17.10.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே - பாபாவின் நினைவின் கூடவே ஞான செல்வத்தினால் நிரம்பியவர்களாக ஆகுங்கள், புத்தியில் முழு ஞானமும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் அப்போது தான் அளவற்ற குஷி இருக்கும், சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தின் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி இராஜாவாக ஆவீர்கள்

 

கேள்வி:-

எந்த குழந்தைகளின்(மனிதர்களின்) அன்பு பாபாவோடு இருக்க முடியாது?

 

பதில்:-

யார் மோசமான நரகத்தில் இருக்கக் கூடிய விகாரங்களோடு அன்பு செலுத்துகிறார்களோ, அப்படிப்பட்ட மனிதர்களின் அன்பு பாபா மீது இருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் பாபாவை அறிந்து கொண்டுள்ளீர்கள், ஆகையினால் உங்களுக்கு பாபா மீது அன்பு இருக்கிறது.

 

கேள்வி:-

சத்யுகத்தில் வருவதற்கான கட்டளை யாருக்கு இல்லவே இல்லை?

 

பதில்:-

பாபா கூட சத்யுகத்தில் வர வேண்டியதில்லை எனும்போது காலன் கூட வர முடியாது. எப்படி இராவணனுக்கு சத்யுகத்தில் வருவதற்கான கட்டளை இல்லையோ, அதுபோல் பாபா கூறுகின்றார், குழந்தைகளே எனக்கும் கூட சத்யுகத்தில் வருவதற்கான கட்டளை இல்லை. பாபா உங்களை சுகதாமத்திற்கு தகுதியானவர்களாக மாற்றிவிட்டு வீட்டிற்கு சென்று விடுகின்றார், அவருக்கும் கூட எல்லை வரையப்பட்டுள்ளது.

 

ஓம் சாந்தி.

ஆன்மீக தந்தை வந்து ஆன்மீக குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார். ஆன்மீக குழந்தைகள் நினைவு யாத்திரையில் அமர்ந்திருக்கின்றீர்களா? ஆத்மாக்களாகிய நாம் நினைவு யாத்திரையில் இருக்கின்றோம் என்ற ஞானம் உள்ளுக்குள் இருக்கிறது அல்லவா! யாத்திரை என்ற வார்த்தை கண்டிப்பாக உள்ளுக்குள் வர வேண்டும். எப்படி அவர்கள் ஹரித்துவார், அமர்நாத் என்று யாத்திரை செல்கிறார்கள் அல்லவா! யாத்திரையை முடித்து விட்டு பிறகு திரும்பி வருகிறார்கள். இங்கே குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் நாம் சாந்திதாமம் செல்கிறோம் என்பது இருக்கிறது. பாபா வந்து கையை பிடித்திருக்கிறார். அவர் கையை பிடித்துக் கொண்டு அக்கரைக்கு செல்ல வேண்டியிருக்கிறது அல்லவா! கையை பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார் ஏனென்றால் விஷக்கடலில் இருக்கின்றோம். இப்போது நீங்கள் சிவபாபாவை நினைவு செய்யுங்கள் மற்றும் வீட்டை நினைவு செய்யுங்கள். நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்பது உள்ளுக்குள் வர வேண்டும். இதில் வாயின் மூலம் எதையும் சொல்ல வேண்டியதும் இல்லை. பாபா நம்மை அழைத்துச் செல்ல வந்துள்ளார், என்பது மட்டும் உள்ளுக்குள் நினைவிருக்க வேண்டும். கண்டிப்பாக நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். இந்த நினைவு யாத்திரையின் மூலம் தான் உங்களுடைய பாவங்கள் அழிய வேண்டும், அப்போது தான் அந்த குறிக்கோளை அடைவீர்கள். பாபா எவ்வளவு தெளிவாகப் புரிய வைக்கின்றார். சிறிய குழந்தைகளுக்கு படிப்பிக்கப்படுகிறது அல்லவா! நாம் பாபாவை நினைவு செய்து கொண்டே செல்கிறோம் என்பது எப்போதும் புத்தியில் இருக்க வேண்டும். பாபாவின் வேலையே தூய்மையாக்கி தூய்மையான உலகத்திற்கு அழைத்துச் செல்வதாகும். குழந்தைகளை அழைத்துச் செல்கின்றார். ஆத்மா தான் யாத்திரை செய்ய வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் பாபாவை நினைவு செய்து வீட்டிற்குச் செல்ல வேண்டும். வீட்டை அடைந்து விட்டால் பிறகு பாபாவினுடைய காரியம் முடிந்தது. தூய்மையற்றவர்களை தூய்மையாக்கி வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகவே பாபா வருகின்றார். படிப்பை இங்கே தான் படிக்கின்றீர்கள். சுற்றித்திரியுங்கள், எந்த வேலை-தொழிலும் செய்யுங்கள், புத்தியில் இந்த நினைவு இருக்கட்டும். யோகம் என்ற வார்த்தையில் யாத்திரை என்பது நிரூபணம் ஆவதில்லை. யோகம் என்பது சன்னியாசிகளுடையதாகும். அவையனைத்தும் மனிதர்களுடைய வழியாகும். அரைக்கல்பம் நீங்கள் மனிதர்களுடைய வழிப்படி நடந்தீர்கள். அரைக்கல்பம் தேவதைகளுடைய வழிப்படி நடந்தீர்கள். இப்போது உங்களுக்கு ஈஸ்வரிய வழி கிடைத்திருக்கிறது.

 

யோகம் என்ற வார்த்தையை சொல்லாதீர்கள், நினைவு யாத்திரை என்று சொல்லுங்கள். இந்த யாத்திரையை ஆத்மா செய்ய வேண்டும். அது சரீரத்தின் மூலம் செய்யக் கூடிய யாத்திரையாகும், சரீரத்தோடு செல்கிறார்கள். இதில் சரீரத்தினுடைய வேலையே இல்லை. அது ஆத்மாக்களாகிய நம்முடைய இனிமையான வீடு என்பதை ஆத்மா தெரிந்துள்ளது. பாபா நமக்கு படிப்பினை கொடுத்துக் கொண்டிருக்கிறார், அதன்மூலம் நாம் தூய்மையாக ஆவோம். நினைவு செய்து-செய்து தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆக வேண்டும். இது யாத்திரையாகும். நாம் பாபாவினுடைய நினைவில் அமருகின்றோம், ஏனென்றால் பாபாவிடம் தான் வீட்டிற்கு செல்ல வேண்டும். பாபா தூய்மையாக்குவதற்கு தான் வருகின்றார். எனவே தூய்மையான உலகத்திற்கு செல்லத் தான் வேண்டும். பாபா தூய்மையாக்குகின்றார், பிறகு வரிசைகிரமமான முயற்சியின்படி நீங்கள் தூய்மையான உலகத்திற்கு செல்வீர்கள். இந்த ஞானம் புத்தியில் இருக்க வேண்டும். நாம் நினைவு யாத்திரையில் இருக்கின்றோம். நாம் இந்த மரணலோகத்திற்கு திரும்பி வரக்கூடாது. நம்மை வீடு வரை அழைத்துச் செல்வது பாபாவினுடைய காரியமாகும். இப்போது நீங்கள் மரணலோகத்தில் இருக்கின்றீர்கள் பிறகு அமரலோகம் புதிய உலகத்தில் இருப்பீர்கள் என்று பாபா வழியை சொல்லிவிடுகின்றார். பாபா தகுதியானவர்களாக்கி விட்ட பிறகு தான் சென்று விடுகின்றார். சுகதாமத்திற்கு பாபா அழைத்துச் செல்ல மாட்டார். இவருக்கு எல்லை இருக்கிறது, அதாவது வீடு வரை சேர்ப்பிப்பதாகும். இந்த ஞானம் அனைத்தும் புத்தியில் இருக்க வேண்டும். வெறுமனே பாபாவை மட்டும் நினைவு செய்யக் கூடாது, கூடவே ஞானமும் வேண்டும். ஞானத்தின் மூலம் நீங்கள் செல்வத்தை சம்பாதிக்கிறீர்கள். இந்த சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தின் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி இராஜாவாக ஆகின்றீர்கள். இதில் சுற்றி வந்துள்ளோம் என்ற ஞானம் புத்தியில் இருக்கிறது. பிறகு நாம் வீட்டிற்கு செல்வோம் பிறகு புதிதாக சக்கரம் சுற்ற ஆரம்பிக்கும். இந்த ஞானம் முழுவதும் புத்தியில் இருக்க வேண்டும் அப்போது தான் குஷியின் அளவு அதிகரிக்கும். பாபாவையும் நினைவு செய்ய வேண்டும், சாந்திதாமம், சுகதாமத்தையும் நினைவு செய்ய வேண்டும். 84 பிறவிகளின் சக்கரத்தை நினைவு செய்ய வில்லை என்றால் எப்படி சக்கரவர்த்தி இராஜாவாக ஆக முடியும். ஒன்றை (பிரம்மத்தை) மட்டும் நினைவு செய்வது சன்னியாசிகளுடைய வேலையாகும். ஏனென்றால் அவர்கள் இவற்றைத் தெரிந்திருக்க வில்லை. பிரம்மத்தை தான் நினைவு செய்கிறார்கள். பாபா நல்ல விதத்தில் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். நினைவு செய்து-செய்து தான் உங்களுடைய பாவங்கள் அழிய வேண்டும். முதலில் வீட்டிற்குச் செல்ல வேண்டும், இது ஆன்மீக யாத்திரையாகும். நாலாபுறமும் சுற்றியும் அலைந்தும் கூட எப்போதும் தூரமாக விலகியே இருந்தோம் அதாவது பாபாவிடமிருந்து விலகியே இருந்தோம். எந்த தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்க வேண்டுமோ அவரை தெரிந்திருக்கவே இல்லை. எவ்வளவு சுற்றினோம்! ஒவ்வொரு வருடமும் நிறைய யாத்திரைகள் செய்கிறார்கள். நிறைய பணம் இருக்கிறது என்றால் யாத்திரை செல்வதற்கு ஆர்வம் இருக்கிறது. இது உங்களுடைய ஆன்மீக யாத்திரையாகும். உங்களுக்காக புதிய உலகம் உருவாகி விடும் பிறகு புதிய உலகத்தில் தான் நீங்கள் வருவீர்கள், அதற்கு அமரலோகம் என்று சொல்லப்படுகிறது. அங்கே காலன் இருப்பதில்லை, யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்வதற்கு. புதிய உலகத்தில் வருவதற்கு காலனுக்கு சட்டமே இல்லை. நான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்குத் தான் வருக்கின்றேன். நீங்கள் தூய்மையாக ஆகி மற்றவர்களையும் தூய்மையாக்குகின்றீர்கள். சன்னியாசிகள் ஓடி விடுகிறார்கள். ஒரேயடியாக காணாமல் போய் விடுகிறார்கள். எங்கே சென்றார்கள் என்று தெரிவதே இல்லை ஏனென்றால் அவர்கள் உடையையே மாற்றிக் கொள்கிறார்கள் நடிகர்கள் வேடத்தை மாற்றுவதைப் போல். சில நேரங்களில் ஆணிலிருந்து பெண்ணாக ஆகி விடுகிறார்கள், சில நேரங்களில் பெண்ணிலிருந்து ஆணாக ஆகி விடுகிறார்கள். இவர்கள் கூட ரூபத்தை மாற்றிக் கொள்கிறார்கள். சத்யுகத்தில் இப்படிப்பட்ட விஷயங்கள் இருக்குமா என்ன!

 

நான் புதிய உலகத்தை உருவாக்க வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். அரைக்கல்பம் குழந்தைகளாகிய நீங்கள் இராஜ்யம் செய்கிறீர்கள் பிறகு நாடகத்தின் திட்டப்படி துவாபர யுகம் ஆரம்பமாகிறது, தேவதைகள் இறங்கும் மார்க்கத்தில் (வாம மார்க்கம்) சென்று விடுகிறார்கள், அவர்களுடைய மோசமான சித்திரங்கள் கூட ஜகநாத்புரியில் இருக்கிறது. ஜகநாத் கோயில் இருக்கிறது. சொல்லப்போனால் அவருடைய இராஜ்யம் இருந்தது சுயம் அவரே உலகத்திற்கு எஜமானராக இருந்தார். பிறகு அவர் கோயிலில் சென்று அடைபட்டார், அவரை கறுப்பாகக் காட்டுகிறார்கள். இந்த ஜகத் நாத் கோயிலைப் பற்றி நீங்கள் நிறைய புரிய வைக்கலாம். வேறு யாரும் இதனுடைய அர்த்தத்தைப் புரிய வைக்க முடியாது. தேவதைகள் தான் பூஜிக்கத்தக்க நிலையிலிருந்து பூஜாரிகளாக ஆகின்றனர். அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பகவானுக்கென்று சொல்லிவிட்டார்கள், தாங்களே பூஜிக்கத்தக்கவர், தாங்களே பூஜாரி. தாங்கள் தான் சுகத்தை அளிக்கின்றீர்கள், தாங்கள் தான் துக்கத்தை அளிக்கின்றீர்கள். நான் யாருக்கும் துக்கம் கொடுப்பதே இல்லை என்று பாபா கூறுகின்றார். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். குழந்தை பிறந்தது என்றால் குஷி ஏற்படுகிறது, குழந்தை இறந்தது என்றால் அழ ஆரம்பித்து விடுகிறார்கள். பகவான் துக்கமளித்து விட்டார் என்று சொல்வார்கள். அட, இந்த அல்பகால சுக-துக்கம் உங்களுக்கு இராவண இராஜ்யத்தில் தான் கிடைக்கிறது. என்னுடைய இராஜ்யத்தில் துக்கத்தின் விஷயமே இருப்பதில்லை. சத்யுகத்தை அமரலோகம் என்றழைக்கப்படுகிறது. இதனுடைய பெயரே மரணலோகமாகும். அகால மரணமடைகிறார்கள். அங்கே மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள், ஆயுளும் அதிகமாக இருக்கிறது. அதிகத்திலும் அதிகமாக 150 ஆண்டுகள் ஆயுள் இருக்கிறது. இங்கேயும் கூட எப்போதாவது அப்படி சிலருக்கு இருக்கிறது ஆனால் இங்கே சொர்க்கம் இல்லை அல்லவா! சிலர் சரீரத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் எனும்போது ஆயுள் அதிகமாகி விடுகிறது, பிறகு எவ்வளவு குழந்தைகளாகி விடுகிறார்கள். குடும்பம் வளர்ந்து கொண்டே செல்கிறது, விரைவாக வளர்ந்து விடுகிறது. எப்படி மரத்திலிருந்து கிளைகள் வருகிறது - 50 கிளைகள் பிறகு அதிலிருந்து இன்னும் 50 வரும், எவ்வளவு வளர்ந்து கொண்டே செல்கிறது! இங்கேயும் கூட அப்படி இருக்கிறது ஆகையினால் இதனை ஆலமரத்தோடு உதாரணம் காட்டப்படுகிறது. முழு மரமும் நிற்கிறது, அடித்தளம் இல்லை. இங்கேயும் கூட ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் எனும் அடித்தளம் இல்லை. தேவதைகள் எப்போது இருந்தார்கள் என்பது யாருக்கும் தெரிய வில்லை, அவர்கள் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என்று சொல்லிவிடுகிறார்கள். முன்னால் நீங்கள் ஒருபோதும் சிந்தித்ததே இல்லை. பாபா தான் வந்து இந்த விஷயங்கள் அனைத்தையும் புரிய வைக்கின்றார். நீங்கள் இப்போது பாபாவையும் தெரிந்து கொண்டீர்கள் மற்றும் முழு நாடகத்தின் முதல்-இடை-கடைசி, எவ்வளவு காலம் போன்றவற்றையும் தெரிந்து கொண்டீர்கள். புதியதிலிருந்து பழையதாகவும், பழையதிலிருந்து புதியதாகவும் எப்படி ஆகிறது என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லை. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் அமருகிறீர்கள். உங்களுடைய இந்த யாத்திரை எப்போதும் நடக்க வேண்டும். சுற்றுங்கள் திரியுங்கள் ஆனால் இந்த நினைவு யாத்திரையில் இருங்கள். இது ஆன்மீக யாத்திரையாகும். பக்தி மார்க்கத்தில் நாமும் கூட அந்த யாத்திரைகளுக்கு சென்றோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். யார் முழுமையான பக்தர்களாக இருந்திருப்பீர்களோ அவர்கள் நிறைய முறை யாத்திரை செய்திருப்பீர்கள். ஒரு சிவனுடைய பக்தி செய்யுங்கள் , அது தான் அவிபச்சாரி பக்தி என்று பாபா புரிய வைத்துள்ளார். பிறகு தேவதைகளுக்கு நடக்கிறது, பிறகு 5 தத்துவங்களுக்கு நடக்கிறது. இருந்தாலும் தேவதைகளுடைய பக்தி என்பது கூட நல்லதே ஆகும் ஏனென்றால் அவர்களுடைய சரீரம் சதோபிரதானமாக இருக்கிறது, மனிதர்களுடைய சரீரம் தூய்மையற்றது அல்லவா! அவர்கள் தூய்மையாக இருக்கிறார்கள், பிறகு துவாபரயுகத்திலிருந்து அனைவரும் தூய்மையற்றவர்களாக ஆகி விடுகிறார்கள். கீழே இறங்கிக் கொண்டே வருகிறார்கள். ஏணிப்படி சித்திரம் புரியவைப்பதற்கு உங்களுக்கு மிகவும் நன்றாக இருகிறது. ஜின் பூதத்தின் கதை சொல்கிறார்கள் அல்லவா! இந்த உதாரணங்கள் அனைத்தும் இந்த சமயத்தினுடையதே ஆகும். அனைத்தும் உங்களைப்பற்றி தான் உருவாக்கப்பட்டுள்ளது. குளவியின் உதாரணம் கூட உங்களுடையதே ஆகும், புழுக்களை தங்களுக்கு சமமாக பிராமணர்களாக மாற்றுகின்றீர்கள். அனைத்தும் இந்த சமயத்தினுடைய உதாரணங்களே ஆகும்.

 

குழந்தைகளாகிய நீங்கள் முதலில் சரீர யாத்திரை செய்தீர்கள். இப்போது பாபாவின் மூலம் ஆன்மீக யாத்திரையைக் கற்கின்றீர்கள். இது படிப்பு அல்லவா! பக்தியில் என்னென்ன செய்கிறார்கள் பாருங்கள்! அனைவருக்கு முன்னாலும் தலை வணங்கிக் கொண்டே இருக்கிறார்கள், ஒருவருடைய தொழிலையும் தெரிந்திருக்கவில்லை. கணக்கிடப்படுகிறது அல்லவா! அனைத்திலும் அதிக பிறவிகளை யார் எடுக்கிறார்கள், பிறகு குறைந்து கொண்டே செல்கிறது. இந்த ஞானம் கூட உங்களுக்கு இப்போது கிடைக்கிறது. உண்மையில் சொர்க்கம் இருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாரதவாசிகளிடம் சொர்க்கம் எப்போது இருந்தது என்று கேட்டீர்கள் என்றால் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் என்று சொல்லிவிடுவார்கள், அந்தளவிற்கு கல்புத்தியுடையவர்களாக ஆகி விட்டார்கள். நாம் உலகத்திற்கு எஜமானர்களாக இருந்தோம், எவ்வளவு சுகமுடைவர்களாக இருந்தோம்! இப்போது மீண்டும் நாம் பிச்சைகாரனிலிருந்து இளவரசனாக ஆக வேண்டும் என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உலகம் புதியதிலிருந்து பழையதாக ஆகிறது அல்லவா! எனவே உழையுங்கள் என்று பாபா கூறுகின்றார். மாயை அடிக்கடி மறக்கச் செய்து விடுகிறது என்பதையும் தெரிந்துள்ளீர்கள்.

 

நாம் சென்று கொண்டிருக்கிறோம், இந்த பழைய உலகத்திலிருந்து நங்கூரம் எடுக்கப்பட்டு விட்டது என்பதை எப்போதும் புத்தியில் வையுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். படகு அந்த கரைக்குச் செல்ல வேண்டும். எங்களுடைய படகை கரை சேருங்கள் என்று பாடுகிறார்கள் அல்லவா! எப்போது கரை சேர வேண்டும், என்பதைத் தெரிந்திருக்க வில்லை. எனவே முக்கியமானது நினைவு யாத்திரையாகும். பாபாவின் கூடவே ஆஸ்தியும் நினைவிற்கு வர வேண்டும். குழந்தை பாலகனாக இருக்கும்போது தந்தையின் ஆஸ்தி தான் புத்தியில் இருக்கிறது. நீங்கள் பெரியவர்களாக இருக்கின்றீர்கள். ஆத்மா உடனே தெரிந்து கொள்கிறது, இது சரியான விஷயமாகும். எல்லையற்ற தந்தையின் ஆஸ்தியே சொர்க்கமாகும். பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார் என்றால் பாபாவினுடைய ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். கண்டிப்பாக தூய்மையாக வேண்டும் என்று பாபா கூறுகின்றார். தூய்மையின் காரணத்தினால் தான் சண்டை நடக்கிறது. அவர்கள் முற்றிலும் மோசமான நரகத்தில் இருக்கிறார்கள். இன்னும் அதிகமாக விகாரத்தில் விழுகிறார்கள் ஆகையினால் பாபாவிடம் அன்பு வைக்க முடியாது. வினாச காலத்தில் அன்பற்ற புத்தி இருக்கிறது அல்லவா! பாபா அன்பான புத்தியாக மாற்றுவதற்குத் தான் வருகின்றார். நிறைய பேருக்கு கொஞ்சம் கூட அன்பான புத்தி இல்லை. ஒருபோதும் பாபாவை நினைவு கூட செய்வதில்லை. சிவபாபாவை தெரிந்திருக்கவே இல்லை, ஏற்றுக் கொள்வதே இல்லை. முழுவதுமாக மாயையின் கிரகம் பிடித்துள்ளது. முற்றிலும் நினைவு யாத்திரை இல்லை. பாபா உழைக்க வைக்கின்றார், சூரியவம்ச, சந்திரவம்ச இராஜ்யம் இங்கே ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்துள்ளீர்கள். சத்யுகம்-திரேதாவில் எந்த தர்மமும் ஸ்தாபனை ஆவதில்லை. இராமர் எந்த தர்மத்தையும் ஸ்தாபனை செய்வதில்லை. ஸ்தாபனை செய்பவரின் மூலமாக இவர் இப்படி ஆகின்றார். மற்ற தர்ம ஸ்தாபகர்களுக்கும் பாபாவின் தர்ம ஸ்தாபனைக்கும் இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. எப்போது உலகம் மாற வேண்டுமோ அப்போது, சங்கமயுகத்தில் தான் பாபா வருகின்றார். கல்பம்-கல்பமாக, கல்பத்தின் சங்கமயுகத்தில் நான் வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார், பிறகு அவர்கள் யுகம்-யுகமாக என்று வார்த்தையை தவறாக எழுதி விட்டார்கள். அரைக்கல்பம் பக்தி மார்க்கம் நடக்கத் தான் வேண்டும். எனவே பாபா கூறுகின்றார், குழந்தைகளே இந்த விஷயங்களை மறக்காதீர்கள். பாபா நாங்கள் தங்களை மறந்து விடுகின்றோம் என்று சொல்கிறார்கள். அட! விலங்குகள் கூட தங்களுடைய தந்தையை மறப்பதில்லை. நீங்கள் ஏன் மறக்கின்றீர்கள்? தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்வதில்லையா! தேக-அபிமானிகளாக ஆவதின் மூலம் நீங்கள் பாபாவை மறக்கின்றீர்கள். இப்போது பாபா எப்படி புரிய வைக்கின்றாரோ, அதுபோல் புரிய வைப்பதற்கான பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். தைரியமாகப் பேச வேண்டும். பெரிய மனிதர்களிடம் பயப்பட பேச வேண்டும் என்பது அல்ல. குமாரிகளாகிய நீங்கள் தான் பெரிய-பெரிய வித்வான்கள், பண்டிதர்களுக்கு முன்னால் செல்கின்றீர்கள் எனும்போது பயமற்றவர்களாக ஆகி புரிய வைக்க வேண்டும். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) நாம் (யாத்திரை) சென்று கொண்டிருக்கிறோம், நம்முடைய படகின் நங்கூரம் இந்த பழைய உலகத்திலிருந்து எடுக்கப்பட்டு விட்டது என்பதை எப்போதும் புத்தியில் வைக்க வேண்டும். நாம் ஆன்மீக யாத்திரையில் இருக்கின்றோம். இந்த யாத்திரையைத் தான் செய்ய வேண்டும் மற்றவர்களையும் செய்ய வைக்க வேண்டும்.

 

2) எந்தவொரு பெரிய மனிதர்களுக்கு முன்பும் பயமற்றவர்களாக ஆகி பேச வேண்டும், தடுமாறக்கூடாது. ஆத்ம- அபிமானியாக ஆகி புரிய வைப்பதற்கான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

வரதானம்:

எப்போதும் இலேசானவராகி தந்தையின் கண்களில் கலந்திருக்கக் கூடிய சகஜயோகி ஆகுக!

 

விளக்கம்:

சங்கமயுகத்தில் கிடைக்கக் கூடிய குஷியின் சுரங்கங்கள் வேறு எந்த யுகத்திலும் கிடைக்காது. இந்த சமயத்தில் தந்தை மற்றும் குழந்தைகளின் சந்திப்பு இருக்கிறது, ஆஸ்தி இருக்கிறது, வரதானம் இருக்கிறது. ஆஸ்தி அல்லது வரதானம் இவ்விரண்டிலும் உழைப்பு இருக்காது, ஆகவே உங்களின் பட்டப் பெயரே சகஜயோகி ஆகும். பாப்தாதா குழந்தைகளின் கடின உழைப்பை பார்க்க விரும்புவதில்லை, குழந்தைகளே, தனது அனைத்து சுமைகளையும் தந்தைக்குக் கொடுத்து விட்டு நீங்கள் இலேசாக ஆகி விடுங்கள் என்று சொல்கிறார். தந்தை தனது கண்களில் அமர்த்தி உடன் அழைத்துச் செல்லும் அளவு இலேசாக ஆகி விடுங்கள். தந்தை மீதிருக்கும் அன்பின் அடையாளம் - எப்போதும் இலேசாக ஆகி தந்தையின் கண்களில் கலந்து விடுவதாகும்.

 

சுலோகன்:

எதிர்மறையை சிந்திக்கக் கூடிய பாதையை மூடி விட்டீர்கள் என்றால் வெற்றி சொரூபமாக ஆகி விடுவீர்கள்.

 

ஓம்சாந்தி