29.05.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே,
பிறருடைய
பெயர்
ரூபத்தில்
மாட்டிக்
கொள்வது
கடுமையிலும் கடுமையான
நோய்
ஆகும்.
உள்நோக்குமுகமாகி
இந்த
நோயை
சோதனை
செய்யுங்கள்
மற்றும் இதிலிருந்து
(முக்தி)
விடுதலை
அடையுங்கள்.
கேள்வி:
பெயர்
ரூபத்தின்
நோயை
முடிப்பதற்கான
யுக்தி
என்ன?
இதன்
மூலம்
என்னென்ன நஷ்டம்
ஏற்படுகிறது?
பதில்:
பெயர்
ரூபத்தின்
நோயை
முடிப்பதற்காக,
ஒரு
பாபாவிடம்
உண்மையிலும்
உண்மையான
அன்பு வையுங்கள்.
நினைவு
செய்யும்
நேரத்தில்
புத்தி
அலைகிறது,
தேகதாரியிடம்
செல்கிறது
என்றால்,
பாபாவிடம் உண்மையை
சொல்லுங்கள்.
உண்மையை
சொல்வதன்
மூலம்
பாபா
மன்னித்துவிடுவார்.
மருத்துவரிடம்
நோயை மறைக்காதீர்கள்.
பாபாவிடம்
சொல்வதன்
மூலம்
எச்சரிக்கையுடன்
இருப்பீர்கள்.
புத்தி
யாருடைய
பெயர்
ரூபத்திலாவது மாட்டிக்
கொள்கிறது
என்றால்,
பாபாவிடம்
புத்தியை
இணைக்க
முடியாது.
அப்படிப்பட்டவர்கள்
சேவைக்கு
பதிலாக டிஸ்சர்வீஸ்
(குந்தகம்
விளைவித்தல்)
செய்கிறார்கள்.
பாபாவுக்கு
நிந்தனை
செய்விக்கிறார்கள்.
இப்படி
நிந்தனை செய்விப்பவர்கள்
கடுமையான
தண்டனைக்
குரியவராக
ஆகிறார்கள்.
ஓம்
சாந்தி.
பாபாவிடமிருந்து
தான்
ஒவ்வொருவருக்கும்
ஆஸ்தி
கிடைக்க
வேண்டும்
என்று
குழந்தைகள் தெரிந்திருக்கின்றார்கள்.
சகோதரருக்கு
சகோதரரிடமிருந்து
ஒருபோதும்
ஆஸ்தி
கிடைப்பதில்லை.
சகோதர
சகோதரிகள் யாரெல்லாம்
இருக்கின்றார்களோ,
அவர்களுக்கு
ஒவ்வொருவருடைய
நிலையைப்
பற்றியும்
தெரிவதில்லை.
அனைத்து விசயங்களும்
பாப்தாதாவிடம்
வருகிறது.
இது
தான்
நடைமுறையில்
இருக்கிறது.
நான்
எந்தளவு
நினைவு செய்கின்றேன்?
யாருடைய
பெயர்
ரூபத்தில்
எந்தளவு
மாட்டி
கொண்டிருக்கின்றேன்?
என்னுடைய
ஆத்மாவின் உள்ளுணர்வு
எங்கெங்கு
செல்கிறது?
என்று
ஒவ்வொருவரும்
தன்னைத்
தான்
பார்த்துக்கொள்ள
வேண்டும்.
ஒவ்வொரு
ஆத்மாவும்
இதை
தெரிந்திருக்கிறது.
தன்னைத்
தான்
ஆத்மா
என்று
புரிந்து
கொள்ள
வேண்டும்.
நம்முடைய
உள்ளுணர்வு
ஒரு
சிவபாபாவிடம்
செல்கிறதா?
அல்லது
பிறருடைய
பெயர்
ரூபத்தில்
செல்கிறதா?
என்று
பார்க்க
வேண்டும்.
எவ்வளவு
முடியுமோ,
அவ்வளவு
தன்னைத்
தான்
ஆத்மா
என்று
புரிந்து
ஒரு பாபாவை
நினைவு
செய்ய
வேண்டும்,
மற்ற
அனைத்தையும்
மறந்து
கொண்டே
செல்ல
வேண்டும்.
நம்முடைய மனம்
பாபாவைத்
தவிர
வேறெங்கும்
செல்வதில்லை
தானே?
தொழில்
விசயங்களில்
அல்லது
குடும்ப
விசயங்களில்,
நண்பர்கள்-உறவினர்கள்
போன்றோரிடம்
புத்தி
செல்லவில்லை
தானே?
என்று
தன்னுடைய
மனதிடம்
கேட்க வேண்டும்.
உள்நோக்குமுகமாகி
சோதனை
செய்ய
வேண்டும்.
எப்போது
இங்கே
வந்து
அமர்கின்றீர்களோ,
அப்போது தன்னைச்
சோதனை
செய்ய
வேண்டும்.
இங்கே
யாரேனும்
முன்னால்
அமர்ந்து
யோகம்
செய்கின்றார்கள்
என்றால்,
அவர்
கூட
சிவபாபாவைத்
தான்
நினைவு
செய்து
கொண்டிருப்பார்.
தன்னுடைய
குழந்தைகளை
நினைவு
செய்து கொண்டிருப்பார்
என்பது
கிடையாது.
நினைவு
சிவபாபாவைத்
தான்
செய்ய
வேண்டும்.
கண்களை
திறந்து
அமர்ந்தாலும் சரி,
கண்களை
மூடி
அமர்ந்தாலும்
சரி,
இங்கே
அமர்ந்து
கொண்டே,
சிவபாபாவை
நினைவு
செய்ய
வேண்டும்.
இதுவோ
புத்தி
மூலம்
புரிந்து
கொள்ள
வேண்டிய
விசயமாகும்.
பாபா
என்ன
புரிய
வைக்கின்றார்
என்று தன்னுடைய
மனதிடம்
கேட்க
வேண்டும்.
நாம்
ஒருவரைத்
தான்
நினைவு
செய்ய
வேண்டும்.
இங்கே
யார் அமர்கின்றார்களோ,
அவர்கள்
ஒரு
சிவபாபாவின்
நினைவில்
தான்
இருப்பார்கள்.
அவர்கள்
உங்களைப்
பார்க்க மாட்டார்கள்,
ஏனெனில்
அவர்களுக்கு
யாருடைய
நிலையைப்
பற்றியும்
தெரியாது.
ஒவ்வொருவருடைய
விசயமும் பாபாவிடம்
வருகிறது.
யார்
யார்
நல்ல
குழந்தைகள்,
யாருடைய
புத்திலைன்
(சிந்தனை
ஓட்டம்)
தெளிவாக இருக்கிறது
என்று
பாபா
தெரிந்திருக்கின்றார்.
புத்திலைன்
தெளிவாக
இருப்பவர்களுக்கு
வேறெங்கும்
புத்தியோகம் செல்லாது.
சிலருடைய
புத்தியோகம்
வேறெங்காவது
செல்கிறது.
பிறகு
முரளி
கேட்பதன்
மூலம்
அவர்களும் மாறிக்கொண்டே
இருக்கின்றார்கள்.
இது
நம்முடைய
தவறு,
நம்முடைய
பார்வை-உள்ளுணர்வு
தவறாக
இருந்தது என்று
அவர்கள்
உணர்கிறார்கள்.
இப்போது
அவர்களை
சரியாக்க
வேண்டும்.
தவறான
உள்ளுணர்வை
விட்டுவிட வேண்டும்.
சகோதரன்
சகோதரனுக்கு
புரிய
வைக்க
முடியாது,
பாபா
தான்
புரிய
வைக்கின்றார்.
இவருடைய உள்ளுணர்வு-பார்வை
எப்படி
இருக்கின்றது
என்று
பாபா
தான்
பார்க்கின்றார்.
பாபாவிடம்
தான்
அனைவரும் தன்னுடைய
மனதின்
நிலையை
சொல்கின்றார்கள்.
சிவபாபாவிடம்
சொல்கின்றீர்கள்
என்றால்,
தாதா
புரிந்து கொள்கின்றார்.
ஒவ்வொருவரையும்
சொல்வதன்
மூலம்,
பார்ப்பதன்
மூலமே
பாபா
புரிந்து
கொள்கின்றார்.
எதுவரை சொல்லவில்லையோ,
அதுவரை
இவர்
என்ன
செய்கின்றார்
என்று
பாபாவுக்கு
எப்படித்
தெரியும்!
இவர்களுக்கு தேக
அபிமானம்
அதிகம்
இருக்கிறது,
இவருக்கு
குறைவாக
இருக்கிறது,
இவருடைய
நடத்தை
சரியில்லை,
யாருடைய
பெயர்
ரூபத்திலாவது
மாட்டிக்
கொண்டிருக்கிறார்
என்று
நடத்தை
மூலம்,
சேவையின்
மூலம்
பாபா புரிந்து
கொள்கின்றார்.
யாரிடமாவது
புத்தி
செல்கின்றதா?
என்று
பாபா
கேட்கின்றார்.
சிலர்
உண்மையை
சொல்லிவிடுகின்றார்கள்,
மற்ற
சிலர்
பெயர்
ரூபத்தில்
மாட்டிக்
கொள்கிறார்கள்,
ஆனால்
சொல்வதில்லை.
அவர்கள்
தன்னுடைய நஷ்டத்தை
ஏற்படுத்திக்
கொள்கிறார்கள்.
பாபாவிடம்
சொல்வதன்
மூலம்
அவர்கள்
மன்னிக்கப்படுகின்றார்கள் மற்றும்
எதிர்
காலத்திலும்
தன்னை
பாதுகாத்துக்
கொள்கிறார்கள்.
தன்னுடைய
உண்மையான
மனநிலையை
நிறைய பேர்
சொல்வதில்லை,
வெட்கம்
வந்துவிடுகிறது.
சிலர்
தவறான
காரியம்
செய்து
விட்டு,
மருத்துவரிடம்
சொல்வதில்லை.
ஆனால்
மறைப்பதன்
மூலம்
நோய்
இன்னும்
அதிகமாகிறது.
இங்கே
கூட
அப்படித்
தான்.
பாபாவிடம்
சொல்வதன் மூலம்
இலேசாகி
விடுகின்றார்கள்.
இல்லையானால்,
நோய்
உள்ளுக்குள்
இருப்பதன்
மூலம்
சுமையுடன்
இருப்பார்கள்.
பாபாவிடம்
சொல்வதனால்,
அடுத்த
முறை
அப்படி
செய்ய
மாட்டார்கள்.
எதிர்காலத்திலும்
தன்
மீது
எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.
மற்றபடி
சொல்லவில்லை
என்றால்,
நோய்
அதிகமாகிக்
கொண்டே
போகும்.
இவர்
நல்ல
சேவை செய்கின்றார்,
இவருடைய
தகுதி
எப்படி
இருக்கிறது,
சேவையில்
கூட
எப்படி
இருக்கிறார்?
யாரிடமும்
போய் மாட்டவில்லை
தானே
என்று
பாபா
தெரிந்திருகின்றார்.
ஒவ்வொருவருடைய
ஜாதகத்தைப்
பார்க்கின்றார்,
பிறகு அந்தளவு
அவர்களிடம்
அன்பு
வைக்கின்றார்.
சிலர்
மிக
நல்ல
சேவை
செய்கின்றனர்.
ஒருபோதும்
எங்கேயும் அவர்களுடைய
புத்தியோகம்
செல்வதில்லை.
முன்பு
புத்தி
சென்று
கொண்டிருந்தது,
இப்போது
எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.
அவர்கள்
சொல்கின்றனர்
-பாபா,
இப்போது
நான்
எச்சரிக்கையுடன்
இருக்கின்றேன்.
முன்பு
நிறைய தவறுகள்
செய்து
கொண்டிருந்தேன்.
தேக
அபிமானத்தில்
வருவதன்
மூலம்
நிறைய
தவறுகள்
தான்
நடக்கும்,
பதவியும்
குறைந்து
விடும்
என்று
புரிந்து
கொள்கின்றனர்.
யாருக்கும்
வெளியே
தெரிவதில்லை
என்றாலும்
பதவி குறைந்துதான்
போகும்.
இதில்
மனம்
மிகவும்
தூய்மையாக
இருக்க
வேண்டும்,
அப்போது
தான்
உயர்ந்த
பதவி அடைவார்கள்.
உயர்ந்த
பதவி
அடைபவர்களின்
புத்தி
மிகவும்
தூய்மையாக
இருக்கிறது.
இந்த
லக்ஷ்மி-நாராயணரின்
ஆத்மாவில்
தூய்மை
இருக்கிறது
அல்லவா,
ஆகையால்
தான்
உயர்ந்த
பதவி
அடைந்திருக்கிறார்கள்.
சிலரைப் பார்த்து
புரிந்து
கொள்ளப்படுகிறது
-
இவர்களுடைய
மனதின்
ஓட்டம்
பெயர்-ரூபத்தின்
பக்கம்
இருக்கிறது,
ஆத்ம அபிமானியாகி
இருப்பதில்லை,
இதன்
காரணமாக
பதவி
கூட
குறைந்து
விடுகிறது.
ராஜாவிருந்து
ஏழை
வரை வரிசைக்கிரமமாக
பதவி
இருக்கிறதல்லவா!
இப்படி
ஏன்
வரிசைக்கிரமமாக
இருக்கிறது?
இதைக்
கூட
புரிந்து கொள்ள
வேண்டும்.
கண்டிப்பாக
வரிசைக்கிரமமாகத்
தான்
ஆகின்றனர்.
கலைகள்
குறைந்து
கொண்டே
தான் போகிறது.
யார்
16
கலைகள்
நிறைந்தவர்களோ,
அவர்கள்
பிறகு
14
கலைகளில்
வந்துவிடுகின்றனர்.
இப்படி கொஞ்சம்
கொஞ்சமாக
குறைந்து
குறைந்து
கலைகள்
கண்டிப்பாக
இறங்குகிறது.
14
கலைகள்
இருக்கிறது
என்றாலும் நல்லது,
பிறகு
வாம
மார்க்கத்தில்
இறங்கும்
போது
விகாரிகள்
ஆகி
விடுகின்றனர்,
ஆயுள்
கூட
குறைந்து போய்விடுகிறது.
பிறகு
ரஜோ,
தமோகுண
முடையவர்களாக
ஆகிக்கொண்டே
போகின்றனர்.
குறைந்து
குறைந்து பழையவர்களாகி
விடுகின்றனர்.
ஆத்மா
சரீரத்திலிருந்து
பழையதாகிக்
கொண்டே
போகிறது.
இந்த
முழு
ஞானமும் இப்போது
குழந்தைகளாகிய
உங்களிடம்
இருக்கிறது.
16
கலைகளிருந்து
கீழே
இறங்கி
இறங்கி
பிறகு
மனிதர்கள் ஆகி
விடுகின்றனர்.
தேவதைகளின்
வழி
என்பது
கிடையாது.
பாபாவின்
வழி
கிடைக்கிறது,
பிறகு
21
பிறவிகளுக்கு வழி
பெறுவதற்கான
அவசியமே
இருப்பதில்லை.
இந்த
ஈஸ்வரிய
வழி
உங்களின்
21
பிறவிகளுக்காக
நடக்கிறது.
பிறகு
எப்போது
இராவண
இராஜ்யம்
ஏற்படுமோ,
அப்போது
உங்களுக்கு
இராவணனுடைய
வழி
கிடைக்கிறது.
தேவதைகள்
வாம
மார்க்கத்தில்
சென்றதாக
காட்டுகின்றனர்.
மற்ற
தர்மங்களைச்
சேர்ந்தவர்களிடத்தில்
இப்படிப்பட்ட விசயங்கள்
இருப்பதில்லை.
தேவதைகள்
எப்போது
வாம
மார்க்கத்தில்
செல்கின்றனரோ,
அப்போது
மற்ற
தர்மத்தினர் வருகின்றனர்.
குழந்தைகளே,
இப்போது
நீங்கள்
திரும்பிச்
செல்ல
வேண்டும்,
இது
பழைய
உலகமாகும்
என்று
பாபா
புரிய வைக்கிறார்.
பழைய
உலகத்தைப்
புதியதாக்குவது
கூட
நாடகத்தில்
என்னுடைய
பங்கு
(பார்ட்)
ஆகும்.
இதைக் கூட
நீங்கள்
புரிந்திருக்கின்றீர்கள்.
உலகத்தில்
உள்ள
மனிதர்களுக்கோ
ஒன்றும்
தெரியாது.
நீங்கள்
இந்தளவு
புரிய வைக்கின்றீர்கள்,
பிறகும்
கூட
சிலர்
மிகுந்த
ஆர்வம்
காட்டுகிறார்கள்,
சிலர்
தன்னுடைய
வழியைச்
சொல்லிவிடுகின்றனர்.
இந்த
லக்ஷ்மி-நாராயணர்
எப்போது
இருந்தார்களோ,
அப்போது
தூய்மை,
சுகம்,
சாந்தி
அனைத்தும் இருந்தது.
தூய்மை
தான்
முக்கியமான
விசயமாகும்.
சத்யுகத்தில்
தேவதைகள்
தூய்மையாக
இருந்தார்கள்
என்பதே மனிதர்களுக்குத்
தெரியாது.
தேவதைகளுக்கும்
குழந்தைகள்
போன்றவை
பிறக்கின்றன
என்று
அவர்கள்
புரிந்து கொள்கின்றார்கள்.
ஆனால்
அங்கே
யோக
பலத்தின்
மூலம்
எப்படி
குழந்தைகள்
பிறக்கின்றன
என்று
யாருக்கும் தெரியாது.
முழு
ஆயுளுமே
தூய்மையாக
இருக்கும்போதும்,
பிறகு
குழந்தைகள்
எப்படிப்
பிறக்கும்
என்று கேட்கின்றார்கள்.
இந்த
நேரம்
தூய்மை
ஆவதன்
மூலம்
நாம்
21
பிறவிகளுக்கு
தூய்மையாக
இருப்போம்
என்று புரிய
வைக்க
வேண்டும்.
ஸ்ரீமத்
படி
நாம்
விகாரமற்ற
உலகத்தையே
ஸ்தாபனை
செய்து
கொண்டிருக்கின்றோம்.
ஸ்ரீமத்
பாபாவினுடையது
ஆகும்.
மனிதரிருந்து
தேவதை
என்று
பாடல்
கூட
இருக்கிறது.
இப்போது
அனைவரும் மனிதர்களாக
இருக்கின்றனர்,
பிறகு
தேவதைகள்
ஆகின்றனர்.
இப்போது
ஸ்ரீமத்
படி
நாம்
தெய்வீக
அரசாட்சியை ஸ்தாபனை
செய்து
கொண்டிருக்கின்றோம்.
இதில்
தூய்மை
மிகவும்
முக்கியமானது
ஆகும்.
ஆத்மா
தான்
தூய்மையாக வேண்டும்.
ஆத்மா
தான்
கல்புத்தியாக
ஆனது.
இதை
நன்றாக
தெளிவாக
சொல்லிப்
புரிய
வையுங்கள்.
பாபா தான்
சத்யுக
தெய்வீக
அரசாட்சியை
ஸ்தாபனை
செய்திருந்தார்,
அதைத்
தான்
சொர்க்கம்
என்கிறார்கள்.
மனிதர்களை தேவதையாக
பாபா
தான்
ஆக்கினார்.
மனிதர்கள்
தூய்மையற்று
இருந்தார்கள்,
அவர்களை
தூய்மையற்ற
நிலையிலிருந்து
யார்
தூய்மையாக
ஆக்கியது?
என்
ஒருவனை
நினைவு
செய்வதால்
நீங்கள்
தூய்மையாகி
விடுவீர்கள் என்று
பாபா
குழந்தைகளிடம்
சொல்கின்றார்.
இந்த
விசயத்தை
நீங்கள்
யாருக்கு
சொன்னாலும்,
உள்ளுக்குள் பதிந்துவிடும்.
இப்போது
தூய்மையற்ற
நிலையிலிருந்து
எப்படி
தூய்மையாவது?
கண்டிப்பாக
பாபாவை
நினைவு செய்ய
வேண்டும்.
மற்ற
தொடர்புகளிலிருந்து
புத்தியோகத்தை
துண்டித்து
ஒருவரோடு
புத்தியை
இணைக்க வேண்டும்,
அப்போது
தான்
மனிதரிலிருந்து
தேவதை
ஆக
முடியும்.
இப்படிப்
புரிய
வைக்க
வேண்டும்.
நீங்கள் என்ன
புரிய
வைத்தீர்களோ,
அது
நாடகப்படி
முற்றிலும்
சரியானதே
ஆகும்.
இதை
புரிந்து
கொள்கின்றனர்,
ஆனால்
கூட
நாளுக்கு
நாள்
புரிய
வைப்பதில்
புதிய
கருத்துகள்
கிடைத்துக்
கொண்டே
இருக்கிறது.
நாம்
தூய்மையற்ற
நிலையிலிருந்து
எப்படி
தூய்மையாவது
என்பது
தான்
முக்கியமான
விசயமாகும்.
தேகத்தின்
அனைத்து தர்மங்களையும்
விட்டு
என்
ஒருவனையே
நினைவு
செய்யுங்கள்
என்று
பாபா
சொல்கின்றார்.
இந்த
புருஷோத்தம சங்கம
யுகத்தைப்
பற்றிக்
கூட
குழந்தைகளாகிய
நீங்கள்
தான்
தெரிந்திருக்கின்றீர்கள்.
நாம்
இப்போது
பிராமணர்களாகி இருக்கின்றோம்,
பிரஜாபிதா
பிரம்மாவின்
குழந்தைகள்
ஆவோம்.
பாபா
நமக்குப்
படிப்பிக்கின்றார்.
பிராமணர் ஆகாமல்
நாம்
எப்படி
தேவதை
ஆக
முடியும்?
இந்த
பிரம்மா
கூட
முழுமையாக
84
பிறவிகள்
எடுக்கின்றார்,
அவர்
தான்
முதல்
நம்பரில்
வருகின்றார்.
பாபா
வந்து
பிரவேசிக்கின்றார்.
ஆக
முக்கியமான
விசயமே
ஒன்று
தான்
-
தன்னைத்
தான்
ஆத்மா
என்று
புரிந்து
பாபாவை
நினைவு
செய்யுங்கள்.
தேக
அபிமானத்தில்
வருவதன்
மூலம் எங்காவது
மாட்டிக்
கொண்டிருக்கின்றனர்.
அனைவரும்
ஆத்ம
அபிமானி
ஆக
முடியாது.
தன்னை
முழுமையாக சோதனை
செய்யுங்கள்
-நான்
தேக
அபிமானத்தில்
வருவதில்லை
தானே?
நம்
மூலம்
எந்த
பாவ
கர்மங்களும் நடப்பதில்லை
தானே?
சட்டத்துக்கு
புறம்பான
நடத்தை
நடப்பதில்லை
தானே?
நிறைய
பேர்
சட்டத்துக்கு புறம்பான
நடத்தை
நடக்கின்றனர்.
அவர்கள்
கடைசியில்
மிகுந்த
தண்டனை
அடைவார்கள்.
ஆயினும்
இப்போது கர்மாதீத்
நிலை
ஏற்படவில்லை.
கர்மாதீத்
நிலை
அடைந்தவர்களின்
அனைத்து
துக்கங்களும்
விலகிவிடும்.
அவர்கள்
தண்டனைகளிருந்து
விடுபட்டு
விடுகின்றனர்.
வரிசைக்கிரமமாகத்
தான்
ராஜாக்கள்
உருவாகின்றனர் என்று
சிந்தனை
ஓடுகிறது.
கண்டிப்பாக
சிலருடைய
முயற்சி
குறைவாக
இருந்திருக்கும்,
அதன்
காரணத்தினால் தண்டனை
அடைய
வேண்டிவருகிறது.
ஆத்மா
தான்
கர்ப்ப
ஜெயில்
தண்டனை
அனுபவிக்கிறது.
ஆத்மா எப்போது
கர்ப்ப
ஜெயிலில்
இருக்குமோ,
அப்போது
'எங்களை
வெளியே
விட்டுவிடுங்கள்,
பிறகு
நாங்கள்
பாவ கர்மம்
செய்ய
மாட்டோம்
என்று
சொல்கிறது.
ஆத்மா
தான்
தண்டனை
அனுபவிக்கிறது.
ஆத்மா
தான்
கர்மம் விகர்மம்
(பாவ
கர்மம்)
செய்கிறது.
இந்த
சரீரம்
எதற்கும்
உதவாது.
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
கொள்வது தான்
முக்கியமான
விசயமாகும்.
அனைத்தும்
ஆத்மா
தான்
செய்கிறது
என்று
அவர்கள்
புரிந்து
கொள்கின்றனர்.
இப்போது
நீங்கள்
அனைத்து
ஆத்மாக்களும்
திரும்பிச்
செல்ல
வேண்டும்,
அதற்குத்
தான்
இந்த
ஞானம் கிடைக்கிறது.
பிறகு
ஒருபோதும்
இந்த
ஞானம்
கிடைக்காது.
ஆத்ம
அபிமானியாக
இருப்பவர்கள்
அனைவரையும் சகோதரன்-சகோதரனாகப்
பார்ப்பார்கள்.
சரீரத்தின்
விசயமே
இருப்பதில்லை.
ஆத்மா
ஆகிவிடும்போது
சரீரத்தின் மீது
பற்று
இருக்காது.
ஆகையால்
தான்
இதை
மிக
உயர்ந்த
நிலை
என்று
பாபா
சொல்கின்றார்.
சகோதரரி-சகோதரனுக்கு
இடையே
புத்தி
மாட்டிக்
கொள்ளும்போது,
மிகுந்த
டிஸ்சர்வீஸ்
செய்கின்றனர்.
ஆத்ம
அபிமானி
பவ,
இதில்
தான் உழைப்பு
இருக்கிறது.
படிப்பில்
கூட
பாடங்கள்
இருக்கிறது,
நாம்
இந்தப்
பாடத்தில்
தோல்வி
அடைந்து
விடுவோம் என்று
புரிந்து
கொள்கிறார்கள்.
தோல்வி
அடைவதன்
மூலம்,
மற்ற
பாடங்களில்
கூட
மந்தமாக
ஆகிவிடுகிறார்கள்.
இப்போது
உங்கள்
ஆத்மா
புத்தியோகத்தின்
பலத்தால்
தங்கபாத்திரமாக
ஆகிக்
கொண்டே
செல்கிறது.
யோகம் இல்லை
என்றால்
ஞானம்
கூட
குறைவு,
அதற்கு
சக்தி
இருப்ப
தில்லை.
யோகத்தின்
கூர்மை
இல்லை,
இது நாடகத்தின்
பதிவு
ஆகும்.
குழந்தைகள்
தன்னுடைய
நிலையை
எவ்வளவு
முன்னேற்ற
வேண்டும்
என்று
பாபா புரிய
வைக்கிறார்.
நான்
ஆத்மா
முழு
நாளும்
சட்டத்துக்கு
புறம்பான
காரியம்
எதுவும்
செய்வதில்லை
தானே என்று
பார்த்துக்
கொள்ள
வேண்டும்.
அப்படிப்பட்ட
ஏதேனும்
பழக்கம்
இருந்தால்,
உடனடியாக
விட்டு
விட வேண்டும்.
ஆனாலும்
கூட
மாயை
இரண்டாவது
அல்லது
மூன்றாவது
நாள்
அந்த
தவறை
செய்ய
வைத்து விடுகிறது.
இது
போன்ற
சூட்சுமமான
விசயங்கள்
நடந்து
கொண்டே
இருக்கிறது,
இது
முற்றிலும்
மறைமுகமான ஞானம்
ஆகும்.
மனிதர்களுக்கு
இதைப்
பற்றி
தெரியாது.
நாங்கள்
எங்கள்
செலவிலேயே
எங்களுக்காக
அனைத்தையும் செய்கின்றோம்
என்று
நீங்கள்
சொல்கின்றீர்கள்.
மற்றவர்களுடைய
செலவில்
எப்படி
செய்ய
முடியும்!
ஆகையால் தான்
பாபா
எப்போதும்
சொல்கின்றார்
-
யாசிப்பதை
விட
இறப்பது
மேல்.
சகஜமாகக்
கிடைத்தால்
பால்
போல,
கேட்டுக்
கிடைத்தால்
தண்ணீரைப்
போல
ஆகும்.
கேட்டு
யாரிடமாவது
பெறுகின்றீர்கள்,
அவர்கள்
வலுக்கட்டாயமாக வேறு
வழியில்லாமல்
கொடுக்கின்றார்கள்,
ஆக
அது
தண்ணீர்
ஆகி
விடுகிறது.
பிடுங்கிக்
கொள்கின்றீர்கள்
என்றால்,
அது
ரத்தத்தை
எடுத்தக்
கொள்வது
போல.......சிலர்
மிகவும்
தொந்தரவு
செய்கின்றார்கள்,
கடனாகக்
கேட்கிறார்கள் என்றால்
அதுவும்
ரத்தத்திற்கு
சமமாக
ஆகி
விடுகிறது.
கடனாகப்
பெறுமளவு
அப்படி
எந்த
அவசியமும்
இல்லை.
தானம்
கொடுத்து
மீண்டும்
திரும்பப்
பெறுகிறார்கள்,
இதற்குத்
தான்
ஹரிச்சந்திரனின்
உதாரணம்
கூட
இருக்கிறது.
அப்படிக்
கூட
செய்யக்
கூடாது.
ஒரு
பகுதியை
ஒதுக்கி
வைத்துக்
கொள்ளுங்கள்,
அப்போது
உங்கள்
காரியத்துக்கும் உதவும்.
கடைசியில்
பாபாவும்
நினைவில்
இருக்க
வேண்டும்,
சுயதரிசனச்
சக்கரமும்
நினைவில்
இருக்க
வேண்டும்,
அப்போது
உயிர்
உடலை
விட்டுப்
பிரிய
வேண்டும்.
குழந்தைகள்
அந்தளவு
முயற்சி
செய்ய
வேண்டும்.
அப்போது தான்
சக்கரவர்த்தி
ராஜா
ஆக
முடியும்.
கடைசியில்
நினைவு
செய்து
விடலாம்,
அந்த
நேரம்
அப்படிப்பட்ட
நிலை ஏற்பட்டு
விடும்
என்பது
கிடையாது.
இல்லை,
இப்போதிருந்தே
முயற்சி
செய்து
செய்து
கடைசியில்
அந்த நிலையை
சரியானதாக
ஆக்க
வேண்டும்.
கடைசியில்
சிந்தனை
வேறு
எங்கேனும்
சென்று
விட்டது
என்று
ஆகி விடக்
கூடாது.
நினைவு
செய்வதன்
மூலம்
தான்
பாவம்
அழிந்து
கொண்டே
போகும்.
தூய்மையினுடைய
விசயத்தில்
தான்
உழைப்பு
இருக்கிறது
என்று
குழந்தைகளாகிய
நீங்கள்
புரிந்திருக்கின்றீர்கள்.
படிப்பில்
அந்தளவு
உழைப்பு
கிடையாது.
இதில்
குழந்தைகள்
மிகுந்த
கவனம்
கொடுக்க
வேண்டும்.
நாம் சட்டத்துக்குப்
புறம்பான
எந்த
காரியமும்
செய்யவில்லை
தானே?
பெயர்
ரூபத்தில்
மாட்டிக்கொள்ள
வில்லை தானே?
யாரையும்
பார்த்தும்
கவர்ச்சிக்கப்படவில்லை
தானே?
கர்மேந்திரியங்கள்
மூலமாக
சட்டத்துக்கு
புறம்பான எந்த
காரியமும்
செய்யவில்லை
தானே?
என்று
தினமும்
தனக்குத்
தானே
கேட்டுக்
கொள்ளுங்கள்
என்று
பாபா சொல்கின்றார்.
பழைய
அழுக்கான
சரீரத்தின்
மீது
முற்றிலுமாக
அன்பு
இருக்கக்
கூடாது.
அது
கூட
தேக அபிமானம்
ஆகிவிடுகிறது.
பற்றற்று
இருக்க
வேண்டும்.
ஒரே
ஒருவரிடம்
உண்மையான
அன்பு,
மற்ற
அனைவர் மீதும்
பற்றற்ற
அன்பு
வேண்டும்.
குழந்தைகள்
போன்றோர்
இருந்தாலும்
கூட
யார்
மீதும்
ஈடுபாடு
இருக்கக் கூடாது.
என்னவெல்லாம்
பார்க்கின்றோமோ,
அனைத்தும்
அழிந்து
விடும்
என்று
தெரிந்திருக்கின்றோம்.
ஆகையால்,
அதன்
மீதான
அன்பு
முழுமையாக
நீங்கிவிடுகிறது.
ஒருவர்
மீது
தான்
அன்பு
இருக்க
வேண்டும்.
மற்றவர்கள் மீது
பெயரளவில்
பற்றற்று
இருக்க
வேண்டும்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு
தாயும்
தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே!
தாரணைக்கான
முக்கிய
சாராம்:
1.
தன்னுடைய
மனநிலையை
(எண்ணங்களை)
மிகவும்
சுத்தமாக
தூய்மையாக
ஆக்க வேண்டும்.
எந்த
சட்டத்துக்குப்
புறம்பான
தலைகீழான
காரியமும்
செய்யக்
கூடாது.
எச்சரிக்கையுடன்
இருக்க
வேண்டும்.
புத்தியை
எங்கேயும்
போய்
சிக்கவிடக்
கூடாது.
2.
உண்மையான
அன்பு
ஒரு
பாபா
மீது
வைக்க
வேண்டும்.
மற்ற
அனைவரிடமும்
பற்றற்று,
பெயரளவில்
அன்புடன்
இருக்க
வேண்டும்.
சரீரத்தில்
கூட
பற்று
இல்லாத
அளவு
ஆத்ம அபிமானி
நிலையை
உருவாக்க
வேண்டும்.
வரதானம்
–
கர்ம
பந்தனத்தை
சேவையின்
பந்தனமாக
மாற்றி
அனைவரிடம்
இருந்தும்
விலகியவர் மற்றும்
பரமாத்மாவுக்குப்
பிரியமானவர்
ஆகுக.
பரமாத்ம
அன்பு
பிராமண
வாழ்க்கையின்
ஆதாரம்
ஆகும்
.
ஆனால்
எப்போது
விலகியவராக
(பற்றற்று
)
இருக்கிறீர்களோ,
அப்போதுதான்
அந்த
அன்பு
கிடைக்கும்
.
இல்லறத்தில்
இருக்கிறீர்கள்
என்றால்
ú
சû
வக்காக
இருக்கிறீர்கள்.
கணக்கு
-வழக்கு
உள்ளது
,
கர்ம
பந்தனம்
உள்ளது
…
என்று
ஒரு
போதும்
புரிந்து
கொள்ளாதீர்கள்.
ஆனால்
சேவை எனப்
புரிந்து
கொள்ளுங்கள்.
சேவையின்
பந்தனத்தில்
கட்டுண்டு
இருப்பதால்
கர்ம
பந்தனம்
முடிந்து
போகும்.
சேவை
என்ற
உணர்வு
இல்லை
என்றால்
கர்ம
பந்தனம்
கவர்ந்து
இழுக்கும்.
எங்கே
கர்ம
பந்தனம்
உள்ளதோ,
அங்கே
துக்கத்தின்
அலை
இருக்கும்.
ஆகவே
கர்ம
பந்தனத்தை
சேவையின்
பந்தனமாக
மாற்றியமைத்து,
விலகியவராகவும்
அன்பானவராகவும்
இருப்பீர்களானால்
பரமாத்மாவுக்கு
அன்பானவராக
ஆகி
விடுவீர்கள்.
சுலோகன்
–
யார்
சுய
ஸ்திதி
(தன்
உறுதியான
நிலை)
மூலம்
ஒவ்வொரு
சூழ்நிலையையும் கடந்து
செல்கிறாரோ,
அவரே
சிரேஷ்ட
ஆத்மா
ஆவார்.
ஓம்சாந்தி