28.08.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
இந்த
பிரம்மா
சத்குருவின்
தர்பாராக
இருக்கிறார்,
இவருடைய புருவ
மத்தியில்
சத்குரு
வீற்றிருக்கிறார்,
அவர்தான்
குழந்தைகளாகிய
உங்களுக்கு
சத்கதி கொடுக்கிறார்.
கேள்வி:
தந்தை
தன்
குழந்தைகளை
எந்த
அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க
வந்திருக்கிறார்?
பதில்:
இந்த
சமயத்தில்
குழந்தைகள்
இயற்கை
மற்றும்
மாயைக்கு
அடிமையாகி
இருக்கின்றனர்.
தந்தை இந்த
அடிமைத்தனத்திலிருந்து இப்போது
விடுவிக்கிறார்.
இப்போது
மாயை
மற்றும்
இயற்கை
இரண்டுமே கஷ்டப்படுத்துகின்றன.
சில
சமயங்களில்
புயல்
வீசும்,
சில
சமயங்களில்
பஞ்சம்
ஏற்படும்
பிறகு
இயற்கை முழுமையாக
உங்களுக்கு
அடிமையாகும்
அளவு
நீங்கள்
எஜமான்
ஆகிவிடுகிறீர்கள்.
மாயையின்
சண்டையும் ஏற்படுவதில்லை.
ஓம்
சாந்தி.
இனிமையிலும்
இனிமையான
ஆன்மீகக்
குழந்தைகள்
புரிந்து
கொண்டிருக்கின்றனர்
–
பரம தந்தையாகவும்
இருக்கிறார்,
பரம
ஆசிரியராகவும்
இருக்கிறார்.
அவர்
உலகின்
முதல்
இடை
கடைசியின் இரகசியத்தையும்
புரிய
வைக்கிறார்,
பிறகு
பரம
குருவாகவும்
இருக்கிறார்.
ஆக,
இவர்
(பிரம்மா)
சத்குருவின் தர்பாராக
இருக்கிறார்.
தர்பார்
நடக்கிறது
அல்லவா!
குருவின்
தர்பார்.
அது
வெறும்
குருவின்
தர்பார்.
சத்குரு அல்ல.
ஸ்ரீ
ஸ்ரீ
108
என்று
சொல்லிக் கொள்வார்கள்,
சத்குரு
என்று
எழுதப்பட்டிருக்காது.
அவர்கள்
குரு
என்று மட்டுமே
கூறுகின்றனர்.
இவர்
சத்குருவாக
இருக்கிறார்.
முதலில் தந்தை,
பிறகு
ஆசிரியர்,
பிறகு
சத்குரு.
சத்குரு
தான்
சத்கதி
கொடுக்கிறார்.
சத்யுகத்திலும்
திரேதாயுகத்திலும்
பிறகு
குரு
இருக்கமாட்டார்கள்,
ஏனென்றால் அனைவரும்
சத்கதியில்
இருக்கின்றனர்.
ஒரு
சத்குரு
கிடைக்கும்போது
மற்ற
அனைத்து
குருமார்களின் பெயரும்
முடிந்து
போய்விடும்.
அனைத்து
குருமார்களில்
குருவாக
இருக்கிறார்,
உயர்வானவராக
இருக்கிறார்.
பதிகளுக்கெல்லாம்
பதி
என்று
கூறுகின்றனர்
அல்லவா!
அது
போல!
அனைவரையும்
விட
உயர்வானவராக இருப்பதால்
இப்படிக்
கூறுகின்றனர்.
நீங்கள்
பரம
தந்தையின்
அருகில்
அமர்ந்திருக்கிறீர்கள்,
எதற்காக?
எல்லைக் கப்பாற்பட்ட
ஆஸ்தியை
எடுப்பதற்காக.
இது
எல்லைக்கப்பாற்பட்ட
ஆஸ்தி.
தந்தையாகவும்
இருக்கிறார்,
ஆசிரியராகவும்
இருக்கிறார்.
மேலும்
இந்த
ஆஸ்தி
புதிய
உலகமாகிய
அமர
லோகத்திற்கானதாகும்,
நிர்விகாரி
(விகாரமற்ற)
உலகத்திற்கானதாகும்.
புதிய
உலகம்
நிர்விகாரி
உலகம்
என்றும்,
பழைய
உலகம்
விஷம்
நிறைந்த உலகம்
என்றும்
சொல்லப்படுகிறது.
சத்யுகம்
சிவாலயம்
என்று
சொல்லப்படுகிறது,
ஏனென்றால்
அது
சிவபாபாவால் உருவாக்கப்பட்டதாகும்.
விஷம்
நிறைந்த
உலகம்
இராவணன்
உருவாக்கியதாகும்.
இப்போது
நீங்கள்
சத்குருவின் தர்பாரில்
அமர்ந்திருக்கிறீர்கள்.
இதை
குழந்தைகளாகிய
நீங்கள்தான்
அறிவீர்கள்.
தந்தைதான்
அமைதிக்
கடலாக இருப்பவர்.
அந்த
தந்தை
வரும்போது
அமைதியின்
ஆஸ்தியைக்
கொடுப்பார்,
வழி
காட்டுவார்.
மற்றபடி காட்டில்
அமைதி
எங்கிருந்து
கிடைக்கும்?
ஆகையால்
தான்
மாலையின்
உதாரணத்தைக்
காட்டுகிறார்.
அமைதியோ
ஆத்மாவின்
கழுத்தின்
மாலையாகும்.
பிறகு
இராவண
இராஜ்யமாக
ஆகும்போது
அசாந்தி
ஏற்படுகிறது.
அவை
சுகதாமம்
என்றும்
சாந்தி
தாமம்
என்று
சொல்லப்படுகின்றன.
அங்கே
துக்கத்தின்
எந்த
விஷயமும் கிடையாது.
மகிமையும்
கூட
எப்போதும்
சத்குருவை
செய்கின்றனர்.
குருவின்
மகிமையை
ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.
ஞானக்கடல்
அந்த
ஒரு
தந்தைதான்
ஆவார்.
இப்படி
எப்போதாவது
குருவின்
மகிமையைக் கேட்டிருக்கிறீர்களா?
இல்லை.
அந்த
குருமார்கள்
உலகின்
பதீத
பாவனராக
ஆக
முடியாது.
ஒரே
ஒரு
நிராகார எல்லைக்கப்பாற்பட்ட
பெரிய
பாபாதான்
அவ்வாறு
கூறப்படுகிறார்.
நீங்கள்
இப்போது
சங்கமயுகத்தில்
நின்றிருக்கிறீர்கள்.
ஒரு
புறம்
தூய்மையற்ற
பழைய
உலகம்,
மற்றொரு புறம்
தூய்மையான
புதிய
உலகம்.
தூய்மையற்ற
உலகில்
அளவற்ற
குருமார்கள்
இருக்கின்றனர்.
முன்னர் உங்களுக்கு
இந்த
சங்கமயுகத்தைப்
பற்றி
தெரியாமல்
இருந்தது.
இப்போது
தந்தை
புரிய
வைத்துள்ளார்
–
இது புருஷோத்தம
சங்கமயுகம்.
இதன்
பிறகு
மீண்டும்
சத்யுகம்
வர
வேண்டும்,
சக்கரம்
சுற்றியபடி
இருக்கும்.
இந்த
நினைவு
புத்தியில்
இருக்க
வேண்டும்.
நாம்
அனைவரும்
சகோதர-சகோதரர்கள்
எனும்போது
எல்லைக்கப்பாற்பட்ட
தந்தையிடமிருந்து
கண்டிப்பாக
ஆஸ்தி
கிடைக்கிறது.
இது
யாருக்கும்
தெரியாது.
எவ்வளவு பெரிய
பெரிய
பதவிகளில்
இருக்கும்
மனிதர்களாக
இருக்கின்றனர்,
ஆனால்
எதையும்
தெரிந்து
கொள்வதில்லை.
நான்
உங்கள்
அனைவருக்கும்
சத்கதி
வழங்குகிறேன்
என்று
தந்தை
சொல்கிறார்.
இப்போது
நீங்கள்
புத்திசாலிகளாக ஆகியுள்ளீர்கள்.
முன்னர்
எதுவும்
தெரிந்திருக்கவில்லை.
இந்த
தேவதைகளுக்கு
முன்னால்
சென்று
நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்
-
நாங்கள்
புத்தியற்றவர்கள்,
எங்களுக்குள்
எந்த
குணங்களும்
இல்லை,
நீங்கள் இரக்கம்
காட்டுங்கள்.
இப்போது
இந்த
தேவதைகளின்
படங்கள்
இரக்கம்
காட்டுமா
என்ன!
இதைத்
தெரிந்து கொள்வதே
இல்லை
-
இரக்கம்
காட்டக்கூடியவர்
யார்?
ஓ,
இறைத்
தந்தையே!
இரக்கம்
காட்டுங்கள்
என்று சொல்லவும்
செய்கின்றனர்.
ஏதாவது
துக்கத்தின்
விஷயம்
வந்தது
என்றால்
தந்தையை
கண்டிப்பாக
நினைவு செய்கின்றனர்.இப்போது
நீங்கள்
இப்படி
சொல்வதில்லை.
தந்தையோ
உடலற்றவர்.
அவர்
முன்னால் அமர்ந்திருக்கிறார்,
அப்போது
தான்
நமஸ்காரம்
செய்கிறார்.
நீங்கள்
அனைவரும்
தேகதாரிகள்.
நான்
விசித்திரமாக
(அசரீரி)
உள்ளேன்.
நான்
ஒருபோதும்
சித்திரத்தை
தாரணை
செய்வதில்லை.
என்னுடைய
சித்திரத்தின்
பெயர் சொல்லுங்கள்
பார்ப்போம்!
சிவபாபா
என்று
தான்
சொல்வீர்கள்.
நான்
இதை
(உடலை)
கடனாக
எடுத்துள்ளேன்.
அதுவும்
பழையதிலும்
பழைய
செருப்பு.
அதில்
தான்
நான்
வந்து
பிரவேசம்
செய்கிறேன்.
இந்த
சரீரத்தின் மகிமையை
எங்கே
செய்கிறார்?
இதுவோ
பழைய
சரீரமாகும்.
தத்தெடுத்துள்ளார்
என்றால்
மகிமை
செய்வாரா என்ன!
அல்ல.
இதைப்
புரிய
வைக்கிறார்
-
இப்படி
இருந்தார்,
இப்போது
மீண்டும்
என்
மூலமாக
அழகாக ஆகப்
போகிறார்.
நான்
சொல்வதை
யோசித்து
தீர்மானியுங்கள்
என்று
இப்போது
தந்தை
கூறுகிறார்.
நான் சொல்வது
சரி
என்றால்,
சரியானவரை
நினைவு
செய்யுங்கள்.
அவரிடம்
மட்டுமே
கேளுங்கள்,
சரியற்றவைகளை கேட்கவே
கேட்காதீர்கள்.
அவை
கெட்டவை
என்று
சொல்லப்படுகிறது.
கெட்டதைப்
பேசாதீர்கள்,
கெட்டதைப் பார்க்காதீர்கள்....
இந்த
கண்களால்
காணும்
அனைத்தையும்
மறந்துவிடுங்கள்.
இப்போது
நம்
வீட்டிற்குச்
செல்ல வேண்டும்,
பிறகு
நமது
சுகதாமத்திற்கு
மீண்டும்
வருவோம்.
மற்ற
இவையனைத்தும்
இறந்து
கிடப்பது போல்தான்
ஆகும்.
தற்காலிகமான தாகும்.
இந்த
பழைய
சரீரங்களும்
இருக்கப்
போவதில்லை,
இந்த
உலகமும் இருக்கப்
போவதில்லை.
புதிய
உலகத்திற்காக
நாம்
முயற்சி
செய்து
கொண்டிருக்கிறோம்.
பிறகு
உலகின் வரலாறு
புவியியல்
மீண்டும்
நடக்கப்
போகிறது.
நீங்கள்
தனது
இராஜ்ய
பாக்கியத்தை
எடுத்துக்
கொண்டிருக்கிறீர்கள்.
கல்ப
கல்பத்திற்கும்
இராஜ்ய
பாக்கியத்தைக்
கொடுப்பதற்காக
தந்தை
வருகிறார்
என்று
தெரிந்திருக்கிறீர்கள்.
பாபா
கல்பத்திற்கு
முன்பும்
கூட
சந்தித்தோம்,
ஆஸ்தி
எடுத்தோம்,
நரனிலிருந்து நாராயணன்
ஆகியிருந்தோம்.
மற்றபடி
ஒருவரைப்
போலவே
பதவிகளை
அடைய
முடியாது.
வரிசைக்கிரமமாக
இருக்கின்றனர்.
இது ஆன்மீகப்
பல்கலைக்கழகம்
ஆகும்.
ஆன்மீகத்
தந்தை
படிப்பிப்பவராக
உள்ளார்.
குழந்தைகள்
கூட
படிப்பிக்கின்றனர்.
கல்லூரி
முதல்வரின்
மகன்
இருந்தால்
அவரும்
கூட
சேவையில்
ஈடுபடுகிறார்.
மனைவியும்
கூட படிப்பிக்கத்
தொடங்கி
விடுகிறார்.
மகளும்
கூட
நல்ல
விதமாக
படித்தார்
என்றால்
பிறருக்கு
படிப்பிக்க
முடியும்.
ஆனால்
அவர்
வேறொரு
வீட்டிற்குச்
சென்று
விடுகிறார்.
இங்கே
பெண்
குழந்தைகள்
வேலைக்குச்
செல்லக் கூடிய
விதிமுறைகள்
இல்லை.
புதிய
உலகில்
பதவி
அடைவதற்கான
முழுமையான
ஆதாரமும்
இந்தப் படிப்பில்
உள்ளது.
இந்த
விஷயங்கள்
உலகினருக்குத்
தெரியாது.
பகவானுடைய
மகாவாக்கியம்
-
ஓ
குழந்தைகளே,
நான்
உங்களை
இராஜாக்களுக்கெல்லாம்
இராஜா
ஆக்குகிறேன்
என்று
எழுதப்
பட்டுள்ளது.
தேவிகளின் படங்களை
உருவாக்குவது
போல
நான்
எதுவும்
பொம்மை
மாதிரிகளை
உருவாக்குவதில்லை.
நீங்கள்
படித்து அந்த
பதவியை
அடைகிறீர்கள்.
அவர்கள்
மண்ணாலான
உருவங்களை
பூஜை
செய்வதற்காக
உருவாக்குகின்றனர்.
இங்கேயோ
ஆத்மா
படிக்கிறது.
பிறகு
நீங்கள்
சம்ஸ்காரங்களை
எடுத்துச்
செல்வீர்கள்,
புதிய
உலகில்
சென்று சரீரம்
எடுப்பீர்கள்.
உலகம்
முடிந்து
போவதில்லை.
யுகங்கள்
மட்டும்
மாறுகின்றன
-
தங்க
யுகம்,
வெள்ளியுகம்,
தாமிர
யுகம்,
இரும்பு
யுகம்.
16
கலைகளிலிருந்து
14
கலைகள்.
அதே
உலகம்தான்
நடந்தபடி
இருக்கிறது,
புதியதிலிருந்து பழையதாகிறது.
தந்தை
இந்த
படிப்பின்
மூலம்
உங்களை
இராஜாக்களுக்கு
இராஜா
ஆக்குகிறார்.
இப்படி
படிப்பிக்கக்
கூடிய
சக்தி
வேறு
யாரிடமும்
கிடையாது.
எவ்வளவு
நல்ல
விதமாக
புரிய
வைக்கிறார்!
பிறகு
படித்துக்
கொண்டிருக்கும்
போதே
மாயா
தன்னுடையவர்களாக
ஆக்கிக்
கொண்டு
விடுகிறது.
பிறகும் கூட
யார்
யார்
எவ்வளவு
படித்தார்களோ
அதற்குத்
தகுந்தாற்போல
அவர்கள்
சொர்க்கத்தில்
கண்டிப்பாக வருவார்கள்.
வருமானம்
போய்
விடாது.
அழிவற்ற
ஞானம்
வினாசமாவதில்லை.
போகப்போக
வந்து
சேருவார்கள்,
வேறு
எங்கே
போவார்கள்?
ஒரே
கடைதான்
இருக்கிறது
அல்லவா!
வந்தபடி
இருப்பார்கள்.
மயானத்திற்கு மனிதர்கள்
செல்லும்
போது
பெரிய
வைராக்கியம்
வருகிறது.
அவ்வளவுதான்,
இந்த
சரீரத்தை
இப்படி
விட வேண்டியுள்ளது.
பிறகு
நாம்
ஏன்
பாவம்
செய்ய
வேண்டும்?
பாவங்கள்
செய்தபடி
நாம்
இப்படி
இறந்து விடுவோம்!
இப்படி
சிந்தனைகள்
வருகின்றன.
இதற்கு
சுடுகாட்டு
வைராக்கியம்
என்று
சொல்லப்படுகிறது.
சென்று
வேறு
சரீரம்
எடுப்பார்கள்
என்று
புரிந்து
கொள்ளவும்
செய்கின்றனர்.
ஆனால்
ஞானம்
இல்லை அல்லவா!
இங்கேயோ
குழந்தைகளாகிய
உங்களுக்குப்
புரிய
வைக்கப்படுகிறது,
இந்த
சமயம்
நீங்கள்
குறிப்பாக இறப்பதற்கான
ஏற்பாடுகள்
செய்து
கொண்டிருக்கிறீர்கள்.
ஏனென்றால்
இங்கே
நீங்கள்
தற்காலிகமாக இருக்கிறீர்கள்.
ஆனால்
சரீரம்
விட்டு
விட்டு
பிறகு
புதிய
உலகிற்குச்
செல்வீர்கள்.
குழந்தைகளே,
நீங்கள்
எந்த
அளவு என்னை
நினைவு
செய்வீர்களோ
அந்த
அளவு
பாவங்கள்
நீங்கியபடி
இருக்கும்
என்று
தந்தை
சொல்கிறார்.
சகஜத்திலும்
சகஜமானது
என்றால்
கஷ்டமாகவும்
இருக்கிறது.
குழந்தைகள்
முயற்சி
செய்யத்
தொடங்கும்போது மாயாவின்
பெரிய
யுத்தம்
இருப்பதாகப்
புரிந்து
கொள்கின்றனர்.
சகஜமானது
என்று
தந்தை
சொல்கிறார்,
ஆனால்
மாயை
தீபத்தையே
அணைத்து
விடுகிறது.
குலேபகாவலியின்
கதையும்
இருக்கிறதல்லவா!
மாயை எனும்
பூனை
தீபத்தை
அணைத்து
விடுகிறது.
இங்கே
அனைவரும்
மாயையின்
அடிமைகளாக
இருக்கின்றனர்.
பிறகு
நீங்கள்
மாயையை
அடிமையாக்குகிறீர்கள்.
முழு
இயற்கையும்
உங்களுக்கு
மரியாதை
கொடுக்கும்.
எந்த புயலும்
இருக்காது,
பஞ்சமும்
இருக்காது.
இயற்கையை
அடிமையாக்க
வேண்டும்.
அங்கே
ஒருபோதும்
மாயையுடன்
சண்டை
நடக்காது.
இப்போது
எவ்வளவு
கஷ்டப்படுத்துகிறது.
நான்
உன்
அடிமை....
என்ற
பாடலில் உள்ளதல்லவா!
அது
பிறகு
சொல்கிறது
-
நீ
எனது
அடிமை.
நான்
இப்போது
உங்களை
அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக
வந்துள்ளேன்
என்று
தந்தை
கூறுகிறார்.
நீங்கள்
எஜமான்
ஆகிவிடுகிறீர்கள்,
அது
அடிமை யாகிவிடும்.
கொஞ்சம்
கூட
கஷ்டம்
இருக்காது.
இதுவும்
கூட
நாடகத்தில்
பதிவாகியுள்ளது.
பாபா,
மாயை மிகவும்
கஷ்டத்தைக்
கொடுக்கிறது
என்று
நீங்கள்
சொல்கிறீர்கள்.
ஏன்
கொடுக்காது?
இது
யுத்த
மைதானம் என்றுதான்
கூறப்படுகிறது.
மாயையை
அடிமையாக்குவதற்காக
நீங்கள்
முயற்சிக்கிறீர்கள்,
அப்போது
மாயை கூட
உங்களை
அலைக்கழிக்கிறது.
எவ்வளவு
கஷ்டப்படுத்துகிறது!
எவ்வளவு
பேரை
தோற்கடிக்கிறது!
பலரை ஒரேயடியாக
சாப்பிட்டு
விடுகிறது,
விழுங்கிவிடுகிறது.
சொர்க்கத்தின்
எஜமான்
ஆகின்றனர்,
ஆனால்
மாயை சாப்பிட்டபடி
இருக்கிறது.
அதன்
வயிற்றில்
விழுந்தது
போல்
இருக்கின்றனர்.
ஒரு
பகுதி
மட்டும்
வெளியே இருக்கிறது,
மற்ற
அனைத்தும்
மாயையின்
உள்ளே
இருக்கிறது,
இதனை
சேறு,
புதைகுழி
என்றும்
சொல்கிறோம்.
எத்தனை
குழந்தைகள்
சேற்றில்
விழுந்து
கிடக்கின்றனர்.
கொஞ்சமும்
நினைவு
செய்ய
முடிவதில்லை.
ஆமை,
குளவிப்
பூச்சியின்
உதாரணம்
இருப்பது
போல
நீங்களும்
புழுக்களை
பூம்
பூம்
செய்து
எப்படி
இருந்தவர்களை என்னவாக
மாற்றிவிட
முடிகிறது.
ஒரேயடியாக
சொர்க்கத்தின்
பாரிஜாதமாக
ஆக்கி
விடுகிறீர்கள்!
சன்னியாசிகள் குளவிப்பூச்சியின்
உதாரணம்
சொல்கிறார்கள்,
ஆனால்
அவர்கள்
எதுவும்
பூம்
பூம்
செய்து
மாற்றுவதில்லை.
சங்கமயுகத்தில்
மாற்றம்
ஏற்படுகிறது.
இப்போது
இது
சங்கம
யுகமாக
உள்ளது.
நீங்கள்
சூத்திரரிலிருந்து பிராமணராகி
இருக்கிறீர்கள்
எனும்
போது
நீங்கள்
விகாரி
மனிதர்களை
அழைத்து
வருகிறீர்கள்.
புழுக்களிலும் சில
குளவிகளாக
ஆகிவிடுகின்றன,
சில
அழுகிப்
போய்
விடுகின்றன,
சில
அரை
குறையாக
நின்று
விடுகின்றன.
பாபா
இது
போல
நிறைய
பார்த்திருக்கிறார்.
இங்கும்
கூட
சிலர்
நல்ல
விதமாகப்
படிக்கின்றனர்,
ஞானத்தின் சிறகுகள்
முளைத்து
விடுகின்றன,
சிலரை
மாயை
பாதியிலேயே
பிடித்துக்
கொண்டுவிடுகின்றது.
அப்போது பக்குவமற்று
நின்று
விடுகின்றனர்.
ஆக
இந்த
உதாரணங்கள்
கூட
இப்போதையதாக
உள்ளன.
குளவி
புழுக்களைக் கொண்டு
வந்து
தனக்கு
சமமாக
ஆக்குவது
அதிசயமாக
உள்ளதல்லவா!
இது
மட்டுமே
தனக்கு
சமமாக ஆக்கக்
கூடியவையாக
உள்ளது.
மற்றொரு
உதாரணமாக
பாம்பைப்
பற்றி
சொல்கிறார்.
சத்யுகத்தில்
ஒரு சரீரத்தை
விடுத்து
மற்றொன்றை
எடுத்துக்
கொள்கின்றனர்.
இப்போது
சரீரம்
விட
வேண்டும்
என்று
சட்டென்று காட்சி
தெரிகிறது,
ஆத்மா
வெளியேறி
மற்றொரு
கர்ப
மாளிகையில்
சென்று
அமருகிறது.
இவர்
(பிரம்மா)
கூட ஒரு
உதாரணத்தைக்
காட்டுகிறார்
-
கர்ப
மாளிகையில்
அமர்ந்தார்,
அவருக்கு
வெளியே
வர
மனமே
வரவில்லை.
என்றாலும்
கூட
வெளியில்
கண்டிப்பாக
வரவே
வேண்டியுள்ளது.
இப்போது
குழந்தைகளாகிய
நீங்கள்
இருப்பது சங்கமயுகத்தில்.
ஞானத்தின்
மூலம்
இப்படிப்பட்ட
புருஷோத்தமராக
ஆகிறீர்கள்.
பக்தியோ
பிறவி
பிறவிகளாக செய்திருக்கிறீர்கள்.
ஆக,
யார்
அதிக
பக்தி
செய்திருக்கின்றனரோ
அவர்கள்
தான்
வந்து
வரிசைக்கிரமமான முயற்சியின்
அடிப்படையில்
பதவியை
அடைவார்கள்.
இப்போது
உங்களின்
புத்தியில்
முழு
ஞானமும்
உள்ளது.
மற்றபடி
சாஸ்திரங்களின்
ஞானம்
எதுவும்
ஞானம்
அல்ல.
அது
பக்தியாகும்,
அதன்
மூலம்
சத்கதி
எதுவும் ஏற்படுவதில்லை.
சத்கதி
என்றால்
வீட்டுக்கு
திரும்பிச்
செல்வதாகும்.
யாரும்
(இடையில்)
வீட்டுக்குத்
திரும்பிச் செல்வதில்லை.
என்னை
யாரும்
சந்திப்பதில்லை
என்று
தந்தை
தாமே
கூறுகிறார்.
படிப்பிக்கக்
கூடியவர்,
உடலின் அழைத்துச்
செல்பவரும்
கூட
தேவையல்லவா!
தந்தைக்கு
எவ்வளவு
யோசனையாக
இருக்கிறது.
5
ஆயிரம் வருடங்களில்
தந்தை
ஒரே
முறை
தான்
வந்து
படிப்பிக்கிறார்.
நான்
ஆத்மா
என்பதை
நீங்கள்
அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள்.
ஆத்மாக்களாகிய
நமக்கு
படிப்பிப்பதற்காக
தந்தை
வந்துள்ளார்
என்பதை
நன்றாக
உறுதியாக்கிக் கொள்ளுங்கள்.
இது
ஆன்மீக
ஞானம்
எனப்படுகிறது.
பரமாத்மா
ஆத்மாக்களாகிய
நமக்கு
ஞானம்
கொடுக்கிறார்.
சம்ஸ்காரங்கள்
கூட
ஆத்மாவில்
இருக்கின்றன.
சரீரம்
அழிந்துவிடுகிறது.
ஆத்மா
அழிவற்றது.
ஆக,
இந்த
பிரம்மாவின்
புருவ
மத்தி
சத்குருவின்
தர்பார்
ஆகும்.
இது
இந்த
ஆத்மாவின்
தர்பாரும் கூட
ஆகும்.
பிறகு
சத்குரு
வந்து
இதற்குள்
வந்து
பிரவேசம்
செய்தார்,
இதை
இரதம்
என்றும்
சொல்கிறோம்,
தர்பார்
என்றும்
சொல்கிறோம்.
குழந்தைகளாகிய
நீங்கள்,
ஸ்ரீமத்
படி
நடந்து
சொர்க்கத்தின்
வாசலை
திறக்கிறீர்கள்.
எந்த
அளவு
நல்ல
விதமாக
படிக்கிறீர்களோ,
அந்த
அளவு
உயர்ந்த
பதவியையும்
அடைவீர்கள்.
எனவே படிக்க
வேண்டும்.
ஆசிரியரின்
குழந்தைகள்
மிகவும்
புத்திசாலிகளாக
இருப்பார்கள்.
ஆனால்
சொல்கிறார்கள் அல்லவா!
கங்கையின்
அருகில்
உள்ள
வீட்டில்
இருப்பவர்கள்
கங்கையின்
அருமையை
அறிவதில்லை.
பாபா
(பிரம்மா)
பார்த்திருக்கிறார்
-
முழு
நகரத்தின்
குப்பையும்
கங்கையில்
சென்று
சேருகின்றன,
பிறகு
அதனை பதீத
பாவனி
என்று
சொல்வார்களா?
மனிதர்களின்
புத்தி
எப்படி
ஆகிவிட்டது
பாருங்கள்!
தேவிகளை
(மூர்த்திகளை)
அலங்கரித்து,
பூஜை
முதலானவைகள்
செய்து
விட்டு
நீரில்
மூழ்கடித்து
விடுகின்றனர்.
கிருஷ்ணரைக் கூட
மூழ்கடிக்கின்றனர்
அல்லவா!
அதுவும்
கூட
மிகவும்
கௌரவமற்ற
முறையில்
மூழ்கடிக்கின்றனர்.
வங்காளத்தில்
இப்படி
மூழ்கடிக்கும்போது
அதன்
மீது
காலை
வைத்துக்
கூட
அழுத்தி
மூழ்கடிக்கின்றனர்.
வங்காளத்தில்
முதலில் இந்த
வழக்கம்
இருந்தது
-
யாராவது
உயிர்
பிரிந்து
செல்லும்
நிலையில்
இருந்தால் அவரை
உடன்
கங்கைக்கு
எடுத்துச்
செல்லும்
பழக்கத்தை
வைத்திருந்தனர்.
அங்கே
நீருக்குள்
போட்டு
ஹரி என்று
சொல்,
ஹரி
என்று
சொல்
என்று
சொல்லி விட்டு
வாயில்
நீரை
விட்டுக்
கொண்டே
இருப்பார்கள்,
இப்படியாக
உயிரை
விட
வைத்துக்
கொண்டிருந்தார்கள்.
ஆச்சரியமாக
உள்ளதல்லவா!
இப்போது
குழந்தைகளாகிய உங்கள்
புத்தியில்
வரிசைக்கிரமமான
முயற்சிக்குத்
தகுந்தாற்போல,
ஏற்றம்
-
வீழ்ச்சியின்
முழுமையான
ஞானம் உள்ளது.
நல்லது!
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
சென்று
கண்டெடுக்கப்பட்ட
குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கங்கள்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாராம்:
1.
தந்தை
சொல்வதை
மட்டுமே
கேட்க
வேண்டும்,
மேலும்
சரி
எது
என
தீர்மானிக்க
வேண்டும்.
சரியானவரைத்தான்
நினைவு
செய்ய
வேண்டும்.
சரியற்ற
விஷயங்களை
கேட்கக்
கூடாது,
பேசக்கூடாது,
பார்க்கவும்
கூடாது.
2.
படிப்பை
நல்ல
விதமாகப்
படித்து
இராஜாக்களுக்கு
இராஜாவாக
ஆக
வேண்டும்.
இந்த பழைய
சரீரம்
மற்றும்
பழைய
உலகத்தில்
தன்னை
தற்காலிகமானவராக
புரிந்து
கொள்ள வேண்டும்.
வரதானம்
:
ஞான
அமிர்தத்திற்கான
தாகத்தில்
இருக்கும்
ஆத்மாக்களின்
தாகத்தைத்
தணித்து,
திருப்திப்
படுத்தக்
கூடிய
மகான்
புண்ணிய
ஆத்மா
ஆகுக.
தாகத்தில்
இருக்கும்
எவரது
தாகத்தையும்
தணிப்பது
மகான்
புண்ணியமாகும்.
எப்படி
தண்ணீர்
கிடைக்காவிட்டால்
தாகத்தில்
தவித்துப்
போகின்றனர்.
அது
போல்
ஞான
அமிர்தம்
கிடைக்காததால்
ஆத்மாக்கள்
துக்கம்,
அசாந்தியில்
தவித்துக்
கொண்டுள்ளனர்
என்றால்
அவர்களுக்கு
ஞான
அமிர்தம்
கொடுத்து
தாகத்தைத்
தணிப்பவர் ஆகுங்கள்.
எப்படி
உணவு
உண்பதற்காக
நேரம்
ஒதுக்குகிறீர்கள்.
ஏனென்றால்
அவசியம்
உள்ளது.
அது
போல் இந்தப்
புண்ணிய
காரியம்
செய்வதும்
கூட
அவசியமாகும்.
ஆகவே
இந்த
வாய்ப்பைப்
பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்.
அதற்காக
சமயத்தை
ஒதுக்க
வேண்டும்
--
அப்போது
மகான்
புண்ணிய
ஆத்மா
எனச்
சொல்வார்கள்.
சுலோகன்
:
நடந்து
முடிந்தவற்றுக்கு
முற்றுப்புள்ளி
வைத்து,
தைரியமாக
முன்னேறிச் செல்வீர்களானால்
பாபாவின்
உதவி
கிடைத்துக்
கொண்டே
இருக்கும்.
ஓம்சாந்தி