20.01.2019           மதுபன்              அவ்யக்த - பாப்தாதா                 ஓம்சாந்தி         12.04.1984


 

பிராமண வாழ்க்கையின் அஸ்திவாரம் தூய்மை

 

இன்று பாப்தாதா அனைத்து புனித அன்னப்பறவைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு புனித அன்னப்பறவையும் எந்தளவு தூய்மையாக ஆகியிருக்கிறார்கள், எந்தளவு அன்னப்பறவை ஆகியிருக்கிறார்கள்? தூய்மை என்றால் புனிதம் ஆவதற்கான சக்தியை எந்தளவு வாழ்க்கையில் அதாவது எண்ணம், சொல் மற்றும் செயலில், சம்மந்தத்தில், தொடர்பில் கொண்டு வந்திருக்கிறார்கள்? ஒவ்வொரு எண்ணமும் புனிதம் அதாவது தூய்மையின் சக்தியினால் நிரம்பியிருக்கிறதா? தூய்மையான எண்ணம் மூலமாக எந்தவொரு தூய்மையற்ற எண்ணம் வைத்திருக்கும் ஆத்மாவை பகுத்தறிந்து மேலும் பரிவர்த்தனை செய்ய முடியுமா? என்று பார்த்துக்கொண்டிருந்தேன்., தூய்மையின் சக்தியின் மூலம் எந்தவொரு ஆத்மாவின் திருஷ்டி, உள்ளுணர்வு மற்றும் செயல் மூன்றையுமே மாற்ற முடியும். அந்த மகான் சக்தியின் எதிரில் தூய்மையற்ற எண்ணம் கூட தாக்குதல் செய்ய முடியாது. ஆனால் எப்பொழுது நீங்களே எண்ணம், சொல் மற்றும் செயலில் தோல்வி அடைகிறீர்களோ, அப்பொழுது இன்னொரு நபர் மற்றும் எண்ண அலைகள் (வைப்ரேஷன்) மூலம் தோல்வி ஏற்படுகிறது. யாருடைய சம்மந்தம் மற்றும் தொடர்பில் வந்து தோல்வியடைவது என்பது சுயம் தந்தையுடன் அனைத்து சம்மந்தங்களை இணைப்பதில் தோல்வியடைந்திருக்கிறார் என்பதை நிரூப்பிக்கிறது. அப்பொழுது தான் ஏதாவது சம்மந்தம் மற்றும் தொடர்பில் தோல்வியடைகிறார். தூய்மையில் தோல்வியடைவது என்பதின் விதை ஏதாவது ஒரு நபர் மற்றும் நபரின் குணம், சுபாவம், தனித்தன்மை மற்றும் விசேஷத்தினால் பிராபவம் அடைவது. இந்த நபர் மற்றும் நபரின் விசேஷங்களின் பிரபாவம் ஆவது, பிரபாவமாதில்லை, ஆனால் சீரழிந்து போவது. நபரின் தனித்தன்மை விசேஷம், குணம், சுபாவம் தந்தையால் கொடுக்கப்பட்டிருக்கும் விசேஷம் அதாவது வள்ளலால் கொடுக்கப்பட்ட கொடை. நபர் மீது பிரபாவம் அடைவது என்பது ஏமாற்றம் அடைவது. ஏமாற்றமடைவது என்றால், துக்கத்தை அனுபவிப்பது. தூய்மையின்மையின் சக்தி கானல் நீருக்கு சமமான சக்தி அது சம்மந்தம் மற்றும் தொடர்பில் மிக நல்ல அனுபவம் செய்விக்கும், கவர்ந்திழுக்கும். நான் நல்லதின் பக்கம் பிரபாவம் ஆகிக்கொண்டிருக்கிறேன் என்று நினைப்பார், ஆகவே தான் மிக நன்றாக இருக்கிறது, இவருடைய குணம் மற்றும் சுபாவம் பிடித்திருக்கிறது என்று கூறுவார், ஞானம் பிடித்திருக்கிறது, யோகா செய்ய வைப்பது பிடித்திருக்கிறது என்றால் இதில் சக்தி கிடைக்கிறது, சகயோகம் கிடைக்கிறது, அன்பு கிடைக்கிறது. அல்ப காலத்தின் பிராப்தி கிடைக்கிறது ஆனால் ஏமாற்றம் அடைகிறார்கள். கொடுக்கும் வள்ளல் அதாவது விதையை, அஸ்திவாரத்தை அழித்து விட்டார்கள், மேலும் வண்ணமயமான கிளையைப் பிடித்து ஆடுகிறார்கள் என்றால் என்ன நிலையாகும்? அஸ்திவாரம் இல்லாத கிளை ஆட்டுமா அல்லது கீழே தள்ளுமா/? எதுவரை விதை அதாவது வள்ளல், உருவாக்குபவருடன் அனைத்து சம்மந்தம், அனைத்து பிராப்தியின் இரசனையை அனுபவம் செய்யவில்லையென்றால், அதுவரை சில நேரம் நபரிடமிருந்து, சில நேரம் வைபவங்களிலிருந்து, சில நேரம் எண்ண அலைகள் வாயுமண்டலம் ஆகிய விதவிதமான கிளைகளிலிருந்து அல்ப கால பிராப்தியின் கானல் நீருக்குச் சமமான ஏமாற்றத்தை அடைந்து கொண்டேயிருப்பார்கள். இந்த பிரபாவம் ஆவது என்றால் அழியாத பிராப்தியிலிருந்து வஞ்சிக்கப்படுவது. தூயமையின் சக்தியின் மூலம் எப்பொழுது விரும்புகிறீர்களோ, எந்த நிலையை விரும்புகிறீர்களோ, எந்த பிராப்தியை விரும்புகிறீர்களோ, எந்தக் காரியத்தில் வெற்றியை விரும்புகிறீர்களோ, அவை அனைத்தும் உங்கள் எதிரில் தாசிக்கு சமமாக ஆஜர் ஆகிவிடும். எப்பொழுது கலியுகத்தின் இறுதியில் கூட இரஜோ பிரதான தூய்மையின் சக்தியை தாரணை செய்யும் பெயர் பெற்ற மகாத்மாக்களுக்கு இதுவரையிலும் கூட இயற்கை தாசியாவதற்கான எடுத்துக்காட்டை பார்க்கிறீர்கள். இது வரையிலும் கூட பெயர் மகாத்மா என்று இருக்கிறது. இதுவரையிலும் பூஜைக்குரியவர்கள். தூய்மையற்ற ஆத்மாக்கள், அவர்கள் எதிரில் தலை வணங்குகிறார்கள், எனவே இறுதி வரையிலும் தூய்மையின் சக்திக்கு, எவ்வளவு மகான் தன்மை இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள். மேலும் பரமாத்மா மூலமாக பிராப்தி ஆகியிருக்கும் சதோபிரதான தூய்மை எவ்வளவு சக்திசாலியாக இருக்கும். இந்த சிரேஷ்ட தூய்மையின் சக்தியின் எதிரில் தூய்மையின்மை தலை வணங்கவில்லை, ஆனால் உங்கள் காலடியில் இருக்கிறது, தூய்மை யின்மை என்ற அசுர சக்தி, சக்தி சொரூபத்தின் காலடியில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. யார் காலடியில் தோல்வி அடைந்து கிடக்கிறாரோ, அவர் எப்படி தோல்வி அடையச் செய்ய முடியும்.

 

பிராமண வாழ்க்கை மற்றும் தோல்வி அடைவது என்பதை பெயரளவில் பிராமணன் என்று கூறுவோம். இதில் அலட்சியமானவராக ஆகாதீர்கள். பிராமண வாழ்க்கையின் அஸ்திவாரம் தூய்மையின் சக்தி. ஒருவேளை அஸ்திவாரம் பலஹீனமாக இருக்கிறது என்றால் பிராப்தி என்ற 21 மாடி கட்டிடம் எப்படி நிற்க முடியும்?. ஒருவேளை அஸ்திவாரம் ஆடிக்கொண்டு இருக்கிறதென்றால் பிராப்தியின் அனுபவம் எப்பொழுதும் இருக்க முடியாது, அதாவது உறுதியானதாக இருக்க முடியாது, மேலும் இப்போதைய யுகத்தின் மற்றும் ஜென்மத்தின் மகான் பிராப்தியின் அனுபவமும் செய்ய முடியாது. யுகத்தின், சிரேஷ்ட ஜென்மத்தின் மகிமை பாடக்கூடிய ஞான பக்தன் ஆகிவிடுவார்கள், அதாவது தெரிந்திருக்கிறார் ஆனால் சுயம் அவர் அப்படியில்லை இதைத்தான் ஞானி பக்தன் என்று கூறுவது. ஒருவேளை பிராமணன் ஆகி அனைத்து பிராப்திகளின், அனைத்து சக்திகளின் வரதானம் அல்லது ஆஸ்தியை அனுபவம் செய்ய வில்லையென்றால், அவரை என்னவென்று கூறுவது? வஞ்சிக்கப்பட்ட ஆத்மா என்றா அல்லது பிராமண ஆத்மா என்றா? இந்த தூய்மையின் விதவிதமான ரூபங்களை நல்ல முறையில் தெரிந்துகொள்ளுங்கள், தனக்காக கடுமையாக பார்வை வையுங்கள். அப்படியே தட்டிக் கழிக்காதீர்கள், பொறுப்பாளார் ஆகியிருக்கும் ஆத்மாக்களையும், தந்தையையும் தட்டிக் கழிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். இதுவோ நடக்கத்தான் செய்யும், அந்த மாதிரி யார் ஆகியிருக்கிறார்கள்?. அல்லது இது தூய்மை யின்மை இல்லை, மகான் தன்மை இதுவோ சேவைக்கான சாதனம் என்று கூறுவார்கள். பிரபாவம் அடையவில்லை, சகயோகத்தை எடுத்துக்கொள்கிறோம். உதவியாளராக இருக்கிறார், எனவே பிரபாவம் அடைந்து இருக்கிறேன், தந்தையை மறந்தார் மற்றும் மாயாவின் குண்டடி விழுந்தது. பிறகு தன்னை விடுவித்துக்கொள்வதற்காக - நான் செய்வதில்லை, இவர் செய்கிறார் என்று கூருவார். ஆனால் தந்தையை மறந்தீர்கள் என்றால் தர்மராஜின் ரூபத்தில் தான் தந்தை சந்திப்பார். தந்தையின் சுகத்தை ஒருபொழுதும் அடைய முடியாது. எனவே மறைக்காதீர்கள், தட்டிக்கழிக்காதீர்கள். மற்றவர்களை பழி சொல்லாதீர்கள். கானல் நீரின் கவர்ச்சியில் ஏமாற்றம் அடையாதீர்கள். இந்த தூய்மையின் அஸ்திவாரத்தில் பாப்தாதா தர்மராஜ் மூலமாக 100 மடங்கு, பலகோடி மடங்கு தண்டனையை பெறவைப்பார். இதில் ஒருபொழுதும் நிவாரணம் இருக்க முடியாது. இரக்க மனமுடையவராக ஆக முடியாது. ஏனென்றால், தந்தையுடன் இருந்த உறவை முறித்தீர்கள் அதனால் தான் மற்றவர் மேல் பிரபாவம் ஆகியிருக்கிறீர்கள். பரமாத்மாவின் பிரபாவத்திலிருந்து விலகி ஆத்மாக்களின் பிராபவத்தில் வருவதென்றால், தந்தையை தெரிந்துகொள்ளவில்லை, அறிந்துகொள்ளவில்லை. அந்தமாதிரியானவர்களின் எதிரில் தந்தை, தந்தையின் ரூபத்தில் இல்லாமல் தர்மராஜின் ரூபத்தில் இருக்கிறார். எங்கு பாவம் இருக்குமோ, அங்கு தந்தை இருக்க மாட்டார். எனவே அலட்சியமானவராக ஆகாதீர்கள். இதை சின்ன விஷயம் என்று நினைக்காதீர்கள். அதுவும் யார் மீதாவது பிரபாவம் ஆவது என்பது காமனா (விருப்பம்) அதாவது காம விகாரத்தின் அம்சம். விருப்பமின்றி பிரபாவம் ஆக முடியாது. இந்த காமனாவும் அதாவது விருப்பமும் காம விகாரம். இது மிகப் பெரிய எதிரி. இது இரண்டு ரூபத்தில் வருகிறது. காமனா ஒன்று பிரபாவம் அடையச் செய்யும் அல்லது நோகடிக்கும், எனவே காம விகாரம் நரகத்தின் வாசல் என்று கோஷம் இடுகிறீர்கள், அதே போல் இப்பொழுது தன்னுடைய வாழ்க்கைக்காக எந்தவிதமான அல்பகாலத்தின் காமனா அதாவது மன விருப்பம் கானல் நீருக்கு சமமான ஏமாற்றம் கொடுக்கிறது, காமனா என்றால் ஏமாற்றம் அடைவது. அந்த மாதிரி இந்த காமம் அதாவது காமனா (விருப்பங்கள்) மேல் கடுமையான பார்வையுள்ள காளி ரூபம் ஆகுங்கள். பாவம், நல்லவர், கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறது, சரியாகி விடும் என்று அன்பானவர் ரூபம் ஆகாதீர்கள். முற்றிலும் வேண்டாம். பாவக் காரியங்கள் மேல் பயங்கரமான ரூபத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்காக அல்ல. தனக்காக ஆகுங்கள். அப்பொழுது தான் பாவங்களை அழித்து ஃபரிஸ்தா ஆக முடியும். யோகா செய்ய முடியவில்லையென்றால் அவசியம் ஏதோவொரு மறைந்திருக்கும் பாவம் தன் பக்கம் இழுக்கிறது. இதை சோதனை செய்யுங்கள். பிராமண ஆத்மா மேலும் யோகா செய்ய முடியவில்லையென்பது இருக்க முடியாது. பிராமணன் என்றாலே ஒருவருடையவன், அவருக்கு இருப்பதே ஒருவர்தான். எனவே அவர் எங்கே செல்வார்? எதுவுமே இல்லையென்றால் எங்கு செல்வார்? நல்லது.

 

பிரம்மச்சர்யம் மட்டும் இல்லை, ஆனால் இன்னும் காம விகாரத்தின் குழந்தைகள் குட்டிகள் இருக்கின்றனர். பாப்தாதாவிற்கு ஒரு விஷயத்தின் மேல் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. பிராமணன் என்று கூறுகிறார், பிராமண ஆத்மா மேல் வீணானதின் விகார திருஷ்டி மற்றும் உள்ளுணர்வு செல்கிறது. இது குலத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விஷயம், சொல்வது சகோதரி அவர்களே மற்றும் சகோதரன் அவர்களே, மேலும் செய்வதென்ன?. குடும்பத்தில் இருக்கும் சகோதரி மேல் கூட ஒருவேளை ஏதாவது தீய பார்வை செல்கிறது, எண்ணமும் வருகிறதென்றால், அவரை குலத்திற்கு களங்கம் ஏற்படுத்துபவர் என்று கூறுவர், அப்படியானால் இங்கு என்ன கூறுவோம்? ஒரு ஜென்மத்திற்கு இல்லை, ஆனால் பல ஜென்மங்களுக்கு களங்கம் ஏற்படுத்துபவர், இராஜ்ய பாக்கியத்தை எட்டி உதைப்பவர். அந்தமாதிரியான பல மடங்கு பாவக்காரியத்தை ஒருபொழுதும் செய்யாதீர்கள். இது பாவம் இல்லை, மகா பாவம். எனவே யோசியுங்கள், புரிந்து கொள்ளுங்கள், பாதுகாத்துக் கொள்ளுங்கள். இந்த பாவம் தான் எமதூதுவர்கள் மாதிரி இழுத்துச் செல்லும். இப்பொழுதோ நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன், யார் பார்க்கிறார், யாருக்குத் தெரியும் என்று நினைக்கிறார், ஆனால் பாவத்திற்கு மேல் பாவம் ஏறிக்கொண்டிருக்கிறது, மேலும் இதே பாவம் தான் உங்களை விழுங்குவதற்கு வரும். பாப்தாதா தெரிந்திருக்கிறார் இதற்கான முடிவு எவ்வளவு கடுமையாக இருக்குமென்று, எப்படி உடலால் யாராவது துடிதுடித்து உடலை விடுகிறரோ, அதே போல் புத்தி பாவங்களினால் துடிதுடித்து உடலை விடுவார். அவர் எதிரில் எப்பொழுதும் இந்த பாவத்தின் எமதூதுவர்கள் இருப்பார்கள். இந்தளவு கடுமையான முடிவாக இருக்கும், எனவே தற்சமயத்தில் தவறுதலாகக் கூட அந்த மாதிரி பாவம் செய்யாதீர்கள். பாப்தாதா எதிரில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் சொல்க்கொண்டிருக்கவில்லை, ஆனால் நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளை சக்திசாலி ஆக்கிக்கொண்டிருக்கிறார், எச்சரிக்கை உள்ளவராக, புத்திசாலியாக ஆக்கிக்கொண்டிருக்கிறார் புரிந்ததா? - இதுவரையிலும் இந்த விஷயத்தில் பலஹீனம் அதிகம் இருக்கிறது. நல்லது.

 

அனைவரும் தனக்காக சமிக்ஞை மூலம் புரிந்து கொள்ளக்கூடிய, எப்பொழுதும் தன்னுடைய தீய எண்ணம் மற்றும் பாவத்தின் மேல் காளியின் ரூபத்தை எடுக்கக்கூடிய, எப்பொழுதும் பலவிதமான ஏமாற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கும், துக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கும், சக்திசாலி ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட விசேஷ அவ்யக்த மகாவாக்கியம்

பிரம்மா பாபாவின் அடி மேல் அடி எடுத்து வைக்கும் பிரம்மாச்சாரி ஆகுங்கள்

 

பிரம்மாச்சாரி என்றால் பிரம்மா பாபாவின் ஆச்சரன் (மகாவாக்கியம்) படி நடப்பவர். எண்ணம், சொல், செயல் என்ற அடி இயற்கையாக பிரம்மா பாபாவின் அடிமேல் அடியாக இருக்க வேண்டும், அதைத் தான் ஃபுட்ஸ்டெப் (காலடி) என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு அடியிலும் பிரம்மாவால் கூறப்பட்டது தென்பட வேண்டும், அதாவது இந்த மனம், சொல், செயல் என்ற அடி பிரம்மாச்சாரியாக இருக்க வேண்டும், அந்தமாதிரி யார் பிரம்மாச்சாரியாக இருக்கிறரோ, அவருடைய முகம் மற்றும் நடத்தை எப்பொழுதுமே உள்நோக்கு பார்வையின் மேலும் அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்விக்கும். பிரம்மாச்சாரி யாரென்றால் யாருடைய ஒவ்வொரு காரியத்திலும் பிரம்மா பாபாவின் காரியம் தென்பட வேண்டும். வார்த்தை பிரம்மாவின் வார்த்தைக்கு சமமாக இருக்கவேண்டும், அமர்வது, எழுவது, பார்ப்பது, நடப்பது அனைத்தும் சமமாக இருக்க வேண்டும். பிரம்மா பாபா தன்னுடைய சமஸ்காரமாக எதை உருவாக்கினாரோ, மேலும் உடலின் இறுதி நேரத்திலும் - நிராக்காரி, நிர்விக்காரி, நிர் அகங்காரி என்பதை நினைவூட்டினார், இதுவே பிராமணர்களின் இயற்கையான சம்ஸ்காரமாக இருக்க வேண்டும், அப்பொழுது தான் பிரம்மாச்சாரி என்று கூறுவோம். சுபாவம் சம்ஸ்காரத்தில் தந்தைக்குச் சமமான இனிமை இருக்க வேண்டும். என்னுடைய சுபாவம் இல்லை, ஆனால் எது தந்தையின் சுபாவமோ, அதுவே என்னுடைய சுபாவம்.

 

தூய்மையின் விரதம் பிரம்மசர்ய விரதம் மட்டுமில்லை, ஆனால் பிரம்மாவுக்கு சமமாக ஒவ்வொரு வார்த்தையில் தூய்மையின் எண்ண அலைகள் நிரம்பி இருப்பதாக இருக்க வேண்டும், ஒவ்வொரு வார்த்தையும் மகா வாக்கியமாக இருக்க வேண்டும், சாதாரணமாக இன்றி ஆன்மீகமானதாக இருக்கவேண்டும், ஒவ்வொரு எண்ணத்திலும் தூய்மையின் மகத்துவம், ஒவ்வொரு காரியத்திலும் காரியம் மற்றும் யோகா அதாவது கர்மயோகியின் அனுபவம் ஆகவேண்டும் - இதைத்தான் பிரம்மச்சாரி மற்றும் பிரம்மாச்சாரி என்று கூறுவது. எப்படி பிரம்மா பாபா சாதாரண உடலில் இருந்தபோதிலும் புருஷோத்தமராக அனுபவம் ஆனது. அனைவரும் பார்த்திருக்கிறீர்கள் அல்லது கேட்டிருக்கிறீர்கள். இப்பொழுது அவ்யக்த ரூபத்திலும் சாதரணத்தில் புருஷோத்தமத்தின் ஜொலிப்பைப் பார்க்கிறீர்கள்!. அந்தமாதிரி தந்தையை பின்பற்றுங்கள். செய்யும் காரியம் சாதரணமானதாக இருந்தாலும் ஆனால் நிலை மகானாக இருக்கட்டும். முகத்தில் சிரேஷ்ட வாழ்க்கையின் பிரபாவம் இருக்கட்டும். ஒவ்வொரு நடத்தையின் மூலம் தந்தையின் அனுபவம் ஆக வேண்டும் இதைத்தான் பிரம்மாச்சாரி என்று கூறுவது.

 

எப்படி பிரம்மாவிற்கு அன்பு விசேஷமாக முரளி மேல் இருந்தது. எனவே முரளிதரன் ஆனார். எதிர்காலத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் ரூபத்திலும் முரளியைத்தான் (புல்லாங்குழல்) அடையாளமாக காண்பிக்கிறார்கள். எனவே எதன் மேல் தந்தையின் அன்பு இருந்ததோ, அதன் மேல் அன்பு இருப்பது தான் அன்பின் அடையாளம். இதைத்தான் பிரம்மா பாபாவிற்கு பிரியமானவர் என்று கூறுவோம் அதாவது பிரம்மாச்சாரி. என்ன காரியம் செய்தாலும் காரியம் செய்வதற்கு முன்பு, பேசுவதற்கு முன்பு, நினைப்பதற்கு முன்பு இது பிரம்மா பாபாவிற்கு சமமாக இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள். பிறகு எண்ணத்தை சொரூபத்தில் கொண்டுவாருங்கள், வார்த்தைகளை வாயின் மூலம் சொல்லுங்கள், காரியத்தை கர்மேந்திரியங்கள் மூலம் செய்யுங்கள். நினைக்கவில்லை, ஆனால் நடந்துவிட்டது என்று அப்படி இருக்கக்கூடாது. பிரம்மா பாபாவின் விசேஷமாக - என்ன நினைத்தரோ, அதைச் செய்தார், என்ன கூறினாரோ அதைச் செய்தார் என்பது தான் இருந்தது. அந்தமாதிரி தந்தையை பின்பற்றி நடப்பவர்கள் தான் பிரம்மாச்சாரி.

 

எப்படி பிரம்மா பாபா நிச்சயத்தின் ஆதாரத்தில், ஆன்மீக போதையின் ஆதாரத்தில் நிச்சயம் நடக்கும் என்ற ஞானம் தெரிந்தவராகி ஒரு வினாடியில் அனைத்தையும் பயனுள்ளதாக்கினார், தனக்காக வைத்துக் கொள்ளவில்லை, அனைத்தையும் பயன்படுத்தினார். அதனுடைய பிரத்யக்ஷ நிருபணமாக இறுதி நாள் வரை கடிதங்கள் மூலமாக சேவை செய்தார், வாய் மூலம் மகா வாக்கியத்தை உரைத்தார். செய்தார். இறுதி நாளிலும் நேரம், எண்ணம், உடலை பயனுள்ளதாக ஆக்கினார். அந்தமாதிரி பிரம்மாச்சாரி என்றால் அனைத்தையும் பயனுள்ளதாக ஆக்குபவர். பயனுள்ளதாக ஆக்குவதன் அர்த்தமே, சிரேஷ்ட காரியங்களில் ஈடுபடுத்துவது. எப்படி பிரம்மா பாபா எப்பொழுதும் மகிழ்ச்சி மற்றும் கம்பீரம் இரண்டின் சம நிலையின் ஒரே சீரான நிலையில் இருந்தார், அந்தமாதிரி தந்தையைப் பின்பற்றுங்கள். ஒருபொழுதும் ஏதாவது விஷயத்தில் குழப்பம் அடையக் கூடாது, மேலும் எந்த விஷயத்தின் காரணமாக மனநிலையை மாற்றக்கூடாது. எப்பொழுதும் ஒவ்வொரு காரியத்திலும் தந்தையை பின்பற்றி நடக்கவேண்டும். அப்பொழுது தான் பிரம்மாச்சாரி என்று கூறுவோம்.

 

பிரம்மா பாபாவின் மிகவும் பிரியமான சுலோகனாக குறைந்த செலவில் நிறைந்த பலன் என்பது இருந்தது. எனவே குறைந்த செலவிலும் நிறைந்த நன்மை செய்து காண்பியுங்கள். செலவு குறைவாக இருக்கட்டும், ஆனால் அதன் மூலம் என்ன பிராப்தி ஆகிறதோ, அது மிகவும் மதிப்புள்ளதாக இருக்க வேண்டும். குறைந்த செலவில் வேலை அதிகம் நடந்திருக்க வேண்டும். சக்தி மற்றும் எண்ணம் அதிகம் செலவு ஆக வேண்டாம், குறைந்த வார்த்தைகள் இருக்கட்டும், ஆனால் அந்த குறைந்த வார்த்தைகளில் தெளிவுதன்மை அதிகமாக இருக்கட்டும், எண்ணம் குறைவாக இருக்கட்டும், ஆனால் சக்திசாலியாக இருக்க வேண்டும். இதைத்தான் குறைந்த செலவில் நிறைந்த பலன் மற்றும் சிக்கனத்தின் அவதாரம் என்று கூறுவது.

 

எப்படி பிரம்மா பாபா ஒரு தந்தையை தவிர வேறு யாருமில்லை என்பதை நடைமுறை காரியத்தில் செய்து காண்பித்தார். அந்த மாதிரி தந்தைக்கு சமமாக ஆகுபவர்களும் பின்பற்றிச் செய்ய வேண்டும். பிரம்மா ஒருபொழுதும் மனமுடைந்து போக மாட்டோம், எப்பொழுதும் மனதில் குஷி நிறைந்து இருப்போம் என்று பிரம்மா பாபாவிற்கு சமமாக திட எண்ணத்தை வைக்க வேண்டும். மாயை அசைத்தாலும் அசையக்கூடாது. ஒருவேளை மாயா இமயமலை மாதிரி பெரிய ரூபத்தில் வந்தாலும் கூட அந்த நேரம் பாதையை உருவாக்குவதற்கு பதிலாக, பறந்து விட வேண்டும், ஒருவினாடியில் பறக்கும் கலை உள்ளவர்களுக்கு மலையும் பஞ்சாகி விடும்.

 

எப்படி சாகார பிரம்மா பாபாவிடம் தூய்மையின் சிறப்பை தெளிவாக அனுபவம் செய்தீர்கள். இது தபஸ்யாவின் அனுபவத்தின் அடையாளம். அந்தமாதிரி இந்த தனித்துவம் இப்பொழுது உங்களுடைய முகம் மற்றும் நடத்தை மூலம் மற்றவர்களுக்கு அனுபவம் ஆக வேண்டும். பிரம்மா பாபா சாகார கர்ம யோகியின் அடையாளமாக இருந்தார். யாராவது எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும், ஆனால் பிரம்மா பாபாவைவிட அதிகம் பிஸியாக வேறு யார் இருக்க முடியாது. எவ்வளவு பொறுப்பு இருந்தாலும், ஆனால் பிரம்மா பாபாவின் பொறுப்பின் அளவிற்கு யாரும் மேலேயும் இருக்க முடியாது. எனவே பிரம்மா பாபா பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டே கர்மயோகியாக இருந்தார், தன்னை செய்பவர் என புரிந்து காரியம் செய்தார். செய்விப்பவர் என்று தன்னை ஒருபொழுதும் நினைக்க வில்லை. அந்தமாதிரி தந்தையைப் பின்பற்றி நடங்கள். எவ்வளவுதான் பெரிய காரியம் செய்தாலும், ஆனால் எப்படி ஆட்டுவிப்பவர் ஆட்டுவிக்கிறா ர், மேலும் நான் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்தீர்கள் என்றால் களைப்படையமாட்டீர்கள், குழப்பமடைய மாட்டீர்கள், எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

 

வரதானம்:

சத்தியத்தின் சக்தி மூலமாக எப்பொழுதும் குஷியில் நடனமாடக்கூடிய சக்திசாலி மகான் ஆத்மா ஆகுக.

 

உண்மையிருந்தால் மனம் நடனமாடும் என்று கூறப்படுகிறது. உண்மை அதாவது சத்தியத்தின் சக்தியுள்ளவர் எப்பொழுதும் நடனமாடிக்கொண்டேயிருப்பார், ஒருபொழுதும் வாடிப் போக மாட்டார், குழப்பமடைய மாட்டார், பயப்படமாட்டார், பலஹீனமாக ஆகமாட்டார். அவர் குஷியில் எப்பொழுதும் ஆடிக்கொண்டேயிருப்பார். சக்திசாலியாக இருப்பார். அவரிடம் எதிர்நோக்கும் சக்தி இருக்கும், சத்தியம் ஒருபொழுதும் ஆடுவதில்லை, உறுதியாக இருக்கும். சத்தியம் என்ற படகு ஆடும் ஆனால் மூழ்காது. எனவே சத்தியத்தின் சக்தியை கடைப்பிடிக்கும் ஆத்மா தான் மகான் ஆவார்.

 

சுலோகன்:

பிஸியான மனம் புத்தியை ஒரு வினாடியில் நிறுத்தி விடுவது தான் மிக உயர்ந்த பயிற்சி ஆகும்.

 

பிரம்மா பாபாவிற்கு சமமாக ஆகுவதற்காக விசேஷ முயற்சி

 எப்படி பிரம்மா பாபா எப்பொழும் பரமாத்மாவின் அன்பில் ஐக்கியமாகி இருந்தார், அதேபோல் உங்களுடைய பிராமண வாழ்க்கைக்கான ஆதாரம் பரமாத்மாவின் அன்பு. பிரபுவின் அன்பு தான் உங்களுடைய சொத்து. இந்த அன்பு தான் பிராமண வாழ்க்கையில் முன்னேற வைக்கிறது, எனவே எப்பொழுதும் அன்புக் கடலில் ஐக்கியமாகி இருங்கள்.

 

ஓம்சாந்தி