26.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் தனது நடத்தைகளை திருத்திக் கொள்வதற்காக தந்தையிடம் வந்துள்ளீர்கள், இப்பொழுது நீங்கள் தெய்வீக நடத்தைகளை உருவாக்க (கடைபிடிக்க) வேண்டும்.

 

கேள்வி:

குழந்தைகள் உங்களுக்கு இங்கு கண்களை மூடி அமர்வதற்கு ஏன் அனுமதி மறுக்கப் படுகிறது?

 

புதில்:

ஏனென்றால் பார்வை மூலம் திருப்திபடுத்த தந்தை உங்கள் முன் இருக்கிறார். ஆகவே நீங்கள் கண்களை மூடினால் எவ்வாறு விரும்பியதை அடைந்து திருப்தி ஆக முடியும். பள்ளியில் கண்களை மூடி அமர்வதில்லை, கண்களை மூடினால் சோம்பல் ஏற்படும். குழந்தைகள் நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், இதுவே வருமானத்திற்கான மூலதனமாகும். லட்சக்கணக்கில், பலகோடிக் கணக்கில் வருமானம் ஏற்படுகிறது. வருமானம் ஏற்படும் போது சோம்பல், சோர்வு ஏற்படாது.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு தந்தை புரிய வைக்கின்றார். ஆன்மீகத் தந்தை பரந்தாமத்திலிருந்து வந்து நமக்கு கற்பிக்கின்றார் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். என்ன கற்பிக்கின்றார்? தந்தையோடு ஆத்மாவின் யோகத்தை (நினைவில்) ஈடுபடுத்த கற்றுக்கொடுக்கின்றார், இதையே நினைவு யாத்திரை எனக் கூறப்படுகிறது. தந்தையை நினைவு செய்து இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் நீங்கள் தூய்மையாகி தன்னுடைய தூய்மையான சாந்திதாமத்திற்கு சென்றடைவீர்கள் என கூறப்படுகிறது, எவ்வளவு சகஜமாக புரியவைக்கப்படுகிறது! தன்னை ஆத்மா என புரிந்துகொண்டு தனது அன்பான எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதால் உங்களுடைய பல பிறவிகளின் பாவங்கள் எரிந்துவிடும், இதையே யோக அக்னி என கூறப்படுகிறது. இது பாரதத்தின் பழமையான இராஜயோகமாகும், இதனை தந்தை மட்டுமே ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்து கற்பிக்கின்றார். எல்லையற்ற தந்தை பாரதத்தில், இந்த சாதாரண உடலில் வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். இந்த நினைவின் மூலமாகவே உங்களுடைய பல பிறவிகளின் பாவங்கள் நீங்கிவிடும். ஏனென்றால், தந்தை தூய்மை படுத்துபவராக மற்றும் சர்வசக்திவானாக இருக்கின்றார். உங்களுடைய ஆத்மாவின் பேட்டரி இப்பொழுது தமோபிரதானமாக ஆகிவிட்டது. யார் சதோபிரதானமாக இருந்தார்களோ அவர்களை மீண்டும் சதோபிரதானமாக எப்படி ஆக்குவது, ஆக நீங்கள் சதோபிரதானமான உலகிற்குச் செல்ல வேண்டும். மேலும், சாந்திதாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும். குழந்தைகள் இதனை மிகவும் நல்ல முறையில் நினைவில் வைக்க வேண்டும். தந்தை குழந்தைகளுக்கு இந்த டோஸ் (மருந்து) கொடுக்கின்றார். இந்த நினைவு யாத்திரையை எழுந்தாலும், உட்கார்ந்தாலும், நடந்தாலும், சுற்றினாலும் நீங்கள் செய்ய முடியும். குடும்பச் சூழ்நிலையில் இருந்து கொண்டே முடிந்தளவு தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக இருக்க வேண்டும். தந்தையையும் நினைவு செய்ய வேண்டும். மேலும் கூடவே தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். ஏனென்றால், உலகத்தைச் சேர்ந்தவர்கள் அசுர நடத்தையுடையவர்கள். குழந்தைகள் நீங்கள் தெய்வீக நடத்தைகளை உருவாக்கிக் கொள்ள இங்கு வந்துள்ளீர்கள். இந்த லட்சுமி-நாராயணரின் நடத்தைகள் மிகவும் இனிமையாக இருந்தது, பக்திமார்க்கத்தில் இவர்களுக்குத்தான் மகிமை செய்யப்படுகிறது. பக்திமார்க்கம் எப்பொழுது ஆரம்பமானது என்பது கூட யாருக்கும் தெரியாது. இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். மேலும் இராவண இராஜ்யம் எப்பொழுது ஆரம்பமானது என்பதையும் அறிந்துள்ளீர்கள். குழந்தைகள் முழு ஞானத்தையும் புத்தியில் வைக்க வேண்டும். நாம் ஞானக்கடல் தந்தையின் குழந்தைகள், இப்பொழுது ஆன்மீகத் தந்தை, நமக்கு கற்பிக்க வந்திருக்கின்றார் என்பதையும் இவர் சாதாரண தந்தை அல்ல என்பதையும் அறிந்துள்ளீர்கள். இவர் ஆன்மீகத் தந்தை நமக்கு கற்பிக்க வந்திருக்கின்றார். இவருடைய இருப்பிடம் எப்பொழுதும் பிரம்மலோகத்தில் இருக்கிறது. அனைவருடைய லௌகீக தந்தை இங்கு இருக் கின்றார்கள். நாம் ஆத்மாக்களுக்குப் படிப்பை கற்றுத் தருபவர் எல்லையற்ற தந்தை பரமபிதா பரமாத்மா. பக்திமார்க்கத்தில் லௌகீக தந்தை இருந்தும் கூட பரமபிதா பரமாத்மாவை அழைக்கின்றனர். அவருடைய மிகச் சரியான ஒரே பெயர் சிவன் ஆகும். தந்தை, அவரே புரிய வைக்கின்றார், இனிமையிலும் இனிமையான குழந்தைகளே என்னுடைய ஒரே பெயர் சிவன் ஆகும். குழந்தைகள் உங்களை ஆத்மா என்றே கூறலாம், சாலிக்கிராமம் என்றும் கூறலாம். அனேக சாலிக்கிராமங்கள் இருக்கின்றன, ஒருவர் மட்டுமே சிவன் ஆகும். அவர் எல்லையற்ற தந்தை, மற்ற அனைவரும் குழந்தைகள். இதற்கு முன்பாக நீங்கள் எல்லைக்குட்பட்ட குழந்தைகளாக, எல்லைக்குட்பட்ட தந்தையின் அருகில் இருந்தீர்கள். அப்பொழுது ஞானம் இல்லை, மற்றபடி அனேக விதமான பக்தி செய்தீர்கள். அரைக் கல்பமாக பக்தி செய்தீர்கள், துவாபரயுகத்திலிருந்து பக்தி ஆரம்பமானது. இராவண இராஜ்யமும் ஆரம்பமானது. இது மிகவும் சகஜமான விசயமாகும். ஆனாலும் இவ்வளவு சகஜமான விசயத்தைக்கூட புரிந்துகொள்ள சிலருக்குக் கடினமாக இருக்கிறது. இராவண இராஜ்யம் எப்பொழுது ஆரம்பமானது என்பதும் யாருக்கும் தெரியாது. தந்தை மட்டுமே ஞானக்கடலாக இருக்கின்றார் என்பதை இனிமையான குழந்தைகள் நீங்கள் அறிந்துள்ளீர்கள், அவரிடம் என்ன இருக்கின்றதோ அதை குழந்தைகளுக்குக் கொடுக்கின்றார். சாஸ்திரங்கள் பக்திமார்க்கத்தைச் சேர்ந்தது.

 

ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் என்பதை நீங்கள் அறீந்துள்ளீர்கள், இந்த மூன்றும் முக்கியமானது. சந்நியாசிகளும் ஞானம், பக்தி மற்றும் வைராக்கியத்தை அறிந்துள்ளனர். ஆனால் சந்நியாசிகளின் வைராக்கியம் எல்லைக்குட்பட்டதாகும். அவர்கள் எல்லையற்ற வைராக்கியத்தைக் கற்றுத்தர முடியாது. இரண்டு விதமான வைராக்கியம் இருக்கிறது- ஒன்று எல்லைக்குட்பட்டது, மற்றொன்று எல்லையற்றது அது ஹடயோகி சந்நியாசிகளின் வைராக்கியமாகும்; இது எல்லையற்றதாகும். உங்களுடையது இராஜயோகம், அவர்கள் வீடு, வாசலை விட்டுவிட்டு காட்டுக்குச் செல்கின்றனர். எனவே சந்நியாசி என அழைக்கப் படுகின்றனர். ஹடயோகி தூய்மையாக இருப்பதற்காக வீடு, வாசலை விடுகின்றனர். இதுவும் நல்லது தான் என தந்தை கூறுகின்றார், பாரதம் மிகவும் தூய்மையாக இருந்தது. இவ்வளவு தூய்மையான கண்டம் வேறு எதுவும் இல்லை. பாரதத்தின் மகிமை மிகவும் உயர்ந்தது, அதனை பாரதவாசிகளே அறியவில்லை. தந்தையை மறந்ததால் அனைத்தையும் மறந்துவிட்டனர். அதாவது நாஸ்திகராக, பிராப்தி இல்லாதவராக ஆகிவிட்டனர். சத்யுகத்தில் எவ்வளவு சுகம், சாந்தி இருந்தது, இப்பொழுது எவ்வளவு துக்கம், அசாந்தி இருக்கிறது. மூலவதனம் சாந்திதாமமாகும், அங்கு நாம் ஆத்மாக்கள் வசிப்போம் ஆத்மாக்கள் எல்லையற்ற தனது பங்கை நடிப்பதற்காக வீட்டிலிருந்து இங்கு வருகிறது. இப்பொழுது இது புருஷோத்தம சங்கமயுகம். இங்குதான் எல்லையற்ற தந்தை புது உலகத்திற்கு அழைத்துச்செல்ல வந்திருக்கிறார். தந்தை வந்து உத்தமத்திலும் உத்தமமானவராக ஆக்குகின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவர் யார், யாரை பகவான் எனக் கூறப்படுகிறது என்பதெல்லாம் தெரியவில்லை. ஒரு பெரிய லிங்கத்தை வைத்து இவர் நிராகாரமான பரமாத்மா என புரிந்துள்ளனர். பூஜை மட்டும் செய்கின்றனர், அவர் நம் ஆத்மாக்களின் தந்தை என்பது கூட புரியவில்லை. எப்பொழுதும் சிவபாபா என்கின்றனர்;. ருத்ர பாபா, பபூல்நாத் பாபா என சொல்வதில்லை. சிவபாபா நினைவு இருக்கிறதா? பிராப்தி நினைவு இருக்கிறதா? என நீங்களும் எழுதுகின்றீர்கள். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் இதனால் பாவங்கள் எரிந்து விடும், ஏனென்றால் அவரே தூய்மை படுத்துபவராக இருக்கின்றார், இந்த வாசகத்தை ஒவ்வொரு வீட்டிலும் எழுதி வைக்க வேண்டும். இந்த அழுக்கான உலகில் ஒருவர் கூட தூய்மையாக இருக்க முடியாது, தூய்மையான உலகில் ஒருவர் கூட அழுக்காக இருக்க முடியாது. சாஸ்திரத்தில் எல்லா இடத்திலும் அசுத்தமான தவறான விஷயங்களை எழுதியுள்ளனர். திரேதயுகத்திலும் இராவணன் இருந்தான், சீதையை கடத்தினான், கிருஷ்ணரோடு சேர்ந்து கம்சன், ஜராசந்தன், ஹிரண்யன் போன்றவர்களை காட்டுகின்றனர். கிருஷ்ணர் மீது களங்கத்தை ஏற்படுத்தி விட்டனர். சத்யுகத்தில் இவையெல்லாம் நடக்காது. எவ்வளவு பொய்யான களங்கத்தை ஏற்படுத்தி விட்டனர். தந்தை மீதும் தேவதைகள் மீதும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டனர். அனைவரையும் நிந்தனை செய்து விட்டனர். ஆகவே தந்தை கூறுகின்றார் இந்த நினைவு யாத்திரை ஆத்மாவைத் தூய்மையாக்கக் கூடியது. தூய்மையாகி தூய்மையான உலகிற்குச் செல்ல வேண்டும். தந்தை 84 பிறவிகளின் சக்கரத்தைப் புரியவைக்கின்றார். இப்பொழுது இது உங்களுடைய கடைசி பிறவியாகும், பிறகு வீட்டிற்குச் செல்ல வேண்டும். வீட்டிற்கு சரீரம் செல்ல முடியாது. எல்லா ஆத்மாக்களும் செல்ல வேண்டும், எனவே இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே! தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு அமருங்கள், தேகம் என நினைக்காதீர்கள். மற்ற சத்சங்கங்களில் தேக அபிமானத்தில் அமர்ந்தீர்கள். இங்கு தந்தை கூறுகின்றார், ஆத்மா அபிமானியாக அமருங்கள் என்னுடைய சம்ஸகாரம் எவ்வாறு உள்ளதோ, நான் ஞானக்கடலாக இருக்கிறேன் குழந்தைகள் நீங்களும் அவ்வாறு ஆக வேண்டும். எல்லையற்ற தந்தை மற்றும் எல்லைக்குட்பட்ட தந்தைக்கான வேறுபாட்டையும் புரியவைக்கப்படுகிறது. எல்லையற்ற தந்தை வந்து உங்களுக்கு முழு ஞானத்தையும் புரியவைக்கின்றார், இதற்கு முன் உங்களுக்குத் தெரியாது. இப்பொழுது உலகச் சக்கரம் எப்படி சுழல்கிறது, அதனுடைய ஆதி, மத்திய, கடைசியைப் பற்றியும் மேலும் காலச்சக்கரத்தின் ஆயுள் எவ்வளவு என்பதைப் பற்றியும் புரிய வைக்கப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் கல்பத்தின் ஆயுள் லட்சக்கணக்கான ஆண்டுகள் என கூறி ஆழ்ந்த இருளில் கொண்டு வந்துவிட்டனர். இதனால் கீழே இறங்கி வந்தனர். எவ்வளவு நாங்கள் பக்தி செய்கின்றோமோ அவ்வளவு தந்தையை கீழே கொண்டுவருவோம் எனக் கூறுகின்றனர். தந்தை வந்து எங்களை தூய்மையாக்குபவர். தந்தையைக் கீழே இழுக்கின்றனர், ஏனென்றால், தூய்மை இழந்து, மிகவும் துக்கமானவர்களாக ஆகிவிட்டனர். பிறகு தந்தையை அழைக்கின்றனர். தந்தையும் பார்க்கின்றார், இவர்கள் முற்றிலும் துக்கமாக, தமோபிரதானமாக ஆகிவிட்டனர். 5000 ஆண்டுகள் முடியும் நிலையில் மீண்டும் தந்தை வருகின்றார். இந்தப்படிப்பு இந்த பழைய உலகிற்கானதல்ல, உங்களுடைய ஆத்மா தாரணை செய்து தன்னோடு எடுத்துச் செல்கிறது. நான் ஞானக்கடலாக இருக்கிறேன், நீங்கள் ஞான நதிகளாக இருக்கிறீர்கள். இந்த ஞானம் இந்த உலகிற்கானதல்ல. இந்த உலகமும், சரீரமும் சீ... சீ... கெட்டதாகி விட்டது, இதனை விடவேண்டும். சரீரம் இங்கு தூய்மையானதாக இருக்க முடியாது. நான் ஆத்மாக்களின் தந்தையாக இருக்கிறேன். ஆத்மாக்களை மட்டுமே தூய்மையாக்க வந்திருக்கிறேன். இந்த விசயங்களை மனிதர்கள் துளியளவும் புரிந்துகொள்ளவில்லை, முற்றிலும் கல்புத்தியாக, தூய்மை இல்லாதவர்களாக இருக்கின்றனர். எனவே பதீத பாவனரே என அழைக்கின்றனர். ஆத்மாதான் தூய்மை இழந்து விட்டது. ஆத்மாதான் எல்லாம் செய்கிறது. பக்தியும் ஆத்மா செய்கிறது, சரீரத்தையும் ஆத்மா எடுக்கிறது.

 

நான் ஆத்மாக்களாகிய உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன் என தந்தை கூறுகின்றார். எல்லையற்ற தந்தையாகிய நான் ஆத்மாக்களாகிய உங்களின் அழைப்பின் பேரில் வந்திருக்கிறேன். நீங்கள் எவ்வளவு காலமாக என்னை அழைத்தீர்கள். ஹே! பதீத பாவனரே, இறை தந்தையே வாருங்கள், இந்த பழைய உலகின் துக்கத்திலிருந்து, அரக்கர்களிடமிருந்து விடுவியுங்கள், நாங்கள் அனைவரும் வீட்டிற்குச் செல்ல வேண்டும். நமது வீடு எங்கே உள்ளது, வீட்டிற்கு எப்படிச் செல்வது, எப்பொழுது செல்வது என இதைப்பற்றி வேறுயாருக்கும் தெரியாது. முக்தி அடைவதற்காக எவ்வளவு போராடுகின்றனர், எத்தனை குருமார்களிடம் செல்கின்றனர். பலபிறவிகளாக போராடித்தான் வந்துள்ளனர். அந்த குருமார்களுக்கு ஜீவன் முக்தியின் சுகத்தைப் பற்றித் தெரியாது. அவர்கள் முக்தியை விரும்புகின்றனர். உலகில் அமைதி எப்படி உருவாகும்? என கேட்கின்றனர். சந்நியாசிகளும் முக்தியைத் தான் அறிந்துள்ளனர். ஜீவன் முக்தியைப் பற்றி தெரியாது. ஆனால் முக்தி, ஜீவன் முக்தி இரண்டையும் தந்தை மட்டுமே தருகின்றார். நீங்கள் ஜீவன் முக்தியில் இருக்கும் பொழுது மற்றவர்கள் அனைவரும் முக்திக்குச் சென்றுவிடுவார்கள். இப்பொழுது குழந்தைகள் நீங்கள் இவ்வாறு ஆவதற்காக ஞானத்தை அடைகின்றீர்கள். நீங்கள் தான் அனைவரையும் விட அதிகமாக சுகத்தை அடைந்தீர்கள் பிறகு அனைவரையும் விட அதிகமாக துக்கத்தை அடைந்தீர்கள். ஆதிசனாதன தேவதா தர்மத்தைச் சேர்ந்த நீங்களே பிறகு தாழ்ந்த தர்மமும், கர்மமும் உடையவர்களாக ஆகிவிட்டீர்கள். நீங்கள் தூய்மையான குடும்ப சூழ்நிலையில் இருந்தீர்கள், இந்த லட்சுமி- நாரயணரும் தூய்மையான குடும்பச் சூழ்நிலையைச் சேர்ந்தவர்கள். வீடு,வாசலை விடுவது சந்நியாசிகளின் தர்மமாகும். சந்நியாசிகளும் முதலில் தூய்மையாக இருந்தார்கள், நீங்களும் முதலில் மிகவும் நன்றாக இருந்தீர்கள், இப்பொழுது தமோபிரதானமாக ஆகிவிட்டீர்கள். இது நாடகத்தின் விளையாட்டு என தந்தை கூறுகின்றர். இந்த படிப்பு புது உலகிற்கானது என தந்தை புரியவைக்கின்றார். தூய்மை இல்லாத சரீரத்தில், தூய்மையற்ற உலகில் நாடக அனுசாரப்படி 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நான் வர வேண்டியதாகிறது. கல்பத்தின் ஆயுள் லட்சக்கணக்கான ஆண்டுகள் கிடையாது, நானும் சர்வ வியாபி அல்ல. இவ்வாறு என்னை நீங்கள் நிந்தனை செய்து வந்தீர்கள். இருந்தாலும் கூட நான் உங்களுக்கு எவ்வளவு உபகாரம் செய்கின்றேன். எந்த அளவு சிவபாபாவுக்கு நிந்தனை ஏற்படுகிறதோ, அந்தளவு வேறு யாருக்கும் ஏற்படவில்லை. எந்த தந்தை உங்களை உலகத்திற்கு எஜமானராக ஆக்கினாரோ, அவரைப் பற்றி சர்வ வியாபி என கூறிவிட்டீர்கள். நிந்தனை செய்வதற்கும் ஒரு எல்லை இருக்கிறது, எனவே நான் மீண்டும் வந்து உபகாரம் செய்கின்றேன். இந்த நேரம் புருஷோத்தம சங்கமயுகம், கல்யாண காரியுகம் ஆகும். இப்பொழுது உங்களை தூய்மையாக்க வந்திருக்கிறேன். தூய்மை ஆக்குவதற்கு எவ்வளவு சுலபமான வழிமுறையை கற்றுத் தருகிறேன். நீங்கள் பக்திமார்க்கத்தில் மிகவும் அலைந்து விட்டீர்கள், குளங்களில் கூட நீராடச் செல்கின்றனர், இதன் மூலம் தூய்மை ஆகிவிடுவோம் என புரிந்துள்ளனர். ஆக தண்ணீர் எங்கிருக்கிறது. மேலும் பதீதபாவன் தந்தை எங்கிருக்கிறார். அவையனைத்தும் பக்திமார்க்கமாகும், இது ஞானமார்க்கமாகும். மனிதர்கள் எவ்வளவு ஆழ்ந்த இருளில் இருக்கின்றனர், கும்பகர்ணனின் தூக்கத்தில் தூங்கிவிட்டனர். வினாச காலத்தில் விபரீத புத்தியால் பெருநஷ்டம் என கூறப்படுவதையும் நீங்கள் அறீந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் வரிசைப்படியான முயற்சியின் ஆதாரத்தில் அன்பான புத்தியுடையவர் களாக இருக்கின்றீர்கள், இன்னும் முழுமையாகவில்லை, ஏனென்றால் மாயா அடிக்கடி மறக்க வைத்துவிடுகிறது. இதுவே 5 விகாரங்களின் யுத்தமாகும், பஞ்ச விகாரங்கள் இராவணன் என கூறப்படுகிறது. இராவணன் மீது கழுதையின் தலை கட்டப்படுகிறது.

 

தந்தை இதையும் புரியவைக்கின்றார், பாடசாலையில் ஒருபொழுதும் கண்களை மூடி அமர்வதில்லை. கண்களை மூடி அமர்ந்து பகவானை நினைவு செய்வதற்கான போதனை பக்திமார்க்கத்தில் தரப்படுகிறது. இது பாடசாலையாகும் என தந்தை கூறுகின்றார். பார்வை மூலம் விடுவிப்பவர்.. இவர் மந்திரவாதியாக இருக்கிறார் என கூறப்படுகிறது. ஆக இதுவும் மகிமை தான். தேவதைகளும் பார்வையால் விடுவிக்கப்பட்டு உயர்வடைபவர்கள். பார்வை மூலம் மனிதர்களை தேவதைகளாக மாற்றுபவர் மந்திரவாதி தானே! தந்தை வந்து ஆத்மா பேட்டரியை சார்ஜ் செய்யும் பொழுது குழந்தைகள் கண்ணை மூடி அமர்ந்தால் என்ன சொல்வது? பாடசாலையில் கண்களை மூடி அமர்வதில்லை, இல்லையென்றால் சோம்பல் ஏற்படும் படிப்புதான் வருமானத்திற்கான மூலதானமாகும், லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வருமானம் ஏற்படுகிறது. வருமான நேரத்தில் சோம்பல் ஏற்படாது. இங்கு ஆத்மாக்களைத் திருத்த வேண்டும். லட்சியம், குறிக்கோள் எதிரில் இருக்கிறது. தேவதைகளின் இராஜ்யத்தைப் பார்க்க வேண்டுமானல் தில்வாடா கோவிலுக்குச் செல்லுங்கள். அங்கு ஜடமான கோவில், இங்கு சைத்தன்யமான தில்வாடா கோவில் இருக்கிறது. தேவதை களும் இருக்கின்றனர், சொர்க்கமும் இருக்கிறது. அனைவருக்கும் சத்கதி தரும் வள்ளல் அபுவில் மட்டுமே வருகின்றார். இது தான் அனைத்தையும் விட பெரிய தீர்த்த ஸ்தலமாகும், ஆனால் மறைவாக இருக்கிறது, எனவே யாருக்கும் தெரியவில்லை. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பரி செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்;தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்;தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தந்தையிடம் எந்த சம்ஸ்காரம் இருக்கிறதோ அதையே தாரணை செய்ய வேண்டும். தந்தைக்குச் சமமாக ஞானக்கடலாக ஆக வேண்டும். ஆத்ம அபிமானியாக இருப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும்.

 

2. ஆத்மா எனும் பேட்டரியை சதோபிரதானமாக்குவதற்கு நடந்தாலும் சுற்றினாலும் நினைவு யாத்திரையில் இருக்கவேண்டும். தெய்வீக நடத்தைகளை தாரணை செய்ய வேண்டும். மிக மிக இனிமையானவராக வேண்டும்.

 

வரதானம்:

ஞானச் செல்வத்தின் மூலம் இயற்கையின் அனைத்து சாதனங்களையும் அடையக் கூடிய கோடான கோடிகளின் அதிபதி ஆகுக.

 

ஞானச் செல்வம் ஸ்தூலச் செல்வத்தை தானாக பிராப்தி செய்விக்கிறது. எங்கே ஞானச் செல்வம் உள்ளதோ அங்கே இயற்கை தானாகவே தாசியாகி (அடிமையாகி) விடுகிறது. ஞானச் செல்வத்தின் மூலமாக இயற்கையின் அனைத்து சாதனங்களும் தாமாக பிராப்தியாகி விடுகிறது, ஆகையால் ஞானச் செல்வமே அனைத்து செல்வங்களின் இராஜா ஆகும். எங்கே இராஜா இருக்கிறாரோ அங்கே அனைத்து பொருட்களும் தானாகவே கிடைத்து விடும். இந்த ஞானச் செல்வம்தான் கோடான கோடிகளின் அதிபதியாக ஆக்குகிறது, பரமார்த்தம் (ஆன்மீகம்) மற்றும் விவகாரங்களை (விசயங்களை) தானாக உணர வைக்கிறது. ஞானச் செல்வத்திற்கு பல பிறவிகளுக்கு இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்கக் கூடிய சக்தி இருக்கிறது.

 

சுலோகன்:

கல்ப கல்பத்திலும் வெற்றியாளன் என்ற ஆன்மீக போதை நம்மிடையே இருந்தால் மாயாஜீத் (மாயையை வென்றவர்) ஆகி விடுவீர்கள்.

 

ஓம்சாந்தி