16.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! நீங்கள் திருமூர்த்தி பாபாவின் குழந்தைகளாவீர்கள், உங்களுக்கு தங்களுடைய மூன்று கடமைகள் நினைவிருக்க வேண்டும் - ஸ்தாபனை, வினாசம் மற்றும் பாலனை

 

கேள்வி:

தேக-அபிமானம் எனும் கடுமையான வியாதி பீடிப்பதின் மூலம் என்னென்ன இழப்பு ஏற்படுகிறது?

 

பதில்:-

1. தேக-அபிமானம் இருப்பவர்களுக்குள் பொறாமை ஏற்படுகிறது, பொறாமையின் காரணத்தினால் பிறரோடு கசப்பு உணர்வுடன் இருக்கிறார்கள், அன்போடு சேவை செய்ய முடிவதில்லை. உள்ளுக்குள்ளேயே எரிந்து கொண்டிருக்கிறார்கள். 2. அலட்சியமானவர்களாக இருக்கிறார்கள். மாயை அவர்களை அதிகம் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறது. முயற்சி செய்து-செய்து வெறுப்படைந்து விடுகிறார்கள், இந்த காரணத்தினால் படிப்பே விட்டுப் போகிறது. 3. தேக-அபிமானத்தின் காரணத்தினால் மனம் சுத்தமாக இருப்பதில்லை, மனம் சுத்தமாக இல்லாத காரணத்தினால் பாபாவின் மனதில் இடம் பெறுவதில்லை. 4. அடிக்கடி மன நிலையை இறுக்கமாக்கிக் (மூட் ஆஃப்) கொள்கிறார்கள். அவர்களுடைய முகமே மாறி விடுகிறது.

 

ஓம் சாந்தி.

பாபாவை மட்டும் தான் நினைவு செய்கிறீர்களா அல்லது இன்னும் வேறு ஏதாவது நினைவிற்கு வருகிறதா? குழந்தைகளுக்கு ஸ்தாபனை, வினாசம் மற்றும் வளர்ப்பு - இந்த மூன்றும் தான் நினைவிருக்க வேண்டும். ஏனென்றால் கூடவே ஒன்றாகச் செல்ல வேண்டும் அல்லவா? யாராவது வக்கீலுக்குப் படிக்கிறார்கள் என்றால் நான் வக்கீலாவேன், வாதாடுவேன் என்பது அவருக்குத் தெரியும். வக்கீல் தொழிலை பராமரிக்கவும் செய்வார்கள் அல்லவா? யாரெல்லாம் படிக்கிறார்களோ அவர்களுடைய குறிக்கோள் முன்னேற்றத்திற்கானதாக இருக்கும். நாம் இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். தூய்மையான புதிய உலகத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம், இதில் யோகம் மிகவும் அவசியமாகும். யோகத்தின் மூலம் தான் தூய்மையற்றதாகி விட்ட நம்முடைய ஆத்மா தூய்மையாக ஆகும். எனவே நான் தூய்மையாக ஆகி, பிறகு தூய்மையான உலகத்திற்கு சென்று இராஜ்யம் செய்வோம் என்பது புத்தியில் வர வேண்டும். அனைத்து தேர்வுகளிலும் பெரிய தேர்வு அல்லது அனைத்து படிப்புகளிலும் உயர்ந்த படிப்பு இதுவாகும். அனேக விதமான படிப்புகள் இருக்கின்றன அல்லவா! அவையனைத்தையும் மனிதர்கள், மனிதர்களுக்கு கற்பிக்கின்றார்கள் மற்றும் அந்த படிப்புகள் இந்த உலகத்திற்காகவே ஆகும். படித்து விட்டு பிறகு அதனுடைய பலனை இங்கேயே அடைவார்கள். இந்த எல்லையற்ற படிப்பின் பலன் நமக்கு புதிய உலகத்தில் கிடைக்கும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அந்த புதிய உலகம் தூரத்தில் இல்லை. இப்போது சங்கமயுகமாகும். நாம் புதிய உலகத்தில் தான் இராஜ்யம் செய்ய வேண்டும். இங்கே அமர்ந்திருந்திருக்கின்றீர்கள் என்றாலும் கூட புத்தியில் இது நினைவிருக்க வேண்டும். பாபாவின் நினைவின் மூலம் தான் ஆத்மா தூய்மையாக ஆகும். நாம் தூய்மையாகிவிட்டால் பிறகு இந்த தூய்மையற்ற உலகம் கண்டிப்பாக வினாசம் ஆகும் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். அனைவரும் தூய்மையாக மாட்டார்கள். மிகவும் குறைவான உங்களிடத்தில் மட்டுமே அந்த சக்தி இருக்கிறது. உங்களில் கூட வரிசைக்கிரமமாக சக்திக்கு ஏற்றவாறு தான் சூரியவம்சத்தவர்களாகவும்- சந்திரவம்சத்தவர்களாகவும் ஆகின்றீர்கள்! ஒவ்வொரு விஷயத்திற்கும் சக்தி வேண்டும். இது ஈஸ்வரிய சக்தியாகும், இதனை யோகபலத்தின் சக்தி என்று சொல்லப்படுகிறது. மற்றவை அனைத்தும் சரீரத்தின் சக்தி என்று சொல்லப்படுகிறது. இது ஆன்மீக சக்தியாகும். பாபா கல்பம்- கல்பமாக கூறுகின்றார் - ஹே குழந்தைகளே, என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். சர்வசக்திவான் பாபாவை நினைவு செய்யுங்கள். அந்த தந்தை ஒருவரே, அவரை நினைவு செய்வதின் மூலம் ஆத்மா தூய்மையாக ஆகும். இவை தாரணை செய்வதற்கான மிகவும் நல்ல விஷயங்களாகும், யாருக்கு நாம் 84 பிறவிகள் எடுத்திருக்கிறோம் என்ற நிச்சயம் இல்லையோ, அவர்களுடைய புத்தியில் இந்த விஷயங்கள் நிற்காது. யார் சதோபிரதான உலகத்தில் வந்திருந்தார்களோ, அவர்கள் தான் இப்போது தமோபிரதானத்தில் வந்துள்ளார்கள். அவர்கள் தான் விரைவாக வந்து நிச்சயபுத்தியுடையவர்களாக ஆவார்கள். ஒருவேளை எதுவும் புரிய வில்லை என்றால் கேட்க வேண்டும். முழுமையான விதத்தில் புரிந்து கொண்டால் பாபாவையும் நினைவு செய்வார்கள். புரிந்து கொள்ளவில்லை என்றால் நினைவும் செய்ய முடியாது. இது நேரடியான விஷயமாகும். சதோபிரதான ஆத்மாக்களாக இருந்த நாமே தான் இப்போது தமோபிரதானமாகி இருக்கிறோம், யாருக்கு நாம் 84 பிறவிகள் எப்படி எடுக்கிறோம் அல்லது பாபாவிடமிருந்து கல்பத்திற்கு முன்பு கூட ஆஸ்தி எடுத்தோம் என்று புரிந்து கொள்வதில், சந்தேகம் இருக்குமோ, அவர்கள் படிப்பின் மீது முழு கவனம் வைக்கமாட்டார்கள். இவர்களுடைய அதிர்ஷ்டத்தில் இல்லை என்று புரிந்து கொள்ளப்படுகிறது. கல்பத்திற்கு முன்பு கூட புரிந்திருக்க வில்லை ஆகையினால் தான் நினைவு செய்ய முடியவில்லை. இந்த படிப்பே எதிர்காலத்திற்கானதாகும். படிக்கவில்லை, என்றால் கல்பம்-கல்பமாக படிக்கவில்லை அல்லது குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. பள்ளியில் நிறைய பேர் தோற்றுப் போய்விடுகிறார்கள். வரிசைக்கிரமமாகத் தான் தேர்ச்சியும் பெறுகிறார்கள். இது கூட படிப்பாகும், இதில் வரிசைக்கிரமமாகத் தான் தேர்ச்சி பெறுவார்கள். யார் புத்திசாலிகளோ, அவர்கள் படித்து பிறகு மற்றவர்களைப் படிக்கச் செய்வார்கள். நான் உங்களுடைய வேலைக்காரன் என்று பாபா கூறுகின்றார். நாங்களும் வேலைக்காரர்கள் தான் என்று குழந்தைகளும் கூறுகிறார்கள். ஒவ்வொரு சகோதர- சகோதரிகளுக்கும் நன்மை செய்ய வேண்டும். பாபா நமக்கு நன்மை செய்கின்றார், பிறகு நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்கள் அழிந்து விடும் என்பதை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். எந்தளவிற்கு அதிகமானவர்களுக்கு செய்தியைக் கொண்டுபோய் சேர்க்கிறார்களோ, அவர்களை பெரிய தூதுவர் என்று சொல்லலாம். அவர்களைத் தான் மகாரதி அல்லது குதிரைப்படை வீரர்கள் என்று சொல்லப்படுகிறது. காலாட்படை வீரர்கள் பிரஜையாகி விடுகிறார்கள். யார்-யார் செல்வந்தர்களாக ஆவார்கள் என்பதையும் குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். இந்த ஞானம் புத்தியில் இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் யார் சேவைக்குப் பொறுப்பாகியுள்ளீர்களோ, சேவைக்காகவே வாழ்க்கையை கொடுத்துள்ளீர்கள் என்றால் பதவியும் அப்படி அடைவீர்கள். அவர்களுக்கு யாருடைய கவலையும் இருப்பதில்லை. மனிதர்கள் அவரவர் கை-கால் உடையவர்கள், யாரையும் கட்டிப் போட முடியாது அல்லவா? தங்களை சுதந்திரமாக வைத்துக் கொள்ள முடியும். ஏன் நான் பந்தனத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும்? ஏன் பாபாவிடமிருந்து அமிர்தத்தை பெற்று அமிர்தத்தையே தானம் செய்யக் கூடாது. நான் என்ன ஆடா-மாடா யாரும் என்னை கட்டிப் போடுவதற்கு. ஆரம்பத்தில் குழந்தைகளாகிய நீங்கள் எப்படி தங்களை விடுவித்துக் கொண்டீர்கள், கூச்சலிட்டீர்கள், ஐயோ-ஐயோ என்று சொல்அமர்ந்து கொண்டார்கள். எங்களுக்கு என்ன கவலை, நாங்கள் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய வேண்டுமா அல்லது இங்கே அமர்ந்து கொண்டு இந்த காரியத்தை செய்ய வேண்டுமா என்று கேட்பீர்கள். போதை ஏறி விடுகிறது, இதனை மௌலாயி மஸ்தி(ஆன்மீக போதை) என்று சொல்லப்படுகிறது. நாம் மௌலாவின் மஸ்தான்கள் (இறைவனுடைய நினைவில் போதையில் இருப்பவர்கள்) ஆவோம். நமக்கு மௌலாவிடமிருந்து (பாபா) என்ன கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மௌலா நமக்கு படிப்பித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா? அவருக்கு நிறைய பெயர்கள் இருக்கின்றன. ஆனால் சில பெயர்கள் மிகவும் இனிமையானதாக இருக்கிறது. இப்போது நாம் மௌலாயி மஸ்தாக(ஆன்மீக போதையில் இருப்பவர்களாக) ஆகியுள்ளோம். பாபா மிகவும் எளிய வழியைக் கொடுக்கின்றார். சரியாக நாம் பாபாவை நினைவு செய்து- செய்து சதோபிரதானமாக ஆகிவிடுவோம் பிறகு உலகத்திற்கு எஜமானர்களாகவும் ஆவோம் என்பதை புத்தியும் புரிந்து கொள்கிறது. இந்தவொரு இடைவிடாத ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. பாபாவை ஒவ்வொரு மூச்சிலும் நினைவு செய்ய வேண்டும். முன்னால் அமர்ந்துள்ளீர்கள் அல்லவா. இங்கிருந்து வெளியில் சென்றீர்கள் என்றால் மறந்து விடுவீர்கள். இங்கு எவ்வளவு போதை ஏற்படுகிறதோ அந்தளவிற்கு வெளியில் இருப்பதில்லை, மறந்து விடுகிறது. நீங்கள் மறக்கக் கூடாது. ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லையென்றால் இங்கு அமர்ந்து கொண்டிருந்தாலும் மறந்து விடுகிறார்கள்.

 

குழந்தைகள் அருங்காட்சியகம் மற்றும் கிராமம்-கிராமமாக சேவை செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றனர். எவ்வளவு நேரம் கிடைத்தாலும், சீக்கிரம்-சீக்கிரமாகச் செய்யுங்கள் என்று தான் பாபா கூறுகின்றார். ஆனால் நாடகத்தில் வேகமாக நடக்க முடியாது. கையை வைத்தவுடனேயே பொருட்கள் தயாராகி விடும்படியான இயந்திரம் இருக்க வேண்டும் என்று பாபா கூறுகின்றார். நல்ல - நல்ல குழந்தைகளை மாயை மூக்கையும் காதையும் நன்றாகப் பிடிக்கிறது என்றும் பாபா புரிய வைக்கின்றார். யார் தங்களை மகாவீர் என்று புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்குத் தான் மாயையின் புயல் நிறைய வருகிறது பிறகு அவர்கள் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. மறைந்து விடுகிறார்கள். ஆழ்மனம் உண்மையாக இல்லை. உண்மையான மனமுடையவர்கள் தான் ஸ்காலர்ஷிப் பெறுகிறார்கள். சைத்தானி மனம் செல்லாது. சைத்தானி தன்னுடைய படகையே மூழ்கடிக்கிறது. சிவபாபாவோடு தான் அனைவருடைய காரியமும் ஆகும். இதை நீங்கள் காட்சியாக பார்க்கின்றீர்கள். பிரம்மாவையும் உருவாக்கக் கூடியவர் சிவபாபா ஆவார். சிவபாபாவை நினைவு செய்தால் தான் இப்படி ஆக முடியும். மாயை மிகவும் பலம்வாய்ந்தது என்று பாபா புரிய வைக்கின்றார். எப்படி எகடி க்கிறது என்றால், அது கடிப்பதே தெரிவதில்லை, மாயையும் கூட அப்படிப்பட்ட திமிரான எலியாகும். மகாரதிகள் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாயை நம்மை கீழே விழவைத்து விட்டது, உப்பு நீராக (கசப்பாக) மாற்றி விட்டது என்பதை அவர்களே புரிந்து கொள்ள முடியாது. உப்பு நீராக ஆவதின் மூலம் நாம் பாபாவின் சேவையை செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உள்ளுக்குள்ளேயே எரிந்து கொண்டிருப்பார்கள். தேக-அபிமானம் இருக்கிறது, ஆகையினால் தான் எரிகிறார்கள். அந்த நிலை இல்லை. நினைவினுடைய கூர்மை உண்டாவதில்லை, ஆகையினால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க  வேண்டும். மாயை மிகவும் கூர்மையானதாகும், நீங்கள் யுத்த மைதானத்தில் இருக்கின்றீர்கள் என்றால், மாயையும் விடுவதில்லை. பாதி-முக்கால் பாகம் முடித்து விடுகிறது, யாருக்கும் தெரிவதும் இல்லை. எவ்வளவு நல்ல - நல்ல, புத்தம்-புதியவர்கள் கூட படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் அமர்ந்து கொள்கிறார்கள். நல்ல புகழ்பெற்றவர்கள் மீது கூட மாயையின் சண்டை நடக்கிறது. புரிந்திருந்தாலும் கூட அலட்சியமாகி விடுகிறார்கள். சின்ன விஷயத்தில் கூட உப்பு நீராகி விடுகிறார்கள். தேக-அபிமானத்தின் காரணத்தினால் உப்பு நீராகி விடுகிறார்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். தங்களுக்கு தாங்களே ஏமாற்றத்தைக் கொடுத்துக் கொள்கிறார்கள். இதுவும் நாடகம் தான்! என்று பாபா சொல்வார். எதையெல்லாம் பார்க்கின்றோமோ அவை கல்பத்திற்கு முன் போலவே நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. நிலை மேல்-கீழாக ஆகிக் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் கிரகச்சாரம் பிடித்துக் கொள்கிறது, சில நேரங்களில் மிகவும் நல்ல சேவை செய்து மகிழ்ச்சியான செய்தியை எழுதுகிறார்கள். மேல்-கீழாக ஆகிக் கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் தோல்வி, சில நேரங்களில் வெற்றி. பாண்டவர்களுக்கு மாயையிடம் சில நேரங்களில் தோல்வியும், சில நேரங்களில் வெற்றியும் ஏற்படுகிறது. நல்ல - நல்ல மகாரதிகள் கூட ஆடிப் போய் விடுகிறார்கள், நிறைய பேர் இறந்தும் விடுகிறார்கள். ஆகையால் எங்கிருந்தாலும் பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள் மற்றும் சேவை செய்து கொண்டே இருங்கள். நீங்கள் சேவைக்குப் பொறுப்பானவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் யுத்த மைதானத்தில் இருக்கின்றீர்கள் அல்லவா? வெளியில் வீடு- வாசல் குடும்ப விவகாரங்களில் இருக்கின்றவர்கள், இங்கே இருப்பவர்களை  விடவும் மிக வேகமாகச் செல்ல முடியும். மாயையோடு முழுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வினாடியும் உங்களுடைய நடிப்பு கல்பத்திற்கு முன் போலவே நடந்து வந்திருக்கிறது. இவ்வளவு காலம் கடந்து விட்டது என்று நீங்கள் சொல்வீர்கள், என்னென்ன நடந்தது என்பது கூட புத்தியில் இருக்கிறது. ஞானம் முழுவதும் புத்தியில் இருக்கிறது. எப்படி பாபாவினிடத்தில் ஞானம் இருக்கிறதோ, அது இந்த தாதாவிடத்திலும் வர வேண்டும். பாபா பேசுகிறார் என்றால், இந்த தாதாவும் பேசுவார். யார்-யார் தூய மனம் உள்ளவர்கள் என்பதை நீங்களும் தெரிந்துள்ளீர்கள். தூய மனம் உள்ளவர்கள் தான் பாபாவின் மனதில் இடம் பெறுகிறார்கள். அவர்களிடம் உப்பு நீரின் உணர்வு இருப்பதில்லை, எப்போதும் புன்சிரிப்போடு இருக்கிறார்கள். அவர்களுடைய மன நிலை (மூட்) ஒருபோதும் மாறாது. இங்கே நிறைய பேருடைய மன நிலை மாறி விடுகிறது. கேட்கவே கேட்காதீர்கள். நாங்கள் தூய்மை யற்றவர்களாக இருக்கிறோம் என்றும் சொல்கிறார்கள். வந்து தூய்மையாக்குங்கள் என்று இப்போது தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பாபாவை அழைக்கிறார்கள். பாபா கூறுகின்றார் - குழந்தைகளே, என்னை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால், உங்களுடைய துணி (ஆத்மா) சுத்தமாகி விடும். என்னுடைய ஸ்ரீமத்படி நடந்து செல்லுங்கள். ஸ்ரீமத்படி நடக்காதவர்களின் ஆடை சுத்த மாவதில்லை. ஆத்மா சுத்தமாவதே இல்லை. இரவும் பகலும் பாபா இதில் தான் அழுத்தம் கொடுக்கின்றார் - தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். தேக-அபிமானத்தில் வருவதினால் தான் நீங்கள் ஏமாற்றம் அடைகிறீர்கள். எந்தளவிற்கு மேலே உயருகிறீர்களோ, அழகானவர்களாகிக் கொண்டே செல்கிறீர்களோ அந்தளவிற்கு புன்சிரிப்பு இருக்கிறது. நல்ல - நல்ல முதல்தரமான குழந்தைகளாக இருக்கிறார்கள், ஆனால் உள்ளுக்குள் இருக்கும் நிலையை பார்த்தால் கரைந்து கொண்டிருக்கிறார்கள். தேக-அபிமானத்தின் தீ உருக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வியாதி எங்கிருந்து வந்தது என்று புரிந்து கொள்வதே இல்லை. தேக-அபிமானத்தினால் தான் இந்த வியாதி வருகிறது என்று பாபா கூறுகின்றார். ஆத்ம - அபிமானிகளை ஒருபோதும் இந்த வியாதி அண்டாது. உள்ளுக்குள் மிகவும் எரிந்து கொண்டிருக்கிறார்கள். பாபா கூறுகின்றார் - குழந்தைகளே, ஆத்ம-அபிமானிகளாக ஆகுங்கள். இந்த வியாதி ஏன் வந்தது என்று கேட்கிறார்கள்? இந்த தேக-அபிமானத்தின் வியாதி அப்படிப் பட்டது, கேட்கவே கேட்காதீர்கள் என்று பாபா கூறுகின்றார். யாருக்காவது இந்த வியாதி வருகிறது என்றால், ஒரேயடியாக மாட்டு ஈயைப் போல் ஒட்டிக் கொள்கிறது, விடுவதே இல்லை. ஸ்ரீமத்படி நடக்காமல் தங்களுடைய தேக-அபிமானத்தில் நடக்கிறார்கள் என்றால் மிக வேகமாக அடி விழுகிறது. பாபாவிடம் செய்திகள் அனைத்தும் வருகிறது. மாயை ஒரேயடியாக மூக்கைப் பிடித்து கீழே விழ வைத்து விடுகிறது. புத்தியை முற்றிலும் அடித்து வீழ்த்தி விடுகிறது. சந்தேக புத்தியுடையவர்களாக ஆகி விடுகிறார்கள். எங்களை கல்லு புத்தியிலிருந்து தங்க புத்தியுடையவர் களாக்குங்கள் என்று பகவானை அழைக்கிறார்கள் பிறகு அதற்கு விரோதமானவர்களாக ஆகி விடுகிறார்கள், என்றால் என்ன கதியாகும். ஒரேயடியாக விழுந்து கல்லுபுத்தியுடையவர்களாக ஆகி விடுகிறார்கள். இந்த மாணவ வாழ்க்கை தான் சிறந்தது என்று குழந்தைகளுக்கு இங்கு அமர்ந்திருக்கும் போது குஷி இருக்க வேண்டும். இதைவிட உயர்ந்த படிப்பு வேறு ஏதாவது இருக்கிறதா என்ன என்று பாபா கேட்கிறார்? அனைத்திலும் சிறந்தது இதுவேயாகும், 21 பிறவிகளுக்கு பலன் தருகிறது, எனவே இப்படிப்பட்ட படிப்பின் மீது எவ்வளவு கவனம் கொடுக்க வேண்டும். சிலர் முற்றிலும் கவனம் கொடுப்பதில்லை. மாயை மூக்கு-காதை முற்றிலும் அறுத்து விடுகிறது. இதனுடைய இராஜ்யம் அரைக்கல்பம் நடக்கிறது, எனவே கேட்கவே கேட்காதீர்கள் அப்படி பிடித்துக் கொள்கிறது, ஆகையினால் எச்சரிக்கையாக இருங்கள் என்று பாபா அவரே கூறுகின்றார். ஒருவர்-மற்றவருக்கு எச்சரித்துக் கொண்டே இருங்கள். சிவபாபாவை நினைவு செய்யுங்கள். இல்லையென்றால் மாயை காது மூக்கை அறுத்து விடும். பிறகு ஒரு காரியத்திற்கும் பயன்படமாட்டீர்கள். நாம் லஷ்மி-நாராயணனாக ஆவது நடக்காது, என்று நிறைய பேர் புரிந்து கொள்கிறார்கள். களைப்படைந்து மன வெறுப்படைந்தவர்களாக ஆகி விடுகிறார்கள். மாயையிடம் தோல்வியடைந்து ஒரேயடியாக குப்பையில் விழுந்து கிடக்கிறார்கள். பாருங்கள், நம்முடைய புத்தி கெடுகிறது என்றால், மாயை மூக்கை பிடித்து விட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும். நினைவு யாத்திரையில் நிறைய பலம் இருக்கிறது. நிறைய குஷி நிரம்பியுள்ளது. குஷியைப் போன்ற டானிக் இல்லை என்று சொல்கிறார்கள். கடையில் வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள், வருமானம் நடந்து கொண்டிருக்கிறது என்றால், ஒருபோதும் அவர்களுக்கு களைப்பு ஏற்படாது. பசி ஏற்படாது. மிகுந்த குஷியில் இருப்பார்கள். உங்களுக்கு அளவற்ற செல்வம் கிடைக்கிறது. உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். நம்முடைய நடத்தை தெய்வீகமாக இருக்கிறதா அல்லது அசுரத்தனமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. அகால மரணங்களின் போட்டி நடப்பதைப் போல் இருக்கிறது. விபத்துகள் போன்றவற்றைப் பாருங்கள் எவ்வளவு நடந்து கொண்டிருக்கின்றன. புத்தி தமோபிரதானமானதாகிக் கொண்டே செல்கிறது. அதிக மழை பொழிகிறது என்றாலும் கூட அதனை இயற்கையின் விபத்து என்று சொல்லலாம். மரணம் முன்னால் வந்தே விட்டது. அணுகுண்டுகளின் யுத்தம் தொடங்கி விடும் என்பதையும் புரிந்துள்ளார்கள். இப்படிப்பட்ட பயங்கரமான காரியங்களைச் செய்கிறார்கள், துன்புறுத்து கிறார்கள் என்றால் பிறகு யுத்தம் ஆரம்பமாகி விடும். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) மௌலாயி (ஆன்மீக) போதையில் இருந்துகொண்டு தங்களை சுதந்திரமானவர்களாக மாற்ற வேண்டும். எந்தவொரு பந்தனத்திலும் மாட்டிக் கொள்ளகூடாது. மாயை எலியிடமிருந்து மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனதில் ஒருபோதும் தீய எண்ணங்கள் வரக்கூடாது.

 

2) பாபாவிடமிருந்து கிடைக்கக் கூடிய அளவற்ற ஞானச் செல்வம் கிடைக்கிறது என்ற குஷியில் இருக்க வேண்டும். இந்த வருமானத்தில் ஒருபோதும் சந்தேக புத்தியுடையவர்களாகி களைப்படையக் கூடாது. மாணவ வாழ்க்கை தான் மிகச்சிறந்த வாழ்க்கை ஆகையினால் படிப்பின் மீது முழு கவனம் வைக்க வேண்டும்.

 

வரதானம்:

அனைத்து பிராப்திகளின் பொக்கிஷங்களை நினைவு சொரூபமாகி காரியத்தில் ஈடுபடுத்தக்கூடிய சதா திருப்தியான ஆத்மா ஆகுக.

 

சங்கமயுகத்தின் விசேஷமான வரதானம் திருப்தி ஆகும். மேலும், சர்வ பிராப்திகளே திருப்தியின் விதை ஆகும். ஸ்தூல அல்லது சூட்சும அப்பிராப்தியே அதிருப்தியின் விதை ஆகும். பிராமணர்களின் பொக்கிஷத்தில் எந்த பொருளின் அபிராப்தியும் இல்லை என்பது பிராமணர்களின் மகிமை ஆகும். அனைத்து குழந்தைகளுக்கும் ஒருவர் மூலம் ஒரே மாதிரியான அளவிட முடியாத பொக்கிசம் கிடைக்கிறது. பிராப்தியாகக் கிடைத்துள்ள பொக்கிஷங்களை ஒவ்வொரு சமயமும் காரியத்தில் ஈடுபடுத்துங்கள். அதாவது நினைவு சொரூபமாக மட்டும் ஆகுங்கள். எல்லையற்ற பிராப்திகளை எல்லைக்குட்பட்டதாக மாற்றாதீர்கள், அப்பொழுது சதா திருப்தியாக இருப்பீர்கள்.

 

சுலோகன்:

எங்கு நம்பிக்கை இருக்கிறதோ, அங்கு வெற்றியின் அதிர்ஷ்ட ரேகையானது நெற்றியில் அவசியம் இருக்கும்.

 

ஓம்சாந்தி