18.08.2019                           காலை முரளி               ஓம்சாந்தி          அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           16.01.1985           மதுபன்


 

பாக்கியம் நிறைந்த யுகத்தில் பகவான் மூலமாக ஆஸ்தி மற்றும் வரதானங்களின் பிராப்தி

 

இன்று படைப்பு என்ற மரத்தின் விதை ரூபமான தந்தை மரத்தின் அஸ்திவாரமாக இருக்கும், தன்னுடைய குழந்தைகளை பார்த்து கொண்டிருக்கிறார். அந்த அஸ்திவாரம் மூலமாக முழு மரத்தின் வளர்ச்சி ஏற்படுகிறது. வளரச் செய்யும் சார சொரூபமாக இருக்கும் ஆத்மாக்களை பார்த்து கொண்டிருக்கிறோம். அதாவது மரத்தின் ஆதாரமாக இருக்கும் ஆத்மாக்களை பார்த்து கொண்டிருக்கிறோம். நேரடியாக விதை ரூபம் மூலமாக பிராப்தி செய்திருக்கும், அனைத்து சக்திகளை தாரணை செய்யக் கூடிய விசேஷ ஆத்மாக்களை பார்த்து கொண்டிருக்கிறோம், முழு உலகிலுள்ள அனைத்து ஆத்மாக்களிலிருந்து மிக உயர்ந்த ஆத்மாக்களுக்குத் தான் இந்த விசேஷ பங்கு கிடைத்திருக்கிறது.. எவ்வளவு குறைந்த ஆத்மாக்கள். அவர்களுக்கு விதையுடன் இருக்கும் சம்மந்தம் மூலமாக சிரேஷ்ட பிராப்தியின் பங்கு கிடைத்திருக்கிறது.

 

அந்த மாதிரி சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த குழந்தைகளின் பாக்கியத்தை, இன்று பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகளுக்கு பகவான் மற்றும் பாக்கியம் என்ற இந்த இரண்டு வார்த்தைகள் மட்டும் நினைவு இருக்கட்டும். அவர்கள் செய்யும் காரியத்தின் கணக்குப் படி பாக்கியம் அனைவருக்கும் கிடைக்கிறது. துவாபர் யுகத்திலிருந்து, ஆத்மாக்கள் நீங்களும் காரியம் மற்றும் பாக்கியம் என்ற கணக்கு வழக்கில் வரவேண்டியதிருக்கிறது, ஆனால் தற்சமயம் பாக்கியம் நிறைந்த யுகத்தில், பகவான் பாக்கியம் கொடுக்கிறார். பாக்கியத்தின் சிரேஷ்ட ரேகையை போடுவதற்கான விதி சிரேஷ்ட காரியம் (கர்மம்) என்ற எழுதுகோல் யை குழந்தைகளாகிய உங்களுக்கு கொடுத்து விடுகிறார். அதன் மூலம் எவ்வளவு சிரேஷ்ட, தெளிவான, பல ஜென்மங்களின் பாக்கியத்தின் ரேகையை போட விரும்புகிறீர்களோ, அந்தளவு போட முடியும். வேறு எந்த காலத்திற்கும் இந்த வரதானம் கிடையாது. இந்த நேரத்தின் வரதானம் தான் என்ன விரும்புகிறீர்களோ, எவ்வளவு விரும்புகிறீர்களோ, அந்தளவு அடைய முடியும். ஏன்? பகவான் பாக்கியத்தின் களஞ்சியத்தை குழந்தைகளுக்காக, பரந்த மனதுடன், எந்தக் கடின உழைப்பும் இல்லாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். திறந்த களஞ்சியம், அதில் எந்தப் பூட்டும் - சாவியும் கிடையாது. மேலும் அந்தளவு நிரம்பியது, குறைவற்றது, யார் எவ்வளவு விரும்புகிறார்கரோ, அந்தளவு எடுத்துக் கொள்ள முடியும். எல்லைக்கு அப்பாற்பட்ட நிரம்பிய களஞ்சியம். பாப்தாதாவும் அனைத்து குழந்தைகளுக்கு எந்தளவு எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ, அந்தளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்ற இதைத் தான் தினசரி நினைவூட்டிக் கொண்டிருக்கிறார். சக்திக்கு ஏற்றபடி இல்லை, பெரிய மனதுடன் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் திறந்த களஞ்சியத்திலிருந்து, நிரம்பிய களஞ்சியத்திலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்., ஒருவேளை யாராவது அவருடைய சக்திக்கு ஏற்றபடி எடுக்கிறார் என்றால், தந்தை என்ன கூறுவார். தந்தையும் சாட்சியாகி பார்த்துப் பார்த்து எப்படி வெகுளியான குழந்தைகள், சிறிதளவிலேயே குஷியாகி விடுகிறார் என்று புண்சிரிப்பு செய்து கொண்டேயிருக்கிறார். ஏன்? 63 ஜென்மங்களின் பக்த தன்மையின் சம்ஸ்காரம் சிறிதளவிலேயே குஷி அடைந்துவிடும் காரணத்தினால், இப்பொழுது கூட நிரம்பிய பிராப்திக்கு பதிலாக, சிறிதளவிலேயே அதிகம் என்று புரிந்து, அதிலேயே திருப்தியாகிவிடுகிறார்கள்.

 

இந்த நேரம் அழியாத தந்தையிடமிருந்து, அனைத்து பிராப்தியை அடைய வேண்டிய நேரம் என்பதை மறந்து விடுகிறார்கள். இருந்தாலும் சக்தி நிறைந்தவர்களாக ஆகுங்கள் என்று குழந்தைகளுக்கு, பாப்தாதா நினைவூட்டுகிறார். இப்பொழுது கூட மிகுந்த கால தாமதம் ஆகவில்லை. காலம் கடந்து வந்திருக்கிறீர்கள், ஆனால் மிகுந்த கால தாமத்திற்கான நேரம் இன்னும் ஆகவில்லை, எனவே இப்பொழுது கூட இரண்டு ரூபத்தினால் தந்தையின் ரூபத்தின் மூலம் ஆஸ்தி, சத்குருவின் ரூபத்தில் வரதானம் கிடைப்பதற்கான நேரம். எனவே வரதானம் மற்றும் ஆஸ்தியின் ரூபத்தில் சகஜமாக சிரேஷ்ட பாக்கியத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். பிறகு பாக்கியத்தை வளங்குபவர், அனைவருக்கும் பாக்கியத்தை கொடுத்தார், ஆனால் நானோ, இந்தளவு தான் எடுத்துக் கொண்டேன் என்று யோசிக்க வேண்டியதிருக்காது. அனைத்து சக்திகள் நிறைந்த தந்தையின் குழந்தைகள், அவரவரின் சக்திக்கு ஏற்றபடி செய்பவர்களாக இருக்க முடியாது. எந்தளவு விரும்புகிறீர்களோ, அதை தந்தையின் பொக்கிஷத்திலிருந்து, அதிகார ரூபத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்பது, இந்த நேரத்திற்கான வரதானம். பலஹீனமானவராக இருந்தாலும் கூட, தந்தையின் உதவியின் மூலமாக, தைரியமுள்ள குழந்தைகளுக்கு உதவி செய்பவர் தந்தை என்ற காரணத்தினால், தற்சமயத்தையும் மேலும் எதிர்காலத்தையும் சிரேஷ்டமாக ஆக்க முடியும். மற்றபடி தந்தையின் சகயோகம், மேலும் பாக்கியத்தின் திறந்த களஞ்சியம் கிடைப்பதற்கு இன்னும் மிகக் குறைந்த காலம் தான் இருக்கிறது.

 

இப்பொழுது அன்பின் காரணமாக தந்தையின் ரூபத்தில் ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் துணைவனாக இருக்கிறார், ஆனால் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு பிறகு, துணைவனுக்கு பதிலாக, பார்வையாளர் ஆகி பார்ப்பதற்கான பாகம் இருக்கும். விரும்பினால் அனைத்து சக்திகள் நிரம்பியவராக ஆகுங்கள், அல்லது விரும்பினால் சக்திகேற்றபடியானவராக ஆகுங்கள் - இருவர்களையும் பார்வையாளராகி பார்ப்போம், எனவே இந்த சிரேஷ்ட நேரத்தில் பாப்தாதா மூலமாக ஆஸ்தி, வரதானம், சகயோகம், துணை என்ற இந்த பாக்கியத்தின் என்ன பிராப்தி ஆகிக் கொண்டிருக்கிறதோ, அதை பிராப்தி செய்து விடுங்கள். பிராப்தி அடைவதில் ஒருபொழுதும் அலட்சியமானவராக ஆகாதீர்கள். இப்பொழுது இன்னும் இத்தனை வருடங்கள் இருக்கின்றன என்று உலக மாற்றத்தின் காலத்தையும் மற்றும் பிராப்தியின் காலத்தையும் ஒன்றாக கலக்காதீர்கள். இந்த அலட்சியத் தன்மையின் எண்ணத்தினால் யோசித்துக் கொண்டேயிருந்து விடாதீர்கள். எப்பொழுதும் பிராமண வாழ்க்கையில் அனைத்தையும் பிராப்தி செய்வதற்கும், நீண்ட காலத்திற்கான பிராப்தி செய்வதற்கும் இப்பொழுது இல்லையேல், ஒருபொழுதும் இல்லை என்ற வாக்கியத்தை நினைவில் வையுங்கள். எனவே தான் பகவான் மற்றும் பாக்கியம் என்ற இரண்டு வார்த்தைகளை மட்டுமாவது நினைவில் வையுங்கள் என்று கூறினோம். பிறகு சதா காலத்திற்கும் பலமடங்கு பாக்கியம் நிறைந்தவராக இருப்பீர்கள். பாப்தாதா அவர்கள் இருவருக்குள்ளும் குழந்தைகள் ஏன் அந்த மாதிரி பழைய பழக்கத்தின் வசமாகி விடுகிறார்கள் என்று ஆன்மீக உரையாடல் செய்கிறார்கள். தந்தை உறுதியானவராக ஆக்குகிறார், இருந்தும் குழந்தைகள் பழைய பழக்கத்திற்கு வசமாகி விடுகிறார்கள். தைரியம் என்ற கால்களையும் கொடுக்கிறார், இறக்கைகளையும் கொடுக்கிறார், கூடவே பறக்கவும் வைக்கிறார் இருந்தும் மேலே கீழே, மேலே கீழே ஏன் ஆகுகிறீர்கள்? மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் யுகத்தில் கூட குழப்பம் அடைந்து கொண்டேயிருக்கிறார்கள், இதைத் தான் பழைய பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்கள் என்று கூறுவது. நீங்கள் உறுதியானவர்களா? அல்லது வசப்பட்டு இருப்பவர்களா? தந்தை டபுல் லைட் ஆக்குகிறார், அனைத்து சுமையையும் அவரே தூக்குவதற்கு துணையையும் கொடுக்கிறார், இருந்தும் சுமையை தூக்கும் பழக்கம் இருப்பதினால், அவர்களே சுமையை தூக்கி விடுகிறார்கள். பிறகு என்ன பாடல் பாடுகிறார்கள் என்று தெரிந்திருக்கிறீர்களா? ஏன், என்ன, எப்படி என்ற , என்ற பாடல் பாடுகிறார்கள். இன்னொரு பாடலும் லாம் லாம் என்ற பாடல் பாடுகிறார்கள். இதுவோ பக்தியின் பாடல். அதிகாரத்தன்மையின் பாடல். அடைந்து விட்டேன். அப்படியானால் நீங்கள் என்ன பாடல் பாடுகிறீர்கள். முழு நாளும் நான் என்ன பாடல் பாடிக்கொண்டிருந்தேன் என்று சோதனை செய்யுங்கள். பாப்தாதாவிற்கு குழந்தைகள் மேல் அன்பு இருக்கிறது, எனவே அன்பின் காரணமாக ஒவ்வொரு குழந்தையும் எப்பொழுதும் சம்பன்னமானவராக, சக்திசாலியானவராக இருக்கட்டும் என்பதைத் தான் யோசிக்கிறார். நீங்கள் சதா காலத்திற்கும் பல மடங்கு பாக்கியம் நிறைந்தவர்கள். புரிந்ததா. நல்லது.

 

எப்பொழுதும் நேரத்திற்கு தகுந்தாற் போல் ஆஸ்தி மற்றும் வரதானத்தின் அதிகாரியாகும், எப்பொழுதும் பாக்கியத்தின் திறந்த களஞ்சியம் மூலம் சம்பூரண பாக்கியத்தை உருவாக்குபவர்களுக்கு, சக்திகேற்றபடி என்பதை அனைத்து சக்திகளில் பரிவர்த்தனை செய்யக் கூடிய, சிரேஷ்ட காரியங்கள் என்ற எழுதுகோல் மூலமாக முழுமையான அதிர்ஷ்டத்தின் ரேகையை போடக் கூடிய, நேரத்தின் மகத்துவத்தை தெரிந்த, அனைத்து பிராப்தி சொரூப சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் சம்பன்னம் ஆக்குவதற்கான அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

It’s a fact peace

பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு: -

1. எப்பொழுதும் தன்னுடைய ஆன்மீக ஜென்மம், ஆன்மீக வாழ்க்கை, ஆன்மீக தந்தை, ஆன்மீக ஆஸ்தி நினைவு இருக்கிறதா? எப்படி தந்தை உலகியல் அல்லாத ஆன்மீக தந்தையாக இருக்கிறார் என்றால், ஆஸ்தியும் ஆன்மீகமானது. உலகத்தில் இருக்கும் தந்தை எல்லைக்குட்பட்ட ஆஸ்தி கொடுக்கிறார், ஆன்மீக தந்தை எல்லைக்கு அப்பாற்பட்ட ஆஸ்தி கொடுக்கிறார். எனவே எப்பொழுதும் ஆன்மீக தந்தை மற்றும் ஆஸ்தியும் நினைவு இருக்கட்டும். எப்பொழுதாவது உலகத்தின் வாழ்க்கையின் நினைவிலேயோ சென்று விடுவதில்லையே, உடலிலிருந்து இறந்து, மறுபிறவி வாழ்க்கை வாழ்பவராக ஆகிவிட்டீர்கள் இல்லையா. எப்படி உடலால் இறப்பவர்களுக்கு ஒருபொழுதும் முந்தைய ஜென்மத்தின் நினைவு இருக்காது, அதேபோல் ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களும், ஜென்மம் எடுப்பவர்களும், வெளியுலகத்து ஜென்மத்தை நினைவு செய்ய முடியாது. இப்பொழுதோ யுகமே மாறிவிட்டது. உலகம் கலியுகத்தில் இருக்கிறது, நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். அனைத்தும் மாறிவிட்டது. எப்போழுதாவது கலியுகத்திலோ சென்று விடுவதில்லையே? இதுவும் எல்லை தான். எல்லையை தாண்டினீர்கள் மற்றும் எதிரியின் வசமாகிவிட்டீர்கள். நீங்கள் எல்லையை தாண்டுவது இல்லையே. எப்பொழுதும் நான் சங்கமயுகத்தின் ஆன்மீக வாழ்க்கையில் உள்ள சிரேஷ்ட ஆத்மா என்ற இதே நினைவில் இருங்கள். இப்பொழுது என்ன செய்வீர்கள்? மிகப் பெரிய வியாபாரி ஆகுங்கள். ஒவ்வொரு அடியிலும் பற்பல மடங்கு வருமானம் செய்யும் வியாபாரி ஆகுங்கள். எப்பொழுதும் நான் எல்லோருக்கும் தந்தையானவரின் குழந்தை என்றால், எல்லைக்கு அப்பாற்பட்ட சேவையில், எல்லைக்கு அப்பாற்பட்ட ஊக்கம், உற்சாகத்தில் எப்பொழுதும் முன்னேறிச் சென்று கொண்டேயிருங்கள்.

 

2. எப்பொழுதும் டபுல் லைட் நிலையை அனுபவம் செய்கிறீர்களா? டபுல் லைட்டின் அடையாளம் எப்பொழுதும் பறக்கும் கலையில் இருப்பது. பறக்கும் கலையில் இருப்பவர், ஒருபொழுதும் மாயாவின் கவர்ச்சியில் வரமுடியாது. நீங்கள் பறக்கும் கலையுள்ள எப்பொழுதும் வெற்றியடைபவர்களா? பறக்கும் கலை உள்ளவர், எப்பொழுதும் நிச்சய புத்தியுடைய கவலையற்றவராக இருப்பார். பறக்கும் கலை என்றால் என்ன? பறக்கும் கலை என்றால், உயர்ந்ததிலும் உயர்ந்த நிலையில் இருப்பது. பறக்கிறார்கள் என்றாலும், உயரே செல்கிறார்கள் இல்லையா. உயர்ந்ததிலும் உயர்ந்த நிலையிலி நிலைத்திருக்கும் உயர்ந்த ஆத்மா என்று புரிந்து முன்னேறிச் சென்று கொண்டேயிருங்கள். பறக்கும் கலையுள்ளவர் என்றால், புத்தி என்ற கால்கள் பூமியில் இருக்காது. பூமி என்றால் தேக உணர்வு, அதிலிருந்து விலகி மேலே இருப்பவர். யார் தேக உணர்விலிருந்து விலகி மேலேயிருக்கிறாரோ, அவர் எப்பொழுதும் ஃபரிஸ்தா, அவருக்கு இந்த பூமியில் எந்த ரிஸ்தாவும் (உறவும்) இல்லை. நீங்கள் தேக உணர்வையும் தெரிந்து கொண்டீர்கள், ஆத்ம அபிமானி நிலையையும் தெரிந்து கொண்டீர்கள். எப்பொழுது இரண்டின் வித்தியாசத்தை தெரிந்து விட்டீர்கள் என்றால், தேக அபிமானத்தில் வரமுடியாது. எது நன்றாக இருக்கிறதோ, அதைத் தான் செய்வார்கள் இல்லையா, எனவே நான் ஃபரிஸ்தா என்ற இதே நினைவில் எப்பொழுதும் இருங்கள். ஃபரிஸ்தாவின் நினைவு மூலம் எப்பொழுதும் பறந்துக் கொண்டேயிருப்பீர்கள். பறக்கும் கலையில் சென்றுவிட்டீர்கள் என்றால், கீழே இந்த பூமி ஈர்க்க முடியாது, எப்படி விண்வெளியில் செல்கிறார்கள் என்றால், அவர்களை பூமி ஈர்ப்பதில்லை, அதே போல் நீங்கள் ஃபரிஸ்தா ஆகிவிட்டீர்கள் என்றால், உடலில் என்ற பூமி ஈர்க்க முடியாது.

 

3. எப்பொழுதும் சகயோகி, கர்மயோகி, இயல்பான யோகி, நிரந்தர யோகி என்ற நிலையின் அனுபவம் செய்கிறீர்களா? எங்கு சகஜமாக இருக்குமோ, அங்கு நிரந்தரமாக இருக்கும். சகஜமாக இல்லையென்றால், நிரந்தரமும் இல்லை. அப்படியானால் நீங்கள் நிரந்தரயோகியா? அல்லது வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறதா? யோகி என்றால் எப்பொழுதும் நினைவில் முழ்கியிருப்பவர். இப்பொழுது அனைத்து சம்மந்தங்களும் ஒரு தந்தையுடன் ஆகிவிட்டது என்றால், எங்கு அனைத்து சம்மந்தங்களும் இருக்கிறதோ, அங்கு நினைவு இயல்பாகவே இருக்கும். மேலும் அனைத்து சம்மந்தங்கள் இருக்கிறது என்றால், ஒருவரின் நினைவு மட்டும் தான் இருக்கும். இருப்பதே ஒருவர் என்றால், எப்பொழுதுமே நினைவு இருக்கும் இல்லையா. எனவே எப்பொழுதும் அனைத்து சம்மந்தங்களினால் ஒரு தந்தையைத் தவிர, வேறு யாருமில்லை. அனைத்து சம்மந்தங்களினால் ஒரு தந்தையைத் தவிர, வேறு யாருமில்லை என்பது தான் நிரந்தர யோகி ஆவதற்கான சுலபமான விதி. எப்பொழுது இன்னொரு சம்மந்தமே இல்லையென்றால், நினைவு எங்கே செல்லும். நான் அனைத்து சம்மந்தங்களினால் சகஜயோகி ஆத்மா என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். எப்பொழுதும் தந்தைக்கு சமமாக ஒவ்வொரு அடியிலும் அன்பு மற்றும் சக்தி இரண்டின் சமநிலை வைப்பதினால் வெற்றி தானாகவே எதிரில் வரும். வெற்றி பிறப்புரிமையாகும். பிஸியாக இருப்பதற்காக வேலையோ செய்யத் தான் வேண்டும், ஆனால் ஒன்று கடினமாக செய்யும் வேலை, இன்னொன்று விளையாட்டாக செய்வது. எப்பொழுது தந்தை மூலமாக சக்திகளின் வரதானம் கிடைத்திருக்கிறது என்றால், எங்கு சக்தி இருக்கிறதோ, அங்கு அனைத்தும் சகஜமாகும். பரிவாரம் மற்றும் தந்தையின் சமநிலை மட்டும் இருக்கிறது என்றால், இயல்பாகவே ஆசிர்வாதம் பிராப்தி ஆகிவிடும். எங்கு ஆசிர்வாதம் இருக்கிறதோ, அங்கு பறக்கும் கலை இருக்கும். விரும்பாவிட்டாலும் சகஜமான வெற்றி கிடைக்கும்.

 

4. எப்பொழுதும் தந்தை மற்றும் ஆஸ்தி இரண்டின் நினைவு இருக்கிறதா? தந்தை யார், மற்றும் ஆஸ்தி என்ன கிடைத்திருக்கிறது என்ற இந்த நினைவு இயல்பாகவே சக்திசாலி ஆக்கி விடும். அந்தமாதிரி அழியாத ஆஸ்தி எது, ஒரு ஜென்மத்தில் அநேக ஜென்மங்களின் பிராப்தியை உருவாக்குவது, அந்த மாதிரியான ஆஸ்தி எப்பொழுதாவது கிடைத்திருக்கிறதா? இப்பொழுது கிடைத்திருக்கிறது, முழுக் கல்பத்திலும் கிடைக்காது. எனவே எப்பொழுதும் தந்தை மற்றும் ஆஸ்தி இதே நினைவின் மூலம் முன்னேறிச் சென்று கொண்டேயிருங்கள். ஆஸ்தியை நினைவு செய்வதினால் எப்பொழுதும் குஷியிருக்கும், மேலும் தந்தையை நினைவு செய்வதினால், எப்பொழுதும் சக்திசாலியாக இருப்பீர்கள். சக்திசாலியான ஆத்மா, எப்பொழுதும் மாயாவை வென்றவராக இருப்பார். மேலும் குஷி இருக்கிறது என்றால், வாழ்க்கை இருக்கிறது. ஒருவேளை குஷி இல்லையென்றால், அது என்ன வாழ்க்கை? வாழ்க்கையிருந்தும் இல்லாததற்கு சமம். உயிரோடு இருந்து கொண்டும் மரணத்திற்கு சமம். எந்தளவு ஆஸ்தி நினைவு இருக்குமோ, அந்தளவு குஷியிருக்கும். அப்படியானால் உங்களுக்கு எப்பொழுதும் குஷியிருக்கிறதா? அந்தமாதிரியான ஆஸ்தி கோடியில் சிலருக்கு கிடைக்கிறது, மேலும் எனக்கும் கிடைத்திருக்கிறது. இந்த நினைவை ஒருபொழுதும் மறக்க கூடாது. எந்தளவு நினைவோ, அந்தளவு பிராப்தி. எப்பொழுதும் நினைவு இருக்கிறது என்றால், எப்பொழுதும் பிராப்தியின் குஷி இருக்கும்.

 

குமாரர்களுடன் சந்திப்பு: -

குமாரர்களுடைய வாழ்க்கை சக்திசாலியான வாழ்க்கை. எனவே பிரம்மா குமார் என்றால், ஆன்மீக சக்திசாலியானவர், உடலால் சக்திசாலியானவர் என்பது அல்ல. குமாரர் வாழ்க்கையில் என்ன விரும்புகிறீர்களோ, அதைச் செய்ய முடியும். அப்படியானால், நீங்கள் அனைத்து குமாரர்களும், உங்களுடைய இந்த குமாரர் வாழ்க்கையில் உங்களுடைய நிகழ்காலம், மற்றும் எதிர்காலத்தை உருவாக்கிவிட்டீர்களா, என்னவாக உருவாக்கியிருக்கிறீர்கள். ஆன்மீகமானதாக ஆக்கியிருக்கிறீர்கள். ஈஸ்வரிய வாழ்க்கையுள்ள பிரம்மா குமார் ஆகியிருக்கிறீர்கள் என்றால், எவ்வளவு சிரேஷ்ட வாழ்க்கையுள்ளவர்களாக ஆகிவிட்டீர்கள். அந்தமாதிரி சிரேஷ்ட வாழ்க்கை உருவாகி விட்டது, அதில் சதா காலத்திற்காக துக்கத்திலிருந்து, ஏமாற்றம் அடைவதிலிருந்து, அலைந்து திரிவதிலிருந்து விலகி வந்து விட்டீர்கள். இல்லையென்றால், உடலால் சக்தி நிறைந்த குமாரர்கள் அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள், சண்டையிடுவது, துக்கம் கொடுப்பது, ஏமாற்றுவது, இதைத் தான் செய்கிறார்கள் இல்லையா. அப்படி நீங்கள் எத்தனை விஷயங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறீர்கள். எப்படி நீங்கள் பாதுகாப்பாகி விட்டீர்கள், அதைபோல் மற்றவர்களையும் பாதுகாப்பதற்கான ஊக்கம் வருகிறது. எப்பொழுதும் நீங்கள் தன்னை போன்றவர்களை காப்பாற்றக் கூடியவர்கள். என்ன சக்திகள் கிடைத்திருக்கிறதோ, அதை மற்றவர்களுக்கும் கொடுங்கள். அளவற்ற சக்திகள் கிடைத்திருக்கிறது தான் இல்லையா. எனவே அனைவரையும் சக்திசாலி ஆக்குங்கள். நான் ஒரு கருவி என்று புரிந்து கொண்டு சேவை செய்யுங்கள். நான் சேவாதாரி என்று அல்ல. பாபா செய்விக்கிறார், நான் ஒரு கருவி. நான் என்ற தன்மையுள்ளவன் இல்லை. யாரிடம் நான் என்பது இல்லையோ, அவர் தான் உண்மையான சேவாதாரி.

 

தம்பதிகளுடன் சந்திப்பு:-

நீங்கள் எப்பொழுதும் சுயராஜ்ய அதிகாரி ஆத்மாக்களா? சுயத்தின் இராஜ்யம் என்றால், எப்பொழுதும் அதிகாரி. அதிகாரி ஒருபொழுதும் அடிமையாக முடியாது. அடிமைத் தனம் இருக்கிறது என்றால், அதிகாரம் இல்லை. எப்படி இரவு இருக்கிறது என்றால், பகல் இல்லை, பகல் இருக்கிறது என்றால், இரவு இல்லை. அந்த மாதிரியான அதிகாரி ஆத்மாக்கள், எந்தவொரு கர்மேந்திரியத்தின், நபரின், வைபவத்தின் அடிமையாக முடியாது. நீங்கள் அந்தமாதிரியான அதிகாரியா? எப்பொழுது மாஸ்டர் சர்வசக்திவான் ஆகிவிட்டீர்கள் என்றால், என்ன ஆகியிருக்கிறீர்கள்? அதிகாரி. அந்தமாதிரி நான் எப்பொழுதும் சுயராஜ்ய அதிகாரி ஆத்மா என்ற இந்த சக்திசாலி நினைவு மூலம் எப்பொழுதும் சுலபமாக வெற்றி அடைபவராக ஆகிக் கொண்டேயிருக்கிறீர்கள். கனவில் கூட தோல்வி எண்ணம் மாத்திரம் கூட இருக்க வேண்டாம்.. இதைத் தான் நிரந்தர வெற்றியாளர் என்று கூறுவது. மாயா ஓடிவிட்டதா அல்லது விரட்டிக் கொண்டிருக்கிறீர்களா. அது திரும்பி வரமுடியாதா அளவிற்கு விரட்டி விட்டீர்களா. யாரை திரும்பி அழைத்து வரவேண்டியதிருக்காதோ, அவரை தொலை தூரத்தில் விட்டுவிட்டு வருவார்கள். அப்படி நீங்களும் வெகு துரத்திற்கு விரட்டி விட்டீர்களா. நல்லது.

 

வரதானம்:

பிராமண வாழ்க்கையில் ஒரு தந்தையை தன்னுடைய உலகமாக ஆக்கக் கூடிய இயல்பான மற்றும் சகஜயோகி ஆகுக.

 

பிராமண வாழ்க்கையில் ஒரு தந்தையை தவிர வேறு யாருமில்லை என்பது அனைத்து குழந்தைகளின் உறுதிமொழி. எப்பொழுது உலகமே தந்தை தான், வேறு யாருமில்லை என்றால், இயல்பான மற்றும் சகஜயோகி நிலை எப்பொழுதும் இருக்கும். ஒருவேளை வேறுயாராவது இருக்கிறார் என்றால், இங்கு புத்தி செல்ல வேண்டாம், அங்கு செல்ல வேண்டுமென்று கடின உழைப்பு செய்ய வேண்டியதாக இருக்கும். ஆனால் ஒரு தந்தை தான் அனைத்துமே என்றால் புத்தி எங்கும் செல்ல முடியாது. அந்தமாதிரியானவர்கள், சகஜயோகி, சகஜ சுயராஜ்ய அதிகாரி ஆகிவிடுகிறார்கள். அவருடைய முகத்தில் ஆன்மீகத்தின் பிரகாசம் ஒரே சீராக ஒரே மாதிரி இருக்கும்.

 

சுலோகன்:

தந்தைக்கு சமமாக அவ்யக்தம் மற்றும் உடலற்ற நிலையில் இருப்பது தான் அவ்யக்த பாலனையின் வெளிப்படையான நிரூபணம்.

 

அறிக்கை: - இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்று கிழமை. அனைத்து சகோதர, சகோதரிகளும் ஒன்றாக கூடி மாலை 6.30 லிருந்து 7.30 வரை இயற்கைக்கும் சேர்த்து அனைத்து ஆத்மாக்களுக்கும் அமைதிs மற்றும் சக்தியின் கிரணங்கள் கொடுப்பதற்கான சேவை செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி