14.10.2018                           காலை முரளி               ஓம் சாந்தி         அவ்யக்த-பாப்தாதா

ரிவைஸ்           18.02.1984           மதுபன்


 

பிராமண வாழ்க்கை -- விலைமதிக்க முடியாத வாழ்க்கை

 

இன்று சதா அன்பில் மூழ்கி இருக்கும் அன்பான குழந்தைகளோடு சந்திப்பைக் கொண்டாடுவதற்காக அன்புக்கடல் வந்துள்ளார். எப்படி அன்போடு பாபாவை நினைவு செய்கின்றனரோ, அது போல் பாபாவும் அன்பான குழந்தைகளுக்குப் பல மடங்கு பிரதிபலனை அளிப்பதற்காக, சாகார சிருஷ்டியில் சந்திப்பதற்காக வந்துள்ளார். பாபா குழந்தைகளைத் தமக்கு சமமாக அசரீரி, நிராகாரமாக ஆக்குகிறார் மற்றும் குழந்தைகள் அன்போடு நிராகாரி மற்றும் ஆகாரி தந்தையரைத் தங்களுக்கு சமமாக சாகாரி ஆக்கி விடுகின்றனர். இது குழந்தைகளுடைய அன்பின் அற்புதம். குழந்தைகளின் அத்தகைய அன்பின் அற்புதத்தைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். குழந்தைகளின் குணங்களின் பாடலைப் பாடுகிறார் -- அதாவது எப்படி சதா பாபாவின் சங்கத்தின் (தொடர்பு) நிறத்தில் பாப்சமான் ஆகிக் கொண்டே செல்கின்றனர் என்று. பாப்தாதா அது போல் தந்தையைப் பின்பற்றக் கூடிய குழந்தைகளை, கீழ்ப்படிதலான, உண்மையுள்ள, கட்டளைப்படி நடக்கிற உண்மையிலும் உண்மையான விலைமதிக்க முடியாத ரத்தினங்கள் எனச் சொல்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு முன்னால் இந்த ஸ்தூல வைரம்-வைடூரியங்கள் கூட மண்ணுக்கு சமமாகும். அவ்வளவு விலைமதிக்க முடியாதவர்கள் நீங்கள்! அது போல் தங்களை அனுபவம் செய்கிறீர்களா, அதாவது நான் பாப்தாதாவின் கழுத்து மாலையின் விலைமதிக்க முடியாத வெற்றி ரத்தினம் என்பதாக? அந்த மாதிரி சுவமான் உள்ளதா?

 

இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு நஷா மற்றும் குஷி உள்ளது -- அதாவது நம்மை பாப்தாதா, இவ்வளவு தூரத்தில் இருந்த போதும் தூரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுத்துத் தம்முடையவர்களாக ஆக்கிக் கொண்டுள்ளார். உலகம் பாபாவைத் தேடிக் கொண்டிருக்கிறது, பாபா நம்மைத் தேடிக் கண்டெடுத்துள்ளார். அது போல் தன்னை உணர்கிறீர்களா? உலகம் அழைத்துக் கொண்டிருக்கிறது -- வாருங்கள் என்று. ஆனால் நீங்கள் அனைவரும் நம்பர்வார் என்ன பாடல் பாடுகிறீர்கள்? உங்களோடு அமர்வோம், உங்களோடு உண்போம், உங்களுடைய துணையில் சதா கூடவே இருப்போம். எங்கே அழைப்பு மற்றும் எங்கே சதா உடன் இருப்பது? இரவு-பகலுக்குள்ள வேறுபாடு ஆகிறது இல்லையா? எங்கே ஒரு விநாடியின் உண்மையான அவிநாசி பிராப்திக் காகத் தவித்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்கள் மற்றும் எங்கே பிராப்தி சொரூப ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும்! அவர்கள் மகிமை பாடுகிறவர்கள் மற்றும் நீங்கள் அனைவரும் பாபாவின் மடியில் அமர்பவர்கள். அவர்கள் கதறுபவர்கள் மற்றும் நீங்கள் ஒவ்வொரு அடியிலும் அவரது அறிவுரைப்படி நடப்பவர்கள். அவர்கள் தரிசனத்திற்காகத் தவித்துக் கொண்டிருப்பவர்கள் மற்றும் நீங்கள் தந்தை மூலமாக சுயம் தரிசனத்திற்குரிய மூர்த்தியாக ஆகி விட்டீர்கள். துக்கம்-வேதனையின் அனுபவம் இன்னும் கொஞ்சம் அதிக மாகட்டும். அதன் பிறகு பாருங்கள், உங்களுடைய ஒரு விநாடி தரிசனம், விநாடியின் திருஷ்டிக்காக எவ்வளவு பேர் தவித்துக் கொண்டிருப்பவர்களாகி உங்கள் முன்னால் வருகின்றனர் என்று!

 

இப்போது நீங்கள் அழைப்புக் கொடுக்கிறீர்கள், அழைக்கிறீர்கள். பிறகு உங்களோடு ஒரு விநாடி சந்திப்பதற்காக அதிக முயற்சி செய்வார்கள் -- எங்களைச் சந்திக்க விடுங்கள் என்று. அது போல் சாட்சாத் சாட்சாத்கார சொரூபம் உங்கள் அனைவருக்கும் உருவாகும். அந்த மாதிரி சமயத்தில் தங்களின் சிரேஷ்ட வாழ்க்கை மற்றும் சிரேஷ்ட பிராப்தியின் மகத்துவத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குள்ளும் கூட அந்தச் சமயம் அதிகமாக அறிந்து கொள்வார்கள். இப்போது கவனக்குறைவு மற்றும் சாதாரணத் தன்மையின் காரணத்தால் தங்களின் உயர்வு மற்றும் சிறப்பை மறந்தும் விடுகிறீர்கள். ஆனால் எப்போது பிராப்தியற்ற ஆத்மாக்கள் பிராப்தியின் தாகத்தால் உங்கள் முன்னால் வருகின்றனரோ, அப்போது அதிக அனுபவம் செய்வார்கள், நாம் யார், இவர்கள் யார் என்று. இப்போது பாப்தாதாவிடமிருந்து சகஜமாக மற்றும் அதிக கஜானாக்கள் கிடைப்பதால் அவ்வப்போது தன்னுடைய மற்றும் கஜானாவின் மதிப்பை சாதாரணமாக எண்ணி விடுகிறீர்கள். ஆனால் ஒவ்வொரு மகாவாக்கியம், ஒவ்வொரு விநாடி, பிராமண வாழ்க்கையின் ஒவ்வொரு சுவாசமும் எவ்வளவு சிரேஷ்டமானது! அதை இன்னும் போகப்போக அதிகம் அனுபவம் செய்வீர்கள். பிராமண வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியும் ஒரு பிறவியல்ல, ஆனால் பல பிறவிகளின் பிராலப்தத்தை (பலன்) உருவாக்கக் கூடியதாகும். ஒரு விநாடி சென்று விட்டது என்றால் அநேகப் பிறவிகளின் பிராலப்தம் சென்று விட்டது. அத்தகைய விலை மதிக்க முடியாத வாழ்க்கையைக் கொண்ட சிரேஷ்ட ஆத்மாக்கள் நீங்கள். அத்தகைய சிரேஷ்ட அதிர்ஷ்டசாஆத்மாக்கள் நீங்கள். நாம் யார் எனப் புரிந்து கொண்டீர்களா? அத்தகைய சிரேஷ்டமான குழந்தைகளோடு பாபா சந்திப்பதற்காக வந்துள்ளார். இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு இது சதா நினைவிருக்கிறது இல்லையா? அல்லது சில நேரம் மறந்து போகிறது, சில நேரம் நினைவிருக்கிறதா? நினைவு சொரூபமாக ஆகி விட்டீர்கள் இல்லையா? யார் சொரூபமாக ஆகி விடுகின்றனரோ, அவர்கள் ஒரு போதும் மறக்க முடியாது. நினைவு செய்பவர்களாக அல்ல, நினைவு சொரூபமாக ஆக வேண்டும். நல்லது.

 

போலந்து மற்றும் மற்ற தேசங்களில் இருந்து வந்திருக்கக் கூடிய புதுப்புதுக் குழந்தைகளுடன் அனைவரும் தங்களை பாக்கியவான் என உணர்கிறீர்களா? எத்தகைய பாக்கியம்? இந்த சிரேஷ்ட பூமிக்கு (மதுபன்) வருவது தான் அனைத்திலும் பெரிய பாக்கியம்! இந்த பூமி மகான் தீர்த்த பூமி. ஆக, இங்கே வந்து சேர்ந்து விட்டாலே பாக்கியம் தான். ஆனால் இப்போது இனி என்ன செய்யப் போகிறீர்கள்? நினைவில் இருக்க வேண்டும், நினைவின் அப்பியாசத்தை முன்னேற்றத்தில் கொண்டு சென்று கொண்டே இருக்க வேண்டும். எவ்வளவு தான் கற்றுக் கொண்டாலும் அதை முன்னேற்றத்தில் கொண்டு சென்று கொண்டே இருக்க வேண்டும். சதா சம்மந்தத்தில் இருந்து கொண்டே இருப்பீர்களானால் சம்மந்தத்தின் மூலம் மிகுந்த பிராப்தியை அடைந்து கொண்டே இருப்பீர்கள். இன்றைய உலகில் அனைவருக்கும் குஷி மற்றும் சாந்தி இரண்டும் தேவை. ஆக, இரண்டுமே இந்த இராஜயோக அப்பியாசத்தின் மூலம் சதா காலத்துக்கும் பிராப்தியாகி விடும். இந்தப் பிராப்தியை விரும்புகிறீர்கள் என்றால் சகஜ சாதனம் இது தான். இதை விட்டுவிடக் கூடாது. கூடவே வைத்துக் கொள்ள வேண்டும். மிகுந்த குஷி கிடைக்கும். குஷியின் சுரங்கமே கிடைத்து விட்டது போலாகும். இதன் மூலம் மற்றவர்களுக்கும் கூட உண்மையான குஷியைப் பகிர்ந்தளிக்க முடியும். மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும், மற்றவர்களுக்கும் இந்த வழியைச் சொல்ல வேண்டும். உலகத்தில் இத்தனை ஆத்மாக்கள் உள்ளனர். ஆனால் அவர்களிலும் மிகக் குறைவான ஆத்மாக்களே இங்கே வந்து சேர்ந்திருக்கிறீர்கள். இதுவும் மிகுந்த அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும். சாந்தி குண்டத்தில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். சாந்தியோ அனைவருக்கும் அவசியமாக உள்ளது இல்லையா? தானும் சாந்தியாக இருந்து மற்றவர்களுக்கும் சாந்தியைக் கொடுத்துக் கொண்டே இருப்பது தான் மனிதர்களின் விசேஷம் ஆகும். சாந்தி இல்லை என்றால் மனித வாழ்க்கை என்பதே என்ன? ஆத்மிக, அவிநாசி சாந்தி. தனக்கும் மற்றும் அநேகருக்கும் கூட உண்மையான சாந்தி கிடைக்கச் செய்வதற்கான வழியை நீங்கள் சொல்ல முடியும். புண்ணிய ஆத்மா ஆகி விடுவீர்கள். யாராவது அமைதியற்ற ஆத்மாக்களுக்கு அமைதியைக் கொடுத்து விட்டீர்கள் என்றால் எவ்வளவு பெரிய புண்ணியம்! தான் முதல் நிரம்பியவராக ஆகுங்கள். பிறகு மற்றவர்களுக்காகவும் புண்ணியாத்மா ஆக முடியும். இதைப் போன்ற புண்ணியம் வேறெதுவும் கிடையாது. துக்கத்திருக்கும் ஆத்மாக்களுக்கு சுகம் சாந்தியின் ஜொலிப்பைக் காட்ட முடியும். எங்கே ஈடுபாடு உள்ளதோ, அங்கே மனதின் சங்கல்பம் பூர்த்தியாகி விடும். இப்போது பாபாவிடம் இருந்து என்ன செய்தி கிடைத்துள்ளதோ, அந்த செய்தியைச் சொல்லக் கூடிய சந்தேஷி (தூதுவர்) ஆகிச் சென்று கொண்டே இருங்கள்.

 

சேவாதாரிகளுடன்

சேவையின் லாட்டரியும் கூட சதா காலத்திற்கும் நிரம்பியவராக ஆக்கி விடுகின்றது. சேவையினால் சதா காலத்துக்குமாக கஜானாக்களால் நிரம்பப் பெற்றவர்களாக ஆகி விடுகிறீர்கள். அனைவரும் நம்பர் ஒன் சேவை செய்திருக்கிறீர்கள். அனைவரும் முதல் பரிசு பெற்ககூடியவர்கள் இல்லையா? முதல் பரிசு என்பது திருப்தியாக இருப்பது மற்றும் அனைவரையும் திருப்திப் படுத்துவது. ஆக, என்ன புரிந்து கொள்கிறீர்கள், எத்தனை நாள் சேவை செய்தீர்களோ, அத்தனை நாள் தானும் திருப்தியாக இருந்து மற்றவர்களையும் திருப்திப் படுத்தினீர்களா, அல்லது யாராவது கோபப் பட்டார்களா? திருப்தியாக இருந்தீர்கள் மற்றும் திருப்திப் படுத்தினீர்கள் என்றால் நம்பர் ஒன் ஆகி விட்டீர்கள். ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியாளர் ஆவதென்றால் நம்பர் ஒன் ஆவதாகும். இது தான் வெற்றி. தானும் சஞ்சலமடையக் கூடாது, மற்றவர்களையும் சஞ்சலப் படுத்தக் கூடாது. ஆக, அத்தகைய சதா காலத்தின் வெற்றி ரத்தினங்கள். வெற்றி என்பது சங்கமயுகத்தின் உரிமை. ஏனென்றால் நீங்கள் மாஸ்டர் சர்வசக்திவான் இல்லையா?

 

உண்மையான சேவாதாரி என்றால் சதா ஆன்மிக திருஷ்டி மூலம், ஆன்மிக விருத்தி மூலம் ஆன்மிக ரோஜாவாகி ஆத்மாக்களைக் குஷிப் படுத்துபவர்கள். ஆக, எவ்வளவு சமயம் சேவை செய்தாலும் ஆன்மிக ரோஜா ஆகி சேவை செய்தீர்களா? இடையில் யாரும் முள்ளாக ஆகி வரவில்லையே? சதா ஆன்மிக ஸ்மிருதியில் இருக்க வேண்டும் மற்றும் ஆன்மிக ரோஜா என்ற ஸ்திதியில் இருக்க வேண்டும். எப்படி இங்கே இந்த அப்பியாசத்தைச் செய்கிறீர்களோ, அது போல் அவரவர் இருப்பிடங்களிலும் இதே போன்ற சிரேஷ்ட ஸ்திதியில் இருக்க வேண்டும். கீழே வரக் கூடாது. எது நடந்தாலும், எத்தகைய வாயுமண்டலமாக இருந்தாலும் சரி, ரோஜா மலர் எப்படி முள்ளோடு இருந்தாலும் சுயம் சதா மணம் தருவதாக உள்ளதோ, அது போல் முட்களின் கூடவே இருந்தாலும் தான் முள்ளாக ஆகக் கூடாது. அத்தகைய ஆன்மிக ரோஜா சதா சூழ்நிலையின் பிரபாவத்தில் இருந்து விலகியவராகவும் அன்பானவராகவும் இருக்க வேண்டும். அங்கே சென்ற பிறகு, என்ன செய்வேன், மாயா வந்து விட்டது என்று அந்த மாதிரி எழுதக் கூடாது. சதா மாயாஜீத் ஆகிச் சென்று கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? மாயா வருவதற்கான வாய்ப்பைக் கொடுத்துவிடக் கூடாது. வாசலை சதா மூடியே வைத்திருக்க வேண்டும். இரட்டைப்பூட்டு -- நினைவு மற்றும் சேவை. எங்கே இந்த இரட்டைப் பூட்டு உள்ளதோ, அங்கே மாயா வர முடியாது.

 

தாதிஜி மற்றும் பெரிய சகோதரிகளுடன்

எப்படி பாபா சதா குழந்தைகளின் ஊக்கம்-உற்சாகத்தை அதிகப் படுத்திக் கொண்டே இருக்கிறாரோ, அது போல் தந்தையைப் பின்பற்றக் கூடிய குழந்தைகள். விசேஷமாக டீச்சர்கள் அனைவர்க்கும், தேசத்திலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ள அனைவர்க்கும் பாப்தாதா சேவைக்கான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். ஒவ்வொருவரும் தங்களின் பெயரோடு கூட பாபாவின் நினைவு மற்றும் அன்பிற்கு உரிமையுள்ளவர் என உணர்ந்து தங்கள் மீது தாங்களே அன்பு கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் குணங்களைப் பாடினால் எவ்வளவு பேரின் குணங்களைப் பாடலாம்! அனைவரும் அதிக முயற்சி செய்திருக்கிறீர்கள். முந்தைய வருடத்தைக் காட்டிலும் இப்போது முன்னேற்றத்தை அடைந்திருக்கிறீர்கள். மேலும் இனி வரும் காலத்திலும் இதைக் காட்டிலும் அதிகமாக சுயம் மற்றும் சேவை மூலம் முன்னேற்றத்தை அடைந்து கொண்டே இருப்பீர்கள். நமக்கு பாப்தாதா சொல்லவில்லை எனப் புரிந்து கொள்ள வேண்டாம், அனைவருக்காகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் தந்தையின் பெயரைச் சொல்வதற்கு முயற்சி செய்து கொண்டுள்ளனர். தந்தையின் பெயர் வாயில் இருந்து கொண்டிருக்க வேண்டும் என யோசிக்கின்றனர். ஆனால் தந்தையின் வாயில் யாருடைய பெயர் உள்ளது? குழந்தைகள் உங்களுடைய பெயர் தந்தையின் வாயில் உள்ளது. புரிந்ததா? நல்லது.

 

இரட்டை வெளிநாட்டின் சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பாப்தாதாவின் பதில்

 

கேள்வி :

இந்த வருட சேவைக்கான புதிய திட்டம் என்ன?

 

பதில் :

சமயத்தை சமீபத்தில் கொண்டு வருவதற்காக ஒன்று, விருத்தி மூலம் வாயுமண்டலத்தை சக்திசாலி ஆக்குவதற்கான சேவை செய்ய வேண்டும். இதற்காக தன்னுடைய விருத்தியின் மீது விசேஷ கவனம் கொடுக்க வேண்டும் மற்றும் இரண்டாவது, மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக விசேஷமாக அப்படிப்பட்ட ஆத்மாக்களைக் கொண்டு வாருங்கள், இதன் மூலம் சாந்திக்கான விதி உண்மையிலேயே இங்கிருந்து தான் கிடைக்க முடியும் என அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாந்தி நிலவுமானால் அது இந்த விதி மூலம் தான் என்ற வார்த்தை அனைவரிடம் இருந்தும் வெளிப்பட வேண்டும். இந்த ஒரு விதி தான் உலகத்திற்கு அவசியமானது - அது இந்த விதி இல்லாமல் இருக்காது. இந்த சூழ்நிலை நாலாபுறமும் சேர்ந்து உருவாக வேண்டும். பாரதத்திலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, அமைதியின் ஜொலிப்பு பிரசித்த ரூபத்தில் வெளிப்பட வேண்டும். நாலாபுறங்களில் இருந்தும் இது அனைவருக்கும் டச் ஆக வேண்டும், கவர்ச்சியாக வேண்டும், யதார்த்த இருப்பிடமோ இது தான் என்று. எப்படி அரசுகளின் சார்பில் .நா. சபை உருவாகியுள்ளது என்றால் எப்போதெல்லாம் ஏதேனும் நிகழ்கிறதோ, அப்போது அனைவரின் கவனமும் அந்தப் பக்கம் செல்கிறது. இது போல் எப்போதெல்லாம் ஏதேனும் அசாந்தியின் சூழ்நிலை இருக்கிறதோ, அப்போது அனைவரின் கவனமும் அமைதியின் செய்தியைக் கொடுக்கின்ற இந்த ஆத்மாக்கள் பக்கம் செல்லும். அசாந்தியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான இருப்பிடம் இது ஒன்று தான், இங்கு தான் அடைக்கலம் பெற முடியும் என அனுபவம் செய்ய வேண்டும். இந்த வருடம் இந்த வாயுமண்டலத்தை உருவாக்க வேண்டும். ஞானம் நன்றாக உள்ளது, வாழ்க்கை நன்றாக இருக்கிறது, இராஜயோகம் நன்றாக இருக்கிறது -- இதை அனைவருமே சொல்கின்றனர். ஆனால் அசல் பிராப்தி இங்கிருந்து தான் கிடைக்க முடியும். உலகத்தின் நன்மை இந்த இருப்பிடம் மற்றும் விதியின் மூலம் தான் கிடைக்க வேண்டும். இந்த பேச்சு பரவ வேண்டும். இதற்காக விசேஷமாக சாந்தியைப் பற்றி விளம்பரம் செய்யுங்கள். யாருக்கு அமைதி வேண்டுமோ, இங்கிருந்து அதற்கான விதிமுறை கிடைக்கும். அமைதி வாரம் கொண்டாடுங்கள். அமைதியின் சந்திப்பு வையுங்கள். அமைதியின் அனுபவத்திற்கான முகாம் நடத்துங்கள். இது போல் அமைதியின் அதிர்வலைகளைப் பரப்புங்கள்.

 

சேவையில் எப்படி மாணவர்களை உருவாக்குகிறீர்கள், அது நல்லது தான்! அது எப்படியாகிலும் விருத்தியடையத் தான் போகிறது. ஆனால் இப்போது ஒவ்வொரு வகையான மக்கள், எப்படி கறுப்பு, வெள்ளை, விதவிதமான தர்மங்களின் ஆத்மாக்கள் உள்ளனர், அது போல் விதவிதமான தொழில்களைக் கொண்டவர்கள் ஒவ்வோர் இருப்பிடத்திலும் இருக்க வேண்டும். சிலர் எங்கே சென்றாலும் ஒவ்வொரு தொழில் செய்பவர்களும் தங்களின் ரீதியில் தங்களுடைய அனுபவங்களைச் சொல்ல வேண்டும். எப்படி இங்கே வொர்க்ஷாப் (கருத்துப் பட்டறை) வைக்கிறீர்கள் -- சில நேரம் டாக்டர்கள், சில நேரம் வக்கீல்கள் என்று விதவிதமான தொழில் செய்பவர்கள் ஒரே சாந்தியின் விஷயம் பற்றித் தங்களின் தொழிலின் ஆதாரத்தில் பேசுகின்றனர் என்றால், நன்றாக உள்ளது. அது போல் ஏதாவது சென்டருக்கு வந்தால் ஒவ்வொரு தொழில் செய்பவர்களும் தங்களுடைய சாந்தியின் அனுபவத்தைச் சொல்ல வேண்டும். இதன் பிரபாவம் அனைவருக்கும் ஏற்படும். அனைத்துத் தொழில் செய்பவர்களுக்கும் இது சகஜமான விதியாகும் -- இது அனுபவம் ஆக வேண்டும். எப்படி குறைந்த காலத்திற்குள் இந்த விளம்பரம் நன்றாக ஆகி விட்டுள்ளது -- அனைத்து தர்மங்களைச் சார்ந்தவர்களுக்கும் இந்த ஒரு விதி தான் என்ற பேச்சு எழ வேண்டும். இதே ரீதியில் இப்போது செய்தியைப் பரப்புங்கள். யார் தொடர்பில் வருகின்றனரோ, அல்லது மாணவர்களாக உள்ளனரோ, அவர்கள் வரையில் இந்த சப்தம் செல்கிறது. ஆனால் இப்போது கொஞ்சம் இன்னும் நாலாபுறமும் பரவச் செய்வதற்கான கவனம் இன்னும் கொஞ்சம் வைக்க வேண்டும். பிராமணர்களும் இப்போது மிகச் சிலரே உருவாகியுள்ளனர். வரிசைக்கிரமமாக பிராமணர் ஆவதற்கான இந்த கதியை வேகமானது எனச் சொல்ல மாட்டார்கள் இல்லையா? இப்போதோ குறைந்தது ஒன்பது லட்சமாவது வேண்டும். குறைந்தது சத்யுகத்தின் ஆரம்பத்தில் ஒன்பது லட்சம் பேருக்கு மேல் தான் இராஜ்யம் செய்வீர்கள் இல்லையா? அதில் பிரஜைகளும் இருப்பார்கள். ஆனால் தொடர்பில் நன்றாக வந்தால் தான் பிரஜை ஆவார்கள்.ஆக, இந்தக் கணக்கின்படி வேகம் எப்படி இருக்க வேண்டும்? இப்போதோ எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இப்போது மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? குறைந்தது வெளிநாட்டினரின் எண்ணிக்கை இரண்டு-மூன்று லட்சமாவது இருக்க வேண்டும். முயற்சியோ நன்றாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்படி எந்த ஒரு விஷயமும் இல்லை. ஆனால் இன்னும் கொஞ்சம் அதிக வேகம் இருக்க வேண்டும். பொதுவான சூழ்நிலையினால் வேகம் அதிகரிக்கும். நல்லது.

 

கேள்வி :

அந்த மாதிரி சக்திசாலி சூழ்நிலையை உருவாக்குவதற்கான யுக்தி என்ன?

 

பதில்

சுயம் சக்தி நிறைந்தவராக ஆகுங்கள். அதற்காக அமிர்தவேளையிலிருந்து ஒவ்வொரு கர்மத்திலும் தனது ஸ்டேஜ் சக்திசாலியா இல்லையா என்பதை சோதிப்பதில் கொஞ்சம் விசேஷ கவனம் வையுங்கள். மற்றவர்களின் சேவையில் அல்லது சேவையின் திட்டங்களில் பிஸி ஆவதனால் தனது ஸ்திதியில் லேசான தன்மை வந்து விடுகிறது . ஆகவே இந்தச் சூழ்நிலை சக்திசாலி ஆவதில்லை. சேவை நடைபெறுகிறது, ஆனால் சக்திசாலி ஆவதில்லை. இதற்காகத் தன் மீது விசேஷ கவனம் வைக்க வேண்டும். கர்மம் மற்றும் யோகம், கர்மத்துடன் கூடவே சக்திசாலி ஸ்டேஜ், இந்த சமநிலையில் கொஞ்சம் குறை உள்ளது. சேவையில் மட்டும் பிஸியாக இருப்பதன் காரணத்தால் சுயத்தின் ஸ்திதி சக்திசாலியாக இருப்பதில்லை. எவ்வளவு நேரம் சேவைக்காகக் கொடுக்கிறீர்களோ, எவ்வளவு உடல்-மனம்-செல்வத்தை சேவையில் ஈடுபடுத்துகிறீர்களோ, அதன் பிரமாணம் ஒன்றுக்கு லட்சம் மடங்காக என்ன கிடைக்க வேண்டுமோ, அது கிடைப்பதில்லை. இதற்கான காரணம், கர்மம் மற்றும் யோகத்தின் சமநிலை இல்லை. எப்படி சேவைக்கான திட்டத்தை உருவாக்குகிறீர்கள், நோட்டீஸ் அச்சடிக்கிறீர்கள், அது போல் டி.வி., ரேடியோவில் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறீர்கள். எப்படி அந்த வெளிப்புற சாதனங்களை உருவாக்குகிறீர்கள், அது போல் முதலில் தனது மனதை சக்திசாலி ஆக்குவதற்கான சாதனம் விசேஷமானதாக இருக்க வேண்டும். இந்த கவனம் குறைவாக உள்ளது. பிறகு சொல்கிறீர்கள், பிஸியாக இருந்து விட்டோம், கொஞ்சம் தவறி விட்டது. பிறகு இரட்டை பலன் கிடைக்க முடியாது. நல்லது.

 

வரதானம் :

சேவை மூலம் கிடைத்த மதிப்பு, பதவியைத் தியாகம் செய்து அவிநாசி பாக்கியத்தை உருவாக்கக் கூடிய மகா தியாகி ஆகுக!

 

குழந்தைகள் நீங்கள் என்ன சிரேஷ்ட கர்மம் செய்கிறீர்களோ, இந்த சிரேஷ்ட கர்மம் அல்லது சேவையின் பிரத்தியட்ச பலன் -- அனைவரின் மூலமாகவும் மகிமை செய்யப் படுவீர்கள். சேவாதாரிக்கு சிரேஷ்ட மகிமைப் பாடலின் இருக்கை கிடைக்கிறது. மரியாதை, பதவி என்ற இருக்கை கிடைக்கிறது, இந்த சித்தி (வெற்றி) அவசியம் பிராப்தியாகிறது. ஆனால் இந்த சித்திகள் என்பவை பாதைகளின் தங்குமிடங்கள் மட்டுமே! இவை இறுதி இலக்குகள் அல்ல. ஆகவே இதன் தியாகவான், பாக்கியவான் ஆகுங்கள். இதைத் தான் மகா தியாகி ஆவது எனச் சொல்லப் படுவது. குப்த மகாதானியின் சிறப்பு, தியாகத்தையும் கூடத் தியாகம் செய்வதாகும்.

 

சுலோகன்:

ஃபரிஸ்தா ஆக வேண்டுமென்றால் சாட்சியாக இருந்துஒவ்வொரு ஆத்மாவின் பாகத்தைப் பாருங்கள் மற்றும் சகாஷ் கொடுங்கள்.

 

ஓம்சாந்தி