04.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! தேகத்தின் சம்மந்தங்களில் பந்தனம் உள்ளது. எனவே துக்கம் உள்ளது. தேஹீ - ஆத்மா என்ற சம்மந்தத்தில் இருந்தீர்கள் என்றால் அளவற்ற சுகம் கிடைத்து விடும். ஒரு தாய் தந்தையின் நினைவு இருக்கும்.

 

கேள்வி:

எந்த போதையில் இருந்தீர்கள் என்றால் மாயை மீது வெற்றி அடைவதற்கான துணிவு வந்து விடும்?

 

பதில்:

கல்ப கல்பமாக நாம் தந்தையின் நினைவினால் மாயை என்ற எதிரி மீது வெற்றி அடைந்து வைரம் போல ஆகி இருக்கிறோம் என்ற போதை இருக்கட்டும். "சுயம் குதா (இறைவன்) நமது தாய் தந்தை ஆவார்." இதே நினைவு அல்லது போதையினால் தைரியம் வந்து விடும்.தைரியம் கொள்ளும் குழந்தைகள் அவசியம் வெற்றி அடைபவர்களாகிறார்கள் மற்றும் சதா ("காட்சர்வீஸ்") இறை சேவையிலேயே மூழ்கி இருப்பார்கள்.

 

பாடல்:

உன்னை அழைக்க மனம் விரும்புகிறது.. .. ..

 

ஓம் சாந்தி.

தேவி தேவதைகளின் பூசாரிகள் பரலோக தாய் தந்தையை நினைவு செய்த படியே தான் வந்துள்ளார்கள். மேலும் நமக்கு பக்தியின் பலனை அளிக்க தாய் தந்தை அவசியம் வர வேண்டி உள்ளது என்பதை பக்தர்களும் அறிந்துள்ளார்கள். இப்பொழுது அந்த தாய் தந்தை யார் என்பதையோ பாவம் அறியாமலேயே உள்ளார்கள். முறையிடுகிறார்கள். இதிலிருந்து அவர்களுடைய சம்மந்தம் அவசியம் உள்ளது என்று நிரூபணமாகிறது. ஒன்று லௌகீக சம்மந்தம் உள்ளது. மற்றொன்று பரலௌகீக சம்மந்தம் உள்ளது. லௌகீக சம்மந்தமோ அநேக விதமானதாக உள்ளது. பெரியப்பா, சித்தப்பா, மாமா ஆகியவை லௌகீக பந்தனங்கள் ஆகும். எனவே பரமபிதா பரமாத்மாவை அழைக்கிறார்கள். சத்யுகத்தில் எந்த பந்தனமும் இல்லை என்பது குழந்தைகளுக்குத் தெரியும். நாம் இப்பொழுது பந்தனத்தில் உள்ளோம். உங்களுடைய சம்மந்தத்தில் வர விரும்புகிறோம் என்று தந்தையை அழைக்கிறார்கள். நாம் அநேக விதமான பந்தனங்களில் இருக்கிறோம் என்பது பக்தர்களுக்கு நினைவிருக்கிறது. தேகத்தின் நினைவு காரணமாக நிறைய பந்தனங்கள் உள்ளன. (தேஹீ) ஆத்மா என்ற சம்மந்தத்தில் ஒரே ஒரு தாய் தந்தை நினைவு மட்டுமே இருக்கும்.லௌகீக மற்றும் பரலௌகீக தந்தையை நினைவு செய்வதில் இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. இது ஸ்தூல பந்தனமாகும் மற்றும் அது ஆன்மீக சம்மந்தம் ஆகும். ஸ்தூல சம்மந்தத்தில் சத்யுகத்தில் இருப்பார்கள். அங்கு சுகத்தின் சம்மந்தம் என்று கூறுவார்கள். இங்கு பிறகு துக்கத்தின் பந்தனம் என்று கூறுவார்கள். அதை சம்மந்தம் என்று கூற மாட்டார்கள். இந்த விஷயங்கள் பற்றி முன்பு தெரியாமல் இருந்தது. இப்பொழுது புரிந்துள்ளீர்கள். ஹே தாய் தந்தையே! வாருங்கள் என்று அவசியம் அழைத்துக் கொண்டிருந்தீர்கள். தந்தையோ அவசியம் அனைவருக்கும் சுகம் தான் கொடுப்பார். ஆனால் தந்தை என்ன சுகம் அளிப்பார் என்பது யாருக்கும் தெரியாது. இப்பொழுது தந்தையிடம் சம்மந்தம் உள்ளது. அவரிடமிருந்து சதா சுகம் கிடைக்கிறது. சுகத்தின் சம்மந்தம், துக்கத்தின் பந்தனம் என்று கூறுவார்கள். எனவே குழந்தைகள் "வந்து இது போல இனிய இனிய விஷயங்களைக் கூறுங்கள்" என்று தாய் தந்தையரை அழைக்கிறார்கள். அவர்கள் மறைமுகமாக அழைக்கிறார்கள். நீங்கள் நேரிடையாக அழைக்கிறீர்கள்.அவர்களும் ஹே பரமபிதா பரமாத்மா என்று நினைவு செய்கிறார்கள். பிதா இருக்கிறார் என்றால் அவசியம் மாதாவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் தந்தை எப்படி படைப்பார். சிவபாபாவிற்கு குழந்தைகள் கடிதம் எப்படி எழுதுவார்கள்? அப்படியே அவர் படிக்க முடியாது. சிவபாபாவோ இங்கு அமர்ந்துள்ளார். எனவே சிவபாபா/பிரம்மா மூலமாக என்று எழுதுகிறார்கள். சிவபாபா அவசியம் ஏதாவது சரீரத்தை தாரணை செய்கிறார். ஆத்மாக்கள் - பரமாத்மா வெகுகாலம் பிரிந்திருந்தார்கள் என்று பாடவும் செய்கிறார்கள். சத்குரு என்று அவருக்குக் கூறப்படுகிறது. அவர் அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல். அவர் வந்து இந்த உடலில் பிரவேசிக்கிறார். பிறகு வந்து இவருக்கு 84 பிறவிகளின் ரகசியத்தைக் கூறுகிறார். பிரம்மாவின் இரவு பிரம்மாவின் பகல் என்று பாடப்பட்டுள்ளது. முதலில் படைப்பவராகிய பரமபிதா பரமாத்மா இருக்கிறார். பிரம்மா விஷ்ணு சங்கரனை படைக்கிறார். உண்மையில் பரமபிதா பிரம்மாவின் இரவை மீண்டும் பிரம்மாவின் பகலாக அமைக்க வருகிறார். பிரஜாபிதா பிரம்மாவின் பகல் தான் பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகளுக்கும் பகல் ஆகியது. பகல் என்று சத்யுக திரேதாவிற்குக் கூறப்படுகிறது. இரவு என்று துவாபரயுகம் கலியுகத்திற்குக் கூறப்படுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியை எடுக்க வந்துள்ளீர்கள். அவருக்காகத் தான் "த்வமேவ மாதாஸ்ச பிதா...." (தாயும் தந்தையும் நீங்களே) என்று பாடுகிறார்கள். தோழன் ரூபத்தில் லேசான ரூபத்தில் வந்து மகிழ்விக்கிறார். முக்கியமான 3 சம்மந்தங்கள் தந்தை ஆசிரியர் மற்றும் சத்குரு ஆகும். இவற்றில் தான் நன்மை உள்ளது. மற்றபடி பெரியப்பா, சித்தப்பா, மாமா ஆகிய சம்மந்தங்களின் எந்த விஷயமும் கிடையாது. எனவே சம்பூர்ண தந்தை வந்து குழந்தைகளை சம்பூர்ணமாக ஆக்குகிறார். 16 கலை சம்பூர்ணமாக நீங்கள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் அனுபவம் உடையவர்கள் ஆவீர்கள். மற்றவர்கள் யாரும் எப்படி தெரிந்து கொள்ள முடியும். குழந்தைகளாகிய உங்களுடைய தொடர்பில் வராதவரை அவர்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும்?

 

பக்தி மார்க்கத்தில் கூட பந்தனம் உள்ளது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். இராவணன் என்ற 5 விகாரங்களின் பந்தனத்தில் இருக்கும் பொழுது தான் நினைவு செய்கிறார்கள். தந்தையின் பெயரே லிபரேட்டர் (விடுவிப்பவர்) என்பதாகும். ஆங்கில வார்த்தை மிகவும் நன்றாக உள்ளது. லிபரேட் செய்கிறார் மனிதர்களை. லிபரேட் துக்கத்திலிருந்து செய்விக்கப்படுகிறது. மாயையின் பந்தனத்திலிருந்து லிபரேட் செய்ய வருகிறார். பிறகு கைடு (வழிகாட்டியும்) ஆவார். கீதையில் கூட கொசுக் கூட்டம் போல அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்கிறார் என்றுள்ளது. எனவே அவசியம் விநாசம் கூட ஆகும். பிரம்மா மூலமாக ஸ்தாபனை, சங்கர் மூலமாக விநாசம் செய்விக்கிறார். பிறகு யார் ஸ்தாபனை செய்கிறார்களோ அவர்கள் மூலமாக பாலனையும் ஆகிறது. இப்பொழுது நீங்கள் வரிசைக்கிரமமாக அவரவர் முயற்சிக்கேற்ப தயார் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். தேகத்தின் பந்தனத்தை புத்தியால் துண்டிக்க வேண்டும். சந்நியாசிகளோ வீடு வாசலை விட்டு விட்டு ஓடி விடுகிறார்கள். நீங்கள் இல்லறத்தில் இருந்தபடியே ராஜயோகம் கற்கிறீர்கள். ஜனகரினுடைய உதாரணம் கூட உள்ளது. அவர் பிறகு சென்று அனு ஜனகர் ஆகினார். நிறைய குழந்தைகள் ஜனகரைப் போல நாங்கள் எங்கள் இராஜதானியில் இருந்தபடியே ஞானம் பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். தங்களது வீட்டிற்கோ ஒவ்வொருவரும் ராஜா ஆவார்கள் அல்லவா? எஜமானருக்கு ராஜா என்று கூறப்படுகிறது. ஸ்தூல தந்தை இருக்கிறார். அவரது மனைவி குழந்தைகள் ஆகியோர் உள்ளார்கள் என்றால் இது எல்லைக்குட்பட்ட படைப்பு ஆகும். படைக்கவும் செய்கிறார். பாலனையும் செய்கிறார். மற்றபடி அழிக்க முடியாது. ஏனெனில் சிருஷ்டியோ வளர்ச்சி அடைந்தே தீரும். எல்லோரும் பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். எல்லையில்லாத தந்தை தான் வந்து புதிய படைப்பை படைக்கிறார் மற்றும் பழையதை விநாசம் செய்விக்கிறார். புதிய சிருஷ்டியின் ஸ்தாபனை மற்றும் பழையதின் விநாசமோ பிரம்மா விஷ்ணு சங்கரின் படைப்புக் கர்த்தா பரமாத்மா தான் செய்வார். இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் நல்ல முறையில் புரிந்துள்ளீர்கள். விஷயங்களோ மிகவும் சுலபம் ஆகும். பெயரே சகஜயோகம் அல்லது சகஜ நினைவு என்று வைக்கப் பட்டுள்ளது. பாரதத்தினுடைய ஞானம் அல்லது யோகம் பிரசித்தமானது ஆகும்.

 

தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு தெய்வீக வழியைத் தருகிறார். அது மூலம் நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாதா பிதா மூலமாகத் தான் புதிய சிருஷ்டியின் படைப்பு ஆகிறது. நம்மை குதா படைத்தார் என்பதையோ எல்லோரும் அறிந்துள்ளார்கள். குதா எப்படி வந்து புதிய சிருஷ்டியைப் படைக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். புதிய சிருஷ்டியை சுவீகாரம் செய்கிறார். மாதா பிதாவோ அவசியம் உள்ளார்கள். தந்தை தந்தையாக இருக்கிறார். பின் சுயம் அவரே இவர் மூலமாக தத்து எடுக்கிறார். எனவே இவர் பெரிய தாய் ஆகி விடுகிறார். பிறகு முதல் நம்பரில் சரஸ்வதியை தத்து எடுத்துள்ளார். தந்தை இவருக்குள் பிரவேசம் செய்துள்ளார் அல்லவா? இந்த மம்மாவோ தத்து எடுக்கப்பட்டவர் ஆவார். உங்களுக்கோ தாய் தந்தை ஆவார். எனக்கு (பிரம்மாவிற்கு) கணவனும் ஆவார் பின் தந்தையும் ஆவார். பிரவேசம் செய்து என்னை அவரது மனைவியாகவும் ஆக்கியுள்ளார் மற்றும் குழந்தையாகவும் ஆக்கி உள்ளார். இதுவோ நேரிடையாக கேட்க வேண்டிய மிகவுமே (ரமணீகரமான) சுவாரசியமான விஷயங்கள் ஆகும். உங்களிலும் கூட வரிசைக்கிரமமாக புரிந்துள்ளார்கள். எல்லோரும் ஒரு வேளை புரிந்திருந்தார்கள் என்றால் பின் மற்றவர்களுக்கு புரிய வைக்கலாமே! புரிய வைக்க முடியாமல் இருக்கிறார்கள் என்றால் ஒன்றும் புரிய வில்லை என்று பொருள். ஜட விதையிலிருந்து விருட்சம் எவ்வாறு உருவாகிறது என்பதையோ யாருமே சட்டென்று கூறிவிட முடியும். இந்த எல்லையில்லாத விருட்சத்தின் ஞானத்தை தந்தை வந்து புரிய வைக்காத வரை யாருமே புரிந்து கொள்ள முடியாது. நாம் தந்தையிடமிருந்து இராஜயோகம் கற்றுக் கொண்டு ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது புத்தியில் இருக்க வேண்டும். இது இரண்டு விதத்தில் சம்மந்தம் ஆகும். அங்கோ ஒரு சம்மந்தம் மட்டுமே இருக்கும். பரலோக தந்தையை நினைவு செய்வதில்லை. இங்கு அவை எல்லாமே பந்தனமாக உள்ளது. நாம் இச்சமயம் அந்த பந்தனத்தில் கூட இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த பந்தனத்திலிருந்து விடுபடுவதற்காக பிதாவின் சம்மந்தத்தில் இப்பொழுது வந்துள்ளோம். தற்காலத்திலோ எவ்வளவு வழி முறைகள் ஆகி விட்டுள்ளன. தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தண்ணீருக்காக, பூமிக்காக கூட சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது எங்களுடைய எல்லைக்குள் இருக்கிறது. இது உங்களுடைய எல்லைக்குள் இல்லை. முற்றிலுமே எல்லைகளுக்குள் வந்து விட்டுள்ளார்கள். பாரதவாசிகள் சத்யுகத்தில் எல்லையில்லாத அதிபதிகளாக இருந்தார்கள் என்பதை மறந்து விட்டுள்ளார்கள். யார் அதிபதியாக இருந்தார்களோ அவர்களே பிறகு மறந்து விடுகிறார்கள். அவசியம் மறக்க வேண்டியும் உள்ளது. அப்பொழுது தான் மீண்டும் தந்தை வந்து புரிய வைக்கிறார். இந்த விஷயங்களை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கு இருப்பது பந்தனம். இங்கு தாய் தந்தையிடம் சம்மந்தம் உள்ளது. நாம் ஸ்ரீமத் படி நடந்து அளவற்ற சுகத்தின் ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துள்ளீர்கள். நான் உங்களுக்கு சுகத்தின் ஆஸ்தியை அளிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். பிறகு சாபம் அளிப்பது யார்? மாயை இராவணன்! சாபத்தில் துக்கம் உள்ளது. ஆஸ்தியிலோ சுகம் இருக்கும். மனிதர்களுக்கு துக்கத்தின் ஆஸ்தி யார் கொடுக்கிறார்கள் என்பது தெரியாது. தந்தை சத்யுகத்தின் ஸ்தாபனை செய்கிறார் என்றால் அவசியம் சுகத்தின் ஆஸ்தி தான் அளிப்பார். தந்தையை துக்கத்தின் ஆஸ்தி அளிப்பவர் என்று கூறுவார்களா என்ன? துக்கமோ எதிரிகள் கொடுப்பார்கள். ஆனால் இந்த விஷயங்களை யாருமே புரிந்து கொள்வதில்லை. எங்கோ இருக்கும் விஷயத்தை எங்கோ எடுத்துச் சென்றுள்ளார்கள். இலங்கை கொள்ளையடிக்கப்படுகிறது. தங்கம் எடுத்து வருகிறார்கள் என்று கூறுகிறார்கள். இப்பொழுது தங்கம் ஒன்றும் இலங்கையில் வைக்கப்படவில்லை. தங்கமோ சுரங்கங்களிலிருந்து கிடைக்கிறது. சில இடங்களில் நதிகளிலிருந்தும் கிடைக்கிறது.

 

இது அனாதி உலக நாடகம் ஆகும் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப பதிந்துள்ளது. யார் புரிந்து கொள்வதில்லையோ மற்றும் புரிய வைப்பதும் இல்லையோ அவர்கள் என்ன பதவி அடைவார்கள்! படித்தவர்களுக்கு முன்னால் மூட்டை தூக்குவார்கள். ராஜா ராணி பிரஜைகளில் வித்தியாசமோ உள்ளது அல்லவா? எப்படி இந்த மம்மா பாபா சென்று உயர்ந்த பதவி அடைகிறார்களோ, அதே போல நீங்களும் முயற்சி செய்து மம்மா பாபாவின் சிம்மாசனத்தில் அமரும் வகையில் அந்த அளவிற்குப் படியுங்கள். வெற்றி மாலையின் மணி ஆகுங்கள்.நிறையவே தூண்டுதல் கொடுக்கப்படுகிறது. ராஜயோகம் ஆகும் அல்லவா? நீங்கள் இராஜயோகத்தின் மூலம் இராஜ்யத்தை அடைந்து கொண்டு விடுங்கள். குறைந்தது முயற்சிக்கேற்ப பிரஜைகளாகவாவது ஆகத் தான் செய்வார்கள்.ஃபாலோ ஃபாதர் (தந்தையைப் பின்பற்றுங்கள்) என்று எப்பொழுதும் கூறப்படுகிறது. நீங்கள் குழந்தைகள் அல்லவா? அவர் தந்தை பிறகு இவர் தந்தை. இங்கு பின் தாயும் இருக்கிறார்கள். முதல் நம்பரில் பின்பற்றிக் கொண்டிருக்கிறார். நீங்கள் சகோதர சகோதரி ஆவீர்கள். தந்தையோ ஒருவராக மட்டுமே இருக்க வேண்டும். காட் ஃபாதர் என்று எல்லோரும் கூறுகிறார்கள். எனவே எல்லோரும் சகோதர சகோதரிகள் ஆகி விட்டார்கள். வேறு அதிகமான சம்மந்தம் எதுவும் இல்லை. சகோதரன் சகோதரி அவ்வளவே! மேலும் அவர்களுடைய தந்தை, பாட்டனார், சகோதரிகளோ நிறைய பேர் உள்ளார்கள். தந்தை ஒருவர். தாதாவும் ஒருவரே! பிரஜாபிதா பிரம்மா ஒருவர் தான். அவர் மூலம் பிறகு படைப்பு படைக்கப்படுகிறது. வரிசைக்கிரமமாக, முயற்சிக்கேற்ப சகோதர சகோதரிகளாகிய நீங்கள் தான் பதவியை அடைகிறீர்கள். மற்றபடி அவரவரது விருட்சத்தில் போய் சேருவார்கள். அவர்களுடைய வசிப்பிடமாகிறது அல்லவா? அங்கிருந்து பிறகு வரிசைக்கிரமமாக வருகிறார்கள். இங்கு ஜீவன் பந்தனமாக உள்ளது. ஆத்மாக்கள் அங்கிருந்து முதன் முதலில் சுகத்தில் வருகிறார்கள். எனவே முதலில் ஜீவன் முக்தி அடைந்தவராக இருப்பார்கள். முதன் முதலில் சொர்க்கத்தில் பாரதவாசிகளின் ஜீவன் முக்தி இருக்கும். எவ்வளவு நல்ல நல்ல விஷயங்களை தந்தை கூறுகிறார். என்னுடையவரோ ஒரே ஒரு சர்வோத்தம ஆசிரியர் வேறு யாருமே இல்லை. கன்னியர்கள் என்னுடையவரோ ஒரே ஒரு சிவபாபா .. .. என்பார்கள். கன்னியர்கள் இதில் முழு கவனம் வைக்க வேண்டும். இந்த (ஈஸ்வரனின்) அரசாங்கத்தினுடையவர் ஆகி விட்டீர்கள் என்றால் பிறகு ஈசுவரிய சேவையில் ஈடுபட்டு விட வேண்டும். பிறகு அசுர சேவை எப்படி செய்ய முடியும்? ஒவ்வொருவருடைய கர்ம பந்தனத்திற்கேற்ப ஆலோசனை அளிக்கப்படுகிறது. இந்த சகோதரியால் வெளி வர முடியுமா இல்லையா என்று பார்க்கப்படுகிறது. நல்ல கூர்மையான புத்தி உள்ளது என்றால் "ஆன் காட்லி சர்விஸ் ஒன்" (ஈசுவரிய சேவையில் மட்டுமே) என்று ஆகி விடுகிறார்கள். குழந்தைகளாகிய உங்களுடையது நிர்விகாரி ஆக்குவதற்கான சேவை. நாம் சேனை ஆவோம். காட் (இறைவன்) நமக்கு மாயையிடம் போரிட கற்பிக்கிறார். இராவணன் எல்லோரையும் விட அதிகமான பழைய எதிரி ஆவார். இதை நீங்கள் மட்டும் தான் அறிந்துள்ளீர்கள். நீங்கள் இராவணன் மீது வெற்றி அடைந்து வைரம் போல ஆவீர்கள். குழந்தைகளுக்கு அந்த தைரியம் அந்த போதை இருக்க வேண்டும். மனிதர்களோ சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் பாருங்கள், சண்டையே சண்டையாக உள்ளது. நமக்கு யாரிடமும் சண்டை இல்லை. என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகும் என்று தந்தை கூறுகிறார். மாயையின் தாக்குதல் இருக்காது. பிறகு ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். இதுவும் ஒருவருக்கு கூற வேண்டி உள்ளது அல்லவா? தந்தையின் அறிமுகம் கொடுத்து அவரிடம் புத்தியோகத்தை ஈடுபடுத்த வேண்டும். அவர் நமது தாயும் தந்தையும் ஆவார். சிவபாபா இருக்கிறார் (தந்தை) என்றால் உங்களது தாய் யார் என்று கூறுங்கள்? இதுவும் எவ்வளவு ஆழமான விஷயங்கள் ஆகும். ஆத்மாவின் தந்தை யார் என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவர்களும் பரமாத்மா என்று எழுதுவார்கள். நல்லது. தாய் எங்கே. தாய் இல்லாமல் குழந்தைகளை எப்படி படைப்பார்கள்? எனவே பிறகு ஜகதம்பா பக்கம் சென்று விடுவார்கள். நல்லது. ஜகதம்பாவை எப்படிப் படைத்தார்? இதுவும் யாருக்கும் தெரியாது. பிரம்மாவின் மகள் சரஸ்வதி என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவரும் முகவம்சாவளி ஆவார். தந்தையோ படைப்பவர் ஆவார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. என்னுடையவரோ ஒரே ஒரு சர்வோத்தம (அனைத்திலும் முதன்மையான) ஆசிரியர். வேறு யாரும் இல்லை - இதே நிச்சயத்துடன் தாய் தந்தைக்குச் சமமாக படிப்பை படிக்க வேண்டும். புருஷார்த்தத்தில் (முயற்சியில்) முழுமையாக பின் பற்ற வேண்டும்.

 

2. தேகத்தின் சம்மந்த உறவு முறையை புத்தியால் துண்டிக்க வேண்டும். தெய்வீக வழிப்படி நடந்து சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

 

வரதானம்:

உடல், மனம் மற்றும் உள்ளத்தின் சுத்தத் தன்மையின் மூலம் தலைவனை திருப்திப் படுத்தக் கூடிய உண்மையான புனித அன்னப்பறவை ஆகுக.

 

விளக்கம்: சுத்தத் தன்மை அதாவது மனம், சொல், செயல், சம்மந்தம் என அனைத்திலும் தூய்மைத் தன்மை. தூய்மையின் அடையாளமாக வெள்ளை நிறத்தைக் காட்டுகின்றனர். புனித அன்னங்களாகிய நீங்களும் கூட வெள்ளை உடையை உடுத்துபவர்கள், சுத்தமான உள்ளம் அதாவது சுத்தத்தன்மையின் சொருபமாக இருக்கிறீர்கள். உடல், மனம் மற்றும் உள்ளத்தால் எப்போதும் கறையற்றவர்கள் அதாவது சுத்தமானவர்களாக இருக்கிறீர்கள். சுத்தமான மனம் அதாவது சுத்தமான உள்ளத்தில் தலைவன் (இறைவன்) திருப்தி அடைகிறார். அவர்களின் அனைத்து ஆசைகளும் அதாவது விருப்பங்களும் நிறைவேறி விடும். அன்னத்தின் விசேஷத் தன்மை தூய்மையாகும், ஆகையால் பிராமண ஆத்மாக்கள் புனித அன்னப்பறவை எனப்படுகின்றனர்.

 

சுலோகன்:

யார் இந்த சமயத்தில் அனைத்தையும் பொறுத்துக் (சகித்துக்) கொள்கின்றனரோ அவர்களே இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆவார்கள்.

 

ஓம்சாந்தி