12.05.2019                           காலை முரளி                ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்    05.12.19.84         மதுபன்


 

சம்பூர்ண காமத்தை வென்றவர் என்றால் எல்லைக்குட்பட்ட மனவிருப்பங்களிலிருந்து விடுபட்டவர்

 

இன்று பாப்தாதா தன்னுடைய மிக உயர்ந்த புஜங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைத்து புஜங்களும் அன்பு மற்றும் சக்தி மூலமாக உலகை மாற்றம் செய்யும் காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அனைவரும் ஒருவரின் புஜங்கள். எனவே அனைவரின் மனதில் தன்னுடைய ஈஸ்வரிய குடும்பத்தின் நம்முடைய சகோதர சகோதரிகளே யார் தந்தையை மற்றும் தன்னுடைய உண்மையான பரிவாரத்தை தெரியாத காரணத்தினால் குழந்தையாக இருந்த போதிலும் பாக்கியத்தை உருவாக்குபவர் மூலமாக தந்தை மற்றும் பாக்கியத்தை பிராப்தி செய்வதிலிருந்து வஞ்சிக்கப் பட்டிருக்கிறார்கள். அந்தமாதிரி பாக்கியத்திலிருந்து வஞ்சிக்கப்பட்ட ஆத்மாக்களை எழுப்பி விட வேண்டுமென்ற ஒரே ஒரு மனதின் ஈடுபாடு இருக்கிறது. ஏதாவது அதிகாரத்தின் அஞ்சமூலமாக அவர்களையும் தந்தையின் அறிமுகத்தை தெரிந்தவர்களாக ஆக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் அனைவரும் முழு வம்சா வழியின் பெரியவர்கள். பெரிய குழந்தைகள் தந்தைக்கு சமமானவர்கள் என்று கூறுவார்கள். எனவே பெரியவர்களுக்கு, ஒன்றும் அறியாத சிறிய சகோதர சகோதரிகள் மேல் இரக்கம் மற்றும் அன்பு இயல்பாகவே வரும். எப்படி எல்லைக்குட்பட்ட குடும்பத்தின் பெரியவர்களுக்கு குடும்பத்தின் மேல் எப்பொழுதும் கவனம் இருக்கிறது, அதே போல் நீங்கள் எல்லைக்கு அப்பாற்பட்ட குடும்பத்தின் பெரியவர்களுக்கு உங்கள் மேல் கவனம் இருக்கிறது தான் இல்லையா. எவ்வளவு பெரிய குடும்பம். முழு எல்லைக்கு அப்பாற்பட்ட குடும்பமும் எதிரில் இருக்கிறதா? நீங்கள் அனைவருக்காக இரக்கத்தின் கிரணங்கள், ஆன்மீக ஆசீர்வாதத்தின் கிரணங்கள், வரதானத்தின் கிரணங்களை பரப்பும், மாஸ்டர் சூரியன் தான் இல்லையா. எப்படி சூரியன் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்குமோ, அந்தளவு நாலா புறங்களிலும் கிரணங்களை பரப்பும். கீழே இருப்பதினால் நாலா புறங்களிலும் கிரணத்தை பரப்ப முடியாது. அதே போல் நீங்கள் எப்பொழுதாவது உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தைக்கு சமமான உயர்ந்த நிலையில் நிலைத்திருக்கிறீர்களோ, அப்பொழுது தான் எல்லைக்கு அப்பாற்பட்ட கிரணங்களை உங்களால் பரப்ப முடியும். அதாவது எல்லைக்கு அப்பாற்பட்ட சேவாதாரியாக ஆக முடியும். நீங்கள் அனைவரும் அந்த மாதிரியான எல்லைக்கு அப்பாற்பட்ட சேவாதாரிகள் தான் இல்லையா. நீங்கள் அனைத்து