17.03.2019
காலை
முரளி
ஓம்
சாந்தி
''அவ்யக்த
பாப்தாதா''
ரிவைஸ்
15.03.1984
மதுபன்
''
ஹோலி
உற்சவம்
(பண்டிகை)
தூய்மை
ஆவதற்கு
மற்றும்
ஆக்குவதற்கான(பிறரை)
நினைவுச்
சின்னம்
''
மிகப்
புனிதமான
தந்தை
புனித
அன்னப்பறவைகளுடன்
ஹோலிடே
(புனித
நாளை)
கொண்டாடுவதற்காக வந்திருக்கிறார்.
புனித
நாள்
என்று
இந்த
சங்கமயுகம்
அழைக்கப்படுகிறது.
சங்கமயுகமே
புனித
நாள்
தான்.
அம்மாதிரி
மிகப்புனிதமான
தந்தை
புனிதமான
குழந்தைகளுடன்
புனித
நாளைக்
கொண்டாடுவதற்கு வந்திருக்கிறார்.
உலகத்தின்
ஹோலி ஓரிரு
நாட்களின்
பண்டிகையாக
இருக்கும்.
மேலும்
புனித
அன்னப்பறவைகள் நீங்கள்
முழு
சங்கமயுகத்திலும்
ஹோலி கொண்டாடுகிறீர்கள்.
அவர்கள்
வண்ணத்தைப்
பூசுவார்கள்,
மேலும் நீங்கள்
தந்தையின்
தொடர்பின்
காரணமாக
அவருடைய
சிறப்புக்கள்,
குணங்கள்,
சக்திகளால்
வண்ணமயமாக்கப்பட்டு தந்தைக்குச்
சமமாக
சதா
காலத்திற்காக
ஹோலி அதாவது
தூய்மையாகி
விடுகிறீர்கள்.
எல்லைக்குட்பட்டவரிலிருந்து எல்லைக்கப்பாற்பட்டவராக
ஆகிவிடுவதினால்
சதா
காலத்திற்காக
ஹோலி அதாவது
தூய்மையாகிவிடுகிறீர்கள்.
இந்த
ஹோலி உற்சவம்,
ஹோலி அதாவது
தூய்மை
ஆக்குவதற்கு
மற்றும்
ஆவதற்கான
உற்சாகத்தைக் கொடுக்கக்கூடியது.
என்னென்ன
விதிகளை
நினைவுச்சின்னமாகக்
கடைப்பிடிக்கிறார்களோ
அந்த
அனைத்து விதிகளிலும்
தூய்மை
ஆக
வேண்டும்
என்ற
சாரம்
நிரம்பி
இருக்கும்.
முதலில் ஹோலி ஆவதற்கு மற்றும் ஹோலியைக் கொண்டாடுவதற்காக
தூய்மையின்மை,
தீயவைகளை
சாம்பலாக்க
வேண்டும்,
எரிக்க
வேண்டும்.
எதுவரை
தூய்மையின்மையை
முழுமையாக
அழிக்கவில்லையோ
அதுவரை
தூய்மையின்
பிரபாவம்
என்ற வண்ணம்
பூசப்பட
மாட்டாது.
தூய்மையான
பார்வையுடன்
ஒருவர்
இன்னொருவர்
மேல்
வண்ணம்
பூசும் உற்சவத்தைக்
கொண்டாட
முடியாது.
பலவிதமான
பாவனைகளை
மறந்து
நாம்
அனைவரும்
ஒரே
பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள்,
ஒரே
சமமானவர்கள்
அதாவது
சகோதரன்
-
சகோதரன்
என்ற
ஒரு
சமமான
உள்உணர்வுடன் கொண்டாடுவதற்கான
நினைவு
பண்டிகையாகும்.
வெளியுலக
மனிதர்களோ
உலகியல்
ரூபத்தில்
கொண்டாடுவதற்காக
சிறியவர்கள்
பெரியவர்கள்,
ஆண்கள்
பெண்கள்
அனைவரும்
சம
உணர்வோடு
கொண்டாட
வேண்டும் என்ற
இந்த
பாவனையோடு
கொண்டாடுகிறார்கள்.
உண்மையில்
சகோதரன்
-
சகோதரனின்
சமமான
சொரூபத்தின் நினைவு
அழியாத
வண்ணத்தின்
(பிரபாவத்தின்)
அனுபவம்
செய்விக்கிறது.
எப்பொழுது
இந்த
சமமான
சொரூபத்தில் நிலைத்து
விடுவார்களோ
அப்பொழுது
தான்
அழியாத
குஷியின்
ஜொலிப்பு அனுபவம்
ஆகிறது.
மேலும் அனைத்து
ஆத்மாக்களுக்கும்
அந்த
மாதிரி
அழியாத
வண்ணத்தைப்
பூச
வேண்டும்
என்ற
உற்சாகம்
சதா காலத்திற்கும்
இருக்கிறது.
வண்ணத்தை
பீச்சாங்குழல்
மூலமாக
மற்றவர்கள்
மீது
பூசுவார்கள்.
உங்களுடைய பீச்சாங்குழல்
எது?
உங்களுடைய
தெய்வீக
புத்தி
என்ற
பீச்சாங்குழல் அழியாத
வண்ணம்
நிரப்பப்பட்டிருக்கிறது தான்
இல்லையா?
நெருக்கத்தின்
தொடர்பின்
வண்ணத்தை
(பிரபாவத்தை)
அனுபவம்
செய்கிறீர்கள்,
அந்த விதவிதமான
அனுபவங்களின்
வண்ணத்தினால்
பீச்சாங்குழல்
நிரம்பியிருக்கிறது
தான்
இல்லையா.?
நிரம்பி யிருக்கும்
புத்தி
என்ற
பீச்சாங்குழல்
மூலம்
எந்த
ஆத்மாவிற்கும்
பார்வை
மூலமாக,
உள்உணர்வு
மூலமாக,
வாய்
மூலமாக
இந்த
வண்ணத்தினால்
அவருக்கு
வண்ணம்
பூச
முடியும்.
அதனால்
அவர்
சதா
காலத்திற்கும் ஹோலி அதாவது
தூய்மையானவர்
ஆகிவிட
வேண்டும்.
அவர்கள்
ஹோகொண்டாடுகிறார்கள்.
மேலும் நீங்கள்
ஹோலியாக ஆக்குகிறீர்கள்.
அனைத்து
நாளையும்
ஹோலி டே அதாவது
புனித
நாளாக
ஆக்கிவிடுகிறீர்கள்.
அவர்கள்
அற்பகாலத்திற்காக
குஷி
நிறைந்த
தன்னுடைய
மூட்-ஐ
(மனநிலையை)
உருவாக்குகிறார்கள்.
ஆனால் நீங்கள்
அனைவரும்
எப்பொழுதும்
கொண்டாடுவதற்காக
ஹோலி மற்றும் ஹேப்பி
மூட்-ல்
இருக்கிறீர்கள்.
மூட்-ஐ
உருவாக்க
வேண்டியதாக
இருக்காது.
எப்பொழுதும்
ஹோலி மூட்-ல்
(மனநிலையில்)
இருக்கிறீர்கள்.
மேலும்
வேறு
எந்த
விதமான
மூட்-ம்
இல்லை.
நீங்கள்
ஹோலி மூட்-ல்
எப்பொழுதும்
லேசானவராக,
எப்பொழுதும்
கவலையற்றவராக,
எப்பொழுதும்
அனைத்து
பொக்கிஷங்களால்
நிரம்பியவராக,
எல்லைக்கப்பாற்பட்ட சுயராஜ்ஜிய
அதிகாரியாக
இருக்கிறீர்கள்.
யார்
தன்னுடைய
மனநிலையை
அடிக்கடி
பலவிதமாக
மாற்றிக் கொள்கிறார்கள்,
சில
நேரம்
குஷியில்,
சில
நேரம்
அதிகம்
யோசிக்கும்,
சில
நேரம்
லேசானவராக,
சில
நேரம் சுமையானவராக
இருக்கும்
இந்த
அனைத்து
மனநிலையை
மாற்றி
எப்பொழுதும்
சந்தோஷம்
மற்றும்
தூய்மையான மனநிலை
உள்ளவராக
ஆகிவிடுகிறீர்கள்.
அந்த
மாதிரியான
அழியாத
உற்சவத்தை
தந்தையுடன்
கொண்டாடுகிறீர்கள்.
அழிக்க
வேண்டும்,
கொண்டாட
வேண்டும்.
மேலும்
பிறகு
சந்திப்பைச்
செய்ய
வேண்டும்.
இதற்கான நினைவாக
எரிக்கிறார்கள்,
வண்ணத்தைப்
பூசுகிறார்கள்.
பிறகு
ஒருவர்
இன்னொருவரை
சந்திக்கிறார்கள்.
நீங்கள் அனைவரும்
எப்பொழுது
தந்தையின்
வண்ணத்தில்
வண்ணமாக்கப்பட்டு
விடுகிறீர்கள்,
ஞானத்தின்
வண்ணத்தில்,
குஷியின்
வண்ணத்தில்
அப்படி
எத்தனை
வண்ணங்களினால்
ஹோலி விளையாடுகிறீர்கள்.
எப்பொழுது
இந்த அனைத்து
வண்ணங்களால்
வண்ணமயமாக்கப்பட்டு
விடுகிறீர்களோ
அப்பொழுது
தந்தைக்குச்
சமமானவர் ஆகிவிடுகிறீர்கள்.
மேலும்
சமமானவர்கள்
எப்பொழுது
அவர்களுக்குள்
சந்திக்கிறார்கள்
என்றால்
எப்படி சந்திப்பார்கள்?
ஸ்தூலத்திலோ
கட்டி
அணைத்துக்
கொள்வார்கள்,
ஆனால்
நீங்கள்
எப்படி
சந்திக்கிறீர்கள்?
எப்பொழுது
சமமானவர்
ஆகிவிடுகிறீர்கள்
என்றால்
அன்பில்
மூழ்கிவிடுகிறார்கள்.
மூழ்கிவிடுவது
தான்
சந்திப்பது.
இந்த
அனைத்து
விதிகளும்
எங்கிருந்து
தொடங்கியது?
நீங்கள்
அழியாததாகக்
கொண்டாடுகிறீர்கள்,
அவர்கள் அழியும்
நினைவுச்
சின்ன
ரூபத்தில்
கொண்டாடி
குஷியடைந்து
விடுகிறார்கள்.
இதை
வைத்து
கொஞ்சம் யோசித்துப்
பாருங்கள்.
நீங்கள்
அனைவரும்
எந்த
அளவு
அழியாத
உற்சவம்
அதாவது
உற்சாகத்தில்
இருப்பதற்கான
அனுபவியாக
ஆகியிருக்கிறீர்கள்.
அதன்
காரணமாக
உங்களுடைய
நினைவுச்
சின்ன
நாளை
கொண்டாடுவதிலும்
குஷியடைந்து
விடுகிறார்கள்.
இறுதிவரையிலும்
உங்களுடைய
உற்சாகம்
மற்றும்
குஷியின்
நினைவுச் சின்னமாக
அனேக
ஆத்மாக்களுக்கு
குஷியின்
அனுபவத்தை
செய்வித்துக்
கொண்டிருக்கிறது.
அந்த
மாதிரியான உற்சாகம்
நிரம்பிய
வாழ்க்கை,
குஷிகளினால்
நிரம்பிய
வாழ்க்கையை
உருவாக்கிவிட்டீர்கள்
தான்
இல்லையா?
அழியாத
உற்சவத்தைக்
கொண்டாடிக்
கொண்டே
தன்னுடைய
நினைவுச்
சின்னமான
உற்சவத்தையும் பார்க்கிறீர்கள்
என்பது
தான்
நாடகத்தில்
இருக்கும்
சங்கமயுகத்தின்
ஒரு
அதிசயமான
பாகம்
ஆகும்.
ஒரு பக்கம்
சைத்தன்ய
சிரேஷ்ட
ஆத்மாக்கள்
நீங்கள்
இருக்கிறீர்கள்.
இன்னொரு
பக்கம்
தன்னுடைய
படங்கள் விக்கிரகங்களைப்
பார்க்கிறீர்கள்.
ஒரு
பக்கம்
நினைவு
சொரூபமாக
ஆகியிருக்கிறீர்கள்,
இன்னொரு
பக்கம் தன்னுடைய
ஒவ்வொரு
சிரேஷ்ட
காரியத்தின்
நினைவுச்
சின்னத்தைப்
பார்க்கிறீர்கள்.
மகிமைக்குத்
தகுதியானவர் ஆகிவிட்டீர்கள்,
மேலும்
சென்ற
கல்பத்தின்
மகிமையை
கேட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்.
இது
அதிசயம்
தான் இல்லையா?
மேலும்
நினைவின்
மூலம்
பார்த்தீர்கள்
என்றால்
இது
நம்முடைய
மகிமை
தான்
என்பது தெரியும்.
பார்க்கப்போனால்
ஒவ்வொரு
ஆத்மாவும்
வேறு
பெயர்
ரூபத்தில்
தன்னுடைய
சிரேஷ்ட
காரியத்தின் நினைவுச்
சின்ன
படங்களை,
விக்கிரகங்களைப்
பார்க்கவும்
செய்கிறார்கள்
ஆனால்
தெரிந்திருக்கவில்லை.
இப்பொழுது
காந்தி
அவர்களும்
வேறு
பெயர்
ரூபத்தில்
தன்னுடைய
படத்தைப்
பார்ப்பவராக
இருப்பார் இல்லையா?
ஆனால்
அறிமுகம்
இல்லை.
ஆனால்
நீங்கள்
தெரிந்து
தன்னுடைய
படங்களைப்
பார்க்கிறீர்கள்.
இது
நம்முடைய
படம்
தான்
என்று
தெரிந்திருக்கிறீர்கள்.
இது
நம்முடைய
உற்சாகம்
நிறைந்த
நாட்களின் நினைவுச்சின்னத்தை
உற்சவத்தின்
ரூபத்தில்
கொண்டாடிக்
கொண்டிருக்கிறார்கள்.
இந்த
முழு
ஞானமும்
வந்து விட்டது
தான்
இல்லையா.
இரட்டை
வெளிநாட்டினரின்
விக்கிரகங்கள்
கோவில்களில்
இருக்கின்றனவா?
இந்த தில்வாடா
கோவிலில் தன்னுடைய
சிலையைப்
பார்த்தீர்களா?
அல்லது
இது
பாரதத்தைச்
சேர்ந்தவர்களின் சிலைகள்
மட்டும்
தானா?
அனைவருமே
தன்னுடைய
விக்கிரகங்களைப்
பார்த்திருக்கிறீர்களா?
இது
என்னுடைய விக்கிரகம்
தான்
என்று
தெரிந்து
கொண்டீர்களா.?
எப்படி
ஹே!
அர்ஜுன்
என்று
ஒருவரை
உதாரணமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது.
அதே
போல்
நினைவுச்
சின்னத்திலும்
கொஞ்சம்
தான்
காண்பிக்கிறார்கள்.
ஆனால் அவை
அனைவரின்
நினைவுச்
சின்னம்
தான்!
இவை
மிகக்
குறைந்த
விக்கிரகங்கள்
தான்
இதில்
நான்
எப்படி இருக்க
முடியும்
என்று
அப்படி
நினைக்காதீர்கள்.
இதுவோ
சேம்பிள்
(மாதிரி)
காண்பித்திருக்கிறார்கள்.
ஆனால் இது
உங்கள்
அனைவரின்
நினைவுச்சின்னம்.
யார்
நினைவில்
இருக்கிறார்களோ
அவர்களுடைய
நினைவுச் சின்னம்
கண்டிப்பாக
உருவாகும்.
புரிந்ததா?
அனைவரின்
பெரிய
பீச்சாங்குழல்
நிரம்பியிருக்கிறது
தான்
இல்லையா?
ஒரு
தடவையிலேயே
காலியாகி விடும்
மாதிரியான
மிக
சிறியதாகவோ
இல்லையே!.
பிறகோ
அடிக்கடி
நிரப்ப வேண்டியதாக
இருக்கும்.
அந்த
மாதிரி
கஷ்டப்படுவதற்கும்
அவசியம்
இல்லை.
அனைவரையும்
அழியாத வண்ணத்தினால்
வண்ணமாக்கி
விடுங்கள்.
ஹோலி
(தூய்மை)
ஆக்குவதற்காக
ஹோலியைக் கொண்டாடுங்கள்.
உங்களுடைய
ஹோலி முடிந்து
விட்டது
தான்
இல்லையா
அல்லது
கொண்டாட
வேண்டுமா?
ஹோலி முடிந்து
விட்டது
என்றால்
ஹோலி கொண்டாடிவிட்டீர்கள்.
வண்ணம்
பூசப்பட்டு
இருக்கிறது
தான்
இல்லையா?
இந்த
வண்ணத்தைக்
கழுவி
சுத்தப்படுத்த
வேண்டியது
இருக்காது.
மிகவும்
குஷியோடு
ஸ்தூல
வண்ணத்தைப் பூசவும்
செய்கிறார்கள்.
மேலும்
பிறகு
அதிலிருந்து தப்பித்துக்
கொள்ளவும்
விரும்புகிறார்கள்.
உங்களுடைய இந்த
வண்ணமோ
அந்த
மாதிரியானது
இன்னும்
பூசுங்கள்
என்று
சொல்வார்கள்.
இதைக்
கண்டு
யாரும் பயப்பட
மாட்டார்கள்.
அந்த
வண்ணத்திலோ
கண்ணில்
விழுந்து
விடக்கூடாது
என்று
பயப்படுவார்கள்.
இங்கேயோ எவ்வளவு
பூசுகிறீர்களோ
அவ்வளவு
நல்லது
என்று
சொல்வார்கள்.
அந்த
மாதிரி
ஹோலியைக் கொண்டாடிவிட்டீர்கள்
தான்
இல்லையா?
ஹோலி
(தூய்மை)
ஆகிவிட்டீர்கள்.
இது
தூய்மை
ஆவதற்கு
மற்றும்
ஆக்குவதற்கான
நினைவுச்சின்னம்.
இங்கு
பாரதத்திலோ
அனேக
கதைகள்
உருவாக்கிவிட்டார்கள்.
ஏனென்றால்
கதைகள்
கேட்பதற்கு
ஆர்வமாக உள்ளார்கள்.
எனவே
ஒவ்வொரு
உற்சவத்தின்
கதையை
உருவாக்கி
இருக்கிறார்கள்.
உங்களுடைய
வாழ்க்கைக் கதையிலிருந்து பலவிதமான
சின்னச்சின்ன
கதைகளை
உருவாக்கி
விட்டார்கள்.
சிலர்
ராக்கியின்
கதையை உருவாக்கியிருக்கிறார்கள்,
சிலர்
ஹோலியின்
கதை,
சிலர்
ஜென்மத்தின்
கதையை
உருவாக்கியிருக்கிறார்கள்.
சிலர்
இராஜ
பதவி
ஏற்பு
(பட்டாபிஷேகம்)
நாளின்
கதையை
உருவாக்கி
விட்டார்கள்.
ஆனால்
இவை
அனைத்தும் உங்களுடைய
வாழ்க்கைக்
கதைகளின்
கதைகள்.
துவாபர்யுகத்தில்
காரிய
விவகாரத்திற்கும்
இந்த
அளவு நேரம்
கொடுக்க
வேண்டியதாக
இருந்தது
இல்லை.
ஓய்வாக
இருந்தீர்கள்.
மக்கள்
ஜனத்தொகையும் இப்பொழுதைய
ஜனத்தொகையின்
கணக்குப்படி
மிகக்
குறைவாக
இருந்தது.
செல்வமும்
ரஜோ
நிலையில் இருந்தது.
உங்களுடைய
நிலையும்
ரஜோ
பிரதானமாக
இருந்தது.
எனவே
தன்னைத்
தானே
பிஸியாக வைத்துக்
கொள்வதற்காக
இந்த
கதை,
கீர்த்தனைகள்
ஆகியவற்றை
உருவாக்கி
பயன்படுத்தினார்கள்.
ஏதாவது சாதனம்
வேண்டும்
இல்லையா?
நீங்களோ
ஒரு
வேலையும்
இல்லாமல்
இருக்கிறீர்கள்
என்றால்
ஒன்று சேவை
செய்கிறீர்கள்
அல்லது
நினைவில்
அமர்ந்து
விடுகிறீர்கள்.
அவர்கள்
அந்த
நேரம்
என்ன
செய்வார்கள்.
பிரார்த்தனை
செய்வார்கள்
அல்லது
கதை
கீர்த்தனை
கேட்பார்கள்.
எனவே
ஒன்றும்
சுமையற்ற
புத்தி
உடையவராகி மிக
நல்ல
நல்ல
கதைகளை
எழுதியிருக்கிறார்கள்.
அதுவும்
நல்லது
தான்.
தூய்மையின்மையில்
அதிகம் செல்வதிலிருந்து பாதுகாப்பாகிவிட்டார்கள்.
இன்றைய
நாட்களின்
சாதனமோ
அந்த
மாதிரியானது.
5
வருடத்து குழந்தைகளைக்
கூட
விகாரி
ஆக்கி
விடுகிறது.
மேலும்
அந்த
நேரம்
இருந்தும்
கொஞ்சம்
மரியாதைகளும் இருந்தன.
ஆனால்
இவை
அனைத்துமே
உங்களுடைய
நினைவுச்
சின்னங்கள்.
நான்
என்னுடைய
நினைவு சின்னத்தைக்
கொண்டாடிக்
கொண்டிருக்கிறேன்.
என்னுடைய
பாடலை
பாடிக்
கொண்டிருக்கிறேன்
என்று
அந்த அளவு
போதை
மற்றும்
குஷி
இருக்கிறது
தான்
இல்லையா?
எவ்வளவு
அன்புடன்
பாடலைப்
பாடுகிறார்கள்.
அந்த
அளவு
அன்பு
சொரூபமாக
நீங்கள்
ஆகியிருக்கிறீர்கள்.
அதனால்
தான்
அன்புடன்
பாடுகிறார்கள்.
புரிந்ததா?
ஹோலியின்
நினைவுச்
சின்னம்
எது?
எப்பொழுதும்
குஷியாக
இருங்கள்,
பாரமற்று
லேசாக இருங்கள்
என்ற
இது
தான்
கொண்டாடுவது.
நல்லது.
ஒருபொழுதும்
மூட்
ஆஃப்
ஆகிவிடாதீர்கள்.
எப்பொழுதுமே
ஹோலி மூட்,
லைட்
மூட்,
ஹேப்பி
மூட்
இருக்கட்டும்.
இப்பொழுது
மிக
நல்ல
ஞானம் நிறைந்தவர்
ஆகிக்
கொண்டே
இருக்கிறீர்கள்.
முதல்
நாள்
எப்பொழுது
மதுபன்னில்
வருகிறீர்களோ
அந்த புகைப்படம்,
மேலும்
பிறகு
எப்பொழுது
செல்கிறீர்களோ
அந்த
புகைப்படம்
இரண்டையுமே
எடுத்துக்
கொள்ள வேண்டும்.
சமிக்ஞையினாலே
புரிந்து
கொள்கிறார்கள்.
இருந்தும்
பாப்தாதாவின்
மற்றும்
பாப்தாதாவின்
வீட்டின் அலங்காரமாக
நீங்கள்
இருக்கிறீர்கள்.
நீங்கள்
வந்ததினால்
பாருங்கள்
மதுபன்
எவ்வளவு
கலகலகப்பாகி விட்டது.
எங்கு
பார்த்தாலும்
அங்கு
ஃபரிஷ்தாக்கள்
வந்த
போய்க்
கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள்
(வீட்டின்)
அலங்காரம்
என்று
பாப்தாதா
தெரிந்திருக்கிறார்.
நல்லது.
அனைவரும்
ஞானத்தின்
வண்ணத்தினால்
வண்ணம்
பூசப்பட்டு,
எப்பொழுதும்
தந்தையின்
தொடர்பு என்ற
வண்ணத்தில்
இருக்கக்கூடிய,
தந்தைக்குச்
சமமாக
சம்பன்னமாகி
மற்றவர்களையும்
அழியாத
வண்ணத்தில் வண்ணமாக்கக்கூடிய,
எப்பொழுதும்
புனித
நாளைக்
கொண்டாடக்
கூடிய
புனித
அன்னப்பறவை
ஆத்மாக்களுக்கு எப்பொழுதும்
சந்தோஷமாக
மற்றும்
தூய்மையாக
இருப்பதற்கான
பாப்தாதாவின்
வாழ்த்துக்கள்
உரித்தாகுக.
எப்பொழுதும்
தன்னை
சம்பன்னம்
ஆக்குவதற்கும்
ஊக்கம்
உற்சாகத்தில்
இருப்பதற்குமான
வாழ்த்துக்கள் உரித்தாகுக.
கூடவே
நாலாபுறங்களிலும்
உள்ள
அன்பிலேயே
மூழ்கியிருக்கக்கூடிய,
எப்பொழுதும்
சந்திப்பை செய்து
கொண்டிருக்கக்கூடிய
விசேஷ
குழந்தைகளுக்கு
அன்பு
நினைவுகள்
மற்றும்
நமஸ்காரம்.
தனிப்பட்ட
சந்திப்பு:
1)
எப்பொழுதும்
தன்னை
தந்தையின்
ஆஸ்திக்கு
அதிகாரி
அதாவது
உரியவராக
அனுபவம்
செய்கிறீர்களா?
அதிகாரி
என்றால்
சக்திசாலியான ஆத்மா
என்று
புரிந்து
கொண்டு
காரியம்
செய்யுங்கள்.
எந்தவிதமான
பலஹீனமும் தங்கிப்
போய்
விடவில்லையே?
எப்பொழுதும்
தன்னை
எப்படி
தந்தை
இருக்கிறாரோ
அப்படி
நானும் இருக்கிறேன்,
தந்தை
சர்வ
சக்திவானாக
இருக்கிறார்,
குழந்தைகள்
மாஸ்டர்
சர்வ
சக்திவான்
என்ற
இந்த நினைவு
மூலம்
எப்பொழுதுமே
சுலபமாக
முன்னேறிச்
சென்று
கொண்டே
இருக்கிறார்கள்.
இந்தக்
குஷி
எப்பொழுதுமே
இருக்கட்டும்.
ஏனென்றால்,
இப்பொழுதைய
குஷி
முழுக்
கல்பத்திலும்
இருக்க
முடியாது.
இப்பொழுது
தந்தை
யிடமிருந்து
பிராப்தி
ஆகிறது,
பின்பு
ஆத்மாக்கள்
மூலமாக
ஆத்மாக்களுக்கு
பிராப்தி கிடைக்கும்.
தந்தை
மூலமாக
என்ன
பிராப்தி
ஆகிறதோ
அது
ஆத்மாக்களிடமிருந்து
கிடைக்க
முடியாது.
ஆத்மாக்கள்
அவர்களே
அனைத்தும்
தெரிந்தவர்களாக
இருக்கவில்லை.
எனவே
அவர்களிடமிருந்து
என்ன பிராப்தி
ஆகிறதோ
அது
அற்ப
காலத்திற்கானதாக
இருக்கும்.
மேலும்
தந்தை
மூலமாக
சதா
காலத்திற்கும் அழியாத
பிராப்தி
ஆகிறது.
இப்பொழுது
தந்தை
மூலமாக
அழியாத
குஷி
கிடைக்கிறது.
எப்பொழுதும் குஷியில்
நடனமாடிக்
கொண்டே
இருக்கிறீர்கள்
இல்லையா?
எப்பொழுதும்
குஷியின்
ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருங்கள்.
கீழே
இறங்கி
வந்தீர்கள்
என்றால்
அழுக்காகி
விடுவீர்கள்.
ஏனென்றால்
கீழே
மண்
இருக்கிறது.
எப்பொழுதும்
ஊஞ்சலில் இருக்கிறீர்கள்
என்றால்
எப்பொழுதும்
சுத்தமாக
இருக்கிறீர்கள்,
சுத்தமானவர்
ஆகாமல் தந்தையோடு
சந்திப்பை
செய்ய
முடியாது.
எப்படி
தந்தை
மிகத்
தூய்மையாக
இருக்கிறார்.
அவரோடு சந்திப்பதற்கான
விதியும்
தூய்மையாக
வேண்டும்.
அப்படி
எப்பொழுதும்
ஊஞ்சலில் இருப்பவர்கள்,
எப்பொழுதும் சுத்தமாக
இருக்கிறார்கள்.
எப்பொழுது
ஊஞ்சல்
கிடைக்கிறது
என்றால்,
கீழே
ஏன்
வந்து
வந்துவிடுகிறீர்கள்..
ஊஞ்சலில் அமர்ந்து
கொண்டே
அருந்துங்கள்,
உண்ணுங்கள்,
நடங்கள்.
. . .
அந்த
அளவு
பெரிய
ஊஞ்சலில்.கீழே
வருவதற்கான
நாட்கள்
முடிந்து
விட்டன,
இப்பொழுது
ஊஞ்சலில் ஆடுவதற்கான
நாள்.
எனவே எப்பொழுதும்
தந்தையுடன்
சுகத்தின்
ஊஞ்சலில் குஷி,
அன்பு,
ஞானம்,
ஆனந்தத்தின்
ஊஞ்சலில் ஆடக்கூடிய சிரேஷ்ட
ஆத்மா
நான்
என்பதை
எப்பொழுதும்
நினைவில்
வையுங்கள்.
எப்பொழுதாவது
ஏதாவது
விஷயம் வருகிறது
என்றால்
இந்த
வரதானத்தை
நினைவு
செய்தீர்கள்
என்றால்
மீண்டும்
வரதானத்தின்
ஆதாரத்தில் தந்தையின்
துணையை,
ஊஞ்சலில் ஆடுவதற்கான
அனுபவத்தை
செய்வீர்கள்.
இந்த
வரதானம்
எப்பொழுதும் பாதுகாப்பிற்கான
சாதனம்.
வரதானம்
நினைவு
இருக்கிறது
என்றால்
வரமளிப்பவரின்
நினைவு
இருப்பது.
வரதானத்தில்
எந்தவொரு
கடின
உழைப்பும்
இருக்காது.
அனைத்து
பிராப்திகளும்
சுலபமாகவே
ஆகிவிடும்.
2)
நீங்கள்
அனைவரும்
ஒரு
பலம்
ஒருவர்
மேல்
உள்ள
நம்பிக்கையில்
சென்று
கொண்டிருக்கும் சிரேஷ்ட
ஆத்மாக்கள்
தான்
இல்லையா!
ஒரு
பலம்
மற்றும்
ஒருவர்
மேல்
உள்ள
நம்பிக்கையில்
நடந்து கொள்ளும்
நிச்சயபுத்தி
குழந்தைகள்
இந்த
சாகார
பாபா
மூலமாக
சொல்லப்படும்
முரளி
தான்
உண்மையான பகவானின்
முரளி,
மதுபனில்
இருந்து
என்ன
ஸ்ரீமத்
கிடைக்கிறதோ
அது
தான்
ஸ்ரீமத்,
தந்தையைத்
தவிர வேறு
யாரிடமிருந்தும்
கிடைக்க
முடியாது.
எப்பொழுதும்
ஒரு
தந்தையின்
படிப்பின்
மேல்
நிச்சயம்
இருக்க வேண்டும்.
மதுபனில்
இருந்து
படிப்பிற்கான
பாடம்
என்ன
வருகிறதோ
அது
தான்
படிப்பு,
வேறு
எந்த படிப்பும்
இல்லை.
ஒருவேளை
போக்
சுவீகாரம்
செய்விக்கும்
நேரத்தில்
செய்தி
கொண்டு
வருபவர்
மூலமாக தந்தையின்
பங்கு
நடந்து
கொண்டிருக்கிறது
என்றால்,
இது
முற்றிலும்
தவறு
இதுவும்
மாயா.
இதை
ஒரு பலம்
மேலும்
ஒருவர்
மேல்
உள்ள
நம்பிக்கை
என்று
கூற
மாட்டோம்.
மதுபனிலிருந்து என்ன
முரளி வருகிறதோ
அதன்
மேல்
கவனம்
வையுங்கள்.
இல்லையென்றால்,
பாதை
மாறிச்
சென்று
விடுவீர்கள்.
மதுபனில் தான்
பாபாவின்
முரளி
சொல்லப்படுகிறது,
மதுபன்னில்
தான்
பாபா
வருகிறார்,
எனவே
ஒவ்வொரு
குழந்தையும் இந்த
கவனம்
வைக்க
வேண்டும்
இல்லையென்றால்
மாயா
ஏமாற்றம்
செய்துவிடும்
(11.04.1982.)
வரதானம்:
திடத்தன்மையின்
சக்தி
மூலமாக
வெற்றியை
அடையக்கூடிய
மூன்று காலங்களையும்
தெரிந்த
ஆசனத்தில்
அமர்ந்திருப்பவர்
ஆகுக.
திடத்தன்மையின்
சக்தி
சிரேஷ்ட
சக்தியாகும்.
அது
அலட்சியத்தின்
சக்தியை
சுலபமாக
பரிவர்த்தனை செய்து
விடுகிறது.
எங்கு
திடத்தன்மை
இருக்கிறதோ
அங்கு
கண்டிப்பாக
வெற்றி
இருக்கிறது
என்பது
பாப்தாதாவின் வரதானம்.
எப்படி
நேரமோ
அப்படி
விதி
மூலம்
சித்தி
சொரூபமாக
மட்டும்
ஆகுங்கள்.
எந்தக்
காரியம் செய்வதற்கு
முன்பும்
அதனுடைய
முதல்,
இடை,
கடையை
யோசித்து,
புரிந்து
காரியம்
செய்யுங்கள்
மற்றும் செய்வியுங்கள்.
அதாவது
மூன்று
காலங்களையும்
தெரிந்த
ஆசனத்தில்
அமர்ந்தவராக
ஆகுங்கள்.
பிறகு அலட்சியம்
முடிவடைந்து
விடும்.
எண்ணம்
என்ற
விதை
சக்திசாலியாக திடத்தன்மை
நிரம்பியதாக
இருக்கிறது என்றால்
வார்த்தைகள்
மற்றும்
செயலில் சுலபமாகவே
கண்டிப்பாக
வெற்றி
இருக்கும்.
சுலோகன்
:
எப்பொழுதும்
திருப்தியாக
இருந்து
அனைவரையும் திருப்தி
படுத்துபவர்
தான்
திருப்தியான
ஆத்மா.
சுற்றிக்கை
–
இன்று
மாதத்தின்
மூன்றாவது
ஞாயிற்றுக்
கிழமை.
அனைத்து
சகோதர
சகோதரிகளும்
மாலை
6.30
முதல்
7.30
வரை
விசேஷமாக
அனைவரும்
ஒன்றாகக்
கூடி
தெய்வீக
புத்தி
என்ற
விமானம்
மூலமாக
அவ்யக்த வதனவாசி
ஆகி,
அனைத்து
ஆத்மாக்களுக்காக
சுபபாவனை
மற்றும்
சுபவிருப்பங்களின்
சகயோக
அலையைப் பரப்பும்
சேவை
செய்யுங்கள்.
ஓம்சாந்தி