25.11.2018       காலை முரளி          ஓம் சாந்தி          ''அவ்யக்த பாப்தாதா''

ரிவைஸ்       01.03.1984       மதுபன்


 

'' ஒன்றின் கணக்கு ''

 இன்று பாப்தாதா அனைத்து சகஜயோகி, நிரந்தர சகயோகி குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார். அனைத்து பக்கங்களிலிருந்தும் வந்திருக்கும் தந்தையின் குழந்தைகள் ஒரு பலம், ஒருவர் மேல் உள்ள நம்பிக்கை, ஒரு வழி, ஒருவரின் இரசணை, ஒருவரை மட்டும் மகிமை பாடக்கூடிய, ஒருவருடன் மட்டும் அனைத்து உறவுகளை வைத்து நடந்து கொள்ளும், ஒருவருடன் எப்பொழுதும் இருக்கக்கூடிய ஒரே பிரபு பரிவாரத்தின் ஒரு இலட்சியம், ஒரே இலட்சணம், அனைவரையும் ஒரே ஒரு சுப மற்றும் சிரேஷ்ட பாவனையோடு பார்க்கக்கூடிய, அனைவரையும் ஒரே ஒரு சிரேஷ்ட நல்விருப்பங்களினால் எப்பொழுதும் உயரே பறக்கச் செய்யக்கூடிய, ஒரே ஒரு உலகம், ஒரே உலகத்தில் அனைத்து பிராப்தியையும் அனுபவம் செய்யக்கூடிய, கண்கள் திறந்தவுடனேயே ஒரு பாபா, ஒவ்வொரு காரியம் செய்யும் போதும் ஒரு துணைவன் பாபா, தினத்தை முடிவு செய்து, கர்மயோகா மற்றும் சேவையின் காரியத்தை முடித்து விட்டு ஒருவரின் அன்பில் ஐக்கியமாகி விடுகிறார்கள், ஒருவருடன் அன்பில் ஐக்கியமாகி இருப்பவராக ஆகிவிடுகிறார்கள். அதாவது ஒருவரின் அன்பு என்ற மடியில் நிரம்பிவிடுகிறார்கள். இரவையும் பகலையும் ஒரே ஒருவருடன் அனைத்து தினசரி நடவடிக்கைகளையும் செய்து கழிக்கிறார்கள். சேவையின் சம்மந்தத்தில் வந்து கொண்டு, பரிவாரத்தின் சம்மந்தத்தில் வந்து கொண்டே பலரிலும் ஒருவரைப் பார்க்கிறோர்கள். ஒரு தந்தையின் பரிவாரம், ஒரு தந்தை சேவைக்காக என்னை பொறுப்பாளர் ஆக்கியிருக்கிறார். இதே விதி மூலம் பலரது சம்மந்தம் தொடர்பில் வந்து கொண்டே அனேகர்களிலும் ஒருவரைப் பார்க்கிறார்கள். பிராமண வாழ்க்கையில், கதாநாயக பாத்திரம் ஏற்று செய்பவராக ஆகும் வாழ்க்கையில், மதிப்புடன் தேர்ச்சி அடைபவராக ஆகும் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்? ஒன்றின் கணக்கு. ஒருவரைத் தெரிந்தார் என்றால் அனைத்தையும் தெரிந்து கொண்டார். அனைத்தையும் அடைந்தார். ஒன்றை எழுதுவது, கற்றுக் கொள்வது, நினைவு செய்வது, அனைத்தையும் விட சரளமானது, சகஜமானது.

 

மூன்று, ஐந்து பேர்களின் விஷயத்தை பேசாதே, ஒருவரின் விஷயத்தை பேசு என்ற பழமொழியும் பாரதத்தில் இருக்கிறது. மூவர் ஐவரின் விஷயங்கள் கடினமாக இருக்கும். ஒருவரை நினைவு செய்வது, ஒருவரை தெரிந்து கொள்வது மிக சுலபம். அந்த மாதிரி இங்கு என்ன கற்றுக் கொள்கிறீர்கள்? ஒன்று தான். கற்றுக் கொள்கிறீர்கள் இல்லையா! ஒருவரில் தான் அனைத்தும் நிரம்பி இருக்கிறது. எனவே பாப்தாதாவும் ஒருவரின் சகஜ வழியைத் தான் கூறுகிறார். ஒருவரின் மகத்துவத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் மகான் ஆகுங்கள். அனைத்து விஸ்தாரமும் ஒன்றில் நிரம்பியிருக்கிறது. அனைத்து ஞானமும் வந்து விட்டது இல்லையா. இரட்டை வெளிநாட்டினரோ ஒருவரை நல்ல முறையில் தெரிந்து கொண்டார்கள் இல்லையா! நல்லது.

 

இன்று வந்திருக்கும் குழந்தைகளுக்கு மரியாதை கொடுப்பதற்காக, வரவேற்பு செய்வதற்காக மட்டும் ஒருவரின் கணக்கைக் கூறிவிட்டோம். இன்று பாப்தாதா சந்திப்பதற்காக மட்டும் வந்திருக்கிறார். இருந்தும் இன்று மற்றும் நேற்று வந்திருக்கும் குழந்தைகளுக்காக கொஞ்சம் கூறிவிட்டோம். அன்பின் காரணமாக எப்படி கடுமையான முயற்சி செய்து வருவதற்கான வழியை கையாளுகிறார்கள் என்று பாப்தாதா தெரிந்திருக்கிறார். கடும் உழைப்பின் மீது தந்தை யினுடைய பல கோடி மடங்கு அன்பு குழந்தைகள் மேல் இருக்கிறது. எனவே தந்தையும் அன்பு மற்றும் பொன்னான வாக்கியங்கள் மூலம் அனைத்து குழந்தைகளை வரவேற்பு செய்கிறார். நல்லது.

 

அனைத்து புறங்களிலுமுள்ள அன்பில் மூழ்கியிருக்கும் குழந்தைகளுக்கு, அனைத்து அன்பில் மூழ்கியிருக்கக்கூடிய மனதால் அன்பிற்குரிய குழந்தைகளுக்கு, எப்பொழுதும் ஒரு தந்தையின் பாடலை பாடக் கூடிய குழந்தைகளுக்கு அன்பின் உறவை வைத்து நடந்து கொள்ளக்கூடிய துணைவர்களாக இருக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுடன் பாப்தாதாவின் ஆன்மீக உரையாடல் - 03.03.1984

 

இரட்டை வெளிநாட்டினர் என்றால் எப்பொழுதும் சுயதேசம், இனிமையான இல்லத்தின் அனுபவம் செய்பவர்கள். நான் எப்பொழுதும் சுயதேசம், இனிமையான இல்லத்தில் இருப்பவன், மாற்றான் தேசத்தில் மாற்றான் இராஜ்யத்தில் அதாவது ஆத்மீக இராஜ்யம் மற்றும் சுகத்தின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்காக குப்த ரூபத்தில் இயற்கையின் ஆதாரத்தை எடுத்து பங்கைச் செய்வதற்காக வந்திருக்கிறேன். சுயதேசத்தைச் சேர்ந்தவன் தான், ஆனால் மாற்றான் தேசத்தில் எனது பங்கைச் செய்து கொண்டிருக்கிறேன். இது இயற்கையின் பௌதீகமான தேசம் சுயதேசம் ஆத்மாவின் தேசம். இப்பொழுது இயற்கை மாயாவின் வசத்தில் இருக்கிறது, மாயாவின் இராஜ்யம் இருக்கிறது, எனவே மாற்றான் தேசம் ஆகிவிட்டது. இதே இயற்கை நீங்கள் மாயாவை வென்றவர் ஆவதினால் சுகம் கொடுக்கும் உங்களுடைய சேவாதாரி ஆகிவிடும். மாயாவை வென்றவர், இயற்கையை வென்றவர் ஆவதினால் தன்னுடைய சுகமான இராஜ்யம், மிக உயர்ந்த தூய்மையான இராஜ்யம் பொன்னுலகம் ஆகிவிடும். இது தெளிவாக நினைவில் வருகிறது தான் இல்லையா! ஒரு நொடியில் ஆடையை மட்டும் மாற்ற வேண்டும். பழையதை விட்டு விட்டு புதிய ஆடையை அணிய வேண்டும். எவ்வளவு நேரம் எடுக்கும்? ஃபரிஷ்தாவாக இருப்பதிலிருந்து தேவதை ஆவதில் ஆடையை மட்டும் மாற்றுவதில் எவ்வளவு நேரம் எடுக்கும். இனிமையான வீட்டிற்கு சென்று அங்கிருந்து செல்வீர்கள். ஆனால் நினைவு இறுதி நேரத்தில் ஃபரிஷ்தாவாக இருக்கும் நான் தேவதையாக ஆகிவிட்டேன் என்பது தான் இருக்கும். தேவதையின் உடல், தேவதையின் வாழ்க்கை, தேவதைகளின் உலகம் மிக தூய்மையான இயற்கையின் காலம் நினைவு இருக்கிறதா? அனேக தடவைகள் இராஜ்யம் செய்தது, நிரம்பியிருக்கும் தேவதை வாழ்க்கையின் சம்ஸ்காரம் வெளிப்படுகிறதா? ஏனென்றால் எதுவரையிலும் தேவதையாக ஆகப்போகிறவர்கள் உங்களுடைய சம்ஸ்காரம் வெளிப்படவில்லை என்றால் சாகார ரூபத்தில் பொன்னுலகம் எப்படி வெளிப்படும். உங்களுடைய வெளிப்படையான எண்ணத்தினால் தேவதைகளின் உலகம் இந்த பூமியில் பிரத்யக்ஷம் ஆகும். எண்ணம் இயல்பாகவே வெளிப்படுகிறதா அல்லது இன்னும் நீண்ட காலம் இருக்கிறது என்று இப்பொழுது நினைக்கிறீர்களா? தேவதை உடல், தேவ ஆத்மாக்கள் உங்களை ஆவஹானம் செய்து கொண்டிருக்கிறது. உங்களுடைய தேவதை உடல் தென்படுகிறதா? எப்பொழுது அதை தாரணை செய்வீர்கள்? பழைய உடல் மேலேயோ உள்ளத்தின் பற்றுதல் ஏற்பட்டு விடவில்லையே? இறுக்கமான பழைய ஆடையையோ அணிந்திருக்கவில்லையே? பழைய உடல், பழைய ஆடை இன்னும் இருக்கிறது அதனால் தேவையான நேரத்தில் ஒரு நொடியில் விட முடிவதில்லை. பந்தனமற்ற நிலை என்றால் தொய்வான ஆடை அணிவது. இரட்டை வெளிநாட்டினருக்கு என்ன விருப்பமாக இருக்கிறதுதொய்வானதா அல்லது இறுக்கமானதா? இறுக்கமானதோ விருப்பம் இல்லை தான் இல்லையா? பந்தனமோ இல்லையே?

 

உங்களுக்கு நீங்களே எவரெடியாக இருக்கிறீர்களா? நேரத்தை விடுங்கள், நேரத்தை எண்ணிக் கொண்டிருக்காதீர்கள். இப்பொழுது இது நடக்க வேண்டும், இது நடக்க வேண்டும் என்பது நேரத்திற்கும் தெரியும், தந்தைக்கும் தெரியும். சேவைக்கும் தெரியும், தந்தைக்கும் தெரியும். சுயத்தின் சேவை மேல் திருப்தியாக இருக்கிறீர்களா? உலக சேவையை ஒரு புறம் வையுங்கள், சுயத்தைப் பாருங்கள். சுயத்தின் நிலையில், சுயத்தின் சுதந்திர இராஜ்யத்தில், சுயத்தின் மேல் திருப்தியாக இருக்கிறீர்களா? சுயத்தின் இராஜ்யத்தை சரியாக நடத்த முடியுமா? இந்த அனைத்து வேலைக்காரர்கள், மந்திரி, மகாமந்திரி அனைவரும் உங்களின் அதிகாரத்திற்குள் இருக்கிறார்களா? எங்காவது அடிமைத்தனமோ இல்லையே? எப்பொழுதாவது உங்களுடையவே மந்திரி, மகாமந்திரி ஏமாற்றத்தையோ கொடுப்பதில்லையே? எங்காவது உள்ளுக்குள்ளேயே குப்தமாக உங்களுடைய வேலைக்காரர்களே மாயாவின் துணைவர்களாக ஆகிவிடுவதில்லையே? சுயத்தின் இராஜ்யத்தில் இராஜாக்கள் உங்களுடைய ஆளுமை சக்தி, கட்டுப்படுத்தும் சக்தி யதார்த்த ரூபத்தில் காரியம் செய்து கொண்டிருக்கின்றனவா? நீங்கள் சுப எண்ணம் வைத்து நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளை இடுகிறீர்கள். மேலும் வீணான எண்ணங்கள் மனதில் ஓடுகிறது என்று அப்படி இல்லையே? சகித்துக் கொள்ளும் குணத்திற்கு கட்டளை இடுகிறீர்கள், மேலும் குழப்பம் செய்யும் அவகுணம் வந்து விடுகிறது. அனைத்து சக்திகள், அனைத்து குணங்கள் ஹே சுயராஜாவே உன்னுடைய கட்டளைக்குள் இருக்கிறதா? இவை தானே உங்களுடைய இராஜ்யத்தில் உடலின் துணைவர்களாக இருப்பவர்கள். எனவே அனைவரும் உங்களுடைய கட்டளைக்குள் இருக்கிறார்களா? எப்படி இராஜாக்கள் ஆணை இடுகிறார்கள் மற்றும் அனைவரும் ஒரு நொடியில் வந்தேன் ஐயா என்று சலாம் செய்கிறார்கள், அந்த மாதிரி கட்டுப்படுத்தும் சக்தி, ஆளுமை சக்தி உங்களுக்குள் இருக்கிறதா? இந்த விஷயத்தில் எவரெடியாக இருக்கிறீர்களா? தன்னுடைய பலஹீனம், தன்னுடைய பந்தனம் ஏமாற்றத்தையோ கொடுக்காதே?

 

இன்று பாப்தாதா சுயராஜ்ய அதிகாரிகளிடமிருந்து தன்னுடைய இராஜ்யத்தின் நிலைமையைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார். இராஜாக்கள் அமர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? நீங்கள் பிரஜைகளோ இல்லை தான் இல்லையா? எதனுடையவாவது அடிமை என்றால் பிரஜை, அதிகாரி என்றால் இராஜா. அப்படியானால் நீங்கள் அனைவரும் யார்? இராஜாக்கள். நீங்கள் இராஜயோகியா அல்லது பிரஜாயோகியா? அனைத்து இராஜாக்களின் சபை கூடியிருக்கிறது தான் இல்லையா? சத்யுகத்தின் இராஜ சபையிலோ மறந்து விடுவீர்கள், நாம் அனைவரும் அதே சங்கமயுக வாசிகள் என்று ஒவ்வொருவரையும் தெரிந்து கொள்ள மாட்டீர்கள். இப்பொழுது மூன்று காலங்களையும் தெரிந்தவராகி ஒவ்வொருவரையும் தெரிந்திருக்கிறீர்கள், பார்க்கிறீர்கள். இப்பொழுதைய இந்த இராஜ சபை சத்யுகத்தை விட சிரேஷ்டமானது அந்த மாதிரியான இராஜ சபை சங்கமயுகத்தில் மட்டும் தான் கூடும். அனைவரின் இராஜ்யத்தின் நிலைமை சரியாக இருக்கிறது தான் இல்லையா? சரியாக இருக்கிறது என்று சப்தமாக கூறவில்லை.

 

பாப்தாதாவிற்கும் இந்த இராஜசபை பிரியமாக இருக்கிறது. இருந்தும் தன்னுடைய இராஜ சபையை தினசரி கூட்டி சோதனை செய்யுங்கள், ஒருவேளை ஏதாவது ஒரு வேலைக்காரன் கொஞ்சமாவது அலட்சிய மானவனாக ஆகிவிட்டான் என்றால் என்ன செய்வீர்கள்? அவனை விட்டு விடுவீர்களா? நீங்கள் அனைவரும் தொடக்க காலத்தின் சரித்திரத்தை கேட்டிருக்கிறீர்கள் தான் இல்லையா? ஒருவேளை ஏதாவது சிறு குழந்தை குழப்பம் செய்கிறார் என்றால் அவருக்கு என்ன தண்டனை கொடுத்தார். அவருக்கு உணவு கொடுக்காமல் நிறுத்தி விடுவது அல்லது கயிறுகளினால் கட்டி விடுவது - இவையோ பொதுவான விஷயம் ஆனால் அவருக்கு தனிமையில் அமர்வதற்கான, அதிக மணி நேரங்கள் அமருவதற்கான தண்டனை கொடுத்தார். குழந்தைகள் தான் இல்லையா? குழந்தைகளோ அமர முடியாது. எனவே ஒரே இடத்தில் எந்த காரியங்களும் செய்யாமல் 4-5 மணி நேரங்கள் அமர்வது அவருக்கு எவ்வளவு பெரிய தண்டனை! அம்மாதிரி இராயல் தண்டனை கொடுத்தார். அதே போல் இங்கேயும் ஏதாவது ஒரு கர்மேந்திரியம் அப்படி, இப்படி செய்கிறது என்றால் உள்நோக்கு முகம் என்ற பட்டியில் அதை அமர வைத்து விடுங்கள். வெளிமுகமாக அதை வரவே விடாதீர்கள். இதே தண்டனையை அதற்கு கொடுங்கள். வெளியில் வருகிறது என்றால் உள்ளே தள்ளி விடுங்கள். குழந்தைகளும் செய்கிறார்கள் இல்லையா! குழந்தைகளை அமர வைக்கிறீர்கள். பிறகு அவர்கள் எழுந்து விடுகிறார்கள் என்றால் மீண்டும் அமர வைத்து விடுவார்கள். அதே போல் வெளிமுகமாக இருப்பதிலிருந்து உள்முகமாக இருப்பதின் பழக்கம் ஏற்பட்டு விடும். எப்படி சிறு குழந்தைகளுக்கு உட்காருங்கள், நினைவு செய்யுங்கள் என்ற பழக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் தான் இல்லையா. அவர்கள் காலை மடக்கி அமர மாட்டார்கள் நீங்கள் மீண்டும் மீண்டும் அவர்களை அமர வைப்பீர்கள். எவ்வளவு தான் அவர்கள் காலை அசைத்தாலும் நீங்கள் அவரிடம் இல்லை இல்லை அப்படியே உட்கார் என்று கூறுவீர்கள். அதே போலவே உள்முகமாக இருப்பதின் பயிற்சி என்ற பட்டியில் மிக நல்ல முறையில் திட எண்ணத்துடன் கட்டிப்போட்டு அமர வைத்து விடுங்கள். வேறு எந்த கயிறையும் கட்ட வேண்டாம். ஆனால் திட எண்ணம் என்ற கயிறு, உள்நோக்கு முகம் என்ற பயிற்சியின் பட்டியில் அமர வைத்து விடுங்கள். உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுங்கள். மற்றவர்கள் கொடுத்தார்கள் என்றால் பிறகு என்னவாகும்? ஒருவேளை மற்றவர்கள் உங்களிடம் உங்களுடைய வேலைக்காரர்கள் சரியில்லை, அவர்களுக்கு தண்டனை கொடுங்கள் என்று கூறினார்கள் என்றால் என்ன செய்வீர்கள்? இவர் ஏன் கூறுகிறார் என்று மனதில் கொஞ்சம் நினைப்பீர்கள் இல்லையா? ஆனால் உங்களுக்கு நீங்களே கொடுத்தீர்கள் என்றால் அது சதா காலத்திற்கும் இருக்கும். மற்றவர்கள் கூறுவதினால் சதா காலம் இருக்காது. மற்றவர்களின் சமிக்ஞைகளையும் எதுவரை தன்னுடையதாக ஆக்கவில்லையோ அதுவரை சதா காலத்திற்கு இருக்காது. புரிந்ததா?

 

நீங்கள் இராஜாக்கள் எப்படி இருக்கிறீர்கள்? இராஜ சபை மிகவும் நன்றாக பிடித்திருக்கிறது தான் இல்லையா? நீங்கள் அனைவரும் பெரிய இராஜாக்கள், சிறிய இராஜாக்கள் இல்லை. நல்லது - இன்று பிரம்மா பாபா முக்கியமாக இரட்டை வெளிநாட்டினரைப் பார்த்து ஆன்மீக உரையாடல் செய்து கொண்டிருந்தார். அதைப் பற்றி பின்பு கூறுவோம். நல்லது. எப்பொழுதும் மாயாவை வென்றவர், இயற்கையை வென்றவர், இராஜ்ய அதிகாரி ஆத்மாக்கள், குணங்கள் மற்றும் அனைத்து சக்திகளின் பொக்கிஷங்களை தன்னுடைய அதிகாரத்தின் மூலம் காரியத்தில் ஈடுபடுத்தக்கூடிய, எப்பொழுதும் சுயராஜ்ஜியம் மூலமாக அனைத்து வேலைக்காரர்களையும் நிரந்தரமான அன்பிற்குரிய துணைவர்களாக ஆக்கக்கூடிய, எப்பொழுதும் பந்தனமற்று எவரெடியாக இருக்கக்கூடிய திருப்தியான ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

ஆஸ்திரேலியா குரூப்புடன் சந்திப்பு

நீங்கள் அனைவரும் எப்பொழுதும் நினைவு மற்றும் சேவையின் சமநிலை வைத்து பாப்தாதா மற்றும் அனைத்து ஆத்மாக்கள் மூலமாக ஆசீர்வாதங்களை பெறுபவர்கள் தான் இல்லையா. எப்பொழுதும் முயற்சி செய்வதின் கூடவே ஆசீர்வாதங்கள் பெற்றுக் கொண்டே முன்னேறிக் கொண்டிருப்பது தான் பிராமண வாழ்க்கையின் விசேஷம். பிராமண வாழ்க்கையில் இந்த ஆசீர்வாதம் ஒரு லிஃப்டின் வேலை செய்கிறது. இதன் மூலமாக பறக்கும் கலையின் அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்கள்.

 

ஆஸ்திரேயாவில் இருப்பவர்கள் மேல் பாப்தாதாவிற்கு விசேஷ அன்பு இருக்கிறது, ஏன்? ஏனென்றால் எப்பொழுதும் ஒருவர் அனேகர்களை அழைத்து வருவதில் தைரியம் மற்றும் ஊக்கத்தில் இருக்கிறார்கள். இந்த விசேஷம் தந்தைக்கும் பிரியமானது, ஏனென்றால் தந்தையின் காரியமே அதிகத்திலும் அதிக ஆத்மாக்களை ஆஸ்தியின் அதிகாரிகளாக ஆக்குவது. தந்தையை பின்பற்றி நடக்கும் குழந்தைகள் விசேஷமாக பிரியமானவர் களாக இருப்பார்கள் இல்லையா? வந்தவுடனேயே நல்ல ஊக்கம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் பூமிக்கு இது ஒரு வரதானமாக கிடைத்திருக்கிறது. ஒருவர் அனேகர்களுக்கு பொறுப்பாளர் ஆகிவிடுகிறார். பாப்தாதாவோ ஒவ்வொரு குழந்தையின் மகிமையின் மாலையை ஜெபித்துக் கொண்டே இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு விசேஷமும் அதிகம் இருக்கிறது, ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் மாயாவிற்கும் கொஞ்சம் அதிகமாக பிரியமானவர்கள். யார் தந்தைக்கு பிரியமானவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் மாயாவிற்கும் பிரியமானவர்கள் ஆகிவிடுகிறார்கள். எத்தனை நல்ல நல்ல குழந்தைகள் கொஞ்ச நேரத்திற்காக கூட மாயாவின் குழந்தைகளாக ஆகியே விடுகிறார்கள் தான் இல்லையா. நீங்கள் அனைவருமோ அந்த மாதிரி பிஞ்சானவர்களோ இல்லையே. உங்களில் யாராவது மாயாவின் சுழற்சியில் வருபவர்களோ இல்லையே? பாப்தாதாவிற்கு இப்பொழுது கூட அந்தக் குழந்தைகள் நினைவில் இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்றால் - ஏதாவது ஒரு விஷயத்தை முழுமையாக புரிந்து கொள்ளாத காரணத்தினால் ஏன் மற்றும் என்ன என்பதில் வந்து விடுகிறார்கள், பிறகு மாயா வருவதற்கான கதவுகள் திறந்து விடுகிறது. நீங்களோ மாயாவின் கதவுகளை தெரிந்து கொண்டீர்கள் தான் இல்லையா. எனவே ஏன், என்ன என்பதில் செல்லாதீர்கள். மேலும் மாயா வருவதற்கான வாய்ப்பைக் கொடுக்காதீர்கள். எப்பொழுதும் இரட்டை பூட்டு போடப்பட்டு இருக்கட்டும். நினைவு மற்றும் சேவை தான் இரட்டைப் பூட்டு. சேவை மட்டும் இருக்கிறது என்றால் அது ஒரு பூட்டு. நினைவு மட்டும் இருக்கிறது, சேவை இல்லை என்றால் அதுவும் ஒரு பூட்டு. இரண்டின் சமநிலை இருப்பது தான் இரட்டைப் பூட்டு. பாப்தாதாவின் டி.வி-யில் உங்களுடைய புகைப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பின்பு இந்த போட்டோவில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று பாப்தாதா காண்பிப்பார். நல்லது. இருந்தாலும் எண்ணிக்கையில் நிச்சயத்துடன், தைரியத்துடன் நல்ல எண்ணிக்கை வந்திருக்கிறது. நீங்கள் தந்தைக்கு அதிகமாக பிரியமானவர்களாக இருக்கிறீர்கள் எனவே மாயாவிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான யுக்தியை கூறினோம். நல்லது - ஓம் சாந்தி.

 

வரதானம்

சாரத்தில் கொண்டு வருவதற்கான சக்தி மூலமாக ஒரு நொடியில் முற்றுப்புள்ளி இடக்கூடிய பற்றுதலை வென்று நினைவு சொரூபமானவர் ஆகுக.

 

இறுதி நேரத்தில் கடைசி பரீட்சைக்கான கேள்வியாக ஒரு நொடியில் முற்றுப்புள்ளி இடுவது இருக்கும். வேறு எதுவும் நினைவில் வரக்கூடாது. தந்தை மற்றும் நான் அவ்வளவு தான் மூன்றாவது எந்த விஷயமும் இல்லை. . . ஒரு விநாடியில் என்னுடைய பாபா வேறு யாரும் இல்லை. . . இதை யோசிப்பதிலும் நேரம் எடுக்கும் ஆனால் நிலைத்து விட வேண்டும், ஆடக்கூடாது. ஏன், என்ன . . . என்பதின் கேள்வி எழக்கூடாது அப்பொழுது தான் பற்றுதலை வென்ற நினைவு சொரூபமானவராக ஆகிவிடுவீர்கள். எனவே எப்பொழுது விரும்புகிறீர்களோ அப்பொழுது விஸ்தாரத்தில் வருவதற்கும் மேலும் எப்பொழுது விரும்புகிறீர்களோ அப்பொழுது சுருக்கத்தில், சாரத்தில் வருவதற்கான பயிற்சி செய்யுங்கள். பிரேக் சக்திசாலியாக இருக்கட்டும்.

 

சுலோகன்

யாருக்கு சுயமரியாதையின் அபிமானம் இல்லையோ அவர் தான் எப்பொழுதும் பணிவானவர்.

 

ஓம்சாந்தி