07.10.2018                           காலை முரளி                ஓம் சாந்தி                        ''அவ்யக்த பாப்தாதா''

ரிவைஸ்    22.01.1984           மதுபன்


 

'' பெயர் பெற்ற சேவாதாரி ஆவதற்கான விதி ''

 

இன்று பாப்தாதா சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தன்னுடைய தீபங்களின் தீபமாலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எப்படி ஒவ்வொரு சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தீபம் ஆடாது தடையின்றி தன்னுடைய ஜோதி மூலம் உலகிற்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். இந்த தீபங்களின் வெளிச்சம் ஆத்மாக்களை எழுப்புவதற்கான வெளிச்சம். உலகின் அனைத்து ஆத்மாக்களின் எதிரில் அஞ்ஞானத்தின் மதில்சுவர் இருக்கிறது. அதை அகற்றுவதற்காக எப்படி அவர்களே விழித்தெழுந்து மேலும் மற்றவர்களையும் எழுப்பி கொண்டிருக்கிறார்கள், இருளின் காரணமாக அனேக விதமாக தட்டுதடுமாறிக் கொண்டிருப்பவர்கள். பிரகாசித்துக் கொண்டிருக்கும் தீபங்கள் உங்கள் பக்கம் மிகவும் அன்போடு வெளிச்சத்தின் இச்சையுடன், தேவையுடன் பார்க்கிறார்கள். அந்த மாதிரி இருளில் அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு ஞானத்தின் வெளிச்சம் கொடுங்கள். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் தீபம் எரிந்து விட வேண்டும் (மின்சாரம் தடைபட்டது). இப்பொழுது கூட பாருங்கள். இருள் நன்றாக இருக்கிறதா? வெளிச்சம் பிரியமானதாக இருக்கிறது தான் இல்லையா? எனவே அந்த மாதிரி தந்தையுடன் தொடர்பை இணைத்து விடுங்கள். தொடர்பை இணைப்பதற்கான ஞானம் சொல்லுங்கள்.

 

இப்பொழுது இரட்டை வெளிநாட்டினர் புத்துணர்வு அடைந்து, அதாவது சக்திசாலி ஆகி, லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஆகி, ஞானம் நிறைந்தவர் ஆகி, சக்தி நிறைந்தவர் ஆகி வெற்றி நிறைந்தவர் ஆகி மீண்டும் வருவதற்காக அவரவர்களுடைய சேவை நிலையங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள். செல்வது என்றால், வெற்றி சொரூபத்தின் பங்கை செய்து ஒருவரிலிருந்து அனேகர்களாக ஆகி வருவது. தன்னுடைய குடும்பத்தின் மற்ற ஆத்மாக்களை தந்தையின் வீட்டிற்கு அழைத்து வருவதற்காகச் செல்கிறீர்கள். எப்படி எல்லைக்குட்பட்ட யுத்தம் செய்யும் போர் வீரர்கள் உடல் பலம், அறிவியல் பலம் உள்ள போர் வீரர்கள் அனைத்து ஆயுதங்களினால் அலங்கரிக்கப்பட்டு யுத்த மைதானத்திற்கு வெற்றி பதக்கத்தைப் பெறுவதற்காகச் செல்கிறார்கள். அதே போன்று நீங்கள் அனைத்து ஆன்மீக போர் வீரர்கள் சேவையின் மைதானத்தில் வெற்றிக் கொடியை பறக்க விடுவதற்காகச் சென்று கொண்டிருக்கிறீர்கள். எந்த அளவு வெற்றியாளர் ஆகிறீர்களோ அந்த அளவு தந்தை மூலமாக அன்பு, சகயோகம், நெருக்கம், சம்பூர்ண நிலையின் வெற்றிப் பதக்கத்தைப் பெறுகிறீர்கள். எனவே இதுவரை எனக்கு எத்தனை பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன என்று சோதனை செய்யுங்கள். என்னென்ன விசேஷங்கள் இருக்கின்றன மற்றும் பட்டங்கள் கொடுக்கிறோம் மற்றும் எத்தனை பதக்கங்களை பிராப்தி செய்திருக்கிறோம். இப்பொழுதோ மிகக் குறைந்தவர்கள் தான் உருவாகியிருக்கிறார்கள். குறைந்ததிலும் குறைந்தது 108 வது இருக்க வேண்டும் இல்லையா? மேலும் தன்னுடைய இத்தனை பதக்கங்களைப் பார்த்து போதையில் இருங்கள். எத்தனை பதக்கங்களினால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறீர்கள். செல்கிறீர்கள் என்றால் எப்பொழுதும் விசேஷத்தின் காரியம் செய்து புதியதிலும் புதிய பதக்கங்களைப் பெற்றுச் செல்லுங்கள். எப்படி செயலோ அப்படி பதக்கம் கிடைக்கிறது. இவ்வருடம் சேவைக்கு பொறுப்பாளர் ஆகியிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஏதாவது ஒரு விசேஷத்தின் ஏதாவது புதுமையான விசேஷ காரியம் செய்ய வேண்டும் என்ற லட்சியம் வைக்க வேண்டும். இது இதுவரையிலும் நாடகத்தில் மறைந்திருக்கிறது, நிரம்பியும் இருக்கிறது. இந்தக் காரியத்தை பிரத்யக்ஷம் (வெளிப்படுத்த) செய்ய வேண்டும். எப்படி உலகியல் காரியத்தில் யாராவது ஏதாவது விசேஷ காரியம் செய்கிறார் என்றால் பெயர் பெற்றவராக ஆகிவிடுகிறார். நாலாபுறங்களிலும் விசேஷத்தின் கூடவே விசேஷ ஆத்மாவின் பெயர் கிடைத்துவிடுகிறது. அந்த மாதிரி நானும் விசேஷ காரியம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். வெற்றிப் பதக்கத்தைப் பெற வேண்டும். பிராமண பரிவாரத்தின் இடையில் விசேஷ சேவாதாரிகளின் பட்டியலில் பெயர் பெற்றவர் ஆக வேண்டும். ஆன்மீக போதையில் இருக்க வேண்டும். பெயர் கிடைத்ததின் போதையில் இருக்கக்கூடாது. ஆன்மீக சேவையின் போதையில் கருவியாக மற்றும் பணிவாக இருந்ததின் சான்றிதழையும் சேர்த்து பெயர் பெற்றவர் ஆக வேண்டும்.

 

இன்று இரட்டை வெளிநாட்டினரின் குரூப்பிற்கு வெற்றியாளர் ஆகி, வெற்றி ஸ்தானத்திற்குச் செல்வதற்கான பாராட்டு விழா. யாராவது வெற்றி ஸ்தலத்திற்குச் செல்கிறார் என்றால் மிகவும் கோலாகலமாக குஷியின் மேளதாளங்களோடு வெற்றித் திலகமிட்டு பாராட்டுக்களை கொண்டாடுவார்கள். விடை கொடுப்பதில்லை, ஆனால் பாராட்டுக்கள் கொடுப்பார்கள். ஏனென்றால் பாப்தாதா மற்றும் பரிவாரத்தினர் அந்த மாதிரி சேவாதாரிகளின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது என்று தெரிந்திருக்கிறார்கள். எனவே பாராட்டுதல் விழாவை கொண்டாடுகிறோம். வெற்றி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது தான் இல்லையா? ஒரு கருவியாகி மட்டும் மீண்டும் அதையே செய்ய வேண்டும். ஏனென்றால், செய்வதினால் கருவியாகி செய்வீர்கள், மேலும் அடைவீர்கள். என்னென்ன காரியங்கள் செய்வீர்களோ அது நிச்சயம் பிரத்யக்ஷ பலனைக் கொடுக்கும். மற்றவர்களை அதிகாரியாக ஆக்கி அழைத்து வருவதற்காக இந்த நிச்சயத்தின் ஊக்கம் உற்சாகத்துடன் சென்று கொண்டிருக்கிறீர்கள். பாண்டவர்கள் முன்னுக்கு செல்கிறார்களா அல்லது சக்திகள் முன்னுக்கு செல்கிறார்களா என்று இப்பொழுது பார்ப்போம். விசேஷமாக யார் புதிய காரியம் செய்கிறார்களோ அவர்களுக்கு பதக்கம் கிடைக்கும். அந்த மாதிரி விசேஷ சேவைக்குப் பொறுப்பான ஆத்மாக்கள் யாரையாவது உருவாக்குங்கள். சேவை ஸ்தானத்தை மற்றும் வளர்ச்சியை பிராப்தி செய்வியுங்கள்.  நாலாபுறங்களிலும் பெயரை பரப்புவதற்கான ஏதாவது விசேஷ காரியம் வேண்டுமென்றாலும் செய்து காண்பியுங்கள். அந்த மாதிரி பெரிய குரூப்பை தயார் செய்து பாப்தாதாவின் எதிரில் கொண்டு வாருங்கள். ஏதேனும் விசேஷ சேவை செய்யக்கூடியவர்களுக்கு வெற்றியின் பதக்கம் கிடைக்கும். அந்த மாதிரி விசேஷ காரியம் செய்பவர்களுக்கு அனைத்து சகயோகமும் கிடைத்து விடும். அவர்களே ஏதாவது பயணச்சீட்டையும் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். தொடக்கக் காலத்தில் எப்பொழுது நீங்கள் அனைவரும் சேவைக்காக வெளி இடங்களுக்குச் சென்றீர்களோ அப்பொழுது சேவை செய்து முதல் வகுப்பில் பயணம் செய்தீர்கள். மேலும் இப்பொழுது பயணச்சீட்டும் வாங்க வேண்டியதாக இருக்கிறது. மேலும் இரண்டாவது, மூன்றாவது வகுப்பில் வருகிறீர்கள். அந்த மாதிரி ஏதாவது கம்பெனியின் சேவை செய்யுங்கள். பிறகு அனைத்தும் நடந்தேறி விடும். சேவாதாரிக்கு சாதனமும் கிடைத்து விடும். புரிந்ததா? அனைவரும் திருப்தியாகி வெற்றியாளராகிச் சென்று கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? ஏதாவது பலஹீனத்தை தன்னுடன் எடுத்துச் சென்று கொண்டிருக்கவில்லையே! பலஹீனங்களை ஸ்வாஹா (அர்ப்பணித்து) செய்து சக்திசாலியான ஆத்மா ஆகி, சென்று கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? ஏதாவது பலஹீனம் தங்கிப் போய் விடவில்லையே? ஒருவேளை ஏதாவது இருந்து விட்டது என்றால், அதற்காக விசேஷ நேரம் எடுத்து அழித்து விட்டுச் செல்லுங்கள். நல்லது.

 

அந்த மாதிரி எப்பொழுதும் உறுதியான, சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தீபம், எப்பொழுதும் ஞான வெளிச்சத்தின் மூலம் இருளை அகற்றக்கூடிய, ஒவ்வொரு நேரமும் சேவையின் விசேஷத்தில் விசேஷ பங்கை செய்யக்கூடிய, தந்தை மூலமாக பிராப்தியாகியிருக்கும் அனைத்து பதக்கங்களையும் அணிந்திருக்கும், எப்பொழுதும் வெற்றி நிச்சயிக்கப்பட்டது என்ற நிச்சயத்தில் இருக்கக்கூடிய அழியாத வெற்றியின் திலகமிட்டிருக்கும், எப்பொழுதும் அனைத்து பிராப்திகளினால் நிரம்பிய திருப்தியான ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

ஜெகதீஷ் சகோதரருடன் சந்திப்பு

பாப்தாதாவின் சாகார பாலனையில் வளர்ந்திருக்கும் இரத்தினங்களுக்கு மதிப்பு இருக்கிறது. எப்படி உலகீய முறையிலும் கூட மரத்திலேயே பழுத்திருக்கும் பழம் எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த மாதிரி அனுபவி ஆத்மாக்கள் உங்களை அனைவரும் எவ்வளவு அன்போடு பார்க்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே வரதானத்தைப் பெற்று விட்டீர்கள் இல்லையா? பாலனை என்றால் வளர்ப்பே வரதானங்களினால் ஆனது இல்லையா? எனவே எப்பொழுதும் பாலனையின் அனுபவம் மூலம் அனேக ஆத்மாக்களை பாலனை செய்து அவர்கள் முன்னேறிச் செல்வதற்காக தூண்டுதல் செய்து கொண்டே இருப்பார்கள். கடலின் விதவிதமான சம்மந்தங்களின் அலைகளில், அனுபவங்களின் அலைகளில் மிதந்து கொண்டே இருப்பார்கள். சேவையின் தொடக்கக் காலத்தில் சிக்கனமாக இருந்த காலம் பொறுப்பாக ஆனது. சிக்கனமான காலம் பொறுப்பாக ஆனதின் காரணத்தினால் சேவையின் பலன் எப்பொழுதும் உயர்ந்ததாக இருந்தது. நேரத்திற்கு ஏற்றபடி சகயோகி ஆனீர்கள். எனவே வரதானம் கிடைத்தது. நல்லது.

 

மகாநாட்டிற்காக பாப்தாதாவின் மகாவாக்கியங்கள்

அனைவரும் ஒன்றாகக் கூடி ஏதாவது ஒரு காரியத்தை ஊக்கம் உற்சாகத்துடன் செய்கிறீர்கள் என்றால், அதில் வெற்றி சுலபமாக கிடைத்து விடுகிறது. அனைவரின் ஊக்கத்தினால் காரியம் நடந்து கொண்டிருக்கிறது இல்லையா? எனவே அவசியம் வெற்றி கிடைக்கும். அனைவரையும் ஒன்றாகச் சேர்ப்பது என்பதும் ஒரு உயர்ந்த நிலையின் அடையாளம். அனைவரும் ஒன்றாகக் கூடியதினால் மற்ற ஆத்மாக்களும் சந்திப்பதற்காக அருகில் வருகிறார்கள். உள்ளத்தின் எண்ணத்தை இணைப்பது என்றால் அனேக ஆத்மாக்களின் இணைப்பைக் கொண்டாடுவது. இந்த இலட்சியத்தை நோக்கி செய்து கொண்டிருக்கிறீர்கள், மேலும் செய்து கொண்டே இருப்பீர்கள். நல்லது. - வெளிநாட்டினர் அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா? திருப்தியாக இருக்கிறீர்களா? இப்பொழுது அனைவரும் பெரியவர்கள் ஆகி விட்டீர்கள். மற்றவர்களைக் கவனிப்பவர் ஆகிவிட்டீர்கள். முதலில் சிறு குழந்தைகளாக இருந்தீர்கள். எனவே குறும்புக் காரியங்கள் செய்தீர்கள், இப்பொழுது மற்றவர்களை கவனிப்பவர்களாக ஆகிவிட்டீர்கள். என்னை யாராவது கவனிக்க வேண்டும் என்ற நிலை இப்பொழுது இல்லை. இப்பொழுது மற்றவர்களின் உழைப்பை பெறுபவர்களாக இல்லை, தன்னுடைய உழைப்பை மற்றவர்களுக்குக் கொடுப்பவர்களாக ஆகிவிட்டீர்கள். புகார் செய்பவர்களாக இன்றி முழுமையானவர்களாக இருக்கிறீர்கள். இப்பொழுதும் ஏதும் எந்த புகாரும்  இல்லை, மேலும் வரும் காலத்திலும் இராது, அந்த மாதிரி தான் இல்லையா? எப்பொழுதும் குஷி நிறைந்த செய்தியைக் கொடுங்கள். மேலும் யாரெல்லாம் வரவில்லையோ அவர்களையும் மாயாவை வென்றவர் ஆக்க வேண்டும். பிறகு அதிக கடிதம் எழுத வேண்டியதாக இருக்காது. .கே. என்று மட்டும் தான் எழுத வேண்டும். நல்ல நல்ல விஷயங்களை வேண்டுமென்றால் எழுதுங்கள். ஆனால் சுருக்கமாக. நல்லது.

 

டீச்சர்களுடன் சந்திப்பு

பாப்தாதாவிற்கு டீச்சர்கள் மேல் விசேஷ அன்பு இருக்கிறது. ஏனென்றால் சமமானவர்கள். தந்தையும் டீச்சர் மற்றும் நீங்கள் மாஸ்டர் டீச்சர். பொதுவாகவே சமமானவர்கள் பிரியமானவர்களாக இருப்பார்கள். மிக நல்ல ஊக்கம் உற்சாகத்தோடு சேவையில் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். அனைவரும் சக்கரவர்த்திகள், சக்கரமாக சுற்றி வந்து அனேக ஆத்மாக்களின் சம்மந்தத்தில் வந்து, அனேக ஆத்மாக்களை அருகில் கொண்டு வருவதற்கான காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இதற்காக பாப்தாதா குஷி அடைகிறார். பாப்தாதா என் மேல் குஷியாக இருக்கிறார் என்று உணருகிறீர்கள் தான் இல்லையா அல்லது இன்னும் கொஞ்சம் குஷிப் படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா? குஷியாக இருக்கிறார், இன்னும் குஷி படுத்த வேண்டும். நன்றாக உழைக்கிறீர்கள், அன்போடு உழைக்கிறீர்கள் என்பதினால் அந்த உழைப்பு, உழைப்பாகப் படவில்லை. சேவை செய்யும் குழந்தைகளை எப்பொழுதுமே பாப்தாதா தலையின் கிரீடம் என்று கூறுகிறார். நீங்கள் தலையின் கிரீடம் ஆவீர்கள். பாப்தாதா குழந்தைகளின் ஊக்கம் உற்சாகத்தைப் பார்த்து இன்னும் மேலும் ஊக்கம் உற்சாகத்தை அதிகரிப்பதற்கான சகயோகம் கொடுக்கிறார். ஒரு அடி குழந்தைகளினுடையது மற்றும் ஆயிரம் அடி தந்தையினுடையது. எங்கு தைரியம் இருக்கிறதோ அங்கு உற்சாகத்தின் பிராப்தி இயல்பாகவே இருக்கிறது. தைரியம் இருக்கிறது என்றால் தந்தையின் உதவி இருக்கிறது. எனவே நீங்கள் கவலையற்ற மகாராஜாவாக இருக்கிறீர்கள். சேவை செய்து கொண்டே இருங்கள், வெற்றி கிடைத்துக் கொண்டே இருக்கும். நல்லது.

 

07.10.2018 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா'' ரிவைஸ் 13.02.1984 மதுபன்

 

''அசாந்திக்கான காரணம் பிராப்தியின்மை மேலும் பிராப்தியின்மைக்கான காரணம் தூய்மையின்மை ''

 

(மகாநாட்டிற்கு பிறகு விருந்தினர்களுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு)

இன்று அன்புக்கடல், அமைதியின் கடல் தந்தை தன்னுடைய அமைதியை விரும்பும், அமைதி சொரூபமான குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். முழு உலகத்திலுள்ள ஆத்மாக்களின் ஒரே ஒரு ஆசை அமைதி மற்றும் உண்மையான அன்பு என்பதைப் பார்த்து அனைத்து குழந்தைகளின் இந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக எளிய விதியைக் கூறுவதற்காக குழந்தைகளிடம் பாப்தாதா வந்து சேர்ந்து விட்டார். நீண்ட காலமாக பற்பல ரூபங்களில் இதே ஆசையை நிறைவேற்றுவதற்காக குழந்தைகள் என்னென்ன முயற்சி செய்திருந்தார்களோ அதைப் பார்த்து பார்த்து இரக்க மனமுடைய தந்தைக்கு குழந்தைகள் மீது இரக்கம் வருகிறது. வள்ளலின் குழந்தைகளாக இருந்து ஒரு நொடிக்காக, கொஞ்ச நேரத்திற்காக அமைதி கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார்கள். அதிகாரி குழந்தைகள் பிச்சைக்காரர்களாகி அமைதி மற்றும் அன்புக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். அலைந்து அலைந்து சில குழந்தைகள் மனமுடைந்தவர்களாக ஆகிவிட்டார்கள். உலகத்தில் அழியாத அமைதி ஏற்பட முடியுமா? அனைத்து ஆத்மாக்களிடமும் சுயநலமற்ற உண்மையான அன்பு இருக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

 

குழந்தைகளின் இதே கேள்விக்குப் பதில் கொடுப்பதற்காக தந்தை அவரே வரவேண்டியதாக ஆனது. பாப்தாதா குழந்தைகளுக்கு என்னுடைய குழந்தைகள் நீங்களே நேற்று அமைதி மற்றும் சுகம் நிறைந்த உலகத்தின் அதிபதிகளாக இருந்தீர்கள் என்ற இதே குஷியான செய்தியைக் கூறுவதற்காக வந்திருக்கிறார். அனைத்து ஆத்மாக்களும் உண்மையான அன்பு என்ற கயிறில் கட்டப்பட்டிருந்தனர். அமைதி மற்றும் அன்போ உங்களுடைய வாழ்க்கையின் விசேஷமாக இருந்தது. அன்பான உலகம், சுகமான உலகம், பந்தனமற்ற வாழ்க்கை உள்ள உலகம் அந்த மாதிரி உலகம் வேண்டும் என்று ஆசை வைத்திருந்தீர்கள். அந்த மாதிரி இருக்க வேண்டும் என்று யோசிக்கிறீர்கள், அந்த உலகத்தின் அதிபதியாக நேற்று இருந்தீர்கள். இன்று அந்த உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு நாளை அதே உலகத்தில் இருப்பீர்கள். நாளையின் விஷயம் மட்டும் தான். இதே உங்களுடைய பூமி நாளை சொர்க்க பூமியாக இருக்கும், என்ன இதை மறந்து விட்டீர்களா? தன்னுடைய இராஜ்ஜியம் சுகம் நிறைந்த இராஜ்யம், அங்கு துக்கம் அசாந்தியின் பெயர் அடையாளம் இல்லை, பிராப்தியின்மை ஒன்றும் இல்லை. பிராப்தியின்மை தான் அமைதியின்மைக்கான காரணம். மேலும் பிராப்தியின்மைக்கான காரணம் தூய்மையின்மை. அப்படியானால் எங்கு தூய்மையின்மை இல்லையோ, பிராப்தியின்மை இல்லையோ அங்கு என்ன இருக்கும்? என்ன விரும்புகிறீர்களோ, எந்த திட்டத்தை யோசிக்கிறீர்களோ அது நடைமுறையில் இருக்கும். அது நாடகத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறது. இதை யாரும் மாற்ற முடியாது. ஏற்கனவே உருவாக்கப்பட்டு நடந்து மீண்டும் உருவாகிறது. தந்தை மூலமாக புது படைப்பு ஆகியே விட்டது, நீங்கள் அனைவரும் யார். புது படைப்பின் அஸ்திவார கல் நீங்கள். உங்களை அந்த மாதிரி அஸ்திவார கல் என்று நினைக்கிறீர்கள். அதனால் தான் இங்கு வந்திருக்கிறீர்கள் இல்லையா? பிராமண ஆத்மா என்றால் புது உலகத்தின் ஆதார மூர்த்தி. அந்த மாதிரி ஆதார மூர்த்தி குழந்தைகளைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். பாப்தாதாவும் ஆஹா என்னுடைய செல்லமான, மீண்டும் கண்டெடுக்கப்பட்ட இனிமையிலும் இனிமையான குழந்தைகளே!  என்ற பாடலைப் பாடுகிறார். நீங்களும் பாடல் பாடுகிறீர்கள் இல்லையா? நீங்களே தான் என்னுடையவர் என்று கூறுகிறீர்கள். மேலும் நீங்களே தான் என்னுடையவர் என்று தந்தையும் கூறுகிறார். குழந்தைப் பருவத்தில் இந்தப் பாடலை அதிகம் பாடினீர்கள் இல்லையா (இரண்டு மூன்று சகோதரிகள் இந்தப் பாடலை பாடினார்கள், மேலும் பாப்தாதாவும் அதற்கு பதில் கூறிக் கொண்டிருந்தார்)

 

வாயின் ஓசை எப்படியிருந்தாலும் சரி. பாப்தாதாவோ இதயத்தின் ஓசையைக் கேட்கிறார். தந்தை பாடலை தயாரித்தார் மேலும் குழந்தைகள் பாடினார்கள். நல்லது. (சில சகோதர சகோதரிகள் கீழே ஹால் மற்றும் ஓம் சாந்தி பவனில் முரளி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், மகாநாட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை பாப்தாதா மெடிடேஷன் ஹால் சந்தித்துக் கொண்டிருக்கிறார்). கீழேயும் அதிக குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள். அன்பு நிறைந்த முகங்கள் மற்றும் இனிமையான முறையீடுகளையும் பாப்தாதா கேட்டுக் கொண்டிருக்கிறார். அனைத்து குழந்தைகளும் உள்ளப்பூர்வமாக, உயிருக்குயிராக, மிகவும் அன்புடன் உலக சேவையின் பங்கை செய்தார்கள். அனைவரின் முழு ஈடுபாட்டிற்காக பாப்தாதா அனைவரையும் அன்பு என்ற ஊஞ்சலில் ஆட்டிக் கொண்டே வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். நீடூழி வாழுங்கள்! வளர்ந்து கொண்டே இருங்கள், பறந்து கொண்டே இருங்கள், எப்பொழுதும் வெற்றி அடையுங்கள். அனைவரின் அன்பின் சகயோகம் உலக காரியத்தை வெற்றி அடையச் செய்தது. ஒருவேளை ஒவ்வொரு குழந்தையின் அன்பு நிறைந்த உழைப்பைப் பார்த்தோம் என்றால், பாப்தாதா இரவு பகலாக வர்ணனை செய்து கொண்டே இருந்தாலும் கூட குறைவானதாகத் தான் இருக்கும். எப்படி தந்தையின் மகிமை அளவற்றதோ அதே போன்று தந்தையின் சேவாதாரி குழந்தைகளின் மகிமையும் அளவற்றது. நாம் உலகின் அனைத்து ஆத்மாக்களுக்கு சாந்தியின் செய்தியை அவசியம் கொடுக்க வேண்டும் என்பதின் ஒரே ஈடுபாடு, ஒரே ஊக்கம், ஒரே திட எண்ணத்தின் முழு ஈடுபாட்டை பிரத்யக்ஷ ரூபத்தில் வெற்றி அடைந்ததை பார்த்தோம். மேலும் எப்பொழுதுமே இருக்கும். தூரத்தில் இருப்பவர்கள் கூட அருகில் தான் இருக்கிறார்கள். கீழே அமர்ந்து கொண்டிருக்கவில்லை, ஆனால் பாப்தாதாவின் கண்களில் இருக்கிறார்கள். சிலர் பஸ்ஸில், சிலர் ரயிலில் சென்று கொண்டிருக்கிறார்கள், ஆனால் அனைவரும் தந்தைக்கு நினைவிருக்கிறார்கள். அவருடைய மனதின் எண்ணமும் பாப்தாதாவிடம் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. நல்லது.

 

தந்தையின் வீட்டில் விருந்தினராக இல்லை, ஆனால் மகான் ஆத்மா ஆகுபவர்கள் வந்திருக்கிறார்கள். பாப்தாதாவோ அனைவரையும் .பி அல்லது வி..பி என்று பார்ப்பதில்லை, ஆனால் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் என்றே பார்க்கிறார். வி..பி- யோ வருவார்கள் மேலும் கொஞ்ச நேரம் பார்த்து கேட்டு விட்டு சென்று விடுவார்கள். ஆனால் குழந்தைகள் எப்பொழுதும் இதயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும், இதயத்திலேயே இருப்பார்கள். தன்னுடைய மற்றும் தந்தையின் வீட்டிற்கு வந்ததற்கு வாழ்த்துக்கள்! அனைத்து குழந்தைகளையும் மதுபன்னின் அதாவது தன்னுடைய வீட்டின் அலங்காரம் என்று பாப்தாதா நினைக்கிறார். குழந்தைகள் வீட்டின் அலங்காரம். நீங்கள் அனைவரும் யார்? அலங்காரம் தான் இல்லையா. நல்லது.

 

அந்த மாதிரி எப்பொழுதும் திட எண்ணம் வைத்திருக்கும் வெற்றியின் நட்சத்திரங்கள், எப்பொழுதும் இதய சிம்மாசனதாரி, எப்பொழுதும் நினைவு மற்றும் சேவையின் ஈடுபாட்டில் மூழ்கியிருக்கக்கூடிய, புது படைப்பின் ஆதார மூர்த்தி, உலகிற்கு சதா காலத்திற்காக புதிய ஒளி, புதிய வாழ்க்கை கொடுக்கக்கூடிய, அனைவருக்கும் உண்மையான அன்பின் அனுபவம் செய்விக்கக்கூடிய, அன்பான சகயோகி நிரந்தர துணைவர்களான குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

வரதானம்

தன்னுடைய ஒவ்வொரு காரியம் மூலமாக தெய்வீகத் தன்மையை அனுபவம் செய்விக்கக்கூடிய தெய்வீக வாழ்க்கை உள்ளவர் ஆகுக.

 

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் தெய்வீக வாழ்க்கை அதாவது தெய்வீக எண்ணம், தெய்வீக பேச்சு, தெய்வீக காரியம் செய்யும் தெய்வீக மூர்த்திகளாக ஆக்கியிருக்கிறார். தெய்வீகத்தன்மை சங்கமயுக பிராமணர்களின் சிரேஷ்ட அலங்காரம் தெய்வீக வாழ்க்கை உள்ள ஆத்மா எந்தவொரு ஆத்மாவிற்கும் தன்னுடைய ஒவ்வொரு காரியம் மூலமாக சாதாரணத் தன்மையிலிருந்து விலகி தெய்வீகத் தன்மையின் அனுபவத்தை செய்விக்கும். தெய்வீகப் பிறவி எடுத்துள்ள பிராமணன் உடலால் சாதாரணக் காரியத்தையும் மனதால் சாதாரண எண்ணத்தையும், செய்ய முடியாது. அவர்கள் பணத்தையும் சாதாரண முறையில் காரியத்தில் ஈடுபடுத்த முடியாது.

 

சுலோகன்

உள்ளத்தால் என்ன அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டோம் என்ற இதே பாடலை பாடிக் கொண்டே இருந்தீர்கள் என்றால் முகம் குஷி நிறைந்ததாக இருக்கும்.

 

ஓம்சாந்தி