14.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே ! நீங்கள் சம்பூர்ண பாவனமாக வேண்டும் . அதனால் ஒருபோதும் யாருக்கும் துக்கம் தரக் கூடாது . கர்மேந்திரியங்கள் மூலம் எந்த ஒரு விகர்மமும் நடைபெறக் கூடாது . சதா பாபாவின் கட்டளைப்படி நடந்து கொண்டே இருங்கள் .

கேள்வி:
கல்லில் இருந்து பாரஸ் ( தங்கம் ) ஆவதற்கான யுக்தி என்ன ? எந்த ஒரு நோய் இதில் தடை ரூபம் ஆகின்றது ?

பதில்:

கல்லில் இருந்து பாரஸ் (தங்கம் போன்று) ஆவதற்கு முழுமையான நாராயணி நஷா வேண்டும். தேக அபிமானம் விட்டுப்போய் இருக்க வேண்டும். இந்த தேக அபிமானம் தான் கடுமையிலும் கடுமையான நோயாகும். எதுவரை ஆத்ம அபிமானியாக இல்லையோ, அதுவரை பாரஸ் ஆக முடியாது. பாரஸ் ஆகக் கூடியவர்கள் தான் பாபாவுக்கு உதவியாளர் ஆக முடியும். 2. சேவையும் கூட உங்களது புத்தியைத் தங்கத்தால் ஆனதாக ஆக்கி விடும். இதற்காகப் படிப்பின் மீது முழு கவனம் வேண்டும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை எச்சரிக்கை தருகிறார் - குழந்தைகளே, தன்னை சங்கமயுகத்தவர் என உணருங்கள். சத்யுகத்தவர் என்று புரிந்து கொள்ள மாட்டீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் தான் தங்களை சங்கமயுகத்தவராக உணர்ந்திருப்பீர்கள். அதிக வேறுபாடு உள்ளது - சத்யுகம் மற்றும் கலியுகம், சொர்க்கவாசி மற்றும் நரகவாசி. நீங்களோ சொர்க்கவாசியும் இல்லை, நரகவாசியும் இல்லை. நீங்கள் புருஷோத்தம் சங்கமவாசி. இந்த சங்கமயுகத்தை பிராமணர்களாகிய நீங்கள் தான் அறிவீர்கள். வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் ஒருவேளை தெரிந்திருக்கவும் செய்யலாம். ஆனால் மறந்து விடுகிறீர்கள். இப்போது மனிதர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? அவர்களோ இராவணனின் விலங்குகளில் சிக்கியுள்ளனர். இராம இராஜ்யமோ இப்போது இல்லை. இராவணனை எரித்துக் கொண்டே இருக்கின்றனர். இதிலிருந்து தெளிவா கின்றது, இப்போது இருப்பது இராவண இராஜ்யம். இராம இராஜ்யம் என்பது என்ன, இராவண இராஜ்யம் என்பது என்ன? இதையும் நீங்கள் நமபர்வார் அறிந்திருக்கிறீர்கள். பாபா வருகிறார், சங்கமயுகத்தில் என்றால் இந்த ஒப்பிடுதல் இப்போது செய்யப்படுகின்றது- சத்யுகம் மற்றும் கலியுகத்திற்கு இடையிலானது. கலியுகத்தில் இருப்பவர்கள் நரகவாசி என்றும் சத்யுகத்தில் இருப்பவர்கள் சொர்க்கவாசி என்றும் சொல்லப்படுகிறார்கள். சொர்க்கவாசிகள் பாவனமானவர்கள் (தூய்மையானவர்கள்) என்றும் நரகவாசிகள் பதீத் (தூய்மையற்றவர்கள்) என்றும் சொல்லப்படுகிறார்கள். உங்களுடைய விஷயமோ தனிப்பட்டது. ஆக, நீங்கள் இந்தப் புருஷோத்தம சங்கமயுகத்தை அறிவீர்கள். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் பிராமணர் என்று. வர்ணங்களைக் குறிக்கும் சித்திரமும் நன்றாக உள்ளது. இதைப் பற்றியும் நீங்கள் புரிய வைக்க முடியும். வேறுபாட்டைப் பற்றிச் சொல்ல வேண்டும். அதன் மூலம் மனிதர்கள் தங்களை நரகவாசி தூய்மையற்ற ஏழை எனப் புரிந்து கொள்ள வேண்டும். எழுத வேண்டும், இப்போது இது பழைய கலியுக உலகம் என்று. சத்யுகமாகிய சொர்க்கம் புது உலகமாகும். நீங்கள் நரகவாசியா? அல்லது சொர்க்கவாசியா? நீங்கள் தேவதையா? அல்லது அசுரரா? நாங்கள் சொர்க்கவாசி என்று யாரும் சொல்ல மாட்டார்கள், அநேகர் இதுபோல் நினைக்கிறார்கள், நாமோ சொர்க்கத்தில் அமர்ந்துள்ளோம் என்று. அட, இதுவோ நரகம் இல்லையா? சத்யுகம் எங்கே உள்ளது? இது இராவண இராஜ்யம். அதனால் தான் இராவணனை எரிக்கின்றனர். அவர்களிடமும் கூட எத்தனை பதில்கள் உள்ளன! சர்வவியாபி பற்றியும் எவ்வளவு வாக்குவாதங்கள் செய்கின்றனர்! குழந்தைகளாகிய நீங்களோ முற்றிலும் தெளிவாகக் கேட்கிறீர்கள் - இப்போது புது உலகமா? அல்லது பழைய உலகமா? இதுபோல் தெளிவான வேறுபாட்டைச் சொல்ல வேண்டும். இதில் அதிக மூளை (புத்தி) வேண்டும். இதுபோல் யுக்தியுடன் எழுத வேண்டும், அதன் மூலம் மனிதர்கள் தங்களையே கேட்டுக் கொள்ள வேண்டும், நாம் நரகவாசியா? அல்லது சொர்க்கவாசியா? இது பழைய உலகமா? அல்லது புதிய உலகமா? இது இராம இராஜ்யமா? அல்லது இராவண இராஜ்யமா? நாம் பழைய கலியுக வாசிகளா? அல்லது புதிய உலக வாசிகளா? என்று. ஹிந்தியில் எழுதிப் பிறகு ஆங்கிலம், குஜராத்தியில் மொழிபெயர்க்க (தங்கள் மாநில மொழியில்) வேண்டும். ஆக, மனிதர்கள் தங்களைக் கேட்க வேண்டும், நாம் எங்கே வசிப்பவர்கள்? யாராவது சரீரத்தை விட்டால் சொல்கின்றனர், சொர்க்கத்திற்குச் சென்று விட்டனர் என்று. ஆனால் சொர்க்கம் இப்போது எங்கே உள்ளது? இப்போதோ கலியுகம். நிச்சயமாகப் புனர்ஜென்மமும் இங்கே தான் எடுப்பார்கள் இல்லையா? சொர்க்கம் என்றோ சத்யுகத்திற்குத் தான் சொல்லப்படுகின்றது. அங்கே இப்போது எப்படிச் செல்வார்கள்? இவை அனைத்தும் விசார் சாகர் மந்தன் செய்வதற்கான விஷயங்களாகும். இதுபோல் தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும், அதில் எழுதி வையுங்கள், பகவான் வாக்கு - ஒவ்வொருவரும் தன்னைத் தான் கேட்டுக் கொள்ள வேண்டும், நான் சத்யுக இராம இராஜ்யத்தை சேர்ந்தவனா? அல்லது கலியுக இராவண இராஜ்யத்தைச் சேர்ந்தவனா? பிராமணர்களாகிய நீங்கள் சங்கமயுகவாசிகள். உங்களையோ யாரும் அறிந்து கொள்ளவில்லை. நீங்கள் அனைவரிட மிருந்தும் தனிப்பட்டவர்கள். நீங்கள் சத்யுகம் மற்றும் கலியுகத்தை யதார்த்த ரீதியில் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் தான் கேட்க முடியும், நீங்கள் விகாரி பிரஷ்டாச்சாரியா, நிர்விகாரி சிரேஷ்டாச்சாரியா என்று. இது உங்களுடைய புத்தகமாகவும் ஆக முடியும். புதுப்புது விஷயங்களை வெளிக் கொண்டு வர வேண்டியுள்ளது இல்லையா? இதன் மூலம் மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஈஸ்வரன் சர்வவியாபி இல்லை என்று. நீங்கள் இப்படி எழுதியிருப்பதைப் பார்த்து தாங்களாகவே உள்ளுக்குள் கேட்டுக் கொள்வார்கள். இதை அயர்ன் ஏஜ் (இரும்பு யுகம்) என்றோ அனைவருமே சொல்வார்கள். சத்யுக தெய்வீக இராஜ்யம் என்றோ இதை யாருமே சொல்ல முடியாது. இது நரகமா அல்லது சொர்க்கமா? இது போல் முதல்தரமானதாக எழுதி வையுங்கள்-மனிதர்கள் தங்களைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும், நாம் நிச்சயமாக நரகவாசிகள், பதீதமானவர்கள் தான் என்று. நம்மிடம் தெய்விக குணங்களோ கிடையாது. கலியுகத்தில் சத்யுகத்தவர் யாரும் இருக்க முடியாது. இதுபோல் விசார் சாகர் மந்தன் செய்து எழுத வேண்டும். யார் தாமாகவே முன்வந்து சேவையின் பொறுப்பினை மேற்கொள்கிறார்களோ, அவர்கள் தான் அர்ஜூன்-அதாவது நம்பர் ஒன்னில் வரக்கூடியவர்கள். கீதையில் அர்ஜூன் பெயர் தரப்பட்டுள்ளது.

பாபா சொல்கிறார், இந்த கீதையில் உண்மை என்பது மாவில் உப்பினைப் போல் உள்ளது. உப்பு மற்றும் சீனிக்கிடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது! அது இனிப்பானது, இது கரிப்பானது. கிருஷ்ண பகவான் வாக்கு என்று எழுதி கீதையை உவர்ப்பாக ஆக்கி விட்டுள்ளனர். மனிதர்கள் எவ்வளவு சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளனர்! பாவம், அவர்களுக்கு ஞானத்தின் இரகசியம் பற்றிக் கூடத் தெரியாது. ஞானத்தை பகவான் உங்களுக்குத் தான் சொல்கிறார், வேறு யாருக்கும் தெரியாது. ஞானமோ மிகவும் சுலபமானது. ஆனால் பகவான் படிப்பு சொல்லித் தருகிறார் என்பதை மறந்து விடுகின்றனர். இல்லையென்றால் மாணவர்கள் ஆசிரியரை ஒருபோதும் மறப்பதில்லை. அடிக்கடி சொல்கின்றனர், பாபா, நாங்கள் மறந்து போகிறோம் என்று. பாபா சொல்கிறார், மாயா ஒன்றும் குறைந்ததல்ல. நீங்கள் தேக அபிமானி ஆகி விடுகிறீர்கள். அதிகமாக விகர்மங்கள் ஆகி விடுகின்றன. விகர்மமே நடைபெறாத நாள் என்பதே இல்லை. ஒரு முக்கிய விகர்மம் இதைச் செய்கிறீர்கள்- பாபாவின் கட்டளையையே மறந்து விடுகிறீர்கள். பாபா கட்டளையிடுகிறார், மன்மனாபவ-தன்னை ஆத்மா என உணருங்கள். இந்தக் கட்டளையை ஏற்று நடக்கவில்லை என்றால் நிச்சயமாக விகர்மங்களே நடைபெறும். அதிகப் பாவங்கள் ஆகி விடுகின்றன. பாபாவின் கட்டளைகள் மிக சுலபமானவையும் கூட, அதே சமயம் மிகக் கடினமாகவும் உள்ளன. எவ்வளவு தான் மண்டையை உடைத்துக் கொண்டாலும் கூட மறந்து விடுவார்கள். ஏனென்றால் அரைக்கல்பமாக தேக அபிமானம் உள்ளது இல்லையா? 5 நிமிடம் கூட யதார்த்த ரீதியில் நினைவில் அமர முடிவதில்லை. நாள் முழுவதும் நினைவில் அமர்ந்திருந்தாலோ கர்மாதீத் அவஸ்தா ஆகி விடும். பாபா புரிய வைத்துள்ளார், இதில் முயற்சி உள்ளது. நீங்கள் அந்த உலகாயதப் படிப்பையோ நன்றாகப் படிக்கிறீர்கள். சரித்திர-பூகோளம் படிப்பதில் எவ்வளவு பயிற்சி உள்ளது! ஆனால் நினைவு யாத்திரையில் முற்றிலும் அப்பியாசம் இல்லை. தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்வது என்பது புதிய விஷயம். விவேகம் சொல்கிறது, அப்படிப்பட்ட தந்தையை நல்லபடியாக நினைவு செய்ய வேண்டும். கொஞ்சம் நேரம் ஒதுக்கி ரொட்டித் துண்டு சாப்பிடு கின்றனர், அதுவும் பாபாவின் நினைவில். எவ்வளவு நினைவில் இருக்கிறார்களோ, அவ்வளவு பாவனமாவார்கள். இதுபோல் அநேகக் குழந்தைகள் உள்ளனர், அவர்களிடம் அவ்வளவு பணம் உள்ளது, அதற்கு வட்டி கிடைத்துக் கொண்டே இருக்கும். பாபாவை நினைவு செய்து கொண்டே ரொட்டித் துண்டு சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் போதும். ஆனால் மாயா நினைவு செய்ய விடுவதில்லை. கல்பத்திற்கு முன் யார் எவ்வளவு புருஷார்த்தம் செய்திருக்கிறார்களோ, அவ்வளவு தான் செய்வார்கள். நேரம் பிடிக்கின்றது. சிலர் விரைவாக ஓடிப்போய்ச் சேர்ந்து விடலாம் என்பது முடியாத காரியம். இதிலோ இரண்டு தந்தையர் உள்ளனர். எல்லையற்ற தந்தைக்கு சரீரம் கிடையாது. அவர் இவருக்குள் பிரவேசமாகி பேசுகிறார். ஆக, பாபாவின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். பாபா குழந்தைகளுக்கு இந்த ஸ்ரீமத் தருகிறார் - தேகத்துடன் கூட அனைத்து தர்மங்களையும் விட்டு தன்னை ஆத்மா என உணருங்கள். நீங்கள் பவித்திரமாக வந்தீர்கள். 84 பிறவிகள் எடுத்து-எடுத்தே ஆத்மா நீங்கள் பதீத்தம் (தூய்மையற்ற நிலை) ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது பாவனமாவதற்கு ஸ்ரீமத்படி நடந்து செல்லுங்கள். அப்போது பாபா கியாரண்டி (உத்திரவாதம்) தருகிறார் - உங்களுடைய பாவங்கள் நீங்கி விடும், ஆத்மா நீங்கள் தங்கமாக ஆகி விடுவீர்கள். பிறகு அங்கே (சத்யுகத்தில்) தேகமும் தங்கமானதாகக் கிடைக்கும். யார் இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ, அவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்டு யோசிக்கத் தொடங்குவார்கள், சொல்வார்கள், நீங்கள் சொல்வதோ சரி தான் என்று. பாவனமாக வேண்டுமானால் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. மனம், சொல், செயலால் பவித்திரமாக வேண்டும். மனதில் புயல்கள் வரும். நீங்கள் எல்லையற்ற இராஜ்யத்தைப் பெறுகிறீர்கள் இல்லையா? நீங்கள் உண்மை சொன்னாலும் சரி, சொல்லவில்லை என்றாலும் சரி, பாபா தாமே சொல்கிறார் - மாயாவின் அநேக விகல்பங்கள் (தீய எண்ணங்கள்) வரும். ஆனால் கர்மேந்திரியங்கள் மூலம் ஒருபோதும் விகர்மம் செய்யக் கூடாது. கர்மேந்திரியங்களால் எந்த ஒரு பாவமும் செய்யக் கூடாது.

ஆக, இந்த வேறுபாட்டின் விஷயங்களை நல்லபடியாக எழுத வேண்டும். கிருஷ்ணர் முழு 84 பிறவிகளை எடுக்கிறார். சிவன் புனர்ஜென்மம் எடுப்பதில்லை. அவர் சர்வகுண சம்பன்ன தேவதை, இவரோ தந்தை ஆவார். நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், பாண்டவர்களின் சித்திரங்கள் எவ்வளவு பெரிய-பெரியதாக உருவாக்கப்பட்டுள்ளன! இதனுடைய அர்த்தம், அவர்கள் இவ்வளவு விசால புத்தி உள்ளவர்களாக இருந்தார்கள். புத்தி பெரியதாக இருந்தது. அவர்கள் பிறகு சரீரத்தைப் பெரிதாக ஆக்கி விட்டுள்ளனர். உங்களைப் போல் விசாலபுத்தி வேறு யாருக்கும் இருக்க முடியாது. உங்களுடையது ஈஸ்வரிய புத்தி. பக்தியில் எவ்வளவு பெரிய-பெரிய சித்திரங்களைத் தயார் செய்து பணத்தை வீணடிக்கிறார்கள்! எவ்வளவு வேத, சாஸ்திர, உபநிடதங்களை உருவாக்கி எவ்வளவு செலவு செய்தார்கள்! பாபா சொல்கிறார், நீங்கள் எவ்வளவு பணத்தை வீணடித்தே வந்திருக்கிறீர்கள்! எல்லையற்ற தந்தை புகார் செய்கிறார். நீங்கள் உணர்கிறீர்கள், பாபா நிறைய பணம் கொடுத்திருந்தார். இராஜயோகம் கற்பித்து இராஜாவுக்கெல்லாம் மேலான இராஜாவாக ஆக்கினார். அவர்கள் உலகாயதப் படிப்பைப் படித்து வக்கீல் முதலானவர் களாக ஆகின்றனர். பிறகு அதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. அதனால் ஞானம் வருமானத்துக்கு ஆதாரம் எனச் சொல்லப்படுகின்றது. இந்த ஈஸ்வரியப் படிப்பும் கூட வருமானத்துக்கு ஆதாரம், இதன் மூலம் எல்லையற்ற இராஜ்யம் கிடைக்கின்றது. பாகவதம், இராமாயணம் முதலானவற்றில் எந்த ஒரு ஞானமும் கிடையாது. நோக்கம் குறிக்கோள் எதுவும் கிடையாது. ஞானம் நிறைந்தவராகிய பாபா அமர்ந்து குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறார். இது முற்றிலும் புதிய ஒரு படிப்பு. அதையும் யார் சொல்லித் தருகிறார்? பகவான். புது உலகத்தின் எஜமான் ஆக்குவதற்காகக் கற்றுத் தருகிறார். இந்த இலட்சுமி-நாராயணன் இந்தப் படிப்பினால் உயர்ந்த பதவி பெற்றுள்ளனர். எங்கே இராஜாக்கள், எங்கே பிரஜைகள்! சிலருடைய அதிர்ஷ்டம் திறந்து கொள்ளுமானால் அவர்களது படகு அக்கரை சேரும். மாணவர்கள் புரிந்து கொள்ள முடியும், நாம் படிக்கிறோம், பிறகு கற்றுத் தருவோமா இல்லையா என்று. படிப்பின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும். கல்புத்தியின் காரணத்தால் எதையும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் தங்க புத்தி உள்ளவராக ஆக வேண்டும். யார் சேவையில் இருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் அதுபோன்ற புத்தி அமையும். பேட்ஜ் பற்றியும் யாருக்காவது புரிய வைக்க முடியும். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி பெற்றுக் கொள்ளுங்கள். பாரதம் சொர்க்கமாக இருந்தது இல்லையா? அது நேற்றைய விஷயம். எங்கே 5000 வருடங்களின் விஷயம், எங்கே இலட்சம் வருடங்களின் விஷயம்! எவ்வளவு வித்தியாசம்! நீங்கள் சொல்லிப் புரிய வைத்தாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. முற்றிலும் கல்புத்தியுள்ளவர்கள் போல் உள்ளனர். இந்த பேட்ஜ் உங்களுக்கு ஒரு கீதை போன்றது. இதில் படிப்பு முழுவதும் உள்ளது. மனிதர்களுக்கோ பக்தி மார்க்கத்தின் கீதை தான் நினைவில் உள்ளது. இப்போது நீங்கள் பாபாவின் மூலம் கேட்கின்ற இந்த கீதையினால் நீங்கள் 21 பிறவிகளுக்கு சத்கதி பெறுகிறீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் தான் கீதை படித்தீர்கள். பூஜையும் நீங்கள் தான் ஆரம்பித்து வைத்தீர்கள். இப்போது புருஷாôத்தம் செய்து ஏழைகளை பக்தி மார்க்கத்தின் விலங்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும். யாராவதொருவருக்கு சொல்லிப் புரிய வைத்துக் கொண்டே இருங்கள். இதில் ஓரிருவர் வெளிவருவார்கள். 5-6 பேர் ஒன்றாக வந்தால் முயற்சி செய்து தனித்தனியாகப் படிவம் நிரப்பச் செய்து தனித்தனியாகப் புரிய வைக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களில் ஒருவர் கூட அப்படி இருந்தால் மற்றவர்களைக் கெடுத்து விடுவார்கள். படிவமோ அவசியம் தனியாக நிரப்பச் செய்யுங்கள். ஒருவர் மற்றவருடையதைப் பார்க்கவும் கூடாது அப்போது அவர்கள் புரிந்து கொள்வார்கள். இந்த யுக்திகள் அனைத்தும் வேண்டும், அப்போது தான் நீங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே செல்வீர்கள்.

பாபாவும் கூட வியாபாரி ஆவார். யார் சாமர்த்தியசாலிகளோ, அவர்கள் நன்றாக வியாபாரம் செய்வார்கள். பாபா எவ்வளவு இலாபத்தில் அழைத்துச் செல்கிறார்! கூட்டமாக ஒன்றாக வருவார்களானால் சொல்லுங்கள், படிவம் தனித்தனியாக நிரப்ப வேண்டும் என்று. அனைவரும் தர்ம சிந்தனை உள்ளவர்கள் என்றால் ஒன்றாக அமர வைத்துக் கேட்க வேண்டும். கீதை படித்திருக்கிறீர்களா? தேவதைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா? பாபா சொல்லியிருக்கிறார், பக்தர்களுக்குத் தான் சொல்ல வேண்டும். என்னுடைய பக்தர்கள் மற்றும் தேவதைகளின் பக்தர்கள் அதை விரைவில் புரிந்து கொள்வார்கள். கல்லைப் பாரஸாக ஆக்குவதொன்றும் சாதாரண விஷயம் கிடையாது. தேக அபிமானம் என்பது மிகவும் கடுமையிலும் கடுமையான, மிக அழுக்கான ஒரு நோயாகும். எதுவரை தேக அபிமானம் விட்டுப் போகவில்லையோ, அதுவரை சீர்திருந்துவது மிகவும் கஷ்டமாகும். இதிலோ முழுமையாக நாராயணி நஷா இருக்க வேண்டும். நாம் அசரீரியாக வந்தோம், அசரீரி ஆகிச் செல்ல வேண்டும். இங்கே என்ன இருக்கிறது? பாபா சொல்லியுள்ளார், என்னை நினைவு செய்யுங்கள். இதில் தான் முயற்சி உள்ளது. பெரிய குறிக்கோளாகும். நடத்தை மூலம் தெரியவரும்- இவர் நல்ல உதவியாளர் ஆவாரா, கல்பத்துக்கு முன் போல்? நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம் . ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே !

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) மனம், சொல், செயலால் பவித்திரமாக வேண்டும். கர்மேந்திரியங்கள் மூலம் எந்த ஒரு விகர்மமும் நிகழக் கூடாது. இதில் கவனம் வேண்டும். ஆத்மாவைத் தங்கமாக ஆக்குவதற்காக பாபா நினைவில் அவசியம் இருக்க வேண்டும்.

2) தேக அபிமனம் என்ற கடுமையான நோயிலிருந்து விடுபடுவதற்கு நாராயணி நஷாவில் இருக்க வேண்டும். அப்பியாசம் செய்யுங்கள் - நாம் அசரீரியாக வந்தோம். இப்போது அசரீரி ஆகி, திரும்பிச் செல்ல வேண்டும்.


வரதானம்:
புத்திசாலிக்கெல்லாம் புத்திசாலியான பாபாவிடம் தங்களின் சாமர்த்தியத்தை காண்பிப்பதற்கு பதிலாக உணரும் சக்தி மூலம் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டவர் ஆகுக .

நிறைய குழந்தைகள் புத்திசாலிகளுக்கெல்லாம் புத்திசாலியான தந்தையிடம் கூட சாமர்த்தியத்தை காண்பிக்கிறார்கள். தனது வேலையை நிறைவேற்றிக் கொள்வதற்காக, தன்னுடைய பெயரை நல்லதாக்கி கொள்வதற்காக அச்சமயம் உணருகிறார்கள். ஆனால் அந்த உணர்தலில் சக்தி இல்லை. ஆகவே, மாற்றிக் கொள்வதில்லை. சிலர் இது சரியில்லை எனப் புரிந்து கொள்கின்றார்கள். ஆனால் தன்னுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என யோசிக்கிறார்கள். ஆகவே தனது விவேகத்தை கொலை செய்கிறார்கள். இதுவும் பாவ கணக்கில் சேமிப்பாகிறது. ஆகவே சாமர்த்தியத்தை விட்டுவிட்டு உண்மையாக உள்ளத்தால் உணர்ந்து தன்னை மாற்றிக் கொண்டு பாவங்களிலிருந்து விடுபட்டவர் ஆகுங்கள்.

சுலோகன்:
வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் விதவிதமான பந்தனங்களிலிருந்து விடுபடுவதே ஜீவன் முக்தி நிலையாகும் .


பிரம்மா தந்தைக்கு சமானமாக ஆவதற்கான விசேஷ புருஷார்த்தம்

பரிஸ்தா வாழ்க்கை பந்தனத்திலிருந்து விடுபட்ட வாழ்க்கையாகும் . பலே சேவையின் பந்தனம் இருக்கலாம் . எவ்வளவு சேவை இருந்தாலும் அவ்வளவும் செய்தும் எப்போதும் ஃபிரியாக இருக்க வேண்டும் . எவ்வளவு அன்போ அவ்வளவு விடுபட்டும் இருக்க வேண்டும் . இந்த தீவிர வேகம் வேண்டும் . எப்போதும் சுதந்திரமான நிலையை அனுபவம் செய்ய வேண்டும் . ஏனென்றால் உடல் மற்றம் கர்மத்திற்கு அடிமை கிடையாது.