21.10.2018                           காலை முரளி                ஓம் சாந்தி                        ''அவ்யக்த பாப்தாதா''

ரிவைஸ்           20.02.1984           மதுபன்


 

'' ஒரு மிக உயர்ந்த, மகான் மற்றும் நன்மையே பயக்கும் நேரம் ''

 

இன்று பாக்கியத்தை உருவாக்கும் தந்தை அனைத்து உயர்ந்த பாக்கியவான் குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். எப்படி ஒவ்வொரு குழந்தையும் சென்ற கல்பத்தில் வந்தது போல் தன்னுடைய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி வந்து சேர்ந்து விட்டார்களோ அப்படியே நீங்கள் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி விட்டு வந்திருக்கிறீர்கள். தெரிந்து கொள்வது என்றால் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்வது! விசேஷமாக இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளின் கூட்டம் வரதான பூமியில் கூடியிருக்கிறது. இந்தக் கூட்டம் அதிர்ஷ்டம் நிறைந்த குழந்தைகளின் கூட்டம். அனைத்தையும் விட முதலில் அதிர்ஷ்டம் உண்டாவதற்கான உயர்ந்த நேரம் மற்றும் உயர்ந்த வேளை எதுவென்றால், எப்பொழுது குழந்தைகள் தெரிந்து கொண்டார்கள், ஏற்றுக் கொண்டார்கள். மேலும் என்னுடைய பாபா என்று கூறினார்களோ அந்த நேரம் தான் உயர்ந்த நேரம். அந்த நேரம் தான் முழுக் கல்பத்திலும் சிரேஷ்டமானது மேலும் நன்மையே பயப்பது. அனைவருக்கும் அந்த நேரத்தின் நினைவு இப்பொழுதும் வருகிறது தான் இல்லையா? ஆவது, சந்திப்பது, அதிகாரத்தை அடைவது என்ற இதையோ முழு சங்கமயுகத்திலும் அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்கள். ஆனால் அந்த நேரம் எதில் நீங்கள் அனாதையிலிருந்து அனைத்தும் நிறைந்தவராக ஆனீர்கள், என்னவாக இருந்ததிலிருந்து என்னவாக ஆனீர்கள். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கிடைத்தீர்கள். பிராப்தியில்லாத ஆத்மா பிராப்தியின் வள்ளலாக ஆனீர்கள் என்ற அந்த முதல் மாற்றத்தின் நேரம் அதிர்ஷ்டம் எழுவதற்கான நேரம் எவ்வளவு சிரேஷ்டமானது, மகான் ஆனது. சொர்க்கத்தின் வாழ்க்கையை விடவும் அந்த முதல் நேரம் எப்பொழுது தந்தையின் குழந்தை ஆனீர்களோ அது மகான் ஆனது. என்னுடையது என்பது உன்னுடையது ஆனது. உன்னுடையது என்று ஏற்றுக் கொண்டீர்கள், மேலும் டபுள் லைட் ஆனீர்கள். என்னுடையது என்ற சுமையிலிருந்து சுமையற்றவர் ஆகிவிட்டீர்கள். குஷியின் இறக்கை வந்து விட்டது. தரையிலிருந்து ஆகாயத்தில் பறக்கத் தொடங்கினீர்கள். கல்லிலிருந்து வைரம் ஆகிவிட்டீர்கள். அனேக குழப்பங்களிலிருந்து விடுபட்டு சுயதரிசன சக்கரதாரி ஆகிவிட்டீர்கள். அந்த நேரம் நினைவிருக்கிறதா? அந்த பிரகஸ்பதியின் திசையின் நேரம் அதில் உடல், மனம், செல்வம் மற்றும் மக்கள் என்று அனைத்து பிராப்தியின் அதிர்ஷ்டம் நிரம்பியிருந்தது. அந்த மாதிரி திசையில் அந்த மாதிரி ரேகை உள்ள நேரத்தில் சிரேஷ்ட அதிர்ஷ்டம் நிறைந்தவராக ஆனீர்கள். மூன்றாவது கண் திறந்தது. மேலும் தந்தையை பார்த்தீர்கள். அனைத்து அனுபவமும் இருக்கிறது தான் இல்லையா? இதயத்தில் ஆஹா உயர்ந்த பிராப்திக்கான நேரம். அதிர்ஷ்டமோ அந்த நேரத்தினுடையது தான் இல்லையா? பாப்தாதா அந்த மாதிரி மகான் வேளையில் அதிர்ஷ்டம் நிறைந்த வேளையில் வந்திருக்கும் குழந்தைகளை பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்.

 

என்னுடைய ஆதிதேவனின் ஆதிகாலத்தின் இராஜ்ய பாக்கிய அதிகாரி குழந்தைகளே என்று பிரம்மா பாபா கூறினார். சிவபாபா ஆஹா! என்னுடைய அனாதி காலத்தின் அனாதி அழியாத அதிகாரத்தை அடையக்கூடிய குழந்தைகளே என்று கூறினார். நீங்கள் தந்தை மற்றும் பிரம்மா பாபா இருவர்களின் அதிகாரி தேடிக் கண்டெடுக்கப்பட்ட அன்பிற்குரிய துணைவர்கள், குழந்தைகள். உலகத்தில் அனைத்து ஆத்மாக்களும் வாழ்க்கைத் துணையை, உண்மையான துணையை, மிக அன்புடன் நடந்து கொள்ளும் துணையை மிகவும் தேடின பிறகு அடைகிறார்கள். இருந்தும் திருப்தி ஆவதில்லை என்று பாப்தாதாவிற்கு போதை இருக்கிறது. ஒருவருக்கு கூட அந்த மாதிரி துணைவர் கிடைப்பதில்லை. மேலும் பாப்தாதாவிற்கோ எத்தனை வாழ்க்கை துணைவிகள் கிடைத்திருக்கிறார்கள். மேலும் ஒவ்வொருவரும் ஒருவர் இன்னொருவரைவிட மகான். நீங்கள் உண்மையான துணைவிகள் தான் இல்லையா? நீங்கள் அந்த மாதிரி உண்மையான துணைவிகள், யார் உயிரே சென்று விட்டாலும் கூட, பாபா மேல் அன்புடன் நடந்து கொண்டிருப்பது சென்று விடாது. நீங்கள் அந்த மாதிரி உண்மையான வாழ்க்கை துணைவிகள்.

 

பாப்தாதாவின் வாழ்க்கை என்ன என்று அதை தெரிந்திருக்கிறீர்களா? உலக சேவை தான் பாப்தாதாவின் வாழ்க்கை. அந்த மாதிரி வாழ்க்கையின் துணைவர்கள் நீங்கள் அனைவரும் தான் இல்லையா? எனவே உண்மையான வாழ்க்கையின் துணைவன், துணையை வைத்து நடந்து கொள்ளும் பாப்தாதாவிற்கு எத்தனை குழந்தைகள். இரவு பகலாக எதில் பிஸியாக இருக்கிறீர்கள். தந்தையின் துணையை வைத்துக் கொள்வதில் தான் இல்லையா? அனைத்து வாழ்க்கைத் துணைவர்கள் குழந்தைகளின் மனதில் எப்பொழுதும் என்ன எண்ணம் இருக்கிறது? சேவையின் முரசு ஒலிக்க வேண்டும். இப்பொழுது கூட அனைவரும் அன்பில் மூழ்கி இருக்கிறீர்கள். சேவையின் துணைவனாகி சேவை செய்து அதற்கான நிரூபணத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? இலட்சியத்திற்கு ஏற்றபடி வெற்றியை அடைந்து கொண்டே இருக்கிறீர்கள். எவ்வளவு செய்வீர்களோ அது நாடகத்தின்படி மிக நன்றாக செய்திருக்கிறீர்கள். மேலும் இன்னும் முன்னேற வேண்டும் இல்லையா? இந்த வருடம் செய்தியை பரவச் செய்திருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது சில இடங்களிலிருந்து மைக்கை கொண்டு வந்திருக்கிறீர்கள். நாலாபுறங்களிலும் உள்ள மைக் வரவில்லை. எனவே செய்தியோ பரவியுள்ளதுதான்! ஆனால் நாலாபுறங்களிலும் உள்ள பொறுப்பாக ஆகியிருக்கும், செய்தியைப் பரப்பக்கூடிய பெரிய மைக் என்று கூறினாலும் சரி சேவைக்கு பொறுப்பாளர் ஆத்மாக்கள் என்று கூறினாலும் சரி அவர்கள் இங்கு வரட்டும் மேலும் ஒவ்வொருவரும் தன்னை தன்னுடைய தரப்பின் மெசஞ்சர் என்று புரிந்து செல்ல வேண்டும். இப்பொழுது எந்தப் பக்கத்திலிருந்து வந்திருக்கிறீர்களோ அவர்கள் அந்தப் பக்கத்தில் செய்திபரப்பாளர் ஆக வேண்டும். ஆனால் நாலாபுறங்களிலும் உள்ள மைக் வர வேண்டும் மேலும் செய்தியாளர் ஆகி விட வேண்டும். நாலாபுறங்களிலும் ஒவ்வொரு மூலையில் அனைவருக்கும் இந்த செய்தி கிடைத்து விட வேண்டும் எனவே, அதற்காக ஒரே நேரத்தில் நாலாபுறங்களிலுமிருந்து செய்தியைப் பரப்ப வேண்டும். இதைத் தான் பெரிய முரசு ஒலிப்பது என்று கூறுவது. நாலாபுறங்களிலும் உள்ள முரசு ஒன்றே தான், ஒருவரே தான் என்று ஒலித்தது என்றால், அதை பிரத்யக்ஷத்தின் முரசு என்று கூறுவோம்.

 

இப்பொழுது ஒவ்வொரு தேசத்தின் பேண்ட் வாத்தியம் ஒலிக்க வேண்டும். பேண்ட் வாத்தியம் ஒலிக்க வேண்டியது இப்பொழுது தான். பேண்ட் வாத்தியத்தை நன்றாக வாசித்தீர்கள். எனவே வேறு வேறு தேசத்தில் பொறுப்பாளர் ஆகியிருக்கும் ஆத்மாக்கள் மூலமாக பல வகையான பேண்ட் வாத்தியத்தை கேட்டு மற்றும் பார்த்து குஷியடைந்து கொண்டிருக்கிறோம். பாரதத்தின் பேண்ட் வாத்தியத்தையும் கேட்டு, பேண்ட் வாத்தியத்தின் ஒலியில் மேலும் முரசின் ஒலியிலும் வித்தியாசம் இருக்கிறது. கோயில்களில் பேண்ட் வாத்தியத்திற்குப் பதிலாக முரசை அடிப்பார்கள். இன்னும் வரும் நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டீர்களா? கூட்டமாக சேர்ந்து ஒலிக்கும் ஓசை நாலாபுறமும் பரவும் ஓசையாக இருக்கும். இப்பொழுது கூட ஒருவர் சரி நான் செய்கிறேன் என்று கூறுகிறார். மேலும் அனைவரும் ஒன்றாகக் கூடி சரி செய்கிறேன் என்று கூறினார்கள் என்றால், எவ்வளவு வித்தியாசம் இருக்கும் இல்லையா? ஒருவர் இருக்கிறார், அந்த ஒருவர் மட்டுமே தான்! இவர் தான் அந்த ஒருவர் என்ற இந்த சப்தமான ஓசை நாலாபுறங்களிலுமிருந்தும் ஒரே நேரத்தில் வெளியாக வேண்டும். டி.வி -யில் பாருங்கள், ரேடியோவில் கேளுங்கள், செய்தித் தாள்களில் பாருங்கள், வாயிலில் இந்த ஒரே ஒரு ஓசை தான் வெளியாக வேண்டும். உலக அளவில் செய்தி பரவ வேண்டும். எனவே தான் பாப்தாதா வாழ்க்கைத் துணைவர்களைப் பார்த்து குஷி அடைகிறார். யாருக்கு இத்தனை வாழ்க்கைத் துணைவர்கள் இருக்கிறார்கள். மேலும் ஒவ்வொருவரும் மகான் என்றால் அனைத்துக் காரியமும் நிச்சயமாக நடந்தேறும். தந்தை ஒரு கருவியாகி மட்டும் சிரேஷ்ட காரியத்தின் பிராப்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். நல்லது. இப்பொழுதோ சந்திப்பதற்கான சீசன். அனைவரையும் விட மிகச் சிறிய மற்றும் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் போலந்த் தேசத்தைச் சேர்ந்தவர்கள். சிறு குழந்தைகள் எப்பொழுதுமே மிகவும் பிடித்தமானவர்களாக இருப்பார்கள். போலந்த் தேசத்தை சேர்ந்தவர்களுக்கு நாம் மற்ற அனைவரையும் விட அதிகமாக தேடிக் கண்டெடுக்கப் பட்டவர்கள் என்ற போதை இருக்கிறது இல்லையா? அனைத்து பிரச்சனைகளையும் கடந்து வந்து சேர்ந்தும் விட்டீர்கள் இல்லையா? இதைத் தான் முழுமையான ஈடுபாடு என்று சொல்வது. முழு ஈடுபாடு தடையை அகற்றி விடுகிறது. நீங்கள் பாப்தாதாவிற்கும் மேலும் பரிவாரத்திற்கும் மிகவும் அன்பானவர்கள். போலந்த் மற்றும் போர்ச்சுகல் இரண்டு தேசங்களைச் சேர்ந்தவர்களும் மிகவும் ஈடுபாடு உள்ளவர்கள். மொழியைப் பார்க்கவில்லை, பணத்தைப் பார்க்கவில்லை. ஆனால் முழு ஈடுபாடு பறக்க வைத்து விட்டது. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு அவசியம் சகயோகம் கிடைக்கும். அசம்பவத்திலிருந்து சம்பவம் ஆகிவிடும். எனவே பாப்தாதாவும் அந்த மாதிரி இனிமையான குழந்தைகளின் அன்பைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். மேலும் முழு ஈடுபாட்டோடு சேவை செய்யக்கூடிய பொறுப்பாளர் ஆகியிருக்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். மிகவும் நன்றாக அன்புடன் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள்.

 

பொதுவாக இந்த வருடம் அனைவருமே நல்ல குரூப்பை அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால் இந்த தேசங்களுக்கும் விசேஷம் இருக்கிறது, எனவே பாப்தாதா விசேஷமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் அவரவர்களுடைய இடத்தில் நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறீர்கள். எனவே ஒவ்வொரு இடத்தின் பெயரைக் கூறவில்லை. ஆனால் ஒவ்வொரு இடத்தின் விசேஷம் அவரவர்களினுடையது. மதுபன் வரை வந்தடைவது என்பது தான் சேவையின் விசேஷம். நாலாபுறங்களிலுமுள்ள பொறுப்பிலிருக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதா விசேஷமாக அன்பு மலர்களை அளிக்கிறார். நாலாபுறங்களில் பண விஷயத்தில் கொஞ்சம் மேலே கீழே இருந்த போதிலும் இத்தனை ஆத்மாக்களைப் பறக்க வைத்து அழைத்து வந்திருக்கிறீர்கள். இது தான் அன்பின் கூடவே உழைப்பின் அடையாளம். இது வெற்றியின் அடையாளம்! எனவே ஒவ்வொருவரும் தனது பெயரையும் சேர்த்து அன்பு மலர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். யாரெல்லாம் வரவும் இல்லையோ அவர்களுடைய நினைவு கடிதங்களாக அதிக மாலைகளையும் கொண்டு வந்திருக்கிறீர்கள். எனவே பாப்தாதா ஆகார ரூபத்தில் இங்கு வந்து சேராத குழந்தைகளுக்கும் அன்பு நிறைந்த அன்பு நினைவுகளை கொடுக்கிறார். நாலாபுறங்களிலிருந்து வந்திருக்கும் குழந்தைகளுக்கு அவர்களுடைய அன்பிற்கான பிரதிபலன் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அனைவருமே அன்பிற்குரியவர்கள். நீங்கள் பாப்தாதாவின் வாழ்க்கைத் துணைவர்கள், எப்பொழுதும் துணையை வைத்து நடந்து கொள்ளும் நெருக்கமான இரத்தினங்கள், எனவே அனைவரின் நினைவு கடிதங்களுக்கு முன்பே, செய்தி கொண்டு வருபவர்களுக்கு முன்பாகவே பாப்தாதாவிடம் வந்து சேர்ந்து விட்டது. மேலும் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து குழந்தைகளும் இப்பொழுது மிகவும் விமர்சையாக சேவை செய்யுங்கள். தந்தை மூலமாக கிடைத்திருக்கும் அமைதி மற்றும் குஷியின் பொக்கிஷங்களை அனைத்து ஆத்மாக்களுக்கும் அதிகமாக வழங்குங்கள். அனைத்து ஆத்மாக்களுக்கும் இது தான் தேவையாக இருக்கிறது. உண்மையான குஷி மற்றும் உண்மையான சாந்தி வேண்டும் என்று விரும்புகிறார்கள். குஷிக்காக எவ்வளவு நேரத்தை, பணத்தை மற்றும் உடல் சக்தியை அழித்துக் கொள்கிறார்கள். ஹிப்பி ஆகிவிடுகிறார்கள். இப்பொழுது அவர்களை ஹேப்பி ஆக்குங்கள். அனைவரின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய அன்னப்பூர்னாவின் பாத்திரம் ஆகுங்கள். இந்தச் செய்தியை அனைத்து வெளிநாட்டுக் குழந்தைகளுக்கும் அனுப்பி விடுங்கள். அனைத்து குழந்தைகளுக்கும் செய்தி சொல்லிக் கொண்டிருக்கிறோம். சில குழந்தைகள் அந்த மாதிரியும் இருக்கிறார்கள். இந்த வாழ்க்கையில் இருந்து கொண்டே ஏதாவது கொஞ்சம் அலட்சியத்தின் காரணத்தினால் தீவிரமாக முயற்சி செய்பவரிலிருந்து தொய்வான முயற்சி செய்பவராக ஆகிவிடுகிறார். மேலும் சிலர் மாயாவின் சுழற்சியில் கொஞ்ச காலத்திற்காகவும் வந்து விடுகிறார்கள். இருந்தும் எப்பொழுது மாட்டிக் கொள்கிறார்களோ அப்பொழுது வேதனை அடைவதில் வந்து விடுகிறார்கள். முதலில் மாயாவின் கவர்ச்சியின் காரணமாக இது சுழற்சி என்று அனுபவம் ஆவதில்லை, ஆனால் நல்ல ஒரு ஓய்வை அனுபவம் செய்கிறார். பிறகு எப்பொழுது சுழற்சியில் மாட்டிக் கொள்கிறார் என்றால், உணர்வில் வந்து விடுகிறார்கள். மேலும் எப்பொழுது உணர்வில் வருகிறார் என்றால் பாபா, பாபா என்ன செய்வது என்று கூறுகிறார்கள். அந்த மாதிரி சுழற்சியில் வசமான குழந்தைகளிடமிருந்தும் அதிக கடிதம் வருகின்றன. அந்த மாதிரி குழந்தைகளுக்கும் பாப்தாதா அன்பு நினைவு களைக் கொடுக்கிறார். மேலும் மீண்டும் இதே நினைவை ஊட்டுகிறார். எப்படி பாரதத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. ஒருவேளை இரவில் காணாமல் போனவர் பகலில் வந்து விட்டார் என்றால் காணாமல் போனவர் என்று கூற முடியாது. அந்த மாதிரி மீண்டும் விழிப்புணர்வு வந்திருக்கிறது என்றால், கடந்ததை கடந்ததாக ஆக்குங்கள். மீண்டும் புதிய ஊக்கம், புதிய உற்சாகத்தில் புதிய வாழ்க்கையை அனுபவம் செய்து முன்னேறிச் செல்ல முடியும்.

 

பாப்தாதாவும் மூன்று தடவை மன்னிக்கிறார். இருந்தும் மூன்று தடவை வாய்ப்பு கொடுக்கிறார். எனவே யாரும் சங்கோஜப் பட வேண்டாம். சங்கோஜத்தை விட்டு விட்டு அன்பில் வந்து விட்டார் என்றால், மீண்டும் தன்னுடைய முன்னேற்றத்தை செய்ய முடியும். அந்த மாதிரி குழந்தைகளுக்கும் விசேஷ செய்தியைக் கொடுங்கள். சிலரால் சூழ்நிலையின் காரணமாக வர முடியவில்லை. மேலும் அவர்கள் மிகுந்த துடிப்புடன் நினைவு செய்கிறார்கள். பாப்தாதா அனைத்து குழந்தைகளின் உண்மையான உள்ளத்தைத் தெரிந்திருக்கிறார். எங்கு உண்மையான உள்ளம் இருக்கிறதோ அங்கு இன்று இல்லை என்றாலும் நாளை அவசியம் பலன் கிடைக்கிறது. நல்லது.

 

எதிரில் இரட்டை வெளிநாட்டினர் இருக்கிறார்கள். அவர்களுடைய சீசன் இல்லையா! சீசனைச் சேர்ந்தவர்களுக்கு முதலில் உணவளிக்கப்படும். அனைத்து பாரதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதாவது பாக்கியவான் ஆத்மாக்களுக்கு, நான் தந்தையின் அவதார பூமியைச் சேர்ந்தவன் என்ற அதிகப்படியான போதை இருக்கிறது. அந்த மாதிரி சேவையின் பாரத பூமி, தந்தையின் அவதார பூமி மேலும் எதிர்காலத்தின் இராஜ்ஜிய பூமியைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் பாப்தாதா விசேஷமாக அன்பு நினைவுகளைக் கொடுக்கிறார். ஏனென்றால், அனைவரும் அவரவர்களின் முழு ஈடுபாடு, ஊக்கம் உற்சாகத்தின் பிரகாரம் சேவை செய்தார்கள். மேலும் சேவை மூலமாக அனேக ஆத்மாக்களை தந்தையின் அருகில் கொண்டு வந்தார்கள். எனவே சேவையின் பிரதிபலனாக பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் அன்பு மலர்களின் பூச்செண்டை வழங்குகிறார், வரவேற்றுக் கொண்டிருக்கிறார். நீங்களும் அனைவரையும் பூச்செண்டு கொடுத்து வரவேற்றீர்கள் இல்லையா? எனவே அனைத்து குழந்தைகளுக்கும் பூச்செண்டும் கொடுக்கிறார். மேலும் வெற்றியின் பேட்ஜையும் அணிவிக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் அவரவர்களின் பெயரால் பாப்தாதா மூலமாக கிடைத்திருக்கும் பேட்ஜையும் பூச்செண்டையும் ஸ்வீகாரம் (ஏற்றுக் கொள்தல்) செய்யுங்கள். நல்லது.

 

செல்லக்கூடிய தாதிகளோ சேர்மேன். சேர்மேன் என்றால் எப்பொழுதும் இருக்கையில் அமர்ந்திருப்பவர். யார் எப்பொழுதும் இருக்கையில் அமர்ந்திருக்கிறாரோ அவரைத் தான் சேர்மேன் என்று கூறுவது. எப்பொழுதும் சேர் உடன் அருகிலும் இருக்கிறார். எனவே எப்பொழுதும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை ஒவ்வொரு அடியிலும் தந்தையின் துணைவர்கள். தந்தையின் அடி மற்றும் அவர்களின் அடி எப்பொழுதுமே ஒன்றாக இருக்கும். அடி மேல் அடி எடுத்து வைப்பவர்கள். எனவே அந்த மாதிரி நிரந்தரமான துணைவர்களுக்கு ஒவ்வொரு அடியிலும் பல பல கோடி மடங்குகள் அன்பு நினைவுகளைக் கொடுக்கிறோம். மேலும் மிக அழகான வைரத்தினால் ஆன தாமரை மலரை தந்தையிடமிருந்து ஏற்றுக் கொள்ளுங்கள். மகாரதிகளில் சகோதரர்களும் வந்து விடுகிறார்கள். பாண்டவர்கள் எப்பொழுதும் சக்திகளின் துணைவர்கள். பாண்டவர்களுக்கு சக்தி சேனை மற்றும் பாண்டவர்கள் இருவரும் சேர்ந்து தந்தையின் காரியத்தில் பொறுப்பாளர் ஆகி பயனுள்ளதாக ஆக்கும் வெற்றி மூர்த்திகள். எனவே பாண்டவர்களும் குறைந்தவர்கள் இல்லை. பாண்டவர்களும் மகான்கள். ஒவ்வொரு பாண்டவனின் விசேஷம் அவரவருடையது, விசேஷ சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் அதே விசேஷத்தின் ஆதாரத்தில் தந்தை மற்றும் பரிவாரத்தின் எதிரில் விசேஷ ஆத்மாக்கள். எனவே சேவைக்குப் பொறுப்பான விசேஷ ஆத்மாக்களுக்கு விசேஷ ரூபத்தில் பாப்தாதா வெற்றித் திலகமிட்டு வரவேற்கிறார். புரிந்ததா? நல்லது.

 

இப்பொழுது அனைவருமோ சந்தித்து விட்டீர்கள் இல்லையா? தாமரை, திலகம், பூச்செண்டு, பேட்ஜ் அப்படி அனைத்தும் கிடைத்தது இல்லையா. இரட்டை வெளிநாட்டினரின் வரவேற்பு எத்தனை விதமாக ஆகி விட்டது. அன்பு நினைவோ அனைவருக்குமே கிடைத்தே விட்டது. இருந்தாலும் இரட்டை வெளிநாட்டினர் மற்றும் நமது தேசத்தை சேர்ந்தவர் அனைத்து குழந்தைகளும் எப்பொழுதும் முன்னேற்றத்தை அடைந்து கொண்டே இருங்கள். உலகை பரிவர்த்தனை செய்து நிரந்தரமாக சுகங்களின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருங்கள். அந்த மாதிரியான விசேஷ சேவாதாரி குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

ட்ரினிடாட் பார்ட்டியுடன் சந்திப்பு -

எப்பொழுதும் தன்னை சங்கமயுகத்தின் சிரேஷ்ட பிராமண ஆத்மா என்று நினைக்கிறீர்களா? பிராமணர்களுக்கு எப்பொழுதும் உச்சங்குடுமியை அடையாளமாகக் காண்பிக்கிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை, மேலும் உயர்ந்ததிலும் உயர்ந்த காலம் என்றால் சுயம் அவர்களும் உயர்ந்தவர்களாக ஆனார்கள். யார் எப்பொழுதும் உயர்ந்த நிலையில் நிலைத்திருக்கிறாரோ அவர் தன்னை எப்பொழுதுமே டபுள் லைட்டாக அனுபவம் செய்கிறார். எந்த விதமான சுமை இல்லை. ஏதாவது சம்மந்தத்தின் அல்லது தன்னுடைய பழைய சுபாவம் சம்ஸ்காரத்தின் சுமை இல்லை. இதைத் தான் அனைத்து பந்தனங்களிலிருந்து விடுபட்ட நிலை என்று கூறுவது. நீங்கள் அந்த மாதிரி இருக்கிறீர்களா? முழு குரூப்பும் பந்தனமற்ற குரூப். ஆத்மாவுடன் மற்றும் சரீரத்தின் சம்மந்தத்திலிருந்தும் பந்தனம் இல்லை. பந்தனமற்ற ஆத்மாக்கள் என்ன செய்வார்கள்? சென்டரை கவனித்து கொள்வார் இல்லையா? அப்படியானால் எத்தனை சேவை நிலையங்கள் திறக்க வேண்டும். நேரமும் இருக்கிறது, மேலும் டபுள் லைட்டாகவும் இருக்கிறீர்கள் என்றால் மற்றவர்களை தனக்குச் சமமாக ஆக்குவீர்கள் இல்லையா. என்ன கிடைத்திருக்கிறதோ அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். இன்றைய உலகத்தின் ஆத்மாக்களுக்கு இதே அனுபவத்தின் எவ்வளவு அவசியம் இருக்கிறது என்று புரிந்து கொள்கிறீர்கள் தான் இல்லையா? அந்த மாதிரியான நேரத்தில் பிராப்தி சொரூப ஆத்மாக்கள் என்ன காரியம் செய்ய வேண்டும்? எனவே இப்பொழுது சேவையில் இன்னும் வளர்ச்சியை அடையுங்கள். பார்க்கப்போனால் ட்ரினிடாட் சம்பன்ன தேசம். அனைத்தையும் விட அதிகமான எண்ணிக்கை ட்ரினிடாட் சென்டரில் இருக்க வேண்டும். அக்கம் பக்கத்திலும் மிகுந்த இடங்கள் இருக்கின்றன, அவர்கள் மேல் உங்களுக்கு இரக்கம் வரவில்லையா? சென்டரையும் திறங்கள், மேலும் பெரிய பெரிய மைக்கையும் கொண்டு வாருங்கள். இந்த அளவு தைரியம் உள்ள ஆத்மாக்கள் நீங்கள். என்ன விரும்புகிறீர்களோ அதை செய்ய முடியும். யார் சிரேஷ்ட ஆத்மாக்களோ அவர்கள் மூலமாக சிரேஷ்ட சேவை நிரம்பியிருக்கிறது. நல்லது.

 

வரதானம்:

பல விதமான அனுபவங்கள் மூலமாக எப்பொழுதும் ஊக்கம் உற்சாகத்தில் நிரம்பியிருக்கக்கூடிய தடைகளை வென்றவர் ஆகுக!

 

தினசரி அமிர்தவேளையில் முழு நாளுக்கான பல விதமான ஊக்கம் உற்சாகத்தின் பாய்ன்ட்டுகளை புத்தியில் எமர்ஜ் செய்யுங்கள். ஒவ்வொரு நாளின் முரளியிலிருந்து ஊக்கம் உற்சாகத்திற்கான பாய்ன்ட்டுகளை குறித்துக் கொள்ளுங்கள், அந்த பல விதமான பாய்ன்ட்டுகள் ஊக்கம் உற்சாகத்தை அதிகரிக்கும். மனித ஆத்மாக்களின் இயல்பு பல விதமானவைகள் மேல் விருப்பம் ஏற்படும். எனவே ஞானத்தின் துளிகளை சிந்தனை செய்யுங்கள் அல்லது ஆன்மீக உரையாடல் செய்யுங்கள், பல வகையான ரூபத்தில் பூஜ்ஜியம் ஆகி தன்னுடைய கதாநாயக பாத்திரத்தின் நினைவில் இருங்கள் பிறகு ஊக்கம் உற்சாகத்தினால் நிரம்பியவராக இருப்பீர்கள். பிறகு அனைத்து தடைகளும் சுலபமாக அகன்று விடும்.

 

சுலோகன் :

தன்னுடைய மனநிலையை அந்த அளவிற்கு அமைதி நிறைந்ததாக ஆக்கி விட்டீர்கள் என்றால், கோபம் என்ற பூதம் தூரத்திலிருந்தே ஓடி விடும்.

 

ஓம்சாந்தி