12.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே- சிவ பாபாவைத் தவிர உங்களுடையது இங்கு எதுவுமே இல்லை. எனவே இந்த தேகத்தின் உணர்விலிருந்தும் தூர விலகி காஆண்டி ஆகி விட வேண்டும். ஆண்டியிலிருந்து தான் அரசனாக ஆவீர்கள் (பெகர் டு பிரின்ஸ்).

 

கேள்வி:

நாடகம் பற்றிய சரியான ஞானம் எந்த ஒரு எண்ணத்தை இல்லாமல் செய்து விடுகிறது?

 

பதில்:

இந்த வியாதி ஏன் வந்தது? இவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் இவ்வாறு ஆகி இருக்காது.. .. இந்த தடை ஏன் வந்தது.. பந்தனம் ஏன் வந்தது.. இந்த எல்லா எண்ணங்களும் நாடகத்தைப் பற்றிய சரியான ஞானத்தினால் முடிந்து போய் விடுகிறது. ஏனெனில் நாடகப்படி எது ஆக வேண்டி இருந்ததோ அதுவே ஆகியது. முந்தைய கல்பத்திலும் ஆகி இருந்தது. பழைய சரீரம் ஆகும் இதற்கு ஒட்டுப் போட வேண்டியே இருக்கும். எனவே எந்த ஒரு சிந்தனையும் எழ முடியாது.

 

பாடல்:

நாம் அந்த வழிகளில் நடக்க வேண்டும்.. .. ..

 

ஓம் சாந்தி.

அந்த வழிகளில் நடக்க வேண்டும், எந்த வழிகள்? வழி யார் கூறுகிறார்? நாம் யாருடைய வழிப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். ஆலோசனை என்று கூறினாலும் சரி, வழி என்று கூறினாலும் சரி, ஸ்ரீமத்படி என்று கூறினாலும் சரி - விஷயம் ஒன்றே தான் ஆகும். இப்பொழுது ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். ஆனால் ஸ்ரீமத் யாருடையது? ஸ்ரீமத் பகவத் கீதை என்று எழுதப் பட்டுள்ளது. எனவே அவசியம் ஸ்ரீமத்தின் பக்கம் நம்முடைய புத்தி யோகம் செல்லும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் யாருடைய நினைவில் அமர்ந்துள்ளீர்கள். ஒரு வேளை ஸ்ரீ கிருஷ்ணர் என்று கூறுகிறீர்கள் என்றால், அவரை அங்கு நினைவு செய்ய வேண்டி இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்கிறீர்களா இல்லையா? ஆஸ்தியின் ரூபத்தில் நினைவு செய்கிறீர்கள் .நாம் இளவரசர் ஆகி விடுவோம் என்று அறிந்துள்ளீர்கள். அப்படியின்றி பிறந்த உடனேயே லட்சுமி நாராயணர் ஆகி விடுவோம் என்பதல்ல. உண்மையில் நாம் சிவ பாபாவை நினைவு செய்கிறோம். ஏனெனில் ஸ்ரீமத் அவருடையது ஆகும். கிருஷ்ண பகவான் வாக்கியம் என்று கூறுபவர்கள், கிருஷ்ணரை நினைவு செய்வார்கள். ஆனால் எங்கு நினைவு செய்வார்கள்? அவரையோ வைகுண்டத்தில் நினைவு செய்ய வேண்டும். எனவே கிருஷ்ணர் மன்மனாபவ என்ற வார்த்தையைக் கூற முடியாது. மத்யாஜி பவ என்று கூறலாம். என்னை நினைவு செய்யுங்கள். அவரோ வைகுண்டத்தில் இருந்தார். உலகினர் இந்த விஷயங்களை அறியாமல் உள்ளார்கள். குழந்தைகளே இந்த எல்லா சாஸ்திரங்களும் பக்தி மார்க்கத்தினுடையது ஆகும் என்று தந்தை கூறுகிறார். எல்லா தர்ம சாஸ்திரங்கள் என்று கூறும் பொழுது அதில் கீதையும் வந்து விடுகிறது. உண்மையில் கீதை பாரதத்தின் தர்ம சாஸ்திரம் ஆகும். பார்க்கப்போனால் இதுவோ அனைவருடைய சாஸ்திரம் ஆகும். ஸ்ரீமத் சர்வ சாஸ்திரங்களுக்குத் தாயான சிரோமணி கீதை என்றும் கூறப்படுகிறது. அதாவது எல்லாவற்றையும் விட உத்தமமானது ஆகியது. எல்லோரையும் விட உத்தமமானவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஸ்ரீ ஸ்ரீ சிவபாபா ஆவார். கிருஷ்ணரை ஸ்ரீ ஸ்ரீ என்று கூறமாட்டார்கள். ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது ஸ்ரீ ஸ்ரீ ராமர் என்று கூற மாட்டார்கள். அவர்களுக்கு ஸ்ரீ என்று மட்டுமே கூறுவார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவராக இருப்பவரே வந்து மீண்டும் உயர்ந்தவராக ஆக்குகிறார். பகவான் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். ஸ்ரீ ஸ்ரீ என்றால் எல்லோரையும் விட சிரேஷ்டமானவர் (உயர்ந்தவர்) சிரேஷ்டமானவரின் பெயர் உயர்ந்ததாக உள்ளது. தேவி தேவதைகளுக்குத் தான் சிரேஷ்டமானவர்கள் என்று கூறுவார்கள். இப்பொழுது அவர்கள் இல்லை. தற்காலத்தில் யாரை உயர்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள்? இப்பொழுதைய தலைவர்களுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். ஆனால் அவர்களை ஸ்ரீ என்று கூற முடியாது .சாமியார்கள் ஆகியோருக்கும் கூட ஸ்ரீ என்ற வார்த்தை கூற முடியாது. இப்பொழுது உங்களுக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த பரமாத்மாவிடமிருந்து ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. பரமபிதா பரமாத்மா எல்லோரையும் விட உயர்ந்தவர் ஆவார். பிறகு அவரது படைப்பு இருக்கிறது. பின் படைப்பில் உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள் பிரம்மா விஷ்ணு சங்கரன் ஆவார்கள். இங்கு கூட வரிசைக்கிரமமான பதவிகள் உள்ளன. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஜனாதிபதி பிறகு பிரதம மந்திரி, உள்துறை மந்திரி ..

 

தந்தை வந்து படைப்பின் முதல் இடை கடை பற்றிய ரகசியத்தைப் புரிய வைக்கிறார். பகவான் படைப்பு கர்த்தா ஆவார். இப்பொழுது படைப்புக் கர்த்தா என்ற வார்த்தை கூறும் பொழுது சிருஷ்டி எப்படி படைக்கப்பட்டது? என்று மனிதர்கள் கேட்கிறார்கள். எனவே திரிமூர்த்தி சிவன் படைப்புகர்த்தா ஆவார் என்று அவசியம் கூற வேண்டி உள்ளது. உண்மையில் படைப்பவர் என்பதற்குப் பதிலாக படைப்பிப்பவர் என்று கூறுவது சரி ஆகும். பிரம்மா மூலமாக தெய்வீக தர்மத்தின் ஸ்தாபனை செய்விக்கிறார். பிரம்மா மூலமாக எதனுடைய ஸ்தாபனை? தெய்வீக சம்பிரதாயத்தின் ஸ்தாபனை. இப்பொழுது நீங்கள் பிரம்மாவின் பிராமண சம்பிரதாயம் ஆவீர்கள் என்று சிவபாபா கூறுகிறார். அவர்கள் அசுர சம்பிரதாயத்தினர் ஆவார்கள். நீங்கள் ஈசுவரிய சம்பிரதாயம் ஆவீர்கள். பிறகு தெய்வீக சம்பிரதாயமாக ஆவீர்கள். தந்தை பிரம்மா மூலமாக அனைத்து வேதங்கள் சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறார். மனிதர்கள் மிகவும் குழம்பி உள்ளார்கள். குடும்பக் கட்டுப்பாடு வேண்டும் என்று எவ்வளவு தலையிலடித்துக் கொள்கிறார்கள். நான் வந்து பாரதத்திற்கு இந்த சேவை செய்து கொண்டிருக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இங்கு இருப்பதே தமோபிரதான மனிதர்கள். 10-12 குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். விருட்சம் அவசியம்  விருத்தி அடைந்து தீரவே வேண்டி உள்ளது. இலைகள் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இதை யாரும் கட்டுப்படுத்த முடியாது. சத்யுகத்தில் கட்டுப்பாடு இருக்கும் - ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை அவ்வளவே! இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்துள்ளீர்கள். இனி போகப்போக வந்து கொண்டே இருப்பார்கள். புரிந்து கொண்டே இருப்பார்கள். அதீந்திரிய சுகத்தைப் பற்றி கோப கோபியர்களிடம் கேளுங்கள் என்றும் பாடப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் நேரிடையாகக் கேட்கும் பொழுது சுகத்தின் உணர்வு ஏற்படுகிறது. பிறகு தொழில் ஆகியவற்றில் செல்லும் பொழுது அந்த அளவு சுகத்தின் உணர்வு இருப்பதில்லை. இங்கு உங்களை திரிகாலதரிசியாக ஆக்கப்படுகிறது. திரிகாலதரிசியை சுயதரிசன சக்கரதாரி என்றும் கூறுகிறார்கள். மனிதர்கள் குறிப்பிட்ட இந்த மகாத்மா திரிகாலதரிசியாக இருந்தார் என்பார்கள். வைகுண்டநாதர், இராதை கிருஷ்ணருக்குக் கூட சுயதரிசன சக்கரத்தின் அல்லது 3 காலங்களின் ஞானம் இருக்கவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். கிருஷ்ணரோ அனைவருக்கும் பிரியமான சத்யுகத்தின் முதல் இளவரசர் ஆவார். ஆனால் மனிதர்கள் புரியாத காரணத்தினால் நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரை பகவான் என்று ஏற்பதில்லை. எனவே நாஸ்திகர்கள் ஆவீர்கள் என்று கூறி விடுகிறார்கள். பிறகு தடையை ஏற்படுத்துகிறார்கள். அவினாஷி ஞான யக்ஞத்தில் தடைகள் ஏற்படுகின்றன. கன்னிகைகள் தாய்மார்கள் மீதும் தடைகள் வருகின்றன. பந்தனத்தில் இருக்கும் பெண்கள் எவ்வளவு சகித்துக் கொள்கிறார்கள். எனவே நாடகப்படி நமது பார்ட் இவ்வாறு தான் உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும். விக்கினங்கள் (தடைகள்) ஏற்பட்டது. பிறகு இப்படிச் செய்யாமல் இருந்திருந்தால் இப்படி ஆகி இருக்காது.. .. இப்படிச் செய்யாமல் இருந்திருந்தால் ஜுரம் வந்திருக்காது.. என்று இது போல நாம் கூற முடியாது. நாடகப்படி இது செய்தோம். முந்தைய கல்பத்திலும் செய்திருந்தோம். அதனால் கஷ்டம் ஏற்பட்டது. பழைய சரீரத்திற்கு ஒட்டுக்கள் போட வேண்டி தான் உள்ளது. கடைசி வரையும் மராமத்து (பழுது பார்த்தல்) நடந்து கொண்டு தானிருக்கும். இதுவும் ஆத்மாவின் பழைய வீடு ஆகும். நானும் மிகவும் பழையது ஆகி விட்டேன். ஒன்றுமே சக்தி இல்லை என்று ஆத்மா கூறுகிறார். சக்தி இல்லாத காரணத்தால் பலவீனமான ஆத்மாக்கள் துக்கத்தை அனுபவிக்கிறார்கள். மாயை பலவீனமானோருக்கு மிகுந்த துக்கம் கொடுக்கும். பாரதவாசிகளாகிய நம்மை உண்மையில் மாயை மிகவும் பலவீனமாக ஆக்கி உள்ளது. நாம் மிகவும் ஆற்றல் உடையவர்களாக இருந்தோம். பிறகு மாயை பலவீனமாக ஆக்கி விட்டுள்ளது. இப்பொழுது மீண்டும் அதன் மீது வெற்றி அடைகிறோம். எனவே மாயை கூட நமது எதிரி ஆகி விடுகிறது. பாரதத்திற்குத் தான் அதிகமான துக்கம் கிடைக்கிறது. எல்லோரிடமிருந்தும் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது. பாரதம் முற்றிலும் பழையதாக ஆகி விட்டது. எது மிகவும் செல்வம் நிறைந்ததாக இருந்ததோ அதுவே மிகவும் ஏழையாக ஆக வேண்டி உள்ளது. பிறகு (பெகர் டு பிரின்ஸ்) ஆண்டியிலிருந்து அரசன். இந்த சரீர உணர்விலிருந்து கூட தூர விலகி காலியாகி விடுங்கள் என்று பாபா கூறுகிறார். இங்கு உங்களுடையது எதுவும் இல்லை. ஒரு சிவ பாபாவைத் தவிர வேறு யாருமில்லை. எனவே நீங்கள் மிகவும் ஏழை ஆக வேண்டி உள்ளது. யுக்திகளும் கூறிக் கொண்டே இருக்கிறார். ஜனகரினுடைய உதாரணம் இல்லற விவகாரங்களில் இருந்தபடியே தாமரை மலர் போல இருக்க வேண்டும். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். அனைத்தையும் சமர்ப்பணம் செய்து விட வேண்டும். ஜனகர் எல்லாமே கொடுத்து விட்டார். பிறகு உங்களது சொத்தை நீங்கள் பராமரியுங்கள் மற்றும் டிரஸ்டி ஆகி இருங்கள் என்று அவருக்கு கூறப்பட்டது. ஹரிச்சந்திரனின் உதாரணம் கூட உள்ளது.

 

குழந்தைகளே நீங்கள் விதை விதைக்கவில்லை என்றால் உங்கள் பதவி குறைந்து போய் விடும் என்று தந்தைப் புரிய வைக்கிறார். ஃபாலோ ஃபாதர் (தந்தையைப் பின்பற்றுங்கள்) .உங்களுக்கு முன்னால் இந்த தாதா அமர்ந்துள்ளார். முற்றிலுமே சிவபாபா சிவசக்திகளை டிரஸ்டியாக ஆக்கினார். சிவபாபா வந்து பராமரிப்பு செய்வாரா என்ன? இவர் தன் மீது பலி ஆவாரா என்ன? இவர் தாய்மார்களுக்கு முன் பலி ஆக வேண்டி உள்ளது. தாய்மார்களைத் தான் முன்னால் வைக்க வேண்டும். மனிதனை தேவதையாக ஆக்க வேண்டும் என்பதற்காக தந்தை வந்து ஞான அமிருதத்தின் கலசத்தை தாய்மார்களுக்குத் தான் கொடுக்கிறார். லட்சுமிக்குக் கொடுக்கவில்லை. இச்சமயம் இவர் ஜகதம்பா ஆவார். சத்யுகத்தில் லட்சுமி ஆவார். ஜகதம்பாவின் பாடல் எவ்வளவு நன்றாக தயார் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. அவர் எப்படி சௌபாக்கிய விதாதா ஆவார். அவருக்கு செல்வம் எங்கிருந்து கிடைக்கிறது? பிரம்மாவிடமிருந்தா? கிருஷ்ணரிடமிருந்தா? இல்லை. செல்வம் பிறகும் ஞானக்கடலிடமிருந்து கிடைக்கிறது. இது மிகவும் மறைமுகமான விஷயங்கள் ஆகும். பகவான் வாக்கியம்: பகவான் அனைவருக்காக கூறுவது பகவானோ அனைவரினுடையவர் ஆவார் அல்லவா? என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று எல்லா தர்மத்தினருக்கும் (மதம்) கூறுகிறார்கள். சிவனின் பூசாரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றாலும் கூட ஒன்றும் தெரியாமல் இருக்கிறார்கள். அது பக்தி ஆகும். இப்பொழுது உங்களுக்கு ஞானம் யார் கொடுக்கிறார்? மிகவும் அன்பிற்குரிய தந்தை. கிருஷ்ணருக்கு அவ்வாறு கூற மாட்டார்கள். அவருக்கு சத்யுகத்தின் இளவரசர் என்று கூறுவார்கள். கிருஷ்ணருக்கு பூஜை செய்கிறார்கள் என்றாலும் கூட அவர் சத்யுகத்தின் இளவரசர் எப்படி ஆனார் என்று சிந்தனை செய்வதில்லை. இதற்கு முன்பு நாமும் அறியாமல் இருந்தோம். உண்மையில் நாம் மீண்டும் இளவரசர் இளவரசி ஆவோம். அப்பொழுது தான் பெரியவர்கள் ஆன பிறகு லட்சுமி, நாராயணரை மணம் முடிப்போம் அல்லவா என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். இந்த ஞானம் இருப்பதே வருங்காலத்திற்காக. இதனுடைய பலன் 21 பிறவிகளுக்குக் கிடைக்கிறது. கிருஷ்ணருக்கு அவர் ஆஸ்தி அளிக்கிறார் என்று கூற மாட்டார்கள். ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கிறது. சிவபாபா இராஜயோகம் கற்பிக்கிறார். பிரம்மா வாயிலிருந்து ஆயிரக்கணக்கான பிராமணர்கள் வெளிப்படுகிறார்கள். அவர்களுக்குத் தான் இந்த கல்வி கிடைக்கிறது. பிராமணர்களாகிய நீங்கள் மட்டும் தான் கல்பத்தின் சங்கம யுகத்தினர் ஆவீர்கள். மற்ற முழு படைப்பே கலியுகத்தினுடையது ஆகும். அவர்கள் எல்லோரும் இப்பொழுது நாங்கள் கலியுகத்தில் இருக்கிறோம் என்பார்கள். நாங்கள் சங்கமத்தில் இருக்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள். இந்த விஷயங்கள் எங்குமே இல்லை. இந்த புதுப்புது விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். முக்கியமான விஷயமாவது தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வது. தூய்மையாக இல்லை என்றால் ஒரு போதும் யோகம் வராது. சட்டம் இல்லை. எனவே அந்த அளவு பதவியும் அடைய முடியாது. சிறிதளவு யோகம் செய்தால் கூட சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள். தூய்மையாக ஆகவில்லை என்றால் என்னிடம் வரமுடியாது என்று தந்தை கூறுகிறார். வீட்டில் அமர்ந்திருந்தால் கூட சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். நல்ல பதவி அடைய முடியும். ஆனால் எப்பொழுது என்றால் யோகத்தில் இருக்க வேண்டும் தூய்மையாக இருக்க வேண்டும். தூய்மையின்றி யோகம் வராது. மாயை யோகம் செய்ய விடாது. உண்மையான உள்ளத்தில் தலைவன் திருப்தி அடைவார். சிலர் விகாரத்தில் சென்று கொண்டே இருக்கிறார்கள், பின் நான் சிவபாபாவை நினைவு செய்கிறேன் என்று கூறுகிறார்கள் என்றால், இது தங்கள் மனதைக் குஷிப்படுத்திக் கொள்கிறார்கள். தூய்மை முக்கியமானது ஆகும். குடும்பக் கட்டுப்பாடு செய்யுங்கள், குழந்தைகளைப் பெற்றெடுக்காதீர்கள் என்று கூறுகிறார்கள். இது இருப்பதே தமோபிரதான உலகமாக. இப்பொழுது பாபா (பர்த் கண்ட்ரோல்) குடும்பக் கட்டுப்பாடு செய்வித்து கொண்டிருக்கிறார். நீங்கள் எல்லோருமே குமார் குமாரிகள் ஆவீர்கள். எனவே விகாரத்தின் விஷயம் இல்லை. இங்கோ விஷத்தின் காரணமாக பெண் குழந்தைகள் எவ்வளவு சகித்துக் கொள்ள வேண்டி வருகிறது. மிகுந்த கட்டுப்பாடு கொள்ள வேண்டும் என்று பாபா கூறுகிறார். இங்கு யாராவது சாராயம் குடிப்பவர் ஒருவரும் இல்லையே? தந்தை குழந்தைகளிடம் கேட்கிறார். பொய் கூறினீர்கள் என்றால் தர்மராஜரின் கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். பகவானுக்கு முன்னாலோ உண்மையே பேச வேண்டும். யாராவது சிறிதளவு கூட ஏதாவதொரு காரணத்திற்காக அல்லது மருந்து போன்று சாராயம் குடிக்கிறீர்களா? யாருமே கை உயர்த்தவில்லை. இங்கு அவசியம் உண்மை பேச வேண்டும். ஏதாவது தவறு ஏற்பட்டால் பாபா, என் மூலமாக இந்தத் தவறு ஏற்பட்டது, மாயை ஓங்கி அறைந்து விட்டது என்று மறுபடியும் எழுத வேண்டும். இன்றைக்கு எனக்குள் கோபத்தின் பூதம் வந்து விட்டது, ஓங்கி அடித்து விட்டேன் என்று பாபாவிற்கோ நிறைய பேர் எழுதவும் செய்கிறார்கள். அடிக்கக் கூடாது என்பதோ உங்களுடைய அறிவுரை (ஆலோசனை) ஆகும். கிருஷ்ணரை உரலில் கட்டினார்கள் என்று காண்பிக்கிறார்கள். இவை எல்லாமே பொய்யான விஷயங்கள் ஆகும். குழந்தைகளுக்கு அன்புடன் புத்திமதி கூற வேண்டும். அடிக்கக் கூடாது. உணவை நிறுத்தி விடுவது, மிட்டாய் கொடுக்காமல் இருப்பது.. .. இப்படி திருத்த வேண்டும். அடிப்பது கோபத்தின் அடையாளம் ஆகி விடுகிறது. அதுவும் மகாத்மாவிடம் கோபப்படுகிறீர்கள். சிறிய குழந்தைகள் மகாத்மாவிற்கு சமமானவர்கள் அல்லவா? எனவே அடிக்கக் கூடாது. திட்டவும் கூடாது. நாம் இந்த விகர்மம் செய்தோம் என்ற சிந்தனை எழக் கூடிய வகையில் அப்பேர்ப்பட்ட கர்மம் செய்யக் கூடாது. ஒரு வேளை செய்தீர்கள் என்றால் பாபா எங்கள் மூலமாக இந்த தவறு ஏற்பட்டது எங்களை மன்னித்து விடுங்கள். மேற் கொண்டு செய்ய மாட்டோம் என்று உடனே எழுத வேண்டும். தப்பு தப்பு என்று கூறுகிறார்கள் அல்லவா? அங்கும் தர்மராஜர் தண்டனை கொடுக்கிறார் என்றால், இனி மேற்கொண்டு செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி கொடுக்கிறார்கள். பாபா செல்லமான நல்ல குழந்தைகளே! பிரியமான குழந்தைகளே! ஒரு பொழுதும் பொய் பேசாதீர்கள் என்று மிகவும் அன்புடன் கூறுகிறார். ஒவ்வொரு அடியிலும் ஆலோசனை கேட்க வேண்டும். உங்களுடைய பைசா இப்பொழுது பாரதத்தை சொர்க்கமாக்குவதில் ஈடுபடுத்தப்படுகிறது. எனவே ஒவ்வொரு சோழி கூட வைரத்துக்குச் சமானம் ஆகும். அப்படி இன்றி நாம் ஏதோ சந்நியாசிகள் ஆகியோருக்கு தான புண்ணியம் செய்கிறோம் என்பதல்ல. மனிதர்கள் ஆஸ்பத்திரி அல்லது கல்லூரி ஆகியவை அமைக்கிறார்கள் என்றால் என்ன கிடைக்கிறது? கல்லூரியைத் திறப்பதால் அடுத்த பிறவியில் நல்ல கல்வி கிடைக்கும். சத்திரம் அமைப்பதால் அரண்மனை கிடைக்கும். இங்கோ உங்களுக்கு பல பிறவிகளுக்கு தந்தையிடமிருந்து எல்லையில்லாத சுகம் கிடைக்கிறது. எல்லையில்லாத ஆயுள் கிடைக்கிறது. இதை விட நீண்ட ஆயுள் வேறு எந்த தர்மத்தினருக்கும் இருப்பதில்லை. குறைந்த ஆயுள் கூட இங்கு இருப்பது கணக்கிடப்படுகிறது. எனவே இப்பொழுது எல்லையில்லாத தந்தையை நடந்தாலும், சென்றாலும், எழுந்தாலும், அமர்ந்தாலும் நினைவு செய்தீர்கள் என்றால் அப்பொழுது தான் குஷியாக இருப்பீர்கள். ஏதாவது கடினம் உள்ளது என்றால் கேளுங்கள். மற்றபடி ஏழைகளாக இருப்பார்கள். பாபா நாங்களோ உங்களுடையவர்கள் ஆவோம். இப்பொழுது நாங்கள் உங்களிடம் அமர்ந்து விடுவோம் என்றால் முடியுமா? அப்படிப் பார்க்கப்போனால் உலகத்தில் ஏழைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். எல்லோரும் எங்களை மதுபனில் வைத்துக் கொள்ளுங்கள் என்றால் பின் லட்சக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இதுவும் நியமம் இல்லை. நீங்கள் இல்லற விவகாரங்களில் இருக்க வேண்டும். இங்கு அது போல இருக்க முடியாது. தொழிலில் எப்பொழுதும் இறைவனின் பெயரில் சிறிது பணத்தை தனியாக எடுத்து வைக்கிறார்கள். பாபா கூறுகிறார் - நல்லது நீங்கள் ஏழைகள் ஆவீர்கள் என்றால் எதுவுமே பைசா எடுத்து வைக்காதீர்கள். ஞானத்தையோ புரிந்து கொள்ளுங்கள் மற்றும் மன்மனாபவ ஆகி விடுங்கள். உங்களுடைய மம்மா என்ன எடுத்து கொடுத்தார். பிறகும் அவர் ஞானத்தில் மிகக் கூர்மையாக இருக்கிறார். உடல் மனதால் சேவை செய்து கொண்டிருக்கிறார். இதில் பைசாவின் விஷயம் இல்லை. அதிகபட்சம் ஒரு ரூபாய் கொடுத்து விடுங்கள். உங்களுக்கு பணக்காரர் அளவிற்கு கிடைத்து விடும். முதலில் தங்களது இல்லறத்திற்கு பராமரிப்பு செய்ய வேண்டும். குழந்தைகள் துக்கமடையக் கூடாது.நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். வந்தே மாதரம், சலாம் மாலேகம்! ஜய ஜய ஜய ஆகுக. உங்களுக்கு .. .. .. ஓம் சாந்தி.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. பின்னால் சிந்தனை எழும் அளவிற்கு, பச்சாதாபப்படும் அளவிற்கு அப்பேர்ப்பட்ட எந்த செயலையும் செய்யக் கூடாது. பொய் பேசக் கூடாது. உண்மையான தந்தையிடம் உண்மையாக இருக்க வேண்டும்.

 

2. பாரதத்தை சொர்க்கமாக ஆக்குவதில் உங்களுடைய ஒவ்வொரு சோழியையும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். பிரம்மா தந்தைக்கு சமானமாக சமர்ப்பணம் ஆகி, டிரஸ்டி ஆகி இருக்க வேண்டும்.

 

வரதானம் :

நிமித்த ஆத்மாக்களின் வழிகாட்டுதலின் மகத்துவத்தை அறிந்து கொண்டு, பாவங்களில் இருந்து விடுபடக்கூடிய புத்திசாலி ஆகுக.

 

புத்திசாலிக் குழந்தைகள் ஒரு போதும் இது போல் யோசிக்க மாட்டார்கள் -- அதாவது, நிமித்த ஆத்மாக்கள் என்ன வழிகாட்டுதல் தருகின்றனரோ, அது ஒரு வேளை யாரோ சொன்னதை இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனரோ என நினைப்பது. நிமித்தமாக ஆகியுள்ள ஆத்மாக்களைப் பற்றி ஒரு போதும் இந்த வீண் சங்கல்பம் எழக் கூடாது. அவர்கள் ஒருவேளை அத்தகைய தீர்வைக் கொடுக்கின்றனர் -- அது உங்களுக்குச் சரியாகப் படவில்லை என்றாலும் கூட, நீங்கள் அதற்குப் பொறுப்பாக மாட்டீர்கள். உங்களுக்கு அது பாவமாகாது. ஏனென்றால், யார் அவர்களை நிமித்தமாக ஆக்கியிருக்கிறாரோ, அந்தத் தந்தை, பாவங்களையும் கூட மாற்றி விடுவார். இது குப்தமான (மறைவான ) இரகசியம் மற்றும் குப்தமான மெஷினரி ஆகும்.

 

சுலோகன் :

பிரபுவுக்குப் பிடித்தமானவராக, உலகிற்குப் பிடித்தமானவராக இருப்பவர் தாம் நேர்மையாளர் ஆவார்.

 

ஓம்சாந்தி