20.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உங்களில் யார் முழு உலகத்திற்கும் சேவை செய்கிறார்களோ, நிறைய பேரை தங்களுக்குச் சமமாக மாற்றுகிறார்களோ, ஓய்வுப்பிரியர்களாக இருப்பதில்லையோ, அவர்கள் தான் நேர்மையானவர்களாவர்

 

கேள்வி:

பிராமணக்குழந்தைகளாகிய நீங்கள் எந்தவொரு வார்த்தையை ஒருபோதும் சொல்ல முடியாது?

 

பதில்:-

எங்களுக்கு பிரம்மாவோடு எந்த தொடர்பும் இல்லை, நாங்கள் நேரடியாக சிவபாபாவை நினைவு செய்கிறோம் என்று பிராமணர்களாகிய நீங்கள் ஒருபோதும் சொல்ல முடியாது. பிரம்மா பாபா இல்லாமல் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாது, யாருக்கு பிரம்மாவோடு தொடர்பில்லையோ அதாவது யார் பிரம்மா வாய்வம்சாவழியினர் இல்லையோ, அவர்கள் சூத்திரர்களே ஆவர். சூத்திரர்கள் ஒருபோதும் தேவதைகளாக ஆக முடியாது.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து தாதாவின் (பிரம்மா) மூலம் புரிய வைக்கின்றார் குழந்தைகளே அருங்காட்சியகம் அல்லது கண்காட்சியின் திறப்புவிழா செய்ய வைக்கிறீர்கள், ஆனால் எல்லையற்ற தந்தை எப்போதோ திறப்பு விழா செய்து விட்டார். இப்போது இதன் கிளைகள் வந்து கொண்டிருக்கிறது. நிறைய பாடசாலைகள் வேண்டும் அல்லவா. இது ஒரு பாடசாலை, இதில் பாபா இருக்கின்றார், இதனுடைய பெயர் மதுபன் என்று வைக்கப்பட்டுள்ளது. மதுபனில் எப்போதும் முரளி வாசிக்கப்படுகிறது என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். யாருடைய முரளி? பகவானுடையது. பகவான் நிராகாரமானவர் அல்லவா. முரளியை பௌதீக ரதத்தின் (சரீரத்தின்) மூலம் கூறுகின்றார். அவருடைய பெயரை பாக்கியசாலிரதம் என்று வைத்துள்ளார். இதை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும். இவருக்குள் பாபா பிரவேசிக்கின்றார், என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள். வேறு யாரும் படைப்பவரையோ அல்லது படைப்பின் முதல்-இடை-கடைசியையோ தெரிந்திருக்கவில்லை. பெரிய மனிதர்கள் கவர்னர் போன்றவர்கள் இருந்தார்கள் என்றால் அவர்களின் மூலம் திறக்கிறார்கள் அவ்வளவு தான். யார் மூலமாக திறக்கின்றீர்களோ, அவர்களுக்கு முதலில் பாபா எப்படி புதிய உலகத்தை ஸ்தாபனை செய்கின்றார் என்ற அறிமுகத்தைக் கொடுங்கள் என்று பாபா எப்போதும் கடிதத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். அதனுடைய கிளைகள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நன்மை உண்டாகட்டும் என்று, யார் மூலமாவது திறக்க வைக்கிறார்கள். உண்மையில் பாபா வந்திருக்கிறார், என்று சிறிதாவது புரிந்து கொள்ளட்டும். உலகத்தில் அமைதியின் இராஜ்யம் அல்லது ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை பிரம்மாவின் மூலம் நடந்து கொண்டிருக்கிறது. அதனுடைய திறப்பு விழா நடந்து விட்டது. இப்போது இதன் கிளைகள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வங்கிகளின் கிளைகள் திறக்கப்படுவதைப் போல் ஆகும். பாபா தான் வந்து ஞானத்தை கொடுக்க வேண்டும். இந்த ஞானம் பரமபிதா பரமாத்மாவிடம் தான் இருக்கிறது, ஆகையினால் அவரைத் தான் ஞானக்கடல் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீகத் தந்தையிடத்தில் தான் ஆன்மீக ஞானம் இருக்கிறது, அதை வந்து ஆத்மாக்களுக்கு கொடுக்கின்றார். புரிய வைக்கின்றார் - ஹே குழந்தைகளே, ஹே ஆத்மாக்களே, நீங்கள் தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். ஆத்மா என்ற பெயர் பொதுவானதாகும். மகான் ஆத்மா, புண்ணிய ஆத்மா, பாவ ஆத்மா என்று சொல்லப்படுகிறது. எனவே ஆத்மாவிற்கு பரமபிதா பரமாத்மா தந்தை கூட புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். தந்தை ஏன் வரவேண்டும்? கண்டிப்பாக குழந்தைகளுக்கு ஆஸ்தியை கொடுப்பதற்காக. பிறகு சதோபிரதான புதிய உலகத்தில் வர வேண்டும். உலகத்தின் வரலாறு-புவியியல் திரும்ப நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. புதிய அல்லது பழைய உலகம் மனிதர்களுடையதே ஆகும். நான் புதிய உலகத்தை படைப்பதற்காக வந்துள்ளேன் என்று பாபா கூறுகின்றார். மனிதர்கள் இல்லாமல் உலகம் இருப்பதில்லை. புதிய உலகத்தில் தேவி-தேவதை களின் இராஜ்யம் இருந்தது, அதனுடைய ஸ்தாபனை மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் சூத்திரனிலிருந்து பிராமணர்களாகியுள்ளீர்கள். பிறகு உங்களை பிராமணனிலிருந்து தேவதைகளாக்க வந்துள்ளேன். பாபா இப்படி புரிய வைக்கின்றார் என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் புதிய உலகத்திற்கு எப்படி செல்வீர்கள். இப்போது உங்களுடைய ஆத்மா தூய்மையற்றதாக விகாரம் நிறைந்ததாக இருக்கிறது எனும்போது நிர்விகாரியாக ஆக வேண்டும். பிறவி-பிறவிகளுக்குமான பாவங்களின் சுமை தலையில் இருக்கிறது. எப்போதிலிருந்து பாவம் ஆரம்பமாகிறது? பாபா எத்தனை ஆண்டுகளுக்கு புண்ணிய ஆத்மாக்களாக மாற்றுகின்றார்? இதையும் கூட குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தெரிந்துள்ளீர்கள். 21 பிறவிகள் நீங்கள் புண்ணிய ஆத்மாக்களாக இருக்கின்றீர்கள் பிறகு பாவாத்மாக்களாக ஆகின்றீர்கள். எங்கே பாவம் நடக்கிறதோ, அங்கே துக்கம் தான் இருக்கும். எத்தகைய பாவம்? அதையும் பாபா கூறுகின்றார். ஒன்று நீங்கள் தர்மத்தை நிந்தனை செய்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு தூய்மையற்றவர்களாக ஆகி விட்டீர்கள். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே வாருங்கள், என்று என்னை அழைத்து வந்தீர்கள், நான் இப்போது வந்துள்ளேன். தூய்மையாக்கக் கூடிய தந்தையை நீங்கள் வசைபாடுகிறீர்கள், நிந்தனை செய்கிறீர்கள் ஆகையினால் நீங்கள் பாவாத்மாக்களாகி விட்டீர்கள். பிறவி-பிறவிகளுக்கும் பாவியாக இருக்கின்றேன், வந்து தூய்மையாக்குங்கள் என்றும் சொல்கிறீர்கள். எனவே பாபா புரிய வைக்கின்றார், யார் அனைத்திலும் அதிகமாக பிறவி எடுத்திருக்கிறாரோ, அவருடைய நிறைய பிறவிகளின் கடைசியில் பிரவேசிக்கின்றேன். பாபா நிறைய பிறவிகள் என்று எதை சொல்கிறார்? குழந்தைகளே, 84 பிறவிகளை. யார் முதல்-முதலில் வருகிறார்களோ, அவர்கள் தான் 84 பிறவிகளை எடுக்கிறார்கள். முதலில் இந்த லஷ்மி-நாராயணன் தான் வருகிறார்கள். இங்கே நீங்கள் நரனிலிருந்து நாராயணனாக ஆவதற்கு தான் வருகின்றீர்கள். சத்திய நாராயணனுடைய கதையைத் தான் சொல்கிறார்கள். எப்போதாவது யாராவது இராமர்-சீதையாக ஆவதற்கான கதையை சொல்லியிருக்கிறார்களா? அவர்களை நிந்தனை செய்துள்ளார்கள். பாபா நரனிலிருந்து நாராயணனாகவும், நாரியிலிருந்து லஷ்மியாகவும் தான் மாற்றுகின்றார். அவர்களை ஒருபோதும் யாரும் நிந்தனை செய்வதில்லை. நான் இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். விஷ்ணுவின் இரண்டு ரூபம் லஷ்மி-நாராயணன் ஆகும். சிறுவயதில் ராதா-கிருஷ்ணர் ஆவர். இவர்கள் ஒன்றும் சகோதர-சகோதரி அல்ல, தனித்தனி ராஜாக்களின் குழந்தைகளாக இருந்தார்கள். அவர் மகாராஜ குமாரர், இவர் மகாராஜ குமாரி, இவர்களை சுயம்வரத்திற்கு பிறகு லஷ்மி - நாராயணன் என்று சொல்லப்படுகிறது. இந்த விஷயங்கள் அனைத்தையும் மனிதர்கள் யாரும் தெரிந்திருக்கவில்லை. இந்த விஷயங்கள் கல்பத்திற்கு முன்னால் யாருடைய புத்தியில் நின்றதோ, அவர்களுடைய புத்தியில் தான் நிற்கும். இந்த லஷ்மி - நாராயணன், ராதா-கிருஷ்ணன் போன்ற அனைவருக்கும் கோயில் இருக்கிறது, விஷ்ணுவின் கோயில் கூட இருக்கிறது, அதனை நர- நாராயணனுடைய கோயில் என்று சொல்கிறார்கள். மேலும் லஷ்மி-நாராயணனுடைய தனித்தனி கோயிலும் இருக்கிறது. பிரம்மாவிற்கும் கூட கோயில் இருக்கிறது. பிரம்மா தேவதாய நமஹ, பிறகு சிவ பரமாத்மாய நமஹ! என்று சொல்கிறார்கள், அவர் தனிப்பட்டவராகி விட்டார் அல்லவா. தேவதைகளை எப்போதாவது பகவான் என்று சொல்ல முடியுமா? எனவே பாபா புரிய வைக்கின்றார், யார் மூலமாக திறப்பு விழா செய்ய வேண்டுமோ, அவர்களுக்கு முதலில் உலகத்தில் அமைதியை ஸ்தாபனை செய்வதற்காக பகவான் அடித்தளம் இட்டுவிட்டார் என்று புரிய வைக்க வேண்டும். உலகத்தில் லஷ்மி - நாராயணனுடைய இராஜ்யத்தில் அமைதி இருந்தது அல்லவா. இவர்கள் சத்யுகத்திற்கு எஜமானர்களாக இருந்தார்கள் அல்லவா. எனவே மனிதர்களை நரனிலிருந்து நாராயணனாக, நாரியிலிருந்து லஷ்மியாக மாற்றும் பெரிய பல்கலைக்கழகம் அல்லது ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் இது என்று புரிய வைக்க வேண்டும். விஷ்வ வித்யாலயம் என்று நிறைய பேர் பெயர் வைத்திருக்கிறார்கள். உண்மையில் அவை ஒன்றும் உலக பல்கலைக்கழகம் அல்ல. யுனிவர்ஸ் என்றால் முழு உலகம் என்றாகி விட்டது. முழு உலகத்திலும் எலையற்ற தந்தை ஒரே கல்லூரியை திறக்கின்றார். உலகத்தில் தூய்மையாவதற்கான விஷ்வ-வித்யாலயம் இந்த ஒன்று மட்டுமே ஆகும், அதை பாபா ஸ்தாபனை செய்கின்றார். நாங்கள் முழு உலகத்தையும் சாந்திதாமம், சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கின்றோம் ஆகையினால் இதனை ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் என்று சொல்லப்படுகிறது.

 

ஈஸ்வரன் வந்து முழு உலகத்திற்கும் முக்தி-ஜீவன்முக்தியின் ஆஸ்தியை கொடுக்கின்றார். பாபாவின் விஷயம் எங்கே, இவர்கள் அனைவரும் சொல்லிக் கொள்ளும் பல்கலைக்கழகங்கள் எங்கே. யுனிவர்ஸ் என்றால் முழு உலகத்தையும் மாற்ற வேண்டும், இது பாபாவின் காரியமாகும். நம்மை இந்த பெயரை வைக்க விடுவதில்லை, அரசாங்கம் தாங்களே வைத்துக் கொள்கிறார்கள். இதை நீங்கள் புரிய வைக்க வேண்டும், அதையும் முதலில் புரிய வைக்கக் கூடாது. எங்களுடைய பெயர் பிரம்மாகுமார-குமாரிகள். எப்போது பாபா வந்து இவரை ரதமாக்கினாரோ, அப்போது தான் இவருடைய பெயர் பிரம்மா என்றானது. பிரஜாபிதா என்ற பெயர் புகழ்பெற்றது அல்லவா. அவர் எங்கிருந்து வந்தார்? அவருடைய தந்தையின் பெயர் என்ன? பிரம்மாவை தேவதையாக காட்டுகிறார்கள் அல்லவா. தேவதைகளின் தந்தை கண்டிப்பாக பரமாத்மாவாகத் தான் இருப்பார். அவர் படைப்பவர் ஆவார், பிரம்மாவை முதல் படைப்பு என்று சொல்லலாம். அவருடைய தந்தை சிவபாபா, அவர் சொல்கின்றார், நான் இவருக்குள் பிரவேசித்து இவருடைய அறிமுகத்தை உங்களுக்கு கொடுக்கின்றேன்.

 

எனவே குழந்தைகள், இது ஈஸ்வரிய அருங்காட்சியகம் என்று புரிய வைக்க வேண்டும். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே வாருங்கள், வந்து தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்குங்கள் என்று தான் என்னை அழைத்தீர்கள் என்று பாபா கூறுகின்றார். ஹே குழந்தைகளே, ஹே ஆத்மாக்களே, நீங்கள் தங்களுடைய தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக ஆகி விடுவீர்கள். மன்மனாபவ என்பது கீதையின் வார்த்தையே ஆகும். பகவான் மட்டுமே ஒரே ஒரு ஞானக்கடல் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரும் அவரே. கிருஷ்ணர் தூய்மையற்றவர்களை தூய்மை யாக்குபவராக இருக்க முடியாது. அவர் தூய்மையற்ற உலகத்திற்கு வர முடியாது. தூய்மையற்ற உலகத்தில் தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பாபா தான் வருவார். இப்போது என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவம் பஸ்மமாகும். எவ்வளவு சகஜமான விஷயமாக இருக்கிறது. பகவானுடைய மகாவாக்கியம் என்ற வார்த்தையை கண்டிப்பாக சொல்ல வேண்டும். காம விகாரம் மிகப்பெரிய எதிரி என்று பரமபிதா பரமாத்மா கூறுகின்றார். முதலில் நிர்விகார உலகமாக இருந்தது, இப்போது விகார உலகமாக இருக்கிறது. துக்கமோ துக்கம் தான் இருக்கிறது. நிர்விகாரிகளாக இருந்தார்கள் என்றால் சுகமே சுகமாகத்தான் இருக்கும். எனவே பகவானுடைய மகாவாக்கியம் காமம் மிகப்பெரிய எதிரி, இதன் மீது வெற்றி அடைவதின் மூலம் நீங்கள் உலகத்தை வென்றவர்களக ஆவீர்கள் என்பதை புரிய வைக்க வேண்டும். ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள். நாங்களும் அவரை நினைவு செய்கின்றோம். ஏதாவது கல்லூரி திறக்கப்படுகிறது என்றால் அதனுடைய திறப்புவிழா செய்விக்கிறார்கள் அல்லவா. அதுபோல் இதுவும் கூட கல்லூரியாகும், நிறைய கிளை நிலையங்கள் இருக்கின்றன. கிளை நிலையங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கண்டிப்பாக டீச்சரும் கவனித்துக் கொள்ள வேண்டும். பாபா புதிய-புதிய கிளை நிலையங்களில் நல்ல நல்ல (பிராமணிகளை) டீச்சர்களை, நியமிக்கிறார். விரைவாக தங்களுக்குச் சமமாக மாற்றி பிறகு மற்ற சென்டர்களுக்கு சேவையின் பொறுப்பை எடுத்துக்கொள்ள அனுப்ப வேண்டும் என்பதற்காக வைக்கின்றார். யார்-யார் சரியான முறையில் முரளியை படித்து சொல்ல முடிகிறது, புரிய வைக்க முடிகிறது என்று பார்க்கிறார், பிறகு இப்போது நீங்கள் இங்கே அமர்ந்து வகுப்பு நடத்துங்கள் என்று சொல்கிறார். இப்படி ஒத்திகை பார்க்கவைத்து, அவர்களை அமர்த்தி விட்டு மற்ற இடங்களுக்கு செண்டர்களை பார்த்துக் கொள்ள சென்று விட வேண்டும். பிராமணிகளின் வேலையே ஒரு செண்டரை பார்த்தார்களா பிறகு சென்று வேறொரு செண்டரை பார்க்க வேண்டும். ஒவ்வொரு டீச்சரும் 10-20 செண்டரை ஸ்தாபனை செய்ய வேண்டும். நிறைய சேவை செய்ய வேண்டும். கடைகளை திறந்து கொண்டே செல்ல வேண்டும், தங்களுக்குச் சமமாக மாற்றிவிட்டு யாரையாவது (பொறுப்பாக) விட்டுக் கொண்டே செல்ல வேண்டும். யாரையாவது தங்களுக்குச் சமமாக தயார் செய்து விட்டு விட்டு வேறொரு சென்டரை திறக்க வேண்டும் என்று மனதில் வர வேண்டும். ஆனால் இப்படி நேர்மையானவர்கள் பலரில் சிலர் தான் இருக்கிறார்கள். யார் முழு உலகத்திற்கும் சேவை செய்கிறார்களோ, அவர்களைத் தான் நேர்மையானவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரு செண்டரை திறந்தார்கள், தங்களுக்கு சமமாக மாற்றினார்கள், பிறகு மற்றொரு இடத்தில் சேவை செய்ய வேண்டும். ஒரே இடத்தில் சிக்கிக் கொள்ள கூடாது. நல்லது, யாருக்கும் புரிய வைக்க முடியவில்லையா வேறு காரியம் செய்யுங்கள். அதில் தேக-அபிமானம் வரக்கூடாது. நான் பெரிய வீட்டை சேர்ந்தவன், இந்த வேலையை எப்படி செய்வேன்....... எங்களுக்கு வலி ஏற்படும். கொஞ்ச வேலை செய்தால் எலும்பு நோகும், என்பதை தேக- அபிமானம் என்று சொல்லப்படுகிறது. எதையும் புரிந்து கொள்வதில்லை, மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் அல்லவா. பாபா இன்னார் எனக்கு புரிய வைத்தார், என்னுடைய வாழ்க்கையை சரிசெய்து விட்டார்கள் என்று மற்றவர்களும் எழுத வேண்டும். சேவையின் நிரூபணம் கிடைக்க வேண்டும். ஒவ்வொருவரும் டீச்சராக ஆக வேண்டும். பிறகு தாங்களே எழுத வேண்டும் - பாபா, எங்களுக்கு பின்னால் பராமரிக்கக் கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், நான் நிறைய பேரை தனக்குச் சமமாக மாற்றியுள்ளேன், நாங்கள் சென்டர்களை திறந்து கொண்டே செல்கிறோம். இப்படிப்பட்ட குழந்தைகளைத் தான் மலர்கள் என்று சொல்லப்படுகிறது. சேவையே செய்ய வில்லையென்றால், எப்படி மலர்களாக ஆக முடியும். மலர்களின் தோட்டமும் இருக்கிறது அல்லவா.

 

எனவே திறந்து வைப்பவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். நாங்கள் பிரம்மாகுமார குமாரிகளாக

இருக்கின்றோம். சூத்திரனிலிருந்து பிராமணர்களாக ஆகின்றோம். பாபா இந்த பிராமண குலம் மற்றும் சூரிய வம்ச-சந்திரவம்ச குலத்தை ஸ்தாபனை செய்கின்றார். இந்த சமயத்தில் அனைவரும் சூத்திர வர்ணத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சத்யுகத்தில் தேவதா வர்ணத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள் பிறகு சத்திரிய, வைசிய வர்ணத்தவர்களாக ஆனார்கள். எத்தனை கருத்துக்களை (பாயின்ட்ஸ்) குழந்தைகள் மறந்து விடுகிறார்கள் என்பதை பாபா தெரிந்துள்ளார். முதல்-முதலில் பிராமண வர்ணம், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள்........... பிரம்மா எங்கிருந்து வந்தார். இந்த பிரம்மா அமர்ந்திருக்கிறார் அல்லவா. நல்ல விதத்தில் புரிய வைக்க வேண்டும். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை, யாருடைய ஸ்தாபனை? பிராமணர்களுடைய ஸ்தாபனை. பிறகு அவர்களுக்கு படிப்பினைகளை கொடுத்து தேவதையாக்குகின்றார். நாங்கள் பாபாவிடம் படித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் பகவானுடைய மகாவாக்கியம் அர்ஜூனனுக்காக என்று எழுதி விட்டார்கள். யார் அர்ஜூனன் என்பது யாருக்கும் தெரியாது. நாம் பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஒருவேளை யாராவது நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள், எங்களுக்கு பிரம்மாவோடு எந்த தொடர்பும் இல்லை என்று சொன்னால் பிறகு எப்படி தேவதையாக ஆவீர்கள்? பிரம்மாவின் மூலம் தான் ஆவீர்கள் அல்லவா. சிவபாபா உங்களை எப்படி, யார் மூலமாக என்னை நினைவு செய்யுங்கள் என்று சொன்னார்? பிரம்மாவின் மூலம் தானே சொன்னார். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் தான் அல்லவா. பிரம்மா குமார- குமாரிகள் என்று சொல்கிறீர்கள். நாங்கள் பிரம்மாவின் குழந்தைகளாக இருக்கிறோம் என்றால் கண்டிப்பாக பிரம்மா நினைவிற்கு வருவார் அல்லவா. சிவபாபா பிரம்மாவின் உடலின் மூலம் படிப்பிக்கின்றார். பிரம்மா பாபா இடையே இருக்கின்றார். பிராமணர்களாக ஆகாமல் எப்படி தேவதையாக ஆக முடியும். நான் எந்த ரதத்தில் வருகின்றேனோ, அவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மாவை தந்தை என்று சொல்லவில்லை என்றால், எப்படி குழந்தையாக ஆக முடியும். தங்களை பிராமணன் என்று புரிந்து கொள்ள வில்லை என்றால் சூத்திரர்களே ஆவர். சூத்திரனிலிருந்து உடனே தேவதையாவது கடினமானதாகும். பிராமணர் களாக ஆகி சிவபாபாவை நினைவு செய்யாமல் எப்படி தேவதையாக ஆக முடியும், இதில் குழப்பமடைவதற்கான அவசியமும் இல்லை. எனவே திறந்து வைப்பவர்களுக்கும், பாபாவின் மூலம் திறப்பு விழா நடந்து விட்டது என்று புரிய வைக்க வேண்டும். தந்தையை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்கள் அழிந்து விடும் என்று உங்களுக்கும் கூறுகின்றோம். அந்த தந்தை தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவராக இருக்கின்றார், பிறகு நீங்கள் தூய்மையாக ஆகி தேவதைகளாக ஆகி விடுவீர்கள். குழந்தைகள் நிறைய சேவை செய்ய முடியும். நாங்கள் பாபாவின் செய்தியை கொடுக்கின்றோம் என்று சொல்லுங்கள். இப்போது செய்வதும், செய்யாததும் உங்களுடைய விருப்பம். நாங்கள் செய்தியை கொடுத்துக் கொண்டே செல்கிறோம். வேறு எந்த முறையிலும் தூய்மையாக ஆகவே முடியாது. நேரம் கிடைக்கும்போது சேவை செய்யுங்கள். நேரம் அதிகம் கிடைக்கிறது. நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) புதிய-புதிய செண்டர்களின் வளர்ச்சிக்காக தங்களுக்குச் சமமாக மற்றவர்களையும் மாற்றும் சேவை செய்ய வேண்டும். செண்டர்களை திறந்து கொண்டே செல்ல வேண்டும். ஒரே இடத்தில் இருந்துவிடக் கூடாது.

 

2) மலர்களின் தோட்டத்தை தயார் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் மலர்களாக ஆகி மற்றவர்களை தங்களுக்குச் சமமாக மலர்களாக்க வேண்டும். எந்தவொரு சேவையிலும் தேக-அபிமானம் வரக்கூடாது.

 

வரதானம்:

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயலிலும் மிகச் சரியாக தக்க வழி முறையுடனும் (யுக்தி யுக்த்தாகவும்) நடக்கக் கூடிய பூஜைக்குரிய, தூய்மையான ஆத்மா ஆகுக.

 

பூஜைக்குரிய மற்றும் தூய்மையான ஆத்மாவின் அடையாளமாவது-- அவர்களின் ஒவ்வொரு சங்கல்பத்திலும் அர்த்தம் இருக்கும். அப்படியே ஏதோ பேசி விட்டேன், செய்து விட்டேன், இப்படி ஆகி விட்டது என்பதாக இருக்கக் கூடாது. தூய்மையான ஆத்மா, ஒவ்வொரு நாளும் செய்யக் கூடிய செயல்கள் சரியான முறையுடனும் யோக யுக்த்தாக பாபா கூறும் வழிப்படி இருப்பார். ஆகவே பூஜையும் கூட அவரது ஒவ்வொரு கர்மத்திற்காகவும் நடைபெறும். காலை எழுந்தது முதல் தூங்கும் வரை பலவித கர்மங்களின் தரிசனங்கள் நடைபெறும்.

 

சுலோகன் :

சூரியவம்சி ஆக வேண்டுமானால், சதா வெற்றிகரமான மற்றும் (ஏக்ரஸ்) ஒரே ரசனை, ஒருவரின் துணையின் அனுபவத்தின் மனநிலையை உருவாக்குங்கள்.

 

ஓம்சாந்தி