18.02.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
சுயதரிசன
சக்கரதாரியாக
ஆகுக
-
நீங்கள்
கலங்கரை
விளக்காக ஆக
வேண்டும்.
தங்களை
ஆத்மா
என்று
உணருங்கள்
இதில்
கவனக்
குறைவாக இருக்காதீர்கள்.
கேள்வி:
நீங்கள்
எல்லோரையும்
விட
அதிசயமான
மாணவர்கள்
ஆவீர்கள்
-
எப்படி?
பதில்:
நீங்கள்
இல்லற
விவகாரங்களில்
இருக்கிறீர்கள்.
சரீர
நிர்வாகத்திற்காக
8
மணி
நேரம்
கர்மமும் செய்கிறீர்கள்.
கூடவே
வருங்கால
21
பிறவிகளுக்காகவும்
8
மணி
நேரம்
தந்தைக்கு
சமானமாக
(பாப்
சமான்)
ஆக்கும்
சேவை
செய்கிறீர்கள்.
எல்லாமே
செய்துக்கொண்டே
தந்தை
மற்றும்
ஆஸ்தியை
நினைவு
செய்கிறீர்கள்.
இதுவே
உங்களுடைய
அதிசயமான
மாணவ
வாழ்க்கை
ஆகும்.
ஞானம்
மிகவும்
சுலபமானது
ஆகும்.
தூய்மை
ஆவதற்கான
உழைப்பு
மட்டும்
செய்கிறீர்கள்.
ஓம்
சாந்தி.
தந்தை
குழந்தைகளிடம்
கேட்கிறார்,
வரிசைக்கிரமமான
முயற்சியின்படி
மூலவதனம்
கூட வரிசைக்கிரமமாக
அவசியம்
நினைவு
வந்து
கொண்டிருக்கக்கூடும்.
நாம்
முதலில் சாந்திதாமத்தில்
வசிப்பவர்களாக இருக்கிறோம்.
பிறகு
சுகதாமத்தில்
வருகிறோம்
என்பது
கூட
குழந்தைகளின்
நினைவில்
வந்திருக்கக்கூடும்.
இவற்றை
உள்ளுக்குள்
அவசியம்
புரிந்திருப்பீர்கள்.
மூலவதனத்திலிருந்து ஆரம்பித்து
இந்த
சிருஷ்டியின் சக்கரம்
எப்படி
சுற்றுகிறது
என்பதும்
புத்தியில்
உள்ளது.
இச்சமயம்
நாம்
பிராமணர்கள்
ஆவோம்.
பிறகு தேவதை,
க்ஷத்திரியர்,
வைசியர்,
சூத்திரராக
ஆகி
விடுவோம்.
இதுவோ
புத்தியில்
சக்கரம்
சுற்ற
வேண்டும் அல்லவா?
குழந்தைகளுடைய
புத்தியில்
இந்த
முழு
ஞானம்
உள்ளது.
தந்தை
புரிய
வைத்துள்ளார்.
முன்னால் அறியாமல்
இருந்தோம்.
இப்பொழுது
நீங்கள்
தான்
அறிந்துள்ளீர்கள்.
நாளுக்கு
நாள்
உங்களுடைய
வளர்ச்சி ஆகிக்
கொண்டே
இருக்கும்.
நிறைய
பேருக்கு
கற்பித்துக்
கொண்டே
இருக்கிறீர்கள்.
அவசியம்
முதலாவதாக நீங்கள்
தான்
சுயதரிசன
சக்கரதாரியாக
ஆவீர்கள்.
இங்கு
நீங்கள்
அமர்ந்துள்ளீர்கள்.
அவர்
நமது
தந்தை ஆவார்
என்பதை
புத்தியால்
அறிந்துள்ளீர்கள்.
அவரே
கற்பிக்கக்
கூடிய
சுப்ரீம்
(உயர்ந்த)
ஆசிரியரும்
ஆவார்.
நாம்
84-பிறவியின்
சக்கரம்
எப்படி
சுற்றுகிறோம்
என்பதை
அவர்
தான்
புரிய
வைத்துள்ளார்.
புத்தியில் அவசியம்
நினைவிருக்கக்
கூடும்
அல்லவா?
இது
புத்தியில்
ஒவ்வொரு
நேரமும்
நினைவு
செய்ய
வேண்டும்.
பாடம்
ஒன்றும்
பெரியது
அல்ல.
ஒரு
செகண்டின்
பாடம்
ஆகும்.
நாம்
எங்கே
வசிப்பவர்களாக
இருந்து.
பிறகு இங்கு
எப்படி
பாகத்தை
நடிக்க
வருகிறோம்
என்பது
புத்தியில்
இருக்கிறது.
84-பிறவியினுடைய
சக்கரம்
ஆகும்.
சத்யுகத்தில்
இத்தனை
பிறவிகள்
திரேதாவில்
இத்தனை
பிறவிகள்
-
இந்த
சக்கரமோ
நினைவு
செய்வீர்கள் அல்லவா?
நமக்கு
என்ன
பதவி
(பொஸிஷன்)
கிடைத்துள்ளதோ,
பார்ட்
நடித்தோமோ
அது
கூட
அவசியம் புத்தியில்
நினைவு
இருக்கும்.
நாம்
இரட்டை
கிரீடம்
அணிந்தவர்களாக
இருந்தோம்.
பிறகு
ஒற்றைக்
கிரீடம் அணிந்தவர்களாக
ஆகிறோம்
என்று
கூறுவோம்.
பிறகு
முழு
இராஜ்யமே
போய்
விட்டது.
தமோபிரதானமாக ஆகிவிட்டோம்.
இந்த
சக்கரமோ
சுற்ற
வேண்டும்
அல்லவா?
எனவே
பெயரே
சுயதரிசன
சக்கரதாரி
என்று வைக்கப்பட்டுள்ளது.
ஆத்மாவிற்கு
ஞானம்
கிடைத்துள்ளது.
ஆத்மாவிற்கு
தரிசனம்
ஆகி
உள்ளது.
நாம்
இது போல
சக்கரம்
சுற்றுகிறோம்
என்பதை
ஆத்மா
அறிந்துள்ளது.
இப்பொழுது
மீண்டும்
வீட்டிற்குச்
செல்ல வேண்டும்.
என்னை
நினைவு
செய்தீர்கள்
என்றால்
வீட்டிற்குப்
போய்
சேர்ந்து
விடுவீர்கள்
என்று
தந்தை கூறியுள்ளார்.
இச்சமயம்
நீங்கள்
அந்த
மனநிலையில்
அமர்ந்து
விடுவீர்கள்
என்பதும்
அல்ல.
இல்லை,
வெளியிலிருந்து நிறைய
விஷயங்கள்
புத்தியில்
வந்து
விடுகின்றன.
ஒருவருக்கு
ஒன்று
நினைவு
வந்து கொண்டிருக்கும்.
மற்றொருவருக்கு
இன்னொன்று
நினைவு
வந்து
கொண்டிருக்கும்.
இங்கோ
மற்ற
எல்லா விஷயங்களையும்
ஒரு
முகப்படுத்தி
ஒருவரை
மட்டுமே
நினைவு
செய்யுங்கள்
என்று
தந்தை
கூறுகிறார்.
ஸ்ரீமத்
கிடைக்கிறது.
அதன்படி
நடக்க
வேண்டும்.
சுயதரிசன
சக்கரதாரி
ஆகி
நீங்கள்
கடைசி
வரையும் முயற்சி
செய்ய
வேண்டும்.
முதலிலோ ஒன்றும்
தெரியாமல்
இருந்தது.
இப்பொழுதோ
தந்தை
கூறுகிறார்
-அவரை
நினைவு
செய்வதால்
எல்லாமே
வந்துவிடுகிறது.
படைப்பவர்
மற்றும்
படைப்பினுடைய
முதல்-இடை-கடைசி
பற்றிய
முழு
ஞானம்
புத்தியில்
வந்து
விடுகிறது.
இந்த
பாடம்
கிடைக்கிறது.
அதையோ
வீட்டில்
(இருக்கும்
போது)
கூட
நினைவு
செய்ய
முடியும்.
இது
புத்தியின்
மூலமாகப்
புரிந்து
கொள்வதற்கான
விஷயம்
ஆகும்.
நீங்கள்
அதிசயமான
மாணவர்கள்
ஆவீர்கள்.
8
மணி
நேரம்
தாராளமாக
ஓய்வெடுங்கள்.
8
மணி
நேரம்
சரீர நிர்வாகத்திற்காக
காரியம்
கூட
தாராளமாகச்
செய்யுங்கள்
என்று
தந்தை
புரிய
வைத்துள்ளார்.
அந்த
தொழில் ஆகியவை
கூட
செய்ய
வேண்டும்.
கூடவே
தந்தை
அளித்திருக்கும்
தனக்குச்
சமானமாக
ஆக்குவதற்கான தொழில்
-
இது
கூட
சரீர
நிர்வாகம்
ஆகியது
அல்லவா?
அது
குறுகிய
காலத்திற்கானது
ஆகும்
மற்றும்
இது
21
பிறவிகள்
சரீர
நிர்வாகத்திற்கானது
ஆகும்.
நீங்கள்
என்ன
பாகத்தை
நடிக்கிறீர்களோ
அதில்
இதற்கும்
மிக உயர்ந்த
மகத்துவம்
உள்ளது.
யார்
எந்தளவு
உழைப்பு
செய்கிறார்களோ
அவ்வளவே.
பிற்காலத்தில்
பக்தியில் அவர்களுக்குப்
பூஜை
நடக்கிறது.
இந்த
எல்லா
தாரணைகளும்
குழந்தைகளாகிய
நீங்கள்
தான்
செய்ய வேண்டும்.
குழந்தைகளாகிய
நீங்கள்
பார்ட்தாரி
ஆவீர்கள்.
பாபாவோ
ஞானம்
அளிப்பதற்கான
பார்ட்
மட்டும் நடிக்கிறார்.
மற்றபடி
சரீர
நிர்வாகத்திற்கான
முயற்சி
(புருஷார்த்தம்)
நீங்கள்
செய்வீர்கள்.
பாபாவோ
செய்ய மாட்டார்
அல்லவா?
தந்தையோ
இந்த
உலக
சரித்திரம்
பூகோளம்
எப்படி
எப்படி
திரும்ப
நடைபெறுகிறது,
சக்கரம்
எப்படிச்
சுற்றுகிறது
என்று
புரிய
வைப்பதற்காகவே
வருகிறார்.
இவற்றைப்
புரிய
வைப்பதற்காகத்
தான் வருகிறார்.
யுக்தியுடன்
புரிய
வைத்துக்
கொண்டே
இருக்கிறார்.
குழந்தைகளே
கவனக்
குறைவாக
இருக்காதீர்கள் என்று
தந்தை
புரிய
வைக்கின்றார்.
சுயதரிசன
சக்கரதாரி
அல்லது
லைட்
ஹவுஸ்
ஆக
வேண்டும்.
தன்னை ஆத்மா
என்று
உணர
வேண்டும்.
சரீரம்
இல்லை
என்றால்
ஆத்மா
பாகத்தை
நடிக்க
முடியாது
என்பதையோ அறிந்துள்ளீர்கள்.
மனிதர்களுக்கு
எதுவுமே
தெரியாது.
உங்களிடம்
வருகிறார்கள்.
நன்றாக
உள்ளது,
நன்றாக உள்ளது
என்கிறார்கள்.
ஆனால்
சுயதரிசன
சக்கரதாரியாக
ஆக
முடியாமல்
இருக்கிறார்கள்.
இதில்
நிறைய அப்பியாசம்
செய்ய
வேண்டி
வருகிறது.
அவ்வாறு
செய்தார்கள்
என்றால்
பிறகு
எங்கு
சென்றாலும்
ஞானக் கடல்
போல
ஆகி
விடுவார்கள்.
எப்படி
மாணவர்கள்
படித்து
ஆசிரியர்
ஆகி
விடுகிறார்கள்.
பிறகு
கல்லூரியில் கற்பிக்கிறார்கள்
மற்றும்
தொழிலில் ஈடுபட்டு
விடுகிறார்கள்.
உங்களுடைய
தொழிலே
ஆசிரியர்
ஆவது
ஆகும்.
அனைவரையும்
சுயதரிசன
சக்கரதாரியாக
ஆக்குங்கள்.
இரட்டை
கிரீடம்
அணிந்த
ராஜாக்கள்
பிறகு
எவ்வாறு ஒற்றை
கிரீடம்
அணிந்த
ராஜாக்களாக
ஆகிறார்கள்
என்பது
பற்றிய
படத்தை
குழந்தைகள்
அமைத்தார்கள்.
இதுவோ
சரி
தான்.
ஆனால்
எப்பொழுது
முதல்
எப்பொழுது
வரை
இரட்டை
கிரீடம்
அணிந்தவர்களாக இருந்தார்கள்?
எப்பொழுது
முதல்
எப்பொழுது
வரை
ஒற்றை
கிரீடம்
அணிந்தவர்களாக
ஆனார்கள்?
பிறகு எப்படி
மற்றும்
எப்பொழுது
ராஜ்யம்
பறிக்கப்பட்டது?
அந்த
தேதிகள்
எழுத
வேண்டும்.
இது
எல்லையில்லாத பெரிய
நாடகம்
ஆகும்.
நாம்
மீண்டும்
தேவதை
ஆகிறோம்
என்பது
நிச்சயம்.
இப்பொழுது
பிராமணர்கள்
ஆகி உள்ளோம்.
பிராமணர்கள்
தான்
சங்கமயுகத்தினர்
ஆவார்கள்.
நீங்கள்
கூறாத
வரைக்கும்
இது
யாருக்குமே தெரியாது.
இது
உங்களுடைய
அலௌகீக
ஜன்மம்
ஆகும்.
லௌகீக
தந்தை
மற்றும்
பரலௌகீக
தந்தையிடமிருந்து ஆஸ்தி
கிடைக்கிறது.
(பிரம்மா)
லௌகீகமானவரிடமிருந்து
ஆஸ்தி
கிடைக்க
முடியாது.
இவர்
மூலமாக
தந்தை உங்களுக்கு
ஆஸ்தி
அளிக்கிறார்.
ஹே
பிரபு
என்று
பாடவும்
செய்கிறார்கள்.
ஹே
பிரஜாபிதா
பிரம்மா
என்று ஒரு
பொழுதும்
கூற
மாட்டார்கள்.
லௌகீக
மற்றும்
பரலௌகீக
தந்தையை
நினைவு
செய்கிறார்கள்.
இந்த விஷயங்கள்
யாருக்குமே
தெரியாது.
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
பரலௌகீக
தந்தையினுடையது
அழியாத
ஆஸ்தி ஆகும்.
லௌகீக
தந்தையினுடையது
அழியக்
கூடிய
ஆஸ்தி
ஆகும்.
உதாரணமாக
ஒருவர்
ராஜாவின்
குழந்தை ஆவார்
என்று
வைத்து
கொள்வோம்.
அவருக்கு
5
கோடி
ஆஸ்தி
கிடைக்கிறது.
மேலும்
எல்லையில்லாத தந்தையின்
ஆஸ்தியை
முன்னால்
பார்த்தீர்கள்
என்றால்
இதற்கு
ஒப்பிடும்
பொழுது
இது
அழியாத
ஆஸ்தி ஆகும்
மற்றும்
அதுவோ
அனைத்தும்
அழியப்
போகிறது
என்று
கூறுவோம்.
இன்றைக்கு
யார்
கோடீஸ்வரராக இருக்கிறார்களோ
அவர்கள்
மாயையின்
கட்டில்
பிடிபட்டிருக்கிறார்கள்.
அவர்கள்
வரமாட்டார்கள்.
தந்தை
ஏழைப் பங்காளன்
ஆவார்.
பாரதம்
மிகவும்
ஏழையாக
உள்ளது.
பாரதத்தில்
நிறைய
மனிதர்கள்
கூட
ஏழையாக உள்ளார்கள்.
இப்பொழுது
நீங்கள்
அநேகருக்கு
நன்மை
செய்வதற்கான
முயற்சி
(புருஷார்த்தம்)
செய்து கொண்டிருக்கிறீர்கள்.
பெரும்பாலும்
நோயாளிகளுக்கு
வைராக்கியம்
வருகிறது.
வாழ்வதால்
என்ன
பயன் என்று
நினைப்பார்கள்.
முக்தி
தாமத்திற்குச்
சென்று
விடுவதற்காக
வழி
கிடைத்தால்
நன்றாக
இருக்கும்.
துக்கத்திலிருந்து விடுபடுவதற்கான
முக்தி
வேண்டுகிறார்கள்.
சத்யுகத்தில்
வேண்டுவது
இல்லை.
ஏனெனில் அங்கு
துக்கம்
இல்லை.
இந்த
விஷயங்களை
இப்பொழுது
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
பாபாவின்
குழந்தைகள் வளர்ச்சி
அடைந்து
கொண்டே
இருப்பார்கள்.
யார்
சூரியவம்ச
சந்திரவம்ச
தேவதை
ஆகக்
கூடியவர்களாக இருப்பார்களோ
அவர்களே
வந்து
வரிசைக்கிரமப்படி
முயற்சிக்கேற்ப
ஞானம்
கற்றுக்கொள்வார்கள்.
இந்த ஞானத்தை
தந்தையைத்
தவிர
வேறு
யாரும்
அளிக்க
முடியாது.
இப்பொழுது
நீங்கள்
எல்லையில்லாத
தந்தையை விட்டு
விட்டு
எங்கும்
போக
மாட்டீர்கள்.
யாருக்கு
தந்தையிடம்
அன்பு
உள்ளதோ
அவர்கள்
ஞானமோ மிகவும்
சுலபமானது
என்பதைப்
புரிந்து
கொள்ள
கூடியவர்களாக
இருப்பார்கள்.
மற்றபடி
தூய்மை
ஆவதில் மாயை
தடை
ஏற்படுத்துகிறது.
எந்த
ஒரு
விஷயத்திலும்
தவறு
செய்து
விட்டார்கள்
என்றால்
–
தவறின் காரணமாகத்
தான்
தோற்றுவிடுகிறார்கள்.
இதனுடைய
உதாரணம்
குத்துச்
சண்டையில்
நன்றாக
பொருந்துகிறது.
குத்துச்
சண்டையில்
ஒருவர்
மற்றவர்
மீது
வெற்றி
அடைகிறார்.
மாயை
நம்மை
தோற்கடித்து
விடுகிறது என்பதை
குழந்தைகள்
அறிந்துள்ளார்கள்.
இனிமையான
குழந்தைகளே
தன்னை
ஆத்மா
என்று
உணருங்கள்
என்று
தந்தை
கூறுகிறார்.
இதில் உழைப்பு
தேவை
என்று
சுயம்
தந்தை
புரிந்துள்ளார்.
தந்தை
மிகவும்
எளிதான
யுக்தி
கூறுகிறார்.
நாம் ஆத்மாக்கள்
ஆவோம்.
ஒரு
சரீரம்
விட்டு
மற்றொன்றை
எடுக்கிறோம்.
பாகத்தை
நடிக்கிறோம்.
எல்லையில்லாத தந்தையின்
குழந்தைகள்
ஆவோம்
-
இதை
நல்ல
முறையில்
உறுதி
செய்துக்
கொள்ள
வேண்டும்.
மாயை இவர்களுடைய
புத்தியோகத்தைத்
துண்டித்து
விடுகிறது
என்று
பாபா
உணருகிறார்.
வரிசைக்கிரமமாகவோ இருக்கவே
இருக்கிறார்கள்.
இதே
கணக்குப்படி
தான்
ராஜதானி
அமைகிறது.
எல்லோரும்
ஒன்று
போல ஆகிவிட்டால்
பிறகு
ராஜ்யம்
அமைய
முடியாது.
ராஜா,
ராணி,
பிரஜைகள்,
செல்வந்தர்கள்
எல்லோருமே
ஆக வேண்டி
உள்ளது.
இந்த
விஷயங்கள்
உங்களைத்
தவிர
வேறு
யாருமே
அறியாமல்
உள்ளார்கள்.
நாம்
நமது ராஜதானி
ஸ்தாபனை
செய்து
கொண்டிருக்கிறோம்.
இந்த
எல்லா
விஷயங்கள்
கூட
உங்களுக்குள்ளேயும்
யார் நெருங்கியவர்களாக
இருக்கிறார்களோ
அவர்களுக்கு
நினைவு
இருக்கும்.
இந்த
விஷயங்களை
ஒரு
பொழுதும் மறக்கக்
கூடாது.
நாம்
மறந்து
விடுகிறோம்
என்பதை
குழந்தைகள்
அறிந்துள்ளார்கள்.
இல்லை
என்றால்
நாம் உலகத்திற்கு
அதிபதி
ஆகிறோம்
என்ற
மிக்க
மகிழ்ச்சி
இருக்க
வேண்டும்.
முயற்சியால்
தான்
ஆக்கப்படுகிறது.
கூறுவதால்
மட்டும்
அல்ல.
பாபா
வந்த
உடனேயே
"குழந்தைகளே,
எச்சரிக்கையாக
இருங்கள்,
சுயதரிசன சக்கரதாரி
ஆகி
அமர்ந்துள்ளீர்களா?"
என்று
கேட்கிறார்.
தந்தையும்
சுயதரிசன
சக்கரதாரி
ஆவார்
அல்லவா?
இவருக்குள்
பிரவேசம்
செய்கிறார்.
மனிதர்களோ
விஷ்ணு
தான்
சுயதரிசன
சக்கரதாரி
என்று
நினைக்கிறார்கள்.
அவர்
(விஷ்ணு)
லட்சுமி
நாராயணர்
ஆவார்கள்
என்பது
அவர்களுக்குத்
தெரியவே
தெரியாது.
இவர்களுக்கு யார்
ஞானம்
அளித்தது?
அந்த
ஞானத்தின்
மூலமாக
இவர்கள்
இந்த
லட்சுமி
நாராயணரின்
பதவியை அடைந்திருக்கிறார்கள்.
சுயதரிசன
சக்கரத்தினால்
கொன்றார்
என்று
காண்பிக்கிறார்கள்.
உங்களுக்கு
இந்த
படங்களை தயாரிப்பவர்களைப்
பார்த்து
சிரிப்பு
வருகிறது.
விஷ்ணு
இணைந்த
கிரஹஸ்த
ஆசிரமத்தின்
அடையாளம் ஆகும்.
படம்
அழகாக
இருக்கிறது.
மற்றபடி
இது
ஒன்றும்
சரியான
படம்
அல்ல.
முதலில் நீங்கள்
அறியாமல் இருந்தீர்கள்.
4
புஜங்கள்
உடையவர்
இங்கு
எங்கிருந்து
வந்தார்.
இந்த
எல்லா
விஷயங்களையும்
உங்களிடையேயும்
வரிசைக்கிரமமாக
அறிந்துள்ளீர்கள்.
எல்லாமே
உங்களுடைய
முயற்சியைப்
பொறுத்தது
என்று
தந்தை கூறுகிறார்.
தந்தையின்
நினைவினால்
தான்
பாவங்கள்
நீங்குகின்றன.
எல்லாவற்றையும்
விட
அதிகமாக
முதல் நம்பர்
இந்த
முயற்சி
செய்ய
வேண்டும்.
தந்தை
நேரமோ
கொடுத்திருக்கிறார்.
இல்லற
விவகாரங்களில்
கூட இருக்க
வேண்டும்.
இல்லையென்றால்
குழந்தைகள்
ஆகியோரை
யார்
பராமரிப்பார்கள்?
அவை
எல்லாமே செய்து
கொண்டிருக்கும்
பொழுதும்
கூட
அப்பியாசம்
செய்ய
வேண்டும்.
மற்றபடி,
வேறு
எந்த
விஷயமும் கிடையாது.
கிருஷ்ணருக்கு
அகாசுரன்,
பகாசுரன்
ஆகியோரை
சுயதரிசன
சக்கரத்தால்
கொன்றார்
என்று காண்பித்துள்ளார்கள்.
சக்கரம்
போன்றவை
பற்றிய
விஷயமே
கிடையாது
என்பதை
இப்பொழுது
நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
எவ்வளவு
வித்தியாசம்
உள்ளது.
இதை
தந்தை
தான்
புரிய
வைக்கிறார்.
மனிதர்
மனிதருக்குப் புரிய
வைக்க
முடியாது.
மனிதர்
மனிதருக்கு
சத்கதி
அளிக்க
முடியாது.
படைப்பவர்
மற்றும்
படைப்பின்
முதல் இடை
கடை
பற்றிய
ரகசியத்தை
யாரும்
புரிய
வைக்க
முடியாது.
சுயதரிசன
சக்கரத்தின்
பொருள்
என்ன என்பதையும்
இப்பொழுது
தந்தை
தான்
புரிய
வைத்துள்ளார்.
சாஸ்திரங்களிலோ
எப்பேர்ப்பட்ட
கதைகளை அமைத்துள்ளார்கள்
என்றால்
கேட்கவே
வேண்டாம்.
கிருஷ்ணரைக்
கூட
இம்சை
செய்பவராக
ஆக்கி விட்டுள்ளார்கள்.
இதில்
தனிமையாக
அமர்ந்து
சிந்தனைக்
கடலை
கடைய
வேண்டியுள்ளது.
இரவில்
எந்த குழந்தைகள்
காவல்
காக்கிறார்களோ
அவர்களுக்கு
நிறைய
நேரம்
நன்றாக
கிடைக்கிறது.
அவர்களால்
நிறைய நினைவு
செய்ய
முடியும்.
தந்தையை
நினைவு
செய்தபடியே
சுயதரிசன
சக்கரத்தையும்
சுற்றிக்
கொண்டே இருங்கள்.
நினைவு
செய்தீர்கள்
என்றால்
குஷியில்
தூக்கம்
கூட
கலைந்து
போய்விடும்.
யாருக்கு
செல்வம் கிடைக்கிறதோ
அவர்கள்
மிகவும்
குஷியில்
இருப்பார்கள்.
ஒருபொழுதும்
தூங்கி
விழ
மாட்டார்கள்.
நாம் என்றும்
ஆரோக்கியமும்
செல்வமும்
உடையவர்களாக
ஆகிறோம்
என்பதை
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
எனவே இதில்
நல்ல
முறையில்
ஈடுபட்டு
விட
வேண்டும்.
நாடகப்படி
என்ன
நடக்கிறதோ
அது
சரியாகவே
நடக்கிறது என்பதையும்
இப்பொழுது
தந்தை
அறிந்துள்ளார்.
இருப்பினும்
முயற்சி
செய்வித்து
கொண்டே
இருக்கிறார்.
இப்பொழுது
தந்தை
அறிவுரை
அளிக்கிறார்.
ஞானமும்
இல்லாமல்
யோகமும்
இல்லாமல்
இருப்பவர்கள்
கூட நிறைய
பேர்
இருக்கிறார்கள்.
யாராவது
புத்திசாலி வித்வான்
ஆகியோர்கள்
வந்து
விட்டார்கள்
என்றால் அவர்கள்
உரையாட
முடியாமல்
இருப்பார்கள்.
நம்மிடம்
யார்
யார்
நன்றாகப்
புரிய
வைக்கக்
கூடியவர்கள் இருக்கிறார்கள்
என்பதை
நன்கு
சேவை
செய்யும்
குழந்தைகள்
அறிந்திருக்கிறார்கள்.
பின்
தந்தையும்
பார்க்கிறார்
-
இவர்
புத்திசாலி நல்ல கற்றுத்
தேர்ந்த
மனிதராக
இருக்கிறார்
மற்றும்
புரிய
வைப்பவர்
முட்டாளாக இருக்கிறார்
-
எனில்
தந்தை
சுயம்
அவருக்குள்
பிரவேசம்
செய்து
அவரை
உயர்த்த
முடியும்.
பிறகு
யார் உண்மையான
குழந்தைகளாக
இருப்பார்களோ
அவர்கள்
கூறுவார்கள்,
"எங்களிடமோ
அவ்வளவு
ஞானம் இருக்கவில்லை.
இதை
தந்தை
தான்
வந்து
இவருக்குப்
புரிய
வைத்தார்".
ஒரு
சிலருக்கோ
தங்களுடைய அகங்காரம்
வந்து
விடுகிறது.
இதுவும்
அவர்
வருவது
உதவி
செய்வது
நாடகத்தில்
பார்ட்
பொருந்தி
உள்ளது.
நாடகம்
மிகவும்
விசித்திரமானது.
இதைப்
புரிந்து
கொள்வதில்
மிகவுமே
விசால
புத்தி
வேண்டும்.
நாம்
எப்பேர்ப்பட்ட
ராஜதானியை
ஸ்தாபனை
செய்து
கொண்டிருக்கிறோம்
என்றால்
அங்கு
எல்லோருமே வெண்மையாக
(தூய்மையாக)
இருந்தார்கள்.
அங்கு
யாரும்
கருமையாக
இருக்க
மாட்டார்கள்.
இதையும்
நீங்கள் வெண்மையான
மற்றும்
கருமையான
சித்திரத்தை
அமைத்து
எழுதுங்கள்.
63
பிறவிகள்
காமச்
சிதையில் அமர்ந்து
இது
போல
கருமையாக
ஆகி
விட்டுள்ளார்கள்.
ஆத்மா
தான்
அது
போல
ஆகியுள்ளது.
லட்சுமி நாராயணருடையதும்
கருமையான
படம்
அமைத்துள்ளார்கள்.
ஆத்மா
தான்
கருமை
ஆகிறது
என்பதைப் புரிந்து
கொள்வது
இல்லை.
இவர்களோ
சத்யுகத்தின்
அதிபதிகள்,
வெண்மையாக
இருந்தார்கள்.
பிறகு
காம சிதையில்
அமர்ந்ததால்
கருமையாக
ஆகிறார்கள்.
ஆத்மா
புனர்ஜென்மம்
எடுத்து
எடுத்து
தமோ
பிரதானமாக ஆகிறார்.
எனவே
ஆத்மாவும்
கருமையானதாக
மற்றும்
சரீரம்
கூட
கருமையானதாக
ஆகி
விடுகிறது.
எனவே
லட்சுமி
நாராயணரை
ஒரு
இடத்தில்
கருமையாக
ஒரு
இடத்தில்
வெண்மையாக
ஏன்
காண்பித்துள்ளார்கள் என்று
கேலியாக நீங்கள்
கேட்டு
பாருங்கள்.
ஞானமோ
இல்லை.
கிருஷ்ணரையே
வெண்மையாக
பிறகு கருமையாக
ஏன்
காண்பிக்கிறார்கள்.
இதுவோ
நீங்கள்
இப்பொழுது
அறிந்துள்ளீர்கள்.
உங்களுக்கு
இப்பொழுது ஞானத்தின்
மூன்றாவது
கண்
கிடைத்துள்ளது.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
வெகுகாலம்
கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு
தாய்
தந்தை
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
மகிழ்ச்சியில்
முழுமையாக
நிறைந்தவராக
இருக்க
வேண்டும்
என்றால்
தனிமையில்
அமர்ந்து ஞானச்
செல்வத்தை
நினைவு
செய்ய
வேண்டும்.
தூய்மையாக
மற்றும்
சதா
நோயற்றவராக ஆவதற்கு
நினைவில்
இருப்பதற்கான
கடின
உழைப்பு
செய்ய
வேண்டும்.
2.
தந்தைக்குச்
சமானமாக
மாஸ்டர்
ஞானக்
கடல்
ஆகி
அனைவரையும்
சுயதரிசன
சக்கரதாரியாக ஆக்க
வேண்டும்.
கலங்கரை
விளக்காக
ஆக
வேண்டும்.
வருங்கால
21
பிறவிகளுக்கான
சரீர நிர்வாகத்திற்கு
வேண்டி
அவசியம்
ஆன்மீக
ஆசிரியர்
ஆக
வேண்டும்.
வரதானம்:
அழிவற்ற
ஊக்கம்
உற்சாகத்தின்
மூலமாக
புயலை
பரிசாக மாற்றக்
கூடியவராகி
உயர்ந்த
பிராமண
ஆத்மா
ஆகுக.
ஊக்கம்
உற்சாகம்
தான்
பிராமணர்களின்
பறக்கும்
கலையின்
சிறகு
ஆகும்.
இந்த
சிறகுகளினால்
எப்போதும் பறந்துக்
கொண்டே
இருங்கள்.
இந்த
ஊக்கம்
உற்சாகம்
பிராமணர்களாகிய
உங்களுக்கு
மிகப்
பெரிய
சக்தி ஆகும்.
சாரமற்ற
வாழ்க்கை
கிடையாது.
ஊக்கம்
உற்சாகத்தின்
சாரம்
சதா
இருக்கிறது.
ஊக்கம்
உற்சாகம் கடினத்தையும்
எளிதாக்கி
விடுகிறது.
அவர்கள்
ஒரு
போதும்
மனச்
சோர்வு
அடைய
முடியாது.
உற்சாகம் புயலையும்
பரிசாக
மாற்றி
விடுகிறது.
உற்சாகம்
எந்த
ஒரு
பரீட்சை
மற்றும்
பிரச்சனையையும்
பொழுது போக்காக
அனுபவம்
செய்ய
வைக்கிறது.
இப்படிப்பட்ட
அழிவற்ற
ஊக்கம்
உற்சாகத்தில்
இருக்கக்
கூடியவர்கள் தான்
உயர்ந்த
பிராமணர்கள்
ஆவர்.
சுலோகன்:
அமைதி
என்ற
வாசனை
சாம்பிராணியை ஏற்றி
வைத்தால்
அசாந்தி
என்ற
நாற்றம்
நீங்கி
விடும்.
ஓம்சாந்தி