01.09.2019                           காலை முரளி      ஓம்சாந்தி         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           21.01.1985           மதுபன்


 

ஈஸ்வரிய பிறந்த நாளின் பொன்னான பரிசு - தெய்வீக புத்தி

 

இன்று உலகைப் படைக்கும் தந்தை தன்னுடைய உலகின் கண்களான, கண்ணின் மணிகளான குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சிரேஷ்ட ஆத்மாக்கள் நீங்கள், உலகின் கண்கள் அதாவது உலகின் ஒளியாக இருக்கிறீர்கள். எப்படி ஸ்தூல கண்கள் இல்லையென்றால், உலகம் இல்லை. ஏனென்றால் கண்கள் அதாவது பிரகாசம். பிரகாசம் இல்லையென்றால், இருளின் காரணமாக உலகம் இல்லை. அந்த மாதிரி கண்கள் நீங்கள் இல்லையென்றால் உலகில் பிரகாசம் இல்லை. நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், பிரகாசத்தின் காரணமாக உலகம் இருக்கிறது. பாப்தாதா அந்த மாதிரியான உலகின் கண்களாக இருக்கும் குழந்தைகளைப் பார்த்து கொண்டிருக்கிறார். அந்தமாதிரி குழந்தைகளின் மகிமை எப்பொழுதும் பாடப்படுகிறது மற்றும் பூஜிக்கப்படுகிறது. அந்த குழந்தைகள் தான் உலக இராஜ்ய பாக்கியத்தின் அதிகாரிகளாக ஆகிறார்கள். பாப்தாதா ஒவ்வொரு பிரமாண குழந்தைக்கும் பிறந்த உடனேயே விசேஷமாக தெய்வீக பிறந்த நாளின் இரண்டு தெய்வீக பரிசுகளைக் கொடுக்கிறார். உலகத்தில் ஒரு மனித ஆத்மா இன்னொரு மனித ஆத்மாவிற்கு பரிசு கொடுப்பார். ஆனால் பிராமண குழந்தைகளுக்கு தந்தை, அவரே தெய்வீக பரிசை இந்த சங்கமயுகத்தில் கொடுக்கிறார். என்ன கொடுக்கிறார்? ஒன்று தெய்வீக புத்தி, மற்றும் இன்னொன்று தெய்வீக கண்கள், அதாவது ஆத்மீக கண். இந்த இரண்டு பரிசுகளும் ஒவ்வொரு பிராமண குழந்தைக்கும், பிறந்தநாளின் பரிசாகும். இந்த இரண்டு பரிசுகளையுமே, எப்பொழுதும் தன்னுடன் வைத்துக் கொண்டே, இவை மூலமாக எப்பொழுதும் வெற்றி சொரூபமாக இருக்கிறீர்கள். தெய்வீக புத்தி தான், ஒவ்வொரு குழந்தையையும் தெய்வீக ஞானம், தெய்வீக நினைவு மற்றும் தெய்வீக தாரணை சொரூபமாக ஆக்குகிறது. தெய்வீக புத்தி தான் தாரணை செய்வதற்கான விசேஷ பரிசு. எனவே எப்பொழுதுமே தெய்வீக புத்தி இருக்கிறதென்றால், தாரணை சொரூபமாக இருக்கிறார். தெய்வீக புத்தியில் அதாவது மிகத் தூய்மையான, பொன்னான புத்தியில் சிறிதளவு கூட இரஜோ, தமோ அதாவது தாழ்ந்த நிலையின் பிரபாவம் ஏற்படுகிறதென்றால், தாரணை சொரூபத்திற்குப் பதிலாக மாயாவின் பிரபாவத்தில் வந்து விடுகிறார். எனவே ஒவ்வொரு சுலபமான விஷயத்தையும் கடினமாக அனுபவம் செய்கிறார்கள். சுலபமாக பரிசின் ரூபத்தில் கிடைத்திருக்கும், தெய்வீக புத்தி பலஹீனமாக இருக்கும் காரணத்தினால், கடும் உழைப்பை அனுபவம் செய்கிறார்கள். எப்பொழுதெல்லாம் கடினம் மற்றும் கடின உழைப்பை அனுபவம் செய்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக தெய்வீக புத்தி ஏதோ மாயாவின் ரூபத்தில் பிரபாவப்பட்டு இருக்கிறது. அப்பொழுது தான் அந்த மாதிரி அனுபவம் ஆகிறது. தெய்வீக புத்தி மூலமாக ஒரு நொடியில் பாப்தாதாவின் ஸ்ரீமத்தை தாரணை செய்து, எப்பொழுதும் சக்திசாலியான ஆடாத அசையாத மாஸ்டர் சர்வ சக்திவானின் நிலையை அனுபவம் செய்கிறார்கள். ஸ்ரீமத் என்றால், சிரேஷ்டமாக ஆக்கக் கூடிய வழி. அது ஒருபொழுதும் கடினத்தை அனுபவம் செய்விக்க முடியாது. ஸ்ரீமத் எப்பொழுதும் சகஜமாக பறக்க வைக்கக் கூடிய வழி. ஆனால் தாரணை செய்யக் கூடிய தெய்வீக புத்தி அவசியம் வேண்டும். எனவே தன்னுடைய பிறந்த நாள் பரிசு எப்பொழுதும் உடன் இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள். எப்பொழுதாவது மாயா தன்னுடையவராக்கி தெய்வீக புத்தியின் பரிசை அபகரித்து விடுவதில்லையே? எப்பொழுதாவது மாயாவின் பிரபாவத்தினால் மிகவும் வெகுளியாகி அதன் காரணமாக பரமாத்மாவின் பரிசையும் தொலைத்து விடுகிறீர்கள். மாயாவிற்கும் ஈஸ்வரிய பரிசை தன்னுடையதாக ஆக்குவதற்கான சாதுரியம் தெரியும். அது சாதுரியமாக ஆகிவிடுகிறது. மேலும் உங்களை வெகுளியானவர் ஆக்கிவிடுகிறது. எனவே போலாநாத் தந்தையின் வெகுளியான குழந்தைகளாக நன்றாக ஆகுங்கள். ஆனால் மாயாவைப் பற்றி தெரியாதவராக ஆகாதீர்கள். மாயாவை அறியாதவர் ஆவது என்றால், மறப்பவர் ஆவது. ஈஸ்வரிய தெய்வீக புத்தி என்ற பரிசு நிரந்தர பாதுகாப்பு குடைநிழல், மேலும் மாயா அதில் தன்னுடைய நிழலைப் போட்டு விடுகிறது. அதனால் பாதுகாப்பு அகன்றுவிடுகிறது, நிழல் இருந்து விடுகிறது. எனவே தந்தையின் பரிசு, எப்பொழுதும் என்னுடன் நிலைத்திருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள். தெய்வீக புத்தியின் அடையாளம், கிஃப்ட் (பரிசு), லிஃப்ட்டின் காரியம் செய்கிறது. சிரேஷ்ட எண்ணம் என்ற பொத்தானை அழுத்தினீர்கள், ஒரு நொடியில் அந்த நிலையில் நிலைத்து விடுவீர்கள். ஒருவேளை தெய்வீக புத்தியின் இடையே மாயாவின் நிழல் இருக்கிறது என்றால், இந்த கிஃப்ட்டின் லிஃப்ட் வேலை செய்யாது. எப்படி ஸ்தூல லிஃப்ட்டும் பழுதடைந்து விடுகிறது என்றால், என்ன நிலைமை ஏற்பட்டு விடுகிறது? மேலேயும் செல்லாது, கீழேயும் செல்லாது, இடையில் மாட்டிக் கொள்கிறார்கள். அதேபோல் இங்கு மதிப்புடன் இருப்பதற்குப் பதிலாக மதிப்பிழந்தவர்கள் ஆகிவிடுகிறார்கள். எவ்வளவு தான் பொத்தானை அழுத்தினாலும், இலட்சியத்தை சென்றடையும் பிராப்தி செய்ய முடியாது. எனவே இந்த கிஃப்ட்டின் லிஃப்ட்டை பழுதாக்கி விடுகிறீர்கள், எனவே கடும் உழைப்பு என்ற படிகளில் ஏற வேண்டியதாக இருக்கிறது. பிறகு என்ன கூறுகிறீர்கள்? தைரியம் என்ற கால்களுக்கு நடக்க இயலவில்லை. அப்படி சகஜமானதை கடினமானதாக யார் ஆக்கினார், மேலும் எப்படி ஆக்கினார்? தன்னைத் தானே அலட்சியமானவராக ஆக்கினார். மாயாவின் நிழலின் வந்து விட்டார், எனவே ஒரு நொடியின் சகஜமான விஷயத்திற்கும், நீண்ட காலத்தின் கடும் உழைப்பை அனுபவம் செய்கிறார்கள். தெய்வீக புத்தியின் பரிசு, ஆன்மீக விமானம், அந்த தெய்வீக விமானம் மூலமாக ஒரு நொடியில் பொத்தானை அழுத்துவதினால், எங்கு சென்றடைய விரும்புகிறீர்களோ, அங்கு சென்றடைய முடியும். எண்ணம் என்பது தான் பொத்தான் அறிவியலை சேர்ந்தவர்களோ, ஒரு உலகை சுற்றி வரச் செய்ய முடியும். நீங்கள் மூன்று உலகங்களையும் சுற்றி வர முடியும். ஒரு நொடியில் உலகிற்கு நன்மை செய்யும் சொரூபமானவர் ஆகி, முழு உலகிற்கும், லைட் (ஒளி) மற்றும் மைட்(சக்தி) கொடுக்க முடியும். தெய்வீக புத்தி என்ற விமானம் மூலமாக மட்டும் உயர்ந்த நிலையில் நிலைத்திருந்து விடுங்கள். எப்படி அவர்கள் விமானம் மூலமாக இமயமலையின் மேலே சாம்பலை தூவினார்கள், நதியில் சாம்பலை போட்டார்கள். எதற்காக? நாலாபுறங்களிலும் பரப்புவதற்காகத் தான் இல்லையா. அவர்களோ, சாம்பலை போட்டார்கள், நீங்கள் தெய்வீக விமானம் மூலமாக மிக உயர்ந்த சிகரம் என்ற நிலையில் நிலைத்திருந்து, உலகிலுள்ள அனைத்து ஆத்மாக்களுக்காக, லைட் மற்றும் மைட்டின் சுபபாவனை மற்றும் சிரேஷ்ட விருப்பங்களின் சகயோகத்தின் அலையைப் பரப்புங்கள். விமானமோ சக்திசாலியாக இருக்கிறது தான் இல்லையா? உபயோகிக்க மட்டும் தெரிய வேண்டும்.

 

பாப்தாதாவின் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட சிரேஷ்ட வழி என்ற சாதனம் தேவையாக இருக்கிறது. எப்படி இன்றைய நாட்களில் சுத்திகரிக்கப்பட்டது என்பதையும் கடந்து இரட்டை சுத்திகரிக்கப்பட்டது என்பது இருக்கிறது இல்லையா? அந்தமாதிரி இது பாப்தாதாவின் இரட்டை சுத்திகரிக்கப்பட்ட சாதனம். சிறிதளவாவது மனம் சொல்லும் வழி, மற்றவர்கள் சொல்லும் வழியின் குப்பைகள் இருக்கிறது என்றால், என்னவாகும்? மேலே செல்வீர்களா? எனவே தெய்வீக புத்தி என்ற விமானத்தில் எப்பொழுதும் இரட்டை சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இருக்கிறதா என்று சோதனைச் செய்யுங்கள். இடையில் ஏதாவது குப்பையோ வந்துவிடுவதில்லையே, இல்லையென்றால் இந்த விமானம் எப்பொழுதும் சுகம் அளிப்பது. எப்படி சத்யுகத்தில் ஒருபொழுதும் எந்த விபத்தும் ஏற்படாது, ஏனென்றால் உங்களுடைய சிரேஷ்ட காரியத்தின் சிரேஷ்ட பிராப்தியாகும். அந்தமாதிரி எந்த ஒரு காரியமும் நடப்பதில்லை, அந்த காரியத்தின் விளைவுகளின் துக்கத்தை அனுபவிக்க வேண்டியளவிற்கு, அந்தமாதிரி சங்கமயுகத்தின் இறை பரிசு தெய்வீக புத்தி, எப்பொழுதும் அனைத்து விதமான துக்கம் மற்றும் ஏமாற்றங்களிலிருந்து விடுபட்டு இருப்பது. தெய்வீக புத்தி உள்ளவர் ஒருபொழுதும் ஏமாற்றத்தில் வரமுடியாது. துக்கத்தின் அனுபவம் செய்ய முடியாது. அவர் எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பார். ஆபத்துகளில் இருந்து விடுபட்டு இருக்கிறார், எனவே இந்த இறை பரிசின் மகத்துவத்தைத் தெரிந்து, இந்தப் பரிசை எப்பொழுதும் உங்கள் உடன் வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பரிசின் மகத்துவம் புரிந்ததா? பரிசு அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா அல்லது யாருக்காவது இன்னும் கிடைக்க வில்லையா? அனைவருக்கும் கிடைத்திருக்கிறது தான் இல்லையா, அதை பாதுகாக்க மட்டும் தெரியுமா அல்லது தெரியாதா என்பது உங்களிடம் இருக்கிறது. எப்பொழுதும் அமிர்தவேளையில் சிறிதளவு குறை இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள்? பிறகு அமிர்தவேளை யோகாவை சரியாக செய்வதினால் முழு நாளும் சக்திசாலியாக இருக்கும். ஒருவேளை, தானே சரியாக செய்ய முடியவில்லையென்றால், மற்றவர்கள் மூலம் சரியாக செய்வித்துக் கொள்ளுங்கள். ஆனால் அமிர்தவேளையிலேயே சரி செய்து விடுங்கள். நல்லது. - தெய்வீக பார்வையின் விஷயத்தைப் பின்பு கூறுவோம். தெய்வீகப் பார்வை என்று கூறினாலும், தெய்வீகக் கண் என்று கூறினாலும், ஆன்மீக கண் என்று கூறினாலும் விஷயம் ஒன்று தான். இந்த நேரமோ தெய்வீக புத்தி என்ற இந்தப் பரிசு, அனைவரிடமும் இருக்கிறது தான் இல்லையா? நீங்கள் அனைவரும் தங்கப் பாத்திரம் தான் இல்லையா. இது தான் தெய்வீக புத்தி. மதுபன்னிற்கு நீங்கள் அனைவரும் தெய்வீக புத்தி என்ற முழுமையான தங்க பாத்திரத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? உண்மையான தங்கத்தில் வெள்ளி மற்றும் செம்பின் கலப்படமோ இல்லை தானே! சதோபிரதானம் என்றால், சம்பூரண தங்கம், இதைத் தான் தெய்வீக புத்தி என்று கூறுவது. நல்லது. நீங்கள் எந்தப் பக்கத்தில் இருந்து வந்திருந்தாலும், அனைத்து பக்கங்களிலிருந்தும் ஞான நதிகள் வந்து, கடலில் கலந்து விட்டன. நதி மற்றும் கடலின் சந்திப்பு மகான் சந்திப்பை கொண்டாடுவதற்காக வந்திருக்கிறீர்கள் இல்லையா?. பாப்தாதாவும் அனைத்து ஞான நதிகளைப் பார்த்து, எப்படி ஊக்கம் உற்சாகத்துடன், எங்கு எங்கிருந்தாலும் இந்த சந்திப்பு விழாவில் வந்து சேர்ந்து விட்டீர்கள். நல்லது.

 

எப்பொழுதும் தெய்வீக புத்தி என்ற பொன்னான பரிசை காரியத்தில் கொண்டு வரக்கூடிய, எப்பொழுதும் தந்தைக்குச் சமமாக மிக சாதுர்யமானவர் ஆகி, மாயாவின் சாதுர்யத்தை தெரிந்திருக்கும், எப்பொழுதும் தந்தையின் குடை நிழலுக்கு கீழ் இருந்து மாயாவின் நிழலிருந்து தூரமாக இருக்கக் கூடிய, எப்பொழுதும் ஞானக் கடலுடன் இனிமையான சந்திப்பைச் செய்யக் கூடிய., ஒவ்வொரு கடினத்தையும் சுலபமாக ஆக்கக் கூடிய,, உலகிற்கு நன்மை செய்யும், உயர்ந்த நிலையில் நிலைத்திருக்க கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

தனிப்பட்ட சந்திப்பு:

1. பார்வை மாறியதினால், உலகம் மாறிவிட்டது இல்லையா? பார்வை சிரேஷ்டமாக ஆகிவிட்டது என்றால், உலகமும் சிரேஷ்டமாக ஆகிவிட்டது. இப்பொழுது உலகமே தந்தை தான். தந்தையில் உலகம் நிரம்பியிருக்கிறது. அந்தமாதிரியே அனுபவம் ஆகிறது தான் இல்லையா? எங்கே பார்த்தாலும், கேட்டாலும், தந்தையின் துணை தான் அனுபவம் ஆகிறது இல்லையா? அந்த மாதிரியான அன்பானவர் யார் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு எண்ணத்திலும், துணைவனாக இருப்பவர் அந்தமாதிரி முழு உலகத்திலும் வேறு யாருமே இருக்க முடியாது.. குடும்பத்தில் கூட யாராவது எவ்வளவு தான் அன்பானவராக இருந்தாலும் கூட அவரும் எப்பொழுதுமே அவருடைய துணையைக் கொடுக்க முடியாது. இவரோ கனவில் கூட, அவருடைய துணையைக் கொடுக்கிறார். அந்தமாதிரி துணை வைத்து நடந்து கொள்ளும் துணைவன் கிடைத்திருக்கிறார், எனவே உலகம் மாறிவிட்டது. இப்பொழுது குடும்ப வாழ்க்கையில் கூட ஆன்மீகத்தை அனுபவம் செய்கிறீர்கள் இல்லையா? குடும்பத்தில் என்னென்ன சம்மந்தத்தை பார்க்கிறீர்களோ, அப்பொழுது உண்மையான சம்மந்தம் இயல்பாகவே நினைவில் வருகிறது. இதன் மூலம் அந்த ஆத்மாக்களுக்கும் சக்தி கிடைத்து விடுகிறது. எப்பொழுது தந்தை உங்கள் கூடவே இருக்கிறார் எனறால் நீங்கள் கவலை இல்லாத இராஜாவாக இருக்கிறீர்கள். சரியாக நடக்குமா அல்லது நடக்காதா என்று இதை யோசிப்பதற்கும் அவசியம் இருக்காது. உடன் இருக்கிறார் என்றால், அனைத்துமே சரியே சரிதான்! எனவே துணையை அனுபவம் செய்து கொண்டே, கடந்து சென்று கொண்டேயிருங்கள். யோசிப்பதும் தந்தையினுடைய வேலை, நம்முடைய வேலை அவருடைய துணையில் முழ்கியிருப்பது. எனவே பலஹீனமான யோசனைகளும் முடிந்துவடைந்து விட்டது. எப்பொழுதும் கவலையில்லாத இராஜாவாக இருங்கள், இப்பொழுதும் இராஜா, எப்பொழுதும் இராஜா!

 

2. எப்பொழுதும் தன்னை வெற்றியின் நட்சத்திரம் என்று நினையுங்கள். மேலும் மற்ற ஆத்மாக்களுக்கும் வெற்றியின் சாவியைக் கொடுத்துக் கொண்டேயிருங்கள். இந்த சேவையின் மூலம் அனைத்து ஆத்மாக்களும் குஷியடைந்து உங்களுக்கு உள்ளப்பூர்வமாக ஆசிர்வாதம் கொடுப்பார்கள். தந்தை மற்றும் அனைவரின் ஆசிர்வாதங்கள் தான் முன்னேறச் செய்விக்கிறது..

 

விசேஷமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்யக்த மகா வாக்கியம் -

சகயோகி ஆகுங்கள், மற்றும் சகயோகியாக ஆக்குங்கள்.

 

எப்படி பிரஜைகள், இராஜாவின் சகயோகி, அன்பானவர்களாக இருக்கிறார்கள். அதேபோல் உங்களூடைய அனைத்து கர்மேந்திரியங்கள், விசேஷ சக்திகள், எப்பொழுதும் அன்பானதாக சகயோகியாக இருக்கட்டும், அப்பொழுது தான் நடைமுறையில் இதனுடைய பிரபாவம், உங்களுடைய சேவையின் துணைவர்கள் மற்றும் குடும்பத்தின் உறவினர்கள், மற்றும் உடன் இருப்பவர் மேல் ஏற்படும். எப்பொழுது நீங்களே உங்களுடைய அனைத்து கர்மேந்திரியங்களையும் உங்களுடைய கட்டளைக்குள் வைத்துக் கொள்வீர்களோ, அப்பொழுது உங்களுடைய மற்ற அனைத்து துணைவர்களும் உங்களுடைய காரியத்தில், சக்யோகியாக ஆவார்கள். யார் மீது அன்பு இருக்கிறதோ, அவருடைய ஒவ்வொரு காரியத்திலும், அவசியம் சகயோகியாக ஆவார்கள். மிக அன்பான ஆத்மாவின் அடையாளம், அவர் எப்பொழுதும் தந்தையின் சிரேஷ்ட காரியத்தில், சகயோகியாக இருப்பார். எந்தளவு சகயோகியோ, அந்தளவு சகஜயோகியாக இருப்பார். எனவே இரவு பகலாக பாபா மற்றும் சேவை இதைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற முழு ஈடுபாடு இருக்க வேண்டும். அவர் மாயாவின் சகயோகியாக இருக்க முடியாது, மாயாவிடமிருந்து விலகி விடுவார்.

 

யாராவது தன்னை வேறு மார்க்கத்தில் செல்பவர் என்று நினைத்தாலும், ஆனால் ஈஸ்வரிய அன்பு அவரையும் சகயோகியாக ஆக்கி, நாம் அனைவரும் நமக்குள் ஒன்று என்று முன்னேறிச் செல்வதற்கான கயிறால் கட்டிப்போட்டு விடுகிறது. அன்பு முதலில் சகயோகி ஆக்குகிறது, சகயோகியாக ஆக்கி, ஆக்கி நேரம் வரும் பொழுது, இயல்பாகவே சகஜயோகியாக ஆக்கிவிடுகிறது. ஈஸ்வரிய அன்பு, பரிவர்த்தனைக்கான அஸ்திவாரம், மேலும் வாழ்க்கை மாற்றத்திற்கான விதை சொரூபமாகும். எந்த ஆத்மாக்களில் ஈஸ்வரிய அன்பின் அனுபவத்தின் விதை போடப்படுகிறதோ, அந்த விதை சகயோகி ஆவதற்கான மரத்தை இயல்பாகவே வளர வைத்துவிடுகிறது, மேலும் நேரம் வரும் பொழுது, சகஜயோகி ஆவதற்கான பழம் தென்படும். ஏனென்றால் பரிவர்த்தனையின் விதை, அவசியம் பழம் கொடுக்கும். அனைவரின் மனதின் சுபபாவனை மற்றும் சுப விருப்பங்களின் சகயோகம், எந்தவொரு காரியத்திலும் வெற்றியைக் கொடுக்கும். ஏனென்றால், இந்த சுபபாவனை, சுப விருப்பங்களின் கோட்டை ஆத்மாக்களை பரிவர்த்தனை செய்து விடுகிறது. வாயுமண்டலத்தின் கோட்டை, அனைவரின் சகயோகத்தினால் தான் உருவாகும். ஈஸ்வரிய அன்பின் கயிறு ஒன்று இருக்கிறது என்றால், அநேகவிதமான கருத்துக்கள் இருந்த போதிலும், சகயோகி ஆவதற்கான, சிந்தனை உருவாகிவிடும். இப்பொழுது அனைத்து தரப்பினர்களையும் சகயோகி ஆக்குங்கள். ஆகிக்கொண்டும் இருக்கிறார்கள், ஆனால் இன்னும் நெருக்கமான சகயோகியாக ஆக்கிக்கொண்டேயிருங்கள். ஏனென்றால் இப்பொழுது பிரத்யக்ஷத்தின் நேரம் அருகில் வந்து கொண்டிருக்கிறது. முன்பு நீங்கள் அவர்களை சகயோகி ஆக்குவதற்கான முயற்சி செய்தீர்கள், ஆனால் இப்பொழுது அவர்களே சகயோகி ஆவதற்கான, மனவிருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள், மேலும் வரும் காலத்திலும் அந்தமாதிரி செய்து கொண்டேயிருப்பார்கள். அவ்வப்பொழுது சேவையின் ரூபம், வடிவம் மாறிக்கொண்டேயிருக்கிறது, மேலும் மாறிக் கொண்டே யிருக்கும்.. இப்பொழுது உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியிருக்காது, ஆனால் அவர்களே இந்தக் காரியம் சிரேஷ்டமானது, எனவே நாமும் சகயோகியாக கண்டிப்பாக ஆக வேண்டுமென்று சொல்வார்கள். யார் உண்மையான உள்ளத்தோடு அன்புடன், சகயோகம் கொடுக்கிறார்களோ, அவர் தந்தையிடமிருந்து பலமடங்கு சகயோகம் பெறுவதற்கு உரியவராக ஆகுகிறார். தந்தை சகயோகத்தின் கணக்கை முழுமையாகவே முடித்துவிடுகிறார். எந்தக் காரியத்தையும் சகஜமாக செய்வதற்கான ஓவியத்தில் மலையை ஒரு விரல் கொடுத்து தூக்கியதாகக் காண்பிக்கிறார்கள். இது சகயோகத்தின் அடையாளம், எனவே ஒவ்வொருவரும் சகயோகியாகி எதிரில் வர வேண்டும், தேவையான நேரத்தில் சகயோகியாக வேண்டும் என்பதின் அவசியம் இப்பொழுது இருக்கிறது. அதற்காக சக்திசாலியான அம்பை எய்ய வேண்டும். சக்திசாலியான அம்பு என்றால், யாரிடம் அனைத்து ஆத்மாக்களின் சகயோகத்தின் பாவனை, குஷியின் பாவனை, உயர்ந்த பாவனை இருக்கிறதோ அவர்தான். நல்லது - ஒம்சாந்தி

 

வரதானம்:

அன்பு மற்றும் புதுமையின் அதிகாரத்தின் மூலம் சமர்ப்பணம் செய்விக்கக் கூடிய மகான் ஆத்மா ஆகுக.

 

யார் தொடர்பில் வந்தாலும், அவர்களை அந்தமாதிரி சம்மந்ததில் கொண்டு வாருங்கள், அதாவது, அவர் சம்மந்தத்தில் வந்து, வந்து சமர்பண புத்தியாக ஆகிவிட வேண்டும். மேலும் பாபா என்ன கூறுகிறாரோ, அது தான் சத்தியம் என்று கூற வேண்டும். இதைத் தான் சமர்ப்பண புத்தி என்று கூறுவது. பிறகு அவருடைய கேள்விகள் முடிவடைந்துவிடும். இவர்களுக்கு ஞானம் நன்றாக இருக்கிறது என்று மட்டும் சொல்ல வேண்டாம், ஆனால் இது புதிய ஞானம், புது உலகத்தைக் கொண்டு வருவது என்ற இந்த வார்த்தைகள் வெளி வந்தால் தான் கும்பகர்ணர்கள் விழித்தெழுவார்கள். எனவே புதுமையின் மகான் தன்மை மூலமாக அன்பு மற்றும் அதிகாரத்தின் சமநிலை மூலம், அந்த மாதிரி சமர்பணம் செய்வியுங்கள். அப்பொழுது தான் மைக் தயார் ஆகிவிட்டது என்று கூறுவோம்.

 

சுலோகன்:

ஒரு பரமாத்மாவின் அன்பிற்குரியவர் ஆனீர்கள் என்றால், உலகின் அன்பிற்குரியவர் ஆகிவிடுவீர்கள்.

 

ஓம்சாந்தி