11.11.2018               காலை முரளி           ஓம் சாந்தி                  ''அவ்யக்த பாப்தாதா''

ரிவைஸ்    26.02.1984          மதுபன்


 

'' பாப்தாதாவின் அதிசயமான சித்திரக் கூடம் ''

 

பாப்தாதா இன்று தன்னுடைய சித்திரக் கூடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். பாப்தாதாவிடம் எந்த சித்திரக்கூடம் இருக்கிறது என்று தெரிந்திருக்கிறீர்களா? இன்று வதனத்தில் ஒவ்வொரு குழந்தையின் சரித்திரத்தின் சித்திரத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். தொடக்கத்திலிருந்து இதுவரையிலும் ஒவ்வொருவரின் சரித்திரத்தின் சித்திரம் எப்படி இருந்தது என்பதைப் பார்த்தோம். யோசித்துப் பாருங்கள் சித்திரக்கூடம் எவ்வளவு பெரியதாக இருக்கும். அந்தச் சித்திரத்தில் ஒவ்வொரு குழந்தைகளின் மூன்று விசேஷமான விஷயங்களைப் பார்த்தோம். ஒன்று - தூய்மையின் சிறப்புத்தன்மை. இரண்டாவது உண்மையின் இராயல்தன்மை, மூன்றாவது சம்மந்தங்களின் நெருக்கம். இந்த மூன்று விஷயங்களையும் ஒவ்வொரு சித்திரத்திலும் பார்த்தோம்.

 

தூய்மையின் சிறப்புத்தன்மை ஒளி ரூபமான சித்திரத்தின் நாலாபுறங்களிலும் பிரகாசமாக மின்னிக் கொண்டிருக்கும் லைட் தென்பட்டது. உண்மைத்தன்மையின் ராயல்தன்மை முகத்தில் சிரித்த முகம் மற்றும் தூய்மை பிரகாசமாக இருந்தது. மேலும் சம்மந்தங்களில் நெருக்கம் இருபுருவ மத்தியில் பிரகாசமாக மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரமாக அதில் சில நட்சத்திரங்களோ நாலாபுறங்களிலும் பரவியிருக்கும் கிரணங்கள் மூலம் பிரகாசமாக இருந்தது. சிலர் சிறிதளவு கிரணங்களினால் பிரகாசமாக இருந்தார்கள். நெருக்கமான ஆத்மா தந்தைக்குச் சமமான எல்லைக்கப்பாற்பட்ட அதாவது நாலாபுறங்களிலும் பரவியிருக்கும் கிரணங்கள் உள்ளதாக இருந்தது. ஒளி மற்றும் சக்தி இரண்டிலும் தந்தைக்குச் சமமானவர் என்ற லைட் மற்றும் மைட் இரண்டும் தென்பட்டுக் கொண்டிருந்தது. அந்த மாதிரி மூன்று விசேஷங்களினால் ஒவ்வொரு குழந்தையின் சரித்திரத்தின் சித்திரத்தைப் பார்த்தோம். கூடவே தொடக்கத்தில் இருந்து இறுதி அதாவது இன்று வரையிலும் மூன்று விஷயங்களிலுமே எப்பொழுதும் சிரேஷ்டமாக இருந்தார்களா அல்லது சில நேரம் அப்படியும் மேலும் சில நேரம் இப்படியும் இருந்தார்களா என்பதின் ரிசஸ்ட்டை ஒவ்வொருவரின் சித்திரத்தில் பார்த்தோம். எப்படி ஸ்தூல உடலில் நாடி சரியான வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதா அல்லது மேலே கீழே போகிறதா என்று சோதனை செய்வார்கள். வேகமாக இருந்ததா அல்லது மெதுவாக இருந்ததா என்பதின் மூலம் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளலாம். அப்படி ஒவ்வொரு சித்திரத்தின் மத்தியில் இதயத்தில் லைட் கீழேயிருந்து மேலே வரை சென்று கொண்டிருந்தது. அதில் வேகமும் தென்பட்டது. ஒரே வேகத்தில் லைட் கீழே இருந்து மேலே செல்கிறதா அல்லது அவ்வப்பொழுது வித்தியாசம் ஏற்படுகிறதா என்பது தென்பட்டது. கூடவே இடை இடையில் லைட்டின் வண்ணம் மாறுகிறதா அல்லது ஒரே மாதிரி சென்று கொண்டிருக்கிறதா. மூன்றாவது நடைமுறையில் லைட் எங்கேயாவது நிற்கிறதா அல்லது சென்று கொண்டே இருக்கிறதா? இந்த விதி மூலமாக ஒவ்வொருவரின் சரித்திரத்தின் சித்திரத்தை பார்த்தோம். நீங்களும் உங்களுடைய சித்திரத்தை பார்க்க முடியும் இல்லையா!

 

தனிச்சிறப்பு, இராயல்தன்மை மற்றும் நெருக்கம் இந்த மூன்று விசேஷங்களினால் என்னுடைய ரூபம் எப்படி இருக்கும் என்று சோதனை செய்யுங்கள். என்னுடைய ஒளியின் நிலை எப்படி இருக்கும். வரிசைக்கிரமமாகவோ இருக்கவே இருக்கிறது. ஆனால் மூன்று விசேஷங்கள் மற்றும் மூன்று விதமான ஒளியின் நிலை தொடக்கத்திலிருந்து எப்பொழுதுமே இருந்ததாக இருக்க வேண்டும். அந்த மாதிரியான சித்திரம் அதிகமானவர்களிடம் இல்லை ஆனால் குறைந்தவர்களிடம் தான் இருந்தது. மூன்று ஒளியின் நிலை மற்றும் மூன்று விசேஷங்கள். அப்படி ஆறு விஷயங்கள் ஆகிவிட்டன இல்லையா. ஆறு விஷயங்களிலிருந்து அதிகமானவர்கள் நான்கு, ஐந்து வரையிலும் மற்றும் சிலர் மூன்று வரையிலும் வந்திருந்தார்கள். தூய்மையின் தனிச்சிறப்பில் ஒளிவடிவமான ரூபம் சிலருக்கு கிரீடத்திற்கு சமமாக முகத்தில் அக்கம் பக்கத்தில் இருந்தது. மேலும் சிலருக்கு பாதி உடல் வரை மேலும் சிலருக்கு முழு உடலிலும் அக்கம் பக்கத்தில் தென்பட்டது. எப்படி புகைப்படம் எடுக்கிறீர்கள் இல்லையா. யார் எண்ணம், சொல், செயல் மூன்றிலும் தொடக்கத்திருந்து இதுவரை தூய்மையாக இருந்தார்கள். மனதில் தனக்காக அல்லது வேறு யாருக்காகவாவது வீணானவை என்ற தூய்மையற்ற எண்ணம் கூட இருக்கவில்லை. எந்தவொரு பலஹீனம் மற்றும் அவகுணம் என்ற தூய்மையற்ற எண்ணத்தைத் தாரணை செய்திருக்கவில்லை. எண்ணத்தில் ஜென்மத்திலிருந்தே வைஷ்ணவனாக இருந்தார். எண்ணம் புத்திக்கான உணவு. ஜென்மத்திலிருந்தே வைஷ்ணவன் என்றால் அசுத்தம் மற்றும் அவகுணம், வீணான எண்ணத்தை புத்தி மூலமாக, மனம் மூலமாகப் கிரஹித்திருக்கவில்லை. இவரைத் தான் உண்மையான வைஷ்ணவன் மற்றும் பால பிரம்மச்சாரி என்று கூறுவது. அம்மாதிரி ஒவ்வொருவரின் சித்திரத்தில் அப்படிப்பட்ட தூய்மையின் தனிச்சிறப்பின் ரேகைகளை ஒளியின் உடல் மூலமாக பார்த்தோம். யார் எண்ணம், சொல், செயல் மூன்றிலும் தூய்மையாக இருந்தார்கள்! (செயல் சம்மந்தம், தொடர்பு அனைத்தும் வந்து விடுகிறது). அவருடைய நெற்றியிலிருந்து கால் வரை ஒளியின் உடல் மின்னிக் கொண்டிருக்கும் ரூபமாக இருந்தது புரிந்ததா! ஞானம் என்ற கண்ணாடியில் தன்னுடைய சித்திரத்தைப் பார்க்கிறீர்களா? மிக நல்ல முறையில் என்னுடைய சித்திரம் எப்படி இருந்தது என்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார், அது எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். நல்லது.

 

சந்திப்பவர்களின் பட்டியலோ மிக நீளமாக இருக்கிறது. அவ்யக்த வதனத்திலோ வரிசை எண்ணும் கிடையாது. மேலும் நேரத்திற்கான எந்த விஷயமும் இருக்காது. எப்பொழுது விரும்புகிறீர்களோ, எவ்வளவு நேரம் விரும்புகிறீர்களோ மேலும் எத்தனை பேர் சந்திக்க விரும்புகிறீர்களோ சந்திக்க முடியும். ஏனென்றால் அது எல்லைக்குட்பட்ட உலகத்திலிருந்து விலகியது. இந்த பௌதீக உலகத்தில் இந்த அனைத்து பந்தனங்களும் இருக்கிறது. எனவே பந்தனமற்றவரையும் பந்தனத்தில் கட்டிப்போட வேண்டியதாக இருக்கிறது. நல்லது.

 

டீச்சர்களோ திருப்தியாகி விட்டீர்கள் இல்லையா? அனைவருக்கும் தன்னுடைய முழுமையான பங்கு கிடைத்தது இல்லையா? நீங்கள் பொறுப்பாளர் ஆகியிருக்கும் விசேஷ ஆத்மாக்கள். பாப்தாதாவும் விசேஷ ஆத்மாக்கள் மேல் விசேஷ மரியாதை வைக்கிறார். இருந்தும் சேவைக்கு துணைவர்களாக இருக்கிறீர்கள் இல்லையா? பார்க்கப்போனால் அனைவருமே துணைவர்கள் தான். இருந்தாலும் பொறுப்பிருப்பவருக்கு தன்னை ஒரு பொறுப்பிலிருக்கும் கருவி என்று புரிந்து கொள்வதில் தான் சேவையின் வெற்றி இருக்கிறது. சேவையில் அனேக குழந்தைகள் மிக வேகமாக ஊக்கம் உற்சாகத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் பொறுப்பாளர் ஆகியிருக்கும் விசேஷ ஆத்மாக்களுக்கு மரியாதை கொடுப்பது என்றால் தந்தைக்கு மரியாதை கொடுப்பது. மேலும் மரியாதைக்கான பலனாக தந்தை மூலமாக இதயப்பூர்வமான அன்பை பெறுவது. புரிந்ததா! நீங்கள் டீச்சர்களுக்கு மரியாதை கொடுப்பதாக அர்த்தமில்லை, ஆனால் தந்தையிடமிருந்து இதயத்தின் அன்பை பலனாகப் பெறுகிறீர்கள். நல்லது.

 

அந்த மாதிரி எப்பொழுதும் திலாராம் தந்தை மூலமாக இதயத்தின் அன்பைப் பெறுவதற்கு பாத்திரமான ஆத்மாக்களுக்கு எப்பொழுதும் தன்னுடைய தூய்மையின் தனிச்சிறப்பு, இராயல் தன்மையின் உண்மை நிலையை அனுபவம் செய்யக்கூடிய நெருக்கமான மற்றும் சமமான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

இங்கிலாந்து குரூப்புடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:

நீங்கள் அனைத்து இரகசியங்களினால் நிரம்பிய இரகசியம் தெரிந்து நடந்து கொள்ளும், யோக சொரூப ஆத்மாக்கள் தான் இல்லையா! நீங்கள் தொடக்கத்திலிருந்தே பாப்தாதாவின் பெயரை உலகின் நாலாபுறங்களிலும் பிரத்யக்ஷம் செய்வதற்காக பொறுப்பான ஆத்மாக்கள். பாப்தாதா அந்த மாதிரியான ஆதி இரத்தினங்களை, சேவையின் துணைவர்களைப் பார்த்து எப்பொழுதும் குஷி அடைகிறார். அனைவரும் பாப்தாதாவின் வலதுகரமான குரூப். மிக நல்ல நல்ல இரத்தினங்கள் இருக்கிறார்கள். சிலர் ஒரு மாதிரியும், சிலர் வேறு மாதிரியும் இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே இரத்தினங்கள். ஏனென்றால் நீங்களே அனுபவம் நிறைந்தவராகி மற்றவர்களை அனுபவியாக ஆக்குவதற்கு பொறுப்பாளராகியிருக்கும் ஆத்மாக்கள். அனைவரும் எவ்வளவு ஊக்கம் உற்சாகத்துடன் நினைவு மற்றும் சேவையில் எப்பொழுதும் மூழ்கியிருக்கும் ஆத்மாக்கள் என்று பாப்தாதா தெரிந்திருக்கிறார். நினைவு மற்றும் சேவையைத் தவிர மற்ற அனைத்து பக்கங்களும் முடிவடைந்து விட்டது. ஒருவர் தான் இருக்கிறார். நான் அந்த ஒருவரினுடையவன், ஒரே ஒருவரின் இரசனையில் இருப்பவன். இது தான் அனைவரின் மனதிலிருந்து எழும் ஓசை. உண்மையிலேயே இது தான் உயர்ந்த வாழ்க்கை. அந்த மாதிரி உயர்ந்த வாழ்க்கை உள்ளவர்கள் எப்பொழுதுமே பாப்தாதாவின் நெருக்கத்தில் இருக்கிறார்கள். நிச்சயபுத்தி உள்ளவர்கள் என்று வெளிப்படையாக நிரூபணம் கொடுப்பவர்கள். எப்பொழுதுமே ஆஹா என்னுடைய பாபா மேலும் ஆஹா என்னுடைய சிரேஷ்ட பாக்கியம் என்ற இது தான் நினைவு இருக்கிறது இல்லையா. பாப்தாதா அந்த மாதிரியான நினைவு சொரூப குழந்தைகளைப் பார்த்து ஆஹா என்னுடைய சிரேஷ்ட குழந்தைகளே என்று எப்பொழுதும் மகிழ்ச்சி அடைகிறார். அந்த மாதிரி குழந்தைகளின் பாடலை பாப்தாதா பாடுகிறார். இலண்டன் வெளிநாட்டு சேவைக்கான அஸ்திவாரம். நீங்கள் அனைவரும் சேவையின் அஸ்திவார கற்கள். நீங்கள் அனைவரும் உறுதியாக ஆனதின் பிரபாவத்தினால் சேவை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. அஸ்திவாரம் மரத்தின் வளர்ச்சியில் உள்ளடங்கி விடுகிறது, ஆனால் நீங்களோ அஸ்திவாரம் தான் இல்லையா? மரத்தின் வளர்ச்சியின் அழகைப் பார்த்து அதன் பக்கம் பார்வை செல்லும். அஸ்திவாரம் மறைந்து இருந்து விடும். அதே போல் நீங்களும் கொஞ்சம் பொறுப்பிலிருப்பவராகி மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர்களாக ஆகிவிட்டீர்கள். என்ன தான் இருந்தாலும் முதலில் வந்தவர்கள் முதன்மையானவர்கள் தான்! மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து முன்னுக்கு கொண்டு வருவதில் உங்களுக்கு குஷி ஏற்படுகிறது இல்லையா? இந்த வெளிநாட்டினர் வந்ததினால் நாங்கள் மறைந்து விட்டோம் என்று அப்படியோ நினைப்பதில்லையே! இருந்தாலும் பொறுப்பிருப்பவர்கள் நீங்கள் தான். அவர்களுக்கு ஊக்கம் உற்சாகம் கொடுப்பதற்காக நீங்கள் தான் பொறுப்பாளர்கள். யார் மற்றவர்களை முன்னுக்கு வைக்கிறார்களோ சுயம் அவர்களே முன்னுக்குத் தான் இருக்கிறார்கள். எப்படி சிறு குழந்தைகளை முன்னால் செல் என்று எப்பொழுதும் கூறுவார்கள். பெரியவர்கள் பின்னால் இருப்பார்கள். சிறியவர்களை முன்னால் வைப்பது தான் பெரியவர்கள் முன்னுக்கு இருப்பது. அதற்கான பிரத்யக்ஷ பலன் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஒருவேளை நீங்கள் சகயோகி ஆகவில்லை என்றால் இலண்டனில் இத்தனை சென்டர்கள் திறந்திருக்காது. ஒவ்வொருவரும் அங்கங்கே அதற்கான பொறுப்பாளர்கள் ஆகியிருக்கிறீர்கள். நல்லது.

 

மலேசியா, சிங்கப்பூர் குரூப்புடன் சந்திப்பு :

அனைவரும் தன்னை தந்தையின் அன்பிற்குரிய ஆத்மாக்கள் என்று அனுபவம் செய்கிறீர்களா? எப்பொழுதும் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற இதே நிலையில் நிலைத்திருக்கிறீர்களா? இந்த நிலையைத் தான் ஒரே சீராக ஒருவரின் இரசனையில் இருக்கும் நிலை என்று கூறுவது. ஏனென்றால் எங்கு ஒன்று இருக்கிறதோ அங்கு ஒரே சீரான நிலை இருக்கும். அனேகம் இருக்கிறது என்றால் நிலை மேலே கீழே ஆட்டம் காணும். ஒன்றில் அனைத்தையும் பாருங்கள் என்று தந்தை சகஜ வழியைக் கூறியிருக்கிறார். அனேகர்களை நினைவு செய்வதிலிருந்து, அனேக பக்கங்களில் அலைவதிலிருந்து விடுபட்டு விட்டீர்கள். ஒருவர் இருக்கிறார், நான் அந்த ஒருவரினுடையவன் இந்த ஒரே சீரான நிலை மூலமாக எப்பொழுதும் தன்னை முன்னேறி செல்ல வைக்க முடியும்.

 

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் இப்பொழுது சைனாவில் சென்டர் திறப்பதற்கான எண்ணம் வைக்க வேண்டும். முழு சைனாவிலும் இப்பொழுது எந்த கிளை நிலையமும் இல்லை. அவர்களைத் தொடர்பில் கொண்டு வந்து அனுபவம் செய்வியுங்கள். தைரியத்தில் வந்து நினைத்தீர்கள் என்றால் நடந்தேறி விடும். இராஜாயோகா மூலம் பிரபுவின் அன்பு, சாந்தி, சக்தியின் அனுபவம் செய்வியுங்கள் பிறகு ஆத்மாக்கள் தானாகவே பரிவர்த்தனை ஆகிவிடுவார்கள். இராஜயோகி ஆக்குங்கள், தேவதை ஆக்க வேண்டாம், இராஜயோகி தேவதையாக தானாகவே ஆகிவிடுவார். நல்லது.

 

போலந்து குரூப்புடன் சந்திப்பு:

அனைத்து குழந்தைகளும் தங்களுடைய இனிமையான இல்லத்திற்கு வந்து சேர்ந்து விட்டார்கள் என்று பாப்தாதாவிற்கு குஷி இருக்கிறது. உங்களுக்கும் நாங்கள் அந்த மாதிரியான மகான் தீர்த்த ஸ்தலத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம் என்ற குஷி இருக்கிறது இல்லையா? சிரேஷ்ட வாழ்க்கையோ பயிற்சி செய்து செய்து உருவாகியே விடும். ஆனால் அந்த மாதிரியான சிரேஷ்ட பாக்கியத்தை அடைந்து விட்டீர்கள் அதன் காரணமாக இந்த ஸ்தானத்தில் தன்னுடைய உண்மையான ஈஸ்வரிய அன்புள்ள பரிவாரத்தில் வந்து சேர்ந்து விட்டீர்கள். இவ்வளவு செலவு செய்து வந்திருக்கிறீர்கள், இவ்வளவு கடும் முயற்சி செய்து வந்திருக்கிறீர்கள், இந்த செலவு, கடின உழைப்பு அனைத்தும் பயனுள்ளதாக ஆகிவிட்டது என்று இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். எங்கே வந்து சேர்ந்து விட்டோம் என்று நினைப்பதில்லையே! எவ்வளவு பரிவாரத்தின் மற்றும் தந்தையின் பிரியமானவர்கள். பாப்தாதா எப்பொழுதும் குழந்தைகளின் விசேஷத்தைப் பார்க்கிறார். நீங்கள் உங்களுடைய விசேஷத்தை தெரிந்திருக்கிறீர்களா? இவ்வளவு ஆர்வத்தோடு இவ்வளவு தொலைதூரம் வந்து சேர்ந்து விட்டீர்கள் இந்த விசேஷமோ இருக்கிறது. இப்பொழுது எப்பொழுதும் தன்னுடைய ஈஸ்வரிய பரிவாரத்தை மேலும் இந்த ஈஸ்வரிய விதி இராஜயோகத்தை எப்பொழுதும் உடன் வைத்துக் கொண்டே இருங்கள். அங்கே உங்கள் இடத்திற்கு சென்ற பிறகு இராஜயோகா கேந்திரத்தை மிக நல்ல முறையில் முன்னேற்றம் அடையச் செய்யுங்கள். ஏனென்றால் அனேக அந்த மாதிரி ஆத்மாக்கள் இருக்கிறார்கள் அவர்கள் உண்மையான அமைதி, உண்மையான அன்பு மற்றும் உண்மையான சுகத்தின் தாகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வழியோ கூறுவீர்கள் தான் இல்லையா! பொதுவாக யாராவது தண்ணீர் தாகம் உள்ளவராக இருக்கிறார், ஒருவேளை அவருக்கு தேவையான நேரத்தில் தண்ணீர் கிடைக்கிறது என்றால் அவர் வாழ்க்கை முழுவதும் தண்ணீர் கொடுத்தவரை புகழ் பாடுவார். நீங்கள் பல ஜென்மங்களின் ஆத்மாக்களின் சுகம் - சாந்தியின் தாகத்தைத் தீருங்கள். இதன் மூலம் புண்ணிய ஆத்மா ஆகிவிடுவீர்கள். உங்களுடைய குஷியைப் பார்த்து அனைவரும் குஷி அடைவார்கள். குஷி தான் சேவைக்கான சாதனம்.

 

இந்த மகான் தீர்த்த ஸ்தலத்திற்கு வந்து சேர்வதினால் அனைத்து தீர்த்த ஸ்தலங்களும் இதில் அடங்கியிருக்கிறது. இந்த மகான் தீர்த்த ஸ்தலத்தில் ஞான ஸ்நானம் செய்யுங்கள் மற்றும் என்னென்ன பலஹீனம் இருக்கிறதோ அதை தானம் செய்யுங்கள். தீர்த்த ஸ்தலத்தில் எதையாவது விட்டுச் செல்ல வேண்டியதாக இருக்கும். எதை விடுவீர்கள்? எந்த விஷயத்தில் நீங்கள் நிலைகுலைந்து போகிறீர்களோ அதைத் தான் விட வேண்டும். அவ்வளவு தான். அப்பொழுது தான் மகான் தீர்த்த ஸ்தலத்தில் வந்ததின் பலன் கிடைக்கும். இதைத் தான் தானம் செய்யுங்கள், மேலும் இதே தானத்தினால் புண்ணிய ஆத்மா ஆகிவிடுவீர்கள், ஏனென்றால் தீயதை விடுவது என்றால் நல்லதை தாரணை செய்வது. எப்பொழுது அவகுணத்தை விடுகிறீர்கள், குணத்தை தாரணை செய்கிறீர்கள் என்றால் புண்ணிய ஆத்மா ஆகிவிடுவீர்கள். இது தான் இந்த மகான் தீர்த்த ஸ்தலத்தின் வெற்றி. மகான் தீர்த்த ஸ்தலத்தில் வந்திருக்கிறீர்கள் இதுவோ மிகவும் நல்லது. வருவது என்றால் பகவானின் பட்டியலில் இருப்பவராக ஆகிவிடுவது. அந்த அளவு இந்த மகான் தீர்த்த ஸ்தலத்திற்கு சக்தி இருக்கிறது. ஆனால் இன்னும் வரும் நாட்களில் என்ன செய்ய வேண்டும்? ஒன்று பாக்கியவான் ஆவது, இன்னொன்று சௌபாக்கியவான் ஆவது, மேலும் அதற்கு மேலே பல கோடி மடங்கு பாக்கியவான் ஆவது. எந்தளவு தொடர்பிலே இருப்பீர்களோ, குணங்களை தாரணை செய்து கொண்டே இருப்பீர்களோ அந்த அளவு பல கோடி மடங்கு பாக்கியவானாக ஆகிக் கொண்டே இருப்பீர்கள். நல்லது.

 

இரட்டை வெளிநாட்டு டீச்சர்களுடன் சந்திப்பு :

நான் மற்ற மதத்திலிருந்து இங்கு வந்திருக்கிறேன் என்று டீச்சர்களின் மனதில் ஒருபொழுதும் எண்ணம் இருக்கக்கூடாது. இதுவோ புதியவர்கள் செய்யும் காரியம் நீங்களோ பழையவர்கள் அதனால் தான் பொறுப்பிலிருப்பவராகவும் ஆகியிருக்கிறீர்கள். நான் மற்ற தர்மத்திலிருந்து இந்த தர்மத்திற்கு வந்திருக்கிறேன் என்ற எண்ணமே இருக்கக்கூடாது. இதே தர்மத்தைச் சேர்ந்தவராக இருந்தீர்கள், மேலும் இதே தர்மத்தில் வந்து விட்டீர்கள். நான் வேறு மற்றும் இவர்கள் வேறு என்ற எண்ணம் கனவில் கூட வரக்கூடாது. பாரதம் வேறு, வெளிநாடு வேறு என்பதும் இருக்கக்கூடாது. இந்த எண்ணம் ஒற்றுமையைப் பிரித்து விடுகிறது. பிறகோ நான் வேறு மற்றும் நீ வேறு ஆகிவிடும் இல்லையா.? எங்கு நான் வேறு மற்றும் நீ வேறு ஆகி விடுகிறதோ அங்கு என்ன நடக்கும். பிரச்சனை இருக்கும் இல்லையா? எனவே நாம் அனைவரும் ஒன்று. இரட்டை வெளிநாட்டினர் என்று அடையாளப் படுத்துவதற்காகத் தான் பாப்தாதா கூறுகிறார். மற்றபடி நீங்கள் வேறு என்பது இல்லை. நாம் இரட்டை வெளிநாட்டினர் என்றால் வேறு பட்டவர்கள் மற்றும் பாரதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு என்று அப்படி புரிந்து கொள்ளாதீர்கள். எப்பொழுது பிராமண ஜென்மம் கிடைத்தது, பிராமண ஜென்மத்தின் காரணமாக என்னவாகி விட்டீர்கள்? பிராமணர்கள் ஒரு ஜென்மத்தை சேர்ந்தவர்கள், அதில் வெளிநாட்டினர், பாரதவாசி என்பது இருப்பதில்லை. நாம் அனைவரும் ஒரு பிராமண தர்மத்தைச் சேர்ந்தவர்கள், பிராமண வாழ்க்கை உள்ளவர்கள், மேலும் ஒரே ஒரு தந்தையின் சேவைக்கு பொறுப்பாளர். ஒருபொழுதும் எங்களுடைய கருத்து இது மேலும் இந்தியாவைச் சேர்ந்த உங்களுடைய கருத்து இது என்று அந்த வார்த்தையை ஒருபொழுதும் உபயோகிக்காதீர்கள். மாறுபட்ட கருத்துக்களோ பாரதவாசிகளிடமும் இருக்கிறது, அது வேறு விஷயம். மற்றபடி பாரதம் மற்றும் வெளிநாடு என்ற வேறுபாட்டை ஒருபொழுதும் செய்யாதீர்கள். வெளிநாட்டினர் எங்களுக்கு இப்படித் தான் இருக்கும், எங்களுடைய சுபாவம் அந்த மாதிரி, எங்களுடைய நேச்சர் அந்த மாதிரி என்று ஒருபொழுதும் யோசிக்காதீர்கள். தந்தை ஒருவர், மேலும் அனைவரும் அந்த ஒருவரினுடையவர்கள். பொறுப்பிலிருக்கும் ஆசிரியர்கள் எந்த மாதிரி வார்த்தைகளை உபயோகிப்பார்களோ அதே போல் மற்றவர்களும் பேசுவார்கள். எனவே மிக மிக யுக்தியாக ஒவ்வொரு வார்த்தையையும் பேச வேண்டும். யோகயுக்த் மற்றும் யுக்த்யுக்த் இரண்டும் சேர்ந்தே இருக்க வேண்டும். சிலர் யோகத்தில் மிக முன்னுக்கு செல்கிறார்கள். ஆனால் செய்யும் காரியத்தில் யுக்தியுக்தாக இருப்பதில்லை. இரண்டின் சமநிலை இருக்க வேண்டும். யோகயுக்தின் அடையாளமே யுக்தியுக்த் தான். நல்லது.

 

சேவாதாரிகளுடன் சந்திப்பு :

யக்ஞ சேவையின் பாக்கியம் கிடைப்பது என்ற இதுவும் மிகப் பெரிய பாக்கியத்தின் அடையாளம். சொற்பொழிவு நிகழ்த்தவில்லை என்றாலும், ஏழு நாள் பாடம் எடுக்கவில்லை என்றாலும் ஆனால் சேவைக்கான மதிப்பெண்களோ கிடைக்கும் இல்லையா! இதிலேயும் தேர்ச்சி அடைந்து விடுவீர்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் அதனதற்கான மதிப்பெண்கள் இருக்கிறது. என்னால் சொற்பொழிவு நிகழ்த்த முடியாது என்றால் நான் பின்னுக்கு இருக்கிறேன் என்று ஒருபொழுதும் நினைக்காதீர்கள். சேவாதாரிகள் எப்பொழுதுமே நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் பலனுக்கு உரியவர்கள். குஷி ஏற்படுகிறது தான் இல்லையா! மாதர்களுக்கு மனதால் நடனம் ஆடத் தெரியுமா? வேறு எதுவும் செய்யாதீர்கள், குஷியால், மனதால் நடனம் ஆடிக் கொண்டு மட்டும் இருந்தீர்கள் என்றாலும் கூட மிகுந்த சேவை நடந்து விடும்.

 

வரதானம்

சமநிலையின் பாவனை இருந்தபோதிலும் ஒவ்வொரு அடியில் விசேஷத்தை அனுபவம் செய்விக்கக்கூடிய விசேஷ ஆத்மா ஆகுக.

 

ஒவ்வொரு குழந்தையிலும் அவரவர்களுக்கு என்ற விசேஷங்கள் இருக்கின்றன. விசேஷ ஆத்மாக்கள் செய்யும் காரியம் சாதாரண ஆத்மாக்கள் செய்யும் காரியத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும். ஒவ்வொருவர் மீதும் சமமான பாவனை தான் வைக்க வேண்டும். ஆனால் இவர் விசேஷ ஆத்மா என்று தென்பட வேண்டும். விசேஷ ஆத்மாக்கள் என்றால் வெறும் வாயளவில் சொல்பவர்கள் அல்ல, ஆனால் விசேஷ காரியம் செய்பவர். ஒவ்வொருவருக்கும் இவர் அன்பின் களஞ்சியம் என்ற உணர்வு வரும். ஒவ்வொரு அடியில், ஒவ்வொரு பார்வையில் அன்பு அனுபவம் ஆக வேண்டும். இது தான் விசேஷம்.

 

சுலோகன்:

உலகின் முடிவுக்கு முன்பு தன்னுடைய குறைகள், பலஹீனங்களுக்கு முடிவு கட்டுங்கள்.

 

ஓம்சாந்தி