24.04.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
"இனிமையான
குழந்தைகளே
!
உங்களுடைய
இந்த
வாழ்க்கை
தேவதைகளை
விடவும் உத்தமமானதாகும்,
ஏனென்றால்
நீங்கள்
இப்போது
படைப்பவர்
மற்றும்
படைப்பவரையும் யதார்த்தமாக
தெரிந்து
கொண்டு
ஆஸ்திகர்களாக
ஆகியுள்ளீர்கள்"
கேள்வி:
முழு
கல்பத்திலும்
இல்லாத
சங்கமயுக
ஈஸ்வரிய
பரிவாரத்தின்
(குடும்பம்)
விசேஷத் தன்மை
என்ன?
பதில்:
இந்த
சமயத்தில்
சுயம்
ஈஸ்வரன்
குழந்தைகளாகிய
உங்களுக்கு
தந்தையாகி
பாதுகாக்கின்றார்,
டீச்சராக
ஆகி
படிப்பிக்கின்றார்;
மேலும்
சத்குருவாக
ஆகி
உங்களை
மலர்களைப்போன்று
ஆக்கி
தன்னுடன் அழைத்துச்
செல்கின்றார்.
சத்யுகத்தில்
தெய்வீக
பரிவாரம்
இருக்கும்
ஆனால்
இப்படிப்பட்ட
ஈஸ்வரிய
குடும்பம் இருக்க
முடியாது.
குழந்தைகளாகிய
நீங்கள்
இப்போது
எல்லையற்ற
சன்னியாசிகளாகவும்
இருக்கின்றீர்கள்,
இராஜயோகிகளாகவும்
இருக்கின்றீர்கள்.
இராஜ்யத்திற்காக
படித்துக்
கொண்டிருக்கின்றீர்கள்.
ஓம்
சாந்தி!
இது
பள்ளி
அல்லது
பாடசாலையாகும்.
யாருடைய
பாடசாலை?
ஆத்மாக்களின்
பாட சாலையாகும்.
கண்டிப்பாக
ஆத்மா
சரீரம்
இல்லாமல்
எதையும்
கேட்க
முடியாது.
ஆத்மாக்களின்
பாடசாலை என்று
சொல்லும்
போது,
ஆத்மா
சரீரம்
இல்லாமல்
புரிந்து
கொள்ள
முடியாது,
என்பதைப்
புரிந்து
கொள்ள வேண்டும்.
ஜீவ
ஆத்மா
என்று
சொல்லப்படுகிறது.
அனைத்துமே
ஜீவ
ஆத்மாக்களின்
பாடசாலையாக இருக்கிறது.
ஆகையினால்
இதை
ஆத்மாக்களின்
பாடசாலை
என்று
சொல்லப்படுகிறது,
மேலும்
பரமபிதா பரமாத்மா
வந்து
படிப்பிக்கின்றார்.
அது
உலகாய
படிப்பு,
இது
ஆன்மீகப்
படிப்பு,
இதை
எல்லையற்ற
தந்தை படிப்பிக்கின்றார்.
எனவே
இது
இறை
தந்தையின்
பல்கலைக்கழகமாக
ஆகி
விட்டது.
பகவானுடைய
மகாவாக்கியம் அல்லவா!
இது
பக்தி
மார்க்கம்
அல்ல.
படிப்பாகும்.
பள்ளியில்
படிப்பு
நடக்கிறது.
பக்தி,
கோவில்
போன்ற இடங்களில்
நடக்கிறது.
இங்கே
படிப்பிப்பது
யார்?
பகவானுடைய
மகாவாக்கியமாகும்.
வேறு
எந்த
பாடசாலையிலும்
பகவானுடைய
மகாவாக்கியம்
இருப்பது
இல்லை.
பகவானுடைய
மகாவாக்கியம்
நடைபெறும்
இடம் இது
ஒன்று
தான்
ஆகும்.
உயர்ந்ததிலும்
உயர்ந்த
பகவானைத்
தான்
ஞானக்கடல்
என்று
சொல்லப்படுகிறது,
அவர்
தான்
ஞானத்தைக்
கொடுக்க
முடியும்.
மற்றவை
அனைத்தும்
பக்தியாகும்.
பக்தியின்
மூலம்
சத்கதி ஏற்படுவதில்லை,
என்று
பக்தியைப்
பற்றி
பாபா
புரிய
வைத்திருக்கின்றார்.
அனைவருக்கும்
சத்கதியை
வழங்கும் வள்ளல்
ஒரு
பரமாத்மா
ஆவார்,
அவர்
வந்து
இராஜயோகம்
கற்றுத்
தருகின்றார்.
ஆத்மா
சரீரத்தின்
மூலம் கேட்கின்றது.
வேறு
எந்த
ஞானம்
போன்றவற்றிலும்
பகவானுடைய
மகாவாக்கியம்
இல்லை.
சிவஜெயந்தி கொண்டாடும்
இடம்
பாரதம்
மட்டுமே
ஆகும்.
பகவான்
நிராகாரமானவர்,
பிறகு
சிவஜெயந்தி
எப்படிக் கொண்டாடுகிறார்கள்.
சரீரத்தில்
பிரவேசிக்கும்
போது
தான்
ஜெயந்தி
நடக்கிறது.
நான்
ஒரு
போதும்
கர்ப்பத்தில் பிரவேசம்
செய்வதில்லை,
என்று
பாபா
கூறுகின்றார்.
நீங்கள்
அனைவரும்
கர்ப்பத்தில்
பிரவேசிக்கின்றீர்கள்.
84
பிறவிகள்
எடுக்கின்றீர்கள்.
அனைவரையும்
விட
இலஷ்மி-நாராயணன்
அதிக
பிறவிகள்
எடுக்கின்றனர்.
84
பிறவிகள்
எடுத்து
பிறகு
கறுப்பாக
(தூய்மையற்றவர்)
ஆகின்றார்,
கிராமத்து
சிறுவனாக
(பிரம்மா)
ஆகின்றார்.
இலஷ்மி-நாராயணன்
என்று
சொன்னாலும்
சரி
அல்லது
இராதா-கிருஷ்ணன்
என்று
சொன்னாலும்
சரி.
இராதா-கிருஷ்ணன்
என்பது
குழந்தைப்
பருவமாகும்.
அவர்கள்
பிறவி
எடுக்கும்
போது
சொர்க்கத்தில் எடுக்கிறார்கள்,
அதைத்
தான்
வைகுண்டம்
என்றும்
சொல்லப்படுகிறது.
முதல்
நம்பர்
பிறவி
இவர்களுடையதாகும்,
எனவே
84
பிறவிகள்
கூட
இவர்கள்
எடுக்கிறார்கள்.
ஷியாம்
(தூய்மையற்ற)
மற்றும்
சுந்தர்
(தூய்மையான),
சுந்தரிலிருந்து பிறகு
ஷியாம்.
கிருஷ்ணரை
அனைவருக்கும்
பிடிக்கிறது.
கிருஷ்ணரின்
பிறப்பு
புதிய
உலகத்தில் தான்
நடக்கிறது.
பிறகு
மறுபிறவி
எடுத்து-எடுத்து
பழைய
உலகத்தை
வந்தடையும்போது
ஷியாம்
ஆகி விடுகிறார்.
இந்த
விளையாட்டே
அப்படித்
தான்
ஆகும்.
பாரதம்
முதலில் சதோபிரதானமாக
அழகாக
(தூய்மையாக)
இருந்தது,
இப்போது
கருப்பாக
(தூய்மையற்றதாக)
ஆகி
விட்டது.
இவ்வளவு
அனைத்து
ஆத்மாக்களும் என்னுடைய
குழந்தைகள்,
என்று
பாபா
கூறுகின்றார்.
இப்போது
அனைவரும்
காம
சிதையில்
அமர்ந்து
எரிந்து கருப்பாகி
விட்டார்கள்.
நான்
வந்து
அனைவரையும்
திரும்பி
அழைத்துச்
செல்கின்றேன்.
இந்த
சிருஷ்டி சக்கரமே
அப்படித்
தான்
ஆகும்.
மலர்களின்
தோட்டம்,
பிறகு
அது
முட்கள்
நிறைந்த
காடாக
ஆகி
விடுகிறது.
பாபா
கூறுகின்றார்,
குழந்தைகளாகிய
நீங்கள்
எவ்வளவு
அழகாக
(தூய்மையாக)
உலகத்திற்கு
எஜமானர்களாக இருந்தீர்கள்,
இப்போது
மீண்டும்
ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள்.
இந்த
இலஷ்மி-நாராயணன்
உலகத்திற்கு
எஜமானர் களாக
இருந்தார்கள்.
இவர்கள்
84
பிறவிகள்
அனுபவித்து
பிறகு
இப்படி
ஆகிக்
கொண்டிருக்கிறார்கள்,
அதாவது
அவர்களுடைய
ஆத்மா
இப்போது
படித்துக்
கொண்டிருக்கிறது.
சத்யுகத்தில்
அளவற்ற
சுகம்
இருக்கிறது
என்பதை
நீங்கள்
தெரிந்துள்ளீர்கள்,
எனவே
அங்கே
ஒரு போதும்
பாபா
நினைவு
செய்வதற்கான
அவசியமே
இருப்பதில்லை.
துக்கத்தில்
அனைவரும்
நினைப்பார்கள்......
என்று
பாடப்பட்டுள்ளது,
யாரை
நினைப்பார்கள்?
பாபாவை.
இவ்வளவு
பேர்
அனைவரையும்
நினைவு
செய்ய வேண்டியதில்லை.
பக்தியில்
எவ்வளவு
நினைவு
செய்கிறார்கள்.
எதுவும்
தெரிந்திருக்கவில்லை.
கிருஷ்ணர் எப்போது
வந்தார்,
அவர்
யார்--
எதுவுமே
தெரிந்திருக்கவில்லை.
கிருஷ்ணர்
மற்றும்
நாராயணனுக்கிடையே உள்ள
வித்தியாசத்தைக்
கூட
தெரிந்திருக்கவில்லை.
சிவபாபா
உயர்ந்ததிலும்
உயர்ந்தவராக
இருக்கின்றார்.
பிறகு
அவருக்குக்
கீழே
பிரம்மா,
விஷ்ணு,
சங்கர்.....
அவர்கள்
தேவதைகள்
என்று
சொல்லப்படுகின்றனர்.
மக்கள்
அனைவரையும்
பகவான்,
என்று
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சர்வவியாபி
என்று
சொல்லி விடுகிறார்கள்.
பாபா
கூறுகின்றார்
--
மாயை
5
விகாரங்கள்
தான்
சர்வவியாபி
யாகும்,
அது
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
சத்யுகத்தில்
எந்த
விகாரமும்
இருப்பதில்லை.
முக்திதாமத்தில்
கூட
ஆத்மாக்கள்
தூய்மையாக இருக்கின்றன.
தூய்மையற்ற
தன்மையின்
விஷயம்
எதுவும்
இல்லை.
எனவே
படைப்பவர்
தந்தை
தான்
வந்து தன்னுடைய
அறிமுகத்தைக்
கொடுக்கின்றார்,
முதல்-இடை-கடைசியின்
இரகசியத்தைப்
புரிய
வைக்கின்றார்,
அதன்
மூலம்
நீங்கள்
ஆஸ்திகர்களாக
ஆகின்றீர்கள்.
நீங்கள்
ஒரே
முறை
தான்
ஆஸ்திகர்களாக
ஆகின்றீர்கள்.
உங்களுடைய
இந்த
வாழ்க்கை
தேவதைகளை
விடவும்
உத்தம
மானதாகும்.
மனித
வாழ்க்கை
கிடைத்தற்கரியது என்றும்
பாடப்படுகிறது.
பிறகு
புருஷோத்தம
சங்கமயுகமாக
ஆகும்போது
வைரம்
போன்ற
வாழ்க்கையாக ஆகிறது.
இலஷ்மி-நாராயணனை
வைரம்
போன்றவர்கள்,
என்று
சொல்ல
முடியாது.
உங்களுடையது
வைரத்திற்கு ஒப்பான
பிறவியாகும்.
நீங்கள்
ஈஸ்வரிய
குழந்தை
களாவீர்கள்,
இவர்கள்
தேவதைகளின்
குழந்தைகளாவர்.
இங்கே
நீங்கள்,
நாங்கள்
ஈஸ்வரிய
குழந்தைகள்,
என்று
கூறுகின்றீர்கள்,
ஈஸ்வரன்
நம்முடைய
தந்தை,
அவர் நமக்கு
படிப்பிக்கின்றார்,
ஏனென்றால்
ஞானக்கடல்
அல்லவா!
இராஜயோகம்
கற்றுத்
தருகின்றார்.
இந்த
ஒரே முறை
புருஷோத்தம
சங்கமயுகத்தில்
தான்
கிடைக்கிறது.
இது
உத்தமத்திலும்
உத்தம
புருஷர்களாக
ஆவதற்கான யுகமாகும்,
இதை
உலகம்
தெரிந்திருக்க
வில்லை.
அனைவரும்
கும்பகர்ணனின்
அஞ்ஞான
உறக்கத்தில் உறங்கிக்
கொண்டிருக்கிறார்கள்.
அனைவருடைய
வினாசமும்
முன்னால்
இருக்கிறது,
ஆகையினால்
இப்போது குழந்தைகள்
யாரிடமும்
சம்பந்தம்
வைக்கக்
கூடாது.
கடைசி
காலத்தில்
யார்
மனைவியை
நினைக்கிறார்களோ.........
என்று
சொல்வார்கள்.
கடைசி
சமயத்தில்
சிவபாபாவை
நினைத்தீர்கள்
என்றால்
நாராயணனுக்கு
குழந்தையாக வருவீர்கள்.
இந்த
ஏணிப்படி
மிகவும்
நன்றாக
இருக்கிறது.
நாம்
தான்
தேவதைகளாகவும்
பிறகு
சத்திரியர்களாகவும்,
என்றெல்லாம்
எழுதப்பட்டிருக்கிறது.
இந்த
சமயத்தில்
இராவண
இராஜ்ஜியமாகும்,
இப்போது
தங்களுடைய ஆதி
சனாதன
தேவி-தேவதா
தர்மத்தை
மறந்து
மற்ற
தர்மங்களில்
மாட்டிக்
கொண்டிருக்கிறீர்கள்.
இந்த
முழு உலகமும்
இலங்கையாகும்.
மற்றபடி
தங்கத்தினாலான
இலங்கை
ஒன்றும்
இருக்கவில்லை.
பாபா
கூறுகின்றார்,
நீங்கள்
உங்களை
விட
என்னை
அதிகம்
நிந்தனை
செய்தீர்கள்,
தங்களை
84
லட்சம்
மற்றும்
என்னை அணு-அணுவிலும்
என்று
சொல்லி விட்டீர்கள்.
அப்படிப்பட்ட
அபகாரிகளுக்கு
நான்
உபகாரம்
(உதவி)
செய்கின்றேன்.
உங்களுடைய
தோஷம்
இல்லை,
இது
நாடகத்தின்
விளையாட்டு,
என்று
பாபா
கூறுகின்றார்.
சத்யுக
ஆரம்பத்திலிருந்து கலியுகக் கடைசிவரை
இந்த
விளையாட்டு
இருக்கிறது,
அது
சுற்றத்
தான்
வேண்டும்.
இதை
பாபாவைத்
தவிர
வேறு
யாரும்
புரிய
வைக்க
முடியாது.
நீங்கள்
அனைவரும்
பிரம்மாகுமார-குமாரிகள்
ஆவீர்கள்.
பிராமணர்களாகிய
நீங்கள்
ஈஸ்வரிய
குழந்தைகளாவீர்கள்.
நீங்கள்
ஈஸ்வரிய
குடும்பத்தில் அமர்ந்துள்ளீர்கள்.
சத்யுகத்தில்
தெய்வீகக்
குடும்பம்
இருக்கும்.
இந்த
ஈஸ்வரிய
குடும்பத்தில்
பாபா
உங்களை வளர்க்கவும்
செய்கின்றார்,
படிப்பிக்கவும்
செய்கின்றார்.
பிறகு
மலர்களாக
மாற்றி
தன்னுடனும்
அழைத்துச் செல்வார்.
நீங்கள்
மனிதனிலிருந்து தேவதையாக
ஆவதற்கு
படிக்கின்றீர்கள்.
கிரந்தத்தில்
கூட,
மனிதனிலிருந்து தேவதையாக்கினீர்கள்.......
என்று
இருக்கிறது,
ஆகையால்
பரமாத்மாவை
மந்திரவாதி
என்றும்
சொல்லப்படுகிறது.
நரகத்தை
சொர்க்கமாக்குவது,
மந்திர
விளையாட்டு
அல்லவா!
சொர்க்கத்திலிருந்து நரகமாக
ஆவதற்கு
84
பிறவிகள்
ஆகிறது
பிறகு
நரகத்திலிருந்து சொர்க்கமாக
ஒரு
வினாடியில்
ஆகிறது.
ஒரு
வினாடியில்
ஜீவன் முக்தியாகும்.
நான்
ஆத்மா,
ஆத்மாவைத்
தெரிந்து
கொண்டீர்கள்,
பாபாவையும்
தெரிந்து
கொண்டீர்கள்.
ஆத்மா
என்றால்
என்ன
என்று
வேறு
எந்த
மனிதர்களுக்கும்
தெரியாது.
அனேக
குருமார்கள்
இருக்கின்றார்கள்,
சத்குரு
ஒருவர்
தான்
ஆவார்.
சத்குரு
அகால்
(அழிவற்றவர்),
என்று
சொல்கிறார்கள்.
பரமபிதா
பரமாத்மா ஒரேயொரு
சத்குரு
தான்
இருக்கிறார்.
ஆனால்
குருமார்கள்
நிறைய
பேர்
இருக்கின்றார்கள்.
விகாரமற்றவர்கள் யாரும்
இல்லை.
அனைவரும்
விகாரத்தின்
மூலம்
தான்
பிறவி
எடுக்கிறார்கள்.
இப்போது
இராஜ்யம்
ஸ்தாபனை
ஆகிக்
கொண்டிருக்கிறது.
நீங்கள்
அனைவரும்
இங்கே
இராஜ்யத்திற்காக
படிக்கின்றீர்கள்.
இராஜயோகிகளாக
இருக்கின்றீர்கள்,
எல்லையற்ற
சன்னியாசிகளாக
இருக்கின்றீர்கள்.
அவர்கள்
ஹடயோகிகள்,
எல்லைக்குட்பட்ட
சன்னியாசிகளாவர்.
பாபா
வந்து
அனைவரையும்
சத்கதியை அடையச்
செய்து
சுகமுடையவர்களாக
ஆக்குகின்றார்.
என்னைத்
தான்
சத்குரு
அகால
மூர்த்தி
(மரணமற்ற
மூர்த்தி)
என்று
சொல்கிறார்கள்.
அங்கே
நாம்
அடிக்கடி
சரீரத்தை
விடுவது
பிறகு
எடுப்பது
இல்லை.
காலன் சாப்பிடுவதில்லை.
உங்களுடைய
ஆத்மாவும்
அழிவற்றதாகும்,
ஆனால்
தூய்மையற்ற
மற்றும்
தூய்மையாக ஆகின்றது.
எதுவும்
ஒட்டாதது
(நிர்லேப்)
கிடையாது.
நாடகத்தின்
இரகசியத்தைக்
கூட
பாபா
தான்
புரிய வைக்கின்றார்.
படைப்பவர்
தான்
படைப்பின்
முதல்-இடை-கடைசியைப்
பற்றிய
இரகசியத்தைப்
புரிய
வைப்பார் அல்லவா?
அந்த
ஒரு
பாபா
தான்
ஞானக்
கடலாக
இருக்கின்றார்.
அவர்
தான்
உங்களை
மனிதனிலிருந்து தேவதையாக
இரண்டு
கிரீடமுடையவர்களாக
மாற்றுகின்றார்.
உங்களுடைய
பிறவி
சோழிக்குச்
சமமானதாக இருந்தது.
இப்போது
நீங்கள்
வைரத்திற்குச்
சமமானவர்களாக
ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள்.
பாபா
ஹம்
சோ,
சோ
ஹம்
(அதுதான்
நான்,
நான்
தான்
அது)
என்ற
மந்திரத்தையும்
புரிய
வைத்திருக்கின்றார்.
அவர்கள்
ஆத்மா தான்
பரமாத்மா
ஆகிறது,
பரமாத்மா
தான்
ஆத்மா
ஆகிறது
ஹம்
சோ,
சோ
ஹம்,
என்று
சொல்லி விட்டார்கள்.
ஆத்மாவிலிருந்து எப்படி
பரமாத்மா
ஆக
முடியும்!
என்று
பாபா
கேட்கின்றார்.
ஆத்மாக்களாகிய
நாம்
இந்த சமயத்தில்
பிராமணர்களாக
இருக்கிறோம்,
பிறகு
ஆத்மாக்களாகிய
நாம்
பிராமணனிலிருந்து தேவதையாக மாறுவோம்,
பிறகு
சத்திரியர்களாக
மாறுவோம்,
பிறகு
சூத்திரனிலிருந்து பிராமணர்களாக
மாறுவோம்,
என்று பாபா
உங்களுக்குப்
புரிய
வைக்கின்றார்.
உங்களுடைய
அனைத்திலும்
உயர்ந்த
பிறவியாகும்.
இது
ஈஸ்வரனுடைய வீடாகும்.
நீங்கள்
யாருக்கு
அருகில்
அமர்ந்திருக்கின்றீர்கள்?
தாய்-தந்தைக்கு
அருகில்.
அனைவரும்
சகோதர-
சகோதரிகள்.
பாபா
ஆத்மாக்களுக்குப்
படிப்பினை
கொடுக்கின்றார்.
நீங்கள்
அனைவரும்
என்னுடைய குழந்தைகள்,
ஆஸ்திக்கு
உரிமையுடையவர்கள்.
ஆகையினால்
பரமாத்மா
தந்தையிடமிருந்து
ஒவ்வொருவரும் ஆஸ்தி
எடுக்கலாம்.
வயதானவர்கள்,
சிறியவர்கள்,
பெரியவர்கள்,
அனைவருக்கும்
பாபாவிடமிருந்து
ஆஸ்தி எடுப்பதற்கு
உரிமை
இருக்கிறது.
ஆகையினால்
குழந்தைகளுக்கு
இதையே
புரிய
வையுங்கள்
–
தன்னை ஆத்மா
என்று
புரிந்து
கொள்ளுங்கள்.
மேலும்
பாபாவை
நினைவு
செய்தீர்கள்
என்றால்
பாவங்கள்
நீங்கி
விடும்.
பக்தி
மார்க்கத்தைச்
சேர்ந்தவர்கள்
இந்த
விஷயங்கள்
எதையும்
புரிந்து
கொள்ளவே
மாட்டார்கள்.
நல்லது.
"இனிமையிலும்-இனிமையான
காணமல்
போய்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான
பாப்-தாதாவின்
அன்பு
நினைவுகளும்
காலை
வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்"
இரவு
வகுப்பு:
குழந்தைகள்
பாபாவை
அறிந்தும்
இருக்கிறார்கள்,
பாபா
நமக்குப்
படிப்பிக்கின்றார்,
அவரிடமிருந்து எல்லையற்ற
ஆஸ்தி
கிடைக்க
வேண்டும்,
என்று
புரிந்தும்
இருக்கிறார்கள்.
ஆனால்
கஷ்டம்
என்னவென்றால்,
மாயை
மறக்க
வைத்து
விடுகிறது.
ஏதாவதொரு
தடையை
ஏற்படுத்தி
விடுகிறது,
அதன்மூலம்
குழந்தைகள் பயந்து
விட
வேண்டும்
என்பதற்காக.
அதிலும்
கூட
முதல்
நம்பரில்,
விகாரத்தில்
விழுந்து
விடுகிறார்கள்.
கண்கள்
ஏமாற்றுகின்றன.
கண்களை
எடுக்க
வேண்டிய
விஷயம்
ஒன்றும்
இல்லை.
பாபா
ஞானம்
என்ற கண்ணைக்
கொடுக்கின்றார்,
ஞானம்
மற்றும்
அஞ்ஞானத்தின்
சண்டை
நடக்கிறது.
ஞானம்
பாபா,
அஞ்ஞானம் மாயையாகும்.
இவர்களின்
சண்டை
மிகவும்
வேகமானதாகும்.
விழுகிறார்கள்
என்றால்
புரிய
வருவதே இல்லை.
நான்
விழுந்திருக்கின்றேன்,
நான்
எனக்கு
நிறைய
தீமைகளைச்
செய்திருக்கின்றேன்
என்று
பிறகு புரிந்து
கொள்கிறார்கள்.
மாயை
ஒரு
முறை
தோல்வி
அடையச்
செய்தது
என்றால்
பிறகு
ஏறுவது
கடினமாகி விடுகிறது.
நிறைய
குழந்தைகள்
சொல்கிறார்கள்,
நாங்கள்
காட்சிகளைக்
காண்கின்றோம்,
ஆனால்
அதில்
கூட மாயை
பிரவேசம்
ஆகி
விடுகிறது.
தெரிவதே
இல்லை.
மாயை
திருட
வைக்கும்,
பொய்
சொல்ல
வைக்கும்.
மாயை
என்ன
தான்
செய்ய
வைப்பதில்லை!
கேட்கவே
கேட்காதீர்கள்.
அழுக்கானவர்களாக
மாற்றி
விடுகிறது.
மலர்களாக
ஆகி-ஆகி
பிறகு
மோசமானவர்களாக
ஆகி
விடுகிறார்கள்.
மாயை
அப்படி
பலமுடையதாக இருக்கிறது,
அது
அடிக்கடி
விழ
வைத்து
விடுகிறது.
பாபா,
அடிக்கடி
மறந்து
விடுகிறது,
என்று
குழந்தைகள்
கூறுகின்றார்கள்.
முயற்சி
செய்ய
வைப்பவர்
ஒரு பாபா
தான்
ஆவார்,
ஆனால்
யாருடைய
அதிர்ஷ்டத்திலாவது
இல்லை
என்றால்
முயற்சி
கூட
செய்ய
முடியாது.
இதில்
யாருக்காகவும்
எதுவும்
செய்ய
முடியாது.
கூடுதலாக
படிப்பிப்பதில்லை.
அந்தப்
படிப்பில்
கூடுதலாக படிப்பதற்காக
டீச்சரை
அழைக்கிறார்கள்.
இது
அதிர்ஷ்டத்தை
உருவாக்குவதற்காக
அனைவருக்கும்
ஒரேமாதிரி படிப்பிக்கின்றார்.
ஒவ்வொருவருவருக்கும்
எதுவரை
தனித்தனியாக
படிப்பிக்க
முடியும்?
எவ்வளவு
அதிகமான குழந்தைகள்
இருக்கிறார்கள்!
அந்த
படிப்பில்
சிலர்
பெரிய
மனிதர்களின்
குழந்தைகள்
இருக்கிறார்கள்,அதிகம்
செலவு
செய்ய
முடியும்
என்றால்
அவர்களுக்கு
கூடுதலாகவும்
படிப்பிக்கின்றார்கள்.
டீச்சர்
தெரிந்திருக்கின்றார்,
இவர்
மந்தமாக
இருக்கின்றார்.
ஆகையினால்
படிப்பித்து
அவரை
ஸ்காலர்ஷிப்புக்குத்
(உதவித்தொகை)
தகுதியானவராக
மாற்றுகிறார்கள்.
இந்த
பாபா
அப்படிச்
செய்வதில்லை.
இவர்
அனைவருக்கும்
ஒரேமாதிரி படிப்பிக்கின்றார்.
அது
டீச்சர்
கூடுதல்
புருஷார்த்தம்
செய்ய
வைக்க
வேண்டும்.
இவர்
யாருக்கும்
தனியாக கூடுதல்
முயற்சி
செய்ய
வைப்பதில்லை.
கூடுதல்
முயற்சி
என்றாலே
டீச்சர்
ஏதாவது
கருணை
காட்டுகின்றார்.
ஆனால்
அதற்குப்
பணம்
வாங்குகிறார்கள்.
குறிப்பாக
நேரம்
ஒதுக்கி
படிப்பிக்கின்றார்கள்,
அதன்
மூலம் அவர்கள்
அதிகம்
படித்து
புத்திசாலிகளாக
ஆகின்றார்கள்.
இங்கே
அதிகமாக
எதுவும்
படிக்க
வேண்டும்,
என்ற
விஷயமே
இல்லை.
இவருடைய
விஷயமே
ஒன்று
தான்
ஆகும்.
மன்மனாபவ
என்ற
ஒரே
மந்திரத்தைத் தான்
கொடுக்கின்றார்.
நினைவின்
மூலம்
என்ன
நடக்கிறது,
இதைக்
குழந்தைகளாகிய
நீங்கள்
புரிந்து
கொள்கிறீர்கள்.
பாபா
தான்
தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவர்,
அவரை
நினைவு
செய்வதின்
மூலம்
நாம்
தூய்மையாவோம்,
என்பதை
தெரிந்துள்ளீர்கள்.
நல்லது
.
குட்நைட்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
முழு
உலகமும்
இப்போது
சுடுகாடாக
ஆகப்போகிறது,
வினாசம்
முன்னால்
இருக்கிறது,
ஆகையால்
யாரிடமும்
சம்பந்தம்
வைக்கக்
கூடாது.
கடைசி
காலத்தில்
ஒரு
பாபாவினுடைய நினைவு
தான்
இருக்க
வேண்டும்.
2.
இது
ஷியாமிலிருந்து சுந்தராக,
தூய்மையற்ற
நிலையிலிருந்து தூய்மையாக
ஆவதற்கான புருஷோத்தம
சங்கமயுகமாகும்,
உத்தமபுருஷர்களாக
ஆவதற்கான
சமயம்
இதுவே ஆகும்,
எப்போதும்
இந்த
நினைவிலேயே
இருந்து
தன்னை
சோழியிலிருந்து வைரத்திற்குச் சமமாக
மாற்ற
வேண்டும்.
வரதானம்:
யாரைப்
பற்றிய
வீணான
தகவல்களையாவது
கேட்டு
ஆர்வத்தை
அதிகப் படுத்துவதற்கு
பதிலாக
முற்றுப்புள்ளி
வைக்கக்
கூடிய,
மற்றவர்களின்
வழிமுறையிலிருந்து விடுபட்டவர்
ஆகுக.
அநேகக்
குழந்தைகள்
போகப்போக
ஸ்ரீமத்தோடு
கூடவே
மற்ற
ஆத்மாக்களின்
அறிவுரையையும்
கலந்து விடுகின்றனர்.
பிராமண
உலகின்
தகவல்
எதையாவது
யாரேனும்
சொன்னால்
அதை
மிகுந்த
ஆர்வத்துடன் கேட்கின்றனர்.
அவர்களால்
எதுவும்
செய்ய
முடியாமல்,
கேட்டு
விடுகின்றனர்
என்றால்
அந்தத்
தகவல் புத்தியில்
சென்று
விடுகின்றது.
பிறகு
நேரம்
வீணாகிறது.
ஆகவே
பாபாவின்
கட்டளையாவது
–
கேட்டாலும் கேட்காதிருங்கள்.
யாராவது
கேட்டாலும்
கூட
நீங்கள்
முற்றுப்புள்ளி
வைத்து
விடுங்கள்.
எந்த
மனிதர்
சொல்வதைக் கேட்டீர்களோ,
அவர்கள்
மீது
திருஷ்டி
அல்லது
சங்கல்பத்திலும்
கூட
வெறுப்பின்
பாவனை
இருக்கக்
கூடாது.
அப்போது
தான்
மற்றவர்
சொல்லும்
வழிமுறையில்
இருந்து
விடுபட்டவர்
எனச்
சொல்லப்
படுவீர்கள்.
சுலோகன்:
யாருடைய
உள்ளம்
விசாலமாக
உள்ளதோ,
அவர்களிடம் கனவிலும்
கூட
எல்லைக்குட்பட்ட
சம்ஸ்காரம்
வெளிப்படாது.
ஓம்சாந்தி