07.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! நினைவு யாத்திரையில் இருந்தீர்கள் எனில் உங்களுடைய பாவம் துண்டித்துப் போய் விடும். ஏனென்றால் நினைவு தான் வாளின் கூர்மை, இதில் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.

 

கேள்வி:

குழந்தைகளின் நடவடிக்கையை மாற்றிக் கொள்ள பாபா எந்த ஒரு வழியைக் கூறுகின்றார்?

 

பதில் :

குழந்தைகளே, தன்னுடைய உண்மையிலும், உண்மையான சார்ட் வையுங்கள். சார்ட் வைப்பதினாலேயே நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும். முழு நாளில் நம்முடைய நடவடிக்கை எவ்வாறு இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும். யாருக்கும் துக்கம் தரவில்லை அல்லவா? தவறான விசயங்களை செய்யவில்லைதானே? ஆத்மா என புரிந்து பாபாவை எவ்வளவு நேரம் நினைவு செய்தேன்? எத்தனைப் பேரை தனக்குச் சமமாக ஆக்கினேன்? இவ்வாறு யார் கணக்கு வைக்கிறார்களோ அவர்களுடைய நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. யார் செய்வார்களோ அவர்களே பலனைப் பெறுவார்கள். செய்யவில்லை எனில் பட்சாதாபப்படுவார்கள்.

 

ஓம் சாந்தி!

ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கிறார் ஏனென்றால் இங்கு எதிரில் இருக்கிறீர்கள். அனைத்து குழந்தைகளும் தன்னுடைய சுய தர்மத்தில் இருக்கிறார்கள்; மேலும் பாபாவை நினைவு செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. எங்காவது புத்தி அவசியம் செல்லத்தான் செய்கிறது இதனை ஒவ்வொருவரும் தாங்களே புரிந்துக் கொள்ள முடியும். முக்கியமான விசயமே சதோபிரதானம் ஆவது தான். அதுவும் கூட நினைவு யாத்திரை இல்லாமல் ஆக முடியாது. பாபா காலையில் யோகத்தில் அமர்ந்து குழந்தைகளை ஈர்க்கின்றார், கவர்ச்சிக்கின்றார். வரிசைக்கிரமமாகத் தான் ஈர்க்கப்படுகிறார்கள். நினைவில் சாந்தியாக இருக்கிறார்கள் உலகத்தைக் கூட மறந்து போய்விடுகிறார்கள். ஆனால் முழு நாளிலும் என்ன செய்கிறார்கள்? என்பது தான் கேள்வி! அதிகாலையில் ஒரு மணி, அரை மணி நேரம் நினைவு யாத்திரை, இதில் ஆத்மா தூய்மை ஆகின்றது; ஆயுள் அதிகரிக்கின்றது. இருப்பினும் முழு நாளில் எவ்வளவு நினைவு செய்கிறார்கள்? எவ்வளவு சுயதரிசன சக்கரதாரி ஆகின்றார்கள்? பாபா அனைத்தையும் தெரிந்திருக்கிறார் என்றெல்லாம் இல்லை. தன்னுடைய உள்ளதைக் கேட்க வேண்டும் நான் முழு நாளிலும் என்ன செய்தேன்? இப்பொழுது நீங்கள் குழந்தைகள் சார்ட் எழுதுகிறீர்கள். சிலர் சரியாக எழுதுகிறார்கள். சிலர் தவறாக எழுதுகிறார்கள். நாம் தான் சிவ பாபாவுடன் தானே இருக்கிறோம் என்று புரிந்துக் கொள்கிறார்கள். சிவ பாபாவைத்தான் நினைவு செய்துக் கொண்டிருந்தேன், ஆனால் உண்மையாகவே நினைவில் இருந்தேனா?

