31.05.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
இப்போது
உங்களுக்கு
அல்லா
(தந்தை)
கிடைத்திருக்கிறார் எனும்போது
சரியானவர்களாக
மாறுங்கள்.
அதாவது
தங்களை
ஆத்மா
என்று
புரிந்து கொள்ளுங்கள்,
தேகம்
என்று
புரிந்து
கொள்வது
தான்
தலைகீழாவதாகும்.
கேள்வி:
எந்த
ஒரு
விஷயத்தை
புரிந்து
கொள்ளக்
கூடியவர்கள்
எல்லையற்ற
வைராக்கிய
முடையவர்களாக
ஆக
முடியும்?
பதில்:
பழைய
உலகம்
இப்போது
நம்பிக்கையற்றதாக
இருக்கிறது.
சுடுகாடாக
ஆகப்போகிறது
என்ற
விஷயம் புரிந்துவிட்டால்
எல்லையற்ற
வைராக்கியம்
உடையவர்களாக
ஆக
முடியும்.
இப்போது
புதிய
உலகம்
ஸ்தாபனையாகிக் கொண்டிருக்கிறது,
என்பதை
நீங்கள்
தெரிந்துள்ளீர்கள்.
இந்த
ருத்ர
ஞான
யக்ஞத்தில்
முழு
பழைய
உலகமும் சுவாஹா
(அர்ப்பணம்
)
ஆகப்போகிறது
.
இந்த
ஒரு
விஷயம்
தான்
உங்களை
எல்லையற்ற வைராக்கியமுடையவர்களாக்கும்.
உங்களுடைய
மனம்
இந்த
சுடுகாட்டிலிருந்து
நீங்கிவிட்டது.
ஓம்
சாந்தி.
இரண்டு
ஓம்
சாந்தி,
ஏனென்றால்
இரண்டு
ஆத்மாக்கள்
இருக்கிறார்கள்.
இரண்டு
ஆத்மாக்களின் சுய
தர்மமும்
சாந்தியாகும்.
பாபாவின்
சுயதர்மமும்
சாந்தியாகும்.
குழந்தைகள்
அங்கே
அமைதியாக
இருக்கிறார்கள்,
அதைத்தான்
சாந்திதாமம்
(அமைதியான
இடம்)
என்று
சொல்லப்படு
கிறது.
பாபாவும்
கூட
அங்கே
இருக்கின்றார்.
பாபா
எப்போதும்
தூய்மையாக
இருக்கின்றார்.
மற்ற
மனிதர்கள்
அனைவரும்
மறுபிறவி
எடுத்து
தூய்மையற்றவர்களாக ஆகின்றார்கள்.
பாபா
குழந்தை
களுக்குக்
கூறுகின்றார்
-
குழந்தைகளே,
தங்களை
ஆத்மா
என்
புரிந்து
கொள்ளுங்கள்.
ஆத்மா
தெரிந்திருக்கிறது,
பரமபிதா
பரமாத்மா
ஞானக்கடலாக
இருக்கின்றார்,
அமைதிக்கடலாக
இருக்கின்றார்,
அவருடைய
மகிமையல்லவா!
அவர்
அனைவருடைய
தந்தையாகவும்
இருக்கின்றார்,
மேலும்
அனைவருக்கும் சத்கதியை
வழங்கும்
வள்ளலாகவும்
இருக்கின்றார்.
எனவே
அனைவருக்கும்
பாபாவின்
ஆஸ்தியின்
மீது
கண்டிப்பாக உரிமை
இருக்கிறது.
பாபாவிடமிருந்து
என்ன
ஆஸ்தி
கிடைக்கிறது?
குழந்தைகளுக்குத்
தெரியும்,
பாபா
சொர்க்கத்தைப் படைப்பவர்,
எனவே
கண்டிப்பாக
சொர்க்கத்தின்
ஆஸ்தியைத்
தான்
கொடுப்பார்.
மேலும்
அதை
நரகத்தில்
தான் கொடுப்பார்.
நரகத்தின்
ஆஸ்தியை
இராவணன்
கொடுத்தான்.
இந்த
சமயத்தில்
அனைவரும்
நரகவாசியல்லவா?
எனவே
கண்டிப்பாக
ஆஸ்தி
இராவணனிடமிருந்து
கிடைத்திருக்கிறது.
நரகம்
மற்றும்
சொர்க்கம்
இரண்டுமே இருக்கிறது.
இதை
கேட்பது
யார்?
ஆத்மா.
அஞ்ஞான
காலத்திலும்
அனைத்தையும்
ஆத்மா
தான்
செய்கிறது,
ஆனால்
தேக
அபிமானத்தின்
காரணத்தினால்
அனைத்தையும்
தேகம்
செய்கிறது,
என்று
புரிந்து
கொள்கிறார்கள்.
நம்முடைய
சுயதர்மம்
சாந்தியாகும்.
இதை
மறந்து
விடுகிறார்கள்.
நாம்
சாந்தி
தாமத்தில்
வசிப்பவர்களாவோம்,
உண்மையான
கண்டம்
தான்
பிறகு
பொய்யான
கண்டமாக
ஆகிறது.
பாரதம்
உண்மையான
கண்டாமாக
இருந்தது பிறகு
இராவண
இராஜ்யம்
பொய்யான
கண்டமாக
ஆகிவிட்டது.
இது
பொதுவான
விஷயம்.
மனிதர்கள்
ஏன்
புரிந்து கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஆத்மா
தமோபிரதானமாக
ஆகிவிட்டது,
அதைத்தான்
கல்புத்தி
என்று சொல்லப்படுகிறது.
யார்
பாரதத்தை
சொர்க்கமாக
மாற்றினாரோ,
பூஜைக்குரியதாக
மாற்றினாரோ,
அவரையே
பூஜாரியாக்கி நிந்திக்கிறார்கள்.
இதில்
கூட
யாருடைய
தோஷமும்
(தவறு)
இல்லை.
இந்த
நாடகம்
எப்படி
உருவாக்கப்பட்டுள்ளது என்பதை
பாபா
குழந்தைகளுக்கப்
புரிய
வைக்கின்றார்.
பூஜைக்குரிய
நிலையிலிருந்து
பூஜாரியாக
எப்படி
ஆனார்கள்?
பாபா
புரிய
வைக்கின்றார்,
இன்றிலிருந்து
5000
வருடங்களுக்கு
முன்னால்
பாரதத்தில்
ஆதி
சனாதன
தேவி-தேவதா
தர்மம்
இருந்தது,
நேற்றைய
விஷயமாகும்.
ஆனால்
மனித
குலம்
மறந்துவிட்டிருக்கிறது.
இந்த
சாஸ்திரம் போன்றவைகளை
பக்தி
மார்க்கத்திற்காக
அமர்ந்து
உருவாக்கியிருக்கிறார்கள்.
சாஸ்திரங்களே
பக்தி
மார்க்கத்திற்காகத்தான் ஆகும்,
ஞான
மார்க்கத்திற்காக
அல்ல.
ஞான
மார்க்கத்தில்
சாஸ்திரம்
உருவாவதேயில்லை.
பாபா
தான்
கல்பம் கல்பமாக
வந்து
தேவதை
பதவிக்காக
குழந்தைகளுக்கு
ஞானத்தைக்
கொடுக்கின்றார்.
பாபா
படிப்பை
கற்பிக்கின்றார்,
பிறகு
இந்த
ஞானம்
மறைந்து
விடுகின்றது.
சத்யுகத்தில்
எந்த
சாஸ்திரமும்
இல்லை,
அது
ஞான
மார்க்கத்தின் பலனாகும்.
21
பிறவிகளுக்கு
எல்லை
யற்ற
பாபாவிடமிருந்து
எல்லைக்கு
அப்பாற்பட்ட
ஆஸ்தி
கிடைக்கிறது,
பிறகு பின்னால்
அல்பகாலத்திற்காக
இராவணனுடைய
ஆஸ்தி
கிடைக்கிறது.
அதை
சன்னியாசிகள்
காக்கையின் எச்சத்திற்கு
(கழிவு)
சமமான
சுகம்
என்று
கூறுகிறார்கள்.
துக்கமே
துக்கம்
தான்,
இதனுடைய
பெயரே
துக்க
தாமம் ஆகும்.
கலியுகத்திற்கு
முன்னால்
துவாபரயுகம்,
அது
பாதி
துக்கதாமம்.
இது
துக்கதாமத்தின்
முடிவாகும்.
ஆத்மா
84
பிறவி
எடுக்கிறது.
கீழே
இறங்குகிறது.
பாபா
ஏணிப்படி
ஏற்றி
விடுகிறார்.
ஏனென்றால்
கண்டிப்பாக
சக்கரம்
சுற்ற வேண்டும்.
புதிய
உலகம்
இருந்தது.
தேவி
தேவதைகளின்
இராஜ்யம்
இருந்தது.
துக்கத்தின்
பெயர்
அடையாளம் இல்லை,
ஆகையால்
சிங்கமும்
-
ஆடும்
ஒன்றாக
நீர்
அருந்துவதாக
காட்டுகிறார்கள்.
அங்கே
ஹிம்சையின் விசயம்
எதுவும்
இல்லை.
அஹிம்சையை
உயர்ந்த
தர்மமாகக்
கொண்ட
தேவி,
தேவதா
தர்மம்,
என்று
சொல்லப்படுகிறது.
இங்கே
ஹிம்சை
இருக்கிறது.
முதல்-முதல்
ஹிம்சை
காமம்
எனும்
விகாரமாகும்.
சத்யுகத்தில்
விகாரிகள்
யாரும் இருப்பதில்லை.
அவர்களுடைய
மகிமை
பாடுகிறார்கள்....
இது
கலியுகம்
இரும்பு
(அயர்ன்
ஏஜ்)
உலகமாகும்.
இதை யாரும்
(கோல்டன்
ஏஜ்)
பொன்
உலகம்
என்று
சொல்ல
முடியாது.
நாடகமே
அப்படி
உருவாக்கப்பட்டுள்ளது.
சத்யுகம்
சிவாலயமாகும்.
அங்கே
அனைவரும்
தூய்மையானவர்கள்,
அவர்களுடைய
சித்திரம்
கூட
இருக்கிறது.
சிவாலயத்தை
உருவாக்கக்கூடிய
சிவபாபாவின்
சித்திரம்
கூட
இருக்கிறது.
பக்தி
மார்க்கத்தில்
அவருக்கு
அனேக பெயர்கள்
கொடுத்து
விட்டார்கள்.
உண்மையில்
பெயர்
ஒன்றுதான்
ஆகும்.
பாபாவிற்கு
அவருடைய
சரீரம்
இல்லை.
அவரே
கூறுகின்றார்
நான்
என்
அறிமுகத்தைக்
கொடுப்பதற்கு
அல்லது
படைப்பின்
முதல்,
இடை,
கடைசியின் ஞானத்தை
சொல்வதற்கு
வர
வேண்டியுள்ளது.
நான்
வந்து
உங்களுக்கு
சேவை
செய்ய
வேண்டியிருக்கிறது.
ஹே,
தூய்மையற்றவர்களை
தூய்மையாக்கக்
கூடியவரே
வாருங்கள்,
என்று
நீங்கள்
தான்
அழைக்கிறீர்கள்.
சத்யுகத்தில்
அழைப்பதில்லை.
இந்த
சமயத்தில்
அனைவரும்
அழைக்கிறார்கள்.
ஏனென்றால்
வினாசம்
அருகிலேயே
உள்ளது.
இது
அதே
மகாபாரத
சண்டைதான்,
என்று
பாரதவாசிகள்
தெரிந்திருக்கிறார்கள்.
பிறகு
ஆதி
சனாதன
தேவி-தேவதா
தர்மத்தின்
ஸ்தாபனை
நடக்கிறது.
பாபா
கூறுகின்றார்,
நான்
ராஜாவுக்கெல்லாம்
இராஜாவாக
மாற்ற
வந்திருக்கின்றேன்.
இன்றைக்கு
மகாராஜா,
சக்கரவர்த்திகள்
போன்றோர்
இல்லை.
இப்போது
பிரஜைகளின்
மீது
பிரஜைகளின்
இராஜ்யமாகும்.
குழந்தைகள்
புரிந்திருக்கிறார்கள்
பாரதவாசிகளாகிய
நாம்
அனைத்தும்
பெற்றவர்களாக
இருந்தோம்.
வைரம் வைடூரியங்களால்
ஆன
மாளிகை
களில்
இருந்தோம்.
புதிய
உலகமாக
இருந்தது.
பிறகு
புதியது
தான்
பழையதாக ஆகியது.
ஒவ்வொரு
பொருளும்
பழையதாக
ஆகத்தான்
செய்கிறது.
எப்படி
கட்டிடங்கள்
புதியதாக
கட்டுகிறார்கள்,
பிறகு
கடைசியில்
ஆயுள்
குறைந்து
கொண்டே
செல்லும்.
இது
புதியதாக
இருக்கிறது
இது
பாதி
பழையதாக இருக்கிறது.
இது
மத்திய
நிலையில்
இருக்கிறது.
என்று
சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு
பொருளும்
சதோ,
ரஜோ,
தமோவாக
ஆகிறது.
பகவானுடைய
மகாவாக்கியமல்லவா!
பகவான்
என்றால்
பகவான்
தான்.
பகவான்
என்று யாருக்கு
சொல்லப்படுகிறது,
என்பதைக்
கூட
தெரிந்திருக்கவில்லை.
இராஜா,
இராணி
இல்லவே
இல்லை.
இங்கே ஜனாதிபதி,
பிரதம
மந்திரி
இன்னும்
அவர்களுடைய
மந்திரிகள்
நிறைய
பேர்
இருக்கிறார்கள்.....
சத்யுகத்தில் இராஜா-இராணி
எப்படியோ....
வித்தியாசத்தை
பாபா
சொல்லியிருக்கின்றார்.
சத்யுகத்தின்
எஜமானர்களாக இருப்பவர்களுக்கு
மந்திரிகள்,
ஆலோசகர்கள்
இருப்பதில்லை.
அவசியமில்லை.
இந்த
நேரத்தில்
தான் சிவபாபாவிடமிருந்து
சக்தியை
அடைந்து
அந்த
பதவியை
அடைகிறார்கள்.
இந்த
சமயத்தில்
பாபாவிடமிருந்து உயர்ந்த
வழி
கிடைக்கிறது,
அதன்
மூலம்
உயர்ந்த
பதவி
அடைகிறார்கள்.
பிறகு
யாரிடமும்
வழி
கேட்க மாட்டார்கள்.
அங்கே
மந்திரிகள்
இருப்பதில்லை.
இறங்கு
முகத்தில்
செல்லும்
போது
தான்
மந்திரிகள்
இருக்கிறார்கள்.
புத்தி
இல்லாமல்
போய்
(காலியாகி)
விடுகிறது.
முக்கியமானது
விகாரத்தின்
விஷயமாகும்.
தேக-அபிமானத்தின்
மூலம்
தான்
விகாரம்
பிறக்கிறது.
அதில் காமம்
தான்
முதலாவதாகும்.
பாபா
கூறுகின்றார்.
இந்த
காமம்
மிகப்பெரிய
எதிரியாகும்,
இதன்
மீது
வெற்றி அடைய
வேண்டும்.
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
கொள்ளுங்கள்,
என்று
பாபா
நிறைய
முறை
புரிய வைத்திருகின்றார்.
நல்ல
அல்லது
கெட்ட
சம்ஸ்காரம்
ஆத்மாவில்
தான்
இருக்கிறது.
இங்கே
தான்
கர்மங்களை தெரிந்து
கொள்ள
வேண்டியிருக்கிறது.
சத்யுகத்தில்
இல்லை.
இது
சுகதாமமாகும்.
பாபா
வந்து
குழந்தைகளாகிய உங்களை
சுகதாம,
சாந்திதாம
வாசிகளாக
(வசிப்பவர்களாக)
மாற்றுகின்றார்.
பாபா
நேரடியாக
ஆத்மாக்களிடம் பேசுகின்றார்.
ஆத்மா
நிச்சய
புத்தியுடையவராகி
அமர்ந்திரு,
தேக,
அபிமானத்தை
விடு
என்று
அனைவருக்கும் கூறுகின்றார்.
இந்த
தேகம்
அழியக்கூடியது,
நீங்கள்
அழிவற்ற
ஆத்மாக்களாவீர்கள்.
இந்த
ஞானம்
வேறு
யாரிடத்திலும்
இல்லை.
ஞானத்தை
அறியாத
காரணத்தினால்,
பக்தியையே
ஞானம்
என்று
புரிந்து
கொண்டார்கள்.
இப்போது குழந்தைகளாகிய
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்---
பக்தி
தனி,
ஞானத்தின்
மூலம்
சத்கதி
ஏற்படுகிறது.
பக்தியின்
சுகம் அல்பகாலத்திற்
கானதாகும்,
ஏனென்றால்
பாவ
ஆத்மாக்களாகி
விடுகிறார்கள்,
விகாரத்தில்
சென்று
விடுகிறார்கள்.
அரைக்
கல்பத்திற்கு
எல்லையற்ற
ஆஸ்தி
கிடைத்தது.
அது
முடிந்து
விட்டது.
பிறகு
இப்போது
பாபா
ஆஸ்தி கொடுப்பதற்காக
வந்துள்ளார்.
இதன்
மூலம்
தூய்மை,
சுகம்
சாந்தி
அனைத்து:ம்
கிடைத்து
விடுகிறது.
குழந்தைகளே,
நீங்கள்
தெரிந்திருக்கிறீர்கள்,
இந்த
பழைய
உலகம்
சுடுகாடாக
ஆகத்தான்
வேண்டும்.
இப்போது
இந்த
சுடுகாட்டிலிருந்து
மனதை
நீக்கி
பரிஸ்தானம்
(தேவதைகள்
வாழுமிடம்
சொர்க்கம்)
புதிய
உலகத்தின்
மீது
பற்று
வையுங்கள்.
எப்படி
லௌகீக
தந்தை
புதிய
வீடு
கட்டுகிறார்
என்றால்
குழந்தைகளின்
புத்தியின்
தொடர்பு
பழைய
வீட்டிலிருந்து நீங்கி
புதிய
வீட்டின்
மீது
ஈடுபட்டு
விடுகிறது.
அலுவலகத்தில்
அமர்ந்திருந்தால்
கூட
புதிய
வீட்டில்
தான் இருக்கும்.
அது
எல்லைக்குட்
பட்ட
விஷயமாகும்.
எல்லையற்ற
தந்தை
புதிய
உலகம்
சொர்க்கத்தைப்
படைத்துக் கொண்டிருக்கின்றார்.
இப்போது
பழைய
உலகத்திலிருந்து
சம்மந்தத்தை
துண்டித்து
என்
ஒருவனிடத்தில் இணையுங்கள்.
என்று
கூறுகின்றார்.
உங்களுக்காக
புதிய
உலகமும்
இந்த
ருத்ர
ஞான
யக்ஞத்தில்
அர்ப்பணம்
ஆக வேண்டும்.
இந்த
முழு
மரமும்
தமோபிரதானமாக
உளுத்துப்
போய்
விட்டது.
இப்போது
பிறகு
புதியதாகிறது.
எனவே
பாபா
புரிய
வைக்கின்றார்.
இவை
புதிய
உலகத்தின்
விஷயங்களாகும்.
எப்படி
மனிதர்கள்
வியாதியில் இருக்கும்
போது
கூட
நம்பிக்கை
இழந்தவர்களாக
ஆகி
விடுகிறார்கள்
அல்லவா?
இவர்
பிழைப்பது
கஷ்டம்
என்று புரிந்து
கொள்கிறார்கள்.
அதே
போல்
உலகமும்
இப்போது
நம்பிக்கை
இல்லாததாக
இருக்கிறது.
சுடுகாடாக ஆகப்போகிறது.
பிறகு
இதனை
ஏன்
நினைவு
செய்ய
வேண்டும்.
இது
எல்லையற்ற
சன்னியாசமாகும்.
இந்த ஹடயோக
சன்னியாசிகள்
வீடு-வாசலை
மட்டும்
தான்
விட்டுச்
செல்கிறார்கள்.
நீங்கள்
பழைய
உலகத்தையே சன்னியாசம்
செய்கிறீர்கள்.
பழைய
உலகத்திலிருந்து
புதிய
உலகமாகி
விடுகிறது.
நான்
கீழ்படிந்த
சேவகன்
என்று
பாபா
கூறுகின்றார்.
நான்
குழந்தைகளின்
சேவைக்காக
வந்துள்ளேன்.
பாபா நாங்கள்
தூய்மையற்றவர்களாக
ஆகிவிட்டோம்.
நீங்கள்
தூய்மையற்ற
உலகத்தில்
மற்றும்
தூய்மையற்ற
சரீரத்தில் வாருங்கள்
என்று
என்னை
அழைத்தீர்கள்.
எப்படி
அழைப்பு
கொடுக்கின்றீர்கள்
பாருங்கள்!
தூய்மையற்றவர்களாக மாற்றுவது
இராவணன்,
அவனைத்
தான்
எரித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
இவன்
மிகப்பெரிய
எதிரியாவான்.
எப்போதிலிருந்து
இராவணன்
வந்தானோ,
அப்போதிலிருந்து
உங்களுக்கு
முதல்-இடை-கடைசி
துக்கம்
கிடைத்து விஷக்கடலில்
மூழ்கிக்
கொண்டிருக்கிறீர்கள்.
இப்போது
பாபா
கூறுகின்றார்
விஷத்தை
விட்டு
விட்டு
அமிர்தத்தைக் குடியுங்கள்.
அரைக்
கல்பம்
இராவண
இராஜ்யத்தில்,
விகாரத்தின்
காரணமாக
நீங்கள்
எவ்வளவு
துக்கமுடையவர்களாக ஆகி
விட்டீர்கள்.
எத்தனை
வழியுடையவர்களாக
ஆகி
விட்டீர்கள்.
எவ்வளவு
திட்டுகிறீர்கள்.
அவ்வளவு
திட்டுகிறீர்கள்
--
யார்
உங்களை
தூய்மையான
உலகத்திற்கு
எஜமானர்களாக
மாற்றுகிறாரோ,
அவரை
அனைத்திலும்
அதிகமாக திட்டுகிறீர்கள்.
அதிசயம்
செய்கிறீர்கள்.
மனிதர்கள்
84
லட்சம்
பிறவிகள்
எடுக்கிறார்கள்
என்று
சொல்லி
விட்டீர்கள்.
இன்னும்
என்னை
சர்வவியாபி
என்று
சொல்லி
விடுகிறீர்கள்.
இது
கூட
நாடகமாகும்.
உங்களுக்கு
விளையாட்டாகப் புரிய
வைக்கின்றேன்.
நல்ல
அல்லது
கெட்ட
சம்ஸ்கார-
சுபாவம்
ஆத்மாவினுடையதாகத்
தான்
இருக்கிறது.
ஆத்மா
கூறுகிறது,
நாம்
84
பிறவிகள்
அனுபவிக்கின்றோம்.
ஆத்மா
தான்
ஒரு
சரீரத்தை
விட்டு
மற்றொன்றை எடுக்கிறது.
இதைக்
கூட
பாபா
இப்போது
புரிய
வைத்திருக்கிறார்.
நாடகத்தின்
திட்டப்படி
பாபா
தான்
வந்து
யார் தலை
கீழாக
ஆகி
விட்டார்களோ,
அவர்களை
நேராக
மாற்றுகின்றார்.
இனிமையிலும்
-
இனிமையான
குழந்தைகளுக்கு பாபா
கூறுகின்றார்.
நீங்கள்
இங்கே
தலை
கீழானவர்களாகி
அமராதீர்கள்.
தங்களை
ஆத்மா
என்று
புரிந்து கொள்ளுங்கள்.
இப்போது
உங்களுக்கு
அல்லா
பாபா
கிடைத்திருக்கின்றார்.
அவர்
உங்களை
சரியாக்குகின்றார்.
இராவணன்
தலை
கீழாக
மாற்றுகின்றான்.
பிறகு
சரியாவதின்
மூலம்
நீங்கள்
நேராக
நின்று
விடுகிறீர்கள்.
இது
ஒரு நாடகமாகும்.
இந்த
ஞானத்தை
பாபா
தான்
அமர்ந்து
கூறுகின்றார்.
பக்தி,
பக்தி
தான்,
ஞானம்,
ஞானம்
தான்.
பக்தி முற்றிலும்
தனிப்பட்டதாகும்.
ஒரு
குளம்
இருக்கிறது
என்று
கூறுகிறார்கள்.
அங்கே
குளிப்பதின்
மூலம்
தேவதைகளாக ஆகி
விடுகிறார்கள்
என்று.
பார்வதிக்கு
அமர
கதை
சொன்னதாக
சொல்லி
விடுகிறார்கள்.
இப்போது
நீங்கள்
அமர கதை
கேட்டுக்
கொண்டிருக்கின்றீர்கள்
அல்லவா!
ஒரு
பார்வதிக்கு
மட்டும்
அமர
கதை
சொன்னாரா
என்ன!
இது எல்லையற்ற
விஷயமாகும்.
அமரலோகம்
சத்யுகமாகும்.
மரணலோகம்
கலியுகமாகும்.
இதை
முட்கள்
நிறைந்த
காடு என்று
சொல்லப்
படுகிறது.
பாபாவை
தெரிந்திருக்கவே
இல்லை.
பரம
பிதா
பரமாத்மா,
ஹே,
பகவானே,
என்று சொல்கிறார்கள்.
ஆனால்
தெரிந்திருக்கவில்லை.
நீங்களும்
கூட
தெரிந்திருக்கவில்லை.
பாபா
வந்து
சரியாக மாற்றினார்.
பகவானை
அல்லா
என்று
அழைக்கின்றனர்.
அல்லா
கற்பித்து
அல்லா
பதவி
கொடுப்பாரல்லவா?
ஆனால்
பகவான்
ஒருவரே
ஆவார்.
இவர்களை
(லஷ்மி-நாராயணனை)
பகவான்
பகவதி
என்று
சொல்ல
முடியாது.
இவர்கள்
மறு
பிறவியில்
வருகிறார்கள்
அல்லவா?
நான்
தான்
இவர்களுக்கு
ஞானம்
கற்பித்து
தெய்வீக குணமுடையவர்களாக
மாற்றினேன்.
நீங்கள்
ஒருவருக்கொருவர்
சகோதரர்களாவீர்கள்.
பாபாவின்
ஆஸ்திக்கு
உரிமையுடையவர்களாவீர்கள்.
மனிதர்கள் காரிருளில்
இருக்கின்றார்கள்.
அசுர
சம்பிரதாயம்
அல்லவா?
கலியுகம்
இன்னும்
சிறு
குழந்தை
போல
தவழ்கிறது.
என்று
சொல்கிறார்கள்.
இன்னும்
நிறைய
ஆண்டுகள்
இருக்கின்றன
என்று
புரிந்து
கொள்கிறார்கள்.
எவ்வளவு அஞ்ஞான
இருளில்
உறங்கிக்
கொண்டிருக்கிறார்கள்.
இது
கூட
விளையாட்டாகும்.
வெளிச்சத்தில்
துக்கம் ஏற்படுவதில்லை,
இருளில்
இரவில்
துக்கம்
ஏற்படுகிறது.
இதை
கூட
நீங்கள்
தான்
புரிந்து
கொள்கிறீர்கள்
மேலும் புரிய
வைக்கவும்
முடியும்.
முதல்
-முதலில்
ஒவ்வொரு
மனிதனுக்கும்
பாபாவின்
அறிமுகத்தைக்
கொடுக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும்
இரண்டு
தந்தை
இருக்கிறார்கள்.
எல்லைக்குட்பட்ட
தந்தை
எல்லைக்குட்பட்ட சுகத்தை
கொடுக்கின்றார்.
எல்லையற்ற
தந்தை
எல்லைக்கு
அப்பாற்பட்ட
சுகத்தைத்
தான்
கொடுக்கின்றார்.
சிவராத்திரி கொண்டாடுகிறார்கள்
என்றால்,
கண்டிப்பாக
பாபா
சொர்க்கத்தை
தான்
ஸ்தாபனை
செய்ய
வருகின்றார்.
எந்த சொர்க்கம்
கடந்து
விட்டதோ,
அதை
மீண்டும்
ஸ்தாபனை
செய்து
கொண்டிருக்கின்றார்.
இப்போது
தமோபிரதான உலகம்
நரகமாகும்.
நாடகத்தின்
திட்டப்படி
எப்போது
துல்லியமான
நேரம்
வருகிறதோ,
அப்போது
மீண்டும்
நான் வந்து
என்னுடைய
நடிப்பை
நடிக்கின்றேன்.
நான்
நிராகாரமானவனாக
இருக்கின்றேன்.
எனக்கு
கண்டிப்பாக
வாய் வேண்டும்.
எருது
முகம்
இருக்குமா
என்ன?
நான்
இவருடைய
வாயை
(பிரம்மா)
ஆதாரமாக
எடுத்துக் கொள்கிறேன்.
இவர்
நிறைய
பிறவிகளின்
கடைசி
பிறவியில்
வானப்பிரஸ்த
நிலையில்
இருக்கின்றார்.
இவருக்குள் பிரவேசம்
ஆகின்றேன்.
இவர்
தன்னுடைய
பிறவிகளைப்
பற்றித்
தெரிந்திருக்கவில்லை.
நல்லது!
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு
தாயும்
தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே!
தாரணைக்கான
முக்கிய
சாரம்
:-
1.
எப்படி
பாபா
நேரடியாக
ஆத்மாக்களிடம்
பேசுகிறாரோ,
அதே
போல்
தன்னை
ஆத்மா
என்று நிச்சயம்
செய்து
கொள்ள
வேண்டும்.
இந்த
சுடுகாட்டிலிருந்து
பற்றை
நீக்கி
விட
வேண்டும்.
ஒருபோதும்
கர்மத்தை
நொந்து
கொள்ளாத
சம்ஸ்காரத்தை
மேற்கொள்ள
வேண்டும்.
2.
எப்படி
பாபா
நாடகத்தின்
மீது
நிலையாக
இருக்கின்ற
காரணத்தினால்
யாரையும்
குற்றம் சொல்வது
இல்லையோ,
திட்டக்கூடிய
அபகாரிகளுக்கும்
உபகாரம்
செய்கின்றாரோ,
அதே
போல்
பாபாவிற்குச்
சமமாக
ஆக
வேண்டும்.
இந்த
நாடகத்தில்
யாருடைய
குற்றமும்
இல்லை,
இது
துல்லியமாக
உருவாக்கப்பட்டுள்ளது.
வரதானம்:
அனைத்து
ஆத்மாக்களின்
மீதும்
தனது
சுப
பாவனைக்கான
(நல்லெண்ண)
விதை
தெளிக்கக்
கூடிய
மாஸ்டர்
வள்ளல்
ஆகுக.
(பழத்தை)
பலனை
எதிர்பார்க்காமல்
நீங்கள்
தனது
சுப
பாவனைக்கான
விதையை
ஒவ்வொரு
ஆத்மாவின்
மீதும் தெளித்துக்
கொண்டே
செல்லுங்கள்.
தகுந்த
நேரத்தில்
ஒவ்வொரு
ஆத்மாவும்
விழிப்படைந்தே
ஆக
வேண்டும்.
ஒருவர்
எதிர்ப்பு
செய்தாலும்
நீங்கள்
தனது
கருணை
பாவனையை
விட்டு
விடக்
கூடாது,
இது
எதிர்ப்பு,
அவமானம்,
நிந்தனைக்கான
காரியம்
செய்யும்,
நல்ல
பழம்
(பலன்)
கொடுக்காது.
எந்த
அளவிற்கு
நிந்தனை செய்கிறார்களோ
அந்த
அளவிற்கு
குணத்தின்
மகிமை
செய்வார்கள்,
ஆகையால்
ஒவ்வொரு
ஆத்மாவிற்கும்
தனது செயல்முறை
மூலம்,
நேர்மறை
அதிர்வலைகள்
மூலம்,
வார்த்தைகளின்
மூலம்
மாஸ்டர்
வள்ளல்
ஆகி
கொடுத்துக் கொண்டே
செல்லுங்கள்.
சுலோகன்:
சதா
அன்பு,
சுகம்,
அமைதி
மற்றும்
ஆனந்தத்தின்
கடலில்
மூழ்கியிருக்கும் குழந்தைகளே
உண்மையிலும்
உண்மையான
தபஸ்விகள்
ஆவர்.
ஓம்சாந்தி