12.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இப்போது காரிருளாக இருக்கிறது, பயங்கரமான இரவு முடிந்து கொண்டிருக்கிறது, நீங்கள் பகலுக்குச் செல்ல வேண்டும், இது பிரம்மாவின் எல்லையற்ற பகல் மற்றும் இரவின் கதையாகும்.

 

கேள்வி:

ஒரு வினாடியில் ஜீவன்முக்தியை அடைவதற்கு அல்லது வைரத்திற்குச் சமமான வாழ்க்கையை உருவாக்குவதற்கான ஆதாரம் என்ன?

 

பதில்:

உண்மையான கீதை. அது ஸ்ரீமத் பகவானுடைய மகாவாக்கியமாகும். பாபா உங்களுக்கு நேரடியாக என்ன அறிவுரைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ இது தான் உண்மையான கீதையாகும், இதன் மூலம் உங்களுக்கு வினாடியில் ஜீவன்முக்தி பதவி கிடைக்கிறது. நீங்கள் வைரத்திற்குச் சமமாக ஆகின்றீர்கள். அந்த கீதையின் மூலம் பாரதம் சோழிக்குச் சமமாக ஆகிவிட்டது ஏனென்றால் பாபாவை மறந்து கீதையை அவமதித்து விட்டார்கள்.

 

பாட்டு:

இரவு பிரயாணிகளே களைத்து விடாதீர்கள்..........

 

ஓம் சாந்தி.

இந்த பாடலை குழந்தைகளாகிய நீங்கள் உருவாக்க வில்லை. இதை திரைபடத்துறையை சேர்ந்தவர்கள் அமர்ந்து உருவாக்கியுள்ளார்கள். அர்த்தம் எதையும் புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு விசயத்தின் யதார்த்த அர்த்தத்தை தெரிந்து கொள்ளாத காரணத்தினால் அர்த்தமற்றதாக ஆகி விடுகிறது. பாடுகிறார்கள் ஆனால் எதையும் புரிந்து கொள்வதில்லை. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத் கிடைத்திருக்கிறது. யாருடைய ஸ்ரீமத்? பகவானுடையது. பகவானையே பக்தர்கள் தெரிந்திருக்கவில்லை என்றால், அந்த பக்தர்களுக்கு சத்கதி எப்படி ஏற்பட முடியும். பக்தர்களை பாதுகாப்பவர் பகவான் ஆவார். பாதுகாப்பை கேட்கிறார்கள் என்றால் கண்டிப்பாக ஏதோ துக்கம் இருக்கிறது. எங்களை பாதுகாருங்கள். நிறைய பாடுகிறார்கள் ஆனால் பகவான் யார், யாரிடமிருந்து பாதுகாக்கின்றார், என்பதை கொஞ்சம் கூட தெரிந்திருக்க வில்லை. பக்தர்கள் அல்லது குழந்தைகள் தங்களுடைய தந்தையை தெரிந்திருக்காத காரணத்தினால் எவ்வளவு துக்கமுடையவர்களாக ஆகி விட்டார்கள். இப்போது இதனுடைய அர்த்தத்தை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்போது காரிருள், பயங்கரமான இரவு, அரைக்கல்பத்தின் இரவாகும். இரவு என்று எதை சொல்லப்படுகிறது என்பது எந்தவொரு வித்வான், (ஆச்சாரியர்), மதகுரு, பண்டிதரும் தெரிந்திருக்க வில்லை. இரவு உறங்குவதற்கும், பகல் விழித்திருப்பதற்கும் இருக்கிறது என்பதை விலங்குகளும் தெரிந்திருக்கின்றன. குருவிகளும் இரவில் உறங்கி விடுகின்றன. விடியல் ஆரம்பித்ததும் எழுந்து விடுகின்றன. அந்த இரவு-பகல் என்பது பொதுவானதாகும். இது பிரம்மாவின் எல்லையற்ற இரவு மற்றும் எல்லையற்ற பகலாகும். எல்லையற்ற பகல் என்று சத்யுகம்- திரேதாவையும், துவாபர-கலியுகத்தை இரவு என்றும் சொல்லப்படுகிறது. பாதி-பாதி வேண்டும் அல்லவா. பகலின் ஆயுள் 2500 ஆண்டுகளாகும். இந்த பகல்-இரவு பற்றி யாருக்கும் தெரிய வில்லை. இப்போது இரவு முடிகிறது அதாவது 84 பிறவிகள் முடிகிறது அல்லது நாடகச் சக்கரம் முடிகிறது பிறகு பகல் ஆரம்பமாகும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இரவை பகலாகவும் மற்றும் பகலை இரவாகவும் மாற்றக் கூடியவர் யார் என்பதை யாரும் தெரிந்திருக்க வில்லை. பகவானையே தெரிந்திருக்க வில்லை எனும்போது இந்த விசயங்கள் அனைத்தையும் எப்படி தெரிந்து கொள்வார்கள். மனிதர்கள் பூஜை செய்கிறார்கள் ஆனால் நாம் யாருடைய பூஜை செய்கிறோமோ அவர் யார் என்பதை புரிந்து கொள்வதே இல்லை. பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார் - முதல்-முதலில் முக்கியமான விசயம் கீதையை மறுத்து(மாற்றி)ப் பேசுவதாகும். ஸ்ரீமத் பகவத்கீதை என்று சொல்கிறார்கள். கீதையின் தலைவன் பகவான், எந்த மனிதனும் கிடையாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரை தேவதைகள் என்று சொல்லப்படுகிறது மேலும் சத்யுகத்தின் மனிதர்களை தெய்வீக குணமுடையவர்கள் என்று சொல்லப்படுகிறது. தெய்வீக தர்மத்தைச் சேர்ந்த உயர்ந்தவர்களை தெய்வீக குணமுடையவர்கள் என்று சொல்லப்படுகிறது. பாரதத்தின் மனிதர்கள் உயர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களே தான் பிறகு அசுர குணமுடையவர்களாக ஆகி விட்டார்கள். முக்கியமான தர்ம சாஸ்திரங்கள் நான்கு ஆகும். வேறு எந்த தர்ம சாஸ்திரமும் கிடையாது. ஒருவேளை அப்படியே இருந்தாலும் மிகவும் சிறிய-சிறிய மடங்களை ஸ்தாபனை செய்திருக்கிறார்கள். சன்னியாசிகளின் மடம், பௌதர்களின் மடம் இருப்பது போலாகும். புத்தர் பௌத்த மதத்தை ஸ்தாபனை செய்தார். எங்களுடைய இந்த தர்மம் என்று அவர்கள் சொல்வார்கள். பாரதவாசிகளின் தர்ம