19.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! முக்கியமானது நினைவு யாத்திரையாகும், நினைவின் மூலமாகவே ஆயுள் அதிகரிக்கும், விகர்மம் விநாசமாகும். நினைவில் இருப்பவர்களின் மன நிலை மற்றும் நடத்தைகள், பேச்சுகள் மிகவும் முதல் தரமானதாக இருக்கும்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய உங்களுக்கு தேவதைகளைக் காட்டிலும் அதிக குஷி இருக்க வேண்டும் - ஏன்?

 

பதில்:

ஏனெனில் உங்களுக்கு இப்பொழுது மிகப் பெரிய லாட்டரி கிடைத்திருக்கின்றது. பகவான் உங்களுக்கு படிப்பிக்கின்றார். சத்யுகத்தில் தேவதைகள் தேவதைகளுக்குப் படிப்பிக்கின்றனர். இங்கு மனிதர்கள் மனிதர்களுக்குப் படிப்பிக்கின்றனர். ஆனால் ஆத்மாக்களாகிய உங்களுக்கு சுயம் பரமாத்மா படிப்பித்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் இப்பொழுது சுவதரிசன சக்கரதாரிகளாக ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களிடத்தில் அனைத்து ஞானமும் இருக்கின்றது. தேவதைகளிடத்திலும் இந்த ஞானம் கிடையாது.

 

பாட்டு:

விழித்தெழுங்கள் நாயகிகளே விழித்தெழுங்கள் .............

 

ஓம் சாந்தி.

புது யுகத்தில் தேவி தேவதைகள் இருப்பர். அவர்களும் மனிதர்கள் தான். ஆனால் அவர்களின் குணம் தேவதைகளைப் போன்று இருக்கின்றது. அவர்கள் இரட்டை அஹிம்சையுடைய வைஷ்ணவர்களாக இருக்கின்றனர். இப்பொழுது மனிதர்கள் இரட்டை ஹிம்சாதாரிகளாக இருக்கின்றனர். சண்டையிடுகின்றனர், காமத்திலும் செல்கின்றனர். இதனையே மரண உலகம் என்று கூறப்படுகின்றது. இதில் விகார மனிதர்கள் இருக்கின்றனர். அது தேவ லோகம் என்று கூறப்படுகின்றது. அதில் தேவி தேவதைகள் இருக்கின்றனர். அவர்கள் இரட்டை அஹிம்சாதாரிகளாக இருந்தனர். அவர்களது இராஜ்யமும் இருந்தது. கல்பத்தின் ஆயுள் இலட்சம் ஆண்டு எனில் எந்த விசயமும் நினைவிற்கு வராது. இன்றைய நாட்களில் கல்பத்தின் ஆயுளைப் குறைத்துக் கொண்டே செல்கின்றனர். சிலர் 7 ஆயிரம் ஆண்டு என்று கூறுகின்றனர், சிலர் 10 ஆயிரம் ஆண்டு என்று கூறுகின்றனர். தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் மற்றும் நாம் அவரது குழந்தைகள் சாந்திதாமத்தில் இருக்கின்றோம் என்பதை குழந்தைகள் அறிந்திருக்கின்றீர்கள். நாம் வழிகாட்டிகள், வழி காண்பிக்கக் கூடியவர்கள். இந்த யாத்திரையை யாரும் வர்ணிக்க முடியாது. கீதையில் மன்மனாபவ என்ற வார்த்தை இருக்கலாம். ஆனால் அதன் பொருள் என்ன? தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள் என்று யாருடைய புத்தியிலும் வருவது கிடையாது. தந்தை வந்து புரிய வைக்கின்ற பொழுது தான் பிறரது புத்தியில் வருகின்றது. இந்த நேரத்தில் நீங்கள் மனிதரிலிருந்து தேவதைகளாக ஆகின்றீர்கள். மனிதர்கள் இங்கு இருக்கின்றனர், தேவதைகள் சத்யுகத்தில் இருப்பர். நீங்கள் இப்பொழுது மனிதனிருந்து தேவதைகளாக ஆகின்றீர்கள். இது உங்களுடைய ஈஸ்வரிய மிஷன் ஆகும். நிராகார பரமாத்மாவை எந்த மனிதர்களாலும் புரிந்து கொள்ள முடியாது. நிராகாரமானவருக்கு கை, கால்கள் எங்கிருந்து வரும்! கிருஷ்ணருக்கு கை, கால் அனைத்தும் இருக்கின்றது. பக்தி மார்க்கத்தில் எத்தனை சாஸ்திரங்களை உருவாக்கியிருக்கின்றனர்! இப்பொழுது குழந்தைகளாகிய உங்களிடத்தில் சித்திரங்கள் போன்றவை அதிகம் இருக்கின்றது. சித்திரங்களின் மூலம் இதனை புரிய வைக்க வேண்டும் என்று நினைவிற்கு வருகின்றது. மேலும் அதிக சித்திரங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். அனைத்திற்கும் மேலிடத்தில் ஆத்மாக்களைக் காண்பிக்க வேண்டும். அங்கும் ஆத்மாக்களாகவே (மூலவதனத்தில்) தென்படும். பிறகு சூட்சுமவதனம், அதன் கீழே மனித உலகமும் உருவாக்குவீர்கள். மனிதர்கள் எவ்வாறு கீழே இறங்கி மேலே செல்கின்றனர் என்பதைக் காண்பிப்பீர்கள். நாளுக்கு நாள் புது கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இப்பொழுது எவ்வளவு சித்திரங்கள் உள்ளனவோ அவ்வளவு சேவையும் செய்ய வேண்டும். பிறகு மனிதர்கள் விரைவாகப் புரிந்து கொள்ளும் படியான சித்திரங்களும் உருவாகும். மரம் மிகவும் விரைவாக அதிகரிக்கும். கல்பத்திற்கு முன்பு யார் எந்த பதவியடைந்திருந்தார்களோ, எந்த ரிசல்ட் வெளிப்பட்டதோ அதுவே வெளிப்படும். கடைசியில் வருபவர்கள் மாலையின் மணியாக வர முடியாது என்பது கிடையாது. அவர்களும் ஆவார்கள். தீவிர பக்தி செய்பவர்கள் இரவு பகல் பக்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அவர்களுக்கு சாட்சாத்கார் ஏற்படுகின்றது. இங்கும் அவ்வாறு வெளிப்படுவார்கள். இரவு பகல் முயற்சி செய்து பதீதத்திருந்து பாவனமாக ஆவார்கள். அனைவருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றது. கடைசியில் சிலர் இருந்து விடுவார்கள் என்பது கிடையாது. யாரும் இருந்து விடக்கூடாது என்றளவிற்கு நாடகம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. நாலாபுறமும் செய்தி கொடுக்க வேண்டும். ஒருவர் இருந்து விட்டாலும் புகார் கூறுவார் என்று சாஸ்திரங்களில் இருக்கின்றது. இந்த சித்திரங்கள் செய்தித்தாள்களிலும் வெளிப்படும். உங்களுக்கும் அழைப்பு கிடைத்துக் கொண்டேயிருக்கும். தந்தை வந்திருக்கின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்து விடும். முழு நிச்சயம் ஏற்படும் பொழுது தான் போட்டியில் ஓடுவர். செய்திகள் வெளி வந்து கொண்டே இருக்கும். புதுயுகம் என்று சத்யுகம் அழைக்கப்படுகின்றது. புதுயுகம் என்ற செய்தித்தாளும் வெளிவருகின்றது. புதுடெல்லி என்று கூறுகின்றனர். ஆனால் புதுடெல்லியில் இந்த பழைய கோட்டை, குப்பை போன்றவைகள் இருக்க முடியாது. இப்பொழுது ஒவ்வொரு பொருளும் ஒழுங்கற்றதாக ஆகிவிட்டது. சத்யுகத்தில் அனைத்து தத்துவங்களும் ஆர்டராக (ஒழுங்காக) இருக்கும். இங்கு 5 தத்துவங்களும் தமோபிரதானமாக இருக்கின்றது. அங்கு அனைத்தும் சதோ பிரதானமாக இருப்பதால் ஒவ்வொரு தத்துவத்தின் மூலம் சுகம் கிடைக்கின்றது. துக்கத்திற்கான பெயரே கிடையாது. அதன் பெயரே சொர்க்கம். இப்பொழுது நாம் தமோபிரதானமாக ஆகி விட்டோம் என்ற இவையனைத்து விசயங்களும் இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். சதோ பிரதானமாவதற்காக முயற்சி செய்து இலட்சியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றீர்கள், மற்ற அனைவரும் ஆழ்ந்த இருளில் இருக்கின்றனர். நாம் வெளிச்சத்தில் இருக்கின்றோம். நாம் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம் மற்ற அனைவரும் கீழே விழுந்து கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றிய சிந்தனைகள் குழந்தைகளாகிய நீங்கள் செய்ய வேண்டும். சிவபாபா கற்றுக் கொடுக்கக் கூடியவராக இருக்கின்றார். அவர் சிந்தனை செய்யமாட்டார். பிரம்மா சிந்திக்க வேண்டியிருக்கின்றது. நீங்கள் அனைவரும் ஞானச் சிந்தனை செய்து புரிய வைக்கின்றீர்கள். சிலருக்கு முற்றிலும் சிந்தனை ஓடுவதில்லை. பழைய உலகம் நினைவில் இருக்கின்றது. பாபா கூறுகின்றார் - பழைய உலகை ஒரேயடியாக மறந்து விடுங்கள். ஆனால் வரிசைக் கிரமமான முயற்சியின் படி இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது என்பதை பாபா அறிந்திருக்கின்றார். தந்தை கூறுகின்றார் - நான் வந்து இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து, மற்ற அனைவரையும் திரும்பி அழைத்தச் செல்கின்றேன். அவர்கள் அவரவர்களது தர்மத்தை மட்டுமே ஸ்தாபனை செய்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் அவர்களது தர்மத்தைச் சார்ந்தவர்கள் வந்து கொண்டிருப்பர். அவர்களுக்கு என்ன மகிமை செய்வது! உங்களுக்கு மகிமை இருக்கின்றது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தையே ஹீரோ ஹீரோயின் என்று கூறப்படுகின்றது. வைரம் போன்ற பிறப்பு மற்றும் சோழி போன்ற பிறப்பு என்று உங்களுக்கு பாடப்பட்டிருக்கின்றது. பிறகு நீங்கள் ஒரேயடியாக கீழே விழுந்து விடுகின்றீர்கள். ஆக இந்த நேரத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு தேவதைகளை விட அதிகமான குஷியிருக்க வேண்டும். ஏனெனில் உங்களுக்கு இலாட்டரி கிடைத்திருக்கின்றது. உங்களுக்கு இப்பொழுது பகவான் படிப்பிக்கின்றார். அங்கு தேவதைகள் தேவதைகளுக்கு படிப்பிப்பார்கள். இங்கு மனிதர்கள் மனிதர்களுக்குப் படிப்பிக்கின்றனர். ஆத்மாக்களாகிய உங்களுக்கு பரம்பிதா பரமாத்மா படிப்பிக்கின்றார். வித்தியாசம் ஏற்பட்டு விட்டதல்லவா! பிராமணர்களாகிய நீங்கள் இராம ராஜ்ஜியம் மற்றும் இராவண ராஜ்ஜியத்தைப் பற்றியும் அறிந்திருக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் எந்த அளவிற்கு ஸ்ரீமத் படி நடக்கின்றீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். அஞ்ஞான காலத்தில் என்ன செய்தாலும் அது தவறாகவே இருந்தது. குழந்தைப் பருவத்தில் சிறிய புத்தியாகவும் பிறகு இளமை புத்தியும் இருக்கின்றது. 16, 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்கின்றனர். இன்றைய நாட்களில் மிகவும் அழுக்காகி விட்டது. மடியில் இருக்கும் குழந்தையையும் திருமணம் செய்து விடுகின்றனர். பிறகு கொடுக்கல் வாங்கல் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். அங்கு திருமணங்கள் மிகவும் இராயலாக இருக்கும். நீங்கள் அனைத்தையும் சாட்சாத்ககாரம் செய்திருக்கின்றீர்கள். நீங்கள் எந்த அளவிற்கு முன்னேறுகின்றீர்களோ அந்த அளவிற்கு அனைத்தையும் சாட்சாத்கார் செய்வீர்கள். நல்ல முதல் தரமான யோகி குழந்தைகளின் ஆயுள் அதிகரித்துக் கொண்டே செல்லும். தந்தை கூறுகின்றார் - யோகாவின் மூலம் தனது ஆயுளை அதிகப்படுத்துங்கள். யோகாவில் நாம் மந்தமாக இருக்கின்றோம் என்பதை குழந்தைகள் அறிந்திருக்கின்றீர்கள். நினைவில் இருப்பதற்காக தலையை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் இருக்க முடிவதில்லை. அடிக்கடி மறந்து விடுகின்றீர்கள். உண்மையில் இங்கு இருப்பவர்களின் சார்ட் மிகவும் நன்றாக இருக்க வேண்டும். வெளியில் தொழில் இருந்து கொண்டிருக்கின்றனர். தந்தையை நினைவு செய்து செய்து இங்கேயே நீங்கள் சதோ பிரதானமானவர்களாக ஆக வேண்டும். உணவு சமைக்கும் பொழுது, காரியங்கள் செய்கின்ற பொழுது குறைந்ததிலும் குறைந்தது 8 மணி நேரம் என்னை நினைவு செய்யுங்கள். அப்பொழுது தான் கர்மாதீத நிலை கடைசியில் ஏற்படும். சிலர் நான் 6-8 மணி நேரம் யோகாவில் இருக்கின்றேன் என்று கூறுகின்றனர் எனில் பாபா ஏற்றுக் கொள்ளமாட்டார். அதிகமானவர்களுக்கு வெட்கம் வருகின்றது. சார்ட் எழுதுவதில்லை. அரை மணி நேரம் கூட நினைவில் இருக்க முடிவதில்லை. முரளி கேட்பது என்பது நினைவு செய்வது கிடையாது. நீங்கள் வருமானம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். நினைவில் இருக்கும் பொழுது கேட்பது நின்று விடுகின்றது. நினைவில் இருந்து முரளி கேட்டேன் என்று சில குழந்தைகள் கூறுகின்றனர். ஆனால் இது நினைவு கிடையாது. பாபா சுயம் கூறுகின்றார் - நான் அடிக்கடி மறந்து விடுகின்றேன். நினைவில் சாப்பிடுவதற்கு அமருகின்றேன், பாபா நீங்கள் அவ்யக்தமாக இருக்கின்றீர்கள். நீங்களும் சாப்பிடுகின்றீர்கள் என்று எப்படி கூறுவேன்? நானும் சாப்பிடுகின்றேன். பாபாவும் கூடவே இருக்கின்றார் என்று சிலர் பிறகு கூறுகின்றனர். முக்கியமானது நினைவு யாத்திரையாகும். முரளிக்கான பாடம் முற்றிலும் தனிப்பட்டதாகும். நினைவின் மூலமாகவே தூய்மையாகின்றீர்கள். ஆயுள் அதிகரிக்கின்றது. மற்றபடி முரளி கேட்டு விட்டு பாபா இதில் இருக்கின்றார் என்பது கிடையாது. முரளி கேட்பதன் மூலம் விகர்மம் விநாசம் ஆகாது. முயற்சி இருக்கின்றது. அதிகமான குழந்தைகள் முற்றிலும் நினைவில் இருப்பதில்லை என்பது பாபாவிற்குத் தெரியும். நினைவில் இருப்பவர்களின் மனநிலை, பேச்சு, நடத்தைகள் முற்றிலும் தனிப்பட்டதாக இருக்கும். நினைவின் மூலமாகவே சதோ பிரதானமாக ஆவீர்கள். ஆனால் மாயை அப்படிப்பட்டது முற்றிலும் முட்டாள்களாக ஆக்கி விடுகின்றது. அதிகமானவர்களுக்கு வியாதி வெளிப்படுகின்றது. இல்லாதிருந்து மோகம் பிறகு வெளிப்படுகின்றது. மாட்டிக் கொள்கின்றனர். மிகவும் முயற்சிக்கான காரியமாகும். முரளி கேட்பது என்ற பாடம் தனிப்பட்டதாகும். இது செல்வம் சம்பாதிப்பதற்கான விசயமாகும். இதன் மூலம் ஆயுள் அதிகரிக்காது, தூய்மையாக மாட்டீர்கள், விகர்மம் விநாசம் ஆகாது. முரளியை அதிகம் கேட்கின்றீர்கள். பிறகு விகாரத்தில் விழுந்து கொண்டே இருக்கின்றீர்கள். உண்மையைக் கூறுவதில்லை. தந்தை கூறுகின்றார் தூய்மையாக இருக்க முடியவில்லையெனில் இங்கு எதற்காக வந்தீர்கள்? பாபா, நான் அஜாமில் போன்றவன் என்று கூறுகின்றனர். இங்கு வந்தால் தான் பாவனமாக ஆவேன். இங்கு வருவதன் மூலம் சிறிது விழிப்படைவேன். இல்லையெனில் எங்கு செல்வது? இது தான் வழி. இப்படிப்பட்டவர்களும் வருகின்றனர். ஏதாவது ஒரு நேரத்தில் அம்பு பாய்ந்து விடும். பாபா இங்கிருப்பவர்களுக்கும் கூறுகின்றார் - இங்கு யாரும் அசுத்தமானவர்கள் வரக் கூடாது. இது இந்திர சபையாகும். இப்போதெல்லாம் வந்து விடுகின்றனர். ஒருநாள் இவ்வாறும் கட்டளை பிறப்பிக்கப்படும் - உறுதியான உத்திரவாதம் கொடுக்கும் பொழுது தான் அனுமதி கொடுக்கப்படும். யாரும் அசுத்தமானவர்கள் உள்ளே செல்ல முடியாது, இது அப்படிப்பட்ட இயக்கமாகும் என்று புரிந்து கொள்ள வேண்டும். இது யாருடைய சபை என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கின்றீர்கள். நாம் பகவான், ஈஸ்வரன், சோமநாதன், பபூல்நாத் இவர்களிடத்தில் அமர்ந்திருக்கின்றோம். அவரே பாவனமாக்கக் கூடியவராவார். கடைசியில் அதிகமானவர்கள் வந்து விடுவார்கள், பிறகு யாரும் எந்த குழப்பம் போன்றவை செய்ய முடியாது. இந்த தர்மத்தைச் சார்ந்தவர்களாக இருக்கக் கூடியவர்கள் வெளிப்படுவார்கள். ஆரிய சமாஜத்தைச் சார்ந்தவர்களும் இந்துக்கள் தான். மடங்கள், மடாலயங்களை தனித்தனியாக அமைத்துள்ளனர். தேவதைகள் சத்தியுகத்தில் இருக்கின்றனர். இங்கு அனைவரும் இந்துக்கள். உண்மையில் இந்து தர்மமே கிடையாது. இந்துஸ்தான் என்பது தேசத்தின் பெயராகும். குழந்தைகளாகிய நீங்கள் எழுந்தாலும் அமர்ந்தாலும், நடந்தாலும் சுயதரிசன சக்கரதாரிகளாக ஆக வேண்டும். மாணவர்கள் படிப்பின் நினைவு இருக்க வேண்டுமல்லவா! முழு சக்கரமும் புத்தியில் இருக்கின்றது. தேவதைகள் மற்றும் உங்களுக்கும் சிறிது வித்தியாசம் இருக்கின்றது. பக்காவான சுவதரிசன சக்கரதாரிகளாக ஆகிவிட்டால் பிறகு விஷ்ணுவின் குலத்தைச் சார்ந்தவர்களாக ஆகி விடுவீர்கள். நாம் இவ்வாறு ஆகிக் கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இறுதி நிலை தேவதைகளாகும். நீங்கள் இறுதி நிலையடைய வேண்டுமெனில் கர்மாதீத நிலை அடைய வேண்டும். சிவபாபா உங்களை சுவதரிசன சக்கரதாரிகளாக ஆக்குகின்றார். அவரிடத்தில் ஞானம் இருக்கின்றதல்லவா! அவர் உங்களை உருவாக்கக் கூடியவர். நீங்கள் அவ்வாறு ஆகக் கூடியவர்கள். பிராமணன் ஆகி பிறகு தேவதைகளாக ஆவீர்கள். இப்பொழுது இந்த அலங்காரம் உங்களுக்கு எப்படிக் கொடுப்பது! இப்பொழுது நீங்கள் முயற்சியாளர்களாக இருக்கின்றீர்கள். பிறகு நீங்கள் விஷ்ணு குலத்தைச் சார்ந்தவர்களாக ஆகின்றீர்கள். சத்யுகமானது வைஷ்ணவ குலமல்லவா! ஆக அவ்வாறு ஆக வேண்டும். நீங்கள் இனிமையானவர்களாக ஆக வேண்டும். இப்படி, அப்படி என்ற வார்த்தை பேசுவதை விட பேசாமல் இருப்பது நல்லது. இருவர் சண்டையிட்டுக் கொண்டனர், வாயில் கற்களை போட்டுக் கொள்ளுங்கள் என்று சந்நியாசி கூறினார். ஒருபொழுதும் வெளிப்படுத்தி விடக் கூடாது என்ற உதாரணம் இருக்கின்றது. பதில் அளிக்க முடியாது. 5 விகாரங்களை வெல்வது சித்தி வீட்டிற்குச் செல்வது போன்று கிடையாது. சிலர் தங்களது அனுபவத்தையும் கூறுகின்றர் - எனக்குள் அதிகம் கோபம் இருந்தது, இப்பொழுது மிகவும் குறைந்து விட்டது. மிகவும் இனிமையானவர்களாக ஆக வேண்டும். நேற்று நீங்கள் இந்த தேவதைகளின் குணத்தைப் பாடினீர்கள். இன்று நாம் இவ்வாறு ஆகிக் கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். வரிசைக்கிரமமாகத் தான் ஆவீர்கள். அதிகமாக சேவை செய்பவர்களின் பெயரை கண்டிப்பாக பாபாவும் பயன்படுத்துவார். வழி காண்பிக்க வேண்டும். நாமும் முன்பு எதையும் அறியாதவர்களாக இருந்தோம். இப்பொழுது எவ்வளவு ஞானம் கிடைத்திருக்கின்றது! யார் நல்ல முறையில் தாரணை செய்யவில்லையோ அவர்களது ரிப்போர்ட் வருகின்றது. பாபா, இவர்களிடத்தில் அதிகமான கோபம் இருக்கின்றது. இவரால் ஆன்மீக சேவை செய்ய முடியவில்லையெனில் ஸ்தூல சேவை இருக்கின்றது என்பதை பாபா அறிந்திருக்கின்றார். பாபாவின் நினைவிலிருந்து சேவை செய்தால் ஆஹா பாக்கியம்! ஒருவருக்கொருவரை நினைவு ஏற்படுத்திக் கொண்டே இருங்கள். நினைவின் மூலம் அதிக பலம் கிடைக்கும். நினைவு செய்யக் கூடியவர்கள் சார்ட் வைக்க வேண்டும். சார்ட்டின் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொருவரையும் பாபா எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கின்றார். உலகில் அதிகமானவர்கள் அமைதியை கேட்கின்றனர். கண்டிப்பாக உலகில் எப்பொழுதோ அமைதி இருந்தது. சத்யுகத்தில் அசாந்திக்கான விசயம் எதுவும் கிடையாது. இனிய தந்தை, இனிய குழந்தைகள் முழு உலகை இனியதாக ஆக்குகின்றனர். இப்பொழுது இனிமை எங்கு இருக்கின்றது? மரணமே மரணமாக இருக்கின்றது. இந்த விளையாட்டு அநேக முறை நடந்திருக்கின்றது. மேலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். முடிவு ஏற்பட முடியாது. சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும். நல்லது.

 

இனிமையிலும் இனிய செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) விகர்மம் விநாசம் செய்ய அல்லது ஆயுளை அதிகப்படுத்துவதற்காக நினைவு யாத்திரையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். நினைவின் மூலமாகவே பாவனமாக ஆவீர்கள். ஆகையால் குறைந்ததிலும் குறைந்தது 8 மணி நேரம் நினைவிற்கான சார்ட் உருவாக்க வேண்டும்.

 

2) தேவதைகளைப் போன்று இனிமையானவர்களாக ஆக வேண்டும். இப்படி, அப்படி வார்த்தைகளைப் பேசுவதற்குப் பதிலாக பேசாமலே இருப்பது நல்லது. ஆன்மீக அல்லது ஸ்தூல சேவை செய்து தந்தையின் நினைவிருந்தால் ஆஹா பாக்கியம்!

 

வதானம்:

ஈஸ்வரிய இரசனையை அனுபவம் செய்து ஏக்ரஸ் ஸ்திதியில் நிலைத்திருக்கக் கூடிய சிரேஷ்ட ஆத்மா ஆகுக.

 

எந்த குழந்தைகள் ஈஸ்வரிய இரசனையின் அனுபவம் செய்கின்றார்களோ, அவர்களுக்கு உலகத்தின் அனைத்து இரசனைகளும் ருசியற்றதாகத் தோன்றும். எப்பொழுது ஒரே ஒரு இரசனை மட்டும் இனிமையானதாக உள்ளதோ, அந்த ஒன்றின் பக்கம் மட்டுமே கவனம் செல்லும் அல்லவா! சுலபமாகவே ஒன்றின் பக்கம் மனம் ஈடுபடும், உழைப்பு இருக்காது. தந்தையின் அன்பு, தந்தையின் உதவி, தந்தையின் துணை, தந்தை மூலம் கிடைக்கும் அனைத்து பிராப்திகள் சகஜமாக ஏக்ரஸ் ஸ்திதியை உருவாக்கிவிடுகின்றன. அத்தகைய ஏக்ரஸ் ஸ்திதியில் நிலைத்திருக்கக்கூடிய ஆத்மாக்களே சிரேஷ்டமானவர்கள் ஆவார்கள்.

 

சுலோகன்:

குப்பைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு இரத்தினங்களைக் கொடுப்பது தான் மாஸ்டர் கடல் ஆவது ஆகும்.

 

பிரம்மா பாபாவிற்கு சமமாக ஆவதற்கான விசேஷ முயற்சி

 எவ்வாறு தந்தை பிரம்மா தனது சுகத்தின் சாதனங்கள், ஓய்வு மற்றும் எந்த ஒரு விசயத்தையும் தன்னுடைய ஆதாரமாக வைத்துக் கொள்ளவில்லை. அவர் அனைத்து விதமான தேகத்தின் நினைவிலிருந்து கடந்து அதாவது நிரந்தரமாக விளக்கின் (பாபாவின்) அன்பில் மூழ்கியிருந்தார், இவ்வாறு தந்தையைப் பின்பற்றுங்கள். எவ்வாறு விளக்கானது ஜோதி சொரூபமாக, ஒளி - சக்தி (லைட் - மைட்) ரூபமாக உள்ளதோ, அவ்வாறு விளக்குக்கு சமமாக தானும் ஒளி - சக்தி ரூபம் ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி