04.01.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
தந்தையின்
நினைவில்
இருந்து
எப்போதும்
புன்சிரிப்புடன் இருங்கள்.
நினைவில்
இருப்பவர்கள்
மிகவும்
ரமணீகரமாக
(குதூகலமாக)
மற்றும்
இனிமையாக இருப்பார்கள்.
குஷியில்
இருந்து
சேவை
செய்வார்கள்.
கேள்வி:
ஞானத்தின்
போதையுடன்
கூட
கூடவே
எந்த
சோதனை
செய்வது
மிகவும்
அவசியமாகும்?
பதில்:
ஞானத்தின்
போதை
இருக்கிறது,
ஆனால்
எந்த
அளவு
ஆத்ம
அபிமானி
ஆகியுள்ளோம்?
என்பதை
சோதியுங்கள்.
ஞானம்
என்னவோ
மிகவும்
சகஜமானது
தான்,
ஆனால்
நினைவில்
மாயை
தடைகளை ஏற்படுத்துகிறது.
இல்லற
விசயங்களில்
பற்றற்றவராகி
இருக்க
வேண்டும்.
மாயா
எனும்
எலியானது
உள்ளுக்குள்ளே கடித்துக்
கொண்டிருப்பதே
தெரியாமல்
இருந்துவிடக்
கூடாது.
பாபாவுடன்
என்னுடைய
உளப்பூர்வமான
அன்பு ஆழமானதாக
இருக்கிறதா?
எவ்வளவு
நேரம்
நாம்
நினைவில்
இருக்கிறோம்?
என்று
தன்னுடைய
நாடியை தானே
பார்த்தபடி
இருங்கள்.
பாடல்:
ஜோதியில்
விட்டில்
பூச்சி,
ஏன்
எரிந்து
போகவில்லை.
. . .
ஓம்
சாந்தி.
இனிமையிலும்
இனிமையான
குழந்தைகள்
பாடலின் வரியைக்
கேட்டீர்கள்.
தந்தை
இவ்வளவு ஜாலத்தைக்
காட்டுகிறார்,
நீங்கள்
இவ்வளவு
அழகாகாக
ஆகி
விடுகிறீர்கள்
எனும்போது
ஏன்
தந்தையுடையவராக ஆகக்
கூடாது,
அந்த
தந்தை
கருப்பிலிருந்து அழகாக
ஆக்குகிறார்.
நாம்
கருப்பானவரிலிருந்து அழகானவராக ஆகிறோம்
என்று
குழந்தைகள்
புரிந்து
கொள்கின்றனர்.
ஒருவருடைய
விஷயம்
இல்லை.
அவர்கள்
கிருஷ்ணரை சியாம்
சுந்தர்
என்று
சொல்லிவிடுகின்றனர்.
படமும்
கூட
அப்படி
உருவாக்குகின்றனர்.
சிலர்
அழகாக,
சிலர் கருப்பாக
உருவாக்குகின்றனர்.
இது
எப்படி
நடக்கும்
என்று
புரிந்து
கொள்வதில்லை.
சத்யுகத்தின்
இளவரசன் கிருஷ்ணர்
கருப்பாக
இருக்க
முடியாது.
கிருஷ்ணரைப்பற்றி
கூறும்போது
கிருஷ்ணரைப்
போல
குழந்தை கிடைக்க
வேண்டும்,
கணவர்
கிடைக்க
வேண்டும்
என்று
அனைவருமே
கூறுகின்றனர்.
பிறகு
அவர்
எப்படி கருப்பானவராக
(சியாம்)
இருக்க
முடியும்.
எதுவும்
புரிந்து
கொள்வதில்லை.
கிருஷ்ணரை
ஏன்
கருப்பாக ஆக்கினார்கள்
என்பதற்கு
காரணம்
தேவை.
பாம்பின்
மீது
நடனமாடினார்
என்று
காட்டுகிறார்கள்
–
அப்படி நடக்க
முடியாது.
சாஸ்திரங்களில்
உள்ள
இப்படிப்பட்ட
விஷயங்களை
கேட்டுவிட்டு
கூறிவிடுகின்றனர்.
உண்மையில் இப்படிப்பட்ட
விஷயங்கள்
எதுவுமில்லை.
ஆதிசேஷ
நாகத்தின்
படுக்கையில்
நாராயணர்
இருந்தார்
என்று சித்திரங்களில்
காட்டியிருப்பது
போல
அப்படிப்பட்ட
பாம்பின்
படுக்கை
எதுவும்
இல்லை.
இவ்வளவு நூற்றுக்கணக்கான
முகம்
இருக்குமா
என்ன?
எப்படியெல்லாம்
படங்களை
உருவாக்கியுள்ளனர்.
இவற்றில் எதுவும்
இல்லை,
இவையனைத்தும்
பக்தி
மார்க்கத்தின்
படங்கள்.
ஆனால்
இதுவும்
கூட
நாடகத்தில் பதிவாகியுள்ளது.
ஆரம்பத்திலிருந்து இந்த
நேரம்
வரை
பதிவு
(ஷூட்டிங்)
செய்யப்பட்ட
நாடகம்
மீண்டும் மீண்டும்
நடக்க
வேண்டியுள்ளது.
பக்தியில்
என்னென்ன
செய்கிறார்கள்
என்பது
மட்டும்
புரிய
வைக்கப்படுகிறது.
எவ்வளவு
செலவழிக்கிறார்கள்.
எப்படி
எப்படியெல்லாம்
படங்கள்
முதலானவைகளை
உருவாக்குகின்றனர்.
முன்னர்
இவையனைத்தும்
பார்த்துக்
கொண்டிருந்த
போது
இவ்வளவு
ஆச்சரியப்பட்டுக்
கொண்டிருக்கவில்லை.
இப்போது
தந்தை
புரிய
வைக்கும்
போது,
இவையனைத்தும்
பக்தி
மார்க்கத்தின்
விஷயங்களாகும்
என்பது புத்தியில்
வருகிறது.
பக்தியில்
என்னென்னவெல்லாம்
நடக்கிறதோ
அவை
மீண்டும்
நடக்கும்.
உங்களைத் தவிர
வேறு
யாரும்
இதைப்
புரிந்து
கொள்ள
முடியாது.
நாடகத்தில்
ஆரம்பத்திலிருந்தே பதிவாகியுள்ளது தான்
நடந்தபடி
இருக்கும்
என்பதை
அறிவீர்கள்.
பல
தர்மங்களின்
விநாசம்,
ஒரு
தர்மத்தின்
ஸ்தாபனை நடக்கிறது.
இதில்
நிறைய
நன்மை
உள்ளது.
இப்போது
நீங்கள்
இந்த
பிரார்த்தனை
முதலானவைகளை
செய்வதில்லை.
அவர்கள்
அனைவரும் பகவானிடம்
பலனை
எடுப்பதற்காக
செய்கின்றனர்.
பலன்
என்பது
ஜீவன்
முக்தி
ஆகும்,
எனவே
இவையனைத்தும் புரிய
வைக்கப்படுகிறது.
இங்கே
பிரஜைகளின்
மீது
பிரஜைகளின்
இராஜ்யம்
உள்ளது.
பாரதவாசி
கௌரவர்களும் பாண்டவர்களும்
எந்த
பயங்கரமான
காரியங்கள்
செய்தனர்
என்பது
கீதையில்
உள்ளது.
யாதவர்கள்
ஆயுதங்களை வெளியில்
எடுத்தார்கள்.
தமது
குலத்தை
விநாசம்
செய்தனர்.
இவர்கள்
அனைவரும்
ஒருவருக்கொருவர் எதிரிகளாக
உள்ளனர்.
நீங்கள்
செய்திகள்
முதலானவைகளை
கேட்பதில்லை,
யார்
கேட்கின்றனரோ
அவர்கள் நல்ல
விதமாக
புரிந்து
கொள்ள
முடியும்.
நாளுக்கு
நாள்
உள்ளுக்குள்
பிரச்னைகள்
அதிகமாகிறது.
அனைவரும் கிறிஸ்தவர்களே,
ஆனால்
அவர்களுக்குள்
பிரச்னைகள்
அதிகமாக
உள்ளன.
வீட்டில்
அமர்ந்தபடியே
ஒருவர் மற்றவரை
அழித்து
விடுவார்கள்.
நீங்கள்
இராஜயோகிகள்.
ஆக
இராஜ்யம்
செய்வதற்காக
பழைய
உலகை கண்டிப்பாக
சுத்தம்
செய்ய
வேண்டும்.
பிறகு
புதிய
உலகில்
அனைத்தும்
புதியதாக
இருக்கும்.
5
தத்துவங்களும் கூட
அங்கே
சதோ
பிரதானமாக
இருக்கும்.
கொந்தளித்து
வந்து
நஷ்டத்தை
ஏற்படுத்த
கடலுக்கு
சக்தி இருக்காது.
இப்போது
5
தத்துவங்கள்
எவ்வளவு
நஷ்டத்தை
ஏற்படுத்துகின்றன.
அங்கே
இயற்கை
முழுமையாக தாசி
ஆகி
விடும்,
ஆகையால்
துக்கத்தின்
விஷயம்
ஏதும்
இருக்காது.
இதுவும்
உருவாகி
உருவாக்கப்பட்ட நாடகத்தின்
விளையாட்டாகும்.
சத்யுகம்
சொர்க்கம்
என்று
சொல்லப்படுகிறது.
கிறிஸ்தவர்கள்
கூட
முதன் முதலில் சொர்க்கம்
இருந்தது
என்று
கூறுகின்றனர்.
பாரதம்
அழிவற்ற
கண்டமாகும்.
நம்மை
விடுவிக்கக் கூடிய
தந்தை
பாரதத்தில்
வருகிறார்
என்பது
மட்டும்
அவர்களுக்குத்
தெரியாது.
சிவ
ஜெயந்தியும் கொண்டாடுகின்றனர்,
என்றாலும்
கூட
புரிந்து
கொள்ள
முடிவதில்லை.
இப்போது
நீங்கள்
புரிய
வைக்கிறீர்கள்
-
பாரதத்தில்
சிவ
ஜெயந்தி
கொண்டாடப்படுகிறது,
கண்டிப்பாக
சிவபாபா
பாரதத்தில்
வந்து
சொர்க்கத்தை உருவாக்கினார்,
இப்போது
மீண்டும்
உருவாக்கிக்
கொண்டிருக்கிறார்.
பிரஜைகளாக
ஆகக்
கூடியவர்களின் புத்தியில்
எதுவும்
பதியாது.
இராஜ்யத்தைச்
சேர்ந்தவர்கள்
நாம்
சிவபாபாவின்
குழந்தைகள்
என்பதை
மிகச் சரியாக
புரிந்து
கொண்டிருப்பார்கள்.
பிரஜாபிதா
பிரம்மாவும்
இருக்கிறார்.
விடுவிப்பவர்,
ஞானக்
கடல்
தந்தையேதான்.
பிரம்மா
என்று
கூற
மாட்டோம்.
பிரம்மாவும்
கூட
அவர்
மூலம்
விடுவிக்கப்படுகிறார்.
ஒரு
தந்தை
தான் அனைவரையும்
விடுவிக்கிறார்.
ஏனென்றால்,
அனைவருமே
தமோபிரதானமாக
இருக்கின்றனர்.
இப்படியாக உள்ளுக்குள்ளே
மனன
சிந்தனை
நடக்க
வேண்டும்.
மனிதர்கள்
உடனே
புரிந்து
கொள்ளும்
படியாக
நாம் முரளியை
நடத்த
வேண்டும்.
குழந்தைகள்
வரிசைக்
கிரமமாகத்தான்
இருக்கிறார்கள்.
இது
ஞானமாகும்,
இதனை தினந்தோறும்
படிக்க
வேண்டும்.
பயத்தின்
காரணமாக
படிப்பை
படிக்காமல்
இருப்பது
சரியல்ல.
பிறகு
கர்ம பந்தனம்
என்று
கூறுகிறார்கள்.
பாருங்கள்,
ஆரம்பத்தில்
எவ்வளவு
பேர்
விடுவித்துக்
கொண்டு
வந்தார்கள்,
பிறகு
பலர்
திரும்பியும்
சென்றுவிட்டார்கள்.
சிந்துவில்
பல
குழந்தைகள்
வந்தார்கள்.
பிறகு
ஆர்ப்பாட்டத்தின் காரணமாக
எதிரிகளாகவும்
ஆகிவிட்டார்கள்.
முதலில் அவர்களுக்கு
ஞானம்
பிடித்திருந்தது.
இவர்களுக்கு இறைவனுடைய
வரம்
கிடைத்திருக்கிறது
என்று
புரிந்து
கொண்டிருந்தார்கள்.
இப்போதும்
கூட
ஏதோ
சக்தி இருக்கிறது
என்று
புரிந்து
கொள்கிறார்கள்,
பரமாத்மாவின்
பிரவேசம்
ஆகியுள்ளது
என்று
புரிந்து
கொள்ளவில்லை.
இன்றைய
நாட்களில்
மந்திர
தந்திரத்தின்
சக்தி
பலருக்குள்
இருக்கிறது.
கீதையை
எடுத்து
விளக்கம்
சொல்யபடி இருக்கிறார்கள்.
இவை
அனைத்தும்
பக்தி
மார்க்கத்தின்
புத்தகங்கள்
என்று
தந்தை
கூறுகிறார்.
நான்
ஞானக்கடலாக இருக்கிறேன்.
பக்தி
மார்க்கத்தில்
என்னைத்தான்
நினைவு
செய்கின்றனர்.
நாடகத்தின்
திட்டப்படி
இதுவும் கூட
பதிவாகியுள்ளது.
காட்சிகளும்
பார்க்கிறார்கள்.
பக்தி
மார்க்கத்தவர்களையும்
கூட
திருப்தி
படுத்துகிறார்.
ஞானம்
எடுக்காவிட்டாலும்
கூட
அவர்களுக்கு
பக்தி
கூட
நல்லது
தான்.
எப்படியோ
மனிதர்கள்
திருந்துகிறார்கள்.
திருட்டு
முதலானவைகள்
செய்ய
மாட்டார்கள்.
பகவானுடைய
பஜனை
செய்பவர்களைக்
குறித்து ஒருபோதும்
தலைகீழான
விஷயங்களைப்
பேச
மாட்டார்கள்.
என்றாலும்
கூட
பக்தர்களக
இருக்கிறார்கள்.
இன்றைய
நாட்களிலோ
பக்தர்களாக
இருந்தாலும்
கூட
பலர்
திவால்
ஆகிறார்கள்
(நஷ்டமடைகிறார்கள்).
சிவபாபாவின்
குழந்தையாக
ஆகினார்கள்
என்றால்,
திவாலாக
மாட்டார்கள்
என்பதல்ல.
கடந்த
காலத்தின்
கர்ம கணக்கின்
காரணமாக
திவாலாகிறார்கள்.
ஞானத்தில்
வரும்போது
கூட
திவாலாகி
விடுகிறார்கள்,
இதற்கு ஞானத்துடன்
எந்த
தொடர்பும்
இல்லை.
குழந்தைகளாகிய
நீங்கள்
சேவையில்
ஈடுபட்டு
இருக்கிறீர்கள்.
ஸ்ரீமத்படி
சேவையில்
ஈடுபடுவதன் மூலம்
பலனை
அடைவோம்
என்று
புரிந்துள்ளீர்கள்.
நாம்
அனைத்தையும்
அங்கே
மாற்றம்
செய்ய
வேண்டும்.
மூட்டை
முடிச்சு
அனைத்தையும்
மாற்றம்
செய்து
விட
வேண்டும்.
பாபாவுக்கு
(பிரம்மா)
ஆரம்பத்தில்
மிகவும் மகிழ்ச்சி
ஏற்பட்டிருந்தது.
அங்கிருந்து
வெளி
வந்த
போது
பாடலை
உருவாக்கினார்
-
இறைவன்
கிடைத்துவிட்டார்,
இராஜ்யத்தின்
ஆஸ்தி
கிடைத்து
விட்டது.
ஸ்ரீகிருஷ்ணர்,
சதுர்புஜ
விஷ்ணுவின்
காட்சி
கிடைத்தது.
துவாரகையின் அரசன்
ஆகக்
போகிறேன்
என்று
இவர்
(பிரம்மா
பாபா)
புரிந்து
கொண்டார்.
அப்படி
போதை
ஏறிக்கொண்டிருந்தது.
இப்போது
அழியக்கூடிய
பணத்தை
என்ன
செய்ய
போகிறோம்
என்று
நினைத்தார்.
ஆக,
குழந்தைகளாகிய உங்களுக்கும்
கூட
குஷி
இருக்க
வேண்டும்.
நமக்கு
பாபா
சொர்க்கத்தின்
இராஜ்யத்தை
கொடுக்கிறார்.
ஆனால்,
குழந்தைகள்
இவ்வளவு
முயற்சி
கூட
செய்வதில்லை.
