17.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நினைவுடன் கூடவே படிப்பின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும். நினைவினால் தூய்மை ஆவீர்கள். மேலும் படிப்பின் மூலம் உலகத்தின் எஜமானர் ஆவீர்கள்.

 

கேள்வி :

ஸ்காலர்ஷிப் (உதவி) பெறுவதற்கு எந்த ஒரு முயற்சி செய்ய வேண்டியது அவசியம்?

 

பதில்:

ஸ்காலர்ஷிப் (தந்தையின் உதவி) பெற வேண்டுமானால் அனைத்துப் பொருட்களில் (சாதனங்கள்) இருந்தும் மோகத்தை நீக்க வேண்டும். செல்வம், குழந்தைகள், வீடு முதலிய எதுவுமே நினைவு வரக்கூடாது. சிவபாபா நினைவு மட்டுமே இருக்க வேண்டும். முழுமையாக அர்ப்பணம் ஆக வேண்டும். அப்போது தான் உயர்ந்த பதவி கிடைக்கும். புத்தியில் இந்த நஷா இருக்க வேண்டும் - நாம் எவ்வளவு பெரிய பரீட்சை பாஸ் பண்ணுகிறோம்! நம்முடையது எவ்வளவு பெரிய படிப்பு! மேலும் படிப்பு சொல்லித் தருபவர் சுயம் துக்கத்தைப் போக்கி சுகம் தரும் தந்தை. அந்த மிகமிக அன்பான தந்தை நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், படிப்பிக்கின்றார் என்றால் குழந்தைகளுக்கு எவ்வளவு நஷா (செருக்கு) இருக்க வேண்டும்! படிக்கிறதோ ஆத்மா தான் இல்லையா? ஆத்மா சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கிறது. சரீரமோ சாம்பலாகி விடுகின்றது.ஆக, பாபா வந்து குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். ஆத்மாக்கள் புரிந்து கொண்டுள்ளனர், நாம் படிக்கிறோம், யோகம் (நினைவு யாத்திரை) கற்றுக் கொள்கிறோம் என்று. பாபா சொல்லியிருக்கிறார், நினைவில் இருப்பீர்களானால் உங்களுடைய பாவகர்மங்கள் நீங்கி விடும். பதீதபாவனரோ ஒரு தந்தை தான். பிரம்மா, விஷ்ணு, சங்கரை பதீதபாவனர் எனச் சொல்ல மாட்டார்கள். லட்சுமி-நாராயணரைச் சொல்வார்களா? கிடையாது. பதீதபாவனரோ ஒருவர் தான். முழு உலகத்தையும் தூய்மைபடுத்துபவர் ஒருவர் தான். அவர் உங்களுடைய தந்தையாவார். குழந்தைகள் அறிவார்கள், மிகமிக அன்பான எல்லையற்ற தந்தை. அவரை பக்தி மார்க்கத்தில் நினைவு செய்தே வந்துள்ளோம் - பாபா, வாருங்கள், வந்து எங்கள் துக்கத்தைப் போக்குங்கள், சுகத்தைக் கொடுங்கள். சிருஷ்டியோ அதே தான். இந்த சக்கரத்தில் அனைவரும் வந்தே ஆக வேண்டும். 84 பிறவிகளின் சக்கரத்தை பாபா புரிய வைத்துள்ளார். ஆத்மா தான் சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கின்றது. ஆத்மா அறிந்துள்ளது, இந்த மரண உலகத்திலிருந்து அமரலோகத்திற்கு, அல்லது நரகத்திலிருந்து சொர்க்கத்திற்குச் செல்வதற்காக நாம் படிக்கிறோம். பாபா வருகிறார், குழந்தை களாகிய உங்களை மீண்டும் உலகத்தின் எஜமானராக ஆக்குவதற்காக. நீங்கள் எவ்வளவு பெரிய பரீட்சையைப் பாஸ் அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள்! உயர்ந்தவரிலும் உயர்ந்தவராகிய (சுப்ரீம்) தந்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார். பாபா வந்து கற்பிக்கும் போது நஷா ஏறுகின்றது. பாபா மேலும் தீவிரமாக நஷாவை அதிகரிக்கச் செய்கின்றார். பாபா வருவதே அமரலோகத்திற்குத் தகுதி உள்ளவர்களாக ஆக்குவதற்காக. இங்கோ யாரும் தகுதியானவர்கள் கிடையாது. நீங்களும் அறிவீர்கள், நாம் தகுதியுள்ள தேவதாக்களின் முன் தலை வணங்கியே வந்துள்ளோம். இப்போது மீண்டும் பாபா நம்மை முழு உலகத்தின் எஜமானராக ஆக்குகிறார். ஆக, அந்த நஷா அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இங்கே நஷா அதிகரிக்கின்றது, வெளியில் சென்றதும் நஷாவே குறைந்து விடுகின்றது என்று இருக்கக் கூடாது. குழந்தைகள் சொல்கின்றனர் - பாபா, நாங்கள் உங்களை மறந்து போகிறோம். நீங்கள் இந்த தூய்மையில்லாத உலகத்தில் தூய்மை இல்லாத சரீரத்தில் வந்து எங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறீர்கள், உலகத்தின் எஜமானராக ஆக்குகிறீர்கள். குழந்தைகள் நீங்கள் உலக ராஜபதவி என்ற மிகப்பெரிய லாட்டரி பெறுகிறீர்கள். ஆனால் நீங்கள் குப்தமாக இருக்கிறீர்கள். ஆகவே அத்தகைய உயர்ந்த படிப்பின் மீது நல்லபடியாக கவனம் செலுத்த வேண்டும். வெறுமனே நினைவு யாத்திரையினால் வேலை நடைபெறாது. படிப்பும் அவசியமாகும். 84 பிறவிச் சக்கரத்தை எப்படிச் சுற்றி வருகிறோம் என்பதும் புத்தியில் சுற்ற வேண்டும்.

 

பாபா மிக நன்றாக நஷாவை ஏற்றுகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போல் பெரிய மனிதராக யாராலும் ஆக முடியாது. நீங்கள் மனிதரிலிருந்து தேவதையாக ஆகி விடுகிறீர்கள். உலகத்தின் எஜமானராக உங்களைத் தவிர வேறு யாராவது ஆகியிருக்கிறார்களா என்ன? கிறிஸ்தவர்கள் உலகின் எஜமானர் ஆவதற்காக முயற்சி செய்தனர். ஆனால் உங்களைத் தவிர வேறு யாரும் உலகத்தின் எஜமானர் ஆவதற்கு சட்டம் சொல்லவில்லை (விதியில்லை). எஜமானராக ஆக்கக் கூடிய பாபா தான் தேவை. வேறு யாருக்கும் அந்த சக்தி கிடையாது. குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நல்ல புத்தி இருக்க வேண்டும். ஞான அமிர்தத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார். நாம் பாபாவை அதிகம் நினைவு செய்கிறோம் என்பதில் மட்டுமே இருந்துவிடக் கூடாது. நினைவின் மூலம் தான் தூய்மையாவீர்கள். ஆனால் பதவியும் பெற வேண்டும். தூய்மை தண்டனை பெற்றும் கூட அனைவரும் ஆகத் தான் வேண்டும். ஆனால் பாபா வந்திருக்கிறார், உலகத்தின் எஜமானராக ஆக்குவதற்காக. அனைவருமே சாந்திதாமத்திற்குத் தான் செல்வார்கள். அங்கே சென்று அனைவரும் அங்கேயே இருந்து விடுவார்களா என்ன? அவர்களோ எந்த வேலைக்கும் ஆக மாட்டார்கள். யார் பிறகு வந்து சொர்க்கத்தில் இராஜ்யம் செய்கிறார்களோ, அவர்கள் தான் வேலைக்காவார்கள். நீங்கள் இங்கே வந்திருப்பதே சொர்க்கத்தின் ராஜபதவியைப் பெறுவதற்காக. உங்களிடம் ராஜ்ய பதவி இருந்தது. பிறகு மாயா அதை அபகரித்துக் கொண்டது. இப்போது மீண்டும் மாயா இராவணன் மீது வெற்றி பெற வேண்டும். உலகத்தின் எஜமானராக நீங்க்ள் தான் ஆக வேண்டும். இப்போது உங்களை இராவணன் மீது வெற்றி கொள்ள வைக்கிறார். ஏனென்றால் நீங்கள் இராவண இராஜ்யத்தில் விகாரி ஆகி விட்டீர்கள். அதனால் மனிதர்களை குரங்குடன் ஒப்பிடப் படுகின்றனர். குரங்குகள் மிக மோசமான விகாரிகளாக உள்ளன. தேவதைகளோ, சம்பூர்ண நிர்விகாரிகள். இந்த தேவதைகள் தான் 84 பிறவிகளுக்குப் பிறகு தூய்மையற்றவர்களாகி விட்டுள்ளனர். பாபா சொல்கிறார், உங்கள் கையில் உள்ள செல்வம், குழந்தைகள், சரீரம் முதலிய அனைத் திருந்தும் மோகத்தை நீக்கிவிட வேண்டும். செல்வந்தர்களோ, பணத்தின் பின்னால் போய் உயிர் விடுகின்றனர். கையில் உள்ள பைசா விடுபடுவதே இல்லை. இராவணனின் சிறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பார்கள். கோடியில் சிலர் தான் வெளிவருவார்கள் - அனைத்துப் பொருட்களில் இருந்தும் மோகத்தை நீக்கிக் குரங்கிலிருந்து தேவதையாக ஆகி விடுவார்கள். பெரிய-பெரிய பணக்காரர்கள், உள்ளங்கையில் பைசாவை இறுக்கி பிடித்துக் கொண்டிப்பவர்களுக்கு, அதன் பின்னாலேயே அவர்களின் பிராணன் உள்ளது. நாள் முழுவதும் மாட மாளிகைகள், குழந்தைகள் முதலியவற்றின் நினைவு வந்து கொண்டே இருக்கும். அந்த நினைவிலேயே இறந்து விடுவார்கள். பாபா சொல்கிறார், கடைசியில் வேறு எந்த ஒரு பொருளின் நினைவும் வரக்கூடாது. என்னை மட்டுமே நினைவு செய்வீர்களானால் அநேக பிறவிகளின் பாவங்களெல்லாம் அழிந்து விடும். பணக்காரர்களின் பணமோ எல்லாமே மண்ணோடு மண்ணாகி விடும். ஏனென்றால் பாவத்தின் பணம் இல்லையா? வேலைக்காகாது. பாபா சொல்கிறார், நான் ஏழைப்பங்காளன். ஏழைகளைப் பணக்காரர்களாகவும், பணக்காரர்களை ஏழைகளாகவும் ஆக்கி விடுவேன். இந்த உலகம் மாற வேண்டியுள்ளது இல்லையா? பைசாவின் நஷா எவ்வளவு உள்ளது! – நமக்கு இவ்வளவு பணம் உள்ளது, ஏரோப்ளேன்கள் உள்ளன, வாகனங்கள் உள்ளன, மாளிகைகள் உள்ளன........! பிறகு எவ்வளவு தான் பாபாவை நினைப்பதற்காகக் கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும் நினைவு நிலைக்காது. அதற்குச் சட்டம் இல்லை. கோடியில் சிலர் தான் வெளிப்படுவார்கள். மற்றப்படி பைசாவையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். பாபா சொல்கிறார், தேகத்துடன் கூட எதையெல்லாம் பார்க்கிறீர்களோ, அவை அனைத்தையும் மறந்து விடுங்கள். இதிலேயே ஒட்டிக் கொண்டிருப்பீர்களானால் உயர்ந்த பதவி பெற முடியாது. பாபா புருஷார்த்தமோ செய்ய வைப்பார் இல்லையா? நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள், நரனிலிருந்து நாராயணனாக ஆவதற்கு. ஆக, இதில் யோகமும் (நினைவு) முழுமையாக இருக்க வேண்டும். ஒரு பாபாவைத் தவிர வேறு எந்த ஒரு பொருளோ, செல்வமோ, குழந்தைகளோ எதுவுமே நினைவு வரக்கூடாது. அப்போது தான் நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த உதவியைப் பெற முடியும். அந்த மனிதர்கள் உலகத்தில் சாந்திக்கான ஆலோசனை தருகின்றனர் என்றால் பைசா பெறாத மெடல் கிடைக்கின்றது. அதிலேயே குஷியடைந்து விடுகின்றனர். இப்போது உங்களுக்கு என்ன பரிசு கிடைக்கின்றது? நீங்கள் உலகத்தின் எஜமானர் ஆகிறீர்கள். அப்படியில்லை, நாம் 5-6 மணி நேரம் நினைவில் இருக்கிறோம் என்றால் போதும், நாம் லட்சுமி-நாராயணராக ஆகிவிடலாம் என்பதில்லை. மிகுந்த முயற்சி செய்ய வேண்டும். ஒரு சிவபாபாவின் நினைவு மட்டுமே நினைவிருக்க வேண்டும். மேலும் கடைசியில் வேறு எதுவுமே நினைவு வரக் கூடாது. நீங்கள் மிகமிகப் பெரிய தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.

 

பாபா புரிய வைத்துள்ளார், நீங்கள் தான் பூஜைக்குரியவர்களாக இருந்தீர்கள். பிறகு மாயா பூஜாரி, தூய்மையற்றவர்களாக ஆக்கி விட்டுள்ளது. உங்களிடம் மனிதர்கள் கேட்கின்றனர், நீங்கள் பிரம்மாவை தேவதை என ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா, பகவான் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா? சொல்லுங்கள், நாங்களோ, பிரம்மாவை பகவான் எனச் சொல்வதில்லை. நீங்கள் வந்து புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் மிக நல்ல சித்திரங்கள் உள்ளன. திரிமூர்த்தி, கல்பவிருட்சம் மற்றும் சிருஷ்டிச் சக்கரம் அனைத்தும் நம்பர் ஒன் சித்திரங்கள். ஆரம்பத்தில் இருந்த இந்த இரண்டு சித்திரங்கள் தான் இருந்தன, இவை தான் உங்களுக்கு மிகவும் பயன்படக் கூடியனவாக இருக்கும். லட்சுமி-நாராயணரின் சித்திரத்தை நீங்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லுங்கள். அவற்றிலிருந்தோ ஞானத்தை எடுத்துக் கூற புரிந்து கொள்ள முடியாது. அனைத்திலும் முக்கியமான சித்திரங்கள் - திரிமூர்த்தி, சிருஷ்டிச் சக்கரம் மற்றும் கல்ப விருட்சத் தினுடையவை ஆகும். இதில் காட்டப்பட்டுள்ளது - யார்-யார் எப்போது வருகின்றனர், ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் எப்போது முடிவுக்கு வருகின்றது, மீண்டும் ஒரு தர்மத்தின் ஸ்தாபனையை யார் செய்கிறார்? மற்ற அனைத்து தர்மங்களும் முடிந்து போகின்றன. அனைத்திலும் மேலே இருப்பவர் சிவபாபா. பிறகு பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா. இதைப் புரிய வைக்க வேண்டும் இல்லையா? அதற்காகத் தான் சித்திரங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. மற்றப்படி சூட்சுமவதனமோ, சாட்சாத்காரத்திற்காக ஏற்றுக் கொள்ளப் படுகின்றது. பாபா படைப்பவர், முதலில் சூட்சுமவதனத்தையும் பிறகு ஸ்தூல வதனத்தையும் படைக்கிறார். பிரம்மா தேவதை அல்ல. விஷ்ணு தேவதை ஆவார். உங்களுக்குப் புரிய வைப்பதற்காக சாட்சாத்காரம் கிடைக்கின்றது. பிரஜாபிதா பிரம்மாவோ இங்கே இருக்கிறார் இல்லையா? பிரம்மாவுடன் உள்ளவர்கள், பிராமணரில் இருந்து பிறகு தேவதை ஆகப் போகிறவர்கள். தேவதைகளோ அலங்கரிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஃபரிஸ்தாக்கள் எனச் சொல்லப்படுவார்கள். ஃபரிஸ்தா ஆகிப் பிறகு வந்து தேவதா பதவி பெறுவார்கள். கர்ப்ப மாளிகையில் பிறவி எடுப்பார்கள். உலகம் மாறிக் கொண்டே உள்ளது. இன்னும் போகப்போக நீங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கப்போகிறீர்கள். நல்ல உறுதியானவர்களாக ஆகி விடுவீர்கள். இன்னும் கொஞ்சம் சமயமே உள்ளது. நீங்கள் வந்திருப்பது நரனிலிருந்து நாராயணனாக ஆவதற்காக. ஃபெயிலாகி விட்டால் பிரஜை ஆகிவிடுவார்கள். சந்நியாசிகள் முதலானோர் இவ்விஷயங்களைப் புரிய வைக்க முடியாது. இராமருடைய கௌரவத்தையே கெடுத்து விட்டனர் - பாடுகின்றனர், இராமர் ராஜா........... (இராமரே பிரஜை என்பதாக). பிறகு அங்கே இத்தகைய அதர்மத்தின் விஷயம் எப்படி இருக்க முடியும்? இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள். அதனால் தான் பாடப்படுகின்றது - பொய்யான மாயை, பொய்யான உடல்.......... 5 விகாரங்கள் தான் மாயா எனச் சொல்லப் படுவது. செல்வம் அல்ல. செல்வம் சம்பத்து எனச் சொல்லப்படுகின்றது. மனிதர்களுக்கு இது கூடத் தெரிவதில்லை-மாயா எனச் சொல்லப் படுவது எது என்று. இதை பாபா இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார்.

 

பாபா சொல்கிறார், நான் பரம ஆத்மா என்னை விடவும் உயர்ந்தவர்களாக எஜமானர்களாக உங்களை ஆக்குகிறேன். நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு உயர்ந்த படிப்பு! மனிதரிலிருந்து பகவான் ஒருவரே தேவதையாக ஆக்க முடியும். தேவதைகள் இருப்பது சத்யுகத்தில். மனிதர்கள் இருப்பது கலியுகத்தில். நீங்கள் இப்போது சங்கமயுகத்தில் அமர்ந்து மனிதரில் இருந்து தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு சுலபமாக்கிப் புரிய வைக்கிறார்! தூய்மையாக அவசியம் ஆக வேண்டும். ஆக, பிரஜைகளையும் அதிகம் உருவாக்க வேண்டும். கல்ப-கல்பமாக நீங்கள் இவ்வளவு பிரஜைகளை உருவாக்குகிறீர்கள் சத்யுகத்தில் எவ்வளவு பிரஜைகள் இருந்தனரோ, அவ்வளவு! சத்யுகம் இருந்தது. இப்போது இல்லை, மீண்டும் வரும். இந்த லட்சுமி-நாராயணர் உலகத்தின் எஜமானர்களாக இருப்பார்கள். சித்திரங்களோ உள்ளன இல்லையா? பாபா சொல்கிறார் - இந்த ஞானத்தை நான் இப்போது உங்களுக்குத் தருகிறேன். பிறகு மறைந்து போகும். பிறகு துவாபர யுகத்திலிருந்து பக்தி ஆரம்பமாகும். இராவண இராஜ்யம் வந்து விடுகின்றது. நீங்கள் வெளிநாடுகளிலும் இதைப் புரிய வைக்க முடியும் - சிருஷ்டிச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்று. லட்சுமி-நாராயணரின் சித்திரத்தோடு மற்ற தர்மங்களைச் சேர்ந்தவர்களுக்கோ தொடர்பு கிடையாது. அதனால் பாபா சொல்கிறார், இந்தத் திரிமூர்த்தி மற்றும் கல்ப விருட்சம் முக்கியமான சித்திரங்களாகும். இவை மிகவும் முதல் தரமானவை. கல்பவிருட்சம் மற்றும் சிருஷ்டிச் சக்கரத்திலிருந்து புரிந்து கொள்வார்கள், இன்னின்ன தர்மங்கள் எப்போது வரும், கிறிஸ்து எப்போது வருவார்? பாதியில் அந்த அனைத்து தர்மங்களும் உள்ளன. மற்றப்படி மீதிப் பாதியில் உங்களுடைய சூரியவம்சி-சந்திரவம்சி. 5000 வருடங்களின் விளையாட்டு. ஞானம், பக்தி, வைராக்கியம். ஞானம் என்பது பகல், பக்தி என்பது இரவு. பிறகு எல்லையற்ற வைராக்கியம் வருகிறது. நீங்கள் அறிவீர்கள், இந்தப் பழைய உலகம் முடிந்துவிடப் போகிறது. ஆகவே இவற்றை மறந்துவிட வேண்டும். பதீத பாவனர் யார் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இரவும் பகலும் பாடிக் கொண்டே இருக்கின்றனர், பதீத பாவனா சீதாராம்...... காந்தியும் கூட கீதை படித்திருந்தார். அவரும் கூட இதுபோல் பாடியிருந்தார் - ஹே பதீத-பாவனா, சீதைகளின் ராமா என்று. ஏனென்றால் சீதைகளாகிய நீங்கள் அனைவரும் மணமகள்கள் இல்லையா? பாபா மணமகன். பிறகு சொல்லி விடுகின்றனர், ரகுபதி ராகவ ராஜாராம் என்று. இப்போது அவர் திரேதாயுகத்தின் ராஜா. விஷயம் முழுவதையுமே குழப்பி விட்டுள்ளனர். அனைவரும் கை தட்டிக் கொண்டே பாடுகின்றனர். நாமும் பாடினோம். ஓராண்டாகக் கதராடை முதலியவற்றை அணிந்தோம். பாபா அமர்ந்து புரிய வைக்கிறார் - இவரும் கூட (பிரம்மா) காந்தியைப் பின்பற்றுபவராக ஆகியிருந்தார். இவரோ அனைத்தையுமே அனுபவம் செய்துள்ளார். முதலில் இருந்தவர் கடைசியாக ஆகியுள்ளார். இப்போது மீண்டும் முதலாமவராக ஆவார். உங்களிடம் சொல்கின்றனர், எங்கெங்கோ பிரம்மாவை அமர்த்தியிருக்கிறீர்கள் என்று. இதையும் புரிய வைக்க வேண்டும் - அட, கல்பவிருட்சத்தின் மீது நின்று கொண்டிருக்கிறார். எவ்வளவு தெளிவாக உள்ளது, இவரோ அசுத்தமான உலகத்தின் கடைசியில் நிற்கிறார். ஸ்ரீகிருஷ்ணரும் மேலே காட்டப்பட்டுள்ளார். இரண்டு பூனைகள் சண்டையிட்டுக் கொள்கின்றன, கிருஷ்ணர் வெண்ணெயைச் சாப்பிட்டு விடுகிறார். மாதாக்களுக்கு சாட்சாத்காரம் கிடைக்கிறது. அவர்கள் புரிந்து கொள்கின்றனர், அவர் வாயில் வெண்ணெய் உள்ளது, அல்லது சந்திரன் உள்ளது என்று. உண்மையில் உலகின் இராஜ பதவி வாயில் உள்ளது. இரண்டு பூனைகள் சண்டையிட்டுக் கொள்கின்றன. வெண்ணெய் தேவதைகளாகிய உங்களுக்குக் கிடைத்து விடுகின்றது. இது உலகத்தின் இராஜபதவியாகிய வெண்ணெய். வெடிகுண்டுகள் முதலியவற்றை உருவாக்குவதிலும் அதிக முன்னேற்றத்தை அடைந்து கொண்டுள்ளனர். அந்த மாதிரிப் பொருளைப் போடுகின்றனர், உடனே மனிதர்கள் மடிந்து போய் வேண்டும் என்று. கதறிக் கொண்டே இருக்கக் கூடாது. எப்படி ஹிரோஷிமாவில் குண்டு போட்டதால் இன்று வரையும் கூட நோயாளிகளாக ஆகிவிட்டுள்ளனர். ஆக, பாபா புரிய வைக்கிறார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, அரைக்கல்பம் நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள். எந்தவிதமான சண்டை முதலியவற்றின் பெயர் கூட இருப்பதில்லை. இவை அனைத்தும் பின்னால் ஆரம்பமாகியுள்ளன. இவையனைத்தும் முன்பு இருந்ததில்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. சக்கரம் ரிப்பீட் (மறுபடியும்) ஆகிறது இல்லையா? பாபா அனைத்தையும் நன்றாகப் புரிய வைக்கிறார். இவற்றைக் குழந்தைகள் முழுமையாக தாரணை செய்ய வேண்டும். மேலும் ஈஸ்வரிய சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதுவோ மிக மோசமான உலகம். இது விஷம் நிறைந்த வைதரணி நதி எனச் சொல்லப்படுகின்றது. ஆகவே பாபா குழந்தைகளுக்கு அமர்ந்து புரிய வைக்கிறார் - பாபா எந்த அளவுக்கு உங்களை உயர்ந்தவர்களாகப் புரிந்து கொண்டிருக்கிறாரோ, நீங்கள் உங்களை அவ்வளவு உயர்ந்தவர் என உணர்வதில்லை. குழந்தைகள் உங்களுக்கு மிகுந்த நஷா இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் மிக உயர்ந்த குலத்தவர்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) தனது புத்தியை நல்லதாக ஆக்குவதற்கு தினமும் ஞான அமிர்தத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். நினைவுடன் கூடவே படிப்பின் மீது முழுமையான கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால் படிப்பினால் தான் உயர்ந்த பதவி கிடைக்கின்றது.

 

2) நாம் உயர்ந்ததிலும் உயர்ந்த குலத்தவர். சுயம் பகவான் நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். இதே நஷாவில் இருக்க வேண்டும். ஞான தாரணை செய்து ஈஸ்வரிய சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

 

வரதானம்:

சேவையின் கூடவே எல்லையற்ற வைராக்கிய உள்ளுணர்வுடன் கூடிய கட்டுபாட்டுடன் செயல்பாட்டையும் வெளிக்கொண்டு வரக்கூடிய (இமர்ஜ்) வெற்றி மூர்த்தி ஆகுக.

 

சேவை மூலம் குஷி மற்றும் சக்தி கிடைக்கிறது. ஆனால், சேவையிலே தான் வைராக்கிய உள்ளுணர்வு முடிந்துவிடுகிறது. ஆகையினால், தனக்குள் உள்ள வைராக்கிய உள்ளுணர்வை விழிப்படையச் செய்யுங்கள். சேவையினுடைய திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்தும் பொழுதே வெற்றி கிடைக்கிறது. அவ்வாறே இப்பொழுது எல்லையற்ற வைராக்கிய உள்ளுணர்வுடன் கூடிய செயல்திறனை இமர்ஜ் செய்யுங்கள். எத்தனை சாதனங்கள் கிடைத்தாலும் சரி, ஆனால், எல்லையற்ற வைராக்கிய உள்ளுணர்வின் கட்டுப்பாடு ஆகிவிடக் கூடாது. சாதனம் மற்றும் தவத்தின் சமநிலை இருக்கும்பொழுதே வெற்றி மூர்த்தி ஆவீர்கள்.

 

சுலோகன்:

நடைபெற முடியாதவற்றையும் நடைபெறக் கூடியதாக்குவதே பரமாத்ம அன்பின் அடையாளம் ஆகும்.

 

ஓம்சாந்தி