12.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இங்கு படிப்பு படிப்பதற்காக வந்திருக்கிறீர்கள், நீங்கள் கண்களை மூட வேண்டிய அவசியமில்லை, கல்வி என்பது கண்களைத் திறந்து கொண்டு தான் கற்கப்படுகிறது.

 

கேள்வி:

பக்தி மார்க்கத்தில் பக்தர்களிடம் இருக்கும் எந்த பழக்கம் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கக் கூடாது?

 

பதில்:

பக்தியில் எந்த தேவதைகளின் சிலைகளுக்கு முன் சென்று எதையாவது கேட்டுக் கொண்டே இருப்பர். அவர்களுக்கு கேட்பதே பழக்கமாகிவிட்டது. லட்சுமி முன் சென்று செல்வம் கேட்பர், ஆனால் கிடைப்பது எதுவும் கிடையாது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களிடம் இந்த பழக்கம் கிடையாது. நீங்கள் தந்தையின் ஆஸ்திக்கு அதிகாரிகளாக இருக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் விசித்திரமான (தேகமற்ற) தந்தையை பார்த்துக் கொண்டே இருங்கள். இதில் தான் உங்களுக்கு உண்மையான வருமானம் இருக்கிறது.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் இது பாடசாலையாகும். ஆனால் இங்கு எந்த சித்திரம் அதாவது தேகதாரிகளையும் பார்க்கக் கூடாது. இங்கு பார்த்தாலும் புத்தி தேகமற்றவரிடம் சென்று விட வேண்டும். பள்ளியில் குழந்தைகளின் கவனம் எப்பொழுதும் ஆசிரியரின் மீது தான் இருக்கும். ஏனெனில் அவர் கற்பிக்கின்றார் எனில், அவசியம் அவர் கூறுவதைக் கேட்க வேண்டும், பிறகு திரும்பி பதில் கூற வேண்டும். ஆசிரியர் கேள்வி கேட்கின்றார் எனில், நான் பதில் கூறுகிறேன் என்று கூற வேண்டும் அல்லவா! இங்கு இது விசித்திரமான பள்ளிக் கூடமாகும். ஏனெனில் விசித்திரமான (புதிய, தனிப்பட்ட) படிப்பாகும். கற்பிப்பவருக்கும் தேகம் கிடையாது. ஆக படிக்கின்ற பொழுது கண்களைத் திறந்து கொண்டு அமர வேண்டும் அல்லவா! பள்ளியில் ஆசிரியரின் முன் கண்களை மூடிக் கொண்டு அமருவார்களா என்ன? பக்தியில் கண்களை மூடிக் கொண்டு மாலை ஜபிக்கும் பழக்கம் இருக்கிறது .... சாதுக்களும் கண்களை மூடிக் கொண்டு அமர்கின்றனர். அவர்கள் பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பது கிடையாது, பார்த்தால் மனம் சஞ்சலம் ஆகிவிடும் என்று நினைக்கின்றனர், ஆனால் இன்றைய உலகம் தமோ பிரதானமானது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கின்றார் - இங்கு நீங்கள் சரீரத்தை பார்க்கிறீர்கள், ஆனால் புத்தியானது அந்த விசித்திரமானவரை (தேகமற்றவரை) நினைவு செய்கிறது. இவ்வாறு அதாவது தேகத்தைப் பார்த்தாலும் அந்த தேகமற்றவரை நினைவு செய்யும் அளவிற்கு எந்த சாது சந்நியாசியும் இருக்க முடியாது. இந்த ரதத்தின் மூலம் அந்த பாபா நமக்கு கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் பேசுகின்றார், செய்கின்றார் எனில், அனைத்தும் செய்வது ஆத்மா தான், எதையும் சரீரம் செய்வது கிடையாது. ஆத்மா தான் கேட்கிறது. ஆன்மீக ஞானம் அல்லது உலகீய ஞானம் கேட்பதோ, கூறுவதோ ஆத்மா தான். ஆத்மா தான் உலகீய ஆசிரியராக ஆகிறது. சரீரத்தின் மூலம் உலகீய கல்வியை கற்பிக்கிறது. அதுவும் ஆத்மா தான் படிக்கிறது. நல்ல சம்ஸ்காரமோ கெட்ட சம்ஸ்காரமோ ஆத்மா தான் தாரணை செய்கிறது. சரீரம் சாம்பலாக