11.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! பாபா ஒவ்வொரு விஷயத்திலும் கல்யாணக்காரியாக (நன்மை செய்பவர்) இருக்கிறார். ஆகவே என்ன வழிகாட்டுதல் கிடைக்கிறதோ அதில் சாக்கு போக்கு சொல்லாமல் ஸ்ரீமத் படி சதா நடந்துக் கொண்டே இருங்கள்.

 

கேள்வி:

தீவிரமான பக்தி மற்றும் தீவிரமான படிப்பு இரண்டிலும் என்ன பிராப்திகள் கிடைக்கிறது. அதில் என்ன வித்தியாசம் உள்ளது?

 

பதில்:

தீவிர பக்தியினால் காட்சிகள் கிடைக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரின் பக்தர்கள் என்றால் அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் காட்சிகள் கிடைக்கும், நடனமாடுவார்கள், ஆனால் அவர்கள் யாரும் வைகுண்ட புரி அல்லது ஸ்ரீ கிருஷ்ணபுரிக்கு செல்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் தீவிரமான படிப்பு படிக்கிறீர்கள். இதன் மூலமாக உங்களின் அனைத்து மனோ விருப்பங்களும் நிறைவேறுகின்றன. இந்த படிப்பினால் தான் நீங்கள் வைகுண்ட புரிக்குச் செல்கிறீர்கள்.

 

பாடல்:

இன்று இல்லையேல் நாளை இல்லை...........

 

ஓம் சாந்தி.

வீட்டிற்குச் செல்லுங்கள் என்று யார் கூறியது? யாருடைய பிள்ளைகளாவது கோபித்துக் கொண்டு சென்று விட்டால் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் அவர்கள் பின் சென்று ஏன் கோபித்துக் கொண்டீர்கள்? இப்போது வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறுவார்கள். இவ்வாறே எல்லையற்ற தந்தையும் வந்து அனைத்துக் குழந்தைகளுக்கும் கூறுகின்றார். தந்தையாகவும் இருக்கிறார் தாத்தாவாகவும் இருக்கிறார். உலகியல் ரீதியாகவும் இருக்கிறார். ஆன்மீகமாகவும் இருக்கிறார். குழந்தைகளே! இப்போது வீட்டிற்குச் செல்லுங்கள். இரவு முடிந்து விட்டது. பகல் வரப்போகிறது என்று கூறுகின்றார். இது ஞானத்தின் விஷயம் ஆகிறது. பிரம்மாவின் இரவு, பிரம்மாவின் பகல் என யார் புரிய வைத்தார்கள். பாபா வந்து பிரம்மா மற்றும் பிரம்மா குமார், குமாரிகளுக்குப் புரிய வைக்கின்றார். அரைக் கல்பம் இரவு அதாவது பதீத இராவண இராஜ்யம் மற்றும் கீழான இராஜ்யம். ஏனென்றால் அசுர வழிப்படி நடக்கிறார்கள். இப்போது நீங்கள் ஸ்ரீமத்படி செல்லுங்கள். ஸ்ரீமத் கூட குப்தமானது. பாபா அவரே வருகிறார் என நாம் அறிகிறோம். அவருடைய ரூபம் தனி இராவணனின் ரூபம் தனி. அவன் 5 விகாரங்களின் ரூபமான இராவணன் என கூறுப்படுகிறது. இப்போது இராவண இராஜ்யம் அழியும். பிறகு ஈஸ்வர இராஜ்யம் உருவாகும். இராம இராஜ்யம் என்று கூறுகிறார்கள் அல்லவா! சீதையின் இராமரை ஜபிப்பதில்லை. மாலையில் ராம் ராம் என ஜபிக்கிறார்கள் அல்லவா? அந்த பரமாத்மாவை நினைக்கிறார்கள். யார் அனைவருக்கும் சத்கதியை அளிக்கும் வள்ளலோ அவரைத்தான் நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இராமர் என்றால் கடவுள். மாலை உருட்டும் போது வேறு யாரையும் நினைக்க மாட்டார்கள். அவர்களின் புத்தியில் வேறு எதுவும் வராது. இப்போது இரவு முடிவடையப் போகிறது என பாபா புரிய வைக்கிறார். இது கர்ம சேத்திரம், நாடக மேடை ஆகும். இங்கே தான் ஆத்மாக்களாகிய நாம் சரீரத்தை தரித்து நடித்துக் கொண்டிருக்கிறோம். 84 பிறவிகளின் வேடத்தை நடிக்க வேண்டும். பிறகு அதில் வர்ணங்களையும் (குலம்) காண்பிக்கிறார்கள். ஏனென்றால் 84 பிறவிகளின் கணக்கு வேண்டும் அல்லவா? எந்தெந்த பிறவியில் எந்த குலத்தில், எந்த வர்ணத்தில் வருகிறார்கள். ஆகவே தான் விராட ரூபத்தைக் காண்பிக்கிறார்கள். முதன் முதலில் பிராமணன். சத்யுக சூரிய வம்சத்தில் மட்டும் 84 பிறவிகள் எடுக்க முடியாது. பிராமண குலத்திலும் கூட 84 பிறவிகள் கிடையாது. 84 பிறவிகளில் விதவிதமான பெயர், ரூபம், தேசம், காலத்தில் வருகிறார்கள். சத்யுகம் தூய்மையான நிலையிலிருந்து கலியுக தமோபிரதானத்திற்கு நிச்சயம் வர வேண்டும் அதற்கும் நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனிதர்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுக்கிறார்கள். இதுவும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். மனிதர்கள் புரிந்துக் கொள்ள முடியாது. நீங்கள் உங்கள் பிறவிகளைப் பற்றி அறியவில்லை, இப்போது நான் தெரிவிக்கிறேன் என பாபா கூறுகிறார். நாடகத்தின்படி அனைத்தையும் நிச்சயம் மறக்க வேண்டும் என பாபா புரிய வைக்கிறார்.

 

இப்போது இது சங்கமயுகம் ஆகும். இப்போது கலியுகம் சிறிய குழந்தை என உலகம் கூறுகிறது. இதற்குத் தான் அஞ்ஞானம், காரிருள் என்று பெயர். இப்போது நாடகம் முடிவதற்கு பத்து நிமிடங்கள் தான் உள்ளது என நாடகத்தில் நடிக்கக் கூடியவர்களுக்குத் தெரிகிறது. அது போல இது கூட சைத்தன்ய நாடகம் ஆகும். இது எப்போது முடிகிறது என மனிதர்கள் அறியவில்லை. மனிதர்கள் காரிருளில் இருக்கிறார்கள். குரு, சன்னியாசி வேத சாஸ்திரங்கள் யாகம், தவம் போன்றவற்றால் நான் உங்களுக்கு கிடைப்பதில்லை என பாபா கூறுகின்றார். இது பக்தி மார்க்கத்தின் பொருளாகும். நான் இரவிலிருந்து பகலாகக் கூடிய நேரத்தில் அல்லது பல தர்மங்கள் அழிந்து ஒரு தர்மம் ஸ்தாபனை ஆக வேண்டிய நேரத்தில் வருகிறேன். சிருஷ்டி சக்கரம் முடியும் போது தான் நான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறேன். உடன் இராஜ்யம் உருவாகிறது. பிறகு நாம் ஏதாவதொரு ராஜாவிடம் சென்று பிறப்போம். மெல்ல மெல்ல புதிய உலகம் உருவாகிறது என நீங்கள் அறிகிறீர்கள். அனைத்தையும் புதியதாக்க வேண்டியிருக்கிறது. ஆத்மாவில் படிக்கக் கூடிய சம்ஸ்காரம் அல்லது செயலை செய்வதற்கான சம்ஸ்காரம் இருக்கிறது என பாபா புரிய வைத்துள்ளார். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம அபிமானி ஆக வேண்டும். மனிதர்கள் அனைவரும் தேக உணர்வில் இருக்கின்றார். ஆத்ம உணர்வு அடையும் போது தான் பரமாத்மாவை உணர முடியும். முதலில் ஆத்ம அபிமானி ஆக வேண்டும். நாம் அனைவரும் ஜீவ ஆத்மாக்கள் என்கிறார்கள். ஆத்மா அழியாதது. இந்த உடல் அழியக் கூடியது என்றும் கூறுகிறார்கள். ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொன்றை எடுக்கின்றது. இவ்வளவு கூறுகிறார்கள். ஆனால் இதன் படி நடக்க வில்லை. ஆத்மா நிராகார உலகத்திலிருந்து வருகிறது. அதில் அழியாத நடிப்பின் பாகம் இருக்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். இதை பாபா தான் வந்து புரிய வைக்கின்றார். மறுபிறவி எடுக்கிறார்கள். நாடகம் அப்படியே திரும்பவும் ரிபீட் ஆகிறது. பிறகு கிறிஸ்து போன்ற அனைவரும் வருவார்கள். அவரவர் வர வேண்டிய நேரத்தில் வந்து அவரவர்களது தர்மத்தை (மதம்) ஸ்தாபனை செய்வார்கள். இப்போது உங்களுக்கு சங்கமயுக பிராமணர்களின் தர்மம் ஆகும். அவர்கள் பூஜாரி பிராமணர்கள். நீங்கள் பூஜைக்குரியவர்கள். நீங்கள் ஒரு போதும் பூஜை செய்ய மாட்டீர்கள். மனிதர்கள் பூஜை செய்வார்கள். இது எவ்வளவு பெரிய படிப்பு என பாபா புரிய வைக்கிறார். எவ்வளவு தாரணை செய்ய வேண்டியிருக்கிறது. விஸ்தாரமாக தாரணை செய்வதில்லை. வரிசைக் கிரமம் இருக்கின்றது. பாபா படைப்பவர் மற்றும் இது அவருடைய படைப்பு என சுருக்கமாகப் புரிந்துக் கொள்கிறார்கள். நல்லது. தந்தை என்பதையாவது புரிந்துக் கொள்கிறீர்கள் அல்லவா? தந்தையை அனைத்து பக்தர்களும் நினைக்கிறார்கள். பக்தர்களும் இருக்கிறார்கள், குழந்தைகளும் இருக்கிறார்கள். பக்தர்கள் தந்தையே என அழைக்கிறார்கள். ஒரு வேளை பக்தர்கள் பகவான் என்றால், பிறகு தந்தையே என்று யாரை அழைக்கிறார்கள். இதுவும் புரிந்துக் கொள்ளவில்லை. தன்னை பகவான் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாடகத்தின்படி பாரதம் முற்றிலும் கடைசி நிலைக்குச் செல்கின்ற நிலைமையில் தந்தை வருகின்றார். பாரதம் பழையதாகும் போது பிறகு புதியதாக வேண்டும். புதிய பாரதமாக இருந்த போது வேறு தர்மம் கிடையாது. அதற்கு சொர்க்கம் என்று பெயர். இப்போது பழைய பாரதம், இதற்கு நரகம் என்பார்கள். அங்கே பூஜைக்குரியவர்களாக இருந்தனர். இப்போது பூஜாரியாக இருக்கின்றனர். பூஜ்ய மற்றும் பூஜாரியின் வித்தியாசம் தெரிவித்துள்ளார். நாம் ஆத்மா பூஜைக்குரியவராகவும், பூஜாரியாகவும் மாறுகின்றோம். நாமே ஞானி ஆத்மா, நாம் பூஜாரி ஆத்மா ஆகிறோம். தாங்களே பூஜைக்குரியவர், தாங்களே பூஜாரி என பகவானுக்குக் கூற மாட்டார்கள். லஷ்மி நாராயணனுக்குத் தான் கூறுவார்கள். அவர்கள் எப்படி பூஜைக்குரியவர்களாகவும் பூஜாரிகளாகவும் மாறுகிறார்கள் என்பது புத்தியில் வர வேண்டும்.

 

போன கல்பத்திலும் நான் தான் இந்த ஞானத்தைக் கொடுத்தேன், கல்ப கல்பமாக கொடுக்கிறேன் என பாபா கூறுகிறார். நான் கல்பத்தின் சங்கமயுகத்தில் தான் வருகிறேன். என்னுடைய பெயரே பதீத பாவனர் ஆகும். அனைத்து உலகமும் பதீதமாகும் போது நான் வருகிறேன். இங்கே பாருங்கள். இது மரம். இதில் பிரம்மா மேலே நிற்கிறார். முதலில் ஆரம்பத்தில் காண்பிக்கிறார்கள். இப்போது அனைவரும் கடைசியில் இருக்கிறார்கள். பிரம்மா கடைசியில் பிரத்யட்சம் ஆவது போல அவரும் கடைசியில் வருவார். கிறிஸ்து இருக்கிறார் என்றால், அவர் மீண்டும் கடைசியில் வருவது போல ஆகும். ஆனால் நான் கடைசியில் அதாவது கிளையின் முடிவில் அவருடைய படத்தைக் கொடுக்க முடியாது. புரிய வைக்கலாம். இந்த தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் பிரஜாபிதா பிரம்மா. இந்த மரத்தின் கடைசியில் நிற்கிறார். அது போல கிறிஸ்து கூட கிறிஸ்தவ தர்மத்தின் பிரஜா பிதா அல்லவா! இவர் பிரஜாபிதா பிரம்மா போல அவர் பிரஜா பிதா கிறிஸ்து, பிரஜா பிதா புத்தர்...... இவர்கள் அனைவரும் தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்கள். சன்னியாசிகளின் சங்கராச்சாரியாரை அவர்களும் தந்தை என்பார்கள். அவர்கள் குரு என்கிறார்கள். எங்களுடைய குரு சங்கராச்சாரியர் என்கிறார்கள். கிளையில் ஆரம்பத்தில் இருக்கக் கூடிய இவர் முடிவில் வருகிறார். இப்போது அனைவரும் தமோ பிரதானமான நிலையில் இருக்கிறார்கள். இதையும் வந்து புரிந்துக் கொள்வார்கள். கடைசியில் சலாம் செய்வதற்காக நிச்சயம் வருவார்கள். அவர்களுக்கும் எல்லையற்ற தந்தையை நினையுங்கள் என்று கூறுவார்கள். எல்லையற்ற தந்தை தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்மந்தங் களையும் விடுங்கள் என அனைவருக்கும் கூறுகின்றார். இந்த ஞானம் ஒவ்வொரு தர்மத்தினருக்காகவும் ஆகும். அனைத்து தேக தர்மங்களையும் விட்டு தன்னை அசரிரீ என புரிந்துக் கொண்டு தந்தையை நினையுங்கள். எவ்வளவு நினைக்கிறீர்களோ ஞானத்தை தாரணை செய்கிறீர்களோ அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவார்கள். போன கல்பத்திலும் யார் எவ்வளவு ஞானம் எடுத்தார்களோ அவ்வளவு தான் நிச்சயமாக வந்து புரிந்துக் கொள்வார்கள்.

 

நாம் உலகத்தை படைக்கக் கூடிய தந்தையின் குழந்தைகள், பாபா நம்மை உலகத்திற்கே அதிபதியாக்குகின்றார். இராஜயோகத்தைக் கற்றுக் கொடுக்கின்றார் என்ற பெருமிதம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். எவ்வளவு எளிதான விசயம். ஆனால் போகப் போக குழந்தைகளுக்கு சிறிய விசயத்தில் கூட சந்தேகம் வருகிறது. இதற்குத் தான் மாயையின் புயல் அல்லது பரீட்சை எனப்படுகிறது. இல்லறத்தில் இருங்கள் என பாபா கூறுகின்றார். அனைவரும் வீட்டை விட்டு விட செய்தால் அனைவரும் இங்கே அமர்ந்துக் கொள்வார்கள். விவகாரத்திலும் தேர்ச்சி அடைய வேண்டும். பிறகு தேவையான நேரத்தில் சேவையில் ஈடுபடலாம். யார் வேலை போன்றவைகளை விட்டிருக் கிறார்களோ, பிறகு அவர்களை சேவையில் ஈடுபடுத்துகிறார்கள். சிலர் சீர் கெட்டு போகிறார்கள். சிலர் ஸ்ரீமத்தில் நன்மை இருக்கிறது என நினைக்கிறார்கள். ஸ்ரீமத்படி நிச்சயமாக நடக்க வேண்டும். டைரக்ஷன் (வழிகாட்டுதல்) கிடைத்திருக்கிறது. அதில் எந்த சாக்கு போக்கும் கூறக் கூடாது. பாபா ஒவ்வாரு விஷயத்திலும் கல்யாணக்காரி ஆவார். மாயா மிகவும் சஞ்சலமானது. பலர் இவ்வாறு இருப்பதோடு ஏதாவது தொழில் செய்யலாம், சிலர் திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள். புத்தி எனும் சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்கிறது. பிறகு படிப்பை விட்டு விடுகிறார்கள். சிலர் நாங்கள் நிச்சயமாக ஸ்ரீமத் படி நடப்போம் என உறுதி அளிக்கிறார்கள். அது அசுர வழியாகும். இது ஈஸ்வரிய வழியாகும். அசுர வழிப்படி நடப்பதால் மிகவும் கடுமையான தண்டனைகளை அடைகிறார்கள். பின் அவர்கள் கருட புராணத்தில் பயமுறுத்தும் படியான விஷயங்களை எழுதி இருக்கிறார்கள். இதனால் அதிகமான பாவம் செய்யாமல் இருக்கலாம். ஆனால் திருந்துவதில்லை. இது அனைத்தையும் பாபா புரிய வைக்கிறார். ஞானக் கடல் என்று எந்த மனிதனையும் கூற முடியாது. ஞானக் கடல், (நாலெட்ஜ்ஃபுல்) ஞானம் நிறைந்த தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். யார் புரிந்துக் கொள்கிறார்களோ அவர்களே மற்றவர்களுக்குப் புரிய வைக்கிறார்கள். அவர்கள் இது சரியான விஷயம், மீண்டும் வருகிறோம் என்கிறார்கள். அவ்வளவு தான் படக் கண்காட்சியிலிருந்து வெளியே சென்றதும் அனைத்தும் முடிந்தது. இரண்டு அல்லது மூன்று பேர் வந்தாலும் கூட மிகவும் நல்லது. பிரஜைகளாக நிறைய பேர் உருவாகிறார்கள். சொத்து அடைய தகுதி உடையவராக சிலரே உருவாகிறார்கள். ராஜா ராணிக்கு ஒன்றிரண்டு குழந்தைகள் இருப்பார்கள். அவர்களுக்கு ராஜகுலத்தினர் என்று கூறுவார்கள். பிரஜைகளாக எத்தனை பேர் உருவாகிறார்கள். பிரஜைகள் உடனே உருவாகிறார்கள். ராஜாக்கள் ஆவதில்லை. 16108 திரேதாவின் முடிவில் சென்று உருவாகிறார்கள். பிரஜைகள் கோடிகணக்கில் இருப்பார்கள் இதை புரிந்துக் கொள்ள மிகவும் விசால புத்தி வேண்டும். நாம் பாரலௌகீக தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்துக் கொண்டிருக்கிறோம். பாபாவின் கட்டளை என்னை நினையுங்கள் மற்றும் ஆஸ்தியை நினையுங்கள். மன்மனாபவ மற்றும் மத்யாஜீபவ. சொர்க்கம் விஷ்ணுபுரி ஆகும். இது இராவண புரி ஆகும். சாந்தி தாமம் சுகதாமம் மற்றும் துக்க தாமம். இதை பாபா புரிய வைக்கின்றார். பாபாவை நினைவு செய்வதால் கடைசி நினைவிற்கு ஏற்ப நிலையை அடையலாம். பக்தி மார்க்கத்தில் கிருஷ்ணரை நினைக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணபுரிக்குச் செல்வார்கள் என்று சொல்ல முடியாது. தியானத்தில் கிருஷ்ணபுரிக்கு சென்று நடனமாடி விட்டுத் திரும்புவார்கள். அது தீவிரமான பக்தியின் பிரபாவம். இதன் மூலம் அவர்களுக்கு சாட்சாத்காரம் ஆகிறது. மன விருப்பங்கள் நிறைவேறுகிறது. மற்றபடி சத்யுகம் சத்யுகம் தான் அங்கே செல்வதற்கு தீவிரமான படிப்பு வேண்டும். தீவிரமான பக்தி தேவை இல்லை. படித்துக் கொண்டே இருங்கள். முரளியைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அவசியம் சென்டருக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் முரளி வைத்து வீட்டிலாவது படியுங்கள். சிலருக்கு சென்டருக்கு செல்லுங்கள என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி (அறிவுரை) ஆகும். அனைவருக்கும் ஒன்று போல கூற முடியாது. திருஷ்டி கொடுத்து விட்டு சாப்பிடுங்கள் போதும் என்று பாபா கூறவில்லை. ஆனால் வேறு வழியே இல்லாத நேரத்தில், எதுவுமே செய்ய முடியவில்லை என்றால், திருஷ்டி கொடுத்து விட்டு சாப்பிடுங்கள் என்று கூறப்படுகிறது. மற்றபடி அனைவருக்காகவும் பாபா கூறவில்லை. சிலருக்கு பாபா பயாஸ்கோப் பார்க்க செல்லுங்கள் என்று கூறுவார். ஆனால் இது அனைவருக்காவும் கிடையாது. யாருடனாவது செல்லும் போது அவர்களுக்கு ஞானம் கொடுக்க வேண்டும். இது எல்லைக்குட்பட்ட நாடகம். இது எல்லைக்கப்பாற்பட்ட நாடகம் ஆகும். எனவே சேவை செய்ய வேண்டும். வெறுமனே பார்ப்பதற்காக மட்டும் செல்லக் கூடாது. சுடுகாட்டில் கூட சென்று சேவை செய்ய வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. பாபாவின் ஒவ்வொரு விசயத்திலும் நன்மை இருக்கிறது. இதைப் புரிந்துக் கொண்டு நிச்சயபுத்தி உடையவராகி நடக்க வேண்டும். ஒரு போதும் சந்தேகத்தில் வரக் கூடாது. ஸ்ரீமத்தை யதார்த்தமாக (மிகச் சரியாக) புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

2. ஆத்ம அபிமானியாக இருப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும். நாடகத்தில் ஒவ்வொரு நடிகருடையதும் அழிவில்லா நடிப்பின் பாகமாகும். ஆகவே சாட்சியாக இருந்து பார்ப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும்.

 

வரதானம்:

ஓவ்வொருவருடைய விசேஷத் தன்மையை பார்த்தபடியே அதை சேவையில் ஈடுபடுத்த கூடிய ஆசிகளுக்கு பாத்திரமானவர் ஆவீர்களாக.

 

எப்படி பாப்தாதாவிற்கு ஒவ்வொரு குழந்தையின் விசேஷத்தன்மை மீது அன்பு உள்ளது. மேலும் ஒவ்வொருவரிடமும் ஏதாவதொரு விசேஷத் தன்மை உள்ளது, அதனால் அனைவரிடமும் அன்பு இருக்கிறது. எனவே நீங்கள் கூட ஒவ்வொருடைய விசேஷ தன்மையைப் பாடுங்கள். எப்படி அன்னம் முத்தை உட்கொள்கிறது, கற்களை அல்ல. அதே போல நீங்கள் புனித அன்னங்கள் ஆவீர்கள். உங்களுடைய காரியமாவது ஒவ்வொருவரின் விசேஷத் தன்மையைப் பார்ப்பது. மேலும் அவர்களது விசேஷத்தன்மையை சேவையில் ஈடுபடுத்துவது. அவர்கள் அந்த விசேஷத் தன்மையின் ஊக்கத்தில் எடுத்து வந்து அவர்கள் மூலமாக அவர்களது சிறப்புக்களை சேவையில் ஈடுபடுத்தினீர்கள் என்றால் அவர்களது ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் அவர்கள் செய்யக் கூடிய சேவையின் பலனில் பங்கு கூட உங்களுக்கு கிடைக்கும்.

 

சுலோகன்:

உங்கள் மூலமாக மற்றவர்களுக்கு தந்தையின் நினைவு வந்து விடும் அளவிற்கு பாப்தாதாவுடன் அவ்வாறு (கம்பைண்டு) இணைந்திருங்கள்.

 

ஓம்சாந்தி