21.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! மகன் தந்தையை எடுத்துக் காட்டுவான். உங்களது மனதின் வழிமுறையை விட்டு ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். அப்போது தந்தையை நீங்கள் எடுத்துக் காட்ட முடியும்.

 

கேள்வி :

எந்தக் குழந்தைகளை பாபா அவசியம் பாதுகாக்கிறார்?

 

பதில் :

எந்தக் குழந்தைகள் உண்மையானவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாகப் பாதுகாக்கப்படுகிறார்கள். பாதுகாக்கப்படுவதில்லை என்றால் உள்ளுக்குள் நிச்சயமாக ஏதேனும் பொய் இருக்கும். படிப்பைத் தவற விடுதல், சந்தேகத்தில் வருதல் என்றால் உள்ளுக்குள் நிச்சயமாக ஏதேனும் பொய் இருக்கும். அவர்களுக்கு மாயா அடித்து வீழ்த்தி விடும்.

 

கேள்வி :

எந்தக் குழந்தைகளுக்கு மாயா காந்தமாக உள்ளது?

 

பதில் :

யார் மாயாவின் அழகினால் கவரப்படுகிறார்களோ, அவர்களுக்கு மாயா காந்தமாக உள்ளது. ஸ்ரீமத்படி நடக்கும் குழந்தைகள் கவர்ச்சிக்கப்பட மாட்டார்கள்.

 

ஓம் சாந்தி.

