22.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இப்போது பாவ கர்மங்கள் (விகர்மங்கள்) செய்வதை நிறுத்திவிடுங்கள். ஏனெனில் இப்போது நீங்கள் (விகர்மாஜீத்) விகர்மங்களை வென்று புதிய யுகத்தை (சகாப்தம்) தொடங்க வேண்டும்.

 

கேள்வி:

ஒவ்வொரு பிராமண குழந்தையும் எந்த ஒரு விஷயத்தில் தந்தையை பின்பற்றுவது மிகவும் அவசியம்?

 

பதில்:

தந்தை எப்படி தானே ஆசிரியர் ஆகி படிப்பிக்கின்றாரோ அது போல தந்தைக்குச் சமமாக ஒவ்வொருவரும் ஆசிரியர் ஆக வேண்டும். எதைப் படிக்கிறீர்களோ, அதை பிறருக்கும் படிப்பிக்க வேண்டும். நீங்கள் ஆசிரியரின் குழந்தைகள் ஆசிரியர்கள், சத்குருவின் குழந்தைகள் சத்குருவாகவும் உள்ளீர்கள். நீங்கள் உண்மையான கண்டத்தை (உலகை) ஸ்தாபனை செய்ய வேண்டும். நீங்கள் சத்தியத்தின் படகில் இருக்கிறீர்க்ள், உங்களின் படகு ஆடலாம், அசையலாம், ஆனால் மூழ்க முடியாது.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து குழந்தைகளுடன் ஆன்மீக உரையாடல் செய்து கொண்டிருக்கிறார். ஆத்மாக்களிடம் கேட்கிறார், ஏனென்றால் இது புது ஞானமாகும். மனிதரிலிருந்து தேவதையாகக் கூடிய புதிய ஞானம் அல்லது படிப்பு இது. இதை உங்களுக்கு படிப்பிப்பவர் யார்? ஆன்மீகத் தந்தை பிரம்மாவின் மூலமாக குழந்தைகளாகிய நமக்கு படிப்பிக்கிறார் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இதை மறக்கக் கூடாது. அவர் தந்தையாக இருப்பவர், பின் படிப்பை சொல்லிக் கொடுப்பதால் ஆசிரியராகவும் ஆகிவிட்டார். நாம் படிப்பதே புதிய உலகத்திற்காக என்பதையும் கூட நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு விஷயத்திலும் நிச்சயம் இருக்க வேண்டும். புதிய உலகிற்காக படிப்பிப்பவர் தந்தைதான் ஆவார். முக்கிய விஷயமே தந்தையுடையதாகும். தந்தை பிரம்மா மூலமாக நமக்கு இந்த கல்வியறிவைக் கொடுக்கிறார். யார் மூலமாவது கொடுப்பார் அல்லவா! பகவான் பிரம்மாவின் மூலமாக இராஜயோகம் கற்றுத் தருகிறார் என்று பாடவும் பட்டுள்ளது. பிரம்மாவின் மூலமாக ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார், அந்த தேவி தேவதா தர்மம் இப்போது இல்லை. இப்போது இருப்பதே கலியுகமாகும். எனவே சொர்க்கம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பது நிரூபணமாகிறது. சொர்க்கத்தில் தேவி தேவதா தர்மத்தவர் மட்டுமே இருப்பர், மற்ற இவ்வளவு தர்மங்கள் அனைத்தும் இருக்கவே போவதில்லை, அதாவது அழிந்து விடும், ஏனென்றால் சத்யுகத்தில் வேறு எந்த தர்மமுமே இருக்கவில்லை. இந்த விஷயங்கள் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்கின்றன, இப்போது பல தர்மங்கள் இருக்கின்றன. இப்போது தந்தை மீண்டும் நம்மை மனிதரிலிருந்து தேவதைகளாக ஆக்குகிறார் ஏனென்றால் இப்போது சங்கமயுகம் உள்ளது. இது மிகவும் புரிய வைப்பதற்கு எளிதான விஷயமாகும். திரிமூர்த்தி படத்திலும் காட்டுகிறோம் - பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை என்று. எதனுடையதை ஸ்தாபனை? கண்டிப்பாக புதிய உலகினுடையதாகத்தான் இருக்கும், பழைய உலகினுடையதாக இருக்காது. புதிய உலகில் இருப்பவர்கள் தெய்வீக குணங்கள் நிறைந்த தேவதைகள்தான் என்ற நிச்சயம் குழந்தைகளுக்கு உள்ளது. ஆக நாமும் கூட இல்லற விஷயங்களில் இருந்தபடி தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். முதன் முதலாக காமத்தின் மீது வெற்றி பெற்று நிர்விகாரிகளாக ஆக வேண்டும். நேற்று இந்த தேவி தேவதைகளுக்கு முன்பாக சென்று நீங்கள் சம்பூரண நிர்விகாரி, நாங்கள் விகாரிகள் என்று சொல்லிக் கொண்டும் இருந்தீர்கள். தம்மை விகாரிகளாக உணர்ந்து கொண்டிருந்தீர்கள், ஏனென்றால் விகாரத்தில் சென்று கொண்டிருந்தீர்க்ள். இப்போது நீங்களும் கூட இப்படிப்பட்ட நிர்விகாரிகளாக ஆக வேண்டும் என்று தந்தை சொல்கிறார். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். காமம், கோபம் முதலான விகாரங்கள் இருந்தது என்றால் தெய்வீக குணங்கள் என்று சொல்ல மாட்டோம். விகாரத்தில் செல்வது, கோபம் கொள்வது இவை அசுர குணங்கள் ஆகும். தேவதைகளிடம் பேராசை இருக்குமா என்ன? அங்கே 5 விகாரங்கள் இருப்பதில்லை. இது இராவணனின் உலகமாகும். இராவணனின் பிறவி திரேதா மற்றும் துவாபரத்தின் சங்கமத்தில் ஏற்படுகிறது. இந்த பழைய உலகம் மற்றும் புதிய உலகத்தின் சங்கமம் இருப்பது போல அதுவும் ஒரு சங்கமம் அல்லவா! இப்போது இராவண இராஜ்யத்தில் துக்கம் இருக்கிறது, நோய் இருக்கிறது, இது இராவண இராஜ்யம் என்றே அழைக்கப்படுகிறது. இராவணனை வருடம் தோறும் எரிக்கின்றனர். வாம மார்க்கத்தில் செல்வதால் விகாரிகள் ஆகி விடுகின்றனர். இப்போது நீங்கள் விகாரமற்றவர் ஆக வேண்டும். இங்கேயேதான் தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். யார் எப்படிப்பட்ட கர்மத்தை செய்கின்றனரோ அப்படிப்பட்ட பலனை அடைகின்றனர். குழந்தைகள் இப்போது எந்த விகர்மமும் (பாவ கர்மங்கள்) செய்யக் கூடாது.

 

ஒருவர் இராஜா விகர்மாஜீத் (விகாரத்தை வென்றவர்), மற்றவர் இராஜா விக்ரமன் (விகாரி). இது விக்ரமனின் காலம் அதாவது இராவண விகாரிகளின் காலமாக உள்ளது. இதை யாரும் புரிந்து கொள்வதில்லை. கல்பத்தின் ஆயுளைப் பற்றியும் கூட யாருக்கும் தெரியாது. உண்மையில் தேவதைகள் விகர்மாஜீத் (விகர்மங்களை வென்றவர்கள்) ஆக இருப்பவர்கள். 5 ஆயிரம் வருடங்களில் 2500 வருடங்கள் இராஜா விக்ரமனுடையது, 2500 வருடங்கள் இராஜா விகர்மாஜீத்தினுடையது ஆகும். பாதி விக்ரமனுடையதாகும். அந்த மனிதர்கள் சொல்கிறார்கள், ஆனால் எதுவும் தெரியாது. விகர்மாஜீத்தின் காலம் ஒன்றாம் வருடத்திலிருந்து தொடங்குகிறது என்று நீங்கள் சொல்வீர்கள், பின் 2500 வருடங்களுக்குப் பிறகு விக்ரமனுடைய காலம் தொடங்குகிறது. இப்போது விக்ரமனின் காலம் முடியப் போகிறது, மீண்டும் நீங்கள் விகர்மாஜீத் மஹாராஜா மஹாராணி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள், அப்படி ஆகிவிடும் போது விகர்மாஜீத் காலம் (ஆண்டு) தொடங்கி விடும். இவையனைத்தும் நீங்கள்தான் அறிவீர்கள். பிரம்மா ஏன் அமர்த்தப்பட்டுள்ளார் என்று உங்களைக் கேட்கின்றனர். அட, உங்களுக்கு இவரிடம் என்ன வேண்டியிருக்கிறது? எங்களுக்கு படிப்பிப்பவர் இவர் (பிரம்மா) அல்ல. நாங்கள் சிவபாபாவிடம் படிக்கிறோம். இவரும் அவரிடம்தான் படிக்கிறார். படிப்பிப்பவரோ ஞானக்கடல் ஆவார். அவர் விசித்திரமானவர் (உடலற்றவர்), அவருக்கு சித்திரம் அதாவது உடல் இல்லை. அவர் நிராகார் என்றுதான் அழைக்கப்படுகிறார். அங்கே (பரந்தாமத்தில்) அனைத்து நிராகார ஆத்மாக்களும் இருக்கின்றனர். பிறகு இங்கே வந்து சாகாரிகள் (உடலுடன் இருப்பவர்கள்) ஆகின்றனர். பரமபிதா பரமாத்மாவை அனைவரும் நினைவு செய்கின்றனர், அவர் ஆத்மாக்களின் தந்தை ஆவார். லௌகிக தந்தையை பரம என்ற வார்த்தையில் கூறுவதில்லை. இவை புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் அல்லவா! பள்ளிக் குழந்தைகள் படிப்பின் மீது கவனம் கொடுக்கின்றனர். ஏதாவது பதவியை அடையும் போது, வக்கீல் முதலானவர்களாக ஆகும்போது பிறகு படிப்பு நின்று விடுகிறது. வக்கீல் ஆன பிறகு அவர் படிப்பை படிக்க மாட்டார். படிப்பு முடிந்து விடுகிறது. நீங்களும் தேவதைகள் ஆகி விட்டால் பிறகு படிக்க வேண்டிய அவசியமில்லை. தேவதைகளின் இராஜ்யம் 2500 வருடங்கள் நடக்கிறது. இந்த விஷயங்கள் குழந்தைகளாகிய நீங்கள்தான் அறிவீர்கள், பிறகு நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இதையும் சிந்தனையில் வைக்க வேண்டும். படிக்க வைக்கவில்லை என்றால் ஆசிரியராக எப்படி ஆக முடியும்? நீங்கள் அனைவரும் ஆசிரியர்கள் ஆவீர்கள், ஆசிரியரின் குழந்தைகள் அல்லவா! எனவே நீங்களும் ஆசிரியர் ஆக வேண்டும். ஆக, படிப்பிக்க எத்தனை ஆசிரியர்கள் தேவை? எப்படி தந்தை, ஆசிரியர், சத்குருவாக இருக்கிறாரோ, அப்படி நீங்களும் ஆசிரியர் ஆவீர்கள். சத்குருவின் குழந்தைகள் சத்குரு ஆவீர்கள். அவர்கள் யாரும் சத்குரு அல்ல. அந்த குருவின் குழந்தைகள் குருவாக இருக்கின்றனர். சத் என்றால் உண்மையானவர் என்று அர்த்தம். சத்தியமான கண்டம் என்றும் கூட பாரதம் அழைக்கப்படுகிறது. இது பொய்யான கண்டமாகும். சத்தியமான கண்டத்தை பாபாதான் ஸ்தாபனை செய்கிறார். அவர் உண்மையான சாயி பாபா (இறைத் தந்தை) ஆவார். உண்மையான தந்தை வருகிறார் எனும்போது போலிகளும் வெளிப்படுகின்றனர். (சத்தியத்தின்) படகு ஆடலாம், புயல் வீசலாம், ஆனால் மூழ்காது என்று பாடலும் உள்ளதல்லவா! மாயையின் புயல்கள் நிறைய வரும் என்று குழந்தைகளுக்கு புரிய வைக்கப்படுகிறது. அவற்றைக் கண்டு பயப்படக்கூடாது. மாயையின் புயல்கள் வீசும் என்று சந்நியாசிகள் ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். படகை எங்கே கரை சேர்ப்பது என்பதே அவர்களுக்குத் தெரியாது.

 

பக்தியால் சத்கதி ஏற்படுவதில்லை என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். கீழேதான் இறங்கியபடி செல்கின்றனர். பகவான் வந்து பக்தர்களுக்கு பக்தியின் பலனைக் கொடுக்கிறார் என்று சொல்கின்றனர். கண்டிப்பாக பக்தி செய்யத்தான் வேண்டியுள்ளது. நல்லது, பக்தியின் பலனாக பகவான் என்ன கொடுப்பார்? கண்டிப்பாக சத்கதியைக் கொடுப்பார். சொல்கிறார்கள் - ஆனால் எப்போது, எப்படி கொடுப்பார் என்பது தெரியாது. யாரிடமாவது நீங்கள் கேட்டீர்கள் என்றால், இது அனாதி காலம் தொட்டு நடந்து வருகிறது என்று சொல்லிவிடுவார்கள். பரம்பரை பரம்பரையாக நடந்து வந்தது. இராவணனை எப்போதிலிருந்து எரிக்கத் தொடங்கினார்கள்? பரம்பரை பரம்பரையாக என்று சொல்வார்கள். நீங்கள் புரியவைத்தீர்கள் என்றால், இவர்களுடைய ஞானம் புதுமையாக உள்ளது என்று சொல்வார்கள். கல்பத்திற்கு முன்பு புரிந்து கொண்டவர்கள் உடன் புரிந்து கொள்வார்கள். பிரம்மாவின் விஷயத்தை விடுங்கள். சிவபாபாவின் ஜென்மம் ஆகி இருக்கிறதல்லவா! அதை சிவராத்திரி என்றும் சொல்கின்றனர். என்னுடைய இந்த ஜென்மம் தெய்வீகமானது மற்றும் அலௌகிகமானது என்று தந்தை புரிய வைக்கிறார். இயற்கையாக மனிதர்கள் எடுப்பது போன்ற பிறவி கிடைப்பதில்லை, ஏனென்றால் அவர்கள் அனைவரும் கர்ப்பத்தில் ஜென்மம் எடுக்கின்றனர், சரீரதாரிகள் ஆகின்றனர். நான் கர்ப்பத்தில் பிரவேசம் செய்வதில்லை. இந்த ஞானத்தை பரமபிதா பரமாத்மா, ஞானக்கடலைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. ஞானக்கடல் என்று எந்த மனிதருக்கும் சொல்லப்படுவதில்லை. இந்த மகிமை நிராகாரருடையது தான் ஆகும். நிராகார தந்தை ஆத்மாக்களுக்குப் படிப்பிக்கிறார், புரிய வைக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் இந்த இராவணனின் இராஜ்யத்தில் நடிப்பை நடித்து நடித்து தேகாபிமானம் மிக்கவர்களாக ஆகிக் கிடக்கிறீர்கள். ஆத்மா அனைத்தும் செய்கிறது என்ற இந்த ஞானம் பறந்து போய் விட்டது. இவை கர்மேந்திரி யங்கள் அல்லவா! நான் ஆத்மா, இவைகளின் மூலம் கர்மங்களை செய்விக்கலாம், செய்விக்காமலும் இருக்கலாம். நிராகார உலகில் சரீரம் இன்றி அமர்ந்திருக்கிறோம். இப்போது நீங்கள் தனது வீட்டையும் கூட தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். பின் அவர்கள், வீட்டை (பிரம்ம தத்துவத்தை) ஈஸ்வரனாக ஏற்றுக் கொள்கின்றனர். பிரம்ம ஞானிகளாக, தத்துவ ஞானிகளாக இருக்கின்றனர் அல்லவா! பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவோம் என்று சொல்கின்றனர். பிரம்மத்தில் வசிக்கப் போகிறோம் என்று சொன்னார்கள் என்றால் ஈஸ்வரன் வேறு என்றாகி விடுகிறது. இவர்களோ பிரம்ம தத்துவத்தையே ஈஸ்வரன் என்று கூறி விடுகின்றனர். இதுவும் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. தந்தையைக் கூட மறந்து விடுகின்றனர். அந்த தந்தை உலகின் எஜமான் ஆக்குகிறார், அவரை நினைவு செய்ய வேண்டும் அல்லவா! ஏனென்றால் அவர்தான் சொர்க்கத்தை உருவாக்குபவர். இப்போது நீங்கள் புருஷோத்தம சங்கம யுகத்தின் பிராமணர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் உத்தம புருஷர்களாக ஆகிறீர்கள். தரம் தாழ்ந்த புருஷர்கள் உத்தமர்களின் முன்பாக தலை வணங்குகின்றனர். தேவதை களின் கோவில்களில் சென்று எவ்வளவு மகிமை பாடுகின்றனர்! நாம்தான் தேவதைகளாகிறோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். இது மிகவும் எளிமையான விஷயமே ஆகும். விராட ரூபத்தைப் பற்றியும் கூட சொல்லியிருக்கிறார். விராட சக்கரம் அல்லவா! அவர்கள் வெறுமனே பாடுகின்றனர் - பிராமண, தேவதா, க்ஷத்திரிய.... இலட்சுமி நாராயணர் முதலானவர்களின் படங்கள் இருக்கின்றன அல்லவா! தந்தை வந்து அனைத்தையும் சரிப்படுத்துகிறார். உங்களையும் கூட சரிப்படுத்திக் கொண்டிருக்கிறார், ஏனென்றால் பக்தி மார்க்கத்தில் பிறவி பிறவிகளாக நீங்கள் செய்து கொண்டு வந்த அனைத்தும் தவறாகும், அதனால் தமோபிரதானம் ஆகிவிட்டீர்கள். இப்போது இருப்பதே சரியற்ற உலகமாகும். இதில் துக்கமே துக்கம்தான் உள்ளது, ஏனென்றால் இராவண இராஜ்யமாக உள்ளது, அனைவரும் விகாரிகளாக உள்ளனர். இராவணனின் இராஜ்யம் சரியற்றது, இராமனின் இராஜ்யம் சரியானது ஆகும். இது கலியுகம், அது சத்யுகம். இது புரிந்து கொள்ளக் கூடிய விஷயம் அல்லவா! இவர் (சிவபாபா) சாஸ்திரங்களை எடுத்து எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? தனது ஞானத்தைத் தான் கொடுத்தார், படைப்பைப் பற்றியும் புரிய வைத்தார். அவர்களுடைய புத்தியில் சாஸ்திரங்கள் இருக்கின்றன, அவற்றைப் படித்து பிறருக்கும் கூறுகின்றனர். ஆக, அனைவருடைய சுகத்தின் வள்ளல் ஒரு சிவபாபா ஆவார். அவரே உயர்விலும் உயர்வான தந்தை ஆவார். அவர் பரமபிதா பரமாத்மா என்று சொல்லப் படுகிறார். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை கண்டிப்பாக எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியைத் தருகிறார். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நீங்கள் சொர்க்கவாசியாக இருந்தீர்கள், இப்போது நரகவாசியாக இருக்கிறீர்கள். தந்தை இராமன் என்று சொல்லப்படுகிறார். சீதையைக் களவு கொடுத்த அந்த இராமன் அல்ல. அவர் ஏதும் சத்கதி வழங்கும் வள்ளல் அல்ல, அந்த இராமன் இராஜாவாக இருந்தார். மகாராஜாவாகக் கூட இருக்கவில்லை. மகாராஜா மற்றும் இராஜாவின் இரகசியம் கூட புரியவைத்திருக்கிறார் - அவர் 16 கலைகள், இவர் 14 கலைகள். இராவண இராஜ்யத்தில் கூட ராஜாக்கள், மகாராஜாக்கள் இருக்கின்றனர். அவர்கள் மிகவும் செல்வந்தர்கள், இவர்கள் குறைவான செல்வந்தர் கள். அவர்களை ஏதும் சூரியவம்சத்தவர், சந்திர வம்சத்தவர் என்று கூற மாட்டோம். இவர்களில் செல்வந்தராக இருப்பவருக்கு மகாராஜாவின் பதவி கிடைக்கிறது, குறைவான செல்வந்தருக்கு இராஜாவின் பதவி கிடைக்கிறது. இப்போதோ பிரஜைகளின் மீது பிரஜைகளின் இராஜ்யம் உள்ளது. கவனித்துக் கொள்பவர்கள் யாருமில்லை. பிரஜைகள் இராஜாவை அன்னதாதா என்று புரிந்து கொண்டிருந்தனர். இப்போது அவர்களும் போய்விட்டனர், மிகுந்திருக்கும் பிரஜைகளின் நிலையைப் பாருங்கள் என்னவாக இருக்கிறது! சண்டை சச்சரவுகள் எவ்வளவு நடக்கிறது! இப்போது உங்கள் புத்தியில் முதலிலிருந்து கடைசிவரையிலான அனைத்து ஞானமும் உள்ளது. படைக்கக் கூடிய தந்தை இப்போது நடைமுறையில் இருக்கின்றார், அவருடைய கதை பிறகு பக்தி மார்க்கத்தில் உருவாகிறது. இப்போது நீங்களும் கூட நடைமுறையில் இருக்கிறீர்கள். அரைக் கல்ப காலம் நீங்கள் இராஜ்யம் செய்வீர்கள், பிறகு பின்னாளில் கதையாகி விடும். படங்கள் இருக்கின்றன. இவர்கள் எப்போது இராஜ்யம் செய்தனர்? என்று யாரிடமாவது கேளுங்கள். இலட்சக்கணக்கான வருடங்கள் என்று சொல்லிவிடுவார்கள். சன்னியாசிகள் துறவற மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் தூய்மையான இல்லற ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள். பிறகு தூயமையற்ற இல்லற ஆசிரமத்தில் செல்ல வேண்டும். சொர்க்கத்தின் சுகத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. துறவற மார்க்கத்தவர்கள் ஒருபோதும் இல்லற மார்க்கத்தைப் பற்றி கற்றுத் தர முடியாது. முன்னர் காட்டில் வசித்துக் கொண்டிருந்தனர், அவர்களுக்குள் சக்தி இருந்தது. காட்டிலேயே அவர்களுக்கு உணவை அனுப்பிக் கொண்டிருந்தனர். இப்போது அந்த சக்தியே இல்லை. அங்கே இராஜ்யம் செய்யும் அளவு உங்களுக்கு சக்தி இருந்தது போல், இப்போது எங்கே இருக்கிறது? அப்படி இருந்தவர்கள்தானே நீங்கள்? இப்போது அந்த சக்தி இல்லை. பாரதவாசிகளின் உண்மையான தர்மம் இருந்தது, அது இப்போது இல்லை. அதர்மமாகி விட்டது. நான் வந்து தர்மத்தின் ஸ்தாபனை,யும் அதர்மத்தின் வினாசத்தையும் செய்கிறேன் என்று தந்தை சொல்கிறார். அதர்மமானவர்களை தர்மத்தில் கொண்டு வருகிறேன். மிகுந்திருப்பவர்கள் வினாசமாகி விடுவார்கள். என்றாலும் கூட அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். தந்தைதான் துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர் என்று சொல்லப் படுகிறார். எப்போது துக்கம் நிறைந்தவர்களாக ஆகிறார்களோ அப்போது சுகம் நிறைந்தவர்களாக ஆக்குகிறார். இதுவும் கூட அனாதியாக உருவாகி உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1.இந்த புருஷோத்தம சங்கம யுகத்தில் உத்தம புருஷர் ஆவதற்காக ஆத்ம அபிமானி ஆகக்கூடிய முயற்சி செய்ய வேண்டும். சத்யமான தந்தை கிடைத்து விட்டார் எனும்போது எந்த சத்யமற்ற, சரியற்ற காரியமும் செய்யக் கூடாது.

 

2. மாயையின் புயல் காற்றுகளால் பயப்படக்கூடாது. சத்தியத்தின் படகு ஆடலாம் அசையலாம், ஆனால் மூழ்கி விடாது என்பது எப்போதும் நினைவிருக்க வேண்டும். சத்குருவின் குழந்தைகள் சத்குருவாகி அனைவரின் படகையும் கரை சேர்க்க வேண்டும்.

 

வரதானம்:

நேரத்திற்குத் தகுந்தாற்போல தனது பாக்கியத்தை நினைத்து குஷி மற்றும் பிராப்திகளால் நிறைந்தவராக ஆகக் கூடிய நினைவின் சொரூபம் ஆகுக.

 

பக்தியில் நினைவு சொரூப ஆத்மாக்களாகிய உங்களின் நினைவார்த்தமாக இன்று வரையிலும் உங்களுடைய ஒவ்வொரு கர்மத்தின் விசேஷத்தன்மையை நினைவு செய்தபடி அலௌகிக அனுபவங்களில் மூழ்கிப் போகின்றனர் என்றால், நீங்கள் நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவு அனுபவங்களை பிராப்தி செய்திருப்பீர்கள்! எப்படி நேரமோ, எப்படிப்பட்ட கர்மமோ அதற்குத் தகுந்தாற்போன்ற சொரூபத்தின் நினைவினை மட்டும் முன்னிறுத்தி அனுபவம் செய்தீர்கள் என்றாலே மிகவும் விசித்திரமான குஷி, விசித்திரமான பிராப்திகளின் களஞ்சியமாக ஆகி விடுவீர்கள், மேலும் இதயத்திலிருந்து இந்த தொடர்ச்சியான பாடலே வெளிப்படும் -அடைய வேண்டியதை அடைந்து விட்டேன்.

 

சுலோகன்:

முதல் நம்பரில் வர வேண்டும் என்றால் பிரம்மா தந்தையின் காலடி மீது காலடி மட்டும் வைத்துச் செல்லுங்கள்.

 

ஓம்சாந்தி