04.02.19 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! உள்நோக்கு முகமுடையவராகி தன்னுடைய
நன்மைக்கான கவனம் கொள்ளுங்கள் . எங்காவது சுற்றச் செல்கிறீர்கள்
என்றால் ஏகாந்தத்தில் ஞான சிந்தனை செய்யுங்கள் . தன்னிடமே
கேளுங்கள் - நான் எப்போதும் முகமலர்ச்சியுடன் இருக்கிறேனா ?
கேள்வி:
இரக்க மனதுடைய தந்தையின் குழந்தைகள் தன்மேல் எந்த ஒரு இரக்கம்
காட்ட வேண்டும் ?
பதில்:
என்னுடைய குழந்தைகள் முள்ளிலிருந்து மலராகட்டும் என்று
தந்தைக்கு இரக்கம் ஏற்படுகிறது. தந்தை குழந்தைகளை மலர்களாக
மாற்றுவதற்கு எவ்வளவு உழைக்கிறார். அது போல குழந்தைகளுக்கும்
தன்மேல் இரக்கம் வரவேண்டும் - ஏ! பதீத பாவனரே வாருங்கள், எங்களை
மலராக்குங்கள் என்று நாம் பாபாவை அழைக்கிறோம். இப்போது அவர்
வந்திருக்கிறார் எனும் போது நாம் மலர்களாக ஆக மாட்டோமா என்ன?
இரக்கம் ஏற்பட்டால் ஆத்ம அபிமானியாக இருப்பார்கள். பாபா என்ன
சொல்கிறாரோ அதை தாரணை செய்வார்கள்.
ஓம் சாந்தி .
இவர் தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார்,
சத்குருவாகவும் இருக்கிறார் என்று குழந்தைகள் புரிந்து
கொள்கிறார்கள். ஆக பாபா குழந்தைகளிடம் கேட்கிறார் - நீங்கள்
எப்போது இங்கே வருகிறீர்களோ அப்போது இந்த லட்சுமி நாராயணருடைய
மற்றும் ஏணிப்படியின் சித்திரத்தை பார்க்கின்றீர் களா? எப்போது
இரண்டு சித்திரங்களையும் பார்க்கின்றீர்களோ அப்போது குறிக்கோள்
மற்றும் முழு சக்கரமும் புத்தியில் வருகிறது. நாம் தேவதையாகி
பிறகு இப்படி ஏணிப்படியில் இறங்கி வந்துவிட்டோம். இந்த ஞானம்
குழந்தைகளாகிய உங்களுக்குத்தான் கிடைக்கிறது. நீங்கள் மாணவர்கள்.
குறிக்கோள் முன்னால் இருக்கிறது. யாரேனும் வந்தால் நம்முடைய
குறிக்கோள் இது என்று புரிய வையுங்கள். இந்த படிப்பின் மூலம்
தேவி தேவதையாக ஆகிறோம். பிறகு 84 பிறவி ஏணிப்படியில்
இறங்குகிறோம். பிறகு மீண்டும் அதே போல் நடைபெறும். இது மிகவும்
எளிய ஞானமாகும். ஆனாலும் படித்தும் ஏன் தோல்வி
அடைந்துவிடுகிறார்கள்? அந்த உலகாயாத படிப்பை விட இந்த ஈஸ்வரிய
படிப்பு மிகவும் சகஜமானது. குறிக்கோள் மற்றும் 84 பிறவிகளின்
சக்கரம் முழுவதும் முன்னால் இருக்கிறது. இந்த இரண்டு
சித்திரங்களும் பார்வையாளர்கள் அறையிலும் இருக்க வேண்டும். சேவை
செய்வதற்கு சேவைக்கான ஆயுதங்களும் வேண்டும். முழு ஞானமும் இதில்
தான் உள்ளது. இந்த முயற்சியைக் கூட நாம் இப்போது தான்
செய்கிறோம். சதோபிரதானம் ஆவதற்காக மிகவும் உழைக்க வேண்டும்.
இதில் உள்நோக்கு முகமுடைய வராகி ஞான சிந்தனை செய்ய வேண்டும்.
சுற்றச் செல்கிறீர்கள் என்றாலும் இது புத்தியில் இருக்க
வேண்டும். வரிசைக் கிரமமாக இருக்கிறார்கள் என்று பாபா
தெரிந்திருக்கிறார். சிலர் நன்றாக புரிந்து கொள்கிறார்கள்
என்றால் கண்டிப்பாக தன்னுடைய நன்மைக்காக முயற்சி செய்திருப்பார்.
இவர் நன்றாக படிக்கிறார் என்று ஒவ்வொரு மாணவரும் புரிந்து
கொள்ள முடியும். தான் சரியாக படிக்கவில்லை என்றால் தனக்குத்தானே
நஷ்டம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தன்னை கொஞ்சமாவது
தகுதியானவர் ஆக்கிக் கொள்ள வேண்டும். நீங்களும் மாணவர்கள்,
அதுவும் எல்லைக்கப் பாற்பட்ட தந்தையின் மாணவர்கள். இந்த பிரம்மா
கூட படிக்கிறார். இந்த லட்சுமி நாராயணர் சித்திரம் நம்
பதவியாகும் மற்றும் ஏணிப்படி 84 பிறவிகளின் சக்கரமாகும். இது
முதல் நம்பர் பிறவி மற்றும் இது கடைசி நம்பர் பிறவி என்று
ஏணிப்படியில் காட்டப்படுகிறது. நீங்கள் தேவதை ஆகிறீர்கள். உள்ளே
வந்ததுமே குறிக்கோள் மற்றும் ஏணிப்படி பற்றி புரிய வையுங்கள்.
தினமும் வந்து இதற்கு முன்னால் அமருங்கள். அப்போது நினைவுக்கு
வரும். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நமக்கு புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார் என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. முழு
சக்கரத்தின் ஞானம் உங்களுடைய புத்தியில் நிறைந்திருக்கிறது
எனும் போது எவ்வளவு முக மலர்ச்சியோடு இருக்க வேண்டும்.
தனக்குத்தான் கேட்க வேண்டும் - என்னுடைய நிலை ஏன் நிலையாக
இருப்பதில்லை? நான் முகமலர்ச்சியாக இருப்பதில் தடை ஏற்படுத்தக்
கூடிய காரணம் என்ன? யார் சித்திரத்தை உருவாக்குகிறார்களோ
அவர்களுடைய புத்தியிலும் இது நம்முடைய எதிர்கால பதவி என்பது
இருக்கும், இது நம்முடைய குறிக்கோள் மற்றும் இது நம்முடைய 84
பிறவிகளின் சக்கரம். சகஜ இராஜ யோகம் என்ற மகிமையும் இருக்கிறது.
ஆனாலும் பாபா தினமும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்,
நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையினுடைய குழந்தைகள் எனும் போது
கண்டிப்பாக சொர்க்கத்தின் ஆஸ்தி எடுக்க வேண்டும் மற்றும் முழு
சக்கரத்தின் ரகசியமும் புரிய வைக்கப்பட்டுள்ளது எனும் போது
கண்டிப்பாக அதை நினைவு செய்ய வேண்டும். ஒருவரோடு ஒருவர்
பேசக்கூடிய விதமும் கூட நன்றாக இருக்க வேண்டும். நடத்தை மிக
நன்றாக இருக்க வேண்டும். நடந்தாலும் சுற்றினாலும் காரியங்கள்
செய்தாலும், நான் பாபாவிடம் படிக்க வந்திருக்கிறேன் என்பது
மட்டும் புத்தியில் இருக்க வேண்டும். இந்த ஞானம் தான் உங்களை
கூடவே அழைத்துச் செல்லக் கூடியதாகும். படிப்பு சகஜமானது. ஆனால்
முழுமையாக படிக்கவில்லை என்றால், வகுப்பில் மிக மந்தமான
குழந்தைகள் இருக்கிறார்களே, நம்முடைய பெயர் கெட்டுப்போகுமே
என்று ஆசிரியருக்கு இந்த எண்ணம் ஏற்படும். பரிசு கிடைக்காது.
அரசாங்கம் எதுவும் கொடுக்காது. இது கூட பள்ளிக்கூடம் அல்லவா!
இங்கே பரிசு போன்ற எந்த விசயமும் கிடையாது. ஆனாலும் முயற்சி
செய்ய வைக்கப்படுகிறது. நடத்தையை மாற்றிக் கொள்ளுங்கள்,
தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள். குணம் மிக நன்றாக இருக்க
வேண்டும். பாபா உங்களுக்கு நன்மை செய்ய வந்துள்ளார். ஆனால்
தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க முடியவில்லை. ஸ்ரீமத், இங்கே
செல்லுங்கள் என்று சொன்னால் செல்வதில்லை. இங்கே வெயிலாக
இருக்கிறது, இங்கே குளிராக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
நமக்கு யார் சொல்கிறார் என்று கூட தந்தையை புரிந்து கொள்வதில்லை.
இந்த சாதாரண ரதம் (பிரம்மா) தான் புத்தியில் வருகிறது. அந்த
தந்தை (சிவ தந்தை) புத்தியில் வருவதே இல்லை. பெரிய ராஜாக்கள்
மீது அனைவருக்கும் எவ்வளவு பயம் இருக்கிறது. மிகுந்த அதிகாரம்
இருக்கிறது. இங்கே பாபா சொல்கிறார் - நான் ஏழைப் பங்காளன்.
படைப்பவராகிய என்னையும் படைப் பின் முதல், இடை, கடைசியையும்
யாரும் தெரிந்து கொள்ளவில்லை. எவ்வளவு நிறைய மனிதர்கள்
இருக்கிறார்கள். எப்படி எப்படியெல்லாம் பேசுகிறார்கள்,
என்னென்ன பேசுகிறார்கள். பகவான் என்றால் யார் என்பது கூட
தெரிவதில்லை. அதிசயமல்லவா! பாபா சொல்கிறார் - நான் சாதாரண
உடலில் வந்து தன்னுடைய மற்றும் படைப்பின் முதல் இடை கடைசியின்
அறிமுகத்தைக் கொடுக்கிறேன். 84 பிறவிகளின் இந்த ஏணிப்படி
எவ்வளவு தெளிவாக இருக்கிறது.
பாபா சொல்கிறார் - நான் உங்களை இப்படி ஆக்கியிருந்தேன். இப்போது
மீண்டும் உருவாக்கிக் கொண்டிருக் கிறேன். நீங்கள் தங்க
புத்தியாக இருந்தீர்கள். பிறகு உங்களை கல் புத்தியாக ஆக்கியது
யார்? அரைக் கல்பமாக இராவண இராஜ்யத்தில் நீங்கள் விழுந்து
கொண்டே வந்தீர்கள். இப்போது நீங்கள் தமோபிரதானத்திலிருந்து
சதோபிரதானமாக கண்டிப்பாக ஆக வேண்டும். தந்தை சத்தியமானவர் என்று
புத்தி சொல்கிறது. அவர் கண்டிப்பாக சத்தியமானதை சொல்வார். இந்த
பிரம்மா கூட படிக்கிறார். நீங்களும் படிக்கிறீர்கள். நான் கூட
மாணவன், படிப்பின் மீது கவனம் கொடுக்கிறேன் என்று இவர் (பிரம்மா)
சொல்கிறார். துல்லியமான கர்மாதீத் நிலை இன்னும் உருவாகவில்லை.
இவ்வளவு உயர்ந்த பதவி அடைவதற்கான படிப்பின் மீது கவனம்
கொடுக்காமல் யாரேனும் இருப்பார்களா என்ன? இப்படிப்பட்ட உயர்ந்த
பதவியை கண்டிப்பாக அடைய வேண்டும் என்று அனைவரும் சொல்வார்கள்.
நாம் தந்தையினுடைய குழந்தைகள், ஆக கண்டிப்பாக எஜமானன் ஆக
வேண்டும். மற்றபடி படிப்பில் ஏற்ற இறக்கம் ஏற்படத்தான்
செய்கிறது. இப்போது உங்களுக்கு ஒரேடியாக ஞானத்தின் சாரம்
கிடைத்துவிட்டது. ஆரம்பத்தில் பழைய ஞானமாக இருந்தது. மெது
மெதுவாக நீங்கள் புரிந்து கொண்டே வந்தீர்கள். இப்போது நமக்கு
உண்மையான ஞானம் கிடைத்துவிட்டது என்று புரிந்து கொள்கிறீர்கள்.
பாபா கூட சொல்கிறார் இன்று நான் உங்களுக்கு ஆழமான விசயங்களைச்
சொல்கிறேன். உடனடியாக யாரும் ஜீவன் முக்தி அடைந்து விட முடியாது.
உடனடியாக முழு ஞானத்தையும் எடுக்க முடியாது. முன்பு இந்த
ஏணிப்படியின் சித்திரம் இருக்கவில்லை. நாம் இப்படி சக்கரத்தில்
சுற்றுகிறோம் என்று இப்போது புரிந்து கொள்கிறீர்கள். நாம் தான்
சுயதரிசன சக்கரதாரி. பாபா ஆத்மாக்களாகிய நமக்கு முழு
சக்கரத்தின் ரகசியத்தையும் புரிய வைத்துவிட்டார். பாபா
சொல்கிறார் - உங்களுடைய தர்மம் மிகவும் சுகம் கொடுக்கக் கூடியது.
தந்தை தான் வந்து உங்களை சொர்க்கத்தின் எஜமானராக ஆக்குகின்றார்.
மற்றவர்களின் சுகத்துக்கான நேரம் இப்போது வந்துள்ளது மற்றும்
மரணம் முன்னால் நிற்கிறது. இந்த ஆகாய விமானம், மின்சாரம்
போன்றவை முன்பு கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை இந்த உலகமே
சொர்க்கம் போல் ஆகும். எவ்வளவு பெரிய பெரிய கட்டிடங்கள்
கட்டுகிறார்கள். நமக்கு மிகுந்த சுகம் கிடைக்கிறது என்று
நினைக்கிறார்கள். எவ்வளவு சீக்கிரமாக லண்டனை சென்றடைந்து
விடுகிறார்கள். போதும், இதுவே சொர்க்கம் என்று நினைத்து
விடுகிறார்கள். இப்போது அவர்களுக்கு யாரேனும் சொர்க்கம் என்று
சத்யுகத்தை சொல்லப் படுகிறது என்று புரிய வைத்தால், கலியுகத்தை
சொர்க்கம் என்று சொல்ல மாட்டார்கள். நரகத்தில் சரீரத்தை
விட்டால் கண்டிப்பாக மறுபிறவி நரகத்தில் தான் எடுக்க
வேண்டியிருக்கும். முன்பு நீங்கள் கூட இந்த விசயங்களைப்
புரிந்து கொள்ளாமல் இருந்தீர்கள். இப்போது புரிந்து
கொள்கிறீர்கள். இராவண இராஜ்யம் வரும் போது நாம் விழ ஆரம்பித்து
விடுகிறோம். அனைத்து விகாரங்களும் வந்துவிடுகிறது. இப்போது
உங்களுக்கு முழு ஞானமும் கிடைத்துவிட்டது. ஆகையால் நடத்தை கூட
மிக ராயலாக இருக்க வேண்டும். இப்போது நீங்கள் சத்யுகத்தை
விடவும் மதிப்பு வாய்ந்தவர்கள். பாபா ஞானக் கடலாக இருக்கிறார்,
அவர் முழு ஞானத்தையும் இப்போது தருகிறார். வேறு எந்த
மனிதர்களும் ஞானம் மற்றும் பக்தியை புரிந்து கொள்ள முடியாது.
இரண்டையும் சேர்த்து விட்டார்கள். சாஸ்திரம் படிப்பது ஞானம்
மற்றும் பூஜை செய்வது பக்தி என்று நினைக்கிறார்கள். ஆக இப்போது
பாபா நம்மை மலர்களாக மாற்ற எவ்வளவு உழைக்கிறார். குழந்தை
களுக்கும் இரக்கம் வர வேண்டும் - தூய்மையற்றவர்களை தூய்மையாக்க
வாருங்கள், மலர்களாக மாற்றுங்கள் என்று நாம் பாபாவை அழைத்தோம்.
இப்போது பாபா வந்திருக்கிறார் எனும் போது தன் மீதும் இரக்கம்
காட்ட வேண்டும். நாம் அப்படிப்பட்ட மலராக மாற மாட்டோமா என்ன?
இப்போது வரை நாம் பாபாவின் மன சிம்மாசனத்தில் ஏன் ஏறவில்லை?
கவனம் கொடுப்பதில்லை. பாபா எவ்வளவு இரக்க மனமுள்ளவராக
இருக்கிறார். தூய்மையற்ற உலகத்தில் வந்து எங்களை
தூய்மையாக்குங்கள் என்று தந்தையை அழைக்கவும் செய்கிறார்கள். ஆக,
எப்படி தந்தைக்கு இரக்கம் ஏற்படுகிறதோ அப்படியே
குழந்தைகளுக்கும் இரக்கம் ஏற்பட வேண்டும். இல்லையானால்,
சத்குருவுக்கு நிந்தனை செய்பவர்கள் உயர்ந்த பதவி அடைய முடியாது.
சத்குரு யார் என்று யாரும் கனவில் கூட பார்த்திருக்க
மாட்டார்கள். மனிதர்கள் குருக்கள் சாபம் கொடுத்து விடக்கூடாது,
அவர்களின் கிருபையை இழந்து விடக் கூடாது என்று நினைக்கிறார்கள்.
குழந்தை பிறந்தது என்றால் குருவின் கிருபை என்று
நினைக்கிறார்கள். இது அல்ப கால சுகத்திற்கான விசயமாகும். பாபா
சொல்கிறார் - குழந்தைகளே! தன்மீது (தனக்குத்தான்) இரக்கம்
காட்டுங்கள். ஆத்ம அபிமானி ஆகுங்கள் அப்போது தாரணை ஏற்படும்.
அனைத்தும் ஆத்மா தான் செய்கிறது. நான் கூட ஆத்மாவிற்கு
கற்பிக்கிறேன். தன்னைத் தான் ஆத்மா என்று உறுதியாக புரிந்து
கொள்ளுங்கள் மற்றும் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையை
நினைவு செய்யவே இல்லை என்றால் விகர்மம் எப்படி வினாசமாகும். ஏ
பகவானே! இரக்கம் காட்டுங்கள் என்று பக்தியில் கூட நினைவு
செய்கிறார்கள். பாபா விடுவிப்பவராகவும் (லிபரேட்டர்)
இருக்கிறார், வழிகாட்டியாகவும் இருக்கிறார்.... இது கூட
அவருடைய மறைமுகமான மகிமையாகும். பக்தி மார்க்கத்தில் நீங்கள்
என்னை நினைவு செய்தீர்கள் என்று பாபா வந்து அனைத்தையும்
சொல்கிறார். நான் கண்டிப்பாக என்னுடைய நேரத்தில் தான் வருவேன்.
நான் நினைத்த போது வருவேன் என்பது கிடையாது. நாடகத்தில் எப்போது
பதிவாகியிருக்கிறதோ அப்போது வருவேன். மற்றபடி இந்த சிந்தனைகள்
கூட ஒருபோதும் வருவதில்லை. உங்களுக்கு கற்பிப்பவர் அந்த
தந்தையாவார். இவர் (பிரம்மா) கூட அவரிடமிருந்து கற்றுக்
கொள்கிறார். அவர் ஒருபோதும் எந்த தவறும் செய்வதில்லை.
யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை மற்றபடி அனைவரும்
வரிசைக்கிரமமான ஆசிரியர்கள். அந்த சத்தியமான தந்தை உங்களுக்கு
சத்தியத்தைதான் கற்றுக் கொடுக்கிறார். சத்தியமானவருடைய
குழந்தைகளும் சத்தியமானவர்கள். பிறகு பொய்யின் குழந்தைகள் ஆகும்
போது அரைக்கல்பம் பொய்யானவர் ஆகிவிடுகிறார்கள். சத்தியமான
தந்தையை மறந்துவிடுகிறார்கள்.
இந்த சத்யுகம் புதிய உலகமா அல்லது பழைய உலகமா? என்று முதலில்
புரிய வையுங்கள். அப்போது, இவர்கள் நன்றாக கேள்வி கேட்கிறார்கள்
என்று மனிதர்கள் நினைப்பார்கள். இந்த நேரத்தில் அனைவருக்
குள்ளும் 5 விகாரங்கள் பிரவேசம் ஆகியிருக்கிறது. அங்கே 5
விகாரங்கள் இருப்பதில்லை. இது மிகவும் சகஜமாக புரிந்து கொள்ள
வேண்டிய விசயமாகும். ஆனால் யார் தானே புரிந்து கொள்ள வில்லையோ
அவர்கள் கண்காட்சியில் என்ன புரிய வைப்பார்கள்? சர்வீஸ்
செய்வதற்கு பதிலாக டிஸ்சர்வீஸ் செய்து விட்டு வருவார்கள்.
வெளியே போய் சேவை செய்வது என்பது சித்தி வீட்டிற்கு போவதல்ல.
மிகவும் புத்தி வேண்டும். பாபா ஒவ்வொருவருடைய நடத்தை மூலம்
புரிந்து கொள்கிறார். இது நாடகத்தில் இருந்தது என்று தந்தை கூட
சொல்வார். யாரேனும் வந்தால் பிரம்மாகுமாரி புரிய வைப்பது
நன்றாக இருக்கிறது என்பார்கள். பெயர் கூட பிரம்மா குமாரி
ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் ஆகும். பிரம்மா குமாரி களின் பெயர்
புகழ் பெற வேண்டும். இந்த நேரத்தில் அனைவரும் 5 விகாரங்களில்
விழுந்து கிடக்கிறார்கள். அவர்களுக்குப் போய் புரிய வைப்பது
எவ்வளவு கடினமாக இருக்கிறது. எதையும் புரிந்து கொள்வதில்லை.
ஞானம் நன்றாக இருக்கிறது என்று மட்டும் சொல்வார்கள். ஆனால்,
ஞானத்தைப் புரிந்து கொள்வதில்லை. தடைக்கு மேல் தடையாக வந்து
கொண்டே இருக்கிறது. பிறகு யுக்திகளை உருவாக்க வேண்டியிருக்கிறது.
போலீஸை பாதுகாப்புக்கு வையுங்கள், சித்திரங்களை காப்பீடு
செய்யுங்கள். இந்த யக்ஞத்தில் கண்டிப்பாக தடைகள் ஏற்படும். முழு
பழைய உலகமும் இதில் சுவாகா ஆக வேண்டும். இல்லையானால் யக்ஞம்
என்ற பெயர் ஏன் வைக்கப்பட்டுள்ளது. யக்ஞத்தில் சுவாகா ஆக
வேண்டும். இதற்கு ருத்ர ஞான யக்ஞம் என்று பெயர்
வைக்கப்பட்டுள்ளது. ஞானத்தை படிப்பு என்றும் சொல்லப்படுகிறது.
இது பாட சாலையாகவும் இருக்கிறது, யக்ஞமாகவும் இருக்கிறது.
நீங்கள் பாடசாலையில் படித்து தேவதை ஆகிறீர்கள். பிறகு இந்த
அனைத்தும் யக்ஞத்தில் சுவாகா ஆகிவிடும். யார் தினமும் பயிற்சி
செய்து கொண்டே இருக்கிறார்களோ அவர்கள் தான் புரிய வைக்க
முடியும். பயிற்சி இல்லையென்றால் அவர்கள் என்ன புரிய வைக்க
முடியும். உலகத்தில் மனிதர்களுக்கு இப்போது இந்த உலகம் அல்ப
காலத்திற்காக சொர்க்கம் ஆகும். உங்களுக்கு அரைக்கல்பத்திற்கு
சொர்க்கம் கிடைக்கிறது. இந்த நாடகம் கூட உருவாக்கப் பட்டுள்ளது.
இதை சிந்தனை செய்யும் போது மிக அதிசயமாக இருக்கிறது. இப்போது
இராவண இராஜ்யம் முடிந்து இராம இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது. இதில்
சண்டை போன்ற எந்த விசயமுமில்லை. இந்த ஏணிப்படியைப் பார்த்து
மனிதர்கள் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். ஆக பாபா என்னவெல்லாம்
புரிய வைக்கிறார். இந்த பிரம்மா கூட பாபாவிடமிருந்து கற்றுக்
கொண்டு புரிய வைக்கிறார். பெண் குழந்தைகளும் புரிய
வைக்கிறார்கள். யார் நிறைய பேருக்கு நன்மை செய்கிறார்களோ
அவர்களுக்கு நிறைய பலன் கிடைக்கும். படித்தவர்கள் முன்னால்
படிக்காதவர்கள் சுமை தூக்குவார்கள். தனக்கு நன்மை செய்து
கொள்ளுங்கள் என்று பாபா தினந்தோறும் புரிய வைக்கிறார். இந்த
சித்திரங்களை முன்னால் வைப்பதன் மூலமே போதை ஏறிவிடுகிறது.
ஆகையால், பாபா தன் அறையில் இந்த சித்திரம் வைத்துவிட்டார்.
குறிக்கோள் எவ்வளவு சகஜமானது. இதில் குணங்கள் நன்றாக இருக்க
வேண்டும். மனம் தூய்மையாக இருந்தால் அனைத்து மனவிருப்பங்களும்
பூர்த்தியாகிவிடும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்போய் கண்டெடுக்கப்பட்ட
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கங்கள் . ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம் .
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாம் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் மாணவர்கள் என்பதை
எப்போதும் நினைவில் வைக்க வேண்டும். பகவான் நமக்கு
கற்பிக்கிறார். ஆகையால் நன்றாகப் படித்து தந்தையின் பெயரை புகழ்
பெறச் செய்ய வேண்டும். தன்னுடைய நடத்தையை மிகவும் ராயலாக வைக்க
வேண்டும்.
2. தந்தைக்குச் சமமாக இரக்க மனதுடையவராகி முள்ளிலிருந்து மலராக
வேண்டும் மற்றும் மற்றவர்களையும் மலராக்க வேண்டும். உள்நோக்கு
முகமுடையவராகி தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வதற்கான
சிந்தனை செய்ய வேண்டும்.
வரதானம்:
விகாரங்கள் என்ற வி ˆ ப் பாம்பை கழுத்து மாலையாக அணிந்துக்
கொள்ளக் கூடியவராகி சங்கரருக்கு சமமாக தபஸ்வி மூர்த்தி ஆகுக .
மக்களைப் பொறுத்த வரை 5 விகாரங்கள் என்பது விஷப் பாம்பு ஆகும்.
யோகி மற்றும் நடைமுறைப் படுத்தும் (பிரயோகி) ஆத்மாவாகிய
உங்களுக்கு இது கழுத்தின் மாலையாகி விடுகின்றது. பிராமண
ஆத்மாக்களாகிய தாங்கள் மற்றும் பிரம்மா பாபாவின் அசரீரி தபஸ்வி
சங்கர் சொரூபத்தின் நினைவு சின்னம் இன்று வரை பூஜிக்கப்படுகிறது.
இரண்டாவது இந்த பாம்பு குஷியில் நடனமாடுவதற்கான மேடையாகி
விடுகிறது. இந்த ஸ்திதி மேடையின் ரூபத்தில் காண்பிக்கிறார்கள்.
எனவே விகாரங்களின் மீது வெற்றி அடையும் போது தான் தபஸ்வி
மூர்த்தி, நடைமுறைபடுத்தும் ஆத்மா என்று கூறுவார்கள்.
சுலோகன்:
யாருடைய சுபாவம் இனிமையாகவும் அமைதியாகவும் இருக்கிறதோ
அவர்களிடம் கோபம் என்ற பூதம் போரிட முடியாது .