25.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! மாயாவை வசப்படுத்துவதற்கான மந்திரம் மன்மனாபவ. இந்த மந்திரத்தில் தான் அனைத்து சிறப்புகளும் நிறைந்துள்ளன. இதே மந்திரம் உங்களைப் தூய்மை ஆக்கிவிடுகின்றது.

 

கேள்வி:

ஆத்மாவின் பாதுகாப்பிற்கான நம்பர் ஒன் சாதனம் எது? எப்படி?

 

பதில்:

நினைவு யாத்திரை தான் பாதுகாப்பிற்கான நம்பர் ஒன் சாதனமாகும். ஏனென்றால் இந்த நினைவினால் தான் உங்களுடைய கேரக்டர் (நடத்தை) திருந்தும். நீங்கள் மாயா மீது வெற்றி கொண்டு விடுகிறீர்கள். நினைவினால் தூய்மையில்லா கர்மேந்திரியங்கள் சாந்தமாகி விடுகின்றன. நினைவில் தான் சக்தி கிடைக்கிறது. ஞான வாளில் தூய்மையின் கூர்மை தேவை. நினைவினால் தான் இனிய சதோபிரதானம் ஆவீர்கள். யாரிடமும் கோபப்பட மாட்டீர்கள். அதனால் நினைவு யாத்திரையில் பலவீனமாக ஆகிவிடக் கூடாது. நாம் எதுவரை நினைவில் இருக்கிறோம்? என்று தன்னைத் தான் கேட்க வேண்டும்

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு தினந்தோறும் எச்சரிக்கை அவசியம் கொடுக்க வேண்டியுள்ளது. என்ன எச்சரிக்கை? பாதுகாப்பு முதலில். பாதுகாப்பு என்பது எது? நினைவு யாத்திரை மூலம் நீங்கள் மிகமிகப் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். முக்கியமான விஷயமே குழந்தைகளுக்காக இது தான். பாபா புரிய வைத்துள்ளார் - குழந்தைகள் நீங்கள் எவ்வளவு நினைவு யாத்திரையில் ஈடுபட்டிருக்கிறீர்களோ, அவ்வளவு குஷியும் இருக்கும். மேலும் (மேனர்ஸ்) நடவடிக்கைகள் கூட சரியாகிவிடும். ஏனென்றால் தூய்மையாகவும் ஆக வேண்டும். நடத்தைகளும் திருந்த வேண்டும். தன்னைத் தான் சோதிக்க வேண்டும் - எனது கேரக்டர் (நடத்தை) யாருக்கும் துக்கம் கொடுப்பதாக இல்லையே? எனக்கு எந்த ஒரு தேக அபிமானமும் வந்து விடவில்லையே? இதில் நல்லபடியாகத் தன்னை சோதிக்க வேண்டும். பாபா அமர்ந்து குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறார். குழந்தைகள் நீங்கள் படிக்கவும் செய்கிறீர்கள் என்றால் பிறகு படிப்பு சொல்லித் தரவும் செய்கிறீர்கள். எல்லையற்ற தந்தை படிப்பு சொல்லித் தருகிறார், அவ்வளவு தான். மற்ற அனைவருமே தேகதாரிகள். இதில் முழு உலகமும் வந்துவிடுகின்றது. ஒரு பாபா தான் விதேகி (சரீர மற்றவர்). அவர் குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்கிறார், நீங்களும் கூட விதேகி ஆக வேண்டும். நான் வந்திருப்பது உங்களை விதேகி ஆக்குவதற்காக. தூய்மை ஆனால் தான் அங்கே செல்வீர்கள். அசுத்தமானவர்களை அங்கே அழைத்துச் செல்ல மாட்டேன். அதனால் முதல்-முதலில் மந்திரமே இதைத் தான் தருகிறேன். மாயாவை வசப்படுத்துவதற்கானது இந்த மந்திரம். தூய்மை அடைவதற்கானது இந்த மன்மனாபவ மந்திரம். இந்த மந்திரத்தில் அதிகமான சிறப்புகள் நிரம்பியுள்ளன. இதன் மூலம் தான் தூய்மை ஆக வேண்டும். மனிதரிலிருந்து தேவதையாக வேண்டும். நிச்சயமாக நாம் தான் தேவதையாக இருந்தோம். தனக்கான பாதுகாப்பினை விரும்பினாலும் சரி, அல்லது உறுதி நிறைந்த மகாவீர் ஆக விரும்பினாலும் சரி, இந்தப் புருஷார்த்தம் செய்யுங்கள். பாபாவோ அறிவுரை தந்துக் கொண்டே இருப்பார். டிராமா என்று சொல்லிக் கொண்டும் இருப்பார். டிராமாவின் அனுசாரம் அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. பிறகு வருங்காலத்திற்காகவும் சொல்லிப் புரிய வைத்துக் கொண்டே இருப்பார். நினைவு யாத்திரையில் பலவீனமாக ஆகக் கூடாது. வெளியில் உள்ள, பந்தனத்திலிருக்கும் கோபிகைகள் எவ்வளவு நினைவு செய்கின்றனர்! அந்த அளவுக்கு முன்னிலையில் இருப்பவர்கள் நினைவு செய்வதில்லை. அவர்கள் உயர்ந்த பதவி பெற முடியும். நல்ல-நல்ல, பெரிய-பெரிய சென்டர்களைப் பராமரிக்கக் கூடிய முக்கியமானவர்களும் கூட நினைவு யாத்திரையில் பலவீனமாக உள்ளனர் என்பதை பார்க்கப் படுகின்றது. நினைவின் கூர்மை மிக நன்றாக இருக்க வேண்டும். ஞானம் என்ற வாளில் நினைவின் கூர்மை இல்லாத காரணத்தால் யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. முழுமையாக வாழ்ந்து கொண்டே இறப்பதில்லை. குழந்தைகள் முயற்சி செய்கின்றனர், ஞான பாணத்தை எய்தி பாபாவுடையவர்களாக ஆக்க வேண்டும் அல்லது மறுபிறவி எடுத்தவர்களாக ஆக்க வேண்டும். ஆனால் இறப்பதில்லை. அதனால் நிச்சயமாக ஞானம் என்ற வாளில் குறைபாடு உள்ளது. பாபா அறிந்திருக்கலாம் - டிராமா முற்றிலும் சரியாகவே நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இனி வரும் காலத்துக்காகவோ புரிய வைத்துக் கொண்டே இருப்பார் இல்லையா? ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளுங்கள் - நாம் எதுவரை நினைவு செய்கிறோம்? நினைவினால் தான் பலம் வரும். அதனால் சொல்லப்படுகிறது - ஞானம் என்ற வாளில் கூர்மை வேண்டும். ஞானத்தையோ மிகவும் சகஜமாகப் புரிய வைக்க முடியும்.

 

எவ்வளவுக்கெவ்வளவு நினைவில் இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிக இனிமையானவர்களாக ஆகிக் கொண்டே போவீர்கள். நீங்கள் சதோபிரதானமாக இருந்த போது இனிமையானவர்களாக இருந்தீர்கள். இப்போது மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும். உங்கள் சுபாவமும் மிக இனிமையானதாக இருக்க வேண்டும். ஒருபோதும் கோபப்படக் கூடாது. கோபப்படுகிற மாதிரி சூழ்நிலை இருக்கக் கூடாது. அதுபோல் முயற்சி செய்ய வேண்டும், ஏனென்றால் இந்த ஈஸ்வரியக் கல்லூரி ஸ்தாபனை செய்வதற்கான சேவை மிகவும் உயர்ந்தது. விஷ்வ வித்யாலயங்களோ பாரதத்தில் அதிகமாகப் பாடப்படுகின்றன. உண்மையில் அப்படியல்ல. ஒரே ஒரு விஷ்வ வித்யாலயம் தான் உள்ளது. தந்தை வந்து அனைவருக்கும் முக்தி-ஜீவன் முக்தி அளிக்கின்றார். பாபாவுக்குத் தெரியும், உலகம் முழுவதிலும் உள்ள மனிதர்கள் அனைவருமே அழிந்துப் போவார்கள். பாபாவை அழைத்ததும் இதற்காகத் தான் - அதாவது இந்த அசுத்த உலகத்தின் அழிவு மற்றும் புது உலகத்தின் ஸ்தாபனை செய்யுங்கள் என்பதற்கு. குழந்தைகளும் புரிந்து கொண்டிருக்கிறார்கள், நிச்சயமாக பாபா வந்து விட்டார். இப்போது மாயாவின் பகட்டு எவ்வளவு உள்ளது! பாம்பியாவின் வீழ்ச்சி பற்றிய விளையாட்டையும் காட்டு கின்றனர். பெரிய-பெரிய கட்டடங்கள் முதலியவற்றை க் கட்டிக் கொண்டுள்ளனர் - இது தான் பகட்டு. சத்யுகத்தில் இத்தனை மாடிகள் உள்ள வீடுகளைக் கட்ட மாட்டார்கள். இங்கே கட்டப்படுகின்றன. ஏனென்றால் வசிப்பதற்கான இடம் குறைவு. விநாசமாகும் போது பெரிய-பெரிய கட்டடங்கள் அனைத்தும் விழுந்துவிடும். முன்பெல்லாம் இவ்வளவு பெரிய-பெரிய கட்டடங்கள் உருவானதில்லை. வெடிகுண்டுகளைப் போடும்போது சீட்டுக்கட்டைப் போல் சரிந்து விழுந்து விடும். இதனுடைய அர்த்தம், அவர்கள் மட்டும் இறந்து போவார்கள், மற்றவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்பது கிடையாது. யார் எங்கே இருக்கிறார்களோ, சமுத்திரத்தில் இருந்தாலும் நிலத்தில் இருந்தாலும் ஆகாயத்தில் இருந்தாலும் மலைகள் மீது இருந்தாலும் பறந்து கொண்டிருந்தாலும்....... அனைவரும் அழிந்து போவார்கள். இது பழைய உலகம் இல்லையா? 84 லட்சம் உயிர்கள் இருந்தாலும் எல்லாமே அழிந்து போகும். அங்கே புது உலகில் இதுபோல எதுவுமே நடைபெறாது. இவ்வளவு மனிதர்களும் இருக்க மாட்டார்கள், கொசுக்களோ அதுபோன்ற வேறு ஜீவ ஜந்துகளோ இருக்காது. இங்கோ ஏராளமாக உள்ளன. இப்போது குழந்தைகள் நீங்களும் தேவதை ஆகிறீர்கள் என்றால் அங்கே ஒவ்வொரு பொருளும் சதோபிர தானமாக இருக்கும். இங்கேயும் கூட பெரிய மனிதர்களின் வீடுகளுக்குச் செல்வீர்களானால் அங்கே மிகவும் சுத்தமாக இருக்கும். நீங்களோ, அனைவரைக் காட்டிலும் அதிகமாக, பெரிய தேவதை ஆகப் போகிறீர்கள். பெரிய மனிதர் என்று கூடச் சொல்ல மாட்டார்கள். நீங்கள் மிக உயர்ந்த தேவதை ஆகிறீர்கள். இது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட நீங்கள் இதுபோல் நம்பர்வார் ஆகியிருந்தீர்கள். இவ்வளவு குப்பைகள் முதலியவை அங்கே எதுவும் இருக்காது. குழந்தைகளுக்கு மிகவும் குஷி ஏற்படுகின்றது - நாம் உயர்ந்த தேவதை ஆகப் போகிறோம். ஒரே ஒரு தந்தை தான் நமக்குப் படிப்பு சொல்லித் தருபவர். அவர் நம்மை மிகவும் உயர்ந்தவர்களாக ஆக்குகின்றார். படிப்பில் எப்போதுமே நம்பர்வார் தகுதி உள்ளவர்கள் இருப்பார்கள். சிலர் குறைவாகப் படிக்கின்றனர், சிலர் அதிகம் படிக்கின்றனர். இப்போது குழந்தைகள் புருஷார்த்தம் செய்துக் கொண்டுள்ளனர். பெரிய-பெரிய சென்டர்களைத் திறந்து கொண்டு இருக்கின்றனர், பெரிய-பெரிய மனிதர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக. பாரதத்தின் புராதன ராஜயோகமும் பாடப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டினருக்கு அதிக ஆர்வம் உள்ளது இராஜயோகம் கற்பதற்காக. பாரதவாசிகளோ, தமோபிரதான புத்தி உள்ளவர்கள். அவர்கள் கூட தமோ புத்தி உள்ளவர்கள். அதனால் அவர்களுக்கு பாரதத்தின் புராதன இராஜ யோகத்தைக் கற்பதற்கான ஆர்வம் உள்ளது. பாரதத்தின் புராதன இராஜயோகம் பெயர் பெற்றதாகும். அதன் மூலம் தான் பாரதம் சொர்க்கமாக ஆனது. முழுமையாகப் புரிந்து கொள்பவர்கள் மிகச் சிலரே வருகின்றனர். சொர்க்கமாகிய ஹெவன் கடந்து சென்றுவிட்டது. மீண்டும் நிச்சயமாக வரும். ஹெவன் அல்லது பேரடைஸ் அனைத்தையும் விடப் பெரிய உலக அதிசயமாகும். சொர்க்கத்திற்கு எவ்வளவு பெயர்-புகழ் உள்ளது! சொர்க்கம் மற்றும் நரகம், சிவாலயம் மற்றும் வேஷ்யாலயம். குழந்தைகளுக்கு இப்போது நம்பர்வார் நினைவு உள்ளது - நாம் இப்போது சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பது. அங்கே செல்வதற்காக சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். அனைவரையும் அழைத்துச் செல்பவர் அவர் தான் அனைவரையும் அழைத்துச் செல்லும் பண்டா (வழிகாட்டி) ஆவார். பக்தி இரவு எனச் சொல்லப்படுகின்றது. ஞானம் பகல் எனச் சொல்லப்படுகின்றது. இது எல்லையற்ற விஷயமாகும். புதிய பொருள் மற்றும் பழைய பொருளுக்கிடையில் மிகுந்த வேறுபாடு உள்ளது. இப்போது குழந்தைகளுக்கு மனதில் தோன்றுகிறது - இவ்வளவு உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பு, உயர்ந்ததிலும் உயர்ந்த கட்டிடத்தில் படிப்பிப்போமானால் பெரிய-பெரிய மனிதர்கள் வருவார்கள். ஒவ்வொரு வருக்கும் அமர்ந்து சொல்லிப் புரிய வைக்க வேண்டியுள்ளது. உண்மையில் படிப்பு அல்லது கல்விக்காக தனிமையான இடங்கள் உள்ளன. பிரம்ம-ஞானிகளின் ஆசிரமங்களும் நகரத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளன. மேலும் கீழ்த்தளத்தில் தான் இருக்கின்றனர். இவ்வளவு உயரமான மாடிகளில் இருப்பதில்லை. இப்போதோ தமோபிரதானமாக ஆன காரணத்தினால் நகரத்தின் உள்ளே நுழைந்துவிட்டனர். அந்த சக்தி குறைந்து போய் விட்டது. இச்சமயம் அனைவரின் பேட்டரியும் காலியாகி விட்டுள்ளது. இப்போது பேட்டரியை எப்படி நிரப்புவது - இதை பாபாவைத் தவிர யாரும் பேட்டரி சார்ஜ் செய்ய முடியாது. குழந்தைகளுக்கு பேட்டரி சார்ஜ் செய்வதால் தான் சக்தி வருகின்றது. அதற்காக முக்கியமானது நினைவாகும். அதில் தான் மாயாவின் விக்னங்கள் படுகின்றன. சிலரோ சர்ஜனுக்கு முன் அனைத்தையும் சொல்லிவிடுகின்றனர். சிலர் மறைத்து விடுகின்றனர். உள்ளுக்குள் இருக்கும் குறைபாடுகளை பாபாவுக்குச் சொல்லி விட வேண்டும். இந்த ஜென்மத்தில் என்ன பாவங்கள் செய்துள்ளனரோ, அவற்றை அவிநாசி சர்ஜன் முன்னிலையில் வர்ணனை செய்ய வேண்டும். இல்லையென்றால் மனதுக்குள் அரித்துக் கொண்டே இருக்கும். சொன்னதற்குப் பிறகு அரிக்காது. உள்ளுக்குள்ளேயே வைத்து விடுவது என்பது நஷ்டத்தை உண்டாக்கிவிடும். யார் உண்மையிலும் உண்மையான குழந்தைகளாக ஆகின்றனரோ, அவர்கள் அனைத்தையும் பாபாவுக்குச் சொல்லிவிடுவார்கள் -இந்த ஜென்மத்தில் இன்னின்ன பாவங்கள் செய்துள்ளேன். நாளுக்கு நாள் பாபா உத்வேகம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இது உங்களுடைய கடைசிப் பிறவி. தமோபிரதானத்தினால் பாவமோ நிச்சயமாக நடை பெறும் இல்லையா?

 

பாபா சொல்கிறார், நான் அநேகப் பிறவிகளின் கடைசியில் யார் நம்பர் ஒன் தூய்மை அற்றவராக ஆகியிருக்கிறாரோ, அவருக்குள் தான் பிரவேசமாகிறேன். ஏனென்றால் அவர் தான் மீண்டும் நம்பர் ஒன்னில் செல்ல வேண்டும். அதிக முயற்சி செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பிறவியில் பாவங்கள் நிகழ்ந்துள்ளன இல்லையா? அநேகருக்குத் தெரிவதே இல்லை, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று. உண்மையைச் சொல்வதில்லை. ஒரு சிலர் உண்மையைச் சொல்லிவிடுகின்றனர். பாபா புரிய வைத்துள்ளார் - குழந்தைகளே, உங்களுடைய கர்மேந்திரியங்கள், கர்மாதீத் அவஸ்தா (நிலை) அமையும் போது தான் சாந்தமடைகின்றன. எப்படி மனிதர்கள் முதுமையடைந்து விட்டால் கர்மேந்திரியங்கள் தாமாகவே சாந்தமாகி விடுகின்றன. இதிலோ சிறு வயதிலேயே அனைத்தும் சாந்தமாகிவிட வேண்டும். யோகபலத்தில் நல்லபடியாக இருந்தால் இந்த அனைத்து விஷயங்களின் முடிவு வந்துவிடும். அங்கே இதுபோன்ற அழுக்கான நோய், குப்பை முதலிய எதுவும் இருப்பதில்லை. மனிதர்கள் மிகவும் தூய்மையாக-சுத்தமாக இருப்பார்கள். அங்கே இருப்பதே இராம ராஜ்யம். இங்கே உள்ளது இராவண இராஜ்யம். ஆகவே அநேக விதமான அழுக்கான நோய்கள் முதலியன உள்ளன. சத்யுகத்தில் இவை எதுவுமே இருக்காது. கேட்கவே வேண்டாம். பெயரே எவ்வளவு முதல்-தரமானதாக உள்ளது - சொர்க்கம், புது உலகம். மிகத் தூய்மையாக இருக்கும். பாபா புரிய வைக்கிறார் - இந்தப் புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் நீங்கள் இந்த அனைத்து விஷயங்களையும் கேட்கிறீர்கள். நேற்று நீங்கள் கேட்டதில்லை. நேற்று மரண உலகத்தின் எஜமானர்களாக இருந்தீர்கள். இன்று அமர உலகத்தின் எஜமான் ஆகிறீர்கள். நிச்சயம் ஏற்பட்டு விடுகின்றது, நேற்று மரண உலகத்தில் இருந்தோம், இப்போது சங்கமயுகத்தில் வருவதன் மூலம் அமர உலகிற்குச் செல்வதற்காக நீங்கள் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். படிப்பு சொல்லித் தருபவரும் இப்போது கிடைத்துள்ளார். நல்லபடியாகப் படிக்கிறார்கள் என்றால் பணம் முதலியவற்றையும் கூட நன்கு சம்பாதிக்கின்றனர். அர்ப்பணம் (தியாகம்) படிப்புக்குத் தான் எனச் சொல்வார்கள். இதுவும் அதுபோல் தான். இந்தப் படிப்பினால் நீங்கள் மிக உயர்ந்த பதவி பெறுகிறீர்கள். இப்போது நீங்கள் ஒளியில் இருக்கிறீர்கள். இதுவும் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நீங்களும் பிறகு அடிக்கடி மறந்துப் போகிறீர்கள். பழைய உலகத்திற்குச் சென்று விடுகிறீர்கள். மறப்பது என்றால் பழைய உலகத்திற்குச் சென்றுவிடுவது என அர்த்தம். இப்போது சங்கமயுக பிராமணர்களாகிய உங்களுக்குத் தெரியும், நாம் கலியுகத்தில் இல்லை. இதை சதா நினைவு வைக்க வேண்டும், நாம் புது உலகத்தின் மாலிக் ஆகிக் கொண்டிருக்கிறோம். பாபா நமக்குப் படிப்பு சொல்லித் தருவதே புது உலகிற்குச் செல்வதற்காகத் தான். இது சுத்த அகங்காரமாகும். குழந்தைகளாகிய உங்களுக்கும் கூட ஒரு போதும் அசுத்த சிந்தனை கூட வரக் கூடாது. புருஷார்த்தம் செய்து-செய்தே கடைசியில் முடிவு வெளியாகிவிடும். பாபா புரிய வைக்கிறார், இச்சமயம் வரை அனைவரும் முயற்சி செய்பவர்கள் தான். பரீட்சை வந்துவிட்டால் நம்பர்வார் பாஸாகிப் பிறகு மாற்றலாகி விடுவார்கள். உங்களுடையது எல்லையற்ற படிப்பு. இதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்கள் எவ்வளவு சொல்லிப் புரிய வைக்கிறீர்கள்! புதிது-புதிதாக வந்துக் கொண்டு இருக்கின்றனர், எல்லையற்ற தந்தையிடம் ஆஸ்திப் பெறுவதற்காக. தூரத்தில் இருக்கலாம். இருந்தாலும் கேட்டுக் கேட்டே நிச்சய புத்தி உள்ளவர்களாக ஆகிவிடுகின்றனர் - இப்படிப்பட்ட தந்தையை காண செல்ல வேண்டும் என்பதாக. எந்தத் தந்தை குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தந்திருக்கிறாரோ, அப்படிப்பட்ட தந்தையை நேரடியாக அவசியம் சந்திக்க வேண்டும். புரிந்து கொண்டு தான் இங்கே வருகின்றனர். யாராவது புரிந்து கொள்ளவில்லை என்றாலும் கூட இங்கே வந்ததும் புரிந்து கொள்வார்கள். பாபா சொல்கிறார், மனதில் எந்த விஷயம் இருந்தாலும் கூட, புரியவில்லை என்றால் கேளுங்கள். பாபாவோ காந்தம் இல்லையா? யாருடைய அதிர்ஷ்டத்தில் உள்ளதோ, அவர்கள் நல்லபடியாகப் பிடித்துக் கொள்ள முடியும். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் பிறகு முடிந்தது. கேட்டும் கேளாதவர்களாக இருந்து விடுகின்றனர். இங்கே யார் அமர்ந்து படிப்பு சொல்லித் தருகிறார்? பகவான். அவருடைய பெயர் சிவன். சிவபாபா தான் நமக்கு சொர்க்கத்தின் ராஜபதவி தருகிறார். பிறகு எந்தப் படிப்பு நல்லது? நீங்கள் சொல்வீர்கள், எங்களுக்கு சிவபாபா படிப்பு சொல்லித் தருகிறார். இதன் மூலம் 21 பிறவிகளுக்கான ராஜபதவி கிடைக்கின்றது. இப்படி-இப்படிப் புரிய வைத்துப் புரிய வைத்தே அழைத்துச் செல்கிறார். சிலரோ முழுமையாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால் இவ்வளவு சேவை செய்ய முடிவதில்லை. பந்தனத்தின் பிணைப்பில் கட்டுண்டு இருக்கின்றனர். ஆரம்பத்திலோ நீங்கள் எப்படி தங்களை சங்கிலியால் கட்டப்பட்டதிலிருந்து விடுவித்துக் கொண்டு வந்தீர்கள்! எப்படி சிலர் போதை மிக்கவர்களாக இருக்கிறார்கள்! இதுவும் டிராமாவில் ஒரு பாகமாக இருந்தது. அது கவர்ச்சியாக ஆயிற்று. டிராமாவில் பட்டி நடைபெற வேண்டும் என்று இருந்தது. உயிருடன் இருந்து கொண்டே இறந்த நிலையை அடைந்து பிறகு மாயாவின் பக்கம் ஒரு சிலர் சென்றுவிட்டனர். யுத்தமோ நடைபெறுகிறது இல்லையா? மாயா பார்க்கிறது - இவர் மிகவும் தைரியத்தைக் காட்டியிருக்கிறார். இப்போது நாமும் அடி கொடுத்துப் பார்ப்போம், பக்காவாக இருக்கிறார்களா இல்லையா என்று. குழந்தைகளுக்கு எவ்வளவு பராமரிப்பு இருந்தது! அனைத்தையும் கற்றுக் கொடுத்திருந்தார். குழந்தைகள் நீங்கள் ஆல்பம் முதலியவற்றை ப் பார்க்கிறீர்கள். ஆனால் சித்திரங்களைப் பார்ப்பதாலும் கூடப் புரிந்து கொள்ள முடியாது. யாரேனும் அமர்ந்து புரிய வைக்க வேண்டும், எனனென்ன நடந்தது என்று. எப்படி பட்டியில் இருந்தார்கள், பிறகு ஒவ்வொருவரும் எப்படி-எப்படி வெளியேறினார்கள்? எப்படி ரூபாய் நோட்டு அச்சடிக்கும் போதும் கூட சில கெட்டுப் போகின்றன. இதுவும் ஈஸ்வரிய மிஷினரியாகும். (பேரியக்கம்) ஈஸ்வரன் அமர்ந்து தர்மத்தின் ஸ்தாபனை செய்கிறார். இவ்விஷயம் யாருக்குமே தெரியாது. பாபாவை அழைக்கவும் செய்கிறார்கள், ஆனால் எதையும் புரிந்து கொள்வதில்லை. இது எப்படி முடியும் எனக் கேட்கின்றனர். மாயா இராவணன் முற்றிலும் இதுபோல் ஆக்கிவிட்டுள்ளான். சிவபாபாவுக்குப் பூஜையும் செய்கின்றனர். பிறகு சர்வவியாபி எனச் சொல்லி விடுகின்றனர். சிவபாபா என்று சொல்கிறீர்கள். பிறகு சர்வவியாபியாக எப்படி இருப்பார்? பூஜை செய்கின்றனர். லிங்கத்தை சிவன் எனச் சொல்கின்றனர். இதில் சிவன் அமர்ந்துள்ளார் எனச் சொல்வதில்லை. இப்போது கல்-மண்ணில் பகவான் இருப்பதாகச் சொல்வது.......... என்றால் அனைத்துமே பகவானே பகவானா என்ன? பகவான் முடிவற்றவராக (வரையரையின்றி) இருக்க முடியாது இல்லையா? ஆக, பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். கல்பத்திற்கு முன்பும் கூட இதுபோல் புரிய வைத்திருந்தார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) யாரிடம் கோபம் என்பது இல்லாத ஒரு இனிமையான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பாபாவுக்கு சமமாக அசரீரி ஆவதற்கான புருஷார்த்தம் செய்ய வேண்டும். நினைவு பலத்தின் மூலம் தனது சுபாவத்தை இனிமையானதாகவும், கர்மேந்திரியங்களை சாந்தமாகவும் ஆக்கிக்கொள்ள வேண்டும்.

 

2) இப்போது நாம் சங்கமயுகத்தவர், கலியுகத்தவர் அல்ல என்ற இதே நஷாவில் (பெருமிதத்தில்) சதா இருக்க வேண்டும். பாபா நம்மைப் புது உலகின் எஜமானர் ஆக்குவதற்காக படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். அசுத்த சிந்தனைகளை முடித்துவிட வேண்டும்.

 

வரதானம் :

சிரேஷ்ட சங்கல்பத்தின் சக்தி மூலம் சித்திகளை (குறிக்கோளை) அடையக் கூடிய சித்தி (வெற்றி) சொரூபம் ஆகுக.

 

மாஸ்டர் சர்வசக்திவான் குழந்தைகளாகிய உங்களின் சங்கல்பத்தில் அவ்வளவு சக்தி உள்ளது எதை எந்தச் சமயம் விரும்புகிறீர்களோ, அதைச் செய்ய முடியும், செய்விக்கவும் முடியும். ஏனென்றால் உங்கள் சங்கல்பங்கள் சதா சுபமான, சிரேஷ்டமான மற்றும் நன்மை செய்யக் கூடியதாகும். சிரேஷ்டமான மற்றும் நன்மை செய்யும் சங்கல்பம் நிச்சயமாக வெற்றி தரக்கூடியதாகும். மனம் சதா ஒருமுகப் பட்டதாக, அதாவது ஓரிடத்தில் நிலைத்திருப்பதாகும், அலைவதாக இருக்காது. எங்கே விரும்புகிறீர்களோ, எப்போது விரும்புகிறீர்களோ, மனதை அங்கே நிலைநிறுத்த முடியும். இதன் மூலம் தானாகவே சித்தி சொரூபமாக ஆகி விடுவீர்கள்.

 

சுலோகன்:

சூழ்நிலைகளால் ஏற்படும் குழப்பத்தினுடைய தாக்கத்திலிருந்து (பாதிப்பு) தப்பிக்க வேண்டுமானால் சரீரமற்ற நிலையில் (விதேகி) இருப்பதற்கான அப்பியாசம் செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி