13.10.2019                           காலை முரளி                ஓம்சாந்தி          அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           21.02.1985           மதுபன்


 

சீதளத்தன்மையின் (குளிர்ச்சி) சக்தி

 

இன்று ஞான சூரியன், ஞான சந்திரன் தனது அதிர்ஷ்ட மற்றும் அன்பான நட்சத்திரங்களைப் பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆன்மீக நட்சத்திர மண்டலத்தை முழு கல்பத்தில் யாரும் பார்க்க முடியாது. ஆன்மீக நட்சத்திரங்களாகிய நீங்கள் மற்றும் ஞான சூரியன், ஞான சந்திரன் இந்த மிகவும் விடுபட்ட மற்றும் அன்பான நட்சத்திர மண்டலத்தைப் பார்க்கின்றீர்கள். இந்த ஆன்மீக நட்சத்திர மண்டலத்தை அறிவியலின் சக்தியால் பார்க்க முடியாது. அமைதியின் சக்தியுடையவர்கள், இந்த நட்சத்திர மண்டலத்தைப் பார்க்க முடிகிறது, தெரிந்து கொள்ள முடிகிறது, எனவே இன்று நட்சத்திர மண்டலத்தை சுற்றி வந்து விதவிதமான நட்சத்திரங்களைப் பார்த்து பாப்தாதா புன்முறுவல் செய்து கொண்டிருக்கிறார். எவ்வாறு ஒவ்வொரு நட்சத்திரமும் ஞான சூரியன் மூலமாக சத்தியத்தின் ஒளியையும், சக்தியையும் பெற்று தந்தையைப் போல சத்தியத்தின் சக்தி நிறைந்த, சத்திய சொரூபம் ஆகின்றனர். மேலும் ஞான சந்திரன் மூலமாக குளிர்ச்சியின் சக்தியை தாரணை செய்து சந்திரனைப் போல குளிர்ச்சி சொரூபம் ஆகின்றனர். சத்தியம் மற்றும் குளிர்ச்சி என்ற இரண்டு சக்திகளும் எப்பொழுதும் எளிதாக வெற்றியை பிராப்தி செய்விக்கிறது. ஒரு பக்கம் சத்தியத்தின் சக்தி என்ற உயர்ந்த போதை, மற்றொரு பக்கம் எவ்வளவு உயர்ந்த போதையோ, அந்தளவே குளிர்ச்சியின் ஆதாரத்தினால் எப்படிப்பட்ட தவறான போதை மற்றும் கோபமான ஆத்மாக்களையும் குளிர்ச்சியாக்கக் கூடியவர்கள். எப்பேர்ப்பட்ட அகங்காரத்தின் போதையில் நான், நான் செய்து காட்டுவேன், ஆனால் குளிர்ச்சியின் சக்தியினால் நான், நான் என்பதற்கு பதிலாக பாபா - பாபா என்று சொல்ல முற்பட்டுவிடுவர். சத்தியத்தை கூட குளிர்ச்சியின் சக்தியினால் நிரூபணம் செய்வதன் மூலம் சித்தி (உழைப்பின்றி வெற்றி) ஆகி விடும்.இல்லையென்றால், குளிர்ச்சியின் சக்தியைத் தவிர, சத்தியத்தை நிரூபிப்பதற்கான இலட்சியத்துடன் நிரூபிக்கின்றனர். ஆனால் அஞ்ஞானிகள் சித்தியை பிடிவாதம் என்று புரிந்து கொள்கின்றனர். எனவே சத்தியம் மற்றும் குளிர்ச்சி என்ற இரண்டு சக்திகளும் சமமாகவும், சேர்ந்தும் இருக்க வேண்டும். ஏனெனில் இன்றைய உலகத்தின் ஓவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு அக்னியில் எரிந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு அக்னியில் எரிந்துக் கொண்டிருக்கும்ஆத்மாக்களை முதலில் குளிர்ச்சியின் சக்தியினால் நெருப்பை அணையுங்கள். அப்பொழுது குளிர்ச்சியின் ஆதாரத்தினால் சத்தியத்தைத் தெரிந்து கொள்வார்கள்.

 

குளிர்ச்சியின் சக்தி என்றாலே ஆன்மீக அன்பின் சக்தி. சந்திரன் (பிரம்மா) என்ற அம்மா, அன்பு என்ற குளிர்ச்சியின் சக்தியினால் எப்படிப்பட்ட சீர்கெட்ட குழந்தைகளையும் திருத்தி விடுகிறார். எனவே அன்பு அதாவது குளிர்ச்சியின் சக்தி எந்தவொரு அக்னியில் எரிந்து கொண்டிருக்கும் ஆத்மாவையும் குளிர்ச்சி ஆக்கி, சத்தியத்தை தாரனை செய்விப்பதற்கான தகுதியை உருவாகி விடுகிறது. முதலில் சந்திரனின் குளிர்ச்சியினால் தகுதியுடைவர் ஆகிய பிறகு, ஞான சூரியனின் சத்தியத்தின் சக்தியால் யோகி ஆகிவிடுகின்றனர்! ஆதலால் ஞான சந்திரனின் குளிர்ச்சியின் சக்தியானது பாபாவின் முன்னால் செல்வதற்கு தகுதியை உருவாக்கி விடுகிறது. தகுதியில்லையெனில் யோகியாகவும் ஆக முடியாது. அதனால் சத்தியத்தைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு குளிர்ச்சியானவர் ஆகுங்கள். சத்தியத்தை கடைப்பிடிப்பதற்கான சக்தி வேண்டும். எனவே குளிர்ச்சியின் சக்தியுள்ள ஆத்மா தானும் எண்ணங்களின் வேகத்தில், வார்த்தையில், தொடர்பில், ஒவ்வொரு சூழ்நிலையிலும் குளிர்ச்சியாக இருக்கும். எண்ணத்தின் வேகம் அதிகமாக இருக்கும் காரணத்தினால், வீணானதும் அதிகமாகிறது. மேலும் கட்டுப்படுத்துவதிலும் நேரம் வீணாகிறது. எப்பொழுது வேண்டுமோ, அப்பொழுது கட்டுப்படுத்த வேண்டும், அல்லது மாற்றம் செய்ய வேண்டும். இதில் நேரமும் சக்தியும் அதிகமாக செலவு செய்ய வேண்டி வருகிறது. சரியான வேகத்துடன் செல்பவர்கள் அதாவது குளிர்ச்சியின் சக்தி சொரூபத்தில் இருக்கக் கூடியவர்கள், வீணானவைகளிலிருந்து தப்பித்து விடுகின்றனர். விபத்திலிருந்து தப்பித்து விடுகின்றனர். இந்த ஏன், என்ன, அப்படியல்ல இப்படி என்ற இந்த வீணானவைகளின் அதி வேகத்திலிருந்து விடுபடுகின்றனர். எவ்வாறு மரத்தின் நிழல் எந்தவொரு வழிப் போக்கருக்கும் ஒய்வைத் தருகிறது, உதவி செய்கிறது. அவ்வாறே குளிர்ச்சியின் சக்தியுள்ளவர்கள் மற்ற ஆத்மாக் களுக்குக் கூட தனது குளிர்ச்சியின் நிழலால் எப்பொழுதும் உதவி என்ற ஓய்வை கொடுக்கின்றனர். இந்த ஆத்மாக்களிடன் சென்றால், இரண்டு நொடியில் கூட குளிர்ச்சியின் நிழல், குளிர்ச்சியின் சுகம், ஆனந்ததைப் பெறலாம் என்று ஒவ்வொருவருக்கும் கவர்ச்சி ஏற்படும். எவ்வாறு நாலாபுறமும் மிக அதிக வெயில் இருக்கிறது என்றால், நிழலான இடத்தைத் தேடுவார்கள் அல்லவா! அவ்வாறு ஆத்மாக்களின் பார்வை மற்றும் ஈர்ப்பு அப்பேற்பட்ட ஆத்மாக்களின் பக்கம் செல்லும். இப்பொழுது உலகத்தில் இன்னும் அதிகமாக விகாரங்களின் அக்னி வேகமாக எரியப் போகிறது - எவ்வாறு தீ பட்டால் மனிதர்கள் கதறுகின்றனர் அல்லவா! குளிர்ச்சியின் (தண்ணீர்) உதவியைத் தேடுகின்றனர். அவ்வாறு இந்த மனித ஆத்மாக்கள் குளிர்ச்சியான ஆத்மாக்கள் உங்களிடம் துடிதுடித்துக் கொண்டு வருவார்கள். சிறிதளவேனும் குளிர்ச்சியான நீர் துளிகளைத் தெளியுங்கள் என்று கதறுவார்கள். ஒரு பக்கம் விநாசத்தின் நெருப்பு, மற்றொன்று விகாரங்களின் நெருப்பு; மூன்றாவது பக்கம் தேகம் மற்றும் தேக சம்மந்தம், பொருட்களின் மீதுள்ள பற்றுதல் என்ற நெருப்பு; நான்காவது பட்சாதாபம் என்ற நெருப்பு. நாலாபுறமும் நெருப்பே நெருப்பு தென்படும். ஆகவே அப்பேற்பட்ட சமயத்தில் குளிர்ச்சியின் சக்தியுள்ள உங்களிடம் ஓடோடி வருவார்கள் - ஒரு விநாடியாவது எங்களைக் குளிர்ச்சி யாக்குங்கள்! அப்படிபட்ட நேரத்தில் நாலாபுறமுள்ள நெருப்பின் அனல் தன்னை பாதிக்காத அளவிற்கு குளிர்ச்சியின் சக்தியை தனக்குள் சேமித்து வைத்திருங்கள். நாலாபுறமுள்ள நெருப்பை அணைக்கக் கூடியவர்களாகவும், குளிர்ச்சியின் வரதானத்தை அளிக்கக்கூடிய குளிர்ச்சியின் தேவி ஆகுங்கள். ஒருவேளை சிறிதளவேனும் நான்கு விதமான நெருப்பில் ஏதாவதொரு நெருப்பு உங்களிடம் இருந்து விட்டதென்றால், நாலாபுறமுள்ள நெருப்பு துளியளவே உள்ள நெருப்பை பிடித்துக் கொள்ளும். எப்படி நெருப்பு நெருப்பை பற்றிக் கொள்கிறது அல்லவா! எனவே இதை சோதனை செய்யுங்கள்.

 

விநாச ஜுவாலையின் அக்னியிலிருந்து காத்துக் கொள்வதற்கான சாதனம் - தைரியத்தின் சக்தி. தைரியமானது, விநாச ஜுவாலையின் தாக்கத்தினால் மனநிலை மேலும் கீழும் ஆகாமல் பார்த்து கொள்ளும். குழப்பத்தில் கொண்டு வராது. தைரியத்தின் ஆதாரத்தினால் விநாச ஜுவாலையின் பயத்திலுள்ள ஆத்மாக்களுக்கு குளிர்ச்சியின் சக்தியைக் கொடுக்கும். ஆத்மா பயம் என்ற அக்னியிலிருந்து தப்பித்து குளிர்ச்சியின் காரணத்தினால் குஷியில் நடனமாடும். விநாசத்தைப் பார்த்தாலும் ஸ்தாபனையின் காட்சியைப் பார்ப்பார்கள். அவர்களது கண்களில் ஒரு கண்ணில் முக்தி - ஸ்வீட் ஹோம், மற்றொரு கண்ணில் ஜீவன் முக்தி அதாவது சொர்க்கம் அடங்கி இருக்கும். அவர்களுக்கு தனது வீடு மற்றும் தனது இராஜ்யமே தென்படும். உலகினர் ஐயோ! போய்விட்டனரே, ஐயோ! இறந்து விட்டனரே என்று கதறுவார்கள். மேலும் நீங்கள் தனது இனிமையான வீட்டிற்கு, தனது இனிமையான இராஜ்யத்திற்கு சென்று விட்டோம் என்று சொல்வீர்கள். எதுவும் புதியதல்ல என்ற சலங்கையை அணிந்தீர்கள் என்றால், நமது வீடு, நமது இராஜ்யம் என்ற குஷியில் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் சேர்ந்து செல்வீர்கள். அவர்கள் கதறுவார்கள், நீங்கள் உடன் செல்வீர்கள். இப்பொழுது கேட்கும் பொழுதே அனைவருக்கும் குஷி ஏற்படுகிறது என்றால், அந்த சமயத்தில் எவ்வளவு குஷியில் இருப்பீர்கள்! ஆகையால் நான்கு வித நெருப்பிலிருந்து குளிர்ச்சியாகிவிட்டீர்கள் அல்லவா. விநாச ஜுவாலையிலிருந்து காத்துக் கொள்வதற்கான சாதனம் பயமின்மை என்பதைக் கேட்டீர்கள் தானே! அவ்வாறே விகாரங்கள் என்ற நெருப்பின் துளியளவிருந்து(அம்சம்) தன்னை காத்துக் கொள்வதற்கான சாதனம் - தனது ஆதி, அனாதி வம்சத்தை நினைவு செய்யுங்கள். அனாதி தந்தையின் வம்சம் - சம்பூரண சதோபிரதான ஆத்மா நான்! ஆதி வம்சம் - தேவ ஆத்மா நான்! தேவ ஆத்மா 16 கலைகள் நிறைந்த, சம்பூரண நிர்விகாரிகள். எனவே அநாதி, ஆதி வம்சத்தை நினைவு செய்தீர்கள் என்றால், விகாரங்களின் அம்சமும் அழிந்துவிடும்.

 

அவ்வாறே மூன்றாவதாக தேகம், தேகத்தின் சம்மந்தம் மற்றும் பொருட்களின் மீதுள்ள பற்று என்ற நெருப்பு. இந்த நெருப்பிலிருந்து தப்பிப்பதற்கான சாதனம் - பாபாவை தனது உலகமாக்கிக் கொள்ளுங்கள். பாபா தான் உலகம் எனும் பொழுது மற்ற அனைத்தும் சாரமற்றதாகி விடும். ஆனால் செய்வது என்ன? அதை மற்றொரு நாள் சொல்வேன். பாபா தான் உலகம் என்ற நினைவு இருந்தால், தேகத்தின், சம்மந்தத்தின், பொருட்களின் நினைவு இருக்காது. அனைத்தும் முடிந்தது.

 

நான்காவது விஷயம் - பட்சாதாபத்தின் நெருப்பு. இதற்கான எளிய சாதனம் சர்வபிராப்தி சொரூபம் ஆவது. அப்பிராப்தி (கிடைக்க வில்லை என்ற உணர்வு) பட்சாதாபத்தை ஏற்படுத்துகிறது. பிராப்தி பட்சாதாபத்தை அழிக்கிறது. இப்பொழுது ஒவ்வொரு பிராப்தியையும் முன்னால் வைத்து சோதனை செய்யுங்கள் - ஏதாவதொரு பிராப்தியை அனுபவம் செய்வதில் குறைவு இருந்துவிட வில்லை தானே! பிராப்திகளின் பட்டியல் (லிஸ்ட்) இருக்கிறது தானே! இல்லை என்பது முடிந்தது அதாவது பட்சாதாபதம் முடிந்தது. இப்பொழுது இந்த நான்கு விஷயங்களை சோதனை செய்யுங்கள், அப்பொழுது தான் குளிர்ச்சியின் சொரூபம் ஆகிவிடுவீர்கள். மற்றவர்களின் வெப்பத்தைத் தணிக்கக் கூடிய சீதள யோகி, சீதளா தேவி ஆகிவிடுவீர்கள். ஆகவே குளிர்ச்சியின் சக்தி என்னவென்று புரிந்ததா! சத்தியத்தின் சக்தியைப் பற்றியும் சொல்லி ஆகி விட்டது. இன்னும் கூட சொல்வோம்! அதனால் கேட்டீர்களா! வாயுமண்டலத்தில் என்ன பார்த்தோம் என்று? விரிவாக பிறகு சொல்வோம். நல்லது.

 

அவ்வாறு எப்பொழுதும் சந்திரனுக்கு சமமாக குளிர்ச்சியின் சக்தி சொரூப ஆத்மாக்களுக்கு, சத்தியத்தின் சக்தியினால் சத்யுகத்தைக் கொண்டு வரக்கூடிய குழந்தைகளுக்கு, சதா குளிர்ச்சி என்ற நிழலினால் அனைவரின் உள்ளத்திற்கு ஓய்வளிக்கும் குழந்தைகளுக்கு, சதா நாலாபுறமுள்ள அக்னியிலிருந்து பாதுகாப்பாக இருக்கக் கூடிய சீதள யோகி, சீதளா தேவி குழந்தைகளுக்கு, ஞான சூரியன் மற்றும் ஞான சந்திரனின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம் உரித்தாகுக.

 

வெளிநாட்டு டீச்சர்ஸ் சகோதர, சகோதரிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:- இது எந்த குரூப்? (ரைட்ஹேண்ட் சேவாதாரிகளுடையது) இன்று பாப்தாதா தனது நண்பர்களை சந்திக்க வந்திருக்கிறார். நண்பர்கள் என்ற உறவு குதூகலம் அளிக்கக் கூடியது. எவ்வாறு பாபா எப்பொழுதும் உங்களுடைய அன்பில் மூழ்கியிருக்கிறாரோ, அவ்வாறே குழந்தைகளும் பாபாவின் அன்பில் மூழ்கியிருக்கிறார்கள். எனவே இது அன்பில் மூழ்கியிருக்கக் கூடிய குரூப்பாகும். சாப்பிட்டாலும், அருந்தினாலும், நடந்தாலும் எங்கு மூழ்கியிருக்கின்றீர்கள்? அன்பில் தான் மூழ்கியிருக்கின்றீர்கள் அல்லவா! இந்த அன்பில் மூழ்கியிருக்கக் கூடிய ஸ்திதி சதா ஒவ்வொரு விசயத்திலும் எளிதாகவே தந்தையைப் போல ஆக்கிவிடுகிறது. ஏனெனில் பாபாவின் அன்பில் மூழ்கியிருக்கின்ற காரணத்தினால் தொடர்பின் நிறம் படியும் அல்லவா! உழைப்பு மற்றும் கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கான எளிய சாதனம் அன்பில் மூழ்கியிருப்பது. இந்த அன்பில் மூழ்கியிருக்கக் கூடிய மனநிலை அதிர்ஷ்டமானது, இதற்குள் மாயை வர முடியாது. ஆகவே பாப்தாதாவின் மிக அன்பான, நெருக்கமான, சமமான குரூப்பாகும். உங்களுடைய எண்ணத்திலும், பாபாவின் எண்ணத்திலும் வித்தியாசம் இல்லை. அம்மாதிரி நெருக்கமானவர்கள் இல்லையா? அப்பொழுது தான் தந்தையைப் போல உலகத்திற்கு நன்மை செய்பவர் ஆக முடியும். எது தந்தையினுடைய எண்ணமோ, அது குழந்தைகளுடையது. எது தந்தையினுடைய வார்தையோ, அது குழந்தைகளுடையது. அப்படியென்றால், உங்களுடைய ஒவ்வொரு செயலும் என்னவாகி விடும்? (கண்ணாடி) எனவே ஒவ்வொரு செயலும் அம்மாதிரி கண்ணாடியாக இருக்க வேண்டும், அதில் பாபா தென்பட வேண்டும். அந்த மாதிரி குரூப் தானே! எவ்வாறு நிறைய கண்ணாடிகள் இருக்கின்றன, அதாவது அந்த கண்ணாடியில் பெரிய உருவம் சிறியதாகவும், சிறியது பெரியதாகவும் தென்படுமளவிற்கு உலகில் கண்ணாடிகளை உருவாக்குகிறார்கள். ஆகவே உங்களுடைய ஒவ்வொரு செயல் என்ற கண்ணாடியில் என்ன தென்படும்? இரட்டையர் தென்பட வேண்டும் - நீங்களும் தந்தையும். உங்களுக்குள் பாபா தென்பட வேண்டும், நீங்கள் பாபாவுடன் தென்பட வேண்டும். எவ்வாறு பிரம்மா பாபாவிற்குள் இரட்டையர்( பாப்தாதா) தென்பட்டிருந்தனர் அல்லவா! அவ்வாறே உங்கள் ஒவ்வொருவரிடத்திலும் சதாபாபா தென்பட்டார் என்றால், இரட்டையர் தென்பட்டதாகி விட்டது அல்லவா! அப்படிபட்ட கண்ணாடிகள் தானே நீங்கள்? சேவாதாரிகள் விசேஷமாக எந்த சேவைக்கு நிமித்தமாகி இருக்கிறீர்கள்! பாபாவை வெளிபடுத்துவது தான் விசேஷ சேவையாகும். அதனால் தனது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல் மூலமாக பாபாவைக் காட்ட வேண்டும். இந்த காரியத்தில் எப்பொழுதும் இருக்கின்றீர்கள் அல்லவா! எப்போதேனும் ஏதாவதொரு ஆத்மா, இவர்கள் மிகவும் நன்றாக பேசுகிறார்கள், இவர்கள் மிகவும் நன்றாக சேவை செய்கிறார்கள், இவர்கள் மிகவும் நன்றாக திருஷ்டி கொடுக்கிறார்கள் என்று கூறினால், இதுவும் பாபாவை பார்க்கவில்லை, ஆத்மாவை தான் பார்த்தார்கள். இதுவும் தவறாகி விடுகிறது. உங்களைப் பார்த்து வாயிலிருந்து பாபா என்பது வெளிவர வேண்டும். அப்பொழுது தான் சக்திசாலியான கண்ணாடி என்று சொல்வோம். தனியாக ஆத்மா மட்டும் தென்படக் கூடாது, பாபாவுன் தென்பட வேண்டும். இதற்கு இயல்பான சேவாதாரி என்று சொல்லப்படுகிறது. புரிந்ததா! எவ்வளவு உங்களுடைய ஒவ்வொரு எண்ணத்திலும், சொல்லும் பாபா, பாபா என்பது இருக்குமோ, அவ்வளவு மற்றவர்களுக்கும் உங்களுடன் சேர்ந்து பாபா தென்படுவார். எவ்வாறு தற்காலத்து அறிவியலின் சாதனங்களினால் முன்பாக எந்தப் பொருளை காட்டுகின்றனரோ, அது மறைந்து விடுகின்றது. மேலும் அடுத்தது தென்படுகிறது. அவ்வாறு உங்களது அமைதியின் சக்தியானது உங்களை பார்த்தாலும் நீங்கள் மறைந்து விட வேண்டும், பாபா வெளிப்பட வேண்டும். அவ்வாறு சக்திசாசேவையாக இருக்க வேண்டும். தந்தையுடன் சம்மந்தத்தை இணைப்பதினால் ஆத்மாக்கள் எப்பொழுதும் சக்திசாலியாகி விடுகின்றன. ஒருவேளை ஆத்மாவுடன் சம்மந்தம் இணைக்கப்படுகிறது என்றால், எப்பொழுதும் சக்திசாலியாக ஆக முடியாது. சேவாதாரிகளுடைய விசேஷ சேவை என்னவென்று புரிந்ததா? தன் மூலமாக தந்தையைக் காட்ட வேண்டும். உங்களைப் பார்த்ததும் பாபா பாபா என்ற பாடலை பாட ஆரம்பித்து விட வேண்டும். அப்படிப்பட்ட சேவை செய்கின்றீர்கள் அல்லவா! நல்லது.

 

அனைவரும் அமிர்தவேளையில் தில்குஷ் மிட்டாய் (உள்ளத்தை குஷிப்படுத்தும் இனிப்பு) சாப்பிடுகிறீர்களா? சேவாதாரி ஆத்மாக்கள் தினமும் தில்குஷ் மிட்டாய் சாப்பிட்டீர்கள் என்றால், பிறருக்கும் வழங்குவீர்கள். பிறகு உங்களிடம் மனமுடைந்து போவதற்கான வி யம் வராது, மாணவர்களும் இது போன்ற விஷயங்களை எடுத்துக் கொண்டு வரமாட்டார்கள். இல்லையென்றால் இதற்கும் கூட நேரத்தைக் கொடுக்க வேண்டியிருக்கிறது அல்லவா! பிறகு இந்த நேரம் சேமிப்பாகிவிடும். மேலும் இந்த நேரத்தில் பலருக்கு தில் குஷ் மிட்டாய் வழங்கிக் கொண்டேயிருப்பீர்கள். நல்லது.

 

உங்களது அனைவருடைய உள்ளமும் சதா குஷியாக இருக்கிறதா? ஒருபொழுதும் எந்த சேவாதாரியும் அழுவதில்லை தானே? கண்களினால் அழுவது மட்டும் அழுகையல்ல, மனதில் அழுவது கூட அழுகை தான், எனவே அழக்கூடியவர்களோ இல்லை தானே! நல்லது. புகார் செய்பவர்களா? பாபாவின் முன்பு புகார் செய்கின்றீர்களா? என் மூலமாக ஏன் அவ்வாறு நிகழ்கிறது! எனக்கும் மட்டும் ஏன் அந்தமாதிரியான நடிப்பு (பார்ட்)! என்னுடைய சம்ஸ்காரம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது! எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரியான மாணவர்கள் கிடைக்கின்றனர் அல்லது எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரியான நாடு கிடைத்திருக்கிறது! இது போன்ற புகார் செய்யக்கூடியவர்களோ இல்லை தானே? புகார் சொல்வது என்றால் பக்தியின் அம்சம். எப்படிப்பட்டவர்களாகவும் இருக்கலாம், ஆனால் மாற்றம் செய்வது சேவாதரிகளுடைய விசேஷ காரியமாகும். நாடாக இருக்கலாம், மாணவர்களாக இருக்கலாம், தனது சம்ஸ்காரமாக இருக்கலாம், உடன் இருப்பவர்களாக இருக்கலாம், புகார் சொல்வதற்கு பதிலாக மாற்றம் செய்யக் கூடிய காரியத்தில் ஈடுபடுங்கள். சேவாதாரிகளாகிய நீங்கள் ஒருபொழுதும் பிறரது பலஹீனங்களை பார்க்காதீர்கள். ஒருவேளை பிறரது பலஹீனங்களை பார்த்தீர்கள் என்றால் தானும் பலஹீனம் ஆகிவிடுவீர்கள். ஆகையால் எப்பொழுதும் ஒவ்வொருவருடைய விசேஷத்தையே பாருங்கள். விசேஷத் தன்மையை தாரணை செய்யுங்கள். விசேஷத் தன்மையையே வர்ணனை செய்யுங்கள். இதுவே சேவாதாரிகளின் விசேஷ பறக்கும் கலையின் சாதனமாகும். புரிந்ததா! சேவாதாரிகள் வேறு என்ன செய்கின்றனர்? மிகவும் நல்ல திட்டங்கள் உருவாக்குகின்றனர், ஊக்கம் மற்றும் உற்சாகமும் மிக நன்றாக இருக்கிறது. பாபா மற்றும் சேவையின் மீதும் அன்பு நன்றாக இருக்கிறது. இப்பொழுது இனி என்ன செய்ய வேண்டும்?

 

இப்பொழுது உலகில் விசேஷமாக இரண்டு அதிகாரங்கள் இருக்கின்றன. (1). இராஜ்ய அதிகாரம், (அரசியல்) (2) தர்ம அதிகாரம், (மதம்). தர்ம தலைவர்கள் மற்றும் இராஜ்ய தலைவர்கள். மேலும் தொழில் செய்பவர்களும் கூட தனித் தனியாக இருக்கின்றனர், ஆனால் அதிகாரம் இந்த இருவரிடத்தில் தான் இருக்கிறது. எனவே இப்பொழுது இந்த இரண்டு அதிகாரங்களுக்கும் அவ்வாறு தெளிவாக அனுபவம் ஆக வேண்டும், அதாவது தர்ம அதிகாரமும் இப்பொழுதும் அதிகாரமில்லாமல் ஆகிவிட்டது. மேலும் இராஜ்ய அதிகாரம் உள்ளவர்களும் அனுபவம் செய்ய வேண்டும் அதாவது நம்மிடத்தில் பெயருக்கு தான் இராஜ்ய அதிகாரம் இருக்கிறதே தவிர உண்மையில் அதிகாரம் இல்லை. அதற்கான சாதனம் என்ன என்பதை எவ்வாறு அனுபவம் செய்விப்பீர்கள்? யாரெல்லாம் இராஜ்ய தலைவர்கள் மற்றும் தர்ம தலைவர்கள் இருக்கின்றனரோ, அவர்களுக்கு தூய்மை மற்றும் ஒற்றுமையின் அனுபவத்தை செய்வியுங்கள் இந்த குறைவின் காரணத்தினால் இரண்டு அதிகாரங்களும் பலஹீனமாக உள்ளன. எனவே தூய்மை என்றால் என்ன, ஒற்றுமை என்றால் என்ன என்பதைப் பற்றி அவர்களுக்கு தெளிவான புரிதல் கிடைப்பதின் மூலம் அவர்கள் நாம் பலஹீனமாக இருக்கிறோம் என்பதையும், இவர்கள் (பிரம்மா குமாரிகள்) சக்திசாலியாக இருக்கின்றனர் என்பதையும் தாமே புரிந்துக் கொள்வார்கள். இதற்காக விசேஷமாக சிந்தனை செய்யுங்கள். ஆன்மீக அதிகாரமுடையவர்களை தங்களுக்கு ஆன்மீக அதிகாரம் உண்மையில் இல்லை என்பதைப் புரிந்து கொள்வதற்கான விசேஷ வழிமுறை - தூய்மையை நிரூபிக்க வேண்டும். மேலும் இராஜ்ய அதிகாரமுடையவர் களுக்கு முன்னால் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும். இந்தத் தலைப்பைப் பற்றி சிந்தனை செய்யுங்கள். திட்டத்தை உருவாக்கி, அவர்களுக்கு சென்றடையும் படி செய்யுங்கள். இந்த இரண்டு சக்திகளையுமே நிரூபித்து விட்டீர்கள் என்றால், இறை சக்தியின் (அதிகாரம்) கொடி மிகவும் எளிதாக பறக்கும். இப்பொழுதும் இந்த இரண்டின் பக்கமும் விசேஷ கவனம் செலுத்துங்கள். உள்ளுக்குள் புரிந்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது வெளிப்படையாக அபிமானம் உள்ளது. எப்படியெல்லாம் தூய்மை மற்றும் ஒற்றுமையின் சக்தியினால் இவர்களை நெருக்கமான தொடர்பில் கொண்டு வருவீர்களோ, அப்படியெல்லாம் அவர்கள் தானாகவே தனது வர்ணனையை செய்ய முற்பட்டு விடுவார்கள். புரிந்ததா! எப்பொழுது இரண்டு அதிகாரங்களின் பலஹீனத்தை நிரூபிக்கின்றீர்களோ, அப்பொழுது பிரத்யக்ஷம் ஆகிவிடும். நல்லது!

 

மற்றபடியோ சேவாதாரிகளின் குரூப் எப்பொழுதும் திருப்தியாக இருக்கவே இருக்கிறார்கள். தன் மீது, உடன் இருப்பவர்கள் மீது, சேவையின் மீது, இவ்வாறு அனைத்தின் மீதும் திருப்தியான யோகி. இந்த திருப்தியின் சான்றிதழ் பெற்று இருக்கிறீர்கள் தானே! பாப்தாதா, நிமித்தமான தாதிகள், தீதிகள், அனைவரும் உங்களுக்கு இவர்கள் திருப்தியான யோகி என்ற சான்றிதழ் கொடுக்க வேண்டும். நடந்தாலும், சுற்றினாலும் சான்றிதழ் கிடைக்கிறது. நல்லது. ஒருபொழுதும் மனம் சரியில்லாமல் போவதில்லை (மூட் ஆஃப்) தானே. எப்பொழுதேனும் சேவையால் களைப்படைந்து மூட் ஆஃப் ஆவதில்லை தானே! என்ன செய்வது, இவ்வளவு செய்ய வேண்டும் என்ற அவசியம் என்ன இருக்கிறது? - அப்படியில்லை தானே!

 

ஆகவே இப்பொழுது இந்த அனைத்து விஷயங்களிலும் தன்னை சோதனை செய்ய வேண்டும். ஒருவேளை ஏதேனும் இருந்தது என்றால், மாற்றம் செய்து கொள்ள வேண்டும், ஏனெனில் சேவாதாரி என்றாலே மேடை மீது ஒவ்வொரு காரியமும் செய்யக் கூடியவர்கள். மேடை மீது எப்பொழுதும் சிரேஷ்டமாகவும், யுக்தி நிறைந்தும் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. நான் இந்த நாட்டில் சேவை நிலையத்தில் அமர்ந்திருக்கிறேன் என்று ஒரு பொழுதும் நினைத்துக் கொள்ள கூடாது, ஆனால் உலகம் என்ற மேடை மீது அமர்ந்திருக்கிறேன் என்ற நினைவு இருப்பதினால் ஒவ்வொரு செயலும் தானாகவே சிரேஷ்டமாக இருக்கும். உங்களைப் பின்பற்றக்கூடியவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள், அதனால் எப்பொழுதும் நீங்கள் தந்தையைப் பின்பற்றினீர்கள் என்றால், உங்களைப் பின்பற்றுவர்களும் தந்தையைப் பின்பற்றுவார்கள். எனவே மறைமுகமாக தந்தையைப் பின்பற்றுதல் ஆகிவிடும். ஏனெனில் உங்களது ஒவ்வொரு காரியமும் தந்தையை பின்பற்றி இருக்கிறது. அதனால் இந்த நினைவு எப்பொழுதும் இருக்க வேண்டும். நல்லது - நேசத்தின் (காதல்) காரணத்தால் கடின உழைப்பிலிருந்து விடுபட்டு இருப்பீர்கள்.

 

வரதானம்:

ஒரு பாபாவை துணைவனாக ஆக்கி அந்தத் துணையிலேயே இருக்கக் கூடிய முழுமையாக தூய்மையான ஆத்மா ஆகுக.

 

யாருடைய எண்ணம் மற்றும் கனவில் கூட பிரம்மசர்யத்தின் தாரணை இருக்கிறதோ, யார் ஒவ்வொரு அடியிலும் பிரம்மா பாபாவின் ஆச்சாரங்கள் படி நடக்கின்றனரோ, அவர் தான் சம்பூரண பவித்திர ஆத்மா. தூய்மை என்பதன் பொருள் - எப்பொழுதும் பாபாவை துணைவனாக்குவது மற்றும் பாபாவின் துணையிலேயே இருப்பது. குழுவின் துணை, குடும்பத்தின் அன்பின் மரியாதை என்பது தனிபட்ட விஷயம், ஆனால் பாபாவின் காரணத்தினால் தான் இந்த குழுவின் அன்பின் துணை உள்ளது, பாபா இல்லையென்றால் குடும்பம் எங்கிருந்து வந்தது? பாபா விதையாவார். விதையை ஒருபொழுதும் மறக்கக் கூடாது.

சதா ஒரு தந்தையின் அன்பில் மூழ்கியிருக்கும் சகயோகி மற்றும் சகஜயோகி ஆத்மா ஆகுக.

சதா ஒரு தந்தையின் அன்பில் மூழ்கியிருக்கும் சகயோகி மற்றும் சகஜயோகி ஆத்மா ஆகுக.

சுலோகன்:

யாருடைய பிரவாத்திலும் வரக் கூடியவர்களாக அல்ல, ஆனால் ஞானத்தின் பிரபாவத்தை (தாக்கம்) ஏற்படுத்தக் கூடியவர்களாக ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி