10.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! புதிய உலகத்திற்காக தந்தை உங்களுக்கு அனைத்தும் புதிய விசயங்களைக் கூறுகிறார், புதிய வழியைக் கொடுக்கிறார், ஆகையால் அவருடைய (கத், மத்) வழிமுறையும், அறிவுரையும் தனிப்பட்டது என பாடப்படுகிறது.

 

கேள்வி:

இரக்க மனமுள்ள தந்தை அனைத்து குழந்தைகளுக்கும் எந்த விசயத்தில் எச்சரிக்கை கொடுத்து அதிர்ஷ்டத்தை உருவாக்குகிறார்?

 

பதில்:

பாபா கூறுகிறார் - குழந்தைகளே, உயர்வான அதிர்ஷ்டத்தை உருவாக்க வேண்டும் என்றால் சேவை செய்யுங்கள். சேவை செய்யாமல் உண்டும் உறங்கியும் இருந்தீர்கள் என்றால் உயர்வான அதிர்ஷ்டத்தை உருவாக்க முடியாது. சேவை செய்யாமல் உணவு உண்பது பாவமாகும். ஆகையால் பாபா எச்சரிக்கை கொடுக்கிறார். படிப்பில்தான் முழு ஆதாரம் உள்ளது. பிராமணர்களாகிய நீங்கள் படிக்க வேண்டும் மற்றும் படிப்பிக்க வேண்டும், உண்மையான கீதையை சொல்ல வேண்டும். தந்தைக்கு இரக்கம் உண்டாகிறது. ஆகவே அனைத்து விசயங்களிலும் வெளிச்சத்தை (விழிப்புணர்வு) கொடுக்கிறார்.

 

பாடல்:

நாங்களும் நீங்களும் சந்தித்த நாளிலிருந்து.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை புரிய வைக்கிறார். குழந்தைகளுக்கு எல்லைக்கப்பாற்பட்ட தந்தை கிடைக்கும் போது அனைத்தும் புதிய விசயங்களைக் கூறுகிறார். ஏனென்றால் இந்த தந்தை புதிய உலகத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர். மனிதர்கள் இப்படிப்பட்ட புதிய விசயங்களைக் கூற முடியாது. தந்தையைத்தான் இறைத் தந்தை என்று சொல்லப்படுகிறார், அந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக்கூடியவர். நரகத்தை ஸ்தாபனை செய்பவர் இராவணன். 5 விகாரங்கள் பெண்களிடம், 5 விகாரங்கள் ஆண்களிடம் எனவே அவர்கள் இராவண சம்பிரதாயத்தவர் ஆகிவிட்டனர். ஆக, இந்த புதிய விசயத்தை கூறினார் அல்லவா. சொர்க்கத்தை உருவாக்குபவர் பரமபிதா பரமாத்மா, அவரை ராம் என்று கூறுகின்றோம். நரகத்தை உருவாக்குபவர் இராவணன், அவருடைய உருவத்தை வருடா வருடம் எரிக்கின்றனர். ஒருமுறை எரிந்து விட்டால் பிறகு அவருடைய கொடும்பாவியை பார்க்க முடியாது. அந்த ஆத்மா சென்று மற்றொரு பிறவி எடுக்கிறது, இலட்சணங்கள், உருவம் முதலானவை மாறி விடுகின்றன. இந்த இராவணனை அதே முக சாயலுடன் வருடா வருடம் உருவாக்குகின்றனர், பிறகு எரிக்கின்றனர். உண்மையில் எப்படி சிவ பாபாவுக்கு எந்த சாயல் (தோற்றம்) கிடையாதோ அப்படியே இராவணனுக்கும் எதுவும் கிடையாது. இந்த இராவணன் என்பது விகாரங்கள் ஆகும். தந்தை இதைப் புரிய வைக்கிறார். மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் எதை விரும்புகின்றனர்? பகவான் வருவதே பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக மற்றும் காப்பாற்றுவதற்காக, ஏனென்றால் பக்தியில் துக்கம் அதிகம் இருக்கிறது. சுகம் நொடி பொழுதிற்கானதாக உள்ளது. பாரதவாசிகளுடைய வாழ்க்கை முழுக்க முழுக்க துக்கம் நிறைந்ததாகும். சிலருடைய குழந்தை இறந்து விடுகிறது, சிலர் திவாலாகி விடுகின்றனர், வாழ்க்கையில் துக்கம் நிறைந்தவராக இருக்கிறார் அல்லவா. நான் அனைவரின் வாழ்க்கையையும் சுகம் நிறைந்ததாக ஆக்குவதற்காக வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். தந்தை வந்து புதிய விசயத்தைக் கூறுகிறார், நான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய வந்துள்ளேன் என்று கூறுகிறார். அங்கே(சத்யுகத்தில்) நீங்கள் விகாரத்தில் செல்ல மாட்டீர்கள். அது நிர்விகாரி இராஜ்யம், இது விகாரி இராஜ்யம். உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்யம் வேண்டும் என்றால் அதை தந்தைதான் ஸ்தாபனை செய்கிறார். நரகத்தின் இராஜ்யத்தை இராவணன் ஸ்தாபனை செய்கிறார். ஆக, நீங்கள் சொர்க்கத்திற்கு செல்வீர்களா? வைகுண்டத்தின் மஹாராணி மஹாராஜாவாக உலகின் எஜமான் ஆக ஆவீர்களா? என பாபா கேட்கிறார். இவை ஏதும் வேத சாஸ்திரங்களின் விசயங்கள் அல்ல. ராம் ராம் என்று சொல்லுங்கள், வாசல் தோறும் அலைந்து ஏமாற்றம் அடையுங்கள், கோவில்கள், தீர்த்தங்கள் முதலானவைகளுக்குச் செல்லுங்கள் அல்லது கீதை, பாகவதம் முதலானவைகளை அமர்ந்து படியுங்கள் என்றெல்லாம் தந்தை கூறுவதில்லை. நீங்கள் எவ்வளவுதான் வேத சாஸ்திரங்கள் படியுங்கள், யக்ஞம், ஜபம், தான புண்ணியங்களை செய்யுங்கள் - இவை ஏமாற்றத்தைத்தான் கொடுக்கும். இவைகளின் மூலம் எந்த பிராப்தியும் கிடையாது. பக்தி மார்க்கத்தில் எந்த குறிக்கோளும் இல்லை. நான் உங்களை சொர்க்கத்தின் எஜமானனாக ஆக்க வந்துள்ளேன். இந்த சமயத்தில் அனைவரும் நரகவாசிகளாக உள்ளனர். நீங்கள் நரகவாசிகள் என்று யாரிடமாவது கூறினீர்கள் என்றால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள். உண்மையில் கலியுகம் நரகம் என்றும், சத்யுகம் சொர்க்கம் என்றும் கூறப்படுகிறது. தந்தை வைகுண்டத்தின் இராஜ்யத்தை எடுத்து வந்துள்ளார். சொர்க்கத்தின் எஜமானன் ஆக வேண்டும் என்றால் கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும் என்று கூறுகிறார். முக்கியமான விசயம் அனைத்தும் தூய்மையினுடையது ஆகும். பல மனிதர்கள் நாங்கள் ஒருபோதும் தூய்மையாக இருக்க முடியாது என்று கூறுகின்றனர். அட, உங்களை சொர்க்கத்திற்கு செல்வதற்காக தூய்மையாக்குகிறார். முதலில் சாந்தி தாமத்திற்குத் திரும்பிச் சென்று பிறகு சொர்க்கத்திற்கு வர வேண்டும். தேகத்தை விட்டு விட்டு அசரீரி ஆகி செல்ல வேண்டும், ஆகவே தேகத்தின் மீதிருக்கும் அபிமானத்தை விடுங்கள் என்று அனைத்து தர்மத்தவர்களுக்கும் கூறுகிறார். நான் கிறிஸ்தவன், நான் புத்த சமயத்தவன் என்பதெல்லாம் தேகத்தின் தர்மங்கள். ஆத்மாவோ இனிமையான வீட்டில் வசிப்பதாகும்.

 

ஆக, இப்போது தந்தை கேட்கிறார் - முக்திதாமத்திற்குத் திரும்பச் செல்வோமா? அங்கே நீங்கள் அமைதியில் இருப்பீர்கள். நீங்கள் எப்படி திரும்பிச் செல்ல முடியும் என்று கூறுங்கள்? தந்தையாகிய என்னையும் தமது இனிமையான வீட்டையும் நினைவு செய்யுங்கள். தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விட்டு விடுங்கள். இவர் மாமா, சிற்றப்பா, பெரியப்பா என்ற இந்த தேகத்தின் சம்மந்தங்கள் அனைத்தையும் விடுங்கள். தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். என்னை நினைவு செய்யுங்கள். இது முயற்சி யாகும், நான் வேறு எதுவும் கூறுவதில்லை. சாஸ்திரம் முதலான படித்த அனைத்தையும் விடுங்கள். நான் புதிய உலகிற்காக உங்களுக்கு புதிய வழி கொடுக்கிறேன். ஈஸ்வரனின் கதியும் வழியும் தனிப்பட்டவை என்று கூறப்படுகிறதல்லவா. முக்தி, கதி என்று கூறப்படுகிறது. தந்தை புதிய விசயங்கள் கூறுகிறார் அல்லவா. கேட்கும்போது மனிதர்களும் இங்கே புதிய விசயங்கள் உள்ளன என்று கூறுகின்றனர். சாஸ்திரங்களின் விசயம் ஏதும் இல்லை. கீதையின் விசயம்தான், ஆனால் மனிதர்கள் கீதையைக் கூட தவறாக்கி விட்டார்கள். நான் கீதையின் புத்தகம் முதலானவைகளை எதுவும் எடுப்பதில்லை. அது பிற்காலத்தில் உருவாகிறது. நான் உங்களுக்கு ஞானத்தைக் கூறுகிறேன். நீங்கள் எனது செல்லமான குழந்தைகள் என்று ஒருபோதும் வேறு யாரும் கூறமாட்டார்கள். இதை பரமபிதா பரமாத்மாதான் கூறுகிறார். நிராகார ஆத்மாக்களுடன் பேசுகிறார். ஆத்மா கேட்கிறது. இந்த சரீரம் கர்மேந்திரியங்களாகும். இந்த விசயத்தை ஒருபோதும் யாரும் புரிந்து கொள்வதில்லை. அந்த மனிதர்கள், மனிதர்களுக்கு கூறுகின்றனர், இந்த பரமாத்மா அமர்ந்து ஆத்மாக்களுக்கு கூறுகிறார். ஆத்மாக்களாகிய நாம் இந்த காதுகளின் மூலம் கேட்கிறோம். பரமபிதா பரமாத்மா அமர்ந்து புரிய வைக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். மனிதர்கள் இது குறித்து ஆச்சரியப்படுகின்றனர் - பகவான் எப்படி புரிய வைப்பார்? அவர்கள் கிருஷ்ண பகவான் மஹாவாக்கியம் என்று புரிந்து கொள்கின்றனர். அட, கிருஷ்ணர் தேகதாரியாக இருந்தார். நான் தேகதாரி அல்ல, நான் தேகமற்றவன், மற்றும் தேகமற்ற ஆத்மாக்களுக்குக் கூறுகிறேன். ஆக இந்த புதிய விசயங்களை கேட்பதன் மூலம் மனிதர்கள் வியப்படைந்து விடுகின்றனர். கல்பத்திற்கு முன்பு கேட்டுச் சென்ற குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கிறது, படிக்கின்றனர், மம்மா பாபா என்கின்றனர். இதில் குருட்டு நம்பிக்கையின் விசயம் எதுவும் இருக்க முடியாது. லௌகிக முறையில் கூட குழந்தைகள் தாய் தந்தையரை தாய் தந்தை என்று கூறுகின்றனர். இப்போது நீங்கள் அந்த லௌகீக தாய் தந்தையரின் நினைவை விட்டு பரலௌகீக தாய் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே! இப்போது விஷத்தின் கொடுக்கல், வாங்கலை விடுங்கள். இந்த பரலோக தாய், தந்தை உங்களுக்கு அமிர்தத்தை கொடுப்பது வாங்குவதை கற்றுத் தருகிறார். நான் உங்களுக்கு கொடுக்கக் கூடிய படிப்பை (ஞானத்தை) ஒருவர் பிறருக்கு கற்றுக் கொடுத்தீர்கள் என்றால் சொர்க்கத்தின் எஜமானன் ஆகி விடுவீர்கள். சிறிதே கேட்டாலும் கூட சொர்க்கத்தில் வந்து விடுவார்கள். ஆனால் பிறரை தமக்குச் சமமாக ஆக்க முடியவில்லை என்றால் சென்று தாச தாசிகள் ஆகி விடுவீர்கள். தாச தாசிகளிலும் கூட