03.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே - நினைவின் ஆதாரம் அன்பு; அன்பில் குறைவு என்றால் நினைவு ஒரு நிலைப்பட்டதாக இருக்காது. நினைவு ஒருமுகப்பட்டதாக இல்லையென்றால் அன்பு கிடைக்காது.

 

கேள்வி:

ஆத்மாவிற்கு அனைத்திலும் அன்பான பொருள் எது? அதன் அடையாளம் என்ன?

 

பதில்:

இந்த சரீரம் ஆத்மாவுக்கு அனைத்தையும் விடப் பிரியமான பொருளாகும்.சரீரத்தின் மீது அவ்வளவு அன்பு உள்ளது, அதை விடவே விரும்புவதில்லை. அதைப் பாதுகாப்பதற்காக அநேக ஏற்பாடுகளைச் செய்கின்றது. பாபா சொல்கிறார், குழந்தைகளே, இதுவோ தமோபிரதான் சீச்சீ சரீரம். நீங்கள் இப்போது புதிய சரீரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனால் இந்தப் பழைய சரீரத்தின் மீது வைத்த பற்றுதலை நீக்கிவிட வேண்டும். இந்த சரீரத்தின் உணர்வு இருக்கக் கூடாது. இதுதான் அடைய வேண்டிய குறிக்கோள்.

 

ஓம் சாந்தி!

ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வைக்கிறார். இப்போது குழந்தைகள் புரிந்து கொண்டு விட்டனர் - தெய்வீக சுயராஜ்யத்தின் திறப்பு விழா முடிந்து விட்டது. இப்போது அங்கே செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்காவது கிளைகள் திறக்கப்பட்டால் பெரிய மனிதர்கள் மூலம் திறப்பு விழா நடத்துவதற்காக முயற்சி செய்யப் படுகின்றது. பெரிய மனிதர்களைப் பார்த்து கீழே உள்ள அலுவலர்கள் முதலானவர்கள் அனைவரும் கூட வருவார்கள். கவர்னர் வருவாரானால் பெரிய பெரிய மந்திரிகள் முதலானோரும் கூட வருவார்கள். கலெக்டரை அழைப்பீர்களானால் பெரிய மனிதர்கள் வரமாட்டார்கள். அதனால் பெரிய பெரிய மனிதர்கள் யாரையாவது வரவழைப்பதற்கு முயற்சி செய்யப்படுகின்றது. ஏதேனும் சாக்கு வைத்து உள்ளே வருவார்களானால் நீங்கள் அவர்களுக்கு வழி சொல்லுங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி எப்படிக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்று. பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு மனிதர்கள் யாரும் இதுபோல் தெரிந்து கொண்டிருக்கவில்லை. பகவான் வந்திருக்கிறார் என்று இதுபோல் நேரடியாகச் சொல்லக்கூடாது. பகவான் வந்துவிட்டார் என்றும் கூட அநேகர் சொல்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. அதுபோல் தங்களை பகவான் எனச் சொல்லிக் கொள்பவர்களோ அநேகர் வந்துள்ளனர். இதுபோல் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் - கல்பத்திற்கு முன்போல் டிராமாவின் திட்டப்படி எல்லையற்ற தந்தை வந்து எல்லையற்ற ஆஸ்தி தந்து கொண்டிருக்கிறார், இந்த வரி முழுவதையும் எழுத வேண்டும். எழுதியிருப்பதை மனிதர்கள் படிப்பார்கள், அவர்களது அதிர்ஷ்டத்தில் இருக்குமானால் முயற்சி செய்வார்கள், நாம் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பது குழந்தை களாகிய உங்களுக்குத் தெரியும் இல்லையா? இங்கோ நிச்சயபுத்தி உள்ள குழந்தைகள் தான் வருகிறார்கள். நிச்சயபுத்தி உள்ளவர்களும் கூடப் பிறகு ஏதாவதொரு சமயம் சந்தேக புத்தியுள்ளவர்களாக ஆகிவிடுகிறார்கள். மாயா அவர்களைப் பின் தொடர்கின்றது. போகப் போக தோல்வி அடைந்து விடுகிறார்கள். ஒரு தரப்பினர் மட்டும் சதா வென்று கொண்டேயிருப்பதற்கும் தோல்வி அடையவே மாட்டார்கள் என்பதற்கும் சட்டமில்லை. தோல்வி மற்றும் வெற்றி இரண்டுமே நடைபெறுகின்றன. யுத்தத்திலும் கூட மூன்று வகை உள்ளன. முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம். எப்போதாவது யுத்தமே செய்யாதவர்களும் கூட பார்ப்பதற்காக வந்து விடுகிறார்கள். அவர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதும் இந்த நிறம் ஏறி, அவர்களும் வந்து விடட்டும். ஏனெனில் நீங்கள் மகாரதி யுத்தவீரர்கள் என்பது உலகத்திற்குத் தெரியாது. ஆனால் உங்கள் கையில் ஆயுதங்கள் முதலியன எதுவும் இல்லை. உங்கள் கையில் ஆயுதங்கள் முதலானவை இருப்பது அழகல்ல. ஆனால் பாபா சொல்லிப் புரிய வைக்கிறார் இல்லையா? ஞானம் என்பது வாள், ஞானம் என்பது கோடாலி. ஆக, அவர்கள் பிறகு ஸ்தூலத்தில் புரிந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா ஞானத்தின் அஸ்திர-சஸ்திரங்களைத் தந்திருக்கிறார். இதில் இம்சையின் விஷயமேயில்லை. ஆனால் இதை புரிந்து கொள்ளவில்லை. தேவி களுக்கு ஸ்தூல ஆயுதங்கள் முதலியவற்றைத் தந்திருக்கிறார்கள்.  அவர்களையும் இம்சிப்பவர்களாக ஆக்கி விட்டிருக்கிறார்கள். இது முற்றிலும் புத்தியற்ற தன்மையாகும். பாபா நன்றாக அறிந்திருக்கிறார், யார்-யார் மலராக ஆகக்கூடியவர்கள் என்று. அதை பாபா தாமே சொல்கின்றார், மலர் முன்னால் இருக்க வேண்டும். இவர்கள் மலராக ஆகக்கூடியவர்கள் என்பது நிச்சயம். பாபா குறிப்பாகப் பெயரைச் சொல்வ தில்லை. இல்லையென்றால், நாங்கள் என்ன முள்ளாக ஆகப்போகிறோமா எனக் கேட்பார்கள். நரனிலிருந்து நாராயணனாக யார் ஆவீர்கள் என்று பாபா கேட்டால் அனைவருமே கை உயர்த்துகின்றனர். தாங்களே புரிந்து கொண்டிருக்கிறார்கள், யார் அதிகமாக சேவை செய்கிறார்களோ அவர்கள் பாபாவையும் நினைவு செய்கிறார்கள், பாபாவிடம் அன்பு உள்ளது என்றால் நினைவும் அவரிடம் தான் இருக்கும். ஒருமுகப்பட்ட நிலையிலோ யாருமே நினைவு செய்ய முடிவதில்லை. நினைவு செய்ய முடிவதில்லை, அதனால் அன்பு இல்லை. அன்பான பொருளோ அதிகமாக நினைவு செய்யப்படும். குழந்தை அன்பிற்குரிய தாக இருந்தால் தாய்-தந்தை மடியில் எடுத்துக் கொள்வார்கள். சிறிய குழந்தைகளும் கூட மலர்களே! எப்படிக் குழந்தைகளாகிய உங்களுக்கு சிவபாபா விடம் செல்ல வேண்டுமென்று மனதில் தோன்றுகிறதோ அதுபோல் சிறு குழந்தைகளும் கவர்ந்து இழுக்கின்றார்கள். உடனே குழந்தையை மடியில் எடுத்துக் கொள்வார்கள், அன்பு செலுத்துவார்கள்.

 

இந்த எல்லையற்ற தந்தையோ மிகவும் அன்பானவர். அனைத்து சுப விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார். மனிதர்களுக்கு என்ன வேண்டும்? ஒன்று நமது உடல் நலம் நன்றாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படவே கூடாது. அனைத்திலும் நல்லது இந்த உடல் நலம். உடல் நலம் நன்றாக இருக்கிறது, ஆனால் பைசா இல்லை என்றால் அந்த உடல் நலமும் என்ன வேலைக்காகும்? பிறகு செல்வம் வேண்டும். அதன் மூலம் சுகம் கிடைக்கும். தந்தை சொல்கிறார் -உங்களுக்கு உடல் நலம் மற்றும் செல்வம் இரண்டுமே அவசியம் வேண்டும். இது ஒன்றும் புதிய விஷயமல்ல. இதுவோ மிகமிகப் பழைய விஷயம். நீங்கள் எப்போதெல்லாம் சந்திக்கிறீர்களோ அப்போதெல்லாம் இப்படித் தான் சொல்வீர்கள். மற்றப்படி இதுபோல் சொல்ல மாட்டீர்கள் - அதாவது லட்சம் வருடங்களாகி விட்டன அல்லது பலகோடி வருடங்களாகி விட்டன என்று. நீங்கள் அறிவீர்கள், இவ்வுலகம் எப்போது புதியதாக இருக்கிறது, பழையதாக எப்போது ஆகிறது என்று? நாம் ஆத்மாக்கள் புதிய உலகத்திற்குப் போகிறோம், பிறகு பழைய உலகத்திற்கு வருகிறோம். உங்களடைய பெயரே ஆல்ரவுண்டர் என வைக்கப்பட்டுள்ளது. நாடக பாகத்தை நடித்து நடித்து இப்போது கடைசியில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். முதல்-முதலில் ஆரம்பத்தில் நீங்கள் பாகத்தை நடிப்பதற்காக வருகின்றீர்கள். அது இனிய அமைதியான வீடு மனிதர்கள் அமைதிக்காக எவ்வளவு துன்புறுகின்றனர்! இதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை. அதாவது நாம் சாந்திதாமத்தில் இருந்தோம், பிறகு அங்கிருந்து இங்கு வந்திருக்கிறோம் பாகத்தை நடிப்பதற்காக. நடிக்க வேண்டிய பாகத்தை நடித்து முடிந்ததும் நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கே நிச்சயமாகச் செல்வோம். அனைவரும் சாந்திதாமத்திலிருந்து வருகிறார்கள். அனைவருடைய வீடு அந்த பிரம்மலோகம், பிரமாண்டம் - அங்கே தான் ஆத்மாக்கள் அனைவரும் இருக்கிறார்கள். ருத்ரனையும் அவ்வளவு பெரிய முட்டைபோல் உருவாக்குகின்றனர். அவர்களுக்கு இது தெரியாது, ஆத்மா மிகவும் சிறியது என்பது. நட்சத்திரத்தைப் போன்றது என்று சொல்லவும் செய்கிறார்கள். பிறகும் பெரிய உருவத்திற்குத் தான் பூஜை நடைபெறுகின்றது. நீங்கள் அறிவீர்கள், இவ்வளவு சிறிய புள்ளிக்கோ பூஜை நடைபெற முடியாது. பிறகு பூஜை யாருக்கு செய்வது? அதனால் பெரியதாக ஆக்குகின்றனர், பிறகு பூஜை செய்கின்றனர், பாலாபிஷேகம் செய்கின்றனர். உண்மையில் அந்த சிவன் எதையும் அனுபவிக்காதவர் (அபோக்தா). பிறகு அவருக்கு ஏன் பாலை அபிஷேகம் செய்கின்றனர்? பாலை அவர் அருந்துவாரானால் அனுபவிப்பவராக ஆகிவிடுகிறார். இதுவும் ஓர் அதிசயம்! அனைவரும் சொல்கிறார்கள், அவர் நம்முடைய வாரிசு, நாம் அவருடைய வாரிசு. ஏனென்றால் நாம் அவரிடம் (அன்பினால்) பலியாகி ஒப்படைத்து விட்டோம். எப்படி தந்தை குழந்தைகளுக்கு அர்ப்பணமாகி ஆஸ்தி முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு வானப்பிரஸ்தத்தில் சென்று விடுகின்றாரோ அதுபோல். இங்கும் கூட நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பாபாவிடம் நாம் எவ்வளவு சேமிக்கின்றோமோ அது பாதுகாப்பாக ஆகிவிடும். பாடலும் உள்ளது - சிலருடைய செல்வம் மண்ணோடு மண்ணாகி விடும்... குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், கொஞ்சம் கூட மிஞ்சப்போவதில்லை. எல்லாமே சாம்பலாகி விடும். இப்படியும் நினைக்காதீர்கள் - ஏரோப்ளேன் விழுகிறது என்றால் திருடர்களுக்குப் பொருள்கள் கிடைக்கின்றன ஆனால் திருடர்கள் முதலானவர்களும் கூட அழிந்து போவார்கள். அச்சமயம் திருட்டு போன்றவைகளும் கூட நின்று போகும். இல்லையென்றால் ஏரோப்ளேன் விழுகிறதென்றால் முதல் முதலில் எல்லாப் பொருள்களும் திருடர்கள் கையில் அகப்பட்டுவிடும். பிறகு அங்கேயே காடுகளில் பொருள்களை மறைத்துவிடுவார்கள். ஒரு வினாடியில் காரியத்தை முடித்துவிடு வார்கள் - சிலர் ராயல்டியுடன், பெருந்தன்மையாக சிலர் ராயல்டி இல்லாமல் இருப்பார்கள். நீங்கள் அறிவீர்கள், இவை அனைத்தும் வினாசமாகி விடும், நீங்கள் முழு உலகிற்கும் எஜமான் ஆகிவிடுவீர்கள். நீங்கள் எங்கும் எதையும் தேட வேண்டியிருக்காது. நீங்களோ மிக உயர்ந்த வீட்டில் பிறவி எடுக்கிறீர்கள். பணத்திற்கான தேவையே இருக்காது. இராஜாக்களுக்கு ஒருபோதும் பணத்தைப் பெற வேண்டுமென்ற சிந்தனையே கூட இருக்காது. தேவதைகளுக்கோ அது முற்றிலும் இருக்காது. பாபா உங்களுக்கு இவ்வளவு அனைத்தையும் கொடுத்துவிடுகின்றார், அதனால் அங்கே திருட்டு, பொறாமை முதலியவற்றின் விஷயமே இருக்காது. நீங்கள் முற்றிலும் மலராக மாறிவிடுகிறீர்கள். முள்ளும் மலரும் இருக்கின்றன இல்லையா? இங்கே அனைவரும் முள்ளாகவே இருக்கின்றனர். யாருக்கு விகாரமின்றி இருக்க முடிவதில்லையோ அவர்கள் நிச்சயமாக முள் என்று தான் சொல்லப்படுவார்கள். இராஜாவிலிருந்து தொடங்கி அனைவருமே முள்ளாக இருக்கிறார்கள். அதனால் தான் பாபா சொல்கிறார், நான் உங்களை லட்சுமி-நாராயணரைப்போல ஆக்குகின்றேன். அதாவது ராஜாவுக்கெல்லாம் மேலான ராஜாவாக ஆக்குகின்றேன். இந்த முட்கள் மலர்களுக்கு முன் போய்த் தலை வணங்குகின்றனர். இந்த லட்சுமி-நாராயணர் புத்திசாலிகள் இல்லையா? இதையும் பாபா சொல்லிப் புரிய வைத்திருக்கிறார், சத்யுகத்தினர் மகாராஜா என்றும் திரேதாயுகத்தினர் ராஜா என்றும் சொல்லப்படுகின்றனர். பெரிய மனிதர்களை மகாராஜா என்றும், குறைந்த வருமானம் உள்ளவர்களை ராஜா என்றும் சொல்வார்கள். மகாராஜாவின் தர்பார் முதலில் இருக்கும். பதவி வேறுபாடு என்பது இருக்கத்தானே செய்கிறது? நாற்காலிகளும் கூட நம்பர்வார் (பதவிக்கேற்ப) கிடைக்கும். வராதவர்கள் யாராவது வந்து விட்டாலும் முதலில் அவர்களுக்கு நாற்காலி கொடுப்பார்கள். மதிப்பு வைக்க வேண்டியுள்ளது. நீங்கள் அறிவீர்கள், நமக்கு மாலை உருவாகின்றது. இதுவும் குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. ருத்ர மாலையை எடுத்துச் சுற்றிக் கொண்டே இருக்கின்றனர். நீங்களும் சுற்றினீர்கள் இல்லையா? அநேக மந்திரங்களை ஜெபித்தீர்கள். பாபா சொல்கிறார், இதுவும் பக்தி தான். இங்கோ ஒருவரை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். மேலும் பாபா குறிப்பாகச் சொல்கிறார் இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே! பக்தி மார்க்கத்தில் தேக அபிமானத்தின் காரணத்தால் நீங்கள் அனைவரையும் நினைவு செய்தீர்கள். இப்போது என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். ஒரு தந்தை கிடைத்து விட்டார் என்றால், அமரும் போதும் எழும் போதும் பாபாவை நினைவு செய்வீர்களானால் மிகுந்த குஷி இருக்கும். பாபாவை நினைவு செய்வதன் மூலம் முழு உலகத்தின் இராஜபதவி கிடைக்கின்றது. எவ்வளவு நேரம் குறைந்து கொண்டே போகின்றதோ அவ்வளவு நினைவு செய்து கொண்டே இருப்பீர்கள். நாளுக்கு நாள் வேகமாக அடி எடுத்து வைத்து முன்னால் சென்று கொண்டே இருப்பீர்கள். ஆத்மா ஒருபோதும் களைத்துப் போவதில்லை. சரீரத்தால் ஏதாவது மலை மீது ஏறுவீர்களானால் களைத்துப் போவீர்கள். பாபாவை நினைவு செய்வதில் உங்களுக்கு எந்த ஒரு களைப்பும் இருக்காது. குஷியில் இருப்பீர்கள். பாபாவை நினைவு செய்து முன்னால் சென்று கொண்டேயிருப்பீர்கள். அரைக்கல்பமாகக் குழந்தைகள் முயற்சி செய்திருக்கிறார்கள் சாந்தி தாமத்திற்குச் செல்வதற்காக. நோக்கம், குறிக்கோள் பற்றி எதுவும் தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கோ அறிமுகம் உள்ளது. பக்தி மார்க்கத்தில் யாருக்காக இவ்வளவு அனைத்தையும் செய்தீர்களோ, அவர் சொல்கிறார் - இப்போது என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் சிந்தனை செய்து பாருங்கள், பாபா சரியாகச் சொல்கிறாரா இல்லையா? அவர்களோ தண்ணீராலேயே தூய்மையாகி விடுவோம் என்று நினைக்கிறார்கள். தண்ணீரோ இங்கேயும் கூட இருக்கின்றது. இது என்ன கங்கையின் தண்ணீரா? இல்லை. இதுவோ மழை பெய்ததால் ஒன்று சேர்ந்துள்ள நீர். ஊற்றுகளிலிருந்து வந்து கொண்டேயிருக்கின்றது. அதை கங்கை நீர் என்று சொல்ல மாட்டார்கள். ஒருபோதும் நிற்பதேயில்லை. இதுவும் ஓர் அற்புதம் ! மழை நின்று விடுகின்றது, ஆனால் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கின்றது. வைஷ்ணவர்கள் எப்போதும் கிணற்று நீரையே அருந்துகின்றனர். ஒரு பக்கம் இது தூய்மையானதென்று நினைக்கின்றனர். இன்னொரு பக்கம் பிறகு தூய்மை இல்லாமலிருந்து தூய்மை ஆவதற்காக கங்கையில் குளிக்கச் செல்கின்றனர். இதையோ அஞ்ஞானம் என்றே சொல்வார்கள். மழை நீரோ நல்லதாகவே இருக்கிறது. இதுவும் டிராமாவின் அற்புதம் எனச் சொல்லப்படுகிறது. ஈஸ்வரிய இயற்கையின் அற்புதம்! விதை எவ்வளவு சிறியது! அதிலிருந்து எவ்வளவு பெரிய மரம் வெளிப்படுகின்றது! இதையும் நீங்கள் அறிவீர்கள், பூமி தரிசாகி விட்டால் அதில் சக்தி இருப்பதில்லை, சுவை இருப்பதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா இங்கே தான் அனைத்து அனுபவங்களையும் செய்விக்கிறார் சொர்க்கம் எப்படி இருக்கும்? இப்போதோ அது இல்லை. டிராமாவில் இதுவும் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சாட்சாத்காரம் ஆகின்றது. அங்குள்ள பழங்கள் முதலியவை எவ்வளவு இனிப்பாக இருக்கும்! நீங்கள் தியானத்தில் பார்த்து வந்து சொல்கிறீர்கள். பிறகு எதை இப்போது சாட்சாத்காரமாகப் பார்க்கிறீர்களோ, அங்கே போகும்போது அதை இந்தக் கண்களால் பார்ப்பீர்கள், வாயினால் உண்பீர்கள். என்னென்ன சாட்சாத்காரம் பார்க்கிறீர்களோ அதையெல்லாம் அவை அனைத்தையும் இந்தக் கண்களால் பார்ப்பீர்கள். பிறகு எல்லாம் முயற்சியைப் பொருத்தது. முயற்சியே செய்யவில்லையென்றால், என்ன பதவி பெறுவீர்கள்? உங்களுடைய புருஷார்த்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் இதுபோல் ஆவீர்கள். இந்த வினாசத்திற்குப் பிறகு இந்த லட்சுமி-நாராயணரின் ராஜ்யம் இருக்கும். இதுவும் இப்போது தெரிந்திருக்கின்றது. தூய்மையாவதில் தான் நேரம் அதிகமாகிறது. நினைவு யாத்திரை முக்கியமானது. சகோதர-சகோதரி என உணர்வதாலும் கூட (விகாரத்தின் மீது) அருவருப்பு ஏற்படுவதில்லை என்பதால் இப்போது சொல்கிறார், சகோதரன்-சகோதரன் என உணருங்கள். சகோதர-சகோதரி என உணர்வதாலும் கூட திருஷ்டி மாறுவதில்லை. சகோதர-சகோதரன் என்று பார்ப்பதால் பிறகு சரீரம் என்பதே இல்லாமற் போகின்றது. நாமெல்லாம் ஆத்மாக்கள், சரீரமல்ல. என்னென்ன இங்கே பார்க்கப்படுகின்றனவோ அவை அனைத்துமே வினாசமாகி விடும். இந்த சரீரத்தை விட்டு நீங்கள் அசரீரி ஆகிச் செல்ல வேண்டும். நீங்கள் இங்கே வருவதே கற்றுக் கொள்வதற்காக - நாம் இந்த சரீரத்தை விட்டு எப்படிச் செல்வது? இது லட்சியம் இல்லையா? சரீரமோ ஆத்மாவுக்கு மிகவும் பிரியமானது. சரீரம் விட்டுப் போகாமலிருக்க வேண்டு மென்பதற்காக ஆத்மா எவ்வளவு ஏற்பாடுகளைச் செய்கின்றது! எங்காவது நமது இந்த சரீரம் விடுபட்டு விடக் கூடாது. ஆத்மாவுக்கு இந்த சரீரத்தின் மீது மிகமிக அன்பு உள்ளது. பாபா சொல்கிறார், இதுவோ பழைய சரீரம். நீங்களும் தமோபிரதானமாக இருக்கிறீர்கள். ஆத்மாவாகிய நீங்கள் மிகவும் மோசமாக ஆகிவிட்டிருக்கிறீர்கள். அதனால் துக்கத்திலும், நோயிலும் இருக்க வேண்டியுள்ளது. பாபா சொல்கிறார் - இப்போது சரீரத்தின் மீது பிரியம் வைக்கக்கூடாது. இதுவோ பழைய சரீரம். இப்போது நீங்கள் புதியதை வாங்கிக் கொள்ள வேண்டும். வாங்கிக் கொள்வதற்கென்று எந்த ஒரு கடையும் வைக்கப்படவில்லை. பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் தூய்மையாகி விடுவீர்கள். பிறகு சரீரமும் கூட உங்களுக்குப் தூய்மையானதாகக் கிடைக்கும். 5 தத்துவங்களும் கூடப் தூய்மையாகி விடும். பாபா அனைத்து விஷயங்களையும் சொல்லிப் புரிய வைத்தபின் சொல்கிறார் - மன்மனாபவ. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :-

1. சிவபாபாவுக்கு நாம் வாரிசு. அவர் நமக்கு வாரிசு. இந்த நிச்சயத்துடன் பாபா மீது முழு பலி ஆகவேண்டும். எவ்வளவு பாபாவிடம் சேமிப்பீர்களோ அவ்வளவு பாதுகாப்பாக ஆகிவிடும். சொல்லப்படுகின்றது - சிலருடைய செல்வம் மண்ணோடு மண்ணாகி விடும்...

 

2. முள்ளிலிருந்து மலராக இப்போது தான் ஆகவேண்டும். ஒருமுகப்பட்ட நினைவு மற்றும் சேவை மூலம் பாபாவின் அன்பிற்கு உரியவர்களாக ஆகவேண்டும். நாளுக்கு நாள் நினைவின் அடியை முன்னெடுத்து முன்னேறிச் சென்று கொண்டேயிருக்க வேண்டும்.

 

வரதானம்:

இந்த கல்யாணக்காரி யுகத்தில் அனைவருக்கும் நன்மை செய்யக் கூடிய இயற்கையை வென்றவர் மற்றும் மாயாவை வென்றவர் ஆகுக.

 

சங்கமயுகம் கல்யாணக்காரி யுகம் என்று கூறப்படுகிறது. இந்த யுகத்தில் நான் கல்யாணக்காரி ஆத்மா, எனது கடமை என்னவெனில் முதலில் தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டும், பிறகு அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற சுயமரியாதையை (கல்யாணகாரி) சதா நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மனித ஆத்மாக்களுக்கு மட்டுமின்றி இயற்கைக்கும் நன்மை செய்யக் கூடியவன், ஆகையால் தான் இயற்கையை வென்றவர், மாயாவை வென்றவர் என்று கூறப்படுகிறீர்கள். ஆத்மா என்ற ஆண் இயற்கையை வென்றவராக ஆகிவிடும் போது இயற்கையும் சுகம் கொடுக்கக் கூடியதாக ஆகிவிடும். இயற்கை அல்லது மாயையின் பாதிப்பில் வர முடியாது. அவர்களுக்கு தீமைக்கான சூழ்நிலையின் பாதிப்பு ஏற்பட முடியாது.

 

சுலோகன்:

ஒருவருக்கொருவர் மற்றவரின் கருத்துக்களுக்கு மரியாதை கொடுக்கும் போது மதிப்பிற்குரிய ஆத்மா ஆகிவிடுவீர்கள்.

 

ஓம்சாந்தி