09.10.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! தந்தை உங்களுக்கு கற்பிக்கும் ஞானத்தில் "ரித்தி சித்தி"யின் விஷயம் கிடையாது. படிப்பில் "சூ-மந்திரத்தினால்" ஒன்றும் காரியம் நடப்பதில்லை.

 

கேள்வி:

தேவதைகளை அறிவுள்ளவர்கள் என்று கூறுவார்கள், மனிதர்களை அல்ல - ஏன்?

 

பதில்:

ஏனெனில் தேவதைகள் சர்வகுணங்களால் நிறைந்தவர்கள். மேலும் மனிதர்களிடம் எந்த குணமும் கிடையாது. தேவதைகள் அறிவாளிகள் ஆவார்கள். அதனால் தான் மனிதர்கள் அவர்களை பூஜை செய்கிறார்கள். அவர்களுடைய பேட்டரி சார்ஜ் ஆகி உள்ளது. எனவே அவர்களுக்கு "வர்த் பவுண்டு" – மதிப்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. பேட்டரி டிஸ் சார்ஜ் ஆகிவிடும் பொழுது (வர்த் பென்னி) ஒரு பைசா அளவு கூட மதிப்பு இல்லாதவர்களாக ஆகி விடுகிறார்கள். அப்பொழுது அறிவற்றவர்கள் என்று கூறுவார்கள்.

 ஓம் சாந்தி.

இது பாடசாலை ஆகும் என்பதை தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைத்துள்ளார். இது படிப்பு ஆகும். இந்த படிப்பினால் இந்த தேவதை பதவி பலன்களாகக் கிடைக்கிறது. இதனை பள்ளிக் கூடம் அல்லது (யுனிவர்சிட்டி) பல்கலைக்கழகம் என்று புரிந்திருக்க வேண்டும். இங்கு மிக தூரத்திலிருந்து படிப்பதற்காக வருகிறார்கள். என்ன படிக்க வருகிறார்கள்? இந்த (ஏம்-ஆப்ஜெக்ட்) லட்சியம் புத்தியில் உள்ளது. நாம் கல்வியை கற்க வருகிறோம். கற்பிப்பவர் ஆசிரியர் என்று கூறப்படுகிறார். "பகவானுவாச" - பகவான் கூறுகிறார் என்பதும் கீதையாகும். வேறு எந்த விஷயமும் கிடையாது. கீதை என்பது கற்பிப்பவரினுடைய இங்கு புத்தகம் உள்ளது. ஆனால் புத்தகம் ஆகியவை ஒன்றும் வைத்து படிப்பிப்பது இல்லை. கீதை ஒன்றும் கையில் இல்லை. இதுவோ "பகவானுவாச" (பகவான் கூறுகிறார்) என்பதாகும். மனிதனை பகவான் என்று கூற முடியாது. பகவான் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒருவர் ஆவார். மூலவதனம், சூட்சும வதனம், ஸ்தூல வதனம் - இது தான் முழு உலகம் (படைப்பு) ஆகும். நாடகம் ஒன்றும் சூட்சும வதனத்தில் அல்லது மூல வதனத்தில் நடப்பதில்லை. நாடகம் இங்கு தான் நடக்கிறது. 84ன் சக்கரம் இங்கு உள்ளது. இதற்குத் தான் 84ன் சக்கரத்தின் நாடகம் என்று கூறப்படுகிறது. இது ஏற்கனவே அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். ஏனெனில் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் - அவருடைய வழி உங்களுக்குக் கிடைக்கிறது. மற்ற எந்த பொருளும் கிடையாது. ஒருவருக்குத் தான் சர்வ சக்திவான் வர்ல்டு ஆல்மைட்டி அத்தாரிட்டி என்று கூறப்படுகிறது. அதாரிட்டி என்பதன் பொருளைக் கூட சுயம் அவரே புரிய வைக்கிறார். இதை மனிதர்கள் புரிந்து கொள்வது இல்லை. ஏனெனில் அவர்கள் எல்லோருமே தமோபிரதானமானவர்கள் ஆவார்கள். இது கலியுகம் என்றே கூறப்படுகிறது. அப்படியின்றி ஒரு சிலருக்கு இது கலியுகம் ஆகும். ஒரு சிலருக்காக சத்யுகம் ஆகும். ஒரு சிலருக்காக திரேதா ஆகும் என்பது கிடையாது. இப்பொழுது இருப்பதே நரகமாக. எந்த ஒரு மனிதனும் "எங்களிடம் பணம், செல்வம் நிறைய உள்ளது. எனவே எங்களுக்கு சொர்க்கமாக உள்ளது" என்று கூற முடியாது. அவ்வாறு ஆக முடியாது. இதுவோ அமைந்த, அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். சத்யுகம் கடந்து போய் விட்டது. இச்சமயத்தில் இருக்கவும் முடியாது. இவை எல்லாமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். தந்தை வந்து எல்லா விஷயங்களையும் புரிய வைக்கிறார். சத்யுகத்தில் இவர்களுடைய ஆட்சி இருந்தது. பாரதவாசிகள் அச்சமயத்தில் சத்யுகத்தினர் என்று அழைக்கப்பட்டார்கள். இப்பொழுது அவசியம் கலியுகத்தினர் என்று அழைக்கப்படுவார்கள். சத்யுகத்தினராக இருக்கும்பொழுது அதற்கு சொர்க்கம் என்று கூறப்பட்டது. அப்படியின்றி நரகத்தையும் சொர்க்கம் என்று கூறுவார்கள் என்பதல்ல. மனிதர்களினுடையதோ அவரவர் கருத்துக்களாக உள்ளன. பணத்தின் சுகம் இருந்தால் தாங்கள் சொர்க்கத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள். என்னிடமோ நிறைய செல்வம் உள்ளது. எனவே நான் சொர்க்கத்தில் இருக்கிறேன். ஆனால் கிடையாது என்று விவேகம் கூறுகிறது. இதுவோ இருப்பதே நரகமாக. ஒருவரிடம் 10-20 லட்சங்கள் கூட இருக்கலாம். ஆனால் இது இருப்பதே நோயாளிகளின் உலகமாக. சத்யுகத்தை நோயற்ற உலகம் என்பார்கள். உலகம் இதுவே தான். சத்யுகத்தில் இதை யோகி உலகம் என்பார்கள். கலியுகத்திற்கு போகி உலகம் என்று கூறப்படுகிறது. அங்கு இருப்பவர்கள் யோகி ஆவார்கள். ஏனெனில் விகாரத்தின் விஷயங்கள் அங்கு இருப்பது இல்லை. எனவே இது பள்ளிக் கூடம் ஆகும். இதில் சக்தியின் விஷயம் கிடையாது. ஆசிரியர் சக்தி வெளிப்படுத்துகிறாரா என்ன? நான் இன்னாராக ஆகிவிடுவோம் என்ற லட்சியம் (ஏம் ஆப்ஜெக்ட்) இருக்கிறது. நீங்கள் இந்த படிப்பின் மூலம் மனிதனிலிருந்து தேவதையாக ஆகிறீர்கள். அப்படியின்றி ஏதோ மாயாஜாலம், சூ மந்திரம் அல்லது ரித்தி சித்தியின் விஷயங்கள் அல்ல. இதுவோ பள்ளிக் கூடம் ஆகும். பள்ளிக் கூடத்தில் "ரித்தி சித்தி"யின் விஷயம் இருக்குமா என்ன? படித்து ஒருவர் மருத்துவர் மற்றொருவர் வழக்கறிஞர் ஆகிறார். இந்த லட்சுமி நாராயணரும் மனிதர்களாக இருந்தார்கள். ஆனால் தூய்மையாக இருந்தார்கள். எனவே அவர்களுக்கு தேவி தேவதை என்று கூறப்படுகிறது. அவசியம் தூய்மை ஆக வேண்டும். இது இருப்பதே பதீதமான (தூய்மையற்ற) பழைய உலகமாக.

