04.11.2018                           காலை முரளி                ஓம் சாந்தி                        ''அவ்யக்த பாப்தாதா''

ரிவைஸ்    24.02.1984          மதுபன்


 

'' பிராமண ஜென்மம் - அவதரித்த ஜென்மம் ''

 

பாப்தாதா அனைவரையும் சப்தத்திலிருந்து விலகிய நிலைக்கு அழைத்துச் செல்வதற்காக சப்தத்தில் வருகிறார். அனைவரையும் உடலற்ற நிலை உள்ளவர்களாக ஆக்குவதற்காக பௌதீக தேசத்தில் பௌதீக உடலில் பிரவேசம் ஆகுகிறார். எப்பொழுதும் தன்னை உடலற்ற நிலையில் உள்ள சூட்சும ஃபரிஷ்தா என்று நினைத்து பௌதீக உடலில் அவதரிக்கிறீர்களா? நீங்கள் அனைவரும் அவதரித்திருக்கும் அவதாரங்கள். இதே நினைவில் எப்பொழுதும் ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டு, செய்யும் காரியத்தின் பந்தனத்திலிருந்து விடுபட்ட கர்மாதீத் அவதாரம் ஆவீர்கள். அவதாரம் என்றால் சிரேஷ்ட காரியம் செய்வதற்காக மேலே இருந்து கீழே வருகிறார்கள். நீங்கள் அனைவரும் கூட உயர்ந்த நிலையில் இருந்து கீழே அதாவது உடலின் ஆதாரம் எடுத்து சேவைக்காக காரியம் செய்வதற்காக பழைய உடலில் பழைய உலகத்தில் வருகிறீர்கள். ஆனால் உங்களுடைய நிலை உயர்ந்ததாகவே இருக்கிறது. எனவே நீங்கள் அவதாரம் ஆவீர்கள். அவதாரம் எப்பொழுதும் பரமாத்மாவின் செய்தியைக் கொண்டு வருவார்கள். நீங்கள் அனைத்து சங்கமயுக சிரேஷ்ட ஆத்மாக்களும் பரமாத்மாவின் செய்தியைக் கொடுப்பதற்காக, பரமாத்மாவின் சந்திப்பை செய்விப்பதற்காக அவதரித்திருக்கிறீர்கள். இந்த உடல் இப்பொழுது உங்களுடைய உடலாக இருக்கவில்லை. உடலையும் தந்தையிடம் கொடுத்து விட்டீர்கள். அனைத்தும் உன்னுடையது என்று கூறினீர்கள் அதாவது எதுவும் என்னுடையது அல்ல. இந்த உடலை சேவைக்காக தந்தை எனக்கு கடனாகக் கொடுத்திருக்கிறார். கடனாக கொடுத்திருக்கும் பொருள் மேல் என்னுடையது என்ற அதிகாரம் இருக்க முடியாது. எப்பொழுது என்னுடைய உடல் இல்லை என்றால் உடல் உணர்வு எப்படி வர முடியும்? ஆத்மாவும் தந்தையினுடையதாக ஆகிவிட்டது, உடலும் தந்தையின் உடலாக ஆகிவிட்டது என்றால் நான் மற்றும் என்னுடையது எங்கிருந்து வந்தது? என்னுடையது என்பது - 'நான் தந்தையினுடையவன்' என்ற ஒரே ஒரு எல்லைக்கு அப்பாற்பட்டது மட்டும் தான் இருக்கிறது. எப்படி தந்தையோ அப்படி நான் மாஸ்டர். அம்மாதிரி இந்த எல்லைக்கப்பாற்பட்ட என்னுடையது என்பது இருக்கிறது. எல்லைக்குட்பட்ட என்னுடையது என்பது தடைகளில் கொண்டு வரும். எல்லைக்கப்பாற்பட்ட என்னுடையது என்பது தடையற்ற, தடையை அழிப்பவராக ஆக்குகிறது. அதே போலவே எல்லைக்குட்பட்ட என்னுடையது, என்னுடைய என்னுடைய என்ற குழப்பத்தில் கொண்டு வருகிறது. மேலும் எல்லைக்கப்பாற்பட்ட என்னுடையது என்பது ஜென்மங்களின் சக்கரத்திலிருந்து விடுவிக்கிறது.

 

'என்னுடைய பாபா' என்பது எல்லைக்கப்பாற்பட்ட என்னுடையது. எனவே எல்லைக்குட்பட்டவை விடுபட்டு விட்டது இல்லையா! அவதாரம் ஆகி உடலின் ஆதாரம் எடுத்து சேவையின் காரியத்தில் வாருங்கள். தந்தை சேவைக்காக கடனாக அதாவது தன்னுடைய சொத்தை கொடுத்திருக்கிறார். அதை வேறு எந்த வீணான காரியத்திலும் ஈடுபடுத்த முடியாது. இல்லை என்றால் ஒப்படைக்கப்பட்ட சொத்தில் ஏமாற்றுக் காரியம் செய்ததின் கணக்கு உருவாகி விடும். அவதாரம் வீணான கணக்கை உருவாக்க மாட்டார். வந்தார், செய்தியைக் கொடுத்தார், மேலும் சென்று விட்டார். நீங்கள் அனைவரும் கூட சேவைக்காக, செய்தி கொடுப்பதற்காக பிராமண ஜென்மத்தில் வந்திருக்கிறீர்கள். பிராமண ஜென்மம் அவதரித்த ஜென்மம், சாதாரண ஜென்மம் இல்லை. எனவே எப்பொழுதும் தன்னை அவதரித்திருக்கும் உலகிற்கு நன்மை செய்பவர், எப்பொழுதும் சிரேஷ்ட அவதரித்த ஆத்மா என்ற இதே நிச்சயம் மற்றும் போதையில் இருங்கள். தற்காலிகமாக வந்திருக்கிறீர்கள் மேலும் பிறகு செல்லவும் வேண்டும். இப்பொழுது செல்ல வேண்டும் என்பது எப்பொழுதும் நினைவில் இருக்கிறதா? நான் அவதாரம், வந்திருக்கிறேன், இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும். இந்த நினைவு தான் விடுபட்ட நிலையை மற்றும் அளவற்ற பிராப்தியின் அனுபவத்தை செய்விக்கும். ஒரு பக்கம் விடுபட்ட நிலை, இன்னொரு பக்கம் அளவற்ற பிராப்தி. இரண்டு அனுபவமும் சேர்ந்தே இருக்கும். நீங்கள் அந்த மாதிரி அனுபவம் நிறைந்தவர்கள் தான் இல்லையா? நல்லது.

 

இப்பொழுது கேட்டதை சொரூபத்தில் கொண்டு வர வேண்டும். கேட்பது என்றால் அந்த மாதிரி ஆவது. இன்று விசேஷமாக தன்னைப் போன்றவர்களுடன் சந்திப்பதற்காக வந்திருக்கிறோம். நீங்கள் அனைவரும் சமமானவர்கள் ஆகிவிட்டீர்கள் இல்லையா. சத்தியமான ஆசிரியர் பொறுப்பிருக்கும் ஆசிரியர்களுடன் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். சேவையின் துணைவர்களோடு சந்திப்பதற்காக வந்திருக்கிறார். நல்லது.

 

எப்பொழுதும் எல்லைக்கப்பாற்பட்ட என்னுடையது என்பதின் நினைவு சொரூபமான, எப்பொழுதும் எல்லைக்கப்பாற்பட்ட என்னுடைய தந்தை என்ற இதே சக்திசாலியான சொரூபத்தில் நிலைத்திருக்கக்கூடிய, எப்பொழுதும் உயர்ந்த நிலையில் நிலைத்திருந்து உடலின் ஆதாரத்தை எடுத்து அவதரித்திருக்கும் அவதாரக் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

டீச்சர்களுடன் சந்திப்பு -

இந்தக் குழு எப்பொழுதும் சேவை செய்யும் சேவாதாரி ஆத்மாக்களின் குழு தான் இல்லையா? எப்பொழுதும் தன்னை எல்லைக்கப்பாற்பட்ட உலக சேவாதாரி என்று நினைக்கிறீர்களா? நீங்கள் எல்லைக்குட்பட்ட சேவாதாரியோ இல்லை தான் அல்லவா? நீங்கள் அனைவருமே எல்லைக்கு அப்பாற்பட்டவர்களா? யாரையாவது எந்த இடத்திருந்தாவது வேறு எந்த இடத்திற்காவது அனுப்பி விட்டோம் என்றால் செல்வதற்கு தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் அனைவரும் பறக்கும் பறவைகளா? தன்னுடைய உடல் உணர்வு என்ற கிளையை விட்டு விட்டுச் செல்லும் பறக்கும் பறவையா? அனைத்தையும் விட மிக அதிகமாக தன் பக்கம் ஈர்க்கக்கூடிய கிளை இந்த உடலின் உணர்வு. கொஞ்சமாவது பழைய சம்ஸ்காரம் தன் பக்கம் கவர்ந்திழுக்கிறது என்றால் அது உடல் உணர்வாகும். என்னுடைய சுபாவம் அந்த மாதிரி, என்னுடைய சம்ஸ்காரம் அந்த மாதிரி, நான் வாழும் முறை அந்த மாதிரி, என்னுடைய பழக்கம் அந்த மாதிரி என்ற இவை அனைத்தும் தேக உணர்வின் அடையாளம். அப்படியானால் இந்தக் கிளையை விட்டு விட்டு பறக்கும் பறவையாக இருக்கிறீர்களா? இதைத் தான் கர்மாதீத் நிலை என்று கூறுவது. எந்தவொரு பந்தனம் இல்லாத நிலை. கர்மாதீத் என்பதின் அர்த்தம் எந்தவொரு காரியத்திலிருந்தும் விடுபட்டு விட்டீர்கள் என்பதல்ல, ஆனால் காரியத்தின் பந்தனத்திலிருந்து விடுபட்டவர். எனவே தேகத்தின் காரியம், எப்படி சிலருடைய இயல்பாக இருக்கிறது - சௌகரியமாக இருக்க வேண்டும், சௌகரியமான நேரத்தில் உணவருந்த வேண்டும், நடந்து கொள்ள வேண்டும். இதுவும் கர்மத்தின் பந்தனம். தன் பக்கம் இழுக்கிறது. இந்த கர்மத்தின் பந்தனம், இந்த பழக்கத்திலிருந்தும் விலகியவர். ஏனென்றால் நீங்கள் பொறுப்பிலிருக்கும் ஒரு கருவி இல்லையா?

 

எதுவரை நீங்கள் அனைத்து பொறுப்பிலிருக்கும் ஆத்மாக்கள் கர்மத்தின் பந்தனங்களிலிருந்து, தேகத்தின் சம்ஸ்காரம் சுபாவங்களிலிருந்து விலகியவராக ஆகவில்லை என்றால் மற்றவர்களை எப்படி ஆக்குவீர்கள்? எப்படி உடல் நோய் செய்த பாவ கர்மத்தின் விளைவை அனுபவிப்பது, இதே முறையில் ஒருவேளை ஏதாவது கர்மத்தின் பந்தனம் தன் பக்கம் இழுக்கிறது என்றால் இதுவும் கர்மத்தின் விளைவுகள் தடை போடுகிறது. எப்படி உடல் நோய் கர்மத்தின் விளைவு தன் பக்கம் அடிக்கடி இழுக்கிறது, வலி ஏற்படுகிறது என்றால் இழுக்கிறது தான் இல்லையா! எனவே என்ன செய்வது, பொதுவாக நன்றாகத் தான் இருக்கிறேன். ஆனால் கர்மத்தின் விளைவுகள் கடுமையாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள். அதே போல் ஏதாவது விசேஷ பழைய சுபாவம் சம்ஸ்காரம் மற்றும் பழக்கம் தன் பக்கம் ஈர்க்கிறது என்றால் இதுவும் கர்மத்தின் விளைவாக ஆகிவிட்டது. எந்தவொரு கர்மத்தின் விளைவை அனுபவிப்பது கர்மயோகியாக ஆகவிடாது. எனவே இதையும் கடந்தவராக ஆக வேண்டும். ஏன்? நீங்கள் அனைவருமே நம்பர் ஒன்-ல் செல்லக்கூடிய ஆத்மாக்கள் தான் இல்லையா? நம்பர் ஒன்-ன் அர்த்தமே ஒவ்வொரு விஷயத்திலும் வின் (வெற்றி) அடைபவர். எந்தவொரு குறையும் இல்லை. டீச்சர்களின் அர்த்தமே எப்பொழுதும் தன்னுடைய மூர்த்தி மூலமாக கர்மாதீத் நிலையில் உள்ள பிரம்மா பாபாவை, மேலும் விலகியிருந்து அன்பாக இருக்கும் சிவபாபாவை அனுபவம் செய்விப்பவர்கள். அவ்வாறு இந்த விசேஷம் இருக்கிறது தான் இல்லையா? நீங்கள் நண்பர்கள் தான் இல்லையா? நண்பர்கள் எப்படி உருவாவார்கள்? சமமாக இல்லாமல் நண்பர்கள் ஆக முடியாது. நீங்கள் அனைவரும் தந்தையின் நண்பர்கள், இறை நண்பர்கள் சமமாக இருப்பது தான் நட்பு, நீங்கள் தந்தையின் அடி மேல் அடியெடுத்து வைப்பவர்கள், ஏன் என்றால் நண்பர்களாகவும் இருக்கிறீர்கள் மேலும் பிறகு தலைவனின் தலைவியாகவும் இருக்கிறீர்கள். தலைவி எப்பொழுதும் தலைவனின் அடி மேல் அடி எடுத்து வைப்பார்கள். இந்த பழக்கம் இருக்கிறது தான் இல்லையா? எப்பொழுது திருமணம் நடக்கிறது என்றால் என்ன செய்விப்பார்கள்? இதைத் தான் செய்விக்கிறார்கள் இல்லையா! இந்த முறை எங்கிருந்து உருவானது? உங்களிலிருந்து தான் உருவானது. உங்களுடையது புத்தி என்ற கால்கள் மேலும் அவர்கள் ஸ்தூலமான கால் என்று புரிந்து கொண்டார்கள். நீங்கள் ஒவ்வொரு சம்மந்தத்தில் விசேஷத்தின் சம்மந்தத்தை வைத்து நடந்து கொள்ளும் பொறுப்பிலிருக்கும் ஆத்மாக்கள்.

 

பொறுப்பிலிருக்கும் ஆசிரியர்களுக்கு மற்றவர்களை விட மிக சகஜ சாதனம் இருக்கிறது. மற்றவர்களுக்கோ என்னதான் இருந்தாலும் மனிதர்களின் சம்மந்தத்தில் இருக்க வேண்டியதாக இருக்கிறது. மேலும் உங்களுடைய சம்மந்தம் எப்பொழுதும் சேவை மற்றும் தந்தையோடு இருக்கிறது. உலகியல் காரியங்கள் செய்தாலும் கூட நேரம் இருக்கிறது என்றால் சேவைக்குச் செல்ல வேண்டும் என்ற இந்த நினைவு தான் எப்பொழுதுமே இருக்கிறது. மேலும் உலகியல் காரியம் யாருக்காக செய்யப்படுகிறதோ அவருடைய நினைவு இயல்பாகவே வரும். எப்படி குடும்பத்தில் தாய் தந்தை குழந்தைகளுக்காக சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு இயல்பாகவே நினைவு வரும். அதே போல் நீங்களும் எந்த நேரம் உலகியல் காரியம் செய்கிறீர்கள் என்றால் யாருக்காக செய்கிறீர்கள்? சேவைக்காக செய்கிறீர்கள் - அல்லது உங்களுக்காக செய்கிறீர்களா? ஏனென்றால் எந்தளவு சம்பாதித்ததை சேவையில் ஈடுபடுத்துவீர்களோ அந்த அளவு குஷி ஏற்படுகிறது. எனவே ஒருபொழுதும் இது குடும்ப சேவை என்று புரிந்து செய்யாதீர்கள். இதுவும் சேவைக்கான ஒரு வழி, ரூபம் மாறுபட்டது ஆனாலும் சேவைக்காகத் தான். இல்லை என்றால் பாருங்கள் ஒருவேளை உலகியல் சேவை செய்து கொண்டே தந்தையின் சேவைக்கான சாதனம் இல்லை என்றால் எங்கிருந்து வரும், எப்படி வரும் என்ற எண்ணம் மனதில் எழும். எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை. இந்த எண்ணம் நேரத்தை வீணாக இழக்க வைக்க வில்லையா? எனவே ஒருபொழுதும் உலகியல் வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்ற இந்த வார்த்தையைக் கூறாதீர்கள். நீங்கள் செய்யும் வேலை சேவைக்காக செய்கிறீர்கள். ஆன்மீக வேலை. பிறகு ஒருபொழுதும் சுமை அனுபவம் ஆகாது. இல்லை என்றால் சில நேரம் சுமை ஆகி விடுகிறது, எதுவரை இருக்கும், என்ன நடக்கும் என்ற எண்ணம் எழ ஆரம்பித்து விடும். இதுவோ உங்களுக்காக பிராப்தியை மிக சுலபமாக ஆக்குவதற்கான சாதனம்.

 

உடல் - மனம் - பணம் மூன்று பொருட்கள் இருக்கின்றன இல்லையா! ஒருவேளை மூன்றையுமே சேவையில் ஈடுபடுத்துகிறீர்கள் என்றால் மூன்றின் பலன் யாருக்குக் கிடைக்கும்? உங்களுக்கு கிடைக்குமா அல்லது தந்தைக்குக் கிடைக்குமா? மூன்று விதத்திலும் தன்னுடைய பிராப்தியை உருவாக்க வேண்டும் என்றால் மற்றவர்களை விட இது அதிகப்படியான பிராப்தியாக ஆகிவிட்டது. எனவே ஒருபொழுதும் இந்த விஷயத்தில் சுமையானவர்களாக ஆகாதீர்கள். பாவனையை மட்டும் மாற்றம் செய்யுங்கள். குடும்பத்திற்காக இல்லை ஆனால் ஆன்மீக சேவைக்காக செய்து கொண்டிருக்கிறீர்கள். இதே பாவனையை மாற்றம் செய்யுங்கள். புரிந்ததா? இப்படி ஆனால் இன்னும் இரட்டை சமர்ப்பணம் ஆகிவிட்டார். பணத்தினாலும் சமர்ப்பணம் ஆகிவிட்டார், அனைத்தும் தந்தைக்காக இருக்கிறது. சமர்ப்பணம் என்பதின் அர்த்தம் என்ன? என்னென்ன இருக்கிறதோ அவை அனைத்தும் தந்தைக்காக இருக்கிறது. அதாவது சேவைக்காக இருக்கிறது. இதைத் தான் சமர்ப்பணம் என்று கூறுவது. உங்களில் யார் சமர்ப்பணம் ஆகவில்லை என்று நினைக்கிறீர்களோ அவர்கள் கையை உயர்த்துங்கள். அதற்கான விழாவைக் கொண்டாடிவிடுவோம். குழந்தை குட்டிகளும் பிறந்து விட்டார்கள். மேலும் நான் சமர்ப்பணம் ஆகவில்லை என்று கூறுகிறீர்கள். நீங்கள் வேண்டுமென்றால் திருமண நாளை பலே! கொண்டாடுங்கள்! ஆனால் திருமணமே ஆகவில்லை என்று இதை மட்டும் கூறாதீர்கள்! என்ன நினைக்கிறீர்கள்? முழு குரூப்புமே சமர்ப்பணமான குரூப் தான் இல்லையா?

 

பாப்தாதாவோ இரட்டை வெளிநாட்டினர் மற்றும் இரட்டை வெளிநாட்டின் ஸ்தானத்தில் பொறுப்பாளர் ஆகியிருக்கும் டீச்சர்களை மிகவும் மகிமை செய்கிறார். அப்படியே மகிமை செய்வதில்லை. ஆனால் நீங்கள் அன்போடு விசேஷமாக கடும் உழைப்பும் செய்கிறீர்கள். உழைப்போ மிகவும் செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஆனால் அன்போடு செய்வதினால் கடின உழைப்பாக அனுபவம் ஆவதில்லை. பாருங்கள், எவ்வளவு தூரத்திலிருந்து குரூப்பை தயார் செய்து அழைத்து வருகிறீர்கள். எனவே குழந்தைகளின் உழைப்பின் மேல் பாப்தாதாவும் பலியாகிவிடுகிறார். இரட்டை வெளிநாட்டினரின் பொறுப்பிலிருக்கும் சேவாதாரிகளிடம் ஒரு மிக நல்ல விசேஷம் இருக்கிறது. என்ன விசேஷம் என்று தெரிந்திருக்கிறீர்களா? (அனேக விசேஷங்கள் கூறப்பட்டன) என்னென்ன விஷயங்கள் சொல்லப்பட்டனவோ அவற்றை தன்னில் சோதனை செய்து, ஒருவேளை குறைவாக இருக்கிறது என்றால் நிரப்பி விடுங்கள். ஏனென்றால் மிக நல்ல நல்ல விஷயங்களைக் கூறி இருக்கிறீர்கள். ஒரு விசேஷத்தை இரட்டை வெளிநாட்டு சேவாதாரிகளிடம் பார்த்தோம் என்று பாப்தாதா கூறிக் கொண்டிருந்தார். பாப்தாதா என்ன டைரக்ஷன் கொடுக்கிறாரோ இதை செய்து வாருங்கள் என்று கூறுகிறார் என்றால் அதை நடைமுறையில் கொண்டு வருவதற்காக எப்பொழுதுமே எவ்வளவு தான் முயற்சி செய்ய வேண்டியதாக இருந்தாலும் ஆனால் நடைமுறையில் கண்டிப்பாக கொண்டு வரத்தான் வேண்டும் என்ற இந்த லட்சியம் நடைமுறையில் மிக நன்றாக இருக்கிறது. எப்படி குரூப்பை அழைத்து வர வேண்டும் என்று பாப்தாதா கூறினார். எனவே குரூப்-களையும் அழைத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

வி..பி -களின் சேவை செய்ய வேண்டும் என்று பாப்தாதா கூறினார், முதலில் மிகவும் கடினம் என்று கூறினீர்கள் - ஆனால் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று தைரியம் வைத்தீர்கள் அதனால் இப்பொழுது பாருங்கள்! இரண்டு வருடங்களாக குரூப்கள் வருகிறார்கள் தான் இல்லையா? இலண்டனிலிருந்து வி..பி வருவது மிகவும் கடினம் என்று கூறினீர்கள். ஆனால் இப்பொழுது பாருங்கள் நடைமுறை நிரூபணத்தை பிரத்யக்ஷமாக காண்பித்தீர்கள் இல்லையா! இந்த தடவையோ பாரதத்தைச் சேர்ந்தவர்களும் ஜனாதிபதியை அழைத்து வந்து காண்பித்தார்கள். ஆனால் இருந்தும் இரட்டை வெளிநாட்டினரின் இந்த ஊக்கம், டைரக்க்ஷன் கிடைத்தது மேலும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற ஈடுபாடு மிக நன்றாக இருக்கிறது. நடைமுறை ரிசல்ட்டை பார்த்து பாப்தாதா விசேஷத்தின் மகிமை செய்கிறார். சென்டர் திறக்கிறீர்கள் என்றால் அது பழைய விஷயமாகி விட்டது. அதையோ திறந்து கொண்டே தான் இருப்பீர்கள். ஏனென்றால் அங்கு சாதனம் மிகவும் சகஜமானது. இங்கிருந்து அங்கு சென்று திறக்க முடியும். பாரதத்தில் அந்த சாதனம் இல்லை. எனவே சென்டர் திறப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் நல்ல நல்ல வாரிசு குழந்தைகளைத் தயார் செய்ய வேண்டும். ஒன்று வாரிசு தரம் உள்ளவர்களை தயார் செய்ய வேண்டும் மற்றும் இன்னொன்று சப்தமாக செய்தியைப் பரப்புபவர்களை தயார் செய்ய வேண்டும். இருவரும் அவசியம் தேவை. வாரிசு தரமுள்ளவர்கள் - எப்படி நீங்கள் சேவையில் ஊக்கம் உற்சாகத்தில் உடல், மனம், பணம், செல்வத்தையும் சேர்த்து அனைத்தும் இருந்தபோதிலும் சமர்ப்பண புத்தி உள்ளவர்களாக இருக்கிறீர்கள், இதைத் தான் வாரிசு தரமுள்ளவர்கள் என்று கூறுவது. அந்த மாதிரி வாரிசு தரமுள்ளவர்களையும் உருவாக்க வேண்டும். இதன் மேலேயும் விசேஷ கவனம் இருக்க வேண்டும். ஒவ்வொரு சேவை நிலையத்திலும் அந்த மாதிரி வாரிசு தரமுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்றால் சேவை நிலையம் அனைத்தையும் விட நம்பர் ஒன் ஆகிவிடும்.

 

ஒன்று சேவையில் சகயோகி ஆவது, இன்னொன்று முழுமையாகவே சமர்ப்பணம் ஆவது. அந்த மாதிரி வாரிசுகள். எத்தனை பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு சேவை நிலையத்திலும் அந்த மாதிரி வாரிசுகள் இருக்கிறார்களா? இறை மாணவனாக ஆக்குபவர்கள், சேவையில் சகயோகி ஆகுபவர்கள் என்ற பட்டியலோ நீளமாக இருக்கும். ஆனால் வாரிசாக சிலர் தான் இருப்பார்கள். யாருக்கு எந்த நேரம் என்ன டைரக்ஷன் கிடைத்ததோ, என்ன ஸ்ரீமத் கிடைத்ததோ அதன் பிராகாரம் நடந்து கொண்டே இருப்பது. எனவே இரண்டு விதமானவர்களையும் உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்தை வையுங்கள். அந்த மாதிரியான ஒரு வாரிசு தரமுள்ளவர், அனேக சென்டர்கள் திறப்பதற்கு பொறுப்பாளர் ஆக முடியும். இதுவும் இலட்சியம் வைத்தால் நடைமுறையில் ஆகிக் கொண்டே இருக்கும். தன்னுடைய விசேஷத்தையும் புரிந்து கொண்டீர்கள் தான் இல்லையா! நல்லது.

 

திருப்தியாகவோ இருக்கிறீர்கள், அல்லது இருக்கிறீர்களா என்று கேட்க வேண்டுமா? நீங்களே திருப்திபடுத்துபவர்கள் தான். யார் திருப்திபடுத்துபவராக இருப்பாரோ சுயம் அவரும் திருப்தியாகத்தான் இருப்பார் இல்லையா! எப்பொழுதாவது சேவை குறைவாக நடக்கிறது என்று பார்த்து குழப்பத்திலோ வருவதில்லையே? சேவை நிலையத்தில் எப்பொழுது ஏதாவது தடை வருகிறது என்றால் தடையைப் பார்த்து பயப்படுவதில்லையே? உதாரணமாக மிகப்பெரிய தடை வந்து விட்டது - நெருக்கமான யாரோ ஒருவர் எதிராளி ஆகிவிட்டார். மேலும் தொந்தரவு கொடுக்கிறார் என்றால் உங்களுடைய சேவையிலோ என்ன செய்ய முடியும்? என்ன பயப்பட வேண்டும். ஒன்று அவருக்காக நன்மை பயக்கும் பாவனை வைத்து இரக்கம் வைப்பது என்பது வேறு விஷயம். ஆனால் தன்னுடைய நிலையே மேலே கீழே செல்கிறது அல்லது வீணான எண்ணம் ஓடுகிறது என்றால் இதைக் குழப்பத்தில் வருவது என்று கூறுவது. எனவே எண்ணத்தின் படைப்பையும் படைக்க வேண்டாம். இந்த எண்ணம் கூட அசைக்க முடியக்கூடாது. இதைத் தான் ஆடாத அசையாத நிலை என்று கூறுவோம். ஒன்றும் புதிதல்ல என்று அந்த மாதிரி அலட்சியமானவராகவும் ஆகிவிடக்கூடாது. சேவையும் செய்யுங்கள் அவருக்காக இரக்க மனமுடையவராகவும் ஆகுங்கள், ஆனால் குழப்பத்தில் வராதீர்கள். அந்த மாதிரி நீங்கள் அலட்சியமானவரும் இல்லை, ஃபீலிங்கில் வருபவரும் இல்லை. எப்பொழுதுமே எந்த ஒரு சூழ்நிலையிலும் வாயுமண்டலத்தில் இருந்தாலும் ஆடாமல் அசையாமல் இருங்கள். எப்பொழுதாவது பொறுப்பிலிருப்பவர் ஏதாவது அறிவுரை கூறுகிறார் என்றால் அதில் குழப்பம் அடையாதீர்கள். இதை ஏன் கூறுகிறார் அல்லது இது எப்படி நடக்கும் என்று யோசிக்காதீர்கள். ஏனென்றால் யார் பொறுப்பிலிருப்பவராக ஆகியிருக்கிறாரோ அவர் அனுபவி ஆகிவிட்டார். மேலும் யார் நடைமுறையில் இந்த மார்க்கத்தில் செல்பவராக இருக்கிறாரோ அதில் சில புதியவர்கள், சிலர் கொஞ்சம் பழையவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எந்த நேரம் என்ன விஷயம் அவரின் எதிரில் வருகிறதோ அந்த விஷயத்தின் காரணமாக அந்த அளவு தெளிவான புத்தியுடையவராகி விஷயத்தின் முதல், இடை, கடையைத் தெரிந்து கொள்ள முடியாது. நிகழ் காலத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடியும். எனவே நிகழ்காலத்தை மட்டும் பார்த்து, அந்த நேரம் முதல்,இடை, தெளிவாக இல்லாத காரணத்தினால் குழப்பம் அடைந்து விடுகிறார். எப்பொழுதாவது ஏதாவது ஒரு டைரக்ஷன் ஒருவேளை தெளிவாகப் புரியவில்லை என்றால் ஒருபொழுதும் குழப்பம் அடையக்கூடாது. தைரியமாக இதைப் புரிந்து கொள்வதற்காக முயற்சி செய்வேன் என்று கூறுங்கள். அதற்காக கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று கூறுங்கள். அதே நேரத்தில் குழப்பமாகி இது இல்லை, அது இல்லை, அப்படி இல்லை என்று கூறாதீர்கள். ஏனென்றால் இரட்டை வெளிநாட்டினருக்கு சுதந்திரமான மனம் அதிகமாக இருக்கிறது எனவே இல்லை என்றும் சுதந்திரமான மனதால் சொல்லிவிடுவார்கள். எனவே என்ன விஷயம் கிடைக்கிறதோ அதைக் கொஞ்சம் கம்பீரமாக முதலில் யோசியுங்கள். அதில் ஏதாவது இரகசியம் மறைந்திருக்கிறது. இதன் இரகசியம் என்ன என்று அவரிடம் நீங்கள் கேட்கலாம். இதனால் என்ன இலாபம் ஏற்படும், எனக்கு கொஞ்சம் தெளிவாகப் புரியவையுங்கள் என்று கூறலாம். ஆனால் ஒருபொழுதும் கிடைத்த டைரக்ஷனுக்கு மறுப்புக் கூறாதீர்கள். மறுப்பு கூறுகிறீர்கள் எனவே குழப்பம் அடைகிறீர்கள். இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு இந்த விசேஷ கவனம் கொஞ்சம் கொடுக்கிறோம். இல்லை என்றால் என்ன நடக்கும். எப்படி பொறுப்பாளர் ஆகியிருக்கும் சகோதரிகளின் டைரக்ஷனைத் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் முயற்சி செய்யவில்லை, மேலும் குழப்பத்தில் வந்து விட்டீர்கள் என்றால் உங்களைப் பார்த்து யாருக்காக நீங்கள் பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்களோ அவர்களில் இந்த சம்ஸ்காரம் நிரம்பிவிடும். பிறகு எப்பொழுதாவது சிலர் மோதுவார், எப்பொழுதாவது வேறு சிலர் மோதுவார். பிறகு சேவை நிலையத்தில் இதே விளையாட்டு நடந்து கொண்டிருக்கும். புரிந்ததா? நல்லது.

 

வரதானம்

ஞானம் மற்றும் யோகத்தின் சக்தி மூலம் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஒரு நொடியில் கடந்து செல்லக்கூடிய மகாவீர் ஆகுக.

 

மகாவீர் என்றால் எப்பொழுதும் லைட் மற்றும் மைட் ஹவுஸ், ஞானம் லைட் மற்றும் யோகம் மைட். யார் இந்த இரண்டு சக்திகளால் நிரம்பி இருக்கிறாரோ அவர் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஒரு நொடியில் கடந்து விடுவார். ஒருவேளை அந்த நேரத்தில் தேர்ச்சி அடையாததற்கான சம்ஸ்காரம் ஏற்பட்டு விடுகிறது என்றால் இறுதியிலும் அந்த சம்ஸ்காரம் முழுமையாக தேர்ச்சி அடைய விடாது. யார் அந்த நேரத்தில் முழுமையாகத் தேர்ச்சி அடைகிறாரோ அவரைத் தான் மதிப்புடன் தேர்ச்சி அடைபவர் என்று கூறுவோம். தர்மராஜரும் அவருக்கு மரியாதை கொடுப்பார்.

 

சுலோகன்

யோக அக்னி மூலம் விகாரங்களின் விதையை பஸ்பம் (சாம்பல்) செய்து விட்டீர்கள் என்றால் தேவையான நேரத்தில் ஏமாற்றம் கிடைக்க முடியாது.

 

ஓம்சாந்தி