21.12.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! ஆத்மா எனும் பேட்டரியை ஞானம் மற்றும் யோகத்தின் மூலம் நிறைத்து சதோபிரதானமாக மாற்ற வேண்டும், தண்ணீர் குளியலின் மூலம் அல்ல

 

கேள்வி:-

இந்த சமயத்தில் மனித ஆத்மாக்கள் அனைத்தையும் அலைய வைப்பது யார்? அவன் ஏன் அலைய வைக்கின்றான்?

 

பதில்:-

அனைவரையும் அலைய வைப்பவன் இராவணன். ஏனென்றால் அவன் தானே அலைந்து கொண்டிருக்கிறான். அவனுக்கென்று எந்த வீடும் இல்லை. இராவணனை யாரும் தந்தை என்று சொல்ல மாட்டார்கள். தந்தை பரந்தாம வீட்டிலிருந்து தன்னுடைய குழந்தைகளை சேர வேண்டிய இடத்தை அடையச் செய்ய வருகின்றார். இப்போது உங்களுக்கு வீடு எங்கே இருக்கிறது என்று தெரிந்து விட்டது. ஆகையினால் நீங்கள் அலைவதில்லை. நாங்கள் பாபாவிடமிருந்து முதல்-முதலில் பிரிந்தோம், இப்போது முதல்-முதலில் வீட்டிற்கு செல்வோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

 

ஓம் சாந்தி.

இவருக்குள் பிரவேசித்துள்ள சிவபாபா எப்படியாவது கண்டிப்பாக நம்மை தன்னோடு அழைத்துச் செல்வார் என்று இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இங்கே அமர்ந்து கொண்டு புரிந்து கொள்கிறார்கள். அது ஆத்மாக்களின் வீடு அல்லவா! எனவே குழந்தைகளுக்கு கண்டிப்பாக குஷி ஏற்படுகிறது, எல்லையற்ற தந்தை வந்து நம்மை மலர்களாக மாற்றுகின்றார். ஆடை எதுவும் அணிவிப்பதில்லை. இதனை யோகபலம், நினைவு பலம் என்று சொல்லப்படுகிறது. டீச்சரின் பதவி எந்தளவிற்கு இருக்கிறதோ, அந்தளவிற்கு குழந்தைகளுக்கும் பதவி பெற வைக்கின்றார். படிப்பின் மூலம் நாம் இப்படி (இலஷ்மி - நாராயணன்) ஆவோம் என்பதை மாணவர்கள் தெரிந்துள்ளார்கள். நம்முடைய தந்தை டீச்சராகவும் இருக்கின்றார், சத்குருவாகவும் இருக்கின்றார் என்று நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். இது புதிய விசயமாகும். நம்முடைய தந்தை டீச்சராக இருக்கின்றார், அவரை நாம் நினைவு செய்கின்றோம். நமக்கு படிப்பித்து இப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றார். நம்மை வீட்டிற்கு திரும்பி அழைத்துச் செல்ல நம்முடைய எல்லையற்ற தந்தை வந்துள்ளார். இராவணனுக்கு எந்த வீடும் இல்லை, இராமருக்குத் தான் வீடு இருக்கிறது. சிவபாபா எங்கே இருக்கின்றார்? பரந்தாமத்தில் என்று நீங்கள் உடனே சொல்வீர்கள். இராவணனை தந்தை என்று சொல்ல மாட்டீர்கள். இராவணன் எங்கே இருக்கின்றான்? தெரியவில்லை. இராவணன் பரந்தாமத்தில் இருக்கின்றான் என்று சொல்ல முடியாது. அவனுக்கு எந்த இருப்பிடமுமே இல்லை. அலைந்து கொண்டிருக்கின்றான், உங்களையும் அலைய வைக்கின்றான். நீங்கள் இராவணனை நினைவு செய்கிறீர்களா என்ன? இல்லை. உங்களை எவ்வளவு அலைய வைக்கின்றான்! சாஸ்திரம் படியுங்கள், பக்தி செய்யுங்கள், இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று. இதனை பக்தி மார்க்கம், இராவண இராஜ்யம் என்று பாபா கூறுகின்றார். இராம இராஜ்யம் வேண்டும் என்று காந்தியும் சொன்னார். இந்த இரதத்தில் நம்முடைய சிவபாபா வந்துள்ளார். பெரிய அப்பா அல்லவா! அவர் ஆத்மாக்களிடம் குழந்தாய்-குழந்தாய் என்று சொல்லிப் பேசுகின்றார். இப்போது உங்களுடைய புத்தியில் ஆன்மீக தந்தை இருக்கின்றார் மற்றும் ஆன்மீக தந்தையின் புத்தியில் ஆன்மீக குழந்தைகளாகிய நீங்கள் இருக்கின்றீர்கள் ஏனென்றால் நம்முடைய தொடர்பு மூலவதனத்திலிருந்தே உள்ளது. ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்ட காலம் பிரிந்திருந்தன............. அங்கே ஆத்மாக்கள் பாபாவோடு ஒன்றாக இருக்கிறது. பிறகு அதனதனுடைய நடிப்பை நடிக்க பிரிகின்றன. நீண்ட கால கணக்கு வேண்டும் அல்லவா! அதை பாபா வந்து புரிய வைக்கின்றார். இப்போது நீங்கள் படிப்பைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல விதத்தில் படிக்கக் கூடிய உங்களில் கூட வரிசைகிரமம் இருக்கிறது. அவர்கள் தான் முதல்-முதலில் என்னிடமிருந்து பிரிந்திருக்கிறார்கள். பிறகு அவர்கள் தான் என்னை அதிகம் நினைவு செய்வார்கள், பிறகு முதல்-முதலில் வந்து விடுவார்கள். பாபா வந்து குழந்தைகளுக்கு முழு சிருஷ்டி சக்கரத்தின் ஆழமான இரகசியத்தைப் புரிய வைக்கின்றார், இதை வேறு யாரும் தெரிந்திருக்கவில்லை. ஆழமானது என்றும் சொல்லப்படுகிறது, இரகசியம் என்றும் சொல்லப்படுகிறது. பாபா ஒன்றும் மேலே இருந்து கொண்டே புரிய வைக்கவில்லை, நான் இந்த கல்பவிருட்சத்தின் விதையாக இருக்கின்றேன் என்று இங்கே வந்து புரிய வைக்கின்றார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இந்த மனித சிருஷ்டி எனும் மரத்தை கல்ப விருட்சம் என்று சொல்லப்படுகிறது. உலகத்திலுள்ள மனிதர்கள் முற்றிலும் எதையும் தெரிந்திருக்கவில்லை. கும்பகர்ண உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் பிறகு பாபா வந்து விழிக்கச் செய்கின்றார். இப்போது குழந்தைகளாகிய உங்களை விழிக்கச் செய்திருக்கின்றார். மற்றவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் கூட கும்பகர்ண அசுர உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தீர்கள். பாபா வந்து விழிக்கச் செய்திருக்கிறார், குழந்தைகளே! விழித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சோம்பேறித்தனமாக உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள், இதனை அஞ்ஞான உறக்கம் என்று சொல்லப்படுகிறது. அந்த உறக்கத்தை அனைவரும் உறங்குகின்றனர். சத்யுகத்திலும் உறங்குகின்றனர். இப்போது அனைவரும் அஞ்ஞான உறக்கத்தில் இருக்கிறார்கள். பாபா வந்து ஞானத்தைக் கொடுத்து அனைவரையும் விழிக்கச் செய்கின்றார். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் விழித்துக் கொண்டீர்கள், பாபா வந்துள்ளார், நம்மை அழைத்துச் செல்வார் என்பதை தெரிந்துள்ளீர்கள். இப்போது இந்த சரீரமும் எதற்கும் உதவாததாக இருக்கிறது ஆத்மாவும் அப்படியே இருக்கிறது, இரண்டுமே தூய்மையற்றதாக ஆகி விட்டது, ஒரேயடியாக முலாம் பூசப்பட்டதாக இருக்கிறது. 9 காரட் என்று சொல்லலாம் அதாவது மிகவும் குறைந்த மதிப்புள்ள தங்கம், உண்மையான தங்கம் 24 காரட்டாக இருக்கிறது. இப்போது பாபா குழந்தைகளாகிய உங்களை 24 காரட்டிற்குச் சமமாக மாற்ற விரும்புகின்றார். உங்களுடைய ஆத்மாவை உண்மையிலும் உண்மையான சத்யுகத்தை சேர்ந்ததாக மாற்றுகின்றார். பாரதத்தை தங்கக் குருவி என்று சொன்னார்கள். இப்போது இரும்பு, கல்லினால் ஆன குருவி என்று சொல்லலாம். உயிரோட்டமானது

அல்லவா! இது புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். எப்படி ஆத்மாக்களைப் புரிந்து கொள்கிறீர்களோ அதுபோல் பாபாவையும் புரிந்து கொள்ள முடியும். ஜொலிக்கக் கூடிய நட்சத்திரம் என்றும் சொல்கிறார்கள். மிகவும் சிறிய நட்சத்திரமாகும். டாக்டர்கள் போன்றோர் பார்ப்பதற்கு நிறைய முயற்சி செய்தார்கள் ஆனால் திவ்ய திருஷ்டி இல்லாமல் பார்க்க முடியாது. மிகவும் சூட்சுமமானதாக இருக்கிறது. சிலர் கண்களின் வழியாக ஆத்மா சென்று விட்டது என்று சொல்கிறார்கள், சிலர் வாயின் வழியாக சென்று விட்டது என்று சொல்கிறார்கள். ஆத்மா வெளியேறி எங்கே செல்கிறது? வேறொரு உடலில் சென்று பிரவேசிக்கிறது. இப்போது உங்களுடைய ஆத்மா மேலே சாந்தி தாமத்திற்குச் சென்று விடும். பாபா வந்து நம்மை வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்பது உறுதியாகத் தெரியும். ஒரு பக்கம் கலியுகம், மறுபக்கம் சத்யுகமாகும். இப்போது நாம் சங்கமயுகத்தில் இருக்கிறோம். அதிசயமாக இருக்கிறது! இங்கே கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள் மற்றும் சத்யுகத்தில் 9 இலட்சம் இருக்கிறார்கள். மற்றவர்கள் அனைவருக்கும் என்ன ஆனது? வினாசம் ஆகி விடுகிறது. பாபா புதிய உலகத்தை படைப்பதற்காகத் தான் வருகின்றார். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை நடக்கிறது. பிறகு இரட்டை ரூபத்தின் மூலம் வளர்ப்பும் நடக்கிறது. மற்றபடி 4 கைகளை உடைய மனிதர்கள் இருப்பார்கள் என்பது கிடையாது. பிறகு அழகாகவே இருக்காது. நான்கு கைகள் என்பது ஸ்ரீ லஷ்மி, ஸ்ரீ நாராயணனுடைய இணைந்த ரூபம் என்று குழந்தைகளுக்குப் புரிய வைத்து விடுகின்றார். ஸ்ரீ என்றால் உயர்ந்த என்பதாகும். திரேதாவில் இரண்டு கலைகள் குறைந்து விடுகிறது. எனவே குழந்தைகள் இப்போது கிடைக்கும் ஞானத்தின் நினைவில் இருக்க வேண்டும். முக்கியமானது இரண்டு வார்த்தைகள், பாபாவை நினைவு செய்யுங்கள். மற்ற யாருக்கும் புரியாது. பாபா தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர், சர்வசக்திவான் ஆவார். பாபா, தாங்கள் எங்களுக்கு ஆகாயம் பூமி அனைத்தையும் கொடுத்து விட்டீர்கள் என்று பாடுகிறார்கள். கொடுக்காத பொருளே இல்லை. முழு உலகத்தின் இராஜ்யத்தையும் கொடுத்து விட்டீர்கள்.

 

இந்த இலஷ்மி - நாராயணன் உலகத்திற்கு எஜமானர்களாக இருந்தார்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாடகத்தின் சக்கரம் சுற்றுகிறது. வரிசைகிரமமான முயற்சியின்படி சம்பூரண நிர்விகாரியாக ஆக வேண்டும். விகாரியிலிருந்து நிர்விகாரியாகவும், நிர்விகாரியிலிருந்து விகாரியாகவும், இந்த 84 பிறவிகளுடைய நடிப்பு எண்ணிலடங்காத முறை நடித்திருக்கிறோம் என்பதையும் தெரிந்துள்ளீர்கள். அதைக் கணக்கிட முடியாது. மக்கள் தொகையைக் கூட கணக்கிட்டு விடுகிறார்கள். மற்றபடி நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாகவும், சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானமாகவும், எத்தனை முறை ஆகியுள்ளீர்கள் என்று கணக்கெடுக்க முடியாது. இது 5 ஆயிரம் வருடங்களின் சக்கரம் என்று பாபா கூறுகின்றார். இதுதான் சரியானதாகும். இலட்சக்கணக்கான ஆண்டுகளின் விசயத்தை நினைவில் கூட வைத்துக் கொள்ள முடியாது. இப்போது உங்களிடத்தில் குணங்கள் தாரணை ஆகிக் கொண்டிருக்கிறது. ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்து விடுகிறது. இந்தக் கண்களின் மூலம் நீங்கள் பழைய உலகத்தைப் பார்க்கின்றீர்கள். கிடைத்திருக்கக் கூடிய மூன்றாவது கண்ணின் மூலம் நீங்கள் புதிய உலகத்தைப் பார்க்க வேண்டும். இந்த உலகம் ஒரு காரியத்திற்கும் உதவாது. பழைய உலகமாக இருக்கிறது. புதிய உலகத்திற்கும் பழைய உலகத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று பாருங்கள். நாம் தான் புதிய உலகத்தின் எஜமானர்களாக இருந்தோம் பிறகு 84 பிறவிகள் எடுத்து-எடுத்து இப்படி ஆகியிருக்கின்றோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இதை நல்ல விதத்தில் நினைவில் வைக்க வேண்டும் மேலும் நாம் எப்படி தேவதைகளாக ஆகின்றோம் என்பதையும் புரிய வைக்க வேண்டும். பிரம்மாவிலிருந்து விஷ்ணு, பிறகு விஷ்ணுவிலிருந்து பிரம்மாவாகவும் ஆகின்றார். பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதைப் பார்க்கின்றீர்கள். விஷ்ணு எப்படி அலங்கரிக்கப்பட்டு அமர்ந்துள்ளார் மற்றும் இந்த பிரம்மா எவ்வளவு சாதாரணமானவராக அமர்ந்துள்ளார்! இந்த பிரம்மா அந்த விஷ்ணுவாக ஆகப்போகிறார் என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இதை யாருக்கும் புரிய வைப்பது கூட மிகவும் சகஜமானதாகும். பிரம்மா, விஷ்ணு, சங்கர் அவர்களுக்குள் என்ன சம்மந்தம்? இந்த விஷ்ணுவின் இரண்டு ரூபம் இலஷ்மி - நாராயணன் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இதே விஷ்ணு தான் தேவதையிலிருந்து மனிதன் பிரம்மாவாக ஆகின்றார். அந்த விஷ்ணு சத்யுகத்தைச் சேர்ந்தவராவார்,

பிரம்மா கலியுகத்தைச் சேர்ந்தவர் ஆவார். பிரம்மாவிலிருந்து விஷ்ணுவாக ஆவது ஒரு வினாடியில், பிறகு விஷ்ணுவிலிருந்து பிரம்மாவாக ஆவதற்கு 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது என்பதை பாபா புரிய வைத்துள்ளார். ததத்துவம் (அது தான் நான், நான் தான் அது) என்பதாகும். ஒரு பிரம்மா மட்டும் அப்படி ஆகின்றார் என்பது கிடையாது அல்லவா! இந்த விசயங்களை ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இங்கே எந்த மனித குருவின் விசயமும் கிடையாது. இவருக்குக் குரு சிவபாபா ஆவார், பிராமணர்களாகிய உங்களுக்கும் குரு சிவபாபா ஆவார். அவரை சத்குரு என்று சொல்லப்படுகிறது. எனவே குழந்தைகள் சிவபாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று யாருக்கும் புரிய வைப்பது மிகவும் சகஜமாகும். சிவபாபா சொர்க்கம் என்ற புதிய உலகத்தைப் படைக்கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் சிவன் ஆவார். அவர் ஆத்மாக்களாகிய நம்முடைய தந்தையாவார். எனவே பகவான் குழந்தைகளுக்குச் சொல்கின்றார், தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். நினைவு செய்வது எவ்வளவு சகஜமானதாக இருக்கிறது! குழந்தை பிறந்தவுடனேயே அதனுடைய வாயிலிருந்து அம்மா-அம்மா என்பது தானாகவே வருகிறது. தாய்- தந்தையைத் தவிர வேறு யாரிடமும் செல்லாது. தாய் இறந்து விட்டால் அது வேறு விசயம். முதலில் தாய் பிறகு தந்தை பிறகு மற்ற நண்பர்கள் உறவினர்கள் போன்றோர் இருக்கிறார்கள்.அதிலும் கூட ஜோடி-ஜோடியாக இருப்பார்கள். சித்தப்பா-சித்தி இருவர் இருக்கிறார்கள் அல்லவா! குமாரியாக இருப்பார் பெரியவர்களாவுடன் சித்தி என்று சொல்வார்கள், சிலர் மாடு என்று சொல்வார்கள்.

 

நீங்கள் அனைவரும் சகோதர-சகோதரர்கள் என்று இப்போது பாபா உங்களுக்குப் புரிய வைக்கின்றார். அவ்வளவு தான் மற்ற அனைத்து சம்மந்தங்களையும் நீக்கி விடுகிறோம். சகோதர-சகோதரர்கள் என்று புரிந்து கொண்டால் ஒரு பாபாவை நினைவு செய்வீர்கள். குழந்தைகளே, தந்தையாகிய என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று பாபாவும் கூறுகின்றார். எவ்வளவு பெரிய எல்லையற்ற தந்தையாக இருக்கின்றார். அந்த பெரிய தந்தை உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்க வந்திருக்கின்றார். அடிக்கடி மன்மனாபவ என்று கூறுகின்றார். தங்களை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்யுங்கள், இந்த விசயத்தை மறக்காதீர்கள். தேக-அபிமானத்தில் வருவதால் தான் மறக்கின்றீர்கள். முதல்-முதலில் தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும் - ஆத்மாக்களாகிய நாம் சாலிகிராமங்கள் மேலும் ஒரு பாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும். நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவனாக இருக்கின்றேன், என்னை நினைவு செய்வதின் மூலம் காலியாகி விட்ட உங்களுடைய பேட்டரி நிரம்பிவிடும், நீங்கள் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். தண்ணீரின் கங்கையில் பிறவி-பிறவிகளாக ஏமாற்றம் அடைந்தீர்கள் ஆனால் தூய்மையாக ஆக முடியவில்லை. தண்ணீர் எப்படி தூய்மையற்றவர்களை தூய்மையாக்கக் கூடியதாக ஆக முடியும்? ஞானத்தின் மூலம் தான் சத்கதி ஏற்படுகிறது. இந்த சமயத்தில் இருப்பது பாவ ஆத்மாக்களின் பொய்யான உலகமாகும். கொடுக்கல்-வாங்கலும் கூட பாவ ஆத்மாக்களோடு தான் நடக்கிறது. மனம்-சொல்-செயலின் மூலம் பாவாத்மாக்களாகவே ஆகின்றனர். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது. நாங்கள் இந்த இலஷ்மி-நாராயணனாக ஆவதற்கு முயற்சி செய்கின்றோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இப்போது நீங்கள் பக்தி செய்வது நின்றுள்ளது. ஞானத்தின் மூலம் சத்கதி ஏற்படுகிறது. இந்த தேவதைகள் சத்கதியில் இருக்கிறார்கள் அல்லவா! இது நிறைய பிறவிகளின் கடைசி என்று பாபா புரியவைத்துள்ளார். பாபா எவ்வளவு சகஜமாகப் புரிய வைக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்கள். கல்பம்-கல்பமாக செய்கிறீர்கள். பழைய உலகத்தை மாற்றி புதிய உலகமாக்க வேண்டும். பகவான் மந்திரவாதி, பொற்கொல்லர், வியாபாரி என்று சொல்கிறார்கள். மந்திரவாதி தான் அல்லவா! பழைய உலகமான நரகத்தை மாற்றி சொர்க்கமாக்கி விடுகின்றார். எவ்வளவு பெரிய மந்திரம்! இப்போது நீங்கள் சொர்க்கவாசிகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது நரகவாசிகளாக இருக்கின்றோம் என்பதை தெரிந்துள்ளீர்கள். நரகம் மற்றும் சொர்க்கம் தனித்தனியாக இருக்கிறது. 5 ஆயிரம் ஆண்டுகளின் சக்கரமாகும். இலட்சக்கணக்கான வருடங்களின் விசயம் இல்லை. இந்த விசயங்களை மறக்கக் கூடாது. பகவானுடைய மகாவாக்கியம் - கண்டிப்பாக யாராவது மறுபிறவி இல்லாமல் இருப்பார்கள். கிருஷ்ணருக்கு சரீரம் இருக்கிறது. சிவனுக்கு இல்லை. உங்களுக்கு சொல்வதற்காக, வந்து படிப்பிக்கின்றார் அல்லவா! எனவே அவருக்கு கண்டிப்பாக வாய் வேண்டும். நாடகத்தின்படி முழு ஞானமும் அவரிடம் தான் இருக்கிறது. அவர் முழு கல்பத்திலும், துக்கதாமத்தை சுகதாமமாக மாற்ற ஒரு முறை தான் வருகின்றார். சுகம்-அமைதியின் ஆஸ்தி கண்டிப்பாக பாபாவிடமிருந்து தான் கிடைத்திருக்கிறது எனவே தான் மனிதர்கள் வேண்டுகிறார்கள், பாபாவை நினைவு செய்கிறார்கள்.

 

பாபா ஞானத்தை எவ்வளவு சகஜமான விதத்தில் கொடுக்கின்றார். இங்கே அமர்ந்து கொண்டு கூட பாபாவை நினைவு செய்யுங்கள், குட்டிகர்ணத்தை நினைவு செய்தால் கூட மன்மனாபவ ஆகும். முழு ஞானத்தையும் கொடுக்கக் கூடியவர் ஒரு பாபாவே ஆவார். நாங்கள் எல்லையற்ற தந்தையிடம் செல்கின்றோம் என்று நீங்கள் சொல்வீர்கள். பாபா நமக்கு சாந்திதாமம்-சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்கான வழியை கூறுகின்றார். இங்கே அமர்ந்து கொண்டே வீட்டை நினைவு செய்ய வேண்டும். தங்களை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும், வீட்டை நினைவு செய்ய வேண்டும் மற்றும் புதிய உலகத்தை நினைவு செய்ய வேண்டும். இந்த பழைய உலகம் அழியத்தான் வேண்டும். இன்னும் போகப்போக நீங்கள் வைகுண்டத்தையும் கூட அதிகம் நினைவு செய்வீர்கள். அடிக்கடி வைகுண்டத்திற்கு சென்று கொண்டே இருப்பீர்கள். ஆரம்பத்தில் குழந்தைகள் அடிக்கடி தங்களுக்குள் ஒன்றாக அமர்ந்து வைகுண்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இதைப் பார்த்து பெரிய-பெரிய வீட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய குழந்தைகள் அனுப்பி வைத்தார்கள். பெயரே ஓம் நிவாஸ் என்று வைக்கப்பட்டிருந்தது. நிறைய குழந்தைகள் வந்தார்கள் பிறகு பிரச்சனைகள் ஏற்பட்டது. குழந்தைகளை படிக்க வைக்கப்பட்டது. தாங்களாகவே தியானத்தில்(டிரான்ஸ்) சென்று வந்தார்கள். இப்போது இந்த தியானம்-காட்சி போன்ற நடிப்பை நிறுத்தி விட்டோம். இங்கேயும் கூட சுடுகாட்டை உருவாக்கியிருந்தனர். அனைவரையும் உறங்க வைத்து விட்டார்கள், இப்போது சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று சொன்னார்கள், தியானத்தில் சென்று விட்டார்கள். இப்போது குழந்தைகளாகிய நீங்களும் கூட மந்திரவாதிகள்தான். யாரையும் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் உடனே தியானத்தில் சென்று விடுவார்கள். இந்த மந்திரம் எவ்வளவு நன்றாக இருக்கிறது! பிடிவாதமான பக்தியில் உயிரை கொடுக்கக்கூட தயாராகும் போது அவர்களுக்கு காட்சி ஏற்படுகிறது. இங்கு பாபா அவரே வந்திருக்கின்றார், குழந்தைகளாகிய உங்களுக்கு படிப்பித்து உயர்ந்த பதவி அடைய வைக்கின்றார். இன்னும் போகப் போக குழந்தைகளாகிய நீங்கள் அதிகம் காட்சிகளை பார்த்து கொண்டே இருப்பீர்கள். இப்போது பாபாவிடம் யாராவது கேட்டார்கள் என்றால் சொல்ல முடியும், யார் ரோஜா மலர், யார் செண்பக மலர், யார் வாசனை இல்லாத மலராக இருக்கிறார்கள்? விதவிதமான மலர்கள் கூட இருக்கிறது அல்லவா! நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு விட்டு ஆத்மா சகோதர-சகோதரர்கள், இந்த நிச்சயம் செய்து கொள்ள வேண்டும் மேலும் பாபாவை நினைவு செய்து முழு ஆஸ்திக்கும் அதிகாரியாக வேண்டும்.

 

2) இப்போது பாவாத்மாக்களோடு கொடுக்கல்-வாங்கல் வைக்கக் கூடாது. அஞ்ஞான உறக்கத்திலிருந்து அனைவரையும் விழிக்கச் செய்ய வேண்டும், சாந்திதாமம் சுகதாமம் செல்வதற்கான வழியை சொல்ல வேண்டும்.

 

வரதானம்:-

தாமரை மலர் சின்னத்தை (சிம்பல்) புத்தியில் வைத்து தன்னை சாம்பிள் எனப் புரிந்திருக்கக் கூடிய விடுபட்ட மற்றும் அன்பானவர் ஆகுக.

 

இல்லறத்தில் இருப்பவர்களுடைய சின்னம் தாமரை மலர் ஆகும். எனவே, தாமரை மலர் ஆகுங்கள் மற்றும் தூய்மை ஆகுங்கள். ஒருவேளை, தூய்மையாகவில்லை எனில், தாமரை மலர் ஆகமுடியாது. எனவே, தாமரை மலர் சின்னத்தை புத்தியில் வைத்து தன்னை சாம்பிள் எனப் புரிந்து நடங்கள். சேவை செய்யும்பொழுது விடுபட்டவராக மற்றும் அன்பானவராகுங்கள். அன்பானவராக மட்டும் ஆகக்கூடாது, விடுபட்டவராகி அன்பானவர் ஆக வேண்டும். ஏனெனில், அன்பு அவ்வப்போது பற்றாக மாறிவிடுகிறது. ஆகையினால், எந்தவொரு சேவை செய்யும்பொழுதும் விடுபட்டவராக மற்றும் அன்பானவராக ஆகுங்கள்.

 

சுலோகன்:-

அன்பு என்ற குடை நிழலுக்குள் மாயை வர முடியாது.

 

ஓம்சாந்தி