15.11.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஸ்ரீமத்தை சரியான முறையில் தாரணை செய்து தந்தையின் பெயரை புகழடையச் செய்யும் அளவிற்கு உங்களுடைய புத்தி அல்லது சிந்தனைகளை சுத்தமானதாக தூய்மையானதாக ஆக்குங்கள்.

 

கேள்வி:

குழந்தைகளின் எந்த ஒரு நிலை தந்தையை வெளிப்படுத்தும்?

 

பதில்:

குழந்தைகளின் நிலை நிரந்தரமாக மகிழ்ச்சியான முகத்துடன் ஆடாது அசையாது ஸ்திரமானதாக மற்றும் போதையுடன் கூடியதாக அமையும் பொழுதே தந்தையை வெளிப்படுத்த முடியும். அப்பேர்ப்பட்ட ஒரே இரசனையுடன் கூடிய நிலை கொண்ட புத்திசாலி குழந்தைகளே சரியான முறையில் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை கொடுக்க முடியும்.

 

பாடல்:

இறந்தாலும் உன் மடியில்...........

 

ஓம் சாந்தி.

குழந்தைகள் பாடல் கேட்டீர்கள். உயிருடன் இருந்தே இறப்பதற்காக உனது வாசலுக்கு வந்துள்ளோம் என்று கூறுகிறார்கள். யாருடைய வாசலுக்கு? ஒரு வேளை கீதையின் பகவான் கிருஷ்ணர் என்று கூறி இருந்தால் இந்த எல்லா விஷயங்களும் இருக்க முடியாது என்ற இதே விஷயம் தான் பிறகும் வெளி வருகிறது. கிருஷ்ணர் கூட இங்கு இருக்க முடியாது. அவேரா சத்யுகத்தின் இளவரசர் ஆவார். கீதையை ஒன்றும் கிருஷ்ணர் கூறவில்லை. கீதையோ பரமபிதா தான் கூறினார். எல்லாமே இந்த ஒரே விஷயத்தை பொருத்துள்ளது. பக்தியில் நீங்கள் இவ்வளவு உழைப்பு செய்தபடியே வந்துள்ளீர்கள். அதுவோ அவசியம் இல்லை. இதுவோ ஒரு செகண்டின் விஷயம் ஆகும், இந்த ஒரே ஒரு விஷயத்தை நிரூபிப்பதற்கு மட்டுமே கூட தந்தை எவ்வளவு உழைக்க வேண்டி உள்ளது! எவ்வளவு ஞானம் அளிக்க வேண்டி இருக்கிறது? பகவான் அளித்த பழைமையான ஞானம் தான் உண்மையான ஞானம் ஆகும். முழு விஷயமே கீதையைப் பொருத்துள்ளது. பரமபிதா பரமாத்மா தான் வந்து தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனைக்காக சகஜ இராஜயோகம் மற்றும் ஞானத்தைக் கற்பித்துள்ளார். அது இப்பொழுது பெரும்பாலும் மறைந்து விட்டுள்ளது. மனிதர்களோ கிருஷ்ணர் எப்பொழுதாவது வந்து கீதையை கூறுவார் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஞானக்கடலான பரலோக பரமபிதா பரமாத்மா வந்து கீதையை கூறினார் என்பதை நீங்கள் இப்பொழுது காலச் சக்கரத்தின் படம் மூலமாக நல்ல முறையில் நிரூபிக்க வேண்டும். கிருஷ்ணரின் மகிமை தனியானது. பரமபிதா பரமாத்மாவின் மகிமை தனியானது. அவர் சத்யுகத்தின் இளவரசர் ஆவார். அவர் சகஜ இராயோகத்தினால் இராஜ்ய பாக்கியத்தை அடைந்துள்ளார். படிக்கும் பொழுது பெயர், ரூபம் வேறானது மற்றும் இராஜ்யம் அடையும் பொழுது பெயர் ரூபம் வேறு என்பதை நிரூபித்துக் கூற வேண்டும். கிருஷ்ணரை ஒருபொழுதும் பதீத பாவனர் என்று கூற மாட்டார்கள். ஒரு தந்தை மட்டுமே பதீத பாவனர் ஆவார். இப்பொழுது மீண்டும் ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா பதீத பாவனர் மூலமாக இராஜயோகம் கற்றுக் கொண்டு வருங்கால பாவன உலகத்தின் இளவரசர் ஆகிக் கொண்டிருக்கிறார். இதை நிரூபித்துக் கூற வேண்டி உள்ளது. முதல் எண்ணில் இருப்பது கீதையே ஆகும். அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாக இருப்பது ஸ்ரீமத் பகவத் கீதா மாதா. இப்பொழுது மாதாவிற்கு யார் ஜன்மம் கொடுத்தார்? தந்தை தான் மாதாவை சுவீகாரம் செய்கிறார் அல்லவா? கீதையைக் கூறியது யார்? கிறிஸ்து பைபிளை சுவீகாரம் செய்தார் என்று கூறமாட்டார்கள். கிறிஸ்து அளித்த அறிவுரைகளை பைபிள் என்று அமைத்து படிக்கிறார்கள். இப்பொழுது கீதையின் அறிவுரைகளை அளித்தது யார்? அந்த அறிவுரைகளைத் தான் பின்னால் புத்தகமாக ஆக்கி படித்துக் கொண்டே இருக்கிறார்கள்? இது யாருக்கும் தெரியாது. மற்ற எல்லா சாஸ்திரங்கள் பற்றியோ அனைவருக்கும் தெரியும். இந்த சகஜ இராஜயோகத்தின் கல்வியை யார் அளித்தார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். உலகமோ நாளுக்கு நாள் தமோபிதானமாக ஆகிக் கொண்டே போகிறது. இவை எல்லாமே தூய்மையான புத்தியில் தான் பதிய முடியும். யார் ஸ்ரீமத்படி நடப்பதில்லையோ அவர்களுக்கு தாரணை ஆக முடியாது. உன்னால் முற்றிலும் புரிய வைக்க முடியாது என்று ஸ்ரீமத் கூறும். தன்னை ஞானி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். கீதையின் பகவான் பரமபிதா பரமாத்மா ஆவார். அவரே பதீத பாவனர் என்ற முக்கியமான விஷயத்தை முதல் நிரூபிக்க வேண்டும். மனிதர்களோ சர்வ வியாபி என்று கூறி விடுகிறார்கள் அல்லது பிரம்ம தத்துவம் என்று கூறி விடுகிறார்கள் அல்லது கடல் என்று கூறி விடுகிறார்கள். அர்த்தம் இல்லாமல் எது தோன்றுகிறதோ அதைக் கூறி விடுகிறார்கள். முழு தவறுமே கீதையிருந்து வெளிப்பட்டுள்ளது - ஏனெனில் கீதையின் பகவானை ஸ்ரீகிருஷ்ணர் என்று கூறி விட்டுள்ளார்கள். எனவே புரிய வைப்பதற்காக கீதையை எடுக்க வேண்டி உள்ளது, கீதையின் பகவான் கிருஷ்ணர் அல்ல என்பதை வாரணாசியில் நிரூபித்து கூறுங்க்ள் என்று வாரணாசியில் இருக்கும் குப்தாஜீ அவர்களுக்கும் கூறி கொண்டிருந்தார். இப்பொழுது மாநாடோ நடக்கிறது. அமைதி ஏற்பட்டு விடுவதற்கு என்ன உபாயம் செய்யலாம் என்று எல்லா பக்திமான் மனிதர்களும் கூறுகிறார்கள். இப்பொழுது அமைதியை நிலை நாட்டுவது பதீத மனிதர்களின் கையிலோ கிடையாது. பதீத பாவனரே வாருங்கள் என்று கூறவும் செய்கிறார்கள். பிறகும் பதீதர்கள் (தூய்மையற்றவர்கள்) எவ்வாறு அமைதியை நிலைநாட்ட முடியும்? அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பதீத நிலையிருந்து பாவனமாக ஆக்கும் தநதையை அறியாமலே உள்ளார்கள். பாரதம் பாவனமாக இருந்தது. ,ப்பொழுது பதீதமாக உள்ளது. இப்பொழுது பதீத பாவனர் யார்? இது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. இரகுபதி இராகவ... என்று கூறி விடுகிறார்கள். இப்பொழுது அந்த இராமரோ கிடையாது. பொய்யான அழைப்பு விடுவிக்கிறார்கள். ஒன்றுமே அறியாமல் உள்ளார்கள். இப்பொழுது இதை யார் போய்க் கூற வேண்டும்? மிகவும் நல்ல குழந்தைகள் வேண்டும். புரிய வைப்பதற்கான மிகுந்த யுக்தி வேண்டும். கீதை பகவான் தான் இயற்றினார் என்று நிரூபணம் ஆகும் வகையில் பெரிய காலச் சக்கரம் கூட அமைக்கப்பட்டுள்ளது. அவர்களோ யாராக இருந்தால் என்ன? எல்லோருமே பகவான் ஆவார்கள் என்று கூறி விடுகிறார்கள். நீங்கள் அறிவற்றவர்கள் என்று தந்தை கூறுகிறார். நான் வந்து பாவன