30.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! பாபாவிற்குச் சமமாக கருணையுள்ளம் உடையவர்களாக ஆகுங்கள். கருணையுள்ளம் உடைய குழந்தைகள் அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவித்து தூய்மை இல்லாதவர்களை தூய்மையானவர்களாக ஆக்கக்கூடிய சேவை செய்வார்கள்.

 

கேள்வி:

முழு உலகமும் எதைக் கேட்கின்றது? அதனை தந்தையைத் தவிர வேறு யாரும் நிறைவேற்ற முடியாது?

 

பதில்:

முழு உலகமும் அமைதி மற்றும் சுகம் கிடைக்க வேண்டும் என்று கேட்கின்றது. அனைத்து குழந்தை களின் அழைப்பைக் கேட்டு தந்தை வருகின்றார். பாபா எல்லையற்றவராக இருக்கின்றார். ஆகையால் தான் எனது குழந்தைகளை எவ்வாறு துக்கத்திலிருந்து சுகமானவர்களாக ஆக்குவது என்ற ஆர்வம் அவருக்கு அதிகமாக இருக்கின்றது. பாபா கூறுகின்றார் - குழந்தைகளே! பழைய உலகமும் கூட என்னுடையதாகும், அனைவரும் எனது குழந்தைகள், அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக நான் வந்திருக்கின்றேன். நான் முழு உலகிற்கும் எஜமானாக இருக்கின்றேன். இதை நான் தான் தூய்மை இல்லாமலிருப்பதிலிருந்து தூய்மையாக ஆக்க வேண்டும்.

 

ஓம் சாந்தி.

குழந்தைகளை தந்தை தூய்மையானவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார். ஆகையால் தந்தையின் மீது கண்டிப்பாக அன்பு இருக்க வேண்டும். சகோதரன் சகோதரன் மீது அன்பு வைத்திருப்பது சரி தான். ஒரு தந்தையின் அனைத்து குழந்தைகளும் உங்களிடையே சகோதரன், சகோதரனாக இருக்கின்றீர்கள். ஆனால் தூய்மையாக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை தான். ஆகையால் தான் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு தந்தையிடம் மட்டுமே இருக்கின்றது. தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! என் ஒருவனை மட்டும் நினைவு செய்யுங்கள். நீங்கள் சகோதர சகோதரன் என்பது சரி தான். உங்களுக்குள் பாற்கடல் போன்று கண்டிப்பாக இருப்பீர்கள். ஒரு தந்தையின் குழந்தைகளாக இருக்கின்றீர்கள். ஆத்மாவில் தான் அந்த அளவிற்கு அன்பு இருக்கின்றது. தேவதைக்கான பதவியை பிராப்தியாக அடைகின்றீர்களெனில் உங்களிடையே மிகவும் அன்பாக இருக்க வேண்டும். நாம் சகோதர-சகோதரர்களாக ஆகின்றோம். தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைகின்றோம். தந்தை வந்து கற்றுத் தருகின்றார். புரிந்து கொள்ளக் கூடியவர்கள் இது பாடசாலை அல்லது மிகப் பெரிய பல்கலைக்கழகம் என்று நினைக்கின்றனர். தந்தை அனைவருக்கும் திருஷ்டி கொடுக்கின்றார் அல்லது நினைவு செய்கின்றார். எல்லையற்ற தந்தையை முழு உலகிலும் உள்ள அனைத்து மனித ஆத்மாக்களும் நினைவு செய்கின்றனர். பழையதோ, புதியதோ முழு உலகமும் தந்தையினுடையதாகும். புது உலகம் தந்தையினுடையதெனில் பழையதும் இருக்காதா என்ன? தந்தை தான் அனைவரையும் தூய்மை ஆக்குகின்றார். பழைய உலகமும் என்னுடையதாகும். முழு உலகிற்கும் எஜமான் நான் தான். நான் புது உலகில் இராஜ்யம் செய்யாமல் இருக்கலாம், ஆனால் அதுவும் என்னுடையது தான். எனது குழந்தைகள் எனது இந்த மிகப் பெரிய வீட்டிலும் மிக சுகமாக இருக்கின்றனர். பிறகு துக்கத்தையும் அடைகின்றனர். இது விளையாட்டு. இந்த முழு எல்லையற்ற உலகமும் எனது வீடாகும். இது பெரிய மேடை யாகும். முழு வீட்டிலும் எனது குழந்தைகள் இருக்கின்றனர் என்பது தந்தைக்குத் தெரியும். முழு உலகையும் பார்க்கின்றார். அனைவரும் சைத்தன்யமானவர்களாக இருக்கின்றீர்கள். அனைத்து குழந்தைகளும் இந்த நேரத்தில் துக்கமானவர்களாக உள்ளனர், ஆகையால் பாபா, எங்களை சீச்சீ, துக்கமான உலகிலிருந்து அமைதியான உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள், அமைதி கொடுங்கள் என்று அழைக்கின்றனர். தந்தையைத் தான் அழைக்கின்றனர். தேவதைகளுக்கு இப்படி கூற முடியாது. அனைவருக்கும் அவர் ஒருவரே தந்தையாக இருக்கின்றார். அவருக்கு முழு உலகைப் பற்றிய கவலை இருக்கின்றது. எல்லையற்ற வீடு. இந்த எல்லையற்ற வீட்டில் அனைவரும் இந்த நேரத்தில் துக்கமானவர்களாக உள்ளனர் என்பது தந்தைக்குத் தெரியும். ஆகையால் அமைதி கொடுங்கள், சுகம் கொடுங்கள் என்று கேட்கின்றனர். இரண்டு பொருட்களை கேட்கின்றனர் அல்லவா! நாம் எல்லையற்ற தந்தையிடமிருந்து சுகத்திற்கான ஆஸ்தி அடைந்து கொண்டே இருக்கின்றோம் என்பதை இப்பொழுது அறிந்திருக்கின்றீர்கள். தந்தை வந்து நமக்கு சுகமும் கொடுக்கின்றார், அமைதியையும் கொடுக்கின்றார். சுகம், சாந்தி கொடுக்கக் கூடியவர்கள் வேறு யாரும் கிடையாது. தந்தைக்குத் தான் கருணை ஏற்படுகின்றது. அவர் எல்லையற்ற தந்தை. நாம் பாபாவின் குழந்தைகள் தூய்மையாக இருந்த பொழுது மிகவும் சுகமானவர்களாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இப்பொழுது அசுத்தமாக ஆனதால் துக்கமானவர்களாக ஆகி விட்டோம். காமச் சிதையில் அமர்ந்து கருப்பாக தூய்மை இழந்தவர்களாக ஆகி விடுகின்றோம். எந்த தந்தை அந்த அளவிற்கு உயர்ந்த பதவியைக் கொடுத்தாரோ அந்த தந்தையை மறந்து விடுகிறோம். நீங்கள் தான் தாய், தந்தை...... என்று பாடவும் செய்கின்றீர்கள். சுகமான பூமியாக இருந்தது. அதை நீங்கள் மீண்டும் அடைந்து கொண்டிருக்கின்றீர்கள். ஏனெனில் இப்பொழுது துக்க உலகமாக இருக்கின்றது. இது தமோ பிரதான உலகமாகும். விஷக் கடலில் புரண்டு கொண்டிருக்கின்றனர். புரிந்து கொள்வது எதுவும் கிடையாது. நீங்கள் இப்பொழுது அறிந்து கொண்டீர்கள். இது கொடூரமான நரகம் என்று நீங்கள் இப்பொழுது நினைக்கின்றீர்கள்.

 

இப்பொழுது நீங்கள் நரகவாசிகளா? அல்லது சொர்க்கவாசிகளா? என்று தந்தை குழந்தைகளிடத்தில் கேட்கின்றார். யாராவது இறந்து விட்டால் சொர்க்கவாசி ஆகி விட்டார் என்று உடனேயே கூறி விடுகின்றனர். அதாவது அனைத்து துக்கங்களிலிருந்தும் தூரமாகி விட்டார். பிறகு நரகத்தின் பொருட்களை ஏன் படைக்கின்றீர்கள்? இதையும் புரிந்து கொள்வது கிடையாது. தந்தை வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். தந்தை கூறுகின்றார்-இனிமையான குழந்தைகளே! நான் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கூறுகின்றேன். என்னிடத்தில் தான் இந்த ஞானம் இருக்கின்றது. நான் ஞானக்கடலாக இருக்கின்றேன். இது சாஸ்திரங்களின் அதாரிட்டி என்று கூறுகின்றார். ஆனால் அவர்களும் ஆத்மாக்கள் தானே! என்பதைப் புரிந்து கொள்வதில்லை. தந்தையைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை. உலகிற்கே எஜமானர்களாக ஆக்கக் கூடிய தந்தையை கல், முட்களில் போன்ற அனைத்திலும் இருப்பதாகக் கூறுகின்றனர். வியாச பகவான் என்னென்ன விசயங்களை எழுதி வைத்து விட்டார். மனிதர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. முற்றிலும் அநாதைகளாக ஆகி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர். படைக்கக் கூடிய தந்தை மற்றும் படைப்பின் முதல், இடை, கடையைப் பற்றி யாரும் அறியவில்லை. தந்தை தனது மற்றும் படைப்பின் முதல், இடை, கடைக்கான ரகசியத்தைப் புரிய வைக்கின்றார். வேறு யாரும் கூற முடியாது. யாரை ஈஸ்வரன், பகவான், படைப்பவர் என்று கூறுகின்றீர்களோ அவரை அறிந்திருக்கின்றீர்களா? என்று நீங்கள் யாரிடத்தில் வேண்டுமென்றாலும் கேளுங்கள். கல்,  முட்களில் இருப்பது என்று கூறுவது தான் அறிவது என்று பொருளா? முதலில் தன்னை அறிந்து கொள்ளுங்கள். மனிதர்கள் தமோ பிரதானமாக இருப்பதால் மிருகங்கள் போன்ற அனைத்தும் தமோ பிரதானமாக இருக்கின்றன. மனிதர்கள் சதோ பிரதானமாக இருக்கின்ற பொழுது அனைத்தும் சுகமானதாக ஆகி விடுகின்றது. மனிதர்கள் எப்படியோ அவ்வாறே அவர்களது பர்னிச்சர் இருக்கும். செல்வந்தர்கள் வீட்டு பர்னிச்சர்கள் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் முற்றிலும் சுகமானவர்களாக, உலகிற்கே எஜமானர்களாக ஆகின்ற பொழுது உங்களிடமுள்ள ஒவ்வொரு பொருளும் சுகமானதாக இருக்கும். அங்கு துக்கம் கொடுக்கும் பொருள் எதுவும் இருக்காது. இந்த நரகமே அழுக்கான உலகமாகும்.

 

பகவான் ஒரே ஒருவரே, அவர் பதீத பாவனாக இருக்கின்றார் என்பதை தந்தை வந்து புரிய வைக்கின்றார். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார். சர்வ குணங்கள் நிறைந்தவர்கள் .......... என்று தேவதைகளின் மகிமை பாடுகின்றனர். கோயில்களுக்குச் சென்று தெய்வங்களுக்கு புகழும், தன்னை நிந்திக்கவும் செய்கின்றனர். ஏனெனில் அனைவரும் பிரஷ்டமானவர்களாக (தரம் தாழ்ந்து) இருக்கின்றனர். சிரேஷ்டாச்சாரி, சொர்க்கவாசிகளாக இருக்கக் கூடியவர்கள் இந்த லெட்சுமி நாராயணன் ஆவர், அவர்களையே அனைவரும் பூஜை செய்கின்றனர். சந்நியாசிகளும் செய்கின்றனர். சத்யுகத்தில் இவ்வாறு ஏற்படுவது கிடையாது. உங்களது சந்நியாசம் எல்லையற்றதாகும். எல்லையற்ற தந்தை வந்து எல்லையற்ற சந்நியாசம் செய்விக்கின்றார். அது ஹடயோகமாகும். எல்லைக்குட்பட்ட சந்நியாசம் ஆகும். அந்த தர்மமே தனி. தந்தை கூறுகின்றார் - நீங்கள் உங்களது தர்மத்தை மறந்து பிற தர்மங்களுக்குச் சென்று விட்டீர்கள். உங்களது பாரதத்தின் பெயரையே இந்துஸ்தான் என்று வைத்து விட்டீர்கள். மேலும் இந்து தர்மம் என்றும் கூறி விட்டீர்கள். உண்மையில் இந்து தர்மத்தை யாருமே ஸ்தாபனை செய்யவில்லை. முக்கிய தர்மம் நான்கு - தேவி தேவதா, இஸ்லாமிய தர்மம், பௌத்தம் மற்றும் கிறிஸ்தவம். இந்த முழு உலகமும் தீவு, இதில் இராவணனின் இராஜ்யம் நடக்கின்றது என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இராவணனைப் பார்த்திருக்கின்றீர்களா? யாரை அடிக்கடி எரிக்கின்றீர்களோ, அவர் மிகப் பழைய எதிரியாக இருக்கின்றார். நாம் ஏன் எரிக்கின்றோம்? என்பதையும் புரிந்து கொள்வதில்லை. இவர் யார்? எப்பொழுதிலிருந்து எரித்து வருகின்றோம்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பரம்பரையாக செய்து வருகின்றோம் என்று நினைக்கின்றனர். அட, அதற்கும் கணக்கு இருக்க வேண்டும் அல்லவா! உங்களை யாரும் அறிந்து கொள்ளவே இல்லை. நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள். நீங்கள்  யாருடைய குழந்தைகள்? என்று உங்களிடத்தில் கேட்கின்றனர். அட,, பிரம்மாகுமார், குமாரிகளாக உள்ளனர் எனில் அவரது குழந்தைகள் அல்லவா! பிரம்மா யாருடைய குழந்தை? சிவபாபாவின் குழந்தை. நாம் அவரது பேரன்கள். அனைத்து ஆத்மாக்களும் அவரது குழந்தைகள். பிறகு சரீரத்தில் முதல் பிரம்மா ஆகின்றார். பிரஜா பிரம்மா அல்லவா! இவ்வளவு பிரஜைகளை எப்படி உருவாக்குகின்றார்? என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இது தத்தெடுப்பதாகும். சிவபாபா பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கின்றார். மேளாவும் நடைபெறுகின்றது. உண்மையில் மேளா என்பது பெரிய நதியாகிய பிரம்மா புத்திராவும் கடலும் சந்திக்கும் இடத்தில் நடைபெற வேண்டும். அந்த சங்கமத்தில் மேளா நடைபெற வேண்டும். இந்த மேளா இங்கு நடைபெறுகின்றது. பிரம்மா அமர்ந்திருக்கின்றார். தந்தையும் அமர்ந்திருக்கின்றார், உயர்ந்த தாயாகவும் இவர் இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். ஆனால் இவர் (பிரம்மா) ஆணாக இருப்பதால் இந்த தாய்மார்களைக் கவனிக்க மம்மாவை நியமித்தார். நான் உங்களுக்கு சத்கதி கொடுக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். இந்த தேவதைகள் இரட்டை அகிம்சாதாரிகள் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். ஏனெனில் அங்கு இராவணன் இருப்பது கிடையாது. பக்தியின் மூலம் இரவு ஏற்படுகின்றது, ஞானத்தின் மூலம் பகல் ஏற்படுகின்றது. ஒரு தந்தை மட்டும் தான் ஞானக்கடலாக இருக்கின்றார். அவரை சர்வவியாபி என்று கூறி விட்டனர். தந்தை வந்து தான் இதனைப் புரிய வைக்கின்றார் மற்றும் குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கின்றார். சிவ பகவானின் மகாவாக்கியம் அல்லவா! சிவ ஜெயந்தி கொண்டாடுகின்றோம் எனில் கண்டிப்பாக யார் மூலமாவது வந்திருப்பார். நான் இயற்கையை ஆதாரமாக எடுக்க வேண்டியிருக்கின்றது என்று கூறுகின்றார். நான் சிறு குழந்தையை ஆதாரமாக எடுப்பது கிடையாது. கிருஷ்ணர் சிறு குழந்தை அல்லவா! நான் அவரது பல பிறப்பின் கடைசியில் அதுவும் வானபிரஸ்த நிலையில் பிரவேசிக்கின்றேன். வானபிரஸ்த நிலைக்குப் பின்பே மனிதர்கள் பகவானை நினைக்கின்றனர். ஆனால் பகவானை யாரும் யதார்த்தமாக அறிந்து கொள்ளவில்லை. ஆகையால் தான் எப்பொழுதெல்லாம் அதர்மம்....... என்று தந்தை கூறுகின்றார். நான் பாரதத்தில் தான் வருகின்றேன். பாரதத்தின் மகிமை மிகவும் உயர்ந்ததாகும்.

 

நான் இன்னாராக இருக்கின்றேன், நான் இப்படி இருக்கின்றேன் என்ற தேக அகங்காரம் மனிதர்களிடத்தில் எவ்வளவு இருக்கின்றது! இப்பொழுது தந்தை வந்து உங்களை ஆத்ம அபிமானிகளாக ஆக்குகின்றார். இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை வந்து ஞானத்தின் அனைத்து ரகசியங்களையும் கூறுகின்றார். இது பழைய உலகமாகும். சத்யுகம் புது உலகமாகும். சத்யுகத்தில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் மட்டுமே இருந்தது. 5 ஆயிரம் ஆண்டிற்கான விசயமாகும். பிறகு சாஸ்திரங்களில் கல்பத்தின் ஆயுள் லட்சக்கணக்கான ஆண்டுகள் என்று வியாசர் எழுதி விட்டார். உண்மையில் கல்பத்திற்கு 5 ஆயிரம் ஆண்டுகளாகும். மனிதர்கள் முற்றிலும் அஞ்ஞான, கும்பகர்ண உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். உங்களது இந்த புதிய விசயத்தை யாராவது புதியவர்கள் கேட்டால் புரிந்து கொள்ள முடியாது. ஆகையால் தான் தந்தை கூறுகின்றார் - நான் எனது குழந்தைகளிடத்தில் உரையாடல் செய்கின்றேன். பக்தியையும் நீங்கள் தான் ஆரம்பித்து வைக்கின்றீர்கள். தனக்குத் தான் தண்டனை (சவுக்கடி) கொடுத்துக் கொண்டீர்கள். தந்தை உங்களை பூஜைக்குரியவர்களாக ஆக்கினார், நீங்கள் பிறகு பூஜாரிகளாக ஆகி விடுகின்றீர்கள். இதுவும் விளையாட்டாகும். யாராவது பலவீன இருதயம் உள்ளவர்கள் இந்த விளையாட்டைப் பார்த்ததும் அழுது விடுகின்றனர். அழுபவர்கள் இழக்கின்றனர் என்று தந்தை கூறுகின்றார். சத்யுகத்தில் அழுவதற்கான விசயமே கிடையாது. அழவே கூடாது என்று இங்கும் தந்தை கூறுகின்றார். துவாபர கலியுகத்தில் அழுகின்றனர். வரும் நாட்களில் யாருக்கும் அழுவதற்கும் நேரம் இருக்காது. எதிர்பாராமல் திடீரென இறந்து கொண்டே இருப்பார்கள். ஐயோ கடவுளே! என்றும் கூற முடியாது. சிறிதும் துக்கம் ஏற்படாது போன்று விநாசம் உண்டாகும். ஏனெனில் மருத்துவமனை போன்றவைகள் இருக்காது. ஆகையால் அப்படிப்பட்ட (வினாச) பொருட்களை உருவாக்கு கின்றனர். ஆக தந்தை கூறுகின்றார் - இராவணன் மீது வெற்றியடையச் செய்வதற்காக நான் குரங்கு சேனைகளாகிய உங்களை சேர்த்துக் கொள்கின்றேன். இராவணனின் மீது வெற்றி அடைவது எப்படி? என்ற யுக்தியை தந்தை இப்பொழுது உங்களுக்கு கூறுகின்றார். அனைத்து சீதைகளையும் இராவணனின் சிறையிலிருந்து மீட்க வேண்டும். இவை அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். பகவானின் மகாவாக்கியம், குழந்தைகளிடம் தான் தந்தை கூறுகின்றார் -தீயவைகளை கேட்காதீர்கள்....... எந்த விசயங்களினால் உங்களுக்கு நன்மை இல்லையோ, அப்போது உங்களது காதுகளை மூடிக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு ஸ்ரீமத் கிடைக்கின்றது. நீங்கள் சிரேஷ்டமானவர்களாக ஆவீர்கள். இங்கு ஸ்ரீ ஸ்ரீ என்ற பட்டம் அனைவருக்கும் கொடுத்து விட்டனர். நல்லது, இருப்பினும் தந்தை கூறுகின்றார் - தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள். வெற்றி தோல்விக்கான அதிசயமான, எல்லையற்ற இந்த விளையாட்டைப் பற்றி தந்தை தான் புரிய வைக்கின்றார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தந்தைக்குச் சமமாக கருணையுள்ளம் உடையவர்களாக ஆக வேண்டும். அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவித்து தூய்மை இழந்துள்ளவர்களை தூய்மை ஆக்கும் சேவை செய்ய வேண்டும். தூய்மை ஆவதற்காக ஒரு தந்தையின் மீது மிகுந்த அன்பு செலுத்த வேண்டும்.

 

2. அழுபவர்கள் இழக்கின்றனர் என்று தந்தை கூறுகின்றார். ஆகையால் எப்படிப்பட்ட பிரச்சனைகளின் பொழுதும் நீங்கள் அழவே கூடாது.

 

வரதானம்:

அனைவராலும் வழிபட (பூஜை)க் கூடியவராகி பரமாத்ம அன்பின் அதிகாரத்தை அடையக் கூடிய முழுமையாக தூய்மையான ஆத்மா ஆகுக.

 

பூஜைக்குரிய ஆத்மாவாகிய நான் இந்த சரீரம் என்ற கோவிலில் வீற்றிருக்கிறேன் என்ற நினைவை வாழ்க்கையில் எப்போதும் கொண்டு வாருங்கள். இப்படிப்பட்ட பூஜைக்குரிய ஆத்மாதான் அனைவருக்கும் அன்பானவர் ஆவார். அவருடைய ஜடமூர்த்தியும் கூட அனைவருக்கும் அன்பானதாக இருக்கும். தங்களுக்குள் யாரேனும் சண்டையிட்டுக் கொள்ளக் கூடும், ஆனால் மூர்த்தியின் மீது அன்பு வைப்பார்கள், ஏனென்றால் அவருக்குள் தூய்மை இருக்கிறது. எனவே தன்னைத் தானே கேளுங்கள் - மனம், புத்தி முழுமையாக தூய்மையடைந்திருக்கிறதா, கொஞ்சமும் அசுத்தமாக இல்லையல்லவா? யார் இப்படிப்பட்ட முற்றிலும் தூய்மையானவராக இருக்கிறாரோ அவர்தான் பரமாத்மாவின் அன்புக்கு அதிகாரி ஆவார்.

 

சுலோகன்:

ஞானத்தின் பொக்கிஷத்தை தனக்குள் கடைபிடித்து அனைத்து சமயங்களிலும், அனைத்து கர்மங்களையும் அறிவார்த்தமாக செய்பவர்கள்தான் ஞானி ஆத்மா ஆவார்கள்.

 

ஓம்சாந்தி