11.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்கைளே! நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள், இதில் தான் ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது, இது புது படிப்பாகும்.

 

கேள்வி:

சங்கமத்தில் ஞானம் மற்றும் யோகாவின் கூடவே பக்தியும் நடைபெறுகிறது - எப்படி?

 

பதில்:

உண்மையில் யோகாவை பக்தி என்றும் கூற முடியும். ஏனெனில் குழந்தைகளாகிய நீங்கள் கலப்படமற்ற நினைவில் இருக்கிறீர்கள். உங்களது இந்த நினைவு ஞான சகிதமாக இருக்கிறது. அதனால் தான் இது யோகா என்று கூறப்படுகிறது. துவாபரத்திலிருந்து பக்தி மட்டுமே ஏற்படுகிறது, ஞானம் கிடையாது, ஆகையால் அந்த பக்தியை யோகா என்று கூறப்படுவது கிடையாது. அதில் எந்த இலட்சியமும் கிடையாது. இப்பொழுது சங்கமத்தில் உங்களுக்கு ஞானமும் கிடைக்கிறது, யோகாவும் செய்கிறீர்கள், பிறகு உங்களுக்கு எல்லையற்ற சிருஷ்டியின் மீது வைராக்கியமும் ஏற்படுகிறது.

 

பாட்டு:

யாரோ என்னை தன்னுடையவராக ஆக்கியிருக்கிறார் ......

 

ஓம்சாந்தி.

