30.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஞானத்தின் சுகம் 21 பிறவிகளுக்கு தொடரும். அது சொர்க்கத்தில் கிடைக்கும் நிலையான சுகம். பக்தியினால் அல்பகாலத்திற்கான, நொடியில் அழியக்கூடிய சுகம் கிடைக்கின்றது.

 

கேள்வி :

எந்த ஒரு ஸ்ரீமத் படி நடந்து குழந்தைகள் நீங்கள் சத்கதியை அடைய முடியும்?

 

பதில் :

உங்களுக்காக பாபாவின் ஸ்ரீமத் - இந்தப் பழைய உலகத்தை மறந்து என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். இது தான் பலியாவது அல்லது உயிருடன் இருந்து கொண்டே இறந்து விடுவது எனச் சொல்லப் படுகின்றது. இந்த ஸ்ரீமத் மூலம் தான் நீங்கள் உயர்ந்தவரிலும் உயர்ந்தவராக ஆகிறீர்கள். உங்களுக்கு சத்கதி ஏற்பட்டு விடுகின்றது. சாகார மனிதர்கள், மனிதர்களுக்கு சத்கதி அளிக்க இயலாது. பாபா தான் அனைவருக்கும் சத்கதி அளிப்பவர்.

 

பாடல் :

ஓம் நமோ சிவாய.......

 

ஓம் சாந்தி.

குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான் என்று பாடப்படுகின்றது. இப்போது பகவானின் பெயரையோ மனிதர்கள் யாருமே அறிந்திருக்கவில்லை. எதுவரை பகவான் வந்து பகதர்களுக்குத் தம்மைப் பற்றிய அறிமுகம் கொடுக்கவில்லையோ, அதுவரை பக்தர்களுக்கு பகவானைப் பற்றி எதுவும் தெரியாது. இதைத்தான் ஞானம் மற்றும் பக்தி என்று புரிய வைக்கப்பட்டுள்ளது. சத்யுக திரேதா என்பது ஞானத்தின் பலன். இப்போது நீங்கள் ஞானக்கடலிடமிருந்து ஞானத்தைப் பெற்று புருஷார்த்தத்தின் மூலம் தங்களுடைய நிலையான சுகத்தின் பலனை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு துவாபர-கலியுகத்தில் பக்தி இருக்கும். ஞானத்தின் பலன் சத்யுக-திரேதா வரை அனுபவம் ஆகும். ஞானத்தின் சுகம் 21 பிறவிகளுக்கு நடைபெறும். அது சொர்க்கத்தின் நிலையான சுகம். நரகத்தினுடையது அல்பகாலத்திற்கானது, நொடியில் அழிந்துவிடக் கூடிய சுகமாகும். குழந்தைகளுக்குப் புரிய வைக்கப் பட்டுள்ளது - சத்யுக-திரேதாவில் ஞான மார்க்கம் இருந்தது, புதிய உலகம், புதிய பாரதம் இருந்தது. அது சொர்க்கம் எனச் சொல்லப் படுகின்றது. இப்போது தமோபிரதான பாரதம் நரகமாக ஆகி விட்டுள்ளது. அநேக விதமான துக்கங்கள்! சொர்க்கத்தில் துக்கத்தின் பெயர்-அடையாளம் எதுவும் இருக்காது. குரு என யாரையும் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பக்தியின் பலனை பகவான் தான் அளிக்கிறார். இப்போது கலியுகத்தின் கடைசி. விநாசம் முன்னால் உள்ளது. பாபா வந்து பிரம்மா மூலம் ஞானம் கொடுத்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். மேலும் சங்கர் மூலம் விநாசம், விஷ்ணு மூலம் பாலனை செய்விக்கிறார். பரமாத்மாவின் காரியத்தைப் பற்றி யாரும் புரிந்து கொள்வதில்லை. மனிதர்களை பாவாத்மா, புண்ணியாத்மா எனச் சொல்லப்படுகிறார்கள். பாவ பரமாத்மா, புண்ணிய பரமாத்மா எனச் சொல்லப்படுவதில்லை. மகாத்மாவையும் கூட மகான் ஆத்மா எனச் சொல்வார்கள், மகான் பரமாத்மா எனச் சொல்ல மாட்டார்கள். ஆத்மா தூய்மையாகின்றது. பாபா புரிய வைத்துள்ளார்-முதல் முதலில் முக்கியமானது தேவி தேவதா தர்மம். அந்தச் சமயம் சூரியவம்சிகள் தான் இராஜ்யம் செய்திருந்தனர். சந்திரவம்சிகள் அப்போது இல்லை. ஒரு தர்மம் மட்டுமே இருந்தது. பாரதத்தில் தங்கம் வெள்ளியாலான மாளிகைகள் இருந்தன. வைரம்-வைடூரியங்களால் கூரை, சுவர்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பாரதம் வைரம் போல் இருந்தது. அதே பாரதம் இப்போது சோழி போல் ஆகிவிட்டுள்ளது. பாபா சொல்கிறார், கல்பத்தின் கடைசியில், சத்யுகத்தின் ஆரம்பத்தில் சங்கமத்தில் நான் வருகிறேன். பாரதத்தை மாதாக்கள் மூலம் மீண்டும் சொர்க்கமாக ஆக்குகின்றேன். இது சிவசக்தி, பாண்டவ சேனை. பாண்டவர்களின் அன்பு ஒரு தந்தையிடம் மட்டுமே இருக்கிறது. அவர்களுக்கு பாபா படிப்பு சொல்லித் தருகிறார். சாஸ்திரங்கள் முதலிய அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாதனங்கள். அது பக்தியின் ஆராதனை . இப்போது பாபா வந்து அனைவருக்கும் பக்தியின் பலனாகிய ஞானத்தைத் தருகிறார். இதன் மூலம் நீங்கள் சத்கதியில் செல்கிறீர்கள். சத்கதி அளிப்பவர், அனைவரின் தந்தை ஒருவர் தான். தந்தை தான் ஞானக்கடலில் எனச் சொல்லப்படுகிறார். மற்றப்படி மனிதர்கள், மனிதர்களுக்கு முக்தி-ஜீவன்முக்தி தர முடியாது. இந்த ஞானம் எந்த ஒரு சாஸ்திரத்திலும் கிடையாது. ஞானக்கடல் என்று ஒரு பாபா மட்டுமே சொல்லப்படுகிறார். அவரிடமிருந்து நீங்கள் ஆஸ்தி பெறுகிறீர்கள். பிறகு சர்வகுண சம்பன்ன, 16 கலை சம்பூர்ணம் ஆகி விடுவீர்கள். இது தேவதைகளின் மகிமையாகும். லட்சுமி-நாராயணர் 16 கலை சம்பூர்ணம், ராம்-சீதா 14 கலை. இது படிப்பாகும். இது ஒன்றும் சாதாரண சத்சங்கம் கிடையாது. சத்தியமானவர் ஒருவர் தான், அவர் தான் வந்து சத்தியத்தைப் புரிய வைக்கிறார். இதே தூய்மை இல்லாத உலகம். தூய்மையான உலகத்தில் தூய்மை இல்லாதவர்கள் இருப்பதில்லை. தூய்மையற்ற உலகத்தில் தூய்மையானவர்கள் இருப்பதில்லை. தூய்மை ஆக்குபவர் ஒரே ஒரு பாபா தான். ஆத்மா சொல்கிறது, சிவாய நமஹ, ஆத்மா தன்னுடைய தந்தைக்கு சொல்கிறது-நமஸ்தே. சிவன் எனக்குள் இருக்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள் அவ்வாறெனில் பிறகு யாருக்கு நமஸ்காரம் செய்கிறார்கள்? இந்த அஞ்ஞானம் பரவியுள்ளது. இப்போது குழந்தைகளாகிய உங்களை பாபா திரிகாலதரிசி ஆக்குகிறார். நீங்கள் அறிவீர்கள், அனைத்து ஆத்மாக்களும் எங்கே வசிக்கிறார்களோ, அது நிர்வாண்தாம், இனிமையான வீடு. முக்தியையோ அனைவருமே நினைவு செய்கின்றனர். அங்கே தான் நாம் தந்தையுடன் வசிக்கிறோம். இப்போது நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள். சுகதாமத்திற்குச் செல்வீர்களானால் தந்தையை நினைவு செய்ய மாட்டீர்கள். இப்போது இது துக்க உலகம், அனைவரும் துர்கதியில் உள்ளனர். புதிய உலகத்தில் பாரதம் புதியதாக இருந்தது. சுகமான உலகமாக இருந்தது. சூரியவம்சி-சந்திரவம்சி இராஜ்யம் இருந்தது. மனிதர்களுக்கோ இது தெரியாது - லட்சுமி-நாராயணருக்கும் இராதை-கிருஷ்ணருக்கும் இடையில் என்ன தொடர்பு? அவர்கள் ராஜகுமாரி-ராஜகுமார் தனித்தனி இராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் அவர்களுக்குள் சகோதர-சகோதரி என்பது கிடையாது. இராதை தனியாக தன்னுடைய ராஜதானியில் இருந்தாள், கிருஷ்ணர் தம்முடைய ராஜதானியின் ராஜகுமாராக இருந்தார். அவர்களுக்கு சுயம்வரம் நடந்தபின் லட்சுமி-நாராயணராக ஆகின்றனர். சத்யுகத்தில் ஒவ்வொரு பொருளும் சுகம் தருவதாகும். கலியுகத்தில் ஒவ்வொரு பொருளும் துக்கம் தருவதாகும். சத்யுகத்தில் யாருக்குமே அகால மரணம் ஏற்படுவதில்லை. குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நாம் நம்முடைய பரமபிதா பரமாத்மாவிடமிருந்து சகஜ இராஜயோகம் கற்றுக் கொள்கிறோம்-நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக, நாரியிலிருந்து லட்சுமி ஆவதற்காக. இது பாடசாலையாகும். அந்த சத்சங்கங்கள் முதலியவற்றில் எந்த ஒரு நோக்கமோ குறிக்கோளோ கிடையாது. வேத-சாஸ்திரங்கள் முதலியவற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். பாபாவின் மூலம் நீங்கள் இந்த மனித சிருஷ்டிச் சக்கரத்தை இப்போது அறிந்து கொண்டு விட்டீர்கள். பாபா தான் ஞானம் நிறைந்தவர், ஆனந்தமயமானவர், இரக்க மனமுள்ளவர் எனச் சொல்லப்படுகிறார். பாடுகின்றனர்-ஓ பாபா, வந்து கருணை காட்டுங்கள். ஹெவன்லி காட் ஃபாதர் தான் வந்து ஹெவன் (சொர்க்கத்தை) ஸ்தாபனை செய்கிறார், சங்கமயுகத்தில்.

 

சொர்க்கத்தில் மிகக் குறைவாகவே மனிதர்கள் இருப்பார்கள். மற்றப்படி இவ்வளவு மனிதர்களெல்லாம் எங்கே செல்வார்கள்? பாபா அனைவரையும் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். சொர்க்கத்தில் பாரதம் மட்டுமே இருந்தது. மறுபடியும் பாரதம் மட்டுமே இருக்கும். பாரதம் உண்மையான கண்டம் என இங்கே பாடப்பட்டுள்ளது. இப்போதோ பாரதம் ஏழையாகி விட்டுள்ளது. பணம்-பணம் என்று பிச்சை எடுத்துக் கொண்டே இருக்கின்றனர். பாரதம் வைரம் போல் இருந்தது. இப்போது சோழி போல் உள்ளது. இந்த டிராமாவின் ஞானத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் படைப்பவர் பாபாவையும் அவரது படைப்பின் முதல்-இடை-கடை பற்றியும் அறிவீர்கள். காங்கிரஸ்காரர்கள் பாடவும் செய்கின்றனர்  வந்தே மாதரம்! ஆனால் தூய்மையானவர்களுக்குத் தான் வந்தனை செய்யப் படுகின்றது. பரமாத்மா தான் வந்து வந்தே மாதரம் எனச் சொல்ல ஆரம்பிக்கிறார். சிவபாபா தான் வந்து சொல்லியிருக்கிறார்-நாரி (பெண்) என்பவள் சொர்க்கத்தின் வாசல்! சக்தி சேனை இல்லையா? இது சொர்க்கத்தின் இராஜ்யத்தைக் கொடுப்பதாகும். இது தான் உலகின் சர்வசக்தி வாய்ந்த இராஜ்யம் எனப்படுகிறது. சக்திகளாகிய நீங்கள் சுயராஜ்யம் ஸ்தாபனை செய்திருந்தீர்கள். இப்போது மீண்டும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சத்யுகம் தான் ராமராஜ்யம் எனச் சொல்லப் படுகின்றது. இப்போதும் கூட ராமராஜ்யம் வேண்டும் என்கின்றனர். ஆனால் அதை எந்த ஒரு மனிதரும் உருவாக்க இயலாது. நிராகார் இறைவனாகிய தந்தை தான் வந்து படிப்பு சொல்லித் தருகிறார். அவருக்கும் கூட நிச்சயமாக சரீரம் வேண்டும். அவசியம் பிரம்மாவின் உடலில் வந்தாக வேண்டியுள்ளது. சிவபாபாவோ ஆத்மாக்களாகிய உங்கள் அனைவருடைய தந்தை ஆவார். பிரஜாபிதா பற்றியும் பாடப்பட்டுள்ளது. பிதா என்றால் தந்தை ஆகிறார் இல்லையா? பிரம்மா கிரேட் கிரேட் கிராண்ட் ஃபாதர் எனச் சொல்லப் படுகிறார். ஆதி தேவ், ஆதி தேவி இருவரும் அமர்ந்துள்ளனர். தபஸ்யா செய்து கொண்டுள்ளனர். நீங்களும் தபஸ்யா செய்து கொண்டிருக்கிறீர்கள். இது இராஜயோகமாகும். சந்நியாசிகளுடையது ஹடயோகமாகும். அவர்கள் ஒருபோதும் இராஜயோகம் கற்றுத்தர இயலாது. கீதா முதலிய என்னென்ன சாஸ்திரங்கள் உள்ளனவோ, அவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாதனங்களாகும். படித்தே வந்துள்ளனர், ஆனாலும் தமோபிரதானம் ஆகி விட்டுள்ளனர். இது அதே மகாபாரத யுத்தம், இதன் மூலம் விநாசம் நடைபெறப் போகின்றது. விஞ்ஞானம் ஒன்றும் வேதங்களில் கிடையாது. இராஜயோகத்தில் ஞானத்தின் விஷயங்கள் உள்ளன. இந்த விஞ்ஞானம் புத்தியின் அற்புதம். அதன் மூலம் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். விமானங்கள் முதலானவற்றை சுகத்திற்காக உருவாக்குகின்றனர். பிறகு கடைசியில் இவற்றின் மூலமாகத் தான் விநாசம் நடைபெறும். இந்த சுகத்திற்கான கலைத்திறமை பாரதத்தில் இருந்து விடும். துக்கத்திற்கான திறமை, கொல்வது முதலானவற்றின் அனைத்தும் அழிந்து போகும். விஞ்ஞானத்தின் புத்தி நடைபெற்றே வந்துள்ளது. இந்த வெடிகுண்டுகள் முதலானவை கல்பத்திற்கு முன்பும் கூட தயாரிக்கப் பட்டன. தூய்மை இல்லாத உலகத்தின் விநாசம் மற்றும் புது உலகத்தின் ஸ்தாபனை நடைபெற வேண்டும். பாபா சொல்கிறார், நீங்கள் 84 பிறவிகளை முடித்து விட்டீர்கள். இப்போது இந்த தேக அகங்காரத்தை விட்டு தந்தையாகிய என்னை நினைவு செய்வீர்களானால் நினைவின் யோக அக்னி மூலம் விகர்மங்கள் விநாசமாகும். இராவணன் உங்களை அதிக விகர்மங்கள் செய்ய வைத்துள்ளான். தூய்மை ஆவதற்கோ ஒரே ஓர் உபாயமே உள்ளது. நீங்கள் ஆத்மாவாகவே இருக்கிறீர்கள். சொல்லவும் செய்கிறீர்கள், நான் ஆத்மா என்று. பரமாத்மா எனச் சொல்வதில்லை. என் ஆத்மாவைத் துன்புறுத்தாதீர்கள் என்கிறீர்கள். ஆத்மாவே பரமாத்மா எனச் சொல்வதோ மிகப்பெரிய பிழையாகும். இப்போது தமோபிரதானம் பலரை வணங்கும் பக்தி உள்ளது. யார் (மனதில்) வருகிறார்களோ, அவர்களுக்கு உட்கார்ந்து பூஜை செய்கின்றனர். அவ்யபிச்சாரி என்று ஒருவரின் நினைவை தான் சொல்லப் படுகின்றது. இப்போது வ்யபிச்சாரி பலரை பூஜிக்கும் பக்திக்கும் முடிவு வரப்போகின்றது. பாபா வந்து எல்லையற்ற ஆஸ்தி தருகின்றார். அனைவருக்கும் சுகம் தருபவர் ஒரு பாபா மட்டுமே. வேறு யாரும் கிடையாது. பாபா சொல்கிறார், என் ஒருவனோடு புத்தியோகத்தை இணைப்பதால் தான் அந்த் மதி ஸோ கதி ஆகும். நானே சொர்க்கத்தின் படைப்பாளன். இது முள் நிறைந்த உலகம். ஒருவர் மற்றவரோடு சண்டையிட்டுக் கொண்டே உள்ளனர். இப்போது இந்தப் பழைய உலகம் மாறிக் கொண்டு வருகிறது. ஞான அமிர்தத்தின் கலசத்தை மாதாக்களின் மீது வைக்கின்றார். இது ஞானமாகும். ஆனால் விஷத்தோடு ஒப்பிடும் போது இதை அமிர்தம் எனச் சொல்லப்படுகின்றது. சொல்லவும் படுகின்றது-அமிர்தத்தை விட்டு விஷத்தை ஏன் உட்கொள்ள வேண்டும் ........என்று. ஸ்ரீமத் மூலம் தான் நீங்கள் சிரேஷ்டமானவராக ஆவீர்கள். பரமபிதா பரமாத்மா வந்து ஸ்ரீமத் தருகிறார். கிருஷ்ணரும் கூட ஸ்ரீமத் மூலம் இதுபோல் ஆகியிருக்கிறார். இவை புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். இந்தப் பழைய உலகம் முழுவதையும் மறந்து ஒரு பாபாவை நினைவு செய்ய வேண்டும். இப்போது தான் பலியாகவும் வேண்டும். இது தான் உயிருடன் இருந்து கொண்டே இறந்து விடுவது எனச் சொல்லப் படுகின்றது. பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் வேறு. அது பக்தியின் ஆராதனை. பக்தியிலோ அநேக குருமார்கள் உள்ளனர். ஆனால் சத்கதி அளிப்பவர் ஒரே ஒரு நிராகார் பரமபிதா பரமாத்மா மட்டுமே. சாகார் மனிதர்கள், மனிதர்களுக்கு சத்கதி அளிக்க முடியாது. சதா காலத்துக்கும் சுகம் தர முடியாது. சதா சுகம் தருபவர் ஒரு பாபா தான். இது பாடசாலையாகும். இதன் நோக்கம்-குறிக்கோளையும் பாபா சொல்கிறார். அவர் சொல்கிறார், உங்களுக்கு சொர்க்கத்தின் சுகம் என்ற ஆஸ்தி கிடைக்கும். மற்ற அனைவரும் முக்திதாம் சென்று விடுவார்கள். சாந்திதாமம், சுகதாமம் மற்றும் இப்போதிருப்பது துக்கதாமம். இந்தச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இது சுயதரிசனச் சக்கரம் எனச் சொல்லப் படுகின்றது. இந்த டிராமாவின் சக்கரத்திலிருந்து யாருமே விடுபட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட நாடக பாகமாகும். பாபா உங்களுக்குப் படிப்பு சொல்லித் தந்து மனிதரில் இருந்து தேவதையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். பிறகு யார் எவ்வளவு படிக்கிறார்களோ, அந்தளவுக்கு சிலர் ராஜா ஆவார்கள், சிலர் பிரஜை ஆவார்கள். சூரியவம்சி சாம்ராஜ்யம் இல்லையா? சத்யுகத்தில் சூரியவம்சிகள் இருந்தனர் என்றால் வேறு யாரும் அப்போது இல்லை. பாரதக் கண்டம் தான் உயர்ந்ததிலும் உயர்ந்த உண்மையான கண்டமாக இருந்தது. இப்போது பொய்யான கண்டமாக ஆகிவிட்டுள்ளது. இது பயங்கர நரகம் எனச் சொல்லப்படுகின்றது. பைசாவுக்காக எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுகின்றன! அங்கோ கிடைக்காத எந்த ஒரு பொருளும் இருக்காது - பிராப்திக்காக ஏதேனும் பாவம் செய்வதற்கு அவசியம் இல்லை. பாபா தான் இந்த பிரஷ்டாச்சாரி உலகத்தை சிரேஷ்டாச்சாரியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார், இந்த மாதாக்களின் மூலமாக. இவர்களுக்கு பாபா வந்தே மாதரம் சொல்கிறார். சந்நியாசிகள் சொல்வதில்லை, வந்தே மாதரம் என்று. அவர்களுடையது எல்லைக்குட்பட்ட சந்நியாசம். இது எல்லையற்ற சந்நியாசமாகும். முழு உலகத்தையும் புத்தி மூலம் சந்நியாசம் செய்ய வேண்டும். சாந்திதாமம், சுகதாமத்தை நினைவு செய்ய வேண்டும். துக்கதாமத்தை மறந்துவிட வேண்டும். இது பாபாவின் கட்டளையாகும். பாபா ஆத்மாக்களுக்குச் சொல்லிப் புரிய வைக்கிறார். நீங்கள் இந்தக் காதுகளால் கேட்கிறீர்கள். சிவபாபா இந்த (பிரம்மாவின்) உடல் உறுப்புகள் மூலமாக உங்களுக்குப் புரிய வைக்கிறார். அவர் ஞானக்கடல். இவர் ஒன்றும் சாது, சந்நியாசி, மகாத்மா கிடையாது. நல்லது

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) பாபா மீது முழுமையாக பலியாக வேண்டும். தேகத்தின் அகங்காரத்தை விட்டு யோக அக்னி மூலம் விகர்மங்களை விநாசம் செய்ய வேண்டும்.

 

2) நோக்கம், குறிக்கோளை புத்தியில் வைத்துப் படிப்பைப் படிக்க வேண்டும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட, உருவாகிக் கொண்டிருக்கிற டிராமாவை புத்தியில் வைத்து சுயதரிசனச் சக்கரதாரி ஆக வேண்டும்.

 

வரதானம்:

திருப்தியின் சான்றிதழ் மூலமாக வருங்கால இராஜ்ய பாக்கியத்தின் சிம்மாசனத்தை அடைந்து விடக் கூடிய திருப்தியின் வடிவம் ஆவீர்களாக.

 

திருப்தியாக இருக்க வேண்டும் மேலும் அனைவரையும் திருப்தி படுத்த வேண்டும் . இந்த வாக்கியத்தை எப்பொழுதும் உங்களது நெற்றி என்ற எழுத்து பலகையில் எழுதப்பட்டிருக்கட்டும். ஏனெனில் இதே சான்றிதழ் உடையவர்கள் வருங்காலத்தில் இராஜ்ய பாக்கியத்தின் சான்றிதழை பெறுவார்கள். எனவே தினமும் அமிருதவேளையில் இந்த வாக்கியத்தை நினைவில் கொண்டு வாருங்கள். எப்படி எழுத்து பலகையில் சுலோகன் எழுதுகிறீர்கள், அதே போல எப்பொழுதும் தங்களது நெற்றி என்ற எழுத்து பலகையில் இந்த சுலோகனை வரையுங்கள். அப்பொழுது எல்லோரும் திருப்தியின் மூர்த்திகள் ஆகி விடுவார்கள். யார் திருப்தியாக இருக்கிறார்களோ அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

 

சுலோகன்:

தங்களுக்குள் சிநேகம் மற்றும் திருப்தியில் நிறைந்து பழகுபவர்களே (செயல்படுபவர்கள்) வெற்றியின் மூர்த்தி ஆகிறார்கள்.

 

ஓம்சாந்தி