போகப்போக
விழுந்து
விடுகிறார்கள்.
நல்ல நல்ல
குழந்தைகள்
பாபாவை
அழைக்கக்
கூடியவர்கள்,
ஒருபோதும்
பாபாவை
நினைவு
செய்வதில்லை.
பாபா நாங்கள்
மிகவும்
மகிழ்ச்சியாக
இருக்கிறோம்.
உங்களுடைய
நினைவில்
போதையுடன்
இருக்கிறோம்
என்று பாபாவுக்கு
கடிதம்
வரவேண்டும்.
பலர்
ஒருபோதும்
நினைவே
செய்வதில்லை.
நினைவின்
யாத்திரை
மூலம் தான்
நன்றாக
குஷி
ஏறும்.
ஞானத்தின்
போதையில்
எவ்வளவு
தான்
இருந்தாலும்
தேக
அபிமானம் எவ்வளவு
இருக்கிறது.
ஆத்மா
அபிமான
நிலை
எங்கு
இருக்கிறது.
ஞானம்
மிகவும்
எளிதானது
தான்.
யோகத்தில்
தான்
மாயை
தடைகளை
ஏற்படுத்துகிறது.
இல்லற
விசயங்களில்
கூட
ஆசையற்றவராக
இருக்க வேண்டும்.
மாயை
நுழைந்து
தடைகளை
ஏற்படுத்தும்படியாக
ஆகக்
கூடாது.
மாயை
எலியைப் போல கடிக்கிறது.
ரத்தம்
வந்தாலும்
தெரியாத
அளவிற்கு
எலி கடித்துவிடுகிறது.
தேக
அபிமானத்தில்
வருவதன் மூலம்
எவ்வளவு
நஷ்டம்
ஏற்படுகிறது
என்று
குழந்தைகளுக்கு
தெரிவதில்லை.
உயர்
பதவியை
அடைய முடியாது.
தந்தையிடமிருந்து
முழுமையாக
ஆஸ்தி
எடுக்க
வேண்டும்.
மம்மா
பாபாவைப்
போல
நாம்
கூட சிம்மாசனதாரி
ஆக
வேண்டும்.
தந்தை
உள்ளத்தைக்
கொள்ளை
கொள்பவர்.
தில்வாடா
கோவிலும் கூட முழுமையான
நினைவு
சின்னங்கள்
இருக்கின்றன,
உள்ளே
யானைகளின்
மீது
மகாரதிகள்
அமர்ந்திருக்கிறார்கள்.
உங்களுக்குள்ளும்
கூட
மகாரதி,
குதிரைப்படை,
காலாட்படை
இருக்கின்றனர்.
ஒவ்வொருவரும்
தத்தமது நாடியைப்
பார்க்க
வேண்டும்.
பாபா
பார்க்க
வேண்டியதில்லை.
நீங்களே
தன்னை
பாருங்கள்
-
நாம்
பாபாவை நினைவு
செய்கிறோமா?
மற்றும்
பாபாவைப்
போல
சேவை
செய்கிறோமா?
நம்முடைய
நினைவின்
தொடர்பு பாபாவிடம்
உள்ளதா?
இரவில்
விழித்திருந்து
பாபாவை
நினைவு
செய்கிறோமா?
நாம்
பலருக்கு
சேவை செய்கிறோமா?
சார்ட்
வைக்க
வேண்டும்
-
பாபாவை
மிகவும்
ஆழமாக
எவ்வளவு
நினைவு
செய்கிறோம்.
சிலர்
நாம்
நிரந்தரமாக
நினைவு
செய்கிறோம்
என்று
புரிந்து
கொள்கின்றனர்.
அது
நடக்காது.
நாம்
பாபாவுடைய குழந்தையாக
ஆகிவிட்டோம்
அவ்வளவுதான்
என்று
பலர்
புரிந்து
கொள்கின்றனர்.
ஆனால்,
தன்னை
ஆத்மா என்று
புரிந்து
பாபாவை
நினைவு
செய்ய
வேண்டும்.
பாபாவின்
நினைவு
இல்லாமல்
ஏதாவது
வேலை செய்தால்,
பாபாவை
நினைவு
செய்வதில்லை
என்று
அர்த்தம்.
பாபாவின்
நினைவில்
எப்போதும்
இருக்க வேண்டும்.
நினைவில்
இருப்பவர்கள்
எப்போதும்
மகிழ்ச்சியாக
இருப்பார்கள்,
மலர்ந்த
முகமாக
இருப்பார்கள்.
பிறருக்கு
மிகவும்
குஷியுடனும்,
பிறருக்கு
மிகவும்
அழகாகவும்
புரிய
வைப்பார்கள்.
சேவையின்
மீது
மிகுந்த ஆர்வம்
இருப்பவர்கள்
மிகவும்
குறைந்தவர்கள்தான்.
சித்திரங்களை
வைத்து
புரிய
வைப்பது
மிகவும்
சகஜமாகும்.
இவர்
உயர்விலும்
உயர்வான
பகவான்,
பிறகு
அவருடைய
படைப்பாகிய
நாம்
ஆத்மாக்கள்
அனைவரும் சகோதரன்
-
சகோதரனாக
இருக்கிறோம்.
சகோதரத்துவமாக
உள்ளது,
அவர்கள்
அனைவரும்
(பித்ருத்வம்)
தந்தை
என்று
கூறிவிட்டார்கள்.
முதலில் சிவபாபாவின்
படத்தை
வைத்து
புரிய
வைக்க
வேண்டும்
–
இவர் அனைத்து
ஆத்மாக்களின்
நிராகார
தந்தை
பரமபிதா
பரமாத்மா.
ஆத்மாக்களாகிய
நாமும்
நிராகாரமாக இருப்பவர்கள்.
புருவ
மத்தியில்
இருப்பவர்கள்.
சிவபாபாவும்
கூட
நட்சத்திரத்தைப்
போல
இருக்கிறார்.
ஆனால்
நட்சத்திரத்திற்கு
எப்படி
பூஜை
செய்வது?
ஆகையால்
பெரியதாக
உருவாக்குகிறார்கள்.
மற்றபடி ஆத்மா
ஒருபோதும்
84
லட்சம்
பிறவிகள்
எடுப்பதில்லை.
ஆத்மா
முதலில் அசரிரியாக
வருகிறது
பிறகு சரிரத்தை
தாரணை
செய்து
பாகத்தை
நடிக்கிறது
என்று
தந்தை
புரிய
வைக்கிறார்.
சதோபிரதானமான
ஆத்மா மறுபிறவிகள்
எடுத்து
எடுத்து
இரும்பு
யுகத்திற்கு
வந்து
விடுகிறது.
பின்னால்
வருபவர்கள்
84
பிறவிகள் எடுப்பதில்லை.
அனைவருமே
84
பிறவிகள்
எடுக்க
முடியாது.
ஆத்மாதான்
ஒரு
சரீரத்தை
விட்டு
மற்றொன்றை எடுக்கிறது.
பெயர்,
ரூபம்,
தேசம்,
காலம்
அனைத்தும்
மாறிவிடுகிறது.
இப்படியாக
சொற்பொழிவாற்ற
வேண்டும்.
தன்னை
உணர்தல்
என்று
கூறுகின்றார்கள்
ஆனால்
செய்விப்பது
யார்?
ஆத்மாவே
பரமாத்மா
என்று
கூறுவது தன்னை
உணர்தல்
என்று
ஆகுமா
என்ன?
ஞானக்கடல்,
பதீத
பாவனன்,
அனைவருக்கும்
சத்கதியை
வழங்கும் வள்ளலாக
இருக்கும்
தந்தைதான்
வந்து
புரிய
வைக்கிறார்.
எனவே
நன்றாக
அவருடைய
மகிமையைப் பாடுங்கள்.
அவருடைய
மகிமையைக்
கேட்டிருக்கிறீர்கள்.
ஆத்மாவின்
அறிமுகத்தை
கூறினோம்,
இப்போது பரமாத்மாவின்
அறிமுகத்தையும்
கூறுகிறோம்.
அவர்
அனைத்து
ஆத்மாக்களின்
தந்தை
என்று
கூறப்படுகிறார்.
அவர்
சிறியவரிலிருந்து பெரியவராக
ஆவதில்லை.
பரமபிதா
பரமாத்மா
என்றால்
சுப்ரிம்
சோல்.
சோல் என்றால்
ஆத்மா
பரமாத்மாவோ
அனைத்தையும்
கடந்து
இருப்பவர்.
அவர்
மறுபிறவியில்
வருவதில்லை.
ஆகையால்
அவர்
பரமபிதா
என்று
கூறப்படுகிறார்.
இத்தனை
சிறிய
ஆத்மாவுக்குள்
நடிப்பு
அடங்கி
யுள்ளது.
பதீத
பாவனர்
என்று
அவரைத்
தான்
கூறுகின்றனர்.
அவருடைய
பெயர்
சிவபாபாதான்
ஆகும்.
ருத்ர
பாபா அல்ல.
பக்தி
மார்க்கத்தில்
பல
பெயர்கள்
வைத்துள்ளனர்.
பதீத
பாவனா
வந்து
பாவனமாக்குங்கள்
என்று அனைவரும்
அவரை
நினைவு
செய்கின்றனர்.
எனவே
கண்டிப்பாக
வரவேண்டியுள்ளது.
ஒரு
தர்மத்தின் ஸ்தாபனை
செய்ய
வேண்டிவரும்
போது
அவர்
வருகிறார்.
அது
ஆதி
சனாதன
தேவி
தேவதா
தர்மம் ஆகும்.
இப்போது
கலியுகமாக இருக்கிறது.
அளவற்ற
மனிதர்கள்
இருக்கின்றனர்.
சத்யுகத்தில்
மிகவும் குறைவான
மனிதர்கள்
இருக்கின்றனர்.
பிரம்மா
மூலம்
ஸ்தாபனை,
சங்கர்
மூலம்
வினாசம்....
என்று
பாடவும் பட்டுள்ளது.
கீதையின்
மூலம்
தான்
ஆதி
சனாதன
தர்மத்தின்
ஸ்தாபனை
நடந்தது.
அதில்
கூட
தவறு செய்து
கிருஷ்ணருடைய
பெயரை
போட்டுவிட்டனர்.
அவர்
மறுபிறவியில்
வரக்கூடியவர்.
நான்
மறுபிறவி எடுப்பதில்லை.
ஆக,
பரமபிதா
பரமாத்மாவா,
அல்லது
ஸ்ரீகிருஷ்ணரா
என்பதை
தீர்மானியுங்கள்.
கீதையின் பகவான்
யார்?
பகவான்
என
ஒருவர்தான்
கூறப்படுகிறார்,
பிறகு
ஒருவேளை
இந்த
விஷயங்களை
யாராவது ஏற்றுக்
கொள்ளவில்லை
என்றால்
இவர்கள்
நம்
குலத்தவர்கள்
அல்ல
என்று
புரிந்து
கொள்ள
வேண்டும்.
சத்யுகத்தில்
வரக்கூடியவர்கள்
உடனே
ஏற்றுக்
கொள்வார்கள்
மற்றும்
முயற்சி
செய்யத்
தொடங்குவார்கள்.
முக்கிய
விஷயமே
இதுதான்.
இதில்
தான்
உங்கள்
வெற்றி
அடங்கியுள்ளது.
ஆனால்
ஆத்ம
அபிமானி
நிலை எங்கே
உள்ளது?
ஒருவர்
மற்றவரின்
பெயர்
உருவத்தில்
சிக்கிக்
கொள்கின்றனர்.
பக்தி
மார்க்கத்திலும்
கூட சொல்லிக் கொண்டிருந்தோம்.
கவலை
(பயம்)
இருந்தது
என்று,
எல்லைக்கடந்த
பிரம்மத்தில்
உள்ள பரமாத்மாவினுடையவர்கள்
ஆன
பிறகு
பயம்
எதற்காக?
மிகவும்
தைரியம்
தேவை.
சொற்பொழிவாற்றுபவர்கள் ஆத்மாவின்
ஞானத்தை
மிகவும்
போதையுடன்
கொடுக்க
வேண்டும்.
பிறகு
பரமாத்மா
என்று
யாரைக் குறிப்பிடுகிறோம்
என்பதையும்
புரிய
வைக்க
வேண்டும்.
தந்தையின்
மகிமைகள்
-
ஞானக்கடல்,
அன்புக்
கடல்.
.
அது
போல்
குழந்தைகளின்
மகிமையும்
அப்படிப்பட்டதாகும்.
யாரிடமாவது
கோபம்
கொள்வது
என்றால் சட்டத்தை
கையில்
எடுப்பது
போலாகும்.
பாபா
எவ்வளவு
இனிமையானவர்.
குழந்தைகள்
ஏதாவது காரியத்தில்
மறுப்பு
தெரிவித்தால்
கிருஷ்ணர்
ஆக
மாட்டீர்கள்.
மிகவும்
இனிமையானவராக
வேண்டும்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்போய்
கண்டெடுக்கப்பட்ட
குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கங்கள்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாராம்:
1.
தனது
மூட்டை
முடிச்சுகளை
மாற்றம்
செய்து
மிகவும்
குஷி
மற்றும்
போதையில்
இருக்க வேண்டும்.
மம்மா,
பாபா
போல
சிம்மாசனதாரி
ஆக
வேண்டும்.
விடாமுயற்சியுடன்
நினைவில் இருக்க
வேண்டும்.
2.
யார்
மீதான
பயத்தினாலும்
படிப்பை
ஒரு
போதும்
விடக்
கூடாது.
நினைவின்
மூலம்
தமது
கர்ம
பந்தனங்களை
இலேசாக்கிக்
கொள்ள
வேண்டும்.
ஒருபோதும்
கோபத்தில்
வந்து சட்டத்தை
தன்
கையில்
எடுக்கக்
கூடாது.
எந்த
சேவைக்கும்
மறுப்பு
சொல்லக்
கூடாது.
வரதானம்:
பிராமண
வாழ்க்கையின்
ஆஸ்தி
மற்றும்
ஆன்மீக
தோற்றத்தை அனுபவம்
செய்து
மற்றும்
செய்விக்கக்
கூடிய
விசேஷஆத்மா
ஆகுக.
ஆஹா
பாக்கியம்
பிராமணர்களாக
ஆகி
விட்டீர்கள்
என்று
பாப்தாதா
அனைத்து
பிராமண
குழந்தைகளுக்கும் நினைவுபடுத்துகின்றார்.
ஆனால்
பிராமண
வாழ்க்கையின்
ஆஸ்தி,
மற்றும்
செல்வம்
திருப்தியாகும்,
மேலும் பிராமண
வாழ்க்கையின்
முகத்
தோற்றம்
மகிழ்ச்சியாகும்.
இந்த
அனுபவத்திலிருந்து
ஒருபோதும்
வஞ்சிக்கப்பட்டு இருந்து
விடக்
கூடாது.
அதிகாரிகளாக
இருக்கிறீர்கள்.
வள்ளல்
மற்றும்
வரதாதா
திறந்த
மனதுடன்
பிராப்திகளின் பொக்கிஷங்களை
கொடுத்துக்
கொண்டிருக்கின்றார்
எனில்
அதை
அனுபவத்தில்
கொண்டு
வாருங்கள்,
மற்றவர் களையும்
அனுபவிகளாக
ஆக்குங்கள்,
அப்போது
தான்
விசேஷ
ஆத்மா
என்று
கூற
முடியும்.
சுலோகன்:
கடைசி
நேரத்தைப்
பற்றி
சிந்திப்பதற்குப்
பதிலாக கடைசி
ஸ்திதியைப்
(மன
நிலை)
பற்றி
சிந்தியுங்கள்.
பிரம்மா
பாபாவிற்கு
சமம்
ஆவதற்கான
விசேஷ
முயற்சி:
சேவைக்கான
வெளிப்படையான
பலனைக்
காண்பிப்பதற்கு
எவ்வாறு
பிரம்மா
பாபா
தனது ஆன்மீக
ஸ்திதியின்
மூலம்
சேவை
செய்தாரோ
அதே
போன்று
குழந்தைகளாகிய
நீங்களும் இப்போது
தனது
ஆன்மீக
ஸ்திதியை
வெளிப்படுத்துங்கள்.
ரூஹ்
என்று
ஆத்மாவுக்கும் கூறப்படுகிறது,
ரூஹ்
என்றால்
சாரம்
என்றும்
கூறப்படுகிறது.
எனவே
ஆன்மீக
ஸ்திதியில் இருப்பதன்
மூலம்
இரண்டும்
வந்து
விடும்.
தெய்வீக
குணங்களின்
ஈர்ப்பு
அதாவது
சாரம் ஆத்மாவிலும்
இருக்கும்
மற்றும்
ஆன்மீக
சொரூபமும்
தென்படும்.
ஓம்சாந்தி