15.04.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
அனைவருக்கும்
சத்கதி
வழங்கக்கூடிய
வள்ளல்
ஒரு
பாபா
ஆவார்.
பாபா
போன்று
தன்னலமற்ற
சேவையை
வேறு
யாரும்
செய்ய
முடியாது.
கேள்வி:
புதிய
உலகத்தை
ஸ்தாபனை
செய்வதில்,
பாபாவுக்கு
என்ன
ஒரு
முயற்சி
செய்ய
வேண்டி
இருக்கிறது?
பதில்:
ஒரேடியாக
அஜாமில்
போல
ஆகிவிட்ட
பாவ
ஆத்மாக்களை
மீண்டும்
லக்ஷ்மி
நாராயணரைப் போல
பூஜிக்கத்
தகுந்த
தேவதையாக
மாற்றுவதற்கான
முயற்சியை
பாபா
செய்ய
வேண்டி
இருக்கிறது.
பாபா குழந்தைகளாகிய
உங்களை
தேவதை
ஆக்குவதற்கான
முயற்சி
செய்கிறார்.
மற்ற
அனைத்து
ஆத்மாக்களும் சாந்திதாமத்திற்கு
திரும்பிச்
செல்கிறார்கள்.
ஒவ்வொரு
ஆத்மாவும்
தன்னுடைய
கணக்கு
வழக்கை
முடித்து,
தகுதியாகி,
வீடு
திரும்ப
வேண்டும்.
பாடல்:
இந்தப்
பாவ
உலகத்திலிருந்து...
ஓம்
சாந்தி.
இனிமையிலும்
இனிமையான
ஆன்மீகக்
குழந்தைகள்
பாட்டைக்
கேட்டனர்.
இது
பாவ உலகம்
என்று
குழந்தைகள்
தெரிந்திருக்கின்றனர்.
புதிய
உலகம்
புண்ணிய
உலகம்
ஆகும்.
அங்கே
பாவம் ஏற்படுவதில்லை.
அது
இராம
இராஜ்யம்,
இது
இராவண
இராஜ்யம்
ஆகும்.
இந்த
இராவண
இராஜ்யத்தில் அனைவரும்
தூய்மையற்றவர்கள்,
துக்கமானவர்கள்
ஆவர்,
ஆகையால்
தான்
அழைக்கின்றனர்
-
ஹே,
பதீத பாவனரே!
வந்து
தூய்மையாக்குங்கள்
என்று.
அனைத்து
மதத்தினரும்
அழைக்கின்றனர்
-
ஓ,
இறை
தந்தையே!
வந்து
எங்களை
விடுவியுங்கள்,
வழிகாட்டி
ஆகுங்கள்.
பாபா
எப்போது
வருகின்றாரோ,
அப்போது
முழு உலகத்தில்
என்னென்ன
மதத்தினர்
இருக்கின்றனரோ,
அனைவரையும்
அழைத்துச்
செல்கிறார்.
இந்த
நேரம் அனைவரும்
இராவண
இராஜ்யத்தில்
இருக்கின்றனர்.
அனைத்து
மதத்தினரையும்
சாந்திதாமத்திற்கு
திரும்ப அழைத்துச்
செல்கிறார்.
அனைவருக்கும்
வினாசம்
ஏற்பட்டே
தீர
வேண்டும்.
பாபா
இங்கு
வந்து
குழந்தைகளை சுகதாமத்திற்குத்
தகுதியானவர்களாக
ஆக்குகிறார்.
அனைவருக்கும்
நன்மை
செய்கிறார்,
ஆகையால்
பாபா ஒருவரைத்
தான்
அனைவருக்கும்
சத்கதி
வழங்கக்
கூடிய
வள்ளல்,
அனைவருக்கும்
நன்மை
செய்பவர்
என்று சொல்லப்படுகிறது.
இப்போது
நீங்கள்
திரும்பிச்
செல்ல
வேண்டும்
என்று
பாபா
சொல்கிறார்.
அனைத்து
மதத்தினரும் சாந்திதாமம்,
நிர்வாணதாமம்
செல்ல
வேண்டும்.
அங்கே
அனைத்து
ஆத்மாக்களும்
அமைதியில்
இருக்கின்றனர்.
படைப்பவராகிய
எல்லையற்ற
தந்தை
வந்து
அனைவருக்கும்
முக்தி,
ஜீவன்
முக்தி
கொடுக்கிறார்.
ஆகையால் அந்த
ஒரு
இறை
தந்தையைத்
தான்
மகிமை
செய்ய
வேண்டும்.
அவரே
வந்து
அனைவருக்கும்
நன்மை செய்கிறார்,
அவரைத்
தான்
நினைவு
செய்ய
வேண்டும்.
நான்
தூர
தேசி,
பரந்தாமத்தில்
வசிக்ககூடியவன் என்று
பாபா
அவரே
புரிய
வைக்கிறார்.
அனைத்திற்கும்
முதலாக
எந்த
ஆதி
சனாதன
தேவி
தேவதா
தர்மம் இருந்ததோ,
அது
இப்போது
இல்லை,
ஆகையால்
தான்
என்னை
அழைக்கிறார்கள்.
நான்
வந்து
அனைத்து குழந்தைகளையும்
திரும்ப
அழைத்துச்
செல்கிறேன்.
இப்போது
இந்து
என்று
எந்த
தர்மமும்
கிடையாது.
உண்மையானது
தேவி
தேவதா
தர்மம்
ஆகும்.
ஆனால்
தூய்மை
இல்லாத
காரணத்தினால்
தன்னை
தேவதை என்று
சொல்லிக் கொள்வதற்குப்
பதிலாக
இந்து
என்று
சொல்லிவிட்டனர்.
இந்து
தர்மத்தை
ஸ்தாபனை செய்பவர்
என்று
யாரும்
கிடையாது.
கீதை
தான்
அனைத்து
சாஸ்திரங்களுக்கும்
சிரோன்மணி
ஆகும்.
அது பகவானுடையது
என்று
பாடப்பட்டுள்ளது.
பகவான்
என்று
ஒருவரைத்
தான்
சொல்லப்படுகிறது
-
இறை
தந்தை.
கிருஷ்ணர்
அல்லது
இலக்ஷ்மி
நாராயணரை
இறை
தந்தை
அல்லது
பதீத
பாவனன்
என்று
சொல்ல
மாட்டார்கள்.
அவர்கள்
இராஜா-இராணி
ஆவர்.
அவர்களை
இப்படி
யார்
ஆக்கியது?
பாபா.
பாபா
முதலில் புதிய
உலகத்தைப் படைக்கிறார்,
அந்த
உலகத்திற்கு
இவர்கள்
(இலக்ஷ்மி
நாராயணர்)
எஜமானர்
ஆகிறார்கள்.
எப்படி
ஆனார்கள்?
இது
மனிதர்கள்
யாருக்கும்
தெரியாது.
பெரிய-பெரிய
இலட்சாதிபதிகள்
கோயில்
போன்றவறைக்
கட்டுகின்றனர்.
இவர்கள்
(இலக்ஷ்மி
நாராயணர்)
இந்த
உலக
இராஜ்யத்தை
எப்படி
அடைந்தார்கள்?
எப்படி
எஜமானர்
ஆனார்கள்?
என்று
அவர்களிடம்
கேட்க
வேண்டும்.
ஒருபோதும்
யாரும்
இதற்கு
பதில்
கூற
முடியாது.
இவ்வளவு
பலன் அடையும்படி
அப்படி
என்ன
காரியம்
செய்தார்கள்?
இப்போது
பாபா
புரிய
வைக்கிறார்
-
நீங்கள்
உங்களுடைய தர்மத்தையே
மறந்து
விட்டீர்கள்.
ஆதி
சனாதன
தேவி
தேவதா
தர்மத்தைப்
பற்றித்
தெரியாத
காரணத்தினால் அனைவரும்
வேறு
வேறு
மதங்களுக்கு
மாறி
விட்டார்கள்.
அவர்கள்
மீண்டும்
தன்னுடைய
தர்மங்களுக்கு திரும்பி
வருவார்கள்.
யார்
ஆதி
சனாதன
தேவி
தேவதா
தர்மத்தைச்
சேர்ந்தவர்களோ,
அவர்கள்
மீண்டும் தன்னுடைய
தர்மத்திற்கே
வந்து
விடுவார்கள்.
கிறிஸ்தவ
தர்மத்தவராக
இருந்தால்,
கிறிஸ்தவ
தர்மத்திற்கே வந்து
விடுவார்.
இந்த
ஆதி
சனாதன
தேவி
தேவதா
தர்மத்தின்
நாற்று
நடப்பட்டுக்
கொண்டிருக்கிறது.
யார்-யார்
எந்தெந்த
தர்மத்தைச்
சேர்ந்தவர்களோ,
அவர்கள்
தன்னுடைய
தர்மத்திற்கே
வர
வேண்டியிருக்கும்.
இது
மரம்
அகும்,
இதனுடையது
மூன்று
கிளைகள்,
பிறகு
அதிலிருந்து வளர்ச்சி
அடைந்து
கொண்டே போகிறது.
வேறு
யாரும்
இந்த
ஞானத்தைக்
கொடுக்க
முடியாது.
நீங்கள்
உங்களுடைய
தர்மத்திற்கு
வாருங்கள் என்று
இப்போது
பாபா
சொல்கிறார்.
சிலர்
நான்
சன்னியாச
தர்மத்திற்குச்
செல்கின்றேன்,
இராமகிருஷ்ண பரமஹம்சர்
சன்னியாசியைப்
பின்பற்றுபவன்
ஆவேன்
என்று
சொல்கின்றனர்.
அவர்கள்
துறவற
மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள்,
நீங்கள்
இல்லற
தர்மத்தைச்
சேர்ந்தவர்கள்
ஆவர்கள்
துறவற
மார்க்கத்தில்
இருப்பவர்கள்
-
இல்லற
மார்க்கத்தினரை
பின்பற்றுபவர்களாக
எப்படி
ஆக
முடியும்?
நீங்கள்
முதலில் இல்லற
மார்க்கத்தில் தூய்மையாக
இருந்தீர்கள்.
பிறகு
இராவணன்
மூலமாக
நீங்கள்
தூய்மையற்றவர்
ஆகிவிட்டீர்கள்.
இந்த விசயங்களை
பாபா
புரிய
வைக்கிறார்.
நீங்கள்
இல்லற
மார்க்கத்தைச்
சேர்ந்தவர்கள்,
நீங்கள்
தான்
பக்தியும் செய்ய
வேண்டும்.
பாபா
வந்து
பக்தியின்
பலனாக
சத்கதியைக்
கொடுக்கிறார்.
தர்மம்
தான்
சக்தி
வாய்ந்தது என்று
சொல்லப்படுகிறது.
பாபா
தர்மத்தை
ஸ்தாபனை
செய்கிறார்.
நீங்கள்
முழு
உலகத்தின்
எஜமானன் ஆகின்றீர்கள்.
பாபாவிடமிருந்து
உங்களுக்கு
எவ்வளவு
சக்தி
கிடைக்கிறது.
ஒரு
சர்வ
சக்திவான்
பாபா
தான் வந்து
அனைவருக்கும்
சத்கதி
கொடுக்கிறார்,
வேறு
யாரும்
சத்கதி
கொடுக்கவும்
முடியாது.
சத்கதியைப் பெறவும்
முடியாது.
இங்கே
தான்
விருத்தி
அடைந்து
கொண்டே
போகின்றனர்.
நான்
வராமல்,
யாரும் திரும்பிச்
செல்ல
முடியாது.
நான்
அனைத்து
தர்மங்களுக்கும்
சேவகனாக
(நங்ழ்ஸ்ஹய்ற்)
இருக்கின்றேன்.
அனைவருக்கும்
வந்து
சத்கதி
கொடுக்கின்றேன்.
சத்கதி
என்று
சத்யுகத்தை
சொல்லப்படுகிறது.
சாந்திதாமத்தில் முக்தி
ஆகும்.
ஆக
அனைத்தையும்
விட
பெரியவர்
யார்?
பாபா
சொல்கிறர்
-
ஹே,
குழந்தைகளே!
நீங்கள் அனைவரும்
சகோதரர்கள்
ஆவீர்கள்.
அனைவருக்கும்
பாபாவிடமிருந்து
ஆஸ்தி
கிடைக்கிறது.
அனைவரையும் அவரவர்
பிரிவுகளுக்கு
அனுப்புவதற்கு
தகுதி
ஆக்குகின்றேன்.
தகுதி
ஆகவில்லை
என்றால்
தண்டனைகள் பெற
வேண்டி
இருக்கிறது.
கணக்கு
வழக்கு
முடித்து
விட்டு
திரும்பிச்
செல்கின்றனர்.
அது
சாந்திதாமம் மற்றும்
இது
சுகதாமம்
ஆகும்.
நான்
வந்து
புதிய
உலகத்தை
ஸ்தாபனை
செய்கின்றேன்,
இதில்
உழைக்க
வேண்டி
இருக்கிறது
என்று பாபா
சொல்கிறார்.
ஒரேடியாக
அஜாமில்
போன்ற
பாவிகளை
இப்படிப்பட்ட
தேவிதேவதையாக
ஆக்குகின்றேன்.
எப்போது
நீங்கள்
வாம
மார்க்கத்தில்
சென்றீர்களோ,
அப்போது
முதலாக
ஏணிப்படியில்
இறங்கிக்
கொண்டே வந்துள்ளீர்கள்.
இந்த
84
பிறவிகளின்
ஏணியே,
கீழே
இறங்குவதற்காகத்
தான்
ஆகும்.
சதோபிரதானத்திலிருந்து சதோ,
ரஜோ,
தமோ...
இப்போது
இது
சங்கமயுகம்
ஆகும்.
நான்
வருவதே
ஒருமுறை
தான்
என்று
பாபா சொல்கிறார்.
நான்
இப்ராஹிம்,
புத்தரின்
சரீரத்தில்
வருவதில்லை.
நான்
புருஷோத்தம
சங்கமயுகத்தில்
வருகின்றேன்.
தந்தையைப்
பின்பற்றுங்கள்
என்று
இப்போது
சொல்லப்படுகிறது.
நீங்கள்
அனைத்து
ஆத்மாக்களும்
என்னைத் தான்
பின்பற்ற
வேண்டும்.
என்னையே
நினைவு
செய்யுங்கள்,
அப்போது
உங்கள்
பாவம்
யோக
அக்னியில் பஸ்மம்
ஆகிவிடும்.
இது
யோக
அக்னி
என்று
கூறப்படுகிறது.
நீங்கள்
உண்மையிலும்
உண்மையான
பிராமணர் ஆவீர்கள்.
நீங்கள்
காமச்
சிதையிலிருந்து இறங்கி
ஞானச்
சிதையில்
அமர்கின்றீர்கள்.
இதை
ஒரே
ஒரு
பாபா தான்
புரிய
வைக்கிறார்.
கிறிஸ்து,
புத்தர்
போன்ற
அனைவரும்
ஒருவரை
நினைவு
செய்கின்றனர்.
ஆனால் அவரை
யதார்த்தமாக
யாரும்
தெரிந்து
கொள்ளவில்லை.
இப்போது
நீங்கள்
ஆஸ்திகர்
ஆகி
இருக்கின்றீர்கள்.
படைப்பவர்
மற்றும்
படைப்பை
நீங்கள்
பாபா
மூலமாக
அறிந்துள்ளீர்கள்.
ரிஷி-முனிகள்
தெரியாது-தெரியாது,
எங்களுக்குத்
தெரியாது
என்று
சொல்லிவிட்டனர்.
சொர்க்கம்
சத்தியமான
கண்டம்
ஆகும்,
துக்கத்தின்
பெயரே இருக்காது.
இங்கே
எவ்வளவு
துக்கம்
இருக்கிறது.
ஆயுளும்
மிகக்குறைவு.
தேவதைகளின்
ஆயுள்
எவ்வளவு அதிகம்.
அவர்கள்
தூய்மையான
யோகிகள்.
இங்கே
தூய்மையற்ற
போகிகள்.
ஏணியில்
இறங்க
இறங்க
ஆயுள் குறைந்து
கொண்டே
போகிறது.
அகால
மரணம்
கூட
ஏற்பட்டுக்
கொண்டே
இருக்கிறது.
நீங்கள்
21
பிறவிகளுக்கு ஒருபோதும்
நோய்வாய்படாதவாறு
பாபா
உங்களை
ஆக்குகின்றார்.
ஆக
அப்படிப்பட்ட
பாபாவிடமிருந்து
ஆஸ்தி பெற
வேண்டும்.
ஆத்மா
எவ்வளவு
புத்திசாலியாக ஆக
வேண்டும்.
அங்கே
எந்த
துக்கமும்
இருக்காது,
பாபா அப்படிப்பட்ட
ஆஸ்தியைக்
கொடுக்கிறார்.
உங்கள்
அழுகை
கூக்குரல்
எல்லாம்
முடிந்து
போய்
விடுகிறது.
அனைவரும்
நடிகர்கள்
தான்.
ஆத்மா
ஒரு
சரீரத்தை
விட்டு
இன்னொரு
சரீரம்
எடுக்கிறது.
இது
கூட
நாடகம் தான்.
பாபா
கர்மம்,
அகர்மம்
மற்றும்
விகர்மத்தின்
கதியையும்
(விளைவு)
புரிய
வைக்கிறார்.
கிருஷ்ணருடைய ஆத்மா
84
பிறவிகள்
எடுத்து
இப்போது
கடைசியில்
அதே
ஞானத்தைக்
கேட்டுக்
கொண்டிருக்கிறது.
பிரம்மாவின் பகல்
மற்றும்
இரவு
என்று
பாடப்பட்டுள்ளது.
பிரம்மாவின்
பகல்-இரவு
தான்
பிராமணர்களின்
இரவு-பகல்
ஆகும்.
இப்போது
உங்கள்
பகல்
ஏற்படப்போகிறது.
மகாசிவராத்திரி
என்று
சொல்கின்றனர்.
இப்போது
பக்தியின் இரவு
முடிந்து
ஞானம்
உதயம்
ஆகிறது.
இப்போது
சங்கமம்
அகும்.
இப்போது
நீங்கள்
மீண்டும்
சொர்க்கவாசி ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள்.
இருள்
நிறைந்த
இரவில்
முட்டி
மோதினீர்கள்,
கால்கள்
தேய்ந்தன,
பணமும் விரயமானது.
இப்போது
பாபா
சொல்கிறார்,
உங்களை
சாந்திதாமம்
மற்றும்
சுகதாமம்
அழைத்துச்
செல்ல
நான் வந்திருக்கின்றேன்.
நீங்கள்
சுகதாமத்தில்
வசிப்பவர்களாக
இருந்தீர்கள்.
84
பிறவிகளுக்குப்
பின்
துக்கதாமத்தில் வந்து
விழுந்து
விட்டீர்கள்.
பிறகு,
பாபா
இந்த
பழைய
உலகத்துக்கு
வாருங்கள்
என்று
அழைக்கின்றீர்கள்.
இது
உங்களுடைய
உலகம்
அல்ல.
நீங்கள்
இப்போது
யோக
பலத்தின்
மூலம்
தன்னுடைய
உலகத்தை ஸ்தாபனை
செய்து
கொண்டிருக்கின்றீர்கள்.
நீங்கள்
இப்போது
டபுள்
அஹிம்சாவாதி
ஆக
வேண்டும்.
காம விகாரம்
இருக்கக்
கூடாது,
சண்டை
சச்சரவு
செய்யக்
கூடாது.
நான்
ஒவ்வொரு
5000
வருடங்களுக்குப்
பிறகு வருகின்றேன்
என்று
பாபா
கூறுகின்றார்.
இந்த
கல்பம்
5000
வருடத்திற்கானது
ஆகும்,
லட்சம்
வருடங்கள் கிடையாது.
லட்சம்
வருடங்களாக
இருந்தால்,
இங்கே
மிகவும்
மக்கள்
தொகை
இருக்கும்.
பொய்
சொல்லிக் கொண்டே
இருக்கின்றனர்.
ஆகையால்
தான்
பாபா
சொல்கிறார்
-
நான்
கல்ப
கல்பத்திற்கும்
வருகின்றேன்,
எனக்கும்
நாடகத்தில்
நடிப்பு
இருக்கிறது.
என்னுடைய
பாகத்தை
நடிக்காமல்,
நான்
எதுவும்
செய்ய
முடியாது.
நானும்
நாடகத்தின்
பந்தனத்தில்
(கட்டுப்பட்டு)
இருக்கின்றேன்.
நேரம்
முடியும்
போது
வருகின்றேன்,
மன்மனாபவ.
ஆனால்
இதன்
அர்த்தம்
யாருக்கும்
தெரியாது.
தேகத்தின்
அனைத்து
பந்தனங்களையும்
விடுத்து
மனதினால் ஒருவரையே
நினைவு
செய்தால்
அனைவரும்
தூய்மை
ஆகி
விடுவீர்கள்.
குழந்தைகள்
பாபாவை
நினைவு செய்வதற்கான
முயற்சி
செய்து
கொண்டே
இருக்கின்றனர்.
இது
ஈஸ்வரிய
விஷ்வ
வித்யாலயம்
ஆகும்.
இது
போன்ற
வித்யாலயம்
வேறு
எதுவும்
இருக்க
முடியாது.
இங்கே
ஈஸ்வரன்
தந்தை
வந்து
முழு
உலகத்தையும்
மாற்றுகின்றார்.
நரகத்திலிருந்து சொர்க்கமாக
மாற்றுகின்றார்.
அந்த
சொர்க்கத்தில்
நீங்கள்
ராஜ்ஜியம்
செய்கின்றீர்கள்.
இப்போது
பாபா
சொல்கின்றார்
-
என்னை
நினைவு செய்தால்
நீங்கள்
தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக
ஆகி
விடுவீர்கள்.
இது
பாபாவின்
பாக்கியசாலிரதம் ஆகும்.
இதில்
பாபா
வந்து
பிரவேசம்
ஆகின்றார்.
சிவஜெயந்தியை
யாரும்
அறிந்து
கொள்ளவில்லை.
அவர்கள்
பரமாத்மா
பெயர்
ரூபத்திலிருந்து தனிப்பட்டவர்
என்று
சொல்லிவிடுகின்றனர்.
பெயர்-ரூபமற்ற
பொருள்
என்று
எதுவுமே
கிடையாது.
இது
ஆகாயம்
என்று
சொல்கிறார்கள்,
ஆக
இது
பெயர்
ஆகி
விடுகிற தல்லவா!
போலார்
என்று
சொன்னாலும்,
அது
கூட
பெயர்
தான்.
ஆக
பாபாவுக்கும்
கல்யாணகாரி
(நன்மை
செய்பவர்)
என்ற
பெயர்
இருக்கிறது.
பிறகு
பக்தி
மார்க்கத்தில்
நிறைய
பெயர்கள்
வைத்துள்ளனர்.
பசுபதிநாத் என்றும்
சொல்கின்றனர்.
அவர்
வந்து
காம
விகாரத்தில்
இருந்து
விடுவித்து
தூய்மை
ஆக்குகின்றார்.
துறவற மார்க்கத்தினர்
பிரம்மத்தையே
பரமாத்மா
என்று
ஏற்றுக்
கொள்கின்றனர்,
அதையே
நினைவு
செய்கின்றனர்.
பிரம்ம
யோகி,
தத்துவ
யோகி
என்று
சொல்கின்றனர்.
ஆனால்
அது
வசிக்ககூடிய
இடம்
ஆகும்,
அதுவே பிரம்மாண்டம்
என்றும்
சொல்லப்படுகிறது.
அவர்கள்
பிரம்ம
தத்துவத்தையே
பகவான்
என்று
நினைக்கின்றனர்.
அதில்
ஒன்றிப்போய்விடலாம்
என்று
நிமனத்துக்
கொள்கின்றனர்.
ஆத்மாவை
அழியக்கூடியது
என்று
நினைக்கின்றனர்.
நான்
தான்
வந்து
அனைவருக்கும்
சத்கதி
கொடுக்கின்றேன்
என்று
பாபா
சொல்கிறார்.
ஆகையால் ஒரு
சிவபாபாவின்
ஜெயந்தி
வைரத்துக்கு
சமமானது
ஆகும்.
மற்ற
அனைத்து
ஜெயந்திகளும்
சோழிக்குச் சமமானது.
சிவபாபா
தான்
அனைவருக்கும்
சத்கதி
கொடுக்கின்றார்.
ஆகையால்
அவர்
வைரத்துக்குச்
சமமானவர்.
அவர்
தான்
உங்களை
பொன்னான
உலகத்திற்கு
அழைத்து
செல்கிறார்.
இந்த
ஞானத்தை
உங்களுக்கு
பாபா தான்
வந்து
கற்பிக்கிறார்,
அவர்
மூலம்
நீங்கள்
தேவி
தேவதை
ஆகின்றீர்கள்.
பிறகு
இந்த
ஞானம்
மறைந்து போய்
விடுகிறது.
இந்த
லக்ஷ்மி
நாராயணரிடம்
படைப்பு
மற்றும்
படைப்பவரைப்
பற்றிய
ஞானம்
கிடையாது.
குழந்தைகள்
பாட்டைக்
கேட்டனர்
-
சுகம்
சாந்தி
நிறைந்த
இடத்திற்கு
அழைத்துச்
செல்லுங்கள்
என்று சொல்கின்றனர்.
அது
தான்
சாந்திதாமம்,
பிறகு
சுகதாமம்.
அங்கே
அகால
மரணம்
ஏற்படுவதில்லை.
ஆக குழந்தைகளை
அந்த
சுகம்-சாந்தி
நிறைந்த
உலகத்திற்கு
அழைத்துச்
செல்வதற்காக
பாபா
வந்திருக்கிறார்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
வெகுகாலம்
காணாமல்
போய்
மீண்டும்
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு
தாய்
தந்தை
பாப்தாதாவின்
அன்பு
நினைவு
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே!
இரவு
வகுப்பு
:
இப்போது
உங்களுடைய
சூரிய
வம்சம்
மற்றும்
சந்திர
வம்சம்
இரண்டும்
உருவாகிறது.
எந்தளவு
நீங்கள்
தெரிந்திருக்கின்றீர்களோ,
தூய்மை
ஆகி
இருக்கின்றீர்களோ
அந்தளவு
யாரும்
தெரிந்திருக்க முடியாது,
தூய்மை
ஆக
முடியாது.
மற்றபடி
கேட்பார்கள்,
பாபா
வந்திருக்கிறார்
என்றதும்
பாபாவை
நினைக்க ஆரம்பித்து
விடுவார்கள்.
இலட்சக்கணக்கானோர்,
கோடிக்கணக்கானோர்
புரிந்து
கொள்வார்கள்
–
இதையும் நீங்கள்
போகப்போகப்
பார்ப்பீர்கள்.
அப்படிப்பட்ட
வாயுமண்டலம்
(சூழ்நிலை)
கூட
இருக்கும்.
கடைசி சண்டையில்
அனைவரும்
நம்பிக்கையற்றவர்
ஆகிவிடுவார்கள்.
அனைவருக்கும்
டச்
ஆகும்.
உங்கள் வார்த்தைகள்
வெளியே
கேட்கும்.
சொர்க்கத்தின்
ஸ்தாபனை
நடந்து
கொண்டிருக்கிறது.
மற்றபடி
அனைவரின் மரணம்
தயாராக
இருக்கிறது.
ஆனால்
அந்த
நேரம்
இப்படி
இருக்கும்
-
சாப்பிடக்
கூட
சமயம்
இருக்காது.
யார்
இருப்பார்களோ,
அவர்கள்
கடைசியில்
அனைத்தையும்
புரிந்து
கொள்வார்கள்.
இவர்கள்
அனைவரும் அந்த
நேரம்
இருப்பார்கள்
என்பதும்
கிடையாது.
சிலர்
இறந்தும்
போய்
விடுவார்கள்.
யார்
கல்ப-கல்பமாக
இருந்தார்களோ,
அவர்கள்
இருப்பார்கள்.
அந்த
நேரம்
ஒரே
ஒரு
பாபாவின்
நினைவில்
இருப்பீர்கள்.
சத்தமும் குறைந்து
விடும்.
பிறகு
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
பாபாவை
நினைக்க
ஆரம்பித்து
விடுவீர்கள்.
நீங்கள் அனைவரும்
சாட்சி
ஆகி
பார்ப்பீர்கள்.
மிகவும்
பயங்கரமான
சம்பவங்கள்
நடந்து
கொண்டே
இருக்கும்.
இப்போது
அழியப்
போகிறது,
உலகம்
மாற
வேண்டும்
என்று
அனைவருக்கும்
தெரிந்து
விடும்.
எப்போது அணுகுண்டுகள்
போடப்படுமோ,
அப்போது
வினாசம்
ஏற்படும்
என்று
புத்தி
சொல்கிறது.
நாங்கள்
குண்டுகளை ஏவ
மாட்டோம்
என்று
உறுதி
கொடுங்கள்
என்று
தங்களுக்குள்
சொல்லிக் கொண்டே
இருக்கிறார்கள்.
ஆனால் இந்த
அனைத்து
பொருட்களும்
வினாசத்துக்காகத்
தான்
உருவாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளாகிய
உங்களுக்கு
மிகுந்த
மகிழ்ச்சி
இருக்க
வேண்டும்.
புதிய
உலகம்
உருவாகிக்
கொண்டிருக்கிறது
என்று
நீங்கள்
தெரிந்திருக்கிறீர்கள்.
பாபா
தான்
புதிய
உலகத்தை
ஸ்தாபனை
செய்வார்
என்று
புரிந்துள்ளீர்கள்.
அங்கே
துக்கத்தின்
பெயரே
இருக்காது.
அதன்
பெயரே
சொர்க்கம்
ஆகும்.
உங்களுக்கு
எப்படி
நிச்சயம் உள்ளதோ,
அப்படியே
போகப்போக
பலருக்கு
ஏற்படும்.
யாருக்கு
அனுபவம்
வேண்டுமோ,
அவர்கள்
போகப்போக மிகவும்
பெறுவார்கள்.
கடைசி
நேரத்தில்
நினைவு
யாத்திரையில்
கூட
நிறைய
பேர்
இருப்பார்கள்.
இப்போது நேரம்
இருக்கிறது,
முழுமையான
முயற்சி
செய்ய
வில்லையானால்,
பதவி
குறைந்து
விடும்.
முயற்சி
செய்வதன் மூலம்,
பதவி
கூட
நல்லதாகக்
கிடைக்கும்.
அந்த
நேரம்
உங்கள்
நிலை
கூட
மிக
நன்றாக
இருக்கும்.
சாட்சாத் காரம்
கூட
பார்ப்பார்கள்.
கல்ப-கல்பமாக
எப்படி
வினாசம்
ஆனதோ,
அப்படியே
ஆகும்.
யாருக்கு
நிச்சயம் இருக்குமோ,
சக்கரத்தின்
ஞானம்
இருக்குமோ,
அவர்கள்
மகிழ்ச்சியில்
இருப்பார்கள்.
நல்லது
–
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
இரவு
வணக்கம்.
தாரணைக்கான
முக்கிய
சாராம்:
1.
டபுள்
அஹிம்சாவாதி
ஆகி,
யோக
பலத்தின்
மூலம்
இந்த
நரகத்தை
சொர்க்கமாக
ஆக்க வேண்டும்.
தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம்
ஆவதற்கான
முயற்சி
செய்ய
வேண்டும்.
2.
ஒரு
பாபாவை
முழுமையாகப்
பின்பற்ற
வேண்டும்.
உண்மையிலும்
உண்மையான
பிராமணன் ஆகி
யோக
அக்னி
மூலம்
விகர்மங்களை
எரிக்க
வேண்டும்.
அனைவரையும்
காமச் சிதையிலிருந்து அகற்றி
ஞானச்சிதையில்
அமரவைக்க
வேண்டும்.
வரதானம்:
தந்தையைத்
தெரிந்து
கொண்டு
மற்றும்
தூய்மையின்
சுயதர்மத்தை தனதாக்கிக்
கொள்ளக்கூடிய
விசேஷ
ஆத்மா
ஆகுக.
என்னுடைய
ஒவ்வொரு
குழந்தையும்
விசேஷ
ஆத்மா
-
அவர்கள்
வயதானவர்களோ,
படிப்பறிவு இல்லாதவர்களோ,
சிறிய
குழந்தையோ,
இளைஞர்ககளாகவோ
மற்றும்
இல்லறத்தில்
உள்ளவர்களோ,
ஆனால் உலகத்திற்கு
முன்னால்
விசேஷமானவர்கள்
என்று
பாப்தாதாவிற்கு
குஷி
ஏற்படுகிறது.
உலகத்தில்
எவ்வளவு பெரிய
தலைவர்களாக
இருந்தாலும்,
நடிகனாக
இருந்தாலும்,
விஞ்ஞானியாக
இருந்தாலும்
தந்தையை
பற்றியே தெரிந்துக்
கொள்ளவில்லையென்றால்
வேறு
என்ன
தெரிந்துள்ளார்கள்?
நீங்கள்
தேடிக்
கொண்டியிருக்கிறீர்கள்,
நாங்களோ
அடைந்துவிட்டோம்
என்று
நம்பிக்கை
புத்தியுடைய
நீங்கள்
கர்வத்தோடு
சொல்வீர்கள்.
இல்லறத்தில் இருந்தாலும்
கூட
தூய்மையின்
சுயதர்மத்தை
தனதாக்கி
கொண்டியிருப்பதால்,
தூய்மையான
ஆத்மா
விசேஷ
ஆத்மா
ஆகிவிட்டீர்கள்.
சுலோகன்:
சதா
மகிழ்ச்சியாக
இருக்கக்
கூடியவர்
தான்
தனக்கும் மற்றவர்களுக்கும்
பிரியமானவர்கள்.
ஓம்சாந்தி