14.07.2019                           காலை முரளி                ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்    31.12.1984          மதுபன்


 

புதிய ஞானம் மற்றும் புதிய வாழ்க்கை மூலமாக புதுமையின் ஜொலிப்பை காண்பியுங்கள்

 

இன்று நாலாபுறங்களிலுமுள்ள குழந்தைகள் உடல் ரூபத்தில், மற்றும் ஒளிவடிவமான உடல் ரூபத்தில், புதுயுகம், புது ஞானம், புது வாழ்க்கையை கொடுக்கும், பாப்தாதாவுடன் புது வருடத்தை கொண்டாடுவதற்காக, இந்த ஆன்மீக மிக உயர்ந்த மற்றும் மிகவும் புனிதமான புதிய தர்பாரில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அனைத்து குழந்தைகளின் உள்ளத்தின் ஊக்கம், உற்சாகம் மற்றும் மாற்றம் செய்வதற்கான உறுதிமொழிகளின் நல்ல எண்ணங்கள், நல்ல பாவனைகள், நல்ல விருப்பங்கள் பாப்தாதாவிடம் வந்து சேர்ந்துவிட்டன. பாப்தாதாவும் அனைத்து புது உலகைப் படைக்கும், உலகை மாற்றம் செய்யும் விசேஷ ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் பழைய உலகத்தின் பழைய சம்ஸ்காரம், பழைய நினைவுகள், பழைய உள் உணர்வுகள், பழைய உடலின் நினைவின் உணர்விலிருந்து விலகியிருக்கக் கூடிய, அனைத்து பழைய விஷயங்களுக்கும் விடை கொடுப்பவர் களுக்கு சதா காலத்திற்காக வாழ்த்துக்கள் கூறுகிறார். கடந்தவைக்கு முற்றுப்புள்ளி இட்டு, சுயராஜ்யத்தின் திலகம் இடுபவர்களுக்கு சுயராஜ்யத்தின் திலகத்தின் வாழ்த்துக்கள் கூறுகிறார். அனைத்து குழந்தைகளுக்கும் இந்த விடைக்கொடுத்ததின் வாழ்த்துக்களுடன் சேர்த்து, புது வருடத்திற்கான விசேஷ பரிசாக - எப்பொழுதும் உடன் இருங்கள், எப்பொழுதும் சமமாக இருங்கள், எப்பொழுதும் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து, உயர்ந்த ஆன்மீக போதையில் இருங்கள் என்ற இதே வரதானத்தின் பரிசை கொடுக்கிறார்.

 

இந்த முழு வருடமும் - உடன் இருக்கிறோம், தந்தைக்குச் சமமாக இருக்கிறோம் என்ற நினைவு இருக்கிறது என்றால், ஒவ்வொரு எண்ணத்திலும் விடைக்கொடுத்ததற்கான வாழ்த்துக்களை அனுபவம் செய்து கொண்டேயிருப்பீர்கள். பழையவற்றிற்கு விடை கொடுக்கவில்லை என்றால், புதுமையின் வாழ்த்துக்களின் அனுபவம் செய்ய முடியாது. எனவே எப்படி இன்று பழைய வருடத்திற்கு விடை கொடுத்து கொண்டிருக்கிறீர்கள், அதே போல் வருடத்துடன் சேர்த்து என்னென்ன பழைய விஷயங்களை மேலே கூறினோமோ, அந்த பழைமைக்கு சதா காலத்திற்காக விடை கொடுங்கள். புதுயுகம், புது பிராமணர்களின் அழகான உலகம், புதிய சம்மந்தம், புதிய பரிவாரம், புதிய பிராப்திகள். அனைத்துமே புதியதிலும் புதியது தான். பார்க்கிறீர்கள் என்றால் கூட ஆன்மீகப் பார்வையோடு, ஆத்மாவை பார்க்கிறீர்கள். ஆன்மீக விஷயங்களைத் தான் யோசிக்கிறீர்கள். அப்படி அனைத்தும் புதியதாக ஆகிவிட்டது இல்லையா! முறை புதியது, அன்பு புதியது, அனைத்துமே புதியது. அப்படி எப்பொழுதும் புதுமையின் வாழ்த்துக்களில் இருங்கள். இதைத் தான் ஆன்மீக வாழ்த்து என்று கூறுவது. இது ஒரு நாளுக்காக மட்டும் இல்லை, ஆனால் எப்பொழுதும் ஆன்மீக வாழ்த்துக்கள் மூலம் வளர்ச்சியை அடைந்துக் கொண்டே யிருக்கிறீர்கள். பாப்தாதா மற்றும் அனைத்து பிராமண பரிவாரத்தின் வாழ்த்துக்கள் மற்றும் ஆன்மீக ஆசிர்வாதங்களினால் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் - இந்த மாதிரி புது வருடத்தை உலகில் யாரும் கொண்டாட முடியாது. அவர்கள் அற்ப காலத்திற்காக கொண்டாடுவார்கள். நீங்கள் அழியாத சதா காலத்திற்காக கொண்டாடுகிறீர்கள், அவர்கள் மனித ஆத்மாக்கள், மனிதர்களுடன் தான் கொண்டாடுவார்கள். நீங்கள் சிரேஷ்ட ஆத்மாக்கள் தந்தை பரமாத்மாவுடன் கொண்டாடுகிறீர்கள். உருவாக்குபவர் மற்றும் வரம் அளிப்பவருடன் கொண்டாடுகிறீர்கள், எனவே கொண்டாடுவது என்றால், பொக்கிஷங்களினால், வரதானங்களினால் சதா காலத்திற்காக பையை நிரப்புவது. அவர்களுடையது கொண்டாடுவது மற்றும் இழப்பது. இது பையை நிரப்புவது, எனவே தான் பாப்தாதாவுடன் கொண்டாடுகிறீர்கள் இல்லையா? அந்த மனிதர்கள் ஹாப்பி நீயூ இயர் என்று கூறுவார்கள், நீங்கள் எவர் ஹாப்பி நீயூ இயர் என்று கூறுகிறீர்கள். இன்று குஷியாக இருக்கிறீர்கள், ஆனால் நாளை துக்கத்தின் நிகழ்வு உங்களை துக்கமானவர் ஆக்குவதில்லை. எப்படிப்பட்ட துக்கமான நிகழ்வாக இருந்தாலும், ஆனால் அந்த மாதிரியான நேரத்திலும் சுகம், அமைதி சொரூப நிலை மூலமாக அனைவருக்கும் சுகம், சாந்தியின் கிரணங்களை கொடுக்கும், சுகத்தின் கடலின் பங்கை செய்கிறீர்கள், எனவே அந்த துக்க சம்பவத்தின் பாதிப்பிலிருந்து விலகி விடுகிறீர்கள். மேலும் யாரெல்லாம் ஹாப்பியை எப்பொழுதும் அனுபவம் செய்கிறீர்கள்? இந்த புது வருடத்தில் என்ன புதுமை செய்வீர்கள்? மேளா செய்வீர்கள், மாநாடு கூட்டுவீர்கள். இப்பொழுது இந்த அனைத்து பழைய பழக்க வழக்களிலிருந்து, பழைய மாதிரி நடந்து கொள்வதிலிருந்துகளைப்பு அடைந்திருக்கிறீர்கள். அனைவரும் ஏதாவது புதியது இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். புதியதாக என்ன இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று அதைப் புரிந்து கொள்ள முடியாது. அந்த மாதிரி புதுமையின் ஆசை வைத்திருப்பவர்களுக்கு புதிய ஞானம் மூலமாக, புதிய வாழ்க்கை மூலமாக, புதுமையின் ஜொலிப்பின் அனுபவம் செய்வியுங்கள். இது நன்றாக இருக்கிறது, இந்தளவு புரிந்திருக்கிறார்கள். ஆனால் புதியது, இதே புதிய ஞானம், புதிய யுகத்தைக் கொண்டு வருகிறது என்ற இந்த அனுபவம் இப்பொழுது குப்தமாக (மறைவாக) இருக்கிறது. இருக்க வேண்டுமென்று இதைக் கூறுகிறார்கள். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக புதிய வாழ்க்கையின் வெளிப்படையான உதாரணத்தை அவர்களின் எதிரே வெளிப்படையான ரூபத்தில் கொண்டு வாருங்கள். அதன் மூலம் புதிய ஜொலிப்பு அவர்களுக்கு அனுபவம் ஆகட்டும். எனவே புதிய ஞானத்தை வெளிப்படுத்துங்கள். ஒவ்வொரு பிராமணனின் வாழ்க்கை மூலம் புதுமையின் அனுபவம் ஆகட்டும், அப்பொழுது தான் புது உலகின் ஜொலிப்பு, அவர்களுக்குத் தென்படும். எந்த நிகழ்ச்சி செய்தாலும் அதில் அனைவருக்கும் புதுமை அனுபவம் ஆக வேண்டும் என்ற இலட்சியதை வையுங்கள்:.இவர்களும் நல்ல காரியம் செய்து கொண்டியிருக்கிறார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, இது புதிய ஞானம், புதிய உலகைக் கொண்டு வருவது என்று அனுபவம் செய்ய வேண்டும். புரிந்ததா? புது உலகின் ஸ்தாபனையின் அனுபவம் செய்விக்கும் அலையைப் பரப்புங்கள். புது உலகம் வந்து விட்டது, அதாவது நம் அனைவரின் சுப பாவனைக்கான பலன் கிடைக்கும் நேரம் வந்துவிட்டது என்று அந்தமாதிரியான ஊக்கம், உற்சாகம் அவர்களுடைய மனதில் எழவேண்டும். அனைவரின் மனதில் நம்பிக்கையின்மைக்குப் பதிலாக சுப பாவனையின் தீபத்தை ஏற்றுங்கள். எந்தவொரு முக்கிய நாளைக் கொண்டாடுகிறீர்கள் என்றால். தீபம் ஏற்றுகிறீர்கள், இன்றைய நாட்களிலோ இராயலான மெழுவர்த்திகள் வந்துவிட்டன, அந்தமாதிரி அனைவரது மனதிலும் இந்த தீபத்தை ஏற்றுங்கள். அந்த மாதிரி புது வருடத்தைக் கொண்டாடுங்கள். சிரேஷ்ட பாவனைகளின் பலனின் பரிசை அனைவருக்கும் கொடுங்கள். நல்லது.

 

எப்பொழுதும் அனைவருக்கும் புதிய வாழ்க்கை, புதிய யுகத்தின் ஜொலிப்பை காண்பிக்கக் கூடிய, புதிய ஊக்கம், உற்சாகத்தின் வாழ்த்துக்களைக் கூறக்கூடிய, அனைவரையும் எவர் ஹாப்பி ஆக்கக் கூடிய, உலகிற்கு புது படைப்பின் அனுபவம் செய்விக்கக் கூடிய, அந்தமாதிரியான மிக உயர்ந்த புது யுகத்தின் மாற்றம் செய்யும், உலகிற்கு நன்மை செய்யும், எப்பொழுதும் தந்தையின் துணையை அனுபவம் செய்யும், தந்தையின் நிரந்தர துணையாக இருக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

பார்ட்டிகளுடன் சந்திப்பு:

புது வருடத்தின், புது ஊக்கம், புது உற்சாகம் எப்பொழுதுமே இருக்க வேண்டுமென்று அந்தமாதிரியான திட எண்ணத்தை அனைவரும் வைத்தீர்களா? இது புது யுகம், இதில் ஒவ்வொரு எண்ணமும் புதியதிலும் புதியதாக இருக்கட்டும். ஒவ்வொரு காரியமும் புதியதிலும் புதியதாக இருக்கட்டும். இதைத் தான் புதிய ஊக்கம், புதிய உற்சாகம் என்று கூறுவது. அந்தமாதிரியான திட எண்ணத்தை வைத்தீர்களா? எப்படி தந்தை அழியாதவரோ அதேபோல் தந்தை மூலமாகக் கிடைக்கும் பிராப்தியும் அழியாதது. அழியாத பிராப்தியை திட எண்ணம் மூலம் பிராப்தி செய்ய முடியும். தன்னுடைய சேவை ஸ்தானத்திற்கு சென்ற பிறகு, இந்த அழியாத திட எண்ணத்தை மறந்து விடாதீர்கள். மறப்பது என்றால் பிராப்தியின்மை, மேலும் திட எண்ணம் இருக்கிறது என்றால், அனைத்து பிராப்தியும் இருக்கிறது.

 

எப்பொழுதும் தன்னை பல மடங்கு பாக்கியம் நிறைந்த ஆத்மா என்று நினைக்கிறீர்களா? எந்த அடியை தந்தையின் நினைவில் எடுத்து வைக்கிறீர்களோ, அந்த ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு வருமானம் அடங்கியிருக்கிறது. எனவே எப்பொழுதும் தன்னை ஒரு நாளில் எண்ண முடியாத அளவிற்கு சம்பாதிக்கும் பலமடங்கு பாக்கியம் நிறைந்த ஆத்மா என்று புரிந்து, ஆஹா என்னுடைய சிரேஷ்ட பாக்கியம் என்ற இதே குஷியில் எப்பொழுதும் இருங்கள். நீங்கள் குஷியாக இருப்பதைப் பார்த்து, மற்றவர்களுக்கும் பிரேரணை கிடைத்து கொண்டேயிருக்கும். இது தான் சேவைக்கான சகஜ சாதனம். யார் நினைவு மற்றும் சேவையில் எப்பொழுதும் முழ்கியிருக்கிறார்களோ, அவர்கள் தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள், வெற்றியடைபவர்களாக இருக்கிறார்கள். நினைவு மற்றும் சேவை அந்தமாதிரியான சக்தி அதன் மூலம் எப்பொழுதுமே முன்னேறிச் சென்று கொண்டேயிருப்பீர்கள். நினைவு மற்றும் சேவைக்கான சமநிலையை மட்டும் அவசியம் வைக்க வேண்டும். சமநிலை தான் ஆசீர்வாதங்களைப் பெற வைக்கும். தைரியம் உள்ள குழந்தைகளுக்கு, தைரியத்தின் காரணமாக எப்பொழுதுமே உதவி கிடைக்கிறது. தைரியம் என்ற ஒரு அடியை குழந்தைகள் எடுத்து வைக்கிறார்கள் என்றால், ஆயிரம் அடிகள் தந்தையின் உதவி கிடைத்து விடுகிறது.

 

(இரவு 12 மணிக்கு பிறகு 01.01.1985 அன்று வெளிநாட்டு சகோதர, சகோதரிகள் புது வருடத்தின் குஷியில் பாடல் பாடினார்கள். மேலும் பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.)

 

எப்படி குழந்தைகள் தந்தையின் அன்பின் நினைவில் இருந்து பாடல் பாடினார்கள், மேலும் அன்பில் ஐக்கியமானவர் ஆகிவிடுகிறார்கள். அதே போல் தந்தையும் குழந்தைகளின் அன்பில் முழ்கியிருக்கிறார். தந்தை பிரியதர்ஷனாக இருக்கிறார் என்றால், பிரியதர்ஷினியாகவும் இருக்கிறார். ஒவ்வொரு குழந்தைகளின் விசேஷத்தின் மேல் தந்தையும் பிரியதர்ஷினியாகி விடுகிறார். தன்னுடைய விசேஷத்தை தெரிந்திருக்கிறீர்களா? தந்தை உங்கள் மேல் எந்த விசேஷத்தின் காரணமாக ஈர்க்கப்பட்டார் என்று ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய விசேஷத்தை தெரிந்திருக்கிறீர்களா?

 

முழு உலகத்திலும் எவ்வளவு குறைந்தவர்கள், தந்தையின் அன்பான குழந்தைகளாகி இருக்கிறார்கள். பாப்தாதாவும் அன்பு குழந்தைகளுக்கு புது வருடத்திற்காக மிகவும் உள்ளப் பூர்வமாக உயிருக்கும் மேலாக மற்றும் அன்புடன் பல மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். எப்படி நீங்கள் பாடல் பாடினீர்கள், அதேபோல் பாப்தாதாவும் குழந்தைகளின் குஷியின் பாடலை பாடுகிறார். தந்தையின் பாடல் மனதில் இருப்பது, மேலும் உங்களுடையது வாயால் பாடப்படுவது. உங்களுடைய பாடலையோ கேட்டு விட்டோம், தந்தையின் பாடலையும் கேட்டீர்கள் இல்லையா?

 

இந்த புது வருடத்தில் எப்பொழுதும் ஒவ்வொரு காரியத்திலும் ஏதாவது ஒரு விசேஷத்தை அவசியம் காண்பித்துக் கொண்டேயிருங்கள். ஒவ்வொரு எண்ணமும் சாதாரணமானதாக இன்றி விசேஷமாக இருக்கட்டும். ஏன்? விசேஷ ஆத்மாக்களின் ஒவ்வொரு என்ணம், வார்த்தை மற்றும் காரியம் விசேஷமாகவே இருக்கும். எப்பொழுதும் ஊக்கம், உற்சாகத்தில் முன்னேறிச் சென்று கொண்டேயிருங்கள். ஊக்கம், உற்சாகம் என்பது விசேஷமான இறக்கைகள், இந்த இறக்கைகள் மூலமாக எவ்வளவு உயரமாகப் பறக்க விரும்புகிறீர்களோ, அந்தளவு பறக்க முடியும். இந்த இறக்கைகள் தான் பறக்கும் கலையின் அனுபவம் செய்விக்கும். இந்த இறக்கைகளால் பறந்து விட்டீர்கள் என்றால், தடைகள் அங்கு வரை வந்தடைய முடியாது. எப்படி விண்வெளியில் செல்கிறார்கள் என்றால், பூமியின் ஈர்ப்பு இழுக்க முடியாது. அதேபோல் பறக்கும் கலை உள்ளவர்களை தடைகள் ஒன்றும் செய்ய முடியாது. எப்பொழுதும் ஊக்கம், உற்சாகத்துடன் முன்னேறிச் செல்வது மற்றும் முன்னேற வைப்பது தான் விசேஷ சேவை. சேவாதாரிகள் இந்த விசேஷத்தின் மூலம் எப்பொழுதும் முன்னேறிச் சென்று கொண்டேயிருக்க வேண்டும்.

 

விசேஷமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்யக்த மகா வாக்கியம் - லைட் மைட் ஹவுஸின் உயர்ந்த நிலை மூலமாக பரமாத்மாவை பிரத்யக்ஷம் செய்வதற்குப் பொறுப்பாளர் ஆகுங்கள்.

 

தந்தையை பிரத்யக்ஷம் செய்வதற்கு முன்பு தனக்குள் என்னென்ன மகிமைகள் இருக்கின்றனவோ, அந்த அனைத்து விஷயங்களையும் பிரத்யக்ஷம் செய்யுங்கள், அப்பொழுது தான் தந்தையை பிரத்யக்ஷம் செய்ய முடியும். இதற்காக ஜுவாலா சொரூபம் அதாவது லைட் ஹவுஸ் மற்றும் மைட் ஹவுஸ் நிலையைப் புரிந்து கொண்டு, விசேஷமாக நினைவு யாத்திரையை சக்திசாலியாக்குங்கள், ஞான சொரூபத்தின் அனுபவி ஆகுங்கள். இந்த முயற்சி செய்வதிலேயே இருங்கள்.

 

பெரும்பான்மையான பக்தர்களின் இச்சை ஒரு வினாடியாவது, ஒளியைப் பார்க்க வேண்டும் என்பது தான். இந்த இச்சையை நிறைவேற்றுவதற்கான சாதனம், குழந்தைகள் உங்களுடைய கண்கள். இந்தக் கண்கள் மூலமாக தந்தையின் ஜோதி சொரூபத்தின் சாட்சாத்காரம் ஆக வேண்டும். இந்தக் கண்கள் கண்களாகத் தென்பட வேண்டாம். ஒளி உருண்டையாகத் தென்பட வேண்டும்.

 

எப்படி ஆகாயத்தில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் தென்படுகின்றன, அதே போல் இந்தக் கண்களின் மணிகளும் நட்சத்திரங்களுக்கு சமமாக மின்னிக் கொண்டிருப்பதாகத் தென் பட வேண்டும். ஆனால் அது எப்பொழுது தென்படும் என்றால், எப்பொழுது நீங்களே லைட் சொரூபத்தில் நிலைத்திருப்பீர்களோ, அப்பொழுது தான். செய்யும் காரியத்திலும் லைட் அதாவது லேசான தன்மை மேலும் சொரூபமும் லைட், நிலையும் லைட்டாக இருக்கட்டும். எப்பொழுது அந்தமாதிரியான முயற்சி மற்றும் நிலை விசேஷ ஆதமாக்கள் உங்களுடையது இருக்குமோ, அப்பொழுது தான் பிரத்யக்ஷம் ஏற்படும். காரியத்தில் வந்து கொண்டே, விஸ்தாரத்தில் வந்து கொண்டே இரமணீகரத்தன்மையில் வந்து கொண்டே, சம்மந்தம் மற்றும் தொடர்பில் வந்து கொண்டு விலகியிருப்பதற்கான பயிற்சி செய்யுங்கள். எப்படி சம்மந்தம் மற்றும் காரியத்தில் வருவது சுலபமோ, அதே போலவே விலகியிருப்பதும் சுலபமாக இருக்க வேண்டும். அந்தமாதிரியான பயிற்சி வேண்டும். கடைசி உச்சக்கட்ட நேரத்தில் ஒரு வினாடியில் முடிவு வந்து விட வேண்டும் - இது தான் இறுதி நிலைக்கான முயற்சி. இந்த நேரம் அளவற்ற சம்மந்தத்தின் மற்றும் அடுத்த நேரம் எந்தளவு தொடர்பில் இருக்கிறீர்களோ, அந்தளவு விலகியிருப்பது. லைட் ஹவுஸில் அப்படியே அடங்கிவிடுவது போல். இதே பயிற்சி மூலம் லைட் ஹவுஸ், மைட் ஹவுஸின் நிலை உருவாகும்.மேலும் அநேக ஆத்மாக்களுக்கு சாட்சாத்காரம் ஆகும், இது தான் பிரத்யக்ஷம் ஆவதற்கான சாதனம்.

 

இப்பொழுது பிரத்யக்ஷத்தின் முரசு ஒலிக்கும் சீசன் தான் பாக்கி இருக்கிறது. செய்தி வலுவாகப் பரவும், அமைதி ஏற்படும். ஆனால் அமைதி மூலமாகத் தான் முரசு ஒலிக்கும். எதுவரை வாயின் முரசு அதாவது வார்த்தைகள் அதிகமாக இருக்கிறதோ, அதுவரை பிரத்யக்ஷம் ஏற்படாது. எப்பொழுது பிரத்யக்ஷத்தின் முரசு ஒலிக்குமோ, அப்பொழுது வாயின் முரசு முடிவடைந்து விடும். அறிவியலின் மேல் அமைதியின் வெற்றி, என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறதே அன்றி வார்த்தைகளின் வெற்றி இல்லை. இப்பொழுது பிரத்யக்ஷத்தின் விசேஷம் மேகங்களுக்கு உள்ளே இருக்கிறது. மேகங்கள் கலைந்து கொண்டிருக்கிறது, ஆனால் அகலவில்லை. எந்தளவு சக்திசாலியான மாஸ்டர் ஞான சூரியன் மற்றும் லைட் மைட் ஹவுஸின் நிலை வரை சென்றடைந்து கொண்டேயிருப்பீர்களோ, அதேபோல் இந்த மேகங்களும் கலைந்து கொண்டேயிருக்கும். மேகம் அகன்று விட்டதென்றால், ஒரு நொடியில் முரசு ஒலித்து விடும்.

 

நாலாபுறங்களிலும் ஒருவேளை நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது, ஒரு மூலையில் குளிர்ந்த குண்டம் இருக்கிறது என்றால், அனைவரும் அதன் பக்கம் தான் ஒடுவார்கள். அதேபோல் சாந்த சொரூபமாகி சாந்தி குண்டத்தின் அனுபவம் செய்வியுங்கள். மன சேவை மூலமாக சாந்தி குணடத்தை பிரத்யக்ஷம் செய்ய முடியும். எங்கெல்லாம் சாந்திக் கடலின் குழந்தைகள் இருக்கிறார்களோ, அந்த ஸ்தானம் சாந்தி குண்டமாக இருக்கட்டும்.

 

பிரம்மா பாபாவிற்குச் சமமாக எல்லைக்கு அப்பாற்பட்ட கீரிடம் அணிந்தவர் ஆகி, நாலாபுறங்களிலும் பிரத்யக்ஷத்தின் லைட் மைட்டை பரப்புங்கள். அதன் மூலம் அனைத்து ஆத்மாக்களுக்கும் நம்பிக்கை இழந்த நிலையிலிருந்து, நம்பிக்கை கிரணங்கள் தென்படட்டும். அனைவரின் விரல் அந்த விசேஷ ஸ்தானத்தை நோக்கி இருக்கட்டும். யார் ஆகாயத்தை தாண்டி விரலை காண்பித்து, தேடிக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கு இந்த பூமியில், வரதான பூமியில், பூமியின் நட்த்திரங்கள் பிரத்யக்ஷம் ஆகிவிட்டன என்று அனுபவம் ஆகட்டும். இந்த சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திர மண்டலம் இங்கே அனுபவம் ஆகட்டும். குழுவின் ரூபத்தில் சக்திசாலியான லைட் ஹவுஸ், மைட் ஹவுஸின் வைப்ரேஷனை பரப்பும் சேவை செய்யுங்கள். இப்பொழுது அனைவரும், எப்பொழுது நம்முடைய படைப்பவர் மற்றும் மாஸ்டர் படைப்பவர் சம்பன்னம் அல்லது சம்பூரணமாகி நம்மூலமாக அவர்களுடைய வரவேற்பை செய்விப்பார்கள் என்று காத்திருக்கிறார்கள். இயற்கையும் கூட வரவேற்பு செய்யும். அது வெற்றியின் மாலையால் வரவேற்கட்டும். அந்த நாளும் கண்டிப்பாக வரும். எப்பொழுது வெற்றியின் மேள தாளம் ஒலிக்குமோ, அப்பொழுது பிரத்யக்ஷத்தின் முரசும் ஒலிக்கும். கண்டிப்பாக ஒலிக்கத் தான் வேண்டும்.

 

பாரதம் தந்தையின் அவதார பூமி, மேலும் பாரதம் பிரத்யக்ஷத்தின் ஒசையை வலுவாக ஒலிக்க வைப்பதற்குப் பொறுப்பான பூமி. வெளிநாட்டின் சகயோகம் பாரதத்தில் பிரத்யக்ஷம் செய்விக்கும், மேலும் பாரதத்தின் பிரத்யக்ஷத்தின் ஓசை வெளிநாடு வரை சென்று அடையும். வார்த்தைகளினால், பிரபாவம் ஏற்படுத்துபவர்களோ உலகத்திலும் அநேகர்கள் இருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய வார்த்தைகளின் விசேஷமே, உங்களின் வார்த்தை தந்தையின் நினைவை ஊட்ட வேண்டும். தந்தையை பிரத்யக்ஷம் செய்வதற்கான வெற்றி ஆத்மாக்களுக்கு சத்கதிக்கான பாதையைக் காண்பிக்க வேண்டும் - இது தான் புதுமையானது. எப்படி இந்த இராஜயோகி ஆத்மாக்கள் சிரேஷ்டமானவர்கள், இராஜயோகம் சிரேஷ்டமானது, செய்யும் காரியம் சிரேஷ்டமானது. பரிவர்த்தனை சிரேஷ்டமானது என்று பிரசித்தி ஆகியிருக்கிறது. அதேபோல் இவர்களுக்கு கற்றுக் கொடுப்பவர் நேரடியாக சர்வசக்திவான், ஞானசூரியன் இந்த பூமியில் உதயம் ஆகியிருக்கிறார் என்பதை இப்பொழுது பிரத்யக்ஷம் செய்யுங்கள்.

 

ஒருவேளை விரைவில் தந்தையின் பிரத்யக்ஷம் ஏற்பட வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், அதற்காக தீவிரமாக செய்யவேண்டிய முயற்சி அனைவரும் தன்னுடைய உள்ளுணர்வை, தனக்காக, மற்றவர்களுக்காக நேர்மறையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஞானம் நிறைந்தவர்களாகவோ நன்றாக ஆகுங்கள், ஆனால் தன்னுடைய மனதில் எதிர்மறையை தாரணை செய்யாதீர்கள். எதிர்மறையின் அர்த்தம் குப்பை. எனவே உள்ளுணர்வை சக்திசாலியாக ஆக்குங்கள், வைப்ரேஷனை (எண்ண அலைகள்) சக்திசாலி ஆக்குங்கள், வாயுமண்டலத்தை சக்திசாலி ஆக்குங்கள். எப்பொழுது நாலாபுறங்களின் வாயுமண்டலம் சம்பூரண தடையற்றதாக, இரக்க மனமுடையதாக, சுபபாவனை, சுப விருப்பங்கள் உள்ளதாக ஆகிவிடுமோ, அப்பொழுது உங்களுடைய இதே லைட் மைட் பிரத்யக்ஷம் செய்வதற்கு பொறுப்பாக ஆகும். நிரந்தர சேவை மற்றும் தபஸ்யா இந்த இரண்டின் சமநிலை மூலம், பிரத்யக்ஷம் ஏற்படும். எப்படி சேவைக்கான கலந்துரையாடலை உருவாக்குகிறீர்கள், அதேபோல் தபஸ்யாவையும் அந்த மாதிரி செய்யுங்கள், அதன் மூலம் அனைத்து விட்டில் பூச்சிகளும், பாபா - பாபா என்று கூறிக் கொண்டு உங்களுடைய விசேஷ ஸ்தானத்திற்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். விட்டில் பூச்சிகள் எப்பொழுது பாபா - பாபா என்று கூறிக் கொண்டே வருவார்களோ, அப்பொழுது பிரத்யக்ஷம் ஆகிவிட்டது என்று கூறுவோம். மைக்கையும் அந்த மாதிரி தயார் செய்யுங்கள், அதன் மூலம் ஊடகத்திற்குச் சமமாக பிரத்யக்ஷத்தின் செய்தியை பரப்பட்டும். பகவான் வந்து விட்டார், பகவான் வந்துவிட்டார் என்று நீங்கள் கூறும் பொழுது, அதை சாதரணமாக நினைக்கிறார்கள், ஆனால் உங்களுக்காக மற்றவர்கள் கூற வேண்டும், அதிகாரத்தில் உள்ளவர்கள் கூறட்டும். முதலில் உங்களை சக்திகளின் ரூபத்தில் பிரத்யக்ஷம் செய்யட்டும். எப்பொழுது சக்திகள் பிரத்யக்ஷம் ஆகிவிடுவார்களோ, அப்பொழுது சிவ தந்தையும் பிரத்யக்ஷம் ஆகியே விடுவார். நல்லது. – ஒம்சாந்தி

 

வரதானம்:

யோகா செய்வது மற்றும் செய்விப்பதின் தகுதியின் கூடவே பிரயோகி ஆத்மா ஆகுங்கள்.

 

குழந்தைகள் யோகா செய்வது, மற்றும் செய்விப்பது இரண்டிலுமே திறைமை மிகுந்தவர்கள் என்று பாப்தாதா பார்த்திருக்கிறார். எப்படி யோகா செய்வது மற்றும் செய்விப்பதில் தகுதியானவர்களாக இருக்கிறீர்கள், அதேபோல் பிரயோகம் செய்வதிலும் தகுதியானவர் ஆகுங்கள், மற்றும் ஆக்குங்கள். இப்பொழுது பிரயோகி வாழ்க்கையின் அவசியமாக இருக்கிறது. முதலில் தன்னுடைய சம்ஸ்காரத்தை மாற்றுவதில் எந்தளவு பிரயோகி ஆகியிருக்கிறேன் என்று சோதனை செய்யுங்கள்? ஏனென்றால், சிரேஷ்ட சம்ஸ்காரம் தான், சிரேஷ்ட உலகத்தின் படைப்பிற்கான வேர். ஒருவேளை வேர் உறுதியாக இருக்கிறதென்றால், மற்ற அனைத்து விஷயங்களும் இயல்பாகவே உறுதியாகி விடும்.

 

சுலோகன்:

அனுபவம் நிறைந்த ஆத்மாக்கள், ஒருபொழுதும் வாயுமண்டலம் மற்றும் தொடர்பின் பாதிப்பில் வர முடியாது.

ஓம்சாந்தி