06.12.2018 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
தமது
சௌபாக்கியத்தை
உருவாக்கிக்
கொள்ள
வேண்டும்
என்றால் ஈஸ்வரிய
சேவையில்
ஈடுபடுங்கள்.
மாதர்கள்-கன்யாக்களுக்கு
தந்தையின்
மீது
பயாவதற்கான உற்சாகம்
வர
வேண்டும்.
சிவ
சக்திகள்
தந்தையின்
பெயரை
புகழ்பெறச்
செய்ய
முடியும்.
கேள்வி:
அனைத்து
கன்யாக்களுக்கும்
தந்தை
எந்த
சுபமான
வழி
கொடுக்கிறார்?
பதில்:
ஓ
கன்யாக்களே
-
நீங்கள்
இப்போது
அதிசயம்
செய்து
காட்டுங்கள்.
நீங்கள்
மம்மாவுக்கு
சமமாக ஆக
வேண்டும்.
இப்போது
நீங்கள்
சமுதாய
மரியாதைகளை
விட்டுவிடுங்கள்.
மோகத்தை
வென்றவர்
ஆகுங்கள்.
ஒருவேளை
அதர்குமாரி
ஆகிவிட்டால்
கறை
ஏற்பட்டு
விடும்.
நீங்கள்
பல
வண்ணமுடைய
மாயாவிடமிருந்து உங்களை
காப்பாற்றிக்
கொள்ள
வேண்டும்.
நீங்கள்
ஈஸ்வரிய
சேவை
செய்தீர்கள்
என்றால்
ஆயிரக்கணக்கானோர் வந்து
உங்கள்
காலில் விழுவார்கள்.
ஓம்
சாந்தி.
சிவசக்தியராகிய
நீங்கள்
உற்சாகத்தில்
துள்ளிக்குதிப்பவர்கள்.
தந்தையின்
மீது
பலியாகக் கூடிய உற்சாகம்
வர
வேண்டும்.
இதுதான்
கவலையற்ற
போதை
என்று
கூறப்படுகிறது.
தந்தை
யார்
யார்
அமர்ந்திருக்கிறார்கள்
என்று
முன்னால்
இருப்பவர்களைப்
பார்க்க
வேண்டியுள்ளது.
உண்மையில்
வகுப்பறையில்
ஆசிரியர் அனைவரையும்
பார்க்கும்படியாக
ஆசனங்கள்
அமைக்கப்பட்டிருக்க
வேண்டும்.
இது
சத்சங்கத்தைப்
போலாகி விடுகிறது.
ஆனால்
நாடகத்தில்
இப்படி
விதிக்கப்பட்டுள்ளது,
என்ன
செய்வது!
வகுப்பறையில்
வரிசைக்கிரமமாக அமர
வைக்க
முடிவதில்லை.
குழந்தைகள்
முகத்தைப்
பார்ப்பதற்கு
விருப்பம்
கொண்டவராக
இருக்கின்றனர் அல்லவா,
அதுபோல
தந்தையும்
கூட
விருப்பம்
கொண்டவராக
இருக்கிறார்.
குழந்தைகள்
இல்லாமல்
வீட்டில் இருள்
சூழ்ந்துள்ளது
என்று
புரிந்து
கொள்கின்றனர்.
குழந்தைகளாகிய
நீங்கள்
பிரகாசத்தை
ஏற்படுத்துபவர்கள்.
பாரதத்தில்
மட்டுமென்ன,
முழு
உலகத்திலும்
பிரகாசத்தை
ஏற்படுத்துபவர்கள்.
பாடல்:
மாதா
ஓ
மாதா
நீ
அனைவரின்
பாக்ய
விதாதா
(பாக்கியத்தை
வழங்கும்
வள்ளல்)
. . .
ஓம்
சாந்தி.
இந்த
பாடல்கள்
கூட
உங்களுடைய
சாஸ்திரம்
ஆகும்.
அனைத்து
சாஸ்திரங்களிலும்
உயர்வானது கீதையாகும்,
மற்ற
அனைத்து
சாஸ்திரங்களாகிய
மஹாபாரதம்,
இராமாயணம்,
சிவ
புராணம்,
வேதங்கள்,
உபநிடதங்கள்
முதலானவை
இதிலிருந்துதான் வெளிப்பட்டன.
ஆச்சரியமாக
உள்ளது
அல்லவா.
நாடகத்தினுடைய
இசைத்தட்டின்
(ரிக்கார்டு)
பாடலைப்
போடுகிறார்கள்,
சாஸ்திரங்கள்
எதுவும்
இவர்களிடம்
இல்லை என்று
மனிதர்கள்
கூறுகின்றனர்.
இந்த
இசைத்தட்டுகளிலிருந்து வரும்
பாடல்களில்
வெளிப்படக்கூடிய
அர்த்தங்கள் கிரந்தங்கள்
முதலானவற்றின்
சாரத்தை
வெளிப்படுத்துகின்றன.
(பாடல்
இசைக்கப்படுகிறது)
இது
மம்மாவின் மகிமை.
மாதர்கள்
நிறைய
பேர்
உள்ளனர்.
ஆனால்
முக்கியமானவர்
மம்மா.
இந்த
ஜகதம்பா
தான்
சொர்க்கத்தின் வாசலைத்
திறக்கின்றார்.
பிறகு
முதலில் அவர்தான்
உலகத்தின்
எஜமானர்
ஆகிறார்
எனும்போது
கண்டிப்பாக குழந்தைகளாகிய
நீங்களும்
தாயுடன்
இருக்கிறீர்கள்.
நீங்களே
தாயும்
தந்தையும்.
. .
என்ற
புகழ்
பாடல் அவருடையது
தான்
ஆகும்.
சிவபாபாதான்
தாய்-தந்தை
என்று
கூறப்படுகிறார்.
பாரதத்தில்
ஜகதம்பாவும் இருக்கிறார்
மற்றும்
ஜகத்பிதாவும்
இருக்கிறார்.
ஆனால்
பிரம்மாவுக்கு
இவ்வளவு
பெயர்
மற்றும்
கோவில்கள் முதலானவை
இல்லை.
அஜ்மீரில்
மட்டும்
பிரம்மாவின்
கோவில்
பெயர்
பெற்றதாக
உள்ளது,
அங்கே பிராமணர்களும்
இருக்கின்றனர்.
பிராமணர்கள்
இரு
விதமானவர்களாக
இருக்கின்றனர்
-
சாரசித்த
மற்றும் புஷ்கரணி.
புஷ்கரில்
(குளக்கரை)
வசிப்பவர்கள்
புஷ்கரணி
என்று
கூறப்படுகின்றனர்.
ஆனால்
அந்த பிராமணர்களுக்கு
இது
தெரியாது.
நாங்கள்
பிரம்மா
முகவம்சாவளியினர்
என்று
கூறுவார்கள்.
ஜகதம்பாவின் கோவில்
மிகவும்
புகழ்
வாய்ந்தது.
பிரம்மாவை
அவ்வளவாக
தெரியாது.
யாருக்காவது
அதிக
செல்வம் கிடைத்தது
என்றால்
சாது
சன்னியாசிகளின்
கிருபை
(கருணை)
என்று
புரிந்து
கொள்கின்றனர்.
ஈஸ்வரனின் கருணை
என்று
புரிந்து
கொள்வதில்லை.
என்னைத்
தவிர
வேறு
யாரும்
கருணை
காட்ட
முடியாது
என்று தந்தை
கூறுகிறார்.
நாம்
சன்னியாசிகளின்
மகிமையைக்
கூட
செய்கிறோம்.
ஒருவேளை
இந்த
சன்னியாசிகள் தூய்மையாக
இல்லாவிட்டால்
பாரதம்
எரிந்து
போகும்.
ஆனால்
சத்கதி
வழங்கும்
வள்ளல்
ஒரு
தந்தைதான் ஆவார்.
மனிதர்கள்
மனிதர்களுக்கு
சத்கதி
கொடுக்க
முடியாது.