ஆன்மிகத் தந்தை வந்து ஆன்மிகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், இதையோ குழந்தைகள் நிச்சயம் செய்துள்ளனர் - ஆன்மிகத் தந்தை ஆன்மிகக் குழந்தை களாகிய நமக்குக் கற்பிக்கிறார். அதற்காகத் தான் பாடல் உள்ளது - ஆத்மாக்களும் பரமாத்மாவும் வெகு காலமாகப் பிரிந்து இருந்தனர்...... மூலவதனத்திலோ தனியாக இருப்பதில்லை. அங்கோ அனைவரும் சேர்ந்தே இருக்கின்றனர். தனியாக இருக்கின்றனர் என்றால் நிச்சயமாக ஆத்மாக்கள் அங்கிருந்து பிரிந்து விட்டனர். இங்கே வந்து அவரவர் பாகங்களை நடிக்கின்றனர். சதோபிரதானத்திலிருந்து இறங்கி-இறங்கி தமோபிரதானமாக ஆகின்றனர். அழைக்கின்றனர், பதீதபாவனா வந்து எங்களைப் தூய்மையாக்குங்கள். பாபாவும் சொல்கிறார், நான் ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் வருகிறேன். இந்த சிருஷ்டியின் சக்கரமே 5000 ஆண்டுகளினுடையது தான். இதற்கு முன் நீங்கள் இதை அறியாதிருந்தீர்கள். சிவபாபா புரிய வைக்கிறார் என்றால் நிச்சயமாக யாருடைய சரீரத்தின் மூலமாவது புரிய வைப்பார். மேலிருந்து ஒன்றும் அசரீரி வாக்கு ஒன்றும் வருவதில்லை. சக்தி அல்லது தூண்டுதலின் எந்த ஒரு விஷயமும் நடப்பதில்லை ஆத்மாவாகிய நீங்கள் சரீரத்தில் வந்து உரையாடல் செய்கிறீர்கள். அதுபோல் பாபாவும் சொல்கிறார், நானும் சரீரத்தின் மூலம் கட்டளை தருகிறேன். பிறகு அதன்படி யார் எந்த அளவுக்கு நடக்கிறார்களோ, அதன் மூலம் தங்களுக்குத் தான் நன்மை செய்து கொள்கிறார்கள். ஸ்ரீமத் படி நடக்கிறார்களோ, நடக்கவில்லையோ, ஆசிரியர் சொல்வதைக் கேட்கிறார்களோ, கேட்கவில்லையோ, அவர்கள் தங்களுக்குத் தாங்களே நன்மையோ தீமையோ செய்து கொள்கிறார்கள். படிக்கவில்லை என்றால் நிச்சயமாக ஃபெயிலாகி விடுவார்கள். இதையும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார் - சிவபாபாவிடம் கற்றுக் கொண்டு பிறகு மற்றவர்களுக்கும் கற்றுத்தர வேண்டும். தந்தை மகனை வெளிப்படுத்துவார். உலகீயத் தந்தையின் விஷயம் கிடையாது. இவர் ஆன்மிகத் தந்தை. இதையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், எந்த அளவுக்கு நாம் ஸ்ரீமத்படி நடக்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் ஆஸ்தியை அடைவோம். முழுமையாக நடப்பவர்கள் உயர்ந்த பதவி பெறுவார்கள். அவ்வாறு நடக்காதவர்கள் உயர்ந்த பதவி பெற மாட்டார்கள். பாபாவோ சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் உங்கள் பாவங்கள் நீங்கி விடும். இராவண இராஜ்யத்தில் உங்களிடம் பாவங்களோ அதிகம் சேர்ந்துள்ளன. விகாரத்தில் செல்வதால் தான் பாவாத்மாவாக ஆகின்றனர். புண்ணியாத்மா மற்றும் பாவாத்மா என்று நிச்சயமாக உள்ளனர். புண்ணியாத் மாவுக்கு முன் பாவாத்மாக்கள் போய்த் தலைவணங்குகின்றனர். மனிதர்களுக்கு இது தெரியாது, அதாவது புண்ணியாத்மாக்களாகிய தேவதைகள் தாம் பிறகு புனர்ஜென்மத்தில் வந்து-வந்து பாவாத்மா ஆகின்றனர். அவர்களோ நினைக்கின்றனர், இவர்கள் சதா புண்ணியாத்மாவாக இருப்பவர்கள் என்று. பாபா புரிய வைக்கிறார், புனர்ஜென்மம் எடுத்து-எடுத்தே சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானம் வரை வருகின்றனர். எப்போது முற்றிலும் பாவாத்மா ஆகி விடுகின்றனரோ, பிறகு பாபாவை அழைக்கின்றனர். எப்போது புண்ணியாத்மாவாக உள்ளனரோ, அப்போது நினைவு செய்வதற்கான அவசியம் இருப்பதில்லை. ஆக, இதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்க வேண்டும், சேவை செய்ய வேண்டும். பாபாவோ அனைவருக்கும் போய்ச் சொல்ல மாட்டார். குழந்தைகள் சேவை செய்வதற்கான தகுதியுள்ளவர்கள் என்றால் குழந்தைகள் தான் செல்ல வேண்டும். மனிதர்களோ நாளுக்கு நாள் அசுரர்களாக ஆகிக் கொண்டே இருக்கின்றனர். அறிமுகம் இல்லாத காரணத்தால் வீண் வார்த்தை சொல்வதற்கும் தயங்குவதில்லை. மனிதர்கள் சொல்கின்றனர், கீதையின் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்று. அவரோ தேகதாரி, அவர் தேவதா எனச் சொல்லப்படுகிறார் என நீங்கள் புரிய வைக்கிறீர்கள். கிருஷ்ணரைத் தந்தை எனச் சொல்ல மாட்டார்கள். அனைவருமே தந்தையை நினைவு செய்கிறார்கள் இல்லையா? ஆத்மாக்களின் தந்தையோ வேறு யாரும் கிடையாது. இந்தப் பிரஜாபிதா பிரம்மாவும் கூடச் சொல்கிறார் - நிராகார் தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்று. இவர் சாகாரத் தந்தை ஆகிறார். புரிய வைக்கப் படுவதோ அதிகம். அநேகர் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் தலைகீழான வழியைப் பெற்றுக் காட்டில் போய் இருந்து கொள்கின்றனர். பாபாவோ சொர்க்கத்திற்குச் செல்வதற்கான வழி சொல்கிறார். இருந்தாலும் காட்டுக்குச் சென்று விடுகின்றனர். பாபா புரிய வைக்கிறார், உங்களைக் காட்டுக்கு அழைத்துச் செல்பவன் இராவணன். நீங்கள் மாயாவிடம் தோற்றுப் போகிறீர்கள். வழியை மறந்து விடுகிறீர்கள் என்றால் பிறகு அந்தக் காட்டின் முள்ளாக ஆகி விடுகிறீர்கள். அவர்கள் பிறகு சொர்க்கத்தில் தாமதமாக வருவார்கள். இங்கே நீங்கள் வந்திருப்பதே சொர்க்கத்திற்குச் செல்வதற்கான புருஷார்த்தம் செய்வதற்காக. திரேதாயுகத்தையும் கூட சொர்க்கம் எனச் சொல்ல முடியாது. 25 சதவிகிதம் குறைந்து விட்டது இல்லையா? அவர்கள் ஃபெயிலாகி விட்டதாகக் கணக்கிடப் படுவார்கள். நீங்கள் இங்கே வந்திருப்பதே பழைய உலகத்தை விட்டுப் புது உலகம் செல்வதற்காக. திரேதாவைப் புது உலகம் எனச்சொல்ல மாட்டார்கள். ஃபெயிலானவர்கள் அங்கே சென்று விடுகின்றனர். ஏனென்றால் வழியைச் சரியான முறையில் அவர்கள் பிடித்துக் கொள்ளவில்லை. மேலே கீழே ஆகிக் கொண்டே உள்ளனர். நீங்கள் உணர்கிறீர்கள், எந்த மாதிரி நினைவு இருக்க வேண்டுமோ, அது இருப்ப தில்லை. சொர்க்கவாசியாக யார் ஆகிறார்களோ, அவர்கள் நல்லமுறையில் பாஸானதாகச் சொல்வார்கள். திரேதாயுகத்தில் வருபவர்கள் ஃபெயிலானதாகக் கணக்கிடப்படுவார்கள். நீங்கள் நரகவாசியாக இருந்து, சொர்க்கவாசி ஆகிறீர்கள். இல்லையென்றால் பிறகு ஃபெயிலாகி விட்டதாகச் சொல்லப்படுவார்கள். அந்தப் படிப்பிலோ உலகீய கல்வியிலோ பிறகு மறுபடியும் படிக்கின்றனர். இதில் இரண்டாம் வருடம் படிப்பதற்கான விஷயமே கிடையாது. கல்பத்திற்கு முன் போலவே பல பிறவிகளாக, கல்ப-கல்பமாக அதே பரீட்சையைப் பாஸ் செய்கிறார்கள். இந்த டிராமாவின் இரகசியத்தை நல்லபடியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அநேகர் நினைக்கின்றனர், நம்மால் செல்ல முடியாது என்று. முதியவர்கள் என்றால் அவர்களைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்வீர்களானால் செல்வார்கள். இல்லை யென்றால் கீழே விழுந்து விடுவார்கள். ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் மலராக ஆக்குவதற்காக எவ்வளவு தான் தீவிர முயற்சி செய்தாலும் ஆவதில்லை. எருக்கம்பூவும் இருக்கவே செய்கிறது. இந்த முட்களோ குத்தும்.

 

பாபா எவ்வளவு சொல்லிப் புரிய வைக்கிறார்! நேற்று நீங்கள் எந்த சிவனுக்குப் பூஜை செய்தீர்களோ, அவர் இன்று உங்களுக்குப் படிப்பு கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு விஷயத்திலும் புருஷார்த்தத்திற்காகத் தான் வலியுறுத்தப்படுகின்றது. பார்க்கப் படுகின்றது - மாயா நல்ல-நல்ல பூக்களைக் கீழே வீழ்த்தி விடுகின்றது. இணைப்பைத் துண்டித்து விடுகின்றது. பிறகு அவர்கள் துரோகிகளாகி விடுகின்றனர். ஒரு ராஜ்யத்தை விட்டு வேறொன்றுக்குச் சென்று விடுபவர்கள் துரோகிகள் என அழைக்கப்படுகின்றனர். பாபாவும் சொல்கிறார், என்னுடையவர்களாக ஆகிப் பிறகு மாயாவுடையவர்களாக ஆகி விட்டார்கள் என்றால் அவர்களும் துரோகி என்றே அழைக்கப்படுவார்கள். அவர்களின் நடத்தையே அதுபோல் ஆகி விடுகின்றது. இப்போது பாபா மாயாவிடமிருந்து விடுவிப்பதற்காக வந்துள்ளார். குழந்தைகள் சொல்கின்றனர், மாயா மிகவும் கொடியது. தன் பக்கமாக அதிகம் இழுத்து விடுகின்றது. மாயா காந்தம் போன்றது. இச்சமயம் காந்தத்தின் ரூபத்தை எடுத்துக் கொள்கின்றது. எவ்வளவு அழகு (வசீகர விசயங்கள்) உலகத்தில் அதிகரித்து விட்டுள்ளது! முன்பு இந்த சினிமாவெல்லாம் இருந்ததில்லை. இவையனைத்தும் 100 வருடங்களில் வெளி வந்துள்ளன. (பிரம்மா) பாபாவோ அனுபவி இல்லையா? ஆக, குழந்தைகள் இந்த டிராமாவின் ஆழமான ரகசியத்தை நல்லபடியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு விஷயமும் மிகச்சரியாக விதிக்கப்பட்டுள்ளது. 100 வருடங்களில் இது சொர்க்கம் போல் ஆகி விட்டது, எதிர்ப்புக்காக. ஆக, புரிய வைக்கப்படுகின்றது - இப்போது சொர்க்கம் விரைவிலேயே வரப் போகின்றது. அறிவியலும் அதிகம் பயன் படுகின்றது. இதுவோ அதிக சுகம் கொடுப்பதாகவும் உள்ளது இல்லையா? அந்த சுகம் நிரந்தரமானதாக ஆக வேண்டும். அதற்காக இந்தப் பழைய உலகத்தின் விநாசமும் ஆக வேண்டும். சத்யுகத்தின் சுகமே பாரதத்தின் பாக்கியத்தில் உள்ளது. அவர்களோ (மற்ற தர்மத்தினர்) வருவதே பின்னால் தான். எப்போது பக்தி மார்க்கம் ஆரம்பமாகிறதோ, எப்போது பாரதவாசிகள் கீழே இறங்குகின்றனரோ, அப்போது மற்ற தர்மத்தினர் வரிசைக்கிரமமாக வருகின்றனர். பாரதம் கீழே இறங்கி-இறங்கியே முற்றிலும் தரை மட்டத்திற்கு வந்து விடுகின்றது. பிறகு மேலேற வேண்டும். இங்கேயும் மேலேறுகின்றனர், பிறகு கீழே இறங்குகின்றனர். எவ்வளவு கீழே இறங்குகின்றனர்! கேட்கவே வேண்டாம். பாபா நமக்கு ஆன்மீகக் கல்வியை கற்றுத்தருகிறார் என்பதை சிலரோ ஏற்றுக் கொள்வதே இல்லை. நல்ல-நல்ல சேவாதாரிகள், பாபாவினால் மகிமை செய்யப்/படுபவர்களும் மாயாவின் பிடியில் வந்து விடுகின்றனர். குஸ்தி நடைபெறுகின்றது இல்லையா? மாயாவும் அதுபோல் சண்டை யிடுகின்றது. முற்றிலுமாகக் கீழே வீழ்த்தி விடுகின்றது. இன்னும் போகப் போக குழந்தைகள் உங்களுக்குத் தெரிந்து கொண்டே போகும். மாயா முற்றிலும் முழுமையாக உறங்க வைத்து விடுகின்றது. பிறகும் கூட பாபா சொல்கிறார், ஒரு முறை ஞானம் கேட்டு விட்டால் சொர்க்கத்தில் நிச்சயம் வந்து விடுவார்கள். மற்றப்படி பதவியோ அடைய முடியாது இல்லையா? கல்பத்திற்கு முன் யார் எந்த மாதிரி புருஷார்த்தம் செய்துள்ளனரோ, அல்லது புருஷார்த்தம் செய்து-செய்து கீழே இறங்கியுள்ளனரோ, அப்படியே இப்போதும் விழுவதும் உயர்ந்து செல்வதுமாக உள்ளனர். வெற்றி மற்றும் தோல்வி உள்ளது இல்லையா? அனைத்துமே குழந்தைகளின் நினைவின் ஆதாரத்தில் உள்ளது. குழந்தைகளுக்கு இந்த அளவற்ற கஜானா கிடைக்கின்றது. அவர்களோ எவ்வளவு லட்சக்கணக்கில் திவாலா ஆகின்றனர்! சிலர் லட்சங் களுக்கு செல்வந்தர் ஆகின்றனர். அதுவும் ஒரு ஜென்மத்துக்கு. அடுத்த ஜென்மத்தில் இவ்வளவு செல்வம் இருக்காது. கர்மபோகமும் அதிகம் உள்ளது. அங்கே சொர்க்கத்திலோ கர்மபோகத்தின் விஷயமே கிடையாது. இச்சமயம் நீஙகள் 21 பிறவிகளுக்கு எவ்வளவு சேமிக்கிறீர்கள்! யார் முழுமையாகப் புருஷார்த்தம் செய்கின்றனரோ, அவர்கள் முழுமையாக சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைகின்றனர். புத்தியில் இருக்க வேண்டும், நாம் நிச்சயமாக சொர்க்கத்தின் ஆஸ்தி பெறுகிறோம். மீண்டும் நாம் கீழே இறங்கப் போகிறோம் என்ற சிந்தனை செய்யக் கூடாது. இவர் அனைவரைக் காட்டிலும் அதிகமாகக் கீழே இறங்கியவர், இப்போது மீண்டும் மேலேறிச் செல்ல வேண்டும். தானாகவே புருஷார்த்தமும் நடைபெற்றுக் கொண்டே உள்ளது. பாபா புரிய வைக்கிறார் - பாருங்கள், மாயா எவ்வளவு சக்தி வாய்ந்ததாக உள்ளது! மனிதர்களுக்குள் எவ்வளவு அஞ்ஞானம் நிரம்பியுள்ளது! அஞ்ஞானத்தின் காரணத்தால் பாபாவையே சர்வவியாபி எனக் கூறி விடுகின்றனர். பாரதம் எவ்வளவு முதல்தரமானதாக இருந்தது! நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் இதுபோல் இருந்தோம், இப்போது மீண்டும் ஆகிக் கொண்டிருக்கிறோம். இந்த தேவதைகளுக்கு எவ்வளவு மகிமை உள்ளது! ஆனால் குழந்தைகளாகிய உங்களைத் தவிர யாரும் இதை அறிந்து கொள்ளவில்லை. நீங்கள் தான் அறிவீர்கள், எல்லையற்ற தந்தையாகிய ஞானக்கடல் வந்து நமக்கு கல்வியை கற்றுத் தருகிறார். பிறகும் மாயா அநேகரை சந்தேகத்தில் கொண்டு வந்து விடுகின்றது. பொய்- கபடத்தை விடுவதில்லை. அதனால் பாபா சொல்கிறார் உங்களுடைய உண்மையான சார்ட்டை எழுதுங்கள். ஆனால் தேக அபிமானத்தின் காரணத்தால் உண்மை சொல்வதில்லை. ஆக, அதுவும் விகர்மமாக ஆகி விடுகின்றது. அனைத்தையும் சொல்ல வேண்டும் இல்லையா? இல்லையென்றால் அதிக தண்டனை பெற நேரிடும். கர்ப்ப ஜெயிலிலும் கூட அதிக தண்டனை கிடைக்கின்றது. பாவச் செயலை மீண்டும் செய்ய மாட்டோம்-செய்ய மாட்டோம்....... என உறுதி அளிக்கின்றனர். எப்படி யாருக்காவது அடி கிடைத்தாலும் இதுபோல் மன்னிப்புக் கேட்கின்றனர். தண்டனை கிடைக்கும் போதும் இதுபோல் சொல்கின்றனர். இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டீர்கள், மாயாவின் இராஜ்யம் எப்போதிருந்து ஆரம்பமானது என்று. பாவம் செய்து கொண்டே உள்ளனர். பாபா பார்க்கிறார் - இவர் அவ்வளவு இனிமையிலும் இனிமையான மென்மையானவராக ஆவதில்லை. பாபா எவ்வளவு மென்மையான குழந்தைகளைப் போல் நடந்து கொள்கிறார்! ஏனென்றால், டிராமாவின் படி நடந்து சென்று கொண்டே இருக்கிறார். டிராமாவில் எது நடக்கவிருந்ததோ, அது தான் நடந்தது எனச் சொல்வார். இனி இப்படி இருக்கக் கூடாது என்று புரிய வைக்கவும் செய்கிறார் - பாப்தாதா இருவரும் சேர்ந்து இருக்கின்றனர் இல்லையா? தாதாவின் வழிமுறை அவருடையது. ஈஸ்வரனின் வழிமுறை ஈஸ்வரனுடையது. புரிந்து கொள்ள வேண்டும், இந்த வழிமுறையை யார் தருகிறார் என்று. இவரும் கூட தந்தை தான் இல்லையா? தந்தை சொல்வதையோ ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். பாபாவோ பெரியவர் இல்லையா? அதனால் பிரம்மா பாபா சொல்கிறார், சிவபாபா தான் சொல்கிறார் எனப் புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொள்ளவில்லை என்றால் பதவியும் அடைய மாட்டார்கள். டிராமாவின் திட்டப்படி தந்தையும் இருக்கிறார், தாதாவும் இருக்கிறார். தந்தையின் ஸ்ரீமத் கிடைக்கின்றது. மாயா மகாவீர், பயில்வானையும் கூட ஏதாவது தலைகீழான காரியம் செய்ய வைத்து விடுகின்றது மாயா அப்படிப்பட்டது . இவர் பாபாவின் அறிவுரைப்படி நடக்கவில்லை என்று அப்போது புரிய வைக்கப்படுகிறது. தாங்களே கூட உணர்கின்றனர், நான் என்னுடைய அசுர வழிப்படி நடக்கிறேன் என்று. ஸ்ரீமத் தருபவர் வந்து எதிரிலேயே உள்ளார். அவருடையது ஈஸ்வரிய வழிமுறை. பாபா தாமே சொல்கிறார், இவருடைய (பிரம்மா) அறிவுரை அதுபோல் கிடைத்தாலும் கூட அவரை சரி செய்வதற்கு நான் அமர்ந்துள்ளேன். நான் இந்த ரதத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன் இல்லையா? அதனால் இவர் நிந்தனை பெற்றார். இல்லையென்றால் அவர் ஒருபோதும் நிந்தனை பெற்றதில்லை. எனது காரணத்தால் எவ்வளவு நிந்தனைகளைப் பெறுகிறார்! ஆக, இவரையும் பாதுகாக்க வேண்டும். பாபா நிச்சயமாகப் பாதுகாப்பளிக்கின்றார். குழந்தைகளைத் தந்தை பாதுகாக்கிறார் இல்லையா? எவ்வளவு உண்மையாக நடந்து கொள்கின்றனரோ, அவ்வளவு பாதுகாப்பு கிடைக்கின்றது. பொய்யானவர்களுக்குப் பாதுகாப்புக் கிடையாது. அவர்களுக்கோ தண்டனை நிலையாக ஆகி விடுகின்றது. அதனால் பாபா புரிய வைக்கிறார் - மாயாவோ ஒரேயடியாக மூக்கைப் பிடித்து அழித்து விடுகின்றது. குழந்தைகள் தாங்களே உணர்கின்றனர், மாயா விழுங்கி விடுகின்றது என்றால் பிறகு படிப்பை விட்டு விடுகின்றனர். பாபா சொல்கிறார், பாபா தரும் கல்வியை அவசியம் படியுங்கள். நல்லது, யாராவது ஒருவரின் தோஷமாகவும் கூட இருக்கட்டும். இதில் ஒருவர் எப்படிச் செய்கிறாரோ, வருங்காலத்தில் அதை அடைவார். ஏனென்றால் இப்போது உலகம் மாறிக் கொண்டுள்ளது. மாயா அப்படிக் குத்து விட்டு விடுகின்றது, அந்தக் குஷி இருப்பதில்லை. பிறகு கதறுகின்றனர் - பாபா, என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று. யுத்த மைதானத்தில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர். யாராவது எதிரிகள் அடி கொடுத்து விடக் கூடாதே என்று. பிறகும் கூட அதிக பலசாலிகள் என்றால் மற்றவர்களை வீழ்த்தி விடுவார்கள். பிறகு அடுத்த நாளுக்கு வைத்துக் கொள்வார்கள் இந்த மாயாவின் யுத்தமோ கடைசி வரை நடந்து கொண்டே இருக்கும். மேலே கீழே ஆகிக் கொண்டே இருப்பார்கள். அநேகக் குழந்தைகள் உண்மை சொல்வதில்லை. தனது சுயகௌரவம் பற்றி அதிக பயம் உள்ளது - பாபா என்ன சொல்வாரோ தெரியாது. எதுவரை உண்மையைச் சொல்லவில்லையோ, அதுவரை முன்னே செல்ல முடியாது. உள்ளுக்குள் அரித்துக் கொண்டே இருக்கும். பிறகு அது அதிகரித்து விடும். தாங்களாகவே உண்மையை ஒருபோதும் சொல்வதில்லை. எங்காவது இருவர் இருந்தால் இவர் பாபாவிடம் சொல்வாரானால் நாமும் சொல்லலாம் என நினைத்திருப்பார்கள். மாயா மிகவும் கொடியது. புரிய வைக்கப்படுகிறது, அதாவது அவர்களது அதிர்ஷ்டத்தில் இவ்வளவு உயர்ந்த பதவி இல்லை என்றால் சர்ஜனிடம் மறைத்து விடுகின்றனர். மறைப்பதால் நோய் விட்டுப் போவதில்லை. எவ்வளவு மறைக்கின்றனரோ, அவ்வளவு கீழே விழுந்து கொண்டே இருப்பார்கள். பூதங்களோ அனைவரிடமும் உள்ளன இல்லையா? எதுவரை கர்மாதீத் நிலை ஏற்படவில்லையோ, அதுவரை குற்றமான பார்வையும் விடுவதில்லை. அனைத்திலும் பெரிய விரோதி காமமாகும். அநேகர் அதனால் கீழே விழுந்து விடுகின்றனர். பாபாவோ அடிக்கடி புரிய வைக்கிறார் சிவபாபாவைத் தவிர எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது. அநேகரோ அப்படி பக்காவாக உள்ளனர், ஒருபோதும் எவருடைய நினைவும் வராது. பதிவிரதா ஸ்திரீகள் உள்ளனர் இல்லையா? அவர்களுக்குத் தீய புத்தி கிடையாது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) நமக்குப் படிப்பு சொல்லித் தருபவர் சுயம் ஞானக்கடலாகிய எல்லையற்ற தந்தை. இதில் ஒருபோதும் சந்தேகம் வரக்கூடாது. பொய், கபடத்தை விட்டு, தன்னுடைய உண்மையிலும் உண்மையான சார்ட் வைக்க வேண்டும். தேக அபிமானத்தில் வந்து ஒருபோதும் துரோகி ஆகக் கூடாது.

 

2) டிராமாவை புத்தியில் வைத்து பாபாவுக்கு சமமாக மிகமிக இனிமையானவராக, மென்மையானவராக ஆகி இருக்க வேண்டும். தனது அகங்காரத்தைக் காட்டக் கூடாது. தனது வழிமுறையை விட்டுவிட்டு ஒரு பாபாவின் உயர்வான வழிப்படி நடக்க வேண்டும்.

 

வரதானம்:

துணைவரை எப்போதும் உடன் வைத்துக் கொண்டு சகயோகத்தின் அனுபவத்தை செய்யக் கூடிய இணைந்த சொரூபமானவர் ஆகுக.

 

விளக்கம்:

நீங்களும் பாபாவும் - இப்படி யாராலும் பிரிக்க முடியாதவாறு இணைந்திருங்கள். ஒரு போதும் தன்னை தனிமையில் இருப்பவராக புரிந்து கொள்ளாதீர்கள். பாப்தாதா அழிவற்ற துணையை கொடுக்கக் கூடியவராக உங்கள் அனைவரின் துணைவராக இருக்கின்றார். பாபா என்று சொன்னாலே பாபா ஆஜராகி விடுவார். நாம் பாபாவுடையவர்கள், பாபா நம்முடையவர். பாப்தாதா உங்களுடைய எல்லா சேவையிலும் சகயோகம் கொடுப்பவர் ஆவார், தம்முடைய இணைந்த சொரூபத்தின் ஆன்மீக போதையில் மட்டும் இருங்கள்.

 

சுலோகன்:

சேவை மற்றும் சுய முன்னேற்றம் இந்த இரண்டின் சமநிலை இருந்தது என்றால் எப்போதும் வெற்றி கிடைத்தபடி இருக்கும்.

 

ஓம்சாந்தி