26.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஸ்ரீமத்படி நடந்தீர்கள் என்றால் உங்களுடைய பொக்கிஷங்கள் அனைத்தும் நிறைந்து விடும், உங்களுடைய அதிர்ஷ்டம் உயர்ந்ததாக ஆகி விடும்.

 

கேள்வி:

இந்த கலியுகத்தில் எந்த விசயம் நஷ்டமாகி விட்டது? நஷ்டமாகி விட்டதால் இதனுடைய நிலை என்னவானது?

 

பதில்:

கலியுகத்தில் தூய்மை, சுகம் மற்றும் அமைதி நஷ்டமாகி(இல்லாமல் போய்)விட்டது ஆகையினால் பாரதம் சுகதாமத்திலிருந்து துக்கதாமமாக, வைரத்திலிருந்து சோழியாக ஆகி விட்டது. இந்த விளையாட்டு அனைத்தும் பாரதத்தை வைத்து தான் ஆகும். விளையாட்டின் முதல்-இடை-கடைசியின் ஞானத்தை இப்போது பாபா உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிர்ஷ்டமுள்ள, சௌபாக்கியசாலி குழந்தைகள் தான் இந்த ஞானத்தை நல்ல விதத்தில் புரிந்து கொள்ள முடியும்.

 

பாட்டு:-

கள்ளம் கபடமற்ற தன்மையினால் தனிப்பட்டவராக இருக்கின்றார்........

 

ஓம் சாந்தி.

பகவானுடைய மகாவாக்கியம். எந்த பகவான்? போலாநாத் சிவபகவானுடைய மகாவாக்கியமாகும். பாபாவும் புரிய வைக்கின்றார், டீச்சருடைய வேலையும் புரிய வைப்பதாகும். சத்குருவின் வேலையும் புரிய வைப்பதாகும். சிவபாபாவைத் தான் சத்தியமான பாபா, போலாநாத் என்று சொல்லப்படுகிறது. சங்கரை போலாநாத் என்று சொல்ல முடியாது. கண்ணை திறந்தார் உலகத்தை அழித்து விட்டார் என்று அவரைப் பற்றி சொல்லப்படுகிறது. போலா பண்டாரி என்று சிவனை சொல்கிறார்கள் அதாவது பொக்கிஷத்தை நிரப்பக் கூடியவர். எந்த பொக்கிஷம்? பொருள்-செல்வம், சுகம்-அமைதியினுடைய பொக்கிஷமாகும். தூய்மை- சுகம்-அமைதியின் பண்டாராவை நிரப்புவதற்குத் தான் பாபா வந்திருக்கின்றார். கலியுகத்தில் தூய்மை-சுகம்-அமைதி நஷ்டமாகி விட்டது ஏனென்றால் இராவணன் சாபம் அளித்து விட்டான். அனைவரும் சோகவனத்தில் அடித்துக் கொண்டும் அழுது கொண்டுமிருக்கிறார்கள். போலாநாத் சிவன் அமர்ந்து சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் இரகசியத்தை புரிய வைக்கின்றார் அதாவது குழந்தைகளாகிய உங்களை திரிகாலதரிசியாக மாற்றுகின்றார். நாடகத்தை வேறு யாரும் தெரிந்திருக்க வில்லை. மாயை முற்றிலும் எதுவும் புரியாதவர்களாக மாற்றி விட்டது. வெற்றி-தோல்வி, சுகம்-துக்கத்தின் நாடகம் பாரதத்தினுடையதே ஆகும். பாரதம் வைரத்தைப் போல் தன்னிறைவுற்றதாக இருந்தது, இப்போது சோழியைப்போல் எதுவுமற்றதாக ஆகி விட்டது. பாரதம் சுகதாமமாக இருந்தது, இப்போது துக்கதாமமாக இருக்கிறது. பாரதம் சொர்க்கமாக இருந்தது, இப்போது நரகம் ஆகும். நரகத்திலிருந்து சொர்க்கமாக எப்படி மாறுகிறது, இதனுடைய முதல்-இடை-கடைசியின் ஞானத்தை ஞானக்கடலைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இந்த நிச்சயம் புத்தியில் இருக்க வேண்டும். யாருடைய அதிர்ஷ்டம் திறக்க வேண்டுமோ, யார் பாக்கியசாலிகளாக ஆகக் கூடியவர்களோ அவர்களுக்கு நிச்சயம் ஏற்படுகிறது.அனைவருமே துர்பாக்கியசாகளே. துர்பாக்கியசாலிகள் என்றால் அதிர்ஷ்டம் கெட்டுப் போய் இருத்தலாகும். கீழானவர்களாக இருக்கிறார்கள். பாபா வந்து உயர்ந்தவர்களாக மாற்றுகின்றார். ஆனால் அந்த தந்தையைக் கூட யாராவது சிலர் தான் கஷ்டப்பட்டு புரிந்து கொள்கிறார்கள் ஏனென்றால் அவருக்கு உடல் இல்லை. பரம் ஆத்மா பேசுகின்றார். தூய்மையான ஆத்மாக்கள் சத்யுகத்தில் இருக்கிறார்கள். கலியுகத்தில் அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள். அனேக மன ஆசைகளை எடுத்துக் கொண்டு ஜகதம்பாவிடம் வருகிறார்கள், எதையும் தெரிந்திருக்கவில்லை, இருந்தாலும் யார்-யார், எந்தெந்த பாவனையில் பூஜை செய்கிறார்களோ அவர்களுக்கு அல்பகால கண நேரத்திற்கு பலனை நான் அளிக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். ஜட மூர்த்தி ஒருபோதும் அவர்களுக்குப் பலனை கொடுக்க முடியாது. பலனை அளிக்கக் கூடியவர், அல்பகால சுகத்தை கொடுக்கக் கூடியவன் நானேயாவேன் மேலும் எல்லையற்ற சுகத்தை வழங்கும் வள்ளலும் நானே ஆவேன். நான் துக்கத்தை வழங்குபவன் இல்லை. நான் துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்குபவனாக இருக்கின்றேன். நீங்கள் சுகதாமத்தில் சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைவதற்காக வந்துள்ளீர்கள். இதில் நிறைய பத்தியம்(கட்டுப்பாடுகள்) இருக்கிறது. முதலில் சுகம் இருக்கிறது, பிறகு மத்தியில் பக்தி மார்க்கம் ஆரம்பமாகிறது எனும்போது துக்கம் ஆரம்பமாகிறது என்று பாபா புரிய வைக்கின்றார். பிறகு தேவி-தேவதைகள் இறங்கும் மார்க்கத்தில், விகார மார்க்கத்தில் விழுந்து விடுகிறார்கள். அங்கிருந்து தான் பக்தி மார்க்கம் ஆரம்பமாகிறது. எனவே முதலில் சுகம், மத்தியில் துக்கம் ஆரம்பமாகிறது. கடைசியில் மகா துக்கம் இருக்கிறது. அனைவருக்கும் அமைதி, சுகத்தை வழங்கும் வள்ளலாக நான் இருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். உங்களை சுகதாமத்திற்கு செல்வதற்காக தயார் செய்து கொண்டிருக்கிறேன். மற்றவர்கள் அனைவரும் கணக்கு-வழக்குகளை முடித்துக் கொண்டு சாந்திதாமத்திற்குச் சென்று விடுவார்கள். நிறைய தண்டனைகள் அனுபவிப்பார்கள். நீதிபதிகளை கொண்ட குழு அமர்கிறது. காசியில் கூட பலியானார்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். காசி கல்வெட் என்று சொல்கிறார்கள் அல்லவா. காசியில் சிவனுடைய கோயில் இருக்கிறது. அங்கே பக்திமார்க்கத்தில் சிவபாபாவின் நினைவில் இருக்கிறார்கள். இப்போது தங்களிடத்தில் வருவேன் என்று சொல்கிறார்கள். மிகவும் அழுது கொண்டு சிவனுக்கு பலியாகிறார்கள் என்றால் க்ஷண நேர பலன் அல்பகாலத்திற்கு கிடைக்கிறது. இங்கே நீங்கள் பலியாகிறீர்கள் என்றால் 21 பிறவிகளுக்கு ஆஸ்தியை அடைவதற்காக வாழ்ந்து கொண்டே சிவபாபாவினுடையவர்களாக ஆகின்றீர்கள். தற்கொலையின் விஷயம் கிடையாது. வாழ்ந்து கொண்டே பாபா நான் தங்களுடையவன் என்று இருப்பதாகும். அவர்கள் சிவனுக்கு பலியாகிறார்கள், இறந்து விடுகிறார்கள், நான் சிவபாபாவினுடையவனாக ஆகி விடுவேன் என்று எண்ணுகின்றனர் ஆனால் அப்படி ஆவதில்லை. இங்கே வாழ்ந்து கொண்டே பாபாவினுடையவர்களாக ஆகிறார்கள், மடியில் வந்திருக்கிறார்கள் என்றால் பிறகு பாபாவின் வழிப்படி நடக்க வேண்டும், அப்போது தான் உயர்ந்த தேவதைகளாக ஆக முடியும். நீங்கள் இப்போது தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். கல்பம்-கல்பமாக நீங்கள் இந்த முயற்சியை செய்து வந்துள்ளீர்கள். இது ஒன்றும் புதிய விஷயமல்ல.

 

உலகம் பழையதாகிறது. பிறகு கண்டிப்பாக புதிதாக வேண்டும். பாரதம் புதிய சுகதாமமாக இருந்தது, இப்போது பழைய துக்கதாமமாக இருக்கிறது. உலகம் ஒன்று தான் என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மனிதர்கள் கல்லுபுத்தியுடையவர்களாக இருக்கிறார்கள். உலகம் புதியதாகவும் பழையதாகவும் மட்டுமே ஆகிறது. மாயை புத்திக்கு பூட்டு போட்டு முற்றிலும் கீழான புத்தியுடையவர்களாக மாற்றி விட்டது, ஆகையினால் தேவதைகளின் தொழிலை தெரிந்து கொள்ளாமலேயே தேவதைகளுக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள், இதனை குருட்டு நம்பிக்கை என்று சொல்லப்படுகிறது. தேவிகளின் பூஜையில் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்கிறார்கள், அவர்களுக்கு பூஜை செய்து படைத்து பிறகு சமுத்திரத்தில் மூழ்கடித்து விடுகிறார்கள் என்றால் இது பொம்மை பூஜை ஆகி விடுகிறது அல்லவா. இதில் என்ன பலன் இருக்கிறது? எவ்வளவு கோலாகலமாக கொண்டாடுகிறார்கள், செலவு செய்கிறார்கள், ஒரு வாரத்திற்குப் பிறகு சுடுகாட்டில் புதைத்து விடுவது போல் கடலில் மூழ்கடித்து விடுகிறார்கள். பகவானுடைய மகாவாக்கியம் - இது அசுர சம்பிரதாய இராஜ்யமாகும், நான் உங்களை தெய்வீக சம்பிரதாயத்தவர்களாக மாற்றுகின்றேன். சிலருக்கு நம்பிக்கை வருவது மிகவும் கடினமாக இருக்கிறது ஏனென்றால் சாகாரத்தில் (பாபாவை சரீரத்தில்) பார்ப்பதில்லை. ஆகாகான் என்பவர் சாகாரத்தில் இருந்தார் எனும்போது அவரை பின்பற்றுபவர்கள் எவ்வளவு பேர் இருந்தார்கள், அவரை தங்கம்-வைரத்தினால் எடை போட்டார்கள். அந்தளவிற்கு எந்த மகாராஜாவிற்கும் மகிமை ஏற்படுவதில்லை. எதுவும் செய்வதில்லை. எனவே இதனை கண்மூடித்தனம் என்று சொல்லப்படுகிறது என்று பாபா புரிய வைக்கின்றார், ஏனென்றால் நிலையான சுகம் இல்லை அல்லவா. நிறைய பேர் தூய்மையற்றவர்களாகவும் ஆகிறார்கள் அல்லவா, பெரிய-பெரிய மனிதர்களின் மூலம் கூட பாவம் நடக்கிறது. நான் ஏழைப்பங்காளன் என்று பாபா கூறுகின்றார். ஏழைகள் அந்தளவிற்கு பாவம் செய்வதில்லை. இந்த சமயத்தில் அனைவரும் பாவாத்மாக்களாக இருக்கிறார்கள். இப்போது உங்களுக்கு எல்லையற்ற தந்தை கிடைத்திருக்கிறார் இருந்தாலும் அடிக்கடி அவரை மறந்து விடுகிறீர்கள். அட நீங்கள் ஆத்மாக்கள் அல்லவா. ஆத்மாவைக் கூட ஒருபோதும் யாரும் பார்த்ததில்லை. நட்சத்திரம் போல் இருபுருவங்களுக்கு மத்தியில் இருக்கிறது என்று புரிந்து கொள்கிறார்கள். ஆத்மா போய் விடுகிறது என்றால் சரீரம் அழிந்து விடுகிறது. ஆத்மா நட்சத்திரம்போல் இருக்கிறது என்றால் கண்டிப்பாக ஆத்மாவாகிய என்னுடைய தந்தையும் என்னைப்போல் தான் இருப்பார். ஆனால் அவர் சுகத்தின் கடலாக, அமைதியின் கடலாக இருக்கின்றார். நிராகாரமானவர் எப்படி ஆஸ்தி கொடுப்பார்? கண்டிப்பாக இருபுருவங்களுக்கு மத்தியில் வந்து அமருவார். ஆத்மா இப்போது ஞானத்தை தாரணை செய்து துர்கதியிலிருந்து சத்கதிக்கு செல்கிறது. இப்போது யார் தாரணை செய்வார்களோ அவர்கள் அடைவார்கள். யாரையும் தங்களுக்கு சமமாக ஆஸ்தியை அடைவதற்கு தகுதியானவர்களாக மாற்ற வில்லை என்றால் ஒரு பைசாவிற்கு பிரயோஜனம் இல்லாத பதவியைத் தான் அடைந்து விடுவார்கள். உயர்ந்தவர்கள் மற்றும் கீழானவர்கள் என்று யாரை சொல்லப்படுகிறது என்பதை பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார். பாரதத்தில் தான் உயர்ந்த தேவதைகள் வாழ்ந்து விட்டு சென்றுள்ளார்கள். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யும் இறை தந்தை........ என்று பாடவும் செய்கிறார்கள் ஆனால் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யும் இறைதந்தை எப்போது வந்து உலகத்தை சொர்க்கமாக மாற்றினார் என்பதை தெரிந்திருக்கவில்லை. நீங்கள் தெரிந்துள்ளீர்கள், முழுமையாக முயற்சி மட்டுமே செய்வதில்லை, அதுவும் நாடகத்தின்படி நடக்க வேண்டியுள்ளது, யாருக்கு எவ்வளவு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அதைபொருத்ததாகும். இந்த நடத்தையின்படி ஒருவேளை சரீரத்தை விட்டுவிட்டால் நீங்கள் எந்த பதவியை அடைவீர்கள் என்று பாபாவை கேட்டால் பாபா சொல்ல முடியும். ஆனால் கேட்பதற்குக் கூட யாரும் தைரியம் வைப்பதில்லை. யார் நல்ல முயற்சி செய்கிறார்களோ அவர்கள் நாம் எவ்வளவு பேருக்கு ஊன்றுகோலாக இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இவர் நல்ல பதவி அடைவார், இந்த குழந்தை சேவை எதுவும் செய்வதில்லை எனவே அங்கேயும் சென்று தாச-தாசிகளாகவே ஆவார்கள் என்று பாபாவும் புரிந்து கொள்கிறார். துடைப்பத்தால் கூட்டுபவர்கள், கிருஷ்ணரை வளர்ப்பவர்கள், மகாராணியை அலங்கரிப்பவர்கள் போன்ற தாச-தாசிகளும் இருக்கிறார்கள் அல்லவா. அவர்கள் தூய்மையான ராஜாக்கள், இவர்கள் தூய்மையற்ற ராஜாக்கள். எனவே தூய்மையற்ற ராஜாக்கள் தூய்மையான ராஜாக்களின் கோயில்களை உருவாக்கி அவர்களுடைய பூஜை செய்கிறார்கள். எதையும் தெரிந்து கொள்வதில்லை.

 

பிர்லா கோயில் எவ்வளவு பெரியதாக இருக்கிறது. எவ்வளவு லஷ்மி - நாராயணனுடைய கோயில்களை உருவாக்குகிறார்கள், ஆனால் லஷ்மி - நாராயணன் யார் என்பதை தெரிந்திருக்கவில்லை. பிறகு அவர்களுக்கு எவ்வளவு பலன் கிடைக்கும்? அல்பகால சுகம் கிடைக்கும். ஜகதம்பாவிடம் செல்கிறார்கள், இந்த ஜகதம்பா தான் லஷ்மியாக ஆகின்றார் என்பதை தெரிந்திருக்கிறார்களா என்ன? இந்த சமயத்தில் நீங்கள் ஜகதம்பாவிடமிருந்து உலகத்தின் அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறீர்கள். உலக இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். ஜகதம்பா உங்களுக்கு படிப்பித்துக் கொண்டிருக்கின்றார். அவர் தான் பிறகு லஷ்மியாக ஆகின்றார். பிறகு அவரிடமிருந்து வருடா வருடம் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. லஷ்மியிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் பணத்தை பிச்சை கேட்கிறார்கள். எங்களுக்கு குழந்தை வேண்டும் என்றோ அல்லது நோயை குணப்படுத்து என்றோ லஷ்மியிடம் கேட்கமாட்டார்கள். லஷ்மியிடம் செல்வத்தை மட்டுமே கேட்கிறார்கள். பெயரே லஷ்மி-பூஜை என்று தான் இருக்கிறது. ஜகதம்பாவிடம் நிறைய கேட்கிறார்கள். அவர் அனைத்து மன ஆசைகளையும் பூர்த்தி செய்பவராக இருக்கின்றார். இப்போது உங்களுக்கு ஜகதம்பாவிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கிறது. லஷ்மியிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது செல்வத்தின் பலன் கிடைக்கிறது, ஆகையினால் தான் ஒவ்வொரு ஆண்டும் பூஜை செய்கிறார்கள். செல்வத்தை அளிப்பவர் என்று புரிந்து கொள்கிறார்கள். செல்வத்தின் மூலம் பாவம் செய்து கொண்டிருக்கிறார்கள். செல்வத்தை அடைவதற்குக் கூட பாவம் செய்கிறார்கள்.

 

இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு அழிவற்ற ஞான ரத்தினங்கள் கிடைக்கிறது, அதன் மூலம் நீங்கள் மிகுந்த செல்வந்தர்களாக ஆகி விடுவீர்கள். ஜகதம்பாவின் மூலம் சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கிறது. அங்கே பாவம் நடப்பதில்லை. எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக இருக்கிறது. சிலர் நல்ல விதத்தில் புரிந்து கொள்கிறார்கள், சிலர் எதையும் புரிந்து கொள்வதில்லை ஏனென்றால் அதிர்ஷ்டத்தில் இல்லை. ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் உயர்ந்தவர்களாக ஆக முடியுமா என்ன. பிறகு பதவியும் குறைந்து விடுகிறது. முழு இராஜ்யமும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இறை தந்தை சொர்க்க இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார் பிறகு பாரதம் சொர்க்கமாக ஆகி விடும். இதனை நன்மை செய்யும் யுகம் என்று சொல்லப்படுகிறது. இது அதிகத்திலும் அதிகம் 100 ஆண்டுகளின் யுகமாகும். மற்ற அனைத்து யுகங்களும் ஒவ்வொன்றும் 1250 ஆண்டுகளை கொண்டதாகும். அஜ்மீரில் வைகுண்டத்தின் மாதிரி இருக்கிறது, சொர்க்கம் எப்படி இருக்கும் என்று காட்டுகிறார்கள். கண்டிப்பாக சொர்க்கம் இங்கே தான் இருக்கும் அல்லவா. கொஞ்சம் ஞானம் கேட்டால் கூட சொர்க்கத்திற்கு வருவார்கள், ஆனால் படிக்க வில்லை என்றால் காட்டுவாசிகளைப் போல் ஆகும். பிரஜைகளும் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள் அல்லவா. ஆனால் அங்கே ஏழை, செல்வந்தர்கள் போன்ற அனைவருக்கும் சுகம் இருக்கிறது. இங்கே துக்கமோ துக்கமாகும். பாரதம் சத்யுகத்தில் சுகதாமமாக இருந்தது, கலியுகத்தில் துக்கதாமமாக இருக்கிறது. இந்த உலகத்தின் வரலாறு-புவியியல் திரும்பவும் நடக்க வேண்டும். இறைவன் ஒருவரே. உலகமும் ஒன்றே ஆகும். புதிய உலகத்தில் முதலில் பாரதமாகும். இப்போது பாரதம் பழையதாக இருக்கிறது இது பிறகு புதியதாக ஆக வேண்டும். இந்த உலகத்தின் வரலாறு-புவியியல் திரும்ப திரும்ப நடந்து கொண்டிருக்கிறது வேறு யாரும் இந்த விஷயங்களை தெரிந்திருக்க வில்லை. அனைவரும் ஒருவரைப் போல் இருப்பதில்லை. பதவி அங்கேயும் இருக்கும். அங்கே சிப்பாய்கள் இருப்பதில்லை ஏனென்றால் அங்கே பயம் இருப்பதில்லை. இங்கே பயம் இருக்கிறது ஆகையினால் தான் சிப்பாய் போன்றவர்களை வைக்கிறார்கள். பாரதத்தை துண்டு-துண்டாக்கி விட்டார்கள். சத்யுகத்தில் பிரிவினை இருப்பதில்லை. லஷ்மி - நாராயணனுடைய ஒரு இராஜ்யம் தான் நடக்கிறது. பாவம் எதுவும் நடப்பதில்லை. இப்போது பாபா கூறுகின்றார் - குழந்தைகளே, என்னுடைய வழிப்படி நடந்து என்னிடமிருந்து சதா சுகத்திற்கான ஆஸ்தியை அடையுங்கள். சத்கதிக்கான வழியை ஒரு பாபா தான் காட்டுகின்றார். இது சிவசக்தி சேனையாகும், இது பாரதத்தை சொர்க்கமாக மாற்றுகின்றது. இவர்கள் உடல்-மனம்-பொருள் அனைத்தையும் இந்த சேவையில் ஈடுபடுத்துகிறார்கள். அந்த பாபுஜி(காந்தி) கிறிஸ்துவர்களை(வெளிநாட்டினரை) விரட்டினார், இதுவும் நாடகத்தில் இருந்தது. ஆனால் அதன் மூலம் எந்த சுகமும் ஏற்பட வில்லை இன்னும் துக்கமாகத்தான் இருக்கிறது. உணவு இல்லை, இது கிடைக்கும், இது நடக்கும்......... என்று கட்டுக் கதைகளை விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தந்தையிடமிருந்து மட்டும் தான் கிடைக்கும். மற்றபடி இவையனைத்தும் அழிந்து விடும். பிறப்பைக் கட்டுபடுத்துங்கள் என்று சொல்கிறார்கள், அதற்காக மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள், எதுவும் நடக்காது. இப்போது கொஞ்சம் சண்டை ஆரம்பமாகி விட்டால் பஞ்சம் ஏற்பட்டுவிடும். ஒருவர் மற்றவர் மீது சண்டையிட்டுக் கொள்வார்கள். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) வாழ்ந்து கொண்டிருக்கும்போதே பாபாவிற்கு பலியாக வேண்டும் அதாவது பாபாவினுடையவர்களாக ஆகி பாபாவின் ஸ்ரீமத்படி மட்டுமே நடக்க வேண்டும். தங்களுக்கு சமமாக மாற்றும் சேவை செய்ய வேண்டும்.

 

2) அழிவற்ற ஞான ரத்தினங்களை தானம் செய்து ஜகதம்பாவிற்கு சமமாக அனைவருடைய மன ஆசைகளையும் பூர்த்தி செய்யக் கூடியவர்களாக ஆக வேண்டும்.

 

வரதானம்:

ஒவ்வொரு விசயமும் நன்மைக்கே என்று புரிந்து கொண்டு ஆடாது, அசையாத மகாவீர் ஆகக் கூடிய திரிகாலதர்சி ஆகுக.

 

எந்த ஒரு காரியத்தையும் ஒரு காலத்தின் பார்வையில் மட்டுமே பார்க்காதீர்கள், திரிகாலதர்சி ஆகி பாருங்கள். ஏன்? எதற்கு? என்பதற்குப் பதிலாக எது நடைபெறுகிறதோ அதில் நன்மை இருக்கிறது என்ற எண்ணம் மட்டுமே சதா இருக்க வேண்டும். பாபா என்ன கூறுகின்றாரோ அதை செய்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு பாபாவின் காரியத்தை பாபா பார்த்துக் கொள்வார். பாபா எப்படி நடத்துகின்றாரோ அப்படி நடந்து கொள்ள வேண்டும், அதில் நன்மை நிறைந்திருக்கிறது. இந்த நம்பிக்கையில் ஒருபோதும் குறையிருக்காது. எண்ணம் மற்றும் கனவிலும் வீண் எண்ணம் வரக் கூடாது, அப்போது தான் ஆடாது, அசையாத மகாவீர் என்று கூற முடியும்.

 

சுலோகன்:

யார் ஸ்ரீமத் வழிகாட்டுதல் படி வினாடியில் விடுபட்டவர்களாக மற்றும் அன்பானவர்களாக ஆகிவிடுகிறார்களோ அவர்களே தபஸ்விகள்.

 

ஓம்சாந்தி