26.02.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இந்த சரீரத்திலிருந்து உயிருடன் இருந்து கொண்டே இறந்த நிலையை அடைவதற்காக பயிற்சி செய்யுங்கள் - நானும் ஆத்மா, நீங்களும் ஆத்மா இந்த பயிற்சியின் மூலம் பற்றுதல் நீங்கி விடும்.

 

கேள்வி :

அனைத்திலும் உயர்ந்த இலக்கு எது? அந்த இலக்கை அடைபவர்களின் அடையாளம் என்னவாக இருக்கும்?

 

பதில் :

தேகதாரிகள் அனைவரிடமிருந்தும் மோகம் விட்டுப்போக வேண்டும், சதா சகோதர-சகோதரன் என்ற நினைவு இருக்க வேண்டும் - இது தான் உயர்ந்த இலக்கு. யார் நிரந்தர ஆத்ம அபிமானி ஆவதற்கான பயிற்சி செய்கிறார்களோ, அவர்கள் தான் இந்த இலக்கினைச் சென்றடைய முடியும். ஆத்ம அபிமானியாக இல்லை என்றால் எங்காவது சிக்கிக் கொண்டே இருப்பார்கள், தங்களுடைய தேகத்திலோ அல்லது யாராவது உற்றார் உறவினரின் சரீரத்தின் மீது பற்றுதல் இருக்கும். அவர்களுக்கு மற்றவர் யாராவது சொல்கிற விஷயம் நன்றாக இருக்கும், அல்லது யாருடைய சரீரமாவது நன்றாக இருப்பதாகத் தோன்றும். உயர்ந்த இலக்கினைச் சென்றடைபவர்கள் தேகத்தின் மீது அன்பு செலுத்த முடியாது. அவர்களின் சரீர உணர்வே விட்டுப் போயிருக்கும்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குச் சொல்கிறார் - பாருங்கள், நான் குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் எனக்குச் சமமாக ஆக்குவதற்காக வந்துள்ளேன். இப்போது பாபா தமக்குச் சமமாக ஆக்குவதற்காக எப்படி வருவார்? அவர் நிராகார். அவர் சொல்கிறார், நான் நிராகார், குழந்தைகளாகிய உங்களை எனக்குச் சமமாக, அதாவது நிராகாரி ஆக்குவதற்காக, உயிருடன் இருந்து கொண்டே இறந்த நிலையை அடைவது எப்படி என்பதைக் கற்றுத் தருவதற்காக வந்துள்ளேன். பாபா தம்மையும் கூட ஆத்மா என உணர்ந்திருக்கிறார் இல்லையா? இந்த சரீரத்தின் உணர்வு இல்லை. சரீரத்தில் இருந்த போதும் சரீரத்தின் உணர்வு இல்லை. இந்த சரீரம் அவருடையது இல்லை அல்லவா. குழந்தைகள் நீங்களும் கூட சரீர உணர்வை விலக்கிவிடுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தான் என்னுடன் கூட செல்ல வேண்டும். இந்த சரீரத்தை நான் எப்படி கடனாக எடுத்துள்ளேனோ, அதுபோல் ஆத்மாக் களும் கடனாக எடுத்துள்ளன, தங்களின் பாகத்தை நடிப்பதற்காக. நீங்கள் பல பிறவிகளாக வெவ்வேறு சரீரத்தை எடுத்தே வந்திருக்கிறீர்கள். இப்போது நான் எப்படி உயிருடன் இருந்து கொண்டே இந்த சரீரத்தில் இருக்கிறேனோ, ஆனாலும் விலகிய நிலையில், அதாவது இறந்த நிலையில் உள்ளேன். இறப்பது என்று சரீரத்தை விடுவதைத் தான் சொல்லப்படுகின்றது. நீங்களும் கூட உயிருடன் இருந்து கொண்டே இந்த சரீரத்திலிருந்து இறந்தவர்களாக ஆக வேண்டும். நானும் ஆத்மா, நீங்களும் ஆத்மா. நீங்களும் கூட என்னோடு வர வேண்டுமா, அல்லது இங்கேயே இருக்க வேண்டுமா? உங்களுக்கு இந்த சரீரத்தின் மீது ஜென்ம-ஜென்மாந்தரமாக மோகம் உள்ளது. எப்படி நான் (சிவபாபா) அசரீரியாக இருக்கிறேனோ, நீங்களும் உயிருடன் இருந்து கொண்டே தன்னை அசரீரியாக உணருங்கள். நீங்கள் இப்போது பாபாவுடன் கூடவே செல்ல வேண்டும். எப்படி பாபாவுக்கு இந்தப் பழைய சரீரம் உள்ளதோ, ஆத்மாக் களாகிய உங்களுக்கும் கூட இது பழைய சரீரம். பழைய செருப்பை விட்டுவிட வேண்டும். எப்படி எனக்கு அதன் மீது மோகம் இல்லையோ, அதுபோல் நீங்களும் இந்தப் பழைய செருப்பின் மீது வைத்த மோகத்தை விலக்கி விடுங்கள். உங்களுக்கு மோகம் வைக்கின்ற பழக்கமாகி விட்டுள்ளது. எமக்கு அந்த பழக்கம் இல்லை. நான் உயிருடன் இருந்து கொண்டே இறந்த நிலையில் உள்ளேன். நீங்களும் கூட உயிருடன் இருந்து கொண்டே இறந்த நிலையை அடைய வேண்டும். என்னோடு கூடவே செல்ல வேண்டுமானால் இப்போது இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். சரீர உணர்வு எவ்வளவு இருக்கிறது! கேட்கவே வேண்டாம். சரீரம் நோய்வாய்ப் பட்டுவிட்டால் கூட ஆத்மா அதை விடுவதில்லை. இதிலிருந்து மோகத்தை விட்டுவிட வேண்டும். நாமோ பாபாவுடன் கூட அவசியம் சென்றாக வேண்டும். தன்னை சரீரத்திலிருந்து விலகித் தனியாக இருப்பதாக உணர வேண்டும். இது தான் உயிருடன் இருந்து கொண்டே இறந்து விடுவது எனச் சொல்லப் படுகின்றது. தன்னுடைய வீடு மட்டுமே நினைவிருக்கிறது. நீங்கள் ஜென்ம-ஜென்மாந்தரமாக இந்த சரீரத்தில் இருந்தே வந்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. உயிருடன் இருந்து கொண்டே இறக்க வேண்டியுள்ளது. நானோ இதில் தற்காலிகமாகத் தான் வருகிறேன். ஆக, இறந்த நிலையில் செல்வதால், அதாவது தன்னை ஆத்மா என உணர்ந்து நடப்பதால் எந்த ஒரு தேகதாரி மீதும் மோகம் இருக்காது. அடிக்கடி யாருக்காவது யார் மீதாவது மோகம் ஆகி விடுகின்றது. அவ்வளவு தான், அவர்களைப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. இந்த தேகதாரியின் நினைவு முற்றிலும் விடுபட்டாக வேண்டும். ஏனென்றால் அடைய வேண்டியது மிக உயர்ந்த குறிக்கோளாகும். உண்ணும் போதும் அருந்தும் போதும் இந்த சரீரத்திலேயே இல்லை என்ற நிலையில் இருக்க வேண்டும். இந்த மன நிலையைப் பக்கா (உறுதியாக) ஆக்க வேண்டும். அப்போது 8 ரத்தினங்களின் மாலையில் வர முடியும். கடின முயற்சி இல்லாமல் உயர்ந்த பதவி பெறுவதென்பது முடியாது. உயிருடன் இருந்து பார்த்துக் கொண்டே புரிந்து கொள்ள வேண்டும், நானோ அங்கே வசிப்பவன். எப்படி பாபா இவருக்குள் தற்காலிகமாகப் பிரவேசமாகி அமர்ந்துள்ளார், அதுபோல் இப்போது நாமும் வீட்டுக்குச் செல்ல வேண்டும். எப்படி பாபாவுக்கு மோகம் இல்லையோ, அதுபோல் நாமும் கூட இதன் மீது மோகம் வைக்கக் கூடாது. பாபாவுக்கோ இந்த சரீரத்தில் வர வேண்டியுள்ளது, குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைப்பதற்காக.

 

நீங்கள் இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். அதனால் எந்த ஒரு தேகதாரி மீதும் மோகம் இருக்கக் கூடாது. இன்னார் மிக நன்றாக இருக்கிறார், இனிமையானவராக இருக்கிறார் - இதுபோல் ஆத்மாவின் புத்தி செல்கிறது இல்லையா? பாபா சொல்கிறார், சரீரத்தை அல்ல, ஆத்மாவைப் பார்க்க வேண்டும். சரீரத்தைப் பார்ப்பதால் நீங்கள் அதில் சிக்கி மடிந்து போவீர்கள். அடைய வேண்டியது மிகப் பெரிய குறிக்கோள். உங்களுடையதும் ஜென்ம-ஜென்மாந்தரத்தின் பழைய மோகம். பாபாவுக்கு மோகம் கிடையாது. அதனால் தான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்க வந்துள்ளேன். பாபா தாமே சொல்கிறார், நானோ இந்த சரீரத்தில் சிக்கிக் கொள்வதில்லை. நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை விடுவிப்பதற்காக வந்துள்ளேன். உங்களுடைய 84 பிறவிகள் முடிவடைந்து விட்டன. இப்போது சரீரத்தின் உணர்வை அகற்றுங்கள். ஆத்ம அபிமானி ஆகி இருக்கவில்லை என்றால் நீங்கள் எங்காவது சிக்கிக் கொண்டே இருப்பீர்கள். யாராவது ஒருவரின் பேச்சு நன்றாக இருப்பதாகத் தோன்றும், சிலருடைய சரீரம் நன்றாக இருப்பதாகத் தோன்றும். அப்போது வீட்டிலும் அவர்களுடைய நினைவு வந்து கொண்டே இருக்கும். சரீரத்தின் மீது அன்பு இருந்தால் தோல்வி அடைவீர்கள். இதுபோல் அநேகர் கெட்டுப்போய் விடுகின்றனர். பாபா சொல்கிறார், ஆண்-பெண் சம்மந்தத்தை விட்டு, தன்னை ஆத்மா என உணருங்கள். இவரும் ஆத்மா, நானும் ஆத்மா. ஆத்மா என உணர்ந்து-உணர்ந்தே சரீரத்தின் உணர்வு நீங்கிக் கொண்டே போகும். பாபாவின் நினைவு மூலம் தான் விகர்மங்களும் விநாச மாகும். இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் நன்கு விசார் சாகர் மந்தன் செய்ய முடியும். விசார் சாகர் மந்தன் செய்யாமல் நீங்கள் எழுச்சி பெற முடியாது. இதில் உறுதியாக இருக்க வேண்டும் நாம் பாபாவிடம் அவசியம் சென்றாக வேண்டும். முக்கியமான விஷயம், நினைவினுடையது. 84 பிறவிகளின் சக்கரம் முடிவடைந்தது, மீண்டும் ஆரம்பமாக வேண்டும். இந்தப் பழைய சரீரத்திலிருந்து மோகத்தை நீக்கவில்லை என்றால் - தன்னுடைய சரீரத்திலோ அல்லது மற்ற உற்றார் உறவினர்களின் சரீரத்திலோ சிக்கிக் கொண்டு விடுவீர்கள். நீங்களோ எவரிடத்திலும் மனதை ஈடுபடுத்தக் கூடாது. தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். நாம் ஆத்மாவும் நிராகார், பாபாவும் நிராகார். அரைக்கல்பமாக நீங்கள் பக்தி மார்க்கத்தில் பாபாவை நினைவு செய்தே வந்திருக்கிறீர்கள் இல்லையா? ஹே பிரபு எனச் சொல்வதால் சிவலிங்கம் தான் முன்னால் வரும். எந்த ஒரு தேகதாரியையும் ஹே பிரபு எனச் சொல்ல முடியாது. அனைவரும் சிவனுடைய கோவிலுக்குச் செல்கின்றனர். அவரைத் தான் பரமாத்மா என நினைத்துப் பூஜை செய்கின்றனர். உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான் ஒருவர் தான். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் என்றால் பரந்தாமத்தில் வசிப்பவர். பக்தியும் கூட முதலில் ஒருவரை மட்டுமே வணங்கும் பக்தியாக இருந்துள்ளது. பின்னால் பலரை வணங்கும் பக்தியாக மாறியுள்ளது. ஆக, பாபா அடிக்கடி குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், நீங்கள் உயர்ந்த பதவி பெற வேண்டுமானால் இந்தப் பயிற்சி செய்யுங்கள். தேக உணர்வை விட்டுவிடுங்கள். சந்நியாசிகளும் கூட விகாரத்தை விட்டு விடுகின்றனர் இல்லையா? முன்போ சதோபிரதானமாக இருந்தனர். இப்போதோ அவர்களும் தமோபிரதான் ஆகி விட்டுள்ளனர். சதோபிரதான் ஆத்மா கவர்ச்சி செய்கின்றது, தூய்மையின்மை அதாவது விகாரம் ஆத்மாக்களை ஈர்க்கின்றது, ஏனென்றால் அந்த ஆத்மா தூய்மையாக உள்ளது. புனர்ஜென்மத்தில் வருகின்றனர் என்ற போதிலும் தூய்மையாக இருக்கிற காரணத்தால் கவர்ந்து இழுக்கின்றனர். எவ்வளவு பேர் அவர்களைப் பின்பற்றுகிறவர்களாக (சிஷ்யர்கள்) ஆகின்றனர்! எவ்வளவு தூய்மையின் சக்தி அதிகமாக உள்ளதோ, அவ்வளவு அதிகமாக அவர்களைப் பின்பற்றுகிறவர்களும் உள்ளனர். இந்தத் தந்தையோ சதா தூய்மையாக இருப்பவர், மேலும் குப்தமாக இருக்கிறார். டபுள் (பாப்தாதா) இல்லையா? சக்தி முழுவதும் அவருடையது. இவருடையது (பிரம்மா) அல்ல. ஆரம்பத்திலும் கூட உங்களை அவர் கவர்ந்திழுத்தார். இந்த பிரம்மா அல்ல, ஏனென்றால் அவரோ சதா தூய்மையானவர். நீங்கள் ஒன்றும் இவர் பின்னால் ஓடிப் போகவில்லை. இவர் (பிரம்மா) சொல்கிறார், நானோ அனைவரைக் காட்டிலும் அதிகமாக 84 பிறவிகளிலும் முழுமையாக இல்லற மார்க்கத்தில் இருந்திருக்கிறேன். இவரோ உங்களைக் கவர முடியாது. (சிவ) பாபா சொல்கிறார், நான் தான் உங்களைக் கவர்ந்தேன். சந்நியாசிகள் தூய்மையாக இருக்கலாம். ஆனால் என்னைப்போல் தூய்மையாகவோ யாருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் அனைவருமோ பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்கள் முதலியவற்றைச் சொல்கின்றனர். நான் வந்து உங்களுக்கு அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைச் சொல்கிறேன். சித்திரங்களிலும் காட்டப்பட்டுள்ளது, விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வெளிப்பட்டார் என்று. பிறகு பிரம்மாவின் கைகளில் சாஸ்திரங்களைக் காட்டியுள்ளனர். இப்போது விஷ்ணுவோ பிரம்மா மூலம் சாஸ்திரங்களின் ரகசியத்தைச் சொல்லவில்லை. அவர்களோ விஷ்ணுவையும் கூட பகவான் எனப் புரிந்து கொண்டுள்ளனர். பாபா புரிய வைக்கிறார், நான் இந்த பிரம்மாவின் மூலம் சொல்கிறேன் என்று. நான் விஷ்ணு மூலம் சொல்வதில்லை. எங்கே பிரம்மா, எங்கே விஷ்ணு! பிரம்மா தான் விஷ்ணு ஆகிறார். மீண்டும் 84 பிறவிகளுக்குப் பிறகு இந்த சங்கமயுகம் வரும். இதுவோ புதிய விஷயம் இல்லையா? புரிய வைப்பதற்கு எவ்வளவு அற்புதமான விஷயங்கள்!

 

இப்போதோ பாபா சொல்கிறார் - குழந்தைகளே, உயிருடன் இருந்து கொண்டே இறந்தவராக ஆக வேண்டும். நீங்கள் சரீரத்தில் வாழ்கிறீர்கள் இல்லையா? நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் ஆத்மா, நாம் பாபாவுடன் கூடவே சென்று விடுவோம். இந்த சரீரம் முதலியவற்றில் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. இப்போது பாபா வந்துள்ளார். கொஞ்சமாவது புது உலகத்துக்கு மாற்றி விடுவார். மனிதர்கள் தான-புண்ணியம் முதலியன செய்கின்றனர், அடுத்த ஜென்மத்தில் அடைவதற்காக. உங்களுக்கும் புது உலகத்தில் கிடைக்கும். இதையும் கல்பத்திற்கு முன் யார் செய்திருக்கிறார்களோ, அவர்கள் தான் செய்வார்கள். குறைவாகவோ அதிகமாகவோ எதுவும் ஆகாது. நீங்கள் சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். எதையும் சொல்வதற்கும் தேவை இல்லை. பிறகும் பாபா புரிய வைக்கிறார், எதையெல்லாம் செய்கிறீர்களோ, அதைப் பற்றிய அகங்காரமும் வரக் கூடாது. நாம் ஆத்மா இந்த சரீரத்தை விட்டுவிட்டுச் சென்று விடுவோம். அங்கே புது உலகத்தில் போய் புதிய சரீரத்தைப் பெற்றுக் கொள்வோம். பாடவும் படுகின்றது, இராமரும் சென்று விட்டார், இராவணனும் சென்று விட்டார்.......... இராவணனின் பரிவாரம் எவ்வளவு பெரியது! நீங்களோ கை நிரம்பப் பெற்றிருக்கிறீர்கள். இவர்கள் அனைவரும் இராவண சம்பிரதாயத்தினர். உங்களுடைய இராம சம்பிரதாயத்தினர் எவ்வளவு கொஞ்சமாக இருப்பார்கள் - 9 லட்சம். நீங்கள் பூமியின் நட்சத்திரங்கள் இல்லையா? தாய்-தந்தை மற்றும் குழந்தைகள் நீங்கள். ஆக, பாபா அடிக்கடி குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், மர்ஜீவா ஆவதற்கு (இருந்து கொண்டே இறந்த நிலையை அடைவதற்கு) முயற்சி செய்யுங்கள். யாரையாவது பார்த்ததும் புத்தியில் - இவர் நன்றாக இருக்கிறார், மிக இனிமையாகப் புரிய வைக்கிறார் - என்பது போல் வருமானால் இதுவும் மாயாவின் போராட்டமாக ஆகின்றது. மாயா ஆசையை உண்டாக்கி விடுகின்றது. அவர்களின் அதிர்ஷ்டத்தில் இல்லையென்றால் மாயா முன்னால் வந்து விடுகின்றது. எவ்வளவு தான் சொல்லிப்புரிய வைத்தாலும் கோபம் வரும். இதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை, அதாவது தேக அபிமானம் தான் காரியத்தைச் செய்விக்கின்றது. அதிகமாகச் சொல்லிப் புரிய வைப்பீர்களானால் உடைந்து போகிறார்கள். அதனால் அன்போடு நடத்த வேண்டியுள்ளது. யாரிடமாவது மனம் ஈடுபட்டு விட்டால் கேட்கவே வேண்டாம். பைத்தியமாக ஆகி விடுகின்றனர். மாயா முற்றிலும் புத்தியற்றவர்களாக ஆக்கி விடுகின்றது. அதனால் பாபா சொல்கிறார், ஒருபோதும் எவருடைய பெயர்-வடிவத்திலும் சிக்கிக் கொள்ளக் கூடாது. நான் ஆத்மாவாக இருக்கிறேன். மேலும் தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒரே ஒரு தந்தையிடம் மட்டுமே அன்பு வைக்க வேண்டும். இது தான் முயற்சியாகும். எந்த ஒரு தேகத்தின் மீதும் மோகம் கூடாது. வீட்டில் அமர்ந்திருக்கும் போதும் அந்த ஞானத்தைக் கொடுத்தவராகிய தேகதாரியைப் பற்றி - மிக இனிமையானவர், மிக நன்றாக சொல்லிப் புரிய வைக்கிறார் - என்று அவரது நினைவு வந்து கொண்டே இருக்கிறது என்று இருக்கக் கூடாது. அட, இனிமையானதோ ஞானம் தான். இனிமையானது ஆத்மா. சரீரம் இனிமையானதல்ல. பேசுவதும் ஆத்மா தான். ஒருபோதும் சரீரத்தின் மீது ஆசை வைக்கக் கூடாது.

 

இப்போதோ பக்தி மார்க்கம் அதிகமாக உள்ளது. ஆனந்தமயி மாவையும் கூட அம்மா - அம்மா என்று சொல்லி நினைவு செய்து கொண்டே இருக்கின்றனர். நல்லது, தந்தை எங்கே இருக்கிறார்? ஆஸ்தி தந்தையிடம் கிடைக்குமா, தாயிடம் கிடைக்குமா? தாய்க்கும் கூட பணம் எங்கிருந்து கிடைக்கும்? வெறுமனே அம்மா - அம்மா எனச் சொல்வதால் பாவங்கள் நீங்குவதில்லை. தந்தை சொல்கிறார், என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். பெயர்-வடிவத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது. மேலும் பாவங்கள் ஆகிவிடும். ஏனென்றால் தந்தையின் கட்டளைப்படி நடக்காதவர் ஆகி விடுகிறீர்கள். அநேகக் குழந்தைகள் மறந்து விட்டுள்ளனர். பாபா புரிய வைக்கிறார், நான் குழந்தைகளாகிய உங்களை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். ஆகவே நிச்சயமாக அழைத்துச் செல்வேன். அதனால் என்னை நினைவு செய்யுங்கள். என்னை மட்டுமே நினவு செய்வதன் மூலம் தான் உங்களுடைய பாவங்கள் நீங்கும். பக்தி மார்க்கத்தில் அநேகரை நினைவு செய்தே வந்திருக்கிறீர்கள். ஆனால் பாபா இல்லாமல் எந்த ஒரு காரியமும் எப்படி நடைபெறும்? தாயை நினைவு செய்யுங்கள் என்று பாபா சொல்வதில்லை. பாபாவோ என்னை நினைவு செய்யுங்கள் என்று தான் சொல்கிறார். பதீத பாவனன் நான் தான் என்று சொல்கிறார். பாபாவின் வழிகாட்டுதல் படி செல்லுங்கள். நீங்களும் பாபாவின் கட்டளைப்படி மற்றவர் களுக்குப் புரிய வைத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் பதீத பாவனன் ஆக முடியாது. ஒருவரை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். எனக்கோ ஒரு பாபா மட்டுமே. வேறு யாரும் கிடையாது. பாபா, நான் உங்கள் மீது மட்டுமே சமர்ப்பணமாவேன். சமர்ப்பணமாவதோ சிவபாபா மீது தான். மற்ற அனைவரின் நினைவும் விட்டுப்போக வேண்டும். பக்தி மார்க்கத்திலோ அநேகரை நினைவு செய்து கொண்டே இருக்கின்றனர். இங்கோ ஒரு சிவபாபா மட்டுமே. வேறு யாரும் கிடையாது. பிறகும் கூட யாராவது தன் விருப்பப்படி நடப்பார்களானால் கதி-சத்கதி கிடைக்குமா? குழம்பிப் போகின்றனர் - பிந்தியை (புள்ளி) எப்படி நினைவு செய்வது என்று. அட, உங்களுக்கு உங்கள் ஆத்மா நினைவிருக்கிறது இல்லையா - நான் ஆத்மா என்று? அதுவும் பிந்தி வடிவம் தான். ஆக, உங்கள் தந்தையும் பிந்தி தான். தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. அம்மாவும் பிறகு தேகதாரி ஆகிறார். நீங்கள் (விதேகியாகிய) தேகமற்ற தந்தையிடமிருந்து தான் ஆஸ்தி பெற வேண்டும். அதனால் மற்ற அனைத்து விஷயங்களையும் விட்டுவிட்டு ஒருவரிடம் புத்தியோகத்தை ஈடுபடுத்த வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) சரீர உணர்வை விடுவதற்காக நடமாடும் போதும் சுற்றி வரும்போதும் அப்பியாசம் செய்ய வேண்டும் - இந்த சரீரத்தில் இருந்து இறந்து, விடுபட்டு இருக்கிறேன் என்பது போன்று. சரீரத்தில் இல்லை. சரீரமில்லாமல் ஆத்மாவைப் பாருங்கள்.

 

2) ஒருபோதும் எவருடைய சரீரத்தின் மீதும் நீங்கள் ஆசை வைக்கக் கூடாது. ஒரு விதேகியாகிய தந்தையிடம் தான் அன்பு வைக்க வேண்டும். ஒருவரிடம் தான் புத்தியோகத்தை ஈடுபடுத்த வேண்டும்.

 

வரதானம்:

பிராமண வாழ்க்கையில் அனைத்து பொக்கிஷங்களையும் பயனுள்ளதாக ஆக்கி எப்பொழுதும் பிராப்திகளில் நிறைந்தவராக ஆகக் கூடிய திருப்தியின் மணி ஆவீர்களாக.

 

திருப்தியாக இருப்பது பிராமண வாழ்க்கையின் எல்லாவற்றையும் விட பெரியதிலும் பெரிய பொக்கிஷம் ஆகும். எங்கு சர்வ பிராப்திகள் உள்ளனவோ அங்கு திருப்தி இருக்கிறது. மேலும் எங்கு திருப்தி இருக்கிறதோ அங்கு எல்லாமே இருக்கிறது. யார் திருப்தியின் இரத்தினங்களாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பிராப்தி சொரூபம் ஆவார்கள். அடைய வேண்டியதை அடைந்து விட்டோம் என்பது அவர்களது பாடல் ஆகும். இது போல அனைத்து பிராப்திகளிலும் நிறைந்தவராக ஆவதற்கான விதியானது கிடைத்திருக்கக் கூடிய அனைத்து பொக்கிஷங்களையும் பயன்படுத்துவது. ஏனெனில் எந்த அளவிற்கு பயனுள்ளதாக ஆக்குவீர்களோ அந்த அளவிற்கு பொக்கிஷங்கள் அதிகரித்துக் கொண்டே போகும்.

 

சுலோகன்:

யார் எப்பொழுதும் அவகுணங்கள் என்ற கற்களை உட் கொள்ளாமல் நல்லது என்ற முத்துக்களை உட்கொள்கிறார்களோ அவர்களே புனித அன்னம் ஆவார்கள்.

.

ஓம்சாந்தி