20.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! கேள்விகளில் குழம்புவதை விடுத்து மன்மனாபவ ஆக ஆகி இருங்கள். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். தூய்மையாக ஆகுங்கள் மற்றும் ஆக்குங்கள்.

 

கேள்வி:

சிவபாபா குழந்தைகளாகிய உங்கள் மூலமாக தனக்கு பூஜை செய்வித்துக் கொள்ள முடியாது, ஏன்?

 

பதில்:

"நான் குழந்தைகளாகிய உங்களுடைய மிகவும் கீழ்ப்படிதலுள்ள ஊழியன் ஆவேன்" என்று பாபா கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் என்னுடைய எஜமானன் ஆவீர்கள். நானோ குழந்தைகளாகிய உங்களுக்கு நமஸ்காரம் (வணக்கம்) செய்கிறேன். தந்தை நிரகங்காரி ஆவார். குழந்தைகள் கூட தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும். நான் குழந்தைகளாகிய உங்கள் மூலமாக எனக்கு எப்படி பூஜை செய்வித்துக் கொள்வேன். நீங்கள் கழுவ வேண்டிய வகையில் எனக்கு பாதங்கள் கூட இல்லை. நீங்களோ இறை சேவகர்கள் ஆகி உலக சேவை செய்ய வேண்டும்.

 

பாடல்:

பலவீனமானோரிடம் பலசாலியின் யுத்தம்.. .. ..

 

ஓம் சாந்தி.

நிராகார சிவபகவான் கூறுகிறார். சிவபாபா நிராகாரமானவர் ஆவார் மற்றும் சிவபாபா என்று கூறும் ஆத்மாக்கள் கூட உண்மையில் நிராகாரமானவர்கள் ஆவார்கள். நிராகாரி உலகத்தில் இருப்பவர்கள் ஆவார்கள். இங்கு பாகத்தை ஏற்று நடிப்பதற்காக சாகாரமானவர் ஆகி இருக்கிறார்கள். இப்பொழுது நம் அனைவருக்குமோ பாதங்கள் உள்ளன. கிருஷ்ணருக்குக் கூட பாதம் உள்ளது .பாத பூஜை செய்கிறார்கள் அல்லவா? நானோ கீழ்ப்படி தலுள்ளவன் ஆவேன் என்று சிவபாபா கூறுகிறார். உங்கள் மூலமாக கால்களைக் கழுவ செய்வதற்கோ பூஜை செய்விப்பதற்கோ எனக்கு கால்களே இல்லை. சந்நியாசிகள் தங்கள் காலை கழுவச் செய்கிறார்கள் அல்லவா? இல்லறத்தில் இருப்பவர்கள் சென்று அவர்களது கால்களைக் கழுவுகிறார்கள். கால்களோ மனிதர்களினுடையது ஆகும். நீங்கள் பாத பூஜை செய்ய வேண்டிய வகையில் சிவபாபாவிற்குப் பாதங்களே இல்லை. இவை பூஜைக்கான சாமான்கள் ஆகும். நானோ ஞானக் கடல் ஆவேன் என்று தந்தை கூறுகிறார். நான் என் குழந்தைகளிடம் எப்படி கால் கழுவச் செய்வேன்? தந்தையோ வந்தே மாதரம் என்று கூறுகிறார். தாய்மார்கள் பின் என்ன கூற வேண்டும்? ஆம். எழுந்து நின்று சிவ பாபா நமஸ்தே என்று கூறுவார்கள். எப்படி "சலாம் மாலேகம்" என்று கூறுகிறார்கள் அல்லவா? அதுவும் தந்தை முதலில் நமஸ்தே கூற வேண்டி உள்ளது. நான் மிகவும் கீழ்ப்படிதலுள்ள எல்லையில்லாத வேலைக்காரன் ஆவேன் என்று கூறுகிறார். நிராகாரமானவர் மற்றும் எவ்வளவு நிரகங்காரியாக இருக்கிறார்! பூஜையினுடைய விஷயமே கிடையாது. மிகவும் அன்பிற்குரிய குழந்தைகள் சொத்திற்கு அதிபதி ஆகக் கூடியவர்கள் அவர்களிடம் நான் எப்படி பூஜை செய்வித்துக் கொள்ள முடியும். ஆம் சிறிய குழந்தைகள் தந்தையின் பாதங்களை வணங்குகிறார்கள். ஏனெனில் தந்தை பெரியவர் ஆவார். ஆனால் உண்மையிலோ தந்தை குழந்தைகளுக்கும் ஊழியன் ஆவார். குழந்தைகளை மாயை மிகவும் தொல்லைப்படுத்துகிறது என்பதை அறிந்துள்ளார், மிகவும் கடுமையான பாகம் உள்ளது. இன்னும் மிகவுமே அளவற்ற துக்கம் வரப் போகிறது. இது முழுவதும் எல்லையில்லாத விஷயம் ஆகும். அப்பொழுது தான் எல்லையில்லாத தந்தை வருகிறார். வள்ளல் நான் ஒருவனே ஆவேன் என்று தந்தை கூறுகிறார். வேறு யாரையுமே வள்ளல் என்று கூற முடியாது. தந்தையிடம் எல்லோருமே வேண்டுகிறார்கள். சாதுக்கள் கூட முக்தி வேண்டுகிறார்கள். பாரதத்தின் இல்லறவாசிகள் பகவானிடம் ஜீவன் முக்தி வேண்டுகிறார்கள். எனவே வள்ளல் ஒருவர் ஆகிவிட்டார். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒருவர் என்றும் பாடப்பட்டுள்ளது. சாதுக்கள் தாங்களே சாதனை செய்கிறார்கள் என்றால் மற்றவர்களுக்கு பின் கதி சத்கதி எவ்வாறு அளிக்க முடியும்? முக்தி தாமம் மற்றும் ஜீவன் முக்தி தாமம் இரண்டிற்கும் உரிமையாளர் ஒரே ஒரு தந்தை ஆவார். அவர் தனது குறித்த நேரத்தில் ஒரே ஒரு முறை தான் வருகிறார். மற்ற எல்லோரும் ஜன்ம மரணத்தில் வந்து கொண்டே இருக்கிறார்கள். இவர் இராவண இராஜ்யம் முடியக் கூடிய நேரத்தில் ஒரே ஒரு முறை தான் வருகிறார். அதற்கு முன்னால் வர முடியாது. நாடகத்தில் பாகமே கிடையாது. எனவே நீங்கள் என் மூலமாக இப்பொழுது என்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளீர்கள் என்று தந்தை கூறுகிறார். மனிதர்களுக்குத் தெரியவில்லை. எனவே சர்வ வியாபி என்று கூறி விட்டுள்ளார்கள்.

 

இப்பொழுதோ இராவண இராஜ்யம் ஆகும். பாரதவாசிகள் தான் இராவணனை எரித்துக் கொண்டே இருக்கிறார்கள். எனவே இராவண இராஜ்யம் பாரதத்தில் இருக்கிறது என்பது நிரூபணமாகிறது. இராம ராஜ்யம் கூட பாரதத்தில் உள்ளது. எப்படி இப்பொழுது இராவண இராஜ்யம் ஆகும் என்ற விஷயங்களை இராம இராஜ்யம் ஸ்தாபனை செய்பவர் தான் புரிய வைக்கிறார். இதை யார் புரிய வைக்கிறார்? நிராகார சிவ பகவான் மகாவாக்கியம் ஆத்மாவிற்கு சிவன் என்று கூற மாட்டார்கள். ஆத்மாக்கள் அனைவரும் சாலிகிராமங்கள் ஆவார்கள். சிவன் என்று ஒருவருக்குத் தான் கூறப்படுகிறது. சாலிகிராமங்களோ அநேகம் இருக்கும். இது ருத்ர ஞான வேள்வி ஆகும். அந்த பிராமணர்கள் வேள்வி இயற்றும் பொழுது அதில் ஒரு பெரிய சிவலிங்கம் மற்றும் சிறு சிறு சாலிகிராமங்கள் அமைத்து பூஜை செய்கிறார்கள். தேவிகள் முதலியோருக்கு பூஜையோ வருடா வருடம் நடக்கிறது. இதுவோ தினமும் மண்ணில் தயாரிக்கிறார்கள் மற்றும் பூஜை செய்கிறார்கள். ருத்ராட்சத்திற்கு மிகுந்த மதிப்பு இருக்கும். சாலிகிராமங்கள் யார் என்பதையோ அறியாமல் உள்ளார்கள். சிவ சக்தி சேனையாகிய நீங்கள் பதீதர்களை பாவனமாக ஆக்குகிறீர்கள். சிவனுக்கு பூஜையோ ஆகிறது. சாலிகிராமங்கள் எங்கே போவது? எனவே நிறைய மனிதர்கள் ருத்ர யக்ஞம் இயற்றி சாலிகிராமங்களுக்கு பூஜை செய்கிறார்கள். சிவபாபாவுடன் கூடவே குழந்தைகளும் உழைத்துள்ளார்கள். சிவபாபாவிற்கு உதவியாளர்கள் ஆவார்கள். அவர்களுக்கு இறை சேவகர்கள் என்று கூறப்படுகிறது.சுயம் நிராகாரமானவர் கூட அவசியம் ஏதாவது ஒரு சரீரத்தில் வருவார் அல்லவா? சொர்க்கத்திலோ இறை சேவையின் அவசியம் இல்லை. பாருங்கள் இவர்கள் என்னுடைய சேவகர்களான குழந்தைகள் ஆவார்கள் என்று சிவபாபா கூறுகிறார். வரிசைக்கிரமமாகவோ உள்ளார்கள் அல்லவா? எல்லோருக்கும் பூஜையோ செய்ய முடியாது. இந்த யக்ஞம் கூட பாரதத்தில் தான் நடக்கிறது. இந்த இரகசியத்தை தந்தை தான் புரிய வைக்கிறார். அந்த பிராமணர்கள் அல்லது சேட் (செல்வந்தர்கள்) அறிந்திருக்கிறார்களா என்ன? உண்மையில் இது ருத்ர ஞான யக்ஞம் ஆகும். குழந்தைகள் தூய்மையாக ஆகி பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறார்கள். இது பெரிய மருத்துவமனை ஆகும். இங்கு யோகத்தின் மூலம் நாம் எவர் ஹெல்தி (என்றும் ஆரோக்கியமானவராக) ஆகிறோம். என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். தேக அகங்காரம் முதல் நம்பர் விகாரம் ஆகும். அது யோகத்தைத் துண்டித்து விடுகிறது. தேக அபிமானி (பாடி கான்ஷியஸ்) ஆகிறீர்கள். தந்தையை மறக்கிறீர்கள். அப்பொழுது தான் மற்ற விகாரங்கள் வந்து விடுகின்றன. இந்த யோகத்தை நிரந்தரமாகச் செய்வது மிகுந்த உழைப்பு ஆகும். மனிதர்கள் கிருஷ்ணரை பகவான் என்று கருதி அவருக்கு பூஜை செய்கிறார்கள். ஆனால் அவருடைய பாதங்களைப் பூஜிக்கும் வகையில் அவர் பதீத பாவனரோ கிடையாது. சிவனோ இருப்பதே பாதங்கள் அற்றவராக! அவரோ வந்து தாய்மார்களுக்கு ஊழியர் ஆகிறார். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்தீர்களானால் பின் நீங்கள் 21 பிறவிகள் ஆட்சி புரிவீர்கள் என்று கூறுகிறார். 21 தலைமுறைகள் பாடப்பட்டுள்ளன. மற்ற தர்மங்களில் பாடப்படுவதில்லை. எந்த ஒரு தர்மத்தினருக்கும் 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் அரசாட்சி கிடைப்பதில்லை. இதுவும் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற தர்மங்களில் கலந்து போய் விட்டிருக்கும் தேவதா தர்மத்தினர் மீண்டும் வெளி வருவார்கள். சொர்க்கத்தின் சுகமோ அளவற்றது ஆகும். புதிய உலகம் புதிய வீட்டில் நன்றாக சுகம் இருக்கும். கொஞ்சம் பழையதாக ஆகி விடும் பொழுது ஏதேனும் பழுது ஏற்பட்டு விடுகிறது. பிறகு பழுது பார்க்கப்படுகிறது. எனவே எப்படி தந்தையின் மகிமை அளவற்றதோ அதே போல சொர்க்கத்தின் மகிமை கூட அளவற்றது ஆகும். அதற்கு அதிபதி ஆவதற்காக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். வேறு யாரும் சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்க முடியாது.

 

விநாசத்தின் காட்சிகள் மிகவும் வேதனைக்குரியதாக இருக்கும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதற்கு முன்னதாக தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொண்டு விட வேண்டும். இப்பொழுது என்னுடையவராக ஆகுங்கள் அதாவது ஈசுவரிய மடியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தந்தை கூறுகிறார். சிவபாபா உயர்ந்தவர் ஆவார் அல்லவா? எனவே உங்களுக்கு நிறைய பிராப்தி உள்ளது. சொர்க்கத்தின் சுகம் அளவற்றது ஆகும். பெயர் கேட்ட உடனேயே வாயில் நீர் சுரக்கிறது. இன்னார் சொர்க்கம் சென்று விட்டார் என்றும் கூறுகிறார்கள். சொர்க்கம் பிரியமானதாகப்படுகிறது அல்லவா? இதுவோ இருப்பது நரகமாக. சத்யுகம் வராதவரை யாரும் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது. இந்த ஜகதம்பா சென்று பிறகு சொர்க்கத்தின் மகாராணி இலட்சுமி ஆகிறார் என்று தந்தை புரிய வைக்கிறார். பிறகு குழந்தைகள் கூட வரிசைக்கிரமமாக ஆகிறார்கள். மம்மா, பாபா அதிகமாக முயற்சி (புருஷார்த்தம்) செய்கிறார்கள். அங்கு குழந்தைகளும் கூட ஆட்சி புரிவார்கள் அல்லவா? இலட்சுமி நாராயணர் மட்டுமே ஆட்சி புரிய மாட்டார்கள். எனவே தந்தை வந்து மனிதனிலிருந்து தேவதையாக ஆக்குகிறார். படிப்பிக்கிறார். கிருஷ்ணர் ஆக்குகிறார் என்று கூறுகிறார்கள் என்றால் பின் கிருஷ்ணரையோ துவாபரத்திற்கு எடுத்துச் சென்று விட்டுள்ளார்கள். துவாபரத்திலோ தேவதைகள் இருப்பதில்லை. நாங்கள் சொர்க்கம் செல்வதற்கான வழி கூறுகிறோம் என்று சந்நியாசிகள் கூற முடியாது. அதற்கோ பகவான் வேண்டும். முக்தி ஜீவன் முக்தியின் வாசல் கலியுகக் கடைசியில் திறக்கும் என்று கூறுகிறார்கள். இது ருத்ர ஞான யக்ஞம் ஆகும். நான் சிவன் ஆவேன். ருத்ர மற்றும் இவர்கள் சாலிகிராமங்கள் ஆவார்கள். இவர்கள் எல்லோருமே சரீரதாரி ஆவார்கள். நான் சரீரத்தைக் கடனாக எடுத்துள்ளேன். இவர்கள் எல்லோரும் பிரமாணர்கள் ஆவார்கள். பிராமணர்களைத் தவிர இந்த ஞானம் யாரிடமும் இருப்பதில்லை. சூத்திரர்களிடமும் இல்லை. சத்யுகத்தில் தேவி தேவதைகளோ தங்கம் போன்ற புத்தி உடையவர்களாக இருந்தார்கள். அது போல தந்தை தான் இப்பொழுது ஆக்குகிறார். சந்நியாசிகள் யாரையும் தங்க புத்தியாக ஆக்க முடியாது. சுயம் தூய்மையாக இருக்கிறார்கள் என்றாலும் கூட பிறகும் நோய்வாய்ப்படுகிறார்கள். சொர்க்கத்தில் ஒரு பொழுதும் நோய்வாய்ப்பட மாட்டார்கள். அங்கோ அளவற்ற சுகம் இருக்கும். எனவே முழுமையாக முயற்சி செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஓட்டப் பந்தயம் நடக்கிறது அல்லவா? இது ருத்ரமாலையில் கோர்க்கப்படுவதற்கான ஓட்டப்பந்தயம். நான் ஆத்மா யோகத்தின் ஒட்டத்தில் ஓட வேண்டும். எந்த அளவு யோகம் செய்வார்களோ இவர்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார் என்று நினைப்போம். அவர்களுடைய விகர்மங்கள் விநாசம் ஆகிக் கொண்டே போகும். நீங்கள் எழுந்தாலும், அமர்ந்தாலும், நடந்தாலும், சென்றாலும் யாத்திரையில் உள்ளீர்கள். இது புத்தியோகத்தின் மிகவும் நல்ல யாத்திரை ஆகும். இப்பேர்ப்பட்ட சொர்க்கத்தின் அளவற்ற சுகத்தை அடைவதற்காக ஏன் தூய்மையாக இருக்க மாட்டோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். எங்களை மாயை அசைக்க முடியாது. உறுதி எடுக்க வேண்டி உள்ளது. கடைசிப் பிறவி ஆகும். இறக்கத் தான் வேண்டும் பின் ஏன் தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுக்கக் கூடாது? எவ்வளவு பேர் பாபாவின் குழந்தைகள் இருக்கிறார்கள்! பிரஜாபிதா இருக்கிறார். எனவே அவசியம் புதிய படைப்பைப் படைக்கிறார். பிராமணர்களினுடையது புதிய படைப்பு ஆகிறது. பிராமணர்கள் ஆன்மீக சமூக சேவகர்கள் ஆவார்கள். தேவதைகளோ பிராலப்தத்தை அனுபவிக்கிறார்கள். நீங்கள் பாரதத்திற்கு சேவை செய்கிறீர்கள். எனவே நீங்கள் தான் சொர்க்கத்திற்கு அதிபதி ஆகிறீர்கள். பாரதத்திற்கு சேவை செய்வதால் அனைவருக்கும் சேவை ஆகி விடுகிறது. எனவே இது ருத்ர ஞான வேள்வி ஆகும். ருத்ரன் என்று சிவனுக்குக் கூறப்படுகிறதேயன்றி கிருஷ்ணருக்கு அல்ல. கிருஷ்ணரோ சத்யுகத்தின் இளவரசர் ஆவார். அங்கு இந்த வேள்விகள் ஆகியவை இருக்காது. இப்பொழுது இருப்பது இராவண ராஜ்யம் ஆகும். இது முடியப் போகிறது. பிறகு ஒரு பொழுதும் இராவணனை உருவாக்கவே மாட்டார்கள். தந்தை தான் வந்து இந்த சங்கிகளிலிருந்து விடுவிக்கிறார். இந்த பிரம்மாவைக் கூட சங்கிகளிலிருந்து விடுவித்தார் அல்லவா? சாஸ்திரங்கள் படித்து படித்து என்ன நிலைமை ஆகி விட்டுள்ளது! எனவே இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். தந்தையை நினைவு செய்வதற்கான துணிவு இல்லை. தூய்மையாக இருப்பதில்லை. வீணாக கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே தந்தை மன்மனா பவ என்று கூறுகிறார். ஒரு வேளை ஏதாவது விஷயத்தில் குழம்புகிறீர்கள் என்றால் அதை விட்டு விடுங்கள். மன்மனாபவ. அப்படி இன்றி கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை என்பதற்காக படிப்பதையே விட்டு விடுங்கள் என்பதல்ல. பகவான் ஆவார் என்றால் ஏன் பதில் அளிப்பதில்லை? என்று கூறுகிறார்கள். உங்களுடைய வேலை தந்தை மற்றும் ஆஸ்தியிடம் என்று தந்தை கூறுகிறார். சக்கரத்தையும் நினைவு செய்ய வேண்டி உள்ளது. அவர்களும் திரிமூர்த்தி மற்றும் சக்கரத்தைக் காண்பிக்கிறார்கள். "சத்தியமேவ ஜெயதே" (வாய்மையே வெல்லும்) என்று எழுதுகிறார்கள். ஆனால் பொருளைப் புரிந்து கொள்வதில்லை. சிவபாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் சூட்சும வதனவாசி பிரம்மா, விஷ்ணு, சங்கரன் கூட நினைவிற்கு வருவார்கள் மற்றும் சுயதரிசன சக்கரத்தை நினைவு செய்வதால் வெற்றி அடைபவர்கள் ஆகி விடுவீர்கள். "ஜெயதே" என்றால் மாயை மீது வெற்றி அடைவீர்கள். எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். அன்னங்களின் சபையில் கொக்குகள் அமர முடியாது என்பது இங்கே சட்டம் ஆகும். சொர்க்கத்தின் தேவதைகளாக (பரிகள்) ஆக்கக் கூடிய பி.கே.க்கள் மீது பெரிய பொறுப்பு உள்ளது. முதலில் யாராவது வந்தார்கள் என்றால் ஆத்மாவின் தந்தையை அறிந்துள்ளீர்களா என்று அவர்களிடம் எப்பொழுதும் கேளுங்கள்! யார் கேள்வி கேட்கிறார்களோ அவர்கள் அவசியம் அறிந்திருக்க கூடும். சந்நியாசிகள் ஆகியோர் ஒரு பொழுதும் இது போல கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியவே தெரியாது. எல்லையில்லாத தந்தையை அறிந்துள்ளீர்களா என்று நீங்களோ கேள்வி கேட்பீர்கள். முதலில் நிச்சயதார்த்தம் செய்யுங்கள். பிராமணர்களின் தொழிலே இது தான். ஹே ஆத்மாக்களே! என்னுடன் யோகம் கொள்ளுங்கள். ஏனெனில் என்னிடம் வர வேண்டி உள்ளது என்று தந்தை கூறுகிறார். சத்யுக தேவி தேவதைகள் வெகுகாலமாகப் பிரிந்திருக்கிறார்கள். எனவே முதன் முதலில் ஞானம் கூட அவர்களுக்குத் தான் கிடைக்கும். இலட்சுமி நாராயணர் 84 பிறவிகள் முழுமையாக எடுத்துள்ளார்கள். எனவே அவர்களுக்குத் தான் முதலில் ஞானம் கிடைக்க வேண்டும்.

 

மனித சிருஷ்டியின் விருட்சத்திற்கு தந்தை பிரம்மா ஆவார் மற்றும் ஆத்மாவின் தந்தை சிவன் ஆவார். எனவே தந்தை மற்றும் தாதா இருக்கிறார்கள் அல்லவா? நீங்கள் அவருடைய பேரன்கள் ஆவீர்கள். அவர்களிடமிருந்து உங்களுக்கு ஞானம் கிடைக்கிறது. நான் நரகத்தில் வந்தால் தானே சொர்க்கத்தைப் படைக்க முடியும் என்று தந்தை கூறுகிறார். இலட்சுமி நாராயணர் திரிகாலதரிசி இல்லை என்று சிவ பகவான் கூறுகிறார். அவர்களுக்கே இந்த படைப்பவர், படைப்பு பற்றிய ஞானம் இல்லை. பின் பரம்பரையாக எப்படி நடக்க முடியும்? இவர்களோ மரணம் வந்து விட்டது போலத் தான் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ஒரு சிலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒன்றுமே நடப்பதில்லை என்று. இது பற்றி ஒரு உதாரணம் கூட உள்ளது அல்லவா? அவர் புலி வந்தது, புலி வந்தது என்று கூறினார். ஆனால் புலி வரவே இல்லை. கடைசியில் ஒரு நாள் புலி வந்தது, எல்லா ஆடுகளையும் சாப்பிட்டு விட்டது. இந்த விஷயங்கள் எல்லாம் இப்பொழுதினுடையவை ஆகும். ஒரு நாள் எமன் வந்து "உயிரைக் குடிப்பான்" பின் என்ன செய்வீர்கள்? பகவானுடைய எவ்வளவு பெரிய வேள்வி ஆகும்! பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு பெரிய வேள்வியை இயற்ற முடியாது. பிரம்மா வம்சத்தின் பிராமணர்கள் என்று அழைத்துக் கொண்டு தூய்மையாக ஆகவில்லை என்றால் அவ்வளவு தான்! சிவபாபாவிடம் உறுதி எடுக்க வேண்டி உள்ளது. இனிமையான பாபா, சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்கும் பாபா, நானோ உங்களுடையவன் ஆவேன். கடைசி வரை உங்களுடையவனாக ஆகியே இருப்பேன். இப்பேர்ப்பட்ட தந்தையை அல்லது மணமகனை கை விட்டு விட்டீர்கள் என்றால் மகாராஜா மகாராணியாக ஆக முடியாது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. உண்மையான இறைத் தொண்டராகி பாரதத்தை சொர்க்கமாக ஆக்குவதில் தந்தைக்கு தூய்மையின் உதவியை அளிக்க வேண்டும். ஆன்மீக சமூக சேவகர் ஆக வேண்டும்.

 

2. எந்த ஒரு விதமான கேள்விகளிலும் குழம்பி படிப்பை விடக் கூடாது. கேள்விகளை விடுத்து தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யவேண்டும்.

 

வரதானம்:

சுய மாற்றம் மற்றும் உலக மாற்றத்தின் பொறுப்பின் கிரீடம் அணிந்தவரிலிருந்து உலக இராஜ்ஜியத்தின் கிரீடதாரி ஆகுக.

 

எப்படி தந்தையின் மீதும், பிராப்தியின் மீதும் ஒவ்வொருவருமே தம்முடைய அதிகாரம் இருப்பதாக புரிந்து கொள்கிறீர்களோ, அது போல சுய மாற்றம் மற்றும் உலக மாற்றம் என்ற இரண்டு பொறுப்பின் கிரீடம் தரித்தவராக ஆகுங்கள். அப்போது உலக இராஜ்ஜியத்தின் கிரீடத்தின் அதிகாரியாக ஆவீர்கள். தற்காலமே எதிர்காலத்தின் ஆதாரம் ஆகும். பிராமண வாழ்வில் தூய்மையின் படிப்பு மற்றும் சேவையின் இரட்டை கிரீடம் இருக்கிறதா என சோதனை செய்யுங்கள் மற்றும் ஞானத்தின் கண்ணாடியில் பாருங்கள். ஒரு வேளை இங்கே எந்த கிரீடமாவது அரை குறையாக இருந்தது என்றால் அங்கும் கூட சிறிய கிரீடத்தின் அதிகாரியாகத்தான் ஆவீர்கள்.

 

சுலோகன்:

எப்போதும் பாப்தாதாவின் குடை நிழலுக்குள் இருந்தீர்கள் என்றால் தடைகளை அழித்தவர் ஆகி விடுவீர்கள்.

 

ஓம்சாந்தி