15.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! தமது ராயல் (கம்பீரமான) நடத்தையின் மூலம் சேவை செய்ய வேண்டும். ஸ்ரீமத்படி புத்தியை தெளிவானதாக்க வேண்டும். தாய்மார்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

 

கேள்வி:

எந்த கடமை தந்தையுடையது, அது எந்த மனிதருடையதும் அல்ல?

 

பதில்:

முழு உலகிலும் அமைதியை ஸ்தாபனை செய்வது - இது தந்தையுடைய கடமையாகும். மனிதர்கள் எவ்வளவுதான் மாநாடு முதலானவைகளை நடத்தினாலும் அமைதி ஏற்பட முடியாது. அமைதிக் கடலான தந்தை குழந்தைகளிடம் தூய்மையின் உறுதி மொழி எடுக்க வைக்கும் போது அமைதி ஸ்தாபனை ஆகிறது. தூய்மையான உலகில்தான் அமைதி இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த விஷயத்தை அனைவருக்கும் மிக யுக்தியுடன் வெளிப்படையாக புரிய வைத்தீர்கள் என்றால் தந்தையின் பெயர் புகழடையும்.

 

பாடல்:

நான் ஒரு சின்னஞ்சிறு குழந்தை. . . .

 

ஓம் சாந்தி.

இந்த பாடல் பக்தி மார்க்கத்தில் பாடப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு புறம் பக்தியின் தாக்கம் (பிரபாவம்) உள்ளது, மறுபுறம் இப்போது ஞானத்தின் பிரபாவம் உள்ளது. பக்தி மற்றும் ஞானத்திற் கிடையில் இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. என்ன வித்தியாசம்? இது மிகவும் சகஜமானது. பக்தி இரவாகவும் ஞானம் பகலாகவும் உள்ளது. பக்தியில் துக்கம் உள்ளது, பக்தர்கள் துக்கமடையும் போது பகவானை அழைக்கின்றனர். பிறகு பகவான் துக்கமுற்றவர்களின் துக்கத்தை நீக்க வரவேண்டியுள்ளது. பிறகு தந்தையிடம் கேட்கப்படுகிறது - நாடகத்தில் ஏதாவது தவறுள்ளதா? தந்தை கூறுகிறார் - ஆம், பெரிய தவறு உள்ளது. நீங்கள் என்னை மறந்து விடுகிறீர்கள் என்பதே அந்த தவறு. யார் மறக்க வைப்பது? மாயா இராவணன். தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார் - குழந்தைகளே, இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சொர்க்கம் மற்றும் நரகம் பாரதத்தில் தான் இருக்கிறது. யாராவது இறந்தார்கள் என்றால் சொர்க்கவாசி ஆகி விட்டார் என்று பாரதத்தில்தான் கூறுகின்றனர். சொர்க்கம் அல்லது வைகுண்டம் எப்போது இருக்கும் என்பது தெரியாது. சொர்க்கம் இருக்கும்போது மனிதர்கள் கண்டிப்பாக மறுபிறவிகளை சொர்க்கத்தில்தான் எடுப்பார்கள். இப்போது நரகமாகத்தான் உள்ளது, சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆகும்வரை மறுபிறவிகள் கூட கண்டிப்பாக நரகத்தில்தான் எடுப்பார்கள். மனிதர்கள் இந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வதில்லை. ஒன்று ஈஸ்வரிய சம்பிரதாயம் அல்லது இராமனின் சம்பிரதாயம், மற்றொன்று இராவணனின் சம்பிரதாயம். சத்யுகம், திரேதா யுகத்தில் இராமனின் சம்பிரதாயம், அவர்களுக்கு துக்கம் எதுவும் கிடையாது. அசோக வனத்தில் இருப்பார்கள். பிறகு அரை கல்பத்திற்குப் பின்னர் இராவண இராஜ்யம் தொடங்குகிறது. இப்போது தந்தை மீண்டும் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார். அது அனைத்திலும் சர்வோத்தமமான தர்மம். அனைத்து தர்மங்களும் இருக்கின்றன அல்லவா! தர்மங்களின் மாநாடு நடக்கிறது. பாரதத்தில் பல தர்மத்தவர்கள் வருகின்றனர் மாநாடுகள் நடத்துகின்றனர். இப்போது தர்மங்களையே ஏற்றுக் கொள்ளாத பாரதவாசிகள் என்ன மாநாடு நடத்துவார்கள்? உண்மையில் பாரதத்தின் பழமையான தர்மம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம்தான் ஆகும். இந்து தர்மம் என்பது இல்லவே இல்லை. அனைத்திலும் உயர்வானது தேவி தேவதா தர்மம். அனைத்திலும் உயர்ந்ததிலும் உயர்ந்த தர்மத்தவர்கள் சிம்மாசனத்தில் அமர வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. அனைவருக்கும் முன்பாக யாரை அமர வைப்பது? இதை வைத்தும் கூட ஒருமுறை அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. ஒரு முறை கும்பமேளாவில் அப்படி சண்டை ஏற்பட்டு விட்டது. ஒரு சாரார் தங்களுடைய சவாரி முன்னால் போக வேண்டும் என்றும் மற்றொரு சாரார் அவர்களுடைய சவாரி முன்னால் போக வேண்டும் என்றும் கூறினார்கள். சண்டையிட்டுக் கொண்டார்கள். ஆக இந்த மாநாட்டில் குழந்தைகள் உயர்ந்ததிலும் உயர்ந்த தர்மம் எது என்பதை புரிய வைக்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாது. ஆதி சனாதனம் தான் தேவி தேவதா தர்மம். அது இப்போது மறைந்து விட்டுள்ளது, மேலும் தம்மை இந்து தர்மத்தவர் என்று கூறிக் கொள்ளத் தொடங்கி விட்டனர். சீனத்தில் இருப்பவர்கள் தம்முடைய தர்மம் சீனம் என்று கூற மாட்டார்கள். அவர்கள் யார் பிரபலமாக உள்ளனரோ அவரை முக்கியமானவராக ஆக்கி அமர வைக்கின்றனர். சட்டத்தின்படி மாநாட்டில் நிறைய பேர் வர முடியாது. தர்மத் தலைவர்களுக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்கப்படுகிறது. நிறைய பேர்களால் பிறகு மிக அதிகமாக வாக்கு வாதங்கள் ஏற்பட்டு விடும். இப்போது அவர்களுக்கு வழி கொடுக்கக் கூடியவர் யாரும் இல்லை. நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். பாரதத்தின் முக்கியமான, அனைத்து தர்மங்களின் தாய்-தந்தையாக இருக்கக்கூடிய தர்மத்தின் தலைவரைத்தான் இந்த மாநாட்டில் முக்கியமானவராக ஆக்க வேண்டும். சிம்மாசனத்தின் அதிகாரியாக அவரை ஆக்க வேண்டும். மற்ற அனைவரும் அவருக்குக் கீழே. ஆக முக்கியமான குழந்தைகளின் புத்தி வேலை செய்ய வேண்டும்.

 

பகவான் அர்ஜுனனுக்கு அமர்ந்து புரிய வைக்கிறார். இவர் சஞ்சய் ஆவார். அர்ஜுனன் ரதத்தில் உள்ள ரதி. அந்த ரதத்தில் இருப்பவர் (தேரோட்டி) தந்தை. ரூபத்தை மாற்றிக் கொண்டு கிருஷ்ணரின் உடலில் வந்து ஞானம் கொடுத்தார் என்று அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அப்படி ஏதும் கிடையாது. இப்போது பிரஜாபிதாவும் இருக்கிறார், திரிமூர்த்தி படத்தை வைத்து மிகவும் நல்ல முறையில் புரிய வைக்கப் படுகிறது. திரிமூர்த்தி படத்திற்கு மேலே சிவபாபாவின் படம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர் சூட்சும வதனத்தின் படைப்பு. இந்த விஷ்ணு பாலனை செய்பவர் என்று குழந்தைகள் புரிந்துள்ளனர். பிரஜாபிதா பிரம்மா ஸ்தாபனை செய்பவர். ஆக, அவருடைய படமும் தேவை. இது பெரிதும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். பிரஜாபிதா பிரம்மா கண்டிப்பாக இருக்கிறார் என்று புத்தியில் இருக்கிறது. விஷ்ணுவும் தேவை. யார் மூலம் ஸ்தாபனை செய்விக்கிறாரோ அவர் மூலமே பாலனையும் செய்விப்பார். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை செய்விக்கிறார். பிரம்மாவுடன் சரஸ்வதி முதலான குழந்தைகளும் உள்ளனர். உண்மையில் இவர் கூட பதீத்ததிலிருந்து பாவனமானவராக ஆகிக் கொண்டிருக்கின்றனர். ஆக, மாநாட்டில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் தலைவியாக ஜகதம்பா இருக்க வேண்டும். ஏனென்றால் மாதர்களுக்கு மிகவும் மரியாதை இருக்கிறது. ஜகதம்பாவின் விழா மிகப் பெரியதாக நடக்கிறது. அவர் ஜகத் பிதாவின் மகளாவார். இப்போது ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. கீதையின் அத்தியாயம் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. அதே மகாபாரதச் சண்டை முன்னால் இருக்கிறது. பிரஷ்டாச்சாரி (கீழான) உலகத்தை சிரேஷ்டாச்சாரி உலகமாக மாற்றுவதற்காக நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் வருகிறேன் என்று தந்தையும் கூறுகிறார். ஞானத்தின் கடவுள் என்று ஜகதம்பா பாடப்பட்டுள்ளார். அவருடன் ஞான கங்கையரும் உள்ளனர். அவருக்கு இந்த ஞானம் எங்கிருந்து கிடைத்தது என்று அவர்களிடம் கேட்கலாம். ஞானம் நிறைந்த இறைதந்தை ஒருவர்தான் ஆவார். அவர் ஞானத்தை எப்படிக் கொடுப்பார்? கண்டிப்பாக அவர் சரீரத்தை எடுக்க வேண்டும். ஆக பிரம்மாவின் கமல வாய் மூலம் கூறுகிறார். இந்த மாதர்கள் அமர்ந்து புரிய வைப்பார்கள். பெரிய தர்மம் எது என்பது மாநாட்டில் அவர்களுக்கு தெரிய வேண்டும் அல்லவா! நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்று யாரும் புரிந்து கொள்வதே இல்லை. இந்த தர்மம் மறைந்து விடும்போது நான் வந்து மீண்டும் ஸ்தாபனை செய்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இப்போது தேவதா தர்மம் இல்லை. மற்ற 3 தர்மங்கள் வளர்ச்சியடைந்து கொண்டே சென்று கொண்டிருக்கின்றன. ஆக கண்டிப்பாக தேவி தேவதா தர்மத்தை மீண்டும் ஸ்தாபனை செய்ய வேண்டியுள்ளது. பிறகு இந்த எல்லா தர்மங்களும் இருக்கவே போவதில்லை. தந்தை வருவதே ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காகத் தான். அமைதியை எப்படி ஸ்தாபனை செய்ய முடியும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்தான் கூற முடியும். பரமபிதா பரமாத்மா தான் அமைதிகடல் ஆவார். ஆக அமைதியை கண்டிப்பாக அவர் தான் ஸ்தாபனை செய்வார். அவர் தான் ஞானக்கடல் சுகக்கடல் ஆவார். பதீதபாவனா வாருங்கள், வந்து பாரதத்தில் தூய்மையான இராமராஜ்யத்தை உருவாக்குங்கள் என்று பாடவும் செய்கின்றனர். அவர் தான் அமைதி நிறைந்ததாக ஆக்குவார். இது தந்தையின் கடமையாகும். நீங்கள் அவர் வழிப்படி நடப்பதன் மூலம் உயர்ந்த பதவியை அடைகிறீர்கள். யார் என்னுடையவராக ஆகின்றனரோ, இராஜ யோகத்தை கற்கின்றனரோ, மற்றும் பாபா நாங்கள் தூய்மை அடைந்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தி எடுப்போம் என்று தூய்மையின் உறுதி மொழி எடுக்கின்றனரோ அவர்கள் தான் எஜமான் ஆவார்கள், தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆவார்கள். அனைவரையும் விட உயர்ந்தவர்களாகிய இலட்சுமி நாராயணன் தூய்மையானவர்கள். பிறகு இப்போது தூய்மையான உலகத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அமைதிக்காக மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மனிதர்கள் அமைதியை ஏற்படுத்த மாட்டார்கள். இது அமைதிக் கடலாகிய தந்தையின் வேலை ஆகும். மாநாட்டில் பல மனிதர்கள் வருவார்கள். பலரும் உறுப்பினர்கள் ஆவார்கள் எனும் போது அவர்களுக்கு வழியும் கொடுக்க வேண்டியிருக்கும். தந்தை மகனை வெளிப்படுத்துவார்! சிவபாபாவின் பேரக்குழந்தைகள், பிரம்மாவின் குழந்தைகள் ஞானத்தின் தேவதைகள் ஆவார்கள். அவர்களுக்கு இறைவன் ஞானத்தை கொடுத்தார். மனிதர்களோ சாஸ்திரங்களின் ஞானத்தை படிக்கின்றனர். இப்படியாக வெளிப்படையாக புரிய வைத்தீர்கள் என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். கண்டிப்பாக யுக்தியை உருவாக்க வேண்டும். ஒருபுறம் அவர்களுடைய மாநாடு நடக்கட்டும், மறுபுறம் பிறகு உங்களுடைய வெளிப்படையான மாநாடு நடக்கட்டும். படங்களும் தெளிவாக இருக்கின்றன. அதன் மூலம் உடனே புரிந்து கொள்வார்கள். அவர்களுடைய தொழில் வேறு உங்களுடையது வேறு. அனைவரும் ஒன்று என்பதல்ல! அனைத்து தர்மங்களுடைய நடிப்பும் வேறு வேறாக உள்ளது. அமைதிக்காக ஒன்றாகக் கலந்து காரியம் செய்கின்றனர். தர்மம் தான் சக்தி ஆகும் என்று கூறுகின்றனர். ஆனால் அனைவரையும் விட சக்தி வாய்ந்தவர் யார்? அவர் தான் வந்து முதல் நம்பர் தேவி தேவிதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார். இதை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிவீர்கள். நாளுக்கு நாள் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின் விஷயங்கள் கிடைத்தபடி இருக்கின்றன. புரிய வைக்கக்கூடிய சக்தியும் உள்ளது. யோகியின் சக்தி நன்றாக இருக்கும். ஞானி ஆத்மாக்கள் தான் எனக்கு பிடித்தமானவர்கள் என்று பாபா கூறுகிறார். யோகிகளை பிடிக்காது என்பதில்லை. யார் ஞானியாக இருக்கின்றனரோ அவர்கள் கண்டிப்பாக யோகிகளாகவும் இருப்பார்கள். பரமபிதா பரமாத்மாவுடன் நினைவின் தொடர்பை வைக்கின்றனர். யோகம் இல்லாவிட்டால் தாரணை ஏற்படாது. யார் நினைவு செய்வதில்லையோ அவர்களிடம் தாரணையும் இருக்காது. ஏனென்றால் நிறைய தேக அபிமானம் இருக்கின்றது. தந்தை புரிய வைக்கின்றார் - அசுர புத்தியை தெய்வீக புத்தியாக ஆக்க வேண்டும். கல் புத்தியை தங்க புத்தியாக ஆக்கக் கூடிய தந்தை ஈஸ்வரன் ஆவார். இராவணன் வந்து கல் புத்தியாக ஆக்குகிறார், அவர்களுடைய பெயரே அசுர சம்பிரதாயத்தினர். தேவதைகளுக்கு முன்பாக சென்று கூறுகின்றனர் - எங்களுக்குள் எந்த குணங்களும் இல்லை, நாங்கள் காமம், கபடம் நிறைந்தவர்கள். தாய்மார்களாகிய நீங்கள் நல்லபடியாக புரிய வைக்க முடியும். முரளி நடத்துவதற்காக அந்தளவு தீவிர ஆர்வம் தேவை. பெரிய பெரிய சபைகளில் இப்படி இப்படியாக பேச வேண்டும். மம்மா ஞானத்தின் தேவதையாக இருக்கிறார். பிரம்மாவை ஞானத்தின் கடவுள் என்று கூறுவதில்லை. சரஸ்வதியின் பெயர் பாடப்பட்டுள்ளது. யாருக்கு என்ன அடைமொழி (பெயர்) உள்ளதோ அதைதான் வைப்பார்கள். மாதர்களுடைய பெயரை புகழ் அடைய செய்ய வேண்டும். பல கோபர்களுக்கு (சகோதரர்கள்) தேக அபிமானம் நிறைய உள்ளது. பிரம்மா குமார்களாகிய நாம் ஞானத்தின் கடவுள் இல்லையா என்பது போல புரிந்து கொள்கிறார்கள். அட, பிரம்மாவே தன்னை ஞானத்தின் கடவுள் என்று கூறுவதில்லை. மாதர்கள் மீது மிகவும் மரியாதை வைக்க வேண்டும். இந்த தாய்மார்கள் தான் வாழ்க்கையை சீர்படுத்தக் கூடியவர்கள். மனிதரிலிருந்து தேவதைகளாக ஆக்கக் கூடியவர்கள். தாய்மார்களும் உள்ளனர், கன்னியர்களும் உள்ளனர். அதர் குமாரியின் இரகசியம் யாருக்கும் புரியாது. திருமணம் ஆகியவர்களாக இருப்பார்கள். இருந்தாலும் கூட பிரம்மா குமாரிகளாக இருக்கின்றனர். இவை மிகவும் அதிசயமான விஷயங்களாகும். யார் தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுக்க வேண்டுமோ அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். மற்றபடி யாருடைய அதிர்ஷ்டத்திலாவது இல்லை என்றால் அவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள்? வரிசைக்கிரமமான பதவிகள் கண்டிப்பாக உள்ளன. அங்கும் கூட சிலர் தாச தாசியாக இருப்பார்கள் சிலர் பிரஜைகளாக இருப்பார்கள். பிரஜைகளும் தேவை. மனித சிருஷ்டி வளர்ந்து கொண்டே இருக்கும் போது பிரஜைகளும் கூட அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். ஆக, இப்படிப்பட்ட மாநாடுகள் நடக்கும் போது அதற்காக தம்மை முக்கியமானவர்களாக கருதுபவர்கள் தயாராக இருக்க வேண்டும். ஞானம் இல்லாதவர்கள் சிறுவர்கள் போல இருக்கின்றனர். அவ்வளவு புத்தி இல்லை. பார்க்கும் போது பெரியவர்களாக இருக்கின்றனர். ஆனால், புத்தி இல்லை, அவர்கள் சிறுவர்கள். சிற்சிலருடைய புத்தி மிகவும் நன்றாக உள்ளது. அனைத்திற்கும் ஆதாரம் புத்தியாகும். சின்னஞ் சிறுவர்கள் கூட வேகமாக சென்று விடுகின்றனர். சிலர் புரிய வைப்பதில் மிகவும் இனிமையாக இருக்கின்றனர். மிகவும் ராயலாக பேசுகின்றனர். இவர்கள் தெளிவான குழந்தைகள் என்று புரிந்து கொள்வார்கள். நடத்தையின் மூலம் கூட வெளிப்படுகிறது அல்லவா! குழந்தைகளின் நடத்தை மிகவும் ராயலாக இருக்க வேண்டும். ராயலாக இல்லாத எந்த காரியமும் செய்ய கூடாது. பெயரை கெடுப்பவர்கள் உயர் பதவி அடைய முடியாது. சிவபாபாவின் பெயரை கெடுக்கின்றனர் என்றால், தந்தைக்கும் (பிரம்மா பாபா) புரியாதவர்களுக்கு புரிய வைக்கக் கூடிய உரிமை இருக்கின்றது. நல்லது!

