25.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இந்த படிப்பு மிகவும் செலவில்லாதது மற்றும் எளிதானதாகும். பதவிக்கு ஆதாரம் ஏழை மற்றும் செல்வந்த நிலையில் இல்லை, படிப்பில் இருக்கிறது. ஆகையால் படிப்பில் முழு கவனம் வையுங்கள்.

 

கேள்வி:

ஞானி ஆத்மாவின் முதல் இலட்சணம் என்ன?

 

பதில்:

அவர் அனைவரிடத்திலும் மிக இனிய விவகாரம் செய்வார். சிலரிடத்தில் தோழமையுடனும், சிலரிடம் எதிரியாகவும் இருப்பது ஞானி ஆத்மாவின் இலட்சணம் கிடையாது. தந்தையின் ஸ்ரீமத் - குழந்தைகளே! மிக இனிமையானவர்களாக ஆகுங்கள். நான் ஆத்மா, இந்த சரீரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன், இப்பொழுது நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற பயிற்சி செய்யுங்கள்.

 

பாட்டு:

நீ அன்புக் கடலாக இருக்கிறாய் ......

 

ஓம்சாந்தி.

குழந்தைகள் யாருடைய மகிமை கேட்டீர்கள்? நிராகார எல்லையற்ற தந்தையினுடையது. அவர் ஞானக் கடலானவர், உயர்ந்ததிலும் உயர்ந்தவர், அவர் தான் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை என்று கூறப்படுகிறார். பரம ஆசிரியர் அதாவது ஞானக் கடல் என்றும் கூறப்படுகின்றார். இந்த மகிமை நமது தந்தையினுடையது என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். அவர் மூலமாக குழந்தைகளாகிய நமது நிலையும் அவ்வாறு இருக்க வேண்டும். அவர் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஆவார், எந்த சாது, சந்நியாசியும் அல்ல. இவர் எல்லையற்ற நிராகார தந்தை பரம்பிதா பரமாத்மா ஆவார். இவர் நமது எல்லையற்ற தாய், தந்தை, பதி போன்ற அனைத்துமாக இருக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இருக்கிறது. இருப்பினும் இந்த போதை நிலையாக இருப்பது கிடையாது. அடிக்கடி குழந்தைகள் மறந்து விடுகிறீர்கள். இவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் மற்றும் மிக இனிமையிலும் இனிய தந்தை ஆவார். அவரைத் தான் அனைவரும் அரைகல்பமாக நினைவு செய்தோம். லெட்சுமி நாராயணனை இந்த அளவிற்கு நினைவு செய்வது கிடையாது. பக்தர்களின் பகவான் ஒரே ஒரு நிராகாரமானவர், அவரைத் தான் அனைவரும் நினைவு செய்கின்றனர். சிலர் லெட்சுமி நாராயணனை, சிலர் விநாயகர் போன்றவரை ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தாலும் வாயில் ஹே பகவான்! என்ற வார்த்தை தான் வெளிப்படுகிறது. ஹே பரமாத்மா என்ற வார்த்தை அவசியமாக அனைவரின் வாயிலும் வெளிப்படுகிறது. ஆத்மா அவரை நினைவு செய்கிறது. உலகீய பக்தர்கள் உலகீயப் பொருட்களை நினைவு செய்கின்றனர் என்றாலும் கூட, ஆத்மா அந்த அளவிற்கு பிதாவிரதத்துடன் இருக்கிறது, தனது தந்தையை அவசியம் நினைவு செய்கிறது. துக்கத்தின் பொழுது உடனேயே ஓசை வெளிப்படுகிறது - ஹே பரமாத்மா. அந்த பரமாத்மா நிராகாரமானவர் என்பதை அவசியம் புரிந்திருக்கின்றனர், ஆனால் அவரது மகத்துவத்தை அறியவில்லை. இப்பொழுது நீங்கள் மகத்துவத்தை அறிந்திருக்கிறீர்கள், அவர் நமது எதிரில் வந்திருக்கிறார். அவர் சொர்க்கத்தை படைப்பவர் ஆவார். நமக்கு எதிரில் கற்பித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரே ஒரு படிப்பாகும். அந்த உலகீய படிப்புகள் வித விதமான முறையில் இருக்கும். சிலரது மனம் படிப்பில் ஈடுபடவில்லையெனில், நிறுத்திவிடுகின்றனர். இங்கு இந்த படிப்பில் பணம் பற்றிய எந்த விசயமும் கிடையாது. அந்த அரசாங்கமும் ஏழைகளுக்கு இலவசமாகக் கற்பிக்கிறது. இங்கு இந்த படிப்பே இலவசமானது, எந்த கட்டணமும் கிடையாது. தந்தை ஏழைப் பங்காளன் என்று கூறப்படுகிறார். ஏழைகள் தான் படிக்கின்றனர். இது மிக எளிய மற்றும் மலிவான படிப்பாகும். மனிதர்கள் தங்களை காப்பீடும் (ஒய்ள்ன்ழ்ங்) செய்து கொள்கின்றனர். இங்கும் நீங்கள் காப்பீடு செய்கிறீர்கள். பாபா, நீங்கள் சொர்க்கத்தில் 21 பிறவிகளுக்கு வட்டியுடன் கொடுங்கள் என்று கூறுகிறீர்கள். பக்தி மார்க்கத்தில் ஹே பரம்பிதா பரமாத்மா, நமக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தி கொடுங்கள் என்று கூறுவது கிடையாது. நாம் நம்மை நேரடியாக காப்பீடு செய்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். பலன் கொடுப்பவர் ஈஸ்வரன் என்று எப்பொழுதும் கூறுவர். அனைவருக்கும் ஈஸ்வரன் தான் கொடுக்கிறார். எந்த சாது, சந்நியாசியாக இருந்தாலும், மாயா ஜால வித்தை செய்பவராக இருந்தாலும் அனைவருக்கும் கொடுக்கக் கூடியவர் ஈஸ்வரன் ஆவார். கொடுப்பவர் ஈஸ்வரன் என்று ஆத்மா கூறுகிறது. தானம், புண்ணியம் போன்றவைகளை செய்கின்றனர், இருப்பினும் அதற்கான பலனைக் கொடுப்பவர் ஈஸ்வரனே ஆவார்.

 

இந்த படிப்பில் எந்தச் செலவும் கிடையாது. ஏழைகளும் அதிக காப்பீடு செய்கின்றனர் என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். செல்வந்தர்கள் செய்தால் அவர்களுக்கு லட்சம் கிடைக்கும். ஏழை ஒரு ரூபாய் செய்வார், செல்வந்தர் 5 ஆயிரம் செய்வார் என்றாலும் இருவருக்கும் பதிலுக்கு சரிசமமாகவே கிடைக்க வேண்டும். ஏழைகளுக்கு மிகவும் எளிதாகும், எந்த கட்டணமும் கிடையாது. ஏழையோ, செல்வந்தரோ இருவரும் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைவதற்கு உரிமையாளர்கள். அனைத்திற்கும் ஆதாரம் படிப்பில் இருக்கிறது. ஏழை நன்றாகப் படிக்கும் பொழுது அவரது பதவி செல்வந்தரை விட உயர்ந்ததாக ஆகிவிடுகிறது. படிப்பு தான் வருமானமாகும். மிக மலிவான மற்றும் எளிய படிப்பாகும். இந்த மனித சிருஷ்டி மரத்தின் முதலில், இடை, கடையை அறிந்து கொண்டால் போதும். இதை எந்த மனிதனும் அறிந்திருக்கவில்லை. திரிகாலதர்சிகளாக யாரும் ஆக முடியாது. எல்லையற்றது என்று அனைவரும் கூறி விடுகின்றனர். மனித சிருஷ்டியின் விதையானவர் பரமாத்மா என்று புரிந்திருக்கின்றனர். இது தலைகீழான மரமாகும். இருப்பினும் நாம் யதார்த்தமாக (துல்லியமாக) அறியவில்லை என்று கூறிவிடுகின்றனர். உண்மையில் யதார்த்தமானதை தந்தை தான் கூறுவார், ஏனெனில் அவர் தான் ஞானம் நிறைந்தவராக இருக்கின்றார். முழு ஆதாரமும் குழந்தைகளாகிய உங்களது படிப்பில் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் வரிசைக்கிரமமான முயற்சியின் படி அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் மாஸ்டர் ஞானக் கடலாக இருக்கிறீர்கள். அனைவரும் ஒன்று போல் கிடையாது. சிலர் பெரிய நதிகளாக, சிலர் சிறிய நதிகளாக இருக்கின்றனர். அனைவரும் அவரவர்களது முயற்சியின்படி படிக்கின்றனர். இவர் எல்லையற்ற தந்தை என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவருடையவராகி அவரது ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். இவர் பாவம் குழப்பத்தில் இருக்கிறார், மாயைக்கு வசமாகி தலைகீழான வழியில் நடக்கிறார் என்று சிலரைப் பார்த்து கூறுகிறோம். ஸ்ரீமத் பகவானின் மகாவாக்கியம் அல்லவா! இதன் மூலம் சிரேஷ்டத்திலும் சிரேஷ்ட தேவி தேவதைகளாக ஆக வேண்டும். முதலில் நிச்சயம் ஏற்பட வேண்டும், பிறகு தான் சிவபாபாவை சந்திக்க வேண்டும். இவருக்கு யதார்த்த நிச்சயம் கிடையாது என்பதை பாபா புரிந்து விடுகின்றார். ஆத்மாக்களின் தந்தை ஒரே ஒருவர் தான், இதனைப் புரிந்து கொள்கின்றனர். ஆனால் அவர் இவர் மூலமாக ஆஸ்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற நிச்சயம் ஏற்படுவது மிகவும் கடினமாக இருக்கிறது. எப்பொழுது இது புத்தியில் வருகிறதோ மற்றும் எழுதிக் கொடுக்கிறார்களோ அப்பொழுது பாபாவிடம் எழுதியதை எடுத்து வர வேண்டும். இது சரியானது தான் என்பதை புரிந்து கொள்வார்கள். இவ்வளவு காலம் என்ன புரிந்திருந்தோமோ அவை தவறானதாகும். ஈஸ்வரன் சர்வவியாபி கிடையாது. அவர் எல்லையற்ற தந்தை ஆவார். உண்மையில் பாரதத்திற்கு கல்ப கல்பத்திற்கு எல்லையற்ற தந்தையின் மூலம் ஆஸ்தி கிடைக்கிறது. சங்கமத்தில் மற்றும் இதே நேரத்தில் தான் கிடைத்திருந்தது. இப்பொழுது மீண்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எழுத வேண்டும். தந்தை சங்கமத்தில் தான் வருகின்றார். வந்து பி.கு மூலம் சொர்க்கத்தைப் படைக்கின்றார். எப்பொழுது எழுதிக் கொடுகின்றார்களோ அப்பொழுது தான் அதை வைத்து புரிய வைக்க முடியும் - நீங்கள் யாரிடத்தில் வந்திருக்கிறீர்கள்? எதை அடைய வந்திருக்கிறீர்கள்?

 

ஈஸ்வரனின் ரூபம் நிராகார் ஆகும். ஈஸ்வரனின் ரூபம் அறியாத காரணத்தினால் பிரம்ம தத்துவம் என்று கூறிவிட்டனர். அவர் பிந்துவாக இருக்கிறார் என்று குழந்தைகள் புரிய வைக்கப்படுகின்றனர். பரமாத்மா ஒரு பிந்துவாக இருக்கின்றார் என்பது யாருடைய புத்தியிலும் வருவது கிடையாது. பிருகுட்டியின் நடுவில் நட்சத்திரம் போன்று ஜொலிக்கிறது என்று ஆத்மாவைப் பற்றி கூறுகின்றனர். அது சிறிய பொருளாகும். ஆக நடிப்பது எது? என்பது பற்றி சிந்தனை செய்ய வேண்டும். இவ்வளவு சிறிய ஆத்மாவில் எவ்வளவு அழிவற்ற நடிப்பு பதிவாகியிருக்கிறது. இந்த விசயங்களின் ஆழத்தில் செல்லும் பொழுது தான் அவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நான் 84 பிறவிகள் எடுக்கிறேன் என்று உங்களது ஆத்மா கூறுகிறது, அந்த முழு நடிப்பும் சிறிய பிந்து ரூப ஆத்மாவில் பதிவாகியிருக்கிறது. அது மீண்டும் வெளிப்படும். இந்த விசயங்களில் மனிதர்கள் ஆச்சரியப்படுவார்கள். இந்த விசயங்களை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. நமது 84 பிறவிகள் திரும்பவும் நடைபெறும். இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகமாகும். ஆத்மாவில் எவ்வாறு நடிப்பு பதிவாகியிருக்கிறது என்பதைக் கேட்டு மனிதர்கள் ஆச்சரியப்படுவார்கள். ஆத்மாவாகிய நான் கூறுகிறேன் - நான் ஆத்மா ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறேன். எனது இந்த நடிப்பு பதிவாகியிருக்கிறது. அது நாடகப்படி திரும்பவும் நடைபெறும். இந்த விசயங்களை பலவீன புத்தியுடையவர்கள் ஒருபொழுதும் தாரணை செய்ய முடியாது. நான் 84 பிறவிகள் எடுத்து நடிப்பை நடிக்கிறேன், சரீரத்தை ஆதாரமாகக் கொள்கிறேன் என்று சிந்தனை செய்ய வேண்டும். இவ்வாறு சிந்தனை செய்கின்ற பொழுது தான் திரிகாலதர்சி, மேலும் மற்றவர்களையும் திரிகாலதர்சி ஆக்கும் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூற முடியும். புரிய வைப்பதற்கும் குழந்தைகளிடம் தைரியம் தேவை. கண்ணில்லாதவர்களுக்கு ஊன்றுகோலாகி துக்கத்திலிருந்து விழிப்படையச் செய்ய வேண்டும்.

