13.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய மனதில் குஷியின் முரசு ஒலிக்க வேண்டும். ஏனென்றால் எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற சொத்து கொடுக்க வந்துள்ளார்.

 

கேள்வி:

மாயை மனிதர்களை எந்த பிரம்மையில் (மயக்கத்தில்) குழப்பமடையச் செய்துள்ளது? இதனால் அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல முயற்சி செய்ய முடிவதில்லை?

 

பதில்:

சமீப கால 100 வருடத்திற்குள் விமானம், மின்சாரம் என என்னென்ன தோன்றி இருக்கிறதோ, இது அனைத்தும் மாயாவின் பகட்டாகும். இந்த பகட்டை பார்த்து மனிதர்கள் சொர்க்கம் இங்கேயே தான் இருக்கிறது என நினைக்கிறார்கள். பணம் இருக்கிறது., மாளிகை இருக்கின்றது, வாகன வசதிகள் இருக்கின்றன...... அவ்வளவு தான்..... நமக்கு இங்கேயே தான் சொர்க்கம் இருக்கிறது. இது மாயையின், குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய சுகமாகும். இதனால் தான் அவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல முயற்சி செய்வதில்லை.

 

பாட்டு:

தாயே, தாயே...........

 

ஓம் சாந்தி.

இப்போது யார் நன்மை செய்து விட்டு சென்றிருக்கிறார்களோ அவர்களின் மகிமை பாடப்படுகிறது என குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இதை பாரதவாசிகள் அறியவில்லை. வித்வான், பண்டிதர்கள் கூட அறியவில்லை. ஜகதம்பா என்றால் ஜகத்தில் உள்ள மனிதர்களை படைக்கக் கூடியவர். யாரை ஜகதம்பா என்று கூறுகிறோமோ அவர் குழந்தைகளுக்கு முன்பு அமர்ந்திருக்கிறார் என்று நீங்கள் அறிகிறீர்கள். பக்தி மார்க்கத்திலோ இவ்வாறு பாடிக் கொண்டே வந்தார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது ஞானம் கிடைத்திருக்கிறது. ஜகதம்பாவின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. ஜகதம்பா என்ற பெயரில் விதவிதமான பல சித்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் ஜகதம்பா ஒருவர் தான். அவருக்கு காளி, சரஸ்வதி, துர்கா என பல பெயர்கள் வைத்திருப்பதால் மனிதர்கள் குழம்பி இருக்கின்றனர். கல்கத்தா காளி என்று கூட கூறுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட தோற்றம் இருக்காது. இது அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விசயம் என பாபா கூறுகின்றார். பக்தி மார்க்கம் ஆரம்பமாகியதிலிருந்து இராவண இராஜ்யமும் ஆரம்பமாகியது. இராவணன் யார்? இராமன் யார்? இது எல்லையற்ற கதையாகும். இதை மனிதர்கள்  அறியவில்லை. இப்போது இராவண இராஜ்யம் முடிவடைந்து இராம இராஜ்யம் ஆரம்பமாகப் போகிறது என நீங்கள் அறிகிறீர்கள். முக்கியமானது பாரதத்தின் விசயம் ஆகும். இராவண இராஜ்யத்தில் நீங்கள் கீழான நிலைக்கு வந்து விட்டீர்கள். இராம் என்றால் சுகம் கொடுக்கக் கூடிய எல்லையற்ற தந்தை யாவார். இச்சமயம் அனைத்து மனிதர்களும் அசுர வழிப்படி இருக்கிறார்கள். மற்றபடி இராவணன் 10 தலைகளை உடையவன் யாரும் கிடையாது. இது 5 விகாரங்களின் விசயம் ஆகும். இதற்கு இராவணன் வழி என்று பெயர். சிவபாபாவின் வழி ஸ்ரீமத் ஆகும். இப்போது அசுர சம்பிரதாயம் அல்லவா. இது எல்லையற்ற விசயம் ஆகும். ஸ்ரீமத் கடைபிடிப்பதால் 21 பிறவிகளுக்கு சுகம் அடைகிறீர்கள். அசுர வழியினால் 63 பிறவிகள் நீங்கள் துக்கம் அடைந்தீர்கள்.

