28.12.2018 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
பழைய
உலகத்திலிருந்து பற்றுதலை
விட்டு,
சேவை
செய்வதற்கான ஊக்கம்
வையுங்கள்.
உற்சாகத்தில்
இருங்கள்.
சேவையில்
ஒருபோதும்
களைத்துப்போகக்
கூடாது.
கேள்வி
:
எந்தக்
குழந்தைகளுக்கு
ஞானத்தின்
போதை
ஏறியிருக்குமோ,
அவர்களின்
அடையாளம் என்னவாக
இருக்கும்?
பதில்:
அவர்களுக்கு
சேவை
செய்வதில்
மிகமிக
ஆர்வம்
இருக்கும்.
அவர்கள்
சதா
மனம்
மற்றும்
சொற்களின் செய்யும்
சேவையில்
ஈடுபட்டிருப்பார்கள்.
அனைவருக்கும்
பாபாவின்
அறிமுகம்
தந்து
நிரூபணம்
தருவார்கள்.
இராஜ்யத்தை
ஸ்தாபனை
செய்வதற்காக
சகித்துக்
கொள்ள
வேண்டியிருந்தாலும்
கூட
சகித்துக்
கொள்வார்கள்.
பாபாவுக்கு
முழுமையான
உதவியாளராக
ஆகி,
பாரதத்தை
சொர்க்கமாக்கும்
சேவை
செய்வார்கள்.
பாடல்
:
மாதா
ஓ
மாதா,
நீ
அனைவருக்கும்
பாக்கிய
விதாதா........
ஓம்
சாந்தி
இப்போது
நம்பர்வார்
(வரிசைக்
கிரம)
புருஷார்த்தத்தின்
அனுசாரம்
குழந்தைகள்
மாதாவை அறிவார்கள்.
அம்மாவை
அறிவார்கள்
என்றால்
நிச்சயமாகத்
தந்தையையும்
தெரிந்திருப்பார்கள்.
இந்தத்
தாய்-தந்தை
சௌபாக்கிய
விதாதா
மற்றும்
பாக்கிய
விதாதா
ஆவார்கள்.
சௌபாக்கியசாலியார் என்றால்,
யார்
முயற்சி
செய்து தங்களின்
முழு
சௌபாக்கியத்தை
உருவாக்கிக்
கொள்கிறார்களோ,
சூரியவம்சி-சந்திரவம்சி
குலத்தில்
ஆஸ்தியைப் பெறுகிறார்களோ,
அவர்கள்
தான்!
அதுவும்
வரிசைக்கிரமமாக!
அநேகர்
இப்படியும்
இருக்கிறார்கள்-எப்படி
மலைஜாதி,
காட்டுவாசிகள்
இருக்கிறார்களோ,
அதுபோல்.
அநேகர்
சாதாரணப்
பிரஜைகளாகப்
போய்ப்
பிறவி
எடுப்பார்கள்.
அவர்கள்
பதவி
பெற
முடியாது.
பாபாவோ
நிச்சயமாகச்
சொல்லிப் புரிய
வைப்பார்
-
குழந்தைகளே,
இந்தப்
பழைய உலகத்தின்
மீது
மோகம்
வைக்காதீர்கள்.
உலகம்
பாவம்
கதறிக்
கொண்டிருக்கிறது.
குழந்தைகளிடம்
சேவை செய்வதற்கான
ஆர்வம்
மற்றும்
ஊக்கம்
வேண்டும்.
சிலருக்கு
ஊக்கம்
வருகிறது,
ஆனால்
சேவை
செய்வதற்கான வழிமுறை
தெரிவதில்லை.
வழிகாட்டுதலோ
நிறையவே
கிடைக்கின்றது.
எழுதுவதிலும்
கூட
மிகவும்
தெளிவு இருக்க
வேண்டும்.
திரிமூர்த்தி
மற்றும்
கல்பவிருட்சத்தின்
சித்திரம்
30
அங்குலத்துக்கு
40
அங்குலம்
என்ற அளவில்
இருக்க
வேண்டும்.
இவை
மிகவும்
பயனுள்ள
பொருட்களாகும்.
ஆனால்
இதற்கான
மதிப்பு
குழந்தைகளிடம் குறைவாக
உள்ளது.
சஞ்சய்க்கு
மிகுந்த
மதிப்பு
உள்ளது
என்ற
போதிலும்
அந்த
மகிமை
(கலியுகத்தின்)
கடைசி நேரத்திற்குரியதாகும்.
எப்படி
சொல்கின்றனர்,
அதிந்திரிய
சுகம்
பற்றி
கோப-கோபியரிடம்
கேளுங்கள்
என்று அதுவும்
கடைசி
நேரத்தின்
மனநிலைப்
பற்றிய
பாடலாகும்.
இப்போது
அந்த
சுகம்
யாருக்கும்
இல்லை.
இப்போதோ அழுது
கொண்டு
கீழே
விழுந்து
கொண்டிருக்கிறார்கள்.
மாயா
அடி
கொடுத்து
விடுகின்றது.
தினந்
தோறும் வருகின்றனர்,
ஆனால்
நஷா
(போதை)
ஏறுவதில்லை.
உங்களுக்கு
சேவைக்கான
வாய்ப்பு
அதிகம்
கிடைக்கிறது.
இப்போது
சொல்லிக் கொண்டே
இருக்கின்றனர்,
ஒரே
தர்மம்
வேண்டும்
என்று.
ஒரே
அரசு
பாரதத்தில் இருந்தது.
இது
தான்
சொர்க்கம்
எனச்
சொல்லப்பட்டது.
ஆனால்
அதை
யாரும்
அறிந்திருக்கவில்லை.
5000
ஆண்டுகளுக்கு
முந்தைய
விஷயம்-அப்போது
ஒரே
இராஜ்யம்
இருந்தது.
2500
ஆண்டுகள்
என்றும்
சொல்ல முடியும்.
ஏனென்றால்,
இராமரின்
இராஜ்யத்திலும்
ஓர்
அரசாங்கம்
இருந்தது.
2500
ஆண்டுகளுக்கு
முன் சத்யுக-திரேதாவில்
ஒரே
அரசாங்கம்
இருந்தது.
இரண்டு
இருந்ததில்லை,
கையொலி எழுப்புவதற்கு
(சண்டையிட்டுக்கொள்வதற்கு).
இங்கேயும்
சொல்லிக் கொண்டே
இருக்கின்றனர்,
இந்து-சீனர்
பாயி
பாயி
(இந்தியரும்
சீனர்களும் சகோதரர்கள்)
என்று.
பிறகு
பாருங்கள்
என்ன
செய்து
கொண்டிருக்கின்றனர்
என்று!
ஒருவரை
ஒருவர்
துப்பாக்கியால் சுட்டுக்
கொண்டே
இருக்கின்றனர்.
இந்த
உலகமே
அப்படிப்
பட்டது
தான்.
கணவன்-மனைவி
கூடத்
தங்களுக்குள் அடித்துக்
கொள்கின்றனர்.
மனைவி
கணவனையே
கூட
அடிப்பதற்குத்
தயங்குவதில்லை.
ஒவ்வொரு
வீட்டிலும் அதிகமாக
சண்டை
நடந்து
கொண்டே
இருக்கிறது.
பாரதவாசிகளும்
கூட
மறந்து
விட்டுள்ளனர்,
2500
ஆண்டுகளுக்கு முந்தைய
விஷயம்-அப்போது
ஒரே
அரசாங்கம்
இருந்தது.
இப்போதோ
அநேக
தர்மங்கள்
உள்ளன
என்றால் நிச்சயமாகச்
சண்டை
இருக்கும்.
நீங்கள்
சொல்கிறீர்கள்,
பாரதத்தில்
ஒரே
அரசாங்கம்
இருந்தது.
அது
பகவான் பகவதியின்
அரசாங்கம்
எனச்
சொல்லப்படும்.
பக்தி
மார்க்கம்
இருந்தது.
சத்யுக
திரேதாவில்
பக்தி
இருப்பதில்லை.
மனிதர்கள்
தங்கள்
அகங்காரத்தை
அதிகமாகக்
காட்டுகின்றனர்.
ஆனால்
ஞானம்
என்பது
சோழியளவு
கூட அவர்களிடம்
இல்லை.
அவ்வாறே
ஞானமோ
அநேகம்
உள்ளன
இல்லையா?
டாக்டரின்
ஞானம்,
வக்கீலின் ஞானம்..........
பாபா
சொல்கிறார்,
டாக்டர்
ஆஃப்
ஃபிலாசஃபி
(தத்துவ
மேதை)
என்று
சொல்க்
கொள்பவர்களிடம் இந்த
ஞானம்
கொஞ்சம்
கூடக்
கிடையாது.
ஃபிலாசஃபி
(தத்துவம்)
எனச்
சொல்லப்
படுவது
எது?
–
இதையும் கூடப்
புரிந்து
கொள்ளவில்லை.
ஆக,
குழந்தைகளாகிய
உங்களுக்கு
சேவை
செய்வதில்
ஆர்வம்
வேண்டும்.
ஸ்தாபனையில்
உதவியாளர்
ஆக
வேண்டும்.
நல்ல
பொருளை
உருவாக்கித்
தர
வேண்டும்.
எப்படி
மனிதர்களோ,
அதுபோல்
அழைப்புக்
கொடுக்கப்படுகின்றது.
எப்படி
அரசாங்கத்தில்
அநேக
அதிகாரிகள்
உள்ளனர்,
கல்வி
அமைச்சர் இருக்கிறார்,
முதலமைச்சர்
இருக்கிறார்,
இங்கேயும்
காரியாலயங்கள்
(துறைகள்)
இருக்க
வேண்டும்.
வழிகாட்டுதல்கள் வெளிப்படட்டும்,
பிறகு
அவற்றை
நடைமுறைப்படுத்த
வேண்டும்.
இப்போது
பாருங்கள்,
கோரக்புரி
கீதைகள் வெளிப்படுகின்றன,
அனைத்தையும்
இலவசமாகக்
கொடுப்பதற்காகத்
தயாராக
வைத்துள்ளனர்.
நிறுவனங்கள் என்னென்ன
உள்ளனவோ,
அவற்றிற்கு
நிதிவசதி
அதிகமாகவே
உள்ளது.
காஷ்மீரின்
மகாராஜா
இறந்தாரென்றால் சொத்து
முழுவதும்
ஆரிய
சமாஜத்தினருக்குக்
கிடைத்தது.
ஏனென்றால்
அவர்
ஆரியசமாஜத்தை
சேர்ந்தவராக இருந்தார்.
சந்நியாசிகள்
முதலானவர்களிடமும்
அதிகப்
பணம்
உள்ளது.
உங்களிடம்
உள்ள
பணத்தையும்
இந்த சேவையில்
ஈடுபடுத்திக்
கொண்டிருக்கிறீர்கள்.
அதனால்
இந்த
பாரதம்
சொர்க்கமாகட்டும்
என்று.
நீங்கள்
சொர்க்கத்தை உருவாக்குவதில்
உதவி
செய்கிறீர்கள்.
இரவு-பகலுக்குள்ள
வேறுபாடு.
அவர்கள்
நாளுக்கு
நாள்
நரகவாசி
ஆகிக் கொண்டே
செல்கின்றனர்.
உங்களை
இப்போது
பாபா
சொர்க்கவாசி
ஆக்குகிறார்.
அனைவருமே
ஏழைகள்
தான்.
நாம்
பணத்தைச்
சேமிக்கிறோம்
என்பதில்லை.
நீங்களோ
சொல்கிறீர்கள்-
பாபா,
இந்த
ஒன்றுக்கும்
உதவாத
பைசா அனைத்தையும்
யக்ஞத்தில்,
சேவையில்
ஈடுபடுத்துங்கள்.
இச்சமயமோ
அனைவரும்
தங்களுக்குள்
சண்டையிட்டுக் கொண்டே
இருக்கின்றனர்.
ஒரே
அரசாங்கமோ
இருக்கவே
முடியாது.
ஆக,
அரசாங்கத்துக்குச்
சொல்ல
வேண்டும்,
சூரியவம்சி
சந்திரவம்சியினரின்
நிச்சயமாக
ஒரே
அரசாங்கம்
இருந்தது.
நீங்களும்
விரும்புகிறீர்கள்,
அது
நிச்சயமாக உருவாகும்.
பாபா
சொர்க்கத்தின்
ஸ்தாபனை
செய்து
கொண்டிருக்கிறார்.
அவர்
ஹெவன்லி காட் ஃபாதர்.
நாம்
ஒரு தெய்வீக
சாம்ராஜ்யத்தை
ஸ்தாபனை
செய்து
கொண்டிருக்கிறோம்.
அங்கே
அசுர
அரசாங்கம்
இருப்பதில்லை.
அவர்கள்
அனைவரும்
விநாசமாகி
விடுவார்கள்.
உங்களிடம்
ஞானம்
மிக
நன்றாக
உள்ளது.
அதிகமான
காரியங்கள் நடைபெற
முடியும்.
டில்தலைமையகமாகும்.
அதிக
சேவை
செய்ய
முடியும்.
அங்கே
குழந்தைகளும்
மிக நல்லவர்களாக
இருக்கிறார்கள்.
ஜெகதீஷ்சஞ்சய்
கூட
இருக்கிறார்.
ஆனால்
சஞ்சயோ
அனைவரும்
தான்
இல்லையா?
ஒருவரல்ல.
நீங்கள்
ஒவ்வொருவரும்
சஞ்சய்
தான்.
உங்களுடைய
கடமை
-
அனைவருக்கும்
வழி
சொல்வது.
பாபாவோ
நல்லபடியாக
சொல்லிப் புரிய
வைத்துக்
கொண்டே
இருக்கிறார்.
ஆனால்
குழந்தைகள்
தங்களுடைய வேலை-கடமைகளில்,
குழந்தைகள்
முதலானவர்
களைப்
பராமரிப்பதில்
மூழ்கியுள்ளனர்.
இல்லற
விவகாரங்களில் இருந்தவாறே
பாபாவுக்கு
உதவியாளர்
ஆக
வேண்டும்
-
ஆனால்
அது
இல்லை.
இங்கோ
சேவை
செய்து
காட்ட வேண்டும்.
ஒரே
அரசாங்கம்
எப்படி
ஸ்தாபனை
ஆகிக்
கொண்டிருக்கிறது,
இந்தச்
சக்கரம்,
டிராமா
பாருங்கள்,
சமயத்தைக்
காட்டிக்
கொண்டிருக்கிறது.
எப்படி
இராவணனின்
சித்திரம்
உருவாக்கப்பட்டுள்ளதோ,
அதுபோல் பெரிய
சித்திரத்தை
உருவாக்கி
அதில்
எழுத
வேண்டும்
-
இப்போது
கடிகாரத்தின்
முள்
வந்து
சேர்ந்துள்ளது
(கலியுக
முடிவு,
சத்தியயுக
ஆரம்பம்).
பிறகு
ஒரே
அரசாங்கம்
உருவாகி
விடும்.
பாபா
வழிகாட்டுதல்
தருகிறார்.
சிவபாபாவோ
தெருக்களில்
சென்று
அடி
வாங்க
மாட்டார்.
இவர்
(பிரம்மா)
போனாரென்றால்
சிவபாபா
அடி
வாங்க வேண்டி
வந்தது
என்று
ஆகிவிடும்.
குழந்தைகள்
மதிப்பு
வைக்க
வேண்டும்.
இந்த
சேவை
செய்ய
வேண்டியது குழந்தைகளின்
கடமையாகும்.
எழுத
வேண்டும்,
ஒரே
அரசாங்கம்
பாரதத்தில்
இருந்தது,
அது
மீண்டும்
ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது.
எத்தனை
ஆண்டுகளாக
இந்த
யக்ஞம்
படைக்கப்
பட்டுள்ளது!
முழு
உலகத்தின் குப்பைகள்
அனைத்தும்
இதில்
அழிந்து
விட
வேண்டும்.
மிகவும்
சுலபம்,
ஆனால்
அனைவருக்கும்
புரிய வைப்பதற்கு
சமயம்
வேண்டும்.
இராஜாவோ
இப்போது
யாரும்
கிடையாது.
யாரோ
ஒருவரை
அனைவரும்
ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்.
முதலில் ஏதேனும்
புதிய
கண்டுபிடிப்புகள்
வெளிவந்தால்
இராஜாக்கள்
மூலம்
அதனுடைய விஸ்தாரத்தைச்
செய்வித்தனர்.
ஏனென்றால்,
இராஜாவுக்கு
சக்தி
இருந்தது.
இராஜயோகத்தினால்
அல்லது
செல்வத்தை தானம்
செய்வதால்
அரசராக
ஆகின்றனர்.
இங்கிருப்பதோ
பிரஜைகளின்
இராஜ்யம்.
ஒரே
ஓர்
அரசாங்கம்
என்பது இங்கே
கிடையாது.
ஒன்றுமில்லாத
ஓர்
ஏழைச்
சிப்பாய்
கூட
அரசாங்கம்
தான்.
யாருடைய
பெல்ட்டையும் கழற்றுவதில்
(பதவி
இறக்கம்)
தயக்கம்
காட்டுவதில்லை.
இதுபோல்
அநேகக்
காரியங்கள்
நடைபெற்றுக்
கொண்டே இருக்கின்றன.
(கொஞ்சம்
பணம்)
கொடுப்பீர்களானால்
அமைச்சரைக்
கூட
கொன்று
விடுகின்றனர்.
ஆக,
குழந்தைகளாகிய
நீங்கள்
சேவைக்கான
வாய்ப்பை
எடுத்துக்
கொள்ள
வேண்டும்.
தூங்கக்
கூடாது.
எப்படி
சத்சங்கங்களில்
கதை
கேட்டு
வீட்டுக்குப்போன
பின்
முன்போலவே
ஆகி
விடுகிறார்கள்.
எந்த
உற்சாகமும் இருப்பதில்லை.
அது
போன்று
நம்
குழந்தைகளிடமும்
கூட
உற்சாகம்
குறைவாக
உள்ளது.
அரசாங்கத்தின் தோட்டம்
இருக்குமானால்
அதில்
நல்ல
முதல்
தரமான
பூக்கள்
இருக்கும்.
அதன்
துறையே
(இலாகா)
தனியாக இருக்கும்.
யாராவது
சென்றால்
முதலில் முதல்
தரமான
பூக்களைக்
கொண்டு
வந்து
தருவார்கள்.
பாபாவுக்கும்
இது மலர்த்தோட்டமாகும்.
யாரேனும்
வந்தால்
நாம்
என்ன
சுற்றிக்
காட்டுவோம்?
பெயர்
சொல்லுவோம்
–
இவர்கள் நல்ல-நல்ல
பூக்கள்
என்று.
அரளி,
எருக்கம்பூக்களும்கூட
அமர்ந்துள்ளனர்-ஜொலிப்பதில்லை.
சேவை
செய்வதில்லை.
தினந்தோறும்
யாருக்காவது
பாபாவின்
அறிமுகம்
அவசியம்
கொடுக்க
வேண்டும்.
நீங்களோ
குப்தமாக
இருக்கிறீர்கள்,
எவ்வளவு
விக்னங்கள்
வருகின்றன!
சேவைக்குத்
தகுதி
உள்ளவர்களாக
ஆகவில்லை.
பாபா
அடிக்கடி
சொல்கிறார்,
கோவில்களுக்குச்
செல்லுங்கள்,
மயானத்திற்குச்
செல்லுங்கள்.
அங்கே
சென்று சொற்பொழிவு
செய்ய
வேண்டும்.
குழந்தைகள்
சேவையின்
நிரூபணம்
காட்ட
வேண்டும்.
ஆயிரத்தில்
ஒரு
சிலர் வெளிப்படுவார்கள்.
உற்றார்
உறவினர்
முதலானோருக்கும்
கூட
சொல்லிப் புரிய
வைக்க
வேண்டும்.
இங்கே வருவதற்கு
பயப்படுகின்றனர்
என்றால்
வீட்டுக்குச்
சென்று
புரிய
வைக்க
முடியும்.
பாபாவின்
அறிமுகம்
கிடைப்பதால் மிகவும்
குஷியடைவார்கள்.
பாபா
சொல்கிறார்,
சேவையில்
களைப்பு
ஏற்படக்
கூடாது.
நூற்றில்
ஒருவர்
வெளிப்படுவார்.
இராஜ்யம்
ஸ்தாபனை
செய்வதில்
நிச்சயமாக
சகித்துக்
கொள்ள
வேண்டியிருக்கும்.
எதுவரை
நிந்தனை பெறவில்லையோ,
அதுவரை
கலங்கீதர்
ஆக
மாட்டார்கள்.
ஞானத்தின்
நஷா
ஏறியுள்ளது.
ஆனால்
முடிவு
(ரிசல்ட்)
எங்கே?
நல்லது,
10-20
பேருக்கு
ஞானம்
கொடுத்தாயிற்று,
அவர்களில்
ஓரிருவர்
விழித்துக்
கொண்டனர்,
அதையும் சொல்ல
வேண்டும்
இல்லையா?
சேவையில்
ஆர்வம்
வேண்டும்.
அப்போது
பாபா
பரிசு
தருவார்.
தந்தையின் அறிமுகம்
கொடுங்கள்
-
உங்கள்
தந்தை
யார்?
-
இந்தக்
கேள்வியைக்
கேளுங்கள்.
அப்போது
தான்
ஆஸ்தியின் நஷா
(போதை)ஏறும்.
நீங்கள்
சொற்பொழிவு
செய்யுங்கள்
-
உலகத்தில்
பிரம்மாகுமார்-குமாரிகள்
தவிர
உலகத்தின் சரித்திர-பூகோளத்தை
யாருமே
அறிந்திருக்கவில்லை.
சவால்
விடுங்கள்.
பாபா
மயானத்தின்
விஷயத்தை
எடுத்துச் சொன்னார்
என்றால்,
நீங்கள்
மயானத்திற்குச்
சென்று
சேவை
செய்ய
வேண்டும்.
வேலை-தொழிலை
பிறகு
6-8
மணி
நேரம்
செய்வீர்கள்,
மற்ற
நேரம்
எங்கே
போய்
விடுகிறது?
இப்படிப்
பட்டவர்கள்
பிறகு
உயர்ந்த
பதவி
பெற முடியாது.
பாபா
சொல்வார்-நீங்கள்
வந்திருக்கிறீர்கள்,
நாராயணரை
அல்லது
லட்சுமியை
மணப்பதற்காக.
ஆனால் தங்கள்
முகத்தைப்
பாருங்கள்.
பாபா
சொல்லிப் புரிய
வைப்பதோ
சரி
தான்
இல்லையா?
ஒரே
ஒரு
தலைப்பை எடுங்கள்,
உலகத்தின்
சரித்திர-பூகோளத்தை
வந்து
புரிந்து
கொள்ளுங்கள்
-
எப்படி
திரும்பவும்
நடைபெறுகின்றது என்று.
செய்தித்
தாட்களில்
போடுங்கள்.
சேவைக்காக
ஹால்
(மண்டபம்)
பெறுவதற்கு
முயற்சி
செய்யுங்கள்.
உங்களுக்கு
மூன்றடி
நிலம்
கிடைப்பதில்லை.
அவர்கள்
இதைப்
பற்றி
அறிந்து
கொள்ளவில்லை.
நீங்கள்
பரந்தாமத்திலிருந்து வந்த
வெளிநாட்டினர்.
ஆத்மாக்கள்
அனைவரும்
பரந்தாமத்திலிருந்து வந்துள்ளனர்.
ஆக,
இங்கே
அனைவரும்
வெளிநாட்டினர்
ஆகின்றனர்
இல்லையா?
ஆனால்
இந்த
உங்களுடைய
வார்த்தைகளை யாரும்
புரிந்து
கொள்வதில்லை.
இங்கே
சாகாரில்
காலைத்
தொடுங்கள்,
இதைச்
செய்யுங்கள்
என்றெல்லாம்
சொல்லப் படுவதில்லை.
எப்படி
சாது-மகாத்மாக்களின்
கால்களைக்
கழுவி
அந்த
நீரைக்
குடிக்கின்றனர்,
அது
தத்துவ
பூஜை எனச்
சொல்லப்
படுகின்றது.
5
தத்துவங்களால்
ஆன
சரீரம்
இல்லையா?
பாரதத்திற்கு
என்ன
மாதிரி
நிலை ஆகியுள்ளது!
ஆக,
பாபா
சொல்கிறார்,
சேவையின்
நிரூபணம்
கொடுங்கள்.
அனைவருக்கும்
சுகம்
கொடுங்கள்.
இங்கு
இந்த
ஈடுபாடு,
இந்தக்
கவலை
இருக்க
வேண்டும்.
புத்தியோகம்
பாபாவிடம்
இருக்க
வேண்டும்.
பாடல்
-
மாதா
நீ
அனைவரின்
பாக்கியவிதாதா.........
மாதா
ஜெகத்
அம்பா
பாக்கிய
விதாதா
ஆவார்.
பதவியை
மாதா
பெறுகிறார்.
அவரும்
சொல்கிறார்,
சிவபாபாவை
நினைவு
செய்யங்கள்.
நானும்
கூட
அவர்
மூலம் தாரணை
செய்து
மற்றவர்களையும்
தாரணை
செய்ய
வைக்கிறேன்.
சௌபாக்கியத்தை
அமைத்துக்
கொள்கிறேன்.
நீங்கள்
பாரதத்தின்
சௌபாக்கிய
விதாதா.
ஆக,
எவ்வளவு
நஷா
இருக்க
வேண்டும்!
மம்மாவின்
மகிமை
தான் பாபாவின்
மகிமை,
அது
தான்
தாதாவின்
மகிமை.
குழந்தைகளாகிய
நீங்கள்
யக்ஞத்தின்
ஸ்தூல
சேவையும்
செய்ய வேண்டும்
என்றால்,
ஆன்மீக
சேவையும்
அவசியம்
செய்ய
வேண்டும்.
மன்மனாபவ
என்ற
மந்திரத்தை அனைவருக்கும்
தர
வேண்டும்.
மன்மனாபவ
என்பது
மனதினுடையது,
மத்யாஜீபவ
என்பது
வார்த்தையினுடையது.
இதில்
காரியங்கள்
செய்வதும்
வந்து
விடுகிறது.
கன்யாக்கள்
சேவையில்
ஈடுபட்டிருக்க
வேண்டும்.
கிராமங்களில்
சேவை
நல்லபடியாக
நடைபெறுகின்றது.
பெரிய
நகரங்களில்
அதிக
ஃபேஷன்
உள்ளது.
கவர்ச்சி
அதிகம்
இருந்தால்
என்ன
செய்வது?
பெரிய
நகரங்களை
விட்டுவிடலாமா?
அப்படியும்
இல்லை.
பெரிய நகரங்களில்
இருந்து,
பணக்காரர்களிடமிருந்து
சப்தம்
(செய்தி)
வெளிப்படும்.
மற்றப்படி
உலகத்திற்கோ
இந்த மன்மனாபவ
என்ற
சூ
மந்திரத்தின்
மூலம்
சொர்க்கத்தை
உருவாக்க
வேண்டும்.
பாபா
வந்து
புரிய
வைக்கிறார்,
இந்த
ஜெகதம்பா
யார்?
இவர்
பாரதத்தின்
சௌபாக்கிய
விதாதா.
இவருடைய
சிவசக்தி
சேனையும்
பெயர்
பெற்றது.
தலைவராக
இருப்பவர்
ஜெகதம்பா,
அதாவது
பாரதத்தில்
ஒரே
அரசாங்கத்தை
ஸ்தாபனை
செய்யக்
கூடிய
தலைவர்.
பாரத
மாதா
சக்தி
அவதாரங்கள்
பாரதத்தில்
ஒரே
அரசாங்கத்தை
ஸ்தாபனை
செய்துள்ளனர்,
ஸ்ரீமத்தின்
ஆதாரத்தில்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
தேடிக்கண்டெடுக்கப்
பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவு
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே!
தாரணைக்கான
முக்கிய
சாரம்
:
1)
புத்தியோகத்தை
ஒரு
பாபாவிடம்
வைக்க
வேண்டும்.
மன்மனாபவ
என்ற
சூ
மந்திரத்தின்
மூலம் இவ்வுலகை
சொர்க்கமாக்க
வேண்டும்.
2)
சேவையில்
ஒருபோதும்
களைத்துப்போகக்
கூடாது.
ஸ்தூல
சேவையுடன்
கூடவே
ஆன்மீக சேவையும்
செய்ய
வேண்டும்.
மன்மனாபவ
என்ற
மந்திரத்தை
அனைவருக்கும்
நினைவுப்
படுத்த வேண்டும்.
வரதானம்:
கண்டறியும்
அல்லது
தீர்மானிக்கும்
சக்தியின்
மூலம்
சேவையில் வெற்றியை
பலனாக
அடையக்
கூடிய
வெற்றி
மூர்த்தி
ஆகுக.
கண்டறியும்
சக்தியின்
மூலம்
தந்தையை,
தன்னை,
நேரத்தை,
பிராமண
குடும்பத்தை
மற்றும்
தனது
உயர்ந்த செயலை
அறிந்து
கொண்டு,
பிறகு
என்ன
ஆக
வேண்டும்?
மற்றும்
என்ன
செய்ய
வேண்டும்?
என்று
முடிவெடுத்து அந்த
சேவை
மட்டுமே
செய்து,
செயல்
அல்லது
சம்பந்தம்,
தொடர்பில்
வருகிறார்களோ
அவர்களே
வெற்றியை பலனாக
அடைகிறார்கள்.
எண்ணம்,
சொல்,
செயல்
ஒவ்வொரு
வகையான
சேவையில்
வெற்றி
மூர்த்தி
ஆவதற்கு ஆதாரம்
கண்டறியும்
மற்றும்
தீர்மானிக்கும்
சக்தியாகும்.
சுலோகன்:
ஞானம்,
யோகம்
என்ற
லைட்,
மைட்
மூலம்
நிறைந்திருக்கும்
போது
எப்படிப்பட்ட பிரச்சனைகளையும்
விநாடியில்
கடந்து
விடுவீர்கள்.
ஓம்சாந்தி