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீக குழந்தைகளூக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

 

இரவு வகுப்பு.

 

ஜீவ ஆத்மாக்களாகிய நாம் பரமபிதா பரமாத்மாவின் முன்னால் அமர்ந்திருக்கிறோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். இதுதான் மங்களகரமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. மங்களம் பகவான் விஷ்ணு என்று பாடப்படுகிறது. இப்போது சந்திப்பினுடைய மங்களம் உள்ளதல்லவா! பகவான் விஷ்ணு குலத்தின் ஆஸ்தி கொடுக்கிறார். ஆகையால் அவர் மங்களம் பகவான் விஷ்ணு என்று கூறப்படுகிறார். தந்தை ஜீவ ஆத்மாக்களை சந்திக்கும் போது அந்த சந்திப்பு மிகவும் அழகாக உள்ளது. நாம் ஈஸவரனிடமிருந்து நம்முடைய ஆஸ்தியை எடுப்பதற்காக இப்போது ஈஸ்வரிய குழந்தைகளாக ஆகியுள்ளோம் என்று நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். ஈஸ்வரனுடைய ஆஸ்திக்கு பிறகு தெய்வீக ஆஸ்தி கிடைக்கிறது. அதாவது சொர்க்கத்தில் மறுபிறவி கிடைக்கிறது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். ஆக, குழந்தைகளாகிய உங்களுக்கு குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும். உங்களைப் போன்ற குஷியின் அதிர்ஷடம் நிறைந்தவர்களாகவும் , சௌபாக்கியசாலிகளாகவும் வேறு யாரும் கிடையாது. உலகத்தில் பிராமண குலத்தினரைத் தவிர வேறு யாரும் பாக்கியசாலி ஆக முடியாது. விஷ்ணு குலம் இரண்டாவது நம்பர் ஆகிவிட்டது. அது தெய்வீக மடியாக ஆகவிட்டது. இப்போது ஈஸ்வரிய மடியாகும். இது உயர்வானதல்லவா! தில்வாடா கோவில் ஈஸ்வரிய மடியின் கோவிலாகும். அம்பாளின் கோவில்கள் கூட இருக்கின்றன. அவை இந்த அளவு சங்கமயுகத்தின் காட்சியை காட்டுவதில்லை. இந்த தில்வாடா கோவில் சங்கமயுகத்தின் காட்சியைக் காட்டுகிறது. குழந்தைகளுக்கு உள்ள புத்திசாலித்தனம் வேறு எந்த மனிதர்களுக்கும் இருக்க முடியாது பிராமணர்களாகிய உங்களுக்கு இருக்கும் புத்திசாலித்தனம் தேவதைகளுக்கு கூட இல்லை. நீங்கள் சங்கமயுகத்தின் பிராமணர்கள். அவர்கள் சங்கமயுகத்தின் பிராமணர்களை மகிமை செய்கின்றனர். பிராமணர்களே தேவதைகளாக ஆகின்றனர் என்று கூறுகின்றனர். இப்படிப்பட்ட பிராமணர்களுக்கு நமஹ (நமஸ்காரம்). பிராமணர்கள் தான் நரகத்தை சொர்க்கமாக ஆக்கக் கூடிய சேவையை செய்கின்றனர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு (பிராமணர்களுக்கு) நமஸ்காரம் செய்கின்றனர். நல்லது! இரவு வணக்கம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

 

1. தந்தைக்கு அன்பானவர் ஆவதற்காக ஞானி மற்றும் யோகியாக ஆக வேண்டும். தேக அபிமானியாக இருக்கக் கூடாது.

 

2. முரளி நடத்துவதில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். தனது நடத்தையின் மூலம் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். பேச்சு வார்த்தை மிகவும் இனிமையாக இருக்க வேண்டும்.

 

வரதானம்:-

மனம் மற்றும் பேச்சின் சக்தியை சரியான மற்றும் சக்திசாலியான முறையில் காரியத்தில் ஈடுபடுத்தக்கூடிய தீவிர முயற்சியாளர் ஆகுக.

 

தீவிர முயற்சியாளர் என்றால் முதல் வகுப்பில் (டிவிசனில்) வரக்கூடிய குழந்தைகள், எண்ணங்களின் சக்தி மற்றும் வார்த்தைகளின் சக்தியை சரியான மற்றும் சக்திசாலியான முறையில் காரியத்தில் ஈடுபடுத்துவார்கள். அவர்கள் இதில் அலட்சியமாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு குறைவாகப் பேசுங்கள், மெதுவாகப் பேசுங்கள் மற்றும் இனிமையாகப் பேசுங்கள் என்ற சுலோகன் எப்பொழுதும் நினைவு இருக்கும். அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் யோகயுக்தாக, யுக்தியுக்தாக (ஞானம் நிறைந்ததாக) இருக்கும். அவர்கள் அவசியமான வார்த்தைகளை மட்டுமே பேசுவார்கள், வீணான வார்த்தைகள், விஸ்தாரமான வார்த்தைகளைப் பேசி தன்னுடைய சக்திகளை அழித்து விடமாட்டார்கள். அவர்கள் சதா ஏகாந்தப் பிரியராக இருப்பார்கள்.

 

சுலோகன்:-

யார் எனது என்பதின் அதிகாரத்தைக் கூட தியாகம் செய்துவிடுகிறார்களோ, அவர்களே சம்பூரணமான மோகத்தை வென்றவர் (நஷ்டோமோஹா) ஆவார்கள்.

 

ஓம்சாந்தி