06.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஞானத்தை தாரணை செய்து கொண்டேயிருந்தீர்கள் என்றால், கடைசியில் நீங்கள் தந்தைக்குச் சமமாக ஆகிவிடுவீர்கள். தந்தையின் முழு சக்தியையும் நீங்கள் ஜீரணித்து விடுவீர்கள்.

 

கேள்வி:

எந்த இரண்டு வார்த்தைகளின் நினைவு மூலம் சுயதர்சன சக்கரதாரி ஆக முடியும்?

 

பதில்:

உயர்ச்சி மற்றும் வீழ்ச்சி, தூய்மையின் உயர் நிலை மற்றும் தூய்மையில்லா நிலை, சிவாலயம் மற்றும் வேசியாலயம். இந்த இரண்டிரண்டு விஷயங்கள், நினைவில் இருந்தால், நீங்கள் சுயதர்சன சக்கரதாரி ஆகிவிடுவீர்கள். நீங்கள் குழந்தைகள் ஞானத்தை சரியான விதத்தில் தெரிந்துள்ளீர்கள். பக்தியில் ஞானம் கிடையாது, உள்ளத்தை குஷிப்படுத்தும் விஷயங்களை மட்டும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பக்தி மார்க்கமே மனதை குஷிப்படுத்தும் மார்க்கமாகும்.

 

ஓம் சாந்தி,

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்காக தந்தை புரிய வைக்கிறார். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்காக தந்தை சொல்கிறார், நீங்கள் எத்தனை உயர்ந்தவர்கள். உயர்ச்சி மற்றும் வீழ்ச்சியின் விளையாட்டு இது. நாம் எவ்வளவு உத்தமமாகவும் தூய்மையாகவும் இருந்தோம் என்பது உங்கள் புத்தியில் இப்போது உள்ளது. இப்போது எவ்வளவு கீழானவர்களாக ஆகிவிட்டோம். தேவி தேவதைகளுக்கு முன், நீங்கள் உயர்ந்தவர்கள் நாங்கள் கீழானவர்கள், என்று நீங்கள் தான் கூறினீர்கள். முதன் முதலில் நாம் தான் உயர்ந்ததிலும் உயர்ந்தவராகவும், பின் கீழானவராகவும் ஆகிறோம் என்பது தெரியாமல் இருந்தது. இப்போது தந்தை உங்களுக்குக் கூறுகிறார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் எவ்வளவு உயர்ந்த தூய்மையானவர்களாக இருந்தீர்கள்! பிறகு எவ்வளவு தூய்மையிழந்தவர்களாக ஆகிவிட்டீர்கள், தூய்மையானவர்கள் உயர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவ்வுலகிற்கு விகாரமில்லா உலகம் எனப்படுகிறது. அங்கு உங்கள் இராஜ்யம் இருந்தது, அதை இப்போது மீண்டும் ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கிறோம். தந்தையும் சைகையின் மூலம் கூறுகிறார், நீங்கள் மிக உயர்ந்த சிவாலயம் என்கிற சத்யுகத்தில் வசிப்பவர்களாக இருந்தீர்கள், பிறகு பிறவி எடுத்து எடுத்து அரை கல்பத்தில் நீங்கள் விகாரத்தில் விழுந்து தூய்மையிழந்தவர் ஆனீர்கள். அரை கல்பம் விகாரத்தில் இருந்தீர்கள், இப்போது மீண்டும் நீங்கள் விகாரமில்லாத உயர்ந்த தூய்மை நிலையை அடைய வேண்டும். இரண்டு வார்த்தைகளை நினைவில் வைக்கவும். இப்போது இது மிகவும் தமோபிரதானமாக (தூய்மையிழந்த கீழான) உலகம். சதோபிரதானமான (உயர்ந்த தூய்மையான) உலகின் அடையாளம் - இந்த இலஷ்மி நாராயணன், ஐந்தாயிரம் வருடத்தின் விஷயம் இது. சதோபிரதானமான இராஜ்யம் பாரதத்தில்தான் இருந்தது. பாரதம் தான் மிகவும் உயர்ந்ததாக இருந்தது, இப்போது கீழானதாகிவிட்டது. விகாரமில்லா நிலையிலிருந்து, விகாரியாக ஆவதில் உங்களுக்கு 84 ஜன்மம் எடுக்கிறது. அங்கும் கூட சிறிது சிறிதாக கலைகள் குறைந்து கொண்டே செல்கின்றன. ஆனாலும் முழுமையான விகாரமே இல்லாதவர் என்று சொல்லப்படுகிறது, அல்லவா! முழு சம்பூர்ண நிர்விகாரி என்று ஸ்ரீ கிருஷ்ணரைச் சொல்லலாம். அவர் வெளுப்பாக இருந்தார், இப்போது கருப்பாகிவிட்டார். நீங்கள் இங்கு உட்கார்ந்திருந்தாலும், நாம் சிவாலயத்தில் உலகிற்கே எஜமானனாக இருந்தோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும். வேறு எந்த தர்மமும் கிடையாது, நம்முடைய இராஜ்யம் மட்டுமே இருந்தது, பிறகு கலை குறைகிறது. சிறது சிறிதாக கலைகள் குறைந்து, திரேதா யுகத்தில் இரண்டு கலை குறைந்துவிடுகிறது, பின்னால் தூய்மையிழந்தவராகிறோம், பிறகு விழுந்து விழுந்து சீ சீ ஆகிவிடுகிறோம். இதற்கு சொல்லப்படுகிறது விகார உலகம் என்று, விஷமான வைதரணி நதியில் (மரணத்திற்குப் பின் கடக்கப்பட வேண்டுமென நம்பப்படும் ஆறு) மூழ்கி ஏமாந்து கொண்டிருக்கின்றனர். அங்கு (சத்யுகத்தில்) பாற்கடலில் இருந்தீர்கள். நீங்கள் முழு உலகின் சரித்திரம் - பூகோளத்தையும் உங்களுடைய 84 ஜன்மங்களின் கதையையும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நாம் விகாரமில்லாதவர்களாக இருந்தோம், இவர்களுடைய இராஜ்யத்தில் இருந்தோம், தூய்மையான இராஜ்யம் இருந்தது, அதற்கு முழு சொர்க்கம் என்று சொல்லலாம். பிறகு திரேதாவில் அரை சொர்க்கம். இது புத்தியில் உள்ளது அல்லவா! தந்தை தான் வந்து உலகின் முதல், இடை, இறுதியின் அந்தத்தின் இரகசியத்தைப் புரிய வைக்கிறார். மத்தியில் தான் இராவணன் வருகிறான், பிறகு கடைசியில் இந்த விகாரமான உலகம் வினாசமாகிவிடும். பிறகு ஆரம்பத்தில் செல்வதற்காக தூய்மையடைய வேண்டும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து என்னை மட்டும் நினைவு செய்க. தன்னை தேகம் என்று புரிந்து கொள்ளாதீர்கள். நீங்கள் பக்தி மார்க்கத்தில் வாக்கு கொடுத்தீர்கள் - பாபா! நீங்கள் வரும் போது நாங்கள் உங்களுடையவர்களாகவே ஆகிவிடுவோம். ஆத்மா தந்தையிடம் பேசுகிறது. கிருஷ்ணர் ஒருபோதும் தந்தையாக முடியாது. ஆத்மாக்களின் தந்தை உடலில்லாத சிவபாபா ஒருவரே. அந்த எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தி, எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி பாரதத்திற்கு கிடைக்கிறது. அதனால் சத்யுகத்திற்கு சிவாலயம் என்று சொல்லப்படுகிறது. சிவபாபா இங்கு வந்து தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்தார். இதை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும். குஷியான விஷயமல்லவா! இப்போது நாம் மீண்டும் சிவாலயத்திற்குச் செல்கிறோம். யாராவது மரணமடைந்தால் சொர்க்கம் சென்று விட்டதாக சொல்வர். ஆனால் ஒரு போதும் அப்படி யாரும் செல்வதில்லை. இவையனைத்தும் பக்திமார்க்கத்தின் பொய்யான பேச்சுகள் உள்ளத்தை குஷிப்படுத்துவதற்காக. உண்மையான சொர்க்கத்திற்கு இப்போது நீங்கள் செல்லப்போகிறீர்கள். அங்கு எந்த ஒரு நோயும் இருக்காது. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தந்தை எவ்வளவு சகஜமாக சின்னஞ்சிறிய குழந்தைகளுக்குப் புரிய வைப்பது போல் புரிய வைக்கிறார். வெளியில் எங்கு இருந்தாலும் நீங்கள் பதவி அடைய முடியும். இதில் முதலில் தூய்மை தான் முக்கியமானது. சாப்பிடுவது, குடிப்பது சுத்தமாக இருக்க வேண்டும். தேவதைகளுக்கு முன் எப்போதாவது சிகரெட், பீடி ஆகியவற்றை போக் (நிவேதனமாக) வைக்கிறீர்களா என்ன? கிரந்ததத்திற்கு (சீக்கரின் வேத நூல்) முன்னால் எப்போதாவது முட்டை, பீடி ஆகியவை போக் வைக்கப்படுகிறதா? கிரந்தத்தை குரு கோவிந்தரின் சரீரம் போல நினைக்கின்றனர். கிரந்தத்திற்கு அவ்வளவு மரியாதை (மதிப்பு) கொடுக்கிறார்கள். இது குருவின் சரீரம் போல என்று. அவ்வாறு சீக்கியர்கள் நினைக்கின்றனர். ஆனால் குருநானக் உட்கார்ந்து கிரந்தம் எழுதவில்லை, நானக் அவதாரம் எடுத்தார் அவ்வளவுதான்! சீக்கியர்கள் அதிகமாகும் போது, பின்னால் கிரந்தம் ஆகியவை எழுதப்படுகிறது. ஒருவருக்குபின் ஒருவராக சீக்கிய தர்மத்தில் வந்து சென்றனர். முதலில் கிரந்தம் கூட மிகச்சிறியதாக கையால் எழுதப்பட்டிருந்தது. இப்போது கீதையைக் கூட கிருஷ்ணரின் ரூபம் என்று நினைக்கின்றனர். எப்படி நானக்கிற்கு கிரந்தமோ, அதுபோல கிருஷ்ணருடைய கீதை என்று பாடப்பட்டுள்ளது. கிருஷ்ண பகவான் வாக்கு என்று சொல்கின்றனர். இதற்குத்தான் அஞ்ஞானம் என்று சொல்லப்படுகிறது. ஒரே ஒரு பரமபிதா பரமாத்மாவிடம் தான் ஞானம் உள்ளது. கீதையினால் தான் சத்கதி ஏற்படுகிறது. அந்த ஞானம் தந்தையிடம் தான் உள்ளது. ஞானத்தினால் பகல், பக்தியினால் இரவு ஏற்படுகிறது. இப்போது தந்தை சொல்கிறார் ஆத்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்காக முயற்சியும் செய்ய வேண்டும். ஞானம் ஒரேடியாக மறந்து (போய்)விடும் அளவிற்கு மாயையின் புயல் அவ்வளவு பலமாக வருகிறது. ஒருவரிடமும் சொல்லக்கூட முடிவதில்லை. முதலில் காம விகாரமே அதிக தொந்தரவு செய்கிறது. அதில் தான் நேரம் எடுக்கிறது. ஜீவன் முக்திக்கான விஷயமோ ஒரு நொடி தான். குழந்தை பிறந்த உடனேயே, எஜமானன் ஆகிவிடுகிறது. நீங்கள் அறிந்து கொண்டீர்கள், சிவபாபா வந்துள்ளார் என்று, மற்றும் ஆஸ்திக்கு உரிமையாளர் ஆனீர்கள். கீதையையும் சிவபாபாதான் விவரித்தார், அவர்தான் கூறுகிறார் - என்னை மட்டும் நினைவு செய். நான் இந்த சாதாரண உடலில் வருகிறேன். கிருஷ்ணர் சாதாரணமானவர் அல்ல. எப்படி மின்சாரம் ஒளி விடுகிறதோ, அது போல ஜன்மம் எடுக்கிறார். அதிக பிரபாவம் ஏற்படுகிறது அதனால் ஸ்ரீகிருஷ்ணருக்கு இதுவரைக்கும் புகழ் பாடுகின்றனர். மீதி சாஸ்திரம் போன்றவை அனைத்தும் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவை. ஆங்கிலத்தில் பிலாசஃபி (ஆன்மிக தத்துவம்) என்கின்றனர். ஆன்மிக ஞானத்தை ஆன்மீகத் தந்தை தான் கொடுக்க முடியும். நான் உங்கள் ஆன்மீகத்தந்தை என்று அவரே சொல்கிறார். ஞானக்கடலாக இருக்கிறேன். நீங்கள் குழந்தைகளும் தந்தையிடம் கற்றுக் கொள்கிறீர்கள். ஞானத்தை தாரணை செய்கிறீர்கள். பிறகு, பின்னால் தந்தை போல ஆகிவிடுவீர்கள். முழு ஆதாரமும் தாரணையில் உள்ளது. பிறகு அந்த வலிமை வந்துவிடும், தந்தையின் நினைவினால். நினைவு கூர்மை என்று சொல்லப்படுகிறது, வாள்களில் கூட வித்தியாசம் உள்ளது அல்லவா? அந்த வாள் கூட 100 ரூபாய் மதிப்புடையது இருக்கிறது. அதே வாள் 3-4 ஆயிரம் மதிப்புடையதும் உள்ளது. பாபா அனுபவஸ்தர் அல்லவா? வாளுக்கு அதிக மதிப்பு உள்ளது. குரு கோவிந்த் சிங்கின் வாளுக்கு எத்தனை மதிப்புள்ளது. ஆகவே, குழந்தைகளாகிய உங்களிடமும் யோகத்தின் பலம் வேண்டும். ஆகவே ஞான வாளில் கூர்மை தேவை. கூர்மை வரும்போது சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள். நாடகத்தின் படி நீங்கள் முயற்சி செய்து கொண்டுள்ளீர்கள். எந்த அளவு தந்தையை நினைவு செய்கிறீர்களோ, நினைவினால் தான் பாவங்கள் நீங்கும். பதீத பாவனாகிய தந்தை தான் வழி சொல்கிறார். பிறகு கல்பத்திற்குப் பின்னாலும் இதே போல வந்து உங்களுக்கு ஞானம் கொடுப்பார். இவரையும்(பிரம்மா) அனைத்தும் தியாகம் செய்ய வைத்து இதே போல தன்னுடைய இரதமாக ஆக்கிக்கொள்வார். குழந்தைகள் உங்களுக்கு அங்கு எத்தனை கவர்ச்சி இருந்தது! எப்படி அனைவரும் ஓடி வந்தனர், தந்தையிடம் கவர்ச்சி உள்ளது அல்லவா! இப்போது நீங்களும் அது போன்று சம்பூர்ணமாக வேண்டும். வரிசைப்படி ஆவீர்கள். இந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது.

 

சிருஷ்டிச் சக்கரத்தையும் புரிந்து கொண்டோம். சத்யுக ஆரம்ப முதல் கலியுகக் கடைசி வரை. இப்போது சங்கமயுகம், தந்தையும் அவசியம் வர வேண்டியுள்ளது, பாவனம் ஆக்குவதற்காக பாவனம் என்றால், சதோபிரதானம் (தூய்மையான உயர்ந்தநிலை). பிறகு அழுக்கு ஏறுகிறது. இப்போது அந்த அழுக்கை நீக்குவது எப்படி? ஆத்மா உண்மையாக (தூய்மையாக) இருக்கும் போது, நகையும் தூய்மை, அதாவது சரீரமும் வெளுப்பாக (தூய்மையாக) இருக்கிறது. ஆத்மா பொய்யாகும் போது சரீரமும் பதீதமாகிறது. ஞானத்திற்கு வருவதற்கு முன்னால் இவரும் (பிரம்மாவும்) நமஸ்காரம் - வணக்கம் ஆகியவை செய்து கொண்டிருந்தார். இலஷ்மி நாராயணனின் பெரிய சித்திரம் (ஆயில் பெயிண்டால்) ஆசனத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதையே மிகுந்த அன்புடன் வேறு யாருடைய நினைவும் இல்லாமல், நினைவு செய்தார். வெளியே வேறுபுறம் நினைவு சென்றால், தன்னையே அடித்துக் கொள்வார். மனம் ஓடுவது ஏன், தரிசனம் ஏன் கிடைக்கவில்லை (இப்படியெல்லாம் நினைப்பார்) பக்தியில் இருந்தார் அல்லவா! பிறகு எப்போது விஷ்ணுவின் தரிசனம் கிடைத்ததோ, அப்போது கூட உடனே நாராயணன் ஆகிவிடவில்லை, முயற்சி அவசியம் செய்ய வேண்டியிருந்தது, இலட்சியமும் குறிக்கோளும் முன்னால் இருந்தன. இவர் சைதன்யமாக இருந்தார், அவருடைய ஜடசித்திரம் செய்யப்பட்டது. தந்தை வந்துள்ளார் தூய்மைப் படுத்துவதற்காக. நரனிலிருந்து நாராயணன் ஆக்குகிறார். நீங்களும் அவர்களின் இராஜ்யத்தில் இருந்தீர்கள். பிறகு அதுபோல ஆவதற்கு முயற்சி செய்கிறீர்கள் எனில், நல்ல விதத்தில் பின்பற்ற வேண்டும். பிரம்மாவுக்கு தேவதை என சொல்லப்படுவதில்லை. விஷ்ணு தேவதை என்று சொல்வது சரியாகும். மனிதர்களுக்கு எதுவும் தெரிவதில்லை,

 

குரு பிரம்மா, குரு விஷ்ணு... என சொல்கின்றனர். இப்போது விஷ்ணு யாருக்கு குருவாக இருக்கிறார்.

அனைவரையும் குரு என்று சொல்லிக் கொண்டுள்ளனர். சிவ பரமாத்மாவுக்கு நமஸ்காரம், அவரை குரு, பரமாத்மா என்கின்றனர். அனைவரிலும் பெரியவர் தந்தையல்லவா! அவரிடமிருந்து நாம் இதைக் கற்கிறோம், மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்காக, சத்குரு உங்களுக்கு என்ன புரிய வைக்கிறாரோ, அதை நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய வைக்கிறீர்கள். இவர் அப்பா, ஆசிரியர் என்று குருவுக்கு அப்படி சொல்ல மாட்டார்கள். இல்லையென்றால், இந்த முழு ஞானமும் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நாம் சிவாலயத்தில் இருந்தோம். இப்போது வேசியாலயத்தில் உள்ளோம். மீண்டும் இப்போது சிவாலயம் செல்ல வேண்டும். பிரம்மத்தில் ஐக்கியமாகி விட்டார், ஜோதியோடு கலந்துவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் ஆத்மாவோ அழியாதது. ஒவ்வொருவரிடமும் அவரவர் நடிப்பு நிரம்பியுள்ளது. அனைவரும் நடிகர்கள், தன்னுடைய நடிப்பை நடித்தே ஆக வேண்டும். அது ஒரு போதும் அழியாதது. முழு உலகின் ஆத்மாக்கள் அவர்களின் நடிப்பை நடிக்க வேண்டும். புதிதாக ஷூட்டிங் நடப்பது போலத்தான்.ஆனால் இதுவோ முடிவில்லா சூட்டிங் முன்னரே செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த உலகின் சரித்திரம், பூகோளம் மீண்டும் நடக்கிறது. இந்த அதிசய நட்சத்திரம் இருபுருவ மத்தியில் ஒளிர் விட்டு மின்னிக் கொண்டுள்ளது. ஒருபோதும் நகர்ந்து போவதில்லை. இந்த ஞானம் உங்களிடம் முன்னால் இல்லாமல் இருந்தது. உலக அதிசயம். ஹெவன் அதாவது சொர்க்கம் என்ற பெயர் கேட்டு உள்ளம் குஷி அடைகிறது. இப்போதோ சத்யுகமே இல்லை, இப்போது கலியுகம். புனர்ஜன்மமும் கலியுகத்தில்தான் எடுப்பீர்கள். அனைவரும் அவசியம் போகத்தான் வேண்டும், ஆனால் பதீத ஆத்மாக்கள் போக முடியாது. இப்போது குழந்தைகள் நீங்கள் பாவனமாகிறீர்கள் - யோக பலத்தினால். பாவன உலகத்தை இறை தந்தைதான் ஸ்தாபனை செய்கிறார். பிறகு இராவணன் நரகமாக்குகிறான். இது பிரத்யட்சமல்லவா? இராவணனை எரிக்கின்றனர் அல்லவா! மனிதர்கள் இது அனாதியாக (ஆரம்ப முடிவில்லாது) நடைபெற்று வருகிறது என்று சொல்கின்றனர். ஆனால் எப்போதிலிருந்து ஆரம்பித்தது, இது கூட யாருக்கும் தெரியாது, பாதி - பாதி என்றும் ஆக்க முடியாது, ஏனெனில் இலட்சக்கணக்கான வருடங்கள் என்று சொல்லிவிட்டனர். கலியுகத்திற்கே 40 ஆயிரம் வருடங்கள் என்று கூறிவிட்டனர். ஆகவே, மனிதர் கோரமான இருளில் உள்ளனர் அல்லவா, அஞ்ஞான உறக்கத்திலிருந்து எழுப்புவது மிகக் கடினமாக உள்ளது, எழுந்திருப்பதேயில்லை. இப்போது சங்கமயுகம், இப்போது தந்தை வந்து பாவனமாவதற்கு யுக்தி சொல்கிறார். நீங்கள் பாவனமாகும் போது, பாவன உலகம் ஸ்தாபனை ஆகிவிடும். இந்த பதீத உலகமும் அழிந்து போகும். இப்போது எவ்வளவு பெரிய உலகமாக உள்ளது. சத்யுகத்தில் மிகச்சிறிய உலகமாகிவிடும். இப்போது மாயை மீது வெற்றியடைந்து அவசியம் தூய்மையடைய வேண்டும். மாயை மிக மோசமானது என்று தந்தை சொல்கிறார். பாவனம் (தூய்மை) ஆவதில் தான் அநேக விதமான தடைகளைப் போடுகிறது. தூய்மையடைவதற்கு தைரியம் வைக்கிறார்கள், பிறகு மாயை வந்து என்ன நிலை ஆக்கிவிடுகிறது! ஒரு குத்துவிட்டு விழவைக்கிறது. சம்பாதித்த வருமானத்தை இழக்க வைக்கிறது. பிறகு அதிக முயற்சி செய்யும்படி ஆகிவிடுகிறது. சிலர் விழுந்துவிடுகின்றனர், பிறகு முகத்தைக்கூட காண்பிப்பதில்லை, பிறகு இந்த அளவு உயர்ந்த பதவி அடைய முடியாது. முழுவதும் முயற்சி செய்ய வேண்டும். தோற்றுவிடக் கூடாது, அதனால் சிலர் கந்தர்வ திருமணம் கூட செய்து காண்பிக்கின்றனர். சன்னியாசிகள் கூறுகின்றனர், திருமணம் செய்துகொண்டு, தூய்மையாகவும் இருப்பது இம்பாசிபிள் (முடியாதது). தந்தை கூறுகிறார், பாசிபிள் (முடியும்) ஏனெனில் பிராப்தி அதிகம். இந்த கடைசி ஒரு பிறவில் தூய்மையாகிவிட்டால் உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கும். இவ்வளவு பெரிய பிராப்தி அடைவதற்காக நீங்கள் ஒரு பிறவி மட்டும் தூய்மையாக இருக்க முடியாதா என்ன? சொல்கின்றனர், பாபா நாங்கள் அவசியம் இருப்போம். சீக்கியர்கள் கூட தூய்மைக்காக கங்கணம் கட்டுகின்றனர். இங்கு எந்த விதமான கயிறும் கட்ட வேண்டிய அவசியமில்லை. இது புத்திக்கான விஷயம். தந்தை கூறுகிறார், என்னை மட்டும் நினைவு செய்க. குழந்தைகள் அநேக பேருக்கு சொல்கின்றனர், ஆனால் பெரிய மனிதர்களின் புத்தி புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகிறார், முதலில் அவர்களுக்கு நல்ல விதத்தில் புரிய வைக்கவும். இவர்கள் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் சந்ததியினர் (வாரிசு) என்று, சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. பதீத நிலையிலிருந்து பாவனம் ஆக வேண்டும். இப்போது தந்தை கூறுகின்றார், என்னை மட்டும் நினைவு செய்க. இவ்வாறு வேறு யாரும் கூற முடியாது. முதலில் அவர்கள் புத்தியில் பதிய வைக்க வேண்டும், பாரதம் விகாரமில்லாமல் இருந்தது, இப்போது விகாரி ஆகிவிட்டது, மீண்டும் விகாரமில்லாததாக எப்படி ஆக்குவது? பகவான் வாக்கு, என்னை மட்டும் நினைவு செய்க.

 

இந்த அளவு கூறினால் கூட அதுவே பாக்கியம். ஆனால் இந்த அளவு கூட சொல்ல முடிவதில்லை. மறந்துவிடுவர். பாபா புரிய வைத்துள்ளார், திறப்பு விழா தந்தை செய்துவிட்டார். மீதி நீங்கள் நிமித்தமாக இருந்து செய்து கொண்டு இருக்கிறீர்கள். அஸ்திவாரம் போட்டாகிவிட்டது, மீதி இப்போது சேவை நிலையங்களின் திறப்பு விழா நடக்கிறது. இது கூட கீதையின் விஷயம் தான், கீதையிலும் உள்ளது - குழந்தைகளே, நீங்கள் காமத்தின் மீது வெற்றி அடைந்தால் அது போன்று உலகையே வென்றவராகி விடுவீர்கள், 21 ஜன்மத்திற்காக. தான் ஆகவில்லையென்றாலும், மற்றவர்களுக்காவது புரிய வைக்கலாம். இது போன்றும் பலர் உள்ளனர், மற்றவரைத் தூக்கிவிட்டுத் தானே விழுந்து விடுகின்றனர். காமம் மிகப் பெரிய எதிரி, ஒரேடியாக சாக்கடையில் தள்ளி விடுகிறது. எந்தக் குழந்தைகள் காமத்தின் மீது வெற்றியடைகின்றனரோ அவர்களே உலகை வென்றவர் ஆகின்றனர். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இந்த கடைசிப் பிறவியில், அனைத்துப் பிராப்திகளையும் முன் வைத்து தூய்மையடைந்து காண்பிக்க வேண்டும். மாயையின் தடைகளிடம் தோல்வியடையக் கூடாது.

 

2. இலட்சியம், குறிக்கோளை முன் வைத்து முயற்சி செய்ய வேண்டும். எப்படி பிரம்மா பாபா முயற்சி செய்து நரனிலிருந்து நாராயணன் ஆகிறாரோ, அது போல அவரைப் பின்பற்றி சிம்மாசனத்தை அடைபவராக வேண்டும். ஆத்மாவை சதோப்பிரதானம் ஆக்குவதற்கான உழைப்பை செய்ய வேண்டும்.

 

வரதானம்:

நற் சிந்தனை மூலமாக (நெகட்டிவ்) எதிர்மறையானதை (பாஸிட்டிவ்) நேர்மறையானதாக மாற்றி விடக் கூடிய நற் சிந்தனையாளர் ஆவீர்களாக.

 

சதா சக்திசாலியாக இருப்பதற்காக நல்ல சிந்தனை மற்றும் நல்ல சிந்தனையாளர் என்ற இரு வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். சுபசிந்தனை மூலம் உங்களால் எதிர்மறையானதை நேர்மறையானதாக மாற்றி கொள்ள முடியும். நல்ல சிந்தனை மற்றும் நல்ல சிந்தனையாளர் இந்த இரண்டிற்குமிடையே சம்பந்தம் உள்ளது. நல்ல சிந்தனை இல்லையென்றால் (சுப சிந்தகர்) நல் விருப்பம் உடையவராகவும் ஆக முடியாது. நிகழ்காலத்தில் இந்த இரண்டு விஷயங்களில் கவனம் வையுங்கள். ஏனெனில் நிறைய பிரச்சினைகள் அப்படிப்பட்டவை, ஜனங்கள் எப்பேர்ப்பட்டவர்கள் என்றால் அவர்கள் வார்த்தைகளால் புரிந்த கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். ஆனால் நற் சிந்தனையாளராகி (வைப்ரேஷன்) அதிர்வலைகளைப் பரப்பினீர்கள் என்றால் அவர்கள் மாறி விடுவார்கள்.

 

சுலோகன்:

ஞான இரத்தினங்களுடன், குணங்கள் மற்றும் சக்திகளுடன் விளையாடுங்கள், மண்ணுடன் அல்ல.

 

ஓம்சாந்தி