23.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! பகவான் நமக்குப் படிப்பிக்கிறார், நம்முடைய இந்த மாணவ வாழ்க்கை மிகவும் சிறந்தது, நம் மீது பிருகஸ்பதி (குரு) தசை நடந்து கொண்டிருக்கிறது என்ற குஷியில் எப்போதும் இருங்கள்.

 

கேள்வி:

எந்த குழந்தைகளுக்கு அனைவரின் அன்பு பிராப்தி ஆகிறது?

 

பதில்:

யார் பலரின் நன்மைக்கு நிமித்தமாகின்றனரோ, அவரால் நன்மை அடைந்தவர்கள் கூறுவார்கள் -நீங்கள் என்னுடைய தாய் என்று. ஆக, தன்னைத் தான் பாருங்கள் - நாம் எவ்வளவு பேருக்கு நன்மை செய்கிறோம்? தந்தையின் செய்தியை எவ்வளவு ஆத்மாக்களுக்குக் கொடுக்கிறோம்? தந்தையும் செய்தியாளர் தான். குழந்தைகளாகிய நீங்களும் தந்தையின் செய்தியைக் கொடுக்க வேண்டும். இரு தந்தையர் இருக்கின்றனர். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று அனைவருக்கும் கூறுங்கள்.

 

பாடல்:

நீங்கள் அன்புக் கடல். . .

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை அமர்ந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு தினம் தோறும் புரிய வைக்கிறார் - குழந்தைகளே ஆத்ம அபிமானி ஆகி அமருங்கள். புத்தி வெளியே அலைந்து கொண்டே இருக்கக் கூடாது. ஒரு தந்தையைத்தான் நினைவு செய்ய வேண்டும். அவர்தான் ஞானக் கடல், அன்புக் கடல். ஞானத்தின் ஒரு துளி போதும் என்று கூறுகின்றனர். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! ஆன்மீகத் தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு இந்த ஆஸ்தி கிடைத்து விடும். அமரபுரியாகிய வைகுண்டத்திற்குச் சென்று விடுவீர்கள். மற்றபடி இந்த தலைமீதிருக்கும் பாவங்களின் சுமையை இறக்க வேண்டும். விதிப்பூர்வமாக, விவேகமான முறையில் (புத்திக்கேற்றாற்போல) குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. உயர்விலும் உயர்வானவராக இருந்தவரே பிறகு இறுதியில் கீழே தவம் செய்து கொண்டிருக்கிறார். இராஜயோக தவத்தினை ஒரு தந்தைதான் கற்றுத் தருகிறார். ஹடயோகம் முற்றிலும் தனிப்பட்டது. அது எல்லைக்குட்பட்டது, இது எல்லைக்கப்பாற்பட்டது. அது துறவற மார்க்கம், இது இல்லற மார்க்கம். நீங்கள் உலகின் எஜமானாக இருந்தீர்கள் என்று தந்தை கூறுகிறார். இராஜா இராணி எப்படியோ பிரஜைகளும் அப்படியே.... இல்லற மார்க்கத்தில் தூய்மையான தேவி தேவதைகள் இருந்தனர், பின்னர் தேவதைகள் வாம மார்க்கத்தில் செல்கின்றனர். அதனுடைய படங்களும் உள்ளன. மிகவும் அருவருக்கத் தக்கவகையில் படங்களை உருவாக்குகின்றனர், அதனைப் பார்க்கும் போதே கூச்சம் ஏற்படுகிறது. ஏனென்றால் புத்தியே ஒரேடியாக இல்லாதது போல் ஆகிவிடுகிறது. நீங்கள் அன்புக்கடல் என்ற புகழ் தந்தையினுடையதுதான் ஆகும். இப்போது அன்பின் துளி இருப்பதில்லை. இது ஞானத்தின் விசயமாகும். நீங்கள் தந்தையைப் புரிந்து கொண்டு தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுக்க வருகிறீர்கள். தந்தை சத்கதிக்கான ஞானத்தைத்தான் வழங்குகிறார். கொஞ்சம் கேட்டார்கள், சத்கதியில் வந்து விட்டார்கள். இங்கே குழந்தைகளாகிய நீங்கள் புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டும். நாம் வைகுண்டத்தின் எஜமானன் ஆகிறோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்த சமயத்தில் முழு உலகிலும் இராவண இராஜ்யம் உள்ளது. உலக இராஜ்யத்தைக் கொடுப்பதற்காக தந்தை வந்துள்ளார். நீங்கள் அனைவரும் உலகின் எஜமானாக இருந்தீர்கள். இப்போது வரை அந்த சித்திரங்கள் இருக்கின்றன. மற்றபடி லட்சக்கணக்கான வருடங்களின் விசயம் எதுவுமில்லை. அது தவறு. தந்தைதான் எப்போதும் சரியானவர் எனச் சொல்லப்படுகிறார். தந்தை மூலமாக முழு உலகமும் சரியானதாக ஆகிறது. இப்போது சரியற்றதாக உள்ளது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இதுவும்கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. ஆச்சரியப்படும்படி ஞானத்தைக் கேட்கிறார்கள், பிறருக்கும் கூறுகிறார்கள், பிறகு ஓடிப்போய் விடுகின்றனர். அஹோ! மாயா நீ எவ்வளவு பலசாலியாக இருக்கிறாய், நீ தந்தையிடமிருந்து முகத்தைத் திருப்பி விட்டு விடுகிறாய். ஏன் பலசாலியாக இருக்காது? அரைக் கல்ப காலமாக அதனுடைய இராஜ்யம் நடக்கிறது. இராவணன் என்றால் என்ன என்பதையும் கூட நீங்கள் அறிவீர்கள். இங்கும் கூட சில குழந்தைகள் புத்திசாலிகளாக உள்ளனர், சிலர் முட்டாள்களாக உள்ளனர்.

 

நம் மீது பிருகஸ்பதியின் தசை நடந்து கொண்டிருக்கிறது, இப்போது நாம் சொர்க்கத்திற்குச் செல்வதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மனிதர்கள் இறக்கிறார்கள், அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்கான முயற்சி ஏதும் செய்வதில்லை. வெறுமனே சொர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்று மட்டும் சொல்லிவிடுகின்றனர். உண்மையிலும் உண்மையான சொர்க்கத்திற்குச் செல்வதற்கான முயற்சியை நாம் செய்து கொண்டிருக்கிறோம் அல்லது சொர்க்கத்தின் எஜமானன் ஆவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவர் சொர்க்கத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார் என்று யாரும் சொல்வதில்லை. அப்படி ஒருவேளை சொன்னால், என்ன இப்படி சொல்கிறீர்கள், வாயை மூடுங்கள் என்று கூறுவார்கள். மனிதர்கள் எல்லைக்குட்பட்ட விசயங்களை கூறுகின்றனர். தந்தை உங்களுக்கு எல்லைக்கப்பாற்பட்ட விஷயங்களைக் கூறுகிறார். குழந்தை களாகிய நீங்கள் மிகவும் முயற்சி செய்ய வேண்டும். மிகவும் போதை ஏற வேண்டும். யார் கல்பத்திற்கு முன்பு முயற்சி செய்தார்களோ, என்ன பதவி அடைந்தார்களோ அதைத்தான் அடைவார்கள். பல முறை குழந்தைகளாகிய உங்களை மாயையின் மீது வெற்றி பெற வைத்திருக்கிறார். பிறகு நீங்கள் தோல்வியும் அடைந்தீர்கள். இதுவும் நாடகமாக உருவாகியுள்ளது. ஆக, குழந்தைகளுக்கு மிகவும் குஷி இருக்க வேண்டும். மரணலோகத்திலிருந்து அமரலோகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள். இந்த மாணவ வாழ்க்கை மிகவும் சிறந்தது. இந்த சமயம் உங்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது. இதை எந்த மனிதரும் அறியவில்லை. பகவான் தாமே வந்து படிப்பிக்கிறார், இது மிகவும் சிறப்பான மாணவ வாழ்க்கையாக உள்ளது. ஆத்மாதான் படிப்பிக்கிறது, பிறகு இவருடைய பெயர் இன்னது என்று கூறுவார்கள். ஆத்மாதான் ஆசிரியராக உள்ளது அல்லவா! ஆத்மாதான் கேட்டு தாரணை செய்கிறது, ஆத்மாதான் கேட்கிறது. ஆனால் தேக-அபிமானத்தின் காரணமாக புரிந்து கொள்வதில்லை. சத்யுகத்திலும், ஆத்மாவாகிய நமக்கு இந்த சரீரம் கிடைத்துள்ளது, இப்போது வயது முதிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று புரிந்து கொள்வார்கள். உடனே காட்சியும் தெரியும் - நாம் இப்போது இந்த பழைய சரீரத்தை விட்டு புதியதை எடுக்கிறோம் என்று. குளவியின் உதாரணமும் கூட இப்போதையது தான். நாம் பிராமணியர் என்று இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாடகத்தின் திட்டப்படி யார் உங்களிடம் வந்தாலும் அவர்களுக்கு பூம் பூம் செய்கிறீர்கள், பிறகு அவர்களிலும் சிலர் பக்குவமற்றவராகவும், சிலர் காய்ந்தும் போகின்றனர். சன்னியாசிகள் இந்த உதாரணத்தைக் கொடுக்க முடியாது. அவர்கள் தமக்கு சமமாக யாரையும் ஆக்குவதில்லை. உங்களிடம் குறிக்கோள் உள்ளது. இந்த சத்ய நாராயணர் கதை, அமர கதை... இவையனைத்தும் உங்களுடையதாகும். ஒரு தந்தை மட்டுமே உண்மையைக் கூறுகிறார். மற்ற அனைத்தும் பொய். அங்கே சத்ய நாராயணரின் கதையைச் சொல்லி பிரசாதம் கொடுத்தபடி இருக்கின்றனர். எங்கே! இந்த எல்லைக்குட்பட்ட விசயங்கள், எங்கே! அந்த எல்லைக்கப்பாற்பட்ட விஷயங்கள். உங்களுக்கு தந்தை வழிமுறை கொடுக்கிறார். நீங்கள் அதை குறிப்பு எடுக்கிறீர்கள், மற்றபடி புத்தகங்கள், சாஸ்திரங்கள் போன்ற அனைத்தும் அழிந்து போய்விடும். பழைய பொருட்கள் எதுவுமே இருக்காது. கலியுகத்திற்கு இன்னும் 40000 வருடங்கள் இருக்கின்றன என்று மனிதர்கள் நினைக்கின்றார்கள், ஆகையால் பெரிய பெரிய கட்டிடங்கள் போன்றவற்றை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றார்கள். செலவு செய்து கொண்டே இருக்கின்றனர். சமுத்திரம் அவற்றை விட்டு விடுமா என்ன? ஒரே பேரலையில் அனைத்தையும் விழுங்கி விடும். இந்த பம்பாய் இருக்கவில்லை, இனியும் இருக்காது. இப்போது 100 வருடங்களுக்குள் என்னவெல்லாம் வந்துவிட்டன! முன்பு வைஸ்ராய் கூட 4 குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் வந்தார், இப்போது கொஞ்ச காலத்தில் என்னவெல்லாம் ஆகிவிட்டது. சொர்க்கம் மிகவும் சிறியது. நதிக்கரையில் உங்கள் மாளிகைகள் இருக்கும்.

 

இப்போது குழந்தைகளாகிய உங்கள் மீது பிருஹஸ்பதி தசை இருக்கிறது. நாம் இவ்வளவு செல்வந்தர்களாக ஆகிறோம் என்று குழந்தைகளுக்குக் குஷி இருக்க வேண்டும். யாராவது திவாலாகி விட்டால் ராகுவின் தசை என்று சொல்லப்படுகிறது. நீங்கள் உங்கள் (பிருஹஸ்பதி) தசையை நினைத்து மகிழ்ச்சியாக இருங்கள். பகவான் தந்தை நமக்குப் படிப்பிக்கிறார். பகவான் யாருக்காவது படிப்பிப்பாரா என்ன? நம்முடைய இந்த மாணவ வாழ்க்கை மிகவும் சிறந்தது என்று தெரிந்துள்ளீர்கள். நாம் நரனிலிருந்து நாராயணன், உலகின் எஜமான் ஆகிறோம். இங்கே நாம் இராவண இராஜ்யத்தில் வந்து மாட்டிக் கொண்டோம். பிறகு சுக தாமத்திற்குச் செல்கிறோம். நீங்கள் சங்கம யுக பிராமணர்கள். பிரம்மா மூலமாக ஸ்தாபனை நடக்கிறது. ஒருவர் மட்டும் இருக்க மாட்டார். நிறைய பேர் இருப்பார்கள் அல்லவா! நீங்கள் இறை உதவியாளர்களாக ஆகியுள்ளீர்கள். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய இறைவன் சேவை செய்கிறார், அதில் நீங்கள் உதவி செய்கிறீர்கள். யார் அதிக உதவி செய்கின்றனரோ அவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள். அவர்கள் யாரும் பசியால் இறக்க மாட்டார்கள். இங்கே பிச்சைக்காரர்களிடம் சோதனை செய்தாலும் கூட ஆயிரக்கணக்கில் பணம் இருக்கிறது. யாரும் பசியால் இறப்பதில்லை. இங்கேயும் நீங்கள் தந்தையுடையவராக ஆகியுள்ளீர்கள். தந்தை ஏழையாக இருந்தாலும் குழந்தைக்கு உணவு கிடைக்காதவரை அவர் சாப்பிடுவதில்லை. ஏனெனில் குழந்தைகள் வாரிசுகளாக இருக்கின்றனர். அவர்கள் மீது அன்பு இருக்கிறது. அங்கேயோ ஏழை என்ற விசயமே கிடையாது. அளவற்ற தானியங்கள் இருக்கும். எல்லைக்கப்பாற்பட்ட செல்வம் இருக்கும். அங்கே ஆடை அணிகலனைப் பாருங்கள், எவ்வளவு அழகாக இருக்கிறது! ஆகையால் பாபா சொல்கிறார் - எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது இலட்சுமி நாராயணர் சித்திரத்திற்கு முன்னால் சென்று அமருங்கள். இரவில் கூட அப்படி அமரலாம். இந்த இலட்சுமி நாராயணரை பார்த்தபடியே தூங்கி விடுங்கள். ஆஹா பாபா நம்மை இப்படி ஆக்குகிறார். நீங்கள் இப்படி பயிற்சி செய்து பாருங்கள், எவ்வளவு குஷி ஏற்படும். பிறகு அதிகாலையில் எழுந்து அனுபவம் சொல்லுங்கள். இலட்சுமி நாராயணரின் சித்திரம் மற்றும் ஏணிப்படிகளின் சித்திரம் அனைவரிடமும் இருக்க வேண்டும். நம்மை யார் படிப்பிக்கின்றார் என்று மாணவர்கள் தெரிந்துள்ளனர். அவருடைய சித்திரமும் இருக்கிறது. அனைத்தும் படிப்பின் ஆதாரத்தில் உள்ளது. சொர்க்கத்தின் எஜமானன் ஆவீர்கள். மற்றபடி பதவிக்கு ஆதாரம் படிப்பு ஆகும். பாபா சொல்கிறார் - நான் ஆத்மா, சரீரம் அல்ல என்ற முயற்சி செய்யுங்கள். நான் பாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுகின்றேன். எந்த கஷ்டமும் கிடையாது. மாதர்களுக்கு மிகவும் சகஜமாகும். ஆண்கள் தொழிலுக்குச் சென்று விடுகின்றனர். இந்த குறிக்கோளுடைய சித்திரத்தை (இலட்சுமி நாராயணர்) வைத்து நிறைய சேவை செய்ய முடியும். நிறைய பேருக்கு நன்மை செய்தால், உங்கள் மீது மிகவும் அன்பு செலுத்துவார்கள். நீங்கள் என்னுடைய தாய் என்று சொல்வார்கள். உலக நன்மைக்காக மாதர்களாகிய நீங்கள் நிமித்தமாகியுள்ளீர்கள். நாம் எத்தனை பேருக்கு நன்மை செய்தோம்? எத்தனை பேருக்கு தந்தையின் அறிமுகம் கொடுத்தோம்? என்று தன்னைத் தானே பார்க்க வேண்டும். தந்தைதான் செய்தியாளர். வேறு யாரையும் செய்தியாளர் என்று சொல்ல முடியாது. உங்களுக்கு தந்தை கொடுக்கக் கூடிய செய்தியை நீங்கள் அனைவருக்கும் சொல்லுங்கள். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள், 84 பிறவி சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் செய்தியாளராகிய தந்தையின் குழந்தைகள். செய்தி கொடுக்கக்கூடியவர்கள் ஆவீர்கள். அனைவருக்கும் சொல்லுங்கள் - இரண்டு தந்தையர் இருக்கின்றனர். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சுகம், அமைதியின் ஆஸ்தி கொடுத்தார், நாம் சுகதாமத்தில் இருந்தோம், மற்ற அனைவரும் சாந்தி தாமத்தில் இருந்தார்கள், பிறகு ஜீவன் முக்தியில் வருகின்றனர். இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும், பிறகு நாம் தான் அங்கே உலகின் எஜமானன் ஆவோம். பாபா, உங்களிடமிருந்து எங்களுக்கு முழு உலக அரசாட்சி கிடைக்கிறது என்ற ஒரு பாடலும் உள்ளது. முழு பூமி, கடல், ஆகாயம் அனைத்தும் நம் கையில் இருக்கும். இந்த நேரம் நாம் தந்தையிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் மறைமுகமான போர் வீரர்கள், சிவசக்தி சேனை. இது ஞான ஆயுதம், ஞான அம்பு ஆகும். அவர்கள், தேவி களுக்கு ஸ்தூலமான ஆயுதங்களைக் கொடுத்து விட்டார்கள். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு கோவில்களைக் கட்டியுள்ளனர்! எவ்வளவு சித்திரங்கள் உள்ளன. ஆகையால் பாபா சொல்கிறார் - பக்தி மார்க்கத்தில் அனைத்து பைசாவையும் காலி செய்து விட்டீர்கள். இப்போது இந்த அனைத்தும் அழியப் போகிறது, அனைத்தும் மூழ்கி விடும். அங்கே எப்படி சுரங்கங்களிலிருந்து வைர, வைடூரியங்களைக் கொண்டு வருகிறார்கள் என்று சாட்சாத்காரம் (காட்சி) காட்டியுள்ளார். ஏனெனில் இவையனைத்தும் மண்ணுக்குள் போய் விடுகிறது. பெரிய பெரிய இராஜாக்களிடம் மண்ணுக்குக் கீழே ஒரு தளம் (நிலவரை) இருக்கும். அவையனைத்தும் பூமிக்குள் புதைந்து இருக்கும். பிறகு உங்களுடைய பணியாளர்கள் சென்று அவற்றைக் கொண்டு வருவார்கள். இல்லையானால் இவ்வளவு தங்கம் எங்கிருந்து வரும்? சொர்க்கத்தின் காட்சியை அஜ்மீரில் பார்க்கிறீர்கள் அல்லவா! மியூசியம் (பொருட்காட்சிக் கூடம்) கூட அதைப் போல உருவாக்குங்கள் என்று பாபா கூறியிருந்தார். சொர்க்கத்தின் முதல் தரமான மாடலில் தயார் செய்ய வேண்டும். இப்போது நாம் நம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். முன்பு எதுவும் தெரியாமல் இருந்தோம், இப்போது தெரிந்து கொண்டபடி இருக்கிறோம். நான் ஒவ்வொரு வருடைய மனதில் இருப்பதை தெரிந்திருக்கிறேன் என்பதல்ல. சில விகாரிகள் கூட வருகின்றனர், ஏன் வருகிறீர்கள் என்று கேட்கும்போது, நான் மிகுந்த பாவாத்மாவாக இருக்கின்றேன், இங்கு வந்தால்தானே விகாரங்களிலிருந்து விடுபடுவோம் என்று சொல்கின்றனர். பாபா சொல்வார் - நல்லது, நன்மை ஏற்படட்டும். மாயை மிகப் பெரிய எதிரி ஆகும். பாபா சொல்கிறார் - குழந்தைகளே! நீங்கள் இந்த விகாரங்களின் மீது வெற்றி அடைய வேண்டும், அப்போதுதான் உலகை வென்றவராக ஆவீர்கள். மாயை ஒன்றும் குறைந்ததல்ல. இப்போது நீங்கள் முயற்சி செய்து இந்த இலட்சுமி நாராயணரைப் போல ஆகின்றீர்கள். இவர்களைப் போல அழகாக வேறு யாரும் ஆக முடியாது. இவர்களுடையது இயற்கையான அழகாகும். ஒவ்வொரு 5000 வருடங்களுக்குப் பிறகு சொர்க்கத்தின் ஸ்தாபனை ஏற்படுகிறது. பிறகு 84 பிறவிகளின் சக்கரத்தில் வருகின்றார்கள். இது பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனை என்று நீங்கள் எழுத முடியும். இது ஆரோக்கியத்திற்காக மற்றும் அது செல்வத்திற்கானதாகும். ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை 21 பிறவிகளுக்கு அடையுங்கள். தொழில் செய்பவர்கள் கூட தம்முடைய போர்டு வைக்கிறார்கள். வீடுகளில் கூட போர்டு வைக்கிறார்கள். யார் (ஆன்மீக) போதையில் இருக்கின்றார்களோ அவர்கள் இப்படியெல்லாம் எழுதுவார்கள். யார் வந்தாலும் அவர் களுக்குப் புரிய வையுங்கள் - நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்தீர்கள். பிறகு 84 பிறவிகள் எடுத்து தூய்மையற்றவராக ஆகிவிட்டீர்கள். இப்போது மீண்டும் தூய்மையாகுங்கள். தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். பாபா (பிரம்மா) கூட இப்படி செய்கிறார். இவர் முதல் நம்பர் முயற்சியாளர் ஆவார். நிறைய குழந்தைகள் எழுதுகிறார்கள் - பாபா, புயல் நிறைய வருகிறது, இப்படி ஆகிறது..... அதற்கு நான் பதில் எழுதுகிறேன் - அனைத்து புயலும் முதலில் என்னிடம் வருகிறது, நான் முதலில் அனுபவசாலியாக ஆகினால்தான் புரிய வைக்க முடியும். புயலைக் கொண்டு வருவது மாயையின் தொழில் ஆகும்.

 

இப்போது பாபா சொல்கிறார் - இனிமையான செல்லமான குழந்தைகளே! இப்போது உங்கள் மீது பிருகஸ்பதி தசை உள்ளது. நீங்கள் யாரிடமும் தன்னுடைய ஜாதகத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. பாபா அனைத்தையும் சொல்லிவிடுகிறார். அங்கே ஆயுள் கூட அதிகமாக இருக்கும். கிருஷ்ணரைக்கூட யோகேஷ்வர் என்று சொல்கிறார்கள். இவருக்கு யோகேஷ்வர் யோகம் கற்றுக் கொடுத்தார், ஆகையால் இப்படி ஆனார். மற்றபடி எந்த மனிதரையும், சன்னியாசி போன்றவரையும் யோகேஷ்வர் என்று சொல்ல முடியாது. உங்களுக்கு ஈஸ்வரன் யோகம் கற்றுக் கொடுக்கிறார். ஆகையால், யோகேஷ்வர் மற்றும் யோகேஷ்வரி என்ற பெயர் வைக்கப் பட்டுள்ளது. ஞானேஷ்வர் மற்றும் ஞானேஷ்வரியும் கூட இந்த நேரத்தில் நீங்கள்தான் ஆகின்றீர்கள். பிறகு சென்று இராஜ இராஜேஷ்வரனாகவும் நீங்கள்தான் ஆகின்றீர்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளூக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. குறிக்கோளை முன்னால் வைத்து முயற்சி செய்யுங்கள். இலட்சுமி நாராயணரின் சித்திரத்தை முன்னால் பார்த்தபடி தனக்குத் தானே பேசிக்கொள்ளுங்கள் - ஆஹா பாபா நீங்கள் என்னை இப்படி ஆக்குகின்றீர்கள், இப்போது எங்கள் மீது பிருகஸ்பதி தசை அமர்ந்துள்ளது.

 

2. தனக்கு சமமாக பிறரை மாற்றுவதற்காக குளவியைப் போல ஞானத்தின் பூம் பூம் செய்யுங்கள். இறை சேவகராகி சொர்க்கத்தின் ஸ்தாபனையில் தந்தைக்கு உதவி செய்யுங்கள்.

 

வரதானம்:

தேக உணர்வை தேகி (ஆத்ம) அபிமானி ஸ்திதியாக மாற்றிவிடக் கூடிய எல்லையற்ற வைராக்கியம் உடையவர் ஆகுக.

 

போகப்போக வைராக்கியத்தில் குறைவு ஏற்படுமானால் அதற்கான முக்கியக் காரணம் தேக உணர்வு. எது வரை தேக உணர்வின் மீது வைராக்கியம் வரவில்லையோ, அது வரை எந்த ஒரு விஷயத்தின் வைராக்கியமும் சதா காலத்துக்கும் இருக்காது. சம்மந்தத்தின் மீது வைராக்கியம் என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. உலகத்திலும் கூட அநேகருக்கு வைராக்கியம் வந்து விடுகிறது. ஆனால் இங்கே தேக உணர்வின் பலவித ரூபங்கள் என்ன உள்ளனவோ, அவற்றைத் தெரிந்து கொண்டு, தேக உணர்வை தேகி அபிமானி ஸ்திதியாக மாற்றி விடுவது -- இது தான் எல்லையற்ற வைராகி ஆவதற்கான விதியாகும்.

 

சுலோகன் :

சங்கல்பம் என்ற கால்கள் உறுதியாக இருக்குமானால் கறுப்பு மேகங்கள் போன்ற விஷயங்களும் கூட மாற்றமடைந்து விடும்.

 

பிரம்மா பாபாவுக்கு சமமாக ஆவதற்கான விஷேச புருஷார்த்தம்

 

எந்த ஒரு கணக்காயினும் -- இந்தப் பிறவியினுடையதாக இருந்தாலும் சரி, முந்தைய பிறவிகளினுடையதாக இருந்தாலும் சரி, ஈடுபாட்டின் அக்னி சொரூபம் இன்றி பஸ்மம் ஆகாது. இப்போது பிரம்மா பாபாவுக்கு சமமாக சதா அக்னி சொரூப சக்திசாலி நினைவின் ஸ்திதி, விதை வடிவம், லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஸ்திதியின் மீது விசேஷ கவனம் செலுத்தி, அனைத்துக் கணக்கு-வழக்குகளையும் பஸ்மம் செய்து

 

ஓம்சாந்தி