15.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு உண்மையான சுதந்திரம் கொடுப்பதற்காக, எம தூதுவர்களின் தண்டனைகளிலிருந்து விடுவிப்பதற்காக, இராவணனின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காகத் தந்தை வந்திருக்கின்றார்.

 

கேள்வி:

தந்தை மற்றும் குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைப்பதில் முக்கிய வித்தியாசம் என்ன இருக்கிறது?

 

பதில்:

தந்தை புரிய வைக்கின்ற பொழுது இனிமையான குழந்தைகளே என்று கூறி புரிய வைக்கின்றார். இதன் மூலம் தந்தையின் விசயங்கள் அம்பு போன்று பதிகிறது. குழந்தைகளாகிய நீங்கள் சகோதரர்களாகிய தங்களுக்குள் புரிய வைக்கின்ற பொழுது இனிமையாக குழந்தைகளே என்று கூற முடியாது. தந்தை பெரியவராக இருக்கின்றார், அதனால் தான் அவரது விசயங்கள் (நமது மனதில்) பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவர் குழந்தைகளை உணர வைக்கின்றார் - குழந்தைகளே! உங்களுக்கு வெட்கமாக இல்லையா! நீங்கள் பதீதமாக ஆகி விட்டீர்கள், இப்பொழுது பாவனமாக ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி.

எல்லையற்ற ஆன்மீகத் தந்தை, எல்லையற்ற ஆன்மீகக் குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கின்றார் என்பதை எல்லையற்ற தந்தை மற்றும் எல்லையற்ற குழந்தைகள் மட்டுமே அறிவர். வேறு யாரும் எல்லையற்ற தந்தையையும் அறியவில்லை, தன்னை எல்லையற்ற குழந்தை என்று ஏற்றுக் கொள்வதும் இல்லை. பிரம்மாவின் வாய் வழிவம்சத்தினர்கள் மட்டுமே அறிவார்கள் மற்றும் ஏற்றுக் கொள்வார்கள். வேறு யாரும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. பிரம்மாவும் கண்டிப்பாகத் தேவை. அவரைத் தான் ஆதிதேவன் என்று கூறுகிறோம். அவரிடத்தில் தான் தந்தை பிரவேசம் ஆகின்றார். தந்தை வந்து என்ன செய்கின்றார்? பாவனம் ஆக வேண்டும் என்று கூறுகின்றார். தந்தையின் ஸ்ரீமத் என்னவெனில், தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள். குழந்தைகளுக்கு ஆத்மாவின் அறிமுகமும் கொடுத்திருக்கின்றார். ஆத்மா நெற்றியின் நடுவில் வாசம் செய்கிறது. ஆத்மா அழிவற்றது, இதன் சிம்மாசனம் இந்த அழியக் கூடிய சரீரமாகும் என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் நமக்குள் சகோதர சகோதரர்களாக இருக்கிறோம், ஒரு தந்தையின் குழந்தை களாக இருக்கிறோம் என்ற விசயத்தை நீங்கள் அறிவீர்கள். ஈஸ்வரன் சர்வவியாபி என்று கூறுவது தவறாகும். நீங்கள் நல்ல முறையில் புரிய வைக்கிறீர்கள். ஒவ்வொருவரிடத்திலும் 5 விகாரங்கள் பிரவேசம் ஆகியிருக்கிறது என்று நல்ல முறையில் புரிய வைக்கின்ற பொழுது இவர்கள் சரியாகத் தான் கூறுகின்றனர் என்று நினைக்கின்றனர். நாம் சகோதர சகோதரர்கள் எனில் அவசியம் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். ஆனால் இங்கிருந்து வெளியில் சென்றதும் மாயையின் புயல்களில் சென்று விடுகின்றனர். மிகச் சிலரே நிலைத்து நிற்கின்றனர். அனைத்து இடங்களிலும் இந்த நிலை ஏற்படுகிறது. சிலர் சிறது நன்றாகப் புரிந்திருக்கின்றனர் எனில், அதிகம் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்கின்றனர். இப்பொழுது நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்க முடியும். ஒருவேளை யாராவது அதிகம் கவனம் செலுத்தவில்லையெனில், இவர் பழைய பக்தன் கிடையாது என்று கூறுவீர்கள். இந்த விஷயங்களைப் புரிந்து கொள்பவர்கள் தான் புரிந்து கொள்வர். யாராவது புரிந்து கொள்ளவில்லையெனில், பிறகு புரிய வைக்கவும் முடியாது. உங்களிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. யாராவது நல்ல மனிதராக இருந்தால் அவருக்குப் புரிய வைப்பதற்கு அதற்குத் தகுந்தாற் போன்று நல்லவர்கள் அனுப்பப்படுகின்றனர். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பெரிய மனிதர்கள் அந்த அளவிற்கு விரைவாகப் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பதையும் அறிவீர்கள். ஆம், இவர்கள் புரிய வைப்பது நன்றாக இருக்கிறது என்று கருத்து கூறுகின்றனர். தந்தையின் அறிமுகத்தை முழுவதுமாகக் கொடுக்கிறீர்கள், ஆனால் அவர்களுக்கு நேரம் எங்கு இருக்கிறது? எல்லையற்ற தந்தையை நினைவு செய்தால் விகர்மங்கள் அழிந்து விடும் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

 

தந்தை இப்பொழுது நேரடியாக ஆத்மாக்களாகிய நம்மிடம் உரையாடிக் கொண்டிருக்கின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நேரடியாகக் கேட்பதன் மூலம் அம்பு மிகவும் நன்றாகப் பதிகிறது. அவர்கள் பி.கு மூலமாகக் கேட்கின்றனர். இங்கு பரம்பிதா பரமாத்மா பிரம்மாவின் மூலம் நேரடியாகப் புரிய வைக்கின்றார் - ஹே குழந்தைகளே! நீங்கள் தந்தை கூறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?. நீங்கள் அனைவரும் யாருக்கும் இவ்வாறு கூற முடியாது அல்லவா! அங்கு தந்தை கிடையாது. இங்கு தந்தை அமர்ந்திருக்கின்றார். தந்தை உரையாடிக் கொண்டிருக்கின்றார். குழந்தைகளே! நீங்கள் தந்தை கூறுவதைக் கேட்கமாட்டீர்களா! அஞ்ஞான காலத்திலும் தந்தை புரிய வைப்பதற்கும், சகோதரன் புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கும். தந்தையின் பிரபாவம் (தாக்கம்) ஏற்படுமளவிற்கு சகோதரன் கூறுவது ஏற்படுத்தாது. ஏனெனில், தந்தை பெரியவர் அல்லவா! ஆக பயம் இருக்கும். உங்களுக்கும் தந்தை புரிய வைக்கின்றார் - உங்களது தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். என்னை அடிக்கடி மறந்து போவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா! தந்தை நேரடியாகக் கூறுகின்றார் எனில், அதன் பிரபாவம் உடனேயே ஏற்பட்டு விடுகிறது. அடே, தந்தை கூறுவதை ஏற்றுக் கொள்ளமாட்டீர்களா! எல்லையற்ற தந்தை கூறுகின்றார் இந்தப் பிறப்பில் நிர்விகாரிகளாக ஆகின்ற பொழுது 21 பிறவிகளுக்கு நிர்விகாரிகளாகி, தூய்மையான உலகிற்கு எஜமானர்களாக ஆவீர்கள். இதை ஏற்றுக் கொள்ளமாட்டீர்களா! தந்தை கூறுவது அம்பு போன்று ஆழமாகப் பதிகிறது. வித்தியாசம் இருக்கத் தான் செய்யும். சதா புதியவர்களிடம் தந்தை சந்தித்துக் கொண்டே இருப்பார் என்பது கிடையாது. தலைகீழான கேள்விகளைக் கேட்கின்றனர். புத்தியில் அமர்வது கிடையாது. ஏனெனில் இது முற்றிலும் புதிய விசயமாகும். கீதையில் கிருஷ்ணரின் பெயரை எழுதி விட்டனர். அவரோ இருக்கவே முடியாது. இப்பொழுது நாடகப்படி உங்களது புத்தியில் வந்திருக்கிறது. நாம் பாபாவிடம் செல்ல வேண்டும், நேரடியாக முரளி கேட்க வேண்டும் என்று குழந்தைகளாகிய நீங்கள் ஓடி வருகிறீர்கள். அங்கு சகோதரர்களின் மூலம் கேட்டீர்கள், இப்பொழுது பாபாவிடம் கேட்க வேண்டும். தந்தை கூறுவது பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகளே! குழந்தைகளே! என்று கூறிப் பேசுகின்றார். குழந்தைகளே! உங்களுக்கு வெட்கமாக இல்லையா? தந்தையை நினைவு செய்வதே கிடையாது. தந்தையிடத்தில் உங்களுக்கு அன்பு இல்லையா?. எவ்வளவு நினைவு செய்கிறீர்கள்? பாபா, ஒரு மணி நேரம். அடே, நிரந்தரமாக நினைவு செய்தால் உங்களது பாவங்கள் அழிந்து விடும். பல பிறவிகளின் பாவங்கள் தலைமீது உள்ளது. நீங்கள் தந்தையை எவ்வளவு நிந்தனை செய்தீர்கள் என்று தந்தை எதிரில் வந்து புரிய வைக்கின்றார். உங்கள் மீது வழக்கு போட வேண்டும். செய்தித்தாளில் யாரைப் பற்றியோ நிந்தித்து எழுதினால் அவர் மீது வழக்கு தொடுப்பார்கள் அல்லவா! நீங்கள் என்ன என்ன செய்தீர்கள் என்று தந்தை இப்பொழுது நினைவு படுத்துகின்றார். நாடகப்படி இராவணனின் தொடர்பினால் தான் இவ்வாறு ஆனது என்று தந்தை புரிய வைக்கின்றார். இப்பொழுது பக்தி மார்க்கம் அனைத்தும் முடிவடைகிறது, கடந்து போய்விட்டது, இடையில் யாரும் தடுத்து நிறுத்துபவர்கள் கிடையாது. நாளுக்கு நாள் கீழே இறங்கி இறங்கி தமோ பிரதான புத்தி அதிகரித்து முட்டாளாகி விட்டீர்கள். யாருக்கு பூஜை செய்கின்றார்களோ அவரை கல்லில் முள்ளில் இருப்பதாகக் கூறிவிட்டனர்! இதுதான் எல்லையில்லாத புத்தியற்ற நிலை என்று கூறப்படுகிறது. எல்லையற்ற குழந்தைகளிடம் எல்லையில்லாத புத்தியற்ற நிலை இருக்கிறது. ஒருபுறம் சிவபாபாவை பூஜை செய்கின்றனர், மறுபுறம் அந்த தந்தையையே சர்வவியாபி என்று கூறுகின்றனர். இப்பொழுது உங்களுக்கு நினைவு வந்து விட்டது, தந்தையை நிந்திக்கும் அளவிற்கு புத்தியற்றவர்களாக இருந்து விட்டோம். இப்பொழுது பிச்சைக்கார நிலையிலிருந்து இளவரசர் ஆவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசர் ஆவார், அவருக்கும் 16108 இராணிகள் இருந்தனர், குழந்தைகள் இருந்தனர் என்று கூறிவிட்டனர். இப்பொழுது உங்களுக்கு வெட்கம் வருகிறது. யாராவது பாவம் செய்கின்றனர் எனில், பகவான் முன் சென்று காதைப் பிடித்துக் கொண்டு ஹே பகவானே! மிகப் பெரிய தவறு ஏற்பட்டு விட்டது, கருணை காட்டுங்கள், மன்னியுங்கள் என்று கூறுவர். நீங்கள் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறீர்கள்! தந்தை புரிய வைக்கின்றார் - நாடகத்தில் இவ்வாறு இருக்கிறது. எப்பொழுது இவ்வாறு ஆகிறீர்களோ அப்பொழுது நான் வருகின்றேன்.

 

இப்பொழுது தந்தை கூறுகின்றார் - நீங்கள் அனைத்து தர்மத்தினருக்கும் நன்மை செய்ய வேண்டும். எந்த தந்தை அனைவருக்கும் சத்கதி கொடுக்கின்றாரோ அவரை அனைத்து தர்மத்தினர்களும் சர்வவியாபி என்று கூறிவிட்டனர். இதை எங்கிருந்து கற்றுக் கொண்டனர்! பகவானின் மகாவாக்கியம் - நான் சர்வவியாபி அல்ல. உங்களது காரணத்தினால் மற்றவர்களின் நிலையும் இவ்வாறு ஆகிவிட்டது. ஹே பதீத பாவனனே..... என்று அழைக்கின்றனர். ஆனால் புரிந்து கொள்வது கிடையாது. நாம் முதன் முதலில் வீட்டிலிருந்து வந்த பொழுது பதீதமாக இருந்தோமா என்ன? தேக அபிமானத்தின் காரணத்தினால் தான் பதீதமாக ஆகிவிட்டோம். எந்த தர்மத்தைச் சார்ந்தவர்கள் வந்தாலும் அவர்களிடத்தில் பரம்பிதா பரமாத்மாவின் அறிமுகம் உங்களிடம் இருக்கிறதா? அவர் யார்? எங்கு வசிக்கின்றார்? என்று கேட்டால் மேலிருந்து என்று கூறுவார்கள் அல்லது சர்வவியாபி என்று கூறிவிடுவார்கள். உங்களது கவனிப்பு முழு உலகையும் சரிவிற்கு வழிவகுத்து விடுகிறது என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் நிமித்தமாக இருக்கிறீர்கள். அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். நாடகப்படி ஏற்பட்டாலும் கூட பதீதமாக ஆகிவிட்டீர்கள் அல்லவா! அனைவரும் பாவ ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். இப்பொழுது புண்ணிய ஆத்மா ஆவதற்காக அழைக்கிறீர்கள். அனைத்து தர்ம ஆத்மாக்களும் முக்திதாம வீட்டிற்குச் செல்ல வேண்டும். அங்கு தூய்மையாக இருப்பீர்கள். இதுவும் நாடகத்தில் அமைந்துள்ளது. இதை தந்தை வந்து புரிய வைக்கின்றார். இது அனைத்து தர்மத்தினர்களுக்குமான ஞானமாகும். பாபாவிடம் செய்தி வந்தது - உங்கள் அனைத்து ஆத்மாக்களையும் பரமாத்மாவாக நினைத்து நமஸ்கரிக்கிறேன் என்று ஒரு ஆச்சாரியர் கூறினார். இவ்வளவு பேர் பரமாத்மாக்களாக இருக்கிறார்களா என்ன? எதையும் புரிந்து கொள்வதே இல்லை. யார் அதிக பக்தி செய்யவில்லையோ அவர்கள் நிலைத்திருப்பது கிடையாது. சென்டர்களிலும் சிலர் சில காலம் நிலைத்திருக்கின்றனர், சிலர் சில காலம் .... இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் பக்தி குறைவாக செய்திருக்கின்றனர். அதனால் தான் நிலைத்திருப்பது கிடையாது. இருப்பினும் எங்கு செல்வார்கள்? வேறு எந்தக் கடையும் கிடையாது. மனிதர்கள் விரைவாகப் புரிந்து கொள்வதற்கு என்ன யுக்தியை உருவாக்குவது? இப்பொழுது அனைவருக்கும் செய்தி கொடுக்க வேண்டும். தந்தையை நினைவு செய்யுங்கள் என்று கூறுங்கள். நீங்களே முழுமையாக நினைவு செய்யவில்லையெனில், உங்களது அம்பு எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்? அதனால் தான் பாபா கூறுகின்றார் - சார்ட் வையுங்கள். பாவனம் ஆவது தான் முக்கியமான விசயமாகும். எந்த அளவிற்கு பாவனம் ஆகின்றோமோ அந்த அளவிற்கு ஞான தாரணை ஏற்படும். குஷியும் ஏற்படும். குழந்தைகளுக்கு அதிக குஷி ஏற்பட வேண்டும் - நாம் அனைவரையும் முன்னேற்றுகிறோம் என்று. தந்தை வந்து தான் சத்கதி அளிகின்றார். தந்தைக்கு துக்கம் மற்றும் குஷிக்கான விசயமே கிடையாது. இது நாடகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு எந்த துக்கமும் இருக்கக் கூடாது. தந்தை கிடைத்து விட்டார், வேறு என்ன வேண்டும்? தந்தையின் வழிப்படி நடந்தால் போதும். இந்த அறிவுரைகளும் இப்பொழுது தான் கிடைக்கிறது, சத்யுகத்தில் கிடைக்காது. அங்கு ஞானத்தின் விசயமே கிடையாது. இங்கு உங்களுக்கு எல்லையற்ற தந்தை கிடைத்திருக்கின்றார் எனில் உங்களுக்கு சொர்க்கத்தை விட அதிகக் குஷி இருக்க வேண்டும்.

 

நீங்கள் அயல்நாட்டிற்குச் சென்றும் இதைப் புரிய வைக்க வேண்டும் என்று தந்தை புரிய வைக்கின்றார். அனைத்து தர்மத்தினர் மீதும் உங்களுக்குக் கருணை ஏற்படுகிறது. ஹே, பகவான் ! கருணை காட்டுங்கள், ஆசீர்வாதம் செய்யுங்கள், துக்கத்திலிருந்து விடுவியுங்கள் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் புரிந்து கொள்வது கிடையாது. தந்தை பல வகையான யுக்திகளைக் கூறுகின்றார். நீங்கள் இராவணனின் சிறையில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அனைவருக்கும் கூற வேண்டும். சுதந்திரம் வேண்டும் என்று கூறுகின்றனர், ஆனால் உண்மையில் எது சுதந்திரம் என்று கூறப்படுகிறது? என்பதை யாரும் அறியவில்லை. இராவணனின் சிறையில் அனைவரும் மாட்டியிருக்கின்றனர். இப்பொழுது உண்மையான சுதந்திரம் கொடுப்பதற்காக தந்தை வந்திருக்கின்றார். இருப்பினும் இராவணனின் சிறையில் அடிமைகளாகி பாவங்கள் செய்து கொண்டே இருக்கின்றனர். உண்மையான சுதந்திரம் எது? என்பதை மனிதர்களுக்குக் கூற வேண்டும். இங்கு இராவணனின் இராஜ்யத்தில் சுதந்திரம் கிடையாது என்று நீங்கள் பத்திரிக்கைகளிலும் போட வேண்டும். மிகவும் அளவாக எழுத வேண்டும். அதிகம் எழுதினால் யாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள். உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா என்ன? என்று கேளுங்கள். நீங்கள் இராவணனின் சிறையில் மாட்டியிருக்கிறீர்கள். உங்களது பிரபாவம் அயல்நாட்டினருக்கு ஏற்படும் பொழுது பிறகு இங்கிருப்பவர்களும் புரிந்து கொள்வர். ஒருவரை ஒருவர் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆக இது சுதந்திரமா என்ன? சுதந்திரத்தை உங்களுக்கு தந்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இராவணனின் சிறையிலிருந்து சுதந்திரம் அளித்துக் கொண்டிருக்கின்றார். நாம் அங்கு (சத்யுகத்தில்) மிகவும் சுதந்திரமாகவும், மிக செல்வந்தர்களாகவும் இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். யாருடைய திருஷ்டியும் (பார்வை) விழுவது கிடையாது. எப்பொழுது பலவீனமாக ஆகிறீர்களோ அப்பொழுது அனைவரின் திருஷ்டியும் உங்களது செல்வத்தின் மீது விழுகிறது. முகமது கஜனி வந்து கோயில்களில் கொள்ளையடித்தார் எனில், உங்களது சுதந்திரம் நீங்கி விட்டது. இராவணனின் இராஜ்யத்தில் அடிமைகளாக ஆகி விட்டீர்கள். இப்பொழுது நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இப்பொழுது உண்மையான சுதந்திரம் அடைந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் சுதந்திரத்தைப் புரிந்து கொள்வதே கிடையாது. ஆக இந்த விசயத்தையும் யுக்தியாகப் புரிய வைக்க வேண்டும். யார் கல்பத்திற்கு முன்பு சுதந்திரம் அடைந்திருந்தார்களோ அவர்கள் தான் ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் புரிய வைக்கிறீர்கள் எனில், முட்டாள்ககளைப் போன்று எவ்வளவு வாக்குவாதம் செய்கின்றனர்! நேரத்தை வீணாக்குகின்றனர் எனில், பேசுவதற்கு மனம் விரும்புவது கிடையாது.

 

தந்தை வந்து சுதந்திரம் கொடுக்கின்றார். இராவணனின் அடிமைத்தனத்தில் அதிக துக்கம் இருக்கிறது. அளவிட முடியாத துக்கம் இருக்கிறது. தந்தையின் இராஜ்யத்தில் நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். சுதந்திரம் என்றால் - நாம் எப்பொழுது தூய்மையான தேவதைகளாக ஆகின்றோமோ அப்பொழுது இராவண இராஜ்யத்திலிருந்து விடுபட்டு விடுகின்றோம். உண்மையான சுதந்திரம் தந்தை வந்து தான் கொடுக்கின்றார். இப்பொழுது மாற்றானின் இராஜ்யத்தில் அனைவரும் துக்கமானவர்களாக இருக்கின்றனர். சுதந்திரம் அடையக் கூடிய யுகம் இந்த புருஷோத்தம சங்கமயுகமாகும். ஆங்கிலேயர்கள் சென்று விட்டதால் நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர். எதுவரை பாவனம் ஆகவில்லையோ அதுவரை சுதந்திரமானவர்கள் என்று கூற முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். பிறகு அதிகமான தண்டனைகளை அடைய வேண்டியிருக்கும். பதவியும் குறைந்து விடும். வீட்டிற்கு அழைத்துச் செல்ல தந்தை வந்திருக்கின்றார். அங்கு அனைவரும் சுதந்திரமாக இருப்பார்கள். நீங்கள் அனைத்து தர்மத்தினருக்கும் புரிய வைக்க முடியும் - நீங்கள் ஆத்மாக்கள், நடிப்பை நடிப்பதற்காக முக்திதாமத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். சுகதாமத்திலிருந்து பிறகு துக்கதாமத்திற்கு, தமோ பிரதான உலகிற்கு வந்து விட்டீர்கள். நீங்கள் எனது குழந்தைகளே தவிர இராவணனுடையவர்கள் அல்ல என்று தந்தை கூறுகின்றார். நான் உங்களுக்கு இராஜ்ய பாக்கியத்தைக் கொடுத்து விட்டு சென்றிருந்தேன். நீங்கள் உங்களது இராஜ்யத்தில் எவ்வளவு சுதந்திரமாக இருந்தீர்கள்! இப்பொழுது நீங்கள் அங்கு செல்வதற்காக பாவனம் ஆக வேண்டும். நீங்கள் எவ்வளவு செல்வந்தர்களாக ஆகிறீர்கள்! அங்கு செல்வத்திற்கான கவலையே இருக்காது. ஏழைகளாக இருந்தாலும் கூட செல்வத்திற்கான கவலை இருக்காது. குஷி இருக்கும். கவலை இங்கு தான் ஏற்படுகிறது. மற்றபடி இராஜ்யத்தில் வரிசைக்கிரமமான பதவி இருக்கும். சூரியவம்சி இராஜாக்களைப் போன்று அனைவரும் ஆகிவிட முடியாது. எந்த அளவிற்கு முயற்சியோ அந்த அளவிற்கு பதவி. நீங்கள் அனைத்து தர்மத்தினர்களுக்கும் சேவை செய்யக் கூடியவர்கள். அயல்நாட்டினர் களுக்கும் புரிய வைக்க வேண்டும் - நீங்கள் அனைவரும் சகோதர சகோதரர்கள் அல்லவா! அனைவரும் சாந்திதாமத்தில் இருந்தீர்கள். இப்பொழுது இராவண இராஜ்யத்தில் இருக்கின்றனர். இப்பொழுது வீட்டிற்குச் செல்வதற் கான வழி கூறுகின்றோம். தன்னை ஆத்மா என்று உணர்ந்து என்னை நினைவு செய்யுங்கள். பகவான் அனைவரையும் விடுவிக்கின்றார் என்றும் கூறுகின்றனர். ஆனால் எவ்வாறு விடுவிக்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை. குழந்தைகள் சில நேரங்களில் குழப்பமடையும் பொழுது பாபா எங்களை விடுவித்து தங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறுகின்றனர். அதாவது பனிமூட்டத்தில், வழி தெரியாத காட்டில் குழப்ப மடைந்தது போன்று! வழி தெரிவது கிடையாது. பிறகு விடுவிப்பவர் கிடைக்கும் பொழுது வழி கூறுகின்றார். எல்லையற்ற தந்தைக்கும் கூறுகின்றோம் - பாபா, எங்களை விடுவியுங்கள். நீங்கள் முன் செல்லுங்கள், நாங்கள் உங்கள் பின் வருகிறோம். தந்தையைத் தவிர வேறு யாரும் வழி கூற முடியாது. எவ்வளவு சாஸ்திரங்கள் படித்தோம், தீர்த்த யாத்திரைகளில் ஏமாற்றம் அடைந்து வந்தோம். ஆனால் பகவானை அறியவில்லை எனும் பொழுது பிறகு எங்கு சென்று தேடுவார்! சர்வவியாபி எனில் பிறகு எப்படி சந்திப்பார்! எவ்வளவு அஞ்ஞான இருளில் இருக்கின்றனர்! அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார், அவர் வந்து தான் குழந்தைகளாகிய உங்களை அஞ்ஞான இருளிலிருந்து விடுவிக்கின்றார். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே !

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஒரு தந்தை கிடைத்து விட்டார், ஆகையால் எந்த விசயத்தைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. அவரது வழிப்படி நடந்து, எல்லையற்ற புத்திசாலியாகி, குஷி குஷியாக அனைவரையும் முன்னேற்றுவதற்கு நிமித்தமாக ஆக வேண்டும்.

 

2) மனிதர்களின் தண்டனைகளிலிருந்து விடுபடுவதற்கு அல்லது உண்மையான சுதந்திரம் அடைவதற்கு அவசியம் பாவனமாக ஆக வேண்டும். வருமானத்திற்கு ஆதாரம் ஞானம் ஆகும், இதை தாரணை செய்து செல்வந்தர்களாக ஆக வேண்டும்.

 

வரதானம்:

சேவையில் இருந்தபடி கர்மாதீத நிலையின் (கர்மங்களை வென்ற முழுமை நிலையின்) அனுபவம் செய்யக் கூடிய தபஸ்வி மூர்த்தி ஆகுக.

 

விளக்கம்: நேரம் குறைவாக உள்ளது மேலும் சேவை இன்னும் அதிகமாக உள்ளது. சேவையில் தான் மாயை வருவதற்கான இடைவெளி இருக்கிறது. சேவையில்தான் சுபாவம், சம்பந்தத்தின் விஸ்தாரம் ஏற்படுகிறது, சுயநலமும் கலந்ததாக இருக்கிறது, அதில் கொஞ்சம் சமநிலை தவறினாலும் மாயை புதுப் புது ரூபங்களை தரித்துக் கொண்டு வரும், ஆகையால் சேவை மற்றும் சுயத்தின் நிலை இவ்விரண்டின் சமநிலையாக வைக்கக் கூடிய பயிற்சி செய்யுங்கள். எஜமான் ஆகி கர்மேந்திரியங்கள் என்ற வேலைக்காரர்களின் மூலம் சேவை பெறுங்கள், மனதில் ஒரு பாபா அவரைத் தவிர வேறு யாருமில்லை என்ற நினைவை முன்னிறுத்துங்கள், அப்போது கர்மாதீத நிலையின் அனுபவமிக்கவர், தபஸ்வி மூர்த்தி என சொல்வோம்.

 

சுலோகன்:

காரணம் என்ற எதிர்மறையை நிவாரணம் என்ற நேர்மறையாக மாற்றுங்கள்

 

ஓம்சாந்தி