வரிசைக்கிரமமாக இருக்கின்றனர். குழந்தைகளை கவனித்துக் கொள்ளக்கூடிய தாச தாசிகள் கண்டிப்பாக நல்ல நிலையில் இருப்பார்கள். இங்கே இருந்தபடி படிக்கவில்லை என்றால் தாச தாசிகள் ஆகிவிடுகின்றனர். பிரஜைகளிலும் வரிசைக்கிரமமாக இருப்பார்கள். நல்ல விதமாக படிப்பவர்கள் இவ்வளவு உயர்ந்த பதவியை அடைகின்றனர். பிரஜைகளில் பணக்காரர்களின் தாச தாசிகளும் இருப்பார்கள். ஒவ்வொருவரும் தம் முகத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் நான் என்னவாக ஆகத் தகுதி வாய்ந்தவனாக உள்ளேன்? பாபாவிடம் யாராவது கேட்டால் பாபா உடன் கூறி விடுவார். தந்தை அனைத்தும் அறிவார், மேலும் இன்ன காரணத்தினால் நீங்கள் இதுவாக ஆவீர்கள் என்று நிரூபித்துக் கூறுவார். சமர்ப்பணம் ஆனவருக்கும் கணக்கு வழக்கு உண்டு. சமர்ப்பணம் ஆனார்கள், ஆனால் சேவை எதுவும் செய்யாமல் சாப்பிட்டு, குடித்தபடி இருந்து விட்டால் கொடுத்ததை சாப்பிட்டே அழித்து விடுகிறார்கள். கொடுத்ததை சாப்பிட்டார், சேவை செய்யவில்லை என்றால் மூன்றாம் வகுப்பு தாச தாசியாக சென்று ஆகிவிடுவார்கள். ஆம், சேவை செய்கிறார்கள், சாப்பிடுகிறார்கள் என்றால் அது சரியே. வேலை எதுவும் செய்யவில்லை என்றால் சாப்பிட்டு சாப்பிட்டு முடித்து விடுகின்றனர், பிறகு இன்னமும் சுமை ஏறி விடுகிறது. இங்கே இருக்கின்றனர், கொடுத்ததை சாப்பிட்டார்கள். கொடுக்கவில்லை என்றாலும் சேவை நிறைய செய்கிறார்கள் என்றால் அவர்கள் உயர் பதவி அடைந்து விடுகின்றனர். மம்மா கூட பணம் எதுவும் கொடுக்கவில்லை, ஆனால் மிகவும் உயர்ந்த பதவி அடைகிறார், ஏனென்றால் பாபாவின் ஆன்மீக சேவை செய்கிறார். கணக்கு உள்ளது அல்லவா! நாம் அனைத்தும் கொடுத்தோம், சமர்ப்பணம் ஆகினோம் என்று பலருக்கு போதை உள்ளது. ஆனால் சாப்பிடவும் செய்கின்றனர் அல்லவா. பாபா அனைத்து உதாரணங்களும் கூறுகிறார். சேவை செய்யவில்லை, சாப்பிட்டார்கள், முடித்து விட்டனர். யார் தூங்கினார்களோ அவர்கள் இழந்தார்கள் என்று கூறுகின்றனர் அல்லவா! 8 மணி நேரம் சேவை செய்யா விட்டால் உண்ணும் உணவு பாவப்பட்டதாகி விடுகிறது. சாப்பிட்டபடி இருந்தால் சேமிப்பு எதுவும் ஏற்படாது, பிறகு சேவை செய்ய வேண்டி இருக்கும். தந்தை அனைத்தையும் சொல்ல வேண்டி இருக்கிறது அல்லவா, எங்களுக்கு ஏன் முன்பே சொல்லவில்லை என்று யாரும் சொல்லக் கூடாது. (பிரம்மா) பாபா அனைத்தும் கொடுத்தார், மேலும் பிறகு சேவையும் செய்தபடி இருக்கிறார், எனும்போது உயர் பதவியும் உண்டு. சமர்ப்பணம் ஆனார்கள், பிறகு அமர்ந்து சாப்பிட்டார்கள், சேவை செய்யவில்லை என்றால் என்னவாக ஆவார்கள்? ஸ்ரீமத்படி நடப்பதில்லை. பாபா குறிப்பாக புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். என்னுடைய பதவி ஏன் இப்படி ஆகி விட்டது? என்று கடைசியில் சொல்லக் கூடாது. ஆக, பாபா புரிய வைக்கிறார் - சேவை செய்யாமலிருப்பது, இலவசமாக சாப்பிடுவது - இதன் விளைவு கல்பம் தோறும் இப்படி ஆகி விடும், ஆகையால் பாபா எச்சரிக்கை கொடுக்கிறார். கல்பம்தோறும் நம்முடைய பதவி கீழானதாக ஆகி விடும் என்று புரிந்து கொள்ள வேண்டும். பாபாவுக்கு இரக்கம் ஏற்படுகிறது, ஆகையால் அனைத்து விசயங்களிலும் விழிப்புணர்வு கொடுக்கிறார். சேவை செய்யவில்லை என்றால் உயர் பதவி அடைய முடியாது. இல்லற விசயங்களில் இருந்தபடி சேவை செய்பவர்களின் பதவி மிகவும் உயர்ந்ததாகும்.

 

அனைத்திற்கும் ஆதாரம் படிப்பதிலும் படிக்க வைப்பதிலும் உள்ளது. நீங்கள் பிராமணர்கள். நீங்கள் உண்மையான கீதையைக் கூற வேண்டும். அவர்கள் (லௌகிக பிராமணர்கள்) இடுப்பில் சாஸ்திரங்களை சொருகி வைத்துள்ளனர். உங்களிடம் அப்படி எதுவுமில்லை. நீங்கள் உண்மையான பிராமணர்கள். நீங்கள் உண்மையைக் கூற வேண்டும், உண்மையான பிராப்தியை செய்விக்க வேண்டும், மற்ற அனைவரும் நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தினார்கள், ஆகையால் அவையனைத்தும் பொய் என்று எழுதப் படுகிறது. பாபா உண்மையைச் சொல்லி உண்மையான கண்டத்திற்கு எஜமான் ஆக்குகிறார். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயம் ஆகும். உலகத்திற்கு எஜமானன் ஆவது என்பது சிறிய விசயமா என்ன! புத்திசாலியாக உள்ள குழந்தைகள் திட்டமிட்டபடி இருப்பார்கள் -நாம் தங்க செங்கற்களால் இப்படியெல்லாம் வீடு கட்டுவோம், இதை செய்வோம்.... பணக்காரரின் பிள்ளை பெரியவராகும்போது அவர்களது சிந்தனை ஓடியபடி இருக்கும் - நாம் இப்படி செய்வோம், இதை உருவாக்குவோம்..... நீங்களும் எதிர்காலத்தில் இளவரசர் ஆகிறீர்கள் என்றால் ஆர்வம் இருக்கும் அல்லவா - நாம் இப்படி இப்படி மாளிகைகளைக் கட்டுவோம். இந்த ஆர்வம் பிறரிடம் இருக்காது. யார் நல்ல விதமாக படித்து, பிறரையும் படிக்க வைக்கின்றனரோ அவர்களுடைய சிந்தனை இப்படி இருக்கும். இராஜ்யம் ஏற்படப் போகிறதல்லவா! ஆக, நாம் எந்த வரிசை எண்ணிக்கையில் தேர்ச்சி அடையப் போகிறோம் என்று புத்தியில் சிந்தனை ஓட்ட வேண்டும். இது மிகப் பெரிய பாடசாலையாகும், இதில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் படிப்பார்கள், அதிக அளவில் வருவார்கள். இந்த அனைத்து விசயங்களையும் தந்தைதான் அமர்ந்து புரிய வைக்கிறார். பகவான் ஒருவர் தான், அவரையே தாய்-தந்தை என்று கூறுகின்றனர், அவர் வந்து தத்தெடுக்கிறார். எவ்வளவு ஆழமான விசயங்கள். இது புதிய பாடசாலை. புதிய விசயங்களை படிப்பிக்கக் கூடியவர். எவ்வளவு நல்ல விதமாகப் புரிய வைக்கிறார். யார் தகுதி வாய்ந்தவர்களாக, தந்தையை நினைவு  செய்பவர்களாக இருப்பார்களோ அவர்களுடைய பை(புத்தி) நிரம்பும். தாய் தந்தையை யாரும் மறப்பதில்லை. பிறகு சங்கம யுகத்தின் குழந்தைகள் எப்படி மறக்க முடியும்? நல்லது.

 

உலகம் சண்டை சச்சரவில் உள்ளது மற்றும் குழந்தைகளாகிய நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். அமைதியில் உள்ளது சாந்தி, சாந்தியில் உள்ளது சுகம். முக்திக்குப் பிறகு ஜீவன் முக்தி உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இரண்டு வார்த்தைகள் நினைவில் இருக்கிறது அல்லா (இறைவன்) மற்றும் ஆஸ்தி (இராஜ்யம்). ஒரு இறைவனை நினைவு செய்வதன் மூலம் இராஜ்யம் கிடைத்து விட்டது. வேறு என்ன மீதி இருந்தது? மீதி இருந்தது மோர் தான். இறைவன் கிடைத்தார் என்றால் வெண்ணெய் கிடைத்தது. மற்ற அனைத்தும் மோர். அப்படித் தான் அல்லவா? நாம் அமைதியாக இருக்கிறோம். அமைதியாக இருந்து ஸ்ரீமத்படி நடக்கிறோம் என்பது தெரியும். ஆனால் குழந்தைகள் தந்தையைக் கூட முழுமையாக நினைவு செய்வதில்லை, மறந்து விடுகின்றனர். மாயை புயலைக் கொண்டு வருகிறது. தந்தையும் கூறுகிறார் - மன்மனாபவ, மத்யாஜிபவ. கீதையில் வார்த்தைகள் உள்ளன. ஆக, கீதை படிப்பவர்களிடம் அர்த்தம் கேட்க வேண்டும் - மன்மனாபவ, மத்யாஜிபவ என்றால் என்ன? என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு இராஜ்யம் கிடைக்கும் என்று தந்தை கூறுகிறார். அனைத்து தேகங்களின் தர்மங்களையும் விட்டு ஆத்மா ஆகிவிடுங்கள், மேலும் தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் இராஜ்யம் கிடைக்கும். இறைவனை ஜபித்தால் இராஜ்யம் கிடைக்கும் என்று கிரந்தங்களில் கூட கூறுகின்றனர். உண்மையான கண்டத்தின் இராஜ்யம் கிடைக்கிறது. நாம் உலகிலிருந்து தனிப்பட்டவர்கள், வேறு யாரும் இப்படி யாரும் கூற மாட்டார்கள். தந்தை உங்களுக்கு புதிய விஷயங்களைக் கூறுகிறார், மற்ற அனைவரும் பழைய விஷயங்களைத்தான் கூறுகின்றனர். விஷயம் மிகவும் சகஜமானதுதான். தந்தையுடையவர் ஆனீர்கள் என்றால் இராஜ்யம் கிடைக்கும். ஆனாலும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. தமக்குச் சமமாக ஆக்கக்கூடிய சேவை எவ்வளவு செய்கிறீர்களோ அவ்வளவு பலன் கிடைக்கும். மனிதர்களுக்கு தந்தையையும் தெரியாது, ஆஸ்தி பற்றியும் தெரியாது. ஆஸ்தி என்றால் இராஜ்யத்தின் வெண்ணெய். கிருஷ்ணரின் வாயில் வெண்ணெய் காட்டுகின்றனர் அல்லவா. கண்டிப்பாக சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர்தான் இராஜ்யத்தை கொடுத்திருக்க வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளூக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இனிமையான வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும், ஆகையால் தேகத்தின் தர்மங்கள் மற்றும் சம்மந்தங்களை மறந்து தன்னை ஆத்மா என புரிந்து கொள்ள வேண்டும். இந்த பயிற்சியிலேயே இருக்க வேண்டும்.

 

2. தந்தையிடமிருந்து கிடைத்த படிப்பை (ஞான அமிர்தம்) பிறருக்கும் கொடுக்க வேண்டும், தனக்குச் சமமாக ஆக்க வேண்டும். கண்டிப்பாக 8 மணி நேரம் சேவை செய்ய வேண்டும்.

 

வரதானம் :

திருஷ்டி மூலம் சக்தி பெறக் கூடிய மற்றும் சக்தி தரக் கூடிய மகாதானி , வரதானி மூர்த்தி ஆகுக .

 

இன்னும் போகப்போக, வாய்மொழி மூலம் சேவை செய்வதற்கான சமயம், சூழ்நிலை இல்லாது போகும் போது வரதானி, மகாதானி திருஷ்டி மூலம் தான் சாந்தியின் சக்தி, அன்பு, சுகம் மற்றும் ஆனந்தத்தின் சக்தியை அனுபவம் செய்விக்க முடியும். எப்படி ஜடமூர்த்திகளுக்கு முன்னால் செல்லும் போது முகத்தின் மூலம் வைப்ரேஷன் கிடைக்கிறது. கண்கள் மூலம் தெய்விகத் தன்மையின் அனுபவம் ஏற்படுகிறது. ஆக, நீங்கள் எப்போது சைதன்யத்தில் இந்த சேவை செய்திருக்கிறீர்களோ, அப்போது ஜடமூர்த்திகள் உருவாகிவிட்டன. ஆகவே திருஷ்டி மூலம் சக்தி பெறுவதற்கான மற்றும் கொடுப்பதற்கான அப்பியாசம் செய்வீர்களானால் மகாதானி, வரதானி மூர்த்தி ஆவீர்கள்.

 

சுலோகன் :

முகத்தோற்றத்தில் (features) சுகம்-சாந்தி மற்றும் குஷியின் ஜொலிப்பு இருக்குமானால் அநேக ஆத்மாக்களின் வருங்காலத்தை (Future) உயர்ந்ததாக உங்களால் உருவாக்க முடியும்.

 

ஓம்சாந்தி