05.07.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
"இனிமையான
குழந்தைகளே!
நீங்கள்
இரட்டை
கீரிடமுள்ள
இராஜாவாக
ஆக
வேண்டும் என்றால்
நன்றாக
சேவை
செய்யுங்கள்,
பிரஜைகளை
உருவாக்குங்கள்,
சங்கமயுகத்தில்
நீங்கள் சேவை
தான்
செய்ய
வேண்டும்,
இதில்
தான்
நன்மை
இருக்கிறது"
கேள்வி:-
பழைய
உலகத்தின்
வினாசத்திற்கு
முன்னால்
ஒவ்வொருவரும்
எந்தவொரு
அலங்காரம்
செய்ய வேண்டும்?
பதில்:
குழந்தைகளாகிய
நீங்கள்
யோக
பலத்தின்
மூலம்
தங்களுடைய
அலங்காரம்
செய்யுங்கள்,
இந்த யோக
பலத்தின்
மூலம்
தான்
முழு
உலகமும்
தூய்மையாகும்.
நீங்கள்
இப்போது
வானப்பிரஸ்த
நிலைக்கு செல்ல
வேண்டும்
ஆகையினால்
இந்த
சரீரத்தை
அலங்காரம்
செய்வதற்கான
அவசியம்
இல்லை.
இது
ஒரு பைசாவிற்கும்
பிரயோஜனம்
இல்லாதது,
இதிலிருந்து
பற்றுதலை
நீக்கி
விடுங்கள்.
வினாசத்திற்கு
முன்பாக
பாபா விற்குச்
சமமாக
இரக்கமனமுடையவராகி
தன்னுடைய
மற்றும்
பிறருடைய
அலங்காரம்
செய்யுங்கள்.
கண்ணில்லாதவர்களுக்கு
ஊன்றுகோலாகுங்கள்.
ஓம்
சாந்தி.
பாபா
தூய்மையாவதற்கான
வழியைச்
சொல்வதற்கு
வருகின்றார்,
என்பதை
குழந்தைகள் இப்போது
நல்ல
விதத்தில்
புரிந்து
கொண்டிருக்கிறார்கள்.
அவரை
இந்த
ஒரு
விஷயத்திற்காக
மட்டுமே அழைக்கப்படுகிறது,
வந்து
எங்களை
தூய்மையற்ற
நிலையிலிருந்து தூய்மையாக்குங்கள்,
ஏனென்றால்
தூய்மையான உலகம்
கடந்து
விட்டது,
இப்போது
தூய்மையற்ற
உலகமாக
இருக்கிறது.
தூய்மையான
உலகம்
எப்போது சென்றது,
எவ்வளவு
காலம்
ஆயிற்று,
என்பதை
யாரும்
தெரிந்திருக்கவில்லை.
பாபா
மீண்டும்
இந்த
(பிரம்மா)
உடலில் வந்திருக்கின்றார்,
என்பதை
குழந்தைகளாகிய
நீங்கள்
தெரிந்துள்ளீர்கள்.
நீங்கள்
தான்
அழைத்தீர்கள்,
பாபா
தூய்மையற்ற
எங்களை
வந்து
தூய்மையாக்குங்கள்,
நாங்கள்
எவ்வாறு
தூய்மையாவது?
நாம்
தூய்மையான உலகத்தில்
இருந்தோம்,
இப்போது
தூய்மையற்ற
உலகத்தில்
இருக்கிறோம்,
என்பதை
தெரிந்துள்ளீர்கள்.
இப்போது இந்த
உலகம்
மாறிக்கொண்டிருக்கிறது.
புதிய
உலகத்தின்
ஆயுள்
எவ்வளவு,
பழைய
உலகத்தின்
ஆயுள் எவ்வளவு,
என்பதை
யாரும்
தெரிந்திருக்கவில்லை.
உறுதியான
கட்டடம்
கட்டுங்கள்
என்றால்
இதனுடைய ஆயுள்
இத்தனை
ஆண்டுகள்
இருக்கும்,
என்று
கூறுவார்கள்.
அரைகுறையான
கட்டடம்
கட்டினால்
இதனுடைய ஆயுள்
இத்தனை
ஆண்டுகள்
இருக்கும்
என்று
சொல்வார்கள்.
இது
எத்தனை
ஆண்டுகள்
வரை
இருக்கும் என்பதை
புரிந்து
கொள்ள
முடியும்.
இந்த
முழு
உலகத்தின்
ஆயுள்
எவ்வளவு?
என்பது
மனிதர்களுக்குத் தெரியாது.
எனவே
கண்டிப்பாக
பாபா
வந்து
தான்
சொல்ல
வேண்டி
இருக்கும்.
பாபா
கூறுகின்றார்
-
குழந்தைகளே,
இப்போது
இந்த
பழைய
உலகம்
முடிய
வேண்டும்.புதிய
தூய்மையான
உலகம்
ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது.
புதிய
உலகத்தில்
மிகவும்
குறைந்த
மனிதர்கள்
தான்
இருந்தார்கள்.
புதிய
உலகம்
சத்யுகமாகும்,
அதை
சுகதாமம்
என்று
சொல்கிறார்கள்.
இது
துக்கதாமம்
ஆகும்,
இதனுடைய
முடிவு
கண்டிப்பாக
வர வேண்டும்.
பிறகு
சுகதாமத்தின்
வரலாறு
திரும்பவும்
நடக்க
வேண்டும்.
அனைவருக்கும்
இதை
புரிய
வைக்க வேண்டும்.
பாபா
டைரக்ஷ்ன்
கொடுக்கின்றார்,
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
பாபாவை
நினைவு
செய்யுங்கள்.
மேலும்
மற்றவர்களுக்கும்
இந்த
வழியை
சொல்லுங்கள்.
லௌகீக
தந்தையை
அனைவரும்
தெரிந்திருக்கிறார்கள்,
பரலௌகீக
தந்தையை
தெரிந்திருக்கவில்லை.
சர்வவியாபி
என்று
சொல்லிவிடுகிறார்கள்.
கச்ச-மச்ச
(ஆமை,
மீன்)
அவதாரம்
அல்லது
84
இலட்சம்
பிறவிகளில்
கொண்டு
சென்று
விட்டார்கள்.
உலகத்தில்
யாருமே பாபாவைத்
தெரிந்திருக்கவில்லை.
பாபாவைத்
தெரிந்தால்
தானே
புரிந்து
கொள்ள
முடியும்.
ஒருவேளை
கல் முள்ளிலெல்லாம்
இருந்தால்
ஆஸ்தி
என்ற
விஷயமே
இருக்க
முடியாது.
தேவதைகளின்
பூஜையும்
செய்கிறார்கள்,
ஆனால்
யாருடைய
தொழிலையும்
தெரிந்திருக்கவில்லை.
இந்த
விஷயங்களில்
ஏதுமறியாதவர்களாக
இருக்கிறார்கள்.
எனவே
முதல்-முதலில்
முக்கியமான
விஷயத்தைப்
புரிய
வைக்க
வேண்டும்.
வெறும்
படங்களிலிருந்து மட்டும்
யாரும்
புரிந்து
கொள்ள
முடியாது.
மனிதர்கள்
பாவம்
பாபாவையும்
தெரிந்திருக்கவில்லை,
ஆரம்பத்திலிருந்து இந்த
படைப்பு
எவ்வாறு
படைக்கப்பட்டது,
என்று
படைப்பைப்
பற்றியும்
தெரிந்திருக்கவில்லை.
யாரை
பூஜிக்கிறார் களோ,
அந்த
தேவதைகளின்
இராஜ்யம்
எப்போது
இருந்தது,
எதுவும்
தெரியாது.
இலட்சக்
கணக்கான
ஆண்டுகள் சூரியவம்ச
இராஜ்யம்
நடந்தது,
பிறகு
சந்திரவம்ச
இராஜ்யம்
லட்சக்
கணக்கான
ஆண்டுகள்
நடந்தது,
என்று புரிந்து
கொள்கிறார்கள்,
இதைத்
தான்
அஞ்ஞானம்
என்று
சொல்லப்படுகிறது.
பாபா
இப்போது
குழந்தைகளாகிய உங்களுக்குப்
புரிய
வைத்தார்,
பிறகு
நீங்கள்
திரும்பவும்
சொல்கிறீர்கள்.
பாபா
கூட
திரும்பவும்
கூறுகிறார் அல்லவா?
இப்படி
புரிய
வையுங்கள்,
செய்தியைக்
கொடுங்கள்,
இல்லையென்றால்
எப்படி
இராஜ்யம்
ஸ்தாபனை யாகும்.
இங்கே
அமர்ந்து
கொள்வதால்
ஒன்றும்
நடக்காது.
ஆமாம்,
வீட்டில்
அமர்ந்திருப்பவர்களும்
வேண்டும்.
அவர்கள்
நாடகத்தின்
படி
அமர்ந்திருக்
கிறார்கள்.
யக்ஞத்தை
பராமரிப்பவர்களும்
கூட
வேண்டும்.
பாபாவிடம் எவ்வளவு
குழந்தைகள்
வருகிறார்கள்
சந்திப்பதற்கு,
ஏனென்றால்
சிவபாபாவிடமிருந்து
தான்
ஆஸ்தி
பெற வேண்டும்.
லௌகீக
தந்தையிடம்
ஆண்
குழந்தை
பிறந்தது
என்றால்
நாம்
தந்தையிடமிருந்து
ஆஸ்தி
எடுக்க வேண்டும்
என்று
அது
புரிந்து
கொள்ளும்.
பெண்
குழந்தை
சென்று
பாதி
வாழ்க்கைத்
துணையாக
மாறுகின்றது.
சத்யுகத்தில்
ஒருபோதும்
சொத்துக்களின்
மீது
சண்டை
நடப்பதே
இல்லை.
இங்கே
காம
விகாரத்திற்காக சண்டை
நடக்கிறது.
அங்கேயோ
இந்த
5
பூதங்கள்
இருப்பதில்லை,
எனவே
துக்கம்
என்ற
பெயர்
அடையாளம் கூட
இல்லை.
அனைவரும்
நஷ்டமோகாவாக
(மோகத்தை
நஷ்டம்
செய்தவர்கள்
-
பற்று
இல்லாதவர்கள்)
இருக்கிறார்கள்.
சொர்க்கம்
இருந்தது,
அது
கடந்து
விட்டது
என்பதைப்
புரிந்து
கொள்கிறார்கள்.
சித்திரங்களும் இருக்கின்றன,
ஆனால்
குழந்தைகளாகிய
உங்களுக்கு
இந்த
சிந்தனை
இப்போது
வருகிறது.
இந்த
சக்கரம் ஒவ்வொரு
5
ஆயிரம்
ஆண்டுகளுக்குப்
பிறகு
திரும்பவும்
நடக்கிறது,
என்பதை
நீங்கள்
தெரிந்துள்ளீர்கள்.
சாஸ்திரங்களில்
சூரியவம்ச-சந்திரவம்ச
இராஜ்யம்
2500
ஆண்டுகள்
நடந்தது
என்று
எழுதப்படவில்லை.
பரோடாவின் இராஜ்பவனில்
இராமாயணம்
கேட்டுக்
கொண்டிருக்கிறார்கள்
என்று
செய்தித்தாளில்
படித்தேன்.
ஏதாவது ஆபத்துக்கள்
வந்தால்,
பகவானை
திருப்திப்
படுத்துவதற்காக
மனிதர்கள்
பக்தியில்
ஈடுபட்டுவிடுகிறார்கள்.
அப்படி
ஒன்றும்
பகவான்
திருப்தி
அடைவதில்லை.
இது
நாடகத்தில்
அடங்கியுள்ளது.
பக்தியின்
மூலம் பகவான்
திருப்தி
அடைவதில்லை.
குழந்தைகளாகிய
நீங்கள்
தெரிந்துள்ளீர்கள்,
அரைக்கல்பம்
பக்தி
நடக்கிறது,
தாங்களாகவே
துக்கம்
அடைந்து
கொண்டிருக்கிறார்கள்.
பக்தி
செய்து-செய்து
பணம்
அத்தனையும்
அழித்து விடுகிறார்கள்.
இந்த
விஷயங்களை
சேவையில்
இருக்கக்
கூடிய
மிகக்
குறைந்தவர்களே
புரிந்து
கொள்வார்கள்,
அவர்கள்
செய்திகளையும்
கொடுத்துக்
கொண்டே
இருக்கிறார்கள்.
இது
ஈஸ்வரிய
பரிவாரம்
என்று
புரிய வைக்கப்படுகிறது.
ஈஸ்வரன்
வள்ளலாவார்,
அவர்
வாங்கக்
கூடியவர்
இல்லை.
அவருக்கு
யாரும்
கொடுப்பதில்லை,
மேலும்
வீணாக்கிக்
கொண்டே
இருக்கிறார்கள்.
உங்களுக்கு
எவ்வளவு
அளவற்ற
பைசா
கொடுத்தேன்,
என்று
பாபா
குழந்தைகளாகிய
உங்களிடம் கேட்கின்றார்.
உங்களை
சொர்க்கத்தின்
எஜமானர்களாக
மாற்றினேன்,
பிறகு
அவையனைத்தும்
எங்கு
சென்றது?
இந்தளவிற்கு
எதுவும்
இல்லாதவர்களாக
எப்படி
ஆனீர்கள்?
பிறகு
இப்போது
நான்
வந்திருக்கின்றேன்,
நீங்கள் எவ்வளவு
பல
மடங்கு
பாக்கியவான்களாக
ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள்.
இந்த
விஷயங்களை
மனிதர்கள் யாரும்
தெரிந்திருக்கவில்லை.
இப்போது
இந்த
பழைய
உலகத்தில்
இருக்க
வேண்டியதில்லை.
இது
அழிய வேண்டும்.
மனிதர்களிடமிருக்கும்
அதிக
பணம்
எதுவும்
கையில்
வந்து
சேரப்போவதில்லை.
வினாசம்
நடந்தது என்றால்
அனைத்தும்
அழிந்து
விடும்.
அவ்வளவு
மையில்களில்
(தொலை
தூரம்
வரை)
பெரிய
பெரிய கட்டிடங்கள்
போன்றவைகள்
கட்டப்பட்டிருக்கின்றன.
அதிகத்திலும்
அதிக
சொத்துகள்
இருக்கின்றன,
அனைத்தும் அழிந்து
விடும்.
ஏனென்றால்
நமது
இராஜ்யம்
இருந்த
பொழுது
வேறு
யாரும்
இல்லை,
என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
அங்கே
அளவற்ற
செல்வம்
இருந்தது.
இன்னும்
போகப்போக
என்னென்ன
நடக்கிறது
என்று பார்க்கப்போகிறீர்கள்.
அவர்களிடம்
எவ்வளவு
தங்கம்,
எவ்வளவு
வெள்ளி,
தாள்கள்
(பணம்)
போன்றவை இருக்கின்றன
அவை
அனைத்திற்கும்
பட்ஜட்
வருகிறது,
இவ்வளவு
பட்ஜட்,
இவ்வளவு
செலவு
என்று அறிவிக்கிறார்கள்.
இப்போது
ஏவுகணைகளுக்கு
அவ்வளவு
செலவு
செய்கிறார்கள்.
அதிலிருந்து வருமானம் எதுவும்
இல்லை.
இது
வைத்துக்
கொள்ளும்
பொருளும்
இல்லை.
தங்கம்
மற்றும்
வெள்ளி
போன்றவைகள் வைக்கும்
பொருட்கள்.
பொன்னுலகமாக
இருக்கும்போது
தங்க
நாணயம்
இருக்கிறது.
திரேதாயுகத்தில்
வெள்ளி இருக்கிறது.
அங்கே
அளவற்ற
செல்வம்
இருக்கிறது,
பிறகு
குறைந்து-குறைந்து
இப்போது
பாருங்கள்
என்ன வருகிறது!
காகித
நோட்டுகள்.
வெளிநாடுகளிலும்
கூட
காகிதத்தில்
வருகிறது.
காகிதம்
ஒன்றிற்கும்
உதவாததாகும்.
மீதி
என்ன
இருக்கும்?
இந்த
பெரிய-பெரிய
கட்டடங்கள்
போன்ற
அனைத்தும்
அழிந்து
விடும்
ஆகையினால் பாபா
கூறுகின்றார்,
இனிமையிலும்-இனிமையான
குழந்தைகளே,
இவை
எதையெல்லாம்
பார்க்கின்றீர்களோ,
இவை
எதுவுமே
இல்லை
என்று
புரிந்து
கொள்ளுங்கள்.
இவையனைத்தும்
அழிந்து
விடும்.
யார்
எவ்வளவு தான்
அழகாக
இருந்தாலும்,
இந்த
சரீரம்
கூட
பழையது,
ஒரு
பைசாவிற்கு
பிரயோஜனமில்லாதது.
இந்த உலகமே
இன்னும்
கொஞ்ச
காலத்திற்குத்
தான்
ஆகும்.
ஏதாவது
இடமிருக்கிறதா
என்ன.
அமர்ந்து-அமர்ந்து
மனிதனுக்கு
என்னவாகி
விடுகிறது.
இதயம்
நின்று
விடுகிறது.
மனிதர்களின்
வாழ்க்கை
நம்பிக்கை
இல்லாதது.
சத்யுகத்தில்
அப்படி
இருக்குமா
என்ன?
அங்கே
யோக
பலத்தினால்
உடல்
கல்பதருவைப்
போல்
இருக்கும்.
இப்போது
குழந்தைகளாகிய
உங்களுக்கு
பாபா
கிடைத்திருக்கிறார்,
இந்த
உலகத்தில்
நீங்கள்
இருக்கக்
கூடாது என்று
கூறுகின்றார்.
இது
மோசமான
உலகமாகும்.
இப்போது
யோகபலத்தின்
மூலம்
அலங்கரிக்க
வேண்டும்.
அங்கே
குழந்தை
கூட
யோகபலத்தின்
மூலம்
பிறக்கும்.
அங்கே
விகாரத்தின்
விஷயமே
இருப்பதில்லை.
நீங்கள்
யோகபலத்தின்
மூலம்
உலகத்தை
தூய்மையாக்குகின்றீர்கள்
என்றால்,
மற்றவை
என்ன
பெரிய
விஷயம்!
இந்த
விஷயங்களைக்
கூட
யார்
தங்களுடைய
வம்சத்தவர்களோ,
அவர்கள்
தான்
புரிந்து
கொள்வார்கள்.
மற்றவர்கள்
அனைவரும்
சாந்திதாமத்திற்குச்
செல்ல
வேண்டும்,
அது
வீடாகும்.
ஆனால்
மனிதர்கள்
அதனை நமது
வீடு
என்று
கூட
புரிந்து
கொள்வதில்லை.
ஒரு
ஆத்மா
செல்கிறது
மற்றொன்று
வந்து
கொண்டிருக்கிறது,
என்று
அவர்கள்
சொல்கிறார்கள்.
உலகம்
வளர்ந்து
கொண்டே
செல்கிறது.
நீங்கள்
படைப்பவர்
மற்றும்
படைப்பை தெரிந்துள்ளீர்கள்,
ஆகையினால்
மற்றவர்களுக்குப்
புரிய
வைப்பதற்கு
முயற்சி
செய்கிறீர்கள்.
பாபாவிற்கு மாணவர்களாகிவிடட்டும்,
அனைத்தையும்
தெரிந்து
கொள்ளட்டும்,
குஷியடையட்டும்,
என்று
புரிந்து
கொண்டு முயற்சி
செய்கிறீர்கள்.
நாம்
இப்போது
அமரலோகம்
செல்கிறோம்.
அரைக்கல்பம்
பொய்யான
கதைகளைக் கேட்டோம்.
இப்போது
நாம்
அமரலோகம்
செல்லப்போகிறோம்,
என்ற
குஷி
நிறைய
இருக்க
வேண்டும்.
இப்பொழுது
இந்த
மரணலோகத்தின்
கடைசியாகும்.
நாம்
குஷியின்
பொக்கிஷத்தை
இங்கே
நிரப்பிக்
கொண்டு செல்கிறோம்.
எனவே
இந்த
வருமானத்தை
ஈட்டுவதில்,
பையை
நிரப்புவதில்
நன்றாக
ஈடுபட்டு
விட
வேண்டும்.
நேரத்தை
வீணாக்கக்
கூடாது.
இப்போது
மற்றவர்களுக்கு
சேவை
செய்ய
வேண்டும்,
பையை
நிரப்ப
வேண்டும்,
அவ்வளவு
தான்.
இரக்கமனமுடையவர்களாக
எப்படி
ஆவது,
என்று
பாபா
கற்றுத்தருகிறார்.
கண்ணில்லாதவர் களுக்கு
ஊன்றுகோல்
ஆகுங்கள்.
இந்த
கேள்வியை
எந்த
சன்னியாசியோ,
வித்வான்
போன்றவர்களோ
கேட்க முடியாது.
சொர்க்கம்
எங்கு
இருக்கிறது?
நரகம்
எங்கு
இருக்கிறது?
என்று
அவர்களுக்கு
என்ன
தெரியும்.
எவ்வளவு
தான்
பெரிய-பெரிய
பதவியில்
இருப்பவர்களாக
இருக்கட்டும்,
விமானப்படைத்
தளபதியாக
இருக்கட்டும்,
தரைப்படை
தளபதியாக
இருக்கட்டும்,
கப்பல்படைத்
தளபதியாக
இருக்கட்டும்,
ஆனால்
உங்களுக்கு
முன்னால் இவர்கள்
எல்லாம்
என்ன!
மீதி
இன்னும்
கொஞ்ச
காலம்
தான்
இருக்கிறது,
என்று
நீங்கள்
தெரிந்துள்ளீர்கள்.
சொர்க்கத்தைப்
பற்றி
யாருக்கும்
தெரியாது.
இந்த
சமயம்
எல்லா
பக்கங்களிலும்
சண்டை
நடந்து
கொண்டிருக்கிறது.
பிறகு
அவர்களுடைய
விமானங்கள்
அல்லது
இராணுவத்திற்கு
அவசியம்
இருக்காது.
இவையனைத்தும்
அழிந்து விடும்.
மீதம்
கொஞ்சம்
மனிதர்கள்
இருப்பார்கள்.
இந்த
விளக்குகள்,
விமானங்கள்
போன்றவை
இருக்கும்,
ஆனால்
உலகம்
எவ்வளவு
சிறியதாக
இருக்கும்,
பாரதம்
தான்
இருக்கும்.
மாடல்கள்
எப்படி
சிறியதாக உருவாக்குகிறார்களோ
அதுபோலாகும்.
கடைசியில்
மரணம்
எப்படி
வரும்,
என்று
வேறு
யாருடைய
புத்தியிலும் இருக்காது.
மரணம்
நேர்
எதிரிலேயே
நிற்கிறது,
என்பதை
நீங்கள்
தெரிந்துள்ளீர்கள்.
நாங்கள்
இங்கு
அமர்ந்து கொண்டே
அணுகுண்டுகளை
வீசுவோம்,
என்று
அவர்கள்
கூறுகிறார்கள்.
எங்கு
விழுகிறதோ
அங்கு
அனைத்தும் அழிந்து
விடும்.
இராணுவம்
போன்ற
எதற்கும்
அவசியம்
இல்லை.
ஒவ்வொரு
விமானம்
கூட
கோடிக்கணக்கில் செலவை
சாப்பிட்டு
விடுகிறது.
அனைவரிடமும்
எவ்வளவு
தங்கமிருக்கிறது.
டன்
டன்களாக
தங்கம்
இருக்கிறது,
அவையனைத்தும்
கடலுக்குள்
சென்று
விடும்.
இவையனைத்தும்
இராவண
இராஜ்யம்
ஒரு
தீவாகும்.
கணக்கிலடங்கா
மனிதர்கள்
இருக்கிறார்கள்.
நீங்கள் அனைவரும்
தங்களுடைய
இராஜ்யத்தை
ஸ்தாபனை
செய்து
கொண்டிருக்கிறீர்கள்.
எனவே
சேவையில் மும்முரமாக
ஈடுபட்டிருக்க
வேண்டும்.
எங்கேயாவது
வெள்ளம்
பெருக்கெடுத்து
ஓடுகிறது
என்றால்
பாருங்கள் எவ்வளவு
பிசியாகிவிடுகிறார்கள்.
அனைவருக்கும்
உணவு
போன்றவைகளை
சேர்க்கும்
சேவையில்
ஈடுபட்டு விடுகிறார்கள்.
தண்ணீர்
வருகிறது
என்றால்
முதலிலேயே ஓட
ஆரம்பித்து
விடுகிறார்கள்.
எனவே
அனைத்தும் எப்படி
அழியும்,
என்று
சிந்தியுங்கள்.
உலகத்தைச்
சுற்றிலும்
சமுத்திரம்
இருக்கிறது.
வினாசம்
நடந்தால்
நீரில் மூழ்கி
விடும்,
எங்கும்
தண்ணீரோ
தண்ணீர்.
புத்தியில்
இருக்கிறது,
நம்முடைய
இராஜ்யம்
இருந்தபோது
இந்த பாம்பே-கராச்சி
போன்றவை
இருக்கவில்லை.
பாரதம்
எவ்வளவு
சிறியதாக
இருக்கும்,
அதுவும்
இனிய
நீரின் மீது.
அங்கே
கிணறு
போன்றவற்றிற்கு
அவசியம்
இல்லை.
நீர்
அருந்துவதற்கு
மிகவும்
சுத்தமாக
இருக்கும்.
நதிகளில்
விளையாடுவார்கள்.
அழுக்கின்
விஷயம்
எதுவும்
இல்லை.
பெயரே
சொர்க்கம்,
அமரலோகமாகும்.
பெயரைக்
கேட்டதுமே,
சீக்கிரம்-சீக்கிரமாக
பாபாவிடமிருந்து
முழுவதுமாகப்
படித்து
ஆஸ்தியை
எடுத்துக் கொள்ள
வேண்டும்,
என்று
மனம்
விரும்புகிறது.
படித்து
பிறகு
படிப்பிக்க
வேண்டும்.
அனைவருக்கும் செய்தியைக்
கொடுக்க
வேண்டும்.
கல்பத்திற்கு
முன்னால்
யாரெல்லாம்
ஆஸ்தி
எடுத்தார்களோ,
அவர்கள் எடுத்துக்
கொள்வார்கள்.
முயற்சி
செய்து
கொண்டே
இருக்கிறார்கள்.
ஏனென்றால்
பாவம்
பாபாவைத்
தெரிந்திருக்கவில்லை.
பாபா
கூறுகின்றார்,
தூய்மையாகுங்கள்.
யாருக்கு
கைகளில்
சொர்க்கம்
கிடைக்கிறதோ,
அவர்கள்
ஏன் தூய்மையாக
இருக்க
மாட்டார்கள்.
எங்களுக்கு
உலகத்தின்
இராஜ்யம்
கிடைக்கிறது,
நாங்கள்
ஏன்
ஒரு
பிறவி தூய்மையாக
மாட்டோம்,
என்று
கேளுங்கள்.
பகவானுடைய
மகாவாக்கியம்
-
நீங்கள்
இந்த
கடைசி
பிறவியில் தூய்மையாக
ஆனீர்கள்
என்றால்
21
பிறவிகளுக்கு
தூய்மையான
உலகத்திற்கு
எஜமானர்களாக
ஆவீர்கள்.
இந்த
ஒரு
பிறவி
மட்டும்
என்னுடைய
ஸ்ரீமத்படி
செல்லுங்கள்.
ரக்ஷா
பந்தன்
கூட
இதனுடைய
அடையாளமாகும்.
எனவே
நாம்
ஏன்
தூய்மையாக
இருக்க
முடியாது.
எல்லையற்ற
தந்தை
உத்திரவாதம்
அளிக்கின்றார்.
பாபா பாரதத்திற்கு
சொர்க்கத்தின்
ஆஸ்தியைக்
கொடுத்திருந்தார்,
அதை
சுகதாமம்
என்று
சொல்லப்படுகிறது.
அளவற்ற சுகம்
இருந்தது.
இது
துக்கதாமமாகும்.
பெரிய
நபர்
ஒருவருக்கு
நீங்கள்
இப்படி
புரிய
வைத்தீர்கள்
என்றால்,
அனைவரும்
கேட்டுக்
கொண்டே
இருப்பார்கள்.
யோகத்தில்
இருந்து
சொன்னீர்கள்
என்றால்
அனைவருக்கும் நேரம்
காலம்
எல்லாமே
மறந்து
விடும்.
யாரும்
எதுவும்
சொல்ல
முடியாது.
15-20
நிமிடங்களுக்குப்
பதிலாக ஒரு
மணி
நேரம்
கூட
கேட்டுக்
கொண்டே
இருப்பார்கள்.
ஆனால்
அந்த
சக்தி
வேண்டும்.
தேக
அபிமானம் இருக்கக்
கூடாது.
இங்கே
சேவையோ
சேவை
தான்
செய்ய
வேண்டும்,
அப்போது
தான்
நன்மை
நடக்கும்.
இராஜாவாக
ஆக
வேண்டும்
என்றால்
பிரஜைகளை
எங்கே
உருவாக்கியிருக்கின்றீர்கள்.
அப்படியே
பாபா தலையில்
கை
வைத்து
ஆசிர்வதித்து
விடுவாரா
என்ன?
பிரஜைகள்
இரண்டு
கிரீடமுடையவர்களாக
ஆகிறார்களா என்ன?
உங்களுடைய
குறிக்கோளே
இரண்டு
கிரீடமுடையவர்களாக
ஆவதாகும்.
பாபா
குழந்தைகளுக்கு உற்சாகமூட்டுகிறார்.
பிறவி-பிறவிகளுக்குமான
பாவங்கள்
தலையில்
இருக்கிறது,
அதை
யோகபலத்தின்
மூலம் தான்
அழிக்க
முடியும்.
மற்றபடி
இந்த
பிறவியில்
என்னென்ன
செய்தீர்களோ,
அதை
நீங்கள்
புரிந்து
கொள்ள முடியும்
அல்லவா?
பாவத்தை
அழிப்பதற்கு
யோகம்
போன்றவைகள்
கற்றுக்
கொடுக்கப்படுகிறது.
மற்றபடி இந்த
பிறவியினுடையது
ஒன்றும்
விஷயமில்லை.
தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம்
ஆவதற்கான யுக்தியை
பாபா
அமர்ந்து
சொல்கின்றார்,
மற்றபடி
கிருபை
போன்றவைகள்
எல்லாம்
சாதுக்களிடம்
சென்று கேளுங்கள்.
நல்லது!
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு
தாயும்
தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே!
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
அமரலோகத்திற்குச்
செல்வதற்காக
சங்கமயுகத்தில்
குஷியின்
பொக்கிஷத்தை
நிரப்பிக்
கொள்ள வேண்டும்.
நேரத்தை
வீணாக்கக்
கூடாது.
தன்னுடைய
பையை
நிரப்பிக்
கொண்டு இரக்கமனமுடையவராகி
கண்ணில்லாதவர்களுக்கு
ஊன்றுகோலாக
ஆக
வேண்டும்.
2.
கைகளில்
சொர்க்கத்தை
பெறுவதற்குக்
கண்டிப்பாக
தூய்மையாக
வேண்டும்.
தன்னை சதோபிர
தானமாக
மாற்றுவதற்கு
யுக்திகளைப்
படைத்து
தன்
மீது
தானே
கருணை
காட்ட வேண்டும்.
யோகபலத்தை
சேமிக்க
வேண்டும்.
வரதானம்:
பிரச்சனைகள்
என்ற
மேகங்களைப்
பார்த்து
பயப்படுவதற்குப்
பதிலாக விநாடியில்
கடந்து
செல்லக்
கூடிய
வெற்றி
சொரூபமானவர்
ஆகுக.
சில
குழந்தைகள்
சாஸ்திரவாதிகளைப்
போன்று
பிரச்சனைகளை
உருவாக்குவதில்
மிகவும்
புத்திசாலிகளாக இருக்கின்றனர்.அந்த
விசயத்தைக்
கேட்டதும்
பாபாவிற்கே
சிரிப்பு
வருமளவிற்கு
பிரச்சனைகளை
உருவாக்குகின்றனர்.
ஆனால்
மற்றவர்கள்
பாதிப்படைந்து
விடுகின்றனர்.
இவ்வாறு
பல
வகையான
வீண்
விசயங்களை,
வீண்
ரிஜிஸ்டருக்கான
ரோல்
உருவாக்கிக்
கொண்டே
இருக்கின்றனர்.
ஆகையால்
இதிலிருந்து
தீவிர
வேகத்தில் பறப்பவர்
ஆகுங்கள்,
கள்ளங்கபடமற்றவர்
ஆகுங்கள்.
தந்தையைப்
பாருங்கள்,
பிரச்சனைகளைப்
பார்க்காதீர்கள்.
இந்த
பிரச்சனைகள்
தான்
மேகங்களாகும்,
இதை
விநாடியில்
கடந்து
செல்வதற்கான
விதியின்
மூலம்
வெற்றி சொரூபமானவர்
ஆகுங்கள்.
சுலோகன்:
ஏதாவது
ஒரு
விசயத்தில்
கேள்விக்
குறி
எழுப்புவது
என்றால் வீணானவைகளின்
கணக்கை
துவக்குவதாகும்.
ஓம்சாந்தி