16.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இப்போது நீங்கள் மிகப்பெரிய கப்பல் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் உப்புக் கால்வாயைக் கடந்து பாற்கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய நங்கூரம் எடுக்கப்பட்டு விட்டது.

 

கேள்வி :

குழந்தைகளுக்கு அதிகமாகக் களைப்பு எந்த ஒரு விஷயத்தில் வருகிறது? களைப்பு வருவதற்கான முக்கியக் காரணம் என்ன?

 

பதில் :

குழந்தைகள் போகப்போக நினைவு யாத்திரையிலேயே களைத்துப் போகின்றனர். இதில் களைப்பு வருவதற்கான முக்கியக் காரணம் சங்கதோஷமாகும். சங்கம் (சேர்க்கை) அதுபோல் கிடைத்து விடுகிறது-பாபாவின் கையையே விட்டு விடுகின்றனர். நல்ல சங்கம் அக்கரை சேர்க்கும், தீய சங்கம் மூழ்கடித்து விடும் என சொல்லப்படுகிறது. தீய சங்கத்தில் வந்து கப்பலில் இருந்து காலைக் கீழே வைத்தால் மாயா பச்சையாகவே விழுங்கி விடும். அதனால் பாபா குழந்தைகளுக்கு எச்சரிக்கை தருகிறார்-குழந்தைகளே, சக்திசாலியான பாபாவின் கையை ஒருபோதும் விடக்கூடாது.

 

பாடல் :

மாதா மாதா...........

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குச் சொல்கிறார்-குழந்தைகளே, ஓம் சாந்தி. இதுவும் மகாமந்திரம் எனச் சொல்லப் படுகின்றது. ஆத்மா தனது சுயதர்மத்தின் மந்திரத்தை ஜெபிக்கின்றது. ஆத்மாவாகிய என்னுடைய சுயதர்மம் அமைதி. நான் சாந்திக்காக எந்த ஒரு வனம் போன்ற இடத்துக்கும் போக வேண்டிய தேவையில்லை. நான் ஆத்மா சாந்த சொரூபம். இவை என்னுடைய சரீர உறுப்புகள். சப்தம் செய்வது, செய்யாமலிருப்பது, இந்த செயல்கள் என் கையில் இல்லை. ஆனால் இந்த ஞானம் இல்லாத காரணத்தால் வீடு-வீடாக அலைகின்றனர். இது பற்றி ஒரு கதை கூட உள்ளது - ஒரு ராணியின் மாலை கழுத்தில் இருந்தது. ஆனால் அவள் மறந்து போனாள். எனது மாலை தொலைந்து விட்டது என அவளுக்குத் தோன்றியது. அதனால் அவள் வெளியில் அதைத் தேடிக்கொண்டிருந்தாள். பிறகு யாரோ சொன்னார்-மாலையோ உன் கழுத்திலேயே உள்ளது என்று. இந்த உதாரணம் சொல்கின்றனர். மனிதர்கள் ஒவ்வோர் இடமாக அலைந்து கஷ்டப் படுகின்றனர் இல்லையா? சந்நியாசிகள் முதலானவர்களும் சொல்கின்றனர். மனதின் சாந்தி எப்படி ஏற்படும்? ஆனால் ஆத்மாவில் தான் மனம் புத்தி உள்ளது. ஆத்மா இந்த உறுப்புகளில் வருவதால் டாக்கி ஆகின்றது (சப்தத்தில் வருகின்றது). பாபா சொல்கிறார், ஆத்மாவாகிய நீங்கள் உங்கள் சுயதர்மத்தில் இருங்கள். இந்த தேகத்தின் அனைத்து தர்மங்களையும் மறந்து விடுங்கள். அடிக்கடி புரிய வைக்கிறார் என்றாலும் சிலர் சொல்கின்றனர், எங்களை சாந்தியில் அமர்த்துங்கள், நிஷ்டை செய்வியுங்கள். அதுவும் தவறாகும். ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவுக்குச் சொல்கிறது - என்னை சாந்தியில் அமர்த்துங்கள் என்று. அட, உங்களுடைய சுயதர்மம் சாந்தி இல்லையா என்ன? நீங்கள் தாங்களாகவே அமர முடியாதா? நடமாடும் போதும் சுற்றிவரும் போதும் நீங்கள் சுயதர்மத்தில் ஏன் நிலைத்திருப்பதில்லை? எதுவரை வழியைச் சொல்பவராகிய பாபா கிடைக்கவில்லையோ, அதுவரை சுயதர்மத்தில் யாரும் நிலைக்க முடியாது. அவர்களோ ஆத்மாவே பரமாத்மா எனச் சொல்லிவிட்டனர். அதனால் சுயதர்மத்தில் நிலைத்திருக்க முடியாது. இந்த அமைதியற்ற தேசத்தில் இது உங்களுடைய கடைசிப் பிறவி. இப்போது நீங்கள் அமைதியின் உலகத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு சுகதாமத்திற்குப் போக வேண்டும். இங்கோ ஒவ்வொரு வீட்டிலும் அசாந்தி. சத்யுகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒளிப்பிரகாசம் இருக்கும். ஆக, இங்கே இருள் நிறைந்துள்ளது. இங்கே ஒவ்வொரு விஷயத்திலும் ஏமாற்றமடைய வேண்டி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் இருள். அதனால் தீபம் ஏற்றுகின்றனர். இராவணன் இறந்து விட்டால் தீபாவளி கொண்டாடுகின்றனர். அங்கோ இராவணன் இருக்க மாட்டான். ஆகவே சதா அங்கே தீபாவளி தான். இங்கே இராவண இராஜ்யத்தின் காரணத்தால் 12 மாதங்களுக்குப் பின் தீபாவளி கொண்டாடுகின்றனர். இராவணனின் மரணம் ஏற்பட்டது என்றால் லட்சுமி-நாராயணரின் பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனுடைய குஷியைக் கொண்டாடுகின்றனர். சத்யுகத்தில் எப்போது லட்சுமி-நாராயணர் சிம்மாசனத்தில் அமர்கின்றனரோ, அப்போது பட்டாபிஷேகத்தைக் கொண்டாடுகின்றனர். நீங்கள் அறிவீர்கள், இப்போது இராவண இராஜ்யம் முடிந்து விடும். பாரதத்திற்கு மீண்டும் இராஜ்ய பாக்கியம் கிடைக்கப் போகின்றது. இப்போது எந்த ஒரு இராஜ்யமும் கிடையாது. பாபாவிடமிருந்து இராஜ்யம் கிடைக்கப் போகின்றது. எல்லையற்ற தந்தை எல்லையற்ற இராஜதானியின் ஆஸ்தி தருகிறார். பாபா சொல்கிறார், நான் உங்களுக்கு சதா சுகத்தின் ஆஸ்தி தருபவன். மற்ற அனைவரும் உங்களுக்கு துக்கத்தைக் கொடுப்பவர்கள். சிலர் ஒருவேளை சுகமும் கொடுத்தாலும் கூட அது அல்பகாலத்துக்குத் தான். அந்த சுகம் காக்கையின் எச்சத்துக்குச் சமமானது. நான் உங்களுக்கு அவ்வளவு சுகம் தருகிறேன், அதனால் பிறகு ஒருபோதும் துக்கம் ஏற்படவே ஏற்படாது. அதனால் இந்த தேகத்துடன் கூட தேகத்தின் உறவு வைப்பவர்களை மறந்து விடுங்கள். இந்த தேகமும் தேகத்தின் உறவுகளும் உங்களுக்கு துக்கம் கொடுப்பவையாகும். இவற்றை விட்டு என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். நினைவு செய்ய வேண்டியது அமிர்த வேளையில். பக்தி மார்க்கத்திலும் கூட மனிதர்கள் அதிகாலையில் எழுகின்றனர். ஒவ்வொருவரும் யாரோ சிலரின் வழிமுறைப்படி என்னென்னவோ செய்கின்றனர். பாபா புரிய வைக்கிறார், அதிகாலை எழுந்து எவ்வளவு முடியுமோ, தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். இது பாபாவின் கட்டளையாகும்.

 

பக்தர்கள் பகவானை நினைவும் செய்கின்றனர். பிறகு சொல்கின்றனர், அனைத்தும் பகவான் என்று. இப்போது அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒரு நாள் அவர்கள் அனைவரும் உங்கள் நண்பர்களாக ஆவார்கள். இந்த விஷயமோ சரி தான் எனச் சொல்வார்கள். ஈஸ்வரன் சர்வவியாபி எனச் சொல்வது என்றால் அது தன்னுடைய மற்றும் பாரதத்தின் படகை மூழ்கடிப்பதாக ஆகும். இரண்டாவது விஷயம்-பாரதத்திற்கு சுயராஜ்யத்தின் வெண்ணெய் கிடைக்கச் செய்பவர் பாபா. அவருக்கு பதிலாகப் பிறகு குழந்தையின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணெய் கிடைக்கின்றது. ஆக, பாரதத்திற்கு வெண்ணெய் கிடைக்கச் செய்பவர் கிருஷ்ணர் என மனிதர்கள் நினைக்கின்றனர். தந்தைக்குப் பதிலாக பிள்ளையின் பெயரைப் போட்டு அர்த்தமற்றதாக ஆக்கி விட்டுள்ளனர். இப்போது முழு உலகத்திற்கும் பகவானாக கிருஷ்ணரோ இருக்க முடியாது. மனிதர்கள் இராவணனின் வழிப்படித் தங்களுக்குத் தாங்களே ஸ்ரீமத் கொடுத்துக் கொண்டுள்ளனர். பாபா படகோட்டியாக உள்ளார். நீங்களெல்லாம் படகுகள். பாடுகின்றனர் இல்லையா-என் படகை அக்கரை கொண்டு சேருங்கள் என்று? இப்போது நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள், பெரிய கப்பல். சந்திரகாந்த் வேதாந்தத்தில் கப்பலின் விசயம் உள்ளது. அதுவும் இப்போதைய விசயத்தை வைத்து உருவாக்கப் பட்டது. நீங்கள் கப்பலில் அக்கரை சென்று கொண்டிருக்கிறீர்கள். விஷக்கடலில் இருந்து அமிர்தம் அல்லது பாற்கடலுக்குச் செல்கிறீர்கள். எப்படி லண்டனில் இருந்து கப்பலில் உப்புக்கடல் கால்வாயைக் கடப்பவருக்குப் பரிசு கிடைக்கிறது. இது பிறகு நரகத்திலிருந்து சொர்க்கம் செல்ல வேண்டும். விஷக்கடல் உப்புக் கால்வாயாக இடையில் உள்ளது. நீங்கள் பெரிய கப்பல் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் புறப்பட்டு விட்டீர்கள். நங்கூரம் எடுக்கப் பட்டு விட்டது. நீங்கள் போய்க்கொண்டே இருக்கிறீர்கள். அக்கரை செல்ல வேண்டும். கப்பல் போகப்போக துறைமுகம் வருகின்றது. அங்கே சிலர் இறங்குகின்றனர், சிலர் ஏறுகின்றனர். சிலர் உணவு-பானத்திற்கிடையில் செல்கிறார்கள் என்றால் இருந்து விடுகின்றனர். இதைப் பற்றி ஒரு கதை உருவாக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணருக்கு பட்டுக் மகாராஜா எழுதியுள்ளார். அவர் பட்டுக் கப்பலின் கேப்டன். பிறகு கப்பலில் செல்லச் செல்ல அநேகர் இறங்கி விடுகின்றனர். அங்கே மலைப் பாம்பு மாயா அமர்ந்துள்ளது. மகாரதிகளையும் கூட சாப்பிட்டு விழுங்கி விடுகின்றது. படிப்பை விட்டுவிட்டார்கள் என்றால் நிச்சயபுத்தி உள்ளவர்களாக இருக்கவில்லை என்றாகிறது. பிறகு கடலின் நடுவில் விழுந்து விடுகின்றனர்.

 

நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்-பறவைகள் இறந்து போனால் பிறகு எறும்புக் கூட்டங்கள் வந்து அவற்றை எடுத்துக் கொள்ளும். ஆக, இந்த 5 விகாரங்களாகிய பூதம் முற்றிலும் பச்சையாகவே சாப்பிட்டு விழுங்கி விடுகின்றன. இதைப் பற்றிப் பெரிய கதை எழுதப்பட்டுள்ளது. யாராவது கப்பலில் அமர்ந்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள் - உறுதிமொழியும் எழுதுகின்றனர், தன்னுடைய புகைப்படமும் அனுப்பி வைக்கின்றனர். பிறகு யாருடைய சங்கத்தினாலாவது கோபித்துக் கொண்டு படிப்பை விட்டு விட்டார்களானால் பிறகு அவர்களுடைய படத்தை அவர்களுக்குத் திருப்பி அனுப்பி விடுவார்கள். இச்சமயம் மாயா தமோபிரதானாக உள்ளது. ஈஸ்வரனின் கையை விட்டு விட்டால் பிறகு அசுரர்கள் பிடித்துக் கொள்வார்கள். இதுபோல் அநேகர் போகப்போக கையை விட்டுக் கீழே இறங்கி விடுகின்றனர். செய்திகள் வருகின்றன-இவரைக் கோபம் என்ற பூதம், மோகம் என்ற பூதம் பிடித்துக் கொண்டு விட்டது என்று. முதலிலோ முழுப் பற்றற்றவர் ஆக வேண்டும். மோகம் ஒருவரிடம் மட்டும் வைக்க வேண்டும். இது முயற்சியாகும். மோகத்தின் மீது சங்கிலியால் பிணைக்கப் பட்டுள்ளது. இப்போது ஒருவரிடம் புத்தியோகத்தை ஈடுபடுத்த வேண்டும். எப்படி மனிதர்கள் அமர்ந்து பக்தி செய்கிறார்கள் என்றால் புத்தி தொழிலின் பக்கம், வீட்டின் பக்கம் சென்று விடுகின்றது. இங்கேயும் கூட உங்களுக்கு அதுபோல் ஆகும். போகப் போக உங்களுக்குக் குழந்தை நினைவு வந்து விடும். கணவரின் நினைவு வந்து விடும். பாபா சொல்கிறார், இந்த சங்கிலி பிணைப்பிலிருந்து புத்தியோகத்தை விலக்கி ஒருவரை நினைவு செய்யுங்கள். கடைசி நேரத்தில் வேறு யாருடைய நினைவாவது வந்தால், கடைசிக் காலத்தில் யார் கணவனை நினைக்கிறார்களோ........ இறுதி காலத்தில் சிவபாபாவைத் தவிர வேறு யார் நினைவும் வரக்கூடாது. அதுபோல் அப்பியாசம் செய்ய வேண்டும். அதிகாலை எழுந்து பாபாவை நினைவு செய்யுங்கள். பாபா, நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம்-நிச்சயமாக நாங்கள் சொர்க்கத்தின் எஜமானர் ஆவோம். தந்தை மற்றும் ஆஸ்தியை, அதாவது அலஃப் மற்றும் பே- நினைவு செய்ய வேண்டும். அலஃப்-அல்லா, பே-ஆஸ்தி, இராஜபதவி. ஆத்மா புள்ளியாக உள்ளது. இங்கே மனிதர்கள் திலகம் வைக்கிறார்கள் என்றால் சிலர் பிந்தி வைக்கின்றனர், சிலர் பெரிய திலகம் வைக்கின்றனர். சிலர் கிரீடம் போல் வைக்கின்றனர். சிலர் சிறிய நட்சத்திரத்தை வைத்து விடுகின்றனர். சிலர் டயமண்ட் வைக்கின்றனர். பாபா சொல்கிறார், நீங்கள் ஆத்மா. நீங்கள் அறிவீர்கள், ஆத்மா நட்சத்திரம் போன்றது. அந்த ஆத்மாவிற்குள் முழு டிராமாவின் பதிவு நிரம்பியுள்ளது. இப்போது பாபா கட்டளையிடுகிறார்-நிரந்தரமாகத் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், மற்ற அனைத்திலிருந்தும் புத்தியோகத்தை விலக்கி வையுங்கள். இந்த இலட்சியத்தை வேறு யாரும் கொடுக்கக்கூட முடியாது. பாபா சொல்கிறார், உங்கள் தலை மீது ஜென்ம-ஜென்மாந்தரத்தின் பாவங்கள் உள்ளன. அவை நினைவினாலன்றி பஸ்மமாகாது. சதா ஆரோக்கியமாக ஆவதற்கு பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபாவிடமிருந்து தான் சதா ஆராக்கியமானவராகவும் சதா செல்வந்தராகவும் ஆவதற்கான ஆஸ்தி கிடைக்கின்றது. ஆரோக்கியமும் செல்வமும் இருக்குமானால் வேறு என்ன வேண்டும்? ஆரோக்கியம் உள்ளது, செல்வம் இல்லை என்றாலும் கூட மஜா இல்லை. ஆத்மா முதலில் தந்தையை நினைவு செய்ய வேண்டும். அப்போது தான் விகர்மங்கள் விநாசமாகும். மேலும் 21 பிறவிகளுக்காக செல்வம் கிடைக்கும். எவ்வளவு சுலபமான விஷயம்! நாம் 84 பிறவிகள் இதுபோல் சுற்றி வந்துள்ளோம். இப்போது அனைத்துமே உரமாக ஆகிவிடப் போகின்றன. அவற்றிடம் மனதை ஏன் ஈடுபடுத்த வேண்டும்? யார் புது உலகத்தின் இராஜ்யத்தைத் தருகிறாரோ, அவரிடம் மனதை ஈடுபடுத்த வேண்டும். ஆத்மாக்களிடம் பேசுகிறார்-குழந்தைகளே, இப்போது இந்த சரீரத்தை மறந்து தன்னை அசரீரி என உணர்ந்து என்னை நினைவு செய்யுங்கள். இந்த சரீரம் உங்களுக்கு நாடக பாகத்தை நடிப்பதற்காகக் கிடைத்துள்ளது. காலையில் எழுந்து இதைச் சிந்தனை செய்ய வேண்டும். விரிகுடாவைக் (அகலமான முகத்துவாரம்) கடந்து அழைத்துச் செல்லும் நாயகனை நினைவு செய்ய வேண்டும். மற்ற அனைவரும் விஷக்கடலில் மூழ்கிப் போகிறவர்கள். பாபா அக்கரை கொண்டு சேர்ப்பவர். அவர் படகோட்டி, தோட்டக்காரர் என்றும் சொல்லப்படுகிறார். உங்களை முள்ளில் இருந்து மலராக்கி சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்து விடுகிறார். பிறகு சொர்க்கத்தில் நீங்கள் ஒருபோதும் துக்கத்தைப் பார்க்க மாட்டீர்கள். அதனால் அவர் துக்கத்தைப் போக்கி சுகமளிப்பவர் எனச் சொல்லப்படுகிறார். ஹர-ஹர மகாதேவா எனச் சொல்கின்றனர் இல்லையா? சிவனைத் தான் அதுபோல் சொல்கின்றனர். இவர் பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கும் கூடத் தந்தையாக இருப்பவர். அதே தந்தை 21 பிறவிகளுக்கு சுகத்தின் ஆஸ்தி தருகிறார் எனும்போது அவரை நினைவு செய்ய வேண்டும் இல்லையா? இதில் தைரியம் வேண்டும். நினைவு செய்து-செய்தே களைத்துப் போகின்றனர் என்றால் செல்வதையே நிறுத்தி விடுகின்றனர். சங்கம் அதுபோல் கிடைத்து விடுகிறது-இதை விட்டு விடுகின்றனர். அதனால் தான் சொல்லப்படுகின்றது-நல்ல சங்கம்(நட்பு) அக்கரை சேர்க்கும், தீய சங்கம் மூழ்கடித்து விடும் என்று. வெளியில் செல்வதால் தீய சங்கம் கிடைக்கும், அப்போது நஷா வெளியேறி விடும். சிலர் சொல்வார்கள், பிரம்மாகுமாரிகளிடம் மந்திரம் உள்ளது, அது பிடித்துக் கொண்டு விடும் என்று. சிலர் சொல்வார்கள், பிரம்மாகுமாரிகளிடமோ மாயமந்திரம் உள்ளது, அவர்களிடம் போகக்கூடாது என்று. பரீட்சைகளோ வரும். அதுபோல் அநேகர் உள்ளனர்-10 ஆண்டுகள் இருந்த பின்னும் கூட சங்கதோஷத்தில் வந்து விடுகின்றனர். காலைக் கீழே வைத்து விட்டால் மாயா பச்சையாகவே சாப்பிட்டு விடும். இதையும் நிச்சயம் செய்கின்றனர்-பாபாவிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி அவசியம் கிடைக்கவே செய்கின்றது என்று. பிறகும் கூட மாயாவின் பெரிய புயல் வருகின்றது. இது யுத்த மைதானமாகும். அரைக்கல்பம் மாயாவின் இராஜ்யம் நடைபெறுகின்றது. இப்போது அதன் மீது வெற்றி பெற வேண்டும். இராவணனை எரிக்கின்றனர், பிறகு ஒரு நாள் குஷியைக் கொண்டாடுகின்றனர். இவையனைத்தும் செயற்கையான சுகமாகும். உண்மையான சுகம் கிடைப்பது சத்யுகத்தில் தான். மற்றப்படி நரகத்தின் சுகம் காக்கையின் எச்சத்தைப் போன்றதாகும். சொர்க்கத்திலோ சுகத்தின் மேல் சுகம் கிடைத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் சுகமான உலகத்திற்காகப் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். குத்துச் சண்டையில் சில நேரம் மாயாவுக்கு வெற்றி, சில நேரம் குழந்தைகளுக்கு வெற்றி ஏற்படுகின்றது. இந்த யுத்தம் இரவும் பகலும் நடைபெறுகின்றது. ஆசிரியரின் கையை முழுமையாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் சர்வசக்திவான், சக்தி நிறைந்தவர். கையை விட்டு விட்டீர்களானால் பிறகு சர்வசக்திவானும் கூட என்ன செய்வார்? கையை விட்டால் இவர் அவ்வளவுதான் போய் விட்டார். கப்பலின் விஷயம் சாஸ்திரங்களிலும் கூட உள்ளது. இப்போது கப்பல் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் தான் உள்ளது. வைகுண்டமோ முன்கண் பார்க்க முடிகின்றது. கடைசி நேரத்திலோ ஒவ்வொரு கணமும் வைகுண்டத்தின் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். எப்படி ஆரம்பத்தில் அநேகர் பார்த்துள்ளனர். கடைசியிலும் கூட உங்களுக்கு அதிக சாட்சாத்காரம் ஆகும். யார் இங்கே இருப்பார்களோ, தைரியத்துடன் கையைப் பிடித்தவாறு இருக்கின்றனரோ, அவர்கள் தான் கடைசி சமயத்தில் அனைத்தும் பார்ப்பார்கள். பெண்குழந்தைகள் சொல்லத் தொடங்குவார்கள்-பாபா, இவர் தாசி ஆகப் போகிறார். இவர் இன்னாராக ஆகப் போகிறவர். பிறகு உணர்வார்கள், நாம் தாசி ஆகி விட்டோம் என்று. முயற்சி செய்யவில்லை என்றால் வேறு என்ன நிலைமை உண்டாகும்? ஆரம்பத்தில் நீங்கள் அநேக விளையாட்டுகளை யெல்லாம் பார்த்திருக்கிறீர்கள். பாடல் உள்ளது இல்லையா-நாம் என்ன பார்த்தோமோ...... என்பதாக? ஆக, எப்படி சமயம் அருகில் வந்து கொண்டே இருக்குமோ, அனைவரும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பிறகு படிப்போ இருக்க முடியாது. பாபா சொல்வார், உங்களுக்கு எவ்வளவு சொன்னேன்! நீங்கள் ஸ்ரீமத் படி நடக்கவில்லை, அதனால் இந்த நிலைமை ஆனது. இப்போது கல்ப-கல்பத்திற்கும் இந்தப் பதவி கிடைத்துக் கொண்டே இருக்கும். அதனால் பாபா சொல்கிறார், உங்களுடைய புருஷார்த்தத்தைச் செய்து கொண்டே இருங்கள். தாய்-தந்தையைப் பின்பற்றுங்கள். அநேக கெட்ட குழந்தைகளும் உள்ளனர் இல்லையா? மாயா வசமாகித் தொந்தரவு செய்கின்றனர். பிறகு பெரிய கடுமையான தண்டனை அடைவார்கள். பதவியும் கூட கீழானதாக ஆகிவிடும். தண்டனைகளின் சாட்சாத்காரங்களும் கூட குழந்தைகள் பார்த்துள்ளனர். உலகத்தில் இருப்பது, அசுர சங்கம், ஆனால் இங்கே ஈஸ்வரிய சங்கம். பாபா அனைத்து விஷயங்களையும் சொல்லிப் புரிய வைக்கிறார்-பிறகு யாரும் இதுபோல் சொல்லக் கூடாது-எங்களுக்கு என்ன தெரியும் என்று. விநாசத்தின் சமயத்தில் மனிதர்கள் அதிகமாக ஐயோ-ஐயோ எனக் கூக்குரடுவார்கள். நீங்கள் அதிக சாட்சாத்காரங்கள் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். வேட்டைக்காரனுக்குக் கொண்டாட்டம், வேட்டையாடப் படும் விலங்குக்குத் திண்டாட்டம்..... இவ்விதமாகவே நீங்கள் நாட்டிய மாடிக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்-விநாசத்திற்குப் பின் நமது மாளிகைகள் எப்படி உருவாகும் என்று. யார் உயிரோடிருக்கிறார்களோ (இடைவிடாமல் பாபாவின் குழந்தையாகத் தொடர்ந்து இருந்து வருகிறார்களோ) அவர்கள் அனைத்தையும் பார்ப்பார்கள். பாபாவுடையவர்களாக ஆகிவிட்டுப் பிறகு கைவிட்டுச் சென்று விட்டால் பார்க்க முடியாது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட, 5000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்து சந்தித்துள்ள குழந்தைகளுக்கு நம்பர்வார் புருஷார்தத்தின் அனுசாரம் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) சக்திசாலி பாபாவின் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாபாவிடம் மட்டுமே மனதை ஈடுபடுத்த வேண்டும். அதிகாலை எழுந்து நினைவில் அமர வேண்டும்.

 

2) சங்கதோஷத்தில் (தீய நட்பில்) இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தீய சங்கத்தில் (சேர்க்கை) வந்து ஒருபோதும் படிப்பை விட்டுவிடக் கூடாது.

 

வரதானம்:

சேவைகளில் எப்பொழுதும் (சகயோகி) ஒத்துழைப்பு அளிப்பவர்களாக ஆகி சகஜயோகத்தின் வரதானத்தை பெற்று விடக் கூடிய விசேசத் தன்மைகளில் நிறைந்தவர் ஆவீர்களாக.

 

பிராமண வாழ்க்கை விசேஷங்கள் நிறைந்த வாழ்க்கை ஆகும். பிராமணர் ஆவது என்றால் சகஜயோகி பவ என்ற வரதானத்தை பெற்று விடுவது ஆகும். இதுவே எல்லாவற்றையும் விட முதல் பிறவியின் வரதானம் ஆகும். இந்த வரதானத்தை புத்தியில் எப்பொழுதும் நினைவில் கொள்வது - இது தான் வரதானத்தை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது ஆகும். வரதானத்தை நிலையாக வைத்திருப்பதற்கான சுலபமான விதியாவது - அனைத்து ஆத்மாக்களுக்காக வரதானத்தை சேவையில் ஈடுபடுத்துவது. சேவையில் சகயோகி ஆவது தான் சகஜயோகி ஆவது ஆகும். எனவே இந்த வரதானத்தை நினைவில் கொண்டு விசேசத் தன்மையில் நிறைந்தவர் ஆகுங்கள்.

 

சுலோகன்:

தனது நெற்றியின் மணி மூலமாக சுயம் தனது சொரூபம் மற்றும் சிறந்த குறிக்கோளின் சாட்சாத்காரம் (காட்சியாகச்) செய்விப்பது தான் (லைட் ஹவுஸ்) கலங்கரை விளக்கம் ஆவது ஆகும்.

 

ஓம்சாந்தி