18.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! பிராமணர்களாகிய உங்களுடைய பிறப்பு தேவதைகளை விட அனைவருக்கும் மிக உயர்ந்த நன்மை செய்யக்கூடிய பிறப்பாகும். ஏனென்றால் பிரமாணர்களாகிய நீங்கள் தான் பாபாவின் உதவியாளர் ஆகிறீர்கள் !

 

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பாபாவிற்குச் செய்யும் உதவி என்ன? உதவி யாளராக இருக்கும் குழந்தைகளுக்கு பாபா என்ன பரிசு கொடுக்கின்றார்?

 

பதில்:

பாபா தூய்மை, அமைதியின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கின்றார். நாம் அவருக்கு தூய்மைபடுத்தும் காரியத்தில் உதவி செய்கிறோம். பாபா படைத்த யாகத்தை நாம் பாதுகாக்கின்றோம். எனவே நிச்சயம் பாபா நமக்கு பரிசு கொடுப்பார். சங்கமத்தில் தான் நமக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்கின்றது. நாம் சிருஷ்டியின் முதல், இடை, கடையை அறிந்து கொண்டு திரிகாலதர்ஷி ஆகின்றோம். மேலும் எதிர்காலத்தில் சிம்மாசனத்தில் அமரக்கூடியவர்களாக ஆகின்றோம். இதுவே பரிசு ஆகும்.

 

பாட்டு:

தந்தை-தாய், உதவி அளிப்பவர் சுவாமி தோழன்...........

 

ஓம் சாந்தி.

இது யாருடைய மகிமை. இது பரம்பிரிய பரம்பிதா பரமாத்மாவின் மகிமையாகும். அவருடைய பெயர் சிவன் ஆகும். அவருடைய பெயரும் மிக மிக உயர்ந்தது. அவருடைய இடமும் மிக மிக உயர்ந்தது. பரம்பிதா பரமாத்மா என்பதன் பொருள் அனைவரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா. மேலும் வேறு யாரையும் பரம்பிதா பரமாத்மா என்று கூற முடியாது. அவருடைய மகிமைகள் அளவு கடந்தது ஆகும். அவ்வளவு மகிமைகள் இருக்கின்றது, அதை அளவிட முடியாது என்று கூறுகின்றார்கள். ரிஷி முனிகளும் அதை அளவிட முடியாது என்று கூறுகின்றார்கள். அவர்களோ தெரியாது தெரியாது என்று கூறி வந்தார்கள். இப்போது பாபாவே வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். ஏன்? பாபாவின் அறிமுகம் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? குழந்தைகளுக்கு எப்படி அறிமுகம் கிடைக்கின்றது. எது வரை அவர் இந்த பூமியில் வரவில்லையோ அது வரை வேறு யாரும் அவருடைய அறிமுகத்தைக் கொடுக்க முடியாது. அப்பா பிள்ளையை வெளிப்படுத்தும் போது தான் பிள்ளை அப்பாவை வெளிப்படுத்துகிறார். என்னுடைய நடிப்பு நிச்சயிக்கப்பட்டுள்ளது என பாபா புரிய வைக்கின்றார். நான் தான் வந்து தூய்மை இழந்தவர்களை தூய்மையாக்க வேண்டும். பதீத பாவனர் சீதா ராம் என சாது சந்நியாசி கள் கூட பாடிக் கொண்டே இருக்கின்றார்கள். ஏனென்றால் இராவண இராஜ்யம் ஆகும். இராவணன் எதற்கும் குறைந்தவன் அல்ல. உலகம் முழுவதையும் தமோபிரதானமாக தூய்மை அற்றதாக யார் மாற்றியது. இராவணன். பிறகு தூய்மையாக மாற்றக் கூடியவர் சக்திசாலி இராமர் அல்லவா? அரைக் கல்பம் இராம இராஜ்யம் இருக்கின்றது என்றால் அரைக் கல்பம் இராவண இராஜ்யம் இருக்கின்றது. இராவணன் யார்? இது யாருக்கும் தெரியவில்லை. வருடம் தோறும் எரித்துக் கொண்டே இருக்கின்றார்கள். இருந்தாலும் இராவண இராஜ்யம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. எரிந்து போகவில்லை. பரமாத்மா சர்வசக்திவான் என்றால் இராவணனுக்கு இராஜ்யம் செய்ய ஏன் கொடுக்கின்றார் என்று மனிதர்கள் கேட்கின்றார்கள். இது வெற்றி-தோல்வி, நரகம்- சொர்க்கத்தின் நாடகம் ஆகும் என பாபா புரிய வைக்கின்றார். பாரதத்தில் தான் அனைத்து விளையாட்டும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இது ஏற்கனவே உருவாக்கப்பட்ட நாடகம் ஆகும். பரம்பிதா பரமாத்மா சர்வ சக்திவான் என்றால் விளையாட்டு முடிவதற்கு முன்பே வருவார் அல்லது பாதியிலேயே விளையாட்டை முடித்து விடுவார் என்பது கிடையாது. உலகம் முழுவதும் தூய்மையை இழந்து விடும் போது தான் நான் வருகின்றேன். ஆகவே சிவராத்திரி கூட கொண்டாடுகிறார்கள். சிவாய நமஹ! என்றும் கூறுகின்றார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரரை தேவதாய நமஹ என்று கூறுகின்றார்கள். சிவனை பரமாத்மாய நமஹ! என்று கூறுவார்கள். பபுள் நாத் அல்லது சோம் நாத் கோவில் இருப்பது போன்றா சிவன் இருக்கிறார்? பரம்பிதா பரமாத்மாவிற்கு இவ்வளவு பெரிய உருவமா இருக்கிறது? அல்லது ஆத்மா சிறியதாகவும் பரமாத்மா பெரியதாகவும் இருக்கின்றாரா, என்ற கேள்வி எழும் அல்லவா? இங்கே சிறியவர்களை குழந்தை என்றும் பெரியவர்களை அப்பா என்றும் கூறுவது போல பரம்பிதா பரமாத்மா மற்ற ஆத்மாக்களை விட பெரியவராக இருக்கிறார். நாம் ஆத்மாக்கள் சிறியதாக இருக்கின்றோம் என்று கிடையாது. குழந்தைகளே! எனது மகிமையைப் பாடுகிறீர்கள். பரமாத்மாவின் மகிமைகள் அளவற்றது என கூறுகின்றீர்கள். மனித சிருஷ்டியின் விதை என்றால் தந்தையை விதை என்பார்கள் அல்லவா! என பாபா புரிய வைக்கின்றார். அவர் படைக்கக் கூடியவர். மற்றபடி இத்தனை வேதங்கள், உப நிடதம், கீதை, யாகம், தவம், தானம், புண்ணியம்...... போன்ற அனைத்தும் பக்தியின் விஷயமாகும். இவைகளுக்கென்றும் நேரம் இருக்கின்றது. அரைக்கல்பம் பக்தி, அரைக்கல்பம் ஞானம் ஆகும். பக்தி என்பது பிரம்மாவின் இரவு, ஞானம் என்பது பிரம்மாவின் பகல். இதை சிவபாபாதான் புரிய வைக்கின்றார். அவருக்கு தனக்கென்று உடல் கிடையாது. மீண்டும் இராஜ்ய பாக்கியத்தை உங்களுக்கு கொடுப்பதற்காக இராஜ யோகத்தை நான் கற்பிக்கின்றேன் என கூறுகின்றார். இப்போது பிரம்மாவின் இரவு முடியப் போகின்றது. அதே தர்ம அவமரியாதை அடையும் நேரம் வந்து விட்டது. எல்லாவற்றையும் விட அதிகமான நிந்தனை (தூற்றுவது) யாருக்கு செய்கிறார்கள். பரம்பிதா பரமாத்மா சிவனுக்குத்தான். யதா யதாஹி...... என எழுதப்பட்டு இருக்கின்றதல்லவா. நான் போன கல்பத்தில் சமஸ்கிருதத்தில் ஞானம் கொடுக்கவில்லை. இதே மொழி தான். பாரதத்தில் தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்பவரை நிந்திக்கும் பொழுது, கல்லிலும் முள்ளிலும் நான் இருக்கின்றேன் என்று கூறும் பொழுது நான் வருகின்றேன். பாரதத்தை சொர்க்கம் ஆக்குபவரை, தூய்மை இழந்தவர்களை தூய்மையாக்குபவரை எவ்வாறெல்லாம் நிந்தித்திருக்கின்றனர்.

 

பாரதம் அனைத்தையும் விட பழைய கண்டம். இது ஒருபோதும் அழிவதில்லை என்பதை நீங்கள் அறிகிறீர்கள். சத்யுகத்தில் லட்சுமி நாராயணனின் இராஜ்யம் கூட இங்கே தான் நடக்கின்றது. இந்த இராஜ்யத்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் தான் கொடுத்தார். இப்போது அதே பாரதம் தூய்மை இல்லாமல் ஆகும் போது மீண்டும் நான் வருகின்றேன். அப்போது தான் சிவாய நமஹ! என்று நீங்கள் மகிமை பாடுகின்றீர்கள். இந்த எல்லையற்ற நாடகத்தில் ஒவ்வொரு ஆத்மாவின் நாடகமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அது திரும்பவும் நடக்கின்றது. இதிலிருந்து தான் ஒரு சிறிய பகுதியை எடுத்து எல்லைக்குட்பட்ட நாடகத்தை உருவாக்குகின்றார்கள். இப்பொழுது நாம் பிராமணர்கள். பிறகு தேவதைகளாக மாறுவோம். இது ஈஸ்வரிய வர்ணம் (குலம்) ஆகும். இது உங்களுடைய 84 வது பிறவியின் முடிவாகும். இதில் நான்கு வர்ணங்களையும் பற்றிய ஞானம் உங்களுக்கு இருக்கின்றது. ஆகவே பிராமண வர்ணம் தான் அனைத்தையும் விட உயர்ந்தது. ஆனால் மகிமையும் பூஜையும் தேவதைகளுக்குத் தான் நடக்கின்றது. பிரம்மாவின் கோவில் கூட இருக்கின்றது. ஆனால் இவருக்குள் பரமாத்மா வந்து சொர்க்கத்தைப் படைக்கின்றார் என்பது யாருக்கும் தெரியாது. ஸ்தாபனை நடந்து கொண்டு இருக்கும் போது அழிவும் வேண்டும். ஆகவே ருத்திர ஞான யாகத்தில் இருந்து வினாச ஜுவாலை வெளிப்பட்டது என கூறுகிறார்கள்.

 

