29.08.2019 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
உயர்ந்த
பாபா
உயர்ந்த
மனிதர்களாகிய
உங்களுக்கு
அதிகமான உழைப்பு
ஒன்றும்
தருவதில்லை.
அ
மற்றும்
ஆ
(அப்பா
மற்றும்
ஆஸ்தி)
என்ற
இரண்டு எழுத்துக்களை
மட்டும்
நினைவு
செய்யுங்கள்.
கேள்வி:
ஆன்மீகத்
தந்தையின்
முக்கியமான
கடமை
எது?
அதை
செய்வதில்
தான்
தந்தைக்கு ஆனந்தம்
ஏற்படுகிறது?
பதில்:
ஆன்மீகத்
தந்தையின்
முக்கிய
கடமையாவது,
பதீதமானவர்களை
பாவனமாக
ஆக்குவது.
தந்தைக்கு பாவனமாக
ஆக்குவதில்
தான்
மிகவும்
ஆனந்தம்
ஏற்படுகிறது.
தந்தை
வருவதே
குழந்தைகளுக்கு
சத்கதி அளிக்க,
அனைவரையும்
சதோபிரதானமாக
ஆக்குவதற்கு.
ஏனெனில்
இப்பொழுது
வீடு
செல்ல
வேண்டும்.
ஒரு
பாடத்தில்
அனுபவமிக்கவர்
ஆகுங்கள்
-
நாம்
தேகம்
அல்ல.
ஆத்மாக்கள்!
இதே
பாடத்தின்
மூலமாக தந்தையின்
நினைவு
இருக்கும்
மற்றும்
பாவனமாக
(தூய்மையாக)
ஆகிவிடுவீர்கள்.
ஓம்
சாந்தி.
ஆன்மீகத்
தந்தை
வந்து
ஆன்மீகக்
குழந்தைகளுக்குப்
புரிய
வைக்கிறார்.
தந்தைக்குக்
கூட குழந்தைகளாகிய
உங்களை
தூய்மையாக
ஆக்குவதில்
ஆனந்தம்
ஏற்படுகிறது.
எனவே
பதீத
பாவனரான தந்தையை
நினைவு
செய்யுங்கள்
என்று
கூறுகிறார்.
அனைவருக்கும்
சத்கதி
அளிக்கும்
வள்ளல்
(சத்கதி
தாதா)
அந்த
ஒரே
ஒரு
தந்தை
ஆவார்.
வேறு
யாரும்
அல்ல.
இப்பொழுது
அவசியம்
வீடு
செல்ல
வேண்டும் என்பதையும்
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
புருஷார்த்தம்
(முயற்சி)
அதிகமாக
செய்வதற்காக
நினைவு
யாத்திரை அவசியமானது
என்று
தந்தை
கூறுகிறார்.
நினைவினால்
தான்
தூய்மையாக
ஆவீர்கள்.
பிறகு
படிப்பு
வேண்டும்.
முதலில்
"அல்ஃப்"
தந்தையை
நினைவு
செய்யுங்கள்.
பின்னால்
இந்த
அரசாட்சி.
இதற்காக
உங்களுக்கு டைரக்ஷ்ன்
(உத்தரவு)
அளிக்கிறார்.
84
பிறவிகள்
எப்படி
எடுக்கிறோம்
என்பதை
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
சதோபிரதான
நிலையிலிருந்து தமோபிரதானமாக
ஆகிறீர்கள்.
படி
கீழே
இறங்க
வேண்டியுள்ளது.
இப்பொழுது மீண்டும்
சதோபிரதானமாக
ஆக
வேண்டும்.
சத்யுகம்
என்பது
பாவன
உலகம்
ஆகும்.
அங்கு
ஒருவர்
கூட பதீதமானவராக
(தூய்மையற்றவராக)
இருக்க
மாட்டார்கள்.
சத்யுகத்தில்
இந்த
விஷயங்கள்
இருக்காது.
முக்கியமான அடிப்படை
விஷயமே
தூய்மை
ஆவதற்கானதாகும்.
இப்பொழுதே
தூய்மை
ஆகுங்கள்.
அப்பொழுது
தான் புது
உலகத்தில்
வருவீர்கள்.
மேலும்
ஆட்சி
புரிவதற்குத்
தகுதியுடையவர்கள்
ஆவீர்கள்.
அனைவரும்
பாவனமாக ஆகவே
வேண்டும்.
அங்கு
பதீதமானவர்கள்
இருக்கவே
மாட்டார்கள்.
யார்
இப்பொழுது
சதோபிரதானமாக ஆவதற்கான
புருஷார்த்தம்
(முயற்சி)
செய்கிறார்களோ
அவர்களே
தூய்மையான
உலகத்தின்
அதிபதி
ஆவார்கள்.
அடிப்படை
விஷயமே
ஒன்றே
ஒன்று
தான்.
தந்தையை
நினைவு
செய்வதன்
மூலம்
சதோபிரதானமாக
ஆக வேண்டும்.
தந்தை
ஒன்றும்
அதிகமான
உழைப்பு
அளிப்பதில்லை.
தன்னை
ஆத்மா
என்று
உணருங்கள் என்று
மட்டுமே
கூறுகிறார்.
திரும்பத்
திரும்ப
கூறுகிறார்
–
முதலில் இந்த
பாடத்தில்
அனுபவமிக்கவராகுங்கள்
-
நாம்
தேகம்
அல்ல.
நாம்
ஆத்மாக்கள்.
அவ்வளவு
தான்.
பெரிய
மனிதர்கள்
அதிகமாகப்
படிப்பதில்லை.
இரண்டு
வார்த்தைகளிலேயே
கூறிவிடுகிறார்கள்.
பெரிய
மனிதர்களுக்கு
கஷ்டம்
கொடுக்க
மாட்டார்கள்.
சதோபிரதான
நிலையிலிருந்து தமோபிரதானமாக
ஆவதற்கு
எவ்வளவு
பிறவிகள்
பிடித்துள்ளன
என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
63
பிறவிகள்
என்று
கூறமாட்டோம்.
84
பிறவிகள்
பிடித்துள்ளது.
நாம்
சதோபிரதானமாக இருந்தோம்.
சொர்க்கவாசி
அதாவது
சுகதாமத்திற்கு
அதிபதியாக
இருந்தோம்
என்ற
இந்த
நிச்சயமோ
உள்ளது அல்லவா?
சுகதாமமாக
இருந்தது.
அதற்குத்
தான்
ஆதிசனாதன
தேவி
தேவதா
தர்மம்
என்று
கூறப்படுகிறது.
அவர்களும்
மனிதர்களாகத்
தான்
இருந்தார்கள்.
தெய்வீக
குணங்கள்
உடையவர்களாக
இருந்தார்கள்.
அவ்வளவு தான்.
இச்சமயத்தில்
இருப்பவர்கள்
அசுர
குணம்
உடைய
மனிதர்கள்.
அசுரர்கள்
மற்றும்
தேவதைகளுக்கிடையில் யுத்தம்
நடந்தது.
பின்
தேவதைகளின்
இராஜ்யம்
ஸ்தாபனை
ஆகியது
என்பதையோ
சாஸ்திரங்களில்
எழுதி விட்டுள்ளார்கள்.
நீங்கள்
முதலில் அசுரர்களாக
இருந்தீர்கள்
என்பதையோ
தந்தை
புரிய
வைக்கிறார்.
தந்தை வந்து
பிராமணராக
ஆக்கி
பிராமணரிலிருந்து தேவதையாக
ஆக்குவதற்கான
யுக்தி
கூறியுள்ளார்.
மற்றது அசுரர்கள்
மற்றும்
தேவதைகளின்
யுத்தத்தின்
விஷயமோ
கிடையவே
கிடையாது.
தேவதைகளுக்கு
"அஹிம்சா
பரமோ
தர்மம்"
என்று
கூறப்படுகிறது.
தேவதைகள்
எப்பொழுதாவது
சண்டையிடுபவர்களா
என்ன?
ஹிம்சையின் விஷயமோ
இருக்க
முடியாது.
சத்யுகத்தில்
தெய்வீக
இராஜ்யத்தில்
யுத்தம்
எங்கிருந்து
வந்தது?
சத்யுகத்தின் தேவதைகள்
இங்கு
வந்து
அசுரர்களுடன்
சண்டையிடுவார்களா?
இல்லை
அசுரர்கள்
அங்கு
தேவதைகளிடம் சென்று
சண்டையிடுவார்களா?
அவ்வாறு
ஆகவே
முடியாது.
இது
பழைய
உலகம்
ஆகும்.
அது
புதிய
உலகம் ஆகும்.
பின்
யுத்தம்
எவ்வாறு
ஏற்பட
முடியும்?
பக்தி
மார்க்கத்திலோ
மனிதர்கள்
என்ன
கேட்கிறார்களோ அதை
சத்தியம்
சத்தியம்
என்று
எண்ணிக்
கொண்டே
இருக்கிறார்கள்.
யாருடைய
யுத்தியும்
வேலை
செய்வதில்லை.
முற்றிலுமே
கல்
போன்ற
புத்தி
உடையவர்களாக
இருக்கிறார்கள்.
கலியுகத்தில்
இருப்பவர்கள்
கல்
போன்ற
புத்தி உடையவர்கள்.
சத்யுகத்தில்
தங்கம்
போன்ற
புத்தி
உடையவர்களாக
இருப்பார்கள்.
இராஜ்யம்
இருப்பதே
"பாரஸ்நாத்"
தினுடையது
ஆகும்.
இங்கோ
இராஜ்யம்
இல்லை.
துவாபரத்தின்
இராஜாக்கள்
கூட
அபவித்திரமாக
(தூய்மையற்றவர்களாக)
இருந்தார்கள்.
இரத்தினங்கள்
பதிக்கப்பட்ட
கிரீடம்
இருந்தது.
ஒளியினுடையது
இல்லை.
அதாவது
தூய்மை
இருக்கவில்லை.
அங்கு
எல்லோருமே
தூய்மையாக
இருந்தார்கள்.
ஒளிக்
கிரீடம்
என்பதன் பொருள்
ஏதோ
மேலே
ஒளி
நின்று
கொண்டிருக்கிறது
என்று
பொருளல்ல.
படத்தில்
தூய்மையின்
அடையாளமாக
(தலைக்கு
பின்)
ஒளியைக்
காண்பித்துள்ளார்கள்.
இச்சமயம்
நீங்களும்
தூய்மை
ஆகிறீர்கள்.
உங்களுடைய
(லைட்)
ஒளி
எங்கே
உள்ளது?
தந்தையிடம்
யோகம்
கொண்டு
தூய்மை
ஆகிறீர்கள்
என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
அங்கு
விகாரத்தின்
பெயர்
கிடையாது.
விகாரி
இராவண
இராஜ்யமே
முடிந்து
போய்
விடுகிறது.
இப்பொழுது
இராவண
இராஜ்யம்
இருக்கிறது
என்பதை
நிரூபிப்பதற்காக
இங்கு
இராவணனைக்
காண்பிக்கிறார்கள்.
இராவணனை
ஒவ்வொரு
வருடமும்
எரிக்கிறார்கள்.
ஆனால்
எரிந்து
போவதில்லை.
நீங்கள்
அந்த
இராவணன் மீது
வெற்றி
அடைகிறீர்கள்.
பிறகு
இந்த
இராவணன்
இருக்கவே
மாட்டான்.
நீங்கள்
அஹிம்சாவாதி
ஆவீர்கள்.
உங்களுடைய
வெற்றி
யோக
பலத்தினால்
ஆகிறது.
நினைவு
யாத்திரை மூலமாக
உங்களுடைய
பல
பிறவிகளின்
எல்லா
விகர்மங்களும்
விநாசம்
ஆகப்
போகிறது.
பல
பிறவிகள் என்றால்
எப்பொழுது
முதல்?
விகர்மங்கள்
(தீய
செயல்கள்)
எப்பொழுது
ஆரம்பமாகிறது?
முதன்
முதலோ ஆதிசனாதன
தேவி
தேவதா
தர்மத்தினராகிய
நீங்கள்
தான்
வந்தீர்கள்.
சூரிய
வம்சத்தினர்
பின்னர்
சந்திர வம்சத்தில்
இரண்டு
கலை
குறைந்து
போய்
விடுகிறது.
பிறகு
மெல்ல
மெல்ல
கலைகள்
குறைந்து
கொண்டே போகிறது.
இப்பொழுது
அடிப்படையான
விஷயமாவது
தந்தையை
நினைவு
செய்து
சதோபிரதானமாக
ஆக வேண்டும்.
யார்
முந்தைய
கல்பத்தில்
சதோபிரதானமாக
ஆகி
இருந்தார்களோ
அவர்களே
ஆகிவிடுவார்கள்.
வந்து
கொண்டே
இருப்பார்கள்.
வரிசைக்கிரமமாகவோ
இருப்பார்கள்.
பிறகு
நாடகப்படி
வரும்
பொழுது
கூட இவ்வாறே
வரிசைக்கிரமமாக
வருவார்கள்.
வந்து
பிறவி
எடுப்பார்கள்.
நாடகம்
எவ்வளவு
விசித்திரமாக
அமைக்கப்பட்டுள்ளது!
இதை
அறிந்து
கொள்வதற்குக்
கூட
அறிவு
வேண்டும்.
எப்படி
நீங்கள்
கீழே
இறங்கினீர்களோ இப்பொழுது
மீண்டும்
ஏற
வேண்டும்.
வரிசைக்கிரமமாகத்
தான்
தேர்ச்சி
அடைவார்கள்.
பின்
வரிசைக்கிரமமாக கீழே
வருவார்கள்.
உங்களுடைய
இலட்சியம்,
நோக்கமே
சதோபிரதானமாக
ஆக
வேண்டும்
என்பதாகும்.
எல்லோருமே
முழு
தேர்ச்சி
அடைவதில்லை.
100 (மதிப்பெண்கள்)
மார்க்குகளிலிருந்து பிறகு
குறைந்து
கொண்டே போகிறது.
எனவே
மிகவுமே
முயற்சி
செய்ய
வேண்டும்.
இந்த
புருஷார்த்தத்தில்
(முயற்சி)
தான்
தோற்று விடுகிறார்கள்.
சேவை
செய்வதோ
சுலபமாகும்.
மியூசியத்தில்
நீங்கள்
எந்த
விதத்தில்
புரிய
வைக்கிறீர்கள் என்பதை
வைத்து
ஒவ்வொருடைய
படிப்பு
பற்றி
தெரிய
வருகிறது.
இவர்
நன்றாகப்
புரிய
வைப்பதில்லை என்பதை
தலைமை
ஆசிரியர்
பார்க்கும்
பொழுது
அவரே
சென்று
புரிய
வைப்பார்,
வந்து
உதவி
செய்வார்.
இவர்கள்
சரியாகப்
புரிய
வைக்கிறார்களா
என்பதைப்
பார்ப்பதற்காக
ஓரிரண்டு
பேர்
காவலர்களாக
வைக்கப் படுகிறார்கள்.
யாராவது
கேள்வி
கேட்கும்
பொழுது
குழம்பி
ஒன்றும்
விடுவதில்லையே?
சென்டரின்
சேவையை விட
கண்காட்சியின்
சேவை
நன்றாக
இருக்கும்
என்பதையும்
புரிந்துள்ளீர்கள்.
கண்காட்சியை
விட
மியூசியத்தில் நன்றாக
இருக்கும்.
மியூசியத்தில்
நல்ல
முறையில்
(ஷோ)
வெளிப்படுத்துகிறார்கள்.
பின்
யார்
பார்த்துவிட்டுச் செல்கிறார்களோ
அவர்கள்
மற்றவர்களுக்குக்
கூறிக்
கொண்டே
இருப்பார்கள்.
இதுவோ
கடைசிவரையும்
நடந்து கொண்டு
தான்
இருக்கும்.
இந்த
காட்
ஃபாதர்லி வர்ல்டு யுனிவர்சிட்டி
(இறை
தந்தையின்
உலக
பல்கலைக்
கழகம்)
என்ற
வார்த்தை நன்றாக
உள்ளது.
இதில்
மனிதர்களுடைய
பெயரே
கிடையாது.
இதனுடைய
திறப்புவிழா
யார்
செய்கிறார்கள்?
நீங்கள்
பெரிய
மனிதர்கள்
மூலமாக
திறப்பு
விழா
செய்விக்கிறீர்கள்.
ஆக
பெரியவர்களுடைய
பெயர்
கேள்விப்பட்டு நிறைய
பேர்
வருகிறார்கள்.
ஒருவருக்கு
பின்னால்
ஏராளமானோர்
வந்துவிடுவார்கள்.
எனவே
பெரிய
பெரிய மனிதர்களின்
அபிப்ராயங்களை
பிரசுரியுங்கள்
என்று
பாபா
தில்க்கு எழுதினார்.
பின்
மனிதர்கள்
பார்த்து
"இவர்களிடம்
இவ்வளவு
பெரிய
பெரிய
மனிதர்கள்
செல்கிறார்கள்"
என்பார்கள்.
இவர்களோ
மிகவும்
நல்ல அபிப்ராயம்
கொடுக்கிறார்கள்.
எனவே
இதைப்
பிரசுரிப்பது
நல்லது.
இதில்
வேறு
ஏதோ
மந்திர
ஜாலம் ஆகியவற்றின்
விஷயம்
கிடையாது.
எனவே
அபிப்ராயத்தின்
புத்தகம்
தயாரிக்க
வேண்டும்
என்று
பாபா எழுதிக்
கொண்டே
இருக்கிறார்.
இங்கும்
விநியோகிக்க
வேண்டும்.
பொய்யான
உடல்,
பொய்யான
மாயை
.. .. ..
என்று
பாடப்படுகிறது.
இதில்
எல்லாமே
வந்துவிடுகிறது.
நிறைய
பேர்
இதை
இராவண
இராஜ்யம்
இராட்சச இராஜ்யம்
என்று
கூறுகிறார்கள்.
முதலிலோ யாருடைய
இராஜ்யம்
உள்ளது
என்பது
பற்றிய
சிந்தனை
வர வேண்டும்.
பதீதர்களாகிய
எங்களை
பாவனமாக
ஆக்குங்கள்
என்று
கூறுகிறார்கள்.
எனவே
பதீத
தன்மையில் எல்லாமே
வந்துவிட்டது.
எல்லோருமே
ஹே
பதீத
பாவனரே!
என்று
கூறுகிறார்கள்
என்றால்,
அவசியம் பதீதமானவர்கள்
ஆகிறார்கள்
அல்லவா!
பதீத
பாவனர்
பரமபிதா
பரமாத்மாவா,
இல்லை
இந்த
எல்லா
நதிகளும்
கால்வாய்களுமா?"
என்ற
இந்தப் படத்தைக்
கூட
நீங்கள்
சரியாக
வடிவமைத்துள்ளீர்கள்.
அமிர்தசரஸிலும்
குளங்கள்
உள்ளன.
தண்ணீர்
முழுவதும் அசுத்தமானதாக
ஆகி
விடுகிறது.
அதை
பிறகு
அவர்கள்
அமிர்தத்தின்
குளம்
என்று
நினைக்கிறார்கள்.
பெரிய பெரிய
இராஜாக்கள்
அமிர்தம்
என்று
கருதி
குளத்தை
சுத்தப்படுத்துகிறார்கள்.
எனவே
பெயரே
அமிர்தசரஸ் என்று
வைத்துள்ளார்கள்.
இப்பொழுது
கங்கையைக்
கூட
அமிர்தம்
என்று
கூறுகிறார்கள்.
தண்ணீர்
எவ்வளவு அசுத்தமாக
ஆகிவிடுகிறது
என்றால்
கேட்கவே
வேண்டாம்.
பாபா
இந்த
நதிகள்
ஆகியவற்றில்
ஸ்நானம் செய்திருக்கிறார்.
மிகவுமே
அசுத்தமான
தண்ணீராக
இருக்கும்.
பிறகு
மண்ணெடுத்து
பூசிக்
கொள்கிறார்கள்.
பாபா
அனுபவம்
உடையவர்
அல்லவா!
இவரைப்
போன்ற
அனுபவம்
உடையவர்
யாருமே
இருக்க
மாட்டார்கள்.
பெரிய
பெரிய
வைஸ்ராய்,
ராஜாக்கள்
ஆகியோரைக்
கூட
சந்திக்கும்
அனுபவம்
இருந்தது.
சோளம்,
கம்பு ஆகியவை
கூட
விற்றுக்
கொண்டிருந்தார்.
சிறிய
வயதில்
4-6
அணா
சம்பாதித்தால்
போதும்
குஷி
அடைந்து விடுவார்.
இப்பொழுதோ
பாருங்கள்
எங்கோ
சென்றுவிட்டார்!
கிராமத்து
சிறுவன்
பின்
என்னவாக
ஆகிறார்!
நான்
சாதாரண
உடலில் வருகிறேன்
என்று
தந்தையும்
கூறுகிறார்.
இவர்
தன்னுடைய
பிறவிகளைப்
பற்றியே அறியாமல்
இருக்கிறார்.
எப்படி
84
பிறவிகள்
எடுத்து
சாதாரண
சிறுவன்
ஆனார்
என்பதை
தந்தை
வந்து
புரிய வைக்கிறார்.
கிருஷ்ணனினுடையதும்
சரித்திரம்
இல்லை.
கம்சனினுடையதும்
இல்லை.
கிருஷ்ணரைப்
பற்றி பானை
உடைப்பது
போன்ற
இதெல்லாம்
பொய்யாகக்
கூறுகிறார்கள்.
தந்தையைப்
பாருங்கள்,
எவ்வளவு
எளிமையாகக்
கூறுகிறார்
-
இனிமையிலும்
இனிமையான
குழந்தைகளே!
எழுந்தாலும்,
அமர்ந்தாலும்
நீங்கள்
என் ஒருவனை
மட்டும்
நினைவு
செய்யுங்கள்.
நான்
உயர்ந்ததிலும்
உயர்ந்தவன்
அனைத்து
ஆத்மாக்களின் தந்தை
ஆவேன்.
நாம்
அனைவரும்
சகோதரர்கள்
ஆவோம்.
அவர்
தந்தை
ஆவார்
என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
சகோதரர்களாகிய
நாங்கள்
அனைவரும்
ஒரு
தந்தையை
நினைவு
செய்கிறோம்.
அவர்களோ
"ஹே
பகவான்,
ஹே
இறைவனே"
என்று
கூறுகிறார்கள்.
ஆனால்
எதுவுமே
தெரியாமல்
உள்ளார்கள்.
தந்தை இப்பொழுது
அறிமுகத்தை
அளித்துள்ளார்.
நாடகத்
திட்டப்படி
இதற்கு
கீதையின்
யுகம்
என்று
கூறப்படுகிறது.
ஏனெனில்
தந்தை
வந்து
ஞானத்தைக்
கூறுகிறார்.
இதன்
மூலம்
நீங்கள்
உயர்ந்தவர்
ஆகிறீர்கள்.
ஆத்மா
கூட சரீரத்தை
தாரணை
செய்து
பிறகு
பேசுகிறது.
தந்தை
கூட
திவ்ய
அளெகீக
காரியம்
செய்ய
வேண்டியுள்ளது.
எனவே
சரீரத்தின்
ஆதாரம்
எடுக்கிறார்.
அரை
கல்பம்
மனிதர்கள்
துக்கமுடையவர்களாக
ஆகிறார்கள்.
பின் அழைக்கிறார்கள்.
தந்தை
கல்பத்தில்
ஒரே
ஒரு
முறை
தான்
வருகிறார்.
நீங்களோ
திரும்பத்
திரும்ப
உங்கள் பாகத்தை
ஏற்று
நடிக்கிறீர்கள்.
ஆதி
சனாதன
என்பது
தேவி
தேவதா
தர்மம்
ஆகும்.
அந்த
அஸ்திவாரம்
(ஃபவுண்டேஷன்)
இல்லை.
மற்றபடி
அந்த
தர்மத்தினுடைய
படங்கள்
மட்டும்
மீதி
உள்ளன.
எனவே
தந்தையும் கூறுகிறார்,
நீங்கள்
இந்த
இலட்சுமி
நாராயணராக
ஆக
வேண்டும்.
"ஏம்
ஆப்ஜெக்ட்"
-
இலட்சியமோ
முன்னால் உள்ளது.
இது
ஆதி
சனாதன
தேவி
தேவதா
தர்மம்
ஆகும்.
மற்றபடி
இந்து
தர்மம்
என்று
எந்த
ஒரு தர்மமும்
இல்லை.
இந்து
என்பதோ
இந்துஸ்தானின்
பெயர்
ஆகும்.
எப்படி
சந்நியாசிகள்
பிரம்மம்
அதாவது வசிக்கும்
இடத்தை
பகவான்
என்று
கூறிவிடுகிறார்களோ
அதே
போல
இவர்கள்
வசிக்கக்
கூடிய
இடத்தையே தங்களது
தர்மம்
என்று
கூறிவிடுகிறார்கள்.
ஆதி
சனாதன
என்பது
இந்து
தர்மமாக
இருந்ததா
என்ன?
இந்துக்களே
தேவதைகளுக்கு
முன்னால்
சென்று
வணங்குகிறார்கள்.
மகிமை
பாடுகிறார்கள்.
யார்
தேவதைகளாக இருந்தார்களோ
அவர்களே
இந்து
ஆகிவிட்டார்கள்.
தர்மம்
கெட்டு
கர்மம்
கெட்டவர்களாக
ஆகிவிட்டுள்ளார்கள்.
மற்ற
எல்லா
தர்மங்களும்
நிலையாக
உள்ளன.
இந்த
தேவதா
தர்மம்
தான்
பெரும்பாலும்
மறைந்து
விட்டுள்ளது.
தாங்களே
பூஜிக்கத்
தக்கவர்களாக
இருந்தார்கள்.
பின்
பூசாரி
ஆகி
தேவதைகளுக்குப்
பூஜை
செய்கிறார்கள்.
எவ்வளவு
புரிய
வைக்க
வேண்டியுள்ளது!
கிருஷ்ணருக்காகவும்
எவ்வளவு
புரிய
வைக்கிறார்!.
இவர்
சொர்க்கத்தின் முதல்
இளவரசர்
ஆவார்.
எனவே
84
பிறவிகளும்
அவரிடமிருந்து
தான்
ஆரம்பமாகும்.
அநேக
பிறவிகளின் கடைசி
பிறவிக்கும்
கடைசியில்
நான்
பிரவேசம்
செய்கிறேன்
என்று
தந்தை
கூறுகிறார்.
எனவே
அதனுடைய கணக்கை
அவசியம்
கூறுவார்
அல்லவா?
இந்த
இலட்சுமி
நாராயணர்
தான்
முதல்
நம்பரில்
வந்திருந்தார்கள்.
எனவே
யார்
முதலில் இருந்தார்களோ
அவர்களே
பின்
கடைசியில்
செல்வார்கள்.
ஒரே
ஒரு
கிருஷ்ணர் மட்டும்
இருக்கவில்லை
அல்லவா?
மற்ற
விஷ்ணு
வம்சாவளிகள்
கூட
இருந்தார்கள்.
இந்த
விஷயங்களை நீங்கள்
நல்ல
முறையில்
அறிந்துள்ளீர்கள்.
இதை
பின்
மறந்து
விடக்
கூடாது.
இப்பொழுது
மியூசியங்களோ திறந்து
கொண்டே
இருக்கின்றன.
நிறைய
திறந்து
கொண்டே
போகும்.
நிறைய
பேர்
வருவார்கள்.
எப்படி கோவிலுக்குச்
சென்று
தலை
வணங்குகிறார்கள்.
உங்களிடம்
கூட
இலட்சுமி
நாராயணரின்
படங்கள்
இருப்பதைப் பார்க்கும்
பொழுது
பக்தர்கள்
அந்தப்
படங்களுக்கு
முன்னால்
பைசா
வைத்து
விடுகிறார்கள்.
இங்கோ
புரிந்து கொள்ள
வேண்டிய
விஷயம்
உள்ளது.
பைசா
வைக்கும்
விஷயம்
இல்லை
என்று
நீங்கள்
கூறுகிறீர்கள்.
இங்பொழுது
நீங்கள்
சிவன்
கோவிலுக்கு
சென்றீர்கள்
என்றால்
பைசா
வைப்பீர்களா
என்ன?
நீங்கள்
புரிய வைக்கும்
இலட்சியத்துடன்
செல்வீர்கள்.
ஏனெனில்,
நீங்கள்
அனைவரினுடைய
வாழ்க்கை
சரித்திரத்தையும் அறிந்துள்ளீர்கள்.
கோவில்களோ
நிறைய
உள்ளன.
முக்கியமானது
சிவனின்
கோவில்
ஆகும்.
அங்கு
மற்றவர்களின் விக்கிரங்களை
ஏன்
வைக்கிறார்கள்?
எல்லோருக்கும்
முன்னால்
பைசா
வைத்துக்
கொண்டே
சென்றார்கள் என்றால்
வருவாய்
ஆகிவிடும்.
எனவே
அதை
சிவனின்
கோவில்
என்று
கூறுவார்களா,
இல்லை,
சிவ குடும்பத்தின்
கோவில்
என்று
கூறுவார்களா?
சிவபாபா
இந்தக்
குடும்பத்தை
ஸ்தாபனை
செய்தார்.
உண்மையிலும் உண்மையான
குடும்பமோ
பிராமணர்களாகிய
உங்களுடையது
ஆகும்.
சிவபாபாவின்
குடும்பமோ
சாலிக்கிராமங்கள் ஆகும்.
பிறகு
நாம்
சகோதர
சகோதரியின்
குடும்பம்
ஆகிவிடுகிறோம்.
முதலில் சகோதர
சகோதரர்களாக இருந்தோம்.
பிறகு
தந்தை
வரும்
பொழுது
சகோதர
சகோதரி
ஆகிறீர்கள்.
பிறகு
நீங்கள்
சத்யுகத்தில்
வருகிறீர்கள்.
எனவே
அங்கு
குடும்பம்
இன்னும்
பெரியதாக
இருக்கும்.
அங்கு
கூட
திருமணம்
நடக்கும்
பின்
குடும்பம் இன்னும்
விருத்தியை
அடைகிறது.
வீடு
அதாவது
சாந்தி
தாமத்தில்
இருக்கும்
பொழுது
நாம்
சகோதரர்கள் ஆவோம்.
ஒரு
தந்தை
ஆவார்.
பிறகு
இங்கு
பிரஜாபிதா
பிரம்மாவின்
குழந்தைகள்
சகோதர
சகோதரி ஆவார்கள்.வேறு
எந்த
சம்பந்தமும்
கிடையாது.
பிறகு
இராவண
இராஜ்யத்தில்
மிகவுமே
விருத்தி
ஆகிக் கொண்டே
போகிறது.
தந்தை
எல்லா
இரகசியங்களையும்
புரிய
வைத்து
கொண்டே
இருக்கிறார்.
பிறகும் கூறுகிறார்
-
இனிமையிலும்
இனிமையான
குழந்தைகளே!
தந்தையை
நினைவு
செய்தீர்கள்
என்றால்,
பல பிறவிகளின்
பாவங்களின்
சுமை
இறங்கி
விடும்.
படிப்பினால்
பாவங்கள்
அழியாது.
தந்தையின்
நினைவு தான்
முக்கியமானது.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
வெகுகாலம்
கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு,
தாய்
தந்தை
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீக
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
முழு
மதிப்பெண்களுடன்
தேர்ச்சி
அடைய
வேண்டுமென்றால்,
தமது
புத்தியை சதோபிரதானமாக
தங்கம்
போல
ஆக்க
வேண்டும்.
மழுங்கிய
புத்தியிலிருந்து துல்லிய புத்தி உடையவராக
ஆகி
நாடகத்தின்
விசித்திர
இரகசியத்தைப்
புரிந்து
கொள்ள
வேண்டும்.
2.
இப்பொழுது
தந்தைக்கு
சமமாக
தெய்வீகமான
மற்றும்
அலௌகீக
செயல்களைச்
செய்ய வேண்டும்.
டபுள்
அஹிம்சாவாதியாகி
யோக
பலத்தினால்
தங்களது
விகர்மங்களை
விநாசம் செய்ய
வேண்டும்.
வரதானம்:
இந்த
பிராமண
வாழ்க்கையில்
பரமாத்ம
ஆசீர்வாதங்களின்
பாலனையை
(வளர்ப்பை)
பிராப்தி
செய்யக்
கூடிய
மஹான்
ஆத்மா
ஆகுக.
இந்த
பிராமண
வாழ்க்கையில்
பரமாத்மாவின்
ஆசீர்வாதங்கள்
மற்றும்
பிராமண
பரிவாரத்தின் ஆசீர்வாதங்கள்
பிராப்தியாகிறது.
இந்த
சிறிய
யுகம்
அனைத்து
பிராப்திகள்
மற்றும்
சதா
காலத்தின்
பிராப்திகளை செய்வதற்கான
யுகம்
ஆகும்.
சுயம்
தந்தை
அனைத்து
உயர்வான
கர்மங்களின்,
உயர்வான
எண்ணங்களின் ஆதாரத்தில்
அனைத்து
பிராமண
குழந்தைகளுக்கும்
எந்த
நேரமும்
இதயப்
பூர்வமான
ஆசீர்வாதங்களைக் கொடுத்தபடி
இருக்கிறார்.
ஆனாலும்
இந்த
அனைத்து
ஆசீர்வாதங்களையும்
அடைவதற்கான
ஆதாரம் நினைவு
மற்றும்
சேவையின்
சமநிலை
ஆகும்.
இந்த
மகத்துவத்தை
அறிந்து
மஹான்
ஆத்மா
ஆகுங்கள்.
சுலோகன்:
பரந்த
மனமுள்ளவராகி
முகம்
மற்றும்
நடத்தையின்
மூலம்
குணங்கள்
மற்றும் சக்திகளின்
அன்பளிப்பை
பகிர்ந்தளிப்பதுதான்
சுப
பாவனை
மற்றும்
சுப
விருப்பங்கள்
ஆகும்.
ஓம்சாந்தி