24.10.2018 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
அதிகாலை
சமயத்தில்
மனம்,
புத்தியின்
மூலமாக
தந்தையாகிய என்னை
நினைவு
செய்யுங்கள்,
கூடவே
பாரதத்தை
ராஜஸ்தான்
ஆக்கக்
கூடிய
சேவை
செய்யுங்கள்.
கேள்வி:
சூரிய
வம்ச
இராஜ்யத்தின்
பரிசு
எதனுடைய
ஆதாரத்தில்
கிடைக்கிறது?
பதில்:
சூரிய
வம்ச
இராஜ்யத்தின்
பரிசு
பெற
வேண்டும்
என்றால்
முழுமையாக
தந்தையின்
உதவியாளர் ஆகுங்கள்,
ஸ்ரீமத்படி
நடந்தபடி
இருங்கள்.
ஆசீர்வாதத்தை
கேட்கக்
கூடாது,
ஆனால்
யோகபலத்தின்
மூலம் ஆத்மாவைத்
தூய்மைப்படுத்தக்
கூடிய
முயற்சி
செய்ய
வேண்டும்.
தேகத்துடன்
சேர்த்து
தேகத்தின்
அனைத்து சம்மந்தங்களையும்
தியாகம்
செய்து
மிகவும்
அன்பான
ஒரு
தந்தையை
நினைவு
செய்தீர்கள்
என்றால் உங்களுக்கு
சூரியவம்ச
இராஜ்யத்தின்
பரிசு
கிடைத்து
விடும்.
அங்கே
அமைதி,
தூய்மை,
செல்வ
வளம் அனைத்தும்
இருக்கும்.
பாடல்:
இறுதியில்
அந்த
நாளும்
வந்தது
இன்று
. . .
ஓம்
சாந்தி.
ஓம்
சாந்தியின்
அர்த்தம்
குழந்தைகளாகிய
உங்கள்
புத்தியில்
இருக்கவே
செய்கிறது.
தந்தை புரியவைக்கக்
கூடியவைகளை
இந்த
உலகத்தில்
உங்களைத்
தவிர
வேறு
யாருக்கும்
புரியாது.
மருத்துவக் கல்லூரியில்
புதியதாக
யாராவது
சென்று
அமர்ந்தால்
எதுவும்
புரியாது
என்பது
போல
மற்றவர்கள்
புரிந்து கொள்ள
முடியாது.
மனிதர்கள்
ஒன்றும்
புரிந்து
கொள்ள
முடியவில்லை
என்பது
போன்ற
சத்சங்கம்
எதுவும் கிடையாது.
அங்கே
இருப்பதே
சாஸ்திரம்
முதலானவைகளை
சொல்லக்
கூடிய
விஷயங்கள்.
இது
பெரியதிலும் பெரியதான
கல்லூரி
ஆகும்.
புதிய
விஷயம்
இல்லை.
மீண்டும்
அந்த
நாள்
வந்தது
இன்று,
இப்போது தந்தை
அமர்ந்து
குழந்தைகளுக்கு
இராஜயோகம்
கற்றுத்
தருகிறார்.
இந்த
சமயத்தில்
பாரதத்தில்
இராஜ்யம் இல்லை.
நீங்கள்
இந்த
இராஜயோகத்தின்
மூலம்
இராஜாக்களுக்கு
இராஜா
ஆகிறீர்கள்,
அதாவது
விகாரி இராஜாக்களுக்கெல்லாம்
கூட
நாம்
இராஜா
ஆகிக்
கொண்டிருக்கிறோம்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
புத்தி கிடைத்துள்ளது.
செய்யக்
கூடிய
கர்மம்
புத்தியில்
இருக்கும்
அல்லவா!
நீங்கள்
சேனை
வீரர்களாக
உள்ளீர்கள்,
ஆத்மாக்களாகிய
நாம்
இப்போது
தந்தையிடம்
நினைவின்
தொடர்பை
ஏற்படுத்திக்
கொள்வதன்
மூலம்
பாரதத்தைத் தூய்மையாக்குகிறோம்,
மேலும்
சக்கரத்தின்
முதல்,
இடை,
கடைசியின்
ஞானத்தை
தாரணை
செய்து
நாம் சக்ரவர்த்தி
இராஜா
ஆகிக்
கொண்டிருக்கிறோம்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
இது
புத்தியில்
இருக்கவேண்டும்
-
நாம்
யுத்த
மைதானத்தில்
இருக்கிறோம்.
வெற்றி
நம்முடையதுதான்
ஆகும்.
இது
நிச்சயம்.
நாம் இப்போது
பாரதத்தை
மீண்டும்
தெய்வீகமான
இரட்டை
கிரீடமுடைய
இராஜஸ்தானாக
உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
பாபா
படங்கள்
குறித்து
மிகவும்
நல்ல
விதமாகப்
புரிய
வைத்தபடி
இருக்கிறார்.
நாம்
84
பிறவிகளை
முடித்து
இப்போது
திரும்பிச்
செல்கிறோம்.
பிறகு
வந்து
இராஜ்யத்தை
ஆள்வோம்.
இந்த
பிரம்மாகுமார்,
குமாரிகள்
அனைவரும்
என்ன
செய்து
கொண்டிருக்கிறார்கள்?
இந்த
பிரம்மாகுமாரிகளின்
அமைப்பு
என்பது என்ன?
கேட்கிறார்கள்
அல்லவா!
பிரம்மா
குமாரிகள்
நாங்கள்
இந்த
பாரதத்தை
ஸ்ரீமத்படி
மீண்டும்
தெய்வீகமான இராஜஸ்தானாக
ஆக்கிக்
கொண்டிருக்கிறோம்
என்று
சட்டென்று
கூறுவார்கள்.
மனிதர்களுக்கு
ஸ்ரீயினுடைய அர்த்தமும்
கூட
தெரியாது.
சிவபாபா
ஸ்ரீஸ்ரீ
.(உயர்ந்ததிலும்
உயர்வானவர்)
ஆவார்,
அவருடைய
மாலைதான் உருவாகிறது.
இந்த
முழு
படைப்பும்
யாருடையது?
தந்தை
படைப்பவர்
அல்லவா!
சூரிய
வம்சம்,
சந்திர வம்சத்தைச்
சேர்ந்த
அனைவரின்
மாலை
ருத்ரனாகிய
சிவபாபாவுடையதாகும்.
அனைவரும்
தம்மைப் படைக்கக்
கூடியவரை
அறிந்துள்ளனர்,
ஆனால்
அவருடைய
தொழிலைப்
பற்றி
தெரிந்து
கொள்ளவில்லை.
அவர்
எப்போது
மற்றும்
எப்படி
வந்து
பழைய
உலகத்தை
புதியதாக
ஆக்குகிறார்
என்பது
யாருடைய புத்தியிலும்
இல்லை.
அவர்கள்
புரிந்து
கொள்கின்றனர்
–
கலியுகம் இன்னும்
பல
வருடங்கள்
நடக்கவுள்ளது என்று.
நாம்
தெய்வீக
இராஜஸ்தான்
ஸ்தாபனை
செய்வதற்கு
நிமித்தமாகியுள்ளோம்
என்று
இப்போது
நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
தெய்வீக
இராஜஸ்தான்
ஏற்படப்
போகிறது,
பிறகு
க்ஷத்திரிய
இராஜஸ்தான்
வரப்
போகிறது.
முதலில் சூர்யவம்சத்தின்
குலம்,
பிறகு
க்ஷத்திரிய
குலத்தின்
இராஜ்யம்
ஏற்படப்
போகிறது.
நீங்கள்
சக்ரவர்த்தி இராஜா
இராணி
ஆக
வேண்டும்
எனும்போது
புத்தியில்
சக்கரம்
சுற்ற
வேண்டும்
அல்லவா!
நீங்கள்
யாருக்கு வேண்டுமானாலும்
படங்களை
வைத்து
மிகவும்
நல்ல
விதமாகப்
புரிய
வைக்க
முடியும்.
இந்த
இலட்சுமி நாராயணர்
சூரிய
வம்சத்தின்
குலத்தவர்
மற்றும்
இந்த
இராமன்-சீதை
க்ஷத்திரிய
குலத்தவர்கள்.
பிறகு வைசிய,
சூத்திர
வம்சத்தின்
தூய்மையற்ற
குலத்தவராக
ஆகி
விடுகின்றனர்.
பூஜைக்குரியவர்கள்
பிறகு பூஜாரிகள்
ஆகி
விடுகின்றனர்.
ஒற்றை
கிரீடமுள்ள
இராஜாக்களின்
படமும்
கூட
உருவாக்க
வேண்டும்.
இந்தக்
கண்காட்சி
மிகவும்
அதிசயமானதாக
ஆகிவிடும்.
நாடகத்தின்படி
சேவைக்காக
இந்த
கண்காட்சி அவசியமானது,
அப்போது
குழந்தைகளின்
புத்தியில்
பதியும்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
புதிய
உலகம் எப்படி
ஸ்தாபனை
ஆகிக்கொண்டிருக்கிறது
என்பது
படங்களின்
மூலம்
புரிய
வைக்கப்படுகிறது.
குழந்தைகளின் புத்தியில்
குஷியின்
அளவு
அதிகரித்தபடி
இருக்க
வேண்டும்.
சத்யுகத்தில்
ஆத்மா
குறித்த
ஞானம்
இருக்கும்,
முதியவராகும்
போது
இந்தப்
பழைய
சரீரத்தை
விட்டு
விட்டு
பிறகு
மற்றொரு
புதிய
சரீரம்
எடுக்க
வேண்டும் என்ற
யோசனை
அனாயாசமாக
வரும்
என்பதை
புரிய
வைத்துள்ளார்.
இந்த
சிந்தனை
கடைசி
சமயத்தில் வரும்.
மற்றபடி
முழு
நேரமும்
மகிழ்ச்சியும்
ஆனந்தமுமாக
இருப்பீர்கள்.
முன்னர்
இந்த
ஞானம்
இருக்கவில்லை.
குழந்தைகளுக்குப்
புரிய
வைத்துள்ளார்
-
இந்த
பரமபிதா
பரமாத்மாவின்
பெயர்,
உருவம்,
கால,
தேசத்தைப் பற்றி
தந்தை
வந்து
அறிமுகம்
கொடுக்கும்
வரை
யாருக்கும்
தெரியாது.
மேலும்
அறிமுகமும்
மிகவும் கம்பீரமானது.
அவருடைய
ரூபமோ
முதலில் லிங்கம் என்று தான்
சொல்ல
வேண்டியிருக்கிறது.
ருத்ர
யக்ஞத்தை படைத்தார்கள்
என்றால்
மண்ணாலான
லிங்கத்தை உருவாக்குகின்றனர்,
அவருடைய
பூஜை
நடந்தபடி
வந்தது.
புள்ளி
ரூபம்
என்று
தந்தை
முதலில் கூறவில்லை.
புள்ளி
ரூபம்
என்று
சொன்னால்
நீங்கள்
புரிந்து
கொண்டிருக்க முடியாது.
எந்த
விஷயத்தை
எப்போது
புரிய
வைக்க
வேண்டுமோ
அப்போது
புரிய
வைக்கிறார்.
நாடகத்தில் இப்படித்தான்
பதிவாகியுள்ளது.
இந்தக்
கண்காட்சியின்
மூலம்
சேவை
நிறைய
வளர்ச்சி
அடையும்.
கண்டுபிடிப்பு ஏற்படும்போது
பிறகு
வளர்ச்சி
அடைந்தபடி
இருக்கும்.
பாபா
மோட்டார்
வாகனத்தின்
உதாரணம்
கொடுப்பதுண்டு
–
முதலில் புதிய
கண்டுபிடிப்பு
செய்யும்போது
உழைக்க
வேண்டியிருக்கும்,
பிறகு
பாருங்கள்
-
பெரிய
பெரிய தொழிற்சாலைகளில்
ஒரு
நிமிடத்தில்
மோட்டார்
வாகனம்
தயாராகி
விடுகிறது.
எவ்வளவு
விஞ்ஞானம் வளர்ந்துள்ளது!
எவ்வளவு
பெரிய
பாரதம்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
உலகம்
எவ்வளவு
பெரியதாக
உள்ளது!
பிறகு எவ்வளவு
சிறியதாக
ஆகி
விடப்
போகிறது.
இதை
நல்ல
விதமாக
புத்தியில்
பதிய
வைக்க
வேண்டும்.
சேவை செய்யக்
கூடிய
குழந்தைகளின்
புத்தியில்தான்
இருக்கும்.
மற்றவர்களுடைய
நேரம்,
உண்பது,
குடிப்பதில்,
வீண்
வம்புப்
பேச்சுக்களிலும்
வீணாகிப்
போகிறது.
பாரதத்தில்
மீண்டும்
தெய்வீக
இராஜஸ்தான்
ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
உண்மையில்
அரசாட்சி
என்ற
வார்த்தையும்
கூட தவறாகும்.
பாரதம்
தெய்வீக
இராஜஸ்தானாக
ஆக
ஆகிக்கொண்டிருக்கிறது.
இந்த
சமயம்
அசுர
ராஜஸ்தானாக உள்ளது.
இராவண
இராஜ்யம்
உள்ளது.
ஒவ்வொருக்குள்ளும்
5
விகாரங்கள்
பிரவேசமாகியுள்ளன.
எவ்வளவு கோடிக்கணக்கான
ஆத்மாக்கள்
உள்ளனர்!
அனைவரும்
நடிகர்கள்.
தத்தமது
சமயத்தில்
வந்து
பிறகு
சென்று விடுகின்றனர்.
பிறகு
ஒவ்வொருவரும்
தம்முடைய
நடிப்பை
மீண்டும்
நடிக்க
வேண்டும்.
ஒவ்வொரு
வினாடியும் நாடகம்
துல்லியமாக மீண்டும்
நடக்கிறது.
கல்பத்திற்கு
முன்பு
நடித்த
நடிப்பே
மீண்டும்
இப்போது
நடிக்கப்படுகிறது.
இவையனைத்தையும்
புத்தியில்
வைக்க
வேண்டும்.
வேலை,
தொழிலில் இருக்கும்போது
கஷ்டமாக
உள்ளது,
ஆனால்
அதிகாலை
நேரம்
என்பது
பாடப்படுகிறது
என்று
தந்தை
கூறுகிறார்.
என்
மனமே,
அதிகாலையில் இராமனை
ஜபித்திடுவாய்
.
என்று
பாடுகின்றனர்.
தந்தை
இப்போது
நேரடியாகக்
கூறுகிறார்,
பின்னர்
பக்திமார்க்கத்தில்
பாடப்படுகிறது.
சத்யுகம்,
திரேதா
யுகங்களில்
பாடப்படுவதில்லை.
தந்தை
புரிய
வைக்கிறார்
-
ஓ
ஆத்மா,
தனது
மனம்-புத்தியின்
மூலமாக
அதிகாலை
நேரத்தில்
தந்தையாகிய
என்னை
நினைவு
செய்வாயாக.
பக்தர்கள் அடிக்கடி
இரவில்
கண்
விழித்து
எதையாவது
நினைவு
செய்கின்றனர்.
இங்குள்ள
பழக்க
வழக்கமே
பிறகு பக்தி
மார்க்கத்தில்
நடந்தபடி
வந்துள்ளது.
குழந்தைகளாகிய
உங்களுக்கு
பிறருக்கு
புரிய
வைப்பதற்கான
வித விதமான
யுக்திகள்
கிடைத்தபடி
இருக்கின்றன.
பாரதம்
எவ்வளவு
சமயம்
முதலில் தெய்வீக
இராஜஸ்தானாக இருந்தது,
பிறகு
க்ஷத்ரிய
இராஜஸ்தான்
ஆனது,
அதன்
பிறகு
வைசிய
இராஜஸ்தானாக
ஆகியது.
நாளுக்கு நாள்
தமோபிரதானமாக
ஆகியபடி
செல்கின்றனர்,
கண்டிப்பாக
கீழே
விழவே
வேண்டும்.
இந்தச்
சக்கரம் முக்கியமானது,
இதனைத்
தெரிந்து
கொள்வதன்
மூலம்
நீங்கள்
சக்கரவர்த்தி
இராஜா
ஆகிறீர்கள்.
இப்போது நீங்கள்
கலியுகத்தில்
அமர்ந்திருக்கிறீர்கள்.
முன்னால்
சத்யுகம்
உள்ளது.
இந்த
சக்கரம்
எப்படி
சுற்றுகிறது என்பதின்
ஞானம்
உங்களுக்கு
உள்ளது.
நாளை
நாம்
சத்யுகத்தின்
இராஜதானியில்
இருப்போம்
என்பதை அறிவீர்கள்.
எவ்வளவு
சகஜமான
விஷயம்.
மேலே
திரிமூர்த்தி
சிவனும்
உள்ளார்.
சக்கரமும்
உள்ளது.
இலட்சுமி நாராயணரும்
இதில்
வந்து
விடுகின்றனர்.
இந்த
படங்கள்
முன்னால்
வைக்கப்பட்டிருந்தால்
யாருக்கு வேண்டுமானாலும்
புரிய
வைக்க
முடியும்.
பாரதம்
தெய்வீக
இராஜஸ்தானாக
இருந்தது,
இப்போது
இல்லை.
ஒற்றை
கிரீடதாரிகள்
கூட
இல்லை.
படங்களை
வைத்துத்தான்
குழந்தைகளாகிய
நீங்கள்
புரிய
வைக்க
வேண்டும்.
இந்தப்
படங்கள்
மிகவும்
மதிப்பு
வாய்ந்தவையாகும்.
எவ்வளவு
அதிசயமான
பொருள்
எனும்போது அதிசயப்படும்படியாக
புரிய
வைக்கவும்
வேண்டும்.
30-40
இன்ச்
(அங்குளம்)
அளவுள்ள
இந்த
கல்ப
மரத்தின்,
திரிமூர்த்தியர்
படம்
கூட
அனைவருக்கும்
அவரவர்
வீட்டில்
வைக்க
வேண்டியிருக்கிறது.
யாராவது
நண்பர்கள்,
உள்ளவர்கள்
வந்தால்
இந்தப்
படங்கள்
பற்றிப்
புரிய
வைக்க
வேண்டும்.
இது
உலகின்
வரலாறு
புவியியல் ஆகும்.
ஒவ்வொரு
குழந்தையிடமும்
இந்தப்
படங்கள்
கண்டிப்பாக
இருக்க
வேண்டும்.
கூடவே
நல்ல
நல்ல பாடல்களும்
இருக்க
வேண்டும்.
இறுதியில்
அந்த
நாளும்
வந்தது
இன்று
-
பாபா
வந்து
விட்டார்.
நமக்கு இராஜயோகம்
கற்றுக்
கொடுக்கிறார்.
படங்கள்
யார்
கேட்டாலும்
கிடைக்கும்.
ஏழைகளுக்கு
இலவசமாக
கிடைக்கும்.
ஆனால்
புரிய
வைப்பதற்கும்
கூட
சக்தி
வேண்டும்.
இது
அழிவற்ற
ஞான
இரத்தினங்களின்
பொக்கிஷம்.
நீங்கள்
தானம்
செய்பவர்கள்,
உங்களைப்போன்ற
அழிவற்ற
ஞான
இரத்தினங்களின்
தானம்
வேறு
யாராலும் கொடுக்க
முடியாது.
இப்படிப்பட்ட
தானம்
வேறு
எதுவும்
இருக்க
முடியாது.
ஆக,
தானம்
கொடுக்க
வேண்டும்,
யார்
வந்தாலும்
அவர்களுக்குப்
புரிய
வைக்க
வேண்டும்.
பிறகு
ஒருவர்
மற்றவரைப்
பார்த்து
பலர்
வருவார்கள்.
இந்த
படங்கள்
மிகவும்
மதிப்பு
வாய்ந்தவை,
விலை
மதிக்க
முடியாதவை
-
நீங்களும்
விலை
மதிப்பற்றவர் என்று
சொல்லிக் கொள்வதைப் போல.
நீங்கள்
சோழியிலிருந்து வைரம்
போல
ஆகிறீர்கள்.
இந்த
படங்களை வெளி
நாட்டிற்கு
எடுத்துச்
சென்று
புரிய
வைத்தால்
அதிசயம்
ஏற்படும்.
இவ்வளவு
சமயம்
இந்த
சன்னியாசிகள் சொன்னபடி
வந்தனர்
-
நாங்கள்
பாரதத்தின்
யோகத்தை
கற்றுத்
தருகிறோம்.
ஒவ்வொருவரும்
தம்
தர்மத்தின் மகிமையைப்
பாடுகின்றனர்.
பௌத்த
சமயத்தவர்கள்
எவ்வளவு
பேரை
பௌத்தர்களாக
மாற்றி
விடுகின்றனர்,
ஆனால்
அதனால்
எந்த
இலாபமும்
இல்லை.
நீங்களோ
இங்கே
மனிதர்களை
குரங்கிலிருந்து கோவிலுக்குத் தகுந்தவர்களாக
மாற்றுகிறீர்கள்.
பாரதத்தில்தான்
முழுமையான
விகாரமற்றவர்கள்
இருந்தனர்.
பாரதம்
அழகாக இருந்தது,
இப்போது
பாரதம்
கருப்பாக
ஆகி
விட்டது.
எவ்வளவு
மனிதர்கள்
உள்ளனர்!
சத்யுகத்திலோ
மிகவும் குறைவானவர்கள்
இருப்பார்கள்
அல்லவா!
சங்கமயுகத்தில்தான்
தந்தை
வந்து
ஸ்தாபனை
செய்கிறார்.
இராஜயோகம் கற்றுத்
தருகிறார்.
கல்பத்திற்கு
முன்பு
கற்றுக்
கொண்ட
குழந்தைகளுக்குத்தான்
கற்றுத்
தருகிறார்.
ஸ்தாபனை ஆகத்தான்
வேண்டும்.
குழந்தைகள்
இராவணனிடம்
தோல்வி
அடைகின்றனர்,
பிறகு
இராவணன்
மீது
வெற்றி அடைகின்றனர்.
எவ்வளவு
சகஜமானது.
எனவே
குழந்தைகள்
பெரிய
படங்களை
உருவாக்கி
அதனைக் கொண்டு
சேவை
செய்ய
வேண்டும்.
பெரிய
பெரிய
எழுத்துக்களால்
எழுதப்
பட்டிருக்க
வேண்டும்.
எழுத வேண்டும்
-
இந்த
சமயத்திலிருந்து பக்தி
தொடங்குகிறது.
எப்போது
துர்க்கதி
உண்டாகிறதோ
அப்போது கண்டிப்பாக
தந்தை
சத்கதி
வழங்க
வருவார்
அல்லவா!
பக்தி
செய்யாதீர்கள்
என்று
யாருக்கும்
கூறாதீர்கள்
என்று
பாபா
புரிய
வைத்துள்ளார்.
அப்படி
அல்ல,
தந்தையின்
அறிமுகம்
கொடுத்துப்
புரிய
வைக்க
வேண்டும்,
அப்போது
அம்பு
தைக்கும்.
மஹாபாரத
யுத்தம் என்று
ஏன்
சொல்லப்படுகிறது
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
ஏனென்றால்
இது
மிகப்
பெரிய
யக்ஞமாகும்,
இந்த
யக்ஞத்திலிருந்துதான் இந்த
சண்டை
கொழுந்துவிட்டு
எரியத்
தொடங்கியது.
இந்தப்
பழைய
உலகம் அழிய
வேண்டும்.
இந்த
விஷயங்கள்
உங்கள்
புத்தியில்
உள்ளன.
மனிதர்களுக்கு
அமைதிக்கான
பரிசு கிடைத்தபடி
இருக்கிறது.
ஆனால்
அமைதி
ஏற்படுவதில்லை.
உண்மையில்
அமைதியை
ஸ்தாபனம்
செய்பவர் ஒரு
தந்தைதான்
ஆவார்.
அவருடன்
நீங்கள்
உதவியாளர்களாக
இருக்கிறீர்கள்.
பரிசு
கூட
உங்களுக்குக் கிடைக்க
வேண்டும்.
தந்தைக்குப்
பரிசு
கிடைப்பதில்லை.
தந்தையோ
கொடுக்கக்
கூடியவர்.
உங்களுக்கு வரிசைக்கிரமமான
முயற்சிக்குத்
தகுந்தாற்போல
பரிசு
கிடைக்கிறது.
கணக்கற்ற
குழந்தைகள்
இருப்பார்கள்.
நீங்கள்
இப்போது
தூய்மை,
அமைதி,
செல்வ
வளம்
அனைத்தும்
ஸ்தாபனை
செய்து
கொண்டிருக்கிறீர்கள்.
எவ்வளவு
பெரிய
பரிசு!
யார்
என்ன
முயற்சி
செய்கின்றனரோ
அவர்களுக்கு
அதற்கேற்றவாறு
சூரிய
வம்சத்து இராஜதானியின்
பரிசு
கிடைக்கும்.
தந்தை
ஸ்ரீமத்
கொடுக்கக்
கூடியவர்.
பாபா
ஆசீர்வாதம்
செய்யுங்கள் என்பதல்ல.
தந்தையை
நினைவு
செய்தீர்கள்
என்றால்
உங்களுடைய
பாவ
கர்மங்கள்
அழியும்
என்று மாணவர்களுக்கு
வழி
கொடுக்கப்படுகிறது.
யோக
பலத்தின்
மூலம்தான்
உங்களுடைய
ஆத்மா
தூய்மையடையும்.
நீங்கள்
அனைவரும்
சீதைகள்
ஆவீர்கள்.
நெருப்பைக்
கடந்து
செல்கிறீர்கள்.
ஒன்று
யோகபலத்தின்
மூலம் கடந்து
செல்ல
வேண்டும்,
அல்லது
நெருப்பில்
எரிந்து
போக
வேண்டும்.
தேகத்துடன்
சேர்த்து
அனைத்து சம்மந்தங்களையும்
தியாகம்
செய்து
மிகவும்
அன்பான
ஒரு
தந்தையை
நினைவு
செய்ய
வேண்டும்.
ஆனால் இந்த
நினைவு
நிரந்தரமாக
இருப்பது
மிகவும்
கஷ்டமானதாக
உள்ளது.
நேரம்
பிடிக்கிறது.
யோக
அக்னி என்று
பாடவும்
படுகிறது.
பாரதத்தின்
பழமையான
யோகம்
மற்றும்
ஞானம்
புகழ்
வாய்ந்தது.
ஏனெனில்
கீதை அனைத்து
சாஸ்திரங்களிலும்
சிரோமணி
(உயர்ந்தது)
ஆகும்.
அதில்
இராஜயோகம்
என்ற
வார்த்தை
உள்ளது.
ஆனால்
இராஜா
என்ற
வார்த்தையை
மறைத்துவிட்டு,
வெறும்
யோகம்
என்ற
வார்த்தையைப்
பிடித்துக் கொண்டனர்.
இந்த
இராஜயோகத்தின்
மூலம்
நான்
உங்களை
இராஜாக்களுக்கெல்லாம்
இராஜாவாக
ஆக்குவேன் என்று
தந்தையைத்
தவிர
வேறு
யாராலும்
சொல்ல
முடியாது.
இப்போது
நீங்கள்
சிவபாபாவுக்கு
முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள்.
ஆத்மாக்களாகிய
நாம்
அனைவரும்
அங்கே
பரம்தாமத்தில்
வசிக்கக்
கூடியவர்கள்,
பிறகு சரீரத்தை
தாரணை
செய்து
நடிப்பை
நடிக்கிறோம்
என்று
தெரிந்துள்ளீர்கள்.
சிவபாபா
மறுபிறவிகள்
எடுப்பதில்லை.
பிரம்மா,
விஷ்ணு,
சங்கர்
கூட
மறுபிறவி
எடுக்க
வேண்டியதில்லை.
தந்தை
கூறுகிறார்
-
நான்
வருவதே பதீதர்களை
பாவனமாக்குவதற்கு,
ஆகையால்தான்
பதீத
பாவனா
வாருங்கள்
என்று
அனைவரும்
நினைவு செய்கின்றனர்,
இது
மிகச்சரியான
வார்த்தை
ஆகும்.
நான்
உங்களை
தூய்மையான
தேவி
தேவதைகளாக ஆக்கிக்
கொண்டிருக்கிறேன்
என்று
தந்தை
கூறுகிறார்
எனும்
போது
அந்த
அளவு
போதையும்
ஏற
வேண்டும்.
பாபா
இவருக்குள்
(பிரம்மா)
வந்து
நமக்கு
அறிவுரைகள்
கொடுத்துக்
கொண்டிருக்கிறார்.
இந்த
மலர்த்தோட்டத்தின் சொந்தக்காரர்
பாபா
ஆவார்,
நாம்
பாபாவின்
கரத்தைப்
பற்றிக்
கொண்டிருக்கிறோம்.
இதில்
முழுவதும் புத்தியினுடைய
விஷயமாகும்.
பாபா
நம்மை
அக்கரைக்கு,
விஷக்
கடலிலிருந்து பாற்கடலுக்கு
அழைத்துச் செல்கிறார்.
அங்கே
விஷம்
(விகாரம்)
இருப்பதில்லை.
அதனால்
அது
நிர்விகாரி
உலகம்
என்று
கூறப்படுகிறது.
பாரதம்
விகாரமற்றதாக
இருந்தது,
இப்போது
அது
விகாரம்
நிறைந்ததாக
ஆகி
உள்ளது.
இந்த
சக்கரம் பாரதத்திற்கானதாகும்.
பாரதவாசிகள்தான்
சக்கரத்தில்
சுற்றி
வருகின்றனர்.
மற்ற
தர்மத்தவர்கள்
முழு
சக்கரத்தில் சுற்றி
வருவதில்லை.
அவர்கள்
பின்னால்
வருகின்றனர்.
இது
மிகவும்
அதிசயமான
சக்கரமாகும்.
புத்தியில் போதை
இருக்க
வேண்டும்.
இந்த
படங்களின்
மீது
மிகவும்
கவனம்
இருக்க
வேண்டும்.
சேவை
செய்து காட்டுங்கள்.
வெளி
நாட்டிற்கும்
படங்கள்
சென்றன
என்றால்
பெயர்
மிகவும்
புகழடையும்.
விஹங்
மார்க்கத்தின்
(பெரிய
அளவிலான)
சேவை
ஏற்பட
வேண்டும்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
தேடிக்கண்டெடுக்கப்
பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு,
தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவு
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு,
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே!
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
அழிவற்ற
ஞான
ரத்தினங்கள்
என்ன
கிடைத்துள்ளனவோ,
அவற்றை
தானம்
செய்ய
வேண்டும்.
தமது
நேரத்தை
உண்டு
குடிப்பதிலும்,
வம்பு
பேசுவதிலும்
வீணாக்கக்
கூடாது.
2.
சோழி
போன்ற
மனிதர்களை
வைரத்திற்குச்
சமமாக
ஆக்கக்
கூடிய
சேவை
செய்ய வேண்டும்.
தந்தையிடம்
ஆசீர்வாதம்
அல்லது
இரக்கத்தை
வேண்டக்
கூடாது.
அவர்
வழிப்படி
நடந்தபடி
இருக்க
வேண்டும்.
வரதானம்:
பாபாவை
முன்னால்
வைத்து,
பொறாமை
என்ற
பாவத்திலிருந்து விடுபடக்
கூடிய
சிறந்த
(விசேஷ)
ஆத்மா
ஆகுக.
பிராமண
ஆத்மாக்களில்
ஒரே
மாதிரி
சமமாக
இருக்கும்
காரணத்தால்
அவர்களுக்குள்
பொறாமை
ஏற்படுகிறது.
பொறாமைக்கான
காரணம்
சம்ஸ்காரங்களின்
மோதலாகும்.
ஆனால்
இதில்
விசேஷமாக
யோசியுங்கள்
–
ஏதோ விசேஷ
காரியத்தின்
நிமித்தம்
ஒரே
மாதிரி
ஆகியிருக்கிறோம்
என்றால்
அவர்களை
நிமித்தமாக
ஆக்குகிறவர் யார்?
பாபாவை
முன்னால்
கொண்டு
வருவீர்களானால்
பொறாமை
என்ற
மாயா
ஓடிப்போய்
விடும்.
யாருடைய பேச்சாவது
உங்களுக்குப்
பிடிக்கவில்லை
என்றால்
மேலே
(பாபாவிடம்)
கொடுத்து
விடுங்கள்.
பொறாமை வசமாக
ஆகாதீர்கள்.
உங்களுக்குள்
விரைந்து
முன்னேறிச்
செல்லுங்கள்.
பொறாமை
கொள்ளவில்லை
என்றால் விசேஷ
ஆத்மா
ஆகி
விடுவீர்கள்.
சுலோகன்:
நீங்கள்
பாபாவைத்
தங்களின்
துணைவராக
ஆக்கிக்
கொள்பவர்கள்
மற்றும்
மாயாவின் விளையாட்டை
சாட்சியாக
இருந்து
பார்ப்பவர்கள்.
ஓம்சாந்தி