21.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உயிர் தானம் கொடுப்பவர் பாபா, அவர் அப்படிப்பட்ட ஞானத்தைக் கொடுக்கிறார், அதன் மூலம் உயிர் தானம் கிடைத்து விடுகின்றது. அத்தகைய உயிர் தானம் கொடுப்பவராகிய பாபாவை அன்புடன் நினைவு செய்யுங்கள்.

 

கேள்வி :

எந்த ஆதாரத்தில் 21 பிறவிகளுக்கு உங்களுடைய அனைத்துக் கஜானாக்களும் நிறைந்திருக்கும்?

 

பதில் :

சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கும் இந்த ஞானம் வருமானத்திற்கான ஆதாரமாகும். இந்தப் படிப்பின் ஆதாரத்தில் அனைத்துக் கஜானாக்களும் நிறைந்து விடுகின்றன. இந்தப் படிப்பினால் 21 பிறவிகளுக்கு மகிழ்ச்சி கிடைத்து விடுகின்றது. எந்த ஒரு பொருளையும் அடைய வேண்டுமென்ற ஆசை இருக்காது. பாபா ஞானத்திற்கான தானம் அதுபோல் கொடுக்கின்றார், அதன் மூலம் ஆத்மா எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு மாறிவிடுகின்றது!

 

ஓம் சாந்தி.

பகவான் வாக்கு - சாலிகிராம்கள் (ஆத்மாக்கள்) புரிந்து கொண்டிருக்கிறார்கள், சிவபாபா நமக்குக் கற்றுத் தருவதற்காக வருகின்றார். அவரே சிருஷ்டியின் முதல்-இடை-கடையினை அறிவார் என்பதை குழந்தைகள் அறிவார்கள். குழந்தைகளுக்கு இப்போது எதுவும் புதிய விஷயமாகத் தோன்றவில்லை. புரிந்து கொண்டு விட்டார்கள். மனிதர்களோ அனைத்தையும் மறந்து விட்டார்கள். யார் கற்பித்தாரோ, அவருக்குப் பதில் முதல் நம்பரில் படிக்கிறவரின் பெயரைப் போட்டு விட்டார்கள். நீங்கள் படித்துப் படித்து இவ்விஷயத்தை உறுதிப் படுத்த வேண்டும். பாரதத்தின் சாஸ்திரங்களின் விஷயம் தான், மற்ற தர்மங்களின் விஷயமல்ல. பாரதத்தின் சாஸ்திரங்களினுடைய தவறு தான். உங்களைத் தவிர வேறு யாரும் இவ்விஷயங்களை உறுதிப்படுத்த முடியாது. குழந்தைகளுக்குத் தெரியும் இது அனாதி டிராமா, பிறகு மீண்டும் நடைபெறும். நீங்கள் மனிதர்கள் அனைவரையும் சீர்திருத்துவதற்காக முயற்சி செய்கிறீர்கள். மனிதர்கள் எப்போது திருந்துகிறார்களோ, அப்போது உலகமே திருந்தி விடுகின்றது. சத்யுகம் என்பது சீர் மிகுந்த புதிய உலகம், கலியுகம் என்பது சீர்கெட்டுப் போன பழைய உலகம். இதையும் குழந்தைகளாகிய நீங்கள் நல்லபடியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மேலும் தாரணை செய்து மற்றவர்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பதற்கான தகுதியுள்ளவர்களாகவும் ஆகிறீர்கள். இதில் மிகவும் புத்திக் கூர்மை வேண்டும். பாபா உங்களுக்கு எவ்வளவு தெளிவு படுத்திப் புரியவைக்கின்றார், செம்மைப் படுத்துகின்றார்! பாபா சொல்கிறார், எப்போது நீங்கள் சீர்திருந்தி விடுகிறீர்களோ, பிறகு நான் சீர்திருத்து வதற்கான அவசியம் இருக்காது. நீங்கள் தூய்மையற்றவர்களாக (அன்-ஆரியர்) ஆகியிருந்தீர்கள். இப்போது தூய்மையானவர்களாக (ஆரியராக), அதாவது தேவதைகளாக ஆக வேண்டும். அதுபோல் சத்யுகத்தில் தான் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் சீர்மிகுந்தவர்களாக இருந்தார்கள். இப்போது சீர்கெட்டவர்கள் அவர்களுக்குப் பூஜை செய்கின்றனர்.நாம் அவர்களை ஏன் சீர்மிகுந்தவர்கள் என்று சொல்கிறோம் என்பது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. அனைவருமே மனிதர்கள் தாம். யார் சீர்மிகுந்தவர்களாக இருந்தார்களோ, அவர்கள் அனைவருமே சீர்கெட்டுப் போனவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். ஆரியர் மற்றும் அன்-ஆரியர். மற்றப்படி ஆரிய சமாஜத்தினர் எனப்படுபவர்கள் ஒரு மதப்பிரிவினர்கள். இவை அனைத்தையும் கல்ப விருட்சத்தின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இது மனித சிருஷ்டியின் விருட்சமாகும். ஆனால் கல்ப விருட்சம் என்ற சொல்லின் மூலம் மனிதர்களின் புத்தியில் மரம் வருவதில்லை. உங்களுக்கு விருட்சத்தின் ரூபத்தில் புரிய வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் (பக்தியில்) லட்சக்கணக்கான வருடங்கள் எனச் சொல்லிவிடுகின்றனர். பாபா சொல்கிறார், கல்பம் என்பது 5000 வருடங்கள் தான். ஆனால் ஒவ்வொருவரும் அதன் ஆயுளை ஒவ்வொரு விதமாகச் சொல்கின்றனர். முழுமையாகச் சொல்லிப் புரிய வைப்பவர்கள் யாருமில்லை. தங்களுக்குள் சாஸ்திரவாதங்கள் எவ்வளவு செய்கின்றனர்! உங்களுடையதோ ஆன்மீக உரையாடல். நீங்கள் கருத்தரங்கம் நடத்துகிறீர்கள், இது ஆன்மீக உரையாடல் எனப்படுகின்றது. புரிந்து கொள்வதற்காகக் கேள்வி-பதில் கூட நடத்துகிறீர்கள். பாபா உங்களுக்கு என்னென்ன சொல்கிறாரோ அதிலிருந்து தலைப்புகள் உருவாக்கி நீங்கள் சொல்கிறீர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள், இதையும் நீங்கள் போய்க் கேளுங்கள். இந்த விதமாக வாத-விவாதங்கள் அங்கே நடை பெறுகின்றன என்று பிறகு வந்து சொல்ல வேண்டும், முதலிலோ இதைப் புரிய வைக்க வேண்டும், அதாவது கீதையின் பகவான் யார்? பகவானாகிய தந்தையை மறந்த காரணத்தால் முற்றிலும் நஷ்டக் கணக்கில் வந்து விட்டுள்ளனர்.குழந்தைகளாகிய உங்களுக்கோ பாபா மீது அன்பு உள்ளது. நீங்கள் பாபாவை நினைவு செய்கிறீர்கள். பாபா தாம் உயிர்மூச்சு என்ற தானத்தைக் கொடுப்பவர். ஞானத்தின் தானத்தை அப்படிக் கொடுக்கின்றார், அதன் மூலம் எதிலிருந்து எதுவாக ஆகிவிடுகிறீர்கள்! ஆகவே பாபாவிடம் அன்பு இருக்க வேண்டும். பாபா நமக்கு இப்படி-இப்படி புதுப்புது விஷயங்களைச் சொல்கின்றார். நாம் கிருஷ்ணரை எவ்வளவு நினைக்கிறோம்! அவர் எதையும் தருவதில்லை. நாராயணரை நினைவு செய்கின்றனர். நினைவு செய்வதால் ஏதாவது நடக்கிறதா என்ன? நாமோ ஏழையிலும் ஏழையாகவே இருந்து விட்டோம். தேவதைகள் எவ்வளவு பெரும் செல்வந்தர்களாக இருந்தார்கள்! இப்போது எல்லாமே செயற்கையான பொருள்களாக ஆகிவிட்டன. எதற்கு விலை எதுவும் இல்லாதிருந்ததோ அது இப்போது விலை கொடுத்து வாங்கும் பொருளாக ஆகிவிட்டது. அங்கே தானியம் முதலானவற்றிற்கு விலை என்ற விஷயமே இல்லை. அனைவருக்கும் அவரவரது சொத்து முதலியவை இருக்கும். இல்லாத பொருள் என்று எதுவும் இருக்காது. அதனால் அதற்காக ஆசைப்பட வேண்டி இராது. பாபா சொல்கிறார் -- நான் உங்களுடைய கஜானாவை நிரப்பித் தருகின்றேன். உங்களுக்கு அத்தகையதோர் ஞானத்தைக் கொடுக்கிறேன், அதன் மூலம் உங்களுடைய கஜானா நிரம்பி விடுகின்றது. உங்களுடைய புத்தியில் இருப்பது - ஞானம் வருமானத்திற்கான ஆதாரம். ஞானம் தான் எல்லாமே! இப்படிப்பினால் நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்களாக ஆகிறீர்கள்! படிப்பின் கஜானா உள்ளது இல்லையா? அந்த ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். அதன் மூலம் அற்பகால சுகம் கிடைக்கின்றது. இந்தப் படிப்பின் மூலம் உங்களுக்கு 21 பிறவிகளுக்கான சுகம் கிடைக்கின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி இருக்க வேண்டும். இதைப் புரிந்து கொள்வதில் நேரம் பிடிக்கின்றது. விரைவாக யாரும் புரிந்து கொள்வதில்லை. கோடியில் சிலர் வெளிப்படுகின்றனர். அரைக்கல்ப மாக மனிதர்கள் அனைவரும் ஒருவர் மற்றவரைக் கீழே விழ வைத்துக் கொண்டே இருக்கின்றனர். உயர்த்துபவர் ஒரே ஒரு பாபா. எல்லையற்ற படிப்பைக் கற்றுத் தருபவருக்கும் பதில் படிப்பவரின் பெயரைப் போட்டு விட்டிருக்கிறார்கள். உலகம் இந்த விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை. சொல்கிறார்கள் பகவான் வாக்கு, படிப்பு சொல்லிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். பிறகு அவருடைய சாஸ்திரம் எதுவும் இருப்பதில்லை. சத்யுகத்தில் சாஸ்திரம் எதுவும் கிடையாது. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்கள். எவ்வளவு பெரிய விருட்சம்! பக்தியின் மரக்கிளைகள் இவைகளெல்லாம் இல்லையென்றால் மரத்தின் பெயரும் கூட இருக்காது. இவையனைத்தும் தாரணை செய்வதற்கான விஷயங்களாகும். நீங்கள் தாரணை செய்கிறீர்கள். படிப்பு சொல்லித் தருபவரோ சொல்லிக் கொடுத்துவிட்டு மறைந்து விடுகின்றார். படிப்பவர்கள் போய் உலகத்திற்கு மாலிக் ஆகின்றனர். எவ்வளவு புதிய விஷயங்கள்! ஒரு விஷயம் கூட யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. மாணவர்களாகிய நீங்களும் கூட வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். சிலர் பாஸாகின்றனர், சிலர் ஃபெயிலாகி விடுகின்றனர். இது எல்லையற்ற பெரிய பரீட்சை. நீங்கள் அறிவீர்கள், நாம் இப்போது நல்ல படியாகப் படித்தால் கல்ப-கல்பமாக நன்றாகப் படிப்போம். நன்றாகப் படிப்பவர்கள் தாம் உயர்ந்த பதவி பெறுவார்கள். நம்பர்வார் அனைவரும் செல்வார்கள். முழு வகுப்பும் டிரான்ஸ்ஃபர் ஆகிவிடும். நம்பர்வார் போய் அமர்கின்றனர். இந்த ஞானமும் கூட ஆத்மாவில் உள்ளது. நல்ல அல்லது கெட்ட சம்ஸ்காரம் ஆத்மாவில் உள்ளது. சரீரமோ மண் தான். ஆத்மா நிர்லேப் (பாவ புண்ணியம் ஒட்டாத ஒன்றாக) ஆக முடியாது. 100 சதவிகிதம் சதோபிரதான் யார்? மற்றும் 100 சதவிகிதம் தமோபிரதான் யார் --? இதையும் நீங்கள் அறிவீர்கள். முதலிலோ ஏழைகளை உயர்த்த வேண்டும். அவர்கள் முதலில் வருவார்கள். குருமார்களுக்கும் கூட நல்ல-நல்ல சிறந்த சீடர்கள் எப்போது வருவார்களோ, அப்போது அவர்கள் அனைவருடைய புத்தியும் திறக்கும். இவர்களோ நம்முடைய இலைகளாகவே வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று பார்ப்பார்கள். இங்குள்ளவர்கள் யார் இருப்பார்களோ, அவர்கள் வெளிப்படவே செய்வார்கள். பாபா வந்து புதிய விருட்சத்தைத் தொடங்கி வைக்கின்றார். யார் பிற தர்மங்களில் போய் விட்டிருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் திரும்புவார்கள். பிறகும் தங்களது பாரதத்தில் தான் வருவார்கள். பாரதவாசியாகத் தான் இருந்தார்கள் இல்லையா? நமது கிளையைச் சேர்ந்தவர்கள் யார்ரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் வந்து விடுவார்கள். இன்னும் போகப்போக நீங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டே செல்வீர்கள். இப்போது வெளியிலிருந்து அனைவருக்கும் அடி கிடைத்துக் கொண்டே இருக்கிறது. எங்கெங்கே வெளிநாட்டினர் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் விரட்டிக் கொண்டே இருக்கின்றனர். இவர்களெல்லாம் தனவான் ஆகிவிட்டார்கள், இங்குள்ளவர்கள் ஏழையாகி விட்டனர் என்று நினைக்கிறார்கள். பின்னால் அனைவரும் தங்கள்-தங்கள் மதங்களில் போக வேண்டியதிருக்கும். கடைசியில் அனைவரும் தங்கள்-தங்கள் வீட்டைப் பார்த்து ஓடுவார்கள். வெளிநாட்டில் யாராவது இறந்தால் அவர்களை பாரதத்திற்குக் கொண்டு வருகின்றார்கள். ஏனென்றால் பாரதம் முதல் தரமான பவித்திர பூமி. பாரதத்தில் தான் புதிய உலகம் இருந்தது. இச்சமயம் இதை நிர்விகாரி உலகம் என்று சொல்ல முடியாது. இது விகாரி உலகம். அதனால், ஹே பதீத-பாவனா வா, வந்து எங்களைப் பாவனமாக்கு என்று அழைக்கின்றனர்.. உலகமென்னவோ இதே தான். ஆனால் இச்சமயம் உலகத்தில் தூய்மையானவர்கள் யாருமே இல்லை. பாவன ஆத்மாக்கள் மூலவதனில் இருக்கிறார்கள். அது பிரம்ம மகதத்துவம். அனைவரும் பாவனமாகி அங்கே செல்வார்கள். பிறகு வரிசைக்கிரமமாக இங்கே நடிப்பதற்காக வருவார்கள். ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தின் அஸ்திவாரம் இது. பிறகு மூன்று கிளைகள் வெளிவருகின்றன. இதுவோ தேவதா தர்மம். இது கிளையல்ல. முதலில் இந்த அஸ்திவாரம், பிறகு மூன்று கிளைகள் வெளிப்படுகின்றன. முக்கியமானவை நான்கு தர்மங்கள். அனைத்தையும் விட நல்ல தர்மம் இந்த பிராமண தர்மம். இதற்கு மிகுந்த மகிமை உள்ளது. இங்கே நீங்கள் வைரம் போல் ஆகிறீர்கள். பாபா உங்களுக்கு இங்கே கற்றுத் தருகின்றார். ஆக, நீங்கள் எவ்வளவு பெரியவர்கள்! தேவதைகளையும் விட பிராமணர்களாகிய நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள். அதிசயம் இல்லையா? நாம் பெற்றுக் கொள்ளும் ஞானம் நம்முடன் கூடவே வரும். பிறகு அங்கே ஞானத்தையே மறந்து விடுகின்றோம். நீங்கள் அறிவீர்கள், முதலில் நாம் என்ன படித்திருந்தோம், இப்போது என்ன படிக்கின்றோம் என்பதை. .சி.எஸ். காரர்கள் என்ன படிக்கிறார்கள், அதன் பிறகு என்ன படிக்கிறார்கள்? வேறுபாடு உள்ளது இல்லையா? இன்னும் போகப்போக நீங்கள் மிகவும் புதிய பாயின்ட்கள் (கருத்துக்கள்) கேட்பீர்கள். இப்போது சொல்ல மாட்டேன். நாடக பாகத்தில் பின்னால் சொல்ல வேண்டுமென்று தான் உள்ளது. புத்தியில் உள்ளது - ஞானத்தின் பாகம் எப்போது முடிவடைய வேண்டுமென்று உள்ளதோ அப்போது நாமும் அச்சமயம் பாபாவின் ஞானத்தை தாரணை செய்து விடுவோம். பிறகு நமது பாகம் சத்யுகத்தில் ஆரம்பமாகி விடும். அவருடைய பாகம் முடிவடைந்து விடும். புத்தியில் மிக நன்றாக தாரணையாக வேண்டும். சிந்தனை செய்து கொண்டே இருங்கள், பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். நினைவு இல்லை யென்றால் குறைந்த பதவி பெறுவீர்கள். பாபாவை நினைவு செய்து-செய்தே சரீர உணர்வு நீங்கிப் போய்விடும். சந்நியாசிகளும் இந்த நிலையை அப்பியாசம் செய்து-செய்து சரீரத்தை விட்டுவிடுகின்றனர். ஆனால் அவர்களது வழி தனிப்பட்டது. அதனால் அவர்கள் பிறகு பிறவி எடுக்க வேண்டியுள்ளது. சீடர்கள் நினைக்கிறார்கள், அவர் போய் பிரம்மத்தில் ஐக்கியமாகி விட்டார், மீண்டும் வரமுடியாது என்று. பாபா சொல்லிப் புரிய வைக்கிறார், யாருமே திரும்பிச் செல்ல முடியாது. கடைசியில் நடிகர்கள் அனைவரும் எப்போது மேடைக்கு வருகிறார்களோ, அப்போது வீட்டுக்குச் செல்வார்கள். அது எல்லைக்குட்பட்ட அழியக் கூடிய நாடகம். நீங்கள் நல்லபடி புரிய வைக்க முடியும், இந்த நாடகச் சக்கரம் போல் சுழன்று கொண்டே இருக்கிறது. அவர்களோ பிறகு சின்னச் சின்ன நாடகங்களைத் தயாரிக்கிறார்கள். பொய்யான படங்களை எடுக்கிறார்கள். அவற்றில் கொஞ்சம் நல்ல விஷயங்கள் உள்ளன, எப்படி விஷ்ணு அவதாரத்தைக் காட்டுகின்றனரோ, அதுபோல. மேலிருந்து யாரோ இறங்கி வந்து விட்டார் என்பதில்லை. இலட்சுமி-நாராயணரின் பாகத்தை நடிப்பதற்காக வருகின்றனர். மற்றப்படி மேலிருந்து யாரும் வருவதில்லை. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா கற்றுத் தருகின்றார். அதனால் இவ்விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள முடிகின்றது. முதலில் நீங்களும் தாழ்ந்த புத்தியுள்ளவர்களாகவே இருந்தீர்கள். எப்போது பாபா சொல்லிப் புரிய வைத்தாரோ அப்போது உங்களது புத்தி திறந்து கொண்டு விட்டது. இவ்வளவு காலமாக என்னென்ன கேட்டீர்களோ அதெல்லாம் எதற்கும் உதவாது, மேலும் நீங்கள் கீழே இறங்கியே வந்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் அனைவரிடமும் எழுதி வாங்குகிறீர்கள். எழுதிக் கொடுக்கும் போது தான் புரிந்து கொள்ளலாம் -- ஏதோ கொஞ்சம் அவர்களது புத்தியில் பதிந்துள்ளது என்று. வெளியிலிருந்து வருகிறார்கள், படிவம் நிரப்புகிறார்கள் என்றால், நமது குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம், முக்கியமான விஷயம், பாபாவை அறிந்து கொள்ள வேண்டியது. கல்ப-கல்பமாக பாபா நமக்குக் கற்பிக்கின்றார் எனப் புரிந்து கொள்ள வேண்டும். இதைக் கேட்க வேண்டும் -- எப்போதிலிருந்து பவித்திரமாகியிருக்கிறீர்கள்? விரைவில் சீர்திருந்துவதில்லை. அடிக்கடி மாயா பற்றிக் கொள்கின்றது. மாயா பார்க்கிறது - பக்குவமடையாதவர்கள் என்றால் விழுங்கி விடுகின்றது. அநேக மகாரதிகளையும் கூட மாயா விழுங்கி விட்டுள்ளது. சாஸ்திரங்களில் உள்ள உதாரணங்களும் கூட இப்போதைய விஷயம் தான். கோயில்களிலும் குதிரைப்படை, மகாரதி மற்றும் காலாட்படை முதலியவற்றைக் காட்டுகின்றனர். நீங்கள் இப்போது உங்களுடைய நினைவுச் சின்னங்களைப் பார்க்கின்றீர்கள். எப்போது ஆகிவிடுகிறீர்களோ, அப்போது பக்தி போய்விடும். நீங்கள் யாருக்கும் தலைவணங்கக் கூடாது. நீங்கள் கேட்பீர்கள் -- இவர்கள் (தேவதைகள்) எங்கே சென்று விட்டார்கள்? இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுங்கள். பாபா குழந்தைகளாகிய உங்களை ஞானம் நிறைந்தவர்களாக ஆக்கி யிருக்கிறார். அதனால் நீங்கள் கேட்கிறீர்கள். ஆகவே நஷா இருக்க வேண்டும். 8 பேர் பாஸ் வித் ஆனர் ஆகிறார்கள் (கௌரவமான முழுத் தேர்ச்சி பெறுகின்றனர்). இது மிகப் பெரிய பரீட்சை. தன்னைத் தான் பார்க்க வேண்டும். ஆத்மா நான் பவித்திரமாகி யிருக்கிறேனா? பேட்ரி நிரம்பும் போது தான் யோகா இருக்கும். பாபாவிடம் யோகா சரியாக இருந்தால் சதோப்ரதான் ஆவீர்கள். தமோப்ரதான் ஆத்மா திரும்பிச் செல்ல முடியாது.

 

இதுவும் நாடகம். அங்கே துக்கம் கொடுக்கக் கூடிய எந்த ஒரு பொருளும் இருக்காது. பசுக்களும் கூட அழகாக இருக்கும். கிருஷ்ணருடன் கூடவே பசுக்களை எவ்வளவு அழகானவையாகக் காட்டுகின்றனர்! பெரிய பெரிய மனிதர்களின் ஃபர்னிச்சர் கூட அழகாக உள்ளன. பசுக்கள் நல்ல பாலைக் கொடுக்கின்றன. அதனால் தான் பாலாறுகள் ஓடுகின்றன. இப்போது இங்கே இல்லை. இப்போது நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாக ஆகிவிட்டிருக்கிறீர்கள். இந்த உலகத்தைத் துச்சமாக நீங்கள் உணர்கிறீர்கள்;. இதனுடைய குப்பைகள் முழுவதும் ஸ்வாஹா ஆகிவிடும். பிறகு குப்பை முழுவதும் நீங்கி அனைத்தும் தூய்மையாகி விடும். நாம் நமது இராஜ்யத்திற்குச் செல்கிறோம். அதன் பெயர் சொர்க்கம். கேட்கும் போதே குஷி ஏற்படுகின்றது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. இந்தச் சீர்கெட்ட பழைய உலகத்தைச் செம்மைப் படுத்துவதற்காகத் தன்னைத் தான் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். தனது புத்தியை பாபாவின் நினைவில் தூய்மைப் படுத்த வேண்டும்.

 

2. தங்களுக்குள் ஆன்மீக உரையாடல் செய்ய வேண்டும். வாத-விவாதம் கூடாது. ஞானத்தை தானம் செய்து அனைவருடைய கஜானாக்களும் நிரம்பச் செய்ய வேண்டும்.

 

வரதானம்:

அன்பிற்கு மாற்றாக (ரிட்டன்) தன்னை மாற்றி (டர்ன்) தந்தைக்கு நிகராகக் கூடிய நிறைந்தவர் மற்றும் முழுமை பெற்றவர் ஆகுக.

 

அன்பின் அடையாளமே, அன்பிற்குரியவரின் குறைகளைப் பார்க்காமல் இருப்பதாகும். அன்பிற்குரியவரின் தவறை, தனது தவறாக நினைத்துக் கொள்வர். பாபா எப்போது குழந்தைகளின் ஏதேனும் விசயத்தை கேட்டாலும், அதை தனது விசயமாகக் கருதுகிறார். பாபா குழந்தைகளை தனக்கு நிகராக நிறைந்தவராகவும், (சம்பன்ன) முழுமை (சம்பூர்ண) பெற்றவராகவும் காண விரும்புகிறார். இந்த அன்பிற்கு மாற்றாக, தன்னை மாற்றிக் (டர்ன்) கொள்ளுங்கள். பக்தர்களோ தலையைக் கொய்து முன் வைக்கவும் தயாராக இருக்கின்றனர். நீங்கள் உடலின் தலையைக் கொய்து வைக்க வேண்டாம். ஆனால் இராவணனின் தலையைக் கொய்து வையுங்கள்.

 

சுலோகன்:

தனது ஆன்மீக வைப்ரேஷன் மூலமாக சக்திசாலியான வாயுமண்டலத்தை உருவாக்கக் கூடிய சேவையை செய்வது தான் அனைத்தையும் விட உயர்ந்த சேவையாகும்.

 

ஓம்சாந்தி