03.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு மிகவும் விசித்திரமான (தனித்துவம் வாய்ந்த) குரு கிடைத்திருக்கிறார். நீங்கள் அவருடைய ஸ்ரீமத் படி நடந்தால் இரண்டு கிரீடங்கள் அணிந்த தேவதை ஆகிவிடுவீர்கள்.

 

கேள்வி:

படிப்பில் ஒரு போதும் களைப்பு ஏற்படாமல் இருக்க எளிய முயற்சி யாது?

 

பதில்:

படிப்பிற்கிடையில் இகழ், புகழ், மரியாதை, அவமரியாதை ஏற்படுகிறது. அதில் சம நிலையில் இருக்க வேண்டும். அதை ஒரு விளையாட்டு என புரிந்துக் கொண்டால் ஒரு போதும் களைப்பு ஏற்படாது. அனைவரையும் விட அதிகமான நிந்தனை கிருஷ்ணருக்குத் தான் ஏற்பட்டது. எவ்வளவு களங்கப்படுத்தி உள்ளனர். பிறகு அதே கிருஷ்ணரை பூஜிக்கவும் செய்கிறார்கள். எனவே திட்டு (வச) என்பது புதிய விசயம் அல்ல. ஆகவே, படிப்பில் களைப்படையக் கூடாது. தந்தை படிக்க வைக்கும் வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 

பாட்டு:

, கண்ணா! வாழ்விற்கு உதவும் உன் திருநாமம்...........

 

ஓம் சாந்தி.

இது யார் கூறியது? யார் கட்டளை இட்டது? மேலும் யாருக்கு? இதை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிகிறீர்கள். புரிந்துக் கொள்பவர்களுக்குத் தான் கோப கோபிகைகள் என்று பெயர். எனவே, அவர்கள் தங்களுடைய தந்தை கோபி வல்லபரை நினைவு செய்தனர். இப்படிப்பட்ட தந்தை பரம்பிதா பரமாத்ûமாவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. யார் வந்து சென்றிருக்கின்றாரோ அவரைத் தான் நினைவு செய்கிறார்கள். பிற்காலத்தில் அவர் புகழ் பாடுகிறார்கள். (உதாரணமாக) கிறிஸ்து வந்தார் கிறிஸ்துவ தர்மத்தை ஸ்தாபனை செய்து விட்டு எங்கேயும் போய்விடவில்லை. அவர்களை நிச்சயமாக பாலனை செய்ய வேண்டும். மறுபிறவி எடுத்து வர வேண்டும். ஆனால் தர்மத்தை ஸ்தாபனை செய்து விட்டு போனவர்களுக்கு வருடம் தோறும் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். பக்தி மார்க்கத்தில் அவரை நினைத்தனர். அதே போல் இப்போது தசரா விழா கூட கொண்டாடுகிறார்கள். கொண்டாடுதல் என்றால் நிச்சயமாக நல்லதாகத்தான் இருக்கும். யாராவது நல்லது செய்து விட்டு போகிறார்கள். அவர்களுடைய உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி அன்று கூட உற்சவம் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. யார் வாழ்ந்து விட்டு செல்கிறார்களோ அவர்களுடைய விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். இப்போது ராக்கி பண்டிகை ஏன் கொண்டாடுகிறோம் என பாரத வாசிகளுக்குத் தெரியவில்லை. என்ன நடந்தது? கிறிஸ்து, புத்தர் போன்றோர் தர்மத்தை நிறுவுவதற்காக வந்தனர் என அறிகிறார்கள். இச்சமயம் அனைவரும் அசுர சம்பிரதாயத்தினர். நீங்கள் ஈஸ்வரிய சம்பிரதாயத்தினர். இப்போது தந்தை இராமர் வந்து தெய்வீகமாக உயர்ந்தவர்களாக மாற்றுகிறார். பரமாத்மா வந்து சொர்க்கத்தின் திறப்பு விழா அல்லது அடிக்கல் நாட்டுகிறார் என்று கூட கூறலாம். திறப்பு விழா என்றும் கூறலாம். பாரதத்தின் மிக உயர்ந்த மகாராஜா மகாராணியாக வாழ்ந்து விட்டு சென்றனர். சத்யுகத்தின் தேவி தேவதைகள் இரட்டை கிரீடங்களுடன் இருந்தனர். தூய்மையின் கிரீடமும் இருந்தது. மேலும் இரத்தினங்கள் பதித்த கிரீடமும் இருந்தது. இரட்டை கிரீடம் உடையவர்களை ஒரு கிரீடம் உடையவர்கள் பூஜை செய்கிறார்கள். ஆனால் எப்போது வாழ்ந்து சென்றனர், எப்படி இராஜ்யத்தைப் பெற்றனர். இது யாருக்கும் தெரியவில்லை. லஷ்மி நாராயணன் இவ்வளவு சிரேஷ்டமான இரட்டை கிரீடம் உடைய தேவி தேவதைகளாக இருந்தனர். அவர்களை இந்த அளவிற்கு உயர்ந்தவர்களாக மாற்றியவர் யார் என்பதை பாபா புரிய வைக்கின்றார். இப்போது தசரா கொண்டாடுகிறார்கள். நிச்சயமாக ஏதோ நடந்திருக்கும். ஆகவே தான் தசரா கொண்டாடுகிறார்கள். இராவணனை எரிக்கிறார்கள் என நீங்கள் அறிகிறீர்கள். ஆனால் அவன் எரியக் கூடிய பொருள் அல்ல. இப்போது அவனுடைய இராஜ்யம் முடியப் போகிறது. இராம இராஜ்யம் உருவாகும் வரை இந்த கீழான ஆட்சி நடக்கும். இராவணன இராஜ்யம் முடிந்து தான் இராம இராஜ்யம் ஸ்தாபனை ஆகியது. அந்த விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இராவணனை எரிக்கிறார்கள். இதிலிருந்து இது உண்மையில் கீழான அசுரராஜ்யம் எனத் தெரிய வருகிறது. கீழானவர்களில் கூட வரிசைக் கிரமம் இருக்கிறது. துவாபரயுகத்திலிருந்து பிரஷ்டாச்சாரம் (வீழ்ச்சி) ஆரம்பமாகிறது. முதலில் இரண்டு கலைகள் குறைகிறது. பிறகு நான்கு, எட்டு, பத்து என அதிகரித்துக் கொண்டே 16 கலைகளும் குறைந்து போகிறது. இப்போது 16 கலைகளையும் இழந்தவர்களை 16 கலைகளிலும் சிறந்தவர்களாக மாற்றுவது ஒரு தந்தையின் வேலையாகும்.

 

இச்சமயம் இராவண இராஜ்யம். இராம இராஜ்யம் உயர்ந்த இராஜ்யமாக இருந்தது என பாபா புரிய வைக்கிறார். இப்போது அது கீழானதாகிவிட்டது. நான் கீழான இராஜ்யத்தை உயர்ந்த இராஜ்யமாக மாற்ற வந்திருக்கிறேன் என பாபா கூறுகிறார். யாதவ குலமும் இருக்கிறது. கௌரவ குலமும் இருக்கிறது. மிக உயர்ந்த தெய்வீக தர்மத்தினராக இருந்தவரின் தர்மமும், கர்மமும் கீழானதாகிவிட்டது. பிறகு பாபா உயர்ந்த கர்மத்தைக் கற்பிக்கிறார். பக்தி மார்க்கத்தில் விழாக்கள் கொண்டாடி வந்திருக்கின்றனர். நிச்சயமாக பகவான் வந்திருக்கிறார். இது 5000 வருடங்களின் விஷயம் ஆகும். தந்தை வந்து கீழானவர்களை உயர்ந்தவர்களாக மாற்றினார். முழு உலகத்தையும் உயர்ந்தவர்களாக மாற்றுவது பாபாவின் வேலையாகும். பிறகு அவர்களை பாலனை செய்வதற்காக உங்களை மேலிருந்து அனுப்புகிறார். நீங்கள் ஸ்தாபனை செய்த தெய்வீக தர்மத்தை சென்று பாலனை செய்யுங்கள் என்று. இவ்வாறு யாரும் கூறுவதில்லை. தானாகவே இந்த நாடகப்படி நடக்கின்றது. நீங்கள் உயர்ந்தவர்களாக மாறியதும் சிருஷ்டியும் சதோபிரதானமாக உயாந்ததாக மாறிவிடும். இப்போது ஐந்து தத்துவங்கள் கூட தமோ பிரதானமாக மாறியிருக்கிறது. எவ்வளவு கீழும் மேலுமாக இருக்கிறது. மனிதர்கள் எவ்வளவு துக்கம் அடைந்துக் கொண்டிருக்கிறார்கள். கோடிக் கணக்கானவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. சத்யுகத்தில் இது போன்ற எந்த தொல்லையும் இல்லை. நரகத்தில் தான் தொல்லை ஏற்படுகிறது. தொல்லைகள் கூட முதலில் இரண்டு கலைகள் உடையவர்களுக்குத் தான். இப்போது 16 கலைகள் உடையவர்களாக மாறிவிட்டீர்கள். இது அனைத்தும் விளக்கமாகப் புரிய வைக்கக்கூடிய விஷயங்கள் ஆகும். எளிதானது. எனினும் புரிந்துக் கொள்ளவில்லை என்றால் புரிய வைக்க முடியாது. இந்த இராவணனை எரிப்பது துவாபரயுகத்திலிருந்து ஆரம்பமாகியது. 5000 வருடங்கள் ஆக நடக்கிறது என கூற முடியாது. பக்தி மார்க்கம் ஆரம்பமாகியதும் இந்த தொல்லைகளும் கூட ஆரம்பமாகியது. இப்போது மீண்டும் இராவண இராஜ்யம் அழிந்து இராம இராஜ்யத்தின் ஸ்தாபனை எப்படி நடக்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். இராவணன் என்றால் என்ன என மனிதர்களுக்குத் தெரியாது. இலங்கை என்ற ஒன்று இல்லை என பாபா கூறுகிறார். சத்யுகத்தில் இலங்கை இல்லவே இல்லை. மிகக் குறைவான மனிதர்களே இருந்தனர். யமுனை ஆற்றங்கரை இருக்கிறது. அஜ்மீரில் வைகுண்டத்தின் மாடல் காண்பிக்கிறார்கள். ஆனால் புரிந்துக் கொள்ளவில்லை. அங்கே தங்கமாளிகைகளை உருவாக்குவதில் தாமதம் ஆகாது. இயந்திரங்களைப் பயன்படுத்தி உடனடியாக உருக்கி, டைல்ஸ் உருவாக்குகிறார்கள்.

 

இந்த விஞ்ஞானத்தின் மூலமாக அழிவுகள் ஏற்படுகிறது. பிறகு அங்கே அதுவே பயன்படுகிறது என நீங்கள் அறிகிறீர்கள். இப்போது இந்த விமானங்களை மகிழ்ச்சிக்காக உருவாக்குகிறார்கள். அதனை பயன்படுத்தியே அழிப்பார்கள். எனவே இந்த விமானங்கள் சுகத்திற்காகவும் இருக்கிறது. துக்கத்திற்காகவும் இருக்கிறது. அல்ப காலத்திற்கான சுகமாகும். 100 வருடத்திற்குள் இந்த பொருள்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே 100 வருடங்களுக்குள் இது அனைத்தும் நடந்திருக்கிறது. இப்போது நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்- வினாசம் நடந்த பிறகு குறைந்த நாட்களிலேயே புது உலகத்தில் அனைத்து பொருள்களும் உருவாகி விடும். அங்கே உடனடியாக தங்கமாளிகை உருவாகிறது. பாரதத்தில் எத்தனை தங்கம், வெள்ளியினால் அலங்கரிக்கப்பட்ட மாளிகைகளை உருவாக்குகிறார்கள். அங்கே தர்பார் மிகப் பெரியதாக இருக்கிறது. அரசர்கள் தங்களுக்குள் சந்தித்துக் கொள்வார்கள். அதை பாண்டவ சபை என்று கூற முடியாது. அதை லஷ்மி நாராயணனின் இராஜ்ய (அரச) சபை என்று கூறுவார்கள். இளவரசன் இளவரசி அனைவரும் அமர்வார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்த போது இளவரசன் இளவரசி மகாராஜாக்களின் பெரிய சபை இருந்தது. அனைவரும் இராஜ்ய கிரீடத்தை அணிந்து அமர்ந்தார்கள். நேபாளத்தில் பாபா சென்றிருக்கிறார். அங்கே ராணா குடும்பத்தினரின் சபை இருந்தது. பெரிய கிரீடங்களை அணிந்த ராணாக்கள் அமர்திருந்தனர். அவர்களை மகாராஜா மகாராணி என்கிறார்கள். பிறகு அவர்களிலும் வரிசைக் கிரமம் இருக்கிறது. இராணிகள் அமர்வதில்லை. அவர்கள் திரைக்கு பின்னால் இருக்கிறார்கள். மிகவும் பகட்டோடு அமர்ந்திருந்தனர். நாம் இது பாண்டவ இராஜ்யம் என கூறினோம். அவர்கள் தங்களை சூரிய வம்சத்தினர் என்றார்கள். ஆனால் இங்கேயோ ஒற்றைக் கிரீடம் அணிந்திருந்தனர். அவர்களுக்கு முன்பு இரட்டை கிரீடம் அணிந்தவர் இருந்தனர். இவர்களை கூட்டிச் சென்றார், இதை செய்தார், அதைச் செய்தார் என கிருஷ்ணரைப் பற்றி பல விஷயங்கள் எழுதி விட்டனர். ஆனால் அது போன்று எதுவும் இல்லை. எந்த விழாக்கள் முடிந்து விட்டதோ அதை பிறகு கொண்டாடிக் கொண்டே வருகிறார்கள். இதைக் கூட விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இராவண இராஜ்யம் முடிந்து இராம இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது. இதையும் வருடா வருடம் கொண்டாடுகிறார்கள். இதிலிருந்து அசுர இராவண இராஜ்யம் 5000 வருடத்திற்கு முன் இருந்தது என தெளிவாகத் தெரிகிறது. தந்தை வந்தார், இராவண இராஜ்யத்தை அழித்தார். அதே மகாபாரத போர் எதிரில் இருக்கிறது மற்றபடி இராவணன் என்று யாரும் இல்லை. இராவணனின் மனைவியாக மண்டோதரியைக் காண்பிக்கிறார்கள். அவரை 10 தலை உடையவராக காண்பிக்கவில்லை. இராவணனை 10 பத்து தலை உடையவராகக் காண்பிக்கிறார்கள். விஷ்ணுவை 4 புஜங்களுடன் காண்பிக்கிறார்கள். இரண்டு லஷ்மியினுடையது, இரண்டு நாராயணனினுடையது. அதே போன்று இராவணனையும் பத்து தலைகளுடன் காண்பிக்கிறார்கள். 5 விகாரங்கள் அவனுடையது. 5 மண்டோதரியினுடையது. நான்கு கைகள் உடைய விஷ்ணுவையும் அர்த்தத்துடன் காண்பித்துள்ளார்கள். மகா லஷ்மிக்கு பூஜை செய்கிறார்கள். மகா லஷ்மியை ஒரு போதும் இரண்டு கைகள் உடையவர்களாகக் காண்பிக்கவில்லை. தீபாவளி அன்று லஷ்மியை அழைக்கிறார்கள். ஏன் நாராயணன் என்ன தவறு செய்தார். லஷ்மிக்கு நாராயணன் தான் செல்வத்தைக் கொடுத்திருப்பார் அல்லவா? பாதி துணைவனாக இருப்பார். எனவே நாராயணன் என்ன தப்பு செய்தார். உண்மையில் லஷ்மியிடமிருந்து செல்வம் கிடைப்பதில்லை. ஜகதம்மாவிடமிருந்து தான் செல்வம் கிடைக்கிறது. ஜகதம்பா தான் லஷ்மியாக மாறுகிறார் என நீங்கள் அறிகிறீர்கள். அவர்கள் தனித்தனியாக காண்பித்து விட்டனர். ஜகதம்பாவிடமிருந்து ஒவ்வொரு பொருளும் கேட்கிறார்கள். ஏதாவது துக்கம் ஏற்பட்டால். குழந்தை இறந்து விட்டால் இரக்கம் காட்டு, குழந்தையைக் கொடு, இந்த நோயை விரட்டு என ஜகதம்மாவிடம் கேட்கிறார்கள். பல விருப்பங்களைத் தெரிவிக்கிறார்கள். லஷ்மியிடம் செல்வம் வேண்டும் என ஒரே விருப்பத்தை வைக்கிறார்கள் அவ்வளவு தான்! ஜகதம்பா அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியவர் ஆவார். இவர் தான் செல்வந்தராக மாற்றுகிறார். இச்சமயம் உங்களது அனைத்து விருப்பங்களும் நிறைவேறுகிறது. வேறு யாரும் செல்வம் கொடுப்பதில்லை. படிக்க மட்டும் வைக்கின்றார். இதன் மூலம் எப்படி இருந்த நீங்கள் எப்படி மாறுகிறீர்கள். மேலும் லஷ்மி ஆகிறீர்கள் என்றால் செல்வந்தராகிறீர்கள். இச்சமயம் உங்களுக்குள் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடிய சக்தி இருக்கிறது. ஜகதம்பா தானம் செய்கிறார். அங்கே தானம் செய்வதில்லை. பசியும் கிடையாது. யாரும் ஏழையாக கிடையாது. சத்யுகத்தில் இராவணன் கிடையாது. இங்கே இராவணனை எரிக்கிறார்கள். தசராவிற்கு பின்பு தீபாவளி கொண்டாடுகிறார்கள். குஷியோடு கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் வினாசம் ஆகி இராம இராஜ்யம் உருவாகிறது என்றால் மகிழ்ச்சி இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பிரகாசம் ஏற்படுகிறது, உங்களுடைய ஆத்மாவிலும் பிரகாசம் வருகிறது. எந்த பொருள் சங்கமத்தில் இருக்கிறதோ அது சத்யுகத்தில் இருக்காது. நீங்கள் திரிகால தர்ஷி அங்கே நீங்கள் சொத்தை அனுபவிக்கிறீர்கள். இந்த ஞானம் முழுவதும் மறந்து போகிறது. சங்கமத்தில் தான் ஸ்தாபனையும் வினாசமும். ஸ்தாபனை ஆகிவிட்டது என்றால் அவ்வளவு தான். இந்த விழாக்கள் அனைத்தையும் பற்றிய ஞானம் உங்களுக்குத் தான் இருக்கிறது. அஞ்ஞானி மனிதர்கள் எதுவும் புரிந்துக் கொள்ள வில்லை. நிறைய தவறானவைகளைப் பரப்புகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. நீங்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். சத்யுகத்தில் இந்த விஷயங்கள் எதுவும் கிடையாது. நாரதரின் விசயம் கூட சாஸ்திரங்களில் இருக்கிறது. உங்களைக் கூட கேட்டால் பாபா நாங்கள் லஷ்மியை மணப்போம் அல்லது நாராயணனை மணப்போம் என்கிறீர்கள். உங்களுக்குள் எந்த விகாரமும் இல்லையா என பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை கோபம் போன்றவை இருந்தால் எப்படி மணக்க முடியும். ஆம், இது வரை யாரும் சம்பூரணம் ஆகிவில்லை. ஆனால் ஆக வேண்டும். இந்த பூதங்களை விரட்ட வேண்டும். அப்போது தான் உயர்ந்த பதவி பெற முடியும். டீச்சர் கூட மிகவும் அதிசயமாகக் கிடைத்திருக்கிறார். தந்தை அனைத்து குணங்களும் நிறைந்தவராக, ஞானக் கடல், ஆனந்தக் கடலாக இருக்கிறார். யார் அவருடைய குழந்தைகளாக மாறுகிறார்களோ அவர்களை சர்வ குணம் நிறைந்தவர்களாக டபுள் கிரீடம் உடைய தேவதையாக மாற்றுகிறார். உண்மையில் நீங்கள் மாறிக் கொண்டிருக்கிறீர்கள். தேவதைகளுக்கு இரண்டு கிரீடங்கள் வைக்கிறார்கள். நீங்கள் தந்தையிடம் சொத்து அடைவதற்காக வந்திருக்கிறீர்கள். சொத்து அடைய வேண்டும், படிக்க வேண்டும். நிறைய கருத்துக்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. படிக்க வில்லை என்றால் மற்றவர்களுக்கு எப்படிப் புரிய வைக்க முடியும். நாடகம் அப்படியே திரும்ப நடக்கிறது. இந்த நாடகத்தை இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். பிறகு இது மறைந்து போகும். இங்கே இலங்கை போன்றவை காண்பிக்கிறார்கள். அதுவும் இருக்காது. இராவணன் எப்போது பிறந்தான் துவாபர யுகத்திலிருந்து தேவதைகள் வாமமார்க்கத்தில் செல்கிறார்கள். அப்போதிலிருந்து விகாரியாக மாற ஆரம்பித்தனர் என எழுதப்பட்டிருக்கிறது. பக்தி கூட முதலில் தூய்மையாக இருந்தது. பிறகு அசுத்தமாகி விட்டது. இப்போதோ மனிதர்கள் தன்னை பூஜிக்க ஆரம்பித்து விட்டனர். நான் கீழான உலகத்தை அழிக்கவும் உயர்ந்த உலகத்தை ஸ்தாபனை செய்வதற்காகவும் வந்திருக்கிறேன் என பாபா கூறுகிறார். எனவே முதலில் ஸ்தாபனை செய்வார். பிறகு அழிப்பார். இது கல்ப கல்பமாக என்னுடைய நடிப்பாகும். கீழானவர்களை உயர்ந்தவர்களாக மாற்றுவதில் நேரம் தேவைப்படுகிறது. தந்தை படிக்க வைக்கும் வரை படிக்க வேண்டும். போன கல்பத்தில் யார் எவ்வளவு படித்தார்களோ அவ்வளவு படிப்பார்கள். நிறைய குழந்தைகள் போகப் போக அவ்வளவு தான் இனிமேல் நடிக்க முடியாது என்கிறார்கள். அடே, இகழ், புகழ், மரியாதை, அவ மரியாதை அனைத்தும் கிடைக்கும் நீங்கள் படிப்பை ஏன் விடுகிறீர்கள். அனைத்தையும் விட அதிகமான நிந்தனை ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தான். எவ்வளவு களங்கப் படுத்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கிருஷ்ணரை ஏன் பூஜிக்க வேண்டும். உண்மையில் இவருக்குத் தான் (பிரம்மாவிற்கு) திட்டு கிடைக்கிறது. முழு சிந்துவிலும் (இடத்தின் பெயர்) நிந்தனை ஏற்பட்டது. பிறகு எதுவும் செய்ய முடியவில்லை. இது அனைத்தும் விளையாட்டாகும். புதிய விஷயம் எதுவும் இல்லை. போன கல்பத்திலும் திட்டு வாங்கினார். நதியைக் கடந்தார். நீங்கள் சிந்துவில் இருந்து கடந்த வந்து விட்டீர்கள் அல்லவா? கிருஷ்ணர் இல்லை. இந்த தாதா தான் வருவதும் போவதுமாக இருந்தார். இப்போது இராஜ்யத்தை அடைகிறோம். பிறகு இழந்து விடுவோம் என நீங்கள் அறிகிறீர்கள். இது விளையாட்டாகும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1 . அனைவரின் மனோவிருப்பங்களையும் நிறைவேற்றக் கூடிய காமதேனு (ஜகதம்பா) ஆக வேண்டும். தானம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 

2. இகழ்-புகழில் சமமான நிலையில் இருக்க வேண்டும். இது அனைத்தும் நடந்துக் கொண்டிருந்தாலும் படிப்பை விடக் கூடாது. இதை விளையாட்டு என புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

வரதானம்

சுத்தமான மனம், மற்றும் திவ்ய புத்தியின் விமானம் மூலம் ஒரு விநாடியில் இனிய வீட்டுக்கு (பரம் தாமம்) யாத்திரை செல்லக் கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.

 

விஞ்ஞானிகள் அதிவேகத்தில் செல்லக்கூடிய எந்திரங்களைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக எவ்வளவு செலவு செய்கின்றனர்! எவ்வளவு நேரத்தையும் சக்தியையும் செலவழிக்கின்றனர்! ஆனால் உங்களிடம் அவ்வளவு அதிவேக எந்திரம் உள்ளது -- அதன் மூலம் செலவு எதுவுமின்றி நினைத்தவுடன் சென்று சேர்ந்து விடலாம். உங்களுக்கு சுபசங்கல்பம் தெய்வீக புத்தி என்ற எந்திரம் கிடைத்துள்ளது. இந்த சுத்த மனம் மற்றும் திவ்ய புத்தியின் விமானத்தின் மூலம் விரும்பும் போது சென்று விடுங்கள், மீண்டும் விரும்பும் போது திரும்பி விடுங்கள். மாஸ்டர் சர்வசக்திவானை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

 

சுலோகன்

மனம் சதா உண்மையுள்ளதாக இருக்குமானால் திலாராம் பாபாவின் ஆசிர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

 

ஓம்சாந்தி