18.11.2018        காலை முரளி          ஓம் சாந்தி        ''அவ்யக்த பாப்தாதா''

ரிவைஸ்    04.04.1984      மதுபன்


 

''சங்கமயுகத்தின் சிரேஷ்ட வேளை, சிரேஷ்ட அதிர்ஷ்டத்தின் அடையாள சித்திரத்தை உருவாக்குவதற்கான வேளை''

 

இன்று பாப்தாதா ஒவ்வொரு சிரேஷ்ட பிராமண ஆத்மாவின் சிரேஷ்ட வாழ்க்கையின் ஜென்ம வேளையின் அதிர்ஷ்ட ரேகையைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஜென்ம வேளை (பிறந்த நேரம்) அனைத்து குழந்தைகளுக்கும் சிரேஷ்டம் தான், ஏனென்றால் இப்பொழுது யுகமே புருஷோத்தம சிரேஷ்டமானது. சிரேஷ்ட சங்கமயுகத்தில் அதாவது சிரேஷ்ட வேளையில் அனைவரின் சிரேஷ்ட பிராமண ஜென்மம் ஏற்பட்டது. அனைவரின் ஜென்ம வேளை சிரேஷ்டமானது. அதிர்ஷ்ட ரேகையும், எதிர்காலமும் கூட அனைத்து பிராமணர்களுக்கும் சிரேஷ்டமானது. ஏனென்றால் சிரேஷ்ட தந்தையின் சிவ வம்சி பிரம்மா குமார் மற்றும் குமாரிகள், .சிரேஷ்ட தந்தை, சிரேஷ்ட ஜென்மம், சிரேஷ்ட ஆஸ்தி, சிரேஷ்ட பரிவாரம், சிரேஷ்ட பொக்கிஷங்கள் - அனைவரின் இந்த அதிர்ஷ்ட ரேகை ரேகை ஜென்மத்திலிருந்தே அனைவருக்கும் சிரேஷ்டமானது. வேளையும் சிரேஷ்டமானது. மேலும் பிராப்தியின் காரணமாக அதிர்ஷ்ட ரேகையும் சிரேஷ்டமானது. இந்த அதிர்ஷ்டம் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு தந்தையிடமிருந்து ஒரே மாதிரி பிராப்தி ஆகியிருக்கியிருக்கிறது. இதில் வித்தியாசம் இல்லை. இருந்தும் ஒரே மாதிரி அதிர்ஷ்டம் பிராப்தி ஆகியிருந்தும் வரிசைக்கிரமம் ஏன்? ஒரு தந்தை, ஒரு ஜென்மம், ஒரு ஆஸ்தி, ஒரு பரிவாரம், வேளையும் ஒரு சங்கமயுகம், இருந்தும் வரிசை எண் ஏன்? அனைத்து பிராப்திகள் அதாவது அதிர்ஷ்டமும் அனைவருக்கும் எல்லையின்றி கிடைத்திருக்கிறது. வித்தியாசமாக எப்படி ஆனது? எல்லையில்லா வாழ்க்கையில் கர்மத்தை நடைமுறைப்படுத்துவதன் அடிப்படையில் அவரவர்களின் சக்திக்கு ஏற்றபடி ஆனது, இதன் காரணத்தினால் வித்தியாசம் ஏற்பட்டு விட்டது. பிராமண வாழ்க்கை என்றால் அதிர்ஷ்டத்தை நடைமுறை ரூபத்தில் கொண்டு வருவது. வாழ்க்கையில் கொண்டு வருவது. ஒவ்வொரு காரியத்தில் கொண்டு வருவது, ஒவ்வொரு எண்ணம் மூலம், வார்த்தை மூலம் செய்யும் காரியம் மூலம் நல்ல அதிர்ஷடசாயின் அடையாளம் அனுபவம் ஆக வேண்டும். அதாவது தென்பட வேண்டும். பிராமணன் என்றால் உயர்ந்த அதிர்ஷ்டசா ஆத்மாவின் கண், நெற்றி, வாயின் புன்சிரிப்பு ஒவ்வொரு அடியிலும் அனைவருக்கும் சிரேஷ்ட அதிர்ஷ்டத்தை அனுபவம் செய்விக்க வேண்டும். இதைத் தான் எதிர்காலத்தின் சித்திரத்தை உருவாக்குவது என்று கூறுவது. எதிர்காலத்தை அனுபவம் என்ற எழுதுகோல் மூலம், கர்மம் என்ற காகிதத்தில் ஓவியமாகக் கொண்டு வர வேண்டும். அதிர்ஷ்டத்தை ஓவியத்தில் வரைதல், ஓவியத்தையோ அனைவரும் வரைகின்றீர்கள். ஆனால் சிலருடைய ஓவியம் சம்பன்னமாக (முழுமையாக) இருக்கிறது, மேலும் சிலரின் ஓவியத்தில் ஏதாவது ஒரு விதத்தில் ஏதோ குறை இருந்து விடுகிறது. அதாவது நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வருவதில் சிலருடைய நெற்றியின் ரேகை அதாவது மனதின் எண்ணம், கண்களின் ரேகை அதாவது ஆன்மீக பார்வை, வாயின் புன்முறுவலின் ரேகை அதாவது எப்பொழுதும் அனைத்து பிராப்தி சொரூப திருப்தியான ஆத்மா, திருப்தி தான் புன்முறுவலின் கோடு. கைகளின் ரேகை என்றால் சிரேஷ்ட கர்மத்தின் ரேகை.. காலின் ரேகை என்றால் ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்படி நடப்பதற்கான சக்தி. இந்த விதமாக அதிர்ஷ்டத்தின் ஓவியத்தை உருவாக்குவதில் சிலருக்கு சில  விஷயத்தில் சிலருக்கு வேறு சில விஷயத்தில் வேற்றுமை ஏற்பட்டு விடுகிறது. எப்படி ஸ்தூல ஓவியம் வரைகிறார்கள் என்றாலும் சிலருக்கு கண்களை வரையத் தெரியாது, சிலருக்கு கால்களை வரையத் தெரியாது. சிலருக்கு புன்முறுவல் செய்வதை வரையத் தெரியாது. அப்படி வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது தான் இல்லையா! எந்த அளவு முழுமையான ஓவியமாக இருக்குமோ அந்த அளவு மதிப்புள்ளதாக இருக்கும். ஒரே ஓவியம் லட்சக்கணக்கான ரூபாய்களையும் சம்பாதிக்கும் மேலும் அதே ஓவியம் நூறு ரூபாயும் சம்பாதிக்கும். எந்த விஷயத்தில் வித்தியாசம் ஏற்பட்டது? சம்பன்னமாக இருக்கும் நிலையில் வித்தியாசம் ஏற்பட்டது. அதே மாதிரியே பிராமண ஆத்மாக்களும் அனைத்து ரேகைகளினால் சம்பன்னம் ஆகாமல் இருக்கும் காரணத்தினால் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு ரேகைகளின் சம்பூர்ண நிலை இல்லாத காரணத்தினால் வரிசைக்கிரமம் உண்டாக்கி விடுகிறார்கள்.

 

அம்மாதிரி இன்று உயர்ந்த அதிர்ஷ்டசாலி உள்ள குழந்தைகளின் ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். எப்படி ஸ்தூல அதிர்ஷ்டத்திலும் பல விதமான அதிர்ஷ்டம் இருக்கும். அதே போல் இங்கு அதிர்ஷ்டத்தின் அதாவது அதிர்ஷ்டத்தின் விதவிதமான ஓவியங்களை பார்த்தோம். ஒவ்வொரு ஓவியத்திலும் முக்கியமாக நெற்றி மற்றும் கண் ஓவியத்தின் மதிப்பை அதிகரிக்கும். அதே போல் இங்கேயும் மனதின் உள்உணர்வின் சக்தி மற்றும் கண்களின் ஆன்மீக திருஷ்டியின் சக்தி இதற்குத் தான் மகத்துவம் இருக்கிறது. இது தான் ஓவியத்தின் அஸ்திவாரம். நீங்கள் அனைவரும் என்னுடைய ஓவியம் எந்த அளவு சம்பன்னம் ஆகியிருக்கின்றீர்கள் என்று உங்களுடைய ஓவியத்தை பாருங்கள். உங்களுடைய ஓவியத்தில் அதிர்ஷ்டத்தை உருவாக்குபவர் தென்படும் அளவிற்கு ஓவியம் உருவாகியிருக்கிறதா? ஒவ்வொரு ரேகையையும் சோதனை செய்யுங்கள். இதே காரணத்தினால் வரிசை எண் வந்து விடுகிறது. புரிந்ததா? வள்ளல் ஒருவர், கொடுப்பதும் ஒரே மாதிரி தான். ஆனால் ஆகுபவர்கள் ஆவதில் வரிசைக்கிரமமாக ஆகிவிடுகிறார்கள். சிலர் அஷ்ட மற்றும் இஷ்ட தேவன் ஆகிவிடுகிறார்கள், சிலர் தேவன் ஆகிவிடுகிறார்கள். சிலர் தேவர்களைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்களாக ஆகிவிடுகிறார்கள். தன்னுடைய சித்திரத்தைப் பார்த்து விட்டீர்கள் தான் இல்லையா! நல்லது.

 

சாகார ரூபத்தில் (பௌதீக ரூபத்தில்) சந்திப்பதில் நேரத்தையும் எண்ணிக்கையையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. மேலும் அவ்யக்த சந்திப்பில் நேரம் மற்றும் எண்ணிக்கைக்கான விஷயம் இல்லை. அவ்யக்த சந்திப்பின் அனுபவி ஆகிவிட்டீர்கள் என்றால் அவ்யக்த சந்திப்பின் விசித்திர அனுபவத்தை எப்பொழுதும் செய்து கொண்டே இருப்பீர்கள். பாப்தாதா எப்பொழுதும் குழந்தைகளின் கட்டளைப்படி நடப்பவர் எனவே அவ்யக்தமாக இருந்தும் வியக்தத்தில் வர வேண்டியதாக இருக்கிறது. ஆனால் என்ன ஆக வேண்டும்? அவயக்தம் ஆக வேண்டும் தான் இல்லையா அல்லது வியக்தத்தில் வர வேண்டுமா? அவ்யக்தம் ஆகுங்கள். அவ்யக்தம் ஆவதினால் உடலற்றவராகி தந்தையுடன் வீட்டிற்கு செல்வீர்கள். இப்பொழுது சூட்சுமவதன வழியாக செல்ல வேண்டும், அந்த நிலை வரையிலும் வந்தடையவில்லை. ஃபரிஷ்தா சொரூபத்திலிருந்து நிராகாரமாகி வீடு செல்ல வேண்டும். எனவே இப்பொழுது ஃபரிஷ்தா சொரூபம் ஆகியிருக்கிறீர்களா? அதிர்ஷ்டத்தின் ஓவியத்தை சம்பன்னம் ஆக்கியிருக்கிறீர்களா? சம்பன்ன ஓவியம் தான் ஃபரிஷ்தா. நல்லது.

 

பல மண்டலங்களிலிருந்து வந்திருக்கும் அனைத்து குழந்தைகளுக்கு ஒவ்வொரு மண்டலத்தின் விசேஷத்தையும் சேர்த்து பார்த்து பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார். சிலர் பாஷை தெரியாதவர்களாக இருந்த போதிலும், அன்பு மற்றும் பாவனையின் பாஷையை தெரிந்து கொள்வதில் புத்திசாலிகள். மேலும் வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் முரளியின் பாஷையை தெரிந்திருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடியாதவர்களும் அன்பு மற்றும் பாவனை மூலம் புரிந்து கொள்கிறார்கள். வங்காளம், பீகாரோ எப்பொழுதும் வசந்த காலத்தில் இருக்கிறார்கள். எப்பொழுதும் வசந்த காலம் தான்.

 

பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை பசுமையாக ஆக்குபவர்கள். பஞ்சாபில் விவசாயம் நன்றாக இருக்கிறது. ஹரியானாவோ எப்பொழுதுமே பசுமை (ஹரா) நிறைந்தது. பஞ்சாப் ஹரியானா எப்பொழுதுமே பசுமையால் நிரம்பியிருக்கும். எங்கு பசுமை இருக்குமோ அந்த ஸ்தானத்தை எப்பொழுதும் நல்ல சிரேஷ்ட ஸ்தானம் என்று கூறப்படும். பஞ்சாப் ஹரியானா எப்பொழுதும் குஷியில் பசுமையாக இருக்கிறது. எனவே பாப்தாதாவும் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். இராஜஸ்தானுக்கு என்ன விசேஷம் இருக்கிறது. இராஜஸ்தான் ஓவியம் வரைவதில் பிரசித்தியானது. இராஜஸ்தானின் ஓவியங்கள் மிகுந்த மதிப்புள்ளவைகளாக இருக்கும். ஏனென்றால் நிறைய இராஜாக்கள் வாழ்ந்த இடம் இல்லையா! அந்த மாதிரி இராஜஸ்தான் அதிர்ஷ்டத்தின் (தேவதா) ஓவியத்தை மிக அதிகமாக மதிப்புள்ளதாக வரைபவர்கள். ஓவியங்கள் வரைவதில் எப்பொழுதும் சிரேஷ்டமானவர்கள். குஜராத்தில் என்ன விசேஷம் இருக்கிறது? அங்கு கண்ணாடிகளின் அலங்காரம் அதிகமாக இருக்கும். எனவே குஜராத் கண்ணாடி. கண்ணாடியில் தந்தையின் உருவம் பார்க்க வேண்டும். கண்ணாடியில் முகம் பார்ப்பார்கள் இல்லையா! எனவே குஜராத்தின் கண்ணாடி மூலம் தந்தையின் ரூபம், ஃபரிஷ்தா சொரூபத்தின் ரூபம் அனைவருக்கும் காண்பிக்கும் விசேஷம் இருக்கிறது. குஜராத்தின் விசேஷம் தந்தையை பிரத்யக்ஷம் செய்யும் கண்ணாடி. மற்றபடி சின்னஞ்சிறு தமிழ்நாடு மீதம் இருக்கிறது. சிறியவர்கள் தான் அதிசயம் செய்வார்கள். பெரிய காரியம் செய்து காண்பிப்பார்கள். தமிழ்நாடு என்ன செய்வீர்கள்? அங்கு கோவில்கள் அதிகம் இருக்கின்றன. கோவில்களில் நாதஸ்வரம் வாசிப்பார்கள். தமிழ்நாட்டின் விசேஷம் மேளதாளம் வாசித்து தந்தையின் பிரத்யக்ஷத்தின் செய்தியை பரப்ப வேண்டும். நல்ல விசேஷம் இருக்கிறது. சிறு வயதிலேயே நாதஸ்வரம் வாசிப்பார்கள். பக்தர்களும் மிகவும் அன்போடு நாதஸ்வரம் வாசிப்பார்கள், மேலும் குழந்தைகளும் அன்போடு நாதஸ்வரம் வாசிப்பார்கள். இப்பொழுது ஒவ்வொரு ஸ்தானமும் தன்னுடைய விசேஷத்தை பிரத்யக்ஷ சொரூபத்தில் கொண்டு வாருங்கள். அனைத்து மண்டலத்தை சேர்ந்தவர்களையும் சந்தித்து விட்டோம் இல்லையா. இறுதியிலும் இந்த மாதிரியே சந்திப்பு இருக்கும். பழைய குழந்தைகள் எங்களை ஏன் அழைக்கவில்லை என்று கூறுகிறார்கள். பிரஜைகளையும் உருவாக்குகிறார்கள். வளர்ச்சி அடையவும் செய்கிறார்கள். எனவே பழையவர்கள் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் எண்ணிக்கை அதிகரிக்கும். பழையவர்களும் பழைய மாதிரியே நடந்து கொண்டே இருந்தார்கள் என்றால் புதியவர்களுக்கு என்னவாகும்? பழையவர்கள் வள்ளல், புதியவர்கள் பெறுபவர்கள். எனவே வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதில் வள்ளலாக ஆக வேண்டியதாக இருக்கும். ஸ்தூல சந்திப்பில் அனைத்து எல்லைகளும் வந்து விடுகிறது. அவ்யக்த சந்திப்பில் எந்த எல்லையும் கிடையாது. எண்ணிக்கை அதிகரித்தால் பிறகு என்ன ஆகும் என்று சிலர் கேட்கிறார்கள். ஸ்தூல சந்திப்பின் விதியும் மாறும் தானே! எப்பொழுது எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றால் கொஞ்சம் தான தர்மமும் செய்ய வேண்டியதாக இருக்கும். நல்லது.

 

அனைத்து பாரதம் மற்றும் வெளிநாட்டின் நாலாபுறங்களிலுள்ள அன்பிற்குரிய குழந்தைகளின் அன்பு நிறைந்த இதயத்தின் ஓசை, குஷியின் பாடல் மற்றும் இதயத்தின் செய்திகள் நிரம்பிய கடிதங்களுக்கு பதிலாக பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் பல கோடி மடங்கு அன்பு நினைவின் கூடவே எப்பொழுதும் நினைவினால் அமரர் ஆகுக என்ற வரம் பெற்றவராகி முன்னேறிக் கொண்டே இருங்கள் மற்றும் முன்னேற்றிக் கொண்டே இருங்கள். அனைத்து ஊக்கம் உற்சாகத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாப்தாதா சுயமுன்னேற்றம் மற்றும் சேவையின் முன்னேற்றத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார். வாழ்த்துக்களுக்கு உரியவர் ஆகுங்கள் எப்பொழுதும் உடன் இருப்பவராக ஆகுங்கள். எப்பொழுதும் சம்பன்னம் மற்றும் சம்பூர்ணமானவராக இருங்கள் என்ற வரம் பெற்ற அனைத்து குழந்தைகளுக்கு பாப்தாதா மீண்டும் அன்பு நினைவுகள் கொடுக்கிறார். அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

பார்ட்டிகளுடன் சந்திப்பு:

எப்பொழுதும் தன்னை தந்தைக்குச் சமமான சம்பன்ன ஆத்மா என்று நினைக்கிறீர்களா? யார் சம்பன்னமாக இருக்கிறாரோ அவர் எப்பொழுதும் முன்னேறிக் கொண்டே இருப்பார். சம்பன்னம் இல்லை என்றால் முன்னேறிச் செல்ல முடியாது. எப்படித் தந்தையோ அப்படி குழந்தைகள். தந்தை கடலாக இருக்கிறார் என்றால் குழந்தைகள் மாஸ்டர் கடல். ஒவ்வொரு குணத்தையும் சோதனை செய்யுங்கள். எப்படி தந்தை ஞானத்தின் கடலாக இருக்கிறார் என்றால் நான் மாஸ்டர் ஞான கடல். தந்தை அன்பின் கடலாக இருக்கிறார் என்றால் நான் மாஸ்டர் அன்பின் கடல். அந்த மாதிரி சமநிலையை சோதனை செய்யுங்கள். அப்பொழுது தான் தந்தைக்குச் சமமாக சம்பன்னம் ஆகி எப்பொழுதும் முன்னேறிச் சென்று கொண்டே இருப்பீர்கள். புரிந்ததா. எப்பொழுதும் அந்த மாதிரி சோதனை செய்து கொண்டே இருங்கள். யாரை முழு உலகமும் தேடுகிறதோ அவர் என்னை தன்னுடையவர் ஆக்கி விட்டார் என்ற இதே குஷியில் எப்பொழுதும் இருங்கள்.

 

அவ்யக்த மகாவாக்கியம் - உலகிற்கு நன்மை செய்பவர் ஆகுங்கள்

 பாப்தாதா குழந்தைகள் உங்களை உலக சேவைக்காக பொறுப்பாளர் ஆக்கியிருக்கிறார். உலகின் எதிரில் தந்தையைக் காண்பிப்பவர்கள் குழந்தைகள் நீங்கள். குழந்தைகள் மூலமாகத் தான் தந்தை தென்படுவார். முதுகெலும்பாகவோ தந்தை இருக்கவே இருக்கிறார். ஒருவேளை தந்தை முதுகெலும்பாக ஆகவில்லை என்றால் தனியாக நீங்கள் களைப்படைந்து விடுவீர்கள். எனவே தந்தையை முதுகெலும்பு என்று புரிந்து உலக நன்மைக்கான சேவையில் உடல், மனம், பணம், செல்வம், எண்ணம், சொல், செயலால் பிஸியாக இருந்தீர்கள் என்றால் சுலபமாகவே மாயாவை வென்றவர் ஆகிவிடுவீர்கள்.

 

தற்சமயம் முழு உலகத்தில் அற்பகாலத்தின் பிராப்தி என்ற பழம் மற்றும் மலர் காய்ந்திருக்கின்றன. அனைவரும் மனதால், வாயினால் கதறிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் எப்படியாவது வலுக்கட்டாயத்தினால் வாழ்க்கையை தேசத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் குஷியோடு நடப்பது முடிவடைந்து விட்டது. அந்த மாதிரி வலுக்கட்டாயத்தில் நடந்து கொள்பவர்களுக்கு பிராப்தி என்ற இறக்கையை கொடுத்து பறக்க வையுங்கள். ஆனால் நீங்களே எப்பொழுது பறக்கும் கலையில் இருப்பீர்களோ அப்பொழுது தான் அவர்களை பறக்க வைக்க முடியும். இதற்காக தந்தைக்குச் சமமாக உலகிற்கு நன்மை செய்பவரின் எல்லைக்கப்பாற்பட்ட நிலையில் நிலைத்திருந்து உலகின் அனைத்து ஆத்மாக்களுக்கு சக்தி கொடுங்கள். உலகைச் சுற்றி வலம் வாருங்கள். எப்படி பூமி உருண்டையின் மேல் ஸ்ரீகிருஷ்ணன் அமர்ந்திருப்பதாக படங்களில் காண்பிக்கிறார்கள். அந்த மாதிரி பூமி உருண்டையின் மேல் உட்கார்ந்து நாலாபுறங்களிலும் பார்வையை சுழற்றுங்கள். பிறகு தானாகவே உலகத்தை சுற்றி வலம் வந்து விடுவீர்கள். பொதுவாகவே எப்பொழுது மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு சென்று விடுகிறார்களோ அப்பொழுது சுற்றி வர வேண்டியது இருக்காது. ஆனால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே அனைத்தும் தென்படும். எப்பொழுது நீங்கள் உங்களுடைய உயர்ந்த நிலையில், விதை ரூப நிலையில், உலகிற்கு நன்மை செய்பவர் என்ற நிலையில் நிலைத்திருப்பீர்களோ அப்பொழுது முழு உலகமும் சிறிய பந்து மாதிரி தென்படும். பிறகு ஒரு நொடியில் சுற்றி வலம் வந்து விடுவீர்கள்.

 

நீங்கள் அனைத்து ஆத்மாக்களின் தந்தையின் குழந்தைகள், அனைத்து ஆத்மாக்களும் உங்களுடைய சகோதரர்கள். எனவே உங்களுடைய சகோதரர்கள் மேல் எண்ணத்தின் பார்வையை ஓட விடுங்கள். விசாலபுத்தி, தொலைநோக்குப் பார்வை உடையவராக ஆகுங்கள். சின்னச்சின்ன விஷயங்களில் தன்னுடைய நேரத்தை இழக்காதீர் கள். உயர்ந்த நிலையில் நிலைத்திருந்து இப்பொழுது விசால காரியம் செய்வதற்கு பொறுப்பாளர் ஆகுங்கள். ஹே! உலகிற்கு நன்மை செய்யும் ஆத்மாக்களே எப்பொழுதும் விசால காரியம் செய்வதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். அனைவரின் விசேஷங்கள் மூலமாகத் தான் உலக நன்மைக்கான எல்லைக்கப்பாற்பட்ட காரியம் சம்பன்னம் ஆகும். எப்படி ஸ்தூலமான ஏதாவது பதார்த்தத்தை உருவாக்குகிறீர்கள் என்றாலும் அதில் ஒருவேளை அனைத்து பொருட்களையும் போடவில்லை, சாதாரண இனிப்பு அல்லது உப்பும் இல்லை என்றால் எவ்வளவு தான் மிக நல்ல பொருளை உருவாக்கினாலும் அது அருந்துவதற்கு தகுதியானதாக ஆக முடியாது. அதே போலவே உலகின் இவ்வளவு சிரேஷ்ட காரியத்திற்காக ஒவ்வொரு இரத்தினத்தின் அவசியம் இருக்கிறது. அனைவரின் விரல் தேவையாக இருக்கிறது. ஒவ்வொருவரின் விரல் மூலமாகத் தான் உலக மாற்றத்தின் காரியம் சம்பன்னம் ஆகும்.

 

உலகத்தில் சதா காலத்திற்காக சுகம் மற்றும் சாந்தியின் கொடி பறக்க வேண்டும் என்பது தான் பாப்தாதாவின் விருப்பம். எப்பொழுதும் நிம்மதியின் புல்லாங்குழல் ஒத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த இலட்சியத்தை எடுத்துக் கொண்டு அனைவரின் சகயோகத்தின் விரல் மூலம் விசால காரியத்தை சம்பன்னம் ஆக்குங்கள். பிராமண குழந்தைகள் உங்களுடைய விசேஷ கடமை - மாஸ்டர் ஞான சூரியன் ஆகி முழு உலகிற்கும் அனைத்து சக்திகளின் கிரணங்களைக் கொடுக்க வேண்டும். எனவே அனைவரும் உலகிற்கு நன்மை செய்வராகி உலகிற்கு அனைத்து சக்திகளின் கிரணங்களை கொடுங்கள். எப்படி சூரியன் தன்னுடைய கிரணங்கள் மூலமாக உலகை பிரகாசம் ஆக்குகிறது. அதே போல் நீங்கள் மாஸ்டர் ஞான சூரியன் ஆகி அனைத்து சக்திகளின் கிரணங்களை உலகில் பரப்புங்கள். அப்பொழுது தான் அனைத்து ஆத்மாக்களுக்கு உங்களுடைய சக்தி கிடைக்க முடியும்.

 

நீங்கள் உலகின் தீபம், அழியாத தீபம் ஆவீர்கள். இதனுடைய நினைவுச் சின்னமாகத் தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதுவரையிலும் உங்களுடைய மாலையை ஜபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இருளை பிரகாசமாக ஆக்குபவர்களாக ஆகியிருக்கிறீர்கள். எனவே தன்னை அந்த மாதிரி எப்பொழுதும் சுடர் விட்டு எரியும் தீபமாக அனுபவம் செய்யுங்கள். எவ்வளவு தான் புயல் வந்தாலும் ஆனால் எப்பொழுதும் ஒரே சீராக இடைவிடாது எரியும் ஜோதிக்கு சமமாக எரிந்து கொண்டிருக்கும் தீபம். அந்த மாதிரி தீபங்களை உலகமும் வணங்குகிறது. மேலும் தந்தையும் அந்த மாதிரி தீபங்களின் உடன் இருக்கிறார். எப்படி தந்தை எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் ஜோதியாக, அகண்ட ஜோதியாக, அமர ஜோதியாக இருக்கிறார். அதே போல் குழந்தைகள் நீங்களும் எப்பொழுதும் அமர ஜோதியாகி உலகின் இருளை அகற்றும் சேவை செய்யுங்கள். உலகின் ஆத்மாக்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தீபங்கள் உங்கள் பக்கம் மிக அன்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இரவைப் பகலாக ஆக்கும் சைத்தன்ய தீபங்கள். எத்தனை ஆத்மாக்கள் இருளில் அலைந்து திரிந்து வெளிச்சத்திற்காக துடித்துக் கொண்டிருக்கிறார்கள்! ஒருவேளை தீபங்கள் உங்களுடைய வெளிச்சம் விட்டு விட்டு எரிகிறது என்றால் அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களின் நிலை என்னவாகும்? அணைந்து அணைந்து எரியும் விளக்கை யாரும் விரும்புவதில்லை. எனவே பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஜோதியாகி இருளை அகற்றுவதற்கான பொறுப்பான ஆத்மா நான் என்று புரிந்து நடந்து கொண்டீர்கள் என்றால் தான் உலகிற்கு நன்மை செய்பவர் என்று கூறுவோம்.

 

நீங்கள் பூர்வஜ் ஆத்மாக்கள், உங்களுடைய உள்உணர்வு உலகின் சூழ்நிலையை பரிவர்த்தனை செய்யக்கூடியது. பூர்வஜமான உங்களுடைய திருஷ்டி அனைத்து வம்சாவளிகளுக்கு சகோதரத்துவத்தின் நினைவூட்டக்கூடியது. பூர்வஜமான நீங்கள் தந்தையின் நினைவிலிருந்து அனைத்து வம்சாவளிகளுக்கு அனைவரின் தந்தை வந்து விட்டார் என்ற நினைவூட்டுங்கள். பூர்வஜம் உங்களுடைய சிரேஷ்ட காரியம். வம்சாவளிகளுக்கு சிரேஷ்ட சரித்திரம் அதாவது சரித்திரத்தை உருவாக்கும் நல்விருப்பத்தை உருவாக்கக்கூடியது. அனைவரின் பார்வை மூதாதையர் உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. எனவே இப்பொழுது எல்லைக்கப்பாற்பட்ட நினைவு சொரூபம் ஆகுங்கள். எப்படி தந்தையின் மகிமையாக 'பலமற்றவர்களுக்கு பலம் கொடுப்பவர்' என்று பாடுகிறார்கள். அதே போல் நீங்கள் அனைவரும் பிராமண பரிவாரத்திலும் அல்லது உலகின் ஒவ்வொரு ஆத்மா மீது பலமற்றவர் களுக்கு பலம் கொடுக்கக்கூடிய மகாபலம் நிரம்பியவர் ஆகுங்கள். எப்படி அந்த மனிதர்கள் ஏழ்மையை அகற்றுங்கள் என்று கோஷமிடுகிறார்கள், அதே போல் நீங்கள் பலமின்மையை அகற்றுங்கள். அந்த மாதிரி பொறுப்பாளர் ஆகி உலகின் ஒவ்வொரு ஆத்மாவையும் தந்தையிடமிருந்து தைரியம் மற்றும் உதவியைப் பெற வையுங்கள். நல்லது.

 

வரதானம் :

முழு ஈடுபாட்டின் அக்னியில் அனைத்து கவலைகளை அழிக்கக்கூடிய நிச்சயபுத்தியுடைய கவலையற்றவர் ஆகுக.

 

எந்தக் குழந்தைகள் நிச்சயபுத்தி உடையவர்களாக இருப்பார்களோ அவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவலையின்றி இருப்பார்கள். கவலைகள் அனைத்தும் அகன்று விட்டன. தந்தை கவலைகளின் சிதையிலிருந்து தூக்கி இதய சிம்மாசனத்தில் அமர வைத்து விட்டார். தந்தை மேல் அன்பின் முழு ஈடுபாடு ஏற்பட்டது. அந்த ஈடுபாட்டின் ஆதாரத்தில், ஈடுபாட்டின் அக்னியில் அனைத்து கவலைகளும் ஒன்றுமே இல்வை என்பது போல் அழிந்து விட்டன. உடலின் எந்த கவலையும் இல்லை, மனதின் ஏதாவது வீணான கவலையும் இல்லை. மேலும் பணம் செல்வத்தின் எந்தக் கவலையும் இல்லை. என்ன ஆகும். . . ஞானத்தின் சக்தி மூலம் அனைத்தையும் தெரிந்து கொண்டீர்கள். எனவே அனைத்து கவலைகளிலிருந்து விடுபட்டு கவலையில்லா வாழ்க்கை ஆகிவிட்டது.

 

சுலோகன்:

எந்த விதமான பிரச்சனையும் புத்தி என்ற கால்களை அசைக்க முடியாத அளவிற்கு ஆடாத அசையாதவர் ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி