27.02.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! தன்னுடைய சார்ட் வையுங்கள். அப்போது தான் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோமா? அல்லது பின்தங்கி விட்டோமா? என்பது தெரியவரும். தேக அபிமானம் பின்னால் தள்ளுகிறது, ஆத்ம அபிமானி உணர்வு முன்னால் கொண்டு செல்கிறது.

 

கேள்வி:

சத்யுகத்தின் ஆரம்பத்தில் வரக்கூடிய ஆத்மாவுக்கும் மற்றும் தாமதமாக வரக்கூடிய ஆத்மாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

 

பதில்:

ஆரம்பத்தில் வரக்கூடிய ஆத்மாக்கள் சுகத்திற்கான விருப்பம் வைப்பார்கள். ஏனெனில், சத்யுகத்தில் ஆதி சனாதன தர்மம் மிகுந்த சுகம் கொடுக்கக் கூடியதாகும். தாமதாக வரக்கூடிய ஆத்மா சுகத்தைக் கேட்கவே மாட்டார்கள். அவர்கள் அமைதி அமைதி என்று கேட்பார்கள். எல்லைக்கப்பாற் பட்ட தந்தையிடமிருந்து சுகம் மற்றும் அமைதிக்கான ஆஸ்தி ஒவ்வொரு ஆத்மாவுக்கும் கிடைக்கிறது.

 

ஓம் சாந்தி.

பகவானுடைய மகாவாக்கியம். எப்போது பகவானுடைய மகாவாக்கியம் என்று சொல்லப்படுகிறதோ அப்போது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் புத்தியில் வருவதில்லை. புத்தியில் சிவபாபாதான் வருகிறார். முக்கியமான விசயமே தந்தையின் அறிமுகம் கொடுப்பது, ஏனெனில் தந்தையிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. நாங்கள் சிவபாபாவைப் பின்பற்றுபவர்கள் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். நாம் சிவபாபாவின் குழந்தைகள். எப்போதும் தன்னை குழந்தைகளாகப் புரிந்து கொள்ளுங்கள். அவர் தந்தை, ஆசிரியர் மற்றும் குருவாக இருக்கிறார் என்பது வேறு யாருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய உங்களிலும் கூட நிறைய பேர் மறந்துவிடுகிறார்கள். இது நினைவில் இருந்தாலும் ஆஹா சௌபாக்கியம் ஆகும். பாபாவை மறந்துவிடுகிறார்கள், பிறகு லௌகீக தேக உறவினர்கள் நினைவுக்கு வருகிறார்கள். உண்மையில் உங்களுடைய புத்தியில் இருந்து மற்ற அனைத்தும் நீங்கிவிட வேண்டும். ஒரு தந்தை மட்டும் நினைவில் இருக்க வேண்டும். நீங்கள் தான் தாயும் தந்தையும்... என்று சொல்கிறீர்கள். வேறு யாராவது நினைவுக்கு வந்தால், சத்கதிக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்று சொல்ல முடியாது. தேக அபிமானத்தில் இருந்தால் துர்கதிதான் ஏற்படுகிறது. ஆத்ம அபிமானியாக இருந்தால் சத்கதி ஏற்படுகிறது. சில நேரம் கீழே, சில நேரம் மேலே ஏறி இறங்கியபடி இருக்கிறார்கள். சில நேரம் முன்னால் செல்கிறார்கள், சில நேரம் பின்னால் நின்றுவிடுகிறார்கள். நிறைய பேர் தேக அபிமானத்தில் வருகிறார்கள். ஆக, பாபா எப்போதும் சொல்கிறார் - சார்ட் வைத்தீர்கள் என்றால், நாம் முன்னால் சென்று கொண்டிருக்கிறோமா அல்லது பின்னடைந்துக் கொண்டிருக்கிறோமா என்பது தெரியவரும். அனைத்தும் நினைவின் ஆதாரத்தில் இருக்கிறது. மேலே கீழே சென்று கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகள் போகப் போக சோர்ந்து விடுகிறார்கள். பிறகு புலம்புகிறார்கள் - பாபா இப்படி ஆகிறது. நினைவு மறந்து போகிறது. தேக அபிமானத்தில் வருவதால் தான் பின்னால் நின்று விடுகிறார்கள். ஏதேனும் பாவம் செய்கிறார்கள். நினைவின் ஆதாரத்தில் அனைத்தும் உள்ளது. நினைவின் மூலம் ஆயுள் அதிகரிக்கிறது. ஆகையால், யோகம் (நினைவால் தொடர்பு கொள்வது) என்ற வார்த்தை புகழ் பெற்றது. ஞானம் மிக எளிய பாடமாகும். நிறைய பேருக்கு ஞானமும் இருப்பதில்லை, ஆக யோகமும் இருப்பதில்லை. இதன் மூலம் நிறைய நஷ்டம் ஏற்படுகிறது. நிறைய பேர் உழைப்பதே இல்லை. படிப்பில் வரிசைக் கிரமமாக இருக்கவே செய்கிறார்கள். இவர் எந்தளவு மற்றும் யாருடைய சேவை செய்கிறார் என்பது படிப்பின் மூலம் புரிய வைக்கப்படுகிறது. அனைவருக்கும் சிவபாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும். எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி ஒரே ஒரு எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து கிடைக்கிறது. முக்கியமானவர் தாய் தந்தை மற்றும் குழந்தைகளாகிய நீங்கள். இது ஈஸ்வரிய குடும்பமாக இருக்கிறது. வேறு யாருடைய புத்தியிலும் நாம் சிவபாபாவின் குழந்தைகள் என்பது இருப்பதில்லை. சிவபாபாவிட மிருந்து தான் ஆஸ்தி பெற வேண்டும். ஒரு தந்தையைத் தான் நினைவு செய்ய வேண்டும். அவர் கூட நிராகார சிவபாபா என்று அறிமுகம் கொடுக்க வேண்டும். அவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஆவார். அவரை சர்வவியாபி என்று எப்படி சொல்ல முடியும். அப்படியானால், அவரிடமிருந்து ஆஸ்தி எப்படி பெற முடியும்? எப்படி தூய்மையாக முடியும்? அப்படி ஆகவே முடியாது. பாபா அடிக்கடி சொல்கிறார் - மன்மனாபவ, என்னை நினைவு செய்யுங்கள். இதை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. கிருஷ்ணரைக் கூட உண்மையில் அனைவரும் தெரிந்து கொள்ளவில்லை. அந்த மயில் சிறகை அணிந்த கிருஷ்ணர் இங்கே எப்படி வருவார்? இது மிக உயர்ந்த ஞானமாகும். உயர்ந்த ஞானத்தில் கொஞ்சம் கடினம் இருக்கத்தான் செய்யும். சகஜமான என்ற வார்த்தை கூட இருக்கிறது. தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவது சகஜமானதல்லவா! குழந்தைகள் கடினமாக ஏன் நினைக்கிறார்கள்? ஏனெனில் தந்தையை நினைவு செய்ய முடிவதில்லை.

 

பாபா குழந்தைகளுக்கு துர்கதி மற்றும் சத்கதியின் ரகசியத்தையும் புரிய வைத்துள்ளார். இந்த நேரத்தில் அனைவரும் துர்கதியில் போய் கொண்டிருக்கின்றனர். மனிதர்களின் வழி துர்கதியில் கொண்டு செல்கிறது. இது ஈஸ்வரிய வழியாகும். ஆகையால், பாபா வித்தியாசத்தைப் புரிய வைக்கிறார். ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தான் கேட்க வேண்டும் - நான் நரக வாசியா? அல்லது சொர்க்க வாசியா? இப்போது சத்யுகம் எங்கே இருக்கிறது. ஆனால் மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. சத்யுகத்தை கூட கற்பனை என்று நினைக்கிறார்கள். அனேக வழிகள் இருக்கின்றன. அந்த அனேக வழிகள் மூலம் துர்கதி ஏற்படுகிறது. ஒருவருடைய வழியின் மூலம் சத்கதி ஏற்படுகிறது. மனிதர்கள் மனிதர்களை துர்கதிக்கு கொண்டு செல்கிறார்கள். ஒரு ஈஸ்வரன் அனைவருக்கும் சத்கதி கொடுக்கிறார் என்ற இந்த சுலோகன் மிக நன்றாக இருக்கிறது. ஆக நீங்கள் சுபமான வார்த்தைகள் சொல்கிறீர்கள். தந்தையின் மகிமையை செய்கிறீர்கள். அவர் அனைவருடைய தந்தை, அனைவருக்கும் சத்கதியை கொடுக்கிறார். குழந்தைகளுக்கு பாபா மிகவும் புரிய வைத்திருக்கிறார். அதிகாலை ஊர்வலம் செல்லுங்கள். சொர்க்கத்தைப் படைக்கும் இறை தந்தை எங்களுக்கு இந்த பதவியை கொடுக்கிறார், இப்போது நரகத்தின் முடிவு வரப்போகிறது என்று சொல்லுங்கள். புரிய வைப்பதில் உழைக்க வேண்டியிருக்கிறது. ஆகாய விமானத்தில் இருந்து துண்டு பிரசுரங்களை கீழே போடலாம். நாம் ஒரே ஒரு தந்தையை மகிமை செய்கிறோம். அவர்தான் அனைவருக்கும் சத்கதியை கொடுக்கும் வள்ளல் ஆவார். பாபா சொல்கிறார் - குழந்தைகளே! நான் உங்களுக்கு சத்கதியை கொடுக்கிறேன். பிறகு உங்களுக்கு துர்கதியை கொடுப்பது யார்? அரைக்கல்பம் சொர்க்கம், பிறகு நரகம். இராவண இராஜ்யம் என்றாலே அசுர இராஜ்யம் ஆகும். தலை கீழான இராவணனுடைய வழியில் சென்று கீழே விழுந்து கொண்டே இருக்கிறார்கள். பதீத பாவனன் ஒரே ஒரு தந்தை ஆவார். நாம் தந்தையிடமிருந்து உலகத்தின் எஜமான் ஆகிக் கொண்டிருக்கிறோம். இந்த சரிரத்தில் இருந்து மோகம் நீங்கிவிட வேண்டும். கொக்கும் அன்னப் பறவையும் சேர்ந்தே இருந்தால் மோகம் எப்படி நீங்கும்? ஒவ்வொருவருடைய சூழ்நிலையையும் பார்க்கப்படுகிறது. தன்னுடைய சரிர நிர்வாகத்தை சுயம் தானே செய்து கொள்ள தைரியம் இருக்கிறது என்றால், பிறகு அதிகமான வலைகளில் (சிக்கலில்) போய் ஏன் மாட்டிக் கொள்கிறீர்கள்? வயிறு நிறைய சாப்பிடுவதில்லை. இரண்டு ரொட்டி சாப்பிடுங்கள் போதும். எந்த கவலையும் இல்லை. பிறகும் கூட தனக்குள் சத்தியம் எடுத்துக் கொள்ள வேண்டும் - தந்தையைத் தான் நினைவு செய்வேன் என்று. அதன் மூலம் அனைத்து விகர்மங்களும் வினாசமாகிவிடும். இதனுடைய அர்த்தம் தொழில் எதுவும் செய்யக் கூடாது என்பதல்ல. தொழில் செய்யவில்லை என்றால் பைசா எங்கிருந்து வரும்? பிச்சை எடுக்கக் கூடாது. இது வீடாகும், சிவபாபாவின் களஞ்சியத்திலிருந்து சாப்பிடுகிறோம். சேவை செய்யவில்லை என்றால், இலவசமாக சாப்பிடுகிறோம். ஆக பிச்சை எடுப்பது போலாகும். பிறகு 21 பிறவிகளுக்கு சேவை செய்ய வேண்டியிருக்கும். ராஜா முதல் ஏழை வரை அனைவரும் இங்கே இருக்கிறார்கள். அங்கேயும் இருப்பார்கள். ஆனால், அங்கே சதா சுகமாக இருக்கும். இங்கே சதா துக்கமாக இருக்கிறது. பதவி இருக்கிறதல்லவா! தந்தையிடம் முழுமையான நினைவை வைக்க வேண்டும். சேவை செய்ய வேண்டும். மனதிடம் கேட்க வேண்டும் - நான் யக்ஞத்திற்கு எவ்வளவு சேவை செய்கிறேன்? ஈஸ்வரனிடம் அனைத்து கணக்கு வழக்குகளும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் என்ன பதவி கிடைக்கும் என்று சாட்சியாக இருந்து பார்க்கப்படுகிறது. ஸ்ரீமத்படி நடப்பதன் மூலம் எவ்வளவு உயர்ந்த பதவி அடைவோம் மற்றும் ஸ்ரீமத்படி நடக்காததால் எவ்வளவு குறைந்த பதவி கிடைக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இவை அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். உங்களிடம் கண்காட்சியில் பல்வேறு தர்மத்தினர் வருகிறார்கள். அவரிடம் சொல்லுங்கள் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட சுகம் சாந்தியின் ஆஸ்தி கிடைக்கிறது. எல்லைக்கப்பாற்பட்ட தந்தை தான் சாந்தியின் வள்ளல் ஆவார். அவரை சாந்தி தேவா என்று சொல்கிறார்கள். எந்த ஜட சித்திரங்களும் சாந்தி கொடுக்க முடியாது. பாபா சொல்கிறார் - உங்களுடைய சுய தர்மமே சாந்தியாகும். நீங்கள் சாந்தி தாமம் செல்ல விரும்புகிறீர்கள். சிவபாபா சாந்தி கொடுங்கள் என்று சொன்னால் பாபா ஏன் கொடுக்க மாட்டார்? தந்தை குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுக்க மாட்டாரா என்ன? சிவபாபா சுகம் கொடுங்கள் என்று சொல்கிறார்கள். அவரோ சொர்க்கத்தை படைக்கக் கூடியவர், ஆக அவர் ஏன் சுகம் கொடுக்க மாட்டார்? அவரை நினைவு செய்வதே இல்லை, அவரிடம் கேட்பதே இல்லை, பிறகு அவர் என்ன கொடுப்பார்? சாந்திக்கடல் பாபா தான் அல்லவா! நீங்கள் சுகத்தை விரும்புகிறீர்கள். பாபா சொல்கிறார் - சாந்திக்கு பிறகு சுகத்தில் வர வேண்டும். முதன் முதலில் யார் வருவார்களோ, அவர்கள் சுகத்தை அடைவார்கள். தாமதமாக வருபவர்கள் சுகத்தை கேட்கவே மாட்டார்கள். அவர்கள் முக்திதான் கேட்பார்கள். முதலில் அனைவரும் முக்தியில் போவார்கள். அங்கே துக்கம் இருப்பதே இல்லை.

 

நாம் முக்தி தாமத்திற்குச் சென்று பிறகு ஜீவன் முக்தியில் வருவோம் என்று தெரிந்துள்ளீர்கள். மற்ற அனைவரும் முக்தியில் போய் விடுவார்கள். இதை இறுதி தீர்ப்பு நேரம் என்று சொல்லப்படுகிறது. அனைவருடைய கணக்கு வழக்கும் முடியப் போகிறது. விலங்குகளுக்கும் கணக்கு வழக்கு ஏற்படுகிறதல்லவா! சில விலங்குகள் ராஜாக்களிடம் இருக்கின்றன, அவைகளுக்கு எவ்வளவு பாலனை நடக்கிறது. பந்தய குதிரைகளுக்கு எவ்வளவு பாலனை நடக்கிறது. ஏனெனில், குதிரை வேகமாக ஓடினால் நிறைய வருமானம் கிடைக்கும். அந்த குதிரையை எஜமான் மிகுந்த அன்பு செய்வார். இது கூட நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. அங்கே இது நடப்பதே இல்லை. இந்த ஓட்டப்பந்தயம் போன்றவை பிற்காலத்தில் ஆரம்பமானது. இது முற்றிலுமாக உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். உலகத்தின் முதல், இடை, கடைசியின் ரகசியத்தையும் நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். ஆரம்பத்தில் மிகவும் கொஞ்சம் மனிதர்கள் இருப்பார்கள். நாம் உலகத்தின் மீது ஆட்சி செய்து கொண்டிருப்போம். நாம் அப்படி ஆக முடியுமா முடியாதா? என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். நாம் நிறைய பேருக்கு நன்மை செய்கிறோமா? தந்தை கிடைத்திருக்கிறார் என்றால் இதில் உழைக்க வேண்டியிருக்கிறது. உலகத்தினர் தங்களுக்குள் சண்டை சச்சரவு செய்து கொண்டே இருக்கின்றனர். வினாசத்திற்காக என்னெவெல்லாம் உருவாக்குகிறார்கள்? அணுகுண்டுகளை தயாரிக்கிறார்கள் அதன் மூலம் நெருப்பு வைக்கப்படும். வைக்கோல்போரில் குறைவான நெருப்பு பிடிக்குமா என்ன? தீயை அணைப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். நிறைய அணுகுண்டுகளை தயாரிக்கிறார்கள். அதில் விஷ வாயுக்களை நிரப்புகிறார்கள். காற்று அடிப்பதன் மூலமே அனைவரும் இறந்து போவார்கள். மரணம் முன்னால் இருக்கிறது. ஆகையால் பாபா சொல்கிறார் - ஆஸ்தி எடுக்க வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். உழையுங்கள். தொழில் போன்றவற்றில் அதிகமாக போகாதீர்கள். எவ்வளவு சிந்தனை செய்ய வேண்டியிருக்கிறது. பாபா இந்த தொழில் போன்றவற்றை விட்டுவிட்டார். இப்போது இது ச்சீ ச்சீ உலகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். உங்களுடைய விகர்மங்கள் வினாசம் ஆகிவிடும் மற்றும் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவீர்கள். மிக அன்புடன் தந்தையை நினைவு செய்ய வேண்டும். லட்சுமி நாராயணரின் படத்தை பார்த்ததுமே மனம் மகிழ்ச்சி அடைகிறது. இது நம்முடைய குறிக்கோளாகும். பூஜைகள் செய்து வந்தோம். ஆனால் நாம் இப்படி ஆக முடியும் என்று முன்பு தெரியவில்லை. நேற்று பூஜாரியாக இருந்தார்கள், இன்று பூஜைக்குரியவராக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். பாபா வந்ததும் பூஜையை விட்டுவிட்டோம். பாபா வினாசம் மற்றும் ஸ்தாபனையின் சாட்சாத்காரம் காட்டினார். நாம் உலகத்தின் எஜமானர் ஆகிக் கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் அழிந்து போகும். ஆக நாம் ஏன் தந்தையை நினைவு செய்யக் கூடாது? உள்ளுக்குள் ஒரே ஒருவருடைய மகிமையை பாடிக் கொண்டே இருக்க வேண்டும் - பாபா நீங்கள் எவ்வளவு இனிமையாக இருக்கிறீர்கள்.

 

நம் அனைத்து ஆத்மாக்களின் தந்தை அவர் ஒருவரே ஆவார் என்று நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அவரிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. நாம் பக்தி மார்க்கத்தில் அவரை நினைவு செய்து வந்தோம். அவர் பரந்தாமத்தில் வசிக்கக் கூடியவர். ஆகையால் அவருடைய சித்திரமும் இருக்கிறது. அவர் வரவில்லை என்றால் பிறகு சித்திரம் ஏன் இருக்கிறது? சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். அவரை பரமபிதா பரமாத்மா என்று சொல்லப்படுகிறது. மற்றபடி அனைவரையும் மனிதர்கள் அல்லது தேவதைகள் என்று சொல்லப்படுகிறது. முதன் முதலில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. பிறகு மற்ற தர்மங்கள் ஏற்பட்டன. ஆக, அப்படிப்பட்ட தந்தையை எவ்வளவு அன்போடு நினைவு செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில் நிறைய புலம்புகிறார்கள். அர்த்தம் எதையும் புரிந்து கொள்வதில்லை. என்ன வாயில் வருகிறதோ அந்த மகிமையைப் பாடிக் கொண்டே இருக்கிறார்கள். மிகுந்த புகழ் பாடுகிறார்கள். தந்தையின் புகழை என்னவென்று பாடுவீர்கள்? நீங்கள் தான் கிருஷ்ணர், நீங்கள் தான் வியாசர், நீங்கள் தான் இவர் அவர்.... ஆக இது நிந்தனை ஆகிவிட்டது. பாபாவுக்கு எவ்வளவு அபகாரம் செய்கிறார்கள். பாபா சொல்கிறார் நாடகப்படி இவர்கள் அனைவரும் எனக்கு அபகாரம் செய்கிறார்கள். பிறகு நான் வந்து அனைவருக்கும் உபகாரம் செய்கிறேன், அனைவருக்கும் சத்கதி கொடுக்கிறேன். நான் புதிய உலகத்தைப் படைக்க வந்திருக்கிறேன். இது தான் வெற்றி தோல்விக்கான விளையாட்டாகும். 5000 வருடங்களின் உருவாக்கப்பட்ட நாடகமாகும். இதில் சிறிது கூட வித்தியாசம் ஏற்படாது. இந்த நாடகத்தின் ரகசியத்தை தந்தையைத் தவிர யாரும் புரிய வைக்க முடியாது. மனிதர்கள் நிறைய வழிகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேவதை ஆவதற்கான வழி கிடைப்பதே இல்லை. மற்ற அனைத்தும் மனிதனுடைய வழியாகும். ஒவ்வொருவரும் தன்னுடைய புத்தியை வெளிப்படுத்து கிறார்கள். இப்போது நீங்கள் வேறு யாரையும் நினைவு செய்யக் கூடாது. ஆத்மா தன் தந்தையை மட்டும் நினைவு செய்து கொண்டே இருக்கட்டும். உழைக்க வேண்டும். பக்தியில் கூட உழைக்கிறார்கள் அல்லவா! மிக சிரத்தையோடு பக்தி செய்கிறார்கள். அவர்கள் பக்தி செய்வது போல உங்களுடையது ஞானத்தின் உழைப்பாகும். பக்தியில் உழைப்பதில்லையா என்ன? குருக்கள் சொல்கிறார்கள் - தினமும் 100 தடவை மாலை உருட்டுங்கள். பிறகு சென்று குகையில் அமர்ந்து விடுகிறார்கள். மாலை உருட்டி உருட்டி நேரம் ஆகிறது. அதிகத்திலும் அதிகமாக ராம் ராம் என்ற ஓசை எழுப்புகிறார்கள். இங்கேயோ நீங்கள் தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். மிக அன்போடு நினைவு செய்ய வேண்டும். எவ்வளவு இனிமையிலும் இனிமையான பாபா! பாபா இதை மட்டும் சொல்கிறார் - என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் தெய்வீக குணங்களைதாரணை செய்யுங்கள். தான் செய்யும் போது தான் மற்றவர்களுக்கு வழி சொல்வார்கள். தந்தையைப் போல இனிமையானவர் வேறு யாரும் இருக்க முடியாது. கல்பத்திற்குப் பிறகு உங்களுக்கு இனிமையான பாபா கிடைக்கிறார். ஆனால் இப்படிப்பட்ட பாபாவை ஏன் மறந்து விடுகிறீர்கள் என்பது தெரிவதில்லை. பாபா சொர்க்கத்தைப் படைப்பவர். ஆக நீங்களும் கண்டிப்பாக சொர்க்கத்தின் எஜமானன் ஆகின்றீர்கள். ஆனால் துரு நீங்குவதற்கு தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையை நினைவு செய்யாமல் இருப்பதற்கு அப்படி என்ன காரணம் இருக்கிறது. காரணத்தை சொல்லுங்கள். தந்தையை நினைவு செய்ய கடினமாக இருக்கிறதா என்ன? நல்லது.

 

இனிமையிலும் இனிமையான அதிர்ஷ்ட நட்சத்திரங்களுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சரீர நிர்வாகத்திற்காக கண்டிப்பாக கர்மங்களை செய்யுங்கள் ஆனால் அதிகமாக சிக்கல்களில் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள். தந்தையை மறந்தும் போகும் அளவிற்கு தொழில் பற்றிய சிந்தனை செய்யக் கூடாது.

 

2. அனேக மனிதர்களின் வழியை விட்டு விட்டு ஒரு தந்தையின் வழிப்படி நடக்க வேண்டும். ஒரு தந்தையின் மகிமையைப் பாட வேண்டும். ஒரு தந்தையைத் தான் அன்பு செய்ய வேண்டும் மற்ற அனைவருமிடருந்தும் மோகத்தை நீக்க வேண்டும்.

 

வரதானம் :

ஞானத்தின் ஒளி, சக்தியின் மூலம் தவறானதைச் சரியானதாக மாற்றக்கூடிய ஞானம் நிறைந்த ஆத்மா ஆகுக.

 

ஞானம் தான் ஒளி மற்றும் சக்தி எனச் சொல்லப் படுகிறது. எங்கே ஒளி, அதாவது பிரகாசம் உள்ளதோ, அதாவது இது தவறு, இது சரி, இது இருள், இது பிரகாசம், இது வீணானது, இது சக்திசாலி என்ற புரிதல் உள்ளதோ -- அப்போது தவறு எனப் புரிந்து கொள்பவர்கள், தவறான கர்மங்கள் அல்லது சங்கல்பங்களின் வசமாக ஆக முடியாது. ஞானம் நிறைந்த ஆத்மா, அதாவது புரிதல் உள்ளவர், ஞான சொரூபமாக இருப்பவர் ஒரு போதும் இது போல் சொல்ல முடியாது -- அதாவது இப்படித் தான் நடக்க வேண்டும் ஆனால் அவர்களிடம் தவறை சரியாக மாற்றுவதற்கான சக்தி உள்ளது.

 

சுலோகன் :

யார் சதா சுப-சிந்தனையாளராக, சுப-சிந்தனையில் இருப்பவர்களாக உள்ளனரோ, அவர்கள் வீண் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு விடுகின்றனர்.

 

ஓம்சாந்தி