14.11.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! தேக அபிமானம் அழ வைக்கக்கூடியது, ஆத்ம அபிமானி ஆனீர்கள் என்றால் முயற்சி சரியாக இருக்கும், உள்ளத்தில் உண்மை இருக்கும், தந்தையை முழுமையாகப் பின்பற்ற முடியும்.

 

கேள்வி:

எந்த சூழ்நிலையிலும் அல்லது ஆபத்தான சமயத்திலும் மனநிலை பயமற்றும் ஒரே சீராகவும் எப்போது இருக்க முடியும்?

 

பதில்:

நாடகத்தின் ஞானத்தில் முழுமையான நம்பிக்கை இருக்கும்போது. எந்த ஆபத்தும் எதிரில் வரும்போது இது நாடகத்தில் இருந்தது என்று கூறுவீர்கள். கல்பத்திற்கு முன்பும் கூட இதனைக் கடந்து சென்றோம், இதில் பயப்படக்கூடிய விஷயம் ஏதுமில்லை. ஆனால் குழந்தைகள் மஹாவீரர்கள்ஆக வேண்டும். யார் தந்தைக்கு முழுமையான உதவியாளர்களாக, நல்ல குழந்தைகளாக, தந்தையின் இதயத்தில் இடம் பிடித்தவர்களாக இருக்கின்றனரோ, அப்படிப்பட்ட குழந்தைகள்தான் எப்போதும் (ஸ்திரமாக) நிலையாக இருப்பார்கள், மனநிலையும் கூட ஒரே (தந்தையின்) ரசனையில் சீராக இருக்கும்.

 

பாடல்:

. . . தூரத்துப் பிரயாணியே. . .

 

ஓம் சாந்தி.

வினாசத்தின் சமயம் வரும்போது, சிலர் தப்பித்து இருப்பார்கள், இராமனின் சேனை அல்லது இராவணனின் சேனை இரண்டு பக்கத்திலும் கண்டிப்பாக பிழைத்திருப்பார்கள். அப்போது இராவணனின் சேனையைச் சேர்ந்தவர்கள் கதறுவார்கள். ஒன்று நாம் உடன் செல்லவில்லையே மற்றது இறுதியில் மிகவும் கஷ்டம் ஏற்படுகிறது ஏனென்றால் ஐயோ ஐயோ என்ற கதறல் அதிகமாக இருக்கும். குழந்தைகளாகிய உங்களிலும் யார் நெருக்கமானவர்களாக இருக்கிறீர்களோ, அவர்கள்தான் வினாசத்தைப் பார்க்கத் தகுந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள்தான் தைரியமிக்கவர்களாக இருப்பார்கள். அங்கதன் எப்படி ஸ்திரமாக (நிலையாக, அசைக்க முடியாதவராக) இருந்ததாகக் கூறுகிறார்களோ, அது போல. குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாராலும் வினாசத்தைப் பார்க்க முடியாது. எப்படி அறுவைச் சிகிச்சை நடக்கும்போது யாராலும் பார்க்க முடியாதோ அப்படி ஐயோ ஐயோ என்ற அலறல் ஏற்படும்போது இருப்பார்கள். அதை நீங்கள் முன்பாகவே பார்த்தபடி இருப்பீர்கள். கூச்சல், குழப்பம் ஏற்பட்டபடி இருக்கும். நல்ல, நெருக்கமான குழந்தைகள், தந்தைக்கு முழுமையான உதவியாளர்களாக இருக்கும் நல்ல குழந்தைகள், தந்தையின் இதயத்தில் இடம் பிடித்திருப்பார்கள். அனுமான் யாரோ ஒருவர் மட்டுமல்ல. அனைத்து அனுமான், மஹாவீரர்களின் மாலையே ஆகும். ருத்ராக்ஷ மாலை உள்ளதல்லவா! ருத்ர பகவானுடைய மாலையின் பெயர்தான் ருத்ர மாலையாகும். ருத்ராக்ஷம் என்பது விலை உயர்ந்த ஒரு விதையாகும். ருத்ராக்ஷத்தில் சில உண்மையானதும் உள்ளன, சில போலிகளும் உள்ளன. அதே மாலை 100 ரூபாய்க்கும் கிடைக்கிறது, அதே மாலை 2 ரூபாய்க்கும் கிடைக்கிறது. ஒவ்வொரு பொருளும் இப்படித்தான் உள்ளது. தந்தை வைரத்திற்குச் சமமாக ஆக்குகிறார், அத்துடன் ஒப்பிடும்போது அனைவரும் செயற்கையானவர்களாக உள்ளனர். உண்மையான பரமாத்மாவுக்கு முன்னால் அனைவரும் பைசா அளவும் மதிப்பற்றவர்களாக உள்ளனர். ஒரு பழமொழி உண்டல்லவா - சூரியனுக்கு முன்னால் காரிருளை ஒருபோதும் மூடி மறைக்க முடியாது. உங்களுக்கு உண்மையான விஷயம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையான ஈஸ்வரன் தந்தையைக் குறித்து மனிதர்கள் பொய்யானதையே கூறுகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

 

இப்போது நீங்கள் புரிய வைக்கிறீர்கள் - கீதையின் பகவான் சிவன், தெய்வீக குணங்கள் நிறைந்த தேவதையான ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. இப்போது சங்கமயுகம், பிறகு சத்யுகம் கண்டிப்பாக வரும். ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா இப்போது ஞானம் எடுத்துக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்கின்றனர். எவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டுவிட்டது! அவர் தந்தை, இவர் குழந்தை. தந்தையை ஒரேடியாக மறைத்து விட்டனர், மேலும் குழந்தையின் பெயரைப் போட்டு விட்டனர். இந்த விஷயங்களை நீங்கள் அறிவீர்கள். ஸ்ரீகிருஷ்ணர் அல்லது தேவி தேவதைகளுடைய ஆத்மாக்கள் 84 பிறவிகளை முடித்துள்ளனர். ஆத்மாவும் பரமாத்மாவும் வெகு காலமாகப் பிரிந்திருந்தனர் என்று பாடவும் படுகிறது. நாம்தான் அனைவருக்கும் முன்னர் பிரிந்தோம். மற்ற ஆத்மாக்கள் அனைவரும் பாபாவுடன் அங்கே இருப்பார்கள். இதனுடைய அர்த்தத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை. உங்களுக்குள்ளும் சரியான முறையில் புரிய வைப்பவர்கள் அபூர்வமாக சிலர் தான் இருக்கிறீர்கள். தேக அபிமானம் தான் மிகவும் அழ வைக்கிறது. ஆத்ம அபிமானிகள் தான் சரியாக முயற்சி செய்வார்கள். எனவே தாரணையும் நல்ல விதமாக ஏற்பட முடியும். ஆகையால் தந்தையைப் பின்பற்றுங்கள் (ஃபாலோ ஃபாதர்) என்று கூறப்படுகிறது. தந்தை கர்மத்திலும் வருகிறார். இருவருமே தந்தையாக ஆகின்றனர். இதை எந்த தந்தை கூறுகிறார் என்பது உங்களுக்குத் தெரிவதில்லை, ஏனென்றால் தந்தை-தாதா (பாப்தாதா) இருவருமே இந்த ஒரே சரீரத்தில் உள்ளனர். கர்மத்தில் வரக்கூடிய ஒருவர் பின்பற்றப்படுகிறார். தந்தை புரிய வைக்கிறார் - குழந்தைகளே, ஆத்ம அபிமானி ஆகுங்கள். பல நல்ல குழந்தைகளும் கூட தேக அபிமானிகளாக உள்ளனர், ஏனென்றால் பாபாவை நினைவு செய்வதில்லை. யார் யோகிகளாக இல்லையோ, அவர்கள் தாரணை செய்ய முடியாது. இங்கே உண்மையாக இருக்க வேண்டும். முழுமையாகப் பின்பற்ற வேண்டும். கேட்பவற்றை தாரணை செய்து பிறருக்குப் புரிய வைத்தபடி இருங்கள். பயமற்றவராக இருக்க வேண்டும். நாடகத்தின் மீது உறுதியாக இருக்க வேண்டும். ஏதும் ஆபத்து வந்தது என்றால் இது நாடகத்தில் உள்ளது என்று புரிந்து கொள்கிறோம். கஷ்டம் கடந்து சென்று விட்டது அல்லவா. நீங்கள் அனைவரும் மஹாவீரர்கள் அல்லவா. உங்களுடைய பெயர் பிரபலமானதாகும். நல்ல மஹாவீரர்கள் 8 பேர், 108 பேர் அவர்களை விட குறைந்தவர்கள், 16000 பேர் அவர்களையும் விட குறைந்தவர்கள். கண்டிப்பாக ஆக வேண்டும். இந்த இராஜ்யம் கல்பத்திற்கும் முன்பும் கூட ஸ்தாபனை ஆகியது, அதுவே மீண்டும் ஆகவேண்டியுள்ளது. மிகவும் சந்தேகத்தில் வந்து விட்டும் விடுகின்றனர். நம்பிக்கை இருந்தது என்றால் இப்படிப்பட்ட தந்தையை விட்டுச் செல்ல முடியாது. பலவந்தப்படுத்தி அமிர்தம் குடிக்க வைத்தாலும் குடிப்பதில்லை, எப்படி சிறிய குழந்தைகள் இருக்கின்றனர் அல்லவா! பாபா ஞானப்பால் கொடுக்கிறார் என்றாலும் குடிப்பதில்லை. ஒரேடியாக முகத்தை திருப்பிக் கொண்டு விடுகின்றனர். அப்போது முழுக்க முழுக்க பயனற்றவராகி விடுகின்றனர். எனக்கு தாய் தந்தை ஒருவரும் தேவையில்லை, நான் ஸ்ரீமத்படி நடக்க முடியாது என்று கூறி விட்டால் பிறகு எப்படி சிரேஷ்டமாக ஆவார்கள்? ஸ்ரீமத் பகவானுடையதாகும். நிராகார ஞானக்கடல் பதீத பாவன பகவான் சிவாச்சாரியாரின் மஹா வாக்கியம் - மாதர்கள் சொர்க்கத்தின் நுழைவாயில் என்ற ஒரு சுலோகனைக் கூட எழுதி வைக்க வேண்டும். புரிய வைப்பதற்காக புத்தியில் விஷயங்கள் வர வேண்டும். மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக வரிசைக்கிரமமாக இருப்பார்கள். நாடகத்தில் தம்முடைய அதே நடிப்பை நடித்துக் கொண்டிருக்கின்றனர். துக்கத்தில் நாம் அவரை நினைவு செய்கிறோம். தூரதேசத்தில் தந்தை இருக்கிறார், ஆத்மாக்களாகிய நாம் அவரை நினைவு செய்கிறோம். துக்கத்தில் அனைவரும் நினைக்கின்றனர், சுகத்தில் நினைப்பவர் யாருமில்லை. இப்போது துக்கம் நிறைந்த உலகமாக உள்ளதல்லவா! இதை புரிய வைப்பது மிகவும் சகஜமாகும். தந்தை சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர், ஆக நாம் ஏன் சொர்க்கத்தின் எஜமானத்தை அடையக் கூடாது என்று முதன் முதலில் புரிய வைக்க வேண்டும். அனைவரும் ஆஸ்தி அடைய முடியாது என்பதையும் தெரிந்திருக்கிறோம். அனைவரும் சொர்க்கத்திற்கு வந்து விட்டால் பிறகு நரகமே இருக்காது. எப்படி விருத்தி ஏற்படும்?

 

இதுவும் பாடப்பட்டுள்ளது - பாரதம் அழிவற்ற கண்டம். அதாவது அழிவற்ற தந்தையின் பிறப்பிடம் ஆகும். பாரதம்தான் சொர்க்கமாக இருந்தது, 5000 வருடங்களுக்கு முன்பு சொர்க்கம் இருந்தது என்று நாம் மகிழ்ச்சியுடன் சொல்கிறோம். சொர்க்கத்தின் எஜமானர்களின் சித்திரம் கூட இருக்கிறது அல்லவா. கிறிஸ்துவுக்கு 3000 வருடங்களுக்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது என்று சொல்லவும் செய்கிறார்கள். கண்டிப்பாக பாரதத்தில்தான் சூரிய வம்சத்தவர், சந்திர வம்சத்தவர் இருந்தனர். சித்திரங்கள் கூட அவர்களுடைய தாகும். எவ்வளவு சகஜமானது. புத்தியில் இந்த ஞானம் ஓடுகிறது. பாபாவுடைய ஆத்மாவில் இந்த ஞானம் இருந்தது. ஆக ஆத்மாக்களாகிய நமக்கும் தாரணை செய்ய வைக்கிறார். அவரோ ஞானம் நிறைந்தவர். பிறகு சொல்கிறார் - இந்த பிரஜாபிதா பிரம்மாவின் மூலமாக இராஜயோகத்தை கற்பிக்கிறேன். இதன் மூலம் நீங்கள் இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆகி விடுகிறீர்கள். பிறகு இந்த ஞானம் மறைந்து போய்விடும். இப்போது ஞானம் உங்களுக்கு மீண்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் சவால் விட வேண்டும். இதில் மிக நல்ல முதல் தரமான புத்தி வேண்டும். பாபா தன்னிடம் ஒரு போதும் விலை உயர்ந்த பொருளை வைத்துக் கொள்வதில்லை. இத்தனை கட்டிடங்கள் போன்றவை உருவாக்கினார். அதைக்கூட குழந்தைகள் தங்குவதற்காக உருவாக்கினார். இல்லையென்றால் குழந்தைகள் எங்கே தங்குவார்கள்? ஒரு நாள் எல்லா கட்டிடங்களும் நம்முடைய கைக்கு வந்து விடும். பகவானுடைய வாசலில் பக்தர்களுடைய கூட்டம் வந்தே தீரும். அவர்களோ பல பகவான்களை உருவாக்கி விட்டார்கள். உண்மையில் இவர்தான் பகவான் அல்லவா. எவ்வளவு கூட்டம் வரும் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உலகத்தில் நிறைய மூட நம்பிக்கை உள்ளது. திருவிழாக்களில் எவ்வளவு கூட்டம் ஏற்பட்டு விடுகிறது. அவ்வப்போது தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். கூட்டத்தில் எவ்வளவு பேர் இறந்தும் போய் விடுகிறார்கள். மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. ஆக, இந்த சுயதரிசன சக்கரம் மிக நன்றாக இருக்கிறது. சுலோகன் கூட கண்டிப்பாக எழுத வேண்டும். கடைசியில் மாதர்கள் முன்பு அனைவரும் தலை வணங்க வேண்டும். சக்திகளுக்கு அப்படிப்பட்ட சித்திரங்களை உருவாக்குகிறார்கள். பாபா குழந்தைகளுக்காக ஞான துப்பாக்கிகளை உருவாக்க வைக்கிறார். நிரூபியுங்கள் என்று சொல்கிறார். இது சகஜமானதாகும். பக்தர்கள் பகவானை நினைவு செய்கிறார்கள். பகவானை சந்திக்க சாதுக்கள் சாதனைகள் செய்கின்றனர். இறைவன் தந்தை என்று சொல்லப்படுகிறார். நாம் அவருடைய குழந்தைகளாக இருக்கிறோம். சகோதரத்துவம் என்று சொல்கிறோம் அல்லவா. சீனர்கள் இந்துக்கள் சகோதர சகோதரர்கள் என்கிறோம். ஆக, தந்தை ஒருவர்தான் அல்லவா. ஸ்தூல ரூபத்தில் பிறகு சகோதர சகோதரி ஆகி விடுகின்றனர். விகாரமான பார்வை இருக்க முடியாது. இது தூய்மையாக இருப்பதற்கான யுக்தி ஆகும். காமம் மிகப் பெரிய எதிரி என்று பாபா சொல்கிறார். ஆனால் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமானது ஒரு விஷயம் - பகவான் அனைவருடைய தந்தை ஆவார். தந்தை சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர் எனும்போது தந்தையிடமிருந்து கண்டிப்பாக ஆஸ்தி கிடைக்க வேண்டும். ஆஸ்தி இருந்தது, இப்போது இழந்து விட்டீர்கள். இது சுக துக்கத்திற்கான விளையாட்டாகும். இதை நன்றாகப் புரிய வைக்க வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சத்தியத்தை தாரணை செய்து தந்தையின் ஒவ்வொரு நடத்தையையும் பின்பற்ற வேண்டும். ஞான அமிர்தத்தைக் குடிக்க வேண்டும், குடிக்க வைக்க வேண்டும். பயமற்றவராக ஆக வேண்டும்.

 

2. நாம் பகவானுடைய குழந்தைகள், ஒருவருக்கொருவர் சகோதர சகோதரர்கள் ஆவோம் என்ற நினைவின் மூலமாக தன்னுடைய பார்வை, உள்ளுணர்வை தூய்மையாக்க வேண்டும்.

 

வரதானம்

விசேஷதாக்களை முன்னால் வைத்து சதா குஷி-குஷியோடு முன்னேறிச் செல்லக்கூடிய நிச்சயபுத்தி உள்ள வெற்றிரத்தினம் ஆகுக.

 

தன்னுடைய விசேஷதாக்கள் அனைத்தையும் முன்னால் வையுங்கள், பலவீனங்களை அல்ல. அப்போது தன் மீது நம்பிக்கை ஏற்படும். பலவீனங்களின் விஷயத்தை அதிகம் யோசிக்காமல் இருப்பீர்களானால் குஷியில் முன்னேறிக் கொண்டே செல்வீர்கள். பாபா சர்வசக்திவான் என்பதில் நிச்சயம் வையுங்கள். அப்போது அவரது கையைப் பிடித்துக் கொள்பவர்கள் அப்பால் கடந்து சென்று விடுவார்கள். அது போல் சதா நிச்சயபுத்தி உள்ளவர்கள் வெற்றிரத்தினம் ஆகி விடுவார்கள். தன் மீது நிச்சயம், பாபா மீது நிச்சயம் மற்றும் டிராமாவின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்தவாறு அதன் மீதும் முழு நிச்சயம் வைக்க வேண்டும். அப்போது வெற்றியாளர் ஆகி விடுவீர்கள்.

 

ஸ்லோகன் :

தூய்மையின் ராயல்டியில் இருப்பீர்களானால் எல்லைக்குட்பட்ட கவர்ச்சிகளில்: இருந்து விடுபட்டு விலகி விடுவீர்கள்.

 

மாதேஸ்வரி அவர்களின் இனிய மகாவாக்கியங்கள்

 

தமோகுணி மாயாவின் விஸ்தாரம் சதோகுணி, ரஜோகுணி, தமோகுணி என மூன்று சொற்களைச் சொல்கின்றனர். இவற்றை யதார்த்தமாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த மூன்று குணங்களும் ஒரே நேரத்தில் சேர்ந்தாற்போல் நடைமுறையில் இருப்பதாக நினைக்கின்றனர். ஆனால் விவேகம் வினவுகிறது -- இந்த மூன்று குணங்களும் ஒன்றாக நடைபெறுகின்றனவா அல்லது மூன்று குணங்களின் பாகங்கள் தனித்தனி யுகங்களில் நடைபெறுகின்றனவா? விவேகமோ இப்படித் தான் சொல்கிறது -- அதாவது இந்த மூன்று குணங்களும் ஒன்றாக நடைபெறுவதில்லை. சத்யுகத்தில் சதோகுணம், துவாபரயுகத்தில் ரஜோகுணம், மற்றும் கலியுகத்தில் தமோகுணம். சதோ இருக்கும் போது ரஜோ, தமோ இருக்காது. ரஜோ இருக்கும் போது சதோகுணம் இருக்காது. இந்த மனிதர்களோ இப்படியே புரிந்து கொண்டுள்ளனர் -- அதாவது இந்த மூன்று குணங்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதாக. இவ்வாறு சொல்வது பிழையாகும். மனிதர்கள் உண்மை பேசும் போது பாவங்கள் செய்வதில்லை, அதனால் சதோகுணியாக உள்ளனர் என நினைக்கின்றனர். ஆனால் விவேகம் சொல்கிறது சதோகுணம் என்று நாம் சொல்லும் போது, சதோகுணம் என்பதன் அர்த்தம் சம்பூர்ண சுகம். முழு சிருஷ்டியும் சதோகுணியாக இருக்கும் என்று அர்த்தமாகிறது. மற்றப்படி இது போல் சொல்ல மாட்டார்கள் -- அதாவது உண்மை பேசுகிறவர் சதோகுணி, பொய் பேசுகிறவர் கலியுக தமோகுணி, இப்படியே தான் உலகம் நடந்து வந்துள்ளது. நாம் சத்யுகம் என்று சொல்லும் போது இதன் அர்த்தம் முழு சிருஷ்டி மீதும் சதோகுண சதோப்ரதானம் இருக்க வேண்டும். ஆம், ஏதோ ஒரு சமயம் அத்தகைய சத்யுகம் இருந்தது. அங்கே முழு உலகுமே சதோகுணியாக இருந்தது. இப்போது அந்த சத்யுகம் இல்லை. இப்போதோ கலியுக உலகமாக உள்ளது. அதாவது முழு சிருஷ்டி மீதும் தமோப்ரதானத் தன்மையின் இராஜ்யம் உள்ளது. இந்தத் தமோகுணி சமயத்தில் பிறகு சதோகுணம் எங்கிருந்து வந்தது? இப்போது பயங்கர அஞ்ஞான இருள் சூழ்ந்துள்ள நேரம். இது பிரம்மாவின் இரவு எனச் சொல்லப் படுகிறது. பிரம்மாவின் பகல் சத்யுகம் மற்றும் பிரம்மாவின் இரவு கலியுகம். ஆகவே நாம் இரண்டையும் ஒன்றாக ஆக்கிவிட முடியாது. நல்லது. ஓம் சாந்தி.

 

ஓம்சாந்தி