30-12-2018                           காலை முரளி                ஓம் சாந்தி                        அவ்யக்த-பாப்தாதா

ரிவைஸ்           02.04.1984           மதுபன்


 

பிந்துவின் மகத்துவம்

 இன்று பாக்கியவிதாதா தந்தை அனைத்து பாக்கியவான் குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். பாக்கியவிதாதா தந்தை, குழந்தைகள் அனைவருக்கும் பாக்கியத்தை உருவாக்குவதற்கான மிக சகஜமான விதியைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். பிந்துவின் (புள்ளி) கணக்கை மட்டும் அறிந்து கொள்ளுங்கள். பிந்துவின் கணக்கு அனைத்திலும் எளிதானது. பிந்துவின் மகத்துவத்தை அறிந்து கொண்டால் மகான் ஆகி விட்டீர்கள்! அனைத்திலும் சகஜமான மற்றும் மகத்துவம் நிறைந்த பிந்துவின் கணக்கை அனைவரும் நல்லபடியாக அறிந்து கொண்டீர்கள் இல்லையா? பிந்து (பூஜ்யம் - பாபா) எனச் சொல்ல வேண்டும் மற்றும் பிந்து (புள்ளி) ஆகிவிட வேண்டும். பிந்து ஆகி பிந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். பிந்துவாக இருந்தீர்கள், இப்போது பிந்து ஸ்திதியில் நிலைத்திருந்து பிந்து பாபாவுக்குச் சமமாகி சந்திப்பைக் கொண்டாட வேண்டும். இது சந்திப்பைக் கொண்டாடுவதற்கான யுகம், பறக்கும் கலைக்கான யுகம் எனச் சொல்லப் படுகின்றது. பிராமண வாழ்க்கை என்பதே சந்திப்பதற்கும் கொண்டாடுவதற்குமானது. இந்த விதியின் மூலம் தான் சதா கர்மம் செய்து கொண்டே கர்மங்களின் பந்தனங்களில் இருந்து விடுபட்ட கர்மாதீத் ஸ்திதியின் அனுபவம் செய்கிறீர்கள். கர்மத்தின் பந்தனத்தில் வருவதில்லை, ஆனால் சதா பாபாவின் அனைத்து சம்மந்தங்களிலும் இருக்கிறீர்கள். செய்விப்பவராகிய தந்தை நிமித்தமாக ஆக்கி, செய்வித்துக் கொண்டிருக்கிறார். ஆக, சுயம் சாட்சி ஆகி விட்டீர்கள். ஆகவே இந்த சம்மந்தத்தின் நினைவு பந்தன்முக்த் ஆக்கி விடுகின்றது. எங்கே சம்மந்தத்தில் செய்கிறீர்களோ, அங்கே பந்தனம் இருப்பதில்லை. நான் செய்தேன் -- இது போல் யோசித்தால் சம்மந்தம் மறந்து விடும், பந்தனமாகி விடும். சங்கமயுகம் பந்தனங்களில் இருந்து விடுபட்ட, சர்வ சம்மந்தங்களுடன் கூடிய, ஜீவன் முக்த் ஸ்திதியை அனுபவம் செய்யும் யுகம். ஆக, சோதித்துப் பாருங்கள், சம்மந்தத்தில் இருக்கிறீர்களா, அல்லது பந்தனத்தில் வருகிறீர்களா? சம்மந்தத்தில் அன்பின் காரணத்தால் பிராப்தி உள்ளது. பந்தனத்தில் ஈர்ப்பு, டென்ஷனின் காரணத்தால் துக்கம் மற்றும் அசாந்தியின் குழப்பம் உள்ளது. ஆகவே

 

எப்போது பாபா பிந்துவின் சகஜமான கணக்கைக் கற்றுத் தந்துள்ளாரோ, அப்போது தேகத்தின் பந்தனமும் முடிந்து போனது. தேகம் உங்களுடையதல்ல. பாபாவுக்குக் கொடுத்து விட்டீர்கள் என்றால் அது பாபாவுடையதாக ஆகி விட்டது. இப்போது உங்களுடைய உண்மையான பந்தனம், எனது சரீரம் அல்லது எனது தேகம் -- இந்த பந்தனம் முடிந்து விட்டது. எனது தேகம் எனச் சொல்வீர்களா என்ன? உங்களுக்கு அதிகாரம் உள்ளதா? கொடுத்து விட்ட பொருள் மீது உங்களுக்கு எப்படி அதிகாரம் வந்தது? கொடுத்து விட்டீர்களா அல்லது வைத்துக் கொண்டிருக்கிறீர்களா? உன்னுடையது எனச் சொல்லிவிட்டு என்னுடையது என ஏற்றுக் கொள்வதோ இல்லை தானே? எப்பொழுது உன்னுடையது எனச் சொல்லி விட்டீர்களோ, அப்போது எனது என்ற பந்தனம் முடிந்து விட்டது. இந்த எல்லைக்குட்பட்ட எனது என்பது தான் மோகத்தின் நூலாகும். நூல் என்று சொன்னாலும் சரி, விலங்கு என்று சொன்னாலும் சரி, கயிறு என்று சொன்னாலும் சரி, இது பந்தனத்தில் கட்டிப் போடுகிறது. அனைத்தும் பாபா, உங்களுடையவை என்றால் இந்த சம்மந்தத்தில் இணைந்து விட்டீர்கள் எனும்போது பந்தனம் முடிந்து சம்மந்தம் ஆகி விடுகிறது. எந்தவித பந்தனமானாலும், தேகத்தினுடையதோ, சுபாவத் தினுடையதோ, சம்ஸ்காரத்தினுடையதோ, மனதின் வளைந்து கொடுத்தலாயினும் இந்த பந்தனம் எதை உறுதி செய்கிறது என்றால் பாபாவிடம் சர்வ சம்மந்தங்களின், சதா கால சம்மந்தத்தில் (முழுமையாக இல்லாமல்) பலவீனம் உள்ளது. அநேகக் குழந்தைகள் சதா மற்றும் சர்வ சம்மந்தத்தில் பந்தன் முக்த்தாக உள்ளனர், இன்னும் அநேகக் குழந்தைகள் சமயத்தின் பிரமாணம் பெயரளவில் சம்மந்தத்தை இணைக்கின்றனர். அதனால் பிராமண வாழ்க்கையின் அலௌகிக ஆன்மிக ஆனந்தம் அடைவதிலிருந்து வஞ்சிக்கப்பட்டவர் ஆகின்றனர். தனக்குத் தான் திருப்தியடைவதும் இல்லை, மற்றவர்களிடமிருந்து திருப்திக்கான ஆசீர்வாதம் பெற முடிவதும் இல்லை. பிராமண வாழ்க்கை என்பது சிரேஷ்ட சம்மந்தங்களின் வாழ்க்கையாகும். அது பாபா மற்றும் சர்வ பிராமணப் பரிவாரத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான வாழ்க்கையாகும். ஆசீர்வாதம் என்றால் சுபபாவனைகள், சுபவிருப்பங்கள். பிராமணர்களாகிய உங்கள் ஜென்மமே, பாப்தாதாவின் ஆசீர்வாதங்கள் எனச் சொன்னாலும் சரி, வரதானம் எனச் சொன்னாலும் சரி, இதே ஆதாரத்தில் தான் நடந்துள்ளது. பாபா சொன்னார், நீங்கள் பாக்கியவான் சிரேஷ்ட விசேஷ ஆத்மாக்கள், இந்த ஸ்மிருதி ரூப ஆசீர்வாதம் மற்றும் வரதானத்தின் மூலம் சுபபாவனை, சுபவிருப்பத்தின் மூலம் பிராமணர்களாகிய உங்களுக்குப் புதிய வாழ்க்கை, புதிய ஜென்மம் ஏற்பட்டுள்ளது. சதா ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் சங்கமயுகத்தின் விசேஷமாகும். ஆனால் இந்த அனைத்தினுடைய ஆதாரம் சர்வ சிரேஷ்ட சம்மந்தமாகும். சம்மந்தம் என்பது எனது-எனது என்ற விலங்குகளை, பந்தனத்தை ஒரு விநாடியில் முடித்து விடுகிறது. மேலும் சம்மந்தத்தின் முதல் சொரூபம் அதே சகஜமான விஷயம் -- பாபாவும் பிந்து, நானும் பிந்து மற்றும் அனைத்து ஆத்மாக்களும் பிந்து. ஆக, பிந்துவின் கணக்கு ஆகிறது இல்லையா? இந்த பிந்துவில் தான் ஞானத்தின் சிந்து (கடல்) அடங்கி யுள்ளது. உலகத்தின் கணக்கின் படியும் கூட பிந்து (0) 10- 100-ஆக ஆக்கி விடுகிறது மற்றும் 100- 1000 ஆக்கி விடுகிறது. பிந்துவை அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள், எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள். அப்போது மதிப்பு எதற்கு உள்ளது? பிந்துவுக்குத் தான் மகத்துவம் இல்லையா? அது போல் பிராமண வாழ்க்கையில் சர்வ பிராப்திகளுக்கான ஆதாரம் பிந்து.

 

படிக்காதவர்கள் கூட பிந்து பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். ஒருவர் எவ்வளவு தான் தங்கள் வேலையில் சுறுசுறுப்பாக இருந்தாலும், ஆரோக்கியம் இல்லாமல் இருந்தாலும், புத்தி பலவீனமாக இருந்தாலும் பிந்துவின் கணக்கை அனைவரும் அறிந்து கொள்ள முடியும். மாதாக்களும் கூட கணக்கிடுவதில் சாமர்த்திய சாலிகள் இல்லையா? ஆக, பிந்துவின் கணக்கு சதா நினைவிருக்க வேண்டும். நல்லது.

 

எல்லா இடங்களில் இருந்தும் தங்களுடைய இனிய வீட்டுக்கு (மதுபன்) வந்து சேர்ந்து விட்டீர்கள். பாப்தாதாவும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்கள் பாக்கியத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். தங்களுடைய வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். இந்த உங்களுடைய வீடு தான் வள்ளலின் வீடு. தங்களின் வீடு என்பது ஆத்மா மற்றும் சரீரத்திற்கு ஓய்வு தரும் வீடு. ஓய்வு கிடைத்துக் கொண்டிருக்கிறது இல்லையா? இரட்டைப் பிராப்தி உள்ளது. ஓய்வும் கிடைக்கிறது, ராமும் (பாபா) கிடைத்து விட்டார். ஆக, இரட்டைப் பிராப்தி ஆகிறது இல்லையா? பாபாவின் வீட்டுக்கு அலங்காரமாகக் குழந்தைகள் உள்ளனர். பாப்தாதா வீட்டின் அலங்காரமாகிய குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நல்லது.

 

சதா சர்வ சம்மந்தத்தின் மூலம் பந்தன்முக்த், கர்மாதீத் ஸ்திதியின் அனுபவம் செய்பவர்கள், சதா பிந்துவின் மகத்துவத்தை அறிந்து மகான் ஆகக் கூடியவர்கள், சதா சர்வ ஆத்மாக்களின் மூலமாக திருப்தியின் சுபபாவனை, சுப விருப்பத்தின் ஆசீர்வாதம் பெறக்கூடியவர்கள், அனைவருக்கும் அத்தகைய ஆசீர்வாதம் தரக்கூடியவர்கள், சதா தன்னை சாட்சியாக உணர்ந்து, நிமித்த பாவத்துடன் கர்மம் செய்பவர்கள், அத்தகைய சதா அலௌகிக ஆனந்தத்தைக் கொண்டாடுபவர்கள், சதா மகிழ்ச்சியின் வாழ்க்கையில் இருப்பவர்கள், சுமையை முடித்து விடுபவர்கள், அப்படிப்பட்ட சதா பாக்கியவான் ஆத்மாக்களுக்கு பாக்கியவிதாதா தந்தையின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

 

தாதிகளிடம் -- சமயம் தீவிர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. எப்படி சமயம் தீவிர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறதோ, அது போல் சர்வ பிராமணர்களும் தீவிர வேகத்தில் பறக்கின்றனர். அவ்வளவு லேசாக, டபுள் லைட்டாக ஆகியிருக்கிறீர்களா? இப்போது விசேஷமாகப் பறக்க வைக்கும் சேவை உள்ளது. அது போல் பறக்க வைக்கிறீர்களா? எந்த விதி மூலம் அனைவரையும் பறக்கச் செய்ய வேண்டும்? வகுப்பில் பாடம் கேட்டுக் கேட்டே பாடம் நடத்துபவராக ஆகி விட்டனர். எந்த ஒரு விஷயத்தை நீங்கள் தொடங்கினாலும் அதற்கு முன்பாக அந்த விஷயம் பற்றிய பாயின்ட்டுகள் அனைவரிடமும் இருக்கும். ஆக, எந்த விதி மூலம் பறக்கச் செய்ய வேண்டும்? இதற்கான பிளானை உருவாக்கியிருக்கிறீர்களா? இப்போது லேசாக ஆக்குவதற்கான விதி தேவை. இந்தச் சுமை தான் மேலே-கீழே கொண்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சுமை உள்ளது. தன்னுடைய சம்ஸ்காரங்களின் சுமையாக இருக்கலாம், குழுவினுடையதாக இருக்கலாம். ஆனால் சுமை இருக்குமானால் அது பறக்க விடாது. இப்போது யாராவது பறந்தாலும் கூட அது மற்றவர்களின் வேகத்தினால் தான். எப்படி பொம்மை இருக்கிறது, அதைப் பறக்க வைக்கின்றனர். பிறகு என்னவாகிறது? பறந்து பிறகு கீழே வந்து விடுகிறது. நிச்சயமாகப் பறக்கின்றது, ஆனால் சதா பறப்பதில்லை. இப்போது பிராமண ஆத்மாக்கள் அனைவரும் பறப்பார்களானால் மற்ற ஆத்மாக்களைப் பறக்கச் செய்து பாபாவின் அருகில் கொண்டு சேர்க்க முடியும். இப்போதோ பறக்க வைப்பதைத் தவிர, பறப்பதைத் தவிர வேறு எந்த ஒரு விதியும் இல்லை. பறப்பதற்கான வேகம் தான் விதி. காரியங்கள் எவ்வளவு உள்ளன, சமயம் எவ்வளவு உள்ளது?

 

இப்போது குறைந்த அளவு 9 லட்சம் பிராமண ஆத்மாக்களோ முதலில் வேண்டும். அவ்வாறு எண்ணிக்கை அதிகமாகவே செய்யும். ஆனால் முழு உலகின் மீதும் இராஜ்யம் செய்வீர்களானால் குறைந்தது 9 லட்சமாவது இருக்க வேண்டும். சமயத்தின் பிரமாணம் சிரேஷ்ட விதி வேண்டும். சிரேஷ்ட விதி என்பது பறப்பதற்கான விதி. அதற்கான பிளானை உருவாக்குங்கள். சின்னச்சின்ன குழுக்களைத் தயார் செய்யுங்கள். அவ்யக்த பார்ட்டுக்கும் எத்தனை வருடம் ஆகி விட்டது! சாகார் பாலனை, அதன் பிறகு அவ்யக்த பாலனை -- எவ்வளவு சமயம் கழிந்து போனது! இப்போது கொஞ்சம் புதுமை செய்ய வேண்டும் இல்லையா? பிளான் (திட்டத்தை) உருவாக்குங்கள். இப்போது பறப்பதும் கீழே வருவதுமான சக்கரமோ முடிந்துவிட வேண்டும். 84 பிறவிகள் என்றால் 84 பிறவிகளின் சக்கரம் என்பது பாடப்பட்டுள்ளது. ஆக, 84-இல் எப்போது இந்தச் சக்கரம் முடிவடைகிறதோ, அப்போது சுயதரிசனச் சக்கரம் தூரத்திலுள்ள ஆத்மாக்களை சமீபத்தில் கொண்டு வரும். ஞாபகார்த்தமாக என்ன காட்டுகின்றனர்? ஓரிடத்தில் அமர்ந்தவாறு சக்கரத்தை அனுப்பினார் மற்றும் அந்த சுயதரிசனச் சக்கரம் தானாகவே ஆத்மாக்களை சமீபத்தில் கொண்டு வந்தது. தானே செல்வதில்லை, சக்கரத்தைச் செலுத்துகின்றார். ஆக, முதலில் இந்தச் சக்கரம் முடிவடைந்தால் தான் சுயதரிசனச் சக்கரம் செல்ல முடியும். ஆக, இப்போது 84-ஆம் ஆண்டில் இந்த விதியைத் தனதாக்குங்கள். அதனால் அனைத்து எல்லைக்குட்பட்ட சக்கரங்களும் முடிந்து போக வேண்டும். அது போலத் தான் யோசித்தீர்கள் இல்லையா? நல்லது.

 

டீச்சர்களுடன்

டீச்சர்களோ பறக்கும் கலையில் இருப்பவர்கள்! நிமித்தமாக ஆவது -- இது தான் பறக்கும் கலையின் சாதனம். ஆக, நிமித்தமாக ஆகியிருக்கிறீர்கள் என்றால் டிராமா அனுசாரம் பறக்கும் கலையின் சாதனம் கிடைத்து விட்டிருக்கிறது. இதே விதியின் மூலம் சதா சித்தியை அடையக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்கள் நீங்கள்! நிமித்தமாக ஆவது தான் லிஃப்ட். ஆக, லிஃப்ட் மூலம் நொடியில் சென்று சேரக்கூடிய பறக்கும் கலை உள்ளவர்கள் நீங்கள். ஏறும் கலையினர் அல்ல, அசைந்து கொடுப்பவர்கள் அல்ல, ஆனால் அசைக்கப்படும் போது அசைந்து கொடுக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்பவர்கள். டீச்சர்கள் என்பதன் அர்த்தமே நிமித்த பாவம். இந்த நிமித்த பாவனை தான் அனைத்து பலன்களின் பிராப்தியைத் தானாகவே செய்விக்கிறது. நல்லது.

 

அவ்யக்த மகாவாக்கியம் -- கர்மபந்தன்முக்த், கர்மாதீத், விதேகி ஆகுங்கள்!

விதேகி மற்றும் கர்மாதீத் ஸ்திதியின் அனுபவம் செய்வதற்காக எல்லைக்குட்பட்ட எனது -எனது என்ற தேக அபிமானத்தில் இருந்து விடுபடுங்கள். லௌகிக் மற்றும் அலௌகிக், கர்மம் மற்றும் பந்தனம் இரண்டிலும் சுயநல உணர்வில் இருந்து விடுபட்டவராக ஆகுங்கள். முந்தைய பிறவிகளின் கணக்கு-வழக்கு மற்றும் நிகழ்காலப் புருஷார்த்தத்தின் பலவீனத்தின் காரணத்தால் ஏதேனும் வீணான சுபாவ-சம்ஸ்காரங்களின் வசமாவதில் இருந்து விடுபட்டவர் ஆகுங்கள். எந்த ஒரு சேவையின், குழுவின், இயற்கையின் பரஸ்திதியானது, சுய ஸ்திதியை அல்லது சிரேஷ்ட ஸ்திதியை மேலே-கீழே ஆக்குகிறது என்றால் -- இதுவும் பந்தனத்திலிருந்து விடுபட்ட ஸ்திதி ஆகாது. இந்த பந்தனத்தில் இருந்தும் விடுபட்டவர் ஆகுங்கள். பழைய உலகத்தில் பழைய கடைசி சரீரத்தில் எந்த விதமான வியாதியும் தனது சிரேஷ்ட ஸ்திதியைக் குழப்பத்தில் கொண்டு வராமல் இருக்க வேண்டும். இதிலிருந்தும் விடுபட்டவர் ஆகுங்கள். வியாதி வருவது என்பது விதிக்கப் பட்டது, ஆனால் ஸ்திதி அசைந்து விடுவது என்பது பந்தனத்துடன் இருப்பதன் அடையாளமாகும். சுய சிந்தனை, ஞான சிந்தனை, சுபசிந்தனையாளர் ஆவதற்கான சிந்தனை மாறி சரீரத்தின் வியாதி பற்றிய சிந்தனை செய்வதிலிருந்து விடுபட்டவர் ஆகுங்கள் -- இது தான் கர்மாதீத் ஸ்திதி எனச் சொல்லப் படுகிறது.

 கர்மயோகி ஆகி கர்மங்களின் பந்தனத்தில் இருந்து சதா விலகியவராக, சதா பாபாவுக்குப் பிரியமானவராக ஆகுங்கள் -- இது தான் கர்மாதீத் - விதேகி ஸ்திதியாகும். கர்மாதீத் என்பதன் அர்த்தம் கர்மத்திலிருந்து விடுபட்டு விடுங்கள் என்பதல்ல. கர்மத்திலிருந்து விலகியவராக அல்ல, கர்மத்தின் பந்தனத்தில் சிக்கிக் கொள்வதிலிருந்து விலகியவராக ஆகுங்கள். எப்படிப்பட்ட பெரிய காரியமாக இருந்தாலும் காரியம் செய்து கொண்டிருக்கவில்லை, ஆனால் விளையாடிக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்ற வேண்டும். எந்த ஒரு பரஸ்திதி வந்தாலும் சரி, யாரேனும் ஆத்மா கணக்கு-வழக்கை முடிப்பவர் எதிராண உணர்வுடன் வந்து கொண்டிருந்தாலும் சரி, சரீரத்தின் கர்மபோகம் (உடல் நோய்) எதிர்கொள்வதற்காக வந்து கொண்டிருந்தாலும் சரி, எல்லைக்குட்பட்ட விருப்பங்களில் (அவைகளின் பாதிப்பிலிருந்து) இருந்து விடுபட்டு இருப்பது தான் விதேகி ஸ்திதி ஆகும். எது வரை இந்த தேகம் உள்ளதோ, கர்மேந்திரியங்களுடன் கூட இந்தக் கர்ம சேத்திரத்தில் உங்கள் பாகத்தை நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது வரை கர்மம் இல்லாமல் ஒரு விநாடி கூட இருக்க முடியாது. ஆனால் கர்மம் செய்யும் போதும் கர்மத்தின் பந்தனத்தில் இருந்து விடுபட்டு இருப்பது தான் கர்மாதீத் விதேகி அவஸ்தா ஆகும். ஆக, கர்மேந்திரியங்கள் மூலம் கர்மத்தின் சம்மந்தத்தில் வர வேண்டும், கர்மத்தின் பந்தனத்தில் கட்டுண்டுவிடக் கூடாது. கர்மத்தின் அழியக்கூடிய பலனுக்கான ஆசை வசமாக ஆகிவிடக் கூடாது. கர்மாதீத், அதாவது கர்மத்தின் வசமாக ஆகிறவர் இல்லை, ஆனால் மாலிக் ஆகி, அத்தாரிட்டி ஆகிக் கர்மேந்திரியங்களின் சம்மந்தத்தில் வர வேண்டும். அழியக்கூடிய ஆசைகளில் இருந்து விலகி இருந்து, கர்மேந்திரியங்கள் மூலமாகக் கர்மம் செய்ய வேண்டும். ஆத்மாவாகிய மாலிக்கைக் கர்மம் தனது அடிமையாக ஆக்கக் கூடாது. ஆனால் அதிகாரி ஆகிக் கர்மத்தைச் செய்வித்துக் கொண்டே இருக்க வேண்டும். செய்விப்பவர் ஆகிக் கர்மம் செய்விப்பது -- இதைத் தான் கர்மத்தின் சம்மந்தத்தில் வருவது எனச் சொல்வார்கள். கர்மாதீத் ஆத்மா சம்மந்தத்தில் வருவார், பந்தனத்தில் அல்ல.

 கர்மாதீத் என்றால் தேகம், தேகத்தின் சம்மந்தம், பொருட்கள், லௌகிக் ஆயினும் சரி, அலௌகிக் ஆயினும் சரி, இரண்டு சம்மந்தங்களிலும் இருந்து அப்பாற்பட்டு, அதாவது விலகி இருக்க வேண்டும். சம்மந்தம் என்ற வார்த்தை சொல்லப் படுகிறது என்றால் தேகத்தின் சம்மந்தம், தேகத்தின் உறவினர்களின் சம்மந்தம் என்பது வருகிறது, ஆனால் தேகத்தில் அல்லது சம்மந்தத்தில் அடிமைத்தனம் உள்ளது என்றால் சம்மந்தமும் கூட பந்தனம் ஆகி விடும். கர்மாதீத் அவஸ்தாவில் கர்ம சம்மந்தம் மற்றும் கர்ம பந்தனத்தின் இரகசியத்தை அறிந்திருக்கும் காரணத்தால் சதா ஒவ்வொரு விஷயத்திலும் திருப்தியாக இருப்பார்கள். ஒரு போதும் கோபமடைய மாட்டார்கள். அவர்கள் தங்களின் முந்தைய கர்மங்களின் கணக்கு-வழக்கின் பந்தனத்தில் இருந்தும் கூட விடுபடுவார்கள். கடந்த காலக் கர்மங்களின் கணக்கு-வழக்கின் பலனாக வரும் உடலின் நோயாக இருந்தாலும், மனதின் சம்ஸ்காரங்கள் மற்ற ஆத்மாக்களின் சம்ஸ்காரங்களோடு மோதல் ஏற்பட்டாலும் கூட கர்மாதீத் ஆத்மாக்கள் கர்மபோகத்தின் வசமாக ஆகாமல், மாலிக் ஆகி, கணக்கை முடித்து விடுவார்கள். கர்மயோகி ஆகி கர்மபோகத்தை முடிப்பது என்பது கர்மாதீத் ஆவதற்கான அடையாளமாகும். யோகத்தின் மூலம் கர்மபோகத்தைப் புன்சிரிப்புடன் ஈட்டியிலிருந்து முள்ளாக மாற்றி பஸ்மம் செய்வது என்றால் கர்மபோகத்தை முடித்து விடுவதாகும். கர்மயோகத்தின் ஸ்திதி மூலமாகக் கர்மபோகத்தை மாற்றியமைத்து விடுவது தான் கர்மாதீத் ஸ்திதி ஆகும். வீண் சங்கல்பங்கள் தான் கர்ம பந்தனத்தின் சூட்சுமமான கயிறுகள் ஆகும். கர்மாதீத் ஆத்மா கெட்டதிலும் நல்லதை அனுபவம் செய்வார்கள். அவர்கள் சொல்வார்கள் -- எது நடக்கிறதோ, அது நல்லது, நானும் நல்லவன், பாபாவும் நல்லவர், டிராமாவும் நல்லது. இந்த சங்கல்பம் பந்தனத்தை வெட்டுவதற்கான கத்திரிக்கோலின் வேலையைச் செய்யும். பந்தனம் வெட்டப் பட்டு விட்டால் கர்மாதீத் ஆகி விடுவீர்கள்.

 விதேகி ஸ்திதியின் அனுபவம் செய்வதற்காக இச்சா மாத்ரம் அவித்யா (ஆசை பற்றி அறியாதவராக) ஆகுங்கள். அத்தகைய எல்லைக்குட்பட்ட ஆசைகளில் இருந்து விடுபட்ட ஆத்மா, அனைவரின் ஆசைகளை நிறைவேற்றக்கூடிய பாபாவுக்கு சமமான காமதேனு ஆவார். எப்படி பாபாவின் அனைத்து பண்டாராக்களும், அனைத்துக் கஜானாக்களும் சதா நிறைந்துள்ளனவோ, அப்பிராப்தியின் பெயர், அடையாளமே இல்லாமல் உள்ளதோ, அது போல் பாப்-சமான் சதா மற்றும் சர்வ கஜானாக்களாலும் நிரம்பியவர் ஆகுங்கள். சிருஷ்டிச் சக்கரத்தினுள் தனது பாகத்தை நடித்துக் கொண்டே அநேக துக்கங்களின் சக்கரங்களில் இருந்து விடுபட்டு இருப்பது தான் ஜீவன்முக்த் ஸ்திதி ஆகும். அத்தகைய ஸ்திதியின் அனுபவம் செய்வதற்காக அதிகாரி ஆகி, மாலிக் ஆகி சர்வ கர்மேந்திரியங்கள் மூலமாகவும் கர்மம் செய்விப்பவர் ஆகுங்கள். கர்மத்தில் வாருங்கள், பிறகு கர்மம் முடிந்ததும் விலகியவராக ஆகுங்கள் -- இது தான் விதேகி ஸ்திதியின் அப்பியாசம். நல்லது.

 

வரதானம்:

எனது என்பதை உனது என மாற்றி, பறக்கும் கலையின் அனுபவம் செய்யக்கூடிய டபுள் லைட் ஆகுக.

 

இந்த அழியக்கூடிய உடல் மற்றும் செல்வம், பழைய மனம் என்னுடையவை அல்ல. பாபாவுக்குக் கொடுத்து விட்டேன். முதல் சங்கல்பமே இதைத் தான் செய்தேன் -- அதாவது அனைத்தும் உன்னுடையது இதில் பாபாவுக்கு நன்மை இல்லை, உங்களுக்கு நன்மை உள்ளது. ஏனென்றால் எனது எனச் சொல்வதால் சிக்கிக் கொள்கிறீர்கள், உனது எனச் சொல்வதால் விடுபட்டு விடுகிறீர்கள். எனது எனச் சொல்வதால் சுமை உள்ளவர் ஆகி விடுகிறீர்கள். உனது எனச் சொல்வதால் டபுள் லைட், டிரஸ்டி ஆகி விடுகிறீர்கள். எது வரை ஒருவர் லேசாக ஆகவில்லையோ, அது வரை உயர்ந்த ஸ்திதி வரை சென்றடைய முடியாது. லேசாக இருப்பவர்கள் தாம் பறக்கும் கலை மூலம் ஆனந்தத்தின் அனுபவம் செய்கிறார்கள். லேசாக இருப்பதில் தான் ஆனந்தம் உள்ளது.

 

சுலோகன்

யார் மீது எந்த ஒரு மனிதரோ இயற்கையோ தனது பிரபாவத்தை ஏற்படுத்த முடியாதோ, அவர் தான் சக்திசாலி ஆத்மா ஆவார்.

 

ஓம்சாந்தி