18.10.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே, , பூதங்களே நீங்கள் என்னிடம் வர முடியாது எனக் கட்டளை இடுங்கள். இவ்வாறு நீங்கள் அதனை பயமுறுத்தினால் அது ஓடிவிடும்.

 

கேள்வி:

ஈஸ்வரிய போதையில் இருக்கக் கூடிய குழந்தைகளின் வாழ்க்கையின் அழகு (பெருமை) என்ன?

 

பதில்:

சேவை தான் அவர்களின் வாழ்க்கையின் அழகாகும். ஈஸ்வரிய இலாட்டரி கிடைத்திருக்கிறது என்ற போதை இருந்தால் சேவையின் ஆர்வம் அதிகரிக்க வேண்டும். ஆனால் உள்ளுக்குள் எந்த பூதமும் இல்லாத போது தான் அம்பு பாயும்.

 

கேள்வி:

சிவபாபாவின் குழந்தை எனக் கூறக் கூடிய உரிமையுடையவர் யார்?

 

பதில்:

பகவான் நம்முடைய தந்தையாக இருக்கிறார். நாம் இப்படிப்பட்ட உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் குழந்தைகள் என்ற நிச்சயம் உடைய, பெருமிதத்தில் இருக்கக் கூடிய தகுதி பெற்ற குழந்தைகள் தான் சிவபாபாவின் குழந்தை என்று கூறிக் கொள்ளும் உரிமை உடையவர் ஆவார். ஒரு வேளை கேரக்டர் சரியாக இல்லை, இராயலான (குணம் மற்றும் செயல்) நடத்தை இல்லை என்றால் அவர்கள் சிவபாபாவின் குழந்தை என்று கூற முடியாது.

 

ஓம் சாந்தி.

சிவபாபா நினைவிருக்கிறதா? சொர்க்கத்தின் இராஜ்ய பதவி நினைவிருக்கிறதா? இங்கே அமரும் போது நாம் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பது நினைவிற்கு வர வேண்டும். மேலும் எப்போதும் தந்தையை நினைக்க வேண்டும். நினைக்காமல் நாம் சொத்து அடைய முடியாது. என்ன சொத்து? தூய்மையின் சொத்து. அதற்காக முயற்சி செய்ய வேண்டும். ஒரு போதும் எந்த விகாரத்தின் விஷயமும் நம் முன் வர முடியாது. விகாரத்தின் விஷயம் மட்டும் இல்லை, ஒரு பூதம் மட்டும் இல்லை, எந்த பூதமும் வர முடியாது. இப்படி சுத்த அகங்காரம் இருக்க வேண்டும். மேலும் மிகவும் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவானுடைய குழந்தைகளாகிய நாமும் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் அல்லவா! பேசுதல், நடத்தை எவ்வளவு இராயலாக இருக்க வேண்டும்! நடத்தையின் மூலமாக இவர் முற்றிலும் ஒரு நயா பைசா அளவிற்குக் கூட மதிப்பற்றவர் என பாபா புரிந்து கொள்வார். என்னுடைய குழந்தை என்று கூறிக் கொள்வதற்கு உரிமை கிடையாது. லௌகீக தந்தைக்கு கூட தகுதியற்ற குழந்தைகளைப் பார்த்து இவ்வாறு தோன்றும். இவரும் தந்தையாவார். பாபா நமக்கு அறிவுரை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு தெரியும். ஆனால் ஒரு சிலரோ முற்றிலும் எதையும் புரிந்து கொள்வதில்லை. எல்லையற்ற தந்தை நமக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற நிச்சயம் இல்லை, போதை இல்லை. குழந்தைகளாகிய உங்களின் புத்தி எவ்வளவு உயர்ந்ததாக இருக்க வேண்டும்! நாம் எவ்வளவு உயர்ந்த தந்தையின் குழந்தைகள்! பாபா எவ்வளவு புரிய வைக்கிறார்! நாம் எவ்வளவு உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் குழந்தைகள்! நம்முடைய நடத்தை எவ்வளவு உயர்ந்ததாக இருக்க வேண்டும் என உள்ளுக்குள் யோசிக்க வேண்டும். இந்த தேவி தேவதைகளுக்கு எவ்வளவு மகிமைகள் இருக்கிறதோ அது நமக்கும் இருக்க வேண்டும். பிரஜைகளுக்கு இந்த மகிமைகள் கிடையாது. ஒரு இலஷ்மி நாராயணணைதான் காண்பித்துள்ளனர். எனவே குழந்தைகள் எவ்வளவு நன்றாக சேவை செய்ய வேண்டும். இந்த இலஷ்மி நாராயணன் இருவரும் சேவை செய்திருக்கிறார்கள் அல்லவா! புத்தி எவ்வளவு உயர்ந்ததாக இருக்க வேண்டும்! சில குழந்தைகளுக்குள் எந்த மாற்றமும் இல்லை. மாயாவிடம் தோல்வி அடைந்து விடுகிறார்கள். மேலும் கெட்டுப் போகிறார்கள். இல்லை என்றால் உள்ளுக்குள் எவ்வளவு பெருமிதம் இருக்க வேண்டும்! நாம் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். அனைவருக்கும் என்னுடைய அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டே இருங்கள் என பாபா கூறுகிறார். சேவையினால் தான் அழகைப் பெறுவீர்கள். அப்போது தான் பாபாவின் இதயத்தில் இடம் பெற முடியும். குழந்தை என்றால் பாபாவின் இதயத்தில் இருக்க வேண்டும். பாபாவிற்கு குழந்தைகள் மீது எவ்வளவு அன்பிருக்கிறது! குழந்தைகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்! இவ்வளவு மோகம் இருக்கிறது. ஆனால் அது எல்லைக்குட்பட்ட மாயாவின் மோகம் ஆகும். இது எல்லைக்கப்பாற்பட்டதாகும். குழந்தைகளைப் பார்த்து சந்தோஷம் அடையாத தந்தை யாராவது இருப்பாரா? தாய் தந்தைக்கு அளவற்ற குμ இருக்கிறது. இங்கே அமரும் போது பாபா படிக்க வைக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பாபா நம்முடைய கீழ் படிந்த ஆசிரியர் ஆவார். எல்லையற்ற தந்தை நிச்சயமாக ஏதாவது சேவை செய்திருப்பதால் தான் புகழ் பாடப்பட்டிருக்கிறது. எவ்வளவு அதிசயமான விஷயம்! எவ்வளவு அவருக்கு மகிமைகள் இருக்கிறது. இங்கே அமரும் போது புத்தியில் பெருமிதம் இருக்க வேண்டும். சன்னியாசிகளோ துறவற மார்க்கத்தைச் சார்ந்தவர்கள். அவர்களின் தர்மமே தனியாகும். இதையும் இப்போது பாபா புரிய வைக்கின்றார். உங்களுக்கு சன்னியாசி மார்க்கத்தைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. நீங்கள் கிரகஸ்த (இல்லறம்) ஆஸ்ரமத்தில் இருந்து பக்தி செய்தீர்கள். பிறகு உங்களுக்கு ஞானம் கிடைக்கிறது. அவர்களுக்கோ ஞானம் கிடைப்பதில்லை. நீங்கள் எவ்வளவு உயர்ந்த படிப்பை படிக்கிறீர்கள். எவ்வளவு சாதாரணமாக கீழே அமர்ந்திருக்கிறீர்கள். தில்வாடா கோவில் கூட நீங்கள் கீழே தவத்தில் அமர்ந்துள்ளீர்கள். மேலே வைகுண்டம் காண்பிக்கப்பட்டுள்ளது. மேலே வைகுண்டத்தை பார்த்து சொர்க்கம் மேலே தான் இருக்கிறது என மனிதர்கள் நினைக்கிறார்கள்.

 

எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு இது பள்ளிக் கூடம், நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற விஷயங்கள் அனைத்தும் உள்ளுக்குள் இருக்க வேண்டும். எங்கே போனாலும் இந்த எண்ணங்கள் வந்து கொண்டே இருந்தால் மிகவும் ஆனந்தம் வரும். எல்யைற்ற தந்தையை உலகத்தில் யாருமே அறியவில்லை. பாபாவின் குழந்தையாகி பாபாவின் வரலாறை தெரிந்து கொள்ளவில்லை. இப்படிப்பட்ட முட்டாளை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? தெரிந்து கொள்ளாததற்கு காரணம் அவர் சர்வ வியாபி என்கின்றனர். நீங்களே பூஜைக்கு உரியவர், நீங்களே பூஜாரி என பகவானுக்குக் கூறி விடுகின்றனர். நாம் எவ்வளவு உயர்ந்த பூஜைக்குரியவராக இருந்தோம் என்பதை நினைத்து குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுக்குள் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்! பிறகு நாமே தான் பூஜாரி ஆகி உள்ளோம். சிவ பாபா உங்களை இவ்வளவு உயாந்தவராக மாற்றுகிறார். பிறகு நாடகத்தின் படி நீங்களே அவருடைய பூஜையை ஆரம்பிக்கிறீர்கள். பக்தி எப்போது ஆரம்பமாகியது என்பது உலகத்தினருக்கு தெரியாது. பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு தினம் தினம் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இங்கே அமர்ந்திருக்கும் போது குஷி ஏற்பட வேண்டும் அல்லவா! நம்மை படிக்க வைப்பவர் யார்? பகவான் வந்து நம்மை படிக்க வைக்கிறார். இதை ஒரு போதும் கேட்டிருக்க முடியாது. கீதையின் பகவான் கிருஷ்ணர் என்றால் கிருஷ்ணர் தான் படிக்க வைத்திருப்பார் என அவர்கள் நினைக்கிறார்கள். சரி கிருஷ்ணர் என்று வைத்துக் கொண்டால் கூட எவ்வளவு உயர்ந்த நிலை வேண்டும். மனித வழி மற்றும் ஈஸ்வரிய வழி என்று ஒரு புத்தகம் கூட இருக்கிறது தேவதைகளுக்கு வழி கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனிதர்கள் தான் ஈஸ்வரிய வழியை விரும்புகிறார்கள். தேவதைகளுக்கு முற்பிறவிலேயே வழி கிடைத்திருந்தது. அதன் மூலம் தான் உயர்ந்த பதவி பெற்றனர். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு சிரேஷ்டமாவதற்கான வழி கிடைத்திருக்கிறது. ஈஸ்வரிய வழி மற்றும் மனிதர்களின் வழியில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! மனிதர்களின் வழி என்ன கூறுகிறது, ஈஸ்வரிய வழி என்ன கூறுகிறது? எனவே ஈஸ்வரிய வழிப்படி நடக்க வேண்டும். யாரையாவது சந்திக்க செல்கிறார்கள் என்றால் எதையும் எடுத்துச் செல்வதில்லை. யாருக்கு என்ன பரிசு கொடுக்க வேண்டும் என்ற நினைவு வருவதில்லை. இந்த ஈஸ்வரிய வழிக்கும் மற்றும் மனிதர்களின் வழிக்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் மனிதர்களாக இருந்த போது அசுர வழி இருந்தது. இப்போது ஈஸ்வரிய வழி கிடைத்திருக்கிறது. இதில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! இந்த சாஸ்திரங்கள் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவையாகும். பாபா எந்த சாஸ்திரத்தையாவது படித்து விட்டு வருகிறாரா? நான் எந்த தந்தையின் குழந்தை என பாபா கேட்கிறார். நான் யாராவது ஒரு குருவின் சீடனா? அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேனா? எனவே இந்த விஷயங்கள் அனைத்தையும் புரிய வைக்க வேண்டும். குரங்கு புத்தி என தெரிந்துக் கொள்கிறார்கள். ஆனால் கோவில் அமரும் அளவிற்கு தகுதி அடைய வைக்கக் கூடியவர் வேண்டும் அல்லவா! இப்படி பலர் மனிதர்கள் சொல்லும் வழியில் செல்கிறார்கள். பிறகு நீங்கள் ஈஸ்வரிய வழியினால் நாம் எப்படி மாறுகிறோம் எனக் கூறுகிறீர்கள். அவர் நம்மை படிக்க வைக்கிறார். பகவான்வாக்கு-நாம் அவரிடம் படிப்பதற்காக செல்கிறோம். நாம் தினந்தோறும் ஒரு மணி நேரம், முக்கால் மணி நேரம் செல்கிறோம். வகுப்பிற்காக அதிக நேரம் கூட எடுத்துக் கொள்ள தேவை இல்லை. போகும் போதும், வரும் போதும் கூட நினைவு யாத்திரை செய்யலாம். ஞானம் மற்றும் யோகா இரண்டுமே மிகவும் எளிதாகும். அப்பா என்பது ஒரே ஒரு வார்த்தை தான். பக்தி மார்க்கத்தில் நிறைய சாஸ்திரங்கள் இருக்கிறது. ஒன்று சேர்த்தால் முழு வீடும் சாஸ்திரங்களினால் நிறைந்து போகும். இதற்காக எவ்வளவு செலவு ஆகியிருக்கும்! இப்போது தந்தையோ மிகவும் எளிதாகப் புரிய வைக்கிறார். தந்தையை மட்டும் நினையுங்கள். பாபா சொர்க்கத்தின் இராஜ்ய பதவியை சொத்தாக கொடுக்கிறார். நீங்கள் உலகத்திற்கே அதிபதியாக இருந்தீர்கள் அல்லவா! பாரதம் சொர்க்கமாக இருந்தது அல்லவா! நீங்கள் மறந்து விட்டீர்களா? இதுவும் நாடகத்தில் விதி எனக் கூறப்படுகிறது. இப்போது தந்தை வந்திருக்கிறார். ஒவ்வொரு 5000 வருடத்திற்கு பிறகு படிக்க வைப்பதற்காக வருகிறார். எல்லையற்ற தந்தையின் சொத்து நிச்சயம் சொர்கம் புது உலகமாக இருக்கும் அல்லவா! இது மிகவும் சாதாரண விஷயம். இலட்சக்கணக்கான ஆண்டுகள் எனக் கூறியதால் புத்தி பூட்டப் பட்டிருக்கிறது. பூட்டு திறப்பதே இல்லை. இவ்வளவு எளிதான விஷயம் கூட புரிந்து கொள்ளாத அளவிற்கு பூட்டு போடப்ட்டிருக்கிறது. ஒரு விஷயம் போதும் என்று பாபா புரிய வைக்கிறார். அதிகமாக படிக்க வேண்டியதில்லை. இங்கே நீங்கள் ஒரு நொடியில் யாரை வேண்டுமானாலும் சொர்க்கவாசியாக மாற்றலாம். ஆனால் இது பள்ளிக் கூடம் ஆகவே உங்களுடைய படிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடலை மையாக்கி, காட்டு மரங்களை பேனாவாக்கி எழுதினாலும் எழுத முடியாத அளவிற்கு ஞானக் கடல் தந்தை உங்களுக்கு ஞானம் கொடுக்கிறார். ஞானத்தை தாரணை செய்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. பக்தி அரைக் கல்பம் ஆகிவிட்டது. ஞானம் உங்களுக்கு ஒரே பிறவியில் கிடைக்கிறது. புது உலகிற்காக தந்தை உங்களைப் படிக்க வைக்கிறார். அந்த உலகியல் பள்ளிக் கூடத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள்? 5 வயதிலிருந்து 20-22 வரை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். வருமானம் குறைவு. ஆனால் செலவு அதிகமானால் நஷ்டம் ஏற்படும் அல்லவா!

 

பாபா எவ்வளவு பெரிய பணக்காரராக மாற்றுகிறார். பிறகு ஏழைகளாகி விடுகிறார்கள். இப்போது பாரதத்தின் நிலைமை எப்படி உள்ளது எனப் பாருங்கள்! தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். தாய்மார்கள் எழுந்து (உயர்ந்து) நிற்க வேண்டும். வந்தே மாதரம் என்பது உங்களின் புகழே! பூமிக்கு வந்தே மாதரம் என்று கூற முடியாது மனிதர்களுக்கு தான் வந்தே மாதரம் என சொல்ல முடியும். பந்தனத்திலிருந்து விடுபட்ட குழந்தைகள் தான் இந்த சேவையை செய்கிறார்கள். அதுவும் போன கல்பத்தில் யார் பந்தனத்திலிருந்து விடுபட்டிருந்தார்களோ அவ்வாறே விடுபடுகிறார்கள். ஒன்றும் அறியாத பெண்களுக்கு எவ்வளவு கொடுமைகள் இழைக்கப்படுகிறது. நமக்கு தந்தை கிடைத்து விட்டார் என புரிந்து கொள்கிறார்கள். போதும், இப்போது பாபாவின் சேவையை செய்யலாம் என நினைக்கிறார்கள். பந்தனம் இருக்கிறது எனக் கூறுபவர்கள் செம்மறி ஆடு போன்றவர்கள். அரசாங்கம் நீங்கள் ஈஸ்வரிய சேவை செய்யக் கூடாது என எதுவும் கூற முடியாது. பேசுவதற்கு தைரியம் வேண்டும் அல்லவா! யாருக்குள் ஞானம் இருக்கிறதோ அவர்கள் எளிதாக பந்தனத்திலிருந்து விடுபடலாம். நீதிபதிக்குக் கூட நாங்கள் ஆன்மீக சேவை செய்ய விரும்புகிறோம் எனப் புரிய வைக்கலாம். ஆன்மீகத் தந்தை நம்மை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கிறிஸ்துவர்கள் விடுவியுங்கள், வழி காட்டுங்கள் என்று கூறுகிறார்கள். பாரதவாசிகளை விட அவர்களின் புத்தி நன்றாக இருக்கிறது. குழந்தைகளாகிய உங்களிலும் நன்கு புத்திசாலியாக இருப்பவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஈஸ்வரிய சேவையினால் நிறைய லாட்டரி கிடைக்கிறது என புரிந்துக் கொள்கிறார்கள். சிலர் இலாட்டரியை பற்றி புரிந்துக் கொள்வதே இல்லை. அங்கேயும் சென்று வேலைக்காரர்களாக மாறுவார்கள். மனதில் வேலைக்காரர்களாக இருந்தாலும் சரி, சண்டாளனாக இருந்தாலும் பரவாயில்லை, சொர்க்கத்தில் இருப்போம் அல்லவா என நினைக்கிறார்கள். அவர்களின் நடத்தையே இவ்வாறு தோன்றுகிறது. எல்லையற்ற தந்தை நமக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். இந்த தாதாவும் புரிய வைக்கிறார். பாபா இவர் மூலமாக குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சிலர் இதைக் கூட புரிந்துக் கொள்வதில்லை. இங்கிருந்து வெளியே சென்றதும் முடிந்தது. இங்கே இருந்தாலும் எதையும் புரிந்து கொள்வதில்லை. புத்தி வெளியே அலைந்து கொண்டிருக்கும் ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. ஒரு பூதம் கூட வெளியேறுவதில்லை. படிக்க வைப்பவர் யார்? என்னவாக மாறுகிறோம்? பணக்காரர்களின் வேலைக்காரனாகக் கூட மாறுவார்கள் அல்லவா! இப்போது கூட பணக்காரரிடம் எத்தனை வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். சேவைக்காக பறக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அமைதியை ஸ்தாபனை செய்வதற்கு நிமித்தமாக இருக்கிறீர்கள். உலகத்தில் சுகம் அமைதியை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறீர்கள் நாம் ஸ்ரீமத்படி நடைமுறையில் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம், இதில் அசாந்தி எதுவும் ஏற்படக்கூடாது என அறிகிறீர்கள். பாபா இங்கே கூட நிறைய நல்ல நல்ல வீடுகளைப் பார்த்திருக்கிறார். ஒரே வீட்டில் 6-7 மருமகள்கள் ஒன்றாக மிகவும் அன்போடு இருக்கிறார்கள். முற்றிலும் அமைதி நிறைந்திருக்கும். எங்களிடம் சொர்க்கம் இருக்கிறது என்று கூறுகின்றனர். எந்த ஒரு சண்டை சச்சரவும் கிடையாது. அனைவரும் கீழ் படிந்தவர்களாக இருக்கிறார்கள். அச்சமயம் பாபாவிற்கு (பிரம்மா) கூட சன்னியாசி ஆகும் எண்ணங்கள் இருந்தது. உலகத்தின் மீது வைராக்கியம் இருந்தது. இப்போதோ இது எல்லையற்ற வைராக்கியம் ஆகும். எதுவுமே நினைவிருக்கக் கூடாது. பாபா அனைவரின் பெயர்களையும் கூட மறந்து போகிறார். குழந்தைகள் பாபாவிடம் நீங்கள் எங்களை நினைவு செய்கிறீர்களா எனக் கேட்கின்றனர். பாபா நாம் அனைவரையும் மறக்க வேண்டும் எனக் கூறுகிறார். மறக்காதீர்கள், நினைக்காதீர்கள். எல்லையற்ற வைராக்கியம் அல்லவா. அனைத்தையும் மறக்க வேண்டும். நாம் இங்கேயே இருக்கக் கூடியவர்கள் கிடையாது. தனது சொர்க்கத்தின் சொத்தைக் கொடுப்பதற்காக பாபா வந்திருக்கிறார். என்னை நினைவு செய்தால் நீங்கள் உலகத்திற்கே அதிபதியாகிவிடலாம் என எல்லையற்ற தந்தை கூறுகிறார். இந்த பேட்ஜ் மூலமாக கூட நன்கு புரிய வைக்கலாம். யாராவது கேட்டால் புரிந்து கொண்டு வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறுங்கள். இந்த பேட்ஜ் பற்றி புரிந்து கொள்வதால் உங்களுக்கு விஷ்வத்தின் இராஜ்ய பதவி கிடைக்கிறது. சிவபாபா இந்த பிரம்மா மூலமாக என்னை நினைத்தால் நீங்கள் இவ்வாறு மாறலாம் என டைரக்ஷன் கொடுக்கிறார். கீதையை படிப்பவர்கள் நன்கு புரிந்துக் கொள்வார்கள். அவர்கள் தேவதா தர்மத்தினராக இருப்பார்கள். தேவதைகள் ஏன் கீழே விழுகிறார்கள் என சிலர் கேள்வி கேட்கிறார்கள். அடே, இந்த சக்கரம் சுழல்கிறது அல்லவா! மறு பிறவி எடுத்து எடுத்து கீழே இறங்குகிறார்கள் அல்லவா. சக்கரம் சுழலத்தான் வேண்டும். நாம் ஏன் சேவை செய்ய முடியாது என ஒவ்வொருவரின் மனதிலும் உதயம் ஆக வேண்டும். நிச்சயமாக எனக்குள் ஏதோ குறை இருக்கிறது. மாயை என்ற பூதம் மூக்கை பிடித்திருக்கிறது.

 

இப்போது நாம் வீட்டிற்கு போக வேண்டும். பிறகு புது உலகத்தில் இராஜ்யம் செய்ய வேண்டும் என குழந்தைகள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் பயணிகள் அல்லவா! தூர தேசத்திலிருந்து இங்கே வந்து நடிக்கிறீர்கள். இப்போது நாம் அமர உலகத்திற்குப் போக வேண்டும் என்பது உங்கள் புத்தியில் இருக்கிறது. இது மரண உலகம் அழியப்போகிறது. பாபா நிறைய புரிய வைக்கிறார். நன்கு கடை பிடிக்க வேண்டும். பிறகு இதை அசைபோட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கர்ம போகத்தின் நோய் பயங்கரமாக வரும் எனவும் பாபா புரிய வைத்திருக்கிறார். மாயை துன்புறுத்தும் ஆனால் குழப்பம் அடையக் கூடாது. ஏதாவது சிறிது நோய் ஏற்பட்டாலே தொல்லையாக நினைக்கின்றனர். நோய் ஏற்படும் போது மனிதர்கள் அதிகமாக பகவானை நினைக்கிறார்கள். வங்காளத்தில் யாருக்காவது நிறைய நோய் ஏற்பட்டால் இராம் இராம் என்று சொல்லச் சொல்கிறார்கள். மரணப் படுக்கையில் இருக்கிறார்கள் என்றால் கங்கையில் கொண்டு சென்று ஹரி, ஹரி எனக் கூறச் சொல்கிறார்கள். பிறகு அவர்களை எடுத்து வந்து எதற்கு எரிக்க வேண்டும். கங்கைக்குள்ளே போட்டு விட வேண்டியது தானே! ஆமை, மீன் போன்றவைகளுக்கு இறையாகி விடும், பயன்படும். பாரசீகர்கள் அப்படியே வைத்து விடுகிறார்கள். அந்த எலும்புகள் கூட பயன்படுகிறது. நீங்கள் மற்ற விஷயங்களை மறந்து என்னை நினையுங்கள் என பாபா கூறுகிறார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. பந்தனத்திலிருந்து விடுபட்டவராகி பாரதத்திற்கு உண்மையான சேவை செய்ய வேண்டும். எங்களுக்கு ஆன்மீகத் தந்தை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார், நாங்கள் ஆன்மீக சேவையில் இருக்கிறோம் என்று பெருமிதத்துடன் புரிய வைக்க வேண்டும். ஈஸ்வரிய சேவையில் ஆர்வம் வாங்கி வர வேண்டும்.

 

2. கர்ம போகத்தின் நோய் மற்றும் மாயையின் புயல்களில் குழப்பமடைவதோ, தொந்தரவு அடைதலோ கூடாது. பாபா கொடுத்திருக்கின்ற ஞானத்தை அசைபோட்டுக் கொண்டே பாபாவின் நினைவில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

 

வரதானம்:

அனைத்து சம்பந்தங்களின் அனுபவத்தின் கூடவே பிராப்திக்கான குஷியின் அனுபவம் செய்யக் கூடிய திருப்தியான ஆத்மா ஆகுக.

 

உண்மையான நாயகியாக இருப்பவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும், ஒவ்வொரு செயலிலும் சதா பிராப்திக்கான குஷியின் அனுபவத்தில் இருப்பார்கள். சில குழந்தைகள் ஆம், அவர் எனது தந்தை, நாயகன், குழந்தை.. என்று அனுபவம் செய்கின்றனர். ஆனால் எவ்வளவு பிராப்தி ஏற்பட வேண்டுமோ அவ்வளவு ஏற்படுவது கிடையாது. எனவே அனுபவத்தின் கூடவே சர்வ சம்பந்தத்தின் மூலம் பிராப்தியை உணர வேண்டும். இவ்வாறு பிராப்தி மற்றும் அனுபவம் செய்பவர்கள் சதா திருப்தியாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஒரு பொருளிலும் குறை என்பது கிடையாது. எங்கு பிராப்தியிருக்கிறதோ அங்கு அவசியம் திருப்தி இருக்கும்.

 

சுலோகன்:

நிமித்தமானீர்கள் எனில் சேவையின் வெற்றிக்கான பங்கு கிடைத்து விடும்.

 

ஓம்சாந்தி