11.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! எல்லையற்ற ஸ்காலர்ஷிப் அடைய வேண்டுமென்றால், ஒரு பாபாவைத் தவிர வேறு யாருடைய நினைவும் வராமலிருக்க பயிற்சி செய்யவும்.

 

கேள்வி:

பாபாவினுடையவர்களாக மாறிய பிறகும் கூட மகிழ்ச்சி இல்லை என்றால் அதற்குக் காரணம் என்ன?

 

பதில்:

1. புத்தியில் முழு ஞானம் இல்லை. 2. பாபாவை யதார்த்தமாக நினைப்பதில்லை. நினைக்காத காரணத்தால் மாயா ஏமாற்றி விடுகிறது. ஆகையால் மகிழ்ச்சி இல்லை. பாபா நம்மை உலகத்திற்கே அதிபதியாக மாற்றுகிறார் என்ற போதை குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இருக்க வேண்டும். அப்போது சதா உல்லாசம் மற்றும் மகிழ்ச்சி இருக்கும். பாபாவின் ஆஸ்திகளாகிய பவித்திரத்தா (தூய்மை), சுகம் மற்றும் சாந்தி போன்றவைகளில் முழுமையாக இருந்தால் மகிழ்ச்சி இருக்கும்.

 

ஓம் சாந்தி.

ஓம் சாந்தி என்றால் நான் ஆத்மா, இது என்னுடைய உடல் என்ற பொருள் குழந்தைகளுக்கு நன்கு தெரியும். இதை நன்கு நினைவு செய்யுங்கள். பகவான் ஆத்மாக்களின் தந்தை நம்மை படிக்க வைக்கிறார். அவர்கள் கிருஷ்ணர் படிக்க வைக்கிறார் என நினைக்கிறார்கள். ஆனால் அவருக்கு பெயர் உருவம் இருக்கிறது. அல்லவா? படிக்க வைக்கக் கூடியவர் நிராகாரர் தந்தை ஆவார். ஆத்மா கேட்கிறது, பரமாத்மா சொல்கிறார். இது புதிய விஷயம் அல்லவா? வினாசம் நடக்கத்தான் வேண்டும். ஒன்று வினாசக் காலத்தில் விபரீத புத்தி, இன்னொன்று வினாசக் காலத்தில் அன்பு புத்தி. முன்பு ஈஸ்வர் சர்வ வியாபி, கல்லிலும் இருக்கிறார், முள்ளிலும் இருக்கிறார் என நீங்கள் கூட கூறினீர்கள். இந்த விஷயங்கள் அனைத்தையும் நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆத்மா அழிவற்றது, சரீரம் அழியக் கூடியது. ஆத்மா ஒருபோதும் தேய்வதோ பெரியதாவதோ கிடையாது என்பதெல்லாம் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இது மிகச் சிறிய ஆத்மா. இவ்வளவு சிறிய ஆத்மா தான் 84 பிறவிகள் எடுத்து நடிக்கிறது. ஆத்மா தான் சரீரத்தை இயக்குகிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை படிக்க வைக்கிறார். எனவே உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி கிடைக்கும். ஆத்மா தான் படித்து பதவி அடைகிறது. ஆத்மாவை யாரும் பார்க்க முடியாது. ஆத்மா எப்படி இருக்கிறது, எங்கிருந்து வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள மிகவும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் தெரியவில்லை. ஒருவேளை யாராவது பாôத்தால் கூட புரிந்து கொள்ள முடியாது. ஆத்மா தான் சரீரத்தில் வசிக்கிறது என்பதை நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். ஆத்மா தனி, உடல் தனியாகும். ஆத்மா சிறியது பெரியது ஆவது கிடையாது. உடல் தான் சிறியதிலிருந்து பெரியதாகிறது. ஆத்மா தான் பதீதமாகவும் பாவனமாகவும் மாறுகிறது. ஆத்மா தான் பதீத ஆத்மாக்களை பாவனமாக்கக் கூடிய தந்தையே வாருங்கள் என தந்தையை அழைக்கிறது. அனைத்து ஆத்மாக்களும் மணப் பெண்கள் (சீதைகள்), அவர் இராம், அவரே மணவாளன் என்பது புரிய வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரையும் மணவாளன் என்று கூறிவிட்டனர். இப்போது மணவாளன் அனைவருக்குள்ளும் பிரவேசிப்பாரா? இது நடக்காது. இவ்வாறு புத்தியில் தவறான ஞானம் உள்ள காரணத்தால் கீழே விழுந்து கொண்டே வந்துள்ளனர். ஏனென்றால் மிகவும் நிந்திக்கிறார்கள். பாவம் செய்கிறார்கள். இகழ்ந்துள்ளார்கள். பாபாவிற்குத் தான் நிறைய நிந்தனை செய்துள்ளனர். குழந்தைகள் தந்தையை நிந்திப்பார்களா என்ன? ஆனால் இன்று கெட்டுப் போய் இருக்கிறார்கள். தந்தையை நிந்தனை செய்கிறார்கள். இவர் எல்லையற்ற தந்தை. ஆத்மா தான் எல்லையற்ற தந்தையை நிந்தனை செய்கிறது பாபா தாங்கள் மீன் அவதாரம், ஆமை அவதாரம் எடுக்கிறீர்கள் எனக் கூறி உள்ளனர். இராணிகளை துரத்திச் சென்றார், வெண்ணையைத் திருடினார் என கிருஷ்ணரையும் நிந்தனை செய்துள்ளனர். வெண்ணையைத் திருட வேண்டும் என்ற அவசியம் அவருக்கு என்ன இருக்கிறது? எவ்வளவு புத்தி தமோபிரதானமாக இருக்கிறது. நான் வந்து உங்களை தூய்மையாக்குவதற்காக மிகவும் எளிய வழிகளைக் கூறுகிறேன் என பாபா கூறுகிறார். தந்தை தான் பதீத பாவனர். சர்வ சக்திவான் அத்தாரிட்டி உடையவர். சாது, சன்னியாசி போன்றோர்களை சாஸ்திரங்களில் அத்தாரிட்டி உடையவர் எனக் கூறுகிறார்கள். சங்கராச்சாரியரை கூட வேத சாஸ்திரங்களின் அத்தாரிட்டி என்பார்கள். அவருக்கு எவ்வளவு பகட்டு இருக்கிறது. சிவாச்சாரியருக்கு எந்த பகட்டும் இல்லை. இவருடன் எந்த படையும் இல்லை. இவர் வந்து அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைக் கூறுகிறார். ஒரு வேளை சிவபாபா வெளிப்பகட்டை காண்பித்தார் என்றால், முதலில் இவருக்குக் கூட (பிரம்மா) பகட்டு வேண்டும். ஆனால் இல்லை. நான் குழந்தைகளாகிய உங்களின் வேலைக்காரன் என பாபா கூறுகின்றார். பாபா இவருக்குள் பிரவேசமாகி குழந்தைகளே! நீங்கள் பதீதமாக உள்ளீர்கள், நீங்கள் தூய்மையாகி 84 பிறவிகளுக்கு பிறகு அழுக்காகி விட்டீர்கள் என புரிய வைக்கிறார். இவர்களுடைய வரலாறு புவியியல் மீண்டும் ரிபீட் ஆகும். இவர்கள் தான் 84 பிறவிகளை அனுபவிக்கின்றனர். பிறகு அவர்களுக்குத் தான் சதோபிரதானமாவதற்காக வழி கூறப்படுகிறது. பாபா தான் சர்வ சக்திவான் பிரம்மா மூலமாக அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறார். சித்திரங்களில் பிரம்மாவிடம் சாஸ்திரம் இருப்பது போல காண்பிக்கிறார்கள். ஆனால் உண்மையில் சாஸ்திரம் போன்றவையின் விஷயம் இல்லை. பாபாவிடமும் சாஸ்திரம் இல்லை. இவரிடமும் இல்லை. உங்களிடமும் சாஸ்திரம் இல்லை. இங்கே உங்களுக்கு தினந்தோறும் இவர் புதுப்புது விஷயங்களைக் கூறுகிறார். அவைகள் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களாகும். நான் சாஸ்திரங்களைப் பற்றி கூறவில்லை. நான் உங்களுக்கு வாய் மூலமாகக் கூறுகிறேன். உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். பக்தி மார்க்கத்தில் இதற்கு கீதை என பெயர் வைத்து விட்டனர். என்னிடமோ அல்லது உங்களிடமோ கீதை இருக்கிறதா என்ன? படிப்பில் அத்தியாயம், சுலோகம் போன்றவை இருக்காது. நான் குழந்தைகளாகிய உங்களைப் படிக்க வைக்கிறேன். ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வாறு தான் படிக்க வைத்துக் கொண்டே இருப்பேன் எவ்வளவு எளிதான விஷயங்களைப் புரிய வைக்கிறேன். தன்னை ஆத்மா என்று உணருங்கள் இந்த சரீரம் கூட மண்ணாகி விடும் ஆத்மா அழிவற்றது. சரீரம் அடிக்கடி எரிந்து கொண்டே இருக்கிறது. ஆத்மா ஒரு உடலை விட்டு விட்டு இன்னொரு உடலை எடுக்கிறது.

 

நான் ஒரே முறை தான் வருகின்றேன் என பாபா கூறுகின்றார். சிவ ராத்திரி கூட கொண்டாடுகிறார்கள். உண்மையில் சிவஜெயந்தி என்று கூற வேண்டும். ஆனால் ஜெயந்தி என்று கூறுவதால் தாயின் கர்ப்பத்தில் பிறத்தல் என்பதாகிறது. எனவே தான் சிவராத்திரி எனக் கூறிவிட்டார்கள். துவாபர கலியுகத்தின் இரவில் என்னைத் தேடுகிறார்கள். சர்வ வியாபி என்கிறார்கள். அப்படியானால் உங்களுக்குள் இருக்கிறார் அல்லவா? பிறகு ஏன் ஏமாற்றம் அடைய வேண்டும். முற்றிலும் தேவகைளிலிருந்து அசுர சம்பிரதாயத்தினராக மாறிவிடுகிறார்கள். தேவதைகள் மது அருந்துவார்களா என்ன? அதே ஆத்மாக்கள் தான் கீழே விழுகிறார்கள். பிறகு மது போன்றவைகளை அருந்துகிறார்கள். இப்போது இது பழைய உலகம். நிச்சயமாக விநாசம் ஆகும் என பாபா கூறுகிறார். பழைய உலகத்தில் பல தர்மங்கள் புது உலகத்தில் ஒரே தர்மம் தான். ஒரு தர்மத்திலிருந்து தான் பல தர்மங்கள் ஏற்பட்டிருக்கிறது. பிறகு மீண்டும் ஒன்றாக வேண்டும். மனிதர்கள் கலியுகம் இன்னும் 40000 வருடம் இருக்கும் என கூறுகிறார்கள். இதற்கு காரிருள் என்று பெயர். ஞான சூரியன் தோன்றினார் அஞ்ஞான இருள் அழிந்தது. மனிதர்களுக்குள் மிகவும் அறியாமை இருக்கிறது. பாபா ஞான சூரியன் ஞானக்கடல் வருகிறார் என்றால் உங்களுடைய பக்தி மார்க்கத்தின் அறியாமை நீங்கிப் போகிறது. நீங்கள் தந்தையை நினைத்து நினைத்து தூய்மையாகிறீர்கள். துரு போய்விடுகிறது. இதுவே யோக அக்னியாகும். காம அக்னி கருப்பாக்குகிறது. யோக அக்னி என்றால் சிவபாபாவின் நினைவு, வெள்ளையாக மாற்றுகிறது. கிருஷ்ணருக்கு ஷியாம் சுந்தர் என்று கூட பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பொருள் எதுவும் தெரியாது. தந்தை வந்து பொருளை புரிய வைக்கிறார். முதன் முதலில் சத்யுகத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள்! ஆத்மா பவித்ரமாக அழகாக இருக்கிறது என்றால் சரீரம் கூட பவித்ரமாக அழகாக எடுக்கிறது. அங்கே எவ்வளவு பணம், செல்வம் அனைத்தும் புதியதாக இருக்கிறது. புதிய உலகம் பழைய உலகமாகிறது. இப்போது இந்த பழைய உலகம் அழிந்து புதியதாக மாறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நிறைய நடந்து கொண்டிருக்கிறது. நாம் நமது குலத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரிந்தாலும் கூட பாரதவாசிகளுக்கு இவ்வளவு தெரியவில்லை. யாரோ தூண்டுகிறார்கள். விஞ்ஞானத்தின் மூலமாக நாம் நமது அழிவைக் கொண்டு வருகிறோம். கிறிஸ்து வருவதற்கு 3000 வருடங்களுக்கு முன்பு சொர்க்கம் இருந்தது எனப் புரிந்துக் கொள்கிறார்கள். இந்த தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. பாரதம் பழைமையாக இருந்தது. இந்த இராஜயோகத்தினால் இலஷ்மி நாராயணன் இவ்வாறு மாறினார்கள். அந்த இராஜயோகத்தை பாபா தான் கற்பிக்க முடியும். சன்னியாசிகள் சொல்லித் தர முடியாது. தற்காலத்தில் எவ்வளவு ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. வெளியில் சென்று நாங்கள் பாரதத்தின் பழைமையான யோகத்தைக் கற்பிக்கிறோம் எனக் கூறுகிறார்கள். பிறகு முட்டை சாப்பிடுங்கள, மது போன்றவைகளை அருந்துங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் எனக் கூறுகிறார்கள். அவர்கள் எப்படி இராஜ யோகத்தைக் கற்பிக்க முடியும். மனிதர்களை எப்படி தேவதைகளாக மாற்றுவார்கள்? ஆத்மா எவ்வளவு உயர்வாக இருந்தது. மறுபிறவி எடுத்து எடுத்து சதோபிரதனாத்திலிருந்து தமோபிரதானமாகி இருக்கிறது. இப்போது நீங்கள் மீண்டும் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே வேறு எந்த தர்மமும் கிடையாது. இப்போது நரகத்தின் அழிவு ஏற்படத்தான் வேண்டும் என்று பாபா கூறுகிறார். இவ்விடம் வரை வந்தவர்கள் பிறகு சொர்க்கத்தில் நிச்சயம் வருவார்கள். சிவபாபாவின் ஞானம் சிறிது கேட்டிருந்தாலும் கூட சொர்க்கத்தில் நிச்சயம் வருவார்கள். பிறகு படிப்புக்கு ஏற்ப, பாபாவை நினைப்பதற்கு ஏற்ப, உயர்ந்த பதவி பெறுவார்கள். இப்போது அனைவருக்குமே வினாசகாலம் தான். வினாசக் காலத்தில் அன்பு புத்தி உடையவர்கள், பாபாவைத் தவிர வேறு யாரையும் நினைக்காதவர்கள் உயர்ந்த பதவி  பெறுகிறார்கள். இதற்குத் தான் எல்லையற்ற ஸ்காலர்ஷிப் என்று பெயர். இதில் தான் ரேஸ் செய்ய வேண்டும். இதுவே ஈஸ்வரிய லாட்டரி ஆகும். ஒன்று நினைவு, இன்னொன்று தெய்வீக குணங்களைக் கடைப் பிடித்து இராஜா இராணி ஆக வேண்டும். பிறகு பிரஜைகளை உருவாக்க வேண்டும். சிலர் நிறைய பிரஜைகளை உருவாக்குகிறார்கள். சிலர் குறைந்த பிரஜைகளை உருவாக்கு கிறார்கள். சேவை செய்வதால் தான் பிரஜைகள் உருவாகிறார்கள். மியூசியம், படக்கண்காட்சி போன்றவைகளில் நிறைய பிரஜைகள் உருவாகிறார்கள். இச்சமயம் நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு சூரிய வம்சம் சந்திர வம்ச இராஜ்யத்தில் சென்று விடுவீர்கள். இது பிராமணர்களாகிய உங்களின் குலம் ஆகும். பாபா பிராமண குலத்தை தத்தெடுத்து அவர்களைப் படிக்க வைக்கிறார். நான் ஒரு குலம் மற்றும் இரண்டு வம்சங்களை உருவாக்குகிறேன் என பாபா கூறுகிறார். சூரிய வம்சத்தின் மகாராஜா மகாராணி, சந்திர வம்சத்தின் இராஜா இராணி. இவர்களுக்கு டபுள் கிரீடம் உடையவர்கள் என கூறலாம். விகாரி இராஜாக்கள் ஆகும் போது அவர்களுக்கு ஒளி கிரீடம் கிடையாது. அந்த டபுள் கிரீடம் உடையவர்களை கோவில்களைக் கட்டி அவர்கள் பூஜிக்கிறார்கள். தூய்மையானவர்கள் முன்பு தலை வணங்குகிறார்கள். சத்யுகத்தில் அந்த விஷயங்கள் எதுவும் இல்லை. அது பரிசுத்தமான உலகம் ஆகும். அங்கே பதீதமானவர்கள் கிடையாது. அதற்கு சுக தாமம், நிர்விகார உலகம் என்று பெயர். இதற்கு விகார உலகம் என்று கூறப்படுகிறது. ஒருவர் கூட தூய்மையானவர் இல்லை. சன்னியாசிகள் வீடு வாசலைத் துறந்து ஓடுகிறார்கள். கோபிசந்த் இராஜாவின் கதை இருக்கிறது அல்லவா? எந்த ஒரு மனிதனும் முக்தி ஜீவன் முக்தியை அளிக்க முடியாது என நீங்கள் அறிகிறீர்கள். அனைவருக்கும் சத்கதியை அளிப்பவன் நானே. நானே வந்து அனைவரையும் பாவனமாக மாற்றுகிறேன். ஒன்று பவித்ரமாகி சாந்திதாமத்திற்குச் செல்வார்கள். இரண்டு பவித்திரமாகி சுக உலகத்திற்குப் போவர்கள். இது அபவித்திரமான துக்க தாமம் ஆகும். சத்யுகத்தில் நோய் எதுவும் இருக்காது. நீங்கள் அந்த சுக உலகத்திற்கு அதிபதியாக இருந்தீர்கள். பிறகு இராம இராஜ்யத்தில் துக்க தாமத்திற்கு அதிபதியாகிறீர்கள். நீங்கள் கல்ப கல்பமாக எனது ஸ்ரீமத் படி சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறீர்கள். புது உலகத்தின் இராஜ்யத்தை அடைகிறீர்கள். பிறகு பதீத நரகவாசி ஆகிறீர்கள். தேவதைகள் தான் விகாரி ஆகிவிடுகிறார்கள். வாம மார்க்கத்தில் விழுகிறார்கள்.

 

இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு தந்தையே வந்து நான் ஒரு முறை தான் புருஷோத்தம சங்கமயுத்தில் வருகிறேன், நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை என தனது அறிமுகத்தை அளிக்கிறார். கல்பத்தில் சங்கமயுத்தில் தான் வருகிறேன். கல்பத்தின் சங்கமயுத்தில் ஏன் வருகிறேன்? ஏனென்றால் நரகத்தை சொர்க்கமாக மாற்றுகிறேன். ஒவ்வொரு 5000 வருடத்திற்குப் பிறகும் வருகிறேன். நிறைய குழந்தைகள் பாபா எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை, உற்சாகம் இல்லை என எழுதுகிறார்கள். அட, பாபா உங்களை உலகத்திற்கே அதிபதியாக மாற்றுகிறார். இப்படிப்பட்ட தந்தையை நினைவு செய்து நீங்கள் மகிழ்ச்சி அடைய வில்லையா? நீங்கள் முழுமையாக நினைப்பதில்லை. எனவே தான் மகிழ்ச்சி நிலையாக இருப்பதில்லை. பதீதமாக மாற்றக் கூடிய கணவரை நினைத்து மகிழ்ச்சி அடைகிறீர்கள். பாபா டபுள் கிரீடம் உடையவராக மாற்றுகிறார் அவரை நினைத்து மகிழ்ச்சி ஏற்பட வில்லையா? பாபாவின் குழந்தையாகி இருக்கிறீர்கள். இருப்பினும் மகிழ்ச்சி இல்லை எனக் கூறுகிறீர்கள். முழுமையாக ஞானம் புத்தியில் இல்லை. நினைவு செய்வதில்லை. ஆகவே மாயை ஏமாற்றுகிறது. குழந்தைகளுக்கு எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கிறார். கல்ப கல்பமாக புரிய வைக்கிறார். கல் புத்தியாக மாறி உள்ள ஆத்மாக்களைத் தங்க புத்தி உடையவராக மாற்றுகிறேன். நாலெட்ஜ்புல் தந்தை வந்து தான் ஞானத்தைக் கொடுக்கிறார். அவர் ஒவ்வொரு விஷயத்திலும் நிறைந்திருக்கிறார். தூய்மையில் நிறைந்திருக்கிறார். அன்பில் நிறைந்திருக்கிறார். ஞானக் கடல், சுகக் கடல், அன்புக் கடல் அல்லவா? இப்படி பட்ட தந்தையிடமிருந்து உங்களுக்கு இந்த சொத்து கிடைக்கிறது. இவ்வாறு மாறுவதற்காக நீங்கள் இங்கு வருகிறீர்கள். மற்றபடி அந்த சத்சங்கம் அனைத்தும் பக்தி மார்க்கம் ஆகும். அதில் குறிக்கோள் எதுவும் இல்லை. இதற்கு கீதா பாட சாலை என்று பெயர். வேத பாட சாலை கிடையாது. கீதையின் மூலமாக நரனிலிருந்து நாராயணன் ஆகிறீர்கள். நிச்சயம் பாபா தான் மாற்றுவார் அல்லவா? மனிதர்கள் மனிதர்களை தேவதையாக்க முடியாது. பாபா அடிக்கடி குழந்தைகளுக்கு, குழந்தைகளே! தன்னை ஆத்மா என உணருங்கள். நீங்கள் தேகம் கிடையாது எனப் புரிய வைக்கிறார். நான் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலை எடுக்கிறேன் என ஆத்மா தான் கூறுகிறது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சிவபாபாவிற்கு எந்த பகட்டும் இல்லை. வேலைக்காரனாகி குழந்தைகளைப் படிக்க வைக்க வந்துள்ளார். இவ்வாறு தந்தையைப் போன்று அத்தாரிட்டி இருந்தாலும் நிர்அகங்காரியாக (பணிவு) இருக்க வேண்டும். தூய்மையாகி தூய்மையாக்கக் கூடிய சேவை செய்ய வேண்டும்.

 

2. வினாச காலத்தில் ஈஸ்வரிய லாட்டரி அடைவதற்கு அன்பு புத்தி உடையவராகி அவரது நினைவிலிருக்கவும், தெய்வீக குணங்களைக் கடை பிடிக்கும் பந்தயத்திலும் ஓட வேண்டும்.

 

வரதானம் :

ஈஸ்வரிய சேவை மூலம் பலவித சேவைகள் பெறக்கூடிய அதிகாரி ஆத்மா ஆகுக.

 

சேவை செய்வீர்களானால் பலன் பெறுவீர்கள் எனச் சொல்லப் படுகிறது. ஈஸ்வரிய ஞானம் கொடுப்பது தான் ஈஸ்வரிய சேவை ஆகும். யார் இந்த சேவை செய்கிறார்களோ, அவர்களுக்கு அதிந்திரிய சுகத்தின், சக்திகளின், குஷியின் பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன. பிராமணர்கள் நீங்கள் தாம் இதற்கு அதிகாரிகள். ஏனென்றால் உங்களுடைய வேலையே ஈஸ்வரிய பாடத்தைப் படிப்பதும் அதை மற்றவர்களுக்குக் கற்பிப்பதும் ஆகும். இதன் மூலம் ஈஸ்வரனுடையவர்களாக ஆகி விடுவீர்கள். ஆக, அத்தகைய ஈஸ்வரிய சேவை செய்வதால் ஈஸ்வரிய பலனுக்கு அதிகாரி ஆகி விட்டீர்கள் -- இதே நஷாவில் இருங்கள்.

 

சுலோகன்:

தந்தையோடு கூடவே இருந்து கர்மம் செய்வீர்களானால் டபுள் லைட்டாக இருப்பீர்கள்.

 

ஓம்சாந்தி