16.10.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
ஆத்மாவிலிருந்து
விகாரங்கள்
என்ற
அசுத்தங்களை
நீக்கி
தூய
மலர்களாக
ஆகுங்கள்.
தந்தையின்
நினைவின்
மூலம்
தான்
அனைத்து
அசுத்தங்களும்
நீங்கும்.
கேள்வி:
தூய்மையாகக்
கூடிய
குழந்தைகள்
எந்த
ஒரு
விசயத்தில்
தந்தையைப்
பின்பற்ற வேண்டும்?
பதில்:
எவ்வாறு
தந்தை
சதா
பரிபூர்ண
தூய்மையானவராக
இருக்கின்றாரோ,
அவர்
ஒருபொழுதும் அசுத்தமானவர்களுடன்
கலப்பது
கிடையாது,
மிக
மிக
புனிதமானவராக
(பூஜிக்கத்தக்கவராக)
இருக்கின்றார்,
இவ்வாறு
தூய்மையாகக்
கூடிய
குழந்தைகளாகிய
நீங்களும்
தந்தையைப்
பின்பற்றுங்கள்,
தீயவைகளைப் பார்க்காதீர்கள்.
ஓம்சாந்தி.
தந்தை
அமர்ந்து
குழந்தைகளுக்கு
புரிய
வைக்கின்றார்.
இவர்கள்
இருவரும்
தந்தையாக இருக்கின்றனர்.
ஒருவரை
ஆன்மீகத்
தந்தை,
மற்றொருவரை
அலௌகீக
தந்தை
என்றும்
கூறுகின்றோம்.
இருவருக்கும்
சரீரம்
ஒன்று
தான்,
ஆகையால்
இரு
தந்தையரும்
புரிய
வைக்கின்றனர்.
ஒருவர்
புரிய வைக்கின்றார்,
மற்றொருவர்
புரிந்து
கொள்கின்றார்
என்றாலும்
கூட
இருவரும்
புரிய
வைப்பதாகத்
தான் கூறுகின்றோம்.
இவ்வளவு
சிறிய
ஆத்மாவிற்குள்
எவ்வளவு
கறைகள்
படிந்திருக்கின்றன!
கறை
படிந்ததன் மூலம்
எவ்வளவு
நஷ்டம்
ஏற்பட்டு
விட்டது!
இந்த
இலாப
நஷ்டம்
என்பது
சரீரத்துடன்
இருக்கின்ற
பொழுது தான்
பார்க்க
முடிகிறது.
ஆத்மாக்களாகிய
நாம்
தூய்மையாக
ஆகின்ற
பொழுது
இந்த
இலட்சுமி
நாராயணன் போன்று
தூய்மையான
சரீரம்
கிடைக்கும்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
இப்பொழுது
ஆத்மாவிற்குள்
எவ்வளவு கறைகள்
படிந்திருக்கின்றன!
தேன்
எடுக்கின்ற
பொழுது
அதை
வடிகட்டுகின்றனர்.
அப்பொழுது
எவ்வளவு அசுத்தங்கள்
வெளிப்படுகின்றன,
பிறகு
தூய்மையான
தேன்
தனியாக
பிரிந்து
விடுகிறது.
ஆத்மாவும்
அதிக கறைபடிந்ததாக
ஆகிவிடுகிறது.
ஆத்மா
தான்
தங்கமாக
இருந்தது,
தூய்மையானதாக,
முற்றிலும்
பவித்திரமாக இருந்தது.
சரீரம்
எவ்வளவு
அழகானதாக
இருந்தது!
இந்த
இலட்சுமி
நாராயணனனின்
சரீரத்தைப்
பாருங்கள் எவ்வளவு
அழகாக
இருக்கிறது!
மனிதர்கள்
சரீரத்தை
தான்
பூஜிக்கின்றனர்
அல்லவா!
ஆத்மாவின்
பக்கம் பார்ப்பது
கிடையாது.
ஆத்மாவின்
அறிமுகமே
கிடையாது.
முதலில்
ஆத்மா
அழகாக
(சுத்தமாக)
இருந்தது,
ஆடையும்
அழகானதாக
கிடைத்தது.
நீங்களும்
இப்பொழுது
இவ்வாறு
ஆக
விரும்புகிறீர்கள்.
ஆக
ஆத்மா எவ்வளவு
தூய்மையானதாக
ஆக
வேண்டும்!
ஆத்மாவிற்கு
தான்
தமோ
பிரதானம்
என்று
கூறப்படுகிறது,
ஏனெனில்
அதனுள்
முழு
அசுத்தமும்
இருக்கிறது.
ஒன்று
தேகாபிமானம்
என்ற
அசுத்தம்,
பிறகு
காமம்,
கோபம்
என்ற
அசுத்தம்.
அசுத்தங்களை
நீக்குவதற்கு
சல்லடைக்
கொண்டு
சலிப்பார்கள்
அல்லவா!
சலிப்பதன் மூலம்
நிறம்
கூட
மாறிவிடுகிறது.
நீங்கள்
நல்ல
முறையில்
அமர்ந்து
சிந்தனை
செய்யும்
பொழுது
அதிக அசுத்தங்கள்
நிறைந்திருப்பதை
உணர்வீர்கள்.
ஆத்மாவிற்குள்
இராவணன்
பிரவேசம்
ஆகியிருக்கிறது.
இப்பொழுது தந்தையின்
நினைவில்
இருப்பதன்
மூலம்
தான்
அசுத்தங்கள்
நீங்கும்.
இதற்கும்
நேரம்
ஏற்படுகிறது.
தேக அபிமானத்தின்
காரணத்தினால்
விகாரங்களின்
அசுத்தங்கள்
எவ்வளவு
ஏற்பட்டு
விடுகிறது
என்பதை
தந்தை புரிய
வைக்கின்றார்.
கோபம்
என்ற
அசுத்தமும்
குறைந்தது
கிடையாது.
கோபப்படுபவர்கள்
உள்ளுக்குள்
எரிந்து கொண்டே
இருப்பர்.
ஏதாவது
ஒரு
விசயத்தில்
உள்ளம்
எரிந்து
கொண்டே
இருக்கும்.
முகமும்
தாமிரம் போன்று
இருக்கும்.
நமது
ஆத்மா
எரிந்து
இருக்கிறது
என்பதை
இப்பொழுது
நீங்கள்
உணர்கிறீர்கள்.
ஆத்மாவிற்குள் எவ்வளவு
அசுத்தங்கள்
உள்ளன
என்பது
இப்பொழுது
தெரிந்து
விட்டது.
இந்த
விசயங்களை
புரிந்து கொள்பவர்கள்
மிகவும்
குறைவானவர்கள்
ஆவர்.
இதற்கு
முதல்
தரமான
மலர்களாக
இருக்க
வேண்டும் அல்லவா!
இப்பொழுது
பல
குறைகள்
உள்ளன.
நீங்கள்
அனைத்து
குறைகளையும்
நீக்கி
தூய்மையாக
ஆக வேண்டும்
அல்லவா!
இந்த
இலட்சுமி
நாராயணன்
எவ்வளவு
தூய்மையானவர்களாக
இருக்கின்றனர்!
உண்மையில் அவர்களைத்
தொடுவதற்குக்
கூட
உரிமை
கிடையாது.
பதீதமானவர்கள்
சென்று
இவ்வளவு
உயர்ந்த தேவதைகளைத்
தொட
முடியாது.
கையால்
தொடுவதற்கு
தகுதியே
கிடையாது.
சிவனை
கையால்
தொடவே முடியாது.
அவர்
நிராகாராக
இருக்கின்றார்,
அவரை
கையால்
தொட
முடியாது.
அவர்
மிகவும்
தூய்மையானவர்.
அவரது
சிலை
மிகப்
பெரியதாக
வைத்திருக்கின்றனர்,
ஏனெனில்
இவ்வளவு
சிறிய
பிந்துவை
யாரும்
கையால் தொட
முடியாது.
ஆத்மா
சரீரத்தில்
பிரவேசிக்கின்ற
பொழுது
சரீரம்
பெரியதாக
ஆகிறது.
ஆத்மாவானது சிறியதாக,
பெரியதாக
ஆவது
கிடையாது.
இது
அசுத்தமான
உலகமாகும்.
ஆத்மாவிற்குள்
எவ்வளவு
அசுத்தங்கள் நிறைந்திருக்கிறது!
சிவபாபா
மிகவும்
தூய்மையானவர்
ஆவார்.
இங்கு
அனைவரையும்
ஒன்று
போல் ஆக்கிவிடுகின்றனர்.
ஒருவரையொருவர்
நீ
மிருகமென்று
கூட
கூறிவிடுகின்றனர்.
சத்யுகத்தில்
இப்படிப்பட்ட வார்த்தைகள்
இருக்காது.
நமது
ஆத்மாவில்
எவ்வளவு
கறைகள்
படிந்திருக்கின்றன!
என்பதை
இப்பொழுது நீங்கள்
உணர்கிறீர்கள்.
தந்தையை
நினைக்கும்
அளவிற்கு
தகுதியற்றதாக
இருக்கிறது.
இவர்
தகுதியற்றவர் என்பதை
மாயையும்
புரிந்து
கொண்டு
அவர்களை
முற்றிலுமாக
விலக்கி
விடுகிறது.
தந்தை
எவ்வளவு
தூய்மையானவராக
இருக்கின்றார்!
ஆத்மாக்களாகிய
நாம்
எப்படியிருந்தவர்கள்
எப்படியாகி விடுகின்றோம்!
ஆத்மாவை
தூய்மைப்படுத்துவதற்காகத்
தான்
நீங்கள்
என்னை
அழைத்தீர்கள்
என்று
தந்தை இப்பொழுது
புரிய
வைக்கின்றார்.
அதிக
அசுத்தங்கள்
நிறைந்திருக்கின்றன!
தோட்டத்தில்
அனைவரும்
முதலில் தரமான
மலர்களாக
ஆகிவிடுவது
கிடையாது.
வரிசைக்
கிரமம்
இருக்கிறது.
தந்தை
தோட்டக்காரனாக
இருக்கின்றார்.
ஆத்மா
எவ்வளவு
தூய்மையானதாக
ஆகிறது,
பிறகு
எவ்வளவு
அசுத்தமானதாக,
முற்றிலும்
முள்ளாக ஆகிவிடுகிறது.
ஆத்மாவிற்குள்
தான்
தேக
அபிமானத்தின்,
காமம்,
கோபத்தின்
அசுத்தங்கள்
நிறைந்திருக்கிறது.
மனிதர்களிடத்தில்
கோபமும்
எவ்வளவு
இருக்கிறது!
நீங்கள்
தூய்மையாகி
விடும்
பொழுது
யாருடைய முகத்தையும்
பார்ப்பதற்கு
மனம்
விரும்பாது.
தீயவைகளைப்
பார்க்காதீர்கள்.
அசுத்தத்தைப்
பார்க்கவே
பார்க்காதீர்கள்.
ஆத்மா
தூய்மையாக
ஆகி
தூய்மையான
சரீரத்தை
எடுக்கின்ற
பொழுது
பிறகு
அசுத்தத்தைப்
பார்ப்பதே கிடையாது.
அசுத்த
உலகமே
அழிந்து
போய்விடும்.
தந்தை
புரிய
வைக்கின்றார்
-
நீங்கள்
தேக
அபிமானத்தில் வந்து
எவ்வளவு
அசுத்தமாக
ஆகியிருக்கிறீர்கள்!
பதீதமாக
ஆகிவிட்டீர்கள்.
குழந்தைகள்
அழைக்கவும் செய்கின்றனர்
-
பாபா,
என்னிடத்தில்
கோபத்தின்
பூதம்
இருக்கிறது,
பாபா,
தூய்மையாவதற்காகவே
நாங்கள் உங்களிடத்தில்
வந்திருக்கிறோம்.
தந்தை
சதா
தூய்மையானவராக
இருக்கின்றார்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
இப்படிப்பட்ட
உயர்ந்த
சக்தி
வாய்ந்தவரை
சர்வவியாபி
என்று
கூறி
எவ்வளவு
நிந்தனை
செய்கிறீர்கள்!
தன் மீதும்
கோபம்
கொள்கிறீர்கள்
-
நான்
எப்படியிருந்தேன்!
பிறகு
எப்படி
ஆகிவிட்டேன்!
இந்த
விசயங்களை குழந்தைகளாகிய
நீங்கள்
மட்டுமே
அறிவீர்கள்.
வேறு
எந்த
சத்சங்கத்திலும்
அல்லது
பல்கலைக்கழகம் போன்றவற்றிலும்
இப்படிப்பட்ட
இலட்சியத்தைப்
புரிய
வைக்க
முடியாது.
நமது
ஆத்மாவில்
எப்படி
அசுத்தங்கள் நிறைய
ஆரம்பித்தன
என்பதை
இப்பொழுது
குழந்தைகளாகிய
நீங்கள்
அறிவீர்கள்.
2
கலைகள்
குறைந்தன,
பிறகு
4
கலைகள்
குறைந்தன,
அசுத்தங்கள்
நிறைய
ஆரம்பித்தன.
அதனால்
தான்
தமோ
பிரதானம்
என்று கூறப்படுகிறது.
சிலர்
பேராசையில்,
சிலர்
பற்றுதலில்
எரிந்து
இறக்கின்றனர்.
இப்படிப்பட்ட
மன
நிலையிலேயே எரிந்து,
எரிந்து
இறந்து
விடுகின்றனர்.
இப்பொழுது
குழந்தைகளாகிய
நீங்கள்
சிவபாபாவின்
நினைவிலேயே சரீரத்தை
விட
வேண்டும்.
இவ்வாறு
சிவபாபா
தான்
ஆக்குகின்றார்.
இந்த
இலட்சுமி
நாராயணனை
இவ்வாறு சிவபாபா
ஆக்கியிருக்கின்றார்
அல்லவா!
ஆக
தன்னை
எவ்வளவு
எச்சரிக்கையுடன்
வைத்துக்
கொள்ள வேண்டும்!
அநேக
புயல்கள்
வரும்!
மாயையின்
புயல்கள்
தான்
வருகின்றன,
வேறு
எந்த
புயல்களும் கிடையாது.
சாஸ்திரங்களில்
ஹனுமான்
போன்றவர்களின்
கதைகளை
எழுதி
வைத்து
விட்டனர்.
பகவான் சாஸ்திரங்களை
உருவாக்கியதாகக்
கூறுகின்றனர்.
பகவான்
அனைத்து
வேத
சாஸ்திரங்களின்
சாரத்தைக் கூறுகின்றார்.
பகவான்
சத்கதி
ஏற்படுத்தி
விட்டார்
எனும்
பொழுது
பிறகு
அவர்
சாஸ்திரங்களை
உருவாக்க வேண்டிய
அவசியம்
என்ன
இருக்கிறது!
தீயவைகளைக்
கேட்காதீர்கள்
என்று
இப்பொழுது
தந்தை
கூறுகின்றார்.
இந்த
சாஸ்திரம்
போன்றவைகளினால்
நீங்கள்
உயர்ந்தவர்களாக
ஆகி
விட
முடியாது.
நான்
இவை
அனைத்திலிருந்தும்
தனிப்பட்டவன்.
யாரும்
அறிந்து
கொள்வது
கிடையாது.
தந்தை
யார்?
என்பது
யாருக்கும்
தெரியாது.
யார்
யார்
எனது
சேவை
செய்கின்றனர்?
என்பதை
தந்தை
அறிவார்,
அதாவது
கல்யாணகாரி
ஆகி
மற்றவர்களுக்கும் நன்மை
செய்கின்றார்களோ
அவர்கள்
தான்
தந்தையின்
உள்ளத்தில்
அமர
முடியும்.
சிலர்
சேவை
என்றால் என்ன?
என்று
கூட
அறியாமல்
இருக்கின்றனர்.
தன்னை
ஆத்மா
என்று
உணர்ந்து
தந்தையை
நினைவு செய்யுங்கள்
என்ற
ஞானம்
குழந்தைகளாகிய
உங்களுக்குக்
கிடைத்திருக்கிறது.
ஆத்மா
தூய்மையானதாக ஆகிக்
கொண்டிருந்தாலும்
சரீரம்
பதீதமானது
அல்லவா!
யாருடைய
ஆத்மா
தூய்மையாகிக்
கொண்டே இருக்கிறதோ
அவர்களது
நடத்தைகளில்
இரவு
பகல்
வித்தியாசம்
இருக்கும்.
நடத்தைகளின்
மூலம்
அறிந்து கொள்ள
முடியும்.
யாருடைய
பெயரையும்
குறிப்பிடுவது
கிடையாது,
ஒருவேளை
யாருடைய
பெயரையாவது குறிப்பிட்டு
அவர்கள்
மேலும்
அதிகமாக
மோசம்
ஆகிவிடக்
கூடாது.
நீங்கள்
எவ்வாறு
இருந்தீர்கள்?
இப்பொழுது
என்ன
ஆக
வேண்டும்?
என்று
வித்தியாசத்தை
நீங்கள் பார்க்க
முடியும்.
ஆகவே
ஸ்ரீமத்
படி
நடக்க
வேண்டும்
அல்லவா!
உள்ளுக்குள்
நிறைந்திருக்கும்
அசுத்தத்தை நீக்கி
விட
வேண்டும்.
லௌகீக
சம்மந்தங்களிலும்
சில
குழந்தைகள்
மிகவும்
அசுத்தமானவர்களாக
இருப்பர்,
அவர்களிடத்தில்
தந்தையும்
விரக்தியடைந்து
விடுவார்.
இப்படிப்பட்ட
குழந்தை
இல்லையெனில்
நன்றாக இருந்திருக்கும்
என்று
கூறுவர்.
மலர்கள்
நிறைந்த
தோட்டத்தில்
நறுமணம்
இருக்கும்.
ஆனால்
நாடகப்படி அசுத்தமும்
இருக்கிறது.
எருக்கம்
பூவைப்
பார்ப்பதற்கு
மனம்
முற்றிலும்
விரும்புவது
கிடையாது.
ஆனால் தோட்டத்திற்குச்
சென்றதும்
பார்வை
அனைத்து
மலர்களின்
பக்கமும்
செல்லும்
அல்லவா!
இது
இப்படிப்பட்ட மலர்
என்று
ஆத்மா
கூறும்.
நல்ல
மலர்களின்
நறுமணத்தை
தான்
நுகர்வீர்கள்
அல்லவா!
தந்தையும்
இவரது ஆத்மா
எந்த
அளவிற்கு
நினைவில்
இருக்கிறது?
எந்த
அளவிற்கு
தூய்மையாகியிருக்கிறது?
ஞானம்
(மற்றவர்களுக்கு)
கூறுகிறது?
மேலும்
மற்றவர்களையும்
தனக்கு
சமமாக
ஆக்கியிருக்கிறது?
என்பதைப் பார்க்கின்றார்.
மூல
விசயம்
மன்மனாபவ.
தந்தை
கூறுகின்றார்
-
என்னை
நினைவு
செய்து
தூய்மையான மலர்களாக
ஆகுங்கள்.
இந்த
இலட்சுமி
நாராயணன்
எவ்வளவு
தூய்மையான
மலர்களாக
இருந்தனர்!
இவர்களை விட
சிவபாபா
மிகவும்
தூய்மையானவர்.
இந்த
இலட்சுமி
நாராயணனையும்
சிவபாபா
தான்
இவ்வாறு ஆக்கியிருக்கின்றார்
என்பது
மனிதர்களுக்குத்
தெரியாது.
இந்த
முயற்சியின்
மூலம்
தான்
இவர்கள்
இவ்வாறு ஆகியிருக்கின்றனர்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
இராமர்
குறைவான
முயற்சி
செய்ததால்
சந்திரவம்சியாக ஆகியிருக்கின்றார்.
தந்தை
நிறைய
விசயங்களைப்
புரிய
வைக்கின்றார்.
ஒன்று
நினைவு
யாத்திரையில்
இருக்க வேண்டும்,
இதன்
மூலம்
அசுத்தங்கள்
நீங்கும்,
ஆத்மா
தூய்மையாகிவிடும்.
உங்களது
மியூசியத்தில்
பலர் வருகின்றனர்.
குழந்தைகள்
சேவையில்
அதிகமாக
ஆர்வம்
காட்ட
வேண்டும்.
சேவையை
விட்டு
விட்டு ஒருபொழுதும்
தூங்கக்
கூடாது.
சேவையில்
மிகச்
சரியாக
இருக்க
வேண்டும்.
மியூசியத்திலும்
கூட
நீங்கள் ஓய்விற்கு
நேரம்
ஒதுக்குகிறீர்கள்.
தொண்டை
கட்டிக்
கொள்கிறது,
உணவும்
சாப்பிட
வேண்டும்,
ஆனால் உள்ளுக்குள்
இரவும்
பகலும்
ஆர்வம்
இருக்க
வேண்டும்.
யாராவது
வந்தால்
அவர்களுக்கு
வழி
கூற வேண்டும்.
உணவு
சாப்பிடும்
நேரத்தில்
யாராவது
வந்து
விட்டால்
முதலில்
அவர்களை
கவனிக்க
வேண்டும்,
பிறகு
தான்
உணவு
சாப்பிட
வேண்டும்.
இவ்வாறு
சேவை
செய்பவர்களாக
இருக்க
வேண்டும்.
சிலருக்கு
அதிக தேக
அபிமானம்
வந்து
விடுகிறது.
ஓய்வுப்
பிரியர்களாக,
நவாப்களாக
ஆகிவிடுகின்றனர்.
தந்தை
புரிய
வைக்க வேண்டியிருக்கிறது.
இந்த
மாதிரியான
நவாப்
நிலையை
விட்டு
விடுங்கள்.
தனது
பதவிக்கான
சாட்சாத்காரத்தையும் பிறகு
தந்தை
காண்பிப்பார்.
தேக
அபிமானம்
என்ற
கோடாரியை
தங்களது
காலில்
போட்டுக்
கொண்டீர்கள்.
பல குழந்தைகள்
பாபாவிடத்திலும்
பொறாமைக்
கொள்கின்றனர்.
ஹரே,
இது
சிவபாபாவின்
இரதமாகும்,
இவரையும் கவனிக்க
வேண்டியிருக்கிறது.
இன்று
உலகில்
மனிதர்கள்
பலர்
பல
மருந்துக்களை
வாங்கிக்
கொண்டே இருக்கின்றனர்,
டாக்டர்களும்
மருந்துக்களை
கொடுத்துக்
கொண்டே
இருக்கின்றனர்.
சரீரத்தை
ஆரோக்கியமாக வைத்துக்
கொள்ளுங்கள்
என்று
பாபா
கூறுவது
சரி
தான்,
ஆனாலும்
தனது
மனநிலையையும்
பார்த்துக் கொள்ள
வேண்டும்
அல்லவா!
நீங்கள்
பாபாவின்
நினைவிலிருந்து
சாப்பிட்டால்
ஒருபொழுதும்
எந்த
பொருளும் நஷ்டம்
ஏற்படுத்தாது.
நினைவின்
மூலம்
சக்தி
நிறைந்து
விடும்.
உணவு
மிகவும்
தூய்மையானதாக
ஆகிவிடும்.
ஆனால்
அப்படிப்பட்ட
நிலை
இப்பொழுது
கிடையாது.
பிராமணர்களினால்
உருவாக்கப்பட்ட
உணவு
உத்தமத்திலும் உத்தமமானது
என்று
பாபா
கூறுகின்றார்.
ஆனால்
அதற்கு
நினைவிலிருந்து
கொண்டு
செய்ய
வேண்டும்.
நினைவிலிருந்து
சமைக்கின்ற
பொழுது
சமைப்பவருக்கும்
நன்மை,
சாப்பிடுபவர்களுக்கும்
நன்மை
ஏற்படும்.
எருக்கம்
பூக்காளாகவும்
பலர்
இருக்கின்றனர்
அல்லவா!
அவர்கள்
என்ன
பதவி
அடைவார்கள்!
தந்தைக்கு கருணை
ஏற்படுகிறது.
ஆனால்
தாச
தாசி
ஆவதற்கான
பாகமும்
பதிவாகியிருக்கிறது,
இதில்
குஷியடைந்து விடக்
கூடாது.
நாம்
இவ்வாறு
ஆக
வேண்டும்
என்று
சிந்திப்பதும்
கிடையாது.
தாச
தாசி
ஆவதற்குப்
பதில் செல்வந்தன்
ஆவது
நல்லது,
தாச
தாசிகளை
வேலைக்கு
வைத்துக்
கொள்வர்.
நிரந்தரமாக
என்
ஒருவனை நினைவு
செய்யுங்கள்,
நினைத்து,
நினைத்து
சுகம்
அடையுங்கள்
என்று
தந்தை
கூறுகின்றார்.
இதையே பக்தர்கள்
மாலையாக
உருட்டுகின்றனர்.
அது
பக்தர்களின்
வேலையாகும்.
தந்தை
கூறுவது
என்னவெனில் தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
கொண்டு,
தந்தையை
நினைவு
செய்யுங்கள்.
அவ்வளவு
தான்.
மற்றபடி
எந்த ஜபமும்
செய்யாதீர்கள்,
மாலை
உருட்டாதீர்கள்.
தந்தையை
அறிந்து
கொள்ள
வேண்டும்,
அவரை
நினைவு செய்ய
வேண்டும்.
வாயில்
பாபா
பாபா
என்றும்
கூறக்
கூடாது.
அவர்
ஆத்மாக்களாகிய
நமது
எல்லையற்ற தந்தை,
அவரை
நினைவு
செய்வதால்
நாம்
சதோ
பிரதானம்
ஆகிவிடுவோம்
அதாவது
ஆத்மா
தூய்மையாக ஆகிவிடும்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
எவ்வளவு
எளிதானது!
ஆனால்
யுத்த
மைதானம்
அல்லவா!
நீங்கள் மாயையிடம்
யுத்தம்
செய்கிறீர்கள்.
அது
அடிக்கடி
உங்களது
புத்தியோகத்தை
துண்டித்து
விடுகிறது.
எந்த அளவிற்கு
விநாச
காலத்தில்
அன்பான
புத்தியுடையவர்களாக
ஆவீர்களோ
அந்த
அளவிற்கு
பதவி
அடைவீர்கள்.
ஒருவரின்
நினைவு
தவிர
வேறு
யாருடைய
நினைவும்
வரக்
கூடாது.
வெற்றி
மாலையில்
மணியாகும் அளவிற்கு
கல்பத்திற்கு
முன்பு
உருவாகியிருக்கின்றனர்.
நீங்கள்
பிராமண
குலத்தினர்களாக
இருக்கிறீர்கள்,
பிராமணர்களுக்குத்
தான்
அதாவது
யார்
மிக
குப்தமாக
முயற்சி
செய்திருக்கின்றார்களோ
அவர்களுக்குத்
தான் ருண்ட
மாலை
(மண்டை
ஓடு
மாலை)
உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஞானமும்
குப்தமானது
அல்லவா!
தந்தை ஒவ்வொருவரையும்
நன்றாக
அறிவார்.
நல்ல
நல்ல
நம்பர்
ஒன்னாக
இருந்த
மகாரதிகளும்
இன்று
கிடையாது.
தேக
அபிமானம்
அதிகமாக
இருக்கிறது.
தந்தையின்
நினைவில்
இருக்க
முடிவது
கிடையாது.
மாயை
மிக அதிகமாக
அடி
கொடுக்கிறது.
மிகவும்
குறைந்தவர்கள்
தான்
மாலையில்
மணிகளாக
ஆக
முடியும்.
இருப்பினும் தந்தை
குழந்தைகளுக்கு
புரிய
வைக்கின்றார்
-
நான்
எவ்வளவு
தூய்மையாக
இருந்தேன்!
பிறகு
நான்
எப்படி ஆகிவிட்டேன்?
அசுத்தமானவனாக
ஆகிவிட்டேன்
என்று
தன்னை
பார்த்துக்
கொண்டே
இருங்கள்.
இப்பொழுது சிவபாபா
கிடைத்திருக்கின்றார்
எனில்
அவரது
வழிப்படி
நடக்க
வேண்டும்
அல்லவா!
எந்த
தேகதாரிகளையும் நினைவு
செய்யக்
கூடாது.
யாருடைய
நினைவும்
வரக்
கூடாது.
யாருடைய
சித்திரத்தையும்
வைத்துக்
கொள்ளக் கூடாது.
ஒரே
ஒரு
சிவபாபாவின்
நினைவு
மட்டுமே
இருக்க
வேண்டும்.
சிவபாபாவிற்கு
சரீரம்
கிடையாது.
இது சிறிது
காலத்திற்கு
கடனாக
எடுக்கப்பட்ட
சரீரமாகும்.
உங்களை
இவ்வாறு
தேவி
தேவதையாக,
இலட்சுமி நாராயணனாக
ஆக்குவதற்கு
எவ்வளவு
உழைகிறார்!
தந்தை
கூறுகின்றார்
-
நீங்கள்
என்னை
பதீத
உலகிற்கு அழைத்தீர்கள்,
உங்களை
பாவனம்
ஆக்குகின்றேன்,
பிறகு
நீங்கள்
என்னை
பாவன
உலகில்
அழைப்பதே கிடையாது!
அங்கு
வந்து
என்ன
செய்வது?
அவரது
சேவையே
பாவனம்
ஆக்குவதாகும்.
முற்றிலுமாக எரிந்து
கறுப்பான
நிலக்கரியாக
ஆகிவிட்டீர்கள்
என்பதை
தந்தை
அறிவார்.
உங்களை
வெள்ளையாக்குவதற்கு
(தூய்மையாக்குவதற்கு)
தந்தை
வந்திருக்கின்றார்.
நல்லது.
இனிமையிலும்
இனிய,
தேடிக்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாய்
தந்தையுமான
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1)
சேவையில்
மிகச்
சரியாக
(ஈடுபாட்டில்)
இருக்க
வேண்டும்.
இரவும்
பகலும்
சேவையில் ஆர்வம்
இருக்க
வேண்டும்.
சேவையை
விட்டு
விட்டு
ஒருபொழுதும்
ஓய்வு
எடுக்கக்
கூடாது.
தந்தைக்கு
சமமாக
கல்யாணகாரி
ஆக
வேண்டும்.
2)
ஒருவரின்
நினைவில்
அன்பான
புத்தியுடையவர்களாகி
உள்ளுக்குள்
இருக்கும் அசுத்தங்களை
நீக்கி
விட
வேண்டும்.
நறுமணமுள்ள
மலர்களாக
ஆக
வேண்டும்.
இந்த அசுத்தம்
நிறைந்த
உலகில்
மனதை
செலுத்த
வேண்டாம்.
வரதானம்
–
முதலில் தாங்கள்!
என்ற
மந்திரத்தின்
மூலம்
அனைவரின்
சுயமரியாதையைப் பெறக்கூடிய,
பணிவானவரிலிருந்து
மகான்
ஆகுக.
பணிவுள்ளவரே
சர்வ
மகான்
என்ற
மகாமந்திரம்
சதா
நினைவிருக்கட்டும்.
முதலில் தாங்கள்
எனச் சொல்வது
தான்
அனைவரிடமும்
சுயமரியாதை
பெறுவதற்கான
ஆதாரமாகும்.
மகான்
ஆவதற்கான
இந்த மந்திரத்தை
வரதான
ரூபத்தில்
சதா
உடன்
வைத்துக்
கொள்ளுங்கள்.
வரதானங்களால்
தான்
வளர்ந்து,
பறந்து இலக்கைச்
சென்றடைய
வேண்டும்.
எப்போது
வரதானங்களை
காரியத்தில்
ஈடுபடுத்துவதில்லையோ,
அப்போது கடின
உழைப்பு
செய்கிறீர்கள்.
வரதானங்களால்
வளர்ந்து
கொண்டே
இருப்பீர்களானால்,
வரதானங்களை
காரியத்தில் ஈடுபடுத்திக்
கொண்டே
இருப்பீர்களானால்
கடின
உழைப்பு
முடிந்து
போய்
விடும்.
சதா
வெற்றி
மற்றும் திருப்தியின்
அனுபவம்
செய்து
கொண்டே
இருப்பீர்கள்.
ஸ்லோகன்
–
முகத்தோற்றத்தின்
மூலம்
சேவை
செய்வதற்காக,
தன்னுடைய
புன்சிரித்த,
இரமணீகரமான
மற்றும்
கம்பீரமான
சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள்.
ஓம்சாந்தி