22.12.2019 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்

ரிவைஸ் 24.03.1985


 

இப்பொழுது இல்லை என்றால் ஒரு போதும் இல்லை

 

இன்று அன்பு நிறைந்த மற்றும் முழுமையாக சட்டப்படி நடக்கும் பாப்தாதா அனைத்து குழந்தைகளின் கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு குழந்தையின் சேமிப்புக் கணக்கு எந்த அளவு இருக்கின்றது என்பதைப் பார்த்தார். பிராமணன் ஆவது என்றால் கணக்கை சேமிப்பது, ஏனென்றால் இந்த ஒரு பிறவியில் சேமிப்பு செய்த கணக்கின் பிரகாரம் 21 பிறவிகள் பிராப்தியை அடைந்துக் கொண்டேயிருப்பார்கள். 21 பிறவிகள் பிராப்தியை மட்டும் அடைவதில்லை, ஆனால் எந்த அளவு பூஜைக்குரியவர்களாக ஆகிறீர்களோ அதாவது இராஜ பதவிக்கு அதிகாரியாக ஆகிறீர்களோ அந்த கணக்கின் அனுசாரம் அரைக் கல்பத்தில் பக்தி மார்க்கத்தில் பூஜையும் இராஜ்ய பாக்கியத்தின் அதிகாரத்தின் கணக்கின் படி நடக்கும். இராஜ பதவி சிரேஷ்மடமாக இருக்கிறது என்றால் பூஜைக்குரிய சொரூபமும் அந்தளவு சிரேஷ்டமாக இருக்கும். அத்தனை எண்ணிக்கையில் பிரஜையும் உருவாகும். பிரஜைகள் தங்களுடைய இராஜ்ய அதிகாரி, விஷ்வ மகாராஜா மற்றும் ராஜாவை தாய் தநதையின் ரூபத்தில் அன்பு செய்வார்கள். அந்த அளவே பக்த ஆத்மாக்கள் கூட அந்த சிரேஷ்ட ஆத்மாவை மற்றும் இராஜ்ய அதிகாரி மகான் ஆத்மாவை அதேபோலவே தன்னுடைய அன்பிற்குரிய இஷ்ட தேவி அல்லது தேவதை என்று புரிந்து பூஜை செய்கின்றார்கள். யார் 8 நம்பரில் (அஷ்ட ரத்தினம்) வருகிறார்களோ அவர்கள் அந்த அளவு இஷ்ட மகான் தேவி தேவதை ஆகிறார்கள். இந்தக் கணக்கின் பிரகாரம் இதே பிராமண வாழ்க்கையில் இராஜ பதவியையும், பூஜைக்குரிய பதவியையும் அடைகிறீர்கள். அரைக் கல்பம் இராஜ பதவி உடையவர்களாக ஆகிறீர்கள், மேலும் அரைக் கல்பம் பூஜைக்குரிய பதவியை அடைகிறீர்கள். அந்த மாதிரி இந்த பிறவி, வாழ்க்கை மற்றும் யுகம் முழு கல்பத்தின் கணக்கில் சேமிப்பு செய்வதற்கான யுகம் மற்றும் வாழ்க்கை. எனவே உங்கள் அனைவருக்கும் ஒரு சுலோகன் உருவாகியிருக்கிறது., அது நினைவிருக்கிறதா? இப்பொழுது இல்லை என்றால் ஒருபொழுதம் இல்லை. . இதை இந்த நேரத்தின் இந்த வாழ்க்கைக்காக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இந்த சுலோகன் பிராணர்களுக்காகவும் இருக்கிறது என்றால், அஞ்ஞானி ஆத்மாக்களை எழுப்புவதற்கான சுலோகனும் இது தான். ஒருவேளை பிராமண ஆத்மாக்கள் ஒவ்வொரு சிரேஷ்ட காரியம் செய்வதற்கு முன்பு சிரேஷ்ட எண்ணத்தை வைத்துக் கொண்டே எப்பொழுதும் இந்த சுலோகனை அதாவது இப்போது இல்லை என்றால் ஒருபொழுதும் இல்லை என்பதை நினைவு வைக்கிறார்கள் என்றால் என்னவாகும்? எப்பொழுதும் ஒவ்வொரு சிரேஷ்ட காரியத்தில் தீவிரமானவராகி முன்னேறிச் சென்று கொண்டேயிருப்பார். கூடவே இந்த சுலோகன் எப்பொழுதும் ஊக்கம், உற்சாகத்தைக் கொடுக்கக்கூடியது. ஆன்மீக விழிப்புணர்வு இயல்பாகவே வந்துவிடுகிறது. பின்பு செய்து விடலாம், பின்பு பார்த்துக் கொள்ளலாம், செய்யவும் வேண்டும், இந்த வாழ்க்கையில் இருக்கவும் வேண்டும், நாம் அந்த மாதிரி ஆகவும் வேண்டும் என்ற இந்தத சாதாரண முயற்சி செய்வதின் எண்ணங்கள் தானாகவே முடிவடைந்துவிடும். எனென்றால் இப்போது இல்லை என்றால் ஒருபோதும் இல்லை என்பது நினைவில் வந்து விட்டது. என்ன செய்ய வேண்டுமோ அதை இப்பொழுது செய்து விடுங்கள்.. இதைத்தான் தீவிர முயற்சி செய்து என்று கூறுவது.

 

நேரம் மாறுவதினால் சில நேரம் நல்ல எண்ணமும் மாறி விடுகிறது. நல்ல காரியத்தை எந்த ஊக்கத்துடன் செய்ய வேண்டும் என்று யோசித்திருந்தாரோ அதுவும் மாறிவிடுகிறது. எனவே பிரம்மா பாபா நம்பர் 1-ல் செல்வதற்கான விசேஷமாக அவரிடம் என்ன பார்த்தீர்கள்? எப்பொழுது என்பதில்லை, ஆனால் இப்பொழுது செய்ய வேண்டும். உடனடி தானம் மகா புண்ணியம் என்று கூறுவது. ஒருவேளை உடனடியாக தானம் செய்யவில்லை என்றால், யோசித்தார், நேரம் எடுத்துக் கொண்டார், திட்டத்தை உருவாக்கினார், பிறகு நடை முறையில் கொண்டு வந்தார் என்றால் இதை உடனடி தானம் என்று கூறமாட்டோம், தானம் என்று கூறுவோம். உடனடி தானம் மற்றும் தானத்தில் வித்தியாசம் இருக்கிறது. உடனடி தானம் மகா தானம். மகா தானத்தின் பலன் மகானாக இருக்கும். ஏனென்றால் எதுவரை எண்ணத்தை நடைமுறையில் செய்வது நான் செய்வேன், இப்பொழுது இல்லை கொஞ்ச காலத்திற்கு பிறகு செய்வேன் என்று யோசிக்கிறார், இப்பொழுது இந்த அளவு செய்து விடுகின்றேன் என்று யோசிப்பது மற்றும் செய்து இதனிடையே என்ன நேரம் இருக்கிறதோ அந்த நேரத்தில் மாயாவிற்கு வாய்ப்பு கிடைத்து விடுகிறது. பாப்தாதா குழந்தைகளின் கணக்கைப் பல முறை பார்த்திருக்கிறார். யோசிப்பது மற்றும் செய்வதற்கிடைய என்ன நேரம் இருக்கிறதோ அந்த நேரத்தில் மாயா வந்துவிடுகிறது என்றால் விஷயமும் மாறிவிடுகிறது. உதாரணமாக எப்போதாவது உடலால், மனதால் நான் இதை செய்வேன் என்று யோசிக்கிறார், ஆனால் கொஞ்ச காலம் கடந்த பிறகு என்ன 100 சதவிகிதமாக யோசித்தாரோ அது செய்யும் நேரத்தில் மாறிவிடுகிறது. நேரம் கிடைப்பதினால் மாயாவின் பிரபாவம் ஆன காரணத்தினால் உதாணரமாக 8 மணி நேரம் ஈடுபடுத்துபவர் 6 மணி நேரம் ஈடுபடுத்துவார். 2 மணி நேரம் குறைந்து விடும். சூழ்நிலைகளும் அந்த மாதிரி ஆகிவிடும். இந்த விதமாக பணம் செல்வத்தைப்பற்றி நான் 100 செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார். ஆனால் 50 செய்தார். இந்த அளவு வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறது. ஏனென்றால் இடையில் மாயாவிற்கு வாய்ப்பு கிடைத்து விடுகிறது. பிறகு அனேக எண்ணங்கள் வருகிறது. நல்லது. இப்பொழுது 50 செய்துவிடுவோம்,. 50 பின்னால் செய்துவிடலாம். எல்லாமே தந்தையுடையது தானே! ஆனால் உடல் மனம், செல்வத்தால் அனைத்திலும் உடனடியாக செய்யப்படும் தானம் மாகா புண்ணியம் ஆகிறது. பலி கொடுக்கிறார்கள் என்றால் உடனடியாக (ஒரே வெட்டில்) வெட்டப்படுவது தான் மகா பிரசாதமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை பார்த்திருக்கின்றீர்கள் இல்லையா? ஒரே வெட்டில் இரண்டு துண்டாக ஆவதை மகா பிராதாசம் என்று சொல்வர்கள். யார் பலியில் கதறி கதறி இருந்து விடுவார்களோ அதை மகா பிரசாதம் என்று கூறமாட்டோம். எப்படி அந்த ஆட்டை பலிக் கொடுக்கிறார்கள், அது அதிகமாகக் கதறும், இங்கு என்ன செய்கிறார்கள்? அந்த மாதிரி செய்யலாமா? அல்லது வேண்டாமா என்று யோசிக்கிறார்கள். இது தான் யோசிப்பது என்பது!. கதறும் மிருகத்தை ஒருபோதும் மகா பிரசாதமாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதே போல் இங்கேயும் உடனடி தானம் மகா புண்ணியம்... என்று இந்த வர்ணனை இருக்கிறது தானே! அது இந்த நேரத்தினுடையது. அதாவது யோசிப்பது மற்றும் உடனடியாக செய்து முடிப்பது.. யோசித்து யோசித்தே இருந்துவிடக்கூடாது. அநேக முறை அந்த மாதிரி அனுபவமும் கூறுவார்கள். நான் இதைத்தான் யோசித்தேன், ஆனால் இவர் செய்து விட்டார், நான் செய்ய வில்லை, யார் செய்து விடுகிறாரோ அவர் அடைந்துவிடுகிறார். யார் யோசித்து யோசித்து இருந்து விடுகிறாரோ அவர் யோசித்து யோசித்து திரேதாயுகம் வரை சென்றடைவார். யோசித்து யோசித்தே இருந்து விடுவார். இதே வீணான எண்ணம் தான் அது உடனடியாக செய்யவில்லை. நல்லக் காரியம், நல்ல எண்ணத்திற்காக உடனடி தானம் மகா புண்ணியம் என்று மகிமை இருக்கிறது. சில நேரம் சில குழந்தைகள் பெரிய விளையாட்டைக் காண்பிக்கிறார்கள், வீணான எண்ணம் அந்தளவு வேகமாக வருகிறது. அதை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பிறகு என்ன செய்வது! நடந்து விட்டது என்று கூறுவார்கள். நிறுத்த முடிவதில்லை,. என்ன வந்ததோ அதை செய்துவிட்டார், ஆனால் வீணானவற்றிற்காக கட்டுப்படுத்தும் சக்தி வேண்டியது இருக்கிறது. ஒரு சக்திசாலியான எண்ணத்தின் பலன் பல மடங்கு கிடைக்கிறது. அதேபோலவே ஒரு வீணான எண்ணத்தின் அதாவது சோர்வு அடைவது, மனம் உடைந்து போவது மற்றும் குஷி காணாமல் போவது, அல்லது நான் என்னவாக இருக்கிறேன் என்று தன்னையே புரிந்துக் கொள்ள முடியாத நிலை ஆகிய இவைகளின் கணக்கும் ஒன்றிற்கு பல மடங்கு கணக்காக அனுபவம் ஆகும். பின்பு விஷயமோ ஒன்றுமே யில்லை, ஆனால் குஷியில்லாமல் ஆகிவிட்டது என்று யோசிக்கிறார்கள். பெரிய விஷயமாக இருக்கவே இல்லை, ஆனால் நீண்ட நாட்களாக குஷி குறைந்து விட்டது.. தனிமையாக இருக்க ஏன் மனம் விரும்புகிறது என்று தெரிய வில்லை. எங்காவது சென்றுவிடலாமா, ஆனால் எங்கே செல்வது? தனிமை என்றால் தந்தையின் துணை என்று தனியாகவோ செல்லக்கூடாது இல்லையா? ஸ்தூலமாக தனிமையானவர்களாக ஆகிக் கொள்ளுங்கள், ஒன்றும் தவறு இல்லை, ஆனால் தந்தையின் துணையிலிருந்து தனிமையானவராக ஒருபோதும் ஆகாதீர்கள். ஒருவேளை தந்தையின் துணையிலிருந்து தனிமையானவர் ஆனீர்கள், வைராக்கியம் உடையவர், சோர்வுடையவர் ஆனீர்கள் என்றால், இதுவும் மற்ற மடங்கள் மாதிரி ஆகிவிடும். பிராமண வாழ்க்கை இல்லை. இணைந்து இருக்கிறீர்கள் இல்லையா? சங்கமயுகம் இணைந்து இருப்பதற்கான யுகம். அந்த மாதரி அதிசயமான ஜோடி (யுகல்) முழு கல்பத்திலும் கிடைக்காது. லட்சுமி நாராயணராக ஆகிவிட்டால் கூட ஆனால் இந்த மாதிரியான ஜோடியாக இருக்காது இல்லையா? எனவே சங்கம யுகத்தின் இணைந்த ரூபம் அதிலிருந்து ஒரு வினாடிக் கூட தனியாகப் பிரிய முடியாது. ஒருவேளை பிரிந்தீர்கள் என்றால் எல்லாம் முடிந்தது. அந்த மாதிரி அனுபவம் இருக்கிறது இல்லையா? பிறகு என்ன செய்கிறார்கள்? சில நேரம் கடற்கரைக்குச் சென்று விடுவார்கள், சில நேரம் மொட்டை மாடிக்கும், சில நேரம் மலை உச்சிக்கும் சென்று விடுவார்கள். ஞானத்தை சிந்திப்பதற்காக மிக நன்றாக செல்லுங்கள், அது வேறு விஷயம். ஆனால் தந்தையில்லாமல் தனியாக செல்லாதீர்கள். எங்கு சென்றாலும் தந்தையுடன் செல்லுங்கள். இது பிராமண வாழ்க்கைக்கான உறுதி மொழி. பிறந்த உடனேயே இந்த உறுதி மொழியை கொடுத்திருக்கிறீர்கள் இல்லையா? உடன் இருப்போம், உடன் செல்வோம். காட்டிற்கும், கடற்கரைக்கும் செல்ல வேண்டும் என்று அப்படி யில்லை, உடன் இருக்க வேண்டும், உடன் செல்ல வேண்டும். இந்த உறுதிமொழி அனைவரிடமும் மிகவும் உறுதியாக இருக்கிறது தான் இல்லையா? திட எண்ணம் உள்ளவர்கள் எப்போதும் வெற்றியை அடைகிறார்கள். திடத்தன்மைத்தான் வெற்றிக்கான சாவி. எனவே இந்த உறுதிமொழியையும் திடமாக உறுதியானதாக செய்திருக்கிறீர்கள் இல்லையா? எங்கு எப்பொழுதும் திடத்தன்மை இருக்குமோ அங்கு எப்போதும் வெற்றி இருக்கும். திடத்தன்மை குறைகிறது என்றால் வெற்றியும் குறைகிறது.

 

பிரம்மா பாபாவிடம் விசேஷமாக என்ன பார்த்திருக்கிறீர்கள்? உடனடி தானம் மகாப்புண்ணியம் என்று இதைத்தான் பார்த்தீர்கள், பிறகு என்னவாகும் என்று அவர் எப்பொழுதாவது யோசித்தது உண்டா? முதலில் யோசிக்க வேண்டும், பிறகு செய்ய வேண்டும் என்று அப்படி இல்லை. உடனடி தானம் மகா புண்ணியத்தின் காரணமாக பிரம்மா பாபா நம்பர் ஒன் மகான் ஆத்மாவாக ஆனார். எனவே நம்பர் ஒன் மாகன் ஆத்மாவாக ஆனதின் காரணத்தினால் கிருஷ்ணரின் ரூபத்தில் நம்பர் ஒன் பூஜை நடந்து கொண்டிருக்கிறது. இவர் ஒருவர் தான் அந்த மாதிரி மகான் ஆத்மா. யாருக்கு குழந்தை பருவ ரூபத்திலும் பூஜை, சிறு வயது ரூபத்திலும் பூஜை, இளமைப் பருவத்திலும் கிருஷ்ணா ராதா ரூபத்திலும் பூஜை, மேலும் மூன்றாவது கோப கோபியரின் மகிமையும் மற்றும் பூஜையும் நடக்கிறது.. நான்காவது லட்சுமி நாராயணர் ரூபத்திலும் பூஜை நடக்கிறது. இந்த ஒரே ஒரு மகான் ஆத்மாவிற்குத்தான் பல ஆயுளின் ரூபத்தில் பலவிதமான சரித்திரத்தின் ரூபத்தில் மகிமை மற்றும் பூஜை நடக்கிறது. இராதாவிற்கும் மகிமை இருக்கிறது, ஆனால் இராதாவின் குழந்தை ரூபத்தில் ஒருபோதும் ஊஞ்சலில் வைத்து ஆட்ட மாட்டார்கள். கிருஷ்ணரை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவார்கள். கிருஷ்ணரிடம் அதிக அன்பு வைப்பார்கள். கிருஷ்ணர் உடன் இருக்கும் காரணத்தினால் இராதாவிற்கும் பெயர் அவசியம் இருக்கிறது. இருந்தாலும் நம்பர் ஒன்று மற்றும் இரண்டில் வித்தியாசம் இருக்கும் இல்லையா? அப்படி நம்பர் ஒன் ஆனதின் காரணமாக என்ன ஆனார்? மகா புண்ணிய ஆத்மா ஆனார். மகா புண்ணிய ஆத்மாவிலிருந்து மகான் பூஜைக்குரிய ஆத்மவாக ஆகிவிட்டார். உங்களின் பூஜைகளிலும் மிகுந்த வித்தியாசம் இருக்கிறது என்று ஏற்கனவே கூறியிருந்தோம் இல்லையா? சில தேவி தேவதைகளுக்கு விதிப்பூர்வமாக நடக்கிறது. மேலும் சிலருக்கு அப்படியே செய்ய வேண்டுமே என்று நடக்கிறது. இதனுடையதோ மிகுந்த விஸ்தாரம் இருக்கிறது. பூஜைக்கும் மிகுந்த விஸ்தாரம் இருக்கிறது. ஆனால் இன்றோ அனைவரின் சேமிப்புக் கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஞானத்தின் பொக்கிஷத்தை, சக்திகளின் பொக்கிஷத்தை, சிரேஷ்ட எண்ணங்களின் பொக்கிஷத்தை எந்தளவு சேமித்திருக்கிறார்கள். மேலும் நேரத்தின் பொக்கிஷத்தை எந்தளவு சேமித்திருக்கிறார்கள், இந்த நான்கு பொக்கிஷங்களையும் எந்தளவு சேமித்திருக்கிறார்கள் என்ற கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். எனவே இப்பொழுது இந்த நான்கு விசயங்களின் கணக்கை நீங்கள் சோதனை செய்யுங்கள். பிறகு பாப்தாதாவும் முடிவையும் (ரிசல்ட்) என்ன பார்த்தோம் என்று கூறுவார். மேலும் ஒவ்வொரு பொக்கிஷத்தையும் சேமிப்பு செய்வதற்கான மற்றும் அதனுடைய பிராப்திக்கும் என்ன சம்மந்தம்? மேலும் எப்படி சேமிப்பு செய்ய வேண்டும்? என்ற இந்த அனைத்து விஷயங்கள் பற்றி பின்பு கூறுவோம் புரிந்ததா?

 

நேரமோ எல்லைக்குட்பட்டது தான் இல்லையா? தந்தை வருவதும் எல்லைக்குட்பட்டதில் தான். தன்னுடைய உடலும் இல்லை. கடனாக எடுக்கப்பட்ட உடல், தற்காலிகமாக பங்கை (பார்ட்) செய்வதற்கான உடல், எனவே நேரத்தையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. பாப்தாதாவிற்கும் ஒவ்வொரு குழந்தையையும் சந்திப்பதில், ஒவ்வொரு குழந்தையும் மிக இனிமையான ஆன்மீக நறுமணத்தை எடுப்பதிலும் மகி:ழ்ச்சி வருகிறது. பாப்தாதாவோ ஒவ்வொரு குழந்தையின் மூன்று காலங்களையும் தெரிந்திருக்கிறார் இல்லையா? மேலும் குழந்தைகள் தன்னுடைய தற்காலத்தை மட்டும் அதிகமாகத் தெரிந்திருக்கிறீர்கள், எனவே சில நேரம் அப்படியும், சில நேரம் வேறு மாதிரியும் ஆகிவிடுகிறீர்கள். ஆனால் பாப்தாதா மூன்று காலங்களையும் தெரிந்திருக்கும் காரணத்தினால் இவர் சென்ற கல்பத்தின் உரிமை பெற்றவர் என்று அதே பார்வையோடு பார்க்கின்றார். இவர் அதிகாரி ஆவார், இப்போது கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறார், ஆனால் கண்டிப்பாக உறுதியாக ஆகியே விடுவார். சிரேஷ்ட எதிர்காலத்தைப் பார்க்கிறார், எனவே தற்சமயத்தை பார்த்தும் பார்ப்பதில்லை, அந்த மாதிரி ஒவ்வொரு குழந்தையின் விசேஷத்தைப் பார்க்கின்றார். எந்த விசேஷமும் இல்லை என்று அந்தமாதிரி யாராவது இருக்கிறார்களா என்ன? முதல் விசேஷமோ இங்கு வந்து சேர்ந்து விட்டீர்கள் அது தான். வேறு எதுவும் இல்லாமல் இருந்தாலும் நேர் எதிரில் சந்திப்பதற்கான இந்த பாக்கியம் ஒன்றும் குறைந்தது அல்ல. இதுவும் விசேஷம் தான் இல்லையா? இது விசேஷ ஆத்மாக்களின் சபை எனவே விசேஷ ஆத்மாக்களின் விசேஷத்தைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார். நல்லது.

 

எப்பொழுதும் உடனடி தானம் மகாப் புண்ணியம் என்ற சிரேஷ்டமான எண்ணத்தை வைக்கக்கூடிய, எப்பொழுதும் எப்போது என்பதை இப்போது என்று மாற்றக்கூடிய, எப்பொழுதும் நேரத்தின் வரதானத்தை தெரிந்து வரதானங்களினால் பையை நிரப்பக்கூடிய எப்பொழுதும் பிரம்மா பாபாவைப் பின்பற்றி பிரம்மா பாபாவுடன் சிரேஷ்ட இராஜ்ய அதிகாரி, சிரேஷ்ட வாழ்க்கை பதவி அதிகாரியாக ஆகக்கூடிய, எப்பொழுதும் தந்தையுடிடன் இணைந்திருக்கக்கூடிய அந்த மாதிரியான எப்போதும் துணைவர்களாக இருக்கும் குழந்தைகளுக்கு,. எப்போதும் தந்தையை துணையாக வைத்து நடந்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

விடைபெறும் நேரத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் அன்பு நினைவுகளைக் கூறிக்கொண்டே பாப்தாதா கூறினார்:

 

பாப்தாதா நாலாபுறங்களிலுமுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் அன்பு நினைவுகளை அனுப்புகிறார். ஒவ்வொரு ஸ்தானத்தின் அன்பான குழந்தைகள் அன்புடன் சேவையில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும் அன்பு எப்பொழுதுமே முன்னேற்றிக் கொண்டேயிருக்கும். நீங்கள் அன்புடன் சேவை செய்கின்றீர்கள் எனவே யாருக்கு சேவை செய்கின்றீர்களோ அவர்களும் தந்தையின் அன்பிற்குரியவராக ஆகிவிடுகிறார்கள். அனைத்துக் குழந்தைகளுக்கும் சேவை செய்வதற்கான வாழ்த்துக்கள் உரித்தாகுக. மேலும் கடினமாக உழைத்தற்காக அல்ல, ஆனால் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக! ஏனென்றால் பெயர் கடும் உழைப்பு. ஆனால் இருப்பதே அன்பு. எனவே யார் நினைவில் இருந்து சேவை செய்கிறார்களோ அவர் தன்னுடைய நிகழ்காலத்திற்கும் மேலும் எதிர்காலத்திற்கும் சேமிக்கிறார்கள். எனவே இப்பொழுதும் சேவைக்கான குஷி கிடைக்கிறது. மேலும் எதிர்காலத்திலும் சேமிப்பு ஆகிறது. சேவையில்லை, ஆனால் அழியாத வங்கியில் தன்னுடைய கணக்கில் சேமிப்பு செய்தீர்கள். சிறிதளவு சேவை செய்தீர்கள், ஆனால் அது சதா காலத்திற்காக சேமிப்பு ஆகிவிட்டது. அப்படியானால் அந்த சேவை என்னவாக ஆனது? சேமிப்பாக ஆனது இல்லையா! எனவே அனைத்துக் குழந்தைகளுக்கும் பாப்தாதா அன்பு நினைவுகளைத் தந்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் தன்னைச் சக்திசாலியான ஆத்மா என்று புரிந்துக் கொண்டு முன்னேறிச் சென்றீர்கள் என்றால், சக்திசாலியான ஆத்மாக்களுக்கு வெற்றி எப்பொழுதுமே நிச்சயமாக இருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர்களின் பெயரோடு இந்த விசேஷ அன்பு நினைவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். (டெல்லி பாண்டவ பவனில் டெலக்ஸ் மிஷன் வைக்கப்பட்டுள்ளது) டில்லியில் இருக்கும் பாண்டபவன் அனைத்துக் குழந்தைகளுக்கும் சேவைக்கான விசேஷ வாழ்த்துக்கள்! ஏனென்றால் இந்த சாதனமும் சேவைக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதனத்திற்காக வாழ்த்துக்கள் இல்லை,. சேவைக்காக வாழ்த்துக்கள்! எப்பொழுதும் இந்த சாதனங்கள் மூலமாக எல்லைக்கப்பாற்பட்ட அழியாத சேவையை செய்துக் கொண்டேயிருப்பீர்கள். மிகவும் குஷியுடன் இந்த சாதனத்தின் மூலமாக உலகத்தில் தந்தையின் செய்தியை அனுப்பிக் கொண்டேயிருப்பீர்கள். எனவே குழந்தைகளுக்கு சேவையின் ஊக்கம் உற்சாகம் மற்றும் குஷி எவ்வளவு இருக்கிறது என்று பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கிறார். இதே குஷியுடன் எப்பொழுதும் முன்னேறிச் சென்றுக் கொண்டேயிருங்கள். பாண்டவ பவனிற்காக அனைத்து வெளிநாட்டினரும் குஷியின் சான்றிதழைக் கொடுக்கின்றார்கள். இதைத்தான் தந்தைக்கு சமமாக விருந்தினரை உபசரிப்பதில் எப்பொழுதும் முன்னுக்கு இருங்கள். எப்படி பிரம்மா பாபா எந்தளவு விருந்தினரை உபசரித்துக் காண்பித்திருக்கிறார், அப்படி விருந்தினர்களைக் கவனிப்பதில் தந்தையைப் பின்பற்றுபவர்கள், தந்தையை வெளிப்படுத்துகிறார்கள். தந்தையின் பெயரை பிரத்யட்சம் செய்கிறார்கள், எனவே பாப்தாதா அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அன்பு நினைவுகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

 

அமிர்தவேளை 6 மணிக்கு பாப்தாதா மீண்டும் முரளி கூறினார்.

மேலும் அன்பு நினைவுகள் கொடுத்தார் - 25.03.1985

 

இன்றைய தினம் எப்பொழுதும் தன்னை டபுள் லைட் என்று புரிந்துக் கொண்டு பறக்கும் கலையின் அனுபவத்தை செய்துக் கொண்டேயிருங்கள். கர்ம யோகியின் பங்கை செய்துக் கொண்டோம், செயல், காரியம் மற்றும் யோகாவின் சமநிலை சக்திசாலியாக இருந்ததா என்று சோதனைச் செய்ய வேண்டும். ஒருவேளை செய்யும் காரியம் சக்திசாலியாக இருந்தது, ஆனால் நினைவு குறைவாக இருந்தது என்றால், சமநிலை இல்லை. மேலும் நினைவு சக்திசாலியாக இருந்தது, காரியம் சக்திசாலியாக இல்லை என்றாலும் சமநிலை இல்லை. எனவே காரியம் மற்றும் நினைவின் சமநிலையை வைத்துக் கொண்டேயிருங்கள். முழு நாளும் இதே உயர்ந்த நிலையில் இருப்பதினால் தன்னுடைய கர்மாதீத் நிலை அருகில் வருவதற்கான அனுபவம் செய்வீர்கள். முழு நாளும் கர்மாதீத் நிலை மற்றும் அவ்யக்த பரிஸ்தா சொரூப நிலையில் நடந்துக் கொண்டேயிருங்கள். மேலும் கீழே உள்ள நிலைக்கு வராதீர்கள். இன்று கீழேயே வராதீர்கள், மேலேயே இருங்கள். ஒருவேளை யாராவது பலஹீனத்தின் காரணமாக கீழே வந்துவிட்டாலும் கூட ஒவ்வொருவருக்கும் நினைவூட்டி சக்திசாலியாக ஆக்கி, அனைவரும் உயர்ந்த நிலையை அனுபவம் செய்யுங்கள். இது தான் இன்றைய நாளுக்கான வீட்டுப்பாடம் (ஹோம் ஓர்க்) வீட்டுப்பாடம் அதிகமாக இருக்கிறது, படிப்பு குறைவாக இருக்கிறது.

 

அந்த மாதிரி எப்பொழு:தும் தந்தையை பின்பற்றி நடக்கக்கூடிய, எப்பொழுதும் தந்தைக்குச் சமமாக ஆவதின் லட்சியத்தைக் கடைப்பிடித்து முன்னேறிச் செல்லக்கூடிய, பறக்கும் கலையின் அனுபவம் நிறைந்த குழந்தைகளுக்கு, தந்தையின் இதயப்பூர்வமான அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.

 

வரதானம்:

இனிமையான நிலை மூலமாக தந்தையின் அருகாமையை சாட்சாத்காரம் செய்விக்கக்கூடிய மகான் ஆத்மா ஆகுக

 

எந்தக் குழந்தைகளின் எண்ணத்திலும் இனிமை, பேசும் வார்த்தைகளிலும் இனிமை, மேலும் செய்யும் காரியங்களிலும் இனிமை இருக்கிறதோ அவர்கள் தான் தந்தையின் அருகில் இருக்கிறார்கள். எனவே தந்தையும் அவர்களை இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! என்று தினசரி கூறுகின்றார். மேலும் குழந்தைகளும் பதிலுக்கு இனிமையிலும் இனிமையான பாபா என்று கூறுகிறார்கள். அந்த மாதிரி இந்த தினசரி கூறப்படும் இனிமையான வார்த்தை இனிமையால் நிரம்பியவர் ஆக்கிவிடுகிறது. அதேபோல் இனிமைத்தன்மையை பிரத்யட்சம் செய்யும் சிரேஷ்ட ஆத்மாக்கள் தான் மகான். இனிமைத்தன்மை தான் மகான் தன்மை. இனிமைத் தன்மை இல்லை என்றால் மகான் தன்மையின் அனுபவம் ஆகாது.

 

சுலோகன்:

எந்த ஒரு காரியத்தையும் டபுள் லைட் ஆகி செய்தீர்கள் என்றால் மன மகிழ்ச்சியுடன் பொழுது போக்காக அனுபவம் செய்வீர்கள்.

 

ஓம்சாந்தி