14.06.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
நீங்கள்
மாற்றமடைவதற்காக
இங்கே
வந்துள்ளீர்கள்.
நீங்கள் அசுர
குணங்களை
மாற்றிக்
கொண்டு
தெய்வீக
குணங்களை
அவசியம்
கடைப்பிடிக்க
வேண்டும்.
கேள்வி
:
குழந்தைகளாகிய
நீங்கள்
எந்தப்
படிப்பை
தந்தையிடம்
மட்டுமே
படிக்கின்றீர்கள்,
வேறு
யாரும் படிக்க
வைக்க
முடியாது?
பதில்
:
மனிதனிலிருந்து தேவதையாக
மாறக்கூடிய
படிப்பு,
அபவித்திரத்திலிருந்து
(தூய்மையற்ற
நிலையிலிருந்து)
பவித்திரமாகி
(தூய்மையாகி)
புது
உலகிற்குச்
செல்வதற்கான
படிப்பு,
ஒரு
தந்தையைத்
தவிர
வேறு யாரும்
படிக்க
வைக்க
முடியாது.
பாபா
தான்
எளிய
ஞானம்
மற்றும்
இராஜயோகத்தின்
படிப்பு
மூலமாக பவித்திரமான
இல்லற
வாழ்க்கை
முறையை
ஸ்தாபனை
செய்கிறார்.
ஓம்
சாந்தி
!
தந்தை
குழந்தைகளுக்குப்
புரியவைக்கின்றார்.
உண்மையில்
இரண்டு
தந்தைகள்
இருக்கின்றனர்.
ஒருவர்
எல்லைக்கு
உட்பட்டவர்,
ஒருவர்
எல்லைக்கு
அப்பாற்பட்டவர்.
அந்த
தந்தையும்
இருக்கிறார்,
இந்த தந்தையும்
இருக்கிறார்.
எல்லையற்ற
தந்தை
வந்து
படிக்க
வைக்கின்றார்.
நாம்
புதிய
உலகம்
சத்யுகம் செல்வதற்காக
படித்துக்
கொண்டிருக்கிறோம்
என்பது
குழந்தைகளுக்குத்
தெரியும்.
இது
போன்ற
படிப்பு
வேறு எங்கும்
கிடைக்காது.
குழந்தைகளாகிய
நீங்கள்
நிறைய
சத்சங்கங்களுக்கு
சென்றிருக்கின்றீர்கள்.
நீங்கள்
பக்தர்களாக இருந்தீர்கள்
அல்லவா!
நிச்சயமாக
குருவிடம்
சென்றிருப்பீர்கள்.
சாஸ்திரங்களை
பயிற்சி
செய்திருக்கிறீர்கள்.
ஆனால்
இப்போது
பாபா
தான்
வந்து
எழுப்புகிறார்.
இப்போது
இந்த
பழைய
உலகம்
மாறவேண்டும்
என
பாபா கூறுகின்றார்.
இப்போது
நான்
உங்களை
புதிய
உலகிற்காக
படிக்க
வைக்கின்றேன்.
உங்களுடைய
டீச்சராக இருக்கிறேன்.
எந்த
ஒரு
குருவையும்
டீச்சர்
என்று
கூறமாட்டார்கள்.
பள்ளிக்கூடத்தில்
டீச்சர்
இருக்கிறார்.
அவர் மூலமாக
உயர்ந்த
பதவியை
அடைகிறார்கள்.
ஆனால்
அவர்
இவ்வுலகிற்காக
படிக்க
வைக்கின்றார்.
இப்போது நாம்
படிக்கின்ற
படிப்பு
புதிய
உலகிற்காக
என்பது
உங்களுக்குத்
தெரியும்.
பொற்கால
உலகம்.
இச்சமயம்
அசுர குணங்களை
மாற்றிக்
கொண்டு
தெய்வீக
குணங்களை
கடைப்பிடிக்க
வேண்டும்
என்பதை
அறிகிறீர்கள்.