நீங்கள்
அனைவரும்
சோகவனத்தின்
சீதைகள்
என்று
பாபா
புரிய
வைத்துள்ளார்.
துக்கத்தில்
சோகமாகிவிடுகிறார்கள்
அல்லவா.
நோய்
முதலானவை
ஏற்பட்டது
என்றால்
துக்கம்
ஏற்படாதா
என்ன?
நோய்
வந்தது என்றால்
எப்போது
குணமாகும்?
என்ற
சிந்தனை
கண்டிப்பாக
ஏற்படும்.
நோய்வாய்ப்பட்டே
இருக்கலாம்
என்று கூறுவதில்லை.
நலமாகட்டும்
என்றே
முயற்சி
செய்கின்றனர்.
இல்லை
என்றால்
மருந்து
முதலானவைகளை ஏன்
எடுத்துக்
கொள்கின்றனர்?
நான்
குழந்தைகளாகிய
உங்களை
இந்த
துக்கங்கள்,
நோய்கள்
முதலானவைகளிலிருந்து விடுவித்து
பரிசைக்
கொடுக்கிறேன்
என்று
இப்போது
தந்தை
கூறுகிறார்.
மாயையாகிய
இராவணன் உங்களுக்கு
துக்கத்தைக்
கொடுத்தான்.
சிருஷ்டியைப்
படைப்பவர்
என்று
என்னை
கூறுகின்றனர்.
பகவான் துக்கத்தைக்
கொடுப்பதற்காக
சிருஷ்டியைப்
படைத்தாரா
என்று
அனைவரும்
கூறுகின்றனர்.
சொர்க்கத்தில் யாரும்
இப்படி
சொல்ல
மாட்டார்கள்.
இங்கே
துக்கம்
உள்ளதால்
மனிதர்கள்
இப்படி
கூறுகிறார்கள்
-பகவானுக்கு
துக்கம்
நிறைந்த
உலகத்தைப்
படைக்க
வேண்டிய
அவசியம்
என்ன
வந்தது?
அவருக்கு
வேறு வேலையே
இல்லையா?
ஆனால்
இந்த
சுகம்-துக்கம்,
வெற்றி-தோல்வியின்
விளையாட்டு
உருவாக்கப்பட்டுள்ளது என்று
தந்தை
கூறுகிறார்.
இராமன்
மற்றும்
இராவணனின்
விளையாட்டு
பாரதத்தில்
தான்
உள்ளது.
இராவணனால்
பாரதத்திற்கு
தோல்வியோ
தோல்வி
ஏற்படுகிறது,
பிறகு
இராவணன்
மீது
வெற்றி
பெற்று இராமனுடையவராக
ஆகின்றனர்.
சிவபாபா
இராமன்
என்று
கூறப்படுகிறார்.
புரிய
வைப்பதற்காக
இராமனின் பெயர்
மற்றும்
சிவனின்
பெயரும்
கூட
எடுக்க
வேண்டியுள்ளது.
சிவபாபா
குழந்தைகளின்
எஜமானன் அல்லது
தலைவன்
(கணவர்)
ஆவார்.
அவர்
உங்களை
சொர்க்கத்தின்
எஜமான்
ஆக்குகிறார்.
தந்தையின் ஆஸ்தியே
சொர்க்கத்தின்
பிராப்தியாகும்,
பிறகு
அதில்
பதவியும்
உள்ளது.
சொர்க்கத்தில்
தேவதைகள்
தான் இருப்பார்கள்.
நல்லது,
சொர்க்கத்தை
உருவாக்குபவரின்
மகிமையைக்
கேளுங்கள்.
(பாடல்)
பாரதத்தின்
சௌபாக்கியத்தை
உருவாக்கும்
வள்ளல்
இந்த
ஜகதம்பாதான்
ஆவார்.
அவரைப்பற்றி யாருக்கும்
தெரியாது.
அம்பாஜி
என்ற
இடத்திற்கு
நிறைய
மனிதர்கள்
சென்று
கொண்டிருப்பார்கள்.
இந்த
பாபா
(பிரம்மா
பாபா)
கூட
பல
முறை
சென்றிருக்கிறார்.
பபூல்நாத்
கோவிலுக்கும்
லட்சுமி
நாராயணரின்
கோவிலுக்கும் பல
முறை
சென்றிருப்பார்.
ஆனால்
எதுவும்
தெரிந்திருக்கவில்லை.
எவ்வளவு
புரியாதவராக
இருந்தார்.
இப்போது நான்
அவரை
எவ்வளவு
புத்திசாலியாக ஆக்கியுள்ளேன்.
ஜகதம்பாவின்
பட்டம்
(டைட்டில்)
எவ்வளவு
பெரியதாக உள்ளது-
பாரதத்தின்
சௌபாக்கிய
விதாதா
(சௌபாக்கியத்தை
வழங்கும்
வள்ளல்).
இப்போது
நீங்கள்
அம்பாஜியின் கோவிலில் சென்று
சேவை
செய்ய
வேண்டும்.
ஜகதம்பாவின்
84
பிறவிகளின்
கதையை
கூற
வேண்டும்.
இது போன்ற
கோவில்கள்
நிறைய
உள்ளன.
மம்மாவின்
இந்தப்
படத்தை
ஏற்றுக்
கொள்ள
மாட்டார்கள்.
நல்லது,
அந்த
அம்பாவின்
மூர்த்தியை
வைத்தே
புரிய
வையுங்கள்
மற்றும்
இந்தப்
பாடலையும்
எடுத்துச்
செல்லுங்கள்.
இந்த
பாடல்தான்
உங்களுடைய
உண்மையான
பாடலாகும்.
சேவை
நிறைய
உள்ளது
அல்லவா.
ஆனால் சேவை
செய்யக்
கூடிய
குழந்தைகளிடமும்
உண்மை
இருக்க
வேண்டும்.
நீங்கள்
இந்தப்
பாடலை
ஜகதம்பாவின் கோவிலுக்கு
கொண்டு
சென்று
புரிய
வையுங்கள்.
ஜகதம்பாவும்
கன்னியாவாக
உள்ளார்,
பிராமணி
ஆவார்.
ஜகதம்பாவுக்கு
ஏன்
இத்தனை
புஜங்கள்
கொடுக்கப்பட்டுள்ளன?
ஏனென்றால்
அவருடைய
உதவியாளர்கள் குழந்தைகள்
பலர்
உள்ளனர்.
சக்தி
சேனை
அல்லவா.
ஆக
படங்களில்
பிறகு
பல
கைகள்
காட்டப்பட்டுள்ளன.
சரீரத்தை
எப்படி
காட்டுகின்றனர்?
கைகளின்
அடையாளம்
சகஜமானது,
அழகாக
உள்ளது.
கால்களின்
அடையாளம் கொடுத்தால்
தோற்றம்
நன்றாக
இருக்காது.
பிரம்மாவுக்கும்
புஜங்களை
காட்டுகின்றனர்.
நீங்கள்
அனைவரும் அவருடைய
குழந்தைகள்,
ஆனால்
இத்தனை
கைகள்
கொடுக்க
முடியாது.
ஆக,
கன்யாக்களும்,
மாதர்களுமாகிய நீங்கள்
சேவையில்
ஈடுபட்டு
விட
வேண்டும்.
தமது
சௌபாக்கியத்தை
உருவாக்கிக்
கொள்ளுங்கள்.
அம்பாவின் கோவிலில் சென்று
நீங்கள்
இந்த
பாடல்
குறித்த
மகிமை
செய்தீர்கள்
என்றால்
பலர்
வந்து
விடுவார்கள்.
மூத்த பிரம்மாகுமாரிகளாலும்
கூட
முடியாத
அளவு
நீங்கள்
அதிகமாக
பெயரை
வெளிப்படுத்துவீர்கள்.
இந்த
சின்னஞ்சிறு கன்யாக்கள்
அதிசயத்தை
செய்ய
முடியும்.
பாபா
ஒரு
கன்யாவுக்கல்ல,
அனைத்து
கன்யாக்களுக்கும்
கூறுகிறார்.
ஆயிரக்கணக்கானோர்
வந்து
உங்கள்
காலடியில்
விழுவார்கள்.
உங்கள்
முன்
விழும்
அளவு
அவர்கள்
முன் விழமாட்டார்கள்.
ஆம்,
இதில்
சமுதாய
மரியாதைகளை
விட
வேண்டும்.
முழுக்க
முழுக்க
மோகத்தை
வென்றவர்
(நஷ்டமோகா)
ஆக
வேண்டும்.
எனக்கு
திருமண
உறவே
வேண்டாம்,
நான்
தூய்மையாக
இருந்து
பாரதத்தை சொர்க்கமாக்கக்
கூடிய
சேவை
செய்வேன்
என்று
கூறுவார்கள்.
அதர்
குமாரிகளுக்கும்
(தாய்மார்கள்)
கூட
கறை ஏற்பட்டு
விடுகிறது.
குமாரிக்கு
திருமண
நிச்சயம்
செய்து
கறை
படியத்
தொடங்கி
விடுகிறது.
வண்ண வண்ணமயமான
மாயை
தாக்கி
விடுகிறது.
இந்த
பிறவியில்
மனிதர்கள்
என்னவாக
இருந்து
என்னவாக
ஆக முடிகிறது.
மம்மாவும்
கூட
இந்த
பிறவியில்
ஆகியுள்ளார்.
அவர்களுக்கு
அல்ப
காலத்திற்காக
பதவி
கிடைக்கிறது.
மம்மாவுக்கு
21
பிறவிகளுக்கு
கிடைக்கிறது.
நீங்கள்
கூட
நரனிலிருந்து நாராயணர்,
நாரியிலிருந்து
(பெண்)
லட்சுமி
ஆகிக்கொண்டிருக்கிறீர்கள்.
முழுமையாக
தேர்ச்சி
பெற்றுவிட்டீர்கள்
என்றால்
பிறகு
தெய்வீக
பிறவி கிடைக்கும்.
அவர்களுக்கு
அற்ப
காலத்திற்கான
சுகம்தான்
இருக்கிறது,
அதிலும்
கூட
எவ்வளவு
கவலை இருக்கிறது.
நாம்
குப்தமாக
(மறைமுகமாக)
இருக்கிறோம்.
நாம்
வெளிப்புறத்தில்
எந்த
பகட்டும்
காட்டக்கூடாது.
அவர்கள்
பகட்டைக்
காட்டுகின்றனர்.
இந்த
இராஜ்யம்
கானல்
நீர்
போன்றது.
சாஸ்திரங்களிலும்
கூட உள்ளது
-
குருடனின்
மகன்
குருடன்
என்று
திரௌபதி
துரியோதனனைப்
பார்த்து
கூறினாள்.
இராஜ்யம்
என்று நினைத்துக்
கொண்டிருக்கக்
கூடிய
இது
இப்போது
அழிந்தே
அழிந்து
விட்டது
போலாகும்.
ரத்த
ஆறு
ஓடப் போகிறது.
பாகிஸ்தான்
பிரிவினையின்
போது
வீடுகள்
தோறும்
எவ்வளவு
அடிதடிகளை
நடத்திக்
கொண்டிருந்தார்கள்.
இன்னும்
கூட
நடந்து
சுற்றியபடி
இருக்கும்போது
சாலைகளில்
அடிதடிகள்
ஏற்படும்.
எவ்வளவு ரத்த
வெள்ளம்
ஓடுகிறது,
இதை
சொர்க்கம்
என்று
சொல்வார்களா?
இதுதான்
புதிய
பாரதம்,
புது
டெல்யா?
புதிய
பாரதம்
தேவதைகள்
வாழும்
இடமாக
(பரிஸ்தான்)
இருந்தது.
இப்போது
விகாரங்களின்
பிரவேசம் ஆகியுள்ளது.
பெரிய
எதிரிகளாக
உள்ளன.
இராமன்-இராவணனின்
பிறவி
பாரதத்தில்
தான்
காட்டுகின்றனர்.
சிவ
ஜெயந்தியை
வெளி
நாட்டில்
கொண்டாடுவதில்லை,
இங்கேதான்
கொண்டாடுகின்றனர்.
இராவணன் எப்போது
வருகிறான்
என்பதை
நீங்கள்
அறிவீர்களா?
பகல்
முடிந்து
இரவு
தொடங்கிய
போது
இராவணன் வந்து
விட்டார்.
அது
வாம
மார்க்கம்
என்று
கூறப்படுகிறது.
வாம
மார்க்கத்தில்
சென்றதன்
மூலம்
தேவதைகளின் நிலை
என்ன
ஆனது
என்பதை
காட்டவும்
செய்கின்றனர்.
குழந்தைகள்
சேவை
செய்ய
வேண்டும்.
தான்
விழித்துக்
கொள்ளும்போது
பிறரையும்
விழிப்படையச் செய்ய
முடியும்.
பாபா
சுப
சிந்தனையாளர்
ஆவார்.
இவர்களை
மாயை
அடித்துவிடாமல்
இருக்கட்டும்
என்று கூறுவார்.
நோய்வாய்ப்பட்டு
விட்டால்
சேவை
செய்ய
முடிவதில்லை.
ஜகதம்பாவுக்குத்தான்
ஞானக்கலசம் கிடைக்கிறது,
இலட்சுமிக்கு
கிடைப்பதில்லை.
இலட்சுமிக்கு
செல்வம்
கொடுத்தார்,
அதன்
மூலம்
தானம்
செய்ய முடியும்.
ஆனால்
அங்கே
தானம்
முதலானவை
நடப்பதில்லை.
தானம்
எப்போதும்
ஏழைகளுக்கு
செய்யப் படுகிறது.
ஆக,
கன்யாக்கள்
இதுபோன்று
கோவில்களில்
சென்று
சேவை
செய்தால்
பலரும்
வருவார்கள்.
பாராட்டுவார்கள்,
காலில் விழுவார்கள்.
தாய்மார்களுக்கு
மரியாதையும்
உள்ளது.
தாய்மார்கள்
கேட்கும்போது மகிழ்ந்து
போவார்கள்.
ஆண்களுக்கோ
தம்முடைய
போதை
இருக்கும்
அல்லவா.
பாபா
புரிய
வைத்துள்ளார்
-
இந்த
சாகார
தந்தை
(பிரம்மா)
வெளிதோற்றமுடையவர்.
ஆனால்
இவருக்குள்
இருக்கக்கூடிய
பகவானோ தெய்வத்திற்கெல்லாம்
தெய்வமாவார்.
கிருஷ்ணரை
லார்ட்
கிருஷ்ணா
என்று
கூறுகின்றனர்
அல்லவா.
கிருஷ்ணருடைய
தெய்வத்திற்கும்
தெய்வம்
அந்த
பரமாத்மா
ஆவார்
என்று
நாம்
கூறுகிறோம்.
அவருக்கு இந்த
வீடு
கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே
இவர்
(பிரம்மா)
வீட்டுக்காரியாகவும்
(லேண்ட்
லேடி)
உள்ளார்,
வீட்டுக்காரராகவும்
(லேண்ட்
லார்ட்)
உள்ளார்.
இவர்
ஆணாகவும்
உள்ளார்,
பெண்ணாகவும்
உள்ளார்.
ஆச்சரியமல்லவா.
போக்
(பிரசாதம்)
வைக்கப்படுகிறது.
நல்லது,
பாபாவுக்கு
அனைத்து
குழந்தைகளுடைய
அன்பு
நினைவுகள் கொடுக்க
வேண்டும்.
குஷியோடு
பெரிய
தலைவனுக்கு
வணக்கத்தைச்
சொல்லி அனுப்புகிறோம்.
இது
ஒரு சடங்காக
உள்ளது.
