15.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! அமைதி என்ற குணம் அனைத்தையும் விட மிக உயர்ந்த குணம் ஆகும். ஆகையால் அமைதியாகப் பேசுங்கள், அசாந்தியை பரப்புவதை நிறுத்துங்கள்.

 

கேள்வி:

சங்கமயுகத்தில் தந்தையிடமிருந்து குழந்தைகளுக்கு எந்த ஆஸ்தி கிடைக்கிறது? குணங்கள் நிறைந்த குழந்தைகளின் அடையாளங்கள் என்ன?

 

பதில்:

முதலாவதாக கிடைக்கும் ஆஸ்தி ஞானம், 2) அமைதி 3) குணங்கள். குணங்கள் நிறைந்த குழந்தைகள் சதா குμயாக இருப்பார்கள். யாருடைய அவகுணங்களையும் பார்க்கமாட்டார்கள். யாரைப் பற்றியும் புகார் கூறமாட்டார்கள், யாரிடத்தில் அவகுணங்கள் இருக்கின்றனவோ அவர்களிடம் சகவாசம் வைத்துக் கொள்ளமாட்டார்கள். யாராவது ஏதாவது கூறிவிட்டால் கேட்டும் கேட்காதது போல் இருந்துவிட்டு தனது போதையில் (மகிழ்ச்சியில்) இருப்பார்கள்.

 

ஓம்சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். ஒன்று, உங்களுக்கு தந்தையிடமிருந்து ஞானத்தின் ஆஸ்தி கிடைத்துக் கொண்டே இருக்கிறது. தந்தையிடமிருந்து குணங்களை கிரஹித்துக் கொள்ள வேண்டும், பிறகு இந்த சித்திரங்களிடமிருந்து (இலட்சுமி, நாராயணன்) குணங்களை கிரஹித்துக் கொள்ள வேண்டும். அமைதியின் கடல் என்று தந்தை கூறப்படுகின்றார். ஆக அமைதியையும் தாரணை செய்ய வேண்டும். அமைதிக்காகத் தான் தந்தை புரிய வைக்கின்றார் - ஒருவருக்கொருவர் அமைதியாக பேசிக் கொள்ளுங்கள். இந்த குணத்தை தாரணை செய்ய வேண்டும். ஞானம் என்ற குணத்தை தாரணை செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். இந்த ஞானப் படிப்பை படிக்க வேண்டும். இந்த ஞானப் படிப்பு இந்த விசித்திரமான (தேகமற்ற) தந்தை தான் கற்பிக்கின்றார். விசித்திரமான ஆத்மாக்கள் (குழந்தைகள்) படிக்கின்றன. இது இங்கிருக்கும் புது விசயமாகும், இதனை வேறு யாரும் அறியவேயில்லை. கிருஷ்ணரைப் போன்று தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். நான் அமைதியின் கடலானவன், ஆக இங்கு தான் அமைதியை ஸ்தாபனை செய்ய வேண்டும் என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். அசாந்தி அழிந்து போக வேண்டும். எந்த அளவிற்கு நான் அமைதியாக இருக்கிறேன் என்று தனது நடத்தையை பார்த்துக் கொள்ள வேண்டும். பல ஆண்கள் அமைதியை விரும்புபவர்களாக இருக்கின்றனர். அமைதியாக இருப்பது நல்லது என்று நினைக்கின்றனர். அமைதி என்ற குணம் மிகவும் உயர்ந்தது ஆகும். ஆனால் அமைதி எப்படி ஸ்தாபனை ஆகும்? அமைதி என்பதன் பொருள் என்ன? என்பதை பாரதவாசிக் குழந்தைகள் அறியவில்லை. தந்தை பாரதவாசிகளுக்குத் தான் கூறுவார். பாரதத்தில் தான் தந்தை வருகின்றார். உள்ளுக்குள் அவசியம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். யாராவது அசாந்தி ஏற்படுத்துகின்றார்கள் எனில் தானும் அசாந்தி ஏற்படுத்த வேண்டும் என்பது கிடையாது. அசாந்தி ஆவதும் கூட அவகுணம் ஆகும். அவகுணங்களை நீக்க வேண்டும். ஒவ்வொருவரிடமிருந்தும் குணங்களை கிரஹிக்க வேண்டும். அவகுணங்களின் பக்கம் பார்க்கவே கூடாது. (அசாந்திக்கான) ஓசைகளை கேட்டுக் கொண்டிருந்தாலும் சுயம் அமைதியாக இருக்க வேண்டும். ஏனெனில் பாபா மற்றும் தாதா இருவரும் அமைதியாக இருக்கின்றனர். ஒருபொழுதும் தடுமாறுவது கிடையாது. வருத்தப்படுவது கிடையாது. இந்த பிரம்மாவும் கற்றுக் கொண்டார் அல்லவா! எந்த அளவிற்கு அமைதியாக இருப்பீர்களோ அந்த அளவிற்கு மிகவும் நல்லதாகும். அமைதியாக இருந்தால் தான் நினைவு செய்ய முடியும். அசாந்தியாக இருப்பவர்கள் நினைவு செய்ய முடியாது. ஒவ்வொரு வரிடமிருந்தும் குணத்தை கிரஹித்தே ஆக வேண்டும். தத்தாத்ரேயரின் உதாரணமும் இங்கு தான் இருக்கிறது. தேவதைகளைப் போன்று குணங்கள் நிறைந்தவர்கள் யாரும் கிடையாது. ஒரே ஒரு விகாரம் தான் மூல காரணமாக இருக்கிறது, அதன் மீது நீங்கள் வெற்றி அடைந்து கொண்டிருக்கிறீர்கள், அடைந்து கொண்டே இருக்கிறீர்கள். கர்மேந்திரியங்களின் மீது வெற்றியடைய வேண்டும். அவகுணங்களை விட்டு விட வேண்டும். பார்க்கவே கூடாது, பேசவும் கூடாது. யாரிடத்தில் குணங்கள் உள்ளனவோ அவர்களிடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். மிக இனிமையாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். குறைவாகப் பேசுவதன் மூலமாகவே நீங்கள் அனைத்து காரியங்களையும் செய்ய முடியும். அனைவரிடமிருந்து குணங்களை கிரஹித்து குணவான்களாக ஆக வேண்டும். அறிவாளிகளாக இருப்பவர்கள் அமைதியாக இருக்க விரும்புவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சில பக்தர்கள் ஞானிகளை விட அமைதியாக, பணிவானவர்களாக இருக்கின்றனர். பாபா அனுபவசாலி அல்லவா! இவர் எந்த லௌகீகத் தந்தையின் குழந்தையோ அவர் ஆசிரியர் ஆவார், மிகவும் பணிவுள்ளவர், அமைதியாக இருந்தார். ஒருபோதும் கோபப்பட்டது கிடையாது. சாதுக்கள் இருக்கின்றனர் எனில் அவர்களுக்கு மகிமை செய்கின்றனர், பகவானை சந்திப்பதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர். காசி, ஹரிதுவார் சென்று வசிக்கின்றனர். குழந்தைகள் மிகவும் அமைதியாக மற்றும் இனிமையானவர்களாக இருக்க வேண்டும். இங்கு யாராவது அசாந்தியுடன் இருக்கின்றனர் எனில் பிறகு அமைதியைப் பரப்புவதற்கு நிமித்தமாக ஆக முடியாது. அசாந்தியாக இருப்பவர்களிடம் பேசவும் கூடாது. தூரமாக இருக்க வேண்டும். வித்தியாசம் இருக்கிறது அல்லவா! அவர் கொக்கு, இவர் அன்னப்பறவை. அன்னப்பறவை முழு நாளும் முத்துக்களை தேர்ந்தெடுத்துக் கொண்டே இருக்கும். எழுந்தாலும், அமர்ந்தாலும், நடந்தாலும் தனது ஞானத்தை சிந்தனை செய்து கொண்டே இருங்கள். யாருக்காவது எப்படி புரிய வைப்பது? தந்தையின் அறிமுகம் எப்படி கொடுப்பது? என்பதே முழு நாளும் புத்தியில் இருக்க வேண்டும்.

 

எந்த குழந்தைகள் வந்தாலும் அவர்களிடத்தில் படிவம் (பார்ம்) நிரப்பப்படுகிறது என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். சென்டர்களில் யாராவது பாடம் (கோர்ஸ்) எடுத்துக் கொள்ள விரும்புகின்றனர் எனில் அவர்களிடத்தில் படிவம் நிரப்பப்படுகிறது. பாடம் எடுக்க விரும்பவில்லையெனில் படிவம் நிரப்பப்பட வேண்டிய அவசியமில்லை. இவரிடத்தில் என்ன என்ன (குணங்கள்) உள்ளன? என்ன புரிய வைக்க வேண்டும்? என்பதற்காகத் தான் படிவம் நிரப்பப்படுகிறது. ஏனெனில் உலகில் உள்ளவர்கள் இந்த விசயங்களைப் புரிந்து கொள்வது கிடையாது. ஆக படிவம் நிரப்புவதன் மூலம் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது. தந்தையை யாராவது சந்திக்கின்றனர் என்றாலும் படிவம் நிரப்ப வேண்டியிருக்கிறது. இதன் மூலம் ஏன் சந்திக்க விரும்பு கின்றனர்? என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். யார் வந்தாலும் அவர்களுக்கு எல்லைக்குட்பட்ட மற்றும் எல்லையற்ற தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். ஏனெனில் உங்களுக்கு எல்லையற்ற தந்தை வந்து தனது அறிமுகம் கொடுத்திருக்கின்றார். ஆக நீங்களும் மற்றவர்களுக்கு அறிமுகம் கொடுக்கிறீர்கள். அவரது பெயர் சிவபாபா. சிவபரமாத்மா நமஹ என்று கூறுகின்றனர் அல்லவா! அந்த கிருஷ்ணரை தேவதா நமஹ என்று கூறுவர். சிவனை சிவபரமாத்மாய நமஹ என்று கூறுவர். என்னை நினைவு செய்தால் உங்களது பாவங்கள் அழிந்து விடும் என்று தந்தை கூறுகின்றார். முக்தி, ஜீவன் முக்திக்கான ஆஸ்தி அடைவதற்காக அவசியம் தூய்மையான ஆத்மாவாக ஆக வேண்டும். அது தூய்மையான உலகமாகும், அது சதோ பிரதான உலகம் என்று கூறப்படுகிறது. அங்கு செல்ல வேண்டுமென்றால் என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இது மிகவும் எளிதாகும். யாராக இருந்தாலும் படிவத்தை நிரப்பிய பிறகு நீங்கள் பாடம் கற்பிக்கிறீர்கள். முதல் நாள் நிரப்ப வையுங்கள், பிறகு புரிய வையுங்கள், அடுத்த நாளும் நிரப்ப வையுங்கள், அப்பொழுது தான் நாம் அவர்களுக்கு என்ன புரிய வைத்தோமோ அதை நினைவில் வைத்திருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியும். இரண்டு நாட்களின் படிவத்திலேயே வித்தியாசம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். உடனேயே உங்களுக்கு தெரிந்து விடும் - என்ன புரிய வைத்தேன்? நான் புரிய வைத்ததில் ஏதாவது சிந்தனை செய்திருந்தாரா? இல்லையா? இந்தப் படிவம் அனைவரிடத்திலும் இருக்க வேண்டும். பாபா முரளிகளில் கட்டளை கொடுக்கின்றார் எனில் பெரிய பெரிய சென்டர்களில் உடனேயே நடைமுறையில் கொண்டு வர வேண்டும். படிவம் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? அவர்கள் தானே உணர்ந்து கொள்வர் - நேற்று என்ன எழுதினேன்? இன்று என்ன எழுதுகிறேன்? படிவம் மிகவும் அவசியமானது. தனித்தனியாக அச்சடித்தாலும் பரவாயில்லை. அல்லது ஒரே இடத்தில் அச்சடித்து அனைவருக்கும் அனுப்பி வைத்தாலும் சரியே. இது மற்றவர்களுக்கு நன்மை செய்வதாகும்.

 

குழந்தைகளாகிய நீங்கள் தேவி தேவதை ஆவதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள். தேவதை என்ற வார்த்தை மிகவும் உயர்ந்தது. தெய்வீக குணங்களை தாரணை செய்பவர்கள் தேவதைகள் என்று கூறப்படுகின்றனர். இப்பொழுது நீங்கள் தெய்வீக குணங்களை தாரணை செய்து கொண்டிருக்கிறீர்கள், ஆக எங்கு இந்த கண்காட்சி அல்லது அருங்காட்சியகம் நடைபெறுகிறதோ அங்கு இந்தப் படிவம் அதிகமாக இருக்க வேண்டும். எந்த மனநிலையுடன் இருக்கின்றனர்? என்பது தெரிந்து விடும். புரிந்து கொண்டு பிறகு புரிய வைக்க வேண்டியிருக்கும். குழந்தைகள் சதா குணங்களை மட்டுமே வர்ணிக்க வேண்டும், ஒருபொழுதும் அவகுணங்களை அல்ல. நீங்கள் குணவான்களாக ஆகிறீர்கள் அல்லவா! யாரிடத்தில் அதிக குணங்கள் உள்ளனவோ அவர்கள் மற்றவர்களிடத்திலும் குணங்களை பரப்ப முடியும். அவகுணங்களுடையவர்கள் ஒருபொழுதும் குணங்களை பரப்ப முடியாது. அதிக காலம் கிடையாது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். அதிக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தினமும் பிரயாணம், யாத்திரை செய்து கொண்டேயிருக்கிறீர்கள் என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். அதீந்திரிய சுகம் கோப கோபியர்களிடம் கேளுங்கள் என்ற புகழானது கடைசி நேரத்திற்கான விசயமாகும். இப்பொழுது வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். சிலர் உள்ளுக்குள் குஷிக்கான பாட்டு பாடிக் கொண்டே இருக்கின்றனர் - ஆஹா, பரம்பிதா பரமாத்மா எனக்கு கிடைத்திருக்கின்றார், அவரிடமிருந்து நான் ஆஸ்தி அடைகிறேன்! அவர்களைப் பற்றி எந்த புகாரும் இருக்க முடியாது. யாராவது ஏதாவது கூறினாலும் கூட கேட்டும் கேட்காதது போன்று இருந்து தனது போதையில் மூழ்கியிருக்க வேண்டும். ஏதாவது வியாதி அல்லது துக்கம் போன்றவைகள் ஏற்படுகிறது எனில் நீங்கள் நினைவில் இருந்தால் போதும். இந்த கணக்கு வழக்குகளை இப்பொழுதே முடிக்க வேண்டும், பிறகு நீங்கள் 21 பிறவிகளுக்கு மலர்களாக ஆகிறீர்கள். அங்கு துக்கத்திற்கான விசயமே இருக்காது. குஷி போன்ற சத்தான உணவு கிடையாது என்று பாடப்படுகிறது. பிறகு சோம்பல் போன்ற அனைத்தும் பறந்து விடுகிறது. இதில் இது தான் உண்மையான குஷியாகும், அது பொய்யானதாகும். செல்வம் கிடைத்தது, நகை கிடைத்தது எனில் குஷி அடைவர். இது எல்லையற்ற விசயமாகும். நீங்கள் அளவற்ற குஷியுடன் இருக்க வேண்டும். நாம் 21 பிறவிகளுக்கு சதா சுகமானவர்களாக இருப்போம் என்பதை அறிவீர்கள். நான் என்ன ஆகப் போகிறேன்? என்ற நினைவில் இருங்கள். பாபா என்று கூறுவதன் மூலம் துக்கம் தூர விலகி விட வேண்டும். இது 21 பிறவிகளுக்கான குஷியாகும். இப்பொழுது இன்னும் சிறிது காலம் தான் இருக்கிறது. நாம் நமது சுகதாமத்திற்குச் செல்வோம். பிறகு வேறு எதுவும் நினைவிற்கு வரக் கூடாது. இந்த பாபா தனது அனுபவம் கூறுகின்றார். எவ்வளவு செய்திகள் வருகின்றன! தவறுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. பாபாவிற்கு எந்த விசயத்திலும் துக்கம் ஏற்படுவது கிடையாது. கேட்பார், நல்லது, இது நாடகம். இது ஒன்றும் பெரிய விசயம் கிடையாது, நாம் அளவிட முடியாத பொக்கிஷத்திற்கு உரியவர்களாக ஆகின்றோம். தனக்குள் உரையாடல் செய்வதன் மூலம் தான் குஷி ஏற்படும். மிகவும் அமைதியாக இருப்பர், அவர்களது முகமும் மிகவும் குஷியாக இருக்கும். உதவித் தொகை (ஸ்காலர்சிப்) கிடைக்கிறது எனில் முகம் எவ்வளவு குஷியாகி விடுகிறது! நீங்களும் இந்த இலட்சுமி நாராயணன் போன்று சிரித்த முகத்துடன் இருப்பதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களிடத்தில் ஞானம் கிடையாது, உங்களிடத்தில் ஞானம் இருப்பதால் குஷியுடன் இருக்க வேண்டும். சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். இந்த தேவதைகளை விட நீங்கள் மிகவும் உயர்ந்தவர்கள். ஞானக் கடலான தந்தை நமக்கு எவ்வளவு உயர்ந்த ஞானம் கொடுக்கின்றார்! அழிவற்ற ஞான இரத்தினங்களின் இலாட்டரி கிடைத்துக் கொண்டிருக்கிறது எனில் எவ்வளவு குஷியுடன் இருக்க வேண்டும்! உங்களது இந்த பிறப்பு வைரம் போன்றது என்று பாடப்பட்டிருக்கிறது. ஞானம் நிறைந்தவர் என்று தந்தையைத் தான் கூறப்படுகிறது. இந்த தேவதைகளைச் சொல்வது கிடையாது. பிராமணர்களாகிய நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் எனில் உங்களுக்கு ஞானத்தின் குஷி இருக்கிறது. ஒன்று தந்தையை அடைந்த குஷி இருக்கிறது. உங்களைத் தவிர வேறு யாருக்கும் குஷி இருக்க முடியாது. பக்தி மார்க்கத்தில் உள்ளார்ந்த சுகம் இருப்பது கிடையாது. பக்தி மார்க்த்தினுடையது செயற்கையான, அல்ப கால சுகமாகும். அதன் பெயரே சொர்க்கம், சுகதாமம் ஆகும். அங்கு அளவற்ற சுகம், இங்கு அளவற்ற துக்கம் இருக்கிறது. இராவண இராஜ்யத்தில் நாம் எவ்வளவு சீ சீ ஆகிவிட்டோம் என்பது இப்பொழுது குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள். சிறிது சிறிதாக கீழே இறங்கி வந்தோம். இது விஷக் கடலாகும். இப்பொழுது தந்தை இந்த விஷக் கடலிலிருந்து நீக்கி உங்களை பாற்கடலுக்கு அழைத்துச் செல்கிறார். குழந்தைகளுக்கு இங்கு மிகவும் இனிமையாக தோன்றுகிறது, பிறகு மறந்து விடுவதனால் என்ன நிலை ஏற்பட்டு விடுகிறது! தந்தை குஷிக்கான போதை எவ்வளவு ஏற்படுத்துகின்றார்! இந்த ஞான அமிர்தத்திற்குத் தான் மகிமை இருக்கிறது. ஞான அமிர்த பானத்தை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இங்கு உங்களுக்கு மிகுந்த போதை ஏற்படுகிறது, பிறகு வெளியில் சென்றதும் அந்த போதை குறைந்து விடுகிறது. பாபா சுயம் உணர்கின்றார், இங்கு குழந்தைகளுக்கு நல்ல உணர்வு ஏற்படுகிறது - நாம் நமது வீட்டிற்குச் செல்கிறோம், நாம் பாபாவின் ஸ்ரீமத்படி இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். நாம் பெரிய போர் வீரர்களாக இருக்கிறோம். இந்த அனைத்து ஞானமும் புத்தியில் இருக்கிறது, இதன் மூலம் தான் நீங்கள் அந்த அளவிற்கு பதவி அடைகிறீர்கள். கற்பிப்பது யார்? என்பதைப் பாருங்கள். எல்லையற்ற தந்தை. அனைத்தையும் கூறி விடுகின்றார். ஆக குழந்தைகளிடத்தில் எவ்வளவு குஷியிருக்க வேண்டும்! மற்றவர்களுக்கும் குஷி கொடுக்க வேண்டும் என்று உள்ளத்தில் வர வேண்டும். இராவணனுடையது சாபம் மற்றும் தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. இராவணனின் சாபத்தின் மூலம் நீங்கள் எவ்வளவு துக்கம், அசாந்தியானவர்களாக ஆகிவிட்டீர்கள்! பல கோபியர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று உள்ளம் இருக்கிறது. ஆனால் கலசம் தாய்மார்களுக்குக் கிடைக்கிறது. சக்தி சேனை அல்லவா! வந்தே மாதரம் என்று பாடப்பட்டிருக்கிறது. கூடவே வந்தே மாதரம் என்றும் இருக்கவே இருக்கிறது. ஆனால் பெயர் தாய்மார்களுக்குத் தான் இருக்கிறது. முதலில் இலட்சுமி பிறகு நாராயணன். முதலில் சீதை பிறகு இராமர். இங்கு முதலில் ஆண்களின் பெயர், பிறகு பெண்ணின் பெயர் எழுதுகின்றனர். இதுவும் விளையாட்டு அல்லவா! தந்தை அனைத்தையும் புரிய வைக்கின்றார். பக்தி மார்க்கத்தின் இரகசியத்தையும் புரிய வைக்கின்றார். பக்தியில் என்ன என்ன நடைபெறுகிறது! ஞானம் இல்லாத பொழுது அறியாமல் இருந்தோம். முதலில் நாம் படிக்காதவர்களாக, உபயோகமற்றவர்களாக இருந்தோம், அசுத்தத்தில் கிடந்தோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இப்பொழுது அனைவரின் நடத்தைகளும் மாறிக் கொண்டே இருக்கிறது. உங்களது நடத்தைகள் தெய்வீகமானதாக ஆகிக் கொண்டிருக்கிறது. 5 விகாரங்களினால் அசுர நடத்தைகளாக ஆகிவிடுகிறது. எவ்வளவு மாற்றம் ஏற்படுகிறது! ஆக மாற்றம் கொண்டு வர வேண்டும் அல்லவா! சரீரத்தை விட்டு விட்டால் பிறகு மாற முடியாது. தந்தையிடத்தில் சக்தி இருப்பதால் பலரிடத்தில் மாற்றம் கொண்டு வரச் செய்கின்றார். சில குழந்தைகள் தங்களது அனுபவங்களைக் கூறுகின்றனர் - நான் மிகவும் குறையுடன், சாராயம் குடிப்பவனாக இருந்தேன், இப்பொழுது அதிக மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது நான் மிகவும் அன்பாக இருக்கிறேன். அன்பினால் ஆனந்தக் கண்ணீரும் வந்து விடுகிறது. தந்தை அதிகமாகவே புரிய வைக்கின்றார், ஆனால் இந்த அனைத்து விசயங்களும் மறந்து விடுகிறீர்கள். இல்லையெனில் குஷியின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் பலருக்கு நன்மை செய்ய வேண்டும். மனிதர்கள் அதிகம் துக்கமானவர்களாக இருக்கின்றனர், அவர்களுக்கு வழி கூற வேண்டும். புரிய வைப்பதற்கும் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. திட்டும் வாங்க வேண்டியிருக்கிறது. இவர்கள் அனைவரையும் சகோதரன், சகோதரிகளாக ஆக்கி விடுகின்றனர் என்ற வார்த்தை முன்பிருந்தே இருக்கிறது. அரே, சகோதரன், சகோதரி என்ற சம்மந்தம் நல்லதல்லவா! ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதர சகோதரர்களாக (பாயி பாயி) இருக்கிறீர்கள். இருப்பினும் பல பிறவிகளாக உறுதியாக இருக்கும் திருஷ்டி (பார்வை) மாறுவது கிடையாது. பாபாவிடத்தில் பல செய்திகள் வருகின்றன. இந்த சீ சீ உலகிலிருந்து குழந்தைகளாகிய உங்களது உள்ளம் நீங்கி விட வேண்டும் என்று தந்தை புரிய வைக்கின்றார். மலர்களாக ஆக வேண்டும். எத்தனையோ பேர் ஞானம் கேட்ட பின்பும் மறந்து விடுகின்றனர். முழு ஞானம் பறந்து விடுகிறது. காமம் மிகப் பெரிய எதிரி அல்லவா! பாபா மிகுந்த அனுபவியாக இருக்கின்றார். இந்த விகாரங்களினால் அரசர்களும் தங்களது இராஜ்யத்தை இழந்திருக்கின்றனர். காமம் மிகவும் கெட்டது. பாபா, இது மிகப் பெரிய எதிரி என்று அனைவரும் கூறவும் செய்கின்றனர். தந்தை கூறுகின்றார் - காமத்தை வெல்வதன் மூலம் நீங்கள் உலகிற்கு எஜமானர்களாக ஆவீர்கள். ஆனால் காமம் மிகவும் கடுமையானது, அதாவது உறுதிமொழி செய்த பின்பும் விழ வைத்து விடுகிறது. மிகச் சிலரே கஷ்டப்பட்டு விழிப்படைகின்றனர். இந்த நேரத்தில் உலகிலுள்ள அனைவரின் நடத்தைகளும் சீர்கெட்டிருக்கிறது. பாவன உலகம் எப்பொழுது இருந்தது? எப்படி உருவானது? இவர்கள் இராஜ்ய பாக்கியத்தை எப்படி அடைந்தனர்? என்பதை ஒருபொழுதும் யாரும் கூற முடியாது. நீங்கள் அயல்நாடுகளுக்குச் செல்லும் காலமும் வரும். அவர்களும் கேட்பார்கள். சொர்க்கம் எப்படி ஸ்தாபனை ஆகிறது? உங்களது புத்தியில் இந்த அனைத்து விசயங்களும் நல்ல முறையில் இருக்கிறது. ஆக இப்பொழுது உங்களுக்குள் இதே ஆர்வம் மற்றும் உற்சாகம் இருக்க வேண்டும், மற்ற அனைத்து விசயங்களையும் மறந்து விட வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நன்ஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) எழுந்தாலும், அமர்ந்தாலும், நடந்தாலும் ஞானத்தை சிந்தனை செய்து முத்துக்களை தேர்ந்தெடுக்கும் அன்னப்பறவைகளாக ஆக வேண்டும். அனைவரிடத்திலும் குணங்களை கிரஹிக்க வேண்டும். ஒருவருக்கொருவரிடத்தில் குணங்களை மட்டுமே பரப்ப வேண்டும்.

 

2) தனது முகத்தை சதா மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு தனக்குள் தானே உரையாடிக் கொள்ள வேண்டும் - ஆஹா! நான் அளவற்ற பொக்கிஷங்களுக்கு எஜமானாக ஆகின்றேன், ஞானக் கடல் தந்தையின் மூலம் எனக்கு ஞான இரத்தினங்களின் இலாட்டரி கிடைத்துக் கொண்டிருக்கிறது.

 

வரதானம்:

சதா திருப்தியுடன் இருந்து தனது பார்வை, விருத்தி, செயல் மூலம் திருப்தியின் அனுபவம் செய்விக்கக் கூடிய திருப்தி மணி ஆகுக.

 

பிராமண குலத்தின் விசேஷ ஆத்மாக்கள் என்றால் சதா திருப்தி என்ற விசேஷத் தன்மை மூலம் தானும் திருப்தியாக இருந்து தனது பார்வை, விருத்தி மற்றும் செயலின் மூலம் மற்றவர்களையும் திருப்தியின் அனுபவம் செய்விக்கக் கூடியவர்கள். அந்த திருப்தி மணிகள் சதா எண்ணம், வார்த்தை, குழுவின் சம்பந்தம், தொடர்பு அல்லது செயலில் பாப்தாதா மூலம் தன் மீது திருப்தி என்ற தங்கமலர்களின் மழை பொழிந்து கொண்டிருப்பதாக அனுபவம் செய்வர். இப்படிப்பட்ட திருப்தி மணிகள் தான் பாப்தாதாவின் கழுத்து மாலையாக ஆகின்றனர், இராஜ்ய அதிகாரிகளாக ஆகின்றனர் மற்றும் பக்தர்கள் நினைவு செய்யும் மாலையாகவும் ஆகின்றனர்.

 

சுலோகன்:

எதிர்மறை மற்றும் வீணானவைகளை அழித்து கடின உழைப்பிலிருந்து விடுபட்டவர் ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி