26.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! கல்யாணகாரி தந்தை இப்போது உங்களுக்கு ஒரு போதும் அழாத அளவிற்கு நன்மை செய்கிறார், அழுதல் என்பது தீமை அல்லது தேக அபிமானத்தின் அடையாளம் ஆகும்.

 

கேள்வி:

எந்த ஒரு நிச்சயமான (நாடகத்தின் தலை) விதியை அறிந்தும் நீங்கள் சதா கவலையற்று இருக்கிறீர்கள்?

 

பதில்:

இந்த பழைய உலகம் நிச்சயம் அழிய வேண்டும் என்பதை நீங்கள் அறிகிறீர்கள். அமைதிக்காக முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனிதன் நினைப்பது ஒன்று........ எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் இந்த விதியை மாற்ற முடியாது. இயற்கை சீற்றங்கள் கூட நடக்கும். நாம் ஈஸ்வரனுடைய மடியில் வந்திருக்கிறோம் என்ற பெருமிதம் இருக்கிறது. என்னென்ன காட்சிகள் கிடைத்ததோ அது அனைத்தும் நேரடியாக நடக்கும். எனவே நீங்கள் சதா கவலையற்று இருக்கிறீர்கள்.

 

ஓம் சாந்தி.

உலகத்தில் மனிதர்களின் புத்தியில் பக்தி மார்க்கத்தின் பாடல் தான் இருக்கின்றது. ஏனென்றால் இப்போது பக்தி மார்க்கம் நடந்துக் கொண்டிருக்கிறது. இங்கே பக்தியின் பாடல் கிடையாது. இங்கு பாபாவின் பாடல் தான் இருக்கிறது. இவ்வளவு உயர்ந்த ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கிறது என்றால் அந்த தந்தையை மகிமை செய்ய வேண்டும். பக்தியில் சுகம் இல்லை. பக்தியில் இருந்தாலும் சொர்க்கத்தை நினைக்கிறார்கள் அல்லவா? மனிதர்கள் இறந்து விட்டால் சொர்க்கவாசி ஆகிவிட்டனர் என்கிறார்கள். எனவே குஷி அடைய வேண்டும் அல்லவா? சொர்க்கத்தில் பிறக்கிறார்கள் என்றால் அழ வேண்டிய அவசியம் இல்லை. சொர்க்கவாசி ஆகிவிட்டனர் என்பது உண்மையான விஷயம் கிடையாது. ஆகவே அழுது கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அழுது கொண்டிருக்கிறவர்களுக்கு எவ்வாறு நன்மை செய்வது? அழுதல் துக்கத்தின் அடையாளம் ஆகும். மனிதர்கள் அழுகின்றார்கள் அல்லவா? குழந்தைகள் பிறந்ததுமே அழுகின்றார்கள். ஏனென்றால் துக்கம் ஏற்படுகிறது. துக்கம் இல்லை என்றால் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏதாவது தீமை ஏற்படும் போது தான் அழுகை வருகிறது. சத்யுகத்தில் ஒரு போதும் தீமை ஏற்படுவதில்லை. ஆகவே அங்கே ஒரு போதும் அழுவதில்லை. தீமையின் விஷயமே கிடையாது. இங்கே வருமானத்தில் சில நேரம் நஷ்டம் ஏற்படுகிறது அல்லது எப்போதாவது உணவு கிடைக்கவில்லை என்றால் துக்கம் அடைகிறார்கள். துக்கத்தில் அழுகிறார்கள். அனைவருக்கும் வந்து நன்மை செய்யுங்கள் என்று பகவானை நினைவு செய்கிறார்கள். சர்வ வியாபியாக இருந்தால் நன்மை செய்யுங்கள் என்று யாருக்கு கூறுகிறார்கள். பரம்பிதா பரமாத்மாவை சர்வவியாபி என்று ஏற்றுக் கொள்ளுதல் மிகப் பெரிய தவறாகும். பாபா தான் அனைவருக்கும் நன்மை செய்யக் கூடியவர். அவர் ஒருவர் தான் நன்மை செய்யக் கூடியவர். எனவே நிச்சயமாக அனைவருக்கும் நன்மை செய்வார். பரம்பிதா பரமாத்மா எப்போதும் நன்மை தான் செய்கிறார் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். அந்த பரம்பிதா பரமாத்மா உலக நன்மைக்காக எப்போது வந்தார். உலகத்திற்காக நன்மை செய்யக் கூடியவர் வேறு யாரும் இல்லை. பாபாவை சர்வவியாபி என்று கூறுகிறார்கள். எவ்வளவு பெரிய தவறு! இப்போது தனது அறிமுகத்தைக் கொடுத்து மன்மனாபவ, இதில் தான் நன்மை இருக்கிறது எனக் கூறுகிறார். சத்யுகம் திரேதாவில் எந்த நிலையிலும் தீமை ஏற்படுவதில்லை. திரேதாவில் கூட இராம இராஜ்யத்தின் போது சிங்கமும், ஆடும் ஒன்றாக தண்ணீரைக் குடிக்கின்றது. நாம் இராம் சீதாவின் இராஜ்யத்தை இந்த அளவிற்கு புகழ் பாடுவதில்லை. ஏனென்றால் 2 கலைகள் குறைந்து போவதால் கொஞ்சம் சுகம் குறைவாகத் தான் கிடைக்கிறது. நமக்கு பாபா ஸ்தாபனை செய்யக் கூடிய சொர்க்கம் பிடிக்கிறது. இதில் முழு சொத்தும் அடைந்தால் மிகவும் நல்லது. உயந்ததிலும் உயர்ந்த பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைந்து நாம் நன்மை செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தனக்கு நன்மை செய்துக் கொள்வது ஸ்ரீமத் ஆகும்.

 

அசுர சம்பிரதாயம் ஒன்று, தெய்வீக சம்பிரதாயம் ஒன்று என பாபா புரிய வைக்கிறார். இப்போது ஒரு பக்கம், இராவண இராஜ்யம். இன்னொரு பக்கம் நான் தெய்வீக சம்பிரதாயம் ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறேன். இப்போது தெய்வீக சம்பிரதாயம் கிடையாது. அசுர சம்பிரதாயத்தை நான் தெய்வீகமாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். தெய்வீக சம்பிரதாயம் சத்யுகத்தில் இருக்கிறது என்று கூறுவார்கள். இந்த அசுர சம்பிரதாயத்தை தெய்வீக சம்பிரதாயமாக எதிர்காலத்திற்காக நான் மாற்றுகின்றேன் என பாபா கூறுகிறார். இப்போது பிராமண சம்பிரதாயம் தெய்வீக சம்பிரதாயமாக மாறிக் கொண்டிருக்கிறது. குரு நானக் கூட மனிதனிலிருந்து தேவதை...... எனக் கூறினார். எந்த மனிதர்களை தேவதையாக மாற்றுவார்கள்? அவர் நாடகத்தின் முதல், இடை, கடையை அறியவில்லை. சிருஷ்டியின் ஆரம்பத்திலிருந்த இலஷ்மி நாராயணன் உயர்ந்தவர் கூட முதல், இடை, கடையை அறியவில்லை. திரிகாலதர்ஷி கிடையாது. போன பிறவியில் திரிகாலதர்ஷியாக இருந்தனர். சுயதரிசன சக்கரதாரியாக இருந்தனர். எனவே இராஜ்ய பதவியை அடைந்தனர். அவர்கள் சுயதரிசன சக்கரத்தை விஷ்ணுவின் கையில் கொடுத்து விட்டார்கள். சுயதரிசன சக்கரதாரி பிராமணன் என்றால் மனிதர்கள் ஆச்சரியப்படுவார்கள். எனவே இதையும் புரிய வைக்க வேண்டும். அவர்கள் கிருஷ்ணரையும் கூறுகிறார்கள். விஷ்ணுவையும் கூறுகிறார்கள். விஷ்ணுவின் இரட்டை ரூபம் தான் இலஷ்மி நாராயணனன் என அறியவில்லை. நாம் கூட அறியவில்லை. மனிதர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் விதி எனக் கூறிவிடுகிறார்கள். எது நடக்க இருக்கிறதோ அதை யாரும் தடுக்க முடியாது. இது டிராமா ஆகும். எனவே முதன் முதலில் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். எல்லையற்ற பாபா, சிவபாபா புகழ் வாய்ந்தவர். ருத்ரபாபா என்று கூட கூறுவதில்லை. சிவபாபா பிரசித்தமானவர். பாபா எங்கெல்லாம் பக்தர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்குச் சென்று புரிய வையுங்கள் எனப் புரிய வைக்கிறார். இமயமலை ஆயுள் இத்தனை பல கோடி ஆண்டுகள் இருக்கும் என மனிதர்கள் கூறுகிறார்கள். செய்தித் தாளில் படித்தேன். இப்போது இமய மலைக்கு ஏதாவது ஆயுள் இருக்கிறதா என்ன? இது எப்போதும் தான் இருக்கிறது. இந்த பாரதம் கூட அனாதி ஆகும். எப்போது படைக்கப்பட்டது? அதனுடைய ஆயுள் கணக்கிட முடியாது. அவ்வாறே இமய மலையும் எப்போதிருந்து இருக்கிறது எனக் கூற முடியாது. இந்த இமய மலையின் ஆயுள் கணக்கிட முடியாது. ஆகாயம் கடலின் ஆயுள் இவ்வளவு என்றெல்லாம் கூற முடியாது. இமய மலையின் ஆயுள் கூறுகிறார்கள் என்றால் சமுத்திரத்தின் ஆயுளையும் கூற வேண்டும் எதுவும் அறியவில்லை. இங்கே நீங்கள் பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைய வேண்டும். இது ஈஸ்வரிய குடும்பம் ஆகும்.

 

பாபாவினுடையவராவதால் சொர்க்கத்திற்கு அதிபதி ஆகிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். ஒரே ஒரு ஜனக ராஜாவின் விஷயம் அல்ல. ஜீவன் முக்தியில் மற்றும் இராம இராஜ்யத்தில் நிறைய பேர் இருப்பார்கள் அல்லவா? அனைவருக்கும் ஜீவன் முக்தி கிடைத்திருக்கும். ஒரு நொடியில் முக்தி ஜீவன் முக்தி பெறுவதற்கான முயற்சியாளர் நீங்கள். குழந்தையாகி இருக்கிறீர்கள். மம்மா பாபா என்கிறீர்கள். ஜீவன் முக்தி கிடைக்கும் அல்லவா? நிறைய பேர் பிரஜைகளாக உருவாகுவார்கள் என்பதைப் புரிந்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு நாளும் பிரபாவம் வெளிப்படுகிறது அல்லவா? இந்த தர்மத்தை ஸ்தாபனை செய்வது மிகவும் கடினம் ஆகும். அவர்கள் மேலிருந்து வந்து ஸ்தாபனை செய்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் மேலிருந்து வந்து போகிறார்கள். இங்கேயோ ஒவ்வொருவரையும் இராஜ்ய பாக்கியத்தைப் பெறுவதற்கு தகுதி அடைய வைக்க வேண்டியிருக்கிறது. தகுதி அடைய வைப்பது பாபாவின் வேலையாகும். யார் முக்தி, ஜீவன் முக்திக்குத் தகுதி உடையவராக இருந்தனரோ அனைவரையும் மாயா தகுதி அற்றவராக்கி விட்டது. 5 தத்துவங்கள் கூட தகுதி அற்றதாகி விட்டது. பிறகு தகுதி அடைய வைக்கக் கூடியவர் தந்தையாவார். இப்போது ஒவ்வொரு நொடியும் நீங்கள் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள். போன கல்பத்தில் கூட இன்னார் இவ்வாறு முயற்சி செய்தனர் என புரிந்துக் கொள்ளலாம். சிலர் வியக்கத் தக்க வகையில் ஓடிப் போகிறார்கள், விவாகரத்து செய்து விடுகிறார்கள். நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வினாசம் எதிரில் இருக்கிறது. நாடகப்படி அனைவரும் நடிக்க வேண்டும் என்பதைக் கூட புரிந்து கொள்கிறார்கள். மனிதன் விரும்புவது ஒன்று...... அவர்கள் அமைதி வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் விதியை அறிகிறீர்கள். உங்களுக்கு காட்சி கிடைத்திருக்கிறது. அவர்கள் எவ்வளவு தான் வினாசம் நடக்கக் கூடாது என தலையில் அடித்துக் கொண்டாலும் இந்த விதியை மாற்ற முடியாது. பூகம்பம், இயற்கையின் சீற்றங்கள் நடக்கும். அவர்கள் என்ன செய்ய முடியும்? இது கடவுளின் வேலை என்பார்கள். உங்களிலும் மிகச் சிலருக்கு போதை ஏறுகிறது. நினைவில் இருக்கிறார்கள். அனைவரும் பரிபூரணமாகவில்லை. உங்களுக்கு இந்த விதியை மாற்ற முடியாது எனத் தெரியும். உணவு இல்லை, மனிதர்களுக்கு இருப்பதற்கு இடம் இல்லை, மூன்றடி நிலம் கிடைக்கவில்லை.

 

தாய், தந்தை, குழந்தைகள் என இது உங்களுடைய ஈஸ்வரிய குடும்பம் ஆகும். நான் குழந்தைகளுக்கு முன்பு தான் பிரத்யக்ஷ்ம் (வெளிபடுதல்) ஆகிறேன். குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறேன் என பாபா கூறுகிறார். நாங்கள் பாபாவின் வழிப்படி நடக்கிறோம் எனக் குழந்தைகள் கூறுகிறார்கள். நான் குழந்தைகளின் எதிரில் வந்து வழி காண்பிக்கிறேன் என தந்தை கூறுகின்றார். குழந்தைகள் தான் புரிந்துக் கொள்வார்கள். புரிந்துக் கொள்ளவில்லை என்றால் விடுங்கள். சண்டை போட வேண்டிய அவசியம் இல்லை. நாம் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்கிறோம். என்னை நினைவு செய்தால் விகர்மங்கள் அழியும் என பாபா கூறுகின்றார். மேலும் சுய தரிசன சக்கரத்தை நினைத்தால் சக்கவர்த்தி இராஜா ஆகலாம். மன்மனாபவ! மத்யாஜீபவ என்பதன் பொருள் இதுவே ஆகும். பாபாவின் அறிமுகத்தைக் கொடுங்கள். இதன் மூலம் படைப்பவர் படைப்பின் இரகசியத்தை புரிந்துக் கொள்வார்கள். முக்கியமானது இது ஒரு விஷயமே ஆகும். கீதையில் முக்கியமாக இந்த தவறு ஒன்று தான். நான் கல்யாணகாரி தான் வந்து நன்மை செய்கிறேன் என பாபா கூறுகிறார். மற்ற சாஸ்திரங்களால் நன்மை ஏற்படுவதில்லை. பகவான் ஒருவரே. அவரை நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அறிந்து கொள்ள வில்லை என்பதை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். தந்தையை நினைக்க வேண்டும் என்றால் அறிமுகம் கூட வேண்டும் அல்லவா? அவர் எங்கே இருக்கின்றார்? வருகிறாரா இல்லையா? பாபா கண்டிப்பாக சொத்து இந்த உலகத்திற்காக கொடுப்பாரா? அந்த உலகத்திற்காக கொடுப்பாரா? பாபா எதிரில் வேண்டும். சிவராத்திரி கூட கொண்டாடுகிறார்கள். அனைத்து ஆத்மாக்களுக்கும் சிவனே சுப்ரீம் பாதர் ஆவார். அவர் படைப்பவர் புதிய ஞானத்தைக் கொடுக்கிறார். சிருஷ்டி சக்கரத்தின் முதல், இடை, கடையை அவர் அறிவார். அவரே உயர்ந்ததிலும் உயர்ந்த டீச்சர். அவர் மனிதர்களை தேவதையாக மாற்றுகிறார். இராஜயோகம் கற்பிக்கிறார். மனிதர்கள் ஒரு போதும் இராஜயோகம் கற்பிக்க முடியாது. நமக்கு அவர் தான் கற்றுக் கொடுத்தார். அப்போது தான் நாம் கற்பிக்கின்றோம். கீதையில் கூட ஆரம்பத்தில் மற்றும் முடிவில் மன்மனா பவ மற்றும் மத்யாஜீபவ என கூறப்பட்டிருக்கிறது. மரம் மற்றும் நாடகத்தின் ஞானம் கூட புத்தியில் இருக்கிறது. விளக்கமாகப் புரிய வைக்க வேண்டும். முடிவாக பாபா மற்றும் ஆஸ்தியை நினைக்க வேண்டும் என்ற ஒரு விஷயம் வருகிறது. இங்கே நாம் உலகத்திற்கு அதிபதியாகிறோம் என்ற ஒரு விஷயம் தான். உலகத்திற்கு நன்மை செய்பவர் தான் உலகத்திற்கு அதிபதியாக்குகிறார். சொர்க்கத்திற்குத் தான் அதிபதியாக்குவார். நரகத்திற்கு அதிபதியாக்குவதில்லை. நரகத்தைப் படைப்பவர் இராவணன். சொர்க்கத்தைப் படைப்பவர் தந்தை என உலகம் அறியவில்லை. மரணம் எதிரில் நிற்கிறது. அனைவருக்கும் வானபிரஸ்த நிலை. நான் இப்போது அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன் என பாபா கூறுகிறார். என்னை நினைத்தால் விகர்மங்கள் அழியும். ஆத்மா அழுக்கிலிருந்து சுத்தமாகும். பிறகு உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பி விடுவேன். இதை நிச்சய புத்தியோடு மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். கிளிப்பிள்ளையைப் போன்று அல்ல. நிச்சய புத்தி உடையவர்கள் அழுவதோ அல்லது தேக அபிமானத்தில் வருவதற்கோ எந்த விஷயமும் அல்ல. தேக அபிமானம் மிகவும் அழுக்காக மாற்றுகிறது. இப்போது நீங்கள் ஆத்ம அபிமானி ஆகுங்கள். சரீர நிர்வாகத்திற்காக காரியம் செய்யுங்கள். அவர்கள் கர்ம சன்னியாசி ஆகிறார்கள். இங்கே நீங்கள் இல்லறத்தில் இருக்க வேண்டும். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பாவையும், சக்கரத்தையும் அறிந்துக் கொள்ளுதல் மிகவும் எளிதாகும். பாபாவிற்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்! அதில் சிலர் நல்ல குழந்தைகளாகவும் சிலர் கெட்ட குழந்தைகளாகவும் இருக்கிறார்கள். பெயரை கெட்ட பெயராக்குகிறார்கள். முகத்தில் கரியைப் பூசுகிறார்கள். முகத்தில் கரியைப் பூசாதீர்கள் என பாபா கூறுகிறார். குழந்தையாகி முகத்தில் கரியைப் பூசினால் குலத்தை களங்கப்படுத்துபவர் ஆகிறீர்கள். இந்த காமச் சிதையினால் நீங்கள் கருப்பாகி இருக்கிறீர்கள். காமச் சிதையில் எரிந்து இறக்கக் கூடாது. சிறிதளவு போதை கூட வேண்டாம். சன்னியாசிகள் தன்னுடைய சீடர்களுக்கு இவ்வாறு கூற மாட்டார்கள். அவர்கள் உண்மையை அறியவில்லை. பாபா அனைவருக்கும் உண்மையான விஷயங்களைப் புரிய வைக்கிறார். என்னை நினையுங்கள் என பாபா கூறுகிறார். பாபா, உங்களுடைய வழிப்படி நடந்து நாங்கள் சொர்க்கவாசி ஆகிறோம் என நீங்கள் உத்தரவாதம் கொடுத்தீர்கள். குழந்தைகளே! விஷ சாக்கடையில் விழ வேண்டும் என்ற எண்ணம் ஏன் வருகிறது என பாபா கேட்கிறார். பெண் குழந்தைகளாகிய நீங்கள் இவ்வாறு முரளி வகுப்பை நடத்தினால், இது போன்ற ஞானத்தை நாங்கள் கேட்கவே இல்லை என கூறுவார்கள். கோவில் தலைவர்களைப் பிடிக்க வேண்டும். படங்களை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த திரிமூர்த்தி, மரம், மனதை கவர்ந்தவரின் படங்கள் ஆகும். மேலே தெய்வீக மரம் நிற்கிறது. தெய்வீக மரத்தில் நடந்து முடிந்தவைகளைக் காண்பிக்கிறார்கள். இவ்வாறு சேவை செய்து காட்டுங்கள். இவர்கள் அதிசயம் செய்திருக்கிறார்கள் என பாபா இரமேஷின் மகிமை செய்வது போல மகிமை செய்வார். படக் கண்காட்சி பறக்கும் மார்க்கத்தின் சேவையின் எடுத்துக்காட்டு நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. இங்கே கூட படக் கண்காட்சி வைக்கலாம். படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.

 

இப்போது டில்யில் ஆன்மீக மாநாடு நடக்கிறது பாருங்கள்! அவர்கள் கூட ஒன்றாக வேண்டும் எனக் கூறுகிறார்கள். அதற்கு அர்த்தமே இல்லை. தந்தை ஒருவர் தான். மற்ற அனைவரும் சகோதரன் சகோதரிகள். தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கக் கூடிய விஷயம் ஆகும். தங்களுக்குள் இணைந்து எப்படி பாலும் சர்க்கரையாக இருப்பது, இந்த விஷயங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும். படக் கண்காட்சியை விரிவுப்படுத்த யுக்திகளைக் கண்டுபிடிக்க வேண்டும். யார் சேவையின் நிரூபணம் காண்பிக்க வில்லையோ அவர்களுக்கு வெட்கம் வர வேண்டும். பத்து பேர் புதியதாக வந்தனர், 8-10 இறந்து போய்விட்டனர் என்றால் இதில் என்ன லாபம். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சரீர நிர்வாகத்திற்காக வேலைகள் செய்தாலும் ஆத்ம அபிமானியாக இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அழவோ தேக அபிமானத்திலோ வரக் கூடாது.

 

2. ஸ்ரீமத் படி தனக்கும் பிறருக்கும் நன்மை செய்ய வேண்டும். நல்ல குழந்தையாகி பாபாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டும்.

 

வரதானம்:

சீதளா (குளிர்ச்சியின்) தேவி ஆகி, அனைத்துக் கர்மேந்திரியங்களையும் குளிர்ந்ததாக, சாந்தமானதாக ஆக்கக் கூடிய சுயராஜ்ய அதிகாரி ஆகுக.

 

சுயராஜ்ய அதிகாரி குழந்தைகளை எந்த ஒரு கர்மேந்திரியமும் ஏமாற்ற முடியாது. ஏமாற்றம் தருகிற சஞ்சலத் தன்மை எப்போது முடிவுக்கு வருகிறதோ, அப்போது சுயம் சீதளாதேவி ஆகி விடுவீர்கள். மேலும் சர்வ கர்மேந்திரியங்களும் கூட குளிர்ந்து விடும். சீதளாதேவிக்கு ஒரு போதும் கோபம் வராது. அநேகர் சொல்கின்றனர் -- கோபம் இல்லை, கொஞ்சம் அதிகார தோரணை வைக்க வேண்டி உள்ளது ஆனால் அதிகார தோரணையும் கூட கோபத்தின் அம்சமாகும். ஆக, எங்கே அம்சம் உள்ளதோ, அங்கே வம்சம் உருவாகி விடும். ஆகவே சீதளாதேவி மற்றும் சீதள தேவன் நீங்கள். ஆகவே கனவிலும் கூட கோபம் அல்லது அதிகார தோரணையின் சம்ஸ்காரம் வெளிப்படக் கூடாது.

 

சுலோகன் :

கீழ்ப்படிதலான குழந்தைகள் தாமாகவே ஆசீர்வாதத்துக்கு உரியவர் ஆவார்கள். அவர்கள் ஆசீர்வாதத்தைக் கேட்டுப் பெறத் தேவை இருக்காது.

 

ஓம்சாந்தி