22.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இந்த பாடசாலைக்கு வருவதன் மூலம் உங்களுக்கு பிரத்யட்ச (கண்கூடான) பலன் பிராப்தி ஆகிறது. தந்தை கொடுக்கும் ஒவ்வொரு ஞான இரத்தினமும் இலட்சக்கணக்கான மதிப்பு வாய்ந்தது.

 

கேள்வி:

பாபா ஏற்றக் கூடிய போதை ஏன் இறங்கி விடுகிறது? போதை எப்போதும் ஏறியிருப்பதற்கான யுக்தி என்ன?

 

பதில்:

வெளியில் சென்று குடும்பத்தினரின் முகத்தைப் பார்க்கும் போது போதை இறங்கி விடுகிறது. மோகத்தை வென்றவராக ஆகவில்லை. போதை எப்போதும் ஏறியிருப்பதற்காக தந்தையிடம் ஆன்மீக உரையாடல் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். பாபா, நாங்கள் உங்களுடையவர்களாக இருந்தோம், நீங்கள் எங்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்திருந்தீர்கள், நாங்கள் 21 பிறவிகளுக்கு சுகத்தை அனுபவித்தோம், பிறகு துக்கம் நிறைந்தவராகி விட்டோம். இப்போது நாங்கள் சுகத்தின் ஆஸ்தி எடுக்க வந்துள்ளோம். மோகத்தை நஷ்டம் செய்தீர்கள் என்றால் போதை எப்போதும் ஏறி இருக்கும்.

 

பாடல்:

இறந்தாலும் உங்கள் மடியில். . .

 

ஓம் சாந்தி.

நீங்கள் கேட்ட இந்த வார்த்தைகள் யாருடையது? கோப கோபியருடையது. யாரைப் பற்றி கூறுகின்றனர்? பரமபிதா பரமாத்மா சிவபாபா பற்றி கூறுகின்றனர். பெயர் கண்டிப்பாக வேண்டும் அல்லவா? குழந்தைகள் கூறுகின்றனர் - பாபா, உங்களின் கழுத்தில் மாலை ஆவதற்காக நாங்கள் வாழ்ந்தபடியே உங்களுடையவர்களாக ஆகிறோம். உங்களை நினைவு செய்வதன் மூலம்தான் நாங்கள் உங்களுடைய கழுத்தின் மாலை ஆவோம். ருத்ரமாலை பிரசித்தமானது. அனைத்து ஆத்மாக்களும் ருத்ரனின் மாலையாகும் என்று தந்தை புரிய வைத்துள்ளார். இது ஆன்மீக மரமாகும். அது (சாகார உலகில்) மனிதர்களுடைய மரம், இது (நிராகார உலகில்) ஆத்மாக்களின் மரம். மரத்தில் பிரிவுகளும் உள்ளன. தேவி தேவதைகளின் பிரிவு, இஸ்லா மியர்களின் பிரிவு, பௌத்தர்களின் பிரிவு. இந்த விஷயங்களை வேறு யாரும் புரிய வைக்க முடியாது. கீதையின் பகவான்தான் கூறுகிறார். அவர் தான் பிறப்பு இறப்பற்றவர். ஆனால் அவரை அஜன்மா (பிறவியில் வராதவர்) என்று கூற முடியாது. பிறப்பு இறப்பில் வரக்கூடியவர் அல்ல. அவருடைய ஸ்தூல அல்லது சூட்சும சரீரம் என்று எதுவும் இல்லை. கோவில்களிலும் கூட சிவலிங்கத்தைத் தான் பூஜிக்கின்றனர். அவரைத்தான் பரமாத்மா என்று கூறுகின்றனர். தேவதைகளுக்கு முன்னால் சென்று மகிமை பாடுகின்றனர். பிரம்மா பரமாத்மாய நமஹ என்று ஒருபோதும் கூற மாட்டார்கள். சிவனைத்தான் எப்போதும் பரமாத்மா என்று புரிந்து கொள்கின்றனர். சிவபரமாத்மாய நமஹ என்று கூறுவார்கள்.

அது மூலவதனம், சூட்சும வதனம் மற்றும் இது ஸ்தூல வதனம் ஆகும்.

 

பரமாத்மா சர்வ வியாபி என்ற ஞானம் இங்கே கிடையாது என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஒருவேளை இவருக்குள்ளும் (பிரம்மா) பரமாத்மா இருக்கிறார் என்றால் இவர் பரமாத்மாய நமஹ என்று கூறப்படுவார். சரீரத்தில் இருந்தபடி பரமாத்மா நமஹ என்று கூறுவதில்லை. உண்மையில் மஹான் ஆத்மா, புண்ணிய ஆத்மா, பாவாத்மா . . . என்ற வார்த்தைகள்தான் உள்ளன, மஹான் பரமாத்மா என்று கூறப்படுவதில்லை. புண்ணிய பரமாத்மா, பாவ பரமாத்மா என்ற வார்த்தைகளும் இல்லை. இவை புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அல்லவா. இந்த பாடசாலைக்கு வருவதன் மூலம் பிரத்யட்ச (உடனடி) பலனின் பிராப்தி ஏற்படுகிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் மட்டும்தான் அறிவீர்கள். இந்த படிப்பின் மூலம் நாம் எதிர்காலத்தில் தேவி தேவதைகள் ஆகப் போகிறோம், வேறு யாரும் இப்படி கூற முடியாது. மனிதரிலிருந்து தேவதையாக நீங்கள் ஆகிறீர்கள். தேவதைகளில் பிரசித்தமானவர்கள் (புகழ் வாய்ந்தவர்கள்) இலட்சுமி நாராயணர், ஆகையால் சத்ய நாராயணரின் கதை என்று கூறுகின்றனர். நாராயணருடன் இலட்சுமி கண்டிப்பாக இருப்பார். சத்யராமனின் கதை என்று கூறுவதில்லை. சத்ய நாராயணரின் கதை என்று கூறுகின்றனர். நல்லது, அவரால் என்ன ஆகும்? நரனிலிருந்து நாராயணன் ஆவார்கள். வக்கீல் மூலம் வக்கீலின் கதை கேட்டு வக்கீல் ஆவார்கள். இங்கே நீங்கள் வருவதே எதிர்காலத்தின் 21 பிறவிகளுக்கான பிராப்திக்காக. எதிர்காலத்தின் 21 பிறவிகளுக்கான பிராப்தியும் கூட சங்கமயுகம் வரும்போதுதான் ஏற்படுகிறது. நாம் தந்தையிடமிருந்து சத்யுகத்தின் இராஜ்யத்தினுடைய ஆஸ்தியை எடுப்பதற்காக வந்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் சிவபாபா நம்முடைய பாபா என்ற நம்பிக்கை முதலில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த பிரம்மாவுக்கும் கூட இவர்தான் பாபா ஆவார். ஆக பிரம்மாகுமார்/குமாரிகளின் தாத்தா ஆகியுள்ளார். இது என்னுடைய ஆஸ்தி அல்ல என்று இந்த தந்தை (பிரம்மா) சொல்கிறார். தாத்தாவின் ஆஸ்தி உங்களுக்கு கிடைக்கிறது. சிவபாபாவிடம் ஞான இரத்தினங்களின் செல்வம் இருக்கிறது. ஒவ்வொரு இரத்தினமும் இலட்சக்கணக்கான மதிப்பு வாய்ந்ததாகும். இது இவ்வளவு மதிப்பு மிக்கதாக உள்ளது, 21 பிறவிகளுக்கான இராஜ்ய பாக்கியம் யாருடைய கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள். இலட்சுமி நாராயணரின் பூஜையை செய்தபடி வந்தனர், ஆனால் இவர்கள் இந்த பதவியை எப்படி அடைந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. சத்யுகத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறி விட்டனர், ஆகையால் கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் இராஜ்யம் செய்து 5 ஆயிரம் வருடங்கள் ஆகின்றன என இப்போது நீங்கள் அறிவீர்கள். பின் ஒன்றாம் வருடத்தில் இருந்து தொடங்கிய கதை என்று கூறப்படுகிறது. வெகு காலத்திற்கு முன்பு..... இந்த பாரதத்தில்தான் இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. பாரதம் மலர்த் தோட்டம், சொர்க்கம் என்று  கூறப்படுகிறது. இது யாருடைய புத்தியிலும் இல்லை. கல்பத்தின் ஆயுளே 5 ஆயிரம் வருடங்கள்தான் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள். இந்த சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. இவைகளைக் கேட்பதன் மூலம் எந்த மாற்றமும் நிகழவில்லை. எவ்வளவு ஆரவாரம் செய்கின்றனர்! ஜகதம்பா ஒருவர்தான், ஆனால் அவருடைய மூர்த்திகள் எத்தனை உருவாக்குகின்றனர்! ஜகதம்பா சரஸ்வதி பிரம்மாவின் மகள் ஆவார். மற்றபடி 8-10 கைகள் ஏதும் இல்லை. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் விசயங்கள் என தந்தை கூறுகிறார். ஞானத்தில் இதெல்லாம் எதுவும் இல்லை, இங்கே அமைதியாக இருக்க வேண்டும். தந்தையை நினைவு செய்ய வேண்டும். முன் பின் பார்த்ததே இல்லை, இப்படிப்பட்ட குழந்தைகள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் எழுதுகின்றனர் - பாபா நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை, ஆனால் நான் உங்களை நல்ல விதமாக தெரிந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் அதே பாபாதான், நாங்கள் உங்களிடமிருந்து ஆஸ்தியை எடுத்தே தீருவோம், வீட்டில் அமர்ந்தபடி பலருக்கு காட்சிகள் தெரிகின்றன. காட்சிகள் தெரியாமலும் இருந்திருக்கலாம், ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நினைவில் ஒரேடியாக மூழ்கி விடுகின்றனர். தந்தைதான் சத்கதி வழங்கும் வள்ளல். அவர் மீது எவ்வளவு அன்பு செலுத்த வேண்டும்! தாய் தந்தையரிடம் குழந்தைகள் எவ்வளவு ஒட்டிக் கொள்கின்றனர்! ஏனெனில் தாய் தந்தை குழந்தைகளுக்கு சுகத்தைக் கொடுக்கின்றனர். ஆனால் இன்றைய நாட்களில் தாய் தந்தையர் சுகம் எதுவும் கொடுப்பதில்லை. இன்னும் கூட விகாரத்தில் சிக்க வைக்கின்றனர். தந்தை கூறுகிறார் - நடந்தது நடந்து விட்டது. இப்போது உங்களுக்கு படிப்பு கிடைக்கிறது - காம வாளின் விஷயங்களை விட்டு விட்டு தூய்மையடையுங்கள், ஏனென்றால் இப்போது நீங்கள் கிருஷ்ணபுரிக்குச் செல்ல வேண்டும். கிருஷ்ணருடைய இராஜ்யமே சத்யுகத்தில்தான் இருக்கிறது. மனிதர்கள் கிருஷ்ணரை துவாபர யுகத்தில் காட்டி விட்டனர். இப்படி சத்யுகத்தின் இளவரசர் துவாபர யுகத்தில் வந்து கீதை கூற மாட்டார். அவர் ஸ்ரீ நாராயணர் ஆகி சத்யுகத்தில் இராஜ்யம் செய்ய வேண்டும்.

 

பகவானுடைய மஹாவாக்கியம் - இந்த சமயத்தில் அனைத்து மனிதர்களுமே அசுர சுபாவமுள்ளவராக உள்ளனர். அவர்களை தெய்வீக சுபாவமுள்ளவராக ஆக்குவதற்காக கீதையின் பகவான் வருகிறார். அந்த தந்தைக்குப் பதிலாக குழந்தையின் பெயரைப் போட்டு விட்டனர், அந்த குழந்தையை பிறகு துவாபர யுகத்திற்கு எடுத்து வந்து விட்டனர். இதுவும் பெரிய தவறாகும். பிறகு யாதவர் மற்றும் பாண்டவர்களை நிரூபிக்க முடியாது. ஆக தந்தை கேட்கிறார் - குழந்தைகளே, நீங்கள் உயர்ந்த தெய்வீக குலத்தைச் சேர்ந்தவராக இருந்தீர்கள். பிறகு உங்களுக்கு எப்படி இந்த நிலை ஏற்பட்டது? இப்போது மீண்டும் உங்களை தேவதைகளாக ஆக்குகிறேன். மனிதர்கள், மனிதர் களை சொர்க்கத்தின் இராஜாவாக ஆக்க முடியாது. மனிதர்கள் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய மாட்டார்கள். ஆத்மாவை பரமாத்மா என கூறுவது எவ்வளவு பெரிய தவறு. சன்னியாசிகள் மனிதரிலிருந்து தேவதையாக ஆக்க முடியாது. இது தந்தையின் வேலையாகும். ஆர்ய சமாஜத்தவர், ஆர்ய சமாஜத்தவராக ஆக்குவார்கள். கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்களாக ஆக்குவார்கள். இப்படியாக நீங்கள் யாரிடம் சென்றாலும், அவர்கள் அவர்களைப் போல்தான் ஆக்குவார்கள். தேவதா தர்மம் இருப்பதே சத்யுகத்தில். ஆக தந்தை சங்கமத்தில் வரவேண்டியுள்ளது. இது மஹாபாரத யுத்தம், இந்த சண்டையின் மூலமாகத்தான் உங்களுடைய வெற்றி உண்டாகும். வினாசத்திற்குப் பிறகு வெற்றியின் முழக்கம் எழும்பும். வினாசம் கண்டிப்பாக ஏற்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்று யாராவது சிம்மாசனத்தில் அமர்ந்தார்கள் என்றால் அவரை கீழே இறக்குவதற்கு தாமதிப்பதே இல்லை. இதை சொர்க்கம் என்று கூறுவார்களா என்ன? இது முழுமையான நரகம் ஆகும். இதனை சொர்க்கம் என்று கூறுவது தவறாகும். மனிதர்கள் எவ்வளவு துக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர்! இன்று யாராவது பிறந்தால் குஷி, சுகம் இருக்கும், இறந்து விட்டால் துக்கம். இங்கே அனைவரிட மிருந்தும் மோகத்தை நீக்கியவர்களாக ஆக வேண்டும். இல்லையென்றால் பாபா சேவை செய்ய செல்லுமாறு ஒருபோதும் சொல்ல மாட்டார். நான் நஷ்டமோஹா (மோகத்தை நீக்கியவர்) ஆக இருக்கிறேன், எந்தப் பொருளின் மீதும் ஏன் மோகத்தை வைக்கப் போகிறேன்? நான் இல்லறவாசி அல்ல என்று பாபா கூறுகிறார்.

 

இந்த வைக்கோல்போர் மீது தீ பிடிக்கப் போகிறது, வினாசத்திற்கு அதிக நேரம் பிடிக்கப் போவதில்லை என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் எங்காவது சொற்பொழிவாற்றுகிறீர்கள் என்றால் புரிய வைக்கிறீர்கள் - இங்கே வந்து எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடம் ஆஸ்தி எடுங்கள். எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தி கிடைக்கிறது. நீங்கள் இந்த நரகத்தில் 63 பிறவிகள் எடுத்தீர்கள். நான் 21 பிறவிகளுக்கு உங்களுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி கொடுக்க வந்துள்ளேன். இப்போது, இராவணனின் ஆஸ்தி நன்றாக உள்ளதா அல்லது இராமனின் ஆஸ்தியா? ஒருவேளை இராவணனுடைய ஆஸ்தி நன்றாக உள்ளது என்றால் அவரை ஏன் எரிக்கிறீர்கள்? சிவபாபாவை எப்போதாவது எரிக்கிறீர்களா? கிருஷ்ணரை ஒருபோதும் எரிப்பதில்லை. இது இராவண சம்பிரதாயம் ஆகும். விகாரத்தின் மூலம் பிறவி எடுக்கின்றனர். இது வைஷ்யாலயம், விஷக் கடல் ஆகும். அது விகாரமற்ற, சிவாலயம், அமிர்தக் கடல். விஷ்ணுவை பாற்கடலில் காட்டுகின்றனர். இப்போது பாற்கடல் என்று ஒன்று இல்லை. பால் பசுவிடமிருந்து கிடைக்கிறது. இப்போது பாருங்கள், ஈஸ்வரன் எங்கும் நிறைந்தவர் என்று கூறுகின்றனர், பிறகு தம்மை சிவோஹம் (நான் சிவன்) என்று கூறுகின்றனர், ஏனென்றால் அவர்கள் தூய்மையாக இருக்கின்றனர். உங்களுக்குள் ஈஸ்வரன் இருக்கிறார் என்று அவர்கள் ஒருபோதும் சொல்வதில்லை. உங்களுக்குள் இல்லை, ஏனென்றால் நீங்கள் தூய்மையற்றவர் இப்படியெல்லாம் பிறரைக் கூறுவதில்லை. ஆத்மா கூறுகிறது - இப்போது பரமபிதா பரமாத்மாவின் மூலமாக தூய்மையடைந்து கொண்டிருக்கிறேன், தூய்மையடைந்து பிறகு இராஜ்யம் செய்வேன். நீங்கள் அனேக முறை ஆஸ்தியை அடைந்தீர்கள், மற்றும் இழந்தீர்கள். இந்த நாடகத்தின் சக்கரம் புத்தியில் பதிந்து விட்டது. நீங்கள் அனைவரும் பார்வதிகள், நான் சிவன் என்று தந்தை புரிய வைக்கிறார். கதை முதலானவை இங்கே உள்ள விஷயங்களாகும், சூட்சும வதனத்தில் கதை முதலானவை இருப்பதில்லை. அமரபுரிக்கு எஜமான் ஆக்குவதற்காக அமரகதை உங்களுக்கு கூறுகிறார். அது அமரலோகம் ஆகும், அங்கே சுகமோ சுகம் இருக்கும், மரண உலகத்தில் முதல், இடை, கடைசி துக்கம் இருக்கிறது. எவ்வளவு நல்ல விதமாக புரிய வைக்கிறார்! கல்பத்திற்கு முன்பு தந்தையிடமிருந்து யார் ஆஸ்தி எடுத்திருந்தனரோ அவர்களுடைய முயற்சிதான் இப்போது நடக்கிறது. இதுவரை எந்த அளவு காரியம் நடந்திருக்கிறதோ, முன்பும் கூட இந்த அளவுதான் நடந்தது. நீங்கள் சேவை மிகவும் குறைவாகத்தான் செய்கிறீர்கள் என்று பாபா சொன்னாலும், கல்பத்திற்கு முன்பு நீங்கள் என்ன சேவை செய்திருந்தீர்களோ அதையேதான் இப்போது செய்கிறீர்கள் என்பதையும் கூட புரிய வைக்கிறார். ஆனாலும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். சிறிய சிறிய தீபங்களை புயல் காற்றுகள் அசைத்து விடுகின்றன. அனைவருக்கும் படகோட்டி ஒரு தந்தைதான் ஆவார். எனது படகை அக்கரைக்கு கொண்டு செல்லுங்கள். . . என்று கூட சொல்வதுண்டு. நாடகத்தின் விதி அப்படி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் அந்த பழைய உலகத்தின் பக்கம் சென்று கொண்டிருக்கின்றனர். இங்கே கொஞ்சம் பேர்தான் உள்ளனர். நீங்கள் எவ்வளவு குறைவானவர்களாக இருக்கிறீர்கள்! இறுதியில் நிறைய பேர் இருப்பார்கள் என்றாலும் கூட இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது. அவர்கள் அனைவரும் இராவண சம்பிரதாயத்தவர்கள். தந்தை அதிக போதையை ஏற்றுகிறார், பிறகு வெளியில் சென்று குடும்பத்தவரின் முகத்தைப் பார்த்தால் போதை குறைந்து விடுகிறது. அப்படி ஆகக் கூடாது. நீங்கள் தந்தையிடம் ஆன்மீக உரையாடல் நடத்துங்கள் என்று ஆத்மாக்களுக்கு கூறப்படுகிறது - பாபா, நாங்கள் உங்களுடையவராக இருந்தோம், நீங்கள் சொர்க்கத்திற்கு அனுப்பியிருந்தீர்கள். 21 பிறவிகள் இராஜ்யத்தை ஆண்டோம், பிறகு 63 பிறவிகள் துக்கத்தை அடைந்தோம். இப்போது நாங்கள் உங்களிடமிருந்து ஆஸ்தி எடுத்தே தீருவோம். பாபா, நீங்கள் எவ்வளவு நல்லவர்! நாங்கள் உங்களை அரைக் கல்பம் மறந்துவிட்டோம். இது அனாதியாக (முடிவற்ற) உருவாக்கப்பட்ட நாடகம் என்று தந்தை கூறுகிறார். இது என்னுடைய கடமையாகவும் கூட உள்ளது. நான் ஒவ்வொரு கல்பமும் வந்து குழந்தைகளாகிய உங்களை மாயையிடம் விடுவித்து பிராமணராக ஆக்கி சிருஷ்டியின் முதல், இடை கடைசியின் இரகசியத்தைக் கூறுகிறேன். சொர்க்கத்தை உருவாக்க வேண்டிய நேரத்தில் தான் நான் வருகிறேன். நீங்கள் இப்போது ஃபரிஸ்தாக்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். தூய்மையின் காட்சியை கூட காட்டுகிறார். நீங்கள் மோகத்தை வென்றவர்களாகவும் ஆக வேண்டும். யாராவது பாபாவிடம் பாபா நாங்கள் சேவைக்கு போகலாமா! என்று கேட்டால் பாபா கூறுவார் - நீங்கள் மோகத்தை வென்றவர்களாக இருந்தீர்கள் என்றால் நீங்கள் எஜமான், எங்கு வேண்டுமானாலும் சேவை செய்ய செல்லுங்கள். ஏன் குழப்பம் அடைகிறீர்கள்? எஜமான் ஆகி குருடர்களுக்கு வழி காட்ட வேண்டும். மோகத்தை வென்றவர்களாக இல்லை எனும் போது வந்து கேட்கிறார்கள். மோகத்தை வென்றவர்களாக இருந்தார்கள் என்றால் அவர்கள் ஓடுவார்கள். அவர்களால் இருக்க முடியாது. இலட்சியம் மிகப் பெரியது. தந்தை சேவை செய்ய தகுந்த குழந்தைகள் மீது பலியாகி விடுகிறார். இந்த பாபா (பிரம்மா பாபா) முதல் நம்பராக இருந்தார் அல்லவா! அனைவரும் தியாகம் செய்கின்றனர். ஆனாலும் கூட இவருடையது முதல் நம்பர்.

 

ஆத்ம அபிமானி ஆகுங்கள் அதாவது தன்னை அசரீரி என்று புரிந்து கொள்ளுங்கள் என்று பாபா கூறுகிறார். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை கொடுக்கிறார். நல்லது அவர் எப்படி வருவார்? பிரம்மாவின் வாய் மூலம் படைப்பை படைக்கிறார் என்று எழுதவும் பட்டுள்ளது எனும் போது கண்டிப்பாக பிரம்மாவுக்குள் தான் வருவார். பிரம்மாதான் பிரஜாபிதா என்று கூறப்படுகிறார். ஆக அந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடம் வந்து ஆஸ்தியை எடுங்கள். இந்த விஷயங்களைப் புரிய வைப்பதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் எதுவும் இல்லை. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளூக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாராம்:

1. பிரம்மாபாபாவுக்கு சமமாக தியாகம் செய்வதில் முதல் நம்பர் எடுக்க வேண்டும். ருத்ரனின் கழுத்தின் மாலை ஆவதற்காக வாழ்ந்தபடியே பலியாக வேண்டும்.

 

2. சேவை செய்ய தகுந்தவராக ஆவதற்காக மோகத்தை நஷ்டம் செய்தவர் (நஷ்டமோஹா) ஆக வேண்டும். குருடர்களுக்கு வழி காட்ட வேண்டும்.

 

வரதானம்:

ஆசீர்வாதம் மற்றும் மருந்து மூலமாக உடல், மனதின் நோயிலிருந்து விடுபட்டு இருக்கக்கூடிய சதா திருப்தியான ஆத்மா ஆகுக.

 

எப்பொழுதாவது சரீரம் நோய்வாய்ப்பட்டாலும் கூட சரீரத்தின் நோயினால் மனம் கலங்கக் கூடாது. எப்பொழுதும் குஷியில் நடனம் ஆடிக்கொண்டே இருந்தீர்கள் என்றால் சரீரமும் சரியாகிவிடும். மனதினுடைய குஷியினால் சரீரத்தை இயக்கினீர்கள் என்றால் இரண்டு எக்சர்சைஸூம் நடந்துவிடும். குஷி என்பது ஆசீர்வாதம் ஆகும் மற்றும் எக்சர்சைஸ் மருந்தாகும். எனவே, ஆசீர்வாதம் மற்றும் மருந்து ஆகிய இரண்டின் மூலம் உடலில், மனதினுடைய நோயிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள். குஷியினால் வலியும் மறந்துவிடும். சதா உடல், மனதால் திருப்தியாக இருக்க வேண்டும் எனில் அதிகமாக யோசிக்காதீர்கள். அதிகம் யோசிப்பதனால் நேரம் விரயம் ஆகிறது மற்றும் குஷி மறைந்துவிடுகிறது.

 

சுலோகன்:

விஸ்தாரத்தில் கூட சாரத்தைப் பார்ப்பதற்கான பயிற்சி செய்தீர்கள் என்றால் ஸ்திதி எப்பொழுதும் ஒரே நிலையில் (ஏக்ரஸ்) இருக்கும்.

 

ஓம்சாந்தி