14.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! பாபா உங்களுக்கு சிவில் (தூய்மையான) கண்ணை தர வந்திருக்கிறார். உங்களுக்கு ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. ஆகையால் இந்தக் கண்கள் கிரிமினல் (குற்றமுள்ள) கண்களாகக் கூடாது.

 

கேள்வி:

எல்லையில்லா சன்னியாசிகளான உங்களுக்கு பாபா எந்த ஒரு ஸ்ரீமத் தந்திருக்கிறார்?

 

பதில்:

பாபாவின் ஸ்ரீமத் இது, நீங்கள் நரகம் மற்றும் நரகவாசிகளிடமிருந்து புத்தியை விலக்கி சொர்க்கத்தை நினைவு செய்யவும். இல்லறத்தில் வாழ்ந்து கொண்டு நரகத்தைப் புத்தியால் தியாகம் செய்யுங்கள், நரகம் என்பது பழைய உலகம், நீங்கள் புத்தியால் பழைய உலகத்தை மறக்கவும். ஒரு குறுகிய வீட்டை விலக்கி விட்டு இன்னொரு இடம் செல்ல வேண்டும் என்பது உங்களுக்கில்லை. உங்களுடையது, எல்லையில்லாத வைராக்கியம் (துறவு மனம்). இதுவே உங்களுடைய வானப்பிரஸ்தா நிலை.

 

ஓம் சாந்தி.

சிவ பகவான் கூறுகின்றார். வேறு எவருடைய பெயரையும் எடுக்கவில்லை, இவருடைய (பிரம்மாவின்) பெயரையும் எடுக்கவில்லை. பாவத்தை நீக்குபவர் பாபா. அவர் கண்டிப்பாக அழுக்கானவர்களை தூய்மை செய்ய இங்கே வருவார். தூய்மை பெறுவதற்கு வழியையும் இங்கே அவர் கூறுகின்றார். ஆகையால் சிவ பகவான் கூறுகிறார் என்பதே சரி. கிருஷ்ண பகவான் கூறுகிறார் என்பது கிடையாது. பேட்ஜ் இருக்கிறபொழுது அதைக் கொண்டு கண்டிப்பாகப் புரிய வைக்கவும். படைப்பவர் படைப்பின் முதல், இடை, இறுதியின் முழு ரகசியம் இங்கே இந்த பேட்ஜில் காட்டப் பட்டிருக்கிறது. இந்த பேட்ஜ் மதிப்பில் குறைந்ததல்ல. குறிப்பான விஷயம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் நம்பர்வார் (வரிசைப்படி) முயற்சிக்குத் தக்கபடி ஆஸ்திகராக இருக்கிறீர்கள். வரிசைப்படி என்று கண்டிப்பாகக் கூற வேண்டும். அனேகரால் படைத்தவர் படைப்பு பற்றிய ஞானத்தைக் கூட புரிய வைக்க முடியவில்லை. அப்படி என்றால் சதோபிரதான புத்தி என்று சொல்லவா முடியும்? சதோபிரதான புத்தி, பிறகு ரஜோ புத்தி, பிறகு தமோ புத்தியும் இருக்கிறது. ஆனால் இதை சொல்வதில்லை. மனம் ஒடிந்து விடக்கூடாது என்பதற்காக வரிசைப்படி தான் இருக்கிறார்கள். முதல் தரத்திற்கு மதிப்பும் மிக அதிகமாக இருக்கிறது. இப்பொழுது உங்களுக்கு உண்மையான சத்குரு கிடைத்திருக்கிறார். இப்பொழுது குழந்தைகள் அறிந்துள்ளீர்கள், நமக்கு சத்குரு கிடைத்திருக்கிறார். மேலும் அவர் முற்றிலும் உங்களை உண்மையிலும் உண்மையாக உருவாக்கி விடுகிறார். உண்மையானவர் தேவி தேவதையாவார்கள். அவர்கள் பிறகு வாம மார்க்கத்தில் (வழியில்) பொய்யானவர் ஆகிவிடுகிறார்கள். சத்யுகத்தில் தேவி தேவதையான நீங்கள் மட்டும் இருக்கிறீர்கள். மற்ற எவரும் இருப்பதில்லை. இப்படி எப்படி இருக்க முடியும் என்று கேட்பவர்கள் சில பேர் இருக்கிறார்கள். ஞானம் இல்லை அல்லவா? இப்பொழுது குழந்தைகளான நீங்கள் நாம் நாஸ்திகரிலிருந்து, ஆஸ்திகர் ஆகி இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறீர்கள், படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை,, இறுதியின் ஞானத்தை இப்பொழுது நீங்கள் துல்லியமாக அறிந்துள்ளீர்கள். பெயரும், உருவமும் இல்லாமல் விலகி இருக்கும் பொருளைப் பார்க்க முடிவதில்லை. ஆகாயத்துடன் காந்த சக்தி (போலார்) இருக்கிறது. ஆனால் இது ஆகாயம் தான் என்று உணரப்படுகிறது. இல்லையா? இது கூட ஞானம் தான். எல்லா நுட்பமும் புத்தியால் புரியும்படி அமைந்திருக்கிறது. படைப்பவர், படைப்பைப் பற்றிய ஞானத்தை ஒரு பாபா தருகின்றார். இதையும் அதாவது இங்கே படைப்பவர், படைப்பு இவற்றின் முதல், இடை, இறுதி பற்றிய ஞானம் கிடைக்கும் என்று எழுதி வைக்கவும். இப்படி நிறைய சுலோகன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதுப்புது ஞான முத்துக்களும் (பாயின்ட்ஸ்) புது புது சுலோகனும் வந்து கொண்டிருக்கின்றன. ஆஸ்திகர் ஆவதற்கு படைப்பவர், படைப்பு பற்றிய ஞானம் கண்டிப்பாக தேவை. பிறகு நாஸ்திகத் தன்மை உடைந்து விடும். நீங்கள் ஆஸ்திகராகி உலகத்தின் எஜமானன் ஆகிவிடுவீர்கள். இங்கே நீங்கள் ஆஸ்திகர்கள், ஆனால் உங்கள் முயற்சிக்குத்தக்கபடி வரிசையாக இருக்கிறீர்கள். அறிய வேண்டியவர்கள் மனிதர்களே! மிருகங்கள் அறிய முடியாது. மனிதர்கள் தான் மிக உயர்ந்தவர்கள், (சத்யுகத்தில்) மனிதர்களே (கலியுகத்தில்) தாம் மிகத் தாழ்ந்தவர்கள். இந்த சமயத்தில் எந்த ஒரு மனிதனும் படைத்தவர், படைப்பு பற்றிய ஞானத்தை அறியவில்லை. புத்தியில் ஒரே அடியாக காட்ரேஜ் பூட்டு போடப்பட்டிருக்கிறது. நாம் பாபாவிடம், உலக எஜமானன் ஆவதற்காக வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் உங்களுடைய முயற்சிக்குத் தக்கபடி, வரிசைப்படி அறிவீர்கள். நீங்கள் 100% தூய்மையில் இருக்கிறீர்கள். அங்கே தூய்மையும் இருக்கிறது, அமைதியும் இருக்கிறது, செழிப்பும் இருக்கிறது. ஆசீர்வாதம் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த வார்த்தை பக்தி மார்க்கத்திற்கு உரியது இங்கு நீங்கள் லட்சுமி நாராயணனாக படிப்பு மூலம் ஆகிறீர்கள். நீங்கள் படித்து மற்றவர்களுக்கும் கல்வியை சொல்லிக் கொடுக்கவும். பள்ளிக்கு குமார், குமாரிகள் படிப்பதற்காக செல்கிறார்கள். சேர்ந்து படிப்பதால் மிகக்கெட்டும் போகிறார்கள். ஏனென்றால் கிரிமினல் (விகாரமான) பார்வை இருப்பதால், முகத்திரை அணிகிறார்கள். அங்கே கிரிமினல் கண் இல்லை. ஆகவே முகத்திரை அணிய அவசியமில்லை. இந்த லட்சுமி, நாராயணருக்கு முகத்திரை மாட்டி இருப்பதை பார்த்திருக்கின்றீர்களா? அங்கே ஒருபொழுதும் இப்படி கெட்ட எண்ணமும் வருவதில்லை. இதுவோ இராவண ராஜ்யம், இந்த கண்கள் பெரிய சாத்தான். பாபா வந்து ஞானக் கண் கொடுக்கிறார். ஆத்மாதான் எல்லாம் கேட்கிறது, பேசுகிறது. அனைத்தையும் செய்வது ஆத்மாதான். உங்களுடைய ஆத்மா இப்பொழுது திருந்திக் கொண்டிருக்கிறது. ஆத்மாதான் சீர் கெட்டு பாவ ஆத்மா ஆகிவிட்டது. பாவ ஆத்மா என்று கிரிமினல் (விகாரமான) பார்வை உள்ளவருக்கு கூறப்படுகின்றது. அந்தக் கிரிமினல் (விகாரமான) கண்ணை பாபாவைத் தவிர வேறு யாராலும் திருத்த முடியாது. ஞானம் என்ற சிவில் (பவித்திரமான) கண்ணை பாபாதான் தருகிறார். இந்த ஞானத்தையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். சாஸ்திரத்தில் இந்த ஞானம் இருக்கவா செய்கிறது? பாபா கூறுகின்றார், இந்த வேதம், சாஸ்திரம், உபநிஷம் முதலிய எல்லாம் பக்தி மார்க்கம். ஜபம், தவம், தீர்த்தயாத்திரை முதலிய எதைச் செய்தாலும் என்னை எவரும் அடைய முடியாது. இந்த பக்தி அரை கல்பம் நடக்கிறது. இப்பொழுது குழந்தைகள் அனைவருக்கும் இந்த செய்தியைக் கொடுக்க வேண்டும். வாருங்கள் நாங்கள் உங்களுக்கு படைப்பவர், படைப்பின் முதல், இடை, இறுதியின் ஞானத்தைக் கூறுவோம். பரம்பிதா பரமாத்மாவின் வரலாற்றைக் கூறுவோம். மனிதர் எவரும் இதை அறிந்திருக்கவில்லை. முக்கிய வார்த்தை இதுதான். வாருங்கள் சகோதரிகளே, சகோதரர்களே, வந்து படைப்பவர், படைப்பின் முதல், இடை, கடையின் ஞானத்தைக் கேளுங்கள். அதன் மூலம் நீங்கள் இப்படி ஆவீர்கள். இந்த ஞானத்தைப் பெற்றால், சிருஷ்டி சக்கரத்தைப் புரிந்தால் நீங்கள் இப்படி சத்யுகத்தில் சக்கரவர்த்தியாக மஹா ராஜா மஹா ராணி ஆக முடியும். இந்த லட்சுமி நாராயணரும் இந்த படிப்பினால் இப்படி ஆனார்கள். நீங்கள் குழந்தைகள் கூட படிப்பு மூலம் இப்படி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த புருஷோத்தம சங்கம யுகத்திற்கு நிறைய செல்வாக்கு இருக்கிறது. பாபா வருவதும் பாரதத்தில் தான். மற்ற கண்டத்தில் ஏன் வர வேண்டும்? பாபா அழிவில்லாத மருத்துவர் எந்த பூமி நிரந்தரமாக வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கிறதோ, அங்குதான் வருவார், கண்டிப்பாக. எந்த பூமியில் பகவானுடைய பாதம் பட்டதோ, அந்த பூமி ஒருபொழுதும் அழிய முடியாது. இந்த பாரதம், தேவதை களுக்காக இருக்கிறது. இதில் மாற்றம் மட்டும் ஏற்படுகிறது. பாரதம் உண்மையான கண்டமாக, பிறகு பொய்யான கண்டமாகவும் மாறுகிறது. பாரதத்திற்குத் தான் ஆல் ரவுன்ட் (அனைத்து யுகங்களின்) நடிப்பு இருக்கிறது. மற்ற எந்த கண்டத்திற்கும் இப்படிக் கூற முடியாது. சத்தியம், அதாவது உண்மை என்ற பகவான் தான் வந்து உண்மையான கண்டத்தை ஆக்குகிறார். பிறகு அதை இராவணன் பொய்யான கண்டமாக ஆக்குகிறான். இப்பொழுது பாபாவே கூறுகிறார்: குழந்தாய், பவித்திரமாய் (தூய்மை) ஆகுக! தெய்வீக குணத்தை தாரணை செய்க! நீங்கள் இப்பொழுது தேவதை ஆக வேண்டும். சன்னியாசி எவரும் சம்பூர்ண நிர்விகாரி ஆகவில்லை. அடிக்கடி விகாரிகளிடம் பிறவி எடுக்கிறார்கள். அனேக பால பிரம்மசாரிகளும் இருக்கிறார்கள். இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். வெளி நாட்டிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். பிறகு வயதாகிவிட்டால் கவனிப்பதற்கு கல்யாணம் செய்து கொள்வார்கள். பிறகு அவர்களுக்கு சொத்து, செல்வங்களை விட்டுச் விட்டு செல்கிறார்கள். மீதி செல்வத்தை தானம் செய்துவிட்டுச் செல்கிறார்கள். இங்கோ, தங்களுடைய குழந்தைகளிடம் நிறைய மோகம் இருக்கிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளுக்கு எல்லாம் அர்ப்பணித்து விட்டு பிறகு கண்காணிக்கிறார்கள். நமக்குப் பிறகு சரியாக நடத்துகிறார்களா இல்லையா என்று. ஆனால் தற்காலத்தில் குழந்தைகள் கூறுகிறார்கள்: அப்பா வானப்பிரஸ்தம் ஆகிவிட்டார், நல்லதாயிற்று! சாவி கிடைத்துவிட்டதே! ஆனால், உயிருடன் இருக்கும் பொழுதே, செல்வம் முழுவதையும் அழித்துவிடுகிறார்கள். பிறகு அப்பாவிடமே கூறுகிறார்கள்: இங்கிருந்து போங்கள் வெளியே. இதனால் பாபா புரிய வைக்கிறார். கண்காட்சியில் நீங்கள் இதை எழுதி வையுங்கள். சகோதரிகளே, சகோதரர்களே, வந்து படைப்பவர், படைப்பின் ஆதி, மத்திய, இறுதியின் ஞானத்தைக் கேளுங்கள். இந்த சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தை அறிந்தால், சக்கரவர்த்தியாக தேவி, தேவதையாக, உலகத்தின் மஹா ராஜன், மஹா ராணியாகிவிடுவீர்கள். பாபா குழந்தை களுக்கு கட்டளை இடுகின்றார்.

 

பாபா கூறுகிறார், இவருக்கு இது அனேகப் பிறவிக்குப் பிறகான கடைசிப் பிறவியாகும். நான் இவரிடம் தான் பிரவேசம் ஆகிறேன். பிரம்மாவுக்கு முன்னால் விஷ்ணு, விஷ்ணுவுக்கு 4 கரங்களை ஏன் கொடுத்திருக்கிறார்கள். 2 கைகள் ஆணுடையது. 2 கைகள் பெண்ணுடையது. இங்கே 4 கைகளை உடைய மனிதர் யாரேனும் இருக்கிறார்களா? இது புரிய வைப்பதற்காகக் கூறப்படுகிறது. விஷ்ணு என்றால் லட்சுமி நாராயணனர், பிரம்மாவுக்கும் கூட காட்டுகிறார்கள். 2 கைகள் பிரம்மாவுக்கு, 2 கைகள் சரஸ்வதிக்கு. இருவரும் எல்லையற்ற சன்னியாசி ஆகி விட்டார்கள். சன்னியாசம் வாங்கிய பிறகு வேறு இடம் செல்வது என்பது உங்களுக்கு இல்லை. பாபா கூறுகிறார். இல்லற வாழ்க்கையில் இருந்து, நரகத்தைப் புத்தியால் தியாகம் செய்து விடுங்கள். நரகத்தை மறந்து விட்டு, சொர்க்கத்தைப் புத்தியால் நினைக்கவும். நரகம் மற்றும் சொர்க்கம் மீது புத்தியோகத்தை விலக்கி சொர்க்கவாசியான தேவதைகள் மீது புத்தி யோகத்தை செலுத்தவும். யார் படிக்கிறாரோ அவருக்கு புத்தியில் இது இருக்கும் இல்லையா, அதாவது நாம் பாஸாகி, இப்படி ஆகிவிடுவோம் என்பது. முன்பு, எப்பொழுது வானப்பிரஸ்தா நிலை ஏற்படுமோ, அப்பொழுது குருவை வைத்துக் கொள்வார்கள். பாபா கூறுகிறார்.

 

நானும் இவருடைய வானப்பிரஸ்தா நிலையில்தான் பிரவேசம் செய்கிறேன். இது அவருக்கு அனேகப் பிறவிக்குப் பிறகு இறுதியான பிறவியாகும். பகவான் கூறுகிறார்: தான் நிறைய பிறவிக்குப் பின் இறுதியான பிறவியில் தான் பிரவேசம் செய்கிறேன். யார் ஆரம்பத்திலிருந்து, தொடர்ந்து இறுதிவரை தனது பங்கை நடித்தாரோ, அவரிடம் தான் பிரவேசிக்கிறேன். ஏனென்றால் அவர்தான் முதல் நம்பரில் செல்ல வேண்டியதிருக்கிறது. பிரம்மா தான் விஷ்ணு, விஷ்ணுதான் பிரம்மா. இருவருக்கும் 4 கரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். கணக்கு இருக்கிறது, பிரம்மா சரஸ்வதிதான் லட்சுமி நாராயணனர், பிறகு லட்சுமி நாராயணர் தான் பிரம்மா சரஸ்வதி ஆகிறார்கள். குழந்தைகள் நீங்கள் சட்டென்று கணக்கை கூற முடிகிறது. விஷ்ணு என்றால் லட்சுமி நாராயணர். 84 பிறவி எடுத்து, எடுத்து கடைசியில் சாதாரணமாக இப்படி பிரம்மா சரஸ்வதி ஆகிறார்கள். இவருடைய பெயர் கூட பின்னால் பிரம்மா என்று பாபாதான் வைத்தார். பிரம்மாவுக்கு தந்தை யார் என்று கேட்டால், கண்டிப்பாக சிவ பாபா என்பார்கள். அவரை எப்படி படைத்தார்? அடாப்ட் (தத்து) எடுக்கிறார். பாபா கூறுகிறார்: நான் இவருக்குள் பிரவேசம் செய்கிறேன். எனவே இப்படி எழுத வேண்டும். சிவ பகவான் கூறுகிறார்: நான் பிரம்மாவிடம் பிரவேசம் செய்கிறேன். அவருக்கு தன்னுடைய பழைய பிறவி பற்றி தெரியாது. அனேகப் பிறவிகளுக்கு இறுதியிலும் இறுதியான பிறவியில் நான் பிரவேசிக்கிறேன். அதுவும் அவருக்கு எப்பொழுது வானப்பிரஸ்தா (உலகீய வாழ்விற்கு அப்பாற்பட்ட) நிலை ஏற்படுகிறதோ, அப்பொழுது நான் வருகிறேன். மேலும் உலகம் பழையதாகி, எப்பொழுது அழுக்காகிறதோ, அப்பொழுது நான் வருகிறேன். எவ்வளவு சுலபமாகக் கூறுகிறேன். முன்னால் 60 வயதுக்குப் பின் தான் குருவை ஏற்றுக் கொள்வார்கள். இப்பொழுதோ பிறந்த உடனே குருவை வைத்துக் கொள்கிறார்கள். இதை கிறிஸ்தவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். சரி, குழந்தைப் பருவத்தில் குருவை வைத்துக்கொள்ள என்ன அவசியம் வந்தது? சிறு வயதில் இறந்து விட்டால் சத்கதி கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். பாபா புரிய வைக்கிறார். இங்கு எவருக்கும் சத்கதி கிடைக்க முடியாது. பாபா இப்பொழுது உங்களுக்கு எவ்வளவு சுலபமாகப் புரிய வைக்கிறார்? உயர்ந்தவராக்குகின்றார்? பக்தியில் ஏணியில் நீங்கள் இறங்கியே வந்தீர்கள், இராவண ஆட்சி இல்லையா? விகார உலகம் ஆரம்பிக்கிறது. எல்லோரும் குருவை வைத்திருக்கிறார்கள். இவரும் கூறுகிறார்: நானும் நிறைய குருக்களை வைத்திருந்தேன். பகவான் அனைவருக்கும் சத்கதி தருகிறார், ஆனால் அவரை அறியவே இல்லை. பக்தி என்ற பெயரில் பலமான சங்கிலி உருவாகிக்கிடக்கிறது. சில சங்கிலி கனமாகவும், சில சங்கிலி லேசாகவும் இருக்கிறது. ஏதேனும் கனமாக பொருளைத் தூக்க வேண்டுமானால், எவ்வளவு பெரிய சங்கிலியில் கட்டித் தூக்குகிறார்கள். இங்கும் அப்படி இருக்கிறது. சிலர் உடனே வந்து உங்களிடம் கேட்பார்கள். நன்றாகப் படிப்பார்கள். சிலர் புரியவே மாட்டார்கள். வரிசைப்படி மாலையில் மணிகள் அமைகின்றன. பக்தி மார்க்கத்தில் மாலையை நினைக்கிறார்கள். ஞானம் கொஞ்சமும் கிடையாது. குரு சொல்லிவிட்டார். மாலையை சுற்றிக் கொண்டிரு, அவ்வளவுதான். ராம், ராம் என்று ஒத்துக்கொண்டிருப்பார்கள். வாத்திய கருவி இசைப்பதைப் போல, சத்தம் ரொம்ப இனிமையாக இருக்கும். அவ்வளவுதான். மற்றபடி எதுவும் தெரியாது. ராம் என்று யார் கூறப்படுகிறார். கிருஷ்ணர் என்று யார் கூறப்படுகிறார். அவர் எப்பொழுது வருகிறார், எதுவும் தெரியாது. கிருஷ்ணரையும் துவாபர் யுகத்திற்கு எடுத்துப் போய் விட்டார்கள். இதை எல்லாம் கற்றுக் கொடுத்தது யார்? குருமார்கள், கிருஷ்ணர் துவாபர் யுகத்தில் வந்தார், என்றால் பிறகு கலியுகம் வந்துவிட்டதே! உலகம் தமோ பிரதானமாகி விட்டதே! பாபா கூறுகிறார். நான் சங்கமயுகத்தில் தான் வந்து தமோபிரதானத்தை (தாழ்வான நிலை) சதோபிரதானமாக (தூய்மையான நிலை) மாற்றுகிறேன். நீங்கள் எவ்வளவு குருட்டு நம்பிக்கையுடையவராகி விட்டீர்கள்? பாபா புரிய வைக்கிறார்: முள்ளிலிருந்து மலராகக் கூடியவர் உடனே புரிந்து கொள்கிறார். இது முற்றிலும் சத்தியமான விஷயம் தான் என்பார். யாரேனும் நன்றாகப் புரிந்தால், உங்களைப் பார்த்து, நீங்கள் நன்றாகப் புரிய வைக்கிறீர்கள், என்று கூறுவார். 84 பிறவி கதையும் சரிதான், ஞானக் கடல் ஒரு பாபா தான். அவர் வந்து, உங்களுக்கு முழு ஞானத்தைத் தருகிறார்.

 

இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும், காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. சத்குரு பாபாவின் நினைவு மூலம் புத்தியை சதோ பிரதானமாக்கவும். உண்மையானவர் ஆகவும், ஆஸ்திகர் ஆகி பிறரையும் ஆஸ்திகராக்கும் சேவை செய்யவும்.

 

2. இப்பொழுது வானப் பிரஸ்தா நிலை. ஆகையால் எல்லையற்ற சன்னியாசி ஆகி, அனைவரிடமிருந்தும், புத்தி யோகத்தை விலக்கிட வேண்டும். தூய்மை அடைய வேண்டும். தெய்வீக குணத்தைத் தாரணை செய்ய வேண்டும்.

 

வரதானம்:

அனைத்தையும் உனது உனது என்று செய்து, எனது என்ற தன்மையின் அணு அளவையும் முடித்து விடக் கூடிய (டபிள் லைட்) லேசாக மற்றும் ஒளியாக இருப்பவர் ஆவீர்களாக.

 

எந்தவொரு எனது என்ற தன்மை - எனது சுபாவம், எனது சம்ஸ்காரம் மற்றும் எனது (நேச்சர்) இயல்பு .. .. .. சிறிதளவு கூட எனது என்று இருக்கிறது என்றால் சுமை இருக்கும். மேலும் சுமை உடையவரால் பறக்க முடியாது. இந்த (மேரா மேரா) எனது எனது என்பது தான் (மைலா) அசுத்தமாக ஆக்கி விடக் கூடியது ஆகும். எனவே இப்பொழுது உனது உனது என்று கூறி தூய்மையானவர் ஆகுங்கள். ஃபரிஷ்தா என்றாலே எனது என்ற தன்மை அணு அளவும் இல்லாதிருப்பது. எண்ணத்தின் அளவில் கூட எனது என்ற தன்மையின் உணர்வு வந்தது என்றால், அழுக்காகி விட்டேன் என்று புரிந்து கொள்ளுங்கள். எனவே இந்த அழுக்குத் தன்மையின் சுமையை முடித்து (டபிள் லைட்) லேசானவர் மற்றும் ஒளியானவராக ஆகுங்கள்.

 

சுலோகன்:

யார் பாப்தாதாவை தங்கள் கண்களில் அடக்கி வைத்திருப்பார்களோ அவர்களே உலகத்தின் ஒளி ஆவார்கள்.

 

ஓம்சாந்தி