ஆகிவிடுகிறது. இதையும் எந்த மனிதர்களும் அறியவில்லை. நான் இன்னாராக இருக்கிறேன், நான் பிரதம மந்திரியாக இருக்கிறேன் என்ற தேக அபிமானம் அவர்களுக்கு இருக்கிறது. ஆத்மாவாகிய நான் இந்த பிரதம மந்திரிக்கான சரீரத்தை எடுத்திருக்கிறேன் என்று அவர்கள் கூறுவது கிடையாது. இதையும் நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். அனைத்தையும் ஆத்மா தான் செய்கிறது. ஆத்மா அழிவற்றது ஆகும், இங்கு நடிப்பை நடிப்பதற்காகத் தான் சரீரம் கிடைத்திருக்கிறது. இதில் ஆத்மா இல்லையெனில், சரீரம் ஒன்றும் செய்ய முடியாது. ஆத்மா சரீரத்திலிருந்து நீங்கி விட்டால் பிணமாகி விடுகிறது. ஆத்மாவை இந்த கண்களினால் பார்க்க முடியாது. அது சூட்சுமமானது அல்லவா! ஆக தந்தை கூறுகின்றார் - புத்தியினால் தந்தையை நினைவு செய்யுங்கள். நமக்கு சிவபாபா இவர் மூலம் கற்பிக்கின்றார் என்பது புத்தியில் இருக்கிறது. இதுவும் சூட்சுமமான, புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். சிலர் நன்றாகப் புரிந்து கொள்கின்றனர், சிலர் சிறிதும் புரிந்து கொள்வது கிடையாது. அல்லா என்றால் பகவான் பாபா. பகவான் அல்லது ஈஸ்வரன் என்று கூறுவதால் மட்டும் தந்தை என்ற சம்மந்தம் ஏற்படுவது கிடையாது. இந்த நேரத்தில் அனைவரும் கல்புத்தியுடையவர்களாக இருக்கின்றனர். ஏனெனில், படைப்பவராகிய தந்தை மற்றும் படைப்பின் முதல், இடை, கடையை அறியவில்லை. இந்த உலக சரித்திர பூகோளம் திரும்பவும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இப்பொழுது சங்கமயுகமாகும், இது யாருக்கும் தெரியாது. முன்பு நாமும் அறியாமல் இருந்தோம் என்பதை நீங்களும் புரிந்திருக்கிறீர்கள். பாபா இப்பொழுது உங்களை ஞானத்தினால் அலங்கரிக்கின்றார், பிறகு இங்கிருந்து வெளியில் செல்கிறீர்கள் எனில், மாயை என்ற தூசியினால் அழுக்காக்கி ஞான அலங்காரத்தைக் கெடுத்து விடுகிறது. தந்தை அலங்காரம் செய்கின்றார். ஆனால் சுயம் முயற்சியும் செய்ய வேண்டும். ஆனால் சில குழந்தைகளின் வாயில் காட்டுவாசிகளைப் போன்ற வார்த்தைகள் வெளிப்படுகிறது, அலங்காரத்துடன் இருப்பது போன்றே தெரியவில்லை. அனைத்தும் மறந்து விடுகின்றனர். கடைசியாக அமர்ந்திருக்கும் மாணவருக்கு அந்த அளவிற்கு படிப்பில் ஈடுபாடு இராது. தொழிற்சாலை போன்றவைகளில் வேலை செய்து செல்வந்தர்களாக ஆகிவிடுகின்றனர். எதுவும் படிக்காதவர்களாக இருப்பர், இது மிகவும் உயர்ந்த படிப்பாகும். படிப்பின்றி எதிர்காலத்தில் உயர்ந்த பதவி அடைய முடியாது. இங்கு செல்வந்தர் ஆவதற்கு நீங்கள் தொழிற்சாலை போன்றவைகளில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. இங்குள்ள இவையனைத்தும் அழியப் போகின்றன. அழிவற்ற வருமானம் மட்டுமே கூட வரும். மனிதர்கள் இறக்கின்றனர் எனில், வெறும் கையுடன் தான் செல்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். கூடவே எதையும் எடுத்துச் செல்லமாட்டார்கள். நீங்கள் நிறைந்த கையுடன் செல்வீர்கள், இது தான் உண்மையான வருமானம் என்று கூறப்படுகிறது. இந்த உண்மையான வருமானம் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு ஏற்படுகிறது. எல்லையற்ற தந்தை உண்மையான வருமானம் செய்விக்கின்றார்.

 

குழந்தைகளாகிய நீங்கள் இந்த சித்திரத்தைப் (தேகத்தை) பார்க்கிறீர்கள், ஆனால் தேகமற்ற தந்தையை நினனவு செய்கிறீர்கள். ஏனெனில், நீங்களும் ஆத்மா தான், ஆத்மாவானது தனது தந்தையை மட்டுமே பார்க்கிறது. அவரிடத்தில் படிக்கிறது. ஆத்மாவையோ, பரமாத்மாவையோ நீங்கள் பார்ப்பது கிடையாது, ஆனால் புத்தியினால் அறிகிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம் அழிவற்றவர்களாக இருக்கிறோம். இந்த சரீரம் அழியக் கூடியது. இந்த தந்தையும் நேர்முகமாக உங்களைப் பார்ர்க்கிறார், ஆனால் புத்தியில் ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறேன் என்பது புத்தியில் இருக்கிறது. இப்பொழுது தந்தை உங்களுக்கு என்ன புரிய வைக்கின்றாரோ அது உண்மையிலும் உண்மையானது ஆகும், இதில் பொய் என்பது சிறிதளவும் கிடையாது. நீங்கள் உண்மையான கண்டத்திற்கு அதிபதி ஆகிறீர்கள். இது பொய்யான கண்டமாகும். பொய்யான உலகம் கலியுகமாகும். உண்மையான உலகம் சத்யுகமாகும். இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. சத்யுகத்தில் துக்கத்தின் விசயம் கிடையாது. பெயரே சுகதாமம் ஆகும். அந்த சுகதாமத்திற்கு எஜமான் ஆக எல்லையற்ற தந்தை மட்டுமே ஆக்க முடியும். அவருக்கு எந்த தேகமும் கிடையாது. மற்ற அனைவருக்கும் தேகம் இருக்கிறது. அந்த ஆத்மாவின் பெயர் மாறுகிறதா என்ன? அவரது பெயரே சிவன். மற்ற அனைத்து ஆத்மாவையும் ஆத்மா என்று தான் கூறுகிறோம். சரீரத்திற்குத் தான் பெயர் வைக்கப்படுகிறது. சிவலிங்கம் நிராகாரமானது. ஞானக் கடல், சாந்திக் கடல் ....... இது சிவனின் மகிமையாகும். அவர் தந்தையாகவும் இருக்கிறார் எனில், தந்தையிடமிருந்து கண்டிப்பாக ஆஸ்தியும் அடைய வேண்டும். படைப்புகளுக்கு படைப்புகளிடமிருந்து ஆஸ்தி கிடைக்காது. படைப்பவர் தான் தனது குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுப்பார். தனது குழந்தை இருக்கின்ற பொழுது சகோதரனின் குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுப்பார்களா என்ன? இவரும் எல்லையற்ற தந்தை தனது எல்லையற்ற குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுக்கின்றார், இது படிப்பு அல்லவா! படிப்பின் மூலம் மனிதர்கள் வக்கீலாக ஆகின்றனர். கற்பிப்பவர் மற்றும் படிப்பின் மீது யோகா (ஈடுபாடு) வைக்கின்றனர். இங்கு கற்பிப்பவர் தேகமற்றவர் ஆவார். ஆத்மாக்களாகிய நீங்களும் தேகமற்றவர்கள். நான் ஆத்மாக்களுக்குத் தான் கற்பிக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். நமக்கு தந்தை கற்பிக்கின்றார் என்று நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரே ஒரு முறை தான் தந்தை வந்து கற்பிக்கின்றார், படிப்பது ஆத்மா அல்லவா! துக்கம், சுகத்தை ஆத்மா தான் அனுபவிக்கிறது, ஆனால் சரீரத்தின் மூலம். ஆத்மா சென்ற பிறகு சரீரத்தை எவ்வளவு தான் அடித்தாலும் அது மண்ணை அடிப்பது போன்றதாகும். ஆக தந்தை அடிக்கடி புரிய வைக்கின்றார் - தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள். வரிசைக்கிரமமாகத் தான் தாரணை ஏற்படுகிறது என்பதை பாபா அறிவார்;. சிலர் முற்றிலும் புத்தியற்றவர்களாக இருக்கின்றனர், எதுவும் புரிந்து கொள்வது கிடையாது. ஞானம் மிகவும் எளிதானது. குருடர்கள், உடல் ஊனம், முடவர்களும் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் இது ஆத்மாவிற்குப் புரிய வைக்கப்படுகிறது அல்லவா! ஆத்மாவானது உடல் ஊனமாக, மூடனாக ஆவது கிடையாது. சரீரம் தான் ஏற்படுகிறது. தந்தை எவ்வளவு நல்ல முறையில் அமர்ந்து புரிய வைக்கின்றார். ஆனால் பக்தி மார்க்கத்தில் கண்களை மூடிக் கொண்டு அமரும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. ஆக இங்கும் கண்களை மூடிக் கொண்டு பைத்தியம் பிடித்தவர்களைப் போன்று அமர்கின்றனர். கண்களை மூட வேண்டாம் என்று தந்தை கூறுகின்றார். எதிரில் பார்த்துக் கொண்டிருந்தாலும் புத்தியினால் தந்தையை நினைவு செய்யும் பொழுது தான் விகர்மங்கள் விநாசம் ஆகும். எவ்வளவு எளிதாக இருக்கிறது! இருந்தாலும் கூட பாபா என்னால் நினைவு செய்ய முடியவில்லை என்று கூறுகிறீர்கள். அட, எல்லைக்குட்பட்ட ஆஸ்தி கொடுக்கும் லௌகீகத் தந்தையை இறக்கின்ற வரை நினைவு செய்கிறீர்கள், இவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் எல்லையற்ற தந்தை ஆவார் அவரை உங்களால் நினைவு செய்ய முடியாதா? அந்த தந்தையைத் தான் , இறை தந்தையே!, வழிகாட்டி என்று அழைத்தீர்கள். உண்மையில் இவ்வாறு கூறுவதும் தவறாகும். தந்தை ஒருவருக்கு மட்டும் வழிகாட்டியாக ஆவது கிடையாது. அவர் எல்லையற்ற வழிகாட்டி ஆவார். ஒரே ஒருவரை மட்டுமே விடுவிக்கமாட்டார். நான் வந்து அனைவருக்கும் சத்கதி செய்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். அனைவரையும் சாந்திதாமம் அனுப்பி வைப்பதற்குத் தான் நான் வந்திருக்கிறேன். இங்கு வாய் திறந்து கேட்க வேண்டிய அவசியமில்லை. எல்லையற்ற தந்தை அல்லவா! அவர்கள் எல்லைக்குட்பட்டதில் வந்து நான் நான் என்று கூறுகின்றனர் பரமாத்மா! எனக்கு சுகம் கொடுங்கள், துக்கத்தை நீக்குங்கள். நாம் பாவிகள், கீழானவர்களாக இருக்கிறோம், நீங்கள் கருணை காட்டுங்கள். தந்தை கூறுகின்றார் - நான் எல்லையற்ற பழைய உலகை புதியதாக ஆக்குவதற்காக வந்திருக்கிறேன். புது உலகில் தேவதைகள் இருப்பர், நான் ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு, எப்பொழுது நீங்கள் முழு தூய்மையற்றவர்களாக ஆகிவிடுகிறீர்களோ அப்பொழுது நான் வருகிறேன். இது அசுர வம்சமாகும். சத்தியத்தை கூறக் கூடிய சத்குரு ஒரே ஒருவர் தான். அவர் தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார், சத்குருவாகவும் இருக்கின்றார். தந்தை கூறுகின்றார் - இந்த தாய்மார்கள் தான் சொர்க்க கதவை திறக்கக் கூடியவர்கள். சொர்க்கத்தின் நுழைவாயில் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இதைக் கூட மனிதர்களால் புரிந்து கொள்ள முடிவது கிடையாது. நரகத்தில் இருக்கின்றனர் அல்லவா! அதனால் தான் அழைக்கின்றனர். இப்பொழுது பாபா உங்களை சொர்க்கம் செல்வதற்கான வழியைக் கூறுகின்றார். தூய்மை இல்லாதவர்களை தூய்மை ஆக்குவதற்காக மற்றும் திரும்பி அழைத்துச் செல்வதற்காக நான் வந்திருக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். இப்பொழுது தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்தால் உங்களது பாவங்கள் அழிந்து விடும். அனைவருக்கும் ஒரே ஒரு விசயத்தைக் கூறுங்கள் - மாயாவை வென்றவர் ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். நான் உங்கள் அனைவருக்கும் உலகிற்கு எஜமான் ஆவதற்கான வழி கூறுகின்றேன். பிறகு லெட்சுமியை தீபாவளியன்று பூû செய்கின்றனர், அவரிடத்தில் செல்வம் கேட்கின்றனர், நல்ல ஆரோக்கியம் கொடுங்கள், நீண்ட ஆயுள் கொடுங்கள் என்று கேட்பது கிடையாது. நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைகிறீர்கள். நீண்ட ஆயுளாக கிடைக்கிறது. இப்பொழுது ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி அனைத்தையும் கொடுத்து விடுகின்றார். அவர்கள் லெட்சுமியிடத்தில் கூடை அளவு கேட்கின்றனர், அதுவும் கிடைப்பது கிடையாது. இது ஒரு பழக்கமாக ஆகிவிட்டது. தேவதைகள் முன் சென்று பிச்சை கேட்கின்றனர். இங்கு நீங்கள் தந்தையிடத்தில் எதுவும் கேட்கக் கூடாது. என்னை நினைவு செய்தால் எஜமான் ஆகிவிடுவீர்கள் மற்றும் சிருஷ்டிச் சக்கரத்தை அறிவதன் மூலம் சக்கரவர்த்தி ராஜா ஆகிவிடுவீர்கள் என்று தந்தை உங்களுக்கு கூறுகின்றார். தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். இதில் எதுவும் பேச வேண்டிய அவசியமில்லை. தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. இப்பொழுது நீங்கள் இவருக்கு பூஜை செய்வீர்களா என்ன? நாம் சுயம் இவ்வாறு ஆகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள், பிறகு இந்த 5 தத்துவங்களை ஏன் பூû செய்ய வேண்டும்? நமக்கு உலக இராஜ்யம் கிடைக்கிறது. பிறகு ஏன் இதை செய்ய வேண்டும்? இப்பொழுது நீங்கள் கோயில்களுக்கெல்லாம் செல்வது கிடையாது. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் விசயங்களாகும் என்று தந்தை கூறுகின்றார். ஞானத்தில் ஒரே ஒரு வார்த்தை ஆகும் என் ஒருவனை நினைவு செய்யுங்கள். நினைவின் மூலம் உங்களது பாவங்கள் அழியும், சதோபிரதானம் ஆகிவிடுவீர்கள். நீங்கள் தான் அனைத்து குணங்களும் நிறைந்தவர்களாக இருந்தீர்கள், மீண்டும் ஆக வேண்டும். இதையும் புரிந்து கொள்வது கிடையாது. கல்புத்தியுடையவர்களிடத்தில் தந்தை எவ்வளவு தலை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது! இந்த நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த விசயங்களை ஒரு தந்தையைத் தவிர வேறு எந்த சாது, சந்நியாசிகளும் கூற முடியாது. இவர் பிரம்மா ஈஸ்வரன் கிடையாது. இவர் பல பிறவிகளின் கடைசியில் இருக்கின்றார். யார் முழு 84 பிறவிகள் எடுத்திருக்கிறாரோ, நான் அவரிடத்தில் பிரவேசம் செய்கிறேன், கிராமத்துக் சிறுவனாக இருந்தார்; பிறகு சியாம் சுந்தராக ஆகின்றார். இவர் முழுமையாக கிராமத்துக் சிறுவனாக இருந்தார். பிறகு எப்பொழுது சாதாரணமானவராக முதிர்ச்சி அடைந்தாரோ அப்பொழுது பாபா பிரவேசம் செய்கின்றார். ஏனெனில் இந்த அளவிற்கு பட்டி (இந்த யக்ஞத்தை) உருவாக்க வேண்டியிருந்தது. இவர்களுக்கு யார் உணவளிப்பது? ஆக அவசியம் சாதாரணமாகவும் இருக்க வேண்டும் அல்லவா! இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். நான் இவரது பல பிறவிகளின் கடைசி பிறவியில் பிரவேசம் செய்கிறேன், இவர் தான் அனைவரையும் விட தூய்மை இழந்தவராக ஆகின்றார், பிறகு அவரே தூய்மையாகவும் ஆவார் என்று தந்தை சுயம் கூறுகின்றார். 84 பிறவிகள் இவர் எடுத்திருக்கின்றார்; இவரே அவர். ஓருவர் மட்டுமின்றி பலர் இருக்கின்றனர் அல்லவா! சூரியவம்சி சந்திரவம்சி ஆகின்றவர்கள் தான் வரிசைக்கிரமமான முயற்சியின் படி இங்கு வருகின்றனர் மற்றவர்களால் நிலைத்திருக்க முடியாது. தாமதாக வருபவர்கள் ஞானமும் சிறிதளவும் தான் கேட்பார்கள். பிறகு தாமதாகவே வருவார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தந்தை எந்த ஞான அலங்காரம் செய்கின்றாரோ அதை நிலையாக வைத்திருக்கும் முயற்சி செய்ய வேண்டும். மாயையின் தூசியில் ஞான அலங்காரத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது. படிப்பை நல்ல முறையில் படித்து அழிவற்ற வருமானம் செய்ய வேண்டும்.

                                                                                                

2) இந்த சித்திரம் அதாவது தேகதாரியை எதிரில் பார்த்தாலும் புத்தியினால் தேகமற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும். கண்களை மூடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. எல்லையற்ற தந்தையிடத்தில் எதையும் கேட்கக் கூடாது.

 

வரதானம்:

சாட்சியாக இருந்து கர்மேந்திரியங்கள் மூலம் காரியம் செய்யவைக்கக் கூடிய செய்பவன் என்ற உணர்விலிருந்து விடுபட்டு, அசரீரி ஆகுக.

 

எப்பொழுது தேவைப்படுகிறதோ சரீரத்தில் வாருங்கள், மேலும் எப்பொழுது விரும்புகிறீர்களோ அசரீரி ஆகி விடுங்கள். ஏதாவது காரியம் செய்ய வேண்டுமென்றால் கர்மேந்திரியங்களின் ஆதாரத்தை எடுங்கள். ஆனால் ஆதாரத்தை எடுக்கக் கூடியவானாகிய நான் ஆத்மா என்பதை இதை மறந்து விடாதீர்கள். செய்யக் கூடியவன் அல்ல, செய்ய வைக்க கூடியவன். எப்படி மற்றவர்களின் மூலம் காரியத்தை செய்ய வைக்கிறோம் என்றால் அந்த சமயம் தன்னை தனிப்பட்டவனாக புரிந்துக் கொள்கிறோம், அப்படி சாட்சியாக இருந்து கர்மேந்திரியங்களின் மூலம் காரியம் செய்ய வையுங்கள். அதனால் செய்பவன் என்ற உணர்விலிருந்து விடுபட்டு அசரீரி ஆகிவிடுங்கள். காரியம் செய்யும் பொழுது இடை - இடையில் ஒன்று - இரண்டு நிமிடம் கூட அசரீரி ஆவதற்கான பயிற்சி செய்வீர்கள் என்றால், கடைசி சமயத்தில் மிகவும் உதவி கிடைக்கும்.

 

சுலோகன்:

விஷ்வ இராஜா (உலகத்திற்கே மகாராஜா) ஆக வேண்டுமென்றால் உலகத்திற்கு (சகாஷ்) ஒளி மற்றும் சக்தியை கொடுக்கக் கூடியவர் ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி