19.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! சதா பாத்திரம் அறிந்து தானம் செய்ய வேண்டும், நேரத்தை வீணாக்கக் கூடாது. கேட்கும் நேரத்தில் அவர்களது மனதின் ஓட்டம் (எண்ணம்) எங்கு செல்கிறது? என்று ஒவ்வொருவரின் நாடியைப் பாருங்கள்.

 

கேள்வி:

தூய்மையான உலகம் செல்வதற்காக குழந்தைகளாகிய நீங்கள் மிக உயர்ந்த (கடுமையான) பத்தியம் கடைபிடிக்கிறீர்கள், உங்களது பத்தியம் என்ன?

 

பதில:

இல்லறத்தில இருந்து கொண்டு தாமரை மலர் போன்று இருப்பது தான் அனைத்தையும் விட மிக உயர்ந்த (கடினமான) பத்தியம் ஆகும். எல்லையற்ற முழு பழைய உலகை தியாகம் செய்வது தான் நமது தியாகமாகும். ஒரு கண்ணில் இனிய வீடு, மற்றொரு கண்ணில் இனிய இராஜ்யம் - இந்த பழைய உலகைப் பார்த்தும் பார்க்காமல் இருக்க வேண்டும். இது மிகப் பெரிய பத்தியமாகும். இந்த பத்தியத்தின் மூலம் தூய்மையான உலகிற்குச் சென்று விடுவீர்கள்.

 

பாடல:

மனிதர்களே பொறுமையாக இருங்கள்......

 

ஓம்சாந்தி.

பாட்ட கேட்டதும் குழந்தைகளுக்கு குஷி அதிகரித்து விட வேண்டும். ஏனெனில் உலகில் துக்கம் இருக்கவே செய்கிறது. மனிதர்கள் நாஸ்திகர்கள் அதாவது தந்தையை அறியவில்லை. இப்பொழுது நீங்கள் நாஸ்திகனிலிருந்து ஆஸ்திகனாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நமது சுகமான நாட்கள் வந்து கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் முதலில் தனது அறிமுகம் அதாவது நாம் ஏன் தங்களை பிரம்மா குமார், குமாரி என்று கூறிக் கொள்கிறோம்? என்று கூறுங்கள். பிரம்மா பிரஜாபிதாவாக, சிவனின் குழந்தையாக இருக்கிறார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்று அந்த நிராகாரமானவர் தான் அழைக்கப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சங்கர் அவரது குழந்தைகள் ஆவர். விஷ்ணு மற்றும் சங்கரை ஒருபொழுதும் பிரஜாபிதா என்று கூறுவது கிடையாது. பிரஜாபிதா பிரம்மா இங்கு தான் இருக்கிறார். இந்த கருத்தை நல்ல முறையில் தாரணை செய்யுங்கள். லெட்சுமி நாராயணன், இராதா கிருஷ்ணரை பிரஜாபிதா என்று கூறுவது கிடையாது. பிரஜாபிதா என்ற பெயர் மிகவும் பிரபலமானது. இந்த பிரஜாபிதா சாகாரத்தில் (சரீரத்தில்) இருக்கிறார். சொர்க்கத்தைப் படைப்பவர் பரம்பிதா பரமாத்மா சிவன் ஆவார். சொர்க்கத்தைப் படைப்பவர் பிரம்மா அல்ல, நிராகார பரமாத்மா வந்து தான் பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் சொர்க்கத்தைப் படைக்கிறார். அவருக்கு குழந்தைகளாகிய நாம் பலர் இருக்கிறோம். ஆத்மாக்கள் தான் பரமபிதா சிவனின் குழந்தைகள் ஆகும். புரிய வைப்பதற்கு மிக நல்ல வழிமுறை தேவை. நமக்கு அவர் இராஜயோகம் கற்பிக்கிறார் என்று கூறுங்கள். பிரம்மாவின் மூலம் சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார். ஆக முதலில் இந்த பிரம்மா கேட்கிறார். ஜெகதம்பாவும் கேட்கிறார். நாம் பி.கு வாக இருக்கிறோம். கன்னியா என்றாலே 21 குலத்தை முன்னேற்றுபவர், 21 பிறவிக்கான சுகம் கொடுப்பவர் என்று பாடப்பட்டிருக்கிறது. நாம் பரம்பிதா பரமாத்மாவிடமிருந்து 21 பிறவிகள் சத்யுகம், திரேதாவில் சுகத்திற்கான ஆஸ்தியை அடைகிறோம். உண்மையில் சத்யுகம், திரேதாவில் பாரதம் சதா சுகமானதாக இருந்தது, ஆக அவர் நமது தந்தையாவார், இவர் நமது மூத்த சகோதரர் ஆவார். யாருக்கு இவ்வளவு குழந்தைகள் உள்ளனரோ அவருக்கு எந்த கவலையும் இல்லை. அவருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றனர்! என்று. நமக்கு பிரம்மாவின் மூலம் சிவபாபா இராஜயோகம் கற்பிக்கின்றார். அந்த எல்லையற்ற தந்தையிடமிருந்து நமக்கு ஆஸ்தி கிடைக்கிறது. முழு உலகமும் தூய்மை இழந்து விட்டதாக இருக்கிறது, இதை தூய்மை ஆக்குபவர் ஒரே ஒரு தந்தை ஆவார். பழைய உலகை மாற்றக் கூடியவர், சொர்க்கத்தைப் படைப்பவர் அந்த சத்குரு ஆவார். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஆவார். புது உலகில் லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருக்கும். பாரதத்தில் எந்த தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்ததோ, அந்த தேவதைகள் தான் 84 பிறவிகள் எடுக்கின்றன. பிறகு வர்ணங்களையும் கூற வேண்டும். முன் கூட்டியே நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விசயங்களை கவனத்துடன் நன்றாகக் கேளுங்கள் என்று கூறுங்கள். புத்தியை அலைய விடாதீர்கள். சகோதரர்களே, சகோதரிகளே நீங்கள் அனைவரும் உண்மையில் சிவனின் குழந்தைகள். பிரஜாபிதா பிரம்மா முழு வம்சத்திற்குத் தலைவராக இருக்கிறார். பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர்களாகிய நாம் அவரிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். யோக பலத்தின் மூலம் உலக இராஜ்யத்தை அடைகிறோம், புஜ பலத்தினால் அல்ல. நாம் வீடுவாசலை விடுவது கிடையாது. நாம் நமது வீட்டில் தான் இருக்கிறோம். மனிதனிலிருந்து தேவதை ஆகக் கூடிய பள்ளி இதுவாகும். எந்த மனிதனும் தேவதைகளாக ஆக்க முடியாது. இந்த உலகமே தூய்மை அற்றதாகும். தண்ணீர் கங்கை பதீத பாவனி (தூய்மை படுத்தக் கூடியது) கிடையாது. அடிக்கடி அதில் குளிப்பதற்குச் செல்கின்றனர், தூய்மை ஆவது கிடையாது. இதே போன்று தான் இராவணனின் உதாரணமும் இருக்கிறது. அடிக்கடி எரித்துக் கொண்டே இருக்கின்றனர், இராவணன் இறப்பதே கிடையாது. இந்த இராவணனின் போஸ்டரையும் (சுவரொட்டி) கொண்டு செல்ல வேண்டும். பெரிய இடங்களுக்குச் செல்கின்ற பொழுது ஆல்பத்தையும் (பட விளக்க புத்தகம்) கொண்டு செல்ல வேண்டும். இவர்கள் அனைவரும் குழந்தைகள், தூய்மைக்கான உறுதிமொழி எடுத்திருக்கின்றனர். உண்மையில் அனைவரும் பிரம்மாவின் குழந்தைகள் ஆவர். பிரஜாபிதா பிரம்மா வம்சத்தின் தலைவராக இருக்கிறார். இந்த நேரத்தில் நடைமுறையில் நாம் பிரம்மா குமார், குமாரிகளாக இருக்கிறோம், நீங்களும் தான், ஆனால் நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. இப்பொழுது உலகில் உண்மையான பிராமணர்கள் யாரும் இல்லை. உண்மையான பிராமணர்கள் நாம் தான். இராஜ்யமும் நாம் தான் அடைகிறோம். பிறகு இது பிராமணர்களின் வம்சமாகும். பிராமணர்கள் குடுமி போன்றவர்கள். கிருஷ்ணர் பகவான் கிடையாது என்று குழந்தைகள் புரிய வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர் முழு 84 பிறவிகள் எடுக்கிறார். 84 பிறவிகள் முழுமையாக எடுத்த பின்பு மீண்டும் தேவதையாக ஆக வேண்டும். யார் ஆக்குவது? தந்தை தான் ஆக்குகின்றார். நாம் அவரிடமிருந்து இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அவருக்குத் தான் ஏகோங்கார் (ஒளி வடிவமானவர்) என்று மகிமை பாடப்படுகிறது. அவர் நிராகாராக, நிர்அகங்காரியாக இருக்கிறார். அவர் வந்து சேவை செய்ய வேண்டியிருக்கிறது. தூய்மை இல்லாத உலகில், தூய்மையற்ற சரீரத்தில் வருகின்றார். இப்பொழுது அதே கீதை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகாபாரத யுத்தம் நடைபெற்றது. அனைவரும் கொசுக்களைப் போல் சென்றிருந்தனர். இப்பொழுது அதே நேரம் ஆகும். பரம்பிதா பரமாத்மா சிவ பகவானின் மகாவாக்கியம், அவர் படைப்பவர். சொர்க்கத்தில் லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. சிருஷ்டியை சதோ பிரதானமாக ஆக்குவது ஒரு தந்தையின் காரியமாகும். நாம் அவரை பாபா பாபா என்று கூறுகிறோம். அவர் அவசியம் வருகின்றார், சிவராத்திரியும் இருக்கிறது. இதன் பொருளையும் புரிய வைக்க வேண்டும். கருத்துக்களைக் குறிப்பெடுத்து பிறகு தாரணை செய்ய வேண்டும். கருத்துக்கள் புத்தியில் இருக்க வேண்டும். கன்னியாக்களின் புத்தி நன்றாக இருக்கிறது. குமாரிகளின் பாதங்களைக் கழுவுகின்றனர். குமார் மற்றும் குமாரி இருவரும் தூய்மையாக இருக்கின்றனர். பிறகு ஏன் குமாரிக்கு மட்டும் புகழ் பாடப்படுகிறது? ஏனெனில் இப்பொழுது உங்களது பெயர் அதாவது கன்னிகைகள் என்றாலே 21 குலத்தை முன்னேற்றுபவர் என்று புகழ் பாடப்படுகிறது. நாம் பாரதத்திற்கு ஆன்மீக சேவை செய்கிறோம். நமது ஆசிரியர், உதவியாளர் பரம்பிதா பரமாத்மா சிவன் ஆவார். யோக பலத்தின் மூலம் அவரிடமிருந்து நாம் சக்தி அடைகிறோம், அதன் மூலம் நாம் 21 பிறவிகளுக்கு சதா ஆரோக்கியமானவர்களாக ஆகிறோம். இது உத்திரவாதம் ஆகும். கலியுகத்தில் அனைவரும் நோயாளிகளாக இருக்கின்றனர், ஆயுளும் குறைவாக இருக்கிறது. சத்யுகத்தில் இவ்வளவு நீண்ட ஆயுளுடையவர்கள் எங்கிருந்து வந்தனர்? இந்த இராஜ யோகத்தின் மூலம் இவ்வளவு நீண்ட ஆயுளுடையவர்களாக ஆகின்றனர். அங்கு திடீர் மரணம் ஏற்படாது. ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுப்பர். இது பழைய சரீரம் ஆகும். சிவபாபாவின் நினைவில் இருந்து இந்த தேக சகிதமாக தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் மறந்து விட வேண்டும். புத்தியினால் நாம் எல்லையற்ற தியாகம் செய்கிறோம். இது நமது புத்தியோகத்தின் ஆன்மீக யாத்திரை ஆகும். அந்த உலகாய யாத்திரையை மனிதர்கள் கற்றுக் கொடுக்கின்றனர். புத்தி யாத்திரை தந்தையைத் தவிர வேறு யாரும் கற்றுக் கொடுக்க முடியாது. இந்த இராஜயோகம் கற்பவர்கள் தான் சொர்க்கத்திற்கு வருவார்கள். இப்பொழுது மீண்டும் நாற்று நடப்படுகிறது. நாம் அனைவரும் அந்த தந்தையின் குழந்தைகள், குழந்தைகளாகிய நமக்கு சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. இந்த தாதாவும் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி அடைகிறார். நீங்களும் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொள்ளுங்கள். இது மிகப் பெரிய மருத்துவமனையாகும். நாம் 21 பிறவிகளுக்கு ஒருபொழுதும் நோயாளிகளாக ஆகமாட்டோம். நாம் பாரதத்திற்கு உண்மையான சேவை செய்து கொண்டிருக்கிறோம், அதனால் தான் சிவசக்தி சேனை என்ற புகழ் இருக்கிறது.

 

தந்தை கூறுகின்றார் - நினைவின் மூலம் தங்களது விகர்மங்களை விநாசம் செய்யும் பொழுது ஆத்மா தூய்மையானதாக ஆகிவிடும், மேலும் ஞானத்தை தாரணை செய்வதன் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி இராஜாவாக ஆவீர்கள். நாம் தூய்மையாக ஆகின்ற பொழுது லெட்சுமி அல்லது நாராயணரையும் கூட மணமுடிக்க முடியும். சர்வகுண சம்பன்னம், சம்பூர்ண நிர்விகாரிகளாக இங்கு ஆகவில்லையெனில் லெட்சுமி நாராயணனை எவ்வாறு அடைய முடியும்? அதனால் தான் லெட்சுமி நாராயணனை அடைவதற்குத் தகுதியானவனாக ஆகி இருக்கிறேனா? என்று தன் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் என்று கூறப்படுகிறது. முழுமையாக நஷ்டமோகா ஆகவில்லையெனில் லெட்சுமியை அடைய முடியாது, பிறகு பிரஜையாகச் சென்று விடுவீர்கள். சிவபாபாவும் பரந்தாமத்திலிருந்து வர வேண்டியிருக்கிறது. அவசியம் தூய்மை இல்லாத உலகிற்கு வந்து தூய்மை ஆக்கி அழைத்துச் செல்வார். இங்கு நாம் பத்தியமும் அதிகம் கடைபிடிக்கிறோம். நமது ஒரு கண்ணில் இனிய வீடு மேலும் மற்றொன்றில் இனிய இராஜ்யம் இருக்கிறது. நாம் முழு உலகையும் தியாகம் செய்கிறோம். வீடு, இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று தூய்மையாக இருக்கிறோம். வானப்பிரஸ்த நிலையில் இருக்கிறோம், முக்திதாமத்திற்காக முயற்சி செய்யலாம் என்று வயோதிகர்கள் நினைக்கின்றனர். இந்த நேரத்தில் அனைவருக்கும் வானபிரஸ்த நிலையாகும். தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. துக்கதாமத்தை மறந்து விட வேண்டும். இது தான் புத்திக்கான தியாகமாகும். நாம் பழைய உலகை புத்தியினால் மறந்து புது உலகை நினைவு செய்கிறோம். பிறகு கடைசி நிலை நல்ல நிலையாக ஆகிவிடுகிறது. இது அனைத்தையும் விட பெரிய இறை தந்தையின் பல்கலைக்கழகமாகும். பகவானின் மகாவாக்கியம் - நான் இராஜயோகம் கற்பித்து மனிதனிலிருந்து தேவதைகளாக ஆக்குகிறேன். இவ்வாறு புரிய வைக்க வேண்டும். நாம் என்ன கூறுகிறோமோ அதை நீங்கள் அமர்ந்து கேளுங்கள் என்று கூறுங்கள். இடையில் அவர்கள் கேள்வி கேட்கின்ற பொழுது அந்த தொடர்ச்சி துண்டிக்கப்பட்டு விடுகிறது. நாம் உங்களுக்கு முழு சிருஷ்டிச் சக்கரத்தின் ரகசியத்தையும் புரிய வைக்கிறோம், சிவபாபாவிற்கு நாடகத்தில் என்ன பாகம் இருக்கிறது? லெட்சுமி நாராயணன் யார்? அனைவரின் வாழ்க்கை சரித்திரத்தையும் நாம் கூறுகிறோம். ஒவ்வொருவரின் நாடியைப் பார்க்க வேண்டும். அந்த நேரத்தின் மனநிலையைப் பார்க்க வேண்டும் சரியாகக் கேட்கிறார்களா? தோசைக் கல்லாக ஆகி அமர்ந்திருக்க வில்லை தானே? இங்கு அங்கு என்று பார்க்கவில்லை தானே? இங்கு பாபாவும் பார்க்கின்றார் - யார் எதிரில் கேட்டு ஊஞ்சல் ஆடுகின்றனர்? இது ஞான நடனமாகும். அந்தப் பள்ளி சிறியதாக இருக்கும், ஆசிரியரினால் நல்ல முறையில் பார்க்க முடியும், மற்றும் வரிசைக்கிரமமாக அமர வைக்கின்றனர். இங்கு பலர் இருக்கின்றனர், வரிசைக் கிரமமாக அமர வைக்க முடியாது. ஆக யாருடைய புத்தியும் எங்கும் அலையவில்லை தானே? என்று பார்க்க வேண்டியிருக்கிறது. சிரிக்கின்றார்களா? குஷியின் அளவு அதிகரிக்கிறதா? கவனமாக கேட்கின்றனரா? பாத்திரம் பார்த்து தான் செய்ய வேண்டும். நேரத்தை வீணாகச் செலவு செய்யக் கூடாது. நாடி பார்ப்பதிலும் புத்திசாலித்தனம் தேவை. மனிதர்கள் பயப்படுகின்றனர், குறிப்பாக சிந்திக்காரர்கள் பி.கு வின் மாயாஜாலம் ஏற்பட்டு விடக் கூடாது என்று நினைக்கின்றனர், ஆகையால் எதிரில் பார்ப்பதும் கிடையாது.

 

பிராமணர்களாகிய நீங்கள் தான் திரிகாலதர்சிகளாக ஆகிறீர்கள், பிறகு வர்ணங்களின் ரகசியங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிவபாபா கூறுகின்றார். நாம் எப்படி இருந்தோம் (ஹம் சோ சோ ஹம்) மீண்டும் அது போல ஆகி விடுவோம் என்பதன் பொருளையும் புரிய வைக்க வேண்டும். ஆத்மாவாகிய நான் தான் பரமாத்மா என்று கூறுவது தவறாகும். சிலர் பிரம்மத்தையும் ஏற்றுக் கொள்பவர்களாக இருப்பர். அஹம் பிரம்மாஸ்மி என்று கூறுகின்றனர். மாயை என்பது 5 விகாரங்களாகும். நாம் பிரம்மத்தை ஏற்றுக் கொள்கிறோம். பிரம்மம் என்பது மகாதத்துவம் ஆகும். அது நாம் வசிக்கும் இடமாகும். எவ்வாறு இந்துஸ்தானில் இருப்பவர்கள் தனது தர்மத்தை இந்து என்று கூறிவிட்டனரோ, அவ்வாறு அவர்களும் பிரம்ம தத்துவத்தை நான் தான் பிரம்மம் என்று கூறிவிட்டனர். தந்தையின் மகிமை தனிப்பட்டதாகும். சர்வ குண சம்பன்னம், 16 கலைகள் நிறைந்தவர்கள் ..... இந்த மகிமை தேவதைகளுடையது. ஆத்மா எப்பொழுது சரீரத்துடன் இருக்கிறதோ அப்பொழுது அதற்கு மகிமை இருக்கிறது. ஆத்மா தான் தூய்மை இழக்கிறது மற்றும் தூய்மையாக ஆகிறது. ஆத்மாவை நிர்லேப் (எதுவும் ஒட்டாது) என்று கூற முடியாது. இவ்வளவு சிறிய ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் இருக்கிறது. பிறகு அதை நிர்லேப் என்று எப்படி கூற முடியும்?

 

இப்பொழுது பாபா அமைதியை ஸ்தாபனை செய்கிறார் எனில், குழந்தைகளாகிய நீங்கள் பாபாவிற்கு என்ன பரிசு கொடுக்கிறீர்கள்? அவர் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு சொர்க்க இராஜ்யத்தைப் பரிசாகக் கொடுக்கிறார். நீங்கள் பாபாவிற்கு என்ன கொடுக்கிறீர்கள்? யார் எவ்வளவு தந்தைக்கு பரிசு கொடுக்கிறார்களோ பிறகு அவ்வளவு தந்தையிடமிருந்து அடைந்து விடுகின்றனர். முதன் முதலில் இவர் பரிசு கொடுத்திருக்கிறார். சிவபாபா வள்ளலாக இருக்கிறார். இராஜாக்கள் ஒருபொழுதும் இவ்வாறு கை நீட்டி வாங்கமாட்டார்கள். அவர் அன்ன தாதா என்று கூறப்படுகிறார். மனிதர்களை வள்ளல் என்று கூற முடியாது. நீங்கள் சந்நியாசி போன்றவர்களுக்குக் கொடுக்கிறீர்கள், இருப்பினும் கைமாறாக பலன் கொடுப்பது வள்ளலாகிய சிவபாபா தான். அனைத்தும் ஈஸ்வரன் கொடுத்தாகக் கூறுகின்றனர், ஈஸ்வரன் தான் எடுத்துக் கொள்கிறார். பிறகு யாராவது இறந்து விட்டால் ஏன் அழுகிறீர்கள்? ஆனால் அவர் அடைவதும் கிடையாது, கொடுப்பதும் கிடையாது. லௌகீக தாய் தந்தை தான் பிறப்பு கொடுக்கின்றனர். பிறகு யாராவது இறந்து விட்டால் அவர்களுக்குத் தான் துக்கம் ஏற்படுகிறது. ஒருவேளை ஈஸ்வரன் தான் கொடுத்தார், ஈஸ்வரனே எடுத்துக் கொண்டார் எனில் பிறகு ஏன் துக்கம் ஏற்பட வேண்டும்? பாபா கூறுகின்றார் - நான் சுகம், துக்கத்திலிருந்து விடுபட்டவன். ஆக இந்த தாதா அனைத்தையும் கொடுத்து விட்டார், அதனால் தான் முழு பரிசும் எடுத்துக் கொண்டிருக்கிறார். கன்னியாக்களிடம் எதுவும் கிடையாது. ஒருவேளை அவர்களுக்கு தாய் தந்தை கொடுக்கிறார்கள் எனில், அதை சிவபாபாவிற்கு கொடுத்து விடலாம். எவ்வாறு மம்மாவும் ஏழையாகஇருந்தார், பிறகு எவ்வளவு வேகமாகச் சென்றார் என்பதைப் பாருங்கள். உடல், மனம், பொருள் மூலமாக சேவை செய்து கொண்டிருக்கிறார்.

 

நாம சுகதாமம் செல்கிறோம் சாந்திதாமத்தின் வழியாக என்பதை நீங்கள் அறிவீர்கள். எதுவரை நாம் தந்தையிடம் செல்லவில்லையோ மாமியார் வீட்டிற்கு எப்படி செல்ல முடியும்? தாய் வீட்டில் அமர்ந்திருக்கிறீர்கள். முதலில் தந்தையிடம் செல்வீர்கள், பிறகு மாமியார் வீட்டிற்குச் செல்வீர்கள். இது சோக வனமாகும். சத்யுகம் அசோக வனமாகும். நல்லது.

 

இனிமையிலும இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. வானபிரஸ்த நிலையில் இருக்கும் நாம் இனிய வீடு மற்றும் இனிய இராஜ்யம் இரண்டையும் நினைக்க வேண்டும், மற்ற அனைத்தையும் புத்தியினால் மறந்து விட வேண்டும். முழு நஷ்டமோகா ஆக வேண்டும்.

 

2. புத்தியினால் எல்லையற்ற தியாகம் செய்து ஆன்மீக யாத்திரை செய்ய வேண்டும். ஸ்ரீமத் படி தூய்மையாகி பாரதத்திற்கு உண்மையான சேவை செய்ய வேண்டும்.

 

வரதானம :

மனதின குஷி மூலம் நோய்களை தூரமாக விரட்டிவிடக் கூடிய சதா ஆரோக்கியமானவர் ஆகுக.

 

மனம குஷியாக இருந்தால் உலகம் குஷியாக இருக்கும். மனதின் நோயினால் சரீரமும் கூட நோயினால் வெளிறிப் போகும் எனச் சொல்லப் படுகின்றது. மனம் சரியாக இருக்குமானால் சரீரத்தின் நோயும் கூட அனுபவமாகாது. சரீரம் நோயில் இருந்தாலும் கூட மனதால் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஏனென்றால் உங்களிடம் குஷி என்ற டானிக் அதிகமாக உள்ளது. இந்த டானிக் நோயை விரட்டி விடும், மறக்கடித்து விடும். ஆக, மனம் குஷியாக இருந்தால் உலகம் குஷியில் இருக்கும், வாழ்க்கை குஷியாக இருக்கும். ஆகவே சதா ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்.

 

சுலோகன :

சமயத்தின மகத்துவத்தை அறிந்து கொள்வீர்களானால் அனைத்துக் கஜானாக்களாலும் நிரம்பியவர் ஆவீர்கள்.

 

ஓம்சாந்தி