28.10.2018                           காலை முரளி                ஓம் சாந்தி                        ''அவ்யக்த பாப்தாதா''

ரிவைஸ்           22.02.1984           மதுபன்


 

'' சங்கமயுகத்தில் நான்கு இணைந்த ரூபங்களின் அனுபவம் ''

 

இன்று பாப்தாதா அனைத்து குழந்தைகளின் இணைந்த ரூபத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைத்து குழந்தைகளும் தன்னுடைய இணைந்த ரூபத்தை நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்களா? ஒன்று சிரேஷ்ட ஆத்மாக்கள், இந்த இறுதி, பழைய ஆனால் மிகவும் விலைமதிக்க முடியாதவர் ஆக்கக்கூடிய உடலோடு இணைந்திருப்பவர். அனைத்து சிரேஷ்ட ஆத்மாக்கள் இந்த உடலின் ஆதாரத்தினால் சிரேஷ்ட காரியம் மற்றும் பாப்தாதாவையும் சந்திக்கும் அனுபவத்தையும் செய்து கொண்டிருக்கிறீர்கள். இது பழைய உடலில் தான் ஆனால் இந்த பழைய இறுதி உடலின் ஆதாரத்தினால் தான் சிரேஷ்ட ஆத்மாக்கள் நீங்கள் ஆன்மீக அனுபவம் செய்கிறீர்கள். அப்படி ஆத்மா மற்றும் உடல் இரண்டுமாக இணைந்திருக்கிறீர்கள். இந்த பழைய உடலின் உணர்வில் வர வேண்டாம். ஆனால் எஜமானன் ஆகி, இதன் மூலமாக காரியம் செய்விக்க வேண்டும். எனவே ஆத்ம அபிமானி ஆகி, கர்மயோகி ஆகி கர்ம இந்திரியங்கள் மூலமாக காரியம் செய்விக்கிறீர்கள்.

 

இரண்டாவது - ஆன்மீக விசித்திர இணைந்த ரூபம்: முழுக் கல்பத்திலும் இந்த இணைந்த ரூபத்தின் அனுபவத்தினை இப்பொழுது மட்டும் தான் உங்களால் செய்ய முடியும். அந்த ரூபம் 'நீங்கள் மற்றும் தந்தை'. இந்த இணைந்த ரூபத்தின் அனுபவம் எப்பொழுதும் மாஸ்டர் சர்வ சக்திவான், எப்பொழுதும் வெற்றி அடைபவர், எப்பொழுதும் அனைவரின் தடைகளை அழிப்பவர். எப்பொழுதும் சுப பாவனை, சிரேஷ்ட விருப்பங்கள், சிரேஷ் வார்த்தைகள், சிரேஷ்ட திருஷ்டி, சிரேஷ்ட காரியம் மூலமாக உலகிற்கு நன்மை செய்யும் சொரூபத்தின் அனுபவம் செய்விக்கிறது. ஒரு நொடியில் அனைத்து பிரச்சனைகளுக்கு சமாதான சொரூபம் ஆக்குகிறது. தனக்காகவும், அனைவருக்காகவும் வள்ளல் மற்றும் மாஸ்டர் வரமளிக்கும் வள்ளல் ஆக்குகிறது. இந்த இணைந்த ரூபத்தில் எப்பொழுதும் நிலைத்து மட்டும் இருந்தீர்கள் என்றால், சுலபமாகவே நினைவு மற்றும் சேவையில் சித்தி (வெற்றி) சொரூபமாக ஆகிவிடுவீர்கள். விதி ஒரு காரணத்திற்காக மட்டும் இருந்து விடும் மேலும் சித்தி அதாவது வெற்றி எப்பொழுதுமே உடன் இருக்கும். இப்பொழுது விதியை கடைபிடிப்பதில் அதிக நேரம் எடுக்கிறது. சித்தி சக்திக்கு ஏற்றபடி அனுபவம் ஆகிறது. ஆனால் எந்த அளவு இந்த ஆன்மீக சக்திசாலியான இணைந்த ரூபத்தில் எப்பொழுதும் இருப்பீர்களோ அந்த அளவு விதியைக் விட அதிகமாக சித்தி அனுபவம் ஆகும். முயற்சி செய்வதின் மூலம் பிராப்தி அதிகமாக அனுபவம் ஆகும். சித்தி சொரூபத்தின் அர்த்தமே ஒவ்வொரு காரியத்திலும் சித்தி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இது நடைமுறையில் அனுபவம் ஆக வேண்டும்.

 

மூன்றாவது இணைந்த ரூபம் : பிராமணனாக இருக்கும் நான் தான் ஃபரிஷ்தாவாக ஆகப் போகிறவன். பிராமண ரூபம் மற்றும் இறுதி கர்மாதீத் ஃபரிஷ்தா சொரூபம். இந்த இணைந்த ரூபத்தின் அனுபவம் உலகின் எதிரில் சாட்சாத்காரம் அளிப்பவர் ஆக்கும். பிராமணனாக இருக்கும் நான் தான் ஃபரிஷ்தா ஆவேன் என்ற இந்த நினைவு மூலமாக நடைமுறையில் காரியங்கள் செய்து கொண்டே இந்த ஸ்தூல உடலில், ஸ்தூல உலகில் வாழ்க்கையின் பங்கை ஆற்றிக் கொண்டே தன்னை பிரம்மா பாபாவின் துணைவனாக சூட்சும உலகத்தின் ஃபரிஷ்தாவான நான் ஸ்தூல உலகில் மற்றும் ஸ்தூல உடலில் உலக சேவைக்காக வந்திருக்கிறேன் என்று ஸ்தூல உணர்விலிருந்து விலகிய அவ்யக்த ரூபமுடையவராக தன்னை அனுபவம் செய்வார்கள். இந்த அவ்யக்த உணர்வு அதாவது ஃபரிஷ்தா தன்மையின் உணர்வு இயல்பாகவே அவ்யக்தம் அதாவது பௌதீக பேச்சு, நடத்தை, பௌதீக உணர்வின் சுபாவம் சம்ஸ்காரத்தை சுலபமாகவே பரிவர்த்தனை (மாற்றம்) செய்து விடும். உணர்வு மாறிவிட்டது என்றால் அனைத்தும் மாறி விடும். அந்த மாதிரியான அவ்யக்த உணர்வை எப்பொழுதும் சொரூபத்தில் கொண்டு வாருங்கள். பிராமணன் நான் தான் ஃபரிஷ்தா ஆவேன் என்பது நினைவில் இருக்கிறது. இப்பொழுது இந்த நினைவை நடைமுறையில் கொண்டு வாருங்கள். சொரூபம் நிரந்தரமானதாக இயல்பானதாக சுலபமாகவே ஆகிவிடும். நடைமுறை சொரூபத்தில் கொண்டு வருவது என்றால், நிரந்தர அவ்யக்த ஃபரிஷ்தாவாக ஆவது. சில நேரம் மறப்பது, சில நேரம் நினைவில் வருவது இந்த நினைவில் இருப்பது முதல் நிலை. சொரூபம் ஆகிவிடுவது உயர்ந்த நிலை.

 

நான்காவது எதிர்கால நான்கு புஜங்களின் சொரூபம்: லட்சுமி மற்றும் நாராயணனின் இணைந்த ரூபம், ஏனென்றால் இந்த நேரம் ஆத்மாவில் லட்சுமி மற்றும் நாராயணன் இருவர்களாக ஆவதற்கான சம்ஸ்காரத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். சில நேரம் லட்சுமி ஆவீர்கள், சில நேரம் நாராயணன் ஆவீர்கள். எதிர்கால பிராப்தியின் இந்த இணைந்த ரூபம் அந்த அளவே தெளிவாக இருக்க வேண்டும். இன்று ஃபரிஷ்தா, நாளை தேவதை. இந்த நேரம் ஃபரிஷ்தா அடுத்த நேரம் தேவதை. நம்முடைய இராஜ்யம், நம்முடைய இராஜ்ஜிய சொரூபம் வந்தே விட்டது, ஆகியே விட்டோம். அந்த மாதிரி எண்ணம் தெளிவாகவும் சக்திசாலியாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் உங்களுடைய இந்த தெளிவான சக்திசாலியான எண்ணத்தின் வெளிப்பாட்டின் மூலம் உங்களுடைய இராஜ்ஜியம் அருகில் வரும். உங்களுடைய வெளிப்பட்ட ரூபத்தின் எண்ணம் புது உலகத்தைப் படைக்கும் அதாவது உலகத்தில் கொண்டு வரும். உங்களுடைய எண்ணம் உள்ளடங்கி இருக்கிறது என்றால் புது உலகம் வெளிப்பட முடியாது. பிரம்மாவின் கூடவே பிராமணர்களின் இந்த எண்ணம் மூலமாக இந்த பூமியில் புது உலகம் பிரத்யக்ஷம் ஆகும். பிரம்மா பாபாவும் புது உலகத்தில் புதிய தன்னுடைய முதலில் வாழ்க்கைப் பங்கினை செய்வதற்காக உடன் செல்வோம் என்ற உறுதிமொழியின் காரணமாக பிராமண குழந்தைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் மட்டும் பிரம்மாவிலிருந்து கிருஷ்ணன் ஆகிவிட்டார் என்றால், தனியாக என்ன செய்வார். உடன் படிப்பவர்களும், விளையாடுபவர்களும் வேண்டும் இல்லையா? எனவே பிரம்மா பாபா பிராமணர்களுக்காக, அவ்யக்த ரூபமுடைய தந்தை எனக்கு சமமாக அவ்யக்த நிலையிலுள்ள ஃபரிஷ்தா ரூபம் ஆகுங்கள் என்று கூறுகிறார். ஃபரிஷ்தாவிலிருந்து தேவதை ஆவீர்கள். புரிந்ததா? இந்த அனைத்து இணைந்த ரூபத்தில் நிலைத்திருப்பதினால் தான் சம்பன்னம் மற்றும் சம்பூர்ணம் ஆகிவிடுவீர்கள். தந்தைக்குச் சமமானவர் ஆகி சுலபமாகவே செய்யும் காரியத்தில் வெற்றியை அனுபவம் செய்வீர்கள்.

 

இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு பாப்தாதாவுடன் ஆன்மீக உரையாடல் செய்வதற்கும் மற்றும் சந்திப்பை செய்வதற்கும் தீவிரமான ஆர்வம் இருக்கிறது. அனைவருமே நாம் இன்றே சந்தித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த பௌதீக உலகத்தில் அனைத்தையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. சூரியன், சந்திரன் ஆகியவற்றின் உள்ளே இருக்கும் உலகம் இல்லையா? அதைவிட விலகியிருக்கும் உலகத்திற்கு வந்து விட்டீர்கள் என்றால் முழு நேரமும் அமர்ந்து கொள்ளலாம். பாப்தாதாவிற்கும் ஒவ்வொரு குழந்தையும் அவரவர்களின் விசேஷங்களின் காரணமாக மிகப் பிரியமானவர்கள். யாராவது இவர் பிரியமானவர், இவர் குறைவாகப் பிரியமானவர் என்று நினைக்கிறார் என்றால் அந்த மாதிரியான விஷயம் ஒன்றும் இல்லை. மகாரதி அவருடைய விசேஷத்தின் மூலம் பிரியமானவர், மேலும் தந்தையின் எதிரில் அனைவரும் அவரவர்களின் ரூபத்தினால் மகாரதிகள். மகான் ஆத்மாக்கள், எனவே மகாரதிகள். இதுவோ காரியத்தை நடத்துவிப்பதற்காக யாரையாவது அன்புடன் பொறுப்பாளர் ஆக்க வேண்டியதாக இருக்கிறது. இல்லை என்றால் காரியம் செய்வதற்காக அவரவர்களுக்கு என்று ஸ்தானம் கிடைத்திருக்கிறது. ஒருவேளை அனைவருமே தாதிகள் ஆகிவிட்டார்கள் என்றால் காரியம் நடக்குமா? பொறுப்பாளராக ஆக்க வேண்டியது இருக்கிறது தான் இல்லையா? பார்க்கப் போனால் அனைவரும் அவர்களுடைய முறையில் தாதிகள் தான். உங்கள் அனைவரையுமே தீதி மற்றும் தாதி என்றோ கூறுகிறார்கள் தான் இல்லையா? இருந்தும் நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒருவரைப் பொறுப்பாளர் ஆக்கியிருக்கிறீர்கள் தான் இல்லையா? நீங்கள் அனைவருமே ஆக்கினீர்களா அல்லது தந்தை மட்டும் தான் ஆக்கினாரா? அல்லது காரிய நடவடிக்கைகள் நடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும் அவரவர்களின் காரியத்தின் அனுசாரம் பொறுப்பாளராக ஆக்க வேண்டியதே இருக்கிறது. அதற்காக நீங்கள் அனைவரும் மகாரதி இல்லை என்று அப்படி அர்த்தம் அல்ல. நீங்களும் மகாரதிகள், மகாவீரர்கள். மாயாவிற்கு சவால் விடுபவர்கள், மகாரதி இல்லை என்றால் என்னவாக இருக்கிறார்.

 

பாப்தாதாவைப் பொருத்தளவில் ஒரு வார பாடத்தை கற்றுக் கொடுக்கும் குழந்தையும் மகாரதி தான். ஏனென்றால் ஒரு வார பாடத்தையும் எப்பொழுது கற்றுக் கொடுக்கிறார் என்றால், எப்பொழுது தானும் சிரேஷ்ட வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்பொழுது தான்! சவால் விட்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் மகாரதி, மகாவீர் ஆகிவிட்டீர்கள். பாப்தாதா எப்பொழுதுமே ஒரு சுலோகனை அனைத்து குழந்தைகளும் காரியத்தில் கொண்டு வருவதற்காக நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். ஒன்று தன்னுடைய சுயநிலையில் இருப்பது, இன்னொன்று காரிய நடவடிக்கையில் வருவது. சுயநிலையில் நினைத்திருப்பதில் அனைவரும் சிறியவர்கள் அல்ல. பெரியவர்களாக ஆகிவிட்டீர்கள். காரிய நடவடிக்கையில் பொறுப்பாளராக ஆக்கவே வேண்டியது இருக்கிறது. அதாவது காரிய நடவடிக்கையில் வெற்றி அடைவதற்கான ஒரே ஒரு சுலோகன் - மரியாதை கொடுப்பது, மரியாதையை பெறுவது. மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது தான் மரியாதையைப் பெறுவது. கொடுப்பதில் பெறுவது நிரம்பியிருக்கிறது. மரியாதை கொடுத்தீர்கள் என்றால், மரியாதை கிடைக்கும். மரியாதையை பெறுவதற்கான வழியே மரியாதையைக் கொடுப்பது. நீங்கள் மரியாதை கொடுக்கிறீர்கள், மேலும் உங்களுக்கு அது கிடைப்பதில்லை என்பது இருக்கவே முடியாது. ஆனால் உள்ளப்பூர்வமாக கொடுங்கள், ஏதாவது தேவைக்காகக் கொடுக்காதீர்கள். யார் உள்ளப்பூர்வமாகக் கொடுக்கிறாரோ அவருக்கு உள்ளப்பூர்வமாக மரியாதை கிடைக்கிறது. ஏதாவது தேவைக்காக மரியாதை கொடுத்தீர்கள் என்றால், கிடைப்பதும் ஏதாவது தேவைக்காகத் தான் இருக்கும். எப்பொழுதுமே உள்ளப்பூர்வமாகக் கொடுங்கள் மற்றும் உள்ளப்பூர்வமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த சுலோகன் மூலமாக எப்பொழுதுமே தடையற்ற, எண்ணமற்ற, கவலையற்றவராக இருப்பீர்கள். எனக்கு என்னவாகும் என்ற இந்தக் கவலை இருக்காது. எனக்கு என்ன நடக்க வேண்டுமோ அது நிச்சயிக்கப்பட்டது என்ற கவலையில்லாத நிலையில் இருப்பார்கள். மேலும் அந்த மாதிரியான சிரேஷ்ட ஆத்மாவில் சிரேஷ்ட பிராப்தியானது நிகழ்காலத்திலும் மற்றும் எதிர்காலத்திலும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று தான். இதை யாரும் மாற்ற முடியாது. யாரும் மற்ற யாருடைய ஆசனத்தையும் பெற முடியாது என்பது நிச்சயிக்கப்பட்டது. நிச்சயிக்கப்பட்டது எனவே கவலையின்றி இருக்கிறார். இவரைத் தான் தந்தைக்குச் சமமான தந்தையைப் பின்பற்றி நடப்பவர் என்று கூறுவது. புரிந்ததா?

 

இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளின் மீது பாபாவிற்கு விசேஷ அன்பு இருக்கிறது. ஏதாவது தேவைக்கான அன்பு இல்லை. உள்ளப்பூர்வமான அன்பு இருக்கிறது. ஒரு பழைய பாடல் உள்ளது... உயர்ந்த உயர்ந்த சுவர்கள். . . இது இரட்டை வெளிநாட்டினரின் பாடல் என்று பாப்தாதா ஏற்கனவே கூறியிருக்கிறார். சமுத்திரத்தைக் கடந்து, மதம், தேசம், பாஷை ஆகிய அனைத்து மிக உயர்ந்த சுவர்களைத் தாண்டி தந்தையின் குழந்தை ஆகிவிட்டார்கள். எனவே தந்தைக்குப் பிரியமானவர்கள். பாரதவாசிகளோ தேவதைகளின் பூஜாரிகளே தான். அவர்கள் உயர்ந்த சுவர்களைத் தாண்டி வரவில்லை. ஆனால் நீங்கள் அனைத்து இரட்டை வெளிநாட்டினரோ இந்த மிக உயர்ந்த சுவர்களை எவ்வளவு சுலபமாகக் கடந்து வந்துள்ளீர்கள். எனவே பாப்தாதா உள்ளப்பூர்வமாக குழந்தைகளின் இந்த விசேஷங்களின் பாடலைப் பாடுகிறார். புரிந்ததா? உங்களை குஷிப் படுத்துவதற்காக மட்டும் இதைக் கூறிக் கொண்டிருக்கவில்லை. சில குழந்தைகள் பாப்தாதாவோ அனைவரையும் குஷிப்படுத்திவிடுகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் அர்த்தத்துடன் குஷிப் படுத்துகிறார். நீங்கள் பாப்தாதா அப்படியே கூறிவிடுகிறாரா அல்லது இது நடைமுறையில் உண்மையா என்று உங்களை நீங்களே கேளுங்கள். மிக உயர்ந்த சுவர்களைக் கடந்து வந்து விட்டீர்கள் தான் இல்லையா? எவ்வளவு கடினத்துடன் பயணச்சீட்டை வாங்குகிறீர்கள். இங்கிருந்து திரும்பிச் சென்றவுடனேயே மீண்டும் பணத்தைச் சேர்க்கிறீர்கள் இல்லையா? எப்பொழுதும் குழந்தைகளின் அன்பை பாப்தாதா பார்க்கிறார், அன்பின் காரணமாக வந்து சேருவதற்காக என்னென்ன வழிமுறைகளைக் கடைபிடிக்கிறார்கள், எப்படியோ வந்து சேர்ந்து விடுகிறார்கள். அந்த மாதிரி அன்பான ஆத்மாக்களின் அன்பின் சாதனத்தை பாப்தாதா பார்த்து, ஆர்வத்தை பார்த்து குஷி அடைகிறார். இந்த தூர தேசத்தில் இருப்பவர்களை, நீங்கள் எப்படி வருகிறீர்கள் என்று கேளுங்கள். கடின முயற்சி செய்து இருந்தும் வந்து சேர்ந்து விடுகிறார்கள் தான் இல்லையா? நல்லது.

 

எப்பொழுதும் இணைந்த ரூபத்தில் நிலைத்திருக்கக்கூடிய, எப்பொழுதும் தந்தைக்குச் சமமான அவ்யக்த உணர்வில் நிலைத்திருக்கக்கூடிய, எப்பொழுதும் சித்தி சொரூபத்தை அனுபவம் செய்யக்கூடிய, தன்னுடைய சக்திசாலியான சமமான சொரூபத்தின் மூலமாக சாட்சாத்காரம் செய்விக்கக்கூடிய, அந்த மாதிரி எப்பொழுதும் கவலையின்றி எப்பொழுதும் நிச்சயமுள்ள வெற்றி அடையும் குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

சான்ஃபிரான்சிஸ்கோ குரூப்புடன் சந்திப்பு :

நீங்கள் அனைவரும் தன்னை முழு உலகத்திலும் நாங்கள் விசேஷ ஆத்மாக்கள் என்று அனுபவம் செய்கிறீர்களா? ஏனென்றால் முழு உலகத்தின் பலகோடிஆத்மாக்களிலிருந்து தந்தையைத் தெரிந்து கொள்வதற்கான பாக்கியம் விசேஷ ஆத்மாக்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையைத் தெரிந்து கொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம். தெரிந்து கொண்டீர்கள், சம்மந்தத்தை இணைத்தீர்கள் மேலும் பிராப்தியும் ஆகி விட்டது. இப்பொழுது தன்னை தந்தையின் அனைத்து பொக்கிஷங்களுக்கு அதிபதி என்று அனுபவம் செய்கிறீர்களா? எப்பொழுது சதா காலத்திற்கான குழந்தை என்றாலே அதிகாரி. நான் யார், யாருடைய குழந்தை என்ற இந்த நினைவை மீண்டும் மீண்டும் நினைவு செய்யுங்கள். அமிர்தவேளை சக்திசாலியான நினைவு சொரூபத்தை அனுபவம் செய்பவர் தான் சக்திசாலியாக இருக்கிறார். அமிர்தவேளை சக்திசாலியாக இருக்கவில்லை என்றால் முழு நாளிலும் மிகுந்த தடைகள் வரும். எனவே அமிர்தவேளை சக்திசாலியாக இருக்க வேண்டும். அமிர்தவேளை நேரத்தில் சுயம் தந்தை குழந்தைகளுக்கு விசேஷ வரதானம் கொடுப்பதற்காக வருகிறார். அந்த நேரத்தில் யார் வரதானத்தை பெற்றுக் கொள்கிறாரோ அவர் முழு நாளும் சகஜயோகி நிலையில் இருக்கிறார். எனவே முரளி வகுப்பு மற்றும் அமிர்தவேளையின் சந்திப்பு இந்த இரண்டுமே விசேஷமாக சக்திசாலியாக இருக்கிறது என்றால், எப்பொழுதுமே பாதுகாப்பாக இருப்பீர்கள்.

 

ஜெர்மனி குரூப்புடன் சந்திப்பு:

எப்பொழுதும் தன்னை உலகிற்கு நன்மை செய்யும் தந்தையின் குழந்தை, உலகிற்கு நன்மை செய்யும் ஆத்மா என்று நினைக்கிறீர்களா? அதாவது அனைத்து பொக்கிஷங்களினால் நிரம்பியவர். எப்பொழுது தன்னிடம் பொக்கிஷங்கள் நிரம்பியிருக்குமோ அப்பொழுது தான் மற்றவர்களுக்கு கொடுப்பீர்கள் இல்லையா? அந்த மாதிரி எப்பொழுதும் அனைத்து பொக்கிஷங்களினாலும் நிரம்பிய ஆத்மாக்கள் குழந்தையாக இருப்பவரிலிருந்து எஜமானன் ஆபவர். அப்படி அனுபவம் செய்கிறீர்களா? தந்தை என்று கூறினீர்கள் என்றால் குழந்தையாக இருப்பவரிலிருந்து எஜமானன் ஆகிவிட்டார். இதே நினைவு இயல்பாகவே உலகிற்கு நன்மை செய்பவராக ஆக்கிவிடும். மேலும் இதே நினைவு எப்பொழுதும் குஷியில் பறக்க வைக்கும். இது தான் பிராமண வாழ்க்கை. சம்பன்னமாக இருக்க வேண்டும், குஷியில் பறக்க வேண்டும். மேலும் எப்பொழுதும் தந்தையின் பொக்கிஷங்களின் அதிகாரத்தின் போதையில் இருக்க வேண்டும். நீங்கள் அந்த மாதிரியான சிரேஷ்ட பிராமண ஆத்மாக்கள். நல்லது.

 

வரதானம் :

தன்னுடைய ஒவ்வொரு காரியம் மற்றும் வார்த்தை மூலமாக நடமாடிக் கொண்டே ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அறிவுரை கொடுக்கக்கூடிய மாஸ்டர் ஆசிரியர் ஆகுக!.

 

எப்படி இன்றைய நாட்களில் நடமாடும் நூலகம் இருக்கிறது, அதே போல் நீங்களும் நடமாடும் மாஸ்டர் ஆசிரியர் ஆவீர்கள். எப்பொழுதும் தன் எதிரில் மாணவர்களை பாருங்கள், நீங்கள் தனியாக இருக்க வில்லை, எப்பொழுதும் மாணவர்களின் எதிரில் இருக்கிறீர்கள். எப்பொழுதும் படித்துக் கொண்டும் இருக்கிறீர்கள். மேலும் படிப்பித்துக் கொண்டும் இருக்கிறீர்கள். தகுதியான ஆசிரியர் ஒருபொழுதும் மாணவர்களின் எதிரில் அலட்சியமாக இருக்க மாட்டார், கவனம் வைப்பார். நீங்கள் தூங்குகிறீர்கள், எழுகிறீர்கள், நடக்கிறீர்கள், உணவு அருந்துகிறீர்கள் இப்படி ஒவ்வொரு நேரத்திலும் நான் பெரிய கல்லூரியில் அமர்ந்திருக்கிறேன், மாணவர்கள் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து: வாருங்கள்.

 

சுலோகன் :

ஆத்ம நிச்சயத்தின் மூலம் தன்னுடைய சம்ஸ்காரங்களை சம்பூர்ண தூய்மையாக ஆக்குவது தான் சிரேஷ்ட யோகா.

 

ஓம்சாந்தி