23.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! எவ்வளவு நினைவில் இருக்கிறீர்களோ, பவித்திரமாகிறீர்களோ, அந்த அளவு பரலௌகிகத் தாய்-தந்தையின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். ஆசிர்வாதங்கள் கிடைப்பதால் நீங்கள் சதா சுகமானவர்களாக ஆகி விடுவீர்கள்.

 

கேள்வி :

பாபா, குழந்தைகள் அனைவருக்கும் எந்த ஓரு அறிவுரை தந்து, தீய கர்மங்களில் இருந்து பாதுகாக்கிறார்?

 

பதில் :

பாபா அறிவுரை தருகிறார்- குழந்தைகளே, உங்களிடம் என்னென்ன செல்வங்கள் முதலியன உள்ளனவோ, அவை அனைத்தையும் தங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் டிரஸ்டி ஆகி நடந்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்லியே வந்திருக்கிறீர்கள், பகவானே, இவை அனைத்தும் உங்களுடையவை. பகவான் குழந்தை கொடுத்தார், செல்வங்களைக் கொடுத்தார் என்று. இப்போது பகவான் சொல்கிறார் இவை அனைத்திலிருந்தும் புத்தியோகத்தை விலக்கி டிரஸ்டி ஆகி இருங்கள். ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். அப்போது எந்த ஒரு தீய கர்மமும் நடைபெறாது. நீங்கள் உயர்ந்தவர்களாக ஆகி விடுவீர்கள்.

 

பாடல் :

தாய்-தந்தையின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்........

 

ஓம் சாந்தி.

வாயினால் எதையும் பேச முடியவில்லை, யாருக்கும் ஞானத்தைப் புரிய வைக்க முயவில்லை என்று எந்தக் குழந்தைகள் சொல்கிறார்களோ, அவர்களுக்கு சென்டரின் பிராமணிகள் (டீச்சர்) எப்படிக் கற்றுத் தருவது என்பதை சிவபாபா சொல்லிப் புரிய வைக்கிறார். சின்னக் குழந்தைகளுக்கு சித்திரங்களைக் காட்டிப் புரிய வைக்க வேண்டும் இல்லையா? வகுப்பில் அனைவரும் வந்து அமர்வார்கள் என்றால், நீங்கள் முரளி வகுப்பு நடத்தத் தொடங்கிவிட வேண்டும் என்பதில்லை. இதை மிகுந்த அன்பு மற்றும் உறுதியுடன் புரிய வைக்க வேண்டும். குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள் - ஒருவர் பரலௌகிகத் தாய்-தந்தை. அவரைத் தான் நினைவு செய்தே வந்துள்ளனர்- நீங்கள் தான் தாயும் தந்தையும்...... என்பதாக. அவர் சிருஷ்டியைப் படைப்பவர். தாய்-தந்தையாக இருப்பவர் நிச்சயமாக சொர்க்கத்தைத் தான் படைப்பார். சத்யுகத்தில் சொர்க்கவாசிக் குழந்தைகள் இருப்பார்கள். இங்குள்ள தாய்-தந்தையர் தாங்களே நரகவாசி எனும்போது குழந்தைகளும் நரகவாசியாகவே தான் பிறப்பார்கள். பாடலில் சொல்லப் பட்டது-தாய்-தந்தையின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.......நீங்கள் அறிவீர்கள், இந்தச் சமயத்தின் தாய்-தந்தையோ ஆசீர்வாதம் அளிப்பதில்லை. சொர்க்கவாசிகள் ஆசீர்வாதம் பெறுகின்றனர். அந்த ஆசீர்வாதம் அரைக்கல்பம் நடைபெறுகின்றது. பிறகு அரைக்கல்பத்திற்குப் பிறகு சாபமிடப்பட்டவர்களாக ஆகின்றனர். தாங்களே பதீத் ஆகின்றனர் என்றால் குழந்தைகளையும் அவ்வாறு ஆக்கி விடுகின்றனர். அதை ஆசீர்வாதம் எனச் சொல்ல மாட்டார்கள். சாபம் கொடுத்துக் கொடுத்தே பாரதவாசிகள் சாபமிடப்பட்டவர்களாக ஆகிவிட்டனர். எவ்வளவு துக்கத்தின் மேல் துக்கம்! அதனால் தாய்-தந்தையை நினைவு செய்கின்றனர். இப்போது அந்தத் தாய்-தந்தையர் ஆசீர்வாதம் அளித்துக் கொண்டுள்ளனர். படிப்பைக் கற்றுத் தந்து பாவனமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இங்கே இருப்பது அசுர சம்பிரதாயம், இராவண இராஜ்யம். இராவணனின் ஜென்மமும் கூட பாரதத்தில் தான். சிவபாபாவை இராமர் எனச் கூறுகின்றனர், அவருடைய ஜென்மமும் பாரதத்தில் தான். நீங்கள் எப்போது வாமமார்க்கத்தில் செல்கிறீர்களோ, அப்போது பாரதத்தில் இராவண இராஜ்யம் ஆரம்பமாகின்றது. ஆக, பாரதத்தைத் தான் இராமர் பரமபிதா பரமாத்மா வந்து பதீத்திலிருந்து பாவனமாக்குகிறார். இராவணன் வருகிறான் என்றால் மனிதர்கள் பதீத் ஆகி விடுகின்றனர். பாடவும் செய்கின்றனர்-இராமரும் சென்று விட்டார், இராவணனும் சென்று விட்டான், அவனுக்கு அநேக குடும்பங்கள் உள்ளனர் என்று. இராமருடைய பரிவாரமோ மிகவும் சிறியது. மற்ற அனைத்து தர்மங்களும் முடிந்து போகும் அனைத்தும் அழிந்து விடும். பாக்கி தேவி-தேவதைகளாகிய நீங்கள் மட்டுமே மிஞ்சியிருப்பீர்கள். இப்போது பிராமணராகி யிருக்கும் நீங்கள் தான் சத்யுகத்திற்கு மாற்றலாகிச் செல்வீர்கள். ஆக, இப்போது உங்களுக்கு தாய்-தந்தையரின் ஆசீர்வாதங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. தாய்-தந்தையர் உங்களை சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகின்றனர். அங்கே சுகத்தின் மேல் சுகம் இருக்கும். இச்சமயம் கலியுகத்தில் இருப்பது துக்கம். அனைத்து தர்மங்களும் துக்கத்தில் உள்ளன. இப்போது கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வரப்போகிறது. கலியுகத்தில் எவ்வளவு ஏராளமான மனிதர்கள்! சத்யுகத்திலோ இவ்வளவு மனிதர்கள் இருக்க மாட்டார்கள். எவ்வளவு பிராமணர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் தாம் பிறகு அங்கே தேவதை ஆவார்கள். அவர்களும் திரேதா வரை விருத்தி அடைந்து கொண்டே இருப்பார்கள். கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் சத்யுகம் இருந்தது எனச் சொல்கின்றனர். கிறிஸ்துவுக்கு முன் மற்றும் கிறிஸ்துவுக்குப் பின். சத்யுகத்திலோ ஒரே ஒரு தர்மம், ஒரே ஒரு இராஜ்யம். அங்கே மனிதர்களும் கொஞ்சம் இருப்பார்கள். பாரதம் மட்டுமே இருக்கும். மற்ற எந்த ஒரு தர்மமும் இருக்காது. சூரியவம்சிகள் மட்டுமே இருப்பார்கள். சந்திரவம்சிகள் கூட இருக்க மாட்டார்கள்.

 

சூரிய வம்சிகளை பகவான்-பகவதி எனச் சொல்ல முடியும். ஏனென்றால் அவர்கள் சம்பூர்ணமானவர்கள். குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், பதீத-பாவனோ ஒரு பரமபிதா பரமாத்மா தான்! (சக்கரத்தின் சித்திரம் பக்கத்தைக் காண்பித்து). பாருங்கள், பாபா மேலே அமர்ந்துள்ளார். இந்த பிரம்மா மூலம் ஸ்தாபனை செய்வித்துக் கொண்டிருக்கிறார். இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்போது இந்த தேவதைகளின் இராஜ்யம் இருக்கிறதோ, அப்போது வேறு எந்த ஒரு தர்மமும் இருக்காது. பிறகு அரைக்கல்பத்திற்குப் பின் விருத்தியாகிக் கொண்டே போகும். மேலிருந்து ஆத்மாக்கள் வரவும் போகவுமாக இருக்கின்றன. வர்ணங்கள் மாறிக்கொண்டே உள்ளன. ஜீவாத்மாக்கள் விருத்தியாகிக் கொண்டே போகின்றன. சத்யுகத்தில் 9 லட்சம் பேர் இருப்பார்கள். பிறகு கோடிகளாக ஆவார்கள். பிறகு விருத்தியடைந்து கொண்டே போவார்கள். சத்யுகத்தில் பாரதம் உயர்ந்ததாக இருந்தது. இப்போது மிகத் தாழ்ந்ததாக ஆகிவிட்டது. அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களும் உயர்ந்தவர்களாக ஆகி விடுவார்கள் என்பதில்லை. எவ்வளவு ஏராளமான மனிதர்கள்! இங்கேயும் தாழ்ந்த நிலையிலிருந்து உயர்ந்தவர்களாக ஆவதில் எவ்வளவு முயற்சி தேவைப் படுகிறது! அவ்வப்போது சிரேஷ்டாச்சாரி ஆகி-ஆகியே பிறகு விகாரத்தில் போய் பிரஷ்டாச்சாரி ஆகி விடுகின்றனர். பாபா சொல்கிறார், நான் வந்திருக்கிறேன், உங்களை கறுப்பிலிருந்து வெள்ளையாக்குவதற்காக. நீங்கள் அடிக்கடி கீழே விழுந்து விடுகிறீர்கள். எல்லையற்ற தந்தையோ நேரடியாகவே பேசுகிறார். கேட்கிறார்- இதென்ன, குலத்துக்குக் களங்கம் செய்தவராக ஆகிறீர்கள்? முகத்தைக் கறுப்பாக ஆக்கிக் கொள்கிறீர்கள்? என்ன நீங்கள் வெள்ளையாக (தூய்மையாக) ஆக மாட்டீர்களா? நீங்கள் அரைக்கல்பம் சிரேஷ்டமானவர்களாக இருந்தீர்கள். பிறகு கலைகள் குறைந்து கொண்டே செல்கின்றன. கலியுகக் கடைசியிலோ கலைகள் முற்றிலுமாக அழிந்து போகின்றன. சத்யுகத்தில் ஒரு பாரதம் மட்டுமே இருந்தது. இப்போதோ அனைத்து தர்மங்களும் உள்ளன. பாபா வந்து மீண்டும் சத்யுக சிரேஷ்ட சிருஷ்டியை ஸ்தாபனை செய்கிறார். நீங்களும் கூட சிரேஷ்டாச்சாரி ஆக வேண்டும். சிரேஷ்டாச்சாரியாக யார் வந்து ஆக்குகிறார்? பாபா ஏழைப்பங்காளர். பண விஷயமல்ல. எல்லையற்ற தந்தையிடம் சிரேஷ்டமானவராக ஆவதற்காக வருகின்றனர் என்றாலும் மக்கள் கேட்கின்றனர், நீங்கள் இங்கே ஏன் போகிறீர்கள் என்று. எவ்வளவு தடைகளை ஏற்படுத்துகின்றனர்! நீங்கள் அறிவீர்கள், இந்த ருத்ர ஞான யக்ஞத்தில் அசுரர்களின் விக்னங்கள் அதிகம் ஏற்படுகின்றன. அபலைகளுக்குக் கொடுமைகள் நடைபெறுகின்றன. பிறகு சில பெண்களும் கூட அதிகத் தொந்தரவு செய்கின்றனர். விகாரத்திற்காகத் திருமணம் செய்கின்றனர். இப்போது பாபா காமச்சிதையிலிருந்து கீழே இறக்கி ஞான சிதையில் அமர்த்துகிறார். ஜென்ம-ஜென்மாந்தரத்தின் கான்ட்ராக்ட் இது. இச்சமயம் இருப்பதே இராவண இராஜ்யம். அரசாங்கத்தினர் எவ்வளவு விழாக்கள் நடத்துகின்றனர்! இராவணனை எரிக்கின்றனர். விளையாட்டைப் பார்க்கச் செல்கின்றனர். இப்போது இந்த இராவணன் எங்கிருந்து வந்தான்? இராவணனின் ஜென்மம் ஏற்பட்டு இப்போது 2500 ஆண்டுகள் ஆகின்றன. இராவணன் அனைவரையும் சோகவனத்தில் அமர்த்தி விட்டான். அனைவரும் ஒரே துக்கத்தில் உள்ளனர். இராம ராஜ்யத்தில் அனைவரும் சுகத்திலேயே இருப்பார்கள். இப்போது கலியுகத்தின் கடைசி. விநாசம் எதிரிலேயே உள்ளது. இத்தனைக் கோடி மனிதர்கள் இறப்பார்கள் என்றால் நிச்சயமாக யுத்தம் நடைபெறும் இல்லையா? கடுகுகளைப் போல் அனைவரும் சிதறிப் போவார்கள். இப்போது பார்க்கிறீர்கள், ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பாபா சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். இந்த ஞானத்தை வேறு யாரும் தர முடியாது. இந்த ஞானத்தை பாபா தான் வந்து தருகிறார், மேலும் பதீதர்களைப் பாவனமாக்குகிறார். சத்கதி அளிப்பவர் ஒரே ஒரு பாபா தான். சத்யுகத்தில் இருப்பது சத்கதி. அங்கே குருவின் அவசியம் கிடையாது. இப்போது நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் திரிகாலதரிசி ஆகிறீர்கள். சத்யுகத்தில் லட்சுமி-நாராயணருக்கு இந்த ஞானம் முற்றிலும் இருக்காது. பிறகு பரம்பரையாக இந்த ஞானம் எங்கிருந்து வந்தது? இப்போது கலியுகத்தின் கடைசி. பாபா சொல்கிறார், நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள். சொர்க்கத்தின் ராஜதானி ஸ்தாபனை செய்பவராகிய பாபாவையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். பவித்திரமாகவோ அவசியம் இருந்தாக வேண்டும். அது பாவன உலகம், இது பதீத் உலகம். பாவன உலகத்தில் கம்சன், ஜராசந்தன், ஹிரண்யகஸ்ப் முதலானோர் இருக்க மாட்டார்கள். கலியுகத்தின் விஷயங்களை சத்யுகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். சிவபாபா வந்துள்ளார், கலியுகத்தின் கடைசியில். இன்று சிவபாபா வந்திருக்கிறார், நாளை ஸ்ரீகிருஷ்ணர் வருவார். ஆக, சிவபாபா மற்றும் ஸ்ரீகிருஷ்ணரின் பாகத்தை ஒன்றாக்கி விட்டுள்ளனர். சிவபகவான் வாக்கு-அவரிடம் படித்து கிருஷ்ணரின் ஆத்மா இந்தப் பதவி பெறுகிறது. அவர்கள் பிறகு தவறுதலாக கீதாவில் கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டுள்ளனர். இந்தத் தவறு மறுபடியும் நடைபெறும். மனிதர்கள் பிரஷ்டாச்சாரி ஆவார்கள், அப்போது தான் பாபா வந்து சிரேஷ்டாச்சாரி ஆக்குவார். சிரேஷ்டாச்சாரிகள் தான் 84 பிறவிகளை முடித்து பிரஷ்டாச்சாரி ஆகின்றனர். இந்தச் சக்கரத்தைப் பற்றிப் புரிய வைப்பதோ மிகவும் சுலபம். மரத்திலும் (கல்பவிருட்சம்) காட்டப்பட்டுள்ளது. கீழே நீங்கள் இராஜயோகத்தின் தபஸ்யா செய்து கொண்டிருக்கிறீர்கள். மேலே லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் உள்ளது. இப்போது நீங்கள் வேர் தூரில் (மரத்தின் அடிப்பகுதியில்) அமர்ந்திருக்கிறீர்கள். அஸ்திவாரம் இடப்படுகின்றது. நீங்கள் அறிவீர்கள், மீண்டும் சூரியவம்ச குலத்தில் (வைகுண்டத்திற்கு) செல்வீர்கள். இராம ராஜ்யம் வைகுண்டம் எனச் சொல்லப்படுவதில்லை.

 

கிருஷ்ணரின் ராஜ்யம் தான் வைகுண்டம் எனச் சொல்லப்படுவதாகும். இப்போது உங்களிடம் அநேகர் வருவார்கள். கண்காட்சி முதலியவற்றில் உங்கள் பெயர் புகழ் பெறும். ஒருவர் மற்றவரைப் பார்த்து எண்ணிக்கை பெருகும். பாபா வந்து இந்த அனைத்து விஷயங்களையும் புரிய வைக்கிறார். சித்திரங்களை வைத்து யாருக்காவது புரிய வைப்பதென்பது மிகவும் சுலபமாகும். சத்யுகத்தின் ஸ்தாபனையை பகவான் தான் வந்து செய்கிறார். மேலும் அவர் பதீத் உலகத்தில் வருகிறார். கறுப்பிலிருந்து வெள்ளையாக (தூய்மையாக) ஆக்குகிறார். நீங்கள் கிருஷ்ணரின் ராஜதானியினுடைய வம்சாவளியாகவும் இருக்கிறீர்கள். பிரஜைகளாகவும் இருக்கிறீர்கள். பாபா நன்றாகச் சொல்லிப் புரிய வைக்கிறார். நிராகார் சிவபாபா வந்து ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார்-நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள். இது ஆன்மீக யாத்திரை. ஹே ஆத்மாக்களே, நீங்கள் உங்களுடைய சாந்திதாம், நிர்வாண்தாமத்தை நினைவு செய்வீர்களானால் சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கும். இப்போது நீங்கள் சங்கமத்தில் அமர்ந்திருக் கிறீர்கள். பாபா சொல்கிறார்-என்னையும் எனது ஆஸ்தியையும் நினைவு செய்வீர்களானால் நீங்கள் இங்கே சொர்க்கத்திற்கு வந்து விடுவீர்கள். யார் எவ்வளவு நினைவு செய்கிறார்களோ, மேலும் பவித்திரமாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும். உங்களுக்கு எவ்வளவு பெரிய ஆசிர்வாதங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன! - தனவான் பவ! புத்ரவான் பவ! ஆயுஸ்வான் பவ! தேவதைகளுக்கு ஆயுள் மிக நீடித்த தாய் இருக்கும். சாட்சாத்காரம் ஆகின்றது-இப்போது இந்த சரீரத்தை விட்டுப்போய்க் குழந்தையாக ஆக வேண்டும். ஆக, இது உள்ளுக்குள் வரவேண்டும்-நாம் ஆத்மா இந்தப் பழைய சரீரத்தை விட்டுப்போய் கர்ப்பத்தில் நிவாசம் செய்வோம். கடைசி நேர நினைவு தான் அடுத்த பிறவியின் கதியைத் தீர்மானிக்கும் (அந்த் மதே ஸோ கதி). முதியவராய் இருப்பதைவிட நாம் ஏன் குழந்தையாக ஆகக் கூடாது? ஆத்மா இந்த சரீரத்தோடு இருக்கும் போது தான் கஷ்டம் அனுபவம் ஆகின்றது. ஆத்மா சரீரத்திலிருந்து தனியாகி விட்டால் எந்த ஒரு கஷ்டமும் அனுபவமாகாது. சரீரத்திலிருந்து தனியாகி விட்டால் முடிந்தது. நாம் இப்போது போக வேண்டும். மூலவதனத்திலிருந்து பாபா வந்திருக்கிறார், அழைத்துச் செல்வதற்காக. இது துக்க உலகமாகும். பாபா சொல்கிறார், அனைவரையும் முக்திதாம் அழைத்துச் செல்கிறேன். அனைத்து தர்மங்களைச் சார்ந்தவர்களும் முக்திதாம் சென்றாக வேண்டும். அவர்கள் முயற்சியும் கூட முக்திதாம் செல்வதற்காகவே செய்கின்றனர்.

 

பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் என்னிடமே வந்து விடுவீர்கள். பாபாவை நினைவு செய்து உணவு சாப்பிடுவீர்களானால் உங்களுக்கு சக்தி கிடைக்கும். அசரீரி ஆகி, நீங்கள் அபுரோடு வரை நடந்து செல்லுங்கள். ஒருபோதும் உங்களுக்கு எந்த ஒரு களைப்பும் இருக்காது. பாபா ஆரம்பத்தில் இந்தப் பயிற்சி செய்ய வைத்தார். ஆத்மா என உணர்ந்திருந்தனர். மிகவும் லேசாக ஆகி நடந்து சென்றனர். எந்த ஒரு களைப்பும் இருந்ததில்லை. சரீரம் இல்லாமல் ஆத்மா நீங்களும் ஒரு விநாடியில் பாபாவிடம் சென்று சேர்ந்து விட முடியும். இங்கே ஒருவர் சரீரத்தை விட்டார் என்றால், ஒரு விநாடியில் போய் லண்டனில் கூட பிறவி எடுத்து விடுவார். ஆத்மாவைப் போல் வேகமாகச் செல்லக்கூடிய பொருள் வேறெதுவும் கிடையாது. ஆக, இப்போது பாபா சொல்கிறார்-குழந்தைகளே, நான் உங்களை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். இப்போது தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். இப்போது உங்களுக்கு நடைமுறையில் எல்லையற்ற பரலௌகிகத் தந்தையின் ஆசீர்வாதங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பாபா குழந்தைகளுக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த வழிமுறையைத் தந்து கொண்டிருக்கிறார். உங்கள் செல்வம் முதலிய அனைத்தையும் உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். டிரஸ்டியாக மட்டும் நடந்து செல்லுங்கள். நீங்கள் சொல்லியும் வந்திருக்கிறீர்கள்-ஹே பகவானே, இவை அனைத்தும் உங்களுடையவை! பகவான் குழந்தை கொடுத்தார், பகவான் இந்த செல்வம் முதலியவற்றைத் தந்தார். நல்லது, பகவான் வந்து இப்போது சொல்கிறார், இவை அனைத்திலிருந்தும் புத்தியோகத்தை விலக்கி நீங்கள் டிரஸ்டியாகிச் செல்லுங்கள். ஸ்ரீமத்படி நடப்பீர்களானால் பாபாவுக்குத் தெரிய வரும். நீங்கள் எந்த ஒரு தீய கர்மமோ செய்வதில்லை. ஸ்ரீமத் படி நடப்பதன் மூலம் தான் நீங்கள் சிரேஷ்டமானவர்களாக ஆவீர்கள். அசுர வழிப் படி நடப்பதால் நீங்கள் மிகத் தாழ்ந்தவர்களாக ஆகி விட்டிருக்கிறீர்கள். மிகத் தாழ்ந்தவராக ஆவதற்கு உங்களுக்கு அரைக்கல்பம் பிடித்திருக்கிறது. 16 கலைகளில் இருந்து பிறகு 14 கலைகள் உள்ளவர்களாக ஆகிறீர்கள். பிறகு கொஞ்சம்-கொஞ்சமாகக் கலைகள் குறைந்து கொண்டே செல்கின்றன. ஆக, இதில் நேரம் பிடிக்கின்றது இல்லையா? நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) நடமாடும் போதும் சுற்றிவரும் போதும் அசரீரி ஆவதற்கான அப்பியாசம் செய்ய வேண்டும். உணவை ஒரு பாபாவின் நினைவில் உண்ண வேண்டும்.

 

2) தாய்-தந்தையின் ஆசிர்வாதங்களைப் பெற வேண்டும். டிரஸ்டியாகி இருக்க வேண்டும். எந்த ஒரு தீய செயலும் செய்யக் கூடாது.

 

வரதானம்:

ஞான சொரூபமாக ஆகி, கர்ம சித்தாந்தத்தை கண்டறிந்து நடக்கக் கூடிய சர்ம பந்தனங்களிலிருந்து விடுபட்டவர் ஆவீர்களாக.

 

ஒரு சில குழந்தைகள் ஆவேசத்தில் வந்து எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒதுக்கி உடலால் தனியாக ஆகி விடுகிறார்கள். ஆனால் மனதில் கணக்கு வழக்கு இருக்கும் காரணத்தால் அது இழுத்துக் கொண்டே இருக்கிறது. புத்தி போய்க் கொண்டே இருக்கிறது. இது கூட ஒரு பெரிய தடை ஆகி விடுகிறது. எனவே எவரொருவரிடமிருந்து ஒதுங்கி விட வேண்டும் என்றாலும் கூட முதலில் (நிமித்தமான) கருவியாக இருக்கும் ஆத்மாக்களிடம் (வெரிஃபை) சரிபார்க்குமாறு செய்யுங்கள். ஏனெனில், இது கர்மங்களின் சித்தாந்தம் ஆகும். வலுகட்டாயமாக துண்டித்து விடும் பொழுது மனம் திரும்ப திரும்ப சென்று கொண்டே இருக்கும். எனவே ஞான சொரூபம் ஆகி கர்ம சித்தாந்தத்தை கண்டறியுங்கள். மேலும் சரி பார்க்குமாறு செய்வியுங்கள். அப்பொழுது எளிதாக கர்மபந்தனத்திலிருந்து விடுபட்டவராக ஆகி விடுங்கள்.

 

சுலோகன்:

தங்களது சுயமானத்தின் (சுய மரியாதை) சீட் மீது செட் ஆகி இருந்தீர்கள் என்றால், மாயை உங்களுக்கு முன்னால் சமர்ப்பணம் ஆகி விடும்.

 

ஓம்சாந்தி