07.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! பாபா கல்ப கல்பமாக வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். நீங்களும் அனைவருக்கும் பாபாவின் சரியான அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும்.

 

கேள்வி :

குழந்தைகளின் எந்த கேள்வியைக் கேட்டு பாபா கூட அதிசயப்படுகிறார்?

 

பதில்:

பாபா தங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது கடினமாக இருக்கின்றது. நாங்கள் எப்படி உங்கள் அறிமுகத்தைக் கொடுப்பது? என குழந்தைகள் கேட்கின்றார்கள். இவ்வாறு கேள்வி கேட்பது பாபாவிற்கு அதிசயமாக இருக்கின்றது. பாபா உங்களுக்கு தனது அறிமுகத்தைக் கொடுத்திருக்கின்றார் என்றால், நீங்களும் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும். இதில் கஷ்டம் எதுவும் இல்லை. இது மிகவும் எளிதாகும். நாம் அனைத்து ஆத்மாக்களும் நிராகார் என்றால் நிச்சயமாக தந்தையும் நிராகாராக இருப்பார்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் எல்லையற்ற தந்தையிடம் அமர்ந்திருக்கிறோம் என அறிகிறார்கள். எல்லையற்ற தந்தை இந்த இரதத்தில் தான் வருகிறார் எனவும் அறிகிறார்கள். பாப்தாதா சொல்கின்ற போது தான் சிவபாபா இந்த இரதத்தில் அமர்ந்திருக்கிறார் என அறிகிறார்கள். தனது அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். அவர் தந்தை என குழந்தைகளுக்குத் தெரியும். ஆன்மீகத் தந்தையை நினைவு செய்தால் பாவங்கள் அழிந்து போகும் என பாபா வழி கொடுக்கின்றார். இதற்கு யோக அக்னி என்று பெயர். இப்பொழுது நீங்கள் பாபாவைத் தெரிந்து கொண்டீர்கள். பாபாவின் அறிமுகத்தை மற்றவருக்கு எப்படி கூறுவது என ஒருபோதும் சொல்ல முடியாது. எல்லையற்ற தந்தையின் அறிமுகம் உங்களுக்கு இருக்கின்றது என்றால், நிச்சயம் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும். அறிமுகத்தை எப்படிக் கொடுப்பது என்ற கேள்வியே எழ முடியாது. நீங்கள் எப்படி தெரிந்து கொண்டீர்களோ அவ்வாறே அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஒருவரே என்று கூறலாம். இதில் குழப்பம் அடைவதற்கு ஒன்றும் இல்லை. சிலர் பாபா உங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது கடினமாக இருக்கின்றது என்கிறார்கள். அட, பாபாவின் அறிமுகத்தைக் கொடுப்பதில் கஷ்டப்படுவதற்கு எதுவும் இல்லை. நான் இன்னாருடைய பிள்ளை என விலங்குகள் கூட சைகையினால் புரிந்து கொள்கிறது. ஆத்மாக்களாகிய நமக்கு அவர் தந்தை என நீங்களும் அறிகிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம் இந்த சரீரத்தில் பிரவேஷம் ஆகியிருக்கிறோம். ஆத்மா அகால மூர்த்தி என்று பாபா புரிய வைத்திருக்கிறார். ஆத்மாவிற்கு ரூபம் இல்லை என்று கூற முடியாது. மிகவும் எளிதான விஷயம். குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும். ஆத்மாக்களுக்கு நிராகார் தந்தை ஒருவரே, நாம் அனைத்து ஆத்மாக்களும் சகோதரர்கள், பாபாவின் வாரிசுகள். பாபாவிடமிருந்து நமக்கு சொத்து கிடைக்கின்றது. அப்பாவைப் பற்றியும் அவருடைய படைப்புகளைப் பற்றியும் தெரியாத குழந்தைகள் யாரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது என அறிகிறீர்கள். பாபாவிடம் என்ன சொத்து இருக்கின்றது என அனைவருக்கும் தெரியும். இதுவே ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் சந்திப்பாகும். இது நன்மை நடக்கக்கூடிய திருவிழா ஆகும். பாபா தான் நன்மை செய்யக்கூடியவர். நிறைய நன்மைகளைச் செய்கிறார். பாபாவைத் தெரிந்து கொண்டதால் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்து கிடைக்கிறது என புரிந்து கொள்கிறீர்கள். உலகத்தில் சந்நியாசி, குருக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய சீடர்களுக்கு குருவின் சொத்து பற்றித் தெரியாது. குருவிடம் என்ன சொத்து இருக்கின்றது என்பது ஒரு சில சீடர்களுக்குத் தெரிந்திருப்பதே கஷ்டம். அவர் சிவபாபா. பாபாவிடம் சொத்து இருக்கிறது என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. எல்லையற்ற தந்தையிடம் உலக இராஜ்யம் என்ற சொர்க்கம் என்ற சொத்து இருக்கின்றது என்பதை குழந்தைகள் அறிகிறீர்கள். இந்த விஷயங்கள் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரிடமும் இல்லை. லௌகீக தந்தையிடம் என்ன சொத்து இருக்கின்றது என்பதை அவருடைய குழந்தைகள் தான் அறிவார்கள். நாம் உயிருடன் பரலோக தந்தையினுடையவராக மாறியிருக்கிறோம் என இப்போது நீங்கள் கூறுவீர்கள். அவரிடமிருந்து என்ன கிடைக்கிறது, அதையும் அறிகிறீர்கள். நாம் முதலில் சூத்திர குலத்தில் இருந்தோம், இப்போது பிராமண குலத்தில் வந்துவிட்டோம். பாபா இந்த பிரம்மா உடலில் வருகிறார். இவருக்கு பிரஜா பிதா பிரம்மா என்று பெயர். அவர் (சிவன்) அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார். இவர் (பிரஜாபிதா பிரம்மா) கிரேட் கிரேட் கிராண்ட்ஃபாதர் என அழைக்கப்படுகிறார். இப்பொழுது நாம் இவருடைய குழந்தைகளாகியிருக்கிறோம். இந்த ஞானம் உங்களுக்கு இருக்கிறது. அனைத்து இடங்களிலும் இருக்கிறார், எல்லாம் அறிந்தவர் என சிவபாபாவைப் பற்றி கூறுகிறார்கள். அவர் எப்படி படைப்பின் முதல், இடை, கடைசியின் ஞானத்தைக் கொடுக்கிறார் என்பது இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை. அவரை பெயர் உருவத்திலிருந்து விடுபட்டவர் என கூறுவது பொய்யாகும். அவருடய பெயர் ரூபம் கூட நினைவிருக்கிறது. இரவு கூட கொண்டாடுகிறார்கள். ஜெயந்தி என்பது மனிதர்களுக்கு ஆகும். சிவபாபாவிற்கே இராத்திரி என்பார்கள். இரவு என்று எதைக் கூறுகிறோம் என்று குழந்தைகளுக்குத் தெரியும். இரவில் கருமையான இருள் இருக்கிறது. அறியாமை இருள் இருக்கிறதல்லவா? ஞான சூரியன் வெளி வந்ததும் அஞ்ஞான இருள் அழிகிறது என்று இப்பொழுது கூட பாடுகிறார்கள். ஆனால் பொருள் புரியவில்லை. சூரியன் யார்? எப்பொழுது வந்தது? எதுவும் புரியவில்லை. ஞான சூரியனுக்கு ஞானக் கடல் என்று கூட கூறலாம் என பாபா புரிய வைக்கிறார். எல்லையற்ற தந்தை ஞானக்கடல் ஆவார். சந்நியாசி, குரு போன்றோர் தன்னை சாஸ்திரங்களில் தேர்ந்தவர் என நினைக்கிறார்கள். அது அனைத்தும் பக்தியாகும். நிறைய வேத சாஸ்திரங்களைப் படித்து வித்வான் ஆகிறார்கள். பாபா ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இதற்கு ஆத்மா மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு என்று பெயர். பாபா இந்த இரதத்தில் வந்துள்ளார் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இந்த சந்திப்புக்கு திருவிழா என்று பெயர். நாம் வீட்டிற்குச் செல்லும் போது அதுவும் திருவிழா ஆகும். இங்கு தந்தையே அமர்ந்து படிக்க வைக்கிறார். அவர் தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார். இந்த ஒரு விஷயத்தை நன்கு கடைபிடியுங்கள். மறந்து விடாதீர்கள். இப்போது பாபா நிராகாரராக இருக்கிறார். அவருக்கு என்று உடல் இல்லை. நிச்சயமாக எடுக்க வேண்டியிருக்கும். நான் இயற்கையின் ஆதாரத்தில் வருகிறேன் என அவரே கூறுகின்றார். இல்லை என்றால் எப்படி பேசுவேன். சரீரம் இல்லாமல் பேச முடியாது. எனவே பாபா இந்த உடலில் வருகிறார். இவருடைய பெயர் பிரம்மா ஆகும். நாம் கூட சூத்திரனிலிருந்து பிராமணர் ஆகிறோம் என்றால் பெயரை மாற்றத்தான் வேண்டும். உங்களுக்கு பெயர் கூட வைக்கப்பட்டது. ஆனால் அதில் இப்பொழுது பலர் இல்லை. ஆகவே பிராமணர்களின் மாலை கிடையாது. பக்த மாலை மற்றும் ருத்திர மாலை என பாடப்பட்டிருக்கிறது. பிராமணர்களின் மாலை இல்லை. விஷ்ணுவின் மாலை இருந்து கொண்டு இருக்கிறது. மாலையில் முதல் மணி யார்? ஜோடியாக இருப்பவர்கள் என்பார்கள். ஆகவே சூட்சும வதனத்தில் கூட ஜோடியாக காட்டப்பட்டு இருக்கிறது. விஷ்ணுவைக் கூட நான்கு புஜங்கள் இருப்பதாகக் காட்டப்பட்டு இருக்கிறது. இரண்டு இலட்சுமியின் புஜங்கள், இரண்டு நாராயணனின் புஜங்களாகும்.

