02.06.2019                           காலை முரளி                ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           24.12.1984           மதுபன்


 

ஈஸ்வரிய அன்பின் மகத்துவம்

 

இன்று அன்பின் கடல் தன்னுடைய அன்பான சாதகப் பறவை குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். இக் குழந்தைகள் அநேக ஜென்மங்களாக அழியாத ஈஸ்வரிய அன்பின் தாகம் உள்ளவர்களாக இருந்தார்கள். பல ஜென்மங்களின் தாகத்திலிருந்த சாதகப் பறவை ஆத்மாக்களுக்கு இப்பொழுது உண்மையான அன்பு, அழியாத அன்பின் அனுபவம் ஆகிக் கொண்டிருக்கிறது. பக்த ஆத்மாவாக இருக்கும் காரணத்தினால் நீங்கள் அனைத்து குழந்தைகளும் அன்பிற்காக யாசிப்பவர்களாக ஆகிவிட்டீர்கள். இப்பொழுது தந்தை யாசிப்பவரிலிருந்து அன்பின் கடலின் ஆஸ்திக்கு உரியவராக ஆக்கிக் கொண்டிருக்கிறார். அனுபவத்தின் ஆதாரத்தில் அனைவரது இதயத்திலிருந்தும் ஈஸ்வரிய அன்பு எங்களுடைய பிறப்புரிமை என்ற ஓசை தான் இயல்பாகவே வெளிப்படுகிறது. அந்தமாதிரி யாசிப்பவரிலிருந்து அதிகாரி ஆகிவிட்டீர்கள். உலகத்தில் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வாழ்க்கையில் அவசியமான ஒன்று அன்பு தான். வாழ்க்கையில் அன்பு இல்லையென்றால், அந்த வாழ்க்கை ஒரு சாரமற்ற வாழ்க்கையாக அனுபவம் ஆகும். அன்பு அந்தளவு உயர்ந்தது, அதை இன்றைய சாதரண மனிதர்களும் கூட அன்பு தான் தெய்வம் என்று நம்புகிறார்கள். அன்பு தான் பரமாத்மா மற்றும் பரமாத்மா தான் அன்பு என்று நினைக்கிறார்கள். அந்தமாதிரி பகவானை எந்தளவு உயர்ந்தவர் என்று நம்புகிறார்களோ, அந்தளவே அன்பும் உயர்ந்தது என்று நினைக்கிறார்கள். எனவே தான் பகவானை அன்பு என்று கூறுகிறார்கள். இது ஏன் கூறப்படுகிறது, அனுபவம் இல்லை, இருந்தாலும், பரமாத்மா தந்தை எப்பொழுது இந்த பூமியில் வருகிறார் என்றால், அனைத்து குழந்தைகளுக்கும் நடைமுறையில் வாழ்க்கையில் சாகார சொரூபத்தினால் அன்பு கொடுத்தார், கொடுத்துக் கொண்டிருக்கிறார். எனவே தான் அனுபவம் இல்லாவிட்டாலும் கூட, அன்பு தான் பரமாத்மா (ஏர்க் ண்ள் கர்ஸ்ங்) என்று நினைக்கிறார்கள். எனவே பரமாத்மா தந்தையின் முதலில் கொடுப்பினை அன்பு. அன்பு உங்கள் அனைவருக்கும் பிராமண ஜென்மம் கொடுத்தது. அன்பின் வளர்ப்பு உங்கள் அனைவரையும் ஈஸ்வரிய சேவைக்குத் தகுதியானவர் ஆக்கியது. அன்பு, உங்களை சகஜ யோகி, கர்ம யோகி, இயல்பான யோகியாக ஆக்கியது. அன்பு எல்லைக்குட்பட்ட தியாகத்தை பாக்கியம் என்று அனுபவம் செய்வித்தது. தியாகம் இல்லை, ஆனால் பாக்கியம் என்ற இந்த அனுபவத்தை உண்மையான அன்பு செய்வித்தது தான் இல்லையா? இதே அன்பின் ஆதாரத்தில் எந்தவிதமான புயலையும் ஈஸ்வரிய பரிசு என்று அனுபவம் செய்கிறீர்கள். அன்பின் ஆதாரத்தில் கடினத்தை மிக சுலபம் என்று அனுபவம் செய்கிறீர்கள். இதே ஈஸ்வரிய அன்பு அநேக சம்பந்தங்களில் ஈடுபட்டிருக்கும் இதயத்தை, அநேக தூண்டுகளாக ஆக்கப்பட்ட இதயத்தை ஒருவருரோடு இணைத்து விட்டது. இப்பொழுது ஒரு இதயம் (தில்) ஒரு திலாராம். இதயம் துண்டு படவில்லை. அன்பு தந்தைக்குச் சமமானவராக ஆக்கிவிட்டது. அன்பு தான் எப்பொழுதும் துணையை அனுபவம் செய்வித்து, எப்பொழுதும் சக்திசாலியானவராக ஆக்கிவிட்டது. அன்பு யுகத்தை பரிவர்த்தனை (மாற்றம்) செய்துவிட்டது. கலியுகவாசியிலிருந்து சங்கமயுகவாசியாக ஆக்கிவிட்டது. அன்பு தான் துக்கம் வேதனையின் உலகத்திலிருந்து சுகத்தின் குஷியின் உலகத்தில் பரிவர்த்தனை செய்துவிட்டது. ஈஸ்வரிய அன்பிற்கு இந்தளவு மகத்துவம் இருக்கிறது. யார் மகத்துவத்தை தெரிந்திருக்கிறாரோ, அவர் தான் மகான் ஆகிவிடுகிறார். நீங்கள் அந்தமாதிரியான மகான் ஆக ஆகியிருக்கிறீர்கள் இல்லையா? அனைத்தையும் விட சுலபமான முயற்சியும் இது தான். அன்பில் எப்பொழுதும் மூழ்கியிருங்கள். அன்பில் ஐக்கியமாகியிருக்கும் ஆத்மாக்களுக்கு ஒரு பொழுதும் கனவில் கூட மாயாவின் பிரபாவம் ஏற்பட முடியாது. ஏனென்றால், அன்பில் ஐக்கியமாகியிருக்கும் நிலை மாயாவால் தாக்க முடியாத நிலையாகும். அன்பில் இருப்பது சுலபம் தான் இல்லையா. அன்பு அனைவரையும் மதுபன் நிவாசி ஆக்கிவிட்டது. அன்பின் காரணமாகத் தான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள் இல்லையா. பாப்தாதாவும் அனைத்து குழந்தைகளுக்கும் எப்பொழுதும் அன்பானவர் ஆகுக என்ற வரதானம் கொடுக்கிறார். அன்பு அந்தமாதிரி மந்திர சக்தி நிறைந்தது. அதனால் யாரிடமிருந்து என்ன கேட்டாலும், அதை பிராப்தி செய்ய முடியும். உண்மையான அன்பு மூலம், உள்ளபூர்வமான அன்பு மூலம், சுயநலமான அன்பினால் இல்லை, உண்மையான அன்பினால் அடைய முடியும். தேவையான நேரத்தில் அன்பானவராக ஆகுபவர் இல்லை. எப்பொழுது ஏதாவது தேவையான நேரம் வருகிறதென்றால், அந்த நேரம் மட்டும் இனிமையான பாபா, அன்பான பாபா என்று கூறி நடந்து கொள்பவர் இல்லை. எப்பொழுதுமே இந்த அன்பில் மூழ்கியிருக்க வேண்டும். அம்மாதிரியானவர்களுக்கு பாப்தாதா எப்பொழுதும் பாதுகாப்பு குடைநிழலாக இருக்கிறார். தேவையான நேரத்தில் நினைவு செய்பவர்கள் மற்றும் ஏதோவொரு காரணத்திற்காக, சுயநலமாக நினைவு செய்பவர்களுக்கு, அவர்களுடைய சக்திகேற்றபடி, அன்பிற்கு கேற்றபடி, பிரதிபலனாக சகயோகம் கிடைக்கிறது. ஆனால் சக்திகேற்றபடி தானே அன்றி, சம்பன்ன, சம்பூர்ண வெற்றி கிடைப்பதில்லை. எனவே எப்பொழுதும் அன்பின் மூலமாக அனைத்து பிராப்தி சொரூபத்தை அனுபவம் செய்வதற்காக உண்மையான உள்ளத்தின் அன்புடையவராக ஆகுங்கள். புரிந்ததா?

 

பாப்தாதா மதுபன் வீட்டின் அலங்காரமாக இருக்கும் குழந்தைகளுக்கு விசேஷமாக அன்பிற்காக வாழ்த்துக்கள் கூறுகிறார். ஒவ்வொரு குழந்தையும் தந்தையின் வீட்டின் விசேஷ அலங்காரம். இந்த எல்லைக்கு அப்பாற்பட்ட மதுபன் வீட்டின் கலகலப்பே குழந்தைகள் தான். அந்தமாதிரி தன்னை நினைக்கிறீர்கள் தான் இல்லையா? உலகத்தினரோ கிறிஸ்துமஸை கொண்டாடுவதற்காக எங்கெங்கோ செல்வார்கள். மேலும் இந்த விசேஷ வெளிநாட்டினர் மற்றும் பாரதத்தின் குழந்தைகள் இனிமையான வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்கள். முக்கியமான பெரிய பண்டிகை நாளை, பெரியதிலும் பெரிய தந்தையோடு, பெரிய மனதோடு கொண்டாடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள்.

 

இந்த முக்கியமான பண்டிகை நாள் விசேஷமாக தந்தை மற்றும் பிரம்மா பாபா அதாவது பாப்தாதா இருவர்களின் நினைவுச் சின்ன அடையாளமான நாள். ஒன்று கொடுப்பவர் ரூபத்தினால் சிவபாபாவின் அடையாளம் மற்றும் வயதான சொரூபம் பிரம்மா பாபாவின் அடையாளம். ஒருபொழுதும் இளமையான ரூபத்தில் காண்பிக்க மாட்டார்கள். கிறிஸ்துமஸ் தந்தையை வயதானவராகத் தான் காண்பிப்பார்கள். வெள்ளை மற்றும் சிகப்பு இந்த வர்ணங்களையும் அவசியம் காண்பிப்பார்கள். அப்படி இது தந்தை மற்றும் தாதா இருவரின் அடையாளம். பாப்தாதா சின்ன குழந்தைகளுக்கு அவர்களுடைய விருப்பமாக என்ன இருக்கிறதோ, அதை நிறைவேற்றி விடுகிறார். சின்ன சின்னக் குழந்தைகள் மிகவும் அன்புடன் இந்த விசேஷ நாளன்று தன்னுடைய மன விருப்பமான பொருட்களை கிறிஸ்துமஸ் தந்தையிடம் கேட்பார்கள் மற்றும் எண்ணத்தை வைப்பார்கள். மேலும் அவர் என்னுடைய விருப்பத்தை அவசியம் நிறைவேற்றுவார் என்ற நிச்சயம் வைப்பார்கள். இந்த நினைவுச் சின்னம் குழந்தைகளாகிய உங்களுடையது தான். பழைய சூத்ர வாழ்க்கையில் எவ்வளவு தான் வயதானவராக இருந்தாலும், ஆனால் பிராமண வாழ்க்கையில் சின்னக் குழந்தைகள் தான். அந்தமாதிரி அனைத்து சின்னக் குழந்தைகளும் என்னென்ன சிரேஷ்ட மனவிருப்பங்கள் வைக்கிறீர்களோ, அது நிறைவேறுகிறது தான் இல்லையா? எனவே இந்த நினைவின் அடையாளம் கடைசி தர்மத்தை சேர்ந்தவர்களிலும் நடைமுறையில் வந்துக் கொண்டிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் இந்த சங்கமயுகத்தில் முக்கியமான பண்டிகை நாளின் மிகுந்த பரிசுகள் பாப்தாதாவிடமிருந்து கிடைத்து விட்டது தான் இல்லையா? விசேஷமாக இந்த பண்டிகை நாள் பரிசுகள் கொடுப்பதற்கும் பெறுவதற்குமான நாளாகும். பாப்தாதா மிகப் பெரிய பரிசாக சுய இராஜ்யம் மற்றும் சொர்க்கத்தின் இராஜ்யத்தைக் கொடுக்கிறார். அந்த இராஜ்யத்தில் இல்லை என்ற எந்த பொருளும் இருக்காது. நீங்கள் அனைத்து பிராப்தி சொரூபமானவராக ஆகிவிடுகிறீர்கள். அந்த மாதிரி நீங்கள் பெரிய நாளை கொண்டாட கூடிய, பெரிய மனம் உடையவர்கள். உலகிற்கு கொடுப்பவர்களோ, பெரிய மனமுடையவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? எனவே அனைவருக்கும் சங்கமயுகத்தின் பெரிய பண்டிகை நாளின் வாழ்த்துக்களை, பெரிய மனதோடு. பெரியதிலும் பெரிய பாப்தாதா உங்களுக்கு கொடுக்கிறார். அவர்களோ 12 மணிக்கு பிறகு கொண்டாடுவார்கள். நீங்கள் அனைவரையும் விட முன்னுக்கு இருக்கிறீர்கள் இல்லையா? எனவே முதலில் நீங்கள் கொண்டாடுகிறீர்கள், பிறகு உலகத்தினர் கொண்டாடுவார்கள். விசேஷ ரூபத்தில் இரட்டை வெளிநாட்டினர் இன்று மிகுந்த ஊக்கம், உற்சாகத்துடன் தந்தைக்காக நினைவு மற்றும் பரிசுகளை ஸ்தூலமாக மற்றும் சூட்சம ரூபத்தில் கொடுக்கிறார்கள். பாப்தாதாவும் அனைத்து இரட்டை வெளிநாட்டு குழந்தைகளுக்கு அன்பின் பரிசுக்கு பிரதிபலனாக பல மடங்கு எப்பொழுதுமே அன்பான துணைவனாக இருப்போம், எப்பொழுதும் அன்புக் கடலில் முழ்கியிருந்து, அன்பில் ஐக்கியமான நிலையை அனுபவம் செய்வீர்கள் என்று அந்த வரதானம் நிரம்பிய நினைவு மற்றும் அழியாத அன்பின் பலனாக பரிசுக் கொடுக்கிறார். எப்பொழுதும் பாடிக்கொண்டும் குஷியில் ஆடிக்கொண்டும் இருங்கள். எப்பொழுதும் வாய் இனிமையாகவே இருக்கும். அந்த மாதிரியே பாரதத்தின் அன்பான குழந்தைகளுக்கும் விசேஷமாக சகஜயோகி, இயல்பான யோகியின் வரதானத்தின் அன்பு நினைவுகளைக் கொடுக்கிறார்.

 

அனைத்து குழந்தைகளுக்கு வள்ளல் மற்றும் உருவாக்குபவர் பாப்தாதா அழியாத அன்பு நிரம்பிய எப்பொழுதும் சக்தி சொரூபத்தினால் சகஜமான அனுபவம் செய்வதின் அன்பு நினைவுகள் கொடுக்கிறார். அனைவருக்கும் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

பார்டிகளுடன் சந்திப்பு:

எப்பொழுதும் தன்னை இந்த பழைய உலகத்தின் கவர்ச்சியிலிருந்து விடுபட்ட மற்றும் தந்தையின் அன்பிற்குரியவர் என்று அனுபவம் செய்கிறீர்களா? எந்தளவு விலகியவராக இருப்பீர்களோ, அந்தளவு இயல்பாகவே அன்பிற்குரியவராக இருப்பீர்கள். விலகியிருக்க வில்லையென்றால், அன்பிற்குரியவராகவும் இல்லை, அந்தமாதிரி நீங்கள் விலகியிருந்து அன்பிற்குரியவராக இருக்கிறீர்களா அல்லது எங்காவது பற்றுதல் இருக்கிறதா? எப்பொழுது யார் மீதும் பற்றுதல் இல்லையென்றால், புத்தி இயல்பாகவே தந்தையின் பக்கம் செல்லும். வேறு இடங்களுக்கு செல்ல முடியாது. சகஜ மற்றும் நிரந்தர யோகியின் நிலை அனுபவமாகும். இப்பொழுது சகஜயோகியாக ஆகவில்லையென்றால், பின்பு எப்பொழுது ஆவீர்கள்? இந்தளவு சகஜ பிராப்தி இருக்கிறது, சத்யுகத்தில் கூட இப்பொழுதைய பிராப்தியின் பலன் தான் இருக்கும், எனவே இபொழுதைய சகஜயோகி மேலும் நிரந்தர இராஜ்ய பாக்கியத்தின் அதிகாரி சகஜயோகி குழந்தைகள், எப்பொழுதும் தந்தைக்குச் சமமாக அருகில் இருப்பவர்கள். தன்னை தந்தையின் அருகில் உடன் இருப்பவராக அனுபவம் செய்கிறீர்களா? யார் உடன் இருக்கிறாரோ, அவருக்கு தந்தையின் ஆதரவு இருக்கிறது. உடன் இருக்கவில்லையென்றால் ஆதரவும் கிடைப்பதில்லை. எப்பொழுது தந்தையின் ஆதரவு கிடைத்து விட்டது என்றால், எந்தவொரு தடையும் வரமுடியாது. எங்கு சர்வசக்திவான் தந்தையின் ஆதரவு இருக்கிறதென்றால், மாயா அதுவாகவே விலகிச் சென்றுவிடும். சக்தியுள்ளவர் எதிரில் பலமற்றவரால் என்ன செய்ய முடியும்? விலகிச் சென்று விடுவார் அல்லவா. அதே போல் மாயாவும் எதிர்நோக்காமல் விலகிச் சென்றுவிடும். அந்தமாதிரி நீங்கள் அனைவரும் மாயாவை வென்றவர்களா? விதவிதமான முறையில் புதுப்புது ரூபத்தில் மாயா வருகிறது, ஆனால் ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் மாயாவிடம் பயப்படுவதில்லை. அவர் மாயாவின் அனைத்து ரூபங்களையும் தெரிந்து கொள்வார், மேலும் தெரிந்த பிறகு விலகிவிடுவார். இப்பொழுது மாயாவை வென்றவர் ஆகிவிட்டீர்கள் என்றால், ஒருபொழுதும் யாரும் அசைக்க முடியாது. யார் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் நீங்கள் அசையாதீர்கள்.

 

அமிர்தவேளையிலிருந்து இரவு வரை தந்தை மற்றும் சேவையைத் தவிர வேறு எந்த ஆர்வமும் இருக்க வேண்டாம். தந்தை கிடைத்தார், மேலும் நீங்கள் சேவாதாரி ஆனீர்கள். ஏனென்றால் என்ன கிடைத்திருக்கிறதோ, அதை எந்தளவு மற்றவர்களுக்கு வழங்குவீர்களோ, அந்தளவு அதிகரிக்கும். ஒன்றை கொடுங்கள் மற்றும் பல மடங்கைப் பெறுங்கள். நான் அனைத்து களஞ்சியங்களின் அதிபதி, களஞ்சியங்கள் நிரம்பியிருக்கின்றன என்ற இதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள். யாரை முழு உலகமே தேடிக் கொண்டிருக்கிறதோ, அவருடைய குழந்தையாக நீங்கள் ஆகியிருக்கிறீர்கள். துக்கமான உலகத்திலிருந்து விடுபட்டு, சுகமான உலகத்திற்கு வந்து சேர்ந்து விட்டீர்கள். எனவே எப்பொழுதும் சுகக் கடலில் நீந்திக் கொண்டே அனைவரையும் சுகத்தின் களஞ்சியங்களினால் நிரப்புங்கள். நல்லது.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்யக்த மகா வாக்கியம்

பிராமண வாழ்க்கையில் பண்பு என்ற கலாச்சாரத்தை கடைப்பிடியுங்கள். பிராமண குடும்பத்தின் முதல் நம்பர் கலாச்சாரம் பண்பு. எனவே ஒவ்வொருவரின் முகம் நடத்தையில் இந்த பிராமண கலாச்சாரம் வெளிப்பட வேண்டும். ஒவ்வொரு பிராமணனும் புன்முறுவல் செய்து கொண்டே ஒவ்வொருவரின் தொடர்பில் வரவேண்டும். யார் எப்படிப்பட்டவராக இருந்தாலும் நீங்கள் உங்களுடைய இந்த கலாச்சாரத்தை ஒருபொழுதும் விடாதீர்கள். இப்பொழுது உங்களுடைய வாழ்க்கையில் புதிய பண்பின் சம்ஸ்காரத்தைக் காண்பியுங்கள். குறைவாகப் பேசுங்கள். மெதுவாகப் பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள். ஒருவேளை விரும்பாவிட்டாலும் எப்பொழுதாவது கோபம் அல்லது சிடுசிடுப்பு வருகிறதென்றால், உள்ளப்பூர்வமாக இனிமையான பாபா என்று கூறுங்கள். பிறகு அதிகப்படியான உதவி கிடைத்து விடும். மனதிலிருந்து நல்ல பாவனை மற்றும் அன்பு நிறைந்த பாவனையை வெளிப்படுத்தினீர்கள் என்றால், மிகப் பெரிய எதிரியான கோபத்தை வெற்றியடைந்து விடுவீர்கள்.

 

சில குழந்தைகள் இன்றைய நாட்களில் ஒரு விசேஷ சொற்களை உபயோகிக்கிறார்கள். என்னால் அசத்தியத்தை பார்க்க முடியாது. அசத்தியத்தை கேட்க முடியாது எனவே அசத்தியத்தைப் பார்த்து பொய்யை கேட்டு மனதில் ஆவேசம் வருகிறது. ஆனால் ஒருவேளை அவர் அசத்தியமாக இருக்கிறார், மேலும் உங்களுக்கு அசத்தியத்தைப் பார்த்து ஆவேசம் வருகிறது என்றால், அந்த ஆவேசமும் அசத்தியம் தான் இல்லையா? அசத்தியத்தை அழிப்பதற்காக தனக்குள் சத்தியத்தின் சக்தியை தாரணை செய்யுங்கள். சத்தியத்தின் அடையாளம் பண்பு. ஒருவேளை நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள், சத்தியத்தின் சக்தி உங்களிடம் இருக்கிறதென்றால் பண்பை ஒருபொழுதும் விடாதீர்கள். சத்தியத்தை நிரூபியுங்கள், ஆனால் பண்பு நிறைந்து நிரூபியுங்கள். பண்பை விட்டு விட்டு பண்பற்ற நிலையில் வந்து, சத்தியத்தை நிரூபிக்க விரும்பினீர்கள் என்றால், அந்த சத்தியம் நிரூபணம் ஆகாது, பண்பற்ற நிலையின் அடையாளம் பிடிவாதம். மேலும் பண்பின் அடையாளம் பணிவு. சத்தியத்தை நிரூப்பிப்பவர் எப்பொழுதும் அவர் பணிவானவர் ஆகி பண்பு நிறைந்து விவகாரம் செய்வார். ஆவேசத்தில் வந்து யாராவது சத்தியத்தை நிரூப்பிக்கிறார் என்றால், அதில் அவசியம் ஏதாவது அசத்தியம் நிரம்பியிருக்கிறது. நான் முற்றிலும் உண்மை பேசுகிறேன். 100% சத்தியம் பேசுகிறேன் என்பது அநேக குழந்தைகளின் மொழி ஆகிவிட்டது. ஆனால் சத்தியத்தை நிரூபிப்பதற்கு அவசியம் இல்லை. சத்தியம் அந்த மாதிரியான சூரியன், அது மறைந்து இருக்க முடியாது. எவ்வளவு தான் சுவர்களை யாராவது எதிரில் எழுப்பினாலும், சத்தியத்தின் பிரகாசம் ஒருபொழுதும் மறைந்திருக்க முடியாது. பண்புகள் நிறைந்த வார்த்தை, பண்புகள் நிறைந்த நடத்தை இதில் தான் வெற்றி இருக்கிறது.

 

எப்பொழுதெல்லாம் ஏதாவது அசத்திய விசயத்தை பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்றால் அசத்திய வாயுமண்டலத்தை பரப்பாதீர்கள். சிலர் இது பாவக் காரியம் தான் இல்லையா, என்னால் பாவக் காரியத்தைப் பார்க்க முடியாது என்று கூறுகிறார்கள், ஆனால் வாயுமண்டலத்தில் அசத்தியத்தின் விஷயங்களை பரப்புவதும் பாவம் தான். உலகிய குடும்பத்தில் கூட ஒருவேளை ஏதாவது அந்தமாதிரியான விஷயத்தை பார்க்கிறார்கள் அல்லது கேட்கிறார்கள் என்றால், அதைப் பரப்ப மாட்டார்கள். காதால் கேட்டார்கள் மற்றும் இதயத்தில் மறைத்து வைத்து விட்டார்கள். ஒருவேளை ஏதாவது வீணான விஷயங்களைப் பரப்புகிறீர்கள் என்றாலும், அதுவும் பாவத்தின் அம்சமாகும். அந்தமாதிரி சின்ன சின்ன பாவங்கள் பறக்கும் கலையின் அனுபவத்தை முடித்து விடுகிறது. எனவே இந்த கர்மங்களின் ஆழமான விளைவுகளைப் புரிந்து கொண்டு, பண்பு நிறைந்த விவகாரம் செய்யுங்கள். பிராமண குழந்தைகள் நீங்கள் மிக மிக இராயலானவர்கள். உங்களுடைய முகம் மற்றும் நடத்தை இரண்டுமே சத்தியத்தின் பண்பை அனுபவம் செய்விக்க வேண்டும். பொதுவாகவே இராயல் ஆத்மாக்களை பண்பின் தேவி என்று கூறுவார்கள். அவர்கள் பார்ப்பது, பேசுவது, நடப்பது, உணவருந்துவது, அமர்வது, எழுவது அந்தமாதிரி ஒவ்வொரு காரியத்திலும் பண்பின் சத்திய நிலை இயல்பாகவே தென்படும். நானோ சத்தியத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறேன், மேலும் பண்பே இல்லை என்று அந்தமாதிரி இருக்கக் கூடாது. இது சரியானது அல்ல. சில குழந்தைகள் எனக்கு பொதுவாக கோபம் வருவதில்லை, ஆனால் யாராவது பொய் சொல்கிறார்கள் என்றால், கோபம் வந்து விடுகிறது என்று கூறுகிறார்கள். அவர் பொய் சொன்னார், நீங்கள் கோபத்துடன் பேசினீர்கள் என்றால், உங்கள் இருவரில் யார் செய்வது சரி? சிலர் சாதுர்யமாக நான் கோபப்படுவதில்லை, நான் பேசுவதே சப்தமாக இருக்கிறது. ஆனால் எப்பொழுது அறிவியலின் சாதனங்கள் மூலம் சப்தத்தை குறைக்க முடியும் என்றால், அமைதியின் சக்தி மூலம் உங்களுடைய பேச்சின் சப்தத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியாதா என்ன? எப்படி கோபம் அஞ்ஞானத்தின் சக்தியோ, அதே போன்று ஞானத்தின் சக்தி சாந்தி மற்றும் சகித்துக் கொள்ளும் சக்தி. அஞ்ஞானத்தின் சக்தியான கோபத்தை மிக நல்ல முறையில் சம்ஸ்காரமாக ஆக்கிவிட்டீர்கள். மேலும் உபயோகித்துக் கொண்டு இருக்கிறீர்கள், பிறகு மன்னிப்பும் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். அந்தமாதிரி இப்பொழுது ஒவ்வொரு குணத்தை ஒவ்வொரு ஞானத்தின் விஷயத்தை சம்ஸ்கார ரூபத்தில் கொண்டு வாருங்கள். பிறகு பண்பு வந்து கொண்டேயிருக்கும்.

 

சிலர் அனேகமாக கோபம் ஒரு விகாரமில்லை, அது ஆயுதம் என்று நினைக்கிறார்கள். ஆனால் கோபம் ஞான சொரூப ஆத்மாவிற்காக மிகப் பெரிய எதிரி, ஏனென்றால், கோபம் அநேக ஆத்மாக்களின் சம்மந்தம், தொடர்பில் வருவதினால் பிரசித்தி ஆகிவிடுகிறது. மேலும் கோபத்தைப் பார்த்து. தந்தையின் பெயருக்கு மிகுந்த இழுக்கு ஏற்படுகிறது. சொல்பவர்கள் ஞான ஆத்மாக்களைப் பார்த்து விட்டோம் என்று தான் கூறுவார்கள். எனவே இதன் அம்சம் மாத்திரத்தையும் அழித்து விடுங்கள். பண்புகள் நிறைந்த விவகாரம் செய்யுங்கள்.

 

வரதானம்:

நேரடியாக பரமாத்மா மின்சார விளக்கின் இணைப்பு மூலமாக இருளை விரட்டக் கூடிய கலங்கரை விளக்கு ஆகுக!

 

குழந்தைகளாகிய உங்களிடம் நேரடியாக பரமாத்ம மின்சார விளக்கின் இணைப்பு இருக்கிறது. சுயமரியாதையின் நினைவு என்ற பொத்தானை நேரடி இணைப்போடு இயக்கி விட்டீர்கள் என்றால், மின்சாரம் வந்து விடும். மேலும் எவ்வளவு தான் சூரியனின் வெளிச்சத்தை மறைக்கக் கூடிய கருமேகமாக இருந்தாலும். அதுவும் ஓடிவிடும். இதன் மூலம் நீங்களோ, வெளிச்சத்தில் இருப்பீர்கள், ஆனால் மற்றவர்களுக்காகவும் கலங்கரை விளக்கு ஆகிவிடுவீர்கள்.

 

சுலோகன்:

சுய முயற்சியில் மிக வேகமாக செல்பவராக ஆனீர்கள் என்றால், உங்களுடைய வைப்ரேஷன் (அதிர்வலைகள்) மூலம் மற்றவர்களின் மாயா சுலபமாக ஓடிவிடும்.

 

ஓம்சாந்தி