05.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! விதேகி (சரீரமற்ற) தந்தையாகிய நான் தேகதாரிகளாகிய உங்களை விதேகி ஆக்குவதற்காகப் படிப்பு சொல்லித் தருகிறேன். இது புது விசயம். இதைக் குழந்தைகள் மட்டுமே புரிந்து கொள்கின்றனர்.

 

கேள்வி:

பாபாவுக்கு ஒரே விசயத்தை மீண்டும் மீண்டும் புரிய வைப்பதற்கான தேவை ஏன் ஏற்படுகின்றது?

 

பதில்:

ஏனென்றால் குழந்தைகள் அடிக்கடி மறந்து போகின்றனர். ஒரு சில குழந்தைகள் சொல்கின்றனர் - பாபாவோ அதே விஷயத்தை அடிக்கடி சொல்லிப் புரிய வைக்கிறார் என்று. பாபா சொல்கிறார், குழந்தைகளே, நான் அதே விஷயத்தைச் சொல்ல வேண்டியுள்ளது. ஏனென்றால் நீங்கள் மறந்து விடுகிறீர்கள். உங்களுக்கு மாயாவின் புயல் தொந்தரவு செய்கிறது. நான் தினந்தோறும் எச்சரிக்கை செய்யவில்லை என்றால் நீங்கள் மாயாவின் புயல்களால் தோற்கடிக்கப்பட்டு விடுவீர்கள். இது வரையிலும் நீங்கள் சதோபிரதானமாக ஆகவில்லை. எப்போது ஆகிறீர்களோ, அப்போது சொல்வதை நிறுத்திவிடுவேன்.

 

ஓம் சாந்தி.

இது விசித்திர (அனைத்திலிருந்தும் வேறுபட்ட) ஆன்மீகப் படிப்பு என்றும் சொல்லப் படுகின்றது. புதிய உலகமாகிய சத்யுகத்திலும் தேகதாரிகள் தான் ஒருவர் மற்றவருக்குப் படிப்பிக்கின்றனர். ஞானத்தையோ அனைவருமே சொல்லித் தருகின்றனர். இங்கேயும் சொல்லித் தருகின்றனர். அவை அனைத்தும் தேகதாரிகள் ஒருவர் மற்றவருக்குச் சொல்லித் தருகின்றனர். விதேகியான தந்தை அல்லது ஆன்மீகத் தந்தை வந்து அவர்களுக்குச் சொல்லித் தருகிறார் என்று ஒருபோதும் இருக்க முடியாது. சாஸ்திரங்களிலும் கூட கிருஷ்ண பகவான் வாக்கு என எழுதப்பட்டுள்ளது. அவரும் சரீரதாரி ஆகிறார். இந்தப் புதிய விஷயத்தைக் கேட்டுக் குழம்பி விடுகின்றனர். உங்களிலும் கூட நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் தான் புரிந்து கொள்கின்றனர், அதாவது ஆன்மீகத் தந்தை தான் ஆத்மாக்களாகிய நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார் என்று. இது புது விஷயமாகும். இந்த சங்கமயுகத்தில் மட்டும் தான் பாபா தாமே வந்து சொல்கிறார், இவர்(பிரம்மா) மூலமாக நான் உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறேன். ஞானக் கடல், சாந்திக் கடல், அனைத்து ஆத்மாக்களின் தந்தையும் அவர் தான். இது புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் இல்லையா? பார்ப்பதற்கோ எதுவும் தென்படுவதில்லை. ஆத்மா தான் முக்கியமானது மற்றும் அது அழியாதது. சரீரமோ அழியக் கூடியது. இப்போது அந்த அழியாத ஆத்மா அமர்ந்து கற்றுத் தருகிறது. நீங்கள் நேரில் பார்க்கிறீர்கள் - இவரோ சாகாரில் அமர்ந்துள்ளார். ஆனால் இதை நீங்கள் அறிவீர்கள், இந்த ஞானத்தை தேகதாரி தருவதில்லை. ஞானத்தைத் தருபவர் விதேகியாகிய தந்தை. எப்படித் தருகிறார்? இதையும் நீங்கள் அறிவீர்கள். மனிதர்களோ இதைப் புரிந்து கொள்வது கஷ்டம். இதை நிச்சயம் செய்வதற்காக எவ்வளவு நீங்கள் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியுள்ளது! அவர்களோ, நிராகாருக்கு (உருவமற்றவருக்கு) பெயர், வடிவம், தேசம், காலம் எதுவும் கிடையாது எனச் சொல்லிவிடுகின்றனர். அந்த தந்தை தானே வந்து படிப்பு சொல்லித் தருகிறார். அவர் சொல்கிறார், நான் அனைத்து ஆத்மாக்களின் தந்தை என்று, அவரை நீங்கள் பார்க்க இயலாது. அவர் விதேகி என்பதைப் புரிந்திருக்கிறீர்கள். ஞானம், ஆனந்தம், அன்பின் கடலாக இருப்பவர். அவர் எப்படிப் படிப்பு சொல்லித் தருவார்? பாபா தானே புரிய வைக்கிறார் - நான் எப்படி வருகிறேன், யாருடைய ஆதாரத்தை எடுத்துக் கொள்கிறேன்? நான் ஒன்றும் கர்ப்பத்தில் ஜென்மம் எடுப்பதில்லை. நான் ஒருபோதும் மனிதராகவோ தேவதையாகவோ ஆவதில்லை. தேவதை களும் கூட சரீரத்தை எடுத்துக் கொள்கின்றனர். நானோ, எப்போதுமே அசரீரியாகவே இருக்கிறேன். எனக்குத் தான் டிராமாவில் இந்த பாகம் உள்ளது. நான் ஒருபோதும் புனர்ஜென்மத்தில் வருவதில்லை. அவர்களோ, கிருஷ்ண பகவான் வாக்கு எனப் புரிந்து கொண்டுள்ளனர். பக்தி மார்க்கத்தில் ரதத்தையும் எப்படி அமர்ந்து உருவாக்கியுள்ளனர்! பாபா கேட்கிறார் - குழந்தைகளே, நீங்கள் குழப்பமடையவில்லையே? எதையும் புரிந்து கொள்ளவில்லை என்றால் பாபாவிடம் வந்து புரிந்து கொள்ளுங்கள். பாபாவோ கேட்காமலே அனைத்தையும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். நீங்கள் எதையும் கேட்கத் தேவையில்லை. நான் இந்தப் புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் அவதாரம் எடுக்கிறேன். எனது ஜென்மமும் கூட அற்புதமானது. குழந்தைகளாகிய உங்களுக்கும் ஆச்சரியம் ஏற்படுகின்றது - எவ்வளவு பெரியதிலும் பெரிய பரீட்சையில் தேர்ச்சியடையச் செய்கிறார்! மிகவும் பெரியதிலும் பெரிய உலகத்தின் அதிபதியாக ஆக்குகிறார். அற்புதமான விசயம் இல்லையா? ஹே ஆத்மாக்களே! ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்களுடைய சேவையில் நான் வருகிறேன். அரைக்கல்பமாக நீங்கள் அழைத்தே வந்திருக்கிறீர்கள் - ஹே பாபா, ஹே பதீத-பாவனா வாருங்கள் என்று. கிருஷ்ணரை யாரும் பதீத-பாவனா என அழைப்பதில்லை. பதீத-பாவனா என்று பரமபிதா பரமாத்மாவைத் தான் சொல்கின்றனர். ஆக, பாபாவும் கூட தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்காக வர வேண்டியிருக்கும். அதனால் சொல்லப்படுகின்றது - அகால மூரத் (அழியாதவர்) சத்தியமான பாபா, அகால மூரத்-சத்தியமான ஆசிரியர், அகால மூரத்-சத்தியமான குரு என்று. சீக்கியர்களின் மிக நல்ல சுலோகனும் உள்ளது மனிதரில் இருந்து தேவதையாக ஆக்குவதில் பகவானுக்கு அதிகத் தாமதமாவதில்லை. எப்போது வந்து மனிதரை தேவதையாக ஆக்குகிறார்? அவர் தான் அனைவருக்கும் சத்கதி அளிப்பவர், இதுவோ பக்கா நிச்சயம் இருக்க வேண்டும். வந்து என்ன சொல்கிறார்? மன்மனாபவ என்று மட்டுமே சொல்கிறார். அதன் அர்த்தத்தையும் புரிய வைக்கிறார். வேறு யாரும் அர்த்தத்தைப் புரிய வைப்பதில்லை. உங்களுக்கு சத்குரு அகால மூரத் அமர்ந்து இந்த தேகத்தின் மூலம் புரிய வைக்கிறார், அதாவது தன்னை ஆத்மா என உணருங்கள் என்று. ஆக, இதை உணர வேண்டும். உலகத்தின் எஜமானர் ஆக்குவதற்காக பாபா வர வேண்டியுள்ளது-குழந்தைகளாகிய உங்களுடைய சேவையில். அவர் புரிய வைக்கிறார் - ஹே ஆன்மிகக் குழந்தைகளே, நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள், பிறகு தமோபிரதானமாக ஆனீர்கள். இந்த சிருஷ்டிச் சக்கரம் சுற்றிக் கொண்டே உள்ளது இல்லையா? தூய்மையான உலகம் இந்த தேவதைகளுடையதாகத் தான் இருந்தது. அவை அனைத்தும் எங்கே சென்றன? இது யாருக்கும் தெரியாது. குழம்பிப் போயுள்ளனர். பாபா வந்து உங்களை புத்திசாலிகளாக ஆக்குகிறார். குழந்தைகளே, நான் ஒரு முறை மட்டுமே வருகிறேன். தூய்மையான உலகத்திற்கு நான் ஏன் வர வேண்டும்? அங்கோ காலன் வர முடியாது. பாபாவோ காலனுக்கெல்லாம் மேலான காலன். சத்யுகத்தில் வருவதற்கான தேவையே இல்லை. அங்கே காலனும் கூட வருவதில்லை. இவர் வந்து அனைத்து ஆத்மாக்களையும் அழைத்துச் செல்கிறார். குஷியோடு செல்கிறீர்கள் இல்லையா? ஆம் பாபா, நாங்கள் குஷியோடு செல்வதற்குத் தயாராக இருக்கிறோம். அதனால் தான் உங்களை அழைத்திருந்தோம்-இந்த தூய்மை இல்லாத உலகத்திலிருந்து தூய்மையான உலகத்திற்கு சாந்திதாம் வழியாக எங்களை அழைத்துச் செல்லுங்கள். இந்த விசயங்களை அடிக்கடி மறந்துவிடாதீர்கள். ஆனால் விரோதியாகிய மாயா நின்று கொண்டுள்ளது. அடிக்கடி மறக்கடித்து விடுகின்றது. நான் மாஸ்டர் சர்வசக்திவான் என்றால் மாயாவும் கூட சக்திவான். அதுவும் அரைக்கல்பமாக உங்கள் மீது இராஜ்யம் செய்கிறது. மறக்கடித்து விடுகிறது. அதனால் பாபா தினந்தோறும் புரிய வைக்க வேண்டியுள்ளது. தினந்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்றால் மாயா அதிக நஷ்டத்தை உண்டாக்கிவிடும். தூய்மை மற்றும் தூய்மையற்றதிற்கிடையிலான விளையாட்டு. இப்போது பாபா சொல்கிறார், தனது நடத்தையைச் சீர்திருத்துவதற்காக தூய்மையாகுங்கள். காம விகாரத்தினால் எவ்வளவு சண்டைகள் நடக்கின்றன!

 

பாபா சொல்கிறார், இப்போது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது எனவே ஆத்மாவை மட்டுமே பாருங்கள். இந்த ஸ்தூலக் கண்களால் பார்க்கவே செய்யாதீர்கள். ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் சகோதர-சகோதரர்கள். எப்படி விகாரத்தில் ஈடுபட முடியும்? நாம் அசரீரியாக வந்தோம். மீண்டும் அசரீரி ஆகிச் செல்ல வேண்டும். ஆத்மா சதோபிரமானமாக வந்தது. சதோபிரதானமாக ஆகிச் செல்ல வேண்டும் இனிமையான வீட்டிற்கு. முக்கியமானது தூய்மையினுடைய விஷயம். மனிதர்கள் சொல்கின்றனர், தினமும் அதே விசயங்களைத் தான் சொல்கின்றனர் என்று. இதுவோ சரி தான். ஆனால் என்ன சொல்லிப் புரிய வைக்கப் படுகின்றதோ, அதன்படியோ நடக்க வேண்டும் இல்லையா? செய்வதற்காகவே புரிய வைக்கப் படுகின்றது. ஆனால் அதன்படி யாரும் நடப்பதில்லை என்றால் நிச்சயமாக தினந்தோறும் புரிய வைக்க வேண்டியுள்ளது. பாபா, நீங்கள் தினந்தோறும் புரிய வைப்பதை நாங்கள் நல்லபடியாகப் புரிந்து கொண்டுவிட்டோம். இப்போது நாங்கள் தமோபிரதானத்திருந்து சதோபிரதானமாக ஆகிவிடுவோம், நீங்கள் போகலாம் என்று யாரும் இதுபோல் சொல்வதில்லை. இதுபோல் சொல்கிறார்களா என்ன? அதனால் பாபா தினந்தோறும் புரிய வைக்க வேண்டியுள்ளது. விஷயமோ ஒன்று தான். ஆனால் செய்வதில்லை இல்லையா? பாபாவை நினைவு செய்வதே இல்லை. சொல்கிறார்கள் - பாபா, அடிக்கடி மறந்து போகிறோம் என்று. நினைவு படுத்துவதற்காக பாபா அடிக்கடி சொல்ல வேண்டியுள்ளது. நீங்களும் ஒருவர் மற்றவருக்கு இதையே சொல்லிப் புரிய வையுங்கள். தன்னை ஆத்மா என உணர்ந்து பரமாத்மாவை நினைவு செய்வீர்களானால் உங்களுடைய பாவங்கள் நீங்கிவிடும். வேறு எந்த உபாயமும் கிடையாது. ஆரம்பத்திலும் கடைசியிலும் இதே விஷயத்தையே சொல்கிறார். நினைவின் மூலம் தான் சதோபிர தானமாக ஆக வேண்டும். தாங்களே எழுதுகின்றனர் - பாபா, மாயாவின் புயல் மறக்கடித்து விடுகின்றது. அப்படியானால் பாபா எச்சரிக்கை செய்ய வேண்டாமா? விட்டு விடலாமா? பாபாவுக்குத் தெரியும், நம்பர்வார் புருஷார்த்தம் என்று. எதுவரை சதோபிரதானமாக ஆகவில்லையோ, அதுவரை வீட்டுக்குப் போக முடியாது. சண்டையோடும் தொடர்பு உள்ளது இல்லையா? எப்போது நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் சதோபிரதானமாக ஆகிறீர்களோ, அப்போது தான் சண்டை தொடங்கும். ஞானமோ ஒரு விநாடிக்கானது. எல்லையற்ற தந்தையை அடைந்து விட்டீர்கள். இப்போது தூய்மை ஆகிவிட்டால் அவரிடமிருந்து எல்லையற்ற சுகம் கிடைக்கும். புருஷார்த்தம் நல்லபடியாகச் செய்ய வேண்டும். அநேகரோ எதையும் புரிந்து கொள்வதில்லை. பாபாவை நினைவு செய்வதற்கான புத்தியும் வருவதில்லை. இதற்கு முன் ஒருபோதும் இந்தப் படிப்பையோ படித்ததில்லை. முழுச் சக்கரத்திலும் நிராகார் தந்தையிடமிருந்து யாரும் படித்ததில்லை. ஆக, இது புது விசயம் ஆகிறது இல்லையா? பாபா சொல்கிறார். நான் ஓவ்வொரு 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் வருகிறேன் உங்களை சதோபிரதானமாக ஆக்குவதற்காக. எதுவரை சதோபிரதானமாக ஆகவில்லையோ, அதுவரை இந்தப் பதவியை அடைய முடியாது. எப்படி மற்றப் படிப்புகளில் ஃபெயிலாகின்றனரோ, அதுபோல் இதிலும் ஃபெயிலாகின்றனர். சிவபாபாவை நினைவு செய்வதால் என்ன ஆகும் என்பது எதுவும் தெரியாது. தந்தை இருக்கிறார் என்றால் தந்தையிடமிருந்து அவசியம் சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கும். பாபா ஒரே ஒரு முறை புரிய வைக்கிறார். அதன் மூலம் நீங்கள் தேவதை ஆகிறீர்கள். நீங்கள் தேவதை ஆவீர்கள். பிறகு நம்பர்வார் அனைவரும் வருவார்கள், பாகத்தை நடிப்பதற்காக. இந்த விஷயங்கள் அனைத்தும் வயோதிகர்களின் புத்தியில் பதியாது. ஆகவே பாபா சொல்கிறார், தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள், போதும். அதே சிவபாபா தான் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாக இருப்பவர். சரீரத்தின் தந்தையோ ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உள்ளனர். சிவபாபாவோ நிராகாராக இருப்பவர். அவரை நினைவு செய்து-செய்தே தூய்மையாகி சரீரத்தை விட்டுப் பிறகு பாபாவிடம் சென்று சேர வேண்டும். பாபா புரிய வைப்பதோ அநேகம். ஆனால் அனைவரும் ஒரே மாதிரி புரிந்து கொள்வதில்லை. மாயா மறக்கடித்து விடுகின்றது. இது யுத்தம் எனச் சொல்லப்படுகின்றது. பாபா எவ்வளவு நன்றாக அமர்ந்து புரிய வைக்கிறார்! எவ்வளவு விசயங்களை நினைவுப்படுத்துகிறார்! முக்கியமாக என்னென்ன தவறுகள் நடைபெற்றுள்ளனவோ, அவற்றின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். ஒன்று தந்தை சர்வவியாபி என்ற விஷயம். பகவான் சொல்கிறார் - நான் சர்வவியாபி அல்ல என்று. சர்வவியாபியோ 5 விகாரங்கள் தான். இது மிகப்பெரிய பிழையாகும். கீதையின் பகவான் கிருஷ்ணரல்ல, பரமபிதா பரமாத்மா சிவன். இந்தப் பிழைகளைத் திருத்திக் கொண்டு விட்டால் தேவதை ஆகிவிடுவீர்கள். ஆனால் அப்படி எந்த ஒரு குழந்தையும் எழுதவில்லை, அதாவது நாங்கள் புரிய வைத்தோம், இந்தப் பிழைகளின் காரணத்தால் தான் பாரதம் தூய்மையான நிலையிலிருந்து தூய்மையற்ற நிலை ஆகியுள்ளது. அதையும் சொல்ல வேண்டும். பகவான் சர்வவியாபியாக எப்படி இருக்க முடியும்? பகவானோ, ஒருவர் அவர் தான் மிக மேலான (சுப்ரீம்) தந்தை, மிக மேலான ஆசிரியர், மிக மேலான சத்குரு. எந்த ஒரு தேகதாரியையும் சுப்ரீம் தந்தை, ஆசிரியர், சத்குரு எனச் சொல்ல முடியாது. கிருஷ்ணரோ, முழு சிருஷ்டியிலும் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவர். சிருஷ்டி சதோபிரதானமாக இருக்கும் போது அவர் வருகிறார். பிறகு சதோவில் இராமர், பிறகு (மற்ற தர்மத்தினர்) நம்பர்வார் தங்களின் சமயத்தில் தான் வருவார்கள். சாஸ்திரங்களில் காட்டுகின்றனர். அனைவருடைய விகாரங்களையும் எடுத்துக் கொண்டதால் கழுத்தே (தொண்டை) கருப்பாக ஆகிவிட்டது. ஆனால் இப்போது சொல்லிப் புரிய வைத்துப் புரிய வைத்து தொண்டை வற்றிப் போகிறது. விஷயம் எவ்வளவு சிறியது! ஆனால் மாயா எவ்வளவு சக்திவாய்ந்ததாக உள்ளது! ஒவ்வொருவரும் தங்களின் மனதைக் கேட்டுக் கொள்ள வேண்டும் - நாம் அத்தகைய குணவான், சதோபிரதானமாக ஆகியிருக்கிறோமா?

 

பாபா புரிய வைத்துள்ளார், எதுவரை விநாசம் ஏற்படவில்லையோ, அதுவரை நீங்கள் கர்மாதீத் அவஸ்தாவை அடைய முடியாது. எவ்வளவு தான் மண்டையை உடைத்துக் கொண்டாலும் சரி. முழு நேரமும் சிவபாபாவை அமர்ந்து நினைவு செய்யுங்கள், வேறு எதுவும் செய்ய வேண்டாம். பாபா, யுத்தத்திற்கு முன்பு நான் கர்மாதீத் அவஸ்தாவை அடைந்து காட்டுவேன். அதுபோல் யாராவது வெளிப்படுவார்கள் - அப்படி டிராமாவில் இருக்க முடியாது. முதல் நம்பரிலோ ஒருவர் தான் செல்வார். இதையும் சொல்கிறார், நாம் எவ்வளவு மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியுள்ளது! மாயாவோ இன்னும் பலசாலி ஆகிப் போரிட வருகின்றது. பிரம்மா பாபா அவரே சொல்கிறார், எனது பக்கத்தில் (தனது ஆத்மாவுக்கு மிக நெருக்கத்தில்) சிவபாபா அமர்ந்துள்ளார். இருந்தும் கூட என்னால் நினைவு செய்ய முடிவதில்லை. மறந்து விடுகிறேன். நான் புரிந்து கொண்டுள்ளேன், என்னோடு சிவபாபா இருக்கிறார். பிறகு நானும் கூட நினைவு செய்ய வேண்டியுள்ளது-எப்படி நீங்கள் நினைவு செய்கிறீர்களோ, அதுபோல. நானோ கூடவே இருக்கிறேன், இதிலேயே குஷியாகிவிட வேண்டும் என்பதல்ல. எனக்கும் சொல்கிறார், நிரந்தரமாக என்னை நினைவு செய்ய வேண்டும் என்று. உடன் பலசாலியான நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கோ இன்னும் அதிகமாக மாயாவின் புயல்கள் வரும். இல்லையென்றால் குழந்தைகளுக்கு எப்படிப் புரிய வைக்க முடியும்? இந்த அனைத்துப் புயல்களுமோ உங்களைக் கடந்து செல்லும். நான் அவருக்கு இவ்வளவு அருகில் அமர்ந்திருந்தும் கர்மாதீத் அவஸ்தாவை அடைய முடியவில்லை எனும்போது பிறகு மற்றவர்கள் எப்படி ஆவார்கள்? இந்தக் குறிக்கோள் மிகவும் உயர்ந்தது. டிராமாவின் அனுசாரம் அனைவரும் புருஷார்த்தம் செய்து கொண்டே இருக்கின்றனர். யாரேனும் அப்படி முயற்சி செய்து காட்டட்டும் - பாபா, நாங்கள் உங்களுக்கு முன் முதலில் கர்மாதீத் அவஸ்தாவை அடைந்து இதுபோல் ஆகிக் காட்டுவோம் என்று. அது முடியாத காரியம். இந்த டிராமா உருவாக்கப் பட்டதாகும்.

 

நீங்கள் புருஷார்த்தம் அதிகம் செய்ய வேண்டும். முக்கியமாக அனைத்து விஷயங்களும் நடத்தை பற்றியதாகும். தேவதைகளின் நடத்தை மற்றும் தூய்மை இல்லாத மனிதர்களின் நடத்தையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது! உங்களை விகாரியிலிருந்து நிர்விகாரியாக ஆக்குபவர் சிவபாபா. ஆகவே இப்போது புருஷார்த்தம் செய்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். மறந்துவிடாதீர்கள். மற்றப்படி அபலைகள் பாவம், பிறர்வசத்தில் உள்ளனர், அதாவது இராவணனின் வசமாக உள்ளனர். அதனால் அவர்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் இராமராகிய ஈஸ்வரனின் வசம் இருக்கிறீர்கள். அவர்கள் இராவணனின் வசம் உள்ளனர். ஆகவே யுத்தம் நடைபெறுகின்றது. மற்றப்படி இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் யுத்தம் என்பது கிடையாது. பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு விதவிதமாக தினந்தோறும் புரிய வைக்கிறார் இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தன்னைத் திருத்திக் கொண்டே செல்லுங்கள். தினமும் இரவில் அன்றாடக் கணக்கைப் பாருங்கள் நாள் முழுவதிலும் அசுர நடத்தை ஏதேனும் இல்லாதிருந்ததா? தோட்டத்தில் மலர்கள் நம்பர்வார் இருக்கவே செய்கின்றன. இருவர் ஒரே மாதிரி ஒருபோதும் இருக்க முடியாது. அனைத்து ஆத்மாக்களுக்கும் அவரவர் பாகம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு நடிகரும் பாகத்தை நடித்துக் கொண்டே இருக்கின்றனர். பாபாவும் வந்து ஸ்தாபனையின் காரியத்தைச் செய்து தான் முடிப்பார். ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் வந்து உலகத்தின் எஜமானராக ஆக்கி விடுகிறார். எல்லையற்ற தந்தை இல்லையா? அதனால் நிச்சயமாக புது உலகத்தின் ஆஸ்தியைத் தான் கொடுப்பார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஞானத்தின் மூன்றாவது கண் மூலமாக ஆத்மாவையே பார்க்க வேண்டும். ஸ்தூல கண்களால் பார்க்கவே கூடாது. அசரீரி ஆவதற்கான பயிற்சி செய்ய வேண்டும்.

 

2) பாபாவின் நினைவு மூலம் தன்னுடைய தெய்வீக நடத்தையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தனது மனதைக் கேட்க வேண்டும் - நாம் எதுவரை குணவான் ஆகியிருக்கிறோம்? நாம் நாள் முழுவதிலும் அசுர நடத்தை இல்லாதிருந்தோமா?

 

வரதானம்:

குழப்பத்தில் மனமுடைந்து போவதற்கு பதிலாக பரந்த மனமுடையவராக இருக்கக் கூடிய தைரியசாலி ஆகுக.

 

எப்பொழுதாவது ஏதாவதொரு உடல் ரீதியான உபாதைகள் இருந்தாலும், மனதினுடைய புயல் இருந்தாலும், செல்வத்தில் அல்லது இயற்கையின் குழப்பம் இருந்தாலும், சேவையில் குழப்பம் இருந்தாலும், - அந்த குழப்பத்தில் மனமுடைந்து போகக் கூடாது. பரந்த மனமுடையவர் ஆகுங்கள். ஏதாவது கணக்கு வழக்கு வந்து விடுகிறது, வலி ஏற்படுகிறது என்றால், அதை நினைத்து - நினைத்து, மனமுடைந்தவர் ஆகி அதிகரிக்காதீர்கள், தைரியசாலி ஆகுங்கள். நினைத்து ஐயோ, நான் என்ன செய்வேன்..... தைரியத்தை இழந்து விடாதீர்கள். தைரியசாலி ஆகுங்கள், பாபாவின் உதவி தானாகவே கிடைக்கும்.

 

சுலோகன்:

மற்றவர்களுடைய பலவீனங்களை பார்ப்பதற்கான கண்களை மூடிக் கொண்டு மனதில் உள்நோக்குமுடையவராக ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி