23.11.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
சங்கமயுகம்
அதிஷ்டசாலி
ஆவதற்கான
யுகமாகும்,
இதில்
நீங்கள் எவ்வளவு
விரும்புகிறீர்களோ
அவ்வளவு
தங்களது
பாக்கிய
நட்சத்திரத்தை
பிரகாசிக்கச்
செய்ய முடியும்.
கேள்வி:
தனது
முயற்சியை
தீவிரமாக்குவதற்கான
எளிய
சாதனம்
என்ன?
பதில்:
தந்தையைப்
பின்பற்றிக்
கொண்டே
சென்றால்
முயற்சி
தீவிரமாகி
விடும்.
தந்தையை
மட்டுமே பாருங்கள்,
தாய்
குப்தமாக
(மறைமுகமாக)
இருக்கின்றார்.
தந்தையைப்
பின்பற்றுவதன்
மூலம்
தந்தைக்குச்
சமமாக உயர்ந்தவர்களாக
ஆவீர்கள்,
ஆகையால்
மிகச்
சரியாக
பின்பற்றிக்
கொண்டே
இருங்கள்.
கேள்வி:
தந்தை
எந்த
குழந்தைகளை
புத்தியற்றவர்களாக
நினைக்கின்றார்?
பதில்:
யாருக்கு
தந்தையை
அடைந்த
பிறகும்
கூட
குஷியில்லையோ
அவர்கள்
புத்தி
யற்றவர்களாக ஆகிவிடுகின்றனர்
அல்லவா!
உலகிற்கு
எஜமானர்களாக
ஆக்கக்
கூடிய
அப்படிப்பட்ட
தந்தையின்
குழந்தையாக ஆன
பின்பும்
குஷியில்லையெனில்
புத்தியற்றவர்கள்
என்று
தான்
கூறுவோம்
அல்லவா!
ஓம்
சாந்தி.
இனிமையிலும்
இனிய
குழந்தைகளாகிய
நீங்கள்
அதிர்ஷ்ட
நட்சத்திரங்களாக
இருக்கிறீர்கள்.
நாம் சாந்திதாமத்தையும்
நினைவு
செய்கிறோம்,
தந்தையையும்
நினைவு
செய்கிறோம்
என்பதையும்
நீங்கள்
அறிவீர்கள்.
தந்தையை
நினைவு
செய்வதன்
மூலம்
நாம்
தூய்மையாகி
வீட்டிற்குச்
செல்வோம்.
இங்கு
அமர்ந்து
இப்படிப்பட்ட சிந்தனை
செய்கிறீர்கள்
அல்லவா!
தந்தை
வேறு
எந்த
கஷ்டத்தையும்
கொடுப்பது
கிடையாது.
ஜீவன்
முக்தியை வேறு
யாரும்
அறியவேயில்லை.
அவர்கள்
அனைவரும்
முக்திக்காக
முயற்சி
செய்து
கொண்டிருக்கின்றனர்,
ஆனால்
முக்தியின்
பொருளையும்
புரிந்து
கொள்வது
கிடையாது.
நாம்
பிரம்மத்தில்
ஐக்கியமாகி
விடுவோம்,
பிறகு வரவே
மாட்டோம்
என்று
சிலர்
கூறுகின்றனர்.
நாம்
இந்த
சக்கரத்தில்
அவசியம்
வந்தே
ஆக
வேண்டும்
என்பது அவர்களுக்குத்
தெரியாது.
இப்பொழுது
குழந்தைகளாகிய
நீங்கள்
இந்த
விசயங்களைப்
புரிந்து
கொள்கிறீர்கள்.
நாம் சுயதரிசன
சக்கரதாரிகள்
அதிர்ஷ்ட
நட்சத்திரங்களாக
இருக்கிறோம்
என்பதை
குழந்தைகளாகிய
உங்களுக்குத் தெரியும்.
அதிர்ஷ்டசாலிகள்
தான்
லக்கி
என்று
கூறப்படுகின்றனர்.
இப்பொழுது
குழந்தைகளாகிய
உங்களை
தந்தை தான்
அதிர்ஷ்டசாலிகளாக
ஆக்குகின்றார்.
தந்தை
எப்படியோ
அப்படி
குழந்தைகள்
இருப்பர்.
சில
தந்தைகள் செல்வந்தர்களாக
இருப்பர்,
சில
தந்தைகள்
ஏழைகளாகவும்
இருப்பர்.
நமக்கு
எல்லையற்ற
தந்தை
கிடைத்திருக்கிறார்,
யார்
எந்த
அளவிற்கு
அதிர்ஷ்டசாலி
ஆக
விரும்புகிறீர்களோ
அந்த
அளவிற்கு
ஆக
முடியும்,
எவ்வளவு செல்வந்தர்
ஆவதற்கு
விரும்புகிறீர்களோ
அவ்வளவு
ஆக
முடியும்
என்பதை
குழந்தைகளாகிய
நீங்கள்
அறிவீர்கள்.
தந்தை
கூறுகின்றார்
-
என்ன
விரும்புகிறீர்களோ
அதை
முயற்சி
செய்து
எடுத்துக்
கொள்ளுங்கள்.
அனைத்திற்கும் ஆதாரம்
முயற்சியில்
இருக்கிறது.
முயற்சி
செய்து
எந்த
அளவிற்கு
உயர்ந்த
பதவி
அடைய
வேண்டுமோ
அந்த அளவு
அடைய
முடியும்.
உயர்ந்ததிலும்
உயர்ந்த
பதவி
இந்த
இலட்சுமி
நாராயணன்
பதவியாகும்.
நினைவிற்கான சார்ட்
அவசியம்
வைக்க
வேண்டும்.
ஏனெனில்
தமோ
பிரதானத்திலிருந்து
சதோ
பிரதானமான
அவசியம்
ஆகியே தீர
வேண்டும்.
புத்தியற்றவர்களாகி
இப்படியே
அமர்ந்து
விடக்
கூடாது.
பழைய
உலகம்
இப்பொழுது
புதியதாக ஆகப்போகிறது
என்பதை
தந்தை
புரிய
வைத்திருக்கின்றார்.
புதிய,
சதோ
பிரதான
உலகிற்கு
அழைத்துச்
செல்ல தந்தை
வந்திருக்கின்றார்.
அவர்
எல்லையற்ற
சுகம்
கொடுக்கும்
எல்லையற்ற
தந்தை
ஆவார்.
சதோ
பிரதானம் ஆவதன்
மூலம்
மட்டுமே
நீங்கள்
எல்லையற்ற
சுகம்
அடைய
முடியும்
என்பதைப்
புரிய
வைக்கின்றார்.
சதோவாக ஆகிறீர்கள்
எனில்
சுகமும்
குறைவாக
கிடைக்கும்.
இரஜோவாக
ஆகிறீர்கள்
எனில்
அதை
விடக்
குறைவாக கிடைக்கும்.
அனைத்து
கணக்குகளையும்
தந்தை
கூறிவிடுகின்றார்.
அளவற்ற
செல்வம்
உங்களுக்கு
கிடைக்கிறது,
அளவற்ற
சுகம்
கிடைக்கிறது.
எல்லையற்ற
தந்தையின்
ஆஸ்தி
அடைவதற்கு
நினைவைத்
தவிர
வேறு
எந்த உபாயமும்
(வழி)
கிடையாது.
எந்த
அளவிற்கு
தந்தையை
நினைவு
செய்வீர்களோ,
நினைவின்
மூலம்
தானாகவே தெய்வீக
குணங்களும்
வந்து
விடும்.
சதோ
பிரதானமாக
ஆக
வேண்டுமெனில்
தெய்வீக
குணங்களும்
அவசியம் தேவை.
தன்னைத்தானே
சோதனை
செய்ய
வேண்டும்.
எந்த
அளவிற்கு
உயர்ந்த
பதவி
அடைய
விரும்புகிறீர்களோ,
தனது
முயற்சியின்
மூலம்
அடைய
முடியும்.
படிப்பு
கற்பிக்கும்
ஆசிரியர்
அமர்ந்திருக்கின்றார்.
தந்தை
கூறுகின்றார்
-
கல்ப
கல்பத்திற்கும்
உங்களுக்கு
இவ்வாறே
புரிய
வைக்கின்றேன்.
இரண்டே
இரண்டு
வார்த்தை
தான்
-
மன்மனாபவ,
மத்தியாஜீ
பவ.
எல்லையற்ற
தந்தையை
அறிந்து
கொண்டீர்கள்.
அந்த
எல்லையற்ற
தந்தை
தான் எல்லையற்ற
ஞானம்
கொடுப்பவர்
ஆவார்.
பதீதத்திலிருந்து
பாவனம்
ஆவதற்கான
வழியும்
அந்த
எல்லையற்ற தந்தை
தான்
புரிய
வைக்கின்றார்.
ஆக
தந்தை
என்ன
புரிய
வைக்கின்றாரோ
அது
ஒன்றும்
புதிய
விசயமில்லை.
கீதையிலும்
எழுதப்பட்டிருக்கிறது,
மாவில்
உப்பு
சேர்த்தது
போன்று
இருக்கிறது.
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து கொள்ளுங்கள்.
தேக
சம்மந்தப்பட்ட
அனைத்து
தர்மங்களையும்
மறந்து
விடுங்கள்.
நீங்கள்
ஆரம்பத்தில்
அசரீரியாக இருந்தீர்கள்.
இப்பொழுது
பல
உற்றார்
உறவினர்களின்
பந்தனங்களில்
வந்திருக்கிறீர்கள்.
அனைவரும்
தமோபிரதானமாக இருக்கின்றனர்,
இப்பொழுது
மீண்டும்
சதோபிரதானமாக
ஆக
வேண்டும்.
தமோ
பிரதானத்திலிருந்து
நாம்
மீண்டும் சதோ
பிரதானமாக
ஆகின்றோம்,
பிறகு
உற்றார்
உறவினர்கள்
அனைவரும்
தூய்மையாகி
விடுவர்.
யார்
எந்த அளவிற்கு
கல்பத்திற்கு
முன்
சதோ
பிரதானம்
ஆகியிருந்தார்களோ
அந்த
அளவிற்குத்
தான்
மீண்டும்
ஆவார்கள்.
அவர்களது
முயற்சியும்
அவ்வாறே
இருக்கும்.
இப்பொழுது
யாரைப்
பின்பற்ற
வேண்டும்?
தந்தையை
பின்பற்றுங்கள் என்று
பாடப்பட்டிருக்கிறது.
எவ்வாறு
இவர்
(பிரம்மா)
தந்தையைப்
நினைவு
செய்கிறாரோ,
முயற்சி
செய்கிறாரோ அதே
போல்
இவரைப்
பின்பற்றுங்கள்.
முயற்சி
செய்விப்பவர்
தந்தை
ஆவார்.
அவர்
முயற்சி
செய்வது
கிடையாது.
அவர்
முயற்சி
செய்விக்கின்றார்.
பிறகு
கூறுகின்றார்
-
இனிமையிலும்
இனிமையான
குழந்தைகளே!
தந்தையைப் பின்பற்றுங்கள்.
குப்தமான
தாய்
தந்தையாக
இருக்கின்றனர்
அல்லவா!
தாய்
குப்தமாக
இருக்கின்றார்,
தந்தையைப் பார்க்க
முடிகிறது.
இது
நல்ல
முறையில்
புரிந்து
கொள்ள
வேண்டிய
விசயமாகும்.
இவ்வாறு
உயர்ந்த
பதவியடைய வேண்டுமெனில்
தந்தையை
நல்ல
முறையில்
நினைவு
செய்யுங்கள்,
எவ்வாறு
இந்த
தந்தை
நினைவு
செய்கிறாரோ!
இந்த
தந்தை
தான்
அனைவரையும்
விட
உயர்ந்த
பதவி
அடைகின்றார்.
இவர்
மிகவும்
உயர்ந்த
நிலையில் இருந்தார்,
பிறகு
இவரது
பல
பிறவிகளின்
கடைசி
பிறவியிலும்
கடைசி
நேரத்தில்
தான்
நான்
பிரவேசம் ஆகின்றேன்.
இதை
நல்ல
முறையில்
நினைவு
செய்யுங்கள்,
மறந்து
விடாதீர்கள்.
பலரை
மாயை
மறக்க
வைத்து விடுகிறது.
நாம்
நரனிலிருந்து
நாராயணன்
ஆகிறோம்
என்று
நீங்கள்
கூறுகிறீர்கள்.
எவ்வாறு
நீங்கள்
அவ்வாறு ஆக
முடியும்
என்பதற்கான
யுக்தியும்
தந்தை
கூறுகின்றார்.
அனைவரும்
மிகச்
சரியாகப்
பின்பற்ற
முடியாது என்பதையும்
அறிவீர்கள்.
இலட்சியம்
(இலக்கு
என்ன
என்பதை)
தந்தை
கூறுகின்றார்
-
தந்தையைப்
பின்பற்றுங்கள்.
இப்போதைய
நிலைக்குத்
தான்
புகழ்
பாடப்படுகிறது.
தந்தையும்
இப்பொழுது
குழந்தைகளாகிய
உங்களுக்கு ஞானம்
கொடுக்கின்றார்.
சந்நியாசிகளைப்
பின்
பற்றுபவர்கள்
சீடர்கள்
என்று
அழைக்கப்படுகின்றனர்,
ஆனால்
அது தவறு
அல்லவா!
பின்பற்றுவதே
கிடையாது.
அவர்கள்
அனைவரும்
பிரம்ம
ஞானிகள்,
தத்துவ
ஞானிகள்.
அவர்களுக்கு ஈஸ்வரன்
ஞானம்
கொடுப்பது
கிடையாது.
தத்துவ
அதாவது
பிரம்ம
ஞானி
என்று
கூறிக்
கொள்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கு
(சீடர்களுக்கு)
தத்துவம்
அதாவது
பிரம்மம்
ஞானம்
கொடுப்பது
கிடையாது.
அவை
அனைத்தும் சாஸ்திரங்களின்
ஞானமாகும்.
இங்கு
தந்தை
உங்களுக்கு
ஞானம்
கொடுக்கின்றார்,
அவர்
தான்
ஞானக்கடல்
என்று கூறப்படுகின்றார்.
இதை
நல்ல
முறையில்
குறித்துக்
கொள்ளுங்கள்.
நீங்கள்
மறந்து
விடுகிறீர்கள்,
இது
உள்ளத்திற்குள் நல்ல
முறையில்
தாரணை
செய்ய
வேண்டிய
விசயமாகும்.
தந்தை
தினம்
தினம்
கூறுகின்றார்
–
இனிமையிலும் இனிய
குழந்தைகளே!
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
தந்தையாகிய
என்னை
நினைவு
செய்யுங்கள்.
இப்பொழுது திரும்பிச்
செல்ல
வேண்டும்.
பதீதமானவர்கள்
செல்ல
முடியாது.
யோக
பலத்தின்
மூலமாகவோ
அல்லது
தண்டனை அடைந்தோ
தூய்மையாகிச்
செல்வீர்கள்.
அனைவரின்
கணக்கு
வழக்குகளும்
அவசியம்
முடிக்கப்
பட
வேண்டும்.
உண்மையில்
ஆத்மாக்களாகிய
நீங்கள்
பரந்தாமத்தில்
இருக்கக்
கூடியவர்கள்,
பிறகு
இங்கு
நீங்கள்
சுகம்,
துக்கத்திற்கான பாகம்
நடித்தீர்கள்
என்று
தந்தை
புரிய
வைத்திருக்கின்றார்.
சுகத்தின்
பாகம்
இராம
இராஜ்யத்திலும்,
துக்கத்தின் பாகம்
இராவண
இராஜ்யத்திலும்
நடிக்கிறோம்.
இராம
இராஜ்யம்
என்று
சொர்க்கத்தை
சொல்கிறோம்,
அங்கு முழுமையான
சுகம்
இருக்கும்.
சொர்க்கவாசி
மற்றும்
நரகவாசி
என்றும்
பாடப்படுகிறது.
ஆக
இதை
நல்ல முறையில்
தாரணை
செய்ய
வேண்டும்.
எந்த
அளவிற்கு
தமோ
பிரதானத்திலிருந்து
சதோ
பிரதானமாக
ஆகிக் கொண்டே
செல்வீர்களோ
அந்த
அளவிற்கு
உங்களுக்குள்
குஷியும்
ஏற்படும்.
எப்பொழுது
நீங்கள்
இரஜோவாக துவாபர
யுகத்தில்
இருந்தீர்களோ
அப்பொழுதும்
நீங்கள்
குஷியாக
இருந்தீர்கள்.
நீங்கள்
இந்த
அளவிற்கு
விகாரிகளாக,
துக்கமானவர்களாக
இல்லை.
இப்பொழுது
எவ்வளவு
விகாரிகளாக,
துக்கமானவர்களாக
இருக்கிறீர்கள்!
நீங்கள் தனது
பெரியவர்களைப்
(மூதாதையர்
களைப்)
பாருங்கள்
-
எவ்வளவு
விகாரிகளாக,
குடிகாரர்களாக
இருக்கின்றனர்!
சாராயம்
மிகவும்
கெட்ட
பொருளாகும்.
சத்யுகத்தில்
தூய்மையான
ஆத்மாக்கள்
இருப்பர்.
பிறகு
கீழே
இறங்கி இறங்கி
முற்றிலும்
சீ
சீயாக
ஆகிவிடுகின்றனர்.
அதனால்
தான்
இது
பயங்கரமான
நரகம்
என்று
கூறப்படுகிறது.
சாராயம்
அப்படிப்பட்ட
பொருள்,
அதாவது
அவர்கள்
சண்டை
யிடுவதற்கு,
கொலை
செய்வதற்கு,
நஷ்டப்படுத்திக் கொள்ள
தாமதம்
செய்வது
(தயங்குவது)
கிடையாது.
இந்த
நேரத்தில்
மனிதர்களின்
புத்தி
கீழ்த்தரமாக
ஆகிவிட்டது.
மாயை
மிகவும்
மோசமானது.
மாயை
மிகவும்
திறமைசாலியாக
இருக்கிறது.
தந்தை
சர்வசக்தி
வாய்ந்தவர்,
சுகம் கொடுக்கக்
கூடியவர்.
அதே
போன்று
மாயை
மிகுந்த
துக்கம்
கொடுக்கக்
கூடியது.
கலியுகத்தில்
மனிதர்களின் நிலை
எப்படி
ஆகிவிட்டது!
முற்றிலும்
இற்றுப்
போன
நிலையாக
ஆகிவிட்டது.
எதுவும்
புரிந்து
கொள்ளவது கிடையாது,
கல்புத்தி
போன்று
இருக்கின்றனர்.
இதுவும்
நாடகம்
அல்லவா!
யாருக்காவது
அதிர்ஷ்டம்
இல்லை யெனில்
இவ்வாறு
புத்தியற்றவர்களாக
ஆகிவிடுகின்றனர்.
தந்தை
மிகவும்
எளிதான
ஞானம்
தான்
கொடுக்கின்றார்.
குழந்தைகளே!
குழந்தைகளே!
என்று
கூறி
புரிய
வைக்கின்றார்.
தாய்மார்களும்
எனக்கு
5
லௌகீகக்
குழந்தைகள் இருக்கின்றனர்
மற்றும்
ஒரே
ஒரு
பரலௌகீக
குழந்தை
இருக்கின்றார்
என்று
கூறுகின்றனர்.
அவர்
நம்மை சுகதாமம்
அழைத்துச்
செல்ல
வந்திருக்கின்றார்.
தந்தையும்
புரிந்திருக்கின்றார்,
குழந்தைகளும்
புரிந்திருக்கிறீர்கள்.
மந்திரவாதி
ஆகிவிடுகின்றார்
அல்லவா!
தந்தை
மந்திரவாதி
எனும்பொழுது
குழந்தைகளும்
மந்திரவாதிகளாக ஆகிவிடுகின்றனர்.
பாபா
எனக்கு
குழந்தையாகவும்
இருக்கின்றார்
என்றும்
கூறுகின்றனர்.
ஆக
தந்தையைப் பின்பற்றி
இவ்வாறு
ஆக
வேண்டும்.
சொர்க்கத்தில்
அவரது
இராஜ்யம்
இருந்தது
அல்லவா!
சாஸ்திரங்களில்
இந்த விசயங்கள்
கிடையாது.
பக்தி
மார்க்கத்தின்
இந்த
சாஸ்திரங்களும்
நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது.
மீண்டும்
ஏற்படும்.
படிப்பு
கற்பிக்கும்
ஆசிரியர்
தேவை
அல்லவா!
என்றும்
தந்தை
புரிய
வைக்கின்றார்.
புத்தகம்
ஆசிரியராக
ஆகிவிட முடியாது.
பிறகு
ஆசிரியர்
அவசியமில்லாமல்
போய்விடுகிறார்.
இந்த
புத்தகங்கள்
சத்யுகத்தில்
இருக்காது.
தந்தை
புரிய
வைக்கின்றார்
-
நீங்கள்
ஆத்மாவைப்
புரிந்திருக்கிறீர்கள்
அல்லவா!
ஆத்மாக்
களுக்கு
தந்தையும் அவசியம்
இருக்கின்றார்.
வருபவர்கள்
அனைவரும்
இந்து
முஸ்லீம்
சகோதரர்கள்
என்று
கூறுகின்றனர்,
ஆனால் பொருள்
சிறிதும்
புரிந்து
கொள்வது
கிடையாது.
சகோதரன்
சகோதரன்
என்பதன்
பொருள்
புரிந்து
கொள்ள வேண்டும்
அல்லவா!
அவசியம்
அதற்கு
தந்தையும்
இருப்பார்.
இந்த
சிறிய
விசயத்தின்
அறிவும்
இல்லாமல் இருக்கின்றனர்.
பகவானின்
மகாவாக்கியம்
-
இது
பல
பிறவிகளின்
கடைசிப்
பிறப்பாகும்.
எவ்வளவு
தெளிவான அர்த்தமாக
இருக்கிறது!
யாரையும்
நிந்திப்பது
கிடையாது.
தந்தை
வழி
கூறுகின்றார்.
முதல்
நம்பரில்
வருபவர் கடைசியாகி
விடுகின்றார்.
வெள்ளையிலிருந்து
(தூய்மையிலிருந்து)
கருப்பாகி
விடுகிறார்.
நாமும்
தூய்மையாக இருந்தோம்,
மீண்டும்
அவ்வாறு
ஆவோம்
என்பதை
நீங்களும்
புரிந்து
கொள்கிறீர்கள்.
தந்தையை
நினைவு செய்வதன்
மூலம்
தான்
இவ்வாறு
ஆவீர்கள்.
இது
இராவண
இராஜ்யமாகும்.
சிவாலயம்
தான்
இராம
இராஜ்யம் என்று
கூறப்படு
கிறது.
சீதையின்
இராமர்,
அவர்
திரேதாயுகத்தில்
இராஜ்யம்
செய்தார்.
இதுவும்
புரிந்து
கொள்ள வேண்டிய
விசயமாகும்.
இரண்டு
கலைகள்
குறைந்து
விடுகிறது
என்று
கூறப்படுகிறது.
சத்யுகம்
உயர்ந்தது,
அதைத்
தான்
நினைவு
செய்கின்றனர்.
திரேதா
மற்றும்
துவாபர
யுகத்தை
அந்த
அளவு
நினைவு
செய்வது கிடையாது.
சத்யுகம்
புது
உலகமாகும்,
கலியுகம்
பழைய
உலகமாகும்.
100
சதவிகிதம்
சுகம்
மற்றும்
100
சதவிகிதம் துக்கமாகும்.
திரேதா
மற்றும்
துவாபரத்தில்
பாதி
சுகமாகும்.
ஆகையால்
முக்கியமானது
சத்யுகம்
மற்றும்
கலியுகம் என்று
பாடப்
பட்டிருக்கிறது.
தந்தை
சத்யுகம்
ஸ்தாபனை
செய்து
கொண்டிருக்கின்றார்.
இப்பொழுது
உங்களது காரியம்
முயற்சி
செய்வதாகும்.
சத்யுகவாசிகளாக
ஆவீர்களா?
அல்லது
திரேதாயுக
வாசிகளாக
ஆவீர்களா?
துவாபரத்தில் மேலும்
கீழே
இறங்கி
விடுகிறீர்கள்.
இருப்பினும்
தேவி
தேவதா
தர்மத்தினர்களாக
இருப்பீர்கள்.
ஆனால்
பதீதம் ஆன
காரணத்தினால்
தன்னை
தேவி
தேவதா
என்று
கூறிக்
கொள்ள
முடிவது
கிடையாது.
ஆக
தந்தை இனிமையிலும்
இனிய
குழந்தைகளுக்கு
தினம்
தினம்
புரிய
வைத்துக்
கொண்டே
இருக்கின்றார்.
முக்கியமான விசயம்
மன்மனாபவ.
நீங்கள்
தான்
நம்பர்
ஒன்
ஆகிறீர்கள்.
84
பிறவிகள்
எடுத்து
கடைசிக்கு
வந்து
விடுகிறீர்கள்,
பிறகு
மீண்டும்
நம்பர்
ஒன்றுக்கு
செல்கிறீர்கள்.
ஆக
இப்பொழுது
எல்லை
யற்ற
தந்தையை
நினைவு
செய்ய வேண்டும்.
இவர்
எல்லையற்ற
தந்தை
ஆவார்.
புருஷோத்தம
சங்கமயுகத்தில்
தான்
தந்தை
வந்து
21
பிறவிகளுக்கான சுகம்
உங்களுக்கு
கொடுக்கின்றார்.
பிறவி
முடியும்
தருவாயில்
நீங்கள்
தானாகவே
சரீரத்தை
விட்டு
விடுவீர்கள்.
யோக
பலம்
இருக்கிறது
அல்லவா!
நியமம்
இவ்வாறு
உருவாக்கப்பட்டிருக்கிறது,
இது
தான்
யோக
பலம்
என்று கூறப்படுகிறது.
அங்கு
ஞான
விசயம்
இருக்காது.
இயற்கையாகவே
நீங்கள்
வயோதிகர்களாக
ஆவீர்கள்.
அங்கு எந்த
விதமான
வியாதியும்
இருக்காது.
நொண்டி
அல்லது
ஊனமுள்ள
கால்கள்
உடையவர்கள்
இருக்கமாட்டார்கள்.
சதா
ஆரோக்கியமானவர்களாக
இருப்பீர்கள்.
அங்கு
துக்கத்தின்
பெயர்,
அடையாளம்
இருக்காது.
பிறகு
சிறிது சிறிதாக
கலைகள்
குறைகின்றன.
இப்பொழுது
குழந்தைகள்
எல்லையற்ற
தந்தையிடமிருந்து
உயர்ந்த
ஆஸ்தி அடைவதற்கான
முயற்சி
செய்ய
வேண்டும்.
நேர்மையுடன்
தேர்ச்சி
அடைய
வேண்டும்
அல்லவா!
அனைவரும் உயர்ந்த
பதவி
அடைந்து
விட
முடியாது.
யார்
சேவையே
செய்யவில்லையோ
அவர்கள்
என்ன
பதவி
அடைவர்!
அருங்காட்சியகத்தில்
குழந்தைகள்
எவ்வளவு
சேவை
செய்கின்றனர்!
அழைக்காமலேயே
மனிதர்கள்
வந்து விடுகின்றனர்.
இது
தான்
தீவிரமான
சேவை
என்று
கூறப்படுகிறது.
இதை
விட
தீவிரமான
சேவை
வேறு
ஏதாவது வெளிப்படலாம்,
யாருக்குத்
தெரியும்.
இரண்டு,
நான்கு
முக்கிய
சித்திரங்கள்
அவசியம்
கூடவே
இருக்க
வேண்டும்.
பெரிய
பெரிய
திரிமூர்த்தி,
மரம்,
சக்கரம்,
ஏணிப்படி
-
இவைகள்
ஒவ்வொரு
இடத்திலும்
பெரிது
பெரிதாக
இருக்க வேண்டும்.
எப்பொழுது
குழந்தைகள்
புத்திசாலிகளாக
ஆகின்றார்களோ
அப்பொழுது
சேவை
நடைபெறும்
அல்லவா!
சேவை
நடந்தே
ஆக
வேண்டும்.
கிராமங்களுக்கும்
சேவை
செய்ய
வேண்டும்.
தாய்மார்கள்
படிக்காதவர்களாக இருக்கலாம்,
ஆனால்
தந்தையின்
அறிமுகம்
கொடுப்பது
மிகவும்
எளிதாகும்.
முன்பு
பெண்கள்
படிக்க
மாட்டார்கள்.
முகலாயர்களின்
ஆட்சியின்
பொழுது
ஒரு
கண்
மட்டும்
திறந்து
கொண்டு
வெளியில்
சென்றனர்.
இந்த
பாபா மிகுந்த
அனுபவியாக
இருக்கின்றார்.
தந்தை
கூறுகின்றார்
-
எனக்கு
இவை
அனைத்தும்
தெரியாது.
நான்
மேலே இருக்கிறேன்.
இவை
அனைத்தும்
இந்த
பிரம்மா
உங்களுக்குக்
கூறுகின்றார்.
இவர்
அனுபவியாக
இருக்கிறார்.
நான்
மன்மனாபவ
என்ற
விசயம்
மட்டுமே
கூறுகின்றேன்
மற்றும்
சிருஷ்டிச்
சக்கரத்தின்
இரகசியத்தைப்
புரிய வைக்கின்றேன்.
இது
இவருக்குத்
தெரியாது.
இவர்
தனது
அனுபவத்தை
தனியாகப்
புரிய
வைக்கின்றார்.
நான் இந்த
விசயங்களில்
செல்வது
கிடையாது.
உங்களுக்கு
வழி
கூறுவது
தான்
எனது
பாகமாகும்.
நான்
தந்தை,
ஆசிரியர்,
குருவாக
இருக்கின்றேன்.
ஆசிரியராகி
உங்களுக்குக்
கற்பிக்கின்றேன்.
மற்றபடி
இதில்
கருணைக்கான விசயம்
எதுவும்
கிடையாது.
கற்பிக்கிறேன்
பிறகு
கூடவே
அழைத்துச்
செல்பவனாகவும்
இருக்கின்றேன்.
இந்தப் படிப்பின்
மூலம்
தான்
சத்கதி
ஏற்படுகிறது.
நான்
உங்களை
அழைத்துச்
செல்லத்
தான்
வந்திருக்கிறேன்.
சிவனின் ஊர்வலம்
என்று
பாடப்பட்டிருக்கிறது.
சங்கரின்
ஊர்வலம்
கிடையாது.
சிவனின்
ஊர்வலமாகும்.
அனைத்து ஆத்மாக்களும்
மணமகனின்
பின்னால்
செல்வார்கள்
அல்லவா!
நீங்கள்
அனைவரும்
பக்தர்களாக
இருக்கிறீர்கள்,
நான்
தான்
பகவான்.
பாவனம்
ஆக்கி
கூடவே
அழைத்துச்
செல்ல
வேண்டும்
என்பதற்காகவே
நீங்கள்
என்னை அழைத்தீர்கள்.
ஆக
நான்
குழந்தைகளாகிய
உங்களை
கூடவே
அழைத்துச்
செல்வேன்.
கணக்கு
வழக்குகளை முடிக்கச்
செய்து
கூடவே
அழைத்துச்
செல்ல
வேண்டும்.
தந்தை
அடிக்கடி
கூறுகின்றார்
-
மன்மனாபவ.
தந்தையை
நினைவு
செய்தால்
ஆஸ்தியின்
நினைவும் அவசியம்
நினைவிற்கு
வரும்.
உலக
இராஜ்யம்
கிடைக்கிறது
அல்லவா!
அதற்காக
முயற்சியும்
அதற்கேற்றபடி செய்ய
வேண்டும்.
குழந்தைகளாகிய
உங்களுக்கு
எந்த
கஷ்டமும்
கொடுப்பது
கிடையாது.
நீங்கள்
அதிக
துக்கம் அடைந்திருப்பதை
நான்
அறிவேன்.
இப்பொழுது
உங்களுக்கு
எந்த
கஷ்டமும்
கொடுக்கமாட்டேன்.
பக்தி
மார்க்கத்தில் ஆயுளும்
குறைவாக
இருக்கிறது.
அகால
மரணமும்
ஏற்பட்டு
விடுகிறது,
எவ்வளவு
வருத்தப்படுகின்றனர்!
எவ்வளவு
துக்கப்படுகின்றனர்!
புத்தியே
கெட்டுப்
போய்விடுகிறது.
இப்பொழுது
தந்தை
கூறுகின்றார்
–
என் ஒருவனை
மட்டும்
நினைவு
செய்து
கொண்டேயிருங்கள்.
சொர்க்கத்திற்கு
எஜமானர்களாக
ஆக
வேண்டுமெனில் தெய்வீக
குணங்களையும்
தாரணை
செய்ய
வேண்டும்.
உயர்ந்த
நிலையடைவதற்குத்
தான்
முயற்சி
செய்யப்படுகிறது
-
நாம்
இலட்சுமி
நாராயணன்
ஆக
வேண்டும்.
தந்தை
கூறுகின்றார்
-
நான்
சூரியவம்சி,
சந்திரவம்சி,
இரண்டு தர்மங்களையும்
ஸ்தாபனை
செய்கின்றேன்.
அவர்கள்
தோல்வியடைந்து
விடுவதால்
சத்ரியர்கள்
என்று கூறப்படுகின்றனர்.
யுத்த
மைதானம்
அல்லவா!
நல்லது.
இனிமையிலும்
இனிய,
தேடிக்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாய்
தந்தையுமான பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின்
நடஸ்தே.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1)
சுகதாம
ஆஸ்தியின்
முழு
அதிகாரம்
அடைவதற்கு
சங்கமத்தில்
ஆன்மீக
மந்திரவாதியாகி தந்தையையும்
தனது
குழந்தையாக
ஆக்கிக்
கொள்ள
வேண்டும்.
முழுமையிலும்
முழுமையாக பலியாகி
(அர்ப்பணமாகி)
விட
வேண்டும்.
2)
சுயதரிசன
சக்கரதாரியாகி
தன்னை
அதிர்ஷ்ட
நட்சத்திரமாக
ஆக்கிக்
கொள்ள
வேண்டும்.
தீவிர வேகத்தில்
சேவை
செய்வதற்கு
நிமித்தமானவராகி
உயர்ந்த
பதவி
அடைய
வேண்டும்.
ஊர்
ஊராகச் சென்று
சேவை
செய்ய
வேண்டும்.
கூடவே
நினைவுச்
சார்ட்டும்
அவசியம்
வைக்க
வேண்டும்.
வரதானம்:-
தேகம்
மற்றும்
தேகத்தினுடைய
உலகத்தின்
நினைவிலிருந்து உயரே
இருக்கக்கூடிய அனைத்து
பந்தனங்களிலிருந்து விடுபட்ட
ஃபரிஷ்தா
ஆகுக.
யாருக்கு
எந்தவொரு
தேகம்
மற்றும்
தேகதாரிகளிடம்
தொடர்பு
அதாவது
மனதின்
பற்று
இல்லையோ,
அவர்களே
ஃபரிஷ்தா
ஆவார்கள்.
ஃபரிஷ்தாக்களின்
கால்கள்
எப்பொழுதுமே
பூமியிலிருந்து உயரே
இருக்கும்.
பூமியிலிருந்து உயர்ந்து
இருப்பது
என்றால்
தேக
உணர்வின்
நினைவிலிருந்து கடந்து
இருப்பது
ஆகும்.
யார் தேகம்
மற்றும்
தேகத்தின்
உலகத்தினுடைய
நினைவிலிருந்து கடந்து
இருக்கிறார்களோ,
அவர்களே
அனைத்து பந்தனங்களிலிருந்து விடுபட்ட
ஃபரிஷ்தா
ஆகிறார்கள்.
அத்தகைய
ஃபரிஷ்தாக்களே
டபுள்
லைட்
ஸ்திதியின் அனுபவம்
செய்கின்றார்கள்.
சுலோகன்:-
பேச்சின்
கூடவே
நடத்தை
மற்றும்
முகத்தில்
தந்தைக்கு
சமமான
குணம்
தென்பட வேண்டும்,
அப்பொழுதே
பிரத்யட்சம்
ஏற்படும்.
ஓம்சாந்தி