 

மனிதர்களோ பழைய உலகம் ஆவதில் லட்சக்கணக்கான வருடங்கள் உள்ளன என்று நினைக்கிறார்கள். கலியுகத்திற்குப் பிறகு தான் சத்யுகம் வரும். இப்பொழுது நீங்கள் சங்கமத்தில் உள்ளீர்கள். இந்த சங்கமம் பற்றி யாருக்குமே தெரியாது. சத்யுகத்திற்கு லட்சக்கணக்கான வருடங்கள் கொடுத்து விடுகிறார்கள். இந்த விஷயங்களை தந்தை வந்து புரிய வைக்கிறார். அவருக்கு "சுப்ரீம் ஸோல்" பரமாத்மா என்று கூறப்படுகிறது. ஆத்மாக்களின் தந்தையை பாபா என்பார்கள். வேறு எந்த பெயரும் இருப்பதில்லை. பாபாவின் பெயர் சிவன் என்பதாகும். சிவனின் கோவிலுக்கும் செல்கிறார்கள். பரமாத்மா சிவனுக்கு நிராகாரமானவர் என்றே கூறப்படுகிறது. அவருக்கு மனித உடல் இல்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கு பாகத்தை நடிக்க வருகிறீர்கள். அப்பொழுது உங்களுக்கு மனித உடல் கிடைக்கிறது. அவர் சிவன் ஆவார். நீங்கள் சாலிகிராமங்கள் எனப்படுவீர்கள். சிவன் மற்றும் சாலிகிராமங்களுக்கு பூஜை கூட நடக்கிறது. ஏனெனில் (சைதன்யமாக) உயிருள்ளவர்களாக வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார்கள். ஏதோ நல்லது செய்து விட்டுச் சென்றுள்ளார்கள். அதனால் தான் அவர்களுடைய பெயர்களின் புகழ் பாடப்படுகிறது. அதாவது பூஜிக்கப்படுகிறார்கள். முந்தைய பிறவி பற்றியோ யாருக்கும் தெரியாது. இந்த பிறவியிலோ பாடல் பாடுகிறார்கள். தேவி தேவதைகளை பூஜிக்கிறார்கள். இந்த பிறவியிலோ நிறைய (லீடர்ஸ்) தலைவர்கள் கூட ஆகி விட்டுள்ளார்கள். யார் நல்ல நல்ல சாது சந்நியாசி ஆகியோர் வாழ்ந்து சென்றுள்ளார்களோ அவர்களுடைய பெயர் புகழுக்காக தபால் முத்திரை கூட (ஸ்டாம்ப்) வெளியிடுகிறார்கள். இங்கு பிறகு எல்லோரையும் விட மிக அதிகமாக புகழ் யாருக்கு பாடப் பட வேண்டும்? எல்லோரையும் விட பெரியதிலும் பெரியவர் யார்? உயர்ந்ததிலும் உயர்ந்தவரோ ஒரு பகவான் தான். அவர் நிராகாரமானவர் மற்றும் அவரது மகிமை முற்றிலும் தனியானது ஆகும். தேவதைகளின் மகிமை தனியானது ஆகும். மனிதர்களது தனியானது ஆகும். மனிதனை தேவதை என்று கூற முடியாது. தேவதைகளிடம் சர்வ குணங்கள் இருந்தன. லட்சுமி நாராயணர் வாழ்ந்து சென்றுள்ளார்கள் அல்லவா? அவர்கள் தூய்மையானவர்களாக இருந்தார்கள். உலகிற்கு அதிபதியாக இருந்தார்கள். அவர்களுக்கு பூஜையும் செய்கிறார்கள். ஏனெனில் தூய்மையானவர்களாக பூஜிக்கத் தக்கவர்களாக இருக்கிறார்கள். தூய்மையற்றவர்களை பூஜிக்கத் தக்கவர் என்று கூற மாட்டார்கள். தூய்மை யற்றவர்கள் (அபவித்திரமானவர்கள்) எப்பொழுதும் (பவித்திரமானவர்களை) தூய்மையானவர்களை பூஜிக்கிறார்கள். கன்னிகை தூய்மையானவர். எனவே பூஜிக்கப்படுகிறார். (பதீதமாக) தூய்மையற்றவர் ஆகும் பொழுது எல்லோருடைய காலிலும் விழ வேண்டி வருகிறது. இச்சமயத்தில் எல்லோரும் பதீதமாக (தூய்மையற்றவர்களாக) இருக்கிறார்கள். சத்யுகத்தில் எல்லோரும் பாவனமாக (தூய்மையாக) இருந்தார்கள். அது இருப்பதே தூய்மையான உலகமாக. கலியுகம் என்பது பதீதமான (தூய்மையற்ற) உலகம். அதனால் தான் பதீத பாவன தந்தையை அழைக்கிறார்கள். தூய்மையாக இருக்கும்பொழுது அழைப்பதில்லை. என்னை சுகத்தில் யாருமே நினைவு செய்வதில்லை என்று சுயம் தந்தை கூறுகிறார். பாரதத்தினுடையதே விஷயம் ஆகும். தந்தை வருவதே பாரதத்தில் தான். பாரதம் தான் இச்சமயம் பதீதமாக (தூய்மையற்றதாக) ஆகி உள்ளது. பாரதம் தான் (பாவனமாக) தூய்மையாக இருந்தது. பாவன தேவதைகளைப் பார்க்க வேண்டும் என்றால் கோவிலில் போய் பாருங்கள். தேவதைகள் எல்லோருமே பாவனமானவர்கள் ஆவார்கள். அவர்களில் யார் முக்கிய முக்கியமான தலைவர்களாக இருக்கிறார்களோ அவர்களை கோவில்களில் காண்பிக்கிறார்கள். இந்த லட்சுமி நாராயணருடைய ராஜ்யத்தில் எல்லோரும் பாவனமாக இருந்தார்கள் - ராஜா ராணி எப்படியோ அப்படியோ பிரஜைகள் கூட. இச்சமயம் எல்லோரும் பதீதமாக (தூய்மையற்று) இருக்கிறார்கள். "ஹே பதீத பாவனரே வாருங்கள்" என்று எல்லோரும் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். சந்நியாசிகள் ஒரு பொழுதும் கிருஷ்ணரை பகவான் அல்லது பிரம்மம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பகவானோ நிராகாரமானவர் ஆவார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவருடைய பாடம் கூட நிராகார முறையில் பூஜிக்கப்படுகிறது. அவருடைய மிகச் சரியான பெயர் சிவன் என்பதாகும். ஆத்மாவாகிய நீங்கள் இங்கு வந்து சரீரத்தை தாரணை செய்யும் பொழுது உங்களுக்கு பெயரிடப்படுகிறது. ஆத்மாவோ அழியாதது ஆகும்.சரீரம் அழியக் கூடியது ஆகும். ஆத்மா ஒரு சரீரத்தை விடுத்து மற்றொரு சரீரம் போய் எடுக்கும். 84 பிறவிகளோ வேண்டும் அல்லவா? 84 லட்சம் இருக்காது. எனவே இதே உலகம் சத்யுகத்தில் புதியதாக இருந்தது. சத்தியமானதாக (ரைட்டியஸ்) இருந்தது என்று தந்தை புரிய வைக்கிறார். இதே உலகம் பிறகு சத்தியமற்றதாக (அன்ரைட்டியஸ்) ஆகிவிடுகிறது. அது சத்தியமான கண்டமாகும். எல்லோருமே சத்தியத்தைப் பேசுபவர்களாக இருப்பார்கள். பாரதத்திற்கு உண்மையான கண்டம் என்று கூறப்படுகிறது. பொய்யான