18.01.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
முழுமையானவர்
ஆக
வேண்டுமெனில்
எனக்குள்
என்ன
என்ன குறை
இருக்கிறது?
என்பதை
நேர்மையாக
மற்றும்
உண்மையான
உள்ளத்துடன்
பாருங்கள்,
தந்தையிடத்தில்
ஆலோசனை
பெற்று
அந்தக்
குறைகளை
நீக்கிக்
கொண்டே
செல்லுங்கள்.
ஓம்சாந்தி.
இப்போது
ஆத்மாக்களாகிய
உங்களது
அன்பு
ஒரு
தந்தையிடத்தில்
இருக்கிறது.
அந்த
ஆத்மாவை நெருப்பு
எரிக்க
முடியாது,
தண்ணீர்
மூழ்கடிக்க
முடியாது.
அப்படிப்பட்ட
ஆத்மா
இப்போது
தந்தையிடத்தில் தொடர்பு
வைத்திருக்கிறது.
அவரை
தீபம்
என்றும்
கூறுகிறோம்,
அவரிடம்
சில
விட்டில்
பூச்சிகள்
சென்று எரிந்து
இறந்து
விடுகின்றன.
சில
சுற்றி
வந்து
நடனம்
ஆடுகின்றன,
சில
எரிந்து
பலியாகி
விடுகின்றன.
முழு உலகமும்
தீபத்திடம்
பலியாக
வேண்டும்.
தீபமாக
இருக்கும்
அந்த
தந்தைக்கு
குழந்தைகளாகிய
நீங்களும் உதவியாளர்களாக
இருக்கிறீர்கள்.
எங்கெல்லாம்
சென்டர்
இருக்கிறதோ
அங்கு
அனைவரும்
வந்து
குழந்தைகளாகிய
உங்கள்
மூலம்
தீபத்திடம்
பலியாகின்றனர்.
தந்தை
கூறுகின்றார்
-
யார்
என்னிடத்தில்
பலியாகிறார்களோ அவர்களிடத்தில்
நான்
21
பிறவிகளுக்கு
பலியாகின்றேன்.
மரம்
சிறிது
சிறிதாக
வளர்கிறது
என்பதை
இப்போது குழந்தைகள்
அறிவீர்கள்.
தீபத்தில்
சிறிய
சிறிய
விட்டில்
பூச்சிகள்
எவ்வாறு
பலியாகின்றன
என்பதைப் பார்க்கிறீர்கள்!
எந்த
அளவிற்கு
குழந்தைகளாகிய
நீங்கள்
யோகா
செய்வீர்களோ,
சக்தி
தாரணை
செய்வீர்களோ அந்த
அளவிற்கு
நீங்களும்
தீபத்திற்கு
சமமாக
ஆகிவிடுவீர்கள்.
இப்போது
அனைவரின்
தீபமும் அணைந்திருக்கிறது.
யாரிடத்திலும்
சக்தி
கிடையாது.
அனைத்து
ஆத்மாக்களும்
பொய்யானதாக
ஆகிவிட்டது.
இன்றைய
நாட்களில்
பொய்யான
தங்கமும்
உண்மையானது
போன்று
தென்படுகிறது.
ஆனால்
அதற்கு
எந்த மதிப்பும்
கிடையாது.
அவ்வாறு
ஆத்மாவும்
பொய்யானதாக
ஆகிவிட்டது.
உண்மையான
தங்கத்தில்
தான் கலப்படம்
செய்கின்றனர்.
எனவே
ஆத்மாவில்
கறை
படிந்து
விட்டது.
இதன்
காரணத்தினால்
பாரதம்
மற்றும் முழு
உலகம்
மிகவும்
துக்கமானதாக
இருக்கிறது.
இப்போது
நீங்கள்
யோக
அக்னியின்
மூலம்
கறையைப் போக்கி
தூய்மையாக
ஆக
வேண்டும்.
தந்தையிடமிருந்து
எனக்கு
எல்லாம்
கிடைத்திருக்கிறதா?
எந்த
ஒரு
பொருளிலும்
குறை
கிடையாது தானே?
என்று
ஒவ்வொரு
குழந்தையும்
தன்னிடத்தில்
கேட்க
வேண்டும்.
தனக்குள்
பார்த்துக்
கொள்ள வேண்டும்.
இலட்சுமியை
அடைவதற்கு
தனக்கு
தகுதியிருப்பதாக
நினைக்கிறீர்களா?
என்று
நாரதரிடம்
கேட்டார்கள் அல்லவா!
தந்தையும்
கேட்கின்றார்
-
இலட்சுமியை
அடைவதற்கு
தகுதியானவராக
ஆகியிருக்கிறீர்களா?
என்ன என்ன
குறை
இருக்கிறது?
அதை
நீக்குவதற்கு
அதிக
முயற்சி
செய்ய
வேண்டும்.
சிலர்
சிறிதும்
முயற்சி செய்வது
கிடையாது.
சிலர்
நல்ல
முறையில்
முயற்சி
செய்கின்றனர்.
உங்களிடத்தில்
எந்த
குறையும்
கிடையாது தானே?
என்று
புதுப்
புது
குழந்தைகள்
கேட்கப்படுகின்றனர்.
ஏனெனில்
நீங்கள்
இப்போது
பெர்ஃபக்ட்
(முழுமை)
ஆக
வேண்டும்.
தந்தை
வருவதே
குறைபாடடற்றவர்களாக
ஆக்குவதற்காக!
எனவே
நான்
இந்த
இலட்சுமி நாராயணனைப்
போன்று
குறைபாடடற்றவனாக
இருக்கிறேனா?
என்று
தனக்குள்
சிந்திக்க
வேண்டும்.
உங்களது இலட்சியமே
இது
தான்.
ஒருவேளை
ஏதாவது
குறையிருந்தால்
தந்தையிடம்
கூற
வேண்டும்.
இந்த
இந்தக் குறைகள்
என்னை
விட்டுப்
போகவில்லை.
பாபா
இதற்காக
எனக்கு
ஏதாவது
வழி
கூறுங்கள்.
வியாதிகள் மருத்துவர்
மூலம்
தான்
வெளியேறும்.
எனவே
எனக்குள்
என்ன
குறையிருக்கிறது?
என்று
நேர்மையுடன்,
உண்மையாகப்
பார்க்க
வேண்டும்.
இதன்
மூலம்
என்னால்
இந்த
பதவி
அடைய
முடியாது
என்பதைப்
புரிந்து கொள்ள
முடியும்.
நீங்கள்
இவரைப்
போன்று
அழகானவராக
ஆக
முடியும்
என்று
தந்தை
கூறுவார்.
குறைகளைக் கூறினால்
தான்
தந்தை
ஆலோசனை
கூறுவார்.
பலரிடத்தில்
குறைகள்
இருக்கின்றன.
சிலரிடம்
கோபம் இருக்கிறது
அல்லது
பேராசை
இருக்கிறது
அல்லது
வீண்
சிந்தனை
இருக்கிறது,
அவர்கள்
ஞான
தாரணை செய்ய
முடியாது.
பிறகு
அவர்களால்
மற்றவர்களுக்கு
தாரணை
செய்விக்கவும்
முடியாது.
தந்தை
தினம்
தினம் புரிய
வைக்கின்றார்,
உண்மையில்
இவ்வளவு
புரிய
வைக்க
வேண்டிய
அவசியமில்லை.
இது
தாரணை
செய்ய வேண்டிய
விசயமாகும்.
மந்திரமும்
மிக
நன்றாக
இருக்கிறது,
அதன்
பொருளை
தந்தை
புரிய
வைத்துக் கொண்டே
இருக்கின்றார்.
தந்தை
ஒரே
ஒருவர்
தான்,
எல்லையற்ற
தந்தையின்
மூலம்
நாம்
இவ்வாறு
ஆக வேண்டும்
என்று
இவ்வளவு
நாட்களாகப்
புரிய
வைத்துக்
கொண்டே
இருக்கின்றார்.
5
விகாரங்களை
வெல்வதற்கான
விசயம்
இப்போதைய
விசயமாகும்.
எந்த
பூதம்
துக்கம்
கொடுக்கிறதோ
அதை
நீக்குவதற்கான
யுக்தி தந்தை
கூறுவார்,
ஆனால்
இந்த
பூதம்
எனக்கு
அதிகம்
தொந்தரவு
செய்கிறது
என்று
வர்ணிக்க
வேண்டும்.
அந்த
பூதம்
நமக்குள்
கிடையாது,
இந்த
விகாரங்கள்
தான்
பல
பிறவிகளுக்கான
பூதம்,
அது
நம்மை துக்கமானவர்களாக
ஆக்கியிருக்கிறது
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
எனவே
பாபாவிடம்
மனம்
திறந்து
பேச வேண்டும்.
என்னிடத்தில்
இந்த
இந்த
பூதம்
இருக்கிறது,
அதை
எப்படி
வெளியேற்றுவது?
என்று
தந்தையிடம் முழுமையாக
கூற
வேண்டும்.
காமம்
என்ற
பூதம்
பற்றி
தினமும்
புரிய
வைக்கப்படுகிறது.
கண்கள்
அதிகம் ஏமாற்றுகிறது,
ஆகையால்
ஆத்மாவைப்
பார்க்கும்
பயிற்சி
நன்றாக
செய்ய
வேண்டும்.
நான்
ஆத்மா,
இவரும் ஆத்மா.
சரீரம்
இருக்கிறது,
இருந்தாலும்
வியாதியிலிருந்து
விடுபடுவதற்காகப்
புரிய
வைக்கின்றார்.
ஆத்மாக்களாகிய நீங்கள்
சகோதர
சகோதரர்கள்
அல்லவா!
எனவே
இந்த
சரீரத்தைப்
பார்க்கக்
கூடாது.
ஆத்மாக்கள்
நாம் அனைவரும்
திரும்பி
வீட்டிற்குச்
செல்லக்
கூடியவர்கள்.
அழைத்துச்
செல்ல
தந்தை
வந்திருக்கின்றார்,
மற்றபடி நான்
சர்வ
குணங்கள்
நிறைந்தவனாக
ஆகியிருக்கிறேனா?
என்பதைப்
பார்க்க
வேண்டும்.
எந்த
குணத்தில் குறையிருக்கிறது?
ஆத்மாவைப்
பார்த்து
இந்த
ஆத்மாவில்
இந்த
குறையிருக்கிறது
என்று
கூறப்படுகிறது.
இவரிடமிருந்து
இந்த
வியாதி
நீங்க
வேண்டும்
என்பதற்காக
அமர்ந்து
கரன்ட்
கொடுப்பார்.
மறைக்கக்
கூடாது,
அவகுணங்களைப்
பற்றி
கூறினால்
தந்தை
எச்சரிக்கை
கொடுப்பார்.
தந்தையே
நீங்கள்
இவ்வாறு
இருக்கிறீர்கள் என்று
தந்தையிடம்
பேச
வேண்டும்.
பாபா
நீங்கள்
எவ்வளவு
இனிமையானவராக
இருக்கிறீர்கள்!
ஆக
தந்தையின்
நினைவின்
மூலம்,
தந்தையின்
மகிமை
செய்வதன்
மூலம்
இந்த
பூதம்
ஓடிவிடும்,
நீங்கள்
குஷியாகவும் இருப்பீர்கள்.
வித
விதமான
பூதங்கள்
இருக்கின்றன.
தந்தை
எதிரில்
அமர்ந்திருக்கின்றார்,
ஆகையால்
அனைத்தும் கூறுங்கள்.
பாபா,
இப்படிப்பட்ட
சூழலில்
நஷ்டம்
ஏற்பட்டு
விடும்
என்று
நான்
நினைக்கிறேன்,
நான்
உணர்கிறேன்.
தந்தைக்கு
கருணை
ஏற்படுகிறது.
மாயையின்
பூதங்களை
விரட்டக்
கூடியவர்
ஒரே
ஒரு
பகவான்
தந்தை மட்டுமே.
அந்த
பூதங்களை
விரட்டுவதற்காக
பலரிடம்
செல்கின்றனர்.
இவர்
ஒரே
ஒருவர்
ஆவார்.
5
விகாரங்களை
வெளியேற்றுவதற்காக
யுக்தி
அனைவருக்கும்
கூறுங்கள்
என்று
குழந்தைகளுக்கும்
கற்றுக்
கொடுக்கப்படுகிறது.
இந்த
மரம்
மிக
மெதுவாக
விருத்தியடைகிறது
என்பதை
குழந்தைகள்
நீங்கள்
அறிவீர்கள்.
மாயை நாலாபுறமும்
அந்த
அளவிற்கு
முற்றுகையிடுகிறது,
முற்றிலுமாக
காணாமல்
போய்
விடுகின்றனர்.
தந்தையின் கைகளை
விட்டு
விடுகின்றனர்.
உங்களது
ஒவ்வொரு
தொடர்பும்
தந்தையிடம்
இருக்கிறது.
குழந்தைகள் அனைவரும்
வரிசைக்கிரமமாக
நிமித்தமாக
இருக்கின்றனர்.
இனிமையிலும்
இனிய
குழந்தைகளுக்கு
பாபா
அடிக்கடி
புரிய
வைக்கின்றார்
-
குழந்தைகளே!
தன்னை ஆத்மா
என்று
புரிந்து
கொள்ளுங்கள்,
இந்த
சரீரம்
என்னுடையது
கிடையாது,
இதுவும்
அழிந்து
போய்விடும்.
நாம்
தந்தையிடம்
செல்ல
வேண்டும்.
இவ்வாறு
ஞானத்தின்
போதையில்
இருப்பதன்
மூலம்
உங்களிடத்தில் அதிக
ஈர்ப்பு
ஏற்படும்.
இந்த
பழைய
ஆடையை
விட்டு
விட
வேண்டும்,
இங்கு
இருக்கப்
போவது
கிடையாது என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
இந்த
சரீரத்தின்
மீதிருக்கும்
பற்றுதல்
நீங்கி
விட
வேண்டும்.
இந்த
சரீரத்தில் சேவைக்காகத்
தான்
இருக்கின்றோம்,
இதன்
மீது
பற்று
கிடையாது.
வீட்டிற்குச்
செல்ல
வேண்டும்,
அவ்வளவு தான்.
சங்கமத்தின்
இந்த
நேரமும்
முயற்சிக்கு
மிகவும்
அவசியமாகும்.
நாம்
84
பிறவிச்
சக்கரம்
முடித்து விட்டோம்
என்பதை
இப்போது
தான்
புரிந்து
கொள்கிறோம்.
நினைவு
யாத்திரையில்
இருங்கள்
என்று
தந்தை கூறுகின்றார்.
எவ்வளவு
நினைவில்
இருப்பீர்களோ
உங்களது
இயற்கையும்
தாசியாக
ஆகிவிடும்.
சந்நியாசிகள் ஒருபோதும்
யாரிடத்திலும்,
எதையும்
கேட்பது
கிடையாது.
அவர்கள்
யோகிகள்
அல்லவா!
நாம்
பிரம்மத்தில் ஐக்கியமாக
வேண்டும்
என்ற
நம்பிக்கை
இருக்கிறது.
அவர்களது
தர்மமே
இது
தான்,
மிகவும்
உறுதியாக இருக்கின்றனர்.
இந்த
சரீரத்தை
விடுத்துச்
செல்கிறோம்,
அவ்வளவு
தான்.
ஆனால்
அவர்களது
பாதையே தவறானது,
செல்ல
முடியாது.
அதிக
உழைப்பு
செய்கின்றனர்.
பக்தி
மார்க்கத்தில்
தேவதைகளை
சந்திப்பதற்காக சிலர்
தனது
உடலையே
கொடுத்து
விடுகின்றனர்.
ஆத்மாவை
கொடுக்கின்றனர்
என்று
கூறுவது
கிடையாது,
அவ்வாறு
கொடுக்க
முடியாது.
மற்றபடி
உடலைக்
கொடுக்கின்றனர்.
எனவே
குழந்தைகள்
நீங்கள்
சேவையில் அதிக
ஆர்வம்
வைக்க
வேண்டும்.
சேவை
செய்தால்
தந்தையின்
நினைவும்
இருக்கும்,
சேவை
அனைத்து இடங்களிலும்
இருக்கிறது,
எங்கு
சென்றும்
நீங்கள்
புரிய
வைக்கலாம்,
ஒன்றும்
செய்யமாட்டார்கள்.
யோகாவில் இருக்கிறீர்கள்
எனில்
நீங்கள்
அமரர்களாக
இருக்கிறீர்கள்.
ஒருபோதும்
வேறு
எந்த
எண்ணமும்
வராது.
ஆனால்
அந்த
நிலை
உறுதியானதாக
இருக்க
வேண்டும்.
முதலில்
எனக்குள்
எந்தக்
குறையும்
கிடையாது தானே?
என்று
தனக்குள்
பார்க்க
வேண்டும்.
குறையில்லையெனில்
சேவையும்
நன்றாக
செய்ய
முடியும்.
தந்தை
குழந்தைகளை
வெளிப்படுத்துவார்,
குழந்தைகள்
தந்தையை
வெளிப்படுத்துவர்.
தந்தை
உங்களை தகுதியானவர்களாக
ஆக்கியிருக்கின்றார்,
பிறகு
குழந்தைகள்
நீங்கள்
புதியவர்களுக்கு
தந்தையின்
அறிமுகம் கொடுக்க
வேண்டும்.
குழந்தைகளை
தந்தை
புத்திசாலிகளாக
ஆக்கிவிட்டார்.
நல்ல
நல்ல
குழந்தைகள்
சேவை செய்து
வருகின்றனர்
என்பதை
தந்தை
அறிவார்.
சித்திரங்களினால்
மற்றவர்களுக்கு
புரிய
வைப்பது
மிகவும் எளிது,
சித்திரமின்றி
புரிய
வைப்பது
கடினமாகும்.
நான்
இவரது
வாழ்க்கையை
எப்படி
உருவாக்குவது
என்ற சிந்தனை
இரவு
பகல்
இருக்க
வேண்டும்.
இதன்
மூலம்
நமது
வாழ்க்கையும்
முன்னேற்றம்
அடையும்.
குஷியிருக்கிறது,
நாம்
நமது
ஊரிலுள்ளவர்களை
முன்னேற்ற
வேண்டும்
என்ற
ஆர்வம்
ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.
நம்
நம்மைப்
போன்றோர்க்கு
சேவை
செய்ய
வேண்டும்.
தானம்
வீட்டிலிருந்து
ஆரம்பிக்க வேண்டும்
என்று
தந்தையும்
கூறுகின்றார்.
ஒரே
இடத்தில்
அமர்ந்து
விடக்
கூடாது,
சொற்பொழிவு
செய்ய வேண்டும்.
சந்நியாசிகளும்
யாருக்காவது
சிம்மாசனம்
கொடுத்து
விட்டு
சுயம்
சிந்தனையில்
மூழ்கிவிடுகின்றனர்
8
அல்லவா
!
இவ்வாறு
செய்து
செய்து
விருத்தி
அடைந்திருக்கின்றனர்.
புதியவர்களும்
பலர் வெளிப்பட்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு
சிறிது
மகிமைகள்
ஏற்படுகிறது,
சிறிது
சக்தியும்
வந்து
விடுகிறது.
பழைய
இலைகளும்
ஜொலிக்க
ஆரம்பித்து
விடுகிறது.
சிலரிடத்தில்
ஏதாவது
ஆத்மா
பிரவேசமாகிவிடுகிறது,
அதன்
மூலம்
அவருக்கும்
முன்னேற்றம்
ஏற்பட்டு
விடுகிறது.
குழந்தைகளே!
நீங்கள்
எப்போதும்
சுய
முன்னேற்றம் செய்ய
வேண்டும்
என்று
தந்தை
அமர்ந்து
கல்வி
கொடுக்கின்றார்.
செல்லமான
குழந்தைகளே!
நாளடைவில்
உங்களிடத்தில்
யோக
பலத்தின்
சக்தி
வந்து
விடும்.
பிறகு நீங்கள்
சிறிது
புரிய
வைத்தாலும்
உடனேயே
புரிந்து
கொள்வார்கள்.
இதுவும்
ஞான
அம்பு
அல்லவா!
அம்பு பதியும்
போது
சிறிது
காயம்
பட்டு
விடுகிறது.
முதலில்
காயம்
ஏற்படுகிறது,
பிறகு
பாபாவினுடையவர்களாக ஆகின்றனர்.
எனவே
தனிமையில்
அமர்ந்து
யுக்திகளை
உருவாக்க
வேண்டும்.
இரவு
தூங்கி
காலையில் எழுந்திருக்க
வேண்டும்
என்று
இருக்கக்
கூடாது.
அதிகாலையில்
விரைவில்
எழுந்திருந்து
பாபாவை
மிக அன்புடன்
நினைவு
செய்ய
வேண்டும்.
இரவும்
நினைவில்
இருந்து
தூங்க
வேண்டும்.
பாபாவை
நினைவே செய்யவில்லையெனில்
பிறகு
தந்தை
எப்படி
அன்பு
செலுத்துவார்?
ஈர்ப்பு
ஏற்படாது.
நாடகத்தில்
அனைவரும் வரிசைக்கிரமமாக
ஆவார்கள்
என்பதை
பாபா
அறிவார்,
இருந்தாலும்
அமைதியாக
இருந்து
விடமாட்டார்.
முயற்சி
செய்ய
வைப்பார்
அல்லவா!
இல்லையெனில்
அதிகம்
பட்சாதாபப்பட
வேண்டியிருக்கும்.
பாபா
எனக்கு எவ்வளவு
புரிய
வைத்தார்!
நான்
இவ்வாறு
செய்திருந்தேன்
என்று
அதிகம்
பட்சாதாபப்பட
வேண்டியிருக்கும்.
மாயைக்கு
வசமாகி
விட்டேன்.
தந்தைக்கு
கருணை
ஏற்படுகிறது.
மாறவில்லையெனில்
அவர்களது
நிலை என்ன
ஆகும்?
அழுவார்கள்,
கண்ணீர்
விடுவார்கள்,
தண்டனை
அடைவார்கள்.
குழந்தைகளே!
நீங்கள் குறைபாடடற்றவர்களாக
அவசியம்
ஆக
வேண்டும்
என்று
தந்தை
குழந்தைகளுக்கு
அடிக்கடி
போதனைகள் கொடுக்கின்றார்.
அடிக்கடி
தன்னை
சோதித்துக்
கொள்ள
வேண்டும்.
நல்லது.
மிக
இனிய,
மிக
அன்பான
அனைத்து
செல்லமான
குழந்தைகளுக்கு
தாய்,
தந்தையாகிய பாப்தாதாவின்
உள்ளப்
பூர்வமான
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீக குழந்தைகளுக்கு
ஆன்மீக
தந்தையின்
நமஸ்தே.
18.01.2019
காலை
முரளி
ஓம்சாந்தி
பாப்தாதா,
மதுபன்
அவ்யக்த
மகாவாக்கியம்
(ரிவைஸ்)
விஞ்ஞானம்
தெளிவாகிக்
கொண்டே
செல்வது
(ரீபைன்)
போன்று
தனக்குள்ளும்
அமைதி
சக்தி
அல்லது தனது
ஸ்திதியும்
தெளிவாகிக்
கொண்டே
செல்கிறதா?
எந்தப்
பொருள்
தெளிவுபடுத்தப்பட்டு
இருக்கிறதோ அதில்
என்ன
என்ன
சிறப்பம்சம்
இருக்கும்?
தெளிவுப்படுத்தப்பட்ட
பொருள்
எண்ணிக்கையில்
குறைவாக இருவாக
இருக்கும்,
ஆனால்
தரம்
சக்தி
வாய்ந்ததாக
இருக்கும்.
எந்த
பொருள்
தெளிவுபடுத்தப்படவில்லையோ அதன்
எண்ணிக்கை
அதிகமாக
இருக்கும்,
தரம்
குறைவாக
இருக்கும்.
இங்கும்
சீர்படுத்தப்படும்
பொழுது குறைவான
நேரம்,
குறைவான
சங்கல்பம்,
குறைவான
சக்தியில்
என்ன
காரியம்
நடக்க
வேண்டுமோ
அது
நூறு மடங்கு
நடைபெறும்
மற்றும்
இலேசான
நிலையும்
இருக்கும்.
இலேசான
நிலையின்
அடையாளம்
–
அது ஒருபோதும்
கீழே
வராது,
விரும்பா
விட்டாலும்
தானாகவே
உயர்ந்த
நிலையில்
இருக்கும்.
இது
தான் சீர்படுத்தப்பட்ட
நிலையின்
தகுதியாகும்.
ஆக
தனக்குள்
இந்த
இரண்டின்
அனுபவம்
ஏற்பட்டுக்
கொண்டே செல்கிறதா?
சுமை
ஆகின்ற
காரணத்தினால்
உழைப்பு
அதிகம்
செய்ய
வேண்டியிருக்கிறது.
இலேசாக
ஆவதால் உழைப்பு
குறைந்து
விடுகிறது.
ஆக
இவ்வாறு
இயற்கையாகவே
மாற்றம்
ஏற்பட்டு
விடுகிறது.
இந்த
இரண்டு சிறப்பம்சங்களும்
சதா
நினைவில்
இருக்க
வேண்டும்.
இதை
எதிரில்
வைத்துக்
கொண்டு
தனது
சீர்படுத்துதலை சோதனை
செய்து
கொள்ள
முடியும்.
சீர்படுத்தப்படும்
பொருள்
அதிகம்
அலையாது,
வேகமாக
இருக்கும்.
சீர்படுத்தப்படவில்லை,
அசுத்தம்
கலப்படம்
கலந்திருக்கிறது
எனில்
வேகம்
இருக்காது.
தடையின்றி
முன்னேற முடியாது.
ஒருபுறம்
எந்த
அளவிற்கு
சீர்படுத்தப்படுக்
கொண்டிருக்கிறதோ,
மற்றொரு
புறம்
அந்த
அளவிற்கு சிறிய
சிறிய
விசயங்கள்
அல்லது
தவறுகள்
அல்லது
சமஸ்காரங்களுக்கான
அபராதமும்
அதிகரித்துக்
கொண்டே செல்கிறது.
ஒரு
புறம்
அந்த
காட்சிகள்,
மற்றொருபுறம்
சீர்படுத்தப்படும்
காட்சிகள்
-
இரண்டின்
வேகம் இருக்கிறது.
சீர்படுத்தப்படவில்லையெனில்
அபராதம்
என்பதைப்
புரிந்து
கொள்ளுங்கள்.
இரண்டு
காட்சிகளும் ஒரே
நேரத்தில்
தென்பட்டுக்
கொண்டிருக்கிறது.
அதுவும்
மிக
வேகமாக
சென்று
கொண்டிருக்கிறது,
மேலும் இதுவும்
மிக
வேகமாக
வெளிப்படையான
ரூபத்தில்
தென்பட்டுக்
கொண்டிருக்கிறது.
குப்தமான
முறையில் இப்போது
வெளிப்பட்டுக்
கொண்டிருக்கிறது.
இரண்டு
விசயங்களும்
வெளிப்படும்
போது,
அதன்படி
தான் நம்பர்
உருவாகும்.
மாலை
கைகளால்
உருட்டக்
கூடாது.
நடத்தையின்
மூலமாகவே
சுயம்
தனது
நம்பரை
தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.
நம்பர்
தேர்ந்தெடுக்கும்
நேரம்
இப்போது
வந்து
கொண்டிருக்கிறது.
ஆகையால்
இரண்டு விசயங்களும்
தெளிவாகத்
தென்பட்டுக்
கொண்டிருக்கிறது.
இரண்டையும்
பார்த்தாலும்
சாட்சியாக
இருந்து மகிழ்ச்சியாக
இருக்க
வேண்டும்.
எந்த
விளையாட்டு
மிக
வேகமாக
இருக்கிறது
அது
தான்
பிடிக்கும்.
அந்த காட்சி
தான்
மிக
ஈர்க்கக்
கூடியதாக
இருக்கும்.
இப்பொழுதும்
அப்படிப்பட்ட
பயங்கர
காட்சி
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பார்ப்பதற்கு
போதை
வருகிறது
அல்லவா!
அல்லது
கருணை
வருகிறதா?
ஒருபுறம்
பார்க்கின்ற போது
குஷி
ஏற்படுகிறது,
மற்றொருபுறம்
பார்க்கின்ற
போது
கருணை
ஏற்படுகிறது.
இரண்டு
விளையாட்டும் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது.
வதனத்திலிருந்து
இந்த
விளையாட்டு
தெளிவாகத்
தென்படுகிறது.
எந்த அளவிற்கு
யார்
உயர்வாக
இருக்கிறார்களோ,
அவர்களுக்கு
தெளிவாகத்
தென்படும்.
யார்
கீழே
நடிக்கும் நடிகர்களாக
இருக்கிறார்களோ,
அவர்களுக்கு
ஏதாவது
தென்படுமா?
எதுவும்
கிடையாது.
ஆனால்
மேலிருந்து சாட்சியாகப்
பார்ப்பதன்
மூலம்
அனைத்தும்
தெளிவாக
தென்படும்.
ஆக
இன்று
வதனத்தில்
நிகழ்கால விளையாட்டின்
காட்சியை
பார்த்துக்
கொண்டிருந்தார்.
நல்லது.
வரதானம்:
மேலிருந்து
அவதாரம்
எடுத்திருக்கக்
கூடிய
அவதாரம்
ஆகி சேவை
செய்யக்
கூடிய
சாட்சாத்கார
மூர்த்தி
ஆகுக.
தந்தை
சேவைக்காக
வதனத்திலிருந்து
கீழே
வருவது
போன்று
நாமும்
சேவைக்காக
வதனத்திலிருந்து கீழே
வந்திருக்கிறோம்.
இவ்வாறு
அனுபவம்
செய்து
சேவை
செய்தால்
சதா
விடுபட்டவர்களாக
மற்றும் தந்தைக்கு
சமம்
உலகத்தினருக்கு
பிரியமானவர்களாக
ஆகிவிடுவீர்கள்.
மேலிருந்து
கீழே
வருவது
என்றால் அவதாரம்
எடுத்தவராகி
சேவை
செய்வதாகும்.
அவதாரங்கள்
வர
வேண்டும்,
நம்மை
தன்
கூடவே
அழைத்துச் செல்ல
வேண்டும்
என்று
அனைவரும்
விரும்புகின்றனர்.
ஆக
உண்மையான
அவதாரங்கள்
நீங்கள்
தான்,
அனைவரையும்
முக்திதாமத்திற்கு
கூடவே
அழைத்துச்
செல்வீர்கள்.
அவதாரம்
என்று
புரிந்து
கொண்டு சேவை
செய்யும்
போது
சாட்சாத்கார
மூர்த்தி
ஆவீர்கள்
மற்றும்
பலரது
ஆசைகளை
நிறைவேற்றுவீர்கள்.
சுலோகன்:
உங்களுக்கு
யாராவது
நல்லது
செய்தாலும்
கெடுதல்
செய்தாலும்
நீங்கள் அனைவருக்கும்
அன்பு
கொடுங்கள்,
உதவி
செய்யுங்கள்,
கருணை
காட்டுங்கள்.
பிரம்மா
பாபாவிற்கு
சமம்
ஆவதற்கான
விசேஷ
முயற்சி:
சதா
பரமாத்ம
அன்பில்
மூழ்கியிருந்தால்
அன்பு
சொரூபமாக,
மாஸ்டர்
அன்புக்
கடலாக
ஆகிவிடுவீர்கள்.
அன்பு
செலுத்த
வேண்டிய
அவசியமிருக்காது,
அன்பு
சொரூபமாக
ஆகிவிடுவீர்கள்.
முழு
நாளும்
அன்பின் அலைகள்
தானாகவே
உருவாகிக்
கொண்டே
இருக்கும்.
எந்த
அளவிற்கு
ஞான
சூரியனின்
கிரணங்கள் அல்லது
ஒளி
அதிகரிக்குமோ
அந்த
அளவிற்குத்
தான்
அன்பின்
அலைகளும்
உருவாகும்.
ஓம்சாந்தி