05.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! படிப்பை ஒருபோதும் தவறவிடக் கூடாது. படிப்பு சொல்லித் தரும் பாபாவிடம் எப்போது உறுதியான நிச்சயம் உள்ளதோ, அப்போது தான் படிப்பின் மீது ஆர்வம் இருக்கும். நிச்சயபுத்தி உள்ள குழந்தைகள் தான் சேவை செய்ய முடியும்.

 

கேள்வி :

பாப்தாதாவுக்கு குழந்தைகளின் எந்த ஒரு விசயத்தைக் கேட்டு மிகுந்த குஷி ஏற்படுகின்றது?

 

பதில் :

இப்போது குழந்தைகள் சேவை பற்றிய செய்தியை எழுதுகின்றனர் - இன்று நாங்கள் இன்னாருக்கு சொல்லிப் புரிய வைத்தோம். அவருக்கு இரண்டு தந்தையரின் அறிமுகம் கொடுத்தோம்....... இப்படி இப்படி சேவை செய்தோம்...... என்று. பாபா அந்தக் கடிதங்களைப் படித்து மிகுந்த குஷியடைகிறார். அன்பு நினைவு அல்லது சேமநலம் பற்றிய கடிதம் எழுதுவதால் பாபாவின் வயிறு (மனம்) நிரம்புவதில்லை. பாபா தம்முடைய உதவியாளர்களாகிய குழந்தைகளைப் பார்த்துக் குஷியடைகிறார். அதனால் சேவை செய்துவிட்டு செய்தியை எழுதித் தெரியப் படுத்த வேண்டும்.

 

பாடல் :

வாருங்கள் செல்வோம் அம்மா, கனவுகளின் கிராமத்திற்கு.......

 

ஓம் சாந்தி.

குழந்தைகளுக்குத் தெரியும், முட்களிலிருந்து மலர்களின் உலகத்திற்குச் செல்ல வேண்டும். சத்யுக உலகத்தை தெய்வீக மலர் என்று தான் சொல்வார்கள். கலியுகத்தில் மனிதர்கள் முள்ளைப்போல் உள்ளனர். ஒருவர் மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்கின்றனர், துக்கம் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றனர். குழந்தைகள் நீங்கள் இப்போது குஷியடைகிறீர்கள் - செல்வோம், இப்போது நாம் நம்முடைய அந்த தெய்வீக மலர்களின் சுகதாமத்திற்குச் செல்வோம். செல்வதற்கான இரகசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். எப்போது நன்கு படிக்கிறார்களோ, அப்போது தான் செல்ல முடியும். முதலாவதாக நிச்சயம் வேண்டும் - படிப்பு சொல்லித் தருபவர் யார்? இவ்விசயங்கள் எந்த ஒரு வேத-சாஸ்திரத்திலும் எழுதப் படவில்லை. கீதையில் இராஜயோகம் பற்றி எழுதப்பட்டுள்ளது என்றாலும் இராஜ்யத்திற்கான படிப்பு என்றால் நிச்சயமாக இராஜ்யத்தை சத்யுகத்தில் தருவார். முதலில் படிப்பு சொல்லித் தருபவரின் மீது நிச்சயம் வைக்க வேண்டும். இவர் ஒன்றும் சாது, சந்நியாசி, மனிதரோ அல்ல. இவரோ நிராகார். அனைத்து ஆத்மாக்களின் தந்தை - பரமபிதா பரமாத்மா. யாருக்கு கல்பத்திற்கு முன்பு போலவே நிச்சயம் ஏற்பட்டிருக்குமோ, அவர்களுக்குத் தான் இப்போதும் ஆகும். நீங்கள் பார்க்கிறீர்கள், பூக்களின் உலகமாகிய சொர்க்கத்திற்குச் செல்வதற்காக ஒவ்வொருவருக்கும் அவரவர் முயற்சி உள்ளது. முதலில் எப்போது நிச்சயம் உள்ளதோ, அப்போது உடனே படிப்பில் ஈடுபட்டு விடுவார்கள். சாஸ்திரங்களில் கிருஷ்ண பகவான் வாக்கு என எழுதப் பட்டுள்ளது - அதனுடன் கூடவே எழுதப்பட்டுள்ளது - ருத்ர ஞான யக்ஞம் என்று. இப்போது இவை ஞானத்தின் விசயங்கள் ஆகின்றன. மனிதர்கள் பிறகு கிருஷ்ணருக்கு மூங்கிலால் ஆன முரளியைக் கொடுத்துள்ளனர். பாடலும் உள்ளது இல்லையா உங்கள் முரளியில் மாயமந்திரம் உள்ளது என, இது இறைவனின் அற்புதம். இப்போது மூங்கிலின் முரளியிலோ இறைவனின் மாய மந்திரம் இருக்க முடியாது. அவரோ வாயின் மூலம் முரளி இசைக்க முடியும். கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தைத்தான் காட்டுகின்றனர். தங்களுக்குள் விளையாடிக் குதித்துக் கொண்டே இருக்கின்றனர். இவ்விசயங்கள் மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டியவையாகும். இதையோ குழந்தைகள் புரிந்துக் கொண்டு விட்டனர் - இது நிச்சயமாக இராஜயோகம் தான் என்று, அதாவது இராஜ்யத்தை அடைவதற்கான படிப்பு சொல்லித் தருபவரோடு யோகம். (புத்தியின் தொடர்பு) அவர் நேராக நமக்கு முன்பாக வந்து படிப்பிக்கிறார். இதில் மூங்கில் முரளியின் எந்த ஒரு விசயமும் கிடையாது. இந்த விசயங்களோ தனிப்பட்டவை. இது யாருக்குமே தெரியாது - நிராகார் பகவான் தாமே வந்து படிப்பு சொல்லித் தருகிறார் என்பது. கிருஷ்ணரைப் பற்றியும் சொல்கின்றனர், அவரது முரளியில் இறைவனின் மாயமந்திரம் உள்ளது என்பதாக. அப்போது இறைவன் வேறொருவர் என்றாகிறது இல்லையா? கிருஷ்ணரை இறைவன் எனச் சொல்ல மாட்டார்கள். இறைவனோ ஒரு இறைவன் தான். அவரைத் தான் மந்திரவாதி என்கின்றனர். மந்திரவாதி தாமே வந்து மாயமந்திரத்தைக் காட்டுகிறார். சாட்சாத்காரம் செய்விக்கிறார். பிறகும் கூட உயர்ந்த பதவி பெறச் செய்வதற்காகப் படிப்பு சொல்லித் தருகிறார். மீராவும் கூட வைகுண்டத்தைப் பார்த்து நாட்டியமாடினார். ஆனால் அவர் இராஜயோகம் கற்றுக் கொள்ளவில்லை. இராஜயோகத்தின் விசயம் எந்த ஒரு சாஸ்திரத்திலும் இல்லை. மீராவுக்குப் படிப்பு சொல்லித் தருபவரோ யாரும் இல்லை. மீராவின் பெயரும் பக்த மாலையில் உள்ளது. இது ஞான மாலையாகும். இரவு-பகலுக்குள்ள வேறுபாடு. நீங்கள் புரிந்துக் கொண்டு விட்டீர்கள் - நாம் எவ்வளவு ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறோமோ அவ்வளவு உயர்ந்தவர்களாக ஆவோம். நிச்சயமாக பக்த  மாலையும் உள்ளது. அவர்களிலும் வரிசைக்கிரமம் உள்ளனர். அவர்களின் பெயரோ புகழ் பெற்றது. இந்த ஞானம் எவரிடத்திலும் கிடையாது. ஆகவே புரிய வைக்க வேண்டும் - இந்த ஞானத்தைக் கொடுப்பவர் அந்த அத்தாரிட்டியாகிய பாபா. அவரைப் பற்றித் தான் சொல்லப் படுகின்றது - பிரம்மாவின் வாய்க் கமலத்தின் மூலம் பிராமணர்களைப் படைத்து அவர்களுக்கு அனைத்து வேத-சாஸ்திரங்களின் சாரத்தைச் சொல்கிறார். சிவபாபா சாஸ்திரங்களைக் கொடுக்க முடியாது. ஏனென்றால் அவரோ நிராகாராக உள்ளார். ஆக, பிரம்மா மூலம் புரிய வைக்கிறார். இந்த யுக்தியை உருவாக்கியுள்ளார். ஆனால் இந்த அனைத்து விசயங்களையும் சொல்லிப் புரிய வைப்பவர் அந்த ஒருவர் தான். காட்டவும் செய்கின்றனர், பிரம்மா மூலம் சாரத்தைச் சொல்கிறார் என்றால் நிச்சயமாக புரிய வைப்பவர் வேறு யாரோ இருப்பார். இப்போது நீங்கள் நடைமுறையில் பார்க்கிறீர்கள், ஞானக்கடலான சிவபாபா நம் முன் அமர்ந்துள்ளார். அவர் நமது தந்தையும் ஆவார். பாரதத்தில் தான் வருகிறார், மேலும் நிச்சயமாக யாரோ ஒருவரின் சரீரத்தில் வருகிறார். இது பிரம்மாவின் சரீரம். பிரஜாபிதா பிரம்மா இருப்பதும் அவசியமாகும். நிச்சயமாக பிரஜாபிதா பிரம்மாவின் மூலமாகத் தான் பாபா வந்து பிராமண தர்மத்தைப் படைக்கிறார். தர்மம் எப்படிப் படைக்கப் படுகிறது? இதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் நடைமுறையில் பிரம்மாவின் குழந்தைகள். நீங்கள் சொல்கிறீர்கள், நாம் பிராமண்-பிராமணிகள் என்று. பாபாவிடமிருந்து ஆஸ்திப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். பின்பற்றுபவர்களோ (ஃபாலோவர்ஸ்-சீடர்கள்) ஒருபோதும் ஆஸ்திப் பெற முடியாது. குழந்தைகள் தான் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுகின்றனர். நீங்கள் வந்து எல்லையற்றக் குழந்தைகளாக ஆகியிருக்கிறீர்கள். கிறிஸ்துவின் ஃபாலோவர்ஸ் (கிறிஸ்துவைப் பின்பற்றுவோர்) எனச் சொல்வார்கள். குழந்தைகள் அல்ல. புத்தருக்கு, குருநானக்கின் ஃபாலோவர்ஸ் என்று தான் சொல்வார்கள். குழந்தைகள் அல்ல. இங்கே நீங்கள் குழந்தைகள். பிரஜாபிதா - அவரும் கூட தந்தை ஆகிறார். மேலும் சிவபாபாவும் கூட தந்தை ஆகிறார். அவர் நிராகார். இந்த சாகார் வேறு. இந்த சாகார் மூலமாகத் தான் சிவபாபா குழந்தைகளைப் படைத்துள்ளார். இப்போது உங்களிலும் கூட சிலருக்கோ உறுதியான நிச்சயம் உள்ளது, சிலருக்கு இல்லை. கிடைக்கக் கூடிய லாட்டரி மிகப் பெரியதாகும்.

 

நீங்கள் உங்களுடைய சரீர நிர்வாகத்திற்காகக் கர்மங்களும் செய்ய வேண்டும். மேலும் இந்த ஞானத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். அந்தப் படிப்பில் அதிக முயற்சிச் செய்ய வேண்டியுள்ளது. இங்கேயும் கூட பாபா சொல்கிறார், ஒரு மணி நேரம், அரை மணி நேரம் அவசியம் படிக்க வேண்டும். நல்லது, ஏதாவது காரணத்தால் தினந்தோறும் படிக்க முடியவில்லை என்றால் முதலில் 7 நாள் படித்த பின் முரளியின் ஆதாரத்தில் நடந்து செல்ல முடியும். இலட்சியத்தைப் பிடித்துக் கொண்டீர்கள் என்றால் மற்றப்படி கிளைகள், இலைகள் முதலானவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவை அனைத்தும் கூட சக்கரத்தில் வந்து விடுகின்றன. உங்களுக்கு 84 பிறவிகளின் இரகசியமும் புரிய வைக்கப்பட்டுள்ளது. கல்ப விருட்சத்தில் விரிவாக உள்ளது. சக்கரத்தில் சுருக்கமாக உள்ளது. இது பலவித மனித சிருஷ்டியின் மரம் என்பதும் புரிய வைக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு தர்மம் இருக்கின்றது. பிறகு விரிவடைகின்றது. மரமும் காட்டப்பட்டுள்ளது - எப்படி அஸ்திவாரம் வெளிப்படுகின்றது என்று. எவ்வளவு சுலபமான இரகசியம்! டிராமா மற்றும் கல்ப விருட்சத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும். புத்தியில் தாரணை செய்ய வேண்டும், பிறகு மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இரண்டு தந்தையரின் கருத்தை அவசியம் புரிய வைக்க வேண்டும். எல்லையற்றத் தந்தையிடம் சுயராஜ்யம் கிடைக்கின்றது. அதனால் இராஜயோகத்தை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். பரமபிதா பரமாத்மா தான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். அதைத் தான் கிருஷ்ணபுரி என்றும் சொல்கின்றனர். கம்சபுரியிலோ கிருஷ்ணபுரி ஸ்தாபனை ஆக முடியாது. அதனால் சங்கமயுகம் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு இது சங்கமயுகமாகும். மற்ற அனைவருக்கும் இது கலியுகம். நீங்கள் தான் சங்கமயுகத்திலிருந்து பிறகு சத்யுகம் செல்லக் கூடியவர்கள். இந்த நிச்சயம் இருக்க வேண்டும். இப்போது நாம் சங்கமயுகத்தில் உள்ளோம். சங்கமயுகம் நினைவிருந்தால் சத்யுகமும் நினைவிருக்கும். மேலும் சத்யுகத்தை ஸ்தாபனை செய்பவரும் நினைவிருக்கும். ஆனால் அடிக்கடி மறந்துவிடுகின்றனர். நீங்கள் புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள், இப்போது நாம் சங்கமயுகத்தில் இருக்கிறோம். எல்லையற்றத் தந்தை வருவதே கல்பத்தின் சங்கமயுகத்தில் தான். கீதையில் தவறு செய்துள்ளனர். கீதையுடன் தொடர்புடையவை பாகவதம், மகாபாரதம் முதலானவை.

 

பாபா புரிய வைக்கிறார் - நீங்கள் அனைவரும் சீதைகள். நான் இராம். நீங்கள் இராவண இராஜ்யமாகிய இலங்கையில் இருக்கிறீர்கள். தற்போதுள்ள இலங்கையல்ல. அங்கே ஏதோ இராவண இராஜ்யம் இருந்தது என்பதல்ல. சத்யுகத்தில் இலங்கை முதலானவை இருப்பதில்லை. அந்தப் பக்கம் பௌத்த தர்மம் உள்ளது. இப்போது பௌத்த தர்மம் அதிகமாகப் பரவியுள்ளது. இப்போது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது - பாரதம் முதலில் முற்றிலும் தூய்மையாக இருந்தது. சுகம்-சாந்தி இருந்தது. ஒரே ஒரு தேவி-தேவதா தர்மம் மட்டுமே இருந்தது. முதல்-முதலில் இந்த நிச்சயம் பக்காவாக இருக்க வேண்டும் - இவர் நம்முடைய எல்லையற்ற தந்தை என்பது. அவரிடமிருந்து ஆஸ்திப் பெற வேண்டும். புருஷார்த்தத்தில் ஒருபோதும் தவறு செய்யக் கூடாது. நிச்சயம் இல்லாமல் புருஷார்த்தையும் கூட எப்படி செய்வீர்கள்? பாபா படிப்பு சொல்லித் தருகிறார். அவரிடமிருந்து சொர்க்கத்தினுடைய சதா சுகத்தின் ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதுவோ நிச்சயிக்கப்பட்டதாகும்.

 

பாடசாலையில் நிச்சயம் இல்லாமல் அல்லது நோக்கம் குறிக்கோளின்றி அமர்ந்திருக்கமாட்டார்கள். அங்கோ பாடங்கள் அதிகம் உள்ளன. இடைவெளி உள்ளது. இங்கோ ஒரே ஒரு பாடம் தான். ஒரே ஒரு பாடத்தில் எவ்வளவு பெரிய இராஜதானி ஸ்தாபனை ஆகிவிடுகிறது! படிக்காதவர்கள் படித்தவர்கள் முன்னிலையில் தலைவணங்குவார்கள். பிரஜைகளிலும் கூட யார் நல்ல பிரஜைகளாக உள்ளனரோ, அவர்களுக்கு முன் குறைந்த பதவி பெறுபவர்கள் தலைவணங்குவார்கள். பிரஜைகளும் வரிசைக்கிரமமாக இருக்கத் தான் செய்கின்றனர் இல்லையா? சிலர் ஏழை, சிலர் பணக்காரர், ஒருவர் போல் இன்னொருவர் இருக்க மாட்டார். இந்த டிராமா எப்படி இருக்கிறது! மனிதர்கள் அனைவருடைய தோற்ற அமைப்புகள் டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளன, பாத்திரத்தை நடிப்பதற்காக. எவ்வளவு ஆழமான விசயங்கள்! தாரணை செய்து யதார்த்த ரீதியில் மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். அனைவருமோ புரிந்துக் கொள்ள முடியாது. எவ்வளவு நல்ல விசயங்களைப் புரிய வைக்கிறார்! நிச்சயத்தில் தான் வெற்றி உள்ளது. நிச்சயம் இருந்தால் தான் படிப்பார்கள். சிலரோ சந்தேகபுத்தி உள்ளவராகிப் படிப்பை விட்டுவிடுகின்றனர். அஹோ, மாயா உடனே புயலை வரவழைத்து சந்தேகத்தில் கொண்டு போய்விடுகின்றது! சந்தேக புத்தி அழிவைத் தரும். மேலே உயர்ந்து சென்றால் வைகுண்ட ரசம். கீழே விழுந்தால் சுக்குநூறாகிவிடுவர். வித்தியாசமோ அதிகம் உள்ளது. கீழே விழுந்தால் முற்றிலும் சண்டாளராக ஆகிவிடுவர். உயர்ந்து சென்றால் முற்றிலும் பாதுஷா (சக்கரவர்த்தி). எல்லாமே படிப்பின் ஆதாரத்தில் தான் உள்ளது. இதற்கு முன் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா - நிராகார் ஆசிரியர் எப்படி இருப்பார் என்று? இப்போது சிவபாபாவிடமிருந்து நீங்கள் கேட்கிறீர்கள். உங்களுக்கு நிச்சயம் ஏற்பட்டுள்ளது - நான் உங்களுடைய தந்தை, பதீத பாவனராகவும் இருக்கிறேன். ஞானம் நிறைந்தவர் என்றும் சொல்கிறீர்கள். ஞானத்தின் மூலம் சக்கரவர்த்தி இராஜா ஆக வேண்டும். இந்த நிச்சயம் இருக்க வேண்டும் இல்லையா? நிச்சயத்தில் தான் மாயா விக்னத்தை ஏற்படுத்துகிறது. விரோதி (மாயா) முன்னாலேயே உள்ளது. நீங்கள் அறிவீர்கள், மாயா நம்முடைய விரோதி. அடிக்கடி நம்மை ஏமாற்றி விடுகின்றது. படிப்பில் சந்தேகத்தை உண்டாக்கிவிடுகின்றது. சந்தேகத்தில் வந்து அநேகக் குழந்தைகள் படிப்பை விட்டுவிடுகின்றனர். படிப்பை விட்டுவிட்டால் தந்தை, ஆசிரியர், சத்குருவையும் கூட விட்டுவிட்டதாக ஆகும். அவர்களோ குருவை மாற்றிக் கொண்டேயுள்ளனர். அநேக குருமார்களைப் பின்பற்றுகின்றனர். இவரோ ஒரே ஒரு சத்குரு ஆவார். இவர் தம்முடைய மகிமை செய்வதில்லை. பாபா தம்முடைய அறிமுகம் தருகிறார். பக்தர்கள் பாடுகின்றனர் இல்லையா? - சிவாய நமஹ, நீங்கள் தான் தாயும் தந்தையுமாக இருக்கிறீர்கள்...... ஆனால் எதையுமே தெரிந்துக் கொள்வதில்லை. வெறுமனே சொல்லிக் கொண்டேயிருக்கின்றனர், பூஜை செய்துக் கொண்டேயிருக்கின்றனர். நீங்கள் இப்போது தெரிந்துக் கொண்டீர்களா, சிவன் யாரென்று? சிவனுக்குப் பின் வருகின்றனர், பிரம்மா-சரஸ்வதி. லட்சுமி-நாராயணர் பின்னால் வருகின்றனர். முதலில் சிவபாபா, பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கர். பாபா சொல்கிறார் - முதன் முதலில் பிரம்மாவுக்குள் பிரவேசமாகிறேன். இவரை முதலில் படைக்கிறேன். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை, பிறகு பிரம்மா தான் விஷ்ணு ஆகி பாலனைச் செய்கிறார். இந்த அனைத்துப் கருத்துக்களையும் குறித்து வைக்க வேண்டும். பிறகு யாருக்காவதுப் புரிய வைப்பதற்கு முயற்சிச் செய்ய வேண்டும். சிலரோ மிக நன்றாகப் புரிய வைக்கின்றனர். பாபாவினுடைய விசயமே வேறு. சில நேரம் சிவபாபா சொல்லிப் புரிய வைக்கிறார், சில நேரம் இவரும் (பிரம்மா) சொல்லிப் புரிய வைக்கிறார். சிவபாபா தான் சொல்லிப் புரிய வைக்கிறார் என்று நீங்கள் எப்போதுமே புரிந்து கொள்ளுங்கள். சிவபாபாவை நினைவு செய்வதன் மூலம் விகர்மங்கள் விநாசமாகின்றன. நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள் - சிவபாபா இவர் மூலம் புதுப்புதுப் கருத்துக்களை சொல்கிறார், மிகவும் யுக்தியுடன் புரிய வைக்கிறார். ஆக, குழந்தைகள் புரிந்துக் கொள்ளவும் வேண்டும். முதல் முதலாவதாக நிச்சயம் இருக்க வேண்டும். 7 நாளிலும் கூட நிறம் (ஞானம்) நன்கு படிய முடியும். ஆனால் மாயாவும் கூட மிகவும் சாமர்த்தியமானது இல்லையா? முதன்-முதலில் நிச்சயம் ஏற்பட வேண்டும் - தந்தையாகிய பரமபிதா பரமாத்மா சொர்க்கத்தைப் படைப்பவர் என்று. ஆகவே தம்முடைய இராஜயோகத்தைத் தான் கற்பித்திருப்பார். கிருஷ்ணர் கற்றுத்தர முடியாது. அவர் வருவதே சத்யுகத்தில் நடைபெறுகின்றது. சொர்க்கத்தைப் படைப்பவர் சிவபாபா ஆவார். சிலர் சொல்லலாம், அவர் கிருஷ்ணரின் உடலில் வந்ததாக. ஆனால் கிருஷ்ணரோ அந்த ரூபத்தில் வர முடியாது. அவர் வருவதே சத்யுகத்தில் தான். பாபா யாருடைய கர்ப்பத்திலும் ஜென்மம் எடுப்பதில்லை. இவருடைய (பிரம்மா பாபா) உடலில் பிரவேசமாகி இவருடைய அறிமுகத்தையும் தருகிறார் இவருடைய பெயரை பிரம்மா என ஏன் வைத்தேன் என்பது பற்றி. இவர் தான் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அந்த பாத்திரத்தை நடிக்கிறார். உங்களுக்கும் கூட மிக நல்ல நல்ல பெயர்களெல்லாம் வைத்திருந்தார். எவ்வளவு குழந்தைகளுக்குப் பெயர்கள் வந்தன! அற்புதம் இல்லையா, 250 பேருக்கு பெயர்கள் உடனே வைக்கப்பட்டன. இவ்வளவு பெயர்களோ இங்குள்ள பிராமணர்கள் தர முடியாது. சந்தேஷிகள் (டிரான்ஸில் சென்ற சகோதரிகள்) உடனே பெயர்களைக் கொண்டு வந்தனர். எல்லையற்றத் தந்தை பெயர்களை வைத்தார். இது அதிசயமாகும். அற்புதமான பாபா, அற்புதமான நோக்கம் குறிக்கோள்.

 

நீங்கள் தான் மீண்டும் இராஜாகளுக்கெல்லாம் மேலான இராஜா ஆவீர்கள். லட்சுமி-நாராயணரின் சித்திரம் மிகத் தெளிவாக உள்ளது. மேலே திரிமூர்த்தியின் சித்திரம் பெரியதாக, மிகச் சரியானதாக உள்ளது. 84 பிறவிகளும் நிச்சயமாக எடுத்தாக வேண்டும். கலியுகக் கடைசியில் தூய்மையற்ற நிலை, சத்யுகத்தின் ஆரம்பத்தில் சம்பூர்ண தூய்மை. குழந்தைகள் சேவையின் நிரூபணத்தைக் காட்ட வேண்டும் - பாபா, நாங்களும் கூட இந்த சின்னச் சின்ன நோட்டீஸ்களை அச்சடித்துள்ளோம். மேலே சிவன், திரிமூர்த்தி மற்றும் இரண்டு தந்தையரின் அறிமுகம் இருக்க வேண்டும். இந்தப் பாயின்ட் அவசியம் இருக்க வேண்டும். இதுபோன்ற நோட்டீஸ்கள் அச்சடித்து நன்றாக சேவை செய்து செய்தி சொல்ல வேண்டும். அப்போது பாபாவின் மனதில் இடம் பெறுவீர்கள். கடிதம் வெறுமனே சேமநலம் பற்றியதாக இல்லாமல் சேவை செய்து அது பற்றிய தகவலை எழுத வேண்டும் - பாபா, இன்னின்ன சேவைகள் செய்தோம். வெறுமனே அன்பு-நினைவை எழுதுவதால் பாபாவின் வயிறு எப்படி நிரம்பும்? இன்று இன்னாருக்கு சொல்லிப் புரிய வைத்தோம், இன்று கணவருக்கு சேவை செய்தோம், மிக நன்கு குஷியடைந்தார், இப்படி-இப்படி சேவை செய்தோம்-இவ்வாறு பாபாவுக்கு எழுதித் தகவலைத் தெரியப்படுத்த வேண்டும். இரண்டு தந்தையர் என்ற கருத்து முக்கியமானதாகும். எல்லையற்ற தந்தை தான் சொர்க்கத்தின் இராஜ்ய பாக்கியத்தைத் தருபவர். நீங்கள் எவ்வளவு இனிமையிலும் இனிமையான குழந்தைகள்! பாபா புரிய வைக்கிறார், இவர்கள் அனைவரும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். இத்தனைக் குழந்தைகள் அனைவருமே தர்மத்தின் குழந்தைகளாகத் தான் இருக்க முடியும். அவர்கள் (வெளியுலகில்) தர்மத்தின் சீடர்களாக உள்ளனர். இங்கே நீங்கள் குழந்தைகள். பாபாவும் கூட இத்தகைய குழந்தைகளைப் பார்த்துக் குஷியடைகிறார். இவர்கள் அனைவரும் நம்முடைய குழந்தைகள். இப்போது கடைசி நேரத்தின் பாத்திரத்தை நடித்துக் கொண்டுள்ளனர். சொர்க்கத்தின் ஸ்தாபனையில் உதவி செய்வதற்காக என்னுடைய துணையாக ஆகியிருக்கின்றனர். இது ருத்ரனாகிய சிவபாபாவின் இராஜஸ்வ அஸ்வமேத ஞான யக்ஞம். சிவபாபா சொர்க்கத்தின் ஸ்தாபனையை எப்படிச் செய்கிறார்? முதலில் பிரம்மா மற்றும் பிராமணர்கள் மூலம் ருத்ர ஞான யக்ஞத்தைப் படைக்கிறார். இதன் மூலம் சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆகின்றது. ஆக, நிச்சயமாக பிராமணர்கள் தான் யக்ஞத்தைப் பராமரிக்க வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்- தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) நிச்சயப் புத்தி உள்ளவராகி படிப்பைப் படிக்க வேண்டும். ஒருபோதும் எந்த விசயத்திலும் சந்தேகம் கொள்ளக் கூடாது. நிச்சயத்தில் தான் வெற்றி உள்ளது.

