24.11.19                                காலை முரளி                               ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           12.03.85              மதுபன்


 

சத்தியத்தின் சக்தி

இன்று சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர், சத்குரு தங்களது சத்தியத்தின் சக்தி சொரூப குழந்தைகளைப் பாத்துக்கொண்டு இருக்கின்றார்கள். நீங்கள் சத்திய ஞானம் மற்றும் சத்தியத்தின் சக்தி எவ்வளவு மகானானது என்பதன் அனுபவி ஆத்மாக்கள் ஆவீர்கள். அனைத்து தூரதேசத்துக் குழந்தைகளும் வெவ்வேறு தர்மம், வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு பழக்க வழக்கங்களில் இருக்கின்றபோதும் இந்த ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் பக்கம் அல்லது இராஜயோகத்தின் பக்கம் ஏன் கவர்ச்சிக்கப்பட்டுள்ளனர்? சத்தியமான தந்தையின் சத்தியமான அறிமுகம் கிடைத்துவிட்டது அதாவது சத்திய ஞானம் கிடைத்துவிட்டது, உண்மையான பரிவாரம் (குடும்பம்) கிடைத்துவிட்டது, உண்மையான அன்பு கிடைத்துவிட்டது, உண்மையான பிராப்தியின் அனுபவம் கிடைத்துவிட்டது. ஆகையினால், சத்தியத்தின் சக்திக்குப் பின்னால் கவர்ச்சிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை இருந்தது, பிராப்தியும் இருந்தது, அவரவர் சக்திக்கேற்ப ஞானமும் இருந்தது, ஆனால், சத்திய ஞானம் இல்லாமல் இருந்தது. ஆகையினால், சத்தியத்தின் சக்தி சத்தியமான தந்தையினுடையவர்களாக ஆக்கிவிட்டது.

 

சத்தியம் என்ற வார்த்தைக்கு இரு அர்த்தங்கள் உள்ளன - சத்தியமானது உண்மையானதாகவும் உள்ளது மற்றும் சத்தியமானது அழிவற்றதாகவும் உள்ளது. எனவே, சத்தியத்தின் சக்தி அழிவற்றதாகவும் உள்ளது. ஆகையினால், அழிவற்ற பிராப்தி, அழிவற்ற சம்பந்தம், அழிவற்ற அன்பு, அழிவற்ற பரிவாரம் உள்ளது. இதே பரிவாரம் (குடும்பம்) 21 பிறவிகள் வெவ்வேறு பெயர், உருவில் சந்தித்துக்கொண்டே இருக்கும். அறிந்திருக்கமாட்டீர்கள். நாம் தான் வெவ்வேறு சம்பந்தத்துடன் பரிவாரத்தில் வந்துகொண்டே இருப்போம். இந்த அழிவற்ற பிராப்தி, அறிமுகம் தூரதேசத்தில் இருந்தபோதிலும் தங்களது சத்தியமான பரிவாரம், சத்தியமான தந்தை, சத்தியமான ஞானத்தின் பக்கம் ஈர்த்துவிட்டது. எங்கு சத்தியமும், அழிவற்ற நிலையும் உள்ளதோ, அதுவே பரமாத்ம அறிமுகம் ஆகும். எவ்வாறு நீங்கள் அனைவரும் இந்த விசேஷத்தன்மையின் ஆதாரத்தில் கவர்ச்சிக்கப்பட்டு இருக்கிறீர்களோ, அவ்வாறே சத்தியத்தின் சக்தியை, சத்திய ஞானத்தை உலகத்தில் பிரத்யட்சம் செய்ய வேண்டும். 50 ஆண்டுகளாக நிலம் உருவாக்கப்பட்டது, அன்பில் கொண்டு வரப்பட்டது, தொடர்பில் கொண்டு வரப்பட்டது, இராஜயோகத்தின் கவர்ச்சியில் கொண்டு வரப்பட்டது, சாந்தியின் அனுபவத்தின் மூலம் கவர்ச்சியில் கொண்டு வரப்பட்டது. இப்பொழுது மீதம் என்ன உள்ளது? எவ்வாறு பரமாத்மா ஒருவரே என்ற நம்பிக்கை அனைத்து வெவ்வேறு தர்மத்தினருக்கும் உள்ளதோ, அவ்வாறே யதார்த்தமான சத்திய ஞானம் ஒரே ஒரு தந்தையினுடையது அதாவது ஒரே ஒரு வழியே உள்ளது என்ற இந்த சப்தம் (வார்த்தை) எதுவரை உரக்க ஒலிக்கவில்லையோ, அதுவரை அனேக துரும்புகளின் ஆதாரத்தின் பக்கம் ஆத்மாக்கள் அலைவது நிற்காது. இப்பொழுது, இதுவும் ஒரு வழி, நல்ல வழி என்றே புரிந்துள்ளனர். ஆனால், ஒரே ஒரு தந்தையினுடைய ஒரே அறிமுகம், ஒரே வழியே இறுதியானது ஆகும். அனேக வழிகள் உள்ளன என்ற பிரமை முடிவடைவதே விஷ்வ சாந்திக்கான ஆதாரம் ஆகும். இந்த சத்திய அறிமுகத்தினை அல்லது சத்திய ஞானத்தின் சக்தியினுடைய அலை எதுவரை நாலாபுறங்களிலும் பரவாதோ, அதுவரை பிரத்யட்சத்தின் கொடியின் கீழே அனைத்து ஆத்மாக்களும் ஆதரவைப் பெற முடியாது. எனவே, பொன்விழா ஆண்டில் தந்தையின் வீட்டிற்கு விசேஷ அழைப்பு கொடுத்து வரவழைக்கிறீர்கள், தங்களுடைய மேடை, சிரேஷ்டமான சூழ்நிலை, சுத்தமான புத்தியின் தாக்கம், அன்பின் நிலம், தூய பாலனை உள்ளது. இத்தகைய வாயுமண்டலத்தில் தங்களது சத்திய ஞானத்தை பிரசித்தி பெறச் செய்வதே பிரத்யட்சத்தின் ஆரம்பம் ஆகும். எப்பொழுது படவிளக்கக் கண்காட்சி மூலம் பல்வேறு துறையின் சேவை ஆரம்பமானதோ, அப்பொழுது என்ன செய்தீர்கள் என்பது நினைவு உள்ளதா? முக்கியமாக ஞானத்தின் கேள்விகள் கொண்ட படிவத்தைப் (ஃபார்ம்) பூர்த்தி செய்ய வைத்தீர்கள் அல்லவா. பரமாத்மா சர்வவியாபியா அல்லது சர்வ வியாபி இல்லையா? கீதையின் பகவான் யார்? இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வைத்தீர்கள் அல்லவா? கருத்துக்களை எழுத வைத்தீர்கள் அல்லவா? புதிர் போட்டீர்கள். முதலில் இவற்றை ஆரம்பித்தீர்கள். ஆனால், போகப்போக இந்த விசயங்களை மறைமுகமான முறையில் செய்துகொண்டே, தொடர்பு, அன்பை முன்னால் வைத்து நெருக்கத்தில் கொண்டு வந்தீர்கள். இம்முறை எப்பொழுது இந்த பூமிக்கு வருகின்றார்களோ, அப்பொழுது சத்தியமான அறிமுகத்தைத், தெளிவான அறிமுகத்தைக் கொடுங்கள். இதுவும் நன்றாக உள்ளது என்பது வெறும் உடன்படுகிற விசயம் ஆகும். ஆனால், ஒரே ஒரு தந்தையின் ஒரு யதார்த்தமான அறிமுகமானது தெளிவாக புத்தியில் வந்துவிட வேண்டும். இந்த சமயத்தை இப்பொழுது கொண்டு வரவேண்டும். தந்தை இந்த ஞானத்தைக் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார், தந்தை வந்திருக்கின்றார் என்று நேரடியாகக் கூறிக் கொண்டு மட்டும் இருக்கிறீர்கள். ஆனால், இதுவே பரமாத்ம ஞானம், பரமாத்மாவின் காரியம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு செல்கின்றனரா? ஞானம் புதுமையாக உள்ளது என்பதை அனுபவம் செய்கின்றனரா? பரமாத்மா சர்வ வியாபியா அல்லது இல்லையா, ஒரே சமயம் தான் வருகின்றாரா? அல்லது அடிக்கடி வருகின்றாரா? என்பதைப் பற்றிய கருத்துப் பட்டறை (ஒர்க்ஷாப்) எப்பொழுதாவது வைத்திருக்கிறீர்களா? உலகத்தில் இதுவரை கேட்டிறாததை இங்கு கேட்டோம் என்று அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாகத் தெளிவான அறிமுகம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். யார் விசேஷமான பேச்சாளராக வருகின்றாரோ, அவருடன் இந்த ஞானத்தின் இரகசியங்களைப் பற்றிய ஆன்மிக உரையாடல் செய்வதன் மூலம் அவர்களுடைய புத்தியில் வந்துவிடும். கூடவே, என்ன சொற்பொழிவு ஆற்றுகிறீர்களோ, அதிலும் கூட தங்களது மாற்றத்தின் அனுபவத்தைக் கூறி, ஒவ்வொரு பேச்சாளாரும், ஒவ்வொரு புது ஞான விசயத்தைத் தெளிவுபடுத்த முடியும். பரமாத்மா சர்வவியாபி அல்ல என்பது போன்ற நேரடியான தலைப்பு வைக்கக்கூடாது. ஆனால், ஒரு தந்தையை ஒரு ரூபத்தில் அறிந்து கொள்வதன் மூலம் என்னென்ன விசேஷமான பிராப்திகள் கிடைத்திருக்கின்றனவோ, அந்தப் பிராப்திகளைக் கூறி சர்வவியாபி பற்றிய விசயங்களைத் தெளிவுபடுத்த முடியும். ஒரு பரந்தாம நிவாசி என்று புரிந்துகொண்டு நினைவு செய்வதன் மூலம் புத்தி எவ்வாறு ஒருமுகப்படுகிறது மற்றும் தந்தையின் சம்பந்தத்தின் மூலம் என்ன பிராப்திகளின் அனுபவம் ஏற்படுகிறது? இம்மாதிரியாக சத்தியம் மற்றும் பணிவு ஆகிய இரண்டு ரூபங்களின் மூலம் நிரூபிக்க முடியும். இதன் மூலம், இவர்கள் தங்களுடைய மகிமை பாடுகிறார்கள் என்ற அபிமானமும் தோன்றாது. பணிவு மற்றும் இரக்க உணர்வு அபிமானத்தின் உணர்வை ஏற்படுத்தாது. முரளி கேட்கும்பொழுது அபிமானத்துடன் கூறுகிறார்கள் என்று சொல்லமாட்டார்கள். அதிகாரத்துடன் (அத்தாரிட்டி) சொல்கிறார்கள் என்று கூறுவார்கள். வார்த்தை எவ்வளவு தான் கடுமையானதாக இருந்தாலும் அபிமானம் என்று கூறமாட்டார்கள். அதிகாரத்தின் அனுபவத்தைச் செய்கின்றார்கள். ஏன் அவ்வாறு ஏற்படுகிறது? எந்தளவு அதிகாரம் உள்ளதோ, அந்தளவே பணிவு மற்றும் இரக்க உணர்வு இருக்கும். தந்தையோ குழந்தைகளுக்கு முன்னால் கூறுகின்றார், ஆனால், நீங்கள் அனைவரும் இந்த சிறப்புத்தன்மையுடன், இந்த விதிப்படி மேடையில் தெளிவுபடுத்த முடியும்.. ஏற்கனவே சொல்லப்பட்டது அல்லவா, அதுபோல் ஒன்று சர்வவியாபி என்ற விசயத்தை வைக்க வேண்டும், இரண்டாவது பெயர் ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் என்ற விசயத்தை வைக்க வேண்டும், மூன்றாவது நாடகத்தின் கருத்தை புத்தியில் வைக்க வேண்டும். ஆத்மாவின் புதிய விசேஷத்தன்மைகளைப் புத்தியில் வைக்க வேண்டும். விசேஷமான தலைப்புகள் என்னென்ன உள்ளனவோ, அவற்றை இலட்சியத்தில் வைத்து அனுபவம் மற்றும் பிராப்தியின் ஆதாரத்ததுடன் தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் இந்த சத்தியமான ஞானத்தின் மூலமே சத்யுகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பகவானின் மகாவாக்கியம் என்ன விசேஷத்தன்மை கொண்டுள்ளது என்றால் அதை பகவானைத் தவிர வேறு எவரும் கூறமுடியாது. மனிதர், மனிதருடைய சத்குருவாக, சத்தியத் தந்தையாக ஒருபொழுதும் ஆகமுடியாது. மனிதர் பரமாத்மா ஆகமுடியாது போன்ற விசேஷமான சுலோகன்களை நீங்கள் நேரடியான வார்த்தைகளில் கூறுகிறீர்கள். இத்தகைய விசேஷமான கருத்துக்களை அவ்வப்போது கேட்டு வந்திருக்கிறீர்கள். அதனைக் கொண்டு வடிவமைத்திடுங்கள். இதன் மூலம் சத்திய ஞானத்தின் தெளிவு ஏற்படும். புதிய உலகிற்கான புதிய ஞானம் இதுவாகும். புதுமை மற்றும் சத்தியம் இரண்டும் அனுபவம் ஆக வேண்டும். மாநாடு நடத்துகிறீர்கள், அதில் சேவை நன்றாக நடக்கிறது. மாநாட்டிற்காக என்னென்ன சாதனங்களை உருவாக்குகிறீர்கள், சில சமயம் பட்டயம் (அதிகாரப்பத்திரம்), சில சமயம் அதைப்போன்ற வேறு ஒன்றை ஏற்பாடு செய்கிறீர்கள். இதன் மூலம் கூட தொடர்பை அதிகப்படுத்துவதற்கான சாதனத்தை உருவாக்குகிறீர்கள். இது கூட நல்ல சாதனமாகும். ஏனெனில், மாநாட்டிற்குப் பின்னும் தொடர்ந்து சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இப்பொழுது யார் வந்தாலும், ஆம், இது நல்ல விசயம், திட்டம் நன்றாக உள்ளது, பட்டயம் நன்றாக உள்ளது, சேவையின் சாதனமும் நன்றாக உள்ளது என்று கூறுகின்றனர். புதுமையான ஞானம் இன்று தெளிவானது என்று கூறிவிட்டுச் செல்ல வேண்டும். இவ்வாறு விசேஷமாக 5, 6 பேர்களை தயார் செய்ய வேண்டும். ஏனெனில், அனைவரின் மத்தியில் இந்த உரையாடல் செய்ய முடியாது. ஆனால், விசேஷமாக யார் வருகிறார்களோ, டிக்கட் போட்டு அழைத்து வருகிறீர்களோ, விசேஷ பாலனையும் கிடைக்கிறதோ, அவர்களிலும் கூட யார் புகழ்வாய்ந்தவர்களோ, அவர்களுடன் இந்த உரையாடல் செய்து அவர்களுடைய புத்தியில் தெளிவாகப் பதிய வைக்க வேண்டும். இவர்களுக்குத் தங்களுடைய போதை அதிகமாக உள்ளது என்றில்லாமல், இது சத்தியமானது என்று தோன்றும்படியான அத்தகைய திட்டத்தை உருவாக்குங்கள். இதைத் தான் அம்பும் தைக்க வேண்டும், ஆனால், வலியும் ஏற்படக்கூடாது என்று கூறப்படுகிறது. கூச்சலிடக் கூடாது, ஆனால், குஷியில் நடனமாட வேண்டும். சொற்பொழிவின் வடிவமைப்பேயே புதியதாக மாற்றுங்கள். விஷ்வ சாந்தியைப் பற்றி நிறைய சொற்பொழிவு ஆற்றிவிட்டீர்கள். ஆன்மிகத்தன்மையின் அவசியம் உள்ளது, ஆன்மிக சக்தி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இதுவோ, செய்தித்தாளில் வருகிறது, ஆனால், ஆன்மிக சக்தி என்றால் என்ன? ஆன்மிக ஞானம் என்றால் என்ன? இதற்கு மூலமானவர் யார்? இப்பொழுது இதை உணர்பவர்களாக இன்னும் ஆகவில்லை. பகவானின் காரியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். தாய்மார்கள் மிகவும் நல்ல காரியம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று இப்பொழுது கூறுகின்றனர். நேரத்தின் அனுசாரமாக இந்த நிலத்தையும் (சூழ்நிலையையும்) உருவாக்க வேண்டும். மகன் தந்தையை வெளிப்படுத்துவது போல் தந்தையும் மகனை வெளிப்படுத்துகின்றார். இப்பொழுது தந்தை மகனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த உரத்த ஒலி பிரத்யட்சத்தின் கொடியைப் பறக்கவிடும். புரிந்ததா?

 

பொன்விழா ஆண்டில் என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்தது அல்லவா? மற்ற இடங்களில் சூழ் நிலையைப் பார்க்க வேண்டியதாக உள்ளது, ஆனால், தந்தையின் வீடு, தங்களுடைய வீடு தங்களுடைய மேடை உள்ளது, எனவே, அத்தகைய இடத்தில் இந்த பிரத்யட்சத்தின் ஒலியை உரக்க ஒலிக்க முடியும். இவ்வாறு குறைந்த நபர்கள் கூட இந்த விசயத்தில் நிச்சயபுத்தி உடையவர்களாக ஆகிவிட்டார்கள் என்றால் அவர்களே சப்தத்தை உரக்க ஒலிப்பார்கள். இப்பொழுது ரிசல்ட் என்ன? தொடர்பு மற்றும் அன்பில் சுயம் வந்தவர்களே இந்த சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள், பிறரையும் கூட அன்பு மற்றும் தொடர்பில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். எந்தளவு சுயம் தான் ஆகிறார்களோ, அந்தளவு சேவை செய்து கொண்டு இருக்கிறார்கள். இதைக் கூட வெற்றி என்று கூறலாம் அல்லவா! ஆனால், இப்பொழுது இன்னும் முன்னேற வேண்டும். பெயர் அவப்பெயராக இருந்தது. முதலில் பயந்தார்கள், இப்பொழுது வர விரும்புகின்றார்கள். இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது அல்லவா? முன்னர் பெயரைக் கேட்பதற்கு விரும்பாதவர்களாக இருந்தனர், இப்பொழுது பெயரைச் சொல்வதற்கு விருப்பம் கொண்டிருக்கின்றனர். 50 வருடத்தில் இந்த வெற்றியை அடைந்திருக்கிறீர்கள். நிலத்தை உருவாக்குவற்கே சமயம் ஆகிறது. 50 வருடங்கள் இதில் ஈடுபட்டாயிற்று,, பிறகு, இன்னும் என்னவாகும் என்று நினைக்காதீர்கள். முதலில் நிலத்தை உழுவதற்குத் தகுதியானதாக ஆக்குவதற்கு சமயம் ஆகிறது. விதை விதைப்பதற்கு சமயம் ஆகுவதில்லை. சக்திசாலியான விதையின் பலன் சக்திசாலியான தாக வெளிப்படுகிறது. இதுவரை என்ன நடந்திருக்கிறதோ, அதுவே நடந்திருக்க வேண்டும், அதுவே சரியானதும் ஆகும். நல்லது.

 

(அயல்நாட்டுக் குழந்தைகளைப் பார்த்து) இந்த சாதகப் பறவைகள் நன்றாக உள்ளனர். பிரம்மா தந்தை நீண்ட கால அழைப்பிற்குப் பின்னர் உங்களுக்கு பிறவி கொடுத்திருக்கின்றார். விசேஷமான அழைப்பின் மூலம் பிறந்திருக்கிறீர்கள். தாமதாகிவிட்டது உண்மை தான், ஆனால், ஆரோக்கியமாக மற்றும் நன்றாகப் பிறந்திருக்கிறீர்கள். தந்தையின் குரல் வந்து சேர்ந்தது, ஆனால், சமயம் வந்தவுடன் அருகாமையில் வந்துவிட்டீர்கள். விசேஷமாக பிரம்மா தந்தை மகிழ்ச்சி அடைகின்றார். தந்தை மகிழ்ச்சி அடைவார் என்றால் குழந்தைகளும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், விசேஷமாக பிரம்மா தந்தையின் அன்பு உள்ளது, ஆகையினால், பெரும்பான்மையினர் பிரம்மா தந்தையை பார்க்காத போதிலும் பார்த்தது போன்ற அனுபவம் செய்கின்றீர்கள். சித்திரத்தில் கூட சைத்தன்யத்தின் அனுபவம் செய்கின்றீர்கள். இந்த விசேஷத்தன்மை உள்ளது. பிரம்மா தந்தையினுடைய அன்பின் விசேஷமான சகயோகம் ஆத்மாக்களாகிய உங்களுக்கு உள்ளது. பாரதத்தினர், பிரம்மா ஏன், இது ஏன்? என்று கேள்வி கேட்பார்கள். ஆனால், அயல்நாட்டுக் குழந்தைகள் வந்தவுடனேயே பிரம்மா தந்தையின் கவர்ச்சியினால் அன்பில் கட்டுண்டுவிட்டனர். எனவே, இந்த விசேஷமான சகயோகத்தின் வரதானம் உள்ளது. ஆகையினால், பார்த்திராத போதிலும், அதிகப் பாலனையின் அனுபவத்தை செய்து கொண்டு இருக்கிறீர்கள். உள்ளத்தில் இருந்து பிரம்மா பாபா என்று கூறுகின்றீர்கள். இது விசே􀀀மான சூட்சும அன்பினுடைய சம்பந்தம் ஆகும். இவர்கள் என் பின்னால் எவ்வாறு வருவார்கள் என்று தந்தை யோசிக்கவில்லை. நீங்களும் யோசிக்கவில்லை, பிரம்மாவும் யோசிக்கவில்லை. எதிரிலேயே இருக்கின்றீர்கள். ஆகார ரூபத்தில் கூட சாகார ரூபத்திற்குச் சமமாக பாலனை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். இவ்வாறு அனுபவம் செய்கின்றீர்கள் அல்லவா? குறைவான சமயத்தில் எத்தனை நல்ல ஆசிரியர்கள் தயாராகிவிட்டனர்! அயல்நாட்டு சேவை துவங்கி எவ்வளவு சமயம் ஆகியுள்ளது? எத்தனை ஆசிரியர்கள் தயாராகி உள்ளனர்? நன்றாக உள்ளது, பாப்தாதா குழந்தைகளுடைய சேவையின் ஈடுபாட்டைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஏனெனில், விசேஷமான சூட்சும பாலனை கிடைக்கின்றது அல்லவா. பிரம்மா தந்தையின் விசேஷ சமஸ்காரமாக என்ன பார்த்தீர்கள்? சேவை இல்லாமல் தந்தையால் இருக்க முடிந்ததா? எனவே, அயல்நாட்டில் தொலைவில் இருக்கக்கூடியவர்களுக்கு இந்த விசேஷபாலனையின் சகயோகம் கிடைத்திருக்கும் காரணத்தினால் சேவையின் ஊக்கம் அதிகமாக உள்ளது.

 

பொன்விழா ஆண்டில் வேறு என்ன செய்திருக்கிறீர்கள்? தானும் பொன்னானவர்கள் மற்றும் விழாவும் பொன்விழா. நல்லது. அவசியம் சமநிலையின் கவனம் வைக்க வேண்டும். சுயம் மற்றும் சேவை. சுய முன்னேற்றம் மற்றும் சேவையின் முன்னேற்றம். சமநிலை வைப்பதன் மூலம் தன்னுடன் சேர்த்து அனேக ஆத்மாக்களுக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கச் செய்வதற்கு நிமித்தம் ஆனவர்கள் ஆகிவிடுவீர்கள். புரிந்ததா! சேவையினுடைய திட்டத்தை உருவாக்கும் பொழுது முதலில் சுய ஸ்திதியின் மீது கவனம் இருக்க வேண்டும், அப்பொழுதே திட்டத்தில் சக்தி நிரம்பும். திட்டம் என்பது விதையாகும். விதையில் ஒருவேளை சக்தி இல்லை, சக்திசாலியான விதையாக இல்லை எனில், எவ்வளவு தான் உழைத்தாலும் அது சிரேஷ்ட பலனைத் தராது. ஆகையினால், திட்டத்தின் கூடவே சுய ஸ்திதியின் சக்தியை அவசியம் நிறைத்துக் கொண்டே இருக்க வேண்டும். புரிந்ததா. நல்லது.

 

அத்தகைய சத்தியத்தை பிரத்யட்சம் செய்யக்கூடிய, சதா சத்தியம் மற்றும் பணிவினுடைய சமநிலை கொண்டிருக்கக்கூடிய, ஒவ்வொரு வார்த்தையின் மூலம் ஒரு தந்தையின் ஒரு அறிமுகத்தை நிரூபிக்கக்கூடிய, சதா சுய முன்னேற்றத்தின் மூலம் வெற்றியை அடையக்கூடிய, சேவையில் தந்தையினுடைய பிரத்யட்சத்தின் கொடியைப் பறக்கவிடக்கூடிய, அத்தகைய சத்குருவினுடைய, சத்தியத் தந்தையினுடைய சத்தியமான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம் உரித்தாகுக.

 

விடைபெறும் சமயம் தாதிஜி போபால் செல்வதற்கு விடைபெறுகிறார்கள்.

சென்றாலும் சேவை, இருந்தாலும் சேவை. சேவைக்கு நிமித்தம் ஆகியிருக்கும் குழந்தைகளுடைய ஒவ்வொரு எண்ணத்தில், ஒவ்வொரு விநாடியில் சேவை அடங்கியுள்ளது. உங்களைப் பார்த்து எந்தளவு ஊக்கம், உற்சாகம் அதிகரிக்குமோ, அந்தளவே தந்தையை நினைவு செய்வார்கள். சேவையில் முன்னேறு வதனாலேயே வெற்றி சதா கூடவே இருக்கிறது. தந்தையையும் உடன் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறீர்கள், வெற்றியையும் உடன் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறீர்கள். எந்த இடத்திற்குச் செல்வீர்களோ, அங்கு வெற்றி இருக்கும். (மோகினி சகோதரியிடம்) சுற்றுவதற்காக சென்று கொண்டிருக்கிறீர்கள். சுற்றுவது என்றால் அனேக ஆத்மாக்களுக்கு சுய முன்னேற்றத்திற்கான சகயோகம் கொடுப்பதாகும். கூடவே எப்பொழுது மேடையில் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்பொழுது புதுமையாக சொற்பொழிவாற்றிவிட்டு வரவேண்டும். முதலில் நீங்கள் ஆரம்பிக்க வேண்டும், அப்பொழுது முதல் எண்ணில் வந்துவிடுவீர்கள். எங்கு சென்றாலும் அனைவரும் என்ன கேட்பார்கள்? பாப்தாதாவின் அன்பு நினைவுகளைக் கொண்டு வந்திருக்கிறீர்களா? எவ்வாறு பாப்தாதா அன்பினுடைய, சகயோகத்தினுடைய சக்தியைக் கொடுக்கின்றார்களோ, அவ்வாறே நீங்களும் கூட தந்தையிட மிருந்து அடைந்த அன்பு, சகயோகத்தின் சக்தியைக் கொடுத்துக்கொண்டே செல்ல வேண்டும். அனைவரையும் ஊக்கம் உற்சாகத்தில் பறக்க வைப்பதற்காக ஏதாவதொரு அத்தகைய மந்திரம் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அனைவரும் குஷியில் நடனமாடிக்கொண்டே இருப்பார்கள். ஆன்மிகத்தன்மையின் குஷியில் அனைவரையும் நடனமாடச் செய்ய வேண்டும் மற்றும் இரமணீகரத்தின் மூலம் அனைவரையும் குஷி குஷியாக முயற்சியில் முன்னேறுவதற்குக் கற்பிக்க வேண்டும். நல்லது.

 

வரதானம் :

சுயத்தின் சக்கரத்தை அறிந்து ஞான சொரூப ஆத்மா ஆகக்கூடிய பிரபுவிற்குப் பிரியமானவர் ஆகுக.

 

ஆத்மாவிற்கு இந்த சிருஷ்டிச் சக்கரத்தில் என்னென்ன நடிப்பு உள்ளது, அதை அறிந்து கொள்வது என்றால் சுயதரிசன சக்கரத்தை சுழற்றுவதாகும். சுயத்தின் சக்கரத்தை அறிந்துகொள்வது என்றால் ஞான சொரூப சுயதரிசன சக்கரதாரி ஆகுவதாகும். முழு சக்கரத்தைப் பற்றிய ஞானத்தை புத்தியில் சரியான முறையில் தாரணை செய்வது தான் ஆத்மா ஆகுவதாகும். அத்தகைய ஞான சொரூப ஆத்மாவே பிரபுவிற்குப் பிரியமானவர். அவருக்கு முன்னால் மாயை நிற்க முடியாது. இந்த சுயதரிசன சக்கரமே எதிர்காலத்தில் சக்கரவர்த்தி இராஜாவாக ஆக்கிவிடுகிறது.

 

சுலோகன்:

ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்குச் சமமாக வெளிப்படையான சான்றாக (பிரத்யட்ச பிரமாணம்) ஆனீர்கள் என்றால், பிரஜைகள் விரைவாகத் தயாராகிவிடுவார்கள்.

 

ஓம்சாந்தி