16.06.2019                           காலை முரளி                ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           12.12.1984           மதுபன்


 

விசேஷ ஆத்மாக்களின் கடமை

 

இன்று திலாராம் (உள்ளத்திற்கு ஓய்வளிக்கும்) தந்தை தன்னுடைய இதயத்தால் குஷி நிறைந்த குழந்தைகளை, சந்திக்க வந்திருக்கிறார். முழு உலகத்தில், எப்பொழுதும் இதயப் பூர்வமாக குஷியில் குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்கள். மற்ற அனைவரும் எப்பொழுதாவது ஏதாவது இதயத்தின் வேதனையில் துக்கமாக இருக்கிறார்கள். அந்தமாதிரி இதயத்தின் வேதனையை அழிக்கக் கூடிய துக்கத்தை அழித்து, சுகம் கொடுக்கும் தந்தையின் சுக சொரூப குழந்தைகள் நீங்கள்! மற்ற அனைவரின் இதயத்தின் வேதனையின் கூக்குரலாக ஐயோ.. ஐயோ! என்ற சப்தம் தான் வெளியாகிறது. மேலும் இதயத்தால் குஷியாக இருக்கும் குழந்தைகள் உங்களுடைய இதயத்திலிருந்து ஆஹா.. ஆஹா! என்ற ஒசை வெளியாகிறது. எப்படி ஸ்தூல உடலின் வலி விதவிதமானதாக இருக்கும். அதே போல் இன்றைய மனித ஆத்மாக்களின் இதயத்தின் வலியும் அநேக விதமாக இருக்கின்றன. சில நேரம் கர்மத்தின் விளைவுகளை அனுபவிக்கும் உடலின் வலி, சில நேரம் சம்மந்தம். தொடர்பு மூலம் துக்கம் அடையும் ஆவதின் வலி, சிலநேரம் பணம் அதிகம் வந்தது ஆனால் குறைந்து விட்டது என்ற கவலையின் வலி, மேலும் சில நேரம் இயற்கையின் ஆபத்துக்களின் மூலம் பிராப்தியான துக்கத்தின் வலி. அந்தமாதிரி ஒரு வலியிலிருந்து அநேக வலிகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. முழு உலகமுமே துக்கத்தின் வலியின் கூக்குரல் இடுபவர்களாக ஆகிவிட்டது. அந்தமாதிரியான நேரத்தில் சுகம் கொடுக்கும், சுக சொரூப குழந்தைகள் உங்களுடைய கடமை என்ன? பல ஜென்மங்களின் துக்கம் மற்றும் வலியின் கடனிலிருந்து அனைவரையும் விடுவியுங்கள். இந்த பழைய கடன் துக்கம் வலியின் சுமையாகி விட்டது. அந்தமாதிரியான நேரத்தில் உங்கள் அனைவரின் கடமை வள்ளல் ஆகி எந்த ஆத்மாவிற்கு, ஏதாவது விதமான கடனின் சுமை இருக்கிறதோ, அவர்களுக்கு அந்த பிராப்தியால் நிரம்பியவராக ஆக்குங்கள். எப்படி உடலின் கர்மத்தின் விளைவுகளை அனுபவிக்கும் துக்கம், வேதனையுள்ள ஆத்மா, கர்மயோகி ஆகி, கர்மயோகத்தின் மூலம் கர்மத்தின் விளைவுகளை அனுபவிப்பதை முடித்து விடும். அந்தமாதிரி கர்மயோகி ஆவதற்கான சக்தியின் பிராப்தியை மகா தானத்தின் ரூபத்தில் கொடுங்கள். வரதானத்தின் ரூபத்தில் கொடுங்கள். அவர்களோ கடன்காரர்கள் அதாவது சக்தியில்லாதவர்கள், காலியாக இருக்கிறார்கள். அந்தமாதிரியானவர்களுக்கு தன்னுடைய கர்மயோகாவின் சக்தியின் பங்கை கொடுங்கள். ஏதாவது தன்னுடைய கணக்கிலிருந்து அவர்களுடைய கணக்கில் சேமிப்பு செய்யுங்கள். அப்பொழுதுதான் அவர்கள் கடனின் சுமையிலிருந்து விடுபட முடியும். இத்தனை காலம் நேரடியாக தந்தையின் வாரிசாகி என்னென்ன அனைத்து சக்திகளின் ஆஸ்தியை சேமித்திருக்கிறீர்களோ, அந்த சேமித்த கணக்கிலிருந்து பறந்த மனமுடன் தானம் செய்யுங்கள். அப்பொழுது இதயத்தின் வலியை போக்க முடியும். எப்படி இறுதி நேரம் அருகில் வந்துக்கொண்டிருக்கிறது, அதே போல் அனைத்து ஆத்மாக்களின் பக்தியின் சக்தியும் முடிவடைந்து கொண்டிருக்கிறது. துவாபர் யுகத்திலிருந்து இரஜோ குண ஆத்மாக்களில் இருந்தும் தானம், புண்ணியம், பக்தியின் சக்தி, அவர்களுடைய கணக்கில் சேமிப்பாக இருந்தது. எனவே, தன்னுடைய ஆத்மாவை நிர்வகிப்பதற்காக ஏதாவது, சாந்திக்கான வழி பிராப்தி ஆகியிருந்தது. ஆனால் இப்பொழுது தமோகுண ஆத்மாக்கள், இந்த குறைந்த நேரத்தின் சுகத்தின் ஆத்மாவை நிர்வகிப்பதற்கான. வழிகளிலிருந்தும் காலியாகி விட்டன. அதாவது பக்தியின் பலனையும் அருந்தி காலியாகி விட்டது. இப்பொழுது பெயருக்கு பக்தி, பலன் சொரூபமான பக்தி இல்லை. பக்தியின் மரம் விஸ்தாரமாக வளர்ந்துவிட்டது. மரத்தின் பல விதமான வண்ணத்தின் ஜொலிப்பு அவசியம் இருக்கிறது. ஆனால் சக்தியில்லாத காரணத்தினால், பலன் கிடைக்க முடியாது. எப்படி ஸ்துல மரம் கூட முழுமையாக வளர்ந்து, இத்துப்போன நிலையை அடைந்து விடுகிறதென்றால், பலன் கொடுப்பதாக இருக்காது. ஆனால் நிழல் கொடுக்கும் மரமாக ஆகிவிடும். அதே போல் பக்தியின் மரமும் மனதை குஷிப் படுத்துவதற்கான நிழலை அவசியம் கொடுக்கிறது. குரு வைத்து விட்டோம், முக்தி கிடைத்துவிடும். தீர்த்த யாத்திரை, தானம், புண்ணியம் செய்தோம், பிராப்தி ஆகிவிடும். அப்படி மனதை குஷிப் படுத்துவதற்கான ஆறுதல் கொடுக்கும் நிழல் இன்னும் பாக்கியிருக்கிறது. இப்பொழுது இல்லையென்றால், எப்போதாவது கிடைத்துவிடும் என்ற இதே நிழலில் பாவம், வெகுளியான பக்தர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பழம் கொடுப்பதில்லை, எனவே அனைவரில் ஆத்மாவை நிர்வகிக்கும் கணக்கு, காலியாக இருக்கிறது. அந்தமாதிரியான நேரத்தில் நிரம்பிய ஆத்மாக்களாகிய உங்களுடைய கடமை தன்னுடைய சேமிப்பாகியிருப்பதிலிருந்து, அந்த ஆத்மாக்களுக்கு ஒரு பங்கை ஏதாவது, அந்த ஆத்மாக்களுக்கு தைரியம் மற்றும் உற்சாகத்தை கொடுக்க வேண்டும். சேமிப்பு ஆகியிருக்கிறதா? அல்லது தனக்காக சம்பாதித்தீர்கள் மற்றும் சாப்பிட்டு விட்டீர்களா? சம்பாதித்தார் மற்றும் சாப்பிட்டு விட்டார் என்பவரை இராஜயோகி என்று கூறமாட்டோம். சுயராஜ்ய அதிகாரி என்று கூறமாட்டோம். இராஜாவின் களஞ்சியம் எப்பொழுதும் நிரம்பியிருக்கும். பிரஜைகளின் பாலனையின் பொறுப்பு இராஜாவிற்கு இருக்கிறது. சுயராஜ்ய அதிகாரி என்றால், அனைத்து பொக்கிஷங்களும் நிரம்பியவர். ஒருவேளை பொக்கிஷம் நிரம்பியிருக்க வில்லையென்றால், இப்பொழுதும் அவர் இராஜயோகி இல்லை, பிரஜா யோகி ஆவார். பிரஜை சம்பாதிப்பார் மற்றும் சாப்பிட்டு விடுவார். செல்வந்தர் பிரஜைகள் கொஞ்சம் சேமிப்பு வைத்துக் கொள்வார்கள், ஆனால் இராஜா கஜானாவின் அதிகாரியாக இருக்கிறார். அந்த மாதிரி இராஜயோகி என்றால், சுயராஜ்ய அதிகாரி ஆத்மாக்கள். எந்தவொரு பொக்கிஷத்தின் சேமிப்பு கணக்கு காலியாக இருக்க முடியாது. எனவே பொக்கிஷம் நிரம்பியிருக்கிறதா? என்று தன்னை பாருங்கள். வள்ளலின் குழந்தைகளாகிய உங்களுக்கு கொடுக்க வேண்டுமென்ற பாவனை இருக்கிறதா? அல்லது தனக்கு பயன்படுத்துவதிலேயே முழ்கியிருக்கிறீர்களா? தன்னுடைய பாலனையிலேயே காலம் கடந்து சென்று விடுகிறதா அல்லது மற்றவர்களின் பாலனைக்காக நேரமும் பொக்கிஷமும் நிரம்பியிருக்கிறதா? இங்கு சங்கமயுகத்திலிருந்து தான் ஆன்மீக பாலனையின் சம்ஸ்காரம் உள்ளவர்கள், எதிர்காலத்தில் பிரஜையை பாலனை செய்யும் விஷ்வராஜன் ஆக முடியும். இராஜா மற்றும் பிரஜையின் முத்திரை இங்கே இடப்படுகிறது. பதவி அங்கு கிடைக்கும். ஒருவேளை இங்கேயே முத்திரை இல்லையென்றால், பதவி கிடைக்காது. சங்கமயுகம் முத்திரை இடப்படும் அலுவலகம், தந்தை மூலமாக பிராமண குடும்பத்தின் மூலமாக முத்திரை இடப்படுகிறது. எனவே தன்னைத் தானே நல்ல முறையில் பாருங்கள். கையிருப்பை சோதனை செய்யுங்கள். தேவையான நேரத்தில் ஏதோவொரு பிராப்தியின்மை (அடைவதில் குறை) கூட சம்பன்னம் (முழுமை) அடைவதில் ஏமாற்றிவிட்டது என்று அப்படி இருக்க வேண்டாம். எப்படி ஸ்தூலமான பொருட்களை சேமிக்கிறீர்கள், ஒருவேளை அனைத்து மளிகை பொருட்களையும் சேர்த்து விட்டீர்கள், ஆனால் சின்னஞ்சிறு தீப்பெட்டி வாங்கவில்லையென்றால், மளிகை மற்றும் தானியங்களை வைத்து என்ன செய்வீர்கள்? அநேக பிராப்திகள் இருந்த போதிலும், ஒரு பிராப்தியின்மை ஏமாற்றத்தை அளித்து விட முடியும். அந்த மாதிரி ஒரு பிராப்தியின்மை கூட நிரம்பியவர் என்ற முத்திரை இடப்படுவதற்கான உரிமையை அடைவதில் ஏமாற்றம் அளித்து விட முடியும்.

 

என்னிடமோ நினைவின் சக்தி இருக்கிறது, ஏதாவது குணத்தின் குறையிருக்கிறது என்றால், ஒன்றும் பாதகம் இல்லை என்று அப்படி நினைக்காதீர்கள். நினைவின் சக்தி மகான், நம்பர் ஒன் அது சரி தான். ஆனால் ஏதாவது ஒரு குணத்தின் குறை கூட அந்த நேரத்தில் முழுமையாக தேர்ச்சியடைவதில் தோல்வியடையச் செய்து விடும். இதை சின்ன விஷயம் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொரு குணத்தின் மகத்துவம் மற்றும் சம்மந்தம் என்ன என்ற இதன் ஆழமான கணக்கு இருக்கிறது, அதை பின்பு எப்போதாவது கூறுவோம்.

 

விசேஷ ஆத்மாக்களின் கடமை மற்றும் பொறுப்பு என்ன? அதை இன்று விசேஷமாக நினைவூட்டினோம். புரிந்ததா? இந்த நேரம் டெல்லி தலைநகரைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறீர்கள் அல்லவா. எனவே இராஜ்ய அதிகாரியின் விஷயத்தைக் கூறினோம். அப்படியே தலை நகரத்தில் மாளிகை கிடைத்துவிடாது. பாலனை செய்து பிரஜைகளை உருவாக்க வேண்டும். டெல்லியைச் சேர்ந்தவர்கள் அதிவேகமாக தயார் செய்து கொண்டு இருக்கிறீர்கள் தான் இல்லையா? தலைநகரத்தில் இருக்க வேண்டும் இல்லையா, தூரமாகச் செல்ல வேண்டாம் இல்லையா?

 

குஜராத்தைச் சேர்ந்தவர்களும் இப்பொழுது உடன் இருக்கிறார்கள். சங்கமயுகத்தில் மதுபன்னில் உடன் இருக்கிறார்கள் என்றால், இராஜ்யத்திலும் உடன் இருப்பார்கள் இல்லையா? உடன் இருப்பதற்கான திடமான எண்ணம் வைப்பீர்கள் இல்லையா? மூன்றாவது இந்தூர். இன் - டோர் என்றால் வீட்டில் இருப்பவர்கள். அப்படி இந்தூர் ஜோனைச் சேர்ந்தவர்கள் இராஜ்யத்தின் வீட்டில் இருப்பீர்கள் இல்லையா? இப்பொழுதும் தந்தையின் இதயம் என்ற வீட்டில் இருப்பவர்கள். அப்படி மூவர்களின் அருகாமையின் ராசி ஒத்துப் போகிறது. எப்பொழுதும் அந்தமாதிரியே இந்த பாக்கியத்தின் ரேகையை தெளிவாகவும், விஸ்தாரமாகவும் ஆக்கிக் கொண்டேயிருங்கள். நல்லது.

 

அந்தமாதிரி எப்பொழுதும் சம்பன்ன நிலையின் கடமையை நிறவேற்றக் கூடிய, தன்னுடைய வள்ளல் தன்மையின் சிரேஷ்ட சம்ஸ்காரங்களினால் அனைவரின் வேதனையை அகற்றக் கூடிய, எப்பொழுதும் சுயராஜ்ய அதிகாரி ஆகி ஆன்மீக பாலனை செய்யக் கூடிய, அனைத்து பொக்கிஷங்களால் நிரம்பிய களஞ்சியமாக ஆக்கக் கூடிய, மாஸ்டர் வள்ளல், வரம் அளிக்கும் வள்ளல், அந்தமாதிரி இராஜயோகி, சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு

1. எப்பொழுதும் தன்னை பார்வையாளர் என்ற இருக்கையில் அமர்ந்திருக்கும் ஆத்மா என்று அனுபவம் செய்கிறீர்களா? இந்த பார்வையாளரின் நிலை அனைத்தையும் விட மிக நல்ல, சிரேஷ்ட இருக்கையாகும். இந்த இருக்கையில் அமர்ந்து காரியம் செய்வதிலும் அல்லது பார்ப்பதிலும் மிகுந்த மகிழ்ச்சி வரும். எப்படி இருக்கை நன்றாக இருக்கிறதென்றால், அமருவதில் மகிழ்ச்சி வரும் இல்லையா? இருக்கை நன்றாக இல்லையென்றால், அமருவதில் மகிழ்ச்சி இருக்காது. இந்த பார்வையாளர் என்ற இருக்கை அனைத்தையும் விட சிரேஷ்ட இருக்கை! இதே இருக்கையில் எப்பொழுதுமே அமர்ந்து இருக்கிறீர்களா? உலகத்தில் கூட இன்றைய நாட்களில் இருக்கையை பிடிப்பதற்குத் தான் அங்கும் இங்கும் ஒடுகிறார்கள். உங்களுக்கு எவ்வளவு நல்ல இருக்கை கிடைத்திருக்கிறது. அந்த இருக்கையில் இருந்து உங்களை யாரும் கீழே இறக்க முடியாது. அவர்களுக்கோ எவ்வளவு பயம் இருக்கிறது. இன்று இருக்கை இருக்கிறது. நாளை இல்லாமல் போய்விடலாம். உங்களுடையது அழியாதது, பயமில்லாமல் நீங்கள் அமர முடியும். அந்தமாதிரி பார்வையாளர் நிலை என்ற இருக்கையில் எப்பொழுதும் அமர்ந்து இருக்கிறீர்களா? நிலைகுலைந்து இருப்பவர் இருக்கையில் ஒரே சீராக அமர முடியாது. எப்பொழுதுமே இந்த இருக்கையில் நன்றாக அமர்ந்திருங்கள். இது அந்த மாதிரி மிகவும் சௌகரியமான இருக்கை, அதில் அமர்ந்து கொண்டு நீங்கள் என்ன பார்க்க விரும்பு கிறீர்களோ, என்ன அனுபவம் செய்ய விரும்புகிறீர்களோ, அதைச் செய்ய முடியும்.

 

2. தன்னை இந்த உலகத்தில் கோடியில் சிலர் மற்றும் சிலரிலும் சிலரான விசேஷ ஆத்மா என்று நினைக்கிறீர்களா? கோடியில் சிலர் தான் தந்தையின் குழந்தை ஆகிறார்கள் என்று வர்ணனை இருக்கிறது தானே, அது நான் தான்! இந்தக் குஷி எப்பொழுதும் இருக்கிறதா, உலகத்தில் அநேக ஆத்மாக்கள் தந்தையை அடைவதற்காக, முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் நான் அடைந்துவிட்டேன். தந்தையின் குழந்தை ஆவது என்றால், தந்தையை அடைவது. உலகத்தினர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் நான் அவருடைய குழந்தை ஆகிவிட்டேன். பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கத்தின் பிராப்தியில் மிகுந்த வித்தியாசம் இருக்கிறது. ஞானம் என்பது படிப்பு, பக்தி என்பது படிப்பு அல்ல. அது குறைந்த நேரத்திற்கான ஆன்மீக பொழுதுபோக்கு. ஆனால் சதா காலத்திற்கான பிராப்திக்கான சாதனம் ஞானம். எனவே எப்பொழுதும் இதே நினைவில் இருந்து மற்றவர்களையும் சக்திசாலி ஆக்குங்கள். எது நினைவிலும் கனவிலும் இல்லாமல் இருந்ததோ, அதை நடை முறையில் அடைந்துவிட்டேன். தந்தை ஒவ்வொரு மூலையிலிருந்தும் குழந்தைகளைக் கண்டுபிடித்து தன்னுடையவராக ஆக்கிவிட்டார். எனவே இதே குஷியில் இருங்கள்.

 

3. அனைவரும் தன்னை ஒரே ஒரு தந்தையின் வழியில் நடக்கும், ஒரே சீரான நிலையில் நிலைத்திருப்பவர்கள் என்று அனுபவம் செய்கிறீர்களா? எப்பொழுது ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமே இல்லையென்றால், சுலபமாகவே ஒரே சீரான நிலை வந்து விடுகிறது. அந்தமாதிரி அனுபவம் இருக்கிறதா? எப்பொழுது இன்னொருவர் யாருமே இல்லையென்றால், புத்தி எங்கு செல்லும், மேலும் வேறு எங்கு செல்வதற்கும் வாய்ப்பும் இல்லை. இருப்பதே ஒரே ஒருவர். எங்கு இரண்டு மூன்று விஷயங்கள் இருக்கிறது என்றால், யோசிப்பதற்கு வாய்ப்பு இருக்கும். எப்பொழுதும் ஒரே ஒரு வழி தான் என்றால், எங்கு செல்ல முடியும். அந்தமாதிரி இங்கு மார்க்கத்தை கூறுவதற்கான சகஜவிதி - ஒரு தந்தை, ஒரு வழி, ஒரே சீரான ஒரே ஒரு பரிவாரம். இந்த ஒரே ஒரு விஷயத்தை நினைவு வைத்துக் கொண்டீர்கள் என்றால், முதல் நம்பர் ஆகிவிடும், ஒன்றின் கணக்கை தெரிந்து கொள்ள வேண்டும் அவ்வளவு தான். எங்கே இருந்தாலும், ஆனால் ஒருவரின் நினைவு இருக்கிறது என்றால் எப்பொழுதுமே உடன் இருப்பீர்கள், தூரமாக இல்லை. எங்கு தந்தையின் தூணை இருக்கிறதோ, அங்கு மாயாவின் துணை இருக்க முடியாது. தந்தையிடமிருந்து பிரித்து விட்டு, பிறகு மாயா வருகிறது. அப்படியே வருவதில்லை. எனவே நீங்கள் பிரியவும் செய்யாதீர்கள், மாயாவும் வரவேண்டாம். அந்த ஒருவருக்குத் தான் மகத்துவம்.

 

அதர்குமாரர்களுடன் (இல்லறத்தில் இருக்கும் சகோதரர்களுடன்) பாப்தாதாவின் சந்திப்பு

எப்பொழுதும் இல்லறத்தில் இருந்து கொண்டும், ஆன்மீக உணர்வில் இருக்கிறீர்களா? நீங்கள் இல்லற வாழ்க்கையில் இருந்து விலகியிருப்பவர்கள், எப்பொழுதும் டிரஸ்டி ரூபத்தில் இருப்பவர்கள். அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்களா? டிரஸ்டி என்றால், எப்பொழுதும் சுகமானவர், மேலும் குடும்பஸ்தன் என்றால் எப்பொழுதும் துக்கமானவர். அப்படியானால் நீங்கள் யாராக இருக்கிறீர்கள்? எப்பொழுதும் சுகமானவர்கள். இப்பொழுது துக்கமான உலகத்தை விட்டுவிட்டீர்கள், அதிலிருந்து வெளியேறி வந்துவிட்டீர்கள். இப்பொழுது சங்கமயுகத்தில் சுகங்களின் யுகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது ஆன்மீக இல்லறத்தில் இருக்கிறீர்களே அன்றி, உலகத்தின் இல்லறத்தில் இருக்கவில்லை. உங்களுக்குள்ளும் ஆன்மீக உள்ளுணர்வு, ஆன்மீக பார்வை இருக்க வேண்டும்.

 

டிரஸ்டி நிலையின் அடையாளம் எப்பொழுதும் விலகியிருப்பவர் மற்றும் தந்தையின் பிரியமானவர். ஒருவேளை விலகியிருந்து, அன்பானவராக இருக்க வில்லையென்றால், டிரஸ்டியாகவும் இல்லை. குடும்ப வாழ்க்கை என்றால், பந்தனம் நிறைந்த வாழ்க்கை. டிரஸ்டி வாழ்க்கை என்றால் பந்தனமற்ற வாழ்க்கை. டிரஸ்டி ஆவதினால், அனைத்து பந்தனங்களும் சுலபமாகவே முடிவடைந்து விடுகிறது. பந்தனமற்றவர் என்றால், எப்பொழுதும் சுகமானவர். அவரிடம் துக்கத்தின் அலைகள் வரமுடியாது. ஒருவேளை எண்ணத்தில் கூட என்னுடைய வீடு, என்னுடைய குடும்பம், என்னுடைய இந்த வேலை என்று வருகிறது என்றால், இந்த நினைவு கூட மாயாவை அழைக்கிறது. எனவே என்னுடையதை உன்னுடையதாக ஆக்கிவிடுங்கள். எங்கு உன்னுடையது இருக்கிறதோ, அங்கு துக்கம் அகன்று விடுகிறது. என்னுடையது என்று கூறினால், குழப்பத்தில் வருவது, உன்னுடையது என்று கூறினால், மகிழ்ச்சியோடு இருப்பது. இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்க வில்லையென்றால், எப்பொழுது இருப்பீர்கள். சங்கமயுகமே மகிழ்ச்சியில் இருப்பதற்கான யுகம், எனவே எப்பொழுதும் மகிழ்ச்சியில் இருங்கள். கனவிலும் மற்றும் நினைவிலும் கூட வீணானவை இருக்க வேண்டாம். அரைக் கல்பம் அனைத்தையும் வீணாக இழந்தீர்கள், இப்பொழுது இழப்பதற்கான நேரம் முடிவடைந்து விட்டது. இப்பொழுது சம்பாதிக்கும் நேரம். எவ்வளவு சக்திசாலியாக இருப்பீர்களோ, அந்தளவு சம்பாத்தியம் செய்து சேமிப்பு செய்ய முடியும். 21 ஜென்மங்களும் மிக சௌகரியமாக இருந்து, சாப்பிடும் அளவிற்கு சேமிப்பு செய்யுங்கள். மற்றவர்களுக்கும் கொடுக்க முடியும் அளவிற்கு, கையிருப்பு இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் வள்ளலின் குழந்தைகள். எந்தளவு சேமிப்பு இருக்குமோ, அந்தளவு அவசியம் குஷி இருக்கும்.

 

எப்பொழுதும் ஒரு தந்தையைத் தவிர வேறுயாரும் இல்லையென்ற, இதே ஈடுபாட்டில் மூழ்கியிருங்கள். எங்கு முழு ஈடுபாடு இருக்கிறதோ, அங்கு தடை வரமுடியாது. பகல் இருக்கிறது என்றால், இரவு இல்லை. இரவு இருக்கும் நேரத்தில் பகல் இருக்காது. அதேபோல் தான் இந்த முழு ஈடுபாடும் தடையும். உங்களுடைய ஈடுபாடு அந்தளவு சக்திசாலியாக இருக்க வேண்டும். அது தடையை பஸ்மம் செய்துவிடும். நீங்கள் அந்தமாதிரியான தடையற்ற ஆத்மாவாக இருக்கிறீர்களா? எவ்வளவு தான் பெரிய தடையாக இருந்தாலும், மாயா தடை ரூபமாக மாறி வந்தாலும், ஆனால் முழு ஈடுபாடு உள்ளவர்கள், எப்படி வெண்ணெயில் இருந்து முடி எடுக்கப்படுகிறது. அதேபோல் அதை கடந்து விடுவார்கள். முழு ஈடுபாடு தான் அனைத்து பிராப்திகளையும் அனுபவம் செய்விக்கும். எங்கு தந்தை இருக்கிறாரோ, அங்கு பிராப்தி அவசியம் இருக்கிறது. எது தந்தையின் பொக்கிஷமோ, அது குழந்தைகளுடையது.

 

மாதர்களுடன் சந்திப்பு:

நீங்கள் சக்தி தளம் தான் இல்லையா? தாய்மார்கள் ஜெகத்மாதாக்கள் ஆகி விட்டார்கள். இப்பொழுது எல்லைக்குட்பட்ட மாதாக்கள் இல்லை. எப்பொழுதும் தன்னை ஜெகத்மாதா என்று புரிந்து கொள்ளுங்கள். எல்லைக்குட்பட்ட குடும்ப வாழ்க்கையில் மாட்டிக் கொள்பவர்கள் இல்லை. எல்லைக்கு அப்பாற்பட்ட சேவையில் எப்பொழுதும் குஷியாக இருப்பவர்கள். தந்தை எவ்வளவு உயர்ந்த பதவியை கொடுத்து விட்டார். தாசியாக இருந்தவரிலிருந்து, தலையின் கீரிடமாக ஆக்கிவிட்டார். ஆஹா எனது உயர்ந்த பாக்கியமே! என்ற இதே பாடலை, பாடிக் கொண்டு மட்டும் இருங்கள். இந்த ஒரு வேலையை மட்டும் தான் தந்தை தாய்மார்களுக்கு கொடுத்திருக்கிறார். ஏனென்றால் மிகவும் அலைந்து, அலைந்து களைப்பு அடைந்து விட்டார்கள். எனவே தந்தை தாய்மார்களின் களைப்பைப் பார்த்து அவர்களை களைப்பிலிருந்து விடுவிப்பதற்காக வந்திருக்கிறார். 63 ஜென்மங்களின் களைப்பை ஒரு ஜென்மத்தில் அகற்றிவிட்டார், ஒரு வினாடியில் அகற்றிவிட்டார், தந்தையின் குழந்தை ஆனீர்கள், களைப்பு அகன்றது. மாதாக்களுக்கு ஊஞ்சலில் ஆடுவதும் மற்றும் ஆட்டுவதும் மிகவும் பிடிக்கும். எனவே தந்தை மாதாக்களை குஷியின் அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சலில் ஆட்டு வித்தார். அதே ஊஞ்சலில் ஆடிக் கொண்டேயிருங்கள். நிரந்தர சுகமானவராக, நிரந்தர சுமங்கலியாக ஆகிவிட்டீர்கள். அமர தந்தையின் அமர குழந்தைகள் ஆகிவிட்டீர்கள். பாப்தாதாவும் குழந்தைகளைப் பார்த்து குஷியடைகிறார்கள். நல்லது.

 

வரதானம்:

நிரம்பிய நிலை மூலமாக எப்பொழுதும் திருப்தியை அனுபவம் செய்யக் கூடிய செல்வந்தர் ஆகுக.

 

சுயராஜ்யத்தின் செல்வம், ஞானம், குணம் மற்றும் சக்திகள். யார் இந்த அனைத்து செல்வங்களினால், நிரம்பிய சுயராஜ்ய அதிகாரியாக இருக்கிறாரோ, அவர் எப்பொழுதும் திருப்தியாக இருக்கிறார். அவரிடம் பிராப்தியின்மையின் பெயர் அடையாளம் கூட இருக்காது. எல்லைக்குட்பட்ட ஆசைகள் என்றால் என்னவென்று தெரியாதவர். இவரைத் தான் செல்வந்தர் என்று கூறுவது. அவர் எப்பொழுதும் வள்ளலாக இருப்பார், யாசிப்பவராக இருக்கமாட்டார். அவர் இடைவிடாத சுகம் சாந்தி நிரம்பிய சுயராஜ்யத்தின் அதிகாரியாக இருப்பார். எந்தவிதமான சூழ்நிலையும் அவருடைய இடைவிடாத அமைதியை துண்டிக்க முடியாது.

 

சுலோகன்:

ஞானக் கண் மூலம் மூன்று காலங்களையும், மூன்று உலகங்களையும் தெரிந்து கொள்பவர் தான் மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்.

 

ஓம்சாந்தி