27.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நான் உங்களுக்கு மீண்டும் இராஜயோகம் கற்பித்து இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன். இந்த "மீண்டும்" என்ற வார்த்தையில் தான் முழு சக்கரம் அடங்கி உள்ளது.

 

கேள்வி:

தந்தையும் பிரபலமாக இருக்கிறார் என்றால் மாயை கூட பிரபலமாக இருக்கிறது. இருவருடைய பிரபலத் தன்மை என்ன?

 

பதில்:

தந்தை உங்களை பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்குகிறார். பாவனமாக ஆக்குவதில் தந்தை பிரபலமாக இருக்கிறார். எனவே தந்தைக்கு பதீத பாவனர் சர்வ சக்திவான் என்று கூறப்படுகிறது. மாயை பிறகு பதீதமாக ஆக்குவதில் பிரபலமாக உள்ளது. உண்மையான சம்பாத்தியத்தில் எப்பேர்ப்பட்ட கிரகச்சாரம் ஏற்பட்டு விடுகிறது என்றால் இலாபத்திற்குப் பதிலாக நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. விகாரங்களுக்குப் பின்னால் மாயை "சூடான தோசைக் கல்" போல புத்தியில் எதுவுமே தங்க விடாது ஆக்கி விடுகிறது. எனவே குழந்தைகளே! ஆத்ம உணர்வுடையவராக ஆவதற்கான முயற்சி செய்யுங்கள் என்று பாபா கூறுகிறார்.

 

பாடல்:

நாம் அந்த வழிகளில் நடக்க வேண்டி உள்ளது.. .. ..

 

ஓம் சாந்தி.

குழந்தைகளாகிய நீங்கள் எந்த வழிகளில் நடக்க வேண்டி உள்ளது? அவசியம் வழி கூறுபவர் இருக்க வேண்டும். மனிதர்கள் தவறான வழிப்படி நடக்கிறார்கள். அதனால் தான் துக்கமுடையவர்கள் ஆகிறார்கள். இப்பொழுது எவ்வளவு துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள்! ஏனெனில், அவரது வழிப்படி நடப்பதில்லை. எப்பொழுதிலிருந்து தவறான வழி கொடுக்கும் இராவண ராஜ்யம் ஆரம்பமாகியதோ அப்பொழுது முதல் எல்லோரும் தவறான வழிப்படி நடந்து கொண்டு வந்துள்ளார்கள். நீங்கள் இச்சமயத்தில் இராவணனின் வழிப்படி உள்ளீர்கள். அதனால் தான் ஒவ்வொருவருக்கும் இப்பேர்ப்பட்ட மோசமான நிலை ஆகி உள்ளது என்று தந்தை புரிய வைக்கிறார். எல்லோரும் தங்களை பதீதமானவர்கள் என்று கூறவும் செய்கிறார்கள். தேசபிதா காந்தியடிகள் கூட பதீத பாவனரே வாருங்கள், என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால் நாம் பதீதராக எப்படி ஆனோம் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. பாரதத்தில் இராம ராஜ்யம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் யார் உருவாக்குவார்கள். கீதையில் தந்தை எல்லா விஷயங்களையும் புரிய வைத்துள்ளார். ஆனால் கீதையின் பகவானின் பெயரையே தவறாக எழுதி விட்டுள்ளார்கள். நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். கிறிஸ்துவின் பைபிளில் போப்பினுடைய பெயரைப் போட்டு விட்டார்கள் என்றால் எவ்வளவு தவறாகிவிடும்! இதுவும் நாடகம் தான். தந்தை பெரியதிலும் பெரிய தவறைப் புரிய வைக்கிறார். இந்த முதல், இடை, கடை பற்றிய ஞானம் கீதையில் உள்ளது. நான் உங்களை மீண்டும் இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் எப்படி 84 பிறவிகள் எடுத்தீர்கள் என்பதை நீங்கள் அறியாமல் உள்ளீர்கள். நாங்கள் கூறுகிறோம். இது எந்த சாஸ்திரத்திலும் கிடையாது. சாஸ்திரங்களோ அனேகம் உள்ளன. வெவ்வேறு வழிகள் உள்ளன. கீதை என்றால் கீதை. யார் கீதையைப் பாடியுள்ளாரோ அவரே தான் ஆலோசனை அளித்துள்ளார். நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க மீண்டும் வந்துள்ளேன் என்று கூறுகிறார். உங்கள் மீது மாயையின் நிழல் படிந்துள்ளது. இப்பொழுது மீண்டும் நான் வந்துள்ளேன். ஹே பகவான், மீண்டும் கீதையைக் கூற வாருங்கள். அதாவது மீண்டும் கீதையின் ஞானத்தைக் கொடுங்கள் என்று கீதையிலும் கூறுகிறார்கள். அசுர படைப்பின் விநாசம் மற்றும் தெய்வீகப் படைப்பின் ஸ்தாபனை மீண்டும் ஆகிறது என்ற விஷயம் கீதையில் தான் உள்ளது. மீண்டும் என்று அவசியம் கூறுவோம். குருநானக் மீண்டும் தனது குறித்த நேரத்தில் வருவார். படங்களும் காண்பிக்கிறார்கள். கிருஷ்ணர் கூட மீண்டும் அதே மயில் கிரீடம் உடையவராக இருப்பார். எனவே இந்த எல்லா இரகசியங்களும் கீதையில் உள்ளன. ஆனால் பகவானை மாற்றி விட்டார்கள். கீதையை ஏற்றுக் கொள்வதில்லை என்று நாம் அவ்வாறு கூறுவதில்லை. ஆனால் அதில் மனிதர்கள் தவறான பெயரைப் போட்டு விட்டுள்ளார்கள். அதை தந்தை வந்து சரியாக ஆக்கிப் புரிய வைக்கிறார். ஒவ்வொரு ஆத்மாவிலும் அதனதன் பார்ட் (பாகம்) பொருந்தி உள்ளது. எல்லோரும் ஒன்று போல இருக்க முடியாது. எப்படி மனிதர் என்றால் மனிதர், அதே போல ஆத்மா என்றால் ஆத்மா. ஆனால் ஒவ்வொரு ஆத்மாவிலும் தனது பார்ட் நிரம்பி உள்ளது. இந்த விஷயங்களைப் புரிய வைப்பவர் மிகவும் புத்திவானாக இருக்க வேண்டும். யார் புரிய வைக்க முடியும், யார் சேவை செய்வதில் அறிவாளி? யாருடைய ("லைன் கிளியர்") புத்தியின் பாதை தெளிவாக உள்ளது என்பதை தந்தை அறிவார். ஆத்ம அபிமானியாக இருக்கிறார்களா? அனைவருமே பரிபூர்ணமானவர்களாக தேஹீ அபிமானியாக (ஆத்ம உணர்வு) ஆகவில்லை. இதுவோ கடைசியில் ரிஸல்ட் வரும். தேர்விற்கான நாட்கள் நெருங்கும் பொழுது யார் யார் தேர்ச்சி அடைவார்கள் என்பது தெரிய வந்து விடுகிறது. இவர் எல்லோரையும் விட கூர்மையானவராக உள்ளார் என்பதை ஆசிரியர்களும் தெரிந்து கொள்ள முடியும் மற்றும் குழந்தைகளும் அறிந்திருப்பார்கள். அங்கோ ஏமாற்றுதல் போன்றவை கூட நடக்கக் கூடும். இங்கோ இந்த விஷயங்கள் இருக்க முடியாது. இதுவோ நாடகத்தில் பொருந்தி உள்ளது. முந்தைய கல்பத்தினர் தான் வெளிப்படுவார்கள். சேவையின் வேகத்தின் மூலமாக நமக்குத் தெரிந்து விடுகிறது. இந்த உண்மையான சம்பாத்தியத்தில் நஷ்டம், இலாபம் மற்றும் கிரகச்சாரம் ஆகியவை வருகிறது. போகப் போக "கால் உடைந்து" போகிறது. கந்தர்வ விவாகம் செய்த பிறகு மாயை முற்றிலுமாக "சூடான தோசைக் கல்" போல ஆக்கி விடுகிறது. மாயையும் மிகவும் பிரபலமாக உள்ளது. பாபா பாவனமாக ஆக்குவதில் பிரபலமாக உள்ளார். எனவே அவருக்கு சர்வசக்திவான் பதீத பாவனர் என்று கூறப்படுகிறது மற்றும் மாயை பின் பதீதமாக ஆக்குவதில் பிரபலமாக உள்ளது. சத்யுகத்திலோ மாயை இருப்பதில்லை. அது இருப்பதே நிர்விகாரி உலகமாக. இப்பொழுது இருப்பது முற்றிலும் விகாரி உலகம். எவ்வளவு பலத்த பிரபலத்தன்மை உள்ளது. போகப் போக மாயை ஒரேடியாக மூக்கால் பிடித்து "தோசைக்கல்" போல ஆக்கி விடுகிறது. கை விடுமாறு செய்து விடுகிறது. அந்த அளவு பிரபலமாக உள்ளது. சர்வ சக்திவான் என்று பரமபிதா பரமாத்மாவிற்குக் கூறுகிறார்கள் என்றாலும் கூட மாயை கூட குறைவானது அல்ல. அரைக் கல்பம் அதனுடைய இராஜ்யம் நடக்கிறது. இதை யாராவது அறிந்துள்ளார்களா என்ன? பகல் மற்றும் இரவு பாதிப் பாதி இருக்கும். பிரம்மாவின் பகல் பிரம்மாவின் இரவு. பிறகும் சத்யுகத்திற்கு லட்சக்கணக்கான வருடங்கள் கலியுகத் திற்கு எத்தனையோ வருடங்கள் கூறிவிடுகிறார்கள். இப்பொழுது தந்தை புரிய வைக்கும் பொழுது புரிய வருகிறது. இதுவோ முற்றிலும் சரி என்று. தந்தை வந்து படிப்பிக்கிறார். கலியுகத்தில் மனிதர்கள் கீதையின் இராஜயோகத்தைக் கற்பித்து இராஜாக்களுக்கு இராஜாவாக ஆக்குவார்களா என்ன? இது போல நாம் இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டு இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆகி விடுவோம் என்பது புத்தியில் இருக்கும் வகையில் யாருமே இல்லை. அந்த கீதா பாடசாலைகளோ அநேகம் உள்ளது. ஆனால் யாருமே இராஜயோகம் கற்றுக் கொண்டு இராஜாக்களுக்கு இராஜா அல்லது இராணி ஆக முடியாது. இராஜ்யத்தை அடைவதற்கான எந்த இலட்சியமும் கிடையாது. இங்கோ நாங்கள் எல்லையில்லாத தந்தையிடமிருந்து வருங்கால சுகத்தின் இராஜ்யத்தை அடைவதற்காகப் படிக்கிறோம் என்று கூறுகிறீர்கள். முதன் முதலோ தந்தை பற்றி புரிய வைக்க வேண்டும். எல்லாமே கீதையைத் தான் பொருத்துள்ளது. சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது. நாம் எங்கிருந்து வந்தோம் பிறகு எங்கே செல்ல வேண்டும் என்பது மனிதர்களுக்கு எப்படித் தெரிய வரும்? யாருக்குமே தெரியாது. எந்த தேசத்திலிருந்து வந்தோம் எந்த தேசத்திற்குச் செல்ல வேண்டும் - பாடல் கூட உள்ளது அல்லவா? கிளிப்பிள்ளை போல பாடிக் கொண்டு மட்டும் இருக்கிறார்கள். நாம் யாருக்கு ஹே பரமபிதா பரமாத்மா! என்று கூறுகிறோம்? அவர் யார்? என்பதை ஆத்மாவில் இருக்கும் புத்தி அறியாமல் இருக்கிறது. ஆத்மாவைப் பார்க்கவும் முடியாதவர்களாக அறியவும் முடியாதவர்களாக இருக்கிறார்கள். தந்தையை அறிவது, பார்ப்பது என்பது ஆத்மா வினுடைய கடமை ஆகும் அல்லவா? இப்பொழுது நாம் ஆத்மாக்கள் ஆவோம், பரமபிதா பரமாத்மா தந்தை நமக்கு படிப்பிக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். தந்தை வந்து படிப்பிக்கிறார் என்று புத்தி கூறுகிறது. எப்படி ஒருவருடைய ஆத்மாவை அழைக்கிறார்கள்!  அப்பொழுது அவரது ஆத்மா வந்துள்ளது என்று புரிந்துள்ளார்கள். எனவே நாம் ஆத்மா ஆவோம், அவர் நமது தந்தை ஆவார் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். தந்தையிடமிருந்து அவசியம் ஆஸ்தி கிடைக்க வேண்டி உள்ளது. நாம் ஏன் துக்க மடைந்துள்ளோம்? மனிதர்களோ தந்தை தான் சுகம் துக்கம் அளிப்பவர் ஆவார் என்று கூறி விடுகிறார்கள். பகவானை நிந்தனை செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அசுர குழந்தைகள் ஆவார்கள். எப்படி முந்தைய கல்பத்தில் கூறினாரோ அவ்வாறே கூறுகிறார். இப்பொழுது நீங்கள் பிராக்டிகல் ஈசுவரிய குழந்தைகளாக ஆகியுள்ளீர்கள். இதற்கு முன்பு நீங்கள் அசுர குழந்தைகளாக இருந்தீர்கள். இப்பொழுது நிரந்தரமாக என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். எவரொருவருக்கும் இந்த இரண்டு வார்த்தைகள் புரிய வைப்பது மிகவும் சுலபமாகும். நீங்கள் பகவானின் குழந்தைகள் ஆவீர்கள். பகவான் சொர்க்கத்தைப் படைத்தார். இப்பொழுது நரகமாக ஆகி உள்ளது. பிறகு சொர்க்கத்தை தந்தைதான் படைப்பார். தந்தை நமக்கு இராஜயோகம் கற்பித்து கொண்டிருக்கிறார். சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். நல்லது, சிவனை அறியாமல் இருக்கிறீர்களா? பிரஜா பிதா பிரம்மாவைக் கூட படைப்பவர் அந்த தந்தை ஆவார். எனவே அவசியம் தந்தை பிரம்மா மூலமாகத் தான் கற்பிப்பார். இப்பொழுது சூத்திர வர்ணம் ஆகும். நாம் பிராமணரிலிருந்து தேவதை- க்ஷத்திரியர் ஆகி விடுவோம். இல்லையென்றால் ஏன் விராட ரூபம் அமைத்துள்ளார்கள்? படம் சரியானது ஆகும். ஆனால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளார்கள்.

 

சூத்திரர்களை யார் பிராமணர்களாக ஆக்குவார்கள்? அவசியம் பிரஜாபிதா பிரம்மா வேண்டும். அவரை எப்படி சுவீகாரம் செய்தார்? எப்படி நீங்கள் இவர் என்னுடைய மனைவி என்று கூறுகிறீர்கள். அவரை என்னுடையவள் என்று எப்படி ஆக்கினீர்கள். சுவீகாரம் செய்தீர்கள். என்னையும் தாயுமானவர் தந்தையுமானவர் என்று கூறுகிறீர்கள் என்று தந்தை கூறுகிறார். நான் தந்தையாகவோ இருக்கிறேன். என்னுடையவளை எங்கிருந்து கூட்டி வருவது? எனவே இவருக்குள் பிரவேசம் செய்து இவருடைய பெயரை பிரம்மா என்று வைக்கிறேன். மனைவியாக ஏற்றுக் கொள்ளப் படுகிறார். எப்படி லௌகீக தந்தை மனைவியை சுவீகாரம் செய்து வம்சாவளியைப் படைக்கிறார். அது போன்று பாபா பிறகு இவருக்குள் பிரவேசம் செய்து இவரை சுவீகாரம் செய்து இவர் வாய் மூலமாக முக வம்சாவளியை ஏற்படுத்தியுள்ளார். நாங்கள் பிராமணர்கள் பிராமணிகள் ஆவோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அவசியம் இவருடைய பெயர் தான் பிரம்மா என்பதாகும். பிரம்மா யாருடைய குழந்தை? சிவபாபாவினுடைய குழந்தை ஆவார். இவரை யார் தத்து எடுத்தார்? எல்லையில்லாத தந்தை தத்து எடுத்தார். உதாரணம் மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் எவரொருவருடைய புத்தியில் பதிந்து இருக்குமோ அவர்கள் தான் புரிய வைக்க முடியும். புத்தியில் இல்லை என்றால் அவர்களுக்கு புரிய வைக்கவே வராது. லௌகீக மற்றும் பரலோக தந்தையோ இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் கூட மனைவியைத் தத்து எடுத்து என்னுடையவர் என்று கூறுகிறார்கள். இவர் பிறகு இவருக்குள் பிரவேசம் செய்து தத்து எடுக்கிறார். நிராகாரமான வராகிய நான் இவரை ஆதாரம் எடுக்க வேண்டி வருகிறது என்று சுயம் அவரே கூறுகிறார். எனவே பெயரைக் கூட மாற்றுகிறேன். ஒரே நேரத்தில் எத்தனை பேருக்கு பெயர்கள் வைத்தார். பெயர்களின் பட்டியல் கூட உங்களிடம் இருக்க வேண்டும். கண்காட்சியில் பெயர்களின் பட்டியல் கூட காண்பிக்க வேண்டும். பாபா எப்படி ஒரே நேரத்தில் பெயர்கள் வைத்தார்? பாபா நம்மை அவருடையவராக ஆக்கினார். எனவே பெயரை மாற்றினார். அவரை பிருகு ரிஷி என்று கூறுகிறார்கள். ஜாதகமோ பகவானிடம் தான் உள்ளது. அதிசயமான பெயர்கள் ஆகும். இப்பொழுது எல்லோருமோ இல்லை. ஒரு சிலரோ ஆச்சரியப்படும் வகையில் ஓடிப் போனவர்கள் ஆகிவிட்டார்கள். இன்று இருக்கிறார்கள். நாளைக்கு இல்லை. காமம் முதல் நம்பர் எதிரி ஆகும். இந்த காம விகாரம் மிகவும் தொல்லைப் படுத்துகிறது. அதன் மீது வெற்றி அடைய வேண்டும். இல்லற விவகாரங்களில் சேர்ந்து இருந்தபடியே அதன் மீது வெற்றி அடைய வேண்டும் - இது உங்களது வாக்குறுதி ஆகும். நமது உள்ளுணர்வைப் பார்க்க வேண்டும். கர்ம இந்திரியங்கள் மூலமாக விகர்மங்கள் செய்ய கூடாது. புயல்களோ எல்லோருக்கும் வருகிறது. இதில் பயப்படக் கூடாது.

 

பாபாவிடம் நிறைய குழந்தைகள் இந்தத் தொழிலை செய்யலாமா வேண்டாமா என்று கேட்கிறார்கள். நான் உங்களுடைய தொழில் ஆகியவற்றைப் பார்க்க வந்துள்ளேனா என்ன? என்று பாபா எழுதுகிறார். நானோ படிப்பிப்பதற்கான ஆசிரியர் ஆவேன். தொழில் ஆகியவற்றின் விஷயங்களை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நானோ இராஜயோகம் கற்பிக்கிறேன். ருத்ர யக்ஞம் என்றும் பாடப்பட்டுள்ளது. கிருஷ்ண யக்ஞம் அல்ல. இலட்சுமி நாராயணரிடம் இந்த சிருஷ்டி சக்கரத்தின் ஞானமே இல்லை என்று தந்தை கூறுகிறார். ஒரு வேளை அங்கு நாம் 16 கலையிலிருந்து 14 கலையினராக ஆக வேண்டி இருக்கும் என்று தெரிந்திருந்தால் அதே நேரத்திலேயே இராஜ்யத்தின் போதை இல்லாமல் போய் விடும். அங்கு இருப்பதே சத்கதியின் நிலை. சத்கதி தாதாவோ ஒரே ஒருவர் ஆவார். அவரே வந்து யுக்தி கூறுகிறார். வேறு யாரும் கூற முடியாது. காமம் மகா எதிரி ஆகும் என்று யார் கூறினார் என்று முதன் முதலில் இந்த விஷயத்தை எடுங்கள். விகாரி உலகம் மற்றும் நிர்விகாரி உலகம் என்றும் பாடுகிறார்கள். பாரதத்தில் தான் இராவணனை எரித்துக் கொண்டு இருக்கிறார்கள். சத்யுகத்தில் எரிப்பார்களா என்ன? ஒரு வேளை இராவணன் அனாதியாக இருக்கிறான், சத்யுகத்திலும் இருக்கிறான் என்று கூறுகிறார்கள் என்றால் பிறகோ எல்லா இடங்களிலும் துக்கமே துக்கம் இருக்கும். பிறகு சொர்க்கம் என்று எப்படிக் கூறலாம்? இந்த விஷயங்களைப் புரிய வைக்க வேண்டும். ஒவ்வொருவருடைய வேகம் தனித் தனி ஆகும். யார் நல்ல வேகம் உடையவர் என்று தெரிய வந்து விடுகிறது. யாருமே சம்பூர்ணமாகவோ ஆகவில்லை. மற்றபடி ஆம், சதோ, ரஜோ, தமோ என்று இருக்கவே இருக்கிறார்கள். புத்தி ஒவ்வொரு வருடையதும் தனித்தனி ஆகும். யார் ஸ்ரீமத்படி நடப்பதில்லையோ அவர்கள் தமோ பிரதான புத்தி உடையவர்கள் ஆவார்கள். தங்களை இன்ஷ்யூர் செய்யவில்லை என்றால் வருங்கால 21 பிறவிகளுக்கு எப்படிக் கிடைக்கும்? சாகத்தான் வேண்டும். பின் ஏன் இன்ஷ்யூர் செய்யக் கூடாது? எல்லாமே அவருடையது ஆகும். எனவே பராமரிப்பும் அவர் தான் செய்வார். ஒருவர் எல்லாமே கொடுத்து விடுகிறார். ஆனால் சேவை செய்வது இல்லை என்றால் என்ன கொடுத்தாரோ அதை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். மற்றபடி சேமிப்பு என்ன ஆகும்? ஒன்றுமே இல்லை. சேவையினுடைய நிரூபணம் வேண்டும். யார் வழி காட்டி ஆகி வருகிறார்கள் என்பது பார்க்கப்படுகிறது. புதிய பி.கேக்கள் கூட தங்களுக்குள் சென்டர் நடத்துகிறார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள் அளிக்கப்படுகிறது. இந்த ஞானமோ மிகவும் சகஜமானது ஆகும். வானப் பிரஸ்த நிலை எப்பொழுது ஆகிறது என்பதை வானப் பிரஸ்த நிலையிலிருப்பவர்களுக்கும் போய் புரிய வையுங்கள். தந்தை தான் வழி காட்டி ஆகி அனைவரையும் அழைத்துச் செல்வார். தந்தை தான் காலனுக்கெல்லாம் காலன் ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாமோ குஷியுடன் பாபா கூடவே ஒன்றாகச் செல்ல விரும்புகிறோம்.

 

கீதையின் பகவான் யார், யார் படைப்பைப் படைத்தார் என்ற முக்கியமான விஷயத்தை முதன் முதலில் எடுங்கள். இலட்சுமி நாராயணருக்கு யார் இராஜயோகத்தைக் கற்பித்தார்? அவருடையதும் இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. வேறு யாரும் இராஜதானி ஸ்தாபனை செய்ய வருவதில்லை. தந்தை தான் இராஜதானி ஸ்தாபனை செய்ய வருகிறார். எல்லா பதீதர்களையும் பாவனமாக ஆக்குகிறார். இது விகாரி உலகம் ஆகும். அது நிர்விகாரி உலகம் ஆகும். இரண்டிலும் வரிசைக்கிரமமான பதவிகள் உள்ளன. யார் ஸ்ரீமத்படி நடக்கக் கூடியவர்களாக இருப்பார்களோ அவர்களுடைய புத்தியில் தான் இந்த விஷயங்கள் பதிய முடியும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. புத்தியின் பாதை சதா தெளிவாக இருக்க வேண்டும் என்றால் தேஹீ அபிமானியாக (ஆத்ம உணர்வுடையவராக) ஆகி இருக்க வேண்டும். உண்மையான சம்பாத்தியத்தில் மாயை எந்த விதமான நஷ்டமும் ஏற்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

2. கர்ம இந்திரியங்களால் எந்த ஒரு விகர்மமும் செய்யக் கூடாது. இன்ஷ்யூர் செய்த பிறகு சேவை கூட அவசியம் செய்ய வேண்டும்.

 

வரதானம்:

யோகத்தின் வெப்பத்தில் கண்ணீர் தொட்டியை காய வைத்து அழுகையை வராமல் தடுக்கக் கூடிய சுக சொரூபம் ஆகுக.

 

இன்னார் துக்கம் கொடுத்தார், அதனால் அழுகை வருகிறது என பல குழந்தைகள் சொல்கின்றனர். ஆனால் அவர்கள் கொடுத்தார்கள் என்றால் நீங்கள் ஏன் எடுக்கிறீர்கள்? அவர்களுடைய வேலை கொடுப்பது, நீங்கள் எடுக்கவே வேண்டாம். பரமாத்மாவின் குழந்தைகள் ஒரு போதும் அழக் கூடாது. அழுகைக்கு முடிவு கட்டுங்கள். கண்களின் அழுகையும் இருக்கக் கூடாது, மனதின் அழுகையும் இருக்கக் கூடாது. குஷி இருக்கும் இடத்தில் அழுகை இருக்காது. குஷி மற்றும் அன்பின் கண்ணீர் அழுகை என சொல்லப் படுவதில்லை. ஆக, யோகத்தின் வெப்பத்தில் கண்ணீரின் தொட்டியை காய வைத்து, தடைகளை விளையாட்டாக புரிந்து கொண்டீர்கள் என்றால் சுக சொரூபமாக ஆகி விடுவீர்கள்.

 

சுலோகன்:

சாட்சியாகி இருந்து நடிப்பை நடிக்கும் பயிற்சி இருந்தது எனில் மன அழுத்தத்திலிருந்து (டென்ஷனிலிருந்து) விடுபட்டு தானாகவே கவனத்துடன் (அட்டென்ஷன்) இருப்பீர்கள்.

 

ஓம்சாந்தி