19.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே - பாபாவிடம் அனைத்து வித சம்மந்தங்களையும் வைத்தீர்கள் என்றால் பந்தனங்கள் விடுபட்டு விடும், மாயை பந்தனத்தில் மாட்டி வைக்கிறது மற்றும் பாபா பந்தனங்களிலிருந்து விடுவிக்கின்றார்.

 

கேள்வி:-

பந்தனமற்றவர்கள் என்று யாரை சொல்லப்படுகிறது? பந்தனமற்றவர்களாக ஆவதற்கான வழி என்ன?

 

பதில்:-

பந்தனமற்றவர்கள் என்றால் அசரீரி. தேகம் உட்பட தேகத்தின் எந்தவொரு சம்மந்தமும் புத்தியை தன் பக்கம் இழுக்கக் கூடாது. தேக- அபிமானத்தில் தான் பந்தனம் இருக்கிறது. ஆத்ம-அபிமானிகளாக ஆனீர்கள் என்றால் அனைத்து பந்தனங்களும் முடிந்து விடும். வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இறந்து விடுவது தான் பந்தனங்கள் அற்றவர்களாக ஆவதாகும். இப்போது கடைசி நேரம், நாடகம் முடிந்து விட்டது, நாம் பாபாவிடம் செல்கிறோம் என்பது புத்தியில் இருந்தது என்றால் பந்தனம் இல்லாதவர்களாக ஆகி விடுவீர்கள். பாட்டு:- யாருக்கு பகவான் துணையாக இருப்பாரோ................

 

ஓம் சாந்தி.

பாபா அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். இவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக எல்லையற்ற தந்தையும் இருப்பார் அல்லவா. நிராகார சிவபாபா என்றும் சொல்கிறார்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். பிரம்மாவையும் பாபா என்று சொல்கிறார்கள், விஷ்ணு அல்லது சங்கரை பாபா என்று சொல்ல முடியாது. சிவனை எப்போதும் தந்தை என்று சொல்கிறார்கள். சிவனுடைய சித்திரம் தனிப்பட்டது, சங்கரின் சித்திரம் தனிப்பட்டது. சிவாய நமஹ: என்று பாடலும் இருக்கிறது. பிறகு நீங்கள் தான் தாயும்-தந்தையும்......... என்று சொல்லப்படுகிறது. நிராகார சிவனைத் தான் தந்தை என்று சொல்லப்படுகிறது என்பதையும் புரிய வைப்பது மிகவும் சகஜமாகும். அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாக இருக்கின்றார். சங்கர் அல்லது விஷ்ணு நிராகாரமானவர்கள் கிடையாது. சிவனை நிராகாரமானவர் என்று சொல்லலாம். கோயில்களில் அவர்கள் அனைவருடைய சித்திரம் இருக்கிறது. பக்திமார்க்கத்தில் எவ்வளவு சித்திரங்கள் இருக்கின்றன. சிவபாபாவினுடைய உயர்ந்ததிலும் உயர்ந்த சித்திரத்தைக் காட்டுகிறார்கள், பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கரின் சித்திரத்தைக் காட்டுகிறார்கள். அவர்களுடைய வடிவமும் இருக்கின்றது. ஜகத் அம்பா, ஜகத் பிதாவிற்கும் வடிவம் இருக்கிறது. லஷ்மி-நாராயணனுக்கும் உருவம் (சரீரம்) இருக்கிறது. மற்றபடி ஒரு பகவான் தான் நிராகாரமானவராவார். ஆனால் அவரை இறைவன் என்று மட்டும் சொல்வதினால் மனிதர்கள் குழம்பி விடுகிறார்கள். இறைவன் உங்களுக்கு என்னவாக இருக்கின்றார் என்று கேளுங்கள், தந்தை என்று சொல்வார்கள். ஆக இறைதந்தை என்பதை நிரூபித்துச் சொல்ல வேண்டும். தந்தை படைப்பவர் என்றால் தாயும் வேண்டும் அல்லவா. தாய் இல்லாமல் தந்தை எப்படி சிருஷ்டியைப் படைப்பார். அந்த தந்தை எப்போது வருவார்? ஹே தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே வாருங்கள் என்று அனைவரும் அழைக்கிறார்கள். இப்போது முழு உலகமும் தூய்மையற்றதாக இருக்கிறது. தூய்மையற்றவர்களாக இருக்கின்றீர்கள், அப்போது தான் வந்து தூய்மையாக்குவார் அல்லவா. இதன்மூலம் பாபா தூய்மையற்ற உலகத்தில் கண்டிப்பாக வர வேண்டும் என்பது நிரூபணம் ஆகிறது. ஆனால் நாடகத்தின் படி இது யாருக்கும் புரியாது. புரியாமல் இருந்தால் தான் பாபா வந்து புரிய வைக்க முடியும். பாபா அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். ஞானம் மற்றும் பக்தி, பிறகு பிரம்மாவின் பகல் மற்றும் பிரம்மாவின் இரவு என்று பாரதத்தில் தான் பாடப்படுகிறது. இரவில் காரிருள் இருக்கிறது. ஞானம் என்ற மையை சத்குரு அளித்தார், அஞ்ஞானம் என்ற இருள் போனது என்று பாடப்படுகிறது. தந்தையைக் கூட தெரிந்திராத அளவிற்கு மனிதர்களிடத்தில் அஞ்ஞானம் இருக்கிறது. இவர்களைப் போல் ஞானமில்லாதவர்களாக வேறு யாரும் இருப்பதில்லை. பரமபிதா, இறைதந்தையே என்று வார்த்தையை சொல்லி விட்டு ஒருவேளை அவரை தெரியவில்லை என்றால் அவரைபோன்ற அஞ்ஞானிகள் வேறு யாரும் கிடையாது. குழந்தைகள் பாபா என்று சொல்லி விட்டு பிறகு நாங்கள் அவருடைய தொழில், பெயர், ரூபம் போன்றவற்றை தெரிந்திருக்கவில்லை என்று சொன்னால் அவர்களை ஒன்றுமறியாதவர்கள் என்று சொல்லப்படுவர் அல்லவா. இது தான் பாரதவாசிகளின் தவறாகும், தந்தை என்று சொல்லிக் கொண்டே அவரை தெரிந்திருக்க வில்லை. இறை தந்தையே, வந்து தூய்மையற்ற எங்களை தூய்மையாக்குங்கள், துக்கத்திலிருந்து விடுவியுங்கள், துக்கத்தைப் போக்கி சுகத்தை அளியுங்கள் என்று பாடுகிறார்கள். பாபா கல்பத்தில் ஒரே முறை தான் வருகின்றார். இதை நீங்கள் வரிசைகிரமமான முயற்சியின்படி தெரிந்துள்ளீர்கள். நாம் பாபாவிடமிருந்து முழுமையான ஆஸ்தியை அடைய வேண்டும் என்பதை சிலர் புரிந்து கொள்வதே இல்லை.

 

பாபாவினுடைய முழுமையான அறிமுகம் இல்லை ஆகையினால் தான் என்ன செய்வது பந்தனம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கும்போதே மரணம் வந்து விட்டால் உங்களுடைய பந்தனம் அழிந்து விடும். மனிதர்கள் திடீரென்று இறந்து விட்டார்கள் என்றால் பந்தனம் விட்டு விடுகிறது. இப்போது அனைவருடைய பந்தனமும் விடுபடப்போகிறது. நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே பந்தன மற்றவர்களாக அதாவது அசரீரியாக ஆக வேண்டும். இந்த சரீரத்தின் பந்தனங்கள் போன்றவற்றை மறந்து விடுங்கள் என்று பாபா கூறுகின்றார். தங்களை ஆத்மா என்று புரிந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். மற்றபடி நீங்கள் தேக-அபிமானிகளாக ஆகும்போது தான் பந்தனம் ஏற்படுகிறது பிறகு எப்படி விடுபடுவது? என்று கேட்கிறீர்கள். குடும்ப விவகாரங்களில் இருங்கள் ஆனால் நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பது புத்தியில் இருக்கட்டும் என்று பாபா கூறுகின்றார். நாடகம் முடியும்போது நடிகர்கள் நாடகத்திருந்து விடுபட்டு விடுகிறார்கள். நடிப்பை நடித்து- நடித்து, இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கிறது, இந்த நடிப்பை நடித்து விட்டு பிறகு வீட்டிற்குச் செல்வோம், என்பது புத்தியில் இருக்கிறது. இப்போது இது கடைசி, நாம் தெய்வீக சம்மந்தத்திற்குச் செல்கிறோம், என்பதையும் நீங்கள் புத்தியில் வைக்க வேண்டும். இந்த பழைய உலகத்தில் இருந்து கொண்டே நாம் பாபாவிடம் செல்கிறோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு பலியாவோம், வாழ்ந்து கொண்டே உங்களுடையவர்களாக ஆவோம் என்று பாடுகிறார்கள். மற்றபடி தேகம் உட்பட தேகத்தின் சம்மந்தங்களை மறந்து நாங்கள் தங்களோடு தான் சம்மந்தம் வைப்போம். சம்மந்தம் இருந்தால் நினைவு செய்யுங்கள், அன்பு செலுத்துங்கள். பாபாவிடம் அல்லது தங்களுடைய அன்பானவரிடம் (தலைவரிடம்) புத்தியின் தொடர்பை ஈடுபடுத்தினீர்கள் என்றால் உங்கள் மீது ஏறியிருக்கும் துரு இறங்கி விடும். யோகம்(நினைவு) என்பது பாடப்பட்டிருக்கிறது அல்லவா. மற்றவை அனைத்தும் சரீர சம்மந்தப்பட்ட யோகங்களாகும் - மாமா, சித்தப்பா, தாத்தா, குரு போன்ற அனைவருடனும் யோகம் வைக்கிறார்கள். பாபா கூறுகின்றார், இவர்கள் அனைவரிடமிருந்து யோகத்தை நீக்கி என் ஒருவனை நினைவு செய்யுங்கள். தேக-அபிமானத்தில் வராதீர்கள். தேகத்தின் மூலம் கர்மம் செய்து கொண்டே நாம் நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நிச்சயம் செய்யுங்கள். இந்த பழைய உலகம் இப்போது முடியப்போகிறது, இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும், தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களிருந்தும் விடுபட வேண்டும். இப்படியெல்லாம் தனக்குத் தானே பேச வேண்டும். இப்போது பாபாவிடம் செல்ல வேண்டும். சிலருக்கு மனைவின் பந்தனம், சிலருக்கு கணவனுடைய பந்தனம் இருக்கிறது, சிலருக்கு வேறு சிலருடைய பந்தனம் இருக்கிறது. பாபா நிறைய யுக்திகளை கூறுகின்றார். நான் தூய்மையாகி பாரதத்தை கண்டிப்பாக தூய்மையாக்க வேண்டும் என்று சொல்லி விடுங்கள். நாம் தூய்மையாக ஆகி உடல்-மனம்-பொருளின் மூலம் சேவை செய்கிறோம். ஆனால் முதலில் பற்றில்லாதவர்களாக ஆக வேண்டும். மோகத்தை நஷ்டம் செய்தால் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினீர்கள் என்றால் அவர்களும் உங்களுக்கு சகயோகம் அளிப்பார்கள். பகவானுடைய மகாவாக்கியம் - காமம் மிகப்பெரிய எதிரி, நாங்கள் அதன்மீது வெற்றி அடைந்து தூய்மையாக இருக்க விரும்புகின்றோம். பாபாவின் கட்டளை என்னவென்றால், தூய்மையாக ஆனீர்கள் என்றால் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள். நமக்கு வினாசம் மற்றும் ஸ்தாபனையின் காட்சி ஏற்பட்டிருக்கிறது, இப்போது தூய்மையாவதில் எங்களுக்கு இவர்கள் தடை போடுகிறார்கள். அடிக்கிறார்கள். நான் பாரதத்தின் உண்மையான சேவையில் இருக்கின்றேன். இப்போது எனக்கு பாதுகாப்பளியுங்கள். ஆனால் உறுதியாக பற்றில்லாத தன்மை வேண்டும். சன்னியாசிகள் வீடு வாசலை விட்டு விடுகிறார்கள். இங்கே கூடவே இருந்து கொண்டு பற்றில்லாதவர்களாக ஆக வேண்டும். சன்னியாசிகளின் வழி தனிப்பட்டதாகும். குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே நாங்கள் ராஜா ஜனகரைபோல் முக்தி, ஜீவன் - முக்தியை அடையும் படியான ஞானத்தை எங்களுக்கு கொடுங்கள் என்று மனிதர்கள் சொல்கிறார்கள். அது தான் உங்களுக்கு இப்போது கிடைக்கிறது அல்லவா.

 

இவர் (பிரம்மா பாபா) என்னுடைய துணைவி(யுகல்) என்று பாபா கூறுகின்றார், இவருடைய கமலவாயின் மூலம் நான் பிரஜைகளைப் படைக்கின்றேன். பிரஜாபிதா பிரம்மாவின் கமலவாயின் மூலம் தான் சொல்கின்றார். நீங்கள் என்னுடைய பேரப்பிள்ளைகள் என்று உங்களை சிவபாபா கூறுகின்றார். நீங்கள் என்னுடைய குழந்தைகளாக ஆகி சிவபாபாவின் பேரப்பிள்ளைகளாக ஆகின்றீர்கள் என்று இவர்(பிரம்மா) கூறுகின்றார். ஆஸ்தி அவரிடமிருந்து கிடைக்கிறது. சொர்க்கத்தின் ஆஸ்தியை மனிதர்கள் யாரும் கொடுக்க முடியாது. நிராகாரமானவர் தான் கொடுக்கின்றார். ஆக பக்தி தனிப்பட்டது மற்றும் ஞானம் தனிப்பட்டதாகும். பக்தியில் வேத-சாஸ்திரங்களைப் படிக்கிறார்கள், யக்ஞம்-தவம், தானம்-புண்ணியம் போன்றவைகளுக்கு நிறைய செலவு ஆகிறது, இவையனைத்தும் பக்தியின் பொருட்களாகும். பக்தி துவாபர யுகத்திலிருந்து ஆரம்பமாகிறது. தேவி-தேவதைகள் இறங்கும் மார்க்கத்தில் வந்து தூய்மையற்றவர்களாக ஆகும்போது தேவி-தேவதைகள் என்று சொல்லிக் கொள்ள முடியாது ஏனென்றால் தேவதைகள் சம்பூரண நிர்விகாரிகளாக இருந்தார்கள். விகாரம் மற்றும் பாவச் செயல்களில் செல்வதின் மூலம் விகாரிகளாக ஆகி விடுகிறார்கள். தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் விகாரத்தில் வந்து தூய்மையற்றவர்களாக ஆகி விட்டார்கள் என்று சொல்லலாம். தூய்மையற்றவர்களை தேவதைகள் என்று சொல்ல முடியாது, ஆகையினால் தான் இந்துக்கள் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. வேத -சாஸ்திரங்களில் ஆரியர்கள் என்று பெயர் வைத்து விட்டார்கள். ஆரியர் என்ற பெயர் இந்த பாரதகண்டத்திற்காக ஆகும். இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது? சத்யுகத்தில் ஆரியர் என்ற வார்த்தை கிடையாது. கிறிஸ்துவிற்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பாரதத்தில் தேவி-தேவதைகள் மிகவும் புத்திசாலிகளாக இருந்தார்கள், பிறகு அதே தேவதைகள் துவாபரயுகத்தில் விகாரிகளாக ஆகும் போது ஆரியர்-அல்லாதவர்(மதிப்பில்லாதவர்கள்) என்று சொல்லப்படுகிறது. ஒருவர் ஆரியர் என்று சொன்னார் அவ்வளவு தான், அதே பெயர் இருந்து வருகிறது. ஒருவர் கிருஷ்ண பகவானுடைய மகாவாக்கியம் என்று சொன்னார் அல்லது எழுதினால் அவ்வளவு தான், அதை ஏற்றுக் கொண்டு விட்டதைப் போல் ஆகும். சிவாய நமஹ: நீங்கள் தான் தாயும்-தந்தையும்................ என்று பாடுகிறார்கள் ஆனால் அவர் எப்படி தாயும் தந்தையுமாக ஆகின்றார், எப்போது படைப்பை படைக்கின்றார், என்பதை தெரிந்திருக்க வில்லை. கண்டிப்பாக சிருஷ்டியின் ஆரம்பத்தில் தான் படைத்திருப்பார். சிருஷ்டியின் ஆரம்பம் என்று எதை சொல்வது? சத்யுகத்தையா அல்லது சங்கமயுகத்தையா? சத்யுகத்தில் பாபா வருவதே இல்லை. சத்யுக ஆரம்பத்தில் லஷ்மி - நாராயணன் வருகின்றனர். அவர்களை சத்யுகத்தின் எஜமானர்களாக மாற்றியது யார்? கலியுகத்திலும் வருவதில்லை. இது கல்பத்தின் சங்கமயுகமாகும். நான் ஒவ்வொரு கல்பத்தின் சங்கமயுகத்திலும் வருகின்றேன் அப்போது அனைத்து ஆத்மாக்களும் தூய்மையற்றவர்களாக ஆகி இருக்கின்றார்கள் அல்லது உலகம் பழையதாக ஆகிவிடுகிறது என்று பாபா கூறுகின்றார். நாடகத்தின் சக்கரம் முடியவேண்டும் அப்போது தான் பாபா வருவார் அல்லவா. குழந்தைகளாகிய உங்களிடத்தில் மிகுந்த புத்திசாலித்தனம் வேண்டும், தாரணை வேண்டும். வேதம் படிப்பதின் மூலம் என்ன பலன் என்று மாநாடுகள் நடத்துகிறார்கள். வேதம் படிக்க வேண்டுமா என்ன? எந்த முடிவும் எடுக்க முடியாது. பிறகு அதே மாநாட்டை அடுத்த ஆண்டும் செய்வார்கள். முடிவு செய்ய அமருகிறார்கள் ஆனால் எதுவும் நடப்பதில்லை. வினாசத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. அணுகுண்டுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது நடந்து கொண்டிருப்பதே கலியுகமாகும். இந்த விசயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். உங்களுடைய விசயமே தனிப்பட்டதாகும். மனிதர்கள் மனிதர்களுக்கு சத்கதியை அளிக்க முடியாது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே என்று பாடுகிறார்கள், எனும்போது தங்களை ஏன் தூய்மையற்றவர்கள் என்று புரிந்து கொள்வதில்லை? இது தூய்மையற்ற உலகம் விஷக்கடலாகும். அனைவரும் படகோட்டிகளாக முடியுமா என்ன முடியாது.

 

இப்போது முழுமையாகப் புரிய வைக்கும் அளவிற்கு குழந்தைகளாகிய உங்களிடத்தில் சக்தி வரவில்லை. இப்போது நீங்கள் அந்தளவிற்கு புத்திசாலிகளாக ஆகியிருக்கவில்லை. யோகமும் கிடையாது. இப்போது வரை சிறிய குழந்தைகளைப் போல் அழுது கொண்டிருக்கிறீர்கள். மாயையின் புயல்களில் நிற்கமுடிவதில்லை. நிறைய தேக-அபிமானம் இருக்கிறது. ஆத்ம-அபிமானிகளாக ஆவதில்லை. தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று பாபா அடிக்கடி கூறுகின்றார். இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும். நடிகர்கள் அனைவரும் அவரவருடைய நடிப்பை நடிக்கிறார்கள். அனைவரும் சரீரத்தை விட்டு விட்டு திரும்பி வீட்டிற்குச் செல்வார்கள். நீங்கள் சாட்சியாக இருந்து பாருங்கள். தேகதாரிககளின் சம்மந்தங்களில், தேகத்தில் ஏன் பற்று வைக்கிறீர்கள்? விதேகிகளாக(அசரீரி) ஆவதில்லை. பிறகு விகர்மங்களும் வினாசம் ஆவதில்லை. பாபாவை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் குஷியின் அளவு அதிகரிக்கும். நமக்கு சிவபாபா படிப்பிக்கின்றார் பிறகு நாம் தேவி-தேவதைகளாக ஆவோம் என்றால் அளவற்ற குஷி இருக்க வேண்டும் அல்லவா.

 

பாரதவாசிகள் சுகமாக இருந்தபோது மற்ற மனிதர்கள் அனைவரும் நிர்வாண் தாமத்தில், சாந்திதாமத்தில் இருந்தார்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது எவ்வளவு கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார் கள். இப்போது நீங்கள் ஜீவன்முக்தியை அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். மற்றவர்கள் அனைவரும் திரும்பிச் சென்று விடுவார்கள். பழைய உலகம் மாறி புதியதாக ஆக வேண்டும். புதியதாக பாபா தான் மாற்றுவார் அல்லவா. நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது தெய்வீக மலர்களின் நாற்றாகும். நீங்கள் முள்ளிலிருந்து மலர்களாக ஆகின்றீர்கள். தோட்டம் முழுமையாக தயாராகி விடும்போது இந்த முட்கள் நிறைந்த காடு அழிந்து விடும். இதற்கு தீ வைக்கப்பட வேண்டும். பிறகு நாம் மலர்களின் தோட்டத்திற்குச் சென்று விடுவோம். ஏன் நாம் மம்மா பாபாவை பின்பற்றக் கூடாது. தாய்-தந்தையரை பின்பற்ற வேண்டும் என்று பாடப்பட்டுள்ளது. மம்மா-பாபா லஷ்மி - நாராயணனாக ஆவார்கள் என்பதை தெரிந்துள்ளீர்கள். இவர்கள் தான் 84 பிறவிகளை கடந்துள்ளார்கள். உங்களுடையதும் அப்படித் தான். இவர்களுடையது முக்கியமான நடிப்பாகும். பாபா வந்து சூரியவம்ச-சந்திரவம்ச சுயராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார் என்றும் எழுதப்படுகிறது. எவ்வளவு புரிய வைக்கப்படுகிறது இருந்தாலும் கூட தேக- அபிமானம் நீங்குவதில்லை. என்னுடைய கணவன், என்னுடைய குழந்தை........... அட இவையனைத்தும் பழைய உலகத்தின் பழைய சம்மந்தங்கள் அல்லவா. என்னுடையவர் ஒரு சிவபாபா வேறு யாரும் கிடையாது. தேகதாரிகள் அனைவரிடமிருந்தும் பற்று நீங்கி விட வேண்டும் என்பது கடினமாக இருக்கிறது. இவர்களுடைய பற்று நீங்குவது கடினமாக தெரிகிறது என்று பாபா புரிந்து கொள்கிறார். முகத்தைப் பார்க்கும்போதே அப்படி தெரிகிறது. குமாரிகள் நல்ல உதவியாளர்களாக ஆகிறார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்-தந்தையுமான பாப்-தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீக குழந்தைகளுக்குக் ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) தேகம் உட்பட அனைத்திலிருந்தும் பற்றை நீக்கி விதேகி(அசரீரி) ஆவதற்கு முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு நடிகருடைய நடிப்பையும் சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். பந்தனங்களிலிருந்து விடுபட்டவராக ஆக வேண்டும்.

 

2) இந்த பழைய உலகத்திலிருந்து விடுபட்டவராக ஆக வேண்டும். நாம் இப்போது திரும்பிச் செல்ல வேண்டும், இப்போது பழைய உலகத்தின் கடைசி நேரம், நம்முடைய நடிப்பு முடிந்து விட்டது என்று தனக்குத் தானே பேச வேண்டும்.

 

வரதானம்:

டபுள் லைட் (பந்தனம் மற்றும் சுமையில்லா) ஸ்திதியின் மூலம் பறக்கும் கலையின் அனுபவம் செய்யக் கூடிய அனைத்து பந்தனங்களிலிருந்து விடுபட்டவர் ஆகுக.

 

நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் நான் டபுள் லைட் ஸ்திதியில் நிலைத்திருக்கும் பரிஸ்தா என்ற நினைவு இருக்க வேண்டும். பரிஸ்தா என்றால் பறக்கக் கூடியவர்கள், இலகுவான பொருள் சதா மேலே செல்லும், கீழே வராது. அரைக் கல்பம் கீழே இருந்தீர்கள், இப்போது பறக்கும் நேரமாகும், ஆகையால் எந்த சுமையும் அல்லது பந்தனமும் கிடையாது தானே? என்று சோதியுங்கள். தனது பலவீன சன்ஸ்காரம், வீண் எண்ணங்கள், தேக உணர்வு போன்ற பந்தனம் அல்லது சுமை பல காலங்களாக இருந்து கொண்டிருந்தால் கடைசியில் கீழே கொண்டு வந்து விடும். ஆகையால் பந்தனமற்றவர்களாக ஆகி டபுள் லைட் ஸ்திதியில் நிலைத்திருக்கும் பயிற்சி செய்யுங்கள்.

 

சுலோகன்:

யாரிடத்தில் தூய எண்ணங்களின் சக்தி சேமிப்பாகியிருக்கிறதோ அவர்கள் தான் மன சேவை செய்ய முடியும்.

 

ஓம்சாந்தி