06.02.19 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இப்பொழுது அசரீரியாகி வீட்டிற்குச்
செல்ல வேண்டும் , ஆகையால் யாரிடமாவது பேசுகின்ற பொழுது ஆத்மா
சகோதர , சகோதரன் என்று புரிந்துக் கொண்டு பேசுங்கள் , ஆத்ம
அபிமானியாக இருப்பதற்கான முயற்சி செய்யுங்கள் .
கேள்வி:
எதிர்கால இராஜ்ய திலகத்தை பிராப்தியாக அடைவதற்கான ஆதாரம் என்ன?
பதில்:
படிப்பு. ஒவ்வொருவரும் படித்து இராஜ்ய திலகம் அடைய வேண்டும்.
படிப்பைக் கற்பிக்கும் கடமை தந்தையினுடையது, இதில்
ஆசீர்வாதத்திற்கான விசயம் கிடையாது. முழு நம்பிக்கை இருக்கிறது
எனில் ஸ்ரீமத்படி நடந்து கொண்டே செல்லுங்கள். தவறு செய்யக்
கூடாது. ஒருவேளை கருத்து வேறுபாட்டில் வந்து படிப்பை விட்டு
விட்டால் தோல்வி அடைந்து விடுவீர்கள். ஆகையால் பாபா
கூறுகின்றார் - இனிய குழந்தைகளே! தனக்குத் தான் கருணை
காட்டுங்கள். ஆசீர்வாதம் கேட்கக் கூடாது, படிப்பில் கவனம்
செலுத்த வேண்டும்.
ஓம் சாந்தி .
சுப்ரீம் ஆசிரியர் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார். பரம்பிதா
பரமாத்மா தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார்
என்பதை குழந்தைகள் அறிவீர்கள். வேறு யாரும் கற்பிக்க முடியாத
அளவிற்கு உங்களுக்கு கற்பிக்கின்றார். சிவபாபா நமக்குக்
கற்பிக்கிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். பாபா இங்கு
ஒருவருடையவர் மட்டும் கிடையாது. மன்மனாபவ, மத்தியாஜீ பவ, இதன்
பொருளைப் புரிய வைக்கிறார் - என் ஒருவனை நினைவு செய்யுங்கள்.
குழந்தைகள் இப்பொழுது புத்திசாலிகளாக ஆகியிருக் கிறீர்கள்.
எல்லையற்ற தந்தை கூறுகிறார் - உங்களுக்காகத் தான் ஆஸ்தி
இருக்கிறது என்பதை ஒருபொழுதும் மறந்து விடாதீர்கள். தந்தை
ஆத்மாக்களிடம் தான் உரையாடுகின்றார். நீங்கள் ஜீவ ஆத்மாக்கள்
அல்லவா! எல்லையற்ற தந்தையும் நிராகாராக இருக்கிறார். இந்த உடல்
மூலமாக நமக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள்
அறிவீர்கள், வேறு யாரும் இவ்வாறு புரிந்துக் கொள்ள முடியாது.
பள்ளியில் ஆசிரியர் கற்பிக்கிறார் எனில் லௌகீக ஆசிரியர் லௌகீக
குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார் என்று கூறுவர். இவர் பரலௌகீக
சுப்ரீம் ஆசிரியர் பரலௌகீக குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார்.
நீங்களும் பரலோகம், மூலவதனத்தில் வசிப்பவர்கள். தந்தையும்
பரலோகத்தில் இருக்கிறார். தந்தை கூறுகின்றார் - நானும்
சாந்திதாமத்தில் வசிப்பவனாக இருக்கிறேன். மேலும் நீங்களும்
அங்கு வாசம் செய்யக் கூடியவர்கள். நாம் இருவரும் ஒரே
இருப்பிடத்தில் வசிக்கக் கூடியவர்கள். நீங்கள் தன்னை ஆத்மா
என்று உணருங்கள். நான் பரம் ஆத்மாவாக இருக்கிறேன். இப்பொழுது
நீங்கள் இங்கு நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நடிப்பை
நடித்து நடித்து நீங்கள் இப்பொழுது தூய்மை இல்லாதவர்களாக
ஆகிவிட்டீர்கள். இந்த முழு உலகமும் எல்லையற்ற மேடையாகும், இதில்
தான் விளையாட்டு நடைபெறுகிறது. இந்த முழு சிருஷ்டி கர்மச்
சேத்திரம் ஆகும். இதில் விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது எல்லையற்ற விளையாட்டு, இதில் இரவு பகல் ஏற்படுகிறது
என்பதையும் நீங்கள் மட்டுமே அறிந்திருக்கிறீர்கள். சூரியன்
மற்றும் சந்திரன் எவ்வளவு எல்லையற்ற வெளிச்சம் கொடுக்கிறது! இது
எல்லையற்ற விசயமாகும். இப்பொழுது உங்களுக்குள் ஞானமும்
இருக்கிறது, படைப்பவர் வந்து படைப்பின் முதல், இடை, கடையின்
அறிமுகம் கொடுக்கிறார். தந்தை கூறுகிறார் - உங்களுக்கு
படைப்பின் முதல், இடை, கடையின் ரகசியத்தைக் கூறுவதற்காக
வந்திருக்கிறேன். இது பாடசாலையாகும், கற்பிப்பவர் எதையும்
அனுபவிக்காதவர். நான் அனுபவிக்காதவன் என்று வேறு யாரும் கூற
முடியாது. அகமதாபாத்தில் ஒரு சாது இவ்வாறு கூறி வந்தார், ஆனால்
பின் நாட்களில் ஏமாற்றுவதாக பிடித்து விட்டனர். இந்த நேரத்தில்
ஏமாற்றுபவர்களும் பலர் உருவாகியிருக்கின்றனர். வேஷதாரிகள் பலர்
உள்ளனர். இவருக்கு எந்த வேஷமும் கிடையாது. கிருஷ்ணர் கீதை
கூறியதாக மனிதர்கள் நினைக்கின்றனர், அவ்வாறெனில் இன்று எத்தனை
கிருஷ்ணர்கள் உருவாகியிருக்க வேண்டும்! இவ்வளவு கிருஷ்ணர்கள்
இருப்பது கிடையாது! இங்கு உங்களுக்கு சிவபாபா வந்து
கற்பிக்கின்றார், ஆத்மாக்களுக்குக் கூறுகின்றார்.
உங்களுக்குப் பலமுறை கூறப்பட்டுள்ளது. தன்னை ஆத்மா என்று
உணர்ந்து சகோதர, சகோதரர்களுக்கு கூறுங்கள் என்று. பாபாவின்
ஞானத்தை நாம் சகோதரர்களுக்குக் கூறுகிறோம் என்பது புத்தியில்
இருக்க வேண்டும். ஆண், பெண் இருவரும் சகோதரா, சகோதரர்கள் ஆவர்.
அதனால் தான் தந்தை கூறுகின்றார் - நீங்கள் அனைவரும் எனது
ஆஸ்திக்கு அதிகாரிகள். உண்மையில் பெண்களுக்கு ஆஸ்தி கிடைப்பது
கிடையாது. ஏனெனில் அவள் மாமியார் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
இங்கு அனைவரும் ஆத்மாக்கள். வீட்டிற்கு அசரீரியாகி செல்ல
வேண்டும். இப்பொழுது உங்களுக்கு என்ன ஞான ரத்தினங்கள்
கிடைக்கிறதோ இது அழிவற்ற ரத்தினங்களாக ஆகிவிடுகிறது. ஆத்மா தான்
ஞானக் கடலாக ஆகிறது அல்லவா! ஆத்மா தான் அனைத்தும் செய்கிறது.
ஆனால் மனிதர்கள் தேக அபிமானத்தில் இருக்கிற காரணத்தினால் ஆத்ம
அபிமானி களாக ஆவது கிடையாது. இப்பொழுது நீங்கள் ஆத்ம
அபிமானிகளாக ஆகி ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
சிறிதளவாவது முயற்சி செய்ய வேண்டும் அல்லவா! லௌகீக குருவை
எவ்வளவு நினைவு செய்கின்றனர்! சிலை வைத்து விடுகின்றனர்.
சிவனின் சிலை, மனிதர்களின் சிலை இரண்டிற்கும் - இரவு பகல்
வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் குருவின் போட்டோவை அணிந்து
கொள்கின்றனர். பதியினுடையது பிடிக்க வில்லையெனும் பொழுது
மற்றவர்களுடையதை அணிந்து கொள்கின்றனர். ஆம் சிவன் போட்டோவை
அணிந்து கொண்டால் அது அனைவருக்கும் பிடிக்கும். ஏனெனில் அவர்
பரம்பிதா அல்லவா! அவரது சிலை இருக்க வேண்டும். இவர் கழுத்து
மணிகளாக ஆக்கக் கூடியவர். நீங்கள் ருத்ர மாலையில் முத்துக்களாக
ஆவீர்கள். உண்மையில் முழு உலகமும் ருத்ர மாலையாக இருக்கிறது.
பிரஜாபிதா பிரம்மாவின் மாலையும் இருக்கிறது, மேலே மணி
இருக்கிறது, அது எல்லைக்குட்பட்ட மணி, இது எல்லையற்ற மணி ஆகும்.
மனிதர்கள் எத்தனை பேர் இருக்கின்றனரோ அனைவரின் மாலையாகும்.
ஆத்மாவானது எவ்வளவு சிறியதிலும் சிறிய பிந்துவாக இருக்கிறது!
முற்றிலுமாக சிறிய பிந்துவாக இருக்கிறது. இவ்வாறு பிந்து
போட்டுக் கொண்டே சென்றால் கணக்கிட முடியாத அளவு ஆகிவிடும்.
கணக்கெடுத்து எடுத்து களைப் படைந்து விடுவீர்கள். ஆனால்
ஆத்மாவின் மரம் எவ்வளவு சிறியதாக இருக்கிறது பாருங்கள்! பிரம்ம
தத்துவத்தில் மிகக் குறுகிய இடத்தில் இருக்கின்றன. அது பிறகு
இங்கு நடிப்பு நடிப்பதற்காக வருகின்றன. ஆக இது எவ்வளவு பெரிய
உலகமாக இருக்கிறது! ஆங்காங்கு விமானத்திலும் செல்கின்றனர்.
அங்கு விமானத்திற்கான அவசியமில்லை. ஆத்மாக்களின் சிறிய மரம்
ஆகும். இங்கு மனித மரம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது!
இவர்கள் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள். இவர்களை
சிலர் ஆடம் (ஆதாம்) என்றும் சிலர் ஆதிதேவன் என்றும்
கூறுகின்றனர். ஆண், பெண் இருக்கின்றனர். உங்களுடையது இல்லற
மார்க்கமாகும். துறவற மார்க்கத்தின் விளையாட்டு ஏற்படுவது
கிடையாது. ஒரு கையினால் என்ன செய்ய முடியும்! இரண்டு கைகளும்
தேவை. இரண்டு பேர் இருக்கின்றனர் எனில் தங்களுக்குள் போட்டி
போட முடியும். மற்றொரு கை இல்லையெனில் தளர்ச்சி ஏற்பட்டு விடும்.
ஆனால் அந்த ஒன்றின் காரணத்தினால் நின்று விடக் கூடாது. முதன்
முதலில் தூய்மையான இல்லற மார்க்கம் இருந்தது. பிறகு
அசுத்தமானதாக ஆகிவிடுகிறது. வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது.
உங்களது புத்தியில் முழு ஞானம் இருக்கிறது. இந்த மரம் எவ்வாறு
அதிகரிக்கிறது? எவ்வாறு கூடுதல் சேர்க்கை ஆகிறது? இப்படிப்பட்ட
மரம் வேறு எதுவும் உருவாக்க முடியாது. யாருடைய புத்தியிலும்
படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடையின் ஞானம்
கிடையாது. அதனால் தான் பாபா கூறி வந்தார் - நாம் படைப்பவர்
மூலம் படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானத்தை முழுமையான
அடைந்திருக்கிறோம் என்று எழுதுங்கள். அவர்கள் படைப்பவரையும்
அறியவில்லை, படைப்புகளைப் பற்றியும் அறியவில்லை. ஒருவேளை
பரம்பரையாக இந்த ஞானம் நடைபெற்று வருகிறது எனில் கூற வேண்டும்
அல்லவா! பிரம்மா குமார், குமாரிகளைத் தவிர வேறு யாரும் கூற
முடியாது. பிராமணர்களாகிய நமக்குத் தான் பரம்பிதா பரமாத்மா
கற்பிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிராமணர்களாகிய நமது
தர்மம் தான் உயர்ந்ததிலும் உயர்ந்தது. சித்திரங்களையும் அவசியம்
காண்பிக்க வேண்டியிருக்கிறது. சித்திரங்கள் (படங்கள்) இல்லாமல்
புத்தியில் ஒருபொழுதும் அமராது. பெரிய பெரிய சித்திரங்களாக
இருக்க வேண்டும். பல விதமான தர்மங்களின் மரம் எவ்வாறு
அதிகரிக்கிறது? என்பதையும் புரிய வைக்க வேண்டும். ஆத்மா தான்
பரமாத்மா, பரமாத்மா தான் ஆத்மா என்று முன்பு கூறி வந்தோம்.
இப்பொழுது தந்தை இதன் பொருளையும் கூறியிருக்கின்றார். இந்த
நேரத்தில் நாம் தான் பிராமணர்களாக இருக்கிறோம், பிறகு நாம் தான்
புது உலகில் தேவதைகளாக ஆவோம். இப்பொழுது நாம் புருஷோத்தம
சங்கமயுகத்தில் இருக்கிறோம் அதாவது இது புருஷோத்தமர்களாக ஆகக்
கூடிய சங்கமயுகமாகும். இவையனைத்தையும் நீங்கள் புரிய வைக்க
முடியும் - படைப்பவர் மற்றும் படைப்பின் பொருள், நாம் தான் அது!
(ஹம் சோ) என்பதன் பொருள். ஓம் என்றால் முதலில் நான் ஆத்மா,
பிறகு தான் இந்த சரீரம். ஆத்மா அழிவற்றது மற்றும் இந்த சரீரம்
அழியக் கூடியது. நாம் இந்த சரீரத்தை எடுத்துக் கொண்டு நடிப்பை
நடிக்கிறோம். இதற்குத் தான் ஆத்ம அபிமானி என்று கூறப்படுகிறது.
ஆத்மாவாகிய நான் இந்த நடிப்பை நடிக்கிறேன், ஆத்மாவாகிய நான் இதை
செய்கிறேன், ஆத்மாவாகிய நான் பரமாத்மாவின் குழந்தையாக
இருக்கிறேன். எவ்வளவு அதிசயமான ஞானமாகும்! இந்த ஞானம்
தந்தையிடம் மட்டுமே இருக்கிறது, அதனால் தான் தந்தையை
அழைக்கிறோம்.
தந்தை ஞானக் கடலாக இருக்கிறார். அவரை ஒப்பிடுகையில் மற்றவை
அஞ்ஞானத்தின் கடல். அரைக்கல்பம் ஞானம், அரைகல்பம் அஞ்ஞானம்.
ஞானம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. படைப்பவர் மூலம்
படைப்புகளை அறிந்து கொள்வது தான் ஞானமாகும். ஆக அவசியம்
படைப்பவரிடம் தான் ஞானம் இருக்கும் அல்லவா! அதனால் தான் அவர்
படைப்பவர் என்று கூறப்படுகிறார். படைப்பவர் இந்த படைப்புகளை
படைத்ததாக மனிதர்கள் நினைக்கின்றனர். தந்தை புரிய வைக்கின்றார்
- இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட விளையாட்டு ஆகும். பதீத பாவனனே
வாருங்கள் என்று கூறுகின்றனர் எனில், படைப்பவர் என்று எப்படிக்
கூற முடியும்? பிரளயம் ஏற்பட்டு பிறகு படைப்புகளைப் படைக்கும்
பொழுது தான் படைப்பவர் என்று கூற முடியும். தந்தை பதீத உலகைப்
பாவனமாக ஆக்குகின்றார். ஆக முழு உலகம் என்ற இந்த மரத்தின் முதல்,
இடை, கடையை இனிமையிலும் இனிய குழந்தைகள் தான் அறிவர். எவ்வாறு
தோட்டக்காரன் ஒவ்வொரு விதை மற்றும் மரத்தைப் பற்றி அறிவார்
அல்லவா! விதையைப் பார்த்ததும் முழு மரமும் புத்தியில் வந்து
விடுகிறது. ஆக இவர் மனித மரத்தின் விதை ஆவார். அவரை யாரும்
அறியவில்லை. பரம்பிதா பரமாத்மா சிருஷ்டியின் விதை ரூபமானவர்
என்று பாடுகின்றனர். சத், சித், ஆனந்த சொரூபமாக இருக்கிறார்.
சுகம், சாந்தி, தூய்மையின் கடலாக இருக்கிறார். இந்த முழு
ஞானத்தையும் பரம்பிதா பரமாத்மா இந்த சரீரத்தின் மூலம்
கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆக
அவசியம் இங்கு தான் வருவார் அல்லவா! தூய்மையற்றவர்களை
தூய்மையாக பிரேரணையின் (குறிப்பால் தூண்டுதல்) மூலம் எப்படி
ஆக்குவார்! தந்தை இங்கு வந்து அனைவரையும் தூய்மையாக்கி
அழைத்துச் செல்கிறார். அந்த தந்தை தான் உங்களுக்குப் பாடம்
கற்பித்துக் கொண்டிருக்கிறார். இது புருஷோத்தம சங்கமயுகமாகும்.
ஆத்மா என்ற புருஷ் (மனிதன்) எவ்வாறு தமோ பிரதானத்திலிருந்து
உயர்வான சதோ பிரதானமாக ஆகிறது என்று இதைப் பற்றி நீங்கள்
சொற்பொழிவு செய்ய முடியும். உங்களிடம் பல தலைப்புகள் உள்ளன.
இந்த தூய்மையற்ற தமோ பிரதான உலகம் சதோ பிரதானமாக எவ்வாறு ஆகிறது
என்பதும் புரிய வைக்க வேண்டிய விசயமாகும். நாட்கள் செல்லச்
செல்ல உங்களது ஞானத்தைக் கேட்பார்கள். விட்டுச் சென்றவர்களும்
வருவார்கள், ஏனெனில் கதி, சத்கதிக்கான கடை ஒன்றே ஒன்று தான்.
அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒருவர் தான் என்பதை
நீங்கள் கூற முடியும். அவர் தான் ஸ்ரீ ஸ்ரீ என்று
கூறப்படுகிறார். உயர்ந்ததிலும் உயர்வானவர் பரம்பிதா பரமாத்மா
ஆவார். அவர் நம்மை உயர்வானவர்களாக ஆக்குகின்றார். உயர்வானது
சத்யுகமாகும். தாழ்வானது கலியுக மாகும். கீழானவர்கள் என்றும்
கூறுகின்றனர். ஆனால் தன்னை அவ்வாறு புரிந்து கொள்வது கிடையாது.
தூய்மை இல்லாத உலகில் ஒருவர் கூட உயர்வானவர் கிடையாது. ஸ்ரீ
ஸ்ரீ எப்பொழுது வருகிறாரோ அப்பொழுது தான் ஸ்ரீ ஆக்குவார். ஸ்ரீ
என்ற பட்டம் சத்யுகத்தின் ஆரம்பத்தில் தேவதை களுக்கு இருந்தது.
இங்கு அனைவருக்கும் ஸ்ரீ ஸ்ரீ என்று கூறி விடுகின்றனர்.
உண்மையில் ஸ்ரீ என்ற வார்த்தை தூய்மையைக் குறிப்பதாகும். மற்ற
தர்மத்தைச் சார்ந்த யாரும் தன்னை ஸ்ரீ என்று கூறிக் கொள்வது
கிடையாது. ஸ்ரீ போப் என்று கூறுவார்களா என்ன? இங்கு
அனைவருக்கும் கூறிக் கொண்டே இருக்கின்றனர். முத்துக்களை
தேர்ந்தெடுக்கும் அன்னம் எங்கு இருக்கிறது! அசுத்தம் சாப்பிடும்
கொக்கு எங்கு இருக்கிறது! வித்தியாசம் இருக்கிறது அல்லவா! இந்த
தேவதைகள் மலர் போன்றவர்கள். அது அல்லாவின் பூந்தோட்டமாகும்.
தந்தை உங்களை மலர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். மற்றபடி
மலர்களில் பலவிதங்கள் இருக்கின்றன. அனைத்தையும் விட நல்ல மலர்
மலர்களின் ராஜாவாகும். இந்த லெட்சுமி நாராயணனை புது உலகின்
மகாராஜா மகாராணி மலர் என்று கூறுவர்.
குழந்தைகளாகிய உங்களுக்குள் ஆத்மார்த்த குஷி இருக்க வேண்டும்.
இதற்கு வெளிப்படையாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இந்த விளக்கு
போன்றவற்றை எரிய வைப்பதற்கும் பொருள் இருக்கிறது. சிவஜெயந்தி
யன்று எரிய விட வேண்டுமா? அல்லது தீபாவளி அன்றா? தீபாவளி அன்று
லெட்சுமியை வரவேற்கின்றனர். அவரிடம் செல்வம் கேட்கின்றனர்.
உண்மையில் செல்வம் நிரப்புபவர் சிவ போலா பண்டாரி ஆவார்.
சிவபாபாவின் மூலம் நமது அளவற்ற பொக்கிஷங்கள் நிறைந்து விடுகிறது
என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஞான ரத்தினம் செல்வம் ஆகும்.
அங்கும் உங்களிடம் அளவற்ற செல்வம் இருக்கும். புது உலகில்
நீங்கள் செல்வந்தர்களாக ஆகிவிடுவீர்கள். சத்யுகத்தில் அதிகமான
வைரம், தங்கம் இருந்தன. பிறகு அது மீண்டும் ஏற்படும். மனிதர்கள்
குழப்பமடைகின்றனர். இவையனைத்தும் அழிந்து போய்விடும் பொழுது
மீண்டும் எப்படி வரும்? பொக்கிஷங்கள் அழிந்து விடுகின்றன,
மலைகள் உடைந்து விடும் பொழுது பிறகு எப்படி ஏற்படும்?
சரித்திரம் மீண்டும் நடைபெறும் அல்லவா- எதுவெல்லாம் இருந்ததோ
அது மீண்டும் வந்து விடும் என்று கூறுங்கள். குழந்தைகளாகிய
நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவதற்கான முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள். சொர்க்கத்தின் சரித்திர பூகோளம்
திரும்பவும் நடைபெறும். தனது முழு உலகம், முழு கடல், முழு
பூமியையும் நமக்குக் கொடுத்து விட்டார், அதை யாரும்
நம்மிடமிருந்து அபகரிக்க முடியாது என்று பாட்டில்
கூறப்பட்டிருக்கிறது அல்லவா! அதை ஒப்பிடுகையில் இப்பொழுது என்ன
இருக்கிறது! நிலத்திற்காக, தண்ணீருக்காக, மொழிக்காக
சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
சொர்க்கத்தை படைக்கும் பாபாவின் பிறப்பு கொண்டாடப்படுகிறது.
அவசியம் அவர் சொர்க்கத்தின் இராஜ்யம் கொடுத்திருக்க வேண்டும்.
இப்பொழுது உங்களுக்கு தந்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் இந்த சரீரத்தின் பெயர், உருவத்திலிருந்து விடுபட்டு
தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். யோக பலத்தின்
மூலமாகவோ அல்லது தண்டனை அடைந்தோ தூய்மையாக ஆக வேண்டும். பிறகு
பதவியும் குறைந்து விடும். நான் இந்த பதவி அடைவேன், இந்த
ஆசிரியர் இந்த அளவிற்கு கற்பிக்கிறார் என்று மாணவனின்
புத்தியில் இருக்கும் அல்லவா! பிறகு ஆசிரியருக்கும் பரிசு
கொடுப்பர். இங்கு தந்தை உங்களை உலகிற்கு எஜமானர்களாக
ஆக்குகிறார். பிறகு நீங்கள் அவரை பக்தி மார்க்கத்தில் நினைவு
செய்கிறீர்கள். மற்றபடி நீங்கள் தந்தைக்கு என்ன பரிசு கொடுக்க
முடியும்? இங்கு நீங்கள் என்ன வெல்லாம் பார்க்கிறீர்களோ அவைகள்
இருக்கப் போவது கிடையாது. இது பழைய சீ சீ உலகமாகும், அதனால்
தான் என்னை அழைக்கின்றனர். தந்தை உங்களை தூய்மையற்ற
நிலையி-ருந்து தூய்மையாக ஆக்குகின்றார். இந்த விளையாட்டை நினைவு
செய்ய வேண்டும். என்னிடத்தில் படைப்பின் முதல், இடை, கடையின்
ஞானம் இருக்கிறது. அதை உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள்
இப்பொழுது கேட்கிறீர்கள், பிறகு மறந்து விடுகிறீர்கள். ஐயாயிரம்
ஆண்டிற்குப் பிறகு மீண்டும் சக்கரம் திரும்பவும் சுற்றும்.
உங்களது பாகம் எவ்வளவு அன்பானதாக இருக்கிறது! நீங்கள் சதோ
பிரதானமாக, அன்பானவர்களாக ஆகிறீர்கள். பிறகு தமோபிரதானமாக
ஆவதும் நீங்கள் தான். நீங்கள் தான் பாபா வாருங்கள் என்று
அழைக்கிறீர்கள். இப்பொழுது நான் வந்திருக்கிறேன். நம்பிக்கை
இருக்கிறது எனில் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். தவறுகள் செய்யக்
கூடாது. சில குழந்தைகள் கருத்து வேறுபாடுகளில் வந்து படிப்பை
விட்டு விடுகின்றனர். ஸ்ரீமத் படி நடக்கவில்லை, படிப்பு
படிக்கவில்லையெனில் நீங்கள் தான் தோல்வி அடைந்து விடுவீர்கள்.
தன் மீது தாங்களே கருணை காட்டுங்கள் என்று தந்தை கூறுகின்றார்.
ஒவ்வொருவரும் படித்து தன் மீது இராஜ்ய திலகம் இட்டுக் கொள்ள
வேண்டும். படிப்பு கற்றுக் கொடுப்பது தந்தையின் கடமையாகும்,
இதில் ஆசீர்வாதத்திற்கான விசயம் கிடையாது. பிறகு அனைவரின்
மீதும் ஆசீர்வாதம் செய்ய வேண்டியிருக்கும். இந்த கருணை
போன்றவைகளை பக்தி மார்க்கத்தில் கேட்கின்றனர். இங்கு அந்த
விசயம் கிடையாது. நல்லது.
இனிமையிலும் இனிய , தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு , தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம் . ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே .
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இல்லறத்தில் இருந்து கொண்டே தங்களுக்குள் போட்டி போட
வேண்டும். ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்தினால் ஒரு கை (இல்லறவாசி)
தளர்ச்சி அடைந்து விட்டால் அதன் பின்னால் நின்று விடக் கூடாது.
தனக்குத் தானே இராஜ்ய திலகம் கொடுத்துக் கொள்ள தகுதியானவர்களாக
ஆக்கிக் கொள்ள வேண்டும்.
2) சிவஜெயந்தி மிகவும் விமரிசையாக கொண்டாட வேண்டும். ஏனெனில்
எந்த சிவ தந்தை ஞான ரத்தினங்களைக் கொடுக்கிறாரோ அதன் மூலம் தான்
நீங்கள் புது உலகில் செல்வந்தர்களாக ஆவீர்கள். உங்களது அனைத்து
களஞ்சியங்களும் நிறைந்து விடும்.
வரதானம்:
அனைத்துப் பொருள்களின் மீதுள்ள பற்றுதல்களில் இருந்து
பற்றற்றவராக , இயற்கையை வென்றவராக ஆகுக .
எந்த ஒரு பொருளாவது கர்மேந்திரியங்களைத் தடுமாறச் செய்கிறது
என்றால், அதாவது பற்றுதலின் உணர்வு உருவாகிறது என்றால் கூட,
விலகியவராக ஆக முடியாது. ஆசைகள் தான் பற்றுதலின் (அடையாளம்)
உருவம். அநேகர் சொல்கின்றனர், ஆசை (இச்சா) இல்லை, ஆனால்
நல்லதாகத் (அச்சா) தோன்றுகிறது என்று. ஆக, இதுவும் கூட
சூட்சுமப் பற்றுதல் ஆகும் -- இதனை நுட்பமான உருவகப்படுத்தி
சோதித்துப் பாருங்கள் -- இந்தப் பொருள், அதாவது அல்பக்கால
சுகத்தின் சாதனம் கவர்ந்திழுக்காமல் உள்ளதா? இந்தப் பொருட்கள்
இயற்கையின் சாதனங்கள். இவற்றிலிருந்து பற்றற்றவராக, அதாவது
விலகியவராக ஆகிறீர்கள் என்றால், அப்போது இயற்கையை வென்றவர்
ஆவீர்கள்.
சுலோகன்:
எனது - எனது என்ற குழப்பங்களை விட்டு , எல்லையற்ற நிலையில்
இருப்பீர்களானால் உங்களை விஷ்வ - கல்யாண்காரி எனச் சொல்வார்கள்
.