12.11.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஞானத்தின் வானம்பாடிகளாக ஆகி முழு நாளும் ஞானத்தைப் பற்றி உரையாடிக் கொண்டேயிருந்தால் லௌகீக மற்றும் பரலௌகீக தாய்-தந்தையை வெளிப்படுத்த முடியும்.

 

கேள்வி:

தன்னைப் பற்றி சிந்தித்தால் போதை அதிகரிக்கும் என்ற பழமொழி இருக்கிறது. இதன் விளக்கம் என்ன?

 

பதில்:

தனது சிறப்பம்சங்கள் அதாவது புத்தியோகத்தை இங்கு அங்கு என்று அலையவிடாமல் ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஒரு தந்தை புத்தியில் இருந்தால் போதை அதிகரிக்கும். ஆனால் இதில் தேக அபிமானம் அதிக தடையை ஏற்படுத்துகிறது. சிறிது நோய் வந்துவிட்டால் குழப்பமடைந்து விடுகிறார்கள், உற்றார்-உறவினர்களின் நினைவு வந்துவிடுகிறது. ஆகையால் போதை அதிகரிப்பது கிடையாது. யோகாவில் இருந்தால் வலியும் குறைந்துவிடும்.

 

பாட்டு:

நீங்கள் இரவெல்லாம் தூங்கிக் கழித்தீர்கள் ........

 

ஓம்சாந்தி.

இந்த அனைத்து விசயங்களும் சாஸ்திரங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் புரிய வைக்கவும் செய்கின்றனர். பலவிதமான வழிகளை குருக்கள் கொடுக்கின்றனர். மிக நல்ல நல்ல பக்தர்கள் சிறிய அறையில் அமர்ந்து, பசுவின் வாய் போன்ற துணிக்குள் கை வைத்து மாலையை உருவாட்டுகின்றனர். இதுவும் கற்றுக் கொடுக்கப்பட்ட ஃபேஷன் ஆகும். இப்பொழுது தந்தை கூறுகின்றார் - இவை அனைத்தையும் விட்டுவிடுங்கள். ஆத்மாவானது தந்தையை நினைவுச் செய்ய வேண்டும். இதில் மாலை உருட்ட வேண்டிய விசயம் கிடையாது. அனைத்தையும் விட மிக நல்ல பாட்டு சிவாய நமஹ என்பதாகும். இதில் தான் நீங்கள் தாய் தந்தை என்பதும் புரிய வைக்கப்படுகிறது. பகவானைத் தான் படைக்கும் தந்தை என்று கூறுகிறோம். படைப்பவர் என்று கூறுகிறோம் எனில் எதைப் படைக்கிறார்? புது உலகைத் தான் படைப்பார் என்பதை அவசியமாக அனைவரும் புரிந்திருப்பர். நீங்கள் தாய் தந்தை, நாங்கள் குழந்தைகளாக இருக்கிறோம் .... என்று பாடுகின்றனர் எனில் முதலில் ஈஸ்வரன் அனைவருக்கும் தந்தையாகி விடுகின்றார். தந்தை இருக்கிறார் எனில் தாயும் அவசியம் தேவை. தாயில்லாமல் படைக்க முடியாது. எப்படிப் படைக்கிறார்? என்பதை யாரும் அறியவில்லை. மற்றொன்று அனைவரும் தங்களுக்குள் சகோதரன் சகோதரிகளாக ஆகிவிடுகிறீர்கள். பிறகு விகாரப்பார்வை ஏற்பட முடியாது. ஒரு தாய் தந்தை அல்லவா! ஆக இந்தக் கருத்து புரிந்து கொள்ள மற்றும் புரிய வைப்பதற்கு மிகவும் நல்ல கருத்தாகும். மூன்றாவது, அவசியமாக தந்தை உலகைப் படைத்திருப்பார். நாம் குழந்தைகளாக இருந்தோம், இப்பொழுது மீண்டும் ஆகியிருக்கிறோம். 84 பிறவிச் சக்கரம் முடிவடைந்த பின்பு மீண்டும் இப்பொழுது தாய் தந்தை யினுடையவர்களாக ஆகியிருக்கிறோம். அவருக்குத் தான் பக்தி மார்கத்தில் புகழ்ப் பாடப்படுகிறது. தாய் தந்தை உலகைப் படைக்கின்றனர், அவரது குழந்தைகளாக ஆகின்றோம் எனில் கண்டிப்பாக சுகமான உலகை கொடுத்திருப்பார். பரமாத்மா தாய் தந்தையாகவும் இருக்கிறார் என்பதை யாரும் அறியவில்லை, ஆசிரியராகவும் இருக்கிறார், சத்குருவாகவும் இருக்கிறார்.

 

நாம் பிரம்மாவின் வம்சத்தினர்கள், தங்களுக்குள் சகோதர சகோதரிகள் ஆகிறோம். பிரம்மா குமார், குமாரிகள் என்றும் கூறிக் கொள்கிறோம். இவர்களையும் படைப்பவர் அவர் ஆவார். சுகமான பூமியை அடைவதற்காக தாய் தந்தையிடமிருந்து இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். சுகமான பூமியை நாம் துக்கத்திலிருக்கும்பொழுது தான் அடைகிறோம், எதிர்காலத்தில் சுகமாக இருக்கும் பொழுது வந்து போதனைகள் கொடுப்பார் என்பது கிடையாது. எப்பொழுது நாம் துக்கத்திலிருக்கிறோமோ அப்பொழுது சுகத்தில் செல்வதற்கான போதனைகளை அடைகின்றோம். அதே தாய் தந்தை வந்து சுகம் கொடுக்கிறார்கள். ஆதாம், ஏவாள் மிகவும் பிரபலமானவர்கள். அவர்களும் கண்டிப்பாக தந்தையின் குழந்தைகள் ஆவர். பிறகு கடவுள் யார்?

 

தந்தை கொடுக்கும் ஞானம் அனைத்து தர்மத்தினருக்கானது என்பதைக் குழந்தைகள் அறிவீர்கள். முழு உலகத்தில் உள்ளவர்களின் புத்தியோகமும் அவரிடமிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மாயை என்ற பேய் புத்தியோகத்தை ஏற்படுத்த விடுவது கிடையாது, மேலும் புத்தியோகத்தை துண்டிக்கிறது. தந்தை வந்து பேயின் மீது வெற்றியடையச் செய்கின்றார். இன்றைய நாட்களில் மாயாஜாலம் செய்பவர்களும் பலர் இருக்கின்றனர். இது பேய்களின் உலகமாகும். காம விகாரம் என்ற பேய் ஒருவரையொருவர் முதல், இடை, கடை துக்கம் கொடுக்கிறது. ஒருவருக்கொருவர் துக்கம் கொடுப்பது பேயின் வேலையாகும். சத்யுகத்தில் பேய் இருக்காது. பேய் என்ற பெயர் பைபிளில் இருக்கிறது என்பதும் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இராவணன் என்றால் பேய், இது பேயின் இராஜ்யமாகும். சத்யுகத்தில் இராம இராஜ்யத்தில் பேய்கள் இருக்காது. அங்கு சுகமான பூமியாக இருக்கும்.

 

ஓம் நமச் சிவாய என்ற பாடல் மிக நன்றாக இருக்கிறது. சிவன் தாய் தந்தையாக இருக்கிறார். பிரம்மா, விஷ்ணு, சங்கரை தாய் தந்தை என்று கூறுவது கிடையாது. சிவனைத் தான் தந்தை என்று கூறுகிறோம். ஆதாம், ஏவாள் என்றால் பிரம்மா, சரஸ்வதி இங்கு இருக்கின்றனர். அங்கு கிறிஸ்தவர்கள் இறை தந்தையிடம் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த பாரதம் தாய் தந்தையின் ஊராகும். அவரது பிறப்பு இங்கு தான் ஏற்படுகிறது. நீங்கள் தான் தாய் தந்தை என்று பாடுகிறீர்கள் எனில் தங்களுக்குள் சகோதரன் சகோதரிகளாக ஆகிவிடுகிறீர்கள் அல்லவா என்று புரிய வைக்க வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் பிரஜைகளை படைக்கின்றார். அவர் தத்தெடுக்கின்றார். சரஸ்வதியும் தத்தெடுக்கப்படுகிறார். பிரஜாபிதா பிரம்மா தத்தெடுக்கின்றார். அதனால் தான் இவ்வளவு பிரம்மா குமார், குமாரிகள் உருவாகியிருக்கின்றனர். சிவபாபா தத்தெடுக்க வைக்கின்றார். புது உலகம் பிரம்மாவின் மூலம் உருவாக்கப்படுகிறது. புரிய வைப்பதற்கு பல யுக்திகள் உள்ளன. ஆனால் முழுமையாகப் புரிய வைப்பது கிடையாது. பாபா பலமுறை புரிய வைத்திருக்கின்றார் - இந்த சிவாய நமஹ என்ற பாட்டு பல இடங்களில் ஒலி பரப்புங்கள். நாம் தாய் தந்தையின் குழந்தைகளாக ஆகியிருப்பது எப்படி? என்பதை அவர் அமர்ந்துப் புரிய வைக்கின்றார். பிரம்மாவின் மூலம் புது உலகை ஸ்தாபனைச் செய்திருந்தார். இப்பொழுது கலியுகத்தின் இறுதியாகும். மீண்டும் சத்யுகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. புத்தியில் தாரணைச் செய்ய வேண்டும். ஞானம் மிகவும் எளியது ஆகும். மாயையின் புயல் ஞான யோகத்தில் நிலைத்திருக்க விடுவது கிடையாது. புத்தி மயக்கத்தில் வந்து விடுகிறது. படைப்பவர் பகவான் அனைவருக்கும் ஒரே ஒருவர் தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், அனைவரும் தந்தை என்று கூறுவார்கள் அல்லவா! அந்த நிராகாரமானவர் பிறப்பு இறப்பில் வராதவர். பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கு சூட்சும சரீரம் இருக்கிறது. மனிதர்கள் 84 பிறவிகள் இங்கேயே எடுக்கின்றனர், சூட்சும வதனத்தில் எடுப்பது கிடையாது. தாய் தந்தையின் குழந்தைகள் நாம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் புதுக் குழந்தைகள். தந்தை தத்தெடுத்திருக்கின்றார். பிரஜாபிதா பிரம்மா இருக்கின்றார் எனில் எத்தனை பிரஜைகள் இருப்பர்? அவசியம் தத்தெடுத்திருக்க வேண்டும். பிரம்மாவிற்கு பல புஜங்களைக் காண்பிக்கின்றனர், எந்த பொருளையும் புரிந்துக் கொள்வது கிடையாது. சித்திரங்கள் என்னவெல்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதாவது சாஸ்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறேதா இவையனைத்தும் நாடகத்தின் மீது ஆதாரமாக வைக்க வேண்டியிருக்கிறது. பிரம்மாவின் பகலாக இருந்தது, பிறகு பக்தி மார்க்கம் ஆரம்பமானது, அது நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இந்த இராஜயோகத்தை தந்தை வந்து தான் கற்றுக் கொடுக்கின்றார். இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

தன்னைப் பற்றி சிந்தித்தால் போதை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர் அல்லவா! ஆனால் புத்தியோகம் தந்தையிடம் இருக்க வேண்டும். இங்கு பலரது புத்தியோகம் அலைந்துக் கொண்டேயிருக்கிறது. பழைய உலகின் உற்றார்-உறவினர்கள் போன்றவைகளின் பக்கம் அல்லது தேக அபிமானத்தில் மாட்டியிருக்கிறது. சிறிது வியாதி வந்து விட்டால் குழப்பமடைந்து விடுகின்றனர். அட, யோகாவில் இருந்தால் வலியும் குறைந்து விடும். யோகா இல்லையெனில் வியாதி எப்படி நீங்கும்? நம்பர் ஒன் பாவனமாகும் தாய், தந்தை தான் பிறகு அனைவரையும் விட கீழே இறங்குகின்றனர் என்று சிந்திக்க வேண்டும். அவர்கள் அதிகக் கணக்குகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால் யோகாவில் இருக்கின்ற காரணத்தினால் வியாதிகள் நீங்கிக் கொண்டே செல்கின்றன. இல்லையெனில் இவர் தான் அனைவரையும் விட அதிகம் அனுபவிக்க வேண்டும். ஆனால் யோகா பலத்தினால் துக்கம் தூரமாகி விடுகிறது, மேலும் அதிகக் குஷியில் இருக்கின்றார் - பாபாவிடமிருந்து நான் சொர்க்கத்தின் சுகத்தை அடையப் போகிறேன். பல குழந்தைகள் தங்களை ஆத்மா என்று புரிந்துக் கொள்வதே கிடையாது. முழு நாளும் தேகத்தின் நினைவு தான் இருக்கிறது.

 

பாபா வந்து ஞானத்தைப் பற்றிய உரையாடலைக் கற்றுக் கொடுக்கின்றார். ஆக நீங்கள் ஞானத்தின் வானம்பாடிகளாக ஆக வேண்டும். வெளியில் பல நல்ல நல்ல சிறிய சகோதரிகள் இருக்கின்றனர், ஞானத்தைஓதுகின்றனர். பீஷ்மபிதாமகர் போன்றவர்களுக்கும் கூட குமாரிகளின் மூலம் ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறு சிறு குழந்தைகளை சேவையில் நிலை நிறுத்த வேண்டும். சிறிய குழந்தைகள் லௌகீக-பரலௌகீக தாய் தந்தையை வெளிப்படுத்துகின்றனர். லோகம், பரலோகம் இன்பம் தரக்கூடியதாக இருக்கும் அல்லவா! ஆக லௌகீக தாய் தந்தையையும் கூட எழுப்ப வேண்டும். சிறு சிறு சகோதரிகளும் தாய் தந்தையை எழுப்புவதை நீங்கள் பார்ப்பீர்கள். குமாரிகளுக்கு மரியாதை ஏற்படும். குமாரிகளை அனைவரும் நமஸ்கரிக்கின்றனர். சிவசக்தி சேனையில் அனைவரும் குமாரிகள் ஆவார். தாய்மார்களும் இருக்கின்றனர், ஆனால் அவர்களும் குமாரிகள் என்று கூறப்படுகின்றனர் அல்லவா! நல்ல நல்ல குமாரிகள் வெளிப்படுவர். சிறு சிறு சகோதரிகள் தான் மிகப் பெரிதாக வெளிப்படுத்துவார்கள். சில சிறிய சகோதரிகள் மிகவும் நன்றாக இருக்கின்றனர். ஆனால் சிலரிடத்தில் மோகமும் அதிகமாக இருக்கின்றன அல்லவா! இந்த மோகம் மிகவும் கெட்டது. இதுவும் ஒரு பூதமாகும். தந்தையிடமிருந்து முகத்தைத் திருப்பி விடுகிறது. மாயை என்ற பேயின் வேலையே பரம்பிதா பரமாத்மாவிடமிருந்து முகத்தைத் திருப்புவதாகும்.

 

ஓம் நமச் சிவாய என்ற பாட்டு அனைத்தையும் விட நன்றாக இருக்கிறது. இதிலிருந்து தான் நீ தாய் தந்தையாக ...... என்ற வார்த்தை கிடைக்கிறது. இராதை கிருஷ்ணர் கோயிலில் ஜோடியாகத் தான் காண்பிக்கின்றனர். கீதையில் கிருஷ்ணருடன் இராதையின் பெயர் கிடையாது. கிருஷ்ணரின் மகிமை தனிப்பட்டது - சர்வகுண சம்பன்ன, 16 கலைகள் நிறைந்தவர் ..... சிவனின் மகிமை தனிப்பட்டது. சிவனுக்கு ஆரத்தி எடுக்கின்ற பொழுது எவ்வளவு மகிமைப் பாடுகின்றனர்! எந்தப் பொருளையும் புரிந்துக் கொள்வது கிடையாது. பூஜை செய்து செய்து களைப்படைந்து விட்டனர். மம்மா, பாபா மற்றும் பிராமணர்களாகிய நாம் அனைவரையும் விட அதிகமாக பூஜாரிகளாக ஆகியிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது மீண்டும் வந்து பிராமணர்களாக ஆகியிருக்கிறோம். அதிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. கர்மக் கணக்கும் இருக்கிறது, அதை யோகாவின் மூலம் அழிக்க வேண்டும். தேக அபிமானத்தை நீக்க வேண்டும். தந்தையை நினைவு செய்து அதிகக் குஷியில் இருக்க வேண்டும். தாய், தந்தையிடமிருந்து நமக்கு அதிக சுகம் கிடைக்கிறது. பாபாவிடமிருந்து நமக்கு ஆஸ்தி கிடைக்கிறது, பாபா எனது இரதத்தை எடுத்திருக்கிறார் என்று இந்த பிரம்மாவும் கூறுவார் அல்லவா! இப்பொழுது பாபா இந்த இரதத்தைக் கவனிப்பார். ஆத்மாவாகிய நான் இந்த இரதத்திற்கு உணவளிக்கிறேன் என்று முன்பு புரிந்திருந்தார். இதுவும் இரதம் அல்லவா! இதற்கும் உணவளிப்பவர் அவர் தான் என்று இப்பொழுது கூறுவார். இந்த இரதத்தை சம்பாலனை செய்ய வேண்டும். குதிரையில் எஜமானர்கள் ஏறுகின்ற பொழுது குதிரைக்குக் கையினால் உணவளிப்பர், சில நேரங்களில் குதிரையைத் தட்டிக் கொடுப்பர். அதிகம் கவனிப்பர். ஏனெனில் அதன் மீது சவாரி செய்கின்றனர். பாபா இதில் சவாரி செய்கின்றார் எனில் பாபா கவனிக்க மாட்டாரா என்ன? பாபா குளிக்கின்ற பொழுது நானும் குளிக்கிறேன், பாபாவையும் குளிப்பாட்ட வேண்டும் என்று நினைப்பார். ஏனெனில் அவர் இந்த இரதத்தை லோனாக எடுத்திருக்கின்றார். நானும் உனது சரீரத்தை குளிப்பாட்டுகிறேன், உணவளிக்கிறேன் என்று சிவபாபாவும் கூறுகின்றார். நான் சாப்பிடுவது கிடையாது, சரீரத்திற்கு உணவளிக்கிறேன். பாபா உணவளிக்கிறாரே தவிர சாப்பிடுவது கிடையாது. இவ்வாறு ஒவ்வொரு அடியிலும் எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது - குளிக்கும் நேரத்தில், வெளியில் செல்லும் நேரத்தில். இது அனுபவ விசயம் அல்லவா! பாபா தானே கூறுகின்றார் - பல பிறவிகளின் கடைசிப் பிறவியில் பிரவேசிக்கிறேன். இவர் தனது பிறப்புகளைப் பற்றி அறியவில்லை, நான் அறிவேன். பாபா மீண்டும் நமக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். சொர்க்கத்தின் ஆஸ்தி அடைய வேண்டும். சத்யுகத்தில் இராஜா, பிரஜை அனைவரும் இருப்பர். தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இப்பொழுது அடையவில்லையெனில் பிறகு கல்ப கல்பத்திற்கும் இழந்து விடுவீர்கள், அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைய முடியாது. ஜென்ம ஜென்மங்களுக்கான பிராப்தி எனும் பொழுது ஸ்ரீமத் படி எவ்வளவு நடக்க வேண்டும்! கல்ப கல்பத்திற்கும் நிமித்தம் ஆவீர்கள். கல்ப கல்பத்திற்கு ஆஸ்தி அடைந்து வந்தீர்கள். கல்ப கல்பத்திற்கான படிப்பு இதுவாகும். இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 7 நாட்களில் இலட்சியம் அடைந்து பிறகு முரளியை வீட்டிலும் படிக்க முடியும். முற்றிலும் எளிதாக்கி விடுகின்றார். நாடகம் புத்தியில் இருக்க வேண்டும் அல்லவா!

 

இது உலக பல்கலைக்கழகம் என்று கூறப்படுகிறது. ஆக அமெரிக்கா போன்று எங்கு வேண்டுமென்றாலும் செல்லுங்கள், தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய முடியும். ஒருவாரம் தாரணை செய்து விட்டு சென்றாலும் போதும். பகவானின் குழந்தைகள் எனில் சகோதரன், சகோதரிகளாக ஆகிவிடுகிறீர்கள் அல்லவா! பிரஜாபிதா பிரம்மா இருக்கிறார் எனில் அவரது அனைத்துக் குழந்தைகளும் சகோதரன் சகோதரிகள் ஆகிவிடுகின்றனர். இல்லறத்தில் இருந்தாலும் அவசியம் தங்களுக்குள் சகோதரன் சகோதரிகளாக இருந்தால் தூய்மையாக இருக்க முடியும். மிகவும் எளிது அல்லவா! நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தன்னை மாயை என்ற பேயிடமிருந்து (கோஸ்ட்) காப்பாற்றிக் கொள்ள ஞான, யோகத்தில் தயாராக இருக்க வேண்டும். மோகம் என்ற பூதத்தைத் தியாகம் செய்து தந்தையை வெளிப்படுத்த வேண்டும். ஞானத்தைப் பற்றி உரையாட வேண்டும்.

 

2) படிப்பில் முழு கவனம் கொடுத்து தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். கல்ப கல்பத்திற்கான இந்த வாய்ப்பை எந்த சூழ்நிலையிலும் விட்டு விடக் கூடாது.

 

வரதானம் :

கர்மயோகியின் நிலை மூலமாக கர்மபோகத்தின்(நோய்) மீது வெற்றி அடையக் கூடிய வெற்றி இரத்தினம் ஆகுக.

 

கர்மயோகி ஆவதால் சரீரத்தின் எந்த ஒரு கர்மபோகத்தை அனுபவிப்பதும் அனுபவம் ஆகாது. மனதில் ஏதாவது நோய் இருந்தால் நோயாளி என்று கூறுவார்கள். ஒரு வேளை மனம் நோயற்றதாக இருந்தால் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். வெறும் பாம்பு படுக்கையில் விஷ்ணுவிற்கு சமமாக ஞானத்தை நினைவு செய்து மகிழ்ச்சியுடன் இருந்து கொண்டே மனன சக்தி மூலமாக இன்னும் கடலின் ஆழத்தில் போவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. இப்படிப்பட்ட கர்மயோகி தான் கர்மபோகத்தின் மீது வெற்றி அடைந்து வெற்றி இரத்தினம் ஆகிறார்கள்.

 

சுலோகன் :

துணிவைத் துணையாக்கிக் கொண்டால் ஒவ்வொரு கர்மத்திலும் வெற்றி கிடைத்துக் கொண்டே இருக்கும்.

  

மாதேஸ்வரி அவர்ககளின் இனிமையான மகா வாக்கியங்கள்

 மனித ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் கேட்பதும், பிராப்தியும் தாயும் நீயே, தந்தையும் நீயே, நாங்கள் உங்களுடைய குழந்தைகள், உங்களுடைய கிருபையால் அளவற்ற சுகம்... இந்த மகிமைகள் யாருக்காக பாடப்பட்டிருக்கிறது. நிச்சயமாக பரமாத்மாவிற்காக பாடப்பட்டிருக்கிறது. ஏனென்றால் பரமாத்மா தானே தாய், தந்தை ரூபத்தில் வந்து இந்த சிருஷ்டிக்கு அளவற்ற சுகத்தைக் கொடுக்கிறார். நிச்சயமாக பரமாத்மா எப்போதோ சுகம் நிறைந்த சிருஷ்டியை உருவாக்கியிருக்கிறார். அதனால் தான் தாய், தந்தை என்று கூறி அழைக்கிறார்கள். ஆனால், மனிதர்களுக்கு சுகம் என்றால் என்னவென்று தெரியவில்லை. இந்த சிருஷ்டியில் அளவற்ற சுகம் இருந்த போது சிருஷ்டியில் அமைதியும் இருந்தது. ஆனால் இப்போது அந்த சுகம் இல்லை. இப்போது மனிதர்களுக்கு அந்த சுகம் எங்களுக்கு வேண்டும் என்ற விருப்பம் எழுவது நிச்சயம். பிறகு சிலர் பணம், பொருட்களைக் கேட்கிறார்கள், சிலர் குழந்தை வேண்டும் எனக் கேட்கிறார்கள். இன்னும் ஒரு சிலரோ பதிவிரதை ஆக வேண்டும், சதா சுமங்கலி ஆக வேண்டும் எனக் கேட்கிறார்கள். ஆசையோ சுகத்தைப் பற்றிதான் இருக்கிறது அல்லவா! எனவே, பரமாத்மாவும் ஏதோ ஒரு நேரத்தில் அவர்களின் விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவார். எனவே, சத்யுகத்தில் சிருஷ்டியில் சொர்கமாக இருந்த போது சதா சுகம் இருக்கிறது. அங்கே ஒரு போதும் பெண்கள் விதவை ஆவதில்லை. எனவே, அந்த ஆசை சத்யுகத்தில் நிறைவேறுகிறது. அங்கே அளவற்ற சுகம் இருக்கிறது. மற்றபடி இச்சமயமோ கலியுகம் தான். இச்சமயத்தில் மனிதர்கள் துக்கத்தையே அனுபவிக்கிறார்கள். நல்லது

 

ஓம்சாந்தி