06.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! தேகம் முதற்கொண்டு அனைத்தையும் மறந்து ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள், அப்போது நேரடிக் (சொந்த) குழந்தை என்று கூறலாம். இந்த பழைய உலகத்திலிருந்து இப்போது உங்களுடைய புத்தியை நீக்க வேண்டும்.

 

கேள்வி:

தந்தையின் ஞானம் எந்த குழந்தைகளின் புத்தியில் சகஜமாக பதிந்து விடுகிறது?

 

பதில்:

ஏழைக் குழந்தைகள், மோகத்தை நஷ்டம் செய்தவர்கள் (மோகத்தை நீக்கியவர்கள்) மற்றும் பரந்த புத்தி உள்ளவர்களுடைய புத்தியில் முழு ஞானமும் சகஜமாகப் பதிந்து விடுகிறது. மற்றபடி யாருடைய புத்தியில் என்னுடைய செல்வம், என்னுடைய கணவர். . . என்பதெல்லாம் இருக்குமோ அவர்கள் ஞானத்தை தாரணை செய்து உயர் பதவியை அடைய முடியாது. தந்தையுடையவராக ஆகி விட்ட பின்பும் லௌகீக சம்மந்தங்களை நினைவு செய்வது என்றால் அரைகுறை நிச்சயதார்த்தம் ஆகும். அவர்கள் மாற்றாந்தாய் குழந்தைகள் என்று சொல்லப்படுகின்றனர்.

 

பாடல்:

இறந்தாலும் உங்கள் மடியில். . . .

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகள் பாடலின் அர்த்தத்தை தாமாகவே புரிந்து கொண்டிருப்பார்கள். இப்போது உயிருடன் வாழ்ந்தபடியே வந்து தந்தையுடையவராக ஆக வேண்டும் மற்றும் பழைய உலகம் - அது கொடுமையான நரகம் என்று சொல்லப்படுகிறது, அதனை மறக்கவும் வேண்டும் மற்றும் விட்டு விடவும் வேண்டும். கொடுமையான நரகத்தை மறந்து பிறகு சொர்க்கத்தை நினைவு செய்ய வேண்டும். தன்னை ஆத்மா எனப் புரிந்து கொண்டு தன் தந்தையை நினைவு செய்ய வேண்டும். பழைய உலகம் புத்தியிலிருந்து நீங்கி விட வேண்டும். அதற்காக முயற்சி தேவை. இது பல பிறவிகளின் கர்மபந்தனமாகும். ஒரு பிறவி அல்ல, பல பிறவிகளின் கர்மபந்தனம். எவ்வளவு பாவங்கள், யார் யாருடன் செய்திருக்கிறீர்களோ, அவைகள் அனைத்தையும் பிறவி எடுத்து அனுபவிக்க வேண்டும். எனவே இந்த கர்ம பந்தனத்தின் உலகத்தை மறந்து விட வேண்டும். இது சீச்சீ (கீழான) உலகம், பதீத சரீரம் அல்லவா! இதன் மீதிருந்து பற்றை நீக்க வேண்டும். ஏழைகளுக்கு பற்று சகஜமாகவே நீங்கி விடுகிறது, பணக்காரர்களுக்கு பற்று நீங்குவது கடினமாக உள்ளது. நாம் சொர்க்கத்தில் சுகம் நிறைந்தவராக அமர்ந்திருக்கிறோம், ஏழைகள் துக்கம் நிறைந்தவர்கள் என்று அவர்கள் புரிந்து கொள்கின்றனர். சொல்லப்போனால் முழு பாரதமுமே ஏழைதான், பின் அதிலும் கூட ஏழையாக உள்ளவர்கள் உடனே ஞானத்தை எடுக்கின்றனர். அவர்களுக்காகத்தான் தந்தை வருகிறார். ஏழைகளுக்கு அதிக ஆஸ்தி கிடைக்கிறது. அனைத்து சென்டர்களிலும் பாருங்கள், பணக்காரர்கள் யாரும் தங்குவது மிகவும் கஷ்டமே. பெண்களும் கூட ஏழைகளின் வீடுகளிலிருந்துதான் வருகின்றனர். செல்வந்தர்களுக்கு கணவன்மார் களிடம் சுகம் கிடைக்கிறது. ஆகையால் அவர்களிடமிருந்து புத்தியின் தொடர்பை நீக்க முடிவதில்லை. ஏழைகள் தான் எப்போதும் ஞானத்தை எடுக்கின்றனர். தந்தையும் கூட ஏழைப்பங்காளராகத்தான் இருக்கிறார். அந்தத் தந்தையை அனைவரும் நினைவு செய்கின்றனர். ஆனால் நாடகத்தின்படி பக்தர்கள் பகவானை அறிவதில்லை. பகவான் பக்தர்களை காப்பாற்றுபவராகத்தான் இருக்கிறார். பக்தியின் பலனைக் கொடுப்பவர், சத்கதி வழங்கும் வள்ளல் ஒரு தந்தை ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தை மூலம் இப்போது ஞானத்தின் விசயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஞானம் பரந்த புத்தி உடையவர்களின், பற்று நீங்கியவர்களின் புத்தியில்தான் நிலைக்கும். என்னுடைய கணவர், என்னுடைய பணம் என்றெல்லாம் யாருடைய புத்தியில் இருக்குமோ அவர்கள் உயர் பதவி அடைய முடியாது. படைப்பவர், படைப்பின் அறிமுகத்தைக் கொடுப்பவர்கள் பதவி அடைகின்றனர். தந்தையை அறியாமல் ஆஸ்தி எப்படி கிடைக்கும்? மணமகனை, பிரியதர்ஷன் என்று வெறுமனே சொல்வதன் மூலம் எந்த இலாபமும் இல்லை. தெரிந்து கொள்ளாமல் பிரியதர்ஷனுடன் எப்படி நிச்சயதார்த்தம் நடக்கும்? கன்னிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது என்றால் இன்னாருடைய மகன், இந்த வேலையில் இருக்கிறார் என்று மணமகனின் படம் முதலானவைக் காட்டுகின்றனர். முன்பு இப்படி யெல்லாம் காட்டாமல் அப்படியே திருமணம் செய்வித்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் கூட அவருடைய தொழிலைக்குறித்து தெரிவிக்கின்றனர் அல்லவா! இங்கே ஒரு சிலர் தன்னுடைய தந்தையை அல்லது பிரியதர்ஷனையே தெரிந்து கொள்ளாவிட்டால் எப்படி நிச்சயதார்த்தம் நடக்கும்? வரிசைக்கிரமமாக உள்ளனர். பலருடையது அரைகுறை நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. பரலௌகீக பிரியதர்ஷனை நினைவு செய்யாமல் லௌகீக பிரியதர்ஷனை, லௌகீக உறவினர் முதலானவர்களை நினைவு செய்து கொண்டே இருந்தார்கள் என்றால் அரைகுறை நிச்சயதார்த்தம் என்று அர்த்தமாகும். அவர்கள் மாற்றாந்தாய் குழந்தைகள் என்று கூறப்படுகிறார்கள். நேரடிக் குழந்தைகள் மிகவும் சிலரே இருக்கின்றனர். பட்டியில் (ஆரம்பகாலத்தில் தந்தையுடன்) எவ்வளவு பேர் இருந்தனர், அவர்களில் எவ்வளவு பேர் பக்குவமற்றவர்கள் வெளியேறினார்கள். தம்முடைய பிரியதர்ஷனை புரிந்து கொள்வதே இல்லை. பாதரசம் உள்ளங்கையில் தங்குவதில்லை அல்லவா! அதுபோலவே நினைவும் கூட இவ்வளவு கடினமாக உள்ளது. அடிக்கடி மறந்து விடுகின்றனர். 25-30 வருடங்கள் ஆனவர்கள் கூட முழுமையாக நினைவு செய்ய முடிவதில்லை. பரலௌகீக பிரியதர்ஷன் 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் மஹாராணி, மஹாராஜாவாக ஆக்கக்கூடியவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிருஷ்டியின் முதல், இடை, கடைசியை அறிந்தவர். பிரியதர்ஷினிகளுக்கு இவ்வளவு புரியவைக்கிறார், என்றாலும் கூட புத்தியில் நிற்பதில்லை. புத்தி பழைய உலகத்தின் சம்மந்தங்களைச் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறது. நான் பந்தனத்தில் இருக்கிறேன் என்று புரிந்து கொள்வதில்லை. ஒருவருடைய சம்மந்தம் தேவை. மற்ற அனைத்தும் பந்தனங்களாகும். குழந்தைகளுக்கு புரிய வைக்கப்படுகிறது - ஒருவருடன் சம்மந்தம் வையுங்கள், அவர் உங்களுக்கு சிருஷ்டியின் முதல், இடை, கடைசியைக் குறித்த கல்வியை கற்றுக் கொடுக்கிறார்.

 

அரைகல்பம் ஞான காண்டம், அரை கல்பம் பக்தி காண்டம் இருக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். ஞான காண்டத்தில் 21 பிறவிகளுக்கு ஆஸ்தி கிடைக்கிறது. அங்கே சதோபிரதானமாக இருக்கும், பிறகு சதோபிரதானத்திலிருந்து கீழே சதோவில், பிறகு சதோவிலிருந்து விழுந்து இரஜோவில் வரவேண்டும். சதோ முடிவடையும்போது ஞான காண்டம் முடிவடைகிறது. துவாபரத்திலிருந்து பக்தி தொடங்குகிறது. அதுவும் கூட முதல் சதோபிரதான பக்தியாக இருக்கும். பிறகு பக்தியும் கூட சதோ, இரஜோ, தமோவில் வருகிறது. விபசாரி பக்தியாக ஆவதன் மூலம் பக்தி பிறகு கீழே இறங்கிக்கொண்டே செல்கிறது. இப்போது இதைத் தெரிந்து கொள்வதும், பிறருக்கு புரிய வைப்பதும் மிகவும் சகஜமாகும். குழந்தைகளாகிய நீங்கள் கொடுமையான நரகத்திலிருந்து சம்மந்தத்தை நீக்கி ஒருவருடன் சம்மந்தம் வைக்க வேண்டும். ஒரு தந்தையுடன் சம்மந்தம் வைக்கக்கூடிய பயிற்சி செய்யுங்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலமே பாவ கர்மங்கள் அழியும். ஏழைகள் நன்றாக முயற்சி செய்கின்றனர். ஆக ஏழைகள் பலி ஆகின்றனர். தந்தையும் கூட ஏழைகள் மீது பலியாகிறார். ஆரம்பத்தில் எவ்வளவு கோபர்கள் (சகோதரர்கள்) இருந்தனர், எவ்வளவு மாதர்கள் இருந்தனர். எவ்வளவு பேர் சென்று விட்டனர், மீதி கொஞ்சம் பேர் தங்கியுள்ளனர். தாய்மார்களும் கூட கொஞ்சம் பேர் தங்கியுள்ளனர். ஆம், குயின் மதர், தேவி முதலானவர்கள் நிலைத்திருப்பதைப் போல சில சில பணக்கார வீட்டினரும் கூட தங்கியுள்ளனர். எந்த பகவானை அனைவரும் நினைவு செய்கின்றனரோ அவருடைய அறிமுகம் என்ன என்ற முக்கியமான விசயத்தை இப்போது நீங்கள் புரிய வைக்க வேண்டும். பதீத பாவனராகிய தந்தை, யார் இராஜயோகம் கற்றுத் தந்து நரனிலிருந்து நாராயணனாக ஆக்குகிறாரோ அவரை தெரிந்து கொள்ளவில்லை என்றால் நீங்கள் பாவம் செய்தபடி இருப்பீர்கள், தந்தையை நிந்தனை செய்தபடியே இருப்பீர்கள். மாநாடுகள் நிறைய நடந்தபடி இருக்கின்றன. அங்கே புரிய வைப்பவர்கள் மிகவும் கூர்மையான புத்தியுடையவர்கள் தேவை. நீங்கள் வேதங்களுக்கு மகிமை இருப்பதாக புரிந்து கொண்டுள்ளீர்கள், ஆனால் இவைகளால் ஒரு இலாபமும் இல்லை என்று புரிய வைக்க வேண்டும். இலாபம் ஒரு தந்தையால் மட்டுமே ஏற்படுகிறது, அவரை நாங்கள் அறிவோம், நீங்கள் அறியவில்லை. வந்தால் நாங்கள் உங்களுக்கு புரிய வைப்போம். தந்தையைத் தெரிந்து கொள்ளாமல் ஆஸ்தி எப்படி கிடைக்கும்? தந்தையின்  ஆஸ்தி முக்தி, ஜீவன் முக்தி, கதி-சத்கதி. இந்த வார்த்தையை தந்தைதான் சொல்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். வேறு எந்த விசயத்திலும் இலாபம் இல்லை. தந்தையையும், படைப்பின் முதல், இடை, கடைசியையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதிலும் கூட அரைகல்ப காலம் பக்தி காண்டம், அரைகல்பம் சத்கதி, ஞான காண்டம். மாநாடு நடத்துகின்றனர், ஆனால் தாமே குழம்பியுள்ளனர். கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். பலருக்கும் அறிமுகம் கிடைத்தது என்றால் அப்போது அதிசயம் என்று சொல்லலாம், இவர்கள் முழு சிருஷ்டியின் முதல், இடை, கடைசியின் இரகசியங்களை படங்களுடன் விளக்குகின்றனர் என்று கூறுவார்கள். தாய்மார்களுக்கு மிகவும் போதை இருக்க வேண்டும். கணவன்மார்களும் உதவி செய்யத் தயாராயிருக்கின்றனர். தந்தை வழி கொடுக்கிறார். கன்னியர்களும், தாய்மார்களும் செய்ய வேண்டும். இன்றைய நாட்களில் கன்னியர்களும், -தாய்மார்களுக்கு மகிமை அதிகம் உள்ளது, தாய்மார்கள் கவர்னராகவும், பிரதம மந்திரியாகவும் ஆகின்றனர். ஒரு புறம் அந்தத் தாய்மார்கள், மறுபுறம் பாண்டவர்களின் தாய்மார்களாகிய நீங்கள். அவர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமாக உள்ளது, ஏனென்றால் அவர்களின் இராஜ்யமாக உள்ளது. உங்களுக்கோ 3 அடி நிலம் கூட கிடைப்பதில்லை.

 

தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு பல இரகசியங்களைப் புரிய வைத்துக்கொண்டே இருக்கிறார். நீங்கள் இப்போது சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைகிறீர்கள். பிரியதர்ஷன் உங்களை அலங்கரிக்கிறார், மஹாராணி ஆக்கி விடுகிறார். இப்படிப்பட்ட பிரியதர்ஷனுடன் புத்தியின் தொடர்பை ஈடுபடுத்தாமல் இருப்பது மிகப் பெரிய தவறாகும். குழந்தைகளுக்கு நிறையவே புரிய வைக்கிறார். நீங்கள் ஞானம் மற்றும் பக்தியின் வேறுபாட்டை மட்டும் கூறுங்கள். பாரதத்தில்தான் பாடப்பட்டுள்ளது - துக்கத்தில் அனைவரும் நினைவு செய்வார்கள், சுகத்தில் யாரும் நினைவு செய்வதில்லை. சுகத்தில் ஏன் நினைவு செய்வார்கள்? இப்போது அந்த புதிய உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. ஆனால் சுகத்தின் ஆஸ்தியையும் முழுமையாக எடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் எந்த அளவு தகுதி வாய்ந்தவர்கள் என்பதை தாய் தந்தை அறிவார்கள். மரணம் அருகாமையில் வரும்போது கூறுவார் - நீங்கள் முழுமையாக முயற்சி செய்யவில்லை, அதனால் உங்களுடைய நிலை இப்படியாகி விட்டது. நீங்கள் என்னென்ன மாதிரியான பிரஜைகளில் வருவீர்கள், என்னென்ன மாதிரியான வேலைக்காரர்களாக ஆவீர்கள் என்ற அனைத்தும் கூறுவார். நல்லது.

 

இன்று நான் மிக நன்றாக முரளி வகுப்பு நடத்தினேன் என்று பல குழந்தைகள் புரிந்து கொள்கின்றனர். ஆனால் அப்படி அல்ல. இந்த உதவியை சிவபாபா வந்து செய்கிறார். தனது அஹங்காரம் இருக்கக் கூடாது. நீங்கள் சொல்பவற்றை தந்தை உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். தந்தை இல்லாவிட்டால் உங்களுடைய முரளி எங்கே? முரளிதரனின் குழந்தைகள் முரளிதரர்களாக ஆக வேண்டும், இல்லாவிட்டால் உயர்ந்த பதவி அடைய முடியாது. ஏதாவது இலாபம் ஏற்பட்டது, யாராவது சென்டர் திறக்கிறார்கள் என்றால் நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கிறது. இவ்வளவு சமயம் படிப்பைப் படித்தீர்கள் என்றால் தாமாகவே சேவை செய்து சென்டர்களைத் திறக்க வேண்டும். தாம் கற்றுக் கொள்ளும்போது பிறருக்கு கற்றுத் தர முடியாதா என்ன? பிரம்மாகுமாரியை அனுப்பும்படி கேட்டால், கேட்பவரிடம் அவ்வளவு ஞானம் இல்லை என்று தந்தை புரிந்து கொண்டு விடுகிறார். மற்றபடி இங்கே வந்து என்ன செய்கிறீர்கள்? பாபா புரிய வைக்கிறார் - மேகங்கள் வர வேண்டும், புத்துணர்ச்சி அடைந்து செல்ல வேண்டும், மழை பொழிய வேண்டும். இல்லையென்றால் எப்படி பதவி அடைவார்கள்? மம்மா-பாபா என்று சொல்கிறீர்கள் என்றால் சிம்மாசனத்தைக் கைப்பற்றிக் காட்டுங்கள். நான் கொடுத்தேன் என்ற அகங்காரமும் யாருக்கும் வரக் கூடாது. நீங்கள் எதுவும் கொடுப்பதில்லை, அகங்காரம் வந்தால் பாபா சோழிக்குப் பதிலாக வைரத்தைக் கொடுப்பதையும் தவிர்த்து விடுவார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளூக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாராம்:

1. ஒருவருடன் அனைத்து சம்மந்தங்களையும் வைத்து புத்தியின் தொடர்பை அனைத்து பந்தனங்களிலிருந்தும் நீக்க வேண்டும். ஒருவருடன் உறுதியான நிச்சயதார்த்தம் செய்து கொள்ள வேண்டும். புத்தியின் தொடர்பு அலையக் கூடாது.

 

2. தந்தைக்குச் சமமாக முரளீதரர் ஆக வேண்டும். நான் முரளி வகுப்பை நன்றாக நடத்தினேன் என்ற அகங்காரத்தில் வரக் கூடாது. புத்தி என்ற மேகத்தை நிரப்பி ஞான மழை பொழிய வேண்டும். படிப்பைப் படித்தீர்கள் என்றால் சென்டர்கள் திறக்க வேண்டும்.

 

மாதேஸ்வரியின் மகா வாக்கியங்கள்:

1. தமது உண்மையான இலட்சியம் என்ன?

தமது உண்மையான இலட்சியம் என்ன என்பதை முதன் முதலில் தெரிந்திருக்க வேண்டும். அதையும் நல்ல விதமாக புத்தியில் தாரணை செய்ய வேண்டும், அப்போதுதான் முழுமையாக அந்த இலட்சியத்தில் நிலைத்திருக்க முடியும். தமது உண்மையான இலட்சியம் - ஆத்மாவாகிய நான் அந்த பரமாத்மாவின் குழந்தையாக இருக்கிறேன். உண்மையில் நான் கர்மங்களை வென்றவன் (கர்மாதீத்) , பிறகு தன்னைத் தான் மறந்ததால் கர்ம பந்தனத்தில் வந்து விட்டேன், இப்போது மீண்டும் அந்த நினைவு வந்ததனால் இந்த ஈஸ்வரிய நினைவில் இருப்பதன் மூலம் செய்திருக்கக் கூடிய எனது பாவ கர்மங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. ஆக நம்முடைய இலட்சியம் நான் ஆத்மா பரமாத்மாவின் குழந்தை என்பதாகும். மற்றபடி யாராவது தம்மை நானே தேவதை என்று புரிந்து கொண்டு அந்த இலட்சியத்தில் நிலைத்து விட்டால் பிறகு பரமாத்மாவின் சக்தி கிடைக்காது. மேலும் பிறகு உங்களுடைய பாவ கர்மங்களும் அழியாது. இப்போது உங்களுக்கு முழுமையான ஞானம் உள்ளது. ஆத்மாவாகிய நான் பரமாத்மாவின் குழந்தை கர்மாதீத் நிலையடைந்து எதிர்காலத்தில் சென்று ஜீவன் முக்தியான தேவி தேவதைப் பதவி பெறுவேன் - இந்த இலட்சியத்தில் இருப்பதன் மூலம் அந்த சக்தி கிடைத்து விடும். இப்போது எங்களுக்கு சுகம், அமைதி, தூய்மை வேண்டும் என்று மனிதர்கள் விரும்புவதும் கூட நினைவின் தொடர்பு முழுமையாக இருக்கும்போதுதான் பிராப்தி ஆகும். மற்றபடி தேவதா பதவி தனது எதிர்காலப் பலனாகும். தனது முயற்சி தனிப்பட்டது மற்றும் தனது பலனும் கூட தனிப்பட்டதாகும். ஆக இந்த இலட்சியமும் தனியானதாகும், தூய்மையான ஆத்மாவாகிய நான் கடைசியில் பரமாத்மா ஆகி விடுவேன் என்ற இந்த இலட்சியத்தில் இருக்கக் கூடாது. ஆனால் நாம் பரமாத்மாவுடன் நினைவின் தொடர்பை ஈடுபடுத்தி தூய்மையான ஆத்மாவாக ஆக வேண்டும், மற்றபடி ஆத்மா ஒன்றும் பரமாத்மாவாக ஆகவேண்டியதில்லை.

 

2. இந்த அழிவற்ற ஞானத்திற்கு பல பெயர்கள் வைக்கப் பட்டுள்ளன:

இந்த அழிவற்ற ஞான ரத்தினங்களுக்கு பல பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. சிலர் இந்த ஞானத்தை அமிர்தம் என்றும் கூறுகின்றனர், சிலர் ஞானத்தை மை என்றும் கூறுகின்றனர். குருநானக் கூறினார் ஞான மை குரு கொடுத்தார். சிலர் பிறகு ஞானத்தை மழை என்றும் கூறினர், ஏனென்றால் ஞானத்தின் மூலம்தான் முழு சிருஷ்டியும் பசுமை நிறைந்ததாக ஆகிறது. தமோபிரதானமாக உள்ள மனிதர்கள் சதோ குணம் நிறைந்த மனிதர்களாக ஆகி விடுகின்றனர், மேலும் ஞான மையின் மூலம் அஞ்ஞானத்தின் காரிருள் நீங்கி விடுகிறது. இந்த ஞானத்தையே பிறகு அமிர்தம் என்றும் கூறுகின்றனர், அதன் மூலம் 5 விகாரங்களின் அக்னியில் எரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் குளிர்ச்சியடைந்து விடுகின்றனர். கீதையிலும் பாருங்கள் பரமாத்மா தெளிவாகக் கூறுகிறார் - காமேஷு, குரோதேஷு (காமம் நிறைந்தவர்கள், குரோதம் நிறைந்தவர்கள்), அதிலும் கூட முதன்மையானது முக்கியமானது காமம், அதுவே 5 விகாரங்களில் முக்கியமான விதையாகும். விதையாவதால் பிறகு கோபம், பேராசை, பற்று, அகங்காரம் முதலான மரம் தோன்றுகிறது, அதன் மூலம் மனிதர்களின் புத்தி கீழானதாகி விடுகிறது. இப்போது அந்த புத்தியிலேயேதான் ஞானம் தாரணை ஆகிறது, ஞானத்தின் தாரணை புத்தியில் முழுமையாக ஆகும்போது தான் விகாரங்களின் விதை அழிந்து போகிறது. மற்ற சன்னியாசிகள் விகாரங்களை வசப்படுத்துவது மிகவும் கடினம் என்று புரிந்து கொள்கின்றனர். இப்போது இந்த ஞானம் சன்னியாசிகளிடம் இல்லவே இல்லை. ஆக, இப்படிப்பட்ட படிப்பை எப்படிக் கொடுப்பார்கள்? மரியாதையில் இருங்கள் என்று வெறுமனே கூறுகின்றனர். ஆனால் உண்மையான மரியாதை எதுவாக இருந்தது? அந்த மரியாதை இன்றைய நாட்களில் சிதைந்து விட்டது, அந்த சத்யுகத்தின், திரேதா யுகத்தின் தேவி தேவதைகளின் மரியாதை எங்கே? இல்லற விசயங்களில் இருந்தபடி எப்படி நிர்விகாரி இல்லறத்தில் இருந்தனர்? இப்போது அந்த உண்மையான மரியாதை எங்கே? இன்றைய நாட்களில் தலைகீழான விகாரி மரியாதையை பாலனை செய்து கொண்டிருக்கின்றனர். ஒருவர் பிறருக்கு இப்படியே கூறுகின்றனர் மரியாதையின் படி நடந்து செல்லுங்கள். மனிதர்களின் முக்கிய கடமை என்ன, அதனை யாரும் அறிவதில்லை. மரியாதையில் இருங்கள் என்று மட்டும் பிரசாரம் செய்கின்றனர், ஆனால் மனிதர்களின் முதன்மையான மரியாதை எது என்பது கூட தெரியாது. மனிதர்களின் முதல் மரியாதை நிர்விகாரி ஆவதாகும், ஒருவேளை யாரிடமாவது, நீங்கள் இந்த மரியாதையில் இருக்கிறீர்களா? என்று கேட்டால், இன்றைய நாட்களில் இந்த கலியுக சிருஷ்டியில் நிர்விகாரி ஆகக்கூடிய தைரியம் இல்லை என்று கூறி விடுகின்றனர். இப்போது மரியாதையில் இருங்கள், விகாரமற்றவர் ஆகுங்கள் என்று வாயால் சொன்னால் யாரும் விகாரமற்றவர் ஆக முடியாது. நிர்விகாரி ஆவதற்காக முதலில் இந்த ஞான வாளின் மூலம் இந்த ஐந்து விகாரங்களின் விதையை அழிக்க வேண்டும், அப்போதுதான் பாவ கர்மங்கள் பஸ்மம் (சாம்பல்) ஆக முடியும். நல்லது.

 

வரதானம்:

விலகிய நிலையின் பயிற்சி மூலம் மதிப்புடன் தேர்ச்சி பெறக்கூடிய (பாஸ் வித் ஹானர்) பிரம்மா பாபாவிற்கு சமமானவர் ஆகுக.

 

எவ்வாறு பிரம்மா பாபா சாகார வாழ்வில் கர்மாதீத நிலையை அடைவதற்கு முன்பே பற்றற்று மற்றும் அன்பாக இருப்பதற்கான பயிற்சியின் வெளிப்படையான அனுபவத்தை செய்வித்தார். சேவையையோ அல்லது எந்த கர்மத்தையோ விடவில்லை, ஆனால், பற்றற்றவராகி சேவை செய்தார். இந்த பற்றற்ற நிலையானது ஒவ்வொரு கர்மத்திலும் வெற்றியை சகஜமாக அனுபவம் செய்விக்கிறது. எனவே, சேவையை எவ்வளவு வேண்டுமானாலும் விஸ்தாரமாக அதிகப்படுத்துங்கள், ஆனால், விஸ்தாரத்தில் செல்வதால் சார ஸ்திதியின் பயிற்சி குறைந்து விடக்கூடாது. அப்பொழுதே டபுள் லைட் ஆகி கர்மாதீத நிலையை பிராப்தியாக அடைந்து இரட்டை கிரீடதாரியாக, பிரம்மா பாபாவிற்கு சமமாக மதிப்புடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகிவிடுவீர்கள்.

 

சுலோகன்:

அநேகருக்கு புது வாழ்க்கையை உருவாக்குவதற்கான சக்தியை கிடைக்கச் செய்யும் அளவிற்கு தன்னை சக்தியின் ஸ்தம்பமாக (தூணாக) ஆக்குங்கள்.

 

ஓம்சாந்தி