06.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! குடும்பத்திலிருந்தாலும் எந்த பொருளின் மீதும் பற்று ஏற்படாத அளவிற்கு டிரஸ்டியாக ஆகுங்கள். எனது என்பது எதுவும் கிடையாது என்ற அளவிற்கு பிச்சைக்காரர்களாக (Begger) ஆகுங்கள்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய உங்களது முயற்சியின் இலட்சியம் எது?

 

பதில்:

நீங்கள் இறந்து விட்டால் உலகமே இறந்து விடும் - இதுவே உங்களது இலட்சியமாகும். சரீரத்தின் மீதிருக்கும் பற்றுதல் நீங்கி விடவேண்டும். எதுவும் நினைவிற்கு வராத அளவிற்கு பிச்சைக்காரர்களாக ஆகிவிடுங்கள். ஆத்மா அசரீரி ஆகிவிட வேண்டும். நான் திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும், அவ்வளவு தான். இவ்வாறு முயற்சி செய்யக் கூடியவர்களே பிச்சைக்கார நிலைலியிருந்து இளவரசர்களாக ஆகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் தான் ஏழையிலிருந்து செல்வந்தனாகவும், செல்வந்தனிலிருந்து ஏழைகளாகவும் ஆகின்றீர்கள். நீங்கள் செல்வந்தர்களாக இருக்கும் பொழுது ஒரு ஏழையும் இருக்க மாட்டார்.

 

ஓம்சாந்தி.

ஆத்மா கேட்கின்றதா? அல்லது சரீரம் கேட்கின்றதா? என்று தந்தை குழந்தைகளிடத்தில் கேட்கின்றார். (ஆத்மா). ஆத்மா கண்டிப்பாக சரீரத்தின் மூலமாகத் தான் கேட்கின்றது. இன்னாரது ஆத்மா பாப்தாதாவை நினைவு செய்கின்றது என்று தான் குழந்தைகள் எழுதுகின்றனர். இன்னாரது ஆத்மா இன்று இந்த இடத்திற்குச் செல்கின்றது. நான் ஆத்மா என்பது பழக்கமாகி விடுகின்றது, ஏனெனில் குழந்தைகள் ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும். எங்கு பார்த்தாலும், ஆத்மாவும் இருக்கின்றது, சரீரமும் இருக்கின்றது, இவரிடத்தில் இரண்டு ஆத்மா இருக்கின்றது என்பதை அறிந்திருக்கின்றீர்கள். ஒன்றை ஆத்மா என்றும் மற்றொன்றை பரம் ஆத்மா என்றும் கூறுகின்றோம். சுயம் பரமாத்மா கூறுகின்றார் - நான் இந்த சரீரத்தில் அதாவது இவரது ஆத்மாவும் பிரவேசித்து இருக்கக் கூடிய சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். சரீரம் இல்லாமல் ஆத்மாவினால் இருக்க முடியாது. தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று தந்தை கூறுகின்றார். தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளும் பொழுது தான் தந்தையை நினைவு செய்வீர்கள் மற்றும் தூய்மையாக ஆகி சாந்திதாமத்திற்குச் செல்வீர்கள். பிறகு எந்த அளவிற்கு தெய்வீக குணங்களை தாரணை செய்து மற்றும் செய்விக்கின்றீர்களோ, சுயதரிசன சக்கரதாரியாக ஆகி மற்றவர்களையும் ஆக்குகின்றீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். இதில் யாருக்காவது குழப்பம் இருந்தால் கேட்கலாம். நான் ஆத்மா என்பது உண்மை தான். பிராமணனாக ஆகியிருக்கின்ற குழந்தைகளுக்குத் தான் தந்தை கூறுகின்றார். மற்றவர்களுக்கு கூறமாட்டார். குழந்தைகள் தான் பிடித்தமானவர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்குப் பிடித்தமானவர்களாக இருக்கின்றனர். மற்றவர்களுக்கு வெளியில் அன்பு காண்பிப்பார், ஆனால் இவர் எனது குழந்தை இல்லை என்பது புத்தியில் இருக்கும். நான் குழந்ததைகளிடத்தில் தான் பேசுகின்றேன். ஏனெனில் குழந்தைகளுக்குத் தான் படிப்பிக்க வேண்டும். மற்றபடி வெளியில் இருப்பவர்களுக்கு படிப்பிப்பது உங்களது கடமையாகும். சிலர் உடனேயே புரிந்து கொண்டு விடுகின்றனர், சிலர் சிறிது புரிந்து கொண்டு சென்று விடுகின்றனர். பிறகு இங்கு அதிகம் விருத்தியாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்ற பொழுது மீண்டும் வருவார்கள், பார்த்தால் சரி. என்னை நினைவு செய்யுங்கள் என்று அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை கூறுவதாக நீங்கள் புரிய வைப்பீர்கள். அனைத்து ஆத்மாக்களையும் பாவனமாக தந்தை தான் ஆக்குகின்றார். என்னைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்யாதீர்கள் என்று அவர் கூறுகின்றார். கலப்படம் இல்லாமல் என்னை நினைவு செய்தால் உங்களது ஆத்மா பாவனமாகிவிடும். பதீத பாவனன் நான் ஒருவன் மட்டுமே. எனது நினைவின் மூலமாகவே ஆத்மா பாவனமாக ஆகும். ஆகையால் குழந்தைகளே! என்னை நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். தந்தை தான் பதீத இராஜ்யத்தை பாவன இராஜ்யமாக ஆக்குகின்றார், விடுவிக்கின்றார். எங்கு அழைத்துச் செல்கின்றார்? சாந்திதாமம், பிறகு சுகதாமம். மூல விசயம் தூய்மையாவதாகும். 84 பிறப்புகளை புரிய வைப்பது எளிமையாகும். சித்திரங்களைப் பார்த்ததும் நம்பிக்கை வந்து விடுகின்றது. ஆகையால் தான் பாபா அடிக்கடி கூறிக்கொண்டிருக்கின்றார் - கோலாகலமாக மியுசியத்தை திறவுங்கள். அந்த கோலாகலம் மனிதர்களை கவர்ந்திழுக்கும். பலர் வருகின்ற பொழுது நாம் தந்தையின் ஸ்ரீமத்படி நடந்து இவ்வாறு ஆகிக் கொண்டிருக்கின்றோம் என்று கூறுவீர்கள். தந்தை கூறுகின்றார் - என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள் மற்றும் தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள். பேட்ஜ் கண்டிப்பாக கூடவே வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பிச்சைக்கார நிலையிலிருந்து இளவரசர்களாக ஆவோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். முதலில் கிருஷ்ணராக ஆவீர்கள் அல்லவா! எதுவரைக்கும் கிருஷ்ணர் ஆகவில்லையோ அதுவரைக்கும் நாராயணனாக ஆக முடியாது. குழந்தையிலிருந்து பெரியவர்களாக ஆகின்ற பொழுது தான் நாராயணன் என்ற பெயர் கிடைக்கும். ஆக இதில் இரண்டு சித்திரம் இருக்கின்றது. நீங்கள் இவ்வாறு ஆகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் அனைவரும் பிச்சைக்காரர்களாக ஆகியிருக்கின்றீர்கள். சிலரை நாம் பிச்சைக்காரர்கள் என்று கூற முடியாது. இந்த பாபா அனைவரையும் விட மிகப் பெரிய பிச்சைக்காரனாக இருக்கின்றார். இதில் முழு பிச்சைக்காரனாக ஆக வேண்டும். குடும்பத்திலிருந்தாலும் பற்றுதல்களை நீக்க வேண்டும். நாடகப்படி நீங்கள் பற்றுதல்களை நீக்கி விட்டீர்கள். நிச்சயபுத்தி உள்ளவர்கள் மட்டுமே அறிந்திருக்கின்றீர்கள், நம்மிடத்தில் என்னவெல்லாம் இருக்கின்றதோ அவைகளை பாபாவிடத்தில் கொடுத்து விட்டேன். ஹே பகவான்! நீங்கள் என்னவெல்லாம் கொடுத்தீர்களோ அவையனைத்தும் உங்களுடையதே, நம்முடையது கிடையாது என்று கூறுகின்றனர் அல்லவா! அது பக்தி மார்க்கமாகும். அந்த நேரத்தில் பாபா வெகு தொலைவில் இருந்தார். இப்பொழுது பாபா மிகவும் நெருக்கத்தில் இருக்கின்றார். எதிரில் இருப்பவரைப் போன்று ஆக வேண்டும்.

 

பாபா என்று நீங்கள் கூறுகின்றீர்கள், பாபாவின் சரீரத்தைப் பார்க்கக் கூடாது. புத்தி மேலே சென்று விடுகின்றது. இது லோனாக எடுக்கப்பட்ட சரீரமாகும். ஆனால் நான் சிவபாபாவிடத்தில் உரையாடிக் கொண்டிருக்கின்றேன் என்பது உங்களது புத்தியில் இருக்கின்றது. இது அடமானமாக எடுக்கப்பட்ட இரதமாகும். அவருடையது கிடையாது. எந்த அளவிற்கு பெரிய மனிதனாக இருக்கின்றாரோ அந்த அளவிற்கு அடமானமும் கண்டிப்பாக கிடைக்கும். அரசர் கட்டிடத்தை வாங்கிக் கொள்கின்றாரெனில் அந்த முதலாளி ஆயிரத்தை 4 ஆயிரமாக மாற்றி விடுகின்றார். ஏனெனில் இவர் செல்வந்தர் என்பதை அறிந்திருக்கின்றார். இவர் அதிகமாக வாங்குகின்றார் என்று அரசர் ஒருபொழுதும் நினைப்பது கிடையாது. இல்லை, அவர்களுக்கு செல்வத்தைப் பற்றிய கவலை கிடையாது. அவர்கள் சுயம் யாருடனும் பேச மாட்டார்கள். தனி செகரட்டரி (Private Secretary) பேசுவார். இன்றைய நாட்களில் லஞ்சம் இல்லாமல் காரியம் நடப்பது கிடையாது. பாபா நல்ல அனுபவியாக இருக்கின்றார். அவர்கள் மிகவும் இராயலாக இருப்பர். பொருட்களை விரும்பினால் போதும், செகரட்டரியை அழைத்து இவரிடத்திலிருந்து இதனை கொண்டு வாருங்கள் என்று கூறிவிடுவார். கடையை திறந்து அமர்ந்திருப்பர். மகாராஜா, மகாராணி இருவரும் வருவார்கள், எந்த பொருள் பிடித்ததோ அதனை கண்களின் மூலமாகவே சைகை காண்பிப்பார்கள். செகரட்டரி பேசி முடிப்பார், இடையில் தனது பங்கையும் எடுத்துக் கொள்வார். சில அரசர்கள் தன் கூடவே பணத்தையும் கொண்டு வருவர், இவருக்கு பணத்தை கொடுத்து விடுங்கள் என்று செகரட்டியிடம் கூறிவிடுவர். பாபா (பிரம்மா) அனைவரின் தொடர்பிலும் வந்திருக்கின்றார். அவர்களது நடத்தைகள் எப்படியெல்லாம் இருக்கின்றது என்பதை அறிந்திருக்கின்றார். அரசர்களிடத்தில் கருவூலத்தலைவர் இருப்பது போன்று இங்கும் சிவபாபா கருவூலத்தலைவர் இருக்கின்றார். இவர் டிரஸ்டியாக இருக்கின்றார். பாபாவிற்கு இவர் மீது எந்த மோகமும் கிடையாது. இவர் தனது செல்வத்தின் மீதும் பற்றுதல் வைக்கவில்லை. அனைத்தையும் சிவபாபாவிற்கு கொடுத்து விட்டார். பிறகு சிவபாபாவின் செல்வத்தின் மீது எப்படி பற்று வைக்க முடியும்? இவர் டிரஸ்டியாக இருக்கின்றார். யாரிடத்தில் செல்வம் அதிகமாக இருக்கின்றதோ, இன்றைய நாட்களில் அரசாங்கம் அவர்களை எவ்வளவு பரிசோதனை செய்கின்றது! அயல்நாட்டிலிருந்து வருபவர்களையும் நன்றாக பரிசோதித்துப் பார்க்கின்றனர்.

 

பிச்சைக்காரனாக எப்படி ஆவது? என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். எதுவும் நினைவிற்கு வரக் கூடாது. ஆத்மா அசரீரியாக ஆகி விடவேண்டும். இந்த சரீரத்தையும் தன்னுடையதாக நினைக்காதீர்கள். என்னுடையது என்று எதுவும் இருக்கக் கூடாது. தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள், இப்பொழுது நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று தந்தை புரிய வைக்கின்றார். பிச்சைக்காரனாக எப்படி ஆவது? என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். சரீரத்திலிருந்தும் பற்றுதல் நீங்கிவிட வேண்டும். நீங்கள் இறந்து விட்டால் உலகமே இறந்து விடும். இது இலட்சியமாகும். பாபா சரியாகத் தான் கூறுகின்றார் என்பதை உணர்ந்திருக்கின்றீர்கள். இப்பொழுது நாம் திரும்பிச் செல்ல வேண்டும். சிவபாபாவிற்கு நீங்கள் எதையெல்லாம் கொடுக்கின்றீர்களோ அதற்குப் பலனாக மறுபிறப்பில் கிடைத்து விடுகின்றன. ஆகையால் தான் இவையனைத்தையும் ஈஸ்வரன் கொடுத்ததாகக் கூறுகின்றீர்கள். முந்தைய பிறப்பில் நல்ல செயல்களை செய்திருப்பீர்கள், அதன் பலன் கிடைக்கின்றது. யாருடையதையும் சிவபாபா வைத்துக் கொள்ளவது கிடையாது. பெரிய பெரிய அரசர்கள், ஜமீன்தார் போன்றவர்களுக்கு பரிசு கொடுத்தார். சிலர் பரிசை எடுத்துக் கொள்கின்றனர், சிலர் எடுத்துக் கொள்வதில்லை. அங்கு நீங்கள் எதையும் தானம், புண்ணியம் செய்வதில்லை. ஏனெனில் அங்கு அனைவரிடத்திலும் செல்வம் அதிகமாக இருக்கும். தானம் யாருக்குச் செய்வீர்கள்! ஏழைகள் அங்கு இருக்க மாட்டார்கள். நீங்கள் தான் ஏழையிலிருந்து செல்வந்தர்களாக, செல்வந்தரிலிருந்து பிச்சைக்காரர்களாக ஆகின்றீர்கள். இவரை ஆரோக்கியமானவராக ஆக்குங்கள்; கருணை காண்பியுங்கள், இதை செய்யுங்கள் என்று கூறுகின்றனர் அல்லவா! முன்பு சிவபாபாவிடத்தில் மட்டுமே கேட்டனர். பிறகு கலப்படமுள்ளவர்களாக ஆகிவிட்டதால் அனைவரின் முன்பும் சென்று கொண்டே இருக்கின்றனர். பையை நிறைத்து விடுங்கள் என்று கூறுகின்றனர். எவ்வளவு கல்புத்தியுடையவர்களாக இருக்கின்றனர்! கல்புத்தியிலிருந்து தங்கபுத்தியாக ஆக்குகின்றார் என்று கூறுகின்றனர். ஆக குழந்தைகளாகிய உங்களுக்கு அளவு கடந்த குஷியிருக்க வேண்டும். அதீந்திரிய சுகத்தைப் பற்றி கேட்க வேண்டுமெனில் கோபவல்லபரின், கோப கோபியர்களிடத்தில் கேளுங்கள். யாருக்காவது அதிக லாபம் கிடைக்கின்ற பொழுது அதிக குஷி ஏற்படுகின்றது. ஆக குழந்தைகளாகிய உங்களுக்கும் அதிக குஷியிருக்க வேண்டும். உங்களிடம் 100 சதவிகிதம் குஷி இருந்தது. பிறகு குறைந்து விட்டது. இப்பொழுது எதுவும் கிடையாது. முதலில் எல்லையற்ற சக்கரவர்திகளாக இருந்தீர்கள். பிறகு அல்பகால எல்லைக்குட்பட்ட ராஜ்ஜியம் இருந்தது. இப்பொழுது பிர்லாவிடம் அதிகமான செல்வங்கள் உள்ளன. கோயில்களை உருவாக்குகின்றார், அதிலிருந்து எதுவும் அடையப்போவதில்லை. ஏழைகளுக்கு எதுவும் கொடுப்பதில்லை. கோயில் உருவாக்கினால், அங்கு மனிதர்கள் வந்து தலைவணங்குவர். ஆம், ஏழைகளுக்கு தானம் கொடுத்தால் அதற்குப் பலன் கிடைக்கும். தர்மசாலைகள் உருவாக்கினால் அங்கு அநேக மனிதர்கள் சென்று ஓய்வு எடுப்பர், மறுபிறப்பில் அல்பகால சுகம் கிடைத்து விடும். சிலர் மருத்துவமனை உருவாக்குகின்றரெனில் அல்பகாலத்திற்கு, ஒரு பிறப்பிற்கு சுகம் கிடைக்கின்றது. ஆக எல்லையற்ற தந்தை குழந்தைகளுக்கு அமர்ந்து புரிய வைக்கின்றார். இந்த புருஷோத்தம சங்கமயுகத்திற்கு அதிக மகிமை இருக்கின்றது. புருஷோத்தமர்களாக ஆகக் கூடிய உங்களுக்கும் அதிக மகிமை இருக்கின்றது. பிராமணர்களாகிய உங்களுக்குத் தான் தந்தை வந்து படிப்பிக்கின்றார். அவரே ஞானக் கடலாக இருக்கின்றார். இந்த முழு மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கின்றார். முழு நாடகத்தின் முதல், இடை, கடையின் இரகசியத்தைப் புரிய வைக்கின்றார். உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கின்றார்? என்று உங்களிடம் கேட்பர். கீதையில் பகவான் வாக்கியம் என்று கூறப்பட்டிருக்கின்றது, நான் உங்களை இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்குகின்றேன் என்பதை மறந்து விட்டீர்களா? என்று கேளுங்கள். இதன் பொருளை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கின்றீர்கள். பதீத இராஜாக்கள் பாவனமான இராஜாக்களை பூஜை செய்கின்றனர். ஆகையால் தந்தை கூறுகின்றார் - உங்களை இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக ஆக்குகின்றேன். இந்த இலட்சுமி நாராயணன் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இருந்தனர் அல்லவா! சொர்க்கத்தின் தேவதைகளை துவாபர, கலியுகத்தில் அனைவரும் வணங்குகின்றனர், பூஜை செய்கின்றனர். இந்த விசயங்களை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பக்தர்கள் எதையும் புரிந்து கொள்கின்றனரா என்ன? அவர்கள் சாஸ்திரத்தின் கதைகளை மட்டுமே படித்து, கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். நீங்கள் எந்த கீதையை அரை கல்பத்திற்கு கேட்டு, கூறிக் கொண்டு வந்தீர்களோ அதன் மூலம் ஏதாவது பலன் கிடைத்ததா? என்று தந்தை கேட்கின்றார். எந்த வயிறும் நிறையவில்லை. இப்பொழுது உங்களது வயிறு நிறைந்து கொண்டிருக்கின்றது. இந்த நடிப்பு ஒரே ஒரு முறை தான் கிடைக்கின்றது என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். நான் இவரது சரீரத்தில் பிரவேசிக்கின்றேன் என்று சுயம் பகவான் கூறுகின்றார். தந்தை இவர் மூலமாகப் பேசுகின்றார் எனில் கண்டிப்பாக பிரவேசம் செய்வார். மேலிருந்து கட்டளைகளைக் கொடுப்பாரா என்ன? நான் எதிரில் வருகின்றேன் என்று கூறுகின்றார். இப்பொழுது நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த பிரம்மாவும் எதையும் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது அறிந்து கொண்டிருக்கின்றார். கங்கை நீர் பாவனம் ஆக்கக் கூடியது கிடையாது. இது ஞான விசயமாகும். தந்தை எதிரில் அமர்ந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். உங்களது புத்தி இப்பொழுது மேலே செல்லாது, இது அவரது இரதமாகும். இவரை பாபா பூட்ஸ் என்றும், டப்பா என்றும் கூறுகின்றார். இந்த டப்பாவில் அவர் வைரமாக இருக்கின்றார். எவ்வளவு முதல் தரமான பொருளாக இருக்கின்றது! இவரை வைர டப்பாவில் தான் வைக்க வேண்டும். தங்கயுகம் என்ற டப்பாவை உருவாக்குகின்றார். பாபா கூறுகின்றார் - வண்ணானின் வீட்டிலிருந்து போய்விட்டது (அழுக்கு). இதனையே சூ, மந்திரம் என்று கூறுகின்றோம். சூ மந்திரத்தின் மூலம் விநாடியில் ஜீவன்முக்தி, ஆகையால் அவரை மந்திரவாதி என்றும் கூறப்படுகின்றது. நான் இவ்வாறு ஆவேன் என்று ஒரு விநாடியில் நம்பிக்கை வந்து விடுகின்றது. இந்த விசயங்களை நீங்கள் இப்பொழுது நடைமுறையில் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். முன்பு சத்திய நாராயணனின் கதையைக் கேட்கும் பொழுது இதனை புரிந்து கொண்டீர்களா என்ன? அந்தக் கதையை கேட்கின்ற பொழுது அயல்நாடு, படகு போன்றவற்றின் நினைவு இருந்தன. சத்திய நாராயணின் கதையைக் கேட்ட பிறகு பிரயாணத்திற்குச் சென்றனர். அவர்கள் பிறகு திரும்பியும் வந்தனர். நீங்கள் இந்த சீ சீ உலகிற்கு மீண்டும் திரும்பி வரக் கூடாது என்று தந்தை கூறுகின்றார். பாரதம் அமரலோகமாக, சொர்க்கமாக, தேவி தேவதைகளின் இராஜ்யமாக இருந்தது. இந்த இலட்சுமி நாராயணன் உலகிற்கு எஜமானர்கள் அல்லவா! இவர்களது இராஜ்யத்தில் தூய்மை, சுகம், சாந்தி இருந்தது. உலகில் அமைதி ஏற்பட வேண்டும், அனைவரும் இணைந்து ஒன்றாக ஆகி விட வேண்டும் என்று உலகத்தினரும் கேட்கின்றனர். இவ்வளவு தர்மத்தினரும் சேர்ந்து எப்படி ஒன்றாக ஆக முடியும்? ஒவ்வொரு தர்மமும் தனித்தனியானது, தோற்றமும் தனித் தனியாக இருக்கும் பொழுது ஒன்றாக எப்படி ஆக முடியும்? அவ்வாறு இருப்பது சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தில் ஆகும். அங்கு ஒரே தர்மம், ஒரே இராஜ்யம் இருக்கும். சண்டையிடுவதற்கு அங்கு வேறு எந்த தர்மமும் கிடையாது. அதனையே உலகின் அமைதியான இராஜ்யம் என்று கூறப்படுகின்றது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை கற்பித்துக் கொண்டிருக்கின்றார். அனைத்துக் குழந்தைகளும் ஒரே மாதிரியாக படிப்பதில்லை என்பதையும் குழந்தைகள் அறிந்திருக்கின்றீர்கள். வரிசைக்கிரமம் என்பது ஏற்படுகின்றதல்லவா! இங்கும் இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது. குழந்தைகள் எவ்வளவு நல்ல புத்திசாலிகளாக ஆக்கப்படுகின்றனர்.

 

இது ஈஸ்வரிய பல்கலைக்கழகமாகும். பக்தர்கள் புரிந்து கொள்வது கிடையாது. பகவான் வாக்கியம் என்று அநேக முறை கேட்டிருக்கின்றனர். ஏனெனில் கீதை தான் பாரதவாசிகளின் தர்ம சாஸ்திரமாகும். கீதைக்கு அளவற்ற மகிமைகள் உள்ளன. அனைத்து சாஸ்திரங்களுக்கும் தலை சிறந்ததாக பகவத் கீதை இருக்கின்றது. சிரோண்மணி என்றால் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமான, பதீத பாவனன், சத்கதியின் வள்ளலான பகவான் ஒருவரே, அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையானவர். பாரதவாசிகள் பொருளை புரிந்து கொள்வதில்லை. அர்த்தமின்றி அனைவரும் பாயி பாயி (சகோதரன்-சகோதரன்) என்று மட்டும் கூறி விடுகின்றனர். நாம் பாயி சகோதர, சகோதரர்கள் என்று தந்தை இப்பொழுது புரிய வைத்திருக்கின்றார். நாம் சாந்திதாமத்தில் இருக்கக் கூடியவர்கள். இங்கு நாம் நடிப்பு நடித்து நடித்து தந்தையை மறந்து விட்டோம், கூடவே வீட்டையும் மறந்து விட்டோம். எந்த தந்தை பாரதத்திற்கு முழு உலகின் இராஜ்யத்தைக் கொடுக்கின்றாரோ அவரை அனைவரும் மறந்து விடுகின்றனர். இவையனைத்து இரகசியங்களையும் தந்தை தான் புரிய வைக்கின்றார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்வதற்காக இது புருஷோத்தம சங்கமயுகம், இப்போது தான் பகவான் படிப்பிக்கின்றார், அதன் மூலம் நாம் இராஜாவிற்கெல்லம் இராஜாவாக ஆவோம் என்ற நினைவு இருக்க வேண்டும். இப்பொழுது தான் நமக்கு நாடகத்தின் முதல், இடை, கடையின் ஞானம் இருக்கின்றது.

 

2. இப்பொழுது திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும், ஆகையால் இந்த சரீரத்திலிருந்தும் முழு பிச்சைக்காரனாக ஆக வேண்டும். இதனை மறந்து தன்னை அசரீரி ஆத்மா என்று நினைக்க வேண்டும்.

 

வரதானம்:

பாபாவிற்கு சமமாக கருணை மனமுடையவர் ஆகி அனைவரையும் மன்னித்து அன்பை அளிக்கக் கூடிய மாஸ்டர் வள்ளல் ஆகுக.

 

பாபாவை கருணை மனமுடையவர், இரக்க மனமுடையவர் என்று சொல்வதைப் போன்று குழந்தைகளாகிய நீங்களும் மாஸ்டர் கருணை மனமுடையவர். யார் கருணை மனமுடையவராக இருக்கிறாரோ, அவர்களால் தான் நன்மை செய்ய முடியும். தீமை செய்பவர்களையும் கூட மன்னிக்க முடியும். அவர்கள் மாஸ்டர் அன்பு கடல் ஆகிறார்கள், அவர்களிடம் அன்பை தவிர வேறு ஒன்றும் இருக்காது. தற்சமயத்தில் சொத்தை விட அதிகமாக அன்பின் அவசியம் இருக்கிறது, ஆகையால் மாஸ்டர் வள்ளல் ஆகி அனைவருக்கும் அன்பை அளித்துக் கொண்டே செல்லுங்கள். யாருமே வெறுங்கையோடு செல்லக் கூடாது.

 

சுலோகன்:

தீவிர முயற்சியாளர் ஆவதற்கான ஆசை இருந்தால், எங்கு விருப்பம் இருக்கிறோமோ, அங்கு வழி கிடைத்து விடும்.

 

ஓம்சாந்தி