23.12.2018                           காலை முரளி                ஓம் சாந்தி                        ''அவ்யக்த பாப்தாதா''

ரிவைஸ்           12.03.1984           மதுபன்


 

'' ஆன்மீகத் தன்மைக்கான சகஜ விதி - திருப்தி ''

 

இன்று பாப்தாதா நாலாபுறங்களிலுமுள்ள தூரத்தில் இருந்த போதிலும் அருகில் இருக்கக்கூடிய அனைத்து குழந்தைகளின் திருப்தி மற்றும் ஆன்மீகத் தன்மை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த புன்முறுவலை பார்த்துக் கொண்டிருந்தனர். திருப்தி ஆன்மீகத் தன்மைக்கான சகஜ விதி. பிரசன்னமாக இருப்பது சகஜ சித்தி (வெற்றி). யாரிடம் திருப்தி இருக்கிறதோ அவர் எப்பொழுதும் பிரசன்ன சொரூபமாக அவசியம் தென்படுவார். திருப்திகளின் அனைத்து பிராப்தி சொரூபம். திருப்தி எப்பொழுதும் ஒவ்வொரு விசேஷத்தையும் தாரணை செய்வதற்கான சுலபமான சாதனம். திருப்தி என்ற பொக்கிஷம் அனைத்து பொக்கிஷங்களையும் இயல்பாகவே தன் பக்கம் ஈர்க்கிறது. திருப்தி ஞான பாடத்தின் நடைமுறை நிரூபணம். திருப்தி கவலையில்லா இராஜா ஆக்கிவிடுகிறது. திருப்தி எப்பொழுதும் சுயமரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பதற்கான சாதனம். திருப்தி பெரும் வள்ளலாக, உலகிற்கு நன்மை செய்பவராக, வரம் அளிப்பவராக, சுலபமாகவும், நிரந்தரமாகவும் ஆக்கிவிடுகிறது. திருப்தி எல்லைக்குட்பட்ட எனது, உனது என்ற சக்கரத்திலிருந்து விடுவித்து சுயதரிசன சக்கரதாரி ஆக்குகிறது. திருப்தி எப்பொழுதும் தீய எண்ணமற்ற, ஒரே ஒருவரின் (பாபா) ரசனை என்ற வெற்றி ஆசனத்திற்கு அதிகாரியாக ஆக்குகிறது. எப்பொழுதும் பாப்தாதாவின் இதயசிம்மாசனதாரி, சகஜமாக நினைவு என்ற திலகமிட்டவர், உலக மாற்றத்தின் சேவையின் கிரீடமணிந்தவர் என்ற இந்த அதிகாரங்களின் சம்பன்ன சொரூபத்தில் நிலைத்திருக்கச் செய்கிறது. திருப்தி பிராமண வாழ்க்கைக்கான உயிர்தானம். பிராமண வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான சகஜ சாதனம் தன் மேல் திருப்தி, ஈஸ்வர்ய குடும்பத்தின் மீது திருப்தி, மேலும் பரிவாரம் அவர் மேல் திருப்தியாக இருப்பது. எந்தவொரு சூழ்நிலையிலும் வாயுமண்டலம், வைப்ரேஷனின் குழப்பத்திலும் திருப்தியாக இருப்பவர். அந்த மாதிரி திருப்தி சொரூப சிரேஷ்ட ஆத்மா வெற்றி இரத்தினத்தின் சான்றிதழை பெறுவதற்கு உரியவர்.

 

(1) தன் மீது தானே திருப்தியாக இருப்பது (2) தந்தை மூலமாக எப்பொழுதும் திருப்தியாக இருப்பது (3) பிராமண குடும்பத்தின் மூலமாக திருப்தியாக இருப்பது இதன் மூலம் தன்னுடைய நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை சிரேஷ்டமாக ஆக்கிக் கொள்ள முடியும். இப்பொழுது கூட சான்றிதழ் பெறுவதற்கான நேரம் இருக்கிறது, பெற முடியும், ஆனால் அதிக நேரம் இல்லை. இப்பொழுது கால தாமதம் ஆகிவிட்டது, ஆனால் அதிக காலதாமதம் (டூ லேட்) ஆகவில்லை. இப்பொழுது கூட திருப்தி என்ற விசேஷம் மூலம் முன்னேறிச் செல்ல முடியும். இப்பொழுது கடைசியாக வந்தவரும் வேகமாகச் சென்று முதலில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது இல்லையெனில் பிறகு கடைசியில் வந்தவர் கடைசியாகவே இருந்துவிடுவார் என்று பாப்தாதா இதே சான்றிதழை சோதனை செய்து கொண்டிருந்தார். நீங்களே உங்களை சோதனை செய்ய முடியும். மகிழ்ச்சி நிறைந்து இருக்கிறேனா அல்லது கேள்வி நிறைந்து இருக்கிறேனா? இரட்டை வெளிநாட்டினர் மகிழ்ச்சி நிறைந்து இருக்கிறீர்களா மற்றும் திருப்தியாக இருக்கிறீர்களா? கேள்வி அகன்று விட்டது என்றால் பிரசன்னமாக ஆகியே விட்டீர்கள். திருப்தியாக இருப்பதின் நேரமே சங்கமயுகம். திருப்தியின் ஞானமும் இப்பொழுது தான் கிடைக்கிறது. அங்கே சத்யுகத்தில் திருப்தி மற்றும் அதிருப்தி என்பதின் ஞானத்திலிருந்து விலகியிருப்பீர்கள். இப்பொழுது சங்கமயுகத்தின் பொக்கிஷம் தான் இது. நீங்கள் அனைவரும் திருப்தியான ஆத்மாக்கள், அனைவருக்கும் திருப்தி என்ற பொக்கிஷத்தை கொடுப் பவர்கள். வள்ளலின் குழந்தைகள் நீங்கள் மாஸ்டர் வள்ளல். அந்த அளவு சேமித்திருக்கிறீர்கள் தான் இல்லையா? கையிருப்பை முழுமையாக நிரப்பி விட்டீர்களா? அல்லது கொஞ்சம் குறைவு இருக்கிறதா? ஒருவேளை கையிருப்பு குறைவாக இருக்கிறது என்றால் உலகிற்கே நன்மை செய்பவராக ஆக முடியாது. வெறும் நன்மை செய்பவராக மட்டும் ஆக முடியும். ஆனால் தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும் இல்லையா. நல்லது.

 

அனைத்து பாரதம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அனைத்து பொக்கிஷங்களினால் நிரம்பி மாஸ்டர் சர்வ சக்திவானாகி சென்று கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? வருவது என்றால் செல்லவும் வேண்டும். தந்தையும் வருகிறார் என்றால் சென்றும் விடுகிறார் இல்லையா? குழந்தைகளும் வருகிறார்கள் மேலும் சம்பன்னம் ஆகிச் செல்கிறார்கள். மற்றவர்களை தந்தைக்குச் சமமாக ஆக்குவதற்காகச் செல்கிறார்கள். தன்னுடைய பிராமண பரிவாரத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்காக செல்கிறார்கள். தாகத்திலிருக்கும் ஆத்மாக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காகச் செல்கிறார்கள், எனவே தான் சென்று கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? தன்னுடைய மனம் விருப்பப்படியோ மற்றும் பந்தனத்திலேயோ சென்று கொண்டிருக்கவில்லை. ஆனால் தந்தையின் டைரக்ஷன் பிரகாரம் சேவைக்காக கொஞ்ச காலத்திற்காக சென்று கொண்டிருக்கிறீர்கள். அந்த மாதிரி புரிந்து சென்று கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? நானோ அமெரிக்காவைச் சேர்ந்தவன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவன் என்று அப்படி நினைத்து சென்று கொண்டிருக்கவில்லையே ! கொஞ்ச காலத்திற்காக பாப்தாதா உங்களை சேவை செய்வதற்காக பொறுப்பாளர் ஆக்கி அனுப்புகிறார். தந்தை அனுப்பிக் கொண்டிருக்கிறார். நீங்கள் உங்களுடைய மனவிருப்பப்படி சென்று கொண்டிருக்கவில்லை. என்னுடைய வீடு, என்னுடைய தேசம் என்று அப்படியில்லை. தந்தை உங்களை சேவை ஸ்தானத்திற்கு அனுப்புகிறார். நீங்கள் அனைவரும் எப்பொழுதும் விலகியிருப்பவர்கள் மற்றும் தந்தையின் பிரியமானவர்கள், எந்த பந்தனமும் இல்லை. சேவையின் பந்தனமும் இல்லை. தந்தை அனுப்பியிருக்கிறார், அவருக்குத் தான் தெரியும். பொறுப்பாளர் ஆகியிருக்கிறோம். எதுவரையிலும் மற்றும் எந்த இடத்திற்கு பொறுப்பாளர் ஆக்கியிருக்கிறாரோ அதுவரையிலும் பொறுப்பாளர். அந்த மாதிரி டபுள் லைட்டாக இருக்கிறீர்கள் இல்லையா? பாண்டவர்களும் விலகியிருப்பவர்கள் மற்றும் அன்பானவர்கள் தான் இல்லையா? பந்தனம் உள்ளவர்களோ யாரும் இல்லை. விலகியிருப்பவராக ஆவது தான் அன்பானவர் ஆவது. நல்லது.

 

எப்பொழுதும் திருப்தியின் ஆன்மீகத்தன்மையில் இருக்கக்கூடிய, பிரசன்னம் நிறைந்து இருக்கக்கூடிய, எப்பொழுதும் ஒவ்வொரு எண்ணம், சொல், செயல் மூலமாக அனைவருக்கும் திருப்தியின் பலம் கொடுக்கக்கூடிய, மனமுடைந்து போன ஆத்மாக்களை பொக்கிஷங்களினால் சக்திசாலியாக ஆக்கக்கூடிய, எப்பொழுதும் உலகிற்கு நன்மை செய்யக்கூடிய, எல்லைக்கப்பாற்பட்ட கவலையில்லா இராஜாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

அவ்யக்த பாப்தாதாவுடன் தாதி மற்றும் தாதி ஜானகி அவர்களின் சந்திப்பு -

புனித அன்னப்பறவைகளின் ரூப் - பசந்த் -ன் ஜோடி நன்றாக இருக்கிறது. இவர் (ஜானகி தாதி) அமைதியான ரூபமாகி, சேவை செய்வதற்கு அதிகம் விரும்புகிறார். மேலும் இவருக்கோ (தாதி) பேசவோ வேண்டிய திருக்கிறது. அவர் எப்பொழுது விரும்பினாலும் ஏகாந்தத்தில் சென்று விடுகிறார். இவருக்கு ரூபம் மூலம் செய்யும் சேவை விருப்பமாக இருக்கிறது, அனைவருமே ஆல்ரவுண்டர்கள் தான். இருந்தும் இவர்கள் இருவரும் ரூப் மற்றும் பசந்தின் ஜோடி. பொதுவாக இரண்டு விதமான சம்ஸ்காரங்களின் தேவை இருக்கிறது. எங்கு வார்த்தைகள் காரியம் செய்ய முடியாதோ அங்கு ரூபம் காரியம் செய்யும், மேலும் எங்கு ரூபம் காரியம் செய்ய முடியாதோ அங்கு பசந்த் காரியம் செய்யும். எனவே இவர்கள் நல்ல ஜோடி! யார் ஜோடி ஆகிறார்களோ அவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். அந்த ஜோடியும் நன்றாக இருந்தது (தீதியைப் பற்றி கூறுகிறார்). இந்த ஜோடியும் நன்றாக இருக்கிறது. நாடகத்தில் அவர் குப்த (மறைவான) நதியாகி விட்டார். அவர் மேல் இரட்டை வெளிநாட்டினருக்கும் மிகுந்த அன்பு இருந்தது. பரவாயில்லை. தீதியின் இன்னொரு ரூபத்தை பார்த்து விட்டீர்கள். அனைவரும் பார்த்து எவ்வளவு குஷி அடைகிறார்கள். அனைத்து மகாரதிகளும் உடன் இருக்கிறார்கள். பிரிஜ் இந்திரா, நிர்மல் சாந்தா அனைவரும் தூர இடத்தில் இருந்த போதும் துணையாக இருக்கிறார்கள். சக்திகளின் நல்ல சகயோகம் கிடைக்கிறது. அனைவரும் ஒருவர் இன்னொருவரை முன்னுக்கு வைக்கும் காரணத்தினால் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பொறுப்பாளர்களாக சக்திகளை முன்னுக்கு வைக்கும் காரணத்தினால் அனைவரும் முன்னுக்கு இருக்கிறார்கள். சேவை அதிகரிப்பதற்கான காரணமே ஒருவர் இன்னொருவரை முன்னுக்கு வைப்பது தான். உங்களுக்குள் அன்பு இருக்கிறது, ஒற்றுமை இருக்கிறது. எப்பொழுதும் மற்றவர்களின் விசேஷத்தை வர்ணிப்பது தான் சேவையை வளர்ச்சி அடையச் செய்வது. இதே விதியை கடைப்பிடித்ததினால் எப்பொழுதும் வளர்ச்சி அடைந்தது, மேலும் அடைந்து கொண்டே இருக்கும். எப்பொழுதும் விசேஷத்தை பார்ப்பது மேலும் விசேஷத்தைப் பார்ப்பதற்காக மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது இது தான் குழு என்ற மாலையின் கயிறு ஆகும். முத்துக்களையும் கயிறில் கோர்ப்பார்கள் இல்லையா? குழுவின் கயிறே இது தான். விசேஷத்தைத் தவிர வேறு எந்த வர்ணனையும் இல்லை. ஏனென்றால் மதுபன் மகான் பூமி. மகாபாக்கியமும் இருக்கிறது என்றால், மகாபாவமும் இருக்கிறது, மதுபன்னிலிருந்து சென்று விட்டு ஒருவேளை யாராவது அந்த மாதிரி வீணானதைப் பேசுகிறார் என்றால், அது மிகுந்த பாவமாக ஆகிவிடுகிறது. எனவே எப்பொழுதும் விசேஷத்தைப் பார்க்கும் கண்ணாடி அணிந்திருக்க வேண்டும். வீணானதைப் பார்க்கக் கூடாது. சிகப்பு கண்ணாடி மூலம் சிகப்பைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. எனவே விசேஷத்தைப் பார்க்கும் கண்ணாடி எப்பொழுதுமே அணியப்பெற்றிருக்க வேண்டும். எப்பொழுதாவது ஏதாவது விஷயத்தைப் பார்த்தாலும் கூட அதைப் பற்றி ஒருபொழுதும் வர்ணனை செய்யாதீர்கள். வர்ணனை செய்தீர்கள் என்றால் உடனே பாக்கியம் சென்று விட்டது. ஏதாவது குறை இருக்கிறது என்றால், அதற்கு பொறுப்பு தந்தை. இவர்களை தந்தை தான் பொறுப்பாளர் ஆக்கினார் இல்லையா? எனவே பொறுப்பிருப்பவர்களிலின் குறையை வர்ணிப்பது என்றால் தந்தையின் குறையை வர்ணிப்பது. எனவே இவர்களைப் பொறுத்தளவில் சுபபாவனையைத் தவிர வேறு எதையும் ஒருபொழுதும் வர்ணனை செய்ய முடியாது.

 

பாப்தாதாவோ இரத்தினங்களான உங்களை தன்னைவிடவும் சிரேஷ்டமானவர்களாகப் பார்க்கிறார். தந்தையின் அலங்காரம் இவர்கள் தான் இல்லையா? அப்படி தந்தையை அலங்கரிக்கக்கூடிய குழந்தைகள் சிரேஷ்டமாக ஆகிறார்கள் இல்லையா? பாப்தாதாவோ குழந்தைகளின் மகிமை செய்து குஷி அடைந்து கொண்டே இருக்கிறார். ஆஹா என்னுடைய இந்த இரத்தினம்! ஆஹா என்னுடைய இந்த இரத்தினம்! என்ற இதே மகிமையைத் தான் செய்து கொண்டே இருக்கிறார். தந்தை ஒருபொழுதும் யாருடைய பலஹீனத்தையும் பார்ப்பதில்லை. சமிக்ஞை கொடுக்கிறார் என்றாலும் கூட விசேஷம் நிரம்பிய மரியாதைப்பூர்வமான சமிக்ஞை கொடுக்கிறார். இல்லை என்றால் தந்தைக்கோ அதிகாரம் இருக்கிறது இல்லையா? ஆனாலும் எப்பொழுதும் மரியாதை கொடுத்து பிறகு சமிக்ஞை கொடுக்கிறார். தந்தையின் இதே விசேஷம் குழந்தைகளிலும் எப்பொழுதும் வெளிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். தந்தையைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

 

பாப்தாதாவின் எதிரில் அனைத்து முக்கிய சகோதரிகள் (தாதிகள்) அமர்ந்திருக்கிறார்கள் -

ஜீவன்முக்த் ஜனக் என்று உங்களுடைய மகிமை இருக்கிறது இல்லையா? ஜீவன்முக்த் மற்றும் விதேகி (தேக உணர்வற்ற நிலை). இந்த இரண்டு பட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. (தாதிக்காக) இவரோ மணியாகவே இருக்கிறார், திருப்தி மணி, நெற்றியின் மணி, வெற்றியின் மணி எத்தனை மணிகள். அனைத்தும் மணிகளே மணிகள் தான்! மணிகளை எவ்வளவு தான் மறைத்து வைத்தாலும், மணியின் மினுமினுப்பை ஒருபொழுதும் மறைக்க முடியாது. தூசியிலிருந்தாலும் மினுமினுக்கும், லைட்டின் காரியம் செய்யும், எனவே பெயரும் அதே தான், செய்யும் காரியமும் அதே தான். இவருடைய (தாதி ஜானகியின்) குணமும் அதுவே தான் தேகமுக்த், ஜீவன்முக்த். எப்பொழுதும் வாழ்க்கையின் குஷியின் அனுபவத்தின் ஆழத்தில் இருக்கிறார். இதைத் தான் ஜீவன்முக்த் என்று கூறுகிறோம். நல்லது.

 

அவ்யக்த் மகாவாக்கியம் - பணிவானவர் ஆகி உலகத்தின் புது படைப்பை செய்யுங்கள் !

சேவையில் சகஜமாகவும் மேலும் எப்பொழுதும் வெற்றி அடைவதற்கான மூல ஆதாரம் பணிவானவராக ஆவது. பணிவானவர் ஆவது தான் சுயமரியாதை! மேலும் அனைவர் மூலமாக மரியாதையைப் பெறுவதற்கான சுலபமான வழியும் அது தான். பணிவானவர் ஆவது என்றால் தலை வணங்குவது என்பதில்லை ஆனால் அனைவரையும் தன்னுடைய விசேஷம் மற்றும் அன்பினால் தலைவணங்க வைப்பது. மகான் தன்மையின் அடையாளம் பணிவு. எந்த அளவு பணிவாக இருப்பாரோ அந்த அளவு அனைவரது உள்ளத்திலும் இயல்பாகவே மகான் ஆவார். பணிவு அகங்காரமற்றவராக சுலபமாக ஆக்கிவிடுகிறது. பணிவு என்ற விதை மகான் தன்மை என்ற பழத்தை இயல்பாகவே பிராப்தி செய்விக்கிறது. பணிவாக இருப்பது அனைவரது உள்ளத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான சகஜ சாதனம். அகங்காரமற்றவராக ஆவதின் விசேஷ அடையாளம் பணிவுத்தன்மை. உள்உணர்வு, பார்வை, சொல், உறவு தொடர்பில் அனைத்திலும் பணிவு என்ற குணத்தை தாரணை செய்தீர்கள் என்றால், மகான் ஆகிவிடுவீர்கள். எப்படி மரம் வளைந்து கொடுக்கும் சேவை செய்கிறது, அதே போல் பணிவானவர் ஆவது! அதாவது வளைந்து கொடுப்பது தான் சேவாதாரி ஆவதாகும். எனவே ஒரு பக்கம் மகான் தன்மை இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் பணிவுத்தன்மை இருக்கட்டும். யார் பணிவாக இருக்கிறாரோ அவர் அனைவரிடமிருந்தும் மரியாதையைப் பெறுகிறார். நீங்கள் பணிவானவர் ஆனீர்கள் என்றால், மற்றவர்கள் மரியாதையைக் கொடுப்பார்கள். யார் அபிமானத்தில் இருக்கிறாரோ அவர்களுக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை, அவரிடமிருந்து தூரமாக ஓடுவார்கள். யார் பணிவானவராக இருக்கிறாரோ அவர் அனைவருக்கும் சுகம் கொடுக்கிறார். எங்கு சென்றாலும், என்ன காரியம் செய்தாலும் அது சுகம் நிறைந்ததாக இருக்கும். அவருடைய உறவு தொடர்பில் யார் வந்தாலும் அவர் சுகத்தின் அனுபவம் செய்விப்பார்.

 

சேவாதாரியின் விசேஷம் :-

ஒரு பக்கம் மிகவும் பணிவானவர், உலக சேவகன், இன்னொரு பக்கம் ஞானத்தின் அதிகாரம் நிறைந்தவர். எந்த அளவு பணிவானவரோ அந்த அளவே கவலையில்லா இராஜா. பணிவு மற்றும் அதிகாரம் இரண்டின் சமநிலை. பணிவுத் தன்மை, பொறுப்புணர்வு, எல்லைக்கப்பாற்பட்ட பாவனை. இவைகள் தான் சேவையின் வெற்றிக்கான விசேஷ ஆதாரம். எந்த அளவு சுயமரியாதை இருக்கிறதோ அந்த அளவே பணிவானவராக இருப்பது. சுயமரியாதையில் அபிமானம் வேண்டாம். நானோ உயர்ந்தவன்! மற்றவர்கள் சிறியவர்கள் அல்லது அவர்களுக்காக வெறுப்புணர்வு இருக்கிறது என்று அப்படி வேண்டாம், மேலும் இந்த மாதிரி இருக்கக்கூடாது. எப்படிப்பட்ட ஆத்மாக்களாக இருந்தாலும், இரக்கப் பார்வையோடு பாருங்கள், அபிமானத்தின் பார்வையோடு பார்க்காதீர்கள். அபிமானமும் வேண்டாம், அவமானமும் வேண்டாம். இப்பொழுது பிராமண வாழ்க்கையில் இந்த மாதிரி நடந்து கொள்ளக் கூடாது. ஒருவேளை அபிமானம் இல்லை என்றால் அவமானம், அவமானமாக அனுபவம் ஆகாது. அவர் எப்பொழுதும் பணிவாக மற்றும் படைப்புக் காரியத்திலேயே பிஸியாக இருப்பார். யார் பணிவாக இருக்கிறாரோ அவர் தான் புதியபடைப்புக் காரியத்தை செய்ய முடியும். சுபபாவனை மற்றும் சுபவிருப்பங்களின் விதையே பொறுப்புணர்வு மற்றும் பணிவான பாவனை. எல்லைக்குட்பட்ட மரியாதை இல்லை, ஆனால் பணிவானவராக இருப்பது. பண்பற்ற நிலையின் அடையாளம் பிடிவாதம், மேலும் பண்பின் அடையாளம் பணிவு. பணிவானவராகி பண்பு நிரம்பிய விவகாரம் செய்வது தான் பண்பாக இருப்பது மற்றும் சத்தியமாக இருப்பது. வெற்றி நட்சத்திரமாக எப்பொழுது ஆவீர்கள் என்றால், எப்பொழுது தன்னுடைய வெற்றியின் அபிமானம் இல்லை, வர்ணனையும் செய்யாமல் இருக்க வேண்டும். தன்னுடைய மகிமையின் பாடலை பாட வேண்டாம், ஆனால் எந்த அளவு வெற்றியோ அந்த அளவு பணிவு நிறைந்த நிர்மல சுபாவம் உடையவர். மற்றவர்கள் உங்களது மகிமை பாடட்டும், ஆனால் நீங்கள் எப்பொழுதும் தந்தையின் மகிமை பாடுங்கள் !. அம்மாதிரியான பணிவுத் தன்மை படைப்பின் காரியத்தை சுலபமாக செய்கிறது. எதுவரை பணிவானவர் ஆகவில்லையோ அதுவரை படைப்புக் காரியம் செய்ய முடியாது. பணிவு நிரம்பியவராக இருப்பது மற்றும் சரி ஐயா! செய்கிறேன், என்ற பாடத்தை படிக்கும் ஆத்மாவைப் பற்றி சில சமயம் தவறாகப் புரிந்து கொள்வதினால் மற்றவர்களுக்கு தோல்வியாகத் தென்படலாம். ஆனால் உண்மையில் அது அவருடைய வெற்றி. ஆனால் அந்த நேரம் மட்டும் மற்றவர்கள் கூறுவதினால் மேலும் வாயுமண்டலத்தில் நிச்சயபுத்தி உடையவராக இருந்தவர், சந்தேக ரூபமானவராக மாறி விட வேண்டாம். வெற்றியா அல்லது தோல்வியா என்ற சந்தேகத்தை வைக்காமல் தன்னுடைய நிச்சயத்தில் உறுதியாக இருக்க வேண்டும். எதை மற்றவர்கள் இன்று தோல்வி என்று கூறுகிறார்களோ, அவர்களே நாளை ஆஹா ! ஆஹா! என்ற மலர்களைத் தூவுவார்கள். சம்ஸ்காரத்தில் பணிவு மற்றும் படைப்பு என்ற இந்த இரண்டு விசேஷங்கள் எஜமானத்தன்மையின் அடையாளம். கூடவே அனைத்து ஆத்மாக்களின் தொடர்பில் வர வேண்டும், அன்பானவராக வேண்டும். அனைவரின் உள்ளத்தின் அன்பின் ஆசீர்வாதங்கள் அதாவது சுபபாவனை அந்த ஆத்மாவிற்காக அனைவரின் மனதிலிருந்து எழ வேண்டும். தெரிந்திருந்தாலும் அல்லது தெரியாவிட்டாலும் தூரத்து சம்மந்தம் மற்றும் தொடர்பு இருந்தாலும், யார் பார்த்தாலும் அன்பின் காரணமாக இவர் நம்முடையவர் என்ற மாதிரியே அனுபவம் செய்ய வேண்டும். எந்த அளவு குணங்களின் தாரணையில் சம்பன்னம், குணம் என்ற பலன் சொரூபமாக ஆவீர்களோ அந்த அளவே பணிவானவர் ஆகுங்கள். பணிவான நிலை மூலமாக ஒவ்வொரு குணத்தையும் வெளிப்படுத்துங்கள், அப்பொழுது தான் இவர் தர்ம சக்தியுள்ள மகான் ஆத்மா என்று கூறுவோம். சேவாதாரி என்றால் படைப்பு காரியம் செய்பவர், மேலும் பணிவாக இருப்பவர். பணிவுத் தன்மை தான் சேவையின் வெற்றிக்கான சாதனம். பணிவானவர் ஆவதினால் எப்பொழுதும் சேவையில் சுமையற்று லேசாக இருப்பார்கள். பணிவு இல்லை மற்றும் மரியாதை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றால், சுமையாகிவிடும். சுமையுள்ளவர் எப்பொழுதும் நின்று விடுவார். வேகமாகச் செல்ல முடியாது, எனவே ஒருவேளை ஏதாவது சுமையான உணர்வு இருக்கிறது என்றால், பணிவாக இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள். எங்கு பணிவுத் தன்மை இருக்கிறதோ அங்கு கோபம் இருக்காது ஆன்மீகம் இருக்கும். எப்படி தந்தை எந்த அளவு பணிவு நிறைந்தவராக வருகிறாரோ அதே போல் தந்தையைப் பின்பற்றி நடங்கள். ஒருவேளை கொஞ்சமாவது சேவையில் முறைத்துக் கொள்ளுதல் இருக்கிறது என்றால், அந்த சேவை நின்று விடும். பிரம்மா பாபா தன்னை எவ்வளவு பணிவானவராக ஆக்கிக் கொண்டார் - குழந்தைகளின் கால்களைப் பிடித்து விடுவதற்கும் கூட தயாரானவர் ஆகி, அந்த அளவு பணிவு நிறைந்த சேவாதாரியாக ஆனார். குழந்தைகள் என்னை விட முன்னுக்கு இருக்கிறார்கள், குழந்தைகள் என்னை விட நன்றாக சொற்பொழிவு நடத்த முடியும். 'முதலில் நான்' என்று ஒருபொழுதும் கூறவில்லை. குழந்தைகள் முன்னுக்கு, முதலில் குழந்தைகள், குழந்தைகள் பெரியவர்கள் என்று கூறி தன்னைத் தாழ்த்திக் கொள்வது, உண்மையில் தாழ்ந்தவராக ஆவதில்லை ஆனால் உயர்ந்தவராக ஆவது. இதைத் தான் உண்மையான நம்பர் ஒன் தகுதியான சேவாதாரி என்று கூறுவது. மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்து தான் பணிவானவர் ஆவது தான் பரோபகாரம். இதைக் கொடுப்பது தான் நிரந்தரமாகப் பெறுவது. அற்ப கால அழியும் மரியாதையை தியாகம் செய்து சுயமரியாதையில் நிலைத்திருங்கள், பணிவானவராகி மரியாதையைக் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். இவ்வாறு கொடுப்பது தான் பெறுவதாக ஆகிவிடுகிறது. மரியாதை கொடுப்பது என்றால் அந்த ஆத்மாவை ஊக்கம் உற்சாகத்தில் கொண்டு வந்து முன்னுக்கு வைப்பது. இந்த சதா காலத்திற்கான ஊக்கம் உற்சாகம் அதாவது குஷியின் மற்றும் தன்னுடைய சகயோகத்தின் பொக்கிஷம், ஆத்மாவை சதா காலத்திற்கும் புண்ணிய ஆத்மாவாக ஆக்கிவிடுகிறது.

 

வரதானம் :

வீணான எண்ணங்களை சக்திசாலியாக பரிவர்த்தனை (மாற்றம்) செய்து சகஜ யோகி ஆகக்கூடிய சக்திசாலியான ஆத்மா ஆகுக.

 

சில குழந்தைகள் என்னுடைய பங்கோ அந்த அளவு தென்படவில்லை, யோகா செய்ய முடியவில்லை, அசரீரி ஆவதில்லை என்று யோசிக்கிறார்கள் - இது வீணான எண்ணம். இந்த எண்ணங்களை பரிவர்த்தனை செய்து நினைவோ என்னுடைய இயற்கையான குணம், நான் தான் ஒவ்வொரு கல்பத்திலும் சகஜயோகியாக இருந்தேன், நான் யோகி ஆகவில்லை என்றால், யார் ஆவார்கள் என்ற சக்திசாலியான எண்ணங்களை வையுங்கள். ஒருபொழுதும் என்னுடைய உடலோ ஒன்றும் செய்ய முடியாது, இந்த பழைய உடலோ உதவாதது என்று அப்படி ஒருபொழுதும் நினைக்காதீர்கள். ஆஹா! ஆஹா! என்ற எண்ணத்தை வையுங்கள். இந்த இறுதி உடலின் மகிமை பாடுங்கள், பிறகு சக்தி வந்து விடும்.

 

சுலோகன் :

சுபபாவனைகளின் சக்தி, பிறரது வீணான பாவனைகளையும் கூட பரிவர்த்தனை செய்ய முடியும்.

 

ஓம்சாந்தி