31.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! தந்தை சங்கமயுகத்தில் உங்களுக்கு எந்த நினைவுகளைக் கொடுத்துள்ளரோ, அதை சிந்தனை செய்யுங்கள் அப்போது சதா மலர்ந்த முகத்தோடு இருப்பீர்கள்.

 

கேள்வி:

சதா இலேசாக இருப்பதற்கான யுக்தி என்ன? எந்த சாதனத்தை தனதாக்கினீர்கள் என்றால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்?

 

பதில்:

சதா இலேசாக இருக்க வேண்டுமெனில் இந்தப் பிறவியில் என்னென்ன பாவம் செய்தீர்களோ, அவை அனைத்தையும் அழியாத சர்ஜன் முன் வைத்துவிடுங்கள். மற்றபடி பல பிறவிகளின் பாவம் எதெல்லாம் தலை மேல் உள்ளதோ அதற்காக நினைவு யாத்திரையில் இருங்கள். நினைவு மூலமாகவே பாவம் நீங்கும். பிறகு மகிழ்ச்சி ஏற்படும். தந்தையின் நினைவினால் தான் ஆத்மா சதோபிரதானமாகும்.

 

ஓம்சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைக்கின்றார் உங்களுக்கு நினைவு வந்துவிட்டது-நாங்கள் ஆதிசனாதன தேவி-தேவதா தர்மத்திருந்தோம், நாங்கள் இராஜ்யம் செய்தோம், நாமே உலகிற்கு எஜமானராக இருந்தோம் என்று. அந்த நேரத்தில் வேறு தர்மம் இல்லை. நாமே சத்யுகத்திலிருந்து பிறவி எடுத்து 84 பிறவிச் சக்கரத்தை முடித்துள்ளோம். முழு மரத்தின் நினைவு வந்துவிட்டது. நாம் தேவதைகளாக இருந்தோம், பிறகு இராவண இராஜ்யத்தில் வந்துவிட்டோம். தேவி-தேவதா என சொல்வதற்கு தகுதியில்லை. எனவே, வேறு தர்மத்தினர் எனப் புரிந்துள்ளோம். வேறு யாருடைய தர்மமும் மாறவில்லை. எவ்வாறு கிறிஸ்துவின் கிறிஸ்தவ தர்மமும், புத்தரின் புத்த தர்மமுமே தொடர்ந்து வருகின்றது. புத்தர் இந்த நேரத்தில் தர்மத்தைப் படைத்தார் என அனைவரின் புத்தியிலும் உள்ளது. நமது இந்து தர்மம் எப்போது ஆரம்பமானது யாரால் உருவாக்கப்பட்டது? என இந்துக்களுக்கு தனது தர்மத்தைப் பற்றித் தெரியாது. இலட்சக்கணக்கான ஆண்டுகள் எனக் கூறிவிட்டனர். முழு உலக சக்கரத்தின் ஞானம் குழந்தைகள் உங்களிடம் மட்டுமே இருக்கிறது, இதைத் தான் ஞானம்-விஞ்ஞானம் என சொல்லப்படுகிறது. அவர்கள் விஞ்ஞான் பவன் என பெயர் வைத்துள்ளனர்;. ஆனால், தந்தை அதன் அர்த்தத்தைப் புரிய வைக்கின்றார், ஞானம் மற்றும் யோகம் படைப்பவர் மற்றும் படைப்பின் ஆதி, மத்திய, அந்திமத்தின் ஞானம், இதனை இப்போது நீங்கள் புரிந்துள்ளீர்கள், நாமும் தெரியாமல் இருந்தோம், நாஸ்திகராக இருந்தோம். சத்யுகத்தில் இந்த ஞானம் இருக்க முடியாது. இப்போது உங்களுக்கு ஆசிரியர் படிப்பிக்கின்றனர். படித்த பிறகு உங்களுக்கு இராஜ்ய பாக்கியம் கிடைக்கும், ஏனென்றால் நீங்கள் வசிப்பதற்கு புதிய உலகம் வேண்டும். இந்த பழைய உலகில் தேவி-தேவதைகள் கால் வைக்க முடியாது. தந்தை வந்து உங்களுக்காக பழைய உலகை அழித்து புதிய உலகைப் படைக்கின்றார். நமக்காக அழிவு அவசியம் ஆக வேண்டும். கல்ப-கல்பமாக நாம் நமது பங்கை நடிக்கின்றோம். பாபா கேட்கின்றார் இதற்கு முன் எப்போது சந்தித்தீர்கள்? பாபா, ஒவ்வொரு கல்பமும் சந்திக்கின்றோம், உங்களிடமிருந்து இராஜ்ய பாக்கியத்தை அடைய எனக் கூறுகின்றனர். கல்பத்திற்கு முன்பாகவும் எல்லையற்ற சுகமான இராஜ்ய பாக்கியம் கிடைத்தது. இந்த எல்லா விசயங்களும் நினைவில் வந்துள்ளது, இப்போது இதனை சிந்தனை செய்ய வேண்டும், இதைத்தான் பாபா சுயதர்சன சக்கரம் எனக் கூறுகின்றார். நாம் முதலில் சதோபிரதானமாக இருந்தோம். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தனித்தனியான நடிப்பு கிடைத்துள்ளது என்ற நினைவும் உங்களுக்கு வந்துவிட்டது. ஆத்மா சிறியதாக, அழியாததாக இருக்கிறது, அதில் நடிப்பும் அழியாததாக தொடர்ந்து நடக்கிறது. இது நிச்சயமானதாக, உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. இதில் புதிய விசயத்தை சேர்க்கவோ, அல்லது நீக்கவோ முடியாது. யாருமே மோட்சத்தை அடைய முடியாது. சிலர் முக்தி வேண்டுகின்றனர், முக்திவேறு, மோட்சம் வேறாகும். இதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நினைவில் இருந்தால் தான் பிறருக்கும் நினைவை ஏற்படுத்த முடியும். உங்களின் வேலையே இதுதான். தந்தை எந்த நினைவைக் கொடுத்தாரோ, அந்த நினைவை மற்றவர்களுக்கும் ஏற்படுத்துங்கள். அப்போது உயர்ந்த பதவி அடைய முடியும் உயர்ந்த பதவி அடைய மிகவும் உழைக்க வேண்டும். முக்கிய உழைப்பு யோகத்தில் இருக்கிறது. இது நினைவு யாத்திரை, இதனை தந்தையைத் தவிர வேறு யாராலும் கற்றுத்தர முடியாது. இப்போது நீங்கள் மனிதனிலிருந்து தேவதையாக படிக்கின்றீர்கள். உங்களுக்குத் தெரியும் நாம் மீண்டும் புது உலகம் செல்வோம். அதன் பெயர் தான் அமரலோகம். இது மரண உலகமாகும். இங்கு திடீரென அமர்ந்து கொண்டே மரணம் வருகிறது. அங்கு மரணத்தின் பெயர், அடையாளம் இல்லை. ஏனென்றல், பொதுவாக ஆத்மாவை காலன் சாப்பிட முடியாது. ஆத்மா இனிப்பான பொருளா என்ன ! நாடகப்படி நேரம் வரும்போது ஆத்மா சென்று விடுகிறது. எந்த நேரம் யாருக்கு செல்ல வேண்டுமோ அவர்கள் சென்றுவிடுவர். காலன் யாரையும் பிடிப்பதில்லை. இதெல்லாம் கதையாக உருவாக்கியுள்ளனர். ஆத்மா ஒரு உடலை எடுக்கிறது. காலன் என்று ஒன்றுமில்லை. அது அமலரலோகம், அங்கே நோயற்ற சரிரம் இருக்கும். சத்யுகத்தில் பாரதவாசிகளின் ஆயுள் அதிகமாக இருந்தது. எவ்வளவு நீங்கள் யோகத்தில் இருப்பீர்களோ, அவ்வளவு பாவம் எரிந்து சாம்பலாகும் மேலும் பதவியும் உயர்வாகக் கிடைக்கும், ஆயுளும் அதிகமாகும். இராஜா, இராணி எவ்வாறு ஆயுள்காலம் முடிந்ததும் உடலை விடுவார்களோ, அவ்வாறே பிரஜைகளுக்கும் ஏற்படும். ஆனால், பதவியில் வித்தியாசம் இருக்கிறது.

 

இப்போது தந்தை கூறுகின்றார் - சுயதர்ஷன சக்கரதாரி குழந்தைகளே, இந்த அலங்காரம் உங்களுடையது. நீங்கள் குடும்ப சூழ்நிலையில் இருந்து கொண்டு தாமரை மலருக்குச் சமமாக இருக்கின்றீர்கள், வேறு யாராலும் இவ்வாறு இருக்க முடியாது. இந்தப் பிறவியில் நாம் எவ்வளவு பாவம் செய்தோம் என்ற நினைவு வந்துவிட்டது, எனவே தந்தை கூறுகின்றார் அவை அனைத்தையும் அழியாத சர்ஜன் முன் சொன்னால் இலகுவாக ஆவீர்கள். மற்றபடி பல பிறவிகளின் பாவங்கள் தலைமேல் இருக்கிறது, அதற்காக நினைவில் இருங்கள். யோகத்தினால் மட்டுமே பாவம் நீங்கும், மேலும் மகிழ்ச்சியும் ஏற்படும். தந்தையின் நினைவினால் சதோபிரதானமாவீர்கள். நினைவினால் நாம் இவ்வாறு ஆவோம் எனத் தெரிந்த பிறகு யார் தான் செய்யமாட்டார்கள்? ஆனால், இது யுத்த மைதானமாக இருக்கிறது, உயர்ந்த பதவி அடைய உழைப்பு செய்ய வேண்டியதாகின்றது. எல்லையற்ற தந்தையிடமிருந்து நாம் உயர்ந்ததிலும் உயர்ந்த பிராப்தி அடைகிறோம், கல்ப-கல்பமாக அடைகின்றோம் என்ற நினைவும் குழந்தைகளுக்கு வந்திருக்கிறது. உங்களிடம் நிறைய பேர் வருவார்கள், மன்மனாபவ எனும் மந்திரத்தை அடைவார்கள். மன்மனாபவ என்பதன் அர்த்தம் தன்னை ஆத்மா எனப் புரிந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். மஹான் ஆத்மா ஆவதற்கு இது மஹாமந்திரம், அவர்கள் யாரும் மஹாத்மா அல்ல. பொதுவாக மஹாத்மா என ஸ்ரீ கிருஷ்ணருக்கு சொல்லப்படுகிறது, ஏனென்றால் அவர் தூய்மையானவர். தேவதைகள் சதா தூய்மையாக இருப்பர்கள். இல்லற மார்க்கம் தேவதைகளுடையது. துறவற மார்க்கம் சந்நியாசிகளுடையது. பெண்கள் இப்போது கலியுகத்தில் இதெல்லாம் கெட்டதாகிவிட்டது. பெண்களையும் சந்நியாசியாக்கி விடுகின்றனர். இருந்தாலும் அவர்களின் தூய்மையால் பாரதம் காப்பாற்றப்படுகிறது. எவ்வாறு பழைய கட்டிடத்தை மராமத்து வேலை செய்து விட்டால் புதியது போலாகிவிடும். இந்த சந்நியாசிகளும் சீர்செய்து பாரதத்தை காப்பாற்றினார்கள். ஆனால், தந்தை கூறுகின்றார் தூய்மையாகின்றார்கள் எனவே அவர்களின் தர்மமே வேறு.

 

பாரத கண்டத்தில் மட்டுமே இந்தளவு தேவி-தேவதைகளுக்கான கோவில், பக்தி இருக்கிறது. இதுவும் விளையாட்டு, இதன் தத்துவத்தை நீங்கள் சொல்வீர்கள். பக்தி மார்க்கத்திற்காக இவை அனைத்தும் தேவை அல்லவா! ஒரு சிவனுக்கே எவ்வளவு பெயர் வைத்துள்ளனர்! பெயரின் ஆதாரத்தில் உருவாக்கியுள்ளனர் நிறைய கோவில்கள் உள்ளன. எவ்வளவு செலவாகின்றது! இருந்தாலும் கிடைப்பது அரைகல்ப சுகம் அவ்வளவு தான். நிறைய செல்வத்தை ஈடுபடுத்துகிறார்கள், சிலைகளும் சேதமடைகிறது. அங்கே கோவிலுக்கு அவசியமில்லை. அரைக்கல்பம் பக்தி நடக்கிறது, பிறகு அரைக்கல்பத்திற்கு பக்தியின் பெயரே இருக்காது என்ற நினைவும் வந்துவிட்டது. இந்த விதவிதமான மரத்தைப் பற்றி தந்தை நினைவுபடுத்துகிறார். கலியுகத்திற்கு மட்டுமே 40 ஆயிரம் ஆண்டுகள் என்றால் கிறிஸ்துவ தர்மம் போன்றவற்றின் ஆயுளும் மிகவும் அதிகமாகும். தந்தை புரிய வைக்கின்றார், கிறிஸ்துவ தர்மத்தின் ஆயுள் இவ்வளவு தான். இதுவும் தெரியும் கிறிஸ்து வந்து இவ்வளவு காலம் ஆகியது, இன்ன தர்மத்தை ஸ்தாபனை செய்ய எவ்வளவு காலம் பிடித்தது? ஆனால் பிறகு எப்போது திரும்பச் செல்வார்கள்? என்பது தெரியாது. கல்பத்தின் ஆயுளை நீண்டதாக ஆக்கிவிட்டனர். இப்போது உங்களுக்குத் தெரியும், இவர்கள் வினாசத்திற்காக தயார் செய்கின்றார்கள். அவர்களுடையது விஞ்ஞானம், உங்களுடையது அமைதி. நீங்கள் எந்தளவு அமைதியில் செல்வீர்களோ அந்தளவு அவர்கள் வினாசத்திற்கான மிகவும் நல்ல பொருட்களைத் தயார் செய்வார்கள். பாபா நமக்காக புதிய உலகை உருவாக்க வந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சி உங்களுக்குள் இருக்கிறது. இப்போது நாம் பழைய உலகில் இருக்க வேண்டுமா என்ன? அதிசயம் பாபாவினுடையது. பாபா நீங்கள் சொர்க்கத்தை படைப்பதே அதிசயமாகும். உங்களுக்கு இப்போது முழு நினைவும் வந்திருக்கிறது. அவர்கள் படைப்பவர் மற்றும் படைப்பின் ஆதி-மத்திய-அந்திமத்தைத் தெரியாமல் உள்ளனர். உங்களுக்குத் தெரியும். நீங்கள் எவ்வளவு வெளிச்சத்தில் இருக்கிறீர்கள்! மனிதர்கள் ஆழ்ந்த இருளில் உள்ளனர். வித்தியாசம் இருக்கிறது தானே? ஞானம் என்ற மையை சத்குரு கொடுத்தார். அஞ்ஞானம் என்ற இருள் அழிந்தது. பக்தர்களுக்கு ஞானம் தெரியாது. இப்போது நீங்கள் பக்தி மற்றும் ஞானத்தை தெரிந்து கொண்டீர்கள். பக்தி எப்போது ஆரம்பமாகிறது, பிறகு எப்போது முடிகின்றது என்பதன் முழு நினைவு வந்திருக்கிறது. தந்தை எப்போது ஞானம் தருகிறார், எப்போது முடியும் என்ற எல்லா நினைவும் இருக்கிறது. வரிசைப்படி தான் இருக்கின்றார்கள். சிலருக்கு அதிக நினைவு, சிலருக்கு குறைவான நினைவு இருக்கிறது. யாருக்கு அதிக நினைவு இருக்கின்றதோ, அவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள். நினைவு இருந்தால் தான் மற்றவர்களுக்கும் புரிய வைப்பார்கள். அதிசயமான நினைவுதானே! இதற்கு முன் உங்களுடைய புத்தியில் என்ன இருந்தது? பக்தி, ஜபம், தவம், தீர்த்த யாத்திரை செய்வது, தலைவணங்குதல், என்று நெற்றிப் பரப்பே தேய்ந்துவிட்டது. பக்தியின் நினைவு மற்றும் ஞானத்திற்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! நீங்கள் பக்தியைத் தெரிந்துள்ளீர்கள் ஏனென்றால் ஆரம்பத்திலிருந்து பக்தி செய்தீர்கள். நாம் முதன் முதலில் சிவனை, பிறகு தேவதைகளை பக்தி செய்தோம் என்பதை தெரிந்துள்ளீர்கள். உங்களுக்கு படைப்பின் ஆதி, மத்திய, அந்திமம், பக்தி பற்றிய எல்லா நினைவும் இருக்கிறது, வேறு யாருக்கும் இந்த நினைவு இல்லை. அரைக்கல்பமாக பக்தி செய்து, செய்து கீழிறங்கி வந்தீர்கள்.

 

இப்போது துக்கத்தின் மலை விழப்போகிறது, விழுவதற்கு முன்பாக நாம் நினைவு யாத்திரை மூலம் பாவத்தை அழிக்க வேண்டும், குழந்தைகள் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் அனைவருக்கும் நீங்கள் இதையே புரிய வையுங்கள், உங்களிடம் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள். சகோதர-சகோதரிகளுக்கு வழி காட்டுவதற்கான உழைப்பு நீங்கள் செய்கிறீர்கள். ஞானம் மற்றும் பக்தியின் நினைவு வந்திருக்கிறது. அதாவது நீங்கள் முழு நாடகத்தினை வரிசைப்படி முயற்சியின் ஆதாரத்தில் புரிந்துள்ளீர்கள். யார் எவ்வளவு நன்றாக புரிந்துள்ளார்களோ அவர்களே நன்றாகப் புரிய வைப்பார்கள். குழந்தைகளுக்குத்தான் புரிய வைப்பார்கள். குழந்தை தந்தையை வெளிப்படுத்துவர் என்ற மகிமை உள்ளது. தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைப்பார், பிறகு குழந்தைகள் மற்ற சகோதரர்களுக்குப் புரிய வைப்பார்கள். ஆத்மாக்களுக்கு புரிய வைக்கப்படுகிறது அல்லவா! பக்தியிலிருந்து இந்த ஞானம் முற்றிலும் வேறுபட்டதாகும். ஒரு பகவான் வந்து அனைத்து பக்தர்களுக்கும் பலன் தருகிறார் என மகிமை கூட இருக்கிறது, அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள். தந்தை கூறுகிறார் நான் அனைத்து குழந்தைகளையும் சாந்திதாமம், சுகதாமம் அழைத்துச் செல்கிறேன். கல்ப-கல்பத்திற்கான இந்த ஞானமும் உங்களுக்கு இப்போது இருக்கிறது, அங்கே இருக்காது. நீங்கள் பதீதமானால் பாவனமாக்குவதற்காக தந்தை உங்களுக்காக எவ்வளவு உழைக்கிறார்! எனவே, மகிமை பாடப்படுகிறது, பலியாகி விடுவேன், அர்ப்பணம் ஆவேன்... யார் மீது? தந்தையிடம். பிறகு தந்தை உதாரணம் கூறுகிறார், இவர் பிரம்மா எவ்வாறு அர்ப்பணம் ஆனார். எடுத்துக்காட்டான இவரைப் பின்பற்றுங்கள். இவர்களே மீண்டும் இலட்சுமி, நாராயணர் ஆகின்றனர். ஆக இவ்வளவு உயர்ந்த பதவி அடைய அவ்வாறு அர்ப்பணம் ஆக வேண்டும். செல்வந்தர்கள் ஒருபோதும் அர்ப்பணம் ஆக முடியாது. இங்கு ஸ்வாஹா ஆக வேண்டும். செல்வந்தர்களுக்கு அவசியம் நினைவுகள் வரும். கடைசி காலத்தில் யார் மனைவியை நினைவு செய்கிறார்களோ..... என கூறப்படுகிறது. இவ்வளவு பணத்தை என்ன செய்வது? யாருமே பெற்றுக் கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் எல்லாமே முடிந்துவிடும். நானும் கூட வாங்கி கொண்டு என்ன செய்வேன். சரீரம் உட்பட அனைத்தும் அழிந்துவிடும். நீங்கள் இறந்தால் உலகமும் முடிந்தது போல் ஆகி விடும். இந்த செல்வம் போன்றவை எதுவும் இருக்காது. மற்றபடி கருட புராணத்தில் பயம் ஏற்படுத்துவதற்கு மிகவும் கொடுமையான விசயங்கள் எழுதியுள்ளனர். தந்தை கூறுகின்றார், இந்த சாஸ்திரம் போன்றவை பக்தி மார்க்கத்திற்கானது. அரைக் கல்பமாக பக்தி மார்க்கம் நடைபெறுகிறது. அப்போது இராவண இராஜ்யம் நடக்கிறது. இராவணனை எப்போது முதல் எரிக்கின்றீர்கள்? என யாரிடமாவது கேளுங்கள், ஆக பரம்பரை காலத்திலிருந்து எனக் கூறுவார்கள். அட! பரம்பரை காலத்திலிருந்து இராவணன் இல்லை. தெரியாமலே பரம்பரை காலத்திலிருந்து எனக் கூறுகின்றனர். குழந்தைகள் உங்களுக்கு நினைவு வருகிறது, இராவண இராஜ்யம் எப்போது முதல் ஆரம்பமாகின்றது. படைப்பவர், படைப்பின் இரகசியத்தைக் கூட நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்போது தந்தை கூறுகின்றார், குழந்தைகளே மனதால் என் ஒருவரை மட்டும் நினைவு செய்தால் பாவங்கள் நீங்கிவிடும். ஒருவருக்கொருவர் இதே எச்சரிக்கையை கொடுங்கள். நடந்தாலும், சுற்றினாலும் கூட தங்களுக்குள் இந்த விசயங்களைப் பேசுங்கள். உங்களுடைய முழு கூட்டமும் இந்த நினைவு செய்வதன் நிலையோடு சுற்றி வந்தால் உங்களுடைய அமைதியின் பிரபாவம் அதிகமாகப் பரவும். பாதிரியார்கள் கிறிஸ்துவின் நினைவில் மிகவும் அமைதியாக நடந்து செல்வார்கள். வேறு எந்தப் பக்கமும் பார்ப்பதில்லை. நீங்கள் இங்கு அதிகமாக நினைவில் இருக்க முடியும், வேறு எந்த தொழிலின் பாதிப்புக்கள் இங்கில்லை. மிகவும் நல்ல சூழ்நிலை இருக்கிறது, எனவே சந்நியாசிகளின் ஆசிரமங்கள் தூரத்தில் உள்ளது. உங்களுடையது தான் எல்லையற்ற சந்நியாசமாகும். பழைய உலகம் இப்போது கடந்து போய் கொண்டேயிருக்கிறது. இந்த சுடுகாடு உலகம் பிறகு (பரிஸ்தான்) தேவலோகமாகும். அங்கே வைரம், வைடூரியங்கள் நிறைந்த மாளிகை உருவாகும். இந்த இலட்சுமி, நாராயணர் தேவலோகத்தின் எஜமானர்களாக இருந்தார்கள் அல்லவா! இப்பொழுது இல்லை. நான் கல்ப-கல்பமாக, கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன் என தந்தை கூறுகின்றார். இந்த முழு சக்கரமும் திரும்ப சுழன்று கொண்டே இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு எல்லா நினைவுகளும் வந்திருக்கிறது, அதாவது தந்தை நினைவுப்படுத்தியிருக்கிறார். இதற்கு முன் எதுவும் புத்தியில் இல்லை. இந்த நினைவின் போதையோடு இருந்தால் மற்றவர்களுக்கும் இதை மகிழ்ச்சியோடு புரிய வைப்பீர்கள். நினைவில் இருந்து கொண்டே நீங்கள் குடும்ப சூழ்நிலையை கவனிக்க வேண்டும். நல்லது.

 

சதா நினைவின் நஷாவில் இருக்கக்கூடிய இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. நாடகத்தின் ஆதி, மத்திய, அந்திமத்தைப் புரிந்து கொண்டு நினைவில் வைத்துக் கொண்டு பிறருக்கும் நினைவை ஏற்படுத்த வேண்டும். ஞானம் என்ற மை கொடுத்து அறியாமை என்ற இருளைப் போக்க வேண்டும்.

 

2. பிரம்மா பாபாவிற்கு சமமாக பலி ஆவதில் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். சரீரம் உட்பட அனைத்தும் அழியப்போகிறது, எனவே அதற்கு முன்பாகவே உயிரோடு இருந்து கொண்டே இறந்தவராக வேண்டும். அதாவது கடைசிக் காலத்தில் வேறு எந்த நினைவும் வரக் கூடாது.

 

வரதானம்:-

தன்னுடைய தொடர்பின் மூலம் அனேக ஆத்மாக்களின் கவலைகளை அழிக்கக்கூடிய அனைவருக்கும் பிரியமானவர் ஆகுக.

 

நிகழ்கால சமயம் மனிதர்களிடம் சுயநலம் இருக்கும் காரணத்தினால் மற்றும் பொருட்கள் மூலம் அல்ப கால பிராப்தி கிடைக்கும் காரணத்தினால், ஆத்மாக்கள் ஏதாவது ஏதாவது கவலையில் குழம்பி இருக்கின்றனர். சுபசிந்தனை செய்யும் ஆத்மாக்களாகிய உங்களுடைய சிறிது நேர தொடர்பு கூட அந்த ஆத்மாக்களின் கவலைகளை அழிப்பதற்கு ஆதாரம் ஆகிவிடுகிறது. இன்று உலகத்திற்கு உங்களைப் போன்ற சுபசிந்தனை செய்யும் ஆத்மாக்களின் தேவை உள்ளது. ஆகையினால், நீங்கள் உலகிற்கு மிகவும் பிரியமானவர்கள் ஆவீர்கள்.

 

சுலோகன்:

வைரம் போன்ற மதிப்பான ஆத்மாக்களாகிய உங்களுடைய பேச்சு கூட இரத்தினத்திற்கு சமமாக மதிப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

 

ஓம்சாந்தி