09.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் உயிரோட்டமுள்ள கலங்கரை விளக்காக இருக்கிறீர்கள், நீங்கள் அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தை அளிக்க வேண்டும், வீட்டிற்கு வழி சொல்ல வேண்டும்.

 

கேள்வி:

இன்னும் போகப்போக எந்தவொரு டைரக்ஷன் மற்றும் எந்த விதியின் மூலம் அனேக ஆத்மாக்களுக்கு கிடைக்கப் போகிறது?

 

பதில்:

இன்னும் போகப்போக, நீங்கள் பிரம்மாகுமார-குமாரிகளிடம் சென்றீர்கள் என்றால் இந்த வைகுண்டத்தின் இளவரசனாவதற்கான ஞானம் கொடுப்பார்கள் என்ற டைரக்ஷன் நிறைய பேருக்கு கிடைக்கும். இந்த சமிஞ்ஞை (சைகை) அவர்களுக்கு பிரம்மாவின் காட்சியின் மூலம் கிடைக்கும். குறிப்பாக பிரம்மா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணருடைய காட்சி தான் கிடைக்கிறது. எப்படி ஆரம்பத்தில் காட்சியினுடைய நடிப்பு நடந்ததோ, அதுபோல் கடைசியிலும் கூட நடக்கப் போகிறது.

 

ஓம் சாந்தி.

ஆன்மீக தந்தை குழந்தைகளிடம் கேட்கின்றார், அனைவரிடமும் கேட்க முடியாது அல்லவ!. நளினி குழந்தையிடம் கேட்கிறேன், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? யாருடைய நினைவில் அமர்ந்துள்ளீர்கள்? பாபாவினுடைய நினைவில். பாபாவினுடைய நினைவில் மட்டும் அமர்ந்துள்ளீர்களா அல்லது இன்னும் வேறு ஏதாவது நினைவிருக்கிறதா? பாபாவினுடைய நினைவின் மூலம் விகர்மங்கள் வினாசம் ஆகும், இன்னும் வேறு எதை நினைவு செய்கிறீர்கள்? இது புத்தியினுடைய வேலை அல்லவா! ஆத்மாக்களாகிய நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனவே வீட்டையும் நினைவு செய்ய வேண்டும். நல்லது, வேறு என்ன செய்ய வேண்டும்? என்ன வீட்டிற்குச் சென்று அமர்ந்து கொள்ள வேண்டுமா! விஷ்ணுவிற்கு சுயதரிசன சக்கரம் காட்டுகிறார்கள் அல்லவா! அதனுடைய அர்த்தத்தையும் பாபா இப்போது புரிய வைத்துள்ளார். சுயம் என்றால் ஆத்மாவின் தரிசனம் என்றாகிறது, 84 பிறவிகளின் சக்கரமாகும்.. எனவே அந்த சக்கரத்தையும் சுற்ற வேண்டும். நாம் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி விட்டு வீட்டிற்குச் செல்வோம் என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு அங்கிருந்து சத்யுகத்திற்கு நடிப்பை நடிக்க வருவீர்கள். பிறகு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றுவீர்கள். விஷ்ணுவிற்கு எந்த சக்கரமும் கிடையாது. அவர் சத்யுகத்தின் தேவதையாவார். விஷ்ணுபுரி என்று சொல்லுங்கள் அல்லது இலஷ்மி - நாராயணபுரி என்று சொல்லுங்கள் அல்லது சொர்க்கம் என்று சொல்லுங்கள் அனைத்தும் சரியே. சொர்க்கத்தில் இலஷ்மி - நாராயணனுடைய இராஜ்யம் இருந்தது. ஒருவேளை ராதை - கிருஷ்ணனுடைய இராஜ்ஜியம் என்று சொன்னால் தவறு செய்கிறார்கள் என்பதாகும் . இராதை-கிருஷ்ணனுடைய இராஜ்யம் என்பது இருப்பதில்லை ஏனென்றால் இருவரும் தனித்தனி இராஜ்யத்தின் இளவரசன்-இளவரசி ஆவர், இராஜ்யத்தின் எஜமானர்களாக சுயம்வரத்திற்கு பிறகு ஆவார்கள். ஆக விஷ்ணுவிற்கு காட்டப்பட்டுள்ள இந்த சக்கரம் உங்களுடையதாகும். எனவே இங்கே நீங்கள் அமரும்போது அமைதியாக மட்டும் அமரக்கூடாது, ஆஸ்தியையும் நினைவு செய்ய வேண்டும் அதற்குத் தான் இந்த சக்கரமாகும். நீங்கள் கலங்கரை விளக்காகவும் இருக்கின்றீர்கள், பேசுகின்ற நடக்கின்ற கலங்கரை விளக்காவீர்கள். ஒரு கண்ணில் சாந்திதாமம், ஒரு கண்ணில் சுகதாமமாகும். இரண்டையும் நினைவு செய்ய வேண்டியுள்ளது. நினைவின் மூலம் பாவம் அழிய வேண்டும். வீட்டை நினைவு செய்வதின் மூலம் வீட்டிற்குச் சென்றுவிடுவீர்கள் பிறகு சக்கரத்தையும் நினைவு செய்ய வேண்டும். இந்த முழு சக்கரத்தின் ஞானம் உங்களுக்குத் தான் இருக்கிறது. 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றியுள்ளீர்கள். இப்போது இந்த கடைசிப் பிறவி மரணலோகத்தில் ஆகும். புதிய உலகத்தை அமரலோகம் என்று சொல்லப்படுகிறது. அமரர் என்றால் நீங்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் ஒருபோதும் இறப்பதில்லை. இங்கே இருந்து-இருந்து திடீரென்று மரணம் சம்பவித்துவிடுகிறது. வியாதிகள் ஏற்படுகிறது, அங்கே இறப்பதற்கான பயம் இருப்பதில்லை ஏனென்றால் அமரலோகமாகும். நீங்கள் வயதானவர்களாகி விடுகிறீர்கள் என்றால் கூட நாம் கர்பமாளிகையில் சென்று பிரவேசிப்போம் என்ற ஞானம் இருக்கிறது. இப்போது கர்பசிறைக்குச் செல்கிறார்கள். அங்கே கர்ப மாளிகை இருக்கிறது. அங்கே தண்டனை அனுபவிக்க பாவம் செய்வதில்லை. இங்கே பாவம் செய்கிறார்கள், அந்த காரணத்தினால் தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வருகிறார்கள் எனும்போது மீண்டும் பாவம் செய்வதை ஆரம்பித்துவிடுகிறார்கள். இது பாவாத்மாக்களின் உலகமாகும். இங்கே துக்கம் தான் ஏற்படுகிறது. அங்கே துக்கம் என்ற வார்த்தையே இல்லை. எனவே ஒரு கண்ணில் சாந்திதாமம், மற்றொரு கண்ணில் சுகதாமத்தை வையுங்கள். நீங்கள் பிறவி-பிறவிகளாக ஜபம்-தவம் போன்றவைகளை செய்து வந்துள்ளீர்கள். ஆனால் அது ஞானம் இல்லை அல்லவா! அது பக்தியாகும். அதில் நீங்கள் அப்படி சதோபிரதானமாக ஆவதற்கு எந்த யுக்தியும் கிடைப்பதில்லை. யாருமே தெரிந்திருக்கவில்லை. கேட்டிருக்கிறோம் அவ்வளவு தான் கிருஷ்ண பகவானுடைய மகாவாக்கியம் தேகம் உட்பட......... இந்த கீதையின் வார்த்தைகள் என்ன இருக்கிறதோ, அதை படித்து சொல்கிறார்கள். நீங்கள் அப்படி ஆகுங்கள் என்று சொல்வதில்லை. பகவான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்க வந்தபோது இப்படி சொல்லி விட்டு சென்றுள்ளார், என்று மட்டும் படிக்கிறார்கள். கீதையில் பரமபிதா பரமாத்மா என்பதற்கு பதிலாக கிருஷ்ணருடைய பெயரை போட்டு விட்டார்கள் அவ்வளவு தான். கிருஷ்ணர் என்பவர் ரதி (சாரதி) அல்லவா! அவருக்கு இரதம் வேண்டுமா என்ன? அவரே தேகதாரி ஆவார். கிருஷ்ணருடைய பெயரை யார் வைத்தார்கள்? பிறந்த ஆறாம் நாள் வருகிறது என்றால் அனைவருக்கும் பெயர் வைக்கிறார்கள் அல்லவா! பாபாவை வெறுமனே சிவன் என்று தான் சொல்லப்படுகிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் பிறப்பு-இறப்பில் வருகிறீர்கள் அதனால், சரீரத்தின் பெயர் மாறுகிறது. சிவபாபா பிறப்பு-இறப்பில் வருவதில்லை.அவர் எப்போதும் சிவனே ஆவார். புள்ளி வைக்கிறார்கள் என்றால் சிவம் என்று சொல்கிறார்கள். புள்ளியான ஆத்மா முற்றிலும் சூட்சுமமாக இருக்கிறது. ஒருவேளை ஆத்மாவின் காட்சி ஏற்படுகிறது என்றால் யாருக்கும் புரிவதில்லை. தேவியைப் பார்த்தால் குஷியாகிவிடுவார்கள். நல்லது, பிறகு என்ன, பலன் எதுவும் இல்லை, அர்த்தமில்லை. வெறுமனே பிடிவாதமான பக்தி செய்தார்கள், தரிசனம் செய்தார்கள் என்றால் அதிலேயே குஷியாகிவிடுகிறார்கள். மற்றபடி முக்தி-ஜீவன்முக்தியின் விசயமே இல்லை. அவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். இங்கே இது ஞான மார்க்கமாகும். இங்கே குறிப்பாக பிரம்மாவின் காட்சி ஏற்படுகிறது, பிறகு ஸ்ரீ கிருஷ்ணருடையது ஏற்படலாம். இந்த பிரம்மாவிடம் சென்றீர்கள் என்றால் நீங்கள் கிருஷ்ணபுரி அல்லது வைகுண்டத்திற்கு செல்லலாம் என்று சொல்வார்கள். இலஷ்மி நாராயணனுடைய காட்சி கூட ஏற்படலாம். காட்சி கிடைத்துவிட்டால் சத்கதி அடைந்து விட்டோம் என்பது கிடையாது. இங்கே செல்லுங்கள் என்று சமிஞ்ஞை கிடைக்கிறது அவ்வளவு தான். இன்னும் போகப்போக நிறைய பேருக்கு காட்சி ஏற்படும், வழி கிடைக்கும். உங்களுடைய திருமூர்த்தி சித்திரம் கூட நாளேடுகளில் வருகிறது, பிரம்மாகுமாரிகளின் பெயரும் வருகிறது. எனவே பிரம்மாவின் காட்சி தான் ஏற்படும், இவரிடம் செல்வதின் மூலம் உங்களுக்கு இந்த வைகுண்டத்தின் இளவரசன் ஆவதற்கான ஞானம் கிடைக்கும். எப்படி அர்ஜூனனுக்கு விஷ்ணு மற்றும் வினாசத்தின் காட்சி கிடைத்ததோ அதுபோலாகும்.

 

நீங்கள் எப்படி தாமரை மலருக்குச் சமமாக ஆக வேண்டும் என்று பாபா கூறுகின்றார். ஆனால் நீங்கள் நிலையாக அப்படி இருப்பதில்லை. ஆகையினால் விஷ்ணுவிற்கு அலங்காரத்தை கொடுத்துவிட்டார்கள். இல்லையென்றால் தேவதைகளுக்கு சங்கு போன்றவற்றின் அவசியம் என்ன இருக்கிறது. வாயின் மூலம் சொல்வதை சங்கொலி என்று சொல்லப்படுகிறது. தாமரையின் இரகசியத்தையும் பாபா புரிய வைக்கின்றார். பிராமணர்களாகிய நீங்கள் இந்த சமயத்தில் தாமரை மலருக்குச் சமமாக ஆக வேண்டும். 5 விகாரங்கள் எனும் மாயையை வெல்வதற்கு அதுவே கதாயுதமாகும். என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய விகர்மங்கள் வினாசம் ஆகும் என்று பாபா வழி சொல்கின்றார். ஸ்ரீமத்படி நடந்து தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பாபாவை நினைவு செய்யுங்கள். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர்கள் கிடையாது. எங்கள் அனைவரையும் இந்த சரீரத்திலிருந்து விடுவித்து தூய்மையான உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று தான் என்னை அழைக்கிறார்கள். எனவே பாபா தான் வந்து அனைத்து ஆத்மாக்களையும் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்குகின்றார், ஏனென்றால் தூய்மையற்ற ஆத்மாக்கள் வீட்டிற்கு அல்லது சொர்க்கத்திற்கு செல்ல முடியாது. தூய்மையாக வேண்டும் என்றால் என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். நினைவின் மூலம் தான் உங்களுடைய பாவம் அழியும். இதற்கு நான் உத்திரவாதம் அளிக்கின்றேன். ஹே பதீத் பாவனா வாருங்கள் - என்று அழைக்கிறார்கள். எங்களை தூய்மையாக்கி புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். எனவே எப்படி செல்வீர்கள்? எவ்வளவு சரியான விசயத்தை (வழியை) சொல்கிறேன். பாபாவினுடையது சகஜமான ஞானம் மற்றும் சகஜமான விசயமாகும். கர்ம காரியங்களை செய்து கொண்டே என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். வேலை போன்றவைகளை செய்யுங்கள், உணவு சமையுங்கள் இருந்தாலும் நினைவில் இருந்து கொண்டு,அப்படி செய்யும்போது உணவும் சுத்தமாக இருக்கும். ஆகையினால் தான் பிரம்மா போஜனத்தை தேவதைகளும் விரும்புவர் என்று பாடப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் கூட போக் எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். அப்படி செல்லும்போது அங்கே கூட்டம் கூடுகிறது. பிராமணர்கள் மற்றும் தேவதைகளின் கூட்டம் கூடுகிறது. போஜனத்தை சுவீகரிக்க வருகிறார்கள். பிராமணர்கள் உணவு சாப்பிடுவதற்கு முன்னால் மந்திரம் ஜபிக்கிறார்கள். பிரம்மா போஜனத்திற்கு நிறைய மகிமை இருக்கிறது. சன்னியாசிகள் பிரம்மத்தையே நினைவு செய்கிறார்கள். அவர்களுடைய தர்மமே தனிப்பட்டதாகும். அவர்கள் எல்லைக்குட்பட்ட சன்னியாசிகள். நாங்கள் வீடு-வாசல் சொத்து போன்ற அனைத்தையும் விட்டு விட்டோம் என்று சொல்கிறார்கள். பிறகு இப்போது உள்ளே நுழைந்து விட்டார்கள். உங்களுடையது எல்லையற்ற சன்னியாசமாகும். நீங்கள் இந்த பழைய உலகத்தையே மறந்துவிடுகிறீர்கள். நீங்கள் புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டும். வீடு-குடும்பத்தில் இருந்து கொண்டே புத்தியில் இப்போது நாம் சாந்திதாமம் வழியாக சுகதாமத்திற்கு செல்ல வேண்டும் என்பது இருக்கிறது. சாந்திதாமத்தையும் நினைவு செய்ய வேண்டும். பாபாவை, சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்கிறோம். இது நம்முடைய நிறைய பிறவிகளின் கடைசி பிறவியாகும். 84 பிறவிகள் முடிந்திருக்கிறது .சூரியவம்சத்தவரிலிருந்து சந்திரவம்சத்தவர் பிறகு வைசிய, சூத்திரவம்சத்தவராக ஆகியுள்ளோம்................ அவர்கள் ஆத்மா தான் பரமாத்மா ஆகிறது என்று சொல்கிறார்கள், ஆத்மாவில் எதுவும் ஒட்டுவதிலை ஏனென்றால் ஆத்மா தான் பரமாத்மா என்று சொல்கிறார்கள். இது கூட அவர்களின் தலைகீழான அர்த்தம் என்று பாபா கூறுகின்றார். நான் தான் அது என்பதின் அர்த்தத்தை பாபா அமர்ந்து புரியவைக்கின்றார். ஆத்மாவாகிய நான் பரமபிதா பரமாத்மாவின் குழந்தையாக இருக்கின்றேன். முதல்-முதலில் நாம் சொர்க்கவாசி தேவதைகளாக இருந்தோம் பிறகு சந்திரவம்ச சத்திரியர்களாக ஆனோம், 2500 ஆண்டுகள் முடிந்தது பிறகு வைசிய, சூத்திர வம்சத்தவர்களாக விகாரிகளாக ஆனோம். இப்போது நாம் பிராமணர்கள் உச்சிகுடுமிகளாக (உயர்ந்தவர்களாக) ஆகின்றோம். இங்கே அமர்ந்திருக்கிறோம், 84 பிறவிகளின் குட்டிகர்ணம் விளையாடுகிறோம். இது குட்டிகர்ணத்தின் ஞானமாகவும் இருக்கிறது. முன்பெல்லாம் தீர்த்தங்களுக்கு செல்கிறார்கள் என்றால் கூட இப்படி குட்டிகர்ணம் செய்து அடையாளம் போட்டு கொண்டு சென்றார்கள். இப்போது உங்களுடையது உண்மையான தீர்த்த யாத்திரை யாகும் - சாந்திதாமம் மற்றும் சுகதாமம் செல்வது. நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாவீர்கள். அனைவருக்கும் வழி சொல்கிறீர்கள் - பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் சாந்திதாமத்திற்கு சென்று விடுவீர்கள். சாதுக்கள் சன்னியாசிகள் போன்ற அனைவரும் சாந்திதாமம் செல்வதற்காகத் தான் உழைக்கிறார்கள். ஆனால் யாரும் செல்ல முடியாது. அனைவரும் மொத்தமாக ஒன்றாகவே செல்வார்கள். சத்யுகத்தில் மிகவும் குறைவானவர்களே இருக்கிறார்கள் பிறகு வளர்ந்து கொண்டே செல்கிறது என்று பாபா புரிய வைத்திருக்கிறார். எனவே நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகளாவீர்கள், தேவதைகள் அல்ல. ஆனால் இந்த சமயத்தில் உங்களுக்கு மாயையோடு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த சண்டையில் கூட யார் பலசாலி என்று புரிந்து கொள்கிறார்களோ, அவர்களுடைய காலில் சரணடைந்து விடுகிறார்கள். இப்போது நீங்கள் யாருடைய காலில் சரணடைகிறீர்கள்? ஆண்-பெண் இருபாலரும் சொல்கிறார்கள் நாங்கள் தங்களுடைய காலில் சரணடைகிறோம். என்னுடையவர் ஒரு சிவபாபா, வேறு யாரும் இல்லை, அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஒருவர் தான் அல்லவா! அந்த ஒருவருடைய குழந்தைகள் நீங்கள். சாது சன்னியாசிகள் ஒருவர் அல்ல. அனேக பகவான்களாக ஆகிவிடுகிறார்கள். யார் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறுகிறார்களோ, அவர்கள் பகவான் என்று கூறிக் கொள்கிறார்கள், பிறகு பெரிய-பெரிய செல்வந்தர்கள், கோடீஸ்வரர்கள் சென்று அவர்களுடைய சிஷ்யர்களாக ஆகிறார்கள் பிறகு மோசமான உணவின் பழக்கத்தில் இணைந்து கூட்டம் போடுகிறார்கள். தமோபிரதான மனிதர்கள் அல்லவா! ஹிந்துக்களுக்கு தங்களுடைய தர்மத்தைப் பற்றியே தெரியவில்லை.

 

உண்மையில் நீங்கள் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால் தூய்மை யற்றவர்களாக ஆகிவிட்டீர்கள் ஆகையினால் தங்களை தேவதைகள் என்று சொல்லிக் கொள்ள முடியாது என்று பாபா புரிய வைக்கின்றார். அந்த தர்மம் மறைந்துவிட்டது. மனிதர்கள் எவ்வளவு விகாரிகளாக குற்றப்பார்வை உடையவர்களாக இருக்கிறார்கள். ஒரு மந்திரி பாபாவிடம் வந்தார், என்னுடைய பார்வை குற்றப்பார்வையாக செல்கிறது என்று சொன்னார். குழந்தைகளே பண்பட்ட பார்வை உடையவர்களாக ஆகுங்கள்! என்று பாபா இப்போது புரிய வைக்கின்றார். எதுவரை குற்றப்பார்வை செல்கிறதோ அதுவரை நீங்கள் தூய்மையற்றவர்களாவீர்கள். தங்களை சகோதர-சகோதரர்கள் என்று புரிந்து கொண்டீர்கள் என்றால் அந்த குற்றப்பார்வை போய்விடும். நாம் ஆத்மாக்கள் சகோதர சகோதரர்களாவோம். ஒரு தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆத்மாவின் சிம்மாசனம் இருபுருவ மத்தியாகும். இதனை அழிவற்ற சிம்மாசனம் என்று சொல்லப்படுகிறது. அழிவற்ற ஆத்மா இந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. இது மண்ணால் ஆன பொம்மையாகும். முழு நடிப்பும் ஆத்மாவில் தான் நிறைந்திருக்கிறது. நான் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தியை கொடுப்பதற்கு வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். நாம் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியின் ஆஸ்தியை பெறுவதற்கு வந்துள்ளோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் அளவற்ற செல்வம் கிடைக்கிறது. நீங்கள் 21 தலைமுறைக்கு தேவதையாக ஆகிறீர்கள். வயதாகாமல் யாரும் ஒருபோதும் இறக்க மாட்டார்கள். இங்கே இருந்து-இருந்து திடீரென்று இறந்து விடுகிறார்கள். கர்பத்தில் உள்ளேயும் கூட இறந்து விடுகிறார்கள். அங்கே துக்கம் என்ற பெயரே இருப்பதில்லை. அதனை சுகதாமம், இராம இராஜ்யம் என்று சொல்லப்படுகிறது. இது துக்கதாமம் இராவண இராஜ்யமாகும். சத்யுகத்தில் இராவணன் இருப்பதில்லை.

 

எனவே இந்த 84 பிறவிகளின் சக்கரமும் உங்களுக்கு புத்தியில் நினைவிருக்கும். மிகுந்த குஷி இருக்கும். நாம் புதிய உலகத்தின் அதாவது சத்யுகத்தின் எஜமானர்களாக ஆகக் கூடியவர்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். கீதையில் கூட பகவானுடைய மகாவாக்கியம் இருக்கிறது அல்லவா! - ஹே குழந்தைகளே, தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் விடுங்கள். தங்களை ஆத்மா என்று புரிந்து என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். உங்களுடைய உண்மையிலும் உண்மையான இறை நண்பன் அவர் ஆவார். அல்லா அலாவுதீன் நாடகம், ஹாத்மதாயி நாடகம் போன்ற அனைத்தும் இந்த சமயத்தினுடையதாகும். குழந்தைகள் குறைவாக பிறக்க வேண்டும் என்று இப்போது மனிதர்கள் எவ்வளவு மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள். எல்லையற்ற தந்தை எவ்வளவு குறைத்துவிடுகிறார்! முழு உலகத்திலும், சத்யுகத்தில் 9 லட்சம் பேரே இருக்கிறார்கள். மற்ற இவ்வளவு கோடிக்கணக்கான மனிதர்கள் இருப்பதே இல்லை. அனைவரும் முக்திதாமம், சாந்திதாமம் சென்று விடுவார்கள். இது விந்தையான விசயம் அல்லவா! ஒரு தேவி-தேவதா தர்மத்தின் அடித்தளம் இட்டுவிட்டு மற்ற அனைத்தையும் வினாசம் செய்துவிடுகிறார். இந்த 84 பிறவிகளின் சக்கரத்தை நல்ல விதத்தில் புத்தியில் நிறுத்த வேண்டும். இது சுயதரிசன சக்கரமாகும். மற்றபடி சக்கரத்தின் மூலம் யாருடைய கழுத்து போன்றவற்றை அறுக்கத் தேவையில்லை. சாஸ்திரங்களில் கிருஷ்ணரைப் பற்றி ஹிம்சையான விஷயங்களை எழுதிவிட்டார்கள். அனைவரையும் சுயதரிசன சக்கரத்தால் கொன்றார் என்று எழுதிவிட்டார்கள். இது கூட நிந்தனையாகிறது அல்லவா! எவ்வளவு ஹிம்சையாளராக மாற்றி விட்டார்கள். நீங்கள் இரட்டை அஹிம்சையாளர்களாக ஆகின்றீர்கள். காம கோடாரியை வீசுவதும் ஹிம்சையாகும். தேவதைகளை தூய்மையானவர்கள் என்று சொல்லப்படுகிறது. யோகபலத்தின் மூலம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகும்போது யோகபலத்தின் மூலம் குழந்தை பிறக்க வைக்க முடியாதா என்ன! இப்போது குழந்தை உருவாக வேண்டும் என்று காட்சி ஏற்படும். இப்போது இந்த சரீரத்தை விடுவீர்கள் பிறகு வாயில் தங்க கரண்டி இருக்கும் என்று பாபா புரிய வைக்கின்றார். நாம் அமரலோகத்தில் பிறவி எடுத்தால் வாயில் தங்க கரண்டி இருக்கும் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஏழை பிரஜைகளும் வேண்டும் அல்லவா! துக்கத்தின் விஷயம் எதுவும் நடப்பதே இல்லை. பிரஜைகளிடம் இவ்வளவு செல்வம் பொருட்கள் போன்றவை இருக்குமா என்ன! மற்றபடி சுகம் இருக்கும், ஆயுள் நீண்டதாக இருக்கும். இராஜா, இராணி, செல்வந்த பிரஜைகள் அனைவரும் வேண்டும் அல்லவா. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) பாபாவின் நினைவின் கூடவே குஷியாக இருப்பதற்கு 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவு செய்ய வேண்டும். சுயதரிசன சக்கரத்தை சுற்ற வேண்டும். இறைவனை தங்களுடைய உண்மையான நண்பனாக்க வேண்டும்.

 

2) இரட்டை அஹிம்சையாளர்களாக ஆவதற்காக குற்றப்பார்வையை மாற்றி பண்பட்ட பார்வையாக மாற்ற வேண்டும். நாம் ஆத்மாக்கள் சகோதர-சகோதரர்கள், என்ற பயிற்சியை செய்ய வேண்டும்.

 

வரதானம்:

டென்ஷன் மூலம் குழப்பமான மற்றும் துக்கமான ஆத்மாக்களுக்கு தைரியம் கொடுத்து முன்னேற்றக் கூடிய மாஸ்டர் கருணையுள்ளம் உடையவர் ஆகுக.

 

நிகழ்காலத்தில் பல ஆத்மாக்கள் டென்சன் காரணத்தினால் துக்கம் மற்றும் குழப்பத்தில் இருக்கிறார்கள். பாவம், முன்னேறுவதற்கான தைரியம் அவர்களிடம் கிடையாது. நீங்கள் அவர்களுக்கு தைரியம் கொடுங்கள். கால் ஊனமுடையவருக்கு மரக் கட்டையினால் கால் உருவாக்கி கொடுக்கும் போது அவர் நடக்க ஆரம்பித்து விடுகின்றார். அதே போன்று நீங்கள் அவர்களுக்கு தைரியம் என்ற கால் கொடுங்கள், ஏனெனில் அஞ்ஞான குழந்தைகளுக்குள் என்ன இருக்கிறது என்பதை பாப்தாதா அறிவார். வெளிப்பகட்டு மிக நன்றாக இருக்கிறது, ஆனால் உள்ளுக்குள் மிகுந்த துக்கத்துடன் இருக்கின்றனர். எனவே மாஸ்டர் கருணையுள்ளம் உடையவர் ஆகுங்கள்.

 

சுலோகன்:

பணிவானவர் ஆகுங்கள், மிருதுவானவர்களாக ஆகாதீர்கள். பணிவு தான் உயர்ந்த நிலையாகும்

 

ஓம்சாந்தி