19.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் ஒரு தந்தை கூறுவதை மட்டும் தான் கேட்க வேண்டும். கேட்டு, மற்றவர்களுக்கும் கூற வேண்டும்.

 

கேள்வி:

மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்காக பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு என்ன புரிய வைத்திருக்கிறார்?

 

பதில்:

ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என பாபா புரிய வைத்திருக்கிறார். நீங்கள் ஒரு பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். இந்த விஷயத்தை நீங்கள் அனைவருக்கும் கூறுங்கள். ஏனென்றால் நீங்கள் முழு உலகத்தில் இருக்கும் சகோதரர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். நீங்கள் தான் இந்த சேவைக்கு நிமித்தமாக இருக்கிறீர்கள்.

 

ஓம் சாந்தி.

ஓம் சாந்தி என பெரும்பாலும் ஏன் சொல்லப்படுகிறது? இதுவே அறிமுகம் கொடுத்தல் ஆகும். ஆத்மாவின் அறிமுகத்தை ஆத்மா தான் கொடுக்கிறது. ஆத்மா தான் சரீரத்தின் மூலமாகப் பேசுகிறது. ஆத்மா இல்லாமல் சரீரம் எதையும் செய்ய முடியாது. எனவே இந்த ஆத்மா (சிவபாபா) தனது அறிமுகத்தைக் கொடுக்கிறது. நாம் ஆத்மாக்கள் பரம்பிதா பரமாத்மாவின் வாரிசு. அவர்களோ ஆத்மாவே பரமாத்மா என கூறுகிறார்கள். குழந்தை களாகிய உங்களுக்கு இந்த விஷயங்கள் அனைத்தும் புரிய வைக்கப்படுகிறது. தந்தை குழந்தைகளே, குழந்தைகளே என கூறுவார் அல்லவா? ஆன்மீகக் குழந்தைகளே! இந்த உடல் மூலமாக நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள் என ஆன்மீகத் தந்தை கூறுகிறார். முதன் முதலில் ஞானம் பிறகு பக்தி என பாபா புரிய வைக்கிறார். முதலில் பக்தி பிறகு ஞானம் என்பதல்ல. முதலில் ஞானம் பகல், பக்தி இரவு. பிறகு பகல் எப்போது வந்தது. பக்தியின் மீது வைராக்கியம் ஏற்படும் போது வருகிறது. இது உங்களுடைய புத்தியில் இருக்க வேண்டும் ஞானம் மற்றும் விஞ்ஞானம் இருக்கிறது அல்லவா? இப்போது நீங்கள் ஞானத்தின் கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு சத்யுகம் திரேதாவில் உங்களுக்கு ஞானத்தின் (பலன்) சொத்து கிடைக்கிறது. பாபா இப்போது ஞானத்தைக் கொடுக்கிறார். இதனுடைய சொத்து சத்யுகத்தில் கிடைக்கும். இது புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா? இப்போது பாபா உங்களுக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் ஞானத்திலிருந்து விடுபட்டு விஞ்ஞானமாகிய தனது வீடாகிய சாந்திதாமத்திற்குச் செல்வோம் என அறிகிறீர்கள். அதை ஞானம் என்றோ, பக்தி என்றோ கூற முடியாது. அதற்கு விஞ்ஞானம் என்று பெயர். ஞானத்தைக் கடந்து சாந்தி தாமத்திற்குச் சென்றுவிடுகிறார்கள். இந்த ஞானம் அனைத்தும் புத்தியில் இருக்க வேண்டும். பாபா எங்கே செல்வதற்காக ஞானத்தைக் கொடுக்கின்றார்? எதிர்கால புது உலகத்திற்காகக் கொடுக்கிறார். புது உலகிற்குச் செல்ல வேண்டும் என்றால் முதலில் நிச்சயமாக நமது வீட்டிற்குச் செல்வோம். முக்திதாமத்திற்குப் போக வேண்டும். ஆத்மாக்களின் வசிப்பிடம் எதுவோ அங்கே நிச்சயம் போவோம் அல்லவா? இந்த புதுப்புது விஷயங்களை நீங்கள் தான் கேட்கிறீர்கள். வேறு யாரும் புரிந்துக் கொள்ள முடியாது. ஆத்மாக்களாகிய நாம் ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தை என புரிந்துக் கொள்கிறீர்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு நிச்சயமாக ஆன்மீகத் தந்தை வேண்டும். ஆன்மீகத் தந்தை மற்றும் ஆன்மீகக் குழந்தைகள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை ஒருவரே ஆவார். அவரே வந்து ஞானத்தைக் கொடுக்கிறார். பாபா எப்படி வருகிறார்? அதுவும் புரிய வைக்கப்பட்டுள்ளது. நானும் இயற்கையின் ஆதாரத்தை எடுக்க வேண்டியிருக்கிறது என பாபா கூறுகிறார். இப்போது நீங்கள் பாபா கூறுவதைத் தான் கேட்க வேண்டும். பாபாவைத் தவிர வேறு யாரிடமும் கேட்கக் கூடாது. குழந்தைகள் கேட்டு பிறகு பிற சகோதரர்களுக்குக் கூறுகிறார்கள். ஏதாவது கொஞ்சம் நிச்சயம் கூறுகிறார்கள். தன்னை ஆத்மா என உணருங்கள், தந்தையை நினையுங்கள். ஏனென்றால், அவரே பதீத பாவனர். புத்தி அங்கே சென்றுவிடுகிறது. குழந்தைகளுக்குப் புரிய வைப்பதால் புரிந்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் முதலில் முட்டாளாக இருந்தார்கள். பக்தி மார்க்கத்தில் புரிந்துக் கொள்ளாமல் இராவணணின் தொடர்பில் (பிடியில்) வந்ததால் என்ன செய்கிறார்கள். எப்படி சீச்சீ ஆகி விட்டார்கள். மது அருந்துவதால் எப்படி மாறுகிறார்கள். மது அழுக்கை இன்னும் பரப்புகிறது. எல்லையற்ற தந்தையிடமிருந்து நாம் சொத்து அடைய வேண்டும் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது. கல்பம் கல்பமாக அடைந்துக் கொண்டே வந்தீர்கள். ஆகையால் தெய்வீக குணங்களையும் நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். கிருஷ்ணனின் தெய்வீக குணங்களுக்கு எவ்வளவு மகிமைகள் உள்ளது. வைகுண்டத்திற்கே அதிபதி, எவ்வளவு இனிமையாக இருக்கிறது. இப்பொழுது கிருஷ்ணரின் இராஜ வம்சம் என்று கூற முடியாது. விஷ்ணு அல்லது லட்சுமி நாராயணனின் வம்சம் என்று தான் கூறுவார்கள். இப்பொழுது பாபா தான் சத்யுக இராஜ்யத்தின் வம்சத்தை ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இந்த சித்திரங்கள் இல்லை என்றாலும் புரிய வைக்கலாம். நிறைய கோவில்களைக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எவரிடம் ஞானம் இருக்கிறதோ அவர்கள் மற்றவர்களுக்கும் நன்மை செய்வதற்காக, தனக்குச் சமமாக மாற்றுவதற்காக ஓடிக் கொண்டே இருப்பார்கள். நாம் எத்தனை பேருக்கு ஞானம் கூறினோம் என தன்னையே சோதித்துப் பாருங்கள். சிலருக்கு உடனடியாக ஞானத்தின் அம்பு பாய்கிறது. பீஷ்ம பிதாமகர் போன்றோர் கூட எங்களுக்கு குமாரிகள் ஞான அம்பை செலுத்தினார்கள் என கூறினார்கள் அல்லவா? இவர்கள் அனைவரும் தூய்மையான குமார் குமாரிகள். அதாவது குழந்தைகள் ஆவர். நீங்கள் அனைவரும் குழந்தைகள்! ஆகவே நாங்கள் பிரம்மாவின் குழந்தைகள் குமார் குமாரிகள், சகோதரன் சகோதரிகள் என கூறுகிறீர்கள். இது தூய்மையான உறவு ஆகும். இருப்பினும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். பாபா தத்தெடுத்துள்ளார். சிவபாபா பிரஜாபிதா பிரம்மா மூலமாகத் தத்தெடுத்திருக்கிறார். உண்மையில் தத்தெடுக்கப்பட்ட என்ற வார்த்தை கூட கூற முடியாது. சிவபாபாவின் குழந்தைகள் தானே? அனைவரும் சிவபாபா சிவபாபா வாருங்கள் என்று என்னை அழைக்கிறார்கள். ஆனால் எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. அனைத்து ஆத்மாக்களும் சரீரத்தை எடுத்து நடித்துக் கொண்டு இருக்கின்றன. சிவபாபா கூட சரீரத்தின் மூலமாக நடிப்பார் அல்லவா! சிவபாபா நடிக்கவே இல்லை என்றால், அவர் எதற்குமே பயனில்லை என்றாகிறது அல்லவா! மதிப்பும் இல்லை. முழு உலகத்தையும் சத்கதி அடைய வைக்கும் பொழுதுதான் அவருக்கு மதிப்பு ஏற்படுகிறது. பக்திமார்க்கத்தில் அவருடைய புகழைப் பாடுகிறார்கள். சத்கதி அடைந்த பிறகு பாபாவை நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் காட்ஃபாதர் என்று கூறும் போது டீச்சர் மறைந்து போகிறது. பரம்பிதா பரமாத்மா தூய்மையாக்கக்கூடியவர் என்று மட்டும் கூறுகிறார்கள். சத்கதி அளிப்பவர் என்று கூறுவதில்லை. அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒருவரே என பாடியிருக் கிறார்கள். ஆனால் பொருள் புரியாமல் கூறிவிட்டார்கள். இப்பொழுது நீங்கள் எதைக் கூறினாலும் அர்த்தத்துடன் கூறுகிறீர்கள். பக்தி என்பது இரவு, அது தனி, ஞானம் என்பது பகல் தனி என புரிந்து கொள்கிறீர்கள். பகலுக்கு என்று நேரம் இருக்கிறது. பக்திக்கு என்று நேரம் இருக்கிறது. இது எல்லையற்ற விஷயம். குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற ஞானம் கிடைத் திருக்கிறது. அரைக் கல்பம் பகல், அரை கல்பம் இரவு. நான் இரவைப் பகலாக மாற்று வதற்காக வருகிறேன் என பாபா கூறுகின்றார்.

 

அரைக் கல்பமாக இராவணனின் இராஜ்யம். அதில் பல்வேறு விதமாக துக்கங்கள் இருக்கிறது என உங்களுக்குத் தெரியும். மீண்டும் பாபா புது உலகத்தை ஸ்தாபனை செய்கிறார் என்றால் அதில் சுகமே சுகம். இது சுகம் மற்றும் துக்கத்தின் விளையாட்டு என கூறப்படு கிறது. சுகம் என்றால் இராம், துக்கம் என்றால் இராவணன். இராவணனை வெற்றி அடைந்து விட்டால் இராம இராஜ்யம் வருகிறது, பிறகு அரைக்கல்பத்திற்குப் பிறகு இராவணன் இராம இராஜ்யத்தை வெற்றி அடைந்து ஆட்சி செய்கின்றான். இப்பொழுது மாயையை வெற்றி அடைகிறீர்கள். ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் புரியும்படி கூறுகிறீர்கள். இது உங்களுடைய ஈஸ்வரிய மொழியாகும். இதை வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. ஈஸ்வர் எப்படி பேசுகின்றார். இது காட்ஃபாதரின் மொழி. ஏனென்றால் காட்ஃபாதர் ஞானம் நிறைந்தவர் என அறிகிறீர்கள். அவர் ஞானக்கடல், ஞானம் நிறைந்தவர் என பாடப்பட்டு இருக்கிறது என்றால் நிச்சயமாக யாருக்காவது ஞானம் கொடுப்பார் அல்லவா? இப்பொழுது பாபா எப்படி ஞானம் கொடுப்பார் என நீங்கள் அறிகிறீர்கள். தன்னுடைய அறிமுகத்தையும் கொடுக்கிறார். மேலும் சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானத்தையும் தருகிறார். இந்த ஞானத்தை அடைவதால் நாம் சக்கரவர்த்தி இராஜா ஆகின்றோம். சுயதரிசன சக்கரம் அல்லவா? நினைவு செய்வதால் நம்முடைய பாவங்கள் அழிந்து போகும் . இது உங்களுடைய நினைவின் அகிம்சை சக்கரம் ஆகும். அது தலையை வெட்டக் கூடிய இம்சையின் சக்கரம் ஆகும். அந்த அறியாமை மனிதர்கள் ஒருவருக்கொருவர் தலையை வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் இந்த சுயதரிசன சக்கரத்தை அறிந்து கொள்வதால் சக்கரவர்த்தி பதவியைப் பெறுகிறீர்கள். காமம் மிகப் பெரிய எதிரி. இதன் மூலம் முதல் இடை கடை துக்கம் கிடைக்கிறது. அது துக்கத்தின் சக்கரமாகும். இந்த சக்கரத்தின் ஞானத்தை பாபா உங்களுக்குப் புரிய வைக்கிறார். சுயதரிசன சக்கரதாரி ஆக்கிவிடுகிறார் அல்லவா? சாஸ்திரங்களில் எத்தனை கதைகளை எழுதியிருக் கிறார்கள். இப்பொழுது நீங்கள் அது அனைத்தையும் மறக்க வேண்டும். ஒரு தந்தையை மட்டும் நினையுங்கள். ஏனென்றால் ஒரு தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியை அடையலாம். தந்தையை நினைக்க வேண்டும். மேலும் ஆஸ்தி அடைய வேண்டும். எவ்வளவு எளிதாக இருக்கிறது. எல்லையற்ற தந்தை புது உலகத்தை ஸ்தாபனை செய்கிறார் என்றால் சொத்து அடைவதற்காகத் தான் நினைவு செய்கிறீர்கள். இதுவே மன்மனாபவ, மத்யாஜிபவ ஆகும். அப்பா மற்றும் சொத்தை நினைவு செய்யும் போது குழந்தைகளுக்கு குஷியின் அளவு அதிகரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நாம் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள், பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார், நாமே அதிபதியாக இருந்தோம், மீண்டும் நிச்சயம் மாறுவோம். பிறகு நீங்களே நரகவாசி ஆகிறீர்கள். சதோபிரதானமாக இருந்தீர்கள், இப்பொழுது தமோபிரதானம் ஆகியிருக்கிறீர்கள். பக்திமார்க்கத்தில் கூட நாம் தான் வந்தோம். சக்கரம் முழுவதும் சுற்றியிருக் கிறோம். நாம் தான் பாரதவாசி, சூரிய வம்சத்தினராக இருந்தோம். பிறகு சந்திரவம்சம், வைசிய வம்சம் ..... கீழே விழுந்திருக்கிறோம். பாரத வாசிகளாகிய நாம் தேவி தேவதைகளாக இருந்தோம். நாமே விழுந்திருக்கிறோம். இப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது. வாமமார்க்கத்தில் (வழி மாறி) சென்றதால் எவ்வளவு மோசமாக மாறியிருக்கிறோம். கோவில்களில் கூட மோசமான சீச்சீ சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். முன்பு கடிகாரங்களைக் கூட இப்படிப்பட்ட படங்களுடன் உருவாக்கினர். நாம் எவ்வளவு மலர்களாக இருந்தோம். நாமே மறுபிறவி எடுத்து எடுத்து எவ்வளவு மோசமாகியிருக்கிறோம் என இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இவர்கள் சத்யுகத்தின் அதிபதி என்றால் தெய்வீக குணங்களின் மனிதர்களாக இருந்தனர். இப்பொழுது அசுர குணங்கள் உடையவராக மாறியிருக்கிறார்கள். வேறு எந்த வித்தியாசமும் இல்லை. வாலுடைய அல்லது தும்பிக்கை உடைய மனிதர்கள் கிடையாது. தேவதைகளின் அடையாளங்கள் மட்டும் இருக்கிறது. மற்றபடி சொர்க்கம் மறைந்து போய் விட்டது. இந்த சித்திரங்கள் மட்டும் அடையாளமாக இருக்கிறது. சந்திர வம்சத்தினரின் அடையாளங்களும் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் மாயையை வெற்றி அடைவதற்காக யுத்தம் செய்கிறீர்கள். யுத்தம் செய்து செய்து தோல்வி அடைகிறார்கள் என்றால், அவர்களின் அடையாளம் வில்லும் அம்பும் ஆகும். பாரதவாசிகள் உண்மையில் தேவி தேவதா குலத்தைச் சேர்ந்தவர்கள். இல்லை யென்றால் எந்த குலம் என கணக்கிடுவது. ஆனால் பாரதவாசிகளுக்கு தனது குலத்தைப் பற்றித் தெரியாத காரணத்தினால் இந்து என கூறுகிறார்கள். இல்லையென்றால் உங்களுடையதும் ஒரே குலம் தான். பாரதத்தில் அனைவரும் தேவதா குலத்தினர். அதை எல்லையற்ற தந்தை ஸ்தாபனை செய்கிறார். பாரதத்தின் சாஸ்திரம் கூட ஒன்றுதான். தேவதா வம்சம் ஸ்தாபனை ஆகிறது. பிறகு அதில் விதவிதமாக கிளைகள் உருவாகின்றன. பாபா தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார். அடித்தளம் தேவி தேவதா தர்மம் தான். அனைவரும் முக்தி தாமத்தைச் சார்ந்தவர்கள். பிறகு நீங்கள் தன்னுடைய தேவதைகளின் கிளைகளில் சென்று விடுவீர்கள். பாரதத்தின் எல்லை ஒன்றுதான். வேறு எந்த தர்மத்தினரும் கிடையாது. இவர்கள் உண்மையான தேவதா தர்மத்தினர். பிறகு அவர்களிடம் இருந்து மற்ற தர்மங்கள் நாடகத்தின் படி உருவாகி உள்ளன. பாரதத்தின் உண்மையான தர்மம் தேவதா தர்மம் ஆகும். அதை தோற்றுவிப்பவர் தந்தை ஆவார். பிறகு புதுப்புது இலைகள் தோன்றுகின்றன. இது அனைத்தும் ஈஸ்வரிய மரம் ஆகும். நான் இந்த மரத்தின் விதை வடிவமாக இருக்கிறேன் என பாபா கூறுகின்றார். இது அடித்தளம் ஆகும். பிறகு அதிலிருந்து கிளைகள் தோன்றுகின்றன. முக்கியமான விஷயம் நாம் அனைவரும் ஆத்மாக்கள் சகோதரர்கள். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஒருவரே, அனைவரும் அவரைத்தான் நினைவு செய்கிறார்கள். இப்பொழுது இந்த கண்களினால் நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்களோ அவற்றை மறக்க வேண்டும் என பாபா கூறுகின்றார். இது எல்லையற்ற வைராக்கியம் ஆகும். அவர்களுடையது எல்லைக்குட்பட்டது ஆகும். வீடு வாசல் மீது மட்டும் வைராக்கியம் வருகிறது. உங்களுக்கோ முழு உலகின் மீது வைராக்கியம் வருகிறது. பக்திக்குப் பிறகு பழைய உலகின் மீது வைராக்கியம். பிறகு நாம் புது உலகத்திற்கு சாந்தி தாம் வழியாகச் செல்வோம். இந்த பழைய உலகம் எரியப்போகிறது என பாபா சொல்கின்றார். இப்பொழுது இந்த பழைய உலகத்தில் மனதை ஈடுபடுத்த வேண்டாம். தகுதி அடையும் வரை இங்கே தான் இருக்க வேண்டும். கணக்கு வழக்கு அனைத்தையும் முடிக்க வேண்டும்.

 

நீங்கள் அரைக்கல்பத்திற்கு சுகத்தை சேமிக்கிறீர்கள். அதனுடைய பெயரே சாந்திதாமம்- சுகதாமம் ஆகும். முதலில் சுகம் கிடைக்கிறது. பிறகு துக்கம். புதுப்புது ஆத்மாக்கள் யார் முதலில் மேலிருந்து வந்தாலும் அதாவது கிறிஸ்துவின் ஆத்மா வருகிறது என்றால் முதலில் அவர்களுக்கு துக்கம் ஏற்படாது என பாபா புரிய வைத்திருக்கிறார். முதலில் விளையாட்டில் சுகம், பிறகு துக்கம். புத்தம் புதிதாக வருபவர்கள் சதோபிரதானமாக இருக்கிறார்கள். உங்களுக்கு சுகத்தின் அளவு அதிகமாக இருப்பது போல அவர்கள் அனைவருக்கும் துக்கத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. இது அனைத்தும் புத்தியினால் புரிந்து கொள்ளப்படுகிறது. பாபா ஆத்மாக்களுக்குப் புரிய வைத்துக் கொண்டு இருக்கிறார். அவர்கள் பிறகு பிற ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார்கள். நான் இந்த சரீரத்தைத் தரித்து இருக்கிறேன் என பாபா கூறுகின்றார். பல பிறவியின் கடைசியில் அதாவது தமோபிரதான உடலில் நுழைகிறேன். பிறகு அவர் தான் முதல் எண்ணில் போக வேண்டும். முதலில் இருந்து கடைசி, கடைசியிலிருந்து முதலில். இதையும் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. முதலில் வருபவருக்குப் பின்னர் யார்? மம்மா. அவர்களுடைய நடிப்பும் வேண்டும். அவர் பலருக்கு கற்பித்திருக்கிறார். பிறகு குழந்தைகளாகிய உங்களுக்குள்ளும் வரிசைக்கிரமம் இருக்கிறது. பலருக்கு பாடம் சொல்லித் தருகிறீர்கள், படிக்க வைக்கிறீர்கள். படிப்பவர்களில் கூட சிலர் உங்களை விட முன்னேறிச் செல்கிறார்கள். ஒவ்வொருவரையும் பார்க்க வேண்டியிருக் கிறது. அனைவரின் நடத்தை தெரிகிறதல்லவா? ஒரு சிலரை மாயை, ஒரேயடியாக அழித்துவிடும் அளவிற்கு மூக்கைப் பிடித்துவிடுகிறது. விகாரங்களில் விழுந்து விடுகிறார்கள். இன்னும் செல்லச் செல்ல நீங்கள் பலருடையதைக் கேட்பீர்கள். அதிசயப்படுவீர்கள். இவர்கள் எங்களுக்கு ஞானம் கொடுத்தனர். பிறகு எப்படி ஆகிவிட்டனர்! எங்களை தூய்மை ஆகுங்கள் என கூறினர். அவர்கள் எவ்வளவு மோசமாகி விட்டனர். நிச்சயம் நினைப்பார்கள் இல்லையா? மிகவும் மோசமாகி விடுகின்றனர். மிகவும் பெரிய பெரிய நல்ல மகாரதிகளைக் கூட மாயை வேகமாக நசுக்குகிறது. நீங்கள் மாயையை மிதித்து வெற்றி அடைகிறீர்கள். மாயையும் அவ்வாறு செய்கிறது. பாபா எவ்வளவு நல்ல நல்ல ரமணீகரமான, அழகான பெயர்களை வைத்தார். ஆனால் அந்தோ பரிதாபம் மாயையின் வேலை தான்! முதலில் ஆச்சரியத்துடன் கேட்டனர், பிறருக்கு கூறினர், பிறகு ஓடியும் விட்டனர்.... விழுந்து விட்டனர். மாயை எவ்வளவு வலிமையாக இருக்கிறது. ஆகவே குழந்தைகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யுத்த மைதானம் அல்லவா? மாயாவுடன் நீங்கள் எவ்வளவு பெரிய யுத்தம் செய்கிறீர்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இங்கேயே அனைத்து கணக்கு வழக்குகளையும் முடித்து விட்டு அரைக் கல்பத்திற்கான சுகத்தை சேமிக்க வேண்டும். இந்த பழைய உலகத்தின் மீது மனதை ஈடுபடுத்தக் கூடாது. இந்த கண்களுக்கு தென்பட கூடியவைகள் அனைத்தையும் மறக்க வேண்டும்.

 

2. மாயா மிகவும் பலசாலி.அதனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். படிப்பில் வேகமாக முன்னேறிச் செல்ல வேண்டும். ஒரு பாபா கூறுவதை மட்டும் தான் கேட்க வேண்டும். அவரிடம் கேட்டவைகளை பிறருக்கும் கூற வேண்டும்.

 

வரதானம்:

எப்பொழுதும் ஒரே ரசனையின் மனநிலை மூலமாக அனைத்து ஆத்மாக்களுக்கும் சுகம், அமைதி மற்றும் அன்பின் (தானம் பிச்சை) அளிக்கக் கூடிய மகாதானி ஆவீர்களாக.

 

குழந்தைகளாகிய உங்களுடைய மனநிலை எப்பொழுதும் குஷியினுடையதாக ஒரே ரசனையில் இருக்க வேண்டும். சில சமயம் மூட் ஆஃப் - மனநிலை சரியில்லாததாக, சில சமயம் மூட் - மிகவும் குஷியாக .. .. .. அப்படி அல்ல. சதா மகாதானி ஆகுபவர்களது மூட் - மனநிலை ஒரு பொழுதும் மாறுவது இல்லை. தேவதை ஆகுபவர்கள் என்றால் கொடுப்பவர்கள். உங்களுக்கு யார் எது வேண்டுமானாலும் கொடுக்கட்டும். ஆனால் மகாதானி குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் சுகத்தின் தானம் அமைதியின் தானம், அன்பின் தானம் கொடுங்கள். உடலினுடைய சேவையுடன் கூடவே மனதாலும் அப்பேர்ப்பட்ட சேவையில் பிஸியாக - மும்முரமாக இருந்தீர்கள் என்றால் இரட்டிப்பு புண்ணியம் சேமிப்பு ஆகி விடும்.

 

சுலோகன்:

உங்களுடைய விசேஷ தன்மைகள் பிரபு பிரசாதமாகும். இவற்றை சுயம் தங்களுக்காக மட்டும் பயன்படுத்தாதீர்கள், பகிர்ந்து கொடுங்கள் மற்றும் அதிகப்படுத்துங்கள்.

 

ஓம்சாந்தி