05.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! தனக்குள் உரையாடல் செய்து தூய்மை ஆவது தான் உங்களது காரியமாகும். மற்ற ஆத்மாக்களின் சிந்தனையில் தனது நேரத்தை வீணாக்காதீர்கள்.

 

கேள்வி:

எந்த விசயம் புத்தியில் வந்து விட்டால் அனைத்து பழைய பழக்கவழக்கங்களும் நீங்கி விடும்?

 

பதில்:

நாம் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் எனில் உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிடுகிறோம், நாம் தேவதைகளாக ஆக வேண்டும் - இந்த விசயம் புத்தியில் வந்து விட்டால் அனைத்து பழைய பழக்க வழக்கங்களும் நீங்கிவிடும். நீங்கள் கூறினாலும் கூறாவிட்டாலும் தானாகவே நீங்கிவிடும். அசுத்த உணவு முறைகள், சாராயம் போன்றவைகள் தாமாகவே நீங்கிவிடும். ஆஹா! நான் இவ்வாறு லெட்சுமி நாராயணனாக ஆக வேண்டும், 21 பிறவிகளுக்கு இராஜ்ய பாக்கியம் கிடைக்கிறது எனில் ஏன் தூய்மையாக இருக்க மாட்டோம்! என்று கூறுவீர்கள்.

 

ஓம்சாந்தி.

தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கிறீர்களா? புத்தி வேறு எந்த பக்கமும் ஓடிவிடவில்லை தானே! என்று தந்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கவன மூட்டுகின்றார். பாபாவை அழைத்ததே - பாபா! வந்து நம்மை தூய்மை ஆக்குங்கள் என்பதற்காக! அவசியம் தூய்மை ஆக வேண்டும், மேலும் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் ஞானத்தைப் புரிய வைக்க முடியும். இந்த சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது? என்று நீங்கள் யாருக்கு புரிய வைத்தாலும் உடனேயே புரிந்து கொள்வார்கள். தூய்மையாகாமல் இருப்பர், ஆனால் ஞானக் கல்வியையும் கற்பர். ஒன்றும் பெரிய விசயம் அல்ல. 84 பிறவிச் சக்கரம் மற்றும் ஒவ்வொரு யுகத்திற்கும் இவ்வளவு ஆயுள், இவ்வளவு பிறவிகள் இருக்கிறது. எவ்வளவு எளிதானது! இதற்கும் நினைவிற்கும் சம்மந்தம் கிடையாது, இது படிப்பாகும். தந்தை யதார்த்த விசயங்களைப் புரிய வைக்கின்றார். மற்றபடி சதோ பிரதானம் ஆவது தான் விசயம் ஆகும். அது நினைவின் மூலம் தான் ஆவீர்கள். ஒருவேளை நினைவு செய்யவில்லை எனில், மிகவும் சிறிய பதவி தான் அடைவீர்கள். இவ்வளவு உயர்ந்த பதவி அடைய முடியாது, அதனால் தான் கவனமாக இருங்கள் என்று கூறப்படுகிறது. புத்தியின் யோகா (தொடர்பு) தந்தையிடம் இருக்க வேண்டும். இது தான் பழமையான யோகா என்று கூறப்படுகிறது. ஆசிரியரிடத்தில் ஒவ்வொருவருரின் யோகா (சம்மந்தம்) இருக்கவே செய்யும். மூல விசயம் நினைவு ஆகும். நினைவு யாத்திரையின் மூலம் தான் சதோ பிரதானமாக ஆக வேண்டும், மேலும் சதோ பிரதானம் ஆகி வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். மற்றபடி இந்தக் கல்வி முற்றிலும் எளிதாகும். குழந்தைகளும் புரிந்து கொள்ள முடியும். மாயையின் யுத்தம் இந்த நினைவில் தான் நடைபெறுகிறது. நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள் மாயை தன் பக்கம் கவர்ந்திழுத்து மறக்க வைத்து விடுகிறது. என்னிடத்தில் சிவபாபா அமர்ந்திருக்கின்றார், நான் தான் சிவன் என்று கூறமாட்டீர்கள். நான் ஆத்மா, சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். என்னுக்குள் சிவபாபா பிரவேசம் செய்திருக்கின்றார் என்று கிடையாது. இவ்வாறு ஏற்பட முடியாது. நான் யாரிடத்திலும் செல்வது கிடையாது என்று தந்தை கூறுகின்றார். நான் இந்த ரதத்தில் சவாரி செய்து தான் குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கின்றேன். சில குழந்தைகள் மந்த புத்தியுடன் இருக்கின்றனர், மேலும் நல்ல அறிந்து கொள்ள விரும்பும் குழந்தைகள் (புதிதாக) வருகின்றனர் எனில் அவர்களின் சேவையின் பொருட்டு நான் பிரவேசம் செய்து திருஷ்டி கொடுத்து விடுவேன். சதா காலத்திற்கும் அமர்ந்திருக்கமாட்டேன். பல வேடங்களை தாரணை செய்து மற்றவர்களுக்கும் நன்மை செய்து விடுவேன். மற்றபடி என்னிடத்தில் சிவபாபா பிரவேசம் ஆகியிருக்கின்றார், எனக்கு சிவபாபா இவ்வாறு கூறியிருக்கின்றார் என்று கூற முடியாது. சிவபாபா குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கின்றார். மூல விசயம் தூய்மை ஆவதாகும், அவர்கள் தான் தூய்மையான உலகிற்குச் செல்ல முடியும். 84 பிறவிகளைப் பற்றி மிக எளிதாகப் புரிய வைக்கிறீர்கள், எதிரில் சித்திரங்கள் உள்ளன. தந்தையைத் தவிர வேறு யாரும் இந்த அளவிற்கு ஞானம் கொடுக்க முடியாது. ஆத்மாவிற்குத் தான் ஞானம் கிடைக்கிறது. இதைத் தான் ஞானம் என்ற மூன்றாவது கண் என்று கூறப்படுகிறது. ஆத்மாவிற்குத் தான் சுகம், துக்கம் ஏற்படுகிறது. அதற்கு இந்த சரீரம் இருக்கிறது அல்லவா! ஆத்மா தான் தேவதையாக ஆகிறது. சிலர் வக்கீலாக, சிலர் வியாபாரியாக ஆகின்றனர், ஆவது ஆத்மா தான். ஆக இப்பொழுது தந்தை வந்து ஆத்மாக்களோடு உரையாடுகின்றார், தனது அறிமுகம் கொடுக்கின்றார். நீங்கள் எப்பொழுது தேவதைகளாக இருந்தீர்களோ அப்பொழுது மனிதர்களாகத் தான் இருந்தீர்கள், ஆனால் தூய்மையான ஆத்மாக்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் தூய்மையாக இல்லை. ஆகையால் உங்களை தேவதைகள் என்று கூற முடியாது. இப்பொழுது தேவதைகளாக ஆவதற்கு அவசியம் தூய்மையானவர்களாக ஆக வேண்டும். அதற்கு பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா, நான் தவறு செய்து தேக அபிமானத்தில் வந்து விட்டேன் என்று தான் சாதாரணமாகக் கூறுகின்றனர். தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார், அவசியம் தூய்மையாக ஆக வேண்டும். எந்த பாவ காரியமும் செய்யக் கூடாது. நீங்கள் அனைத்து குணங்களும் நிறைந்தவர்களாக இங்கு ஆக வேண்டும். தூய்மையாவதன் மூலம் முக்திதாமத்திற்குச் சென்று விடுவீர்கள். வேறு எந்த கேள்வியும் கேட்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தனக்குத் தான் உரையாடல் செய்யுங்கள், மற்ற ஆத்மாக்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். யுத்தத்தில் இரண்டாயிரம் கோடி பேர் இறந்து விட்டனர் என்று கூறுகின்றனர். இவ்வளவு ஆத்மாக்கள் எங்கு சென்றனர்? அட, அவர்கள் எங்கு வேண்டுமென்றாலும் செல்லட்டும், அதில் உங்களுக்கு என்ன இருக்கிறது? நீங்கள் ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? வேறு எந்த விசயங்களையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. தூய்மை ஆகி தூய்மையான உலகிற்கு எஜமான் ஆவது தான் உங்களது காரியமாகும். மற்ற விசயங்களில் செல்வதன் மூலம் குழப்பமடைந்து விடுவீர்கள். யாருக்காவது முழுமையான பதில் கிடைக்கவில்லையெனில் குழப்பமடைந்து விடுகின்றனர்.

 

மன்மனாபவ என்று தந்தை கூறுகின்றார். தேக சகிதமாக தேகத்துடன் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு விடுங்கள், என்னிடத்தில் தான் நீங்கள் வர வேண்டும். மனிதர்கள் இறக்கின்ற பொழுது, மயானத்திற்கு எடுத்துச் செல்லும் பொழுது முகத்தை இந்த பக்கமும், காலை மயானத்தின் பக்கமும் வைக்கின்றனர். மயானத்திற்கு எடுத்துச் சென்ற பிறகு காலை இந்த பக்கமும் தலையை மயானத்தின் பக்கமும் வைத்து விடுகின்றனர். உங்களது வீடும் மேலே இருக்கிறது அல்லவா! தூய்மை ஆகாதவர்கள் யாரும் மேலே செல்ல முடியாது. தூய்மை யாவதற்கு புத்தியின் தொடர்பை தந்தையிடத்தில் செலுத்த வேண்டும். தந்தையின் கூடவே முக்திதாமம் செல்ல வேண்டும். தூய்மை இல்லாமல் இருப்பதால் தான் தூய்மை இல்லாத எங்களை வந்து தூய்மை ஆக்குங்கள், விடுதலை செய்யுங்கள் என்று அழைக்கின்றனர். ஆக இப்பொழுது தூய்மையாக ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தந்தை எந்த மொழியில் புரிய வைக்கின்றாரோ அதில் தான் கல்ப கல்பத்திற்கும் புரிய வைப்பார். எந்த மொழி இவருடையதோ அதில் தான் புரிய வைப்பார் இல்லையா! இன்றைய நாட்களில் அதிகமாக இந்தி பேசப்படுகிறது, மொழியை மாற்ற முடியும் என்பது கிடையாது. தேவதைகளின் மொழி சமஸ்கிருதம் கிடையாது. இந்து தர்மத்தின் மொழியும் சமஸ்கிருதம் கிடையாது. இந்தி தான் இருக்க வேண்டும். பிறகு ஏன் சமஸ்கிருதத்தை எடுக்கிறீர்கள்? ஆக தந்தை புரிய வைக்கின்றார் - இங்கு அமரும் பொழுது தந்தையின் நினைவில் தான் அமர வேண்டும். வேறு எந்த விசயத்திலும் நீங்கள் கவனம் செலுத்தவே வேண்டாம். இவ்வளவு கொசுகள் உருவாகின்றன, எங்கு செல்கின்றன? பூகம்பத்தில் பலர் உடனேயே இறந்து விடுகின்றனர் எனில், ஆத்மாக்கள் எங்கு செல்கின்றன? இதற்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது? உங்களுக்கு தந்தை ஸ்ரீமத் கொடுத்திருக்கின்றார் - தனது முன்னேற்றத்திற்காக முயற்சி செய்யுங்கள். மற்றவர்களைப் பற்றிய சிந்தனைகளில் செல்லாதீர்கள். இவ்வாறு பல விசயங்களைப் பற்றிய சிந்தனைகள் ஏற்பட்டு விடும். நீங்கள் என்னை நினைவு செய்தால் போதும், எதற்காக அழைத்தீர்களோ அதன்படி யுக்தியாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் தந்தையிட மிருந்து ஆஸ்தி அடைய வேண்டும், மற்ற விசயங்களில் செல்லக் கூடாது, அதனால் தான் பாபா அடிக்கடி கவனமாக இருங்கள் என்று கூறுகின்றார். எங்கும் புத்தி செல்லவில்லை தானே! பகவானின் ஸ்ரீமத்- ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா! மற்ற எந்த விசயத்தாலும் நன்மை கிடையாது. தூய்மையாவது தான் முக்கிய விசயமாகும். நமது பாபா, தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார், குருவாகவும் இருக்கின்றார் என்பதை பக்காவாக (உறுதியாக) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதை அவசியம் உள்ளத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் - தந்தை தந்தையாகவும் இருக்கின்றார், நமக்குக் கற்பிக்கின்றார், யோகா கற்பிக்கின்றார். ஆசிரியர் கற்பிக்கின்றார் எனில் புத்தியின் தொடர்பு ஆசிரியரிடம் மற்றும் படிப்பில் ஈடுபட்டு விடுகிறது. இதைத் தான் தந்தையும் கூறுகின்றார், நீங்கள் தந்தையினுடையவர்களாக ஆகி விட்டீர்கள். குழந்தைகளாக ஆகிவிட்டீர்கள், அதனால் தான் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். ஆசிரியரிடத்தில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். எங்கு இருந்தாலும் தந்தையினுடையவர்களாக இருக்கிறீர்கள், பிறகு படிப்பின் மீது கவனம் செலுத்த வேண்டும். சிவபாபாவை நினைவு செய்தால் பாவங்கள் அழிந்து விடும் மற்றும் நீங்கள் சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள். இந்த ஞானம் வேறு யாரும் கொடுக்க முடியாது. மனிதர்கள் முற்றிலும் காரிருளில் இருக்கின்றனர் அல்லவா! பாருங்கள் ஞானத்தில் எவ்வளவு சக்தி இருக்கிறது! சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? தந்தையிடமிருந்து சக்தி கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் தூய்மை ஆகிறீர்கள். பிறகு படிப்பு எளிதாக இருக்கிறது. அந்த படிப்பிற்கு அதிக மாதங்கள் ஏற்படுகின்றன. இங்கு 7 நாட்களுக்கான பாடத்திட்டமாகும். இதன் மூலம் நீங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டு விடுவீர்கள். இதற்கு புத்தி தான் ஆதாரமாக இருக்கிறது. சிலர் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றனர், சிலர் குறைவாக எடுத்துக் கொள்கின்றனர். சிலர் 2-3 நாட்களிலேயே நன்றாகப் புரிந்து கொள்கின்றனர். மூல ஆதார விசயம் தந்தையை நினைவு செய்வதாகும், தூய்மை அடைவதாகும். அது தான் கடினமாக இருக்கிறது. மற்றபடி படிப்பு மிகவும் எளிதானது. சுயதரிசன சக்கரதாரி ஆக வேண்டும். ஒரே ஒரு நாள் பாடத்தின் மூலமாக அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும். நான் ஆத்மா, எல்லையற்ற தந்தையின் குழந்தை எனில் நான் அவசியம் உலகிற்கு எஜமான் அல்லவா! இது புத்தியில் வருகிறது அல்லவா! தேவதா ஆக வேண்டுமெனில் தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். யாருக்கு புத்தியில் வந்து விடுகிறதோ அவர்கள் அனைத்தையும் உடனேயே விட்டு விடுவர். நீங்கள் கூறினாலும், கூறாவிட்டாலும், தானாகவே விட்டு விடுவர். அசுத்த உணவு முறைகள், சாராயம் போன்றவைகளை சுயமாகவே விட்டு விடுவர். ஆஹா நான் இவ்வாறு ஆக வேண்டும், 21 பிறவிகளுக்கு இராஜ்ய பாக்கியம் கிடைக்கிறது எனில் ஏன் தூய்மையாக இருக்க மாட்டோம்? என்று கூறுவர். பலியாகி விட வேண்டும். முக்கியமான விசயம் நினைவு யாத்திரை. மற்றபடி 84 பிறவிச் சக்கரத்தின் ஞானம் ஒரு விநாடியில் கிடைத்து விடுகிறது. பார்த்தவுடனேயே புரிந்து கொள்கின்றனர். புது மரம் கண்டிப்பாக சிறியதாகத் தான் இருக்கும். இப்பொழுது எவ்வளவு பெரிய மரமாக, தமோ பிரதானமாக ஆகிவிட்டது! பிறகு நாளை புதியதாக சிறிய மரமாக ஆகிவிடும். இந்த ஞானம் வேறு எங்கும் அடைய முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். இது படிப்பாகும், அடையக் கூடிய முதல் முக்கிய போதனை என்னவெனில், தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை கற்பிக்கின்றார் என்ற நிச்சயம் செய்யுங்கள். பகவானின் மகாவாக்கியம் - நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். வேறு எந்த மனிதனும் கூற முடியாது. ஆசிரியர் கற்பிக்கின்றார் எனில் அவசியம் ஆசிரியரை நினைவு செய்வர் அல்லவா! எல்லையற்ற தந்தையாகவும் இருக்கின்றார், தந்தை நம்மை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். ஆனால் ஆத்மா எவ்வாறு தூய்மை ஆகும்? என்பதை யாரும் கூற முடியாது. தன்னை பகவான் என்று கூறிக் கொள்ளலாம், ஆனால் தூய்மையாக்க முடியாது. இன்றைய நாட்களில் பலர் பகவான்களாக ஆகிவிட்டனர். மனிதர்கள் குழப்பமடைந்து இருக்கின்றனர். பல தர்மங்கள் உருவாகி விட்டன, எது சரியானது என்று எப்படி தெரிந்து கொள்வது என்று கூறுகின்றனர். உங்களது கண்காட்சி, மியூசியம் போன்றவைகளை திறக்கின்றனர், ஆனால் எதுவும் புரிந்து கொள்வது கிடையாது. உண்மையில் திறப்பு விழா நடைபெற்று விட்டது. முதலில் அஸ்திவாரம் இடுவர், பிறகு கட்டிடம் கட்டி தயாரான பின்பு திறப்பு விழா செய்வர். அஸ்திவாரம் இடுவதற்கும் அழைப்பு கொடுக்கப்படுகின்றன. ஆக இங்கும் தந்தை ஸ்தாபனை செய்து விட்டார். மற்றபடி புது உலக ஸ்தாபனை ஆகியே தீரும். அதை யாரும் திறக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. தானாகவே திறப்பு விழா நடைபெற்று விடும். இங்கு படிப்பை படித்துவிட்டு பிறகு நாம் புது உலகிற்குச் சென்று விடுவோம்.

 

இப்பொழுது நாம் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம், அதற்காகவே முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். விநாசம் ஏற்படும், பிறகு இந்த உலகமே மாறிவிடும். பிறகு நீங்கள் புது உலகில் இராஜ்யம் செய்ய வருவீர்கள். சத்யுக ஸ்தாபனை தந்தை செய்திருக்கின்றார், பிறகு நீங்கள் வருகின்ற பொழுது சொர்க்க இராஜ்யம் கிடைத்துவிடும். மற்றபடி திறப்பு விழா யார் செய்வார்கள்? தந்தை சொர்க்கத்திற்கு வரவே மாட்டார். சொர்க்கம் எப்படி இருக்கும்? என்பதை நாளடைவில் பார்ப்பீர்கள். கடைசியில் என்ன நடக்கும்? பின்நாளில் புரிந்து கொள்வீர்கள். தூய்மையாகாமல் மரியாதையுடன் நாம் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அந்த அளவிற்கு பதவியும் அடைய முடியாது. அதனால் அதிகமாக முயற்சி செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தொழில் போன்றவைகளும் செய்யுங்கள், ஆனால் அதிகப்படியான செல்வம் சேர்த்து என்ன செய்யப் போகிறீர்கள்? சாப்பிட முடியாது. உங்களது பேரன், பேத்திகளும் சாப்பிட மாட்டார்கள். அனைத்தும் மண்ணோடு மண்ணாக ஆகிவிடும். ஆகையால் யுக்தியாக சிறிது சேமிப்பு செய்து கொள்ளுங்கள். மற்றபடி அனைத்தையும் அங்கு மாற்றம் (பழ்ஹய்ள்ச்ங்ழ்) செய்து விடுங்கள். அனைவரும் மாற்றி விட முடியாது. ஏழைகள் விரைவாக மாற்றி விடுகின்றனர். பக்தி மார்க்கத்திலும் அடுத்த பிறவிக்காக மாற்றம் செய்கின்றனர். ஆனால் அது மறைமுகமானது (ஒய்க்ண்ழ்ங்ஸ்ரீற்). இது நேரிடையானது. தூய்மை இல்லாத மனிதர்களுக்கு தூய்மை இல்லாதவர்களிடத்தில் தான் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. இப்பொழுது தந்தை வந்திருக் கின்றார், நீங்கள் தூய்மை இல்லாதவர்களிடத்தில் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்வது கிடையாது. நீங்கள் பிராமணர் களாக இருக்கிறீர்கள், பிராமணர்களுக்குத் தான் நீங்கள் உதவி செய்ய வேண்டும். யார் சுயம் சேவை செய்கின்றார்களோ அவர்களுக்கு உதவிக்கான அவசியம் கிடையாது. இங்கு ஏழை, செல்வந்தர்கள் அனைவரும் வருகின்றனர். மற்றபடி கோடீஸ்வரர்கள் வருவது மிகவும் கடினமாகும். நான் ஏழைப் பங்காளன் என்று தந்தை கூறுகின்றார். பாரதம் மிகவும் ஏழை தேசமாகும். நான் வருவதும் பாரதத்தில் தான், இதிலும் இந்த அபு அனைத்தையும் விட மிக உயர்ந்த தீர்த்த ஸ்தானமாகும் என்று தந்தை கூறுகின்றார். இங்கு தந்தை வந்து முழு உலகிற்கும் சத்கதி அளிக்கின்றார். இது நரகமாகும். நரகம் பிறகு சொர்க்கமாக எவ்வாறு ஆகிறது? என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது உங்களது புத்தியில் முழு ஞானம் இருக்கிறது. தூய்மையாவதற்கு தந்தை யுக்திகளைக் கூறுகின்றார், அது அனைவருக்கும் நன்மை செய்து விடுகிறது. சத்யுகத்தில் தீமைக்கான எந்த விசயமும் இருக்காது, அதாவது அழுவது, கதறுவது போன்ற எதுவும் இருக்காது. இப்பொழுது தந்தையின் மகிமைகளாகிய ஞானக்கடல், சுகக்கடல் போன்றகைள் உங்களது மகிமைகளாகவும் இருக்கின்றன. நீங்களும் ஆனந்தத்தின் கடலாக ஆகிறீர்கள், பலருக்கு சுகம் கொடுக்கிறீர்கள், பிறகு உங்களது ஆத்மா சம்ஸ்காரத்தை எடுத்து, எப்போது புது உலகிற்குச் செல்கிறதோ அங்கு உங்களது மகிமை மாறிவிடும். பிறகு உங்களை சர்வ குணங்கள் நிறைந்தவர் ....... இப்பொழுது நீங்கள் நரகத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். இது முட்கள் நிறைந்த காடு என்று கூறப்படுகிறது. தந்தை தான் தோட்டக்காரன், படகோட்டி என்று அழைக்கப்படுகின்றார். எமது படகை கரையேற்றுங்கள் என்று பாடுகின்றனர். ஏனெனில் துக்கத்தில் இருப்பதால் தான் ஆத்மா அழைக்கிறது. மகிமைகள் செய்கின்றனர், ஆனால் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. எது தோன்றுகிறதோ அதைக் கூறி விடுகின்றனர். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானை நிந்தனை செய்து கொண்டே இருக்கின்றனர். நாம் ஆஸ்திகர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் தந்தையை நாம் அறிந்து விட்டோம். தந்தை சுயம் அறிமுகம் கொடுத்திருக் கின்றார். நீங்கள் பக்தி செய்யவில்லையெனில் எவ்வளவு தொந்தரவு செய்கின்றனர்! அவர்கள் அதிகபட்சமானவர் கள், நீங்கள் குறைந்தபட்சமானவர்களாக இருக்கிறீர்கள். எப்பொழுது உங்களுடையது அதிகபட்சமாக ஆகிவிடுகிறதோ அப்பொழுது அவர்களுக்கு கவர்ச்சி ஏற்படும். புத்தியின் பூட்டு திறக்கப்பட்டு விடும். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நன்ஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தனது முன்னேற்றத்தைப் பற்றியே சிந்தியுங்கள். மற்ற எந்த விசயத்திலும் செல்லாதீர்கள். படிப்பு மற்றும் நினைவில் முழு கவனம் செலுத்த வேண்டும். புத்தியை அலைய விடக் கூடாது.

 

2) இப்பொழுது தந்தை நேரடியாக வந்திருக்கின்றார், ஆகையால் தன்னிடமுள்ள அனைத்தையும் யுக்தியாக மாற்றம் செய்து விட வேண்டும். தூய்மை இல்லாத ஆத்மாக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்யக் கூடாது. மரியாதையுடன் சொர்க்கம் செல்வதற்கு அவசியம் தூய்மையாக ஆக வேண்டும்.

 

வரதானம்:

யோகத்தின் (நினைவின் தொடர்பின்) மூலம் உயர்ந்த நிலையின் அனுபவம் செய்யக் கூடிய டபுள் லைட் (பிரகாசமான & லேசான) பரிஸ்தா ஆகுக.

 

இராஜயோகி குழந்தைகளாகிய நீங்கள் யோகத்தின் மூலம் உயர்ந்த நிலையின் அனுபவத்தை செய்கிறீர்கள், ஹடயோகிகள் உடலை உயரமாக இருக்கச் செய்கின்றனர். நீங்கள் எங்கிருந்தாலும் உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள், ஆகையால் யோகிகள் மேலே வசிக்கிறார்கள் என்று கூறுகின்றனர். உங்களின் மனதின் நிலை உயர்வாக இருக்கிறது, ஏனென்றால் டபுள் லைட் ஆகி விட்டீர்கள். பரிஸ்தாக்களின் பாதங்கள் பூமியில் படுவதில்லை என்றும் கூட சொல்கின்றனர். பரிஸ்தா என்றால் புத்தி என்ற கால் பூமியில் இருக்காது, தேக உணர்வில் இருக்காது, பழைய உலகத்தின் மீது பற்றுதல் எதுவும் இருக்காது.

 

சுலோகன்:

இப்போது ஆசீர்வாதங்களின் கணக்கை நிரப்பிக் கொண்டீர்கள் என்றால் உங்களின் உருவப் படங்களின் (சிலை) மூலம் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் கிடைத்தபடி இருக்கும்.

 

ஓம்சாந்தி