18.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நான் ஆத்மா, இது எனது சரீரம் என்ற நிச்சயம் செய்யுங்கள். இதில் சாட்சாத்காரத்திற்கான விசயம் ஏதுமில்லை. ஆத்மாவின் சாட்சாத்காரம் ஏற்பட்டாலும் புரிந்து கொள்ள முடியாது.

 

கேள்வி:

தந்தையின் எந்த ஸ்ரீமத் படி நடப்பதன் மூலம் கர்ப்ப சிறையின் தண்டனையிலிருந்து விடுபட முடியும்?

 

பதில்:

தந்தையின் ஸ்ரீமத் - குழந்தைகளே! நஷ்டமோகா ஆகுங்கள். ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமில்லை. நீங்கள் என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள், மேலும் வேறு எந்த பாவ காரியமும் செய்யாதிருந்தால் கர்ப்ப சிறையின் தண்டனையிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். இங்கு நீங்கள் பல பிறவிகளாக சிறைப் பறவைகளாக இருந்து வந்தீர்கள், இப்பொழுது அந்த தண்டனையிலிருந்து விடுவிக்க தந்தை வந்திருக்கின்றார். சத்யுகத்தில் கர்ப்ப சிறை இருக்காது.

 

ஓம்சாந்தி.

ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் - ஆத்மா என்றால் என்ன? மேலும் அதன் தந்தை பரமாத்மா யார்? இதனை மீண்டும் புரிய வைக்கின்றார். ஏனெனில் இது பதீத உலகமாகும். பதீதமானவர்கள் எப்பொழுதும் புத்தியற்றவர்களாக இருப்பர். பாவன உலகத்தினர் எப்பொழுதும் புத்திசாலிகளாக இருப்பர். பாரதம் பாவன உலகம், அதாவது தேவி தேவதைகளின் இராஜ்யமாக இருந்தது, இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யமாக இருந்தது. மிகுந்த செல்வந்தர்களாக, சுகமானவர்களாக இருந்தனர், ஆனால் பாரதவாசிகள் இந்த விசயங்களைப் புரிந்து கொள்வது கிடையாது. தந்தை, பரம்பிதா பரமாத்மா அதாவது படைப்பவரை அறியவில்லை. மனிதர்கள் தான் புரிந்து கொள்ள முடியும். மிருகங்கள் அறிந்து கொள்ளாது அல்லவா! ஹே பரம்பிதா பரமாத்மா என்று நினைக்கவும் செய்கின்றனர். அவர் பரலௌகீகத் தந்தையாவார். ஆத்மா தனது பரலௌகீகத் தந்தையை நினைவு செய்கிறது. இந்த சரீரத்திற்கு பிறப்பு கொடுப்பவர் லௌகீகத் தந்தை ஆவார், மேலும் பரம்பிதா பரமாத்மா பரலௌகீகத் தந்தை ஆவார், ஆத்மாக்களுக்குத் தந்தை ஆவார். மனிதர்கள் லெட்சுமி நாராயணனை பூஜிக்கின்றனர், இவர்கள் சத்யுகத்தில் இருந்தார்கள், மேலும் இராமர் சீதை திரேதாவில் இருந்தனர் என்றும் நினைக்கின்றனர். தந்தை வந்து புரிய வைக்கின்றார் - குழந்தைகளே! நீங்கள் பரலௌகீகத் தந்தையாகிய என்னை பல பிறவிகளாக நினைத்து வந்தீர்கள். இறை தந்தை அவசியம் நிராகாராக இருப்பார் அல்லவா! நமது ஆத்மாவும் நிராகாரமானது அல்லவா! இங்கு வந்து சாகாரி ஆகியிருக்கிறது. இந்த சிறிய விசயமும் யாருடைய புத்தியிலும் வருவது கிடையாது. அவர் உங்களது எல்லையற்ற தந்தை படைப்பவர் ஆவார். நீங்கள் தாய் தந்தையாக ..... என்று அழைக்கவும் செய்கின்றனர். உங்களுடையவர்களாக நாம் ஆகின்ற பொழுது நாம் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகின்றோம், பிறகு உங்களை மறப்பதன் மூலம் நரகத்திற்கு எஜமானர்களாக ஆகிவிடுகிறோம். இப்பொழுது அந்த தந்தை இவர் மூலமாக வந்து புரிய வைக்கின்றார் - நான் படைப்பவன், இவர் எனது படைப்பு ஆகும். இந்த ரகசியத்தை உங்களுக்குப் புரிய வைக்கிறேன். இவரும் புரிந்து கொள்கிறார். ஆத்மாவை யாரும் பார்த்ததே கிடையாது. பிறகு ஏன் நான் ஆத்மா என்று கூறுகின்றனர்? நான் ஆத்மா ஒரு சரீரத்தை விடுவித்து மற்றொன்றை எடுக்கிறேன் என்று புரிந்து கொள்கின்றனர் அல்லவா! மகான் ஆத்மா, புண்ணிய ஆத்மா என்று கூறுகின்றனர் அல்லவா! நான் ஆத்மா, அது எனது சரீரம் என்ற நிச்சயம் செய்கின்றனர். சரீரம் அழியக் கூடியது, ஆத்மா அழிவற்றது. அந்த பரம்பிதா பரமாத்மாவின் குழந்தை. எவ்வளவு எளிய விசயமாகும்! ஆனால் நல்ல நல்ல புத்திவான்களும் புரிந்து கொள்ள முடியாது. மாயை புத்திக்குப் பூட்டு போட்டு விட்டது. உங்களுக்கு தனது ஆத்மாவின் சாட்சாத்காரமும் ஏற்படுவது கிடையாது. ஆத்மா தான் பல பிறவிகள் எடுக்கிறது அல்லவா! ஒவ்வொரு பிறப்பிலும் தந்தை மாறிக் கொண்டே இருப்பர். நீங்கள் தன்னை ஆத்மா என்று ஏன் நிச்சயம் செய்வது கிடையாது? ஆத்மாவின் சாட்சாத்கார் ஏற்பட வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஹரே, இவ்வளவு பிறவிகளில் ஆத்மாவின் சாட்சாத்காரம் ஏற்பட வேண்டும் என்று கேட்டீர்களா என்ன? சிலருக்கு ஆத்மாவின் சாட்சாத்கார் ஏற்படவும் செய்கின்றன, ஆனால் புரிந்து கொள்ள முடியாது. தந்தையை நீங்கள் அறியவில்லை. எல்லையற்ற தந்தையைத் தவிர ஆத்மாக்களுக்கு பரமாத்மாவின் சாட்சாத்காரமும் யாரும் செய்விக்க முடியாது. ஹே பகவான்! என்று கூறுகின்றனர் எனில், தந்தை ஆகிவிட்டார் அல்லவா! உங்களுக்கு இரண்டு தந்தைகள் இருக்கின்றனர் - ஒன்று அழியும் சரீரத்திற்கு பிறப்பு கொடுக்கும் அழியக் கூடிய தந்தை, மற்றொன்று அழிவற்ற ஆத்மாக்களின் அழிவற்ற தந்தை ஆவார். நீங்கள் பாடினீர்கள் - நீ தான் தாய் தந்தை ..... அவரை நினைவு செய்கிறீர்கள் எனில் அவசியம் அவர் வந்திருக்க வேண்டும் அல்லவா! ஜெகதம்பா மற்றும் ஜெகத் பிதா அமர்ந்திருக்கின்றனர், இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கின்றனர். வைகுண்டத்தில் லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது, அவர்களும் பாரதத்தில் தான் இருந்தனர் அல்லவா! சொர்க்கம் மேலே இருப்பதாக மனிதர்கள் நினைக்கின்றனர். அட, லெட்சுமி நாராயணனின் நினைவுச் சின்னம் இங்கு இருக்கிறது. கண்டிப்பாக இங்கு தான் இராஜ்ஜியம் செய்திருக்க வேண்டும். இந்த தில்வாடா கோயில் இப்போதைய உங்களது நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் இராஜயோகிகள். 108 அறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதர் குமாரிகள் மற்றும் குமாரிகளாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். அதன் நினைவுச் சின்னம் பிறகு பக்தியில் உருவாக்கப்படுகிறது. தில்வாடா கோயில் முற்றிலும் சரியானது. ஆனால் அந்த கோயிலின் டிரஸ்டியாக உள்ளவர்களுக்கு இந்த கோயில் யாருடையது? என்பது தெரியாது. தில்வாடா என்ற பெயருக்கும் ஏதாவது பொருள் இருக்கும் அல்லவா! உள்ளத்தை கொள்ளை கொள்ளக் கூடியவர் யார்? இந்த ஆதிதேவன் மற்றும் ஆதிதேவியும் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கின்றனர். இவரும் அந்த பரம்பிதா பரமாத்மாவை நினைவு செய்வார். அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஞானக் கடலானவர். இந்த ஆதிதேவனின் சரீரத்தில் வந்து அனைத்து குழந்தைகளுக்கும் புரிய வைக்கின்றார். இந்த கோயில் எப்பொழுது உருவாக்கப்பட்டது? ஏன் உருவாக்கப்பட்டது? இது யாருடைய நினைவுச் சின்னமாகும்? என்று எதையும் அறியாமல் இருக்கின்றனர். எத்தனை தேவிகளின் பெயரை பயன்படுத்துகின்றனர்! காளி, துர்க்கை, அன்னபூர்ணா ....... இப்பொழுது முழு உலகிற்கும் அன்னபூரணியாக யார் ஆக முடியும்? எந்த தேவி அன்னம் கொடுக்கிறார்? நீங்கள் அறிவீர்களா? பாரதம் சொர்க்கமாக இருந்தது, அங்கு அளவற்ற வைபவங்கள் இருக்கும், இன்றிலிருந்து 80-90 ஆண்டுகளுக்கு முன்பு 10-12 அனாவில் அரிசி கிடைத்திருக்கிறது எனில், அதற்கு முன்பு எவ்வளவு மலிவாக இருந்திருக்கும்! சத்யுகத்தில் அரிசி போன்றவைகள் மிகவும் மலிவாக நல்லதாக இருக்கும். ஆனால் இதையும் யாரும் அறியவில்லை. தந்தை வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மா இந்த கர்மேந்திரியங்களின் மூலம் கேட்கிறது. ஆத்மாவிற்கு இந்த கண்கள் பார்ப்பதற்காகத் தான் கிடைத்திருக்கிறது, கேட்பதற்காகத்தான் காது கிடைத்திருக்கிறது. தந்தை கூறுகின்றார் - நிராகாரமான நானும் இந்த சரீரத்தை ஆதாரமாக எடுக்கிறேன். என்னை சதா சிவன் என்று தான் கூறுகின்றனர். மனிதர்கள் பல பெயர்களை வைத்து விட்டனர் - ருத்ரன், சிவன், சோமநாத் ..... ஆனால் எனக்கு ஒரே ஒரு பெயர் தான் சிவன். சிவாய நமஹ, பக்தர்கள் பகவானை நினைவு செய்து வருகின்றனர். அவ்வாறு செய்து 2500 ஆண்டுகள் ஆகிவிட்டன. பக்திமார்க்கத்தில் முதலில் கலப்படமற்ற பக்தியாக இருந்தது, இப்பொழுது நீங்கள் கல், முள்ளில் வைத்து விட்டீர்கள். இப்பொழுது இந்த பக்தியின் கடைசியாகும். அனைவரையும் திரும்பி அழைத்துச் செல்ல நான் வந்திருக்கிறேன். இந்த பழைய உலகம் அழிந்து போக வேண்டும். அணுகுண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது எனில் அனைவரும் எவ்வளவு நேரத்தில் அழிந்து போய் விடுவர்! சத்யுகத்தில் மிகக் குறைவாக 9 லட்சம் பேர் இருப்பர். பாக்கி அனைவரும் எங்கு செல்வார்கள்? இந்த யுத்தம், பூகம்பம் போன்றவைகள் ஏற்படும். கண்டிப்பாக விநாசம் ஏற்பட வேண்டும்.

 

இவர் பிரஜாபிதா ஆவார். எவ்வளவு பிரம்மா குமார், குமாரிகள் இருக்கின்றனர்! பிரம்மாவின் தந்தை யார்? நிராகார சிவன். நாம் அவரது பேரன் பேத்திகளாக இருக்கிறோம். சிவபாபாவிடமிருந்து நாம் ஆஸ்தி அடைகிறோம். ஆக அவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். நினைவின் மூலம் தான் பாவங்களின் சுமைகள் இறங்கும். இது விகார, பதீத உலகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்யுகம் விகாரமற்ற உலகமாகும். அங்கு விஷம் (விகாரம்) இருக்காது. நியமப்படி ஒரு குழந்தை மட்டுமே இருக்கும். ஒருபொழுதும் திடீர் மரணம் ஏற்படாது. அது தான் சுகதாமம் ஆகும். இங்கு எவ்வளவு துக்கம் இருக்கிறது! ஆனால் இந்த விசயத்தை யாரும் அறியவில்லை. கீதை கூறுகின்றனர், ஸ்ரீமத் பகவத் கீதை, பகவானின் மகாவாக்கியம். நல்லது, பகவான் யார்? ஸ்ரீ கிருஷ்ணர் என்று கூறி விடுகின்றனர். அரே, அவர் சிறிய குழந்தை ஆவார், அவர் எப்படி இராஜயோகம் கற்பிப்பார்? அந்த நேரத்தில் உலகமும் பதீதமாக கிடையாது. சத்கதிக்காக இராஜயோகம் கற்பிப்பவர் இங்கு தான் தேவை. ருத்ர ஞான யக்ஞம் என்று கீதையிலும் எழுதப்பட்டிருக்கிறது. கிருஷ்ண கீதா ஞான யக்ஞம் என்று கிடையாது. இந்த ஞான யக்ஞம் எவ்வளவு காலமாக நடைபெற்று வருகிறது? இது எப்பொழுது முடிவடையும்? எப்பொழுது முழு உலகமும் இதில் சுவாஹா ஆகிறதோ! யக்ஞம் முடிவடையும் பொழுது அதில் அனைத்தையும் சுவாஹா செய்வர் அல்லவா! இந்த யக்ஞமும் கடைசி வரை நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்த பழைய உலகம் அழியப் போகிறது. தந்தை கூறுகின்றார் - நான் காலனுக்கெல்லாம் காலனாக இருக்கிறேன், அனைவரையும் அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறேன் - நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகுங்கள். இந்த நேரத்தில் அனைத்து மனிதர்களும் சதா துர்பாக்கியசாலிகளாக இருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்யுகத்தில் சதா சௌபாக்கியசாலிகளாக இருந்தனர் - இந்த வித்தியாசத்தை அனைவருக்கும் புரிய வையுங்கள். இங்கு வருகின்ற பொழுது நன்றாகப் புரிந்து கொள்கின்றனர், பிறகு வீட்டிற்குச் சென்றதும் அனைத்தும் அழிந்து போய்விடுகிறது. நான் பாவம் செய்யவே மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து விட்டு கர்ப்பச் சிறையிலிருந்து (சிசு) வெளியில் வருகிறது! வெளியில் வந்ததும் பிறகு பாவம் செய்ய ஆரம்பித்து விடுகிறது. சிறைப் பறவை இருக்கிறது அல்லவா! இந்த நேரத்தில் மனிதர்கள் அனைவரும் சிறைப் பறவைகளாக இருக்கின்றனர். அடிக்கடி கர்ப்பச் சிறைக்குச் சென்று தண்டனை அடைகின்றனர். தந்தை கூறுகின்றார் - இப்பொழுது உங்களை கர்ப்பச் சிறைப் பறவையிலிருந்து விடுவிக்கிறேன். சத்யுகத்தில் கர்ப்பத்தை சிறை என்று கூறமாட்டார்கள். உங்களை இந்த தண்டனையிலிருந்து விடுவிக்க வந்திருக்கிறேன். இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள், எந்த பாவமும் செய்யாதீர்கள், நஷ்டமோகா ஆகுங்கள். எனக்கு ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை ..... என்று பாடுகின்றனர். இது கிருஷ்ணருக்கான விசயம் கிடையாது. கிருஷ்ணர் 84 பிறவிகள் எடுத்து, இப்பொழுது வந்து பிரம்மாவாக ஆகியிருக்கிறார், பிறகு அவரே கிருஷ்ணராக ஆக வேண்டும். அதனால் தான் இந்த சரீரத்தில் பிரவேசித்திருக்கிறார். இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகமாகும். இப்பொழுது பகவான் இந்த சூரியவம்சி, சந்திரவம்சி இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். உங்களது எதிர்காலத்திற்கான பிராப்தியை உருவாக்குகிறார். சொர்க்கத்தைப் படைப்பவராகிய எல்லையற்ற தந்தையின் மூலம் இப்பொழுது நீங்கள் முயற்சி செய்த பல பிறவிகளுக்கான பிராப்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். நாடகத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் தனித்தனியான பாகம் இருக்கிறது. ஆக நாம் ஏன் கண்ணீர் விட வேண்டும்? நாம் உயிருடன் இருந்து கொண்டே அந்த தந்தையை நினைவு செய்கிறோம். இந்த சரீரத்தையும் நாம் கவனிப்பது கிடையாது. இந்த பழைய சரீரத்தை விடுத்து நாம் பாபாவிடம் சென்று விட வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் பாரதத்திற்கு எவ்வளவு சேவை செய்கிறீர்கள்! அன்னபூர்ணா, துர்க்கை, காளி போன்ற பெயர்கள் உங்களுக்குத் தான் பாடப்பட்டிருக்கிறது. மற்றபடி காளி இவ்வாறு பயமுறுத்தும் தோற்றமுடையவராக அல்லது விநாயகர் தும்பிக்கையுடையவராக இருக்கமாட்டார். மனிதர்கள் மனிதர்களாகத் தான் இருப்பர். இப்பொழுது தந்தை புரிய வைக்கிறார் - நான் குழந்தைகளாகிய உங்களை இந்த லெட்சுமி நாராயணனைப் போன்று ஆக்கிக் கொண்டிருக்கிறேன். நான் பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறேன், பிறகு எதிர்காலத்தில் இளவரசன், இளவரசியாக ஆவேன் என்று நிச்சயம் செய்யுங்கள். சொர்க்கத்தைப் படைக்கும் தந்தையை யாரும் அறியவில்லை. ஜெகதம்பாவையும் மறந்து விட்டனர். யாருக்கு கோயில் கட்டப்பட்டு இருக்கிறதோ அவர்கள் இப்பொழுது சைத்தன்யமாக அமர்ந்திருக்கின்றனர். கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வந்து விடும். விநாசத்தைப் பற்றி மனிதர்கள் கேட்கின்றனர். அரே, முதலில் நீங்கள் படித்து புத்திசாலிகளாக ஆகிவிடுங்கள். மகாபாரத யுத்தம் நடைபெற்று இருந்தது, அதற்குப் பிறகு தான் சொர்க்கத்தின் கதவு திறக்கப்பட்டது. ஆக இப்பொழுது இந்த தாய்மார்களின் மூலம் சொர்க்கக் கதவு திறக்கப்படுகிறது. வந்தே மாதரம் என்று பாடுகின்றனர் அல்லவா! பாவனமானவர்களுக்குத் தான் வந்தனம் செய்யப்படுகிறது. இரண்டு வகை தாய்மார்கள் இருக்கின்றனர் - ஒன்று உலகீய சமூக சேவகர்கள், மற்றொன்று ஆன்மீக சமூக சேவகர்கள். உங்களுடையது ஆன்மீக யாத்திரை ஆகும். நாம் இந்த சரீரத்தை விடுத்து திரும்பிச் செல்லக் கூடியவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பகவானின் மகாவாக்கியம் - மன்மனாபவ! தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். கிருஷ்ணர் குழந்தை இவ்வாறு கூற முடியாது அல்லவா! அவருக்கென்று தந்தை இருக்கிறார். மன்மனாபவ என்பதன் பொருளையும் யாரும் அறியவில்லை. இதை தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு செய்தால் விகர்மம் விநாசம் ஆகும், பறப்பதற்கு இறக்கையும் கிடைத்து விடும். இப்பொழுது நீங்கள் கல்புத்தியிலிருந்து தங்கப்புத்தியுடையவர்களாக ஆகிறீர்கள். அனைவரையும் படைக்கும் தந்தை ஒரே ஒருவர் தான். ஆதிதேவன் மற்றும் ஆதிதேவியின் கோயிலும் இருக்கிறது. அவர்களது குழந்தைகளாகிய நீங்கள் இங்கு இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு தான் நீங்கள் தபஸ்யா செய்திருக்கிறீர்கள், உங்களது நினைவுச் சின்னம் எதிரில் இருக்கிறது. லெட்சுமி நாராயணன் போன்றவர்களுக்கு இராஜ்யம் எவ்வாறு கிடைத்தது? அவர்களது கோயில் இதுவாகும். நீங்கள் இராஜரிஷிகளாக இருக்கிறீர்கள். இராஜ்யம் பிராப்தியாக அடைவதற்கு அல்லது பாரதத்திற்கு மீண்டும் இராஜ்ய பாக்கியத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தங்களது உடல், மனம், பொருள் சேவையின் மூலமாக பாரதத்தில் சொர்க்க இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். தந்தையின் ஸ்ரீமத் மூலமாக நீங்கள் பதீத இராவண ராஜ்யத்திலிருந்து அனைவரையும் விடுவிக்கிறீர்கள். தந்தை விடுவிப்பவராக, துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவராக இருக்கிறார். உங்களது துக்கத்தை நீக்குவதற்காக பழைய உலகை விநாசம் செய்விக்கிறார். உங்களை எதிரியின் மீது வெற்றியடையச் செய்கிறார். ஆக நீங்கள் மாயாஜீத் ஜெகத்ஜீத் ஆவீர்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இராஜ்யம் அடைகிறீர்கள், பிறகு இழக்கிறீர்கள். இது ருத்ரன் சிவனின் யக்ஞமாகும், இதிலிருந்து விநாச நெருப்பு வெளிப்படுகிறது. அவர்கள் அனைவரும் அழிந்து விடுவர், நீங்கள் சதா சுகமானவர்களாக ஆகிவிடுவீர்கள். துவாபரத்திலிருந்து துக்கம் ஆரம்பமாகிறது. தந்தை கூறுகிறார் - நான் வந்து நரகவாசிகளை சொர்க்கவாசிகளாக ஆக்குகிறேன். கலியுகம் வைஷ்யாலயம், சத்யுகம் சிவாலயம் ஆகும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள் எனில் இந்த குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும் அல்லவா! நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) உயிருடன் இருக்கும் பொழுதே தந்தையை நினைவு செய்து, ஆஸ்தியின் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த விசயத்தையும் அலட்சியப்படுத்தக் கூடாது.

 

2) ஸ்ரீமத் படி தனது உடல், மனம், பொருள் மூலம் பாரதத்தை சொர்க்கமாக்கும் சேவை செய்ய வேண்டும் மற்றும் அனைவருக்கும் இராவணனிடமிருந்து விடுதலையாவதற்கான யுக்தி கூற வேண்டும்.

 

வரதானம்:

எல்லைக்கப்பாற்பட்ட நினைவு சொரூபத்தின் மூலம் எல்லைக்குட்பட்ட விசயங்களுக்கு முடிவு கட்டக் கூடிய அனுபவ மூர்த்தி ஆகுக!

 

உயர்வான ஆத்மாக்களாகிய நீங்கள் நேரடியாக விதை, முக்கியமான இரண்டு இலைகள், திரிமூர்த்தியுடன் நெருக்கமான சம்பந்தத்தில் இருக்கும் அடித்தண்டாக இருக்கிறீர்கள். இந்த உயர்ந்த நிலையிலேயே நிலைத்திருங்கள், எல்லைக்கப்பாற்பட்ட நினைவின் சொரூபமாக ஆகுங்கள், அப்போது எல்லைக்குட்பட்ட வீணான விசயங்கள் முடிவுக்கு வந்து விடும். தனது எல்லைக்கப்பாற்பட்ட மூத்த தன்மையில் வந்தீர்கள் என்றால் அனுபவ மூர்த்தி ஆகி விடுவீர்கள். எல்லைக்கப்பாற்பட்ட மூதாதையரின் தொழிலை எப்போதும் நினைவில் வையுங்கள். மூதாதையரான ஆத்மாக்களாகிய உங்களின் வேலை அமர ஜோதியாகி அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களை நிலையிடத்தில் சேர்ப்பதாகும்.

 

சுலோகன்:

எந்த விசயத்திலும் குழப்பமடைவதற்குப் பதிலாக மகிழ்ச்சியின் அனுபவம் செய்வதுதான் மகிழ்ச்சியான யோகி ஆவதாகும்.

 

ஓம்சாந்தி