இராஜ்யத்தை ஸ்தாபனை செய்தேன். அதற்கு பதிலாக பின் ஸ்ரீகிருஷ்ணர் பெயரைப் போட்டு விட்டார்கள். பதீதர்களைத் தான் பாவனமாக ஆக்கி முதல் இளவரசராக ஆக்குகிறேன். பகவான் கூறுகிறார் - நான் கிருஷ்ணரின் ஆத்மாவை தத்து எடுத்து பிரம்மாவாக ஆக்கி அவர் மூலமாக ஞானம் அளிக்கிறேன். அவர் பின்னர் இந்த சகஜ இராஜயோகத்தினால் சத்யுகத்தின் முதல் இளவரசராக ஆகி விடுகிறார். இந்த விளக்கவுரை வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. ஸ்ரீமத் பகவத் கீதை அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாய் தந்தையாக உள்ளது என்ற விஷயத்தில் ஏற்பட்டுள்ள இந்த தவற்றினை நிரூபித்துக் கூற வேண்டும். கீதையின் படைப்புகர்த்தா யார்? எப்படி கிறிஸ்து பைபிளுக்கு ஜன்மம் கொடுத்தார். அது கிறிஸ்துவ தர்மத்தின் சாஸ்திரம் ஆகும். நல்லது. பைபிளின் தந்தை யார்? கிறிஸ்து. அவரை தாய் தந்தை என்று கூற மாட்டார்கள். அங்கு தாய் என்ற விஷயமே கிடையாது. இங்கோ தாய் தந்தை இருக்கிறார்கள். கிறித்துவர்கள் கிருஷ்ணரின் தர்மத்தின் மீது பொறாமைப்பட்டுள்ளார்கள். அவர்களோ கிறிஸ்துவை ஏற்பவர்கள் ஆவார்கள். எப்படி புத்தர் தர்ம ஸ்தாபனை செய்தார். அதனால் பௌத்தியர்களின் சாஸ்திரம் கூட உள்ளது. இப்பொழுது கீதையைக் கூறியது யார்? அதன் மூலம் எந்த தர்மம் ஸ்தாபனை ஆகியது என்பது யாருக்கும் தெரியாது. பதீத பாவன பரமபிதா பரமாத்மா ஞானம் அளித்தார் என்று புரிந்து கொள்ளும் வகையில் அப்பேர்ப்பட்ட காலச் சக்கரத்தை அமைத்துள்ளோம். இராதை கிருஷ்ணரோ சத்யுகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கே ஞானம் கொடுத்துக் கொண்டு இருந்திருக்க மாட்டார்கள். ஞானம் அளிப்பவர் இன்னொருவர் வேண்டும். யாரோ ஒருவர் அவர்களை தேர்ச்சி பெறுமாறு செய்திருக்க வேண்டும். இராஜ்யத்தை பிராப்தி செய்விப்பதற்கான ஞானத்தை யார் அளித்தார்? தானாகவே ஒன்றும் யாருடைய அதிர்ஷ்டமும் அமைவதில்லை. பாக்கியத்தை அமைத்துக் கொடுப்பதற்கு ஒன்று தந்தை வேண்டும் அல்லது ஆசிரியர் வேண்டும். குரு கதி அளிப்பவர் என்று கூறுகிறார்கள். ஆனால் கதி, சத்கதி என்பதன் பொருள் கூட புரிந்து கொள்வதில்லை. அவர்களோ பக்தி மார்க்கத்தில் மிகப் பெரிய பெரிய கடைகள் திறந்து விட்டு அமர்ந்துள்ளார்கள். உண்மையான ஞான மார்க்கத்தின் கடை இது ஒன்றே ஒன்று தான் மற்றது அனைத்தும் பக்தி மார்க்கத்தின் கடைகள் ஆகும். இந்த வேத சாஸ்திரங்கள் ஆகிய அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாமான்கள் ஆகும் என்று தந்தை கூறுகிறார்.இந்த ஜபம், தவம், வேத சாஸ்திரங்கள் ஆகியவற்றைப் பயிலுவதால் நான் கிடைப்பதில்லை. நானோ குழந்தைகளுக்கு ஞானம் அளித்து பாவனமாக ஆக்குகிறேன். முழு சிருஷ்டிக்கு சத்கதி அளிக்கும் வள்ளல் ஆவேன். கதி வழியாக சென்று பிறகு சத்கதியில் வர வேண்டும். எல்லோருமோ சத்கதியில் வரமாட்டார்கள். இந்த நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய கல்பத்தில் உங்களுக்கு என்ன கற்பித்திருந்தாரோ, என்ன படங்களை உருவாக்கி இருந்தார்களோ அவற்றையே இப்பொழுதும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 

3 தர்மங்களின் கால்களில் சிருஷ்டி நின்றுள்ளது என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஒரு தேவதா தர்மத்தின் கால் உடைந்து விட்டுள்ளது. எனவே ஆடிக் கொண்டு இருக்கிறது. முதல் ஒரு தர்மம் இருக்கும். அப்பொழுது அது அத்வைத இராஜ்யம் என்று கூறப்படுகிறது. பிறகு அந்த ஒரு கால் குறைந்து 3 கால்கள் வெளிப்படுகின்றது. அதில் கொஞ்சம் கூட சக்தி இருப்பதில்லை. தங்களுக்குள்ளேயே சண்டை சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது. தலைவனை அறியாமலே உள்ளார்கள். அநாதைகளாக ஆகி விட்டுள்ளார்கள். புரிய வைப்பதற்கான யுக்தி மிகவும் வேண்டும். கீதையின் பகவான் கிருஷ்ணர் அல்ல. பரமபிதா பரமாத்மா ஆவார் என்ற விஷயத்தை கண்காட்சியில் கூட புரிய வைக்க வேண்டும். அவருடைய ஜன்ம பூமி பாரதம் ஆகும். கிருஷ்ணரோ சாகாரமானவர். அவர் நிராகாரமானவர். அவருடைய மகிமை முற்றிலும் தனிப்பட்டது. கீதையைக் கூறியது யார் என்பது நிரூபிக்கப்பட்டு விடும் வகையில் அப்பேர்ப்பட்ட யுக்தியுடன் கார்ட்டூன் அனைக்க வேண்டும். குருடர்களுக்கு முன்னால் பெரிய கண்ணாடி வைக்க வேண்டும். இதுவே குருடர்களுக்கு முன்னால் கண்ணாடி ஆகும். அளவுக்கு அதிகமாக எதிலும் போகக் கூடாது இது கடுமையான தவறு ஆகும். பரமபிதா பரமாத்மாவின் மகிமை தனி. அதற்கு பதிலாக கிருஷ்ணருக்கு மகிமை அளித்து விட்டுள்ளார்கள். இலட்சுமி நாராயணரினுடைய படத்திற்குக் கீழே இராதை கிருஷ்ணர் இருக்கிறார்கள். அவர்களே பிறகு இலட்சுமி நாராயணர் ஆகிறார்கள். இலட்சுமி நாராயணர் சத்யுகத்தில். இராமர் சீதை, திரேதாவில். முதல் நம்பர் குழந்தை ஸ்ரீகிருஷ்ணர் ஆவார். அவரை பிறகு துவாபரத்தில் எடுத்துச் சென்று விட்டுள்ளார்கள். இவை எல்லாமே பக்தி மார்க்கத்தில் பொருந்தி உள்ளது. வெளி நாட்டினருக்கு இந்த விஷயங்கள் பற்றி என்ன தெரியும்? நாடகப்படி இந்த ஞானம் யாரிடமுமே கிடையாது. ஞானம் என்றால் பகல். பக்தி என்றால் இரவு என்று கூறவும் செய்கிறார்கள். பிரம்மாவின் பகல். பிரம்மாவின் இரவு. சத்யுகத்தை ஸ்தாபனை செய்பவர் யார்? பிரம்மா எங்கிருந்து வந்தார்? சூட்சும வதனத்தில் எங்கிருந்து வந்தனர்? பரமபிதா பரமாத்மா தான் சூட்சும சிருஷ்டியைப் படைக்கிறார். அங்கு பிரம்மாவைக் காண்பிக்கிறார்கள். ஆனால் அங்கோ பிரஜா பிதா பிரம்மா இருப்பதில்லை. நிச்சயமாக பிரஜாபிதா பிரம்மா வேறு ஆவார். அவர் எங்கிருந்து வந்தார்? இந்த விஷயங்களை யாரும் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளார்கள். கிருஷ்ணருடைய கடைசிப் பிறவியில் அவரை பாமாத்மா தனது இரதமாக ஆக்கியுள்ளார் என்பது யாருடைய புத்தியிலும் இல்லை.

 

இது மிக பெரிய வகுப்பு ஆகும். இந்த மாணவர் எப்படி என்பதை ஆசிரியரோ புரிந்திருப்பார் அல்லவா? பின் தந்தை புரிந்திருக்க மாட்டாரா என்ன? இது எல்லையில்லாத தந்தையின் வகுப்பு ஆகும். இங்கு இருக்கும் விஷயங்களே தனிப்பட்டது ஆகும். சாஸ்திரங்களிலோ பிரளயம் ஆகியவற்றைக் காண்பித்து எவ்வளவு குழப்பங்கள் விளைவித்து விட்டுள்ளார்கள். எவ்வளவு அகங்காரம் உள்ளது! இராமாயணம், கீதை ஆகியவற்றை எப்படி அமர்ந்து கூறுகிறார்கள். கிருஷ்ணரோ கீதையைக் கூறவில்லை. அவரோ கீதையின் ஞானத்தைக் கேட்டு இராஜ்ய பதவியை அடைந்துள்ளார். கீதையின் பகவான் இவர், அவருடைய குணங்கள் இவையாகும். கிருஷ்ணரினுடைய குணங்கள் இவையாகும் என்பதை நிரூபித்துப் புரிய வைக்கிறோம். இந்த தவற்றின் காரணமாகத் தான் பாரதம் சோழி போல ஆகியுள்ளது. நீங்கள் மாதா நரகத்தின் வாசல் என்று கூறுகிறீர்கள். ஆனால் பரமாத்மாவோ ஞான கலசத்தை தாய்மார்கள் மீது வைத்துள்ளார் என்பதை தாய்மார்களாகிய நீங்கள் அவர்களுக்கு கூறலாம். தாய்மார்கள் தான் சொர்க்க வாசல் ஆகிறார்கள். நீங்கள் நிந்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்.... ஆனால் கூறுபவர் மிகவும் புத்திசாயானவராக இருக்க வேண்டும். பாயிண்ட்ஸ் எல்லாம் குறித்து வைத்து புரிய வைக்க வேண்டும். பக்தி மார்க்கம் உண்மையில் இல்லறத்தின் இருப்பவர்களுக்காக உள்ளது. இது இல்லற மார்க்கத்திற்கான சகஜ இராஜயோகம் ஆகும். அதை நிரூபித்துப் புரிய வைப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். குழந்தைகள் அழகாக வெளிப்படுத்த வேண்டும். எப்பொழுதும் மகிழ்ச்சியான முகத்துடனும் ஆடாது ஸ்திரமாக, போதையுடனும் இருக்க வேண்டும். இனி மேற்கொண்டு அவசியம் மகிமை வெளிப்படப் போகிறது. நீங்கள் அனைவரும் பிரம்மா குமார், குமாரிகள் ஆவீர்கள். 21 பிறவிகளுக்கு ஆஸ்தி அளிப்பவரே குமாரி ஆவார். குமாரிகளின் மகிமை மிகவும் உயர்ந்தது. உங்கள் மம்மா முக்கியமான குமாரி ஆவார். சந்திரனுக்கு முன்னால் பின் நல்ல நட்சத்திரமும் வேண்டும். இவர் ஞான சூரியன் ஆவார். இந்த மறைமுகமான மம்மா (பிரம்மா) தனி ஆவார். இந்த இரகசியத்தை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்து கொண்டு புரிய வைக்க முடியயும். அந்த மம்மாவின் பெயர் தனி. கோவில் அவருடையது. இந்த மறைமுகமான வயோதிக தாயிற்கு (பிரம்மா) கோவில் இருக்கிறதா என்ன? இந்த தாய் தந்தை இணைந்து இருக்கிறார்கள். உலகம் இதை அறியாமல் உள்ளது. கிருஷ்ணரோ இருக்க முடியாது. அவர் பிறகும் சத்யுகத்தின் இளவரசர் ஆவார். கிருஷ்ணருக்குள் பகவான் வர முடியாது. புரிய வைப்பது மிகவும் சுலபம் ஆகும். கீதையின் பகவானின் மகிமை தனியாகும். அந்த பதீத பாவனர் முழு உலகத்தின் (கைடு) வழி காட்டி,(லிபரேட்டர்) விடுவிப்பவர் ஆவார். உண்மையில் பரமாத்மாவின் மகிமை தனியானது என்பதை மனிதர்கள் படங்களால் புரிந்து கொண்டு விடுவார்கள். எல்லோரும் ஒன்றாக ஆக முடியுமா என்ன? நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகு காலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப் தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீக தந்தைக்கு ஆன்மீக குழந்தைகளின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. நமது நிலையை மிகவும் போதையுடன் கூடியதாக ஆடாது அசையாததாக ஆக்க வேண்டும் எப்பொழும் மகிழ்ச்சியான முகத்துடன் இருக்க வேண்டும்.

 

2. ஞானத்தின் தூய்மையான போதையில் இருந்து தந்தையை வெளிப்படுத்த வேண்டும். கீதையின் பகவானை நிரூபித்து தந்தையின் உண்மையான அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும்.

 

வரதானம்:

அனைத்து பிராப்திகளின் அனுபவத்தின் மூலம் மாயைக்கு விடை கொடுத்து வாழ்த்துக்களைப் பெறக் கூடிய பாக்கியசாலி ஆத்மா ஆகுக.

 

யாருக்கு சர்வசக்திவான் தந்தை துணைவராக இருக்கிறாரோ அவருக்கு எப்போதுமே அனைத்து பிராப்திகளும் உண்டு. அவருக்கு முன்னால் ஒரு போதும் எந்த விதமான மாயையும் வர முடியாது. யார் பிராப்திகளை அனுபவம் செய்வதன் மூலம் மாயைக்கு விடை கொடுக்கின்றனரோ அவர்களுக்கு பாப்தாதாவின் மூலம் ஒவ்வோர் அடியிலும் வாழ்த்துக்கள் கிடைக்கும். ஆக சுயம் பகவான் ஆத்மாக்களாகிய நமக்கு வாழ்த்துக்களை வழங்குகிறார் என்ற நினைவில் எப்போதும் இருங்கள், நினைத்தே பார்க்காததை அடைந்து விட்டோம், தந்தையை அடைந்தோம் அனைத்தையும் அடைந்தோம் - இப்படிப்பட்ட பாக்கியசாலி ஆத்மாவாக ஆகுங்கள்.

 

சுலோகன்:

சுய சிந்தனை மற்றும் பிரபுவின் சிந்தனை செய்தீர்கள் என்றால் வீணான சிந்தனைகள் செய்வது தானாக நீங்கி விடும்

 

ஓம்சாந்தி