17.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

"இனிமையான குழந்தைகளே! நினைவினால் நினைவு கிடைக்கின்றது. எந்தக் குழந்தைகள் அன்போடு பாபாவை நினைவு செய்கிறார்களோ அவர்களிடம் பாபாவுக்கும் கூட கவர்ச்சி ஏற்படுகின்றது.

 

கேள்வி :

உங்களுடைய பரிபக்குவ (முதிர்ந்த) நிலையின் அடையாளம் என்ன? அந்த நிலையை அடைவதற்கான முயற்சி என்ன?

 

பதில் :

எப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு முதிர்ந்த நிலை ஏற்படுகின்றதோ அப்போது அனைத்துக் கர்மேந்திரியங்களும் குளிர்ச்சியடைந்து விடும். கர்மேந்திரியங்கள் மூலம் எந்த ஒரு தலைகீழான கர்மமும் நடை பெறாது. மன நிலையும் ஆடாத அசையாததாக ஆகிவிடும். இச்சமயத்தின் அசையாத மன நிலை மூலம் 21 பிறவி களுக்கு கர்மேந்திரியங்கள் வசமாகி விடும். இந்த நிலையை அடைவதற்காகத் தன்னை சோதித்தறிந்து குறித்துக் கொள்வதன் மூலம் எச்சரிக்கையாக இருப்பீர்கள். யோக பலத்தின் மூலம் கர்மேந்திரியங்களை வசப்படுத்த வேண்டும். யோகம் தான் உங்களது மன நிலை முதிர்ச்சி அடைந்ததாக ஏற்படுத்தும்.

 

ஓம் சாந்தி.

இது நினைவு யாத்திரை. குழந்தைகள் அனைவரும் இந்த யாத்திரையில் உள்ளனர். நீங்கள் மட்டும் இங்கே அருகில் இருக்கிறீர்கள். யார் யார் எங்கெங்கு இருந்தாலும் பாபாவை நினைவு செய்கின்றனர். ஆக, அவர்கள் தாமாகவே அருகில் வந்து விடுகின்றனர். எப்படி சந்திரனுக்கு முன் சில நட்சத்திரங்கள் மிக அருகில் உள்ளன, சில மிகவும் பிரகாசிக்கின்றன. சில அருகிலும், சில தொலைவிலும் உள்ளன. பார்ப்பதற்கு இந்த நட்சத்திரம் மிகவும் ஜொலிப்பது போல் தெரிகின்றது. இது மிக அருகில் உள்ளது, இதுவோ ஜொலிப்பதே இல்லை. உங்களுடைய மகிமையும் பாடப் பட்டுள்ளது. நீங்கள் ஞான மற்றும் யோக நட்சத்திரங்கள். குழந்தைகளுக்கு ஞான சூரியன் கிடைத்துள்ளார். பாபா குழந்தைகளைத்தான் நினைவு செய்கின்றார். யார் சேவாதாரிக் குழந்தைகளாக இருக்கிறார்களோ அவர்களை சர்வசக்திவான் பாபாவே நினைவு செய்கின்றார். நினைவின் மூலம் நினைவு கிடைக்கின்றது. எங்கெங்கே இதுபோன்ற சேவாதாரிக் குழந்தைகள் இருக்கிறார்களோ, ஞான சூரியன் பாபாவும் அவர்களை நினைவு செய்கின்றார். எந்தக் குழந்தைகள் பாபாவை நினைவு செய்வதில்லையோ அவர்களை பாபாவும் நினைவு செய்வதில்லை. அவர்களுக்கு பாபாவின் நினைவு போய்ச் சேர்வதில்லை. நினைவின் மூலம் நினைவு நிச்சயமாகக் கிடைக்கின்றது. குழந்தைகளும் கூட நினைவு செய்ய வேண்டும். குழந்தைகள் கேட்கிறார்கள் -- பாபா நீங்கள் எங்களை நினைவு செய்கிறீர்களா? பாபா சொல்கிறார், ஏன் இல்லாமல்? இந்த முறையில் பாபா ஏன் நினைவு செய்வதில்லை? யார் மிகவும் பவித்திரமாக இருக்கிறார்களோ மற்றும் பாபாவிடம் மிகவும் பிரியமாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு பாபாவைக் கவரவும் செய்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளுங்கள், நாம் எந்த அளவு பாபாவை நினைவு செய்கிறோம்? ஒருவரின் நினைவில் இருப்பதன் மூலம் இந்தப் பழைய உலகம் மறந்து போகும். பாபாவையே நினைவு செய்து கொண்டிருந்தே சென்று சந்திக்கிறார்கள். இப்போது சந்திப்பதற்கான சமயம் வந்து விட்டது. டிராமாவின் ரகசியமும் பாபா புரிய வைத்துள்ளார். பாபா வருகிறார், வந்து குழந்தைகளைத் தம்முடைய ஆன்மீகக் குழந்தைகளாக ஆக்குகின்றார். தூய்மை இல்லாததிலிருந்து எப்படிப் தூய்மையாவது என்பதைக் கற்றுத் தருகின்றார். பாபாவோ ஒருவர் தான். அவரையே அனைவரும் நினைவு செய்கின்றனர். ஆனால் கர்மாதீத் நிலையும் கூட அவ்வாறே ஆகும். எந்தளவு நினைவு அனைவருக்கும் நம்பர்வார் அவரவர் புருஷார்த்தத்தின் அனுசாரம் கிடைக்கின்றது. எந்தளவிற்கு அதிகமாமக நினைவு செய்வீர்களோ அப்போது அவரே நம் முன் நிற்பது போல் தோன்றம். நினைவு செய்கின்றார்களோ அந்தளவு கர்மேந்திரியங்கள் சஞ்சலமின்றி இருக்கும். கர்மேந்திரியங்கள் அதிகமாகச் சஞ்சலமடைகின்றன இல்லையா? இது தான் மாயா எனப்படுகின்றது. கர்மேந்திரியங்களால் எந்த ஒரு தீய கர்மமும் நடைபெறக் கூடாது. இங்கே யோகபலத்தால் கர்மேந்திரியங்களை வசப்படுத்த வேண்டும். அவர்களோ மருந்துகளால் வசப்படுத்துகின்றனர். குழந்தைகள் கேட்கிறார்கள் -- பாபா, இவை ஏன் வசமாவதில்லை? பாபா சொல்கிறார், நீங்கள் எவ்வளவு நினைவு செய்கிறீர்களோ அந்த அளவு கர்மேந்திரியங்கள் வசமாகி விடும். இது கர்மாதீத் அவஸ்தா எனப்படுகின்றது. இது நினைவு யாத்திரையினால் மட்டுமே ஏற்படுகின்றது. அதனால் பாரதத்தின் புராதன இராஜயோகம் பாடப்பட்டுள்ளது. அதை பகவான் தாம் கற்றுத் தருவார். பகவான் தம்முடைய குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றார். நீங்கள் இந்த விகாரி கர்மேந்திரியங்களை யோகபலத்தின் மூலம் வெற்றி கொள்ளும் முயற்சி செய்ய வேண்டும். கடைசியில் முழுமை அடைந்துவிடுவீர்கள். எப்போது பரிபக்குவ அவஸ்தா (முதிர்ந்த நிலை) ஏற்படுகின்றதோ, பிறகு எந்த ஒரு கர்மேந்திரியமும் சஞ்சலம் செய்யாது. இப்போது சஞ்சலம் முடிவுக்கு வருவதன் மூலம் 21 பிறவிகளுக்கு எந்த ஒரு கர்மேந்திரியமும் ஏமாற்றம் தராது. 21 பிறவிகளுக்குக் கர்மேந்திரியங்கள் வசமாகி விடும். அனைத்திலும் முக்கியமானது காம விகாரம். நினைவு செய்ய-செய்யவே கர்மேந்திரியங்கள் வசமாகிக் கொண்டே செல்லும். இப்போது கர்மேந்திரியங்களை வசப்படுத்துவதன் மூலம் அரைக்கல்பத்திற்கு வெகுமதி கிடைக்கின்றது. வசப்படுத்த இயலவில்லை என்றால் பிறகு பாவங்கள் இருந்து விடும். உங்கள் பாவங்கள் யோகபலத்தினால் நீங்கிக் கொண்டே செல்லும். நீங்கள் தூய்மை அடைந்து கொண்டே செல்வீர்கள். இது முதல் நம்பர் பாடம். தூய்மை இல்லாமலிருப்பதிலிருந்து பாவனமாவதற்காகவே அழைக்கின்றனர். ஆக, பாபா வந்து தான் தூய்மையாக்குகின்றார்.

 

பாபா தான் ஞானம் நிறைந்தவர். பாபா சொல்கிறார், தன்னை ஆத்மா என உணருங்கள், பாபாவை நினைவு செய்யுங்கள். இதுவும் ஞானமாகும். ஒன்று யோகத்தின் ஞானம், மற்றது 84 பிறவிகளின் சக்கரத்தினுடைய ஞானம். இரண்டு ஞானம் உள்ளது. பிறகு அதில் தெய்வீக குணங்கள் தாமாகவே அடங்கி யுள்ளன. குழந்தைகள் அறிவார்கள், நாம் மனிதரிலிருந்து தேவதையாகிறோம் என்றால் தெய்வீக குணங்களையும் அவசியம் தாரணை செய்ய வேண்டும். தன்னை சோதித்தறிய வேண்டும். குறித்து வைப்பதன் மூலம் தன் மீது எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். தன்னை சோதித்தறிந்தால் எந்த ஒரு பிழையும் நேராது. பாபா தாமே சொல்கிறார் -- என்னையே நினைவு செய்யுங்கள். நீங்கள் தான் என்னை அழைத்தீர்கள். ஏனெனில் நீங்கள் அறிவீர்கள், பாபா பதீத பாவனர். அவர் எப்போது வருகிறாரோ அப்போது தான் இந்தக் கட்டளையைத் தருகின்றார். இப்போது இந்தக் கட்டளையை ஆத்மாக்கள் நடைமுறைப் படுத்த வேண்டும். நீங்கள் இந்த சரீரத்தின் மூலம் பாகத்தினை நடிக்கிறீர்கள். ஆகவே பாபாவும் கூட அவசியம் இந்த சரீரத்தில் வரவேண்டியுள்ளது. இவை மிக அற்புதமான விஷயங்கள். திரிமூர்த்தியின் சித்திரம் எவ்வளவு தெளிவாக உள்ளது! பிரம்மா தபஸ்யா செய்து இப்படி (தேவதை) ஆகிறார். பிறகு 84 பிறவி களுக்குப் பின் இவ்வாறு ஆகிறார். இதுவும் புத்தியில் இருக்க வேண்டும் -- நாம் பிராமணிலிருந்து தேவதையானோம். பிறகு 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வந்தோம். இப்போது மீண்டும் தேவதையாவதற்காக வந்துள்ளோம். எப்போது தேவதைகளின் சாம்ராஜ்யம் முடிவடைகின்றதோ அதன் பின் பக்தி மார்க்கத்திலும் கூட அவர்களை மிகுந்த அன்புடன் நினைவு செய்கின்றனர். இப்போது அந்தத் தந்தை உங்களுக்கு இந்தப் பதவி அடைவதற்காக யுக்தி சொல்கிறார். நினைவு செய்வதும் மிக சுலபமானது. தங்கத்தாலான பாத்திரம் மட்டும் வேண்டும் (தூய புத்தி வேண்டும்). எவ்வளவு புருஷார்த்தம் செய்வீர்களோ அவ்வளவு பாயின்ட்கள் (கருத்துகள்) வெளிப்படும். ஞானமும் நல்லபடியாகச் சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். பாபா நமக்குள் பிரவேசமாகி முரளி சொல்லிக் கொண்டிருப்பதாக உணர்வீர்கள். பாபாவும் மிகவும் உதவி செய்கிறார். மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். அதுவும் டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வினாடி போல் அடுத்த வினாடி இருக்காது. நேரம் கடந்து சென்று கொண்டே இருக்கின்றது. இத்தனை வருடம் இத்தனை மாதம் எப்படிக் கடந்து செல்கின்றன? ஆரம்பத்திலிருந்து நேரமானது கடந்து சென்று கொண்டே இருக்கின்றது. இந்த வினாடி மீண்டும் 5000 ஆண்டுகளுக்குப் பிறகு வரும்; இதையும் நல்லபடியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பாபாவை நினைவு செய்ய வேண்டும், அதன் மூலம் பாவகர்மங்கள் வினாசமாகும். வேறு வழியேதும் கிடையாது. இவ்வளவு காலமாக என்னென்ன செய்து வந்தீர்களோ அவையனைத்தும் பக்தியே யாகும். பக்தியின் பலனை பகவான் தருவார் என்று சொல்லவும் செய்கிறார்கள். என்ன பலன் கொடுப்பார்? எப்போது, எப்படிக் கொடுப்பார்? இது பற்றி எதுவும் தெரியாது. பாபா எப்போது பலனைத் தருவதற்காக வருகின்றாரோ அப்போது கொடுப்பவரும் பெற்றுக் கொள்பவரும் சேர்ந்தாற்போல கூடி இருக்க வேண்டும். டிராமாவின் பாகம் முன்னே சென்று கொண்டே இருக்கின்றது. முழு நாடகத்திலும் இது கடைசி ஜென்மம். சிலர் சரீரத்தை விட்டுவிடவும் கூடும். இன்னொரு பாகத்தை நடிப்பதற்காக பிறவி எடுக்க முடியும். யாருக்காவது அதிகமாகக் கணக்கு வழக்கு இருக்கிறது என்றால் (அதைத் தீர்த்துக் கொள்ள) பிறவி எடுக்க முடியும். யாருக்காவது அதிகமாகப் பாவங்கள் இருந்தால் அடிக்கடி, ஒரு ஜென்மம் எடுத்துப் பிறகு இரண்டாவது, மூன்றாவது என்று எடுத்துக் கொண்டும் விட்டுக் கொண்டும் இருப்பார்கள். கர்ப்பத்தில் போய் துக்கம் அனுபவித்தாயிற்று என்றால் பிறகு அடுத்த பிறவி எடுத்து விடுகிறார்கள். காசி கல்வெட்டிலும் இந்த நிலைமை தான். பாவங்கள் தலை மீது நிறையவே உள்ளன. யோகபலமோ இல்லை. காசி கல்வெட்டில் பலியாவது என்றால் தன் சரீரத்தை பலியிட்டுக் கொள்வது. தற்கொலை செய்து கொள்கிறோம் என்பது ஆத்மாவுக்கும் புரிந்திருக்கிறது. சொல்லவும் செய்கிறார்கள் -- பாபா, நீங்கள் வருவீர்களானால் உங்கள் மீது பலியாவோம் என்று. மற்றப்படி பக்தி மார்க்கத்தில் பலியிடுகின்றார்கள். அது பக்தியாகி விடுகின்றது. தான-புண்ணியம், தீர்த்தயாத்திரை முதலிய என்னென்ன செய்கிறார்களோ அதெல்லாம் யாரோடு கொடுக்கல்-வாங்கல் ஆகிறது? பாவாத்மாக்களோடு. இராவண இராஜ்யம் இல்லையா? பாபா சொல்கிறார், எச்சரிக்கையோடு கொடுக்கல்-வாங்கல் செய்ய வேண்டும். எப்போதாவது ஏதாவது கெட்டக்காரியம் செய்துவிட்டால் பாவச் சுமை தலை மீது ஏறிவிடும். தானம் - புண்ணியம் கூட எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியுள்ளது. ஏழைகளுக்கோ உணவு மற்றும் உடை தானமாகக் கொடுக்கப்படுகின்றது. அல்லது இப்போதெல்லாம் தர்ம சாலைகள் முதலியன அமைத்துத் தருகின்றனர். செல்வந்தர்களுக்கோ பெரிய-பெரிய மாளிகைகள் உள்ளன. ஏழைகளுக்காகக் குடிசைகள். அவர்களோ அழுக்கான சாக்கடைக்கு எதிரில் வசிக்கின்றனர். அந்தக் குப்பைகளை உரமாக்கி விற்கின்றனர். அதில் வயல்கள் முதலியன உள்ளன. சத்யுகத்திலோ இப்படிப்பட்ட குப்பை முதலியவற்றில் வயல்கள்; இருப்பதில்லை. அங்கோ புதிய மண் இருக்கும். அதன் பெயரே சொர்க்கம். புஷ்பராகம் மற்றும் பச்சைக்கல் என்று பெயர்கள் பாடப்பட்டுள்ளன. இரத்தினங்கள் இல்லையா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, அதிகமாக அல்லது குறைவாக சேவை செய்கின்றனர். சிலர் சொல்கிறார்கள், எங்களால் சேவை செய்ய முடியவில்லை என்று. பாபாவின் ரத்தினங்களோ அனைவருமே தான். அவர்களிலும் நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் உள்ளனர். அவர்கள் பிறகு பூஜை செய்யப் படுகின்றனர். பூஜை தேவதைகளுக்கு நடைபெறுகின்றது. பக்தி மார்க்கத்தில் அநேக பூஜைகள் நடைபெறுகின்றன. அவை அனைத்தும் டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளன. அதைப் பார்த்து குஷி (மஜா) வருகின்றது. நாம் நடிகர்கள். இச்சமயம் உங்களுக்கு ஞானம் கிடைக்கின்றது. நீங்கள் மிகுந்த குஷியடைகிறீர்கள். பக்திக்கும் கூட பாகம் இந்நாடகத்தில் உள்ளதென்பதை அறிவீர்கள். பக்தியிலும் கூட மிகவும் குஷியடைகிறார்கள். மாலையைச் சுழற்றுங்கள் என்று குரு சொல்வாரானால் அந்தக் குஷியிலேயே மாலையைச் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எதையும் புரிந்து கொள்வதில்லை. சிவன் நிராகார். அவருக்கு பால், நீர் முதலியவற்றை ஏன் அபிஷேகம் செய்கிறார்கள்? மூர்த்திகளுக்கு போக் படைக்கிறார்கள். அந்த மூர்த்திகள் அதை உண்பதில்லை. பக்தியின் விஸ்தாரம் எவ்வளவு பெரியது! பக்தி என்பது மரம், ஞானம் என்பது விதை. படைப்பவர் மற்றும் படைப்பு பற்றி குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். சில குழந்தைகளோ தங்களின் எலும்புகளை இந்த சேவையில் ஸ்வாஹா செய்யக் கூடியவர்களாக உள்ளனர். உங்களிடம் சிலர் சொல்கிறார்கள், இது உங்கள் கற்பனை என்று. அட, இதுவோ உலகத்தின் சரித்திரம்-பூகோளம் திரும்பவும் நடைபெறுகின்றது! கற்பனை திரும்ப நடைபெறுவதில்லை. இதுவோ ஞானம். இவை புதிய விஷயங்கள், புதிய உலகத்திற்காக. பகவான் வாக்கு. பகவானும் புதியவர், அவருடைய மகாவாக்கியங்களும் புதியவை. அவர்கள் கிருஷ்ண பகவான் வாக்கு என்கிறார்கள். நீங்கள் சொல்கிறீர்கள், சிவபகவான் வாக்கு என்று. ஒவ்வொருவருக்கும் அவரவர் விஷயங்கள். ஒன்று மற்றதைப் போல் இருக்காது. இது படிப்பு. பாடசாலையில் படிக்கின்றீர்கள். கற்பனையின் விஷயம் எதுவும் கிடையாது. பாபா ஞானக்கடல், ஞானம் நிறைந்தவர். ரிஷி-முனியும் கூட நாங்கள் படைப்பவர் மற்றும் படைப்பு பற்றி அறிந்திருக்கவில்லை என்கிறார்கள். ஆதி சனாதன தேவி-தேவதைகளுக்கே தெரியாது எனும் போது அவர்களுக்கு இந்த ஞானம் எங்கிருந்து கிடைக்கும்? யார் அறிந்திருந்தார்களோ அவர்கள் பதவி பெற்றார்கள். பிறகு எப்போது சங்கமயுகம் வருகிறதோ அப்போது பாபா வந்து புரிய வைப்பார். புதியதாக வந்திருப்பவர்கள் இவ்விஷயங்களில் குழப்பமடைகின்றனர். சொல்கிறார்கள் கொஞ்சம் பேரான நீங்கள் தான் சத்யம், மற்றவர்களெல்லாம் பொய் சொல்பவர்கள். நீங்கள் புரிய வைக்கிறீர்கள் -- கீதை தாயும் தந்தையுமாக இருப்பது -- அதைக் குறையுள்ளதாக ஆக்கி விட்டிருக்கிறார்கள். மற்ற அனைவருமோ படைப்புகள். அவர்களிடமிருந்து ஆஸ்தி கிடைக்காது. வேத-சாஸ்திரங்களில் படைப்பவர் மற்றும் படைப்பு பற்றிய ஞானம் இருக்க முடியாது. முதலில் சொல்லுங்கள், வேதங்களால் எந்த தர்மம் ஸ்தாபனை ஆயிற்று? தர்மங்களோ நான்கு. ஒவ்வொரு தர்மத்திற்கும் தர்ம சாஸ்திரம் ஒன்று தான் உள்ளது. பாபா பிராமண குலத்தை ஸ்தாபனை செய்கிறார். பிராமணர்கள் தான் பிறகு சூரியவம்சி-சந்திரவம்சி குலத்தில் தம்முடைய பதவியைப் பெறுகின்றனர். பாபா வந்து உங்களுக்கு முன்னிலையில் சொல்லிப் புரிய வைக்கிறார் இந்த ரதத்தின் மூலம். ரதமோ நிச்சயமாக வேண்டும். ஆத்மாவோ நிராகாராக உள்ளது. அவர்களுக்கு சாகார சரீரம் கிடைக்கின்றது. ஆத்மா என்ன பொருளாக உள்ளது அதையே அறியவில்லை எனும் போது பிறகு தந்தையை எப்படி அறிவார்கள்? சரியானதை பாபா தான் சொல்கிறார். மற்ற அனைத்துமே தவறானவை அவற்றால் எந்த நன்மையும் இல்லை. யாருடைய மாலையைச் சுற்றுகின்றனர்? எதுவும் தெரியாது. தந்தையையே அறியாதிருக்கிறார்கள். பாபா தாமே வந்து தமது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். ஞானத்தின் மூலம் சத்கதி கிடைக்கின்றது. அரைக்கல்பம் ஞானம், அரைக்கல்பம் பக்தி. இராவண இராஜ்யத்திருந்து பக்தி தொடங்குகின்றது. பக்தியால் ஏணியில் இறங்கி-இறங்கி தமோபிரதானமாகி விட்டுள்ளனர். யாருடைய தொழில் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. பகவானுக்கு எவ்வளவு புஜை செய்கின்றனர்! ஆனால் எதுவுமே தெரியாது. ஆக, பாபா சொல்லிப் புரிய வைக்கிறார், இவ்வளவு உயர்ந்த பதவி பெறுவதற்காகத் தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். இதில் தான் முயற்சி உள்ளது. யாருக்காவது மந்த புத்தி இருக்கு மானால் அந்த புத்தியினாலேயே நினைவு செய்யலாம். ஆனால் ஒருவரையே நினைவு செய்ய வேண்டும். பாடவும் செய்கிறார்கள், பாபா நீங்கள் வருவீர்களானால் உங்களிடம் மட்டுமே புத்தியோகத்தை இணைப்போம் என்று. இப்போது பாபாவும் வந்து விட்டார். நீங்கள் அனைவரும் யாருடன் சந்திக்க வந்திருக்கிறீர்கள்? யார் பிராணதானம் தருகிறாரோ அவருடன். ஆத்மாவை அமரலோகத்திற்கு அழைத்துச் செல்கிறார். பாபா புரிய வைத்துள்ளார், காலன் மீது வெற்றி கொள்ள வேண்டும். உங்களை அமரலோகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். அமரகதையைப் பார்வதிக்குச் சொன்னதாகக் காட்டுகிறார்கள் இல்லையா? இப்போது அமரநாத்தோ ஒருவர் தான். இமயமலையில் அமர்ந்து கதை சொல்ல மாட்டார். பக்தி மார்க்கத்தின் ஒவ்வொரு விஷயமும் வியக்கத்தக்கதாக உள்ளது.

 

இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.

ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. யோகபலத்தின் மூலம் கர்மேந்திரியங்களை வென்றவராகி முழுமையாக தூய்மை ஆக வேண்டும். இந்த நிலையை அடைவதற்காகத் தன்னைத் தான் சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 

2. சதா புத்தியில் நினைவு இருக்க வேண்டும் -- நாம் தான் பிராமணர்களிலிருந்து தேவதையாக இருந்தோம். இப்போது மீண்டும் தேவதையாவதற்காக வந்திருக்கிறோம். அதனால் எச்சரிக்கையுடன் பாவம் மற்றும் புண்ணியத்தைப் புரிந்து கொண்டு கொடுக்கல்-வாங்கல் செய்ய வேண்டும்.

 

வரதானம்:

அனைத்து பிராப்திகளையும் நினைவில் கொண்டு வந்து சதா நிறைந்திருக்கக் கூடிய திருப்தி ஆத்மா ஆகுக.

 

சங்கமயுகத்தில் பாப்தாதாவின் மூலம் என்னவெல்லாம் பிராத்தியாக கிடைத்திருக்கிறதோ அவை நினைவில் இருக்க வேண்டும். அது பிராப்திகளுக்கான குஷியை ஒருபோதும் கீழே குழப்பத்தில் கொண்டு வராது. சதா உறுதியானவர்களாக இருப்பார்கள். சம்பன்ன நிலை உறுதியானவர்களாக ஆக்குகிறது, குழப்பத்திலிருந்து விடுவித்து விடுகிறது. அனைத்து பிராப்திகளிலும் நிறைந்தவர்களாக இருப்பவர்கள் சதா மகிழ்ச்சியான, சதா திருப்தியாக இருப்பார்கள். திருப்தி மிகப் பெரிய பொக்கிஷமாகும். யாரிடம் உள்ளதோ அவர்களிடம் திருப்தி அனைத்தும் இருக்கும். எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டேன் என்ற பாட்டை அவர்கள் பாடிக் கொண்டே இருப்பார்கள்.

 

சுலோகன்:

அன்பு என்ற ஊஞ்சலில் அமர்ந்து விட்டால் கடின உழைப்பு தானாகவே நீங்கி விடும்.

 

ஓம்சாந்தி