03.02.19 காலை முரளி
ஓம் சாந்தி 17.04.84 பாப்தாதா,
மதுபன்
பலமடங்கு பாக்கியம் நிறைந்தவரின் அடையாளம்
இன்று பாக்கியத்தை உருவாக்கும் தந்தை அனைத்து பாக்கியவான்
குழந்தைகளை பார்த்து கொண்டிருக் கிறார். ஒவ்வொரு பிராமண
ஆத்மாவும் பாக்யவான் ஆத்மா. பிராமணன் ஆவது என்றால் பாக்கியவான்
ஆவது. பகவானின் குழந்தை ஆவது என்றால் பாக்கியசாலி ஆவது.
அனைவருமே பாக்கியவான்கள் தான் ஆனால் தந்தையின் குழந்தை ஆன பிறகு
தந்தையின் மூலமாக விதவிதமான கஜானக்களின் ஆஸ்தியாக என்ன பிராப்தி
ஆகிறதோ, அந்த சிரேஷ்ட ஆஸ்தியின் அதிகாரத்தை பிராப்தி செய்து
அதிகாரி வாழ்க்கையை வாழ்வது மற்றும் பிராப்தி ஆகியிருக்கும்
அதிகாரத்தை எப்பொழுதும் சகஜ விதி மூலமாக வளர்ச்சி அடையச்
செய்வது என்பதில் வரிசைக்கிரமம் ஆகிவிடுகிறார்கள். சிலர்
பாக்கியவானாக இருந்து விடுகிறார்கள், சிலர் சௌபாக்கியவானாக
ஆகிவிடுகிறார்கள். சிலர் ஆயிரம், சிலர் இலட்சம், சிலர் பல
கோடிமடங்கு பாக்கியவான் ஆகிவிடுகிறார்கள், ஏனென்றால் கஜானாவை
விதி மூலம் காரியத்தில் ஈடுபடுத்துவது என்றால் வளர்ச்சியை
அடைவது. அதை தன்னை சம்பன்னமாக ஆக்கும் காரியத்தில்
ஈடுபடுத்தினாலும் சரி, தன்னுடைய சம்பன்ன நிலை மூலமாக மற்ற
ஆத்மாக்களின் சேவையில் ஈடுபடுத்தினாலும் சரி. அதிகம் பணம்/செல்வத்தை
செலவழிப் பதினால் குறைகிறது. அழியாத செல்வத்தை செலவழிப்பதினால்
பலமடங்கு அதிகரிக்கிறது. எனவே நன்றாக சாப்பிடு, நன்றாக செலவழி
என்ற பழமொழி இருக்கிறது. எந்தளவு செலவழித்தீர்களோ,
சாப்பிடுகிறீர்களோ, அந்தளவு மகாராஜாக்களுக்கெல்லாம் மகாராஜா
தந்தை இன்னும் அனைத்து செல்வங்கள் நிறைந்தவராக ஆக்கிவிடுவார்,
எனவே பிராப்தி ஆகியிருக்கும் கஜானாவின் பாக்கியத்தை சேவைக்காக
ஈடுபடுத்துங்கள், முன்னேறிச் செல்லுங்கள். பல மடங்கு பாக்கியம்
நிறைந்தவர் என்றால், ஒவ்வொரு அடியிலும் பலமடங்கு வருமானத்தை
சேமிப்பு செய்பவர், மேலும் ஒவ்வொரு எண்ணம், வார்த்தை, செயல்,
தொடர்பு மூலம் சேவாதாரி ஆகி பலகோடி மடங்கு சேவையில்
ஈடுபடுத்துபவர். பலமடங்கு பாக்கியம் நிறைந்தவர் எப்பொழுதும்
பரந்த மனது, அழியாத, இடைவிடாத பெரும் வள்ளல், அனைவருக்காகவும்
அனைத்து பொக்கி‘ங்களை கொடுக்கும் வள்ளலாக இருப்பார். நேரம்
மற்றும் நிகழ்ச்சியின் அனுசாரம், சாதனங்களின் அனுசாரம் சேவை
செய்பவராக மட்டும் இல்லாமல், இடைவிடாத பெரும் வள்ளல். வாய்மொழி
மூலம் இல்லையென்றால் மனதால் உடலால் சேவை செய்வது, சம்மந்தம் -
தொடர்பு மூலமாக ஏதாவது விதி மூலமாக குறைவற்ற கஜானக்களின் இடை
விடாத நிரந்தர சேவாதாரி. சேவையின் பலவிதமான ரூபம் இருக்கும்,
ஆனால் சேவைக்கான நங்கூரம் எப்பொழுதுமே போடப்பட்டிருக்கும்.
எப்படி நிரந்தர யோகியாக இருக்கிறீர்கள், அதே போல் நிரந்தர
சேவாதாரி. நிரந்தர சேவாதாரி சேவையில் சிரேஷ்ட பலன் என்ற பழத்தை
எப்பொழுதும் தானும் அருந்திக் கொண்டு மற்றவர்களுக்கும் அருந்த
கொடுத்துக்கொண்டேயிருப்பார். அதாவது அவரே நிரந்தரமாக பழத்தை
அருந்திக்கொண்டே பிரத்யக்‘ சொரூபம் ஆகிவிடுவார்.
பலகோடி மடங்கு பாக்கியவான் ஆத்மா எப்பொழுதும் பதம் ஆசன நிவாசி
அதாவது தாமரை மலருக்குச் சமமான நிலையின் ஆசன நிவாசி
எல்லைக்குட்பட்ட கவர்ச்சி மற்றும் எல்லைக்குட்பட்ட பலனை
ஏற்றுகொள்வதிலிருந்து விலகியிருப்பவராக மேலும் தந்தை மற்றும்
பிராமண குடும்பத்தின், உலகத்தின் அன்பானவராக இருப்பார். அந்த
மாதிரி சிரேஷ்ட சேவாதாரி ஆத்மா மேல் அனைத்து ஆத்மாக்களும்
எப்பொழுதும் இதயத்தின் அன்பு நிறைந்த குஷியின் மலர்களை
தூவுவார்கள். பாப்தாதாவும் அந்தமாதிரியான நிரந்தர சேவாதாரி
பலகோடி மடங்கு பாக்கியவான் ஆத்மாவிற்காக அன்பின் மலர்களை
தூவுகிறார். பலகோடி மடங்கு பாக்கியவான் ஆத்மா எப்பொழுதும்
தன்னுடைய மின்னிக்கொண்டிருக்கும் பாக்கியத்தின் நட்சத்திரம்
மூலமாக மற்ற ஆத்மாக்களையும் பாக்கியவான் ஆக்குவதற்கு ஒளி
கொடுக்கிறார்கள். பாப்தாதா அந்தமாதிரி பாக்கியவான் குழந்தைகளை
பார்த்துக்கொண்டிருந்தார். தூரத்தில் இருந்தாலும், எதிரில்
இருந்தாலும், எப்பொழுதும் தந்தையின் இதயத்தில்
நிரம்பியிருக்கிறார்கள். எனவே சமமாக இருப்பவராகி அருகில்
இருக்கிறார்கள். இப்பொழுது நான் எந்தமாதிரியான பாக்கியவான்
என்று தன்னைத் தானே கேளுங்கள். தன்னைத் தானோ தெரிந்துக்கொள்ள
முடியும் தான் இல்லையா,. மற்றவர்கள் கூறுவதை நம்பினாலும்
நம்பாவிட்டாலும் சரி, ஆனால் நான் யார் என்று அனைவரும் தன்னைத்
தெரிந்திருக்கிறார்கள். புரிந்ததா. இருந்தும் பாக்கியம்
இல்லாதவரிலிருந்து பாக்கியவானாகவோ ஆகிவிட்டார்கள் என்று
பாப்தாதா கூறுகிறார். அனேக விதமான துக்கம், வேதனையிலிருந்தோ
பாதுகாப்பாக ஆகிவிடுவார்கள். சொர்க்கத்தின் அதிபதி யாகவோ
ஆவர்கள். ஒன்று சொர்க்கத்தில் வருவது. இன்னொன்று இராஜ்ய அதிகாரி
ஆவது. அனைவருமே வருபவர்கள் தான் ஆனால் எப்பொழுது மற்றும் எங்கே
வருவார்கள் என்பதை தன்னிடமே கேளுங்கள். பாப்தாதாவின்
பதிவேட்டில் சொர்க்கத்தில் வருபவர்களின் பட்டியலில் பெயர் வந்து
விட்டது. உலகத்தை ஒப்பிடும் பொழுது இது நல்லது. ஆனால்
நல்லதிலும் நல்லது என்று இல்லை. எனவே என்ன செய்வீர்கள்? எந்த
மண்டலம் நம்பர் ஒன்னில் வரும் ஒவ்வொரு மண்டலத்திற்கும்
அவரவர்களின் விசேஷம் இருக்கிறது.
மஹாராஷ்ட்ராவின் விசேஷம் என்ன? தெரிந்திருக்கிறீர்களா? மகானாகவோ
இருக்கிறது, ஆனால் முக்கியமான விசேஷாக என்ன வர்ணிக்கப்படுகிறது.
மஹாராஷ்டிராவில் கணபதியின் பூஜை அதிகமாக இருக்கும், கணபதியை
என்னவென்று கூறுகிறார்கள்? தடைகளை அழிப்பவர். என்ன ஒரு காரியம்
தொடங்கினாலும் முதலில் கணேஷாயா நமஹ! என்று கூறுகிறார்கள்.
அப்படியானால் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்ன செய்வீர்கள்?
ஒவ்வொரு மகான் காரியத்தில் ஸ்ரீகணேஷ் செய்வீர்கள் இல்லையா?
மகாரஷ்டிரா என்றால் எப்பொழுதும் தடைகளை அழித்த இராஷ்டிரம். எனவே
எப்பொழுதும் தடைகளை அழிப்பவர் ஆகி தனக்கும் மேலும்
மற்றவர்களுக்காகவும் இதே மகான் தன்மையை காண்பிப்பீர்கள்.
மஹாராஷ்ட்ராவில் தடை இருக்கக் கூடாது. அனைவரும் தடைகளை
அழிப்பவராக ஆகிவிட வேண்டும். (தடை) வந்தது மேலும்
தூரத்திலிருந்தே நமஸ்காரம் செய்தது. அம்மாதிரியான தடைகளை
அழிக்கும் குரூப்பை அழைத்து வந்திருக்கிறீர்கள் இல்லையா.
மகாராஷ்ட்ராவிற்கு எப்பொழுதும் தன்னுடைய இந்த மகான் தன்மையை
உலகத்திற்கு எதிரே காண்பிக்க வேண்டும். நீங்கள் தடைகளை கண்டு
பயப்படுவர்களோ இல்லை தான் இல்லையா. தடைகளை அழிப்பவர்கள் சவால்
விடுபவர்களாக இருப்பார்கள். பொதுவாகவே மஹாராஷ்டாராவில்
தன்னுடைய வீரத் திறமையை காண்பிக்கிறார்கள். நல்லது.
உ.பி. யை சேர்ந்தவர்கள் என்ன அதிசயம் காண்பிப்பீர்கள்?
உ.பி.யின் விசேஷம் என்ன? தீர்த்த ஸ்தலங்களும் அதிகம்
இருக்கின்றன, நதிகளும் அதிக இருக்கின்றன, ஜெகத்குருவும் அங்கே
தான் இருக்கிறார்கள். நான்கு மூலைகளில் நான்கு ஜெகத் குருக்கள்
இருக்கிறார்கள் இல்லையா. உ.பி.யில் மகா மண்டலிஷ்வரர் அதிகம்
இருக்கிறார்கள். ஹரிதுவார் அதாவது ஹரியின் வாசலும் உ.பி. யின்
விசேஷம். எனவே ஹரித் துவார் என்றால் ஹரியிடம் சென்று
அடைவதற்கான வாசலை காண்பிக்கக் கூடிய சேவாதாரிகள் உ.பி.யில்
அதிகம் இருக்க வேண்டும். எப்படி தீர்த்த ஸ்தானத்தின் காரணமாக
உ.பி.யில் வழிகாட்டிகள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களோ ஒன்றாக
சாப்பிடுபவர்கள், குடிப்பவர்கள், ஆனால் இதுவோ ஆன்மீக
வழிகாண்பிக்கக் கூடிய ஆன்மீக சேவாதாரி வழிகாட்டிகள். இவர்கள்
தந்தையோடு சந்திப்பை செய்துக் கொண்டிருப்பவர்கள். தந்தையின்
அருகில் கொண்டு வருபவர்கள். அந்தமாதிரி பாண்டவரான வழிகாட்டிகள்.
உ.பி.யில் விசேஷமாக இருக்கிறார்கள்? உ.பி.க்கு விசேஷமாக
பாண்டவரிலிருந்து வழிகாட்டி ஆகும். பிரத்யக்ஷ ரூபத்தை
காண்பிக்க வேண்டும். புரிந்ததா!
மைசூரின் விசேஷம் என்ன? அங்கு சந்தனமும் இருக்கிறது, மேலும்
விசேஷ பூங்காக்களும் இருக்கின்றன, எனவே கர்னாடகாவை
சேர்ந்தவர்கள் விசேஷமாக எப்பொழுதும் ஆன்மீக ரோஜா மலர்,
எப்பொழுதும் நறுமணம் வீசும் சந்தனம் ஆகி உலகத்தில் சந்தனத்தின்
வாசனை என்று கூறினாலும் மேலும் ஆன்மீக ரோஜா மலர் என்று
கூறினாலும் உலகை பூங்காவாக மாற்ற வேண்டும். மேலும் சந்தனத்தின்
நறுமணத்தை பரப்ப வேண்டும். சந்தன திலகமிட்டு நறுமணம்
நிரம்பியவராக மேலும் சீதளமாக ஆக்க வேண்டும். சந்தனம்
சீதளமாகவும் இருக்கும். எனவே மிக அதிக ரோஜா மலர் கர்னாடகாவில்
உருவாகும் இல்லையா. இந்த நடைமுறை நிரூபணத்தை கொண்டு வாருங்கள்.
இப்பொழுது அனைவருக்கும் அவரவர்களின் விசேஷத்தின் வெற்றியின்
பிரத்யக்ஷ ரூபத்தை காண்பிக்க வேண்டும். மிகவும் நன்றாக மலர்ந்த
நறுமணம் நிறைந்த ஆன்மீக ரோஜா மலரை கொண்டு வரவேண்டும். கொண்டு
வந்தும் இருக்கிறீர்கள், கொஞ்சம் கொஞ்சம் கொண்டு
வந்திருக்கிறீர்கள், ஆனால் மலர்ச் செண்டை கொண்டு வரவில்லை.
நல்லது.
வெளிநாட்டின் மகிமையையோ அதிகம் கூறியிருக்கிறோம். வெளிநாட்டின்
விசேஷம் - மிக வலுவாக விடு பட்டவர்களாக ஆகிவிடுகிறார்கள்
என்றால், மிக வலுவாக பற்றுதலிலும் வந்துவிடுவார்கள்.
வெளிநாட்டுக் குழந்தைகளின் விலகியிருந்து அன்பாக இருக்கும்
நிலையை பார்த்து, பாப்தாதாவும் மகிழ்ச்சியடைகிறார். அந்த
வாழ்க்கையோ கடந்து சென்று விட்டது. எந்தளவு மாட்டிக்
கொண்டிருந்தார்களோ, அந்தளவே இப்பொழுது விலகியிருப்பவர்களாகவும்
ஆகிவிட்டார்கள், எனவே வெளிநாட்டின் விலகியிருந்து அன்பாக
இருக்கும் தன்மை பாப்தாதாவிற்கும் மிகவும் பிடித்திருக்கிறது,
எனவே விசேஷமாக பாப்தாதாவும் அன்பு நினைவுகள் கொடுக்கிறார்.
தன்னுடைய விசேஷத்தில் முழ்கிவிட்டீர்கள். நீங்கள் அந்தமாதிரி
விலகியிருப்பவர் மற்றும் அன்பானவர் தான் இல்லையா. பற்றுதலோ
இல்லைதான் இல்லையா. இருந்தாலும் பாருங்கள் வெளிநாட்டினர்
விருந்தினராகி வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால்,
விருந்தினரை எப்பொழுதும் முன்னுக்கும் வைக்கப் படுவார்கள், எனவே
வெளிநாட்டினரை பார்த்து பாரதவாசிகளுக்கு விசேஷ குஷி ஏற்படுகிறது.
சில அந்தமாதிரியான விருந்தினர்களும் இருக்கிறார்கள், சிலர்
வந்த வீட்டிலேயே அமர்ந்து விடுகிறார்கள், வெளி நாட்டினரின்
நடத்தை எப்பொழுதும் இதே மாதிரி தான் இருந்தது. விருந்தினராகி
வருகிறார்கள், மேலும் வீட்டில் இருப்பவராகி இருந்து
விடுகிறார்கள், இருந்தும் அனேக சுவர்களை இடித்து தந்தையிடம்
அதாவது உங்களிடம் வந்திருக்கிறார்கள், எனவே முதலில்
நீங்கள்’என்று கூறுவீர்கள் இல்லையா. பாரதத்தின் விசேஷம்
அதனுடையது, வெளிநாட்டினரின் விசேஷம் அதனுடையது. நல்லது.
அனைவரும் பதம் ஆசனதாரி, பதமா பதம் பாக்கியவான், எப்பொழுதும்
ஒவ்வொரு வினாடி, ஒவ்வொரு எண்ணத்தில் நிரந்தர 84 மணிகள் உள்ள
தேவிகள் பிரபலமானவர்கள். எனவே இப்பொழுது 84-ல் மணி அடிப்பீர்களா
அல்லது இன்னும் காத்துகொண்டிருப்பீர்களா. வெளிநாட்டிலோ
பயத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே எப்பொழுது மணி
அடிப்பீர்கள். வெளிநாடு அடிக்குமா அல்லது பாரதம் அடிக்குமா. 84
என்றால் நாலாபுறங்களிலும் உள்ள மணிகள் அடிப்பது. எப்பொழுது
இறுதி பூஜையில் ஆரத்தி காண்பிக்கிறார்கள் என்றால், மிகவும்
சப்தமாக மணி அடிப்பார்கள் இல்லையா, அப்பொழுது முடிவு ஏற்படும்.
ஆரத்தி காண்ப்பிப்பது என்றால், முடிவு ஆவது. எனவே இப்பொழுது
என்ன செய்வீர்கள்?
அனைத்து பதம் ஆசனதாரி, பதமா பதம் பாக்கியவான், எப்பொழுதும்
ஒவ்வொரு வினாடி, ஒவ்வொரு எண்ணத்தில் நிரந்தர சேவாதாரி,
எப்பொழுதும் பரந்த மனமுடையவராகி அனைத்து பொக்கிஷங்களை
கொடுக்ககூடிய, மாஸ்டர் வள்ளல், எப்பொழுதும் தன்னுடைய சம்பன்ன
நிலை மூலமாக மற்றவர்களையும் சம்பன்னம் ஆக்கக் கூடிய, சிரேஷ்ட
பாக்கிய அதிகாரி, எப்பொழுதும் சிரேஷ்ட நிரூபணம் கொடுக்கக்
கூடிய உண்மையான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் சமஸ்காரம்.
பஞ்சாப் நிவாசிகளுக்காக பாப்தாதாவின் மகா வாக்கியங்கள்: தந்தை
உங்களுடன் இருக்கிறார், எனவே யோசிப்பதற்கு அவசியமில்லை, என்ன
நடக்குமோ, அதில் நன்மை தான் இருக்கும். நீங்களோ
அனைவரினுடையவர்கள் இந்துவும் இல்லை, சீக்கியரும் இல்லை, நீங்கள்
தந்தையின் உடையவர்கள் என்றால் அனைவரின் உடையவர்கள்.
பாக்கிஸ்தானிலும் - நீங்களோ அல்லாவின் குழந்தைகள் உங்களுக்கு
எந்த விஷயத்தோடு தொடர்பு கிடையாது. நீங்கள் ஈஸ்வரனினுடையவர்கள்,
வேறுயாருடையவர்களும் கிடையாது என்று தான் கூறினார்கள். என்னவாக
இருந்தாலும் ஆனால் பயப்படுபவர்களோ இல்லை. எவ்வளவு தான் நெருப்பு
வைத்து கொளுத்தினாலும் பூனையின் குட்டிகளோ பாதுகாப்பாக
இருப்பார்கள், ஆனால் யார் யோக சொரூபமாக இருப்பார்களோ, அவர்கள்
மட்டும் தான் பாதுகாப்பாக இருப்பார்கள். நான் தந்தையின் உடையவன்
என்று கூறிக்கொண்டு மற்றவர்களை நினைப்பதென்று அப்படி இருக்கக்
கூடாது. அந்தமாதிரி யானவர்களுக்கு உதவி கிடைக்காது.
பயப்படாதீர்கள், நடுங்காதீர்கள், முன்னேறிச் சென்று
கொண்டேயிருங்கள். நினைவு யாத்திரையில், தாரணை செய்வதில்,
படிப்பில் அனைத்து பாடங்களிலும் முன்னேறிச் சென்று
கொண்டேயிருங்கள். எந்தளவு முன்னேறிச் செல்கிறீர்களோ, அந்தளவு
சுலபமாகவே பிராப்தி செய்து கொண்டேயிருப்பீர்கள்.
2. அனைவரும் தன்னை இந்த உலக நாடகத்தில் விசேஷ நடிகன் என்று
நினைக்கிறீர்களா? சென்ற கல்பத்தில் தன்னுடைய படங்களை இப்பொழுது
மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இதுதான் பிராமண
வாழ்க்கையின் அதிசயம். என்னவாக இருந்தேன் மற்றும் என்னவாக
ஆகிவிட்டேன் என்ற இதே விசே‘த்தை எப்பொழுதும் நினைவு செய்யுங்கள்.
கொஞ்சம் மதிப்பில்லாத சோழியிலிருந்து மிகவும் மதிப்புள்ள வைரம்
ஆகி விட்டேன். துக்கமான உலகத்திலிருந்து சுகமான உலகத்தில்
வந்துவிட்டேன். நீங்கள் அனைவரும் இந்த நாடகத்தின் கதாநாயகன்,
கதாநாயகி நடிகர்கள்.. ஒவ்வொரு பிரம்மா குமார், குமாரி தந்தையின்
செய்தியை கூறக்கூடிய செய்தியாளர்கள். பகவானின் செய்தியை
கூறக்கூடிய செய்தியாளர்கள் எவ்வளவு சிரேஷ்ட மானவர்கள்
ஆகிவிட்டார்கள். எப்பொழுதும் இதே காரியம் செய்வதற்காக அவதரித்து
இருக்கிறீர்கள். இந்த செய்தியை கொடுப்பதற்காக மேலேயிருந்து கீழே
வந்திருக்கிறேன் என்ற இதே நினைவு எவ்வளவு குஷி கொடுக்கக்
கூடியது. எனவே நான் அனைத்து குஷிகளின் சுரங்கத்தின் எஜமானன்
என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள், அவ்வளவுதான். இதுதான்
பட்டம்.
3. எப்பொழுதும் தன்னை சங்கமயுகத்தின் சிரேஷ்ட பிராமண ஆத்மா
என்று அனுபவம் செய்கிறீர்களா? உண்மையான பிராமணன் என்றால்
எப்பொழுதும் சத்தியமான தந்தையின் அறிமுகம் கொடுப்பவர்.
பிராமணர்களின் வேலையே கதை கூறுவது. நீங்கள் கதை கூறுவதில்லை,
ஆனால் சத்திய அறிமுகத்தை கூறுகிறீர்கள். அந்தமாதிரி சத்தியமான
தந்தையின் சத்தியமான அறிமுகம் கொடுக்கும் பிராமண ஆத்மா என்ற இதே
போதை எப்பொழுதும் இருக்கட்டும். பிராமணன் தேவதைகளை விடவும்
உயர்ந்தவர் எனவே பிராமணர்களின் ஸ்தானமாக உச்சி குடுமியை
காண்பித்திருக்கிறார்கள், குடுமி உள்ள பிராமணன் என்றால்
உயர்ந்த நிலையில் இருப்பவர். உயர்ந்த இடத்தில் இருப்பதினால்
கீழே அனைத்தும் சிறியதாக தென்படும். எந்தவொரு விஷயமும்
பெரியதாக அனுபவம் ஆகாது. மேலே அமர்ந்து கொண்டு கீழே உள்ள
பொருட்களை பார்த்தீர்கள் என்றால் சிறியதாக தென்படும்.
எப்பொழுதாவது ஏதாவதுவொரு பிரச்சினை பெரியதாக அனுபவம்
ஆகிறதென்றால், அதற்கான காரணம் அதை நீங்கள் கீழே அமர்ந்து
பார்க்கிறீர்கள், மேலே அமர்ந்து பார்த்தீர்கள் என்றால், கடின
முயற்சி செய்ய வேண்டியிருக்காது. எனவே நான் உயர்ந்த ஸ்தானம்
உச்சி குடுமியில் இருக்கும் பிராமணன் என்பதை நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள் - இதில் பெரிய பிரச்சனையும் கூட ஒரு
நொடியில் சிறியதாகி விடும். நீங்கள் பிரச்சனைகள் கண்டு
பயப்படுபவர்கள் இல்லை, ஆனால் கடந்து செல்பவர்கள்,
பிரச்சனைகளுக்கு சமாதானம் செய்பவர்கள். நல்லது.
இன்று காலை (18/4/84) அமிர்தவேளையில் ஒரு சகோதரர் மாரடைப்பின்
காரணமாக தன்னுடைய பழைய உடலை மதுபனில் விட்டு விட்டார் , அந்த
நேரம் அவ்யக்த பாப்தாதாவால் கூறப்பட்ட மகாவாக்கியம்
நீக்கள் அனைவரும் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியை பார்வையாளராகி
பார்க்கக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்கள் தான் இல்லையா. நாடகத்தில்
என்ன காட்சி இருந்தாலும் அதை நன்மை பயக்ககூடியது தான் என்று
கூறுவோம். ஒன்றும் புதியதல்ல. (அவருடைய குடும்பத்து அன்னியிடம்)
என்ன யோசித்துக் கொண்டி ருக்கிறீர்கள்? பார்வையாளர் என்ற
இருக்கையில் அமர்ந்து அனைத்து காட்சிகளையும் பார்ப்பதினால்
தனக்கும் நன்மை இருக்கிறது, மேலும் அந்த ஆத்மாவிற்கும் நன்மை
இருக்கிறது. இதையோ புரிந்திருக்கிறீர்கள் இல்லையா. நினைவு
செய்வதில் நீங்கள் சக்தி ரூபம் தான் இல்லையா. சக்தி எப்பொழுதும்
வெற்றியடைப வராக இருப்பார். வெற்றி அடையும் சக்தி ரூபம் ஆகி
தனது வாழ்க்கையின் அனைத்து பாகத்தையும் செய்பவர். இதுவும் பாகம்
தான். பாகத்தை செய்துகொண்டே ஒருபொழுதும் வேறு எந்த எண்ணமும்
வைக்காதீர்கள். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அவரவர்களுக்கென்ற பாகம்
இருக்கிறது. இப்பொழுது அந்த ஆத்மாவிற்கு சாந்தி மற்றும்
சக்தியின் சகயோகம் கொடுங்கள். இத்தனை அனைத்து தெய்வீக
பரிவாரத்தின் சகயோகம் பிராப்தி ஆகிக் கொண்டிருக்கிறது, எனவே
ஏதாவது யோசிப்பதற்கான விஷயம் இல்லை. இது மகான் தீர்த்த ஸ்தலம்
தான் இல்லையா. அவர் மகான் ஆத்மா., இது மகான் தீர்த்த ஸ்தலம்.
எப்பொழுதுமே மகான் தன்மையை மட்டும் யோசியுங்கள். நீக்கள்
அனைவரும் நினைவில் அமர்ந்திருக்கிறீர்கள் இல்லையா. ஒரு
செல்லமான குழந்தை தன்னுடைய இந்த பழைய உடலின் கணக்கு வழக்கை
முடித்துவிட்டு தன்னுடைய புதிய உடலை தயார் செய்வதற்காக
சென்றுவிட்டார், எனவே இப்பொழுது நீங்கள் அனைவரும் அந்த
பாக்கியவான் ஆத்மாவிற்கு சாந்தி, சக்தியின் சகயோகம் கொடுங்கள்.
இதுதான் விசேஷ சேவை. ஏன், என்ன என்பதில் செல்லாதீர்கள். ஆனால்
நீங்களே சக்தி சொரூபம் ஆகி உலகில் சாந்தியின் கிரணங்களை
பரப்புங்கள். சிரேஷ்ட ஆத்மா, வருமானம் செய்யக்கூடிய ஆத்மா எனவே
எதுவும் யோசிப்பதற்கான விஷயம் இல்லை. புரிந்ததா.
வரதானம்:
பரிஸ்தா சொரூபத்தின் நினைவு மூலமாக தந்தையின் பாதுகாப்பு
குடைநிழலை அனுபவம் செய்யக் கூடிய தடையை வென்றவர் ஆகுக .
அமிர்தவேளை எழுந்தவுடனேயே நான் ஃபரிஸ்தா என்பதை நினைவில் கொண்டு
வாருங்கள். பிரம்மா பாபாவிற்கு மனதிற்கு விருப்பமான இதே பரிசை
கொடுத்தீர்கள் என்றால் தினசரி அமிர்தவேளையில் பாப்தாதா உங்களை
தன்னுடைய இரு கரங்களுக்குள் அரவணைத்துக் கொள்வார். நீங்கள் நான்
பாபாவின் கரங்களுக்குள் அதீந்தீரிய சுகம் என்ற ஊஞ்சலில்
ஆடிக்கொண்டிருக்கிறேன் என்று அனுபவம் செய்வீர்கள். யார் ஃபரிஸ்தா
சொரூபத்தின் நினைவில் இருப்பார்களோ, அவர் எதிரில் ஏதாவது
பிரச்சனை மற்றும் தடை வந்தாலும் கூட அவர்களுக்காக தந்தை
பாதுகாப்பு குடை நிழல் ஆகிவிடுவார். எனவே தந்தையின் குடை நிழலை
மற்றும் அன்பை அனுபவம் செய்து கொண்டே தடையை வென்றவர் ஆகுங்கள்.
சுலோகன்:
சுக சொரூப ஆத்மா சுய நிலை மூலம் சூழ்நிலை மேல்
சகஜமாக வெற்றி அடைந்து விடுகிறது.