06.10.2019
காலை
முரளி
ஓம்சாந்தி
அவ்யக்த
பாப்தாதா
ரிவைஸ்
18.02.1985
மதுபன்
சங்கமயுகம்
உடல்,
மனம்,
பொருள்
மற்றும்
நேரத்தை
பயனுள்ளதாக ஆக்குவதற்கான
யுகம்
இன்று
உலகிற்கு
நன்மை
செய்யும்
தந்தை,
தன்னுடைய
சகயோகி
குழந்தைகளைப்
பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு
குழந்தையின்
உள்ளத்திலும்
தந்தையை
பிரத்யக்ஷம்
செய்வதற்கான
ஆர்வம் மற்றும்
ஈடுபாடு
நிரம்பியிருக்கிறது.
அனைவருக்கும்
இந்த
ஒரே
ஒரு
சிரேஷ்ட
எண்ணம்
தான்
இருக்கிறது,
மேலும்
அனைவரும்
இதே
காரியத்தில்
ஊக்கம்,
உற்சாகத்துடன்
ஈடுபட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தந்தை
மீது
அன்பு
இருக்கும்
காரணத்தினால்,
சேவை
மீதும்
அன்பு
ஏற்பட்டு
விட்டது.
இரவு
பகலாக நடைமுறையில்
காரியம்
செய்வதிலும்,
மற்றும்
கனவில்
கூட
தந்தை
மற்றும்
சேவை
தான்
தென்படுகிறது.
தந்தைக்கு
சேவை
மீது
அன்பு
உள்ளது.
எனவே
அன்பிற்குரிய
சகயோகி
குழந்தைகளுக்கும்,
சேவை
மேல் அன்பு
நன்றாக
இருக்கிறது.
இது
அன்பிற்கான
நிரூபணம்
அதாவது
எடுத்துகாட்டாகும்.
அந்தமாதிரியான சகயோகி
குழந்தைகளைப்
பார்த்து,
பாப்தாதாவும்
மகிழ்ச்சியடைகிறார்.
தன்னுடைய
உடல்,
மனம்,
செல்வம் மற்றும்
நேரத்தை
எவ்வளவு
அன்புடன்
பயனுள்ளதாக
ஆக்கிக்
கொண்டிருக்கிறார்கள்.
பாவக்
கணக்கில் இருந்து
மாறி
புண்ணியத்தின்
கணக்கில்
தற்சமயத்திற்காகவும்,
மேலும்
சிரேஷ்ட
எதிர்காலத்திற்காகவும்,
சேமிப்பு செய்து
கொண்டிருக்கிறார்கள்.
சங்கமயுகமே
ஒன்றிற்கு
பலமடங்கு
சேமிப்பு
செய்வதற்கான
யுகம்.
உடலை சேவையில்
ஈடுபடுத்துங்கள்,
மற்றும்
21
ஜென்மங்களுக்காக
முழுமையாக
நோயற்ற
உடலைப்
பெறுங்கள்..
எப்படிப்பட்ட
பலஹீனமான
உடலாக
இருந்தாலும்,
நோயுற்றதாக
இருந்தாலும்,
வாய்
மொழி
சேவை
மற்றும் உடலால்
சேவை
செய்ய
முடியவில்லையென்றாலும்
மன
சேவையை
இறுதி
நேரம்
வரை
செய்ய
முடியும்.
தன்னுடைய
அதீந்திரிய
சுகம்,
சாந்தியின்
சக்தியை
முகம்
மூலம்,
கண்களின்
மூலம்
காண்பிக்க
முடியும்.
உங்கள்
தொடர்பில்
வருபவர்கள்,
இவரோ
அதிசயமான
நோயாளி
என்று
கூற
வேண்டும்.
டாக்டர்களும் நோயாளியைப்
பார்த்து
மகிழ்ச்சியடைந்து
விட
வேண்டும்.
பொதுவாக
டாக்டர்கள்
நோயாளிகளுக்கு
குஷி
கொடுப்பார்கள்,
ஆனால்
அவர்
கொடுப்பதற்குப்
பதிலாக
பெறுவதின்
அனுபவம்
செய்யட்டும்.
எப்படிப்பட்ட நோயாக
இருந்தாலும்,
ஒருவேளை
தெய்வீக
புத்தி
நன்றாக
இருக்கிறது
என்றால்,
இறுதி
நேரம்
வரையிலும் சேவை
செய்ய
முடியும்.
ஏனென்றால்,
இந்த
உடலின் சேவையின்
பலனாக
21
ஜென்மங்கள்
அமர்ந்து
நன்றாக சாப்பிட்டுக்
கொண்டிருப்போம்
என்று
தெரிந்திருக்கிறீர்கள்.
அந்தமாதிரி
உடலால்,
மனதால்,
நீங்களே
மனதின் அமைதி
சொரூபமாகி,
எப்பொழுதும்
ஒவ்வொரு
எண்ணத்தில்
சக்திசாலியாகி,
சுபபாவனை,
சுப
விருப்பங்கள் மூலமாக
வள்ளலாகி,
சுகம்,
சாந்தியின்
கிரணங்களை
வாயுமண்டலத்தில்
பரப்பிக்
கொண்டேயிருங்கள்.
எப்பொழுது உங்களுடைய
படைப்பாகிய
சூரியன்,
நாலாபுறக்களிலும்
பிரகாசிக்கும்
கிரணங்களைப்
பரப்பிக்
கொண்டேயிருக்கிறது என்றால்,
நீங்கள்
மாஸ்டர்
படைப்பவர்,
மாஸ்டர்
சர்வசக்திவான்,
பாக்கியத்தை
வழங்குபவர்,
வரமளிக்கும் வள்ளல்,
பாக்கியவான்,
பிராப்திகளின்
கிரணங்களைப்
பரப்ப
முடியாதா?
எண்ணத்தின்
சக்தி
அதாவது
மனம் மூலமாக,
ஒரு
இடத்தில்
இருந்து
கொண்டும்
கூட
நாலாபுறாங்களிலும்
வைப்ரேஷன்
மூலமாக
வாயுமண்டலத்தை உருவாக்க
முடியும்.
கொஞ்ச
காலத்திற்காக
இந்த
ஜென்மத்தில்
மனம்
மூலமாக
சேவை
செய்வதினால்,
21
ஜென்மங்கள்
மனம்
எப்பொழுதும்
சுகம்
மற்றும்
சாந்தியின்
மகிழ்ச்சியில்
இருக்கும்.
பிறகு
அரைக்
கல்பம் பக்தியில்,
விக்ரஹங்கள்,
படங்கள்
மூலமாக
மனதின்
சாந்தியைக்
கொடுப்பதற்காக
பொறுப்பாளராக
ஆவீர்கள்.
விக்ரஹமும்
அந்தளவு
சாந்தியை
மற்றும்
சக்தியை
கொடுக்கக்
கூடியதாக
ஆகும்.
அப்படி
ஒரு
ஜென்மத்தின் மன
சேவை,
முழுக்
கல்பத்தில்
சைத்தன்ய
சொருபம்
மூலம்
மற்றும்
படங்கள்
மூலம்
அமைதியின்
சொரூபமானவர் ஆவீர்கள்.
அதேபோல்
பணம்,
செல்வம்
மூலமாக
சேவைக்கு
பொறுப்பாளர்
ஆகுபவர்கள்,
21
ஜென்மங்களுக்கு எண்ண
முடியாத
செல்வத்தின்
அதிபதி
ஆகிவிடுவார்கள்.
கூடவே
தூவாபர்
யுகத்திலிருந்து,
இதுவரையிலும் கூட
அந்த
ஆத்மாக்கள்
ஒருபொழுதும்
செல்வத்திற்காக
யாசிப்பவராக
ஆக
மாட்டார்கள்.
மிகவும்
மகிழ்ச்சியுடன் இரண்டு
பிடி
சாதம்
அருந்துபவர்களாக
இருப்பார்கள்.
ஒருபொழுதும்
உணவிற்காக
யாசிப்பவராக
ஆக
மாட்டார்கள்.
அப்படி
ஒரு
ஜென்மம்
வள்ளலின் காரியத்திற்காக
பணம்,
செல்வத்தை
ஈடுபடுத்துவதினால்,
வள்ளலும்
என்ன செய்வார்?
சேவையில்
ஈடுபடுத்துவார்.
நீங்களோ
தந்தையின்
உண்டியில் போடுகிறீர்கள்
இல்லையா?
மேலும் தந்தை
பிறகு
அதை
சேவையில்
ஈடுபடுத்துகிறார்,
அந்தமாதிரி
சேவைக்காக
மற்றும்
வள்ளலின் காரியத்திற்காக செல்வத்தை
ஈடுபடுத்துவது
என்றால்,
முழுக்
கல்பமும்
யாசிப்பதிலிருந்து விடுபடுவது.
எந்தளவு
ஈடுபடுத்துவீர்களோ,
அந்தளவு
தூவாபர்
யுகத்திலிருந்து கலியுகம் வரையிலும்
சௌகரியமாக
உட்கார்ந்து
சாப்பிட்டுக் கொண்டேயிருப்பீர்கள்.
எனவே
உடல்,
மனம்,
செல்வம்,
மற்றும்
நேரத்தை
பயனுள்ளதாக
ஆக்க
வேண்டும்.
நேரத்தை
ஈடுபடுத்துபவர்கள்
ஒன்றோ
படைப்புச்
சக்கரத்தின்
அனைத்தையும்
விட
சிரேஷ்ட
காலம் சத்யுகத்தில்
வருவார்கள்.
மிகத்
தூய்மையான
உயர்ந்த
யுகத்தில்
வருவார்கள்.
அந்தக்காலத்தின்
மகிமையை பக்தர்கள்
இப்பொழுது
வரையிலும்
பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
சொர்க்கத்தை
மகிமை
செய்கிறார்கள்
தான் இல்லையா?
அப்படி
மிக
உயர்ந்த
காலத்தில்
கூட
1 .1. 1
என்ற
தொடக்க
காலத்தில்,
அதாவது
சத்யுகத்தின் முதல்
ஜென்மத்தில்,
அந்தமாதிரி
சிரேஷ்ட
காலத்தின்
அதிகாரத்தை
அடையக்
கூடிய,
முதல்
நம்பரில்
இருக்கும் ஆத்மாவுடன்
தனது
வாழ்க்கை
காலத்தைக்
கழிப்பவராக
இருப்பார்.
அவருடன்
சேர்ந்து
படிப்பவராக,
விளையாடுபவராக,
அங்குமிங்கும்
சுற்றி
வருபவராக
இருப்பார்.
எனவே
யார்
சங்கமயுகத்தில்
தனது
நேரத்தை பயனுள்ளதாக
ஆக்குகிறார்களோ,
அதன்
சிரேஷ்ட
பலனாக
சம்பூரண
அனைத்தும்
நிறைந்த
சிரேஷ்ட
காலத்தின் அதிகாரம்
அவர்களுக்கு
பிராப்தியாக
கிடைக்கிறது.
ஒருவேளை
நேரத்தை
ஈடுத்துவதில்
அலட்சியமாக
இருக்கிறார் என்றால்,
முதல்
நம்பரில்
உள்ள
ஆத்மா
ஸ்ரீ
கிருஷ்ணர்
சொரூபத்தில்,
சொர்க்கத்தில்
முதல்
வருடத்தில் வராமல்
பிற்காலத்தில்
வரிசைக்கிரமமாக
வருவார்.
இது
தான்
நேரத்தை
கொடுப்பதின்
மகத்துவம்.
என்ன கொடுக்கிறீர்கள்,
மேலும்
என்ன
பெற்றுக்
கொள்கிறீர்கள்?
எனவே
உடல்,
மனம்,
பணம்,
நேரம்,
நான்கையுமே எந்தளவு
ஈடுபடுத்த
முடியுமோ,
அந்தளவு
ஈடுபடுத்துகிறேனா
என்று
சோதனை
செய்யுங்கள்.
எவ்வளவு ஈடுபடுத்த
முடியுமோ,
அந்தளவு
ஈடுபடுத்துவதில்லை
என்று
இல்லையே?
சக்திகேற்றப்படி
ஈடுபடுத்தினால் பிராப்தியும்
சக்திக்கேற்றபடி
இருக்கும்,
சம்பூரணமாக
இருக்காது.
பிராமண
ஆத்மாக்கள்
நீங்கள்,
செய்தியாக அனைவருக்கும்
என்ன
கூறுகிறீர்கள்?
சம்பூரண
சுகம்,
சாந்தி
உங்களுடைய
பிறப்புரிமை
என்று
தான்
கூறுகிறீர்கள்..
சக்திக்கேற்றப்படி
உங்களுக்கு
அதிகாரம்
இருக்கிறது
என்றோ
கூறுவதில்லை.
சம்பூரண
என்று
கூறுகிறீர்கள் தான்
இல்லையா.
எப்பொழுது
சம்பூரணம்
அதிகாரம்
இருக்கிறது
என்றால்,
சம்பூரண
பிராப்தி
செய்வது
தான் பிராமண
வாழ்க்கை.
அரை
குரையாக
இருக்கிறது
என்றால்,
சத்திரியன்.
சந்திர
வம்சத்தினர்
பாதியில்
வருகிறார்கள் இல்லையா.
எனவே
சக்திக்கேற்றப்படி
என்றால்,
அரைகுறையான
நிலை
மற்றும்
பிராமண
வாழ்க்கை
என்றால்,
ஒவ்வொரு
விஷயத்திலும்
சம்பூரணம்.
புரிந்ததா?
பாப்தாதா
குழந்தைகளின்
சகயோகம்
கொடுப்பதற்கான சார்ட்டைப்
பார்த்துக்
கொண்டிருந்தார்.
அனைவருமே
சகயோகிகள்
தான்.
எப்பொழுது
சகயோகி
ஆகியிருக்கிறீர்களோ,
அப்பொழுது
தான்
சகஜயோகியாகவும்
ஆனீர்கள்.
நீங்கள்
அனைவரும்
சகயோகி,
சகஜயோகி,
சிரேஷ்ட
ஆத்மாக்கள்.
பாப்தாதா
ஒவ்வொரு
குழந்தையையும்
சம்பூரண
அதிகாரமுள்ள
ஆத்மாவாக
ஆக்குகிறார்.
பிறகு
சக்திக்கேற்றவராக
ஏன்
ஆகிறீர்கள்?
அல்லது
வேறு
யாராவது
ஆவார்கள்
என்று
நினைக்கவில்லையே?
அந்தமாதிரி
ஆகுபவர்கள்
அதிகம்
இருக்கிறார்கள்.
அதில்
நீங்கள்
இல்லையா?
இப்பொழுது
கூட
சம்பூரண அதிகாரத்தை
அடைவதற்கான
நேரம்.
இப்பொழுது
மிகவும்
காலதாமதம்
ஆகிவிட்டது.
என்ற
அறிவிப்பு பலகையை
மாட்டவில்லை.
தாமதமாக
அதாவது
பின்னால்
வருபவர்கள்
முன்னேறிச்
செல்ல
முடியும்,
எனவே இப்பொழுது
கூட
பொன்னான
வாய்ப்பு
இருக்கிறது.
எப்பொழுது
மிகவும்
காலதாமதம்
என்ற
அறிவிப்பு
பலகை மாட்டப்பட்டு
விட்டது
என்றால்,
பிறகு
பொன்னான
வாய்ப்பிற்குப்
பதிலாக,
வெள்ளி
வாய்ப்பு
ஆகிவிடும்.
அப்படியானால்
என்ன
செய்ய
வேண்டும்?
நீங்கள்
பொன்னான
வாய்ப்பை
எடுத்துக்
கொள்பவர்
தான்
இல்லையா?
பொற்காலத்தில்
வரவில்லையென்றால்,
பிராமணன்
ஆகி
என்ன
செய்தீர்கள்?
எனவே
பாப்தாதா
அன்பிற்குரிய குழந்தைகளுக்கு
இருந்தும்
நினைவூட்டுகிறார்,
இப்பொழுது
தந்தையின்
அன்பின்
காரணமாக
ஒன்றிற்கு
பலமடங்கு கிடைப்பதற்கான
வாய்ப்பு
இருக்கிறது.
இப்பொழுது
எந்தளவோ,
அந்தளவு
என்பதில்லை.
ஒன்றிற்கு
பலமடங்கு.
பிறகு
கணக்கு
வழக்கு
எவ்வளவோ,
அந்தளவிற்கு
இருக்கும்.
ஆனால்
இப்பொழுது
கள்ளம்
கபடமற்றவரின் நிரம்பிய
களஞ்சியம்
திறக்கப்பட்டிருக்கிறது.
எந்தளவு
விரும்புகிறீர்களோ,
அந்தளவு
எடுத்துக்
கொள்ள
முடியும்.
பிறகு
சத்யுகத்தின்
நம்பர்
ஒன்
ஆசனம்
காலி இல்லை என்று
கூறுவீர்கள்,
எனவே
தந்தைக்குச்
சமமாக சம்பூரணம்
ஆகுங்கள்.
மகத்துவத்தைத்
தெரிந்து
மகான்
ஆகுங்கள்.
இரட்டை
வெளிநாட்டினர்
பொன்னான வாய்ப்பை
எடுத்துக்
கொள்பவர்கள்
தான்
இல்லையா?
எப்பொழுது
இவ்வளவு
ஆர்வத்துடன்
படித்துக் கொண்டிருக்கிறீர்கள்,
அன்பானவராக,
சகயோகியாக
இருக்கிறீர்கள்
என்றால்,
ஒவ்வொரு
விஷயத்திலும்
சம்பூரணம் ஆகவேண்டும்
என்ற
இலட்சியம்
மூலமாக
சம்பூரணத்தின்
இலட்சணத்தைக்
கடைப்பிடியுங்கள்.
ஆர்வமில்லை என்றால்
இங்கு
எப்படி
வந்து
சேர்ந்தீர்கள்,
எப்படி
பறந்து
வந்து
சேர்ந்திருக்கிறீர்களோ,
அதேபோலவே எப்பொழுதும்
பறக்கும்
கலையில்
பறந்து
கொண்டேயிருங்கள்.
உடலால்
பறப்பதற்கும்
பயிற்சி
உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.
ஆத்மாவும்
எப்பொழுதும்
பறந்து
கொண்டேயிருக்கட்டும்.
இது
தான்
பாப்தாதாவின்
அன்பு.
நல்லது.
எப்பொழுதும்
வெற்றி
சொரூபமாகி,
எண்ணம்,
நேரத்தை
பயனுள்ளதாக
ஆக்கக்
கூடிய,
ஒவ்வொரு காரியத்திலும்
சேவையின்
ஊக்கம்,
உற்சாகம்
வைக்கக்
கூடிய,
எப்பொழுதும்
தன்னை
சம்பன்னம்
ஆக்கி,,
சம்பூரண
அதிகாரத்தை
பெறக்
கூடிய,
கிடைத்திருக்கும்
பொன்னான
வாய்ப்பை
இப்பொழுதும்
எடுத்துக் கொள்ளக்
கூடிய,
தந்தையைப்
பின்பற்றி
நடக்கும்
உணமையான
குழந்தைகளுக்கு,
நம்பர்
ஒன்
குழந்தைகளுக்கு பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
நமஸ்காரம்.
காத்மண்டு
(நேபாளம்)
மற்றும்
வெளிநாட்டு
சகோதர,
சகோதரிகளின்
குரூப்புடன் பாப்தாதாவின்
தனிப்பட்ட
சந்திப்பு
அனைவரும்
எப்பொழுதும்
தங்களை
விசேஷ
ஆத்மாக்கள்
என்று
அனுபவம்
செய்கிறீர்களா?
முழு உலகத்திலும்
அந்த
மாதிரியான
விசேஷ
ஆத்மாக்கள்
எத்தனை
பேர்
இருப்பார்கள்?
கோடியில்
சிலர்
என்ற மகிமை
செய்யப்
படுகிறதே,
அவர்கள்
யார்?
நீங்கள்
தான்
இல்லையா.
எனவே
தன்னை
எப்பொழுதும் கோடியில்
சிலர்,
அந்த
சிலரிலும்
சிலரான
சிரேஷ்ட
ஆத்மா
என்று
நினைக்கிறீர்களா?
இந்த
மாதிரி
சிரேஷ்ட ஆத்மாவாக
ஆவேன்
என்று
ஒருபொழுதும்
கனவில்
கூட
நினைத்திருக்க
மாட்டீர்கள்,
ஆனால்
நடைமுறை ரூபத்தில்
அனுபவம்
செய்கிறீர்கள்.
அப்படியானால்,
தன்னுடைய
இந்த
சிரேஷ்ட
பாக்கியம்
எப்பொழுதும் நினைவில்
இருக்கிறதா?
ஆஹா!
என்னுடைய
சிரேஷ்ட
பாக்கியம்!
பகவான்
அவரே,
உங்களுடைய
இந்த பாக்கியத்தை
உருவாக்கியிருக்கிறார்.
நேரடியாக
பகவான்
பாக்கியத்தின்
ரேகையைப்
போட்டிருக்கிறார்,
அந்தமாதிரி சிரேஷ்ட
பாக்கியம்.
எப்பொழுது
இந்த
சிரேஷ்ட
பாக்கியம்
நினைவில்
இருக்கிறது என்றால், குஷியில் புத்தி என்ற கால்கள் இந்த
பூமியில் இருப்பதில்லை. அந்தமாதிரி நினைக்கிறீர்கள் தான்
இல்லையா? பொதுவாகவே ஃபரிஸ்தாக்களின் கால்கள் பூமியில்
இருப்பதில்லை. எப்பொழுதுமே மேலே இருப்பார்கள். உங்களுடைய
புத்தி என்ற கால் எப்பொழுதும் எங்கே இருக்கிறது.? கீழே தரையில்
இல்லை. தேக அபிமானம் கூட தரை தான். தேக அபிமானம் என்ற
தரையிலிருந்து, மேலே இருப்பவர்கள். இவர்களைத் தான்
ஃபரிஸ்தாக்கள் என்று கூறுவது. அப்படி உங்களுக்கு எத்தனை
பட்டங்கள். - பாக்கியவான், ஃபரிஸ்தா, தேடிக்
கண்டெடுக்கப்பட்டவர்கள், - என்னவெல்லாம் சிரேஷ்ட பட்டங்கள்
இருக்கின்றனவோ, அவை அனைத்தும் உங்களுடையதாகும். எனவே இந்த
குஷியில் நடனமாடிக் கொண்டேயிருங்கள். செல்லக் குழந்தைகள்
ஒருபொழுதும் தரையில் கால்களை வைக்க மாட்டார்கள். எப்பொழுதும்
ஊஞ்சலில் இருப்பார்கள். ஏனென்றால், கீழே தரையில் இருப்பதற்கான
பழக்கம் உள்ளவர்களாக 63 ஜென்மங்கள் இருந்தீர்கள். அதை அனுபவம்
செய்து பார்த்து விட்டீர்கள். தரையில், மண்ணில் இருந்ததினால்,
அழுக்காகி விட்டீர்கள். மேலும் இப்பொழுது செல்லக் குழந்தைகள்
ஆகிவிட்டீர்கள் என்றால், எப்பொழுதும் பூமிக்கு மேலே இருங்கள்.
அழுக்கு ஆகாமல், எப்பொழுதும் சுத்தமாக இருங்கள். உண்மையான
உள்ளம், சுத்தமான உள்ளமுள்ள குழந்தைகள், எப்பொழுதும்
தந்தையுடன் இருக்கிறார்கள், ஏனென்றால், தந்தையும் எப்பொழுதும்
சுத்தமாக இருக்கிறார் இல்லையா? அந்தமாதிரி தந்தையுடன்
இருப்பவர்களும், எப்பொழுதும் சுத்தமானவர்கள் தான். மிகவும்
நல்லது, சந்திப்பு விழாவிற்கு வந்து சேர்ந்து விட்டீர்கள்,
ஆர்வமானது சந்திப்பதற்காக இங்கே கொண்டு வந்து சேர்த்தே
விட்டது. பாப்தாதா குழந்தைகளை பார்த்து, குஷியடைகிறார்.
ஏனென்றால், குழந்தைகள் இல்லையென்றால், தந்தையும் தனியாக என்ன
செய்வார். உங்களுடைய வீட்டிற்கு வருக! வருக! என்று
வரவேற்கிறோம். பக்தர்கள் தீர்த்த யாத்திரையில் செல்கிறார்கள்.
எவ்வளவு கடினமான பாதையை கடந்து செல்கிறார்கள், நீங்களோ,
காத்மண்டுவிலிருந்து பேருந்தில் வந்துள்ளீர்கள். மிகவும்
மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்து விட்டீர்கள். நல்லது.
லண்டன்
குரூப்போடு
சந்திப்பு:
அனைவரும்
அன்பு
என்ற
கயிறில்
கோர்க்கப்
பட்டிருக்கும்,
ஒரு
தந்தையின் மாலையின்
மணிகள்
தான்
இல்லையா?
மாலைக்கு
இந்தளவு
மகத்துவம்
ஏன்
உருவானது.
ஏனென்றால் அன்பு
என்ற
கயிறு
அனைத்தையும்
விட
சிரேஷ்ட
கயிறாகும்.
அப்படி
அன்பின்
கயிறு
மூலம்
நீங்கள் அனைவரும்
ஒரு
தந்தையின்
குழந்தையாக
ஆகியிருக்கிறீரகள்,
இதனுடைய
நினைவு
சின்னம்
தான்
மாலையாகும் யாருக்கு
ஒரு
தந்தையைத
தவிர
வேறு
யாருமே
இல்லையோ,
அவர்
தான்
அந்த
ஒருவரின்
அன்பு
என்ற கயிற்றில்
மாலையின்
மணியாகி
உருளுவார்கள்.
கயிறு
ஒன்று
தான்,
மணிகள்
அநேகம்.
அப்படி
இது
ஒரு தந்தையின்
அன்பின்
அடையாளம்.
அந்தமாதிரி
தன்னை
மாலையின்
மணி
என்று
நினைக்கிறீர்கள்
தான் இல்லையா,
அல்லது
108-லோ
மிகக்
குறைந்தவர்கள்
தான்
வருவார்கள்
என்று
நினைக்கிறீர்களா?
என்ன நினைக்கிறீர்கள்?
இந்த
108 -
என்ற
எண்ணிக்கையோ
ஒரு
காரணமாக
மட்டும்
தான்
இருக்கிறது.
யாரெல்லாம் தந்தையின்
அன்பில்
மூழ்கியிருக்கிறார்களோ,
அவர்கள்
கழுத்தின்
மாலையின்
முத்துக்களாக
நிச்சயம் இருக்கிறார்கள்.
யார்
அந்தமாதிரி
ஒருவரின்
அன்பிலேயே
மூழ்கியிருக்கிறார்களோ,
அந்த
மூழ்கியிருக்கும் நிலை
தடையற்றவராக
ஆக்கிவிடுகிறது.
மேலும்
தடையற்ற
ஆத்மாக்களுக்குத்
தான்
பூஜையும்
மகிமையும் செய்யபடுகிறது.
மிக
அதிகமாக
மகிமையை
யார்
செய்கிறார்?
ஒருவேளை,
ஒரு
குழந்தையையாவது
மகிமை செய்ய
வில்லையென்றால்,
அவர்
கோபப்
படுவார்,
எனவே
பாபா
ஒவ்வொரு
குழந்தையையும்
மகிமை செய்கிறார்,
ஏனென்றால்,
ஒவ்வொரு
குழந்தையும்
தனது
அதிகாரம்
என்று
நினைக்கிறார்.
அதிகாரத்தின் காரணமாக
ஒவ்வொருவரும்
தன்னுடைய
உரிமை
என்று
நினைக்கிறார்.
தந்தையின்
வேகம்
அந்தமாதிரியானது,
அந்தமாதிரியான
வேகம்,
வேறு
யாருக்கும்
இருக்க
முடியாது.
ஒரு
வினாடியில்
அநேகர்களை
திருப்திப் படுத்த
முடியும்,
அப்படி
தந்தை
குழந்தைகளோடு
பிஸியாக
இருக்கிறார்,
மேலும்
குழந்தைகள்
தந்தையுடன் பிஸியாக
இருக்கிறார்கள்.
தந்தையின்
தொழிலே
குழந்தைகளுக்காகத்
தான்.
அழியாத
இரத்தினமாக
ஆகியிருக்கிறீர்கள்,
அதற்கான
வாழ்த்துக்கள்.
10
வருடம்
அல்லது
15
வருடங்களாக
மாயாவை
வென்றவராக
இருக்கிறீர்கள்
-
அதற்கான
வாழ்த்துக்கள்!
இன்னும்
வரும்
நாட்களிலும் முழு
சங்கமயுகமே
வென்றவராகவே
இருங்கள்.
நீங்கள்
அனைவருமே
உறுதியானவர்கள்.
எனவே
பாப்தாதா அந்தமாதிரியான
உறுதியான,
அசையாத
குழந்தைகளை
பார்த்து
குஷியடைகிறார்.
ஒவ்வொரு
குழந்தையின் விசேஷத்
தன்மை,
அவரை
தந்தையின்
குழந்தையாக
ஆக்கியது.
யாரிடம்
விசேஷத்
தன்மையே
இல்லை என்று
அந்தமாதிரி
ஒரு
குழந்தை
கூட
கிடையாது..
எனவே
பாப்தாதா
ஒவ்வொரு
குழந்தையின்
விசேஷத் தன்மையைப்
பார்த்து,
எப்பொழுதும்
குஷியடைகிறார்.
இல்லையென்றால்,
கோடியில்
சிலராக,
அந்த
சிலரிலும் சிலராக,
நீங்கள்
மட்டும்
ஏன்
ஆகியிருக்கிறீர்கள்.,
அவசியம்
ஏதோ
விசேஷம்
இருக்கிறது.
சிலர்
ஒருவிதமான இரத்தினங்கள்,
சிலர்
வேறுவிதமான
இரத்தினங்கள்,
பலவிதமான
விசேஷங்களில்
நவரத்தினங்கள்
வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
விசேஷமாக
ஒவ்வொரு
இரத்தினமும்
விக்ன
விநாசக்
ஆக
இருக்கும்,
அந்தமாதிரி
நீங்கள் அனைவருமே
விக்ன
விநாசக்.
வெளிநாட்டு
சகோதர,
சகோதரிகளின்
அன்பு
நினைவு
மற்றும்
கடிதங்களுக்கான
பதில்
கூறிக்
கொண்டே:-அனைத்து
அன்பான
குழந்தைகளின்
அன்பைப்
பெற்றுக்
கொண்டோம்.
அனைவரது
உள்ளத்தின்
ஊக்கம் மற்றும்
உற்சாகம்
தந்தையிடம்
வந்து
சேருகிறது.
மேலும்
எப்படி
ஊக்கம்
மற்றும்
உற்சாகத்தோடு
முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்
-
எப்பொழுதும்
முன்னேறிக்
கொண்டிருக்கும்
குழந்தைகளின்
மீது
பாப்தாதாவின்
மற்றும் குடும்பத்தின்
விசேஷ
ஆசிர்வாதங்கள்
இருக்கிறது.
இதே
ஆசீர்வாதங்கள்
மூலமாக
முன்னேறிக் கொண்டேயிருப்பார்கள்.
மேலும்
மற்றவர்களையும்
முன்னேற்றிக்
கொண்டேயிருப்பார்கள்.
சேவையில்
நன்றாக பந்தயம்
செய்து
கொண்டு
இருக்கிறீர்கள்.
எப்படி
ஊக்கம்
மற்றும்
உற்சாகத்தில்
பந்தயம்
செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அதேபோல்
அழியாத
முன்னேற்றத்தையும்
அடைந்து
கொண்டேயிருங்கள்.
பிறகு
நல்ல வரிசை
எண்ணையும்
வரும்
நாட்களில்
பெற்றுவிடுவீர்கள்.
அனைவரும்
தன்னுடைய
பெயர்,
விசேஷத்தோடு நினைவை
ஏற்றுக்
கொள்ளுங்கள்.
இப்பொழுதும்
கூட
அனைத்து
குழந்தைகளும்
அவரவர்களின்
விசேஷத்தோடு பாப்தாதாவின்
எதிரில்
இருக்கிறார்கள்.
எனவே
பல
கோடி
மடங்கு
அன்பு
நினைவுகள்.
தாதி
சந்திரமணி
அவர்கள்
பஞ்சாப்
செல்வதற்காக
விடைபெறுகிறார்கள்.:
அனைத்து
குழந்தைகளுக்கும் அன்பு
நினைவுகள்
கொடுங்கள்.
மேலும்
பறக்கும்
கலையில்
செல்ல
வேண்டுமென்ற
விசேஷ
செய்தியையும் கூறுங்கள்.
மற்றவர்களைப்
பறக்க
வைப்பதற்காக
சக்திசாலியான நிலையையும்
கடைப்பிடியுங்கள்.
எப்படிபட்ட சூழ்நிலையிலும்
பறக்கும்
கலை
மூலமாக
ஆன்மீக
அத்மாக்களைப்
பறக்க
வைக்கும்
அனுபவத்தை
செய்விக்க முடியும்.
எனவே
அனைவருக்கும்
நினைவு
மற்றும்
சேவை
எப்பொழுதும்
சேர்ந்தே
இருக்கட்டும்.
விசேஷமாக இந்த
நினைவை
ஊட்டுங்கள்.
மற்றபடி
அனைவருமே
செல்லக்
குழந்தைகள்.
நல்ல
விசேஷம்
நிறைந்த ஆத்மாக்கள்.
அனைவரும்
அவரவர்களின்
விசேஷத்தோடு
அன்பு
நினைவுகளை
ஏற்றுக்
கொள்ளுங்கள்.
நல்லது.
இரட்டை
பங்கை
செய்து
கொண்டிருக்கிறீர்கள்.
எல்லைக்கு
அப்பாற்பட்ட
ஆத்மாக்களின்
அடையாளமே இது
தான்
-
எந்த
நேரம்,
எங்கு
அவசியமாக
இருக்கிறதோ,
அங்கு
சென்று
அடைவது.
நல்லது.
வரதானம்:
சேவையின்
தடைகளை
முன்னேற்றத்திற்கான
படி
என்று
நினைத்து
முன்னேறிச் செல்லக்
கூடிய
தடையற்ற
உண்மையான
சேவாதாரி
ஆகுக.
சேவை
என்பது
பிராமண
வாழ்க்கையை
எப்பொழுதும்
தடையற்றதாக
ஆக்குவதற்கான
சாதனமும்
தான்.
மேலும்
சேவையில்
தான்
தடைகளின்
கேள்விக்குறி
அதிகமாக
வருகிறது.
தடையற்ற
சேவாதாரியை
உண்மையான சேவாதாரி
என்று
கூறுவோம்.
தடை
வருவதும்
கூட
நாடகத்தில்
அடங்கியிருக்கிறது.
கண்டிப்பாக
வரும்,
மேலும்
வந்து
கொண்டேயிருக்கும்.
ஏனென்றால்
இந்த
தடை
மற்றும்
பரீட்சை
தான்
அனுபவி
ஆக்குகிறது.
இதை
தடையென்று
புரிந்து
கொள்ளாமல்,
அனுபவத்தின்
முன்னேற்றம்
ஆகிக்
கொண்டிருக்கிறது
என்ற பாவனையோடு
பார்த்தீர்கள்
என்றால்,
முன்னேற்றத்தின்
படி
அனுபவம்
ஆகும்,
மேலும்
முன்னேறிக் கொண்டேயிருப்பீர்கள்.
சுலோகன்:
விக்ன
ரூபமாக
ஆகாமல்
விக்ன
விநாசக்
ஆகுங்கள்.
ஓம்சாந்தி