03.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! சகோதரன் சகோதரன் என்பது உங்களுடைய அனாதி உறவாகும். நீங்கள் சாகாரத்தில் சகோதரன் சகோதரிகள். ஆகவே உங்களுக்கு குற்றப் பார்வை ஒருபோதும் ஏற்பட முடியாது.

 

கேள்வி:

வெற்றியடைந்த அஷ்ட இரத்தினங்கள் யார்? அவர்களுடைய மதிப்பு என்ன?

 

பதில்:

அஷ்ட இரத்தினத்தில் வருபவர்களுக்கு தவறான சிந்தனைகள் இருக்காது. முழுமையாக தூய்மையான பார்வை இருக்கும். அதாவது கர்மாதீத நிலையை அடைகிறார்கள். இவர்களுக்கு எந்த அளவிற்கு மதிப்பிருக்கிறது என்றால் யாருக்காவது கிரகச்சாரம் பிடித்துவிட்டால் அவர்களுக்கு அஷ்ட இரத்தினங்களின் மோதிரத்தை அணிவிக்கிறார்கள். இதனால் கிரகச்சாரம் நீங்கிவிடும் என நினைக்கின்றார்கள். அஷ்ட இரத்தினமாக மாறக் கூடியவர்களுக்கு தொலைநோக்குப் பார்வை இருக்கின்ற காரணத்தினால் சகோதரன் சகோதரன் என்ற நினைவில் நிரந்தரமாக இருக்கின்றார்கள்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகக் குழந்தைகள் அறிந்திருக்கிறார்கள். அவர்களின் பெயர் என்ன? பிராமணன். பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள் நிறைய பேர் இருக்கின்றார்கள். இதனால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் என்பது தெளிவாகிறது. ஏனெனில் ஒரு தந்தையின் குழந்தைகள். நிச்சயமாக தத்தெடுக்கப்பட்டவர்கள். பிரம்மா குமார் - பிரம்மா குமாரிகளாகிய நீங்கள் தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். நிறைய குழந்தைகள் இருக்கின்றார்கள். ஒரு புறம் பிரஜபிரதா பிரம்மாவின் குழந்தைகள், மற்றொரு புறம் பரம்பிதா சிவனின் குழந்தைகள். நிச்சயமாக அவர்களுக்குள் தொடர்பு இருக்கும். ஏனென்றால், அவர்கள் ஆன்மீகக் குழந்தைகள். இவருடையது உலகியல் குழந்தைகள் ஆகும். அவருடையவர் என்றால் சகோதரன் சகோதரன். பிரஜாபிதா பிரம்மாவினுடையவர் என்றால், சாகாரத்தில் சகோதரன் சகோதரிகள் ஆவர். சகோதரன் சகோதரி என்ற உறவு இருக்கும்பொழுது தவறான உறவு ஒருபோதும் ஏற்படாது. உங்களுக்கு இவர்கள் அனைவருமே சகோதரன் சகோதரியாக மாற்றுகிறார்கள் என்ற குரல் கேட்கிறதல்லவா? இதன் மூலம் தூய்மையான உறவு இருக்கட்டும். குற்றப்பார்வை ஏற்படக்கூடாது. இந்தப் பிறவியில் இந்தப் பார்வை ஏற்படுவதால் எதிர்காலத்தில் ஒருபோதும் குற்றப்பார்வை ஏற்படுவதில்லை. அங்கே சகோதரன் சகோதரி என்று நினைப்பார்கள் என்பது கிடையாது. அங்கே மகாராஜா மகாராணி இருப்பதைப் போன்றே இருக்கின்றார்கள். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் நாம் புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கிறோம், நாம் அனைவரும் சகோதரன் சகோதரி எனப் புரிந்து கொள்கிறீர்கள். பிரஜா பிதா பிரம்மா என்ற பெயர் இருக்கிறதல்லவா? பிரஜாபிதா பிரம்மா எப்போது இருந்தார் என்பது உலகத்தினருக்குத் தெரியவில்லை. நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். நாம் புருஷோத்தம சங்கமயுகத்தைச் சார்ந்த பி.கே என அறிகிறீர்கள். இப்போது இதை தர்மம் என கூற முடியாது. இந்த குலத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டு இருக்கின்றது. நீங்கள் பிராமண குலத்தைச் சார்ந்தவர்கள். நாங்கள் பிரம்மா குமார் - குமாரிகள். ஒரு பிரஜாபிதா பிரம்மாவின் வாரிசு என உங்களால் கூற முடியும். இது புது விஷயம் அல்லவா? நாங்கள் பி.கே என நீங்கள் கூறலாம். உண்மையில் நாம் அனைவரும் சகோதரர்கள் ஒரு தந்தையின் குழந்தைகள். அவரை தத்தெடுக்கப்பட்டவர் என்று கூற முடியாது. ஆத்மாக்களாகிய நாம் அவருடைய வாரிசு என்பது அனாதி ஆகும். அவர் பரம்பிதா பரமாத்மா (சுப்ரீம் சோல்) ஆவார். வேறு யாரையும் சுப்ரீம் என்று கூறமுடியாது. சம்பூரண பவித்திரமானவர்களைத்தான் சுப்ரீம் என்று அழைக்கின்றார்கள். அனைவருக்குள்ளும் தூய்மை இருக்கின்றது என்று கூற முடியாது. இந்த சங்கமத்தில் தான் தூய்மையைக் கற்றுக் கொள்கிறார்கள். கலியுக நிவாசி, சத்யுகநிவாசி என்று கூறுவது போல நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தைச் சார்ந்தவர்கள். சத்யுக கலியுகத்தை பலர் அறிந்திருக்கிறார்கள். ஒருவேளை தொலை நோக்கு புத்தி உடையவர்கள் என்றால் புரிந்து கொள்ள முடியும். கலியுகம் மற்றும் சத்யுகத்திற்கு இடைப்பட்ட காலத்தை சங்கமயுகம் என்று கூறுகின்றோம். ஒவ்வொரு யுகத்திலும் என சாஸ்திரங்களில் கூறப்பட்டு இருக்கின்றது. நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை என பாபா கூறுகின்றார். நாம் புருஷோத்தம சங்கமயுகத்தைச் சார்ந்த பிரம்மா குமாரர் குமாரிகள் என்பது புத்தியில் இருக்க வேண்டும். நாம் சத்யுகத்திலும் இல்லை, கலியுகத்திலும் இல்லை. நிச்சயமாக சங்கமயுகத்திற்குப் பிறகு தான் சத்யுகம் வரும்.

 

இப்பொழுது நீங்கள் சத்யுகத்திற்குப் போவதற்காக முயற்சி செய்து கொண்டு இருக்கின்றீர்கள். அங்கே தூய்மை இல்லாமல் யாரும் போக முடியாது. இச்சமயம் நீங்கள் தூய்மையாவதற்காக முயற்சி செய்கிறீர்கள் அனைவரும் தூய்மையாக முயற்சி செய்வது இல்லை. பலர் பதீதமாகவே இருக்கின்றார்கள். போகப் போக வீழ்ந்து விடுகிறார்கள். பிறகு மறைந்து வந்து அமிர்தத்தை அருந்துகிறார்கள். உண்மையில் அமிர்தத்தை விட்டு விட்டு விஷத்தை அருந்துபவர்களை சிறிது காலத்திற்கு வரவிடுவதில்லை. ஆனால் அமிர்தத்தை அளித்த போது விகாரி அசுரர்கள் மறைந்து வந்து அமர்ந்து விட்டார்கள் என்று கூறப்பட்டு இருக்கின்றது. இந்திர சபையில் இது போன்ற அபவித்திரமானவர்கள் மறைந்து வந்து அமர்ந்தார்கள் என்றால், அவர்களுக்கு சாபம் ஏற்படும். ஒரு தேவதை ஒரு விகாரியை அழைத்து வந்தார். அவருடைய நிலைமை என்னவாயிற்று என்று கதை கூட கூறுகின்றார்கள். விகாரிகளாக இருப்பவர்கள் நிச்சயமாக விழுந்துவிடுவார்கள். இது புரிந்து கொள்ளக்கூடிய விஷயமாகும். விகாரிகளால் முன்னேற முடியாது. அவர்கள் சென்று கல்லாக மாறிவிட்டனர் என்று கூறுகின்றனர். மனிதர்கள் கல்லாகவோ மரமாகவோ மாறுகிறார்கள் என்பது கிடையாது. கல்புத்தியாகி விட்டார்கள். இங்கே வருவதே தங்க புத்தியாக மாறுவதற்காக. ஆனால் மறந்து விஷத்தை அருந்தினால் கல்புத்தியாக இருப்பார்கள் என்பது தெளிவாகிறது. சாஸ்திரங்களில் கூட இவ்வாறு தான் எழுதுப்பட்டு இருக்கின்றது. இது எதிரிலேயே புரிய வைக்கப்படுகிறது. இந்திர சபை என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கின்றது. புகராஜ் (புஷ்பராகம்) தேவதை என்று விதவிதமான தேவதைகளைக் காண்பிக்கிறார்கள். இரத்தினங்களில் கூட வரிசைக்கிரமம் இருக்கிறதல்லவா! சிலர் மிகவும் நல்ல இரத்தினமாகவும் கொஞ்சம் குறைவாகவும் இருக்கிறார்கள். சில இரத்தினங்களின் மதிப்பு மிகவும் குறைவாகும். சிலரின் மதிப்பு மிகவும் அதிகமாகும். ஒன்பது இரத்தினங்களின் மோதிரம் நிறைய செய்கிறார்கள். விற்பனை செய்கிறார்கள். பெயர் இரத்தினங்கள் என்பது ஆகும். இங்கு அமர்ந்திருக்கிறார்கள் அல்லவா? இது வைரம், இது மரகதம், இது மாணிக்கம், புஷ்பராகம் கூட இருக்கிறது. இரவு பகல் வித்தியாசம் இருக்கின்றது. அவற்றின் மதிப்பிலும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. இவ்வாறு தான் மலர்களுடன் ஒப்பிடப்படுகிறது. அவைகளிலும் பலவிதம் இருக்கின்றது. யார் யார் எத்தகைய மலர் என குழந்தைகளுக்கு த்தெரியும். பிராமணிகள் வழிகாட்டிகளாக வருகிறார்கள் அவர்கள் நல்ல மலர்கள். சில மாணவர்கள் கூட புரிய வைப்பதில் மிகவும் கூர்மையாக இருக்கின்றார்கள். பாபா பிராமணிக்கு மலர் கொடுக்காமல் அவருக்குக் கொடுத்தார். கற்றுக் கொடுப்பவர்களை விட அவர்களுக்குள் நல்ல குணம் இருக்கின்றது. சிலருக்கும் கோபம் என்ற பூதம், பேராசை என்ற பூதம் என அவகுணம் இருக்கிறது. இவர் மனசுக்கு பிடித்த வழிகாட்டி, இவர் இரண்டாம் நம்பர் என பாபாவிற்கு தெரியும். ஒரு சில வழிகாட்டிகள் இந்த அளவிற்கு பிடித்தமானவர்களாக ஆவது கிடையாது. எவ்வளவு மாணவர்களை யார் அழைத்து வருகிறார்களோ அவ்வளவு அவர்கள் பிடித்த மானவர்களாக இருக்கின்றார்கள். கற்றுக் கொடுப்பவர்களே மாயையின் தாக்கத்தில் வந்து விகாரத்தில் விழுந்து விடுகிறார்கள். சிலர் புதை குழியிலிருந்து வெளியே எடுப்பதற்காக சென்று தானும் மாட்டிக் கொள்கிறார்கள். மாயா மிகவும் கடுமையானதாகும். குற்றப்பார்வை மிகவும் ஏமாற்றுகிறது என குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். குற்றப்பார்வையோடு இருக்கிறவரை சகோதரன் சகோதரிகளுக்கு என்ன டைரக்ஷன் (ஸ்ரீமத்) கிடைத்திருக்கிறதோ அதன் படி நடக்க முடியாது. நல்ல பார்வை குற்றப்பார்வையாக மாறிவிடுகிறது. குற்றப் பார்வை விலகி உறுதியான தூய்மையான பார்வை அடையும் நிலைக்கு கர்மாதீத நிலை என்று பெயர். இந்த அளவிற்கு தன்னை சோதித்துக் கொள்ள வேண்டும். ஒன்றாக இருந்தாலும் விகாரத்தின் பார்வை கூடாது. இங்கு நீங்கள் சகோதரன் சகோதரியாக இருக்கிறீர்கள். இடையில் ஞான வாள் இருக்கின்றது. நாம் பவித்திரமாக இருக்க வேண்டும் என்று உறுதியாக உறுதிமொழி எடுக்க வேண்டும். ஆனால் பாபா ஈர்ப்பு ஏற்படுகிறது, அந்த நிலை இன்னும் உறுதியாகவில்லை என்று எழுதுகிறார்கள். இப்படி ஆகக்கூடாது என முயற்சி செய்து கொண்டே இருக்கின்றார்கள். முழுமையாக தூய்மையான பார்வை ஏற்படும் பொழுது தான் வெற்றி அடைய முடியும். எந்த ஒரு விகார எண்ணங்களும் ஏற்படாத நிலைக்குத் தான் கர்மாதீத நிலை என்று பெயர். இந்த குறிக்கோளை அடைய வேண்டும்.

 

எவ்வளவு அதிசயமான மாலை உருவாகிறது! எட்டு இரத்தினங்களின் மாலை உருவாகின்றது. நிறைய குழந்தைகள் இருக்கின்றார்கள். சூரிய வம்சம், சந்திர வம்சம் இங்கே தான் உருவாகின்றது. அவர்கள் அனைவரையும் சேர்த்து முழுûமாக தேர்ச்சி, ஸ்காலர்ஷிப் அடையக்கூடியவர்கள் 8 இரத்தினங்கள் தான். இடையில் அவர்களை இரத்தினமாக மாற்றக்கூடிய வைரம் சிவனை வைக்கிறார்கள். இதனால் தான் இந்த இரத்தினங்கள் உருவாகியது. கிரகச்சாரம் பிடித்துவிட்டால் 8 இரத்தினங்களின் மோதிரத்தை அணிகிறார்கள். இச்சமயம் பாரதம் முழுமையிலும் இராகுவின் கிரகச்சாரம் பிடித்திருக்கிறது. முதலில் விருக்ஷபதி அதாவது பிரகஸ்பதி தசை இருந்தது. நீங்கள் சத்யுக தேவதைகளாக இருந்தீர்கள். முழு உலகையும் ஆட்சி செய்தீர்கள். பிறகு இராகு தசை வந்துவிட்டது. இப்போது நம் மீது பிரகஸ்பதி தசை இருந்தது. பெயர் விருட்சபதி என அறிகிறீர்கள். சுருக்கமாக பிரகஸ்பதி என கூறப்படுகிறது. நாம் உலகத்திற்கு அதிபதியாக இருந்தபோது பிரகஸ்பதி தசை இருந்தது. இப்போது இராகு தசை பிடித்துவிட்டது எனவே நாம் சோழியைப் போன்று மாறியிருக்கிறோம் என ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். கேட்க வேண்டிய விஷயம் இல்லை. இந்தத் தேர்வில் தேர்ச்சி அடைந்துவிடுவோமோ என குருக்களிடம் சென்று கேட்கிறார்கள். இங்கே கூட பாபாவிடம் நாங்கள் தேர்ச்சி அடைந்துவிடுவோமா என கேட்கிறார்கள். இவ்வாறு முயற்சி செய்து கொண்டே இருந்தால் ஏன் தேர்ச்சி அடைய மாட்டீர்கள்? ஆனால் மாயை மிகவும் சக்தி வாய்ந்தது. புயலைக் கொண்டு வருகின்றது. இச்சமயம் சரி, இன்னும் போகப்போக இன்னும் நிறைய புயல் வந்தால், இப்போது நீங்கள் யுத்த மைதானத்தில் இருக்கின்றீர்கள். பிறகு நான் எப்படி உத்திரவாதம் அளிக்க முடியும்? முன்பு மாலையை உருவாக்கினார். அதில் யாருக்கு இரண்டாவது மூன்றாவது இடத்தை ஒதுக்கினாரோ அவர்கள் இன்று இல்லை. ஒரேயடியாக முள்ளாக மாறிவிட்டார்கள். எனவே பிராமணர்களின் மாலையை உருவாக்க முடியாது என பாபா கூறுகின்றார். யுத்த மைதானம் அல்லவா! இன்று பிராமணன், நாளை சூத்திரன் ஆகிவிடுவார்கள், விகாரத்தில் விழுந்தனர் என்றால் சூத்திரன் ஆகிவிட்டனர். இராகுவின் திசை பிடித்துவிட்டது. துரோகி ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். ஒரு இராஜ்ஜியத்தில் இருந்து சென்று இன்னொரு இராஜ்ஜியத்தில் சரணடைந்து விடுகிறார்கள். அவர்களும் பார்ப்பார்கள். தனக்கு பயன்படுவார் என்று தெரிந்தால் அடைக்கலம் கொடுத்து விடுகிறார்கள். இவ்வாறு பலர் தேச துரோகிகள் ஆகி விமானம் உட்பட எடுத்துச் சென்று வேறு இராஜ்யத்தில் இருக்கிறார்கள். பிறகு அவர்கள் விமானத்தை திரும்பக் கொடுத்து விடுவார்கள். அவனுக்கு அடைக்கலம் கொடுத்து விடுவார்கள். விமானத்திற்கு அடைக்கலம் கொடுப்பதில்லை. அது அவர்களின் சொத்து. அவர்களின் பொருளை அவர்களுக்கே கொடுத்துவிடுவார்கள். மற்ற படி மனிதன் மனிதனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள்.

 

இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் சரணடைந்துள்ளீர். எங்களுடைய மரியாதையை காப்பாற்றுங்கள் என்று கூறுகின்றீர்கள். என்னை இவர்கள் துயிலுரித்தார்கள், பதீதமாவதிலிருந்து காப்பாற்றுங்கள் என்று திரௌபதி அழைத்தாள். சத்யுகத்தில் ஒருபோதும் துயிலுரிவதில்லை. அவர்களுக்கு சம்பூரண நிர்விகாரி என்கிறார்கள். சிறிய குழந்தைகள் கூட நிர்விகாரியாக இருக்கிறார்கள். இல்லறத்தில் இருந்தாலும் சம்பூரண நிர்விகாரியாக இருக்கிறார்கள். கணவன் மனைவி ஒன்றாக இருந்தாலும் கூட நிர்விகாரியாக இருக்கின்றார்கள். ஆகவே தான் நாங்கள் நரனிலிருந்து நாராயணனாக நாரியிலிருந்து இலட்சுமியாக மாறிக்கொண்டு இருக்கின்றோம் என்கிறார்கள். அதுவே நிர்விகாரி உலகம் ஆகும். அங்கே இராவணன் கிடையாது. அதற்கு இராம இராஜ்ஜியம் என்று பெயர். இராமர் என்று சிவபாபாவிற்குத் தான் கூறப்படுகிறது. இராமரின் பெயரை ஜபித்தல் என்பதன் பொருள் தந்தையை நினைவு செய்தல் ஆகும். இராம் இராம் என்று கூறும்பொழுது புத்தியில் நிராகாரர் தான் இருக்கின்றார். இராம் இராம் என்று கூறுகின்றார்கள். சீதையை விட்டு விடுகின்றார்கள். கிருஷ்ணரின் பெயரை எடுக்கும் பொழுது இராதையின் பெயரை விட்டு விடுகிறார்கள். இங்கே தந்தை ஒருவரே அவர் என்னை மட்டும் நினையுங்கள் என்று கூறுகின்றார். கிருஷ்ணரை பதீதபாவனர் என்று கூறமுடியாது. சிறிய வயதில் இராதையும் கிருஷ்ணரும் சகோதரன் சகோதரி கிடையாது. வெவ்வேறு இராஜ்ஜியத்தினர். குழந்தைகள் தூய்மை யானவர்களாக இருக்கின்றார்கள். குழந்தைகள் மலர் போன்றவர்கள் அவர்களுக்குள் விகாரத்தின் பார்வை இருக்காது என பாபா கூறுகின்றார். பெரியவர்கள் ஆகின்ற பொழுது பார்வை மாறுகின்றது. ஆகவே தான் குழந்தையையும் மகாத்மாவையும் சமம் என்கிறார்கள். அதாவது குழந்தை மகாத்மாவையும் விட உயர்ந்தவர். மகாத்மாவிற்கு நாம் விகாரத்தினால் பிறந்திருக்கிறோம் என்று தெரியும். குழந்தைக்கு அதுவும் தெரியாது. குழந்தை அப்பாவினுடையவர் ஆனதும் சொத்து கிடைக்கின்றது . நீங்கள் உலக இராஜ்ஜியத்தின் அதிபதி யாகின்றீர்கள். நீங்கள் உலகத்திற்கு அதிபதியாக இருந்தீர்கள் என்பது நேற்றைய விஷயம் ஆகும். இப்பொழுது மீண்டும் மாறிக் கொண்டு இருக்கின்றீர்கள். இவ்வளவு பிராப்தி கிடைக்கின்றது. எனவே கணவன் மனைவி சகோதரன் சகோதரியாகி தூய்மையாக இருப்பது என்ன பெரிய விஷயம்? சிறிதாவது முயற்சி வேண்டும் அல்லவா? ஆம் வரிசைக்கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப பிரகஸ்பதி தசையில் செல்கிறீர்கள். சொர்க்கத்திற்குச் செல்கிறீர்கள். பிறகு படிப்பிற்கு ஏற்ப சிலர் உயர்ந்த பதவி பெறுகிறார்கள். சிலர் மத்தியமான பதவி அடைகிறார்கள், சிலர் மலராகிறார்கள், சிலர் என்னவோ ஆகிறார்கள். தோட்டம் அல்லவா? பிறகு பதவியும் அவ்வாறே பெறுகிறார்கள். இவ்வாறு மலராவதற்காக மிகவும் முயற்சி செய்ய வேண்டும். ஆகையால் குழந்தைகளுக்கு காண்பிப்பதற்காக பாபா மலர்களை எடுத்து வருகின்றார். தோட்டத்தில் பல்வேறு விதமான மலர்கள் இருக்கின்றது. சத்யுகம் என்பது மலர் தோட்டம் ஆகும். இது முள்காடு ஆகும். இப்பொழுது நீங்கள் முள்ளிலிருந்து மலராவதற்காக முயற்சி செய்கிறீர்கள். ஒருவருக்கொருவர் முள்போன்று குத்துவதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றனர். யார் எவ்வளவு முயற்சி செய்கின்றனரோ அவ்வளவு வெற்றி அடைகின்றார்கள். காமத்தை வெல்வதால் தான் உலகத்தை வெல்ல முடியும் என்பது முக்கியமான விஷயம் ஆகும். இது குழந்தைகள் தான் செய்ய வேண்டும். இளைஞர்கள் மிகவும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும். வயதானவர்கள் சற்று குறைவு. வானப்பிரஸ்த நிலையை அடைந்தவர்களுக்கு இன்னும் குறைவு. குழந்தைகளுக்கு மிகவும் குறைவு.

 

நமக்கு உலகத்தின் ஆதிமத்தியத்தின் சொத்து கிடைக்கிறது. அதற்காக இந்த ஒரு பிறவி தூய்மையாக இருந்தால் என்ன என அறிகிறீர்கள். அவர்களுக்கு பால பிரம்மச்சாரி என்று பொருள். கடைசி வரை தூய்மையாக இருக்கின்றார்கள். தூய்மையாக மாறக்கூடியவர்களுக்கு பாபாவின் ஈர்ப்பு ஏற்படுகின்றது. குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஞானம் கிடைத்துவிட்டால் தப்பித்துக் கொள்ளலாம். சிறிய குழந்தைகள் தூய்மையாக இருப்பார்கள். பிறகு வெளியே பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போது அந்த சங்கத்தின் (தொடர்பின்) தாக்கம் ஏற்படுகின்றது. நல்ல சங்கத்தில் இருந்தால் பிரகாசிப்பார்கள். தீய சங்கத்தில் இருந்தால் மூழ்கிப் போவார்கள். நான் உங்களை சிவாலயத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என பாபா கூறுகின்றார். சத்யுகம் என்பது முற்றிலும் புதிய உலகமாகும். மிகவும் குறைவான மனிதர்களே அங்கு இருப்பார்கள் பிறகு வளர்ச்சி அடைகிறது. அங்கே மிகச் சில தேவதைகளே இருக்கிறார்கள். எனவே புதிய உலகத்திற்குச் செல்ல முயற்சி செய்ய வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. பாபாவின் மனதிற்குப் பிடித்தவர் ஆவதற்காக குணவான் ஆகவேண்டும். நல்ல நல்ல குணங்களைக் கடைப்பிடித்து மலர் போல ஆகவேண்டும். அவகுணங்களை நீக்க வேண்டும். யாரையும் முள்போன்று குத்தக்கூடாது.

 

2. முழுமையாக தேர்ச்சி அடைவதோடு, ஸ்காலர்ஷிபையும் பெற வேண்டுமெனில், எதுவும் நினைவில் வராத அளவிற்கு, முழுமையான தூய்மையான பார்வை வருமளவிற்கு மனநிலையை உருவாக்க வேண்டும். எப்பொழுதும் குருபார்வை உடையவராக இருக்க வேண்டும்.

 

வரதானம்:-

சுய சொரூபம் மற்றும் தந்தையின் சத்திய சொரூபத்தை அறிந்து சத்தியத்தின் சக்தியை தாரணை செய்யக்கூடிய தெய்வீகத்தன்மை நிறைந்தவர் ஆகுக.

 

எந்தக் குழந்தைகள் தனது சுய சொரூபத்தை மற்றும் தந்தையின் சத்திய அறிமுகத்தை யதார்த்தமாக அறிந்து கொள்கிறார்களோ மற்றும் அந்த சொரூபத்தின் நினைவில் இருக்கிறார்களோ, அவர்களுக்குள் சத்தியத்தின் சக்தி வந்துவிடுகிறது. அவர்களுடைய ஒவ்வொரு எண்ணமும் சதா சத்தியமானதாக மற்றும் தெய்வீகத்தன்மை நிறைந்ததாக இருக்கும். எண்ணம், பேச்சு, கர்மம் மற்றும் சம்பந்தம், தொடர்பு ஆகிய அனைத்திலும் தெய்வீகத்தன்மையின் அனுபவம் ஏற்படும். சத்தியத்தை நிரூபிப்பதற்கான அவசியம் இல்லை. ஒருவேளை, சத்தியத்தின் சக்தி உள்ளது எனில், குஷியில் நடனமாடிக் கொண்டே இருப்பார்கள்.

 

சுலோகன்:

சகாஷ் (சக்தி) கொடுக்கும் சேவை செய்யுங்கள், அப்பொழுது பிரச்சனைகள் சுலபமாக ஓடிவிடும்.

 

ஓம்சாந்தி