19.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இது கல்யாண்காரி புருஷோத்தம சங்கமயுகம். இதில் பழைய உலகம் மாறி புதியதாகிறது. இந்த யுகத்தை நீங்கள் மறக்காதீர்கள்.

 

கேள்வி :

தந்தை சிறிய, பெரிய குழந்தைகள் அனைவரையும் தனக்கு சமமாக மாற்றுவதற்காக ஒர் அன்பான படிப்பினை கொடுக்கின்றார் அது என்ன?

 

பதில் :

இனிமையான குழந்தைகளே! இப்பொழுது தவறுகள் செய்யாதீர்கள். இங்கே நீங்கள் நரனிலிருந்து நாராயணனாக மாறுவதற்காக வந்துள்ளீர்கள். அதனால் தெய்வீக குணங்களை கடைபிடியுங்கள். யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள். தவறுகள் செய்கீறீர்கள் என்றால் துக்கம் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம் . தந்தை ஒருபோதும் குழந்தைகளுக்கு துக்கம் கொடுப்பதில்லை, அவர் குழந்தைகளே என்னை மட்டும் நினையுங்கள் என உங்களுக்கு வழி கூறுகிறார். யோகி ஆனால் விகர்மம் அழிந்துபோகும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் இனிமையாகுவீர்கள்.

 

ஓம் சாந்தி:

எந்த குழந்தைகள் தன்னை ஆத்மா என உணர்ந்து பரம்பிதா பரமாத்மாவுடன் யோகம் நினைவு செய்கிறார்களோ அவர்களே உண்மையான யோகி எனப்படுகிறார்கள். ஏனென்றால், பாபா உண்மை யானவர் அல்லவா? எனவே உங்களுடைய புத்தியோகம் சத்தியமானவரிடம் இருக்கிறது. அவர் சொல்வது அனைத்தும் சத்தியம். யோகி மற்றும் போகி என இரண்டு விதமான மக்கள் இருக்கிறார்கள். போகி கூட பலவிதமாக இருக்கிறார்கள். யோகியும் கூட பலவிதமாக இருக்கிறார்கள் உங்களுடைய யோகா ஒரே விதமானது. அவர்களுடைய சன்னியாசம் தனிப்பட்டது உங்களுடைய சன்னியாசம் தனிப்பட்டது; நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தின் யோகி. நாம் தூய்மையான யோகியா? அல்லது தூய்மையில்லாத போகியா? என இந்த யோகத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. இதையும் கூட குழந்தைகள் அறிந்திருக்கவில்லை. தந்தை அனைவரையும் குழந்தாய்-குழந்தாய் என கூறுகிறார். ஏனென்றால் தந்தை, நான் எல்லையற்ற ஆத்மாக்களுக்கு தந்தையாக இருக்கிறேன் என அறிந்திருக்கிறார். நாம் ஆத்மாக்கள் அனைவரும் நமக்குள் சகோதரர்கள் என நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அவர் நம்முடைய தந்தை நீங்கள் தந்தையுடன் புத்திமூலம் தொடர்பு கொள்வதால் தூய்மையாகிறீர்கள். அவர்கள் போகி, நீங்கள் யோகி. தந்தை தனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். இது புருஷோத்தம சங்கமயுகம் என நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை இதனுடைய பெயரே புருஷோத்தம சங்கமயுகம்; ஆகையால் புருஷோத்தமர் என்ற வார்த்தையை ஒரு போதும் மறக்காதீர்கள். இது புருஷோத்தமராக மாறக்கூடிய யுகம். உயர்ந்த மற்றும் தூய்மையான  மனிதருக்கு உத்தம புருஷர் என்று கூறுவார்கள். உயர்ந்த மற்றும் தூய்மையானவராக இந்த இலஷ்மி நாராயணன் இருந்தனர். இப்போது உங்களுக்கு காலத்தை பற்றிக் கூட தெரிந்திருக்கிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உலகம் பழையதாகிறது. பிறகு இதை புதியதாக்க தந்தை வருகிறார். இப்பொழுது நாம் சங்கமயுக பிராமண குலத்தினர். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பிரம்மா. ஆனால் பிரம்மாவை சரீரத்தாரியாக காண்பிக்கிறார்கள். சிவதந்தை அசரீரியானவர். அசரீரி மற்றும் சரீரம் உடையவர்களின் சந்திப்பு ஏற்படுகிறது என குழந்தைகள் புரிந்துகொண்டீர்கள். அவரை குழந்தைகளாகிய நீங்கள் தந்தை என்கிறீர்கள் இது அதிசயமான பார்ட் அல்லவா? இவரை புகழ்ந்தும் பாடியிருக்கின்றனர். கோவில்கள் கூட காட்டுகின்றனர். சிலர் சிலவிதமாகவும் சிலர் வேறு சிலவிதமாகவும் ரதத்தை அலங்கரிக்கிறார்கள். பல ஜென்மங்களின் கடைசி ஜென்மத்தில் கடைசியில் நான் பிரவேசிக்கிறேன் என்பதை கூட பாபா தான் தெரிவிக்கிறார். எவ்வளவு தெளிவாகப் புரியவைக்கிறார். முதன் முதலில் பகவான் வாக்கு என கூறவேண்டும். பிறகு நான் பல ஜென்மங்களின் கடைசியில் அனைத்து ரகசியங்களையும் குழந்தைகளுக்குப் புரியவைக்கிறேன். வேறு யாரும் புரிந்துகொள்ளக் கூட முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் கூட அவ்வப்போது மறந்து விடுகிறீர்கள். புருஷோத்தம என்ற வார்த்தையை எழுதுவதால், இந்த புருஷோத்தம யுகம் தான் கல்யாணகாரி யுகம் என புரிந்து கொள்வார்கள். யுகம் நினைவிருந்தால் நாம் புதிய உலகத்திற்காக மாறிக்கொண்டிருக்கிறோம் என புரிந்து கொள்வார்கள். புதிய உலகத்தில் தேவதைகள் தான் இருப்பார்கள். யுகங்களைப் பற்றி கூட இப்போது நீங்கள் அறிந்துவிட்டீர்கள். தந்தை புரியவைக்கிறார்இனிமையான குழந்தைகளே, சங்கமயுகத்தை ஒருபோதும் மறக்காதீர்கள். இதை மறப்பதால் அனைத்து ஞானமும் மறந்து விடுகிறது. இப்போது நாம் மாறிக்கொண்டிருக் கிறோம் என குழந்தைகள் அறிகிறீர்கள். இந்த பழைய உலகம் கூட புதியதாகிறது. தந்தை வந்து உலகத்தை மாற்றுகிறார் எனில், குழந்தைகளைக் கூட மாற்றுகிறார். குழந்தாய் - குழந்தாய் என அனைவரையும் கூறுகிறார். முழு உலகத்திலும் இருக்கின்ற ஆத்மாக்கள் அனைவரும் குழந்தைகளே. அனைவருடைய நடிப்பின் பாகமும் இந்த நாடகத்தில் இருக்கிறது.; சக்கரத்தைக் கூட தெளிவுபடுத்த வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்கள். இந்த தேவி தேவதா தர்மத்தை தந்தையை தவிர வேறு யாரும் ஸ்தாபனை செய்ய முடியாது. இந்த தர்மத்தை பிரம்மா ஸ்தாபனை செய்யவில்லை. புது உலகில் தேவி தேவதா தர்மம் இருக்கிறது. பழைய உலகில் அனைவரும் மனிதர்களே மனிதர்கள். புது உலகில் தேவி தேவதைகள் இருப்பார்கள். தேவதைகள் தூய்மையானவர்கள். அங்கே இராவண இராஜ்யம் இல்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களை இராவணன் மீது வெற்றி அடையவைக்கிறார். இராவணனை வெற்றி அடைந்ததும் இராம இராஜ்யம் ஆரம்பமாகிவிடுகிறது. இராம இராஜ்யம் என புது உலகமும், இராவண இராஜ்யம் என பழைய உலகத்தையும் கூறப்படுகிறது. இராம இராஜ்யம் எப்படி ஸ்தாபனை ஆகிறது என குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. படைக்கக்கூடிய தந்தை அமர்ந்து குழந்தைகளாகிய உங்களுக்கு படைப்பின் இரகசியத்தை புரிய வைக்கிறார். தந்தை படைக்கக்கூடியவர்; விதை ரூபமாக இருக்கிறார். விதையே விருட்ஷபதி என கூறப்படுகிறது. இப்போது அது ஜட விதையாக இருக்கிறது. இதை இது போல புரிந்துக் கொள்ளமாட்டார்கள் விதையிலிருந்து தான் முழு மரமும் வெளிப்படுகிறது என நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். முழு உலகத்தினுடையது எவ்வளவு பெரிய மரம். அது ஜடம், இது சைத்தன்யம் (உணர்வுடைய) சத்சித் ஆனந்த சொரூபம், மனித சிருஷ்டியின் விதை ரூபமாக தந்தை இருக்கிறார். அவரிலிருந்து எவ்வளவு பெரிய மரம் வெளிப்படுகிறது. மாதிரியை (மாடல்) சிறியதாக உருவாக்குகிறார்கள்.

 

மனித சக்தியினுடைய மரம் எல்லாவற்றையும் விட பெரியது. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஞானம் நிறைந்தவர். அந்த மரங்களின் ஞானம் பலபேருக்கு இருக்கிறது. இதனுடைய ஞானத்தை அந்த ஒரு தந்தை தான் கொடுக்கிறார். இப்போது தந்தை எல்லைக்குட்பட்ட புத்தியை எல்லைக்கப்பாற்பட்ட புத்தியாக மாற்றுகிறார். நீங்கள் இந்த எல்லையற்ற மரத்தைப் பற்றி தெரிந்து கொண்டீர்கள். எவ்வளவு பெரிய உருவம் இந்த மரத்திற்கு கிடைத்திருக்கிறது. தந்தை குழந்தைகளை எல்லையற்றதில் கொண்டு செல்கிறார். இப்போது மரம் முழுவதும் தூய்மை இழந்ததாக இருக்கிறது. சிருஷ்டி முழுவதும் இம்சை நிறைந்ததாக இருக்கிறது. ஒருவருக்கொருவர் துன்பம் கொடுக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். இப்போது குழந்தைகளுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது. சத்யுகத்தில் ஒரே ஒரு தேவதா தர்மம் மட்டுமே அகிம்சையானது. சத்யுகத்தில் அனைவரும் தூய்மையாக, சுகம், சாந்தியில் இருக்கின்றனர். அனைத்து மனோவிருப்பங்களும் 21 ஜன்மங்களுக்காக நிறைவேறுகிறது. சத்யுகத்தில் எந்த விருப்பமும் இல்லை, தானியங்கள் போன்ற அனைத்தும் அளவில்லாமல் கிடைக்கிறது. இந்த பாம்பே முதலில் கிடையாது. தேவதைகள் உப்பு (கடற்கரை) நிலத்தில் வசிக்க மாட்டார்கள். இனிமையான நதிகள் எங்கிருந்ததோ அங்கே தேவதைகள் இருந்தனர். மனிதர்கள் கொஞ்சம் பேர் இருந்தனர்; ஒவ்வொரு வருக்கும் நிறைய நிலம் இருந்தது. சத்யுகத்தில் தான் விகாரம் அற்ற உலகம் இருந்தது. நீங்கள் யோக பலத்தால் உலகத்தின் இராஜ்யத்தை அடைகிறீர்கள். அதற்கு தான் இராம இராஜ்யம் என்று பெயர். முதன் முதலில் புதிய மரம் மிகவும் சிறியதாக இருக்கிறது. முதலில் அடிமரத்தில் ஒரு தர்மம் இருந்தது. பிறகு அடிமரத்திலிருந்து மூன்று கிளைகள் வெளிப்படுகிறது. தேவி தேவதா தர்மத்தின் அடித்தளம் ஒன்றாகவே இருக்கிறது. அடிமரத்திலிருந்து (தண்டு) கிளைகள் சிறிய சிறியதாக தோன்றுகிறது. இப்போது இந்த மரத்தில் அடிமரம் இல்லை. இதுபோன்று வேறு எந்த மரமும் கிடையாது. இதை ஆலமரத்துடன் துல்லியமாக ஒப்பிடலாம். ஆலமரம் முழுவதும் நிற்கிறது, ஆனால் அடிமரம்; இல்லை, காயவும் இல்லை. முழுமரமும் பசுமையாக நிற்கிறது. அதுபோல் தேவி தேவதா தர்மத்தின் பவுன்டேஷன் இல்லை, ஆனால் இதுதான் அடிமரம் அல்லவா. இராம இராஜ்யம் மற்றும் தேவி தேவதா தர்மம் கூட அடிமரத்தில் தான் வருகிறது. நாம் மூன்று தர்மத்தை ஸ்தாபனை செய்கிறோம் என பாபா கூறுகிறார். இந்த அனைத்து விஷயங்களையும் சங்கமயுக பிராமணர்களாகிய நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள். பிராமணர்களாகிய உங்களுடைய குலம் சிறியது. சிறிய சிறிய மடம் மதங்கள் (சமயங்கள்) தோன்றுகின்றன அல்லவா? அரவிந்தர் ஆசிரமம் எவ்வளவு சீக்கிரமாக வளர்ச்சி அடைகிறது. ஏனென்றால் அங்கே விகாரத்திற்காக எந்த தடையும் இல்லை. இங்கே காமம் மிகப்பெரிய எதிரி என பாபா கூறுகிறார். அதை வெற்றி அடையுங்கள். இது போன்று வேறு யாரும் கூறுவதில்லை. சண்டை இல்லையென்றால் அவர்களிடமும் கூட சண்டை சச்;சரவுகள் உண்டாகும். இங்கே இருப்பதே தூய்மையற்ற மனிதர்கள் தான் தூய்மையாவதற்கான விஷயத்தைக் கேட்பதில்லை. விகாரம் இல்லாமல் குழந்தைகள் எவ்வாறு பிறக்கும் என கூறுகின்றனர். பாவம், அவர்களுடைய குற்றமில்லை. பகவான் வாக்கு-காமம் மிகப்பெரிய எதிரி என கீதையை கற்பிப்பவர்கள் கூறுகின்றனர். அதை வெற்றி அடைவதால் உலகத்தை வென்றவர்கள் ஆகின்றனர். ஆனால் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் இந்த வார்த்தைகளை கூறும் போது அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். அனுமான் வாயிற்படியில் செருப்புகள் வைக்கும் இடத்தில் அமர்ந்திருந்தது போல, கடற்கரையில் சென்று சொல்லுங்கள் என பாபா கூறுகிறார். இந்த வார்த்தைகளைக் கூறும்போது இதனுடைய இரகசியம் என்ன என கேளுங்கள். இந்த தேவதைகள் உலகத்தை வென்றவர்களாக இருந்தனர். தேவதைகள் ஆவதற்காக இந்த விகாரங்களை விடவேண்டும். இதை நீங்கள் சொல்ல முடியும். இப்போது இராம இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது என உங்களுக்குத் தெரியும். நீங்கள் தான் மகாவீரர்கள் இதில் பயப்படுவதற்கு ஏதுமில்லை. சுவாமி ஜீ! இந்த விகாரங்களை வெற்றி அடைவதால் உலகத்திற்கு அதிபதி ஆகலாம் என தாங்கள் கூறினீர்கள், ஆனால் எப்படி தூய்மையாவது என தாங்கள் கூறவில்லை என்று மிகவும் அன்போடு கேட்க வேண்டும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தூய்மையாக இருக்கக்கூடிய மகாவீரர்கள். மகாவீரர்கள் தான் வெற்றி மாலையில் கோர்க்கப்படுகின்றனர். மனிதர்களுடைய காது தவறுகளை கேட்பதில் மூழ்கியிருக்கிறது. இப்போது உங்களுக்கு தவறான விஷயங்களை கேட்பதில் விருப்பமில்லை. உண்மையான விஷயங்கள் தான் உங்களுடைய காதுகளுக்கு நன்றாக இருக்கிறது. தீயவைகளை கேட்காதீர்கள். மனிதர்களை நிச்சயமாக விழித்தெழச் செய்யவேண்டும். தூய்மையாகுங்கள் என பகவான் கூறுகிறார். சத்யுகத்தில் அனைத்து தேவதைகளும் தூய்மை யாக இருந்தனர். இப்போது அனைவரும் தூய்மை இல்லாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு புரிய வைக்க வேண்டும். எங்களிடம் சத்சங்கம் நடைபெறுகிறது. அதில் காமம் மிகப்பெரிய எதிரி என புரிய வைக்கப்படுகிறது என சொல்லுங்கள். இப்போது தூய்மையாக விரும்புகிறீர்கள் என்றால் தன்னை ஆத்மா என உணர்ந்து சகோதர-சகோதரன் என்ற பார்வையை உறுதியாக்கிக் கொள்ளுங்கள் என யுக்தி சொல்லுங்கள்.

 

முதன் முதலில் பாரதம் அனைத்தும் நிரம்பிய கண்டமாக இருந்தது. இப்போது காலியான காரணத்தால் இந்துஸ்தான் என பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது என குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். முதலில் பாரதம் செல்வம், தூய்மை, சுகம், அமைதி அனைத்திலும் நிரம்பியிருந்தது. இப்போது துக்கத்தினால் நிரம்பி யிருக்கிறது. அப்போது தான் துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவரே.. என அழைக்கின்றனர். நீங்கள் எவ்வளவு மிகழ்ச்சியாக தந்தையிடம் கற்றுக் கொள்கிறீர்கள். எல்லையற்ற தந்தையிடம் எல்லையற்ற சுகத்தின் சொத்து அடையாமல் யார் இருப்பார்கள். முதன் முதலில் தந்தையை புரிந்து கொள்ள வேண்டும். தந்தையை புரிந்து கொள்ளவில்லை என்றால் எந்த இரகசியமும் புத்தியில் வராது. எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஆஸ்தி கொடுக்கின்றார் என்ற நிச்சயம் ஏற்படும் போது தான் முன்னேற முடியும். குழந்தைகள் தந்தையிடம் எந்த கேள்வியும் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. தந்தை பதீதபாவனர், அவரைத்தான் நீங்கள் நினைக்கின்றீர்கள். அவருடைய நினைவினால் தான் தூய்மையாகலாம். என்னை அழைத்ததே இதற்காகத்தான், ஜீவன் முக்தி கூட ஒரு நொடியில். இருந்தாலும் நினைவு யாத்திரையில் சமயம் செலவாகிறது. முக்கியமாக நினைவு யாத்திரையில் தான் தடைகள் ஏற்படுகிறது., அரைக் கல்பமாக தேக உணர்வில் இருக்கிறீர்கள். இப்போது இந்த ஒரு ஜென்மத்தில் ஆத்ம அபிமானி ஆவதில் தான் உழைப்பு இருக்கிறது. இவருக்கு (பிரம்மா பாபாவிற்கு) மிகவும் எளிதாக இருக்கிறது. நீங்கள் பாப்தாதாவை அழைக்கிறீர்கள் தந்தையின் சவாரி என் தலைமீது இருக்கிறது என இவர் கூட புரிந்து கொள்கிறார். மிகவும் அவருடைய மகிமை செய்கிறேன், மிகவும் அன்பாக இருக்கிறேன். பாபா நீங்கள் எவ்வளவு இனிமையானவர், இனிமையானவராக இருக்கிறீர்கள். எங்களுக்கு கல்பகல்பமாக எவ்வளவு கற்பிக்கிறீர்கள். பிறகு அரைக் கல்பம் தங்களை நினைக்க மாட்டோம். இப்போது மிகவும் நினைக்கிறேன். நேற்று எங்களுக்குள் எந்த ஞானமும் இல்லை. யாரைப் பூஜை செய்தோமோ அவராகவே மாறுவோம் என எங்களுக்கு தெரியுமா என்ன? இப்போது அதிசயமாகவே இருக்கிறது. யோகி ஆவதால் மீண்டும் இந்த தேவி தேவதைகளாக மாறுவோம். அனைவரும் என்னுடைய குழந்தைகளாக இருக்கின்றனர். இந்த பாபா மிகவும் அன்போடு குழந்தைகளை பாதுகாக்கிறார். இவர்களை பாலனை செய்கிறார். இவர்கள் கூட தனக்குச் (பிரம்மாவிற்கு) சமமாக நரனிலிருந்து நாராயணன் ஆகிவிடுவார்கள். இதற்காகவே நீங்கள் இங்கு வந்துள்ளீர், குழந்தைகளே! தந்தையை நினையுங்கள் தெய்வீக குணங்களை கடைப்பிடியுங்கள், உணவில் கவனமாக இருங்கள் என எவ்வளவு புரியவைக்கிறேன். செய்யவில்லை என்றால் ஒருகால் இன்னும் நேரம் இருக்கிறது என நினைக்கிறேன். ஏதாவது தவறுகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. சிறிய, பெரிய குழந்தை களுக்கு அன்போடு புரியவைக்கிறேன், குழந்தைகளே தவறு செய்யாதீர்கள், யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள். தவறு செய்கிறீர்கள் என்றால் துக்கம் கொடுப்பதாகும். தந்தை ஒருபோதும் துக்கம் கொடுப்பதில்லை. என்னை மட்டும் நினைவு செய்தால் விகர்மம் வினாசம் ஆகிவிடும், மிகவும் இனிமையாக மாறிவிடுவீர்கள் என அவர் அறிவுரை கொடுக்கிறார். இவ்வாறு இனிமையாக மாறவேண்டும், தெய்வீக குணங்களை கடைபிடிக்க வேண்டும். தூய்மையாகுங்கள் இங்கே தூய்மை இல்லாதவர்கள் வர அனுமதியில்லை. சில நேரங்களில் வர அனுமதிக்கின்றனர். அதுவும் இப்போது தான். மிகவும் வளர்ச்சி அடையும் போது தூய்மையின் கோபுரம் (Tower of purity), அமைதியின் கோபுரம் (Tower of peace) என கூறுவார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தது அல்லவா? தன்னை ஆத்மா எனப்புரிந்து தந்தையின் நினைவிருத்தல் - இது உயர்ந்த சக்தி. அங்கே மிகவும் அமைதியிருக்கிறது. அரைக்கல்பத்திற்கு சண்டை எதுவும் ஏற்படாது. இங்கே எவ்வளவு சண்டை நடக்கிறது, அமைதி இருக்க முடியாது. அமைதியினுடைய இடம் மூலவதனம் பிறகு சரீரத்தை ஏற்று உலகத்தில் நடிப்பதற்காக வருகிறோம் என்றால் அங்கே கூட அமைதியிருக்கிறது. ஆத்மாவின் சுயதர்மமே சாந்தி. இராவணன் அசாந்தி செய்விக்கிறான். நீங்கள் அமைதியின் பாடத்தை கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். யாராவது கோபமடைந்தால் அனைவருக்கும் அசாந்தி கொடுக்கிறார்கள். இந்த யோக சக்தியால் உங்களிடமிருந்து அனைத்து குப்பையும் வெளியேறுகிறது. படிப்பினால் குப்பை வெளியேறுகிறது. நினைவினால் அனைத்து குப்பையும் எரிந்து விடுகிறது, கறை நீங்கிவிடுகிறது. நேற்று உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தேன், மறந்து விட்டீர்களா? என பாபா கூறுகிறார். இது 5000 ஆண்டின் விஷயம். அவர்கள் இலட்சக் கணக்கான வருடங்கள் என கூறுகின்றார்கள்.

 

இப்போது உங்களுக்குப் பொய் மற்றும் உண்மையின் வித்தியாசம் தெரிகிறது. பொய் என்ன? உண்மை என்ன? ஞானம் என்ன? பக்தி என்ன? என்பதை தந்தை தான் வந்து உங்களுக்கு கூறுகிறார். பிரஷ்டாச்சாரம் (கீழானவர்) மற்றும் சிரேஷ்டாச்சாரம் (உயர்ந்தவர்) என எதை கூறுகிறோம்? பிரஷ்டாச்சாரி (கீழானவர்) விகாரத்தினால் பிறக்கிறார், அங்கே விகாரம் கிடையாது. தேவதைகள் சம்பூர்ண நிர்விகாரி என நீங்களே கூறுகிறீர்கள். இராவண இராஜ்யமே இல்லை. இது எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய விஷயம். பிறகு என்ன செய்ய வேண்டும். ஒன்று தந்தையை நினைக்க வேண்டும் மற்றொன்று தூய்மையாக நிச்சயம் மாற வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. தூய்மையாக மாறுவதில் மகாவீர் ஆகவேண்டும். நினைவு யாத்திரையால் உள்ளுக்குள் இருக்கும் குப்பையை வெளியேற்ற வேண்டும். தன்னுடைய அமைதியான சுயதர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும். அசாந்தியை பரப்பக்கூடாது.

 

2. பாபா கூறும் உண்மையான விஷயத்தையே கேட்க வேண்டும். தீயவைகளை கேட்காதீர்.. தவறான விஷயங்களை கேட்காதீர். அனைவரையும் விழித்தெழச் செய்ய வேண்டும். புருஷோத்தம யுகத்தில் புருஷோத்த மராகுங்கள் மற்றவரையும் ஆக்குங்கள்.

 

வரதானம்:

மறதியான (நினைவிழந்த) உலகத்திலிருந்து விலகி நினைவு சொரூபத்தில் இருந்து கதாநாயகன் என்ற நடிப்பை நடிக்கக்கூடிய விசேஷ ஆத்மா ஆகுக.

 

இந்த சங்கமயுகம் நினைவிற்கான யுகமாகும். மேலும் கலியுகம் மறதிக்கான யுகமாகும். நீங்கள் அனைவரும் மறதிக்கான உலகத்திலிருந்து வெளியேறி விட்டீர்கள். யார் நினைவு சொருபத்தில் இருக்கிறார்களோ அவர்கள் தான் கதாநாயகனின் நடிப்பு நடிக்கக்கூடியவர்தான் விசேஷ ஆத்மா. இந்த சமயத்தில் நீங்களோ டபுள் ஹீரோ ஓன்று வைரத்திற்கு நிகரான விலைமதிப்புடையவராகிறீர்கள், மற்றொன்று ஹீரோ கதாநாயகன் என்ற நடிப்பை நடிக்கக் கூடியவர் ஆகிறீர்கள். எனவே உள்ளத்தில் ஆஹா! எனது சிரேஷ்ட பாக்கியம் என்ற இதே பாடலை பாடிக்கொண்டே இருங்கள். எவ்வாறு தேகத்தின் தொழில் நினைவு இருக்கிறதோ, அவ்வாறே இந்த அழிவற்ற தொழில், அதாவது நான் சிரேஷ்ட ஆத்மா ஆவேன் என்ற நினைவு இருக்கும் போது தான் விசேஷ ஆத்மா என்று சொல்லலாம்.

 

சுலோகன்:

தைரியம் என்ற முதல் அடி எடுத்து முன்னால் வைத்தீர்கள் என்றால் பாபாவின் முழு உதவி கிடைக்கும்.

 

ஓம்சாந்தி