 

2) பாபாவின் துணையாக ஆகி சொர்க்கத்தின் ஸ்தாபனையில் முழு உதவியாளராக ஆக வேண்டும். யக்ஞத்தைப் பராமரிக்கக் கூடிய உறுதியான பிராமணன் ஆக வேண்டும்.

 

வரதானம்:

வருவது மற்றும் செல்வது என்ற பயிற்சியின் மூலம் பந்தனமற்றவர்களாக ஆகக் கூடிய விடுப்பட்டவர், பாதிப்படையாதவர் (நிர்லேப்) ஆகுங்கள்.

 

முழு படிப்பு அதாவது ஞானத்தின் சாரம் - வருவது மற்றும் செல்வதாகும். புத்தியில் வீட்டிற்கு செல்வது மற்றும் இராஜ்யத்தில் வருவதற்கான குஷியிருக்கிறது. ஆனால் யாருக்கு வருவது மற்றும் செல்வதற்கான பயிற்சியிருக்கிறதோ அவர்கள் தான் குஷியாக செல்ல முடியும். எப்போது வேண்டுமோ அப்போது அசரீரி ஸ்திதியில் நிலைத்து விடுங்கள், மேலும் எப்போது வேண்டுமோ அப்போது கர்மாதீத நிலை அடைந்து விடுங்கள் - இந்த பயிற்சி மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இதற்கு எந்த பந்தனமும் தன் பக்கம் ஈர்க்கக் கூடாது. பந்தனம் தான் ஆத்மாவை இறுக்கி விடுகிறது. மேலும் இறுக்கமான ஆடையை கழற்றுவது கடினமாக இருக்கும். ஆகையால் சதா விடுபட்டவர்களாக, பாதிப்படையாதவர்களாக இருக்கக் கூடிய பாடத்தை உறுதியாக கடைபிடியுங்கள்.

 

சுலோகன்:

சுகத்திற்கான கணக்கு (வருமானம்) நிறைந்திருந்தால் உங்களது ஒவ்வொரு அடியின் மூலம் அனைவருக்கும் சுகத்தின் அனுபவம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

 

ஓம்சாந்தி