10.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! சேவையின் வளர்ச்சிக்காக புதிய-புதிய முறைகளை உருவாக்குங்கள், கிராமம்-கிராமமாக சென்று சேவை செய்யுங்கள், சேவை செய்வதற்கு ஞானத்தின் அதிகபட்ச முழுமை (தெளிவு) வேண்டும்.

 

கேள்வி:-

புத்தியின் மூலம் பழைய உலகத்தை மறந்து கொண்டே செல்ல வேண்டும் இதற்கான சகஜமான யுக்தி என்ன?

 

பதில்:-

வீட்டை அடிக்கடி நினைவு செய்யுங்கள். இப்போது மரணலோகத்திலிருந்து கணக்கு-வழக்குகளை முடித்து அமரலோகத்திற்கு செல்ல வேண்டும் என்பது புத்தியில் இருக்க வேண்டும். தேகத்திருந்தாலும் பிச்சைகாரர்கள், இந்த தேகம் கூட தங்களுடையது கிடையாது - அப்படிப்பட்ட பயிற்சி இருந்தது என்றால் பழைய உலகம் மறந்து விடும். இந்த பழைய உலகத்தில் இருந்து கொண்டே தங்களுடைய மனோநிலையை பரிபக்குவமுடையதாக மாற்ற வேண்டும். ஒரே ரசனையுள்ள நிலைக்காக முயற்சி செய்ய வேண்டும்.

 

பாடல்:-

தாய்மார்களே தாய்மார்களே..................

 

ஓம் சாந்தி.

ஜகதம்பாவின் மகிமை பாரதத்தில் அதிகம் இருக்கிறது. ஜகதம்பாவை பாரதவாசிகளைத் தவிர வேறு யாரும் தெரிந்திருக்க வில்லை. பெயர் கேட்டிருக்கிறார்கள் அவர்களை ஈவ் என்று பீபீ என்றும் சொல்கிறார்கள். பீபீ மற்றும் எஜமானர் இல்லாமல் படைப்பு படைக்கப்பட முடியாது என்பதை குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இப்போது இருக்கிறது. கண்டிப்பாக ஜகதம்பா வெளிப்பட வேண்டும். கண்டிப்பாக இருந்தார் ஆகையினால் தான் புகழ் பாடுகிறார்கள். பாரதத்தின் மகிமை அதிகம் இருக்கிறது. சொர்க்கம் என்றும் சொல்கிறார்கள், பாரதம் தான் பழமையானதாக இருந்தது ஆகையினால் கண்டிப்பாக சொர்க்கமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்திருக்கிறார்கள். இதை ஈஸ்வரிய குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. யாரெல்லாம் கல்பத்திற்கு முன்னால் புரிந்திருப்பார்களோ அவர்கள் தான் வந்து கொண்டே இருப்பார்கள். கண்காட்சி நடக்கிறது. கல்பத்திற்கு முன்னால் கூட செய்திருப்போம். அனைவருக்கும் புரிய வைப்பதற்கு நல்ல வார்த்தைகளும் வேண்டும். தூய்மையான ஆத்மா, தூய்மையின் மூலம் நீங்கள் ஒளி கிரீடத்தை அடைகிறீர்கள். மற்றொன்று யார் தானம்-புண்ணியம் செய்கிறார்களோ அவர்களை புண்ணிய ஆத்மாக்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களை ஆங்கிலத்தில் பிலிந்த்ரோபிஸ்ட் என்று சொல்லப்படுகிறது.தூய்மையானவர்களை நிர்விகாரிகள் என்று சொல்லப்படுகிறது. தனித்தனி வார்த்தைகள் இருக்கின்றன. பாரதத்தில் நிறைய தானம்-புண்ணியம் நடக்கிறது ஆனால் குறிப்பாக குருக்களுக்கு தானம் செய்கிறார்கள். அவர்களை தூய்மையான ஆத்மாக்கள் என்று சொல்லலாம் ஆனால் புண்ணிய ஆத்மா என்று சொல்ல முடியாது. அவர்கள் தானம்-புண்ணியம் செய்வதில்லை, அவர்கள் தானம்-புண்ணியம் வாங்குகிறார்கள். எனவே இவை அனைத்திலிருந்தும் புத்தியின் தொடர்பை துண்டித்து பாபாவிடம் இணைக்க வேண்டும், அதற்காக (மற்ற தொடர்புகள்) இது சரியில்லை என்று பாபா புரிய வைக்க வேண்டியிருக்கிறது. இவர்கள் அனைவரையும் கடைத்தேற்ற நான் வருகின்றேன். நீங்கள் ஞானக்கடலிலிருந்து வந்திருக்கக் கூடிய ஞான கங்கைகளாவீர்கள். உண்மையில் கங்கை என்ற வார்த்தை சரி இல்லை ஆனால் பாடப்பட்டு வந்துள்ளது எனவே ஒப்பீடு செய்யப்படுகிறது. பாபா வந்து பழைய உலகத்தின் பழைய பொருட்கள் அனைத்தையும் புதியதாக்குகின்றார். சொர்க்கம் புதியதாகும். புதிய உலகத்தின் செய்திகளை பாபா தான் தெரிந்திருக்கின்றார், உலகம் தெரிந்திருக்கவில்லை.

 

பகவானுடைய மகாவாக்கியமாகும், ஆனால் கீதையில் கிருஷ்ணருடைய பெயரை போட்டதின் மூலம் அனைவருடைய புத்தியோகமும் துண்டிக்கப்பட்டு விட்டது. ஆகையினால் சர்வவியாபி என்று சொல்லிவிட்டார்கள். கிருஷ்ணரோடு நிறைய பேருடைய புத்தியோகம் இருக்கிறது, எங்கெல்லாம் கீதைக்கு மரியாதை இருக்கிறதோ அங்கு கிருஷ்ணருக்கு மரியாதை இருக்கிறது. உண்மையில் பாபாவின் மகிமை எனும் தொப்பி குழந்தைகள் மீது வந்து விட்டது. இதுவும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. இதை பாபா வந்து புரிய வைக்கின்றார்.

 

யாராவது வருகிறார்கள் என்றால் ஒவ்வொருவருடைய தொழிலையும் கேளுங்கள் இவர்களிடம் உங்களுக்கு என்ன சம்பந்தம்? என்று கேட்க வேண்டும் என்று பாபா அடிக்கடி புரிய வைக்கின்றார். பாபா கேள்வி பதிலை நன்றாக உருவாக்கியுள்ளார். மிகவும் நன்றாக சேவை நடக்கும். ஜகதம்பாவின் கோயிலில் நன்கு சேவை நடக்கும், அங்கு சென்று இந்த ஜகதம்பா உலகத்தை படைக்கக் கூடியவர் என்று புரிய வையுங்கள். எப்படிப்பட்ட உலகத்தை படைக்கின்றார்? கண்டிப்பாக புதிய உலகத்தை தான் படைப்பார். நல்லது, இந்த தாயினுடைய தந்தை யார்? இவருக்கு யார் பிறவி அளித்தது? மனிதர்கள் வாய்வம்சாவழியின் அர்த்தத்தைக் கூட புரிந்து கொள்வதில்லை. இவருக்கு பரமபிதா பரமாத்மா பிறவி அளித்தார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிய வைக்க வேண்டும். ஜகதம்பா வாய்வம்சாவழி ஆவார், ஆனால் எப்படி? பரமபிதா பரமாத்மா நிராகாரமானவராக இருக்கின்றார், பிரம்மாவின் சரீரத்தின் மூலம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. பரமபிதா பரமாத்மா வந்து இந்த பிரம்மாவை தத்தெடுத்தார், அதுபோல் குழந்தைகளையும் தத்தெடுத்தார். இந்த விசயங்கள் அனைவருடைய புத்தியிலும் நிலையாக இருப்பதில்லை. அடிக்கடி மறந்து விடுகிறார்கள். குழந்தைகள் நிறைய சேவை செய்ய முடியும். ஜகதம்பாவின் கோயிலில் அறிமுகம் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்களுடைய புத்தியின் தொடர்பு பாபாவிடம் இணையட்டும். ஜகதம்பாவும் அவரிடம் யோகத்தை ஈடுபடுத்துகின்றார் என்றால் நாமும் அவரிடத்தில் யோகத்தை ஈடுபடுத்த வேண்டும். கீழே ஜகதம்பா தவத்தில் அமர்ந்திருக்கின்றார், அவருடைய கோயில் மேலே இருக்கிறது. கீழே இராஜயோக தவம் செய்து கொண்டிருக்கின்றார் பிறகு இராஜ-இராஜேஸ்வரியாக சத்யுகத்தில் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகின்றார். இப்போது கலியுகமாக இருக்கிறது. மீண்டும் தவத்தில் அமர்ந்தால் தான் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக முடியும் அல்லவா! இந்த ஞானம் அனைத்தும் உங்களுடைய புத்தியில் இருக்க வேண்டும். இந்த உண்மையான வழி மனிதர்களுக்கு கொடுக்கப்படுகிறது. நீங்கள் ஒவ்வொருவருடைய அறிமுகத்தையும் அளிக்கின்றீர்கள். ஆனால் அனைவருடைய புத்தியிலும் உடனேவா நிற்கும்? சேவையில் ஈடுபட்டால் தான் நிற்கும். சித்திரங்களும் மிக நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. இலஷ்மி - நாராயணனுடைய கோயிலில் சென்று புரிய வைக்கலாம். என்னுடைய பக்தர்களுக்கு சொல்லுங்கள் என்று பாபா கூறுகின்றார். பக்தர்கள் கண்டிப்பாக கோயில் தான் கிடைப்பார்கள். அவர்களுக்கு அன்போடு புரிய வையுங்கள் - இந்த இலஷ்மி நாராயணனுடைய சித்திரம் இருக்கிறதே, இவர்களைப் பற்றி இவர்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இருந்தார்கள் என்று சொல்கிறார்கள். நல்லது, இப்போது என்னவாக இருக்கிறது? கண்டிப்பாக கலியுகம் என்று சொல்வார்கள். கலியுகத்தில் துக்கமே துக்கம் தான் இருக்கிறது பிறகு இவர்களுக்கு எப்படி இராஜ்யம் கிடைத்தது? நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள் எனும்போது அனைவருக்கும் சொல்ல முடியும். ஒருவருக்கு புரிய வைத்தீர்கள் என்றால் சத்சங்கம் சேர்ந்து விடும். பிறகு அனைவரும் எங்களிடம் வாருங்கள் என்று அழைப்பார்கள். கோயிலில் பெரிய விழா நடைபெறுகிறது. இராமருடைய கோயிலுக்கு சென்று அவருடைய தொழிலை சொல்லலாம். மெது-மெதுவாக யுக்தியோடு புரிய வைக்க வேண்டும். பாபா, நாங்கள் இப்படி-இப்படியெல்லாம் புரிய வைத்தோம் என்று நிறைய குழந்தைகள் எழுதவும் செய்கிறார்கள். ஒருவருக்கு புரிய வைப்பதின் மூலம் மற்றவர்களும் அழைப்பு விடுப்பார்கள். எங்களுடைய வீட்டிலும் கூட ஏழு நாட்கள் சொற்பொழிவு நடந்தால் நன்றாக இருக்கும் பிறகு அங்கிருந்து வேறு யாராவது புதியதாக வருவார்கள். யார் வேண்டுமானாலும் அழைப்பு விடுக்கட்டும் அவர்களுக்கு விடமுடியாத அளவிற்கு (ஞானத்தை) புரிய வைக்க வேண்டும். சொற்பொழி வாற்றுவதின் மூலம் அக்கம்-பக்கமுள்ளவர்கள் நண்பர்கள்- உறவினர்கள் போன்றவர்களும் ஒன்று சேருவார்கள். இப்படி தான் வளர்கிறது. சென்டருக்கு அவ்வளவு பேர் வர முடியாது. இது நல்ல யுக்தியாகும். அப்படி உழைக்க வேண்டும். உழைப்பதற்கான முறை கஷ்டப்பட்டு யாருக்காவது வருகிறது. ஞானத்தின் அதிக தெளிவு இருக்க வேண்டும். நமக்கு கற்றுக் கொடுக்க எவ்வளவு தூரத்திலிருந்து வருகின்றார். சேவை செய்ய வில்லை என்றால் உயர்ந்த பதவி எப்படி அடைய முடியும்? பள்ளியில் குழந்தைகள் மிகவும் நல்ல புத்திசாலிகளாக இருக்கிறார்கள், மகிழ்ச்சியினால் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் படிப்பாகும், இது அதிசயமான படிப்பாகும் - இதில் வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவரும் படிக்கிறார்கள். ஏழைகளுக்கு இன்னும் நல்ல வாய்ப்பாகும். சன்னியாசிகளும் கூட உண்மையில் ஏழைகளாவர். எவ்வளவு பெரிய-பெரிய செல்வந்த மனிதர்கள் தங்களிடம் அழைக்கிறார்கள். சன்னியாசிகள் வீடு வாசலை விட்டு விட்டு பிச்சைகாரர்களாக ஆகியுள்ளார்கள். அவர்களிடம் எதுவும் இல்லை. நீங்களும் கூட இப்போது பிச்சைகாரர்களாக இருக்கிறீர்கள் பிறகு இளவரசர்களாக ஆகின்றீர்கள். அவர்களும் பிச்சைகாரர்களாக இருக்கிறார்கள். இதில் தூய்மையின் விசயமாகும். உங்களிடம் வேறு எதுவும் இல்லை. நீங்கள் தேகத்தை கூட மறந்து விடுகிறீர்கள். தேகம் உட்பட அனைதையும் தியாகம் செய்து ஒரு பாபாவினுடையவர்களாக ஆகின்றீர்கள். எந்தளவிற்கு ஒரு பாபாவை நினைவு செய்வீர்களோ அந்தளவிற்கு நன்கு தாரணை ஆகும். ஏக்ரஸ் தாரணை ஆக வேண்டும் அதற்கு நல்ல உழைப்பு வேண்டும். நாம் பாபாவிடம் செல்ல வேண்டும் எனும்போது இந்த பழைய உலகத்தைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?. எதுவரை பரிபக்குவ நிலை உருவாக வில்லையோ அதுவரை இந்த பழைய உலகம், பழைய சரீரத்தில் இருக்க வேண்டும்.

 

இப்போது நீங்கள் குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே தூய்மையாக ஆக வேண்டும். இந்த மரணலோகத்திலிருந்து கணக்கு-வழக்கு முடிகிறது. இப்போது அமரலோகத்திற்குச் செல்ல வேண்டும். வீட்டை அடிக்கடி நினைவு செய்வதின் மூலம் பழைய உலகம் மறந்து கொண்டே செல்லும். கீதையில் பாபா என்ன சொன்னார்? சொல்லுங்கள். பகவானை பாபா என்று சொல்லப்படுகிறது. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று நிராகார பாபா கூறுகின்றார். யோக அக்னியின் மூலம் உங்களுடைய விகர்மம் வினாசம் ஆகும். கிருஷ்ணர் அப்படி சொல்ல முடியாது. இந்த பழைய உலகம் மற்றும் பழைய தேகத்தையும் விடுங்கள் என்பது பகவானுடைய மகாவாக்கியமாகும். ஆத்ம-அபிமானியாக ஆகி நிரந்தரமாக பாபாவை நினைவு செய்யுங்கள். பகவான் நிராகாரமானவராக இருக்கின்றார். ஆத்மா சரீரத்தை எடுத்து சப்தத்தில் வருகிறது. பாபா கருவின் மூலம் பிறவி எடுப்பதில்லை. அவருடைய ஒரே பெயர் சிவன் என்பது மட்டுமே ஆகும். பிரம்மா, விஷ்ணு, சங்கரின் ஆத்மாக்கள் இருக்கின்றன, அவர்களுக்கு தங்களுடைய சூட்சும சரீரமிருக்கிறது. இவர் நிராகார பரமபிதா பரமாத்மா ஆவார். அவருடைய பெயர் சிவன் ஆகும். அவர் தான் ஞானக்கடல் ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரை படைப்பவர்கள் என்று சொல்ல முடியாது. படைப்பவர் என்று ஒரு நிராகாரமானவரை மட்டுமே சொல்லப்படுகிறது. பிறகு அவர் எப்படி சாகார படைப்பை படைப்பார்? எனவே வந்து பிரம்மாவின் மூலம் படைக்கின்றார். கிருஷ்ணர் படைப்பவராக ஆக முடியாது. பிரம்மாவின் கைகளில் தான் வேத-சாஸ்திரங்களை காட்டுகிறார்கள். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை என்று பாடப்பட்டுள்ளது, பிரம்மாவின் மூலம் அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தை கூறுகின்றார். நிராகாரமானவர் சாகாரத்தின் மூலம் கூறுகின்றார். இந்த விசயங்களை நல்ல விதத்தில் தாரணை செய்ய வேண்டும். பகவானுடைய மகாவாக்கியம் - நான் இராஜயோகத்தை கற்றுக் கொடுக்கின்றேன். வினாசத்திற்கு முன்னால் கண்டிப்பாக ஸ்தாபனை செய்ய வேண்டும். முதல்-முதலில் ஸ்தாபனை. மிகவும் தெளிவாக எழுதிக் கொண்டிருக்கிறார். பிரம்மாவின் மூலம் சூரியவம்சத்தின் ஸ்தாபனை. எழுத்தில் கூட மிகவும் நல்ல இரகசியம் இருக்கிறது ஆனால் யாராவது முயற்சி செய்து சேவையில் ஈடுபட வேண்டும். சேவையில் ஈடுபடுவதின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். மம்மா-பாபாவிற்கும் கூட சேவையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. குழந்தைகளும் கூட சேவை செய்ய வேண்டும், மம்மாவை கோயிலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. மம்மாவிற்கு அதிக மகிமை இருக்கிறது, குழந்தைகள் செல்லத் தான் வேண்டும். வானப்பிரஸ்திகளிடம் சென்று அவர்களிடம் கேள்வி கேட்டு பிறகு புரிய வையுங்கள், எப்போதாவது கீதையை படித்திருக்கிறீர்களா? கீதையின் பகவான் யார்? ஒரு நிராகாரமானவர் தான் பகவான் ஆவார். பௌதீக உடலில் இருப்பவர்களை பகவான் என்று சொல்ல முடியாது. பகவான் ஒருவரே ஆவார். இதில் சேவைக்காக நிறைய ஞானத்தை சிந்தனை செய்ய வேண்டும். பயிற்சி செய்ய வேண்டும் பிறகு வெளியில் சென்று ஒத்திகை பார்க்க வேண்டும். ஜகதம்பாவை தரிசிக்க தினமும் வருகிறார்கள். திரிவேணிக்கும் கூட நிறைய பேர் செல்கிறார்கள். அங்கேயும் சென்று சேவை செய்ய வேண்டும், சொற்பொழிவாற்றினீர்கள் என்றால் நிறைய பேர் வந்து ஒன்று சேர்வார்கள். எங்களிடம் வந்து சத்சங்கம் செய்யுங்கள் என்று அழைப்பு விடுத்துக் கொண்டே இருப்பார்கள். பாபா-மம்மா எங்கேயும் செல்ல முடியாது, குழந்தைகள் செல்லலாம். வங்காளத்தில் காளி கோயில் இருக்கிறது அங்கேயும் சென்று நிறைய சேவை செய்யலாம். காளி யார்? இதைப்பற்றி சொற்பொழிவாற்றுங்கள். ஆனால் தைரியம் வேண்டும். யார் புரிய வைக்க முடியும் என்று பாபா தெரிந்துள்ளார். யாரிடம் தேக-அபிமானம் இருக்கிறதோ அவர்கள் என்ன சேவை செய்ய முடியும்? சேவையின் பலனை காட்டுவதில்லை. ஒருவேளை சேவையை முழுமையாக செய்ய வில்லை என்றால் பெயரை கெடுப்பார்கள். யோகிகளிடத்தில் நல்ல பலம் இருக்கிறது. புரிய வைப்பதற்கு நிறைய பாயிண்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அனேக நல்ல - நல்ல மகாரதிகள் கூட மறந்து விடுகிறார்கள். சேவை நிறைய இருக்கிறது, இதனை எல்லையற்ற சேவை என்று சொல்லப்படுகிறது, அந்த மரியாதையும் நிறைய அடைகிறார்கள். முக்கியமானது தூய்மையின் விசயமாகும். போகப்போக விட்டுவிடுகிறார்கள். லௌகீக தந்தையிடம் ஒருபோதும் யாருக்கும் நிச்சயம் குறைவதில்லை. இங்கே பாபாவிடம் பிறவி எடுக்கிறார்கள். அப்படிப்பட்ட பாபாவை அடிக்கடி மறந்து விடுகிறார்கள் ஏனென்றால் விசித்திரமானவராக(சரீரம் இல்லாதவர்) இருக்கின்றார், இப்படிப்பட்ட தந்தைக்கு சரீரம் இல்லை. பாபா கூறுகின்றார் என்னை நினைவு செய்து தூய்மையாக ஆனீர்கள் என்றால் என்னிடம் வந்து விடுவீர்கள். நாம் தான் 84 பிறவிகளின் நடிப்பை நடித்தோம் என்று ஆத்மா புரிந்து கொள்கிறது. ஆத்மாவில் நடிப்பு பதிவாகியிருக்கிறது. சரீரத்திலா நடிப்பு இருக்கிறது! இவ்வளவு சிறிய ஆத்மாவில் எவ்வளவு நடிப்பு இருக்கிறது! புத்தியில் எவ்வளவு போதை இருக்க வேண்டும், காரியங்களின் கூடவே இந்த சேவையையும் செய்யலாம். தாய்-தந்தை எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது. குழந்தைகள் எங்கு வேண்டுமானாலும் சென்று சேவை செய்யலாம். குழந்தைகளைத் தான் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்று சொல்லப்படுகிறது.

 

இனிமையிலும் இனிமையான ஞான அதிர்ஷ்ட நட்சத்திரங்களுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) தேக-அபிமானத்தை விட்டு விட்டு சேவை செய்ய வேண்டும். ஞானத்தை சிந்தனை செய்து எல்லையற்ற சேவையின் நிரூபணம் கொடுக்க வேண்டும்.

 

2) இந்த மரணலோகத்திலிருந்து பழைய கணக்கு-வழக்குகள் அனைத்தையும் முடிக்க வேண்டும். பழைய தேகம் மற்றும் பழைய உலகத்தை புத்தியின் மூலம் மறந்து விட வேண்டும்.

 

வரதானம்:- :

கர்மம் செய்தாலும் சக்திசாலி நிலையில் நிலைத்திருந்து ஆன்மீக பர்சனாலிட்டியை (ஆளுமை) அனுபவம் செய்விக்கக்கூடிய கர்மயோகி ஆகுக.

 

குழந்தைகளாகிய நீங்கள் கர்மம் செய்பவர்கள் மட்டும் அல்ல. ஆனால் யோக நிலையில் இருந்து கர்மம் செய்யக்கூடிய கர்மயோகி. எனவே தங்கள் மூலமாக ஒவ்வொருவரும் இவர்கள் கைகளால் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள், ஆனால் வேலை செய்து கொண்டு இருந்தாலும் தங்களுடைய சக்திசாலி நிலையில் நிலைத்திருக்கிறார்கள் என அனுபவம் செய்ய வேண்டும். சாதாரணமாக சென்று கொண்டு இருந்தாலும், நின்று கொண்டு இருந்தாலும், ஆன்மீக பர்ஸ்னாலிட்டி தொலைவிலிருந்தே அனுபவம் ஆக வேண்டும். உலகியல் பர்ஸ்னாலிட்டி எப்படி கவருகிறதோ அதே போன்று தங்களின் ஆன்மீக பர்ஸ்னாலிட்டி, தூய்மையின் பர்ஸ்னாலிட்டி, ஞானி அல்லது யோகி ஆத்மாவின் பர்ஸ்னாலிட்டி தானாகவே கவர்ந்து இழுக்கும்.

 

சுலோகன் :

உண்மையான வழியில் செல்லக்கூடிய மற்றும் உண்மையான வழியைக் காண்பிக்கக்கூடியவரே உண்மையிலும் உண்மையான லைட்ஹவுஸ் ஆவர்.

 

ஓம்சாந்தி