10.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் முழு கல்பத்திலும் அனைத்து விதமான நடிப்பைபும் நடித்து விட்டீர்கள். இப்போது நடிப்பு நிறைவடைகிறது, வீட்டிற்குப் போக வேண்டும்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் தங்களின் மகிமைகளை எந்த வார்த்தைகளில் கூறுகிறீர்கள்?

 

பதில்:

நாங்கள் பிராமணர்கள் உச்சிக்குடுமிக்கு சமமானவர்கள். நமக்கு நிராகார் பகவானே வந்து கற்பிக்கிறார். உலகத்தில் மனிதர்கள் மனிதர்களுக்குக் கற்பிக்கிறார்கள்! ஆனால் சுயம் பகவானே கற்பிக்கிறார் என்றால், நாம் எவ்வளவு பாக்கியசாலி!

 

கேள்வி:

இந்த நாடகத்தில் அனைவரையும் விட மிகப் பெரிய நிலை யாருடையது?

 

பதில்:

நிராகாரர் தந்தையினுடையது. அவர் ஆத்மாக்களாகிய உங்கள் அனைவருக்கும் தந்தையாக இருக்கிறார். அனைத்து ஆத்மாக்களும் நாடகம் என்ற நூல் கட்டப்பட்டுள்ளீர்கள். அனைவரையும் விட மிகப் பெரிய நிலை பாபாவினுடையதாகும்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! உங்களுடைய வீடு சாந்தி தாமம் நினைவிருக்கிறதா? மறந்து விட வில்லையே என ஆன்மீகக் குழந்தைகளிடம் ஆன்மீகத் தந்தை கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது 84 பிறவிகளின் சக்கரம் நிறைவடைந்து விட்டது. எப்படி நிறைவடைந்தது என்பதை இப்போது நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள். சத்யுகத்திலிருந்து கலியுகம் வரை யாரும் இவ்வாறு கேட்க முடியாது. இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளிடம் பாபா கேட்கிறார். இப்போது வீட்டிற்குப் போக வேண்டும் அல்லவா? வீட்டிற்குச் சென்று பிறகு சுகதாமத்தில் வர வேண்டும். இது சுகதாமம் கிடையாது. இது பழைய உலகம் துக்க தாமம் ஆகும். அது சாந்தி தாமம், சுக தாமம் ஆகும். இப்போது இந்த துக்க உலகத்திலிருந்து முக்தி அடைந்து முக்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். முக்தி தாமம் மற்றும் சாந்தி தாமம் எதிரில் இருக்கிறது. அது வீடாகும். பிறகு நீங்கள் புதிய உலகத்தில் வருவீர்கள். அங்கே தூய்மை சுகம், சாந்தி இருக்கும். இதை புரிந்துக் கொள்கிறார்கள் அல்லவா! இதைத் தான் பாடுகிறார்கள். , பதீத பாவனா! இந்த பதீத உலகத்தில் இருந்து எங்களை அழைத்துச் செல்லுங்கள். இங்கே நிறைய துக்கம் இருக்கிறது, எங்களை சுகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என தந்தையை அழைக்கிறார்கள். நினைவில் வருகிறது. அனைவரும் சொர்க்கத்தை நினைக்கிறார்கள். சரீரத்தை விட்டு விட்டால் சொர்க்கத்திற்குப் போய்விட்டனர். வைகுண்ட பதவியை அடைந்து விட்டார் என்பார்கள். எது விட்டு விட்டு சென்றது. ஆத்மா. சரீரம் செல்லாது. ஆத்மா தான் செல்கிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் சாந்தி தாமம் சுகதாமத்தை அறிகிறீர்கள். வேறு யாரும் அறியவில்லை. குழந்தைகளின் புத்தியில் சாந்தி தாமம் என்றால் என்ன, சுகதாமம் என்றால் என்ன என்ற ஞானம் இருக்கிறது. நீங்கள் சுகதாமத்தில் இருந்தீர்கள். இப்போது மீண்டும் துக்க தாமத்தில் வந்துள்ளீர்கள். நொடி, நிமிடம், மணி, நாள், வருடங்கள் கழிந்து விட்டது. இப்போது 5000 வருடத்தில் எத்தனை நாட்கள் மீதம் இருக்கின்றது? பாபா குழந்தைகளுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார். மிகவும் எளிதான விஷயம் ஆகும். இதில் குழப்பம் அடைவதற்கு எதுவும் இல்லை. ஆத்மா எப்படி 84 பிறவிகளை எடுக்கிறது. இதுவும் யாருக்கும் தெரியாது. இலட்சக்கணக்கான ஆண்டுகளின் விஷயங்கள் யாருக்கும் நினைவிருப்பது கடினமாகும். இது 5000 வருடத்தின் விஷயம் ஆகும். வியாபாரிகள் கூட கணக்கு எழுதும் போது ஸ்வஸ்திக் போடுகிறார்கள். அதை கணேஷ் எனக் கூறுகிறார்கள். கணேஷருக்கு யானை யின் தும்பிக்கையைக் காண்பிக்கிறார்கள். மனிதர்கள் பணத்தை செலவழித்து சித்திரங்களை உருவாக்கு கிறார்கள். இதற்கு நேரத்தை வீணாக்குதல் என்று பெயர். உங்களுக்குள் எவ்வளவு சக்தி இருந்தது! அந்த நாள் ஒவ்வொரு நாளாகக் குறைந்து கொண்டே போகிறது. அதாவது காரிலிருந்து பெட்ரோல் குறைந்துக் கொண்டே போவது போன்று குறைகிறது. இப்போது நீங்கள் மிகவும் பலவீனமாகிவிட்டீர்கள். 5000 வருடத்திற்கு முன்பு பாரதம் எப்படி இருந்தது! அளவற்ற சுகம் இருந்தது. எவ்வளவு செல்வம் இருந்தது. அந்த இராஜ்யத்தை அவர்கள் எப்படி பெற்றனர். இராஜயோகத்தைக் கற்றனர். இதில் சண்டை போடுவதற்கு எதுவும் இல்லை. இதற்கு தான் ஞான ஆயுதம் என்று பெயர். வேறு எந்த ஸ்தூல விஷயங்களும் இல்லை. ஞானத்தின் ஆயுதங்களும் உள்ளன. ஞானம், விஞ்ஞானம், நினைவு மற்றும் ஞானத்தில் எவ்வளவு பெரிய பெரிய ஆயுதங்கள் இருக்கின்றன! நீங்கள் முழு உலகத்தையும் ஆட்சி செய்கிறீர்கள். தேவதைகளுக்கு அகிம்சையாளர்கள் என்று பெயர்.

 

இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு மனிதனிலிருந்து தேவதையாகக் கூடிய போதனைகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாம் ஒவ்வொரு 5000 வருடத்திற்குப் பிறகும் எல்லையற்ற தந்தையிடமிருந்து இந்த எல்லையற்ற சொத்தை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிகிறீர்கள். இது ஆத்மாவின் விஷயம் ஆகும். இதில் ஸ்தூலமான சண்டைகளின் விஷயம் எதுவும் இல்லை. ஆத்மா பதீதமாகியிருக்கிறது. ஆகவே தூய்மையாவதற்காக பாபாவை அழைக்கிறது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! இப்போது வீட்டிற்குப் போக வேண்டும் என பாபா கூறுகிறார். இது ஜீவ ஆத்மாக்களின் உலகம் ஆகும். அது ஆத்மாக்களின் உலகம் ஆகும். அதை ஜீவ ஆத்மாக்களின் உலகம் என்று கூற முடியாது. நாம் தூர தேசத்தில் வசிக்கக் கூடியவர்கள் என்பதை அடிக்கடி நினைவில் கொண்டு வர வேண்டும். ஆத்மாக்களாகிய நமது வீடு பிரம்மாண்டம் ஆகும். நாம் அங்கே வசிக்கிறோம் என்பது புத்தியில் இருக்கட்டும். அது இந்த ஆகாய தத்துவத்தை கடந்தது. அங்கே சூரியன் சந்திரன் எதுவும் இல்லை. நாம் அங்கே வசிக்கக் கூடியவர்கள். இங்கே நடிப்பதற்காக வந்துள்ளோம். 84 பிறவிகளின் நடிப்பை நடிக்கின்றோம். அனைவரும் 84 பிறவிகளை எடுக்க முடியாது. மெல்ல மெல்ல மேலிருந்து இறங்கிக் கொண்டே வருகிறோம். நாம் ஆல்ரவுண்டர். அனைத்து காரியங்களையும் செய்யக் கூடியவர்களுக்கு ஆல்ரவுண்டர் என்று பெயர். நீங்களும் ஆல்ரவுண்டர். முதலில் இருந்து கடைசி வரை உங்களுக்கு பாகம் இருக்கிறது. இப்போது இந்த சக்கரத்தின் முடிவு என்றாலும் மேலிருந்து கீழே வந்து கொண்டிருக்கிறார்கள். நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் மேலிருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.

 

பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு (நானே அது) என்பதன் பொருளைப் புரிய வைத்துள்ளார். அவர்கள் ஆத்மாக்களாகிய நாம் பரமாத்மா என்கிறார்கள். அவர்களுக்கு நாடகத்தின் முதல், இடை, கடை, கால அளவு எதைப் பற்றியும் தெரியாது. இந்த சரீரத்தில் இப்போது நீங்கள் பிராமணர்கள் என பாபா உங்களுக்கு புரிய வைத்துள்ளார். பிரஜா பிதா பிரம்மா மூலமாக சிவபாபா தத்தெடுத்திருக்கிறார். படிக்க வைக்கிறார். இது நினைவிருக்க வேண்டும் அல்லவா? பாபா நம்மை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் ஆவார். அனைத்து ஆத்மாக்களும் இந்த நாடகம் என்ற நூல் சுழன்று கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் நாம் தேவதையாக இருந்தோம். பிறகு நாமே சத்திரிய தர்மத்தில் வந்தோம். அதாவது சூரிய வம்சத்திலிருந்து சந்திர வம்சத்தில் வந்தனர். இத்தனை பிறவிகள் எடுத்தோம் என அனைத்தும் இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்த ஞானம் முதலில் உங்களுக்குள் இல்லை. இது வர்ணங்களின் குட்டிக்கரணம் என இப்போது பாபா புரிய வைத்துள்ளார். இப்போது மீண்டும் சூத்திரனிலிருந்து பிராமணன் ஆகிறீர்கள். பிறகு பிராமணிலிருந்து தேவதையாகிறீர்கள். விராட ரூபத்தைக் காண்பிக்கிறார்கள், அல்லவா? எப்படி நாம் கீழே வந்தோம், பிறகு பிராமண குலத்தில் வந்தோம். பிறகு தெய்வீக இராஜ்யத்தில் வந்தோம் என்ற ஞானம் முழுவதும் உங்களுடைய புத்தியில் உள்ளது. பிராமணர்களாகிய நீங்கள் உச்சிக்குடுமிக்கு சமமானவர்கள். எல்லவற்றையும் விட உயர்ந்தது உச்சிக் குடுமியாகும். உங்களைப் போன்று உயர்ந்த குலம் என்று யார் கூற முடியும்? பகவான் தந்தை வந்து உங்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் எவ்வளவு பாக்கியசாலி! உங்கள் பாக்கியத்தைப் பற்றி சிறிதாவது மகிமை செய்யுங்கள். வெளியில் மனிதர்கள் மனிதர்களுக்கு கற்பிக்கிறார்கள். இவர் நிராகார தந்தையாவார். இந்த தந்தை கல்பத்தில் ஒரு முறை தான் வந்து ஞானம் கொடுக்கிறார். படிப்பை ஒவ்வொருவரும் படிக்கிறார்கள் அல்லவா! வக்கீல் ஞானத்தைப் படித்து வக்கீல் ஆகிறார்கள். அது அனைத்தையும் மனிதர்கள் மனிதர்களுக்குப் படிக்க வைத்து வருகிறார்கள். இது இப்போது பகவான் வாக்கு ஆகும். மனிதர்களை ஒரு போதும் பகவான் என கூற முடியாது. அவர் நிராகாரர். இங்கே வந்து குழந்தைகளாகிய உங்களைப் படிக்க வைக்கிறார். படிப்பு சூட்சும வதனத்திலோ, மூலவதனத்திலோ படிப்பதில்லை. இங்கே தான் படிப்பை படிக்கிறார்கள். இதில் குழப்பமடைவதற்கு எந்த விஷயமும் இல்லை. பள்ளிக் கூடத்தில் நாங்கள் குழப்பமடைந்து விட்டோம், எங்களுக்கு நிச்சயம் இல்லை என்று மாணவர்கள் கூறுவார்களா என்ன? படிப்பைப் படித்து நல்ல நிலை அடைகிறார்கள். இந்த இலஷ்மி நாராயணன் சத்யுகத்தின் ஆரம்பத்தில் விஷ்வத்திற்கு அதிபதியாக எப்படி மாறினர். நிச்சயமாக பாபா மூலமாக மாறினர்? பாபா உண்மையைத் தெரிவிப்பார். பகவான் தவறானவைகளை கூற முடியாது. இது மிகப் பெரிய தேர்வாகும். இச்சமயம் மக்கள் மக்களை ஆளுகின்றனர். இராஜா இராணி இல்லை சத்யுகத்தில் இருந்தனர். இப்போது கலியுக முடிவில் இல்லை. இதற்கு பஞ்சாயத்து இராஜ்யம் என்று பெயர். கௌரவர் பாணடவர் என எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் தான் ஆன்மீக வழிகாட்டிகள். அனைவருக்கும் ஆன்மீக வீட்டிற்கு வழிகாட்டுகிறீர்கள். அது ஆத்மாக்களாகிய உங்களின் ஆன்மீக வீடாகும். ஆத்மா பிறவி எடுத்து நடிக்கிறது. இந்த விஷயங்களை உங்களைத் தவிர வேறு யாரும் அறியவில்லை. ரிஷி முனி போன்ற யாருமே படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை கடையை அறியவில்லை. இலட்சக் கணக்கான வருடங்கள் எனக் கூறுகின்றார்கள். ஆனால் அதற்கும் எந்த கணக்கும் இல்லை. முழு பாதி சுகதாமம் பிறகு பாதி துக்கதாமம் என பாதிப் பாதியாகக் கூட இருக்க முடியாது. இது பதீதமான விகார உலகம், அது விகார மற்றதாகும்.

 

பாபா எவ்வளவு உயர்ந்ததிலும் உயர்ந்தவர்! ஆனால் எவ்வளவு சாரதாரணமாக இருக்கிறார்! யாராவது பெரிய மனிதர்கள் அதிகாரிகளைச் சந்திக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கிறார்கள்! பதீத உலகத்தில் பதீத மனிதர்கள் தான் பதீதர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். பாவனமானவர்கள் குப்தமாக (மறைமுகமாக) இருக்கிறார்கள். வெளியில் எதுவுமே தெரியவில்லை. பாபாவிற்கு நாலெட்ஜ்ஃபுல், ஆனந்தக் கடல் என்று பெயர். இந்த விஷயங்கள் பாபாவிற்குள் நிறைந்திருக்கிறது. ஆகவே அவருக்கு ஞானக் கடல் என்று பெயர். ஒவ்வொரு மனிதனின் நிலையைப் பற்றி மகிமைகள் தனித் தனியாகும். அமைச்சருக்கு அமைச்சர், பிரதம அமைச்சரை பிரதம மந்திரி என்று தான் கூறுவார்கள். பிறகு இவர் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் ஆவார். எல்லோரையும் விட நிராகாரத் தந்தையின் நிலையே உயர்ந்ததாகும். நாம் அவருடைய குழந்தைகள். அங்கே நாம் அனைவரும் தந்தையுடன் பரந்தாமத்தில் இருக்கின்றோம். அது வீடாகும். இங்கே அனைவருக்கும் அவரவருக்கென்று நடிப்பு கிடைத்திருக்கிறது. ஒரு சிலர் ஒரு பிறவியாவது நடித்து விட்டு திரும்பச் செல்கிறார்கள். இந்த மனித சிருஷ்டி என்பது பல்வேறு விதமான மரம் என பாபா புரிய வைக்கிறார். ஒன்றைப் போல இன்னொன்று இருக்காது. ஆத்மா ஒன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் சரீரம் ஒன்று போல இன்னொன்று இருக்காது. நாடகத்தில் ஒன்றுபோல இருவரின் முகங்களை உருவாக்குகிறார்கள். அதில் தன்னுடைய கணவர் யார் இவரா அவரா என குழம்பிப் போகிறார்கள். இது எல்லையற்ற விளையாட்டாகும். இதில் ஒருவர் போல இன்னொருவர் இருக்க முடியாது. ஒவ்வொருவரின் தோற்றமும் தனித்தனியாகும். வயது ஒன்றாக இருக்லாம். ஆனால் தோற்றம் ஒன்றாக இருக்காது. ஒவ்வொரு பிறவியிலும் தோற்றமும் மாறிக் கொண்டே போகிறது. எவ்வளவு பெரிய எல்லையற்ற நாடகம்! எனவே அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா? முழு சிருஷ்டியின் முதல், இடை, கடை, பற்றிய ஞானம் உங்களுடைய புத்தியில் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் நாடகத்தில் என்ன நடிப்பு இருக்கிறதோ அதை நடிப்பார்கள். நாடகத்தில் யாரையும் மாற்ற முடியாது. எல்லையற்ற நாடகம் அல்லவா! பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்கின்றனர். அனைவரின் தோற்றமும் தனித்தனியாக இருக்கிறது. எத்தனை விதமான தோற்றங்கள் இருக்கிறது! இந்த ஞானம் முழுவதையும் புத்தியினால் புரிந்துக் கொள்ள வேண்டியதாகும். எந்த புத்தகமும் கிடையாது. கீதையின் பகவான் கையில் கீதையை எடுத்து வருகிறாரா என்ன? அவரோ ஞானக் கடலாவார். புத்தகத்தை எடுத்து வருவதில்லை. பக்தி மார்க்கத்தில் புத்தகங்களை உருவாக்குகிறார்கள். எனவே இது அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நொடியைப் போன்று இன்னொன்று இருக்காது. குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் கற்பிக்கப்பட்டுள்ளது. சக்கரம் முடிவடைந்ததும் மீண்டும் புதிய தலைமுறை ஆரம்பமாகும். இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். தந்தையைப் பற்றியும் தெரிந்துக் கொண்டீர்கள், படைப்பை பற்றியும் தெரிந்துக் கொண்டீர்கள். மூலவதனத்திலிருந்து இங்கு நடிப்பதற்காக வந்திருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய மேடை! இதை யாரும் அளக்க முடியாது. யாரும் சென்றடைய முடியாது. கடல் மற்றும் ஆகாயத்தின் முடிவை யாரும் அடைய முடியாது. ஆகவே முடிவற்றது என்று பாடப்படுகிறது. முன்பு யாரும் இவ்வளவு முயற்சி செய்ய வில்லை. இப்போது முயற்சி செய்கிறார்கள். விஞ்ஞானம் கூட இப்போது இருக்கிறது. பிறகு எப்போது ஆரம்பம் ஆகும். அவர்களின் நடிப்பு எப்போது இருக்கிறதோ அப்போது. இவ்வளவு விஷயங்கள் அனைத்தும் சாஸ்திரங்களில் கிடையாது. சொல்பவருக்குப் பதிலாகக் கேட்பவரின் பெயரைப் போட்டுவிட்டனர். இது கருப்பான ஆத்மா, அது வெள்ளையான ஆத்மா. கருப்பான ஆத்மா இவர் மூலமாகக் கேட்டு வெள்ளையாக மாறுகிறது. ஞானத்தின் மூலம் எவ்வளவு உயர்ந்த பதவி கிடைக்கிறது!

 

இது கீதா பாட சாலையாகும். யார் படிக்க வைக்கிறார்கள்? பகவான் இராஜயோகத்தை அமரபுரிக்காகக் கற்பிக்கிறார். ஆகவே இதற்கு அமர கதை என்று பெயர். நிச்சயமாக சங்கமயுகத்தில் தான் கூறப்பட்டிருக்கும். யார் போன கல்பத்தில் படித்தனரோ அவர்களே பிறகு வந்து படிப்பார்கள். மேலும் வரிசைக்கிரமத்தில் பதவியை அடைவார்கள். நீங்கள் இங்கே எத்தனை முறை வந்துள்ளீர்கள்? எண்ணவே முடியாது. இந்த நாடகம் எப்போது ஆரம்பித்தது என யாராவது கேட்டால், இது அனாதியாக சென்று கொண்டிருக்கிறது என நீங்கள் கூறினீர்கள். எண்ணி கூற முடியாது. கேட்க வேண்டும் என்ற எண்ணம் கூட வராது.

 

சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தின் கதைகள் அதைப் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். இங்கே பல மொழிகள் உள்ளன. சத்யுகத்தில் பல மொழிகள் கிடையாது. ஒரே தர்மம், ஒரே மொழி, ஒரே இராஜ்யத்தை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அமைதியை உருவாக்க ஆலோசனை வழங்குபவர்களுக்கு பரிசைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிவபாபா உங்களுக்கு முழு உலகத்திலும் அமைதியை உருவாக்க ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நீங்கள் என்ன பரிசு கொடுப்பீர்கள்? அவரோ உங்களுக்குத் தான் பரிசு கொடுக்கிறார், வாங்குவதில்லை. இது புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். இது நேற்றைய விஷயம் ஆகும். இவர்களின் இராஜ்யம் இருந்தது. இப்போது வசிப்பதற்கும் இடம் இல்லை. அங்கே இரண்டு மூன்று அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டுவதற்கு அவசியம் இல்லை. கட்டைகளின் அவசியமும் இல்லை. அங்கே தங்கம் வெள்ளியினால் ஆன கட்டிடங்கள் இருக்கும். விஞ்ஞானத்தின் வேகத்தால் சீக்கிரமாக கட்டிடங்களைக் கட்டுவார்கள். இங்கே விஞ்ஞானத்தின் சுகமும் இருக்கிறது. துக்கமும் இருக்கிறது. இதன் மூலமாக முழு உலகமும் அழிந்து போகும். இதற்குத் தான் பகட்டின் வீழ்ச்சி என்று பெயர். மாயா எவ்வளவு பகட்டாக இருக்கிறது! பணக்காரர்களைப் பொருத்தவரை இதுவே சொர்க்கம். அதனாலே அவர்கள் உங்களின் விஷயங்களைக் கேட்பதில்லை. முன்பு நீங்கள் எதையும் அறியவில்லை. இங்கே பாபா வந்து நேரடியாக உங்களுக்குக் கற்பிக்கிறார். வெளியில் குழந்தைகள் படிக்க வைக்கிறார்கள். நண்பர்கள் உறவினர்களின் நினைவு வந்து கொண்டே இருக்கிறது. இங்கேயோ பாபாவே புரிய வைக்கிறார். ஒவ்வொரு நாளும் நீங்கள் நினைவு யாத்திரையில் உறுதியாகிக் கொண்டே போகிறீர்கள். பிறகு எதுவும் உங்களுக்கு நினைவு வராது. வீடு மற்றும் இராஜ்யம் மட்டும் தான் நினைவு வரும். பிறகு இந்த வேலை போன்ற எதுவும் நினைவிருக்காது. உட்கார்ந்த படியே மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதைப் போன்று இறப்பார்கள். துக்கம் ஏற்படாது, மருத்துவமனை போன்ற எதுவுமே இருக்காது. பாபாவைத் தெரிந்து கொண்டனர். சொர்க்கத்திற்கு அதிபதியாகின்றனர். உங்களுக்கு உரிமை இருக்கிறது. அனைவருக்கும் இல்லை. ஏனென்றால் அனைவரும் சொர்க்கத்திற்கு வர மாட்டார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஆன்மீக வழிகாட்டியாகி அனைவருக்கும் ஆன்மீக வீட்டிற்கு வழி காட்ட வேண்டும். ஞானம் மற்றும் யோகத்தின் ஆயுதங்களால் முழு உலகத்தையும் ஆட்சி செய்ய வேண்டும். டபுள் இரட்டை அஹிம்சையாளர் ஆக வேண்டும்.

 

2. 84 பிறவிகளின் ஆல்ரவுண்ட் பாகத்தை நடிப்பவர்கள் இப்போது ஆல்ரவுண்டர் ஆக வேண்டும். அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். எல்லையற்ற பல விதமான நாடகத்தில் ஒவ்வொரு நடிகரின் நடிப்பையும் பார்த்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

 

வரதானம்:

கண்டறியும் சக்தி மூலம் தந்தையை அறிந்து அதிகாரி ஆகக்கூடிய விசேஷஆத்மா ஆகுக.

 

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் விசேஷத்தன்மையைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள், எவரும் சம்பூரணம் ஆகவில்லை, முயற்சியாளர்களாக உள்ளனர், ஆனால், எந்த ஒரு விசேஷத்தன்மையும் இல்லாமல் ஒரு குழந்தை கூட இல்லை. அனைத்தையும் விட முதல் விசேஷத்தன்மை என்னவென்றால் கோடியில் ஒருவர் என்ற பட்டியலில் இருக்கிறீர்கள். தந்தையைக் கண்டறிந்து எனது பாபா என்று கூறுவது மற்றும் அதிகாரி ஆகுவது, இது கூட புத்தியின் விசேஷத்தன்மை ஆகும், கண்டறியும் சக்தி ஆகும். இந்த சிரேஷ்ட சக்தி தான் விசேஷஆத்மா ஆக்கிவிட்டது.

 

சுலோகன்:

சிரேஷ்டமான பாக்யத்தின் ரேகையை வரைவதற்கான பேனா சிரேஷ்ட கர்மம் ஆகும், ஆகையினால் எவ்வளவு விரும்புகிறீர்களோ, அவ்வளவு அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

 

ஓம்சாந்தி