16.11.2018 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே,
நீங்கள்
ஆன்மீக
வழிகாட்டி
ஆகி
யாத்திரை
செய்ய
வேண்டும்
மற்றும் செய்விக்க
வேண்டும்,
நினைவு
தான்
உங்களுடைய
யாத்திரை
ஆகும்.
நினைவு
செய்து
கொண்டே இருந்தால்
குஷியின்
அளவு
அதிகரிக்கும்.
கேள்வி:
நிராகார
உலகத்துக்கு
சென்றதுமே
எந்த
சமஸ்காரம்
முடிந்து
போய்
விடுகிறது,
எந்த
சமஸ்காரம் அப்படியே
இருந்து
விடுகிறது?
பதில்:
அங்கே
ஞானத்தின்
சமஸ்காரம்
முடிந்து
போய்
விடுகிறது,
பிராலப்தத்தின்
(பலன்)
சமஸ்காரம் அப்படியே
இருந்து
விடுகிறது.
அந்த
சமஸ்காரங்களின்
ஆதாரத்தில்
தான்
குழந்தைகளாகிய
நீங்கள்
சத்யுகத்தில் பலனை
அனுபவிக்கிறீர்கள்,
அங்கே
பிறகு
படிப்பு
அல்லது
முயற்சிக்கான
சமஸ்காரம்
இருக்காது.
பலன் கிடைத்ததும்
ஞானம்
முடிந்து
போய்விடுகிறது.
பாடல்:
இரவுப்
பிரயாணிகளே
களைப்படையாதீர்கள்..............
ஓம்
சாந்தி.
இங்கே
முன்னால்
சிவபகவானுடைய
மகாவாக்கியம்
ஆகும்.
கீதையில்
ஸ்ரீகிருஷ்ண
பகவானுடைய மகாவாக்கியம்
என்று
காட்டுகிறார்கள்.
ஆனால்
கிருஷ்ணர்
அந்த
பெயர்,
உருவத்தில்
முன்னால்
இருக்க முடியாது.
இவரோ
முன்னால்
இருந்து
சொல்கிறார்,
நிராகார
பகவானுடைய
மகாவாக்கியம்.
கிருஷ்ணருடைய வாக்கியம்
என்றால்,
அது
சரீரத்திலிருந்து
(சாகார்
நிலையிருந்து)
சொல்வதாகி
விடுகிறது.
வேத
சாஸ்திரங்கள் போன்றவை
சொல்பவர்கள்
கூட
பகவானுடைய
மகாவாக்கியம்
என்று
சொல்ல
மாட்டார்கள்.
ஏனெனில்
அந்த சாது,
சன்னியாசி,
மகாத்மா
போன்ற
அனைவரும்
சரீரத்தில்
இருக்கிறார்கள்.
மேலும்
பாபா
சொல்கிறார்
-
ஏ,
ஆன்மீகப்
பிரயாணியே!
என்று.
ஆன்மீகத்
தந்தை
கண்டிப்பாக
ஆத்மாக்களுக்குத்
தான்
சொல்வார்
–
குழந்தைகளே களைப்படையாதீர்கள்!
யாத்திரையில்
நிறைய
பேர்
களைப்படையும்
போது
திரும்பி
வந்து
விடுகிறார்கள்.
அது உலகிய
யாத்திரை
ஆகும்.
அநேக
கோயில்களில்
உலகிய
தீர்த்த
யாத்திரை
செல்கின்றனர்.
சிலர்
சிவனுடைய கோயில்களுக்குச்
செல்கின்றனர்,
அங்கே
அனைத்தும்
பக்தி
மார்க்கத்தின்
உலகிய
சித்திரங்களை
வைத்திருக்கின்றனர்.
இவரோ
சுப்ரீம்
ஆத்மா
பரமபிதா
பரமாத்மா
ஆத்மாக்களுக்குச்
சொல்கிறார்,
ஏ,
குழந்தைகளே!
இப்போது
என்
ஒருவனோடு
புத்தியோகத்தைச்
செலுத்துங்கள்,
மேலும்
ஞானமும்
தருகின்றார்.
தீர்த்தங்களுக்கு செல்லும்
போது
அங்கேயும்
பிராமணர்கள்
அமர்ந்திருக்கின்றனர்,
கதைகள்,
கீர்த்தனைகள்
பாடுகின்றனர்.
உங்களுடையதோ
ஒரே
ஒரு
சத்திய
நாராயணனின்
கதை
ஆகும்,
நரனிலிருந்து நாராயணன்
ஆவதற்கான கதை
ஆகும்.
உங்களுக்குத்
தெரியும்,
முதலில் இனிமையான
வீட்டுக்கு
(ஸ்வீட்
ஹோம்)
செல்வோம்,
பிறகு விஷ்ணுபுரிக்கு
வருவோம்.
இந்த
நேரம்
நீங்கள்
பிரம்ம
புரியில்
இருக்கிறீர்கள்,
இதை
பிறந்த
வீடு
என்று சொல்லப்படுகிறது.
உங்களிடம்
ஆபரணங்கள்
போன்ற
எதுவும்
இல்லை,
ஏனெனில்
நீங்கள்
பிறந்த
வீட்டில் இருக்கிறீர்கள்.
உங்களுக்குத்
தெரியும்,
மாமியார்
வீட்டில்
(சத்யுகத்தில்)
நமக்கு
அளவற்ற
சுகம்
கிடைக்கும்.
கலியுகத்தின்
மாமியார்
வீட்டில்
அளவற்ற
துக்கமாக
இருக்கிறது.
நீங்கள்
அக்கரைக்கு
அதாவது,
சுகதாமத்துக்குச் செல்ல
வேண்டும்.
இங்கே
இருந்து
மாற்றப்பட
வேண்டும்.
பாபா
அனைவரையும்
கண்ணுக்குள்
அமர்த்தி அழைத்துச்
செல்கிறார்.
கிருஷ்ணருடைய
தந்தை
அவரைக்
கூடையில்
வைத்து
அக்கரைக்கு
அழைத்துச் சென்றதாகக்
காட்டுகிறார்கள்
அல்லவா!
ஆக
இந்த
எல்லைக்கப்பாற்பட்ட
தந்தை
குழந்தைகளாகிய
உங்களை அக்கரைக்கு
மாமியார்
வீட்டுக்கு
கொண்டு
செல்கிறார்.
முதலில் தன்னுடைய
நிராகார
வீட்டுக்குக்
கொண்டு செல்வார்,
பிறகு
மாமியார்
வீட்டுக்கு
அனுப்பி
வைப்பார்.
அங்கே
இந்த
அனைத்து
மாமியார்
வீடு
மற்றும் பிறந்த
வீட்டின்
விசயங்கள்
மறந்து
விடும்.
அதுவோ
நிராகார
பிறந்த
வீடு,
அங்கே
இந்த
ஞானம்
மறந்து போய்விடுகிறது,
ஞானத்தின்
சமஸ்காரம்
வெளியேறி
விடுகிறது.
பிராலப்தத்தின்
(பலன்)
சமஸ்காரம்
அப்படியே இருந்து
விடுகிறது.
பிறகு
குழந்தைகளாகிய
உங்களுக்கு
பிராலப்தம்
தான்
நினைவில்
இருக்கிறது.
அதன்
படி சுகத்தில்
போய்
பிறப்பு
எடுப்பீர்கள்.
சுகதாமம்
செல்ல
வேண்டும்.
பலன்
கிடைத்ததும்
ஞானம்
முடிந்து போய்விடுகிறது.
உங்களுக்குத்
தெரியும்,
இதன்
பலனாக
நமக்கு
மீண்டும்
அதே
நடிப்பு
கிடைக்கும்.
உங்களுடைய சமஸ்காரமே
பிராலப்தத்தினுடையதாக
ஆகிவிடும்.
இப்போது
முயற்சியின்
சமஸ்காரம்
ஆகும்.
முயற்சி
மற்றும் பிராலப்தம்
இரண்டினுடைய
சமஸ்காரமும்
அங்கே
இருக்கும்
என்பது
கிடையாது.
அங்கே
இந்த
ஞானம் இருப்பதில்லை.
ஆக
இது
உங்களுடைய
ஆன்மீக
யாத்திரை
ஆகும்,
பாபா
உங்களது
தலைமை
வழிகாட்டி ஆவார்.
நீங்களும்
ஆன்மீக
வழிகாட்டி
ஆகிவிடுகிறீர்கள்,
அனைவரையும்
கூடவே
அழைத்துச்
செல்கிறீர்கள்.
அவர்கள்
உலகிய
வழிகாட்டிகள்,
நீங்களோ
ஆன்மீக
வழிகாட்டிகள்
ஆவீர்கள்.
அவர்கள்
கூட்டம்
கூட்டமாக செல்கின்றனர்.
குறிப்பாக
அமர்நாத்துக்கு
மிகவும்
கொண்டாட்டத்துடன்
செல்கின்றனர்.
பாபா
பார்த்திருக்கிறார்,
நிறைய
சாது
சன்னியாசிகள்
மேளதாளங்களை
கொண்டு
செல்கின்றனர்.
குளிர்
காலமாக
இருப்பதால்
டாக்டரையும் கூடவே
அழைத்துச்
செல்கிறார்கள்.
நிறைய
பேர்
நோய்வாய்படுகின்றனர்.
உங்களுடைய
யாத்தியோரையோ மிக
சகஜமானதாகும்.
பாபா
சொல்கிறார்,
நினைவில்
இருப்பது
தான்
உங்களுடைய
யாத்திரை
ஆகும்.
நினைவு தான்
முக்கியம்.
குழந்தைகள்
நினைவு
செய்து
கொண்டே
இருந்தால்
குஷியின்
அளவு
அதிகரித்துக்
கொண்டே இருக்கும்.
கூடவே
மற்றவர்களையும்
யாத்திரையில்
கூட்டிச்
செல்ல
வேண்டும்.
இந்த
யாத்திரை
ஒரே
ஒரு முறை
தான்
ஏற்படுகிறது.
அந்த
உலகிய
யாத்திரைகளோ
பக்தி
மார்க்கத்திலிருந்து ஆரம்பமாகிறது.
அது
கூட பக்தியின்
ஆரம்பத்தில்
கிடையாது.
உடனுக்குடன்
கோயில்,
சித்திரங்கள்
உருவாகி
விடுகிறது
என்பது
கிடையாது.
அவையனைத்தும்
கொஞ்சம்
கொஞ்சமாக
பின்னால்
உருவாக்கப்பட்டுக்
கொண்டே
செல்கிறது.
முதன்முதலில் சிவனுடைய
கோயில்
உருவாகும்.
அது
கூட
முதலில் வீட்டில்
சோமநாத்
கோயிலை
உருவாக்குகின்றனர்,
ஆக எங்கேயும்
செல்வதற்கான
அவசியம்
கிடையாது.
இந்த
கோயில்
போன்றவை
பின்னால்
உருவாகிறது,
நேரம் பிடிக்கிறது.
போகப்போக
புதிய
சாஸ்திரங்கள்,
புதிய
சித்திரங்கள்,
புதிய
கோயில்கள்
போன்றவை
உருவாகிக் கொண்டே
போகிறது.
இதில்
நேரம்
எடுக்கிறது,
ஏனெனில்
படிப்பவர்களும்
வேண்டுமல்லவா!
மடம்
ஆகியவை விருத்தி
அடையும்போது,
சாஸ்திரங்கள்
உருவாக்குவதற்கான
சிந்தனை
வரும்.
ஆக
இத்தனை
தீர்த்தஸ்தலங்கள் உருவானது,
கோயில்கள்
உருவானது,
சித்திரங்கள்
உருவானது
நேரம்
எடுக்கிறது
அல்லவா!
துவாபர
யுகத்திலிருந்து பக்தி
ஆரம்பமானதாக
சொல்லப்படுகிறது
என்றாலும்
நேரம்
எடுக்கிறதல்லவா!
பிறகு
கலைகள்
குறைந்து கொண்டே
போகும்.
முதலில் அவிபச்சாரி
பக்தி,
பிறகு
விபச்சாரி
பக்தி
(கலப்பட)
ஆகிவிடுகிறது.
இந்த அனைத்து
விசயங்களும்
நல்ல
முறையில்
சித்திரங்கள்
மூலம்
நிரூபித்துச்
சொல்லப்படுகிறது.
புரிய
வைப்பவர்களின் புத்தியில்
இதே
ஓடிக்கொண்டிருக்கும்
-
இப்படி
இப்படியாக
சித்திரங்களை
உருவாக்கி,
இதைப்
புரிய
வைக்கலாம் என்று.
அனைவரின்
புத்தியிலும்
இது
ஓடாது.
வரிசைக்கிரமமாக
இருக்கிறார்கள்
அல்லவா!
சிலருடைய
புத்தியில் முற்றிலும்
ஓடுவதில்லை,
அவர்
பிறகு
பதவியும்
அப்படித்
தான்
அடைவார்.
இவர்
என்னவாக
ஆவார்,
எவ்வளவு
முன்னேறுவார்
என்று
தெரிந்துவிடுகிறது.
நீங்கள்
புரிந்துகொண்டே
போவீர்கள்.
எப்போது
சண்டை போன்றவை
வருமோ
அப்போது
நடைமுறையில்
பார்ப்பார்கள்.
பிறகு
மிகவும்
பச்சாதாபப்படுவார்கள்.
அந்த நேரம்
படிக்க
முடியாது.
சண்டை
நடக்கும்
நேரத்தில்
அய்யோ
அய்யோ
என்ற
கூக்குரல்
ஏற்பட்டுக்
கொண்டே இருக்கும்,
கேட்கவே
முடியாது.
என்ன
ஆகும்
என்றே
தெரியாது.
பிரிவினை
(பாகிஸ்தான்)
ஏற்பட்ட
போது என்ன
நடந்தது
என்று
பார்த்தீர்கள்
அல்லவா!
இந்த
வினாச
நேரத்தில்
நிறைய
நடக்க
இருக்கிறது.
ஆம் மற்றபடி
சாட்சாத்காரம்
ஆகியன
நிறைய
ஏற்படும்,
அதிலிருந்து இவர்
எவ்வளவு
படித்திருக்கிறார்
என்று தெரிந்துவிடும்.
நிறைய
பச்சாதாபப்படவும்
செய்வார்கள்,
சாட்சாத்காரமும்
ஏற்படும்
-
பாருங்கள்
நீங்கள்
படிப்பை விட்டுவிட்டீர்கள்,
அதனால்
இந்த
நிலைமை
ஆகிவிட்டது.
தர்மராஜர்
சாட்சாத்காரம்
காட்டாமல்
எப்படி
தண்டனை கொடுப்பார்?
அனைத்தையும்
சாட்சாத்காரம்
காண்பிப்பார்.
பிறகு
அந்த
நேரம்
ஒன்றும்
செய்ய
முடியாது.
ஆ!
என்
அதிர்ஷ்டமே
என்று
சொல்வார்கள்.
முயற்சிக்கான
காலமோ
கடந்து
விட்டது.
இப்போதே
ஏன்
முயற்சி செய்யக்கூடாது
என்று
பாபா
சொல்கிறார்.
சேவை
மூலமாகவே
பாபாவின்
மனதில்
அமர
முடியும்.
பாபா சொல்வார்,
இந்தக்
குழந்தை
நல்ல
சேவை
செய்கிறது.
இராணுவத்தில்
யாரேனும்
இறந்தால்,
அவருடைய நண்பர்கள்
உறவினர்களுக்கும்
கூட
வெகுமதி
கொடுக்கிறார்கள்.
இங்கே
உங்களுக்கு
வெகுமதி
கொடுப்பவர் எல்லைக்கப்பாற்பட்ட
பாபா
ஆவார்.
பாபாவிடமிருந்து
எதிர்காலத்தின்
21
பிறவிகளுக்கு
வெகுமதி
கிடைக்கிறது.
ஒவ்வொருவரும்
தன்னுடைய
மனதில்
கைவைத்து
கேட்க
வேண்டும்,
நான்
எந்தளவிற்கு
படிக்கின்றேன்?
தாரணை
ஏற்படவில்லை
என்றால்
அதிர்ஷ்டத்தில்
இல்லை.
அப்படிப்பட்ட
கர்மம்
செய்திருக்கிறார்கள்,
என்று சொல்வார்கள்.
மிக
மோசமான
கர்மம்
செய்பவர்கள்
ஒன்றும்
அடைய
முடியாது.
பாபா
புரிய
வைக்கின்றார்
-
இனிமையான
குழந்தைகளே!
நீங்கள்
இந்த
ஆன்மீக
யாத்திரையில்
தங்கள் உடன்
இருப்பவர்களையும்
அழைத்து
வர
வேண்டும்.
ஒவ்வொருவருக்கும்
இந்த
யாத்திரையைப்
பற்றி சொல்வது
உங்கள்
கடமையாகும்.
இது
எங்களுடைய
ஆன்மீக
யாத்திரை
என்று
சொல்லுங்கள்.
அது
உலகிய யாத்திரையாகும்.
இரங்கூனில்
ஒரு
ஒலி எழுப்பும் குளம்
இருக்கிறது,
அங்கே
குளிப்பதின்
மூலம்
தேவதையாக ஆகிவிடுவதாக
காட்டுகிறார்கள்.
ஆனால்
அப்படி
தேவதையாக
ஒன்றும்
ஆவதில்லை.
இது
ஞானக்
குளியல் செய்வதற்கான
விஷயமாகும்,
இதன்
மூலம்
நீங்கள்
சொர்க்கத்தின்
இராணியாக
ஆகின்றீர்கள்.
மேலும்
ஞான யோக
பலத்தின்
மூலம்
வைகுண்டத்திற்கு
போவது
மற்றும்
வருவது
உங்களுக்கு
சாதாரண
விஷயமாகும்.
திரும்பத்திரும்ப
காட்சி
பார்ப்பதற்கு
(டிரான்ஸ்)
செல்லாதீர்கள்,
என்று
தடுக்கப்படுகிறது,
இது
பழக்கமாகிவிடும்.
ஆக
இது
ஞானத்தின்
மானசரோவர்
ஆகும்,
பரமபிதா
பரமாத்மா
வந்து
இந்த
மனித
உடலின் மூலமாக ஞானம்
சொல்கின்றார்,
ஆகையால்
இதை
மான
சரோவர்,
என்று
அழைக்கப்படுகிறது.
மானசரோவர்
என்ற வார்த்தை
கடல்
என்ற
வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது.
ஞானக்கடலில் ஞானக்
குளியல்
செய்வது
மிகவும் நல்லதாகும்.
சொர்க்கத்தின்
இராணி
மகாராணி,
என்று
அழைக்கப்படுகிறார்.
பாபா
சொல்கின்றார்,
நீங்களும் சொர்க்கத்தின்
எஜமானர்
ஆகுங்கள்.
பாபாவிற்கு
குழந்தைகளின்
மீது
அன்பு
இருக்கிறது,
ஒவ்வொருவரின் மீதும்
இரக்கம்
வருகிறது,
சாதுக்களின்
மீது
கூட
இரக்கம்
வருகிறது.
சாதுக்களையும்
கடைத்தேற்றுகிறார்,
என்று
கீதையில்
எழுதப்பட்டிருக்கிறது.
ஞானம்
யோகத்தின்
மூலமாக
கடைத்தேற்றப்படுகிறது.
குழந்தைகளாகிய உங்களுக்கு
புரிய
வைப்பதில்
சுறுசுறுப்பு
வேண்டும்.
சொல்லுங்கள்
-
நீங்கள்
அனைத்தையும்
தெரிந்திருக்கிறீர்கள் ஆனால்
மோர்
போன்றவற்றை
தெரிந்திருக்கிறீர்கள்,
மற்றபடி
வெண்ணெய்
ஊட்டுபவரைப்
பற்றி
நீங்கள் தெரிந்து
கொள்ளவே
இல்லை.
பாபா
எவ்வளவு
நல்ல
முறையில்
புரிய
வைக்கின்றார்.
ஆனால்
யாருடைய புத்தியிலாவது
பதிய
வேண்டுமல்லவா!
பாபாவைத்
தெரிந்து
கொள்வதின்
மூலம்
மனிதர்கள்
வைரத்தைப்போல் ஆகிவிடுகிறார்கள்,
தெரிந்து
கொள்ளாததின்
மூலம்
மனிதர்கள்
சோழியைப்
போல
முற்றிலும்
தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள்.
பாபாவைத்
தெரிந்து
கொள்வதின்
மூலம்
தான்
தூய்மையாகின்றார்கள்.
தூய்மையற்ற
உலகத்தில் தூய்மையானவர்
யாரும்
இருக்க
முடியாது.
மகாரதி
குழந்தைகள்
நல்ல
விதமாகப்
புரிய
வைக்க
முடியும்.
எத்தனை
பிரம்மாகுமார-குமாரிகள்
இருக்கின்றார்கள்!
பிரஜாபிதா
பிரம்மா
என்ற
பெயர்
கூட
பிரபலமாக
இருக்கிறது.
இவர்கள்
பிரஜாபிதா
பிரம்மாவினுடைய
வாய்வம்சாவழியினர்
ஆவர்.
பிரம்மாவிற்கு
தான்
100
கரங்கள்,
1000
கரங்கள்
காட்டுகின்றார்கள்.
இத்தனை
கரங்கள்
இருக்க
முடியாது,
என்பதும்
புரிய
வைக்கப்படுகிறது.
மற்றபடி பிரம்மாவோ
அதிகம்
குழந்தைகளுடையவர்
ஆவார்.
பிரம்மா
யாருடைய
குழந்தை?
இவருக்கு
தந்தை
இருக்கிறார் அல்லவா!
பிரம்மா
சிவபாபாவினுடைய
குழந்தையாவார்.
இவருக்கு
வேறு
யார்
தந்தையாக
இருக்க
முடியும்?
மனிதர்கள்
யாரும்
இருக்க
முடியாது.
பிரம்மா,
விஷ்ணு,
சங்கர்
சூட்சுமவதனவாசிகளாகப்
பாடப்படுகின்றனர்.
அவர்கள்
இங்கே
வர
முடியாது.
பிரஜாபிதா
பிரம்மா
கண்டிப்பாக
இங்கே
தான்
இருப்பார்
அல்லவா!
சூட்சும வதனத்தில்
பிரஜைகளைப்
படைக்க
மாட்டார்.
ஆக
பரமபிதா
பரமாத்மா
வந்து
இந்த
பிரம்மாவின்
கமலவாயின் மூலமாக
சக்தி
சேனையைப்
படைக்கின்றார்.
நாங்கள்
பிரம்மா
வாய்வம்சாவழிகள்,
என்ற
அறிமுகம்
தர வேண்டும்.
நீங்கள்
கூட
பிரம்மாவின்
குழந்தைகள்
அல்லவா!
பிரஜாபிதா
பிரம்மாவோ
அனைவருக்கும் தந்தையாவார்.
பிறகு
அவரிடமிருந்து
மற்ற
கிளைகள்
உருவாகின்றன,
பெயர்
மாறிக்
கொண்டே
போகிறது.
இப்போது
நீங்கள்
பிராமணர்
ஆவீர்கள்.
நடைமுறையில்
பாருங்கள்,
பிரஜாபிதா
பிரம்மாவிற்கு
எவ்வளவு குழந்தைகள்
இருக்கின்றனர்!
கண்டிப்பாக
குழந்தைகளுக்குத்
தான்
ஆஸ்தி
கிடைக்கும்.
பிரம்மாவிடமோ
எந்த ஆஸ்தியும்
கிடையாது,
ஆஸ்தியோ
சிவபாபாவினுடையதாகும்.
பிரம்மாவுக்கு
சிவனிடமிருந்து
செல்வம் கிடைக்கிறது.
எல்லைக்கு
அப்பாற்பட்ட
தந்தையிடமிருந்து
தான்
ஆஸ்தி
கிடைக்கிறது.
பிரம்மாவின்
மூலம் சிவபாபா
அமர்ந்து
படிப்பிக்கின்றார்.
நமக்கு
தாத்தாவின்
ஆஸ்தி
கிடைக்கிறது.
பாபா
நிறைய
புரிய
வைக்கின்றார்,
ஆனால்
யோகம்
இல்லை.
சட்டப்படி
நடக்க
வில்லை
என்றால்
பாபாவும்
என்ன
செய்வார்?
இவருடைய அதிர்ஷ்டம்
அப்படி
என்று
பாபா
சொல்வார்.
இந்த
நிலையில்
உங்களுடைய
பதவி
என்னவாக
இருக்கும்?
என்று
பாபாவிடம்
கேட்டால்
பாபாவால்
சொல்ல
முடியும்.
மனம்
கூட
சாட்சியம்
சொல்கிறது,
நான்
எவ்வளவு சேவை
செய்கின்றேன்?,
எந்தளவிற்கு
ஸ்ரீமத்படி
நடக்கின்றேன்?
ஸ்ரீமத்
மன்மனாபவ,
என்று
சொல்கிறது.
அனைவருக்கும்
பாபா
மற்றும்
ஆஸ்தியினுடைய
அறிமுகத்தைக்
கொடுத்துக்
கொண்டே
இருக்கின்றார்கள்,
தண்டோரா
அடித்துக்
கொண்டே
இருக்கிறார்கள்.
பாபா
சைகை
காட்டிக்
கொண்டே
இருக்கின்றார்,
நீங்கள் அரசாங்கத்திற்கும்
புரிய
வைக்க
வேண்டும்.
உண்மையில்
பாரதத்தின்
சக்தி
போய்விட்டது,
என்று
அவர்களும் கூட
புரிந்து
கொள்ளட்டும்.
பரமபிதா
பரமாத்மா
சர்வசக்திவானோடு
யோகம்
இல்லை.
இவரோடு
நீங்கள் யோகம்
ஈடுபடுத்துவதின்
மூலம்
நீங்கள்
ஒரேயடியாக
உலகத்தின்
எஜமானர்
ஆகிவிடுகின்றீர்கள்,
மாயையின் மீது
கூட
நீங்கள்
வெற்றி
அடைகின்றீர்கள்.
குடும்ப
விவகாரத்தில்
இருந்து
கொண்டே
நீங்கள்
மாயையின்
மீது வெற்றி
அடைய
வேண்டும்.
நமக்கு
உதவியாளராக
பாபா
இருக்கின்றார்.
எவ்வளவு
புரிய
வைக்கப்படுகிறது,
தாரணை
செய்ய
வேண்டும்.
செல்வத்தை
தானம்
செய்தால்
செல்வம்
குறையாது,
என்று
பாபா
புரிய
வைத்திருக்கின்றார்.
சேவை
செய்தீர்கள்
என்றால்
பாபாவின்
மனதில்
அமர
முடியும்.
இல்லையென்றால்
மனதில்
அமருவது இயலாததாகி
விடும்.
இதனுடைய
அர்த்தம்
பாபா
அன்பு
செய்வதில்லை
என்பது
கிடையாது.
பாபா
சேவை செய்பவர்கள்
மீது
அன்பு
செலுத்துவார்.
உழைக்க
வேண்டும்.
அனைவரையும்
யாத்திரைக்குத்
தகுதியானவர்களா உருவாக்குகின்றார்.
மன்மனாபவ.
இது
ஆன்மீக
யாத்திரையாகும்,
நீங்கள்
என்னை
நினைவு
செய்தீர்களானால்,
என்னிடம்
வந்து
சேர்ந்து
விடுவீர்கள்.
சிவபுரிக்கு
வந்து
பிறகு
விஷ்ணுபுரிக்கு
சென்று
விடுவீர்கள்.
இந்த விஷயங்களை
குழந்தைகளாகிய
நீங்கள்
மட்டும்
தான்
தெரிந்திருக்கிறீர்கள்.
வேறு
யாரும்
மன்மனாபவ என்பதின்
அர்த்தத்தை
புரிந்து
கொள்வதில்லை,
ஆனால்
நிறைய
பேர்
படிக்கிறார்கள்.
பாபா
மகாமந்திரம் கொடுக்கின்றார்,
என்னை
நினைவு
செய்வதன்
மூலம்
நீங்கள்
விகர்மாஜீத்
(பாவகர்மங்களை
வென்றவர்)
ஆகிவிடுவீர்கள்.
நல்லது.
"இனிமையிலும்
இனிமையான
காணாமல்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான
பாப்
தாதாவின்
அன்பு
நினைவுகளும்
காலை
வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்"
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
(1)
ஞான
ஸ்நானம்
செய்ய
வேண்டும்.
அன்போடு
சேவை
செய்து
பாபாவின்
இதயசிம்மாசத்தில் அமர
வேண்டும்.
முயற்சிக்கான
நேரத்தில்
சோம்பேறித்தனமாக
ஆகக்
கூடாது.
(2)
பாபாவின்
கண்ணிமைக்குள்
அமர்ந்து
கலியுக துக்கதாமத்திலிருந்து சுகதாமத்திற்குச்
செல்ல வேண்டும்.
ஆகையால்
தன்னுடைய
அனைத்தையும்
மாற்றம்
(டிரான்ஸ்ஃபர்)
செய்து
விட
வேண்டும்.
வரதானம்:
அன்புக்
கடல்
மூழ்கி
எனது
என்ற
கறையைப்
போக்கக்
கூடிய தூய்மையான
ஆத்மா
ஆகுக.
யார்
சதா
அன்புக்
கடலில்
மூழ்கியிருக்கிறார்களோ,
அவர்களுக்கு
உலகின்
எந்த
ஒரு
விசயத்தைப் பற்றியும்
விழிப்புணர்வு
இருக்காது.
அன்பில்
மூழ்கியிருக்கின்ற
காரணத்தினால்
அவர்கள்
எளிதாகவே
அனைத்து விசயங்களையும்
கடந்து
விடுவார்கள்.
இவர்கள்
தன்னிலை
மறந்து
இருக்கின்றனர்
என்று
பக்தர்களுக்காக கூறுவர்,
ஆனால்
குழந்தைகள்
சதா
அன்பில்
மூழ்கியிருப்பர்.
அவர்களுக்கு
உலகத்தின்
நினைவு
இருக்காது,
எனது
எனது
என்ற
அனைத்தும்
அழிந்து
விடும்.
பல
எனது
என்பது
அசுத்தமாக்கி
விடுகிறது,
ஒரு
தந்தை என்னுடையவர்
எனும்
போது
அசுத்தம்
அழிந்து
விடுகிறது,
மேலும்
ஆத்மா
தூய்மையாகி
விடுகிறது.
சுலோகன்:
புத்தியில்
ஞான
இரத்தினங்களை
தாரணை
செய்வது
மற்றும் செய்விப்பது
தான்
தூய
அன்னப்பறவை
ஆவதாகும்.
ஓம்சாந்தி