02.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்போது பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர்களாக, பிச்சைக்காரரிலிருந்து இளவரசர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் குஷியில் துள்ளிக் குதிக்க வேண்டும், ஒரு போதும் அழக் கூடாது.

 

கேள்வி:

அழிவற்ற ஞான ரத்தினங்களின் மழையின் மூலம் பாரதத்தை செல்வம் நிறைந்ததாக ஆக்குவதற்காக தந்தை உங்களை எந்த விஷயத்தில் தமக்குச் சமமாக ஆக்குகிறார்?

 

பதில்:

பாபா கூறுகிறார் - குழந்தைகளே! நான் எப்படி ஞானம், யோகத்தில் நிறைந்துள்ளேனோ, அதுபோல உங்களையும் ஞான, யோகத்தில் நிறைந்தவராக ஆக்குகிறேன். உங்களுக்கு கிடைத்துள்ள அழிவற்ற ஞான ரத்தினங்களை தாரணை செய்து வாய் மூலம் தானம் செய்யுங்கள். இந்த மஹா தானத்தின் மூலமாகத்தான் பாரதம் செல்வம் நிறைந்ததாக ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுப்பது போல பிறருக்கும் கொடுங்கள். உங்களுடைய கடமை அனைவருக்கும் வழி காட்டுவது, சுகம் கொடுப்பவராக ஆக வேண்டும்.

 

பாடல்:

நீதியின் பாதையில். . . .

 

ஓம் சாந்தி.

இந்தப் பாடல் காங்கிரஸாருக்கும் பொருந்தும், குழந்தைகளாகிய உங்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் அவர்கள் சகிப்புத் தன்மையுடன் ஆங்கிலேயரிடமிருந்து பாரதத்தை விடுதலை செய்தனர். ஆக இந்த பாடலில் அவர்களுடைய குஷி நிறைந்துள்ளது. குஷி என்னவோ கொண்டாடியபடி இருக்கின்றனர், எவ்வளவுதான் செய்திருக்கட்டும், ஆனாலும் பழைய உலகம் மாறவில்லை அல்லவா? உலகம் அதே பழையதுதான். நாம் உலகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அதை ஸ்ரீமத் என்று சொல்ல முடியாது. ஸ்ரீமத் ஒரே ஒரு பகவானுடையதாகும். நீங்கள் இப்போது தந்தையின் உயர்ந்ததிலும் உயர்ந்த ஸ்ரீமத் படி இருக்கிறீர்கள். அவர்கள் பிறகு ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டனர். இது ஸ்ரீ சிவபாபாவின் வழி என்று இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். கிருஷ்ணரை பாபா என்று கூறுவது அழகாக இல்லை. ஸ்ரீ சிவபாபாவின் வழி. ஸ்ரீ கிருஷ்ண பாபாவின் வழி என்று கூறுவதில்லை. நீங்கள் இந்த பாரதத்தை மீண்டும் தூய்மையாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். பாரத கண்டம்தான் முக்கியமானதாகும். ஏனெனில் இது எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் பிறப்பிடம் ஆகும். இது சர்வோத்தம தீர்த்தம் என்று கூறப்படுகிறது. இது போன்ற உயர்விலும் உயர்வான தீர்த்தம் வேறு எதுவுமில்லை. ஆனால் கீதையில் பெயரை மாற்றி விட்டனர். இந்த பாரதம் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் பிறப்பிடம் என்பதை இந்த பாரதவாசிகள் தாங்களே அறியவில்லை. சிவராத்திரியைக் கொண்டாடுகின்றனர், ஆனால் சிவன் யார், எப்போது வந்தார், அவருடைய பெயர், உருவம் என்ன என்பது தெரியாது. நீங்கள் இப்போது தெரிந்து கொண்டீர்கள். இப்போது சிவலிங்கத்தின் படத்தில் வெண்ணிற நட்சத்திரம் காட்டுகின்றனர், இது பரமாத்மாவின் ரூபம் என்று தெளிவாகப் புரிந்து கொள்ளட்டும் என்று. ஆனால் பூஜை முதலானவை எப்படி செய்வது? ஆகையால் பெரிய ரூபமாக உருவாக்கியுள்ளனர். உண்மையில் நட்சத்திரம் போன்றவர். பாபா இரத்தின வியாபாரியும் ஆவார். பாபாவுக்குத் தெரியும் - ஒரு கல் கூட உள்ளது, அதனை ஸ்டார் ரூபி (நட்சத்திர ரூபி), ஸ்டார் ஃபைன் மாணிக்கம் (தெளிவான மாணிக்கம்), ஸ்டார் நீலம் என்றெல்லாம் சொல்கின்றனர். அது மிகவும் விலை மதிப்பு வாய்ந்ததாகும். அனைத்திலும் பெரிய ஸ்டார் (மாணிக்கம்) இன்ன கருவூலத்திலிருந்து திருடப்பட்டு விட்டது என்று ஒரு முறை செய்தித்தாளிலும் கூட செய்தி வெளியாகி இருந்தது. ஆக இந்த சிவலிங்கம் மாணிக்கம் ஆகும், இதில் இடையில் வெண்ணிற நட்சத்திரம், நட்சத்திரத்தின் ஒளி உள்ளது. புரிய வைப்பது மிகவும் சகஜமாக இருக்கும். நட்சத்திரம் வெண்மையாக இருக்கிறது அல்லவா! ஆத்மா வெண்ணிற நட்சத்திரமாகத்தான் காட்சியில் தெரிகிறது. பொருள் என்னவோ இதேதான். நட்சத்திரத்தைப் போட வேண்டும், வேறு எதுவும் எழுத வேண்டிய அவசியமில்லை. புரிய வைப்பது மிகவும் சகஜமாக இருக்கும். கீழே இந்த வார்த்தைகள் இருக்கவே இருக்கின்றன - சொர்க்கத்தின் இராஜ்யம் உங்களுடைய பிறப்புரிமை. ஏனென்றால் சொர்க்கத்தின் இறை தந்தை ஆவார். ஆக நட்சத்திர ஒளியைப் போட வேண்டும். இப்போது பாபா வழி கொடுத்துக் கொண்டிருக்கிறார். சட்டென்று இந்த வேலையை செய்ய வேண்டும். நட்சத்திரம் போன்ற ஒளி மிகவும் முதல்தரமாகத் தெரியக்கூடிய கற்களும் உள்ளன. இங்கே அவைகளுக்கு மிகவும் மதிப்பு இருக்கும். பிறகு சத்யுகத்தில் இந்த பொருட்களுக்கு மதிப்பே இருக்காது. அங்கே இந்த வைடூரியங்கள் வெறும் கற்களைப் போலத்தான் எண்ணப்படும், மாளிகைகளில் பதித்தபடி இருப்பார்கள். இந்த உலகம் இப்போது மாறிக் கொண்டிருக்கிறது. நாம் சொர்க்கத்தின் எஜமான் ஆவதற்காக தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம், படித்துக் கொண்டிருக்கிறோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். யார் எவ்வளவு படிக்கின்றனரோ, அந்த அளவு உயர்ந்த பதவி அடைவார்கள். படிக்க வேண்டும், பிறகு படிக்க வைக்கவும் வேண்டும், அதாவது தமக்குச் சமமாக ஆக்க வேண்டும், அப்போதுதான் உயர்ந்த பதவி அடைய முடியும். நாம் பிராமணர்கள், நாம் உண்மையான யாத்திரை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று குழந்தைகள் புரிந்து கொள்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். எந்த மனிதரும் தந்தையை அறிந்து கொள்ளவில்லை. தந்தை ஒருவர்தான். மற்ற அனைவருக்கும் அவரவர்களுடைய நடிப்பு கிடைத்துள்ளது. ஒரு ஆத்மாவின் நடிப்பு மற்றொன்றுடையதைப் போல இருக்காது. ஆத்மா அழிவற்றது, இதனுடைய ரூபத்தில் எந்த வித்தியாசமும் இருக்க முடியாது. சரீரங்களில் வித்தியாசம் உள்ளது, மேலும் ஒவ்வொரு ஆத்மாவின் நடிப்பிலும் வித்தியாசம் உள்ளது. நட்சத்திர ஒளி போருக்கும் ஒவ்வொரு ஆத்மாவிலும் அழிவற்ற நடிப்பு அடங்கியுள்ளது. இந்த விஷயங்களையும் நீங்கள்தான் வரிசைக்கிரமமான முயற்சியின்படி அறிவீர்கள். ஆத்மாவைக் குறித்து புருவ மத்தியில் ஜொலிக்கக் கூடிய அதிசயமான நட்சத்திரம் என்று பாடவும் செய்கின்றனர். அதிசயமானது அல்லவா! எவ்வளவு சிறிய நட்சத்திரம், அதில் 84 பிறவிகளின் நடிப்பு நிறைந்திருக்கிறது. இந்த விஷயங்களைக் கேட்டார்கள் என்றால் இவர்களுக்கு படிப்பிப்பவர் அந்த பரமாத்மா என்று மரியாதை கொடுப்பார்கள். நீங்களோ அனைவரையும் படிப்பிக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் ஆங்கிலம் தெரிந்தவராக இருப்பார்கள், நீங்கள் இந்தியில் சொல்லுங்கள், பிறகு மொழிபெயர்ப்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்வார். அவர்களிடம் மொழிபெயர்ப்பவர்கள் இருப்பார்கள். தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். தந்தை துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவராக இருப்பது போல குழந்தைகளாகிய நீங்களும் ஆக வேண்டும். ஒவ்வொருவருக்கும் வழி காட்ட வேண்டும். பிறரையும் சுகம் கொடுப்பவராக ஆக்க வேண்டியது உங்களுடைய கடமையாகும். நீங்கள் தானும் தந்தையிடமிருந்து இவ்வளவு ஆஸ்தி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனும்போது பிறருக்கும் கொடுக்க வேண்டும். இது மஹா தானமாகும். இந்த ஒவ்வொரு மஹாவாக்கியமும் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புமிக்கதாகும். சாஸ்திரங்களின் வாக்கியங்கள் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு மிகுந்ததாக இருந்தால் பின் பாரதம் ஏன் இத்தனை ஏழையாக ஆகிறது?

 

ஆக குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்க வேண்டும், தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும், அவரும் கூட பரம ஆத்மா ஆவார். ஞானமும் நிறைந்தவர், யோகமும் நிறைந்தவர். ஆனால் அழிவற்ற ஞானரத்தினங்களின் மழையை எப்படிப் பொழிவார்? கண்டிப்பாக சரீரம் தேவை. ஆக தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களை அதாவது உங்கள் ஆத்மாவை ஞானம் யோகம் நிறைந்ததாக ஆக்குகிறார். அழிவற்ற ஞான இரத்தினங்களை தாரணை செய்ய வேண்டும். வாய் மூலம் இந்த தானம் கொடுக்க வேண்டும், இந்த இரத்தினங்களுக்கு விலையே மதிப்பிட முடியாது. அது குறித்து ஒரு கதையும் உள்ளது. ஆக இதை தாரணை செய்ய வேண்டும். சிவபாபா, பம்-பம் போலாநாத் (கள்ளங்கபடமற்றவரே) பையை நிரப்பி விடுங்கள் என்று கூறுகின்றனர் அல்லவா! இந்த அழிவற்ற ஞான ரத்தினங்களால் பையை நிரப்ப வேண்டும். பிறகு அங்கே (சத்யுகத்தில்) உங்களின் வைர வைடூரியங்களால் ஆன மாளிகை உருவாகப் போகிறது. ஆக இதை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க வேண்டும். தந்தை வசிக்குமிடம் நிர்வாண தாமம் அல்லது முக்தி தாமம். அனைத்தும் கடந்த நிர்வாணத்துக்குச் சென்று விட்டார் என்று புத்தர் முதலானவர்களைக் குறித்து கூறுகின்றனர். ஆக அது அனைவரின் வீடாகி விட்டதல்லவா? தந்தையின் வீடும் அதுவே ஆகும். தந்தை இப்போது அனைவரையும் அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். அளவற்ற செல்வங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆக தந்தையின் அறிமுகத்தை நீங்கள் கொடுக்காவிட்டால் வேறு யார் கொடுப்பார்கள்? நான் கிறிஸ்தவன், நான் இன்னார் . . . என்ற இவையனைத்தும் தேகத்தின் தர்மங்களாகும். இவையனைத்தும் விட்டுவிட்டு இப்போது தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். அவரை பக்தி மார்க்கத்தில் நீங்கள் நினைவு செய்து வந்தீர்கள். இறுதி நிலைக்கேற்ற கதி என்று பாடவும் படுகிறது. இறுதிக்காலத்தில் யார் மனைவியை நினைக்கிறார்காளோ . . . என்று கிரந்தங்களில் கூட உள்ளது அல்லவா? இப்போது நாயாகவோ பன்றியாகவோ ஆக முடியாது. ஆனாலும் பிறவி என்னவோ கிடைக்கிறது அல்லவா! இங்கே தந்தை கூறுகிறார் ஆத்ம அபிமானி ஆகுங்கள், என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் உங்கள் தந்தையையும் வீட்டையும் மறந்து விட்டீர்கள். இப்போது நாடகம் முடிவடைகிறது, மீண்டும் திரும்பவும் நடக்க வேண்டும். இஸ்லாம், பௌத்த, கிறிஸ்தவர்கள் அனைவரும் தம் நடிப்பை திரும்பவும் நடித்தபடி வந்துள்ளனர். இந்த நாடகம் பல முறை திரும்பத் திரும்ப நடந்தபடி வந்துள்ளது. அதற்கு ஏதும் தொடக்கமும் முடிவும் கிடையாது. நாடகத்திற்கு தொடக்கமும் முடிவும் உண்டு. மீண்டும் மீண்டும் தானாகவே நடந்தது நடந்தபடி வருகிறது. யாருக்கு இந்த விஷயங்கள் புரிந்துள்ளதோ அவர்கள் பிறருக்கும் புரிய வைக்க வேண்டும் - வந்து தந்தையை அறிந்து கொள்ளுங்கள். தந்தையை அறிந்து கொள்ளாததால் அனாதைகளாகி உள்ளனர். இப்போது சண்டை போடாதீர்கள் என்று போப் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர்கள் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. கிறிஸ்தவர்களின் பெரியவர் போப். அனைவருடைய குருவாக இருப்பவர். பிறகு குருவின் வழிப்படி ஏன் நடப்பதில்லை? அவர்கள் யாருடைய பேச்சையும் ஏற்பதில்லை. தந்தையே வந்து வழி கொடுக்கிறார் எனும்போது அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். மெது மெதுவாக அனைத்து தர்மத்தவர்களும் புரிந்து கொள்வார்கள். முதலில் சிந்தி இனத்தைச் சேர்ந்த நீங்கள் மட்டுமே இருந்தீர்கள். இப்போது அனைவரும் வரத் தொடங்கியுள்ளனர். கிறிஸ்தவர்களுக்கும் கூட தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும், அதன் மூலம் அவர்களும் கூட தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுக்க உரிமை நிறைந்தவராகலாம். இதில் களைப்படையக் கூடாது. இந்த கண்காட்சி மிகவும் நன்றாக நடக்கும். சேவை செய்யத் தகுந்த குழந்தைகள் மீது சேவையின் மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அவர்கள்தான் மனதில் இடம் பிடிப்பார்கள், பிறகு சிம்மாசனத்தில் வீற்றிருப்பார்கள். மஹாதானி ஆக வேண்டும், பிறகு தந்தையை நினைவு செய்ய வேண்டும். அவர்கள் அடுத்த பிறவிக்காக இன்ஷியூர் (காப்பீடு) செய்கின்றனர். ஈஸ்வரனுடைய அல்லது கிருஷ்ணருடைய பெயரில் தானம் செய்கின்றனர். உண்மையில் கிருஷ்ணர் செல்வந்தராக இருப்பவர், அவரது தானம் எடுக்கப்பட்டு விட்டது, தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொண்டு விட்டார். சொர்க்கத்தின் இளவரசர் ஆகினார் என்றால் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவரிடமிருந்து ஆஸ்தி எடுத்தார் அல்லவா! ஆனால் எப்படி எடுத்தார்? இது யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. தந்தைதான் கிருஷ்ணருக்கும் ஆஸ்தி கொடுத்தார். ஆஸ்தியைத்தான் தானம் என்றும் சொல்லப்படுகிறது. கன்னியாதானம் செய்கின்றனர் அல்லவா! இப்போது தந்தை கூறுகிறார் - நான் உங்களுக்கு அழிவற்ற ஞான இரத்தினங்களின் தானம் கொடுக்க வந்துள்ளேன். இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். செலவு ஏற்படலாம், நஷ்டம் எதுவுமில்லை. நம்மிடம் குழந்தைகள் காட்சிகள் பார்த்தனர். இப்ராஹிம், புத்தர், கிறிஸ்து முதலான அனைத்து பெரிய பெரியவர்களும் கடைசியில் வருவார்கள். கண்டிப்பாகக் கேட்பார்கள், அப்போதுதான் பதவியை அடைவார்கள் அல்லவா? குழந்தைகளுக்கு குஷி ஏற்பட வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு பாரதத்துடன் மிகவும் தொடர்பு உள்ளது. இராஜ்யத்தையும் எடுத்தனர், பிறகு இப்போது திருப்பிக் கொடுக்கவும் செய்கின்றனர். அவர்கள் பாரதத்தை மிகவும் பராமரிக்கவும் வேண்டியுள்ளது. ஒருவேளை பாரதத்தை யாராவது தமது ஆட்சிக்குக் கீழே கொண்டு வந்து விட்டால் பணம் அனைத்தும் முடிந்து விடும். அவர்கள் (கிறிஸ்தவர்கள்) அதிக அளவில் பணம் கொடுத்து விட்டுள்ளனர். அனைத்து செல்வமும் இல்லாமல் போய் விடும். ஆகையால் அனைத்து விதங்களிலும் பாரதத்தைக் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்வார்கள். அவர்களுக்கு உதவியும் கண்டிப்பாக தேவை மற்றும் பணமும் திருப்பித் தர வேண்டும். அவர்கள் காப்பாற்றத்தான் வேண்டும். பாரதம் ஏழையாக உள்ளது என்பதை பாபா அறிவார், ஆகவே அங்கிருந்தும் கூட உதவி செய்விக்கிறார் மற்றும் தானும் கூட வந்து உதவி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது அவர்கள் உதவி செய்கின்றனர், பிறகு எதிர்காலத்திற்காக தந்தை உதவி செய்கிறார். ஆக, மிகவும் நல்ல ஒரு மண்டபத்தை உருவாக்கி அங்கே அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு கொடுக்க வேண்டும். எவ்வளவு நல்ல நல்ல படங்கள் இருக்கின்றன. இவைகளில் அனைத்து ஞானமும் உள்ளது. நாளுக்கு நாள் புத்தியின் பூட்டு திறந்தபடி செல்லும்.

 

சிறிய ஆத்மாவுக்குள் எவ்வளவு அதிகமான நடிப்பு நிறைந்துள்ளது! விஞ்ஞானிகள் கூட இந்த விஷயங்கள் குறித்து மிகவும் அதிசயப்படுவார்கள். யாரோ தம்மைத் தூண்டுவதாக விஞ்ஞானிகள் கூட புரிந்து கொள்கின்றனர். வினாசம் கண்டிப்பாக நடக்க வேண்டும். இது நாடகத்தில் பதிவாகியுள்ளது. சங்கரருடைய விஷயம் ஏதுமில்லை. நிமித்தமாக பெயர் வைக்கப் பட்டுள்ளது. இயற்கையின் சீற்றங்கள் கூட கண்டிப்பாக ஏற்பட வேண்டும். இந்த விஷயங்களைக் கேட்டு அவர்கள் மிகவும் குஷியடைவார்கள், உங்களுக்கு மிகவும் நன்றி சொல்வார்கள். நிறைய வெளி நாட்டவர்கள் வருவார்கள். வீட்டில் அமர்ந்தபடி இருக்கும்போது வந்தார்கள் என்றால் கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும். இந்த சமயத்தில் தன்னைப் பொருத்த வரையில் அனைவருமே அனாதைகள், ஏழைகளாக உள்ளனர். முழு உலகமுமே யாருமற்றவராக உள்ளது, ஏனென்றால் தாய் தந்தையின் அறிமுகமே இல்லை. ஆக நீங்கள் உலகின் எஜமான் ஆகிறீர்கள். எனவே குழந்தைகளுக்கு சேவையின் ஆர்வமும் இருக்க வேண்டும். வந்து புரிந்து கொள்ளுங்கள், அனைத்து ஆத்மாக்களையும் அழைத்துச் செல்ல தந்தை வந்து விட்டார் என்று தந்தியும் அனுப்புவீர்கள். ஆத்மா குஷியடைகிறது - இப்போது நாடகம் முடிந்து விட்டது, இப்போது அழைத்துச் செல்வதற்காக பாபா வந்துள்ளார். பிறகு நாம் சுகதாமத்திற்கு வருவோம். அரை கல்ப காலம் பூஜாரியாகி தந்தையை நினைத்தோம். இப்போது மீண்டும் பூஜைக்குரியவர் ஆக வேண்டும். எனவே குஷியில் துள்ளிக் குதிக்க வேண்டும். குஷி இல்லாததால் பிறகு அழுதபடி இருக்கின்றனர். அழுபவர்கள் இழக்கின்றனர். ஆம், இப்படிப்பட்ட சுகம் கொடுக்கக் கூடிய தந்தையின் நினைவில் அன்புக் கண்ணீர் வந்தது என்றால் அவர்கள் மாலையின் மணிகள் ஆவார்கள். தந்தையின் ஸ்ரீமத்படி சிரேஷ்டமாகின்றனர். ஒவ்வொரு அடியிலும் சிவபாபாவின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் என்று இந்த தந்தை (பிரம்மா) கூட கூறுகிறார். ஸ்ரீமத் தான் உயர்வானது. மிகவும் உயர்வான படிப்பாகும். தீர்த்தங்களுக்கு மனிதர்கள் செல்கின்றனர். பல கஷ்டங்கள் முன்னால் வருகின்றன. முன்னர் கால் நடையாகவே சென்று கொண்டிருந்தனர், இப்போது அரசாங்கம் எளிதாக்கி விட்டது. ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார். எச்சரிக்கையுடன் ஏறினால் வைகுண்ட ரசத்தை சுவைப்பார்கள், விழுந்தால் சுக்கு நூறாகி விடுவார்கள். ஒவ்வொரு அடியிலும் வழி கேட்க வேண்டும். பிரம்மா அல்லது பிரம்மா குமாரிகளின் மூலமாக சிவபாபாவுக்கு என்று கடிதம் எழுதுங்கள். அப்போது சிவபாபாவின் நினைவு இருக்கும். ஆனால் பல குழந்தைகள் எழுதுவதற்கு மறந்து விடுகின்றனர். ஒரு நாள் அனைவரின் புத்தியின் பூட்டு திறந்துவிடப் போகிறது. குழந்தைகளுக்கு சேவையின் ஆர்வம் அதிகமாக இருக்க வேண்டும். அதிக அளவில் சேவை செய்ய வேண்டும். இதுவும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. செலவுக்கு தானாகவே பணம் வரும். அனாயாசமாகவே அனைத்தும் நடந்தபடி செல்லும். உங்களுக்கு 3 அடி நிலம் கிடைப்பதும் கடினமாக உள்ளது என்று தந்தை கூறுகிறார். எனினும் கூட கல்பத்திற்கு முன்பு நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கித்தான் உள்ளீர்கள். நல்லது,

 

நிறையவே புரியவைக்கிறார். தாரணையும் ஏற்பட வேண்டும். அதிக அளவில் உணவு உண்டால் பிறகு செரிமானம் ஆகாது. கண்காட்சிகளில் ஏராளமானவர் வருகின்றனர், ஆனால் இவர்களை படிப்பிப்பவர் அல்லது இராஜயோகம் கற்பிப்பவர் தந்தை என்ற நம்பிக்கை ஒருவரின் புத்தியிலும் உட்காருவதில்லை. முதன் முதலில் இந்த நிச்சயத்தை ஏற்படுத்த வேண்டும். இவர்கள் பிரஜாபிதா பிரம்மாகுமார், குமாரிகள் என்று நீங்கள் புரிய வைக்க முடியும். படைப்பவர் ஒரே ஒரு பரமபிதா பரமாத்மா ஆவார். தந்தையிடமிருந்துதான் ஆஸ்தி கிடைக்க வேண்டும். தந்தையின் குழந்தை ஆகாதவரை ஆஸ்தி கிடைக்காது. பக்தர்களுக்கு பலன் கொடுப்பவர் தந்தை. இவ்வளவு பிரம்மா குமார் குமாரிகள் உள்ளனர். பிரஜாபிதா பிரம்மாவையும் கூட படைப்பவர் என்கின்றனர். இப்போது புதிய உலகத்தின் படைப்பு ஏற்படுகிறது. பகவானுடைய மகாவாக்கியம் - நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுத் தருகிறேன். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான அதிர்ஷ்ட நட்சத்திரங்களுக்கு ஞான சூரியன், ஞான சந்திரனின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தந்தையின் மனசிம்மாசனத்தில் அமர்வதற்கு சேவையில் பொறுப்பு எடுக்க வேண்டும். கண்டிப்பாக மகாதானி ஆக வேண்டும். ஞான தானம் செய்வதில் கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லை.

 

2. உயர்ந்த ஏணி (குறிக்கோள்) ஆகும், ஆகையால் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். அடிக்கு அடி ஸ்ரீமத் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

 

வரதானம்:

புருவமத்தி என்ற குகையில் அமர்ந்து அகநோக்குத் தன்மையின் சுவையை பெறக் கூடிய உண்மையான தபஸ்வி மூர்த்தி ஆவீர்களாக.

 

எந்தக் குழந்தைகள் தங்களது பேச்சின் மீது கட்டுப்பாடு கொண்டு சக்தி மற்றும் நேரத்தை சேமிப்பு செய்து கொண்டு விடுகிறார்களோ, அவர்களுக்கு இயல்பாகவே அகநோக்குத் தன்மையின் சுவை அனுபவம் ஆகிறது. அகநோக்குத் தன்மையின் சுவை மற்றும் பேச்சு நடத்தையின் சுவை - இவற்றிற்கிடையே இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. உள்முகமாக இருப்பவர் எப்பொழுதும் புருவமத்தி என்ற குடிசையில் தபஸ்வி மூர்த்தியின் அனுபவம் செய்கிறார். அவர் வீணான சிந்தனையிலிருந்து விடுபட்டு மனதின் மௌனம் மேலும் வீண் பேச்சிலிருந்து விடுபட்டு வாயின் மௌனம் கொள்கிறார். எனவே அகநோக்குத் தன்மையின் சுவையின் அளெகீக அனுபவம் ஆகிறது.

 

சுலோகன்:

(ராஜ்யுக்த்) இரகசியங்களை அறிந்தவராகி ஒவ்வொரு நிலைமையிலும் (ராஜி) திருப்தியாக இருப்பவரே ஞானம் உடைய ஆத்மா ஆவார்.

 

ஓம்சாந்தி