கண்டம் தான் பிறகு உண்மையான கண்டமாக ஆகிறது. உண்மையான தந்தை தான் வந்து உண்மையான கண்டத்தை அமைக்கிறார். அவருக்கு உண்மையான பாத்ஷா (தலைவன்) ட்ரூத் (உண்மை) என்று கூறப்படுகிறது. இது இருப்பதே பொய்யான கண்டமாக. மனிதர்கள் கூறுவது எல்லாமே பொய்யாக உள்ளது. உணர்வுள்ள புத்திசாலியானவர்கள் தேவதைகள் ஆவார்கள். அவர்களை மனிதர்கள் பூஜிக்கிறார்கள். அறிவுள்ளவர்கள் மற்றும் அறிவில்லாதவர்கள் என்று கூறப்படுகிறது. அறிவுள்ளவர்களாக யார் ஆக்குகிறார் மற்றும் அறிவற்றவராக யார் ஆக்குகிறார்கள் என்பதையும் தந்தை கூறுகிறார். அறிவுள்ளவராக சர்வ குணங்களில் நிறைந்தவராக ஆக்குபவர் தந்தை ஆவார். அவர் சுயம் வந்து தனது அறிமுகத்தை அளிக்கிறார். எப்படி நீங்கள் ஆத்மா ஆவீர்கள். பிறகு இங்கு சரீரத்தில் பிரவேசம் செய்து பாகத்தை நடிக்கிறீர்கள். நான் கூட ஒரே ஒரு முறை இவருக்குள் பிரவேசம் செய்கிறேன். அவர் ஒரே ஒருவர் ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவருக்குத் தான் சர்வ சக்திவான் என்று கூறப்படுகிறது. எந்த ஒரு மனிதனையும் நாம் சர்வசக்திவான் என்று கூற முடியாது. லட்சுமி நாராயணரைக் கூட கூற முடியாது. ஏனெனில் அவர்களுக்கும் சக்தி அளிப்பவர் வேறு யாரோ ஒருவர் இருக்கிறார். பதீதமான (தூய்மையற்ற) மனிதர்களிடம் சக்தி இருக்க முடியாது. ஆத்மாவில் இருக்கும் சக்தி மெல்ல மெல்ல (டி கிரேட்) குறைந்து கொண்டே போகிறது. அதாவது ஆத்மாவில் இருந்த சதோபிரதானமான சக்தி தமோபிரதானமான சக்தியாக ஆகிவிடுகிறது. எப்படி மோட்டாரில் எண்ணெய் தீர்ந்து விடும்பொழுது மோட்டார் நின்று விடுகிறது. இந்த பேட்டரி அடிக்கடி டிஸ்-சார்ஜ் ஆவது இல்லை. இதற்கு முழுமையாக நேரம் கிடைத்துள்ளது. கலியுக கடைசியில் பேட்டரி மந்தமாகி விடுகிறது. முதலில் சதோபிரதானமாக உலகத்தின் அதிபதியாக இருந்தவர்கள் இப்பொழுது தமோபிரதானமாக ஆகி உள்ளார்கள். எனவே அந்த வலிமை குறைந்துவிட்டுள்ளது. சக்தி இல்லாமல் ஆகியுள்ளது. (வர்த் நாட் பென்னி) ஒரு காசுக்கு கூட மதிப்பில்லாதவர்களாக ஆகி விடுகிறார்கள். பாரதத்தில் தேவி தேவதா தர்மம் இருக்கும் பொழுது (வர்த் பவுண்டு) மதிப்புடையவர்களாக இருந்தார்கள். "ரிலிஜன் இஸ் மைட்" தர்மமே (மதம்) வலியது என்று கூறப்படுகிறது. தேவதா தர்மத்தில் வலிமை உள்ளது. உலகத்தின் அதிபதியாக இருந்தார்கள். என்ன வலிமை இருந்தது? சண்டைக்கான பலம் ஒன்றும் இருக்கவில்லை. வலிமை சர்வசக்திவான் தந்தையிடமிருந்து கிடைக்கிறது. பலம் என்பது என்ன பொருள்?

