29.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! கட்டளைப் படி நடப்பவர் ஆகுங்கள். தந்தையின் முதல் கட்டளையாவது - தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்பதாகும்.

 

கேள்வி:

ஆத்மா என்ற பாத்திரம் ஏன் அசுத்தமாக ஆகி உள்ளது? அதைத் தூய்மைப்படுத்துவதற்கான சாதனம் என்ன?

 

பதில்:

வீணான விஷயங்களைக் கேட்டும் கூறியும் ஆத்மா என்ற பாத்திரம் அசுத்தமாக ஆகி விட்டுள்ளது. இதைத் தூய்மைப்படுத்துவதற்காக தந்தையின் கட்டளையாவது, தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள்.. .. ஒரு தந்தை கூறுவதைக் கேளுங்கள். தந்தையை மட்டுமே நினைவு செய்யுங்கள் பின் ஆத்மா என்ற பாத்திரம் தூய்மையானதாக ஆகி விடும். ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே பாவனமாக ஆகி விடும்.

 

பாடல்:

யார் தலைவனுடன் கூட இருக்கிறார்களோ .. .. ..

 

ஓம் சாந்தி.

ஓம் சாந்தி என்பதன் பொருளோ குழந்தைகள் புரிந்துள்ளார்கள். குழந்தைகளுக்கு அடிக்கடி (பாயிண்ட்ஸ்) குறிப்புக்கள் கொடுக்கப்படுகின்றன. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று அடிக்கடி கூறப்படுகிறது. இங்கு எந்த ஒரு மனிதனின் நினைவும் இல்லை. மனிதர்கள் மனிதர்களின் அல்லது ஏதாவது ஒரு தேவதையின் நினைவூட்டுவார்கள். யாருமே பரலோக தந்தையின் நினைவூட்ட முடியாது. ஏனெனில் தந்தையை யாருமே அறியாமல் உள்ளார்கள். இங்கு தன்னை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்று அடிக்கடி கூறப்படுகிறது. எப்படி தந்தைக்கு குழந்தைகள் பிறக்கும் பொழுது, இது(குழந்தை) தந்தையிடம் ஆஸ்தி எடுக்க வந்துள்ளது என்று எல்லோரும் புரிந்து கொள்ள முடிகிறது. பிறகு அவருக்கு தந்தை மற்றும் ஆஸ்தி நினைவில் இருக்கும். இங்கும் அவ்வாறு தான். அவசியம் குழந்தைகள் தந்தையை அறியாமல் உள்ளார்கள். எனவே தந்தை வர வேண்டி உள்ளது. யார் தந்தையுடன் கூட இருக்கிறார்களோ அவர்களுக்காக இந்த ஞான மழை ஆகும். வேத சாஸ்திரங்களில் இருக்கும் ஞானம் எல்லாமே பக்தி மார்க்கத்தின் பொருள்கள் ஆகும். ஜபம், தவம், தானம், புண்ணியம், சந்தியா, காயத்ரி ஆகிய என்னவெல்லாம் செய்கிறார்களோ அவை எல்லாமே பக்தி மார்க்கத்தின் பொருள்கள் ஆகும். சந்நியாசிகள் கூட பக்தர்கள் ஆவார்கள். தூய்மையின்றி யாருமே சாந்தி தாமத்திற்குச் செல்ல முடியாது. எனவே அவர்கள் வீடு வாசலை விட்டு விட்டு செல்கிறார்கள். ஆனால் முழு உலகமோ இவ்வாறு செய்ய மாட்டார்கள். அவர்களுடைய இந்த ஹடயோகம் கூட நாடகத்தில் பொருந்தி உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க கல்பம் கல்பமாக ஒரே ஒரு முறை வருகிறேன்.என்னுடையது வேறு எந்த அவதாரமும் ஆவதில்லை. "ரி-இன்கார்னேஷன் ஆஃப் காட்" (இறைவனின் அவதாரம்). அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். பிறகு ஜகதம்பா மற்றும் ஜகத் பிதாவின் அவதாரம் கூட அவசியம் ஆக வேண்டும். உண்மையில் (ரி-இன்கார்னேஷன்) அவதாரம் என்ற வார்த்தை தந்தைக்கு மட்டுமே பொருந்துகிறது. சத்கதி தாதா ஒரே ஒரு தந்தை ஆவார். பார்க்கப்போனால் ஒவ்வொரு பொருளும் மீண்டும்ரி-இன்கார்னேட் அடைகிறது. எப்படி இப்பொழுது ப்ரஷ்டாச்சாரம் (இழிந்த நிலை) உள்ளது என்றால் ப்ரஷ்டாச்சாரம் மறுபடியும் ஆகி (ரி-இன்கார்னேட்) உள்ளது என்பார்கள். மீண்டும் ப்ரஷ்டாச்சாரம் ஆகி உள்ளது. மறுபடியும் சிரேஷ்டாச்சாரம் - உயர்ந்த நிலை வரும். ஒவ்வொரு பொருளும் ரி-இன்கார்னேட் - அடைகிறது. இப்பொழுது பழைய உலகமாக உள்ளது. பிறகு புதிய உலகம் வரும். புதிய உலகிற்குப் பின்னர் மீண்டும் பழைய உலகம் வரும் என்பார்கள். இந்த எல்லா விஷயங்களையும் தந்தை வந்து புரிய வைக்கிறார். இங்கு அமரும் பொழுது "நான் ஆத்மா ஆவேன், என்னை நினைவு செய்யுங்கள் என்று எனக்கு தந்தையின் கட்டளை கிடைத்துள்ளது" என்று எப்பொழுதும் உணர்ந்திருங்கள். குழந்தைகளைத் தவிர வேறு யாருக்குமே தந்தையின் கட்டளை கிடைக்க முடியாது. பிறகு குழந்தைகளுக்குள் ஒரு சிலரோ கட்டளைப்படி நடப்பவர்களாக இருப்பார்கள். ஒரு சிலரோ கட்டளையை ஏற்காதவர்களும் இருப்பார்கள். ஹே ஆத்மாக்களே! நீங்கள் என்னுடன் புத்தியோகத்தை இணையுங்கள் என்று தந்தை கூறுகிறார். தந்தை ஆத்மாக்களிடம் உரையாடுகிறார். வேறு எந்த ஒரு வித்வான், பண்டிதர் ஆகியோர் நான் ஆத்மாக்களிடம் உரையாடுகிறேன் என்று கூறமாட்டார்கள். அவர்களோ ஆத்மாவே பரமாத்மா என்று நினைத்துக் கொண்டு விடுகிறார்கள். அது தவறு ஆகும். சிவபாபா இந்த சரீரத்தின் மூலமாக நமக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். சரீரம் இன்றி செயல்கள் நடக்க முடியாது. முதன் முதலிலோ இந்த நிச்சயம் வேண்டும். நிச்சயம் இல்லை என்றால் எதுவுமே புத்தியில் பதியாது. ஆத்மாக்களாகிய நமது தந்தை அந்த நிராகார பரமபிதா பரமாத்மா ஆவார் மற்றும் சாகாரத்தில் பிரஜாபிதா பிரம்மா ஆவார் மற்றும் நாம் பிரம்மாகுமார் குமாரிகள் ஆவோம் என்ற நிச்சயம் முதலில் இருக்க வேண்டும். சிவனுக்கோ அனைத்து ஆத்மாக்களும் குழந்தைகள் ஆவார்கள். எனவே சிவகுமார் என்று கூறுவார்கள். குமாரி அல்ல. இந்த எல்லா விஷயங்களையும் தாரணை செய்ய வேண்டும். நிரந்தரமாக நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் தான் தாரணை ஆகும். நினைவு செய்வதால் தான் புத்தி என்ற பாத்திரம் தூய்மையாக ஆகும். வீணான விஷயங்களைக்கேட்டு கேட்டு பாத்திரம் அசுத்தமாக ஆகி விட்டுள்ளது. அதைத் தூய்மையாக ஆக்க வேண்டும். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய புத்தி தூய்மையாக ஆகி விடும் என்பது தந்தையின் கட்டளை ஆகும். உங்களது ஆத்மாவில் துரு படிந்துள்ளது. இப்பொழுது தூய்மையாக ஆக வேண்டும். ஆத்மாவில் எதுவும் பதிவதில்லை (நிர்லேப்) என்று சந்நியாசிகள் கூறுகிறார்கள். ஆத்மாவில் தான் துரு படிந்துள்ளது என்று தந்தை கூறுகிறார். ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே தூய்மையாக உள்ளது. இரண்டுமே தூய்மையாக சத்யுகத்தில் மட்டும் தான் இருக்கும். இங்கோ இருக்க முடியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக தூய்மை ஆகிக் கொண்டே செல்கிறீர்கள். இப்பொழுது தூய்மையாக ஆகி விடவில்லை. யாருமே தூய்மையாக இல்லை. எல்லோரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். கடைசியில் வரிசைக்கிரமமாக எல்லோருடைய (ரிஸல்ட்) முடிவுகளும் வெளிப்படும்.

 

தந்தை வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னை நினைவு செய்யுங்கள், தங்களை அசரீரி என்று உணருங்கள் தேஹீ அபிமானி (ஆத்ம உணர்வுடையவர்) ஆகுங்கள் என்று கட்டளையிடுகிறார். முக்கியமான இந்த விஷயத்தை தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. முதல்

இந்த முழு நிச்சயம் இருந்தது என்றால் வெற்றி அடைவீர்கள். நிச்சயம் இல்லை என்றால் வெற்றி அடைய மாட்டீர்கள். நிச்சய புத்தி உடையவர்கள் வெற்றி அடைவார்கள். சந்தேக புத்தி உடையவர்கள் அழிந்து போவார்கள். கீதையில் ஒரு சில வார்த்தைகள் மிகவும் நன்றாக உள்ளன. இதற்கு மாவில் ஒரு துளி உப்பு என்று கூறப்படுகிறது. நான் உங்களுக்கு எல்லா வேத சாஸ்திரங்களின் சாரத்தை, இவற்றில் என்னவெல்லாம் உள்ளது என்பதைப் புரிய வைக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இவை எல்லாமே பக்தி மார்க்கத்தின் வழிகள் ஆகும். இவையும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. இந்த பக்தி மார்க்கம் ஏன் அமைக்கப்பட்டது என்ற இந்த கேள்வி எழ முடியாது. இதுவோ அனாதியாக ஏற்கனவே அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். நீங்கள் கூட இந்த நாடகத்தில் தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் அதிபதி ஆவதற்கான ஆஸ்தியை அநேக முறை எடுத்துள்ளீர்கள் மற்றும் எடுத்துக் கொண்டே இருப்பீர்கள். ஒரு பொழுதும் முடிவு ஏற்பட முடியாது. இந்தச் சக்கரம் அனாதியாக சுற்றிக் கொண்டே இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது துக்க தாமத்தில் உள்ளீர்கள். பிறகு சாந்தி தாமத்திற்குச் செல்வீர்கள், சாந்தி தாமத்திலிருந்து சுக தாமத்திற்குச் செல்வீர்கள். பிறகு துக்க தாமத்தில் வருவீர்கள் - இந்த அனாதி சக்கரம் நடந்து கொண்டே இருக்கும். சுக தாமத்திலிருந்து துக்க தாமம் வருவதற்கு குழந்தைகளாகிய உங்களுக்கு 5 ஆயிரம் வருடங்கள் பிடிக்கின்றது. அதில் நீங்கள் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். எல்லோரும் எடுக்க முடியாது. இது எல்லையில்லாத தந்தை உங்களுக்கு நேரிடையாகப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற குழந்தைகள் பின்னால் முரளி கேட்பார்கள் அல்லது படிப்பார்கள் அல்லது (டேப்) ஒலிப்பதிவு நாடாவில் கேட்பார்கள். டேப் கூட எல்லோரும் கேட்க முடிவதில்லை. எனவே முதன் முதலில் குழந்தைகளாகிய நீங்கள் எழுந்தாலும் அமர்ந்தாலும் இந்த நினைவில் இருக்க வேண்டும். மனிதர்களோ மாலை உருட்டியபடியே இராம நாமத்தை ஜபிக்கிறார்கள். ருத்ராட்ச மாலை என்று கூறுவார்கள் அல்லவா? இப்பொழுது ருத்ர என்பவரோ பகவான் ஆவார்.பிறகு இந்த மாலையில் மேரு மணி சேர்ந்து உள்ளது. அதுவோ விஷ்ணுவின் ஜோடி சொரூபம் ஆகும். அவர்கள் யார்? இந்த தாய் தந்தை பிறகு விஷ்ணுவின் இரண்டு ரூபம் இலட்சுமி நாராயணர் ஆகிறார்கள். எனவே இவர்களுக்கு மேரு என்று கூறப்படுகிறது. சிவபாபா மலர் ஆவார். பிறகு இந்த மம்மா பாபா மேரு ஆவார்கள். அவர்களுக்கு தாய் தந்தை என்று கூறுகிறீர்கள். விஷ்ணுவிற்கு தாய் தந்தை என்று கூற முடியாது. இலட்சுமி நாராயணருக்கு தாய் தந்தை என்றோ அவர்களுடைய குழந்தைகள் தான் கூறுவார்கள். தற்காலத்திலோ எல்லோருக்கும் முன்னால் சென்று "த்வமேவ மாதாஸ்ச பிதா".. .. என்கிறார்கள். அவ்வளவு தான், யாரோ ஒருவர் மகிமை செய்தார் என்றால் அவருக்குப் பின்னால் எல்லோரும் பின்பற்ற முற்படுகிறார்கள். இது இருப்பதே அசத்தியமான உலகமாக. கலியுகத்திற்கு அசத்தியமானது என்று கூறப்படுகிறது. சத்யுகத்திற்கு சத்தியமானது என்று கூறப்படுகிறது. அங்கு ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே தூய்மையாக இருக்கும். சத்யுகத்தில் கிருஷ்ணர் வெண்மையாக (தூய்மையாக) இருப்பார். பின் கடைசி பிறவியில் அவரது ஆத்மா கருமையாக (தூய்மையற்றதாக) ஆகி உள்ளது. இந்த பிரம்மா சரஸ்வதி இச்சமயம் கருமையாக உள்ளார்கள் அல்லவா? ஆத்மா கருமையாக ஆகி விட்டுள்ளது. பின் அதன் நகையும் கருமையாக ஆகி விட்டுள்ளது. தங்கத்தில் தான் துரு படுகிறது. அதன் மூலம் அமைக்கப்படும் நகை கூட கலப்படமானதாக இருக்கும். சத்யுகத்தில் தேவி தேவதைகளின் அரசாங்கம் இருக்கும் பொழுது இந்த பொய் (கலப்படம்) இருக்காது. அங்கோ தங்க அரண்மனைகள் அமைக்கப்படும். பாரதம் தங்க பறவையாக இருந்தது. இப்பொழுதோ வெளிப் பகட்டு மட்டுமே உள்ளது. அப்பேர்ப்பட்ட பாரதத்தை மீண்டும் சொர்க்கமாக தந்தை தான் அமைக்க முடியும்.

 

ஸ்ரீமத் பகவானுவாச என்று உள்ளது அல்லவா! என்று தந்தை புரிய வைக்கிறார். கிருஷ்ணரோ தெய்வீக குணங்கள் உடையவர் ஆவார். இரண்டு கைகள், இரண்டு கால்கள் உடையவர் ஆவார். படங்களிலோ சில இடங்களில் நாராயணருக்கு, சில இடங்களில் இலட்சுமிக்கு 4 கைகள் காண்பித்துள்ளார்கள். ஒன்றுமே புரிந்து கொள்வது இல்லை. ஓம் என்ற வார்த்தையும் கூறுகிறார்கள். ஓம் என்றால் "நான் (காட்) கடவுள், எங்கு பார்த்தாலும் கடவுளே கடவுள்" என்று பொருள் கூறுகிறார்கள். ஆனால் இதுவோ தவறு ஆகும். ஓம் என்றால் நான் ஆத்மா. தந்தையும் கூறுகிறார், நான் ஆத்மா. ஆனால் நான் சுப்ரீம் ஆவேன். எனவே எனக்கு பரமாத்மா என்று கூறப்படுகிறது. நான் பரந்தாமத்தில் இருக்கிறேன். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான். பிறகு சூட்சுமவதனத்தில் பிரம்மா, விஷ்ணு, சங்கரனின் ஆத்மா உள்ளது. பிறகு கீழே வந்தீர்கள் என்றால் இது மனித உலகம் ஆகும்.அது தேவதைகளின் உலகம். அது ஆத்மாக்களின் உலகம். அதற்கு மூலவதனம் என்று கூறப்படுகிறது. இந்த விஷயங்கள் புரிந்து கொள்ள வேண்டியது ஆகும். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த அவினாஷி ஞான இரத்தினங்களின் தானம் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் வருங்காலத்தில் செல்வச் செழிப்பு நிறைந்து இரட்டை கிரீடம் உடையவராக ஆகிறீர்கள். பாருங்கள் ஸ்ரீகிருஷ்ணருக்கு இரண்டு கிரீடமும் உள்ளது அல்லவா? பிறகு அதே குழந்தை சந்திர வம்சத்தில் வரும் பொழுது இரண்டு கலை குறைந்து விடுகிறது. பிறகு வைசிய வம்சத்தில் வரும் பொழுது இன்னும் நான்கு கலைகள் குறைந்து போய் விடும். பிறகு ஒளிக் கிரீடம் இல்லாமல் போய் விடும். மற்றது இரத்தினங்கள் பதித்த கிரீடம் இருக்கும். பிறகு யார் நன்றாக தான புண்ணியம் செய்கிறார்களோ அவர்களுக்கு ஒரு பிறவிக்கு நல்ல இராஜ்யம் கிடைக்கிறது. பிறகு அடுத்த பிறவியில் கூட நல்ல தான புண்ணியம் செய்தார்கள் என்றால் பிறகும் இராஜ்யம் கிடைக்க முடியும். இங்கோ நீங்கள் 21 பிறவிகளுக்கு இராஜ்யத்தை அடைய முடியும். உழைப்பு செய்ய வேண்டி உள்ளது. எனவே தந்தை தனது அறிமுகத்தைக் கொடுக்கிறார். " ஏம் சுப்ரீம் ஸோல்" (நான் பரம ஆத்மா ஆவேன்) என்று கூறுகிறார். எனவே அவருக்கு பரமபிதா பரமாத்மா அதாவது பரமாத்மா என்று கூறப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் அந்த சுப்ரீம்- நினைவு செய்கிறீர்கள். நீங்கள் சாலிகிராமங்கள் ஆவீர்கள். அவர் சிவன் ஆவார். சிவனுக்கு பெரிய லிங்கம் மற்றும் சாலிகிராமங்கள் மண்ணால் செய்கிறார்கள். இது எந்த ஆத்மாக்களுக்கான நினைவார்த்தம் அமைக்கிறார்கள் என்பது கூட யாருக்கும் தெரியாது. சிவபாபாவின் குழந்தைகளாகிய நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறீர்கள். எனவே உங்களுக்கு பூஜை ஆகிறது. பிறகு நீங்கள் தேவதை ஆகிறீர்கள். அப்பொழுதும் உங்களுக்கு பூஜை ஆகிறது. சிவபாபாவுடன் சேர்ந்து நீங்கள் இவ்வளவு சேவை செய்கிறீர்கள். எனவே சாலிகிராமங்களுக்கும் பூஜை ஆகிறது. யார் உத்தமத்திலும் உத்தமமான காரியம் செய்கிறார்களோ அவர்களுக்கு பூஜை ஆகிறது மற்றும் கலியுகத்தில் யார் நல்ல காரியம் செய்கிறார்களோ அவர்களுக்கு நினைவார்த்தம் அமைக்கிறார்கள். கல்ப கல்பமாக தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு முழு சிருஷ்டி சக்கரத்தின் இரகசியத்தைப் புரிய வைக்கிறார். அதாவது உங்களை சுயதரிசன சக்கரதாரியாக ஆக்குகிறார். விஷ்ணுவிற்கு சுய தரிசன சக்கரம் இருக்க முடியாது. அவரோ தேவதை ஆகி விட்டார். இந்த ஞானம் முழுவதும் உங்களுக்கு உள்ளது. பிறகு இலட்சுமி நாராயணர் ஆன பிறகு இந்த ஞானம் இருக்காது. அங்கோ எல்லோருமே சத்கதியில் இருப்பார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தை இப்பொழுது தான் கேட்கிறீர்கள். பிறகு இராஜ்யத்தை அடைந்து விடுகிறீர்கள். சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆகி விட்டது என்றால் பிறகு ஞானத்தின் அவசியம் இருக்காது. தந்தை தான் வந்து தனது மற்றும் படைப்பின் முழு அறிமுகத்தை அளிக்கிறார். சந்நியாசிகள் தாய்மார்களை நிந்தனை செய்துள்ளார்கள். ஆனால் தந்தை வந்து தாய்மார்களை உயர்த்துகிறார். இந்த சந்நியாசிகள் இல்லாமல் இருந்திருந்தால் பாரதம் காமச் சிதையில் அமர்ந்து ஒரேயடியாக சாம்பலாகி இருக்கும் என்பதையும் தந்தை புரிய வைக்கிறார். தேவி தேவதைகள் வாம மார்க்கத்தில் விழுந்து விடும் போது, அந்த நேரத்தில் மிகவுமே பலத்த பூகம்பம் ஏற்பட்டு விடுகிறது மற்றும் எல்லாமே கீழே சென்று விடுகிறது. வேறு கண்டங்கள் ஆகியவை இருக்காது. பாரதம் மட்டும் தான் இருக்கும். இஸ்லாமியர்கள் ஆகியோரோ பின்னால் வருகிறார்கள். ஆக அந்த சத்யுகத்தின் பொருட்கள் பின்னால் இங்கு இருப்பது இல்லை. நீங்கள் பார்க்கும் சோமநாத் கோவில் ஒன்றும் வைகுண்டத்தினுடையது கிடையாது. இதுவோ பக்தி மார்க்கத்தில் அமைக்கப்பட்டது. அதை முகம்மது கஜினி ஆகியோர் கொள்ளையடித்தார்கள். மற்றபடி தேவதைகளின் அரண்மனை ஆகிய அனைத்தும் பூகம்பத்தில் மறைந்து போய் விடுகிறது. அப்படி இன்றி கீழே போய் விட்ட அதே அரண்மனைகள் அவ்வாறே மீண்டும் மேலே வந்து விடும் என்பதல்ல. இல்லை. அவைகளோ உள்ளுக்குள்ளேயே இடிந்து நொறுங்கி அழிந்து போய் விடும். பிறகு அதே நேரத்தில் தோண்டும் பொழுது ஏதாவது கொஞ்சம் கிடைக்கிறது. இப்பொழுதோ ஒன்றும் கிடைப்பதில்லை. சாஸ்திரங்களில் இந்த விஷயங்கள் ஒன்றும் இல்லை. ஒரே ஒரு தந்தை தான் சத்கதி தாதா ஆவார். முதன் முதலிலோ இந்த நிச்சயம் வேண்டும். நிச்சயத்தில் தான் மாயை தடை ஏற்படுத்துகிறது. பகவான் எப்படி வருவார் என்கிறார்கள். அடே! சிவஜெயந்தி இருக்கிறது என்றால் அவசியம் வந்திருக்கக் கூடும். நான் எல்லையில்லாத பகல் மற்றும் எல்லையில்லாத இரவின் சங்கமத்தில் வருகிறேன் என்று தந்தை புரிய வைத்துள்ளார். எந்த நேரத்தில் வருகிறேன் என்பது யாருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தை தான் இந்த ஞானம் அளித்துள்ளார் மற்றும் திவ்ய திருஷ்டி மூலமாக இந்தப் படங்கள் ஆகியவற்றைத் தயாரித்துள்ளார். கீதையில் கூட கல்ப விருட்சத்தின் வர்ணனை கொஞ்சம் உள்ளது. நானும் நீங்களும் இப்பொழுது இருக்கிறோம். முந்தைய கல்பத்திலும் இருந்தோம், மேலும் கல்ப கல்பமாக மீண்டும் சந்தித்துக் கொண்டே இருப்போம் என்று குழந்தைகளிடம் கூறுகிறார். நான் கல்ப கல்பமாக உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பேன். எனவே சக்கரமும் நிரூபணம் ஆகிறது. ஆனால் உங்களைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. இது முழு சிருஷ்டி சக்கரத்தின் படம் ஆகும். அவசியம் யாரோ அமைத்திருக்க வேண்டும். தந்தையும் இதன் மீது புரிய வைக்கிறார். குழந்தைகளும் இதன் மீது புரிய வைக்கிறார்கள்.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றிக்கான ஆதாரம் நிச்சயம் ஆகும். எனவே அவசியம் நிச்சய புத்தி உடையவர் ஆக வேண்டும். சத்கதி தாதாவான (வள்ளல்) தந்தையிடம் ஒரு பொழுதும் சந்தேகம் எழுப்பக் கூடாது.

 

2. புத்தியை பவித்திரமாக அல்லது சுத்தமாக ஆக்குவதற்கு அசரீரி ஆவதற்கான அப்பியாசம் செய்ய வேண்டும். வீணான விஷயங்களைக் கேட்கவும் கூடாது கூறவும் கூடாது.

 

வரதானம் :

தனது சக்தி சொரூபத்தின் மூலமாக அலௌகீகத் தன்மையின் அனுபவம் செய்விக்கக் கூடிய ஜுவாலா ரூபம் ஆகுக.

 

இது வரை தீபமாகிய பாபாவின் கவர்ச்சி இருக்கிறது. பாபாவின் கடமை நடந்து கொண்டு இருக்கிறது. குழந்தைகளின் கடமை மறைமுகமாக இருக்கிறது. ஆனால் தாங்கள் தங்களின் சக்தி சொருபத்தில் நிலைத்திருக்கும் பொழுது தொடர்பில் வரக்கூடிய ஆத்மாக்கள் அலௌகீக தன்மையை அனுபவம் செய்வார்கள். நல்லது, நல்லது என்று கூறக்கூடியவர்களுக்கு நல்லவர்களாக மாறுவதற்கான தூண்டுதல் தாங்கள் குழுவாக ஜுவாலா சொரூபமாக, லைட்ஹவுசாக மாறும் பொழுது கிடைக்கும். மாஸ்டர் சர்வ சக்திவானின் நிலை மேடையில் வந்துவிட்டால் அனைவருமே தங்கள் முன்பு விட்டில் பூச்சிகளைப் போன்று சுற்ற ஆரம்பித்து விடுவர்.

 

சுலோகன் :

தனது கர்மேந்திரியங்களை யோக அக்னியில் சூடாக்குபவர்களே (பக்குவப்படுத்துதல்) சம்பூரணமாக தூய்மையாகிறார்கள்.

 

ஓம்சாந்தி