26.07.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே
-
உண்மையான
தந்தையிடம்
உள்ளேயும்
வெளியேயும்
(மனதாலும்,
நடத்தையாலும்)
உண்மையானவர்களாக
ஆகுங்கள்,
அப்போது
தான்
தேவதையாக ஆக
முடியும்,
பிராமணர்களாகிய
நீங்கள்
தான்
ஃபரிஸ்தாவிலிருந்து
தேவதைகளாக
ஆகின்றீர்கள்.
கேள்வி:-
இந்த
ஞானத்தை
கேட்க
அல்லது
தாரணை
செய்ய
உரிமையுள்ளவர்களாக
யார்
இருக்க
முடியும்?
பதில்:-
யார்
முழுசக்கரத்திலும்
நடிப்பை
நடித்தார்களோ,
யார்
அனைத்திலும்
அதிகமாக
பக்தி
செய்தார்களோ,
அவர்கள்
தான்
ஞானத்தை
தாரணை
செய்வதில்
மிக
வேகமாகச்
செல்வார்கள்.
அவர்கள்
தான்
உயர்ந்த பதவியும்
அடைவார்கள்.
குழந்தைகளாகிய
உங்களிடம்
சிலர்
கேட்கிறார்கள்
-
நீங்கள்
சாஸ்திரங்களை
ஏற்றுக் கொள்வதில்லையா?
என்று.
எந்தளவிற்கு
நாங்கள்
சாஸ்திரங்களை
படித்திருக்
கிறோமோ,
பக்தி
செய்திருக்கிறோமோ,
அந்தளவிற்கு
உலகத்தில்
யாரும்
செய்வதில்லை
என்று
சொல்லுங்கள்.
எங்களுக்கு
இப்போது
பக்தியின்
பலன் கிடைத்திருக்கிறது,
ஆகையினால்
இப்போது
பக்திக்கு
அவசியம்
இல்லை.
ஓம்
சாந்தி.
எல்லையற்ற
தந்தை
வந்து
எல்லையற்ற
குழந்தைகளுக்குப்
புரிய
வைக்கின்றார்,
அனைத்து ஆத்மாக்களுக்கும்
தந்தை
அனைத்து
ஆத்மாக்களுக்கும்
புரிய
வைக்கின்றார்,
ஏனென்றால்
அவர்
அனைவருக்கும் சத்கதியை
வழங்கும்
வள்ளல்
ஆவார்.
இருக்கின்ற
ஆத்மாக்கள்
அனைத்தையும்
ஜீவ
ஆத்மாக்கள்
என்று தான்
சொல்ல
முடியும்.
சரீரம்
இல்லையென்றால்
ஆத்மாவைப்
பார்க்க
முடியாது.
நாடகத்தின்
திட்டப்படி
பாபா சொர்க்கத்தை
ஸ்தாபனை
செய்து
கொண்டிருக்கின்றார்,
ஆனால்
நான்
சொர்க்கத்தை
பார்ப்பதில்லை
என்று
பாபா கூறுகின்றார்.
யாருக்காக
இருக்கின்றதோ,
அவர்கள்
தான்
பார்க்க
முடியும்.
உங்களுக்கு
படிப்பித்துவிட்டு
பிறகு நான்
எந்த
சரீரத்தையும்
தாரணை
செய்வதே
இல்லை.
சரீரம்
இல்லாமல்
எப்படிப்
பார்க்க
முடியும்?
எங்கும் இருக்கின்றேன்,
அனைத்தையும்
பார்க்கின்றேன்
என்பதெல்லாம்
கிடையாது.
பாபா
குழந்தைகளாகிய
உங்களை மட்டும்
தான்
பார்க்கிறார்,
உங்களை
மலர்களாக
மாற்றி
நினைவு
யாத்திரையை
கற்றுக்
கொடுக்கின்றார்.
யோகம் என்ற
வார்த்தை
பக்தியினுடைய
தாகும்.
ஞானத்தைக்
கொடுப்பவர்
ஒரு
ஞானக்கடலாவார்,
அவரைத்
தான் சத்குரு
என்று
சொல்லப்படுகிறது.
மற்றவர்கள்
அனைவரும்
குரு
ஆவர்.
உண்மையை
பேசக்கூடியவர்,
உண்மையான
கண்டத்தை
ஸ்தாபனை
செய்பவர்
அவரே
ஆவார்.
பாரதம்
உண்மையான
கண்டமாக
இருந்தது,
அங்கே
அனைவரும்
தேவி-தேவதைகள்
வசித்தார்கள்.
நீங்கள்
இப்போது
மனிதனிலிருந்து தேவதையாக மாறிக்
கொண்டிருக்கிறீர்கள்.
எனவே
குழந்தைகளுக்குப்
புரிய
வைக்கின்றார்
-
உண்மையான
தந்தையிடம் உள்ளும்-புறமும்
(மனதால்
மற்றும்
நடத்தையால்)
உண்மையானவர்களாக
ஆக
வேண்டும்.
முன்பு
ஒவ்வொரு அடியிலும்
பொய்தான்
இருந்தது,
சொர்க்கத்தில்
உயர்ந்த
பதவி
அடைய
விரும்புகிறீர்கள்
என்றால்,
அவை யனைத்தையும்
விட
வேண்டும்.
சொர்க்கத்திற்கு
நிறைய
பேர்
செல்வார்கள்,
ஆனால்
பாபாவைத்
தெரிந்து கொண்டும்
கூட
விகர்மங்களை
வினாசம்
செய்ய
வில்லையென்றால்
தண்டனைகளை
அனுபவித்து
கணக்கு-
வழக்குகளை
முடிக்க
வேண்டியிருக்கும்,
பிறகு
பதவியும்
மிகக்
குறைவாக
கிடைக்கும்.
புருஷோத்தம
சங்கமயுகத்தில்
இராஜ்யம்
ஸ்தாபனை
ஆகிக்
கொண்டிருக்கிறது.
இராஜ்யம்
சத்யுகத்திலோ
அல்லது
கலியுகத்திலோ ஸ்தாபனை
ஆக
முடியாது.
ஏனென்றால்
பாபா
சத்யுகத்திலோ
அல்லது
கலியுகத்திலோ
வருவதில்லை.
இந்த யுகத்தை
புருஷோத்தம
கல்யாணகாரி
யுகம்
என்று
சொல்லப்படுகிறது.
இது
தூய்மையற்ற
பழைய
உலகம் என்று
பாபா
கூறியுள்ளார்.
தூர
தேசத்தில்
இருக்கக்
கூடியவரே
என்று
பாடப்பட்டுள்ளது...........
மாற்றானுடைய தேசத்தில்
தன்னுடைய
குழந்தைகள்
எங்கே
கிடைப்பார்கள்?
மாற்றானுடைய
தேசத்தில்
மாற்றானுடைய
குழந்தைகள் தான்
கிடைக்கிறார்கள்.
நான்
யாருக்குள்
பிரவேசிக்
கின்றேன்
என்று
அவர்களுக்கு
நல்ல
விதத்தில்
புரிய வைக்கின்றேன்.
என்னுடைய
அறிமுகத்தையும்
கொடுக்கின்றேன்
மேலும்
நான்
யாருக்குள்
பிரவேசிக்கின்றேனோ அவருக்கும்
இது
உங்களுடைய
நிறைய
பிறவிகளின்
கடைசிப்
பிறவி
என்று
புரிய
வைக்கின்றேன்.
எவ்வளவு
தெளிவாக
இருக்கிறது!
இப்போது
இங்கே
நீங்கள்
முயற்சியாளர்களாக
இருக்கிறீர்கள்,
சம்பூரண
தூய்மை
கிடையாது.
சம்பூரண தூய்மையானவர்களை
ஃபரிஸ்தா
என்று
சொல்லப்படுகிறது.
யார்
தூய்மையாக
இல்லையோ
அவர்களை தூய்மையற்றவர்கள்
என்று
தான்
சொல்ல
முடியும்.
ஃபரிஸ்தாவாக
ஆன
பிறகு
தேவதைகளாக
ஆகின்றீர்கள்.
சூட்சுமவதனத்தில்
நீங்கள்
சம்பூரண
ஃபரிஸ்தாவைப்
பார்கின்றீர்கள்,
அவர்களை
ஃபரிஸ்தா
என்று சொல்லப்படுகிறது.
எனவே
பாபா
புரிய
வைக்கின்றார்
-
குழந்தைகளே,
ஒரு
அல்லாவையே
நினைவு
செய்ய வேண்டும்.
அல்ஃப்
என்றால்
பாபா,
அவரை
அல்லா
என்றும்
சொல்கிறார்கள்.
பாபாவிடமிருந்து
சொர்க்கத்தின் ஆஸ்தி
கிடைக்கிறது
என்பதை
குழந்தைகள்
புரிந்து
கொண்டுள்ளார்கள்.
சொர்க்கத்தை
எப்படி
படைக்கின்றார்?
நினைவு
யாத்திரை
மற்றும்
ஞானத்தின்
மூலம்
ஆகும்.
பக்தியில்
ஞானம்
இருப்பதில்லை.
ஒரு
பாபா
தான் பிராமணர்களுக்கு
ஞானத்தைக்
கொடுக்கின்றார்.
பிராமணர்கள்
குடுமி
அல்லவா!
இப்போது
நீங்கள்
பிராமணர்கள் பிறகு
குட்டிகர்ணம்
விளையாடுவீர்கள்.
பிராமணன்,
தேவதை,
சத்திரியர்............
இதைத்
தான்
விராட
ரூபம் என்று
சொல்லப்படுகிறது.
விராட
ரூபத்தை
பிரம்மா,
விஷ்ணு,
சங்கருடையது
என்று
சொல்ல
முடியாது.
அதில் பிராமணன்
குடுமி
இல்லை.
பாபா
பிரம்மாவின்
உடலில் வருகின்றார்,
என்பதை
யாரும்
தெரிந்திருக்கவில்லை.
பிராமணகுலம்
தான்
சர்வோத்தம
குலமாகும்,
இப்போது
பாபா
வந்து
படிப்பிக்கின்றார்.
பாபா
சூத்திரர்களுக்கு படிப்பிக்க
மாட்டார்
அல்லவா!
பிராமணர்களுக்குத்
தான்
படிப்பிக்கின்றார்.
படிப்பிப்பதற்கு
நேரம்
பிடிக்கிறது,
இராஜ்யம்
ஸ்தாபனை
ஆக
வேண்டும்.
நீங்கள்
உயர்ந்ததிலும்
உயர்ந்த
புருஷோத்தமர்களாக
ஆகுங்கள்.
புதிய உலகத்தைப்
படைப்பது
யார்?
பாபா
தான்
படைப்பார்.
இதை
மறக்காதீர்கள்.
மாயை
உங்களை
மறக்கச் செய்கிறது,
அதனுடைய
வேலையே
இது
தான்
ஆகும்.
ஞானத்தில்
அந்தளவிற்கு
குறுக்கிடுவதில்லை,
நினைவில் தான்
செய்கிறது.
ஆத்மாவில்
நிறைய
குப்பைகள்
நிறைந்திருக்கிறது,
அதை
பாபாவின்
நினைவு
அன்றி சுத்தமாக
முடியாது.
யோகம்
என்ற
வார்த்தையினால்
குழந்தைகள்
குழம்புகிறார்கள்.
பாபா
எங்களுக்கு
யோகம் ஈடுபடவில்லை
என்று
சொல்கிறார்கள்.
உண்மையில்
யோகம்
என்ற
வார்த்தை
அந்த
ஹடயோகிகளுடையதாகும்.
பிரம்மத்தோடு
யோகம்
ஈடுபடுத்த
வேண்டும்
என்று
சன்னியாசிகள்
கூறுகிறார்கள்.
பிரம்ம
தத்துவம்
என்பது மிகப்பரந்து
விரிந்ததாகும்,
எப்படி
ஆகாயத்தில்
நட்சத்திரங்கள்
தெரிகிறது,
அதுபோல்
அங்கேயும்
கூட
சிறிய-
சிறிய
நட்சத்திரங்களைப்
போல்
ஆத்மாக்கள்
இருக்கின்றன.
அது
ஆகாயத்தையும்
கடந்ததாகும்,
அங்கே
சூரிய சந்திரனின்
ஒளி
இல்லை.
என்றால்
நீங்கள்
எவ்வளவு
சிறிய-சிறிய
இராக்கெட்டுகளாக
இருக்கிறீர்கள்.
ஆகையினால் தான்
பாபா
கூறுகின்றார்
-
முதல்-முதலில்
ஆத்மாவின்
ஞானத்தைக்
கொடுக்க
வேண்டும்.
அதை
ஒரு பகவான்
தான்
கொடுக்க
முடியும்.
பகவானை
மட்டும்
தெரிந்திருக்க
வில்லை
என்பது
கிடையாது.
ஆனால் ஆத்மாவையும்
கூட
தெரிந்திருக்கவில்லை.
இவ்வளவு
சிறிய
ஆத்மாவில்
84
பிறவிச்
சக்கரங்களின்
அழிவற்ற நடிப்பு
நிறைந்துள்ளது,
இதைத்
தான்
இயற்கை
என்று
சொல்லப்படுகிறது,
வேறு
ஒன்றும்
சொல்ல
முடியாது.
ஆத்மா
84
பிறவிகளின்
சக்கரத்தை
சுற்றிக்
கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு
5
ஆயிரம்
ஆண்டுகளுக்குப்
பிறகு இந்த
சக்கரம்
சுற்றிக்
கொண்டே
இருக்கிறது.
இது
நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது.
உலகம்
அழிவற்றது,
ஒருபோதும்
வினாசம்
அடைவதில்லை.
அவர்கள்
பெரிய
பிரளயம்
நடப்பதாகவும்
பிறகு
கிருஷ்ணர்
விரலை சூப்பிக்
கொண்டு
ஆலை மீது
வருவதாகவும்
காட்டுகிறார்கள்.
ஆனால்
அப்படி
எதுவும்
நடக்கிறதா
என்ன?
இது
விதிக்கு
புறம்பானதாகும்.
மகாபிரளயம்
ஒருபோதும்
நடப்பதில்லை.
ஒரு
தர்மத்தின்
ஸ்தாபனையும் அனேக
தர்மங்களின்
வினாசமும்
நடந்து
கொண்டு
தான்
இருக்கிறது.
இந்த
சமயத்தில்
3
முக்கியமான தர்மங்கள்
இருக்கின்றன.
இது
கல்யாணகாரி
சங்கமயுகமாகும்.
பழைய
உலகம்
மற்றும்
புதிய
உலகத்திற்கு இடையில்
இரவு-பகலுக்குண்டான
வித்தியாசம்
இருக்கிறது.
நேற்று
புதிய
உலகமாக
இருந்தது,
இன்று
பழையதாக இருக்கிறது.
நேற்றைய
உலகத்தில்
என்ன
இருந்தது,
என்பதை
நீங்கள்
புரிந்து
கொள்ள
முடியும்.
யார்
எந்த தர்மத்தவர்களாக
இருக்கிறார்களோ,
அந்த
தர்மத்தின்
ஸ்தாபனையை
தான்
செய்கிறார்கள்.
அவர்களில்
ஒருவர் தான்
வருகிறார்,
நிறைய
பேர்
இருப்பதில்லை.
பிறகு
மெது-மெதுவாக
வளர்ச்சி
அடைகிறது.
குழந்தைகளாகிய
உங்களுக்கு
வேறு
எந்த
கஷ்டமும்
கொடுப்பதில்லை
என்று
பாபா
கூறுகின்றார்.
குழந்தைகளுக்கு
எப்படி
கஷ்டத்தை
கொடுப்பேன்!
மிகவும்
அன்பான
தந்தை
அல்லவா!
நான்
உங்களுடைய சத்கதியை
வழங்கும்
வள்ளல்,
துக்கத்தைப்
போக்கி
சுகத்தை
வழங்குபவன்
என்று
கூறுகின்றார்.
என்
ஒருவனைத் தான்
நினைவு
செய்கிறார்கள்.
பக்தி
மார்க்கத்தில்
என்ன
செய்து
விட்டார்கள்,
என்னை
எவ்வளவு
திட்டினார்கள்.
கடவுள்
ஒருவரே
என்று
சொல்கிறார்கள்.
சிருஷ்டி
சக்கரமும்
ஒன்று
தான்
ஆகும்,
ஆகாயத்தில்
வேறொரு உலகம்
இருக்கிறது
என்பது
கிடையாது.
ஆகாயத்தில்
நட்சத்திரங்கள்
இருக்கின்றன.
ஒவ்வொரு
நட்சத்திரத்திலும் உலகம்
இருக்கிறது
என்றும்
கீழேயும்
உலகம்
இருக்கிறது
என்றும்
மனிதர்கள்
புரிந்து
கொள்கிறார்கள்.
இவை யனைத்தும்
பக்தி
மார்க்கத்தின்
விஷயங்களாகும்.
உயர்ந்ததிலும்
உயர்ந்த
பகவான்
ஒருவரே
ஆவார்.
முழு உலகத்தின்
ஆத்மாக்களும்
உங்களுக்குள்
கோர்க்கப்பட்டுள்ளது
என்றும்
சொல்கிறார்கள்,
இது
ஒரு
மாலை போன்ற
தாகும்.
இதனை
எல்லையற்ற
ருத்ர
மாலை
என்றும்
சொல்லலாம்.
நூல் கட்டப்பட்டுள்ளது.
பாடுகிறார்கள் ஆனால்
எதையும்
புரிந்து
கொள்வதில்லை.
குழந்தைகளே,
நான்
உங்களுக்கு
கொஞ்சம்
கூட
கஷ்டம்
கொடுப்பதில்லை
என்று
பாபா
வந்து
புரிய
வைக்கின்றார்.
யார்
முதல்-முதலில்
பக்தி
செய்திருந்தார்களோ,
அவர்கள் தான்
ஞானத்தில்
வேகமாக
செல்வார்கள்
என்றும்
சொல்லப்பட்டுள்ளது.
பக்தி
அதிகமாக
செய்திருந்தால்
பலனும் அவர்களுக்கு
அதிகம்
கிடைக்க
வேண்டும்
அல்லவா!
பக்தியின்
பலனை
பகவான்
கொடுக்கின்றார்
என்று கூறுகிறார்கள்,
அவர்
ஞானக்கடல்
ஆவார்.
எனவே
ஞானத்தின்
மூலம்
தான்
பலனை
கொடுப்பார்
அல்லவா!
பக்தியில்
பலனைப்
பற்றி
யாருக்கும்
தெரிவதில்லை.
பக்தியின்
பலன்
ஞானமாகும்,
அதன்மூலம்
சொர்க்கத்தின் ஆஸ்தி
சுகம்
கிடைக்கிறது.
எனவே
பலன்
கொடுக்கிறார்
அதாவது
நரகவாசியிலிருந்து சொர்க்கவாசிகளாக
ஒரு பாபா
மாற்றுகின்றார்.
இராவணனைப்
பற்றியும்
யாருக்கும்
தெரியவில்லை.
இது
பழைய
உலகம்
என்றும் சொல்கிறார்கள்.
எப்போதிலிருந்து பழையது
-
அந்த
கணக்கை
போட
முடியாது.
பாபா
மனித
சிருஷ்டி
எனும் மரத்தின்
விதை
ரூபமாக
இருக்கின்றார்.
சத்தியமானவராக
இருக்கின்றார்.
அது
ஒருபோதும்
அழிவதில்லை,
இதனை
தலைகீழ்
மரம்
என்று
சொல்லப்படுகிறது.
பாபா
மேலே
இருக்கின்றார்,
ஆத்மாக்கள்
பாபாவை
மேலே பார்த்து
அழைக்கின்றன,
சரீரத்தை
அழைக்க
முடியாது
அல்லவா!
ஆத்மா
ஒரு
சரீரத்திலிருந்து விடுபட்டு மற்றொன்றில்
சென்று
விடுகிறது.
ஆத்மா
துண்டிக்கப்படுவதுமில்லை,
வளருவதுமில்லை,
ஒருபோதும் மரணமடைவதில்லை.
இந்த
விளையாட்டு
உருவாக்கப்பட்டுள்ளது.
முழு
விளையாட்டின்
முதல்-இடை-கடைசியின்
இரகசியத்தை
பாபா
கூறியுள்ளார்.
ஆஸ்திகர்களாகவும்
மாற்றியுள்ளார்.
இந்த
இலஷ்மி
–
நாராயணனிடத்தில் இந்த
ஞானம்
இல்லை
என்பதையும்
கூறியுள்ளார்.
அங்கே
ஆஸ்திகர்
-
நாஸ்திகர்
பற்றிய
ஞானமும் இருப்பதில்லை.
இந்த
சமயத்தில்
பாபா
தான்
அர்த்தத்தை
புரிய
வைக்கின்றார்.
யார்
பாபாவையோ,
படைப்பினுடைய முதல்-இடை-கடைசியையோ,
கால
அளவையோ
தெரிந்திருக்க
வில்லையோ
அவர்களை
நாஸ்திகர்கள்
என்று சொல்லப்படுகிறது.
இந்த
சமயத்தில்
நீங்கள்
ஆஸ்திகர்களாக
ஆகியுள்ளீர்கள்.
அங்கு
இந்த
விஷயங்களே இல்லை.
விளையாட்டு
அல்லவா*
ஒரு
வினாடியில்
நடந்த
ஒரு
விஷயம்
அடுத்த
வினாடியில்
நடப்பதில்லை.
நாடகம்
டிக்-டிக்
என்று
சென்று
கொண்டே
இருக்கிறது.
எது
கடந்ததோ
சக்கரம்
சுற்றிக்
கொண்டே
செல்லும்.
எப்படி
சினிமா
இருக்கிறது,
இரண்டு
மணி
நேரம்
அல்லது
மூன்று
மணி
நேரத்திற்குப்
பிறகு
அதே
சினிமா அப்படியே
திரும்பவும்
நடக்கும்.
கட்டிடம்
போன்றவற்றை
உடைத்து
விடுகிறார்கள்
பிறகு
பார்த்தால்
உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதுவே
அப்படியே
மீண்டும்
நடக்கிறது.
இதில்
குழம்புதவற்கான
விஷயமே
இல்லை.
முக்கியமான விஷயம்
ஆத்மாக்கள்
மற்றும்
தந்தை
பரமாத்மாவினுடையதாகும்.
ஆத்மாக்களும்
பரமாத்மாவும்
நீண்ட
காலம் பிரிந்திருந்தன...........
பிரிகின்றன,
இங்கே
நடிப்பை
நடிக்க
வருகின்றன.
நீங்கள்
முழுமையாக
5
ஆயிரம் ஆண்டுகள்
பிரிந்திருக்கிறீர்கள்.
இனிமையான
குழந்தைகளான
உங்களுக்கு
முழு
சக்கரத்திலும்
நடிப்பு கிடைத்திருக்கிறது
ஆகையினால்
உங்களுக்குத்
தான்
புரிய
வைக்கின்றார்.
நீங்கள்
ஞானத்திற்கு
அதிகாரி ஆவீர்கள்.
அனைத்திலும்
அதிக
பக்தி
யார்
செய்துள்ளார்களோ,
அவர்கள்
தான்
ஞானத்திலும்
வேகமாகச் செல்வார்கள்,
உயர்ந்த
பதவியும்
அடைவார்கள்.
முதல்-முதலில்
ஒரு
சிவபாபாவின்
பக்தி
நடக்கிறது,
பிறகு தேவதைகளின்
பக்தி
நடக்கிறது.
பிறகு
5
தத்துவங்களுக்கும்
கூட
பக்தி
செய்கிறார்கள்,
பலரை
பக்தி
செய்பவர்களாகி விடுகிறார்கள்.
இப்போது
எல்லையற்ற
தந்தை
உங்களை
எல்லையற்ற
நிலைக்கு
கொண்டு
செல்கிறார்,
அவர்கள் எல்லையற்ற
பக்தியின்
அஞ்ஞானத்திற்கு
அழைத்துச்
செல்கிறார்கள்.
தங்களை
ஆத்மா
என்று
புரிந்து
ஒரு பாபாவை
நினைவு
செய்யுங்கள்
என்று
பாபா
இப்போது
குழந்தைகளாகிய
உங்களுக்கு
புரிய
வைக்கின்றார்.
இருந்தாலும்
இங்கிருந்து
வெளியே
சென்றவுடன்
மாயை
மறக்கச்
செய்து
விடுகிறது.
நாங்கள்
அப்படி
செய்ய மாட்டோம்
என்று
கர்பத்திலிருக்கும் போது
பட்சாதாபப்
படுகிறார்கள்,
ஆனால்
வெளியில்
வந்தவுடன்
மறந்து விடுகிறார்கள்.
இங்கேயும்
அப்படித்
தான்
ஆகும்,
வெளியில்
சென்றவுடன்
மறந்து
விடுகிறார்கள்.
இது மறப்பது
மற்றும்
மறக்காமல்
இருப்பதின்
விளையாட்டாகும்.
இப்போது
நீங்கள்
பாபாவின்
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாகியுள்ளீர்கள்.
சிவபாபா
அல்லவா!
அவர்
அனைத்து
ஆத்மாக்களின்
எல்லையற்ற
தந்தை
ஆவார்.
பாபா
எவ்வளவு
தூரத்திலிருந்து வருகின்றார்!
அவருடைய
வீடு
பரந்தாமமாகும்.
பரந்தாமத்திலிருந்து வந்தால் கண்டிப்பாக
குழந்தைகளுக்கு
பரிசு
கொண்டு
வருவார்.
கைகளில்
சொர்க்கத்தை
பரிசாக
கொண்டு
வருகின்றார்.
ஒரு
வினாடியில்
சொர்க்கத்தின்
இராஜ்யத்தைப்
பெறுங்கள்
என்று
பாபா
கூறுகின்றார்.
தந்தையை
மட்டும் தெரிந்து
கொள்ளுங்கள்.
அனைத்து
ஆத்மாக்களுக்கும்
தந்தை
அல்லவா!
நான்
உங்களுடைய
தந்தையாக இருக்கின்றேன்.
நான்
எப்படி
வருகின்றேன்
என்பதை
உங்களுக்குப்
புரிய
வைக்கின்றேன்.
எனக்கு
இரதம் கண்டிப்பாக
வேண்டும்.
என்ன
இரதம்?
எந்த
மகாத்மாவின்
இரதத்தையும்
எடுக்க
முடியாது.
நீங்கள்
பிரம்மாவை பகவான்
என்றும்,
தேவதை
என்றும்
சொல்கிறீர்கள்
என்று
மனிதர்கள்
கேட்கிறார்கள்.
அட!
நாங்கள்
எங்கே அப்படி
சொல்கிறோம்!
மரம்
முற்றிலும்
தமோபிரதானமாக
இருக்கும்போது,
மரத்திற்கு
மேலே
முற்றிலும் கடைசியில்
நிற்கிறார்.
பிரம்மா
அங்கே
நிற்கிறார்
என்றால்
நிறைய
பிறவிகளின்
கடைசி
பிறவி
ஆகிறது அல்லவா!
பாபா
அவரே
கூறுகின்றார்,
என்னுடைய
நிறைய
பிறவிகளின்
கடைசிப்
பிறவியில்
வானப்பிரஸ்த நிலை
வரும்போது
பாபா
வருகின்றார்.
அவர்
வந்து
தொழில்
போன்றவற்றிலிருந்து விடுவித்தார்.
அறுபது வயதிற்குப்
பிறகு
மனிதர்கள்
பகவானை
அடைவதற்காக
பக்தி
செய்கிறார்கள்.
நீங்கள்
அனைவரும்
மனிதர்களுடைய
வழிப்படி
இருந்தீர்கள்,
இப்போது
பாபா
உங்களுக்கு
ஸ்ரீமத் கொடுத்துக்
கொண்டிருக்கிறார்,
என்று
பாபா
கூறுகின்றார்.
சாஸ்திரங்களை
எழுதுபவர்கள்
கூட
மனிதர்களே ஆவர்.
தேவதைகள்
எழுதுவதுமில்லை,
படிப்பதுமில்லை.
சத்யுகத்தில்
சாஸ்திரங்கள்
இருப்பதில்லை.
பக்தியே கிடையாது.
சாஸ்திரங்களில்
அனைத்தும்
மதச்சடங்குகளைப்
பற்றி
எழுதப்பட்டுள்ளது.
இங்கே
அந்த
விஷயம் கிடையாது.
பாபா
ஞானம்
கொடுப்பதை
நீங்கள்
பார்க்கிறீர்கள்.
பக்தி
மார்கத்தில்
நாம்
நிறைய
சாஸ்திரங்களைப் படித்திருக்கிறோம்.
நீங்கள்
வேத-சாஸ்திரங்களை
ஏற்பதில்லையோ?
என்று
யாராவது
கேட்கிறார்கள்
என்றால்,
மனிதர்கள்
அனைவரையும்
விட
நாங்கள்
ஏற்றுக்
கொள்கிறோம்
என்று
சொல்லுங்கள்.
ஆரம்பத்திலிருந்து அவிபச்சாரி
(கலப்படமற்ற)
பக்தியை
நாங்கள்
தான்
ஆரம்பித்தோம்.
இப்போது
எங்களுக்கு
ஞானம் கிடைத்திருக்கிறது.
ஞானத்தின்
மூலம்
சத்கதி
கிடைக்கிறது
பிறகு
நாங்கள்
ஏன்
பக்தி
செய்ய
வேண்டும்?
பாபா
கூறுகின்றார்
-
குழந்தைகளே,
தீயதைக்
கேட்காதீர்கள்,
தீயதைப்
பார்க்காதீர்கள்.........
எனவே
பாபா எவ்வளவு
சுலபமாகப்
புரிய
வைக்கின்றார்
-
இனிமையிலும்
இனிமையான
குழந்தைகளே,
தங்களை
ஆத்மா என்று
நிச்சயம்
செய்து
கொள்ளுங்கள்.
நான்
ஆத்மா,
அவர்கள்
நான்
அல்லா
என்று
சொல்லிவிடுகிறார்கள்.
நான்
ஆத்மா,
பாபாவின்
குழந்தையாக
இருக்
கின்றேன்,
என்று
உங்களுக்கு
படிப்பினை
கிடைக்கிறது.
இதைத் தான்
மாயை
அடிக்கடி
மறக்கச்
செய்கிறது.
தேக-அபிமானிகளாக
ஆவதின்
மூலம்
தலைகீழான
கர்மம் நடக்கிறது.
இப்போது
பாபா
கூறுகின்றார்
- குழந்தைகளே,
பாபாவை
மறக்காதீர்கள்.
நேரத்தை
வீணாக்காதீர்கள்.
நல்லது!
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகளும்
காலை
வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1)
படைப்பவர்
மற்றும்
படைப்பின்
ரகசியத்தை
யதார்த்தமாக
புரிந்து
ஆஸ்திகர்களாக
ஆக
வேண்டும்.
நாடகத்தின்
ஞானத்தில்
குழப்பமடையக்
கூடாது.
தங்களுடைய
புத்தியை எல்லைக்குட்பட்டதிலிருந்து நீக்கி
எல்லையற்றதில்
கொண்டு
செல்ல
வேண்டும்.
2)
சூட்சுமவதனவாசி
ஃபரிஸ்தாவாக
ஆவதற்கு
முழுமையாக
தூய்மையாக
வேண்டும்.
ஆத்மாவில்
நிறைந்திருக்கும்
குப்பையை
நினைவு
பலத்தின்
முலம்
நீக்கி
சுத்தமாக்க
வேண்டும்.
வரதானம்:
ஆன்மீகப்
புன்முறுவல்
மூலம்
முகத்தில்
மகிழ்ச்சியின்
ஜொலிப்பை வெளிப்படுத்தக்
கூடிய
விசேஷ
ஆத்மா
ஆகுக.
பிராமண
வாழ்க்கையின்
சிறப்பு
மகிழ்ச்சியாகும்.
மகிழ்ச்சி
என்றால்
ஆன்மீகப்
புன்முறுவல்
ஆகும்.
அதிக ஓசையுடன்
சிரிப்பது
கூடாது,
ஆனால்
புன்முறுவல்.
பிறர்
திட்டிக்
கொண்டிருந்தாலும்
உங்களது
முகத்தில்
துக்க அலைகள்
வரக்
கூடாது,
சதா
மகிழ்ச்சியாக
இருக்க
வேண்டும்.
அவர்
ஒரு
மணி
நேரம்
பேசினார்,
நான்
ஒரு விநாடி
மட்டுமே
பேசினேன்
என்று
நினைக்கக்
கூடாது.
விநாடி
பேசியிருந்தாலும்,
நினைத்தாலும்
முகத்தில் துக்கம்
வந்து
விட்டால்
தோல்வியடைந்து
விடுவீர்கள்.
ஒரு
மணி
நேரம்
பொறுத்துக்
கொண்டீர்கள்,
பிறகு பலூனிலிருந்து
காற்று
வெளியேறி
விட்டது.
உயர்ந்த
வாழ்க்கையின்
இலட்சியம்
வைத்திருக்கும்
விசேஷ ஆத்மா
இவ்வாறு
பலூனாக
ஆகமாட்டார்கள்.
சுலோகன்:
குளிர்ந்த
உடலுடைய
யோகிகள்
தானும்
குளிர்ந்தவராக
ஆகி
மற்றவர்களையும்
குளிர்ந்த
பார்வையின்
மூலம்
திருப்திப்படுத்துவார்கள்.
ஓம்சாந்தி