13.11.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! பகலில் சரீர நிர்வாகத்திற்காகக் கர்மங்கள் செய்யுங்கள். இரவில் அமர்ந்து ஞானத்தை சிந்தனை செய்யுங்கள். பாபாவை நினைவு செய்யுங்கள். புத்தியில் சுயதரிசனச் சக்கரத்தைச் சுற்றுங்கள். அப்போது போதை அதிகரிக்கும்.

 

கேள்வி :

மாயா எந்தக் குழந்தைகளை நினைவில் அமர்வதற்கே கூட விடுவதில்லை?

 

பதில்:

யார் ஒருவருடைய புத்தி வேறு யாரிடமாவது சிக்கிக் கொண்டுள்ளதோ, யாருடைய புத்திக்குப் பூட்டுப் போடப் பட்டுள்ளதோ, படிப்பை நன்றாகப் படிப்பதில்லையோ, மாயா அவர்களை நினைவில் அமர்வதற்குக் கூட விடுவதில்லை. அவர்கள் மன்மனாபவ நிலையில் இருக்க முடியாது. பிறகு சேவைக்காகவும் அவர்களின் புத்தி செயல்படுவதில்லை. ஸ்ரீமத் படி நடக்காத காரணத்தால் பெயரைக் கெடுத்து விடுகின்றனர். ஏமாற்றி விடுகின்றனர் என்றால் தண்டனைகள் அடைய நேரிடுகின்றது.

 

பாடல் :

உங்களை அழைக்க மனம் விரும்புகிறது........

 

ஓம் சாந்தி.

குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். இறைத்தந்தையைத் தான் அழைக்கின்றனர், கிருஷ்ணரை அல்ல. பாபாவுக்குச் சொல்வார்கள்-வாருங்கள், மீண்டும் கம்சபுரிக்கு பதிலாக கிருஷ்ணபுரியை உருவாக்குங்கள் என்று. கிருஷ்ணரையோ அழைக்க மாட்டார்கள். கிருஷ்ணபுரியோ சொர்க்கம் எனச் சொல்லப்படுகின்றது. இதை யாருமே அறிந்திருக்கவில்லை. ஏனெனில் கிருஷ்ணரை துவாபரயுகத்திற்குக் கொண்டு சென்று விட்டனர். இந்த அனைத்துத் தவறுகளும் சாஸ்திரங்களால் ஏற்பட்டுள்ளன. இப்போது பாபா உண்மையான விசயங்களைப் புரிய வைக்கிறார். உண்மையில் முழு உலகத்தின் உயர்வான இறைத் தந்தை (காட் ஃபாதர்) அவர். அனைவரும் அந்த ஓர் இறைத்தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். மனிதர்கள் கிறிஸ்து, புத்தர் அல்லது தேவதைகள் முதலானவர்களை நினைவு செய்கின்றனர் என்ற போதிலும் ஒவ்வொரு தர்மத்தைச் சேர்ந்தவர்களும் தர்ம ஸ்தாபகரை நினைவு செய்கின்றனர். நினைவு செய்வது துவாபர யுகத்திலிருந்து ஆரம்பமாகி யுள்ளது. பாரதத்தில் பாடப்படவும் செய்கிறது. துக்கத்தில் அனைவரும் நினைவு செய்வார்கள், சுகத்தில் யாருமே நினைவு செய்வதில்லை என்பதாக. பிற்காலத்தில் தான் நினைவு செய்வதற்கான வழக்கம் வந்துள்ளது. ஏனென்றால் துக்கம். முதல்-முதலில் பாரதவாசிகள் நினைவு செய்யத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து மற்ற தர்மங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் தர்ம ஸ்தாபகர்களை நினைவு செய்யத் தொடங்கினர். பாபாவும் தர்ம ஸ்தாபனை செய்பவர். ஆனால் மனிதர்கள் பாபாவை மறந்து ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டனர். லட்சுமி-நாராயணரின் தர்மத்தினைப் பற்றி அவர் களுக்குத் தெரியாது. லட்சுமி-நாராயணரையோ கிருஷ்ணரையோ நினைவு செய்யக் கூடாது. ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். அவர் தான் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். பிறகு எப்போது பக்தி மார்க்கத்தில் சிவனுக்குப் பூஜை செய்யத் தொடங்கு கின்றனரோ, அப்போது புரிந்து கொள்கின்றனர், கீதையின் பகவான் கிருஷ்ணர் என்பதாக. அதனால் அவரை நினைவு செய்கின்றனர். இவர்களைப் பார்த்து மற்ற தர்மத்தினரும் தங்கள் தர்ம ஸ்தாபகரை நினைவு செய்கின்றனர். இந்த தேவதா தர்மத்தை பகவான் ஸ்தாபனை செய்தார் என்பதை மறந்து விடுகின்றனர். நாம் எழுத முடியும், கீதையை உரைப்பவர் கிருஷ்ணரல்ல, சிவபாபா என்று. அவர் நிராகார். இது அற்புதமான விசயம் ஆகிறது இல்லையா? எவரிடத்திலும் சிவபாபாவின் அறிமுகம் கிடையாது. அவர் நட்சத்திரமாக உள்ளார். அனைத்து இடங்களிலும் சிவாலயங்கள் உள்ளன என்றால் அவர்கள் நினைக்கின்றனர், இவ்வளவு பெரிய உருவமுள்ளவர், அகண்ட ஜோதி தத்துவம் என்பதாக. ஆனால் அவரோ மகாதத்துவத்தில் வசிக்கின்றார். ஆத்மாவின் ரூபம் நிச்சயமாக நட்சத்திரம் போன்றது தான், பரமபிதா பரமாத்மாவும் நட்சத்திரம் தான். ஆனால் அவர் ஞானம் நிறைந்தவர், விதை வடிவமாக இருக்கின்ற காரணத்தால் அவருக்குள் சக்தி உள்ளது. ஆத்மாக்களின் தந்தை (விதை) என்று பரமாத்மாவைச் சொல்வார்கள். அவர் நிராகாராகத் தான் இருக்கிறார். மனிதர்களையோ ஞானக்கடல், அன்புக்கடல் எனச் சொல்ல முடியாது. அதனால் புரிந்து கொள்ளக் கூடிய குழந்தைகளிடம் அத்தாரிட்டி வேண்டும். அவர்களின் புத்தி விசாலமாக இருக்க வேண்டும். உங்கள் அனைவரிலும் முக்கியமானவர்கள் மம்மா, வந்தே மாதரம் எனவும் பாடப் பட்டுள்ளது. கன்யாக்களின் மூலமாக (ஞானத்தின்) பாணங்கள் விடுமாறு செய்தார். அதர் கன்யா, குமாரி கன்யா பற்றிய ரகசியங்கள் எங்கும் கிடையாது. கோவில்கள் மூலம் தான் தெரிய வருகின்றன. ஜெகதம்பாவும் நிச்சயமாக இருக்கிறார். ஆனால் அவர் யார் என்று அவர்களுக்குத் தெரியாது.

 

பாபா சொல்கிறார், நான் பிரம்மாவின் கமலவாய் மூலம் படைப்பவர் மற்றும் படைப்பு பற்றிய முதல்-இடை-கடையின் ரகசியத்தைச் சொல்கிறேன். டிராமாவில் என்ன உள்ளது - இது மனிதர்களின் புத்தியில் வர வேண்டும். இது எல்லையற்ற டிராமா. இதில் நாம் நடிகர்கள் என்று சொன்னால் டிராமாவின் முதல்-இடை-கடை பற்றிய ரகசியம் புத்தியில் இருக்க வேண்டும். யாருடைய புத்தியில் இது இருக்கிறதோ, அவர்களுக்கு மிகுந்த போதை இருக்கும். நாள் முழுவதும் சரீர நிர்வாகம் செய்தீர்கள், இரவில் அமர்ந்து நினைவில் கொண்டு வாருங்கள் - இந்த டிராமா எப்படிச் சுற்றி வருகின்றது? இதுவே மன்மனாபவ ஆகும். ஆனால் மாயா இரவில் கூட நினைவில் அமர விடுவதில்லை. நடிகர்களின் புத்தியிலோ டிராமாவின் ரகசியம் இருக்க வேண்டும் இல்லையா? ஆனால் மிகவும் கஷ்டம். எங்காவது சிக்கிக் கொள்கின்றனர் என்றால் பாபா புத்தியின் பூட்டைப் பூட்டி விடுகிறார். மிக உயர்ந்த குறிக்கோள். நன்றாகப் படிப்பவர்கள் பிறகு நல்ல சம்பளமும் பெறுகிறார்கள். இதுவும் படிப்பாகும். ஆனால் வெளியில் சென்றதும் மறந்து விடுகின்றனர். பிறகு தன்னுடைய வழிப்படி நடக்கின்றனர். பாபா சொல்கிறார் - இனிமையான குழந்தைகளே, ஸ்ரீமத்படி நடப்பதில் தான் உங்களுக்கு நன்மை உள்ளது. இது தூய்மை இல்லாத உலகம். விகாரம் விஷம் எனச் சொல்லப் படுகின்றது. அதை சந்நியாசிகள் சந்நியாசம் செய்து விடுகின்றனர். இந்த இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறது துவாபரயுகத்தில் இருந்து. இந்த வேத-சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாதனங்கள். சேவைக்காக குழந்தைகளின் புத்தியை ஓட்ட (சிந்தனை) வேண்டும். ஸ்ரீமத்படி நடந்தால் தாரணையும் ஆகும். குழந்தைகள் அறிவார்கள், விநாசம் முன்னாலேயே நின்று கொண்டுள்ளது. அனைவரும் துக்கத்தில் வந்து கூக்குரல் இடுகின்றனர் - ஹே பகவானே, இரக்கம் வையுங்கள். ஐயோ-ஐயோ எனக் கூக்குரலிடும் போது பகவானை நினைவு செய்வார்கள். பிரிவினை சமயத்தில் எவ்வளவு நினைவு செய்தனர்! - ஹே பகவானே! கருணை செய்யுங்கள், காப்பாற்றுங்கள். இப்போது என்ன பாதுகாப்பு செய்வார்? காப்பாற்றுபவரையே அறிந்து கொள்ளவில்லை என்றால் எப்படிக் காப்பாற்றுவார்? இப்போது பாபா வந்துள்ளார், ஆனால் யாருடைய புத்தியிலாவது பதிவதென்பது கஷ்டம். பாபா புரிய வைக்கிறார், இப்படி-இப்படி சேவை செய்யுங்கள் என்று. இந்த ஸ்ரீமத் பாபாவிடமிருந்து கிடைக்கிறது. அப்படிப்பட்ட தந்தையை அறிந்து கொள்ள முடியவில்லை-இதுவும் எப்படிப்பட்ட அதிசயமாக உள்ளது! எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்! நாள் முழுவதும் சிவபாபாவின் நினைவு புத்தியில் இருக்க வேண்டும். இவரும் அவருடைய ரதம், துணையாகிறார் இல்லையா?

 

பாபா பார்க்கிறார் - குழந்தைகள் இன்று மிக நல்ல நிச்சயபுத்தியுடன் இருக்கிறார்கள். நாளை சந்தேக புத்தியுள்ளவர்களாக ஆகி விடுகிறார்கள். மாயாவின் புயல் வருவதால் மனநிலை கீழிறங்குகிறது என்றால் பாபா இதில் என்ன செய்ய இயலும்? நீங்கள் ஞானத்தில் வந்தீர்கள், சமர்ப்பணமானீர்கள் என்றால் நீங்கள் டிரஸ்டி ஆகிறீர்கள். நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர்கள்? சமர்ப்பணமாகி விட்டால் பிறகு சேவையும் செய்ய வேண்டும், அப்போது பிரதிபலன் கிடைக்கும். சமர்ப்பணமாகி விட்டுப் பிறகு சேவை செய்யவில்லை என்றால் கூட அவர்களுக்கு உணவளிக்கத் தான் வேண்டும். அந்தப் பணத்தால் உண்டு-உண்டு தங்களுடையதை அழித்துக் கொள்கிறார்கள். சேவை செய்வதில்லை. மனிதர்களை வைரம் போல் ஆக்குவதற்கான சேவையை நீங்கள் செய்ய வேண்டும். முக்கியமாக பாபாவின் ஆன்மீக சேவை செய்ய வேண்டும், இதன் மூலம் மனிதர்கள் உயர்ந்தவர்களாக ஆக வேண்டும். சேவை செய்யவில்லை என்றால் அங்கு போய் தாச-தாசி ஆவார்கள். யார் படிப்பை நன்கு படிக்கிறார்களோ, அவர்களுக்கு மதிப்பும் உயர்ந்ததாக இருக்கும். யார் ஃபெயிலாகி விடுகிறார்களோ, அவர்கள் போய் தாச-தாசி ஆவார்கள்.

 

பாபா சொல்கிறார் - குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள், ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். போதும், இந்த மன்மனாபவ என்ற சொல் சரியானது தான். ஞானக்கடல் சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகும். இதுபோல் கிருஷ்ணர் சொல்ல முடியாது. பாபா தான் சொல்கிறார்-என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள், மேலும் வருங்கால இராஜ்ய பதவியை நினைவு செய்யுங்கள். இது இராஜயோகம் அல்லவா? இதன் மூலம் இல்லற மார்க்கம் உறுதியாகின்றது. இதை நீங்கள் தான் புரிய வைக்க முடியும். உங்களிலும் சேவையில் சிறந்தவர்கள் அழைக்கப் படுகிறார்கள். இவர்கள் சாமர்த்தியசாலிகள் என்பது புரிய வைக்கப் படுகின்றது. குழந்தைகள் யுக்தி நிறைந்தவர்களாக ஆக வேண்டும். ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் பெயரைக் கெடுக்கின்றனர். ஏமாற்றுகின்றனர் என்றாலோ பிறகு தண்டனைகள் அடைய நேரிடும். தீர்ப்பாயமும் அமர்கின்றது இல்லையா? நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

இரவு வகுப்பு:

 

குழந்தைகளுக்கு முதல்-முதலில் தந்தை பற்றிய அறிமுகம் கொடுக்க வேண்டும். எல்லையற்ற தந்தை தான் உங்களுக்கு கற்பிக்கிறார். கீதை படிக்கிறவர்கள் கிருஷ்ணரை பகவான் எனச் சொல்கின்றனர். அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும், பகவான் எனச் சொல்லப் படுபவர் நிராகார் தான் என்பதை. தேகதாரிகளோ ஏராளமான பேர் உள்ளனர். தேகம் இல்லாதவர் ஒருவர் தான். அவர் உயர்ந்தவரிலும் உயர்ந்தவரான சிவபாபா. இதை நல்லபடியாக புத்தியில் பதிய வையுங்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கின்றது. அவர் தான் உயர்ந்தவரிலும் உயர்ந்த பரமபிதா பரமாத்மா. அவர் எல்லையற்ற தந்தை, இவர் எல்லைக்குட்பட்ட தந்தை. வேறு யாரும் 21 பிறவிகளுக்கான ஆஸ்தி தருவ தில்லை. அமர பதவி பெறுவதற்கு இப்படிப்பட்ட ஒரு தந்தையைத் தவிர வேறு கிடையாது. அமரலோகம் என்பது சத்யுகம். இது மரண உலகம். ஆக, பாபாவின் அறிமுகம் கொடுப்பதால் புரிந்து கொள்வார்கள், பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. அது தெய்வீக சுயராஜ்யம் என்று சொல்லப்படுகிறது. அதை பாபா தான் தருகிறார். அவர் தான் பதீதபாவனன் எனப் பாடப்படுகிறார். அவர் சொல்கிறார், தன்னை ஆத்மா என உணர்ந்து என்னை நினைவு செய்வீர்களானால் பாவங்கள் அழிந்து விடும். தூய்மையில்லா நிலையிலிருந்து தூய்மையாகி தூய்மையான உலகத்திற்குச் செல்வதற்குத் தகுதி உள்ளவர்களாக நீங்கள் ஆக முடியும். கல்ப-கல்பமாக பாபா சொல்கிறார், என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். நினைவு யாத்திரை மூலமாகத் தான் தூய்மை ஆக வேண்டும். இப்போது தூய்மையான உலகம் வந்து கொண்டிருக்கிறது. தூய்மை அற்ற உலகம் விநாசமாகப் போகின்றது. முதல்-முதலில் பாபாவின் அறிமுகம் கொடுத்து உறுதியானவர்களாக ஆக்க வேண்டும். எப்போது மிகச் சரியாக பாபாவைப் புரிந்து கொள்கிறார்களோ, அப்போது பாபாவிடம் இருந்து ஆஸ்தி கிடைக்கும். இதில் மாயா அதிகமாக மறக்கடித்து விடுகின்றது. நீங்கள் பாபாவை நினைவு செய்வதற்கு முயற்சி செய்கிறீர்கள். பிறகு மறந்து விடுகிறீர்கள். சிவபாபாவை நினைவு செய்வதன் மூலம் தான் பாவங்கள் நீங்கும். அந்த (சிவ)பாபா இவர்(பிரம்மா) மூலம் சொல்கிறார், குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள். பிறகும் கூட வேலை முதலியவற்றால் மறந்து போகின்றனர். இதை மறக்கக் கூடாது. இது தான் முயற்சியின் விசயம். பாபாவை நினைத்து-நினைத்தே கர்மாதீத் அவஸ்தா வரை சென்று சேர வேண்டும். கர்மாதீத் அவஸ்தா நிலை அடைந்தவர்கள் ஃபரிஸ்தா எனச் சொல்லப்படு கின்றனர். ஆகவே இதை நன்றாகச் சிந்தனை செய்யுங்கள் - எப்படி யாருக்குச் சொல்லிப் புரிய வைப்பது என்று. மனதில் நிச்சயமும் உறுதியும் இருக்க வேண்டும்-நாம் சகோதரர்களுக்கு (ஆத்மாக்களுக்கு) சொல்லிப் புரிய வைக்கிறோம். அனைவருக்கும் பாபாவின் செய்தியைக் கொடுக்க வேண்டும். அநேகர் சொல்கின்றனர், பாபாவிடம் செல்ல வேண்டும், காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்று. ஆனால் இதில் காட்சி பார்த்தல் (சாட்சாத்காரம்) முதலியவற்றின் விசயம் கிடையாது. பகவான் வந்து கற்றுத் தருகிறார். மேலும் வாயின் மூலம் சொல்கிறார்-நீங்கள் நிராகார் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். நினைவு செய்வதால் அனைத்துப் பாவங்களும் நீங்கி விடுகின்றன. எங்கு வேண்டுமானாலும் வேலை முதலியவற்றில் அமர்ந்து கொண்டே அவ்வப்போது பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா உத்தரவிட்டுள்ளார் - என்னை நினைவு செய்யுங்கள். நிரந்தரமாக நினைவு செய்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். இந்தப் படிப்பே மனிதரில் இருந்து தேவதை ஆவதற்கானது. அதை ஒரு தந்தை மட்டுமே கற்றுத் தருகிறார். நீங்கள் சக்கரவர்த்தி ராஜா ஆக வேண்டும் என்றால் 84 பிறவிகளின் சக்கரத்தையும் கூட நினைவு செய்ய வேண்டும். கர்மாதீத் அவஸ்தா வரை சென்று சேர்வதற்காக முயற்சி செய்ய வேண்டும். அது கடைசியில் நடைபெறும். கடைசி நேரம் எப்பபொழுது வேண்டுமானாலும் வரலாம். அதனால் புருஷார்த்தத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தினமும் உங்கள் புருஷார்த்தம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். லௌகிக் தந்தை உங்களுக்கு இதுபோல் சொல்ல மாட்டார் - தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று. சரீரத்தின் உணர்வை விட்டு என்னை நினைவு செய்வீர்களானால் பாவங்கள் நீங்கும். இதையோ எல்லையற்ற தந்தை தான் சொல்கிறார் - குழந்தைகளே, என் ஒருவனின் நினைவில் இருப்பீர்களானால் அனைத்துப் பாவங்களும் நீங்கி விடும். நீங்கள் சதோபிர தானமானவர்களாக ஆகி விடுவீர்கள். இந்தத் தொழிலையோ குஷியுடன் செய்ய வேண்டும் இல்லையா? உணவு உண்ணும் போதும் பாபாவை நினைவு செய்ய வேண்டும். நினைவில் இருப்பதற்கான குப்த அப்பியாசம் குழந்தைகளாகிய உங்களிடம் நடைபெற்றுக் கொண்டே இருக்குமானால் நல்லது. அதில் உங்களுக்குத் தான் நன்மை. தன்னைத் தானே பார்க்க வேண்டும்-பாபாவை எவ்வளவு நினைவு செய்கிறேன்? நல்லது!

 

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்பு நினைவு, குட்நைட் மற்றும் வணக்கம். ஓம் சாந்தி.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) மனிதர்களை வைரம் போல் ஆக்குவதற்கான ஆன்மீக சேவை செய்ய வேண்டும். ஒருபோதும் சந்தேக புத்தி உள்ளவராகி படிப்பை விட்டுவிடக் கூடாது. டிரஸ்டி ஆகி இருக்க வேண்டும்.

 

2) சரீர நிர்வாகத்திற்காகக் கர்மம் செய்து கொண்டே கூட பாபாவை நினைவு செய்ய வேண்டும். ஸ்ரீமத்தில் தான் தங்களுடைய நன்மை உள்ளது என உணர்ந்து கொண்டே இருக்கவேண்டும். தன்னுடைய வழிமுறையை நடத்தக் கூடாது.

  

வரதானம்:

அனைவரிடத்தும் சுப நன்மையின் பாவனை வைத்து பரிவர்த்தனை செய்யக் கூடிய எல்லையில்லாத சேவாதாரி ஆவீர்களாக.

 

பெரும்பான்மையான குழந்தைகள் பாப்தாதாவிற்கு முன்னால் எங்களுடைய குறிப்பிட்ட இந்த உறவினர் மாறி விட வேண்டும். இல்லறத்தினர் துணையாளராக ஆகி விட வேண்டும் என்ற இந்த விருப்பத்தை வைக்கிறார்கள். ஆனால் அந்த ஆத்மாக்களை மட்டும் தன்னுடையவர்கள் என்று கருதி இந்த விருப்பம் கொள்ளும் பொழுது எல்லைக்குட்பட்ட தடுப்பு சுவரின் காரணமாக உங்களுடைய சுப நன்மையின் விருப்பம் அந்த ஆத்மாக்கள் வரை போய் சேருவது இல்லை. எல்லையில்லாத சேவாதாரி அனைவரிடத்தும் ஆத்மீக எண்ணம் அல்லது எல்லையில்லாத ஆத்மீக பார்வை, சகோதர சகோதரர் என்ற சம்மந்தத்தின் உள்ளுணர்வுடன் நல்லெண்ணம் கொள்கிறார்கள். ஆக அதற்கு அவசியம் பலன் கிடைக்கிறது - இதுவே மனசா சேவையின் சரியான விதி ஆகும்.

 

சுலோகன்:

ஞானம் என்ற அம்புகளை புத்தி என்ற அம்பாரியில் நிரப்பி மாயைக்கு சவால் விடுபவர்களே மகாவீரர்களாகி யுத்தம் செய்பவர்கள் ஆவார்கள்.

  

மாதேஷ்வரி அவர்களின் மதுர மகா வாக்கியம்

 மனதின் அமைதியின்மைக்கு காரணம் கர்மபந்தனம் - அமைதிக்கு ஆதாரம் கர்மாதீத நிலை. நமக்கு மன அமைதி கிடைத்து விட வேண்டும் என்று உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் விருப்பம் அவசியம் இருக்கிறது. எனவே அநேக முயற்சிகள் செய்தபடியே வந்துள்ளார்கள். ஆனால் மன அமைதி இதுவரையும் பிராப்தி ஆகவில்லை. இதற்கான சரியான காரணம் என்ன? இப்பொழுது முதலில் மனதில் அமைதியின்மைக்கான முதல் வேர் என்ன என்பது பற்றி சிந்திப்பது அவசியம். மனதின் அமைதியின்மைக்கான முக்கிய காரணமாவது - கர்மபந்தனத்தில் சிக்கிக் கொள்வது. மனிதன் இந்த ஐந்து விகாரங்களின் கர்ம பந்தனத்திலிருந்து விடுபடாத வரையும், மனிதர்கள் அமைதியின்மையிலிருந்து விடுபட முடியாமல் இருப்பார்கள். கர்ம பந்தனம் அறுபட்டு விடும் பொழுது, மன அமைதி அதாவது ஜீவன் முக்தியை அடைந்து விட முடியும். இந்த கர்ம பந்தனம் எப்படி அறுபடும் என்பது பற்றி இப்பொழுது சிந்திக்க வேண்டும். மேலும் அதற்கு விடுதலை கொடுப்பவர் யார்? எந்தவொரு மனித ஆத்மாவும், எந்தவொரு மனித ஆத்மாவிற்கும் விடுதலை அளிக்க முடியாது என்பதையோ நாம் அறிந்துள்ளோம். இந்த கர்மபந்தனத்தின் கணக்கு வழக்கை துண்டிப்பவர் ஒரேயொரு பரமாத்மா மட்டுமே ஆவார். அவரே வந்து இந்த ஞான யோக பலத்தினால் கர்மபந்தனத்திலிருந்து விடுவிக்கிறார். எனவே தான் பரமாத்மாவிற்கு சுகம் அளிக்கும் வள்ளல் என்று கூறப்படுகிறது. முதலில் நான் ஆத்மா ஆவேன், உண்மையில் நான் யாருடைய குழந்தையாக உள்ளேன், எனது உண்மையான குணம் என்ன? என்ற ஞானம் முதலில் இருக்கவில்லை. இது எப்பொழுது புத்தியில் வந்து விடுகிறதோ, அப்பொழுது தான் கர்மபந்தனம் அறுபட முடியும். இப்பொழுது இந்த ஞானம் நமக்கு பரமாத்மா மூலமாகத் தான் பிராப்தி ஆகிறது. அதாவது பரமாத்மா மூலமாகத் தான் கர்மபந்தனம் அறுபடுகிறது. நல்லது. ஓம் சாந்தி

 

ஓம்சாந்தி