ஆரம்பத்தில்
காட்சி
தெரிந்தது
போல
இறுதியிலும்
பாபா
மிகவும்
மகிழ்ச்சிப்படுத்துவார்.
அபு
மலைக்கு
நிறைய
குழந்தைகள்
வருவார்கள்.
நடக்கப்
போவதை
பார்க்கப்
போகிறீர்கள்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
தேடிக்கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்,
காலை
வணக்கம்
இரவு
வகுப்பு
- 08. 04. 1968
இந்த
ஈஸ்வரிய
மிஷன்
(நிறுவனம்)
நடந்து
கொண்டிருக்கிறது.
யார்
நம்முடைய
தேவி
தேவதா
தர்மத்தைச் சேர்ந்தவர்களோ
அவர்களே
வருவார்கள்.
எப்படி
அவர்களுடைய
மிஷன்
கிறிஸ்தவர்களாக
மாற்றுவதற்காக உள்ளதோ
அது
போன்றதாகும்.
யார்
கிறிஸ்தவர்களாக
ஆகின்றனரோ
அவர்களுக்கு
கிறிஸ்தவ
மிஷனின் இராஜ்யத்தில்
சுகம்
கிடைக்கிறது.
நல்ல
ஊதியம்
கிடைக்கிறது,
ஆகையால்
கிறிஸ்தவர்கள்
அதிகரித்து
விட்டனர்.
பாரதவாசிகள்
இவ்வளவு
ஊதியம்
முதலானவைகளை
கொடுக்க
முடியாது.
இங்கே
ஊழல்
அதிகமாக
உள்ளது.
பலர்
லஞ்சம்
வாங்காவிட்டால்
வேலையிலிருந்தே துரத்தி
விடுகின்றனர்.
இந்த
நிலையில்
என்ன
செய்வது என்று
குழந்தைகள்
கேட்கின்றனர்.
யுக்தியுடன்
வேலை
செய்யுங்கள்,
பிறகு
சுப
காரியத்தில்
ஈடுபடுத்துங்கள்.
தூய்மையற்ற
எங்களை
வந்து
தூய்மையானவராக
ஆக்குங்கள்,
விடுவியுங்கள்,
வீட்டுக்கு
அழைத்துச் செல்லுங்கள்
என்று
இங்கே
அனைவரும்
தந்தையைக்
கூப்பிடுகின்றனர்.
தந்தை
கண்டிப்பாக
வீட்டுக்கு அழைத்துச்
செல்வார்
அல்லவா.
வீட்டுக்குச்
செல்வதற்காகத்தான்
இவ்வளவு
பக்தி
முதலானவைகளை செய்கின்றனர்.
ஆனால்
தந்தை
வரும்போதுதான்
அழைத்துச்
செல்வார்.
பகவான்
ஒரே
ஒருவர்தான்.
அனைவருக்குள்ளும்
வந்து
பகவான்
பேசுகிறார்
என்பதல்ல.
அவருடைய
வருகையே
சங்கமயுகத்தில்
தான்.
இப்போது
நீங்கள்
அப்படி,
இப்படியான
விஷயங்களை
ஏற்றுக்
கொள்வதில்லை.
முன்னர்
ஏற்றுக்கொண்டிருந்தீர்கள்.
இப்போது
நீங்கள்
பக்தி
செய்வதில்லை.
நாங்கள்
முதலில் பூஜை
செய்து
கொண்டிருந்தோம்
என்று
நீங்கள் கூறுகிறீர்கள்.
இப்போது
நம்மை
பூஜைக்குரிய
தேவதையாக
ஆக்குவதற்காக
தந்தை
வந்துள்ளார்.
சீக்கியர் களுக்கும்
கூட
நீங்கள்
புரிய
வையுங்கள்.
மனிதரிலிருந்து தேவதையாக்கினார்
. . .
என்ற
புகழும்
உள்ளதல்லவா.
தேவதைகளின்
மகிமை
அல்லவா.
தேவதைகள்
இருப்பதே
சத்யுகத்தில்.
இப்போது
உள்ளது
கலியுகம்.
தந்தை கூட
சங்கமயுகத்தில்
புருஷோத்தமர்
ஆவதற்கான
கல்வியைக்
கற்பிக்கிறார்.
தேவதைகள்
அனைவரையும் விட
உத்தமமானவர்கள்,
எனவேதான்
இவ்வளவு
பூஜை
செய்கின்றனர்.
யாருக்கு
பூஜை
செய்கின்றனரோ,
அவர்கள்
கண்டிப்பாக
எப்போதோ
இருந்துள்ளனர்,
இப்போது
இல்லை.
இந்த
இராஜ்யம்
கடந்த
காலமாகி விட்டது
என்று
புரிந்து
கொள்கின்றனர்.
இப்போது
நீங்கள்
குப்தமாக
உள்ளீர்கள்.
நாம்
உலகின்
எஜமானன் ஆகக்
கூடியவர்கள்
என்பது
யாருக்கும்
தெரியாது.
நாம்
படித்து
இப்படி
ஆகிறோம்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
எனவே
படிப்பின்
மீது
முழு
கவனம்
கொடுக்க
வேண்டும்.
தந்தையை
மிகவும்
அன்போடு
நினைவு
செய்ய வேண்டும்.
பாபா
நம்மை
உலகின்
எஜமானன்
ஆக்குகிறார்
என்றால்
ஏன்
நினைவு
செய்யக்கூடாது?
பிறகு தெய்வீக
குணங்களும்
இருக்க
வேண்டும்.
நல்லது,
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீக
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்,
இரவு
வணக்கம்
மற்றும்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாராம்:
1.
இந்த
உலகத்தில்
தமது
வெளிப்புற
பகட்டைக்
காட்டக்
கூடாது.
முழுமையாக
தேர்ச்சி அடைவதற்காக
குப்தமான
முயற்சி
செய்தபடி
இருக்க
வேண்டும்.
2.
இந்த
வண்ணமயமான
உலகத்தில்
சிக்கிக்
கொள்ளக்
கூடாது.
மோகத்தை
வென்றவராகி தந்தையின்
பெயரைப்
புகழ்பெறச்
செய்வதற்கான
சேவை
செய்ய
வேண்டும்.
அனைவரின் சௌபாக்கியத்தையும்
எழுப்ப
வேண்டும்.
வரதானம்:
எப்போதும்
குஷியின்
டானிக்கை
அருந்தி
மற்றும்
(பிறரையும்)
அருந்த வைக்கக்
கூடிய
குஷி
நிறைந்த,
அதிர்ஷ்டம்
நிறைந்தவர்
ஆகுக.
குழந்தைகளாகிய
உங்களிடம்
உண்மையான
செல்வம்
இருக்கிறது,
ஆகையால்
அனைவரைவிடவும் செல்வந்தர்களாக
நீங்கள்
இருக்கிறீர்கள்.
காய்ந்த
ரொட்டியை
கூட
நீங்கள்
சாப்பிடக்
கூடும்,
ஆனால்
குஷியின் டானிக்
அந்த
காய்ந்த
ரொட்டியில்
நிறைந்திருக்கிறது,
அதனை
விட
வேறு
டானிக்
எதுவும்
கிடையாது.
அனைத்தையும்
விட
நல்ல
டானிக்கை
அருந்தக்
கூடியவர்கள்,
சுகத்தின்
ரொட்டியை
சாப்பிடக்
கூடியவர்கள் நீங்கள்தான்,
ஆகையால்
எப்போதும்
குஷியாக
இருக்கிறீர்கள்.
ஆக
பிறரும்
கூட
பார்த்து
குஷியடையும்படியாக குஷி
மிக்கவர்களாக
இருந்தீர்கள்
என்றால்
குஷியால்
அதிர்ஷ்டம்
நிறைந்தவர்
என்று
சொல்வார்கள்.
சுலோகன்:
ஒரு
எண்ணம்
மற்றும்
சொல்லும்
கூட
வீணாகாமல் இருப்பவரே
ஞானம்
நிறைந்தவர்
ஆவார்.
ஓம்சாந்தி