21.10.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நினைவில் இருந்து ஒவ்வொரு கர்மத்தையும் செய்வீர்களானால் அநேகருக்கு உங்களின் சாட்சாத்காரம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

 

கேள்வி :

சங்கமயுகத்தில் எந்த விதி மூலம் தனது இதயத்தை (மனதை) சுத்தப் படுத்த முடியும்?

 

பதில் :

நினைவில் இருந்து உணவு சமைக்க வேண்டும். மேலும் நினைவில் இருந்து உண்ணவும் வேண்டும். அப்போது இதயம் (மனம்) சுத்தமாகி விடும். சங்கமயுகத்தில் பிராமணர்களாகிய உங்கள் மூலம் சமைக்கப்பட்ட பவித்திர பிரம்மா போஜனம் தேவதைகளுக்கும் கூட மிகவும் பிடித்தமானதாகும். யாருக்கு பிரம்மா போஜனத்தின் மீது மதிப்பு உள்ளதோ, அவர்கள் தட்டைக் கழுவிக் கூடக் குடித்து விடுவார்கள். மகிமையும் அதிகம் உள்ளது. நினைவில் சமைக்கப் பட்ட உணவு சாப்பிடுவதால் சக்தி கிடைக்கின்றது, இதயம் சுத்தமாகின்றது.

 

ஓம் சாந்தி

சங்கமயுகத்தில் தான் பாபா வருகிறார். தினந்தோறும் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியுள்ளது. ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். குழந்தைகளே, உங்களை ஆத்மா என உணருங்கள். இதுபோல் ஏன் சொல்கிறார்? நிச்சயமாக அவர் எல்லையற்ற தந்தை, ஆத்மாக்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார் என்பது குழந்தைகளுக்கு நினைவிருக்க வேண்டும். சேவைக்காக வித-விதமான பாயின்ட்டுகள் பற்றிப் புரிய வைக்கிறார். குழந்தைகள் சொல்கின்றனர், சேவை இல்லை, நாங்கள் வெளியில் போய் எப்படி சேவை செய்வது என்று. பாபா சேவைக்கான யுக்திகளோ மிக சுலபமாகப் புரியும்படி சொல்கிறார். சித்திரம் கையில் இருக்க வேண்டும். இரகுநாத்தின் கருப்பான சித்திரமும் இருக்க வேண்டும், வெள்ளையான சித்திரமும் இருக்க வேண்டும். கிருஷ்ணர் அல்லது நாராயணரின் சித்திரம் கருப்பானதும் வேண்டும், வெண்மையானதும் வேண்டும், சிறிய சித்திரமாகவே இருந்தாலும் சரி தான். கிருஷ்ணருடைய மிகச் சிறிய சித்திரத்தையும் கூட உருவாக்குகின்றனர். நீங்கள் கோவிலின் பூஜாரியிடம் கேட்கலாம் - இவர்கள் உண்மையில் வெள்ளையாக இருந்தார்கள் எனும்போது ஏன் கருப்பாக செய்திருக்கிறீர்கள்? இதுவோ குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது, ஆத்மா எப்படி விதவிதமான பெயர் வடிவங்களை தாரணை செய்து கீழே இறங்கி வருகின்றது. எப்போதிருந்து காமசிதையின் மீது ஏறுகின்றதோ, அப்போதிருந்தே கருப்பாகி விடுகின்றது. ஜெகத்நாத் அல்லது ஸ்ரீநாத் கோவிலுக்கு ஏராளமான யாத்திரிகர்கள் வருகின்றனர். உங்களுக்கு அழைப்பும் கூடக் கிடைக்கின்றது. சொல்லுங்கள், நாங்கள் உங்களுக்கு ஸ்ரீநாத்தின் 84 பிறவிகளின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறோம். சகோதர-சகோதரிகளே, வந்து கேளுங்கள். இது போன்ற சொற்பொழிவை வேறு யாரும் செய்ய முடியாது. நீங்கள் புரிய வைக்க முடியும், இவர் ஏன் கருப்பாகியிருக்கிறார் என்பது பற்றி. ஒவ்வொருவரும் பாவன நிலையில் இருந்து பதீத்தாக அவசியம் ஆகித் தீர வேண்டும். தேவதைகள் எப்போது வாம மார்க்கத்தில் சென்றுள்ளனரோ, அப்போது அவர்களைக் கருப்பாக ஆக்கி விட்டனர். காம சிதையில் அமர்வதால் அயர்ன் ஏஜ்டாக (இரும்பு யுகம்) இரும்பின் நிறம் கருப்பாக உள்ளது. தங்கத்தினுடையது கோல்டன், அதை வெள்ளை எனச் சொல்வார்கள். அவர்கள் தான் பிறகு 84 பிறவிகளுக்குப் பின் கருப்பாகின்றனர். ஏணிப்படியின் சித்திரமும் அவசியம் கையில் இருக்க வேண்டும். ஏணிப்படியும் பெரியதாக இருக்குமானால் யார் வேண்டுமானாலும் தூரத்திலிருந்து நன்றாகப் பார்க்க முடியும். மேலும் பாரதத்திற்கு இந்த கதி ஏற்பட்டுள்ளது என நீங்கள் புரிய வைப்பீர்கள். உயர்வு மற்றும் தாழ்வு என எழுதப் பட்டும் உள்ளது. குழந்தைகளுக்கு சேவை செய்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். புரிய வைக்க வேண்டும், இந்த உலகத்தின் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது, கோல்டன் ஏஜ், சில்வர் ஏஜ், காப்பர் ஏஜ்.... பிறகு இந்தப் புருஷோத்தம சங்கமயுகத்தையும் காட்ட வேண்டும். அதிகமான சித்திரங்களை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் சரி, ஏணிப்படியின் சித்திரம் பாரதத்திற்கு முக்கியம். நீங்கள் புரிய வைக்க முடியும், இப்போது மீண்டும் பதீத்திலிருந்து பாவனமாக நீங்கள் எப்படி ஆக முடியும் என்று. பதீத பாவனரோ ஒரே ஒரு தந்தை தாம். அவரை நினைவு செய்வதன் மூலம் ஒரு விநாடியில் ஜீவன் முக்தி கிடைக்கின்றது. குழந்தைகளாகிய உங்களிடம் முழு ஞானமும் உள்ளது. மற்ற அனைவருமோ அஞ்ஞான உறக்கத்தில் உறங்கிப் போயுள்ளனர். பாரதம் ஞானத்தில் இருந்த போது பெரும் செல்வம் மிகுந்த நாடாக இருந்தது. இப்போது பாரதம் அஞ்ஞானத்தில் உள்ளது அதனால் எவ்வளவு ஏழையாக உள்ளது! ஞானி மனிதர்கள் மற்றும் அஞ்ஞானி மனிதர்கள் உள்ளனர் இல்லையா? தேவி-தேவதைகள் மற்றும் மனிதர்கள் என்பதோ பெயர் பெற்றதாகும். தேவதைகள் சத்யுக-திரேதாவில், மனிதர்கள் துவாபர-கலியுகத்தில். சேவை எப்படி செய்வது என்பது குழந்தைகளின் புத்தியில் சதா இருக்க வேண்டும். அதையும் பாபா புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். ஏணிப்படியின் சித்திரம் புரிய வைப்பதற்கு மிக நல்லது. பாபா சொல்கிறார், இல்லறத்தில் இருங்கள். சரீர நிர்வாகத்திற்காக வேலை முதலியவற்றை யோ செய்தாக வேண்டும். உலகாயதக் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும். மீதி நேரம் கிடைத்தால் சேவைக்கான சிந்தனை செய்ய வேண்டும் - நாம் மற்றவர்களுக்கு எப்படி நன்மை செய்வது? இங்கோ நீங்கள் அநேகருக்கு நன்மை செய்ய இயலாது. இங்கோ பாபாவின் முரளி கேட்பதற்காக வருகிறீர்கள். இதில் தான் மாயமந்திரம் உள்ளது. பாபாவை மந்திரவாதி எனச் சொல்கின்றனர் இல்லையா? பாடவும் செய்கின்றனர், முரளி உங்களிடம் உள்ள மாயாஜாலம்.... உங்களின் வாயினால் இசைக்கும் முரளியில் மாயாஜாலம் உள்ளது. மனிதரிலிருந்து தேவதை ஆகி விடுகின்றனர். இப்படி ஒரு மந்திரவாதி பாபாவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. பாடலும் உள்ளது - மனிதரில் இருந்து தேவதையாக மாற்றுவதற்கு அதிக நேரமாகாது.... பழைய உலகத்திலிருந்து புது உலகமாக அவசியம் ஆக வேண்டும். பழைய உலகின் விநாசமும் அவசியம் ஆக வேண்டும். இச்சயம் நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொள்கிறீர்கள் என்றால் நிச்சயமாக இராஜாவாகவும் ஆக வேண்டும். இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டீர்கள், 84 பிறவிகளுக்குப் பிறகு முதல் நம்பரில் பிறவி எடுக்க வேண்டும். ஏனென்றால் உலகத்தின் சரித்திரம்-பூகோளம் திரும்பவும் நடைபெறுகின்றது. சத்யுகம்-திரேதாயுகம் இருந்து சென்றுள்ளது, அது மறுபடியும் வந்தாக வேண்டும்.

 

நீங்கள் எங்கே அமர்ந்திருந்தாலும் புத்தியில் - நாம் திரும்பிச் செல்கிறோம், பிறகு சதோபிரதான தேவி-தேவதையாக ஆகிறோம் என்பது நினைவி-ருக்க வேண்டும். அவர்கள் தேவதைகள் எனச் சொல்லப்படுகிறார்கள். இப்போது மனிதர்களிடம் தெய்வீக குணங்கள் இல்லை. ஆக, நீங்கள் எங்கே இருந்தாலும் சேவை செய்ய முடியும். எவ்வளவு தான் வேலை முதலியவை இருந்தாலும் இல்லறத்தில் இருந்தவாறே வருமானத்தை சேமித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதில் முக்கிய விஷயம் பவித்திரதாவினுடையது. தூய்மை இருந்தால் அமைதியும் செல்வச் செழிப்பும் இருக்கும். முழு தூய்மை ஆகி விட்டால் பிறகு இங்கே இருக்க முடியாது. ஏனென்றால் நாம் அவசியம் சாந்திதாம் சென்றாக வேண்டும். ஆத்மா தூய்மையாகி விட்டால் பிறகு ஆத்மா இந்தப் பழைய சரீரத்துடன் இருக்க வேண்டியதில்லை. இதுவோ அசுத்தமானது இல்லையா? 5 தத்துவங்களே அசுத்தமாக உள்ளன. சரீரமும் இதனால் தான் உருவாகின்றது. இது மண்ணாலான உருவம் எனச் சொல்லப்படுகின்றது. 5 தத்துவங்களாலான ஒரு சரீரம் முடிந்து போகிறது, மற்றொன்று உருவாகின்றது. ஆத்மாவோ இருக்கவே செய்கிறது. ஆத்மா ஒன்றும் உருவாகிற ஒரு பொருளல்ல. சரீரம் முதலில் எவ்வளவு சிறியது, பிறகு எவ்வளவு பெரியதாக ஆகின்றது! எவ்வளவு உறுப்புகள் கிடைக்கின்றன! அதன் மூலம் ஆத்மா பாகம் முழுவதையும் நடிக்கின்றது. இந்த உலகமே அற்புதமானது. அனைத்திலும் அற்புதமானவர் பாபா. அவர் ஆத்மா பற்றிய அறிமுகம் தருகிறார். நாம் ஆத்மா எவ்வளவு சிறியதாக இருக்கிறோம்! ஆத்மா பிரவேசமாகின்றது. ஒவ்வொரு பொருளும் அற்புதமானது. மிருகங்களின் சரீரம் முதலியவை எப்படி உருவாகின்றன? அற்புதம் இல்லையா? ஆத்மாவோ அனைவரிடமும் அதே சிறிய அளவு தான். யானை எவ்வளவு பெரியது! அதற்குள் இவ்வளவு சிறிய ஆத்மா போய் அமர்ந்து கொள்கிறது. பாபாவோ மனிதப் பிறவியின் விஷயத்தைச் சொல்கிறார். மனிதர்கள் எத்தனை பிறவிகள் எடுக்கின்றனர்? 84 இலட்சம் பிறவிகளோ கிடையாது. புரிய வைக்கப்பட்டுள்ளது, எத்தனை தர்மங்கள் உள்ளனவோ, அத்தனை விதமாக உருவாகின்றது. ஒவ்வோர் ஆத்மாவும் எத்தனை தோற்ற அமைப்புள்ள சரீரங்களை எடுக்கின்றது! அதிசயம் இல்லையா? பிறகு எப்போது சக்கரம் திரும்பவும் நடைபெறுகிறதோ, அப்போது ஒவ்வொரு பிறவியிலும் தோற்றம், பெயர், வடிவம் முதலியவை மாறி விடுகின்றன. கருப்பான கிருஷ்ணர், வெள்ளையான கிருஷ்ணர் என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். அவரது ஆத்மா முதலில் வெள்ளையாக இருந்தது. பிறகு 84 பிறவிகள் எடுத்து-எடுத்துக் கருப்பாகி விடுகின்றது. உங்கள் ஆத்மாவும் கூட விதவிதமான தோற்றம், விதவிதமான சரீரங்களை எடுத்து பாகத்தை நடிக்கின்றது. இதுவும் டிராமா.

 

குழந்தைகளாகிய உங்களுக்கு ஒருபோதும் எந்த ஒரு கவலையும் இருக்கக் கூடாது. அனைவரும் நடிகர்கள். ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுத்து பிறகு பாகத்தை நடித்தேயாக வேண்டும். ஒவ்வொரு பிறவியிலும் உறவுகள் முதலியன மாறி விடுகின்றன. ஆக, பாபா புரிய வைக்கிறார், இது உருவாக்கப்பட்ட டிராமா. ஆத்மா தான் 84 பிறவிகள் எடுத்து-எடுத்தே தமோபிரதானமாக ஆகியுள்ளது. இப்போது மீண்டும் ஆத்மாவை சதோபிரதானமாக ஆக்க வேண்டும். பாவனமாகவோ அவசியம் ஆக வேண்டும். பாவன சிருஷ்டியாக இருந்தது. இப்போது பதீத்தாக உள்ளது. மீண்டும் பாவனமாக வேண்டும். சதோபிரதானம், தமோபிரதானம் என்ற சொற்கள் உள்ளன இல்லையா? சதோப்ரதான சிருஷ்டி பிறகு சதோ, ரஜோ, தமோ சிருஷ்டி. இப்போது தமோபிரதானமாக ஆகியிருப்பவர்களே மீண்டும் சதோபிரதானமாக எப்படி ஆவது? பதீதத்திலிருந்து பாவனமாக எப்படி ஆவது? மழைநீரினாலோ பாவனமாக மாட்டார்கள். மழையினாலோ மனிதர்களுக்கு மரணம் கூட ஏற்படுகின்றது. வெள்ளம் வந்து விட்டால் எத்தனை பேர் மூழ்கி விடுகிறார்கள்! இப்போது பாபா புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார், இந்தக் கண்டங்கள் அனைத்தும் இருக்கப் போவதில்லை. இயற்கை சேதங்களும் உதவி செய்யும். எவ்வளவு ஏராளமான மனிதர்கள், மிருகங்கள் அடித்து செல்லப்படுகின்றன. தண்ணீரினால் பாவனமாகி விடுகின்றனர் என்பதல்ல. சரீரமோ சென்று விடுகின்றது. சரீரங்களோ பதீதத்திலிருந்து பாவனமாகாது. ஆத்மா தான் பாவனமாக வேண்டும். ஆக, பதீதபாவனரோ ஒரு தந்தை தான். அவர்கள் ஜெகத்குரு எனச் சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் குருவின் வேலை சத்கதி அளிப்பது. ஒரே ஒரு தந்தை தான் சத்கதி அளிப்பவர். பாபா சத்குரு தானே சத்கதி அளிக்கிறார். பாபா நிறைய புரிய வைக்கிறார். இவரும் (பிரம்மா) கூட கேட்கிறார் இல்லையா? குருக்களும் கூட அருகில் சீடர்களை அமர்த்துகின்றனர் இல்லையா? கற்றுத் தருவதற்காக? இவரும் கூட அவருக்கருகில் அமர்கின்றார். (சிவ)பாபா புரிய வைக்கிறார் என்றால் இவரும் கூட புரிய வைப்பார் இல்லையா? அதனால் குரு பிரம்மா நம்பர் ஒன்னில் செல்கிறார். சங்கரைப் பற்றியோ சொல்கின்றனர் - கண்ணைத் திறந்து பஸ்மமாக்கி விடுவார் என்பதாக. பிறகு அவரையோ குரு எனச் சொல்ல முடியாது. பிறகும் கூட பாபா சொல்கிறார், குழந்தைகளே, என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். அநேகக் குழந்தைகள் கேட்கின்றனர் - இவ்வளவு வேலை, தொழில் சம்மந்த கவலைகளில் இருந்து கொண்டு நாங்கள் எங்களை ஆத்மா என உணர்ந்து எப்படி பாபாவை நினைவு செய்வது? பாபா புரிய வைக்கிறார், பக்தி மார்க்கத்திலும் கூட நீங்கள் ஹே ஈஸ்வரா, ஹே பகவானே எனச் சொல்லி நினைவு செய்கிறீர்கள் இல்லையா? துக்கம் வரும்போது தான் நினைவு செய்கிறீர்கள். இறக்கும் தருவாயிலும் சொல்கின்றனர், ராம-ராம் சொல்லுங்கள் என்று. இராம நாமத்தின் தானம் செய்யும் நிறுவனங்கள் நிறைய உள்ளன. எப்படி நீங்கள் ஞான தானம் செய்கிறீர்கள், அவர்கள் பிறகு சொல்கின்றனர், இராம் சொல்லுங்கள், இராம் சொல்லுங்கள் என்று. நீங்களும் சொல்கிறீர்கள், சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று. அவர்களோ சிவனைப் பற்றி அறிந்திருக்கவே இல்லை. சும்மா இராம்-இராம் எனச் சொல்லிவிடுகின்றனர். இப்போது இதையும் ஏன் சொல்கின்றனர், ராம் சொல்லுங்கள் என்று-பரமாத்மா அனைவருக்குள்ளும் இருக்கிறார் எனச் சொல்லும் போது? பாபா அமர்ந்து புரிய வைக்கிறார், ராமர் அல்லது கிருஷ்ணர் பரமாத்மா எனச் சொல்லப் படுவதில்லை. கிருஷ்ணரையும் கூட தேவதை எனச் சொல்கின்றனர். ராமரைப் பற்றியும் புரிய வைக்கப்பட்டுள்ளது - அவர் பாதி தேவதா. இரண்டு கலைகள் குறைந்து விடுகின்றன. ஒவ்வொரு பொருளின் கலையும் குறைந்து கொண்டே செல்கின்றது. ஆடையும் கூட முதலில் புதிதாக உள்ளது, பிறகு பழையதாகி விடுகின்றது.

 

ஆக, பாபா இவ்வளவு விஷயங்களைப் புரிய வைக்கிறார், பிறகும் சொல்கிறார் - என்னுடைய இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, தங்களை ஆத்மா என உணருங்கள். நினைத்து-நினைத்து சுகம் பெறுங்கள். இங்கோ துக்க உலகம். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். நினைவு செய்து-செய்தே அளவற்ற சுகம் பெறுவீர்கள். கலக-கிலேசம், நோய்கள் முதலியவை எதுவாக இருந்தாலும் விட்டுப் போய்விடும். நீங்கள் 21 பிறவிகளுக்கு நோயற்றவர்களாக ஆகி விடுவீர்கள். உடலைப் பற்றிய அனைத்துக் கலக-கிலேசங்களும் விட்டுப் போகட்டும். ஜீவன்முக்தி பதவி பெறுங்கள். பாடுகின்றனர், ஆனால் செயலில் வருவதில்லை. உங்களுக்கு பாபா நடைமுறையில் புரிய வைக்கிறார் - பாபாவை நினைப்பீர்களானால் உங்களுடைய மனதின் அனைத்து ஆசைகளும் நிறைவேறி விடும். சுகமானவராக ஆகி விடுவீர்கள். தண்டனை பெற்று ரொட்டித் துண்டு கொஞ்சம் சாப்பிடுவது நன்றாக இருக்காது. அனைவருக்கும் சூடான ரொட்டி என்றால் பிடிக்கும். இப்போதோ எண்ணெய் தான் பயன்படுகிறது. அங்கோ நெய்யாறு ஓடும். ஆக, குழந்தைகள் தந்தையின் சிந்தனையில் இருக்க வேண்டும். இங்கே உட்கார்ந்து கொண்டு பாபாவை நினைவு செய்யுங்கள் என்றெல்லாம் பாபா சொல்லவில்லை. நடமாடும் போதும் சுற்றிவரும் போதும் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். வேலை முதலியவற்றை யும் செய்ய வேண்டும். பாபாவின் நினைவு புத்தியில் இருக்க வேண்டும். லௌகி தந்தையின் குழந்தைகள் வேலை முதலியன செய்கின்றனர் என்றால் நினைவு இருக்கிறது இல்லையா? யாரேனும் கேட்டால் நாங்கள் இன்னாரின் குழந்தைகள் என்று உடனே சொல்வார்கள். புத்தியில் தந்தையின் ஆஸ்தியும் நினைவிருக்கிறது. நீங்களும் பாபாவின் குழந்தையாகி இருக்கிறீர்கள் என்றால் ஆஸ்தியும் நினைவிருக்கிறது. பாபாவையும் நினைவு செய்ய வேண்டும், வேறு யாருடனும் சம்மந்தம் கிடையாது. ஆத்மாவில் தான் முழு பாகமும் நிரம்பியுள்ளது. அது வெளிப்படுகின்றது. இந்த பிராமண குலத்தில் உங்களுக்குக் கல்ப-கல்பமாக என்ன பாகம் நடைபெற்றதோ, அது தான் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். பாபா புரிய வைக்கிறார், சமையல் செய்யுங்கள், இனிப்பு பதார்தமும் செய்யுங்கள். அப்போதும் கூட பாபாவை நினைவு செய்து கொண்டு இருங்கள். சிவபாபாவை நினைவு செய்து சமைப்பீர்களானால் இனிப்பை உண்பவர்களுக்கும் கூட நன்மை ஏற்படும். எங்காவது சாட்சாத்காரம் கூட நடைபெறலாம். பிரம்மாவின் சாட்சாத்காரமும் கிடைக்கலாம். சுத்தமான உணவு இருந்தால் பிரம்மாவின், கிருஷ்ணரின், சிவனுடைய சாட்சாத்காரம் பார்க்க முடியும். பிரம்மா இங்கே தான் இருக்கிறார். பிரம்மாகுமார் குமாரிகள் என்ற பெயரோ உள்ளது இல்லையா? அநேகருக்கு சாட்சாத்காரம் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஏனென்றால் பாபாவை நினைவு செய்கிறீர்கள் இல்லையா? பாபா யுக்திகளோ அதிகம் சொல்கிறார். அவர்கள் வாயினால் ராம்-ராம் எனச் சொல்கின்றனர். நீங்கள் வாயினால் எதையும் பேசத் தேவையில்லை. எவ்வாறு அவர்கள் குருநானக்குக்கு போக் வைத்துக் கொண்டிருப்பதாக எண்ணுகிறார்களோ அவ்வாறு நீங்களும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், சிவபாபாவுக்கு போக் வைப்பதற்காக உணவு சமைக்கிறோம் என்பதாக. சிவபாபாவை நினைவு செய்தவாறே சமைப்பீர்களானால் அநேகருக்கு நன்மை ஏற்பட முடியும். அந்த உணவில் சக்தி வந்து விடுகின்றது. அதனால் பாபா உணவு சமைப்பவர்களுக்கும் சொல்கிறார் - சிவபாபாவை நினைவு செய்து சமைக்கிறீர்களா? எழுதப் பட்டும் உள்ளது - சிவபாபா நினைவிருக்கிறதா? என்று. பாபா நினைவில் இருந்து உணவு சமைத்தால் உண்பவர்களுக்கும் கூட சக்தி கிடைக்கும். மனம் சுத்தமாகும். பிரம்மா போஜனம் பற்றிய மகிமையும் பாடப்பட்டுள்ளது இல்லையா? பிராமணர்களால் சமைக்கப்பட்ட உணவை தேவதைகளும் கூட விரும்புகின்றனர். இதுவும் சாஸ்திரங்களில் உள்ளது. பிராமணர்களால் சமைக்கப்பட்ட உணவை உண்பதால் புத்தி சுத்தமாகி விடும், சக்தி இருக்கும். பிரம்மா போஜனத்துக்கு மிகுந்த மகிமை உள்ளது. பிரம்மா போஜனத்தின் மீது யாருக்கு மதிப்பு உள்ளதோ, அவர்கள் தட்டைக் கழுவியும் கூடக் குடித்து விடுவார்கள். மிக உயர்ந்ததாக அதைப் புரிந்து கொண்டுள்ளனர். உணவு இல்லாமலோ இருக்க முடியாது. பஞ்சத்தின் போது உணவு இல்லாமல் இறந்து போகின்றனர். ஆத்மா தான் உணவை உண்கிறது. இந்த உறுப்புகள் மூலம் வாசனையை அது எடுத்துக் கொள்கிறது. நல்லது-கெட்டது என்று ஆத்மா தான் சொன்னது இல்லையா? இது மிகவும் மணமுள்ளது, சக்தி வாய்ந்தது. இன்னும் போனால் எப்படி நீங்கள் முன்னேற்றத்தை அடைந்து கொண்டே இருப்பீர்களோ, அதுபோல் உணவும் கூட உங்களுக்கு அப்படிக் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதனால் குழந்தைகளுக்குச் சொல்கிறேன், சிவபாபாவை நினைவு செய்து உணவு தயார் செய்யுங்கள். பாபா என்ன சொல்கிறாரோ, அதை நடைமுறையில் கொண்டுவர வேண்டும் இல்லையா?

 

நீங்கள் தந்தை வீட்டில் இருப்பவர்கள். மாமனார் வீட்டுக்குச் செல்கிறீர்கள். சூட்சுமவதனத்திலும் உங்களுக்குள் சந்தித்துக் கொள்கிறீர்கள். போக் எடுத்துச் செல்கிறீர்கள். தேவதைகளுக்கு போக் வைக்கின்றனர் இல்லையா? தேவதைகள் வருகின்றனர். பிராமணர்களாகிய நீங்கள் அங்கே செல்கிறீர்கள். அங்கே குழுவாகக் கூடுகிறீர்கள்.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. ஏனென்றால் இந்த டிராமா முற்றிலும் மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் அனைவரும் இதில் அவரவர் பாகத்தை நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

2) ஜீவன் முக்தி பதவி பெறுவதற்கு அல்லது சதா சுகமானவராக ஆவதற்கு உள்ளுக்குள் ஒரு தந்தையின் நினைவு மட்டுமே இருந்து கொண்டிருக்க வேண்டும். வாயினால் எதையும் பேசத் தேவையில்லை. உணவு சமைக்கும் போதும், உண்ணும் போதும் பாபாவின் நினைவில் அவசியம் இருக்க வேண்டும்.

 

வரதான்:

சுயநலமில்லாத மற்றும் எதிர்மறையற்ற மனநிலையின் மூலம் சேவை செய்யக் கூடிய வெற்றி மூர்த்தி ஆகுக

 

சேவையில் வெற்றிக்கான ஆதாரம் நம்முடைய சுயநலமில்லாத மற்றும் எதிர்மறையற்ற மனநிலையாகும். இந்த மனநிலையில் இருந்து சேவை செய்யக் கூடியவர்கள் தானும் திருப்தியாகவும், புன்முறுவலுடனும் இருக்கின்றனர். மேலும் அவர்களால் பிறகும் திருப்தியாக இருக்கின்றனர். சேவையில் குழு (குரூப்) இருக்கிறது, மேலும் குழுவில் விதவிதமான விஷயங்கள், விதவிதமான சிந்தனைகள் ஏற்படுகிறது. ஆனாலும் வேறுபாட்டில் (பலவிதமான) குழப்பம் அடையாதீர்கள். எதை ஏற்றுக் கொள்வது, எதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று யோசிக்காதீர்கள். சுயநலமில்லாத மற்றும் விகல்பமற்ற உணர்விலிருந்து தீர்மானம் செய்தீர்கள் என்றால் யாருக்கும் வீணான எண்ணம் வராது, மேலும் வெற்றி மூர்த்தி ஆகிவிடலாம்.

 

சுலோகன்:

இப்பொழுது சகாஷ் (சக்தி கொடுப்பது) மூலம் புத்தியை மாற்றம் செய்வதற்கான சேவையை ஆரம்பம் செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி