03.10.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் தாய்-தந்தையர் எதிரில் வந்திருக்கிறீர்கள், அளவற்ற சுகத்தை அடைவதற்காக. பாபா உங்களை அளவற்ற துக்கத்திலிருந்து விடுவித்து அளவற்ற சுகங்களில் கொண்டு செல்கிறார்.

 

கேள்வி :

ஒரு தந்தை மட்டுமே தனிப்பட்டவராக (பிறவிகளிலிருந்து விலகி) இருக்கிறார். அவர் புனர்ஜென்மம் எடுப்பதில்லை. ஏன்?

 

பதில் :

ஏனென்றால் உங்களை தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக மாற்றுபவர் யாராவது வேண்டும். பாபாவும் கூட புனர் ஜென்மத்தில் (மறுபிறவி) வருவாரானால் உங்களைக் கருப்பிலிருந்து வெள்ளையாக யார் ஆக்குவார்? அதனால் பாபா இந்தச் சக்கரத்திலிருந்து விலகி இருக்கிறார்.

 

கேள்வி :

தேவதைகள் சதா குஷியாக இருப்பது ஏன்?

 

பதில் :

ஏனென்றால் அவர்கள் பவித்திரமாக (தூய்மையாக) உள்ளனர். பவித்திரதாவின் காரணத்தால் அவர்களது நடத்தை திருந்தியதாக உள்ளது. எங்கே பவித்திரதா உள்ளதோ, அங்கே சுகம்-சாந்தி இருக்கும். முக்கியமானது பவித்திரதாஆகும்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைக்கிறார். அவர் தந்தையாகவும் உள்ளார், தாய்-தந்தையாகவும் உள்ளார். நீங்கள் பாடினீர்கள் இல்லையா- நீங்கள் தாயும் தந்தையுமாக இருக்கிறீர்கள் என்று. நாங்கள் உங்கள் குழந்தைகள்......... அனைவரும் அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். யாரை அழைக்கின்றனர்? பரமபிதா பரமாத்மாவை அழைக்கின்றனர். மற்றப்படி அவருடைய கிருபையால் அளவற்ற சுகம் எந்த மாதிரி மற்றும் எப்போது கிடைத்திருந்தது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அளவற்ற சுகம் எனச் சொல்லப்படுவது எது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இப்போது நீங்கள் இங்கே அவர் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். இங்கே எவ்வளவு அளவற்ற துக்கம் உள்ளது என்பதை அறிவீர்கள். இது துக்கதாமம். அது சுகதாமம். நாம் 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தில் சுகமாக இருக்கிறோம் என்பது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. உங்களுக்கும் கூட முதலில் இந்த அனுபவம் இல்லாதிருந்தது. இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள், நாம் அந்த பரமபிதா பரமாத்மா, தாய்-தந்தையின் அருகில் அமர்ந்துள்ளோம். நாம் 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் இராஜ பதவி அடைவதற்காகவே இங்கே வருகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபாவையும் அறிந்து கொண்டு விட்டீர்கள், மேலும் பாபா மூலம் முழு சிருஷ்டிச் சக்கரத்தையும் கூடப் புரிந்து கொண்டு விட்டீர்கள். நாம் முதலில் அளவற்ற சுகத்தில் இருந்தோம். பிறகு துக்கத்தில் வந்தோம். இதுவும் நம்பர்வார் ஒவ்வொருவர் புத்தியிலும் உள்ளது. மாணவர்களுக்கோ சதா நினைவில் இருக்க வேண்டும். ஆனால் பாபா பார்க்கிறார், அடிக்கடி மறந்து போகின்றனர். அதனால் பிறகு வாடிப் போகின்றனர். தொட்டாற்சுருங்கி போன்ற நிலை ஆகி விடுகின்றது. மாயா போரிடுகின்றது. எந்தக் குஷி இருக்க வேண்டுமோ, அது இருப்பதில்லை. நம்பர்வார் பதவியோ இருக்கிறது இல்லையா? சொர்க்கத்திற்கோ செல்கின்றனர். ஆனால் அங்கேயும் இராஜாவில் தொடங்கி ஒன்றுமில்லாத ஏழை வரை உள்ளனர் இல்லையா? இவர்கள் ஏழைப் பிரஜைகள், அவர்கள் பணக்காரர்கள். சொர்க்கத்திலும் அதுபோல் உள்ளனர் என்றால் நரகத்திலும் அவ்வாறே உள்ளனர். உயர்ந்தவர் மற்றும் தாழ்ந்தவர். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், அளவற்ற சுகம் அடைவதற்காகப் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறோம். இந்த இலட்சுமி-நாராயணருக்கு அனைவரைக் காட்டிலும் அதிகமான அளவற்ற சுகம் இல்லையா? முக்கியமானது பவித்திரதாவின் விஷயம். பவித்திரதா இல்லாமல் அமைதியும் செல்வச் செழிப்பும் கிடைக்காது. இதில் நடத்தை மிக நன்றாக இருக்க வேண்டும். மனிதர்களின் நடத்தை பவித்திரதாவினால் தான் திருந்துகின்றது. பவித்திரமாக இருந்தால் அவர்கள் தேவதை எனப்படுகிறார்கள். நீங்கள் இங்கே வந்திருப்பது தேவதை ஆவதற்காக. தேவதைகள் சதா சுகமாக இருந்தனர். மனிதர்கள் யாரும் சதா சுகமாக இருக்க முடியாது. சுகம் இருப்பது தேவதைகளுக்குத் தான். இந்த தேவதைகளுக்குத் தான் நீங்கள் பூஜை செய்து வந்தீர்கள் இல்லையா? ஏனென்றால் அவர்கள் பவித்திரமாக இருந்தார்கள். எல்லாமே பவித்திரதாவின் ஆதாரத்தில் தான் உள்ளது. விக்னங்களும் இதில் தான் வருகின்றன. உலகத்தில் அமைதி வேண்டும் என விரும்புகின்றனர். பாபா சொல்கிறார், பவித்திரதா இல்லாமல் சாந்தி ஒரு போதும் இருக்க முடியாது. முதல்-முதலில் முக்கியமானது பவித்திரதாவின் விஷயம். பவித்திரதாவினால் தான் திருந்திய நடத்தை இருக்கும். பதீத் (தூய்மையற்ற நிலை) ஆவதால் பிறகு நடத்தை கெட்டுப்போகும். புரிந்து கொள்ள வேண்டும், இப்போது நாம் மீண்டும் தேவதை ஆக வேண்டுமானால் பவித்திரதா அவசியம் வேண்டும். தேவதைகள் பவித்திரமாக இருந்தனர். அதனால் தான் அபவித்திர மனிதர்கள் அவர்களுக்கு முன் தலை வணங்குகின்றனர். முக்கியமான விஷயம் பவித்திரதாவினுடையதாகும். இவ்வாறு தான் அழைக்கவும் செய்கின்றனர் - ஹே பதீத-பாவனா வந்து எங்களைப் பாவனமாக்குங்கள். பாபா சொல்கிறார், காமம் மகா சத்ரு. இதன் மீது வெற்றி கொள்ளுங்கள். இதன் மீது வெற்றி பெறுவதன் மூலம் தான் நீங்கள் பவித்திரமாவீர்கள். நீங்கள் எப்போது பவித்திர சதோபிரதானமாக இருந்தீர்களோ, அப்போது சாந்தி இருந்தது, சுகமும் இருந்தது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது நினைவு வந்து விட்டது, இது நேற்றைய விஷயம் தான் என்று நீங்கள் பவித்திரமாக இருக்கும் போது அளவற்ற சுகம்-சாந்தி அனைத்தும் இருந்தன. இப்போது மீண்டும் நீங்கள் இந்த இலட்சுமி-நாராயணனாக ஆக வேண்டும். இதில் முதல் முக்கிய விஷயம் சம்பூர்ண நிர்விகாரி ஆக வேண்டும். இதுவோ மகிமையின் பாடலாகும், இது ஞான யக்ஞம், இதில் விக்னங்களோ அவசியம் ஏற்படத் தான் செய்யும். பவித்திரதாவைப் பற்றிய விஷயத்தில் எவ்வளவு தொந்தரவுகள் செய்கின்றனர்! அசுர சம்பிரதாயம் மற்றும் தெய்விக சம்பிரதாயம் என்பதும் பாடப் பட்டுள்ளது. சத்யுகத்தில் இந்த தேவதைகள் இருந்தனர் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. முகத் தோற்றமோ மனிதர்களுடையதாக உள்ளது, ஆனால் அவர்கள் தேவதை எனச் சொல்லப் படுகின்றனர். அங்கே இருப்பவர்கள் சம்பூர்ண சதோப்ரதானமானவர்கள். எந்த ஒரு குறைபாடும் அங்கே கிடையாது. ஒவ்வொரு பொருளும் முழுமையானதாக இருக்கும். பாபா சம்பூர்ணமானவர் என்றால் குழந்தைகளையும் சம்பூர்ணமானவர்களாக ஆக்குகிறார். யோக பலத்தினால் நீங்கள் எவ்வளவு பவித்திரமாக, அழகாக ஆகிறீர்கள்! இந்தப் பிரயாணியோ (சிவபாபா) சதா வெள்ளையாக (தூய்மையாக) இருப்பவர். அவர் வந்து உங்களைக் கருப்பிலிருந்து வெள்ளையாக ஆக்குகிறார். அங்கே இயற்கையான அழகு இருக்கும். அழகு படுத்துவதற்கான அவசியம் கிடையாது. சதோபிரதானமானவர்கள் அழகாகவே இருப்பார்கள். அவர்களே பிறகு தமோபிரதானமாக ஆவதால் கருப்பாகி விடுகின்றனர். பெயரே ஷியாம் மற்றும் சுந்தர். கிருஷ்ணரை ஷியாம் என்றும் சுந்தர் என்றும் ஏன் சொல்கின்றனர்? இதனுடைய அர்த்தத்தை ஒருபோதும் யாராலும் சொல்ல இயலாது - பாபாவைத் தவிர. பகவானாகிய தந்தை என்ன சொல்கிறாரோ, அதை வேறு மனிதர்கள் யாரும் சொல்ல முடியாது. சித்திரங்களில் சுயதரிசனச் சக்கரத்தை தேவதைகளுக்குக் கொடுத்து விட்டுள்ளனர்.

 

பாபா புரிய வைக்கிறார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தேவதைகளுக்கு சுயதரிசனச் சக்கரத்தின் அவசியமோ கிடையாது. சங்கு முதலியவற்றை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள்? சுயதரிசனச் சக்கரதாரிகள் பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் தான். சங்கொலியும் நீங்கள் தான் எழுப்ப வேண்டும். இப்போது உலகத்தில் சாந்தி எப்படி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். கூடவே நடத்தையும் நல்லதாக இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்திலும் கூட நீங்கள் தேவதைகளுக்கு முன் போய் உங்கள் நடத்தை பற்றிய வர்ணனை செய்கிறீர்கள் இல்லையா? ஆனால் தேவதைகள் ஒன்றும் உங்கள் நடத்தையைச் சீர்திருத்துவதில்லை. சீர்திருத்துபவர் வேறொருவர். அந்த சிவபாபாவோ நிராகாராக உள்ளார். அவருக்கு முன்பு இதுபோல் சொல்ல மாட்டார்கள் - நீங்கள் சர்வகுண சம்பன்ன..... சிவனுடைய மகிமையே வேறு. தேவதைகளுக்கு மகிமை பாடுகின்றனர். ஆனால் நாம் அதுபோல் எப்படி ஆவது? ஆத்மா தான் பவித்திரம் மற்றும் அபவித்திரமாக ஆகின்றது இல்லையா? இப்போது ஆத்மா நீங்கள் பவித்திரமாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். எப்போது ஆத்மா சம்பூர்ணமாக ஆகின்றதோ, அதன் பிறகு இந்த பதீத்த சரீரம் இருக்காது. பிறகு போய் பாவன சரீரத்தை எடுத்துக் கொள்ளும். இங்கோ பாவன சரீரம் இருக்க முடியாது. எப்போது இயற்கையும் சதோபிரதானமாக (உயர்ந்த நிலை) ஆகிறதோ, அப்போது பவித்திர சரீரம் இருக்கும். புதிய உலகத்தில் ஒவ்வொரு பொருளும் சதோபிரதானமாக இருக்கும். இப்போது 5 தத்துவங்களும் தமோபிரதானமாக (மோசமான நிலை) உள்ளன. அதனால் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டுக் கொண்டே உள்ளன! எப்படி மனிதர்கள் இறந்து கொண்டே உள்ளனர்! தீர்த்த யாத்திரை செல்கின்றனர். ஏதாவது விபத்து நேர்ந்தால் இறந்து போகின்றனர். நீர், நிலம் போன்றவை எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன! இந்தத் தத்துவங்கள் அனைத்தும் உங்களுக்கு உதவி செய்கின்றன. வினாசத்தின் போது திடீரென்று வெள்ளம் வந்து விடும், புயல் வரும் - இவை இயற்கை ஆபத்துகள். வெடிகுண்டுகள் தயாரிக்கிறார்கள் என்றால் அதுவும் டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஈஸ்வரிய ஆபத்துகள் எனச்சொல்ல மாட்டார்கள். அவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. நில நடுக்கம் போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்த ஆபத்துகள் அனைத்தும் ஒன்று சேர்கின்றன. பூமியின் மூலம் இலேசான தன்மை ஆகி (அசைய ஆரம்பித்து) விடுகின்றது. நீங்கள் அறிவீர்கள், எப்படி பாபா நம்மை முற்றிலும் இலேசாக ஆக்கித் தம்முடன் அழைத்துச் செல்கிறார் புது உலகத்திற்கு. புத்தி இலேசாக ஆவதால் பிறகு சுறுசுறுப்பாகி விடுகின்றனர் இல்லையா? உங்களை பாபா முற்றிலும் இலேசாக ஆக்கி விடுகிறார். அனைத்து துக்கங்களும் விலகி விடுகின்றன. இப்போது உங்கள் அனைவரின் புத்தியும் பாரமாக உள்ளது. பிறகு இலேசாக, சாந்தமாக, சுகமாக ஆகி விடுவீர்கள். யார் எந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் குஷி இருக்க வேண்டும் - பாபா வந்திருக்கிறார், அனைவருக்கும் சத்கதி அளிப்பதற்காக. எப்போது ஸ்தாபனை முழுமையடைகிறதோ, அதன் பிறகு அனைத்து தர்மங்களும் விநாசமாகி விடும். இதற்கு முன்பு உங்கள் புத்தியில் இந்த சிந்தனை இருந்ததில்லை. இப்போது புரிந்து கொண்டுவிட்டீர்கள், பாடலும் உள்ளது, பிரம்மா மூலம் ஸ்தாபனை என்பதாக. மற்ற அனைத்து தர்மங்களும் விநாசமாகி விடும். இந்தக் காரியம் ஒரு பாபா தான் செய்கிறார். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் செய்ய இயலாது. அப்படிப்பட்ட அலௌகிக ஜென்மம் மற்றும் அலௌகிக காரியம் யாருக்கும் இருக்க முடியாது. பாபா உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்.

 

செய்பவர் மற்றும் செய்விப்பவர் இல்லையா? நீங்கள் ஞானம் சொல்கிறீர்கள் - பாபா வந்துள்ளார், இந்த சிருஷ்டியிலிருந்து பாவாத்மாக்களின் சுமையை இறக்குவதற்காக. இதுவோ பாடலாகவும் உள்ளதல்லவா -தந்தை வருகிறார், ஒரு தர்மத்தின் ஸ்தாபனை மற்றும் அநேக தர்மங்களின் விநாசம் செய்வதற்காக! உங்களை இப்போது எவ்வளவு உயர்ந்த மகாத்மாவாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்! தேவதைகளைத் தவிர மகாத்மா வேறு யாரும் கிடையாது. இங்கோ அநேகரை மகாத்மா எனச் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் மகான் ஆத்மா தான் மகாத்மா எனச் சொல்லப்படுவார். இராமராஜ்யம் எனச் சொல்லப்படுவதே சொர்க்கம் தான். அங்கே இராவண இராஜ்யமே கிடையாது. ஆகவே விகாரத்தின் கேள்வியே எழ முடியாது. அதனால் அது சம்பூர்ண நிர்விகாரி எனச் சொல்லப்படுகின்றது. எவ்வளவு சம்பூர்ணமாகின்றனரோ, அவ்வளவு அதிக காலம் சுகம் பெறுவார்கள். சம்பூர்ணமாகாதவர்களோ இவ்வளவு சுகம் பெற முடியாது. பள்ளிக்கூடத்திலும் கூட சிலர் முழுமையானவர்களாகவும் சிலர் முழுமையடையாதவர்களாகவும் உள்ளனர். வேறுபாடு காணப்படுகின்றது. டாக்டர் என்றால் டாக்டர் தான். ஆனால் சிலருக்கு ஊதியம் குறைவாகவும் சிலருக்கு அதிகமாகவும் உள்ளது. அதே போல் தேவதைகளோ தேவதைகள் தான். ஆனால் பதவியில் வேறுபாடு எவ்வளவு உள்ளது! பாபா வந்து உங்களுக்கு உயர்ந்த படிப்பைக் கற்றுத் தருகிறார். கிருஷ்ணரை ஒருபோதும் பகவான் எனச் சொல்ல முடியாது. கிருஷ்ணரைத் தான் ஷியாம்-சுந்தர் எனச் சொல்கின்றனர். கருப்பான கிருஷ்ணரையும் காட்டுகின்றனர். கிருஷ்ணர் கருப்பாக இருப்பதில்லை. பெயர்-வடிவமோ மாறி விடுகின்றது இல்லையா? அதுவும் ஆத்மா கருப்பாக ஆகின்றது- வெவ்வேறு பெயர், வடிவம், தேசம், காலத்தில் வருகின்றது. இப்போது உங்களுக்குப் புரிய வைக்கப்படுகின்றது, நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் - நிச்சயமாக நாம் ஆரம்பத்தில் தொடங்கி எப்படி இந்த நாடக பாகத்தில் வந்தோம் என்று. முதலில் தேவதையாக இருந்தோம். பிறகு தேவதையிலிருந்து அசுரர்களாக ஆனோம். பாபா 84 பிறவிகளின் இரகசியத்தையும் புரிய வைத்துள்ளார். அதைப் பற்றி வேறு யாருக்கும் தெரியாது. பாபா தான் வந்து அனைத்து இரகசியங்களையும் புரிய வைக்கிறார். பாபா சொல்கிறார் - என்னுடைய செல்லக் குழந்தைகளே, நீங்கள் என்னோடு கூடவே வீட்டில் (பரந்தாமத்தில்) இருந்தீர்கள் இல்லையா? நீங்கள் சகோதர-சகோதரர்களாக இருந்தீர்கள் அல்லவா? அனைவரும் ஆத்மாக்களாக இருந்தீர்கள். அங்கே சரீரம் கிடையாது. தந்தை இருந்தார். மேலும் சகோதர-சகோதரர்களாகிய நீங்கள் இருந்தீர்கள். வேறு எந்த ஓர் உறவும் கிடையாது. பாபாவோ புனர்ஜென்மத்தில் வருவதில்லை. அவரோ டிராமாவின் அனுசாரம் பிறப்பு-இறப்புக்கு அப்பாற்பட்டு உள்ளார். அவருடைய பாகமே அதுபோல் தான். நீங்கள் எத்தனைத் தடவை அழைத்தீர்கள்! அதையும் பாபா சொல்லியிருக்கிறார். துவாபரயுகம் தொடங்கியதுமே அழைக்கத் தொடங்கி விட்டனர் என்பதில்லை. அதிக காலத்திற்குப் பிறகு நீங்கள் அழைக்கத் தொடங்கி இருக்கிறீர்கள். உங்களையோ பாபா சுகமானவர்களாக ஆக்குகிறார், அதாவது சுகத்தின் ஆஸ்தியை பாபா கொடுத்துக் கொண்டிருக்கிறார். நீங்களும் சொல்கிறீர்கள், பாபா, நாங்கள் உங்களிடம் கல்ப-கல்பமாக அநேக தடவைகள் வந்திருக்கிறோம். இந்தச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் பாபா உங்களோடு சந்திக்கிறார். மேலும் இந்த ஆஸ்தியைப் பெறுகிறோம். தேகதாரிகள் அனைவருமே மாணவர்கள். படிப்பு சொல்லித் தருபவர் விதேகி (தேகமற்றவர்). இது அவருடைய தேகமல்ல. அவர் தானே விதேகியாக உள்ளார். இங்கே வந்து தேகத்தை தாரணை செய்கிறார். தேகம் இல்லாமல் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பது எப்படி? அனைத்து ஆத்மாக்களின் தந்தை அவர். பக்தி மார்க்கத்தில் அனைவரும் அவரை அழைக்கின்றனர். நிச்சயமாக ருத்ர மாலையைச் நினைக்கின்றனர். மேலே உள்ளது பூ மற்றும் யுகல் மேரு (மம்மா, பாபா) அதுவோ ஒன்று போலவே உள்ளது. பூவுக்கு ஏன் நமஸ்காரம் செய்கின்றனர்? இதுவும் உங்களுக்குத் தெரிய வந்துள்ளது - யாருடைய மாலையைச் உருட்டுகின்றனர்? தேவதைகளின் மாலையை உருட்டுகின்றனரா. அல்லது உங்களுடைய மாலையை உருட்டுகின்றனரா மாலை தேவதைகளுடையதா, உங்களுடையதா? தேவதைகளுடையது எனச் சொல்ல மாட்டார்கள். இந்த பிராமணர்களுக்குத் தான் பாபா அமர்ந்து படிப்பு சொல்லித் தருகிறார். பிராமணரில் இருந்து பிறகு தேவதை ஆகி விடுகிறீர்கள். இப்போது படிக்கிறீர்கள், பிறகு அங்கே சென்று தேவதா பதவி அடைகிறீர்கள். மாலை பிராமணர்களாகிய உங்களுடையது-நீங்கள் பாபாவிடம் படித்து, முயற்சி செய்து பிறகு தேவதை ஆகி விடுகிறீர்கள். மகிமையெல்லாம் படிப்பைக் கற்றுத் தருபவருக்குத் தான். பாபா குழந்தைகளுக்கு எவ்வளவு சேவை செய்துள்ளார்! அங்கோ யாரும் பாபாவை நினைவு செய்யக்கூட மாட்டார்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் மாலை உருட்டி வந்தீர்கள். இப்போது அந்தப் பூ (சிவபாபா) வந்து உங்களையும் பூவாக ஆக்குகிறார். அதாவது தம்முடைய மாலையின் மணிகளாக ஆக்குகிறார். நீங்கள் மணமுள்ள மலர்களாக ஆகிறீர்கள்  இல்லையா? ஆத்மா பற்றிய ஞானமும் இப்போது உங்களுக்குக் கிடைக்கிறது. முழு சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ஞானம் உங்களுடைய புத்தியில் உள்ளது. உங்களுக்குத் தான் மகிமை. பிராமணர்களாகிய நீங்கள் அமர்ந்து உங்களுக்குச் சமமான பிராமணர்களாக ஆக்கிப் பிறகு சொர்க்கவாசி தேவி-தேவதாவாக ஆக்குகிறீர்கள். தேவதைகள் சொர்க்கத்தில் வசிக்கின்றனர். நீங்கள் தேவதையாக ஆகும் போது உங்களுக்குக் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் பற்றிய ஞானம் இருக்காது.

 

இப்போது பிராமணக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் பற்றிய ஞானம் கிடைக்கின்றது. வேறு யாருக்கும் ஞானம் கிடைப்பதில்லை. நீங்கள் மிகமிக பாக்கியசாலிகள். ஆனால் மாயா பிறகு மறக்கச் செய்து விடுகிறது. உங்களுக்கு இந்த (பிரம்மா) பாபா ஒன்றும் கற்றுத் தரவில்லை. இவரோ மனிதர் ஆவார். இவரும் படித்துக் கொண்டிருக்கிறார். இவரோ அனைவரை விடவும் கடைசியில் இருந்தார். அனைவரை விடவும் நம்பர் ஒன் பதீத்தமாகிய அவர் தான் பிறகு நம்பர் ஒன் பாவனமாக ஆகிறார். எவ்வளவு சுகமாக உள்ளனர்! நோக்கம் குறிக்கோள் முன்னால் உள்ளது. பாபா உங்களை எவ்வளவு உயர்ந்தவர்களாக ஆக்குகிறார்! ஆயுஸ்வான் பவ, புத்திரவான் பவ......... இதுவும் டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. பாபா சொல்கிறார், நான் ஆசீர்வாதம் தருவதாக இருந்தால் பிறகு அனைவருக்கும் தந்து கொண்டே இருக்க வேண்டும். நானோ குழந்தைகளாகிய உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருவதற்காக வந்துள்ளேன். படிப்பின் மூலம் எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு கிடைத்து விடுகின்றன. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) எப்படி பாபா சம்பூர்ணமானவராக உள்ளாரோ, அதுபோல் தன்னை சம்பூர்ணமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். பவித்திரதாவை தாரணை செய்து தனது நடத்தையை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். உண்மையான சுகம்-சாந்தியின் அனுபவம் செய்ய வேண்டும்.

 

2) சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ஞானத்தை புத்தியில் வைத்து பிராமணரில் இருந்து தேவதை ஆக்குவதற்கான சேவை செய்ய வேண்டும். தனது உயர்ந்த பாக்கியத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது.

 

வரதானம் :

சாதனங்களால் ஆன இல்லறத்தில் இருந்தபடி தாமரை மலர் போல விடுபட்டு மற்றும் அன்பானவராக இருக்கக் கூடிய எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியமுள்ளவர் ஆகுக !

 

சாதனங்கள் கிடைத்தது என்றால் அவற்றை பரந்த உள்ளத்துடன் பயன் படுத்துங்கள். இந்த சாதனங்கள் இருப்பதே உங்களுக்காகத்தான். ஆனால் சாதனையை (முயற்சியை) மறைந்து போக விடாதீர்கள். முற்றிலும் சமநிலையில் இருக்க வேண்டும். சாதனங்கள் கெட்டதல்ல. சாதன்ஙகள் உங்களின் கர்மங்களின். யோகத்தின் பலனாகும். ஆனால் சாதனங்களாலான இல்லறத்தில் இருந்தபடி தாமரை மலர் போல விடுபட்டு மற்றும் தந்தைக்கு அன்பானவராக ஆகுங்கள். பயன்படுத்தியபடி இருப்பினும் அவைகளின் தாக்கத்தில் (பிரபாவத்தில்) வராதீர்கள். சாதனங்களுக்குள் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியத்தின் உள்ளுணர்வு மறைந்து விடக் கூடாது. முதலில் தனக்குள் இதனை தோன்றச் செய்யுங்கள். பின்னர் உலகத்தில் வாயு மண்டலத்தைப் பரப்புங்கள்.

 

சுலோகன் :

குழப்பங்களை தம்முடைய சுய கௌரவத்தில் நிலைக்கச் செய்வதுதான் அனைத்திலும் நல்ல சேவையாகும்.

 

ஓம்சாந்தி