24.12.2018 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
அமைதியாக
இருந்து
என்னை
நினைவு
செய்யுங்கள்
என்ற
எளிதான வசீகரிக்கும்
மந்திரம்
சத்குருவிடமிருந்து
உங்களுக்கு
கிடைத்திருக்கிறது.
இது
தான்
மாயாவை அடிமையாக்கும்
மகா
மந்திரமாகும்.
கேள்வி:
சிவபாபா
தான்
அனைவரையும்
விட
மிகவும்
கள்ளங்கபடமற்ற
வாடிக்கையாளராக
இருக்கிறார்
-
எப்படி?
பதில்:
பாபா
கூறுகிறார்
-
குழந்தைகளே!
உங்களிடம்
தேக
சகிதமாக
என்னவெல்லாம்
பழைய
குப்பைகள் இருக்கிறதோ
அதை
நான்
எடுத்துக்
கொள்கிறேன்.
அதுவும்
நீங்கள்
இறக்கும்
தருவாயில்
இருக்கிற
பொழுது.
உங்களது
வெள்ளை
ஆடையும்
இறந்ததன்
அடையாளமாகும்.
நீங்கள்
இப்பொழுது
தந்தையிடம்
பலியாகியிருக்கிறீர்கள்.
பிறகு
தந்தை
உங்களை
21
பிறவிகளுக்கு
செல்வந்தர்களாக
ஆக்கிவிடுகிறார்.
பக்தி
மார்க்கத்திலும் தந்தை
அனைவரின்
மன
ஆசைகளையும்
நிறைவேற்றுகிறார்,
ஞான
மார்க்கத்திலும்
சிருஷ்டியின்
முதல்,
இடை,
கடையின்
ஞானம்
கொடுத்து
திரிகாலதரிசி
ஆக்குகிறார்.
பாட்டு:
கள்ளங்கபடமற்றவராக
மற்றும்
தனிப்பட்டவராக
இருக்கிறார்
.....
ஓம்சாந்தி.
குழந்தைகள்
கள்ளங்கபடமற்றவரின்
எதிரில்
அமர்ந்திருக்கிறீர்கள்.
ஓராயிரம்,
இரண்டாயிரத்திற்கான பொருட்களை
எடுத்துக்
கொண்டு
நமக்கு
அதிக
செல்வங்களைக்
கொடுத்துச்
செல்லும்
குறைந்த
புத்தியுடைய கள்ளங்கபடமற்றவர்கள்
இருக்க
வேண்டும்
என்று
வியாபாரிகள்
கூறுகின்றனர்.
ஹே
பகவான்,
எனக்கு
அப்படிப்பட்ட வாடிக்கையாளரை
சந்திக்கச்
செய்வியுங்கள்.
இப்பொழுது
போலாநாத்
தந்தை
வந்து
குழந்தைகளுக்கு
முதல்,
இடை,
கடையின்
ரகசியத்தைப்
புரிய
வைத்து
திரிகாலதரிசிகளாக
ஆக்கிக்
கொண்டிருக்கிறார்.
என்னைப்
போன்ற
வாடிக்கையாளர்
உங்களுக்கு
வேறு
எப்போதாவது
கிடைப்பாரா?
நீங்கள்
அவருக்கு
அர்ப்பணிக்கிறீர்கள்,
பக்தி
மார்க்கத்தில் அதிக
மகிமை
செய்கின்றனர்.
போலாநாத்தின்
மகிமை
-
தாயும்
நீயே,
தந்தையும்
நீ
.......
அவர்
வந்து
இராஜயோகம் கற்பிக்கிறார்,
இராஜ்யம்
கொடுக்கிறார்.
இந்த
பழைய
குப்பைகளை
நாங்கள்
உங்களுக்கு
பலி கொடுக்கிறோம்
என்று தந்தையிடம்
கூறுகிறீர்கள்.
நீங்கள்
நமக்கு
21
பிறவிகளுக்கு
செல்வந்தர்களாக
ஆக்குகிறீர்கள்.
வெள்ளி,
பொன் வியாபாரிகள்
ஒப்பந்தம்
செய்து
கொள்வர்
அல்லவா!
தரகுக்
கூபெறுவர் அல்லவா!
தேக
சகிதமாக
உங்களிடம் என்ன
குப்பைகள்
உள்ளனவோ
அவைகளைப்
பெற்றுக்
கொள்கிறேன்,
அதுவும்
நீங்கள்
இறக்கும்
தருவாயில் என்று
இவரும்
கூறுகிறார்.
இங்கு
பிரம்மா
குமாரிகளாகிய
உங்களது
ஆடையும்
வெள்ளையாக
இருக்கிறது.
நீங்கள் இறந்ததாக
ஆகிவிட்டீர்கள்.
இறக்கின்றவர்
மீது
வெள்ளை
துப்பட்டி
போடுகின்றனர்.
எந்த
கரையும்
இருக்கக் கூடாது.
இந்த
நேரத்தில்
அனைவருக்கும்
மாயையின்
கருப்பு
கறை
பட்டிருக்கிறது.
இது
தான்
ராகு
கிரஹணம் என்று
கூறப்படுகிறது.
சந்திரனுக்கும்
கிரஹணம்
ஏற்படுவதன்
மூலம்
கலை
குறைந்து
விடுகிறது.
ஆக
இந்த மாயையின்
கிரஹணமும்
கூட
முழு
உலகையும்
கருப்பாக்கி
விடுகிறது.
இதில்
தத்துவங்கள்
அனைத்தும்
வந்து விடுகிறது.
இது
உங்களது
இராஜயோகம்
ஆகும்
என்று
தந்தை
வந்து
புரிய
வைக்கின்றார்.
இராஜயோகத்தின்
மூலம் சொர்க்க
இராஜ்யம்
பிராப்தியாகக்
கிடைக்கிறது.
நீங்கள்
இராஜாவிற்கெல்லாம்
இராஜாவாக
ஆகிறீர்கள்,
நாராயண போதை
இருக்கிறது.
நரனிலிருந்து நாராயணனாக
ஆகிறீர்கள்.
லெட்சுமி
நாராயணனின்
இராஜ்யம்
சத்யுகத்தில் இருக்கும்.
ஆக
கண்டிப்பாக
நான்
கடைசியில்
வர
வேண்டியிருக்கும்.
இது
பக்தி
மார்க்கத்தின்
நேரமாகும்.
பக்தி மார்க்கத்தின்
ஒவ்வொரு
வாசல்
வாசலாகச்
(கோயில்)
சென்று
தலைவணங்குகின்றனர்,
தள்ளு
முள்ளில்
அகப்பட்டுக் கொள்கின்றனர்.
பக்தர்களைக்
காப்பாற்றுபவர்
பகவான்,
வந்து
பக்தியின்
பலனைக்
கொடுக்கிறார்.
அனைவரும் பக்தர்கள்
தான்,
ஆனால்
அனைவருக்கும்
ஒன்று
போல்
பலன்
கிடைப்பது
கிடையாது.
அற்ப
காலத்திற்கு
சிலருக்கு சாட்சாத்காரம்
கிடைக்கிறது,
சிலருக்கு
குழந்தை
கிடைக்கிறது.
விதவிதமான
மனோ
ஆசைகள்
நிறைவேறுகின்றன.
பகவான்
இராஜயோகம்
கற்பிப்பதற்காக
வந்திருக்கிறார்
என்பது
உலகில்
யாருக்கும்
தெரியாது.
அவர்
துவாபரத்தில் வந்து
இராஜயோகம்
கற்பித்திருப்பார்
என்று
நினைக்கின்றனர்.
பிறகு
அங்கு
நரனிலிருந்து நாராயணனாக
எப்படி ஆவார்கள்?
இப்பொழுது
தான்
தந்தை
உங்களுக்கு
இராஜயோகம்
கற்பித்து
இராஜாவிற்கெல்லாம்
இராஜாவாக ஆக்குகின்றார்.
இங்கு
நீங்கள்
அமைதியாக
இருந்தால்
போதும்.
மன்மனாபவ,
இது
தான்
சத்குருவின்
எளிய
வசீகர மந்திரமாகும்.
இந்த
மந்திரத்தில்
அதிக
லாபம்
இருக்கிறது.
மாயாவை
தனக்கு
அடிமையாக
ஆக்கும்
மந்திரம்
இது வாகும்.
மாயாஜீத்
ஜெகத்ஜீத்.
பக்தி
மார்க்கத்தில்
உள்ளவர்
மன்ஜீத்,
ஜெகத்ஜீத்
என்பதாகும்,
இதற்காக
அவர்கள் ஹடயோகம்
போன்றவைகள்
செய்கின்றனர்.
அதுவும்
ஜெகத்ஜீத்
ஆவதற்காக
கிடையாது.
அவர்கள்
முக்திக்காக செய்கின்றனர்.
தந்தை
வந்து
கூறுகின்றார்
-
குழந்தைகளே!
தேக
சகிதமாக,
அனைத்து
தர்மத்தினர்களுக்கும்
......
நான்
இந்த
தர்மத்தைச்
சார்ந்தவன்,
இன்னாராக
இருக்கிறேன்.
இவையனைத்தையும்
விடுத்து
தன்னை
ஆத்மா என்று
உணர்ந்து
என்
ஒருவனை
நினைவு
செய்யுங்கள்.
அவ்வளவு
தான்,
நான்
என்ன
வழி
கொடுத்துக் கொண்டிருக்கிறேனோ
அதன்
படி
நடங்கள்.
மற்றபடி
இதுவரை
எந்த
வழிப்படி
நடந்து
வந்தீர்களோ
அந்த அனைத்து
வழிகளையும்
விட்டு
விடுங்கள்.
ஆக
உங்களது
ஞானம்
முற்றிலும்
புதிதாக
ஆகிவிடுகிறது.
இவர்களது விசயங்கள்
புதிதாக
இருக்கிறது
என்று
நினைக்கின்றனர்.
குழந்தைகளாகிய
நீங்கள்
யாருக்காவது
புரிய
வைக்கிறீர்கள்
எனில்
முதலில் அவர்களது
நாடி
பார்க்க வேண்டும்.
அனைவரிடத்திலும்
ஒரே
மாதிரியாகப்
பேசி
விடக்
கூடாது.
மனிதர்களிடத்தில்
பல
வழிகள்
உள்ளன.
உங்களிடம்
இருப்பது
ஒரே
வழியாகும்.
ஆனால்
வரிசைக்கிரமமாகும்.
யார்
நன்றாக
யோகாவில்
இருக்கிறார்களோ,
தாரணை
செய்கிறார்களோ
அவர்கள்
அவசியம்
நன்றாகப்
புரிய
வைப்பார்கள்.
குறைவாக
தாரணை
செய்பவர்கள் குறைவாகப்
புரிய
வைப்பார்கள்.
யாராக
இருந்தாலும்
ஒரே
ஒரு
எளிய
விசயத்தை
புரிய
வையுங்கள்
–
இல்லறத்தில் இருங்கள்,
ஆனால்
தாமரை
மலர்
போன்று
இருங்கள்.
தாமரை
மலருக்கு
குழந்தை
குட்டிகள்
பலர்
இருக்கின்றனர் என்பது
உங்களுக்குத்
தெரியும்.
மேலும்
அது
தான்
உதாரணமாகக்
கொடுக்கப்படுகிறது.
தந்தைக்கும்
பல
குழந்தைகள் இருக்கின்றனர்.
தாமரை
மலர்
தண்ணீரின்
மேல்
இருக்கிறது,
அதன்
குழந்தைகள்
தண்ணீரின்
அடியில்
இருக்கிறது.
இந்த
உதாரணம்
மிக
நன்றாக
இருக்கிறது.
இல்லறத்தில்
இருந்தாலும்
தூய்மையாக
இருங்கள்
என்று
பாபா கூறுகின்றார்.
இந்த
விசயம்
தூய்மைப்
பற்றியதாகும்.
அதுவும்
இந்த
கடைசி
வாழ்க்கையில்
தூய்மையாக
இருந்து என்னை
நினைவு
செய்யுங்கள்.
படைப்புகளையும்
அவசியம்
பாலனையும்
செய்ய
வேண்டும்.
இல்லையெனில் ஹடயோகம்
ஆகிவிடும்.
உலகில்
தூய்மையாக
பலர்
இருக்கின்றனர்.
பால
பிரம்மச்சாரிகள்
பீஷ்ம
பிதாமாவைப் போன்று
ஆகிவிட்டனர்.
பால
பிரம்மச்சாரி
என்றால்
கணவன்-மனைவி
சேர்ந்திருந்தாலும்
தூய்மையாக
இருப்பதாகும்.
கந்தர்வ
திருமணம்
பற்றிய
விசயம்
சாஸ்திரங்களிலும்
இருக்கிறது.
ஆனால்
யாரும்
அறியவில்லை.
இதை
தந்தை தான்
புரிய
வைக்கின்றார்.
பாபா
கூறுகின்றார்
-
குழந்தைகளே!
இப்பொழுது
காமச்
சிதைக்குப்
பதிலாக
இருவரும் ஞானச்
சிதைக்கான
கங்கனம்
கட்டிக்
கொள்ளுங்கள்.
பிராமணர்களாகிய
நீங்கள்
எப்படிப்பட்ட
நல்ல
காரியங்களை செய்கிறீர்கள்!
தூய்மைக்கான
உறுதிமொழி
எடுக்க
வேண்டும்.
ஒருவருக்கொருவர்
எச்சரிக்கை
செய்து
கொண்டால் நீங்கள்
இருவரும்
சொர்க்கத்திற்குச்
சென்று
விடுவீர்கள்.
இங்கு
இருவரும்
தூய்மையாக
இருந்து
காண்பிக்கிறீர்கள்.
ஆகையால்
நீங்கள்
மிக
உயர்ந்த
பதவி
அடைய
முடியும்.
உதாரணம்
காண்பிக்கப்படும்
அல்லவா!
ஞானச் சிதையில்
அமர்ந்து
சொர்க்கத்திற்குச்
சென்று
உயர்ந்த
பதவி
அடைகிறீர்கள்.
இதில்
தைரியம்
தேவை,
பக்காவாக ஆகி
முன்னேறிக்
கொண்டே
இருந்தால்
உயர்ந்த
பதவி
கிடைக்கும்.
பிறகு
சேவையும்
ஆதாரமாக
இருக்கிறது.
யார்
அதிக
சேவை
செய்வார்களோ,
பிரஜைகளை
உருவாக்குவார்களோ
அவர்கள்
பதவியும்
நன்றாக
அடைவார்கள்.
பாபா,
மம்மாவை
விட
உயர்வாகச்
சென்று
விட
வேண்டும்.
அந்த
இரண்டு
கிறிஸ்தவர்களும்
ஒன்றாகி
விட்டால் உலகிற்கே
எஜமானர்களாக
ஆகிவிடுவர்
என்று
பாபா
கூறுவது
போன்று,
அந்த
மாதிரியான
ஜோடி
யாராவது
தாய் தந்தையை
விட
உயர்ந்த
நிலை
அடைய
வேண்டும்,
ஆனால்
அவ்வாறு
யாரும்
இல்லை.
ஜெகதம்பா,
ஜெகத்பிதா தான்
பிரபலமானவர்களாக
இருக்கின்றனர்.
இவர்களைப்
போன்று
சேவை
செய்ய
முடியாது.
இவர்கள்
நிமித்தமாக இருக்கின்றனர்,
ஆகையால்
ஒருபொழுதும்
மனம்
உடைந்து
போய்விடக்
கூடாது.
சரி,
மம்மா
பாபாவைப்
போன்று இல்லை
யென்றாலும்
இரண்டாம்
நம்பராக
ஆக
முடியும்
அல்லவா!
சேவை
தான்
ஆதாரமாகும்.
பிரஜை
மற்றும் வாரிசுகளை
உருவாக்க
வேண்டும்.
ஆக
நமது
இந்த
விசயம்
புதியது
ஆகும்.
புது
உலகைப்
படைப்பதற்கு
தந்தை அவசியம்
வர
வேண்டியிருக்கிறது.
அவர்
தான்
படைப்பவர்
ஆவார்.
பரமாத்மா
பெயர்,
உருவத்திலிருந்து விடுபட்டவர் என்று
அவர்கள்
கூறிவிட்டனர்.
ஆனால்
அவ்வாறு
கிடையாது.
அது
அவர்களது
குற்றமும்
கிடையாது.
அதிர்ஷ்டம் இருந்தால்
புரிந்து
கொள்வர்.
தந்தை
என்பது
சரி
தான்
என்று
பலர்
வந்து
புரிந்து
கொள்கின்றனர்.
சிலர் ஆத்மாவிற்குப்
பெயர்,
உருவம்
கிடையாது
என்று
கூறுகின்றனர்.
பிறகு
ஆத்மா
என்ற
பெயர்
எதனுடையது?
ஆத்மா
என்று
பெயர்
இருக்கிறது
அல்லவா!
இது
இராஜயோகம்
என்று
நீங்கள்
அனைவருக்கும்
கூறுங்கள்.
பரம்பிதா
பரமாத்மா
சங்கமத்தில்
வருகிறார்,
இராஜயோகத்தை
அவசியம்
சங்கமயுகத்தில்
தான்
கற்பிப்பார்,
அப்பொழுது தான்
தூய்மை
இல்லாததிலிருந்து
தூய்மை
ஆக்க
முடியும்.
ஆக
இங்கிருக்கும்
விசயம்
தனிப்பட்டது
ஆகும்.
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
கொண்டால்
போதும்
என்று
தந்தை
கூறுகின்றார்.
தந்தையிடம்
செல்ல
வேண்டும்.
இதில்
கேள்வி
கேட்க
வேண்டிய
அவசியமே
இல்லை.
எனது
ஆத்மாவை
துக்கப்படுத்தாதீர்கள்,
இவர்
பாவ ஆத்மா,
புண்ணிய
ஆத்மா.
என்று
கூறுகின்றனர்.
ஆத்மாவிற்கு
எந்த
ரூபமும்
கிடையாது
என்று
யாரும்
கூற முடியாது.
விவேகானந்தர்
இராம
கிருஷ்ணரின்
எதிரில்
அமர்ந்த
பொழுது
அவருக்கு
சாட்சாத்காரம்
ஏற்பட்டது,
ஒளி
வந்து
தன்னிடத்தில்
பிரவேசமானதைப்
பார்த்தார்.
இவ்வாறு
சில
விசயங்களைக்
கூறுகின்றனர்.
நம்முடையது இராஜயோகம்
என்று
நீங்கள்
கூறுங்கள்.
இதில்
தேக
சகிதமாக
தேகத்தின்
அனைத்து
உற்றார்
உறவினர்களையும் மறக்க
வேண்டும்,
நான்
ஆத்மா
அவரது
குழந்தை,
தங்களுக்குள்
சகோதரர்களாக
இருக்கிறோம்.
ஒருவேளை அனைவரும்
தந்தைமார்களாக
ஆகிவிட்டால்
(ஸ்தூல)
தந்தை
தான்
தந்தையிடம்
(பரமபிதா
பரமாத்மாவிடம்)
பிரார்த்தனை
செய்கின்றனர்.
இப்பொழுது
நாம்
இராஜயோகம்
கற்றுக்
கொண்டிருக்கிறோம்.
இது
இராஜாவிற்கெல்லாம் இராஜா
ஆகக்
கூடிய
யோகா
ஆகும்.
இப்பொழுது
இராஜ்யமே
கிடையாது.
ஆக
நாம்
அமைதியாக
இருந்து சிவபாபாவை
மட்டும்
நினைவு
செய்கிறோம்
என்பதைப்
புரிய
வைக்க
வேண்டும்.
தன்னை
சரீரத்திலிருந்து விடுபட்டதாக
உணர்கிறோம்.
ஒரு
சரீரத்தை
விடுத்து
மற்றொன்றை
எடுக்கிறோம்
என்று
ஆத்மா
கூறுகிறது.
ஆக ஞானத்தின்
சம்ஸ்காரம்
ஆத்மாவில்
இருக்கிறது
அல்லவா!
நல்லதோ
கெட்ட
சம்ஸ்காரமோ
ஆத்மாவில்
இருக்கிறது.
ஆத்மாவில்
எதுவும்
ஒட்டாது
(நிர்லேப்)
என்று
கிடையாது.
இதைப்
புரிய
வைக்க
வேண்டும்.
அடிக்கடி கர்மேந்திரியங்களை
எடுக்க
வேண்டியிருக்கிறது.
ஆத்மா
நட்சத்திரம்
போன்று
இருக்கிறது,
நெற்றியின்
நடுவில் இருக்கிறது.
ஆத்மாவின்
சாட்சாத்காரம்
ஏற்பட்டது
எனில்
இவரிடத்தில்
அதிக
சக்தி
இருக்கிறது
எனக்கு
ஆத்மாவின் சாட்சாத்காரம்
ஏற்படுத்தினார்
என்று
நினைக்கின்றனர்.
ஆத்மா
நெற்றியின்
நடுவில்
இருக்கிறது.
சாட்சாத்காரம் ஏற்பட்டது,
ஏற்படவில்லை
-
என்ன
வித்தியாசம்
இருக்கிறது?
சுயம்
ஆத்மா
கூறுகிறது
நான்
நட்சத்திரம்
போன்று இருக்கிறேன்.
எனக்குள்
84
பிறவிகளுக்கான
நடிப்பு
இருக்கிறது.
ஒருவேளை
84
லட்சம்
பிறப்பு
எனில்
இவ்வளவு சம்ஸ்காரங்கள்
என்ன
ஆகும்?
என்றே
தெரியாது,
84
பிறவிகள்
என்று
ஏற்றுக்
கொள்ள
முடியும்.
இப்பொழுது
நாம் தூய்மை
ஆகிக்
கொண்டிருக்கிறோம்.
பாபா
நம்மை
நரனிலிருந்து நாராயணன்
ஆக்குவதற்காக
தூய்மையாக்கியிருக்கிறார்,
இந்த
போதை
மிக
நன்றாக
இருக்க
வேண்டும்.
நீங்கள்
யாரிடத்திலும்
வாக்குவாதம்
செய்ய
வேண்டிய
அவசியமில்லை.
தேக
சகிதம்
தேகத்தின்
அனைத்து
தர்மத்தையும்
தியாகம்
செய்து
தன்னை
ஆத்மா,
அசரீரி
என்று
புரிந்து கொள்ள
வேண்டும்.
நாம்
சாஸ்திரம்
போன்றவைகளைப்
படித்திருக்கலாம்,
ஆனால்
ஏன்
வாதம்
செய்ய
வேண்டும்?
என்
ஒருவனை
மட்டுமே
நினைவு
செய்யுங்கள்
என்று
தந்தை
கூறியிருக்கிறார்,
மேலும்
அடுத்த
கட்டளையாக இல்லறத்தில்
இருந்தாலும்
தாமரை
மலர்
போன்று
தூய்மையாக
இருங்கள்.
யோக
அக்னியின்
மூலம்
தான் பாவங்கள்
அழியும்.
பகவானின்
மகாவாக்கியம்,
பகவானும்
பரம்
ஆத்மா
ஆவார்.
அவரையும்
நட்சத்திரம்
என்று கூறுகிறோம்.
பல
கருத்துக்கள்
உள்ளன,
ஒரே
நேரத்தில்
கூறி
விட
முடியாது.
ஆசாமியைப்
பார்த்து
யுக்தியாகக்
கூற வேண்டும்.
நாமும்
சாஸ்திரங்கள்
படிக்கிறோம்,
ஆனால்
தந்தையின்
கட்டளை
என்னவெனில்,
அனைத்தையும் மறந்து
என்
ஒருவனை
நினைவு
செய்யுங்கள்
என்பதாகும்
என்று
கூறுங்கள்.
அவர்
நிரகாராக
இருக்கிறார்.
ஆத்மாவை
அனைவரும்
ஏற்றுக்
கொள்வர்.
விவேகானந்தர்
குழுவைச்
சார்ந்தவர்களும்
ஏற்றுக்
கொள்வர்.
அனைவரிடத்திலும்
ஆத்மா
இருக்கிறது.
அவசியம்
அதற்கு
தந்தையும்
இருப்பார்
அல்லவா!
அவர்
தான்
பரம்பிதா பரமாத்மா
என்று
கூறப்படுகிறார்.
இவை
அனைத்தும்
கருத்துக்கள்
அல்லவா!
இதை
சிந்திப்பதன்
மூலம்
சதா கருத்துக்கள்
கிடைத்துக்
கொண்டே
இருக்கும்.
கப்பல்
நிறைந்து
கொண்டே
இருக்கும்.
இவரும்
கூட
அழிவற்ற ஞான
ரத்தினங்களை
நிறைத்துக்
கொள்கிறார்.
கருத்துக்களைக்
குறிப்பெடுத்துக்
கொண்டு
மீண்டும்
படித்துப்
பார்க்க வேண்டும்.
இது
ரத்தினம்
ஆகும்,
இதை
தாரணை
செய்வது
மற்றும்
எழுதுவதில்
ஆர்வம்
இருக்க
வேண்டும்.
நல்ல
முறையில்
மற்றவர்களுக்குப்
புரிய
வைக்க
வேண்டும்.
ஆத்மா
அனைவரிடத்தில்
இருக்கிறது,
அதற்கு பெயர்,
உருவம்
கிடையாது
என்று
யாரும்
கூற
முடியாது.
ஆத்மாவிற்கு
உருவம்
இருக்கிறது
எனில்
பரமாத்மாவிற்கு ஏன்
இருக்காது?
அவர்
பரம்பிதா
பரமாத்மா
என்று
கூறப்படுகிறார்,
பரந்தாமத்தில்
இருக்கக்
கூடியவர்
ஆவார்.
குழந்தைகள்
எவ்வளவு
புரிய
வைக்கப்படுகின்றனர்!
ஆக
இப்பொழுது
சேவை
செய்து
காண்பியுங்கள்.
சேவை செய்பவர்களுக்கு
பாபா
பரிசு
கொடுப்பார்.
ஞான
ரத்தினங்களினால்
எவ்வளவு
அலங்கரிக்கிறார்!
நாம்
இங்கு செல்வந்தர்களாக
ஆக
விரும்புவது
கிடையாது,
நமக்கு
உலக
இராஜ்யம்
தேவை.
நல்லது.
இனிமையிலும்
இனிய,
தேடிக்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாய்
தந்தையுமான பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின்
நமஸ்தே.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1)
ஞான
ரத்தினங்கள்
என்ன
கிடைக்கிறதோ
அதனை
சிந்தனை
செய்து
தனக்குள்
தாரணை செய்ய
வேண்டும்.
ஞான
ரத்தினங்களினால்
சதா
நிறைந்து
இருக்க
வேண்டும்.
2)
தனது
நாராயணி
போதையில்
இருக்க
வேண்டும்.
வீணான
விசயங்கள்
யாரிடத்திலும்
பேசக் கூடாது.
அசரீரி
ஆகக்
கூடிய
பயிற்சி
செய்ய
வேண்டும்.
வரதானம்
:
மாயாவை
எதிரி
என
நினைப்பதற்கு
பதிலாக
பாடத்தை
படிக்க
வைக்கக்கூடிய
சகயோகி என
புரிந்து
கொண்டு
(ஏக்ரஸ்)
நிலையாக
ஒரே
ரசனையில்
(நோக்கத்தில்)
இருக்கக்கூடிய
மாயாவை வென்றவர்
ஆகுக.
மாயா
தங்களுக்கு
பாடம்
சொல்லிக் கொடுப்பதற்காக
வருகிறது.
ஆகவே
பயப்படாதீர்கள்,
பாடம்
படியுங்கள்.
சில
நேரம்
பொறுமை
என்ற
பாடம்,
சில
நேரம்
அமைதி
சொரூபமாக
மாறக்
கூடிய
பாடத்தை
வலிமையாக்குவதற்காக மாயா
வருகிறது.
ஆகவே
மாயையை
எதிரி
என்பதற்கு
பதிலாக
தனது
சகயோகி
என
புரிந்து
கொண்டால்
பயத்தில் தோல்வி
அடைய
மாட்டீர்கள்.
பாடத்தை
உறுதியாக்கிக்
கொண்டு
அங்கதனுக்குச்
சமமாக
அசையாதவராகி
விடுவீர்கள்.
ஒருபோதும்
பலவீனமாகி
மாயையை
அழைக்காவிட்டால்
அது
விடை
பெற்று
விடும்.
சுலோகன்
:
ஒவ்வொரு
எண்ணத்திலும்
உறுதியின்
மகான்
தன்மை
(உயர்வான
உணர்வு)
இருந்தால்
வெற்றி
கிடைத்துக்
கொண்டே
இருக்கும்.
மாதேஸ்வரி
அவர்களின்
இனிய
மகாவாக்கியம்
பரமாத்மாவின்
சக்தி
கொடுப்பதற்கான
நிலை
மற்றும்
வழியை
பரமாத்மாவே
அறிவார் உங்களது
நிலை
மற்றும்
வழியை
நீங்கள்
தான்
அறிவீர்கள்.
இப்போது
இந்த
மகிமையை
யாருடைய நினைவுச்
சின்னத்தின்
முன்பு
பாடுகின்றனர்?
ஏனென்றால்
பரமாத்மாவிடம்
சத்கதி
கொடுப்பதற்கான
என்ன
வழி இருக்கிறதோ
அதையோ
பரமமாத்மாவே
அறிந்திருக்கிறார்.
மனிதர்கள்
தெரிந்து
கொள்ள
முடியாது.
நமக்கு
எப்போதும் சுகம்
வேண்டும்
என்ற
இந்த
ஆசை
மட்டும்
மனிதர்களுக்கு
இருக்கிறது.
ஆனால்
அந்த
சுகம்
எப்படிக் கிடைக்கும்?
எதுவரை
மனிதர்கள்
தங்களது
5
விகாரங்களை
சாம்பலாக்கி,
செயலை
நற்செயலாக
ஆக்கவில்லையோ அதுவரை
அந்த
சுகம்
கிடைக்க
முடியாது.
ஏனெனில்
கர்மம்,
அகர்மம்,
விகர்மத்தின்
நிலை
மிகவும்
ஆழமானது.
அதனை
பரமாத்மாவைத்
தவிர
வேறு
என்த
மனித
ஆத்மாவும்
அந்த
நிலையைத்
தெரிந்து
கொள்ள
இயலாது இப்போது
எதுவரை
பரமாத்மா
அந்த
நிலையைக்
கூறவில்லையோ
அதுவரை
மனிதர்களுக்கு
ஜீவன்
முக்தி கிடைக்க
முடியாது.
எனவே
மனிதர்கள்
கூறுகின்றனர்:
உங்களது
நிலை
மற்றும்
வழியை
நீங்கள்
தான் தெரிந்திருக்கிறீர்கள்.
இவர்களுக்கு
சத்கதி
கொடுப்பதற்கான
வழி
அந்த
பரமாத்மாவிடம்
உள்ளது.
எவ்வாறு கர்மத்தை
அகர்மமாக
ஆக்குவது,
என்ற
படிப்பினையைக்
கொடுப்பது
பரமாத்மாவின்
வேலையாகும்.
மற்றபடி மனிதர்களுக்கு
இந்த
ஞானம்
இல்லை.
இந்த
காரணத்தால்
அவர்கள்
தவறான
காரியம்
செய்து
கொண்டிருக்கின்றனர்.
இப்போது
மனிதர்களுடைய
முதல்
கடமை
தனது
செயலைத்
திருத்திக்
கொள்வதாகும்.
அப்போது
தான்
மனித வாழ்வின்
முழு
இலாபத்தையும்
அடைய
முடியும்.
நல்லது.
ஓம்
சாந்தி.
ஓம்சாந்தி