 

இந்த இராவணன் மிகப் பெரிய எதிரி என அறிகிறீர்கள். ஆகவே தான் எரித்துக் கொண்டே இருக்கிறார்கள். கடைசியில் இராவணனை எரிப்பதை நாம் எப்போது நிறுத்துவோம் என புரியவில்லை. இவ்வாறு இராவணனை எரிப்பது பரம்பரையாக வந்துக் கொண்டிருக்கிறது என கூறுகிறார்கள். இராவணனின் கொடும்பாவியை செய்து எரித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இராவணன் அனைவருக்கும் துக்கம் கொடுத்திருக்கிறான். முக்கியமாக பாரதத்திற்கு. எனவே இராவணன் மிகப் பெரிய எதிரி அல்லவா. ஆனால் இந்த எல்லையற்ற எதிரியைப் பற்றி யாரும் அறியவில்லை. எல்லையற்ற தந்தை வந்து எல்லையற்ற சுகம் கொடுக்கிறார். இப்படிப்பட்ட எளிய விசயத்தை எந்த வித்வானும், பண்டிதரும் அறியவில்லை. நமக்கு எல்லையற்ற தந்தையிடமிருந்து சுகத்தின் ஆஸ்தியை அடைய வேண்டும் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். ஆனால் அடிக்கடி நீங்கள் தந்தையை மறந்து விடுகிறீர்கள். , பாபா, இரக்கம் காட்டுங்கள், என் மீது கருணை காட்டுங்கள் என பக்தி மார்க்கத்தில் நீங்கள் அழைத்துக் கொண்டே வந்தீர்கள். இரக்கம் காட்டிக் கொண்டு தான் இருக்கிறேன். யார் எந்த பாவனையோடு எந்த தேவதைகளை பூஜிக்கிறார் களோ அவர்களுக்கு அல்ப கால சுகம் கண்டிப்பாக கொடுக்கிறேன். வேறு யாரும் எந்த சுகமும் கொடுக்க முடியாது. நான் தான் சுக வள்ளல். பக்தி மார்க்கத்திலும் நானே கொடுக்கிறேன். இறை தந்தை இதை கொடுத்தார் என்கிறார்கள். பகவானைத்தான் இப்படி கூறுகிறார்கள். ஒரு தந்தை தான் சுகம் கொடுக்கக் கூடியவர் என்றால் பிறகு இந்த செல்வத்தை இந்த குரு தான் கொடுத்தார் என ஏன் கூற வேண்டும். , பகவான் எங்கள் துக்கத்தை நீக்குங்கள் என பாடுகிறார்கள். பிறகு இந்த குரு தான் எங்களின் துக்கத்தை நீக்கினார், குழந்தையை கொடுத்தார் என ஏன் கூற வேண்டும். அவருடைய கருணையால் சுகம் கிடைத்தது என நினைக்கிறார்கள். தொழில் நன்மை நடந்தாலும் குருவின் கருணை தான் என நினைக்கிறார்கள். அதே நஷ்டம் ஏற்பட்டால் குரு கருணை காட்டவில்லை என கூறுவதில்லை. பாவம் பக்தர்கள் புரிந்துக் கொள்ளாமல் எது தோன்றுகிறதோ அதை கூறிக் கொண்டே இருக்கிறார்கள். எதை கேட்கிறார்களோ அதை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள. இதுவும் நாடகம் ஆகும்.

 

இப்போது தந்தையே வந்து உங்களை தன்னுடையவராக மாற்றுகிறார். தந்தையிடம் அன்பு வைப்பதிலும் கூட மாயா மிகவும் தடை ஏற்படுத்துகிறது. ஒரேயடியாக முகத்தை திருப்பிவிடுகிறது. 21 பிறவிகளுக்கு சுகம் கொடுக்கக் கூடிய தந்தையை விகாகரத்து செய்ய வைக்கிறது. பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கத்தில் இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது என பாபா புரிய வைக்கிறார். பக்தி செய்து செய்து ஏழையாகிவிடும் போது தந்தை வந்து ஞானம் கொடுத்து 21 பிறவிகளுக்கு உங்களை செல்வந்தராக மாற்றி விடுகிறார். நீங்கள் ஒவ்வொரு பிறவியிலும் பக்தி செய்துக் கொண்டே வந்தீர்கள். அல்ப கால சுகம் கிடைக்கிறது. துக்கம் நிறைய இருக்கிறது அல்லவா. நான் உங்களுடைய இழந்த இராஜ்யத்தை கொடுப்பதற்காக வந்திருக்கிறேன் என பாபா கூறுகிறார். எல்லையற்ற விசயம் அல்லவா. மற்றபடி வேறு எந்த விசயமும் இல்லை. இந்த லஷ்மி நாராயணன் விகாரம் அற்ற தேவதைகள். அவர்களுடைய மாளிகைகளில் எவ்வளவு வைர வைடூரியங்கள் இருந்திருக்கும். நீங்கள் இன்னும் செல்ல செல்ல நிறைய பார்ப்பீர்கள். எவ்வளவு அருகாமையில் வருகிறீர்களோ அவ்வளவு சொர்க்கத்தின் காட்சிகள் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். எவ்வளவு பெரிய பெரிய தர்பார் இருக்கும். ஜன்னல்கள் தங்கம், வைரம், வைடூரியங்களால் எவ்வளவு அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். அவ்வளவு தான். இந்த இரவு முடிந்து பகல் ஆரம்பமாகும். நீங்கள் தெய்வீக திருஷ்டியினால் எதை பார்க்கிறீர்களோ அதை நேரடியாக நிச்சயமாக பார்ப்பீர்கள். தெய்வீக திருஷ்டியால் பார்த்த அழிவுக் காட்சிகளையும் நீங்கள் நேரடியாக பார்ப்பீர்கள். உங்களுக்குள் குஷியின் முரசு ஒலிக்க வேண்டும். நாம் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்து அடைந்துக் கொண்டிருக்கின்றோம். இந்த சித்திரங்கள் எதுவும் துல்-யமானது கிடையாது. நீங்கள் அதை அனைத்தையும் தெய்வீக திருஷ்டியால் பார்க்கிறீர்கள். அங்கே சென்று நடனம் கூட ஆடுகிறீர்கள். எவ்வளவு சித்திரங்களை உருவாக்கி இருக்கிறார்கள். பாபா திவ்ய திருஷ்டியால் எதை காண்பித்தாரோ அதை பிறகு நேரடியாக நிச்சயமாக பார்க்கலாம். இந்த சீ, சீ உலகம் அழியப் போகிறது என நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள் இங்கே ஸ்ரீமத்படி உங்கள் சுயராஜ்யத்தை அடைவதற்காக அமர்ந்திருக்கிறீர்கள். அந்த பக்தி மார்க்கம் எங்கே? இந்த ஞான மார்க்கம் எங்கே? இங்கே பாரதத்தின் நிலைமை எப்படி இருக்கிறது பாருங்கள். உண்பதற்கு உணவில்லை. பெரிய பெரிய திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேரம் குறைவாக இருக்கிறது. அவர்களின்திட்டம் மற்றும் உங்களின் திட்டத்தைப் பாருங்கள், எப்படி இருக்கிறது. இந்த விசயங்கள் எந்த சாஸ்திரத்திலும் இல்லை. இராமயணம் போன்றவற்றில் எவ்வளவு கதைகளை எழுதி இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறில்லை. இராவணனை ஒவ்வொரு வருடமும் எரிக்கிறார்கள். இராவணனை எரித்து விட்டார்கள் என்றால் அவன் அழிந்துப் போயிருக்க வேண்டும் அல்லவா. பக்தி மார்க்கத்தின் வருமானம் எப்படிப்பட்டது. ஞான மார்க்கத்தின் வருமானம் எப்படிப்பட்டது. பாபா ஒரேயடியாக பண்டாராவை நிரப்பி விடுகிறார். அதற்கு கடின உழைப்பு இருக்கிறது. நிச்சயமாக தூய்மையாக இருக்க வேண்டும். அமிர்தத்தை விட்டு விஷத்தை அருந்தினர் என பாடுகிறார்கள். அமிர்தம் என்ற பெயரில் அமிர்தசரஸில் ஒரு குளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. குளத்தில் மூழ்கி எழுகிறார்கள். மானசரோவர் என்ற பெயரிலும் ஒரு ஏரி இருக்கிறது. மானசரோவர் என்பதன் பொருளை புரிந்துக் கொள்ளவில்லை. மான சரோவர் என்றால் நிராகார் பரம்பிதா பரமாத்மா ஞானக் கடல் மனிதனின் உடலில் வந்து இந்த ஞானத்தைக் கூறுகின்றார். மனிதர்கள் எத்தனை கதைகளை எழுதி இருக்கிறார்கள். அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாக இருப்பது கீதை...... பிறகு அதில் கிருஷ்ணர் வாக்கு என எழுதி விட்டனர். கிருஷ்ணரைப் பற்றி எத்தனை விசயங்களை எழுதி இருக்கின்றனர். பாம்பு கடித்தது, கிருஷ்ணர் பெண்களை விரட்டினார்...... எத்தனை பொய்யான களங்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். இப்போது நீங்கள் புரிய வைக்க முடியும். கிருஷ்ணரின் விசயமே கிடையாது. பிரம்மா மூலமாக பரம்பிதா பரமாத்மா அனைத்து வேத சாஸ்திரங்கள், கிரந்தத்தின் சாரத்தைப் புரிய வைக்கிறார். நம்பர் ஒன் ஸ்ரீமத் பகவத் கீதையாகும். பாரதவாசிகளின் தர்ம சாஸ்திரம் ஒன்று தான். அதை தவறாக்கி விட்டனர். ஆகவே மற்ற குழந்தைக் குட்டிகளாகிய வேத சாஸ்திரங்களும் தவறாகி விட்டது.

 

பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கின்றார். இருப்பினும் போகப் போக மாயையிடம் அடி வாங்குகிறார்கள். தாரணை செய்வதில்லை. இது போர்களம் ஆகும். நீங்கள் குழந்தைகள் பிராமணன் ஆகி இருக்கிறீர்கள். கீதை போன்றவைகளில் இது போன்ற எந்த விசயமும் எழுதப்பட வில்லை. பிரம்மாவின் வாய் வழி வம்சத்தினர், பிரம்மா மூலமாக யாகம் படைக்கப்பட்டது. உண்மையில் ருத்ர ஞானயாகம் இருக்கிறது. பிறகு யுத்த மைதானம் எங்கிருந்து வந்தது. இராஜஸ்வ அஸ்வமேத யாகம் எனவும் பாடப்பட்டிருக்கிறது. இந்த ரதத்தை நாம் அர்ப்பணம் செய்கிறோம். பிறகு அவர்கள் தக்ஷ பிரஜாபதி யாகத்தை படைத்து குதிரையை அர்ப்பணிக்கிறார் என எழுதி விட்டனர். சத்யுகத்தில் பாரதம் சொர்க்கமாக இருந்தது. நிச்சயமாக அங்கே சிலரே இருந்திருப்பார்கள் என நீங்கள் அறிகிறீர்கள். தேவி தேவதைகள் குறைவாகவே இருந்தனர். யமுனை ஆற்றங்கரையில் இராஜ்யம் இருக்கும். தேவி தேவதைகள் மட்டும் ஆட்சி செய்திருப்பார்கள். அங்கே காஷ்மீர், சிம்லா போக வேண்டிய அளவிற்கு வெப்பம் இருக்காது. தத்துவங்கள் கூட முற்றிலும் சதோபிரதானமாக மாறியிருக்கும். இதைக் கூட புரிந்துக் கொள்ளக் கூடியவர்களே புரிந்துக் கொள்வார்கள். சத்யுகத்திற்கு சொர்க்கம் என்று பெயர். கலியுகத்திற்கு நரகம் என்று பெயர். துவாபரயுகத்தை இவ்வளவு நரகம் என்று கூற முடியாது. திரேதாவில் கூட இரண்டு கலைகள் குறைகிறது. அனைத்தையும் விட நிறைய சுகம் சொர்க்கத்தில் தான். இன்னார் வைகுண்ட பதவி அடைந்தார் என்கிறார்கள். ஆனால் வைகுண்டத்தின் பொருள் புரிந்து கொள்ளவில்லை. சொர்க்கத்திற்கு சென்று விட்டார் என்றால் நிச்சயமாக நரகத்தில் இருந்தார் அல்லவா. ஒவ்வொரு மனிதனும் நரகத்தில் இருக்கிறான். இப்போது பாபா உங்களுக்கு எல்லையற்ற இராஜ்யத்தை கொடுக்கின்றார். அங்கே அனைத்தும் உங்களுடையது. பூமி உங்களுடையது, ஆகாயம் உங்களுடையது...... நீங்கள் நிலையான, தொடர்ச்சியான, அமைதியான ஆட்சி செய்வீர்கள். துக்கம் என்ற பெயரே இருக்காது. எனவே, அதற்கு எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு நிலை எப்படி இருக்க வேண்டும். நம்முடைய மம்மா, பாபா மிகவும் நன்றாக முயற்சி செய்கிறார்கள் என அறிகிறீர்கள். ஏன் நாம் கூட முயற்சி செய்து சொத்து அடையக் கூடாது.

 

குழந்தைகளே, களைத்து போகாதீர்கள். ஸ்ரீமத் படி சென்று கொண்டே இருங்கள் என பாபா கூறுகிறார். இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எது செய்தாலும் பாபா நாங்கள் இதில் குழப்பமாக இருக்கிறோம். இதை செய்வதில் எங்கள் மீது எந்த பாவமும் ஏற்படாதா என கேளுங்கள். பாபா யாரிடமும் எதையும் எடுத்துக் கொள்வதில்லை. பக்தி மார்க்கத்தில் கூட ஈஸ்வரன் பெயரில் தானம் செய்தார்கள் என்றால் மீண்டும் திரும்ப அடைகிறார்கள். சிவபாபா வாங்கி என்ன செய்வார். அவர் எந்த மாளிகையையும் கட்ட வேண்டியதில்லை. அனைத்தும் குழந்தைகளுக்காக செய்கின்றார். கட்டிடங்களை கட்டுகிறார். அதுவும் கடைசியில் நீங்கள் தங்குவதற்காக. உங்களுடைய நினைவுச் சின்னம் கோவில் கூட இங்கிருக்கிறது. நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். நன்கு சேவை செய்யக் கூடிய குழந்தைகள் இன்னும் செல்ல செல்ல மிகுந்த அழகை பார்ப்பார்கள். இங்கே அமர்ந்துக் கொண்டே சொர்க்கத்தில் வலம் வந்துக் கொண்டிருப்பார்கள். பிறகு அங்கே சென்று மாளிகைகளைக் கட்டுவார்கள். கட்டிடங்களின் போட்டி இருக்கிறது அல்லவா. இப்போது 100 வருங்களில் எவ்வளவு கட்டியிருக்கிறார்கள். பாரதத்தை சொர்க்கம் போல மாற்றி விட்டனர். அங்கே 100 வருடத்தில் என்ன நடக்காது என புரிந்துக் கொள்கிறீர்கள். விஞ்ஞானம் அனைத்தும் உங்களுக்குப் பயன்படும். விஞ்ஞானத்தின் சுகம் அங்கே தான். இங்கேயோ துக்கமாக இருக்கிறது. விஞ்ஞானத்திற்காக எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள். இப்போது தங்களின் பகட்டினை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இது அல்ப கால நொடிப் பொழுது சுகமே. இது மாயாவின் பகட்டு என குழந்தைகள் அறிகிறீர்கள். இந்த விமானம், ராக்கெட் போன்றவைகளில் இப்போது போகிறார்கள். முன்பு இந்த சாதனங்கள் இல்லை. மின்சாரம் கூட இல்லை. இது அனைத்தும் மாயாவின் சுகமாகும். மாயா மனிதனை குழப்புகிறது. இதுவே சொர்க்கம் என மனிதர்கள் நினைக்கிறார்கள். விமானம் போன்றவை சொர்க்கத்தில் இருந்தது. இப்போது சொர்க்கம் அல்லவா. சொர்க்கத்திற்காக இப்போது ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்கிறது என புரிந்துக் கொள்வதில்லை. செல்வம் இருக்கிறது, மாளிகை இருக்கிறது, போதும். எங்களுக்கு இதுவே சொர்க்கம் என நினைக்கிறார்கள். நல்லது. உங்களின் அதிர்ஷ்டத்தில் இதுவே சொர்க்கம். நாம் முயற்சி கடினமாக முயற்சி செய்து உண்மையிலும் உண்மையான சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும். நீங்களும் அதற்காக முயற்சி செய்கிறீர்கள்.  முயற்சியில் மந்தமாக இருக்கக் கூடாது. இல்லறத்தில் இருந்துக் கொண்டே முயற்சி செய்ய வேண்டும். சேவை செய்ய வேண்டும். தாங்கள் தூய்மையாகி தன்னுடைய சொந்த பந்தங்களையும் தகுதி அடைய வைக்க வேண்டும். இனிமையிலும் இனிமையான விசயங்களைக் கூறுங்கள். பாபா இரண்டு தந்தையைப் பற்றி மிக நன்றாகப் புரிய வைத்திருக்கிறார். அசையா சொத்தின் ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கிறது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. முயற்சியில் ஒரு போதும் களைப்படையக் கூடாது. மிகவும் எச்சரிக்கையோடு ஸ்ரீமத் படி நடந்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 

2. ஒரு போதும் பாவ கர்மம் செய்யக் கூடாது. உண்மையிலும் உண்மையான சொர்க்கத்திற்கு செல்ல தூய்மையாகி மற்றவரையும் தூய்மையாக்கக் கூடிய சேவை செய்ய வேண்டும்.

 

வரதானம்:

பற்றற்றவராகி லௌகீகத்தை திருப்திப்படுத்திக் கொண்டே ஈஸ்வரிய வருமானத்தை சேமிப்பு செய்யக்கூடிய ராஜ்யுக்த் (இரகசியங்களைப் புரிந்தவர்கள்) ஆகுக.

 

சில குழந்தைகள் லௌகீக காரியம், லௌகீக இல்லறம், லௌகீக சம்மந்தம், தொடர்பை பராமரித்துக்கொண்டே தன்னுடைய விசால புத்தி மூலம் அனைவரையும் திருப்திப்படுத்தவும் செய்வார்கள் மற்றும் ஈஸ்வரிய வருமானத்தின் இரகசியத்தை அறிந்துகொண்டு விசேஷமாக சேமிப்பும் செய்வார்கள். அத்தகைய ஏக்நாமி (ஒரு பாபாவின் நினைவில் இருப்பவர்கள்) மற்றும் எக்கானமியாக (சிக்கனமாக)) இருக்கக்கூடிய பற்றற்ற குழந்தைகள், அனைத்து பொக்கிஷங்கள், சமயம், சக்திகள் மற்றும் ஸ்தூல செல்வத்தை லௌகீகத்திலிருந்து சிக்கனப்படுத்தி அலௌகீக காரியத்தில் பரந்த உள்ளத்துடன் ஈடுபடுத்துவார்கள். அத்தகைய யுக்தியுக்த், ராஜ்யுக்த் குழந்தைகள் தான் மகிமைக்குரியவர்கள் ஆவார்கள்.

 

சுலோகன்:

நினைவு சொரூபம் ஆகி ஒவ்வொரு கர்மமும் செய்பவர்கள் தான் பிரகாச ஸ்தம்பம் (லைட் ஹவுஸ்) ஆகின்றார்கள்.

 

ஓம்சாந்தி