09.12.2018
காலை
முரளி
ஓம்
சாந்தி
''அவ்யக்த
பாப்தாதா''
ரிவைஸ்
07.03.1984
மதுபன்
''கர்மாதீத்
(கர்ம
பந்தனம்
அற்ற
நிலை),
வானபிரஸ்தி
(சப்தத்திலிருந்து
விலகிய
நிலை)”
ஆத்மாக்கள்
தான்
தீவிர
வேகமாக
சேவை
செய்வதற்கு
பொறுப்பாளர்கள்
''
மதுபன்
வரதான
பூமி,
சக்தி
நிறைந்த
பூமி,
சிரேஷ்ட
குழுவினரின்
பூமி,
சகஜ
பரிவர்த்தன
பூமி,
அனைத்து பிராப்திகளை
அனுபவம்
செய்விக்கும்
பூமி.
அம்மாதிரியான
பூமியில்
வந்து
அனைவரும்
தன்னை
சம்பன்னமாக அதாவது
அனைத்து
விஷயங்களால்
நிரம்பியவராக
அனுபவம்
செய்கிறீர்களா?
ஏதாவது
பிராப்தியின்மையோ இல்லையே?
என்னென்ன
அனைத்து
பொக்கிஷங்களும்
கிடைத்திருக்கின்றனவோ
அவற்றை
சதா
காலத்திற்காக தாரணை
செய்திருக்கிறீர்களா?
இங்கிருந்து
சேவை
ஸ்தானத்திற்கு
சென்று
பெரும்
வள்ளலாகி
இதே
சக்திகளை,
அனைத்து
பிராப்திகளை
அனைவருக்கும்
கொடுப்பதற்கு
பொறுப்பாளர்
ஆவேன்
என்று
அப்படி
நினைக்கிறீர்களா?
சதா
காலத்திற்கும்
தன்னை
விக்ன
விநாஷக்,
சமாதான
சொரூபமாக
அனுபவம்
செய்தீர்களா?
தன்னுடைய பிரச்சனையோ
வேறு,
ஆனால்
மற்ற
ஆத்மாக்களின்
பிரச்சனைகளுக்கும்
சமாதான
சொரூபம்.
நேரத்திற்கு
தகுந்தாற்போல்
இப்பொழுது
பிராமண
ஆத்மாக்கள்
பிரச்சனைகளில்
வசமாவதிலிருந்தும் கடந்து சென்று
விட
வேண்டும்.
பிரச்சனைகளுக்கு
வசமாவது
குழந்தைப்
பருவம்.
இப்பொழுது
பிராமண
ஆத்மாக்களின் குழந்தைப்
பருவத்தின்
காலம்
முடிவடைந்து
விட்டது.
வாலிப நிலையில்
மாயாவை
வென்றவர்
ஆவதற்கான விதி
மூலம்
மகாவீர்
ஆனீர்கள்,
சேவையில்
சக்கரவர்த்தி
ஆனீர்கள்,
அனேக
ஆத்மாக்களுக்கு
வரமளிப்பவராகி,
பெரும்
வள்ளலாக
ஆனீர்கள்,
அனேக
விதமான
அனுபவம்
செய்து
மகாரதி
ஆனீர்கள்,
இப்பொழுது
கர்மாதீத் வானபிரஸ்த
நிலையில்
செல்வதற்கான
நேரம்
வந்து
சேர்ந்து
விட்டது.
கர்மாதீத்
வானபிரஸ்த
நிலை
மூலமாகத் தான்
உலகின்
அனைத்து
ஆத்மாக்களை
அரைக்
கல்பத்திற்காக
கர்ம
பந்தனங்களிலிருந்து விடுபட்டவராக்கி முக்தியில்
அனுப்புவீர்கள்.
விடுபட்ட
(முக்த்)
ஆத்மாக்கள்
தான்
ஒரு
விநாடியில்
முக்தியின்
ஆஸ்தியை தந்தையிடமிருந்து
பெற
வைக்க
முடியும்.
பெரும்பான்மையான
ஆத்மாக்கள்
முக்தியை
யாசிப்பதற்காக
கர்மாதீத் வானபிரஸ்த
பெரும்
வள்ளல்
வரமளிக்கும்
வள்ளல்
குழந்தைகள்
உங்களிடம்
வருவார்கள்.
எப்படி
இப்பொழுது உங்களுடைய
ஜட
விக்கிரகங்களுக்கு
எதிரில்
சிலர்
கோயில்களுக்கு
சென்று
பிரார்த்தனைகள்
செய்து
சுகம் சாந்தியை
வேண்டுகிறார்கள்.
சிலர்
தீர்த்த
ஸ்தானங்களில்
சென்று
வேண்டுகிறார்கள்,
சிலர்
வீட்டில்
அமர்ந்து கொண்டே
வேண்டுகிறார்கள்.
யாருக்கு
எந்த
அளவு
சக்தி
இருக்குமோ
அதுவரை
சென்றடைகிறார்கள்.
ஆனால் சக்திகேற்றபடி
பலனை
பிராப்தி
செய்கிறார்கள்.
சிலர்
தூர
இடத்தில்
அமர்ந்து
கொண்டும்
உள்ளப்பூர்வமாக செய்கிறார்கள்.
மேலும்
சிலர்
மூர்த்தியின்
எதிரில்
தீர்த்த
ஸ்தானங்கள்
மற்றும்
கோயில்களில்
சென்றும் வெளிப்பகட்டளவில்
செய்கிறார்கள்.
சுயநல
வசமாகி
செய்கிறார்கள்.
அந்த
அனைத்து
கணக்கின்
அனுசாரம் எப்படி
காரியமோ,
எப்படி
பாவனையோ
அப்படி
பலன்
கிடைக்கிறது.
அதே
போல்
இப்பொழுது
நேரத்திற்கு ஏற்றபடி
சைத்தன்ய
பெரும்
வள்ளல்
வரமளிக்கும்
வள்ளல்
மூர்த்திகள்
உங்களின்
எதிரில்
பிரார்த்தனை
செய்வார்கள்.
சிலர்
சேவை
ஸ்தானம்
என்ற
கோயிலில் செல்வார்கள்,
சிலர்
மகான்
தீர்த்த
ஸ்தானம்
மதுபன்
வரை
வருவார்கள்.
மேலும்
சிலர்
வீட்டில்
அமர்ந்து
கொண்டே
காட்சிகளைப்
பார்த்து
தெய்வீக
புத்தி
மூலமாக
பிரத்யக்ஷத்தின் அனுபவம்
செய்வார்கள்.
எதிரில்
வரவில்லை
என்றாலும்
அன்பு
மற்றும்
திட
எண்ணத்தோடு
பிரார்த்தனை செய்வார்கள்.
மனதால்
சைத்தன்ய
ஃபரிஷ்தாக்கள்
உங்களை
ஆவஹானம்
செய்து
முக்தியின்
ஆஸ்திக்கான அஞ்சகேட்பார்கள்.
குறைந்த
காலத்தில்
அனைத்து
ஆத்மாக்களை
ஆஸ்தியை
பெற
வைக்கும்
காரியம் அதிவேகத்தில்
செய்ய
வேண்டியதாக
இருக்கும்.
எப்படி
விநாஷத்திற்கான
சாதனம்
மிகவும்
நுட்பமாக
இருப்பதால் அதிவேகத்தில்
முடிப்பதற்கு
பொறுப்பாளர்
ஆகும்,
அதே
போல்
பெரும்
வள்ளல்
வரமளிக்கும்
வள்ளல்
ஆத்மாக்கள் நீங்கள்
தன்னுடைய
கர்மாதீத்
ஃபரிஷ்தா
சொரூபத்தின்
சம்பூர்ண
சக்திசாலியான சொரூபம்
மூலமாக,
அனைவரின் பிரார்த்தனையின்
பலனாக
முக்தியின்
ஆஸ்தியை
பெற
வைப்பீர்கள்.
அதிவேகமாக
இந்தக்
காரியத்தை
செய்வதற்காக மாஸ்டர்
சர்வ
சக்திவான்,
சக்திகளின்
களஞ்சியம்,
ஞானத்தின்
களஞ்சியம்,
நினைவு
சொரூபமானவர்கள்
நீங்கள் தயாராக
இருக்கிறீர்களா?
விநாஷத்தின்
இயந்திரம்
மற்றும்
வரதானத்தின்
இயந்திரம்
இரண்டும்
அதிவேகத்தில் சேர்ந்தே
இயங்கும்.
நீண்ட
காலமாக
அதாவது
இப்போதிலிருந்தே
எவரெடி.
அதிவேகமுள்ளவராக
கர்மாதீத்,
சமாதான
சொரூபமாக எப்பொழுதும்
இருப்பதற்கான
பயிற்சி
செய்யவில்லை
என்றால்
அதிவேகத்தின்
நேரம்
கொடுப்பவராக
ஆவதற்கு பதிலாக
பார்ப்பவராக
ஆக
வேண்டியது
வரும்.
நீண்ட
காலமாக
தீவிரமாக
முயற்சி
செய்பவர்
அதிவேகத்தின் சேவை
செய்வதற்கு
பொறுப்பாளர்
ஆக
முடியும்.
இது
தான்
வானபிரஸ்த்
அதாவது
அனைத்து
தடைகளிலிருந்து விடுபட்ட,
விலகியிருக்கும்
மற்றும்
தந்தையுடன்
சேர்ந்து
அதிவேகமாக
சேவையின்
பிரியமான
நிலை.
எனவே இப்பொழுது
கொடுப்பவராக
ஆவதற்கான
நேரமேயன்றி
இப்பொழுது
கூட
தனக்காகவும்
பிரச்சனைகளுக்காகவும் பெறுபவராக
ஆவதற்கான
நேரம்
இல்லை.
தன்னுடைய
பிரச்சனைகளின்
குழப்பத்தில்
வருவது
–
இப்பொழுது அந்த
நேரம்
கடந்து
சென்று
விட்டது.
பிரச்சனையும்
கூட
தன்னுடைய
பலஹீனத்தின்
படைப்பு
தான்.
யார் மூலமாவது
மற்றும்
ஏதாவது
சூழ்நிலை
மூலமாவது
வந்திருக்கும்
பிரச்சனை
உண்மையில்
தன்னுடைய
பலஹீனத்தின் காரணம்
தான்.
எங்கு
பலஹீனம்
இருக்குமோ
அங்கு
நபர்
மூலமாக,
சூழ்நிலை
மூலமாக
பிரச்சனை
தாக்குதல் செய்யும்.
ஒருவேளை
பலஹீனம்
இல்லை
என்றால்
பிரச்சனை
தாக்காது.
வந்திருக்கும்
பிரச்சனை
பிரச்சனைக்குப் பதிலாக
சமாதான
ரூபத்தில்
அனுபவியாக
ஆக்கும்.
இது
தன்னுடைய
பலஹீனத்தினால்
உருவாகியிருக்கும்
மிக்கி மௌஸ்.
இப்பொழுதோ
நீங்கள்
அனைவரும்
சிரிக்கிறீர்கள்.
மேலும்
எந்த
நேரம்
வருகிறதோ
அந்த
நேரம்
என்ன செய்கிறீர்கள்?
நீங்களே
மிக்கி
மௌஸ்
ஆகி
விடுகிறீர்கள்.
அதனோடு
விளையாடுங்கள்
மற்றபடி
பயப்படாதீர்கள்.
ஆனால்
இதுவோ
குழந்தைப்
பருவத்து
விளையாட்டு.
எனவே
இதை
உருவாக்காதீர்கள்.
நேரத்தையும்
இழக்காதீர்கள்.
இதை
விட்டும்
விலகிய
நிலையான
வானபிரஸ்தி
ஆகிவிடுங்கள்.
புரிந்ததா?
நேரம்
என்ன
கூறுகிறது?
தந்தை
என்ன
கூறுகிறார்?
இப்பொழுது
கூட
பொம்மைகளுடன்
விளையாடுவது
பிடித்திருக்கிறதா
என்ன?
எப்படி
கலியுகத்தின்
மனிதப்
படைப்பு
கூட
என்னவாகி
விட்டது?
முரளியில் கேட்கிறீர்கள்
தான்
இல்லையா!
தேள்
-
பூரான்
ஆகிவிட்டார்கள்.
அந்த
மாதிரி
இந்த
பலஹீனத்தின்
பிரச்சனைகளை
உருவாக்குவதும்
தேள்,
பூரான்
மாதிரி
தன்னையே
கடிக்கிறது,
சக்தியற்றவர்
ஆக்கிவிடுகிறது.
எனவே அனைவரும்
மதுபன்னிலிருந்து சம்பன்னம்
ஆகி
இப்பொழுதிலிருந்து தன்னுடைய
பிரச்சனைகளையோ
முடித்து விட்டேன்.
ஆனால்
யாருக்காகவும்
பிரச்சனை
சொரூபமாக
ஆக
மாட்டேன்
என்ற
உறுதியான
எண்ணத்தை எடுத்து
செல்லுங்கள்.
தனக்காக
மற்றும்
அனைவருக்காக
எப்போதும்
சமாதான
சொரூபமாக
இருப்பேன்.
புரிந்ததா?
இவ்வளவு
செலவு
செய்து
கடுமையாக
முயற்சி
செய்து
இங்கே
வருகிறீர்கள்
என்றால்
கடின
முயற்சிக்கான பலனாக
இந்த
உறுதியான
எண்ணம்
மூலம்
சகஜமாக
எப்பொழுதும்
கிடைத்துக்
கொண்டே
இருக்கும்.
எப்படி முக்கியமான
விஷயம்
தூய்மையாக
இருப்பதற்காக,
இறந்து
விடுவேன்,
சகித்துக்
கொள்வேன்
ஆனால்
இந்த விரதத்தை
அவசியம்
கடைபிடிப்பேன்
என்ற
திட
எண்ணம்
செய்தீர்கள்
இல்லையா?
கனவிலும்
அல்லது எண்ணத்தில்
கூட
ஒருவேளை
கொஞ்சமாவது
தடுமாற்றம்
இருக்கிறது
என்றால்
அதை
பாவம்
என்று
நினைக்கிறீர்கள் இல்லையா?
அதே
போல்
பிரச்சனை
சொரூபமாக
ஆவது
அல்லது
பிரச்சனைக்கு
வசமாகி
விடுவது
என்ற இதுவும்
பாவக்கணக்கு.
பாவத்தின்
விளக்கத்தைத்
தெரிந்திருக்கிறீர்கள்.
எங்கு
பாவம்
இருக்குமோ
அங்கு தந்தையின்
நினைவு
இருக்காது,
துணை
இருக்காது.
பாவம்
மற்றும்
தந்தை,
இரவு
மற்றும்
பகல்
மாதிரி.
அதனதால்
எப்பொழுது
பிரச்சனை
வருகிறதோ
அந்த
நேரம்
தந்தை
நினைவில்
வருகிறாரா?
நினைவு
விலகிவிடுகிறது தான்
இலலையா?
பிறகு
எப்பொழுது
நொந்து
போகிறீர்களோ
அப்பொழுது
தந்தையின்
நினைவு
வருகிறது.
மேலும்
அதுவும்
பக்தனின்
ரூபத்தில்
நினைவு
செய்கிறீர்கள்.
அதிகாரியின்
ரூபத்தில்
இல்லை.
சக்தி
கொடுங்கள்.
ஆதரவு
கொடுங்கள்,
கடந்து
விடச்
செய்யுங்கள்
என்றெல்லாம்
கூறுகிறீர்கள்.
அதிகாரியின்
ரூபத்தில்,
துணைவனின் ரூபத்தில்,
சமமானவராகி
நினைவு
செய்வதில்லை.
எனவே
இப்பொழுது
என்ன
செய்ய
வேண்டும்
என்று புரிந்ததா?
நிறைவு
விழாவைக்
கொண்டாட
வேண்டும்
இல்லையா?
பிரச்சனைகளுக்கான
முடிவு
விழாவை கொண்டாடுவீர்கள்
இல்லையா
அல்லது
நடனம்
மட்டும்
ஆடுவீர்களா?
நல்ல
நல்ல
நாடகம்
நடத்துகிறீர்கள் இல்லையா?
இப்பொழுது
இந்த
நிகழ்ச்சியை
செய்யுங்கள்
ஏனென்றால்
இப்பொழுது
சேவைக்கு
அதிக
நேரம் தேவையாக
இருக்கிறது.
அங்கே
கூக்குரலிட்டு அழைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
மேலும்
இங்கு
நிலைகுலைந்து போய்
கொண்டிருக்கிறார்.
இதுவோ
நல்லது
இல்லை
தான்
இல்லையா?
அவர்கள்
வரமளிக்கும்
வள்ளலே!
பெரும் வள்ளலே!
என்று
கூறி
நினைவு
செய்து
கெண்டிருக்கிறார்கள்.
மேலும்
நீங்கள்
மூட்
ஆஃப்
ஆகி
அழுது கொண்டிருக்கிறீர்கள்
என்றால்
எப்படி
பலன்
கொடுப்பீர்கள்?
அவர்களிடமும்
உங்களுடைய
சூடான
கண்ணீர் சென்று
சேர்ந்து
விடும்.
அவர்களும்
பயந்து
கொண்டே
இருப்பார்கள்.
எனவே
இப்பொழுது
நான்
பிரம்மா பாபாவுடன்
சேர்ந்து
இஷ்ட
தேவன்
பூஜைக்குரிய
ஆத்மா
என்று
நினைவு
வையுங்கள்.
நல்லது.
எப்பொழுதும்
நீண்ட
காலமாக
தீவிர
முயற்சி
செய்பவர்களுக்கு,
தீவிர
வேகத்தின்
சேவைக்காக
எவரெடியாக இருக்கும்
குழந்தைகளுக்கு,
எப்பொழுதும்
உலகை
மாற்றம்
செய்பவராக
இருப்பவரிலிருந்து பிரச்சனைகளை பரிவர்த்தனை
செய்யும்
சமாதான
சொரூப
குழந்தைகளுக்கு,
எப்பொழுதும்
இரக்க
மனமுடையவராகி
பக்த ஆத்மாக்களின்
மற்றும்
பிராமண
ஆத்மாக்களின்
அன்பிற்குரிய
மற்றும்
சகயோகியாக
இருக்கும்
சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு,
எப்பொழுதும்
பிரச்சனைகளிலிருந்து விலகியிருக்கக்கூடிய,
கர்மாதீத்
வானபிரஸ்த
நிலையில் இருக்கக்கூடிய
சம்பன்ன
சொரூப
குழந்தைகளுக்கு
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
நமஸ்காரம்.
நியூயார்க்
பார்ட்டியுடன்
சந்திப்பு
-
நீங்கள்
அனைவரும்
தன்னை
தந்தையின்
விசேஷ
ஆத்மாக்கள்
என்று
அனுபவம்
செய்கிறீர்களா?
எப்படி
தந்தை
எப்பொழுதுமே
சிரேஷ்டமாக
இருக்கிறார்
அதே
போல்
குழந்தைகள்
நாங்களும்
தந்தைக்குச் சமமாக
சிரேஷ்டமானவர்கள்
என்ற
இந்த
குஷி
எப்பொழுதுமே
இருக்கிறதா?
இந்த
நினைவு
மூலம்
எப்பொழுதுமே ஒவ்வொரு
காரியமும்
இயல்பாகவே
சிரேஷ்டம்
ஆகிவிடும்.
எப்படி
எண்ணம்
இருக்குமோ
அப்படி
காரியம் இருக்கும்.
நீங்கள்
எப்பொழுதும்
நினைவு
மூலமாக
சிரேஷ்ட
நிலையில்
நிலைத்திருக்கும்
விசேஷ
ஆத்மாக்கள்.
எப்பொழுதுமே
தன்னுடைய
இந்த
சிரேஷ்ட
ஜென்மத்தின்
குஷிகளைக்
கொண்டாடிக்
கொண்டே
இருங்கள்.
அந்த
மாதிரியான
சிரேஷ்ட
ஜென்மம்
எதில்
நீங்கள்
பகவானின்
குழந்தைகளாக
ஆகிவிட்டீர்களோ,
அந்த மாதிரியான
ஜென்மம்
முழுக்
கல்பத்திலும்
இருக்காது.
ஐயாயிரம்
ஆண்டுகளில்
இந்த
நேரம்
மட்டும்
தான்
இந்த ஆன்மீக
ஜென்மம்
கிடைக்கிறது.
சத்யுகத்தில்
கூட
ஆத்மாக்களின்
பரிவாரத்தில்
வருவீர்கள்.
ஆனால்
இப்பொழுது பரமாத்மாவின்
குழந்தை.
எனவே
இதே
விசேஷத்தை
எப்பொழுதும்
நினைவில்
வையுங்கள்.
நான்
பிராமணன் உயர்ந்ததிலும்
உயர்ந்த
தர்மம்,
காரியம்
மற்றும்
பரிவாரத்தைச்
சேர்ந்தவன்
என்ற
இதே
நினைவு
மூலம்
எப்பொழுதும் ஒவ்வொரு
அடியிலும்
முன்னேறிச்
சென்று
கொண்டே
இருங்கள்.
முயற்சி
செய்வதின்
வேகம்
எப்பொழுதுமே தீவிரமாக
இருக்கட்டும்.
பறக்கும்
கலை
எப்பொழுதுமே
மாயாவை
வென்றவராக
மற்றும்
பந்தனமற்றவராக ஆக்கிவிடும்.
எப்பொழுது
தந்தையை
தன்னுடையவராக
ஆக்கிவிட்டீர்கள்
என்றால்
இன்னும்
வேறு
என்ன
தான் இருக்கிறது?
ஒன்று
தான்
மிச்சம்
இருந்தது
இல்லையா.
அந்த
ஒன்றில்
தான்
அனைத்தும்
அடங்கியிருக்கிறது.
ஒருவரின்
நினைவில்,
ஒருவரின்
இரசனை
என்ற
நிலையில்
நிலைத்திருப்பதினால்
சாந்தி,
சக்தி
மற்றும்
சுகத்தின் அனுபவம்
ஆகிக்
கொண்டே
இருக்கும்.
எங்கு
ஒன்று
இருக்கிறதோ
அங்கு
நம்பர்
ஒன்
இருக்கும்.
அப்படி நீங்கள்
அனைவரும்
நம்பர்
ஒன்
தான்
இல்லையா.
ஒருவரை
நினைவு
செய்வது
சுலபமா
அல்லது
அனேகர்களை நினைவு
செய்வதா?
தந்தை
இந்தப்
பயிற்சியை
மட்டும்
தான்
செய்விக்கிறார்
வேறு
ஒன்றும்
இல்லை.
பத்து பொருட்களை
தூக்குவது
சுலபமா
அல்லது
ஒரு
பொருளை
தூக்குவது
சுலபமா?
புத்தி
மூலமாக
ஒருவரின் நினைவிலேயே
இருப்பது
மிக
சுலபம்.
அனைவரின்
இலட்சியம்
மிக
நல்லதாக
இருக்கிறது.
இலட்சியம் நல்லதாக
இருக்கிறது
என்றால்
இலட்சணமும்
நல்லதாக
ஆகிக்
கொண்டே
இருக்கும்.
நல்லது.
அவ்யக்த
மகாவாக்கியம்
-
எண்ணத்தின்
சக்தியை
கட்டுப்படுத்துங்கள்
நேரத்திற்கு
தகுந்தாற்போல்
சீதளத்தின்
சக்தி
மூலமாக
ஒவ்வொரு
சூழ்நிலையிலும்
தன்னுடைய எண்ணங்களின்
வேகத்தை,
வார்த்தையை
சீதளமாக
மற்றும்
தைரியம்
நிறைந்ததாக
ஆக்குங்கள்.
ஒருவேளை எண்ணத்தின்
வேகம்
அதிகமாக
இருக்கிறது
என்றால்
அதிக
நேரம்
வீணாகப்
போய்விடும்,
கட்டுப்படுத்த
முடியாது.
எனவே
சீதளத்தின்
சக்தியை
தாரணை
செய்தீர்கள்
என்றால்
வீணானவற்றிலிருந்து மற்றும்
விபத்திலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.
இது
ஏன்,
என்ன,
அப்படி
இல்லை
இப்படி,
இந்த
வீணானதின்
அதிவேகத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.
சில
சில
குழந்தைகள்
சில
நேரங்களில்
நல்ல
விளையாட்டைக்
காண்பிக்கிறார்கள்.
வீணான எண்ணங்கள்
அந்த
அளவு
வலுவுடன்
வருகிறது
அதை
அவர்களால்
கட்டுப்படுத்த
முடிவதில்லை.
பிறகு
அந்த நேரம்
என்ன
செய்வது
நடந்து
விட்டது,
நிறுத்த
முடியவில்லை
என்று
கூறுகிறார்கள்.
மனதில்
என்ன
வந்ததோ அதைச்
செய்து
விட்டார்.
ஆனால்
வீணானதை
கட்டுப்படுத்துவதற்கு
சக்தி
வேண்டும்.
எப்படி
ஒரு
சக்திசாலியான எண்ணத்தின்
பலனாக
பல
மடங்கு
கிடைக்கிறது.
அதே
போல்
ஒரு
வீணான
எண்ணத்தின்
கணக்கு
-சோர்வடைவது,
மனமுடைந்து
போவது
மற்றும்
குஷி
இல்லாமல்
ஆவது
என்ற
இதுவும்
ஒன்றிற்கு
பல
மடங்கின் கணக்கோடு
அனுபவம்
ஆகும்.
தினசரி
தன்னுடைய
சபையைக்
கூட்டுங்கள்.
மேலும்
தன்னுடைய
அனைத்து காரியம்
செய்யும்
வேலைக்காரர்களின்
நிலைமையைக்
கேளுங்கள்.
உங்களுடைய
சூட்சும
சக்திகளாக
மந்திரி,
மகாமந்திரி
இருக்கிறார்கள்
இல்லையா!
அவர்களை
தன்னுடைய
கட்டளைப்படி
நடத்துங்கள்.
ஒருவேளை இப்பொழுதிலிருந்தே இராஜசபை
சரியாக
இருக்கிறது
என்றால்
தர்மராஜரின்
சபையில்
செல்ல
வேண்டியதிருக்காது.
தர்மராஜும்
வரவேற்பு
செய்வார்.
ஆனால்
ஒருவேளை
கட்டுப்படுத்தும்
சக்தி
இல்லை
என்றால்
ஃபைனல்
(இறுதி)
ரிசல்ட்டில்
ஃபைன்
(அபராதம்)
கட்டுவதற்காக
தர்மராஜ்
புரியில்
செல்ல
வேண்டியதாக
இருக்கும்.
இந்த
தண்டனைகள் தான்
ஃபைன்.
ரிஃபைன்
(மிக
சுத்தமானவர்)
ஆகிவிட்டீர்கள்
என்றால்
ஃபைன்
கட்ட
வேண்டியது
இருக்காது.
நிகழ்காலம்,
எதிர்காலத்தின்
கண்ணாடி.
நிகழ்காலத்தின்
நிலை
அதாவது
கண்ணாடி
மூலமாக
தன்னுடைய எதிர்காலத்தை
தெளிவாகப்
பார்க்க
முடியும்.
எதிர்காலத்தில்
இராஜ்ஜிய
அதிகாரி
ஆவதற்காக
தற்சமயம்
எனக்குள் ஆளுமை
சக்தி
எந்தளவு
இருக்கிறது
என்று
சோதனை
செய்யுங்கள்.
முதலில் விசேஷமாக
காரியம்
செய்யும் சூட்சும
சக்திகள்.
எண்ணத்தின்
சக்தியின்
மேல்,
புத்தியின்
மேல்
மற்றும்
சம்ஸ்காரங்களின்
மேல்
முழுமையான அதிகாரம்
இருக்க
வேண்டும்.
இந்த
விசேஷ
மூன்று
சக்திகள்
இராஜ்ஜிய
காரிய
நடவடிக்கைகளை
செய்விப்பதில் முக்கியமான
சகயோகி
காரியம்
செய்பவர்கள்.
ஒருவேளை
இந்த
மூன்று
காரியம்
செய்பவர்கள்
ஆத்மா
உங்களுடைய அதாவது
இராஜ்ய
அதிகாரி
இராஜாவின்
சமிக்ஞையின்
படி
நடக்கிறார்கள்
என்றால்
அந்த
இராஜ்ஜியம்
எப்பொழுதும் சரியான
முறையில்
நடந்து
கொண்டிருக்கும்.
எப்படி
இராஜா
தானே
எந்தக்
காரியமும்
செய்வதில்லை,
செய்விப்பார்.
செய்யக்கூடிய
இராஜ்ய
வேலைக்காரர்கள்
தனியாக
இருப்பார்கள்.
ஒருவேளை
இராஜ்ஜிய
காரிய
நடவடிக்கை சரியாக
நடக்கவில்லை
என்றால்
இராஜ்ஜியம்
குழப்பத்தில்
வந்து
விடும்.
அதே
போல்
ஆத்மாவும்
காரியத்தை செய்விப்பவர்,
செய்பவர்கள்
இந்த
விசேஷ
மும்மூர்த்தி
சக்திகள்.
முதலில் இவர்கள்
மேல்
ஆளுமை
சக்தி இருக்கிறது
என்றால்
இந்த
பௌதீக
கர்ம
இந்திரியங்கள்
அவைகளின்
ஆதாரத்தில்
இயல்பாகவே
சரியான
வழியில் நடந்து
கொண்டிருக்கும்.
எப்படி
சத்யுக
உலகத்தைப்
பற்றி
ஒரு
இராஜ்ஜியம்
ஒரு
தர்மம்
இருந்தது
என்று கூறுகிறார்கள்.
அதே
போலவே
இப்பொழுது
சுயராஜ்ஜியத்திலும்
ஒரு
இராஜ்ஜியம்
அதாவது
தன்னுடைய சமிக்ஞை
படி
அனைவரும்
நடப்பவர்களாக
இருக்க
வேண்டும்.
மனம்
தன்னுடைய
வழிப்படி
நடக்கக்கூடாது,
புத்தி
தன்னுடைய
முடிவெடுக்கும்
சக்தியில்
குழப்பம்
செய்யக்கூடாது.
சம்ஸ்காரம்
ஆத்மாவை
ஆட்டுவிப்பதாக இருக்கக்கூடாது.
அப்பொழுது
தான்
ஒரு
தர்மம்,
ஒரு
இராஜ்ஜியம்
என்று
கூறுவோம்.
எனவே
அந்த
மாதிரி கட்டுப்படுத்தும்
சக்தியை
தாரணை
செய்யுங்கள்.
மதிப்புடன்
தேர்ச்சி
அடைவதற்கு
மற்றும்
இராஜ்ஜிய
அதிகாரி
ஆவதற்காக
சூட்சும
சக்தியான
மனதின் மேல்
கட்டுப்பாடு
இருக்க
வேண்டும்
அதாவது
அது
கட்டளைப்படி
காரியம்
செய்ய
வேண்டும்.
என்ன யோசிக்கிறீர்களோ
அது
கட்டளைப்படி
இருக்க
வேண்டும்.
நில்
என்றால்
நின்று
விட
வேண்டும்,
சேவையைப் பற்றி
நினைத்தீர்கள்
என்றால்
சேவையில்
ஈடுபட்டு
விட
வேண்டும்.
பரம்தாமத்தை
நினைத்தீர்கள்
என்றால் பரம்தாமம்
சென்றடைந்து
விட
வேண்டும்.
அந்த
மாதிரியான
கட்டுப்படுத்தும்
சக்தியை
இப்பொழுது
அதிகரியுங்கள்.
சின்னச்
சின்ன
சம்ஸ்காரங்களில்,
யுத்தம்
செய்வதில்
நேரத்தை
இழக்காதீர்கள்.
கட்டுப்படுத்தும்
சக்தியை
தாரணை செய்து
விட்டீர்கள்
என்றால்
கர்மாதீத்
நிலையின்
அருகில்
சென்றடைந்து
விடுவீர்கள்.
எப்பொழுது
மற்ற அனைத்து
எண்ணமும்
சாந்தமாகி
விடுகிறது,
ஒரு
தந்தை
மற்றும்
நான்
அவ்வளவு
தான்
என்ற
இந்த
சந்திப்பின் அனுபவத்தின்
எண்ணம்
இருக்கிறதோ
அப்பொழுது
தான்
சக்திசாலியான யோகா
என்று
கூறுவோம்.
இதற்காக உள்ளடக்கும்
மற்றும்
சாரத்தில்
கொண்டு
வரும்
சக்தி
வேண்டும்.
நில்
என்று
கூறிய
உடனேயே
எண்ணம்
நின்று விட
வேண்டும்.
முழுமையான
பிரேக்
பிடிக்க
வேண்டும்,
தொய்வாக
இருக்க
கூடாது.
சக்திசாலியான பிரேக் இருக்க
வேண்டும்.
கட்டுப்படுத்தும்
சக்தி
இருக்க
வேண்டும்.
ஒருவேளை
ஒரு
விநாடிக்கு
பதிலாக
அதிக நேரம்
சென்று
விட்டது
என்றால்
உள்ளடக்கும்
சக்தி
பலஹீனமாக
இருக்கிறது.
இறுதியில்
கடைசி
பரீட்சையின் கேள்வியாக
ஒரு
நொடியில்
முற்றுப்புள்ளி
வைக்க
வேண்டும்
என்றிருக்கும்.
இதிலே
தான்
வரிசை
எண் கிடைக்கும்.
ஒரு
விநாடியை
விட
அதிகம்
ஆகி
விட்டது
என்றால்
தோல்வி
அடைந்து
விடுவீர்கள்.
ஒரு
தந்தை மற்றும்
நான்,
மூன்றாவது
எந்த
விஷயமும்
இருக்க
வேண்டாம்.
இதைச்
செய்யலாமா,
இதைப்
பார்க்கலாமா
. ..இது
நடந்தது,
இது
நடக்கவில்லை
என்று
அப்படி
இருக்க
வேண்டாம்.
இது
ஏன்
நடந்தது,
இது
என்ன
ஆனது என்று
ஏதாவது
விஷயம்
வந்தது
என்றால்
தோல்வி
அடைந்து
விடுவீர்கள்.
ஏதாவது
விஷயத்தில்
ஏன்,
என்ன என்ற
க்யூ
வரிசையை
உருவாக்கினீர்கள்
என்றால்
அந்த
க்யூவை
முடிப்பதற்கு
மிகுந்த
நேரம்
ஆகும்.
எப்பொழுது படைப்பை
படைத்து
விட்டீர்கள்
என்றால்
பாலனையையும்
செய்ய
வேண்டியது
இருக்கும்.
பாலனை
செய்யாமல் தப்பிக்க
முடியாது.
நேரம்,
சக்தியை
கொடுக்கத்
தான்
வேண்டும்.
எனவே
இந்த
வீணான
படைப்பிற்கான குடும்பக்
கட்டுப்பாடு
செய்யுங்கள்.
யார்
தன்னுடைய
சூட்சும
சக்திகளை
கையாள
முடியுமோ
அவரால்
மற்றவர்களையும்
கையாள
முடியும்.
எனவே
தன்
மேல்
இருக்கும்
கட்டுப்படுத்தும்
சக்தி,
ஆளுமை
சக்தி
அனைவருக்காக
யதார்த்த
கையாளும் சக்தியாக
ஆகிவிடுகிறது.
அஞ்ஞானி
ஆத்மாக்களை
சேவை
மூலமாக
கையாண்டாளும்
சரி
அல்லது
பிராமண பரிவாரத்தில்
அன்பு
நிறைந்த,
திருப்தி
நிறைந்த
விவகாரம்
செய்தாலும்
சரி
இரண்டிலும்
வெற்றி
அடைந்து விடுவீர்கள்.
வரதானம்
–
எண்ணம்
மற்றும்
சொல்லின் ஒருங்கிணைப்பு
மூலமாக
மந்திர
காரியம்
செய்யக்கூடிய புதுமை
மற்றும்
விசேஷம்
நிரம்பியவர்
ஆகுக.
எண்ணம்
மற்றும்
சொல்லின் ஒருங்கிணைப்பு
மந்திர
சக்தியின்
காரியம்
செய்கிறது.
இதன்
மூலம் குழுவின்
சின்ன
சின்ன
விஷயங்கள்,
நீங்கள்
நினைத்தீர்கள்
அப்படியே
நடந்தது
என்று
மந்திரம்
போட்டது
போல் முடிவடைந்து
விடும்.
மனதால்
சுபபாவனை
மற்றும்
சுப
ஆசீர்வாதங்கள்
கொடுப்பதிலேயே
பிஸியாக
இருந்தீர்கள் என்றால்
மனதின்
குழப்பம்
முடிவடைந்து
விடும்,
முயற்சி
செய்வதில்
ஒருபொழுதும்
மனமுடைந்து
போக மாட்டீர்கள்.
குழுவில்
ஒருபொழுதும்
பயப்பட
மாட்டீர்கள்.
எண்ணம்,
சொல்லில் இணைந்து
சேவை
செய்வதினால் விஸ்தாரமான
மார்க்கத்தின்
சேவையின்
பிரபாவத்தைப்
பார்ப்பீர்கள்.
இப்பொழுது
சேவையில்
இதே
புதுமை மற்றும்
விசேஷத்தினால்
சம்பன்னம்
ஆனீர்கள்
என்றால்
9
இலட்சம்
பிரஜைகள்
சகஜமாக
தயாராகி
விடுவார்கள்.
சுலோகன்
:
எப்பொழுது
முழுமையாக
விகாரமற்றவராக
ஆவீர்களோ அப்பொழுது
புத்தி
சரியான
முடிவைக்
கொடுக்கும்.
ஓம்சாந்தி