08.12.2019           காலை முரளி               ஒம்சாந்தி         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்    18.03.1985          மதுபன்


 

திருப்தி

இன்று உள்ளத்தை கவர்ந்த பாபா தனது அன்பான இதய சிம்மானசதாரி குழந்தைகளிடம் உள்ளத்தின் ஆன்மீக உரையாடல் செய்ய வந்துள்ளார். உள்ளத்தைக் கவர்ந்தவர் தனது உண்மையான உள்ளங்களிடம் உள்ளத்தின் கொடுக்கல் வாங்கல் செய்வதற்காகவும், உள்ளத்தின் நிலைமையை கேட்டறிவதற்காகவும் வந்துள்ளார். ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களிடம் ஆன்மீக உரையாடல் செய்கின்றார். இந்த ஆன்மீக உரையாடலை இந்த நேரத்தில் மட்டும் தான் நீங்கள் அனுபவம் செய்ய முடியும். ஆத்மாக்களாகிய உங்களிடம் அவ்வளவு அன்பின் சக்தி உள்ளது, நீங்கள் ஆத்மாக்களின் படைப்பவராகிய தந்தையை ஆன்மீக உரையாடலுக்காக நிர்வாணத்திலிருந்து (நிசப்ததிலிருந்து) சப்தத்தில் அழைத்து வருகிறீர்கள். அப்பேற்பட்ட சிரேஷ்டமான ஆத்மாகளாகிய நீங்கள் பந்தனமற்ற பாபாவையும் கூட அன்பான பந்தனத்தில் பிணைத்து விடுகிறீர்கள். உலகில் உள்ளவர்கள் பந்தனத்தில் இருந்து விடுவிப்பவரே! என்று கூறி அழைத்துக் கொண்டிருக்கின்றனர், மேலும் அப்பேற்பட்ட பந்தனமற்ற பாபா, குழந்தைகளின் அன்பான பந்தனத்தில் எப்பொழுதும் பிணைக்கப் பட்டுள்ளார். பிணைப்பதில் நீங்களோ புத்திசாலிகள்.! எப்பொழுதெல்லாம் நினைவு செய்கின்றீர்களோ, அப்பொழுதெல்லாம் பாபா வந்து விடுகிறார் அல்லவா! .ஹஜுர் (பாபா) வந்து

(ஆஜர்) விடுகிறார். எனவே இன்று விசேஷமாக இரட்டை அயல் நாட்டு குழந்தைகளிடம், ஆன்மீக உரையாடல் செய்ய வந்துள்ளார். இந்த சீசனில் இரட்டை அயல்நாட்டவரின் விசேஷ முறை 􄐈 􄐴 􄐵 􄐲 􄐮 􄐉 ஆகும். அதிகபட்சமாக இரட்டை அயல்நாட்டினர் தான் வந்திருக்கின்றனர். மதுபன் நிவாசிகள் மதுபன் என்ற சிரேஷ்டமான இடத்தில் வசிப்பவர்களோ இருக்கவே இருக்கின்றனர். ஒரே இடத்திலேயே அமர்ந்துக் கொண்டு உலகின் வித விதமான ஆத்மாக்களின் சந்திப்பு விழாவைப் பார்ப்பவர்களாக இருக்கின்றனர். யார் வருகின்றார்களோ, அவர்கள் சென்று விடுகின்றனர், ஆனால் மதுபன் நிவாசிகளோ எப்பொழுதுமே இருக்கின்றனர்!

 

இன்று விசேஷமாக இரட்டை அயல்நாட்டவரிடம் பாப்தாதா கேட்டுக்கொண்டிருக்கின்றார் அனைவரும் திருப்தி மணிகளாகி கிரீடத்தில் மின்னிக் கொண்டு இருக்கிறீர்களா? அனைவரும் திருப்தி மணிகள் தானே? எப்பொழுதும் திருப்தியாக இருக்கின்றீர்களா? சில நேரம் தன்னிடம் அதிருப்தியாகவோ, அல்லது சில நேரம் பிராமண ஆத்மாக்களிடம் அதிருப்தியாகவோ, சில நேரம் தனது சம்ஸ்காரங்களிடம் அதிருப்தியாகவோ, சில நேரம் வாயுமண்டலத்தின் தாக்கத்தினால் அதிருப்தியாகவோ ஆகவில்லை தானே! எப்பொழுதும் அனைத்து விஷயங்களிலும் திருப்தியாக இருக்கின்றீர்களா? சில நேரம் திருப்தி, சில நேரம் அதிருப்தியாகவும் இருந்தால், திருப்தி மணி என்று சொல்லாமா? நாங்கள் திருப்தி மணிகள் என்று நீங்கள் அனைவரும் சொன்னீர்கள் தானே! பிறகு நாங்கள் திருப்தி மணிகள் தான், ஆனால் எங்களை பிறர் அதிருப்தியாக்குகின்றார்கள் என்று கூறமாட்டீர்கள் தானே? என்ன வேண்டுமென்றாலும் ஆகலாம், ஆனால் யார் திருப்தியான ஆத்மாக்களாக இருக்கிறார்களோ, அவர்கள் ஒருபொழுதும் தனது திருப்தி என்ற விசேஷத்தை விட முடியாது. திருப்தியை பிராமண வாழ்க்கையின் விசேஷ குணம் என்று சொல்லலாம் அல்லது விசேஷ வாழ்க்கையின் அலங்காரம் என்று சொல்லலாம். எவ்வாறு ஏதேனும் பிரியமான பொருள் இருக்கிறது என்றால், பிரியமான பொருளை ஒருபொழுதும் விடுவதில்லை. திருப்தி என்பது விசேஷத் தன்மையாகும். திருப்தி என்பது பிராமண வாழ்க்கையின் விசேஷ மாற்றத்திற்கான கண்ணாடி ஆகும். சாதாரண வாழ்க்கை மற்றும் பிராமண வாழ்க்கை. சாதாரண வாழ்க்கை என்றாலே, சில நேரம் திருப்தி, சில நேரம் அதிருப்தி. பிராமண வாழ்க்கையில் திருப்தி என்ற விசேஷத்தைப் பார்த்து, அஞ்ஞானிகள் கூட ஈர்க்கப் படுகிறார்கள். இந்த மாற்றம் அநேக ஆத்மாக்களை மாற்றம் செய்வதற்கு நிமித்தமாகி விடுகிறது. அனைவரின் வாயிலிருந்து, இவர்கள் எப்பொழுதும் திருப்தியாக அதாவது குஷியாக இருக்கின்றனர் என்ற வார்த்தையே வெளிவருகிறது. எங்கு திருப்தி இருக்கிறதோ, அங்கு அவசியம் குஷி இருக்கிறது. அதிருப்தி குஷியை மறைத்து விடுகிறது. இதுவே பிராமண வாழ்வின் மகிமையாகும். எப்பொழுதும் திருப்தி இல்லையெனில், அது சாதரண வாழ்க்கை, திருப்தி வெற்றிக்கு எளிய ஆதாரமாகும். திருப்தி அனைத்து பிராமண குடும்பத்தினரை அன்பானவர் ஆக்குவதில் சிரேஷ்டமான சாதனமாக இருக்கின்றது. யார் திருப்தியாக இருப்பாரோ, அவருக்கு தானாகவே அனைவரிடமிருந்தும் அன்பு கிடைக்கும். திருப்தியான ஆத்மாக்களை எப்பொழுதும் அனைவரும் தானாகவே நெருங்கி வருவார்கள், மற்றும் ஒவ்வொரு சிரேஷ்டமான காரியத்தில் உதவியாளர் ஆக்குவதற்காக பிரயத்தனம் (உழைப்பு) செய்வார்கள். என்னை அருகாமையில் கொண்டு வாருங்கள் என்று சொல்லி, அவர்களுக்கு உழைக்க வேண்டிய அவசியமிருக்காது. என்னை உதவியாளர் ஆக்குங்கள், அல்லது என்னை விசேஷ ஆத்மாக்களின் பட்டியலில் இடம் பெறச் செய்யுங்கள் என்பது யோசிக்கவும் வேண்டியிருக்காது. சொல்லவும் வேண்டியிருக்காது. திருப்தியின் விசேஷத் தன்மை தானாகவே ஒவ்வொரு காரியத்திலும் 􄐧 􄐯 􄐬 􄐤 􄐥 􄐮 􄐀 􄐣 􄐨 􄐡 􄐮 􄐣 􄐥 􄐬 􄐬 􄐥 􄐲 􄐀 􄐈 பொன்னான வாய்ப்பிற்குரியவர்) ஆக்கிவிடுகிறது. தானாகவே காரியத்திற்கு நிமித்தமாகியுள்ள ஆத்மாக்களுக்கு திருப்தியான ஆத்மாவிற்காக எண்ணங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். மேலும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டே தான் இருக்கும். திருப்தி என்பது எப்பொழுதும் அனைவரது சுபாவ - சம்ஸ்காரத்தை ஒத்துப்போகச் செய்வதாகும். திருப்தியான ஆத்மா ஒருபொழுதும் யாருடைய சுபாவ சம்ஸ்காரத்தைக் கண்டு பயப்படுவர்களாக இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட திருப்தியான ஆத்மாக்களாக ஆகியுள்ளீர்கள் தானே! எவ்வாறு பகவான் உங்களிடம் வந்துள்ளார், நீங்கள் வரவில்லை. பாக்கியம் தானாகவே உங்களிடம் வந்துள்ளது, வீட்டில் அமர்ந்தவாறே பகவானும் கிடைத்தார், பாக்கியமும் கிடைத்தது! வீட்டில் அமர்ந்தவாறே அனைத்து பொக்கிஷங்களின் சாவி கிடைத்து விட்டது! எப்பொழுது விரும்புகிறீர்களோ, என்ன விரும்புகிறீர்களோ, பொக்கிஷம் உங்களிடம் உள்ளன, ஏனெனில் உரிமையாளர் ஆகிவிட்டீர்கள் அல்லவா! எனவே அப்படிப்பட்ட அனைவரின் நெருக்கத்தில் வருவதற்கான, சேவையில் நெருக்கத்தில் வருவதற்கான வாய்ப்பும் தானாகவே கிடைக்கின்றது. விசேஷத் தன்மை தானாகவே முன்னேற்றுகிறது, யார் எப்பொழுதும் திருப்தியாக இருக்கின்றாரோ, அவரிடம் அனைவரின் உள்ளத்தின் அன்பு தானாகவே தோன்றுகிறது. வெளிப்படையான அன்பு அல்ல. ஒன்று யாரேனும் திருப்தி படுத்துவதற்காக மேலோட்டமாக அன்பு காட்டுவது. இன்னொன்று உள்ளப் பூர்வமாக அன்பு செலுத்துவது. வெறுப்படையக் கூடாது எனபதற்காகவும் அன்பு செலுத்த வேண்டியுள்ளது, ஆனால் அவர்கள் அன்பை எப்பொழுதும் பெறுவதற்கு உரியவர் ஆவதில்லை. திருப்தியான ஆத்மாவிற்கு எப்பொழுதும் அனைவரின் உள்ளப் பூர்வமான அன்பு கிடைக்கின்றது. யாரேனும் புதியவர்களாக இருக்கலாம், அல்லது பழையவர்களாக இருக்கலாம், யாரேனும் சிலரை அறிமுகமான ரூபத்தில் தெரிந்திருக்கலாம், அல்லது தெரியாமல் இருக்கலாம், ஆனால் திருப்தி என்பது அந்த ஆத்மாக்களின் அறிமுகத்தைக் கொடுக்கிறது. ஒவ்வொருவருடைய உள்ளமும், இவர்களிடம் பேச வேண்டும், இவர்களுடன் அமர வேண்டும் என்று நினைக்கும். எனவே அப்படிப்பட்ட திருப்தியானவரா? உறுதியாகத் தானே! ஆகிக் கொண்டேயிருக்கிறோம் என்று சொல்வதில்லை அல்லவா! ஆகிவிட்டோம்.

 

திருப்தியான ஆத்மாக்கள் எப்பொழுதும் மாயாவை வென்றவர்களாகவே இருக்கின்றனர். இது மாயாயை வென்றவர்களின் சபை தானே! மாயையைக் கண்டு பயப்படுபவர்கள் இல்லை தானே? மாயா யாரிடம் வருகிறது? அனைவரிடமும் வருகின்றது தானே! மாயாவே வருவதில்லை என்று கூறுபவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா? அனைவரிடமும் வருகிறது, ஆனால் சிலர் பயப்படுகின்றனர், சிலர் தெரிந்துக் கொள்வதினால் தன்னை பாதுகாத்துக் கொள்கின்றனர். மரியாதை (ஸ்ரீமத்) என்ற கோட்டுக்குள்ளே இருக்கக் கூடிய, பாபாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த குழந்தைகள் மாயையை தொலைவில் இருந்தே தெரிந்து கொள்கின்றனர். (மாயாவை) தெரிந்து கொள்வதில் தாமதம் செய்பவர்களும், தவறு செய்பவர்களும் மாயாவைக் கண்டு பயப்படுகின்றனர். எவ்வாறு உங்கள் ஞாபகார்த்த கதை கேட்கின்றீர்கள் - சீதை ஏன் ஏமாற்றம் அடைந்தார்? ஏனெனில் தெரிந்துக் கொள்ளவில்லை. மாயாயின் சொரூபத்தை தெரிந்து கொள்ளதாத காரணத்தினால் ஏமாற்றம் அடைந்தார்கள். ஒருவேளை இவர் பிராமணன் அல்ல, பிச்சைக்காரன் அல்ல, இராவணன் என்று தெரிந்திருந்தால் சோகவனத்தின் அவ்வளவு அனுபவம் செய்ய வேண்டியிருந்திருக்காது. ஆனால் தாமதமாகத் தெரிந்து கொண்டதினால் ஏமாற்றம் அடைந்தார், மற்றும் ஏமாற்றத்தின் காரணத்தினால் துக்கப் படவேண்டியிருந்தது. யோகியிலிருந்து வியோகி (மறந்தவர்) ஆகிவிட்டார். (இராமருடன்) எப்பொழுதும் கூடவே இருப்பதிலிருந்து தூரமாகி விட்டார். பிராப்தி சொரூப ஆத்மாவிலிருந்து கூக்குரலிடும் ஆத்மா ஆகிவிட்டார். காரணம்? (மாயையை) தெரிந்து கொள்வதில் குறை. மாயையின் ரூபத்தைத் தெரிந்து கொள்ளும் சக்தி குறைவாக இருக்கும் காரணத்தினால் மாயையை விரட்டுவதற்குப் பதிலாக, தானே பயந்துவிடுகிறார்கள். தெரிந்து கொள்வதில் ஏன் குறை ஏற்படுகிறது? நேரத்திற்கு தெரிந்து கொள்ள முடிவதில்லை. பின்னால் ஏன் தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு காரணம்? ஏனெனில் எப்பொழுதும் பாபாவின் சிரேஷ்ட வழிப்படி நடப்பதில்லை. சில நேரம் நினைவு செய்கின்றனர், சில நேரம் செய்வதில்லை. சில நேரம் ஊக்கம் உற்சாகத்தில் இருக்கின்றனர், சில நேரம் இருப்பதில்லை. யார் எப்பொழுதும் என்ற கட்டளையை மீறுகின்றனரோ, அதாவது கட்டளை ஸ்ரீமத் என்ற கோட்டிற்குள் இல்லாத காரணத்தினால் மாயை நேரத்திற்கு ஏற்றவாறு ஏமாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. மாயாவிற்கு கண்டறியும் சக்தி அதிகம் இருக்கிறது. ,இந்த சமயம் இவர் பலஹீனமாக இருக்கிறார் என்பதை மாயை பார்க்கிறது, ஆகவே இவ்விதமான பலஹீனம் மூலமாக இவர்களை தன்னுடையவர் ஆக்க முடிகின்றது, மாயா வருவதற்கான வழியே பலஹீனம் தான், சிறிதளவேனும் வழி கிடைத்து விட்டாலும், உடனே வந்து விடுகின்றது. எவ்வாறு தற்காலத்து திருடர்கள் என்ன செய்கின்றார்கள்! கதவு மூடியிருக்கலாம், ஆனாலும் வெண்டிலேட்டர் வழியாக வந்து விடுகிறது. சிறிதளவு எண்ணத்திலேனும் பலஹீனம் ஆவது என்றாலே, மாயைக்கு வழிக் கொடுப்பதாகும். எனவே மாயாஜீத் ஆவதற்கான மிக எளிய சாதனம் - எப்பொழுதும் பாபாவுடன் இருங்கள். உடன் இருப்பது என்றால், தானாகவே மரியாதைகள் (ஸ்ரீமத்) என்ற கோட்டிற்குள் இருப்பது. ஒவ்வொரு விகாரத்தின் மீதும் வெற்றியாளர் ஆவதற்கான உழைப்பிலிருந்து விடுப்பட்டு விடுவீர்கள். உடன் இருங்கள், அப்பொழுது தானாகவே எவ்வாறு தந்தையோ, அவ்வாறே நீங்களும் ஆகிவிடுவீர்கள். தொடர்பின் நிறம் தானாகவே படிந்துவிடும். விதையை விட்டு விட்டு, கிளைகளை மட்டும் வெட்டக்கூடிய உழைப்பை (முயற்சி) செய்யாதீர்கள். இன்று காமத்தை வென்றவர் ஆனோம், நேற்று கோபத்தை வென்றவர் ஆனோம் என்றல்ல,, எப்பொழுதுமே அனைத்திலும் வெற்றியாளர்களாகவே இருக்கின்றோம். எப்பொழுது விதை ரூபம் மூலமாக விதையை (விகாரத்தை) அழித்து விடுவோம் என்றால், அடிக்கடி கஷ்டப்பட்டு உழைப்பதிலிருந்து தானாகவே விடுப்பட்டு விடுவீர்கள். விதை ரூபத்தை மட்டும் உடன் வைத்திருங்கள். பிறகு இந்த மாயை என்ற விதை சாம்பாலாகி விடும், அதாவது ஒருபொழுதும், அந்த விதையிலிருந்து அம்சம் கூட விகாரம் முளைக்க முடியாது. அதே போல் தான் நெருப்பில் எரிந்து விட்ட விதையிலிருந்து, ஒருபொழுதும் பழம் உற்பத்தி ஆக முடியாது.

 

ஆகவே உடன் இருங்கள், திருப்தியாக இருங்கள், அப்பொழுது மாயை என்ன செய்யும்! சரண்டர் ஆகிவிடும். மாயையை சரண்டர் செய்ய முடியவில்லையா? ஒருவேளை, தான் (பாபாவிற்கு) சரண்டராக இருந்தால், மாயையை அவர்கள் முன்பு சரண்டராகவே இருக்கும், எனவே மாயையை சரண்டராக்கி விட்டீர்களா அல்லது இப்பொழுது தான் ஏற்பாடு செய்து கொண்டீர்களா? நிலைமை என்ன? எவ்வாறு தன்னுடைய சரண்டர் ஆனதிற்கான செரிமனி (விழா) கொண்டாடுகிறீர்களோ அவ்வாறே மாயையை சரண்டர் ஆக்குவதற்கான செர்மனியை கொண்டாடி விட்டீர்களா? அல்லது கொண்டாட வேண்டுமா? ஹோலி ஆகிவீட்டீர்கள் என்றால், செர்மனி ஆகிவிட்டது, எரிந்துவிட்டது. பிறகு அங்கு சென்று என்ன செய்வது, மாயை வந்து விட்டது என்று கடிதம் எழுத மாட்டீர்களே! மகிழ்ச்சியான மடல் மட்டும் தானே எழுதுவீர்கள் அல்லவா! எவ்வளவு சரண்டர் செர்மனி கொண்டாடினீர்களோ, நம்முடையதோ ஆகிவிட்டது, ஆனால் மற்ற ஆத்மாக்கள் மூலமாகவும் மாயையை சரண்டர் ஆக்கினோம் என்ற செய்தியை எழுதுவீர்கள் தானே! நல்லது.

 

எவ்வளவு ஊக்கம் உற்சாகத்துடன் வந்திருக்கின்றீர்களோ, அவ்வளவே பாப்தாதாவும் எப்பொழுதும் குழந்தைகளை அதே போன்ற ஊக்க உற்சாகத்துடன் திருப்தியான ஆத்மா என்ற ரூபத்தில் பார்க்க விரும்புகின்றார். ஈடுபாடோ இருக்கவே செய்கிறது. ஈடுபாட்டின் அடையாளம் - அவ்வளவு தூரத்திலிருந்து வந்து சேர்ந்து விட்டீர்கள். இரவும் - பகலும் ஈடுபாட்டுடன் நாட்களை எண்ணி - எண்ணி இங்கு வந்து சேர்ந்து விட்டீர்கள். ஈடுபாடு இல்லையெனில் வந்தடைவது கடினமாக இருக்கிறது. ஈடுபாடு இருக்கிறது தேர்ச்சி அடைந்து விட்டீர்கள். பாஸாகி விட்டோம் என்ற சர்ட்டிபிகேட் கிடைத்து விட்டது தானே! ஒவ்வொரு பாடத்திலும் பாஸ். இருந்தாலும் பாப்தாதா குழந்தைகளுக்கு உதவி செய்ய முன்வருகிறார், ஏனெனில் தெரிந்து கொள்ளும் பார்வை கூர்மையாக இருக்கிறது. தொலைவிலிருந்தே பாபாவை தெரிந்து கொண்டீர்கள். கூடவே அதாவது உள் நாட்டில் இருக்கக் கூடியவர்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நீங்கள் தொலைவில் அமர்ந்தவாறே தெரிந்து கொண்டீர்கள். தெரிந்து கொண்டு பாபாவை தன்னுடையவர் ஆக்கினீர்கள் அல்லது பாபாவினுடைவர் ஆனீர்கள்? இதற்காக விசேஷமான ஆஃப்ரின் (உதவி செய்ய முன் வருதல்) கொடுக்கிறார். எனவே எவ்வாறு தெரிந்து கொள்வதில் முன்னால் போய்விட்டீர்களோ, அவ்வாறே மாயாஜீத் ஆவதிலும் நம்பர் ஓன் ஆகி, எப்பொழுதும் பாபாவின் உதவியை பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களாக ஆவீர்கள். பாப்தாதா மாயாவைக் கண்டு பயப்படக் கூடிய எந்தவொரு ஆத்மாவையும் உங்களிடம் அனுப்புவார், அதாவது இந்த குழந்தைகளிடம் சென்று மாயாஜீத் ஆவதற்கான அனுபவத்தை கேளுங்கள் என்று. அவ்வாறு எடுத்துக்காட்டு ஆகிக் காட்டுங்கள். இவ்வாறு மாயாஜீத் குடும்பம் பிரபலமாக ஆக இருக்கிறதோ, அவ்வாறே மாயாஜீத் செண்டரும் பிரபலமாக இருக்கட்டும்! இங்கு மாயை ஒருபொழுதும் போரிடடுவதில்லை என்பது போல செண்டராக இருக்க வேண்டும். வருவது வேறு விஷயம், போரிடுவது வேறு விஷயம். ஆகவே இதிலும் நம்பர் பெறக்கூடியவர்கள் அல்லவா! இதில் நம்பர் ஓன் யார் ஆவார்கள்? லண்டன், ஆஸ்திரேயா ஆகுமா, அல்லது அமெரிக்கா ஆகுமா? பாரிஸ் ஆகுமா, ஜெர்மன் ஆகுமா, பிரேஸில் ஆகுமா, யார் ஆவீர்கள்? யார் வேண்டுமானாலும் ஆகலாம். பாப்தாதா அந்தமாதிரியான சைத்தன்ய மியூசியம் என்று அறிவிப்பார். எவ்வாறு அபுவின் மியூசியத்தை நம்பர் ஒன் என்று சொல்கின்றனர், சேவையிலும், அலங்காரத்திலும் அதேபோன்று மாயாஜீத் குழந்தைகளின் சைதன்ய மியூசியம் இருக்க வேண்டும். துணிவு இருக்கின்றது அல்லவா? அதற்காக இப்பொழுது எவ்வளவு நேரம் வேண்டும்? யார் முதலிலேயே ஏதேனும் செய்து காட்டினீர்கள் என்றால், கோல்டன் ஜுப்லியிலலும் கூட அவர்களுக்கு பரிசு அளிப்போம்.. கடைசியிலிருந்து முதலில் வந்து காட்டுங்கள். பாரத நாட்டினரும் போட்டியிடலாம். ஆனால் நீங்கள் அவர்களைக் காட்டிலும் முன்னால் செல்லுங்கள். பாப்தாதா அனைவருக்கும் முன்னால் செல்ல வாய்ப்பளித்துக் கொண்டிருக்கிறார். 8 மணி மாலையில் வந்துவிடுங்கள். 8 மணி மாலைக்கு தான் பரிசு கிடைக்கும். ஒருவருக்கு மட்டும் தான் கிடைக்கும் என்று அல்ல. லண்டன் மற்றும் ஆஸ்திரேயாவைச் சேர்ந்தவர்களோ பழையவர்கள்,நாங்களோ இப்பொழுது தான் வந்துள்ள புத்தம் புதியவர்களாக இருக்கிறோம் என்று யோசிக்க வேண்டாம். அனைத்தையும் விட சிறிய மற்றும் புதிய சென்டர் எதுவாக இருக்கிறது? அனைத்தையும் விட யார் சிறியவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறும் கூட சிறியவர்களை சொல்கிறார்கள் .- பெரியவர்கள் பெரியவர்கள் தான், ஆனால் சிறியவர்கள் தான் பாபாவிற்கு சமமானவர்கள். அனைவராலும் செய்ய முடியும் தானே! எதுவும் பெரிய விஷயமில்லை. கிரிஸ், டெம்பா, ரோம் போன்றவை சிறிய நாடுகள், இவர்களோ மிகவும் உற்சாகத்தில் இருக்கக் கூடியவர்கள். டெம்பா (ஒரு சிறிய நாடு) என்ன செய்வீர்கள்? டெம்பில் (கோவில்) ஆக்குவீர்களா? அங்கிருந்து ஒரு அழகான (இனிமையான) குழந்தை வந்தது அல்லவா -டெம்பாவை டெம்பிள் (கோவில்) ஆக்குங்கள் என்று அவருக்கு சொல்ல பட்டது. யாரெல்லாம் டெம்பாவிலிருந்து வருகிறார்களோ, ஒவ்வொரு சைதன்ய மூர்த்தியைப் பார்த்து புன்முறுவல் செய்கிறார். சக்திசாலியாக நீங்கள் தயார் ஆகிவிடுங்கள். இராஜாக்களாகிய நீங்கள் தயார் ஆகிவிடுங்கள், பிரஜைகள் உடனடியாக ஆகிவிடுவார்கள். இராயல் குடும்பம் உருவாவதில் நேரம் ஆகிறது, இது இராயலான குடும்பம், இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது, பிறகு பிரஜைகள் அநேகர் வந்துவிடுவார்கள். - நீங்கள் பார்த்து பார்த்து களைப்படையுமளவிற்கு வந்துவிடுவார்கள் சொல்வார்கள் பாபா! போதும், இப்பொழுது நிறுத்துங்கள், ஆனால் முன்னதாகவே இராஜ்ய அதிகாரி சிம்மானசதாரி விட வேண்டுமல்லவா! சிம்மானதாரி, திலகம் அணிந்தவர் ஆகிவிடும் பொழுது பிரஜைகள் கூட, உள்ளேன் ஐயா! என்று சொல்வார்கள். சிம்மாசனதாரி ஆகவில்லையென்றால் இவர் இராஜா என்று பிரஜைகள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள். இராயல் குடும்பம் உருவாக்குவதில் நேரம் தேவைப்படுகிறது. நீங்கள் சரியான நேரத்தில் வந்துவிட்டீர்கள், ஆகையால் இராயல் குடும்பத்தில் வருவதற்கான அதிகாரி ஆகிவிடுவீர்கள். இப்பொழுதிலிருந்தே இராஜ்ய அதிகாரி ஆகக் கூடியவர்களின் அருகாமையில் மற்றும் உதவியாளர் ஆகக் கூடியவர்கள் அங்கு கூட அருகாமையில் மற்றும் இராஜ்யம் செய்யக் கூடியவர்களின் உதவியாளராக இருப்பார்கள். இப்பொழுது சேவையில் உதவியாளர் பிறகு இராஜ்யம் செய்வதில் உதவியாளர். ஆகையால் இப்பொழுதிலிருந்தே சோதனை செய்யுங்கள். இராஜாவாக இருக்கிறீர்களா அல்லது அவ்வப்பொழுது இராஜா, அவ்வப்பொழுது பிரஜை ஆகிவிடுகிறீர்களா? சிலசமயம் அதிகாரி, சிலசமயம் அடிமை. சதா காலத்திற்கு இராஜாவாக இருக்கிறீர்களா? அதனால் எந்தளவு அதிர்ஷ்டசாலியாக இருக்கிறீர்கள்? நாங்கள் பின்னால் தான் வந்தோம் என்று யோசிக்காதீர்கள். கடைசியில் வருபவர்கள் தான் அவ்வாறு யோசிக்க வேண்டி வரும், நீங்கள் தக்க நேரத்தில் வந்தடைந்து விட்டீர்கள், ஆகையால் அதிர்ஷ்டசாலிகள். நாங்களோ பின்னால் தான் வந்தோம், இராஜா ஆக முடியுமா அல்லது முடியாதா? இராயல் குடும்பத்தில் வர முடியுமா அல்லது முடியாதா? என்று யோசனை செய்யாதீர்கள்.. நாங்கள் வரவில்லையென்றால் யார் வருவார்கள் என்று சதா சிந்தனை செய்யுங்கள். வந்தே தீர வேண்டும், இதை செய்ய முடியுமா அல்லது முடியாதா என்று தெரியவில்லை, இது நடைபெறுமா அல்லது. என்ன ஆகும் என்பது அல்ல. நாம் ஒவ்வொரு கல்பமும் செய்தோம், செய்துக் கொண்டிருக்கிறோம் சதா காலத்திற்கும் செய்வோம் என்பது தெரியும். புரிந்ததா?.

 

நாங்கள் அயல் நாட்டவரைச் சேர்ந்தவர்கள், இவர்களோ பாரத தேசத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் இந்தியர், நாமோ வெளிநாட்டவர். நமது கலாச்சாரம் வேறு, இவர்களுடைய கலாச்சாரம் வேறு என்று ஒருபொழுது யோசிக்காதீர்கள் இவர்களையோ அறிமுகத்திற்காக இரட்டை வெளிநாட்டினர் என்று கூறுகிறோம். இங்கு கூட சொல்கிறார்கள் - இவர்கள் கர்னாடகாவைச் சேர்ந்தவர்கள், இவர்கள் .பியை சேர்ந்தவர்கள். மற்றப்படி பிராமணர்கள் தானே! இந்தியனாக இருந்தாலும், அயல்நாட்டினராக இருந்தாலும் அனைவரும் பிராமணர்கள் தான். நாங்கள் அயல் நாட்டைச் சேர்ந்தவர் என்று நினைப்பது கூட தவறு. புது பிறவி எடுக்கவில்லையா என்ன? கடைசி பிறவி தான் அயல் நாடு இல்லையா? புது பிறவியோ பிரம்மாவின் மடியில் அல்லவா? இவை அனைத்தும்  அறிமுகத்திற்காகச் சொல்வது தான். ஆனால் சம்ஸ்காரத்தில் மற்றும் புரிந்துக் கொள்வதில் வேறுபட்டு புரிந்து கொள்ளாதீர்கள். பிரம்மாவின் வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள் அல்லவா? அமெரிக்கா, ஆப்பிரிக்காவின் வம்சத்தைச் சேர்ந்தவர் இல்லை தானே? அனைவருடைய அறிமுகம் என்ன சொல்கிறீர்கள்? சிவ வம்சத்தைச் சேர்ந்த பிரம்மா குமார் மற்றும் குமாரிகள். ஒரே வம்சத்தைச் சேர்ந்தவர் ஆகிவிட்டோம் அல்லவா? ஒரு பொழுதும் பேசுவதில் வித்தியாசப் படுத்தாதீர்கள். இந்தியர்கள் அவ்வாறு செய்கிறார்கள், அயல் நாட்டினர் அவ்வாறு செய்கிறார்கள் என்று அல்ல. நாம் அனைவரும் ஒன்றே! பாபாவும் ஒருவரே! பாதையும் ஒன்றே! பழக்க வழக்கமும் ஒன்றே! சுபாவ-சம்ஸ்காரம் ஒன்றே! பிறகு இந்தியர் என்று அயல் நாட்டினர் என்று வித்தியாசம் எங்கிருந்து வந்தது? தன்னை வெளிநாட்டினர் என்று கூறுவதினால் தூர விலகிச் சென்று விடுவீர்கள். நாம் பிரம்மாவின் வம்சத்தைச் சேர்ந்த பிராமணர்கள். நாங்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், நாங்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் ... இதனால் தான் வித்தியாசம் ஏற்படுகிறது. இல்லை. அனைவரும் ஒரு பாபாவினுடைவர். பல வித விதமான சம்ஸ்காரங்கள் சந்தித்து ஒன்றாகிவிட்டது என்பது விசேஷத் தன்மை.!வெவ்வேறு தர்மம், வெவ்வேறு ஜாதி,வழி அனைத்தும் முடிவடைந்து விட்டது. ஒருவருடையவர் ஆகிவிட்டோம், அதாவது ஒன்றாகி விட்டோம். நல்லது.

 

சதா திருப்தி என்ற விசேஷத் தன்மையுடைய விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா திருப்தியின் மூலம் சேவையில் வெற்றியடையக் கூடிய ஆத்மாக்களுக்கு, சதா இராஜ்ய அதிகாரியிலிருந்து உலக இராஜ்ய அதிகாரியான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா நம்பிக்கையின் மூலம் ஒவ்வொரு காரியத்திலும் முதல் நம்பரில் வரக்கூடிய குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நம்ஸ்தே.

 

வரதானம்:

சாதனங்களை விடுப்பட்ட மற்றும் பற்றற்றரவராகி காரியத்தில் பயன்படுத்தக் கூடிய எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக ஆகுக!

 

எல்லைக்கு அப்பாற்பட்டவராகி என்றாலே எதன் மீதும் பற்றற்றவர், சதா பாபாவிற்கு அன்பானவர். இந்த அன்பான தன்மை தான் விடுபட்டவராக ஆக்குகிறது. பாபாவிற்கு அன்பானவராக இல்லையென்றால், விடுபட்டவராகக் கூட ஆக முடியாது, பந்தனத்தில் வந்து விடுவீர்கள். யார் பாபாவிற்கு அன்பானவராக இருக்கிறார்களோ, அவர்கள் அனைத்து கவர்ச்சியிலிருந்தும் விடுபட்ட அதாவது பற்றவராக இருப்பார்கள். இதற்கு தான் சொல்லப் படுகிறது பற்றற்றத் தன்மை (எதுவும் ஒட்டாத நிலை). எந்தவொரு எல்லைக்குட்ட கவர்ச்சியில் மாட்டிக்கொள்ளக் கூடியவர் அல்ல. படைப்பு மற்றும் சாதனங்களை விடுபட்ட நிலையில் இருந்து காரியத்தில் பயன்படுத்துங்கள். அப்படிப்பட்ட எல்லைக்கு அப்பாற்பட்டவர்தான் இராஜரிஷி.

 

சுலோகன்:

மனதில் உண்மை மற்றும் தூய்மை இருந்தால் பாபாவை திருப்திப் படுத்தியவர் ஆகிவிடுவீர்கள்.

 

ஓம்சாந்தி