30.06.2019                           காலை முரளி                ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           19.12.19.84          மதுபன்


 

மிக உயர்ந்த, சகஜ மற்றும் தெளிவான மார்க்கம்

 

இன்று பாப்தாதா விசேஷமாக தன்னுடைய அன்பிற்குரிய, எப்பொழுதும் துணையை வைத்து நடந்து கொள்ளும், துணைவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். துணைவர் என்றால், எப்பொழுதும் உடன் இருப்பவர். ஒவ்வொரு காரியத்திலும், எண்ணத்திலும் துணையை வைத்து நடந்து கொள்பவர்கள். ஒவ்வொரு அடிமீது அடி வைத்து முன்னேறிச் செல்பவர். ஒரு அடி கூட தன்னுடைய மனதின் வழிப்படியோ, மற்றவர்கள் சொல்லும் வழிப்படியோ எடுத்து வைக்காதவர். அந்த மாதிரி எப்பொழுதும் துணைவரின் துணையை வைத்து நடந்து கொள்பவர்கள், எப்பொழுதுமே சகஜ மார்க்கத்தின் அனுபவம் செய்கிறார்கள். ஏனென்றால் தந்தை மற்றும் உயர்ந்த துணைவர் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் பொழுதும், பாதையை தெளிவானதாகவும், தடையற்றதாகவும் ஆக்கிவிடுகிறார். நீங்கள் அனைவரும் அடி மீது அடி எடுத்து வைத்து மட்டும் செல்ல வேண்டும். பாதை சரியானதா, சகஜமானதா, தெளிவானதா என்று யோசிப்பதற்கும் அவசியமில்லை. எங்கு தந்தையின் அடி வைக்கப்படுகிறதோ, அது உயர்ந்த பாதையாகும் அடியை மட்டும் எடுத்து வையுங்கள். ஒவ்வொரு அடியிலும் பலமடங்கை பெறுங்கள். எவ்வளவு சுலபமானது. தந்தை துனைவராகி துணையை வைத்து நடந்து கொள்வதற்காக மனித உடலின் மூலமாக, ஒவ்வொரு அடியும் எடுத்து வைப்பதை செய்து காண்பிப்பதற்காக, இந்த பௌதீக உலகில் அவதரித்திருக்கிறார். சுலபமாக ஆக்குவதற்காக, மனித உடலை கருவியாக ஆக்கியிருக்கிறார். மனிதனை பின்பற்றுவது அடிமேல் அடி எடுத்து வைப்பது சுலபம் தான் இல்லையா? உயர்ந்த துணைவன் தன்னுடைய துணைவர்களுக்காக இந்தளவு எளிய மார்க்கத்தை கூறியிருக்கிறார், ஏனென்றால் எந்த துணைவர்களை, (நம்மை) துணைவர்களாக ஆக்கினாரோ, அவர்கள் மிகவும் அலைந்து திரிந்த காரணத்தினால், களைப்பு அடைந்திருக்கிறார்கள் என்று துணைவராகிய தந்தை அறிவார். நம்பிக்கை இழந்தவர்கள், பலமற்றவர்கள். கடினம் என்று புரிந்து கொண்டு மனமுடைந்து போய்விட்டார்கள். எனவே மிகவும் சுலபமாக அடி மீது அடி மட்டும் எடுத்து வையுங்கள் என்ற எளிய வழியைத் தான் கூறுகிறார். அடி எடுத்து வைப்பது மட்டும் நீங்கள் செய்யும் வேலை, நடத்துவிப்பது, அக்கரைக்கு கொண்டு சேர்ப்பது, ஒவ்வொரு அடியிலும் பலத்தை நிரப்புவது, களைப்பை அகற்றுவது, இவை அனைத்தும் துணைவருடைய வேலையாகும். நீங்கள் அடியை மட்டும் அகற்றி விடாதீர்கள். அடி எடுத்து மட்டும் வைப்பது, கடினம் இல்லை தான் இல்லையா? அடி எடுத்து வைப்பது என்றால், எண்ணத்தை வைப்பது. துணைவன் என்ன கூறுகிறாரோ, எப்படி நடத்துவிக்கிறாரோ, அப்படி நடந்து கொள்வது. தன் விருப்பப்படி நடப்பதில்லை. தன் விருப்படி நடப்பது என்றால், கதறுவது. அப்படியானால், அந்த மாதிரி அடி எடுத்து வைக்கத் தெரியும் தானே! இது கடினமா என்ன? பொறுப்பை ஏற்றுக் கொள்பவர் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார் என்றால், அவர் மீது பொறுப்பை சுமத்த தெரியாதா? சாகார கருவியான பிரம்மா பாபாவை வழி காட்டுபவராக ஆக்கியிருக்கிறோம், முன்னுதாரணமாக வைத்திருக்கிறோம், பிறகு மார்க்கத்தில் செல்வது, ஏன் கடினமாக இருக்கிறது? சகஜமான வழி ஒரு நொடிக்கான வழி. சாகார ரூபத்தில் பிரம்மா பாபா எப்படி செய்தாரோ, என்ன செய்தாரோ, அதைத் தான் செய்ய வேண்டும். தந்தையைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

 

ஒவ்வொரு எண்ணத்தையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். தந்தையின் எண்ணமாக என்ன இருக்கிறதோ, அது என்னுடைய எண்ணமா? காப்பி செய்வது கூட தெரியாதா.? உலகத்தினரோ, காப்பி அடிப்பதைத் தடுப்பார்கள். ஆனால் இங்கு செய்வதோ அவரை காப்பி செய்வது தான்! அப்படியானால் சுலபமானதா அல்லது கடினமானாதா? எப்பொழுது சகஜ, சரள, தெளிவான பாதை கிடைத்துவிட்டதோ அதைப் பின்பற்றி நடங்கள். வேறு பாதையில் ஏன் செல்கிறீர்கள்? வேறு பாதை என்றால், வீணான எண்ணம் என்ற பாதை. பலஹீனமான எண்ணம் என்ற பாதை. கலியுகத்தின் கவர்ச்சிக்கும் பலவிதமான எண்ணங்களின் பாதை. இந்தப் பாதைகள் மூலமாக குழப்பம் நிறைந்த காட்டில் சென்று சேர்ந்துவிடுவீர்கள். எங்கிருந்து விடுபடுவதற்கு இவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ, அந்தளவு நாலா புறங்களிலும் முட்களாக இருக்கும் காரணத்தினால் வெளியேற முடிவதில்லை. முட்கள் என்றால் என்ன? எங்கு, என்னவாகும், இது என்ன! என்ற முட்கள் குத்துவது. சில நேரம் ஏன் என்ற முள் குத்துகிறது சில நேரம் எப்படி என்ற முள் குத்துகிறது, சில நேரம் தன்னுடைய பலஹீனமான சம்ஸ்காரங்களின் முள் குத்துகிறது நாலா புறங்களிலும் முட்களே முட்களாகத் தென்படுகிறது. பிறகு துணைவரே இப்பொழுது வந்து காப்பாற்றுங்கள் என்று கதறுவார்கள். பிறகு துணைவரும், அடி மீது அடி எடுத்து வைப்பதற்குப் பதிலாக வேறு பாதையில் ஏன் சென்றாய் என்று கேட்கிறார்? எப்பொழுது துணைவர் தன்னுடைய துணையைக் கொடுப்பதற்கு தானே முன்னுக்கு வருகிறார் என்றால், பிறகு ஏன் துணைவரை விட்டு விடுகிறீர்கள்? விலகிவிடுவது என்றால், ஆதாரம் விடுபடுவது. ஏன் தனியானவர்களாக ஆகிறீர்கள்? எல்லைக்குட்பட்ட துணையின் கவர்ச்சியில் அது ஏதாவது சம்மந்தத்தினுடையதாக இருக்கலாம், அல்லது ஏதாவது சாதனம் தன்பக்கம் கவர்ந்திழுக்கலாம், இந்தக் கவர்ச்சியின் காரணமாக சாதனத்தை மற்றும் அழியும் சம்மந்தத்தை உங்களுடைய துணைவராக ஆக்கிக் கொள்கிறீர்கள். மற்றும் ஆதாரமாக ஆக்கிக் கொள்கிறீர்கள், அப்பொழுது தான் அழியாத துணைவரிடமிருந்து விலகி விடுகிறீர்கள். மேலும் ஆதரவு விடுபட்டு விடுகிறது. அரைக் கல்பம் இந்த எல்லைக்குட்பட்ட ஆதாரங்களை, ஆதரவு என்று புரிந்து, இது ஆதரவா? அல்லது புதை குழியா? என்று அனுபவம் செய்து விட்டீர்கள். அது மாட்டி விட்டதா, விழ வைத்ததா அல்லது இலட்சியத்தை சென்றடைய வைத்ததா? நல்ல முறையில் அனுபவம் செய்திருக்கிறீர்கள் இல்லையா!. ஒரு ஜென்மத்தின் அனுபவம் இல்லை, என்று, 63 ஜென்மத்தின் அனுபவி. இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஜென்மமும் அதிகம் வேண்டுமா? ஒரு தடவை ஏமாற்றம் அடைபவர் இன்னொரு தடவை ஏமாற்றம் அடையமாட்டார். ஒருவேளை அடிக்கடி ஏமாற்றம் அடைந்து கொண்டேயிருக்கிறார் என்றால், அவர் பாக்கியமற்றவர்! இப்பொழுதோ, பாக்கியத்தை உருவாக்கும் பிரம்மா பாபா, அவரே அனைத்து பிரமாணர்களின் பிறந்த ஜாதகத்தில், உயர்ந்த பாக்கியத்தின் நீண்ட ரேகையை போட்டு விட்டார் இல்லையா? பாக்கியத்தை உருவாக்குபவர், உங்களுடைய பாக்கியத்தை உருவாக்கி இருக்கிறார். பாக்கியத்தை உருவாக்குபவர் தந்தையாக இருக்கும் காரணத்தினால், ஒவ்வொரு பிராமணக் குழந்தைக்கும் பாக்கியம் நிறைந்த களஞ்சியம் என்ற ஆஸ்தியைக் கொடுத்து விட்டார். அப்படியானால், பாக்கியத்தின் களஞ்சியத்தின் அதிபதியின் குழந்தைக்கு என்ன குறை இருக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.

 

என்னுடைய பாக்கியம் என்ன? என்று யோசிப்பதற்கும் அவசியம் இல்லை, ஏனென்றால் பாக்கியத்தை உருவாக்குபவரே தந்தையாக ஆகிவிட்டார் என்றால், குழந்தைகளின் பாக்கியத்தின் சொத்தில் என்ன குறை இருக்கும். பாக்கியத்தின் பொக்கிஷத்தின் எஜமானன் ஆகிவிட்டீர்கள் இல்லையா? அந்த மாதிரியான பாக்கியவான், ஒருபொழுதும் ஏமாற்றம் அடைய முடியாது. எனவே சகஜமான பாதையில் அடி மீது அடி எடுத்து வையுங்கள். நீங்களே தன்னை குழப்பத்தில் கொண்டு வருகிறீர்கள், துணைவனின் துணையை விட்டு விடுகிறீர்கள். நான் உயர்ந்த துணைவனின் துணையில் இருக்கிறேன் என்ற ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வையுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு எப்பொழுதுமே தன் மீது திருப்தியாக இருப்பீர்கள். புரிந்ததா? சகஜமான வழி. சகஜமானதை கடினமாக ஆக்காதீர்கள். எண்ணத்தில் கூட ஒருபொழுதும் கடினத்தை அனுபவம் செய்யாதீர்கள். அந்தமாதிரி திடமான எண்ணம் வைக்கத் தெரியும் தான் இல்லையா? அல்லது அங்கே உங்கள் இடத்திற்குச் சென்ற பிறகு கடினம் என்று கூறுவீர்களா.? பாப்தாதா பார்க்கிறார் பெயர் சகஜயோகி, ஆனால் அனுபவம் ஆவது கடினமாக இருக்கிறது. தன்னை அதிகாரி என்று நம்புகிறார்கள். பிறகு அடிமை ஆகிவிடுகிறார்கள். இருப்பதோ பாக்கியத்தை உருவாக்குபவரின் குழந்தை, ஆனால் என்னுடைய பாக்கியம் இருக்கிறதா அல்லது இல்லையா தெரியவில்லை என்று யோசிக்கிறார்கள். ஒருவேளை இது தான் என்னுடைய பாக்கியமோ என்று நினைக்கிறார்கள், எனவே உங்களை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள், மேலும் எப்பொழுதும் தன்னை ஒவ்வொரு நேரத்திலும் இறைவனுடைய துணைவன் என்று புரிந்து நடந்து கொண்டேயிருங்கள். நல்லது.

 

அந்தமாதிரி எப்பொழுதும் ஒவ்வொரு அடி மீது அடி எடுத்து வைக்கும், தந்தையைப் பின்பற்றி நடக்கும், எப்பொழுதும் ஒவ்வொரு எண்ணத்திலும் துணைவரது துணையை அனுபவம் செய்யும், எப்பொழுதும் ஒருவர் தான் என்னுடைய துணைவர் வேறு யாருமில்லை என்று அன்பை வைத்து நடந்து கொள்ளும், எப்பொழுதும் சகஜயோகி, சிரேஷ்ட பாக்கியவான் விசேஷ ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

அவ்யக்த பாப்தாதாவின் தனிப்பட்ட சந்திப்பு- குமாரிகளுடன்

1. குமாரிகள் என்றால், அதிசயம் செய்பவர்கள். நீங்கள் சாதாரண குமாரிகள் இல்லை, ஆன்மீக குமாரிகள். இந்த உலகத்திருக்கும் குமாரிகள் என்ன செய்கிறார்கள், மேலும் ஆன்மீக குமாரிகள் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் தேக அபிமானத்தில் இருந்து, மற்றவர்களையும் தேக அபிமானத்தில் விழ வைக்கிறார்கள், மேலும் நீங்கள் எப்பொழுதும் ஆத்ம அபிமானி ஆகி, நீங்களும் பறந்து கொண்டு, மற்றவர்களையும் பறக்க வைக்கிறீர்கள். நீங்கள் அந்தமாதிரியான குமாரிகள் தான் இல்லையா? எப்பொழுது தந்தை கிடைத்து விட்டார் என்றால், அனைத்து சம்மந்தங்களும் ஒரு தந்தையுடன் எப்பொழுதும் கண்டிப்பாக இருக்கும். இதற்கு முன்பு வெறும் சொல்லும் அளவிற்குத் தான் இருந்தது, இப்பொழுது நடைமுறையில் இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் கூட அனைத்து சம்மந்தமும் தந்தையுடன் இருக்கிறது என்று அவசியம் வர்ணித்து இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது நடைமுறையில் அனைத்து உறவுகளின் சுவை தந்தை மூலம் கிடைக்கிறது. அந்தமாதிரி அனுபவம் செய்பவர்கள் தான் நீங்கள் இல்லையா? எப்பொழுது அனைத்து ரசனையும் ஒரு தந்தை மூலமாக கிடைக்கிறது என்றால், வேறு எங்கேயும் எண்ணம் செல்ல முடியாது. அந்தமாதிரி நிச்சய புத்தியுடைய வெற்றி இரத்தினங்கள், எப்பொழுதும் மகிமை செய்யப்படுகிறார்கள். மேலும் பூஜிக்கப் படுகிறார்கள். அப்படியானால், நான் வெற்றியடையும் ஆத்மா, எப்பொழுதும் நினைவின் திலகமிட்ட ஆத்மா என்ற நினைவு இருக்கிறதா? இத்தனை குமாரிகள் என்ன அதிசய காரியம் செய்வீர்கள்? எப்பொழுதும் ஒவ்வொரு செயலின் மூலமாக தந்தையைப் பிரத்யட்சம் (வெளிப்படுத்தும்)செய்வீர்கள். ஒவ்வொரு காரியத்திலும் தந்தை தென்பட வேண்டும். ஏதாவது பேசுகிறீர்கள் என்றாலும், அந்தப் பேச்சிலும் தந்தை தென்பட வேண்டும். உலகத்தில் கூட யாராவது மிகவும் நன்றாக பேசுபவர்களாக இருக்கிறார் என்றால், இவருக்கு கற்றுக் கொடுத்தது யார் என்று அனைவரும் கேட்பார்கள். அவர் பக்கம் பார்வை செல்லும். அதேபோன்று உங்களுடைய காரியம் மூலமாக தந்தையின் பிரத்யட்சம் ஆக வேண்டும். நீங்கள் அந்தமாதிரியான தாரணை மூர்த்தி. திவ்ய மூர்த்தி இந்த விசேஷம் உங்களிடம் இருக்கிறது. சொற்பொழிவு நிகழ்த்துபவர்களாக அனைவரும் ஆவார்கள், ஆனால் தன்னுடைய ஒவ்வொரு செயலின் மூலம் சொற்பொழிவு நிகழ்த்துபவர் கோடியில் சிலராகத் தான் இருப்பார். நீங்கள் அந்தமாதிரி விசேஷத்தைக் காண்பிப்பீர்கள் இல்லையா? தன்னுடைய சரித்திரம் (நடத்தை) மூலமாக தந்தையின் சித்திரத்தை காண்பிக்க வேண்டும். நல்லது.

 

2. இது குமாரிகளின் கூட்டம். சேனை தயாராகிக் கொண்டிருக்கிறது. அவர்களோ லெப்ட் ரைட் என்று செய்வார்கள். நீங்கள் எப்பொழுதும் ரைட் ரைட்டே செய்பவர்கள், இந்த சேனை எவ்வளவு சிரேஷ்டமானது, சாத்தி மூலமாக வெற்றியடைபவர் ஆகிவிடுகிறார்கள். அமைதியின் மூலம் தான் சுயராஜ்யத்தை அடைந்து விடுகிறார்கள். எந்தவொரு குழப்பமும் செய்ய வேண்டியிருக்காது. அந்தமாதிரி நீங்கள் சக்தி சேனையின் உறுதியான சக்திகள், சேனையை விட்டுவிட்டு செல்பவர்கள் இல்லை. கனவில் கூட யாரும் உங்களை அசைக்க முடியாது. நீங்கள் ஒருபொழுதும் யாருடைய தீய சேர்க்கையிலும் வருபவர்கள் இல்லை. எப்பொழுதும் தந்தையின் தொடர்பில் இருப்பவர்கள், மற்றவர்களின் பிறரின் சேர்க்கையில் வரமுடியாது. அந்தமாதிரி இந்த முழு குரூப்பும் வீரம் நிறைந்தவர்கள் தான் இல்லையா? வீரம் நிறைந்தவர்கள் என்ன செயல் செய்வார்கள்? மைதானத்தில் வருவார்கள். நீங்கள் அனைவரும் வீரம் நிறைந்தவர்கள் தான், ஆனால் மைதானத்தில் இன்னும் வரவில்லை, வீரம் நிறைந்தவர் மைதானத்தில் வருகிறார் என்றால், அந்த வீரனின் வீரத் திறமைக்காக, இசை வாத்தியங்கள் வாசிப்பார்கள், இதை நீங்கள் பார்த்திருக்கலாம், நீங்களும் எப்பொழுது மைதானத்தில் வருவீர்களோ, அப்பொழுது குஷியின் மேளதாளம் ஒலிக்கும், குமாரிகள் எப்பொழுதுமே உயர்ந்த எதிர்காலம் உள்ளவர்கள். குமாரிகளுக்கு சேவைக்கான மிக நல்ல வாய்ப்பு இருக்கிறது, மேலும் கிடைக்கவும் செய்யும். ஏனென்றால் சேவை அதிகமாக இருக்கிறது, சேவாதாரிகள் குறைவாக இருக்கிறார்கள். எப்பொழுது சேவாதாரிகள், சேவை செய்வதற்காக வெளிப்படுகிறார்கள் என்றால் எவ்வளவு சேவை நடந்தேறும்! குமாரிகள் என்ன அதிசயம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம், சாதாரண காரியமோ அனைவரும் செய்கிறார்கள், ஆனால் நீங்கள் விசேஷக் காரியம் செய்து காண்பியுங்கள். குமாரிகள் நீங்கள் வீட்டின் அலங்காரம், உலகத்தில் குமாரிகளைப் பற்றி என்ன தான் நினைத்தாலும், ஆனால் பரலோகத் தந்தையின் வீட்டில் குமாரிகள் என்றாலே மகான்கள், குமாரிகள் இருக்கிறார்கள் என்றால், செண்டரில் கலகலப்பு இருக்கும். மாத்தாக்களுக்கும் விசேஷ லிப்ட் இருக்கிறது. முதலில் மாதா குரு. தந்தை மாதா குருவை முன்னுக்கு வைத்தார். அதனால் தான் எதிர்காலத்தில் மாத்தாக்களின் பெயர் முன்னுக்கு

இருக்கிறது. நல்லது.

 

டீச்சர்களுடன் சந்திப்பு

டீச்சர்கள் என்றால் தந்தைக்குச் சமமானவர்கள். எப்படி தந்தையோ, அப்படி பொறுப்பில் இருக்கும் சேவாதாரிகள். தந்தையும் பொறுப்பில் இருக்கிறார் என்றால், சேவாதாரிகளும் பொறுப்பில் இருக்கும் ஆத்மாக்கள். பொறுப்பிருக்கிறேன் என்று புரிந்து கொள்வதால், இயல்பாகவே தந்தைக்குச் சமமாகும் சம்ஸ்காரம் நடைமுறையில் வருகிறது. ஒருவேளை பொறுப்பில் இருக்கிறேன் என்று நினைக்கவில்லையென்றால், தந்தைக்குச் சமமாக ஆக முடியாது. அப்படி ஒன்று பொறுப்பில் இருக்கிறேன், இன்னொன்று விலகியிருப்பது மற்றும் அன்பானவராக இருப்பது. இது தந்தையின் விசேஷம். அன்பானவராகவும் இருக்கிறார், விலகியும் இருக்கிறார். விலகியிருப்பவராக ஆகி, அன்பானவராக ஆகிறார். எனவே தந்தைக்குச் சமமானவர் என்றால், மிகவும் விலகியிருப்பவர், மேலும் மிகவும் அன்பானவர். மற்றவர்களிடமிருந்து விலகியிருப்பவர், தந்தைக்கு அன்பானவர். இந்த சமநிலை வேண்டும். தந்தையினுடையது இதே இரண்டு விசேஷங்கள் தான் எனவே தந்தைக்குச் சமமான சேவாதாரிகளும் அந்தமாதிரி இருக்கிறார்கள். இதே விசேஷத்தை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டே முன்னேறிச் சென்று கொண்டேயிருப்பீர்கள். கடும் உழைப்பு செய்ய வேண்டியிருக்காது. எங்கு பொறுப்பாளராக மற்றும் கருவியாக இருக்கிறாரோ, அங்கு வெற்றி கண்டிப்பாக இருக்கும். அங்கு என்னுடையது என்பது வரமுடியாது. எங்கே என்னுடையது என்பது இருக்கிறதோ, அங்கு வெற்றி இருக்காது. பொறுப்புணர்வு மற்றும் கருவி என்ற உணர்வு வெற்றியின் சாவி. எப்பொழுது எல்லைக்குட்பட்ட உலகத்தின் என்னுடையது என்பதை விட்டு வீட்டீர்களோ, பிறகு வேறு என்னுடையது எங்கிருந்து வந்தது? என்னுடையது என்பதற்குப் பதிலாக பாபா, பாபா, என்று கூறுவதால், எப்பொழுதும் பாதுகாப்பு ஏற்பட்டு விடுகிறது. என்னுடைய சென்டர் இல்லை, ஆனால் பாபாவின் சென்டர். என்னுடைய மாணவர்கள் இல்லை, பாபாவின் மாணவர்கள். என்னுடையது என்பது அழிந்து, உன்னுடையது ஆகிவிடுகிறது. உன்னுடையது என்று கூறுவது என்றால், பறப்பது. அந்த மாதிரி பொறுப்பில் இருக்கும் ஆசிரியர் என்றால், பறக்கும் கலைக்கான ஒரு உதாரணம். எப்படி நீங்கள் பறக்கும் கலையின் உதாரணமாக ஆகிறீர்களோ, அதேபோல் மற்றவர்களும் (அதிர்வலைகள்) ஆகிறார்கள். விரும்பாவிட்டாலும் யாருடைய பொறுப்பாளர் ஆகிறாரோ, அவர்களிடம் அந்த வைப்ரேஷன் இயல்பாக வந்துவிடுகிறது. எனவே பொறுப்பிலிருக்கும் ஆசிரியர், சேவாதாரி எப்பொழுதுமே விலகியிருப்பவர், எப்பொழுதுமே அன்பானவர். எப்போதாவது, ஏதாவது பரீட்சை வருகிறது என்றால், அதில் தேர்ச்சி அடைபவர்கள். நிச்சய புத்தியுள்ள, வெற்றியடைபவர்கள்!

 

பார்ட்டிகளுடன் சந்திப்பு:

1. எப்பொழுதும் தன்னை டபுல் லைட் ஃபரிஸ்தா என்று அனுபவம் செய்கிறீர்களா? ஃபரிஸ்தா என்றால், அவருடைய உலகமே ஒரு தந்தை தான்! அந்த மாதிரியான ஃபரிஸ்தாக்கள் எப்பொழுதும் தந்தையின் அன்பிற்குரியவர்கள். ஃபரிஸ்தா என்றால், தேகம் மற்றும் தேகத்தின் சம்மந்தங்களில் எந்தவொரு கவர்ச்சியும் இல்லை. ஏதேனும் காரணத்திற்காக தேகத்திலும், தேகத்தின் உறவினர்களோடும் காரியத்தில் வருகிறார்கள், ஆனால் பற்றுதல் இல்லை. ஏனென்றால் ஃபரிஸ்தாக்களுக்கு வேறு எந்த ரிஸ்தாவும் (உறவும்) இருப்பதில்லை. ஃபரிஸ்தாக்களின் உறவு ஒரு தந்தையுடன் இருக்கிறது. நீங்கள் அந்தமாதிரியான ஃபரிஸ்தாக்கள் இல்லையா? இந்த நேரம் காரியம் செய்வதற்காக தேகத்தில் வருகிறீர்கள், மேலும் அடுத்த நேரம் தேகத்திலிருந்து விலகி விடுகிறீர்கள். ஃபரிஸ்தாக்கள் ஒரு நொடியில் இங்கேயும், அடுத்த வினாடி வேறு எங்கேயும் இருப்பார்கள். ஏனென்றால், பறப்பவர்கள். காரியம் செய்வதற்காக உடலின் ஆதாரம் எடுப்பார்கள். பிறகு மேலே சென்று விடுவார்கள். நீங்கள் அந்தமாதிரி அனுபவம் செய்கிறீர்களா? ஒருவேளை எங்காவது பற்றுதல் இருக்கிறது. பந்தனம் இருக்கிறது என்றால், பந்தனம் உள்ளவர்கள் மேலே பறக்க முடியாது. அவர் கீழே வந்துவிடுவார். ஃபரிஸ்தா என்றால் எப்பொழுதும் பறந்து கொண்டு இருப்பவர். மேலே கீழே போகுபவர் அல்ல! எப்பொழுதும் மேலான நிலையில் இருப்பவர். ஃபரிஸ்தாக்களின் உலகத்தில் இருப்பவர். எனவே ஃபரிஸ்தாவின் நினைவு சொரூபம் ஆனீர்கள் என்றால், அனைத்து ரிஸ்தாக்களும் (உறவுகளும்) அழிந்து விட்டன. அந்தமாதிரி பயிற்சி உள்ளவர்கள் தான் நீங்கள் இல்லையா? காரியம் செய்தீர்கள், மற்றும் பிறகு விலகிவிட்டீர்கள். லிஃப்டில் என்ன செய்கிறார்கள்? இந்த நேரம் கீழே, அடுத்த நேரம் மேலே செல்கிறார்கள். கீழே வந்தார்கள், காரியம் செய்தார்கள், மேலும் பிறகு சுவீட்சை அழுத்தினார்கள், மேலே சென்று விட்டார்கள். நீங்கள் அந்தமாதிரி பயிற்சி உள்ளவர்கள் தான் இல்லையா? நல்லது.

 

2. அனைவரும் ஆன்மீக ரோஜா மலர் தான் இல்லையா? நீங்கள் மல்லிகையா, அல்லது ரோஜாவா? எப்படி ரோஜா மலர் அனைத்து மலர்களிலும் உயர்ந்தது என்று கூறப்படுகிறது. அதேபோன்று ஆன்மீக ரோஜா என்றால், உயர்ந்த ஆத்மாக்கள். ஆன்மீக ரோஜாக்கள் எப்பொழுதும் ஆன்மீகத் தன்மையில் இருப்பார்கள், எப்பொழுதும் ஆன்மீக போதையில் இருப்பார்கள். எப்பொழுதும் ஆன்மீக சேவையில் இருப்பவர்கள். நீங்கள் அந்தமாதிரி ஆன்மீக ரோஜா மலர். இனறைய நாட்களின் நேரத்திற்கு ஏற்றபடி ஆன்மீகத் தன்மை அவசியமாக இருக்கிறது. ஆன்மீகத் தன்மை இல்லாத காரணத்தினால், இந்த அனைத்து சண்டை சச்சரவுகளும் நடக்கின்றன. நீங்கள் ஆன்மீக ரோஜா மலராகி, ஆன்மீகத் தன்மையின் நறுமணம் பரப்புபவர்கள். இது தான் பிராமண வாழ்க்கையின் தொழில். எப்பொழுதும் இதே தொழிலில் முழுமையாக ஈடுபட்டு இருங்கள்.

 

வரதானம்:

பிரம்மா பாபாவிற்குச் சமமாக ஜீவன் முக்த் நிலையை அனுபவம் செய்யக் கூடிய, கர்மங்களின் பந்தனத்திலிருந்து விடுபட்டவர் ஆகுக.

 

பிரம்மா பாபா காரியங்கள் செய்து கொண்டும், செய்யும் காரியத்தின் பந்தனத்தில் மாட்டிக் கொள்ள வில்லை. சம்மந்தத்தை வைத்து நடந்து கொண்ட போதிலும், சம்மந்தங்களின் பந்தனத்தில் கட்டுப்படவில்லை. அவர் பணம், செல்வம் மற்றும் சாதனங்களின் பந்தனத்திலிருந்தும் விடுபட்டு இருந்தார். பொறுப்புக்களை கவனித்துக் கொண்டும், ஜீவன் முக்த் நிலையை அனுபவம் செய்தார். அந்தமாதிரி நீங்களும் தந்தையைப் பின்பற்றி செய்யுங்கள். எந்தவொரு கடந்த காலத்தின் கணக்கு வழக்கின் பந்தனத்தில் கட்டப்பட்டு விடக்கூடாது. சம்ஸ்காரம், சுபாவம், பிரபாவம் மற்றும் அடக்குதலின் பந்தனத்திலும் வராதீர்கள். அப்பொழுது தான் கர்மபந்தனத்திலிருந்து விடுபட்டவர். ஜீவன் முக்த் என்று கூறுவோம்

 

சுலோகன்:

தன்னுடைய ஆன்மீக உள்ளுணர்வு மூலம் குடும்பத்தின் அனைத்து சூழ்நிலைகளையும் மாற்றம் செய்துவிடுங்கள்.

 

 

ஓம்சாந்தி