21.07.2019                          காலை முரளி                ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           02.01.1985           மதுபன்


 

மிக உன்னத அன்பு, சம்மந்தம் மற்றும் சேவை

 

இன்று பாப்தாதா அனைத்து குழந்தைகளின் அன்பு நிரம்பிய பரிசுகளை பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு குழந்தையின் அன்பு நிரம்பிய நினைவு பரிசு பல விதமானதாக இருந்தது. ஒரு பாப்தாதாவிற்கு, அநேக குழந்தைகளின் பரிசுகள், அநேக எண்ணிக்கையில் கிடைத்திருக்கிறது. அந்தமாதிரி பரிசுகள், மேலும் இத்தனை எண்ணிக்கையில் பரிசுகள் உலகத்தில் வேறு யாருக்குமே கிடைக்க முடியாது. இது திலாராமிற்காக இதயப் பூர்வமான பரிசுகளாக இருந்தன. பிற அனைத்து மனித ஆத்மாக்களும் ஸ்தூல பரிசுகள் கொடுப்பார்கள். ஆனால் சங்கமயுகத்தில் இது விசித்திர தந்தை மற்றும் விசித்திரமான பரிசுகள். அந்த மாதிரி பாப்தாதா அனைவரின் அன்புப் பரிசுகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டு இருந்தார். இவருடைய பரிசு வந்து சேரவில்லை என்று அந்தமாதிரி ஒரு குழந்தையும் இருக்கவில்லை. ஆனால் பலவிதமான மதிப்பிற்குரியதாக அவசியம் இருந்தது. சிலருடையது அதிக மதிப்புடையதாக இருந்தது. சிலருடையது குறைவானதாக இருந்தது. எந்தளவு இடைவிடாத மற்றும் அனைத்து சம்மந்தத்தின் அன்பு இருந்ததோ, அந்தளவு மதிப்புள்ள பரிசாக இருந்தது. வரிசைக்கிரமான அன்பு மற்றும் சம்மந்தத்தின் ஆதாரத்தில் இதயத்தின் பரிசாக இருந்தது. இரண்டு தந்தைகளும் பரிசுகளிலிருந்து வரிசைக்கிரமான மதிப்புள்ள மாலையைப் கோர்த்துக் கொண்டிருந்தார்கள். மேலும் மாலையை பார்த்து, மதிப்பில் வித்தியாசம் விஷயமாக எந்த விஷயத்தில் இருந்தது என்று சோதனை செய்து கொண்டிருந்தார்கள். என்ன பார்த்தார்கள்? அனைவருக்கும் அன்பு இருக்கிறது, சம்மந்தமும் அனைவருக்கும் இருக்கிறது, அனைவரின் சேவையும் இருக்கிறது, ஆனால் அன்பில் தொடக்கத்தில் இருந்து, இதுவரையிலும் எண்ணம் மூலமாக மற்றும் கனவிலும் கூட வேறு எந்த நபர் அல்லது பொருளின் பக்கம் புத்தி கவர்ந்திழுக்கப் படாததாக இருந்ததா? ஒரு தந்தையின் ஒரே சீரான இடைவிடாத அன்பில், எப்பொழுதும் மூழ்கியிருப்பவராக இருந்ததரா? எப்பொழுதும் அன்பின் அனுபவங்களின் கடலில் அந்தமாதிரி முழ்கியிருந்து, அதன் மூலம் அந்த உலகத்தைத் தவிர வேறு எந்த நபரும், பொருளும் தென்படாத நிலை. எல்லைக்கு அப்பாற்பட்ட அன்பின் ஆகாயம் மற்றும் எல்லைக்கு அப்பாற்பட்ட அனுபவங்களின் கடல். இந்த ஆகாயம் மற்றும் கடலைத் தவிர, வேறு எந்தக் கவர்ச்சியும் இல்லாமல் இருப்பது. அந்தமாதிரி இடைவிடாத அன்பின் பரிசுகள் வரிசைக்கிரமான மதிப்புள்ளவைகளாக இருந்தன. எத்தனை வருடங்கள் கடந்துவிட்டனவோ, அத்தனை வருடங்களின் அன்பின் மதிப்பு இயல்பாகவே சேமிப்பாகிக் கொண்டேயிருக்கிறது. மேலும் அந்தளவு மதிப்புள்ள பரிசு பாப்தாதாவின் எதிரில் பிரத்யக்ஷம் ஆனது. விசேஷமாக அனைவரின் மூன்று விஷயங்களைப் பார்த்தோம்.

 

1. அன்பு இடைவிடாத துண்டிக்கப்படாததாக இருந்ததா? உள்ளபூர்வமான அன்பு இருக்கிறதா? அல்லது நேரத்திற்கு ஏற்றாற்போல் அவசியத்தின் காரணமாக, தன்னுடைய விஷயங்களை நிரூப்பிக்கும் காரணமாக இருந்ததா - அந்த மாதிரியான அன்போ இல்லையே? எப்பொழுதும் அன்பு சொரூபம் வெளிப்படும் ரூபத்தில் இருக்கிறதா மற்றும் தேவையான நேரத்தில் வெளிப்படுகிறது, மற்ற நேரங்களில் உள்ளடங்கியிருக்கிறதா, மனதை குஷிப்படுத்துவதற்கான அன்பா அல்லது மிகவும் உள்ளப்பூர்வமான, உணர்வுப் பூர்வமான அன்பா? அந்தமாதிரி அன்பில் இந்த அனைத்து விஷயங்களையும் சோதனை செய்தோம்.

 

2. சம்மந்தத்தில் - முதல் விஷயம் அனைத்து சம்மந்தங்களும் இருக்கிறதா? அல்லது ஏதாவது விசேஷ சம்மந்தம் இருக்கிறதா? ஒரு சம்மந்ததின் அனுபவம் ஒருவேளை குறைவாக இருக்கிறதென்றால், சம்பன்ன நிலையில் குறையிருக்கிறது. மேலும் அவ்வப்பொழுது அந்த மிச்சமிருக்கும் ஒரு சம்மந்தம் கூட தன் பக்கம் கவர்ந்திழுத்துவிடும். எப்படி தந்தை, ஆசிரியர், சத்குரு என்ற விசேஷ சம்மந்தத்தையோ இணைத்து விட்டீர்கள். ஆனால் மிகச் சிறிய சம்மந்தம், பேரன், கொள்ளு பேரனாகவோ ஆக்க வில்லையென்றால், அந்த சம்மந்தமும் தன் பக்கம் இழுத்துவிடும். எனவே சம்மந்தத்தில் அனைத்து சம்மந்தங்களும் இருக்கிறதா?

 

இன்னொரு விஷயம் - தந்தையுடன் ஒவ்வொரு சம்மந்தமும் 100 சதவிகதம் இருக்கிறதா அல்லது ஏதாவது சம்மந்தம் 100 சதவிகதம், சில சம்மந்தம் 50 சதவிகதம், மற்றும் வரிசைக்கிரமாக இருக்கிறதா? சதவீதத்திலும் முழுமையாக இருக்கிறதா அல்லது கொஞ்சம் அலௌகீகம், கொஞ்சம் லௌகீகம் அப்படி இரண்டிலும் சதவிகதம் பகிரப்பட்டிருக்கிறதா?

 

மூன்றாவது - அனைத்து சம்மந்தங்களின் அனுபவத்தின் ஆன்மீக இரசணையை எப்பொழுதும் அனுபவம் செய்கிறாரா அல்லது எப்பொழுது அவசியம் ஏற்படுகிறதோ, அப்பொழுது அனுபவம் செய்கிறாரா? எப்பொழுதும் அனைத்து சம்மந்தங்களிலும் இரசனையை எடுத்துக் கொள்பவரா அல்லது எப்பொழுதாவது எடுப்பவரா?

 

3. சேவையில் - சேவையில் விசேஷமாக என்ன சோதனை செய்திருந்திருப்போம்? முதல் விஷயம் - மேலான ரூபத்தில் சோதிக்கப்பட்டது - எண்ணம், சொல், செயல் மற்றும் உடல், மனம், பணம், செல்வம், அனைத்து விதமான சேவையின் கணக்கு சேமிப்பாகியிருக்கிறதா? இன்னொரு விஷயம் - உடல், மனம், பொருள், எண்ணம், சொல், செயல் இந்த ஆறு விஷயங்களில் எந்தளவு செய்ய முடியுமோ, அந்தளவு செய்திருக்கிறாரா அல்லது எந்தளவு செய்ய முடியுமோ, அந்தளவு செய்யாமல் சக்திகேற்றப்படி தன்னுடைய நிலைகேற்றப்படி செய்தாரா? இன்று மனநிலை நன்றாக இருக்கிறதென்றால், சேவை செய்ததின் சதவிகிதமும் நன்றாக இருந்தது, நாளை ஏதாவது காரணத்தினால் மனநிலை பலஹீனமாக இருக்கிறது என்றால், சேவை செய்ததின் சதவிகிதமும் பலஹீனமாக இருந்தது. எந்தளவு இருக்க வேண்டுமோ, அந்தளவு இருக்கவில்லை. இந்தக் காரணத்தினால் சக்திகேற்றபடி வரிசைக்கிரமாக ஆகிவிடுகிறார்.

 

மூன்றாவது விஷயம்

பாப்தாதா மூலமாக ஞானத்தின் பொக்கிஷம், சக்திகளின் பொக்கிஷம், குணங்களின் பொக்கிஷம், குஷியின் பொக்கிஷம், சிரேஷ்ட நேரத்தின் பொக்கிஷம், சுத்த எண்ணங்களின் பொக்கிஷம் என்று என்ன கிடைத்திருக்கிறதோ, அந்த அனைத்து பொக்கிஷங்களின் மூலமாக சேவை செய்தாரா? அல்லது ஏதாவது சில பொக்கிஷம் மூலமாக சேவை செய்தாரா? ஒருவேளை ஒரு பொக்கிஷத்தின் சேவை செய்வதில் குறையிருக்கிறது அல்லது பரந்த மனதுடன் பொக்கிஷத்தை காரியத்தில் ஈடுபடுத்தவில்லை, கொஞ்சம் கொஞ்சம் செய்து விட்டார், அதாவது கஞ்சத்தனத்தை காண்பித்தார் என்றால், ரிஸல்ட்டில் வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறது,

 

நான்காவது விஷயம்

உள்ளப்பூர்வமாக செய்தாரா, அல்லது கடமை என்று செய்தாரா, சேவையில் எப்பொழுதும் பெருக்கெடுத்தோடும் கங்கையாக இருந்தாரா, அல்லது சேவையில் சில நேரம் சாக்குபோக்கு, சில நேரம் செய்யாமல் இருப்பது என்று இருந்தாரா? மூட் (மனநிலை) இருந்தால் சேவை செய்தார், மூட் இல்லையென்றால் செய்யவில்லை, ஒரு இடத்தில் தங்கி நிற்கும் குளமாக இருக்கவில்லையே.

 

அந்தமாதிரி மூன்று விதமான சோதனையின் பிரகாரம் ஒவ்வொருவரின் மதிப்பை சோதனை செய்தோம். எனவே அந்த மாதிரி விதிப் பூர்வமாக ஒவ்வொருவரும் தன்னைத் தானே சோதனை செய்யுங்கள். மேலும் இந்த புதிய வருடத்தில் குறைகளை நிரந்தரமாக முடிவு செய்து, சம்பன்னம் ஆகி நம்பர் ஒன் மதிப்புள்ள பரிசை தந்தையின் எதிரில் வைப்போம் என்ற உறுதியான எண்ணத்தை வையுங்கள். சோதனை செய்வது, மேலும் பிறகு மாற்றம் செய்யத் தெரியும் இல்லையா? ரிஸல்டிற்கு ஏற்றபடி பெரும்பான்மையோர் இப்பொழுது ஏதாவது ஒரு விஷயத்தில் அவர்களுடைய சக்திக்கு ஏற்றபடி இருக்கிறார்கள். சம்பன்ன சக்தி சொரூபமாக இருக்கவில்லை, எனவே இப்பொழுது கடந்ததை கடந்ததாக்கி, நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை சம்பன்னம் (நிறைவு) மற்றும் சக்திசாலி ஆக்குங்கள்.

 

உங்களிடம் பரிசுப் பொருட்கள் ஒன்றாக சேர்ந்து விட்டது என்றால், எது எது மதிப்புள்ளதென்று சோதனை செய்கிறீர்கள் இல்லையா? பாப்தாதாவும் குழந்தைகளுடன் இந்தக் காரியத்தைத் தான் செய்து கொண்டிருந்தார். பரிசுகளோ அளவற்று இருந்தது. ஒவ்வொருவரும் தனக்கு ஏற்றபடி நல்லதிலும் நல்ல ஊக்கம் உற்சாகம் நிரம்பிய எண்ணத்தை, சக்திசாலியான எண்ணத்தை தந்தையின் எதிரில் வைத்தார்கள். இப்பொழுது சக்திக்கேற்றபடி என்பதற்குப் பதிலாக, எப்பொழுதும் சக்திசாலியான வர் என்று மட்டும் பரிவரித்தனை (மாற்றம்) செய்ய வேண்டும். புரிந்ததா. நல்லது.

 

அனைத்து நிரந்தர அன்பான, உள்ளப் பூர்வமாக அன்பான, அனைத்து உறவுகளின் அன்பான, ஆன்மீக இரசனையின் அனுபவி ஆத்மாக்களுக்கு, அனைத்து பொக்கிஷங்கள் மூலமாக சக்திசாலியாகி நிரந்தர சேவாதாரி, அனைத்து விஷயங்களில் சக்திகேற்றபடி என்பதை எப்பொழுதும் சக்திசாலியானவர் என்பதில் பரிவர்த்தனை செய்யக் கூடிய, விசேஷ அன்பிற்குரிய மற்றும் நெருங்கிய சம்மந்தத்திலுள்ள ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நம்ஸ்காரம்.

 

தாதி ஜானகி அவர்களுடன் சந்திப்பு: -

மதுபனின் அலங்காரம் மதுபனில் வந்து சேர்ந்துவிட்டது. வாருங்கள், வாருங்கள்.. வரவேற்கிறோம். நீங்கள் பாப்தாதா மற்றும் மதுபனின் விசேஷ அலங்காரம், விசேஷ அலங்காரம் மூலம் என்ன நடக்கும்? பிரகாசமோ ஏற்றபட்டுவிட்டது அல்லவா? பாப்தாதா மற்றும் மதுபன் விசேஷ அலங்காரத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள். விசேஷமாக சேவையில் தந்தையின் அன்பு மற்றும் சம்மந்தத்தை பிரத்யக்ஷம் செய்தீர்கள், இந்த விசேஷ சேவை அனைவரின் இதயத்தை அருகில் கொண்டு வரக்கூடியது. எப்பொழுதுமே ரிஸல்ட் நன்றாகத் தான் இருக்கிறது. இருந்தும் அந்த நேரத்திற்கு அதனுடைய விசேஷத்தின் ரிஸல்ட் இருக்கும். அப்படி தந்தையின் அன்பை தன்னுடைய அன்பு நிறைந்த முகம் மூலம் கண்கள் மூலம் பிரத்யக்ஷம் செய்தீர்கள். இந்த விசேஷ சேவை செய்தீர்கள். கேட்பவர்களாக ஆக்குவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை, ஆனால் அன்பானவராக ஆக்குவது. இது தான் விசேஷ சேவையாகும். அது எப்பொழுதும் நடந்து கொண்டேயிருக்கும். எத்தனை விட்டில் பூச்சிகள் பார்த்தீர்கள், விளக்கு ஒளி மேல் பலியாகும் இச்சை வைத்திருக்கும் விட்டில் பூச்சிகள் எத்தனை பார்த்தீர்கள்? இப்பொழுது கண்களின் பார்வை மூலம் விட்டில் பூச்சிகளை விளக்கு ஒளி பக்கம் செல் என்று சமிக்ஜை செய்வதற்கான விசேஷ நேரம். சமிக்ஜை கிடைத்தது, மேலும் சென்று கொண்டேயிருப்பார்கள். பறந்து பறந்து வந்து சேர்ந்து விடுவார்கள். இந்த விசேஷ சேவை அவசியமானதும் தான், மேலும் நீங்கள் செய்யவும் செய்தீர்கள். அந்த மாதிரி ரிஸல்ட் தான் இல்லையா? நல்லது. ஒவ்வொரு அடியிலும் அநேக ஆத்மாக்களின் சேவை  நிரம்பியிருக்கிறது, எத்தனை அடி எடுத்து வைத்தீர்கள்? எத்தனை வைத்தீர்களோ, அந்தளவு ஆத்மாக்களின் சேவை நடந்தது. நன்றாகச் சுற்றி வந்திருக்கிறீர்கள். அவர்களுக்கும் இப்பொழுது ஊக்கம், உற்சாகத்தின் சீசன். என்ன நடக்கிறதோ, அது நல்லதிலும் நல்லதாக நடக்கிறது. பாப்தாதாவின் நெருக்கமான குழந்தைகளின் ஒவ்வொரு கர்மத்தின் ரேகை மூலம் அநேகர்களின் கர்மங்களின் ரேகை மாறுகிறது. அப்படி ஒவ்வொரு காரியத்தின் ரேகை மூலம் அநேகரது அதிர்ஷ்ட ரேகையும் போட்டு இருக்கிறீர்கள். செல்வது என்றால் அதிர்ஷ்ட ரேகை கீறுவது. அப்படி எங்கெங்கு செல்கிறீர்கள், தன்னுடைய கர்மங்கள் என்ற எழுதுகோல் மூலம் அநேகர்களின் அதிர்ஷ்டத்தின் ரேகை போட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள். எனவே அடி அதாவது காரியம் தான் நெருக்கமான குழந்தைகளின் அதிர்ஷ்டத்தின் ரேகையைப் போடுவதற்கான சேவையின் பொறுப்பாளர் ஆக்கியது. எனவே இப்பொழுது இன்னும் மிச்சமிருக்கும் இறுதி ஒசை - இதுவே தான், இதுவே தான் யாரைத் தேடிக் கொண்டிருந்தோமோ, அவர்கள் இவர்களே என்று வெளியாக வேண்டும். இப்பொழுது இதுவா அல்லது அதுவா என்று யோசிக்கிறார்கள். ஆனால் அநேகரிடமிருந்து இதுவே தான் என்று ஓசை மட்டும் வெளியாக வேண்டும். இப்பொழுது அந்த நேரம் அருகில் வந்து கொண்டிருக்கிறது, அதிர்ஷ்டத்தின் ரேகை நீளமாக ஆகி, அதுவும் புத்தியில் இருக்கும் சிறிதளவு பூட்டைத் திறக்க வேண்டியிருக்கிறது, அதுவும் திறந்துவிடும். சாவியையோ போட்டு இருக்கிறீர்கள், திறக்கவும் செய்திருக்கிறீர்கள், ஆனால் இப்பொழுது கொஞ்சம் மாட்டிக் கொண்டிருக்கிறது, அந்த நாளும் வந்துவிடும்.

 

டீச்சர் சகோதரிகளுடன் சந்திப்பு: -

டீச்சர்கள் என்றால் எப்பொழுதும் நிரம்பியவர்கள், நீங்கள் நிரம்பிய நிலையை அனுபவம் செய்பவர்கள் தான் இல்லையா. எப்பொழுது நீங்களே அனைத்து பொக்கிஷங்களினால் நிரம்பியிருக்கிறீர்களோ, அப்பொழுது மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியும். தன்னிடம் நிரம்பிய நிலையில்லை என்றால், மற்றவர்களுக்கு என்ன கொடுப்பீர்கள்? சேவாதாரி என்பதின் அர்த்தமே அனைத்து பொக்கிஷங்களினால் நிரம்பியவர். எப்பொழுதும் நிரம்பிய நிலையின் போதை மற்றும் குஷி இருப்பது. எந்தவொரு பொக்கிஷத்தின் குறையில்லாத நிலை. சக்தி இருக்கிறது, குணம் இல்லை.. மேலும் குணம் இருக்கிறது, சக்தி இல்லை. என்று அப்படி இருக்க வேண்டாம். அனைத்து பொக்கிஷங்களினால், நிரம்பியிருக்க வேண்டும். எந்த சக்தியை, எந்த நேரம் வரவழைக்கிறீர்களோ, அந்த சக்தியின் சொரூபம் ஆகிவிட வேண்டும் - இதைத் தான் நிரம்பிய நிலை என்று கூறுவது. நீங்கள் அந்தமாதிரி இருக்கிறீர்களா? யார் நினைவு மற்றும் சேவையில் சமநிலையில் இருக்கிறார்களோ, சில நேரம் நினைவு அதிகமாக இருக்கிறது, சில நேரம் சேவை அதிகமாக இருக்கிறது என்று அப்படி இருக்க வேண்டாம். இரண்டும் சமமாக சமநிலையில் இருப்பவராக இருக்க வேண்டும். அவர் தான் நிரம்பிய நிலையின் ஆசிர்வாதத்திற்கு உரியவர் ஆகுகிறார். நீங்கள் அந்தமாதிரியான சேவாதாரியா, என்ன இலட்சியம் வைத்திருக்கிறீர்கள்? அனைத்து பொக்கிஷங்களின் நிரம்பிய நிலை, ஒரு குணத்தில் குறை இருக்கிறது என்றால் கூட நிரம்பி இருக்க வில்லை. ஒரு சக்தி குறைவாக இருக்கிறது என்றால் கூட நிரம்பியவர் என்று கூற முடியாது. எப்பொழுதும் நிரம்பிய நிலை, அனைத்திலும் நிரம்பிய நிலை, அப்படி இரண்டிலுமே இருக்க வேண்டும். அந்த மாதிரியானவரைத் தான் தகுதியான சேவாதாரி என்று கூறுவோம். புரிந்ததா? ஒவ்வொரு அடியிலும் நிரம்பிய நிலை. அந்த மாதிரி அனுபவி ஆத்மா, அனுபவத்தின் அதிகாரியாக இருப்பார். எப்பொழுதும் தந்தையின் துணையின் அனுபவம் இருக்கட்டும்.

 

குமாரிகளுடன் சந்திப்பு: -

எப்பொழுதுமே அதிர்ஷ்டம் நிறைந்த குமாரிகள் தான் இல்லையா? எப்பொழுதும் தன்னுடைய நெற்றியில் பாக்கியத்தின் நட்சத்திரம் மின்னிக் கொண்டிருப்பதாக அனுபவம் செய்கிறீர்களா?. நெற்றியில் பாக்கியத்தின் நட்சத்திரம் மின்னிக் கொண்டிருக்கிறதா அல்லது இனிமேல் தான் மின்னப் போகிறதா? தந்தையின் குழந்தையாவது என்றால், நட்சத்திரம் மின்னுவது. அப்படியானால், ஆகிவிட்டீர்களா? அல்லது இப்பொழுது முடிவு செய்வதற்காக யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் யோசிப்பவர்களா? அல்லது செய்பவர்களா? வேறு யாராவது இந்த ஒப்பந்தத்தை முறிக்க விரும்பினால், முறிக்க முடியுமா? தந்தையுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு, இன்னொரு ஒப்பந்தம் செய்தால் என்னவாகும்? பிறகு பாக்கியத்தை பார்க்க வேண்டியதாக இருக்கும். யாரும் இலட்சாதிபதியினுடைவராக ஆன பிறகு ஏழையினுடையவர் ஆவதில்லை. ஏழை செல்வந்தர்களாக ஆவார்கள்., செல்வம் உள்ளவர்கள் ஏழையாக ஆகமாட்டார்கள். தந்தையினுடையவராக ஆன பிறகு வேறு எங்கும் எண்ணம் கூட செல்ல முடியாது - நீங்கள் அந்தமாதிரி உறுதியானவர்களா? எந்தளவு தந்தையின் தொடர்பில் இருப்பீர்களோ, அந்தளவு அவருடைய பிரபாவம் உறுதியாக இருக்கும். தொடர்பு பிஞ்சாக இருக்கிறது என்றால், பிரபாவமும் பிஞ்சாக இருக்கும்,. எனவே படிப்பு மற்றும் சேவை இரண்டின் ஈடுபாடு இருக்க வேண்டும். பிறகு சதா காலத்திற்காக உறுதியான அசையாதவராக இருப்பீர்கள். மேலும் மேலே கீழே செல்லும் குழப்பத்தில் வர மாட்டீர்கள். உறுதியான பிரபாவம் ஏற்பட்டுவிட்டது என்றால், இத்தனை கரங்கள் மூலம், இத்தனை செண்டர்கள் திறக்க முடியும். ஏனென்றால் குமாரிகள் பந்தனமற்றவர்கள். மற்றவர்களின் பந்தனத்தையும் அழிப்பீர்கள் இல்லையா? எப்பொழுதும் தந்தையுடன் உறுதியான ஒப்பந்தம் செய்பவர்கள். தைரியம் இருக்கிறது என்றால், தந்தையின் உதவியும் கிடைக்கும். தைரியம் குறைவாக இருக்கிறது என்றால், உதவியும் குறைவாக இருக்கும். நல்லது. ஒம்சாந்தி

 

வரதானம்:

பரமாத்மாவின் அன்பை பிராப்தி செய்யக் (அடையக்) கூடிய இப்பொழுதும் மற்றும் எதிர்காலத்திலும் இராஜ குழந்தைகள் ஆகுக.

 

சங்கமயுகத்தில் பாக்கியவான் குழந்தைகள் நீங்கள் தான் திலாராம் தந்தையின் அன்பிற்குப் பாத்திரமானவர்கள். இந்த பரமாத்ம அன்பு கோடியில் சில ஆத்மாக்களுக்குத் தான் பிராப்தி ஆகிறது. இந்த தெய்வீக அன்பு மூலமாக இராஜ குழந்தைகள் ஆகிவிடுகிறீர்கள். இராஜ குழந்தைகள் என்றால் இப்பொழுதும் இராஜா மேலும் எதிர்காலத்திலும் இராஜா. எதிர்காலத்தையும் விட முன்பாக இப்பொழுது சுயராஜ்யா அதிகாரி ஆகிவிட்டீர்கள். எப்படி எதிர்கால இராஜ்யத்தின் மகிமையாக ஒரு இராஜ்யம், ஒரு தர்மம், என்று இருக்கிறது., அதே போல் இப்பொழுது அனைத்து கர்மேந்திரியங்களின் மீது ஆத்மாவின் ஒரே ஒரு இராஜ்யம்.

 

சுலோகன்:

தன்னுடைய முகம் மூலம் தந்தையின் காரியத்தை காண்பிக்கக் கூடியவர் தான் பரமாத்மாவின் அன்பிற்குரியவர்.

 

அறிக்கை:

இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அனைவரும் ஒன்றாகக் கூடிய ரூபத்தில் மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணி வரை அகில உலக யோகாவில் கலந்து கொண்டு, விதை ரூபத் தந்தையுடன் தன்னுடைய மூதாதையரின் சொரூபத்தின் நினைவில் நிலைத்திருந்து முழு மரத்திற்கும் அன்பு மற்றும் சக்தியின் பலம் கொடுக்கும் சேவை செய்யுங்கள். முழு நாளும் நான் மூதாதைய ஆத்மா என்ற இந்த சுய கௌரவத்தில் இருப்பதற்காக பயிற்சி செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி