02.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! யோகத்தின் மூலம் தத்துவங்களை தூய்மையாக்கும் சேவை செய்யுங்கள் ஏனென்றால் தத்துவம் தூய்மையாக ஆகினால் தான் இந்த உலகத்தில் தேவதைகள் காலை வைப்பார்கள்.

 

கேள்வி:

உங்களுடைய புதிய உலகத்தில் எந்தவிதமான அசாந்தியும் ஏற்படமுடியாது - ஏன்?

 

பதில்:

1. ஏனென்றால் அந்த இராஜ்யம் உங்களுக்கு பாபாவின் மூலம் ஆஸ்தியாக கிடைத்துள்ளது, 2. வரத்தை வழங்கும் வள்ளல் பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போதே வரதானம் அதாவது ஆஸ்தியைக் கொடுத்துவிட்டார், இந்த காரணத்தினால் அங்கே அசாந்தி ஏற்பட முடியாது. நீங்கள் பாபாவினுடையவர்களாக ஆகின்றீர்கள் எனும்போது ஆஸ்தி முழுவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்.

 

ஓம் சாந்தி.

நாம் யாருடைய குழந்தைகளாக இருக்கின்றோமோ, அவரை உண்மையான தலைவன் என்று சொல்கிறார்கள் ஆகையினால் இன்றைக்கு குழந்தைகளாகிய உங்களை தலைவனுடைய குழந்தைகள் (சாஹேப் ஜாதே) என்று சொல்கிறார்கள், என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். (உண்மைக்கு மேலும் ஒரு உறுதி இருக்கிறது - சத்தியத்தையே உண்பது, (கடைபிடிப்பது) சத்தியத்தையே உடுத்துவது) இது மனிதர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் ஆனால் இதை பாபா வந்து புரிய வைக்கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பாபா தான், அவருக்கு அதிக மகிமை இருக்கிறது, அவரை படைப்பவர் என்று சொல்கிறார்கள். முதல்-முதலில் குழந்தைகளை படைப்பதாகும். பாபாவின் குழந்தைகள் அல்லவா! ஆத்மாக்கள் அனைத்தும் பாபாவோடு இருக்கின்றனர். அதனை தந்தையின் வீடு, இனிமையான வீடு என்று சொல்லப்படுகிறது. இது ஒன்றும் வீடு அல்ல. அவர் நம்முடைய மிகவும் இனிமையான தந்தை என்பது குழந்தைகளுக்குத் தெரியும். இனிமையான வீடு சாந்திதாமமாகும். பிறகு சத்யுகமும் கூட இனிமையான வீடாகும் ஏனென்றால் அங்கே ஒவ்வொரு வீட்டிலும் அமைதி இருக்கிறது. இங்கே வீட்டில் லௌகீக தாய்-தந்தையிடமும் அசாந்தி இருக்கிறது என்றால் உலகத்திலும் கூட அசாந்தி இருக்கிறது. அங்கே வீட்டிலும் அமைதி இருக்கிறது என்றால் முழு உலகத்திலும் கூட அமைதி இருக்கிறது. சத்யுகத்தை புதிய சிறிய உலகம் என்று சொல்லலாம். இது எவ்வளவு பெரிய பழைய உலகமாக இருக்கிறது. சத்யுகத்தில் சுகமும் அமைதியும் இருக்கிறது. குழப்பத்திற்கான விஷயம் எதுவும் இல்லை, ஏனென்றால் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத்திருக்கிறது. குருமார்கள் புத்திரபாக்கிய முடையவர்களாகுக, நீண்ட ஆயுள் உடையவர்களாகுக, என்று ஆசீர்வாதம் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் புதியதாக எதையும் கொடுப்பதில்லை. பாபாவிடமிருந்து தானாகவே ஆஸ்தி கிடைக்கிறது. இப்போது பாபா உங்களுக்கு நினைவூட்டியுள்ளார். எப்போது துக்கம் நிறைந்த உலகமாக ஆகிறதோ அப்போது பரலௌகீக தந்தையை பக்தி மார்க்கத்தில் அனைத்து தர்மத்தைச் சேர்ந்தவர்களும் நினைவு செய்கிறார்கள். இந்த உலகமே தூய்மையற்ற பழைய உலகமாகும். புதிய உலகத்தினால் சுகம் கிடைக்கிறது, அசாந்தியின் பெயர் கூட இல்லை. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தூய்மையான குணமிக்கவர்களாக ஆக வேண்டும். இல்லையென்றால் நிறைய தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். பாபாவின் கூடவே தர்மராஜாவும் இருக்கின்றார், கணக்கு- வழக்குகளை முடித்து வைக்கக் கூடியவர் ஆவார். நியாய சபை அமருகிறது அல்லவா! பாவங்களுக்கான தண்டனை கண்டிப்பாக கிடைக்கும். யார் நல்ல விதத்தில் உழைக்கிறார்களோ, அவர்கள் தண்டனை அனுபவிப்பார்களா என்ன! பாவத்திற்கு தண்டனை கிடைக்கிறது, இதை கர்மத்தின் வினை என்று சொல்லப்படுகிறது. இது இராவணன் மாற்றானுடைய இராஜ்யமாகும், இதில் அளவற்ற துக்கம் இருக்கிறது. இராம இராஜ்யத்தில் அளவற்ற சுகம் இருக்கிறது. நீங்கள் நிறைய பேருக்கு புரிய வைக்கிறீர்கள் இருந்தாலும் சிலர் உடனே புரிந்து கொள்கிறார்கள் இன்னும் சிலர் காலம் கடந்து புரிந்து கொள்கிறார்கள். குறைவாக புரிந்து கொள்கிறார்கள் என்றால் இவர்கள் காலம் கடந்து பக்தி செய்தவர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். யார் ஆரம்பத்திலிருந்து பக்தி செய்தார்களோ, அவர்கள் ஞானத்தையும் கூட விரைவாகப் புரிந்து கொள்வார்கள், ஏனென்றால் அவர்கள் முதல் நம்பரில் செல்ல வேண்டும்.

 

ஆத்மாக்களாகிய நாம் இனிமையான வீட்டிலிருந்து இங்கே வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அமைதி (சைலன்ஸ்) அசைவு (மூவி) பேச்சு (டாக்கி) என்று இருக்கிறது அல்லவா! குழந்தைகள் தியானத்தில் செல்கிறார்கள் என்றால் அங்கே அசைவு (மூவி) நடக்கிறது என்று சொல்கிறார்கள். அதற்கும் ஞான மார்க்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முக்கியமான விசயம் தங்களை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்யுங்கள், அவ்வளவு தான் வேறு எந்த விசயமும் இல்லை. பாபா நிராகாரமானவர், குழந்தைகளும் கூட அதாவது ஆத்மாவும் கூட இந்த சரீரத்தில் நிராகாரமாக இருக்கிறது, வேறு எந்த விசயமும் எழுவதே இல்லை. ஆத்மாவின் அன்பு ஒரு பரமபிதா பரமாத்மாவோடு தான் இருக்கிறது. சரீரம் அனைத்தும் தூய்மையற்றதாகும். எனவே தூய்மையற்ற சரீரத்தோடு அன்பு இருக்க முடியாது. ஆத்மா என்னவோ தூய்மையாகிவிடுகிறது, ஆனால் சரீரம் தூய்மையற்றதாக இருக்கிறது. தூய்மையற்ற உலகத்தில் சரீரம் தூய்மையாக ஆவதே இல்லை. ஆத்மா இங்கு தான் தூய்மையாக ஆக வேண்டும், அப்போது தான் இந்த தூய்மையற்ற சரீரங்கள் வினாசம் ஆகும். ஆத்மா அழிவற்றதாக இருக்கிறது. ஆத்மாவின் வேலை எல்லையற்ற தந்தையை நினைவு செய்து தூய்மையாக ஆக வேண்டும். ஆத்மா தூய்மையாக இருக்கிறது என்றால் சரீரமும் தூய்மையாக வேண்டும். அது புதிய உலகத்தில் தான் கிடைக்கும். ஆத்மா என்னவோ தூய்மை யாகிவிடலாம், ஆத்மா ஒரு பரமபிதா பரமாத்மாவோடு தான் யோகத்தை ஈடுபடுத்த வேண்டும். இந்த தூய்மையற்ற சரீரத்தை தொடக் கூட கூடாது. இதை பாபா ஆத்மாக்களோடு பேசுகின்றார். புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் அல்லவா! சத்யுகத்திலிருந்து கலியுகம் வரை சரீரங்களோடு மாட்டிக் கொண்டுள்ளீர்கள். அங்கே ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே தூய்மையாக இருக்கிறது, அங்கே விகாரத்தில் செல்வதில்லை, அதன் மூலம் சரீரம் அல்லது ஆத்மா விகாரமுடையதாக ஆவதற்கு. வல்லபாச்சாரிகளும் கூட தொடுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுடைய ஆத்மா ஒன்றும் நிர்விகாரியாக தூய்மையாக ஒன்றும் இருப்பதில்லை என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஒரு வல்லபாச்சாரி சமயத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தங்களை உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று புரிந்து கொள்கிறார்கள், சரீரத்தைக் கூட தொட விடுவதில்லை. நாம் விகாரிகள் தூய்மையற்றவர்கள் என்று புரிந்து கொள்வதில்லை, சரீரம் கீழான தன்மையினால் தானே பிறந்திருக்கிறது! இந்த விஷயங்களை பாபா வந்து புரிய வைக்கின்றார். ஆத்மா தூய்மையாகிக் கொண்டே செல்கிறது என்றால் பிறகு சரீரத்தைக் கூட மாற்ற வேண்டும் அல்லவா! 5 தத்துவங்களும் தூய்மையாக ஆனால் தான் சரீரம் கூட தூய்மையானதாக ஆகும். சத்யுகத்தில் தத்துவம் கூட தூய்மையானதாக இருக்கிறது, அப்போது தான் சரீரம் கூட தூய்மையாக ஆகிறது. தேவதைகள் தூய்மையற்ற சரீரத்தில், தூய்மையற்ற பூமியில் கால் வைப்பதில்லை. அவர்களுடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே தூய்மையாக இருக்கிறது, சுத்தமாக இருக்கிறது ஆகையினால் அவர்கள் சத்யுகத்தில் தான் கால் வைக்கிறார்கள். இது தூய்மையற்ற உலகமாகும். ஆத்மா பரலௌகீக தந்தை பரமாத்மாவை நினைவு செய்கிறது. ஒருவர் சரீரத்தின் தந்தை, ஒருவர் அசரீரி தந்தை. அசரீரி தந்தையை நினைவு செய்கிறார்கள் ஏனென்றால் அவரிடமிருந்து அப்படிப்பட்ட சுகத்தின் ஆஸ்தி கண்டிப்பாகக் கிடைத்திருக்கிறது. எனவே நினைவு செய்யாமல் இருக்க முடியாது. இந்த சமயத்தில் தமோபிரதானமாக ஆகியிருக்கலாம், இருந்தாலும் கூட அந்த பாபாவை கண்டிப்பாக நினைவு செய்கிறார்கள். ஆனால் ஈஸ்வரன் சர்வவியாபி என்ற தலைகீழான படிப்பினை கிடைக்கிறது. பிறகு இந்த விஷயத்தில் குழம்பிவிடுகிறார்கள், பிறகு மனிதர்கள், மனிதர்களாகவே ஆகிவிடுகிறார்கள். இந்த தவறுகள் அனைத்தையும் பாபா வந்து புரிய வைக்கின்றார். பாபா ஒரேயொரு மன்மனாபவ எனும் மந்திரத்தைக் கொடுக்கின்றார், அதனுடைய அர்த்தமும் வேண்டும். தங்களை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்யுங்கள். அவ்வளவு தான், இந்த ஈடுபாட்டிலேயே இருக்க வேண்டும் அதன் மூலம் நீங்கள் தூய்மையாக ஆக முடியும். தேவதைகள் தூய்மையாக இருக்கிறார்கள், இப்போது பாபா வந்து மீண்டும் அப்படிப்பட்ட தூய்மையானவர்களாக மாற்றுகின்றார். முன்னால் குறிக்கோளை வைத்து விடுகிறார், யார் சிலை செதுக்குபவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் மனிதர்களுடைய முகத்தைப் பார்த்து உடனே அவர்களுடைய சிலையை உருவாக்கிவிடுகிறார்கள். அவர்கள் முன்னால் உயிருடன் அமர்ந்திருப்பதைப் போல் உருவாக்கி விடுகிறார்கள். அது ஜட மூர்த்தியாகி விடுகிறது. நீங்கள் அப்படிப்பட்ட உயிருள்ள இலஷ்மி-நாராயணனாக ஆக வேண்டும் என்று பாபா உங்களுக்கு கூறுகின்றார். எப்படி ஆவீர்கள்? நீங்கள் இந்த படிப்பு மற்றும் தூய்மையின் மூலம் மனிதனிலிருந்து தேவதையாக ஆவீர்கள். இந்த பள்ளியே மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்கானதாகும். அவர்கள் சிலை போன்றவை செய்வதை கலை என்று சொல்லப்படுகிறது. அப்படியே அதே முகம் போன்றவைகளை உருவாக்குகிறார்கள், இதில் அப்படியே என்பதின் விஷயமே இல்லை. இது ஜட சித்திரமாகும், அங்கே நீங்கள் இயற்கையாக உயிருடன் அப்படி ஆவீர்கள் அல்லவா ! 5 தத்துவங்களினால் ஆன உயிருள்ள சரீரம் இருக்கும். இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஜட சித்திரமாகும். அப்படியே இருக்க முடியாது ஏனென்றால் தேவதைகளின் புகைப்படம் எடுக்க முடியாதல்லவா! தியானத்தில் சென்று காட்சிகளை பார்க்கிறார்கள் ஆனால் புகைப்படம் எடுக்க முடியாது. நாங்கள் இப்படி காட்சியைப் பார்த்தோம் என்று சொல்வார்கள். சித்திரத்தை அவர்களோ, மற்றவர்களோ உருவாக்க முடியாது. தாங்கள் எப்போது அப்படி ஆக முடியும் என்றால் பாபாவிடமிருந்து ஞானத்தை பெற்று முழுமையாகும்போது தான் அப்படியே கல்பத்திற்கு முன் போன்று ஆக முடியும். இது இயற்கையின் எப்படிப்பட்ட அதிசயமான நாடகமாக இருக்கிறது! பாபா அமர்ந்து இந்த இயற்கையான விஷயங்களைப் புரிய வைக்கின்றார். மனிதர்களுக்கு இந்த விஷயங்கள் சிந்தனையில் கூட இருப்பதில்லை. அவர்களுக்கு முன்னால் சென்று தலைவணங்குகிறார்கள், இவர்கள் இராஜ்யம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள் என்று புரிந்து கொள்கிறார்கள். ஆனால் எப்போது? என்பது தெரியவில்லை. பிறகு எப்போது வருவார்கள் அல்லது என்ன செய்வார்கள், போன்ற எதுவும் தெரியாது. சூரியவம்சத்தவரும், சந்திரவம்சத்தவரும் இருந்துவிட்டு சென்றுள்ளார்கள், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள், அவர்கள் மீண்டும் இந்த ஞானத்தின் மூலம் அப்படியே ஆவார்கள். அதிசயமாக இருக்கிறது அல்லவா! எனவே இப்போது பாபா புரிய வைக்கின்றார் - அப்படி முயற்சி செய்வதின் மூலம் நீங்கள் தேவதையாக ஆவீர்கள். சத்யுகம்-திரேதாவில் இருந்தது போலவே நடத்தைகள் இருக்கும். எவ்வளவு அதிசயமான நாடகமாக இருக்கிறது! எப்போது மனம் தூய்மையாக இருக்குமோ, அப்போது தான் இது புத்தியில் நிற்கும். அனைவருடைய புத்தியிலும் இந்த விஷயங்கள் நிற்க முடியாது. உழைப்பு வேண்டும். உழைப்பு இல்லாமல் எந்த பலனும் கிடைத்துவிடுமா என்ன? பாபா முயற்சி செய்வித்துக் கொண்டே இருக்கின்றார். நாடகத்தின் படி தான் நடக்கிறது ஆனால் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. நாடகத்தில் இருந்தால் என் மூலம் முயற்சி நடக்கும் என்று அமர்ந்து விட முடியுமா? இப்படிப்பட்ட காட்டு மிராண்டித் தனமான எண்ணமுடையவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் - எங்களுடைய அதிர்ஷ்டத்தில் இருந்தால் முயற்சி கண்டிப்பாக நடக்கும். அட! நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். முயற்சி மற்றும் பலன் என்று இருக்கிறது. முயற்சி பெரியதா? அல்லது பலன் பெரியதா? என்று மனிதர்கள் கேட்கிறார்கள். பலன் தான் இப்போது பெரியதாக இருக்கிறது. ஆனால் முயற்சியை பெரியதாக வைக்கப்படுகிறது, அதன் மூலம் பலன் உருவாகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் முயற்சியின் மூலம் தான் அனைத்தும் கிடைக்கிறது. சிலர் தலைகீழாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கும் கல்புத்தியுடையவர்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய அதிர்ஷ்டத்தில் இல்லை என்று புரிந்து கொள்ளப்படுகிறது. மனமுடைந்து விடுகிறார்கள். இங்கே குழந்தைகளை எவ்வளவு முயற்சி செய்ய வைக்கின்றார்கள். இரவும்-பகலும் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். தங்களுடைய குணங்களை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

 

நம்பர் ஒன் குணம் தூய்மையாக ஆக வேண்டும். தேவதைகள் தூய்மையானவர்களாவர். பிறகு விழுந்து விடும்போது, குணங்கள் கெட்டு விடும்போது ஒரேயடியாக தூய்மையற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். நம்முடைய குணங்கள் ஒன்னாக (முதல் தரமாக) இருந்தது என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு ஒரேயடியாக விழுந்துவிடுகிறீர்கள். அனைத்தும் தூய்மையின் மீது தான் ஆதாரப்பட்டிருக்கிறது, இதில் தான் நிறைய கஷ்டம் ஏற்படுகிறது. மனிதர்களுடைய கண்கள் நிறைய ஏமாற்றுகிறது, ஏனென்றால் இராவண இராஜ்யமாக இருக்கிறது. அங்கே கண்கள் ஏமாற்றுவதே இல்லை. ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துவிடுகிறது, ஆகையினால் தர்மம் தான் சக்தி என்று சொல்லப்படுகிறது. சர்வசக்திவான் பாபா தான் வந்து இந்த தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார். செய்வது அனைத்தும் ஆத்மா தான் ஆனால் மனித ரூபத்தில் செய்யும். அந்த தந்தை ஞானக்கடலாக இருக்கின்றார், தேவதைகளிலிருந்து இவருடைய மகிமை முற்றிலும் தனிப்பட்டதாகும். எனவே அப்படிப்பட்ட தந்தையை ஏன் நினைவு செய்யக்கூடாது? அவரை ஞானக்கடல், விதையானவர் என்று சொல்லப்படுகிறது. அவரை ஏன் சத்-சித்-ஆனந்த் என்று சொல்லப்படுகிறது? மரத்தினுடைய விதை இருக்கிறது, அதற்கும் கூட மரத்தை பற்றி தெரியும் அல்லவா? ஆனால் அது ஜட விதையாகும். மனிதர்களிடத்தில் உயிருள்ள ஆத்மா இருக்கிறது. உயிருள்ள ஆத்மாவை ஞானக்கடல் என்று சொல்லப்படுகிறது. மரம் சிறியதிலிருந்து பெரியதாக ஆகிறது. எனவே கண்டிப்பாக ஆத்மா இருக்கிறது ஆனால் பேச முடியாது. பரமாத்மாவின் மகிமை எவ்வளவு இருக்கிறது! ஞானக்கடலாக இருக்கின்றார்.................... இந்த மகிமை ஆத்மாவினுடையது அல்ல, பரம் ஆத்மா என்றால் பரமாத்மாவிற்கு பாடப்படுகிறது, பிறகு அவரை ஈஸ்வரன் என்றெல்லாம் சொல்கிறார்கள். உண்மையான பெயர் பரமபிதா பரமாத்மா ஆகும். பரம் என்றால் சுப்ரீம் ஆகும். மிகப்பெரிய மகிமை பாடுகிறார்கள். இப்போது நாளுக்கு-நாள் மகிமைகளும் குறைகிறது ஏனென்றால் முதலில் புத்தி சதோ நிலையில் இருந்தது பிறகு இரஜோ, தமோபிரதானமாக ஆகிவிடுகிறது. இந்த விஷயங்கள் அனைத்தையும் பாபா வந்து புரிய வைக்கின்றார். நான் ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் வந்து பழைய உலகத்தை புதியதாக மாற்றுகின்றேன். சத்யுகம் முதலில் சத்தியம், நடப்பதும் சத்தியம்.............. என்று பாடப்பட்டுள்ளது. சில வாக்கியங்கள் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன ஏனென்றால் அவர்கள் அந்தளவிற்கு ஒன்றும் தூய்மையற்றவர்கள் இல்லை. பின்னால் வரக்கூடியவர்கள் அந்தளவிற்கு தூய்மையற்றவர்களாக ஆவதில்லை. பாரதவாசிகள் தான் மிகவும் சதோபிரதானமாக இருந்தார்கள், அவர்கள் தான் பிறகு நிறைய பிறவிகளின் கடைசியில் தமோபிரதானமாக ஆகியுள்ளார்கள், மற்ற தர்ம ஸ்தாபகர்களுக்கு இப்படி சொல்ல முடியாது. அவர்கள் இந்தளவிற்கு சதோபிரதானமாக ஆவதும் இல்லை, இந்தளவிற்கு தமோபிரதானமாக ஆக வேண்டியதுமில்லை. அதிக சுகத்தையும் பார்த்ததில்லை, அதிக துக்கத்தையும் பார்க்க மாட்டார்கள். அனைத்திலும் அதிக தமோபிரதான புத்தியாக யாருடையது ஆனது? யார் முதல்-முதலில் தேவதைகளாக இருந்தார்களோ, அவர்கள் தான் அனைத்து தர்மங்களையும் விட அதிகமாக விழுகிறார்கள். பாரதத்தின் மகிமை என்னவோ பாடுகிறார்கள், ஏனென்றால் மிகவும் பழமையானது. சிந்தித்துப் பார்த்தால் இந்த சமயத்தில் பாரதம் மிகவும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பது பாரதத்திற்கே ஆகும், அதாவது தேவி-தேவதைகளுடையதாகும். இதை புத்தியின் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் சதோபிரதானமாக இருந்த போது சுகத்தையும் அதிகமாக பார்த்துள்ளோம், பிறகு அதிக துக்கத்தையும் பார்த்திருக்கிறோம், ஏனென்றால் தமோபிரதானமாக இருக்கிறோம். முக்கியமானவை 4 தர்மங்களாகும் - தேவதா, இஸ்லாம், பௌத்தம் மற்றும் கிறிஸ்துவமாகும். மற்றவை இதிலிருந்து வளர்ந்தவைகளாகும். இந்த பாரதவாசிகளுக்கு எந்த தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவே இல்லை. தர்மத்தை தெரியாத காரணத்தினால் தர்மத்தையே விட்டுவிட்டார்கள். உண்மையில் அனைத்திலும் முக்கியமான தர்மமே இது தான் ஆகும். ஆனால் தங்களுடைய தர்மத்தையே மறந்துவிட்டார்கள். யார் புரிந்தவர்களாக புத்திசாலிகளாக இருக்கிறார்களோ அவர்கள், இவர்களுக்கு தங்களுடைய தர்மத்தின் மீது மரியாதை இல்லை என்று புரிந்து கொள்கிறார்கள். இல்லையென்றால் பாரதம் என்னவாக இருந்தது, இப்போது என்னவாக ஆகியுள்ளது! குழந்தைகளே, நீங்கள் என்னவாக இருந்தீர்கள்! என்று பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார். முழு வரலாறையும் அமர்ந்து புரிய வைக்கின்றார். நீங்கள் தேவதைகளாக இருந்தீர்கள், அரைக்கல்பம் இராஜ்யம் செய்தீர்கள் பிறகு அரைகல்பத்திற்கு பிறகு இராவண இராஜ்யத்தில் நீங்கள் கீழான தர்மமுடையவர்களாகவும், கீழான கர்ம முடையவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். இப்போது மீண்டும் தெய்வீக சம்பிரதாயத்தவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பகவானுடைய மகாவாக்கியம், பாபா கல்ப கல்பமாக குழந்தைகளாகிய உங்களுக்கே புரிய வைத்து ஈஸ்வரிய சம்பிரதாயத்தவர்களாக மாற்றுகின்றார். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தங்களுடைய உள்ளத்தின் தூய்மையின் மூலம் பாபாவின் அதிசயமான ஞானத்தை வாழ்க்கையில் தாரணை செய்ய வேண்டும், முயற்சியின் மூலம் உயர்ந்த பலனை உருவாக்க வேண்டும். நாடகம் என்று சொல்லி விட்டு நின்று விடக்கூடாது.

 

2) இராவண இராஜ்யத்தில் குற்றப்பார்வையின் ஏமாற்றத்திலிருந்து காத்துக் கொள்வதற்கு ஞானத்தின் மூன்றாவது கண்ணின் மூலம் பார்ப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும். நம்பர் ஒன் குணமான தூய்மையை தாரணை செய்ய வேண்டும்.

 

வரதானம்:

சத்தியம் என்ற அஸ்திவாரதத்தின் மூலம் நடத்தை மற்றும் முகத்தின் மூலம் தெய்வீகத் தன்மையின் அனுபவத்தை செய்விக்கக் கூடிய சத்தியமானவர் ஆகுக.

 

உலகில் பல ஆத்மாக்கள் தங்களை சத்தியமானவர் என்று கூறிக் கொள்கின்றனர் அல்லது நினைக்கின்றனர். ஆனால் முழுமையான தூய்மையின் ஆதாரத்தில் தான் சத்தியம் இருக்கிறது. தூய்மையில்லை எனில் சதா சத்தியத்துடன் இருக்க முடியாது. சத்தியத்திற்கு அஸ்திவாரமாக இருப்பது தூய்மையாகும். மேலும் சத்தியத்தின் நடைமுறை நிரூபணம் முகத்தில் மற்றும் நடத்தையில் தெய்வீகத்தன்மை இருக்கும். தூய்மையின் ஆதாரத்தில் சத்தியத்தின் சொரூபம் தானாகவே மற்றும் எளிதாக இருக்கும். ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் பாவனமாக ஆகின்ற பொழுது தான் சம்பூர்ன சத்தியமானவர், அதாவது தெய்வீகம் நிறைந்த தேவதை என்று கூற முடியும்.

 

சுலோகன்:

எல்லையற்ற சேவையில் பிஸியாக இருந்தால் எல்லையற்ற வைராக்கியம் தானாகவே வந்து விடும்.

 

ஓம்சாந்தி