 

விழித்தெழுங்கள் நாயகிகளே, இப்பொழுது புது உலகம் ஸ்தாபனை ஆகிறது. பழைய உலகம் விநாசம் ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் திரிமூர்த்தி பிரம்மா, விஷ்ணு, சங்கர் போன்ற பெயர்களை கேள்விப்படவில்லையா? பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை ஆகிறது. இவர்கள் அனைவரும் பிரம்மா குமார், குமாரிகள் அல்லவா! பிரம்மா ஒருவர் மட்டும் செய்து விட முடியாது. பிரஜாபிதாவின் கூடவே அவசியம் பிரம்மா குமார், குமாரிகளும் இருப்பர். இவருக்கு தந்தையும் கண்டிப்பாக இருப்பார், அவர் தான் இவருக்கும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பார். இவரை (பிரம்மாவை) ஞானக் கடல் என்று கூறுவது கிடையாது. பிரம்மாவின் கைகளில் சாஸ்திரங்களைக் காண்பிக்கின்றனர். ஆனால் பரம்பிதா பரமாத்மா இவரிடம் வந்து இவர் மூலம் அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைக் கூறுகின்றார். பிரம்மா சாஸ்திரங்களின் சாரத்தைக் கூறுவது கிடையாது. அவர் எங்கிருந்து கற்றார்? அவருக்கு யாராவது தந்தை அல்லது குரு இருப்பார்கள் அல்லவா! பிரஜாபிதா கண்டிப்பாக மனிதனாகத் தான் இருப்பார் மற்றும் இங்கு தான் இருப்பார். அவர் பிரஜைகளைப் படைக்கக் கூடியவர் ஆவார். அவரைப் படைப்பவர், ஞானக் கடல், ஞானம் நிறைந்தவர் என்று கூற முடியாது. ஞானக் கடலானவர் பரம்பிதா பரமாத்மா மட்டுமே! அவர் வந்து பிரஜாபிதா மூலம் கற்பிக்கின்றார். இது தான் ஞானக் கலசம் என்று கூறப்படுகிறது. இவையனைத்தும் தாரணையில் இருக்கிறது. காப்பீடு (ஒய்ள்ன்ழ்ங்) செய்வது, செய்யாமலிருப்பது உங்களிடத்தில் இருக்கிறது. பாபா மிக நல்ல முறையில் காப்பீடு செய்கிறார். காப்பீட்டுக் காந்தமாக பக்தி மார்கத்திலும், ஞான மார்கத்திலும் இருக்கிறார், தந்தையை அனைத்து ஆத்மாக்களும் பக்தி மார்க்கத்தில் தந்தையே, வந்து எம்மை துக்கத்திலிருந்து விடுவியுங்கள் என்று நினைவு செய்கின்றனர். தந்தை ஆஸ்தி கொடுப்பார் சாந்திதாமத்திற்கு அனுப்பி விடுவார் அல்லது சுகதாமத்திற்கு அனுப்பி விடுவார். யார் சாந்திக்கான ஆஸ்தி அடைய வேண்டுமோ அவர்கள் கல்ப கல்பத்திற்கு அதே சாந்திக்கான ஆஸ்தியை அடைவார்கள். நீங்கள் சுகத்திற்கான ஆஸ்தி அடைவதற்காக இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இதில் படிக்க வேண்டும் மற்றும் கற்பிக்க வேண்டும். தந்தை எவ்வாறு இனிமையிலும் இனிமையானவராக இருக்கிறாரோ அதே போன்று அவரது படைப்பும் இனிமையிலும் இனிமையானதாகும். சொர்க்கம் எவ்வளவு இனிமையானது! சொர்க்கம் என்ற பெயரை அனைவரும் வாயில் கூறிக் கொண்டு இருக்கின்றனர். யாராவது இறந்து விட்டால் சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்று கூறுகின்றனர். ஆக அவசியம் நரகத்தில் இருந்திருக்கிறார், இப்பொழுது சொர்க்கத்திற்குச் சென்று விட்டார். செல்வது கிடையாது, இருப்பினும் கூறுகின்றனர். கண்டிப்பாக நரகத்தில் இருந்தார் அல்லவா என்று நீங்கள் எழுத வேண்டும். இது நரகமாகும், பிறகு அவரை இங்கு அழைப்பதற்கு, உணவு படைப்பதற்கு ஏன் முயற்சி செய்கிறீர்கள்? பித்துருக்களை அழைக்கின்றனர் அல்லவா! ஆத்மாவை அழைப்பது என்பது பித்துருவை அழைப்பதாகும். அனைத்து பித்துருக்களுக்கும் தந்தையை நீங்கள் அழைக்கிறீர்கள். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையானவர் வந்து உங்களுக்கு கற்பிக்கின்றார். நீங்கள் எவ்வளவு குப்தமான சேனைகளாக இருக்கிறீர்கள்! சிவசக்திகள். சிவன் நிராகாரமானவர் அல்லவா! சக்திகளாகிய நீங்கள் அவரது குழந்தைகள். ஆத்மாவிற்கு சக்திகள் கிடைக்கின்றன. மனிதர்கள் உலகீய சக்திகளைக் காண்பிக்கின்றனர், நீங்கள் ஆன்மீக சக்திகளைக் காண்பிக்கின்றீர்கள். உங்களுடையது யோக பலமாகும். யோகா செய்வதன் மூலம் உங்களது ஆத்மா தூய்மை ஆகிறது. ஆத்மாவிற்கு சக்தி கிடைக்கிறது. உங்களில் மம்மாவின் ஞான அம்பு அனைவரையும் விட மிக வேகமானது ஆகும். இங்கு எந்த ஸ்தூல ஆயுதமோ அல்லது அம்பிற்கான விசயமோ கிடையாது.

 

எனக்குள் ஞான சங்கு ஊதுவதற்கான சக்தி நன்றாக இருக்கிறது என்று ஆத்மா புரிந்து கொள்கிறது. என்னால் சங்கு ஊத முடியும். என்னால் சங்கு ஊத முடியாது என்று சிலர் கூறுகின்றனர். ஞான சங்கு ஊதுபவர்கள் எனக்குப் பிரியமானவர்கள் என்று தந்தை கூறுகின்றார். எனது அறிமுகமும் ஞானத்தின் மூலம் கொடுப்பீர்கள் அல்லவா! எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள், இந்த ஞானமும் கொடுத்திருக்கிறார் அல்லவா! தந்தையை நினைவு செய்ய வேண்டும், இதில் வாயினால்  எதுவும் கூற வேண்டிய அவசியமில்லை. தந்தை எனக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை உள்ளுக்குள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். என்னை நினைவு செய்தால் விகர்மம் விநாசம் ஆகும். பகவானின் மகாவாக்கியம் - மன்மனாபவ. ஆக அவர் அவசியம் நிராகாராக இருப்பார் அல்லவா! என்னை நினைவு செய்யுங்கள் என்று சாகாரமானவர் எப்படிக் கூறுவார்? நிராகாரமானவர் தான் கூறுகின்றார் - ஹே ஆத்மாக்களே! என்னை நினைவு செய்யுங்கள். நான் உங்களது தந்தையாக இருக்கிறேன். என்னை நினைவு செய்தால் கடைசி நிலை, சிறந்த நிலையாக ஆகிவிடும். கிருஷ்ணர் இவ்வாறு கூற முடியாது. அவர் மனிதர் அல்லவா! ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த சரீரத்தின் மூலம் கூறுகிறீர்கள் - ஜீவாத்மாக்களே! தனது தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையும் ஆத்மாக்களுக்கு மன்மனாபவ என்று கூறுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் என்னிடத்தில் வந்தே ஆக வேண்டும். ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். நான் ஆத்மா, இந்த சரீரத்தை இயக்கக் கூடியவன், இப்பொழுது நான் தந்தையிடம் செல்ல வேண்டும் என்ற பயிற்சி நல்ல முறையில் செய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார் - நடந்தாலும், காரியங்கள் செய்தாலும், எழுந்தாலும், அமர்ந்தாலும் என்னை நினைவு செய்யுங்கள். யார் அசாந்தியை பரப்புகிறார்களோ அவர்கள் தங்களது பதவியை பிரஷ்டமாக்கிக்(தாழ்ந்ததாக) கொள்கின்றனர். இதில் மிக மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். எவ்வளவு இனிமையானவர், எவ்வளவு அன்பானவர் போலாநாத் சிவ பகவான் என்ற பாட்டும் இருக்கிறது அல்லவா! நீங்களும் அவரது குழந்தைகள் போலாவாக (கள்ளங்கபடமற்றவர்கள்) இருக்கிறீர்கள். தந்தையை நினைவு செய்தால் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள் என்ற மிகச் சிறந்த வழி கூறுகிறீர்கள். வேறு யாரும் இப்படிப்பட்ட வியாபாரம் செய்ய முடியாது. ஆக தந்தையை மிக அதிகமாக நினைவு செய்ய வேண்டும். யாரிடமிருந்து இவ்வளவு சுகம் கிடைக்கிறதோ அவரை பதீத பாவனரே! வாருங்கள் என்று நினைவு செய்கின்றனர். ஆத்மாக்கள் பதீதம் (அழுக்கு) ஆகியிருக்கிறது. அதனுடன் சரீரமும் பதீதமாகி விட்டது. ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் பதீதமாகி விட்டது. அவர்கள் ஆத்மாவில் எதுவும் ஒட்டாது (நிர்லேப்), பதீதம் ஆகவே முடியாது என்று கூறி விட்டனர். ஆனால் கிடையாது, ஒரே ஒரு பரம்பிதா பரமாத்மாவிடம் தான் ஒருபொழுதும் கரை படிவது கிடையாது. மற்றபடி அனைவரிடத்திலும் கரை படிந்தே ஆக வேண்டும். ஒவ்வொரும் சதோ, ரஜோ, தமோவில் வந்தே ஆக வேண்டும். இந்த அனைத்து கருத்துக்களையும் தாரணை செய்து மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். சிலரிடம் எதிரியாக, சிலரிடம் நண்பனாக இருக்கக் கூடாது. தேக அபிமானத்தில் வந்து இங்கேயே அமர்ந்து கொண்டு மற்றவர்களிடம் சேவை வாங்குவது என்பது முற்றிலும் தவறாகும். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஞானச் சிந்தனை செய்து திரிகாலதர்சி ஆக வேண்டும் மேலும் ஆக்க வேண்டும். கண்ணில்லாதவர்களுக்கு ஊன்றுகோலாகி அவர்களை அஞ்ஞான நித்திரையிலிருந்து எழுப்ப வேண்டும்.

 

2) 21 பிறவிகளுக்காக தன்னிடமுள்ள அனைத்தையும் காப்பீடு செய்ய வேண்டும். கூடவே ஞான சங்கும் ஊத வேண்டும்.

 

வரதானம்:

மனமுடைந்து போவதற்குப் பதிலாக கணக்கு வழக்கை குஷி குஷியாக தீர்க்கக் கூடிய கவலையற்ற ஆத்மா ஆகுக.

 

யாராவது ஏதாவது விசயத்தைச் சொன்னார்கள் என்றால் உடனே மனமுடைந்து போகாதீர்கள், முதலில் எந்த அர்த்தத்தில் சொன்னார்கள் என தெளிவாக்கிக் கொள்ளுங்கள், சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுடைய தவறு இல்லை என்றால் கவலையற்றவராகி விடுங்கள். பிராமண ஆத்மாக்களின் மூலமாக இங்கேயேதான் அனைத்து கணக்கு வழக்குகளையும் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற விசயம் நினைவில் இருக்க வேண்டும். தர்மராஜபுரியிலிருந்து விடுபடுவதற்காக பிராமணர்கள் எங்காவது ஓரிடத்தில் நிமித்தமாகி விடுகின்றனர், ஆகையால் பயப்படாதீர்கள், குஷி குஷியாய் தீர்த்துக் கொள்ளுங்கள். இதில் முன்னேற்றம்தான் ஏற்படும்.

 

சுலோகன்:

தந்தைதான் உலகம் - இந்த நினைவில் எப்போதும் இருப்பதுதான் சகஜ யோகமாகும்.

 

ஓம்சாந்தி