 

நான் சலவை தொழிலாளி (டோபி) என பாபா புரிய வைக்கிறார். நான் யோக பலத்தினால் ஆத்மாக்களாகிய உங்களை சுத்தப்படுத்துகிறேன். நீங்கள் விகாரத்தில் சென்று உங்கள் அலங்காரத்தை இழந்து விடுகிறீர்கள். பாபா அனைவரையும் சுத்தப்படுத்துவதற்காக வருகிறார். ஆத்மாக்களுக்கு வந்து கற்றுத்தருகின்றார் என்றால் கற்றுக் கொடுப்பவர் நிச்சயமாக இங்கு வேண்டும் அல்லவா? வந்து தூய்மை ஆக்குங்கள் என அழைக்கிறார்கள். துணி அழுக்காகி விட்டால் அது துவைத்து சுத்தமாக்கப்படுகிறது. பதீத பாவனா பாபா, வந்து எங்களை பரிசுத்தமாக ஆக்குங்கள் என நீங்களும் அழைக்கிறீர்கள். ஆத்மா தூய்மையாகி விட்டால் சரீரமும் தூய்மையாகக் கிடைக்கும். எனவே முதல் முதல் முக்கியமான விஷயம் பாபாவின் அறிமுகத்தைக் கொடுத்தல் ஆகும். பாபாவின் அறிமுகத்தை எப்படி கொடுப்பது என்ற கேள்வியே கேட்க முடியாது. பாபா உங்களுக்கு அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார். அப்போது தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள் அல்லவா? பாபாவிடம் வந்திருக்கிறீர்கள். பாபா எங்கே இருக்கிறார். இந்த இரதத்தில். இது அழிவற்ற சிம்மாசனம் ஆகும். ஆத்மாக்களாகிய நீங்களும் அகால மூர்த்தி. இது உங்களுடைய சிம்மாசனம் ஆகும். இதில் ஆத்மாக்களாகிய நீங்கள் வீற்றிருக்கிறீர்கள். அந்த அழிவற்ற சிம்மாசனம் ஜடமாகி விட்டதல்லவா? நான் அகால மூர்த்தி என்றால் நிராகாரர், சாகார ரூபம் இல்லை என நீங்கள் அறிகிறீர்கள். நான் ஆத்மா அழிவற்றவன். ஒருபோதும் அழிவைப் பெற முடியாது. ஒரு உடலை விட்டு இன்னொரு உடலை எடுக்கிறேன். ஆத்மாவாகிய எனக்குள் இருக்கும் நடிப்பானது அழிவற்றது, நிச்சயிக்கப்பட்டது. இன்றிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு என்னுடைய நடிப்பு இவ்வாறே ஆரம்பமாகியது. ஒன்று ஒன்று என்ற வருடத்திலிருந்து நாம் இங்கு நடிப்பதற்காக வீட்டிலிருந்து வருகிறோம். இது 5000 வருடத்தின் சக்கரம். அவர்களோ இலட்சக்கணக்கான வருடங்கள் என கூறியிருக்கிறார்கள். எனவே குறைந்த வருடங்களைப் பற்றி சிந்திக்கவில்லை. நாம் பாபாவின் அறிமுகத்தை யாருக்கு எப்படிக் கொடுக்கலாம் என குழந்தைகள் கூறமுடியாது. இவ்வாறு கேள்வி கேட்பது அதிசயமாக இருக்கிறது! நீங்கள் பாபாவினுடையவராக ஆகிவிட்டீர்கள். பிறகு பாபாவின் அறிமுகம் ஏன் கொடுக்க முடியாது? நாம் அனைவரும் ஆத்மாக்கள். அவர் நமது தந்தையாக இருக்கிறார். அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். எப்பொழுது சத்கதி அளிப்பார் என்பது கூட இப்பொழுது உங்களுக்குத் தெரியும். கல்ப கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் வந்து அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். அவர்கள் இன்னும் நாற்பதாயிரம் வருடங்கள் இருக்கிறது என நினைக்கிறார்கள். முதலிலேயே பெயர் உருவத்திலிருந்து விடுபட்டவர் எனக் கூறியிருக்கிறார்கள். இப்பொழுது பெயர் ரூபத்திலிருந்து விடுபட்ட பொருள் எதுவும் இருக்க முடியாது. கல், முள் என்று கூட பெயர் இருக்கிறதல்லவா? இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் வந்திருக்கிறீர்கள் என பாபா கூறுகின்றார். எவ்வளவு எண்ணற்ற குழந்தைகள் என பாபாவிற்குத் தெரியும். இப்பொழுது குழந்தைகள் எல்லைக்குட்பட்டது மற்றும் எல்லையற்றதையும் கடந்து செல்ல வேண்டும். எல்லா குழந்தைகளையும் பார்க்கிறார். இவர்கள் அனைவரையும் அழைத்துச் செல்வதற்காக நான் வந்திருக்கிறேன். சத்யுகத்தில் மிகச்சிலரே இருப்பார்கள். எவ்வளவு தெளிவாக இருக்கிறது! ஆகவே படங்களை வைத்து புரிய வைக்கப்படுகிறது. ஞானம் முற்றிலும் எளிதாகும். நினைவு யாத்திரையில் தான் நேரம் எடுக்கிறது. இப்படிப்பட்ட தந்தையை ஒருபோதும் மறக்கக் கூடாது. என்னை மட்டும் நினையுங்கள். நினைத்தால் தான் தூய்மையாக முடியும் என பாபா கூறுகின்றார். நான் அசுத்தத்திலிருந்து தூய்மையாக மாற்றுவதற்காக வந்திருக்கிறேன். நீங்கள் அழிவற்ற ஆத்மாக்கள். அனைவரும் அவரவர் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறீர்கள். பாபா இந்த சிம்மாசனத்தைக் கடனாகப் பெற்றிருக்கிறார். இந்த பாக்கியசாலி இரதத்தில் பாபா பிரவேசமாகியிருக்கிறார். பரமாத்மாவிற்கு பெயர் ரூபம் இல்லை என சிலர் கூறுகின்றார்கள். அப்படி கிடையவே கிடையாது. அவரை அழைக்கிறார்கள். மகிமை பாடுகிறார்கள் என்றால் நிச்சயமாக ஏதாவது ஒரு பொருள் இருக்கும் அல்லவா? தமோபிரதானமாகிவிட்டதால் எதையும் புரிந்து கொள்வதில்லை. இனிமையிலும் இனிமையான குழந்தைகளே 84 இலட்சம் பிறவிகள் எதுவும் கிடையாது என பாபா புரிய வைக்கிறார். 84 பிறவிகள் தான். அனைவருக்கும் மறுபிறவி உண்டு. அப்படியே பிரம்மத்தில் கலந்துவிடவோ மோட்சத்தைப் பெற்றுவிடவோ முடியாது. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம். ஒன்று கூட குறையவோ கூடவோ முடியாது. இந்த முதலும் முடிவுமற்ற அழியாத நாடகத்தில் இருந்து தான் சிறிய சிறிய டிராமா அல்லது நாடகங்களை உருவாக்கு கின்றார்கள். அது அழிவற்றதாகும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்றதில் நிற்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு நாம் எப்படி 84 பிறவிகளை எடுக்கிறோம் என்ற ஞானம் கிடைத்திருக்கிறது. இப்பொழுது பாபா புரிய வைத்திருக்கிறார். முன்பு யாருக்கும் தெரியாது. ரிஷி முனிகள் கூட எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறினார்கள். இந்த பழைய உலகத்தை மாற்றுவதற்காக தந்தை சங்கமயுகத்தில் தான் வருகிறார். பிரம்மா மூலமாக மீண்டும் புது உலகத்தை உருவாக்குகின்றார். அவர்களோ இலட்சக்கணக்கான வருடங்கள் என கூறி விட்டார்கள். எந்த விஷயமும் நினைவில் இருக்காது. மகா பிரளயம் கூட நடப்பதில்லை. பாபா இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். பிறகு நீங்கள் இராஜ்யத்தைப் பெறுகிறீர்கள். இதில் சந்தேகப்படுவதற்கு எதுவும் இல்லை. முதல் நம்பரில் அனைவருக்கும் பிரியமானவர் பாபா, பிறகு இரண்டாவது நம்பர் பிரியமானவர் ஸ்ரீ கிருஷ்ணர் என குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஸ்ரீ கிருஷ்ணர் சொர்க்கத்தின் முதல் இளவரசன், நம்பர் ஒன் என நீங்கள் அறிகிறீர்கள். பிறகு அவரே 84 பிறவிகளை எடுக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். பிறகு அவருடைய கடைசி பிறவியில் தான் நான் பிரவேஷம் ஆகிறேன். இப்பொழுது நீங்கள் அசுத்தத்திலிருந்து பரிசுத்தமாக மாற வேண்டும். தந்தை தான் பதீத பாவனர். தண்ணீருடைய நதிகள் எல்லாம் உங்களை துய்மையாக மாற்றாது. இந்த நதிகள் சத்யுகத்தில் கூட இருக்கிறது. அங்கேயோ தண்ணீர் மிகவும் சுத்தமாக இருக்கும். சேறு போன்றவை இருக்காது. இங்கே எவ்வளவு சேறு இருக்கின்றது! பாபா பார்த்திருக்கிறார் அச்சமயம் ஞானம் கிடையாது. இப்பொழுது தண்ணீர் எப்படி தூய்மையாக மாற்றும் என அதிசயப்படுகிறார்.

 

இனிமையான குழந்தைகளே! ஒருபோதும் தந்தையை எப்படி நினைப்பது என குழப்பமடையாதீர்கள். அட, தந்தையை நினைவு செய்ய முடியாதா? அவர்கள் கர்பத்தின் மூலமாக உருவான வம்சம். நீங்களோ தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். தந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாபாவிடமிருந்து சொத்து கிடைக்கிறது. அவரை மறக்க முடியுமா? எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்து கிடைக்கிறது என்றால், அவரை மறக்க முடியுமா? லௌகீக குழந்தைகள் தந்தையை மறக்கிறார்களா? ஆனால் மாயா எதிர்ப்பைக் காண்பிக்கிறது. மாயா யுத்தம் செய்கிறது. முழு உலகமும் கர்ம சேத்திரமாகும். ஆத்மா இந்த உடலில் பிரவேஷம் ஆகி இங்கே கர்மம் செய்கிறது. பாபா கர்மம், அகர்மம், விகர்மத்தின் இரகசியத்தைப் புரிய வைக்கிறார். இங்கே இராவண இராஜ்யத்தில் கர்மம் விகர்மம் ஆகிறது. அங்கே இராவண இராஜ்யமே இல்லை. கர்மம் நல்ல கர்மம் ஆகிறது. விகர்மம் எதுவும் நடப்பதில்லை. இது மிகவும் எளிய விஷயமாகும். இங்கே இராவண இராஜ்யத்தில் கர்மம் விகர்மம் ஆவதால் விகர்மங்களின் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இராவணனுக்கு முதல் முடிவு இல்லை என்று கூறமுடியாது. அரைக்கல்பம் இராம இராஜ்யம், அரைக்கல்பம் இராவண இராஜ்யம். நீங்கள் தேவதையாக இருந்த போது உங்களுடைய கர்மம் அகர்மமாக (விளைவற்றதாக) இருந்தது. இப்பொழுது இது ஞானம் ஆகும். குழந்தைகள் ஆகியிருக்கிறீர்கள் என்றால், படிப்பையும் படிக்க வேண்டும். அவ்வளவு தான். பிறகு வேறு எதைப்பற்றியும் சிந்தனைகள் வரக்கூடாது. ஆனால் குடும்பத்தில் இருந்து வேலை செய்பவர் களும் இருக்கிறார்கள். தாமரை மலர் போல இருங்கள் என பாபா கூறுகின்றார். இவ்வாறு நீங்கள் தேவதையாக மாறுகிறீர்கள். அவர்கள் அடையாளங்களை விஷ்ணுவிற்கு கொடுத்து விட்டார்கள். ஏனென்றால் உங்களுக்கு அழகாக இருக்காது. அவருக்கு அழகாக இருக்கிறது. அவரே விஷ்ணுவின் இரட்டை ரூபம் இலட்சுமி நாராயணனான மாறுகிறார்கள். அவர்களே அகிம்சா பரமோ தேவி தேவதா தர்மம். எந்த விகாரத்தின் வேலையும் நடக்காது. எந்த சண்டை சச்சரவும் நடக்காது. நீங்கள் டபுள் அகிம்சையாளர் ஆகிறீர்கள். சத்யுகத்திற்கு அதிபதியாக இருந்தீர்கள். பெயரே கோல்டன் ஏஜ் ஆகும். தங்க உலகம். ஆத்மா மற்றும் உடல் இரண்டுமே தங்கமாகி விடுகிறது. யார் தங்கமாக மாற்றுகின்றார்? பாபா. இப்பொழுது கலியுகம் அல்லவா? சத்யுகம் முடிந்துவிட்டது என கூறுகிறீர்கள். நேற்று சத்யுகம் இருந்தது அல்லவா! நீங்கள் இராஜ்யம் செய்தீர்கள். நீங்கள் ஞானம் நிறைந்தவர் ஆகிக் கொண்டே போகிறீர்கள். அனைவரும் ஒன்று போல ஆகமாட்டார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. நான் ஆத்மா அழியாத சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறேன். இந்த நினைவு இருக்க வேண்டும். எல்லை மற்றும் எல்லையற்றதைக் கடந்து போக வேண்டும். ஆகவே எல்லைக்குட்பட்டதில் புத்தி மாட்டிக் கொள்ளக்கூடாது.

 

2. எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்து கிடைக்கின்றது. இந்த போதையில் இருங்கள். கர்மம் - அகர்மம் - விகர்மத்தின் விளைவுகளைத் தெரிந்து கொண்டு விகர்மங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். படிக்கும் நேரத்தில் வேலை முதலியவைகளிலிருந்து புத்தியை விலக்கிவிட வேண்டும்.

 

வரதானம்:

சேவையில் சினேகம் மற்றும் சத்தியத்தின் அதாரிட்டியின் சமநிலையின் மூலம் வெற்றி மூர்த்திகள் ஆகுக.

 

எப்படி இந்த பொய்யான கண்டத்தில் பிரம்மா பாபாவின் சத்தியத்தின் அதாரிட்டியின் வெளிப்படையான சொரூபத்தைப் பார்த்தோம். அவருடைய அத்தாரிட்டியான வார்த்தைகளில் ஒருபோதும் அகங்காரத்தின் வாசனையே, இராது. அதாரிட்டியான பேச்சில் சிநேகம் நிறைந்திருக்கும். அந்த அதாரிட்டியான பேச்சு வெறும் அன்பாக மட்டுமல்லாமல் பிரபாவசாலியாகவும் இருக்கும். ஆக பாபாவைப் பின்பற்றுங்கள் - சிநேகம் மற்றும் அதாரிட்டி, பணிவு மற்றும் மகான் தன்மை ஆகியவை சேர்ந்தே தென்படட்டும். தற்போது சேவையில் இந்த சமநிலையை கோடிட்டு வையுங்கள், அப்போது வெற்றி நிறைந்தவர்கள் ஆவீர்கள்.

 

சுலோகன் :

எனது என்பதை உனது என்பதாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதாவது பாக்கியத்தின் உரிமையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

ஓம்சாந்தி