10.11.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உங்கள் மனதில் உண்மையும் தூய்மையும் இருக்கும் போது உங்களுடைய உண்மையான (ஞான) கருத்துக்கள் கேட்பவர் மனதில் அம்பு போல் பதியும். உங்களுக்கு சத்தியமான தந்தையின் சேர்க்கை (துணை) கிடைத்துள்ளது. அதனால் உண்மையானவர்களாக ஆகுங்கள்.

 

கேள்வி :

நீங்கள் அனைவரும் மாணவர்கள், நீங்கள் எந்த விசயத்தின் சிந்தனை வைக்க வேண்டியது அவசியம்?

 

பதில் :

எப்போதாவது ஏதேனும் தவறு நேர்ந்தால் உண்மையைச் சொல்ல வேண்டும். உண்மை பேசுவதன் மூலம் தான் முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய சேவையை மற்றவரிடமிருந்து நீங்கள் பெறக்கூடாது. இங்கே சேவை பெற்றுக் கொண்டால் அங்கே சேவை செய்ய நேரிடும். மாணவர்களாகிய நீங்கள் நன்றாகப் படித்து மற்றவர்களுக்கும் கற்றுத் தருவீர்களானால் பாபாவும் குஷியடைவார். பாபா அன்புக்கடலானவர். அவருடைய அன்பே இது தான் - அவர் உங்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்து உயர்ந்த பதவி கிடைக்கச் செய்கிறார்.

 

பாடல் :

யார் இந்த விளையாட்டை யெல்லாம் உருவாக்கினார்?...........

 

ஓம் சாந்தி.

இப்போது செய்திகள் வருகின்றன - நாங்கள் கீதா ஜெயந்தியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று. இப்போது கீதைக்கு ஜென்மம் கொடுத்தவர் யார்? இது தான் தலைப்பு. ஜெயந்தி எனச் சொல்கின்றனர் என்றால் அவசியம் ஜென்மமும் ஏற்பட்டிருக்கும் இல்லையா? ஸ்ரீமத் பகவத்கீதை என்று சொல்கின்றனர் என்றால் அதற்கு ஜென்மம் கொடுப்பவரும் இருக்க வேண்டும் அல்லவா? அனைவரும் சொல்கின்றனர், ஸ்ரீகிருஷ்ண பகவான் வாக்கு என்பதாக. அப்போது ஸ்ரீகிருஷ்ணர் முதலில் வருகிறார், கீதை பின்னால் வருகின்றது. இப்போது கீதையைப் படைப்பவர் நிச்சயமாக வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரை அதுபோல் சொல்வதானால் முதலில் ஸ்ரீகிருஷ்ணர், பின்னால் கீதை வரவேண்டும். ஆனால் ஸ்ரீகிருஷ்ணரோ சின்னக் குழந்தையாக இருந்தார். அவர் கீதை சொல்ல முடியாது. இதை உறுதிப் படுத்த வேண்டியிருக்கும் - கீதைக்கு ஜென்மம் தருபவர் யார்? இது ஆழமான விசயமாகும். கிருஷ்ணரோ மாதாவின் கர்ப்பத்தில் ஜென்மம் எடுக்கிறார். அவரோ சத்யுகத்தின் இளவரசர். அவர் தாமே கீதை மூலமாக இராஜயோகத்தைக் கற்று இளவரசர் பதவி பெற்றுள்ளார். இப்போது கீதைக்கு ஜென்மம் கொடுப்பவர் யார்? பரமபிதா பரமாத்மாவா, அல்லது ஸ்ரீகிருஷ்ணரா? ஸ்ரீகிருஷ்ணரை உண்மையில் திரிலோகிநாத், திரிகாலதரிசி என்றும் சொல்ல இயலாது. திரிலோகிநாத், திரிகாலதரிசி என்று ஒருவரை மட்டுமே சொல்வார்கள். திரிலோகிநாத் என்றால் மூன்று உலகங்கள் மீதும் இராஜ்யம் செய்கின்றார். மூல வதனம், சூட்சும வதனம், ஸ்தூல வதனம் ஆகிய மூன்றும் திரிலோகம் எனச் சொல்லப் படுகின்றது. இவற்றை அறிந்திருப்பவர் திரிலோகிநாத், திரிகாலதரிசி பரமபிதா பரமாத்மா சிவன். இந்த மகிமை அவருடையதாகும், ஸ்ரீகிருஷ்ணருடையது அல்ல. கிருஷ்ணருடைய மகிமையாவது - 16 கலை சம்பூர்ண, சர்வகுண சம்பன்ன......... அவர் சந்திரனோடு ஒப்பிடப்படுகின்றார். பரமாத்மாவை சந்திரனோடு ஒப்பிட மாட்டார்கள். அவருடைய செயல்களே வேறு. அவர் கீதைக்கு ஜென்மம் கொடுக்கக் கூடிய படைப்பவராவார். கீதையினுடைய ஞானம் மற்றும் இராஜயோகத்தினால் தான் தேவதைகள் உருவாகின்றனர். மனிதர்களை தேவதை ஆக்குவதற்காக பாபா வந்து ஞானம் கொடுக்க வேண்டியுள்ளது. இப்போது இந்த ஞானத்தைத் தருபவர்கள் மிகவும் திறமைசாலிகளான பிரம்மாகுமார்-குமாரிகள் வேண்டும். அனைவரும் ஒரே மாதிரி சொல்லிப் புரிய வைக்க முடியாது. பெண்குழந்தைகள் அனைவருமே நம்பர்வார் உள்ளனர். தலைப்பும் இதுபோல் வைக்க வேண்டும் - ஸ்ரீமத் பகவத் கீதைக்கு ஜென்மம் கொடுத்தவர் யார்? இதற்கான வித்தியாசத்தைப் புரிய வைக்க வேண்டும். பகவானோ ஒருவர் தான் -பரமபிதா பரமாத்மா சிவன். அந்த ஞானக்கடல் மூலம் ஞானம் கேட்டு கிருஷ்ணர் இந்தப் பதவியை அடைந்திருந்தார். சகஜ இராஜயோகத்தின் மூலம் இந்தப் பதவியை எப்படிப் பெற்றார்? இதைப் புரிய வைக்க வேண்டும். பிரம்மா மூலம் தான் முதலில் பாபா பிராமணர்களைப் படைக்கிறார். அனைத்து வேத-சாஸ்திரங்களின் சாரத்தைச் சொல்கிறார். பிரம்மாவுடன் கூட பிரம்மா முகவம்சாவளியும் வேண்டும். பிரம்மாவுக்குத் தான் திரிகாலதரிசி பற்றிய ஞானம் கிடைக்கின்றது. திரிலோகி அதாவது மூன்று உலகங்கள் பற்றிய ஞானமும் கிடைக்கின்றது. மூன்று காலங்கள்-ஆரம்பம், இடை, கடைசியைச் சேர்த்து சொல்லப்படுகின்றது. மற்றும் மூன்று உலகங்கள் என்றால் மூல, சூட்சும, ஸ்தூல வதனம். இந்த வார்த்தைகளை நினைவு வைக்க வேண்டும். அநேகக் குழந்தைகள் மறந்து போகின்றனர். தேக அகங்காரமாகிய மாயா தான் மறக்கடித்துள்ளது. ஆக, கீதையின் படைப்பாளர் பரமபிதா பரமாத்மா சிவன். ஆவார், கிருஷ்ணரல்ல. பரமபிதா பரமாத்மா தான் திரிகாலதரிசி மற்றும் திரிலோகிநாத் ஆவார். கிருஷ்ணரிடமோ அல்லது லட்சுமி-நாராயணரிடமோ இந்த ஞானம் கிடையாது. ஆம், யார் இந்த ஞானத்தை பாபாவிடமிருந்து பெற்றார்களோ, அவர்கள் உலகத்தின் எஜமானர் ஆகி விட்டனர். எப்போது சத்கதி கிடைத்து விட்டதோ அதன் பிறகு இந்த ஞானம் புத்தியிலிருந்து மறைந்து விடுகின்றது. அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் அவர் ஒருவர் தான். அவர் புனர்ஜென்மம் எடுப்பவர் அல்ல. புனர்ஜென்மம் எடுப்பது ஆரம்பமானது, சத்யுகத்தின் தொடக்கத்திலிருந்து கலியுகத்தின் கடைசி வரை 84 பிறவிகள் எடுக்கின்றனர். இதைப் புரிய வைக்க வேண்டியுள்ளது. அனைவருமோ 84 பிறவிகள் எடுப்பதில்லை. யார் இந்த கீதையை எழுதினாரோ அவரைத் திரிகாலதரிசி எனச் சொல்ல மாட்டார்கள். முதலிலேயே எழுதப் பட்டுள்ளது, ஸ்ரீகிருஷ்ண பகவான் வாக்கு என்பதாக. இது முற்றிலும் தவறானதாகும். தவறாகவும் நிச்சயமாக ஆகியே தீர வேண்டும். எப்போது அனைத்து சாஸ்திரங்களும் தவறாக ஆகின்றனவோ, அப்போது பாபா வந்து சரியானதைச் சொல்கிறார். நிச்சயமாக பிரம்மா மூலம் வேத-சாஸ்திரங்களின் உண்மையான சாரத்தைச் சொல்கிறார். அதனால் அவர் சத்தியமானவர் எனச் சொல்லப்படுகிறார். இப்போது உங்களுடையது சத்தியமானவருடன் தொடர்பு. அவர் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்கிறார்.

 

பிரஜாபிதா பிரம்மா மற்றும் அவருடைய முகவம்சாவளி இந்த ஜெகதம்பா சரஸ்வதி. பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் அனைவரும் தங்களுக்குள் சகோதர-சகோதரிகள் ஆகின்றனர். எங்காவது கோவில்களில் போய் சொற்பொழிவு செய்ய வேண்டும். நடந்து சுற்றி வருவதற்காகவும் அங்கே அநேகர் வருகின்றனர். ஒருவருக்குப் புரிய வைத்தால் சத்சங்கம் கூடிவிடும். மயானத்திற்கும் செல்ல வேண்டும். அங்கே மனிதர்களுக்கு வைராக்கியம் ஏற்படுகின்றது. ஆனால் பாபா சொல்கிறார், என்னுடைய பக்தர்களுக்குப் புரிய வைப்பதன் மூலம் அவர்கள் உடனே புரிந்து கொள்வார்கள். ஆக, சிவபாபாவின் கோவில், லட்சுமி-நாராயணின் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். லட்சுமி-நாராயணரை பாபா மம்மா எனச் சொல்வதில்லை. சிவனை பாபா எனச் சொல்கின்றனர் என்றால் நிச்சயமாக மம்மாவும் இருப்பார். அவர் குப்தமாக உள்ளார். படைப்பவராகிய சிவபாபாவை தாய்-தந்தை என்று எப்படிச் சொல்கின்றனர்? - இந்த குப்தமான விசயத்தை யாருமே அறிந்து கொள்ள முடியாது. லட்சுமி - நாராயணருக்கென்று ஒரு குழந்தை மட்டுமே இருக்கும். மற்றப்படி இவருடைய பெயர் பிரஜாபிதா பிரம்மா. விஷ்ணு மற்றும் சங்கரை உயர்வாக வைப்பதில்லை. உயர்ந்தவராக திரிமூர்த்தி பிரம்மாவை வைக்கின்றனர். எப்படி படைப்பவர் என சிவ பரமாத்மாவைச் சொல்கின்றனர், அதுபோலவே பிரம்மாவும் கூட படைப்பவர் எனச் சொல்லப் படுகிறார். அவரோ அவிநாசியாகவே உள்ளார். படைப்பவர் என்ற சொல்லைச் சொன்னால் கேட்பார்கள் - எப்படிப் படைத்தார்? அவரோ படைப்பவர் தான். ஆனால் படைப்பு நடைபெறுவது பிரம்மா மூலமாக. இப்போது பிரம்மா மூலம் பரமாத்மா அனைத்து ஆத்மாக்களுக்கும் சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ஞானத்தைத் தருகிறார். வேத-சாஸ்திரங்கள் முதலிய அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாதனங்கள். பக்தி மார்க்கம் அரைக்கல்பம் நடைபெறுகின்றது. இது ஞான காண்டம் (ஞானத்தின் தொகுப்பு). எப்போது பக்தி முடிவடைகிறதோ, அப்போது அனைவரும் தூய்மையற்று கீழான நிலையில் ஆகி விடுகின்றனர். அப்போது நான் வருகிறேன். முதலில் சதோபிரதானில் இருந்து சதோ, ரஜோ, தமோவில் வருகின்றனர். மேலிருந்து வரும் தூய்மையான ஆத்மாக்கள் துக்கம் அனுபவிக்கின்ற அளவுக்கு அப்படிப்பட்ட கர்மம் எதையும் செய்திருக்கவில்லை. கிறிஸ்து பற்றிச் சொல்கின்றனர்-அவரைச் சிலுவையில் அறைந்தனர் என்று. ஆனால் அதுபோல் நடைபெற முடியாது. புது ஆத்மா தர்ம ஸ்தாபனை செய்வதற்காக வரும்போது அவருக்கு துக்கம் கிடைக்க முடியாது. ஏனென்றால் அவரோ கர்மாதீத் அவஸ்தாவில் உள்ள செய்தித் தூதுவராகிய ஆத்மா, தர்ம ஸ்தாபனை செய்வதற்காக வந்தார். சண்டையிலும் தூதுவரை அனுப்புகின்றனர் என்றால் அவர் வெள்ளைக்கொடி ஏந்தி வருகிறார். இதன் மூலம் மக்கள் புரிந்து கொள்கின்றனர், இவர் ஏதோ செய்தி கொண்டு வந்துள்ளார். அவருக்கு யாரும் கஷ்டம் கொடுப்பதில்லை. ஆக, தூதுவர் வரும்போது அவரை ஒன்றும் சிலுவையில் அறைய முடியாது. துக்கத்தை ஆத்மா தான் அனுபவிக்கின்றது. ஆத்மா நிர்லேப் (பாவ புண்ணியங்களுக்கு அப்பாற் பட்டது) அல்ல. இதை எழுத வேண்டும். ஆத்மாவை நிர்லேப் எனச் சொல்வது தவறாகும். இதை யார் சொன்னார்? சிவபகவான் சொன்னார். இந்தப் பாயின்ட்டை நீங்கள் குறித்து வைக்க வேண்டும். எழுதுவதற்கு மிகவும் விசால புத்தி வேண்டும். கண்காட்சியில் கிறிஸ்துவர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கும் கூட சொல்ல முடியும்-கிறிஸ்துவின் ஆத்மா சிலுவையில் அறையப் படவில்லை. மற்றப்படி அவர் யாருக்குள் பிரவேசமானாரோ, அந்த ஆத்மாவுக்கு துக்கம் ஏற்பட்டது. ஆக, இதுபோன்ற விசயங்களைக் கேட்டு வியப்படைவார்கள். அந்த தூய்மையான ஆத்மா வந்து தர்ம ஸ்தாபனை செய்தார். இறைத்தந்தையின் கட்டளைப்படி. இதுவும் டிராமா. டிராமாவையும் அநேகர் புரிந்து கொண்டுள்ளனர், ஆனால் அதன் முதல்-இடை-கடை பற்றி அவர்களுக்குத் தெரியாது. இப்படிப்பட்ட விசயங்களைக் கேட்டு அவர்கள் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். கிருஷ்ணருக்கும் யாரும் நிந்தனை செய்ய முடியாது. நிச்சயமாக நிந்தனைகள் இப்போது தான் கிடைத்துக் கொண்டிருக்கின்றன-யாருக்கு? சிவபாபாவுக்கு அல்ல. இந்த சாகாருக்கு (பிரம்மா). ஆசிரியரோ பாபா-தூய ஆத்மா, இவர் (பிரம்மா) தூய்மையற்றவர், தூய்மையாக ஆகிக் கொண்டிருக் கிறார். யார் புரிந்து கொண்டுள்ளனரோ, அவர்கள் எதையாவது பிதற்ற மாட்டார்கள். இல்லையென்றால் புரிந்து கொள்வார்கள், இதுவோ கற்பிக்கப் பட்டுள்ளது என்று. பிறகு அந்த விசயம் யாருக்கும் தோன்றுவதில்லை. புத்தியில் பதிவதில்லை. உண்மை-தூய்மை மிகவும் வேண்டும். யார் தாங்களே விகாரிகளாக உள்ளனரோ, அவர்கள் மற்றவர்களுக்கு காமம் மகாசத்ரு எனச் சொல்வார்களானால் அவர்கள் சொல்வது கேட்பவர்களின் புத்தியில் பதியாது. எப்படி பண்டிதர், உதாரணம் - ராம்-ராம் எனச் சொல்வதால் நதி அல்லது கடலைத் தாண்டிச் சென்று விடுவார்கள் என்று. அது இப்போதைய விசயம் தான். சிவபாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் இந்த விஷக்கடலில் இருந்து அப்பால் சென்று விடுவீர்கள். எந்தக் கடல்? இதைப் பண்டிதர்கள் அறிய மாட்டார்கள். வேஷ்யாலத்தில் இருந்து சிவாலயத்திற்குச் சென்று விடுவீர்கள். மிக நன்றாக ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். சொல்கின்றனர் இல்லையா-பாபா, நீங்கள் அன்பு காட்டினாலும் சரி, எட்டி உதைத்தாலும் சரி....... இங்கோ ஞானம் புரிய வைக்கப் படுகின்றது, அவ்வளவு தான். இருந்தாலும் அநேகர் பிணங்களாக ஆகி விடுகின்றனர். குழந்தைகளுக்கோ எழுதப் படிக்க சொல்லித்தரப்படுகின்றது. பாபா அன்புக்கடலாக உள்ளார். அதாவது படிப்பு சொல்லித் தந்து உயர்ந்த பதவி கிடைக்கச் செய்கிறார். இது அவரது அன்பாகும். பாபா படிப்பு சொல்லித் தருகிறார் எனும்போது படித்து, மற்றவர்களுக்கும் படிப்பு சொல்லித்தர வேண்டும். பாபாவைக் குஷிப் படுத்த வேண்டும். பாபாவின் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். பாபாவின் சேவை என்பது இது தான் - தன்னுடைய உடல்-மனம்-செல்வத்தின் மூலம் பாரதத்துக்கு உண்மையிலும் உண்மையான சேவை செய்யுங்கள். நீங்களோ உரத்த சப்தமிட்டுப் புரிய வைக்க வேண்டும். அனைவரும் வரிசைக்கிரமமாக உள்ளனர். இராஜதானியிலும் கூட வரிசைக்கிரமமாக இருப்பார்கள். டீச்சர் (சிவபாபா) புரிந்து கொள்வார், இவர் தெய்விக ராஜதானியில் என்ன நம்பர் பெறுவார் என்று. சேவை மூலம் புரிந்து கொள்ள முடியும், யார்-யார் முக்கியமானவராக ஆவார்கள் என்று. தானே கூடப் புரிந்து கொண்டுள்ளனர், நாம் பாபா-மம்மா அளவுக்கு சேவை செய்யவில்லை என்றால் தாச-தாசி ஆக வேண்டியது வரும். இன்னும் போனால் உங்கள் அனைவருக்கும் எல்லாமே தெரிய வரும். நாம் ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்பதெல்லாம் தெளிவாகி விடும். குழந்தைகள் நீங்கள் இச்சமயம் மாணவர்கள். இச்சமயம் நீங்கள் உங்களுக்கு தாசிகளை அமர்த்திக் கொண்டால் நீங்களே தாசிகளாக ஆக நேரிடும். இங்கேயே மகாராணி ஆவதென்பது தேக அபிமானமாகும். உண்மை கூற வேண்டும் - பாபா, இந்தத் தவறு நேர்ந்து விட்டது. இப்போது சம்பூர்ணமாகவோ அனைவரும் ஆகவில்லை. பரீட்சையில் அனைவரும் ஃபெயிலாகி விட்டாலோ வெட்கப் படவும் செய்கின்றனர். பாபாவுக்கு இரவில் சிந்தனை ஓடியது - மனிதர்கள் 21 பிறவிகள் எனச் சொல்கின்றனர், பாடவும் செய்கின்றனர். இப்போது இந்த ஈஸ்வரிய ஜென்மம் ஒன்று தனிப்பட்டது. 8 ஜென்மங்கள் சத்யுகத்தில், 12 ஜென்மங்கள் திரேதாயுகத்தில், 21 ஜென்மங்கள் துவாபரயுகத்தில், 42 ஜென்மங்கள் கலியுகத்தில். இந்த உங்களுடைய ஈஸ்வரிய ஜென்மம் அனைத்திலும் உயர்ந்த ஜென்மம் - தத்தெடுக்கப் பட்டது. பிராமணர்களாகிய உங்களுக்குத் தான் இந்த சௌபாக்கியசாலி ஜென்மம் உள்ளது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) அன்புக்கடலான பாபாவின் அன்புக்குப் பிரதிபலன் தரவேண்டும். நல்லபடியாகப் படித்து, பிறகு மற்றவர்களுக்குப் படிப்பிக்கவும் வேண்டும். ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்.

 

2) உண்மை மற்றும் தூய்மை மூலம் முதலில் தனக்குள் தாரணை செய்து பிறகு மற்றவர்களுக்கும் தாரணை செய்விக்க வேண்டும். ஒரு பாபாவின் சங்கத்திலேயே இருக்க வேண்டும்.

 

வரதானம்:

எல்லைகுட்பட்டவைகளிலிருந்து அப்பாற்பட்டவராகித் தன்னுடையவர் என்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தக்கூடிய அனுபவி மூர்த்தி ஆகுக.

 

எவ்வாறு ஒவ்வொருவருடைய மனதில் இருந்தும் என்னுடைய பாபா என்பது வெளிப்படுகிறதோ, அவ்வாறே அனைவரது மனதில் இருந்தும் இவர் என்னுடையவர், எல்லையற்ற சகோதரன் அல்லது சகோதரி, தீதி (மூத்த சகோதரி), தாதி ஆவார் என்பது வெளிப்பட வேண்டும். எங்கிருந்தாலும் எல்லையற்ற சேவைக்கு நீங்கள் நிமித்தம் ஆனவர்கள் ஆவீர்கள். எல்லைக்குட்பட்டவைகளிலிருந்து அப்பாற்பட்டு எல்லையற்ற பாவனை, எல்லையற்ற சிரேஷ்டமான விருப்பம் வைக்க வேண்டும், இதுவே தந்தையைப் பின்பற்றுவது ஆகும். இப்பொழுது இதை நடைமுறையில் அனுபவம் செய்யுங்கள் மற்றும் செய்வித்திடுங்கள். எவ்வாறு அனுபவம் ஆன வயோதிகர்களை ஐயா, பெரியவரே என்று கூறுகின்றனரோ, அவ்வாறே இவர் எல்லையற்ற அனுபவஸ்தர் அதாவது தன்னுடையவர் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

 

சுலோகன்:

பற்றற்ற நிலையின் மூலம் பறக்கும் கலையில் பறந்து கொண்டே இருந்தீர்கள் என்றால் கர்மம் என்ற கிளையின் பந்தனத்தில் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள்.

 

மாதேஸ்வரி அவர்களின் இனிய மகாவாக்கியம் -

 

மனிதர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றனர், 84 இலட்ச பிறவிகள் அல்ல பிரபு, குழந்தைகளாகிய எங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று இப்பொழுது நாம் கூறுகின்றோம். அக்கரை என்றால் என்ன? அக்கரை என்றால் பிறப்பு இறப்புச் சக்கரத்தில் வராமல் இருப்பது அதாவது முக்தி அடைவதாகும் என்று மனிதர்கள் புரிந்திருக்கின்றனர். இது மனிதர்களுடைய கூற்று ஆகும். ஆனால், அவர் கூறுகின்றார், குழந்தைகளே, எங்கு முழுமையான சுகம் சாந்தி உள்ளதோ, துக்கம் அசாந்தி இல்லையோ, அதை உலகம் என்று சொல்வதில்லை. மனிதர்கள் சுகத்தை விரும்புகிறார்கள் எனில் அது கூட இந்த வாழ்வில் இருக்க வேண்டும், சத்தியுகம் வைகுண்டம் தேவதைகளின் உலகத்தில் முழுமையான சுகம் நிறைந்த வாழ்க்கை இருந்தது. அந்த தேவதைகளை அமரர்கள் என்று கூறினார்கள். இப்பொழுது அமரர் என்ற வார்த்தைக்கும் கூட அர்த்தம் இல்லாமல் ஆகிவிட்டது. தேவதைகள் ஆயுள் மிகவும் நீளமானது, அவர்கள் ஒருபொழுதும் மரணம் அடைய மாட்டார்கள் என்பது கிடையாது. அவர்களுடைய இந்த கூற்று தவறானது. ஏனெனில், தேவதைகள் அவ்வாறு கிடையாது. அவர்களுடைய ஆயுள் சத்தியுக திரேதாயுகம் வரை மட்டும் இருப்பதில்லை, ஆனால், தேவி தேவதைகளின் பிறப்பானது சத்தியுக திரேதாயுகத்தில் மிக அதிகமாக இருக்கிறது, 21 பிறவிகளுக்கு அவர்கள் சிறப்பாக இராஜ்யம் செய்தனர் மற்றும் பிறகு, 63 பிறவிகள் துவாபரயுகத்தில் இருந்து கலியுகத்தின் இறுதி வரை மொத்தம் ஏறும் கலையில் 21 பிறவிகளும் பிறகு இறங்கும் கலையில் 63 பிறவிகளும் எடுக்கின்றனர், ஆக மொத்தம் மனிதர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றனர். மற்றபடி, மனிதர்கள் 84 இலட்ச பிறவிகளை அனுபவிக்கின்றார்கள் என்று மனிதர்கள் புரிந்திருக்கின்றனர், இந்தக் கூற்று தவறானதாகும். ஒருவேளை மனிதர்கள் தன்னுடைய பிறவிகளில் சுகம் துக்கம் ஆகிய இரண்டு பாகத்தையும் நடிக்க முடிகிறது எனில், பிறகு, விலங்காகப் பிறவி எடுத்து அனுபவிப்பதற்கான அவசியம் என்ன உள்ளது? இப்பொழுது மனிதர்களுக்கு இந்த ஞானமே கிடையாது. மனிதர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றனர், மற்றபடி சிருஷ்டியில் விலங்குகள், பறவைகள் முதலியவை மொத்தம் 84 இலட்ச உயிரினங்கள் உள்ளன. அனேக விதமான பிறவிகள் உள்ளன, அதிலும் கூட மனிதர்கள் மனிதப் பிறவியிலேயே தனது பாவம், புண்ணியத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர். மேலும், மிருகங்கள் தன்னுடைய பிறவிகளில் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றன. மனிதன் மிருகமாகப் பிறப்பதில்லை மற்றும் மிருகம் மனிதப் பிறவி எடுப்பதில்லை. மனிதர்கள் தன்னுடைய பிறவியிலேயே வினைப்பயன்களை அனுபவிக்க வேண்டியதாக உள்ளது, எனவே, துக்கம் சுகத்தின் உணர்வு வருகிறது. அவ்வாறே மிருகங்களும் கூட தன்னுடைய பிறவிகளில் சுகம் துக்கத்தை அனுபவிக்கின்றன. ஆனால், இந்த வினைப்பயன் எந்த செயல் செய்ததால் கிடைத்தது என்று புரிந்து கொள்ளும் புத்தி மிருகங்களுக்குக் கிடையாது. அவற்றினுடைய வினைப்பயனைக் கூட மனிதர்கள் உணர்கின்றனர். ஏனெனில், மனிதர்கள் புத்திவான்களாக உள்ளனர். மற்றபடி, மனிதர்கள் 84 இலட்ச பிறவிகளை அனுபவிக்கின்றனர் என்பது கிடையாது. ஜடமான மரங்களில் பல வகைகள் உள்ளன, ஜடமான மரம் கணக்கு வழக்கு உருவாகும் வண்ணம் அத்தகைய என்ன கர்மம், அகர்மம் செய்துள்ளது? என்பது புரிந்துகொள்வதற்கான சுலபமான விசயம் ஆகும். இறுதிக் காலத்தில் யார் தன்னுடைய புத்திரர்களை நினைத்து கவலையுடன் மரணத்தை அடைகிறார்களோ, அவர்கள் பன்றியாகப் பிறவி எடுத்து எடுத்து இறங்கிவிடுவார்கள் என்ற மகாவாக்கியத்தை குருநானக் கூறியிருக்கின்றார். ஆனால், மனிதர்கள் பன்றியின் பிறவி எடுக்கிறார்கள் என்பது இந்த மகாவாக்கியத்தின் அர்த்தம் அல்ல. ஆனால், பன்றியின் பிறப்பு என்றால், மனிதர்களின் காரியம் மிருகங்களின் காரியத்தைப் போன்று உள்ளதாக அர்த்தம். மற்றபடி, மனிதர்கள் ஒன்றும் மிருகங்களாகப் பிறவி எடுப்பதில்லை. மனிதர்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறு போதிக்கின்றனர். எனவே, தன்னை இந்த சங்கமயுக சமயத்தில், தன்னுடைய வாழ்க்கையை மாற்றி பாவ ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மா ஆக வேண்டும். நல்லது. ஓம்சாந்தி.

 

ஓம்சாந்தி