சாஸ்திரம் ஒன்று தான் ஆகும். சத்யுக தேவி-தேவதைகளின் தர்ம சாஸ்திரம் ஒன்று, அதனை ஸ்ரீமத் பகவத் கீதை என்று சொல்லப்படுகிறது. கீதை தாய், அதை படைப்பவர் பரமபிதா பரமாத்மா ஆவார். கிருஷ்ணருடைய ஆத்மா 84 பிறவிகளை முடிக்கும்போது கீதையின் பகவான், ஞானக்கடல் பரமபிதா பரமாத்மாவிடமிருந்து சகஜராஜயோகம் மற்றும் ஞானத்தை கற்றுக் கொண்டு உயர்ந்த பதவி அடைகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த தர்ம சாஸ்திரத்தை அவமதித்து விட்டார்கள். இந்த காரணத்தினால் தான் பாரதம் சோழியைப்போல் ஆகி விட்டது. கீதையை அவமதித்தது தான் நாடகத்தில் ஒரே ஒரு தவறாகும். இப்போது பாபா சொல்லும் உண்மையான கீதை வெளி வர வேண்டும். உண்மையான கீதையை அரசாங்கம் அச்சிட வேண்டும். இது ஸ்ரீமத் பகவானுடைய மகாவாக்கிய மாகும். சுருக்கமாக நல்ல விதத்தில் எழுத வேண்டும் என்று பாபா குழந்தைகளுக்கு வழி முறை கொடுக்கின்றார். உண்மையான கீதையின் மூலம் வினாடியில் ஜீவன்முக்தி கிடைத்து விடுகிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபாவினுடையவர்களாக ஆகி பாபாவிடமிருந்து ஆஸ்தி எடுக்க வேண்டும். விதை, மரம் மற்றும் நாடகத்தின் சக்கரத்தை புரிய வைக்க வேண்டும், சத்யுகம் முத-ல் இருந்ததும் சத்தியம், இருப்பதும் சத்தியம், வரப்போவதும் சத்தியம் என்று பாடப்பட்டுள்ளது. மரத்தை புரிந்து கொள்வதும் சகஜமாகும். இதனுடைய விதை மேலே இருக்கிறார். இது விதவிதமான தர்மங்களின் மரமாகும். இதில் அனைத்தும் வந்து விட்டன. மற்றபடி சிறிய-சிறிய கிளைகள் நிறைய இருக்கின்றன, மடங்கள் நிறைய இருக்கின்றன. பாரதத்தின் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் இருக்கிறதே அதை ஸ்தாபனை செய்தது யார்? பகவான் ஆவார். எந்த மனிதனும் ஸ்தாபனை செய்யவில்லை. ஸ்ரீகிருஷ்ணர் தெய்வீக குணமுடைய மனிதனாக இருந்தார், அவர் 84 பிறவிகளை முடித்து இப்போது கடைசி பிறவியில் இருக்கின்றார். சூரிய வம்சத்தவர், சந்திரவம்சத்தவர், வைசியவம்சத்தவராக ஆகி-ஆகி கலைகள் குறைந்து கொண்டே செல்கிறது. சூரிய வம்ச இராஜ்யம் எது சத்யுகத்தில் உயர்ந்ததாக இருந்ததோ அது இப்போது கீழானதாக இருக்கிறது. இப்போது மீண்டும் உயர்ந்ததாக ஆகிக் கொண்டிருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த நடிப்பு யாருடையதாக இருக்கும் என்பது இப்போது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. இப்போது நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். முக்கியமானது சிவாய நமஹ: என்பதாகும், இது அவருடைய மகிமையாக இருக்கிறது, இதை பிரம்மா-விஷ்ணு-சங்கருக்கு பாட முடியாது. ஜனாதிபதியின் மகிமையை பிரதமமந்திரிக்கோ அல்லது வேறு யாருக்கோ கொடுப்பார்களா என்ன? கிடையாது. வெவ்வேறு பட்டம் இருக்கிறது அல்லவா. அனைவரும் ஒன்றாக முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது புத்தி கிடைத்திருக்கிறது. கிறிஸ்துவிற்கு கூட தங்களுடைய கிறிஸ்துவ தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்கான நடிப்பு கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஆத்மா புள்ளியாக இருக்கிறது. அந்த ஆத்மாவில் நடிப்பு நிரம்பியிருக்கிறது. கிறிஸ்துவ தர்மத்தை ஸ்தாபனை செய்து பிறகு மறுபிறவி எடுத்து வளர்த்து சதோ - ரஜோ தமோவில் வரவேண்டும். கடைசியில் முழு மரமும் உளுத்துப் போகத்தான் வேண்டும். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு எவ்வளவு காலம் நடிப்பு கிடைத்திருக்கிறது. புத்தர் எவ்வளவு காலம் வளர்க்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். வெவ்வேறு பெயர் ரூபத்தில் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

 

இப்போது பாபா உங்களுடைய புத்தியை எவ்வளவு பரந்தபுத்தியாக மாற்றுகின்றார். ஆனால் சிலர் சிவபாபாவை நினைவே செய்ய முடிவதில்லை. எல்லையற்ற தந்தை எல்லையற்ற சொர்க்கத்தின் ஆஸ்தியை கொடுக்கின்றார். இதையும் நீங்கள் புரிய வைக்கலாம். பாபா பல முறை புரிய வைத்திருக்கிறார், ஆத்மாவில் அழிவற்ற நடிப்பு நிரம்பியுள்ளது. ஒரு சரீரத்தை விட்டு விட்டு பிறகு மற்றொன்றை எடுக்க வேண்டும். புரிந்து கொள்வதற்கு எவ்வளவு ஆழமான விசயங்களாக இருக்கின்றன. யார் தினமும் பள்ளியில் படிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தான் புரிந்து கொள்வார்கள். சிலர் போகப் போக களைப்படைந்து விடுகிறார்கள். நீங்கள் தான் தாயும் தந்தையுமாக இருக்கிறீர்கள் நாங்கள் உங்களுடைய குழந்தைகளாக இருக்கின்றோம்........ என்று பாடுகிறார்கள். நான் உங்களுக்கு சொர்க்கத்தின் நிறைய சுகத்தை அளிப்பதற்கு முயற்சி செய்வித்துக் கொண்டிருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். நீங்கள் களைப்படைந்து விடாதீர்கள். இவ்வளவு உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பை படிப்பதை விட்டு விடுகிறீர்களே. சிலர் படிப்பை விட்டு விட்டு விகாரத்தில் சென்று விடுகிறார்கள். எப்படி இருந்தார்களோ அப்படியே ஆகி விடுகிறார்கள். போகப்போக விழுந்து விடுகிறார்கள் என்றால் பிறகு என்னவாகும். அங்கே சுகத்தில் இருப்பார்கள் ஆனால் பதவியில் வித்தியாசம் இருக்கிறது அல்லவா. இங்கே அனைவரும் துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். அங்கே ராஜா-பிரஜை அனைவருக்கும் சுகம் இருக்கிறது. இருந்தாலும் உயர்ந்த பதவி அடைய வேண்டும் அல்லவா. படிப்பை விட்டு விட்டீர்கள் என்றால் நீங்கள் தகுதியில்லாதவர்கள் என்று தாய்-தந்தையர் சொல்வார்கள். பாபாவிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியை எடுத்து-எடுத்து நிறைய குழந்தைகள் களைப்படைந்து விடுகிறார் கள். போகப்போக மாயை சண்டையிட்டு விடுகிறது என்றால் திரும்பி விடுகிறார்கள். என்ன சேமித்தார்களோ அது இல்லை என்றாகி விடுகிறது. மற்றபடி என்னவாக ஆவார்கள்? சொர்க்கத்திற்கு செல்வார்கள் ஆனால் முற்றிலும் சாதாரண பிரஜையாக ஆவார்கள். என்னுடையவர்களாக ஆகிவிட்டு பிறகு களைப்படைந்து அமர்ந்து விட்டார்கள் அல்லது துரோகம் செய்பவர்களாக ஆகி விட்டார்கள் என்றால் பிரஜையிலும் சண்டாளர்களாக ஆவார்கள். அனைவரும் வேண்டும் அல்லவா. சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகி-ஆகி ஒருவேளை படிப்பை விட்டு விடுகிறார்கள் என்றால் அவர்களைப்போன்ற முட்டாள்கள் உலகத்தில் வேறு யாரும் இருப்பதில்லை. நீங்கள் தான் தாயும்-தந்தையும் நாங்கள் உங்களுடைய குழந்தைகள் என்றும், உங்களுடைய கிருபையின் மூலம் சொர்க்கத்தின் அதிக சுகம் கிடைக்கிறது என்று எழுதவும் செய்கிறார்கள். கருணை காட்டுங்கள். கருணையின் விசயம் கிடையாது என்று பாபா கூறுகின்றார். நான் டீச்சராக இருக்கின்றேன், கற்பிப்பேன், நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற நீங்கள் முயற்சி செய்யுங்கள். மற்றபடி நான் அமர்ந்து அனைவரையும் ஆசீர்வதித்துக் கொண்டா இருப்பேன். நீங்கள் யோகத்தில் இருந்தீர்கள் என்றால் சக்தி கிடைத்துக் கொண்டே இருக்கும். அனைவருமா கதியில் அமர முடியும். ஒருவர் மற்றவருடைய தலையில் அமருவீர்களா என்ன. எனவே முக்கியமான தர்மங்கள் 4, சாஸ்திரங்களும் 4 ஆகும். அதிலும் முக்கியமானது கீதையாகும். ஆஸ்தி தாய்-தந்தையரிடமிருந்து தான் கிடைக்கிறது. இப்போது பாபா நேரடியாகப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். வெறுமனே கீதையை படிப்பதினால் மட்டுமே யாரும் இராஜாவுக்கெல்லாம் இராஜாவாக ஆகி விட முடியுமா என்ன. பாபாவும் பிரம்மா கூட கீதை படித்திருக்கிறார். ஆனால் அதன்மூலம் எதுவும் நடப்பதில்லை. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களாகும், நீங்கள் முயற்சி செய்து 16 கலைகள் நிரம்பியவர்களாக ஆக வேண்டும். இப்போது உங்களிடத்தில் எந்த கலையும் இல்லை, எந்த குணமும் இல்லை. நாங்கள் குணமில்லாதவர்கள், எங்களிடத்தில் எந்த குணமும் இல்லை, தாங்கள் கருணை காட்டுங்கள்........... எங்களை 16 கலைகள் நிறைந்தவர்களாக மாற்றுங்கள் என்று பாடுகிறார்கள். நாங்கள் எப்படி இருந்தோமோ அப்படி எங்களை மீண்டும் மாற்றுங்கள். பாபா நேரடியாக வந்து புரியவைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அவர்கள் ஒரு நிர்குண (குணங்களற்ற) அமைப்பையும் கூட உருவாக்கி விட்டார்கள். உலக மக்கள் குணமற்ற என்பதன் அர்த்தம், நிராகாரமானவரின் அர்த்தத்தைக் கூட தெரிந்திருக்க வில்லை. சிவபாபாவிற்கும் ஒரு உருவம் உள்ளது, யார் யாருக்கு பெயர் இருக்கிறதோ, கண்டிப்பாக பொருளும் (உருவம்) இருக்கிறது அல்லவா. ஆத்மா அந்தளவிற்கு சூட்சுமமாக இருக்கிறது, அதற்கு பெயர் இருக்கிறது. பிரம்ம மகாதத்துவம், அங்கே ஆத்மாக்கள் வசிக்கின்றன, அதற்கும் பெயர் இருக்கிறது அல்லவா. பெயர்-ரூபம் இல்லாமல் எந்த பொருளும் இருப்பதில்லை. பகவானை பெயர்-ரூபத்திலிருந்து விடுபட்டவர் என்று சொல்கிறார்கள் பிறகு அவரை சர்வவியாபி என்று சொல்லி விடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு. மனிதர்கள் இந்த விசயங்களை எப்போது புரிந்து கொள்வார்களோ அப்போது தான் நம்பிக்கை கொள்ள முடியும். பாபா நாங்கள் தங்களை தெரிந்து கொண்டோம். கல்பம்-கல்பமாக தங்களிடமிருந்து இராஜ்ய-பாக்கியத்தை எடுத்து வந்துள்ளோம். அப்படிப்பட்ட நிச்சயம் இருந்தால் தான் படிக்க முடியும். இங்கிருந்து வெளியில் சென்றவுடனேயே மறந்து விடுகிறார்கள், எனவே சிவபாபா இராஜயோகம் கற்றுக் கொடுக்க வந்துள்ளார் என்று முதலில் எழுதி வாங்க வேண்டும். எழுதியும் கொடுத்து விடுகிறார்கள் பிறகு படிப்பதே கிடையாது. ரத்தத்தினால் கூட எழுதி கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்று இல்லை, மாயை அவ்வளவு புத்திசாலியாக இருக்கிறது. பாபா எவ்வளவு அமர்ந்து புரிய வைக்கின்றார். இப்படி-இப்படியெல்லாம் கடிதம் எழுதினால் தான் உங்களுடைய சேவை பறக்கும் கலையில் செல்லும். உங்களுடைய சக்தி சேனையில் கூட வரிசைகிரமம் என்பது இருக்கிறது. சிலர் தலைமை தளபதியாக இருக்கின்றனர், சிலர் கேப்டனாக இருக்கிறார்கள், சிலர் மேஜர்களாக இருக்கிறார்கள். சிலர் சிப்பாய்களோடு சுமை தூக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். அனைத்தும் சேனையாகவே இருக்கிறது. பாபா முயற்சி செய்ய வைப்பார் அல்லவா. ஒவ்வொருவரும் முயற்சி செய்வதிலிருந்து இவர் ராஜா-ராணியாக ஆவார்களா அல்லது நல்ல செல்வந்த பிரஜையில் வருவார்களா, இவர்கள் சாதாரண பிரஜையில் செல்வார்களா, இவர்கள் தாச-தாசிகளாக ஆவார்களா என்பது புரிய வருகிறது. இது புரிந்து கொள்வதற்கு மிகவும் சகஜமாகும். எனவே முதலில் முக்கியமான விசயத்தை எடுக்க வேண்டும். பாபா மகாரதிகளுக்கு எவ்வளவு சவால் விடுகின்றார். பறக்கும் கலையின் சேவைக்காக சிந்தனை செலுத்த வேண்டும். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) படிப்பில் களைப்படையக் கூடாது. உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பை தினமும் படிக்க வேண்டும் மற்றும் படிப்பிக்க வேண்டும்.

 

2) பல மடங்கு சேவை விரிவடையச் செய்வதற்கான யுக்திகளை உருவாக்க வேண்டும். யோகத்தில் இருந்து பாபாவிடமிருந்து சக்தியை அடைய வேண்டும். கருணை அல்லது ஆசீர்வாதத்தை கேட்கக் கூடாது.

 

வரதானம்:

பிராமண வாழ்க்கையில் குஷி என்ற வரதானத்தை சதா நிலையாக வைத்திருக்கக் கூடிய மகான் ஆத்மா ஆகுங்கள்.

 

பிராமண வாழ்க்கையில் குஷி தான் பிறப்புரிமை ஆகும். சதா குஷியுடன் இருப்பது தான் உயர்ந்த நிலையாகும். யார் இந்த குஷி என்ற வரதானத்தை நிலையாக வைத்திருக்கிறார்களோ அவர்கள் தான் மகான்கள். ஆக ஒருபோதும் குஷியை இழந்து விடக் கூடாது. பிரச்சனைகள் வரும், போகும். ஆனால் குஷியை இழந்து விடக் கூடாது. ஏனெனில் பிரச்சனைகள் என்பது சூழ்நிலை சம்மந்தப்பட்டது. மற்றவர்களிடமிருந்து வருகிறது, அது வரும், சென்று விடும். குஷி என்பது என்னுடையது, தனது பொருளை எப்போதும் கூடவே வைத்துக் கொள்வார்கள். ஆகையால் சரீரத்தை இழந்தாலும் குஷி இழந்து விடக் கூடாது. குஷியுடன் சரீரத்தை விட்டு செல்வது மிகவும் சிறந்தது மற்றும் புதியது கிடைக்கும்.

 

சுலோகன்:

பாப்தாதாவின் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்களை அடைய வேண்டுமென்றால் பல விசயங்களை பார்க்காமல் களைப்பற்ற சேவையில் ஈடுபாட்டுடன் இருங்கள்.

 

ஓம்சாந்தி