இப்பொழுது அதே தந்தை, இனிமையான குழந்தைகளே, இது உங்களுடைய கடைசி பிறவி, நான் உங்களுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியை மீண்டும் கொடுப்பதற்காக வந்திருக்கின்றேன் என குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டு இருக்கின்றார். உங்களுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால் யார் என்னுடைய ஸ்ரீமத் படி நடப்பார்களோ அவர்களுக்கு நான் சொர்க்கத்தின் பரிசு கொடுப்பேன். உலகில் அவர்களுக்குக் கூட அமைதியின் பரிசு கிடைக்கின்றது. ஆனால் பாபா உங்கள் அனைவருக்கும் சொர்க்கத்தின் பரிசைக் கொடுக்கின்றார். நான் எடுத்துக் கொள்ளமாட்டேன் என கூறுகின்றார். நான் உங்கள் மூலமாக ஸ்தாபனை செய்விக்கின்றேன். உங்களுக்குத்தான் கொடுப்பேன் நீங்கள் சிவபாபாவின் பேரக் குழந்தைகள் பிரம்மாவின் குழந்தைகள். இத்தனை குழந்தைகளை பிரஜா பிதா பிரம்மா தான் தத்தெடுத்து இருக்க வேண்டும் அல்லவா? இந்த பிராமண ஜன்மம் உங்கள் அனைத்து பிறவிகளையும் விட உயர்ந்தது ஆகும். இது நன்மை நடக்கக்கூடிய பிறவி ஆகும். தேவதைகளின் பிறவி அல்லது சூத்திரர்களின் பிறவி நன்மை தரக்கூடியது அல்ல. உங்களுடைய இந்த பிறவி மிகவும் நன்மை தரக்கூடியது. ஏனென்றால் பாபாவின் உதவியாளராகி சிருஷ்டியில் தூய்மை மற்றும் அமைதியை ஸ்தாபனை செய்கிறீர்கள். அந்த பரிசைக் கொடுப்பவர் இதை அறியவில்லை. அவர்கள் அமெரிக்காவை சார்ந்தவர்களுக்குக் கொடுக்கின்றார்கள். யார் என்னுடைய உதவியாளராக மாறுகின்றார்களோ அவர்களுக்கு பரிசு கொடுக் கின்றேன் என பாபா கூறுகின்றார். தூய்மை இருக்கின்றது என்றால் சிருஷ்டியில் தூய்மை, அமைதி இருக்கின்றது. இது வேசியாலயம் ஆகும். சத்யுகம் சிவாலயம் ஆகும். சிவபாபா ஸ்தாபனை செய்திருக்கின்றார். சாது சந்தியாசிகளோ, ஹடயோகிகளோ, இல்லறத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு சகஜ இராஜயோகத்தை கற்பிக்க முடியாது. 1000 முறை கீதை, மாகாபாரதத்தை படிக்கலாம். இவரோ அனைவருக்கும் தந்தையாக இருக்கின்றார். அனைத்து தர்மத்தினருக்கும் உங்களுடைய புத்தி யோகத்தை என் ஒருவருடன் வையுங்கள் என கூறுகின்றார். நானும் சிறிய புள்ளியாகவே இருக்கின்றேன், இவ்வளவு பெரியதாக இல்லை. ஆத்மாவைப் போன்றே பரமாத்மாவாகிய நானும் இருக்கின்றேன். ஆத்மா புருவ மத்தியில் இருக்கின்றது. இவ்வளவு பெரியது என்றால் இங்கே எப்படி அமரும்? நானும் ஆத்மாவைப் போன்றே இருக்கின்றேன். நான் பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டு சதா தூய்மையாக இருக்கின்றேன். மற்ற ஆத்மாக்கள் பிறப்பு இறப்பில் வருகிறார்கள். தூய்மையான நிலையில் இருந்து தூய்மையின்றியும், தூய்மையற்ற நிலையில் இருந்து தூய்மையாகவும் மாறுகின்றார்கள். இப்போது மீண்டும் தூய்மை இல்லாதவர்களை தூய்மையாக்குவதற்காக இந்த ருத்திர யாகத்தை பாபா படைக்கின்றார். இதற்குப் பிறகு சத்யுகத்தில் வேறு எந்த யாகமும் நடப்பது இல்லை. பிறகு துவாபர யுகத்தில் இருந்து பல விதமான யாகங்களைப் படைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த ருத்ர ஞான யாகம் முழு கல்பத்திலும் ஒரே முறை தான் படைக்கப்படுகிறது. இதில் அனைத்தும் அர்ப்பணிக்கப்படுகிறது. பிறகு வேறு எந்த யாகமும் படைக்கப்படுவது கிடையாது. ஆபத்துக்கள் வரும் போது தான் யாகத்தைப் படைக்கின்றார்கள். மழை பொழியவில்லை அல்லது வேறு ஏதாவது ஆபத்துக்கள் நிகழும் போது யாகத்தை படைக்கின்றார்கள். சத்யுகம் திரேதாவில் எந்த ஆபத்துக்களும் கிடையாது. இச்சமயம் பல விதமான ஆபத்துக்கள் வருகின்றன. ஆகவே எல்லோரையும் விட பெரிய சேட் (முதலாளி) சிவபாபா யாகத்தைப் படைத்திருக்கின்றார். எனவே முதலில் இருந்து சாட்சாத்காரம் செய்விக்கின்றார். எப்படி அனைத்தும் சுவாஹா ஆகின்றது, எவ்வாறு வினாசம் ஆகின்றது? பழைய உலகம் சுடுகாடு ஆகப்போகின்றது. பிறகு ஏன் இந்த பழைய உலகத்தில் மனதை செலுத்த வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற பழைய உலகத்தை சந்நியாசம் செய்கிறீர்கள். அந்த சந்நியாசிகளோ வீடு வாசலை சந்நியாசம் செய்கிறார்கள். நீங்கள் வீடு வாசலைத் துறக்க வேண்டாம். இங்கே இல்லற விவகாரத்தை கவனித்துக் கொண்டே பற்றுதலை நீக்கினால் மட்டும் போதும். அனைவரும் இறந்து விட்டார்கள். இவர்கள் மீது ஏன் மனதை வைக்க வேண்டும். இது பிணங்களின் உலகம் ஆகும். எனவே தான் சொர்க்கத்தை நினையுங்கள். சுடுகாட்டை ஏன் நினைக்கின்றீர்கள் என்கிறார்.

 

பாபா தரகராக இருந்து உங்களுடைய புத்தி யோகத்தை தன்னுடன் இணைக்கின்றார். ஆத்மா, பரமாத்மா பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டது....... என கூறுகின்றார்கள் அல்லவா? இந்த மகிமை அவருடையது ஆகும். கலியுக குருக்களை பதீத பாவனர் என்று கூற முடியாது. அவர்கள் சத்கதி கொடுக்க முடியாது. ஆம், சாஸ்திரங்களைச் சொல்கின்றார்கள். கிரியா கர்மம் செய்விக்கிறார்கள். சிவபாபாவிற்கு குரு, டீச்சர் யாரும் கிடையாது. நான் உங்களுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுக்க வந்திருக்கிறேன் என்று பாபா கூறுகின்றார். பின் சூரிய வம்சத்தினர் ஆகினாலும் சரி, சந்திரவம்சத்தினர் ஆகினாலும் சரி. எவ்வாறு மாறினார்கள். சண்டையிட்டா? இல்லை. லட்சுமி நாராயணன் சண்டையினால் இராஜ்யத்தை அடையவில்லை. இராமர் சீதாவும் அவ்வாறு அடையவில்லை. இவர்கள் இச்சமயம் மாயாவிடம் போரிட்டுள்ளனர். நீங்கள் குப்தமான (மறைமுகமான) படைவீரர்கள். ஆகவே சக்தி சேனைகளாகிய உங்களை யாரும் அறியவில்லை. நீங்கள் யோக சக்தியினால் முழு உலகத்திற்கும் அதிபதியாகின்றீர்கள். நீங்கள் தான் விஷ்வ இராஜ்யத்தை இழக்கிறீர்கள். பிறகு நீங்களே பெறுகிறீர்கள். உங்களுக்குப் பரிசு கொடுப்பவர் தந்தை. இப்போது பாபாவின் உதவியாளர் ஆகுபவர்களுக்கு அரைக் கல்பத்திற்கு அமைதி, சுகத்தின் பரிசு கிடைக்கும். அசரீரியாகி பாபாவை யார் நினைக்கிறார்களோ சுயதரிசனத்தைச் சுழற்றுகின்றார்களோ, சாந்திதாமம், ஸ்வீட் ஹோம் மற்றும் ஸ்வீட் இராஜ்யத்தை நினைவு செய்து தூய்மை ஆகிறார்களோ, அவர்களே உதவியாளர்கள் என பாபா கூறுகின்றார். எவ்வளவு எளிதாக இருக்கின்றது. நாம் ஆத்மாக்களும் நட்சத்திரம் போல இருக்கின்றோம், நம்முடைய தந்தையும் நட்சத்திரம் போன்று இருக்கின்றார். அவர் இவ்வளவு பெரியதாக இல்லை. ஆனால் நட்சத்திரத்தை எப்படி பூஜை செய்வது. ஆகவே பூஜைக்காக எவ்வளவு பெரியதாக செய்திருக்கிறார்கள். முதலில் பாபாவிற்கு பூஜை நடக்கின்றது பிறகு மற்றவர்களுக்கு நடக்கின்றது. லட்சுமி நாராயணனுக்கு எவ்வளவு பூஜை நடக்கின்றது. ஆனால் அவர்களை இவ்வாறு மாற்றுவது யார்? அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் தந்தை. அவருக்குத்தான் அர்ப்பணம் ஆக வேண்டும் அல்லவா? அவருடைய பிறப்பு வைரம் போன்றது ஆகும். மற்ற அனைவரின் பிறப்பும் சோழியைப் போன்றதாகும். சிவாய நமஹ! - இது அவருடைய யாகம் ஆகும். பிராமணர்களாகிய உங்களினால் படைத்திருக்கின்றார். யார் எனக்கு தூய்மை, அமைதி ஸ்தாபனை செய்வதில் உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு இவ்வளவு பலனை கொடுக்கின்றேன். பிராமணர்கள் மூலமாக யாகத்தைப் படைத்திருக்கின்றார் என்றால் தட்சணையும் தருவார் அல்லவா? இவ்வளவு பெரிய யாகம் படைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. வேறு எந்த யாகமும் இவ்வளவு காலம் நடைபெற வில்லை. யார் எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு பரிசு கொடுக்கிறேன் என்கிறார். அனைவருக்கும் பரிசு கொடுப்பவர் நானே! நான் எதையும் எடுத்துக் கொள்வது இல்லை. அனைத்தையும் உங்களுக்கே கொடுக்கின்றேன். இப்பொழுது யார் எவ்வளவு செய்வார்களோ அவ்வளவு அடைவார்கள். சிறிதளவு செய்தால் பிரஜையில் செல்வார்கள். காந்திக்கு யார் உதவி செய்தார்களோ அவர்கள் குடியரசுத் தலைவர், அமைச்சர் ஆனார்கள் அல்லவா? இது அல்பகால சுகம் ஆகும். பாபா உங்களுக்கு முதல், இடை, கடை ஞானம் முழுவதையும் உங்களுக்கு கொடுத்து திரிகாலதரிசியாக மாற்றுகின்றார். எனது பயோகிராஃபியை (சுயசரிதையை) தெரிந்துக் கொள்வதால் நீங்கள் அனைத்தையும் அறிந்துக் கொள்கிறீர்கள் எனக் கூறுகிறார். சன்னியாசிகள் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. அவர்களிடம் இருந்து என்ன சொத்துக் கிடைக்கும்? அவர்கள் ஒருவருக்குத் தான் சிம்மாசனத்தை கொடுப்பார்கள். மற்றவர்களுக்கு என்ன கிடைக்கிறது. பாபா உங்கள் அனைவருக்கும் சிம்மாசனத்தைக் கொடுக்கிறார். எவ்வளவு பலனை எதிர்பாராது சேவை செய்கிறார். ஆனால் நீங்களோ என்னை கல்லிலும் முள்ளிலும் இருக்கிறார் எனக் கூறி நிந்தித்து விட்டீர்கள். இவ்வாறு நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கிளிஞ்சல் போன்று மாறும் போது (மதிப்பிழக்கும் போது) தான் உங்களை வைரம் போன்று மாற்றுகிறேன். நீங்கள் பல முறை பாரதத்தை சொர்க்கமாக்கினீர்கள். பிறகு மாயை நரகமாக்கி விட்டது. இப்போது பிராப்தி அடைய வேண்டும் என்றால் பாபாவின் உதவியாளராகி உண்மையான பரிசை அடையுங்கள். இதில் தூய்மை தான் முதன்மையானது.

 

பாபா சன்னியாசிகளும் நல்லவர்கள் தான், தூய்மையாக இருக்கிறார்கள் என அவர்களையும் மகிமை செய்கிறார். இவர்கள் கூட பாரதத்தை விழுவதிலிருந்து (தாழ்வடையும் போது) காப்பாற்றுகிறார்கள். இல்லை என்றால் என்ன நடக்கும் என்பது தெரியாது. இப்போது பாரதத்தை சொர்க்கமாக்க வேண்டும். எனவே நிச்சயமாக இல்லறத்தில் இருந்தாலும் தூய்மையுடன் இருக்க வேண்டும். பாப்தாதா இருவரும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார்கள். சிவபாபாவும் இந்த பழைய செருப்பு மூலமாக குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். புதியதை எடுக்க முடியாது. தாயின் கர்ப்பத்தில் வருவதில்லை. தூய்மை இல்லாத உலகம் தூய்மையற்ற சரீரத்தில் தான் வருகிறார். இந்த கலியுகத்தில் அடர்ந்த இருள் இருக்கிறது. காரிருளை பிரகாசமாக்க வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இந்த எல்லையற்ற உலகத்தை மனப்பூர்வமாக சன்னியாசம் செய்து பற்றுதலை நீக்க வேண்டும். இதில் மனதை செலுத்தக் கூடாது.

 

2. பாபாவின் உதவியாளராகி பரிசு அடைவதற்கு 1. அசரீரி ஆக வேண்டும். 2. தூய்மையாக இருக்க வேண்டும். 3. சுயதரிசன சக்கரத்தைச் சுழற்ற வேண்டும். 4. ஸ்வீட் ஹோம், மற்றும் ஸ்வீட் இராஜ்யத்தை நினைவு செய்ய வேண்டும்.

 

வரதானம்:

வாழ்க்கையின் தெய்வீக குணங்கள் என்ற மலர்களின் தோட்டம் மூலமாக குஷியான மனநிலையை அனுபவம் செய்யக் கூடிய எப்பொழுதுமே மகிழ்ச்சியானவர் ஆவீர்களாக.

 

எப்பொழுதும் குஷியான மனநிலை என்றும் நிரம்பிய சம்பன்னமான நிலை. முதலில் வாழ்க்கை முட்களின் காட்டில் இருந்தது. இப்பொழுது மலர்களின் குஷியான நிலையில் வந்து விட்டீர்கள். எப்பொழுதும் வாழ்க்கையில் தெய்வீக குணங்களின் மலர்களின் தோட்டம் அமைந்துள்ளது. எனவே யாரெல்லாம் உங்களது தொடர்பில் வருகிறார்களோ அவர்களுக்கு தெய்வீக குணங்களின் மலர்களின் நறுமணம் வந்து கொண்டே இருக்கும். மேலும் குஷியான மனநிலையை பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். சக்தியின் அனுபவம் செய்வார்கள். குஷியான மனநிலை மற்றவர்களையும் கூட மகிழ்ச்சிப்படுத்துகிறது. எனவே நாங்கள் சதாகாலமும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறுகிறீர்கள்.

 

சுலோகன்:

யார் மாயையின் நீர்க்குமிழிகளை பார்த்து பயப்படுவதற்கு பதிலாக அவற்றுடன் விளையாடக் கூடியவர்களே மாஸ்டர் சர்வசக்திவான் ஆவார்கள்.

 

ஓம்சாந்தி