எல்லையற்ற தந்தை புரிய வைக்கின்றார் - சாஸ்திரங்களைப் படிப்பது என்பது ஒரு படிப்பே கிடையாது. ஏனெனில் சாஸ்திரங்களின் படிப்பில் எந்த இலட்சியமும் குறிக்கோளும் கிடையாது. சாஸ்திரங்களினால் எந்த உலகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அமெரிக்கா எங்கு இருக்கிறது? யார் கண்டுபிடித்தது? இந்த விசயங்கள் சாஸ்திரங்களில் கிடையாது. இன்னார் கண்டுபிடித்தார் என்று கூறுகின்றனர். தான் வசிப்பதற்காக மற்ற நாடுகளைத் தேடி கண்டுபிடித்ததாகும். மக்கள் அதிகரித்து விட்டனர், வசிப்பதற்கு இடம் தேவை அல்லவா! இப்பொழுது இவையனைத்து விசயங்களும் படிப்பிற்கானது ஆகும், இது தான் கல்வி என்று கூறப்படுகிறது. உங்களுடையது இது கல்வியாகும். இதை ஆசிரமம் என்று கூறலாமா? அல்லது கல்விக் கூடம் என்று கூறலாமா? அல்லது பல்கலைக்கழகம் என்று கூறலாமா? இதில் அனைத்தும் வந்து விடுகிறது. அந்த படிப்பின் வரைபடங்கள் முதலானவைகள் தனிப்பட்டதாகும். சாஸ்திரங்களினால் ஒளி கிடைப்பது கிடையாது, படிப்பின் மூலம் ஒளி கிடைக்கிறது. உங்களுடையதும் படிப்பாகும். வைகுண்டம் என்று எதற்குக் கூறப்படுகிறது? இது அந்த படிப்பிலும் கிடையாது, சாஸ்திரங்களிலும் கிடையாது. இந்த ஞானமே புதியது ஆகும், இதை ஒரு தந்தை தான் கூறுகின்றார். சொர்க்கம், நரகம் அனைத்தும் இங்கு தான் இருக்கிறது என்று மனிதர்கள் கூறி விடுகின்றனர். சொர்க்கம், நரகம் என்று எதற்குக் கூறப்படுகிறது? என்று தந்தை தான் புரிய வைக்கின்றார். இந்த விசயங்கள் சாஸ்திரங்களிலும் கிடையாது, அந்த கல்வியிலும் கிடையாது. ஆக புதிய விசயமாக இருக்கின்ற காரணத்தினால் மனிதர்கள் குழப்பமடைகின்றனர். இப்படிப்பட்ட ஞானம் ஒருபொழுதும் கேள்விப்படவேயில்லை என்று கூறுகின்றனர். இது புதிய ஆச்சரியமான விசயமாகும், இதை ஒருபொழுதும் யாரும் கூறியதேயில்லை. உண்மையில் புது விசயமாகும். அந்த கல்வியாளர்களும் கூற முடியாது, சந்நியாசிகளும் கூற முடியாது. அதனால் தான் பரம்பிதா பரமாத்மா தான் ஞானக் கடல் என்று கூறப்படுகின்றார். எல்லையற்ற சரித்திர பூகோளத்தையும் புரிய வைக்கின்றார். ஞானத்தின் மூலம் சொர்க்கம் மற்றும் நரகத்தின் விஸ்தாரத்தையும் கூறுகின்றார். இது புது விசயம் அல்லவா! இந்த படிப்பில் அனைத்தும் இருக்கிறது - ஞானமும், இருக்கிறது, யோகாவும் இருக்கிறது, படிப்பும் இருக்கிறது, பக்தியும் இருக்கிறது. யோகாவை பக்தி என்றும் கூற முடியும். ஏனெனில் ஒரே ஒருவரிடம் தொடர்பு வைத்து அவரை நினைவு செய்ய வேண்டியிருக்கிறது. அந்த பக்தர்களும் நினைவு செய்கின்றனர், பூஜை செய்கின்றனர், பாடுகின்றனர். அந்த பக்தி செய்வது என்பது யோகா கிடையாது. உதாரணத்திற்கு மீரா இருந்தார், கிருஷ்ணரிடம் தொடர்பு வைத்திருந்தார், அவரை நினைவு செய்தார், ஆனால் அது பக்தி என்று கூறப்படுகிறது. அவரது புத்தியில் எந்த குறிக்கோளோ அல்லது இலட்சியமோ கிடையாது. இதை ஞானம் என்றும் கூறுகிறோம், பக்தி என்றும் கூறுகிறோம். யோகா செய்கிறோம், ஒருவரை நினைவு செய்கிறோம். சத்யுகத்தில் பக்தியும் இருக்காது, ஞானமும் இருக்காது. சங்கமத்தில் ஞானம் மற்றும் பக்தி இரண்டும் இருக்கிறது. மேலும் துவாபரத்திலிருந்து பக்தி மட்டுமே நடைபெற்று வருகிறது. யாரையாவது நினைவு செய்வது தான் பக்தி என்று கூறப்படுகிறது. இங்கு  இந்த ஞானமும் இருக்கிறது, யோகாவும் இருக்கிறது, பக்தியும் இருக்கிறது. புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் வெறும் பக்தர்கள் தான், தத்துவங்களுடன் தொடர்பு வைக்கின்றனர். ஆனால் அவர்களுடையது பலரிடத்தில் தொடர்பு வைப்பதாகும், அதனால் அவர்களை பக்தர்கள் என்று கூறுகிறோம். உங்களுடையது கலப்படமற்ற நினைவாகும். இதை ஞானக்கடல் சுயம் வந்து கற்பிக்கிறார். அவரிடத்தில் தொடர்பு வைக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் ஆத்மாவை அறிந்து கொள்ளவில்லை. நாம் அறிந்திருக்கிறோம். பரம்பிதா பரமாத்மாவிடம் புத்தியின் தொடர்பை வைப்பதன் மூலம் நாம் தந்தையிடம் சென்று விடுவோம். அவர்கள் ஹனுமானை நினைவு செய்கின்றனர் எனில் அவர்களுக்கு சாட்சாத்காரம் ஏற்பட்டு விடுகிறது. அது கலப்படம் என்று கூறப்படுகிறது. இது கலப்படமற்ற யோகா ஆகும். ஒரே ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்கிறோம் எனில் இதில் ஞானம், பக்தி, வைராக்கியம் அனைத்தும் உள்ளடக்கம். மேலும் அவர்களுடையது அனைத்தும் தனித் தனியாக இருக்கிறது. பக்தி தனியானது, ஞானமும் சாஸ்திரத்தினுடையதாக இருக்கிறது, வைராக்கியமும் எல்லைக்குட்பட்டதாக இருக்கிறது. இங்கு எல்லையற்ற விசயமாகும். நாம் எல்லையற்ற தந்தையை அறிந்திருக்கிறோம், அதனால் தான் அவரை நினைவு செய்கிறோம். அவர்கள் சிவனை நினைவு செய்யலாம், ஆனால் விகர்மம் விநாசம் ஆவது கிடையாது. ஏனெனில் அவர்கள் அதன் பலனை அறியாமல் இருக்கின்றனர். விகர்மம் விநாசம் ஆவதற்கான ஞானமே கிடையாது. இங்கு தந்தையின் நினைவின் மூலம் விகர்மம் விநாசம் ஆகிறது. அங்கு காசியில் பலியாகின்றனர், விகர்மம் விநாசம் ஆகிறது, தண்டனைகளை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் உங்களைப் போன்று சிறிது சிறிதாக கர்மாதீத நிலை அடைவார்கள் என்பது கிடையாது. அவர்களது விகர்மங்கள் தண்டனைகள் அனுபவித்து அனுபவித்து அழிந்து விடும். மன்னிப்பு ஏற்பட்டு விடாது. ஆக இது படிப்பாகவும் இருக்கிறது, ஞானமாகவும் இருக்கிறது, யோகாவாகவும் இருக்கிறது. இதில் அனைத்தும் இருக்கிறது. கற்றுக் கொடுப்பவர் ஒரே ஒரு தந்தையாவார். இது ஆசிரமம் அதாவது நிறுவனம் என்று கூறப்படுகிறது. மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. முன்பு ஓம் மண்டலி என்று பெயர் தவறாக இருந்தது. இப்பொழுது புரிதல் (தெளிவு) வந்து விட்டது. இந்த பெயர் மிகவும் நன்றாக இருக்கிறது. (ஆசிரம், நிறுவனம்) நீங்களும் பிரம்மா குமாரர்கள் என்று நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் புரிய வைக்க முடியும். தந்தை அனைவரையும் படைப்பவர், அவர் முதன் முதலில் சூட்சுமவதனத்தைப் படைக்க வேண்டும். பிரம்மா, விஷ்ணு, சங்கர் சூட்சுமவதனவாசிகள். புது சிருஷ்டி படைக்கின்றார் எனில் கண்டிப்பாக பிரஜாபிதா தேவை. சூட்சுமவதனத்தில் உள்ளவர் இங்கு வர முடியாது. அவர் சம்பூர்ண அவ்யக்தமானவர். இங்கு சாகார பிரம்மா தேவை. அவர் எங்கிருந்து வந்தார்? மனிதர்கள் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. சித்திரங்கள் இருக்கிறது அல்லவா! பிரம்மாவின் மூலம் பிராமணர்கள் உருவாகின்றனர். ஆனால் பிரம்மா எங்கிருந்து வந்தார்? பிறகு தத்தெடுப்பது ஏற்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு இராஜாவிற்கு குழந்தை இல்லையெனில் தத்தெடுக்கிறார். தந்தையும் இவரை தத்தெடுக்கின்றார், பிறகு பெயரை பிரஜாபிதா பிரம்மா என்று மாற்றி வைக்கின்றார். மேலே இருக்கும் அவர் கீழே வர முடியாது. கீழே இருப்பவர் மேலே செல்ல வேண்டும். அவர் அவ்யக்தமானவர், இவர் வியக்தமானவர் (சரீரமுள்ளவர்). ஆக இந்த ரகசியத்தையும் நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அனைவருக்கும் கேள்வி எழுகிறது. தாதாவை சில நேரங்களில் பிரம்மா, சில நேரங்களில் பகவான், சில நேரங்களில் கிருஷ்ணர் ...... என்று கூறுகிறீர்கள். இவரை பகவான் என்று கூறுவது கிடையாது. மற்றபடி பிரம்மா மற்றும் கிருஷ்ணர் என்று கூற முடியும். ஏனெனில் கிருஷ்ணர் கருப்பாக ஆகின்றார். எப்பொழுது இரவு இருக்கிறதோ அப்பொழுது பிரம்மா என்று கூறுறோம், எப்பொழுது பகல் இருக்கிறதோ அப்பொழுது கிருஷ்ணர் என்று கூறுகிறோம். கிருஷ்ணரின் ஆத்மாவிற்கு இப்பொழுது கடைசிப் பிறப்பாகும். மேலும் கிருஷ்ணருக்கு இது ஆதி பிறப்பாகும். இதை தெளிவுபடுத்தி எழுத வேண்டும். இராதை கிருஷ்ணர் அல்லது லெட்சுமி நாராயணனின் 84 பிறவிகளைப் பற்றி கூற வேண்டும். பிறகு இங்கு இவர்களைத் தத்தெடுக்கின்றார். ஆக பிரம்மாவின் பகல் மற்றும் பிரம்மாவின் இரவு ஆகிவிடுகிறது. இதுவே பிறகு லெட்சுமி நாராயணனின் பகல் மற்றும் இரவாகும். அவர்களது வம்சத்தினர்களுக்கும் இவ்வாறே ஏற்பட்டது.

 

நீங்கள் இப்பொழுது பிராமண குலத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறீர்கள், பிறகு தேவதா குலத்தைச் சார்ந்தவர்களாக ஆவீர்கள். ஆக பிரம்மா குமார்-குமாரிகளுக்கும் பகல் மற்றும் இரவாக ஆகிவிடுகிறது அல்லவா! இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். கீழே தபஸ்யா செய்து கொண்டிருக்கின்றனர், கடைசிப் பிறப்பாகும் என்று சித்திரங்களிலும் தெளிவாக இருக்கிறது. பிரம்மா எங்கிருந்து வந்தார்? யார் மூலமாக பிறப்பெடுத்தார்? ஆக பிரம்மாவை தத்தெடுக்கின்றார். எவ்வாறு இராஜா தத்தெடுக்கின்றாரோ, பிறகு அவரை இராஜகுமார் ஆக்குவார். இந்நாட்டின் இளவரசர் என்று இடமாற்றம் செய்து விடுகின்றனர். முன்பு இளவரசராக இல்லை. இராஜா தத்தெடுத்ததும் இளவரசர் என்று பெயர் கொடுத்து விட்டார். இந்த வழக்கம் நடைபெற்று வருகிறது. குழந்தைகளின் புத்தியில் இது வர வேண்டும். தந்தை பழைய உலகை எவ்வாறு விநாசம் செய்கிறார்? மற்றும் புது உலகை எவ்வாறு ஸ்தாபனை செய்கிறார்? என்பது உலகத்தினருக்குத் தெரியாது. இந்த ஒளி (விளக்கம்) குழந்தைகளிடம் இருக்கிறது. உங்களிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. நாள் செல்லச் செல்ல சிறிய சகோதரிகளும் மிகத் தீவிரமாக ஆகிக் கொண்டே செல்வார்கள், ஏனெனில் குமாரிகளாக இருக்கின்றனர். குமாரிகளின் மூலம் அம்பு எய்யப்பட்டதாக எழுதப்பட்டிருக்கிறது. குமாரிகளின் ஜொலிப்பு நம்பர் ஒன்னாக சென்றிருக்கிறது. மம்மாவும் குமாரியாவார், அனைவரையும் விட தீவிரமாகச் சென்றார். மகள் தாயை வெளிப்படுத்துவாள் என்று கூறப்படுகிறது. தாய் வந்து யாரிடத்திலும் பேசமாட்டாள். இந்தத் தாய் குப்தமாக(மறைவாக) இருக்கிறார். அந்த மம்மா காணக்கூடியவராக இருக்கிறார். ஆக சக்திகளாகிய உங்களது அல்லது குழந்தைகளின் காரியம் என்னவெனில் தாயை வெளிப்படுத்துவதாகும். மிக நல்ல நல்ல சகோதரி குழந்தைகளும் உள்ளனர், அவர்களது முயற்சியும் நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கௌரவ சம்பிரதாயத்திலும் முக்கியமாக மகாரதிகளாக இருக்கும் சிலரது பெயர்கள் இருக்கிறது அல்லவா! இங்கும் மகாரதிகளின் பெயர்கள் உள்ளன. அனைவரையும் விட உயர்ந்தவர் சிவபாபா. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான். அவரது இருப்பிடமும் உயர்ந்தது ஆகும். உண்மையில் ஆத்மாக்களாகிய நாம் இருக்கும் அந்த இடமும் உயர்ந்தது ஆகும். மனிதர்கள் வெறுமனே மகிமை செய்து கொண்டிருக்கின்றனர், எதையும் அறிந்து கொள்வது கிடையாது. ஆத்மாக்களாகிய நாமும் அங்கு வசிக்கக் கூடியவர்கள். ஆனால் நாம் பிறப்பு இறப்பில் வந்து நடிப்பு நடிக்க வேண்டும். அவர் பிறப்பு இறப்பில் வருவது கிடையாது. அவருக்கும் நடிப்பு இருக்கிறது, ஆனால் எப்படிப்பட்டது? என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இது சிவபாபாவின் ரதம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அஷ்வம் அதாவது குதிரையாகவும் இருக்கிறது. மற்றபடி அந்த குதிரை வண்டி என்பது கிடையாது. இந்த தவறும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. அரைக்கல்பம் நாமும் தவறுதலாக அலைந்து அலைந்து ஒரேயடியாக வழி தவறி தொலைந்து விட்டோம். இப்பொழுது ஒளி கிடைத்திருப்பதால் மிகவும் எச்சரிக்கையாகி விட்டோம். இந்த பழைய உலகம் அழிய வேண்டும், நாம் நஷ்டமோகா ஆக வேண்டும் என்பதை அறிவீர்கள். தாமரை மலர் போன்று இல்லறத்தில் இருந்தாலும் நஷ்டமோகா ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். அனைவரிடத்திலும் சேர்ந்து, ஒன்றாக இருக்க வேண்டும். இந்த பட்டி உருவாக வேண்டியிருந்தது, முந்தைய கல்பத்திலும் உருவாகியிருந்தது. இல்லறத்தில் இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும் என்று இப்பொழுது கூறுகின்றார். இங்கு வீடு வாசலை விடுவதற்கான விசயம் கிடையாது. நாம் வீட்டில் அமர்ந்திருக்கிறோம் அல்லவா! எவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனர்! லௌகீகத்திலும் இருந்தனர் அல்லவா! எதையும் விட்டு விடவில்லை. சந்நியாசிகள் காட்டிற்குச் சென்று விடுகின்றனர். நாம் நாட்டில் இருக்கிறோம். ஆக அவர்களுடன் சேர்ந்திருக்க வேண்டும். தந்தையும் படைப்பவராக இருக்கிறார், தந்தை வருமானம் செய்து குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுக்கிறார். முதலில் இராவணன் தான் காம விகாரத்தை ஆஸ்தியாகக் கொடுக்கிறார். பிறகு அதிலிருந்து விடுவித்து நிர்விகாரிகளாக ஆக்குவது ஒரே ஒரு தந்தையின் காரியமாகும். சில இடங்களில் குழந்தைகள் தாய் தந்தைக்கு ஞானம் கொடுக்கின்றனர், சில இடங்களில் தந்தை குழந்தைகளுக்கு ஞானம் கொடுப்பர்.

 

இது இராஜயோகமாகும், அது ஹடயோகமாகும். ஆத்மாவிற்கு பரமாத்மாவிடமிருந்து ஞானம் கிடைக்கிறது. நான் (பிரம்மா) இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக இருந்தேன், இப்பொழுது ஏழையாக ஆகி விட்டேன். ஏழையிலிருந்து செல்வந்தன் என்று பாடப்பட்டிருக்கிறது. சூரியவம்சிகளாக இருந்த நாம் இப்பொழுது சூத்திரவம்சிகளாக ஆகிவிட்டோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். நரகம் மற்றும் சொர்க்கம் தனித்தனியானது என்பதையும் புரிய வைக்க வேண்டும். மனிதர்கள் இதை அறியவில்லை. குழந்தைகளாகிய உங்களிலும் எவ்வளவோ குழந்தைகள் எதுவும் அறியாமல் இருக்கின்றனர். ஏனெனில் அதிர்ஷ்டத்தில் இல்லையெனில் என்ன முயற்சி செய்ய முடியும்? சிலரது அதிர்ஷ்டத்தில் ஒன்றும் இல்லாமல் இருக்கிறது, சிலரது அதிர்ஷ்டத்தில் அனைத்தும் இருக்கிறது. அதிர்ஷ்டம் முயற்சி செய்வித்துக் கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டம் இல்லையெனில் என்ன முயற்சி செய்ய முடியும்? ஒரே ஒரு பள்ளி தான், நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. சில  குழந்தைகள் பாதியிலேயே கீழே விழுந்து விடுகின்றனர், சிலர் போகப் போக இறந்து விடுகின்றனர். பிறப்பு எடுப்பது மற்றும் இறப்பது அதிகம் ஏற்படுகிறது. இந்த ஞானம் எவ்வளவு ஆச்சரியமானதாக இருக்கிறது! ஞானம் மிகவும் எளிதானதாகும், மற்றபடி கர்மாதீத நிலை அடைவதில் தான் முழு முயற்சியும் இருக்கிறது. எப்பொழுது விகர்மம் விநாசம் ஆகிறதோ அப்பொழுது தான் பறக்க முடியும். தியானத்தை விட ஞானம் சிரேஷ்டமானது. தியானத்தில் மாயையின் பிரவேசம் அதிகமாக இருக்கிறது. அதனால் தியானத்தை விட ஞானம் நல்லதாகும். யோகாவை விட ஞானம் நல்லது என்று பொருள் அல்ல. தியானத்திற்காக கூறப்படுகிறது. தியானத்தில் செல்பவர்கள் இன்று கிடையாது. யோகாவில் வருமானம் ஏற்படுகிறது, விகர்மம் விநாசம் ஆகிறது. தியானத்தில் எந்த வருமானமும் கிடையாது. யோகா மற்றும் ஞானத்தில் வருமானம் இருக்கிறது. ஞானம் மற்றும்  யோகா இன்றி ஆரோக்கியமானவர், செல்வந்தர்களாக ஆக முடியாது. பிறகு இவ்வாறு சுற்றித் திரியும் ஒரு பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதுவும் சரியானது கிடையாது. தியானம் அதிக நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஞானம் விநாடிக்கானது ஆகும். யோகா விநாடிக்கானது அல்ல. எதுவரை வாழ்கிறோமோ அதுவரை யோகா (நினைவு) செய்து கொண்டே இருக்க வேண்டும். ஞானம் எளிதானது, மற்றபடி சதா ஆரோக்கியமானவர், நோயற்றவர்களாக ஆவதில் தான் முயற்சி இருக்கிறது. அதிகாலையில் எழுந்து நினைவில் அமர்வதிலும் கூட பல தடைகள் ஏற்படுகின்றன. கருத்துக்களை உருவாக்கினாலும் கூட புத்தி இங்கு அங்கு என்று சென்று விடுகிறது. அனைவரையும் விட மிக அதிகமான புயல் முதல் நம்பரில் உள்ளவருக்குத் தான் வரும் அல்லவா! சிவபாபாவிற்கு வர முடியாது. பல புயல்கள் வரும் என்று பாபா சதா புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். எந்த அளவிற்கு நினைவில் இருப்பதற்கு முயற்சி செய்வீர்களோ அந்த அளவிற்கு புயல்கள் அதிகம் வரும். அதைப் பார்த்து பயப்படாதீர்கள். நினைவில் இருக்க வேண்டும், நிலையாக இருக்க வேண்டும். எந்த புயல்களும் அசைத்து விட முடியாது, இது கடைசி நிலையாகும். இது ஆன்மீக பந்தயமாகும். சிவபாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய மற்றும் தாரணை செய்ய வேண்டிய விசயமாகும். செல்வம் தானம் செய்யவில்லையெனில் தாரணை ஏற்படாது. முயற்சி செய்ய வேண்டும். இரண்டு தந்தைக்கான கருத்தை மற்றவர்களுக்குப் புரிய வைப்பது மிகவும் எளிதாகும். தந்தை 21 பிறவிகளுக்கான ஆஸ்தி கொடுக்கிறார் என்பதையும் நீங்கள் தான் அறிவீர்கள். இந்த லெட்சுமி நாராயணனுக்கு தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தி கிடைத்திருக்கிறது என்று நீங்கள் கூறுவீர்கள். தந்தை அவர்களுக்கு இராஜயோகம் கற்பித்தார், அவர்களுக்கு பகவான் ஆஸ்தி கொடுத்தார் என்று யாரும் வாயினால் கூறவே முடியாது. உலகில் சிலர் சில விசயங்களிலும், சிலர் சில விசயங்களிலும் குஷியடைகின்றனர். நீங்கள் எந்த விசயத்தில் குஷிடைகிறீர்களோ அதனை யாரும் அறியவில்லை. மனிதர்கள் அல்ப கால துளியளவு குஷியைக் கொண்டாடுகின்றனர். நீங்கள் உண்மையான பிராமண குல பூஷணர்கள், யோகி மற்றும் ஞானிகளாக இருக்கிறீர்கள். உங்களது இந்த அதீந்திரிய சுகத்தின் குஷியை வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது. அவர்கள் எவ்வாறெல்லாம் தலையை உடைத்துக் கொண்டிருக்கின்றனர்! நிலவிற்குச் செல்லும் முயற்சி செய்கின்றனர். மிகக் கடினமான உழைப்பு செய்கின்றனர். அவர்கள் அனைவரது முயற்சியும் வீணாகி விடும். வேறு யாரும் சென்று விட முடியாத இடத்திற்கு நீங்கள் எந்த கடினமுமின்றி செல்வதற்கான முயற்சி செய்கிறீர்கள். ஒரேயடியாக உயர்ந்ததிலும் உயர்ந்த பரந்தாமத்திற்குச் செல்கிறீர்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) இல்லறத்தில் இருந்தாலும் நஷ்டமோகா ஆக வேண்டும். கூடவே அனைவரோடும், சேர்ந்திருந்தாலும் தாமரை மலர் போன்று இருக்க வேண்டும்.

 

2) தாரணை செய்வதற்காக ஞான செல்வத்தை கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும். ஞானம் மற்றும் யோகா மூலம் தனது வருமானத்தை சேமிக்க வேண்டும். மற்றபடி தியானம், காட்சி பார்க்கும் ஆசை வைக்கக் கூடாது.

 

வரதானம்:

அமைதியின் சக்தியின் மூலம் சேமிப்புக் கணக்கை அதிகரிக்கக் கூடிய உயர் பதவியின் தகுதியானவர் ஆகுக!

 

தற்சமயம் அறிவியலின் சக்தியின் பிரபாவம் நிறைய உள்ளது, அல்ப காலத்திற்கு பிராப்தியை செய்விக்கிறது, அது போல அமைதியின் சக்தியின் மூலம் சேமிப்பின் கணக்கை அதிகப் படுத்துங்கள். தந்தையின் திவ்ய திருஷ்டியின் (தெய்வீகப் பார்வையின்) மூலம் தமக்குள் சக்தியை சேமியுங்கள், அப்போது தான் சேமித்து வைத்திருப்பதை சமயத்தில் பிறருக்கும் கொடுக்க முடியும். திருஷ்டியின் மகத்துவத்தைத் தெரிந்து அமைதியின் சக்தியை சேமித்து வைத்துக் கொள்கின்றவர்கள்தான் உயர் பதவிக்கு தகுதி படைத்தவர் ஆகின்றனர். அவர்களின் முகத்திலிருந்து குஷியின் ஆன்மீக ஜொலிப்பு தெரியும்.

 

சுலோகன்:

தமக்குள் இயல்பாகவே இயற்கையான கவனம் இருந்தது என்றால் எந்த விதமான மன அழுத்தமும் வர முடியாது.

 

ஓம்சாந்தி