16.12.2018                           காலை முரளி                ஓம் சாந்தி                        ''அவ்யக்த பாப்தாதா''

ரிவைஸ்    09.03.1984          மதுபன்


 

'' மாற்றத்தை அழியாததாக ஆக்குங்கள் ''

 

பாப்தாதா அனைத்து சாதகப்பறவை குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைவருக்கும் கேட்க வேண்டும், சந்திக்க வேண்டும் மற்றும் ஆக வேண்டும் என்ற இதே ஆர்வம் இருக்கிறது. கேட்பதில் அனைவரும் நம்பர் ஒன் சாதகப் பறவைகள். சந்திப்பதில் வரிசை எண் இருக்கிறது மேலும் ஆவதில் அவர்களின் சக்திக்கேற்றபடி சமமாக ஆக வேண்டும். ஆனால் அனைத்து சிரேஷ்ட ஆத்மாக்கள், பிராமண ஆத்மாக்கள் இந்த மூன்றின் சாதகப் பறவைகளாக அவசியம் இருக்கிறார்கள். நம்பர் ஒன் சாதகப் பறவை மாஸ்டர் முரளிதரன், மாஸ்டர் சர்வ சக்திவானாக இருப்பவர், தந்தைக்குச் சமமாக நிரந்தரமாக மற்றும் சகஜமாக ஆகிவிடுகிறார். கேட்பது என்றால் முரளிதரன் ஆவது. சந்திப்பது என்றால் தொடர்பின் பிரபாவத்தில் அவருக்குச் சமமாக சக்திகள் மற்றும் குணங்களில் நிரம்பி விடுவது. ஆவது என்றால் எண்ணத்தின் அடி மேல், வார்த்தைகளின் அடி மேல், காரியத்தின் அடி மேல் அடி வைத்து சாட்சாத் தந்தைக்குச் சமமாக ஆவது. குழந்தைகளின் எண்ணத்தில் தந்தையின் எண்ணம் சமமாக அனுபவம் ஆக வேண்டும். வார்த்தையில், காரியத்தில், எப்படி தந்தையோ அப்படி குழந்தை என்று அனைவருக்கும் அனுபவம் ஆக வேண்டும். இதைத் தான் சமமாக ஆவது மற்றும் நம்பர் ஒன் சாதகப் பறவை என்று கூறுவது. இந்த மூன்றிலிருந்து நான் யார் என்று சோதனை செய்யுங்கள். அனைத்து குழந்தைகளின் ஊக்கம் உற்சாகம் நிறைந்த எண்ணம் பாப்தாதாவிடம் வந்து சேருகிறது. எண்ணத்தை மிகவும் நல்ல தைரியம் மற்றும் திடத்தன்மையுடன் செய்கிறார்கள். எண்ணம் என்ற விதை சக்திசாலியாக இருக்கிறது. ஆனால் தாரணை செய்வதின் பூமி, ஞானத்தின் கங்கா ஜலம் மற்றும் நினைவு என்ற வெயில் என்று கூறினாலும் அல்லது வெப்பம் என்று கூறினாலும், அடிக்கடி தன் மேல் கவனம் என்ற மேற்பார்வையில் அங்கங்கே கவனக்குறைவானவர் ஆகிவிடுகிறார்கள். ஒரு விஷயத்தின் குறை இருக்கும் காரணத்தினாலும் எண்ணம் என்ற விதை எப்பொழுதும் பழம் (பலன்) கொடுப்பதில்லை. கொஞ்ச காலத்திற்காக ஒரு சீசன், இரண்டு சீசன்களுக்கு பழம் கொடுக்கும். எப்பொழுதும் பழம் கொடுக்காது. பிறகு விதையோ சக்திசாலியாக இருந்தது, உறுதிமொழியையும் உறுதியாக செய்திருந்தோம், தெளிவும் ஆகிவிட்டது இருந்தும் என்ன ஆகிவிட்டது என்று தெரியவில்லை என்று யோசிக்கிறார்கள். 6 மாதங்களோ மிகுந்த ஊக்கம் இருந்தது. பிறகு போகப்போக என்ன ஆகிவிட்டது என்று தெரியவில்லை என்று கூறுகிறார்கள். இதற்காக எந்த விஷயங்களை முதலில் கூறியிருந்தோமோ அதன் மேல் எப்பொழுதும் கவனம் இருக்க வேண்டும்.

 

இன்னொரு விஷயம் - சின்ன விஷயத்தில் விரைவில் பயந்து விடுகிறீர்கள். பயந்து விடும் காரணத்தினால் சின்ன விஷயத்தையும் பெரியதாக ஆக்கிவிடுகிறீர்கள். விஷயம் எறும்பு மாதிரி இருக்கிறது, அதை யானை மாதிரி ஆக்கிவிடுகிறீர்கள், எனவே சமநிலை இருப்பதில்லை. சமநிலை இல்லாத காரணத்தினால் வாழ்க்கை சுமையாக ஆகிவிடுகிறது. இருந்தால் போதையில் முற்றிலும் உயரே சென்று விடுகிறார்கள் அல்லது சின்னஞ் சிறிய கல் கூட கீழே அமர வைத்து விடுகிறது. ஞானம் நிறைந்தவராகி ஒரு நொடியில் அதை அகற்றுவதற்காக கல் வந்து விட்டது, நின்று விட்டேன், கீழே வந்து விட்டேன், இது நடந்து விட்டது என்று இதை யோசிப்பதில் ஈடுபட்டு விடுகிறார்கள். நோய் வந்து விட்டது, காய்ச்சல் மற்றும் வலி வந்து விட்டது என்று ஒருவேளை இதையே யோசிக்கிறார்கள் மற்றும் கூறிக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் என்ன நிலைமை ஆகும்! அந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்கள் என்ன வருகின்றனவோ அவற்றை அழியுங்கள், அகற்றுங்கள் மற்றும் பறந்து செல்லுங்கள். ஆகிவிட்டது, வந்து விட்டது, இதே எண்ணத்தில் பலஹீனம் ஆகாதீர்கள். மருந்து எடுத்து கொள்ளுங்கள் மற்றும் ஆரோக்கியமானவராக ஆகுங்கள். சில நேரம் பாப்தாதா குழந்தைகளின் முகத்தைப் பார்த்து இப்பொழுது என்னவாக இருந்தார், அடுத்த நேரமே என்னவாகி விட்டார்! என்று யோசிக்கிறார். இது அவரே தானா அல்லது இன்னொருவராக ஆகிவிட்டாரா! விரைவில் மேலே கீழே போவதினால் என்ன நடக்கிறது,? தலை பாரமாகிவிடுகிறது. பொதுவாகவே நடைமுறையிலும் மேலே கீழே சென்று வந்து கொண்டே இருந்தீர்கள் என்றால் தலை சுற்றுவது போல் அனுபவம் செய்வீர்கள் இல்லையா! எனவே இந்த சம்ஸ்காரத்தை பரிவர்த்தனை செய்யுங்கள். நம்முடைய பழக்கமே அந்த மாதிரி தான் என்று அப்படி யோசிக்காதீர்கள். தேசத்தின் காரணமாக மற்றும் வாயுமண்லத்தின் காரணமாக மற்றும் ஜென்மத்தின் சம்ஸ்காரம், நேச்சரின் காரணமாக அந்த மாதிரி ஆகத் தான் செய்யும் என்ற அந்த மாதிரியான நம்பிக்கைகள் பலஹீனமானவராக ஆக்கிவிடுகிறது. ஜென்மம் மாறியது என்றால் சம்ஸ்காரத்தையும் மாற்றுங்கள். எப்பொழுது உலகை மாற்றுபவராக இருக்கிறீர்கள் என்றால் சுயத்தை மாற்றுபவராக முன்பாகவே இருக்கிறீர்கள் தான் இல்லையா? தன்னுடைய ஆதி, அனாதி சுபாவ சம்ஸ்காரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அது தான் உண்மையான சம்ஸ்காரம். இவையோ போலியானவை. என்னுடைய சம்ஸ்காரம், என்னுடைய நேச்சர் என்று கூறுவது மாயாவின் வசமானதின் நேச்சர். சிரேஷ்ட ஆத்மாக்கள் உங்களுடைய ஆதி, அனாதி நேச்சர் இது இல்லை, எனவே இந்த விஷயங்களின் மேல் மீண்டும் உங்களுடைய கவனத்தை ஈர்க்கிறோம். மீண்டும் படிப்பிக்கிறோம். இந்த பரிவர்த்தனையை அழியாததாக ஆக்குங்கள்.

 

விசேஷங்களும் அதிகம் இருக்கிறது. அன்பில் நம்பர் ஒன் ஆக இருக்கிறீர்கள், சேவையின் ஊக்கத்திலும் நம்பர் ஒன் ஆக இருக்கிறீர்கள். ஸ்தூலமாக தூரமாக இருந்த போதிலும் அருகில் இருக்கிறீர்கள். கேட்ச்சிங் பவர் (தந்தை கூறுவதை புரிந்து கொள்ளும் சக்தி) மிக நன்றாக இருக்கிறது. உணரும் சக்தியும் மிகத் தீவிரமாக இருக்கிறது. குஷிகளின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டும் இருக்கிறீர்கள். ஆஹா பாபா, ஆஹா பரிவாரம், ஆஹா நாடகம் என்ற பாடலையும் நன்றாக பாடுகிறீர்கள். திடத்தன்மையும் விசேஷமும் நன்றாக இருக்கிறது. தெரிந்து கொள்ளும் புத்தியும் கூர்மையாக இருக்கிறது. தந்தை மற்றும் பரிவாரத்தின் கண்டெடுக்கப்பட்ட மிகச் செல்லமான குழந்தைகளாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மதுபன்னின் அலங்காரம். மேலும் மிகவும் கலகலப்பாகவும் இருக்கிறீர்கள். வகைவகையான கிளைகள் ஒன்றாக சேர்ந்து ஒரு சந்தனத்தின் மரமாக ஆவதின் உதாரணத்திலும் மிக நன்றாக இருக்கிறீர்கள். உங்களிடம் எத்தனை விசேஷங்கள் இருக்கின்றன! விசேஷங்கள் அதிகம் மேலும் பலஹீனம் ஒன்று இருக்கிறது என்றால் ஒன்றை அகற்றுவதோ மிகவும் சுலபம் தான் இல்லையா? பிரச்சனைகள் முடிவடைந்து விட்டன தான் இல்லையா! புரிந்ததா!

 

எப்படி தெளிவாகக் கூறுகிறீர்கள், அதே போல் உள்ளத்தின் தூய்மை காரணமாக மற்றவர்களிடமிருந்து விஷயத்தை பெறுவதிலும் நம்பர் ஒன். விசேஷங்களின் மாலையை உருவாக்கினோம் என்றால் மிக நீளமானதாக ஆகி விடும். இருந்தாலும் பாப்தாதா வாழ்த்துக்கள் கூறுகிறார். இந்த பரிவர்த்தனையை 99 சதவிகிதமோ செய்து விட்டீர்கள், இன்னும் ஒரு சதவிகிதம் மிச்சம் இருக்கிறது. அதுவும் கண்டிப்பாக பரிவர்த்தனை ஆகிவிடும். புரிந்ததா! நீங்கள் எவ்வளவு நல்லவர்கள்! இப்பொழுதே மாறிவிட்டு முடியாது என்பதிலிருந்து முடியும் என்று சொல்லிவிடுகிறீர்கள். இதுவும் விசேஷம் தான் இல்லையா! மிக நல்ல பதில் கொடுக்கிறீர்கள். இவர்களிடம் சக்திசாலியாக, வெற்றி அடைபவராக இருக்கிறீர்களா என்று கேட்கிறோம். அதற்கு இப்பொழுதிலிருந்து இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். இதுவும் பரிவர்த்தனையின் சக்தி அதிகவேகமாக இருக்கிறது இல்லையா! எறும்பு, எலியிடம் மட்டும் பயப்படும் சம்ஸ்காரம் இருக்கிறது. மாவீரனாகி எறும்பை காலின் கீழே வைத்து விடுங்கள். மேலும் எலியை சவாரியாக ஆக்கிவிடுங்கள், கணேஷன் ஆகிவிடுங்கள். இப்பொழுதிலிருந்து விக்ன விநாஷக் அதாவது கணேஷன் ஆகி எலி மேல் சவாரி செய்யத் தொடங்கி விடுங்கள். எலியை கண்டு பயப்படாதீர்கள். எலி சக்திகளை கடித்து விடுகிறது. சகித்துக் கொள்ளும் சக்தியை அழித்து விடுகிறது. சரளத்தன்மையை அழித்து விடுகிறது. அன்பை அழித்து விடுகிறது. கடிக்கிறது தான் இல்லையா? எறும்பு நேராக தலைக்குள் சென்று விடுகிறது. டென்ஷனில் மயக்கமடையச் செய்து விடுகிறது. அந்த நேரம் மிகவும் பிரச்சனை செய்து விடுகிறது தான் இல்லையா! நல்லது.

 

எப்பொழுதும் மகாவீர் ஆகி சக்திசாலி நிலையில் நிலைத்திருக்கக்கூடிய, ஒவ்வொரு எண்ணம் சொல் மற்றும் செயல் என்ற ஒவ்வொரு அடி மேல் அடி எடுத்து வைத்து தந்தை கூடவே செல்லக்கூடிய உண்மையான வாழ்க்கை துணைவர்களுக்கு, எப்பொழுதும் தன்னுடைய விசேஷங்களை எதிரில் வைத்து பலஹீனங்களுக்கு நிரந்தரமாக விடை கொடுக்கக்கூடிய, எண்ணம் என்ற விதையை எப்பொழுதும் நன்றாக பழம் கொடுப்பதாக ஆக்கக்கூடிய, ஒவ்வொரு நேரமும் எல்லைக்கப்பாற்பட்ட பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்தக்கூடிய, அனைத்து பிராப்திகள் என்ற ஊஞ்சலில் ஆடக்கூடிய நிரந்தரமான சக்திசாலியான ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

ஃபிரான்ஸ் குரூப்புடன் சந்திப்பு -

நீங்கள் அனைவரும் அனேக தடவைகள் சந்தித்திருக்கிறீர்கள் மேலும் இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஏனென்றால் சென்ற கல்பத்தில் முதலில் சந்தித்திருக்கிறீர்கள் அதனால் இப்பொழுது சந்தித்து கொண்டிருக்கிறீர்கள். சென்ற கல்பத்தின் ஆத்மாக்கள் மீண்டும் தன்னுடைய உரிமையைப் பெறுவதற்காக வந்து சேர்ந்து விட்டீர்களா? புதியதாக அனுபவம் இல்லை தான் இல்லையா! நான் பல தடவைகள் சந்தித்திருக்கிறேன் என்ற அறிமுகம் நினைவு வருகிறது. தெரிந்த வீடாக அனுபவம் ஆகிறது. எப்பொழுது தன்னுடையவர் யாராவது கிடைத்து விட்டார் என்றால் தன்னுடையவர்களைப் பார்த்து குஷி ஏற்படுகிறது. இப்பொழுதோ இதற்கு முன்பு என்ன சம்மந்தம் இருந்ததோ அது சுயநலத்தின் சம்மந்தமாக இருந்தது. உண்மையானதாக இருக்கவில்லை என்று இப்பொழுது புரிந்து கொண்டீர்கள். தன்னுடைய பரிவாரத்தில், தன்னுடைய இனிமையான இல்லத்தில் வந்து சேர்ந்து விட்டீர்கள். பாப்தாதாவும் வாருங்கள், வாருங்கள் என்று கூறி வரவேற்கிறார்.

 

திடத்தன்மை வெற்றியை கொண்டு வரும். இது நடக்குமா அல்லது நடக்காதா என்ற எண்ணம் எங்கு இருக்குமோ அங்கு வெற்றி கிடைக்காது. எங்கு திடத்தன்மை இருக்குமோ அங்கு நிச்சயம் வெற்றி இருக்கும். ஒருபொழுதும் சேவையில் மனமுடைந்து போகாதீர்கள் ஏனென்றால் இது அழியாத தந்தையின் அழியாத காரியம். வெற்றியும் அழியாததாக கண்டிப்பாக இருக்கும். சேவைக்கான பலன் கிடைக்கவில்லை என்பது இருக்கவே முடியாது. சில பலன் அந்த நேரம் கிடைக்கும், சிலவை கொஞ்ச காலத்திற்கு பிறகு கிடைக்கும் எனவே ஒருபொழுதும் இந்த மாதிரி எண்ணத்தையும் வைக்காதீர்கள். சேவை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று எப்பொழுதும் புரிந்து கொள்ளுங்கள்.

 

ஜப்பான் குரூப்புடன் சந்திப்பு -

தந்தை மூலமாக அனைத்து பொக்கிஷங்களும் பிராப்தி ஆகிக் கொண்டிருக்கிறதா? நான் நிரம்பிய ஆத்மா என்று அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்களா? இந்த பொக்கிஷங்கள் ஒரு ஜென்மத்திற்கு இல்லை ஆனால் 21 ஜென்மங்கள் வரை உடன் இருக்கும். இன்றைய உலகத்தில் யாராவது எவ்வளவு தான் செல்வந்தனாக இருந்தாலும் ஆனால் என்ன பொக்கிஷங்கள் உங்களிடமிருக்கிறதோ அது வேறு யாரிடமும் இல்லை. அப்படியானால் வாஸ்தவமாக உண்மையான வி..பி யார்? நீங்கள் தான் இல்லையா! இந்த பதவியோ இன்றிருக்கும் நாளை இருக்காது. ஆனால் உங்களுடைய இந்த ஈஸ்வரிய பதவியை யாரும் பறிக்க முடியாது. நீங்கள் தந்தையின் வீட்டின் அலங்காரமான குழந்தைகள். எப்படி மலர்களால் வீட்டை அலங்கரிப்பார்கள் அதே போல் நீங்கள் தந்தையின் வீட்டின் அலங்காரங்கள். எனவே எப்பொழுதும் நான் தந்தையின் அலங்காரம் என்று புரிந்து தன்னை உயர்ந்த நிலையில் நிலைத்திருக்கச் செய்யுங்கள். ஒருபொழுதும் பலஹீனமான விஷயங்களை நினைவு செய்யாதீர்கள். கடந்த காலத்து விஷயங்களை நினைவு செய்வதினால் இன்னும் பலஹீனம் வந்து விடும். கடந்ததை நினைத்தீர்கள் என்றால் அழுகை வரும். எனவே கடந்தது என்றால் முடிந்தது. தந்தையின் நினைவு சக்திசாலி ஆத்மாவாக ஆக்கிவிடுகிறது. சக்திசாலியான ஆத்மாவை பொறுத்தளவில் கடின உழைப்பும் அன்பில் மாறிவிடுகிறது. எந்த அளவில் ஞானத்தின் களஞ்சியத்தை மற்றவர்களுக்கு கொடுப்பீர்களோ அந்த அளவு அது பெருகும். தைரியம் மற்றும் உற்சாகத்தின் மூலமாக எப்பொழுதும் முன்னேற்றத்தை அடைந்து கொண்டே முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். நல்லது.

 

அவ்யக்த மகாவாக்கியம் - 'ஆசை என்றால் என்னவென்று அறியாதவராக ஆகுங்கள்'

 

பிராமணர்களின் இறுதி சம்பூர்ண சொரூபம் மற்றும் நிலையை ஆசை என்றால் என்னவென்று அறியாத நிலை என்று வர்ணிக்கிறார்கள். எப்பொழுது அந்த மாதிரியான நிலை உருவாகுமோ அப்பொழுது வெற்றி முழக்கம் ஏற்படும். இதற்காக திருப்தியான ஆத்மாவாக ஆகுங்கள். எந்த அளவு திருப்தியானவராக ஆவீர்களோ அந்த அளவே ஆசை என்றால் என்னவென்று அறியாதவராக ஆவீர்கள். எப்படி பாப்தாதா எந்தவொரு காரியத்தின் பலனின் இச்சை வைப்பதில்லை. ஒவ்வொரு வார்த்தையில் மற்றும் காரியத்தில் எப்பொழுதுமே தந்தையின் நினைவு இருக்கும் காரணத்தினால் பலனிற்கான இச்சை எண்ண அளவில் கூட இருப்பதில்லை. அந்த மாதிரி தந்தையை பின்பற்றிச் செய்யுங்கள். பழுக்காத பழத்திற்கான ஆசை வைக்காதீர்கள். பலத்தின் ஆசை சூட்சுமத்திலும் இருக்கிறது என்றால் எப்படி செய்தீர்களோ அப்படி பலன் என்ற பழத்தை அருந்தினீர்கள், பிறகு பலன் சொரூபம் எப்படி தென்படும்? எனவே பலனுக்கான ஆசையை விட்டு விட்டு ஆசை என்றால் என்னவென்று அறியாதவர் ஆகுங்கள்.

 

எப்படி அளவற்ற துக்கங்களின் பட்டியல் இருக்கிறது, அதே போல் பலனிற்கான ஆசைகள் மற்றும் அதனுடைய பிரதிபலனை பெறுவதற்கான சூட்சும எண்ணம் இருக்கிறது அதுவும் பல வகையானதாக இருக்கும். ஆசையற்ற உள்உணர்வு இருப்பதில்லை. முயற்சி செய்வதின் பலன் என்ன கிடைக்கும் என்ற ஞானம் இருந்தபோதிலும் அதன் மேல் பற்றுதல் இருக்கிறது. யாராவது உங்களை மகிமை செய்கிறார் என்றால் அவர் பக்கம் உங்களுடைய விசேஷ கவனம் செல்கிறது என்றால் இதுவும் சூட்சுமமாக பலனை ஏற்றுக் கொள்வது. ஒரு உயர்ந்த காரியம் செய்வதற்காக நூறு மடங்கு முழுமையான பலன் உங்கள் எதிரில் வரும் ஆனால் நீங்கள் அற்ப காலத்தின் ஆசை என்றால் என்னவென்று அறியாதவராக ஆகுங்கள். ஆசை நல்ல காரியத்தை அழித்து விடும், தூய்மையை அழித்து விடுகிறது, சுத்தமாக இருப்பதற்கு பதிலாக யோசிப்பவராக ஆக்கிவிடும். எனவே இந்த விஷயத்தை அறியாதவராக ஆகுங்கள்.

 

எப்படி தந்தையைப் பார்த்திருக்கிறீர்கள் - தன்னுடைய நேரத்தையும் சேவைக்காக கொடுத்தார். அவர் சுயம் தானே பணிவானவராகி குழந்தைகளுக்கு மரியாதை கொடுத்தார். முதலில் குழந்தைகள் - பெயர் குழந்தைகளுக்கு, காரியம் தன்னுடையது. காரியத்தினால் கிடைக்கும் பெயரின் பிராப்தியையும் தியாகம் செய்தார். குழந்தைகளை எஜமானர்களாக வைத்தார் மேலும் தன்னை சேவாதாரியாக வைத்தார். எஜமானத்தன்மையின் மரியாதையையும் கொடுத்து விட்டார், மதிப்பையும் கொடுத்து விட்டார், பெயரையும் கொடுத்து விட்டார். ஒருபொழுதும் தன்னுடைய பெயரை பயன்படுத்தவில்லை - என்னுடைய குழந்தைகள். எப்படி தந்தை பெயர், மரியாதை, புகழ் அனைத்தையும் தியாகம் செய்தார், அதே போல் தந்தையை பின்பற்றிச் செய்யுங்கள். ஏதாவது ஒரு சேவையை இப்பொழுது செய்தீர்கள், மேலும் இப்பொழுதே அதனுடைய பலனை எடுத்து கொண்டீர்கள் என்றால் ஒன்றுமே சேமிப்பாகவில்லை, சம்பாதித்தீர்கள் மற்றும் சாப்பிட்டீர்கள் என்றாகிவிடும். பிறகு அதில் மனோபலம் இருப்பதில்லை அவர் மனதால் பலஹீனமாக இருப்பார், சக்திசாலியாக இருப்பதில்லை. காகாயாக இருந்து விடுவார். எப்பொழுது இந்த அனைத்து விஷயங்களும் முடிவடைந்து விடுமோ அப்பொழுது நிராகாரி, நிரகங்காரி மற்றும் நிர்விகாரி நிலை இயல்பாக ஆகிவிடும். நீங்கள் குழந்தைகள் எந்தளவு ஒவ்வொரு விருப்பத்திலிருந்து விலகியிருப்பீர்களோ அந்த அளவு உங்களுடைய ஒவ்வொரு விருப்பமும் சுலபமாக நிறைவேறிக் கொண்டே இருக்கும். வசதிகளை கேட்காதீர்கள், வள்ளலாகி கொடுங்கள். ஏதாவது ஒரு சேவைக்காக மற்றும் தனக்காக ஏதாவது வசதி சௌகர்யத்தின் ஆதாரத்தில் தன்னுடைய முன்னேற்றம் மற்றும் சேவையின் அற்ப காலத்தின் வெற்றி கிடைத்து விடும். ஆனால் இன்று மகானாக இருப்பீர்கள் மேலும் நாளை மகான் நிலையின் தாகம் உள்ள ஆத்மாவாக ஆகிவிடுவீர்கள். எப்பொழுதுமே பிராப்தியின் இச்சையிலேயே இருப்பீர்கள்.

 

ஒருபொழுதும் நியாயம் கேட்பவராக ஆகாதீர்கள். எந்தவிதமாக கேட்பவர்கள் தன்னை திருப்தியான ஆத்மாவாக அனுபவம் செய்ய மாட்டார்கள். பெரும் வள்ளல் பிச்சைக்காரனிடமிருந்து ஒரு நையா பைசா பெறுவதற்கான ஆசையை வைக்க முடியாது. இவர் மாற வேண்டும் மற்றும் இதை இவர் செய்ய வேண்டும் மற்றும் இவர் கொஞ்சம் சகயோகம் கொடுத்தால், கொஞ்சம் ஒரு அடி முன்னுக்கு வைத்தால் அந்த மாதிரியான எண்ணம் மற்றும் அந்த மாதிரியான சகயோகத்தின் பாவனை மற்றதின் வசமாகி சக்தியற்ற யாசிக்கும் ஆத்மாவிடம் என்ன வைக்க முடியும்? ஒருவேளை யாராவது உங்களுடைய சகயோகி சகோதரன் அல்லது சகோதரி பரிவாரத்தின் ஆத்மா, அறியாமையில் குழந்தைத்தன பிடிவாதத்தினால் அற்பகாலத்தின் பொருளை சதா காலத்தின் பிராப்தி என்று புரிந்து, அற்பகாலத்தின் பெயர், புகழ் மரியாதை மற்றும் அற்பகாலத்தின் பிராப்திக்கான இச்சை வைக்கிறது என்றால் மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்து தான் பணிவானவராக ஆவது என்ற இதைக் கொடுப்பது தான் சதா காலத்திற்கும் பெறுவது. யாரிடமாவது ஏதாவது வசதியை பெற்றுக் கொண்டு பிறகு வசதியை கொடுக்க வேண்டும் என்பது எண்ணத்தில் கூட இருக்க வேண்டாம். இந்த அற்பகால ஆசையிலிருந்து பிச்சைக்காரன் ஆகுங்கள். எதுவரை யார் மேலேயாவது அம்ச மாத்திரமும் ஏதாவது ருசி தென்படுகிறது, சாரமற்ற உலகம் என்ற அனுபவம் ஆவதில்லை, இவர்கள் அனைவரும் இறந்து கிடக்கிறார்கள் என்பது புத்தியில் வரவில்லை என்றால் அதுவரை அவரிடமிருந்து ஏதாவது ஒரு பிராப்தியின் ஆசை வைக்க முடியாது. ஆனால் எப்பொழுதும் ஒருவரின் இரசனையில் இருக்கக்கூடியவர்கள் ஒரே சீரான நிலையில் உள்ளவராக ஆகிவிடுவார்கள். அவர்களுக்கு பிணங்களிடமிருந்து எந்தவிதமான பிராப்திக்கான விருப்பம் இருக்க முடியாது. எந்தவொரு அழியும் இரசனை தன் பக்கம் கவர்ந்திழுக்க முடியாது.

 

அனேகவிதமான விருப்பங்கள் எதிர்நோக்குவதில் தடைபோடுகிறது. எப்பொழுது எனக்கு பெயர் கிடைக்க வேண்டும், நான் அப்படிப்பட்டவன், என்னிடமிருந்து ஏன் கருத்துக்கள் கேட்கவில்லை, எனக்கு ஏன் மதிப்பு வைக்கவில்லை என்ற விருப்பத்தை வைக்கிறீர்கள் என்றால் அப்பொழுது தான் சேவையில் தடை ஏற்படுகிறது. எனவே மரியாதை கிடைக்க வேண்டும் என்ற ஆசையை விட்டு விட்டு சுய மரியாதையில் நிலைத்திருந்து விட்டீர்கள் என்றால் மரியாதை நிழலுக்கு சமமாக உங்கள் பின்னாலேயே வரும்.

 

சிறிய குழந்தைகள் மிக நல்ல முயற்சி செய்பவர்கள், ஆனால் முயற்சி செய்து கொண்டே சில நேரங்களில் நன்றாக முயற்சி செய்த பிறகு அதற்கான பலனை இங்கேயே அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வைக்கிறார்கள். இந்த அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை சேமிப்பாவதில் குறை ஆக்கி விடும். எனவே பலனின் ஆசையை அகற்றி விட்டு நல்ல முயற்சி செய்யுங்கள். இச்சைக்கு பதிலாக அச்சா (நல்லது) என்ற வார்த்தையை நினைவில் வையுங்கள்.

 

பக்தர்களுக்கு அனைத்து பிராப்திகளை செய்விப்பதற்கான ஆதாரம் ''ஆசை என்றால் என்னவென்று தெரியாத நிலை''. எப்பொழுது நீங்களே ஆசை என்றால் என்னவென்று தெரியாதவர்களாக ஆகிவிடுகிறீர்களோ அப்பொழுது தான் மற்ற ஆத்மாக்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற முடியும். ஒருபொழுதும் தனக்காக எந்த ஆசையையும் வைக்காதீர்கள். ஆனால் மற்ற ஆத்மாக்களின் ஆசைகளை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்தீர்கள் என்றால் நீங்கள் இயல்பாகவே சம்பன்னம் ஆகிவிடுவீர்கள். இப்பொழுது உலகின் ஆத்மாக்களின் அனேக விதமான ஆசைகளை அதாவது விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற திட எண்ணத்தை வையுங்கள். மற்றவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவது என்றால் தன்னை ஆசை என்றால் என்னவென்று அறியாதவராக ஆக்குவது. எப்படி கொடுப்பது என்றால் பெறுவது என்றிருக்கிறது, அதே போலவே மற்றவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவது என்றால் தன்னை சம்பன்னமாக ஆக்குவது. நான் அனைவரின் விருப்பங்களை நிறைவேற்றும் மூர்த்தியாக ஆக வேண்டும் என்ற இலட்சியத்தை எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள். நல்லது.

 

வரதானம்:

பிரச்சினைகளை சாலையோரக் காட்சிகள் என்று புரிந்து கடந்து செல்லக்கூடிய நினைவு சொரூப சக்திசாலியான ஆத்மா ஆகுக.

 

நினைவு சொரூப ஆத்மா சக்திசாலியாக இருக்கும் காரணத்தினால் பிரச்சினைகளை விளையாட்டு என்று நினைக்கிறார்கள். எவ்வளவு தான் பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஆனால் சக்திசாயான

ஆத்மாவை பொறுத்தளவில் இலட்சியத்தை சென்றடைவதற்கு இந்த அனைத்து பாதைகளும் பக்கத்து காட்சிகள். மனிதர்களோ பணம் செலவழித்தும் சுற்றுலா காட்சிகளை பார்ப்பதற்கு செல்கிறார்கள். எனவே நினைவு சொரூப சக்திசாலியான ஆத்மாவை பொறுத்தளவில் பிரச்சனை என்று கூறினாலும், சோதனை, தடை என்று கூறினாலும் அனைத்தும் பக்கத்து காட்சிகள் மேலும் இந்த இலட்சியத்தை சென்றடைவதின் பக்கத்து காட்சிகளை எண்ணிலடங்கா தடவை நான் கடந்து வந்திருக்கிறேன், ஒன்றும் புதிதல்ல என்ற நினைவு இருக்கிறது.

 

சுலோகன் :

மற்றவர்களை கரெக்ஷன் (சரி செய்வது) செய்வதற்கு பதிலாக தந்தையுடன் கனெக்ஷனை (தொடர்பை) இணைத்து கொண்டீர்கள் என்றால் வரதானங்களின் அனுபவம் ஆகிக் கொண்டே இருக்கும்.

 

அறிக்கை :

இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை. அனைத்து சகோதர சகோதரிகளும் மாலை 6.30 லிருந்து 7.30 வரை விசேஷமாக குழு ரூபத்தில் உலகத்தில் மன சக்தி மூலமாக அனைத்து சக்திகளின் கிரணங்களை பரப்புங்கள். நான் மாஸ்டர் சர்வ சக்திவான் ஆத்மா என்ற சுயமரியாதையை நினைவில் வைத்து அனைத்து ஆத்மாக்களுக்கு இயற்கைக்கும் சேர்த்து அனைத்து சக்திகளின் தானம் கொடுத்து கொண்டிருக்கிறேன் என்ற நினைவில் அமருங்கள்.

 

ஓம்சாந்தி