ஆத்மாக்களின் மனவிருப்பங்களை நிறைவேற்றும் காமதேனு தான் இல்லையா. அனைவரின் மன விருப்பங்களை நிறைவேற்றுபவர் இதுவரையிலும் தன்னுடைய மனதின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே பிஸியாக இருக்கவில்லையே? தன்னுடைய மனதின் விருப்பங்கள் நிறைவேறவில்லையென்றால், மற்றவரின் மனவிருப்பங்களை எப்படி நிறைவேற்றுவீர்கள்? மிகப் பெரிய மனவிருப்பமாக தந்தையை அடைய வேண்டு மென்பது தான் இருந்தது. எப்பொழுது அந்த உயர்ந்த மனவிருப்பம் நிறைவேறி விட்டதென்றால், அந்த உயர்ந்த மனவிருப்பத்தில் அனைத்து சின்ன சின்ன எல்லைக்குட்பட்ட மனவிருப்பங்கள் அடங்கியிருக்கிறது. சிரேஷ்ட எல்லைக்கு அப்பாற்பட்ட மனவிருப்பத்தின் எதிரில் மற்ற ஏதாவது எல்லைக்குட்பட்ட மனவிருப்பங்கள் நிறைவேறாமல் இருந்துவிடுமா என்ன? இந்த எல்லைக்குட்பட்ட மனவிருப்பங்களும் மாயாவை எதிர்நோக்க விடாது. இந்த எல்லைக்குட்பட்ட மனவிருப்பங்கள் எல்லைக்கு அப்பாற்பட்ட நிலை மூலமாக எல்லைக்கு அப்பாற்பட்ட சேவையை செய்விக்க முடியாது. நீங்கள் உங்களை சூட்சம ரூபத்தில் சோதனை செய்யுங்கள், எல்லைக்குட்பட்ட மனவிருப்பங்களும் முக்கிய காம விகாரத்தின் வம்சம் மற்றும் அம்சம் தான், எனவே மனவிருப்பத்தின் வசமானவர் எதிர்கொள்ள முடியாது. எல்லைக்கு அப்பாற்பட்ட மனவிருப்பங்களை நிறைவேற்றுபவராக ஆக முடியாது. காமத்தை வென்றவர் என்றால், எல்லைக்குட்பட்ட மனவிருப்பங்களின் மேல் வென்றவர். நீங்கள் அந்த மாதிரி மனவிருப்பங்களை நிறைவேற்றும் விசேஷ ஆத்மாக்கள், மன்மனாபவ என்ற நிலை மூலமாக மனதின் எல்லைக்குட்பட்ட விருப்பங்களை நிறைவேற்றி விட்டு அதாவது முடித்து விட்டு, மற்றவர்களின் மனவிருப்பங்களை நிறைவேற்ற முடியும். இப்பொழுது சப்தத்திலிருந்து விலகிய நிலையில் நிலைத்திருப்பதற்கான வானபிரஸ்த நிலையில் மனவிருப்பத்தை வென்ற அதாவது சம்பூரண காமத்தை வென்றவரின் உதாரணமாக உலகின் எதிரில் ஆகுங்கள். உங்களுடைய சின்னஞ்சிறு சகோதர சகோதரிகள் இந்த விருப்பங்களை வைத்துக் கொண்டு தான் பெரியவர்கள் உங்கள் பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், எங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுங்கள், எங்களுடைய சுகம், சாந்தியின் ஆசைகளை நிறைவேற்றுங்கள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், நீங்கள் உங்களுடைய மனவிருப்பங்களை நிறைவேற்றுவீர்களா அவர்களுடைய மனவிருப்பங்களை நிறைவேற்றுவீர்களா? உங்கள் அனைவரின் உள்ளத்திலிருந்து மற்றவர்கள் சொல்வதினால் அல்ல, அல்லது வாயுமண்டலத்தின் குழுவின் மரியாதைக்காக அல்ல, உள்ளத்திலிருந்து இந்த சிரேஷ்ட கோஷம் தான் ஆசை என்றால் என்னவென்று தெரியாதவர்கள் என்பது வெளியாக வேண்டும்.

 

சில குழந்தைகள் மிகவும் சாதுரியமானவர்கள், சாதுரியத்திலும் சாதுரியமானவரிடம் தன்னுடைய சாதுரியத்தைக் காண்பிக்கிறார்கள், அது எல்லைக்குட்பட்ட இச்சையாக இருக்கும், மேலும் அவர்கள் இது சுப இச்சை, சேவைக்காக வைத்திருக்கும் இச்சை அந்தமாதிரி அந்தமாதிரி என்று கூறுவார்கள். அது தன்னுடைய இச்சையாக இருக்கும், ஆனால் வெளிப்படையான ரூபத்தில் சேவைக்கானதாக ஆக்கிவிடுவார்கள். எனவே பாப்தாதா புன்முறுவலுடன், தெரிந்து கொண்டும், பார்த்துக் கொண்டும், சாதுர்யத்தைப் புரிந்துக் கொண்ட போதிலும் அனேக குழந்தைகளுக்கு வெளிபடையாக சமிஞ்சை கொடுப்பதில்லை, ஆனால் நாடகத்தின் அனுசாரம் அவசியம் சமிஞ்சை கிடைக்கிறது. அது எப்படி? எல்லைக்குட்பட்ட இச்சைகள் நிறைவேறினாலும் ரூபம் பிராப்திக்கானதாக இருக்கும், ஆனால் மனதிற்குள் ஒரு இச்சை மற்ற இச்சைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும். எனவே மனதின் உளைச்சல் ரூபத்தில் சமிஞ்சை கிடைத்துக் கொண்டேயிருக்கும். வெளிப்படையாக ஒருவர் எவ்வளவு தான் எல்லைக்குட்பட்ட பிராப்தியில் சாப்பிடுவது, குடிப்பது, ஆடுவதாக இருந்தாலும், ஆனால் மனதின் உளைச்சலை மறைப்பதற்காக இந்த வழியை கடைப்பிடிக்கிறார்கள். உள்ளே மனம் திருப்தியாக இருக்காது. அற்ப காலத்திற்காக இருக்கும், ஆனால் சதா காலத்தின் திருப்தியின் நிலை மற்றும் தந்தை கிடைத்தார், உலகம் கிடைத்தது என்ற இந்த உள்ளத்தின் பாடலை அவர் பாட முடியாது. அவர்கள் தந்தையிடமும் நீங்களோ கிடைத்திருக்கீறீர்கள் இதுவும் அவசியம் வேண்டும் என்று கூறுவார்கள். இந்த வேண்டும், வேண்டும் என்ற விருப்பத்தின் திருப்தி இருக்காது. நேரத்திற்கு ஏற்றபடி இப்பொழுது உங்கள் அனைவரின் மனதிலிருந்து ஆசை என்றால் என்னவென்று தெரியாத நிலை என்ற சப்தம் தான் வலுவாக வெளியாக வேண்டும், அப்பொழுது தான் மற்றவர்களின் ஆசைகளை நிறைவேற்ற முடியும். இப்பொழுது கொஞ்ச நேரத்தில் ஒவ்வொரு சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களை உலகத்தினர் சைத்தன்ய களஞ்சியம் என்று அனுபவம் செய்வார்கள், யாசிப்பவராகி வருவார்கள். நீங்கள் தான் நிரம்பிய களஞ்சியம் என்று கூறுவார்கள். இதுவரையிலும் யாரோ இருக்கிறார் ஆனால் அவர் எங்கு இருக்கிறார், யார் என்ற தெளிவாக தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது நேரத்தின் அம்புக் குறி போடப்படும். எப்படி வழியை காண்ப்பிதற்காக இங்கே செல்லுங்கள் என்று அம்புக் குறி போட்டு காண்பிக்கிறார்கள். அதேபோல் இங்கே செல்லுங்கள் என்று அனைவருக்கும் அனுபவம் ஆகும். அந்தமாதிரி நிரம்பிய களஞ்சியமாக ஆகியிருக்கிறீர்களா? நேரமும் உங்களுடைய சகயோகியாக மாறும். ஆசிரியராக அல்ல, சகயோகியாக ஆகும். நேரத்திற்கு முன்பாகவே பாப்தாதா அனைத்து குழந்தைகளை சம்பன்ன சொரூபத்தில், நிரம்பிய களஞ்சிய ரூபத்தில், ஆசை என்றால் என்னவென்று தெரியாத திருப்தியான சொரூபத்தில் பார்க்க விரும்புகிறார், ஏனென்றால் இப்பொழுதிலிருந்தே சம்ஸ்காரத்தை நிரப்பவில்லையென்றால், இறுதியில் சம்ஸ்காரத்தை நிரப்புபவர்கள் நீண்ட காலத்தின் பிராப்தியின் ஆதிகாரியாக ஆக முடியாது. எனவே நீங்கள் உலகத்திற்காக உலகின் ஆதார மூர்த்தி. உலகின் எதிரில் உலகின் கண்கள். உலகின் குல தீபங்கள். என்னென்ன சிரேஷ்ட மகிமைகளின் இருக்கின்றனவோ, அனைத்து சிரேஷ்ட மகிமைகள் அதிகாரி ஆத்மாக்கள் இப்பொழுது உலகின் எதிரில் தன்னுடைய சம்பன்ன ரூபத்தில் பிரத்யட்சமாகி காண்பியுங்கள். புரிந்தா.

 

வந்திருக்கும் அனைத்து விசேஷ சேவாதாரி குழந்தைகளுக்கு விசேஷமாக அன்பு சொரூபத்தில் பாப்தாதா அன்பு நிறைந்த வரவேற்பு செய்கிறார். வலது கரமான குழந்தைகளுக்கு சம நிலையின் கை குலுக்கல் செய்கிறார். வாருங்கள், நன்றாக வாருங்கள். நல்லது.

 

அனைத்து உலகின் மனவிருப்பங்களை நிறைவேற்றக்கூடிய, எப்பொழுதும் சம்பன்ன திருப்தியான ஆத்மாக்களுக்கு, உலகின் ஆதார மூர்த்திகளுக்கு, ஒவ்வொரு நேரமும் உலக நன்மைக்கான சிரேஷ்ட விருப்பத்தில் நிலைத்திருக்கக் கூடிய, உலகின் எதிரில் மாஸ்டர் உலகை பாதுகாப்பவர் ஆகி, அனைவரையும் பாதுகாக்க கூடிய மிக உயர்ந்த மகான் ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் சம்ஸ்காரம்.

 

மீட்டிங்கில் வந்திருக்கும் சகோதர, சகோதரிகளுடன் சந்திப்பு

சேவாதாரி குழந்தைகள் சேவையின் திட்டங்களை மனதிலோ உருவாக்கியிருப்பார்கள். மற்றபடி மீட்டிங்கின் சபையில் நடைமுறையில் கொண்டு வருவதற்காக வர்ணணை செய்வார்கள். என்னென்ன சேவை நடந்து கொண்டிருக்கிறதோ, அந்த ஒவ்வொரு சேவையும் மிக நன்றாக தான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுவோம். எப்படி நேரம் அருகில் வந்து கொண்டிருக்கிறது, நேரம் அனைவரின் புத்தியை குழப்பதில் கொண்டு வருகிறது, அந்தமாதிரி நேரத்திற்கு ஏற்றாற்போல் சக்திசாலி திட்டங்களை உருவாக்குங்கள், அது நிலங்கள் மேல் உழுது விட வேண்டும், எப்பொழுதுமே விதை விதைக்கும் முன்பு நிலத்தை உழுவார்கள் இல்லையா. நிலத்தை உழும் பொழுது என்ன நடக்கும். மேலே கீழே தான் போகும் தான் இல்லையா. அதற்கு பிறகு விதை விதைக்கிறார்கள் என்றால், விளைந்து பலன் கொடுக்கும். அதே போல் இப்பொழுது குழப்பம் ஏற்படுத்தும் ஏர் உழுங்கள். எந்த குழப்பத்தின்? எப்படி இன்று கூறினோம் - யாரோ இருக்கிறார் இதையோ அனைவரும் புரிந்து கொண்டார்கள், ஆனால் இதுவே தான் மேலும் இது ஒன்று தான் என்ற குழப்பம் செய்யும் ஏற் உழவில்லை. இப்பொழுது இன்னும் இருக்கிறது, இதுவும் இருக்கிறது என்பது வரை வந்து சேர்ந்து இருக்கிரார்கள். ஆனால் இது ஒன்று தான் என்ற அம்பை எய்யுக்கள். இந்த உணர்தலுடன் அந்த மாதிரியான ஆத்மாக்கள் உங்கள் எதிரில் வருவார்கள். எப்பொழுது அந்தமாதிரியாக குழப்பம் ஏற்படுமோ, அப்பொழுது தான் பிரத்யசம் ஆகும். இதற்கான விதி என்ன? எப்படி அனைத்து விதிகளும் நடைமுறையில் இருக்கிறது, பல விதமான நிகழ்ச்சிகள் செய்து கொண்டேயிருக்கிறீர்கள், மகாநாடுகளும் செய்கிறீர்கள் என்றால் மற்றவர்களின் மேடையிலும் செல்கிறீர்கள், தன்னுடைய மேடையையும் உருவாக்குகிறீர்கள். யோகா பயிற்சி முகாமும் நடத்துகிறீர்கள். இந்த அனைத்து சேவைகளும் அருகிலோ கொண்டு வந்திருக்கிறது, மேலும் என்ன எண்ணிக்கை இருந்ததோ, அந்த எண்ணிக்கையின் வளர்ச்சியும் இருந்தது. அருகிலும் வந்து விட்டார்கள். ஆனால் இப்பொழுது ஆஸ்தியின் அதிகாரத்தின் அருகில் வரவேண்டும். ஆஹா! ஆஹா! என்று கூறுபவர் களாகவோ ஆகியிருக்கிறார்கள், இப்பொழுது வாரிசு உருவாக்குங்கள். இப்பொழுது இவர்கள் தான் உண்மையான வழி காண்ப்பிபவர்கள், தந்தையோடு சந்திக்க வைப்பவர்கள், காப்பாற்றுபவர்கள் என்ற செய்தி நாலாபுறங்களிலும் வலுவாக ஒலிக்க வேண்டும். எனவே இப்பொழுது அதற்கான விதி, சூழ்நிலையும் அந்தமாதிரி இருக்க வேண்டும். மேடையின் வடிவமைப்பும் அப்படி இருக்கவேண்டும். மேலும் அனைவரின் எண்ணமும் ஒன்றாகவே இருக்க வேண்டும். சூழ்நிலையின் பிரபாவம் சக்திசாலியாக இருக்க வேண்டும். சூழ்நிலை அன்பானதாகவோ இருக்கிறது, ஆனால் அதில் சாந்தி மற்றும் சக்தியை கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள். உலகின் கணக்குப் படியோ அமைதியையோ அனுபவம் செய்கிறார்கள்., ஆனால் அந்தமாதிரி அமைதியின் அம்பு பாய வேண்டும். அதன் விளைவாக அவர் சாந்திக் கடல் இல்லாமல் இருக்க முடியாத அளவிற்கு. உங்களுடைய தொடர்பின் பாதிப்போ, அந்த நேரம் வரை நன்றாக இருக்கிறது. ஆனால் நரம்போடு நரம்பில் ஏறிவிட வேண்டும், அது அவரை ஈர்க்க வேண்டும், அருகில் கொண்டு வரவேண்டும், சம்மந்தத்தில் கொண்டு வரவேண்டும், எனவே இந்த உறுதியான பிரபாவத்தை ஏற்படுத்துங்கள். இதுவரை என்ன செய்திருக்கிறீர்களோ, அதை மிக நன்றாக செய்திருக்கிறீர்கள் என்று கூறியிருந்தோம் அல்லவா. ஆனால் இப்பொழுது தங்கத்தை (நகையை) செய்திருக்கிறீர்கள், அதில் கல் பதிக்க வேண்டும். இன்றைய உலகத்தில் எடுத்துக் காட்டு தேவையாக இருக்கிறது, எனவே நடைமுறையில் சாந்தி மற்றும் சக்தியின் அனுபவம் ஆகவேண்டும். அது சில வினாடிகளுக்கு இருந்தாலும் கூட ஆனால் அனுபவம் அந்தமாதிரியான ஒன்று, அந்த அனுபவத்தின் சக்தி நெருக்கத்தில், சம்மந்ததில் அவசியம் கொண்டு வரும். திட்டத்தையோ உருவாக்குவீர்கள். மற்றபடி குழந்தைகளின் தைரியம், ஊக்கம், உற்சாகத்தின் மேல் பாப்தாதா குஷியாக இருக்கிறார். சேவையின் ஆர்வத்தில் இருக்கும் குழந்தைகள், சேவை செய்ய வேண்டுமென்ற ஈடுபாடு மிக நன்றாக இருக்கிறது. இப்பொழுது ஏதாவது புதுமை ஏற்பட வேண்டும் என்று அனைவரின் எண்ணமும் ஓடுகிறது, முதலில் புதுமையை கொண்டு வருவதற்காக அனைவரிடமும் ஒரு எண்ணம் இருக்க வேண்டும், ஒருவர் கூறினார் மற்ற அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். ஒரு எண்ணத்தில் எப்பொழுதும் திடமாக இருக்க வேண்டும். ஒருவேளை ஒரு செங்கலாவது அசைகிறது என்றால், முழு சுவரையும் அசைத்து விடும். ஒருவருடைய எண்ணமாவது இதில் கொஞ்சமாவது ஏதாவது காரணத்தினால் சூழ்நிலை காரணமாக வலுவற்றதாக இருக்கிறது என்றால் முழு நிகழ்ச்சியும் வலுவற்றதாகி விடும். அந்தமாதிரி கண்டிப்பாக செய்ய வேண்டும், அனைவரின் சகயோகம் கிடைக்கும் என்ற திடமான எண்ணத்தில் தன்னை கொண்டு வந்து கொண்டு, பிறகு முயற்சி செய்யுங்கள். பாப்தாதா சேவையின் வியத்தில் குஷியாக இருக்கிறார். அந்தமாதிரி வேறு எந்த விஷயமும் இல்லை, ஆனால் இப்பொழுது தங்கத்தில் கல் பதித்து விட்டீர்கள் என்றால் கவர்ந்து இழுப்பீர்கள்.

 

வெளிநாட்டிலும் குழந்தைகள் நல்ல தைரியம் வைத்திருக்கிறார்கள். அவர்களும் நம்முடைய மைக் வந்து மைக் மூலமாக சென்றடைந்தது வலுவான செய்தியும் சொல்லப் பட்டது, ஆனால் இலேசான சப்தம் செய்பவர் வந்தார், பெரிய சப்தம் செய்பவர் வரவில்லை. இருந்தும், இந்தளவோ சேர்ந்து விட்டார்கள். நல்ல தைரியம் வைக்கிறார்கள். நல்லது.

 

இப்பொழுது உங்களுடைய பூஜைக்குரிய சொரூபம் பிரத்யக்ஷம் ஆக வேண்டும். பூஜைக்குரியவர் தான், பூஜையை செய்விப்பவர் இல்லை. இவர் தான் என்னுடைய தேவதை, பூர்வஜமானவர், பூஜைக்குரியவர், இங்கிருந்து தான் அனைத்து மன விருப்பங்களும் நிறைவேறும். இப்பொழுது இந்த அனுபவம் இருக்க வேண்டும். இப்பொழுது தன்னுடைய எல்லைக்குட்பட்ட எண்ணம் மற்றும் மன விருப்பங்கள் முடிவடைந்து விட வேண்டும். அப்பொழுது தான் இந்த அலை பரவும். இப்பொழுது கூட கொஞ்சம் என்னுடையது என்னுடையது என்பது இருக்கிறது. என்னுடைய சம்ஸ்காரம், என்னுடைய சுபாவம் என்ற இதுவும் முடிவடைந்து விட வேண்டும். தந்தையின் சம்ஸ்காரம் எதுவோ, அது தான் என்னுடைய சம்ஸ்காரம். உண்மையான சம்ஸ்காரமும் அது தான் இல்லையா. பிரமாணர்களின் பரிவர்த்தனை தான் விஷ்வ பரிவர்த்தனைக்கான ஆதாரம். எனவே இப்பொழுது என்ன செய்வீர்கள். கண்டிப்பாக சொற்பொழிவு நிகழ்த்துங்கள், ஆனால் நீங்கள் சப்ததில் வாருங்கள், மேலும் அவர்கள் பாஷையிருந்து விலகி சென்று விடட்டும், அந்த மாதிரியான சொற்பொழிவு இருக்க வேண்டும், பேசவோ வேண்டும் தான் இல்லையா. நீங்கல் சப்த்தில் வாருங்கள், அவர்கள் சப்ததிலிருந்து விலகி சென்றுவிடட்டும். நீங்கள் பேசிக் கொண்டு மட்டும் இருக்க வில்லை, ஆனால் அனுபவம் பேச்சாக இருக்க வேண்டும். அனைவர் மனதிலும் இந்த அலை அடிக்க வேண்டும். எப்படி யாராவது அந்த மாதிரியான விஷயத்தை கூறுகிறார் என்றால் சில நேரம் சிரிப்பதற்கான, சில நேரம் அழுவதற்கான, சில நேரம் வைராக்கியத்தின் அலை பரவி விடுகிறது. அது தற்காலிகமானதாக இருக்கும், ஆனால் இருந்தும் பரவுகிறது தான் இல்லையா. அந்தமாதிரி அனுபவம் ஆனதின் அலை பரவி விடவேண்டும். இது தான் நடக்க வேண்டும். எப்படி ஸ்தாபனை காரிய தொடக்கத்தில் ஓம் என்ற த்வணி தொடங்குவார்கள், மேலும் எத்தனை பேர்கள் சாட்சாத்காரம் பார்ப்பதில் சென்று விட்டார்கள், அலை பரவி விட்டிருந்தது. அந்தமாதிரி சபையில் அனுபவங்களின் அலை பரவ வேண்டும். ஒருவருக்கு அமைதியும், இன்னொருவருக்கு சக்தியும் அனுபவம் ஆக வேண்டும். இந்த அலை பரவட்டும். கேட்பவர்களாக மட்டும் இருக்க வேண்டாம், ஆனால் அனுபவத்தின் அலை இருக்க வேண்டும். எப்படி நீரூற்று பெருகெடுத்து ஒடுகிறதென்றால், அந்த யார் நீரூற்றின் கீழ் யார் வருகிறார்கரோ, அவருக்கு குளுமையின் புத்துணர்வு ஆவதற்கான அனுபவம் இருக்கும் இல்லையா. அதே போல் அவர்களும் அமைதி, சக்தி, அன்பு, ஆனந்தம், அதீந்திரிய சுகத்தின் அனுபவத்தை செய்து கொண்டே இருக்கட்டும். இன்று கூட அறிவிலியன் சாதனங்கள் வெப்பம் - குளுமையின் அனுபவம் செய்விக்கிறது தான் இல்லையா. முழு அறையிலும் அந்த அலை பரவி விடுகிறது. எனவே இத்தனை சிவ சக்திகள், பாண்டவர்கள், மாஸ்டர் சாந்தி, சக்தி அனைத்தின் கடலாக இருப்பவர்கள், இந்த அலையை பரப்ப முடியாத என்ன? நல்லது.

 

எத்தனை விசால புத்தியுள்ளவர்கள் ஒன்றாகக் கூடியிருக்கிறார்கள். சக்தி சேனையும் அதிகமாக இருக்கிறார்கள். மதுபனில் ஒரே நேரத்தில் இத்தனை சிரேஷ்ட ஆத்மாக்கள் வந்து விடுவது என்பது ஒன்றும் குறைந்த விஷயமில்லை. இப்பொழுதோ உங்களுக்குளே சாதாரணமாக இருக்கிறீர்கள், எனவே சாதாரண விஷயமாக அனுபவமாகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு மகான் ஆத்மாக்கள். இத்தனை மகான் ஆத்மாக்களின் கூட்டம் முழுக் கல்பத்திலும் இந்த மாதிரி இருக்கவே முடியாது. ஒவ்வொருவரின் மகத்துவம் குறைந்தது அல்ல. இப்பொழுதோ உங்களுக்குள் ஒவ்வொருவரையும் சாதாரணமானவர் என்று நினைக்கிறீர்கள், நீங்களோ மஹாவீர் ஆத்மாக்கள். இன்னும் வரும் நாட்களில் ஒவ்வொருவரின் விசேஷத்தின் பிரகாரம் விசேஷ ஆத்மாக்கள் என்று புரிந்து கொள்வீர்கள். இப்பொழுது மிக சாதாரண விஷயங்கள் அதிகமாக கவனிக்கப் படுகிறது, விசேஷங்கள் குறைவாக கவனிக்கப் படுகிறது. அமர்ந்து சிந்தனை செய்தீர்கள் என்றால், ஒவ்வொருவரும் எத்தனை பக்தர்களின் பூர்வஜமாக இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் இஷ்ட தேவதைகள் மற்றும் தேவிகள் தான் இல்லையா. ஒவ்வொரு இஷ்ட தேவதைக்கும் எத்தனை பக்தர்கள் இருப்பார்கள்? நீங்கள் ஒன்றும் சாதாரணமானவர்கள் இல்லை. ஒரு மூர்த்திக்கே இவ்வளவு மகத்துவம் இருக்கிறது என்றால், இத்தனை இஷ்ட தேவதைகள் ஒன்றாக கூடிவிட்டார்கள் என்றால், என்ன ஆகிவிடும். நீங்கள் சக்திசாலியான வர்கள். ஆனால் அதை உங்களுக்குள் மறைத்து விட்டீர்கள் என்றால் உலகத்தினரிடமிருந்தும் மறைத்து விட்டீர்கள். பார்கக போனால் ஒவ்வொருவரின் மதிப்பு எண்ணில் அடங்காதது. பாப்தாதாவோ குழந்தைகளின் மகத்துவத்தை எப்பொழுது பார்க்கிறார் என்றால், ஒவ்வொரு குழந்தையும் எவ்வளவு மகான் என்று பெருமிதம் ஏற்படுகிறது. தன்னையும் சில நேரம் புரிந்து கொள்கிறீர்கள், சில நேரம் புரிந்துக் கொள்வதில்லை. நீங்களோ மிகுந்த மகான், சாதாரண மனிதன் இல்லை. கொஞ்சம் பிரயத்யக்தா ஏற்பட்ட பிறகு, நான் யார் என்பது உங்களுக்கும் தெரிய வரும். தந்தையோ அதே மகான் தன்மையோடு பார்க்கிறார். தந்தையின் எதிரிலோ அனைத்தும் பிரத்யக்ஷ்மாக இருக்கிறது இல்லையா. நல்லது. - ஒவ்வொருவரின் மகான் தன்மை என்ன என்ற இந்த வகுப்பையும் செய்யுங்கள். நல்லது.

 

வரதானம்:

அழியாத போதையில் இருந்து ஆன்மீக மகிழ்ச்சி மற்றும் சந்தோத்தை அனுபவம் செய்யக் கூடிய பிரமாணனாக இருப்பவரிலிருந்து ஃபரிஸ்தா ஆகுக.

 

நீங்கள் பிராமணனிலிருந்து ஃபரிஸ்தா ஆகுபவர்கள். தேவதைகளையும் விட உயர்ந்தவர்கள். தேவதை வாழ்க்கையில் தந்தையின் ஞானம் வெளிப்படாது. பரமாத்மாவின் சந்திப்பின் அனுபவமும் இருக்காது. எனவே இப்பொழுது நான் தேவதையையும் விட உயர்ந்த பிராமணனிலிருந்து ஃபரிஸ்தா ஆகுபவன் என்ற இந்த போதை எப்பொழுதும் இருக்கட்டும். இந்த அழியாத போதை தான் ஆன்மீக மகிழ்ச்சி சந்தோஷத்தை அனுபவம் செய்விப்பது. ஒருவேளை போதை எப்பொழுதும் இருக்கவில்லையென்றால், சில நேரம் மகிழ்ச்சியில் இருப்பீர்கள், சில நேரம் குழப்பதில் இருப்பீர்கள்.

 

சுலோகன்:

தன்னுடைய சேவையையும் தந்தையின் எதிரில் அர்பணம் செய்து விடுங்கள். அப்பொழுது தான் சமர்பணமான ஆத்மா என்று கூறுவோம்.

 

ஓம்சாந்தி