28.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

"இனிமையான குழந்தைகளே! பாபாவின் கடமை முட்கள் நிறைந்த காட்டினை அழித்து, மலர்கள் நிறைந்த தோட்டமாக மாற்றுவதாகும். இதன் மூலம் தான் நம்பர் ஒன் குடும்பக் கட்டுப்பாடு ஆகிவிடுகின்றது.

 

கேள்வி :

குடும்பக் கட்டுப்பாட்டினுடைய (எஹம்ண்ப்ஹ் டப்ஹய்ய்ண்ய்ஞ்) முதல் தரமான சாஸ்திரம் எது? எப்படி?

 

பதில் :

கீதை தான் குடும்பக் கட்டுப்பாட்டின் முதல் தரமான சாஸ்திரம். ஏனெனில் கீதை மூலம் தான் பாபா அநேக அதர்மங்களின் வினாசம் செய்து ஒரே தர்மத்தை ஸ்தாபனை செய்தார். கீதையில் தான் பகவானின் மகாவாக்கியம் உள்ளது -- காமம் மிகப் பெரிய எதிரி. எப்போது காமம் என்ற மிகப் பெரிய எதிரி மீது வெற்றி கொள்கிறீர்களோ, அப்போது குடும்பக்கட்டுப்பாடு தானாகவே ஆகிவிடுகின்றது. இது ஒரு பாபாவின் காரியமாகும். எந்த ஒரு மனிதருடையதுமல்ல.

 

ஓம் சாந்தி.

சிவபகவான் வாக்கு. பாபா அமர்ந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வைக்கிறார். இந்த உலகத்தையோ அசுர உலகம் என்று நிச்சயமாக சொல்வார்கள். தெய்வீக உலகத்தில் மனிதர்கள் மிகக் குறைவாக இருப்பார்கள். இப்போது இந்த இரகசியத்தையும் கூட அனைவருக்கும் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். குடும்பக்கட்டுப்பாடு மந்திரியாக யார் இருக்கிறார்களோ அவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். அவர்களுக்குச் சொல்லுங்கள், குடும்பக்கட்டுப்பாட்டின் கடமையும் கூட கீதையில் சொல்லப்பட்டுள்ளபடி ஒரு பாபாவின் கடமையேயாகும். கீதையையோ அனைவரும் ஏற்றுக் கொள்ளவே செய்கிறார்கள். கீதை குடும்பக் கட்டுப்பாட்டின் சாஸ்திரமாகும். கீதையின் மூலம் தான் பாபா புதிய உலகத்தின் ஸ்தாபனை செய்கிறார் தானாகவே நாடகத்தில் பதிவாகியுள்ளது. பாபாதான் வந்து ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார். அதாவது தூய்மையான தேசியத்தின் ஸ்தாபனை செய்கிறார். அங்குள்ளவர்கள் தங்களை தேவி-தேவதா தர்மத்தினர் என்றே சொல்வார்கள். கீதையில் பகவான் தெளிவாகச் சொல்கிறார் -- நான் வருவதே ஒரு தர்மத்தின் ஸ்தாபனை செய்யவும், மற்ற அநேக தர்மங்களின் அழிக்கவும் தான். ஆக, இதன் மூலம் நம்பர் ஒன் குடும்பக்கட்டுப்பாடு ஆகிவிடும். முழு சிருஷ்டியிலும் ஜெய, ஜெய! என்ற முழக்கம் கேட்கும். மேலும் ஓர் ஆதி சனாதன தர்மத்தின் ஸ்தாபனை ஆகிவிடும். இப்போதோ ஏராளமான மனிதர்கள் இருப்பதால் அதிகமான குப்பைகள் உருவாகி விட்டன. அங்குள்ள மிருகங்கள், பறவைகள் முதலியன எல்லாமே முதல் தரமானவையாக இருக்கும். அவற்றைப் பார்த்த உடனேயே மனமகிழ்ச்சி ஏற்படும், பயப்படுவதற்கான விஷயம் இல்லை. பாபா அமர்ந்து சொல்லிப் புரிய வைக்கிறார், நீங்கள் என்னை அழைத்ததே இதற்காகத்தான் -- வந்து குடும்பக்கட்டுப்பாடு செய்யுங்கள், அதாவது தூய்மையற்ற குடும்பங்களைத் திரும்ப அழைத்துச் செல்லுங்கள், பாவனமான குடும்பத்தை ஸ்தாபனை செய்யுங்கள். நீங்கள் அனைவரும் சொல்லியிருந்தீர்கள் -- பாபா, வந்து தூய்மையற்ற உலகத்தை அழித்துப் புதிய பாவன உலகத்தை உருவாக்குங்கள். இது பாபாவின் திட்டம் தான். பார்த்த மாத்திரத்திலேயே மனம் மகிழ்ச்சி யடைந்து விடும். இலட்சுமி-நாராயணரைப் பார்த்த உடனேயே உங்கள் மனம் மகிழ்கின்றது இல்லையா? அங்கோ இராஜா-இராணி எப்படியோ அதுபோல் பிரஜைகள் அனைவருமே முதல் தரமானவர்களாக இருப்பார்கள். ஆக, இந்தக் குடும்பக்கட்டுப்பாட்டின் யுக்தி டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் பரலௌகீகத் தந்தையோ சத்யுகத்திற்கான திட்டத்தை முதல் தரமானதாகச் செய்கிறார், முட்களின் காட்டையே அழித்து விடுகின்றார். இந்த உலகம் முழுவதையுமே நெருப்புப் பற்றிக் கொள்கின்றது. இந்தக் காரியம் பாபாவினுடையது. உங்களால் எதுவும் செய்ய இயலாது. எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் யாராலும் வெற்றி பெற இயலாது. பாபா சொல்கிறார் -- உங்களுடைய நண்பனாக நினைத்துக் கொண்டிருக்கும் காம விகாரம் மிகப் பெரிய விரோதியாகும். அநேகம் பேர் அதற்கு நண்பனாக ஆகிவிடுகிறார்கள். பாபா அவசரச் சட்டம் பிறப்பிக்கின்றார் -- நீங்கள் இந்த விகாரத்தின் மீது வெற்றி கொள்ளுங்கள். நீங்கள் சொல்லிப் புரிய வையுங்கள் -- காமம் மகா சத்ரு என்று பாபா சொல்கின்றார்.பாவம் அவர்களுக்குத் தெரியவே செய்யாது, குடும்பக்கட்டுப்பாடு எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது. இதுவோ டிராமாவின் அனுசாரம் கல்ப-கல்பமாக பாபா செய்வதாகும். மீண்டும் இது நடந்தே யாக வேண்டும். சத்யுகத்தில் மிகக் கொஞ்சம் மனிதர்கள் தான் இருப்பார்கள். இதில் வேறுபாட்டுக்கான எந்த ஒரு விஷயமும் இல்லை. பாபா நடைமுறையில் இந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார். அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்! கல்வி அமைச்சருக்கும் சொல்லிப் புரிய வையுங்கள். இப்போதைய பண்புகள் எவ்வளவு மோசமாக உள்ளன! தேவதைகளின் பண்புகள் எவ்வளவு நன்றாக இருந்தன! நீங்கள் எதையும் பொருட்படுத்தாமல் சொல்லுங்கள். இது ஒன்றும் அமைச்சராகிய உங்கள் வேலையல்ல என்று சொல்லுங்கள். இதுவோ உயர்ந்தவரிலும் உயர்ந்தவரான பாபாவின் வேலையாகும். இந்த தேவதைகளின் இராஜ்யத்தில் ஒரே தர்மம், ஒரே இராஜ்யம், ஒரே மொழி இருந்தது. எவ்வளவு குறைவாக மனிதர்கள் இருந்தார்கள்! ஆனால் இதுபோல் யுக்தியுடன் பேசுவது என்பது மிகக் குறைவானவர்களுக்கே வருகின்றது. அந்த ஆன்மீகம் இருப்பதில்லை. அவர்களுக்கு இந்த லட்சுமி-நாராயணன் சித்திரத்தைக் காட்ட வேண்டும். இந்த குடும்பக்கட்டுப்பாடு பாபா தான் செய்திருந்தார். இப்போது மீண்டும் செய்து கொண்டிருக்கிறார். இவர்களின் ராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார்.

 

பாபா சொல்லியிருக்கிறார் -- இந்த இலட்சுமி-நாராயணன் சித்திரத்தை எப்போதும் முன்னால் வையுங்கள். மேலும் விளக்குகள் முதலியவற்றை நன்றாக ஏற்றி வையுங்கள். பஜனைக்கு செல்லும் போது இந்த டிரான்ஸ் லைட் இருக்க வேண்டும். இதனை அனைவரும் தெளிவாகப் பார்க்கும் படி இருக்க வேண்டும். நாங்கள் இந்த குடும்பக்கட்டுப்பாட்டைச் செய்து கொண்டிருக்கிறோம் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். இராஜா-இராணி எப்படியோ அப்படியே பிரஜைகளும். தெய்வீக சாம்ராஜ்யம் ஸ்தாபனையாகிக் கொண்டிருக்கிறது. மற்ற அனைத்தும் வினாசமாகி விடும். நீங்கள் சொல்லவும் செய்கிறீர்கள், ஹே, பதீத பாவனா! வா, எங்களைப் பாவனமாக்கு! என்று. அவ்வாறு பாபா தான் செய்ய முடியும். ஒரு தேவி-தேவதா தர்மம் தான் பாவனமாக உள்ளது. மற்ற அனைத்தும் அழிந்து போகும். இந்தத் திட்டம் சிவபாபாவின் கையில் தான் உள்ளது என்பதைச் சொல்லுங்கள். சத்யுகத்தில் இந்தத் திட்டம் நடைமுறையில் வந்து விடும். அங்கே இருப்பதே தேவதா வம்சம், சூத்திரர் இருப்பதில்லை. இதுவோ மிகவும் முதல் தரமான திட்டமாகும். மற்ற அனைத்து தர்மங்களும் அழிந்து விடும். இந்த தந்தையின் திட்டத்தை வந்து புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய இந்த விஷயத்தைக் கேட்டு உங்கள் மீது அதிகமாக சமர்ப்பணமாவார்கள். இந்த அமைச்சர்கள் முதலானோர் நிர்விகாரி திட்டத்தை எப்படி உருவாக்க முடியும்? உயர்ந்தவரிலும் உயர்ந்தவராக இருக்கும் பாபா வருவதே இந்த திட்டத்தை உருவாக்குவதற்காகத் தான். மற்ற அநேக தர்மங்கள் அனைத்தையும் அழித்து விடுகின்றார். இந்த விஷயமே எல்லையற்ற தந்தையின் கையில் உள்ளது. பழைய பொருளைப் புதியதாக ஆக்கி விடுகின்றார். பாபா புதிய உலகத்தை ஸ்தாபனை செய்து, பழைய உலகத்தை அழித்து விடுகின்றார். இது டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. சொல்லிப் புரிய வைக்க வேண்டும் -- சகோதர சகோதரர்களே! இந்த சிருஷ்டிச் சக்கரத்தின் முதல்-இடை-கடை பற்றி நீங்கள் அறிய மாட்டீர்கள், பாபா சொல்கிறார். சத்யுக ஆரம்பத்தில் இவ்வளவு மனிதர்கள் இருக்க மாட்டார்கள். மேலும் குடும்பக்கட்டுப்பாடு போன்றவற்றை திட்டமிடுவதும் அங்கே இருக்காது. முதலில் நீங்கள் வந்து சிருஷ்டிச் சக்கரத்தின் முதல்-இடை-கடை பற்றி அறிந்து கொள்ளுங்கள். சத்கதி அளிப்பவர் பாபா மட்டுமே. சத்கதி என்றால் சத்யுகத்தின் மனிதர்கள். முதல்-முதலில் இந்த தேவி-தேவதைகள் மிகக் குறைவாக இருந்தார்கள். முதல் தரமான தர்மமாக இருந்தது. பாபா பூக்களின் முதல் தரமான திட்டத்தை உருவாக்குகின்றார். காமமோ மிகப் பெரிய எதிரி. இப்போதோ இதற்காக உயிரையே கொடுக்கின்றனர். யாருக்காவது யார் மீதாவது மனம் ஈடுபட்டால் தாய்-தந்தை திருமணம் செய்து வைப்பதில்லை என்றால் வீட்டிலேயே குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இந்த உலகமே அழுக்கானதாகும். ஒருவர் மற்றவரை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கின்றனர்;. சத்யுகத்திலோ பூக்களின் மழை பொழியும். ஆகவே இப்படியெல்லாம் விசார் சாகர் மந்தனம் செய்யுங்கள். பாபா சமிக்ஞை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். நீங்கள் இதை இன்னும் சிறந்ததாக ஆக்குங்கள். சித்திரங்களும் வெவ்வேறு விதமாக உருவாக்கு கின்றார். டிராமாவின்படி என்னென்ன நடைபெறுகின்றதோ எல்லாமே சரியானது தான். யாருக்காவது சொல்லிப் புரியவைப்பதும் சுலபமானதாகும். அனைவருடைய கவனத்தையும் பாபாவின் பக்கம் ஈர்க்க வேண்டும். இது பாபாவின் காரியமே ஆகும். இப்போது பாபா மேலே அமர்ந்து கொண்டே இந்தக் காரியத்தைச் செய்ய மாட்டார். சொல்லவும் செய்கிறார்,; எப்போதெல்லாம் தர்மத்தின் அழிவு ஏற்படுகின்றதோ அசுர இராஜ்யம் இருக்கிறதோ அப்போதெல்லாம் வந்து இவையனைத்தையும் அழித்து தெய்வீக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறேன். மனிதர்களோ அஞ்ஞானத் தூக்கத்தில் தூங்கி விட்டுள்ளனர். இவை யனைத்தும் வினாசமாகி விடும். யார் நிர்விகாரியாக ஆகின்றனரோ அவர்களின் குடும்பம் தான் வந்து இராஜ்யம் செய்யும். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை எனப் பாடவும் படுகின்றது. எதனுடைய ஸ்தாபனை? இந்தக் குடும்பத்தின் ஸ்தாபனை. இந்தத் திட்டமானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரம்மா குமார் குமாரிகள் பவித்திரமாகிறார்கள் என்றால் அவர்களுக்காக நிச்சயமாகப் பவித்திர உலகம் வேண்டும். இந்தப் புருஷோத்தம சங்கமயுகம் மிகச்சிறியது. இவ்வளவு குறைந்த காலத்தில் எவ்வளவு நல்ல திட்டத்தைச் செயல்படுத்தி விடுகிறார்! பாபா அனைவருடைய கணக்கு-வழக்குகளை முடித்து வைத்துத் தம்முடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். இவ்வளவு குப்பைகள் அனைத்தையும் அங்கே கொண்டு போக மாட்டார். அழுக்காகி விட்ட ஆத்மாக்கள் அங்கே செல்ல முடியாது. அதனால் பாபா வந்து ரோஜா மலர்களாக ஆக்கி அழைத்துச் செல்கிறார். இதுபோன்ற விஷயங்கள் பற்றி விசார் சாகர் மந்தனம் செய்யுங்கள். நீங்கள் உணர்ந்து கொண்டே செல்கிறீர்கள். பாபா சொல்கிறார், நான் ஒரு தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக உங்களுக்கு ஒத்திகை நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்தக் குடும்பக்கட்டுப்பாட்டை யார் செய்தார்கள்? பாபா சொல்கிறார், நான் கல்பத்திற்கு முன் போலவே என்னுடைய காரியத்தை செய்து கொண்டிருக்கிறேன். அழைக்கின்றார்கள், பதீத் (தூய்மையற்ற) குடும்பத்தை மாற்றிப் பாவனமான குடும்பத்தை ஸ்தாபனை செய்யுங்கள் என்று. இச்சமயம் அனைவருமே தூய்மையற்றவர்கள். திருமணங்களுக்காக இலட்சக்கணக்கில் செலவழிக்கிறார்கள். எவ்வளவு சடங்காச்சாரங்கள் செய்கிறார்கள்! ஆனாலும் மேலும் மேலும் பாவன (தூய்மையான) நிலையிலிருந்து மாறி பதீத்தம் ஆகிக்கொண்டே செல்கிறார்கள்.

 

குழந்தைகளாகிய நீங்கள் இப்போது இந்த ஈஸ்வரியக் காரியத்தைச் செய்ய வேண்டும். அனைவருக்கும் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். அனைவரும் அசுர உறக்கத்தில் உறங்கி விட்டுள்ளனர். அவர்களை எழுப்பிவிட வேண்டும். வெள்ளையாகி மற்றவர்களையும் ஆக்க வேண்டும். அப்போது பாபாவின் அன்பும் அவர்கள் மீது செல்லும். சேவையே செய்யவில்லை என்றால் என்ன கிடைக்கும்? யாராவது மகாராஜா ஆகிறார்கள் என்றால் நிச்சயமாக நல்ல கர்மம் செய்திருக்கிறார்கள். இதை யாரும் புரிந்து கொள்ள முடியும். இவர்கள் இராஜா-இராணி, நாம் தாச-தாசி என்றால் நிச்சயமாக முற் பிறவியில் அதுபோல் கர்மம் செய்திருக்கிறார்கள். கெட்ட கர்மம் செய்வதால் கெட்ட பிறவி கிடைக்கின்றது. கர்மங்களின் கதியோ நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. இப்போது பாபா உங்களுக்கு நல்ல கர்மம் செய்யக் கற்றுத் தருகின்றார். அங்கும் கூட இதுபோல் நிச்சயமாகப் புரிந்து கொள்வார்கள், முற் பிறவியின் கர்மங்களின் அனுசாரம் இதுபோல் ஆகியிருக்கிறோம். மற்றப்படி என்ன கர்மம் செய்தோம் என்பது பற்றித் தெரியாது. கர்மங்கள் பாடப் படுகின்றன. ஒருவர் எவ்வளவு நல்ல கர்மம் செய்கிறாரோ அந்த அளவு உயர்ந்த பதவி அடைகிறார். உயர்ந்த கர்மங்களால் தான் உயர்ந்தவர்களாக ஆகிறார்கள். நல்ல கர்மம் செய்யவில்லை என்றால் பெருக்கி சுத்தம் செய்யும் வேலைக்காரர்களாக ஆகிறார்கள். மற்றவர் முன் தலை வணங்குகின்றனர். இதெல்லாம் கர்மங்களின் பலன் என்று தான் சொல்வார்கள் இல்லையா? கர்மங்களின் கோட்பாடு நடைபெற்று வருகிறது.. ஸ்ரீமத்தினால் நல்ல கர்மங்கள் நடைபெறுகின்றன. எங்கே மகாராஜா, எங்கே தாச-தாசிகள்! பாபா சொல்கிறார், இப்போது தந்தையைப் பின்பற்றுங்கள். எனது ஸ்ரீமத் படி நடப்பீர்களானால் உயர்ந்த பதவி பெறுவீர்கள். பாபா சாட்சாத்காரமும் செய்விக்கிறார். இந்த மம்மா, பாபா, குழந்தைகள் இவ்வளவு உயர்ந்தவர்களாக ஆகிறார்கள் என்றால் இதுவும் கர்மம் தான் இல்லையா? அநேகக் குழந்தைகள் கர்மங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளவில்லை. பின்னாளில் அனைவருக்கும் சாட்சாத்காரம் ஆகும். நன்றாகப் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்றால் மகாராஜா ஆவார்கள். சண்டையிடுவதும் சத்தமிடுவதுமாக இருக்கிறார்கள் என்றால் கெட்டுப் போவார்கள். இதுவோ அந்தப் படிப்பிலும் உள்ளது. பகவான் வாக்கு, இந்த சமயம் முழு உலகமும் காமச் சிதையில் உருகிச் செத்துக் கொண்டிருக்கிறது. பெண்ணைப் பார்ப்பதால் நிலை கெட்டுப் போவதாகச் சொல்கிறார்கள். அங்கோ இதுபோல் நிலை கெட்டுப் போகாது. பாபா சொல்கிறார், பெயர், ரூபத்தைப் பார்க்கவே செய்யாதீர்கள். நீங்கள் சகோதர-சகோதரர்களைப் பாருங்கள். பெரிய குறிக்கோள். உலகத்தின் எஜமானர் ஆகவேண்டும். ஒருபோதும் யாருடைய புத்தியிலும் இருக்காது -- இந்த இலட்சுமி-நாராயணர் உலகத்தின் எஜமானர்களாக எப்படி ஆனார்கள்? பாபா சொல்கிறார், நான் உங்களை சொர்க்கத்தின் எஜமானன் ஆக்குகின்றேன். இந்த இலட்சுமி-நாராயணர் சர்வகுண சம்பன்னமாக இருந்தார்கள். இப்போது யாரை நீங்கள் புதிய ரத்தம் என்று சொல்கிறீர்களோ அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? காந்திஜி இதைக் கற்பித்துச் சென்றாரா? இராமராஜ்யத்தை உருவாக்குவதற்கும் யுக்தி வேண்டும். இதுவோ பாபாவின் காரியமே ஆகும். பாபாவோ எப்போதும் தூய்மையாக இருப்பவர். நீங்கள் பிறகு 21 பிறவிகள் பாவனமாக இருந்து அதன் பின் 63 பிறவிகள் பதீத்தம் ஆகிவிடுகிறீர்கள். சொல்லிப் புரிய வைப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும். பாபா குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார் -- குழந்தைகளே! பாவனமாகுங்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. தனது ஸ்திதியை (நிலை) சதா ஒரு நிலையுள்ளதாக, உறுதியானதாக ஆக்குவதற்கு எந்த ஒருவரின் பெயர் வடிவத்தையும் பார்க்காமல் இருக்க வேண்டும். சகோதர-சகோதரனைப் பாருங்கள். திருஷ்டியைப் பாவனமானதாக ஆக்குங்கள். சொல்லிப் புரிய வைப்பதில் ஆன்மீகத்தை தாரணை செய்யுங்கள்.

 

2. பாபாவின் அன்பைப் பெறுவதற்கு பாபாவுக்கு சமமான காரியம் செய்ய வேண்டும்அசுர உறக்கத்தில் உறங்குபவர்களை எழுப்பி விட வேண்டும். வெள்ளையாக (தூய்மையாக) ஆகி, மற்றவர்களையும் ஆக்க வேண்டும்.

 

வரதானம்:

குழந்தையிலிருந்து எஜமானன் என்ற நினைவினால் அனைத்து பொக்கிஷங்களையும் தனதாக்கிக் கொள்ளக் கூடிய சுயராஜ்ய அதிகாரி ஆகுக.

 

இந்த நேரம் குழந்தைகளாகிய நீங்கள் குழந்தையாக மட்டுமல்ல, ஆனால் குழந்தையிலிருந்து எஜமானன், ஒன்று சுயராஜ்ய அதிகாரி என்ற எஜமானன், மற்றொன்று பாபாவின் ஆஸ்திக்கு அதிகாரி என்ற எஜமானன். எப்போது சுயராஜ்ய அதிகாரி ஆகின்றீர்களோ, அப்போது தனது அனைத்து புலன்களும் கட்டளைப்படி நடக்க வேண்டும். ஆனால் நேரத்திற்கேற்றவாறு எஜமானன் என்ற நினைவை மறக்கச் செய்து, புலன்களின் வசமாக்கி விடக்கூடியது இந்த மனம், எனவே பாபாவுடைய மந்திரம் - மன்மனா பவ. மனதார ஒரு பாபாவின் நினைவில் இருப்பதினால், எந்தவொரு வீணான விசயத்தின் தாக்கம் ஏற்படாது, மேலும் அனைத்து பொக்கிஷங்களும் தன்னுடையதாக அனுபவம் ஆகும்.

 

சுலோகன்:

பரமாத்ம நேசம் என்ற ஊஞ்சலில் பறக்கும் கலையின் களிப்பைக் கொண்டாடுவதே அனைத்திலும் உயர்ந்த பாக்கியமாகும்.

 

ஓம்சாந்தி