15.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! எல்லையில்லாத சேவைக்காக உங்களது புத்தி இயங்க வேண்டும். எப்பேர்ப்பட்ட பெரிய கடிகாரம் (காலச் சக்கரம்) அமைக்க வேண்டும் என்றால் அதனுடைய முட்களில் தூரத்திலிருந்தே பிரகாசித்துக் கொண்டிருக்கும் வகையில் ரேடியம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

 

கேள்வி:

சேவையில் முன்னேற்றத்திற்காக எந்த ஒரு யுக்தியைக் கையாள வேண்டும்?

 

பதில்:

யாரெல்லாம் மகாரதி புத்திசாலி குழந்தைகள் இருக்கிறார்களோ அவர்களை தங்களிடம் அழைக்க வேண்டும். மகாரதி குழந்தைகள் சுற்றி வந்து கொண்டே இருந்தார்கள் என்றால் சேவை விருத்தி அடைந்து கொண்டே இருக்கும். இதில் எங்களது மதிப்பு குறைந்து போய் விடும் என்று நினைக்கக் கூடாது. குழந்தைகள் ஒரு பொழுதும் தேக அபிமானத்தில் வரக் கூடாது. மகாரதிகளுக்கு மிக மிக மதிப்பு கொடுக்க வேண்டும்.

 

பாடல்:

இந்த நேரம் சென்று கொண்டிருக்கிறது.. .. ..

 

ஓம் சாந்தி.

கடிகாரம் என்ற பெயர் கேட்ட உடன் எல்லையில்லாத கடிகாரம் நினைவிற்கு வந்தது. இது எல்லையில்லாத கடிகாரம் ஆகும். இதில் எல்லாமே புத்தி மூலமாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். அதில் கூட பெரிய முள் மற்றும் சிறிய முள் உள்ளது. வினாடி முள் இயங்கி கொண்டே இருக்கிறது. இப்பொழுது இரவு 12 மணி ஆகும்.அதாவது இரவு முடிந்து பிறகு பகல் ஆரம்பமாக வேண்டி உள்ளது. இந்த எல்லையில்லாத கடிகாரம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். இதில் அமைக்கப்படும் முட்களில் தூரத்திலிருந்தே பிரகாசிக்கக் கூடிய வகையில் ரேடியம் கூட பொருத்த வேண்டும். கடிகாரமோ தானாகவே புரிய வைக்கும். யார் புதியதாக வந்தாலும் கடிகாரத்தை வந்து பார்க்க வேண்டும். உண்மையில் முள் கடைசியில் வந்து சேர்ந்துள்ளது என்று புத்தியும் கூறுகிறது. விநாசம் அவசியம் ஆக வேண்டி உள்ளது என்பதை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும். பிறகு சத்யுகத்தின் ஆரம்பம் ஆகும். சத்யுகத்தில் மிகவும் குறைவான ஆத்மாக்கள் இருப்பார்கள். ஆக இத்தனை எல்லா ஆத்மாக்களும் அவசியம் திரும்பிச் செல்லக் கூடும்.படங்கள் மீது புரிய வைப்பது மிகவும் சுலபமாகும். இது போல யாராவது கடிகாரம் தயாரித்தீர்கள் என்றால் நிறைய பேர் விலைக்கு வாங்கி கூட வீட்டில் வைப்பார்கள். இதன் மீது புரிய வைக்க வேண்டும். இது கலியுக (ப்ரஷ்டாச்சாரி) இழிந்த உலகம் ஆகும். அநேக தர்மங்கள் கூட உள்ளன. விநாசம் கூட முன்னால் நின்றுள்ளது. இயற்கை சேதங்களும் நடக்க வேண்டி உள்ளது. இப்பொழுது இந்த இலட்சுமி நாராயணர் ஆகியோருக்குக் கூட சத்யுகத்தின் அரசாட்சி எப்படிக் கிடைத்தது? அவசியம் தந்தை மூலமாகக் கிடைத்திருக்க வேண்டும். பதீத பாவனர் வருவதே பதீத உலகத்தில், சங்கமத்தில். பாவன உலகத்திலோ தந்தை வர வேண்டியது இல்லை. இது காலச் சக்கரத்தைப் பற்றி புரிய வைப்பதற்கான மிகவுமே முதல் தரமான விஷயம் ஆகும். மேலும் இது பற்றி புரிய வைப்பது எவரொருவருக்கும் மிகவும் சுலபமானது ஆகும். யாரிடம் பைசா நிறைய உள்ளதோ அவர்களோ சட்டென்று ஆர்டர் கொடுத்து உடனே பொருள் தயார் ஆக்கி விட வேண்டும். அரசாங்கத்தின் காரியமோ சட்டென்று ஆகி விடுகிறது. இங்கோ இவ்வாறு காரியம் செய்வது மிகவும் அரிதாக உள்ளது. யாராவது நல்ல ஓவியர் படம் தயாரித்தார் என்றால் அது அழகாகவும் இருக்கும். தற்காலத்தில் கலைகளுக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. நடனக் கலை எவ்வளவு காண்பிக்கிறார்கள். முதலில் இது போல நடனங்கள் இருந்தன என்று நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு யாரும் இல்லை. எனவே இந்த எல்லையில்லாத கடிகாரம் உடனே தயார் செய்ய வேண்டும். அதன் மூலம் மனிதர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்ள முடியும். நிறம் கூட பிரகாசிக்கும் வகையில் அவ்வாறு நல்லதாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதரோ பதீத பாவனராக இருக்க முடியாது. மனிதர்கள் பதீதமாக உள்ளார்கள் அல்லவா? அதனால் தான் பாடுகிறார்கள். பாவன உலகம் கூட சொர்க்கம் ஆகும். கிருஷ்ணர் தான் (ஷியாம் - கருமையாக) தூய்மையற்று இருந்து பிறகு (சுந்தர் -அழகாக) தூய்மையாக ஆகிறார். அதனால் தான் ஷியாம் - சுந்தர் என்ற பெயர் உள்ளது என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வது இல்லை. நாம் கூட முதலில் புரியாமல் இருந்தோம். உண்மையில் காம சிதையில் அமர்ந்ததால் கருப்பாகி விடுகிறது. அதாவது ஆத்மா பதீதமாக ஆகி விட்டது என்பது இப்பொழுது புத்தியில் உள்ளது. இதையும் தெளிவாக எழுத வேண்டும். பரமபிதா பரமாத்மா ஆஸ்தி அளிக்கிறார் மற்றும் இராவணன் சாபம் கொடுக்கிறான். மனிதர்களின் புத்தி "பிறகு ரகுபதி ராகவ ராஜா ராம்" பக்கம் சென்று விடுகிறது. ஆனால் இராமரோ பரமபிதா பரமாத்மா ஆவார். இவை எல்லாமே புத்தியைப் பயன்படுத்தி படத்தைத் தயாரிக்க வேண்டும். ஏனெனில் தற்காலத்தில் எல்லோரும் தங்களை பகவான் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். தந்தையோ ஒரே ஒருவர் ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். மற்றபடி ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் பரந்தாமத்தில் பரமாத்மாவுடன் கூட சென்று இருப்போம். அச்சமயம் தந்தையும் பிரம்மாண்டத்தின் அதிபதி. நாம் கூட பிரம்மாண்டத்தின் அதிபதி ஆவோம். பிறகு தந்தை கூறுகிறார், குழந்தைகளாகிய உங்களை நான் உலகிற்கு அதிபதி ஆக்குகிறேன். மேலும் யாராவது ஒருவர் எவ்வளவு தான் பெரிய இராஜாவாக இருந்தாலும் கூட நாங்கள் உலகின் அதிபதி ஆவோம் என்று கூற மாட்டார்கள். தந்தையோ உலகத்தின் அதிபதியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். எனவே அப்பேர்ப்பட்ட தாய் தந்தை மீது எவ்வளவு பலி ஆக வேண்டும்? அவருடைய ஸ்ரீமத் பிரசித்தமானது ஆகும். அதன் படி நடந்து நடந்து கடைசியில் ஸ்ரீமத்தை முழுமையாக பாலனை செய்கிறார்கள். இப்பொழுதே ஒரு வேளை ஸ்ரீமத் படி முழுமையாக நடந்தார்கள் என்றால் சிறந்தவர்களாக ஆகி விடலாம். எவ்வளவு தலையிலடித்து கொள்ள வேண்டி (முயற்சி செய்ய வேண்டி) உள்ளது. யக்ஞம் உள்ள வரையும் புருஷார்த்தம் (முயற்சி) நடந்து கொண்டே இருக்கும்.

 

இது ருத்ர ஞான யக்ஞம் (வேள்வி) ஆகும்.அவர்கள் கூட அமைதிக்காக ருத்ர யக்ஞம் செய்கிறார்கள். அதனாலோ அமைதி ஏற்பட முடியாது. தந்தையினுடையதோ ஒரே ஒரு வேள்வி ஆகும். அதில் முழு பொருட்களும் ஸ்வாஹா ஆகி விடுகிறது மற்றும் ஒரு நொடியில் ஜீவன் முக்தி கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவர்கள் எவ்வளவு வேள்விகள் இயற்றுகிறார்கள். நன்மை எதுவும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் அஹிம்சகர் ஆவீர்கள். தூய்மையின்றி யாரும் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது. இது கடைசி நேரம் ஆகும். பதீத உலகம், ப்ரஷ்டாச்சாரி (இழிவான) இராவணனின் உலகம், 100 சதவிகிதம் அபவித்திரதா, அசாந்தி, துக்கம், நோய் நொடிகள்.. .. இவை எல்லாம் எழுத வேண்டும். மேலும் பிறகு சொர்க்கத்தில் சிரேஷ்டாச்சாரி (சிறந்தவர்களாக) 100 சதவிகிதம் தூய்மை, சுகம், சாந்தி, நோயற்ற நிலை .. .. அது இராவணனின் சாபம். இது சிவபாபாவின் ஆஸ்தி - முழுமையாக எழுதப்பட வேண்டும். பாரதம் குறிப்பிட்ட இந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை சிரேஷ்டாச்சாரி (உயர்ந்ததாக) இருந்தது மற்றும் குறிப்பிட்ட இந்த நேரம் முதல் ப்ரஷ்டாச்சாரி (தாழ்ந்ததாக) ஆகி உள்ளது. பார்த்த உடனேயே புரிந்து கொள்ளும் வகையில் அப்பேர்ப்பட்ட வாசகங்கள் எழுதப்பட வேண்டும். புரிய வைப்பதால் கூட புத்தியில் போதை ஏறும். இந்த தொழிலிலேயே இருப்பதால் பிறகு அப்பியாசம் ஏற்பட்டு விடும். அந்த பணியை எட்டு மணி நேரம் செய்கிறார்கள். இந்த சேவையும் 8 மணி நேரம் செய்ய வேண்டும். சென்டரில் இருக்கும் பெண் குழந்தைகளிலும் (சகோதரிகள்) கூட வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். ஒரு சிலருக்கோ சேவையில் மிகுந்த ஆர்வம் உள்ளது. அங்கங்கு ஓடிக் கொண்டு இருப்பார்கள். ஒரு சிலரோ ஒரே இடத்தில் ஓய்வாக அமர்ந்து விடுகிறார்கள். அவர்களை ஆல் ரவுண்டர் என்று கூற மாட்டார்கள். மகாரதிகளை கொஞ்சமும் புரிந்து கொள்ளாமலிருக்கும் பொழுது சேவையும் தளர்ந்து போய் விடுகிறது. அநேகருக்கு தங்களது அகங்காரம் நிறைய உள்ளது. நமக்கு மதிப்பு வேண்டும். வேறு யாராவது வந்தால் நமக்கு மதிப்பு குறைந்து போய் விடும். மகாரதிகளோ உதவி செய்வார்கள் என்பதைப் புரிந்து கொள்வது இல்லை. தங்களுடைய அகங்காரம் இருக்கிறது. இப்பேர்ப்பட்ட முட்டாள்கள் கூட இருக்கிறார்கள். உண்மையான இதயத்தில் தான் தலைவன் திருப்தி அடைகிறார் என்று தந்தை கூறுகிறார். பாபாவிடம் சமாசாரமோ வந்து கொண்டே இருக்கிறது அல்லவா? பாபா ஒவ்வொருவரின் நாடியையும் புரிந்துள்ளார். இந்த பாபா கூட அனுபவம் உடையவர் ஆவார்.

 

எனவே இந்த காலச் சக்கரத்தின் விளக்கவுரை மிகவும் நன்றாக உள்ளது. உங்களுடைய இந்த விளக்கவுரை வெளிப்பட்டால் உங்களுடைய சேவை மிகவும் நன்றாக வேகமான பாதையினுடையதாக ஆகி விடும். இப்பொழுதோ எறும்பு வேகத்தின் சேவையாக உள்ளது. தங்களுடையதே தேக அபிமானத்தில் இருக்கிறார்கள். அதனால் புத்தி இயங்குவது இல்லை. இப்பொழுது இது வேகமான பாதையின் சேவை ஆகும். சேவை செய்யும் குழந்தைகளின் மூளையில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது ஓடிக் கொண்டே இருக்கும். படங்கள் மீது புரிய வைப்பது மிகவும் சுலபம் ஆகும். இப்பொழுது கலியுகம் ஆகும். சத்யுகம் ஸ்தாபனை ஆகிறது. தந்தை தான் அனைவரையும் திரும்ப அழைத்து செல்வார். அங்கு சுகம் இருக்கும். இங்கு துக்கம் இருக்கிறது. எல்லோரும் பதீதமாக உள்ளார்கள். பதீத மனிதர்கள் யாருக்குமே முக்தி, ஜீவன் முக்தி அளிக்க முடியாது. இவர்கள் எல்லோருமே பக்தி மார்க்கத்தின் காரியங்கள் கற்பிப்பவர்கள். குருமார்கள் எல்லோருமே பக்தி மார்கத்தினுடையவர்கள். ஞான மார்க்கத்தில் யாரும் குரு கிடையாது. இங்கோ எவ்வளவு உழைப்பு செய்ய வேண்டி உள்ளது. பாரதத்தை சொர்க்கமாக ஆக்கும் மந்திர ஜாலத்தின் விளையாட்டு அல்லவா? எனவே அவரை மந்திரவாதி என்றும் கூறுகிறார்கள். கிருஷ்ணரை ஒரு பொழுதும் மந்திரவாதி என்று கூற மாட்டார்கள். கிருஷ்ணரை கூட (ஷ்யாம்) கருமையிலிருந்து (சுந்தர்) அழகாக ஆக்குபவர் அந்த தந்தை ஆவார். புரிய வைப்பதற்கு மிகுந்த போதை வேண்டும். வெளியில் போக வேண்டும். ஏழைகள் தான் நன்றாக ஞானத்தை ஏற்றுக் கொள்வார்கள். பணக்காரர்களிடம் நம்பிக்கை குறைவாக உள்ளது.100 பேர் ஏழைகள் என்றால் 1 - 2 பணக்காரர்கள், 5 - 7 பேர் சாதாரணமானவர்கள் வெளிப்படுவார்கள். இப்படியே தான் காரியம் நடக்கிறது. பணத்தின் அவசியம் அவ்வளவு இருப்பதில்லை. அரசாங்கம் பாருங்கள் எவ்வளவு வெடி மருந்துகள் தயாரிக்கிறார்கள். விநாசம் ஆகி விடும். நாங்கள் அழிந்து விடுவோம் என்று இரண்டு பேரும் நினைக்கிறார்கள். அப்பொழுது வேட்டையாடுபவர் யாராக இருப்பார்கள். கதை இருக்கிறது அல்லவா? இரண்டு பூனைகள் சண்டையிட்டு கொள்ள நடுவில் வெண்ணெய் குரங்கிற்குக் கிடைத்து விட்டது. கிருஷ்ணருடைய வாயில் வெண்ணெய் காண்பிக்கிறார்கள். இது உண்மையில் சொர்க்கம் என்ற வெண்ணெய். இந்த விஷயங்களை ஒருவர் புரிந்து கொள்வது மிகவும் அரிதாக உள்ளது. இங்கு 25-25 வருடங்களாக இருப்பவர்கள் கூட ஒன்றும் புரிந்து கொள்வதில்லை. பாபாவின் பட்டி அமைந்தது. அதில் எத்தனை பேர் வந்தார்கள்? எத்தனை பேர் இல்லாமல் போய் விட்டார்கள். ஒரு சிலர் நிலைத்து விட்டார்கள். நாடகத்தில் முந்தைய கல்பத்திலும் அவ்வாறே ஆகி இருந்தது. இப்பொழுதும் இவ்வாறு ஆகிக் கொண்டிருக்கிறது. படங்கள் எவ்வளவு பெரியதாக இருக்குமோ அந்த அளவிற்கு யாருக்கும் புரிய வைப்பது சுலபமாக இருக்கும். இலட்சுமி நாராயணருடைய படமும் அவசியம் ஆகும். பக்தி கலாச்சாரம் எப்பொழுது முதல் ஆரம்பமாகிறது என்பது கல்ப விருட்சத்தின் மூலம் தெரிய வருகிறது. பிரம்மாவின் இரவு இரண்டு யுகங்கள், பின் பிரம்மாவின் பகல் இரண்டு யுகங்கள். மனிதர்களோ புரிந்து கொள்வதில்லை. பிறகு கூறுவார்கள் - பிரம்மாவோ சூட்சும வதனத்தில் இருக்கிறார். ஆனால் பிரஜா பிதாவோ அவசியம் இங்கு தான் இருப்பார். எவ்வளவு ஆழமான ரகசியங்கள் ஆகும்! இவை சாஸ்திரங்களிலோ இருக்க முடியாது. மனிதர்கள் எல்லோருமே தவறான படங்கள் பார்த்துள்ளார்கள். தவறான ஞானம் கேட்டுள்ளார்கள். பிரம்மாவிற்கும் நிறைய புஜங்கள் கொடுத்துள்ளார்கள். இந்த சாஸ்திரங்கள் ஆகியவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாமான்கள் ஆகும். இவை எப்பொழுது முதல் ஆரம்பமாகிறது என்பது உலகத்திற்குத் தெரியாது. மனிதர்கள் எவ்வளவு பக்தி செய்கிறார்கள். பக்தி இல்லாமல் பகவானை அடைய முடியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் முழுமையான துர்க்கதி ஏற்படும் பொழுது தான் சத்கதிக்காக பகவான் கிடைப்பார். இந்த கணக்கு வழக்கை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அரை கல்பம் முதல் பக்தி ஆரம்பமாகிறது. இந்த வேதம், உபநிடதங்கள், யக்ஞம், தவம் ஆகிய அனைத்துமே பக்தி மார்க்கத்தினுடையது என்று தந்தை கூறுகிறார். இவை எல்லாமே முடியப் போகிறது. அனைவரும் கருமையாக ஆகவே வேண்டி உள்ளது. பிறகு வெண்மையாக ஆக்க தந்தை வர வேண்டி உள்ளது. நான் கல்பத்தின் சங்கம யுகத்தில் வருகிறேன். ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் அல்ல என்று தந்தை கூறுகிறார். ஆமை அவதாரம், மீன் அவதாரம், பரசுராம அவதாரம்.. .. .. ..என்று காண்பிக்கிறார்கள். இவை பகவானின் அவதாரம் ஆகும் என்றால் பிறகு கல், மண் ஆகியவற்றில் பகவான் எவ்வாறு இருக்க முடியும்? மனிதர்கள் எவ்வளவு அறிவற்றவர்களாக ஆகி விட்டுள்ளார்கள். தந்தை வந்து எவ்வளவு அறிவாளியாக ஆக்கி இருக்கிறார். பரமபிதா பரமாத்மா ஞானக் கடல், தூய்மையின் கடல் என்ற மகிமையும் செய்ய வேண்டி உள்ளது. கிருஷ்ணருக்கு இந்த மகிமை இருக்க முடியாது. கிருஷ்ணரின் பக்தர்கள் பிறகு கிருஷ்ணருக்கு சர்வவியாபி என்கிறார்கள். எவ்வளவு ஒட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து விடுவித்து பிறகு தந்தையின் அறிமுகம் கொடுக்கிறோம். அனைத்து ஆத்மாக்களும் சகோதர சகோதரர்கள் ஆவோம். எல்லோரும் தந்தை ஆக முடியுமா? பிறகு யாரை நினைவு செய்யப்படுகிறது? காட் ஃபாதர்- குழந்தைகள் நினைவு செய்கிறார்கள். புரிய வைப்பவர் கூட எல்லையில்லாத புத்தி உடையவராக இருக்க வேண்டும். குழந்தைகளின் புத்தி எல்லைக்குட்பட்டவற்றில் மாட்டி உள்ளது. ஒரே இடத்தில் அமர்ந்து விடுகிறார்கள். வியாபாரிகளாக இருப்பவர்கள் பெரிய பெரிய கிளைகளைத் திறக்கிறார்கள். எந்த அளவு யார் சென்டர்கள் திறக்கிறார்களோ அந்த மேனேஜர் சிறந்தவர். பிறகு சென்டரையும் பொருத்து உள்ளது. இது அழியாத ஞான இரத்தினங்களின் கடை ஆகும். யாருடையது? ஞானக் கடலினுடையது. கிருஷ்ணரிடமோ இந்த ஞானம் இருக்க வில்லை. அந்த நேரத்தில் யுத்தமும் நடைபெறவில்லை. குறிப்புக்களோ நிறைய உள்ளன. அவற்றை தாரணை செய்து புரிய வைக்க வேண்டும். சபையில் படங்கள் வைத்தீர்கள் என்றால் எல்லோரும் பார்ப்பார்கள். கடிகாரத்தின் படம் மிகவும் நன்றாக உள்ளது. இந்தச் சக்கரத்தை அறிந்து கொள்வதால் சக்கரவர்த்தி ஆகி விடுவீர்கள். சுய தரிசன சக்கரதாரி ஆக வேண்டும். கடிகாரத்தின் மீது புரிய வைப்பது மிகவும் சுலபமாகும். எத்தனை பழைய குழந்தைகள் தகுதி உடையவர்களாகவே ஆவது இல்லை. தனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைத்து கொண்டு அமர்ந்து விடுகிறார்கள். வீணாகக் குஷிப்பட்டுக் கொள்கிறார்கள். சேவை செய்யவில்லை என்றால் இவர் (தானி) தானம் செய்பவர் என்று யார் ஏற்றுக் கொள்வார்கள்? தானம் கூட பொற்காசுகளினுடையது செய்ய வேண்டுமா இல்லை பைசாக்களினுடையதா? இந்தப் படம் குருடர்களுக்கு முன்னால் கண்ணாடி போல. கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்ப்பீர்கள். முதலில் குரங்கினுடைய முகமாக இருந்தது. இப்பொழுது கோவிலுக்கான முகம் அமைந்து கொண்டிருக்கிறது. கோவில் இருக்கத் தகுதி உடையவராக ஆவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். இது பதீத உலகம் ஆகும். அது பாவன உலகம் ஆகும். இதை சிவபாபா ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். யார் ஸ்ரீமத் படி நடப்பதில்லையோ அவர்களுடைய புத்தியில் ஒரு பொழுதும் தாரணை ஆக முடியாது. நாளுக்கு நாள் உங்களுக்கு ஆழமான விஷயங்களைக் கூறுகிறேன் என்று தந்தை கூறுகிறார். எனவே அவசியம் ஞானத்தின் விருத்தி ஆகிக் கொண்டே போகும்.

 

எட்டு அரசாட்சிகள் (இராஜ்யம்) எப்படி நடக்கும் என்று ஒரு சிலர் கேள்விகள் எழுப்புகிறார்கள்? இந்த கணக்குப்படி இவ்வளவு அரசாட்சிகள் இருக்க வேண்டும். நீங்கள் இந்த விஷயங்களில் ஏன் செல்கிறீர்கள் என்று தந்தை கூறுகிறார்? முதலில் தந்தை மற்றும் அவரது ஆஸ்தியையோ நினைவு செய்யுங்கள். அங்கு என்ன பழக்க வழக்கம் இருக்குமோ அது தான் நடக்கும். குழந்தைகள் எந்த விதத்தில் பிறக்க கூடுமோ அவ்வாறே தான் பிறப்பார்கள். நீங்கள் ஏன் இதில் செல்கிறீர்கள்?விகாரத்தின் விஷயங்களை வாயில் ஏன் எடுத்து வருகிறீர்கள்? இந்தப் படத்தை ஒருவருக்குப் பரிசாக கொடுப்பது மிகவும் நல்லது. இது காட் ஃபாதரின் பரிசு ஆகும். இப்பேர்ப்பட்ட (காட்லி ஃபாதர்கிஃப்ட்) இறை தந்தையின் பரிசை யார் தான் எடுத்துச் செல்ல மாட்டார்கள். கிறித்துவர்கள் மற்றவர்களுடைய இலக்கியங்கள் (லிட்டிரேச்சர்) ஆகியவற்றை வாங்க மாட்டார்கள்! அவர்களுக்கு தங்களுடைய தர்மத்தின் போதை இருக்கும். தந்தையோ தேவதா தர்மம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று கூறுகிறார். நமக்கு இந்த கிறித்துவர்களிடமிருந்து நிறைய பைசா கிடைக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இதுவோ ஞானத்தின் விஷயங்கள் ஆகும். யார் ஞானத்தை ஏற்கிறார்களோ அவர்களே தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுகிறார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. உலகிற்கு அதிபதியாக ஆக்கக் கூடிய தாய் தந்தை மீது உள்ளப்பூர்வமாக பலி ஆக வேண்டும். அவர்களது ஸ்ரீமத் படி நல்ல முறையில் நடந்து மேன்மையானவர் ஆக வேண்டும்.

 

2. நமது உள்ளத்தை எப்பொழுதும் உண்மையானதாக வைத்திருக்க வேண்டும். அகங்காரத்தில் வரக் கூடாது. பொற்காசுகளை தானம் செய்ய வேண்டும். ஞான தானம் செய்வதில் மகாரதி ஆக வேண்டும். 8 மணி நேரம் ஈசுவரிய சேவை அவசியம் செய்ய வேண்டும்.

 

வரதானம் :

தனது பொறுப்புகளின் அனைத்து சுமைகளையும் பாபாவிற்குக் கொடுத்துவிட்டு சதா கவலையற்று இருக்கக்கூடியவராகி வெற்றி நிறைந்த சேவாதாரி ஆகுக!

 

எந்த குழந்தைகள் எவ்வளவு லேசாக இருக்கிறார்களோ அவ்வளவு சேவையை மற்றும் தன்னை எப்போதும் மேலே உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அதாவது முன்னேற்றத்தை அடைந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆகையால் அனைத்து பொறுப்புகளையும் பாபாவிற்கு கொடுத்து விட்டு ஆசையற்றவராக இருங்கள். எந்த ஒரு நான் என்ற சுமையும் இருக்கக் கூடாது. நினைவின் போதையில் மட்டும் இருங்கள். பாபாவுடன் இணைந்திருந்தால் பாபா இருக்கும் இடத்தில் சேவை தானாகவே நடந்து விடும். செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கின்றார் என்றால் லேசாகவும் இருக்கலாம் வெற்றி நிறைந்தவராகவும் ஆகிவிடலாம்.

 

சுலோகன் :

எல்லையற்ற நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் நிச்சயிக்கப்பட்டது எனப் புரிந்து கொண்டு சதா கவலையற்றவராக இருங்கள்.

 

ஓம்சாந்தி