23.06.2019                           காலை முரளி               ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்    17.12.19.84          மதுபன்


 

வீணானனதை அழிப்பதற்கான சாதனம் -

சக்திசாலியான எண்ணங்களின் பொக்கிஷம்-ஞான முரளி

 

இன்று பாப்தாதா சங்கமயுகத்தின் ஆன்மீக சபையில் சந்திப்பை செய்வதற்காக வந்திருக்கிறார். இந்த ஆன்மீக சபை, ஆன்மீக சந்திப்பு முழுக் கல்பத்திலும் இப்பொழுது தான் செய்ய முடியும். ஆத்மாக்களுடன் பரமாத்மாவின் சந்திப்பு என்ற இந்த உயர்ந்த சந்திப்பு சத்யுகத்தில் கூட இருக்காது. எனவே இந்த யுகத்தை மகான் யுகம், மகா சந்திப்பதற்கான யுகம், அனைத்து பிராப்திகளின் யுகம், அசம்பவத்திலிருந்து சம்பவம் ஆக்கும் யுகம், சகஜ மற்றும் உயர்ந்த அனுபவங்களுக்கான யுகம், விசேஷ மாற்றத்திற்கான யுகம், உலக நன்மைக்கான யுகம், சகஜ வரதானங்களின் யுகம் என்று கூறப்படுகிறது. அந்தமாதிரியான யுகத்தில் பங்கேற்று செய்யும் மகான் ஆத்மாக்கள் நீங்கள்! இந்தமாதிரி மகான் போதை, எப்பொழுதும் இருக்கிறதா? முழு உலகத்திலும் எந்த தந்தையின் ஒரு நொடிக்கான காட்சியைப் பார்ப்பதற்கான சாதக பறவைகள் போல் இருக்கிறார்கள், அந்த தந்தையின் ஒரு நொடியில் அதிகாரி ஆகக் கூடிய சிரேஷ்ட ஆத்மா நான் என்ற இந்த நினைவு இருக்கிறதா? இந்த நினைவு இயல்பாகவே சக்திசாலியாக ஆக்கிவிடும். நீங்கள் அந்தமாதிரி சக்திசாலியான ஆத்மாவாக ஆகியிருக்கிறீர்களா? சக்திசாலியானவர் என்றால், வீணானதை அழிப்பவர். வீணானது இருக்கிறது என்றால், சக்திசாலியாக இல்லை. ஒருவேளை மனதில் வீணான எண்ணம் இருக்கிறது என்றால், சக்திசாலியான எண்ணம் நிலைத்திருக்க முடியாது. வீணானது அடிக்கடி கீழே கொண்டு வருகிறது. சக்திசாலியான எண்ணம், சக்திசாலியான தந்தையின் சந்திப்பையும் அனுபவம் செய்விக்கிறது. மாயாவை வென்றவராகவும் ஆக்குகிறது. வெற்றி சொரூப சேவாதாரியாகவும் ஆக்குகிறது. வீணான எண்ணம், ஊக்கம் மற்றும் உற்சாகத்தை அழித்துவிடுகிறது. அவர் எப்பொழுதும் ஏன், என்ன, என்ற குழப்பத்தில் இருப்பார், எனவே சின்ன சின்ன விஷயங்களில் தன் மீதே மனமுடைந்தவராக இருப்பார், வீணான எண்ணம் எப்பொழுதும் அனைத்து பிராப்திகளின் பொக்கிஷத்தை அனுபவம் செய்வதிலிருந்து, வஞ்சித்து விடுகிறது. வீணாண எண்ணம் உள்ளவர்களின் விருப்பம் மற்றும் மனதின் இச்சைகள் மிக உயர்ந்ததாக இருக்கும். நான் இதைச் செய்தேன், இதையும் செய்வேன் என்று அதிவேகத்தில் திட்டங்களை உருவாக்குவார்கள். ஏனென்றால், வீணான எண்ணங்களின் ஒட்டம் மிக வேகமாக இருக்கும். எனவே மிக உயர்ந்த திட்டம் மற்றும் நடைமுறை செயலில் பெரிய வித்தியாசம் வந்துவிடுகிறது, எனவே மனமுடைந்தவர்கள் ஆகிவிடுவார்கள். சக்திசாலியான எண்ணம் உள்ளவர்கள், எப்பொழுதும் என்ன நினைப்பாரோ, அதைச் செய்வார். நினைப்பது மற்றும் செய்வது இரண்டும் சமமாக இருக்கும். எண்ணம் மற்றும் காரியத்தில் எப்பொழுதும் தைரியம் நிறைந்த வேகத்தோடு, வெற்றியடைவார். வீணான எண்ணம் மிக வேகமாக சூறாவளி மாதிரி குழப்பத்தில் கொண்டு வரும். சக்திசாயான

