17.02.2019           மதுபன்               அவ்யக்த பாப்தாதா                    ஓம்சாந்தி         22.04.19.84


 

விசித்திர தந்தையின் மூலமாக விசித்திர படிப்பு மற்றும் விசித்திர பிராப்தி

 

இன்று ஆன்மீகத் தந்தை தன்னுடைய ஆன்மீகக் குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்கிறார். ஆன்மீக தந்தை, ஒவ்வொருவரிடமும் எந்தளவு ஆன்மீக சக்தி நிரம்பியிருக்கிறது என்று ஒவ்வொரு ஆத்மாவையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஆத்மாவும் எந்தளவு குஷியின் சொரூபம் ஆகியிருக்கிறார். ஆன்மீக தந்தை அழியாத குஷியின் பொக்கிஷத்தை குழந்தைகளுக்கு பிறப்புரிமையாகக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொருவரும் தன்னுடைய ஆஸ்தியை, அதிகார உரிமையை வாழ்க்கையில் எந்தளவு பிராப்தி செய்திருக்கிறார். குழந்தையாக இருப்பவர் பொக்கிஷங்களின் அதிபதியாக ஆகியிருக்கிறாரா என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். தந்தை வள்ளல், அனைத்து குழந்தைகளுக்கும் முழுமையான அதிகாரத்தைக் கொடுக்கிறார், ஆனால் ஒவ்வொரு குழந்தையும் அவரவர்களின் தாரணையின் சக்திக்கு ஏற்றப்படி அதிகாரி ஆகுகிறார்கள். தந்தைக்கோ அனைத்து குழந்தைகளுக்காக ஒவ்வொரு ஆத்மா என்ற குழந்தை எப்பொழுதும் அனைத்து பொக்கிஷங்களினால் நிரம்பி அனேக ஜென்மங்களுக்காக சம்பூர்ண ஆஸ்தியின் அதிகாரி ஆகி விடவேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணம் தான் இருக்கிறது. அந்தமாதிரி பிராப்தி செய்வதின் ஊக்கம், உற்சாகத்தில் இருக்கும் குழந்தைகளைப் பார்த்து பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொரு சிறிய - பெரிய குழந்தை, வாலிபர் மற்றும் வயோதிகர், இனிமையான தாய்மார்கள், படித்திருந்தாலும் சரி, படிக்காவிட்டாலும், உடலால் பலமற்று இருந்தாலும், சரி ஆத்மாக்கள் எவ்வளவு பலம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள்! ஒரு பரமாத்மா மேல் உள்ள அன்பு எவ்வளவு இருக்கிறது! நான் பரமாத்மாவை தெரிந்துக்கொண்டேன் என்றால், அனைத்தையும் தெரிந்துக்கொண்டேன் என்ற அனுபவம் இருக்கிறது. பாப்தாதாவும் அந்தமாதிரி அனுபவி ஆத்மாக்களுக்கு - ஹே முழு ஈடுபாட்டில் மூழ்கியிருக்கும் குழந்தைகளே! எப்பொழுதும் நினைவு செய்வதில் நீடுழி வாழ்க! எப்பொழுதும் சுகம் சாந்தியின் பிராப்தியில் வளர்ந்து கொண்டேயிருங்கள், அழியாத குஷியின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டேயிருங்கள். மேலும் உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்கள் என்ற தனது ஆன்மீக சகோதரகளுக்கு சுகம் சாந்தியை அடைவதற்காக சகஜ வழியைக் கூறி, அவர்களையும் ஆன்மீகத் தந்தையின் ஆன்மீக ஆஸ்திக்கு உரியவர் ஆக்குங்கள் என்ற வரதானத்தைத் தான் கொடுக்கிறார். நாம் அனைத்து ஆத்மாக்களும் ஒரு தந்தையின் குழந்தைகள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள், ஒரே உலக நாடக மேடையில் வாழ்க்கை என்ற பாகத்தை ஏற்று நடிக்கும் நடிகர்கள் என்ற இந்த ஒரு பாடத்தை அனைவருக்கும் கற்பியுங்கள். அனைத்து ஆத்மாக்களாகிய நமக்கு ஒரே இயற்கையான குணம் அமைதி மற்றும் தூய்மை. இதே பாடத்தின் மூலம் சுயபரிவர்த்தனை மற்றும் உலக பரிவர்த்தனை செய்து கொண்டிருக்கிறீர்கள், மேலும் நிச்சயம் அது நடக்கும் அவ்வளவு தான்! சுலபமான விஷயம் தான் இல்லையா? கடினம் இல்லையே? படிப்பறிவு இல்லாதவர்கள் கூட இந்த பாடத்தின் ஞானம் நிறைந்தவர்களாக ஆகியிருக்கிறார்கள்,. ஏனென்றால் படைப்பவர் விதையைத் தெரிந்து, படைப்பவர் மூலமாக படைப்பை இயல்பாகவே தெரிந்து விடுகிறார்கள். அனைவரும் ஞானம் நிறைந்தவர் தான் இல்லையா? முழு படைப்பை படைத்தவர் மற்றும் படைப்பின் மூன்று வார்த்தைகளை மட்டும் படித்து விட்டீர்கள். ஆத்மா, பரமாத்மா மற்றும் படைப்பு சக்கரம். இந்த மூன்று வார்த்தைகளினால் என்னவாக ஆகிவிட்டீர்கள், என்ன சான்றிதழ் கிடைத்திருக்கிறது? பி.., எம்.-ன் சான்றிதழ் கிடைக்கவில்லை, ஆனால் திரிகாலதரிசி (மூன்று காலங்களை தெரிந்தவர்), ஞானம் சொரூபம் என்ற இந்த பட்டம் கிடைத்திருக்கிறது தான் இல்லையா? மேலும் வருமானத்திற்கான ஆதாரமாக என்ன உள்ளது? என்ன கிடைத்திருக்கிறது? சத்தியமான ஆசிரியர் மூலமாக பல ஜென்மங்களுக்கு அழியாத அனைத்து பிராப்திகளின் உத்திரவாதம் கிடைத்திருக்கிறது. பொதுவாக எப்பொழுதும் சம்பாதித்துக் கொண்டே இருப்பாய்! செல்வந்தனாக இருப்பாய்! என்று ஆசிரியர் உத்திரவாதம் கொடுப்பதில்லை. அவரோ கற்பித்து, தகுதியானவர் ஆக்கிவிடுவார். குழந்தைகள் உங்களுக்கு அல்லது இறை மாணவர்களுக்கு தந்தை ஆசிரியர் மூலமாக தற்சமயத்தின் ஆதாரத்தில் 21 ஜென்மங்கள் சத்யுகம் திரேதாயுகத்தில் நிரந்தர சுகம், சாந்தி, செல்வம், ஆனந்தம், அன்பு நிறைந்த பரிவாரம் கண்டிப்பாக கிடைக்கும். கிடைக்கும் என்பதில்லை, கண்டிப்பாகக் கிடைக்கும். இந்த உத்திரவாதம் இருக்கிறது, ஏனென்றால் அழியாத தந்தை, அழியாத ஆசிரியர். எனவே அழியாதவர் மூலமாகக் கிடைக்கும் பிராப்தியும் அழியாதது. எனவே நான் சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர் மூலமாக அனைத்து பிராப்தியின் அதிகாரத்தை (உரிமை) அடைந்துவிட்டேன் என்ற இந்த குஷி நிறைந்த பாடலைப் பாடிக்கொண்டேயிருங்கள். இதைத் தான் விசித்திர தந்தை, விசித்திரமானவர்கள் மேலும் விசித்திர படைப்பு, விசித்திர பிராப்தி என்று கூறுவது. யாராவது எவ்வளவு தான் படித்தவராக இருந்தாலும், இந்த விசித்திர தந்தையின் மற்றும் ஆசிரியரின் படிப்பு மற்றும் ஆஸ்தியை தெரிந்து கொள்ள முடியாது. படங்களை வரையவும் முடியாது. எப்படி தெரிந்து கொள்ள முடியும். இவ்வளவு பெரிய உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை, ஆசிரியர் மேலும் எங்கே கற்பிக்கிறார், மேலும் யாருக்குக் கற்பிக்கிறார். எவ்வளவு சாதரணமாக இருக்கிறார். மனிதனை தேவதை ஆக்கும், சதா காலத்திற்கும் சரித்திரவானாக ஆக்கும் படிப்பு மேலும் படிப்பவர்கள் யார்? யாருக்கு வேறு யாரும் கற்பிக்க முடியாதோ, அவர்களுக்கு தந்தை கற்பிக்கிறார். யாருக்கு உலகம் கற்பிக்க முடியுமோ, தந்தையும் அவர்களுக்கு கற்பிக்கிறார் என்றால், அது என்ன பெரிய விஷயம். நம்பிக்கையற்ற ஆத்மாக்களைத் தான் நம்பிக்கைக்குரியவராக ஆக்குகிறார். அசம்பவத்தை சம்பவம் ஆக்குகிறார், எனவே தான் உன்னுடைய காரியம், நீ கூறும் வழியை நீ மட்டும் அறிவாய்! உனக்குத் தான் தெரியும் என்று வர்ணித்து இருக்கிறார்கள். பாப்தாதாவும் நம்பிக்கையற்றவர்களிலிருந்து நம்பிக்கைக்குரியவர் ஆகும், அந்தமாதிரி குழந்தைகளைப் பார்த்து குஷி அடைகிறார். வாருங்கள், வாருங்கள் தந்தையின் வீட்டின் அலங்காரமே, வருக! வருக!. என வரவேற்கிறார். நல்லது.

 

எப்பொழுதும் தன்னை சிரேஷ்ட பிராப்தியின் அதிகாரி என்று அனுபவம் செய்யும், சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, ஒரு ஜென்மத்தில் அனேக ஜென்மங்களின் பிராப்தியை சேமிக்கக் கூடிய ஞான சொரூப குழந்தைகளுக்கு, எப்பொழுதும் ஒரு பாடத்தை படிக்கும் மற்றும் கற்பிக்கும் சிரேஷ்ட குழந்தைகளுக்கு, எப்பொழுதும் வரம் அளிக்கும் வள்ளல் தந்தையின் வரதானங்களில் வளர்ந்து கொண்டிருக்கும் பாக்கியவான் குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் சமஸ்காரம்.

 

17.02.2019 மதுபன் அவ்யக்த பாப்தாதா ஓம்சாந்தி 24.04.19.84

தற்சமய பிராமண ஜென்மம் வைரத்திற்குச் சமமானது.

 

இன்று பாப்தாதா தன்னுடைய மிக உயர்ந்த குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். உலகில் தாழ்ந்த தூய்மையற்ற ஆத்மாக்களின் மத்தியில் இவர்கள் எவ்வளவு சிரேஷ்ட ஆத்மாக்கள். உலகத்தில் அனைத்து ஆத்மாக்களும் இறைவனை அழைத்துக் கொண்டிருப்பவர்கள், அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருப்பவர்கள், பிராப்தி இல்லாத ஆத்மாக்கள். அழியக் கூடிய அனைத்து பிராப்திகள் எவ்வளவு தான் இருந்தாலும், ஏதாவது பிராப்தியற்ற தன்மை அவசியம் இருக்கும். பிராமண குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்து பிராப்திகளின் வள்ளலின் குழந்தைகளுக்கு, கிடைக்காதது என்று ஒருபொருளும் கிடையாது. நீங்கள் எப்பொழுதும் பிராப்தி சொரூபமானவர்கள். அற்ப காலத்தின் சுகத்தின் சாதனம், அற்ப காலத்தின் வைபவங்கள், அற்ப காலத்தின் இராஜ்ய அதிகாரம் இல்லாவிட்டாலும் ஒரு பைசா இல்லாத மகாராஜாக்கள். கவலை இல்லாத இராஜாக்கள். மாயாவை வென்ற, இயற்கையை வென்ற சுயராஜ்ய அதிகாரிகள். நீங்கள் எப்பொழுதும் ஈஸ்வரிய வளர்ப்பில் வளரக் கூடிய, குஷியின் ஊஞ்சலில், அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடக் கூடியவர்கள். அழியும் செல்வத்திற்குப் பதிலாக அழியாத செல்வத்தின் அதிபதிகள். இரத்தினம் பதித்த கீரிடம் இல்லை, ஆனால் தந்தை பரமாத்மாவின் தலையின் கீரிடமாக இருக்கிறீர்கள். இரத்தினம் பதித்த அலங்காரம் இல்லை, ஆனால் ஞான இரத்தினங்கள், குணங்கள் என்ற இரத்தினங்களின் அலங்காரத்தினால் எப்பொழுதும் அலகரிக்கப் பட்டவர்கள். எவ்வளவு தான் பெரிய அழியக் கூடிய மிக உயர்ந்த வைரமாக இருந்தாலும், மிக மதிப்புள்ளதாக இருந்தாலும், ஆனால் ஒரு ஞானத்தின் இரத்தினம், குணத்தின் இரத்தினத்தின் மத்தியில் அதனுடைய மதிப்பு என்ன இருக்கிறது? இந்த இரத்தினங்கள் எதிரில் அதுவோ கல்லுக்குச் சமமானது. ஏனென்றால் அழியக் கூடியது. 9 இலட்ச மாலையின் எதிரிலும் சுயம் நீங்கள் தந்தையின் கழுத்தின் மாலை ஆகிவிட்டீர்கள். பிரபுவின் கழுத்தின் மாலையின் எதிரில் 9 இலட்சம் என்று கூறினாலும் அல்லது 9 கோடி என்று கூறினாலும் அல்லது எண்ணிலடங்காத கோடிக்கணக்கான மாலை ஒன்றுமில்லை. 36 வகையான போஜனமும் இந்த பிரம்மா போஜனத்திற்கு எதிரில் ஒன்றுமில்லை. ஏனென்றால் நேரடியாக பாப்தாதாவிற்கு போக் சமர்ப்பித்து இந்த போஜனத்தை பரமாத்மாவின் பிரசாதமாக ஆக்கி விடுகிறீர்கள். இந்தக் கடைசி ஜென்மத்தில் கூட பக்த ஆத்மாக்களிடம் பிரசாதத்திற்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது? நீங்கள் சாதாரண போஜனத்தை அருந்தவில்லை, பிரபுவின் பிரசாத்தை அருந்துகிறீர்கள். அதன் ஒவ்வொரு துளியும் பல கோடியை விட உயர்ந்தது. நீங்கள் அந்தமாதிரி மிக உயர்ந்த ஆத்மாக்கள். அந்தமாதிரி ஆன்மீக சிரேஷ்ட போதை இருக்கிறதா? நடைமுறையில் காலபோக்கில் தன்னுடைய சிரேஷ்ட தன்மையை மறந்து விடுவதில்லையே? தன்னை சாதாரணமாக நினைக்கவில்லையே? கேட்பவர் அல்லது சொல்பவராக மட்டும் இல்லாமல், சுயமரியாதை உள்ளவராக ஆகியிருக்கிறீர்களா? கேட்கும் மற்றும் சொல்பவர்களோ, அனேகர் இருக்கிறார்கள். சுய மரியாதையில் இருப்பவர்கள் கோடியில் சிலர். இதில் நீங்கள் யார்? அனேகர்களில் இருக்கிறீர்களா அல்லது கோடியில் சிலராக இருக்கிறீர்களா? பிராப்தியின் நேரத்தில் அலட்சியம் ஆனவராக ஆவது, இந்தமாதிரியானவர்களை பாப்தாதா எந்த மாதிரி புத்தியுள்ள குழந்தைகள் என்று கூறுவார்? அடைந்திருக்கும் பாக்கியத்தை, கிடைத்திருக்கும் பாக்கியத்தை அனுபவம் செய்யவில்லையென்றால், இப்பொழுது மகான் பாக்கியவனாக ஆகவில்லை என்றால், எப்பொழுது ஆவீர்கள்? இந்த சிரேஷ்ட பிராப்தியின் சங்கமயுகத்தில் ஒவ்வொரு அடியிலும், இப்பொழுது இல்லையென்றால் ஒருபொழுதும் இல்லை என்ற சுலோகனை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். புரிந்ததா? நல்லது.

 

இப்பொழுது குஜராத் மண்டலம் வந்திருக்கிறது. குஜராத்தின் விசேஷம் என்ன? குஜராத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் அவசியம் நடனமாடுவார்கள். இதுதான் அதனுடைய விசேஷம். தன்னுடைய சிறு வயது பருவத்தை, உடல் பருமனை அனைத்தையும் மறந்து விடுவார்கள். நடனத்தின் ஆர்வத்தில் மூழ்கி விடுவார்கள். முழு இரவு கூட நடனமாடிக் கொண்டேயிருப்பார்கள். எப்படி நடனமாடும் ஆர்வத்தில் முழ்கியிருக்கிறீர்கள், அதேபோல் எப்பொழுதும் ஞானத்தின் குஷியின் நடனமாடுவதிலும் முழ்கியிருக்கிறீர்கள் தான் இல்லையா. இந்த அழியாத ஆர்வத்தில் முழ்கியிருப்பதிலும் நம்பர் ஒன் பயிற்சி உள்ளவர்கள் தான் இல்லையா? விஸ்தாரமும் நன்றாக ஆகியிருக்கிறது. இந்த தடவை முக்கிய ஸ்தானம் மதுபனிற்கு அருகில் உள்ள துணையான இரண்டு மண்டலமும் வந்திருக்கிறீர்கள். ஒரு பக்கம் குஜராத், இன்னொரு பக்கம் இராஜஸ்தான். இரண்டும் அருகில் இருக்கின்றன இல்லையா? அனைத்து காரியத்தின் சம்மந்தமும் இராஜஸ்தான் மற்றும் குஜராத்துடன் இருக்கிறது. எனவே நாடகத்தின் அனுசாரம் இரண்டு ஸ்தானக்களுக்கும் சக யோகி ஆவதற்கான பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருவரும் ஒவ்வொரு காரியத்திலும் அருகில் இருப்பவர்களாக மற்றும் சகயோகியாக ஆகியிருக்கிறார்கள். சங்கமயுகத்தின் சுயராஜ்யத்தின் இராஜ்ய சிம்மாசனமோ இராஜஸ்தானில் இருக்கிறது இல்லையா? எத்தனை இராஜாக்களை தயார் செய்திருக்கிறீர்கள்? இராஜஸ்தானில் இராஜாக்களை மிகவும் மகிமை செய்திருக்கிறார்கள். எனவே இராஜக்கள் தயார் ஆகிவிட்டார்களா அல்லது ஆகிக் கொண்டு இருக்கிறார்களா? இராஜஸ்தானில் இராஜாக்களின் குதிரை சவாரி ஊர்வலம் இருக்கும். அப்படி இராஜஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு அந்தமாதிரி முழுமையான சவாரியை தயார் செய்து கொண்டுவரவேண்டும். அப்பொழுது தான் அனைவரும் மலரால் மழை பொழிவார்கள் இல்லையா? மிகவும் கம்பீரத்துடன் சவாரியில் வருவார்கள். அந்தமாதிரி எத்தனை இராஜாக்களின் சவாரி வரும். குறைந்தது எங்கெல்லாம் சேவை நிலையங்கள் இருக்கின்றனவோ, அங்கிருந்து ஒவ்வொரு இராஜா வந்தால் கூட எத்தனை இராஜக்கள் ஆகிவிடுவார்கள். 25 ஸ்தானங்களிலிருந்து 25 இராஜாக்கள் வந்தார்கள் என்றால் சவாரி அழகானதாக ஆகிவிடும் இல்லையா? நாடகத்தின் அனுசாரம் இராஜஸ்தானில் தான் சேவையின் ஆசனம் உருவாகியிருக்கிறது. அப்படி இராஜஸ்தானிற்கும் விசேஷ பங்கு இருக்கிறது. இராஜஸ்தானில் இருந்துதான் விசேஷ சேவையின் குதிரைகள் உருவானர்கள் இல்லையா? நாடகத்தில் பங்கு இருக்கிறது. அதை மீண்டும் அப்படியே செய்ய மட்டும் வேண்டும்.

 

கர்நாடகாவும் மிக நன்றாக விஸ்தாரம் ஆகிவிட்டது. இப்பொழுது கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்கு விஸ்தாரத்திலிருந்து வெளியில் வரவேண்டும். எப்பொழுது கடைந்து வெண்ணெய் எடுக்கிறார்கள் என்றால், முதலில் விஸ்தாரமாக இருக்கும், பிறகு அதிலிருந்து வெண்ணெய் சாரமாக உருவாகும். எனவே கர்நாடகாவிற்கும் இப்பொழுது விஸ்தாரத்திலிருந்து வெண்ணெய் எடுக்க வேண்டும். சார சொரூபம் ஆகவேண்டும் மற்றும் ஆக்க வேண்டும். நல்லது.

 

தன்னுடைய சிரேஷ்ட சுய கௌவரத்தில் நிலைத்திருக்கக் கூடிய, அனைத்து பிராப்திகளின் களஞ்சியம் எப்பொழுதும் சங்கமயுகத்தின் சிரேஷ்ட சுயராஜ்யம் மற்றும் மகான் பாக்கியத்தின் அதிகாரி ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் ஆன்மீக போதை மற்றும் குஷி சொரூப ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

பார்ட்டிகளுடன் சந்திப்பு;

அனைவரும் தன்னை சுயராஜ்ய அதிகாரி சிரேஷ்ட ஆத்மாக்கள் என்று நினைக்கிறீர்களா? சுயராஜ்யத்தின் அதிகாரம் கிடைத்து விட்டதா? அந்தமாதிரி அதிகாரி ஆத்மாக்கள் சக்திசாலியாக இருப்பார்கள் இல்லையா? இராஜ்யம் செய்வதை சக்தி என்று கூறப் படுகிறது. இன்றைய நாட்களின் அரசாங்கத்தையும் ஆட்சி சக்தியில் உள்ள கட்சி என்று கூறுவார்கள். அப்படி இராஜ்யம் செய்வது என்றால் சக்தி. அப்படியானால் சுயராஜ்யம் எவ்வளவு பெரிய சக்தி? அந்தமாதிரி சக்தி பிராப்தி ஆகியிருக்கிறதா? அனைத்து கர்மேயந்திரியங்களும் உங்களுடைய சக்திக்கு ஏற்றப்படி காரியம் செய்து கொண்டிருக்கின்றனவா? இராஜா எப்பொழுதும் தன்னுடைய இராஜ்ய சபையை இராஜ்ய தர்பாரை கூட்டி எப்படி இராஜ்யம் நடந்துக்கொண்டிருக்கிறது என்று கேட்கிறாரா? உங்களுடைய சுயராஜ்ய அதிகாரி இராஜாக்களின் காரிய நடவடிக்கைகள் நன்றாக நடந்து கொண்டிருக்கிறதா? அல்லது எங்காவது மேலே கீழே போகிறதா? எப்போதாவது ஏதாவது இராஜ்யத்தின் காரியம் செய்பவர் ஏமாற்றத்தைக் கொடுப்பதில்லையே? சில நேரம் கண் ஏமாற்றுகிறது, சில நேரம் காது ஏமாற்றுகிறது, சில நேரம் கை, கால்கள் என்று அப்படி ஏமாற்றுப்பட்டுக்கொண்டே இருக்கவில்லையே. ஒருவேளை இராஜ்ய சக்தி சரியாக இருக்கிறது என்றால், ஒவ்வொரு வினாடி, ஒவ்வொரு எண்ணத்தில் பல கோடியின் வருமானம் இருக்கிறது. ஒருவேளை இராஜ்யசக்தி சரியில்லையென்றால், ஒவ்வொரு வினாடியிலும் பல கோடியின் நஷ்டம் ஏற்படுகிறது. பிராப்தி இருக்கிறது என்றாலும், ஒன்றுக்கு பலகோடி மடங்கு, மேலும் இழக்கிறீர்கள் என்றால், ஒன்றுக்கு பலகோடி மடங்கு இழக்கிறீர்கள். எவ்வளவு கிடைக்கிறதோ, அந்தளவு சென்று விடவும் செய்கிறது. இது ஒரு கணக்கு. எனவே முழு நாளின் இராஜ்ய நடவடிக்கைகளைப் பாருங்கள். கண் என்ற மந்திரி சரியாக வேலை செய்கிறாரா? காது என்ற மந்திரி சரியாக வேலை செய்கிறாரா? அனைவரின் இலாக்களும் சரியாக இருந்ததா. அல்லது இல்லையா? இதை சோதனை செய்கிறீர்களா அல்லது களைப்படைந்து துங்கிவிடுகிறீர்களா? பொதுவாக காரியம் செய்வதற்கு முன்பாகவே சோதனை செய்து பிறகு காரியம் செய்ய வேண்டும். முதலில் யோசிக்க வேண்டும். பிறகு செய்ய வேண்டும். முதலில் செய்வது, பிறகு யோசிப்பது என்று அப்படியிருக்கக் கூடாது. முழு முடிவையும் பார்ப்பது வேறு விஷயம். ஆனால் ஞானி ஆத்மா முதலில் யோசிப்பார், பிறகு செய்வார். அந்தமாதிரி யோசித்து புரிந்து கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறீர்களா? நீங்கள் முதலில் யோசிப்பவர்களா அல்லது பின்னால் யோசிப்பீர்களா? ஒருவேளை ஞானி பின்னால் யோசிக்கிறார் என்றால், அவரை ஞானி என்று கூறமாட்டோம். எனவே நீங்கள் எப்பொழுதும் சுயராஜ்ய அதிகாரி ஆத்மாக்கள், மேலும் இதே சுயராஜ்யத்தின் அதிகாரம் மூலம் உலக இராஜ்யத்தின் அதிகாரியாகவும் ஆகவே வேண்டும். ஆவேனா அல்லது இல்லையா என்ற கேள்வியே இல்லை. சுயராஜ்யம் இருக்கிறது என்றால் விஷ்வ இராஜ்யமும் கண்டிப்பாக இருக்கிறது. சுயராஜ்யத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லைதான் இல்லையா? துவாபர் யுகத்தில் இருந்தே பிரச்சனையுள்ள இடங்களில் சுற்றி சுற்றியே வந்திருக்கிறீகள். இப்பொழுது பிரச்சனையுள்ள இடங்களிலிருந்து வெளிப்பட்டு வந்துவிட்டீர்கள், இப்பொழுது பின்பு ஒருபொழுதும் எந்த விதமான பிரச்சனையுள்ள இடங்களில் கால் வைக்காதீர்கள். இது அந்தமாதிரி பிரச்சனையுள்ள இடங்கள் - ஒரு தடவை கால் வைத்தீர்கள் என்றால், வெளியில் வர தெரியாமல் மறக்க வைக்கும் விளையாட்டு. பிறகு வெளியேறுவது கடினமாகிவிடும், எனவே எப்பொழுதும் ஒரே வழி, ஒரே வழியில் பிரச்சனை இருக்காது. ஒரே வழியில் செல்பவர் எப்பொழுதும் குஷியாகவும், எப்பொழுதும் திருப்தியாகவும் இருப்பார்.

 

பெங்களூர் உயர் நீதிமனறத்தின் நீதிபதியுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு

 

எந்த ஸ்தானத்தில் மேலும் என்ன அனுபவம் செய்துக்கொண்டிருக்கிறீர்கள்? அனுபவம் அனைத்தையும் விட மிகப் பெரிய அமுதல் அனுபவம் ஆத்மா அபிமானி ஆவதாகும். எப்பொழுது ஆத்ம அபிமானியின் அனுபவம் ஆகிறது என்றால், பரமாத்மாவின் அன்பு, பரமாத்மா பிராப்தியின் அனுபவமும் இயல்பாகவே ஆகிவிடுகிறது. எந்தளவு அனுபவம் இருக்குமோ, அந்தளவு சக்திசாஆகி

விடுகிறார். நீங்கள் பல ஜென்மங்களில் துக்கங்களிலிருந்து விடுவிப்பதற்கான தீர்ப்பு கூறுபவர் தான் இல்லையா? அல்லது ஒரு ஜென்மத்தின் துக்கங்களிலிருந்து விடுவிக்கும் நீதிபதியா? அவர்களோ உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி. இது ஆன்மீக நீதிமன்றம். இந்த நீதிபதி ஆவதற்கு படிப்பதற்கும் மற்றும் நேரத்திற்கும் அவசியம் இல்லை. ஆத்மா மற்றும் பரமாத்மா என்ற இரண்டு வார்த்தைகளைப் படிக்க வேண்டும் அவ்வளவு தான். இதன் அனுபவி ஆகிவிட்டீர்கள் என்றால், ஆன்மீக நீதிபதி ஆகிவிட்டீர்கள். எப்படி தந்தை பல ஜென்மங்களிலிருந்து துக்கங்களிலிருந்து விடுவிப்பவர், எனவே தந்தையை சுகம் கொடுக்கும் வள்ளல் என்று கூறுகின்றோம். எப்படி தந்தையோ அப்படியே குழந்தைகள்! இரட்டை நீதிபதி ஆவதினால், அனேக ஆத்மாக்களுக்கு நன்மை செய்வதற்கான பொறுப்பாளர் ஆகிவிடுவீர்கள். ஒரு வழக்குக்காக வருவார் மேலும் பல ஜென்மக்களின் வழக்கில் வெற்றியடைந்து செல்வார். மிகவும் குஷி அடைவார். எனவே உங்களுக்கு தந்தையின் கட்டளை ஆன்மீக நீதிபதி ஆகுங்கள் என்பதே! நல்லது. - ஒம்சாந்தி.

 

வரதானம்;

சர்வ சக்திவான் தந்தையை இணைந்த ரூபத்தில் உடன் துணையாக வைத்துக் கொள்ளும் வெற்றியடைபவர் ஆகுங்கள்.

 

எந்தக் குழந்தைகளுடன் சர்வசக்திவான் தந்தை இணைந்திருக்கிறாரோ, அவருக்கு சர்வ சக்திகள் மீது அதிகாரம் இருக்கிறது. மேலும் எங்கு சர்வ சக்திகளும் இருக்கிறதோ, அங்கு வெற்றி இல்லை என்பது அசம்பவம். ஒருவேளை எப்பொழுதும் தந்தையுடன் இணைந்திருப்பதில் குறை இருக்கிறது என்றால், வெற்றியும் குறைவாகவே இருக்கும். எப்பொழுதும் துணைவனாக இருந்து நடந்து கொள்ளும் அழியாத துணைவனை இணைந்த ரூபத்தில் வைத்தீர்கள் என்றால், வெற்றி பிறப்புரிமை ஆகிவிடும், ஏனென்றால் வெற்றி மாஸ்டர் சர்வ சக்திவானின் முன்னுக்கு - பின்னுக்கு சுற்றுகிறது.

 

சுலோகன்:

யார் விகாரங்கள் என்ற அசுத்தத்தைத் தீண்டுவது கூட இல்லையோ, அவர் தான் உண்மையான வைஷ்ணவன்.

 

ஓம்சாந்தி