 

முற்றிலும் அமைதியில் இருப்பதினால் பிறகு இந்த உலகம் கூட மறந்து விடுகிறது. நான் சிவ பாபாவின் நினைவில் தான் இருக்கிறேன் என்று தன்னைத் தான் ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். தேகத்தின் அனைத்து தர்மத்தையும் மறந்து விட வேண்டும். நம்மை சிவ பாபா கவர்ச்சி செய்து முழு உலகத்தையும் மறக்க வைக்கிறார். தன்னைத் தான் ஆத்மா என புரிந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா கவர்ச்சி செய்கின்றார். அனைத்து ஆத்மாக்களும் தந்தையை நினைவு செய்ய வேண்டும், மேலும் வேறு எந்த நினைவும் வரக் கூடாது. ஆனால் உண்மையாகவே நினைவு வருகின்றதா? அல்லது இல்லையா, அதனைத்தான் கணக்கெடுக்க வேண்டும். எவ்வளவு நாம் தந்தையை நினைவு செய்கின்றோம்? எடுத்துக்காட்டாக நாயகன்-நாயகி இருப்பது போல. இந்த நாயகன் நாயகி ஆன்மீகமானதாகும். இந்த விசயமோ தனிப்பட்டதாகும்., அது உலகீய விசயம், இது ஆன்மீகமாகும். நான் எவ்வளவு சமயம் தெய்வீக குணத்தில் இருக்கின்றேன் என்று பார்க்க வேண்டும். எவ்வளவு சமயம் பாபாவின் சேவையில் இருக்கிறேன்? பிறகு மற்றவர்களுக்கும் கூட நினைவு படுத்த வேண்டும். ஆத்மாவில் என்ன துரு படிந்துள்ளதோ அதனை நினைவு இல்லாமல் நீக்க முடியாது. பக்தியில் அனேகம் பேரை நினைவு செய்கிறீர்கள். இங்கு ஒருவரை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். நாம் ஆத்மா சிறிய புள்ளியாக இருக்கிறோம். ஆகவே பாபா கூட சிறிய புள்ளியாக மிக மிக சூட்சுமமாக இருக்கிறார். மற்றபடி ஞானம் தான் உன்னதமானதாகும். ஸ்ரீலட்சுமி அல்லது நாராயணன் ஆக வேண்டும், விஸ்வத்தின் எஜமான் ஆவது சித்தி வீட்டிற்கு செல்வது போல் அல்ல. பாபா கூறுகிறார் தன்னைத்தான் அதி மேதாவியாக (எல்லாம் தெரிந்தவர்) புரிந்து கொண்டு ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். தன்னிடம் கேளுங்கள். முழு நாளில் நான் தன்னை ஆத்மா என்று புரிந்து பாபாவை எவ்வளவு நேரம் நினைவு செய்தேன், துரு நீங்குவது போன்று? எத்தனைப் பேரை தனக்குச் சமமாக ஆக்கினேன்? இந்த கணக்கை ஒவ்வொருவரும் தனக்காக வைக்க வேண்டும். யார் செய்கின்றார்களோ அவர்கள் (பலனை) அடைவார்கள். செய்யவில்லை எனில், பட்சாதாபப்படுவீர்கள். நம்முடைய நடத்தை முழு நாளில் எவ்வாறு உள்ளது? என்பதைப் பார்க்க வேண்டும். யாருக்கும் துக்கம் தரவில்லை தானே! அல்லது தவறான விசயங்களைச் செய்யவில்லை தானே? சார்ட் வைப்பதினால் நடவடிக்கை மாறி விடும். பாபா வழி கூறியிருக்கிறார். எதிரில் வந்து நின்று விடுகிறார்கள். இரண்டு பெண்களாக இருப்பினும் கூட காட்சி கிடைக்க முடியும். இரண்டு ஆண்களாக இருப்பினும் கூட காட்சி கிடைக்க முடியும். சில சில உறவினர்கள் (அல்லது) நண்பன் சகோதரனை விட மிகவும் வேகமாக இருக்கிறார்கள். நண்பர்களிடையே அவ்வளவு அன்பு இருந்து விடுகிறது. அந்தளவு சகோதரனிடம் கூட இருக்க முடிவதில்லை. ஒருவர் மற்றவரை மிகவும் நன்றாக அன்பினால் உயர்த்தி விடுகிறார்கள். பாபா அனுபவியாக இருக்கிறார் அல்லவா. ஆகவே அதிகாலையில் பாபா அதிகமாக கவர்ச்சிக்கின்றார். காந்தமாக இருக்கிறார். எப்பொழுதும் தூய்மையானவர், ஆகவே அவர் ஈர்க்கின்றார். தந்தை எல்லையற்றவர் அல்லவா? இவர் மிகவும் அன்பான குழந்தை என்று புரிந்துக் கொள்கிறார். மிகவும் பலமாக ஈர்க்கின்றார். ஆனால் இந்த நினைவுப் பயணம் மிகவும் அவசியமானதாகும். எங்கு சென்றாலும் பயணம் செய்து கொண்டிருந்தாலும், எழுந்தாலும், அமர்ந்தாலும், சாப்பிட்டாலும் நினைவு செய்ய முடியும். நாயகன்-நாயகி எங்கிருந்தாலும் கூட நினைவு செய்கிறார்கள் அல்லவா, இது கூட அப்படித்தான்! பாபாவை நினைவு செய்ய வேண்டும். இல்லையெனில் விகர்மம் எப்படி விநாசம் ஆகும்? வேறு எந்த ஒரு உபாயமும் இல்லை. இது மிகவும் ஆழமானதாகும். கத்தியின் கூர்மையில் செல்ல வேண்டியதாக உள்ளது. நினைவு தான் வாளின் கூர்மையாகும். அடிக்கடி கூறுகிறீர்கள் நினைவு மறந்து விடுகிறது என்று. வாள் என்று ஏன் கூறுகிறீர்கள்? ஏனென்றால் இதனால் பாவம் துண்டிக்கப்படும், நீங்கள் பாவனம் ஆவீர்கள். இது மிகவும் கூர்மையானதாகும். எவ்வாறு அவர்கள் நெருப்பைக் கடந்து செல்கிறார்கள், உங்களுடைய புத்தியோகம் தந்தையிடம் சென்று விடுகிறது. பாபா வந்திருக்கிறார் இங்கு, நமக்கு ஆஸ்தியைத் தருகிறார். மேலே இல்லை, இங்கே வந்திருக்கிறார். சாதாரணமான உடலில் வருகின்றேன் என்று கூறுகிறார். நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள், பாபா மேலிருந்து கீழே வந்திருக்கிறார். சைதன்யமான வைரம் இந்த டப்பாவில் (பிரம்மா பாபா) அமர்ந்திருக்கிறார். நாம் பாபாவின் முன்பு அமர்ந்திருக்கிறோம் என்று இதில் குஷி அடைந்து விட வேண்டாம். இதனை பாபா தெரிந்திருக்கிறார். மிகவும் ஈர்க்கின்றார். ஆனால் இவை எல்லாம் வெறும் அரை மணி நேரம், முக்கால் மணி நேரத்திற்கு மட்டுமே! மற்றபடி முழு நாளும் வீணாக இழக்கின்றீர்கள் எனில் அதில் என்ன லாபம் உள்ளது? குழந்தைகள் தன்னுடைய சார்ட்டின் மீது கவனம் வைக்க வேண்டும். நான் சொற்பொழிவு செய்ய முடியும், சார்ட் எழுதுவதற்கு எனக்கு என்ன அவசியம் உள்ளது என்றொல்லாம் இல்லை. இந்த தவறை செய்ய வேண்டாம். மகா ரதிகள் கூட சார்ட் வைக்க வேண்டும். மகாரதிகள் நிறைய பேர் இல்லை, விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளனர். நிறைய பேருக்கு பெயர்-ரூபத்தில் அதிகமாக நேரம் வீணாகி விடுகிறது. லட்சியம் மிகவும் உயர்வானதாகும். பாபா அனைவற்றையும் புரிய வைத்து விடுகின்றார், ஆகையால் எந்த ஒரு மாணவரும் பாபா இந்த கருத்தை புரியவைக்கவில்லையே என எண்ண முடியாது. நினைவு மற்றும் சிருஷ்டி சக்கரத்தின் ஞானம் - இது முக்கிய மானதாகும். இந்த சிருஷ்டி சக்கரத்தின் 84 ஜென்மத்தைப் பற்றி, குழந்தைகளாகிய உங்களைத் தவிர யாரும் தெரிந்திருக்கவில்லை. வைராக்கியம் கூட உங்களுக்கு வருகின்றது. நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள் இப்பொழுது இந்த மரண லோகம் வசிப்பதற்காக அல்ல. செல்வதற்கு முன் பவித்திரமாக ஆக வேண்டும். தெய்வீக குணம் கூட அவசியம் வேண்டும். வரிசைக்கிரமமாக மாலையில் வர வேண்டும். பிறகு வரிசைப்படி ராஜ்யத்தில் வருவீர்கள். பின்பு வரிசைக் கிரமமாக உங்களுக்கும் கூட பூஜை நடைபெறுகின்றது. அனேக தேவதைகளுக்கு பூஜை நடைபெறுகின்றது. என்னென்ன பெயர் வைக்கிறார்கள். சண்டிகா தேவிக்கு விழா நடைபெறுகின்றது. யார் நினைவின் கணக்கை வைப்பதில்லையோ, அவர்கள் மாறுவதில்லை. அப்பொழுது தான் கூறப்படுகிறது, இவர் சண்டிகையாக இருக்கிறார். கேட்பதும் இல்லை, ஏற்றுக் கொள்வதும் இல்லை. இவை எல்லையற்ற விசயமாக உள்ளது. முயற்சி செய்யவில்லை என்றால் பாபா கூறுவார், இவர் பாபாவைக் கூட ஏற்றுக் கொள்பவர் அல்ல. பதவி குறைவாக ஆகிவிடும். ஆகவே பாபா கூறுகிறார் தன் மீது மிகவும் கவனம் வைக்க வேண்டும். பாபா அதிகாலையில் வந்து எவ்வளவு முயற்சி செய்ய வைக்கின்றார் நினைவு யாத்திரைக்காக இது மிகவும் உயர்வான லட்சியமாக உள்ளது. ஞானத்தை மிகவும் எளிதான பாடம் என சொல்லாம். 84 ஜென்மத்தின் சக்கரத்தை நினைவு செய்வது பெரிய விசயம் ஒன்றும் இல்லை. மற்றபடி உன்னதமான பொருளாக இருப்பது நினைவு யாத்திரை, இதில் தான் அதிகமானவர்கள் தோல்வி அடைந்து விடுகிறார்கள். உங்களுடைய யுத்தம் கூட இதில் தான் உள்ளது. நீங்கள் நினைவு செய்கிறீர்கள். மாயா பின்னுக்கு இழுத்து விடுகிறது. ஞானத்தில் யுத்தத்திற்கான விசயம் எதுவும் இல்லை. அது தான் வருமானத்திற்கு வழியாக இருக்கிறது. இதில் தூய்மை ஆக வேண்டும், ஆகையால் பாபாவை அழைக்கிறார்கள் வந்து பதீதமானவர்களை பாவனம் ஆக்குங்கள் என்று. எங்களுக்கு கல்வி கற்றுத் தாருங்கள் என்று கூறுவதில்லை. பாவனமாக ஆக்குங்கள் என கூறுகிறார்கள். ஆகையால் இந்த கருத்துக்கள் அனைத்தையும் புத்தியில் வைக்க வேண்டும். முழுமையாக இராஜயோகி ஆக வேண்டும்.

 

ஞானம் மிகவும் எளிதானதாகும். மிகவும் யுக்தியாக புரிய வைக்க வேண்டியதாக உள்ளது அவ்வளவுதான்! வார்த்தையில் மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு இந்த ஞானம் கிடைக்கின்றது. அதுவும் கூட கர்மத்தின் அனுசாரமாக என கூறலாம். ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பக்தி செய்திருக்கிறீர்கள் எனில் நல்ல கர்மத்தை செய்திருக்கிறீர்கள். ஆகையால் சிவ பாபா கூட நல்ல விதமாக, வந்து புரிய வைக்கிறார். எவ்வளவு அதிகமாக பக்தி செய்திருக்கிறீர்கள்! சிவ பாபா திருப்தியாகி இருக்கிறார், ஆகவே இப்பொழுது கூட ஞானத்தை சீக்கிரமாக எடுத்துக் கொள்வார்கள். மகாரதியின் புத்தியில் கருத்துக்கள் இருக்கும். எழுதிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், நல்ல நல்ல கருத்துக்களை தரம் பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். கருத்துக்களை எடை போட்டுப் பாருங்கள். ஆனால் இப்படிப்பட்ட முயற்சியை யாரும் செய்வதில்லை. சிரமப்பட்டு ஒரு சிலரே குறிப்பு எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் நல்ல கருத்துக்களை எடுத்து தனியாக வைத்துக் கொள்வார்கள். பாபா எப்பொழுதும் கூறுவார் சொற்பொழிவு செய்வதற்கு முன்பு முதலில் எழுதுங்கள், பின்பு சோதனை செய்யுங்கள். இவ்வாறு முயற்சி செய்வதில்லை. அனைத்து கருத்துக்களும் யாருக்கும் நினைவில் இருப்பதில்லை. வக்கீல்கள் கூட டயரியில் கருத்துக்களைக் குறிப்பு எடுத்துக் கொள்கிறார்கள். உங்களுக்கும் இது மிகவும் அவசியமாக உள்ளது. கருத்துக்களை எழுதிக் கொண்டு பின்பு படிக்க வேண்டும், திருத்தம் செய்ய வேண்டும். இவ்வளவு முயற்சி செய்யவில்லை என்றால் ஆர்வம் ஏற்பட முடியாது. உங்களுடைய புத்தியோகம் வேறு வேறு திசைகளில் அலைந்துக் கொண்டே இருக்கிறது. மிகவும் குறைவானவர்களே சரளமாக நடந்துக் கொள்கிறார்கள். சேவையைத் தவிர வேறு ஒன்றும் புத்தியில் இருப்பதில்லை. மாலையில் வரவேண்டுமெனில் முயற்சி செய்ய வேண்டும். பாபா வழி தருகின்றார் பின்பு உள்ளத்தில் பதிந்து விடுகிறது. நினைவு இல்லையெனில் அவர்கள் தானே அறிந்துக் கொள்வார்கள். மற்றபடி தொழில் - காரியங்கள் முதலியவை செய்யுங்கள், ஆனால் டைரி சதா பையில் இருக்க வேண்டும். நீங்கள் தான் அதிகமாக குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்தீர்கள் என்றாலோ, தன்னைத்தான் அதிமேதாவியாக புரிந்துக் கொண்டீர்கள் என்றாலோ மாயாவும் கூட குறைந்தது அல்ல. தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும். லட்சுமி-நாராயணன் ஆவது சித்தி வீட்டிற்குச் செல்வது போல் அல்ல. மிகப் பெரிய ராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டுள்ளது. கோடியில் சிலர் தான் வெளிப்படுவார்கள். பாபா கூட அதிகாலையில் இரண்டு மணிக்கு எழுந்து எழுதுவது உண்டு பிறகு படிப்பார். கருத்துக்கள் மறந்து விட்டது எனில் பின்பு அமர்ந்து படித்துப் பார்ப்பார், உங்களுக்குப் புரிய வைப்பதற்காக! ஆகவே தான் புரிய வைக்கப்படுகிறது நினைவு யாத்திரை இப்பொழுது வரை எந்த அளவு உள்ளது. கர்மாதீத் நிலை எந்தளவிற்கு உள்ளது. இலவசமாக யாரையும் உயர்த்துவது (முன்னேற்றுவது) இல்லைதானே! மிகவும் முயற்சி உள்ளது, கர்மத்தின் சுமை இருக்கின்றது. நினைவு செய்ய வேண்டியதாக உள்ளது. நல்லது, புரிந்துக் கொள்ளுங்கள் முரளி பிரம்மாவினுடையது அல்ல, சிவ பாபா நடத்துகின்றார். குழந்தைகளுக்கு எப்பொழுதும் புரிய வைக்கிறார், சிவ பாபாதான் உங்களுக்கு சொல்கிறார், சில நேரங்களில் இந்த குழந்தை (பிரம்மா) கூட பேசுகின்றார். பாபா முற்றிலும் துல்லியமாகத் தான் கூறுவார். இவருக்கு முழு நாளும் மிகவும் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. பல குழந்தைகளின் பொறுப்பு உள்ளது. குழந்தைகள் பெயர் - ரூபத்தில் மாட்டிக்கொண்டு அலைக்கழிப்பது போல ஆகி விடுகிறார்கள். குழந்தைகளைப் பற்றிய எண்ணம் இருக்கிறது. குழந்தை களுக்காக வீடு கட்ட வேண்டும், இந்த ஏற்பாடு செய்ய வேண்டும், இருப்பினும் இவை அனைத்தும் நாடகமாக உள்ளது. பாபாவிற்கும் நாடகம் தான், இவருக்கும் கூட நாடகம் தான், உங்களுக்கும் கூட நாடகம். நாடகப்படி இல்லாமல் எதுவும் நடைபெற முடியாது. வினாடிக்கு-வினாடி நாடகத்தின் படி நடந்துக் கொண்டே இருக்கிறது. நாடகத்தை நினைவு செய்வதால் அசைந்து விடக்கூடாது. ஆடாது, அசையாது, நிலையானவர்களாக இருக்க வேண்டும். புயல் கூட நிறைய வரும். பல குழந்தைகள் உண்மையைக் கூறுவது இல்லை. கனவு கூட நிறைய வருகின்றது. மாயை அல்லவா! இதற்கு முன் வராதவர்களுக்குக் கூட வரக்கூடும். பாபா புரிந்துக் கொள்கிறார், குழந்தைகள் ஆஸ்தியைப் பெறுவதற்காக நினைவில் முயற்சி செய்ய வேண்டியதாக உள்ளது. சிலர் முயற்சி செய்து செய்து களைப்படைந்து விடுகிறார்கள். லட்சியம் மிகவும் உயர்வானதாக உள்ளது. 21 வம்சத்திற்கு உலகின் எஜமானராக ஆகின்றீர்கள், ஆகவே முயற்சி செய்ய வேண்டும் அல்லவா? இனிமையான தந்தையை நினைவு செய்ய வேண்டி உள்ளது. பாபா நம்மை உலகின் எஜமானர்களாக ஆக்குகின்றார் என்பது உள்ளத்தில் இருக்கின்றது. இப்படிப்பட்ட தந்தையை அடிக்கடி அடிக்கடி நினைவு செய்ய வேண்டும். அனைவரிலும் அன்பானவர் பாபா தான். இந்த தந்தை அதிசயம் செய்கின்றார், விஷ்வத்தின் ஞானத்தைத் தருகின்றார். பாபா, பாபா, பாபா என கூறி உள்ளுக்குள் மகிமை பாட வேண்டும். யார் நினைவு செய்துக் கொண்டே இருப்பார்களோ, அவர்களுக்கு பாபாவின் ஈர்ப்பு ஏற்படுகின்றது. இங்கு வருவதே பாபாவிடம் புத்துணர்ச்சி அடைவதற்காகத் தான்! ஆகையால் பாபா புரிய வைக்கிறார். இனிமையான குழந்தைகளே, தவறு செய்ய வேண்டாம். பாபா பார்க்கின்றார் எல்லா சென்டர்களிலிருந்தும் வருகிறார்கள், எந்தளவு குஷி அவர்களிடம் உள்ளது? என்று பார்க்கின்றேன், கேட்கின்றேன் என்று பாபா சோதனை செய்கின்றார் அல்லவா? முகத்தைக் கூட பார்க்கின்றார் - பாபாவிடம் எவ்வளவு அன்பு உள்ளது? பாபாவிற்கு எதிரில் வருகிறீர்கள் என்றால் பாபா ஈர்க்கவும் செய்கின்றார். இங்கு அமர்ந்து இருக்கும்போது அனைத்தும் மறந்து போய் விடுகின்றது. பாபாவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை, முழு உலகத்தையும் கூட மறந்து போய் விட நேரிடுகிறது. அந்த நிலை மிகவும் இனிமையானதாக அலௌகீகமாக இருக்கின்றது. பாபாவின் நினைவில் இருந்து அமர்ந்தவுடன் அன்பு கண்ணீர் வருகின்றது. பக்தி மார்க்கத்திலும் கண்ணீர் வருகிறது. ஆனால் பக்தி மார்க்கம் தனிப்பட்டது, ஞான மார்க்கம் தனிப்பட்டதாகும். இது தான் குழந்தைகள் உண்மையான பாபாவிடம் உண்மையான அன்பு வைப்பது. இங்கிருக்கும் விசயம் முற்றிலும் தனிப்பட்டதாகும். இங்கு நீங்கள் சிவபாபாவிடம் வருகின்றீர்கள், அவசியம் ரதத்தில் சவாரி செய்யப்படும் அல்லவா, சரீரம் இல்லாமல் ஆத்மாக்கள் அங்கு தான் சந்தித்துக் கொள்ள முடியும். இங்கோ அனைவரும் அசரீரியாக உள்ளனர். இவர் பாப்தாதா என்பதை தெரிந்திருக்கிறீர்கள். ஆகவே தந்தையை நினைவு செய்ய வேண்டியது அவசியமாகும். மிகவும் அன்புடன் மகிமை செய்ய வேண்டும். பாபா நமக்கு என்னவெல்லாம் தருகின்றார்!

 

நீங்கள் குழந்தைகள் தெரிந்திருக்கிறீர்கள் பாபா வந்திருக்கிறார், நம்மை இந்த காட்டிலிருந்து அழைத்துச் சென்று விடுகிறார். மங்களம் பகவான் விஷ்ணு என சொல்லப்படுகின்றது அல்லவா? அனைவருக்கும் மங்களம் செய்விப்பவர், அனைவருக்கும் நன்மை ஏற்படுகின்றது. பாபா ஒருவர் தான் எனில் அவரை நினைவு செய்ய வேண்டும். நாம் ஏன் பிறருக்கும் நன்மை செய்ய முடிவதில்லை? அவசியம் ஏதோ குறை உள்ளது! பாபா கூறுகிறார் நினைவின் கூர்மை இல்லை, எனவே வார்த்தையிலும் கூட கவர்ச்சி ஏற்படுவதில்லை. இதுவும் கூட நாடகம் தான். இப்பொழுது நன்றாக கூர்மையை (நினைவு) தாரணை செய்ய வேண்டும். நினைவின் யாத்திரை தான் மிகவும் கடினமானதாக உள்ளது. நாம் சகோதரனுக்கு ஞானத்தை தருகின்றோம். பாபாவின் அறிமுகத்தைத் தருகின்றோம். பாபாவிடம் ஆஸ்தியைப் பெற வேண்டும். பாபா தெரிந்துக் கொள்கின்றார் அடிக்கடி மறந்து போய் விடுகின்றனர். பாபா அனைவரையும் குழந்தையாகப் புரிந்து கொள்கிறார், ஆகவே தான் குழந்தாய், குழந்தாய் என கூறுகிறார். இந்த தந்தை அனைவருடையவர், அதிசயகரமான நடிப்பு இவருடையது அல்லவா! மிகவும் குறைவான குழந்தைகளே நினைக்கின்றார்கள் இந்த வார்த்தை யாருக்கோ என்று. பாபா குழந்தாய் குழந்தாய் என்று கூறுவார். குழந்தைகளுக்கு ஆஸ்தி தருவதற்காகவே வந்திருக்கிறேன். பாபா அனைத்தையும் கூறி விடுகின்றார். குழந்தைகளிடம் நான் காரியம் செய்ய வைக்க வேண்டியதாக உள்ளது அல்லவா? இது மிகவும் அதிசயமான ஞானமாக உள்ளது. இந்த ஞானம் வைகுண்டத்திற்கு எஜமானர்களாக ஆக்கக் கூடியதாகும். ஆகவே இவ்வாறாகத் தான் இருக்க வேண்டும். நல்லது! ஒவ்வொருவரும் பாபாவை நினைவு செய்ய வேண்டும், தெய்வீக குணத்தை நினைவு செய்ய வேண்டும். வாயினால் ஒருபொழுதும் தலை கீழான வார்த்தையைப் பேச வேண்டாம். அன்புடன் காரியம் செய்துக் கொள்ள வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. அதிகாலையில் ஏகாந்தத்தில் அமர்ந்து அன்புடன் தந்தையை நினைவு செய்ய வேண்டும். முழு உலகத்தையும் மறந்து விட வேண்டும்.

 

2. தந்தைக்குச் சமமாக அனைவருக்கும் நன்மை செய்பவராக ஆக வேண்டும், குறைகளை அகற்றி விட வேண்டும். தன்மீது மிகுந்த கவனம் வைக்க வேண்டும். தன்னுடைய ரிஜிஸ்டரை தானே தான் பார்க்க வேண்டும்.

 

வரதானம்:

மூன்று நினைவுகளின் (ஸ்மிருதி) மூலமாக (சிறந்த மனநிலை) சிரேஷ்ட ஸ்திதியை அமைத்துக் கொள்ளக் கூடிய ஆடாது அசையாது இருப்பவராக ஆவீர்களாக.

 

பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் மூன்று நினைவுகளின் (ஸ்மிருதி) திலகம் அளித்துள்ளார். ஒன்று சுயத்தின் நினைவு, பின் தந்தையின் நினைவு மேலும் சிறந்த செயல்கள் செய்வதற்காக டிராமாவின் ஸ்மிருதி. யாருக்கு இந்த மூன்று ஸ்மிருதிகள் எப்பொழுதும் இருக்கின்றனவோ அவர்களது ஸ்திதி கூட சிரேஷ்டமானதாக இருக்கும். ஆத்மாவின் ஸ்மிருதியுடன் கூடவே தந்தையின் ஸ்மிருதி மேலும் தந்தையுடன் கூடவே நாடகத்தின் நினைவு மிகவுமே அவசியமானது ஆகும். ஏனெனில் கர்மத்தில் ஒரு வேளை நாடகத்தின் ஞானம் இருந்தது என்றால், மேலும் கீழும் ஆக மாட்டார்கள். பல்வேறு விதமான நிலைமைகள் எவை எல்லாம் வருகின்றனவோ அவற்றில் ஆடாது அசையாது இருப்பார்கள்.

 

சுலோகன்:

பார்வையை அளெகீகமானதாக, மனதை குளிர்ந்ததாக மேலும் புத்தியை கருணையுள்ளத்துடன் கூடியதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

 

ஓம்சாந்தி