எண்ணம் எப்பொழுதும் வசந்த காலத்திற்குச் சமமாக பசுமையாக ஆக்கிவிடும். வீணான எண்ணம் ஆத்மீக சக்தி மற்றும் நேரத்தை இழப்பதற்கான காரணமாக ஆகிவிடும். சக்திசாலியான எண்ணம் எப்பொழுதும் ஆத்மீக சக்தியை சேமிப்பு செய்யும். நேரத்தை பயனுள்ளதாக ஆக்கும். வீணான எண்ணம் வீணான எண்ணத்தை உருவாக்கும் ஆத்மாவையும் மிகவும் தொந்தரவு செய்யும். அதாவது மாஸ்டர் சர்வசக்திவான் சக்திசாலியான ஆத்மாவின் மதிப்பிலிருந்து இறக்கிவிடும். சக்திசாலியான எண்ணம் மூலம் எப்பொழுதும் உயர்ந்த மதிப்பின் நினைவு சொரூபத்தில் இருப்பார். இந்த வித்தியாசத்தை நீங்கள் புரிந்தும் கொள்கிறீர்கள். இருந்தும் அநேக குழந்தைகள் இப்பொழுது கூட வீணான எண்ணங்கள் வருகிறது என்று புகார் செய்கிறார்கள். இதுவரையிலும் வீணான எண்ணம் ஏன் வருகிறது, இதற்கான காரணம் என்ன? பாப்தாதா சக்திசாலியான எண்ணங்களின் பொக்கிஷமாக என்ன கொடுத்திருக்கிறார் - அது தான் ஞானத்தின் முரளி. முரளியின் ஒவ்வொரு மகா வாக்கியமும் சக்திசாலியான பொக்கிஷம். இந்த சக்திசாலியான எண்ணத்தின் பொக்கிஷத்தின் மகத்துவம் குறைவாக இருக்கும் காரணத்தினால், சக்திசாலியான எண்ணம் தாரணை ஆகவில்லையென்றால், வீணான வற்றிற்கு வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு மகாவாக்கியத்தை சிந்தித்துக் கொண்டேயிருந்தீர்கள் என்றால், சக்திசாலியான புத்தியில் வீணானவை வரமுடியாது. புத்தி காலியாக இருந்துவிடுகிறது. எனவே காலியாக இருக்கும் காரணத்தினால் வீணானவை புகுந்துவிடுகிறது. எப்பொழுது வாய்ப்பே இல்லையென்றால், வீணானவை எப்படி வரமுடியும். சக்திசாலியான எண்ணங்களினால் புத்தியை பிஸியாக வைத்துக் கொள்ளத் தெரியவில்லையென்றால், வீணான எண்ணங்களை வரவழைப்பது என்றாகிவிடும்.

 

பிஸியாக வைத்துக் கொள்ளும் பிஸினஸ் மேன் ஆகுங்கள். இரவு பகலாக இந்த ஞானரத்தினங்களின் பிஸினஸ் மேன் ஆகுங்கள். உங்களுக்கு நேரமும் இருக்காது. வீணான எண்ணங்களுக்கும் வாய்ப்பும் இருக்காது. எனவே முக்கியமான விஷயம் புத்தியை சக்திசாலியான எண்ணங்களினால் எப்பொழுதும் நிரப்பி வையுங்கள். அதற்கான ஆதாரம் தினசரி முரளி கேட்பது, புரிந்து உள்ளே நிரப்புவது. மேலும் சொரூபம் ஆவது. இந்த மூன்று நிலைகள் இருக்கின்றன. கேட்பது மிக நன்றாக இருக்கும். கேட்காமல் இருக்கவே முடியாது. இதுவும் ஒரு நிலை. அந்த நிலையில் உள்ளவர்கள், கேட்கும் நேரம் வரை, கேட்பதற்கான இச்சை, கேட்பதற்கான ஆர்வம் இருக்கும் காரணத்தினால் அந்த நேரம் வரையிலும் அந்த இரசனையின் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கேட்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். மிகவும் நன்றாக இருக்கிறது . என்ற இந்தப் பாடலையும் குஷியோடு பாடுவார்கள். ஆனால் கேட்பது முடிவடைந்து விட்டது என்றால், அந்த இரசனையும் முடிவடைந்து விடுகிறது. ஏனென்றால், புரிந்து உள்ளே நிரப்ப வில்லை. உள்ளடக்கும் சக்தியின் மூலமாக, புத்தியை சக்திசாலியான எண்ணங்களினால், நிரம்பியதாக ஆகவில்லையென்றால், வீணானது வந்து கொண்டேயிருக்கும். உள்ளடக்குபவர், நிரப்புபவர் எப்பொழுதும் நிரம்பியவராக இருப்பார். எனவே வீணான எண்ணங்களிலிருந்து விலகியிருப்பார். ஆனால் சொரூபம் ஆகுபவர் சக்திசாலியாகி, மற்றவர்களையும் சக்திசாலியாக ஆக்குவார். எனவே அந்தக் குறை இருந்துவிடுகிறது.

 

வெறும் கேட்பவர், வீணானவற்றிலிருந்து, பாதுகாப்பாக இருக்கிறார், சுத்த எண்ணங்களில் இருக்கிறார், ஆனால் சக்தி சொரூபமாக ஆக முடியாது. சொரூபம் ஆகுபவர் எப்பொழுதும் சம்பன்னமாக எப்பொழுதும் சக்திசாலியான, கிரணங்கள் மூலமாக மற்றவர்களுடைய வீணானவற்றையும் அழிப்பவர்களாக இருப்பார்கள். எனவே நான் யார் என்று உங்களை நீங்களே கேளுங்கள். நான் கேட்பவனா, புரிந்து உள்ளடக்குபவனா, சொரூபம் ஆகுபவனா? சக்திசாலியான ஆத்மா ஒரு வினாடியில் வீணானதை சக்திசாலியாக பரிவர்த்தனை (மாற்றம்) செய்துவிடுவார். நீங்கள் சக்திசாலியான ஆத்மாக்கள் தான் இல்லையா? எனவே வீணானதை பரிவர்த்தனை செய்யுங்கள். இதுவரையிலும் வீணானதில் சக்தியையும். நேரத்தையும் இழந்து கொண்டேயிருந்தீர்கள் என்றால், எப்பொழுது சக்தி நிறைந்தவராக ஆவீர்கள்? நீண்ட காலமாக சக்திசாலியானவர் தான், நீண்ட காலத்தின் சம்பன்ன இராஜ்யம் செய்ய முடியும். புரிந்ததா?

 

இப்பொழுது தன்னுடைய சக்திசாலியான சொரூபம் மூலமாக மற்றவர்களையும் சக்திசாலியாக ஆக்குவதற்கான நேரமாகும். தன்னுடைய வீணானதை முடித்து விடுங்கள். தைரியம் இருக்கிறது தான் இல்லையா? எப்படி மகாராஷ்ட்ரா இருக்கிறது, அதே போல் நீங்களும் மகான் இல்லையா, மகான் எண்ணம் இருக்கிறது தான் இல்லையா, பலஹீனமான எண்ணம் வைப்பவர் இல்லை. எண்ணத்தை வைத்தீர்கள், உடன் நடந்தும்விட்டது. இதைத் தான் மகான் எண்ணம் என்று கூறுவது. நீங்கள் அந்தமாதிரி மகான் ஆத்மாக்கள் தான் இல்லையா? பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்ன யோசிக்கிறீர்கள்? பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் வீரம் நிறைந்தவர்கள் தான் இல்லையா? மாயாவின் சக்தியுள்ளவர்கள் அராசாங்கத்திற்கு சவால் விடுகிறார்கள். ஈஸ்வரிய சக்தியுள்ளவர்கள் மாயாவிற்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மாயாவிற்கு சவால் விடுபவர்கள் தான் இல்லையா? பயப்படுபவர்களோ இல்லை தான் இல்லையா. எப்படி எங்களுடைய இராஜ்யம் இருக்க வேண்டுமென்று அவர்கள் கூறுகிறார்கள். நீங்களும் மாயாவிற்கு சவால் விடுகிறீர்கள், இப்பொழுது எங்களுடைய இராஜ்யம் வரப்போகிறது என்று கர்ஜனை செய்து கொண்டே கூறுகிறீர்கள், அந்த மாதிரி வீரம் நிறைந்தவர் தான் இல்லையா. பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் வீரம் நிறைந்தவர்கள். மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர்கள் மகான் ஆத்மாக்கள். கர்நாடகாவைஙச சேர்ந்தவர்களின் விசேஷம் மகான் பாவனை உள்ளவர்கள். பாவனையின் காரணமாக, பாவனைக்கான பலன் சுலபமாக கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், பாவனை மூலமாக மகான் பழத்தை உண்பவர்கள், எனவே எப்பொழுதும் குஷியில் நடனமாடிக் கொண்டேயிருக்கிறார்கள். அந்தமாதிரி குஷியின் பழத்தை அருந்தக்கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த ஆத்மாக்கள். அந்தமாதிரி மகாராஷ்ட்ரா மகான் எண்ணம் வைப்பவர்கள். மேலும் பஞ்சாப் மகான் சவால் விடும், மகான் இராஜ்ய அதிகாரி, மேலும் கர்நாடகா மகான் பழத்தை அருந்துபவர்கள். மூவருமே மகான் ஆகிவிட்டார்கள் இல்லையா?

 

மகாராஷ்ட்ரா என்றால் அனைத்திலும் மகான். ஒவ்வொரு எண்ணமும் மகான், சொரூபம் மகான், காரியம் மகான், சேவை மகான். அனைத்திலும் மகான். அப்படி இன்று மூன்று மகான் நதிகள் சந்திக்கின்றன. மகான் நதிகள் சேர்ந்துவிட்டன இல்லையா. மகான் நதிகளின் சந்திப்பு மகான் கடலோடு நடக்கிறது. எனவே இந்த சந்திப்பு சபையில் வந்திருக்கிறோம். இன்று சபையிலும் கொண்டாட்டம் இருக்கிறது இல்லையா. நல்லது. அந்தமாதிரி எப்பொழுதும் சக்திசாலியான நிலை மூலம் எப்பொழுதும் ஒவ்வொரு மகா வாக்கியத்தின் சொரூபமாகக் கூடிய, நீண்ட காலத்தின் சக்திசாலியான நிலை மூலம் ஆத்மாக்களை, சக்திசாலியாக ஆக்கக் கூடியவர்களுக்கு பாப்தாதாவின் அனைத்து சக்திகள் நிரம்பிய அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

தாதிகளுடன் சந்திப்பு:

மகா மண்டலி இவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். தொடக்கத்தில் ஓம் மண்டலி இருந்தது. மேலும் இறுதியில் மகா மண்டலி ஆகி விட்டது. அனைத்து மகான் ஆத்மாகளின் மண்டலி தான் இல்லையா? அவர்கள் தன்னை மகா மண்டலேஷ்வர் என்று கூறுகிறார்கள். மேலும் நீங்கள் உங்களை மகா சேவாதாரி என்று கூறுகிறீர்கள். மகா மண்டலேஷ்வர் மற்றும் மகா மண்டலேஷ்வரி என்று கூறுவதில்லை, ஆனால் மகா சேவாதாரி. அப்படி இது மகான் சேவாதாரிகளின் மகான் மண்டலி. மகா சேவாதாரி என்றால், ஒவ்வொரு எண்ணத்தினாலும், இயல்பாகவே சேவைக்கு பொறுப்பாளர் ஆகியிருக்கிறார். ஒவ்வொரு எண்ணம் மூலம் சேவை நடந்து கொண்டேயிருக்கிறது. யார் இயல்பான யோகியோ அவர் இயல்பான சேவாதாரி. எனவே இயல்பாகவே சேவை நடந்து கொண்டிருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள்? பிறகு சேவையின்றி ஒரு வினாடியும் ஒரு எண்ணமும், இருக்க முடியாது என்று அனுபவம் செய்வீர்கள். ஒவ்வொரு காரியம் செய்து கொண்டே நடைமுறையில் சென்றாலும், வந்தாலும் சேவை மூச்சுக்கு மூச்சு ஒவ்வொரு வினாடியில் நிரம்பியிருக்கிறது.. இதைத் தான் இயல்பான சேவாதாரி என்று கூறுவது. நீங்கள் அந்தமாதிரி தான் இல்லையா. இப்பொழுது விசேஷ நிகழ்ச்சி மூலம் சேவை செய்யும் நிலை முடிவடந்து விட்டது. இயல்பாகவே சேவைக்கு பொறுப்பாளர் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அவர்கள் நிகழ்ச்சியை உருவாக்கவும் செய்வார்கள், நடைமுறையிலும் செய்வார்கள், ஆனால் உங்களுடைய சேவை இப்பொழுது இயல்பான சேவாதாரியினுடையது. நிகழ்ச்சியின் நேரம் வரையில் இல்லை, ஆனால் நிரந்தரமாகவே நிகழ்ச்சி யிருக்கிறது. எப்பொழுதுமே சேவையின் மேடையில் இருக்கிறீர்கள். அந்தமாதிரியான மண்டலி தான் இல்லையா? எப்படி உடல் மூச்சின்றி இயங்க முடியாதோ, அதே போல் ஆத்மா சேவையின்றி இருக்க முடியாது. இந்த மூச்சு தானாகவே சென்று கொண்டேயிருக்கிறது தான் இல்லையா? அந்தமாதிரி சேவையும் இயல்பாகவே இருந்து கொண்டேயிருக்கும். சேவை தான் ஆத்மாவின் மூச்சை போன்றது. அப்படித் தான் இல்லையா? எத்தனை மணி நேரம் சேவை செய்தீர்கள் என்ற இந்தக் கணக்கை எடுக்க முடியுமா? தர்மம், கர்மம் செய்வதே சேவை தான்! நடப்பதும் சேவை, பேசுவதும் சேவை, செய்வதும் சேவை என்றால், இயல்பான சேவாதாரி, நிரந்தர சேவாதாரி. என்னென்ன எண்ணம் எழுகிறதோ, அதில் சேவை நிரம்பியிருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையிலும், சேவை நிரம்பியிருக்கிறது. எனென்றால், வீணானதோ முடிவடைந்து விட்டது. எனவே சக்திசாலியான வர் என்றால் சேவை. அந்தமாதிரியானவர்களை மகா மண்டலியைச் சேர்ந்த, மகான் ஆத்மாக்கள் என்று கூறுவது. நல்லது.

 

உங்களுடைய அனைத்து உடன் இருப்பவர்களும் பாப்தாதாவின் எதிரில் இருக்கிறார்கள். ஓம் மண்டலியைச் சேர்ந்த அனைத்து மகா மண்டலியை சேர்ந்தவர்கள், தொடக்க காலத்தின் சேவாதாரிகள், நிரந்தர சேவாதாரிகள். பாப்தாதாவின் எதிரில் மகா மண்டலியின் அனைத்து மகான் ஆத்மாக்களும் இருக்கிறார்கள். சவாலை எடுத்து செய்பவர்கள், மகான் மண்டலியைச் சேர்ந்தவர்கள் தான் இல்லையா? எதையும் யோசிக்காமல், நினைக்காமல் உறுதியான எண்ணத்தை வைத்தார்கள், மேலும் பொறுப்பாளர் ஆகிவிட்டார்கள். இவர்களைத் தான் மகான் ஆத்மாக்கள் என்று கூறுவது. மகான் காரியத்திற்கு பொறுப்பாளர் ஆகியிருக்கிறார்கள். உதாரணமாகவோ ஆகியிருக்கிறார்கள், எந்த உதாரணத்தையும் பார்க்காமல் உலகத்திற்கே உதாரணமானவர்கள் ஆகிவிட்டார்கள். உடனடி தானம் மகான் புண்ணியம். நீங்கள் அந்தமாதிரியான மகான் ஆத்மாக்கள். நல்லது.

 

பார்ட்டிகளுடன் சந்திப்பு:

1. மகாராஷ்ட்ரா மற்றும் பஞ்சாப் குரூப் அனைத்து குழந்தைகள் நீங்கள் பயமற்றவர்கள் தான் இல்லையா, ஏன் என்றால் நீங்கள் எப்பொழுதுமே நிர்வேராக (வெறுப்பற்றவராக) இருக்கிறீர்கள். உங்களுக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. அனைத்து ஆத்மாக்களின் மீதும் சகோதரன் மற்றும் சகோதரன் என்ற சுபபாவனை மற்றும் நல்ல விருப்பங்கள் இருக்கிறது. அந்தமாதிரி சுபபாவனை மற்றும் விருப்பம் வைத்திருக்கும் ஆத்மாக்கள், எப்பொழுதும் பயமற்றவர்களாக இருப்பார்கள். பயம், பீதி அடைபவராக இருக்க மாட்டார். அவரே யோக யுக்த நிலையில் நிலைத்திருக்கிறார் என்றால், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவசியம் பாதுகாப்பாக இருப்பார். நீங்கள் எப்பொழுதுமே பாதுகாப்பாக இருப்பவர்கள் தான் இல்லையா? தந்தையின் குடைநிழலின் கீழ் இருப்பவர், எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பார். குடைநிழலில் இருந்து வெளியில் வந்துவிட்டார் என்றால், பிறகு பயமிருக்கும், குடை நிழலில் இருக்கிறார் என்றால் பயமற்றவராக இருப்பார். ஒருவர் எவ்வளவு தான் ஏதாவது செய்தாலும், ஆனால் தந்தையின் நினைவு ஒரு கோட்டை ஆகும். எப்படி கோட்டைக்குள் யாரும் வரமுடியாதோ. அதே போல் நினைவு என்ற கோட்டைக்குள் எப்பொழுதும் பாதுகாப்பு இருக்கும். குழப்பத்திலும் ஆடாதவர், பயப்படுபவர் அல்ல. இதுவோ ஒன்றுமே இல்லை. இது ஒத்திகை. உண்மையானதோ, இன்னும் வேறு இருக்கிறது. உறுதியாக்குவதற்காக ஒத்திகை பார்க்கப்படும். அந்த மாதிரி நீங்கள் உறுதியானவர் ஆகிவிட்டீர்களா? வீரமடைந்தவர் ஆகிவிட்டீர்களா? தந்தை மேல் ஈடுபாடு இருக்கிறது என்றால், எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் வந்து சேர்ந்துவிட்டீர்கள். பிரச்சனையை வென்றவர் ஆகிவிட்டீர்கள். ஈடுபாடு, தடையற்றவர் ஆவதற்கான சக்தி கொடுக்கிறது. என்னுடைய பாபா என்ற இந்த மகா மந்திரம் மட்டும் நினைவில் இருக்கட்டும். இதை மறந்தீர்கள் என்றால், அவ்வளவுதான். எல்லாமே முடிந்தது. இதே நினைவு இருக்கிறது என்றால் எப்பொழுதுமே பாதுகாப்பாக இருப்பீர்கள்.

 

2. எப்பொழுதும் தன்னை ஆடாத அசையாத ஆத்மாக்கள் என்று அனுபவம் செய்கிறீர்களா? எந்தவிதமான குழப்பமும் ஆடாத அசையாத நிலையில் தடை போட வேண்டாம். அந்தமாதிரியான தடைகளை அழிக்கும், ஆடாத அசையாத ஆத்மாக்களாக ஆகியிருக்கிறீர்களா? தடைகளை அழிக்கும் ஆத்மாக்கள், ஒவ்வொரு தடையையும் அது தடையில்லை, ஒரு விளையாட்டு என்பது போல் கடந்து சென்று விடுவார்கள். விளையாடுவதில் எப்பொழுதும் மகிழ்ச்சி வருமல்லாவா! ஏதாவது சூழ்நிலையை கடந்து செல்வது, விளையாடுவது என்ற இரண்டிலும் வித்தியாசம் இருக்கும் இல்லையா? ஒருவேளை தடைகளை அழிக்கும் ஆத்மாக்களாக இருந்தால், சூழ்நிலை ஒரு விளையாட்டு போல் அனுபவமாகும். மலை கடுகுக்கு சமமாக அனுபவமாகும். நீங்கள் அந்தமாதிரி தடைகளை அழிப்பவர் தானே? பயப்படுபவரோ இல்லையே! ஞானம் நிறைந்த ஆத்மாக்களுக்கு இவை அனைத்தும், நடக்கும் என்று முன்பாகவே தெரிந்திருக்கும். எப்பொழுது முன்பாகவே தெரிந்து விட்டது என்றால், ஒரு பெரிய விசயமாக அனுபவம் ஆகாது, திடீரென்று ஏதாவது விசயம் நடக்கிறதென்றால், சிறிய விஷயம் பெரியதாக அனுபவமாகும், முன்பாகவே தெரிந்திருந்தது என்றால், பெரிய விஷயமும் சிறியதாக அனுபவமாகும். நீங்கள் அனைவரும் ஞானம் நிறைந்தவர்கள் தான் இல்லையா? பொதுவாக ஞானம் நிறைந்தவர்கள் தான், ஆனால் எப்பொழுது பிரச்சனை நேரமாக இருக்கும் பொழுது, அந்த நேரம் ஞானம் நிறைந்ததின் நிலை மறக்கக் கூடாது. அநேக தடவை செய்ததை இப்பொழுது மீண்டும் அதேபோல் செய்து கொண்டிருக்கிறேன். எப்பொழுது ஒன்றும் புதிதல்ல என்றால், அனைத்தும் எளிதானது. நீங்கள் அனைவரும் கோட்டையின் உறுதியான செங்கல்கள். ஒவ்வொரு செங்கலுக்கும் மிகுந்த மகத்துவம் இருக்கிறது. ஒரு செங்கல் ஆடுகிறது என்றால், முழு சுவரையும் ஆட்டிவிடும். நீங்கள் செங்கல்கள் உறுதியானவர்கள், யாராவது எவ்வளவு தான் அசைப்பதற்கு முயற்சி செய்தாலும், அசைப்பவர் ஆடிப்போவார், ஆனால் நீங்களோ ஆடுபவர் இல்லை. அந்தமாதிரியான உறுதியான ஆத்மாக்களுக்கு, தடைகளை அழிக்கும் ஆத்மாக்களுக்கு, பாப்தாதா தினசரி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார், அந்தமாதிரி குழந்தைகள் தான், தந்தையின் வாழ்த்துக்கு உரியவர்கள். அந்த மாதிரி ஆடாத அசையாத குழந்தைகளை, தந்தை மற்றும் முழு குடும்பமும் பார்த்து மகிழ்ச்சியடைகிறது. நல்லது.

 

வரதானம்:

சக்திசாலியான நிலையின் பொத்தானை அழுத்தி (சுவீட்ச் ஆன் செய்து) வீணானவையின் இருளை அகற்றக்கூடிய அவ்யக்த ஃபரிஸ்தா ஆகுக.

 

எப்படி ஸ்தூல லைட்டின் சுவீட்ச் ஆன் செய்வதினால், இருள் அகன்றுவிடுகிறது. அந்தமாதிரி சக்திசாலியான நிலை தான் சுவீட்ச். இந்த சுவீட்சை ஆன் செய்தீர்கள் என்றால், வீணானவற்றின் இருள் அகன்று விடும். ஒவ்வொரு வீணான எண்ணத்தையும், அகற்றும் கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். எப்பொழுது நிலை சக்திசாலியாக இருக்குமோ, அப்பொழுது மகா தானி, வரதானி ஆகிவிடுவீர்கள். ஏனென்றால், வள்ளலின் அர்த்தமே நிறைந்தவர் அதாவது சக்திசாலியானவர். நிறைந்தவர் தான் கொடுக்க முடியும். மேலும் எங்கு நிறைவு இருக்கிறதோ, அங்கு வீணானவை அகன்றுவிடும். இது தான் அவ்யக்த ஃபரிஸ்தாக்களின் சிரேஷ்ட காரியம்.

 

சுலோகன்:

சத்தியத்தின் ஆதாரத்தினால் அனைத்து ஆத்மாக்களின் உள்ளப்பூர்வமான ஆசீர்வாதங்களை பிராப்தி செய்பவர் தான் பாக்கியவான் ஆத்மா.

 

ஓம்சாந்தி