17.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இந்த படிப்பு மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்கானதாகும், இந்த படிப்பில் சிறிதளவும் கூட கவனக்குறைவு இருக்கக் கூடாது, உறங்கினீர்கள், சாப்பிட்டீர்கள், படிப்பை படிக்கவில்லை என்றால் நிறைய பச்சாதாபப் பட வேண்டியிருக்கும்

 

கேள்வி :

எந்த விசயத்தில் பிரம்மா பாபாவை பின்பற்றினால் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்?

 

பதில்:

எப்படி பிரம்மா பாபா தன்னுடைய அனைத்தையும் பலி செய்தார் அதாவது அனைத்தையும் சமர்ப்பணம் செய்தார், அதுபோல் தந்தையைப் பின்பற்றுங்கள். முன்னேற்றத்திற்கான சாதனம் - பாபாவினால் படைக்கப்பட்டுள்ள இந்த ருத்ர ஞான யக்ஞத்தில் தங்களை பலியாக கொடுக்க வேண்டும் அதாவது பாபாவிற்கு உதவியாளர்களாக ஆக வேண்டும். ஆனால் நான் இவ்வளவு உதவி செய்தேன், இவ்வளவு கொடுத்தேன் என்ற எண்ணம் கூட ஒருபோதும் வரக்கூடாது. பாபா வள்ளலாக இருக்கின்றார், அவரிடமிருந்து நீங்கள் எடுக்கின்றீர்கள், கொடுப்பதில்லை.

 

பாடல்:

நீங்கள் இரவெல்லாம் உறங்கி கழித்தீர்கள்.....................

 

ஓம் சாந்தி.

குழந்தைகள் பாட்டை கேட்டீர்கள். இதைப்பற்றியும் குழந்தைகள் புரிய வைக்க வேண்டும், நான் குழந்தைகளிடம் பேசுகின்றேன் என்று பாபா கூறுகின்றார், இப்படி வேறு யாரும் சொல்ல முடியாது. சாதுக்கள் சன்னியாசிகள் மகாத்மாக்கள் நிறைய இருக்கிறார்கள். சிலர் இவருக்குள் சக்தி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இவர் (சிவபாபா) அனைவருக்கும் தந்தையாவார், அவர் அமர்ந்து புரிய வைக்கின்றார். நிறைய குழந்தைகள் முழு நாளும் சாப்பிட்டுக் கொண்டும், குடித்துக் கொண்டும் மற்றும் உறங்கிக் கொண்டும் இருகிறார்கள், அதிகமாக உறங்குகிறார்கள். இதன் மூலம் என்ன நடக்கும்? வைரம் போன்ற வாழ்க்கையை இழந்து விடுவார்கள். மாயை நிறைய தவறுகளை செய்ய வைக்கிறது. மாயை கும்பகர்ண உறக்கத்தில் உறங்க வைத்து விட்டது. இப்போது விழிக்கச் செய்பவர் வந்துள்ளார், அஞ்ஞான உறக்கத்திலிருந்து விழியுங்கள். முழு உலகத்திலும் அதிலும் குறிப்பாக பாரதத்தில் அஞ்ஞானமே அஞ்ஞானம் தான் உள்ளது. எனவே பாபா கூறுகின்றார், இப்போது அலட்சியம் செய்தீர்கள் என்றால் அதிகம் பச்சாதாபப் பட வேண்டியிருக்கும். பின்னர் பச்சாதாபப்படுவதின் மூலம் எந்த காரியமும் நடக்காது. இது மனிதனிலிருந்து தேவதையாவதற்கான படிப்பாகும். இப்படி வேறு யாரும் சொல்ல முடியாது. இங்கேயும் அதே ஞானம் தான் என்பது கிடையாது. இந்த படிப்பே புதியதாகும். ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நடக்கிறது. இங்கேயும் கூட நிறைய பேரை தேவி என்று சொல்கிறார்கள். பெண் தேவி என்றால் ஆண் தேவதை ஆகி விடுகிறார்கள் அல்லவா! ஆனால் நாம் சத்யுகத்தில் தேவி-தேவதை பதவி அடைவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், அப்படியென்றால் சத்யுகத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் தான் அந்த பதவியை அடையவைப்பார். அனைத்து சத்சங்களிலிருந்தும் இந்த விசயம் தனிப்பட்டதாகும். யார் ஈஸ்வரனை சர்வவியாபி என்று சொல்கிறார்களோ மற்றும் அனேக அவதாரங்களைச் சொல்கிறார்களோ, அவர்களிடம் கேளுங்கள் ஈஸ்வரன் சர்வவியாபியாக இருந்தால் அவதாரம் என்று சொல்லக் கூடியவர்களும் கண்டிப்பாக ஈஸ்வரனுடைய அவதாரங்களாகத் தான் இருப்பார்கள். நல்லது, படைப்பின் முதல்-இடை-கடைசியின் இரகசியத்தைச் சொல்லுங்கள் என்று கேளுங்கள். அப்போது ஒன்றும் சொல்ல முடியாது. வித-விதமானவர்கள் இருக்கிறார்கள். ரித்தி-சித்திக்காரர்களும் இருக்கிறார்கள். புதிய ஆத்மாக்கள் வருகின்றன எனும்போது அதுவும் அதன் சக்தியைக் காட்டுகிறது. தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்கு புதிய ஆத்மா பிரவேசம் ஆகிறது எனும்போது அதனுடைய புகழ் பரவுகிறது. இது சக்தியினுடைய விசயம் கிடையாது. சிவபாபா நாங்கள் தங்களிடமிருந்து ஆஸ்தியை அடைய வந்துள்ளோம் என்று நீங்கள் சொல்வீர்கள். இதைத் தான் ஈஸ்வரிய பிறப்புரிமை என்று சொல்லப்படுகிறது. நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகளாவீர்கள். எந்தவொரு சாது, சன்னியாசி, மகாத்மாவும் நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்று சொல்ல முடியாது.

 

நாம் சொர்க்கத்தின் ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். முழுமையான ஆஸ்தியை அடைய வேண்டும் என்றால் பாபாவின் நினைவில் இருங்கள் என்று பாபா கூறுகின்றார். பாபா இங்கே தான் கற்றுத்தருகின்றார். இராஜ்யம் ஸ்தாபனை ஆகி விட்டது என்றால் இந்த படிப்பு மற்றும் அதை கற்பிக்கக் கூடியவர் மறைந்து விடுகிறார்கள். இந்த பிராமண குலம் இப்போது தான் இருக்கிறது. நாங்கள் பிரம்மாவின் குழந்தைகள் என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் பிரம்மா எப்போது வந்தார்? பிரம்மா சங்கமயுகத்தில் வருவார் அல்லவா. பிரஜாபிதா பிரம்மா எந்த பிராமணர்களை படைக்கிறாரோ, அவர்கள் தேவி-தேவதைகளாக ஆகி விடுகிறார்கள் பிறகு பிராமணர்கள் இருப்பதே இல்லை. பிறகு நாம் தேவதா குலத்திற்குச் சென்று விடுவோம். பிறகு கர்மகாரியம் செய்வதற்காக இருக்கக் கூடிய பூஜாரி பிராமணர்களை யாராவது ரிஷி - முனிவர்கள் போன்றோர் ஆரம்பித்திருப்பார்கள். துவாபர யுகத்தில் சிவன் போன்றவர்களின் கோயில்களை உருவாக்கி பூஜையை ஆரம்பிக்கிறார்கள் எனும்போது யார் பூஜிக்கத்தக்க தேவி-தேவதைகளாக இருந்தார்களோ, அவர்கள் பூஜாரிகளாக ஆகி விடுகிறார்கள். அந்த சமயத்தில் கோவில்களில் பிராமணர்கள் வேண்டும். எனவே அந்த சமயத்திலிருந்து ஆரம்பித்து இருப்பார்கள், பூஜிக்கத்தக்கவர்களிலிருந்து பூஜாரியாக ஆனவர்களை பிராமணர்கள் என்று சொல்ல முடியாது. கோவில்களில் மூர்த்திக்கு முன்னால் கண்டிப்பாக பிராமணன் இருப்பார். எனவே அந்த சமயத்தில் அந்த பிராமணர்களும் வந்திருப்பார்கள். இது விரிவான விசயங்களாகும். உண்மையில் இதனுடன் ஞானத்தின் சம்மந்தம் எதுவும் கிடையாது. மன்மனாபவ என்று மட்டும் தான் ஞானம் சொல்கிறது. சிவபாபா மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்லப்படுகிறது, வெறுமனே நினைவு செய்வதின் மூலம் அனைவரும் லஷ்மி - நாராயணனாக ஆகி விடுவார்களா? கிடையாது. பிறகு படிப்பும் இருக்கிறது. எந்தளவிற்கு அதிகமாக சேவை செய்வீர்களோ அந்தளவிற்கு உயர்ந்த பதவியை அடைவீர்கள், அந்தளவிற்கு (வாயில் தங்க கரண்டி இருக்கும்). அனைத்தும் நிறைவான குடும்பத்தில் பிறவி எடுப்பர் 21 பிறவிக்கான பலன். புதிய உலகம் உருவாவதில், மாற்றங்கள் ஆவதற்கு நேரம் பிடிக்கிறது அல்லவா. வினாசத்திற்குப் பிறகு ஸ்தாபனை ஆகும். கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் உருவாகும். பூகம்பங்கள் போன்றவை நடந்து கொண்டிருக்கிறது ஆனால் அனேக தர்மங்களின் வினாசம் நடக்க வேண்டும். நாடகம் முடிகிறது. இப்போது நாம் பாபாவிடம் சென்று பிறகு புதிய உலகத்தில் வருவோம். இந்த சமயத்தில் நாம் இந்த யக்ஞத்தின் பிராமணர்களாக இருக்கிறோம். சிவபாபா 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் போலவே ருத்ர யக்ஞத்தைப் படைத்திருக்கிறார். இது பெரியதிலும் பெரிய யக்ஞமாகும். இந்த யக்ஞத்தை உண்மையிலும் உண்மையான பிராமணர்களாகிய நீங்கள் பாதுகாக்கின்றீர்கள். அந்த பிராமணர்கள் பொருட்களின் யக்ஞத்தை படைக்கிறார்கள். ஆபத்துக்கள் ஏதாவது வரப்போகிறது எனும்போது யக்ஞத்தை படைக்கிறார்கள். சத்யுகத்தில் குரு போன்றவர்களின் அவசியம் இருக்க வில்லை. குரு எங்கே இருப்பார் என்றால் எங்கே சத்கதிக்கு அவசியம் இருக்கிறதோ அங்கே இருப்பார்கள். இப்போது இங்கே கணக்கற்ற குருமார்கள் இருக்கிறார்கள். இவ்வளவு வேத-சாஸ்திரங்கள் போன்றவை இருந்தாலும் கூட பாரதத்திற்கு இப்படிப்பட்ட நிலை ஏன் ஏற்பட்டது?

 

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்போலவே மனிதர்கள் அனைவரும் கும்பகர்ண ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் எழுதலாம். அனைவரும் உறங்குகிறார்கள், ஆனால் இது அஞ்ஞான உறக்கத்தின் விசயமாகும். சத்கதியை அளிக்கக் கூடிய குரு யாருமே இல்லை. இப்போது பிரகாசிக்க வைக்கக் கூடியவர் யார்? பரமபிதா பரமாத்மாவை தவிர வேறு யாரும் (விடியலை) வெளிச்சத்தை கொண்டுவர முடியாது என்று குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. இப்போது நிறைய குருமார்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் கூட இருள் சூழ்ந்த இரவு, துக்கம் ஏன்? சத்யுகத்தில் அளவுகடந்த சுகம் இருந்தது. இப்போது பகவானுடைய ஸ்ரீமத் கிடைத்தால் தான் சுகம் ஏற்படும். இராவணன் தான் பாரதத்தை தூய்மையற்ற-துக்கமுடையதாக மாற்றினான். இந்த காமம் என்ற மிகப்பெரிய எதிரியை வெல்லுங்கள் என்று பாபா கூறுகின்றார். தூய்மையின் சத்தியம் செய்யுங்கள் அப்போது தான் புதிய உலகத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள். தூய்மையாக ஆகுங்கள் என்று குருமார்கள் ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். இப்போது நீங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளீர்கள் எனும்போது, அந்தளவிற்கு சுகமுடையதாக இருந்த பாரதம், இப்போது இந்தளவிற்கு துக்கமுடையதாக ஏன் இருக்கிறது என்று நீங்கள் சென்று கேளுங்கள்? நாம் தான் தேவதைகளாக ஆகின்றோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சன்னியாசிகள் உடனே வீடு வாசலை விட்டு விட்டு சென்று விடுகிறார்கள். சன்னியாசிகள் தூய்மையாக இருக்கிறார்கள் என்று அவர்களைப் பற்றி சொல்கிறார்கள். நாங்கள் தூய்மையாக இருப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சொல்ல மாட்டார்கள். உங்களுடைய விசயமே தனிப்பட்டதாகும். சன்னியாசிகள் அனைவரும் தூய்மையாக இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளாதீர்கள். எதுவரை மனோ நிலை உறுதியாகவில்லையோ அதுவரை புத்தியோகம் நண்பர்கள்-உறவினர்களிடத்தில் சென்று கொண்டிருக்கிறது. தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களை மறந்து விடுங்கள் என்று உங்களுக்கு சொல்லப்படுகிறது எனும்போது எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது. நீங்கள் எப்போது சன்னியாசம் செய்தீர்கள்? லௌகீக பெயர் என்ன? என்று அவர்களிடம் கேட்டீர்கள் என்றால், கேட்கவே கேட்காதீர்கள் என்று சொல்வார்கள். ஏன் நினைவூட்டுகிறீர்கள் என்பார்கள். சிலர் சொல்லவும் செய்வார்கள் பிறகு நீங்கள் உடனே அனைவரையும் மறந்து விட்டீர்களா அல்லது நினைவு வருகிறதா என்று கேளுங்கள்? நீங்கள் யாராக இருந்தீர்கள் என்பது தெரியும் அல்லவா, எப்படி மறந்துவிட்டீர்கள், தனியாக இருந்தீர்களா அல்லது குழந்தை குட்டிகள் இருந்ததா? மீண்டும் அவர்கள் உங்களுடைய நினைவுக்கு வருகிறார்களா? ஆமாம், நிறைய தடவை நினைவுக்கு வந்தார்கள், கஷ்டப்பட்டு தான் நினைவு விடுபடுகிறது என்று கூறுகிறார்கள். தங்களுடைய வாழ்க்கை என்னவோ நினைவு இருக்கிறது. நாம் சிவபாபாவை என்னவோ நினைவு செய்கிறோம் ஆனால் நம்முடைய வாழ்க்கையையோ அல்லது படித்த சாஸ்திரங்களையோ மறந்து விடுகிறோமா என்ன? வெறுமனே வாழ்ந்து கொண்டிருக்கும்போதே மறந்து விடுங்கள், இதை தாரணை செய்யுங்கள் என்று சொல்கிறோம். நினைவு செய்தால் விழுந்து விடுங்கள். ஆகவே முதலில் இந்த விசயங்களை கேளுங்கள் பிறகு முடிவெடுங்கள். வாழ்ந்து கொண்டே இறந்தும் வாழ்பவர்களாக ஆகுங்கள், வேறு யார் சொல்வதை யும் கேட்காதீர்கள். நாங்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் சொல்ல முடியும். இப்போது இந்த உலகம் முடியப்போகிறது என்பதை தெரிந்திருக்கிறோம். கிளை நிலையங்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். யார் மம்மா-பாபா என்று சொல்கிறார்களோ, அவர்கள் பிராமணர்களாக ஆகி விடுகிறார்கள். இப்போது பாபா கூறுகின்றார் ஹே ஆத்மாக்களே, ஆத்மா தான் பேசுகிறது. உங்களிடம் கேட்பார்கள், நீங்கள் யார்? உடனே ஆத்மா நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வீர்கள். இந்த ஞானம் இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. உங்களுடைய ஆத்மா இந்த கர்மேந்திரியங்களின் மூலம் படிக்கிறது. ஆத்மா மற்றும் சரீரம் இரண்டு இருக்கிறது. ஆத்மா தான் சரீரத்தை எடுக்கிறது மற்றும் விடுகிறது, சம்ஸ்காரத்தை தாரணை செய்கிறது என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நாம் சத்யுகத்தில் புண்ணிய ஆத்மாக்களாக இருந்தோம், இப்போது பாவாத்மாக்களாக இருக்கின்றோம். இப்போது கடைசி பிறவியாகும். பரமாத்மாவினிடத்தில் என்ன ஞானம் இருக்கிறதோ அதை இப்போது ஆத்மாக்களாகிய நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார். மற்றபடி மனிதர்கள் அனைவரும் இப்போது காரிருளில் இருக்கிறார்கள். சாஸ்திரங்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையதாகும். அதனை ஞானம் என்று சொல்ல முடியாது. ஞானம் பகல் மற்றும் பக்தி இரவாகும். கீதையை படைத்தது யார் மற்றும் எப்போது வந்தார்? கீதை எப்போது எழுதப்பட்டது? என்று நீங்கள் கேட்கலாம். பாபாவும் எழுதிக் கொண்டிருக்கிறார் பிறகு அதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. இப்படியெல்லாம் புத்தியில் தாரணை செய்வதின் மூலம் உங்களுடைய முன்னேற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார், குழந்தைகளுக்கு மாலையின் இரகசியமும் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. பரமபிதா பரமாத்மா எல்லையற்ற (நிகரற்ற) மலராக இருக்கின்றார் பிறகு இரண்டு மணிகள் பிரம்மா மற்றும் சரஸ்வதி. பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் படைப்பு படைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தான் ஆதி தேவன் மற்றும் ஆதி தேவி ஆவர். இவர்கள் பிராமணர்கள், இவர்கள் தான் சொர்க்கத்தை உருவாக்கினார்கள் ஆகையினால் இவர்களுக்கு பூஜை நடக்கிறது. இடையில் அந்த 8 மணிகள் இருக்கிறார்கள், அவர்கள் சூரியவம்சத்தவர்களாக ஆகி இருக்கிறார்கள். நிறைய உதவி செய்திருக்கிறார்கள். ஞானம் புத்தியில் இருக்க வேண்டும். யக்ஞத்தில் பலி இடப்படுகிறது என்பதையும் தெரிந்துள்ளீர்கள். தாய்மார்களின் முன்னேற்றத்திற்காக பாபா யுக்தி உருவாகியுள்ளார். பலியாகினார் அல்லவா, எனவே தந்தையை பின்பற்ற வேண்டும். காந்திக்கு கூட யார் உதவினார்களோ, அவர்களுக்கு அல்பகால சுகம் கிடைத்தது. அவர் எல்லைக்குட்பட்ட தந்தை, இவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையாவார்.

 

இங்கே பாபா அனைத்தையும் தாய்மார்களின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டார், இவர் முதல் இடத்திற்கு சென்று விட்டார். குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், யார் உதவி செய்வார்களோ, அவர்கள் தான் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவார்கள். நாம் சிவபாபாவிற்கு உதவி செய்கிறோம் என்று யாரும் புரிந்து கொள்ள வேண்டாம். இல்லை. சிவபாபா தான் உங்களுக்கு உதவி செய்கின்றார். அட, அவர் வள்ளல் ஆவார், நீங்கள் உங்களுக்காகவே செய்கின்றீர்கள். நீங்கள் நினைவில் இருந்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகும். சொர்க்கத்தை நினைவு செய்தீர்கள் என்றால் சொர்க்கத்திற்குச் சென்று விடுவீர்கள். பாபா அவரே சொல்கின்றார் - மன்மனாபவ. இல்லையென்றால் உயர்ந்த பதவி எப்படி கிடைக்கும்? கணக்கு வழக்கை தீர்த்துக் கொள்வது உங்களுடைய வேலையாகும். நான் கொடுக்கின்றேன் என்று யாரும் புரிந்து கொள்ள வேண்டாம். இது சிவபாபாவினுடைய யக்ஞம் நடக்கிறது, நடந்து கொண்டே தான் இருக்கும்.

 

நாம் பாரதத்திற்கு மட்டுமல்லாது முழு உலகத்திலும் பாபாவின் உதவியின் மூலம் நம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பது பிராமண குழந்தைகளாகிய உங்களுடைய மனதில் இருக்கிறது. நாம் மீண்டும் தூய்மையாக ஆகி பாரதத்தை சொர்க்கமாக்கி இராஜ்யம் செய்வோம். சிவபாபாவின் வழிப்படி செல்வதின் மூலம் பாரதம் சொர்க்கமாக ஆகி விடுகிறது. எனவே சிவபாபா கற்பிக்கின்றார் என்பதை நினைவில் வையுங்கள். பிராமணர்களாக ஆனால் தான் தேவதா சம்பிரதாயத்தில் வருவீர்கள் என்று பாபா கூறுகின்றார். விகாரத்தில் விழுவதின் மூலம் ஒரேயடியாக சத்திய நாசம் ஆகி விடுகிறது. தாங்களே தங்கள் மீது கருணைக்கு பதிலாக கருணையில்லாமல் நடந்து கொள்கிறீர்கள் பிறகு சாபமாகி விடுகிறது. நான் வரம் கொடுக்க வந்துள்ளேன். ஆனால் ஸ்ரீமத்படி நடக்காததின் மூலம் தங்களை சபித்துக் கொள்கிறீர்கள், பதவியை கீழானதாக்குகிறீர்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. புத்தியின் மூலம் அனைத்தையும் மறப்பதற்கு வாழ்ந்து கொண்டே இறக்க வேண்டும். ஒரு பாபாவினுடையதை மட்டுமே கேட்க வேண்டும். தங்களுடைய முன்னேற்றத்திற்காக முழுமையாக பலியாக வேண்டும்.

 

2. ஸ்ரீமத்படி நடந்து தங்கள் மீது கருணை காட்ட வேண்டும். உண்மையான பிராமணர்களாக ஆகி யக்ஞத்தை பாதுகாக்க வேண்டும். படிப்பை நல்ல விதத்தில் படித்து உயர்ந்த பதவியை அடைய வேண்டும்.

 

வரதானம் :

நினைவு சொரூபம் ஆகி மறந்திருப்பவர்களுக்கும் நினைவு படுத்தக்கூடிய உண்மையான சேவாதாரி ஆகுக.

 

தன்னுடைய நினைவு சொரூபத்தின் தோற்றம் மூலமாக மற்றவர்களை நினைவு சொரூபமாக மாற்றுவதே உண்மையான சேவை ஆகும். தங்களின் தோற்றம் மற்றவர்களுக்கு நான் ஆத்மா, புருவ மத்தியத்தை பார்த்ததுமே மின்னக்கூடிய ஆத்மா அல்லது மணி என்பதை நினைவு படுத்த வேண்டும். பாம்பின் மணியைப் பார்த்ததும் யாருக்கும் பாம்பின் பக்கம் கவனம் போவதில்லை. அதுபோல அழிவற்ற மின்னக்கூடிய மணியைப் பார்த்து தேக உணர்வு மறந்து போக வேண்டும். கவனம் தானாகவே ஆத்மாவின் பக்கம் போக வேண்டும். மறந்து போய் இருப்பவருக்கு நினைவு வரவேண்டும். அப்போது உண்மையான சேவாதாரி என்பார்கள்.

 

சுலோகன் :

அவகுணங்களை தாரணை செய்யக்கூடிய புத்தியை அழித்து சதோபிரதானமான தெய்வீக புத்தியை தாரணை செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி