27.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! அனைத்து ஆத்மாக்களையும் கர்ம பந்தனங்களிலிருந்து விடுவிக்கக் கூடிய விடுதலை (மீட்பு படை) வீரர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் கர்மபந்தனங்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது.

 

கேள்வி:

எந்த பயிற்சி செய்து கொண்டே இருந்தால் ஆத்மா மிக மிக சக்திசாலியாக ஆகிவிடும்?

 

பதில்:

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சரீரத்திலிருந்து விடுபட்டிருக்கும் பயிற்சி செய்யுங்கள். விடுபடுவதன் மூலம் ஆத்மாவிற்குள் சக்திகள் திரும்பி வந்துவிடும், பலம் நிறைந்துவிடும். நீங்கள் குப்தமான போர் வீரர்களாக இருக்கிறீர்கள். தயவு செய்து கவனமாக இருங்கள் (ஆற்ற்ங்ய்ற்ண்ர்ய் டப்ங்ஹள்ங்) அதாவது ஒரு தந்தையின் நினைவில் இருங்கள், அசரீரி ஆகிவிடுங்கள் என்ற கட்டளை உங்களுக்கு கிடைக்கிறது.

 

ஓம் சாந்தி.

ஓம்சாந்தி என்பதன் பொருளை தந்தை மிக நல்ல முறையில் புரிய வைத்திருக்கின்றார். எங்கு போர் வீரர்கள் இருக்கிறார்களோ அங்கு கவனமாக (ஆற்ற்ங்ய்ற்ண்ர்ய்) இருங்கள் என்று கூறுவர். அவர்களுக்கு கவனத்துடன் இருப்பது என்றால் அமைதியாக இருப்பது என்பதாகும். இங்கும் தந்தை உங்களுக்கு கூறுகின்றார் - கவனமாக இருங்கள் அதாவது ஒரு தந்தையின் நினைவில் இருங்கள். வாயினால் கூற வேண்டியிருக்கிறது, இல்லையெனில் உண்மையில் பேசுவதிலிருந்தும் தூர விலகி இருக்க வேண்டும். கவனத்துடன் அதாவது தந்தையின் நினைவில் இருக்கிறீர்களா? தந்தையின் கட்டளை அதாவது ஸ்ரீமத் கிடைக்கிறது, நீங்கள் ஆத்மா வையும் புரிந்திருக்கிறீர்கள், தந்தையையும் புரிந்திருக்கிறீர்கள் எனில் தந்தையை நினைவு செய்யாமல் விகர்மாஜீத் அதாவது சதோ பிரதானம், தூய்மையாக ஆக முடியாது. மூல விசயமே இது தான், தந்தை கூறுகின்றார் - இனிமையிலும் இனிய குழந்தைகளே! தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள். இவையனைத்தும் இந்த நேரத்திற்கான விசயங்களாகும், இதையே அவர்கள் வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டுவிட்டனர். அவர்களும் இராணுவ வீரர்கள், நீங்களும் இராணுவ வீரர்களாக இருக்கிறீர்கள். குப்தமான (மய்க்ங்ழ் ஞ்ழ்ர்ன்ய்க்) இராணுவ வீரர்களும் இருப்பர் அல்லவா! மறைந்து இருப்பர். நீங்களும் குப்தமாக இருக்கிறீர்கள். நீங்களும் குப்தமாக (மறைமுக வீரர்களாக) ஆகிவிடுகிறீர்கள் அதாவது தந்தையின் நினைவில் ஐக்கியமாகி (முழ்கி) விடுகிறீர்கள். இது தான் குப்தம் என்று கூறப்படுகிறது. யாரும் அறிந்து கொள்ள முடியாது, ஏனெனில் நீங்கள் குப்தமாக இருக்கிறீர்கள் அல்லவா! உங்களது நினைவு யாத்திரையும் குப்தமாக இருக்கிறது, தந்தை கூறுவது என்னவெனில் என்னை மட்டும் நினைவு செய்தால் போதும், ஏனெனில் நினைவின் மூலம் தான் ஆதரவற்ற இவர்களுக்கு நன்மை ஏற்படும் என்பதை தந்தை அறிவார். இப்பொழுது உங்களை ஆதரவற்றவர்கள் (இரக்கத்திற்குரியவர்கள்) என்று கூறுவார் அல்லவா! சொர்க்கத்தில் ஆதரவற்றவர்கள் இருக்கமாட்டார்கள். யார் ஏதாவது பந்தனங்களில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் தான் ஆதரவற்றவர்கள் என்று கூறப்படுகின்றனர். இதையும் நீங்கள் புரிந்திருக்கிறீர்கள், நீங்கள் கலங்கரை விளக்கு என்றும் கூறப்படுகிறீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். தந்தையும் கலங்கரை விளக்கு என்று கூறப்படுகின்றார். ஒரு கண்ணில் சாந்திதாமம், மற்றொரு கண்ணில் சுகதாமம் வையுங்கள் என்று தந்தை அடிக்கடி புரிய வைக்கின்றார். நீங்கள் கலங்கரை விளக்கம் போன்று இருக்கிறீர்கள். எழுந்தாலும், அமர்ந்தாலும், நடந்தாலும் நீங்கள் கலங்கரை விளக்காக இருங்கள். அனைவருக்கும் சாந்திதாமம், சுகதாமத்தின் வழி கூறிக் கொண்டே இருங்கள். இந்த துக்கதாமத்தில் அனைவரின் படகும் சிக்கிக் கொண்டு இருக்கிறது. அதனால் தான் எனது படகை கரையேற்றுங்கள் என்று கூறுகின்றனர். படகோட்டியே! அனைவரின் படகும் சிக்கிக் கொண்டிருக்கிறது, அவைகளை யார் மீட்பது? அதற்கு எந்த மீட்கக்கூடிய வீரர்களும் கிடையாது. இவ்வாறே பெயர் வைத்துவிட்டனர். உண்மையில் நீங்கள் தான் மீட்கக்கூடிய வீரர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் தான் ஒவ்வொருவரையும் விடுவிக்கிறீர்கள். அனைவரும் 5 விகாரங்கள் என்ற வலையில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர், அதனால் தான் எங்களை கரையேற்று கிறீர்கள் என்று கூறுகின்றனர். ஆக தந்தை கூறுகின்றார் இந்த நினைவு யாத்திரையின் மூலம் நீங்கள் (விஷக் கடலை) கடந்துவிடுவீர்கள். இப்பொழுது அனைவரும் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். தந்தையை தோட்டக்காரன் என்றும் கூறுகின்றோம். அனைத்து விசயங்களும் இந்த நேரத்திற்கான விசயங்களாகும். நீங்கள் மலர்களாக ஆக வேண்டும். இப்பொழுது அனைவரும் முட்களாக இருக்கிறீர்கள். ஏனெனில் இம்சை தருபவர்களாக இருக்கிறீர்கள். இப்போது அஹிம்சையாளராக வேண்டும் பாவனமாக ஆக வேண்டும். தர்ம ஸ்தாபனை செய்ய வருபவர்கள் தூய்மையான ஆத்மாக்களாகவே வருகின்றனர். அவர்கள் அசுத்தமானவர்களாக இருக்கவே முடியாது. முதன் முதலில் வருகின்றபொழுது தூய்மையாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களது ஆத்மாவோ அல்லது சரீரமோ துக்கம் அடைய முடியாது. ஏனெனில் அவர்களிடத்தில் எந்த பாவமும் கிடையாது. நாம் தூய்மையாக இருந்தபொழுது எந்த பாவமும் செய்வது கிடையாது, மற்றவர்களும் செய்வது கிடையாது. ஒவ்வொரு விசயத்தையும் சிந்தனை செய்ய வேண்டும். தர்மம் ஸ்தாபனை செய்வதற்காக அங்கிருந்து ஆத்மாக்கள் வருகின்றன. பிறகு அவர்களது இராஜ்யமும் நடைபெறுகிறது. சீக்கிய தர்மத்தினரின் இராஜ்யமும் இருக்கிறது. சந்நியாசிகளின் இராஜ்யம் நடைபெறுவது கிடையாது. இராஜாக்களாக ஆவது கிடையாது. சீக்கிய தர்மத்தில் மகாராஜா போன்றவர்கள் இருக்கின்றனர், அவர்கள் தர்ம ஸ்தாபனை செய்ய வருகின்றபொழுது புது ஆத்மாவாக வருகின்றனர். கிறிஸ்து வந்து கிறிஸ்துவ தர்மத்தை ஸ்தாபனை செய்தார். புத்தர் பௌத்த தர்மம், இப்ராஹிம் இஸ்லாமியம் - அனைவரின் பெயரிலும் தர்மம் உருவாகிறது. தேவி தேவதா தர்மத்தின் பெயர் என்பதே கிடையாது. நிராகார தந்தை வந்து தான் தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார். அவர் தேகதாரி கிடையாது. மற்ற தர்மத்தை ஸ்தாபனை செய்பவர்களுக்கு தேகத்தின் பெயர் இருக்கிறது, இவர் தேகதாரி கிடையாது. புது உலகில் தான் இராஜ்யம் நடைபெறுகிறது. ஆக தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! தன்னை ஆன்மீக இராணுவ படைவீரன் என்று அவசியம் புரிந்து கொள்ளுங்கள். அந்த இராணுவத்தின் சேனாதிபதி (கமாண்டர்) வருகின்றபொழுது நேராக நிற்க (ஆற்ற்ங்ய்ற்ண்ர்ய்) என்று கூறியதும் உடனேயே நேராக நின்றுவிடுவர். உலகத்தார் அவரவர்களது குருக்களை நினைவு செய்வர் அல்லது அமைதியாக இருப்பர். ஆனால் அது பொய்யான அமைதியாக ஆகிவிடுகிறது. நாம் ஆத்மாக்கள், நமது தர்மம் அமைதி என்பதை நீங்கள் அறிவீர்கள். பிறகு யாரை நினைவு செய்ய வேண்டும்! இப்பொழுது உங்களுக்கு ஞானம் கிடைக்கிறது. ஞான சகிதமாக நினைவில் இருப்பதன் மூலம் பாவங்கள் அழியும். இந்த ஞானம் வேறு யாரிடத்திலும் கிடையாது. நாம் ஆத்மாக்கள், அமைதி சொரூபமானவர்கள் என்பதை மனிதர்கள் அறியவில்லை. நாம் சரீரத்திலிருந்து விடுபட்டு அமர வேண்டும். இங்கு உங்களுக்கு அந்த பலம் கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையின் நினைவில் அமர முடியும். தன்னை எவ்வாறு ஆத்மா என்று புரிந்து, விடுபட்டு அமர வேண்டும் என்பதை தந்தை புரிய வைக்கின்றார். ஆத்மாக்களாகிய நாம் இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் அங்கு வசிக்கக் கூடியவர்கள். இவ்வளவு காலம் வீட்டை மறந்துவிட்டோம், நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை வேறு யாரும் நினைப்பது கிடையாது. தூய்மை இல்லாத ஆத்மாக்கள் திரும்பிச் செல்ல முடியாது. யாரை நினைக்க வேண்டும் என்று புரிய வைப்பவர் களும் கிடையாது. ஒரே ஒருவரை தான் நினைவு செய்ய வேண்டும் என்று தந்தை புரிய வைக்கின்றார். வேறு யாரையாவது நினைவு செய்வதனால் என்ன பலன் இருக்கிறது? பக்தி மார்க்கத்தில் சிவ சிவா என்று கூறிக் கொண்டே இருக்கின்றனர், இதனால் என்ன பலன் என்பது யாருக்கும் தெரியாது. சிவனை நினைவு செய்வதால் பாவங்கள் அழிந்துவிடும் என்பது யாருக்கும் தெரியாது. ஓசைகள் கேட்க முடிகின்றது. கண்டிப்பாக ஓசைகள் இருக்கவே செய்யும். இது போன்ற விசயங்களினால் எந்த பலனும் கிடையாது. அனைத்து குருக்களிடத்திலும் பாபா அனுபவியாக இருக்கின்றார் அல்லவா!

 

தந்தை கூறியிருக்கின்றார் அல்லவா - ஹே அர்ஜுன், இவை அனைத்தையும் விட்டு விடு ...... சத்குரு கிடைத்து விட்டார் எனும் பொழுது இது போன்றவைகள் அவசியம் கிடையாது. சத்குரு கரை சேர்ப்பிக்கின்றார். நான் உங்களை அசுர உலகிலிருந்து விடுவித்து அக்கரைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். விஷக்கடலை கடந்து செல்ல வேண்டும். இது போன்ற விசயங்களைப் புரிய வைக்க வேண்டும். படகோட்டி படகை ஓட்டுபவராக இருப்பார், ஆனால் புரிய வைப்பதற்காகத் தான் இந்த பெயர் ஏற்பட்டிருக்கிறது. இவர் பிராணேஸ்வர் பாபா என்று கூறப்படுகின்றார், அதாவது உயிர் தானம் கொடுக்கும் பாபா, அவர் அமரர்களாக ஆக்கிவிடுகின்றார். பிராணன் என்பது ஆத்மாவை கூறப்படுகிறது. ஆத்மா நீங்கி விட்டால் பிராணன் போய் விட்டது என்று கூறுவர். பிறகு சரீரத்தை வைத்துக் கொள்ளவும் விடுவதில்லை. ஆத்மா இருக்கிறது எனில் சரீரமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆத்மா இல்லாத சரீரம் என்பது துர்நாற்றத்தை ஏற்படுத்தி விடும். பிறகு அதை வைத்து என்ன செய்வீர்கள்! மிருகங்களும் இவ்வாறு செய்யாது. ஒரே ஒரு குரங்கு மட்டும் தான் தனது குழந்தை இறந்த பிறகு துர்நாற்றம் வீசினாலும் கூட அந்த பிணத்தை விடவே விடாது. தொங்கிக் கொண்டே இருக்கும். அது மிருகம், நீங்கள் மனிதர்கள் அல்லவா! சரீரம் விட்டு விட்டால் விரைவில் அதை வெளியேற்றி விடுங்கள் என்று கூறுவர். சொர்க்கம் சென்று விட்டதாக மனிதர்கள் கூறுவர். பிணத்தை எடுத்துச் செல்லும் பொழுது முதலில் அதன் பாதத்தை மயானத்தின் பக்கம் வைப்பர், பிறகு மயானத்திற்குள் நுழைகின்ற பொழுது, பூஜைகள் செய்த பிறகு இப்பொழுது சொர்க்கத்திற்கு சென்று கொண்டிருப்பதாக நினைப்பர். பிறகு அதன் முகத்தை மயானத்தின் பக்கம் வைத்து விடுவர். நீங்கள் கிருஷ்ணனரையும் மிகச் சரியாக காண்பித்திருக்கிறீர்கள், நரகத்தை எட்டி உதைத்துக் கொண்டிருக்கிறார். கிருஷ்ணரின் சரீரம் இது கிடையாது, அவரது பெயர், உருவம் மாறுகிறது. எவ்வளவு விசயங்களை தந்தை புரிய வைத்தாலும் கூட மன்மனாபவ என்று கூறுகின்றார்.

 

இங்கு வந்து அமர்கின்ற பொழுது கவனம் (ஆற்ற்ங்ய்ற்ண்ர்ய்) தேவை. புத்தி தந்தையிடத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். உங்களது இந்த கவனம் சதா காலத்திற்கும் ஆனது. எதுவரை வாழ்வீர்களோ அதுவரை தந்தையை நினைவு செய்ய வேண்டும். நினைவின் மூலம் தான் பல பிறவிகளின் பாவங்கள் அழிகிறது. நினைவு செய்யவில்லையெனில் பாவங்களும் அழியாது. தந்தையை நினைவு செய்ய வேண்டும், நினைவின் பொழுது ஒருபொழுதும் கண்களை மூடக் கூடாது. சந்நியாசிகள் கண்களை மூடிக் கொண்டு அமர்வர். சிலர் பெண்களின் முகத்தை பார்க்கவே மாட்டார்கள். துணியினால் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருப்பர். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் பொழுது படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடையின் சுயதரிசன சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் கலங்கரை விளக்குகள் அல்லவா! இது துக்கதாமம் ஆகும். ஒரு கண்ணில் துக்கதாமம், மற்றொரு கண்ணில் சுகதாமம். எழுந்தாலும், அமர்ந்தாலும் தன்னை கலங்கரை விளக்கு என்று நினையுங்கள். பாபா விதவிதமான முறையில் புரிய வைக்கின்றார். நீங்கள் தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறீர்கள். கலங்கரை விளக்கு ஆவதன் மூலம் தனக்கும் நன்மை செய்து கொள்கிறீர்கள். தந்தையை அவசியம் நினைவு செய்ய வேண்டும், செல்லும் வழியில் யாரையாவது சந்தித்தால் அவர்களுக்கு கூற வேண்டும். அறிமுகம் ஆனவர்கள் பலரை சந்திக்கின்றீர்கள், அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது இராம் இராம் என்று சொல்வர், இது துக்கதாமம், அது சாந்திதாமம் மற்றும் சுகதாமம் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று அவர்களிடம் கேளுங்கள். நீங்கள் சாந்திதாமம், சுகதாமம் செல்ல விரும்புகிறீர்களா? இந்த 3 சித்திரங்களைப் பற்றி மற்றவர்களுக்குப் புரிய வைப்பது மிகவும் எளிதாகும். உங்களுக்கு குறிப்பாக உணர்த்துகின்றார். கலங்கரை விளக்கும் கூட குறிப்பால் உணர்த்துகிறது. இந்த படகு இராவணனின் சிறையில் மாட்டிக் கொண்டு இருக்கிறது. மனிதர்கள் மனிதர்களை விடுவிக்க முடியாது. அவை அனைத்தும் செயற்கையான எல்லைக்குட்பட்ட விசயங்களாகும். இது எல்லையற்ற விசயமாகும். அது சமூக சேவையும் கிடையாது. உண்மையான சேவை இது தான் அதாவது அனைவரின் படகையும் கரை சேர்ப்பது. மனிதர்களுக்கு என்ன சேவை செய்ய வேண்டும் என்பது உங்களது புத்தியில் இருக்கிறது.

 

முக்திதாமம் செல்ல, தந்தையை சந்திப்பதற்காக நீங்கள் குருக்களிடம் செல்கிறீர்கள், ஆனால் யாரும் சந்திப்பது கிடையாது என்பதை முதலில் கூறுங்கள். சந்திப்பதற்கான வழி தந்தைதான் கூறுகின்றார். இந்த சாஸ்திரங்கள் போன்றவைகளை படிப்பதன் மூலம் பகவானை அடைய முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆறுதலுக்கு பகவான் ஏதாவது ரூபத்தில் கிடைப்பார். எப்பொழுது கிடைப்பார் என்பது போன்ற அனைத்தையும் தந்தை உங்களுக்கு புரிய வைத்திருக்கின்றார். ஒருவரை நினைவு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சித்திரங்களில் காண்பித்திருக்கிறீர்கள். தர்ம ஸ்தாபகர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் இவ்வாறு தான் சைகை கொடுக்கின்றனர், ஏனெனில் நீங்கள் முறையை அறிவுறத்திருப்பதால் அவர்களும் இவ்வாறு சைகை கொடுக்கின்றனர். எஜமானை ஜெபியுங்கள், அந்த தந்தை சத்குருவாக இருக்கின்றார். மற்ற அனைவரும் பல விதமான வழிமுறைகளை கொடுப்பவர்களாக இருக்கின்றனர். அவர்கள் குருக்கள் என்று கூறப்படுகின்றனர். அசரீரி ஆவதற்கான வழியை யாரும் அறியவில்லை. சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று நீங்கள் கூறுவீர்கள். அவர்கள் சிவனின் கோயில்களுக்குச் செல்கின்றனர் எனில் சிவனை பாபா (அப்பா) என்று கூறும் பழக்கம் எப்பொழுதும் இருக்கிறது. வேறு யாரையும் பாபா என்று கூறுவது கிடையாது. ஆனால் அவர் (லௌகீக தந்தை) நிராகாரமாக கிடையாது. சரீரதாரி ஆவார். சிவன் நிராகாராக இருக்கின்றார், உண்மையான பாபா, அவர் அனைவருக்கும் பாபா (தந்தை) ஆவார். அனைத்து ஆத்மாக்களும் அசரீரியாக இருக்கின்றன.

 

குழந்தைகளாகிய நீங்கள் இங்கு அமரும் பொழுது இதே சிந்தனையுடன் அமருங்கள் - நாம் எப்படியெல்லாம் (வலையில்) சிக்கிக் கொண்டிருந்தோம்? என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது தந்தை வந்து வழி கூறியிருக்கின்றார். மற்ற அனைவரும் சிக்கிக் கொண்டிருக்கின்றனர், விடுபடுவது கிடையாது. தண்டனைகளை அடைந்து பிறகு அனைவரும் விடுபட்டு விடுவர். குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார், தண்டனை அடைந்து பதவியை குறைத்துக் கொள்ளக் கூடாது. அதிக தண்டனை அடைகிறீர்கள் எனில் பதவியும் குறைந்து விடும், பிராப்தியும் குறைவாக கிடைக்கும். குறைந்த தண்டனை எனில் பிராப்தி நன்றாக கிடைக்கும். இது முட்கள் நிறைந்த காடாகும். அனைவரும் ஒருவருக்கொருவர் முட்கள் போன்று இருக்கின்றனர். சொர்க்கம் அல்லாவின் பூந்தோட்டம் என்று கூறப்படுகிறது. கிறிஸ்தவர்களும் சொர்க்கம் இருந்ததாக கூறுகின்றனர். சில நேரங்களில் சாட்சாத்காரமும் செய்கின்றனர், இந்த தர்மத்தைச் சார்ந்தவர்களாக இருப்பின் மீண்டும் தனது தர்மத்திற்கு வந்து விடுவர். மற்றவர்கள் இங்கு என்ன இருக்கின்றன? என்று பார்க்கின்றனர். பார்ப்பதனால் யாரும் சென்று விட முடியாது. தந்தையை அறிந்து கொள்ள வேண்டும் மற்றும் ஞானம் பெற வேண்டும். அனைவரும் வந்து விட முடியாது. அங்கு தேவதைகள் மிகக் குறைவாக இருப்பர். இப்பொழுது இவ்வளவு இந்துக்கள் இருக்கின்றனர். உண்மையில் தேவதைகளாக இருந்தனர் அல்லவா! ஆனால் அவர்கள் தூய்மையாக இருந்தனர், இவர்கள் தூய்மையின்றி இருக்கின்றனர். தூய்மை இல்லாதவர்களை தேவதைகள் என்று கூறுவது அழகல்ல. இந்த ஒரே ஒரு தர்மத்தில் தான் தர்மமும் கீழானதாக ஆகிவிட்டது, செயல்களும் தரம் குறைந்துவிட்டது என்று கூறப்படுகிறது. ஆதி சநாதன இந்து தர்மம் என்று கூறிவிட்டனர். தேவதா தர்மத்தின் பெயர் இடம் பெறவேயில்லை.

 

குழந்தைகளாகிய நமக்கு மிக இனிய தந்தையாக இருக்கின்றார், அவர் எப்படிப்பட்டவர்களை எப்படி ஆக்கிவிடுகின்றார்! தந்தை எவ்வாறு வருகின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தேவதைகளின் பாதங்கள் பழைய தமோ பிரதான சிருஷ்டியில் படாது எனும் பொழுது பிறகு தந்தை எப்படி வருவார்? தந்தை நிராகாரமாக இருக்கின்றார், அவருக்கு தனக்கென்று சரீரம் கிடையாது. அதனால் தான் இவரிடத்தில் பிரவேசம் செய்கின்றார்.

 

இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஈஸ்வரீய உலகில் அமர்ந்திருக்கிறீர்கள், அவர்கள் அனைவரும் அசுர உலகில் இருக்கின்றனர். இது மிகவும் சிறிய சங்கமயுகமாகும். நாம் தேவதா உலகிலும் கிடையாது, அசுர உலகிலும் கிடையாது என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். நாம் ஈஸ்வரீய உலகில் இருக்கிறோம். நம்மை வீட்டிற்கு அழைத்துச் செல்ல தந்தை வந்திருக்கின்றார். அது என்னுடைய வீடு என்று தந்தை கூறுகின்றார். உங்களை கவனிப்பதற்காக நான் எனது வீட்டை விட்டு வந்திருக்கின்றேன். பாரதம் சுகதாமம் ஆகிவிடும் பொழுது பிறகு நான் வருவது கிடையாது. நான் உலகிற்கு எஜமானராக ஆவது கிடையாது, நீங்கள் ஆகிறீர்கள். நான் பிரம்மாண்டத்திற்கு எஜமானாக இருக்கிறேன். பிரம்மாண்டத்திலிருந்து அனைவரும் வருகின்றனர். யார் வர வேண்டியிருக்கிறதோ அவர்கள் இப்பொழுதும் எஜமானர்களாக ஆகி அங்கு அமர்ந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் வந்து உலகிற்கு எஜமானர்களாக ஆவது கிடையாது. பல விசயங்களை புரிய வைக்கின்றார். சில மாணவர்கள் மிகவும் நல்லவர்களாக இருக்கின்ற பொழுது உதவித்தொகை (நஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்) அடைகின்றனர். நான் தூய்மையாக ஆவேன் என்று இங்கு இருக்கும் பொழுது கூறுகின்றனர், பிறகு சென்று அசுத்தம் ஆகிவிடுகின்றனர், ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு பக்குவமற்றவர்களை அழைத்து வர வேண்டாம். சிந்தித்து அழைத்து வர வேண்டியது நிமித்தமானவர்களின் காரியமாகும். ஆத்மா தான் சரீரத்தை தாரணை செய்து நடிப்பு நடிக்கிறது, அதற்கு அழிவற்ற பாகம் கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) கலங்கரை விளக்காகி அனைவருக்கும் சாந்திதாமம், சுகதாமத்தின் வழி கூற வேண்டும். அனைவரின் படகையும் துக்கதாமத்திலிருந்து விடுவிக்கும் சேவை செய்ய வேண்டும். தனக்கும் நன்மை செய்து கொள்ள வேண்டும்.

 

2) தனது சாந்தி சொரூப ஸ்திதியில் நிலைத்திருந்து சரீரத்திலிருந்து விடுபட்டிருக்கக் கூடிய பயிற்சி செய்ய வேண்டும். நினைவின் பொழுது கண்களை திறந்து கொண்டு அமர வேண்டும், புத்தியில் படைப்பவர் மற்றும் படைப்பின் சிந்தனை (நினைவு) செய்ய வேண்டும்.

 

வரதானம்:

இந்த அலௌகீக வாழ்க்கையில் சம்மந்தத்தின் சக்தியின் மூலம் அழிவற்ற அன்பு மற்றும் உதவியை பலனாக அடையக் கூடிய சிரேஷ்ட ஆத்மா ஆகுக.

 

இந்த அலௌகீக வாழ்க்கையில் சம்மந்தத்தின் சக்தி குழந்தைகளாகிய உங்களுக்கு இரண்டு ரூபத்தில் பலனாக கிடைத்திருக்கிறது. ஒன்று தந்தையிடம் சர்வ சம்மந்தம், மற்றொன்று தெய்வீக குடும்பத்தின் சம்பந்தம். இந்த சம்மந்தங்களின் மூலம் சதா சுய நலமற்ற அன்பு, அழிவற்ற அன்பு மற்றும் உதவி சதா பலனாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. எனவே உங்களிடம் சம்மந்தத்தின் சக்தியும் இருக்கிறது. இவ்வாறு சிரேஷ்ட அலௌகீக வாழ்க்கையுடைய சக்தி நிறைந்த வரதானி ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். ஆகையால் புகார் செய்யக் கூடியவர்கள் அல்ல, சதா திருப்தியாக இருக்கக் கூடியவர்களாக ஆகுங்கள்.

 

சுலோகன்:

எந்த ஒரு திட்டத்தையும் தேகத்திலிருந்து விடுபட்டு (அசரீரி நிலையில்) சாட்சியாக இருந்து சிந்தியுங்கள் மற்றும் விநாடியில் (சாதாரண) ஸ்திதியை உருவாக்கிக் கொண்டே செல்லுங்கள்.

 

ஓம்சாந்தி