 

இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! உங்களுடைய ஆத்மா சதோபிரதானமாக இருந்தது. இப்பொழுது தமோபிரதானமாக உள்ளது என்பதை தந்தை புரிய வைக்கிறார். உலகின் அதிபதிக்குப் பதிலாக உலகின் அடிமை ஆகி விட்டுள்ளீர்கள். இந்த 5 விகாரங்கள் என்ற இராவணன் உங்களுடைய முழு பலத்தையும் பறித்து விடுகிறான். எனவே பாரதவாசிகள் ஏழைகளாக ஆகி விட்டுள்ளார்கள். விஞ்ஞானிகளிடம் நிறைய பலம் உள்ளது என்று நினைக்காதீர்கள். அது வலிமை கிடையாது. இது ஆன்மீக பலம் ஆகும். இது சர்வ சக்திவான் தந்தையிடம் யோகம் கொள்வதால் (நினைவின் தொடர்பால்) கிடைக்கிறது. சையன்ஸ் (விஞ்ஞானம்) மற்றும் சைலன்ஸ்க்கிடையே (அமைதி) இச்சமயம் யுத்தம் நடப்பது போலுள்ளது.நீங்கள் சைலன்ஸ்-ல் செல்கிறீர்கள். அதனுடைய பலம் உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. சைலன்ஸ்-ன் பலம் பெற்று நீங்கள் சைலன்ஸ் (அமைதி) உலகிற்குச் சென்று விடுவீர்கள். தந்தையை நினைவு செய்து தங்களை சரீரத்திலிருந்து விடுவித்துக் கொண்டு விடுகிறீர்கள். பக்தி மார்க்கத்தில் பகவானிடம் செல்வதற்காக நீங்கள் மிகவுமே பலவிததத்தில் சிரமம் மேற் கொண்டீர்கள். ஆனால் சர்வ வியாபி என்று கூறிய காரணத்தால் வழி கிடைப்பதே இல்லை. தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளார்கள். எனவே இது படிப்பு ஆகும். படிப்பை சக்தி என்று கூற மாட்டார்கள். முதலிலோ தூய்மை ஆகுங்கள் மற்றும் சிருஷ்டியின் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்ற ஞானத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஞானம் நிறைந்தவரோ (நாலேஜ்ஃபுல்) தந்தையே ஆவார். இதில் சக்தியின் விஷயம் கிடையாது. சிருஷ்டி சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்பது குழந்தைகளுக்குத் தெரியாது. நடிகர்களாகிய நீங்கள் தத்தமது பாகத்தை நடிப்பவர்கள் அல்லவா? இது எல்லையில்லாத நாடகம் ஆகும். முன்பு மனிதர்களுடைய நாடகம் நடந்து கொண்டிருந்தது. அதில் நடிகர்களை ஒருவருக்குப் பதிலாக மற்றவரை மாற்ற முடியும். இப்பொழுது திரைப்படம் (பயோஸ் கோப்) அமைந்துள்ளது. தந்தைக் கூட திரைப்படத்தின் உதாரணம் அளித்து புரிய வைப்பது சுலபமாக உள்ளது. அது சிறிய திரைப்படம். இது பெரியது ஆகும். நாடகத்தில் நடிகர்களை மாற்ற முடியும். இதுவோ அனாதி நாடகம் ஆகும். ஒரு முறை படம் பிடித்துவிட்டால் (ஷூட்டிங்) பின் அதை மாற்ற முடியாது. இந்த முழு உலகம் எல்லையில்லாத திரைப்படம் ஆகும். சக்தியின் எந்த ஒரு விஷயமே கிடையாது. அம்பாளை சக்தி என்கிறார்கள். ஆனால் பிறகும் பெயரோ உள்ளது. அவரை அம்பாள் என்று ஏன் கூறுகிறார்கள். என்ன செய்து சென்றுள்ளார்? உயர்ந்ததிலும் உயர்ந்தவர் அம்பாள் மற்றும் லட்சுமி ஆவார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். அம்பாள் தான் பிறகு லட்சுமி ஆகிறார். இதுவும் குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்துள்ளீர்கள். நீங்கள் ஞானம் நிறைந்தவராகவும் ஆகிறீர்கள் மற்றும் உங்களுக்கு தூய்மையும் கற்பிக்கிறார். அந்த தூய்மை அரைக் கல்பம் நடக்கிறது. பிறகு தந்தை தான் வந்து தூய்மையின் வழியைக் கூறுகிறார். அவரை இந்த நேரத்திற்காகத் தான் "வந்து வழியைக் கூறுங்கள் பிறகு வழி காட்டியாகவும் (கைடு) ஆகுங்கள்" என்று அழைக்கிறார்கள். அவர் பரம ஆத்மா ஆவார். சுப்ரீம்- உயர்ந்தவரின் படிப்பு மூலமாக ஆத்மா சுப்ரீம் உயர்ந்தவர் ஆகிறார். சுப்ரீம் என்று தூய்மைக்குக் கூறப்படுகிறது. இப்பொழுது இங்கோ எல்லோரும் பதீதமாக (தூய்மையற்றவராக) இருக்கிறார்கள். தந்தை என்றைக்குமே பாவனமாக (எவர் பாவனம்) உள்ளார். வித்தியாசம் உள்ளது அல்லவா? அந்த எவர் பாவனமானவர் தான் வந்து அனைவருக்கும் ஆஸ்தி அளிக்கிறார் மற்றும் கற்பிக்கிறார். எனவே சுயம் வந்து "நான் உங்களுடைய தந்தை ஆவேன்" என்பதைக் கூறுகிறார். எனக்கு ரதமோ அவசியம் வேண்டும். இல்லையென்றால் ஆத்மா எப்படிப் பேச முடியும்? ரதம் கூட பிரசித்தமானது. பாக்கியசாலிரதம் என்று பாடுகிறார்கள். எனவே பாக்கியசாலி ரதம் மனிதனினுடையது ஆகும். குதிரை வண்டியின் விஷயம் கிடையாது. மனிதர்களுக்கு வந்து புரிய வைக்கும் வகையில் மனிதனினுடைய ரதம் தான் வேண்டும். அவர்கள் பிறகு குதிரை வண்டியைக் காண்பித்துள்ளார்கள். பாக்கியசாலி ரதம் என்று மனிதருக்கு கூறப்படுகிறது. இங்கோ ஒரு சில மிருகங்களுக்கும் கூட மிகவும் நல்ல சேவை கிடைக்கிறது. அந்த மாதிரி சேவை மனிதர்களுக்குக் கூட ஆவது இல்லை. நாய்மீது எவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள். குதிரையை, பசுவைக் கூட அன்புடன் நேசிக்கிறார்கள். நாய்களினுடைய கண்காட்சி நடத்தப்படுகிறது. இவை எல்லாம் அங்கு இருக்காது. லட்சுமி நாராயணர் நாய்களை வளர்ப்பார்களா என்ன?

 

இச்சமயத்தில் மனிதர்கள் எல்லோருமே தமோபிரதான புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர்களை சதோபிரதானமாக ஆக்க வேண்டும். அங்கோ மனிதர்கள் குதிரைகளுக்கு சேவை செய்யும் வகையில் அந்த மாதிரி குதிரைகள் ஆகியவை இருக்காது. எனவே உங்கள் நிலைமையைப் பாருங்கள். என்னவாக ஆகிவிட்டுள்ளது என்று தந்தை புரிய வைக்கிறார். இராவணன் இந்த நிலைமை செய்து விட்டுள்ளான். இவன் உங்கள் எதிரி ஆவான். ஆனால் இந்த எதிரியின் ஜென்மம் எப்பொழுது ஆகிறது என்பது உங்களுக்குத் தெரியாது. சிவனின் ஜென்மம் பற்றிக் கூடத் தெரியாது. இராவணனின் பிறவி பற்றிக் கூட தெரியாது. திரேதாவின் கடைசி மற்றும் துவாபரத்தின் ஆரம்பத்தில் இராவணன் வருகிறான் என்று தந்தை கூறுகிறார். அவனுக்கு 10 தலைகள் ஏன் கொடுத்துள்ளார்கள்? ஒவ்வொரு வருடமும் ஏன் எரிக்கிறார்கள்? இது கூட யாருக்கும் தெரியாது. இப்பொழுது நீங்கள் மனிதனிலிருந்து தேவதை ஆவதற்காகப் படிக்கிறீர்கள். யார் படிப்பதில்லையோ அவர்கள் தேவதை ஆக முடியாது. அவர்கள் இராவண இராஜ்யம் ஆரம்பமாகும் பொழுது வருவார்கள். நாம் தேவதா தர்மத்தினராக இருந்தோம். இப்பொழுது மீண்டும் நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நான் ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குர் பிறகும் வந்து உங்களுக்கு இது போல கற்பிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இச்சமயத்தில் முழு சிருஷ்டியின் (படைப்பின்) விருட்சம் பழையதாக உள்ளது. ஒரே ஒரு தேவதா தர்மம் இருக்கும் பொழுது புதியதாக இருந்தது. பிறகு மெல்ல மெல்ல கீழே இறங்குகிறார்கள். தந்தை உங்களுக்கு 84 பிறவிகளின் கணக்கைக் கூறுகிறார். ஏனெனில் தந்தை (நாலேஜ்ஃபுல்) ஞானக் கடல் ஆவார் அல்லவா? நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. (சைலன்ஸ்) அமைதியின் பலத்தை சேமிப்பு செய்ய வேண்டும். அமைதி பலத்தினால் (சைலன்ஸ்) அமைதியான உலகத்திற்குச் செல்ல வேண்டும். தந்தையின் நினைவின் மூலம் சக்தி பெற்று அடிமைத் தனத்திலிருந்து விடுபட வேண்டும். எஜமானன் ஆக வேண்டும்.

 

2. சுப்ரீம்-ன் (உயர்ந்தவரின்) படிப்பை படித்து ஆத்மாவை சுப்ரீம் ஆக ஆக்க வேண்டும். தூய்மையினுடைய வழிப்படி நடந்து தூய்மையாகி மற்றவர்களைத் தூய்மையாக்க வேண்டும். (கைடு) வழி காட்டி ஆக வேண்டும்.

 

வரதானம்:

தடைகளை உருவாக்கும் ஆத்மாவை ஆசிரியர் எனப் புரிந்து, அவரிடம் பாடம் கற்றுக் கொள்ளக் கூடிய அனுபவி மூர்த்தி ஆகுக.

 

எந்த ஆத்மாக்கள் தடைகளை ஏற்படுத்துவதற்கு நிமித்தமாகிறார்களோ, அவர்களை, விக்னங்களை உருவாக்குபவராகப் பார்க்காதீர்கள். அவர்களை, நமக்குப் பாடம் கற்பிப்பதற்கு, முன்னேறச் செய்வதற்கு நிமித்த ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள். நிந்தனை செய்பவர் நண்பர் எனச் சொல்கிறீர்கள் என்றால், அவர் விக்னங்களைக் கடந்து செல்ல வைத்து, அனுபவி ஆக்கக் கூடிய ஆசிரியர் ஆகிறார். எனவே தடை ஏற்படுத்தும் ஆத்மாவை, அந்தப் பார்வையில் பார்ப்பதற்கு பதிலாக, சதா காலத்திற்கும் விக்னங்களைக் கடந்து செல்ல வைப்பதற்கு நிமித்தமான, அசையாத, உறுதியானவராக ஆக்குவதற்கு நிமித்தமானவர் எனப் புரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் இன்னும் கூட அனுபவங்களின் அத்தாரிட்டி அதிகரித்துக் கொண்டே செல்லும்.

 

சுலோகன் :

புகார்களின் கோப்புகளை (File) முடித்து விட்டு, மிக நல்லவராக (Fine), குறைகள் நீங்கிய, மாசற்ற, தூய்மை உணர்வுள்ளவராக (Refine) ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி