25.08.2019                           காலை முரளி                ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்    நினைவு தினம்             18.01.19.85          மதுபன்


 

உறுதி மொழி மூலமாக பிரத்யக்ஷம்

 

இன்று சக்திசாலியான தினத்தன்று சக்திசாலியான தந்தை தன்னுடைய சக்திசாலியான குழந்தைகளை பார்த்து கொண்டிருக்கிறார். இன்றைய தினம் விசேஷமாக பிரம்மா பாபா மூலமாக குழந்தைகளுக்கு சக்திசாலியின் வரதானத்தை அர்ப்பிக்கும் தினமாகும். இன்றைய தினம் பாப்தாதா, தன்னுடைய சக்தி சேனையை உலக மேடையில் கொண்டு வருகிறார் - எனவே சாகார சொரூபத்தில் சிவசக்திகளுக்கு பிரத்யக்ஷ ரூபத்தில், தனது பங்கை செய்வதற்கான தினம். சக்திகள் மூலமாக சிவ தந்தை பிரத்யக்ஷம் ஆகவேண்டும், அவர் குப்த ரூபத்தில் தனது பங்கை செய்து கொண்டேயிருக்கிறார். சக்திகளை பிரத்யக்ஷ ரூபத்தில் உலகின் எதிரில் வெற்றி அடைந்தவர்கள் என்று பிரத்யக்ஷம் செய்கிறார். இன்றைய தினம் குழந்தைகளுக்கு பாப்தாதா மூலமாக சமமாக ஆகுங்கள் என்ற வரதானத்திற்கான தினமாகும். இன்றைய தினம் விசேஷமாக அன்பிற்குரிய குழந்தைகளை, கண்களில் அன்பு சொரூபத்தில் நிரப்புவதற்கான தினம். இன்றைய தினம் பாப்தாதா விசேஷமாக சக்திசாலியான மற்றும் அன்பிற்குரிய குழந்தைகளுக்கு, இனிமையான சந்திப்பின் மூலமாக அழியாத சந்திப்பிற்கான வரதானம் கொடுக்கிறார். இன்றைய தினம் அமிர்தவேளையிலிருந்து, நாலாபுறங்களிலுமுள்ள அனைத்து குழந்தை களின் இதயத்தில் முதல் எண்ணமாக இனிமையான சந்திப்பை செய்ய வேண்டும், இதயத்திலிருந்து வரும் இனிமையிலும் இனிமையான மகிமையின் பாடலை பாட வேண்டும், மற்றும் விசேஷ அன்பின் அலையை பரப்புவதற்கான தினம். இன்றைய தினம் அமிர்தவேளையில் அநேக குழந்தைகளின் அன்பின் முத்துக்களின் மாலைகளில், ஒவ்வொரு முத்திற்கும் இடையில் பாபா, இனிமையான பாபா என்ற வார்த்தை மின்னிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். எத்தனை மாலைகள் இருக்கும், இந்த பழைய உலகத்தில் நவரத்தினத்தின் மாலை என்று கூறுகிறார்கள், ஆனால் பாப்தாதாவிடம் அநேக ஆன்மீக விநோதமான, விலைமதிக்க முடியாத இரத்தினங்களின் மாலைகள் இருந்தன. அந்த மாதிரியான மாலைகளை சத்யுகத்தில் கூட அணிவதில்லை. இந்த மாலைகளை பாப்தாதா மட்டும் தான் இந்த நேரம் குழந்தைகள் மூலமாக அணிந்து கொள்கிறார். இன்றைய தினம் அநேக பந்தனத்தில் இருக்கும், கோபிகளின் பிரிந்திருக்கும் உணர்வு மற்றும் தந்தை மேல் அன்பு நிறைந்த உள்ளப் பூர்வமான, இனிமையான பாடலை கேட்பதற்கான தினம். பாப்தாதா அந்தமாதிரி அன்பில் முழ்கியிருக்கும் அன்பான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட ஆத்மாக்களுக்கு, பிரதிபலனாக இப்பொழுது பிரத்யக்ஷத்தின் முரசு ஒலிக்க போகிறது. ஹே சகஜயோகி மேலும் சந்திப்பிலிருந்து விலகியிருக்கும் குழந்தைகளே, இந்த சில நாட்கள் விரைவில் முடிவடைந்து விடும். சாகார இனிமையான இல்லத்தில், இனிமையான சந்திப்பு நடந்தே விடும். அந்த நல்ல நாள் அருகில் வந்து கொண்டிருக்கிறது என்ற குஷி நிறைந்த செய்தியை கூறுகிறார்.

 

இன்றைய தினம் ஒவ்வொரு குழந்தையும் உள்ளப்பூர்வமான திட எண்ணம் வைப்பதினால் சகஜமாக வெற்றியின் பிரத்யக்ஷ பலனை அடைவதற்கான தினம். இன்றைய தினம் எவ்வளவு மகான் என்று கேட்டீர்களா. அந்த மாதிரி மகான் தினத்தன்று அனைத்து குழந்தைகளும் எங்கு இருந்தாலும், தூரத்தில் இருந்தாலும், இதயத்தின் அருகில் இருக்கிறார்கள். பாப்தாதாவும் ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பு மற்றும் பாப்தாதாவை பிரத்யக்ஷம் செய்வதற்கான சேவையின் ஊக்கம் உற்சாகத்திற்கு பிரதிபலனாக, அன்பு நிறைந்த வாழ்த்துக்களை கூறுகிறார், ஏனென்றால் பெருபான்மையான குழந்தைகளின் ஆன்மீக உரையாடல் அன்பு மற்றும் சேவையின் ஊக்கத்தின் அலைகள் தான் விசேஷமாக இருந்தது. உறுதிமொழி மற்றும் பிரத்யக்ஷம் விசேஷமாக இரண்டு விஷயங்களும் இருந்தது. கேட்டுக்கொண்டே பாப்தாதா என்ன செய்கிறார்? சொல்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், ஆனால் இதயத்தின் ஓசையை திலாராம் தந்தை ஒரே நேரத்தில் அநேகர்கள் கேட்க சொல்வதை முடியும். உறுதிமொழி செய்பவர்களுக்கு பாப்தாதா வாழ்த்துக்கள் கூறுகிறார். ஆனால் இந்த உறுதிமொழியை அமிர்தவேளையில் எப்பொழுதும் மீண்டும் மீண்டும் நினைவு செய்யுங்கள். உறுதிமொழி செய்துவிட்டு, அதை விட்டு விடாதீர்கள். செய்யத்தான் வேண்டும், ஆகத்தான் வேண்டும் என்று இந்த ஊக்கம், உற்சாகத்தை எப்பொழுதும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும். கூடவே காரியங்கள் செய்து கொண்டே எப்படி ட்ராஃபிக் கண்ட்ரோல் விதியின் மூலமாக, நினைவு நிறைந்த நிலை தொடர்ந்து இருப்பதில் வெற்றியை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். அதேபோல் காரியங்கள் செய்து கொண்டே தனக்காக, தன்னைத் தானே சோதனை செய்வதற்கான நேரத்தையும் நிச்சயம் செய்யுங்கள். பிறகு குறிப்பிட்ட நேரத்தில் உறுதிமொழியை வெற்றி சொரூபமாக ஆக்கிக் கொண்டேயிருப்பீர்கள்.

 

பிரத்யக்ஷத்தின் ஊக்கம் உற்சாகம் உள்ள குழந்தைகளுக்கு பாப்தாதா தன்னுடைய வலது கரத்தினால் அன்பின் கைக்குலுக்கல் செய்கிறார். எப்பொழுதும் நெருக்கமான குழந்தையாக இருப்பதிலிருந்து, தந்தைக்கு சமமானவர் ஆகி, ஊக்கத்தின் தைரியம் மூலம் பலமடங்கு பாப்தாதாவின் உதவிக்கு பாத்திரமானவராக இருக்கவே இருக்கிறார். சுபாத்திரம் என்றால் பாத்திரமானவர்.

 

மூன்றாவது விதமான குழந்தைகள் - இரவு பகலாக அன்பில் மூழ்கியிருப்பவர்கள். அன்பைத் தான் சேவை என்று நினைக்கிறார்கள். சேவைக் களத்தில் வருவதில்லை, ஆனால் என்னுடைய பாபா, என்னுடைய பாபா என்ற இந்தப் பாடலை அவசியம் பாடுகிறார்கள். தந்தையையும் இனிமையான ரூபத்தில் சந்தோஷபடுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். என்னவாக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன், உங்களுடையவர் தான். அந்தமாதிரியும் விசேஷ அன்பான ஆத்மாக்கள் இருக்கிறார்கள். அந்தமாதிரியான அன்பான குழந்தைகளுக்கு, பாப்தாதா அன்பின் பிரதிபலனாக, அன்போ அவசியம் கொடுக்கிறார், ஆனால் இராஜ்ய அதிகாரி ஆக வேண்டும் என்ற தைரியமும் ஊட்டுகிறார். இராஜ்யத்தில் வருபவராக ஆக வேண்டும், பிறகு அன்பானவராக இருந்தாலும் சரிதான். இராஜ்ய அதிகாரி ஆகவேண்டுமென்றால், அன்புடன் சேர்த்து படிப்பின் சக்தி, அதாவது ஞானத்தின் சக்தி, சேவையின் சக்தியும் அவசியமாக இருக்கிறது. எனவே தைரியம் வையுங்கள். உதவி செய்பவராக தந்தை இருக்கவே இருக்கிறார். அன்பின் பலனாக சகயோகம் கண்டிப்பாக கிடைக்கும், கொஞ்சம் தைரியம் வைத்தால், கவனம் வைத்தால், இராஜ்ய அதிகாரி ஆக முடியும். கேட்டீர்களா, இன்றைய ஆன்மீக உரையாடலுக்கான பதிலை பாரதம் மற்றும் வெளிநாட்டின் நாலாபுறமுள்ள குழந்தைகளின் ரம்மியமான வருகையை சூட்சமவதனத்தில் பார்த்தோம். வெளிநாட்டு குழந்தைகளும், கடைசியில் வந்தும் வேகமாக சென்று, முதலில் வருவதற்கான ஊக்கம், உற்சாகத்தில் நன்றாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்தளவு வெளிநாடு என்ற கணக்கில் தூரமாக இருக்கிறோமோ, அந்தளவு இதயத்தின் அருகாமையில் இருக்கிறோம் என்று நினைக்கிறார்கள். இன்று கூட நல்ல நல்ல ஊக்கம், உற்சாகத்தின் ஆன்மீக உரையாடல் செய்து கொண்டிருந்தார்கள். சில குழந்தைகள் மிக இனிமையானவர்கள், இனிமையிலும் இனிமையான விஷயங்களை கூறி தந்தையையும் சம்மதிக்க வைக்கிறார்கள். சொல்வதோ மிக வெகுளியான ரூபத்தில் இருக்கும், ஆனால் சாதுர்யமானவர்கள். நீங்கள் உறுதிமொழி கூறுங்கள் என்று சொல்வார்கள். அந்தமாதிரி சம்மதிக்க வைப்பார்கள். தந்தை என்ன கூறுவார்? குஷியாக இரு, நன்றாக இரு, முன்னேறிக் கொண்டேயிரு. விசயங்களோ மிகவும் அதிகமானவை, எவ்வளவு கூறுவது. ஆனால் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு, அனைத்து விஷயங்களையும் கூறுகிறார்கள். நல்லது.

 

எப்பொழுதும் அன்பு மற்றும் சேவையின் ஊக்க உற்சாகத்தில் இருக்கக் கூடிய, எப்பொழுதும் தகுதி வாயந்திவராகி அனைத்து பிராப்திகளின் பாத்திரமாகக் கூடிய, எப்பொழுதும் தன்னுடைய காரியங்கள் மூலமாக, பாப்தாதாவின் சிரேஷ்ட தெய்வீக காரியத்தை, பிரத்யக்ஷம் செய்யக் கூடிய, தன்னுடைய தெய்வீக வாழ்க்கை மூலமாக பிரம்மா பாபாவின் வாழ்க்கை கதையை தெளிவாக வெளிப்படுத்தக் கூடிய, அந்தமாதிரியான அனைத்து பாப்தாதாவின் நிரந்தரமாக துணைவர்களாக இருக்கக் கூடிய குழந்தைகளுக்கு, சக்திசாலியான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நம்ஸ்காரம்.

 

தாதி அவர்கள் மற்றும் ஜானகி தாதி அவர்களும் பாப்தாதாவின் எதிரில் அமர்ந்து இருக்கிறார்கள்.

 

இன்று உங்களுடைய தோழி (தீதி) யும், பிரத்தேயகமாக அன்பு நினைவு கொடுத்தார். இன்று அவரும் வதனத்தில் வெளிப்பட்டார். எனவே அவருக்கும் அனைவரின் நினைவு இருக்கிறது. அவரும் (அட்வான்ஸ் பார்ட்டியில்) தன்னுடைய குழுவை உறுதியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். அவர்களுடைய காரியமும் உங்கள் அனைவருடன் சேர்ந்து பிரத்யக்ஷம் ஆகிக் கொண்டேயிருக்கும். இப்பொழுதோ சம்மந்தம் மற்றும் தேசத்தின் அருகில் இருக்கிறார்கள். எனவே சின்னஞ்சிறு குரூப்களிலும் ஏதோ காரணத்தினால், அவர்களை தெரியாத போதிலும், சந்தித்துக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த முழுமையான நினைவு இருக்கவில்லை. ஆனால் நாம் இணைந்து ஏதாவது புதிய காரியம் செய்ய வேண்டும் என்று புத்தியில் உணர்த்துதல் ஏற்படுகிறது. உலகத்தின் நிலைமை என்னவாக இருக்கிறது, அதற்கேற்றபடி, எந்தக் காரியத்தை யாராலேயும் செய்ய முடியாதோ, அதை நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செய்ய வேண்டும் என்ற இந்த உணர்த்துதல் மூலம் அவர்களுக்குள் அவசியம் சந்திக்கிறார்கள். ஆனால் இப்பொழுது சிலர் சிறியவர்களாகவும், சிலர் பெரியவர்களாகவும் அந்தமாதிரியான குரூப்பாக இருக்கிறார்கள். ஆனால் அனைத்து விதமானவர்களும் சென்று இருக்கிறார்கள். உடலால் காரியம் செய்பவர்களும் சென்று இருக்கிறார்கள். இராஜ்ய ஸ்தாபனை செய்வதற்கு, திட்டமிடும் புத்தியுள்ளவர்களும் சென்று இருக்கிறார்கள். கூடவே தைரியம் மற்றும் உற்சாகத்தை அதிகரிப்பவர்களும் சென்றிருக்கிறார்கள். இன்று முழு குரூப்பிலும் இந்த மூன்று விதமான குழந்தைகளை பார்த்தோம், மேலும் மூவருமே அவசியமாக இருக்கிறார்கள். சிலர் திட்டமிடுபவர்கள், சிலர் காரியத்தில் கொண்டு வருபவர்கள், மேலும் சிலர் தைரியத்தை அதிகரிப்பவர்கள். குரூப்போ நன்றாக உருவாகிக் கொண்டிருக்கிறது, ஆனால் இரண்டு குரூப்புகளும் சேர்ந்தே பிரத்யக்ஷம் ஆகும். இப்பொழுது பிரத்யக்ஷத்தின் விசேஷம் மேகங்களுக்கு உள்ளேயிருக்கிறது. மேகம் கலைந்துக் கொண்டிருக்கிறது, ஆனால் அகலவில்லை. எந்தளவு சக்திசாலியான மாஸ்டர் ஞான சூரியனின் நிலை வரை வந்து சேர்ந்து விடுவீர்களோ, அதேபோல் இந்த மேகங்கள் கலைந்து கொண்டிருப்பது அகன்றுவிட்டது என்றால், ஒரு நொடியில் வெற்றி முரசு கொட்டிவிடும். இப்பொழுது கலைந்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய பார்ட்டியும் அவர்களுடைய ஏற்பாடுகளை அதிகமாக செய்து கொண்டிருக்கிறார்கள். எப்படி நீங்கள் இளைஞர்களின் பேரணிக்காக திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா. அவர்களும் இப்பொழுது இளைஞர்கள். அவர்களும் அவர்களுக்குள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி இப்பொழுது பாரதத்தில் அநேக பார்ட்டிகளின் என்ன விசேஷம் இருந்ததோ, அது குறைந்து விட்டது, இருந்தும் ஒரு பார்ட்டி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது இல்லையா, அப்படி வெளியுலகத்தின் ஒற்றுமையிலும் இரகசியம் இருக்கிறது. பல வழிகளில் நடப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது, மேலும் ஒருவர் சக்திசாஆகிக் கொண்டிருக்கிறார். இந்த ஸ்தாபனையின் இரகசியத்தில் சகயோகத்தின் பங்கு இருக்கிறது. மனதால் சந்தித்தவர்களாக இல்லை, கட்டாயத்தில் சந்தித்திருக்கிறார்கள், ஆனால் கட்டாயத்தில் சந்தித்ததிலும் இரகசியம் இருக்கிறது. இப்பொழுது ஸ்தாபனையின் நுண்ணிய முறைகள், பழக்கங்கள், தெளிவாக ஆவதற்கான நேரம் அருகில் வந்து கொண்டிருக்கிறது. பிறகு உங்களுக்கும், அட்வான்ஸ் பார்ட்டி என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், மேலும் நான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரிய வந்துவிடும். இப்பொழுது நீங்களும் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி கேட்கிறீர்கள், அவர்களும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால் இருவருமே நாடகத்தின் அனுசாரம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

 

ஜெகத்தம்பாவோ பௌர்ணமி நிலவாக இருக்கவே இருக்கிறார். பௌர்ணமி நிலவு ஜெகத்தம்பாவுடன் தீதிக்கு தொடக்கத்தில் இருந்தே விசேஷ பங்கு இருந்தது. காரியம் செய்வதில் உடன் இருந்து செய்யும் பங்கு இருந்தது. முழு நிலவு சீதளமானவர் மேலும் இவர் தீவிரமானவர். இருவர்களும் இணைந்து இருத்தல் இருந்தது. இப்பொழுது அவர் கொஞ்சம் பெரியவர் ஆகவிடுங்கள், ஜெகத்தம்பாவோ இப்பொழுது கூட அவருக்கு சீதளத்தின் சக்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் திட்டம் போடுவது, முன்னுக்கு வருவதில் துணையும் வேண்டுமல்லவா. புஸ்பா சாந்தா மற்றும் தீதி தொடக்கத்தில் இவர்களுக்கு இடையிலும் கணக்கு இருந்தது. இங்கேயும் இருவர்களின் கணக்கு அவர்களுக்குள் அருகில் இருப்பதற்கானது. பாவு (விஷ்வ கிஷோர்) சகோதரரோ, முதுகெலும்பாக இருந்தார். இதிலேயும் பாண்டவர்கள் பின்னுக்கு முதுகெலும்பாக இருக்கிறார்கள். சக்திகள் முன்னுக்கு இருக்கிறார்கள். அவர்களும் ஊக்கம், உற்சாகத்தில் கொண்டு வரக்கூடிய குரூப். இப்பொழுது திட்டம் போடுபவர்கள் கொஞ்சம் மைதானத்தில் வந்து விட்டார்கள் என்றால், பிரத்யக்ஷத்தம் ஆகிவிடும். நல்லது.

 

வெளிநாட்டு சகோதர, சகோதரிகளுடன் சந்திப்பு:

நீங்கள் அனைவரும் கடைசியில் வந்தாலும், வேகமாக செல்லக் கூடிய மேலும் முதல் நம்பரில் வருவதற்கான ஊக்கம், உற்சாகம் உள்ளவர்கள் தான் இல்லையா. உங்களில் யாரும் இரண்டாம் நம்பரில் வருபவர்களோ இல்லையே, இலட்சியம் சக்திசாலியாக இருக்கிறது என்றால், இலட்சணமும் இயல்பாகவே சக்திசாலியாக இருக்கும். நீங்கள் அனைவரும் முன்னேறிச் செல்வதில் ஊக்கம், உற்சாகம் உள்ளவர்கள். பாப்தாதாவும் ஒவ்வொரு குழந்தைக்கும் எப்பொழுதும் டபுள் லைட்டாகி பறக்கும் கலை மூலம் நம்பர் ஒன்னாக வரத்தான் வேண்டும் என்பதைத் தான் கூறுகிறார். எப்படி தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவராக இருக்கிறார், அதேபோல் ஒவ்வொரு குழந்தையும் உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள்.

 

எப்பொழுதும் ஊக்கம், உற்சாகத்தின் இறக்கைகளால் பறப்பவர் தான், பறக்கும் கலையை அனுபவம் செய்கிறார். இந்த நிலையில் நிலைத்திருபதற்கான சகஜமான வழி - என்ன சேவை செய்தாலும், அதை தந்தை செய்பவர் செய்விப்பவர், நான் கருவியாக இருக்கிறேன், செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார், நடத்துவித்துக் கொண்டியிருக்கிறார், இந்த நினைவின் மூலம் எப்பொழுதும் லேசாகி பறந்துக் கொண்டேருப்பீர்கள். இன்னும் வரும் நாட்களில் இதே நிலையை அதிகரித்துக் கொண்டேயிருங்கள்.

 

விடைபெறும் நேரத்தில் கூறிய மகாவாக்கியம்:

இந்த சக்திசாலியான தினம் எப்பொழுதும் சக்திசாலியாக ஆக்கிக் கொண்டேயிருக்கும். இந்த சக்திசாலியான தினத்தன்று யாரெல்லாம் வந்துள்ளீர்களோ, அவர்கள் விசேஷமாக சக்திசாலி ஆகுக என்ற வரதானத்தை எப்பொழுதும் உடன் வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது அந்த மாதிரி விஷயம் வந்தது என்றால், இந்த தினத்தை மற்றும் இந்த வரதானத்தை நினைவு செய்யுங்கள். இந்த நினைவு சக்தியை கொண்டு வரும். ஒரு வினாடியில் புத்தி என்ற விமானம் மூலம் மதுபன்னில் வந்து சேர்ந்து விடுங்கள். என்னவாக இருந்தது, எப்படி இருந்தது, மேலும் என்ன வரதானம் கிடைத்தது. அப்படி ஒரு வினாடியில் மதுபன் நிவாசி ஆவதினால், சக்தி வந்துவிடும். மதுபன்னை வந்து சேர்வதோ, தெரியும் இல்லையா. இதுவோ சகஜம் தான், இந்த கண்களால் பார்த்திருக்கிறீர்கள். பரந்தாமத்திற்கு செல்வது கடினமாக அனுபவம் ஆகலாம், மதுபன் வந்து சேர்வது கடினமில்லை. எனவே ஒரு வினாடியில் டிக்கெட் இல்லாமல், செலவில்லாமல் மதுபன் நிவாசி ஆகிவிடுங்கள். மதுபன் எப்பொழுதுமே தைரியம் மற்றும் உற்சாகத்தை கொடுத்துக் கொண்டேயிருக்கும். எப்படி இங்கே அனைவரும் தைரியம் உற்சாகத்தில் இருக்கிறார்கள், யாரிடமும் பலஹீனம் இல்லை தான் இல்லையா. இதே நினைவு பிறகு சக்திசாலியான வர் ஆக்கிவிடும். நல்லது.

 

வரதானம்:

பரமாத்ம காரியத்தில் சகயோகி ஆகி அனைவரின் சகயோகத்தை பிராப்தி செய்யக் கூடிய வெற்றி சொரூபமானவர் ஆகுக.

 

எங்கு அனைவரின் ஊக்கம், உற்சாகம் இருக்கிறதோ, அங்கு வெற்றி அதுவே அருகில் வந்து கழுத்தின் மாலை ஆகிவிடும். எந்தவொரு விசால காரியத்திலும் ஒவ்வொருவரின் சகயோகத்தின் விரல் தேவையாக இருக்கிறது. சேவை செய்வதற்கான வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது, யாருமே என்னால் செய்ய முடியாது, நேரமில்லை என்ற சாக்குபோக்கு சொல்ல முடியாது. காரியங்கள் செய்து கொண்டே, எழுந்தாலும், அமர்ந்தாலும் 10-10 நிமிடங்களாவது சேவை செய்யுங்கள். உடல் நிலை சரியில்லையென்றால், வீட்டில் அமர்ந்து செய்யுங்கள். மன சக்தி மூலம், சுகம் நிறைந்த உள்ளுணர்வின் மூலம் சுகம் நிறைந்த மனநிலையின் மூலம் சுகம் நிறைந்த உலகை உருவாக்குங்கள், பரமாத்மா காரியத்தில் சகயோகியாக ஆனீர்கள் என்றால், அனைவரின் சகயோகம் கிடைக்கும்.

 

சுலோகன்:

இயற்கையின் தலைவன் என்ற ஆசனத்தில் அமர்ந்திருந்தீர்கள் என்றால், எந்த சூழ்நிலைகளிலும் நிலைகுலைந்து போக மாட்டீர்கள்.

 

ஓம்சாந்தி