09.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இப்போது மனிதர்கள் மூலம் கிடைத்துள்ள மந்திர-தந்திரங்கள் பயன் தராது. அதனால் நீங்கள் அனைத்திliருந்தும் உங்கள் புத்தியோகத்தை விடுவித்து ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள்.

 

கேள்வி :

பக்தியின் எந்த ஒரு விசயம் ஞான மார்க்கத்தில் செல்லுபடியாகாது?

 

பதில்:

பக்தியில் பகவானிடம் கிருபை அல்லது ஆசிர்வாதம் வேண்டுகின்றனர். ஞான மார்க்கத்தில் ஆசிர்வாதம் அல்லது கிருபையின் விசயம் கிடையாது. இது படிப்பாகும், தந்தை ஆசிரியராகி உங்களுக்குக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். அதிர்ஷ்டத்தின் ஆதாரம் படிப்பில் உள்ளது. தந்தை கிருபை செய்வாரானால் வகுப்பு முழுவதுமே பாஸாகி விடும். அதனால் ஞான மார்க்கத்தில் கிருபை அல்லது ஆசிர்வாதத்தின் விசயம் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவரது முயற்சியை அவசியம் செய்ய வேண்டும்.

 

பாடல்:

நான் ஒரு சின்னஞ்சிறிய குழந்தை........

 

ஓம் சாந்தி.

இது பக்தி மார்க்கத்தின் அழைப்பு-சிறியவர் மற்றும் பெரியவர்கள் அழைப்பது. ஏனென்றால் புரிய வைக்கப்பட்டுள்ளது-பக்தர்களோ யக்ஞம், ஜபம், தவம், முதலியன செய்கின்றனர். இவற்றால் பரமாத்மாவுடன் சந்திப்பதற்கான வழி கிடைக்கும் என நம்புகின்றனர். பிறகு ஈஸ்வரனை சர்வவியாபி எனச் சொல்வது, நானும் அவருடைய ரூபம், எனக்குள்ளும் பகவான் இருக்கிறார்-இப்படியெல்லாம் சொல்வதென்பது பொய் இல்லையா? அவர் துக்கம் எதையும் சகித்துக் கொள்வதில்லை. பகவானோ வேறு பொருள் இல்லையா? இதுவே மனிதர்களின் தவறாகும். இதன் காரணத்தால் தான் துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். உங்களிலும் கூட அபூர்வமாக யாரோ சிலர் தான் தந்தையை அறிந்து கொள்கின்றனர். மாயா அடிக்கடி மறக்கடித்து விடுகின்றது. பாபாவோ அடிக்கடி சொல்கிறார், உங்களுக்கு ஸ்ரீமத் தருகிறேன் - தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். இது உயர்ந்ததிலும் உயர்ந்த ஒரு வழிமுறையாகும். பாபாவின் ஸ்ரீமத் மூலம் மனிதரில் இருந்து நாராயணனாக, பதீத்ததிருந்து பாவனமாக ஆகின்றனர். இச்சமயத்தின் பதீத் மனிதர்களாக இருப்பவர்களது சிரேஷ்ட வழிமுறை கிடையாது. பகவானும் கூட சொல்லியிருக்கிறார், இது பிரஷ்டாச்சாரி அசுர சம்பிரதாயம். பாபா சொல்கிறார், உங்களுடைய தேவி-தேவதா தர்மம் மிகுந்த சுகம் தரக்கூடியதாகும். நீங்கள் அதிக சுகத்தை அடைந்திருக்கிறீர்கள். இது உருவாக்கப்பட்ட ஒரு நாடகம். பகவான் ஏன் இதை உருவாக்கினார் என்றெல்லாம் கேட்பதாகாது. இதுவோ அனாதி டிராமா அல்லவா? ஞானம் என்றால் பகல், பக்தி என்றால் இரவு. ஞானத்தினால் இப்போது நீங்கள் சொர்க்கவாசி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பக்தியினால் நரகவாசி ஆகியிருக்கிறீர்கள். ஆனால் மனிதர்கள் கல்புத்தியாக இருக்கிற காரணத்தால் புரிந்து கொள்வதில்லை. கோபம் எவ்வளவு அதிகமாக உள்ளது! எவ்வளவு வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டே இருக்கின்றனர்! வினாசம் நிச்சயமாக நிகழும் என நம்புகின்றனர். ஆக, இது பிரஷ்டாச்சாரி (மிகவும் தாழ்ந்த) புத்தி தானே? கலியுகம் இராவண இராஜ்யம் எனச் சொல்லப்படுகின்றது. இராவணன் தான் பிரஷ்டாச்சாரி ஆக்குகிறான். பாபா வந்து அவசரச் சட்டம் பிறப்பிக்கிறார் - இப்போது தீய செயல்களை (பிரஷ்டாச்சாரம்) நிறுத்தி விடுங்கள். நம்பர் ஒன் தீயச் செயல் ஒருவர் மற்றவரைப் பதீத் ஆக்குவது. இது விகாரம் நிறைந்த உலகம். கலியுக பாரதம் விகாரம் நிறைந்த உலகம் எனச் சொல்லப் படுகின்றது. அனைவரும் விஷத்தினால் பிறப்பவர்கள். சத்யுகம் சிவாலயம் எனச் சொல்லப் படுகின்றது. சிவபாபாவினால் ஸ்தாபனை செய்யப்பட்ட தூய்மையான பாரதம். லட்சுமி-நாராயணர் முதலானோர் சர்வகுண சம்பன்ன, 16 கலை சம்பூர்ணமான, சம்பூர்ண நிர்விகாரி......... எனச் சொல்லப்படுகின்றனர். பிறகு இந்தக் கேள்வி எழ முடியாது. குழந்தைகள் எப்படிப் பிறப்பார்கள்? குழந்தைகளாகிய நீங்கள் யோகபலத்தினால் உலகத்தின் எஜமானர் ஆக முடியும் எனும்போது யோக பலத்தினால் என்ன தான் நடைபெற முடியாது? இப்போது செய்தித்தாட்களிலும் செய்தி இதுபோல் வெளியிடப்படுகிறது - கன்னிகள் (பவித்திர குமாரிகள்) எந்த ஒரு மருந்தோ இஞ்செக்ஷ்னோ இல்லாமல் குழந்தை பெற்றெடுக்கின்றனர். பாபா சொல்கிறார், நீங்கள் யோகபலத்தினால் ஸ்ரீமத் படி சொர்க்கத்தின் எஜமானர் ஆக முடியும் என்றால், அங்கே யோகபலத்தினால் குழந்தைகளும் பிறக்கும். சரீர பலத்தினால் முழு உலகத்தின் மீதும் இராஜ்யம் செய்ய இயலாது. அவர்களுடையது சரீர சம்மந்தமான பலம், உங்களுடையது யோகபலம். நீங்கள் சர்வசக்திவான் பாபாவிடம் யோகம் வைக்கிறீர்கள். சர்வசக்திவான் தாமே சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகும். ஆனால் யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. அந்த சமயம் ஆம்-ஆம் எனச் சொல்கின்றனர், பிறகு மறந்து விடுகின்றனர்.

 

நிச்சயமாக பகவான் எல்லையற்ற தந்தை இராஜயோகம் கற்பித்து ஞானத்தினால் நம்மை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்.பிறகும் கூட புத்தியில் பதிவதில்லை என்றால் சொல்வார்கள், இவர்களுடைய அதிர்ஷ்டத்தில் இல்லை, அதனால் முயற்சி செய்வதில்லை. ஆசிரியரோ அனைவருக்குமே படிப்பு சொல்லித் தருகிறார், சிலர் எவ்வளவு படிக்கிறார்கள்! சிலர் ஃபெயிலாகி விடுகின்றனர்! ஆசிரியரிடம் போய் எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் எனச் சொல்ல மாட்டார்கள். படிப்பில் கிருபை, ஆசீர்வாதம் போன்றவை நடக்காது. ஞான மார்க்கத்திலோ பாபா உங்களுக்கு நமஸ்தே சொல்கிறார். கிருபை அல்லது ஆசீர்வாதம் வேண்டுமெனக் கேட்கக் கூடாது. தந்தையிடம் குழந்தை வந்தால் எஜமானர்களாகத் தான் ஆவார்கள். பாபா சொல்கிறார், இவர்களோ எஜமானர்கள். இதில் கிருபையின் விசயம் கிடையாது. தந்தையின் ஆஸ்தி குழந்தையினுடையதாக ஆகிவிட்டது. ஆம், மற்றப்படி குழந்தைகளைச் சீர்திருத்துவது என்பது ஆசிரியரின் வேலையாகும். ஆசிரியர் படி என்று சொல்வார். படிப்பது உங்களுடைய வேலை. கிருபை என்ன செய்வார்? குருவின் கடமையும் சத்கதி மார்க்கத்திற்கான வழி சொல்வதாகும். ஆசீர்வாதத்தின் விசயமல்ல. இவரோ ஒரே ஒரு தந்தை, ஆசிரியர், சத்குரு ஆவார். மூவரிடம் கிருபை வேண்டுகின்ற விசயம் கிடையாது. புத்தியற்ற மனிதர்களுக்கு பாபா வந்து அறிவைக் கொடுக்கிறார். இது தான் அவருடைய ஆசீர்வாதமாகும். மற்றப்படி அதன்படி நடப்பதென்பது குழந்தைகளின் வேலை. பாடப்பட்டுள்ளது-ஸ்ரீமத் பகவான் வாக்கு. அவர் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் என்பதால் அவருடைய வழிமுறையும் கூட உயர்ந்ததிலும் உயர்ந்ததாகவே இருக்கும் இல்லையா? ஸ்ரீமத் மூலம் நீங்கள் சிரேஷ்ட தேவி-தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள், நம்பர்வார் முயற்சியின் படி. நீங்களும் புரிந்து கொள்ள முடியும், நாம் எத்தனை மார்க்குகள் எடுத்துப் பாஸாவோம் என்று. நம்பர்வார் புருஷார்த்தத்தின் படி தேவதை ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் புரிந்து கொள்ள முடியும், நாம் எத்தனை மார்க்கில் பாஸாவோம் என்று. பாடசாலையில் மாணவர்கள் புரிந்து கொள்ள முடியும் இல்லையா? நாம் முழுமையாகப் படிக்கவில்லை, அதனால் நாம் ஃபெயிலாகி விடுவோம் என்று? இவர் ஃபெயிலாகி விடுவார் என்று. பாபாவும் கூட ரிஜிஸ்டர் மூலம் புரிந்து கொள்வார், இவரும் எல்லையற்ற தந்தை, ஆசிரியர், குரு ஒருவரே ஆவார். இவரும் அறிவார், குழந்தைகளும் அறிவார்கள், நாம் படிப்பதில்லை என்று. படிப்பதில்லை என்றால் நிச்சயமாகக் குறைந்த பதவி இருக்கும். நல்லது, நாம் சிறப்பாகப் படிக்க வேண்டும் என்று இவர்களும் புருஷார்த்தம் செய்வதில்லை. எவ்வளவு தான் அறிவுறுத்தினாலும் சரி, புரிய வைத்தாலும் சரி, எதுவும் செய்வதில்லை. ஸ்ரீமத் படி நடக்காததால் கீழான பதவி பெறுவார்கள். யார் குழந்தையாக ஆகிறார்களோ, அவர்கள் இராஜ்யத்தில் என்னவோ வந்து விடுவார்கள். அங்கும் அநேகப் பதவிகள் உள்ளன இல்லையா? தாச, தாசியாகவும் (வேலையாள்) ஆகின்றனர். ஆனால் அவர்களும் கூட இராஜ குடும்பத்தில் வசிக்கின்றனர். லட்சுமி-நாராயணருக்கு வைரம்-வைடூரியங்களின் மாளிகைகள் இருக்கும். அப்போது தாச-தாசிகளும் கூட அங்கே வசிப்பார்கள் இல்லையா? பிறகு நம்பர்வார் முன்னேறிச் சென்று பதவி பெற முடியும். பிரஜைகளிலும் நம்பர்வார் உள்ளனர். பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் இன்ஷ்யோர்(காப்பீடு) செய்கின்றனர் இல்லையா? அவர்கள் ஈஸ்வரன் பெயரில் தானம் செய்கின்றனர். யாராவது மருத்துவமனை கட்டியிருந்தால் அடுத்த பிறவியில் நல்ல நோயற்ற உடல் கிடைக்கும். அல்பகாலத்துக்காக பலனோ கிடைக்கின்றது இல்லையா? யாரேனும் பாடசாலை திறந்திருப்பார்கள் என்றால் அடுத்த பிறவியில் நன்றாகப் படிப்பார்கள். தர்மசாலை திறந்திருப்பார்களானால் அடுத்த பிறவியில் வசிப்பதற்கு நல்ல வீடு கிடைக்கும். ஆக, இது இன்ஷ்யோர் செய்வதாகின்றது இல்லையா? ஒவ்வொருவரும் தனக்காக இன்ஷ்யோர் செய்கின்றனர். இப்போது உங்களுடையது நேரடியாக ஈஸ்வரனோடு. அது மறைமுகமானது. இது நேரடியாக இன்ஷ்யோர் செய்வது. பாபா, இவை அனைத்தும் உங்களுடையவை. நான் டிரஸ்டியாக இருக்கிறேன். இதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு 21 பிறவிகளுக்கு சுயராஜ்யம் தரவேண்டும். இது நேரடியாக பாபாவுக்கு இன்ஷ்யோர் செய்வதாகும்-21 பிறவிகளுக்காக. பாபா சொல்கிறார், தனது பெட்டி-படுக்கைகள் அனைத்தையும் சத்யுகத்துக்கு மாற்றி விடுங்கள். எப்படி யுத்தம் நடக்கிறது என்றால் பிறகு சின்னச் சின்ன ராஜாக்கள் பெரிய ராஜாக்களிடம் தங்கள் சொத்துகளை ஒப்புவிக்கின்றனர். பிறகு யுத்தம் முடிவுற்றதும் பிறகு பெரியவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். (பிரம்மா) பாபாவோ இவ்விசயங்களில் அனுபவஸ்தர் இல்லையா? பாபாவும் அறிவார். இந்த தாதாவும் அறிவார். புரிந்து கொள்ள வேண்டும், நமக்கு தாதா மூலம் பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. பாபா கல்வி கற்றுத் தருகிறார். ஹெவன்லி காட்ஃபாதர் அந்தத் தந்தை. இவரல்ல. இவர் தாதா. முதலில் நிச்சயமாக தாதாவுடையவர்களாக ஆக வேண்டும். பாபா, நாங்கள் உங்களுடையவர்கள். உங்களிடமிருந்து நாங்கள் ஆஸ்தி பெறுவோம். மேலும் அனைத்துத் தரப்பிலிருந்தும் புத்தியோகத்தை நீக்க வேண்டும், இதில் முயற்சி உள்ளது.

 

பாபா சொல்கிறார், இப்போது மற்ற குரு முதலானவர்களின் மந்திரங்கள் எதற்கும் பயன்படாது. எந்த மனிதர்களுடைய மந்திரங்களும் இப்போது பயன் தராது. நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை நினைவு செய்வீர்களானால் உங்களுக்கு வெற்றி! உங்கள் தலை மீது பாவச்சுமை அதிகமாக உள்ளது. இப்போது என்னை நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். பிறகு உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். முதலிலோ இந்த நிச்சயம் வேண்டும் இல்லையா? நிச்சயம் இல்லை என்றால் பாபா புத்தியின் பூட்டையும் திறக்க மாட்டார். தாரணை ஆகாது. பாபாவுடையவர்களாக ஆகிவிட்டால் ஆஸ்திக்கும் கூட உரிமையுள்ளவர்கள் ஆவீர்கள். புத்தியில் பதிவதில்லை. புதியவர்களில் கூட ஒரு சிலர் கூட பழையவர் களைவிட வேகமாகச் சென்று விடுகின்றனர். பாபாவோ நல்லபடியாகப் புரிய வைக்கிறார். ஒருவர் எவ்வளவு படிக்கிறாரோ அவ்வளவு வருமானம் உள்ளது. இந்த இறைத்தந்தையின் ஞானம் வருமானத்திற்கு ஆதாரமாகும். நீங்கள் உலகத்துக்கு எஜமானர் ஆகிறீர்கள்-ஞானத்தின் மூலம். மனிதர்களிடம் இந்த ஞானம் கிடையாது. இப்போது என்னுடைய குழந்தைகளாகிய நீங்கள் அசுர சம்பிரதாயத்திலிருந்து தெய்வீக சம்பிரதாயம், பிரஷ்டாச்சாரியிலிருந்து சிரேஷ்டாச்சாரியாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஸ்ரீமத் இல்லாமல் யாரும் சிரேஷ்டாச்சாரி ஆக முடியாது. இல்லையென்றால் பிறகு கடைசியில் தண்டனைகள் பெற்றுத் திரும்பிச் செல்வார்கள். கொஞ்சமாவது யார் கேட்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் வருவார்கள், ஆனால் முற்றிலும் சாதாரணப் பிரஜையாக வருவார்கள். பதவியில் நம்பர்வார் இருப்பார்கள் இல்லையா? யாருக்கும் ரொட்டி கிடைக்கவில்லை என்ற அளவுக்கு அங்கே ஏழைகள் யாரும் இருக்க மாட்டார்கள். இங்கே இருப்பது போன்ற ஏழைகள் அங்கே இருக்க மாட்டார்கள். சுகம் அனைவருக்குமே இருக்கும். நல்லது, ஆனால், பிரஜை என்றால், பிரஜையானாலும் பரவாயில்லை என நினைக்கக் கூடாது. இது பலவீனம் ஆகிறது இல்லையா? முதலிலோ பக்கா நிச்சயம் வேண்டும். இது நிராகார் பகவானின் வாக்கு. பகவான் சொல்கிறார், எனக்கு மனித உடலிலோ இல்லை. எனது பெயர் சிவன். மற்ற மனிதர்கள், தேவதைகள் அனைவருக்கும் சரீரத்தின் பெயர் உள்ளது. என்னுடைய பெயர் சரீரத்தினுடையது அல்ல. எனக்கு என்னுடைய சரீரம் என்பதே கிடையாது. சரீரதாரி பகவான் எனச் சொல்லப் படுவதில்லை, மனிதர் எனச் சொல்லப் படுவார்கள். மனிதரை பகவான் என ஏற்றுக் கொள்வதால் தான் பாரதவாசிகள் புத்தியற்றவர்களாக ஆகி விட்டுள்ளனர். இல்லையென்றால் பாரதவாசிகள் மிகவும் புத்திசாலிகளாக இருந்தனர். முதலில் பாரதத்தில் துணிகள் முதலியவை மிகவும் சிறந்தனவாக உருவாக்கப் பட்டன. இப்போதோ அந்தமாதிரியான பொருட்களை உருவாக்கவே முடியாது. ஆக, சொர்க்கத்தில் விஞ்ஞானமும் சுகத்திற்காக இருக்கும். இங்கோ விஞ்ஞானம் சுகம்-துக்கம் இரண்டுக்காகவும் உள்ளது. அல்ப காலத்தின் சுகம் கிடைக்கிறது. துக்கமோ அளவற்றதாக உள்ளது.. முழு உலகமும் அழிந்து போகும் என்றால் துக்கம் ஆகிறது இல்லையா? அனைவரும் ஐயோ-ஐயோ எனக் கூக்குரல் இடுவார்கள். அங்கோ விஞ்ஞானத்தினால் சுகத்தின் மேல் சுகமாகக் கிடைக்கும். துக்கத்தின் பெயர் அடையாளமே இருக்காது. இதையும் யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கின்றதோ, அவர்கள் தான் புரிந்து கொள்ள முடியும். அதிர்ஷ்டத்தில் சுகம் இல்லை என்றால், புரிந்து கொள்ள முடியாது. வக்கீல்களும் நம்பர்வார் உள்ளனர் இல்லையா? சிலரே ஒவ்வொரு வழக்குக்கும் 10-20 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். ஒரு சில வக்கீல்களைப் பாருங்கள், அணிந்து கொள்வதற்குக் கோட் கூட இருப்பதில்லை. இங்கே கூட அதுபோல் உள்ளனர் இல்லையா? இராஜாவுக்கெல்லாம் மேலான ராஜாவாக ஆகின்றனர், அல்லது ஒன்றுக்கும் ஆகாத பிரஜைகளாக ஆகின்றனர். ஆக, பாபா வந்து குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வைக்கிறார், பாரதம் தான் இச்சமயம் அனைத்திலும் ஏழையாக உள்ளது. பாரதம் தான் பிறகு செல்வம் மிகுந்ததாக ஆகும். தானம் எப்போதுமே ஏழைகளுக்குத் தான் கொடுக்கப் படுகின்றது. பணக்காரர்கள் இந்த அளவு (ஞானத்தை) எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஏழைகள், சாதாரணமானவர்கள் தான் இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்வார்கள். பணக்காரர் களுக்கு தானம் கொடுப்பதற்கு விதிமுறை இடம் தராது. நீங்கள் ஏழைகள் இல்லையா? உங்களுடைய மம்மா அனைவரைக் காட்டிலும் ஏழை. அவர் பிறகு உலகத்தின் மகாராணி ஆகிறார். டிராமாவே இதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் பெற்றுக் கொள்கிறார்கள். ஏனென்றால் துக்கத்தில் உள்ளனர் இல்லையா? பணக்காரர்களோ மிகுந்த சுகத்தில் உள்ளனர். அவர்களோ சொல்கின்றனர், எங்களுக்கோ இங்கேயே சொர்க்கம் உள்ளது, மோட்டர், வண்டிகள், பணம் எல்லாம் உள்ளன என்று. யாரிடம் பைசா இல்லையோ, நரகத்தில் உள்ளனரோ அவர்களுக்கு நீங்கள் ஞானம் கொடுங்கள் என இப்படியும் சொல்கின்றனர். இப்போது உங்களுடையது இறைத் தந்தையின் (காட் ஃபாதர்) சேவை. நீங்கள் பாரதத்தின் உண்மையான சேவகர்கள். அந்த சமூக சேவை சரீர சம்மந்தமானது. மனிதர்களுக்குக் கொஞ்சம் சுகம் கொடுக்கின்றனர். இவரோ முழு சிருஷ்டியையும் தூய்மையாக்கி பவித்திரமாக, சுகமாக ஆக்கி விடுகிறார். இவர்கள் உடல்-மனம்-பொருள் மூலம் பாரதத்திற்கு சேவை செய்து கொண்டிருக்கின்றனர். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) தன்னுடைய பழைய பெட்டி-படுக்கைகளை(அனைத்தையும்) 21 பிறவிகளுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். இன்ஷ்யோர் செய்து டிரஸ்டி ஆக இருந்து பராமரிக்க வேண்டும்.

 

2) நிச்சயபுத்தி உள்ளவராகி படிப்பைப் படிக்க வேண்டும். ஏழைகளுக்கு ஞான தானம் கொடுக்க வேண்டும். பாரதத்தைப் பவித்திரமாக்குகின்ற உண்மையான ஆன்மீக சேவை செய்ய வேண்டும்.

 

வரதானம்:

அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்த நிலை (சம்பன்னதா) மூலமாக முழுமையான நிலையை (சம்பூர்ணதா) அனுபவம் செய்யக் கூடிய பிராப்தி சொரூபம் ஆவீர்களாக.

 

எப்படி நிலா முழுமையாக இருக்கும் பொழுது அந்த முழுமை அதனுடைய சம்பூர்ண தன்மையின் அடையாளமாக இருக்கிறது. அதற்கு மேல் இன்னும் முன்னேறி போகாது. அவ்வளவு தான். அந்த அளவிற்கு தான் சம்பூர்ண தன்மை இருக்கும். சிறிதளவு கூட கீற்று குறைவாக இருக்காது. அதே போல குழந்தைகளாகிய நீங்கள் ஞானம், யோகம், தாரணை மற்றும் சேவை அதாவது அனைத்து பொக்கிஷங்களில் நிறைந்தவராக ஆகிறீர்கள். ஆக அந்த நிறைந்தத் நிலையைத் தான் (சம்பன்னதா) முழுமையான நிலை (சம்பூர்ணதா) என்று கூறப்படுகிறது. இப்பேர்ப்பட்ட நிறைந்த (சம்பன்னம்) ஆத்மாக்கள் பிராப்தி சொரூபமாக இருக்கும் காரணத்தினால் ஸ்திதியில் கூட எப்பொழுதும் சமீபமாக இருப்பார்கள்.

 

சுலோகன்:

திவ்ய புத்தி மூலமாக அனைத்து சித்திகளையும் அடைவது தான் சித்தி சொரூபம் ஆவதாகும்.

 

ஓம்சாந்தி