08.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே - நீங்கள் பாபாவிடம் பக்தியின் பலனை அடைவதற்காக வந்துள்ளீர்கள். யார் அதிகமாக பக்தி செய்திருக்கிறார்களோ அவர்களே ஞானத்தில் முன்னேறிச் செல்வார்கள்.

 

கேள்வி :

கலியுக இராஜ்யத்தில் எந்த இரண்டு விஷயங்கள் அவசியமாக இருக்கிறது? அது சத்யுகத்தில் இருக்காது?

 

பதில் :

கலியுக இராஜ்யத்தில் மந்திரி மற்றும் குருவின் அவசியம் இருக்கிறது. சத்யுகத்தில் இவை இரண்டும் இருக்காது. அங்கே யாருடைய ஆலோசனையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் சத்யுக இராஜ்ஜியமானது சங்கமத்தில் பாபாவினுடைய ஸ்ரீமத்படி உருவாகிறது. 21 தலைமுறை வரை செல்லும் அளவிற்கு ஸ்ரீமத் (அறிவுரை) கிடைக்கிறது. மேலும் அனைவரும் சத்கதியில் இருப்பதால் குருவினுடைய அவசியம் இல்லை.

 

ஓம் சாந்தி!

ஓம் சாந்தியினுடைய பொருள் என்ன? சுயதர்மத்தில் அமருங்கள் அல்லது தன்னை ஆத்மா என்று உணர்ந்து அமைதியில் அமருங்கள். இதற்கு தான் சுயதர்மத்தில் இருப்பது என்று பெயர். பகவான் வாக்கு - சுயதர்மத்தில் அமருங்கள். உங்களுடைய தந்தை உங்களைப் படிக்க வைக்கின்றார். எல்லையற்ற தந்தை எல்லையற்ற படிப்பு படிக்க வைக்கின்றார். ஏனென்றால் பாபா எல்லையற்ற சுகத்தை கொடுக்கக்கூடியவர். படிப்பினால் சுகம் கிடைக்கிறதல்லவா! தன்னை ஆத்மா என்று உணர்ந்து அமருங்கள் என இப்போது பாபா கூறுகின்றார். எல்லையற்ற தந்தை உங்களை வைரம் போல மாற்றுவதற்காக வந்திருக்கிறார். வைரம் போல தேவி தேவதைகள் தான் இருப்பார்கள். அவர்கள் எப்போது மாறுகிறார்கள்? இவ்வளவு உயர்ந்த புருஷோத்தமர் களாக எப்படி மாறுகின்றார்கள்? இதை தந்தையைத் தவிர வேறு யாரும் கூற முடியாது. நீங்கள் தான் பிரஜா பிதா பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்கள். மீண்டும் நீங்கள் தேவதைகளாக மாற வேண்டும். பிராமணர்களுக்குத் தான் குடுமி இருக்கிறது. நீங்கள் சூத்திரனிலிருந்து பிராமணராகின்றீர்கள். நீங்கள் பிரஜா பிதா பிரம்மாவின் வாய் வழி வம்சம், வயிற்று வழி வம்சம் கிடையாது. கலியுகத்தில் இருப்பவர் அனைவரும் வயிற்று வழி வம்சம். சாது சந்நியாசி, ரிஷி, முனி போன்ற அனைவரும் துவாபரயுகத்திலிருந்து வயிற்று வழி வம்சத்தினராக இருக்கின்றனர். இப்பொழுது பிரஜா பிதா பிரம்மா குமார், பிரம்மா குமாரிகளாகிய நீங்கள் மட்டும் தான் வாய் வழி வம்சத்தினராக மாறுகின்றீர்கள். இது உங்களுடைய மிக உயர்ந்த குலம். தேவதைகளை விட உயர்ந்தது. ஏனென்றால் உங்களைப் படிக்கவைக்க மனிதனிலிருந்து தேவதையாக மாற்றக்கூடிய தந்தையே வந்திருக்கின்றார். குழந்தைகளுக்கு புரிய வைக் கின்றார், ஏனென்றால் பக்திமார்கத்தை சார்ந்தவர்கள் இங்கே வருவதில்லை. இங்கே ஞானமார்கத்தை சார்ந்தவர்கள் தான் வருகின்றார்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் பக்தியின் பலனை அடைவதற்காக வருகிறீர்கள். இப்போது பக்தியின் பலனை யார் அடைவார்கள்? எல்லோரையும் விட அதிகமாக பக்தி செய்தவர்களே கல்லிலிருந்து தங்க புத்தியாக மாறுகின்றார்கள். அவர்கள் தான் வந்து ஞானம் பெறுகிறார்கள். ஏனென்றால் பக்தியின் பலனை பகவானே வந்துதான் கொடுக்க வேண்டும். இது நன்கு புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இப்போது நீங்கள் கயுகத்திலிருந்து சத்யுகத்திற்கு அதாவது விகாரியிலிருந்து நிர்விகாரியாக, புருஷோத்தமர்களாக மாறுகிறீர்கள். இலட்சுமி நாராயணன் போன்று மாறுவதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள். இவர்கள் பகவான், பகவதி என்றால் நிச்சயம் இவர்களை பகவான் தான் படிக்க வைப்பார். பகவான் வாக்கு, ஆனால் பகவான் என்று யாரைக் கூறுகின்றோம்? பகவான் ஒருவர்தான். பகவான் என்பவர் 100 பேரோ 1000 பேரோ இருக்க முடியாது. கல்லிலும் மண்ணிலும் இருக்க முடியாது. தந்தையை அறியாத காரணத்தால் பாரதம் எவ்வளவு ஏழையாகிவிட்டது! பாரதத்தில் இவர்களுடைய (இலட்சுமி நாராயணனுடைய) இராஜ்யம் இருந்தது. இவர்களுடைய குழந்தைகள் யாரெல்லாம் இருந்தார்களோ இராஜ்யத்திற்கு அதிபதியாக இருந்தார்கள். நீங்கள் இங்கு வந்திருப்பதே இராஜ்யத்திற்கு அதிபதியாவதற்காக. இவர்கள் இப்போது இல்லை யல்லவா? பாரதத்தில் இவர்களுடைய இராஜ்யம் இருந்தது. எப்பொழுது இந்த தேவி தேவதைகளுடைய இராஜ்யம் இருந்ததோ சூரியவம்சம் சந்திர வம்சத்தை சார்ந்தவர் இருந்தாரோ அப்பொழுது வேறு எந்த தர்மத்தினரும் இல்லை. இந்த நேரத்தில் மற்ற அனைத்து தர்மங்களும் இருக்கிறது. இந்த தர்மமே இல்லை. இது தான் அடித்தளம் இதை வேர் என்கிறோம். இந்த நேரத்தில் மனித சிருஷ்டி என்ற மரத்தின் வேர் முழுமையாக எரிந்து விட்டது. மற்ற அனைத்தும் நிற்கின்றது. இப்போது அவர்கள் அனைவரின் ஆயுளும் முடிவடையப்போகின்றது. இந்த மனித சிருஷ்டி என்பது பலவித மதங்கள் நிறைந்த மரம். விதவிதமான பெயர், ரூபம், தேசம், காலம் என பல வகைகள் இருக்கின்றன அல்லவா! இது வெரைட்டி மரம். எவ்வளவு பெரிய மரமாக இருக்கிறது. கல்பகல்பமாக, இந்த மரம் இற்றுப்போய் தமோபிரதானமாக ஆகும் போது நான் வருகிறேன் என பாபா புரியவைக்கின்றார். பாபா வாருங்கள், பதீதமான எங்களை பாவனமாக்குங்கள் என நீங்கள் அழைக்கிறீர்கள். பதீத பாவனன் என்று கூறும்போது நிராகார தந்தையின் நினைவு வருகிறது. சாகாரத்தின் நினைவு ஒருபோதும் வராது. பதீதபாவனர், சத்கதியை கொடுக்கக்கூடிய வள்ளல் ஒருவர்தான். சத்யுகமாக இருந்தபொழுது நீங்கள் சத்கதியில் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். மற்ற அனைவரும் கலியுகத்தில் இருக்கிறார்கள். நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். மேலானவரிலும் மேலானவர் மற்றும் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரே பகவான் தான் எனப்பாடப்படுகிறது. உன்னுடைய பெயரும் உயர்ந்தது, உன்னுடைய இருப்பிடமும் உயர்ந்தது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பரந்தாமத்தில் வசிக்கிறார் அல்லவா! இது மிகவும் எளிதாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. சத்யுகம், திரேதா, துவாபர், கலியுகம் பிறகு சங்கமயுகம். இதைப்பற்றி யாரும் அறியவில்லை. நாடகத்தில் இந்த பக்தி மார்க்கம் கூட உருவாக்கப்பட்டிருக்கிறது. பாபா இந்த பக்தி மார்க்கத்தை ஏன் உருவாக்கினார் எனக் கூறமுடியாது. இதுவே அனாதி ஆகும். நான் உங்களுக்கு இந்த நாடகத்தின் இரகசியத்தை புரியவைக்கின்றேன். நான் உருவாக்கினேன் என்றால் எப்பொழுது உருவாக்கினேன் எனக் கேட்பார்கள். இது அனாதியானது என பாபா கூறுகின்றார். எப்பொழுது ஆரம்பமானது என்ற கேள்வி வரமுடியாது. இந்த நேரத்தில் ஆரம்பமாகியது என்று கூறினால் அடுத்து எப்பொழுது முடியும் என கேட்பார்கள். ஆனால் முடிவதில்லை, இந்த சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் பிரம்மா, விஷ்ணு, சங்கருடைய சித்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள். இவர்கள் தேவதைகள். திருமூர்த்தியைக் காண்பிக்கின்றார்கள். அதில் உயர்ந்ததிலும் உயர்ந்த சிவனைக் காண்பிப்பதில்லை. அவரைத் தனியாக பிரித்து விடுகிறார்கள். இப்பொழுது பிரம்மா மூலமாக ஸ்தாபனை நடந்துகொண்டிருக்கிறது. நீங்கள் உங்களுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். இராஜ்ஜியத்தில் அனைத்து விதமான பதவிகளும் இருக்கிறது. ஜனாதிபதி, பிரதமமந்திரி, முதலமைச்சர்- இவர்கள் அனைவரும் ஆலோசனை வழங்கக்கூடியவர்கள். சத்யுகத்தில் ஆலோசனை வழங்கக்கூடிய யாருமே தேவையில்லை. இப்போது உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்ற ஆலோசனை, ஸ்ரீமத் அழியாததாக ஆகிவிடுகிறது. இப்பொழுது எவ்வளவு ஆலோசனை வழங்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்! நிறைய பேர் இருக்கிறார்கள்;. பைசா செலவு செய்து ஆலோசனை வழங்குவதற்காக அமைச்சராக ஆகிறார்கள். இவர்கள் இலஞ்சம் வாங்குகின்றனர், நிறைய சாப்பிடுகின்றனர் என அரசாங்கமே கூறுகிறது. இதுதான் கலியுகம். அங்கே இதுபோல் நடக்காது. மந்திரி போன்றவர்களின் அவசியம் இல்லை. இந்த வழி 21 ஜன்மங்களுக்கு தொடர்கிறது. உங்களுக்கு சத்கதி கிடைக்கிறது. அங்கே குருவின் அவசியம் இருக்காது. சத்யுகத்தில் குருவும் இல்லை, மந்திரியும் இல்லை. இப்பொழுது உங்களுக்கு அழியாத 21 தலைமுறைக்காக, 21 வயோதிக பருவத்திற்காக ஸ்ரீமத் கிடைக்கிறது. வயதானவராகி பின் சரீரத்தை விட்டு விட்டால் குழந்தை ஆவார்கள். பாம்பு ஒரு சட்டையை (தோல்) விட்டு விட்டு இன்னொரு தோலை எடுப்பது போல. விலங்குகளினுடைய எடுத்துக்காட்டு கொடுக்கப்படுகிறது. மனிதர்களுக்கு சிறிது கூட அறிவு இல்லை, ஏனென்றால் கல் புத்தியாக இருக்கின்றனர்.

 

இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நீங்கள் பிராமணர்கள், பிராமணிகள் என பாபா புரிய வைக்கிறார். அனைவரின் அழுக்கான துணிகள் துவைக்க... என கிரந்தத்தில் கூட படித்து கேட்டிருக்கிறீர்கள். அழுக்கு நிறைந்த துணிகளை போன்ற ஆத்மாக்களாகிய எங்களை தூய்மைப் படுத்துங்கள் என பகவானை அழைக்கிறார்கள். ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரின் தந்தையே! வந்து எங்களுடைய அழுக்கான துணியை தூய்மையாக்குங்கள். சரீரத்தைத் துவைக்க வேண்டியதில்லை. ஆத்மாக்களை தான் துவைக்க வேண்டும் ஏனென்றால் ஆத்மா தான் பதீதமாகியிருக்கிறது. பதீத ஆத்மாக்களை வந்து பாவனமாக்குங்கள். ஆகவே இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நான் இங்கே வரவேண்டி யிருக்கிறது என பாபா புரியவைக்கின்றார். நான் தான் ஞானக்கடல், தூய்மையின் கடல். நீங்கள் எல்லையற்ற அப்பாவிடமிருந்து எல்லையற்ற சொத்தை அடைகிறீர்கள். எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட சொத்தை அடைகிறீர்கள். எல்லைக்குட்பட்ட சொத்தில் துக்கம் நிறைய இருப்பதால் தந்தையை நினைவு செய்கிறார்கள். அளவற்ற துக்கம் இருக்கிறது. இந்த 5 விகாரங்கள் என்ற இராவணன் உங்களுடைய மிகப்பெரிய எதிரி என பாபா கூறுகின்றார். இது முதல், இடை, கடை துக்கம் கொடுக்கிறது. இனிமையான குழந்தைகளே ! இந்தப் பிறவியில் பிராமணனாக மாறி காமத்தை வெற்றியடைந்தால் உலகத்தை வென்றவர் ஆகலாம்.. நீங்கள் தேவதையாவதற்காக தூய்மையை தாரணை செய்கிறீர்கள். நீங்கள் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக வந்துள்ளீர்கள். இதுவே புருஷோத்தம சங்கமயுகம். இதில் முயற்சி செய்து தூய்மையாக வேண்டும். போன கல்பத்தில் யார் தூய்மையானார்களோ சூரிய வம்சத்தினராக, சந்திர வம்சத்தினராக இருந்தார்களோ அவர்கள் நிச்சயம் மாறுவார்கள். நேரம் தேவைப்படுகிறதல்லவா! பாபா மிகவும் எளிதான யுக்திகளைக் கூறுகின்றார். இப்போது பாபாவினுடைய குழந்தைகளாக மாறியிருக்கின்றீர்கள். இங்கே நீங்கள் யாரிடம் வந்துள்ளீர்? அவர் நிராகாரர். அவர் இந்த உடலைக் கடனாகப் பெற்றுள்ளார். இவர் பலபிறவிகளுடைய கடைசியிலும் கடைசிப் பிறவியில் இருக்கிறார் என அவரே தெரிவிக்கின்றார். ஆகையால் எல்லோரையும் விட அதிகமான பழைய உடல் இவருடையதே. நான் பழைய இராவணனின் அசுர உலகில் யாருக்கு தன்னுடைய பிறவிகளைப்பற்றி கூடத் தெரியாதோ அவருடைய உடலில் வருகிறேன். இவருடையதே பல பிறவிகளுடைய கடைசி பிறவி. எப்பொழுது இவர் வானப்பிரஸ்த நிலையை அடைகிறாரோ அப்பொழுது நான் பிரவேசமாகிறேன். எப்பொழுதும் வானப்பிரஸ்த நிலையில் தான் குருவிடம் செல்வார்கள். 60 வயது என்றாலே ஊன்று கோல் தான் எனக் கூறுவார்கள் அல்லவா! வீட்டில் இருந்தால் குழந்தைகளின் அடி (திட்டு) கிடைக்கும். ஆகையால் வீட்டிலிருந்து ஓடுங்கள். தந்தையை அடிப்பதற்க்குக் கூட பயப்படுவதில்லை, இவ்வாறும் குழந்தைகள் இருக்கின்றனர். இறந்து விட்டால் சொத்து நமக்கு கிடைக்கும் என கூறுகின்றனர். நிறைய வானப்பிரஸ்திகளினுடைய சத்சங்கம் இருக்கிறது. அனைவருக்கும் சத்கதியை கொடுக்கக் கூடியவர் ஒருவரே, அவர் சங்கமத்தில் வருகின்றார் என அறிவீர்கள். சத்யுகத்தில் நீங்கள் சத்கதியை அடைகின்ற பொழுது மற்ற அனைவரும் சாந்திதாமத்தில் இருக்கிறார்கள். இதற்க்குதான் அனைவருக்கும் சத்கதி என கூறப்படுகிறது. தந்தையைத் தவிர வேறு யாரையும் சத்கதி வள்ளல் எனக் கூறமுடியாது. யாரையும் ஸ்ரீ என்றோ ஸ்ரீ ஸ்ரீ என்றோ கூறமுடியாது. ஸ்ரீ என்றால் சிரேஷ்டமான தேவதைகள். ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ நாராயணன் என்று அவர்களை கூறுகின்றார்கள். அவர்களை மாற்றுபவர் யார்? ஸ்ரீ ஸ்ரீ என்று சிவபாபாவைத்தான் கூறவேண்டும். தந்தை தவறுகளை தெளிவுபடுத்தி கூறுகின்றார். நீங்கள் இத்தனை குருக்களிடம் சென்றீர்கள். இருந்தாலும் இவ்வாறுதான் இருக்கிறீர்கள்;. நீங்கள் மீண்டும் அதே குருவிடம் செல்வீர்கள். சக்கரம் மீண்டும் அவ்வாறே சுழலும். நீங்கள் சொர்க்கத்தில் இருக்கும் பொழுது சுகதாமமாக இருக்கிறது. தூய்மை, சுகம், சாந்தி அனைத்தும் அங்கே இருக்கிறது. அங்கே சண்டை போன்றவை இல்லை. மற்ற அனைவரும் சாந்தி தாமத்தில் சென்றுவிடுகிறார்கள். சத்யுகத்தை இலட்சக் கணக்கான வருடங்கள் என்று கூறியிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான வருடங்கள் என்பதெல்லாம் கிடையாது என பாபா கூறுகின்றார். இதுவோ 5000 வருடத்தின் விஷயம். மனிதர்களுக்கு 84 ஜன்மம் என கூறுகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஏணிப்படியில் கீழே இறங்கி தமேபிரதானமாகின்றார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என பாபா கூறுகிறார். நடிகராக இருந்து நாடகத்தினுடைய படைப்பவர், டைரக்டர், முக்கிய நடிகர்களை அறியாமருந்தால் என்ன சொல்வது. இந்த எல்லையற்ற நாடகத்தை எந்த மனிதர்களும் அறியவில்லை என பாபா கூறுகின்றார்;. தந்தையே வந்து புரியவைக்கின்றார். சரீரத்தை எடுத்து நடிக்கிறார்கள் என்றால் நாடகம் அல்லவா எனக் கூறுகிறார்கள். நாடகத்தின் முக்கிய நடிகர்கள் யார்? யாரும் கூறமுடியாது. இப்போது இந்த எல்லையற்ற நாடகம் எப்படி பேன் போல செல்கிறது எனக் குழந்தைகள் அறிகிறீர்கள். டிக் டிக் என சென்று கொண்டிருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையும் முக்கியமானவர். அவரே வந்து புரியவும் வைக்கின்றார் அனைவருக்கும் சத்கதியையும் கொடுக்கின்றார். சத்யுகத்தில் வேறு யாரும் இல்லை. மிகவும் குறைவானவர்களே இருக்கிறார்கள். அந்த குறைவானவர்களும் அனைரையும் விட அதிகமாக பக்தி செய்திருப்பார்கள். உங்களிடம் கண்காட்சி மற்றும் மியூசியத்தில் அதிகமாக பக்தி செய்தவர்களே வருவார்கள். ஒன்று சிவனுடைய பக்தி செய்தல். இதற்கு அவ்விபச்சாரி (கலப்படமற்ற) பக்தி என்பர். பிறகு பலருடைய பக்தி செய்து விபச்சாரி ஆகியிருக்கிறார்கள். இப்போது மிகவும் முற்றிலும் தமேபிரதானமான பக்தி இருக்கிறது. முதலில் சதோபிரதானமான பக்தி இருந்தது, பிறகு ஏணியில் இறங்கி தமோபிரதானமாகிவிட்டார்கள். இது போன்ற நிலை ஏற்படும் போது தான் அனைவரையும் சதோபிரதானமாக மாற்றுவதற்காக தந்தை வருகிறார். இந்த எல்லையற்ற நாடகத்தைக் கூட நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. எல்லையற்ற தந்தையிடம் எல்லையற்ற சொத்தை அடைவதற்காக நிச்சயம் தூய்மையாக வேண்டும். இப்போது தூய்மையினுடைய சொத்தை அடைந்தால்தான் அதாவது காமத்தை வெல்லும் போது தான் உலகத்தை வென்றவர் ஆகமுடியும்.

 

2. எல்லையற்ற தந்தையிடம் படிப்பைப் படித்து தன்னை சோழியிலிருந்து வைரம் போல மாற்றிக்கொள்ள வேண்டும். எல்லையற்ற சுகத்தை அடையவேண்டும். இப்போது மனிதனிலிருந்து தேவதையாக மாற்றுவதற்காக பாபா நம் எதிரில் இருக்கிறார். இப்போது நம்முடையது மிக உயர்ந்த பிராமணகுலம், என்ற போதை இருக்கட்டும்.

 

வரதானம்:

அசையாத நிச்சயத்தின் மூலம் எளிதாக வெற்றியை அனுபவம் செய்யக்கூடிய, சதா மகிழ்ச்சி நிறைந்த, கவலையற்றவர் ஆகுக.

 

நிச்சயத்தின் அடையாளம் எளிதாக வெற்றி அடைவது. ஆனால் நிச்சயம் என்பது அனைத்து விஷயங்களிலும் இருக்க வேண்டும். பாபா மீது மட்டும் நம்பிக்கை உள்ளது என்பதல்ல, தன் மீது, பிராமணக் குடும்பம் மீது மற்றும் டிராமாவின் ஒவ்வொரு காட்சியின் மீதும் முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். சிறு விசயத்தில் நிச்சயம் என்பது நழுவி விடுகிறது என்று இருக்கக் கூடாது. சதா இந்த நினைவு இருக்க வேண்டும் -- வெற்றிக்கான விதி நழுவிச் செல்ல முடியாது. அத்தகைய நிச்சயபுத்தி உள்ள குழந்தைகள், என்னவாயிற்று, ஏன் இப்படி நடந்தது இந்த அனைத்துக் கேள்விகளையும் கடந்து, சதா கவலையற்று, சதா மகிழ்ச்சி நிறைந்தவராக இருப்பார்கள்.

 

சுலோகன்:

சமயத்தை இழப்பதற்கு பதிலாக உடனுக்குடன் நிர்ணயம் செய்து, தீர்வு காணுங்கள்.

 

ஓம்சாந்தி