09.06.2019                           காலை முரளி      ஓம்சாந்தி                        அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           10.12.1984           மதுபன்


 பழைய கணக்கு முடிந்ததின் அடையாளம்

 இன்று பாப்தாதா பௌதீக உடலின் ஆதாரம் எடுத்து பௌதீக உலகத்தில், பௌதீக உடலிலிருக்கும் குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். தற்சமயத்தின் குழப்பமான உலகம் அதாவது துக்கம் சூழ்ந்த உலகத்தில் பாப்தாதா தன்னுடைய ஆடாத அசையாத குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். குழப்பத்தில் இருந்தபொதிலும் அதிலிருந்து விலகி, மேலும் தந்தையின் பிரியமான தாமரை மலர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். பயமிகுந்த சூழ்நிலையிலிருந்து கொண்டு பயமற்ற, சக்தி சொரூப நிலையிலிருக்கும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த உலகத்தை பரிவர்த்தனை செய்யும் கவலையில்லா இராஜாக்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அந்தமாதிரியான கவலையில்லா இராஜாக்கள், உங்கள் மேல் நாலாபுறங்களிலும் உள்ள கவலை நிறைந்த சூழ்நிலையின் பாதிப்பு அம்சம் மாத்திரம் கூட ஏற்பட முடியாது. தற்சமயம் உலகத்தில் பெரும்பான்மையான ஆத்மாக்களில் பயம் மற்றும் கவலை இந்த இரண்டுமே அனைவரிடமும் விசேஷமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் எவ்வளவு தான் கவலையில் இருக்கிறார்களோ, அந்தளவே நீங்களும் நற்சிந்தனை யுள்ளவர்களாக இருக்கிறீர்கள். கவலை மாறி நல்ல எண்ணங்களின் பாவனை சொரூபமாக ஆகிவிட்டீர்கள். பய பீதி அடைவதற்குப் பதிலாக சுகத்தின் பாடலைப் பாடுகிறீர்கள். அந்தளவு மாற்றத்தை அனுபவம் செய்கிறீர்கள் தான் இல்லையா? எப்பொழுதும் நல்ல சிந்தனையுள்ளவராகி, சுபபாவனை, சுப விருப்பங்களினால் மனதால் செய்யும் சேவை மூலமாக அனைவருக்கும் சுகம் சாந்தியின் பிராப்தி கொடுப்பவர்கள் தான் இல்லையா? அகால மரணமடையும் ஆத்மாக்களுக்கு அழியாத மூர்த்தியாகி சாந்தி மற்றும் சக்தியின் சகயோகம் கொடுப்பவர்கள் தான் இல்லையா. ஏனென்றால், தற்சமயத்தில் அகால மரணத்தின் சீசன் நடக்கிறது. எப்படி காற்றின் சமுத்திரத்தின் புயல் தீடீரென்று அடிக்கிறது. அதே போல் இந்த அகால மரணத்தின் புயலும் தீடீரென்று மேலும் மிக வேகமாக அநேகர்களை ஒன்றாக அழைத்துச் செல்கிறது. அகால மரணத்தின் புயல் இப்பொழுது தான் தொடங்கியிருக்கிறது. விசேஷமாக பாரதத்தில் உள்நாட்டு கலவரம் மற்றும் இயற்கையின் ஆபத்துக்கள் தான் ஒவ்வொரு கல்பத்திலும் பரிவர்த்தனைக்கான காரணமாக ஆகின்றன. வெளிநாட்டின் ரூபம் மற்றும் வடிவம் (விநாசத்தின்) வேறு விதமானது. ஆனால் பாரதத்தில் இதே இரண்டு விஷயங்கள் தான் விசேஷமாக காரணமாகின்றன. மேலும் இந்த இரண்டின் ஒத்திகையையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இரண்டுமே சேர்ந்தே தங்களுடைய பங்கை செய்து கொண்டிருக்கிறார்கள்.

 ஒரே நேரத்தில் மொத்தமாக அநேகர்களின் மரணம் ஏன் மற்றும் எப்படி ஏற்படுகிறதென்று குழந்தைகள் கேட்கிறார்கள், இதற்கான காரணம் என்ன? இப்பொழுது சம்பன்னம் ஆவதற்கான நேரம் அருகில் வந்து கொண்டிருக்கிறது, இதையோ தெரிந்திருக்கிறீர்கள் மற்றும் அனுபவம் செய்கிறீர்கள். அனைத்து ஆத்மாக்களும் துவாபர் யுகம் மற்றும் கலியுகத்திருந்து செய்திருக்கும் பாவங்களின் கணக்கு என்னென்ன மிச்சம் இருக்கின்றனவோ, அவை இப்பொழுது முழுமையாகவே அழிக்கப் பட வேண்டும். ஏனென்றால் இப்பொழுது அனைவரும் திரும்பி வீடு செல்ல வேண்டும். துவாபர் யுகத்திலிருந்து செய்த காரியங்கள் மற்றும் பாவங்களின் பலனை ஒரு பிறவியில் முடிக்க வில்லையென்றால், அடுத்த பிறவியில் முடிப்பதற்கும், பிராப்தி அடைவதற்கும் கணக்கு தொடர்ந்து வருகிறது. ஆனால் இப்பொழுது கடைசி நேரம், மேலும் பாவங்களின் கணக்கு அதிகமாக இருக்கிறது, எனவே இப்பொழுது விரைவில் பிறவி, விரைவில் மரணம் என்ற இந்த தண்டனை மூலமாக அநேக ஆத்மாக்களின் பழைய கணக்கு முடிவடைந்து கொண்டிருக்கின்றது. எனவே தற்சமயம் மரணமும் வேதனை நிறைந்ததாக மேலும் பெரும்பான்மையினரின் பிறவியும் மிகுந்த துக்கம் நிறைந்ததாக இருக்கிறது, சகஜமான மரணமும் இல்லை, சகஜமான ஜென்மமும் இல்லை. எனவே வேதனை நிறைந்த மரணம் மற்றும் துக்கம் நிறைந்த பிறவி என்று இது கணக்கு வழக்கு முடிப்பதற்கான சாதனம். எப்படி இந்த பழைய உலகத்தில் எறும்புகள், ஈக்கள், கொசுக்கள் ஆகியவற்றைக் கொள்வதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அந்த வழிகள் மூலமாக ஒரே நேரத்தில் ஈக்கள், எறும்புகள், கொசுக்கள் மற்றும் அநேகவிதமான கிரிமிகள் ஒன்றாக அழிந்து விடுகின்றன இல்லையா? அதே போல் இன்றைய நாளில் மனிதர்களும் கொசுக்கள் ஈக்கள் மாதிரி அகால மரணத்தின் வசமாகிக் கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கும் எறும்புகளுக்கும் வித்தியாசமே இல்லை, இந்த அனைத்து கணக்கு வழக்குகளும் நிரந்தரமாக முடிவடையும் காரணத்தினால், மொத்தமாக அகால மரணத்தின் புயல் அவ்வப்பொழுது வந்து கொண்டிருகிறது.

 எப்படி தர்மராஜபுரியில் தண்டனைகள் கிடைக்கும் என்ற பங்கு இறுதியில் அடங்கியிருக்கிறது. ஆனால் அந்த தண்டனைகளை, ஆத்மா மட்டும் தனக்குத் தானாகவே அனுபவிக்கிறது மற்றும் கணக்கு வழக்குகளை முடிக்கிறது. ஆனால் கர்மங்களின் விளைவுகளின் கணக்கு அநேகவிதமாக இருந்த பொழுதிலும், அதில் விசேஷமாக மூன்று விதங்கள் இருக்கின்றன - ஒன்று, ஆத்மா தனக்கு தானே அனுபவிக்கும் கணக்கு, நோய்கள் ஆகியவை. ஆத்மா உடல் நோய் மூலமாக தனக்கு தானாகவே கணக்கை முடிக்கிறது. அதே போலவே இன்னும் மூளை பலஹீனமாவது மற்றும் எந்தவிதமான பூதம் பிரவேசம் ஆவது. அந்தமாதிரி வித விதமான தண்டனைகள் மூலமாக ஆத்மா தன்னுடைய கணக்கு வழக்கைத் தானே அனுபவிக்கிறது. இரண்டாவது, கணக்கு, சம்மந்தம் மற்றும் தொடர்பு மூலமாக துக்கத்தின் பிராப்தி ஆவது. இது எப்படியென்று நீங்களோ புரிந்து கொள்ள முடியும் இல்லையா? மேலும் மூன்றாவது இயற்கையின் ஆபத்துக்கள் மூலமாக கணக்கு வழக்குகள் முடிவடைவது. இந்த மூன்று விதங்களின் ஆதாரத்தினால் கணக்கு வழக்கு முடிவடைந்து கொண்டிருக்கிறது. எனவே தர்மராஜபுரியில் சம்மந்தம் மற்றும் தொடர்பு மூலமாக, மேலும் இயற்கையின் ஆபத்துக்கள் மூலமாக உள்ள கணக்கு வழக்கு முடிவடையாது. அது இந்த பௌதீக உலகத்தில் இருக்கும். முழுமையான பழைய கணக்கு அனைவரினுடையதும் இப்பொழுது முடிவடைய வேண்டும். எனவே இந்த கணக்கு வழக்கை முடிக்கும் இயந்திரம் இப்பொழுது அதிவேகமாக இயங்கத் தான் செய்யும். உலகத்தில் இவை அனைத்துமே நடக்கும். புரிந்ததா? இது கர்மங்களின் விளைவுகளின் கணக்கு வழக்கு. இப்பொழுது பிராமண ஆத்மாவாகிய நான், மிக அதி வேகமாக முயற்சி செய்வதின் மூலம், என்னுடைய அனைத்து பழைய கணக்கு வழக்கு முடிந்து விட்டதா? அல்லது இப்பொழுது கூட ஏதாவது சுமை இன்னும் இருகிறதா? என்று உங்களை நீங்களே, சோதனை செய்யுங்கள். பழைய கணக்கு இப்பொழுது இன்னும் இருக்கிறதா அல்லது முடிவடைந்து விட்டதா? என்பதின் விசேஷ அடையாளம் என்ன என்று தெரிந்திருக்கிறீர்களா? சிரேஷ்ட பரிவர்த்தனையில் !(மாற்றம்) மற்றும் சிரேஷ்ட காரியம் செய்வதில் யாராவது அவருடைய சுபாவம், சம்ஸ்காரத்தினால் தடை போடுகிறார் மற்றும் எவ்வளவு விரும்புகிறீர்களோ, எந்தளவு நினைக்கிறீர்களோ, அந்தளவு செய்ய முடிவதில்லை, மேலும் விரும்பாவிட்டாலும் தெரியவில்லை ஏன் இப்படி ஆகிவிடுகிறது என்ற வார்த்தைகள் வெளியாகின்றன. மற்றும் மனதில் எண்ணம் எழுகிறது. என்ன ஆகிவிடுகிறது என்று தெரியவில்லை, மேலும் தன்னுடைய விருப்பம் சிரேஷ்டமாக இருந்தபோதிலும், தைரியம் மற்றும் உற்சாகம் இருந்தபோதிலும் மற்றதின் - மற்றவர்களின் வசமானதாக அனுபவம் செய்கிறார்கள். அந்த மாதிரி செய்யவோ கூடாது, நினைக்கவில்லை, ஆனால் நடந்து விட்டது என்று கூறுகிறார்கள். இதைத் தான் தன்னுடைய பழைய சுபாவம் மற்றும் சம்ஸ்காரத்தின் வசமாவது அல்லது யாருடைய தீய சேர்க்கையின் வசமாவது மற்றும் ஏதாவது வாயுமண்டலம் வைப்ரேஷனின் (எண்ண அலைகளின்) வசமாவது. இந்த மூன்று விதமான வசம் ஆவதின் நிலை இருக்கிறது என்றால், விரும்பாவிட்டாலும் நடந்துவிடுகிறது, நினைத்தபோதிலும் நடப்பதில்லை மற்றும் மற்றதின் வசமாகி வெற்றியை அடைய முடிவதில்லை. என்ற இவைகள் தான் கடந்த காலத்தின் பழைய கணக்கின் சுமையின் அடையாளம், என்னை ஏதாவது விதமான சுமை பறக்கும் கலையின் அனுபவத்திலிருந்து கீழே கொண்டு வரவில்லையே என்று . இந்த அடையாளங்கள் மூலமாக தன்னைத்தானே சோதனை செய்யுங்கள். கணக்கு முடிந்தது என்றால்,ஒவ்வொரு பிராப்தியின் அனுபவங்களில் பறக்கும் கலை. எப்போதாவது பிராப்தி இருக்கிறது, எப்போதாவது இருக்கிறதென்றால், இப்பொழுது இன்னும் மிச்சம் இருக்கிறது. எனவே இந்த விதியின் மூலம் தன்னைத் தானே சோதனை செய்யுங்கள். துக்கமான உலகத்திலோ, துக்கத்தின் சம்பவங்களின் மலை கண்டிப்பாக வெடிக்கும். அந்தமாதிரியான நேரத்தில் பாதுகாப்பிற்கான ஒரே வழி தந்தையின் (பாதுகாப்பு) குடை நிழல் . உங்களிடம் குடை நிழல் இருக்கிறது தான் இல்லையா. நல்லது.

 சந்திப்பின் விழாவைக் கொண்டாடுவதற்கு அனைவரும் வந்திருக்கிறீர்கள். இந்த சந்திப்பு விழா தான் எவ்வளவு வேதனை நிறைந்த காட்சியாக இருந்த போதிலும், ஆனால் விழா என்பதினால். அது ஒரு விளையாட்டாக அனுபவமாகும். பயந்து பீதி அடைவது இருக்காது. சந்திப்பின் பாடலைப் பாடிக்கொண்டேயிருப்பீர்கள். குஷியின் நடனம் ஆடுவீர்கள். மற்றவர்களுக்கும் தைரியத்தின் சகயோகம் கொடுப்பீர்கள். ஸ்தூலமாக ஆடுவதில்லை, இது குஷியின் நடனமாகும். நீங்கள் எப்பொழுதுமே சந்திப்பு விழாவைக் கொண்டாடிக் கொண்டேயிருக்கிறீர்கள் இல்லையா? இருப்பதே சந்திப்பின் விழாவில் தான். இருந்தும் மதுபனில் சந்திப்பதற்காக வந்திருக்கிறீர்கள், பாப்தாதாவும் அந்தமாதிரி சந்திப்பு விழாவைக் கொண்டாடும் குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். மதுபனின் அலங்காரம் மதுபன்னிற்கு வந்து சேர்ந்து விட்டது. நல்லது.

 அந்தமாதிரி எப்பொழுதும் தன்னுடைய அனைத்து கணக்கு வழக்கையும் முடித்து விட்டு, மற்றவர்களுடைய கணக்கு வழக்கையும் முடித்து வைக்கும் சக்தி சொரூப ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் துக்கம் வேதனை நிறைந்த சூழ்நிலையில் இருந்தபோதிலும், விலகியிருந்து மற்றும் தந்தையின் பிரியமானவர்களாக இருக்கக் கூடிய, ஆன்மீக தாமரை மலர்களுக்கு, அனைத்து ஆத்மாக்களுக்காகவும் நல்ல எண்ணங்கள் வைத்திருக்கக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் சமஸ்காரம்.

 டீச்சர் சகோதரிகளுடன் சந்திப்பு

1. நீங்கள் டீச்சர்கள் இல்லை, சேவாதாரிகள். சேவையில் தியாகம், தபஸ்யா நிரம்பி இருக்கிறது. சேவாதாரி ஆவது என்றால், சுரங்கத்தின் அதிகாரியாக ஆவது. சேவை என்பது அந்தமாதிரியான ஒன்று அதன் மூலம் ஒவ்வொரு வினாடியிலும் நிரம்பிய நிலை தான். அந்தளவு நிரம்பியவர் ஆகிவிடுகிறீர்கள் அதை அரைக் கல்பம் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டேயிருப்பீர்கள். உழைப்பதற்கு அவசியம் இருக்காது. நீங்கள் அந்தமாதிரியான சேவாதாரிகள். அதுவும் ஆன்மீக சேவாதாரி, அதாவது ஆத்ம நிலையில் நிலைத்திருந்து ஆத்மாக்களுக்கு சேவை செய்பவர்கள். இவரைத் தான் ஆன்மீக சேவாதாரி என்று கூறுவது. அந்த மாதிரியான சேவாதாரிகளுக்கு எப்பொழுதும் பாப்தாதா ஆன்மீக ரோஜா மலர் என்ற பட்டத்தைக் கொடுக்கிறார். அந்தமாதிரி நீங்கள் அனைவரும் ஆன்மீக ரோஜா மலர்கள், மேலும் ஒருபொழுதும் வாடிப்போவதில்லை. எப்பொழுதும் தன்னுடைய ஆன்மீகத் தன்மையின் நறுமணம் மூலம் அனைவரையும் புத்துணர்வு அடையச் செய்பவர்கள்.

2. சேவாதாரியாக ஆவது கூட மிகுந்த சிரேஷ்ட பாக்கியம். சேவாதாரி என்றால், தந்தைக்குச் சமமானவர். எப்படி தந்தை சேவாதாரியாக இருக்கிறாரோ, அதே போன்று நீங்களும் பொறுப்பில் இருக்கும் சேவாதாரி. தந்தை எல்லைக்கு அப்பாற்பட்ட ஆசிரியர், நீங்களும் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்கள். அந்தமாதிரி தந்தைக்குச் சமமாகும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. எப்பொழுதும் இதே சிரேஷ்ட பாக்கியம் மூலமாக மற்றவர்களுக்கும் அழியாத பாக்கியத்தின் வரதானத்தை கொடுத்துக் கொண்டேயிருங்கள். முழு உலகத்திலும் அந்த மாதிரியான சிரேஷ்ட பாக்கியம் மிகக் குறைந்த ஆத்மாக்களுக்குத் தான் இருக்கிறது. இந்த விசேஷ பாக்கியத்தை நினைவில் வைத்துக் கொண்டு சக்திசாலியானவர் ஆகி, மற்றவர்களையும் சக்திசாலியானவர்களாக ஆக்கிக் கொண்டேயிருங்கள்..பறக்கவைத்துக் கொண்டேயிருங்கள். எப்பொழுதும் தன்னை முன்னேற்றிக் கொண்டு மற்றவர்களையும் முன்னேற வையுங்கள். நல்லது.

 

தேர்ந்தேடுக்கப்பட்ட மகாவாக்கியம்

மாயாவை வென்றவரின் கூடவே இயற்கையை வென்றவராகவும் ஆகுங்கள்.

 குழந்தைகளாகிய நீங்கள் மாயாவை வென்றவராகவோ ஆகிக் கொண்டே தான் இருக்கிறீர்கள், ஆனால் இயற்கையை வென்றவராகவும் ஆகுங்கள். ஏனென்றால், இப்பொழுது இயற்கையின் சீற்றங்கள் அதிகமாக நடக்கப் போகிறது. சில நேரம் கடலின் நீர் தன்னுடைய பிரபாவத்தைக் காண்பிக்கும், சில நேரம் நிலம் தன்னுடைய பிரபாவத்தைக் காண்பிக்கும். ஒருவேளை இயற்கையை வென்றவராக இருக்கிறீர்கள் என்றால், இயற்கையின் எந்தவொரு சீற்றமும் உள்ளவர்களை அசைக்க முடியாது. எப்பொழுதும் பார்வையாளர் ஆகி அனைத்து காட்சிகளையும் பார்த்துக் கொண்டேயிருப்பீர்கள், எந்தளவு நீங்கள் உங்களுடைய ஃபரிஸ்தா சொரூபத்தில் அதாவது உயர்ந்த நிலையில் இருக்கிறீர்களோ, அந்தளவு இந்த சீற்றங்களில் இருந்து, இயல்பாகவே விலகியிருப்பீர்கள். இயற்கையை வென்றவராக ஆவதற்கு முன்பு கர்மமேந்திரியங்களை வென்றவர் ஆகுங்கள். அப்பொழுது தான், இயற்கையை வென்றவரிலிருந்து கர்மாதீத் நிலையில் இருப்பவராகி, உலக இராஜ்ய அதிகாரி ஆக முடியும். எனவே ஒவ்வொரு கர்மேந்திரியமும் கூறுங்கள் ஐயா, சரி ஐயா, என்று கூறி நடந்து கொள்கிறதா? உங்களுடைய மந்திரி, துணை மந்திரி எங்காவது ஏமாற்றமோ கொடுப்பதில்லையே?

 குழந்தைகள் உங்களிடம் தூய்மையின் மகான் சக்தி இருக்கிறது, அதன் மூலம் தன்னுடைய தூய்மையான மனசக்தி, அதாவது சுத்தமான உள்ளுணர்வு மூலமாக இயற்கையையும் பரிவர்த்தனை செய்ய முடியும். மனதின் தூயமையின் சக்தியின் வெளிப்படையான எடுத்துக்காட்டு, இயற்கையின் பரிவர்த்தனை. அந்தமாதிரி சுய பரிவர்த்தனை மூலம் இயற்கை மற்றும் நபரின் பரிவர்த்தனையும் செய்ய முடியும். அதாவது மிக தாழ்ந்த மனித ஆத்மாக்கள், மேலும் தீய வாயுமண்டலம் மற்றும் எண்ண அலைகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான, சுலபமான வழி இந்த ஈஸ்வரிய மரியாதைகள். மரியாதைகளுக்கு உள்ளே இருந்தீர்கள் என்றால், கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். எப்பொழுது எண்ணம், சொல் மற்றும் செயலால் மரியாதை கோட்டிற்கு வெளியே சென்று விடுகிறீர்கள் என்றால், கடின உழைப்பு செய்ய வேண்டியது இருக்கிறது.

 நீங்கள் எப்பொழுதும் தன்னுடைய மூதாதையர் என்ற நிலையில் இருந்து, எண்ணம்த்தின் மூலமாக 5 விகாரங்களுக்கு நீங்கள் அரைகல்பத்திற்காக, விடைபெற்று சென்று விடுங்கள் என்று கட்டளை இட்டீர்கள் என்றால், இயற்கை மிக தூய்மையான சுகம் கொடுப்பதாக ஆகி, அனைவருக்கும் சுகத்தை கொடுக்கும். அது உங்களுடைய கட்டளைப் படி காரியம் செய்யும். பிறகு இந்த இயற்கை ஏமாற்றம் கொடுக்க முடியாது. ஆனால் முதலில் தனக்கு அதிகாரி ஆகுங்கள், சுபாவம் சம்ஸ்காரத்திற்கு கூட அடிமைத்தனம் வேண்டாம். எப்பொழுது அதிகாரியாக இருப்பீர்களோ, அப்பொழுது அனைத்தும் கட்டளைப் படி காரியம் செய்யும். அறிவியலின் சக்தி மூலமாக, மனிதர்கள் இயற்கை அதாவது தத்துவங்களை இன்று கூட தங்களுடைய கட்டுப்பாட்டில் வைக்கிறார்கள் என்றால், நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகள், மாஸ்டர் படைப்பவர், மாஸ்டர் சர்வசக்திவானின் எதிரில், இந்த இயற்கை மற்றும் சூழ்நிலை தாசியாக ஆக முடியாத என்ன? எப்பொழுது அறிவியலின் அணு சக்தி மகான் காரியம் செய்ய முடியும் என்றால், ஆத்மீக சக்தி, பரமாத்ம சக்தி என்ன தான் செய்ய முடியாது. சுலபமாகவே இயற்கை மற்றும் சூழ்நிலையின் ரூபம் மற்றும் குணத்தை மாற்றம் செய்ய முடியும். அனைத்து தடைகளிலிருந்தும், அனைத்து விதமான சூழ்நிலைகளிலிருந்தும் அல்லது மிக மோசமான இயற்கையின் ஆபத்துக்களிலிருந்து ஒரு நொடியில் வெற்றி அடைபவராக ஆவதற்காக, . ஆஹா நான்! என்ற ஒரு விஷயத்தில் மட்டும் நிச்சயம் மற்றும் போதையில் இருங்கள். நான் சிரேஷ்ட பிராமண ஆத்மா என்ற நினைவில் இருந்தீர்கள் என்றால் சக்திசாலியான சொரூபம் ஆகிவிடுவீர்கள்.

 எப்பொழுதெல்லாம் இயற்கையின் மூலமாக ஏதாவது சோதனை வருகிறதென்றால், இது என்ன, இது ஏன் என்று குழப்பத்தில் வராதீர்கள். குழப்பத்தில் வருவது என்றால், தோல்வி அடைவது. என்ன நடந்தாலும், மனதிலிருந்து எப்பொழுதும் ஆஹா, இனிமையான நாடகமே! என்ற எண்ணம் தான் உருவாக வேண்டும். ஐயோ! இது என்ன இப்படி ஆயிற்று! என்ற எண்ணத்தில் கூட வரவேண்டாம், நாடகத்தின் ஞானத்தினால் தன்னை உறுதியானவராக ஆக்குங்கள். மாயாவை வென்றவர், இயற்கையை வென்றவர் ஆவதற்காக, சாரத்தில் கொண்டு வரும் சக்தியை தாரணை செய்யுங்கள். இதற்காக பார்த்தும் பார்க்காமல், கேட்டும் கேட்காதவர்களாக ஆகுங்கள். இந்த நேரம் பௌதீக உடலில் இருக்கிறேன், அடுத்த நேரம் ஒளி வடிவமான உடலில் இருக்கிறேன், மேலும் இன்னொரு நேரத்தில் உடலற்றவனாக இருக்கிறேன் என்று பயிற்சி செய்யுங்கள். இயற்கையின் சீற்றங்களைப் பார்த்து, இயற்கையின் தலைவனாகி, தன்னுடைய முற்றுப்புள்ளி வைக்கும் நிலை மூலம் இயற்கையின் சீற்றத்தை நிறுத்துங்கள். தரமற்ற நிலையில் இருப்பதிலிருந்து, உயர்ந்த தரமுள்ள நிலையில் பரிவர்த்தனை செய்யுங்கள். இந்தப் பயிற்சியை அதிகரியுங்கள்.

 சங்கமயுகத்தில் தான் இயற்கை சகயோகி ஆவதற்கான தன்னுடைய பங்கை ஆரம்பம் செய்து விடும். அனைத்து பக்கங்களிலிருந்தும் இயற்கையின் தலைவனுக்கு, மேலும் மாஸ்டர் இயற்கையின் தலைவனுக்கு வரவேற்பு அளிக்கும். அனைத்து பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்கள் வழங்கும் மற்றும் நான் என்ன செய்ய வேண்டுமென்று அவைகளே முன்னுக்கு வரும். எனவே இயற்கையின் ஒவ்வொரு தத்துவத்தையும், தேவதையின் ரூபத்தில் காண்பித்திருக்கிறார்கள். தேவதை என்றால், கொடுப்பவர். எனவே இறுதியில் இந்த அனைத்து இயற்கையின் தத்துவங்கள் உங்கள் அனைவருக்கும் சகயோகம் கொடுக்கும். வள்ளலாகி விடுவார்கள். உலகில் நாலா புறங்களிலும் எந்த தத்துவத்தின் மூலமாக எவ்வளவு தான் குழப்பம் இருந்தாலும், ஆனால் எங்கு இயற்கையின் தலைவர்கள் நீங்கள் இருப்பீர்களோ, அங்கு இயற்கை தாசியாகி (வேலையாள்) சேவை செய்யும். நீங்கள் இயற்கையை வென்றவராக மட்டும் ஆகிவிடுங்கள். பிறகு இந்த இயற்கை தன்னுடைய தலைவர்களுக்கு சகயோகத்தின் மாலை அணிவிக்கும். எங்கு இயற்கையை வென்ற பிராமணர்கள் உங்களுடைய கால் இருக்குமோ, ஸ்தானம் இருக்குமோ, அங்கு எந்தவொரு நஷ்டமும் ஏற்பட முடியாது. பிறகு அனைவரும் ஸ்தூல மற்றும் சூட்சம ஆதாரத்தைப் பெறுவதற்காக உங்களை நோக்கி ஒடி வருவார்கள். உங்களுடைய ஸ்தானம் அகதிகளின் முகாம் ஆகிவிடும். மேலும் அனைவரின் வாயிலிருந்தும் ஆஹோ பிரபு! உங்களுடைய லீலை அளவற்றது என்ற வார்த்தை வெளியாகும்.

 பாக்கியசாலிகளே.. பாக்கியசாலிகளே.. நீங்கள் அடைந்தீர்கள், நாங்கள் தெரிந்து கொள்ளவில்லை, இழந்துவிட்டோம். இந்த வார்த்தை நாலாபுறங்களிலிருந்தும் வரும். நல்லது.

 வரதானம்:

ஒரு தந்தையை தன்னுடைய உலகமாக்கி எப்பொழுதும் ஒருவரின் கவர்ச்சியில் இருக்கக் கூடிய கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டவர் ஆகுக.

 எப்பொழுதும் எனக்கு இருப்பது ஒரு தந்தையைத் தவிர, வேறு யாரும் இல்லை என்ற இதே அனுபவத்தில் இருங்கள். ஒரு பாபா தான் என்னுடைய உலகம், மேலும் வேறு எந்தக் கவர்ச்சியும் இல்லை, எந்த கர்மபந்தனமும் இல்லை. தன்னுடைய ஏதாவது பலஹீனமான சம்ஸ்காரத்தின் பந்தனமும் இருக்க வேண்டாம். யார், யார் மீதாவது என்னுடையவர் என்ற அதிகாரம் வைக்கிறாரோ, அவருக்கு கோபம் அல்லது அபிமானம் வருகிறது, - இதுவும் கர்மபந்தனம். ஆனால் எப்பொழுது பாபா தான் என்னுடைய உலகம் என்ற நினைவு இருக்கிறதென்றால், அனைத்து என்னுடையது என்னுடையது என்பவை ஒரு என்னுடைய பாபாவில் அடங்கி விடுகின்றன, மேலும் கர்மபந்தனத்திலிருந்து சுலபமாக விடுபட்டு விடுகிறீர்கள்.

 சுலோகன்:

யாருடைய பார்வை மற்றும் உள்ளுணர்வு எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறதோ, அவர் தான் மகான் ஆத்மா!

 

ஓம்சாந்தி