08.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நாம் பகவான் வாக்கியம் - பகவான் கூறுவதைத் தான் கேட்கிறோம், சுயம் பகவான் நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற முழுமையான நிச்சயம் இருக்கும் பொழுது தான் சதா குஷியில் இருக்க முடியும்.

 

கேள்வி:

நாடகப்படி இச்சமயம் அனைவரும் என்ன திட்டம் போடுகிறார்கள் மற்றும் என்ன முன்னேற்பாடு செய்கிறார்கள்?

 

பதில்:

இச்சமயத்தில் நாங்கள் இத்தனை வருடங்களுக்குள் இவ்வளவு தானியங்களை உற்பத்தி செய்வோம், புதிய டில்லி, புதிய பாரதம் ஆகப் போகிறது என்று எல்லோரும் திட்டமிடுகிறார்கள். ஆனால் ஏற்பாடுகளோ அழிவிற்கானதை செய்து கொண்டு இருக்கிறார்கள். முழு உலகத்தின்   கழுத்தில் மரணத்தின் மாலை போடப்பட்டுள்ளது. மனிதன் நினைப்பது ஒன்று நடப்பது முற்றிலும் வேறு .. .. என்று பழமொழி உள்ளது. தந்தையின் திட்டம் தனி. மனிதர்களின் திட்டம் தனி ஆகும்.

 

பாடல்:

யாரோ என்னை தன்னுடையவராக ஆக்கி.. .. .. ..

 

ஓம் சாந்தி.

நிராகார பகவான் பிரம்மாவின் உடல் மூலமாகப் பேசுகிறார். இங்கு யாரும் மனிதன் படிப்பிப்பதில்லை, நிராகார பகவான் கற்பிக்கிறார் என்ற இந்த முதல் விஷயத்தை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அவருக்கு எப்பொழுதும் பரமபிதா, பரமாத்மா, சிவன் என்று கூறப்படுகிறது. பனாரஸ்-ல் சிவனுடைய கோவில் கூட உள்ளது அல்லவா? எல்லையில்லாத தந்தை நமக்கு கற்பிக்கிறார் என்று முதன் முதலில் ஆத்மாவிற்கு நிச்சயம் வேண்டும். இந்த நிச்சயம் இல்லாத வரை மனிதர்கள் எதற்கும் பயனில்லை. சோழிக்குச் சமம் ஆவார்கள். தந்தையை அறிந்து கொள்வதால் வைரத்திற்குச் சமமாக ஆகி விடுகிறார்கள். சோழிக்குச் சமமாகக் கூட பாரதத்தின் மனிதர்கள் ஆகிறார்கள். வைரத்திற்குச் சமமாக கூட பாரதத்தின் மனிதர்கள் ஆகிறார்கள். தந்தை வந்து மனிதனிலிருந்து தேவதையாக ஆக்குகிறார். முதலில் பகவான் கற்பிக்கிறார் என்ற நிச்சயம் இல்லாத வரை இந்த கல்லூரியில் அமர்ந்திருந்தால் கூட ஒன்றும் புரியாமல் இருப்பார்கள். அந்த அளவு கடந்த குஷி இருப்பதில்லை. அவர் நம்முடைய மிகவும் அன்பிற்குரிய தந்தை ஆவார். அவரைத் தான் பக்தி மார்க்கத்தில் "ஹே பரமாத்மா, கருணை புரியுங்கள்" என்று துக்கத்தின் பொழுது கூப்பிட்டு கொண்டிருந்தார்கள். இதை ஆத்மா கூறுகிறது. லௌகீக தந்தை இருக்கும் பொழுதும் நாம் எந்த தந்தையை நினைவு செய்கிறோம் என்பதை மனிதர்களோ புரிந்து கொள்வதில்லை. இவர் எனது லௌகீக தந்தை ஆவார். இவர் எனது பரலோக தந்தை ஆவார் என்று ஆத்மா வாய் மூலமாகக் கூறுகிறது. நீங்கள் இப்பொழுது தேஹீ அபிமானி (ஆத்ம உணர்வுடையவர்) ஆகி உள்ளீர்கள். மற்ற மனிதர்கள் தேக அபிமானியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆத்மா மற்றும் பரமாத்மா பற்றி தெரியவே தெரியாது. ஆத்மாக்களாகிய நாம் அந்த பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள் ஆவோம் என்ற ஞானம் யாரிடமும் இல்லை. "பகவான் கூறுகிறார், நான் உங்களுக்கு ராஜயோகம் கற்பிக்கிறேன்" என்று முதன் முதலில் தந்தை இந்த நிச்சயம் செய்விக்கிறார். நீங்கள் தேகத்துடன் சேர்த்து தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் மறந்து, தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். எந்த ஒரு மனிதனோ அல்லது கிருஷ்ணர் ஆகியோரோ இவ்வாறு கூற முடியாது. இது இருப்பதே பொய்யான மாயை, பொய்யான உடல், எல்லாமே பொய்யான உலகம். ஒருவர் கூட உண்மையாக இல்லை. உண்மையான கண்டத்தில் பின் ஒருவர் கூட பொய்யாக இருக்க மாட்டார்கள். இந்த லட்சுமி நாராயணர் உண்மையான கண்டத்தின் அதிபதியாக இருந்தார்கள்.பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தார்கள். இப்பொழுது பாரதவாசிகள் தர்மம் கெட்டு கர்மம் கெட்டவர்களாக ஆகி உள்ளார்கள். எனவே தான் பெயரே ப்ரஷ்டாச்சாரி (தாழ்ந்த) பாரதம் ஆகும். சிரேஷ்டாச்சாரி (உயர்ந்த) பாரதம் சத்யுகத்தில் இருக்கும். அங்கு எல்லோரும் எப்பொழுதும் புன்முறுவலுடன் இருப்பார்கள். ஒரு பொழுதும் நோய்வாய்ப் பட்டு நோயாளிகளாக இருக்க மாட்டார்கள். இங்கு இன்னார் சொர்க்க மடைந்தார் என்று கூறுகிறார்கள் தான். ஆனால் ஒருவரும் செல்வது இல்லை. இச்சமயத்தின் இராஜ்யம் கூட கானல் நீருக்குச் சமமாக உள்ளது. ஒரு மானின் கதை உள்ளது அல்லவா? தண்ணீர் என்று நினைத்து உள்ளே சென்றது மற்றும் சேற்றில் மாட்டிக் கொண்டது. எனவே இச்சமயம் சேற்றினுடைய ராஜ்யம் ஆகும். எவ்வளவு அலங்கரிக்கிறார்களோ அவ்வளவு இன்னுமே இறங்கிக் கொண்டே போகிறார்கள். பாரதத்தில் தானியங்கள் நிறைய ஆகும், இப்படி ஆகும்.. .. .. என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். எதுவுமே ஆவதில்லை. இதற்குத் தான் மனிதன் ஒன்று நினைக்க , நடப்பது வேறு என்று கூறப்படுகிறது. இது ஒன்றும் ராஜ்யமே கிடையாது என்று தந்தை கூறுகிறார். எங்கு ராஜா ராணி இருப்பார்களோ அதற்குத் தான் ராஜ்யம் என்று கூற வேண்டும். இதுவோ பிரஜைகள் மீது பிரஜைகளின் ராஜ்யம் உள்ளது. அதர்மத்தின் அசத்தியத்தின் ராஜ்யம் ஆகும். பாரதத்திலோ ஆதி சனாதன தேவி தேவதைகளின் ராஜ்யம் இருந்தது. இப்பொழுதோ எவ்வளவு தர்மம் கெட்டு கர்மம் கெட்டவர்களாக ஆகி உள்ளார்கள். தனது தர்மத்தையே அறியாத அப்பேர்ப்பட்ட தேசம் வேறு எதுவும் இல்லை. தர்மத்தில் சக்தி உள்ளது என்றும் கூறப்படுகிறது. தேவதைகளினுடையதோ முழு உலகத்தின் மீது ஆட்சி இருந்தது. இப்பொழுதோ முற்றிலுமே ஏழையாகி விட்டுள்ளது. எவ்வளவு வெளியிலிருந்து உதவி பெற்று கொண்டிருக்கிறது. அவர்களது புஜ பலத்தின் உதவி. உங்களுடையது யோக பலத்தின் உதவி. மிகவும் அன்பிற்குரிய தந்தையிடமிருந்து நமக்கு 21 பிறவிகளுக்கு சதா சுகத்தின் ஆஸ்தி கிடைக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கு ஒரு பொழுதும் துக்கத்தின் அழுகை ஆகியவற்றின் விஷயமே கிடையாது. ஒரு பொழுதும் அகால மரணம் ஆவதில்லை. இந்த காலத்தைப் போல 4-5 குழந்தைகளை ஒட்டு மொத்தமாக பெற்றெடுப்பதும் இல்லை. ஒரு புறம் பார்த்தீர்கள் என்றால் சாப்பிடுவதற்கு இல்லை. குடும்பக் கட்டுப்பாடு செய்யுங்கள் என்கிறார்கள். மனிதன் ஒன்று நினைக்க.. .. .. ..? புது டில்லி, புது ராஜ்யம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒன்றுமே இல்லை. சாவு எல்லோருடைய கழுத்திலும் இருக்கிறது. சாவிற்கான முழு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் 5 ஆயிரம் வருடத்திற்கு முன்னது போலவே இது அதே மகாபாரதப் போர் ஆகும். இதுவோ ஒன்றும் ராஜ்யம் அல்ல. இது கானல் நீர் போன்றது என்று தந்தை கூறுகிறார். திரௌபதியின் உதாரணம் கூட உள்ளது அல்லவா? நீங்கள் எல்லோரும் திரௌபதிகள் ஆவீர்கள். இந்த விகாரங்கள் மீது வெற்றி அடையுங்கள் என்பது உங்களுக்கு தந்தையிடும் கட்டளை ஆகும். நாங்கள் சதா தூய்மையாக இருந்து பாரதத்தைத் தூய்மையாக ஆக்குவோம் என்று நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம். இந்த ஆண்கள் தூய்மையாக இருக்க விடுவதில்லை. இவர்கள் எங்களை அடிக்கிறார்கள் என்று மறைந்து வாழும் அனேக கோபிகையர்கள் எவ்வளவு அழைக்கிறார்கள்.

 

இந்த காமம் என்ற மகா எதிரியோ மனிதருக்கு முதல் இடை கடை துக்கம் அளிக்க கூடியது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதன் மீது நீங்கள் வெற்றி அடையவேண்டும் என்று தந்தை கூறுகிறார். காமம் மகா எதிரி என்று பகவான் கூறுகிறார் என்பது கீதையிலும் உள்ளது. ஆனால் மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. தூய்மையாக ஆனீர்கள் என்றால், நீங்கள் ராஜாக்களுக்கெல்லாம் ராஜா ஆவீர்கள் என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது ராஜாக்களுக்கெல்லாம் ராஜா ஆக வேண்டுமா, இல்லை பதீதமாக ஆக வேண்டுமா என்று கூறுங்கள். எனக்காக வேண்டி இந்த ஒரு கடைசி பிறவியில் பவித்திரமாக ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். அபவித்திர உலகத்தின் விநாசம், பவித்திர உலகத்தின் ஸ்தாபனை ஆகி விடும். அரை கல்பம் நீங்கள் விஷம் குடித்து குடித்து இவ்வளவு துக்கத்தைப் பார்த்திருக்கிறீர்கள். ஒரு பிறவிக்கு உங்களால் இதை விட முடியாதா? இப்பொழுது பழைய உலகத்தின் விநாசம் மற்றும் புதிய உலகத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதில் யார் தூய்மையாக ஆவார்கள் மற்றும் ஆக்குவார்களோ அவர்களே உயர்ந்த பதவி அடைவார்கள். இது ராஜயோகம் ஆகும். நாம் பிரம்மா குமார் குமாரிகள் ஆவோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். எனவே உண்மையில் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளும் ஆவீர்கள். பிரம்மா சிவனின் குழந்தை ஆவார். உங்களுக்கு ஆஸ்தி அளிப்பவர் சிவன் ஆவார். அதே காட் ஃபாதர், ஆனந்த கடல், ஞானக் கடலான தந்தை அமர்ந்து படிப்பிக்கிறார். ஆனால் தேக  அபிமானம் நீங்கினால் தானே புத்தியில் பதியும். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் பிறகு தாரணையும் ஆவதில்லை. உண்மையில் நீங்கள் ஜகத் பிதாவின் குழந்தைகள் ஆவீர்கள். பிரம்மா குமார் குமாரிகள் ராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடையதே நினைவார்த்தம் அமைந்துள்ளது. எவ்வளவு நல்ல கோவில் ஆகும். அதன் பொருள் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் அறியாமல் உள்ளார்கள். பூஜை செய்து தலை வணங்கி எல்லா பைசாவையும் இழந்து விட்டார்கள். இப்பொழுது முற்றிலுமே சோழி போல ஆகி விட்டுள்ளார்கள். சாப்பிடுவதற்கு உணவு இல்லை. இப்பொழுது குழந்தைகளைப் பெற்றெடுப்பதை குறையுங்கள் என்கிறார்கள். காமம் மகா எதிரி ஆகும் என்று சொல்லக் கூடிய சக்தி எந்த மனிதனுக்கும் இல்லை. இதுவோ எவ்வளவு பிறப்பை குறையுங்கள் என்று கூறுகிறார்களோ அவ்வளவே அதிகமாக குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள். யாருடைய பலமும் வேலை செய்யாது.

 

இது காட் ஃபாதர்யுனிவர்சிட்டி ஆகும். பகவான் ஒருவரே என்ற விஷயத்தை முதன் முதலில் குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்க வேண்டும். இந்த ஒரே சக்கரம் தான் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். நண்பர்கள் உறவினர்கள் ஆகியோருக்குக் கூட இந்த ஆன்மீக யாத்திரையின் ரகசியத்தைப் புரிய வைக்க வேண்டும். ஸ்தூல யாத்திரைகளோ ஜன்ம பல பிறவிகளாக செய்தீர்கள். இந்த ஆன்மீக யாத்திரை ஒரே ஒரு முறை தான் ஆகிறது. எல்லோரும் திரும்பிச் செல்ல வேண்டி உள்ளது. யாருமே பதீதமானவர் இங்கு இருக்க முடியாது. இப்பொழுது தீர்ப்பிற்கான நேரம் ஆகும். இப்பொழுது இருக்கும் இத்தனை கோடிக்கணக்கான மனிதர்கள் எல்லோருமே சத்யுகத்தில் இருக்க மாட்டார்கள். அங்கு மிகவும் குறைவானோர் இருப்பார்கள். எல்லோரும் திரும்பிச் செல்ல வேண்டும். தந்தை வந்திருப்பதே அழைத்துச் செல்ல - இது புரியாத வரைக்கும் இனிமையான இல்லம் (ஸ்வீட் ஹோம்) மற்றும் சுகதாமம் நினைவிற்கு வர முடியாது. நினைவு செய்வதோ மிகவும் சுலபம் ஆகும். ஸ்வீட் ஹோம் போகலாம் என்று தந்தை கூறுகிறார். என்னைத் தவிர உங்களை யாரும் அழைத்துச் செல்ல முடியாது. நான் தான் காலன்களுக்கெல்லாம் காலன் ஆவேன். எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கிறார். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், இத்தனை வருடங்களாக இருந்தும் கூட தாரணை ஆவதில்லை. ஒரு சிலரோ மிகவும் புத்திசாலி ஆகி விடுகிறார்கள். ஒரு சிலருக்கு ஒன்றுமே புரிவதில்லை. அதற்காக, பழையவர்களது நிலைமையே இப்படி என்றால், நம்முடையது என்ன ஆகும் என்பதல்ல! அப்படி கிடையாது. பள்ளிக் கூடத்தில் எல்லோரும் முதல் நம்பராக இருப்பார்களா என்ன? இங்கு கூட வரிசைக்கிரமமாக உள்ளார்கள். எல்லையில்லாத தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுப்பதற்கான நேரம் இதுவே என்பதை எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டும். 21 பிறவிகளுக்கு சதா சுகத்தின் ஆஸ்தியைப் பெற வேண்டும். எத்தனை பிரம்மா குமார் குமாரிகள் புருஷார்த்தம் (முயற்சி) செய்து கொண்டு இருக்கிறார்கள். வரிசைக்கிரமமாகவோ இருக்கத் தான் செய்வார்கள்.

 

பதீத பாவனர் ஒரே ஒரு தந்தை ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். மற்ற எல்லோரும் பதீதமாக உள்ளார்கள். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒருவர் ஆவார். அவரே சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார் என்று தந்தை கூறுகிறார். பிறகு பாரதம் மட்டுமே இருக்கும். பிற அனைத்தும் அழிந்து போய் விடும். மனிதர்களின் புத்தியில் இவ்வளவு சிறிய விஷயம் கூட பதிவதில்லை. குழந்தைகளே எனக்கு உதவி செய்பவர்களாக ஆகுங்கள். பின் நான் உங்களை சொர்க்கத்திற்கு அதிபதி ஆக்குவேன்! என்று தந்தை கூறுகிறார். மனிதன் தைரியம் வைத்தால் இறைவன் உதவி செய்வார். இறை தொண்டர்கள் என்றோ பாடுகிறார்கள். உண்மையில் அது ஸ்தூல மீட்பு படை. உண்மையிலும் உண்மையான ஆன்மீக மீட்புப் படை நீங்களே ஆவீர்கள். பாரதத்தின் மூழ்கி இருக்கும் படகை மீட்கக் கூடிய பாரதமாதா சக்தி அவதாரம் நீங்களே ஆவீர்கள். நீங்கள் மறைமுகமான சேனை ஆவீர்கள். சிவபாபா மறைமுகமாக உள்ளார். பின் அவரது சேனையும் மறைமுகமாக உள்ளது. சிவ சக்தி பாண்டவ சேனை. உண்மையிலும் உண்மையான சத்திய நாராயண கதை இதுவாகும். மற்றது எல்லாமே பொய்யான கதைகள் ஆகும். எனவே தான் தீயதைப் பார்க்காதீர்கள், தீயதைக் கேட்காதீர்கள், நான் புரிய வைப்பதை மட்டுமே கேளுங்கள் என்று கூறுகிறார்.

 

இது எல்லையில்லாத பெரிய பள்ளிக் கூடம் ஆகும். இந்த (யுனிவர்சிட்டி) பல்கலைக்கழகத்திற்காக இந்த இருப்பிடங்கள் எல்லாம் கட்டப்பட்டுள்ளன. கடைசியில் இங்கு குழந்தைகள் வந்து இருப்பார்கள். யார் யோகத்துடன் கூடிய நிலையில் (யோக யுக்த்) இருப்பார்களோ அவர்கள் வந்து இருப்பார்கள். இந்த கண்களால் விநாசத்தைப் பார்ப்பார்கள். எந்த ஸ்தாபனை மற்றும் விநாசத்தின் சாட்சாத்காரத்தை இப்பொழுது திவ்ய திருஷ்டி மூலமாகப் பார்க்கிறீர்களோ - பிறகு நீங்களே சொர்க்கத்தில் இந்த கண்களுடன் அமர்ந்திருப்பீர்கள். இதில் மிகுந்த விசால புத்தி வேண்டும். எந்த அளவிற்கு தந்தையை நினைவு செய்வீர்களோ அந்த அளவிற்கு புத்தியின் பூட்டு திறந்து கொண்டே போகும். ஒரு வேளை விகாரத்தில் சென்றார்கள் என்றால் முற்றிலுமே பூட்டு பூட்டப் பட்டு விடும். பள்ளிக் கூடத்தை விட்டு விட்டார்கள் என்றால், முற்றிலுமே ஞானம் புத்தியை விட்டு வெளியேறி விடும். பதீதமானவராக ஆனார்கள் என்றால், பிறகு தாரணை செய்ய முடியாது. உழைப்பு உள்ளது. இது உலகத்தின் அதிபதி ஆவதற்கான கல்லூரி ஆகும். இந்த பிரம்மா குமார் குமாரிகள் சிவபாபாவின் பேரன்கள் பேத்திகள் ஆவார்கள். இவர்கள் இப்பொழுது பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆன்மீக சமூக ஊழியர்கள் உலகத்தை பாவனமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். தூய்மை தான் முக்கியமானது. சிரேஷ்டாச்சாரி (மிக சிறந்த) உலகமாக இருந்தது. இப்பொழுது ப்ரஷ்டாச்சாரியாக (தாழ்ந்த நிலையில்) உள்ளது. இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த தெய்வீகச் செடியின் நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து விடும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. உண்மையிலும் உண்மையான ஆன்மீக மீட்பு படை ஆகி, பாரதத்தை விகாரங்களிலிருந்து மீட்க வேண்டும். தந்தையின் உதவியாளராகி ஆன்மீக சமூக சேவை செய்ய வேண்டும்.

 

2. ஒரு தந்தையிடம் மட்டுமே சத்தியமான விஷயங்களைக் கேட்க வேண்டும். தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள்.. .. .. இந்த கண்களால் கடைசி காட்சிகளைப் பார்ப்பதற்கு யோகத்துடன் கூடியவராக ஆக வேண்டும்.

 

வரதானம் :

சரளமான சம்ஸ்காரங்கள் மூலமாக நல்லது, தீயதின் கவர்ச்சியிலிருந்து விடுபட்டு இருக்கக்கூடியவராகி, சதா மகிழ்ச்சியின் மூர்த்தியாகுக.

 

தன்னுடைய சம்ஸ்காரங்களை எளிதாக்கிக் கொண்டால் ஒவ்வொரு காரியம் செய்தாலும் எளிதாக இருக்கலாம். ஒருவேளை சம்ஸ்காரம் டைட்டாக இருந்தால் சூழ்நிலைகளும் டைட்டாக இருக்கும். தொடர்பில் இருப்பவர்களும் டைட்டாக விவகாரம் செய்வர். டைட் என்றால் இழுக்கக் கூடியவர்களாக இருப்பவர்கள். ஆகவே எளிதான சம்ஸ்காரங்கள் மூலமாக நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துக் கொண்டே நல்லது மற்றும் தீயதின் கவர்ச்சியிலிருந்து விடுபட்டு இருங்கள். நல்லதும் கவர்ச்சிக்கக் கூடாது, தீயதும் கவர்ச்சிக்கக் கூடாது. அப்போது தான் (நிரந்தர) மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.

 

சுலோகன் :

யார் அனைத்து பிராப்திகளிலும் முழுமையாக இருக்கிறார்களோ அவர்களே ஆசை என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பவர்கள்.

 

ஓம்சாந்தி