28.07.2019                           காலை முரளி               ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்    07.01.1985          மதுபன்


 

புதுவருடத்திற்கான விசேஷ எண்ணம் - மாஸ்டர் அளிப்பவர் ஆகுங்கள்

 

இன்று அளிப்பவர் தந்தை தன்னுடைய குழந்தைகள் மாஸ்டர் அளிப்பவர்களை சந்திப்பதற்காக வந்திருக்கிறார், அளிப்பவர் தந்தை ஒவ்வொரு குழந்தையின் சார்ட்டை பார்த்துக் கொண்டிருக்கிறார். அளிப்பவர் மூலமாக கிடைத்திருக்கும் பொக்கிஷங்களில் எந்தளவு அளிப்பவருக்குச் சமமாக மாஸ்டர் அளிப்பவர் ஆகியிருக்கிறார்கள்? ஞானத்தின் அளிப்பவரா? நினைவின் சக்திகளின் அளிப்பவரா? நேரத்திற்கு ஏற்றபடி ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சகயோகத்தின் அளிப்பவராகி ஆகியிருக்கிறாரா? பலமற்றவர்களுக்கு தன்னுடைய சிரேஷ்ட தொடர்பின் அளிப்பவராக ஆகியிருக்கிறாரா? பிராப்தியில்லாத ஆத்மாக்களை திருப்தியான ஆத்மாக்களாக ஆகுவதின் ஊக்கம், உற்சாகத்தின் அளிப்பவராக ஆகியிருக்கிறாரா? ஒவ்வொரு மாஸ்டர் அளிப்பவரின் இந்த சார்ட்டை பார்த்துக் கொண்டிருந்தோம். அளிப்பவர் என்றால், ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு எண்ணம் மூலம் கொடுப்பவர்.

 

அளிப்பவர் என்றால், பரந்த மனமுடையவர். கடலுக்குச் சமமாகக் கொடுப்பதில் பரந்த மனமுடையவர். அளிப்பவர் என்றால் ஒரு தந்தையைத் தவிர வேறு எந்த ஆத்மாவிடமிருந்தும் எதையும் வாங்கும் பாவனை வைக்காதவர். எப்பொழுதும் கொடுப்பவர் ஒருவேளை யாராவது ஆன்மீக அன்பு, சகயோகம் கொடுத்தாலும் கூட ஒன்றிற்குப் பதிலாக பல மடங்கு கொடுப்பவர். எப்படி தந்தை எதையும் யாரிடமிருந்தும் பெற்றுக் கொள்வதில்லை, கொடுக்கிறார். ஒருவேளை ஏதோ ஒரு குழந்தை தன்னுடைய பழைய குப்பைக்குச் சமமானவைகளைக் கொடுத்தாலும் கூட, அதற்குப் பதிலாக அந்தளவு கொடுக்கிறார். அதனால் பெறுவது கொடுப்பதில் மாறிவிடுகிறது. அப்படி மாஸ்டர் அளிப்பவர் என்றால் ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு அடியிலும் கொடுப்பவர், மஹான் வள்ளல் என்றால், விதாதா அதாவது வழங்குபவர். எப்பொழுதும் கொடுப்பவராக இருக்கும் காரணத்தினால் எப்பொழுதும் சுயநலமற்றவராக இருப்பார். தன்னுடைய நலனிலிருந்து விலகிய மற்றும் தந்தைக்குச் சமமாக அனைவரின் அன்பானவராக இருப்பார். அளிக்கும் ஆத்மாவிற்காக இயல்பாகவே அனைவரின் மரியாதை இருக்கும். அளிப்பவர் இயல்பாகவே அனைவரின் பார்வையில் வள்ளலாக அதாவது மஹானாக இருப்பார். அந்தமாதிரியான உருவாக்குபவராக எந்தளவு ஆகியிருக்கிறீர்கள்? அளிப்பவர் என்றால், இராஜவம்சி. அளிப்பவர் என்றால், வளர்ப்பவர். தந்தைக்குச் சமமாக எப்பொழுதும் அன்பு மற்றும் சகயோகத்தினால் வளர்ப்பவர். அளிப்பவர் என்றால், எப்பொழுதும் நிரம்பியவர். எனவே நான் பெறுபவனா அல்லது கொடுக்கும் மாஸ்டர் வள்ளலா என்று தன்னைத் தானே சோதனை செய்யுங்கள்.

 

இப்பொழுது நேரத்திற்குத் தகுந்தாற்போல் பங்கை செய்ய வேண்டும். நேரம் அருகில் வந்து கொண்டிருக்கிறது. அதாவது தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும். இது வரையிலும் கூட தனக்காகப் பெற வேண்டும் என்ற பாவனை உள்ளவராக இருந்தீர்கள் என்றால், கொடுப்பவராக எப்பொழுது ஆவீர்கள்? இப்பொழுது கொடுப்பது தான் பெறுவதாகும். எந்தளவு கொடுப்பீற்களோ, அந்தளவு இயல்பாகவே அதிகரித்துக் கொண்டேயிருக்கும். எந்த விதமான எல்லைக்குட்பட்ட விஷயங்களில் பெறுபவராக ஆகாதீர்கள். இதுவரையிலும் தன்னுடைய எல்லைக்குட்பட்ட ஆசைகளை நிறைவேற்றுவதற்கான ஆசை இருக்கிறது என்றால், உலகிலுள்ள அனைத்து ஆத்மாக்களின் ஆசைகளை எப்படி நிறைவேற்றுவீர்கள். கொஞ்சம் பெயர் கிடைக்க வேண்டும், அன்பு கிடைக்க வேண்டும், மதிப்பு கிடைக்க வேண்டும், மரியாதை வேண்டும், அன்பு வேண்டும், சக்தி வேண்டும், இதுவரையிலும் தனக்காக இந்த ஆசை இருக்கிறது என்றால், என்னவென்று தெரியாத நிலையை எப்பொழுது அனுபவம் செய்வீர்கள்? இந்த எல்லைக்குட்பட்ட ஆசைகள் ஒருபோதும் நல்லவராக ஆகவிடாது. இந்த ஆசையும் கூட ராயல் யாசிக்கும் தன்மையின் அம்சம். அதிகாரி என்ற தன்மைக்குப் பின்னால் இந்த அனைத்து விஷயங்களும் தானாகவே முன்னுக்கு வரும். வேண்டும், வேண்டும் என்ற பாடலைப் பாடாதீர்கள். கிடைத்து விட்டது, ஆகிவிட்டேன் என்ற இந்தப் பாடலைப் பாடுங்கள். எல்லைக்கு அப்பாற்பட்ட வள்ளலுக்காக இந்த எல்லைக்குட்பட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகள் அவைகளே நிழலுக்கு சமமாக பின்னால் வரும். எப்பொழுது என்ன அடைய வேண்டுமோ, அதை அடைந்துவிட்டோம் என்ற பாடலைப் பாடுகிறீர்கள் என்றால், பிறகு இந்த எல்லைக்குட்பட்ட பெயர், மதிப்பு, மரியாதையைப் பெற வேண்டும் என்பது எப்படி இன்னும் மிச்சம் இருக்கிறது? இல்லையென்றால், பாடலை மாற்றிவிடுங்கள். எப்பொழுது 5 தத்துவங்களும், அளிப்பவர் உங்கள் முன்பு தாசி ஆகிவிடுகின்றன, இயற்கையை வென்றவர், மாயாவை வென்றவர் ஆகிவிடுகிறீர்கள். அவற்றின் எதிரில் இந்த எல்லைக்குட்பட்ட ஆசைகள் சூரியனின் எதிரில் ஒரு அகல் விளக்கு மாதிரி. எப்பொழுது சூரியன் ஆகிவிட்டீர்கள் என்றால், இந்த தீபங்களுக்கு என்ன அவசியம்? வேண்டும் என்பதே திருப்தி படுத்துவதற்கான ஆதாரம். என்ன வேண்டுமோ, அதை அதிகமாகக் கொடுத்துக் கொண்டேயிருங்கள். மதிப்பை (பிறருக்கு) கொடுங்கள், வேண்டும் என்று கேட்காதீர்கள், மரியாதையைக் கொடுங்கள். மரியாதை வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள், பெயர் வேண்டுமென்றால், தந்தையின் பெயரை தானம் செய்யுங்கள். பிறகு உங்களுக்கு தானாகவே பெயர் கிடைத்துவிடும். கொடுப்பது தான் பெறுவதற்கான ஆதாரம். எப்படி பக்தி மார்க்கத்தில் கூட, இந்தப் பழக்கம் தான் இருந்து வந்திருக்கிறது. ஏதாவது ஒரு பொருளின் குறையிருக்கிறது என்றால், அதன் பிராப்திக்காக அதே பொருளை தானம் செய்விப்பார்கள். அப்படி அந்த கொடுப்பது தான் பெறுவதாக ஆகிவிட்டது. அந்தமாதிரி நீங்களும் வள்ளலின் குழந்தைகள் கொடுக்கக் கூடிய தேவதை ஆகுபவர்கள். உங்கள் அனைவரின் மகிகையாக, வழங்கும் வள்ளலே! சாந்தி தேவா!, செல்வத்தைக் கொடுப்பவரே! என்று கூறுகிறார்கள். பெறுபவர் என்று கூறி மகிமை செய்வதில்லை, அப்படி இந்த சார்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்தோம். தேவதை (கொடுப்பவர்) ஆகுபவர்கள் எத்தனை பேர், மேலும் பெறுபவர்கள் எத்தனை பேர். உலகீய ஆசைகள், இச்சைகள் முடிவடைந்து விட்டன. இப்பொழுது ஆன்மீக வாழ்க்கையின் எல்லைக்கு அப்பாற்பட்ட இச்சைகளை ஞானத்தின் விஷயங்கள் என்று புரிந்து கொள்கிறீர்கள் தான் இல்லையா? இதுவோ இருக்கத்தான் வேண்டும். ஆனால் எந்தவொரு எல்லைக்குட்பட்ட விருப்பம் வைத்திருப்பவர், மாயாவை எதிர்நோக்க முடியாது. கேட்பதால் கிடைக்கக் கூடிய பொருள் அல்ல அது!. யாரிடமாவது எனக்கு மரியாதை கொடுங்கள் அல்லது கொடுக்க வையுங்கள் என்று கூறுகிறார். கேட்டுக் கிடைப்பது என்ற இந்த நோக்கமே தவறானது. பிறகு இலட்சியம் எங்கிருந்து கிடைக்கும், எனவே வழங்கும் வள்ளல் ஆகுங்கள். பிறகு இயல்பாகவே அனைவரும் உங்களுக்கு கொடுப்பதற்கு வருவார்கள்? மதிப்பை வேண்டுமென்று கேட்பவர் மதிப்பிழந்து போகிறார். எனவே மாஸ்டர் அளிப்பவர் என்ற மதிப்புடன் இருங்கள். என்னுடையது, என்னுடையது என்று கூறாதீர்கள்.. அனைத்தும் உங்களுடையது, நீங்கள் உங்களுடையது என்று கூறினீர்கள் என்றால், அனைவரும் உன்னுடையது, உன்னுடையது என்று கூறுவார்கள். என்னுடையது - என்னுடையது என்று கூறுவதினால் என்ன வருகிறதோ அதையும் இழந்து விடுவீர்கள். ஏனென்றால் எங்கு திருப்தி இல்லையோ, அங்கு பிராப்தியும், பிராப்தியின்மைக்குச் சமமானது. எங்கு திருப்தி இருக்கிறதோ, அங்கு கொஞ்சம் இருந்தாலும் அனைத்தும் இருப்பதற்குச் சமமானது. எனவே உன்னுடையது, உன்னுடையது என்று கூறுவதினால், பிராப்தி சொரூபம் ஆகிவிடுவீர்கள். எப்படி குவிந்த கூரை உள்ள மண்டபத்தினுள் ஏதாவது சப்தத்தை எழுப்பினீர்கள் என்றால், அதே சப்தம் திரும்பி வரும். அதேபோல் இந்த எல்லைக்கு அப்பாற்பட்ட மண்டபத்தினுள், ஒருவேளை நீங்கள் மனதால் என்னுடையது என்று கூறினீர்கள் என்றால், அனைவரின் பக்கத்திலிருந்தும் அதே என்னுடையது என்ற ஓசையைத் தான் கேட்பீர்கள்.

 

நீங்கள் என்னுடையது என்று கூறுவீர்கள், அவரும் என்னுடையது என்று கூறுவார், எனவே எந்தளவு மனதாற அன்புடன் (ஏதாவது தேவைக்காக இல்லை) உன்னுடையது என்று கூறுவீர்களோ, அந்தளவே மனதாற அன்புடன் எதிரில் இருப்பவரும் உங்களிடம் உன்னுடையது என்று கூறுவார். இந்த விதி மூலம் என்னுடையது, என்னுடையது என்பதின் எல்லைக்குட்பட்டது. எல்லைக்கு அப்பாற்பட்டதில் மாற்றம் ஆகிவிடும். மேலும் பெறுபவருக்குப் பதிலாக மாஸ்டர் அள்ப்பவர் ஆகிவிடுவார். எனவே இந்த வருடம் எப்பொழுதும் நான் மாஸ்டர் அளிப்பவன் என்ற இந்த விசேஷ எண்ணத்தை வையுங்கள். புரிந்ததா?

 

மஹாராஷ்டிர மண்டலம் வந்திருக்கிறது. எனவே மஹான் ஆகவேண்டும் இல்லையா? மஹாராஷ்டிரா என்றாலே, எப்பொழுதும் மஹான் ஆகி, அனைவருக்கும் வழங்குபவராக ஆவது. மஹாராஷ்ட்ரா என்றால், எப்பொழுதும் நிரம்பிய இராஜ்யம், தேசம் சம்பன்னமாக இருக்கிறதோ, அல்லது இல்லையோ, ஆனால் மஹான் ஆத்மாக்கள் நீங்களோ சம்பன்னமாக இருக்கிறீர்கள், எனவே மஹாராஷ்டிரா என்றால் மஹாதானி ஆத்மாக்கள்.

 

இன்னொன்று .பி.யைச் சேர்ந்தவர்கள், .பி.யில் பதீத பாவனி கங்கையின் மகத்துவம் இருக்கிறது. எனவே எப்பொழுதும் பிராப்தி சொரூபமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் பதீத பாவனியாக ஆக முடியும். அப்படி .பி.யைச் சேர்ந்தவர்களும் தூய்மையின் களஞ்சியமாக இருக்கிறார்கள். எப்பொழுதும்  அனைவருக்கும் தூய்மையின் ஆசீர்வாதம் கொடுக்கும் மாஸ்டர் அளிப்பவர், அப்படி இரண்டும் மஹான் ஆனது இல்லையா? பாப்தாதாவும் அனைத்து மஹான் ஆத்மாக்களையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்.

 

இரட்டை வெளிநாட்டினரோ, இரட்டை போதையில் தான் இருக்கிறார்கள். ஒன்று நினைவின்  போதை, இன்னொன்று சேவையின் போதை. பெரும் பான்மையோர் இந்த இரட்டை போதையில் எப்பொழுதும் இருப்பவர்கள். மேலும் இந்த இரட்டை போதை தான் அனேக போதைகளிலிருந்து காப்பாற்றக் கூடியது. இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளும் இரண்டு விஷயங்களின் பந்தயத்தில் வரிசை எண் நல்லதாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாபா மற்றும் சேவையின் பாடலை கனவிலும் பாடிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி மூன்று நதிகளின் சங்கமம் - கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்று ஆகிவிட்டது இல்லையா? உண்மையான அல்லாவின் வளமாக்கப்பட்ட ஸ்தானமோ இந்த மதுபன் தான் இல்லையா? இதே அல்லாவின் வளமாக்கப்பட்ட ஸ்தானத்தில் மூன்று நதிகளின் சங்கமம். நல்லது.

 

அனைத்து எப்பொழுதும் மாஸ்டர் அளிப்பவர்களுக்கு, எப்பொழுதும் அனைவருக்கும் கொடுக்கும் பாவனையில் இருப்பவர்களுக்கு, தேவதை ஆகும், எப்பொழுதும் உன்னுடையது, உன்னுடையது என்ற பாடலைப் பாடுகின்ற, எப்பொழுதும் பிராப்தியில்லாத ஆத்மாக்களை திருப்திப் படுத்தக் கூடிய சம்பன்ன ஆத்மாக்களுக்கு, வழங்குபவர், வரமளிக்கும் வள்ளல் பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

டீச்சர்களுடன் சந்திப்பு: -

சேவாதாரி சேவை செய்வதினால் அவர்களும் சக்திசாயாகுகிறார், மேலும் மற்றவர்களிலும் சக்தி நிரப்புவதற்கு பொறுப்பாளர் ஆகிறார். உண்மையான ஆன்மீக சேவை எப்பொழுதும் சுயமுன்னேற்றம் மற்றும் மற்றவர்களின் முன்னேற்றத்திற்குப் பொறுப்பாளர் ஆக்குகிறது. மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு முன்பு தன்னுடைய சேவை செய்ய வேண்டியதாக இருக்கிறது. மற்றவர்களுக்கு கூறுவது என்றால், முதலில் அவர் கேட்பது, முதலில் தன்னுடைய காதுகளில் செல்லும் இல்லையா? சொல்வது என்பது இருக்காது. கேட்பது என்பது இருக்கும். அப்படி சேவை மூலம் தனக்கும் மற்றவர்களுக்கும் இரட்டை லாபம் ஆகிறது. சேவையில் பிஸியாக இருப்பது என்றால் சுலபமாக மாயாவை வென்றவர் ஆவது. பிஸியாக இருப்பதில்லை, அப்பொழுது தான் மாயா வருகிறது. சேவாதாரி என்றால், பிஸியாக இருப்பவர். சேவாதாரிகளுக்கு ஒருபொழுதும் ஒய்வான நேரமே இல்லையென்றால், மாயா எப்படி வரு?. சேவாதாரி ஆவது என்றால், சுலபமாக வெற்றியடைபவர் ஆவது. சேவாதாரி சுலபமாக மாலையில் வர முடியும்.. ஏனென்றால், சுலபமாக வெற்றியடைபவர். வெற்றியடைபவர் வெற்றி மாலையில் வருவார். சேவாதாரியின் அர்த்தம் அப்பொழுது எடுக்கப்பட்ட வெண்ணெய் அருந்துபவர். அப்பொழுது பறிக்கப்பட்ட பழத்தை அருந்துபவர் ஆரோக்கியமாக இருப்பார். டாக்டர்களும் புதிய பழங்களும், புதிய காய்கறிகளையும் சாப்பிடுங்கள் என்று கூறுவார்கள். அப்படி சேவை செய்வது என்றால் உயிர்சத்து (வைட்டமின்) கிடைப்பது. நீங்கள் அந்தமாதிரி சேவாதாரி தான் இல்லையா? சேவைக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கிறது. அந்தமாதிரி சேவையின் அனுபவம் ஆகிக் கொண்டிருக்கிறதா என்று இந்த விஷயத்தைத் தான் சோதனை செய்ய வேண்டும். எவ்வளவு தான் ஒருவர் குழப்பத்தில் இருந்தாலும் சேவை குஷியில் நடனமாட வைக்கக் கூடியது. எவ்வளவு தான் ஒருவர் நோயுற்று இருந்தாலும் சேவை ஆரோக்கியமாக ஆக்கக்கூடியது, சேவை செய்து, செய்து தான் நோயாளி ஆகிவிட்டேன். என்று அந்தமாதிரி கிடையாது. நோயாளியை ஆரோக்கியமானவராக ஆக்கக் கூடியது சேவை. அந்தமாதிரி அனுபவம் இருக்கட்டும். நீங்கள் அந்தமாதிரி விசேஷ சேவாதாரி விசேஷ ஆத்மாக்கள். பாப்தாதா சேவாதாரிகளை எப்பொழுதும் சிரேஷ்ட சம்பந்தத்தில் பார்க்கிறார். ஏனென்றால், சேவைக்காக தியாகி, தபஸ்வியாகவோ ஆகியிருக்கிறார்கள் இல்லையா? தியாகம் மற்றும் தபஸ்யாவைப் பார்த்து பாப்தாதா எப்பொழுதும் குஷியடைகிறார்.

 

2. சேவாதாரி என்றால் எப்பொழுதும் சேவைக்குப் பொறுப்பாளர் ஆகியிருக்கும் ஆத்மாக்கள். எப்பொழுதும் தன்னை ஒரு கருவி என்று நினைத்து சேவையில் முன்னேறிக் கொண்டே இருங்கள். நான் சேவாதாரி என்ற இந்த நான் என்ற உணர்வு வருவதில்லையே? தந்தை செய்விப்பவர், நான் ஒரு கருவி, செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார், நடத்துபவர் நடத்திக் கொண்டிருக்கிறார் என்ற இந்த சிரேஷ்ட பாவனை மூலம் எப்பொழுதும் விலகியிருப்பவராகவும் மற்றும் அன்பானவராகவும் இருப்பீர்கள். ஒருவேளை நான் செய்கிறேன் என்பது இருக்கிறது என்றால், விலகியிருப்பவராகவும், அன்பானவராகவும் இல்லை. எனவே எப்பொழுதும் விலகியிருந்து மேலும் எப்பொழுதும் அன்பானவராக ஆவதற்கான வழி, செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார் என்ற நினைவில் இருப்பது. இதன் மூலம் வெற்றியும் அதிகம் மேலும் சேவையும் சுலபமாக இருக்கும் கடின உழைப்பு செய்ய வேண்டியதாக இருக்காது. ஒருபொழுதும் நான் என்ற மனப்பிராந்தியில் வருபவன் இல்லை, ஒவ்வொரு விஷயத்திலும் பாபா, பாபா என்று கூறினால் வெற்றி இருக்கும். அந்தமாதிரி சேவாதாரி எப்பொழுதும் முன்னேறிக் கொண்டும் இருப்பார். மற்றவர்களையும் முன்னேற்றுவார். இல்லையென்றால், அவரே சில நேரம் பறக்கும் கலை, சில நேரம் ஏறும் கலை, சில நேரம் நடக்கும் கலையில் இருப்பார். மாற்றிக் கொண்டே இருப்பார். மேலும் மற்றவர்களையும் சக்திசாலி ஆக்க முடியாது. எப்பொழுதும் பாபா பாபா என்று சொல்பவர் மட்டும் இல்லை, ஆனால் செய்து காண்பிப்பவர். அந்தமாதிரி சேவாதாரி எப்பொழுதும் பாப்தாதாவின் நெருக்கத்தில் இருப்பார். எப்பொழுதும் தடைகளை அழிப்பவராக இருப்பார். நல்லது.

 

வரதானம்:

தைரியம் மற்றும் ஊக்கம் - உற்சாகத்தின் இறக்கைகள் மூலம் பறக்கும் கலையில் பறக்கக் கூடிய தீவிர முயற்சி செய்பவர் ஆகுக.

 

பறக்கும் கலைக்கு இரண்டு இறக்கைகள் இருக்கின்றன - தைரியம் மற்றும் ஊக்கம் - உற்சாகம் என்பது! எந்த ஒரு காரியத்திலும் வெற்றியை அடைவதற்கு தைரியம் மற்றும் ஊக்கம் - உற்சாகம் இல்லையோ அங்கு களைப்பு ஏற்படும், மேலும் களைப்படைந்தவர் ஒருபொழுதும் வெற்றியடைவதில்லை. தற்சமயத்திற்கு ஏற்றபடி பறக்கும் கலையின்றி இலட்சியத்தை சென்றடைய முடியாது. ஏனென்றால், முயற்சி செய்வது ஒரு பிறவியில் மட்டுமே! ஆனால் பிராப்தி 21 ஜென்மங்களுக்காக மட்டுமின்றி முழு கல்பத்திற்கானது. எப்பொழுதும் நேரத்தை உணர்ந்திருப்பது நினைவில் இருக்கிறது என்றால் முயற்சி செய்வது இயல்பாகவே அதிவேகமுடையதாக ஆகிவிடுகிறது.

 

சுலோகன்:

அனைவரின் மனவிருப்பங்களை நிறைவேற்றுபவர் தான் காமதேனு.

 

ஓம்சாந்தி