23.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஞானத்தின் மூன்றாவது கண் சதா திறந்திருந்தால் மகிழ்ச்சியில் மெய் சிர்த்துப் போகும். மகிழ்ச்சியின் அளவு சதா அதிகரித்துக் கொண்டே போகும்.

 

கேள்வி:

இச்சமயம் மனிதர்களின் பார்வை மிகவும் பலவீனமாக இருக்கிறது. அவர்களுக்குப் புரிய வைப்பதற்கான வழி என்ன?

 

பதில்:

நீங்கள் மிகப் பெரிய படங்களை உருவாக்குங்கள். அதை அவர்கள் தூரத்திலிருந்து பார்த்து புரிந்து கொள்ளலாம் என பாபா கூறுகிறார். இந்த நாடக சக்கரத்தின் படம் மிகப் பெரியதாக இருக்க வேண்டும். இது குருடர்களுக்கு முன்பு கண்ணாடியாகும்.

 

கேள்வி:

முழு உலகத்தையும் தூய்மையாக்குவதில் உங்களுக்கு உதவியாளர் யார்?

 

பதில்:

இந்த இயற்கை சீற்றங்கள் உங்களுக்கு உதவியாளராக இருக்கிறது. இந்த எல்லையற்ற உலகத்தை தூய்மைப் படுத்துவதற்கு நிச்சயமாக உங்களுக்கு யாராவது உதவியாளர் வேண்டும்.

 

ஓம் சாந்தி.

தந்தையிடமிருந்து ஒரு நொடியில் சொத்து என்றால் ஜீவன் முக்தி என்று பாடப் பட்டிருக்கிறது. மற்ற வாழ்க்கை பந்தனத்தில் இருக்கிறார்கள். திரிமூர்த்தி மற்றும் நாடக சக்கரத்தின் படம் மிகவும் முக்கியமானதாகும். இது மிகப் பெரியதிலும் பெரியதாக இருக்க வேண்டும். குருடர்களுக்கு மிகப் பெரிய கண்ணாடி வேண்டும். அதன் மூலமாக நன்றாகப் பார்க்க முடியும். ஏனென்றால் இப்போது அனைவரின் பார்வையும் பலவீனமாக இருக்கிறது. புத்தி குறைவாக இருக்கிறது. மூன்றாவது கண்ணிற்கு புத்தி என்று பெயர். உங்களுடைய புத்தி இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியில் யாருடைய மெய் சிர்க்கவில்லையோ அவர்கள் சிவ பாபாவை நினைக்கவில்லை. அதாவது ஞானத்தின் மூன்றாவது கண் சிறிது திறந்திருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் சுருக்கமாகப் புரிய வைக்க வேண்டும் என பாபா கூறுகிறார். பெரிய பெரிய திருவிழாக்கள் நடக்கின்றது. சேவை செய்வதற்கு ஒரு படம் கூட போதும் என்பது குழந்தைகளுக்குத் தெரியும். நாடக சக்கரத்தின் படம் இருந்தாலும் கூட பரவாயில்லை. பாபா, நாடகம் மற்றும் மரம் அல்லது கல்ப விருட்சம் மற்றும் 84 பிறவிகளின் சக்கரத்தைப் புரிய வைக்கிறார். பிரம்மா மூலமாக பாபாவின் இந்த சொத்து கிடைக்கிறது. இது மிகவும் தெளிவாக இருக்கிறது. இந்த படத்திலேயே அனைத்தும் வந்து விடுகிறது. இவ்வளவு படங்களுக்கு அவசியம் இல்லை. இந்த இரண்டு படங்களும் மிகப் பெரியதிலும் பெரியதாக இருக்க வேண்டும், எழுதியும் இருக்க வேண்டும். வினாசத்திற்கு முன்பாக ஜீவன் முக்தியை அடைதல் என்பது தந்தை அளித்துள்ள பிறப்புரிமையாகும். நிச்சயமாக வினாசமும் நடக்கும். நாடகத்தின் திடடப்படி தாங்களாகவே அனைத்தையும் புரிந்துக் கொள்வார்கள். நீங்கள் புரிய வைப்பதற்கு அவசியம் இல்லை. எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற இந்த சொத்து கிடைக்கிறது. இது நன்கு நினைவிலிருக்க வேண்டும். ஆனால் மாயா உங்களை மறக்கச் செய்கிறது. நேரம் சென்று கொண்டே இருக்கிறது. நிறைய காலம் கடந்து விட்டது..... என்று பாடப்பட்டிருக்கிறது இது இச்சமயத்தை குறிப்பதாகும். இன்னும் சிறிது காலம் தான் இருக்கிறது. ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. வினாசத்திற்கு சிறிது காலம் இருக்கிறது. குறைவிலும் குறைவானதாக இருக்கிறது. பிறகு என்ன நடக்கும் என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இப்போது எழவே இல்லை, பின்னால் எழுந்து விடுவார்கள். கண்கள் பெரியதாகிக் கொண்டே போகும். இந்த கண்கள் இல்லை. புத்தியின் கண்கள். சிறிய சிறிய படங்களில் அவ்வளவு மகிழ்ச்சி வருவதில்லை. பெரிது பெரிதாக உருவாக்கப்படும். விஞ்ஞானம் கூட எவ்வளவு உதவி செய்கிறது, வினாசத்தின் போது தத்துவங்களும் உதவி செய்கிறது. ஒரு பைசா செலவில்லாமல் உங்களுக்கு எவ்வளவு உதவி செய்கிறது! உங்களுக்காக முற்றிலும் தூய்மையாக்கி விடுகிறது. இது மோசமான உலகம் ஆகும். அஜ்மீரில் சொர்க்கத்தின் நினைவு சின்னம் இருக்கிறது. இங்கே தில்வாடா கோவிலில் ஸ்தாபனையின் நினைவு சின்னம் இருக்கிறது ஆனால் எதையும் புரிந்து கொள்ள முடியாது. இப்போது நீங்கள் புத்திசாலியாகி இருக்கிறீர்கள். மனிதர்கள் வினாசம் நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது, புரியவில்லை என்கிறார்கள். புலி வருகிறது, புலி வருகிறது என்ற ஒரு கதை இருக்கிறது அல்லவா ! ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு நாள் வந்து அனைத்து பசுக்களையும் தின்று விட்டது. நீங்கள் கூட இந்த பழைய உலகம் முடியப் போகிறது என்கிறீர்கள். நிறைய காலம் சென்று விட்டது சிறிதளவே இருக்கிறது......

 

இந்த ஞானம் முழுவதையும் குழந்தைகளாகிய நீங்கள் புத்தியில் தாரணை செய்ய வேண்டும் ஆத்மா தான் தாரணை செய்கிறது. பாபாவின் ஆத்மாவிலும் ஞானம் இருக்கிறது. அவர் சரீரத்தை ஏற்கும் போது ஞானத்தைக் கொடுக்கிறார். நிச்சயமாக அவருக்குள் ஞானம் இருப்பதால் தான் நாலெட்ஜ் ஃபுல் (ஞானம் நிறைந்தவர்) காட் பாதர் (இறை தந்தை) எனக் கூறப்படுகிறது முழு சிருஷ்டியின் முதல், இடை, கடை ஞானத்தை அறிந்திருக்கிறார். தன்னைப் பற்றி அறிந்திருக்கிறார் அல்லவா? மேலும் சிருஷ்டி சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்ற ஞானமும் இருக்கிறது. ஆகவே, ஆங்கிலத்தில் நாலெட்ஜ்ஃபுல் என்ற வார்த்தை மிக நன்றாக இருக்கிறது மனித சிருஷ்டி என்ற மரத்தின் விதை ரூபமாக இருப்பதால் அவருக்குள் அனைத்து ஞானமும் இருக்கிறது. நீங்கள் வரிசைக் கிரமமாக இதை புரிந்து கொள்கிறீர்கள். சிவ தந்தை தான் நாலெட்ஜ்ஃபுல் ஆவார். இதை நன்றாகப் புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். அனைவரின் புத்தியிலும் ஒரே மாதிரியான தாரணை நடக்கிறது என்பது கிடையாது. எழுதுகிறார்கள். ஆனால் தாரணை எதுவும் இல்லை. பெயருக்கு எழுதுகிறார்கள். யாருக்கும் சொல்ல முடியாது. வெறும் காகிதத்திற்கு சொல்கிறார்கள். காகிதம் என்ன செய்யும்? காகிதத்தினால் யாரும் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். இந்த படத்தின் மூலம் மிக நன்றாகப் புரிந்துக் கொள்வார்கள். மிகப் பெரியதிலும் பெரிய ஞானம். எனவே, எழுத்துக்கள் கூட பெரியது பெரியதாக இருக்க வேண்டும். பெரிய பெரிய படங்களைப் பார்க்கும் போது இதில் ஏதோ நிச்சயம் விஷயம் இருக்கிறது எனப் புரிந்துக் கொள்வார்கள். ஸ்தாபனை மற்றும் வினாசம் கூட எழுதப்பட்டிருக்கிறது. இராஜ்யத்தின் ஸ்தாபனை-இது இறை தந்தை அளித்துள்ள பிறப்புரிமை ஆகும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஜீவன் முக்தி அடைய உரிமை இருக்கிறது. அனைவரும் ஜீவன் பந்தனத்தில் இருக்கிறார்கள். இவர்களை ஜீவன் பந்தனத்திலிருந்து ஜீவன் முக்திக்கு எப்படி அழைத்துச் செல்வது என குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டும். முதலில் சாந்தி தாமம் செல்வார்கள். பிறகு சுகதாமம். சுகதாமத்தை ஜீவன் முக்தி என்கிறார்கள். இந்தப் படங்களை பெரியது பெரியதாகச் செய்ய வேண்டும். முக்கியமான படங்கள் அல்லவா? மிகப் பெரிய பெரிய எழுத்துக்கள் இருந்தால் பிகே இவ்வளவு பெரிய படங்களை தயாரித்து இருக்கிறார்கள், நிச்சயமாக ஏதோ ஞானம் இருக்கிறது என மனிதர்கள் கூறுவார்கள். எங்கெங்கே உங்களுடைய பெரிய பெரிய சித்திரங்கள் இருக்கிறதோ அங்கே இது என்ன எனக் கேட்பார்கள் உங்களுக்குப் புரிய வைப்பதற்காக இவ்வளவு பெரிய படங்களை உருவாக்கியிருக்கிறோம் எனக் கூறுங்கள். இவர்களிடம் எல்லையற்ற சொத்து இருந்தது என இதில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. நேற்றைய விஷயம் ஆகும். இன்று இல்லை ஏனென்றால் 84 பிறவிகளை எடுத்து எடுத்து கீழே வந்து விட்டார்கள். சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானமாகத்தான் வேண்டும். ஞானம் மற்றும் பக்தி, பூஜைக்குரியவர் மற்றும் பூஜாரி அல்லவா? பாதி பாதியாக இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே பெரிய பெரிய சித்திரங்களை உருவாக்க தைரியம் வேண்டும். சேவைக்குக் கூட ஆர்வம் வேண்டும். டில்லியில் ஒவ்வொரு மூலையிலும் சேவை செய்ய வேண்டும். திருவிழா நடக்கும் இடங்களில் நிறைய மக்கள் வருகிறார்கள். அங்கே உங்களுக்கு இந்த சித்திரங்கள் பயன் படும். திரிமூர்த்தி, நாடகச் சக்கரம் முக்கியமானதாகும். இது மிகவும் நல்ல பொருளாகும். குருடர்களுக்கு முன்பு கண்ணாடி போன்றாகும். குருடர்களை படிக்க வைக்கப்படுகிறது. படிப்பது ஆத்மா அல்லவா! ஆனால் ஆத்மாவின் உறுப்புகள் சிறியதாக இருப்பதால் அவர்களைப் படிக்க வைப்பதற்கு படங்கள் போன்றவற்றை காட்ட வேண்டியிருக்கிறது. பிறகு கொஞ்சம் பெரியதானதும் உலக வரை படத்தை காட்டுகிறார்கள். பிறகு வரை படம் முழுவதும் புத்தியில் வந்து விடுகிறது. இப்போது உங்களுடைய புத்தியில் இந்த முழு நாடகச் சக்கரம் இருக்கிறது. இத்தளை தர்மங்கள் அனைத்தும் இருக்கிறது, எப்படி வரிசைக் கிரமத்தில் வருகிறார்கள், பிறகு செல்கிறார்கள் என்பது தெரிகிறது. அங்கே ஒரேயொரு ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் மட்டுமே. அதற்கு சொர்க்கம் ஹெவன் என்கிறார்கள். பாபாவுடன் தொடர்பு கொள்வதால் ஆத்மா பதீதத்திலிருந்து பாவனமாகி விடும். பாரதத்தின் பழமையான யோகம் பிரசித்தமானது. யோகா என்றால் நினைவு தந்தையாகி என்னை நினையுங்கள் எனக் பாபாவும் கூறுகிறார் இதை கூற வேண்டியிருக்கிறது. லௌகீக தந்தை என்னை நினையுங்கள் என கூற வேண்டியிருக்காது. குழந்தைகள் தானாகவே அம்மா, அப்பா என கூறிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் லௌகீக தாய் தந்தை. இவர் பரலௌகீக தந்தை. உங்களுடைய கருணை யினால் மிகப் பெரிய சுகம் கிடைக்கிறது என இவரைப் பற்றித் தான் பாடியிருக்கிறார்கள். யார் துக்கத்தில் இருக்கிறார்களோ அவர்களே பாடுகிறார்கள், சுகத்தில் கூற வேண்டியிருக்காது. துக்கத்தில் அனைவரும் அழைக்கிறார்கள். இப்போது அவர் தாய் தந்தை என நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஆழமான விஷயத்தை பாபா கூறுகிறார் அல்லவா? தாய் தந்தை என்று யாருக்கு கூறுகிறோம் என முன்பு தெரியுமா? அவருக்குத் தான் தந்தை என்று பெயர் என இப்போது நீங்கள் அறிகிறீர்கள். பிரம்மா மூலமாக சொத்து கிடைக்கிறது. குழந்தைகளை தத்தெடுப்பதற்கு தாய் கூட வேண்டும் அல்லவா! இந்த விஷயங்கள் யாருடைய கவனத்திலும் வரவில்லை. இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள் என அடிக்கடி பாபா கூறுகிறார். எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் இலட்சியம் கிடைத்து விட்டது. வெளிநாட்டிற்குக் கூட செல்லுங்கள். 7 நாள் பாடம் எடுத்து விட்டீர்கள் என்றால் பெரிது. தந்தையிடமிருந்து சொத்து அடைய வேண்டும். நினைவினால் தான் ஆத்மா தூய்மையாக மாறும் சொர்க்கத்திற்கு அதிபதியாகலாம். இந்த இலட்சியம் புத்தியிலிருந்தால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இந்த பேட்ஜில் கீதையின் முழு ஞானமும் இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்ற கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தந்தையிடமிருந்து சொத்து அடைய வேண்டும் என்றால் நிச்சயமாக பாபாவை நினைக்க வேண்டும். நீங்கள் தந்தையிடமிருந்து பலமுறை இந்த சொத்தை அடைந்தள்ளீர்கள். நாடக சக்கரம் ரீபிட் ஆகிக் கொண்டே இருக்கிறது அல்லவா? பல முறை நீங்கள் டீச்சரிடமிருந்து படித்து ஏதாவது ஒரு பதவியை அடைகிறீர்கள். படிப்பில் புத்தி தொடர்பு டீச்சருடன் இருக்கிறது அல்லவா! தேர்வு சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் ஆத்மா தான் படிக்கிறது அல்லவா? இவருடைய ஆத்மாவும் படிக்கிறது. ஆசிரியரையும், குறிக்கோளையும் நினைக்க வேண்டும். சிருஷ்டி சக்கரத்தையும் புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும் அப்பா மற்றும் ஆஸ்தியை நினைக்க வேண்டும். தெய்வீக குணங்களைக் கடைபிடிக்க வேண்டும். எவ்வளவு தாரணை செய்கிறீர்களோ அவ்வளவு உயர்ந்த பதவி அடைவீர்கள். நன்கு நினைவு செய்து கொண்டே இருந்தால் இங்கு வரவேண்டும் என்ற அவசியம் என்ன? ஆனால் இவ்வளவு உயர்ந்த தந்தை அவரிடமிருந்து இவ்வளவு எல்லையற்ற சொத்து கிடைக்கிறது அவரை சந்தித்து விட்டு வரலாமே என வருகிறார்கள். மந்திரத்தை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். உங்களுக்கு நிறைய மந்திரங்கள் கிடைக்கிறது. ஞானம் முழுவதும் நன்கு புத்தியில் இருக்கிறது.

 

இப்போது அழியக் கூடிய வருமானத்திற்காக நிறைய நேரத்தை வீணாக்கக் கூடாது என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். அது அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும். பாபாவிற்கு ஏதாவது வேண்டுமா என்ன? எதுவும் இல்லை. ஏதாவது செலவுகள் செய்கிறோம் என்றால் தனக்காகத் தான் செய்கிறார்கள். இதில் ஒரு நயா பைசாவிற்கும் செலவில்லை. ஏதாவது அணுகுண்டுகள், பீரங்கி போன்றவைகளை சண்டைக்காக வாங்க வேண்டியதில்லை. எதுவும் இல்லை. நீங்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் முழு உலகத்திலும் குப்தமாக இருக்கிறீர்கள் உங்களுடைய போர் எப்படி இருக்கிறது பாருங்கள்! இதற்கு யோக பலம் என்று பெயர். அனைத்தும் குப்தமான (மறைவான) விஷயம் ஆகும். இதில் யாருடனும் சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தந்தையை மட்டும் நினைக்க வேண்டும். அனைவரின் மரணமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு 5000 வருடத்திற்குப் பிறகும் யோக சக்தியின் சேமிப்பிற்காக படிப்பைப் படிக்கிறீர்கள். படிப்பு முடிந்ததும் புது உலகத்தில் சொத்து வேண்டும். பழைய உலகத்திற்காக இது இயற்கை சீற்றமாகும். தனது குலத்தை எப்படி அழிக்கிறார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது அல்லவா? எவ்வளவு பெரிய குலம், அனைத்து ஐரோப்பாவும் வந்து விடுகிறது. இந்த பாரதம் தனியாக மூலையில் இருக்கிறது. மற்ற அனைத்தும் அழிந்து போகும். யோக பலத்தினால் முழு உலகத்தையும் வெற்றி அடைகிறீர்கள். இந்த இலஷ்மி நாராயணனைப் போன்று தூய்மையாக வேண்டும். அங்கே குற்றப் பார்வை கிடையாது. இன்னும் போகப்போக உங்களுக்கு நிறைய காட்சிகள் கிடைக்கும். தனது நாட்டிற்கு அருகாமையில் வரும் போது மரங்கள் கூட தெரியும் அல்லவா? இப்போது நமது வீட்டிற்கு அருகாமையில் வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. நீங்களும் வீட்டிற்குச் செல்லும் போது உங்களுடைய சுகதாமத்திற்கு வருவீர்கள். இன்னும் சிறிது காலம் இருக்கிறது சொர்க்கத்தில் இருந்து விடை பெற்று எவ்வளவு காலம் ஆகிவிட்டது! இப்போது மீண்டும் சொர்க்கம் நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய புத்தி மேலே செல்கிறது. அது நிராகார உலகம் ஆகும். அதற்கு பிரம்மாண்டம் என்று கூறலாம். நாம் அங்கே வசிக்கக் கூடியவர்கள். இங்கே 84 பிறவிகளின் பாகத்தை நடித்தாயிற்று, இப்போது நாம் போகிறோம். குழந்தைகளாகிய நீங்கள் ஆல்ரவுண்ட். ஆரம்பத்திலிருந்து முழுமையாக 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். தாமதமாக வருபவர்களுக்கு ஆல்ரவுண்டர் என்று கூற முடியாது. அதிகபட்சம் மற்றும் குறைந்த பட்சம் எத்தனை பிறவிகளை எடுக்கிறீர்கள் என பாபா புரிய வைக்கிறார். ஒரு பிறவி கூட இருக்கிறது. கடைசியில் அனைவரும் வீட்டிற்குச் சென்று விடுவார்கள். நாடகம் முழுமையடைகிறது. விளையாட்டு முடிந்தது. என்னை நினையுங்கள். கடைசி நினைவிற்கு ஏற்ப நிலையை அடையலாம் என பாபா கூறுகிறார். பாபாவிடம் பரந்தாமத்திற்குச் சென்று விடுவீர்கள். அவ்விடத்திற்கு முக்தி தாமம், சாந்தி தாமம் என கூறுகிறார்கள். பிறகு சுகதாமம் இருக்கிறது. இது துக்க உலகம் ஆகும். மேலிருந்து ஒவ்வொருவரும் சதோபிரதானத்திலிருந்து சதோ, ரஜோ, தமோவில் வருகிறார்கள். ஒரு பிறவி என்றாலும் கூட அதில் இந்த நான்கு நிலைகளைக் கடக்கிறார்கள். எவ்வளவு நன்றாக குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார்! இருப்பினும் நினைப்பதில்லை. தந்தையை மறந்து விடுகிறார்கள். வரிசைக் கிரமம் இருக்கிறது அல்லவா? வரிசைக்கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப ருத்ர மாலையும் உருவாகிறது என குழந்தைகளுக்கு தெரியும். எத்தனை கோடிகளின் ருத்ர மாலை, எல்லையற்ற உலகத்தின் மாலை. இது பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா. இருவரின் துணைப் பெயர் பாருங்கள். இது பிரஜா பிரம்மாவின் பெயராகும். அரை கல்பத்திற்கு பிறகு இராவணன் வருகிறார் தேவதா தர்மம் பிறகு இஸ்லாமியம்...... ஆதாம்-பீபீயைக் கூட நினைக்கிறார்கள். சொர்க்கத்தையும் நினைக்கிறார்கள். பாரதம் பேரடைஸாக சொர்க்கமாக இருந்தது. குழந்தைகளுக்கு நிறைய குஷி வேண்டும். எல்லையற்ற தந்தை உயர்ந்திலும் உயர்ந்த பகவான். உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பைப் படிப்பிக்கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியும் கிடைக்கிறது. எல்லோரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்த டீச்சர் பாபா ஆவார். அவர் ஆசிரியராகவும் இருக்கிறார். பிறகு உடன் அழைத்துச் செல்லக் கூடிய சத்குருவாகவும் இருக்கிறார். இப்படிப்பட்ட தந்தையை ஏன் நினைக்கக் கூடாது? குஷியின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் யுத்த மைதானமாக இருப்பதால் மாயா நிலைத்திருக்க விடுவதில்லை. அடிக்கடி கீழே விழுகிறார்கள். குழந்தைகளே நினைவினால் தான் நீங்கள் மாயா ஜீத் ஆகலாம் என பாபா கூறுகிறார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. பாபா கற்றுத் தருவதை நடைமுறைப் படுத்த வேண்டும். அதை காகிதத்தில் மட்டும் குறித்து வைக்கக் கூடாது. வினாசத்திற்கு முன்பாக வாழ்க்கை பந்தனத்திலிருந்து விடுபட்டு ஜீவன் முக்தி பதவியை அடைய வேண்டும்.

 

2. தனது நேரத்தை அழியக் கூடிய வருமானத்திற்காக அதிகமாக வீண் செய்யக் கூடாது. ஏனென்றால், இது அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகிறது. ஆகவே எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெற வேண்டும். மேலும் தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும்.

 

வரதானம்:

அதிகாரியாகி சமயத்தில் சர்வசக்திகளையும் காரியத்தில் ஈடுபடுத்தக்கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.

 

சர்வசக்திவான் பாபாவின் மூலம் யார் அனைத்து சக்திகளையும் அடைந்திருக்கிறார்களோ, அவர்கள் எப்படிபட்ட பிரச்சனைகளாக இருந்தாலும், எப்படிபட்ட சமயமாக இருந்தாலும், மேலும் எந்த விதியில் காரியத்தில் ஈடுபடுத்த விரும்புகிறீர்களோ, அதே ரூபத்தினால் இந்த சக்திகள் அனைத்தும் உங்களுக்கு உதவியாளராக ஆகிவிடும். இந்த சக்திகளை மற்றும் பிரபுவின் ஆசிர்வாதங்களை எந்த ரூபத்தில் விரும்புகிறீர்களோ, அந்த ரூபத்தில் நடைமுறைப்படுத்த முடியும். இப்பொழுதே குளிர்ச்சியான ரூபத்தில், இப்பொழுதே ஜுவாலா (எரிக்கும் - சாம்பலாக்கும்) ரூபத்தில். நேரத்தில் காரியங்களில் ஈடுபத்துவதற்கான அதிகாரியாக மட்டும் ஆகுங்கள். இந்த அனைத்து சக்திகளும், உங்களின் மாஸ்டர் சர்வசக்திவானின் சேவாதாரி ஆகும்.

 

சுலோகன்:

சுய முயற்சியாளர் மற்றும் உலகத்திற்கு நன்மை செய்வதற்கான காரியத்தில் எப்பொழுது தைரியம் வைக்கிறீர்களோ, அப்பொழுது வெற்றி ஆகியே இருக்கிறது.

 

ஓம்சாந்தி