18.12.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! மாயை மிகவும் சக்தி வாய்ந்தது. இதனிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். நாங்கள் பிரம்மாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம், எங்களுடைய தொடர்பு நேரடியாக சிவபாபாவுடன் என்ற சிந்தனை ஒருபோதும் வரக் கூடாது,

 

கேள்வி

எந்தக் குழந்தைகள் மீது அனைவருடைய அன்பும் தானாகவே ஏற்படுகிறது?

 

பதில் :

முதலில் அனைத்து விசயங்களையும் தனக்குள்ளே நடைமுறைப்படுத்தி விட்டு பிறகு மற்றவர்களுக்கு சொல்பவர்கள் மீது அனைவருடைய அன்பும் தானாகவே ஏற்படும். ஞானத்தை தனக்குள் முதலில் தாரணை செய்து பிறகு பலருக்கும் சேவை செய்ய வேண்டும். அப்போது அனைவரின் அன்பும் கிடைக்கும். தான் செய்யாமல் பிறருக்கு சொன்னால் அவர் சொல்வதை யாரேனும் ஏற்பார்களா? அவர்கள் பண்டிதர் போல் ஆகி விடுகின்றனர்.

 

ஓம் சாந்தி.

குழந்தைகளிடம் தந்தை கேட்கிறார், ஆத்மாக்களிடம் பரமாத்மா கேட்கிறார் - நாம் பரமபிதா பரமாத்மாவின் முன் அமர்ந்திருக்கிறோம் என்பதை அறிகிறீர்களா? பாபாவுக்கு தனது ரதம் (உடல்) இல்லை என்ற நிச்சயம் இருக்கிறது அல்லவா? இந்த புருவ மத்தியில் தந்தையின் இருப்பிடம் உள்ளது. தந்தை அவரே சொல்கிறார்- நான் இவருடைய (பிரம்மாவுடைய) புருவ மத்தியில் அமர்கிறேன். இவருடைய சரீரத்தை கடனாகப் பெறுகிறேன். ஆத்மா புருவ மத்தியில் அமர்வது போல் தந்தையும் கூட இங்குதான் வந்து அமர்கிறார். பிரம்மாவும் இருக்கிறார், சிவபாபாவும் இருக்கிறார். இந்த பிரம்மா இல்லை என்றால் சிவபாபாவும் இருக்க மாட்டார். சிலர் நாங்கள் சிவபாபாவைத்தான் நினைவு செய்வோம், பிரம்மாவை அல்ல என்று சொல்லலாம். ஆனால் சிவபாபா எப்படிப் பேசுவார்? எப்போதும் சிவபாபாவை மேலே பரந்தாமத்தில் இருப்பதாக நினைவு செய்தபடிதான் வந்தனர். நாம் தந்தையுடன் இங்கே அமர்ந்திருக்கிறோம் என்று இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். சிவபாபா மேலே இருக்கிறார் என்று புரிந்து கொள்வதில்லை. பக்தி மார்க்கத்தில் சிவபாபா மேலே இருக்கிறார், அவருடைய சிலை இங்கே பூஜிக்கப்படுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். தந்தை ஞானக்கடல், ஞானம் நிறைந்தவர் என்று அறிந்திருக்கிறீர்கள் எனும் போது எங்கிருந்து ஞானத்தைக் கூறுகிறார்? பிரம்மாவின் உடலில் இருந்து கூறுகிறார். நாங்கள் பிரம்மாவை ஏற்பதில்லை என்று பலர் சொல்கின்றனர். ஆனால் நான் இவருடைய வாயின் மூலமாகத்தான் என்னை நினைவு செய்யுங்கள் என்று உங்களுக்குக் கூறுகிறேன். இது புரிந்து கொள்ளும் விஷயம் அல்லவா! பிரம்மாவோ சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று தான் சொல்கிறார். என்னை நினைவு செய்யுங்கள் என்று இவர் எங்கே சொல்கிறார்? என்னை நினைவு செய்யுங்கள் என்று இவர் மூலமாக சிவபாபா சொல்கிறார். இந்த மந்திரத்தை நான் இவர் வாய் மூலம் கொடுக்கிறேன். பிரம்மா இல்லாவிட்டால் இந்த மந்திரத்தை நான் எப்படி கொடுப்பேன்? பிரம்மா இல்லாவிட்டால் நீங்கள் சிவபாபாவை எப்படி சந்திப்பீர்கள்? எப்படி என் அருகில் அமர்வீர்கள்? நல்ல நல்ல மகாரதிகளுக்கும் கூட இப்படிப்பட்ட சிந்தனைகள் வந்து விடுகின்றன, அதன் மூலம் மாயை என்னிடமிருந்து முகத்தைத் திருப்பி விட்டு விடுகிற்து. பிரம்மாவை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொல்கிறார்கள் எனும்போது அவர்களின் கதி என்னவாகும்? மாயை எவ்வளவு சக்தி வாய்ந்ததாக உள்ளது, அது ஒரேடியாக முகத்தையே திருப்பி விட்டு விடுகிறது. இப்போது உங்கள் முகத்தை சிவபாபா முன்னால் திருப்பி இருக்கிறார். நீங்கள் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். பிறகு பிரம்மா ஒன்றுமில்லை என்று புரிந்து கொள்பவர்களின் கதி என்னவாகும்? துர்கதியை அடைகின்றனர். ! இறை தந்தையே ! என்று மனிதர்கள் கூப்பிடுகின்றனர். இறை தந்தை கேட்கிறாரா என்ன? விடுவிப்பவரே வாருங்கள் என்று கூறுகின்றனர். அங்கிருந்தபடியே விடுவிப்பாரா என்ன? ஒவ்வொரு கல்பத்திலும் புருஷோத்தம சங்கம யுகத்தில்தான் தந்தை வருகிறார். யாருக்குள் வருகிறாரோ அவரையே புறக்கணித்து விட்டால் அதை என்னவென்று சொல்வது? மாயா அந்த அளவு பலசாலியாக உள்ளது, அது நம்பர் ஒன் ஒரு பைசாவுக்கும் மதிப்பற்றவராக ஆக்கி விடுகிறது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் கூட ஒரு சில சென்டர்களில் இருக்கின்றனர். ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தந்தை கூறுகிறார். பாபாவால் சொல்லப்பட்ட ஞானத்தை மற்றவர்களுக்கு சொல்லவும் செய்கின்றனர், ஆனால் பண்டிதர்கள் போல செய்கின்றனர். பண்டிதரின் கதையை பாபா கூறுவது போல. இந்த சமயத்தில் நீங்கள் தந்தையின் நினைவின் மூலம் விஷக்கடலைக் கடந்து சென்று பாற்கடலுக்குச் செல்கிறீர்கள் அல்லவா! பக்தி மார்க்கத்தில் அளவற்ற கதைகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இராம நாமம் சொல்வதன் மூலம் கரை சேர்ந்து விடுவீர்கள் என்று பண்டிதர் பிறருக்குச் சொல்லிக் கொண்டிருந்தாராம், ஆனால் அவர் தானே மூழ்கி விட்டார். தாமே விகாரங்களில் சென்றபடி இருப்பது, ஆனால் பிறருக்கு நிர்விகாரி ஆகவேண்டும் என்று சொல்வது. இவர்களின் (அறிவுரையின்) தாக்கம் எப்படி ஏற்படும்? இங்கும் கூட அங்கங்கே சொல்லித் தருபவர்களை விட கேட்பவர்கள் வேகமாகச் சென்று விடுகின்றனர். யார் பலருக்கு சேவை செய்கின்றனரோ அவர் அனைவருக்கும் பிடித்தவராக ஆகிறார். பண்டிதர் பொய்யானவர் என்று தெரிந்து விட்டால் அவர் மீது யார் அன்பு செலுத்துவார்கள்? பிறகு நடைமுறையில் யார் நினைவு செய்கின்றனரோ அவர் மீது அன்பு ஏற்பட்டுவிடுகிறது. நல்ல நல்ல மகாரதிகளையும் கூட மாயை விழுங்கி விடுகிறது.

 

பாபா புரிய வைக்கிறார் - இன்னும் கர்மாதீத் நிலை (கர்மங்களை வென்ற நிலை) உருவாகவில்லை. சண்டைக்கு ஏற்பாடுகள் ஆகும் வரை அது நடக்காது. ஒரு புறம் சண்டைக்கு ஏற்பாடுகள் நடக்கும், மறுபுறம் கர்மாதீத் நிலை உண்டாகும். ஒன்றுக்கொன்று முழுமையான தொடர்பு உள்ளது. பிறகு சண்டை முடிந்து விடும், மாற்றம் ஆகி விடுவீர்கள். முதலில் ருத்ர மாலை உருவாகிறது. இந்த விசயங்கள் வேறு யாருக்கும் தெரியாது. இந்த உலகம் மாற வேண்டும் என்று நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். உலகம் இன்னும் 40 ஆயிரம் வருடங்கள் இருக்கும் என்று அவர்கள் புரிந்து கொள்கின்றனர். வினாசம் முன்னால் நின்றிருக்கிறது என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் கொஞ்சம்பேர் இருக்கிறீர்கள், அவர்கள் நிறையபேர் இருக்கின்றனர். நீங்கள் சொல்வதை யார் ஏற்பார்கள்? நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள், பிறகு உங்கள் யோக பலத்தால் பலர் ஈர்க்கப்பட்டு வருவார்கள். உங்களிடமிருந்து எந்த அளவு துரு நீங்குமோ அந்த அளவு சக்தி நிறைந்தபடி இருக்கும். பாபா அனைத்தும் அறிந்தவர் என்பதல்ல. அனைவரின் மன நிலையையும் அறிவார். தந்தை குழந்தைகளின் நிலையை அறிய மாட்டாரா என்ன? அனைத்தும் தெரிந்திருக்கும். இப்போதே கர்மாதீத நிலை ஏற்பட முடியாது. மிக மோசமான தவறுகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது, மகாரதிகளிலும் ஏற்படும். பேச்சுவார்த்தை, நடத்தை முதலான அனைத்தும் பிரபலமாகி விடும். இன்னும் தெய்வீக நடத்தை உடையவர்களாக வேண்டும். தேவதைகள் அனைத்து குணங்களும் நிறைந்தவர்கள் அல்லவா! இப்போது நீங்கள் இப்படி ஆக வேண்டும். ஆனால் மாயை யாரையும் விட்டு வைப்பதில்லை. தொட்டால் சுருங்கியாக ஆக்கி விடும். 5 படிகள் (விகாரங்கள்) உள்ளன அல்லவா. தேக அபிமானம் வருவதால் மேலிருந்து ஒரேடியாக விழுகின்றனர். விழுந்ததும் உடன் இறந்து விடுகிறார். இன்றைய நாட்களில் தன்னை மாய்த்துக் கொள்ள எப்படியெல்லாம் உபாயம் செய்கின்றனர். 20 மாடிகளிலிருந்து விழுந்து ஒரேடியாக மடிந்து போய் விடுகின்றனர். ஆஸ்பத்திரியிலேயே படுத்துக் கிடந்து துக்கத்தை அனுபவிக்கும்படியும் ஆகக் கூடாது. பிறகு சிலர் தன் மீது நெருப்பை பற்ற வைத்துக் கொண்டு விடுகின்றனர். யாராவது காப்பாற்றி விட்டால் எவ்வளவு துக்கத்தை அனுபவிக்கின்றனர்! எரிந்து போய்விட்டால் ஆத்மா ஓடிப்போய் விடும். ஆகையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை செய்து கொண்டால் துக்கத்திலிருந்து விடுபடலாம் என்று புரிந்து கொள்கின்றனர். ஆவேசம் வந்தால் அவ்வளவுதான்! பலரும் ஆஸ்பத்திரியில் எவ்வளவு துக்கத்தை அனுபவிக்கின்றனர்! இவர் துக்கத்திலிருந்து விடுபட முடியாது, இதைவிட மாத்திரை கொடுத்தால் இவர் முடிந்து விடுவார் என்று டாக்டர்கள் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இப்படி மாத்திரை கொடுத்து அழிப்பது மகா பாவம் என்று அவர்கள் நினைக்கின்றனர். இந்த வேதனையை அனுபவிப்பதை விட சரீரம் விட்டு விடலாம் என்று ஆத்மா தானே சொல்கிறது. இப்போது சரீரத்தை எப்படி விடுவது? இது அளவில்லா துக்கம் நிறைந்த உலகம். அங்கே எல்லையில்லா சுகம் இருக்கும்.

 

குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள் - நாம் இப்போது திரும்பிச் செல்கிறோம், துக்க தாமத்திலிருந்து சுகதாமம் செல்கிறோம் எனும்போது அதனை நினைவு செய்ய வேண்டும். தந்தையும் சங்கம யுகத்தில் வருகிறார், அப்போது உலகமாற்றம் ஏற்படுகிறது. நான் குழந்தைகளாகிய உங்களை துக்கங்களிலிருந்து விடுவித்து புதிய பாவன உலகத்திற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். தூய்மையான உலகத்தில் கொஞ்சம் பேர் இருப்பார்கள். இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளனர், ஆகையால் பதீத பாவனா....... என்று அழைக்கின்றனர். எங்களை இந்த சீச்சீ (கீழான) உலகத்திலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று நாம் மகாகாலனை அழைக்கிறோம் என்று புரிந்து கொள்வதில்லை. கண்டிப்பாக பாபா வருவார், அனைவரும் இறப்பார்கள், அப்போது அமைதி ஏற்படும் அல்லவா! அமைதி அமைதி என்றபடி இருக்கின்றனர். அமைதி சாந்தி தாமத்தில் இருக்கும். ஆனால் இந்த உலகத்தில் அமைதி எப்படி ஏற்படும்? அதுவும் இவ்வளவு அளவற்ற மனிதர்கள் இருக்கும்போது.... சத்யுகத்தில் சுகம், அமைதி இருந்தது. இப்போது கலியுகத்தில் பல தர்மங்கள் இருக்கின்றன. அவை முடியும்போது ஒரு தர்மத்தின் ஸ்தாபனை ஆகும்போது சுகம், அமைதி ஏற்படும். ஐயோ என்ற அலறலுக்குப் பிறகு வெற்றி கோஷம் எழும். மரணத்தின் வியாபாரம் எவ்வளவு சூடு பிடிக்கப் போகிறது என்று போகப் போக பாருங்கள். எப்படி இறப்பார்கள்! அணுகுண்டுகள் மூலம் கூட தீ பற்றும். போகப் போக பார்க்கும்போது பலரும் சொல்வார்கள் - வினாசம் ஏற்படத்தான் போகிறது.

 

இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். வினாசம் ஏற்படத்தான் போகிறது. ஒரு தர்மத்தின் ஸ்தாபனையை தந்தை செய்விக்கிறார். இராஜயோகம் கூட கற்றுத் தருகிறார். மற்ற அனைத்து பல தர்மங்களும் முடிந்து விடும். கீதையில் கொஞ்சம் கூட எடுத்துக் கூறவில்லை. பிறகு கீதை படிப்பதன் முடிவு என்ன? பிரளயம் ஆகி விட்டது என்று காட்டுகின்றனர். வெள்ளம் ஏற்படலாம், ஆனால் முழு உலகமும் அவ்வாறு ஆகாது. பாரதமோ அழிவற்ற தூய்மையான கண்டம். அதிலும் கூட அபு அனைத்தையும் விட தூய்மையான தீர்த்த ஸ்தானமாகும். அங்கே தந்தை வந்து அனைவருக்கும் சத்கதி கொடுக்கிறார். தில்வாடா கோவில் எப்படி நல்ல நினைவிடமாக உள்ளது! எவ்வளவு அர்த்தம் நிறைந்ததாக உள்ளது. ஆனால் அதனை யார் கட்டினார்களோ அவர்களுக்கு இது தெரியாது. ஆனாலும் நல்ல புத்திசாலிகளாக இருந்தனர் அல்லவா! துவாபர யுகத்தில் கண்டிப்பாக நல்ல புத்திசாலிகளாக இருப்பார்கள். கலியுகத்தில் அனைவரும் தமோபிரதானமாக உள்ளனர். அனைத்து கோவில்களையும் விட இது உயர்வானது, இங்கே நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். நாம் சைதன்யமானவர்கள், அது நம்முடைய ஜடமான நினைவுச் சின்னம்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்னும் கொஞ்ச காலத்திற்கு இந்த கோவில்கள் முதலானவை இன்னும் உருவாகிக் கொண்டிருக்கும். பிறகு உடைக்க வேண்டிய நேரம் வரும். அனைத்து கோவில்கள் முதலானவை உடைந்து போய் விடும். மொத்தமாக மரணம் ஏற்படும். மிகப் பெரிய மகாபாரத சண்டை பாடப்பட்டுள்ளது அல்லவா! அதில் அனைவரும் முடிந்து போய் விடுவார்கள். தந்தை சங்கம யுகத்தில்தான் வருகிறார் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். தந்தைக்கு இரதம் தேவைப்படுகிறது அல்லவா! ஆத்மா சரீரத்தில் வரும்போது அசைவு ஏற்படுகிறது. ஆத்மா சரீரத்திலிருந்து வெளியேறும்போது சரீரம் ஜடம் ஆகிவிடுகிறது. ஆக, இப்போது நீங்கள் வீட்டிற்குச் செல்கிறீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் இலட்சுமி நாராயணராக ஆக வேண்டும். எனவே அதற்கேற்ற குணமும் தேவை அல்லவா! குழந்தைகளாகிய நீங்கள் இந்த விளையாட்டையும் அறிவீர்கள். இந்த விளையாட்டு எவ்வளவு அதிசயமாக உருவாக்கப்பட்டுள்ளது! இந்த விளையாட்டின் இரகசியத்தை தந்தை வந்து புரிய வைக்கிறார். தந்தை ஞானம் நிறைந்தவர், விதைரூபமாக இருப்பவர் அல்லவா! தந்தைதான் வந்து முழு விருட்சத்தின் ஞானத்தைக் கொடுக்கிறார் - இதில் என்ன என்ன நடக்கிறது, நீங்கள் இதில் எத்தனை பாகங்கள் நடித்தீர்கள் முதலானவையின் ஞானம் கொடுக்கிறார். அரை கல்ப காலம் தெய்வீக இராஜ்யம், அரை கல்பம் அசுர இராஜ்யம். நல்ல நல்ல குழந்தைகளின் புத்தியில் முழு ஞானமும் இருக்கிறது. தந்தை தனக்குச் சமமாக ஆசிரியராக ஆக்குகிறார். ஆசிரியர் களும் வரிசைக்கிரமமாக ஆகின்றனர். சிலரோ ஆசிரியராகி பிறகு கெட்டுப் போகின்றனர். பலருக்கு கற்றுக் கொடுத்துவிட்டு தான் இல்லாமல் போய் விடுகின்றனர். சிறிய சிறிய குழந்தைகளுக்குள் வித விதமான சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. இங்கும் கூட ஞானத்தை சரியான முறையில் எடுக்காதவர்கள், நடத்தையை திருத்திக் கொள்ளாதவர்கள் பலருக்கு துக்கம் கொடுக்க நிமித்தமாக ஆகிவிடுகின்றனர் என்று தந்தை புரிய வைக்கிறார். இதுவும் கூட சாஸ்திரங்களில் காட்டியுள்ளனர் - அசுரர்கள் மறைந்து அமர்ந்திருந்தனர், பிறகு வெளியே சென்று துரோகிகள் ஆகி எவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்தனர்? இவையனைத்தும் நடக்கவே செய்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார் எனும்போது எவ்வளவு பேர் தடை ரூபங்களாகி விடுகின்றனர்!

 

நீங்கள் சுகம்-சாந்தியின் ஸ்தம்பமாக உள்ளீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் மிகவும் இராயலாக இருக்கிறீர்கள். உங்களைப் போல இராயலாக இந்த சமயம் வேறு யாரும் இல்லை. எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் குழந்தைகள் எனும்போது எவ்வளவு இனிமையானவராகி நடக்க வேண்டும்! யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. இல்லாவிட்டால் அது இறுதிக் காலத்தில் நினைவுக்கு வரும். பிறகு தண்டனைகள் அனுபவிக்க வேண்டியிருக்கும். இப்போது வீடு திரும்ப வேண்டும் என்று தந்தை சொல்கிறார். சூட்சும வதனத்தில் குழந்தைகளுக்கு பிரம்மாவின் காட்சி தெரியும், ஆகையால் நீங்களும் கூட சூட்சும வதன வாசியாக ஆகுங்கள். அசைவுகளின் (மூவி) பயிற்சி செய்ய வேண்டும். மிகவும் குறைவாக பேச வேண்டும், இனிமையாகப் பேச வேண்டும். இப்படி முயற்சி, செய்து செய்து நீங்கள் சாந்தி ஸ்தம்பமாக ஆகி விடுவீர்கள். உங்களுக்கு கற்றுக் கொடுப்பவர் தந்தை ஆவார். நீங்கள் பிறகு மற்றவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். பக்தி மார்க்கம் பேசும் (டாக்கி) மார்க்கமாகும். இப்போது நீங்கள் அமைதியானவர்களாக ஆக வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளூக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. மிகவும் இராயல்டியுடன் இனிமையாகவும் நடந்துகொள்ள வேண்டும். சாந்தி மற்றும் சுகத்தின் ஸ்தம்பமாக ஆவதற்காக மிகவும் குறைவாக, இனிமையாக பேச வேண்டும். அசைவுகளின் (மூவி) பயிற்சி செய்ய வேண்டும். அதிகம் பேசக் கூடியவர்களாக (டாக்கி) ஆகக் கூடாது.

 

2. தனது நடத்தையை தெய்வீகமாக ஆக்க வேண்டும். தொட்டால்சுருங்கி செடி போல ஆகக் கூடாது. யுத்தத்திற்கு முன்பாக கர்மாதீத் (கர்மங்களை வென்ற) நிலை அடைய வேண்டும். விகாரமற்றவர் ஆகி பிறரையும் விகார மற்றவராக ஆக்க வேண்டும்.

 

வரதானம் :

கர்மம், சம்மந்தம் இரண்டிலும் சுயநல உணர்வில் இருந்து விடுபட்டு இருக்கக்கூடிய, தந்தைக்கு சமமான கர்மாதீத் ஆகுக.

 

குழந்தைகளாகிய உங்களின் சேவை, அனைவருக்கும் முக்தியளிப்பதாகும். ஆக, மற்றவர்களை விடுவித்து விட்டு, தன்னை பந்தனத்தில் மாட்டி வைக்கக் கூடாது. எப்போது எல்லைக்குட்பட்ட எனது-எனது என்பதிலிருந்து விடுபடுவீர்களோ, அப்போது அவ்யக்த ஸ்திதியின் அனுபவம் செய்ய முடியும். எந்தக் குழந்தைகள் லௌகீக மற்றும் அலௌகீக கர்மம் மற்றும் சம்மந்தம் இரண்டிலும் சுயநல உணர்விலிருந்து விடுபட்டு இருப்பார்களோ, அவர்கள் தாம் பாப்-சமான் கர்மாதீத் ஸ்திதியின் அனுபவம் செய்ய முடியும். ஆகவே சோதித்துப் பாருங்கள் -- எது வரை கர்மங்களின் பந்தனத்திலிருந்து விலகியவராக ஆகியிருக்கிறோம்? வீணான சுபாவ-சம்ஸ்கார வசமாவதில் இருந்து விடுபட்டிருக்கிறோமா? எப்போதாவது ஏதேனும் பழைய சம்ஸ்கார-சுபாவம் தன்வசமாக ஆக்காமல் இருக்கிறதா?

 

சுலோகன் :

சமமாக மற்றும் சம்பூர்ணமாக ஆக வேண்டுமானால் அன்பின் கடலில் மூழ்கி விடுங்கள்.

 

ஓம்சாந்தி