இங்கே நீங்கள்
மாற்றமடைவதற்காக
வந்திருக்கிறீர்கள்.
நல்
ஒழுக்கத்தின்
மகிமை
செய்யப்படுகிறது.
தேவதைகளுக்கு முன்பு
சென்று
தாங்கள்
இப்படி
இருக்கிறீர்கள்,
நாங்கள்
இப்படி
இருக்கிறோம்
என்று
கூறுகின்றார்கள்.
இப்போது உங்களுக்கு
குறிக்கோள்
கிடைத்திருக்கிறது.
எதிர்காலத்திற்காக
பாபா
புதிய
உலகத்தை
ஸ்தாபனை
செய்கின்றார்.
மேலும்
உங்களை
படிக்கவும்
வைக்கின்றார்.
அங்கே
விகாரத்தின்
விஷயம்
கிடையாது.
நீங்கள்
இராவணனை வெற்றி
அடைகிறீர்கள்,
இராவண
இராஜ்யத்தில்
அனைவரும்
விகாரிகளாக
இருக்கின்றனார்.
இராஜா,
இராணி எவ்வாறோ
அவ்வாறே
பிரஜைகள்.
இப்போதோ
பஞ்சாயத்து
இராஜ்யம்
நடைபெறுகிறது.
அவர்களுக்கு
முன் இராஜா,
இராணியின்
இராஜ்யம்
இருந்தது.
ஆனால்
அவர்களும்
பதீதமானவர்கள்.
அந்த
பதீத
இராஜாக்களிடம் கோவில்
கூட
இருந்தது.
நிர்விகாரி
தேவதைகளை
பூஜை
செய்தனர்.
அந்த
தேவதைகள்
வாழ்ந்து
விட்டு சென்றிருக்கின்றனர்
என
அறிந்திருக்கின்றனர்.
இப்பொழுது
அவர்களுடைய
இராஜ்யம்
இல்லை.
பாபா
ஆத்மாக்களை
பாவனமாக்குகின்றார்.
மேலும்
நீங்கள்
தேவதா
சரீரமுடையவர்களாக
இருந்தீர்கள்
என்பதை
நினைவு படுத்துகின்றார்.
உங்களுடைய
ஆத்மா
மற்றும்
சரீரம்
இரண்டுமே
தூய்மையாக
இருந்தது.
இப்போது
மீண்டும் தந்தை
வந்து
பதீதத்திலிருந்து பாவனமாக்குகின்றார்.
ஆகையால்
தான்
இங்கே
நீங்கள்
வந்துள்ளீர்கள்.
பாபா
கட்டளையிடுகின்றார்
-
குழந்தைகளே,
காமம்
மிகப்
பெரிய
எதிரி.
இது
உங்களுக்கு
முதல்,
இடை,
கடைசி
வரை
துக்கம்
கொடுக்கின்றது.
இப்போது
நீங்கள்
குடும்பத்தில்
ஈடுபட்டிருந்தாலும்
தூய்மையாக மாறவேண்டும்.
தேவி
தேவதைகள்
தங்களுக்குள்
அன்பாக
இருந்திருக்க
மாட்டார்கள்
என்பது
கிடையாது.
ஆனால்
அங்கே
விகாரப்
பார்வையிருக்காது,
நிர்விகாரியாக
இருப்பார்கள்.
குடும்பத்தில்
இருந்தாலும்
தாமரை மலருக்குச்
சமமாக
இருங்கள்
என
பாபா
கூறுகின்றார்.
நீங்கள்
தூய்மையான
ஜோடியாக
இருந்தது
போன்று உங்களுடைய
எதிர்காலத்தை
உருவாக்க
வேண்டும்.
ஒவ்வொரு
ஆத்மாவும்
விதவிதமான
பெயர்,
உருவம் எடுத்து
அதன்
பாகத்தை
நடித்துக்
கொண்டே
வந்திருக்கிறது.
இப்போது,
இது
உங்களுடைய
கடைசி
பாகம்.
தூய்மையாகின்ற
பொழுது
என்ன
செய்வது?,
எப்படி
துணைவனாக
இருப்பது?
என
மிகவும்
குழம்புகிறார்கள்.
துணைவனாக
இருப்பது
என்பதன்
பொருள்
என்ன?
வெளிநாட்டில்
வயதாகும்
போது
துணையாக இருப்பதற்காகவும்,
தன்னை
கவனிப்பதற்காகவும்
திருமணம்
செய்து
கொள்கின்றனர்.
பிரம்மச்சாரியாக
இருப்பதை நிறையபேர்
விரும்புகின்றனர்.
சந்நியாசிகளின்
விஷயம்
தனி,
குடும்பத்தில்
இருந்தாலும்
திருமணம்
செய்து கொள்வதை
விரும்பாதவர்கள்
பலர்
இருக்கின்றனர்.
திருமணம்
செய்து
கொண்டு
குழந்தை
குட்டிகளை
பார்த்துக் கொள்ளுதல்
போன்ற
வலையை
விரித்து
அதில்
தானே
ஏன்
மாட்டிக்
கொள்ள
வேண்டும்.
இது
போன்று
பலர் இங்கேயும்
வருகிறார்கள்.
நாற்பது
வயதாகியும்
பிரம்மச்சாரியாக
இருக்கிறார்கள்.
இதன்
பிறகு
திருமணம் செய்வார்களா!
சுதந்திரமாக
இருப்பதை
விரும்புகின்றார்கள்.
பாபா
அவர்களைப்
பார்த்து
குஷி
அடைகிறார்.
இவரோ
பந்தனத்திலிருந்து விடுபட்டவர்.
மற்றபடி
சரீரத்தின்
பந்தனம்
இருக்கிறது.
தேகம்
உட்பட
அனைத்தையும் மறந்து
ஒரு
தந்தையை
நினைவு
செய்ய
வேண்டும்.
எந்த
தேகதாரியையோ,
கிறிஸ்துவையோ
நினைக்க கூடாது.
நிராகாரி
சிவன்
தேகதாரி
கிடையாது.
அவருடைய
பெயரே
சிவன்.
சிவனுடைய
கோவில்கள்
கூட இருக்கிறது.
84
பிறவிகளின்
பாகம்
ஆத்மாவிற்கு
கிடைத்திருக்கிறது.
இது
அழியாத
நாடகம்,
இதில்
எதையும் மாற்ற
முடியாது.
முதன்
முதலில் நம்முடைய
தர்மம்,
கர்மம்
உயார்ந்ததாக
இருந்தது.
அது
இப்போது
கீழான
நிலைக்கு வந்துவிட்டது
என்பதை
நீங்கள்
அறிகிறீர்கள்.
தேவதா
தர்மமே
அழிந்து
விட்டது
என
சொல்ல
முடியாது.
தேவதைகள்
அனைத்து
குணங்களிலும்
நிரம்பியவர்களாக
இருந்தார்கள்
எனப்பாடுகின்றார்கள்.
இலட்சுமி-
நாராயணன்
இருவரும்
தூய்மையாக
இருந்தார்கள்.
தூய்மையான
குடும்ப
மார்க்கம்
இருந்தது.
இப்போது அபவித்திரமான
குடும்ப
மார்க்கமாக
உள்ளது.
84
பிறவிகளாக
விதவிதமான
பெயர்,
தோற்றம்
மாறிக்
கொண்டே வந்திருக்கிறது.
இனிமையிலும்
இனிமையாக
குழந்தைகளே,
நீங்கள்
தன்னுடைய
பிறவிகளைப்
பற்றி
அறியவில்லை,
நான்
உங்களுக்கு
84
பிறவிகளின்
கதையைக்
கூறுகின்றேன்
என்று
பாபா
கூறுகின்றார்.
எனவே
முதல்
பிறவியிலிருந்து புரிய
வைக்க
வேண்டியிருக்கிறது.
நீங்கள்
தூய்மையாக
இருந்தீர்கள்,
இப்போது
விகாரி
ஆகிவிட்டதால் தேவதைகளுக்கு
முன்பு
சென்று
தலை
வணங்குகிறீர்கள்.
கிறிஸ்துவர்கள்
கிறிஸ்துவுக்கு
முன்பும்,
பௌத்தர்கள் புத்தருக்கு
முன்பும்,
சீக்கியர்கள்
குருநானக்கின்
தர்பாருக்கு
முன்பும்
சென்று
தலைவணங்குகின்றார்கள்.
இதனால்,
இவர்கள்
எந்த
சமயத்தைச்
சர்ந்தவார்கள்
என்பது
தெரிகிறது.
உங்களை
இந்து
என்று
கூறுகிறார்கள்.
ஆதிசனாதன தேவி
தேவதா
தர்மம்
எங்கே
சென்றது?
இது
யாருக்கும்
தெரியவில்லை.
மறைந்து
போயிற்று.
பாரதத்தில் அளவற்ற
படங்கள்
உருவாக்கப்பட்டிருக்கிறது.
மனிதர்கள்
சொல்லும்
வழிகளும்
பல
இருக்கின்றன.
சிவனுக்குக் கூட
பல
பெயார்களை
வைத்திருக்கின்றனர்.
உண்மையில்
அவருக்கு
ஒரே
பெயர்
தான்
சிவன்.
அவர் மறுபிறவி
எடுத்திருக்கின்றார்
அதனால்
தான்
பெயர்கள்
மாறிக்
கொண்டேயிருக்கிறது
என்பதெல்லாம்
கிடையாது.
இல்லை.
மனிதர்களுக்கு
பலவழிகள்
இருக்கிறது.
ஆகையால்
பல
பெயர்கள்
வைக்கின்றனர்.
ஸ்ரீநாத்,
துவாராகாவிற்கு
சென்றால்
அங்கேயும்
அதே
இலட்சுமி-நாராயணன்
தான்
இருக்கிறார்கள்.
ஜெகன்நாத்
கோவிலும் அதே
சிலை
தான்
இருக்கிறது.
பெயர்
விதவிதமாக
வைக்கின்றனர்.
நீங்கள்
சூரிய
வம்சத்தில்
இருந்த
பொழுது பூஜை
போன்றவைகளை
செய்யவில்லை.
நீங்கள்
முழு
உலகையும்
ஆட்சி
செய்தீர்கள்,
சுகமாக
இருந்தீர்கள்.
ஸ்ரீமத்படி
சிரேஷ்ட
இராஜ்யத்தை
ஸ்தாபனை
செய்தீர்கள்.
அது
தான்
சுகதாமம்
என்று
அழைக்கப்படுகிறது.
அங்கே
எங்களை
தந்தை
படிக்க
வைக்கின்றார்,
மனிதனிலிருந்து தேவதைகயாக
மாற்றுகின்றார்
என்று
யாரும் கூறமாட்டார்கள்.
அடையாளம்
கூட
இருக்கிறது.
கண்டிப்பாக
அவர்களுடைய
இராஜ்யம்
இருந்தது.
அங்கே கோட்டை
போன்றவை
கிடையாது.
பாதுகாப்பிற்காகத்தான்
கோட்டைகளை
கட்டுகின்றனர்.
இந்த
தேவி
தேவதை களின்
இராஜ்யத்தில்
கோட்டை
போன்றவை
இல்லை.
வேறு
யாரும்
படையெடுக்க
மாட்டர்கள்.
இப்பொழுது நாம்
அந்த
தேவி
தேவதா
தார்மத்தில்
இடம்
மாறிக்
கொண்டிருக்கிறோம்
என
அறிவீர்கள்.
அதற்காக
நீங்கள் இராஜயோக
படிப்பை
படித்துக்
கொண்டிருக்கிறீர்கள்.
இராஜ்யத்தை
அடைய
வேண்டும்.
பகவான்
வாக்கு
-
நான்
உங்களை
இராஜாக்களுக்கு
இராஜாவாக
மாற்றுகின்றேன்.
இப்போது
யாரும்
இராஜா
இராணி
கிடையாது.
எத்தனை
சண்டை
சச்சரவுகள்
ஏற்பட்டுக்
கொண்டேயிருக்கிறது.
இதுதான்
கலியுகம்,
அயர்ன்
ஏஜ்
வோர்ல்ட்.
(Iron age world)
நீங்கள்
பொன்னான
யுகத்தில்
இருந்தீர்கள்.
இப்போது
மீண்டும்
புருஷோத்தம
சங்கமயுகத்தில் நிற்கிறீர்கள்.
பாபா
உங்களை
முதல்
நம்பரில்
அழைத்துச்
செல்ல
வந்திருக்கிறார்,
அனைவருக்கும்
நன்மை செய்கின்றார்.
நமக்குக்
கூட
நன்மை
நடக்கிறது.
முதன்
முதலில் நாம்
நிச்சயமாக
சத்யுகத்தில்
வருவோம்
என அறிகிறீர்கள்.
மற்ற
தார்மத்தினர்
யார்
யார்
இருக்கிறார்களோ
அவார்கள்
அனைவரும்
சாந்திதாமத்திற்குச் சென்று
விடுவார்கள்.
அனைவரையும்
பவித்திரமாக
ஆக்க
வேண்டும்
என
பாபா
கூறுகின்றார்.
நீங்கள்
தான் தூய்மையான
தேசத்தில்
வசிக்கக்
கூடியவர்கள்.
அதற்கு
தான்
நிர்வாண
தாமம்
என்று
பெயர்.
சப்தத்திலிருந்து விடுபட்டு
அசரீரி
ஆத்மாக்கள்
மட்டும்
வசிக்கின்றனர்.
நான்
உங்களை
நிர்வாண
தாமத்திற்கு,
சாந்தி
தாமத்திற்கு அழைத்துச்
செல்கிறேன்
என
வேறு
யாரும்
கூறமுடியாது.
அவர்கள்,
நாங்கள்
பிரம்மத்தில்
மூழ்கிவிடுவோம் என
கூறுகிறார்கள்.
இப்போது
இது
தமோபிரதான
உலகம்,
இதில்
உங்களுக்கு
சுவை
வராது
என
அறிகிறீர்கள்.
ஆகையால்
புதிய
உலகை
ஸ்தாபனை
செய்து
பழைய
உலகை
அழிப்பதற்காக
பகவான்
இங்கே வரவேண்டியிருக்கிறது.
சிவஜெயந்தி
கூட
இங்கு
தான்
கொண்டாடுகின்றார்கள்.
அப்படி
என்றால்
அவர்
என்ன செய்தார்,
யாராவது
சொல்லுங்கள்.
ஜெயந்தி
கொண்டாடுகின்றார்கள்
என்றால்
நிச்சயமாக
வருகின்றார்
அல்லவா?
ரதத்தில்
வீற்றிருக்கின்றார்.
அவர்கள்
குதிரை
வண்டியின்
ரதத்தை
காண்பித்துவிட்டனர்.
தந்தை
அமர்ந்து
புரிய வைக்கின்றார்
-
நான்
எந்த
ரதத்தில்
சவாரி
செய்கிறேன்
என
குழந்தைகளுக்குத்
தெரிவிக்கிறேன்.
பிறகு
இந்த ஞானம்
மறைந்து
விடுகிறது.
இவருடைய
84
பிறவிகளின்
கடைசியில்
பாபா
வரவேண்டியிருக்கிறது.
இந்த ஞானம்
வேறு
யாரும்
கொடுக்க
முடியாது.
ஞானம்
என்பது
பகல்,
பக்தி
என்பது
இரவு.
கீழே
இறங்கிக் கொண்டேயிருக்கிறோம்.
பக்தியினுடைய
பகட்டு
எவ்வளவு
இருக்கிறது.
எவ்வளவு
கும்பமேளாக்கள்,
திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
இப்பொழுது
நீங்கள்
பவித்திரமாகி
புதிய
உலகிற்கு
போக
வேண்டும்.
இது
சங்கமயுகம் என்பதை
பாபா
தான்
கூறுகின்றார்
இவ்வாறு
வேறு
யாரும்
கூறவில்லை.
உங்களுக்கு,
மனிதனிலிருந்து தேவதையாக
மாறிய,
போன
கல்பத்தில்
படித்த
அதே
படிப்பு
தான்
கிடைத்திருக்கிறது.
மனிதனிலிருந்து தேவதையாக
மாறினார்கள்
என
பாடப்பட்டிருக்கிறது.
நிச்சயமாக
பாபா
தான்
மாற்றுவார்
அல்லவா!
நாம் அபவித்திரமான
இல்லற
தர்மத்தைச்
சார்ந்தவராக
இருந்தோம்.
இப்போது
பாபா
வந்து
மீண்டும்
பவித்திரமான இல்லற
மார்க்கத்தினராக
மாற்றுகின்றார்.
நீங்கள்
மிகவும்
உயர்ந்த
பதவி
அடைகிறீர்கள்
உயர்ந்ததிலும்
உயார்ந்த தந்தை
எவ்வளவு
உயர்ந்தவராக
மாற்றுகின்றார்.
பாபாவினுடையது
ஸ்ரீ
ஸ்ரீ,
அதாவது
சிரேஷ்டத்திலும் சிரேஷ்ட
வழி.
நாம்
சிரேஷ்டமாக
மாறுகின்றோம்.
ஸ்ரீ
ஸ்ரீ
யினுடைய
பொருள்
யாருக்கும்
தெரியவில்லை.
ஒரு சிவதந்தைக்குத்
தான்
இந்த
பட்டம்
(டைட்டில்)
இருக்கிறது.
ஆனால்,
அவர்கள்
தங்களுக்கு
ஸ்ரீ
ஸ்ரீ
என கூறிக்கொள்கிறார்கள்.
மாலை
உருட்டப்படுகிறது.
108 -
னுடைய
மாலையிருக்கிறது.
அவர்கள்
16,108
னுடைய மாலையை
உருவாக்கியுள்ளனர்.
அதில்
எட்டு
பேர்
வரத்தான்
வேண்டும்.
நான்கு
ஜோடி
மற்றும்
ஒரு
தந்தை,
அஷ்ட
ரத்தினங்கள்
மேலும்
ஒன்பதாவது
நான்.
அவர்களை
ரத்தினங்கள்
என்கிறார்கள்.
அவர்களை
அவ்வாறு மாற்றுபவர்
தந்தை.
நீங்கள்
பாபா
மூலமாக
தங்க
புத்தி
உடையவராக
மாறுகின்றீர்கள்.
ரங்கூனில்
ஒரு
குளம் இருக்கிறது.
அதில்
நீராடினால்
தேவதையாக
ஆகிவிடுவார்கள்
எனக்
கூறுகின்றார்கள்.
உண்மையில்
இது ஞானக்
குளியல்.
இதன்
மூலமாகத்தான்
நீங்கள்
தேவதையாக
மாறுகின்றீர்கள்.
மற்றவை
எல்லாம்
பக்திமார்க்கத்தின் விஷயங்கள்.
தண்ணீரில்
நீராடுவதால்
தேவதையாகிவிடலாம்
என்பதெல்லாம்
ஒருபோதும்
நடக்காது.
இவையனைத்தும்
பக்தி
மார்க்கம்.
என்னென்ன
விஷயங்களை
உருவாக்கியிருக்கின்றார்கள்.
எதையும்
புரிந்து கொள்ளவில்லை.
உங்களின்
நினைவுச்
சின்னமாக
தில்வாடா,
குருஷிக்கர்
போன்றவை
அமைந்துள்ளன
என்பதை நீங்கள்
இப்போது
புரிந்து
கொள்கிறீர்கள்.
பாபா
மிகவும்
உயரத்தில்
இருக்கிறார்
அல்லவா!
பாபா
மற்றும் ஆத்மாக்களாகிய
நாம்
எங்கே
வசிக்கிறோமோ
அதுவே
மூலவதனம்
என்பது
உங்களுக்குத்
தெரியும்.
சூட்சும வதனம்
என்பது
சாட்சாத்காரத்திற்கு
மட்டுமே.
அது
ஒரு
உலகம்
கிடையாது.
சூட்சுமவதனம்
அல்லது
மூல வதனத்திற்கு
உலக
வரலாறு
மீண்டும்
நடக்கிறது
என
கூறமாட்டார்கள்.
உலகம்
ஒன்று
தான்
இருக்கிறது.
இந்த உலகத்தின்
சரித்திரம்
மீண்டும்
நடக்கிறது
என்று
கூறப்படுகிறது.
உலகம்
அமைதியடைய
வேண்டும்
என
மனிதர்கள்
கூறுகிறார்கள்.
ஆத்மாவின்
சுயதர்மம்
தான்
சாந்தி என்பதை
இவர்கள்
அறியவில்லை.
மற்றபடி
காட்டில்
அமைதி
கிடைக்காது.
குழந்தைகளாகிய
உங்களுக்கு சுகமும்
மற்ற
அனைவருக்கும்
அமைதியும்
கிடைக்கிறது.
யாரெல்லாம்
வருகிறார்களோ
முதலில் சாந்தி தாமத்திற்குச்
சென்று
பிறகு
சுகதாமத்திற்கு
வருவார்கள்.
நாங்கள்
ஞானம்
எடுக்க
மாட்டோம்
என
அனேகர் கூறுவார்கள்.
கடைசியில்
வருகின்றார்கள்
என்றால்
இவ்வளவு
காலம்
முக்தி
தாமத்தில்
இருக்கிறார்கள்.
இது நல்லது.
நீண்ட
காலம்
முக்தியில்
இருக்கிறார்கள்.
இங்கே
ஓரிரு
பிறவிகள்
பதவி
பெறுவார்கள்.
அது
என்ன ஆகிறது.
கொசுக்கூட்டம்
உற்பத்தியாகி
இறந்து
போவது
போன்று.
ஒரு
பிறவியில்
இங்கே
என்ன
சுகம் கிடைக்கும்?
அதில்
எந்த
பயனும்
இல்லை,
நடிக்காதது
போன்று
தான்
அது.
உங்களுடைய
பாகம்
மிகவும் உயார்ந்தது.
உங்களைப்
போன்ற
இவ்வளவு
சுகம்
வேறு
யாரும்
பார்க்க
முடியாது.
ஆகையால்,
முயற்சி செய்ய
வேண்டும்.
செய்து
கொண்டேயிருக்கிறார்கள்.
போன
கல்பத்திலும்
நீங்கள்
முயற்சி
செய்தீர்கள்.
உங்களுடைய
முயற்சிக்கு
ஏற்றார்போல்
ஆஸ்தி
பெற்றிருக்கிறீர்கள்.
முயற்சி
இல்லாமல்
ஆஸ்தியை
(பிராப்தியை)
அடைய
முடியாது.
கண்டிப்பாக
முயற்சி
செய்ய
வேண்டும்.
இவ்வாறு
நாடகம்
உருவாக்கப்பட்டிருக்கிறது
என பாபா
கூறுகின்றார்.
உங்களது
முயற்சி
கூட
நடைபெறும்
தான்.
அப்படியே
செல்ல
முடியாது.
முயற்சி
இல்லாமல் எதுவும்
நடக்காது.
இருமல்
தானாகவே
எப்படி
சரியாகும்?
மருந்து
உட்கொள்வதற்காக
முயற்சி
செய்ய வேண்டும்.
சிலர்
நாடகத்தில்
இருந்தால்
நடக்கும்
என்று
அப்படியே
நாடகத்தின்
மீது
அமர்ந்து
கொள்கிறார்கள்.
இது
போன்று
தலைகீழாக
ஞானத்தை
புத்தியில்
வைக்காதீர்கள்.
இப்படி
கூட
மாயா
தடையை
ஏற்படுத்துகிறது.
குழந்தைகள்
படிப்பையே
விட்டு
விடுகிறார்கள்.
இதற்குத்தான்
மாயாவிடம்
தோல்வி
என்கிறார்கள்.
சண்டை அல்லவா!
அதுவும்
வலிமையானது.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு
தாயும்
தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே
தாரணைக்கான
முக்கிய
சாரம்
:-
1.
சிரேஷ்டமான
(மிக
மேன்மையான)
இராஜ்யத்தை
ஸ்தாபனை
செய்வதற்காக
ஸ்ரீமத்படி நடந்து
பாபாவிற்கு
உதவியாளராக
வேண்டும்.
தேவதைகள்
நிர்விகாரியாக
இருப்பதைப்
போல
குடும்பத்தில்
இருந்தாலும்,
நிர்விகாரி
ஆக
வேண்டும்.
தூய்மையான
இல்லறத்தை
உருவாக்க வேண்டும்.
(2)
நாடகத்தில்
(டிராமா)
கூறப்படும்
கருத்துக்களை
தலை
கீழான
வடிவில்
பயன்படுத்தக்
கூடாது.
டிராமா
என்று
கூறிக்கொண்டு
வெறுமனே
இருந்துவிடக்கூடாது.
படிப்பின்
மீது
முழு
கவனம் செலுத்த
வேண்டும்.
முயற்சி
செய்து
தனது
உயர்வான
பலனை
உருவாக்கிக்
கொள்ள வேண்டும்.
வரதானம்:
அன்பு
சக்தியின்
மூலம்
மாயா
சக்தியை
அழிக்கக்
கூடிய முழுமையான
ஞானி
ஆகுக.
அன்பில்
மூழ்குவது
தான்
முழுமையான
ஞானமாகும்.
அன்பு
பிராமண
வாழ்க்கையின்
வரதானமாகும்.
சங்கமயுகத்தில் அன்புக்
கடலானவர்
அன்பு
என்ற
வைர
முத்துக்ளை
தட்டு
தாம்பாளம்)
நிறைத்து
கொடுத்துக்
கொண்டிருக்கின்றார் எனில்
அன்பில்
முழுமையானவர்களாக
ஆகுங்கள்.
அன்புச்
சக்தியின்
மூலம்
பிரச்சனைகள்
என்ற
மலை
மாறி தண்ணீருக்குச்
சமமாக
இலேசானதாக
ஆகிவிடும்.
மாயையின்
எப்படிப்பட்ட
பெரிய
ரூபமாக
இருந்தாலும்
அல்லது ராயல்
ரூபத்தில்
எதிர்
கொண்டாலும்
விநாடியில்
அன்புக்
கடலில்
மூழ்கி
விடுங்கள்.
அன்புச்
சக்தியின்
மூலம்
மாயா சக்தி
அழிந்து
விடும்.
சுலோகன்:
உடல்-மனம்-பொருள்,
மனம்-சொல்
மற்றும்
செயலின்
மூலம்
தந்தையின்
காரியத்தில்
சதா
உதவி
செய்பவர்களே
யோகிகள்
ஆவர்.
ஓம்சாந்தி