08.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! காரியங்கள் ஆகியவை செய்யும் பொழுதும் ஒரு தந்தையின் நினைவு இருக்க வேண்டும். நடந்தாலும் சென்றாலும் தந்தை மற்றும் வீட்டை நினைவு செய்யுங்கள். இதுவே உங்களுடைய தைரியம் ஆகும்.

 

கேள்வி:

தந்தைக்கு (ரிகார்டு) மதிப்பு மற்றும் (டிஸ்-ரிகார்டு) அவமதிப்பு எப்பொழுது மற்றும் எப்படி ஆகிறது?

 

பதில்:

குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நல்ல முறையில் நினைவு செய்யும்பொழுது மதிப்பு கொடுக்கிறீர்கள். ஒருவேளை நினைவு செய்வதற்கு நேரம் இல்லை என்று கூறுகிறீர்கள் என்றால், இது அவமதிப்பது போல ஆகும். உண்மையில் இது தந்தையை அவமதிப்பது அல்ல. இதுவோ தங்களை தாங்களே அவமதிப்பதாகும். எனவே சொற்பொழிவு நிகழ்த்துவதில் மட்டும் பிரசித்தமானவர் ஆகாதீர்கள். ஆனால் நினைவு யாத்திரையிலும் பிரசித்தமானவர் ஆகுங்கள். நினைவின் சார்ட் வையுங்கள். நினைவினால் தான் ஆத்மா சதோபிரதானமாக ஆகிவிடும்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைக்கிறார். இங்கு புரிய வைக்கப்படும் 84ன் சக்கரத்தின் ஞானமோ ஒரு நாலேஜ் ஆகும். இதை குழந்தைகளாகிய நாமோ பல பிறவிகளாக படித்துள்ளோம் மற்றும் தாரணை செய்தபடியே வந்துள்ளோம். இதுவோ முற்றிலும் சுலபமானது. இது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது.

 

சத்யுகம் முதற்கொண்டு கலியுகக் கடைசி வரையும் நீங்கள் எவ்வளவு மறுபிறவிகள் எடுத்துள்ளீர்கள் என்பதை தந்தை வந்து புரிய வைக்கிறார். இந்த ஞானமோ சுலபமான வழியில் புத்தியில் இருக்கவே இருக்கிறது. இதுவும் ஒரு படிப்பு ஆகும். படைப்பினுடைய முதல், இடை, கடையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இந்த ஞானத்தை விடவும் உயர்ந்த விஷயம் நினைவு யாத்திரை ஆகும் என்று தந்தை கூறுகிறார். இதற்கு யோகம் என்று கூறப்படுகிறது. யோகம் என்ற வார்த்தை பிரசித்தமானதாகும். ஆனால் இது நினைவு யாத்திரை ஆகும். எப்படி மனிதர்கள் யாத்திரை செல்கிறார்கள், நாங்கள் குறிப்பிட்ட இந்த தீர்த்த யாத்திரை செல்கிறோம் என்பார்கள். ஸ்ரீநாத் அல்லது அமரநாத் செல்கிறார்கள் என்றால் அது நினைவு இருக்கும். என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தையோ மிகவும் நீண்ட யாத்திரை கற்பிக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த யாத்திரைகளிலிருந்தோ பிறகும் திரும்பி வருகிறார்கள். இது எப்பேர்ப்பட்ட யாத்திரை என்றால் பின் முக்திதாமம் சென்று இருக்க வேண்டும். நடிக்க வர வேண்டி உள்ளது என்றாலும் கூட இந்த பழைய உலகத்தில் வரமாட்டோம். இந்த பழைய உலகத்தின் மீது உங்களுக்கு வைராக்கியம் உள்ளது. இதுவோ சீ - சீ இராவண இராஜ்யம் ஆகும். எனவே நினைவு யாத்திரை தான் அடிப்படை விஷயமாகும். ஒரு சில குழந்தைகள் எப்படி நினைவு செய்ய வேண்டும் என்பது கூட புரியாமல் உள்ளார்கள். ஒருவர் நினைவு செய்கிறாரா இல்லை நினைவு செய்வதில்லையா என்பது கண்களுக்குத் தென்படக் கூடிய பொருள் ஒன்றும் அல்ல. தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு செய்ய வேண்டும் என்று தந்தை கூறுகிறார். பார்ப்பதற்கான பொருளோ ஒன்றும் கிடையாது. தெரியவும் முடியாது. அந்த நிலையில் எந்த அளவு நினைவு யாத்திரையில் நிலையாக இருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். யுத்தியோ நிறைய பேருக்குக் கூறுகிறார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று கல்யாணகாரி தந்தை புரிய வைத்துள்ளார். தங்களுடைய சேவையும் தாராளமாக செய்துக் கொண்டே இருங்கள். உதாரணமாக காவல் காக்கும் பணியில் குழந்தைகள் இருக்கிறார்கள். உலாவிக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு நினைவில் இருப்பதோ மிகவும் சுலபம் ஆகும். தந்தையின் நினைவைத் தவிர வேறு எதுவும் நினைவிற்கு வரக் கூடாது. பாபா உதாரணம் அளித்துக் கூறுகிறார் - அந்த நினைவு யாத்திரையிலேயே வர வேண்டும், போக வேண்டும். எப்படி பாதிரிமார்கள் நடக்கிறார்கள். எவ்வளவு அமைதியாக நடக்கிறார்கள். எனவே குழந்தை களாகிய நீங்கள் கூட மிகவும் அன்புடன் தந்தை மற்றும் வீட்டை நினைவு செய்ய வேண்டும். இந்தக் குறிக்கோள் மிகவும் உயர்ந்தது ஆகும். பக்தர்கள் கூட இதே புருஷார்த்தம் (முயற்சி) செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களோ கலியுகம் முடியும்பொழுது செல்வோம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு இது போல கற்பிப்பவர்கள் யாரும் கிடையாது. குழந்தைகளாகிய உங்களுக்கோ கற்பிக்கப்படுகிறது. எப்படி காவல் காக்கும் தொழில் செய்கிறீர்கள் என்றால், தனிமையில் எந்த அளவு தந்தையை நினைவு செய்கிறீர்களோ அந்த அளவு நல்லது. நினைவினால் பாவங்கள் நீங்கும். ஜன்ம ஜன்மாந்திரத்தின் பாவங்கள் தலை மீது உள்ளது. யார் முதலில் சதோபிரதானமாக ஆகிறார்களோ இராம ராஜ்யத்தில் கூட முதலில் அவர்கள் செல்கிறார்கள். எனவே அவர்கள் தான் எல்லோரையும் விட அதிகமாக நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். கல்ப கல்பத்தின் விஷயம் ஆகும். எனவே இவர்களுக்கு (காவல் காப்பவர்களுக்கு) நினைவு யாத்திரையில் இருப்பதற்கான நல்ல வாய்ப்பு இருக்கிறது. இங்கோ எந்த ஒரு சண்டை சச்சரவின் விஷயமே கிடையாது. வந்தாலும் போனாலும் அல்லது அமர்ந்தாலும் "ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - காவல் காக்கும் காரியமும் செய்யுங்கள், கூடவே தந்தையையும் நினைவு செய்யுங்கள்". கர்மம் செய்தபடியே தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள். காவல் காக்கும் பணியிலிருப்பவர்களுக்கு எல்லோரையும் விட அதிகமான நன்மை உள்ளது. பகலானாலும் சரி, இரவானாலும் சரி, யார் காவல் காக்கும் வேலை செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த நினைவில் இருப்பதற்கான பழக்கம் ஏற்பட்டுவிட்டால் மிகுந்த நன்மை உள்ளது. தந்தை இந்த மிக நல்ல சேவை அளித்திருக்கிறார். காவல் காப்பது மற்றும் நினைவு யாத்திரை. இதில் தந்தையின் நினைவில் இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இம்மாதிரி நினைவு யாத்திரையில் இருப்பதற்கான பல்வேறு யுக்திகள் கூறப்படுகின்றன. இங்கு நீங்கள் எவ்வளவு நினைவில் இருக்க முடியுமோ அந்த அளவு தொழில்கள் ஆகியவற்றில் இருக்க முடியாது. எனவே மதுபனிற்கு புத்துணர்வு பெற வருகிறீர்கள். தனிமையில் சென்று ஒரு மலை மீது அமர்ந்து நினைவு யாத்திரையில் இருக்கலாம். பிறகு ஒருவர் சென்றாலும் சரி 2-3 பேர் சென்றாலும் சரி. இங்கு சான்ஸ் (வாய்ப்பு) மிகவும் நன்றாக உள்ளது. இதுவே முக்கியமானது - தந்தையின் நினைவு பாரதத்தின் பழமையான யோகம் மிகவும் பிரசித்தாமானது கூட. இந்த நினைவு யாத்திரையினால் பாவங்கள் நீங்குகின்றன என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். நாம் சதோபிரதானமாக ஆகிவிடுவோம். எனவே இதில் புருஷார்த்தம் (முயற்சி) மிகவும் நன்றாக செய்ய வேண்டும். காரியம் செய்யும் பொழுதும் தந்தையை நினைவு செய்து காண்பியுங்கள். இதில் தான் தைரியம் வேண்டியுள்ளது. கர்மமோ செய்ய வேண்டியே உள்ளது. ஏனெனில் நீங்கள் இல்லற மார்க்கத்தினர் ஆவீர்கள். இல்லற விவகாரங்களில் இருக்கையிலும் தொழில் ஆகியவை செய்யும் பொழுதும் புத்தியில் தந்தையின் நினைவு இருக்க வேண்டும். இதனால் உங்களுக்கு மிகுந்த சம்பாத்தியம் உள்ளது. இப்பொழுது அநேக குழந்தைகளின் புத்தியில் வருவதில்லை தான். "சார்ட்" (குறிப்பேடு) வையுங்கள் என்று தந்தை கூறிக் கொண்டே இருக்கிறார். ஒரு சிலர் கொஞ்ச நஞ்சம் எழுதுகிறார்கள். தந்தை யுக்திகளோ நிறைய கூறுகிறார். பாபாவிடம் போகலாம் என்று குழந்தைகள் விரும்புகிறார்கள். இங்கு நிறைய சம்பாத்தியம் செய்ய முடியும். தனிமை மிகவும் நன்றாக உள்ளது. என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்கள் நீங்கிவிடும் என்று தந்தை நேரிடையாக வந்து புரிய வைக்கிறார். விகாரத்திற்காக எவ்வளவு சண்டைகள் நடக்கின்றன, தடைகள் ஏற்படுகின்றன! பாபா எங்களை தூய்மையாக இருக்க விடுவதில்லை என்று கூறுகிறார்கள். குழந்தைகளே நீங்கள் நினைவு யாத்திரையில் இருந்து தலை மீது இருக்கும் பல பிறவிகளின் பாவச் சுமையை இறக்குங்கள் என்று தந்தை கூறுகிறார். வீட்டில் அமர்ந்தபடியே சிவ பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். நினைவோ எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து செய்ய முடியும். எங்கு இருந்தாலும் இந்த பயிற்சி செய்ய வேண்டும். யார் வந்தாலும் அவர்களுக்கும் கூட செய்தியைக் கொடுங்கள். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்று தந்தைக் கூறுகிறார். இதற்குத் தான் யோக பலம் என்று கூறப்படுகிறது. பலம் என்றால் வலிமை, சக்தி. தந்தைக்கு சர்வ சக்திவான் என்று கூறுகிறார்கள் அல்லவா? எனவே அந்த சக்தி தந்தையிடமிருந்து எப்படிக் கிடைக்கும்? என்னை நினைவு செய்யுங்கள் என்று சுயம் தந்தை கூறுகிறார். நீங்கள் கீழே இறங்கி தமோபிரதானமாக ஆகிவிட்டுள்ளீர்கள். எனவே அந்த சக்தி முற்றிலும் முடிந்து போய் விட்டுள்ளது. ஒரு பைசா அளவிற்குக் கூட இல்லை. உங்களிடையேயும் கூட ஒரு சிலர் நல்ல முறையில் புரிய வைக்கிறார்கள். தந்தையை நினைவு செய்கிறார்கள்.

 

எனவே நமது சார்ட் எப்படி இருக்கிறது என்று நம்மையே நாம் கேட்க வேண்டும். நினைவு யாத்திரை தான் முக்கியமானது என்று தந்தை அனைத்து குழந்தைகளுக்கும் கூறுகிறார். நினைவினால் தான் உங்கள் பாவங்கள் நீங்கும். உங்களை எச்சரிப்பவர்கள் யாருமே இல்லை என்றாலும் கூட தந்தையை நினைவு செய்ய முடியும் அல்லவா? வெளிநாட்டில் தனியாக இருக்கிறீர்கள் என்றாலும் கூட நினைவில் இருக்க முடியும். உதாரணமாக யாராவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் மனைவி வேறு இடத்தில் இருக்கலாம்.

 

"தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் ஜன்ம ஜன்மாந்திரத்தின் பாவங்கள் சாம்பலாகி விடும்" என்ற ஒரே ஒரு விஷயத்தை நீங்கள் நினைவு செய்யுங்கள் என்று அவருக்குக் கூட நீங்கள் எழுதலாம். விநாசம் முன்னால் நிற்கிறது. தந்தை அனேக யுக்திகளை மிகவும் நன்றாகப் புரிய வைத்து கொண்டே இருக்கிறார். பிறகு யார் செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி, அது அவருடைய விருப்பம். தந்தை ஆலோசனையோ மிகவும் நல்லதாக அளிக்கிறார் என்பதை குழந்தைகளும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். நண்பர்கள் உறவினர்கள் ஆகியோர் யாரை சந்தித்தாலும் அவர்களுக்கு செய்தி அளிப்பது நம்முடைய வேலையாகும். நண்பராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி சேவையில் ஆர்வம் வேண்டும். உங்களிடம் படங்களோ உள்ளன. பேட்ஜ் கூட உள்ளது. இது மிகவும் நல்ல பொருள் ஆகும்! பேட்ஜ் எவரொருவரையும் இலட்சுமி நாராயணராக ஆக்கி விட முடியும். திரி மூர்த்தி படத்தின் மீது நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும். திரிமூர்த்திக்கு மேலே சிவன் இருக்கிறார். அவர்கள் திரிமூர்த்தி அமைக்கிறார்கள். ஆனால் மேலே சிவனைக் காண்பிப்பது இல்லை. சிவனை அறியாத காரணத்தினால் பாரதத்தின் படகு மூழ்கிவிட்டுள்ளது. இப்பொழுது சிவபாபா மூலமாகத் தான் பாரதத்தின் படகு கரையேற்றப்படுகிறது. பதீத பாவனரே வந்து பதீதர்களாகிய நம்மை பாவனமாக ஆக்குங்கள் என்று அழைக்கிறார்கள். பிறகும் சர்வவியாபி என்று கூறிவிடுகிறார்கள். பைசாவுக்குக் கூட மதிப்பில்லாத தவறவல்லவா இது! நீங்கள் இது போல சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும் என்று தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். இது போல மியூசியம் திறவுங்கள், சேவை செய்யுங்கள் அப்பொழுது நிறைய பேர் வருவார்கள் என்று தந்தை கூட டைரக்ஷ்ன் (உத்தரவு) அளித்துக் கொண்டே இருக்கிறார். சர்க்கஸ் கூட பெரிய பெரிய நகரங்களில் திறக்கிறார்கள் அல்லவா? எவ்வளவு அவர்களிடம் சாமான்கள் இருக்கின்றன. கிராமம் கிராமமாக பார்ப்பதற்காக ஜனங்கள் வருகிறார்கள். எனவே நீங்கள் கூட அது போல அழகான மியூசியம் (பொருட்காட்சி நிலையம்) அமையுங்கள் என்று பாபா கூறுகிறார். பின் அவர்கள் பார்த்து குஷி அடைந்துவிடுவார்கள். பின் மற்றவர்களுக்கும் போய் கூறுவார்கள். என்னவெல்லாம் சேவை நடக்கிறதோ முந்தைய கல்பத்தைப் போல நடக்கிறது என்பதையும் புரிய வைக்கிறார். ஆனால் சதோபிரதானமாக ஆவதற்கான மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். இதில் தான் குழந்தைகள் தவறு செய்கிறார்கள். மாயை தடை கூட இந்த நினைவு யாத்திரையில் தான் ஏற்படுத்துகிறது. இவ்வளவு நமக்கு ஆர்வம் இருக்கிறதா? உழைப்பு செய்கிறோமா என்று நமது உள்ளத்தைக் கேட்க வேண்டும். ஞானமோ சாதாரணமான விஷயம் ஆகும். தந்தையின்றி 84ன் சக்கரத்தை யாருமே புரிய வைக்க முடியாது. மற்றபடி நினைவு யாத்திரை முக்கியமானது. கடைசி நேரத்தில் ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமே நினைவிற்கு வரக் கூடாது. (டைரக்ஷ்ன்) வழிமுறைகளோ தந்தை முழுமையாக அளித்து கொண்டே இருக்கிறார். நினைவு செய்வது முக்கியமான விஷயமாகும். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்க முடியும். யாராக இருந்தாலும் சரி, நீங்கள் பேட்ஜ் மீது மட்டும் புரிய வையுங்கள். வேறு யாரிடமுமே இது போல பொருளுடன் கூடிய மெடல் (பதக்கம்) இருக்காது. இராணுவத்தினர் நல்ல காரியம் செய்கிறார்கள். எனவே அவர்களுக்கு "மெடல்" (பதக்கம்) கிடைக்கிறது. ராய் சாஹேப் என்ற மெடல் - எல்லோரும் பார்ப்பார்கள் - இவருக்கு வைஸ்ராயிடம் டைட்டில் (பட்டம்) கிடைத்துள்ளது. முன்பு வைஸ்ராய்கள் இருந்தார்கள். இப்பொழுதோ அவர்களிடம் எந்த அதிகாரமும் இல்லை. இப்பொழுதோ எவ்வளவு சண்டைகள் நடந்துள்ளன! மனிதர்கள் நிறைய பேர் ஆகிவிட்டுள்ளார்கள். எனவே அவர்களுக்கு நகரத்தில் நிலம் வேண்டும். இப்பொழுது பாபா சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். இத்தனை எல்லோரும் முடிந்து போய் எவ்வளவு கொஞ்சம் பேர் மீதம் போய் இருப்பார்கள். ஏராளமான நிலங்கள் இருக்கும். அங்கோ எல்லாமே புதியதாக இருக்கும். அந்த புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் பின் நல்ல முறையில் புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். ஒவ்வொரு மனிதரும் மிகவும் உயர்ந்த பதவியை அடைவதற்கான புருஷார்த்தம் செய்கிறார்கள். ஒருவர் முழுமையாக புருஷார்த்தம் செய்வதில்லை என்றால் தோல்வி அடைந்துவிடுவார் என்று புரிந்து கொள்ளலாம். சுயம் தாங்களும் தோல்வி அடைந்துவிடுவோம் என்று புரிந்திருப்பார்கள். பிறகு படிப்பு ஆகியவற்றை விட்டு விட்டு உத்தியோகத்தில் ஈடுபட்டுவிடுகிறார்கள். தற்காலத்திலோ உத்தியோகங்களில் கூட மிகவும் கடுமையான சட்ட திட்டங்களை எடுத்து வந்து கொண்டே இருக்கிறார்கள். மனிதர்கள் மிகவும் துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். இப்பொழுது பாபா உங்களுக்கு எப்பேர்ப்பட்ட வழி கூறுகிறார் என்றால் 21 பிறவிகளுக்கு பின் ஒருபொழுதும் துக்கத்தின் பெயர் இருக்காது. நினைவு யாத்திரையில் மட்டுமே இருங்கள் என்று தந்தை கூறுகிறார். கூடுமானவரையும் இரவு மிகவும் நல்லது படுத்தபடியே கூட நினைவு செய்யுங்கள். ஒரு சிலருக்கு பிறகு தூக்கம் வந்துவிடும். முதியவராக இருப்பார். அதிக நேரம் உட்கார முடியாமல் இருப்பார். பின் அவசியம் உறங்கிவிடுவார். படுத்தபடியே தந்தையை நினைவு செய்து கொண்டிருப்பார்கள். உள்ளுக்குள் மிகவும் குஷி ஆகிக் கொண்டே இருக்கும். ஏனெனில் மிக மிக சம்பாத்தியம் உள்ளது. நேரம் இருக்கிறது என்றோ நினைக்கிறார்கள். ஆனால் மரணம் பற்றி எந்த நம்பிக்கையும் இல்லை. எனவே முக்கியமானது நினைவு யாத்திரை என்று தந்தை புரிய வைக்கிறார். வெளியில் நகரங்களிலோ கஷ்டம். இங்கு வருகிறீர்கள் என்றால் மிகவும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. எந்த ஒரு கவலையின் விஷயமும் கிடையாது. எனவே இங்கு சார்ட்டை அதிகரித்துக் கொண்டே இருங்கள். இதனால் உங்களுடைய நடத்தை கூட திருந்திக் கொண்டே போகும். ஆனால் மாயை மிகவுமே கடுமையானது. வெளியில் இருப்பவர்கள் கொண்டிருக்கும் அளவிற்கு வீட்டில் இருப்பவர்கள் மதிப்பு வைப்பதில்லை. பிறகும் இச்சமயம் கோபர்களின் (ஆண்களின்) ரிஸல்ட் நன்றாக உள்ளது.

 

ஒரு சில பெண் குழந்தைகள் "திருமணத்திற்காக மிகவும் தொல்லைப் படுத்துகிறார்கள், என்ன செய்வது?" என்று எழுதுகிறார்கள். யார் வலிமையான (சென்ஸிபிள்) அறிவுள்ள பெண் குழந்தைகளாக இருப்பார்களோ அவர்கள் ஒருபொழுதும் இது போல எழுத மாட்டார்கள். எழுதுகிறார்கள் என்றால் (பயந்து) ஆட்டு குட்டி என்று பாபா புரிந்து கொண்டுவிடுகிறார். இதுவோ வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வது. தங்களது கையில் உள்ளது. இந்த உலகத்தில் அநேக விதமான துக்கம் உள்ளது. இப்பொழுது பாபாவோ சுலபமாகக் கூறுகிறார்.

 

குழந்தைகளாகிய நீங்களோ மகான் பாக்கியசாலி ஆவீர்கள். ஏனென்றால் தலைவனுக்கு (தந்தைக்கு) சொந்தமானவர்களாக (ஸாஹேப் ஜாதா) ஆகியுள்ளீர்கள். தந்தை எவ்வளவு உயர்ந்தவர்களாக ஆக்குகிறார்! பிறகும் நீங்கள் தந்தையை நிந்தனை செய்கிறீர்கள். அதுவும் முறையற்ற வசவுகள். எவ்வளவு தமோபிரதானமாக ஆகியுள்ளீர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இதை விட அதிகமாக இன்னும் என்ன சகித்து கொள்வார். அதிகமாக துன்பப்படுத்தினீர்கள் என்றால் கொன்றுவிடுவோம் என்று கூறுகிறீர்கள் அல்லவா? எனவே இதை தந்தை வந்து புரிய வைக்கிறார். சாஸ்திரங்களிலோ கதைகள் எழுதி விட்டுள்ளார்கள். பாபா யுக்தியோ மிகவும் சுலபமானதாகக் கூறுகிறார். கர்மம் செய்கையிலும் நினைவு செய்யுங்கள். இதில் மிகவுமே நன்மைகள் உள்ளன. அதிகாலை எழுந்து நினைவில் அமருங்கள். மிகவும் ஆனந்தம் ஏற்படும். ஆனால் அந்த அளவிற்கு ஆர்வம் இல்லை. மாணவரின் நடத்தை மூலமாக இவர் ஃபெயில் ஆகிவிடுவார் என்று ஆசிரியர் புரிந்து கொண்டு விடுகிறார். "இவர் ஃபெயில் ஆகிவிடுவார், அதுவும் ஒவ்வொரு கல்பத்திலும்" என்று புரிந்துள்ளார். சொற்பொழிவு நிகழ்த்துவதில் மிகவும் திறமைசாலியாக இருக்கிறார்கள் தான். கண்காட்சியில் கூட புரிய வைத்துவிடுகிறார்கள். ஆனால் நினைவு இல்லை. இதில் ஃபெயில் ஆகி (தோற்று) விடுகிறார்கள். இதுவும் ஒரு அவமதிப்பது போலாகி விடுகிறது. தங்களுக்கே அவமதிப்பு செய்து கொள்கிறார்கள். சிவ பாபாவிற்கோ அவமதிப்பு ஆவதில்லை. எங்களுக்கு நினைவு செய்வதற்கு நேரமே இல்லை என்று யாருமே கூற முடியாது. பாபா ஒப்பு கொள்ளவே மாட்டார். குளிக்கும் பொழுது கூட நினைவு செய்ய முடியும். உணவு உட்கொள்ளும் பொழுது தந்தையை நினைவு செய்யுங்கள். இதில் மிகவுமே சம்பாத்தியம் உள்ளது. ஒரு சில குழந்தைகள் சொற்பொழிவாற்றுவதில் மட்டுமே பிரசித்தமாக உள்ளார்கள். யோகம் இல்லை. அந்த அகங்காரம் கூட அவர்களை வீழ்த்திவிடுகிறது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சர்வ சக்திவான் தந்தையிடமிருந்து சக்தி பெற வேண்டும் என்றால் நினைவின் சார்ட்டை அதிகரிக்க வேண்டும். நினைவிற்கான பல்வேறு யுக்திகளைக் கையாள வேண்டும். தனிமையில் அமர்ந்து குறிப்பாக சம்பாத்தியம்-சேமிப்பு செய்ய வேண்டும்.

 

2. சதோபிரதானமாக ஆவதற்கான அக்கறை கொள்ள வேண்டும். சேவையிலும் ஆர்வம் கொள்ள வேண்டும். கூடவே நினைவு யாத்திரையிலும் இருக்க வேண்டும்.

 

வரதானம்:

புத்தியை என்னுடையது என்ற குழப்பத்திலிருந்து விடுவித்து குழப்பங்களிலிருந்து விடுபட்டு இருக்கக் கூடிய விடுபட்டவர், டிரஸ்டி ஆகுக.

 

எங்கு என்னுடையது என்பது வருகிறதோ, புத்தி அலைந்து கொண்டிருக்கிறது என அர்த்தம். இல்லறத்தவர் என நினைத்து சிந்திப்பதால் குழப்பம் ஏற்படுகிறது, ஆகையால் முற்றிலும் விடுபட்டவராக, டிரஸ்டியாக ஆகி விடுங்கள். இந்த என்னுடையது என்ற - என்னுடைய பெயர் கெட்டுப் போகும், எனக்கு நிந்தனை உண்டாகும். . . இப்படி நினைப்பதுதான் குழப்பமடைவது ஆகும். பிறகு எந்த அளவு சரிப்படுத்த முயற்சி செய்கிறீர்களோ அந்த அளவு குழப்பமடைந்து கொண்டே இருப்பீர்கள். ஆகையால் டிரஸ்டியாகி இந்த குழப்பங்களிருந்து விடுபட்டு விடுங்கள். பகவானின் குழந்தைகள் ஒரு போதும் குழப்பத்தில் வர முடியாது.

 

சுலோகன்:

பெரிய தந்தையின் குழந்தைகளாக இருக்கிறீர்கள், ஆகையால் குறுகிய மனமுள்ளவராகவும் ஆகாதீர்கள் மற்றும் சிறிய விசயங்களுக்கு பயப்படவும் செய்யாதீர்கள்.

 

ஓம்சாந்தி