13.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! புத்தியோகம் தேகத்துடன் கூட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டு இருக்கும் பொழுதே உங்களுடைய ஒரே ஒருவரின் மீதான அன்பு ஒரு தந்தையுடன் இணைய முடியும்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய உங்களுடைய வேகப் பந்தயம் எது? அந்த வேகப் பந்தயத்தில் முன்னால் செல்வதற்கான ஆதாரம் என்ன?

 

பதில்:

உங்களுடைய வேகப் பந்தயம் "பாஸ் வித் ஆனர்" ஆவதற்கானது ஆகும். இந்த வேகப் பந்தயத்திற்கான ஆதாரம் புத்தியோகம் ஆகும். எந்த அளவிற்கு புத்தியோகம் தந்தையுடன் இருக்குமோ அந்த அளவிற்கு பாவங்கள் நீங்கும் மற்றும் நிலையான முழுமையான சுகம் சாந்தி நிறைந்த 21 பிறவி களுக்கான இராஜ்யம் கிடைக்கும். இதற்காக குழந்தைகளே! உறக்கத்தை வென்றவர் ஆகுங்கள் என்று தந்தை ஆலோசனை தருகிறார். ஒரு மணி, 1/2 மணி என்று நினைவில் இருந்து அப்பியாசத்தை அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள். நினைவின் பதிவு அட்டவணையை வையுங்கள்.

 

பாடல்:

அவர் நம்மை விட்டு பிரியவும் மாட்டார் (உல்ஃபத்) அன்பும் இதயத்திலிருந்து நீங்காது.. .. ..

 

ஓம் சாந்தி.

குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். அன்பிற்கு "உல்ஃபத்" என்று கூறப்படுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய அன்பு எல்லையில்லாத தந்தை சிவனுடன் பிணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பி.கே.அவரை தாதா (பாட்டனார்) என்று கூறுவீர்கள். உலகில் தங்களது பாப் தாதாவின் (தந்தை மற்றும் பாட்டனாரின்) தொழிலை அறியாத எந்த மனிதர்களும் இருக்க மாட்டார்கள். இத்தனை ஏராளமான பேர்கள் நாங்கள் பிரம்மா குமாரர், பிரம்மா குமாரிகள் ஆவோம் என்று கூறக் கூடிய வேறு எந்த ஸ்தாபனமும் இருக்காது. தாய்மார்களோ குமாரிகள் அல்ல. பிறகும் பிரம்மாகுமாரி என்று ஏன் அழைத்துக் கொள்கிறார்கள்? இவர்களோ பிரம்மா முக (வாய் வழி) வம்சாவளி ஆவார்கள். இத்தனை பிரம்மா குமார் குமாரிகள் இருக்கிறார்கள் அனைவருமே பிரஜாபிதா பிரம்மாவின் முக வம்சாவளி ஆவார்கள். அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள் ஆவார்கள். பிரம்மாவின் தொழில் பற்றி கூட அறிந்திருக்க வேண்டும். பிரம்மா யாருடைய குழந்தை ஆவார்? சிவனுடைய குழந்தை. சூட்சும வதனவாசிகளாக இருக்கும் பிரம்மா விஷ்ணு சங்கரன் சிவனின் மூன்று குழந்தைகள் ஆவார்கள். இப்பொழுது பிரஜாபிதா பிரம்மாவோ ஸ்தூல வதனவாசியாக இருக்க வேண்டும். இத்தனை பேர் எல்லோருமே பிரஜாபிதா பிரம்மாவின் முகவம்சாவளி ஆவோம் என்று கூறுகிறார்கள். குக (கர்ப்பம் மூலம் பிறவி எடுத்த) வம்சாவளியாகவோ இருக்க முடியாது. இது ஒன்றும் கர்ப்பத்தின் மூலமாக பிறப்பு அல்ல. பின் இத்தனை பேர் எல்லோரும் பிரம்மா குமார் குமாரிகள் என்று எவ்வாறு அழைக்கப்படுகிறீர்கள் என்று அவர்கள் உங்களிடம் கேட்பது கூட இல்லை. தாய்மார்கள் கூட பிரம்மாகுமாரிகள் ஆவார்கள். எனவே அவசியம் பிரம்மாவின் குழந்தைகள் பிரம்மாவின் முக வம்சாவளி ஆவார்கள். இவர்கள் எல்லோருமே இறைவனின் குழந்தைகள் ஆவார்கள். இறைவன் யார்? அவர் பரமபிதா பரமாத்மா, படைப்பவர் ஆவார். எந்த பொருளின் படைப்பைப் படைக்கிறார்? சொர்க்கத்தின் படைப்பு. எனவே அவசியம் தனது பேரன் பேத்திகளுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி அளித்திருக்கக் கூடும். அவருக்கு இராஜயோகம் கற்பிப்பதற்காக சரீரம் வேண்டும். அப்படியே தலைப்பாகை வைத்து விடுவார்களா என்ன? சிவபாபா வந்து பிரம்மா முக வம்சாவளியினருக்கு மீண்டும் இராஜயோகம் கற்பிக்கிறார். ஏனெனில் மீண்டும் சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்கிறார். இல்லாவிட்டால் பின் இத்தனை பிரம்மா குமார் குமாரிகள் எங்கிருந்து வந்தார்கள்? தைரியத்துடன் இது போன்று யாரும் கேட்பது இல்லை. என்ன ஆச்சரியம்! எத்தனை சென்டர்கள் இருக்கின்றன? நீங்கள் யார், உங்கள் அறிமுகம் கொடுங்கள் என்று கேட்க வேண்டியது தானே? பிரஜாபிதா பிரம்மாவின் குமாரர்கள் மற்றும் குமாரிகள் மேலும் சிவனின் பேரன்கள் பேத்திகள் ஆவார்கள் என்பதோ தெளிவாக உள்ளது. நாம் அவர்களுடைய குழந்தைகள் ஆகி உள்ளோம். நமக்கு அவர் மீது அன்பு உள்ளது. அனைவரிடமிருந்தும் புத்தியோகத்தை அகற்றி என் ஒருவனுடன் புத்தியால் தொடர்பு (நினைவு) கொள்ளுங்கள் என்று சிவபாபாவும் கூறுகிறார். நான் உங்களுக்கு பிரம்மா மூலமாக இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறேன் அல்லவா! மேலும் பிரம்மா குமார் குமாரிகளாகிய நீங்கள் கேட்டு கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? எவ்வளவு சுலபமான நேரான விஷயம் ஆகும். கேட்டுத் தான் பாருங்களேன். எனவே இது பசு கொட்டகை (கௌ சாலா) ஆகும். சாஸ்திரங்களில் பிரம்மாவின் பசு கொட்டகை கூட பாடப்பட்டுள்ளது. உண்மையில் சிவபாபாவின் பசு கொட்டகை ஆகும். சிவபாபா இந்த நந்தி வாகனத்தில் வருகிறார். எனவே பசுக் கொட்டகை என்ற வார்த்தை காரணமாக சாஸ்திரங்களில் பிறகு பசு ஆகியவற்றை காண்பித்துள்ளார்கள். சிவ ஜெயந்தி கொண்டாடப்படுகிறது என்றால் அவசியம் சிவன் வந்திருக்கக் கூடும். அவசியம் யாருடைய உடலாவது வந்திருக்க வேண்டும். இது இறை தந்தையினுடைய பள்ளிக் கூடம் ஆகும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சிவபகவான் கூறுகிறார். ஞானக் கடல் பதீத பாவனர் அவர் ஆவார். கிருஷ்ணரோ சுயம் அவரே தூய்மை யாக இருக்கிறார். அவர் தூய்மையற்ற உடலில் வரவேண்டிய அவசியம் என்ன? தூர தேசத்தில் இருப்பவர் அன்னிய தேசத்தில் வந்தார் என்றும் பாடப்படுகிறது. சரீரமும் மற்றவரினுடையது. எனவே அவசியம் சிவபாபா இவரைப் படைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் மனித சிருஷ்டி படைக்கப்படக் கூடும். எனவே இவர் பாப் தாதா ஆவார் என்பது நிரூபணம் ஆகியது. பிரஜாபிதா பிரம்மா ஆதி தேவன் மகாவீர் ஆவார். ஏனெனில் மாயை மீது வெற்றி அடைகிறார். ஜகதாம்பாவும் பாடப் பட்டுள்ளார். ஸ்ரீலட்சுமியும் பாடப் பட்டுள்ளார். ஜகதாம்பா பிரம்மாவின் மகள் சரஸ்வதி ஆவார் என்பது உலகிற்குத் தெரியாது. அவரும் பிரம்மா குமாரி ஆவார். இவரும் பிரம்மா குமாரி ஆவார். சிவபாபா பிரம்மா வாய் மூலமாக இவரை தன்னுடையவராக ஆக்கி உள்ளார். இப்பொழுது இந்த அனைவருடைய புத்தி யோகம் (அன்பு அவருடன் உள்ளது. பரமாத்மாவுடன் அன்பு கொள்ளுங்கள் என்றும் கூறப்படுகிறது. மற்ற அனைவரிடமிருந்தும் புத்தியோகத்தைத் துண்டித்து ஒருவருடன் இணையுங்கள். அந்த ஒருவர் தான் பகவான் ஆவார். ஆனால் அறியாமால் உள்ளார்கள். அறிவதும் எப்படி? தந்தை வந்து அறிமுகம் அளிக்கும் பொழுது தான் நிச்சயம் ஏற்படும். தற்சமயத்திலோ ஆத்மாவே பரமாத்மா.. என்று கற்பித்து விட்டுள்ளார்கள். அதனால் சம்மந்தமே அறுபட்டு விட்டுள்ளது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் உண்மையிலும் உண்மையான சத்திய நாராயணரின் கதை கேட்கிறீர்கள். அவர் சுகதேவன் ஆவார் மற்றும் நீங்கள் வியாசர் ஆவீர்கள். கீதையிலும் வியாசர் பெயர் உள்ளது அல்லவா? அவரோ மனிதர் ஆவார். உண்மையான கண்டத்தில் பொய்யான பெயர் இருப்பதில்லை. நீங்கள் பாட்டனாரிடமிருந்து ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த பாபாவின் சொத்து அல்ல. சொர்க்கத்தின் படைப்பு கர்த்தா சிவபாபா ஆவாரேயன்றி பிரம்மா அல்ல. பிரம்மா மனித சிருஷ்டியின் படைப்பு கர்த்தா ஆவார். பிரம்மா கமல வாய் மூலமாக பிராமண வர்ணம் (குலம்) படைக்கப்பட்டது. நீங்கள் சிவனின் பேரர்கள் அதாவது ஈசுவரிய சம்பிரதாயத்தினர். அவர்களை தன்னுடைய வராக ஆக்கி உள்ளார். குருவின் பேரன்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் அல்லவா? இப்பொழுது நீங்கள் சத்குருவின் பேரன்கள் மற்றும் பேத்திகள் ஆவீர்கள். அவர்களோ பேரன்கள் மட்டுமே ஆவார்கள். அதாவது ஆண்கள் ஆவார்கள். பேத்திகள் இல்லை. சத்குருவோ ஒரு சிவபாபா ஆவார். சத்குரு இன்றி கோரமான இருள் என்று பாடப்படுகிறது. உங்களுடைய பிரம்மா குமார் குமாரி என்ற பெயர் மிகவும் அதிசயமானது. தந்தை எவ்வளவு புரிய வைக்கிறார். ஆனால் அநேக குழந்தைகள் புரிந்து கொள்வதில்லை. எல்லையில்லாத தந்தையாகிய என்னை அறிந்து கொள்வதால் நீங்கள் எல்லாமே தெரிந்து கொண்டு விடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார். சத்யுக திரேதாவில் சூரிய வம்ச சந்திர வம்ச இராஜ்யம் இருந்தது. பிறகு இராவண இராஜ்யத்தில் பிரம்மாவின் இரவு ஆரம்பமாகிறது. நடைமுறையில் நீங்கள் பிரம்மா குமார் குமாரிகள் ஆவீர்கள். சத்யுகத்திற்கு தான் சுவர்க்கம் என்று கூறப்படுகிறது. அங்கு நெய்யாறு பாலாறு ஓடுகிறது. இங்கோ நெய் கிடைப்பதில்லை. குழந்தைகளே இந்த பழைய உலகம் இப்பொழுது அழியப்போகிறது என்று தந்தை கூறுகிறார். ஒரு நாள் இந்த மூங்கில் காட்டிற்கு நெருப்பு பிடிக்கும். எல்லாமே அழிந்து போய் விடும். பிறகு என்னிடமிருந்து ஆஸ்தியோ அடைய முடியாமல் போய் விடும்.

 

நான் வருகிறேன் என்றால் அவசியம் சரீரத்தைக் கடனாக எடுக்க வேண்டி வரும். வீடோ வேண்டும் அல்லவா? பாபா எவ்வளவு நன்றாக சுவாரசியமான முறையில் புரிய வைக்கிறார். நீங்கள் இப்பொழுது என் மூலமாக அனைத்தையும் அறிந்து விட்டுள்ளீர்கள். இந்த சிருஷ்டி சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்பது யாருக்குமே தெரிய வில்லை. 84 பிறவிகள் யார் எடுக்கிறார்கள்? எல்லோருமோ எடுக்க மாட்டார்கள். அவசியம் முதலில் வரக்கூடிய தேவி தேவதைகள் தான் 84 பிறவிகள் எடுப்பார்கள். இப்பொழுது அவர்களுக்கு மீண்டும் நான் இராஜயோகம் கற்பிக்கிறேன். பாரதத்தை மீண்டும் நரகத்திலிருந்து சொர்க்கமாக ஆக்குவதற்காக நான் வருகிறேன். இவர்களை நான் லிபரேட் செய்கிறேன் (விடுவிக்கிறேன்). பிறகு வழிகாட்டி ஆகி திரும்பவும் அழைத்துச் செல்கிறேன். என்னை ஜோதி சொரூபம் என்றும் கூறுகிறார்கள். ஜோதி சொரூபமானவர் கூட வர வேண்டி உள்ளது. குழந்தைகளே நான் உங்களது தந்தை ஆவேன் என்று சுயம் பகவான் கூறுகிறார். என்னுடைய ஜோதி ஒரு பொழுதும் அணைந்து போவதில்லை. அவர் நட்சத்திரமாக இருக்கிறார். புருவ மத்தியில் இருக்கிறார். மற்ற அனைத்து ஆத்மாக்களும் ஒரு சரீரம் விட்டு மற்றொன்று எடுக்கிறார்கள். எனவே ஆத்மா என்ற நட்சத்திரத்தில் 84 பிறவிகளின் அழியாத பார்ட் (பாகம்) பொருந்தி உள்ளது. 84 பிறவிகள் அனுபவித்து பிறகு முதல் நம்பரிலிருந்து ஆரம்பிக்கிறார்கள். ராஜா ராணி எவ்வாறோ அவ்வாறே பிரஜைகள். இல்லையென்றால் ஆத்மாவில் இவ்வளவு பார்ட் எங்கிருந்து நிரம்பி உள்ளது என்று கூறுங்கள் பார்க்கலாம்? இது மிகவும் ஆழமான அதிசயமான விஷயம் என்று கூறப்படுகிறது. முழு மனித சிருஷ்டியின் ஆத்மாக்களின் பார்ட் பொருந்தி உள்ளது. எனக்குள் இந்த பார்ட் உள்ளது. அதுவும் அழிவற்றது ஆகும் என்று கூறுகிறார். அதில் எதுவுமே மாற்றங்கள் ஏற்பட முடியாது. எனது நடிப்பின் பாகத்தை பிரம்மா குமார் குமாரிகள் அறிந்துள்ளார்கள். நடிக்கும் பாகங்களுக்கு வாழ்க்கை சரித்திரம் என்று கூறப்படுகிறது. பிரஜாபிதா பிரம்மா இருக்கிறார் என்றால் அவசியம் ஜகதம்பா கூட இருப்பார். அவரும் சூத்திரரிலிருந்து பிராமணர் ஆகியுள்ளார். எனவே நமது அன்பு தந்தையிடம் உள்ளது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள் மற்றும் நமக்கு ஒருவரிடம் தான் அன்பு உள்ளது. ஒரே ஒருவரிடம் மட்டுமே அன்பு செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதில்லை. மாயை என்ற பூனை கூட குறைந்தது அல்ல. அநேக பெண்கள் தங்களுக்குள் பொறாமை கொள்கிறார்கள். நாம் கூட சிவபாபாவிடம் அன்பு கொள்கிறோம். அப்பொழுது மாயைக்கு பொறாமை ஏற்பட்டு விடுகிறது. எனவே புயல்கள் எடுத்து வருகிறது. நீங்கள் சொக்கட்டான் ஆட்டத்தில் இரட்டை காய் போடலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் மாயை என்ற பூனை மூன்று காய் போட்டு விடுகிறது. நீங்கள் இல்லற விவகாரங்களில் இருக்கிறீர்கள். உங்கள் புத்தி யோகத்தை மட்டும் தேகம், தேகத்தின் அனைத்து சம்பந்தங்களிலிருந்தும் அகற்றி என்னை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார். நான் உங்களுடைய மிகவும் அன்பிற்குரிய தந்தை ஆவேன். எனது ஸ்ரீமத் படி நடந்தீர்கள் என்றால் நான் உங்களை சொர்க்கத்திற்கு அதிபதி ஆக்குவேன். பிரம்மாவின் வழி கூட பிரசித்தமானது ஆகும். எனவே அவசியம் பிரம்மாவின் குழந்தைகளினுடையது கூட பிரசித்தமாகத் தான் இருக்கும். அவர்களும் இதே போல ஆலோசனை அளித்துக் கொண்டு இருப்பார்கள். இந்த முழு சிருஷ்டி சக்கரத்தின் சமாசாரமோ தந்தை தான் கூறுகிறார். குழந்தைகள் ஆகியோரை தாராளமாகப் பராமரியுங்கள். ஆனால் புத்தியோகம் ஒரு தந்தையிடம் மட்டுமே இருக்கட்டும். இதனை சுடுகாடு என்று நினையுங்கள். நாங்கள் (பரிஸ்தான்) சொர்க்கத்திற்குச் செல்கிறோம். எவ்வளவு சகஜமான விஷயம் ஆகும்.

 

எந்த ஒரு சாகாரி (சரீரம்) அல்லது ஆகாரி (சூட்சும சரீர) தேவதையிடமும் புத்தி யோகத்தை ஈடுபடுத்தாதீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். தந்தை தரகராக ஆகிக் கூறுகிறார். ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து வெகு காலமாக பிரிந்திருந்தனர் என்று பாடுகிறார்கள் அல்லவா? இப்பொழுது வெகு காலமாக பிரிந்திருப்பவர்களோ தேவி தேவதை ஆவார்கள். அவர்களே முதன் முதலில் பாகத்தை நடிக்க வருகிறார்கள். சத்குரு தரகராகக் கிடைக்கும் பொழுது அழகான திருவிழாவாகச் (சந்திப்பு) செய்து விட்டார். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தரகர் ரூபத்தில் கூறுகிறார் மற்றும் நாங்கள் காமச் சிதையிலிருந்து இறங்கி ஞானச் சிதையில் அமருவோம் என்று உறுதி எடுங்கள் என்று கூறுகிறார். பிறகு நீங்கள் இராஜ்ய பாக்கியத்தை பெற்றுக் கொண்டு விடுவீர்கள். நாம் எவ்வளவு நேரம் இப்பேர்ப்பட்ட மிகவும் அன்பிற்குரிய தந்தையை நினைவு செய்கிறோம் என்று உங்களிடம் ரிகார்டு-பதிவேடு வையுங்கள். ஒரு கன்னிகை இரவு பகலாக கணவனை நினைவு செய்கிறார் அல்லவா? ஹே, உறக்கத்தை வெல்லும் குழந்தைகளே! இப்பொழுது (புருஷார்த்தம்) முயற்சி செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஒரு மணி 1/2 மணி என்று .. .. .. ஆரம்பம் செய்யுங்கள். பிறகு மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள். என்னிடம் யோகம் (நினைவு தொடர்பு) கொண்டீர்கள் என்றால் பாஸ் வித் ஆனர் (தகுதியான தேர்ச்சி) ஆகி விடுவீர்கள். இது புத்தியின் பந்தயம் ஆகும். நேரம் பிடிக்கும். புத்தியோகத்தினால் தான் பாவங்கள் நீங்கும். பின் நீங்கள் நிலையான அசைக்க முடியாத சுகம் சாந்தி நிறைந்த 21 பிறவிகளின் ஆட்சி புரிவீர்கள். முந்தைய கல்பத்திலும் செய்திருந்தீர்கள். இப்பொழுது மீண்டும் இராஜ்ய பாக்கியம் பெறுங்கள். கல்ப கல்பமாக நாம் தான் சொர்க்கத்தை அமைக்கிறோம். ஆட்சி புரிகிறோம். பிறகு நம்மை தான் மாயை நரகவாசியாக ஆக்குகிறான். இப்பொழுது நாம் இராம (ஈஸ்வர) சம்பிரதாயத்தினர் ஆவோம். நமக்கு அவரிடம் அன்பு உள்ளது. தந்தை நமக்கு தனது அறிமுகத்தை அளித்துள்ளார். தந்தை சொர்க்கத்தின் படைப்புகர்த்தா ஆவார். நாம் அவருடைய குழந்தைகள் ஆவோம். பிறகு நாம் நரகத்தில் ஏன் இருக்கிறோம்? அவசியம் எப்பொழுதோ சொர்க்கத்தில் இருந்திருந்தோம். தந்தையோ சொர்க்கத்தைப் படைத்துள்ளார். பிரம்மா குமார் குமாரிகள் அனைவருக்கும் உயிர்த் தானம் அளிப்பவர்கள் ஆவார்கள். அவர்களுடைய உயிர்களை ஒரு பொழுதும் காலன் வந்து சட்டத்திற்குப் புறம்பாக அகாலமாக கூட்டிச் செல்ல மாட்டான். அங்கு அகால மரணம் ஆவது என்பது முடியாத காரியம். அங்கு அழுகை கூட இருக்காது. ஸ்ரீகிருஷ்ணர் எப்படி ஜன்மம் எடுக்கிறார் என்பதை நீங்கள் சாட்சாத்காரத்தில் கூட பார்த்திருக்கிறீர்கள். முற்றிலுமே மின்னல் போன்ற பிரகாசம் ஏற்பட்டு விடும். சத்யுத்தின் முதல் இளவரசர் ஆவார் அல்லவா? கிருஷ்ணர் முதல் நம்பர் சதோ பிரதானமானவர் ஆவார். பிறகு சதோ ரஜோ தமோவில் வருகிறார். தமோ நிலையில் பட்டுப் போன சரீரம் ஆகி விடும் பொழுது ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்று எடுத்து விடுகிறார்கள். இந்த அப்பியாசம் இங்கு செய்யப்படுகிறது. பாபா இப்பொழுது நாங்கள் உங்களிடம் வருகிறோம். பிறகு அங்கிருந்து நாங்கள் சொர்க்கத்திற்குச் சென்று புதிய சரீரம் எடுப்போம். இப்பொழுதோ பாபாவிடம் திரும்பிச் செல்ல வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. அகால மரணத்திலிருந்து தப்பித்து இருப்பதற்காக அனைவருக்கும் உயிர் தானம் அளிக்கும் சேவை செய்ய வேண்டும். இராவண சம்பிரதாயத்தினரை இராம (ஈஸ்வரன்) சம்பிரதாயத்தினராக ஆக்க வேண்டும்.

 

2. இதயத்தின் அன்பு ஒரு தந்தையிடம் வைக்க வேண்டும். புத்தி யோகத்தை அலைய விடக் கூடாது. உறக்கத்தை வென்று நினைவை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும்.

 

வரதானம்:

சமயத்திற்குத் தகுந்தாற்போல் ஞானம் - யோகம் நிறைந்தவராக அதாவது ஞானி மற்றும் யோகி ஆத்மா ஆகக் கூடிய சுயக் கட்டுப்பாடு மிக்கவர் ஆகுக.

 

சுயக் கட்டுப்பாடு நிறைந்தவர் (தன்னைத் தான் ஆளக் கூடியவர்) எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஞானத்தின் ரூபமாகவும், வேண்டிய நேரத்தில் யோகத்தின் வடிவமாகவும் ஆகக் கூடியவராக இருப்பார். இரண்டு நிலைகளையும் ஒரு வினாடியில் உருவாக்க முடியும். யோக நிலையில் இருக்க விரும்பும் போது ஞானத்தின் விசயங்கள் நினைவில் வந்தபடியே இருக்குமாறு ஆகி விடக் கூடாது. வினாடிக்கும் குறைவான நேரத்தில் முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும். சக்தி வாய்ந்த பிரேக்-கின் வேலை என்னவென்றால் எந்த இடத்தில் பிரேக் பிடித்தாலும் அதே இடத்தில் அப்படியே நின்று போக வேண்டும். அதற்காக எந்த நேரத்தில் எந்த விதியின் மூலம் மனம் - புத்தியை எங்கே நிலை நிறுத்த விரும்புகின்றீர்களோ அங்கே நிலைத்து விடும் படியாக பயிற்சி செய்யுங்கள். அப்படிப்பட்ட கட்டுப்படுத்தும் மற்றும் ஆளுமை நிறைந்த சக்தி இருக்க வேண்டும்.

 

சுலோகன்:

புயலாக வீசக் கூடியவருக்கும் கூட அமைதியின் பரிசைக் கொடுப்பவரே அமைதியின் தூதர் ஆவார்.

 

ஓம்சாந்தி