05.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! நீங்கள் தந்தையை நினைப்பதற்கு ஏற்ப ஆத்மாவில் ஒளி பெருகும். ஞானி ஆத்மா பிரகாசமாக மாறுகிறது.

 

கேள்வி:

மாயா எந்த குழந்தைகளை சிறிது கூட துன்புறுத்த முடியாது?

 

பதில்:

யார் வலிமையான யோகியாக இருக்கிறார்களோ, யார் யோக சக்தியினால் அனைத்து கர்மேந்திரியங்களையும் குளிர்ச்சியாக்கி இருக்கிறார்களோ, யார் யோகத்தில் இருப்பதற்காக கடினமாக முயற்சி செய்கிறார்களோ, அவர்களை மாயா சிறிது கூட துன்புறுத்தாது. நீங்கள் உறுதியான யோகியாக மாறும் போது தகுதி அடைகிறீர்கள். தகுதி அடைய வேண்டும் என்றால் முதலில் தூய்மை வேண்டும்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளிடம் பாபா வந்து புரிய வைக்கிறார். அறியாமை காரணமாக உங்களுடைய ஆத்மா டல்லாகி (மங்கி) விட்டது. வைரத்தில் பிரகாசம் இருக்கிறது அல்லவா! கல்லில் பிரகாசம் இல்லை. ஆகவே, கல்லைப் போன்று டல்லாகி விட்டது என்று கூறுகிறார்கள். மீண்டும் ஒளி பெற்றதும் இது பாரஸ்மணி போன்று இருக்கிறது என்று கூறுகிறார்கள். இப்போது அறியாமையின் காரணமாக ஆத்ம ஜோதி மங்கலாகிவிட்டது. கருப்பாகவில்லை. இவ்வாறு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அனைவரின் ஆத்மாவும் ஒன்று போல இருக்கிறது. ஆனால் சரீரம் கருப்பாக, எப்படி எல்லாம் இருக்கிறது. சரீரம் பல்வேறு விதமாக இருக்கிறது. ஆத்மா ஒன்று தான். நாம் ஆத்மா பாபாவின் குழந்தை என்பதை இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். இந்த ஞானம் முழுவதும் இருந்தது. பிறகு அது மெல்ல மெல்ல போய் விட்டது. கடைசியில் ஒன்றுமே இல்லாத போது தான் அறியாமை என்கிறார்கள். நீங்களும் அஞ்ஞானியாக இருந்தீர்கள். இப்போது ஞானக் கடலினால் ஞானியாகிக் கொண்டே போகிறீர்கள். ஆத்மா மிகவும் சூட்சுமமாக இருக்கிறது. இந்த கண்களால் பார்க்க முடியவில்லை. தந்தை வந்து புரிய வைக்கிறார். குழந்தைகளை ஞானம் நிறைந்தவராக மாற்றுகிறார். அப்போது விழிப்படைகிறீர்கள். ஒவ்வொரு வீட்டிலும் வெளிச்சம் ஏற்படுகிறது. இப்போது ஒவ்வொரு வீட்டிலும் இருள் சூழ்ந்திருக்கிறது. அதாவது ஆத்மா ஒளி குன்றி விட்டது. என்னை நினைத்தால் ஒளி வந்து விடும். மீண்டும் ஞானி ஆகிவிடுவீர்கள் என பாபா கூறுகிறார். பாபா யாரையும் நிந்திக்கவில்லை. இந்த நாடகத்தின் இரகசியத்தைப் புரிய வைக்கிறார். இங்கே அனைவரும் முட்டாளாகி விட்டனர். குழந்தைகளுக்குக் கூறப்பட்டுள்ளது. யார் கூறியது? பாபா. குழந்தைகளே! ஸ்ரீமத்படி உங்களுடைய புத்தி எவ்வளவு அழகாக இருந்தது! இப்போது நீங்கள் உணர்கிறீர்கள் அல்லவா? உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது. ஞானமானது (ஆன்மீக) கல்வி என்று கூறப்படுகிறது. பாபாவின் படிப்பினால் நம்முடைய ஜோதி எரிய ஆரம்பித்து விட்டது. இதற்குத் தான் உண்மையிலும் உண்மையான தீபாவளி என்று கூறப்படுகிறது. சிறு வயதில் அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினர். அந்த பழக்கம் இருந்து கொண்டே இருக்கின்றது. இதனால் தீபாவளி ஏற்படுவதில்லை. இங்கே ஆத்மா உள்ளே இருக்கிறது. அது ஒளி குன்றிவிட்டது. அந்த ஜோதியை பாபா வந்து எரிய வைக்கிறார். அதாவது குழந்தைகளுக்கு ஞானம் கொடுக்கிறார். படிக்க வைக்கிறார். பள்ளிக் கூடத்தில் டீச்சர் படிக்க வைப்பார் அல்லவா? அது எல்லைக்குட்பட்ட ஞானம், இது எல்லைக்கப்பாற்பட்ட ஞானம். சாது, சன்னியாசிகள் படிக்க வைக்கிறார்களா என்ன? படைக்கக் கூடியவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடை ஞானம் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? யாராவது வந்து படிக்க வைத்திருக்கிறார்களா? எங்கு வேண்டுமானாலும் சென்று இந்த ஞானத்தை படிக்க வைக்கிறார்களா பாருங்கள்! ஒரு தந்தை மட்டும் தான் படிக்க வைக்கிறார், அவரிடம் படிக்க வேண்டும். பாபா திடீரென்று வந்து விடுகிறார். நான் வருகிறேன், நான் வருகிறேன் என தண்டோரா எதுவும் போடவில்லை. திடீரென்று வந்து நுழைகிறார். அவருக்கு உடல் கிடைக்காத வரை அவரால் -யை எழுப்ப முடியாது. ஆத்மா சரீரம் இல்லாமல் -யை எழுப்ப முடியாது. சரீரத்தில் வரும் போது தான் -யை எழுப்புகிறது. நீங்கள் புரிய வைத்தால் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். குழந்தைகளுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கும் போது தான் புரிந்து கொள்கிறார்கள். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. வினாசத்தின் காட்சிகளையும் யாரும் விரும்ப வில்லை. பாபா தான் வந்து செய்விக்கிறார். நாடகத்தின் படி பழைய உலகம் இப்போது முடியப் போகிறது. புதிய உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. பாபாவிடமிருந்து யார் ஞானத்தை அடைய வேண்டுமோ வந்து கொண்டே இருப்பார்கள். எவ்வளவு பேருக்கு ஞானம் கொடுக்கப் பட்டிருக்கும். எண்ண முடியாத அளவிற்கு ஒவ்வொரு ஊர்களில் இருந்தும் எத்தனை பேர் வருகிறார்கள்! ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மா சந்திக்கும் விழா ஒரு முறை தான் நடக்கிறது. சங்கமயுத்தில் தான் வருகிறார்கள். தந்தை வந்து புது உலகத்தை உருவாக்குகிறார். யாருடைய ஆத்ம ஜோதி எரிகிறதோ அவர்கள் மற்றவர்களின் ஜோதியை ஏற்றி வைக்கிறார். வீட்டிற்குப் போக வேண்டும். இதில் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். பக்தி மார்க்கத்தில் இருளாக இருக்கிறது. ஞானம் கொடுப்பதற்கு ஒரு தந்தை வேண்டும். அவர் சங்கமத்தில் தான் வருகிறார். பழைய உலகத்தில் ஞானம் கிடைக்காது. மனிதர்கள் இன்னும் 40,000 வருடம் இருக்கிறது என நினைக்கிறார்கள். முற்றிலும் காரிருளில் இருக்கிறார்கள். 40,000 வருடங்களுக்குப் பிறகு பகவான் வருவார் என நினைக்கிறார்கள். நிச்சயமாக வந்து ஞானத்தைக் கொடுத்து சத்கதியைக் கொடுப்பார் என்றால் அறியாமை அல்லவா? இதற்குத் தான் அஞ்ஞான இருள் என கூறப்படுகிறது. அஞ்ஞானத்தில் இருப்பவர்களுக்கு ஞானம் வேண்டும். பக்திக்கு ஞானம் என்று கூற முடியாது. ஆத்மாவில் ஞானம் இல்லை. ஆனால் புத்தி மந்தமான காரணத்தினால் பக்தி தான் ஞானம் என நினைக்கிறார்கள். ஒரு புறம் ஞான சூரியன் தோன்றியதும் வெளிச்சம் உண்டாகும் என்கிறார்கள். ஆனால் புரிந்து கொள்ளவில்லை. ஞான சூரியன் தோன்றியதும்...... என பாடுகிறார்கள். யாரை ஞான சூரியன் எனக் கூறுகிறார்கள். எப்போது வந்தார் இது யாருக்கும் தெரியவில்லை. பண்டிதர்களோ கலியுகம் முடியும் போது வெளிச்சம் ஏற்படும் எனக் கூறுவார்கள். இந்த விஷயங்கள் அனைத்தையும் தந்தை புரிய வைக்கிறார். குழந்தைகள் வரிசைக்கிரமத்தில் புரிந்து கொள்கிறார்கள். ஆசிரியர் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார். குழந்தைகள் ஒரே மாதிரி படிப்பதில்லை. படிப்பில் அனைவரும் சமமான மதிப்பெண்களைப் பெறுவதில்லை. எல்லையற்ற தந்தை வந்திருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். இப்போது இந்த பழைய உலகத்தின் அழிவு கூட எதிரில் இருக்கிறது. இப்போதே பாபாவிடமிருந்து ஞானத்தைப் பெற வேண்டும். மேலும் யோகத்தைக் கற்க வேண்டும். நினைவினால் தான் விகர்மங்கள் அழியும். இந்த சங்கமத்தில் தான் வந்து இந்த சரீரத்தைக் கடனாக பெறுகிறேன் என பாபா கூறுகிறார். அதாவது இயற்கையின் ஆதாரத்தை எடுக்கிறேன். கீதையில் கூட இந்த வார்த்தைகள் இருக்கிறது. வேறு எந்த சாஸ்திரத்தின் பெயரையும் பாபா எடுப்பதில்லை. ஒரே ஒரு கீதை மட்டும் தான். இதுவே இராஜயோகத்தின் படிப்பாகும். கீதை என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பகவான் வாக்கு என்று இதில் முதன் முதலில் எழுதப்பட்டிருக்கிறது. இப்போது பகவான் என்று யாரைக் கூறுகிறார்கள்? பகவான் நிராகாரர். அவருக்கென்று உடல் கிடையாது. அது நிராகார உலகம் ஆகும். அங்கே ஆத்மாக்கள் வசிக்கிறது. சூட்சும வதனத்தை உலகம் என்று கூற முடியாது. இது ஸ்தூல சாகார உலகம் ஆகும். அது ஆத்மாக்களின் உலகம் ஆகும். நிராகார உலகத்தில் ஆத்மாக்கள் எவ்வளவு சிறிதாக இருக்கிறது! பிறகு நடிப்பதற்காக வருகிறது. இந்த எண்ணங்கள் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் பதிவாகிறது. இதற்குத் தான் ஞானம் என்று பெயர். வேத சாஸ்திரங்களுக்கு பக்தி என்று பெயர். ஞானம் என்று கூற முடியாது. உங்களை சாது சன்னியாசிகளுடன் ஒப்பிட முடியாது. பாபா பலரின் சங்கத்தில் இருந்திருக்கிறார். பல குருக்களைப் பெற்றிருந்தார். தாங்கள் ஏன் சன்னியாசம் எடுத்தீர்கள், வீடு வாசலை விட்டீர்கள் என கேட்டிருக்கிறார். விகாரத்தினால் புத்தி கீழாகி விடுகிறது. ஆகவே வீடு வாசலை விட்டோம் என கூறினர். சரி, காட்டில் சென்றிருந்தால் வீடு வாசலின் நினைவு வந்திருக்குமே என்றால் ஆமாம் என்றனர். ஒரு சன்னியாசியோ மீண்டும் திரும்பி வீட்டிற்கு வந்து விட்டார். இதை பாபா பார்த்திருக்கிறார். இதுவும் சாஸ்திரங்களில் இருக்கிறது. மனிதர்கள் வயோதிக நிலையை அடையும் போது வானபிரஸ்த நிலைக்குப் போகிறார்கள். சிறிய வயதில் போவதில்லை. கும்பமேளாவில் மிகவும் குறைவாக ஆடையற்ற மனிதர்கள் வருகிறார்கள். மருந்து கொடுக்கிறார்கள். இதன் மூலம் உடல் உறுப்புகள் குளிர்ச்சியாகி விடுகிறது. நீங்கள் யோக பலத்தினால் கர்மேந்திரியங்களை வசமாக்க வேண்டும். யோக பலத்தினால் வசமாகி ஆகி கடைசியில் குளிர்ச்சியாகும். பாபா மாயா மிகவும் துன்புறுத்துகிறது என பலர் கூறுகிறார்கள். அங்கே இது போன்ற விஷயம் இல்லை. இதில் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். இங்கே இவ்வாறான சீ,சீ வேலைகள் நடப்பதில்லை. இப்படிப்பட்ட சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்கு பாபா வந்திருக்கிறார். உங்களை தகுதி அடைய வைத்துக் கொண்டிருக்கிறார். மாயா உங்களை தகுதி அற்றவராக மாற்றுகிறது. அதாவது சொர்க்கம் அல்லது ஜீவன் முக்தி தாமத்திற்கு செல்ல தகுதி இல்லை. எனவே தந்தை வந்து தகுதி அடைய வைக்கிறார். அதற்கு முதலில் தூய்மை வேண்டும். பாபா, நாங்கள் பதீதமாகி விட்டோம் எங்களை வந்து தூய்மையாக்குங்கள் என பாடுகிறார்கள். பாவனம் என்றால் தூய்மை. அமிர்தத்தை விட்டு விஷத்தை அருந்தினார்கள் என கூறப்பட்டிருக்கிறது. அதனுடைய பெயரே விஷமாகும். அதுவே, முதல், இடை, கடை துக்கத்தை அளிக்கிறது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. பாபா எத்தனை முறை வந்து குழந்தைகளை சந்தித்திருக்கிறார்! உங்களை கீழான நிலையிலிருந்து உயர்ந்த மனிதராக மாற்றியிருக்கிறார். ஆத்மா தூய்மையாகும் போது ஆயுளும் அதிகமாகிறது. ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி அனைத்தும் கிடைக்கிறது. இதையும் நீங்கள் போர்டில் எழுதலாம். 21 பிறவிகளுக்கு ஒரு நொடியில் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி. தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கு இந்த சொத்து கிடைக்கிறது. பல குழந்தைகள் போர்டு வைப்பதற்கு பயப்படுகிறார்கள். அனைவரின் வீட்டிலும் போர்டு இருக்கிறது. நீங்கள் சர்ஜனின் (மருத்துவ நிபுணர்) குழந்தைகள் அல்லவா? உங்களுக்கு ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி அனைத்தும் கிடைக்கிறது. எனவே நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுங்கள். கொடுக்க முடியும் என்றால் போர்டில் ஏன் எழுதுவதில்லை. பாரதத்தில் இன்றிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு ஆரோக்கியமும், செல்வமும், இருந்தது. தூய்மையும் இருந்தது. இதை மனிதர்கள் புரிந்து கொள்வார்கள். எல்லையற்ற தந்தையின் சொத்து ஒரு நொடியில். உங்களிடம் பலர் வருவார்கள். இதே பாரதம் தான் தங்கப் பறவையாக இருந்தது. இவர்களின் இராஜ்யம் இருந்தது என புரிய வையுங்கள். பிறகு இவர்கள் எங்கே போனார்கள்? முதலில் இவர்கள் தான் 84 பிறவிகளை எடுப்பார்கள். இவர் நம்பர் ஒன் அல்லவா? பிறகு இவரே கடைசியில் வருகிறார். இப்போது உங்களுடைய 84 பிறவிகளின் சக்கரம் முடிந்து விட்டது என பாபா கூறுகிறார். பிறகு ஆரம்பம் ஆகும். எல்லயைற்ற தந்தை தான் வந்து இந்த பதவியை அடைய வைக்கிறார். நீங்கள் என்னை நினைவு செய்தால் தூய்மையாக மாறுவீர்கள் என்று மட்டும் கூறுகிறார். 84 பிறவிகளை தெரிந்து கொண்டு தந்தையிடமிருந்து சொத்தை அடைய வேண்டும். ஆனால் படிப்பு வேண்டும் அல்லவா? உங்களுக்கு சுயதரிசன சக்கரதாரி என்று பெயர். புதியவர்கள் எதுவும் புரிந்துக் கொள்ள முடியாது. சுயம் என்று ஆத்மாவிற்குக் கூறப்படுகிறது என நீங்கள் அறிகிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம் பவித்திரமாக இருந்தோம். ஆரம்பத்திலிருந்து 84 பிறவிகளை எடுத்தோம். நீங்கள் தான் முதன் முதலில் சிவனின் பக்தியை ஆரம்பித்தீர்கள். நீங்கள் தூய்மையான பக்தர்களாக இருந்தீர்கள். இதையும் பாபா தான் புரிய வைக்கிறார். பாபாவைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! முதலில் நீங்கள் இந்தப் பிறவியை எடுத்தீர்கள் என பாபா தான் புரிய வைக்கிறார். யாராவது பணக்காரர்களாக இருந்தால் முற்பிறவியில் இது போன்ற நல்ல கர்மங்களைச் செய்துள்ளனர் என கூறுவார்கள். யாராவது நோயாளியாக இருந்தாலும் போன பிறவியின் கணக்கு வழக்கு என்பார்கள். சரி, இந்த இலஷ்மி நாராயணன் எப்படிப்பட்ட கர்மங்களைச் செய்தனர். இதை பாபா புரிய வைக்கிறார். இவர்களின் 84 பிறவிகள் முடிவடைந்து விட்டது. பிறகு முதல் நம்பரில் வருகிறார்கள். பகவான் சங்கமயுகத்தில் தான் வந்து இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். இப்போது பாபா நமக்கு இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பிறகு நீங்களே மறந்து போவீர்கள். கர்மம், அகர்மம், விகர்மத்தின் விளைவுகளின் இரகசியத்தை பாபா புரிய வைத்திருக்கிறார். இராவண இராஜ்யத்தில் உங்களுடைய கர்மங்கள் விகர்மம் ஆகிவிடுகிறது. அங்கே கர்மம் அகர்மம் ஆக இருக்கிறது. அங்கே இராவண இராஜ்யமே கிடையாது. விகாரமே கிடையாது. அங்கே தான் யோக பலத்தினால் உலகத்திற்கு அதிபதியாகிறோம் என்றால் நிச்சயமாக பவித்திரமான உலகம் வேண்டும். பழைய உலகத்திற்கு அபவித்திரமான உலகம் என்றும், புது உலகத்திற்கு பவித்திரமான உலகம் என்றும் பெயர். அது நிர்விகார உலகம் ஆகும், இது விகார உலகம் ஆகும். தந்தை தான் வந்து வேசியாலத்தை சிவாலயமாக மாற்றுகிறார். சத்யுகம் தான் சிவாலயம் ஆகும். சிவபாபா வந்து உங்களை சத்யுகத்திற்காக தகுதி அடைய வைத்துக் கொண்டிருக்கிறார். இலஷ்மி நாராயணன் கோவிலுக்குச் சென்று நீங்கள் கேட்கலாம்- இவர்கள் இந்தப் பதவியை எப்படி அடைந்தார்கள் என உங்களுக்குத் தெரியுமா? உலகத்திற்கு எப்படி அதிபதியாக மாறினார்கள்? உங்களுக்குத் தெரியாது, எனக்கு தெரியும் என பாபா கூறுகிறார். பாபாவின் குழந்தைகளாகிய நீங்கள் தான் இவர்கள் இந்தப் பதவியை எப்படி அடைந்தனர் என தெரிவிக்க முடியும். இவர்கள் தான் முழுமையாக 84 பிறவிகளை எடுத்தனர். இவர்களுக்குத் தான் பாபா சங்கமயுத்தில் வந்து இராஜயோத்தைக் கற்பித்து இராஜ்யத்தைக் கொடுக்கிறார். அதற்கு முன்பு நம்பர் ஒன் அழுக்காக இருந்தனர். பிறகு நம்பர் ஒன் பாவனமாகிறார்கள். முழு இராஜ்யமும் அல்லவா? உங்களுடைய படங்களினால் இவர்களுக்கு இராஜயோகத்தை யார் கற்பித்தனர் என்பது அனைத்தும் தெளிவாக இருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பரமாத்மா தான். தேவதைகள் கற்றுத் தர முடியாது. பகவான் தான் கற்பிக்கிறார். அவருக்கு ஞானம் நிறைந்தவர் என்று பெயர். அப்பா, டீச்சர், சத்குரு என்று கூட கூறப்படுகிறது. இந்த விஷயங்கள் அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து சிவனின் பக்தி செய்தவர்கள் தான் புரிந்துக்கொள்ள முடியும். கோவில் கட்டுபவர்களிடம் நீங்கள் இந்த கோவிலைக் கட்டியிருக்கிறீர்கள், இதை யார் கட்டினார்கள்? இவர்கள் இந்த பதவியை எப்படி அடைந்தனர்? இவர்களின் இராஜ்யம் எப்போது இருந்தது? இப்போது எங்கே போனார்கள்? இப்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள்? எனக் கேளுங்கள். நீங்கள் 84 பிறவிகளின் கதையைத் தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சி ஆகிவிடுவார்கள். சித்திரம் பாக்கெட்டில் இருக்கிறது. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்கலாம்.

 

ஆரம்பத்திலிருந்து யார் சிவனின் பக்தி செய்தனரோ அவர்கள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருப்பார்கள். இவர் நம்முடைய குலத்தைச் சார்ந்தவர் என நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள். பாபா ஒவ்வொரு நாளும் பல எளிய வழிமுறைகளைத் தெரிவிக்கிறார். பரம்பிதா பரமாத்மா தான் அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கிறது. 21 பிறவிகளுக்கு சத்யுகத்தின் இராஜ்ய பதவி கிடைக்கிறது. இந்தப் படிப்பினால் தான் 21 ஜென்மங்களுக்கான சொத்து கிடைக்கிறது. தலைப்புகள் கூட நிறைய இருக்கிறது. வேசியாலம் மற்றும் சிவாலயம் என எதற்கு கூறப்படுகிறது? இந்த தலைப்பில் கூட நாம் பரம்பிதா பரமாத்மாவின் வாழ்க்கைக் கதையை கூறலாம். இலஷ்மி நாராயணனின் 84 பிறவிகளின் கதை, இது கூட ஒரு தலைப்பாகும். உலகத்தில் அமைதி எப்போது இருந்தது? பிறகு எப்படி அசாந்தி ஆயிற்று? இப்போது மீண்டும் அமைதி எப்படி உருவாகிக் கொண்டிருக்கிறது? இது கூட ஒரு தலைப்பாகும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இப்போது உயர்ந்த ஆத்மா ஆவதற்காக நினைவின் பலத்தினால் ஆத்மாவைத் தூய்மையாக்க வேண்டும். கர்மேந்திரியங்கள் மூலமாக எந்த விகர்மமும் செய்ய கூடாது.

 

2. ஞானி ஆகி ஆத்மாக்களை எழுப்பக் கூடிய சேவை செய்ய வேண்டும். ஆத்மா என்ற ஜோதியில் ஞானம் யோகம் என்ற நெய்யை நிரப்ப வேண்டும். ஸ்ரீமத் படி புத்தியைத் தூய்மையாக்க வேண்டும்.

 

வரதானம்:

மாலிக் தன்மையின் (எஜமானத்தன்மை) ஸ்மிருதி மூலம் மன்மனாபவ ஸ்திதியை அமைத்துக் கொள்ளக்கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.

 

சதா இந்த ஸ்மிருதி வெளிப்பட்டு இருக்கட்டும் -- நான் ஆத்மா செய்விப்பவன், மாலிக்காக (எஜமானன்) இருக்கிறேன், விசேஷ ஆத்மா, மாஸ்டர் சர்வசக்திவானாக இருக்கிறேன். ஆக, இந்த மாலிக் தன்மையின் ஸ்மிருதி மூலம் மனம்-புத்தி மற்றும் சம்ஸ்காரம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும். நான் விலகியிருக்கிறேன், மாலிக்காக இருக்கிறேன் -- இந்த ஸ்மிருதி மூலம் மன்மனாபவ நிலை சுலபமாக அமைந்து விடும். இந்த விலகிய நிலையின் அப்பியாசம் தான் கர்மாதீத் ஆக்கி விடும்.

 

சுலோகன்:

நிந்தனை மற்றும் தொந்தரவு ஆகியவற்றை சகித்துக் கொள்வது என்றால் தனது இராஜதானியை நிச்சயம் செய்வதாகும்.

 

ஓம்சாந்தி