31.12.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே
!
உங்களுக்கு
கிடைக்கும்
ஞானத்தின்
மீது
(விசார்
சாகர்
மந்தன்)
ஞான
மனனம்
செய்யுங்கள்.
ஞான
மனனம்
செய்வதாலேயே
(சிந்தனைக்
கடலை
கடைதல்)
அமிருதம்
வெளிப்படும்.
கேள்வி:
21
பிறவிகளுக்கு
செல்வம்
நிறைந்தவர்களாக
ஆவதற்கான
சாதனம்
என்ன?
பதில்:
ஞான
இரத்தினங்கள்.
எந்த
அளவிற்கு
நீங்கள்
இந்த
புருஷோத்தம
சங்கம
யுகத்தில்
ஞானரத்தினங்களை தாரணை
செய்கிறீர்களோ
அந்த
அளவு
செல்வம்
நிறைந்தவர்களாக
ஆகிறீர்கள்.
தற்போதைய
ஞான
ரத்தினங்கள்,
அங்கு
வைரம்
வைடூரியங்களாக
ஆகி
விடுகிறது.
ஆத்மா
ஞான
ரத்தினங்களை
தாரணை
செய்து
விடும்
பொழுது வாயிலிருந்து ஞான
ரத்தினங்களை
வெளிப்படுத்தும்
பொழுது,
ரத்தினங்களையே
கேட்டு
கொண்டும்
கூறிக் கொண்டும்
இருக்கும்
பொழுது
-
அப்பொழுது
தான்
அவர்களுடைய
மகிழ்ச்சியான
முகத்தின்
மூலமாக
தந்தையின் பெயர்
புகழடையும்.
அசுர
குணங்கள்
நீங்கி
விடும்
பொழுது
தான்
செல்வம்
நிறைந்தவராக
ஆக
முடியும்.
ஓம்
சாந்தி.
தந்தை
குழந்தைகளுக்கு
ஞானம்
மற்றும்
பக்தி
பற்றி
புரிய
வைக்கிறார்.
சத்யுகத்தில்
பக்தி இருப்பதில்லை
என்பதை
குழந்தைகள்
அறிந்துள்ளார்கள்.
ஞானம்
கூட
சத்யுகத்தில்
கிடைப்பதில்லை.
கிருஷ்ணர் பக்தியும்
செய்வதில்லை,
ஞானத்தின்
புல்லாங்குழலும்
(முரளி)
வாசிப்பதுமில்லை.
முரளி
என்றால்
ஞானம்
அளிப்பது.
முரளியில்
மந்திர
ஜாலம்
என்ற
பாடல்
உள்ளது
அல்லவா?
எனவே
அவசியம்
ஏதோ
மந்திர
ஜாலம்
இருக்கும் அல்லவா?
மனிதர்கள்
கிருஷ்ணர்
புல்லாங்குழலை
வாசித்துக்
கொண்டிருந்தார்
என்று
நினைக்கிறார்கள்.
அவருக்கு நிறைய
மகிமை
செய்கிறார்கள்.
கிருஷ்ணரோ
தேவதையாக
இருந்தார்
என்று
தந்தை
கூறுகிறார்.
மனிதனிலிருந்து தேவதை,
தேவதையிலிருந்து மனிதன்
-
இவ்வாறு
ஆகிக்
கொண்டே
இருக்கிறது.
தெய்வீக
சிருஷ்டியும்
இருக்கிறது.
பின்
மனித
சிருஷ்டியும்
இருக்கிறது.
இந்த
ஞானத்தினால்
மனிதனிலிருந்து தேவதை
ஆகிறீர்கள்.
சத்யுகமாக இருக்கும்
பொழுது
இது
ஞானத்தின்
ஆஸ்தி
ஆகும்.
சத்யுகத்தில்
பக்தி
இருப்பதில்லை.
தேவதைகள்
மனிதர்களாக ஆகி
விடும்
பொழுது
பக்தி
ஆரம்பமாகிறது.
மனிதர்களை
விகாரி
என்றும்,
தேவதைகளை
நிர்விகாரி
என்றும் கூறப்படுகிறது.
தேவதைகளின்
(சிருஷ்டி)
படைப்பிற்கு
தூய்மையான
உலகம்
என்று
கூறப்படுகிறது.
இப்பொழுது நீங்கள்
மனிதனிலிருந்து தேவதையாக
ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள்.
தேவதைகளிடம்
பிறகு
இந்த
ஞானம்
இருக்காது.
தேவதைகள்
சத்கதியில்
இருக்கிறார்கள்.
ஞானம்
துர்க்கதியில்
இருப்பவர்
களுக்குத்
தான்
வேண்டும்.
இந்த ஞானத்தினால்
தான்
தெய்வீக
குணங்கள்
வருகின்றன.
ஞானத்தின்
தாரணை
உடையவர்களின்
நடத்தை தேவதைகளுக்குரியதாக
இருக்கும்.
குறைவான
தாரணை
உடையவர்களின்
நடத்தை
கலப்படமாக
இருக்கும்.
அசுர
நடத்தை
என்றோ
கூற
மாட்டார்கள்.
தாரணை
இல்லை
என்றால்
என்னுடைய
குழந்தைகள்
என்று
எப்படி அழைக்க
முடியும்?
குழந்தைகள்
தந்தையை
அறியாமல்
உள்ளார்கள்
என்றால்
பின்
தந்தை
கூட
குழந்தைகளை எவ்வாறு
அறிந்திருப்பார்?
எவ்வளவு
பச்சையான
வசை
சொற்களால்
தந்தையை,
ஏசுகிறார்கள்.
பகவானை நிந்தனை
செய்வது
எவ்வளவு
மோசமானது.
பின்
அவர்கள்
பிராமணர்களாக
ஆகி
விடும்
பொழுது
நிந்தனை செய்வது
நின்று
விடுகிறது.
எனவே
இந்த
ஞானத்தை
"விசார்
சாகர்
மந்தன்""
(சிந்தனை
கடலை
கடைதல்)
செய்ய வேண்டும்.
மாணவர்கள்
ஞான
மனனம்
செய்து
ஞானத்தில்
முன்னேற்றம்
காண்கிறார்கள்.
உங்களுக்கு
இந்த ஞானம்
கிடைக்கிறது.
அதன்
மீது
நீங்கள்
ஞான
மனனம்
செய்வதால்
(சிந்தனைக்
கடலை
கடைவதால்)
அமிருதம் வெளிப்படும்.
ஞான
மனனம்
ஆக
வில்லை
என்றால்
பின்
என்ன
மனனம்
ஆகும்?
அசுர
சிந்தனையின்
மனனம்.
அதனால்
குப்பை
தான்
வெளிப்படும்.
இப்பொழுது
நீங்கள்
ஈசுவரிய
மாணவர்கள்
ஆவீர்கள்.
மனிதனிலிருந்து தேவதையாக
ஆவதற்கான
கல்வியை
தந்தை
கற்பித்துக்
கொண்டிருக்கிறார்
என்பதை
அறிந்துள்ளீர்கள்.
தேவதைகளோ கற்பிக்க
மாட்டார்கள்.
தேவதைகளுக்கு
ஒரு
பொழுதும்
ஞானக்
கடல்
என்று
கூறப்படுவதில்லை.
தந்தை
தான் ஞானக்
கடல்
ஆவார்.
எனவே
நமக்குள்
அனைத்து
தெய்வீக
குணங்களும்
உள்ளனவா
என்று
உங்களிடம்
கேட்க வேண்டும்.
ஒரு
வேளை
அசுர
குணம்
உள்ளது
என்றால்,
அவற்றை
நீக்கி
விட
வேண்டும்.
அப்பொழுது
தான் தேவதை
ஆகி
விடுவீர்கள்.
இப்பொழுது
நீங்கள்
புருஷோத்தம
சங்கமயுகத்தில்
உள்ளீர்கள்.
புருஷோத்தமராக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள்.
எனவே
வாயு
மண்டலம்
கூட
மிகவும்
நன்றாக
இருக்க
வேண்டும்.
சீ
–
சீ விஷயங்கள்
வாயிலிருந்து வெளிப்படக்
கூடாது.
இல்லையென்றால்
குறைவான
தரத்தினர்
என்று
கூறப்படுவார்கள்.
வாயுமண்டலத்தினால்
உடனே
தெரிந்து
விடுகிறது.
வாயிலிருந்து வார்த்தைகளே
துக்கம்
தரக்
கூடியதாக வெளிப்படுகிறது.
குழந்தைகளாகிய
நீங்கள்
தந்தையின்
பெயரை
விளங்க
வைக்க
வேண்டும்.
எப்பொழுதும் முகம்
மகிழ்ச்சியுடன்
கூடியதாக
இருக்க
வேண்டும்.
வாயிலிருந்து எப்பொழுதும்
இரத்தினங்கள்
தான்
வெளிப்பட வேண்டும்.
இந்த
இலட்சுமி
நாராயணர்
எவ்வளவு
மகிழ்ச்சியான
முகத்துடன்
இருக்கிறார்கள்.
இவர்களுடைய ஆத்மாக்கள்
ஞான
இரத்தினங்களை
தாரணை
செய்து
இருந்தார்கள்.
வாயிலிருந்து இந்த
இரத்தினங்களை
வெளிப்படுத்தி இருந்தார்கள்.
இரத்தினங்களையே
கேட்டும்
கூறிக்
கொண்டும்
இருந்தார்கள்.
எவ்வளவு
குஷி
இருக்க
வேண்டும்!.
இப்பொழுது
நீங்கள்
எடுக்கும்
ஞான
ரத்தினங்கள்
பிறகு
உண்மையான
வைரம்
வைடூரியங்களாக
ஆகி
விடுகின்றன.9
ரத்தினங்களின்
மாலை
ஒன்றும்
வைரம்
வைடூரியங்களினுடையது
கிடையாது.
இவை
சைதன்ய
(உயிருள்ள)
ரத்தினங்களின்
மாலை
ஆகும்.
மனிதர்கள்
பின்
அந்த
இரத்தினங்கள்
என்று
நினைத்து
மோதிரங்கள்
ஆகியவை அணிந்து
கொள்கிறார்கள்.
ஞான
ரத்தினங்களின்
மாலை
இந்த
புருஷோத்தம
சங்கமயுகத்தில்
தான்
அமைகிறது.
இந்த
இரத்தினங்கள்
தான்
21
பிறவிகளுக்கு
செல்வம்
நிறைந்தவர்களாக
ஆக்கி
விடுகிறது.
இந்த
செல்வத்தை யாருமே
கொள்ளையடிக்க
முடியாது.
இங்கு
அணிந்தார்கள்
என்றால்
உடனே
யாராவது
கொள்ளையடித்து
விடுவார்கள்.
எனவே
தங்களை
மிக
மிக
அறிவாளியாக
ஆக்க
வேண்டும்.
அசுர
குணங்களை
நீக்கி
விட
வேண்டும்.
அசுர குணங்கள்
உடையவர்களுடைய
முகமே
அது
போல
ஆகி
விடுகிறது.
கோபத்திலோ
சிவப்பு,
செம்பு
போல
ஆகி விடுகிறார்கள்.
காம
விகாரம்
உடையவர்களோ
ஒரேயடியாக
கருப்பு
முகம்
உடையவர்களாக
ஆகி
விடுகிறார்கள்.
கிருஷ்ணரைக்
கூட
கருப்பாக
காண்பிக்கிறார்கள்
அல்லவா?
விகாரங்களின்
காரணமாகத்
தான்
வெண்மையிலிருந்து கருநீலமாக
ஆகி
விட்டார்.
குழந்தைகளாகிய
நீங்கள்
ஒவ்வொரு
விஷயத்தையும்
விசார்
சாகர்
மந்தன்
ஞான மனனம்
செய்ய
வேண்டும்.
இந்த
படிப்பு
மிகுந்த
செல்வம்
அடைவதற்கானது
ஆகும்.
குழந்தைகளாகிய
நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்
-
குயின்
(இராணி)
விக்டோரியாவின்
மந்திரி
முதலில் மிகவும்
ஏழையாக
இருந்தார்.
மண் தீபம்
ஏற்றிப்
படித்து
கொண்டிருந்தார்.
ஆனால்
அந்த
படிப்பு
ஏதாவது
இரத்தினமாக
உள்ளதா
என்ன?
நாலேஜ்
(ஞானம்)
படித்து
முழுமையாக
(பொஸிஷன்)
பதவி
அடைந்து
விடுகிறார்கள்.
எனவே
படிப்பு
பயன்பட்டது.
பைசா அல்ல.
படிப்பு
தான்
செல்வம்
ஆகும்.
அது
எல்லைக்குட்பட்டது.
இது
எல்லையில்லாத
செல்வம்
ஆகும்.
தந்தை நமக்கு
கற்பித்து
உலகிற்கு
அதிபதி
ஆக்கி
விடுகிறார்
என்பதை
இப்பொழுது
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
அங்கோ செல்வம்
சம்பாதிப்பதற்காக
கல்வியைக்
கற்க
மாட்டார்கள்.
அங்கோ
இப்பொழுதைய
(புருஷார்த்தம்)
முயற்சியினால் ஏராளமான
செல்வம்
கிடைக்கிறது.
செல்வம்
அவினாஷி
(அழியாததாக)
ஆகி
விடுகிறது.
தேவதைகளிடம்
நிறைய செல்வம்
இருந்தது.
பிறகு
வாம
மார்க்கம்,
இராவண
ராஜ்யத்தில்
வந்து
விடும்
பொழுது
கூட
எவ்வளவு
செல்வம் இருந்தது!
எவ்வளவு
கோவில்கள்
கட்டினார்கள்!
பிறகு
பின்னால்
வந்த
முகம்மதியர்கள்
கொள்ளை
யடித்தார்கள்.
எவ்வளவு
செல்வந்தர்களாக
இருந்தார்கள்.
தற்காலத்தைய
படிப்பினால்
இவ்வளவு
செல்வந்தராக
ஆக
முடியாது.
எனவே
இந்த
படிப்பினால்
பாருங்கள்
மனிதர்கள்
என்னவாக
ஆகி
விடுகிறார்கள்!
ஏழையிலிருந்து செல்வந்தர்.
இப்பொழுது
பாருங்கள்
பாரதம்
எவ்வளவு
ஏழையாக
உள்ளது!
பெயருக்கு
பணக்காரர்
என்று
இருப்பவர்களுக்கோ நேரமே
கிடையாது.
தங்களுடைய
பணம்,
பதவியின்
அகங்காரம்
எவ்வளவு
இருக்கிறது!
இதில்
அகங்காரம் ஆகியவை
நீங்கி
விட
வேண்டும்.
நாம்
ஆத்மாக்கள்
ஆவோம்.
ஆத்மாவிடம்
பணம்,
செல்வம்,
வைரம்,
வைடூரியம்
ஆகியவை
எதுவும்
இல்லை.
இனிமையான
குழந்தைகளே!
தேகத்துடன்
சேர்த்து
தேகத்தின்
அனைத்து
சம்பந்தங்களையும்
விட்டுவிடுங்கள் என்று
தந்தை
கூறுகிறார்.
ஆத்மா
சரீரத்தை
விட்டு
விடும்
பொழுது
பின்னர்
அந்த
பணக்காரத்
தன்மை
ஆகியவை எல்லாமே
முடிந்து
போய்
விடுகிறது.
பிறகு
மீண்டும்
புதியதாகக்
கற்க
முற்பட
வேண்டும்.
பணம்
சம்பாதிக்க வேண்டும்.
அப்பொழுது
தான்
பணக்காரன்
ஆக
முடியும்
அல்லது
தான
புண்ணியம்
நன்றாக
செய்திருந்தால் பின்னர்
செல்வந்தரின்
வீட்டில்
ஜென்மம்
எடுப்பார்கள்.
இது
முந்தைய
கர்மங்களின்
பலன்
என்று
கூறுவார்கள்.
(நாலேஜ்)
ஞானத்தின்
தானம்
அளித்தார்
அல்லது
கல்லூரி
தர்ம
சத்திரங்கள்
ஆகியவை
அமைத்தார்கள்
என்றால் அதற்கு
பலன்
கிடைக்கிறது.
ஆனால்
குறுகிய
காலத்திற்காக.
இந்த
தான
புண்ணியங்கள்
ஆகியவை
கூட
இங்கு செய்யப்படுகிறது.
சத்யுகத்தில்
செய்யப்படுவதில்லை.
சத்யுகத்தில்
நல்ல
கர்மங்களே
செய்கின்றனர்.
ஏனெனில் இப்பொழுதினுடைய
ஆஸ்தி
கிடைத்துள்ளது.
அங்கு
எந்த
ஒரு
கர்மமும்
விகர்மமாக
ஆகாது.
ஏனெனில்
இராவணனே இல்லை.
விகாரத்தில்
செல்வதால்
விகாரி
கர்மங்கள்
ஆகி
விடுகின்றன.
விகாரத்தினால்
விகர்மங்கள்
ஆகின்றன.
சொர்க்கத்தில்
எந்த
ஒரு
விகர்மமும்
ஆவதில்லை.
எல்லாமே
கர்மங்களைப்
பொருத்தது
ஆகும்.
இந்த
மாயை இராவணன்
அவ
குணமுடையவனாக
ஆக்குகிறான்.
தந்தை
வந்து
(சர்வ
குண
சம்பன்னமாக)
சர்வ
குணங்களில் நிறைந்தவராக
ஆக்குகிறார்.
இராம
வம்சத்தினர்
மற்றும்
இராவண
வம்சத்தினரின்
யுத்தம்
நடக்கிறது.
நீங்கள் இராமரின்
குழந்தைகள்
ஆவீர்கள்.
எவ்வளவு
நல்ல
நல்ல
குழந்தைகள்
மாயையிடம்
தோற்றுப்
போய்
விடுகிறார்கள்.
பாபா
பெயரைக்
கூறுவதில்லை.
பிறகும்
நம்பிக்கை
வைக்கிறார்.
தாழ்ந்ததிலும்
தாழ்ந்தவர்களுக்கு
முன்னேற்ற வேண்டி
உள்ளது.
தந்தை
முழு
உலகையும்
முன்னேற்ற
வேண்டி
உள்ளது.
இராவணனினுடைய
இராஜ்யத்தில் அனைவரும்
அதோ
கதியை
அடைந்து
விட்டுள்ளார்கள்.
தந்தையோ
தப்பித்திருக்கவும்,
மற்றவர்களைக்
காப்பாற்றுவதற்குமான
யுக்திகளை
(வழி
முறைகள்)
அனுதினமும்
புரிய
வைத்துக்
கொண்டே
இருக்கிறார்.
பிறகும்
விழுந்து விடுகிறார்கள்
என்றால்
தாழ்ந்ததிலும்
தாழ்ந்தவர்களாக
ஆகி
விடுகிறார்கள்.
அவர்கள்
பின்
இந்த
அளவிற்கு முன்னேற
முடியாமருப்பார்கள்.
அந்த
தாழ்ந்து
விட்ட
தன்மை
உள்ளுக்குள்
உறுத்தி
கொண்டே
இருக்கும்.
எப்படி
"கடைசி
நேரத்தில்
யார்
எப்படி
எண்ணுகிறார்களோ..
என்று
கூறுகிறீர்கள்,
அவர்களுடைய
புத்தியில்
அந்த தாழ்ந்து
விட்ட
தன்மை
தான்
நினைவிற்கு
வந்து
கொண்டே
இருக்கும்.
எனவே
தந்தை
வந்து
குழந்தைகளுக்குப்
புரிய
வைக்கிறார்
-
கல்ப
கல்பமாக
நீங்கள்
தான்
கேட்கிறீர்கள்,
சிருஷ்டி
சக்கரம்
எவ்வாறு
சுற்றுகிறது
என்று.
மிருகங்களோ
அறிந்து
கொள்ளாது
அல்லவா?
நீங்கள்
தான் கேட்கிறீர்கள்.
மேலும்
புரிந்து
கொள்கிறீர்கள்.
மனிதர்களோ
மனிதர்களே
தான்
ஆவார்கள்.
இந்த
இலட்சுமி நாராயணருக்கு
கூட
மூக்கு,
காது
ஆகியவை
எல்லாமே
உள்ளது.
மனிதர்கள்
ஆவார்கள்
அல்லவா?
ஆனால் தெய்வீக
குணங்கள்
நிறைந்துள்ளன.
எனவே
அவர்களுக்கு
தேவதை
என்று
கூறப்படுகிறது.
இவர்கள்
இது
போல எப்படி
தேவதை
ஆகிறார்கள்?
பின்னால்
எப்படி
விழுகிறார்கள்
என்ற
இந்த
சக்கரம்
பற்றி
உங்களுக்குத்
தான் தெரியும்.
யார்
விசார்
சாகர்
மந்தன்
(சிந்தனை
கடலை
கடைதல்)
செய்கிறார்களோ
அவர்களுக்குத்
தான்
தாரணை ஆகும்.
யார்
விசார்
சாகர்
மந்தன்
செய்வதில்லையோ
அவர்களை
முட்டாள்
என்று
கூறுவார்கள்.
முரளி நடத்துபவர்களினுடைய
"விசார்
சாகர்
மந்தன்"
நடந்து
கொண்டே
இருக்கும்
-
இந்த
தலைப்பின்
(டாபிக்)
மீது
இது இது
புரிய
வைக்க
வேண்டும்
என்று.
நம்பிக்கை
வைக்கப்படுகிறது.
இப்பொழுது
புரிந்து
கொள்ளவில்லை.
ஆனால் இனி
முன்னால்
போகப்
போக
அவசியம்
புரிந்து
கொள்வார்கள்.
நம்பிக்கை
வைப்பது
என்றால்
சேவையில் ஆர்வம்
உள்ளது
என்று
பொருள்.
களைப்படையக்
கூடாது.
ஒருவர்
முன்னேறி
பிறகு
தாழ்ந்தவர்
ஆகி
விட்டார் என்றாலும்
கூட
ஒரு
வேளை
அவர்
மீண்டும்
வருகிறார்
என்றால்
சிநேகத்துடன்
அமர்த்துவீர்கள்
அல்லவா?
இல்லை
போய்
விடு
என்று
கூறுவீர்களா?
க்ஷேம
நலம்
விசாரிக்க
வேண்டி
இருக்கும்
-
இவ்வளவு
நாட்கள்
எங்கு இருந்தீர்கள்?
ஏன்
வரவில்லை?
மாயையிடம்
தோற்று
விட்டோம்
என்று
கூறுவார்கள்
அல்லவா?
ஞானம்
மிகவும் நன்றாக
உள்ளது
என்று
புரிந்தும்
இருக்கிறார்கள்.
நினைவோ
இருக்கும்
அல்லவா?
பக்தியிலோ
வெற்றி
தோல்வி அடைவதற்கான
விஷயமே
கிடையாது.
இது
நாலேஜ்
(ஞானம்)
ஆகும்.
இதை
தாரணை
செய்ய
வேண்டும்.
நீங்கள்
பிராமணர்
ஆகாத
வரை
தேவதை
ஆக
முடியாது.
கிறித்துவர்கள்,
பௌத்தர்கள்,
பார்ஸிகள்
ஆகியோரில் பிராமணர்கள்
இருப்பார்களா
என்ன?
பிராமணரின்
குழந்தைகள்
பிராமணர்களாக
இருப்பார்கள்.
இந்த
விஷயங்களை இப்பொழுது
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
"அல்ஃப்"
தந்தையை
நினைவு
செய்ய
வேண்டும்
என்பதை
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
"அல்ஃப்"
தந்தையை
நினைவு
செய்வதால்
"பே"
(பாதுஷாயி)
-
அரசாட்சி
கிடைக்கிறது.
யாரை
சந்தித்தாலும்
அல்ஃப்
அல்லாவை
நினைவு
செய்யுங்கள்
என்று
கூறுங்கள்.
அல்ஃப்
தந்தைக்கு
தான் உயர்ந்தவர்
என்று
கூறப்படுகிறது.
விரல்
மூலமாக
அல்ஃப்
பக்கம்
சமிக்ஞை
செய்கிறார்கள்.
அல்ஃப்
தந்தை என்பது
மிகவும்
எளிதான
தெளிவான
விஷயம்.
அல்ஃப்
தந்தை
ஒருவர்
என்றும்
கூறப்படுகிறது.
பகவான்
ஒரே ஒருவர்
ஆவார்.
மற்ற
எல்லோருமே
குழந்தைகள்
ஆவார்கள்.
தந்தைக்கு
அல்ஃப்
என்று
கூறப்படுகிறது.
தந்தை ஞானத்தையும்
அளிக்கிறார்.
தனது
குழந்தையாகவும்
ஆக்குகிறார்.
எனவே
குழந்தைகளாகிய
நீங்கள்
எவ்வளவு குஷியாக
இருக்க
வேண்டும்.
பாபா
நமக்கு
எவ்வளவு
சேவை
செய்கிறார்.
உலகின்
அதிபதி
ஆக்குகிறார்.
பிறகு சுயம்
அவர்
அந்த
தூய்மையான
உலகத்தில்
வருவது
கூட
இல்லை.
.பாவனமான
உலகத்தில்
யாரும்
அவரை அழைப்பதே
இல்லை.
பதீதமான
உலகத்தில்
தான்
அழைக்கிறார்கள்.
பாவனமான
உலகிற்கு
வந்து
அவர்
என்ன செய்வார்?.
அவரது
பெயரே
பதீத
பாவனர்
என்பதாகும்.
எனவே
பழைய
உலகத்தை
பாவனமான
உலகமாக ஆக்குவது
அவருடைய
கடமை
ஆகும்.
தந்தையின்
பெயரே
சிவன்
என்பதாகும்.
குழந்தைகளுக்கு
சாலிகிராமம் என்று
கூறப்படுகிறது.
இருவருக்குமே
பூஜை
நடக்கிறது.
ஆனால்
பூஜை
செய்பவர்களுக்கு
எதுவுமே
தெரியாது.
பூஜை
செய்யும்
ஒரு
பழக்க
வழக்கம்
ஆகி
விட்டுள்ளது
அவ்வளவே!.
தேவிகளுக்கும்
ஃபர்ஸ்ட்கிளாஸ்
(முதல்தரமான)
வைரம்
முத்துக்களின்
அரண்மனை
ஆகியவை
அமைக்கிறார்கள்.
பூஜை
செய்கிறார்கள்.
ஆனால்
மண்ணினால் லிங்கம் அமைத்தார்கள்
மற்றும்
உடைத்தார்கள்.
உருவாக்குவதில்
அவ்வளவு
கஷ்டம்
இல்லை.
தேவிகளை உருவாக்குவதில்
சற்று
உழைப்பு
தேவை.
அவருக்கு
(சிவபாபாவுக்கு)
பூஜை
செய்வதில்
எந்த
கஷ்டமும்
இல்லை.
இலவசமாக
கிடைக்கிறது.
கற்கள்
தண்ணீரில்
தேய்ந்து
தேய்ந்து
உருண்டையாக
ஆகி
விடுகிறது.
முழுமையாக முட்டை
வடிவமானதாக
ஆக்கி
விடுகிறார்கள்.
முட்டை
போல
ஆத்மா
உள்ளது
என்றும்
கூறுகிறார்கள்.
ஆத்மாக்கள் பிரம்ம
தத்துவத்தில்
இருக்கின்றன.
எனவே
அதற்கு
""பிரம்மாண்டம்"
என்று
கூறுகிறார்கள்.
நீங்கள்
பிரம்மாண்டம் மற்றும்
உலகத்திற்கும்
அதிபதி
ஆகிறீர்கள்.
எனவே
முதன்
முதலில் ஒரு
தந்தை
பற்றிய
விளக்கம்
அளிக்க
வேண்டும்.
சிவனை
பாபா
என்று
கூறி,
அனைவரும்
நினைவு
செய்கிறார்கள்.
இரண்டாவது
பிரம்மாவையும்
பாபா
என்று
கூறுகிறார்கள்.
பிரஜாபிதா
ஆவார்.
எனவே
அனைத்து
பிரஜைகளுக்கும்
பிதா
ஆகிறார்
அல்லவா?
கிரேட்
கிரேட்
கிராண்டு
ஃபாதர்.
இந்த
முழு ஞானம்
இப்பொழுது
குழந்தைகளாகிய
உங்களிடம்
உள்ளது.
பிரஜா
பிதா
பிரம்மா
என்றோ
நிறைய
பேர்
கூறுகிறார்கள்.
ஆனால்
சரியான
முறையில்
யாருக்கும்
தெரியாது.
பிரம்மா
யாருடைய
குழந்தை
ஆவார்?பரமபிதா
பரமாத்மாவின் குழந்தை
ஆவார்
என்று
நீங்கள்
கூறுவீர்கள்.
சிவபாபா
இவரை
சுவீகாரம்
செய்துள்ளார்.
எனவே
இவர்
சரீரதாரி ஆகிறார்
அல்லவா?
இறைவனுக்கு
அனைவரும்
குழந்தைகள்
ஆவார்கள்.
பிறகு
சரீரம்
கிடைக்கும்
பொழுது பிரஜாபிதா
பிரம்மாவின்
"அடாப்ஷன்"
(தத்து
எடுத்தல்)
என்று
கூறுகிறார்கள்.
அந்த
"அடாப்ஷன்"
(தத்து
எடுப்பது)
அல்ல.
ஆத்மாக்களை
பரமபிதா
பரமாத்மா
தத்து
எடுத்திருக்கிறாரா?
இல்லை.
உங்களை
தத்து
எடுத்துள்ளார்.
இப்பொழுது
நீங்கள்
பிரம்மா
குமார்
குமாரிகள்
ஆவீர்கள்.
சிவபாபா
தத்து
எடுப்பதில்லை.
அனைத்து
ஆத்மாக்களும் அனாதி
அவினாஷி
ஆவார்கள்.
அனைத்து
ஆத்மாக்களுக்கும்
அவரவருக்கென்று
சரீரம்
அவரவருக்கென்று பார்ட்
கிடைத்துள்ளது.
அதை
நடித்தே
ஆக
வேண்டும்.
இந்த
பார்ட்
தான்
அனாதி
அவினாஷி
பரம்பரையாக நடந்து
வருகிறது.
அதற்கு
ஆரம்பம்
முடிவு
என்று
கூறப்படுவதில்லை.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
வெகுகாலம்
கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு
தாய்
தந்தை
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
தங்களுடைய
பணம்
மற்றும்
பதவி
ஆகியவற்றின்
அகங்காரத்தை
நீக்கி
விட
வேண்டும்.
அவினாஷி ஞான
செல்வத்தினால்
தங்களை
செல்வந்தராக
ஆக்க
வேண்டும்.
சேவையில்
ஒரு
பொழுதும் களைப்படையக்
கூடாது.
2.
வாயுமண்டலத்தை
நன்றாக
வைத்திருப்பதற்காக
வாயிலிருந்து எப்பொழுதும்
இரத்தினங்களை வெளிப்படுத்த
வேண்டும்.
துக்கம்
அளிக்கும்
வார்த்தைகள்
வெளிப்படக்
கூடாது
என்ற
கவனம் கொள்ள
வேண்டும்.
மலர்ந்த
முகத்துடன்
இருக்க
வேண்டும்.
வரதானம்:
எப்பொழுதும்
சிறந்த
நேரத்திற்கு
ஏற்ப
சிறந்த
செயல்களை
செய்து
ஆஹா
ஆஹா
என்ற கீதம்
பாடக்
கூடிய
பாக்கியவான்
ஆத்மா
ஆவீர்களாக.
இந்த
சிரேஷ்ட
நேரத்தில்
எப்பொழுதும்
சிரேஷ்ட
செயல்களை
செய்தபடியே
ஆஹா
ஆஹா
என்ற கீதத்தை
மனதில்
பாடிக்
கொண்டே
இருங்கள்.
ஆஹா
என்னுடைய
சிறந்த
செயல்
அல்லது
ஆஹா
சிறந்த செயலை
கற்பிக்கக்
கூடிய
பாபா
-
ஆக
எப்பொழுதும்
ஆஹா
ஆஹா
என்ற
கீதத்தை
பாடுங்கள்.
ஒரு பொழுதும்
தவறி
கூட
துக்கத்தின்
காட்சிகளை
பார்க்கையிலும்
கூட
ஐயோ
என்ற
வார்த்தை
வெளிப்படக் கூடாது.
ஆஹா!
டிராமா
ஆஹா!
மேலும்
ஆஹா!
பாபா
ஆஹா!
எது
கனவிலும்
கூட
நினைக்கவில்லையோ,
அந்த
பாக்கியம்
வீட்டில்
அமர்ந்தபடியே
கிடைத்து
விட்டது.
இதே
பாக்கியத்தின்
போதையில்
இருங்கள்.
ஸ்லோகன்:
மனம்,
புத்தியை
சக்திசாலியாக ஆக்கி
விட்டீர்கள்
என்றால் எந்தவொரு
குழப்பத்திலும்
ஆடாது
அசையாது
இருப்பீர்கள்.
ஓம்சாந்தி