20.06.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
"இனிமையான
குழந்தைகளே!
அந்தர்முகி
(அக
நோக்கு)
ஆகுங்கள்,
அதாவது அமைதியாயிருங்கள்.
வாயினால்
எதுவும்
பேசாதிருங்கள்.
ஒவ்வொரு
காரியத்தையும் அமைதியாகச்
செய்யுங்கள்.
ஒருபோதும்
அசாந்தியைப்
பரப்பாதீர்கள்.
கேள்வி
:
குழந்தைகளாகிய
உங்களை
ஏழையாக
ஆக்குகின்ற,
அனைவரைக்
காட்டிலும்
பெரிய
விரோதி
யார்?
பதில்
:
கோபம்!
எங்கே
கோபம்
உள்ளதோ
அங்கே
பானையின்
தண்ணீரும்
கூட
வற்றிப்
போகுமென்று சொல்லப்படுகின்றது.
பாரதத்தின்
பானை
-
வைர
வைடூரியங்களால்
நிரம்பப்
பெற்றதாக
இருந்தது,
இந்த பூதத்தின்
காரணத்தால்
காலியாகி விட்டிருக்கிறது.
இந்த
பூதங்கள்
தான்
உங்களை
ஏழையாக
ஆக்கி
விட்டிருக்கின்றன.
கோபமடையும்
மனிதர்கள்
தாங்களும்
சூடாகி,
மற்றவர்களையும்
சூடாக்குகின்றனர்.
அதனால்
இப்போது இந்த
பூதங்களை
அந்தர்முகியாகி
(உள்முகநோக்குள்ளவராகி),
வெளியேற்றுங்கள்.
ஓம்
சாந்தி!
பாபா
குழந்தைகளுக்குப்
புரிய
வைக்கின்றார்,
இனிமையான
குழந்தைகளே!
அந்தர்
முகியாகுங்கள்.
அந்தர்
முக்தா
என்றால்
எதுவும்
பேசாதீர்கள்.
தன்னை
ஆத்மா
என
உணர்ந்து
பாபாவை
நினைவு
செய்யுங்கள்.
இது
தந்தை
வந்து
குழந்தைகளுக்குக்
கற்றுத்
தருவதாகும்.
இதில்
வேறு
எதுவும்
பேசுவதற்குத்
தேவையில்லை.
புரிந்துக்
கொள்ள
வைக்கப்படுகின்றது
--
இல்லறத்தில்
இதுபோல்
இருக்க
வேண்டும்.
இது
தான்
மன்மனாபவ.
என்னை
நினைவு
செய்யுங்கள்
-
இது
முதல்
முக்கியமான
விஷயம்
குழந்தைகளாகிய
நீங்கள்
வீட்டில்
கோபப் படவும்
கூடாது.
கோபம்
எப்படிப்
பட்டதென்றால்
அது
குடத்தில்
உள்ள
தண்ணீர்
கூட
வற்றிப்
போகச் செய்யும்..
கோபவசமான
மனிதர்கள்
அசாந்தியைப்
பரப்புகின்றனர்.
அதனால்
இல்லறத்தில்
இருந்து
கொண்டே அமைதியாக
இருக்க
வேண்டும்.
உணவு
சாப்பிட்டுவிட்டுத்
தனது
தொழில்
அல்லது
அலுவலகம்
முதலானவற்றிற்குச்
செல்ல
வேண்டும்.
அங்கும்
கூட
அமைதியில்
இருக்க
வேண்டும்.
அனைவருமே
சொல்கிறார்கள்,
எங்களுக்கு
அமைதி
வேண்டுமென்று.
இதுவோ
குழந்தைகளுக்கு
சொல்லப்பட்டுள்ளது--
அமைதியின்
கடல் ஒரே
ஒரு
பாபா
மட்டுமே.
பாபா
தான்
கட்டளையிடுகின்றார்,
என்னை
நினைவு
செய்யுங்கள்.
இதில்
பேசுவதற்கு எதுவுமில்லை.
உள்முகநோக்கில்
இருக்க
வேண்டும்.
அலுவலகம்
முதயவற்றில்
தங்களது
காரியத்தையும் செய்ய
வேண்டும்
என்றால்
இதில்
அதிகம்
பேசவேண்டிய
தேவை
எதுவும்
இருக்காது.
முற்றிலும்
இனிமையானவர்களாக
ஆகவேண்டும்.
யாருக்கும்
துக்கம்
கொடுக்கக்
கூடாது.
சண்டையிடுவது
முதலிய இதெல்லாம் கோபத்துடன்
சேர்ந்தது.
அனைத்திலும்
பெரிய
விரோதி
காமமாகும்.
பிறகு
இரண்டாவதாக
வருவது
கோபம்.
ஒருவர்
மற்றவருக்கு
துக்கம்
கொடுக்கிறார்கள்.
கோபத்தால்
எவ்வளவு
சண்டையாகி
விடுகின்றது!
குழந்தைகளுக்குத் தெரியும்,
சத்யுகத்தில்
சண்டை
நடப்பதில்லை.
இது
இராவணனுடைய
குணத்தின்
அடையாளம்.
கோபப்படுகிறவர்களும்
கூட
அசுர
சம்பிரதாயத்தினர்
எனப்படுகிறார்கள்.
பூதத்தின்
பிரவேசம்
அல்லவா?
இதில் பேச
வேண்டியது
எதுவும்
இல்லை.
ஏனெனில்
அந்த
மனிதர்களுக்கோ
ஞானம்
கிடையாது.
அவர்களோ கோபப்படுவார்கள்.
கோபப்படுபவர்கள்
மீது
கோபப்படுவதால்
சண்டை
வந்து
விடும்.
பாபா
சொல்லிப் புரிய வைக்கிறார்,
இது
கடுமையான
பூதம்.
இதை
யுக்தியுடன்
விரட்ட
வேண்டும்.
வாயிலிருந்து எந்த
ஒரு
கடுமை யான
சொல்லும்
வெளிவரக்
கூடாது.
இது
மிகவும்
இழப்பை
உருவாக்குவதாகும்.
வினாசமும்
கூட
கோபத்தினால் தான்
ஏற்படுகிறது
இல்லையா?
வீடு
தோறும்
எங்கெல்லாம்
கோபம்
இருக்கிறதோ
அங்கே
அசாந்தி
அதிகமாக உள்ளது.
கோபப்பட்டால்
நீங்கள்
பாபாவின்
பெயரைக்
கெடுக்கிறீர்கள்.
இந்த
பூதங்களை
விரட்ட
வேண்டும்.
ஒரு
தடவை
விரட்டி
விட்டால்
பிறகு
அரைக்கல்பத்திற்கு
இந்த
பூதம்
இருக்கவே
செய்யாது.
இந்த
5
பூதங்கள் இப்போது
முழு
வேகத்தில்
உள்ளன.
இத்தகைய
சமயத்தில்
தான்
பாபா
வருகின்றார்
-
விகாரங்கள்
முழு வேகத்தில்
இருக்கும்
போது.
இந்தக்
கண்கள்
மிகவும்
குற்றமானவை,
வாயும்
கூடக்
குற்றமுள்ளதாகும்.
சப்தமாக
பேசுவதால்
மனிதர்கள்
சூடாகி
விடுகின்றனர்.
மேலும்
வீட்டையும்
கூட
சூடாக்கி
விடுகின்றனர்.
காமம்
மற்றும்
கோபம்
இந்த
இரண்டும்
பெரிய
விரோதிகள்.
கோபக்காரர்கள்
நினைவு
செய்ய
இயலாது.
நினைவு
செய்பவர்கள்
எப்போதும்
அமைதியாக
இருப்பார்கள்.
தனது
மனதைக்
கேட்டுக்
கொள்ள
வேண்டும்
--
எனக்குள்
பூதம்
எதுவும்
இல்லாதிருக்கிறதா?
மோகத்தினுடைய
மற்றும்
பேராசையினுடைய
பூதமும்
கூட உள்ளது.
பேராசையின்
பூதமும்
கூடக்
குறைவானதல்ல.
இவையனைத்தும்
பூதங்கள்,
ஏனெனில்
இராவண சேனை.
பாபா
குழந்தைகளுக்கு
நினைவு
யாத்திரை
கற்றுத்
தருகின்றார்.
ஆனால்
குழந்தைகள்
இதில்
அதிகமாகக் குழம்பிப்
போகிறார்கள்.
புரிந்து
கொள்வதில்லை,
ஏனெனில்
பக்தி
அதிகம்
செய்திருக்கிறார்கள்
அல்லவா?
பக்தி என்பது
தேக
அபிமானம்.
அரைக்கல்பமாக
தேக
அபிமானம்
இருந்துள்ளது.
வெளிமுகநோக்கில்
இருப்பதால் தன்னை
ஆத்மா
என
உணர
முடிவதில்லை.
பாபா
மிகுந்த
முக்கியத்துவம்
கொடுக்கிறார்
--
தன்னை
ஆத்மா என
உணர்ந்து
பாபாவை
நினைவு
செய்யுங்கள்.
ஆனால்
அது
தான்
முடிவதில்லை.
மற்ற
அனைத்து
விஷயங்களையும்
ஏற்றுக்
கொள்ளவும்
செய்கிறார்கள்.
பிறகு
சொல்லிவிடுகிறார்கள்,
எப்படி
நினைவு
செய்வது?
எந்த ஒரு
பொருளும்
காணப்படுவதில்லை.
அவர்களுக்குச்
சொல்லிப் புரிய
வைக்கப்படுகின்றது
-
தன்னை
ஆத்மா என
உணர்ந்து
கொண்டிருக்கிறீர்கள்.
இதையும்
அறிவீர்கள்
--
அவர்
எல்லையற்ற
தந்தையாக
உள்ளார்.
வாயினால்
சிவ-சிவ
என்று
சொல்லத்
தேவையில்லை.
உள்ளுக்குள்
அறிந்திருக்கிறீர்கள்,
இல்லையா
–
நான் ஆத்மா
என்பதை?
மனிதர்கள்
அமைதி
வேண்டுகின்றனர்.
அமைதியின்
கடலாக
இருப்பவர்
அந்த
பரமாத்மா ஒருவரே!
நிச்சயமாக
ஆஸ்தியும்
அவர்
தான்
தருவார்.
இப்போது
பாபா
சொல்லிப் புரிய
வைக்கிறார்,
என்னை நினைவு
செய்வீர்களானால்
அமைதி
ஏற்பட்டு
விடும்.
மேலும்
பல
பிறவிகளுக்கான
பாவ
கர்மங்கள்
வினாசமாகி விடும்.
வேறு
பொருள்
எதுவுமில்லை.
இவ்வளவு
பெரிய
லிங்கம் எதுவுமில்லை.
ஆத்மா
சிறியது,
பாபாவும் சிறிய
அளவே
உள்ளார்.
நினைவோ
அனைவருமே
செய்கின்றனர்
--
ஹே,
பகவான்!
ஹே
கடவுளே!
யார் சொல்கிறார்கள்?
ஆத்மா
சொல்கின்றது
-
என்னுடைய
தந்தையை
நினைவு
செய்கின்றேன்.
ஆக,
பாபா
குழந்தைகளுக்குச்
சொல்கிறார்
--
மன்மனாபவ.
இனிமையான
குழந்தைகளே!
அந்தர்முகியாகி
இருங்கள்.
இப்போது என்னென்ன
பார்க்கிறீர்களோ
அவையனைத்தும்
அழிந்து
விடப்போகின்றன.
மற்றப்படி
ஆத்மா
அமைதியாக உள்ளது.
ஆத்மா
சாந்திதாமத்திற்குத்
தான்
செல்ல
வேண்டும்.
எதுவரை
ஆத்மா
தூய்மை
ஆகவில்லையோ அதுவரை
அது
சாந்திதாம்
செல்ல
முடியாது.
ரிஷி,
முனி
முதலானோரும்
அமைதி
எப்படிக்
கிடைக்கும்
எனக் கேட்கிறார்கள்.
பாபாவோ
சகஜமான
யுக்தி
சொல்கிறார்.
ஆனால்
குழந்தைகளில்
பலர்
சாந்தியாக
இருப்பதில்லை.
பாபாவுக்குத்
தெரியும்,
வீடுகளில்
இருக்கிறார்கள்,
ஆனால்
முற்றிலும்
சாந்தியாக
இருப்பதில்லை.
சென்டர்களுக்குக் கொஞ்ச
நேரம்
செல்கின்றனர்.
உள்ளுக்குள்
சாந்தியாக
இருந்து
பாபாவை
நினைவு
செய்வதில்லை.
நாள் முழுவதும்
வீட்டில்
தொந்தரவு
செய்து
கொண்டே
இருக்கின்றனர்.
ஆகவே
சென்டருக்கு
வந்தாலும்
கூட அமைதியாக
அமர
முடிவதில்லை.
யாருக்காவது
தேகத்தின்
மீது
பிரியம்
ஏற்பட்டு
விட்டதென்றால்
அவர்களது மனம்
ஒருபோதும்
அமைதியடையாது.
அதனுடைய
நினைவு
தான்
வந்து
கொண்டே
இருக்கும்.
பாபா சொல்லிப் புரிய
வைக்கிறார்,
மனிதர்களிடம்
5
பூதங்கள்
உள்ளன.
இவர்களுக்குள்
பூதம்
பிரவேசமாகியுள்ளது எனச்
சொல்கிறார்கள்
இல்லையா?
இந்த
பூதங்கள்
தான்
உங்களை
ஏழையாக
ஆக்கிவிட்டுள்ளன.
பூதம்
என்று ஏதேனும்
ஒன்று
இருக்கலாம்,
அதுவும்
எப்போதாவது
பிரவேசமாகி
விடுகின்றது.
பாபா
சொல்கிறார்,
5
பூதங்கள் ஒவ்வொருவருக்குள்ளும்
பிரவேசமாகியுள்ளன.
இந்த
பூதங்களை
விரட்டுவதற்காகத்
தான்
அழைக்கின்றனர்.
பாபா,
வந்து
எங்களுக்கு
அமைதி
கொடுங்கள்,
இந்த
பூதங்களை
விரட்டுவதற்கான
யுக்தி
சொல்லுங்கள்.
இந்த பூதங்களோ
அனைவரிடமும்
உள்ளன.
இது
இராவண
இராஜ்யம்
இல்லையா?
அனைத்தையும்
விடக்
கடுமையான பூதம்
காம-கோபம்.
பாபா
வந்து
பூதங்களை
விரட்டுகின்றார்
என்றால்
அதற்குப்
பதிலாக
ஏதேனும்
கிடைக்கத்தான்
வேண்டும்
இல்லையா?
அவர்கள்
பேய்-பிசாசுகளை
விரட்டுகின்றனர்.
எதுவும்
கிடைப்ப
தில்லை.
இதை குழந்தைகள்
அறிவார்கள்,
முழு
உலகிலும்
இருந்து
பூதங்களை
விரட்டுவதற்காக
பாபா
வருகின்றார்.
இப்போது முழு
உலகத்திலும்
அனைவருக்குள்ளும்
பூதங்கள்
பிரவேசமாகியுள்ளன.
தேவதைகளிடம்
எந்த
ஒரு
பூதமும் இருப்பதில்லை
-
தேக
அபிமானத்தின்
பூதமோ,
காம-கோப-
லோப-மோக
எதுவுமே
இருப்பதில்லை.
பேராசையின் பூதமும்
குறைவானதல்ல.
இந்த
முட்டையைச்
சாப்பிட
வேண்டும்,
அதை-இதைச்
சாப்பிட
வேண்டும்
அநேகரிடம் பூதங்கள்
உள்ளன.
தங்கள்
மனதால்
புரிந்து
கொள்கின்றனர்,
நமக்குள்
காமத்தின்
பூதம்,
கோபத்தின்
பூதம் நிச்சயமாக
உள்ளது
என்பதை.
ஆக,
இந்த
பூதங்களை
வெளியேற்றுவதற்காக
பாபா
எவ்வளவு
கஷ்டப்படுகிறார்!
தேக
அபிமானத்தில்
வருவதால்
நான்
நகை
அணிய
வேண்டும்,
இன்னென்ன
செய்ய
வேண்டும்
என்ற எண்ணமெல்லாம்
வருகின்றது.
பிறகு
சம்பாதித்த
வருமானமெல்லாம்
காணாமற்
போய்விடும்.
கோபப்படுகிறவர் களுக்கும்
கூட
இதே
நிலைமை
தான்.
கோபத்தில்
வந்து
தந்தை
குழந்தைகளைக்
கொன்று
விடுகின்றார்.
குழந்தைகள்
தந்தையைக்
கொன்று
விடுகின்றனர்,
மனைவி
கணவனைக்
கொன்று
விடுகிறாள்.
சிறைகளில் போய்
நீங்கள்
பாருங்கள்,
எப்படி
எப்படியெல்லாம்
வழக்குகள்
உள்ளன
என்று!
இந்த
பூதங்களின்
பிரவேசத்தின் காரணத்தால்
பாரதத்தின்
நிலை
என்னவாக
ஆகிவிட்டுள்ளது!
பாரதத்தின்
மிகப்
பெரிய
பானை
தங்கம்-வைரங்களால்
நிரம்பப்
பெற்றிருந்தது,
இப்போது
காலியாகிவிட்டுள்ளது.
சொல்கிறார்கள்
இல்லையா:
கோபத்தின்
காரணத்தால் தண்ணீர்ப்
பானை
கூடக்
காய்ந்து
போகும்
என்று?
ஆக,
இந்த
பாரதத்தின்
நிலையும்
கூட
இதுபோல்
ஆகி விட்டிருக்கிறது.
இதையும்
யாரும்
அறிந்திருக்கவில்லை.
பூதங்களை
வெளியேற்றுவதற்காக
பாபா
தான்
வருகின்றார்.
இதை
வேறு
எந்த
ஒரு
மனிதரும்
வெளி
யேற்ற
முடியாது.
இந்த
5
பூதங்கள்
மிகவும்
சக்தி
வாய்ந்தவையாகும்.
அரைக்கல்பமாக
இவற்றின்
பிரவேசம்
நடைபெற்று
வந்துள்ளது.
இந்தச்
சமயமோ
கேட்கவே
வேண்டாம்.
யாராவது
தூய்மையாக
இருக்கலாம்.
ஆனால்
பிறவியோ
விகாரத்திலிருந்து தான்
கிடைக்கின்றது.
பூதங்களோ இருக்கத்
தான்
செய்கின்றன
இல்லையா?
5
பூதங்கள்
பாரதத்தை
முற்றிலும்
ஏழையாக
ஆக்கி
விட்டுள்ளன.
அதனால்
வெளியிலிருந்து கடன்
வாங்கிக்
கொண்டே
இருக்கின்றனர்.
பாரதத்திற்காகத்
தான்
பாபா
சொல்லிப் புரிய
வைக்கின்றார்.
இப்போது
குழந்தைகளாகிய
உங்களுக்கு
இந்தக்
கல்வியால்
எவ்வளவு
செல்வம் கிடைக்கின்றது!
இது
அழியாத
படிப்பு,
அழியாத
தந்தை
கற்றுத்
தருகின்றார்.
பக்தி
மார்க்கத்தில்
எவ்வளவு வழக்கங்கள்
உள்ளன!
(பிரம்மா)
பாபா
சிறு
வயதிலிருந்தே கீதை
படித்து
வந்தார்.
மேலும்
நாராயணருக்குப் பூஜை
செய்து
வந்தார்.
எதையும்
புரிந்து
கொள்ளவில்லை.
நான்
ஆத்மா.
அவர்
என்னுடைய
தந்தை
--இதையும்
கூடப்
புரிந்து
கொண்டிருக்கவில்லை.
அதனால்
கேட்கின்றனர்,
எப்படி
நினைவு
செய்வது
என்று.
அட,
நீங்களோ
பக்தி
மார்க்கத்தில்
நினைவு
செய்து
வந்தீர்கள்
--
ஹே,
பகவான்
வாருங்கள்,
எங்களை விடுவியுங்கள்,
எங்கள்
வழிகாட்டியாகுங்கள்.
வழிகாட்டி
கிடைப்பது
முக்தி-ஜீவன்முக்திக்காக.
பாபா
இந்தப் பழைய
உலகத்தின்
மீது
வெறுப்பு
ஏற்படுமாறு
செய்கிறார்.
இச்சமயம்
ஆத்மாக்கள்
அனைவருமே
கருப்பாக உள்ளனர்
எனும்
போது
அவர்களுக்கு
வெள்ளையான
(தூய)
உடல்
எப்படிக்
கிடைக்கும்?
தோல்
எவ்வளவு தான்
வெளுப்பாக
இருந்தாலும்
ஆத்மாவோ
கருப்பாக
உள்ளது
இல்லையா?
வெள்ளையான,
அழகான
சரீரம் உள்ளவர்களுக்கு
நஷா
எவ்வளவு
இருக்கிறது!
ஆத்மா
எப்படி
வெள்ளையாகின்றது
என்பது
மனிதர்களுக்குத் தெரிவதே
இல்லை.
அதனால்
அவர்கள்
நாஸ்திகர்
எனப்படுகின்றார்கள்.
யார்
தங்களின்
தந்தை
படைப்பவர் மற்றும்
அவரது
படைப்புப்
பற்றி
அறியாதிருக்கிறார்களோ
அவர்கள்
நாஸ்திகர்கள்.
யார்
அறிந்திருக்கிறார்களோ அவர்கள்
ஆஸ்திகர்கள்.
பாபா
எவ்வளவு
நன்றாக
அமர்ந்து
குழந்தைகளாகிய
உங்களுக்குச்
சொல்லிப் புரிய வைக்கின்றார்!
ஒவ்வொருவரும்
தங்கள்
மனதைக்
கேட்டுக்
கொள்ள
வேண்டும்
--
எதுவரை
எனக்குள் தூய்மை
உள்ளது?
எதுவரை
நான்
என்னை
ஆத்மாவாக
உணர்ந்து
பாபாவை
நினைவு
செய்கிறேன்?
நினைவு பலத்தினால்
தான்
இராவணன்
மீது
வெற்றி
கொள்ள
வேண்டும்.
இதில்
சரீரம்
பலவானாக
இருப்பதற்கான விஷயமே
இல்லை.
இச்சமயம்
அனைவரைக்காட்டிலும்
பலவானாக
இருப்பது
அமெரிக்காவாகும்.
ஏனென்றால் அவர்களிடம்
செல்வம்,
வெடிகுண்டுகள்
முதலியன அதிகமாக
உள்ளன.
அதனால்
அந்த
பலம்
சரீர
சம்மந்தமானது,
கொல்வதற்காக.
நாம்
வெற்றி
பெற
வேண்டுமென்பது
புத்தியில்
உள்ளது.
உங்களுடையதோ
ஆன்மீக
பலம்.
நீங்கள்
இராவணன்
மீது
வெற்றி
கொள்கிறீர்கள்.
இதன்
மூலம்
நீங்கள்
உலகத்திற்கு
மாலிக்
(எஜமானர்)
ஆகிவிடுகிறீர்கள்.
உங்களை
யாருமே
வெற்றி
கொள்ள
இயலாது.
அரைக்கல்பத்திற்கு
யாராலும்
அபகரிக்க முடியாது.
வேறு
யாருக்கும்
தந்தையிடமிருந்து
ஆஸ்தி
கிடைப்பதில்லை.
நீங்கள்
என்னவாக
ஆகிறீர்கள் என்பதைக்
கொஞ்சம்
சிந்தித்துப்
பாருங்கள்.
பாபாவையோ
மிகுந்த
அன்புடன்
நினைவு
செய்ய
வேண்டும்.
மேலும்
சுயதரிசன
சக்கரதாரி
ஆகவேண்டும்.
அவர்கள்
நினைக்கிறார்கள்,
சுயதரிசன
சக்கரத்தால்
விஷ்ணு அனைவருடைய
தலைகளையும்
வெட்டினார்
என்று.
ஆனால்
இதில்
இம்சைக்கான
விஷயம்
எதுவும்
இல்லை.
ஆக,
இனிமையிலும்
இனிமையான
குழந்தைகளுக்கு
பாபா
சொல்கிறார்
--
இனிமையான
குழந்தைகளே,
நீங்கள்
என்னவாக
இருந்தீர்கள்,
இப்போது
உங்களது
நிலைமையைப்
பாருங்கள்!
நீங்கள்
எவ்வளவு
பக்தி முதலியவற்றைச்
செய்திருந்தாலும்
பூதங்களை
வெளியேற்ற
முடியவில்லை.
இப்போது
உள்முகநோக்கில்
இருந்து பாருங்கள்,
நமக்குள்
எந்த
ஒரு
பூதமும்
இல்லாதிருக்கின்றதா?
யார்
மீதாவது
மனம்
ஈடுபட்டது,
(மோகித்தது)
நகை
அணிந்தீர்கள்
என்றால்
சம்பாதித்த
வருமானம்
இல்லாமற்போகும்.
அவர்களுடைய
முகத்தைப்
பார்ப்பதற்குக் கூட
நன்றாக
இருக்காது.
அவர்கள்
அசுத்தமாகவே
ஆகிவிட்டார்கள்,
தூய்மையாக
இல்லை.
உள்ளுக்குள் மனம்
அரித்துக்
கொண்டே
இருக்கும்.
நான்
தூய்மையிழந்து
விட்டேன்.
பாபா
சொல்கிறார்,
தேகத்துடன்
கூட அனைத்தையும்
மறந்து
விடுங்கள்.
தன்னை
ஆத்மா
என
உணருங்கள்.
இந்த
அவஸ்தாவில்
(நிலை)
இருப்பதன் மூலம்
தான்
நீங்கள்
தேவதை
ஆவீர்கள்.
ஆக,
எந்த
ஒரு
பூதமும்
வரக்கூடாது.
தன்னைத்
தான்
சோதித்துப் பாருங்கள்
என்று
சொல்லிப் புரிய
வைத்துக்
கொண்டே
இருக்கிறார்.
அநேகரிடம்
கோபம்
உள்ளது.
நிந்தனை செய்யாமல்
அவர்களால்
இருக்க
முடிவதில்லை.
பிறகு
சண்டை
நடைபெறுகின்றது.
சிலரோ
மிகவும்
கெட்டவர்களாக உள்ளனர்.
பூதங்களை
விரட்டிவிட்டு
முற்றிலும்
தூய்மையாக
வேண்டும்.
சரீர
நினைவு
கூட
வரக்கூடாது.
அப்போது
தான்
உயர்ந்த
பதவி
பெற
முடியும்.
அதனால்
எட்டு
ரத்தினங்கள்
பாடப்படுகின்றனர்.
உங்களுக்கு ஞானரத்தினங்கள்
கிடைக்கின்றன,
இரத்தினங்களாக
மாறுவதற்காக.
பாரதத்தில்
33
கோடி
தேவதைகள்
இருந்தனர் என்று
சொல்கின்றனர்.
ஆனால்
அவர்களிலும்
கூட
எட்டு
ரத்தினங்கள்
கௌரவத்துடன்
தேர்ச்சி
பெறுவார்கள்.
அவர்களுக்குத்
தான்
பரிசு
கிடைக்கும்.
எப்படி
ஸ்காலர்ஷிப்
(உதவித்தொகை)
கிடைக்கின்றது
இல்லையா?
நீங்கள்
அறிவீர்கள்,
குறிக்கோள்
மிக
உயர்ந்தது.
போகப்
போகக்
கீழே
விழுந்து
விடுகின்றனர்.
பூதத்தின் பிரவேசம்
ஆகிவிடுகின்றது.
அங்கே
விகாரம்
இருப்பதில்லை.
குழந்தைகளாகிய
உங்கள்
புத்தியில்
முழு டிராமாவின்
சக்கரமும்
சுற்ற
வேண்டும்.
நீங்கள்
அறிவீர்கள்,
5000
ஆண்டுகளில்
எத்தனை
மாதங்கள்,
எத்தனை
மணிகள்,
எத்தனை
வினாடிகள் உள்ளன
என்று.
யாராவது
கணக்கெடுப்பதானால்
எடுக்க
முடியும்.
பிறகு
இந்த
மரம்
இருக்கிறதே,
அதிலும் கூட
எழுதி
விடுவீர்கள்,
கல்பத்தில்
இத்தனை
வருடங்கள்,
இத்தனை
மாதங்கள்,
இத்தனை
நாட்கள்,
இத்தனை மணிகள்
இத்தனை
வினாடிகள்
உள்ளன
என்று.
மனிதர்கள்
சொல்வார்கள்,
இவர்கள்
முற்றிலும்
சரியாகச் சொல்கிறார்கள்
என்று.
84
பிறவிகளின்
கணக்கைச்
சொல்கிறார்கள்.
ஆக,
கல்பத்தின்
ஆயுளை
ஏன்
சொல்ல மாட்டார்கள்?
குழந்தைகளுக்கு
முக்கியமான
விஷயமோ
சொல்லப்
பட்டுள்ளது,
அதாவது
எப்பாடுபட்டாவது பூதங்களை
விரட்டியாக
வேண்டும்.
இந்த
பூதங்கள்
உங்களுக்கு
முழு
அழிவை
ஏற்படுத்தியுள்ளன.
மனிதர்கள் அனைவரிடமும்
இந்த
பூதங்கள்
நிச்சயமாக
உள்ளன.
பிரஷ்டாச்சாரத்தின்
(விகாரம்)
பிறப்புகளாகவே
உள்ளனர்.
அங்கே
(சத்யுகத்தில்)
பிரஷ்டாச்சாரம்
இல்லை.
இராவணனே
அங்கு
இல்லை.
இராவணனையும்
கூட
யாரும் புரிந்து
கொள்ளவில்லை.
நீங்கள்
இராவணன்
மீது
வெற்றி
கொள்கிறீர்கள்.
பிறகு
இராவணனே
இருக்க
மாட்டான்.
இப்போது
புருஷார்த்தம்
செய்யுங்கள்.
பாபா
வந்திருக்கிறார்
என்றால்
பாபாவின்
ஆஸ்தி
கண்டிப்பாகக்
கிடைத்தாக வேண்டும்.
நீங்கள்
எத்தனை
தடவை
தேவதை
ஆகிறீர்கள்!
எத்தனை
தடவை
அசுரர்களாகிறீர்கள்!
அதனுடைய கணக்கைச்
சொல்ல
முடியாது.
எண்ணற்ற
தடவை
ஆகியிருப்பீர்கள்.
நல்லது,
குழந்தைகளே!
சாந்தியில்
இருப்பீர் களானால்
ஒருபோதும்
கோபம்
வராது.
பாபா
என்ன
போதனை
தருகிறாரோ,
அதை
நடைமுறைப்
படுத்த வேண்டும்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான,
வெகுகாலம்
கழித்து,
காணாமல்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக் குழந்தைகளுக்கு
தாய்,
தந்தையாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகளும்
காலை
வணக்கமும்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே.
தாரணைக்கான
முக்கிய
சாரம்
:
1.
தன்னைத்
தான்
கேட்டுக்
கொள்ள
வேண்டும்
--
எனக்குள்
எந்த
ஒரு
பூதமும்
இல்லையே?
கண்கள்
குற்றமுள்ளதாக
இல்லையே?
சப்தமாகப்
பேசுகிற
அல்லது
அசாந்தியைப்
பரப்புகின்ற பழக்கம்
இல்லையே?
பேராசை-மோகத்தின்
விகாரங்கள்
தொந்தரவு
செய்யாமல் இருக்கின்றனவா?
2.
எந்த
ஒரு
தேகதாரியிடமும்
மனம்
ஈடுபடாதிருக்க
வேண்டும்.
தேகத்துடன்
கூட
அனைத்தையும்
மறந்து
நினைவு
யாத்திரை
மூலம்
தனக்குள்
ஆன்மீக
பலத்தை
நிரப்ப வேண்டும்.
ஒரு
முறை
பூதங்களை
விரட்டிவிட்டு
அரைக்கல்பத்திற்கு
விடுதலை
பெறவேண்டும்.
வரதானம்:
பணிவுத்தன்மையின்
குணத்தை
தாரணை
செய்து
அனைவருக்கும் சுகத்தை
கொடுக்கக்
கூடிய
சுகதேவன்,
சுக
சொரூபம்
ஆகுக.
மகான்
ஆத்மாக்களாகிய
உங்களின்
அடையாளம்
பணிவுத்தன்மையாகும்.
எந்த
அளவு
பணிவானவராக ஆகுவீர்களோ
அந்த
அளவு
அனைவரிடமிருந்தும்
மரியாதை
கிடைக்கும்.
பணிவானவராக
இருப்பவர்கள் பிறருக்கு
சுகத்தைக்
கொடுப்பார்கள்.
எங்கு
சென்றாலும்
என்ன
செய்தாலும்
சுகத்தைக்
கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
ஆக,
யார்
சம்மந்தம்,
தொடர்பில்
வருகின்றனரோ
அவர்
சுகத்தின்
அனுபவத்தை
அடைவார்,
ஆகையால்
பிராமண
ஆத்மாக்களாகிய
உங்களின்
புகழ்
பாடல்
-
சுகக்
கடலின் குழந்தைகள்
சுக
சொரூபம்,
சுக தேவன்.
எனவே
அனைவருக்கும்
சுகத்தைக்
கொடுத்து,
சுகத்தை
பெறுங்கள்.
யாரேனும்
உங்களுக்கு துக்கத்தைக்
கொடுத்தால்
நீங்கள்
ஏற்க
வேண்டாம்.
சுலோகன்:
யார்
ஆத்ம
உணர்வுடையவராக
இருக்கிறாரோ அவர்
அனைவரை
விடவும்
பெரிய
ஞானி
ஆவார்.
ஓம்சாந்தி