31.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஒரே ஒரு தந்தையிடம் உண்மையான அன்பு இருந்தால் தந்தை உங்களை தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார், அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை செய்து விடுவார், சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கி விடுவார்.

 

கேள்வி:

தன்னைத் குஷியாக வைத்துக் கொள்வதற்கு எந்த முக்கிய தாரணை தேவை?

 

பதில்:

தனக்குள் உரையாடல் செய்து கொள்ள தெரிகின்ற பொழுது தன்னை குஷியாக வைத்துக் கொள்ள முடியும். எந்த பொருளின் மீதும் பற்றுதல் இருக்கக் கூடாது. வயிற்றுக்கு இரண்டு ரொட்டி கிடைத்தால் போதும், இவ்வாறு பற்றற்ற விருத்தியின் தாரணை இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஞானத்தை சிந்தனை செய்து தன்னை மகிழ்வாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கர்மயோகிகள், காரியங்கள் செய்தாலும், வீட்டுக் காரியங்கள் செய்தாலும், உணவு உட்கொள்ளும் போதும் தந்தையை நினைவு செய்யுங்கள். சுவதரிசன சக்கரத்தை புத்தியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும், அப்பொழுது தான் மிகுந்த குஷி இருக்கும்.

 

பாட்டு:

அவர் நம்மைவிட்டுப் பிரியமாட்டார்.

 

ஓம்சாந்தி.

இனிமையிலும் இனிய குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். இது குழந்தைகளின் அல்லது ஆத்மாக்களின் தனது பரம்பிதா பரமாத்மாவுடனான ஆன்மீக அன்பாகும். இந்த ஆன்மீக அன்பு பிராமணக் குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது. நீங்கள் தங்களை ஆத்மா என்று நிச்சயம் செய்கிறீர்கள். ஆனால் ஆத்மா தான் பரமாத்மா என்று கூறுகிற பொழுது பிறகு ஆத்மா யாரிடத்தில் அன்பு செலுத்தும்? அன்பு குழந்தைகளுக்கு தந்தையிடம் ஏற்படும். தந்தைக்கு தந்தையின் மீது அன்பு ஏற்படாது. ஆத்மாக்களாகிய நாம் நமது பரம்பிதா பரமாத்மாவிடம் அன்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இந்த அன்பு தான் உங்களை உடன் அழைத்துச் செல்கிறது. நீங்கள் தந்தையிடம் ஆன்மீக அன்பு வைக்கிறீர்கள், ஆகையால் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. முழு உலகம், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் எதிரிகளாக ஆகிவிடுகின்றனர்.

 

பதீத பாவனி கங்கை கிடையாது என்பது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. பாவனம் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் மனிதர்கள் கங்கை அல்லது யமுனா நதிக்கரையில் அமர்கின்றனர், ஹரித்துவார், காசிக்குச் செல்கின்றனர். முக்கிய இடம் இந்த இரண்டு ஆகும். ஹே பதீத பாவனி கங்கா என்று கூறுகின்றனர். அந்த கங்கை கேட்பது கிடையாது. கேட்கக் கூடியவர் ஒரே ஒரு பதீத பாவன் தந்தை மட்டுமே. இப்பொழுது நீங்கள் அந்த தந்தையின் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் பாவனம் ஆவது எப்படி? என்று தந்தை கூறிக் கொண்டிருக்கிறார். என் ஒருவனை நினைவு செய்தால் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும் என்று தண்ணீர் கங்கை கூறுவது கிடையாது. தந்தை கூறுகின்றார் - நீங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்தால் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும் என்று நான் உத்திரவாதம் கொடுக்கிறேன். உத்திரவாதம் செய்கிறார், கங்கை உத்திரவாதம் கொடுக்க முடியாது. மனிதர்கள் வருடா வருடம் இராவணனை எரித்துக் கொண்டு வருவது போன்று, இராவணன் இறப்பது கிடையாது, கங்கையில் குளிப்பதை பல பிறவிகளாக செய்து வருகின்றனர். ஆனால் பதீதத்திலிருந்து பாவனமாக யாரும் ஆவது கிடையாது. மீண்டும் மீண்டும் குளிப்பதற்குச் சென்று கொண்டிருக்கின்றனர். ஒருமுறை பாவனம் ஆகிவிட்டால் பிறகு குளிப்பதற்கு ஏன் செல்கின்றனர்? எவ்வளவு மேளா கொண்டாடுகின்றனர்! அதை ஆத்மா பரமாத்மாவின் சங்கமம் என்று யாரும் கூற முடியாது. பக்தி மார்க்கத்தில் மேளாவில் கூட்டம் ஏற்பட்டு விடுகிறது. இப்பொழுது நீங்கள் தந்தையிடத்தில் புத்தியோகம் வைக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம் நாயகிகளாக ஆகியிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மா தான் சரீரத்தின் மூலம் பகவானை நினைவு செய்கிறது. தந்தை கூறுகின்றார் - நானும் இந்த சரீரத்தின் மூலம் உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால் சதா பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். பாபா என்று கூறியவுடனேயே சொர்க்கம் அவசியம் நினைவிற்கு வரும். மேலும் தனது வீடாகிய முக்திதாமத்தின் நினைவும் வரும். முக்தியை நிர்வானதாமம் என்றும் கூறுகிறோம்.

 

இது சாகார உலகமாகும். எதுவரை ஆத்மாக்கள் இங்கு வரவில்லையோ பிறகு சாகார உலகம் எப்படி அதிகரிக்கும்? ஆத்மாக்கள் நிராகார உலகிலிருந்து வருகின்றன. மனித சிருஷ்டி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையாக அதிகரித்துக் கொண்டிருப்பதாக சிலர் நினைக்கின்றனர். ஆத்மாக்கள் இங்கு வருகின்றன, விருத்தி அடைந்து கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். இனிய வீடு சாந்திதாமம் என்பதை குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள். அமைதியை பலர் விரும்புகின்றனர். சாந்திதாமம் என்பது நமது இனிய இறை தந்தையின் வீடு என்பதை நீங்கள் அறிவீர்கள். பாரதவாசிகள் அயல்நாட்டிலிருந்து வருகின்ற பொழுது நாம் நமது இனிய வீடாகிய பாரதத்திற்குச் செல்கிறோம் என்று கூறுகின்றனர். எங்கு பிறப்பு எடுக்கிறோமோ அந்த தேசம் பிடித்தமானதாக இருக்கிறது. நம்மை இனிய வீட்டிற்கு (பாரதத்திற்கு) அழைத்துச் செல்லுங்கள் என்று கூறுகின்றனர். சரி, இறந்து விடுகிறார் எனில் ஆத்மா சென்று விடுகிறது. பிறகு சரீரத்தை இங்கு கொண்டு வந்து அழித்து விடுகின்றனர். பாரதத்தின் மண்ணால் உருவானது அந்த மண்ணிலேயே போக வேண்டும் என்று நினைக்கின்றனர். நேரு இறந்ததும் அவரது அஸ்தியை எங்கு எங்கு கொண்டு சென்றனர் பார்த்தீர்கள்! விளை நிலங்களில் தூவினர். விளை நிலம் நன்றாக வரும் என்று நினைத்தனர். ஆனால் அவர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு தான் மரியாதை கொடுத்தாலும் அது அவசியம் பழையதாக ஆகிவிடும். எவ்வளவு கஷ்டங்களை பொறுத்துக் கொண்டிருக்கின்றனர். தந்தையை அறியாமல் இருக்கின்றனர். நீங்கள் தந்தையை அறிந்து கொண்டு தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். ஆக உற்றார் உறவினர்கள் போன்றவர்களையும் சொர்க்கவாசிகளாக ஆக்க வேண்டும் என்று உள்ளம் விரும்புகிறது. நீங்கள் சொர்க்கவாசியாக ஆகுங்கள் என்று யாரிடமாவது கூறினால் நீங்கள் கொலை செய்ய விரும்புகிறீர்களா என்ன? என்று கேட்கின்றனர். ஸ்ரீமத் மூலம் நாம் சிரேஷ்ட சொர்க்கவாசி களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்ம அபிமானி ஆவதில் மிகுந்த முயற்சி இருக்கிறது. அடிக்கடி தேக அபிமானத்தில் வந்து தந்தையை மறந்து விடுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். நாம் இப்பொழுது நமது பரம்பிதா பரமாத்மாவிடம் வந்திருக்கிறோம் என்பதை அறிவீர்கள். பாபா கூறுகின்றார் - முன்பு எப்பொழுதாவது சந்தித்திருக்கிறீர்களா? ஆம் பாபா, 5 ஆயிரம் ஆண்டிற்கு முன் சந்தித்திருந்தோம் என்று உடனேயே கூறுகிறீர்கள். இது உங்களது குப்தமான வார்த்தையாகும். வேறு யாரும் நகல் செய்ய முடியாது. கிருஷ்ணரின் வேடம் போடலாம், நான் சொர்க்கம் ஸ்தாபனை செய்ய வந்திருக்கிறேன் என்று கூறலாம். ஆனால் 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பும் சொர்க்கம் ஸ்தாபனை செய்திருந்தேன் என்று கூற முடியாது. பாபா, 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு நாம் உங்களிடமிருந்து சொர்க்க ஆஸ்தி அடைவதற்கு வந்திருந்தோம், நீங்கள் தான் இராஜயோகம் கற்பித்திருந்தீர்கள் என்று நீங்கள் தான் கூற முடியும். ஆத்மா இவ்வாறு இந்த சரீரத்தின் மூலம் கூறுகிறது. தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதில் சர்வவியாபிக்கான விசயம் கிடையாது. பிரம்மா அவசியம் சாகாரத்தில் தான் தேவை, அவர் மூலமாக பரம்பிதா பரமாத்மா சிருஷ்டியைப் படைக்கிறார் என்பதையும் புரிந்து கொள்வது கிடையாது.

 

பதீத பாவன் தந்தை வந்து தேவி தேவதைகளாக, பாவனமாக ஆக்குகின்றார். தந்தை தான் சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். ஆக நிச்சயமாக சொர்க்கத்தில் மனிதர்கள் தேவை. பாபா வந்து உங்களுக்கு சொர்க்க வாசலை நிற்க்கின்றார். நரகவாசிகளை சொர்க்கவாசிளாக ஆக்குவதற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். எந்த ஒரு பெரிய மனிதனிடத்தில் நீங்கள் பதீத நரகவாசிகள் என்று கூறிவிட்டால் எவ்வளவு கோபித்துக் கொள்கின்றனர்! நாம் நரகத்திலிருந்து விடுபட்டு சொர்க்கத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது நாம் சங்கமயுகவாசிகள். ஆத்மாக்களாகிய நாம் இப்பொழுது இந்த சரீரத்தை விடுத்து பாபாவிடம், பாபாவின் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறோம். இது உங்களது ஆன்மீக யாத்திரையாகும். பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். இந்த சரீரம் எவ்வளவு காலம் இருக்கிறதோ அவ்வளவு காலம் யாத்திரை நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்பதைப் புரிந்திருக்கிறீர்கள். காரியங்களும் செய்ய வேண்டும். சாப்பிடுங்கள், குடியுங்கள், சமையுங்கள். எவ்வளவு நேரம் கிடைக்குமோ தந்தையை அவசியம் நினைவு செய்ய வேண்டும். கடையில் அமர்ந்திருக்கிறீர்கள், நேரம் இருக்கிறது எனும் பொழுது பாபாவின் நினைவில் அமர்ந்து விடுங்கள். அதிக வருமானம் கிடைக்கும். இரயிலில் பயணம் செய்கிறீர்கள் எனில் அந்த நேரத்தில் எந்த வேலையும் கிடையாது. அமர்ந்து கொண்டே தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள். இப்பொழுது நாம் பாபாவிடம் செல்கிறோம். பாபா பரந்தாமத்திலிருந்து அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். சரி, மாலையில் வீட்டில் உணவு சமைக்கிறீர்கள் எனில் ஒருவருக்கொருவர் நினைவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - வாருங்கள், நாம் நமது தந்தையின் நினைவில் அமரலாம். ஒருவருக்கொருவர் கருத்துக்களையும் கூறிக் கொள்ளுங்கள். நாம் சுவதரிசன சக்கரதாரிகள். பாபா கூறுகின்றார் - நீங்கள் லைட் ஹவுசாகவும் இருக்கிறீர்கள், வழி கூறுகிறீர்கள். நடந்தாலும், அமர்ந்தாலும், எழுந்தாலும் நீங்கள் லைட் ஹவுசாக இருக்கிறீர்கள். ஒரு கண்ணில் முக்தி, ஒரு கண்ணில் ஜீவன்முக்தி. சொர்க்கம் இங்கு தான் இருந்தது. இப்பொழுது கிடையாது. இப்பொழுது நரகமாக இருக்கிறது. பாபா மீண்டும் சொர்க்கம் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். தந்தை கூறுகின்றார் - நான் உங்களை மிக நல்ல மலர்களாக ஆக்குகிறேன். பிறகு நீங்கள் சென்று மகாராணி, பட்டத்து இராணிகளாக ஆவீர்கள். வீட்டு ராணிகளாக ஆகக் கூடாது. நீங்கள் 16 கலைகள் நிறைந்தவர்களாக ஆக வேண்டுமே தவிர 14 கலைகள் உடையவர்களாக அல்ல. ஸ்ரீ கிருஷ்ணர் 16 கலை களுடையவராக இருந்தார். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு விரதங்கள், நியமங்களுடன் இருந்தீர்கள். 7 நாட்கள் தண்ணீரின்றியும் இருந்திருக்கிறீர்கள். எவ்வளவு முயற்சி செய்தீர்கள்! ஆனால் கிருஷ்ணபுரிக்கு செல்ல முடியாது. இப்பொழுது நீங்கள் கிருஷ்ணபுரி சொர்க்கம் செல்வதற்காக நடைமுறையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். கிருஷ்ணரை துவாபரயுகத்தில் கொண்டு சென்றதால் சொர்க்கம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. உண்மையில் 7 நாட்கள் என்பதன் பொருள் என்ன? என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். தந்தையைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்யக் கூடாது. மற்றபடி தண்ணீரின்றி இருப்பதற்கான விசயம் கிடையாது. பாபாவை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் பாபாவிடம் சென்று விடுவீர்கள். பிறகு தந்தை சொர்க்கத்திற்கு அனுப்பி விடுவார். விரதம், நியமங்களுடன் நீங்கள் எவ்வளவு நாட்கள் பட்டினியாக இருப்பீர்கள்! பல பிறவிகளாக எவ்வளவு முயற்சி செய்தீர்கள்! எந்த பிராப்தியும் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களை அதிலிருந்து விடுவித்து சத்கதியின் மார்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். பாபா, கல்பத்திற்கு முன்பும் சொர்க்க ஆஸ்தி அடைவதற்காக உங்களை சந்தித்திருந்தோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஒவ்வொரு அடியிலும் வழியைப் பெற்று கொண்டே இருங்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த கணக்கு வழக்குகளைக் கேளுங்கள். பாபா வழி கொடுத்துக் கொண்டே இருப்பார். நீங்கள் உங்களது தொழில் போன்றவைகளை செய்யுங்கள். இருப்பினும் பாபா வழி கொடுத்துக் கொண்டே இருப்பார். இவர் தொழிலிலேயே மூழ்கி விட்டிருப்பதைப் பார்க்கின்ற பொழுது வழி கொடுப்பார். இவ்வளவு ஏன் தலை உடைத்துக் கொள்கிறீர்கள்? எவ்வளவு காலம் நீங்கள் வாழ்வீர்கள்? வயிறு ஒன்று ரெண்டு ரொட்டி தான் கேட்கிறது. இதை வைத்துக் கொண்டு ஏழைகளும் வாழ்கின்றனர், செல்வந்தர்களும் வாழ்கின்றனர். செல்வந்தர்கள் நன்றாகச் சாப்பிடுகின்றனர். பிறகு நோயாளிகளாகவும் ஆகின்றனர். ஆதிவாசிகளைப் பாருங்கள் எவ்வளவு உறுதியானவர்களாக இருக்கின்றனர்! மேலும் எதைச் சாப்பிடுகின்றனர்? எவ்வளவு வேலைகள் செய்கின்றனர்! தங்களது குடிசைகளில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆக இந்த நேரத்தில் நீங்கள் மற்ற அனைத்து ஆசைகளையும் விட்டு விட வேண்டும். இரண்டு ரொட்டி கிடைத்தாலும் வயிறு நிறைந்து விட வேண்டும், அவ்வளவு தான், தந்தையை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் ஆன்மீகக் குழந்தைகள், பரம்பிதா பரமாத்மா என்ற நாயகனின் நாயகிகளாக ஆகியிருக்கிறீர்கள். பாபாவை எவ்வளவு நினைக்கிறீர்களோ அந்த அளவிற்கு விகர்மம் விநாசம் ஆகும். மேலும் யாரை நினைக்கிறீர்களோ அவரைச் சந்திப்பீர்கள். சிலர் சாட்சாத்காரம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். நீங்கள் வீட்டில் அமர்ந்திருக்கும் பொழுதும் உங்களால் செய்ய முடியும் என்று பாபா கூறுகின்றார். சிவபாபாவை நினைவு செய்வதன் மூலம் உங்களுக்கு வைகுண்டத்தின் சாட்சாத்கார் ஏற்படும், கிருஷ்ணபுரியைப் பார்ப்பீர்கள். இங்கு உங்களை பாபா வைகுண்டத்திற்கு எஜமானர்களாக ஆக்கி விடுகின்றார். சாட்சாத்காரத்திற்கான விசயம் கிடையாது. என்னை நினைவு செய்யுங்கள். ஏனெனில் உங்களை அழைத்துச் செல்ல நான் வந்திருக்கிறேன். சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். அவர் தான் கிருஷ்ணபுரிக்கு எஜமானர்களாக ஆக்கக் கூடியவர். கிருஷ்ணர் ஆக்கமாட்டார். சிவபாபாவை நினைவு செய்வதன் மூலம் உங்களுக்கு வைகுண்டத்தின் இராஜ்யம் கிடைக்கிறது. இப்பொழுது அவர் பரந்தாமத்திலிருந்து வந்திருக்கிறார். வந்திருந்தார் என்பதன் நினைவுச் சின்னமாகத் தான் கோயில்கள் உருவாக்கி இருக்கின்றனர் அல்லவா! சிவனின் கோயில் இருக்கிறது. சிவஜெயந்தியும் கொண்டாடுகின்றனர் அல்லவா! ஆனால் அவர் பாரதத்தில் எவ்வாறு வருகின்றனர்? என்பது யாருக்கும் தெரியாது. கிருஷ்ணரின் உடலில் வருவது கிடையாது. கிருஷ்ணர் இருப்பதோ சத்யுகத்தில். சிவன் கோயில் மிகப் பெரியதாக இருக்கிறது. கிருஷ்ணருக்கு அந்த அளவிற்கு பெரியதாக கிடையாது. சோமநாத கோயில் எவ்வளவு பெரியதாக இருக்கிறது! கிருஷ்ணரின் கோயில் இராதை கிருஷ்ணரை அதிக நகைகளுடன் காண்பிக்கின்றனர். சிவனின் கோயிலில் ஒருபொழுதும் நகைகளைப் பார்க்க முடியாது. இப்பொழுது சிவபாபா மிகப் பெரிய மாளிகைகளில் இருப்பது கிடையாது. இருப்பது ஸ்ரீ கிருஷ்ணர் தான். பாபா கூறுகின்றார் - நான் மாளிகைகளில் இருப்பதே கிடையாது. ஆனால் பக்தி மார்க்கத்தில் வைரம், இரத்தினங்களினால் எவ்வளவு பெரிய கம்பீரமான கோயில்கள் உருவாக்கியிருக்கின்றனர்! யாருக்கு சிவபாபாவின் மூலம் சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைத்ததோ அவர்கள் அவரது கோயிலை இந்த அளவிற்கு உயர்வாக உருவாக்கி யிருக்கின்றனர். நினைவுச் சின்னமாக எவ்வளவு பெரிய கோயில்கள் உருவாக்கியிருக்கின்றனர்! ஆக அவர் சுயம் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்திருப்பார்! மிக நன்றாக கோயில்கள் உருவாக்கினர். மும்பையில் பாபூல்நாத்தில் சிவன் கோயில் இருக்கிறது. மாதவ் ஏரியாவில்  இலட்சுமி நாராயணன் கோயில் இருக்கிறது. தந்தை கூறுகின்றார் - நான் உங்களை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குகிறேன். ஆக பக்தி மார்கத்தில் நீங்கள் எவ்வளவு பெரிய கோயில்கள் கட்டுகிறீர்கள்! மற்றும் இப்பொழுது பாருங்கள் எப்படி குடிசையில் அமர்ந்திருக்கிறார்! உங்களது பெயரும் வெளிப்பட வேண்டும். நமக்கு கோயில் கட்டப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். நமது தந்தையாகிய சிவனுக்கும் அதிக கோயில்கள் உள்ளன, ஆச்சரியம் அல்லவா! யார் சோமநாத் கோயில் கட்டியிருப்பாரோ அவர் எவ்வளவு செல்வந்தராக இருந்திருக்க வேண்டும்! இப்பொழுது எவ்வளவு குப்தமாக இருக்கிறார்! யாருக்கும் தெரியாது. சிவபாபாவின் கோயில் எப்படி கட்ட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்தில் கட்டப்படும். முதல் நம்பரில் பூஜ்ய நிலை அடைந்த மம்மா, பாபா வைகுண்டத்திற்கு எஜமானர்களாக ஆகின்றனர், பிறகு முதன் முதலில் பூஜாரிகளாக ஆகி அவர்கள் தான் கோயில்களும் உருவாக்குகின்றனர். ஆக உள்ளத்தில் கூறுவீர்கள் அல்லவா - நாம் தான் பூஜாரிகளாக ஆகி கோயில் கட்டுவோம். இந்த மாதிரியான விசயங்களை சிந்தனை செய்வதன் மூலம் இந்த பழைய உலகை மறந்து விடுவீர்கள். தங்களுக்குள்ளும் இப்படிப்பட்ட விசயங்களைப் பேசிக் கொண்டால் உங்களுக்கு அதிகக் குஷி ஏற்படும். தனக்குள் உரையாடல் செய்யுங்கள்.

 

சுப்ரீம் ஆத்மா அமர்ந்து உங்களது ஆத்மாவை கவர்ந்திழுக்கிறார். இந்த ஞானத்தின் மூலம் மகிழ்ச்சியானவர்களாக ஆக்குகின்றார். நாம் கல்பத்திற்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். பலமுறை தந்தையை சந்தித்திருக்கிறோம். ஆஸ்தி அடைந்திருக்கிறோம். இவ்வாறு தங்களுக்குள் உரையாடல் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் கர்மயோகிகளாகவும் இருக்கிறீர்கள். வீட்டில் உணவு போன்றவைகளை சமையுங்கள், குஷி ஏற்படும். நீங்கள் 84 பிறவிகளின் சரித்திர பூகோளத்தை அறிவீர்கள். நாம் இப்பொழுது பிராமணர்களாக ஆகியிருக்கிறோம், பிறகு தேவதைகளாக ஆகி இராஜ்ஜியம் செய்வோம். பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர்களாக ஆவோம். பிறகு மாளிகைகளை உருவாக்குவோம். தங்களது சரித்திர பூகோளத்தைக் கூறிக் கொண்டே இருங்கள். நமது சரித்திர பூகோளம் எவ்வாறு சுற்றுகிறது - இதற்குத் தான் சுவதரிசன சக்கரதாரி என்று கூறப்படுகிறது. நீங்கள் மூன்று லோகங்களையும் அறிந்தவர்களாக இருக்கிறீர்கள். உங்களது ஞானக் கண் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த சக்கரம் அடிக்கடி நினைவு செய்வது உங்களுக்குள் அடிக்கடி குஷி ஏற்பட வேண்டும். தந்தைக்கும் குஷி ஏற்படுகிறது. இப்பொழுது நீங்கள் சேவையில் இருக்கிறீர்கள். சேவாதாரிகளாகிய உங்களுக்கு கோயில் பக்தி மார்க்கத்தில் உருவாகும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்வதற்கு நான் வந்திருக்கிறேன். உங்களுக்கு சொர்க்கத்தின் முழு ஆஸ்தி கொடுப்பதற்காக வந்திருக்கிறேன். யார் எந்த அளவிற்கு முயற்சி செய்வார்களோ, அதன் படி சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் லைட் ஹவுஸ் ஆகி அனைவருக்கும் வழி கூற வேண்டும். அனைத்து ஆசைகளையும் விட்டு விட்டு ஒரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். தந்தையிடம் வழி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

 

2) ஞான விசயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும். தனக்குள் தானே உரையாடல் செய்ய வேண்டும். சுவதரிசன சக்கரத்தைச் சுற்றிக் கொண்டு சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

 

வரதானம் :

உயர்ந்த சுயமரியாதை என்ற சீட்டில் அமர்ந்து அனைவருக்கும் மரியாதை அளிக்கக்கூடியவராகி அனைவரின் மதிப்பிற்குரியவர் ஆகுக.

 

எப்போதும் தங்களுடைய உயர்ந்த சுயமரியாதையில் நிலைத்திருந்து, பணிவுடையவராகி அனைவருக்கும் மரியாதை கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். இந்த கொடுத்தலே அடைதல் ஆகிவிடும். மரியாதை கொடுத்தல் என்றால் அந்த ஆத்மாவை ஊக்கம் உற்சாகத்தில் கொண்டு வந்து முன்னேற்றுவதாகும். எப்போதும் சுயமரியாதையில் இருந்தால் அனைத்து பிராப்திகளும் தானாகவே கிடைத்து விடும். சுயமரியாதையின் காரணத்தால் உலகமே மரியாதை கொடுக்கும். மேலும் அனைவர் மூலமாகவும் உயர்ந்த மரியாதை கிடைப்பதற்கு பாத்திரமாவதால் மதிப்பிற்குரியவர் ஆகிவிடுவீர்கள்.

 

சுலோகன் :

யார் அனைவருக்கும் மரியாதை கொடுக்கிறார்களோ அவர்களின் பதிவேடு (ரெக்கார்டு) தானாகவே சரியாகிவிடுகிறது.

 

ஓம்சாந்தி