25.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! அவ்வப்பொழுது ஞானக்கடலிடம் வாருங்கள், ஞான ரத்தினங்களின் சாமான்களை நிரப்பிக் கொண்டு வெளியில் சென்று விநியோகியுங்கள், ஞான சிந்தனை செய்து சேவையில் ஈடுபடுங்கள்.

 

கேள்வி:

அனைத்தையும் விட நல்ல முயற்சி எது? பாபாவிற்கு எந்த குழந்தைகள் பிடித்தமானவர் களாக இருக்கிறார்கள்?

 

பதில்:

அனைவரது வாழ்க்கையையும் சீர்படுத்துவது, என்பது மிகவும் நல்ல முயற்சியாகும். குழந்தைகள் இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும். ஒருவேளை ஏதாவது தவறு நடந்து விட்டது என்றால் அதற்குப் பதிலாக நன்றாக சேவை செய்யுங்கள். இல்லையென்றால் அந்த தவறு மனதை அரித்துக் கொண்டே இருக்கும். பாபாவிற்கு ஞானி மற்றும் யோகி குழந்தைகள் தான் மிகவும் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள்.

 

பாட்டு:

யார் தலைவனோடு இருக்கிறார்களோ..........

 

ஓம் சாந்தி.

முன்னால் அமர்ந்து முரளியை கேட்பதற்கும் அல்லது டேப்பின் வழியாக முரளியை கேட்பது அல்லது (காகிதத்தின்) அச்சடித்த முரளி வழியாக படிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள முடியும். பாட்டில் கூட சொல்கிறார்கள், யார் தலைவனோடு இருக்கிறார்களோ...... மழை அனைவருக்காகவும் இருக்கிறது ஆனால் அவரோடு இருப்பதின் மூலம் பாபாவின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், வித-விதமான டைரக்ஷன்களை தெரிந்து கொள்வதால் நிறைய நன்மைகள் ஏற்படுகிறது. ஆனால் அப்படியே யாரும் அமர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் கிடையாது. சாமான்களை (ஞான இரத்தினங்கள்) நிரப்பிக் கொண்டு பிறகு சென்று சேவை செய்கிறார்கள். பிறகு வந்து சாமான்களை நிரப்ப வேண்டும். மனிதர்கள் சாமான்களை விற்பதற்கு வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். விற்று விட்டு பிறகு சாமான்களை வாங்குவதற்கு வருகிறார்கள். இதுவும் கூட ஞான ரத்தினங்கள் எனும் பொருட்களாகும். சாமான்களை வாங்குபவர்கள் வருவார்கள் அல்லவா. சிலர் டெலிவரி செய்வதில்லை, பழைய பொருட்களிலேயே இருக்கிறார்கள், புதியதை வாங்க விரும்புவதில்லை. இப்படியும் முட்டாள்கள் இருக்கிறார்கள். மனிதர்கள் தீர்த்தங்களுக்குச் செல்கிறார்கள், தீர்த்தங்கள் வராது அல்லவா ஏனென்றால் அவை ஜட சித்திரங்களாகும். இந்த விஷயங்களை குழந்தைகள் தான் தெரிந்துள்ளார்கள். மனிதர்கள் எதையும் தெரிந்திருக்கவில்லை. நிறைய பெரிய-பெரிய குருமார்கள் ஸ்ரீ ஸ்ரீ மடாதிபதிகள் போன்றவர்கள் மாணவர்களை தீர்த்தங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள், திரிவேணி சங்கமத்திற்கு எவ்வளவு பேர் செல்கிறார்கள். நதிக்கு சென்று தானம் செய்வதை புண்ணியம் என்று புரிந்து கொள்கிறார்கள். இங்கே பக்தியின் விஷயமே கிடையாது. இங்கே பாபாவிடம் வருகிறோம் என்றால் குழந்தைகள் புரிந்து கொண்டு பிறகு புரிய வைக்க வேண்டும். கண்காட்சியில் கூட மனிதர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றுகிறார்கள் அல்லவா? இதை குழந்தைகள் தான் தெரிந்துள்ளார்கள், அனைவரும் சுற்றுவதில்லை. இதை புரிய வைப்பதற்கு மிகுந்த யுக்தி வேண்டும். இந்த சக்கரத்தில் தான் மனிதர்கள் குழம்புகிறார்கள். மரத்தைப் பற்றி யாருக்குமே தெரியாது. சாஸ்திரங்களில் கூட சக்கரத்தைக் காட்டுகிறார்கள். கல்பத்தின் ஆயுளை சக்கரத்திலிருந்து கணக்கிடுகிறார்கள். சக்கரத்தில் தான் சண்டை இருக்கிறது. நாம் முழுமையாக சக்கரத்தைச் சுற்றுகிறோம். 84 பிறவிகள் எடுக்கிறோம், மற்றபடி இஸ்லாமியர், பௌத்தர்கள் போன்றோர் பின்னால் வருகிறார்கள். நாம் எப்படி அந்த சக்கரத்தில் சதோ, ரஜோ, தமோவை கடக்கின்றோம் என்பது நாடகச்சக்கரத்தில் காட்டப்பட்டிருக்கிறது. மற்றபடி வேறு யாரெல்லாம் வருகிறார்களோ, இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் போன்றவர்களை எப்படி காட்டுவது? அவர்களும் கூட சதோ, ரஜோ, தமோவில் வருகிறார்கள். நாம் நம்முடைய விராட ரூபத்தையும் காட்டுகிறோம். சத்யுகத்திலிருந்து கலியுகம் வரை முழுவதும் சுற்றி காட்டுகிறோம். குடுமி பிராமணர்களுடையதாகும் பிறகு வாயை சத்யுகத்திலும், தோள்களை துவாபர யுகத்திலும் பிறகு கால்களை கடைசியில் நிறுத்த வேண்டும். நம்முடைய விராட ரூபத்தை காட்ட வேண்டும். இன்னும் பிற தர்மத்தை சேர்ந்தவர்களை எப்படி காட்டுவது? அவர்களும் ஆரம்பத்தில் முதலில் சதோபிரதானம், பிறகு சதோ-ரஜோ-தமோ என்று வர வேண்டும். எனவே இதன்மூலம் ஒருபோதும் யாரும் நிர்வாணத்திற்குச் செல்லவில்லை என்பது நிரூபணமாகிறது. அவர்கள் இந்த சக்கரத்தில் வரத்தான் வேண்டும். ஒவ்வொருவரும் சதோ-ரஜோ-தமோவில் வரத்தான் வேண்டும். இப்ராஹிம், புத்தர், கிறிஸ்து போன்றவர்களும் மனிதர்களாக இருந்தார்கள். இரவில் பாபாவிற்கு நிறைய சிந்தனை ஓடுகிறது. சிந்தனையினால் உறக்கத்தின் போதையும் போய் விடுகிறது, உறக்கம் போய் விடுகிறது. புரியவைப்பதற்கு மிகவும் நல்ல யுக்தி வேண்டும். அவர்களுடைய விராட ரூபமும் உருவாக்க வேண்டும். அவர்களுடைய காலையும் கடைசியில் கொண்டு சென்று பிறகு எழுத்தில் புரிய வைக்க வேண்டும். கிறிஸ்து வரும்போது அவரும் கூட சதோ-ரஜோ-தமோவை கடக்க வேண்டியிருக்கிறது. சத்யுகத்தில் அவர் வருவதே இல்லை. அவர் பிறகு தான் வர வேண்டியிருக்கிறது. கிறிஸ்து சொர்க்கத்தில் வர மாட்டார். இது உருவாகின்ற உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். கிறிஸ்துவிற்கு முன்னால் கூட தர்மம் இருந்தது பிறகு அதே தர்மம் திரும்பவும் வரும் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாடகத்தின் இரகசியத்தைப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. பாபாவிடமிருந்து எப்படி ஒரு வினாடியில் ஆஸ்தி கிடைக்கிறது என்று முதல்-முதலில் பாபாவின் அறிமுகத்தை அளிக்க வேண்டும். ஒரு வினாடியில் ஜீவன்முக்தி என்பது பாடப்பட்டுள்ளது. பாருங்கள், பாபாவிற்கு எவ்வளவு சிந்தனை செல்கிறது. ஞான சிந்தனை செய்வது பாபாவின் நடிப்பாகும். இறை தந்தையின் பிறப்புரிமை, இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளது. ஜீவன் முக்தி என்ற வார்த்தையை எழுத வேண்டும். எழுத்து தெளிவாக இருந்தால் புரிய வைப்பதற்கு சகஜமாக இருக்கும். ஜீவன் முக்தியின் ஆஸ்தி கிடைத்துள்ளது. ஜீவன் முக்தியில் ராஜா, ராணி, பிரஜைகள் அனைவரும் இருக்கிறார்கள். எனவே எழுத்தை சரி செய்ய வேண்டும். சித்திரம் இல்லாமலும் புரிய வைக்கலாம். வெறும் சைகையினால் மட்டும் கூட புரிய வைக்கலாம். இது பாபா, இது ஆஸ்தி என்று புரிய வைக்கலாம். யார் யோகம் நிறைந்தவர்களாக (சதா பரமாத்மா நினைவில்) இருக்கிறார்களோ அவர்கள் நல்ல விதத்தில் புரிய வைக்க முடியும். அனைத்தும் யோகத்தில் (நினைவில்) தான் ஆதாரப்பட்டிருக்கிறது. யோகத்தின் மூலம் புத்தி தூய்மையடைகிறது, அப்போது தான் தாரணை ஆக முடியும். இதில் ஆத்ம-அபிமான நிலை வேண்டும். அனைத்தையும் மறக்க வேண்டும். சரீரத்தை மறக்க வேண்டும். அவ்வளவு தான், இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும், இந்த உலகம் அழிந்து போகக் கூடியதாகும். இந்த பிரம்மா பாபாவிற்கு சகஜமாகும் ஏனென்றால் இவருடைய தொழிலே இது தான் ஆகும். முழு நாளும் புத்தி இதில் ஈடுபட்டிருக்கிறது. நல்லது, யார் குடும்ப விவகாரங்களில் இருக்கிறார்களோ அவர்கள் கர்மம் செய்ய வேண்டும். ஸ்தூல கர்மம் செய்வதின் மூலம் அந்த விஷயங்கள் மறந்து விடுகிறது, பாபாவின் நினைவு மறந்து விடுகிறது. பாபா, தானே அவருடைய அனுபவத்தை கூறுகின்றார். பாபாவை நினைவு செய்கிறேன், பாபா இந்த ரதத்திற்கு ஊட்டிக் கொண்டிருக்கிறார் பிறகு மறந்து விடுகின்றேன், எனும்போது பாபா சிந்தனை செய்கின்றார் நானே மறந்து விடுகின்றேன் எனும்போது பாவம் இவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும். இந்த நினைவின் சார்ட்டை எப்படி அதிகரிப்பது? குடும்ப மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டமாகும். அவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. பாபா புரிய வைக்கலாம். யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் முடிவை எழுதி அனுப்பலாம். உண்மையில் கடினம் என்பதை பாபா தெரிந்திருக்கிறார். இரவில் முயற்சி செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். ஒருவேளை நீங்கள் யோகயுக்தமாக இருந்து ஞானத்தை சிந்தனை செய்து கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களுடைய களைப்பு அனைத்தும் இறங்கி விடும், பாபா தன்னுடைய அனுபவத்தைக் கூறுகின்றார் - எப்போது மற்ற விஷயங்களின் பக்கம் புத்தி சென்று விடுகிறதோ அப்போது தலை சூடாகி விடுகிறது. பிறகு அந்த புயல்களிலிருந்து புத்தியை நீக்கி இந்த ஞான சிந்தனையில் ஈடுபடுகின்றேன் எனும்போது புத்தி லேசாகி விடுகிறது. மாயையின் புயல் அனேக விதமாக வருகிறது. இந்த பக்கம் புத்தியை ஈடுபடுத்துவதின் மூலம் அந்த களைப்பு முழுவதும் இறங்கி விடுகிறது, புத்தி புத்துணர்வடைந்து விடுகிறது. பாபாவின் சேவையில் ஈடுபட்டு விடும்போது யோகம் மற்றும் ஞானத்தின் வெண்ணெய் கிடைத்து விடுகிறது. இந்த பாபா அனுபவத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். தந்தை குழந்தைகளுக்கு சொல்வார் அல்லவா - இப்படி-இப்படியெல்லாம் நடக்கும், மாயையின் விகல்பங்கள் வரும். புத்தியை அந்தப்பக்கம் ஈடுபடுத்த வேண்டும். சித்திரத்தை எடுத்துக் கொண்டு அதைப்பற்றி சிந்தனை செய்தீர்கள் என்றால் மாயையின் புயல் ஓடி விடும். மாயை நினைவில் இருக்க விடாது என்பதை பாபா தெரிந்திருக்கிறார். குறைவானவர்களே முழுமையாக நினைவில் இருக்கிறார்கள். பெரிய-பெரிய விஷயங்களை நிறைய பேசுகிறார்கள். பாபாவின் நினைவில் இருந்தால் புத்தி தெளிவாக இருக்கும். நினைவு செய்வதைப் போன்ற வெண்ணெய் வேறு எதுவும் இல்லை. ஆனால் ஸ்தூலமான சுமை நிறைய இருப்பதால் நினைவு குறைந்து விடுகிறது.

 

பாருங்கள் மும்பையில் போப் வந்தார், அவருக்கு எவ்வளவு மகிமை இருந்தது, என்னவோ அனைவருடைய பகவானும் வந்து விட்டதைப் போல் இருந்தது. சக்தி மிக்கவர் அல்லவா. பாரதவாசிகளுக்கு தங்களுடைய தர்மத்தைப் பற்றி தெரியவில்லை. தங்களுடைய தர்மம் ஹிந்து தர்மம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஹிந்து என்பது ஒரு தர்மமே இல்லை. எங்கிருந்து வந்தது, எப்போது ஸ்தாபனை ஆனது, என்பது யாருக்கும் தெரியாது. உங்களிடத்தில் ஞானத்தின் எழுச்சி வர வேண்டும். சிவசக்திகள் ஞானத்தில் பொங்கி எழ வேண்டும். அவர்கள் சக்திகளை சிங்கத்தின் மீது காட்டியுள்ளார்கள். அனைத்தும் ஞானத்தின் விஷயமாகும். கடைசியில் உங்களிடத்தில் சக்தி வரும்போது சாது சன்னியாசிகள் போன்றவர்களுக்கும் கூட புரிய வைப்பீர்கள். அந்தளவிற்கு ஞானம் புத்தியில் இருந்தால் தான் பொங்கி வர முடியும். சக்ராத்தா கிராமத்தில் விவசாயிகளுக்கு டீச்சர் படிப்பிக்கும் போது அவர்கள் படிக்கவேயில்லை. அவர்களுக்கு விவசாயம் தான் நன்றாக இருக்கிறது. அதுபோல் இன்றைக்கு இருக்கும் மனிதர்களுக்கு இந்த ஞானத்தை கொடுத்தீர்கள் என்றால் இது நன்றாக இல்லை, நாங்கள் சாஸ்திரம் படிக்க வேண்டும், என்று சொல்வார்கள். ஆனால் பகவான் தெளிவாக கூறுகின்றார், ஜபம், தவம், தானம், புண்ணியம் போன்றவை செய்வதின் மூலம் அல்லது சாஸ்திரங்களை படிப்பதின் மூலம் என்னை யாரும் அடையவில்லை. நாடகத்தை தெரிந்திருக்க வில்லை. நாடகத்தில் நடிகர்கள் இருக்கிறார்கள், நடிப்பை நடிப்பதற்காக இந்த சரீரத்தை எடுத்திருக்கிறார்கள் என்று அவர்கள் புரிந்திருக்கிறார்களா என்ன? இது முட்கள் நிறைந்த காடாகும். ஒருவர் மற்றவரை முள் போன்று குத்திக் கொண்டிருக்கிறார்கள், கொள்ளை, கொலை செய்கிறார்கள். முகம் மனிதர்கள் போன்று இருந்தாலும் நடத்தை குரங்கைப் போல் இருக்கிறது. பாபா அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். யாராவது புதியவர்கள் கேட்டால் சூடாகி விடுவார்கள். குழந்தைகள் சூடாக மாட்டார்கள். நான் குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். தாய்-தந்தையர் குழந்தைகளை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். குழந்தைகளை தந்தை அடித்தாலும் யாரும் எதுவும் செய்ய முடியுமா என்ன? குழந்தைகளின் நடத்தையை மாற்றுவது தாய்-தந்தையரின் கடமையாகும். ஆனால் இங்கு விதி கிடையாது. எப்படிபட்ட கர்மத்தை நான் செய்வேனோ, என்னை பார்த்து மற்றவர்களும் செய்வார்கள். எனவே பாபா (பிரம்மா) என்ன ஞான சிந்தனை செய்தாரோ அதையும் சொன்னார். இவர் முதல் நம்பரில் இருக்கின்றார், இவர் 84 பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. அப்படியென்றால் இன்னும் இருக்கின்ற மற்ற தர்ம ஸ்தாபகர்கள் எப்படி நிர்வாணத்திற்கு (சப்தமற்ற உலகத்திற்கு) செல்ல முடியும். அவர்கள் சதோ, ரஜோ, தமோவில் கண்டிப்பாக வர வேண்டும். முதல் நம்பரில் லஷ்மி- நாராயணன் உலகத்திற்கு எஜமானர்களாக இருக்கிறார்கள். அவர்களும் கூட 84 பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. மனித சிருஷ்டியில் யார் உயர்ந்த புதிய மனிதராக இருக்கின்றாரோ அவரோடு புதிய பெண்மணி வேண்டும். இல்லையென்றால் பெண் இல்லாமல் எப்படி பிறப்பு நிகழும்? சத்யுகத்தில் புதிய மனிதர்கள் இந்த லஷ்மியும் நாராயணனும் ஆவர். பழையதிலிருந்து தான் புதியது உருவாகிறது. இவர்கள் முழு சக்கரத்திலும் நடிக்கக் கூடியவர் களாவர். மற்றவர்கள் அனைவரும் கூட சதோவிலிருந்து தமோவிற்கு வருகிறார்கள், பழையவர்களாக ஆகிறார்கள் பிறகு பழையதிலிருந்து புதியவர்களாக ஆகிறார்கள். எப்படி கிறிஸ்து முதலில் புதியவராக வந்தார் பிறகு வயதானவராக ஆகி சென்றால் பிறகு புதியவராக ஆகி அவருடைய நேரத்திற்கு வருவார். இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். இதில் யோகம் நன்றாக இருக்க வேண்டும். முழுமையான அர்ப்பணம் வேண்டும் அப்போது தான் ஆஸ்திக்கு உரிமையுடையவர்களாக ஆக முடியும். அர்ப்பணம் ஆனால் பிறகு இப்படி-இப்படி செய்யுங்கள் என்று பாபா வழி சொல்ல முடியும். யாராவது அர்ப்பணம் ஆகிறார்கள், விவகாரங்களிலும் இருங்கள் அப்போது புத்தியை பற்றி தெரிய வரும் என்று சொல்கிறேன். விவகாரங்களில் இருந்து கொண்டே ஞானத்தை எடுங்கள், தேர்ச்சி பெற்று காட்டுங்கள். குடும்பத்திலும் செல்லக் கூடாது. பிரம்மாச்சாரியாக இருந்தால் நல்லது. பாபா ஒவ்வொருவருடைய கணக்கையும் கேட்கின்றார். மம்மா-பாபாவின் வளர்ப்பை எடுத்திருக்கிறீர்கள் என்றால் பிறகு கடனையும் தீர்க்க வேண்டும் அப்போது பலம் கிடைக்கும். இல்லையென்றால் பாபாவும் கூறுவார், நான் இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன், என்னை கைவிட்டு விட்டாய் என்று. ஒவ்வொருவருடைய நாடியையும் பார்த்து பிறகு வழி சொல்லப்படுகிறது. இவரின் மூலம் தவறு நடந்து விடுகிறது என்றால் பாபா அதை தவறு இல்லாமல் சரி செய்து விடுகிறார். இவரும் (பிரம்மா) கூட ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்படி நடந்து கொண்டிருக்கிறார். எப்போதாவது நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது என்றால் நாடகத்தில் இருந்தது என்று புரிந்து கொள்கிறார். வருங்காலத்தில் பிறகு இப்படிபட்ட விஷயம் நடக்கக் கூடாது. தவறு தங்களுடைய மனதை அரிக்கிறது. தவறு செய்தால் அதற்கு பதிலாக பிறகு நிறைய சேவையில் ஈடுபட வேண்டும், நிறைய முயற்சி செய்ய வேண்டும். யாருடைய வாழ்க்கையையாவது திருத்துவது தான் முயற்சியாகும்.

 

எனக்கு யோகி மற்றும் ஞானி குழந்தைகள் தான் அனைத்திலும் பிடித்தமானவர்கள் என்று பாபா கூறுகின்றார். பாபா நினைவில் இருந்து உணவு சமைத்து, பரிமாறினால் அதிக முன்னேற்றம் ஏற்படும். இது சிவபாபாவின் பண்டாரா ஆகும். எனவே சிவபாபாவின் குழந்தைகள் கண்டிப்பாக யோகயுக்தமாக இருப்பார்கள். மெது-மெதுவாக நிலை உயர்ந்ததாக ஆகிறது. கண்டிப்பாக நேரம் பிடிக்கிறது. ஒவ்வொருவருடைய கர்ம பந்தனம் அவரவருடையதாக இருக்கிறது. குமாரிகளுக்கு எந்த சுமையும் இல்லை. ஆண்குழந்தைகளுக்கு இருக்கிறது.. குழந்தை வளர்ந்து விட்டால் தாய்-தந்தையருக்கு சுமை கூடுகிறது. தந்தை இவ்வளவு புரிய வைத்தார், இவ்வளவு காலம் வளர்த்தார் என்றால் அவர்களை பராமரிக்க வேண்டும். கணக்கை முடிக்க வேண்டும் அப்போது அவர்களுடைய மனமும் குஷியாகும். யார் நல்ல குழந்தைகளாக இருப்பார்களோ அவர்கள் பயணம் முடித்து திரும்பும் போது அனைத்தையும் தந்தைக்கு முன்னால் வைக்கிறார்கள். கடனை தீர்க்க வேண்டும். மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். உயர்ந்த பதவி அடையக் கூடியவர்கள் தான் சிங்கத்தைப் போல் எழுச்சி மிக்கவர்களாக இருப்பார்கள். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) பாபா நினைவில் இருந்து உணவு சமைக்க வேண்டும், யோகத்தில் இருந்து தான் உணவு உண்ண வேண்டும் மற்றும் பரிமாற வேண்டும்.

 

2) பாபா என்ன புரிய வைத்தாரோ அதை நல்ல விதத்தில் சிந்தனை செய்து யோகயுக்தமாக இருந்து மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

 

வரதானம்:

தந்தைக்கு சமானமாக ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் கிருபை அல்லது கருணை புரியக் கூடிய மாஸ்டர் கருணையுள்ளம் உடையவர் ஆவீர்களாக.

 

எப்படி தந்தை கருணையுள்ளம் கொண்டவராக இருக்கிறாரோ, அதே போல குழந்தைகளாகிய நீங்களும் அனைவர் மீதும் கிருபை அல்லது கருணை புரியுங்கள். ஏனெனில் தந்தைக்கு சமானமாக கருவி ஆகி உள்ளீர்கள். பிராமண ஆத்மாவிற்கு ஒரு பொழுதும் எந்தவொரு ஆத்மாவிடத்தும் வெறுப்பு வரமுடியாது. ஒருவர் கம்சனாக இருந்தாலும் சரி, ஜராசாந்தியாக இருந்தாலும் சரி அல்லது இராவணனாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி ஆனால் அவர்களை கருணையுள்ள தந்தையின் குழந்தைகள் வெறுக்க மாட்டார்கள். பரிவர்த்தனையின் பாவனை நன்மையின் பாவனை கொண்டிருப்பார்கள். ஏனெனில் எப்படி இருந்தாலும் நம்முடைய பரிவாரம் ஆகும், ஏதோ ஒன்றில் வசப்பட்டுள்ளார்கள் ஆகவே அவர்கள் மீது வெறுப்பு வராது.

 

சுலோகன்:

மாஸ்டர் சூரியனாக ஆகி சக்திகள் என்ற கிரணங்கள் மூலமாக பலவீனங்கள் என்ற அசுத்தத்தை சாம்பலாக்கி விடுங்கள்.

 

ஓம்சாந்தி