22.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! புத்தியை இங்கும் அங்கும் அலையவிடுவதற்குப் பதிலாக (பரம்தாமம்) வீட்டில் தந்தையை நினைவு செய்யுங்கள். வெகுதூரம் வரையும் புத்தியை எடுத்து செல்லுங்கள் -இதற்குத் தான் நினைவு யாத்திரை என்று கூறப்படுகிறது.

 

கேள்வி:

எந்த குழந்தைகள் உண்மையான உள்ளத்துடன் தந்தையை நினைவு செய்கிறார்களோ அவர்களின் அடையாளம் என்னவாக இருக்கும்?

 

பதில்:

(1) உண்மையான உள்ளத்துடன் நினைவு செய்யும் குழந்தைகள் மூலமாக ஒரு பொழுதும் எந்த விகர்மமும் ஏற்பட முடியாது. தந்தைக்கு களங்கம் ஏற்படும் வகையிலான செயல்கள் ஒருபோதும் அவர்கள் மூலமாக நடக்காது. அவர்களுடைய நடத்தை மிகவும் நன்றாக இருக்கும். (2) அவர்கள் உணவு உட்கொள்ளும் பொழுதும் நினைவில் இருப்பார்கள். தூக்கம் கூட குறித்த நேரத்தில் இயல்பாகவே கலைந்து விடும். அவர்கள் மிகவும் சகிப்புத் தன்மை உடையவர்களாக, மிகவும் இனிமை யானவர்களாக இருப்பார்கள். தந்தையிடம் எந்த விஷயத்தையும் மறைக்க மாட்டார்கள்.

 

பாடல்:

நமது தீர்த்தம் தனிப்பட்டது.. .. ..

 

ஓம் சாந்தி.

தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். ஒரு சிலர் நிராகார தந்தை என்று நினைப்பார்கள். ஒரு சிலர் சாகார தந்தை என்று நினைப்பார்கள். ஒரு சிலர் தாய் தந்தை என்று நினைப்பார்கள். இதனை தாய் தந்தை புரிய வைக்கிறார்கள் என்றாலும் கூட, தாய் தனி மற்றும் தந்தை தனி என்று ஆகி விடுகிறார்கள். நிராகாரமானவர் புரிய வைத்தார் என்றால் நிராகாரமானவர் தனி, சாகாரமானவர் தனி என்றாகி விடுகிறது. ஆனால் இதைப் புரிய வைப்பவர் தந்தை ஆவார். ஸ்தூல (தீர்த்தம்) யாத்திரை மற்றும் ஆன்மீகத்தீர்த்தம் (யாத்திரை) என்று உள்ளது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். அந்த ஸ்தூல தீர்த்தம் அரைக் கல்பத்தினுடையது ஆகும். பல பிறவிகளாக இவை நடந்து வந்துள்ளன என்று கூறினோம் என்றால் ஆரம்ப முதல் கொண்டு இவை நடந்து வந்துள்ளன. அனாதி ஆகும் என்று நினைத்து கொள்வார்கள். அப்படி ஒன்றும் இல்லை. எனவே அரைக்கல்பமாக என்று கூறப்படுகிறது. இப்பொழுது தந்தை வந்து இந்த தீர்த்தங்களின் ரகசியத்தைப் புரிய வைத்துள்ளார். மன்மனாபவ என்றால் ஆன்மீகத் தீர்த்தம். அவசியம் ஆத்மாக்களுக்குத் தான் புரிய வைக்கிறார் மற்றும் புரிய வைப்பவர் பரமபிதா ஆவார். வேறு யாரும் புரிய வைக்க முடியாது. ஒவ்வொருவரும் அவரவர் தர்ம ஸ்தாபகரின் தீர்த்தத்திற்குச் செல்கிறார்கள். இதுவும் அரைக் கல்பத்தின் பழக்க வழக்கம் ஆகும். எல்லோரும் தீர்த்தங்களுக்குச் (புன்னியதலம்) செல்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்குமே சத்கதி அளிக்க முடியாது. சுயம் அவர்களே அடிக்கடி தீர்த்தங்களுக்குச் சென்று கொண்டே இருப்பார்கள். அமரநாத், பத்ரிநாத் பக்கம் வருடா வருடம் யாத்திரை செல்ல கிளம்புகிறார்கள். பின் நான்கு தாமங்களுக்குச் செல்கிறார்கள். இப்பொழுது இந்த ஆன்மீகத் தீர்த்தம் பற்றி நீங்கள் மட்டும் அறிந்துள்ளீர்கள். மன்மனாபவ மற்றும் ஸ்தூல தீர்த்தங்கள் ஆகியவற்றை விட்டு விடுங்கள். என்னை நினைவு செய்யுங்கள் அப்பொழுது நீங்கள் உண்மையிலும் உண்மையான சொர்க்கத்திற்குச் சென்று விடுவீர்கள் என்று ஆன்மீக, சுப்ரீம் தந்தை புரிய வைத்துள்ளார். யாத்திரை என்றால் வருவது போவது. அதுவோ இப்பொழுது தான் ஆகிறது. சத்யுகத்தில் யாத்திரை இருக்காது. நீங்கள் எப்பொழுதிற்குமாக சொர்க்கத்தின் ஆசிரமத்தில் போய் அமருவீர்கள். இங்கோ பெயர் மட்டும் வைத்து விடுகிறார்கள். உண்மையில் இங்கு சொர்க்க ஆசிரமம் என்பது இருப்பதில்லை. சொர்க்க ஆசிரமம் என்று சத்யுகத்திற்குக் கூறப்படுகிறது. நரகத்திற்கு இந்த வார்த்தை கூற முடியாது. நரகவாசிகள் நரகத்தில் தான் இருப்பார்கள். சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் இருப்பார்கள். இங்கோ உலகாய ஆசிரமங்களுக்குச் சென்று பிறகு திரும்பி வருகிறார்கள். இதை எல்லை யில்லாத தந்தை புரிய வைக்கிறார். பார்க்கப்போனால் உண்மையிலும் உண்மையான எல்லையில்லாத குரு ஒரே ஒருவர் தான். எல்லையில்லாத தந்தையும் ஒருவர் தான். "ஆகா கான் குரு" என்றும் கூறுகிறார்கள். ஆனால் அவர் ஒன்றும் குரு கிடையாது. சத்கதி அளிக்கும் வள்ளலோ இல்லை அல்லவா? ஒரு வேளை சத்கதி தாதாவாக இருந்திருந்தால் சுயம் அவரும் கதி சத்கதியில் சென்றிருக்க வேண்டும். அவரை குரு என்று கூற மாட்டார்கள். இதுவோ பெயர் மட்டும் வைத்துள்ளார்கள். சீக்கியர்கள் சத்குரு அகால் என்கிறார்கள். உண்மையில் சத்ஸ்ரீ அகால் ஒரே ஒரு பரமாத்மா ஆவார். அவருக்கு சத்குரு என்றும் கூறுகிறார்கள். அவரே சத்கதி செய்பவர் ஆவார். இஸ்லாமியர், பௌத்தியர் அல்லது பிரம்மா ஆகியோர் சத்கதி அளிக்க முடியாது. குரு பிரம்மா, குரு விஷ்ணு என்றும் கூறுகிறார்கள் தான். இப்பொழுது குரு என்று பிரம்மாவிற்குக் கூறினாலும் சரி மற்றபடி குரு விஷ்ணு, குரு சங்கர் என்றோ ஆக முடியாது. குரு பிரம்மா என்ற பெயர் அவசியம் உள்ளது. ஆனால் பிரம்மா குருவிற்கும் ஒரு குரு இருப்பார் அல்லவா?சத் ஸ்ரீ அகால் என்பவருக்கோ பின் யாரும் குரு கிடையாது. அவர் ஒரே ஒரு சத்குரு ஆவார். மற்றபடி வேறு எந்த ஒரு குருவோ அல்லது தத்துவ ஞானியோ அல்லது ஆன்மீக ஞானம் அளிப்பவரோ அந்த ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை. புத்தர் தனக்குப் பின்னால் அனைவரையும் அழைத்து வருகிறார். அவர்கள் ரஜோ தமோவில் வந்தே ஆக வேண்டும். அவர்கள் ஒன்றும் சத்கதிக்காக வருவதில்லை. சத்கதி தாதா என்ற பெயர் ஒரே ஒருவருடையது தான் பிரசித்தமாக உள்ளது. அவருக்கு பிறகு சர்வ வியாபி என்று கூறுகிறார்கள். பிறகு குருவிடம் செல்வதற்கான அவசியம் தான் என்ன? நானும் குரு, நீயும் குரு. நானும் சிவன் நீயும் சிவன் - இதனால் யாருடைய வயிறும் நிரம்புவதில்லை. மற்றபடி ஆம், தூய்மையாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு மதிப்பு இருக்கிறது. சத்கதி அளிக்க முடியாது. அதற்கு ஒரே ஒருவர் தான். அவருக்குத் தான் உண்மையிலும் உண்மையான குரு என்று கூறப்படுகிறது. குருக்களோ அநேக விதமானோர் உள்ளார்கள். கற்பிக்கக் கூடிய ஆசிரியருக்கு கூட குரு என்று கூறுகிறார்கள். இவரும் ஆசிரியர் ஆவார். மாயையுடன் போரிட கற்பிக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு திரிகாலதரிசி என்பதன் ஞானம் உள்ளது. அதன் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி ஆகிறீர்கள். சிருஷ்டியின் சக்கரத்தை அறிந்திருப்பவர்கள் தான் சக்கரவர்த்தி ராஜா ஆகிறார்கள். நாடகத்தின் சக்கரத்தை அல்லது கல்ப விருட்சத்தின் முதல், இடை, கடையை அறிவது - விஷயம் ஒன்று தான். சக்கரத்தின் அடையாளம் நிறைய சாஸ்திரங்களிலிலும் எழுதப்பட்டுள்ளது. தத்துவங்களின் புத்தகம் தனியானதாக உள்ளன. புத்தகங்களோ அநேகவித மானதாக இருக்கின்றன. இங்கு உங்களுக்கு எந்த ஒரு புத்தகத்தின் அவசியமும் இல்லை. உங்களுக்கு தந்தை என்ன கற்பிக்கிறாரோ அதைப் புரிந்து கொள்ள வேண்டும். தந்தையின் சொத்தின் மீது அனைத்து குழந்தைகளுக்கும் உரிமை உள்ளது. ஆனால் சொர்க்கத்தில் எல்லோருக்கும் ஒன்று போல சொத்தோ இருக்காது. யார் தந்தையினுடையவர் ஆனார்களோ அவர்களுக்கு ராஜ்யம் இருக்கிறது. பாபா என்று கூறினார்கள், சிறிதளவாவது ஞானம் கேட்டார்கள் என்றால் அவர்கள் உரிமை உடையவர்கள் ஆகி விடுகிறார்கள். ஆனால் வரிசைக்கிரமமாக உள்ளார்கள். விஷ்வ மகாராஜா எங்கே, பிரஜைகள், தாசர் தாசிகள் எங்கே! இந்த முழு ராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. தந்தையினுடையவர் ஆகும் பொழுது சொர்க்கத்தின் ஆஸ்தியோ அவசியம் கிடைக்கிறது. ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கிறது. இது புது விஷயங்கள் ஆன காரணத்தால் மனிதர்கள் புரிந்து கொள்வது இல்லை. சத்யுகத்தில் விகாரம் இருப்பதில்லை என்று தந்தை புரிய வைக்கிறார். மாயையே இல்லை என்றால் விகாரம் எங்கிருந்து வரும்? மாயையின் இராஜ்யம் துவாபரத்திலிருந்து ஆரம்பமாகிறது. இது இராவணனின் 5 சங்கிலிகள் ஆகும். அங்கு இது இருக்காது. அதிகமாக வாதாடக் கூடாது. அது இருப்பதே சம்பூர்ண நிர்விகாரி உலகமாக. மற்றபடி குழந்தைகள் பிறப்பதற்கான, சிம்மாசனத்தில் அமருவதற்கான, அரண்மனை ஆகியவை அமைப்பதற்கான பழக்க வழக்கம் இருக்கும் - அவை அவசியம் நன்றாகத் தான் இருக்கும். ஏனெனில் சொர்க்கம்.

 

குழந்தைகளே, இந்த ஆன்மீக யாத்திரையில் நீங்கள் நிரந்தரமாக புத்தி யோகத்தை ஈடுபடுத்த வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார். இது மிகவும் சகஜமானது. பக்தி மார்க்கத்தில் கூட அதிகாலை எழுந்திருக்கிறார்கள். ஞான மார்க்கத்தில் கூட அதிகாலை எழுந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். வேறு எந்த புத்தகம் ஆகியவையும் படிக்க வேண்டியதில்லை. என்னை நினைவு செய்யுங்கள் என்று மட்டுமே கூறுகிறார். ஏனெனில் இப்பொழுது சிறியவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் மரணம் எதிரிலேயே உள்ளது. மரணமடையும் நேரத்தில் பகவானை நினைவு செய்யவில்லை என்றால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது. எனவே தந்தை கூட மன்மனாபவ என்று கூறுகிறார். இந்த தேகத்தைக் கூட நினைவு செய்யக் கூடாது. ஆத்மாக்கள் நாம் நடிகர்கள் ஆவோம். சிவபாபாவின் குழந்தைகள். தொடர்ந்து நினைவில் இருக்க வேண்டும். அப்படியும் சிறிய குழந்தைகளுக்கோ பகவானை நினைவு செய்யுங்கள் என்று கூற மாட்டார்கள். இங்கோ எல்லோருக்கும் கூற வேண்டி உள்ளது. ஏனெனில் எல்லோரும் தந்தையிடம் செல்ல வேண்டி உள்ளது. தந்தையிடம் தான் புத்தியோகத்தை ஈடுபடுத்த வேண்டும். யாரிடமும் சண்டை சச்சரவு செய்யக் கூடாது. இது மிகவுமே தீமை ஏற்படுத்தக் கூடியது ஆகும். யாராவது ஏதாவது கூறினாலும் கேட்டும் கேட்காமல் இருந்து விட வேண்டும். சண்டை ஏற்பட்டு விடும் வகையில் எதிர்க்கக் கூடாது. ஒவ்வொரு விஷயத்திலும் சகிப்பு தன்மை உடையவராக இருக்க வேண்டும். பிறகு, தந்தை தந்தையுமாகவும் இருக்கிறார், தர்மராஜராகவும் இருக்கிறார் என்பதை புரிந்திருக்க வேண்டும். எந்த விஷயம் ஆனாலும் தந்தைக்கு சமாச்சாரம் கொடுங்கள். பிறகு தர்மராஜரிடம் போய் சேர்ந்தே விடும் மற்றும் தண்டனைக்கு உள்ளாகி விடுவார்கள். நான் சுகம் கொடுக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். துக்கம் அல்லது தண்டனைகளை தர்மராஜர் கொடுக்கிறார். எனக்கு தண்டனை கொடுப்பதற்கான அதிகாரம் இல்லை. என்னிடம் கூறுங்கள். தண்டனை தர்மராஜர் கொடுப்பார். பாபாவிற்குக் கூறுவதால் இலேசாக ஆகி விடுகிறீர்கள். ஏனெனில் இவர் வலது கையாகவும் உள்ளார். சத்குருவை நிந்திப்பவர் பதவி அடைய முடியாது. யாருடைய குற்றம் என்ற தீர்ப்பை தர்மராஜர் தான் அளிப்பார். அவரிடமிருந்து எதுவும் மறைந்திருக்க முடியாது. நாடகப்படி தவறு செய்தார். முந்தைய கல்பத்திலும் செய்திருக்கக் கூடும் என்று கூறுவார். ஆனால் இதன் பொருள் தவறு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல. பிறகு தவறற்றவர்களாக எப்படி ஆவீர்கள்? தவறு ஏற்பட்டால் மன்னிப்பு கேட்க வேண்டி இருக்கும். வங்காளத்தில் பிறரது பாதம் மீது தங்களுடையது பட்டு விட்டது என்றால் உடனே மன்னிப்பு கேட்பார்கள். இங்கோ ஒருவரையொருவர் தூஷிக்க முற்படுகிறார்கள். நடத்தை மிகவும் நல்லதானதாக இருக்க வேண்டும். தந்தை நிறையவே கற்பிக்கிறார். ஆனால் புரிந்து கொள்வதில்லை என்றால் இவரது பதிவேடு (ரிக்கார்ட்) மோசமாக உள்ளது என்று கருதப்படுகிறது. நிந்தனை செய்வித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் பதவி மோசமானதாக ஆகி விடும். பல பிறவிகளின் விகர்மங்களின் சுமையோ இருக்கவே இருக்கிறது. அவற்றிற்கான தண்டனையோ அனுபவித்தே ஆக வேண்டும். பிறகு இங்கு (பரிவாரத்தில்) இருந்து கொண்டு விகர்மங்கள் செய்கிறார்கள் என்றால் அதற்கு நூறு மடங்கு தண்டனை கிடைத்து விடுகிறது. தண்டனையோ வாங்கவே வேண்டி உள்ளது. எப்படி பாபா "காசி கல்வட்" (காசியில் தன்னை பலி கொடுப்பது) பற்றி புரிய வைக்கிறார்.அது பக்தி மார்க்கத்தினுடையது. இது ஞான மார்க்கத்தின் விஷயம் ஆகும். ஒன்று முந்தைய விகர்மமே உள்ளது. இரண்டாவது, பிறகு இச்சமயத்தில் என்ன செய்கிறார்களோ அதற்கு நூறு மடங்கு தண்டனை ஆகி விடுகிறது. மிகவும் கடுமையான தண்டனை வாங்க வேண்டி வரும். தந்தையோ ஒவ்வொரு விஷயத்தையும் புரிய வைக்கிறார். எந்த ஒரு பாவமும் செய்யாதீர்கள். நஷ்டோமோகா- மோகத்தை அழித்தவர் ஆகுங்கள். எவ்வளவு உழைப்பு உள்ளது. இந்த மம்மா பாபாவை நினைவு செய்யக் கூடாது. இவர்களை நினைவு செய்வதால் சேமிப்பு ஆகாது. சிவபாபா வருகிறார். பின் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். அப்படியின்றி இவருக்குள் சிவபாபா இருக்கிறார் என்பதற்காக இவருடைய நினைவு இருக்க வேண்டும் என்பதல்ல. இல்லை. சிவபாபாவை அங்கு நினைவு செய்ய வேண்டும். சிவபாபா மற்றும் இனிமையான இல்லத்தை நினைவு செய்ய வேண்டும். ஜின் என்ற பூதம் போல (இடைவிடாது) சிவபாபா அங்கு இருக்கிறார் என்பதை புத்தியில் நினைவு செய்ய வேண்டும். சிவபாபா இங்கு வந்து கூறுகிறார். ஆனால் நினைவு நாம் அங்கு செய்ய வேண்டும். இங்கு அல்ல. புத்தி தூரம் செல்ல வேண்டும். இங்கு அல்ல. இவர் சிவபாபாவோ சென்று விடுவார். சிவபாபா இந்த ஒருவர் உடலில் தான் வருகிறார். மம்மாவில் அவரைப் பார்க்க முடியாது. இது பாபாவின் ரதம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆனால் அவரது முகத்தைப் பார்க்க முடியாது. புத்தி அங்கு இணைந்து இருக்க வேண்டும். இங்கு புத்தி இருப்பதால் அவ்வளவு ஆனந்தம் ஏற்படாது. இது ஒன்றும் யாத்திரை ஆகாது. அங்கு உங்களுடைய யாத்திரையின் எல்லை உள்ளது. அப்படி இன்றி இவருக்குள் சிவன் இருக்கிறார் என்பதற்காக பாபாவைப் (பிரம்மாவை) பார்த்துக் கொண்டே இருப்பது என்பதல்ல. பிறகு மேலே செல்வதற்கான பழக்கம் விட்டுப் போய்விடுகிறது. என்னை அங்கு நினைவு செய்யுங்கள். புத்தியோகம் அங்கு ஈடுபடுத்துங்கள் என்று தந்தை கூறுகிறார். ஒரு சில முட்டாள்கள் பாபாவையே உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அட, புத்தியை இனிமையான இல்லத்தில் ஈடுபடுத்த வேண்டும் தானே! சிவபாபாவோ எப்பொழுதும் ரதத்தில் இருக்க முடியாது. இங்கு வந்து சேவை மட்டும் செய்வார். பிரவேசம் செய்து பிறகு சேவை செய்த பிறகு இறங்கி விடுவார். எருதின் (பிரம்மா) மீது எப்பொழுதுமே அமர்ந்து இருக்க முடியாது. எனவே புத்தி அங்கு இருக்க வேண்டும். பாபா வருகிறார். முரளி நடத்தி சென்று விடுகிறார். இவருடைய புத்தி கூட அங்கு இருக்கும்.சரியான வழியைப் பிடிக்க வேண்டும். இல்லை என்றால் அடிக்கடி பாதையிலிருந்து விழுந்து விடுகிறார்கள். இதுவோ சிறிது நேரம் இருப்பார். இவருக்குள் சிவபாபாவே இல்லை என்றால் ஏன் நினைவு செய்வீர்கள். முரளியோ இவர் கூட கூறலாம். இவருக்குள் சில நேரம் இருப்பார். சில நேரம் இருக்க மாட்டார். சில நேரம் ஓய்வெடுப்பார். நீங்கள் அங்கு நினைவு செய்யுங்கள். சிலசமயம் பாபா இவ்வாறு சிந்தனை செய்கிறார் - நாடகப்படி முந்தைய கல்பத்தைப் போலவே இன்றைய நாள் என்ன முரளி நடத்தினேனோ அதையே சென்று நடத்துவேன். நீங்களும் "முந்தைய கல்பத்தில் தந்தையிடமிருந்து எவ்வளவு ஆஸ்தி எடுத்திருந்தீர்களோ அவ்வளவே எடுப்போம்" என்று கூறலாம். சிவபாபாவின் பெயரை அவசியம் கூற வேண்டும். ஆனால் இது போல யாருக்குமே கூற வராது. தந்தை என்றால் அவசியம் நினைவிற்கு வர வேண்டும். தந்தையினுடையதே அறிமுகம் கொடுக்க வேண்டும். அப்படியின்றி இவரை உட்கார்ந்து பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதல்ல. சிவபாபாவை நினைவு செய்யுங்கள். இல்லை என்றால் பாவம் ஏற்பட்டு விடும் என்று பாபா புரிய வைத்துள்ளார். நிரந்தரமாக தந்தையை நினைவு செய்ய வேண்டும். இல்லை என்றால் எப்படி விகர்மங்கள் விநாசம் ஆகும். மிகவும் பெரிய குறிக்கோள் ஆகும். சித்தி வீடு ஆகுமா என்ன? அப்படியின்றி உணவிற்கு முன்னதாக நினைவு செய்தோம். முடிந்து விட்டது. பின் அவ்வாறே உணவு உட் கொள்ள முற்பட்டு விட்டோம் என்பதல்ல. இல்லை. முழு நேரமும் நினைவு செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு உள்ளது. அப்படியே தானாக உயர்ந்த பதவி கிடைத்து விட முடியுமா என்ன? அதனால் தான் பாருங்கள் கோடிக்கணக்கானோருக்குள் – 8 ரத்தினங்கள் பாஸ் (தேர்ச்சி) ஆகிறார்கள். குறிக்கோள் மிகவும் உயர்ந்தது ஆகும். உலகின் அதிபதி ஆக வேண்டும் என்பது யாருடைய புத்தியிலும் வராது. இவருடைய புத்தியிலும் இருக்கவில்லை. இப்பொழுது சிந்தனை செய்ய வேண்டி உள்ளது. 84 பிறவிகள் யாருக்கு கிடைக்கிறது? அவசியம் யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் லட்சுமி நாராயணர் ஆகிறார்கள். இவை எல்லாம் சிந்தனைக் கடலை கடையும் விஷயங்கள் ஆகும். கை காரியம் செய்தபடியே இருக்க, உள்ளம் நினைவு செய்யட்டும் என்று தந்தை புரிய வைக்கிறார். தாராளமாக தொழில் ஆகியவற்றில் இருங்கள். ஆனால் நிரந்தரமாக தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள். இது யாத்திரை ஆகும். தீர்த்தங்களில் சென்று பிறகு திரும்ப வேண்டியதில்லை. நிறைய மனிதர்கள் தீர்த்தங்களுக்குச் செல்கிறார்கள். இப்பொழுதோ அங்கு கூட அசுத்தம் ஆகி விட்டுள்ளது. இல்லை என்றால் தீர்த்த ஸ்தானங்களில் ஒரு பொழுதும் வைசியாலயம் இருப்பதில்லை. இப்பொழுது எவ்வளவு இழிவான நிலை உள்ளது. தலைவன் என்று ஒருவரும் இல்லை. சட்டென்று நிந்திக்க முற்படுகிறார்கள். இன்றைக்கு முதன் மந்திரியாக இருக்கிறார். நாளைக்கு அவரையும் இறக்கி விடுகிறார்கள். மாயையின் குழந்தைகளாக ஆகி விடுகிறார்கள். பைசா சேர்ப்பார்கள். வீடு கட்டுவார்கள். பணத்திற்காக திருடக்கூட முற்படுவார்கள். நீங்கள் இப்பொழுது சொர்க்கத்திற்கு செல்வதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறீர்கள். இது தான் நினைவிற்கு வர வேண்டும். தாரணையும் ஆக வேண்டும். முரளி எழுதி பிறகு (ரிவைஸ்) திரும்பவும் பார்க்க வேண்டும். நேரமோ நிறைய இருக்கிறது. இரவிலோ நிறைய நேரம் இருக்கிறது. இரவு விழித்தீர்கள் என்றால் பழக்கம் ஏற்பட்டு விடும். யார் உண்மையிலும் உண்மையாக பாபாவை நினைவு செய்பவர்களாக இருப்பார்களோ அவர்களுக்கு தானாகவே கண்கள் திறந்து விடும். பாபா அனுபவத்தைக் கூறுகிறார். எப்படி இரவில் கண்கள் திறந்து விடுகின்றது. இப்பொழுதோ தூக்கத்திற்காக இன்னுமே புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறார்கள். ஆம்! ஸ்தூல காரியம் செய்வதால் கூட சரீரத்திற்கு களைப்பு ஏற்படுகிறது. பாபாவின் ரதம் கூட பாருங்கள் எவ்வளவு பழையது ஆகும். சிந்தித்துப் பாருங்கள். பாபா தூய்மை இல்லாத உலகத்தில் வந்து எவ்வளவு உழைக்கிறார். பக்தி மார்க்கத்தில் கூட உழைத்துக் கொண்டிருந்தார். இப்பொழுதும் உழைக்கிறார். சரீரம் கூட பதீதமானது (தூய்மையற்றது), பின் உலகமும் பதீதமானது. நான் அரைக் கல்பமோ மிகவுமே ஓய்வாக இருக்கிறேன், ஒன்றுமே சிந்தனை செய்ய வேண்டி இருப்பதில்லை என்று பாபா கூறுகிறார். பக்தி மார்க்கத்தில் நிறைய சிந்தனை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே தந்தைக்குக் கருணைக்கடல் என்று பாடப்பட்டுள்ளது. ஞானக்கடல். கடல் ஒன்றே ஒன்று தான் இருக்கும். பிறகு அதனுடைய பிரிவுகள் ஏற்பட்டு விடுகின்றது. அதே தந்தை நமக்குப் கற்பிக்கிறார் வேறு யாரும் கற்பிக்க முடியாது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. யாரையும் எதிர்க்கக் (விரோதித்துக் கொள்ள) கூடாது. யாராவது ஏதாவது கூறினாலும் கேட்டும் கேட்காது இருந்து விட வேண்டும். சகிப்புத் தன்மை உடையவர் ஆக வேண்டும். சத்குருவிற்கு நிந்தனை செய்விக்கக் கூடாது.

 

2. நமது ரிஜிஸ்டரை (பதிவேட்டை) கெட்டுப் போக விடக் கூடாது. தவறு ஏற்பட்டு விட்டால் தந்தையிடம் கூறி மன்னிப்பு பெற்று விட வேண்டும். அங்கு (மேலே) நினைவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

 

வரதானம் :

ஒதுங்கி விடுவதற்கு பதிலாக தான் அனுசரிக்கக் கூடிவயராகி பொறுமையின் அவதாரமாகுக.

 

நிறைய குழந்தைகளுக்குள் பொறுமையின் சக்தி குறைவாக இருக்கிறது. ஆகவே ஏதாவது சிறிய விஷயம் நடந்து விட்டால் கூட முகம் மிக வேகமாக மாறி விடுகிறது. பிறகு பயப்பட்டு அல்லது இடத்தை மாற்றுவதற்கு யோசிப்பார்கள் அல்லது யார் மூலமாக துன்புறுகிறார்களோ அவர்களை மாற்றிவிடுவார்கள். தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி விடுவார்கள். ஆகவே இடம் அல்லது மற்றவர்களை மாற்றுவதற்கு பதிலாக தன்னை மாற்றிக் கொள்ளுங்கள். பொறுமையின் அவதாரம் ஆகிவிடுங்கள். அனைவரையும் அனுசரித்துப் போகக் கற்றுக் கொள்ளுங்கள்.

 

சுலோகன் :

வாய்மையின் (பரமார்த்தத்தின்) ஆதாரத்தில் நடத்தை மூலம் நிரூபணம் செய்வதே யோகியின் இலட்சணமாகும்.

 

ஓம்சாந்தி