19.12.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இப்பொழுது நீங்கள் கல்வியை கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள், இந்த கல்விதான் பதீத்ததிலிருந்து பாவனமாக்கக் கூடியது. இந்தக் கல்வியை நீங்களும் படித்து பிறருக்கும் கற்பிக்க வேண்டும்.

 

கேள்வி:

உலகினர் அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடக்கும் அளவு அப்படி என்ன ஞானம் அவர்களிடம் உள்ளது?

 

பதில்:

மாயாவினுடைய ஞானம். இதன் மூலம் வினாசம் ஏற்படுகிறது. சந்திரன் வரையில் செல்கிறார்கள். இந்த ஞானம் நிறைய இருக்கின்றது. ஆனால் புது உலகம் மற்றும் பழைய உலகத்தின் ஞானம் யாரிடமும் இல்லை. அனைவரும் அஞ்ஞான இருளில் இருக்கிறார்கள். அனைவரும் ஞானக் கண் இல்லாத குருடர்களாக இருக்கிறார்கள். உங்களுக்கு இப்போது ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்துள்ளது. நீங்கள் ஞானம் நிறைந்த குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள் அவர்களுடைய மூளையில் வினாசத்திற்கான சிந்தனைகள், உங்களுடைய புத்தியில் ஸ்தாபனைக்கான சிந்தனைகள் இருக்கிறன.

 

ஓம்சாந்தி

பாபா இந்த சரீரத்தின் மூலம் புரிய வைக்கின்றார். இதனை ஜீவன் (உடல்) என்று சொல்லப் படுகின்றது. இவருக்குள் ஆத்மா இருக்கிறது, நான் கூட இவருக்குள் வந்து அமருகின்றேன். இந்த நம்பிக்கை முதலில் உறுதியாக இருக்க வேண்டும். இவர் மூத்த சகோதரன் என்று அழைக்கப்படுகிறார். இந்த நிச்சயம் குழந்தைகளுக்கு உறுதியாக இருக்க வேண்டும். இந்த நம்பிக்கையுடன் சிந்தனை செய்யுங்கள். பாபா இவருக்குள் வருகை புரிந்திருக்கின்றார், இந்த பாபா தானே சொல்கின்றார், நான் இவருடைய அனைத்து பிறவிகளின் கடைசியில் வருகின்றேன். குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது அனைத்து சாஸ்திரங்களில் முதன்மையானது கீதா ஞானம். ஸ்ரீமத் என்றால் சிரேஷ்ட வழி. சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானது ஒரு பகவானுடைய வழி. இந்த சிரேஷ்ட வழி மூலமாகத்தான் நீங்கள் தேவதை ஆகின்றீர்கள். பாபா தானே கூறுகின்றார்: நீங்கள் எப்போது கீழான வழிப்படி நடந்து பதீத்தம் ஆகின்றீர்களோ அப்போது நான் வருகின்றேன். மனிதனிலிருந்து தேவதை ஆகும் அர்த்தத்தைக் கூட புரிந்து கொள்ள வேண்டும். விகாரி மனிதனை தேவதை ஆக்குவதற் காக பாபா வந்திருக்கின்றார். சத்யுகத்திலும் மனிதர்கள் தான் இருப்பார்கள். ஆனால் தெய்வீக குணங்கள் நிறைந்து இருப்பார்கள். இப்பொழுது கலியுகத்தில் அசுர குணங்கள் உடையவர்கள். இது முழுவதுமாக மனித உலகமாகத் தான் இருக்கிறது. ஆனால் இது ஈஸ்வரிய புத்தி அது அசுர புத்தி. இங்கே ஞானம், அங்கே பக்தி. ஞானம் மற்றும் பக்தி வெவ்வேறு. பக்தியினுடைய புத்தகங்கள் நிறைய இருக்கின்றது. ஞானத்தின் புத்தகம் ஒன்றுதான். ஞானக்கடல் ஒருவருடைய புத்தகம் ஒன்றுதான் இருக்க வேண்டும். யாரெல்லாம் தர்ம ஸ்தாபனை செய்கின்றார்களோ இவர்களுடைய புத்தகம் ஒன்று தான் இருக்கிறது. இதனை தர்மத்தின் புனித நூல் என்று கூறப்படுகின்றது.

 

முதன் முதல் தர்மத்தின் புனித நூல் கீதையாகும். முதலில் இருந்தது ஆதி சனார்த்தன தேவி தேவதா தர்மம், இந்து தர்மம் அல்ல. கீதை மூலமாக இந்து தர்மம் ஸ்தாபனையானது என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். கீதை ஞானத்தை கிருஷ்ணர் கூறியதாகச் சொல்கிறார்கள். எப்போது கொடுத்தார் என்றால், பரம்பரை பரம்பரையாக என்கின்றனர். எந்த ஒரு சாஸ்திரத்திலும் சிவ பகவானின் மகா வாக்கியம் என்பதே இல்லை. இந்த கீதை ஞானத்தின் மூலமே மனிதனிலிருந்து தேவதையாகின்றோம் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இந்த ஞானத்தை பாபா இப்போது நமக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தான் பாரதத்தின் பழைமையான இராஜயோகம் என்று சொல்லப்படுகின்றது. அந்த கீதையில் எழுதப்பட்டுள்ளது காமம் என்பது மகா எதிரி. இந்த எதிரிதான் உங்களை தோல்வியடைய வைத்தான். பாபா இதன் மீது வெற்றியடைய வைத்து உலகத்தை வென்றவர் ஆக்குகின்றார். எல்லையற்ற தந்தை வந்து இவர் மூலமாக உங்களுக்கு கல்வியை கற்றுத் தருகின்றார். அவர்தான் அனைத்து ஆத்மாக்களின் தந்தை. இவர் அனைத்து ஆத்மாக்களின் எல்லையற்ற தந்தையாவார். பிரஜாபிதா பிரம்மா என்ற பெயர் இருக்கின்றது. நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம் பிரம்மாவின் தந்தை பெயர் என்ன? என்று, அவர்கள் குழப்பம் அடைவார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கர் மூவருக்கும் தந்தை யாராவது இருக்க வேண்டும் அல்லவா? பிரம்மா, விஷ்ணு, சங்கர் சூட்சம வதனத்தில் இருக்கும் தேவதைகள். இவர்களுக்கு மேலே இருப்பவர் சிவன். சிவ பாபாவுடைய குழந்தைகள் அனைவரும் ஆத்மாக்கள் அனைவரும் சரீரத்தை எடுத்து இருக்கிறார் கள், அவர் எப்போதும் நிராகார பரமபிதா பரமாத்மாவாக இருக்கிறார் என்பதை குழந்தைகள் தெரிந்திருக் கின்றீர்கள். ஆத்மாத்தான் சரீரத்தின் மூலம் சொல்கிறது பரமபிதா என்று. எவ்வளவு சகஜமான விஷயமாக இருக்கிறது. இதற்குத்தான் சொல்லப்படுகின்றது தந்தை மற்றும் அவரது ஆஸ்திக்கான கல்வி. யார் கல்வியை கற்றுத் தருகின்றார்கள்? கீதையின் ஞானத்தை யார் கூறியது? கிருஷ்ணரை பகவான் என்று சொல்ல முடியாது. இவர் ஒரு சரீரதாரி. மேலும் கிரீடதாரியாக இருக்கின்றார். சிவன் நிராகாரமானவர். அவருக்கு எந்த விதமான கிரீடமும் கிடையாது. அவரே ஞானக்கடல். பாபா விதை ரூபமான சைதன்யமாக இருக்கின்றார். நீங்களும் கூட சைதன்யமாக இருக்கின்றீர்கள். முழு மரத்தின் முதல், இடை, கடைசியின் ஞானத்தைத் தெரிந்திருக்கின்றீர்கள். நீங்கள் தோட்டகாரன் அல்ல. ஆனாலும் புரிந்து கொள்ள முடிகிறது, விதை எப்படி போடப்படுகிறது? அதிலிருந்து மரம் எப்படி வெளிப்படுகிறது. அந்த மரம் ஜடமானது. இது சைதன்யமானது. ஆத்மாவைத்தான் சைதன்யம் என்று சொல்லப்படுகின்றது. உங்களுடைய ஆத்மாவில் தான் ஞானம் இருக்கின்றது. வேறு எந்த ஆத்மாவிலும் இந்த ஞானம் இருக்க முடியாது. எனவே பாபா மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கின்றார். இது சைதன்யமான படைப்பு. அவையனைத்தும் ஜடமான விதைகள். ஜடமான விதையில் ஞானம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. இவர் சைதன்ய விதை இவருக்குள் முழு உலகத்தின் ஞானம் இருக்கிறது. மரத்தின் உற்பத்தி, பாலனை வினாசத்தின் முழு ஞானமும் அவரிடம் இருக்கிறது. பிறகு புது மரம் எப்படி ஏற்படுகிறது? இது குப்தமானது. உங்களுக்கு ஞானம் கூட குப்தமாக கிடைக்கிறது. பாபா கூட குப்தமாக வந்து இருக்கின்றார். நீங்கள் தெரிந்துக் கொண்டிருக்கின்றீர்கள் இந்த நாற்று நடப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இப்போது அனைவரும் பதீத்தமாகி விட்டனர். நல்லது, விதையிலிருந்து முதன் முதலில் வெளிப்பட்டவர் யார்? சத்திய யுகத்தின் முதல் இலை என்று கிருஷ்ணரைத்தான் சொல்லலாம். லட்சுமி நாராயணரைக் கூற முடியாது. புதிய இலை சிறியதாகவே இருக்கும். பிறகு தான் பெரியதாகின்றது. எனவே இந்த இலைக்கு எவ்வளவு மகிமை இருக்கிறது? இது சைதன்யமாக இருக்கின்றது அல்லவா?. மற்றவைகள் வெளிப்படும் போது கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய மகிமை குறைந்து கொண்டே வருகின்றது. இப்போது நீங்கள் தேவதையாகின்றீர்கள். எனவே முக்கியமான விஷயம் தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். இவர்களைப் போல ஆக வேண்டும். சித்திரங்கள் கூட இருக்கின்றது. இந்த சித்திரங்கள் இல்லையென்றால் புத்தியில் ஞானம் எப்படி வரும்? இந்த சித்திரங்கள் மிகவும் காரியத்திற்குப் பயன்படக் கூடியவை. பக்தி மார்க்கத்தில் இந்த சித்திரங்களுக்கு பூஜை நடைபெறுகின்றது. இவர்கள் போல் ஆக வேண்டும் என்ற ஞானம் ஞான மார்க்கத்தில் இவர்கள் மூலம் கிடைக்கின்றது. நான் அப்படி ஆக வேண்டும் என்று பக்தி மார்க்கத்தில் யாரும் புரிந்து கொள்வதில்லை. பக்தி மார்க்கத்தில் எத்தனை கோவில்கள் கட்டியிருக்கிறார்கள், அனைத்தைக்காட்டிலும் அதிகமான கோவில் யாருக்கு இருக்கிறது? நிச்சயம் சிவபாபா விற்குத்தான் இருக்கும். றகுதான் படைப்புக்களுக்கு இருக்கும். முதல் படைப்பு இந்த இலட்சுமி நாராயணன் எனவே சிவபாபாவிற்குப் பிறகு இவர்களுக்குத்தான் இருக்கும். தாய்மார்கள் ஞானம் தருகிறார்கள் ஆனால் அவர்களுக்கு பூஜையில்லை. அவர்கள் படிக்கின்றார்கள். உங்களுக்கு பூஜை இப்போது நடைபெறாது, ஏனென்றால் நீங்கள் இப்பொழுது படித்துக்கொண்டிருக்கின்றீர்கள். எப்பொழுது நீங்கள் படித்து படிப்பை முடித்து விடுகின்றீர்களோ அப்போது உங்களுக்கு பூஜை நடைபெறும். இப்பொழுது நீங்கள் தேவி தேவதையாகின்றீர்கள். சத்திய யுகத்தில் பாபா கல்வி கற்றுத்தர வருவாரா என்ன? அங்கே இப்படிப்பட்ட கல்வி இருக்குமா? இந்தக் கல்வி பதீதமானவர்களை பாவனமாக்கக் கூடியது. நம்மை யார் அப்படி ஆக்கு கிறார்களோ அவருக்கு பூஜை நடைபெறும், பிறகு நமக்கு நம்பர்வார் பூஜை நடைபெறும் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். பிறகு கீழே வர வர 5 தத்துவங் களை பூஜை செய்ய ஆரம்பிக்கின்றார்கள். 5 தத்துவங்களின் பூஜை என்றால் பதீத சரீரத்தினுடைய பூஜை யாகும். இந்த முழு உலகத்திலும் இலட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது என்பது உங்கள் புத்தியில் ஞானம் இருக்கிறது. இந்த தேவி தேவதைகள் இராஜ்யத்தை எப்படி எப்போது அடைந்தார்கள்? இது யாருக்கும் தெரியாது. லட்சக்கணக்கான ஆண்டுகள் என்று கூறிவிட்டார்கள். லட்சக்கணக்கான ஆண்டுகள் என்ற விஷயம் யார் புத்தியிலும் அமர முடியாது, எனவே இது பரம்பரை பரம்பரையாக உள்ளது என்று கூறிவிடுகின்றனர். இப்பொழுது நீங்கள் தெரிந்துள்ளீர்கள் தேவி தேவதை தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற தர்மத்தில் சென்று விட்டார்கள். யார் பாரதத்தில் இருக்கிறார்களோ அவர்கள் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏனென்றால் பதீதமான காரணத்தால் தேவி தேவதை என்று கூறுவது அழகானதாக இல்லை. ஆனால் மனிதர்களிடம் ஞானம் எங்கு இருக்கின்றது? தேவி தேவதையைக் காட்டிலும் உயர்ந்த பட்டத்தை தன் மீது வைத்துக் கொள்கிறார்கள். பாவனமான தேவி தேவதைகளுக்கு பூஜை செய்கின்றார்கள், தலை வணங்குகின்றார்கள், ஆனால் தன்னை பதீதமானவர் என்று புரிந்து கொள்கிறார்களா?

 

குறிப்பாக பாரதத்தில் கன்னிகைகளை எவ்வளவு வணங்குகின்றார்கள். குமார்களுக்கு அவ்வளவு நடைபெறுவதில்லை. ஆண்களைக் காட்டிலும் பெண்களைத்தான் அதிகமாக வணங்குகின்றனர். ஏனென்றால் இந்த நேரம் ஞான அமிர்தம் இந்த தாய்மார்களுக்குத் தான் கிடைக்கிறது. பாபா இவருக்குள் பிரவேசம் ஆகின்றார். இதைக் கூட புரிந்திருக்கிறீர்கள். இவர் (பிரம்மாபாபா) ஞானத்தினுடைய மிகப்பெரிய நதியாக இருக்கின்றார். ஞான நதியாகவும் இருக்கின்றார் ஆணாகவும் இருக்கின்றார். பிரம்மா புத்திரா நதி மிகப் பெரிய நதியாகவும் இருக்கிறது. அது கல்கத்தாவில் கடலில் சென்று கலக்கிறது. மேளா (மகாமகம்) கூட அங்கு கொண்டாடுகிறார்கள், இது ஆத்மா பரமபிதாவின் மேளா (சந்திப்பு) என்பது அவர்களுக்குத் தெரியாது. அது தண்ணீர் நதி, அதற்குப் பெயர் பிரம்மபுத்திரா என்று வைத்திருக்கிறார்கள். அவர்கள் பிரம்மத்தை ஈஸ்வரன் என்று நினைக்கின்றார்கள், எனவே பிரம்மபுத்திராவை பாவனமானது என்று நினைக்கின்றார்கள். பதீத பாவனன் என்று கங்கையைக் கூற முடியாது. இங்கு கடல் மற்றும் பிரம்மா நதியினுடைய மேளா நடைபெறுகிறது. அவர் பெண்ணல்ல, இவர் மூலம் தத்தெடுப்பது நடைபெறுகிறது. இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய ஆழமான விஷயம், பிறகு இது மறைந்து விடும். பிறகு மனிதர்கள் இதன் ஆதாரத்தில் சாஸ்திரங்களை உருவாக்குகிறார்கள். முதலில் கைகளால் எழுதப்பட்ட சாஸ்திரம் இருந்தது, பிறகு பெரிய பெரிய கனமான புத்தகங்களை அச்சடித்துள்ளார்கள். சமஸ்கிருதத்தில் ஸ்லோகன் முதலில் இருக்கவில்லை. இது மிக சகஜமான விஜயம். நான் இவர் மூலம் இராஜயோகத்தைக் கற்றுத் தருகின்றேன் பிறகு இந்த உலகமே முடிந்து விடுகிறது. சாஸ்திரங்கள் எதுவுமே இருக்காது. பிறகு பக்தி மார்க்கத்தில் இந்த சாஸ்திரங்கள் அனைத்தும் உருவாக்கப்படுகிறது. இந்த சாஸ்திரங்கள் அனைத்தும் பரம்பரை பரம்பரையாக இருக்கிறது என்று மனிதர்கள் புரிந்திருக்கிறார்கள், இதனைத்தான் சொல்லப்படுகிறது அஞ்ஞான இருள். இப்பொழுது குழந்தைகளகிய உங்களுக்கு பாபா கல்வியைக் கற்றுத் தருகிறார், இதன் மூலம் நீங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றீர்கள். சத்தியயுகத்தில் பவித்திரமான இல்லற மார்க்கம் இருந்தது. கலியுகத்தில் அனைவரும் அப்பவித்திர இல்லற மார்க்கத்தினர். இது கூட நாடகம். பிறகு தான் துறவற மார்க்கம் வருகிறது, இதனைத்தான் சந்நியாச தர்மம் என்று அழைக்கப்படுகிறது, காட்டில் சென்று இருக்கிறார்கள். அது எல்லைகுட்பட்ட சந்நியாசம். இந்த பழைய உலகத்தில் தான் இருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் புது உலகத்திற்குச் செல்கிறீர்கள். உங்களுக்கு இப்பொழுது பாபாவிடமிருந்து ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்திருப்பதால் நீங்கள் எவ்வளவு ஞானம் நிறைந்தவர் ஆகியிருக்கிறீர்கள்! இதனை விட அதிக ஞானம் வேறு எதுவும் இல்லை. அங்கு இருப்பது மாயையினுடைய ஞானம், இதனால் வினாசம் ஏற்படுகிறது. அவர்கள் சந்திரனில் சென்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு எதுவுமே புதிய விஷயமல்ல. இது அனைத்தும் மாயையினுடைய பகட்டு. மிகவும் ஷோ செய்கிறார்கள். ஏதாவது அதிசயம் செய்து காட்ட மிகவும் ஆழத்தில் செல்கிறார்கள். மிகவும் அதிசயம் செய்த பிறகு மிகவும் நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களுடைய புத்தியில் வினாசத்திற்கான சிந்தனை வருகின்றது. என்னென்ன உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். இதன் மூலம் தான் வினாசம் ஏற்படும் என்பது உருவாக்குபவர்களுக்குத் தெரியும். ஒத்திகை கூட பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள். இரண்டு பூனைகள் வெண்ணெய்க்கு சண்டைப் போட்டன, இடையே மூன்றாவது குரங்கு வந்து சாப்பிட்டு விட்டது, என்று சொல்கிறார்கள். கதை மிகவும் சிறியது தான். ஆனால் விளையாட்டு எவ்வளவு பெரியது! இவர்கள் பெயர்தான் வெளிப்படுகிறது. இவர்கள் மூலம் தான் வினாசம் என்பது பதிவானது. யாராவது நிமித்தம் ஆகின்றார்கள் அல்லவா? சொர்க்கம் இருந்தது, ஆனால் அதில் நாம் இல்லை என்பதை அறிந்திருக்கிறார்கள். இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் கூட இல்லை. ஆனாலும் கிறிஸ்துவர்களின் புத்தி நன்றாக உள்ளது. தேவி தேவதை தர்மம் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்று பாரதவாசிகள் கூறுகின்றார்கள் என்றால் அறிவீனம் அல்லவா? பாபா பாரத தேசத்தில் தான் வருகிறார், யார் மகான் அறிவீனமாக இருக்கிறார்களோ அவர்களை மகான் புத்திசாலியாக்குகின்றார். பிறகும் கூட நினைவிருக்க வேண்டும், பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு சகஜமாக புரிய வைக்கிறார், நீங்கள் என்னை நினைவு செய்தீர்களானால் நீங்கள் தங்கப் பாத்திரம் ஆகிவிடுவீர்கள், தாரணையும் நன்றாக இருக்கும். நினைவு யாத்திரையின் மூலம் பாவங்கள் அழிகின்றன. முரளி கேட்கவில்லை என்றால் ஞானம் மாயமாய் மறைந்து விடுகிறது. பாபா கருணை நிறைந்தவராதலால் பறப்பதற்கான யுக்தியைத் தருகின்றார். கடைசி வரையில் கற்றுக் கொடுத்துக் கொண்டே யிருப்பார். நல்லது, இன்று போக். போக் வைத்துவிட்டு விரைவில் வந்து விடவும். வைகுண்டத்தில் சென்று சாட்சாத்காரம் பார்ப்பது அனைத்தும் வீணானது. இதில் மிகவும் கூர்மையான புத்தி வேண்டும். பாபா என்னை நினைவு செய்யுங்கள் என்று இந்த இரதத்தின் மூலம் கூறுகின்றார், நான் தான் பதீத பாவனன், உங்களுடைய தந்தையாக இருக்கின்றேன். உன்னுடனேயே சாப்பிடுவேன், உன்னுடனேயே அமருவேன்.... என்று சொல்வது இந்த உலகிற்காகத்தான், இது மேலே எப்படி நடக்கும்? நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட, மிக செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாபாதாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம்

1. பாபா இந்த தாதாவினுள் பிரவேசமாகி நம்மை மனிதனிலிருந்து தேவதை அதாவது விகாரியிலிருந்து நிர்விகாரி ஆக்குவதற்காக கீதை ஞானத்தை கூறிக்கொண்டிருக்கின்றார், இந்த நிச்சயத்தோடு சிந்திக்க வேண்டும். ஸ்ரீமத் படி நடந்து சிரேஷ்ட குணவான் ஆக வேண்டும்.

 

2. நினைவு யாத்திரையின் மூலம் புத்தியை தங்கப் பாத்திரம் ஆக்க வேண்டும். புத்தியை ஞானம் நிறைந்ததாக ஆக்குவதற்காக முரளியை அவசியம் கேட்க அல்லது படிக்க வேண்டும்.

 

வரதானம்:

சரீரத்தின் வியாதிகளின் சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, ஞான சிந்தனை மற்றும் சுய சிந்தனை செய்யக் கூடிய சுப சிந்தனையாளர் ஆகுக.

 

ஒன்று சரீரத்திற்கு நோய் வருவது, மற்றொன்று நோயினால் ஆட்டம் காண்பது (ஆடிப் போவது). நோய் வருவது என்பது விதி, ஆனால் உயர்ந்த நிலை ஆடிப் போவது என்பது பந்தன யுக்தமாக (பந்தனத்தில் தள்ளப்பட்டவராக) ஆவதின் அடையாளம் ஆகும். சரீரத்தின் வியாதியின் சிந்தனையிலிருந்து விடுபட்டிருந்து, சுய சிந்தனை, ஞான சிந்தனை செய்பவர்தான் சுப சிந்தனையாளர் ஆவார். இயற்கையைக் குறித்த சிந்தனையை அதிகமாக செய்வதனால் அது கவலையின் ரூபமாய் ஆகி விடுகிறது. இந்த பந்தனத்திலிருந்து விடுபடுவதுதான் கர்மாதீத் (கர்மங்களை வென்ற முழுமை நிலை) எனப்படுகிறது.

 

சுலோகன்:

அன்பின் சக்தி பிரச்சினை என்ற மலையையே நீர் போல இலேசாக மாற்றி விடுகிறது.

 

ஓம்சாந்தி