29.11.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஞானம் என்பது வெண்ணெய். பக்தி என்பது மோர். தந்தை உங்களுக்கு ஞானம் என்ற வெண்ணெய் அளித்து உலகிற்கு அதிபதியாக ஆக்கி விடுகிறார். எனவே கிருஷ்ணரின் வாயில் வெண்ணெய் காண்பிக்கிறார்கள்.

 

கேள்வி:

நிச்சயபுத்தியின் அடையாளம் என்ன? நிச்சயத்தின் ஆதாரத்தில் என்ன பிராப்தி ஆகிறது?

 

பதில்:

(1) நிச்சய புத்தி குழந்தைகள் ஒளி மீது பலி (தியாகம்) ஆகக் கூடிய உண்மையான விட்டில் பூச்சிகளாக இருப்பார்கள். வட்டம் சுற்றி வருபவர்கள் அல்ல. ஒளி மீது பலி ஆகுபவர்கள் இராஜ்யத்தில் வருவார்கள். வட்டம் சுற்றி வருபவர்கள் பிரஜைகளில் சென்று விடுவார்கள். (2) பூமியே பிளந்தாலும் தர்மத்தை விட மாட்டோம் என்ற வாக்குறுதி நிச்சய புத்தி குழந்தைகளினுடையது ஆகும். அவர்கள் உண்மையான அன்பான புத்தி உடையவர்களாக ஆகி தேகத்துடன் சேர்த்து தேகத்தின் அனைத்து தர்மங்களையும் மறந்து தந்தையின் நினைவில் இருக்கிறார்கள்.

 

பாடல்:

ஆகாய சிம்மாசனத்தை விட்டாவது.. .. ..

 

ஓம் சாந்தி.

பகவான் கூறுகிறார். நிராகார பரமபிதாவிற்கு பகவான் என்று கூறப்படுகிறது. பகவானுவாச் - யார் கூறியது? அந்த நிராகார பரமபிதா பரமாத்மா கூறினார். நிராகார தந்தை நிராகார ஆத்மாக்களுக்கு அமர்ந்து புரிய வைக்கிறார். நிராகார ஆத்மா இந்த சரீரம் என்ற கர்ம இந்திரியங்கள் மூலமாக கேட்கிறது. ஆத்மாவிற்கு ஆண் என்றோ பெண் என்றோ கூறப்படுவதில்லை. ஆத்மாவிற்கு ஆத்மா என்று தான் கூறப்படுகிறது. ஆத்மா சுயம் இந்த உறுப்புக்கள் மூலமாக கூறுகிறது, நான் ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்று எடுக்கிறேன். மனிதர்கள் அனைவருமே சகோதரர்கள் ஆவார்கள். நிராகார பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள் என்னும் பொழுது தங்களுக்குள் அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவார்கள். பிரஜா பிதா பிரம்மாவின் குழந்தைகள் என்னும் பொழுது சகோதர சகோதரிகள் ஆவார்கள். இதை எப்பொழுதும் அனைவருக்கும் புரிய வைத்துக் கொண்டு இருங்கள். பகவான் ரட்சகர் ஆவார். பக்தர்களுக்கு பக்தியின் பலனை அளிக்கக் கூடியவர் ஆவார்.

 

அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் நான் ஆவேன் என்பதை தந்தை புரிய வைக்கிறார். அனைவருக்கும் ஆசானாக ஆகி ஸ்ரீமத் அளிக்கிறேன். மேலும் அனைவரின் சத்குருவும் ஆவேன். அவருக்கென்று தந்தையோ ஆசிரியரோ குருவோ கிடையாது. அதே தந்தை பழமையான பாரதத்தின் இராஜயோகம் கற்பிப்பவர் ஆவார். கிருஷ்ணர் அல்ல. கிருஷ்ணரை தந்தை என்று கூற முடியாது. அவருக்கு தெய்வீக குணங்கள் நிறைந்த சொர்க்கத்தின் இளவரசர் என்று கூறப்படுகிறது. பதீத பாவனர் சத்கதி அளிக்கும் வள்ளல் என்று ஒருவருக்கு கூறப்படுகிறது. இப்பொழுது எல்லாம் துக்கம் உடையவர்களாக, பாவ ஆத்மாக்களாக மற்றும் பிரஷ்டாச்சாரியாக (இழிவானவர்களாக) உள்ளார்கள். பாரதம் தான் சத்யுகத்தில் தெய்வீகமானதாக (சிரேஷ்டாச்சாரி) உயர்ந்ததாக இருந்தது. பின்னர் அது பிரஷ்டாச்சாரி (தாழ்ந்த) அசுர இராஜ்யமாக ஆகி விடுகிறது. எல்லோருமே பதீத பாவனரே வாரும் வந்து இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். எனவே இப்பொழுது இராவண இராஜ்யம் ஆகும். இராவணனை எரிக்கவும் செய்கிறார்கள். ஆனால் எந்த ஒரு வித்வான், ஆசாரியர் மற்றும் பண்டிதர் ஆகியோரும் இராவணனை அறியாமல் உள்ளார்கள். சத்யுகத்திலிருந்து திரேதாவரை இராம இராஜ்யம் ஆகும். துவாபர முதல் கலியுகம் வரையும் இராவண இராஜ்யம். பிரம்மாவின் பகல் என்பது பிரம்மா குமார் குமாரிகளுக்கும் பகல். பிரம்மாவின் இரவு என்பது பி.கேக்களுக்கும் இரவு. இப்பொழுது இரவு முடிந்து பகல் வரப் போகிறது. விநாசகாலத்தில் விபரீதமான புத்தி என்றும் பாடப்பட்டுள்ளது. மூன்று சேனைகளும் கூட இருக்கிறார்கள். பரமபிதா மிகவும் அன்பிற்குரிய தந்தை, ஞானக் கடல் என்று கூறப்படுகிறார். எனவே அவசியம் ஞானம் அளித்திருக்கக் கூடும் அல்லவா? சிருஷ்டியின் சைதன்ய விதை ரூபமானவர் ஆவார். சுப்ரீம் ஸோல் - பரம ஆத்மா ஆவார் அதாவது உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் ஆவார். அப்படி இன்றி சர்வவியாபி என்பதல்ல. சர்வ வியாபி என்று கூறுவது தந்தையை இழிவு படுத்துவது ஆகும். நிந்தனை செய்து செய்து தர்மத்திற்கு நிந்தனை ஆகி விட்டுள்ளது. பாரதம் ஏழையாக இழிவான நிலை ஆகி விட்டுள்ளது. அப்பேர்ப்பட்ட நேரத்தில் தான் நான் வர வேண்டி இருக்கிறது. பாரதம் தான் எனது ஜன்ம பூமி ஆகும். சோம நாதரின் கோவில், சிவனின் கோவில் கூட இங்கு தான் உள்ளது. நான் எனது ஜன்ம பூமியைத் தான் சொர்க்கமாக ஆக்குகிறேன். பிறகு இராவணன் நரகமாக ஆக்குகிறான். அதாவது இராவணனின் வழிப்படி நடந்து நரகவாசி, அசுர சம்பிரதாயத்தினராக ஆகி விடுகிறார்கள். பிறகு அவர்களை மாற்றி நான் தெய்வீக சம்பிரதாயத்தினராக சிரேஷ்டாச்சாரியாக ஆக்குகிறேன். இது விகாரக் கடல் ஆகும். அது பாற்கடல் ஆகும். அங்கு நெய்யாறு ஓடுகிறது. சத்யுக திரேதாவில் பாரதம் சதா சுகமுடையதாக செழிப்புடன் இருந்தது. வைரம் வைடூரியங்களின் அரண்மனைகள் இருந்தன. இப்பொழுதோ பாரதம் 100 சதவிகிதம் திவால் ஆகி விட்டுள்ளது. நான் தான் வந்து 100 சதவிகிதம் செழிப்புடையதாக சிரேஷ்டாச்சாரியாக ஆக்குகிறேன்.இப்பொழுதோ தங்களது தெய்வீக தர்மத்தையே மறந்து விட்டிருக்கும் அளவிற்கு (ப்ரஷ்டாச்சாரி) தாழ்ந்தவர்களாக ஆகி விட்டுள்ளார்கள்.

 

பக்தி மார்க்கம் என்பது மோர், ஞான மார்க்கம் என்பது வெண்ணெய் என்று தந்தை வந்து புரிய வைக்கிறார். கிருஷ்ணரின் வாயில் வெண்ணெய் காண்பிக்கிறார்கள். அதாவது உலகத்தின் ராஜ்யம் இருந்தது. லட்சுமி நாராயணர் உலகின் அதிபதியாக இருந்தார்கள். தந்தை தான் வந்து எல்லையில்லாத ஆஸ்தியை அளிக்கிறார். அதாவது உலகின் அதிபதி ஆக்குகிறார். நான் உலகின் அதிபதி ஆவதில்லை என்று கூறுகிறார். ஒரு வேளை நான் அதிபதி ஆனேன் என்றால் பின் மாயையிடம் தோற்க வேண்டியும் வரும். மாயையிடம் நீங்கள் தோற்கிறீர்கள். பிறகு வெற்றியும் நீங்கள் தான் அடைய வேண்டி உள்ளது. இந்த 5 விகாரங்களில் சிக்கி விட்டுள்ளீர்கள். இப்பொழுது நான் உங்களை கோவிலில் வீற்றிருப்பதற்குத் தகுதி உடையவர்களாக ஆக்குகிறேன். சத்யுகம் பெரிய கோவில் ஆகும். அதற்கு சிவாலயம் என்று கூறப்படுகிறது. சிவனால் ஸ்தாபிக்கப்பட்டது ஆகும். கலியுகமானது வேசியாலயம் என்று கூறப்படுகிறது. எல்லோரும் விகாரியாக உள்ளார்கள். இப்பொழுது தேகத்தின் தர்மங்களை விடுத்து தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையிடம் அன்பு உள்ளது. நீங்கள் வேறு யாரையும் நினைவு செய்வதில்லை. நீங்கள் விநாச காலத்தில் அன்பான புத்தி உடையவர் ஆவீர்கள். ஸ்ரீஸ்ரீ 108 என்று பரமபிதா பரமாத்மாவிற்குத் தான் கூறப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். 108 மணி மாலையை உருட்டுகிறார்கள். மேலே இருப்பது சிவபாபா. பிறகு தாய் தந்தை பிரம்மா சரஸ்வதி. பிறகு அவரது குழந்தைகள். அவர்கள் பாரதத்தை தூய்மை ஆக்குகிறார்கள். ருத்ராட்ச மாலை பாடப்பட்டுள்ளது. அதற்கு ருத்ர யக்ஞம் என்றும் கூறப்படுகிறது. எவ்வளவு பெரிய ராஜஸ்வ அஷ்வமேத அவினாஷி ஞான யக்ஞம் ஆகும். எத்தனை வருடங்களாக நடந்து வருகிறது. அநேக தர்மங்கள் ஆகிய எல்லாமே இந்த வேள்வியில் முடிந்து போகப் போகிறது. அப்பொழுதே இந்த வேள்வி முடிவடையும். இது அழிவற்ற பாபாவின் அழியாத வேள்வி ஆகும். எல்லா பொருட்களும் இதில் ஸ்வாஹா ஆகப் போகிறது. விநாசம் எப்பொழுது ஆகும் என்று கேட்கிறார்கள். அட யார் ஸ்தாபனை செய்கிறார்களோ அவர்கள் தான் பிறகு பாலனை செய்ய வேண்டி இருக்கிறது. இது சிவபாபாவின் ரதம் ஆகும். சிவபாபா இதில் ரதி (வீற்றிருப்பவர்) ஆவார். மற்றபடி குதிரை வண்டி ஆகியது ஒன்றும் கிடையாது. அதுவோ உட்கார்ந்து பக்தி மார்க்கத்தின் பொருட்களை அமைத்துள்ளார்கள். நான் இந்த இயற்கையை ஆதாரமாக எடுக்கிறேன் என்று பாபா கூறுகிறார்.

 

முதலில் ஒருவரையே வணங்கும் பக்தி இருக்கும். பிறகு கலியுக முடிவில் முழுமையாக பலரை வழிபடும் பக்தி ஆகி விடுகிறது என்று தந்தை புரிய வைக்கிறார். பிறகு தந்தை வந்து பாரதத்திற்கு வெண்ணெய் கொடுக்கிறார். நீங்கள் உலகிற்கு அதிபதி ஆவதற்காக படித்துக் கொண்டிருக்கிறீர்கள். தந்தை வந்து வெண்ணெய் ஊட்டுகிறார். இராவண இராஜ்யத்தில் மோர் ஆரம்பமாகி விடுகிறது. இவை அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். புதிய குழந்தைகளோ இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. பரமபிதா பரமாத்மாவிற்குத் தான் ஞானக் கடல் என்று கூறப்படுகிறது. நான் இந்த பக்தி மார்க்கத்தினால் யாருக்குமே கிடைப்பதில்லை என்று தந்தை கூறுகிறார். நான் எப்பொழுது வருகிறேனோ அப்பொழுது தான் வந்து பக்தர்களுக்கு பக்தியின் பலனைக் கொடுக்கிறேன். நான் "லிபரேட்டர்" (விடுவிப்பவர்) ஆகிறேன். துக்கத்திலிருந்து விடுவித்து அனைவரையும் சாந்தி தாமம், சுகதாமம் அழைத்துச் செல்கிறேன். நிச்சய புத்தி உடையவர்கள் வெற்றி அடைவார்கள். சந்தேக புத்தி உடையவர்கள் அழிந்து போவார்கள்.

 

தந்தை ஒளி ஆவார். அவர் மீது ஒரு சில விட்டில் பூச்சிகள் முற்றிலுமாக சமர்ப்பணம் (பலி) ஆகி விடுகிறார்கள். ஒரு சிலர் வட்டமாகச் சுற்றி வந்து விட்டுச் சென்று விடுகிறார்கள். ஒன்றும் புரிந்து கொள்வது இல்லை. உண்மையில் எல்லையில்லாத தந்தையிடமிருந்து நமக்கு எல்லையில்லாத ஆஸ்தி கிடைக்கிறது. யார் வட்டம் சுற்றி வந்து மட்டும் சென்று விடுகிறார்களோ அவர்களே பிறகு பிரஜையில் தான் வரிசைக்கிரமமாக வருவார்கள். யார் சமர்ப்பணம் ஆகிறார்களோ அவர்கள் புருஷர்த்தப்படி ஆஸ்தி எடுக்கிறார்கள். புருஷார்த்தத்தினால் தான் (முயற்சி) பிராலப்தம் (பிராப்தி) கிடைக்கிறது. ஞானக் கடல் ஒரே ஒரு தந்தை ஆவார். பின்னர் ஞானம் மறைந்து போய் விடுகிறது. நீங்கள் சத்கதியை அடைந்து கொண்டு9விடுகிறீர்கள். சத்யுக திரேதாவில் யாருமே குருமார்கள் ஆகியோர் இருப்பதில்லை. இப்பொழுது எல்லோரும் அந்த தந்தையை நினைவு செய்கிறார்கள். ஏனெனில் அவர் ஞானக் கடல் ஆவார். அனைவருக்கும் சத்கதி செய்து விடுகிறார். பிறகு ஐயோ! ஐயோ! என்ற கதறல் முடிந்து போய் வெற்றி முழக்கம் ஏற்பட்டு விடுகிறது. நீங்கள் படைப்பின் முதல் இடை கடையை அறிந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் திரிகாலதரிசி, திரிநேத்ரி ஆகிறீர்கள். உங்களுக்கு படைப்பவர் மற்றும் படைப்பின் முதல் இடை கடை பற்றிய முழு ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது ஒன்றும் கட்டுக் கதை அல்ல. கீதை பகவானால் பாடப்பட்டது ஆகும். ஆனால் கிருஷ்ணருடைய பெயரை போட்டு குறையுள்ளதாக ஆக்கி விட்டுள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். நீங்கள் சிவ சக்தி சேனை ஆவீர்கள். வந்தே மாதரம் என்று பாடப்பட்டுள்ளது. (பவித்திரமாக) தூய்மைக்குத் தான் வந்தனை செய்யப்படுகிறது. கன்னிகை தூய்மையாக இருக்கிறார். எனவே அனைவரும் அவருக்கு வந்தனை செய்கிறார்கள். புகுந்த வீடு சென்றார் மற்றும் விகாரி ஆனார் என்றால் எல்லோருக்கும் தலை வணங்கிக் கொண்டே இருப்பார். எல்லாமே தூய்மையை பொருத்தது ஆகும். பாரதம் தூய்மையான இல்லற தர்மமாக இருந்தது. இப்பொழுது அபவித்திர இல்லற தர்மம் ஆகும். துக்கமே துக்கமாக உள்ளது. சத்யுகத்தில் இவ்வாறு இருக்காது. தந்தை குழந்தைகளுக்காக உள்ளங்கையில் சொர்க்கத்தை ஏந்தி வருகிறார். இல்லற விவகாரங்களில் இருக்கையிலும் தந்தையிடமிருந்து ஜீவன் முக்தியின் ஆஸ்தியை எடுத்துக் கொள்ள முடியும். வீடு வாசலை விட வேண்டிய எந்த விஷயமும் கிடையாது. சந்நியாசிகளின் துறவற மார்க்கம் தனி ஆகும். இப்பொழுது "பாபா நாங்கள் தூய்மையாக ஆகி தூய்மையான உலகத்தின் அதிபதியாக அவசியம் ஆவோம்" என்று தந்தையிடம் உறுதி கொடுக்கிறார்கள். பிறகு பூமியே பிளந்தாலும் தர்மத்தை விடக் கூடாது. 5 விகாரங்களின் தானம் கொடுத்தீர்கள் என்றால் மாயையின் கிரகணம் விடுபடும். அப்பொழுது 16 கலை சம்பூர்ணம் ஆவீர்கள். சத்யுகத்தில் 16 கலை சம்பூர்ணம், சம்பூர்ண நிர்விகாரியாக .. இருப்பார்கள். இப்பொழுது ஸ்ரீமத் படி நடந்து மீண்டும் அவ்வாறு ஆக வேண்டும்.

 

பகவான் இருப்பதே ஏழைப் பங்காளனாக! செல்வந்தர்கள் இந்த ஞானத்தை எடுக்க முடியாது. ஏனெனில் அவர்களோ எங்களிடம் செல்வம் ஆகியவை நிறைய உள்ளது. நாங்களோ சொர்க்கத்தில் அமர்ந்துள்ளோம் (வாழ்கிறோம்) என்று நினைக்கிறார்கள். எனவே அபலைகள் அகலிகைகள் தான் ஞானம் எடுக்கிறார்கள். பாரதமோ ஏழையாக உள்ளது. அதில் கூட யார் சாதாரணமாக ஏழைகளாக இருக்கிறார்களோ அவர்களைத் தான் தந்தை தன்னுடையவராக ஆக்குகிறார். அவர்களுடைய அதிர்ஷ்டத்தில் தான் உள்ளது. குசேலருடைய உதாரணம் பாடப்பட்டுள்ளது அல்லவா? செல்வந்தர்களுக்குப் புரிந்து கொள்வதற்கான நேரம் இல்லை. இராஜேந்திர பிரசாத்திடம் (பாரதத்தின் முதல் ஜனாதிபதி) சகோதரிகள் சென்று கொண்டிருந்தார்கள். எல்லையில்லாத தந்தையை அறிந்து கொண்டீர்கள் என்றால் நீங்கள் வைரம் போல ஆகி விடுவீர்கள் என்று கூறினார்கள். 7 நாள் பாட முறை கற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். ஆம் விஷயமோ மிகவும் நன்றாக உள்ளது. பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் கோர்ஸ் எடுக்கிறேன் என்று கூறினார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் நான் நோய்வாய்ப் பட்டுள்ளேன் என்றார். பெரிய பெரிய மனிதர்களுக்கு நேரம் இல்லை. முதலில் 7 நாள் கோர்ஸ் முடித்தால் தான் பின் நாராயணி போதை ஏறும் அவ்வாறே சாயம் ஏறி விடுமா என்ன? 7 நாட்களுக்குப் பிறகு தான் இவர் தகுதி உடையவரா இல்லையா என்பது தெரிய வருகிறது. தகுதி உடையவராக இருந்தால் பின் படிப்பதற்காக முயற்சியில் ஈடுபட்டு விடுவார். பட்டியில் பக்குவமான சாயம் ஏறி இருக்கவில்லை என்றால் வெளியில் சென்ற உடனேயே சாயம் நீங்கி விடுகிறது. எனவே முதலில் பக்குவமான சாயம் (உறுதியாக இருக்கும்படி) ஏற்ற வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சிவசக்தி ஆகி உலக நன்மை செய்ய வேண்டும். தூய்மையின் ஆதாரத்தில் சோழி போன்ற மனிதர்களை வைரம் போல ஆக்க வேண்டும்.

 

2. ஸ்ரீமத் படி விகாரங்களை தானம் கொடுத்து சம்பூர்ண நிர்விகாரி 16 கலை சம்பூர்ணமாக ஆக வேண்டும். ஒளி மீது சமர்ப்பணம் (பலி) ஆகக் கூடிய விட்டில் பூச்சி ஆக வேண்டும்.

 

வரதானம்:

எப்போதும் தன்னை சாரதி (வாகன ஓட்டி) மற்றும் சாட்சி என புரிந்து கொண்டு தேகத்தின் உணர்விலிருந்து விடுபட்டு இருக்கக் கூடிய யோக யுக்தமானவர் (நினைவில் மூழ்கி இருப்பவராக) ஆகுக.

 

யோக யுக்தமாக இருப்பதற்கான சரளமான விதி - எப்போதும் தன்னை சாரதி மற்றும் சாட்சி என புரிந்து கொண்டு நடப்பதாகும். ஆத்மாவாகிய நான் இந்த இரதத்தை (உடலை) நடத்தக் கூடிய சாரதியாக இருக்கிறேன் என்ற இந்த நினைவு தானாகவே இந்த இரதம் அல்லது தேகத்திலிருந்து அல்லது எந்த விதமான தேகத்தின் உணர்விலிருந்தும் கூட விடுபட்டவராக (சாட்சியாக) ஆக்கி விடுகிறது. தேக உணர்வு இல்லாமலிருந்தால் சகஜமாக யோக யுக்தமானவராக ஆகி விடுகிறீர்கள் மற்றும் அனைத்து கர்மங்களும் கூட யோக யுக்தி நிறைந்ததாக ஆகிறது. தன்னை சாரதி என புரிந்து கொள்வதன் மூலம் அனைத்து கர்மேந்திரியங் களும் தனது கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் எந்த கர்மேந்திரியத்தாலும் வசப்பட்டவராக ஆக முடியாது.

 

சுலோகன்:

வெற்றியாளரான ஆத்மாவாக ஆக வேண்டும் என்றால் கவனம் மற்றும் பயிற்சி - இவற்றை நிஜமான சம்ஸ்காரமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

 

ஓம்சாந்தி