14.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! தன்னுடைய சர்நேம் (சார்ந்துள்ள குடும்ப பெயரை) சதா நினைவு வையுங்கள் நீங்கள் இறைவனின் குழந்தைகள் (காட்சி சில்ட்ரன்). உங்களுடையது ஈஸ்வரிய குலம். நீங்கள் தேவதைகளை விடவும் உயர்ந்தவர்கள். உங்களுடைய பண்புகள் (மேனர்ஸ்) ஒரு இராஜாவிற்குரிய (ராயல்) இருக்க வேண்டும்.

 

கேள்வி :

பாபா, குழந்தைகளைத் தமக்கு சமமாக அன்புக்கடலாக ஆக்கியுள்ளார் என்பதற்கான அடையாளம் என்ன?

 

பதில்:

குழந்தைகளாகிய நீங்கள் பாபாவுக்கு சமமாக அன்பானவர்களாக ஆகியிருக்கிறீர்கள். அதனால் தான் உங்களுடைய நினைவுச் சின்னங்களாகிய சித்திரங்களை அனைவரும் நேசிக்கின்றனர். அன்போடு பார்த்துக் கொண்டே இருக்கின்றனர். இலட்சுமி-நாராயணர் சதா சிரித்த முகத்துடன் மனதை மகிழ்விப்பவர்களாக உள்ளனர். இப்போது நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மை ஞானம் யோகத்தால் மிக-மிக இனிமையானவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் வாயினால் சதா ஞான ரத்தினங்களையே வெளிப்படுத்த வேண்டும்.

 

பாடல் :

நீ அன்புக்கடலாக இருக்கிறாய் .........

 

ஓம் சாந்தி.

இதை யாருடைய மகிமையாகப் பாடுகின்றனர், நீ அன்புக் கடலாக இருக்கிறாய் என்று? இது எந்த ஒரு மனிதருடைய மகிமையும் கிடையாது. நீ அன்பு, சாந்தி மற்றும் தூய்மையின் கடலாக இருக்கிறாய் என்று சொல்லப் படுகின்றது. இப்போது நீங்கள் தூய்மையாக ஆகிறீர்கள். இதுபோல் அநேகர் உள்ளனர், திருமணம் செய்து கொள்வதில்லை. அநேகர் சந்நியாசம் மேற்கொள்ளாமலே கூட தூய்மையாக உள்ளனர். பாடப்படவும் செய்கிறது - இல்லற விவகாரத்தில் ஜனகரைப் போன்ற ஞானம் என்பது போல. அவருக்கு சரித்திரம் உள்ளது. எமக்கு யாராவது பிரம்ம ஞானம் சொல்லுங்கள் எனச் சொன்னார்கள். உண்மையில் பிரம்மா ஞானம் என்று தான் சொல்ல வேண்டும். பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலமாக வந்து பிரம்மாகுமார் குமாரிகளுக்கு ஞானம் தருகிறார். நீங்கள் அறிவீர்கள், இச்சமயம் நம்முடைய சர்நேம் (பெயருக்கு முன் சேர்க்கப்பட்டுள்ள வம்சத்தின் பெயர்) பிரம்மாகுமார்-குமாரி. நாம் ஈஸ்வரிய குழந்தைகள். நாங்கள் ஈஸ்வரனின் குழந்தைகள் என்று அநேகர் சொல்கின்றனர். ஆகவே நிச்சயமாக சகோதர-சகோதரிகள் ஆகின்றனர். அப்போது தங்களைத் தாங்களே தந்தை என்று சொல்லிக் கொள்ள முடியாது. பித்ருத்துவம் (Fatherhood) அல்ல, பிறகோ சகோதரத்துவம் (Brotherhood) என்று சொல்லப் பட வேண்டும். ஒன்று, நீங்கள் பிரம்மாகுமார்-குமாரி எனச் சொல்லிக் கொள்கிறீர்கள், இரண்டாவது, யாருடைய குமார்-குமாரிகளாக இருக்கிறீர்களோ, அவர்களை மம்மா-பாபா என அழைக்கிறீர்கள். குழந்தைகள் அறிவீர்கள், நாம் சிவபாபாவின் பேரன்-பேத்திகளாகிய பிரம்மாகுமார்-குமாரிகள். பாரதத்தில் அநேக சாஸ்திரங்கள், வேத-புராணங்கள் முதலியவற்றை அனைவரும் படிக்கின்றனர். அனைத்து சாஸ்திரங்களின் தாய் ஸ்ரீமத் பகவத் கீதை. கீதை மூலம் சத்யுகம் ஸ்தாபனை ஆகின்றது. கீதை ஞானத்தைச் சொன்னவர் ஞானக்கடலாகிய பரமாத்மா. இந்த ஞான நதிகள் அனைவரும் ஞானக்கடலில் இருந்து வெளிப்படுகின்றனர். தண்ணீரின் கங்கையிடம் ஞானம் கிடைப்பதில்லை, அதன் மூலம் தூய்மையாவதற்கு. சத்கதி என்றால் தூய்மையாவது. இதுவே தமோபிரதான் உலகம். தூய்மையாகிவிட்டால் எங்கே இருப்பது? திரும்பியோ செல்ல முடியாது. அதற்கு விதிமுறை கிடையாது. அனைவரும் மறுபிறவி எடுத்து தமோபிரதான் ஆகியே தீர வேண்டும். பாபா ஞானக்கடல். நீங்கள் நடைமுறை ரூபத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதை யாரும் காப்பி பண்ண (அவரைப் போல) முடியாது. நானும் அதே ஞானம் தருகிறேன் என்று சொல்பவர்கள் அநேகர் இருக்கலாம். ஆனால் அப்படியல்ல. இங்கே யாருக்கெல்லாம் ஞானம் கிடைக்கிறதோ, அவர்கள் பிரம்மாகுமார்-குமாரி எனச் சொல்லிக் கொள்கின்றனர். இதுபோல் பிரம்மாகுமார்-குமாரி என்று சொல்லிக் கொள்கின்ற நிறுவனம் வேறு எதுவும் கிடையாது. ஆடை கூட இதுபோல் (வெண்ணிற ஆடை) அணிந்திருக்கலாம். ஆனால் பிரம்மாவின் குழந்தைகள் என்று அவர்கள் எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? இவருக்கு நான் பிரம்மா என்று பெயர் கொடுத்திருக்கிறேன். இவருக்கு அமர்ந்து சொல்லிப் புரிய வைக்கிறேன். உங்களுக்கும் சொல்கிறேன், பிரம்மாகுமார்-குமாரிகளாகிய நீங்கள் உங்களுடைய பிறவிகளைப் பற்றி அறிய மாட்டீர்கள். நான் அறிவேன். இப்போது சங்கமயுகத்தில் கால் (பாதம்) மற்றும் குடுமி உள்ளது. இதன் மூலம் பழைய உலகம் மாறி புதியதாகிறது. சத்யுக, திரேதா, துவாபர, கலியுகம்........ சிருஷ்டி விருத்தியடைந்து கொண்டே இருக்கிறது. இப்போது இறுதி நேரம். உலகம் மாறி புதியதாக ஆகின்றது. பாபா வந்து திரிகாலதரிசி ஆக்குகிறார். அவர் அன்புக்கடல் என்றால் நிச்சயமாக அவ்வாறே அன்பானவராக ஆக்குவார். இலட்சுமி-நாராயணரிடம் பாருங்கள், எவ்வளவு கவர்ச்சி உள்ளது! இலட்சுமி-நாராயணருக்கு எவ்வளவு ரமணீகரமான (மனதைக் கவரக்கூடிய) சிரித்த முகத்துடன் கூடிய சித்திரத்தைப் பார்க்கிறீர்களோ, அந்த அளவு இராம்-சீதாவுக்கு இல்லை. இலட்சுமி-நாராயணரைப் பார்த்தாலே குஷி வந்து விடுகின்றது. இராதை-கிருஷ்ணரின் கோவிலுக்குச் செல்வதால் இவ்வளவு குஷி ஏற்படாது. இலட்சுமி-நாராயணருக்கோ இராஜ்ய-பாக்கியம் உள்ளது. இப்போது உலகமோ இவ்விசயங்களை அறிந்திருக்கவில்லை. நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மை மிக இனிமையானவர்களாக ஆக்குகிறார். இலட்சுமி-நாராயணரை ஞானக்கடலில் எனச் சொல்ல மாட்டார்கள். அவர்கள் இந்த ஞானம்-யோகத்தின் மூலம் அதுபோல் ஆனார்கள். இப்போது நீங்களும் ஆகிறீர்கள். மனிதர்கள் விரும்புகிறார்கள், உலகம் ஒன்றாக வேண்டும், ஒரு ராஜ்யம் இருக்க வேண்டும் என்று. நினைவு படுத்துகிறார்கள், எப்போதோ ஒரு இராஜ்யம் நிச்சயமாக இருந்துள்ளது என்பதை. ஆனால் அனைவரும் சேர்ந்து ஒன்றாகி விடுவார்கள் என்பதில்லை. அங்கே (சத்யுகத்தில்) மிகக் கொஞ்சம் மனிதர்களே இருந்தார்கள். நாம் ஈஸ்வரிய குழந்தைகள் என்பதை நீங்கள் புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். ஈஸ்வரன் இங்கேயே ஆஜராகியுள்ளார் என்கிறார்கள். ஆனால் ஆஜராகியிருப்பதாக ஆத்மாவைச் சொல்வார்கள். ஆத்மா சர்வவியாபி, அனைவருக்குள்ளும் ஆத்மா உள்ளது. அனைவருக்குள்ளும் பரமாத்மா உள்ளார் என்பதில்லை. அப்போது உறுதி எடுத்துக் கொள்ள என்ன தேவை உள்ளது? நமக்குள் பரமாத்மா இருக்கிறார் என்றால் உறுதிமொழியை யாருக்குத் தருகிறார்கள்? நாம் தலைகீழான காரியம் செய்வோமானால் பரமாத்மா தண்டனை தருவார். பரமாத்மா அனைவருக்குள்ளும் இருந்தால் உறுதி எடுத்துக் கொள்ளும் விசயம் எதுவும் கிடையாது. இப்போது நீங்கள் சரீரத்தில் இருக்கிறீர்கள். எப்படி ஆத்மா இந்தக் கண்களால் பார்க்க முடியாததாக உள்ளதோ, அப்போது பரமாத்மாவை எப்படிப் பார்க்க முடியும்? நமக்குள் ஆத்மா உள்ளது என்பதை உணர்கிறார்கள். பரமாத்மாவின் சாட்சாத்காரம் கிடைக்க வேண்டும் எனச் சொல்வார்கள். ஆனால் ஆத்மாவையே பார்க்க இயலாது எனும்போது பரமாத்மாவை எப்படிப் பார்க்க முடியும்? ஆத்மா தான் புண்ணிய ஆத்மா, பாவாத்மாவாக ஆகிறது. இச்சமயம் பாவாத்மாவாக உள்ளது. நீங்கள் அதிக புண்ணியம் செய்திருந்தீர்கள். பாபாவுக்கு முன் உடல்-மனம்-செல்வத்தை சமர்ப்பணம் செய்திருந்தீர்கள். இப்போது பாவாத்மாவில் இருந்து புண்ணியாத்மாவாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சிவபாபாவுக்கு உடல்-மனம்-செல்வத்தை அர்ப்பணிக்கிறீர்கள். இவரும் (பிரம்மா) கூட அர்ப்பணம் செய்தார் இல்லையா? உடலையும் உண்மையான சேவைக்காகக் கொடுத்தார். மாதாக்களுக்கு முன் அர்ப்பணம் செய்து அவர்களை டிரஸ்டி ஆக்கி விட்டார். மாதாக்களை முன்னேறச் செய்ய வேண்டும். மாதாக்கள் தான் வந்து அடைக்கலம் பெற்றுள்ளனர் எனும்போது அவர்களின் பராமரிப்பு எப்படி நடைபெறும்? மாதாக்கள் மீது அர்ப்பணம் ஆக வேண்டும். பாபா சொல்கிறார், வந்தே மாதரம். இங்கேயே ஆஜராகி யிருப்பது பற்றிய இரகசியமும் புரிய வைக்கப் பட்டுள்ளது. ஆத்மா அழைக்கிறது, காட் ஃபாதர் என்று. எந்தத் தந்தையை அழைக்கின்றனர்? அதை அவர்கள் புரிந்திருக்கவில்லை. நீங்கள் இலட்சுமி-நாராயண் ஆகிறீர்கள். மனிதர்கள் எவ்வளவு அன்பு காட்டுகின்றனர்! ஹர் ஹோலினஸ் என்றும் ஹிஸ் ஹோலினஸ் என்றும் அவர்கள் அழைக்கப் படுகிறார்கள். இப்போது நீங்கள் சொல்வீர்கள், நாங்கள் ஈஸ்வரிய குலத்தைச் சேர்ந்தவர்கள், முதலில் அசுர குலத்தவர்களாக இருந்தோம் என்று. பிராமணர்களுக்கு சர்நேம் ஈஸ்வரிய குழந்தை என்பது தான். பாபு காந்தியும் கூட ராமராஜ்யம் வேண்டும், உலகின் சர்வசக்தி வாய்ந்த அரசு இருக்க வேண்டும் என விரும்பினார். அதை எல்லையற்ற தந்தை மட்டுமே உருவாக்க முடியும். தந்தை சொல்கிறார், நான் வேர்ல்ட் ஆல்மைட்டி அத்தாரிட்டி. உயர்ந்தவரிலும் உயர்ந்த நிராகார் நான். பிரம்மா, விஷ்ணு, சங்கரோ என்னுடைய படைப்புகள் ஆவர். பாரதம் சிவாலயமாக, சம்பூர்ண நிர்விகாரியாக இருந்தது. இப்போது சம்பூர்ண விகாரியாக உள்ளது. இதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை, அதாவது சம்பூர்ண நிர்விகாரிகள் இங்கே தான் (சத்யுகத்தில்) உள்ளனர். அவர்கள் விரும்புகிறார்கள், ஒரே உலகமாக இருக்க வேண்டும், ஒரே ஒரு சர்வ சக்தி வாய்ந்த இராஜ்யம் வேண்டும் என்று. அதையும் பரமாத்மா, உலகின் ஒரே சர்வசக்தி வாய்ந்த, தெய்வீகமான, லட்சுமி-நாராயணரின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். மற்ற அனைவருடைய அழிவும் முன்னாலேயே நின்று கொண்டுள்ளது. இவ்வளவு நஷா இருக்க வேண்டும். இங்கிருந்து வீட்டுக்குச் சென்று விட்டால் மூர்ச்சையாகி விடுகின்றனர். சஞ்சீவி மூலிகையின் கதை உள்ளது இல்லையா? ஆனால் இதுவோ ஞானத்தின் மூலிகை, மன்மனாபவ நிலையின் மூலிகை. தேக அபிமானத்தில் வருவதால் மாயாவின் அடி விழுகிறது. ஆத்ம அபிமானி ஆகி விட்டால் அடி விழாது. நாம் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுகிறோம். பிரம்மாவுக்கு இது கடைசிப் பிறவி. அவரும் கூட ஆஸ்தி பெறுகிறார். தெய்வீக உலக சாம்ராஜ்யம் என்பது உங்களுடைய தந்தையாகிய இறைவன் தரும் பிறப்புரிமையாகும். குழந்தைகளாகிய உங்களிடம் தெய்வீகப் பண்புகள் இருக்க வேண்டும். பிராமணர்களாகிய நீங்கள் தேவதைகளை விடவும் உயர்ந்தவர்கள். நீங்கள் மிக இனிமையாகப் பேச வேண்டும். சொற்பொழிவு முதலியவற்றிலோ பேச வேண்டி உள்ளது. மற்றப்படி வீண் விசயங்களில் செல்லக் கூடாது. வாயிலிருந்து சதா ரத்தினங்களையே வெளிப்படுத்துங்கள். இந்தக் கண்கள் இருக்கின்றன, ஆனால் சொர்க்கத்தையும் மூலவதனையும் பாருங்கள். ஞானத்தின் கண் ஆத்மாவுக்குக் கிடைக்கின்றது. ஆத்மா உறுப்புகள் மூலம் படிக்கின்றது. உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது. எப்படி அறிவுப்பல் முளைக்கின்றது, அதுபோல. பாபா ஆஸ்தியை பிராமணர்களுக்குக் கொடுப்பார். சூத்திரர்களுக்குக் கொடுக்க மாட்டார். மூன்றாவது கண் ஆத்மாவுக்குக் கிடைக்கின்றது. ஞானக்கண் இல்லாமல் சரி எது, தவறு எது என்பதைப் புரிந்து கொள்ள இயலாது. இராவணன் தவறான வழியில் தான் செலுத்துவான். பாபா சரியான வழியில் செல்ல வைக்கிறார். எப்போதும் ஒருவர் மற்றவரிடமிருந்து நற்குணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நற்குணங்களுக்கு பதில் அவகுணங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. பாருங்கள், டாக்டர் நிர்மலா வருகிறார். அவருடைய சுபாவம் மிக இனிமையானது. சாந்தமாக இருப்பது, கொஞ்சமாகப் பேசுவது எப்படி என்று அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலியான, இனிமையான குழந்தை ஆவார். அமைதியாக அமரக்கூடியதிற்கும் ராயல்டி (அரசருக்குரிய பண்பு) வேண்டும். கொஞ்ச நேரம் நினைவு செய்தோம், பிறகு நாள் முழுவதும் இல்லை என்று ஆகக் கூடாது. இதையும் அப்பியாசம் செய்ய வேண்டும். பாபாவை நினைவு செய்வதால் சக்தி கிடைக்கிறது. அப்போது பாபாவும் குஷியடைகிறார். அப்படிப்பட்ட அப்பியாசம் செய்பவர் யாரைப் பார்த்தாலும் அவரையும் கூட அசரீரி ஆக்கி விடுவார். அசரீரி ஆகி விடுவார்கள், சாந்தமாக ஆகி விடுவார்கள். வெறுமனே அமைதியில் அமர்ந்திருப்பது ஒன்றும் சுகமல்ல. இது அல்ப காலத்தின் சுகமாகும். சாந்தமாக அமர்ந்து விட்டால் பிறகு கர்மம் எப்படிச் செய்வது? யோகத்தினால் விகர்மங்கள் விநாசமாகும். உண்மையான சுகமோ சாந்தியோ இங்கே இருக்க முடியாது. இங்கே ஒவ்வொரு பொருளும் அல்ப காலத்தினுடையதாகும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

இரவு வகுப்பு  9-4-1968

 

தற்சமயம் அதிகமாக இது போன்ற மகாநாடு நடத்திக் கொண்டிருக்கின்றனர் - அதாவது உலகத்தில் சாந்தி எப்படி ஏற்படும்? அவர்களுக்குச் சொல்ல வேண்டும் - பாருங்கள், சத்யுகத்தில் ஒரே ஒரு தர்மம், ஒரே ஒரு இராஜ்யம் அத்வைத தர்மம் (பிளவு படாத) இருந்தது. இரண்டாவதாக வேறு தர்மமே இருந்ததில்லை, கையொஎழுப்புவதற்கு. இராமராஜ்யமாகவே இருந்தது, அதனால் தான் உலகத்தில் அமைதி நிலவியது. நீங்கள் விரும்புகிறீர்கள், உலகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று. அதுவோ சத்யுகத்தில் இருந்தது. பின்னால் அநேக தர்மங்கள் ஆனதால் அசாந்தி வந்தது. ஆனால் எதுவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லையோ, அதற்காக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இன்னும் போகப்போக செய்தித்தாள்களிலும் வரும். பிறகு இந்த  சந்நியாசிகள் முதலானவர்களுக்கும் காதுகள் திறக்கும். இதுவோ குழந்தைகளாகிய உங்களுக்கான விசேச கவனிப்பாகும்-நம்முடைய ராஜதானி ஸ்தாபனையாகிக் கொண்டுள்ளது. இது தான் நஷாவாகும். அருங்காட்சியகத்தின் ஜொலிப்பைப் பார்த்து அநேகர் வருவார்கள். உள்ளே வந்து பார்த்து வியப்படைவார்கள். புதுப்புது சித்திரங்கள் பற்றி புதுப்புது விளக்கங்களைக் கேட்பார்கள்.

 

யோகம் என்பது முக்தி ஜீவன்முக்திக்காக என்பது குழந்தைகளுக்குத் தெரியும். அதையும் மனிதர்கள் யாருமே கற்றுத்தர இயலாது. பரமபிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் முக்தி ஜீவன்முக்திக்காக யோகம் கற்றுத்தர முடியாது. அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் ஒருவர் தான். இதை மனிதர்கள் படிக்கும் வகையில் தெளிவாக எழுதி வைக்க வேண்டும். சந்நியாசிகள் என்ன கற்றுத் தருவார்கள்? யோகம்-யோகம் எனச் சொல்பவர்கள் யாரும் உண்மையில் யோகத்தைக் கற்றுத்தர முடியாது. மகிமை ஒருவருக்கு மட்டுமே. உலகத்தில் அமைதியை உருவாக்குவது மற்றும் முக்தி ஜீவன்முக்தி தருவது என்பது தந்தையின் வேலை மட்டுமே. இப்படியெல்லாம் விசார் சாகர் மந்தன் செய்து பாயின்ட்டுகளைப் புரிய வைக்க வேண்டும். அப்படி எழுத வேண்டும், மனிதர்களுக்கு இது சரியான விசயம் எனத் தோன்றும்படியாக எழுத வேண்டும். இந்த உலகமோ மாறத் தான் போகின்றது. இது மரண உலகம். புதிய உலகம் அமரலோகம் எனச் சொல்லப் படுகின்றது. அமரலோகத்தில் மனிதர்கள் எப்படி அமரர்களாக இருக்கிறார்கள்? - இது கூட அதிசயம் இல்லையா? அங்கே ஆயுள் கூட நீண்டதாக இருக்கும். மேலும் சமயத்தில் தானாகவே சரீரத்தை மாற்றிக் கொள்வார்கள், ஆடையை மாற்றிக் கொள்வது போல. இவையனைத்தும் புரிய வைக்க வேண்டிய விசயங்களாகும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக பாப்தாதாவின் அன்பு நினைவு, இரவு வணக்கம் மற்றும் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. தனது சுபாவத்தை மிகவும் இனிமையானதாக, அமைதி நிறைந்ததாக ஆக்க வேண்டும். மிகக் குறைவாகவும் ராயல்டியுடனும் பேச வேண்டும்.

 

2. உடல்-மனம்-செல்வத்தால் பிரம்மா பாபாவுக்கு சமமாக டிரஸ்டியாகி இருக்க வேண்டும்.

 

வரதானம்:

தனது ஆதி மற்றும் அநாதி சொரூபத்தின் நினைவின் மூலம் அனைத்து பந்தனங்களையும் சமாப்தி செய்யக் கூடிய பந்தனமற்றவர், சுதந்திரமானவர் ஆகுக.

 

ஆத்மாவின் ஆதி, அநாதி சொரூபம் சுதந்திரம், எஜமான் ஆகும். பின் நாட்களின் தான் அடிமையாக ஆகிவிட்டது. ஆகையால் தனது ஆதி மற்றும் அநாதி சொரூபத்தை நினைவில் வைத்துக் கொண்டு பந்தனமற்றவர்களாக ஆகுங்கள். மனதின் பந்தனமும் இருக்கக் கூடாது. ஒருவேளை மனதின் பந்தனம் இருந்தால் அந்த பந்தனம் மற்ற பந்தனங்களையும் கொண்டு வந்து விடும். பந்தனமற்றவர்கள் என்றால் இராஜா, சுயராஜ்ய அதிகாரி. இவ்வாறு பந்தனமற்ற, சுதந்திர ஆத்மாக்கள் தான் நேர்மையான முறையில் தேர்ச்சி பெறுவார்கள், அதாவது முதல் டிவிசனில் வருவார்கள்.

 

சுலோகன்:

மாஸ்டர் துக்கத்தை போக்குவராகி துக்கத்தையும் கூட ஆன்மீக சுகமாக மாற்றுவது தான் உண்மையான சேவையாகும்.

 

ஓம்சாந்தி