01.01.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே
!
இங்கே
நீங்கள்
வனவாசத்தில்
இருக்கிறீர்கள்.
நல்ல
நல்லதாக அணிய
வேண்டும்,
சாப்பிட
வேண்டும்......
என்ற
ஆர்வம்
குழந்தைகளாகிய
உங்களுக்குள் இருக்கக்
கூடாது.
படிப்பு
மற்றும்
நடத்தையில்
முழுமையாக
கவனம்
வையுங்கள்.
கேள்வி:
ஞான
ரத்தினங்களால்
சதா
நிரம்பி
இருப்பதற்கான
வழி
என்ன?
பதில்:
தானம்.
எவ்வளவு
மற்றவர்களுக்கு
தானம்
செய்வார்களோ
அவ்வளவு
தனக்குள்
நிரம்பி
இருப்பார்கள்.
யார்
கேட்டு
தாரணை
செய்து
பிறகு
மற்றவர்களுக்கும்
தானம்
செய்கிறார்களோ
அவர்களே
புத்திசாலிகள்.
ஒரு வேளை
புத்தி
என்ற
பையில்
ஓட்டை
இருந்தால்
வெளியேறி
விடும்.
தாரணை
ஆகாது.
ஆகவே
முறைப்படி படிப்பைப்
படிக்க
வேண்டும்.
5
விகாரங்களில்
இருந்து
விடுபட்டு
இருக்க
வேண்டும்.
ஞானி
யோகி
(ரூப்-பஸந்த்)
ஆக
வேண்டும்.
ஓம்
சாந்தி.
ஆன்மீகத்
தந்தை
ஆன்மீகக்
குழந்தைகளுக்குப்
புரிய
வைக்கின்றார்.
ஆன்மீகத்
தந்தை
கூட கர்மேந்திரியங்களால்
பேசுகின்றார்,
ஆன்மீகக்
குழந்தைகள்
கூட
கர்மேந்திரியங்களால்
கேட்கின்றார்கள்.
இது புது
விஷயம்
ஆகும்.
உலகத்தில்
வேறு
எந்த
மனிதரும்
இவ்வாறு
கூற
முடியாது.
உங்களிலும்
கூட வரிசைக்கிரமத்தில்
தான்
முயற்சிக்கு
ஏற்ப
புரிய
வைக்கிறீர்கள்.
டீச்சர்
படிக்க
வைக்கிறார்கள்
என்றால்
அது மாணவர்களின்
ரிஜிஸ்டர்
மூலம்
வெளிப்படுகிறது.
ரிஜிஸ்டர்
மூலமாக
அவர்களின்
படிப்பு
மற்றும்
நடத்தை தெரிகிறது.
முக்கியமானது
படிப்பும்
நடத்தையும்
ஆகும்.
இந்த
ஈஸ்வரிய
படிப்பை
வேறு
யாரும்
படிக்க வைக்க
முடியாது.
படைப்பவர்
மற்றும்
படைப்பின்
முதல்,
இடை,
கடை,
சிருஷ்டி
சக்கரத்தின்
ஞானம்,
முழு உலகத்தில்
எந்த
மனிதரும்
அறிய
வில்லை.
இவ்வளவு
படித்த
அத்தாரிட்டி
உடைய
ரிஷி
முனிகளே
நாங்கள் படைப்பவர்
மற்றும்
படைப்பினைப்
பற்றி
அறியவில்லை
என்று
கூறினார்கள்.
தந்தை
தான்
வந்து
அறிமுகத்தை வழங்கி
இருக்கிறார்.
இது
முட்களின்
காடு
என்று
பாடப்பட்டு
இருக்கிறது.
காட்டில்
நிச்சயம்
தீப்பற்றும்.
மலர்களின்
தோட்டத்தில்
ஒரு
போதும்
தீப்பற்று
வதில்லை.
ஏனென்றால்
காடு
முழுவதும்
காய்ந்து
போய் இருக்கிறது.
தோட்டம்
பசுமையாக
இருக்கிறது.
பசுமையான
தோட்டத்தில்
தீப்பற்றாது.
காய்ந்து
போய் இருப்பவைகளுக்கு
இடையில்
சட்டென
தீப்பற்றுகிறது.
இது
எல்லையற்ற
காடாகும்.
இதற்கும்
தீப்பற்றியது.
தோட்டமும்
உருவாகியது.
உங்களுடைய
தோட்டம்
குப்தமாக
(மறைமுகமாக)
உருவாகிக்
கொண்டிருக்கிறது.
நாம்
தோட்டத்தில்
உள்ள
நறுமணம்
உள்ள
மலர்
போன்ற
தேவதைகளாக
மாறிக்
கொண்டிருக்கிறோம்.
அதனுடைய
பெயரே
சொர்க்கம்
என
உங்களுக்குத்
தெரியும்.
இப்போது
சொர்க்கம்
உருவாகிக்
கொண்டிருக்கிறது.
அதிசயமாக
இருக்கிறது.
நீங்கள்
எவ்வளவு
தான்
மக்களுக்கு
புரிய
வைக்கிறீர்கள்.
ஆனால்
யாருடைய புத்தியிலும்
பதிவதில்லை.
இந்த
தர்மத்தைச்
சார்ந்தவர்கள்
இல்லை
என்றால்
அவர்களுடைய
புத்தியில் பதியாது.
ஒரு
காதில்
கேட்டு
இன்னொன்றில்
விட்டு
விடுவார்கள்.
சத்யுகம்
திரேதாவில்
எவ்வளவு
குறைவாக இருப்பார்கள்.
பிறகு
துவாபரயுகம்,
கலியுகத்தில்
எவ்வளவு
விருத்தியாகி
விட்டது.
அங்கே
ஒன்று
இரண்டு குழந்தைகள்,
இங்கே
நான்கு
ஐந்து
குழந்தைகள்
என்றால்
நிச்சயமாக
விருத்தி
அடைகிறது.
பாரதவாசிகள்தான் இப்போது
இந்து
என
அழைக்கப்படுகிறார்கள்.
உண்மையில்
தேவதா
தர்மத்தைச்
சார்ந்தவர்கள்.
வேறு
யாரும் தங்களின்
தர்மத்தை
மறக்கவில்லை.
பாரதவாசிகள்
தான்
மறந்து
இருக்கின்றனர்.
பாருங்கள்
இச்சமயம்
எவ்வளவு நிறைய
மனிதர்கள்
இருக்கிறார்கள்!
இத்தனை
பேரும்
வந்து
ஞானத்தை
அடைய
மாட்டார்கள்.
ஒவ்வொருவரும் தனது
பிறவிகளைப்
புரிந்துக்
கொள்ளலாம்.
யார்
84
பிறவிகளை
முழுமையாக
எடுத்திருப்பார்களோ
அவர்களே நிச்சயமாக
பழைய
பக்தர்களாக
இருப்பார்கள்.
நாம்
எவ்வளவு
பக்தி
செய்திருக்கிறோம்
என
நீங்கள்
புரிந்து கொள்ளலாம்.
கொஞ்சம்
பக்தி
செய்திருந்தால்
கொஞ்சம்
ஞானம்
தான்
எடுப்பார்கள்.
கொஞ்ச
பேருக்குத்
தான் புரிய
வைப்பார்கள்.
நிறைய
பக்தி
செய்திருந்தால்
நிறைய
ஞானம்
எடுப்பார்கள்.
நிறைய
பேருக்கு
புரிய வைப்பார்கள்.
ஞானம்
எடுக்கவில்லை
என்றால்
குறைவாகத்
தான்
புரிய
வைப்பார்கள்.
ஆகவே
அவர்களுக்கு பலனும்
சிறிதே
கிடைக்கிறது.
கணக்கு
இருக்கிறது
அல்லவா?
பாபாவிற்கு
ஒரு
குழந்தை,
இஸ்லாமியர்கள் இத்தனை
பிறவி,
பௌத்தர்கள்
இத்தனை
பிறவி
எடுக்க
வேண்டும்
என
கணக்கிட்டு
அனுப்பியது.
புத்தர்
கூட தர்ம
ஸ்தாபகர்.
அவருக்கு
முன்பு
எந்த
ஒரு
புத்த
தர்மமும்
இல்லை.
புத்தரின்
ஆத்மா
பிரவேசமாகியது.
அது புத்த
தர்மத்தை
ஸ்தாபனை
செய்தது.
பிறகு
ஒன்றிலிருந்து விருத்தி
அடைகிறது,
அவரும்
ஒரு
பிரஜாபிதா.
ஒன்றிலிருந்து எவ்வளவு
விருத்தி
அடைகிறது!
நீங்கள்
புது
உலகத்தில்
இராஜா
ஆக
வேண்டும்.
இங்கே வனவாசத்தில்
இருக்கிறீர்கள்.
எந்த
பொருளிலும்
ஆசை
வைக்கக்
கூடாது.
நாம்
நல்ல
உடை
உடுத்த வேண்டும்
என்பது
கூட
தேக
அபிமானம்
ஆகும்.
எது
கிடைக்கிறதோ
நல்லது.
இந்த
உலகம்
சிறிது
காலம் தான்.
இங்கு
நல்ல
உடை
உடுத்தினால்
பிறகு
அங்கே
குறைந்து
விடும்.
இந்த
விருப்பத்தையும்
விட வேண்டும்.
இன்னும்
போகப்போக
குழந்தைகளுக்கு
தானாகவே
சாட்சாத்காரம்
கிடைத்துக்
கொண்டே
இருக்கும்.
இவர்கள்
நிறைய
சேவை
செய்கிறார்கள்
அதிசயம்!
நிச்சயம்
இவர்கள்
உயர்ந்த
பதவி
அடைவார்கள்.
பிறகு தனக்குச்
சமமாக
மாற்றிக்
கொண்டே
இருப்பார்கள்
என
நீங்களே
கூறுவீர்கள்.
ஒவ்வொரு
நாளும்
தோட்டம் பெரியதாக
வேண்டும்.
சத்யுகம்
மற்றும்
திரேதாவைச்
சார்ந்த
தேவி
தேவதைகள்
அனைவரும்
இங்கே
தான் குப்தமாக
அமர்ந்திருக்கிறார்கள்.
பிறகு
வெளிப்படுவார்கள்.
இப்போது
நீங்கள்
குப்தமாக
பதவியை
அடைந்து கொண்டிருக்கிறீர்கள்.
மரண
உலகத்தில்
படித்துக்
கொண்டிருக்கிறோம்.
அமர
லோகத்தில்
பதவியை
அடைவோம் என
உங்களுக்குத்
தெரியும்.
இது
போன்ற
படிப்பு
எப்போதாவது
பார்த்திருக்
கிறீர்களா?
இது
அதிசயம்
ஆகும்.
படித்தல்
பழைய
உலகத்தில்,
பதவி
அடைதல்
புது
உலகத்தில்.
அமர
உலகத்தின்
ஸ்தாபனை
மற்றும்
மரண உலகத்தினை
அழிப்பவரே
படிக்கவும்
வைக்கிறார்.
உங்களுடைய
இந்த
புருஷோத்தம
சங்கம
யுகம்
மிகவும் சிறியதாகும்.
இதில்
படிக்க
வைப்பதற்காக
தந்தை
வருகிறார்.
வந்தவுடன்
படிப்பு
ஆரம்பம்
ஆகிறது.
அப்போது தான்
சிவஜெயந்தி
மூலம்
கீதா
ஜெயந்தி
என
எழுதுங்கள்
என
தந்தை
கூறுகின்றார்.
இதை
மனிதர்கள் அறியவில்லை.
அவர்கள்
கிருஷ்ணரின்
பெயரை
வைத்திருக்கின்றனர்.
இப்போது
இந்த
தவறு
யாராவது
புரிய வைக்கும்
போது
தான்
புரியும்.
எவ்வளவு
பெரிய
பெரிய
மனிதர்கள்
மியூசியத்திற்கு
வருகிறார்கள்.
அவர்கள் பாபாவைப்
புரிந்துக்
கொண்டனர்
என்பது
கிடையாது.
ஆகவே
தான்
விண்ணப்பத்தை
நிரப்புங்கள்,
ஏதாவது கற்றுக்
கொண்டிருக்கிறாரா
எனத்
தெரியும்
என
பாபா
கூறுகின்றார்.
மற்றபடி
இங்கே
வந்து
என்ன
செய்வார்கள்?
சாது,
சன்னியாசிகள்,
மகாத்மாவிடம்
செல்கிறார்கள்.
அது
போன்று
இங்கு
கிடையாது.
இவருடையதோ
அதே சாதாரண
ரூபம்.
உடையிலும்
எந்த
வித்தியாசமும்
இல்லை.
ஆகவே
யாரும்
புரிந்து
கொள்ள
முடியாது.
இவர் வைர
வியாபாரியாக
இருந்தார்
என
நினைக்கின்றனர்.
முதலில் அழியக்
கூடிய
இரத்தினங்
களின்
வியாபாரம் இருந்தது.
இப்போது
அழிவற்ற
இரத்தினங்களின்
வியாபாரி
ஆகி
இருக்கின்றார்.
நீங்கள்
எல்லையற்ற
தந்தையுடன் வியாபாரம்
செய்கிறீர்கள்,
அவரே
பெரிய
வியாபாரி,
மந்திரவாதி,
இரத்தின
வியாபாரி.
எனவே
ஒவ்வொருவரும் தன்னை
ஞானி
யோகி
எனப்
புரிந்து
கொள்ள
வேண்டும்.
நமக்குள்
இலட்சக்கணக்கான
ரூபாய்
மதிப்புள்ள ஞான
ரத்தினங்கள்
இருக்கிறது.
இந்த
ஞான
ரத்தினங்களால்
நீங்கள்
தங்க
புத்தி
உடையவராக
மாறுகிறீர்கள்.
இது
கூட
புரிந்து
கொள்ள
வேண்டிய
விஷயம்
ஆகும்.
சிலர்
நன்கு
புத்திசாலிகளாக
இருக்கிறார்கள்.
அவர்கள் தான்
இந்த
விஷயங்களை
தாரணை
செய்கிறார்கள்.
ஒருவேளை
தாரணை
செய்யவில்லை
என்றால்
எதற்கும் பயன்
இல்லை.
அவருடைய
பையில்
ஓட்டை
இருக்கிறது,
வெளியேறி
விடுகிறது
எனப்
புரிந்து
கொள்ளுங்கள்.
நான்
உங்களுக்கு
அழியாத
ஞான
ரத்தினங்களைத்
தானமாக
கொடுக்கிறேன்
என
பாபா
கூறுகின்றார்.
நீங்கள் தானம்
கொடுத்துக்
கொண்டே
இருந்தால்
நிரம்பிக்
கொண்டே
இருக்கும்.
இல்லையென்றால்
எதுவும்
இல்லை.
காலியாகத்தான் இருக்கும்.
படிப்பதும்
இல்லை
முறைப்படி
நடப்பதும்
இல்லை,
இதில்
பாடம்
மிகவும்
நன்றாக இருக்கிறது.
5
விகாரங்களில்
இருந்து
நீங்கள்
முற்றிலும்
விலகிப்
போக
வேண்டும்.
இராக்கி
கட்டும்
விழா
கொண்டாடுவது
எல்லாம்
இச்சமயத்தின்
பழக்கம்
தான்
என
பாபா
புரிய வைத்திருக்கிறார்.
ஆனால்
மனிதர்கள்
பொருளைப்
புரிந்து
கொள்ளாமல்
ஏன்
ராக்கி
அணிந்துக்
கொள்கிறார்கள்?
அவர்கள்
அபவித்ரமாகிக்
கொண்டே
இருக்கிறார்கள்.
இராக்கியும்
அணிந்துக்
கொண்டே
இருக்கிறார்கள்.
முன்பெல்லாம்
பிராமணர்கள்
கட்டினார்கள்.
இப்போது
சகோதரிகள்
சகோதரர்களுக்கு
கட்டுகிறார்கள்.
செலவிற்காக.
அங்கே
பவித்திரதாவின்
விஷயமே
இல்லை.
மிகவும்
ஆடம்பரமான
இராக்கிகளை
உருவாக்குகிறார்கள்.
இது தீபாவளி,
தசரா
அனைத்தின்
சங்கமம்
ஆகும்.
பாபா
என்ன
நடிப்பு
நடித்திருக்கிறாரோ
அது
மீண்டும்
பக்தி மார்க்கத்தில்
நடக்கிறது.
பாபா
உங்களுக்கு
உண்மையான
கீதையைக்
கூறி
இலஷ்மி
நாராயணனாக
மாற்றுகிறார்.
இப்போது
நீங்கள்
முதல்
வகுப்பில்
செல்கிறீர்கள்.
சத்திய
நாராயணனின்
கதையைக்
கேட்டு
நீங்கள்
நரனிலிருந்து நாராயணனாக
மாறுகிறீர்கள்.
இப்போது
குழந்தைகûளாகிய
நீங்கள்
முழு
உலகத்தையும்
எழுப்ப
வேண்டும்.
எவ்வளவு
யோக
சக்தி
வேண்டும்!
யோக
சக்தியினால்
தான்
நீங்கள்
கல்ப
கல்பமாக
சொர்க்கத்தை உருவாக்குகிறீர்கள்.
யோக
பலத்தினால்
ஸ்தாபனை
நடக்கிறது.
உடல்
பலத்தால்
அழிவு
ஏற்படுகிறது.
அப்பா மற்றும்
ஆஸ்தி
என்ற
இரண்டு
வார்த்தைகள்தான்.
யோக
சக்தியினால்
நீங்கள்
உலகத்திற்கு
அதிபதியாகிறீர்கள்.
உங்களுடைய
ஞானம்
முற்றிலும்
குப்தமாக
இருக்கிறது.
நீங்கள்
சதோ
பிரதானமாக
இருந்தீர்கள்,
இப்போது தமோபிரதானமாகி
இருக்கிறீர்கள்.
மீண்டும்
சதோபிரதானமாக
மாற
வேண்டும்.
ஒவ்வொரு
பொருளும் புதியதிலிருந்து பழையதாக
நிச்சயமாக
மாறுகிறது.
புது
உலகத்தில்
என்ன
இருக்காது!
பழைய
உலகத்தில் ஒன்றும்
இல்லை.
காலியாக உள்ளது.
பாரதம்
சொர்க்கமாக
இருந்தது
எங்கே?
இப்போது
பாரதம்
நரகமாக இருக்கிறது.
இது
எங்கே?
இரவு
பகல்
வித்தியாசம்
இருக்கிறது.
இராவணனின்
உருவத்தைச்
செய்து
எரிக்கிறார்கள்.
ஆனால்
அர்த்தத்தைப்
புரிந்துக்
கொள்ளவில்லை.
இவர்கள்
என்னென்ன
செய்துக்
கொண்டிருக்கிறார்கள்
என இப்போது
நீங்கள்
புரிந்துக்
கொண்டீர்கள்.
உங்களுக்குள்
கூட
நேற்று
அஞ்ஞானம்
இருந்தது.
இன்று
ஞானம் இருக்கிறது.
நேற்று
நரகத்தில்
இருந்தீர்கள்.
இன்று
உண்மையான
சொர்க்கத்திற்குச்
சென்று
கொண்டிருக்கிறீர்கள்.
உலகத்தில்
இருப்பவர்கள்
சொர்க்கவாசி
ஆகிவிட்டனர்
என்று
கூறுவது
போல்
கிடையாது.
இப்போது
நீங்கள் சொர்க்கத்திற்குச்
சென்று
விட்டீர்கள்
என்றால்
பிறகு
நரகமே
இருக்காது.
எவ்வளவு
புரிந்து
கொள்ள
வேண்டிய விஷயம்.
இருப்பினும்
ஒரு
நொடி
விஷயம்
ஆகும்.
பாபாவை
நினைவு
செய்வதால்
விகர்மம்
வினாசம்
ஆகும்.
இதை
அனைவருக்கும்
தெரிவித்துக்
கொண்டே
இருங்கள்.
நீங்கள்
இவர்களைப்
(லஷ்மி
நாராயணன்)
போன்று இருந்தீர்கள்.
84
பிறவிகள்
எடுத்து
இவ்வாறு
ஆகிவிட்டீர்கள்
எனக்
கூறுங்கள்.
சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானமாகி
இருக்கிறீர்கள்.
மீண்டும்
சதோபிரதானம்
ஆக
வேண்டும்.
ஆத்மா
அழிவதில்லை.
மற்றபடி அதை
தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக
மாற்ற
வேண்டும்.
பாபா
வித
விதமாக
புரிய
வைத்துக் கொண்டிருக்கின்றார்.
என்னுடைய
பேட்டரி
ஒரு
போதும்
பழையதாவதில்லை.
தன்னை
பிந்து
ஆத்மா
என உணருங்கள்
என
பாபா
கூறுகின்றார்.
இவருடைய
ஆத்மா
போய்விட்டது
எனக்
கூறுகிறார்கள்.
ஆத்மா சம்ஸ்காரங்களுக்கு
ஏற்ப
ஒரு
உடலை
விட்டு
இன்னொரு
உடலை
எடுக்கிறது.
இப்போது
ஆத்மாக்கள் வீட்டிற்குப்
போக
வேண்டும்.
சிருஷ்டி
சக்கரம்
சுழன்று
கொண்டே
இருக்கிறது.
கடைசியில்
கணக்கெடுத்து உலகத்தில்
இவ்வளவு
மனிதர்கள்
இருக்கிறார்கள்
எனக்
கூறுவார்கள்.
இவ்வளவு
ஆத்மாக்கள்
இருக்கிறார்கள் என
ஏன்
கூறுவதில்லை.
குழந்தைகளே!
என்னை
எவ்வளவு
மறந்து
விட்டீர்கள்
என
பாபா
கூறுகின்றார்.
மீண்டும்
நான்
தான்
அனைவருக்கும்
நன்மை
செய்ய
வேண்டும்.
அதனால்
தான்
தந்தையை
அழைக்கிறார்கள்.
நீங்கள்
தந்தையை
மறந்து
விடுகிறீர்கள்.
பாபா
குழந்தைகளை
மறப்பதில்லை.
பாபா
பதீதர்களை பாவனமாக்குவதற்காக
வருகின்றார்.
இது
பசு
வாய்
ஆகும்.
மற்றபடி
காளை
மாட்டின்
விஷயம்
அல்ல.
இது பாக்கியசாலி இரதம் ஆகும்.
பாபா
குழந்தைகளாகிய
உங்களிடம்
சிவபாபா
நம்மை
அலங்காரம்
செய்கிறார் எனக்
கூறுகிறார்கள்.
இது
கண்டிப்பாக
நினைவிருக்கட்டும்.
சிவபாபாவை
நினைத்தால்
மிகவும்
நன்மை
நடக்கும்.
பாபா
நம்மை
இவர்
மூலமாக
(பிரம்மா
மூலமாக)
படிக்க
வைக்கின்றார்.
ஆனால்
இவரை
நினைக்கக்
கூடாது சத்குரு
ஒரே
ஒரு
சிவபாபா
தான்.
அவருக்கு
நீங்கள்
அர்ப்பணம்
ஆக
வேண்டும்.
இவர்
கூட
அவருக்கு அர்ப்பணம்
ஆகிவிட்டார்
அல்லவா?
என்னை
மட்டும்
நினையுங்கள்
என
பாபா
கூறுகின்றார்.
சத்யுகம்
என்ற மலர்களின்
உலகத்திற்கு
குழந்தைகள்
செல்கிறீர்கள்.
பிறகு
முட்களை
ஏன்
நினைக்க
வேண்டும்?
63
பிறவிகளாக பக்தி
மார்க்கத்தில்
சாஸ்திரங்களைப்
படித்து
பூஜை
செய்து
வந்தீர்கள்.
பூஜை
கூட
முதலில் நீங்கள்
சிவபாபாவிற்குத் தான்
செய்தீர்கள்,
அப்போது
தான்
சோமநாத்
கோவில்
கட்டப்பட்டது.
அனைத்து
இராஜாக்களின்
வீட்டிலும் கோவில்
இருந்தது.
எவ்வளவு
வைர
வைடூரியங்கள்
இருந்தன!
பிற்காலத்தில்
கொள்ளையடிக்கப்பட்டது.
ஒரே கோவிலிலிருந்து எவ்வளவு
தங்கத்தை
எடுத்துச்
சென்றனர்!
இது
போன்ற
செல்வந்த
உலகிற்கு
நீங்கள் அதிபதியாகின்றீர்கள்.
இவர்கள்
செல்வந்தர்களாக
இருந்தனர்.
உலகத்திற்கு
அதிபதியாக
இருந்தனர்.
ஆனால் இவர்களிள்
இராஜ்யம்
நடந்து
எவ்வளவு
காலம்
ஆகிவிட்டது
என
யாருக்கும்
தெரியவில்லை.
5000
வருடங்கள் ஆகிவிட்டது
என
பாபா
கூறுகின்றார்.
2500
வருடங்கள்
இராஜ்யம்
செய்தனர்.
மீதி
2500
வருடத்தில்
இத்தனை மடங்கள்
வழிகாட்டிகள்
வளர்ச்சி
அடைந்து
இருக்கிறார்கள்.
நம்மை
எல்லையற்ற
தந்தை
படிக்க
வைத்துக் கொண்டிருக்கிறார்
என்ற
குஷி
குழந்தைகளாகிய
உங்களுக்கு
நிறைய
இருக்க
வேண்டும்.
அளவற்ற
சொத்து கிடைக்கிறது.
கடலிலிருந்து தேவதைகள்
தட்டுக்களில்
இரத்தினங்களை
நிறைத்து
எடுத்து
வந்தனர்
என காண்பிக்கிறார்கள்
இப்போது
உங்களுக்கு
ஞான
ரத்தினங்களின்
தட்டுக்கள்
நிரம்பி
கிடைக்கிறது.
பாபா
ஞானக் கடலாக
இருக்கிறார்.
சிலர்
நன்கு
தட்டை
நிரப்புகிறார்கள்.
சிலருடையது
ஓட்டையில்
போய்
விடுகிறது.
யார் நன்கு
படிக்கிறார்களோ
படிக்க
வைக்கிறார்களோ
நிச்சயமாக
அவர்கள்
நல்ல
செல்வந்தர்களாக
ஆகுவார்கள்.
இராஜ்யம்
உருவாகிக்
கொண்டிருக்கிறது.
இது
நாடகத்தில்
நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
யார்
நன்கு
படிக்கிறார்களோ அவர்களுக்கு
உதவித்
தொகை
கிடைக்கிறது.
இது
ஈஸ்வரிய
உதவி
தொகை
ஆகும்.
அது
அழிவற்றது
இது அழியக்
கூடியதாகும்.
ஏணிப்படி
மிகவும்
அதிசயமானது.
84
பிறவிகளின்
கதை
அல்லவா!
ஏணிப்படியை
பெரிய டிரான்ஸ்லைட்டாக
செய்தால்
தூரத்திலிருந்தே தெளிவாக
பார்க்க
முடியும்
என
பாபா
கூறுகிறார்.
மனிதர்கள் பார்த்து
அதிசயப்படுவார்கள்.
பிறகு
உங்களின்
பெயர்
பிரசித்தமாகிக்
கொண்டே
இருக்கும்
இப்போது
அருகில் வந்து
சுற்றி
விட்டு
போய்விடுவார்கள்
அவர்கள்
கடைசியில்
வருவார்கள்.
இரண்டு
நான்கு
முறை
விளக்கைச் சுற்றுவார்கள்.
அதிர்ஷ்டத்தில்
இருந்தால்
அர்ப்பணம்
ஆவார்கள்.
விளக்கு
ஒன்று
தான்.
எங்கே
செல்வார்கள்!
குழந்தைகள்
மிகவும்
இனிமையாக
மாற
வேண்டும்.
யோகத்தில்
இருக்கும்
போது
தான்
இனிûமாக
மாற முடியும்.
யோகத்தினால்
தான்
ஈர்ப்பு
ஏற்படும்.
எதுவரை
துரு
நீங்கவில்லையோ
அது
வரை
யாரையும்
ஈர்க்க முடியாது.
இந்த
ஏணிப்படியின்
இரகசியத்தை
அனைத்து
ஆத்மாக்களுக்கும்
தெரிவிக்க
வேண்டும்.
மெல்ல மெல்ல
வரிசைக்கிரமத்தில்
அனைவரும்
புரிந்துக்
கொள்வார்கள்.
இது
நாடகம்
ஆகும்.
உலகத்தின்
வரலாறு புவியியல்
திரும்ப
நடந்து
கொண்டிருக்கிறது.
யார்
இதைப்
புரிய
வைத்தாரோ
அவரை
நினைக்க
வேண்டும் அல்லவா!
தந்தையை
சர்வ
வியாபி
என்கிறார்கள்.
ஆனால்
அங்கே
மாயா
தான்
சர்வ
வியாபியாக
இருக்கிறது.
இங்கே
பாபா
இருக்கிறார்.
ஏனென்றால்
ஒரு
நொடியில்
வர
முடியும்.
பாபா
இவருக்குள்
இருக்கிறார்
என்பதை நீங்கள்
புரிந்து
கொள்ள
முடியும்.
செய்து
செய்விப்பவர்
அல்லவா!
தானும்
செய்கிறார்,
செய்யவும்
வைக்கிறார்.
குழந்தைகளுக்கு
டைரக்ஷன்
கொடுக்கிறார்.
தானும்
செய்து
கொண்டிருக்கிறார்.
இந்த
சரீரத்தில்
இருந்து
கொண்டு என்ன
செய்ய
முடியும்,
என்ன
செய்ய
முடியாது,
என்பதைக்
கணக்கிடுங்கள்.
பாபா
சாப்பிடுவதில்லை.
வாசனையை எடுக்கிறார்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு
தாயும்
தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
ஞானி
யோகியாகி
தன்னடைய
புத்தி
என்ற
பையில்
ஞான
ரத்தினங்களை
சதா
நிரப்பி வைக்க
வேண்டும்.
புத்தி
என்ற
பையில்
எந்த
ஓட்டையும்
இருக்க
கூடாது.
ஞான
ரத்தினங்களை
தாரணை
செய்து
பிறருக்கு
தானம்
செய்ய
வேண்டும்.
2.
ஊக்கத்
தொகை
பெறுவதற்காக
படிப்பை
நன்கு
படிக்க
வேண்டும்.
முழுமையாக வனவாசத்தில்
இருக்க
வேண்டும்.
எந்தவொரு
விதமான
ஆர்வமும்
இருக்கக்
கூடாது.
நறுமணம்
உள்ள
மலர்களாக
மாறி
மற்றவர்களையும்
மாற்ற
வேண்டும்.
வரதானம்:
சுபசிந்தனையாளரின்
ஸ்திதி
மூலமாக
அனைவரினுடைய
சகயோகம்
(ஒத்துழைப்பு)
பெறக்
கூடிய
அனைவருக்கும்
அன்பானவர்
ஆவீர்களாக!
சுபசிந்தனை
உடைய
ஆத்மாக்கள்
மீது
ஒவ்வொருவருக்கும்
இதயத்தில்
சிநேகம்
உருவாகிறது
மேலும் அந்த
சிநேகம்
தான்
சகயோகி
(ஒத்துழைப்பு)
அளிப்பவர்களாக
ஆக்கி
விடுகிறது.
எங்கு
சிநேகம்
இருக்கிறதோ அங்கு
நேரம்,
செல்வம்,
சகயோகத்தை
எப்பொழுதும்
அர்ப்பணம்
செய்வதில்
தயாராகி
விடுகிறார்கள்.
எனவே சுபசிந்தனை
உடையவர்கள்
சிநேகம்
உடையவர்களாக
ஆகி
விடுவார்கள்
மேலும்
சிநேகம்
எல்லாவிதமான சகயோகத்தில்
அர்ப்பணம்
செய்பவர்களாக
ஆக்கி
விடும்.
எனவே,
எப்பொழுதும்
சுபசிந்தனையில்
நிறைந்து இருங்கள்
மேலும்
சுபசிந்தனை
உடையவர்களாக
ஆகி
அனைவரையும்
சிநேகி
சகயோகிகளாக
ஆக்குங்கள்.
சுலோகன்:
இச்சமயத்தில்
வள்ளல்
ஆனீர்கள்
என்றால்
உங்களுடைய
இராஜ்யத்தில்
ஒவ்வொரு ஆத்மாவும்
பல
பிறவிகளுக்கு
நிரம்பியவராக
இருப்பர்.
அறிவிப்பு
இந்த
அவ்யக்த
மாதம்
பிரம்மா
குழந்தைகளாகிய
நம்
அனைவருக்கும்
விசேஷமாக
வரதானி மாதம்
ஆகும்.
இதில்
நாம்
உள்முகமாக
ஆகி,
சாகார
பிரம்மா
தந்தைக்கு
சமானமாக
ஆவதற்கான இலட்சியம்
வைத்து
தீவிர
புருஷார்த்தம்
செய்கிறோம்.
இதற்காக
இந்த
ஜனவரி
மாதத்தில் தினமும்
முரளிக்கு
கீழே
விசேஷ
புருஷார்த்தத்திற்கான
ஒரு
பாயிண்ட்
எழுதி கொண்டிருக்கிறோம்.
தயவு
செய்து
அனைவரும்
இதே
பிரகாரம்
கவனம்
வைத்து
முழு
நாளும் இதன்
மீது
மனனம்
மற்றும்
சிந்தனை
செய்தபடியே
அவ்யக்த
வதனத்தில்
உலாவி
வருவோம்.
பிரம்மா
தந்தைக்கு
சமானமாக
ஆவதற்கான
விசேஷ
புருஷார்த்தம் காலத்திற்கேற்ப
3
வார்த்தைகளை
எப்பொழுதும்
நினைவில்
கொள்ளுங்கள்
-
அந்தர்
முகம்
(உள்முகம்),
அவ்யக்த
நிலை
மற்றும்
அலௌகீக
நிலை.
இது
வரையும்
கொஞ்சம்
லௌகீக தன்மை
கலந்துள்ளது.
ஆனால்
எப்பொழுது
முற்றிலும்
அலௌகீகமாக
அந்தர்முகி
(உள்
முகமானவர்)
ஆகி
விடுவீர்களோ,
அப்பொழுது
அவ்யக்த
ஃபரிஷ்தாவாக
தென்படுவீர்கள்.
ஆத்மீக
அல்லது
அலௌகீக
ஸ்திதியில்
இருப்பதற்காக
அந்தர்முகி
(உள்முகமானவர்)
ஆகுங்கள்.
ஓம்சாந்தி