01.10.2018 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
பாபாவின்
ஆசை
-
குழந்தைகள்
முழுமையாக நஷ்டமோகா(பற்றற்றவர்களாக)
ஆக
வேண்டும்,
பாபா
தாங்கள்
எங்களுடையவர்கள்,
நாங்கள் தங்களுடையவர்கள்
என்று
திடமான
உறுதிமொழி
அளிக்க
வேண்டும்
அப்போது
தான்
உண்மையான
அன்பின்
பிணைப்பு
ஏற்படும்.
கேள்வி:-
ருத்ரன்
சிவபாபாவின்
மூலம்
படைக்கப்பட்ட
யக்ஞம்
மற்றும்
மனிதர்களின்
மூலம்
படைக்கப்படுகின்ற
யக்ஞத்திற்கும்
உள்ள
முக்கியமான
வித்தியாசம்
என்ன?
பதில்:-
மனிதர்கள்
படைக்கும்
யக்ஞத்தில்
பார்-
எள்
போன்றவைகளை
சுவாஹா
செய்கிறார்கள்,
அது பொருட்களின்
யக்ஞமாகும்.
பாபா
படைக்கின்ற
இந்த
யக்ஞமானது
அழிவற்ற
ஞான
யக்ஞமாகும்,
இதில்
முழு பழைய
உலகமும்
சுவாஹா
ஆகிவிடுகிறது.
2.
அந்த
யக்ஞம்
கொஞ்ச
காலம்
வரை
தான்
நடக்கிறது,
இந்த யக்ஞம்
வினாசம்
ஆகும்
வரை
நடந்து
கொண்டே
இருக்கும்.
குழந்தைகளாகிய
நீங்கள்
எப்போது
கர்மாதீத் நிலையை
அடைகிறீர்களோ,
அப்போது
இந்த
யக்ஞம்
முடிவடையும்.
பாட்டு:-
பலமுள்ளவன்
பலமற்றவனோடு
சண்டையிடுகிறான்.................
ஓம்
சாந்தி.
இதனை
பாடசாலை
என்றும்
சொல்லலாம்
மற்றும்
ஞான
யக்ஞம்
என்றும்
சொல்லலாம் என்பதை
குழந்தைகள்
தெரிந்துள்ளார்கள்.
பாடசாலை
என்று
பார்த்தால்
குறிக்கோள்
கண்டிப்பாக
வேண்டும்.
இப்போது
இது
யக்ஞத்திற்கு
யக்ஞமாகவும்
இருக்கிறது
மற்றும்
பாடசாலையாகவும்
இருக்கிறது.
இது
ருத்ர ஞான
யக்ஞமாகும்,
அவர்கள்
இதை
காப்பி
அடிக்கிறார்கள்.
பொருட்களின்
யக்ஞம்
உருவாக்குகிறார்கள்.
அதில்
பார்-எள்
போன்றவற்றை
ஆகுதி
போடுகிறார்கள்
மற்றொன்று
பிறகு
பெரிய
யக்ஞமும்
உருவாக்குகிறார்கள் அங்கே
நாலாபுறமும்
சாஸ்திரங்களை
வைக்கிறார்கள்.
மிகப்பெரிய
நிலத்தை
எடுத்துக்
கொள்கிறார்கள்.
பிறகு ஒரு
பக்கம்
அரிசி,
நெய்,
மாவு
போன்ற
அனைத்தையும்
வைக்கிறார்கள்
மற்றும்
மற்றொரு
பக்கம்
சாஸ்திரங்கள் அனைத்தையும்
வைக்கிறார்கள்.
என்ன
சாஸ்திரம்
வேண்டுமோ
அதைச்
சொல்வார்கள்
பிறகு
அங்கே யக்ஞத்தில்
சுவாஹாவும்
செய்து
கொண்டிருக்கிறார்கள்.
பாபா
கூறுகின்றார்,
இந்த
ருத்ரன்
என்பது
என்னுடைய பெயராகும்.
ருத்ர
பகவான்
ஞான
யக்ஞத்தை
படைத்திருந்தார்
என்றும்
சொல்கிறார்கள்.
இதற்கு
ருத்ர
ஞான யக்ஞம்
என்று
பெயர்
வந்து
விட்டது.
நேரு
இறந்த
பிறகு,
நேரு
தெரு,
நேரு
பார்க்
என்றெல்லாம்
பெயர் வைக்கிறார்கள்.
ருத்ரன்
என்பவர்
பகவான்
சிவன்
ஆவார்.
அவர்
தான்
ருத்ர
ஞான
யக்ஞத்தை படைத்திருக்கிறார்.
இந்த
யக்ஞத்தில்
முழு
பழைய
உலகமும்
ஆகுதியாகிறது.
இது
யாருடைய
புத்தியிலும் இருப்பதில்லை.
எவ்வளவு
பெரிய
உலகமாக
இருக்கிறது.
எவ்வளவு
தூரம்
தூரமாக
நகரங்கள்
இருக்கின்றன.
அனைத்தும்
இந்த
அழிவற்ற
ஞான
யக்ஞத்தில்
ஆகுதியாகி
விடும்.
பழைய
உலகத்தின்
வினாசம்
கண்டிப்பாக ஆக
வேண்டும்,
பிறகு
புதிய
உலகம்
உருவாகும்.
வினாசம்
ஆவதற்கு
இயற்கை
சீற்றங்களும்
உதவி புரிகிறது,
எனவே
இது
ருத்ர
இராஜஸ்வ
அஷ்வமேத
அழிவற்ற
ஞான
யக்ஞமாகும்.
அழிவற்ற
என்றால் எதுவரை
வினாசம்
ஆகவில்லையோ
அது
வரை
நடந்து
கொண்டே
இருக்கும்.
இப்படிப்பட்ட
யக்ஞம்
வேறு யாராலும்
நடத்தப்படுவதில்லை.
மற்ற
யக்ஞம்
அதிகத்திலும்
அதிகம்
ஒரு
மாதம்
வரை
நடக்கும்.
கீதையை கூட
ஒரு
மாதம்
சொல்கிறார்கள்.
நான்
இந்த
ஞான
யக்ஞத்தை
படைத்திருக்கிறேன்
என்று
பாபா
புரிய வைக்கின்றார்.
இது
இராஜஸ்வ
அஷ்வமேத
என்றால்
உங்களுடைய
ரதம்
(உடல்)
என்ன
இருக்கிறதோ,
அதை
சுவாஹா
செய்ய
வேண்டும்,
பலியிட
வேண்டும்.
அவர்கள்
வேறு
பெயரை
வைத்து
விட்டார்கள்.
தட்ச
பிரஜாபதியின்
யக்ஞத்தை
காட்டுகிறார்கள்,
அதில்
குதிரையை
எரிக்கிறார்கள்.
பெரிய
கதை
இருக்கிறது.
இது
என்னுடைய
அழிவற்ற
ஞான
யக்ஞம்
என்று
பாபா
புரிய
வைக்கின்றார்.
அழிவற்றவரின்
மூலம் அழிவற்ற
யக்ஞமாகும்.
எப்போதும்
நடந்து
கொண்டிருக்கும்
என்பதும்
கிடையாது.
முழு
உலகமும்
சுவாஹா ஆகும்
நேரம்
எப்போது
வருமோ
அதுவரை
இந்த
யக்ஞம்
நடக்க
வேண்டும்
ஏனென்றால்
பாபா
ஞானக்கடலாக இருக்கின்றார்.
பக்தியின்
சாஸ்திரங்கள்
அதிகம்
இருக்கிறது.
பாபா
ஞானக்கடல்
என்றால்
கண்டிப்பாக அவரிடம்
புதிய
ஞானம்
இருக்கும்
அல்லவா.
பாபா
தன்னுடைய
முழுமையான
அறிமுகத்தைக்
கொடுக்கின்றார் மேலும்
சிருஷ்டி
சக்கரம்
எப்படி
சுற்றுகின்றது
என்பதையும்
புரிய
வைக்கின்றார்,
இதன்மூலம்
ஆத்மா திரிகாலதரிசியாக
ஆகின்றது.
திரிகாலதரிசியாக்கும்
ஞானத்தை
வேறு
யாரும்
கொடுக்க
முடியாது.
ஒன்று ஞானத்தை
தாரணை
செய்ய
வேண்டும்,
மற்றொன்று
குழந்தைகளாகிய
நீங்கள்
யோகபலத்தின்
மூலம்
விகர்மங்களை வென்றவர்களாக
ஆக
வேண்டும்.
பிறவி-பிறவிகளுக்குமான
பாவங்களின்
சுமை
தலைமீது
இருக்கிறது,
அது எரிவதற்கு
நேரம்
பிடிக்கிறது.
எவ்வளவு
ஆண்டுகள்
ஆகிறது
இருந்தாலும்
கர்மாதீத்
நிலையை
அடையவில்லை.
கர்மாதீத்
நிலை
வரும்போது
தான்
யக்ஞமும்
முடிகிறது.
இது
மிகப்பெரிய
யக்ஞமாகும்.
அறிகுறிகளையும் பார்க்கின்றீர்கள்,
ஏற்பாடுகள்
நடந்து
கொண்டிருக்கின்றன.
இன்னும்
போகப்போக
பார்ப்பீர்கள்,
இயற்கை சீற்றங்களும்
தயாராகிக்
கொண்டிருக்கின்றன.
சில
நேரங்கள்
பெருவெள்ளம்
ஏற்படும்,
சில
நேரங்களில் பூகம்பங்கள்,
சில
நேரங்களில்
பஞ்சம்
ஏற்படும்.
4
ஆண்டு
திட்டம்
போட்டிருக்கிறோம்
பிறகு
நிறைய தானியங்கள்
பெருகிவிடும்
என்று
அவர்கள்
கட்டுக்
கதை
விடுகிறார்கள்.
அட
சாப்பிடக்கூடிய
மனிதர்களும் மிக
அதிகமாக
இருக்கிறார்களே.
மனிதர்கள்
மட்டுமா,
வெட்டுகிளி,
ஈக்களும்
சாப்பிட்டு
விடுகின்றன.
வெள்ளம் வருகிறது,
நிறைய
இழப்புகளை
ஏற்படுத்தி
விடுகிறது.
இவர்கள்
பாவம்,
எதுவுமே
தெரிவதில்லை.
பஞ்சம் போன்றவை
கண்டிப்பாக
ஏற்பட
வேண்டும்
என்பதை
நீங்கள்
தெரிந்துள்ளீர்கள்.
அறிகுறிகள்
தெரிகின்றன.
கொஞ்சம்
சண்டை
ஏற்பட்டாலும்
தானியங்கள்
போன்றவை
வருவதும்
நின்று
விடும்.
முன்பு
சண்டையில் எத்தனை
கப்பல்கள்
மூழ்கின.
ஒருவர்
மற்றவருக்கு
எவ்வளவு
நஷ்டத்தை
ஏற்படுத்தினார்கள்.
5
ஆயிரம்
ஆண்டுகளுக்கு
முன்பு
கூட
இந்த
யக்ஞத்தைப்
படைத்திருந்தேன்
மற்றும்
நீங்கள்
இராஜயோகம் கற்றீர்கள்
என்று
பாபா
கூறுகின்றார்.
யக்ஞம்
பிராமணர்களின்
மூலம்
படைக்கப்படுகிறது.
கீதையில்
சண்டை போன்ற
விஷயங்களை
எழுதி
விட்டார்கள்.
சஞ்சய்
போன்றவர்களும்
இருக்கிறார்கள்.
இவையனைத்தும் பக்தி
மார்க்கத்தின்
பொருட்களாகும்.
இதுவும்
அழிவற்றதாகும்.
மீண்டும்
பக்திமார்க்கத்தில்
அந்த
பொருட்களே தான்
வரும்.
இராமாயணம்
போன்ற
என்னவெல்லாம்
சாஸ்திரங்கள்
வெளிவந்ததோ,
அவை
மீண்டும்
வரும்.
யார்
யாருடைய
இராஜ்யம்
நடைபெற்றதோ,
ஆங்கிலேயர்கள்
வந்தார்கள்,
முஸ்லீம்கள்
வந்தார்கள்,
இவர்கள் அனைவரும்
இருந்து
விட்டு
சென்றுள்ளார்கள்,
மீண்டும்
வருவார்கள்.
மீண்டும்
பிரிவினை
நடக்கும்.
இந்த விஷயங்களை
நீங்கள்
தெரிந்து
கொள்ள
முடியும்,
உங்களில்
கூட
வரிசைக்கிரமம்
இருக்கிறது.
சிலர்
எதையுமே தெரிந்திருக்கவில்லை.
ஆக
எவ்வளவு
யக்ஞங்களை
உருவாக்குகிறார்கள்
என்று
பாபா
புரிய
வைக்கின்றார்.
உண்மையில்
அஷ்வமேத
அழிவற்ற
ருத்ர
ஞான
யக்ஞமாகும்,
இதை
ருத்ரன்
சிவபகவான்
தான்
படைத்திருந்தார்,
கிருஷ்ணர்
கிடையாது
என்று
அவர்களுக்கு
புரிய
வைக்க
வேண்டும்.
கிருஷ்ணருடைய
அதே
சரீரம் சத்யுகத்தில்
கிடைக்கும்,
பிறகு
ஒருபோதும்
கிடைக்க
முடியாது
ஏனென்றால்
அந்த
பெயர்,
ரூபம்,
தேசம்,
காலம்
போன்ற
அனைத்தும்
மாறிக்
கொண்டே
செல்கிறது.
கிருஷ்ணர்
வந்து
தன்னை
தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர்
என்று
சொல்லிக் கொள்ளவே
முடியாது.
தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவர்
ஒரே ஒரு
பரமபிதா
பரமாத்மாவே
ஆவார்.
முதலிலேயே ஏன்
ரூபத்தை
காட்ட
வில்லை
என்று
நீங்கள்
கேட்பீர்கள்?
அப்படி
கிடையாது.
அப்படி
முதலிலேயே அனைத்தையும்
சொல்லிவிட
முடியுமா
என்ன.
முதலிலேயே இந்த
ஞானத்தை
ஏன்
கொடுக்கவில்லை,
ஒரே
நாளில்
ஏன்
ஞானத்தை
கொடுக்கவில்லை?
என்று
நீங்கள் கேட்பீர்கள்.
ஆனால்
அப்படி
கிடையாது,
இவர்
ஞானக்கடல்
எனும்போது
கண்டிப்பாக
மெது,
மெதுவாக சொல்லிக் கொண்டே
இருப்பார்.
அனைவரும்
அப்படியே
ஒரே
நேரத்தில்
படித்து
விடுவீர்களா
என்ன?
வரிசைக்கிரமாக
படிப்பீர்கள்
மற்றும்
படிப்பதற்கு
நேரம்
பிடிக்கிறது.
இதனுடைய
பெயரே
அழிவற்ற
ருத்ர ஞான
யக்ஞமாகும்.
இப்போது
இது
எங்கேயும்
எழுதப்பட்டிருக்கவில்லை.
சாஸ்திரங்களில்
பெயரளவிற்கு வெறும்
வார்த்தைகள்
மட்டும்,
பாரதத்தின்
பழமையான
சகஜ
இராஜயோகம்
என்று
இருக்கிறது.
நல்லது,
பழமையானது
என்றால்
எப்போது?
ஆரம்பத்தில்.
எனவே
கண்டிப்பாக
இந்த
அழிவற்ற
ஞான
யக்ஞத்திலிருந்து தான்
சொர்க்கத்தை
உருவாக்கியிருப்பார்.
நான்
கல்பம்-கல்பத்திலும்
சங்கமயுகத்தில்
வருகின்றேன்
என்று
பாபா கூறுகின்றார்.
அவர்கள்
தவறு
செய்துவிட்டார்கள்,
காலத்தையும்
மாற்றி
விட்டார்கள்.
பிறகு
சத்யுகத்தின் ஆயுளையும்
இலட்சக்கணக்கான
ஆண்டுகள்
என்று
எழுதிவிட்டர்கள்,
கட்டுக்
கதைகளை
ஏற்படுத்தி
விட்டார்கள்.
இது
4
பாகங்களாக
இருக்கிறது.
சுவஸ்திக்கில்
கூட
4
பாகங்களாக்கி
விட்டார்கள்
-
ஞானம்
மற்றும்
பக்தி.
அரைகல்பம்
ஞானம்-பகல்,
அரைகல்பம்
பக்தி-இரவாகும்.
ஞானத்தினுடைய
பலன்
வெண்ணெய்
கிடைக்கிறது,
பக்தியின்
பலன்
மோர்
கிடைக்கிறது.
வீழ்ந்து-வீழ்ந்து
ஒரேயடியாக
அழிந்துவிடுகிறார்கள்.
புதிய
உலகம் கண்டிப்பாக
பழையதாக
ஆக
வேண்டும்.
கலைகள்
குறைந்துக்
கொண்டே
செல்கிறது
ஆகையினால்
இப்போது இதை
கீழான,
விகாரம்
நிறைந்தது
என்று
சொல்லப்படுகிறது.
அசுர
உலகம்
அல்லவா?
இந்த
பக்தி போன்றவை
செய்வதின்
மூலம்
ஒருபோதும்
பகவான்
கிடைக்க
முடியாது
என்பதை
நீங்கள்
தெரிந்துள்ளீர்கள்.
பக்தி
செய்து
கொண்டு
தான்
வந்துள்ளார்கள்,
(பக்தி)
நிற்பதே
இல்லை.
ஒருவேளை
பகவான்
கிடைத்துவிட்டால் பக்தி
நின்று
விட
வேண்டும்
அல்லவா?
அரைக்
கல்பம்
பக்தி
நடக்க
வேண்டும்.
இந்த
விஷயங்கள் அனைத்தையும்
மனிதர்களுக்குப்
புரிய
வைக்க
வேண்டியிருக்கிறது.
உலகம்
எப்படி
புதியதாகிறது
என்பதை சித்திரங்களின்
மூலம்
சாட்சாத்காரம்
செய்விக்க
வேண்டும்.
பழைய
உலகம்
அழிந்து
பிறகு
புதியது
ஸ்தாபனை ஆகின்றது.
கண்காட்சி
போன்றவற்றை
யாராவது
பெரிய
மனிதர்களை
வைத்து
திறக்க
வேண்டியிருக்கிறது.
உதவி
பெற
வேண்டியிருக்கிறது
அல்லவா?
பிறகு
அவருக்கு
நன்றி
தெரிவிக்கப்படுகிறது.
வாழ்த்து
தெரிவிக்க தந்தி
கொடுக்கப்படுகிறது.
எவ்வளவு
பெரிய-பெரிய
பட்டங்களை
தங்களுக்கு
வைத்துக்
கொள்கிறார்கள்.
ஸ்ரீ ஸ்ரீ
என்ற
பட்டத்தைக்
கூட
வைத்துக்
கொண்டு
விட்டார்கள்.
ஸ்ரீ
ஸ்ரீ
பாபா
புரிய
வைக்கின்றார்
–
உயர்ந்த உலகமாக
இருந்தது,
இப்போது
கீழானதாக
இருக்கிறது.
மீண்டும்
உயர்ந்ததாக
மாற்ற
பாபா
வந்துள்ளார்.
அவர்கள்
முதலிலேயே தங்களுடைய
பெயருக்கு
முன்னால்
ஸ்ரீ
என்று
வைத்து
விட்டார்கள்.
உண்மையில் ஸ்ரீ
லஷ்மி,
ஸ்ரீ
நாராயணன்
என்று
சத்யுகத்தில்
தான்
சொல்லப்படுகிறது.
இராஜாக்களுக்கு
ஸ்ரீ
என்ற
பட்டம் ஒருபோதும்
கொடுக்கப்படவில்லை.
அவர்களை
மேதகு
என்று
சொல்கிறார்கள்.
அனைத்திலும்
உயர்ந்த புனிதமான
இலஷ்மி
-
நாராயணனை
இராஜாக்கள்
கூட
பூஜை
செய்கிறார்கள்.
ஏனென்றால்
அவர்கள்
தூய்மையாக இருக்கிறார்கள்.
தூய்மையான
இராஜாக்களுக்கு
புனிதர்கள்
என்று
சொல்லப்படுகிறது.
இப்போது
மேதகு என்பதற்கு
பதிலாக
நிறைய
பட்டங்களை
அனைவருக்கும்
கொடுத்து
விடுகிறார்கள்.
ஸ்ரீ
ஸ்ரீ
என்று
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது
எல்லையற்ற
தந்தை
உங்களை
உயர்ந்தவர்களாக
மாற்றிக்
கொண்டிருக்கிறார்.
புதிய
உலகம்
எப்படி
ஸ்தாபனையாகிக்
கொண்டிருக்கிறது
என்பதை
படங்களை
வைத்து
தான்
புரிய
வைக்க முடியும்.
நாம்
கீழானவர்களிலிருந்து உயர்ந்தவர்களாக
மாற்றும்
சேவை
செய்கிறோம்,
தாங்கள்
வந்து
திறந்து வையுங்கள்.
ஒரு
வினாடியில்
ஜீவன்முக்தி
என்று
பாடப்படுகிறது
அல்லவா
என்று
அவர்களுக்குப்
புரிய வைக்க
வேண்டும்.
புரிய
வைக்கக்
கூடியவர்கள்
மிகவும்
சுறுசுறுப்பாக
இருக்க
வேண்டும்,
வேகம்(தீவிரம்)
இருக்க
வேண்டும்.
இராணுவத்தினர்
எவ்வளவு
டிப்டாப்பாக
இருக்கிறார்கள்.
குழந்தைகளாகிய
உங்களுடைய பெயர்
எவ்வளவு
பெரியதாக
இருக்கிறது,
சிவசக்தி
சேனை!
இந்த
ஞானம்
அபலைகளுக்கும்,
சபிக்கப்பட்டவர்களுக்கு
தான்
கிடைக்கிறது.
இங்குள்ள
விஷயங்களே
அதிசயமானதாகும்.
உயர்ந்ததிலும் உயர்ந்தவர்
பகவான்,
யாருக்கு
படிப்பிக்கின்றார்
பாருங்கள்!
அகலிகை போன்ற
சபிக்கப்பட்டவர்களுக்கும்,
கூனிகளுக்கும்.
பகவானுடைய
மகாவாக்கியம்
-
அவர்களுக்கு
இராஜயோகத்தை
கற்றுக்
கொடுக்கின்றேன்,
நாடகத்தில்
அப்படி
பதிவாகியிருக்கிறது.
ஆனால்
அனைவரும்
தங்களை
பாவாத்மாக்கள்
என்று
புரிந்து கொள்கிறார்களா
என்ன!
இந்த
கடைசி
பிறவியில்
தூய்மையாக
ஆனீர்கள்
என்றால்
ஒரு
வினாடியில் ஜீவன்முக்தியை
அடையலாம்
என்று
பாபா
கூறுகின்றார்.
நிறைய
பேர்
வருகிறார்கள்.
ஆச்சரியமாக
கேட்பார்கள்,
மற்றவர்களுக்கு
சொல்வார்கள்,
பாபாவினுடையவர்களாக
ஆவார்கள்
இருந்தாலும்
வீழ்ந்து(மாயை
வசமாகி)
பிறகு
வெளியே
சென்று
விடுகிறார்கள்.
இது
ஆரம்பத்திலிருந்து நடந்து
கொண்டு
தான்
இருக்கிறது.
காலையில் எங்களுக்கு
உறுதியான
நம்பிக்கை
இருக்கிறது
என்று
சொல்வார்கள்,
மாலையில்
எங்களுக்கு
சந்தேகம்
இருக்கிறது என்று
சொல்வார்கள்,
நான்
போகிறேன்,
என்னால்
நியமங்களின்
படி
நடக்க
இயலாது.
குறிக்கோள்
உயர்ந்ததாக இருக்கிறது,
நான்
விடைபெறுகிறேன்
என்று
சொல்வார்கள்.
நாடகத்தின்
விதியாகும்.
பாபாவை
கைவிட்டு விடுகிறார்கள்.
மாயை
அந்தளவிற்கு
பலம்
வாய்ந்ததாக
இருக்கிறது,
அது
போகப்
போக
அடி
கொடுத்து விடுகிறது.
பாபா,
மாயையை
கொஞ்சம்
கடுமையில்லாமல்
இருக்கச்
சொல்லுங்கள்
என்று
குழந்தைகள் கூறுகிறார்கள்.
நன்கு
சூடாக(கடுமையாக)
இரு
என்று
மாயையிடம்
சொல்கிறேன்
என்று
பாபா
கூறுகின்றார்.
மாயை
அடி
கொடுக்கும்
மற்றும்
நீங்கள்
மாட்டிக்
கொள்வீர்கள்
என்பது
கிடையாது,
எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்
என்று
பாபா
கூறுகின்றார்.
ஜனகரைப்
போல்
குடும்ப
விவகாரங்களில்
இருந்துக்
கொண்டே ஜீவன்முக்தி
அடைய
வேண்டும்
என்று
தான்
நீங்கள்
கேட்கிறீர்கள்.
ஒரு
பிறவி
தூய்மையாக
ஆனீர்கள்
என்றால்
நீங்கள்
சொர்க்கத்திற்கு
எஜமானர்களாக
ஆவீர்கள்
என்று பாபா
கூறுகின்றார்.
மனிதர்களுக்கு
விகாரத்தின்
மீது
எவ்வளவும்
விருப்பம்
இருக்கிறது.
போகப்போக விழுந்து
விடுகிறார்கள்.
நாங்கள்
திருமணம்
செய்து
கொள்ள
விரும்பவில்லை
என்றால்
அரசாங்கம்
எதுவும் செய்ய
முடியாது.
நாங்கள்
ஏன்
தூய்மையற்றவர்களாக
ஆகி
பூஜாரிகளாக
ஆகி
தலைகுனிய
வேண்டும் என்று
புரிய
வைக்கலாம்.
நான்
குமாரியாக
இருந்தால்
அனைவரும்
எனக்கு
முன்னால்
தலை
வணங்குகிறார்கள்,
என்றால்
நாங்கள்
ஏன்
பூஜிக்கத்தக்கவர்களாக
இருக்கக்
கூடாது?
தூய்மையான
பூஜிக்கத்தக்கவர்களாக
ஆகுங்கள் என்று
எல்லையற்ற
தந்தை
கூறுகின்றார்.
ஒரேயொரு
இராஜயோகத்திற்குத்
தான்
சோதனை
இருக்கிறது.
எவ்வளவு
பேர்
ஏறுகிறார்கள்
மற்றும்
விழுகிறார்கள்.
ஒவ்வொருவரும்
அவரவருடைய
நடிப்பை
நடிக்கிறார்கள்.
இருந்தாலும்
முடிவு
கல்பத்திற்கு
முன்னால்
நடந்தது
போல்
தான்
இருக்கும்.
இது
நாடகமாகும்,
நாம் நடிகர்களாக
இருக்கிறோம்.
முழுமையாக
பற்றில்லாதவர்களாக
ஆக
வேண்டும்
அப்போது
தான்
பாபாவிடம் முழுமையான
அன்பு
ஏற்படும்.
பாபா,
நாங்கள்
தங்களைத்
தான்
நினைவு
செய்வோம்,
தங்களிடம்
ஆஸ்தியை அடைந்து
விட்டு
தான்
விடுவோம்.
இப்படி
சத்தியம்
செய்ய
வேண்டும்,
அப்போது
தான்
மனைவி-கணவன்
இருவரும்
தூய்மையாக
ஆகி
சொர்க்க
தாமத்திற்குச்
செல்ல
முடியும்.
இருவருமே
ஞானச்
சிதையில்
அமர்ந்து விடுவார்கள்.
இப்படி
நிறைய
ஜோடிகள்
உருவாவார்கள்.
பிறகு
வேக-வேகமாக
மரம்
வளர
ஆரம்பித்து விடும்.
நல்லது!
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு தாயும்-தந்தையுமான
பாப்-தாதாவின்
அன்பு
நினைவுகளும்
காலை
வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:-
1)
இந்த
அழிவற்ற
ஞான
யக்ஞத்தில்
தங்களுடைய
இந்த
ரதம்(உடல்)
சகிதமாக
அனைத்தையும் சுவாஹா
செய்ய
வேண்டும்.
சேவைக்கு
மிக
மிக
சுறு
சுறுப்பானவர்களாகவும்
மற்றும் தீவிரமானவர்களாகவும்
ஆக
வேண்டும்.
2)
மாயை
எவ்வளவு
தான்
சூடாக
இருந்தாலும்,
எச்சரிக்கையாக
இருந்து
அதனுடைய
அடியிலிருந்து தங்களைக்
காத்துக்
கொள்ள
வேண்டும்.
பயப்படக்
கூடாது.
வரதானம்
:
ஒரு
பாபாவை
தனது
உலகமாக
மாற்றிக்
கொண்டு
எப்பொழுதும்
சிரித்துக்
கொண்டும்,
பாடிக்கொண்டும்,
பறந்து
கொண்டும்
இருக்கக்கூடிய
மகிழ்ச்சியுடைவர்
ஆகுக.
பார்வையினாலேயே
உலகம்
மாறுகிறது
என்று
கூறப்படுகிறது
என்றால்
தங்களின்
ஆன்மீகப்
பார்வையால் உலகம்
மாறிவிட்டது.
இப்போது
உங்களைப்
பொருத்தவரை
பாபாதான்
உலகம்.
முதலில் இருந்த
உலகம் மற்றும்
இப்போதைய
உலகத்திற்கும்
வித்தியாசம்
வந்து
விட்டது.
முதலில் உலகத்தில்
புத்தி
அலைந்து கொண்டு
இருந்தது.
இப்பொழுது
பாபாதான்
உலகம்
என்று
ஆகிவிட்டதால்
புத்தி
அலைவது
நின்று
விட்டது.
எல்லையற்ற
பிராப்திகளை
செய்விக்கக்
கூடிய
பாபா
கிடைத்து
விட்டார்
என்றால்
வேறு
என்ன
வேண்டும்?
ஆகவே
சிரித்துக்
கொண்டும்,
பாடிக்
கொண்டும்,
பறந்து
கொண்டும்
சதா
மகிழ்ச்சியாக
இருங்கள்.
சுலோகன்
:
மனம்
சுத்தமாக
இருந்தால்
விருப்பங்கள்
நிறைவேறிக்
கொண்டே
இருக்கும்,
அனைத்து
பிராப்திகளும்
தானாகவே
தங்கள்
முன்பாக
வரும்.
ஓம்சாந்தி