27.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உங்களுடைய துக்கத்தின் நாட்கள் இப்போது முடிவடையப் போகிறது. சுகத்தின் நாட்கள் வந்துக் கொண்டிருக்கிறது. பொறுமையாக இருங்கள். நிச்சய புத்தி உடைய குழந்தைகளின் நிலை பொறுமையாக இருக்கிறது.

 

கேள்வி:

எந்த நிலையிலும் சோர்வு வந்து விடக் கூடாது. இதற்கு எளிய விதி என்ன?

 

பதில்:

பிரம்மா பாபாவின் எடுத்துக் காட்டை சதா முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். இத்தனை குழந்தைகளின் தந்தை சிலர் நல்ல குழந்தைகளாக இருந்தால், சிலர் கெட்ட குழந்தைகளாக இருக்கின்றனர், சிலர் சேவை செய்கின்றனர். சிலர் டிஸ்சர்வீஸ் செய்கின்றனர். இருப்பினும் பாபா ஒரு போதும் வாடிப் போவதில்லை. பயப்படுவதில்லை. பிறகு குழந்தைகளாகிய நீங்கள் ஏன் வாடிப் போகிறீர்கள்? நீங்கள் எந்த நிலையிலும் வாடிப் போகக் கூடாது.

 

பாட்டு:

பொறுமையாக இரு மனிதா...........

 

ஓம் சாந்தி.

பொறுமையாக இரு மனிதனே என்று மனிதனுக்குக் கூற முடியாது. மனம், புத்தி ஆத்மாவில் இருக்கிறது. இது ஆத்மாவிற்குக் கூறப்படுகிறது. பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் ஆத்மாவிற்கு பொறுமையாக இருங்கள் என்று கூற முடியாது. ஏனென்றால் பொறுமையவற்றவருக்குத் தான் பொறுமை கொடுக்கப் படுகிறது. ஒரு வேளை ஈஸ்வரன் சர்வ வியாபியாக இருந்தால் அவருக்கு பொறுமையற்றவர் என்று கூற முடியாது. இச்சமயம் மனிதர்கள் அனைவரும் பொறுமையற்றவர்களாக இருக்கிறார்கள். துக்கத்தில் இருக்கிறார் கள். ஆகவே, பொறுமையை அளிப்பதற்காக சுகத்தை அளிப்பதற்காக தந்தை வந்திருக்கின்றார். இப்போது பொறுமையாக இருங்கள் என்று கூறுகின்றார். பாபாவின் மகா வாக்கியங்கள் உங்களுக்காக மட்டும் அல்ல. உண்மையில் முழு உலகத்திற்கும் ஆகும். முழு உலகமும் மெல்ல மெல்ல கேட்டுக் கொண்டே இருக்கும். யார் கேட்கிறார்களோ அவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அனைவருக்கும் சத்கதி கொடுக்கக் கூடிய வள்ளல், துக்கத்தை நீக்குபவர் ஒரு தந்தை தான். இதுவே துக்க உலகம் ஆகும். இப்போது நமக்கு முக்தி, ஜீவன் முக்தி அடையக் கூடிய நாள் அல்லது பதீத உலகத்திலிருந்து விடுதலை பெறக் கூடிய நாள் என குழந்தைகள் அறிகிறீர்கள். இது உங்களுடைய புத்தியில் வரிசைக் கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப இருக்கிறது. இப்போது நாம் இந்த துக்க உலகத்தில் இருந்து சுகமான உலகத்திற்கு போவாம் என்ற பொறுமை அனைவருக்கும் இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்கும் நிலையான உறுதி இருக்க வேண்டும். ஸ்ரீமத் படி நடந்து கொண்டே இருந்தால் நமக்கு சுகத்தின் நாட்கள் வந்துக் கொண்டே இருக்கும். இதில் ஆசீர்வாதம் தாருங்கள், கருணை கட்டுங்கள் என கேட்க வேண்டியது கிடையாது. பாபா படிப்பிக்கின்றார். எளிய சுய ராஜ்ய யோகத்தைக் கற்பிக்கின்றார். படிப்பிற்கு ஞானம் என்று பெயர். குழந்தைகளாகிய உங்களுக்கு சிரேஷ்டமான வழி கொடுத்துக் கொண்டிருக்கிறார். முதன் முதலில் உறுதியான நிச்சயம் வேண்டும். பிறகு ஒரு போதும் ஏற்றத் தாழ்வு வரக் கூடாது. பரபிரம்மத்தில் இருப்பவரைப் பற்றி எண்ணினோம், அவரை அடைந்து விட்டோம் என்றால் வேறு என்ன வேண்டும்? என்று பாடுகிறார்கள். அந்த தந்தையிடம் இருந்த சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது என்ற நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி என்றால் முதலில் இருந்தே பொறுமை கிடைத்து விடுகிறது. இது அழிவற்ற பொறுமையாகும். நாம் ஸ்ரீமத் படி உயர்ந்ததிலும் உயர்ந்தவர்களாக உயர்ந்த இராஜ்ய பாக்கியத்தை எந்த ஒரு சண்டை சச்சரவும் இல்லாமல் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது உறுதி. பிறகு ஏன் தளர்ந்து போக வேண்டும்? வீட்டில் பத்து, இருபது குழந்தைகள் இருக்கலாம். பாபாவைப் பாருங்கள், ஆயிரம் இலட்சம் குழந்தைகள் இருக்கிறார்கள். பல குழந்தைகள் சண்டை போடுகின்றனர். சிலர் நல்ல குழந்தைகளாக இருக்கின்றனர். சிலர் கெட்ட குழந்தைகளாக இருக்கின்றனர். சிலர் சேவை செய்கிறார்கள், சிலர் டிஸ்சர்வீஸ் செய்கிறார்கள். பாபா எப்போதாவது பயப்படுகிறாரா? எனவே, குழந்தைகளுக்கும் பயம் இருக்ககக் கூடாது. இல்லறத்தில் இருக்க வேண்டும். ஒரு புறம் ஹட யோகம் கர்ம சன்னியாசம். உங்களுடையது எல்லைக்கப்பாற்பட்ட சன்னியாசம். இது இராஜயோகம் ஆகும். நீங்கள் இல்லறத்தில் இருந்து கொண்டே பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைகிறீர்கள். மிகவும் எளிதாகும். இப்போது உங்களுடைய சுக உலகத்தின் மரம் தெரிந்துக் கொண்டிருக்கிறது. நேரில் தெரியலாம், தெரியாமல் போகலாம். புத்தியினால் அறிகிறீர்கள். காட்சி கிடைத்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, எதிர் கால சுய இராஜ்யத்திற்காக முயற்சி செய்கிறீர்கள். குறிக்கோள் எதிரில் இருக்கிறது அல்லவா? இலஷ்மி நாராயணனின் படத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா! எங்களுக்கு சாட்சாத்காரம் கிடைத்தால் தான் ஏற்றுக் கொள்வோம் என்று கிடையாது. இது புத்தியின் மூலம் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். இந்த கண்களினால் சித்திரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? இந்த கண்களினால் மீண்டும் இதையே பார்ப்பீர்கள். இராஜயோகம் அல்லவா! சரியாக படங்கள் வைக்கப்பட்டிருகிறது. பிறகு சாட்சாத்காரம் எதற்கு என்று புத்தி கூறுகிறது. ஸ்ரீ கிருஷ்ணன் சத்யுகத்திற்கு அதிபதி அல்லவா! சிவன் பரந்தாமத்தில் வசிக்கக் கூடியவர். நீங்கள் இலஷ்மி நாராயணன் ஆக முடியும். இதுவே உங்கள் குறிக்கோள் ஆகும்; எனவே நமக்குள் அந்த தெய்வீக குணங்கள் எவ்வளவு வந்திருக்கிறது என்று கண்ணாடியில் பாருங்கள். பாபா மிகவும் நன்கு பொறுமையைக் கொடுக்கிறார். இப்போது படிக்க வேண்டும். இராஜ்யம் செய்வதற்கான ஞானம் வேண்டும். அதை பாபா கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஐசிஎஸ் முடித்தவர்களுக்கு நாம் மிக உயர்ந்த அதிகாரி ஆகப் போகிறோம் என்று அனைவரையும் விட அதிகமாக பெருமிதம் இருக்கிறது. நீங்கள் தொழில் வியாபாரத்தில் கூட கோடீஸ்வரன் ஆகிறீர்கள். பிறகு பாபா உங்களுக்கு இந்த தொழிலைக் கற்றுக் கொடுக்கிறார்-ஒப்பந்தம் செய்தல். நீங்கள் பாபாவிற்கு சோழியைக் கொடுக்கிறீர்கள். அதற்குப் பலனாக பாபா உங்களை 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் அதிபதியாக்குகிறார். இது வியாபாரமாகவும் இருக்கிறது. படிப்பாகவும் இருக்கிறது. வெறும் வியாபாரத்தின் வேலை மட்டும் அல்ல. உலகத்தின் வரலாறு புவியியலைப் பற்றிய ஞானமும் வேண்டும் அல்லவா? சுய தரிசன சக்கரதாரி ஆக வேண்டும். எவ்வளவு படிப்பீர்களோ அவ்வளவு உயாந்த பதவி பெறுவீர்கள். சொர்கத்திற்கு அதிபதி என்றால் பிரஜைகள், வேலைக்காரர்கள் கூட இருப்பார்கள். இப்போது கூட அனைவரும் பாரதம் நமது நாடு என்கிறார்கள் அல்லவா? ஆனால் இராஜா மற்றும் பிரஜைகளுக்குள் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. எவ்வளவு முடியுமோ உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி அடையுங்கள். தாய் தந்தைக்குச் சமமாக முயற்சி செய்யுங்கள் என பாபா கூறுகிறார், அனைவரும் சிம்மாசனத்தில் அமர முடியாது என புரிய வைக்கப்படுகிறது. இருப்பினும் பந்தயத்தில் ஓட வேண்டும். முயற்சிக்கு ஏற்ப வரிசைக் கிரமத்தில் இராஜ்ய பதவியை அடைவார்கள். போன கல்பத்தில் யார் எவ்வளவு முயற்சி செய்தனரோ அவர்கள் சாட்சியாக இருந்து பார்க்கிறார்கள். பிறகு யாருடைய முயற்சியாவது மந்தமாக இருந்தால் தீவிரமாக்கப்படுகிறது. உங்களுடைய முயற்சி மிகவும் மந்தமாகத் தெரிகிறது. உங்களுக்கு பற்று இருக்கிறது. டிரஸ்டி ஆக்கி விட்டீர்கள். பிறகு ஏன் பற்று? நீங்கள் ஸ்ரீமத் படி செல்லுங்கள். பாபா கட்டிடம் கட்டட்டுமா என்று கேட்கிறார்கள். ஏன் கட்டக் கூடாது? ஓய்வாக இருங்கள். இன்னும் சிறிது நாட்கள் தான். இது சீ, சீ உலகம், ஓய்வாக இருங்கள். ஓய்வெடுங்கள். குழந்தைகளுக்கு திருமணம் செய்யுங்கள் .தந்தை எந்த பணத்தையும் வாங்கிக் கொள்வதில்லை. அவரோ வள்ளல் ஆவார். சிவபாபா இச்சமயம் குழந்தைகள் வசிப்பதற்காக இந்த கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார். தான் வசிப்பதற்கு இந்த உடல் நிமித்தமாக உள்ளது. ஜீவ ஆத்மாக்கள் வசிப்பதற்கு நிச்சயம் கட்டிடம் வேண்டும். எனவே, குழந்தைகளாகிய உங்களுக்காக கட்டிக் கொண்டிருக்கிறோம் பாபா கூட இந்த கட்டிடத்தில் அமர்ந்திருக்கிறார் அல்லவா? அவர் நம்முடைய ஆத்மாக்களின் தந்தை. இவர் சரீரத்தின் தந்தை என நீங்கள் அறிகிறீர்கள் உங்களைத் தத்தெடுத்துள்ளார். நீங்கள் என்னுடைய குழந்தைகள். மம்மா, பாபா என்கிறீர்கள் அல்லவா? இதற்குத் தான் தத்தெடுத்தல் என்று பெயர். பிரஜா பிதா பிரம்மாவிற்கு இத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாகத் தான் இருப்பார்கள். குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுக்கிறார். சரஸ்வதி கூட மகள் அல்லவா? இது மிகவும் ஆழமான புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். கீதை, பாகவதம் போன்றவைகளைக் கூட நீங்களும் படித்திருக்கிறீர்கள். இந்த பாபாவும் படித்திருக்கிறார். ஆனால் இப்போது நாடகத்தின் படி ஸ்ரீமத் கிடைக்கிறது. எது கூறப்பட்டதோ அனைத்தும் நாடகத்தின் படி ஆகும். அதில் நிச்சயம் நன்மை இருக்கும். நஷ்டம் ஏற்படுகிறது என்றாலும் அதிலும் நன்மை இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை அடங்கி இருக்கிறது. சிவபாபா நன்மை செய்யக் கூடியவர் ஆவார். அவருடைய வழி சிறந்ததாகும். ஒரு வேளை அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் ஸ்ரீமத் படி நடக்காமல் தனது வழிப்படி நடக்கிறார்கள். இதனால் ஏமாற்றம் அடைகிறார்கள். பிறகு சிவபாபா என்ன செய்வார்? ஒவ்வொரு அடியிலும் ஆலோசனை கேட்க வேண்டும். மிக உயர்ந்த வழிக்காட்டி அமர்ந்திருக்கிறார் அல்லவா? நிறைய குழந்தைகள் இந்த விஷயங்களை மறந்து போகிறார்கள். ஏனென்றால் யோகத்தில் இருப்பதில்லை. யோகம் மற்றும் நினைவைத்தான் யாத்திரை என கூறப்படுகிறது. நினைக்கவில்லை என்றால் நாம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறோம் எனப் புரிந்து கொள்ளுங்கள். யாத்திரை செல்லும் போது சிலர் ஓய்வெடுக்கிறார்கள். நீங்களும் ஓய்வெடுக்கிறீர்கள். நினைக்கவில்லை என்றால் விகர்மம் வினாசம் ஆகாது. மேலும் முன்னேறவும் முடியாது. நினைக்கவில்லை என்றால் அருகாமையில் வர முடியாது. ஆத்மா களைத்துப் போகிறது. தந்தையை மறந்து விடுகிறது. நீங்கள் யாத்திரையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். இரவு நீங்கள் ஓய்வெடுக்கத்தான் செய்கிறீர்கள் என பாபா கூறுகின்றார். இரவு நீங்கள் தூக்கத்தில் உள்ள போது யாத்திரை என்று பொருள் அல்ல. அது ஓய்வாகும். விழித்தெழும் போது தான் யாத்திரையில் இருக்கிறீர்கள். தூக்கத்தில் எந்த விகர்மமும் வினாசம் ஆகாது. ஆம், மற்றபடி வேறு எந்த விகர்மமும் நடக்காது. எனவே, பாபா அனைத்து விஷயங்களையும் புரிய வைக்கிறார். ஆனால் யாராவது அமல்படுத்த வேண்டும். நிறைய கருத்துக்களை தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். வழக்கறிஞருக்குப் படிக்கும் போது தான் அதற்கு உரிய கருத்துக்கள் புத்தியில் வருகிறது. மருத்துவருக்கோ இன்ஜினியருக்கோ படிக்கும் போது மருத்துவர் மற்றும இன்ஜினியர் ஆகிறார்கள். யார் எவ்வாறு படிக்கிறார்களோ அதற்கு ஏற்ப ஆகிறார்கள்.

 

இங்கேயோ ஒரே கோர்ஸ் ஆகும். சென்றுக் கொண்டே இருங்கள். உங்களுடைய தலையில் பல பிறவிகளின் பாவச் சுமை நிறைய இருக்கிறது. அவற்றை அழிப்பதற்கான வழி பாபாவை நினைவு செய்தல் ஒன்றே ஆகும். இல்லை என்றால் பதவி தாழ்ந்து போகும். மாலை உருவாக்கப்பட்டிருக்கிறது அல்லவா? ஒன்பது இரத்தினங்களைப் பற்றி பாடப்பட்டிருக்கிறது. இவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதைக் கூட மனிதர்கள் அறியவில்லை. அஷ்ட இரத்தினங்கள் ருத்திரனின் மாலை ஆகிறார்கள். எனவே நன்கு முயற்சி செய்ய வேண்டும். மாணவர்கள் நன்கு படிக்கிறார்கள் என்றால் பதிவேடு மூலமாக தாய் தந்தைக்குத் தெரிய வருகிறது. இங்கேயோ தந்தை தான் ஆசிரியராகவும் இருக்கிறார். எனவே அவரே அறிவார். நீங்கள் தந்தையிடம் தான் படிக்கிறீர்கள். உங்கள் ரெஜிஸ்டர் பற்றி அவருக்குத் தெரிகிறது. நீங்களும் உங்களுடைய ரெஜிஸ்டர் மூலமாக எவ்வளவு நமக்குள் நல்ல குணங்கள் வந்திருக்கிறது. நான் மற்றவர்களை எவ்வளவு தனக்குச் சமமாக மாற்றியிருக்கிறேன் எனப் புரிந்து கொள்ள முடியும். யாராவது நேரடியாகப் பார்த்தால் அவருக்கு சரீரம் மறந்து போக வேண்டும். இவ்வளவு சக்தி இருக்கிறதா? தைரியத்தோடு ஒரு அடி வைத்தால் கடவுளின் உதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பாபா நிறைய உதவி செய்கிறார். நீங்களும் யோகத்தில் உதவி செய்கிறீர்கள். பாபாவிற்கு தூய்மையின் உதவி வேண்டும். முழு பதீத உலகத்தையும் யோக பலத்தினால் தூய்மையாக்க வேண்டும். எந்த அளவிற்கு யோகத்தின் உதவி செய்கிறீர்களோ அவ்வளவு பாபாவும் மகிழ்ச்சி அடைவார். இது பாபாவிற்கான உதவியா? அல்லது தனக்கா? நீங்கள் எவ்வளவு படிக்கிறீர்களோ அவ்வளவு உயர்ந்த பதவி அடைவீர்கள். எவ்வளவு நினைக்கிறார்களோ அவ்வளவு எனக்கு பவித்ரதாவின் உதவி செய்வார்கள். நான் பாவன உலத்திற்காக பதீதர்களை பாவனமாக்க வந்திருக்கிறேன். பதீதர்களாகவும் பாவனமாகவும் இங்கே தான் மாறுகிறார்கள். அது நிராகார உலகம் ஆகும். பதீத பாவனா வருங்கள் என்று பாடுகிறார்கள். பாவனமான உலகம் என்று எதற்குக் கூறப்படுகிறது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். சீதையை இராவணனின் சிறையிலிருந்து, துக்கத்திலிருந்து விடுவித்தால் சுகம் வேண்டும் அல்லவா! மற்றவர்களுக்கு நிறைய சாந்தி கிடைக்கிறது. சுகம் குறைவாக கிடைக்கிறது. உங்களுக்கு சுகமும் நிறைய கிடைக்கிறது, துக்கமும் நிறைய கிடைக்கிறது. கடைசியில் வரக் கூடிய ஆத்மாக்கள் சிறிதளவு நடித்து விட்டு திரும்பப் போய் விடுகிறார்கள். ஓரிரு பிறவிகள் கூட எடுக்கிறார்கள். சிறிது காலம் வருகின்றனர். பிறகு சென்று விடுகின்றனர். உங்களுடையது 84 பிறவிகளின விஷயம் ஆகும் அவர்களுடையது ஓரிரு பிறவிகளின் விஷயம் ஆகும். நீங்கள் 84 பிறவிகளை அறிகிறீர்கள். சக்கரத்தை அறிவதால் சக்கரவர்த்தி இராஜா ஆகிறீர்கள். அவர்கள் ஆக முடியாது. அவர்களுக்கு இந்த ஞானம் இல்லை. யார் போன கல்பத்தில் ஞானம் அடைந்த உங்களுக்கு இந்த ஞானம் இருக்கிறது. இப்போது நீங்களும் முயற்சி செய்ய வேண்டும். முயற்சி செய்யக் கூடிய நேரம் இதுவே ஆகும். முயற்சியின் விஷயம் உங்களுக்குத் தான். தேவி தேவதா தர்மம் மிகவும் சுகம் கொடுக்கக் கூடியது. இவ்வளவு சுகம் வேறு யாரும் கொடுக்க முடியாது.

 

இது அனாதி டிராமா நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் கதாநாயகன் கதாநாயகி பாத்திரம் கிடைக்காது. விதவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அதிலும் கூட நல்லவர், கெட்டவர் என பல விதம் இருக்கிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள் தேவி தேவதைகள் சிரேஷ்டமானவர்கள் என அவர்களுக்குத் தான் கூறப்படுகிறது. அவர்கள் சத்யுகத்தில் தான் இருப்பார்கள். அவர்களுக்கு சித்திரம் கூட இருக்கிறது. ஆனால் அவ்வாறு எப்படி ஆகினார்கள் என்பது தெரியவில்லை. சிலரோ காணும் இடமெல்லாம் கிருஷ்ணர் தெரிகிறார் எனக் கூறுகிறார்கள். பகவான் அனைத்து இடங்களிலும் இருக்கிறார் என்கின்றனர். இந்த விஷயங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இந்த குறிக்கோளைப் புரிய வைப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. அனைவரையும் நிச்சயமாக அழைக்க வேண்டும். செய்தித்தாட்கள் மூலமாக அழைப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது மிகக் குறைவான நேரமே இருக்கிறது. இது வரை குழந்தைகள் யாத்திரை செய்து செய்து களைத்து போகிறார்கள் என்றால் அமர்ந்து விடுகிறார்கள் மாயாவின் புயலை பொறுத்துக்கொள்ள முடியவதில்லை. யுத்த மைதானத்தில் நிச்சயம் மாயா பிடிக்கும். பலசாலியிடம் பலசாலியாகி மோதும். வேகமாகப் புயல் வரும். பிறகு ஞானத்தில் வந்ததிலிருந்து நிறைய தடைகள் ஏற்படுகின்றது, தொழிலும் கூட நஷ்டம் ஏற்படுகிறது என்று கூறுவார்கள். ஞானத்தில் வந்ததிலிருந்து தான் தடைகள் ஏற்படுகிறது என நினைக்க வேண்டாம் என பாபா கூறுகிறார். இவ்வாறு உலகத்தில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இதில் பயப்பட வேண்டாம். சில நேரம் சுக்கிர திசை, சில நேரம் இராகு, சில நேரம் வேறு ஏதாவது திசை அமர்கிறது. போகப்போக வெறுத்துப் போகிறார்கள். ராகுவின் தசை கடுமையானதாகும். மாயா சாப்பிட்டு விடுகிறது என்றால் கருப்பிலும் கருப்பாகி விடுகிறார்கள். மாயா அடி கொடுத்து ஒரேயடியாக முகத்தைக் கருப்பாக்கி விடுகிறது. மாயா கூட வெற்றி அடைகிறது. குழந்தைகள் மட்டுமே வெற்றி அடைந்ததால் உடனடியாக இராஜ்யம் ஸ்தாபனை ஆகிவிடும். ஆசிரியரை மறந்து விட்டால் மாயா அடி கொடுக்கிறது. இப்படிப்பட்ட ஆன்மீக பிரியதர்ஷனை பிரிய தர்ஷினி மறந்து விடுகிறார். இது அதிசயம் அல்லவா! நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. யோகபலத்தினால் பதீத உலகத்தை பாவனமாக மாற்றுவதில் பாபாவிற்கு உதவியாளர் ஆக வேண்டும். நினைவு யாத்திரையில் ஓய்வெடுக்க கூடாது. எதிரில் இருப்பவர் தனது சரீரத்தை மறக்கும் அளவிற்கு நினைவு இருக்க வேண்டும்.

 

2. ஸ்ரீமத்தில் ஒரு போதும் சந்தேகத்தை எழுப்பி தனது மனம் சொல்லும் வழியில் நடக்கக் கூடாது. ஒவ்வொரு விஷயத்திலும் ஆலோசனை கேட்டு அதில் தனக்கு நன்மை இருக்கிறது எனப் புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்.

 

வரதானம்:

தனது சூட்சும சக்திகளை படைப்புக் காரியத்தில் ஈடுபடுத்தக்கூடிய மாஸ்டர் படைப்பாளர் ஆகுக.

 

எவ்வாறு உங்களுடைய படைப்பான விஞ்ஞானிகள் விஸ்தாரத்தை சாரத்தில் அடக்கிக்கொண்டு இருக்கிறார்கள். மிகவும் சூட்சுமமான மற்றும் சக்திசாலியான விநாசத்திற்கான சாதனங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறே நீங்கள் மாஸ்டர் படைப்பாளர் ஆகி தன்னுடைய சூட்சும சக்திகளை படைப்புக் காரியத்தில் ஈடுபடுத்துங்கள். உங்களிடம் அனைத்தையும் விட மகான் சக்திகளான சிரேஷ்ட எண்ணங்களின் சக்தி, சுப விருத்தியின் சக்தி, அன்பு மற்றும் சகயோகம் நிறைந்த திருஷ்டி ஆகியவை உள்ளன. எனவே, இந்த சூட்சும சக்திகள் மூலம் தனது வம்சத்தினரின் ஆசைகளின் தீபத்தை ஏற்றி அவர்களை சரியான இலக்கை அடையச் செய்யுங்கள்.

 

சுலோகன்:

எங்கே தூய்மை மற்றும் இனிமை உள்ளதோ, அங்கே சேவையில் வெற்றி உள்ளது.

 

ஓம்சாந்தி