31.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஆத்மாக்களாகிய உங்களுக்கு அவரவர்களுக்கென்று ரதம் (சரீரம்) இருக்கிறது, நான் நிராகாராக இருக்கிறேன், எனக்கும் கல்பத்தில் ஒரே ஒரு முறை ரதம் தேவை. நான் பிரம்மாவின் அனுபவம் நிறைந்த, வயோதிக ரதத்தை ஆதாரமாக எடுக்கிறேன்.

 

கேள்வி:

 எந்த நிச்சயத்தின் ஆதாரத்தில் சரீர உணர்வை மறப்பது மிக எளிதாகும்?

 

பதில்:

குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயத்துடன் கூறுகிறீர்கள் - பாபா, நாங்கள் உங்களுடையவர்களாக ஆகிவிட்டோம். தந்தையினுடையவர்களாக ஆவது என்றால் சரீர உணர்வை மறப்பதாகும். சிவபாபா எவ்வாறு இந்த சரீரத்தில் வருகிறார் மற்றும் சென்று விடுகிறாரோ அதே போன்று குழந்தைகளாகிய நீங்களும் உங்களுடைய ரதத்தில் வந்து செல்லும் பயிற்சி செய்யுங்கள். அசரீரியாவதற்கான பயிற்சி செய்யுங்கள். இதில் கஷ்டத்தின் அனுபவம் ஏற்படக் கூடாது. தன்னை நிராகார ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள்.

 

பாட்டு:

ஓம் நமோ சிவாய .........

 

ஓம்சாந்தி.

சிவபாபா இந்த பிரம்மாவின் ரதத்தின் மூலம் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். ஏனெனில் தந்தை குழந்தைகளிடம் தான் கூறுகின்றார் - எனக்கென்று ரதம் கிடையாது. எனக்கு அவசியம் ரதம் தேவை. எவ்வாறு ஆத்மாக்களாகிய உங்களுக்கு அவரவர்களுக்கென்று ரதம் இருக்கிறது அல்லவா! பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கும் சூட்சும சரீரம் இருக்கிறது அல்லவா! லெட்சுமி நாராயணன் போன்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் சரீரம் என்ற ரதம் அவசியம் இருக்கிறது. அதையே குதிரை என்று கூறுகிறோம். மனிதர்களாகத் தான் இருக்கின்றனர் அல்லவா! மனிதர்களுக்கான விசயம் தான் புரிய வைக்கப்படுகிறது, மிருகங்களுக்கான விசயங்கள் மிருகங்களுக்குத் தெரியும். இது மனித சிருஷ்டி எனில் தந்தையும் மனிதர்களுக்குத்தான் வந்து புரிய வைக்கின்றார். மனிதனுக்குள்ளும் இருக்கக் கூடிய ஆத்மாவிற்கு அமர்ந்து புரிய வைக்கின்றார். உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சரீரம் இருக்கிறது அல்லவா! என்று நேரடியாகக் கேட்கின்றார். ஒவ்வொரு ஆத்மாவும் சரீரம் எடுக்கிறது மற்றும் விட்டு விடுகிறது. ஆத்மா 84 லட்சம் பிறப்புகள் எடுப்பதாக மனிதர்கள் கூறி விடுகின்றனர். இது தவறாகும், நீங்கள் 84 பிறவிகள் எடுத்து முற்றிலுமாக களைப்படைந்து விட்டீர்கள். எவ்வளவு களைப்படைந்து விட்டீர்கள்! ஆக 84 லட்சம் பிறப்பிற்கான விசயமே கிடையாது. இது மனிதர்களின் கட்டுக் கதையாகும். ஆக தந்தை புரிய வைக்கின்றார் - ஆத்மாக்களாகிய உங்களுக்கும் தனித்தனியாக ரதம் இருக்கிறது. எனக்கும் ரதம் தேவை அல்லவா! நான் உங்களது எல்லையற்ற தந்தை ஆவேன். பதீத பாவன், ஞானக் கடல் ..... என்று பாடவும் செய்கிறீர்கள். நீங்கள் வேறு யாரையும் பதீத பாவன் என்று கூறமாட்டீர்கள். லெட்சுமி நாராயணன் போன்றவர்களையும் கூறமாட்டீர்கள். தூய்மை இல்லாத உலகை தூய்மை ஆக்கக் கூடியவர் அதாவது தூய்மையான சிருஷ்டியாகிய சொர்க்கத்தைப் படைப்பவர் பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. சுப்ரீம் தந்தை அவர் தான். நீங்கள் வரிசைக் கிரமமாக கல்புத்தியிலிருந்து தங்கப் புத்தியுடையவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை தந்தை அறிவார். வெளியிலுள்ள மனிதர்கள் இதனை அறியவில்லை. ஆக தந்தை புரிய வைக்கின்றார் - எனக்கும் அவசியம் ரதம் தேவை அல்லவா! பதீத பாவனாகிய நான் கண்டிப்பாக தூய்மை இல்லாத உலகிற்கு வர வேண்டும் அல்லவா! பிளேக் நோய் ஏற்படும் பொழுது டாக்டர் பிளேக் நோயாளிகளிடத்தில் வர வேண்டியிருக்கும். தந்தை கூறுகின்றார் - உங்களிடம் 5 விகாரங்கள் என்ற நோய் அரைக்கல்பமாக இருக்கிறது. மனிதர்களுக்கு துக்கம் கொடுக்கக் கூடிய இந்த 5 விகாரங்களின் மூலம் நீங்கள் முற்றிலும் தூய்மை இல்லாதவர்களாக ஆகிவிட்டீர்கள். ஆக தந்தை புரிய வைக்கின்றார் - நான் தூய்மை அற்ற உலகிற்கு வர வேண்டும் அல்லவா! தூய்மை இல்லாதவர்களைத் தான் கீழானவர்கள் என்று கூறப்படுகின்றனர். தூய்மையானவர்கள் உயர்வானவர்கள் என்று கூறப்படுகின்றனர். உங்களது பாரதம் தூய்மையாக, உயர்வாக இருந்தது, லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. சர்வ குண சம்பன்னம் ..... என்று அதன் மகிமையைத் தான் பாடுகின்றீர்கள். அங்கு அனைவரும் சுகமாக இருந்தனர். இது நேற்றைய விசயமாகும். நான் வர வேண்டுமெனில், எப்படி வருவது? யாருடைய சரீரத்தில் வருவது? என்று தந்தை கேட்கின்றார். முதலில் எனக்கு பிரஜாபிதா தேவை. சூட்சுமவதனவாசியை இங்கு எப்படி அழைத்து வர முடியும்? அவர் பரிஸ்தா அல்லவா! அவர் தூய்மை இல்லாத உலகிற்கு வந்தால் அது தோஷமாகி விடும். நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்பார். தந்தை மிக மகிழ்ச்சி அளிக்கும் விசயங்களைப் புரிய வைக்கின்றார். யார் தந்தையினுடையவர்களாக ஆகியிருக்கிறார்களோ அவர்கள் தான் புரிந்து கொள்வர். அடிக்கடி தந்தையை நினைவு செய்து கொண்டே இருப்பர்.

 

தந்தை கூறுகின்றார் - எப்பொழுது பூமியில் பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்பொழுது தான் நான் வருகிறேன். கலியுகத்தில் மனிதர்கள் எவ்வளவு பாவம் செய்கின்றனர்! ஆக தந்தை கேட்கின்றார் - குழந்தைகளே! நான் வர வேண்டுமெனில் யாருடைய சரீரத்தில் வருவது? எனக்கு அவசியம் வயோதிக அனுபவி ரதம் தான் தேவை. நான் எந்த ரதத்தை எடுத்திருக்கிறேனோ அவர் பல குருக்களிடம் சென்றிருக்கிறார். சாஸ்திரம் போன்றவைகளை படித்திருக்கிறார். அதிகம் படித்திருக்கிறார் என்றும் எழுதப்பபட்டிருக்கிறது அல்லவா! அர்ஜீனனுக்கான விசயம் கிடையாது. எனக்கு அர்ஜீனன் அல்லது கிருஷ்ணரின் சரீரம் தேவையில்லை. எனக்கு பிரம்மாவின் ரதம் தான் தேவை. அவரைத் தான் பிரஜாபிதா என்று கூறுகிறோம். கிருஷ்ணரை பிரஜாபிதா என்று கூறுவது கிடையாது. தந்தைக்கு பிரம்மாவின் ரதம் தான் தேவைப்படுகிறது, அவர் மூலம் பிராமணர்களின் பிரஜைகளை உருவாக்குகின்றார். பிராமண குலம் சர்வ உத்தமமான குலமாகும். விராட ரூபம் காண்பிக்கின்றனர் அல்லவா! தேவதா, சத்திரியர், வைஷ்யர், சூத்திரர், மற்றபடி பிராமணர்கள் எங்கு சென்றனர்? இது யாருக்கும் தெரியாது. உயர்ந்ததிலும் உயர்ந்தது பிராமணர்களின் குடுமியாகும். குடுமியைப் பார்த்து தான் இவர் பிராமணன் என்று புரிந்து கொள்கிறோம். உண்மையிலும் உண்மையான குடுமி போன்றவர்கள் நீங்கள் தான். நீங்கள் இராஜரிஷிகளாக இருக்கிறீர்கள், உயர்ந்த குடுமி உடையவர்கள். யார் தூய்மையாக இருக்கிறார்களோ அவர்கள் தான் ரிஷி என்று கூறப்படுகின்றனர். நீங்கள் இராஜயோகிகள், இராஜரிஷிகள். இராஜ்யத்திற்கான தபஸ்யா செய்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் முக்திக்காக ஹடயோகத்தின் தபஸ்யா செய்கின்றனர், நீங்கள் ஜீவன்முக்தி, இராஜ்யத்திற்காக தபஸ்யா செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களது பெயரே சிவசக்திகள். சிவபாபா உங்களை மறுபிறப்பு எடுக்கச் செய்கிறார். ஆக நீங்கள் மீண்டும் பாரதத்தில் பிறப்பு எடுத்திருக்கிறீர்கள். பிறப்பு எடுத்திருக்கிறீர்கள் அல்லவா! சிலர் பிறப்பெடுத்திருக்கின்றனர், ஆனால் நான் சிவபாபாவினுடையவனாக ஆகியிருக்கிறேன், அவரிடம் பிறப்பெடுத்திருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்வது கிடையாது. ஒருவேளை இவ்வாறு புரிந்திருந்தால் தேக உணர்வு முற்றிலுமாக நீங்கி விட வேண்டும். எவ்வாறு நிராகார சிவபாபா இந்த ரதத்தில் இருக்கிறாரோ, நீங்களும் தன்னை நிராகார ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! என்னை நினைவு செய்யுங்கள். இப்பொழுது வீட்டிற்குத் திரும்ப வேண்டும். நீங்கள் முன்பு அசரீரியாக இருந்தீர்கள். பிறகு தேவி தேவதைகளின் சரீரம் எடுத்தீர்கள், பிறகு சத்ரிய சரீரம், பிறகு வைஷ்ய சரீரம், பிறகு சூத்ர சரீரம் எடுத்தீர்கள். இப்பொழுது மீண்டும் நீங்கள் அசரீரி ஆகுங்கள். நிராகாரமாகிய என்னைத் தான் நீங்கள் பாபா, இப்பொழுது நாம் உங்களுடையவராக ஆகியிருக்கிறோம், நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறுகிறீர்கள். தேகத்தை எடுத்துச் செல்ல முடியாது. ஹே ஆத்மாக்களே! இப்பொழுது தந்தையாகிய என்னை மற்றும் இனிய வீட்டை நினைவு செய்யுங்கள். மனிதர்கள் அயல்நாட்டிற்குச் சென்று திரும்புகையில் எனது இனிய வீடாகிய பாரதத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறுவர். எங்கு பிறப்பு எடுத்தோமோ அங்கு திரும்ப வேண்டும். மனிதர்கள் இறக்கின்ற பொழுது அவர் எங்கு பிறந்தாரோ அங்கு அவரை எடுத்துச் செல்கின்றனர். பாரத மண்ணால் உருவானதை அதே மண்ணில் தான் விட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

 

தந்தை கூறுகின்றார் - எனது பிறப்பும் பாரதத்தில் தான் ஏற்படுகிறது. சிவஜெயந்தி கொண்டாடுகிறீர்கள். எனக்கு பல பெயர்களை வைத்து விட்டீர்கள். ஹர ஹர மகாதேவ், அனைவரின் துக்கத்தை நீக்குபவர் என்று கூறுகிறீர்கள். அதுவும் நானே, தவிர சங்கர் அல்ல. பிரம்மா சேவையில் இருக்கிறார். மேலும் யார் ஸ்தாபனை செய்கிறார்களோ அவரே பிறகு விஷ்ணுவின் இரண்டு ரூபத்தில் இருந்து பாலனையும் செய்வார். எனக்கு பிரஜாபிதா அவசியம் தேவைப்படுகிறார். ஆதிதேவனுக்கு கோயிலும் இருக்கிறது. ஆதிதேவன் யாருடைய குழந்தை? யாராவது கூறுவார்களா! இந்த தில்வாடா கோயிலின் டிரஸ்டியாக இருப்பவர்களும் கூட இந்த ஆதிதேவன் யார்? என்பதை அறிந்திருக்கவில்லை. அவரது தந்தை யார்? ஆதிதேவன் பிரஜாபிதா ஆவார், அவரது தந்தை சிவன். யாருக்கு கோயில் இருக்கிறதோ அவரைப் பற்றி அறியாமலேயே டிரஸ்டியாக ஆகிவிட்டனர். ஜெகத்பிதா, ஜெகதம்பாவின் நினைவுச் சின்னம் தான் இந்த கோயிலாகும். இந்த ஆதிதேவன் பிரம்மாவின் ரதத்தில் தான் தந்தை வந்து ஞானம் கூறியிருக்கிறார். (தந்தையோடு) அறையில் அனைத்து குழந்தைகளும் அமர்ந்திருக்கின்றனர். அனைவருக்கும் கோயில் கட்ட முடியாது. முக்கியமானது 108 மணி மாலை, ஆக 108 அறைகளை உருவாக்கி விட்டனர். 108 பேருக்குத் தான் பூஜை நடைபெறுகிறது. முக்கியமானவர் சிவபாபா, பிறகு பிரம்மா, சரஸ்வதி யுகல்(ஜோடி). சிவபாபா மலராக இருக்கின்றார். அவருக்கென்று தனியான சரீரம் கிடையாது. பிரம்மா, சரஸ்வதிக்கு அவரவர்களது சரீரம் இருக்கிறது. சரீரதாரிகளுக்கான மாலை தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் மாலையை பூஜிக்கின்றனர். பூஜை முடித்த பின்பு சிவபாபாவை நமஸ்கரிக்கின்றனர், தலை வணங்குகின்றனர். ஏனெனில் அவர் இவர்கள் அனைவரையும் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்கியிருக்கின்றார். ஆகையால் பூஜிக்கின்றனர். மாலையை கையில் எடுத்துக் கொண்டு ராம் ராம் என்று கூறுகின்றனர். பரம்பிதா பரமாத்மாவின் பெயர் யாருக்கும் தெரியவில்லை. சிவபாபா முக்கியமானவர், பிறகு பிரஜாபிதா பிரம்மா மற்றும் சரஸ்வதி முக்கியமானவர்கள். மற்றபடி பிரம்மா குமார், குமாரிகள் யாரெல்லாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்களது பெயரும் இருக்கும். நாளடைவில் நீங்கள் பார்ப்பீர்கள். கடைசி நேரத்தில் நீங்கள் வந்து இங்கு இருப்பீர்கள். யார் பக்கா யோகிகளாக இருப்பார்களோ அவர்கள் தான் இருக்க முடியும். போகிகள் சிறிது விசயங்களை கேட்டதும் அழிந்து போய்விடுவார்கள். மற்றவரது அறுவை சிகிச்சையைப் பார்த்ததும் சிலர் மயக்கமடைந்து விடுகின்றனர். பிரிவினையின் பொழுது எத்தனை மனிதர்கள் இறந்தனர். நாம் யுத்தம் செய்யாமலேயே இராஜ்யத்தை அடைந்து விட்டோம் என்று அவர்கள் கதை விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எத்தனை பேர் இறந்தனர்! கேட்கவே வேண்டாம். இது தான் பொய்யான மாயை ......... இப்பொழுது சத்திய தந்தை வந்து சத்தியத்தைக் கூறுகின்றார். தந்தை கூறுகின்றார் எனக்கு அவசியமாக ரதம் தேவை. நாயகனாகிய நான் பெரியவனாக இருக்கிறேன் எனில் எனக்கு நாயகியும் பெரியவராக இருக்க வேண்டும். சரஸ்வதி பிரம்மாவின் முக்வம்சாவளி ஆவார். அவர் பிரம்மாவின் யுகல் கிடையாது, பிரம்மாவின் குழந்தை ஆவார். ஆனால் அவரை ஏன் ஜெகதம்பா என்று கூறுகிறோம்? ஏனெனில் அவர் ஆண் அல்லவா! ஆக தாய்மார்களை பராமரிப்பு செய்வதற்காக அவரை வைத்திருக்கிறார். பிரம்மா முக்வம்சாவளி சரஸ்வதி பிரம்மாவின் குழந்தையாக ஆகிவிடுகிறார். மம்மா இளம் வயதுடையவராக இருக்கிறார், பிரம்மா வயதானவர் ஆவார். சரஸ்வதி இளம் வயது பெண், பிரம்மாவின் மனைவியாக இருப்பது அழகல்ல. சரிபாதி (ஐஹப்ச் டஹழ்ற்ய்ங்ழ்) என்று கூற முடியாது. இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். ஆக தந்தை கூறுகின்றார் - நான் இந்த பிரம்மாவின் சரீரத்தை லோனாக எடுக்க வேண்டியிருக்கிறது. பலர் கடன் வாங்குகின்றனர். பிராமணர்களுக்கு உணவளிக்கின்றனர் எனில் அந்த ஆத்மா வந்து பிராமண சரீரத்தை ஆதாரமாக எடுக்கும். ஆத்மா அந்த சரீரத்தை விட்டு விட்டு வருமா என்ன? கிடையாது. நாடகத்தில் சாட்சாத்காரத்தின் வழக்கங்கள் முன் கூட்டியே பதிவாகியிருக்கிறது என்பது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இங்கும் அழைக்கின்றனர். ஆத்மா சரீரத்தை விட்டு விட்டு வரும் என்பது கிடையாது. இது நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. தந்தைக்கு இந்த சரீரம் நந்தி போன்றதாகும். இல்லையெனில் சிவன் கோயிலில் ஏன் நந்தி காண்பிக்கின்றனர்? சூட்சுமவதனத்தில் சங்கரிடம் நந்தி எங்கிருந்து வந்தது? அங்கு இருப்பதோ பிரம்மா, விஷ்ணு, சங்கர் மற்றும் அவர்களை யுகல்களாக(ஜோடியாக) காண்பிக்கின்றனர். இல்லற மார்க்கமாகக் காண்பிக்கின்றனர். மற்றபடி அங்கு மிருகம் எப்படி வந்தது? மனிதர்களின் புத்தி சிறிதும் வேலை செய்வது கிடையாது. என்ன தோன்றுகிறதோ அதைக் கூறிக் கொண்டே இருக்கின்றனர். இதன் மூலம் நேரம் வீணாகிறது, சக்தி வீணாகிறது.

 

நாம் தான் தூய்மையான தேவதைகளாக இருந்தோம், பிறகு மறுபிறப்பு எடுத்து எடுத்து நாம் தூய்மையற்ற பூஜாரிகளாக ஆகிவிட்டோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நாம் தான் பூஜைக்குரியவர்கள், நாமே பூஜாரிகள். பூஜைக்குரியவர் மற்றும் பூஜாரியாக பகவான் ஆவது கிடையாது. அவர் 84 பிறவிகள் எடுக்க வேண்டியதும் இல்லை. மாயை மனிதர்களை முற்றிலுமாக கல்புத்தி உடையவர்களாக ஆக்கி விட்டது. நான் தான் (ஹம் சோ .....) என்பதன் பொருள் ஆத்மாவாகிய நான் தான் பரமாத்மா என்பது கிடையாது. நாம் தான் பிராமணர்களாக இருக்கிறோம், தேவதைகளாக ஆவோம். மறுபிறப்பு எடுத்து வருவோம். எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கின்றார்! தந்தை கூறுகின்றார் - நான் யாரிடத்தில் பிரவேசம் ஆகியிருக்கிறேனோ அவர் பல குருக்களிடம் சென்றிருக்கிறார், சாஸ்திரங்களைப் படித்திருக்கிறார், முழு 84 பிறவிகளும் எடுத்திருக்கிறார். இவையனைத்தையும் அவர் கூறுவது கிடையாது, பிரம்மாவிற்கும் நான் தான் கூறுகிறேன். சதா சவாரி செய்யவும் முடியாது. பிரம்மா வாய்வழி பிரமாணர்களுக்குக் கூறுகிறேன். எனக்கு ரதம் தேவை அல்லவா! குழந்தைகளாகிய நீங்கள் நினைவு செய்கிறீர்கள், நான் வந்து விடுகிறேன். நான் சேவை செய்ய வேண்டும், ஆக ஸ்ரீ ஸ்ரீ சிவனின் வழிப்படி பாரதம் தூய்மை ஆகிறது. நரகவாசிகளுக்கு ஸ்ரீ ஸ்ரீ என்ற பட்டம் கொடுப்பது தவறாகும். முன்பு ஸ்ரீ என்று பெயர் இல்லாமல் இருந்தது. இப்பொழுது அனைவருக்கும் ஸ்ரீ அதாவது சிரேஷ்டம் ஆக்கிவிட்டனர். ஸ்ரீ ஸ்ரீ ஆனவர் சிவபாபா ஆவார். பிறகு சூட்சுமவதனவாசி பிரம்மா, விஷ்ணு, சங்கர், பிறகு ஸ்ரீ லெட்சுமி நாராயணன். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். ஞானம் மிக மகிழ்ச்சிகரமானது ஆகும். ஆனால் சிலர் படித்து படித்து இல்லாமல் போய் விடுகின்றனர். மாயை கை விட வைத்து விடுகிறது. கடையும் வரிசைக் கிரமமாக இருக்கிறது. பெரிய கடைகளில் கண்டிப்பாக நல்ல விற்பனையாளர் (நஹப்ங்ள்ம்ஹய்) மகாரதிகள் இருப்பார். சிறிய சிறியவைகளில் குறைவாக இருப்பர். ஆக எங்கு மகாரதிகள் இருக்கிறார்களோ அந்த கடைக்குச் செல்ல வேண்டும். தாய்மார்களுக்கு அதிக நேரம் இருக்கிறது. ஆண்கள் தொழில் போன்றவைகள் செய்ய வேண்டியிருப்பதால் பிசியாக இருக்கின்றனர். தாய்மார்கள் ஃபிரியாக இருக்கின்றனர். உணவு சமைக்கின்றனர், அவ்வளவு தான். பிறகு அவர்கள் உங்கள் மீது பந்தனம் ஆகிவிடுகின்றனர். பிரம்மா குமாரிகளிடம் சென்றால் விஷம் நின்று விடும் என்று கேள்விப்பட்டதும் தடுக்கின்றனர்.

 

சிவபாபா அந்த அளவிற்கு நினைவிலிருந்து மறந்து விடும் பொருளாக இருக்கிறார், ஆகவே அடிக்கடி மறந்து விடுகிறோம். என்னை நினைவு செய்தால் உங்களது பாவங்கள் அழிந்து விடும், மேலும் என்னிடம் வந்து விடுவீர்கள் என்ற மிக எளிய வழி தந்தை கூறுகின்றார். நினைவு செய்யவில்லையெனில் பாவங்களும் அழியாது, மேலும் கூடவே அழைத்துச் செல்லவும் மாட்டேன். பிறகு தண்டனை அடைய வேண்டியிருக்கும். பக்தி மார்க்கத்தில் மோர் குடித்து வந்தனர், சத்யுகம் திரேதாவில் நீங்கள் வெண்ணெய் சாப்பிட்டு காலி செய்து விட்டீர்கள். கடைசியில் மோர் மட்டுமே பாக்கி இருக்கிறது. முதலில் மோரும் மிக நன்றாக கிடைத்தது, பிறகு தண்ணீராக கிடைக்கிறது. சத்யுகம் திரேதாவில் நெய், பாலாறு நதியாக ஓடும். இப்பொழுது நெய்யின் விலை எவ்வளவு உயர்ந்து விட்டது! நல்லது.

 

பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) இராஜரிஷியாகி தபஸ்யா செய்ய வேண்டும். பூஜைக்குரிய மாலையில் வருவதற்காக பாப்சமான் சேவை செய்ய வேண்டும். பக்கா யோகி ஆக வேண்டும்.

 

2) ஞானம் மிக மகிழ்ச்சிகரமானது ஆகும். ஆகையால் மகிழ்ச்சியாக படிக்க வேண்டும், குழப்பமடையக் கூடாது.

 

வரதானம் :

வரதானங்களின் தெய்விக பாலனை (வளர்ப்பின்) மூலம் சகஜ மற்றும் சிறப்பான வாழ்க்கையை அனுபவம் செய்யக்கூடிய சதா பாக்கியசாலி ஆகுக.

 

பாப்தாதா சங்கமயுகத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் மூன்று சம்மந்தங்களில் வளர்ப்பினை செய்கிறார். தந்தையின் சம்மந்தத்தில் ஆஸ்தி தருகிறார், ஆசிரியர் சம்மந்தத்தில் படிப்பைக் கற்பிக்கிறார் மற்றும் சத்குருவின் சம்மந்தத்தில் வரதானங்களின் மூலம் அனுபவம் செய்விக்கிறார். ஒரே சமயத்தில் அனைவருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த தெய்விகப் பாலனை மூலம் தான் சகஜ மற்றும் சிரேஷ்ட வாழ்க்கையை அனுபவம் செய்கிறீர்கள். கடின உழைப்பு மற்றும் கஷ்டம் என்ற சொல்லும் கூட முடிந்துபோக வேண்டும். அப்போது தான் பாக்கியசாலி எனச் சொல்வார்கள்.

 

சுலோகன் :

பாபாவோடு கூடவே சர்வ ஆத்மாக்களுக்கும் கூட சிநேகி ஆவது தான் உண்மையான (சத்பாவனை) நல்லெண்ணம் ஆகும்.

 

ஓம்சாந்தி