31.10.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே - தங்கள் அனைவருடைய படகுகளையும் விஷக்கடலிருந்து வெளியேற்றி பாற்கடலுக்குக் கொண்டு செல்ல பாபா படகோட்டியாக ஆகி வந்துள்ளார், இப்போது நீங்கள் இந்த கரையிலிருந்து அந்த கரைக்குச் செல்ல வேண்டும்.

 

கேள்வி:-

குழந்தைகளாகிய நீங்கள் அனைவருடைய நடிப்பையும் பார்த்துக் கொண்டே யாரையும் நிந்தனை செய்ய முடியாது - ஏன்?

 

பதில்:-

இது ஆரம்பமும் முடிவுமற்ற உருவாகின்ற உருவாக்கப்பட்ட நாடகம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள், இதில் ஒவ்வொரு நடிகரும் அவரவருடைய நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த தோஷமும் (குற்றம்) யாருடையதும் இல்லை. இந்த பக்தி மார்க்கம் கூட மீண்டும் கடந்து செல்லும், இதில் கொஞ்சம் கூட மாற்றம் இருக்க முடியாது.

 

கேள்வி:-

எந்த இரண்டு வார்த்தைகளில் முழு சக்கரத்தின் ஞானமும் நிறைந்திருக்கிறது?

 

பதில்:-

நேற்று மற்றும் இன்று. நேற்று நாம் சத்யுகத்தில் இருந்தோம், இன்று 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றி நரகத்தை அடைந்துள்ளோம், நாளை மீண்டும் சொர்க்கத்திற்கு செல்வோம்.

 

ஓம் சாந்தி.

இப்போது குழந்தைகள் முன்னால் அமர்ந்துள்ளார்கள், எங்கிருந்து வருகிறார்களோ அங்கே தங்களுடைய சென்டர்களில் இருக்கும்போது நாம் உயர்ந்ததிலும் உயர்ந்த பாபாவிற்கு முன்னால் அமர்ந்திருக்கிறோம் என்று புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்தான் நமக்கு டீச்சராகவும் இருக்கின்றார், அவர்தான் நம்முடைய படகை கரை சேர்ப்பவர், அவரைத் தான் குரு என்று சொல்கிறார்கள். இங்கே நாம் அவர் முன்னால் அமர்ந்திருக்கிறோம் என்று புரிந்து கொள்கிறீர்கள், நம்மை இந்த விஷக்கடலிலிருந்து வெளியேறி பாற்கடலுக்குக் கொண்டு செல்கிறார். கரை சேர்க்கக் கூடிய பாபா கூட முன்னால் அமர்ந்திருக்கின்றார், அது ஒரே ஒரு சிவ தந்தையின் ஆத்மா தான், அவரைத் தான் சுப்ரீம் அல்லது உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் என்று சொல்லப்படுகிறது. நாம் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் சிவபாபாவிற்கு முன்னால் அமர்ந்திருக்கிறோம் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர் இந்த பிரம்மாவின் உடலில் அமர்ந்திருக்கின்றார், அவர் உங்களை அக்கரையை அடைய வைக்கின்றார். அவருக்கு ரதமும் வேண்டும் அல்லவா. இல்லையென்றால் எப்படி ஸ்ரீமத் கொடுப்பார். பாபா நம்முடைய தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார், கரை சேர்க்கக் கூடியவராகவும் இருக்கின்றார் என்ற நம்பிக்கை இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கிறது. இப்போது ஆத்மாக்களாகிய நாம் நம்முடைய வீடான சாந்திதாமத்திற்குச் செல்லப்போகிறோம். அந்த தந்தை நமக்கு வழி சொல்லிக் கொண்டிருக்கிறார். அங்கே சென்டர்களில் அமருவதற்கும் இங்கே பாபா முன்னால் அமருவதற்கும் இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. நாம் முன்னால் இருக்கின்றோம் என்று சென்டர்களில் இருக்கும்போது புரிந்து கொள்ள முடியாது. இங்கே இந்த உணர்வு வருகிறது. இப்போது நாம் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். முயற்சி செய்விப்பவருக்கு குஷி இருக்கும். இப்போது நாம் தூய்மையாக ஆகி வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறோம். எப்படி நாடகத்தின் நடிகர்கள் இருக்கிறார்கள் என்றால் இப்போது நாடகம் முடிந்தது என்று புரிந்து கொள்கிறார்கள் அல்லவா. இப்போது பாபா ஆத்மாக்களாகிய நம்மை அழைத்துச் செல்ல வந்துள்ளார். நீங்கள் எப்படி வீட்டிற்குச் செல்லமுடியும் என்பதையும் புரிய வைக்கின்றார், அவர் தந்தையாகவும் இருக்கின்றார், படகை கரை சேர்க்கக் கூடிய படகோட்டியாகவும் இருக்கின்றார். அவர்கள் பாடுகிறார்கள் ஆனால் எதையும் புரிந்துக் கொள்வதில்லை, எதை படகு என்று சொல்லப்படுகிறது, அவர் என்ன சரீரத்தை கொண்டு செல்வாரா என்ன? அவர் நம்முடைய ஆத்மாவை அக்கரைக்குக் கொண்டு செல்வார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது ஆத்மா சரீரத்தோடு வேஷ்யாலயத்தில் விஷ வைத்தரினீய நதியில் இருக்கிறது. உண்மையில் நாம் சாந்திதாமத்தில் இருக்கக் கூடியவர்களாவோம், நம்மை கரை சேர்ப்பவர் என்றால் வீட்டிற்கு அழைத்துச் செல்லக் கூடிய தந்தை கிடைத்திருக்கிறார். உங்களுடைய இராஜ்யம் இருந்தது, அதை மாயை இராவணன் முழுவதுமாக அபகரித்து விட்டான். பிறகு அந்த இராஜ்யத்தை மீண்டும் கண்டிப்பாக அடைய வேண்டும். எல்லையற்ற தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே, இப்போது தங்களுடைய வீட்டை நினைவு செய்யுங்கள். அங்கே சென்று பிறகு பாற்கடலுக்கு வர வேண்டும். இது விஷக்கடலாகும், அங்கே பாற்கடலில் இருக்கிறது மற்றும் மூலவதனம் அமைதியின் கடலாகும். மூன்று இடங்கள் இருக்கின்றன. இது துக்கதாமமாகும். பாபா புரிய வைக்கின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தங்களை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்யுங்கள். சொல்பவர் யார், யார் மூலமாக கூறுகின்றார்? முழு நாளும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளே என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றார். இப்போது ஆத்மா தூய்மையற்றதாக இருக்கிறது, இந்த காரணத்தினால் பிறகு சரீரமும் அதுபோலத்தான் கிடைக்கும். நாம் உண்மையான தங்க ஆபரணமாக இருந்தோம் பிறகு கலப்பு ஏற்பட்டு-ஏற்பட்டு பொய்யானவர்களாக ஆகி விட்டோம் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இப்போது அந்த பொய் (கறை) எப்படி நீங்கும், ஆகையினால் தான் இந்த நினைவு யாத்திரையின் பட்டி இருக்கிறது. அக்னியில் தங்கம் கொக்க தங்கமாகிறது அல்லவா. பாபா அடிக்கடி புரிய வைக்கின்றார், உங்களுக்கு கொடுக்கின்ற இந்த ஞானத்தை, ஒவ்வொரு கல்பத்திலும் கொடுத்து வந்துள்ளேன். என்னுடைய நடிப்பு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்து குழந்தைகளே தூய்மையாகுங்கள் என்று சொல்கிறேன். சத்யுகத்தில் கூட உங்களுடைய ஆத்மா தூய்மையாக இருந்தது, சாந்திதாமத்திலும் தூய்மையான ஆத்மாவாக இருக்கிறது. அது நம்முடைய வீடாகும். எவ்வளவு இனிமையான வீடாக இருக்கிறது. அங்கே செல்வதற்கு மனிதர்கள் எவ்வளவு மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள். இப்போது அனைவரும் செல்ல வேண்டும் பிறகு நடிப்பு நடிக்க அனைவரும் வர வேண்டும் என்று பாபா புரிய வைக்கின்றார். இதை குழந்தைகள் புரிந்து கொண்டார்கள். குழந்தைகள் துக்கமடையும் போது, ஹே பகவான், எங்களை தங்களிடம் அழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். எங்களை இங்கே துக்கத்தில் ஏன் விட்டீர்கள்? பாபா பரந்தாமத்தில் இருக்கின்றார், என்பதை தெரிந்துள்ளார்கள். எனவே கூறுகிறார்கள் ஹே பகவான், எங்களை பரந்தாமத்திற்கு அழைத்துக் கொள்ளுங்கள். சத்யுகத்தில் அப்படி சொல்ல மாட்டார்கள். அங்கு சுகமோ சுகமாகும். இங்கு அனேக துக்கம் இருக்கிறது ஆகையினால் தான் ஹே பகவான் என்று அழைக்கிறார்கள். ஆத்மாவிற்கு நினைவிருக்கிறது. ஆனால் பகவானை முற்றிலும் தெரிந்திருக்க வில்லை. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபவின் அறிமுகம் கிடைத்துள்ளது. பாபா பரந்தாமத்தில் தான் இருக்கின்றார். வீட்டை தான் நினைவு செய்கிறார்கள். இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். ஒருபோதும் இராஜ்யத்திற்காக சொல்ல மாட்டார்கள். பாபா ஒருபோதும் இராஜ்யத்தில் இருப்பதும் கிடையாது. அவர் சாந்திதாமத்தில் தான் இருக்கின்றார். அனைவரும் அமைதியை வேண்டுகிறார்கள். பரந்தாமத்தில் பகவானிடத்தில் கண்டிப்பாக அமைதி தான் இருக்கும், அதை முக்திதாமம் என்று சொல்லப்படுகிறது. அது ஆத்மாக்கள் இருப்பதற்கான இடமாகும், அங்கிருந்து தான் ஆத்மாக்கள் வருகின்றன. சத்யுகத்தை வீடு என்று சொல்ல முடியாது, அது இராஜ்யமாகும். இப்போது நீங்கள் எங்கெங்கிருந்து வந்துள்ளீர்கள். இங்கே வந்து முன்னால் அமர்ந்துள்ளீர்கள். பாபா குழந்தாய்- குழந்தாய் என்றழைத்து பேசுகின்றார். தந்தை ரூபத்தில் குழந்தைகளே-குழந்தைகளே என்றும் சொல்கிறார் பிறகு டீச்சராக ஆகி சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் ரகசியம் அல்லது வரலாறு-புவியியலை புரிய வைக்கின்றார். இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரத்திலும் இல்லை. மூலவதனம் ஆத்மாக்களாகிய நம்முடைய வீடு என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சூட்சுமவதனம் என்பதே திவ்ய திருஷ்டியின் விஷயமாகும். மற்றபடி சத்யுகம், திரேதா, தூவாபர, கலியுகம் என்பது இங்கே தான் நடக்கிறது. நடிப்பையும் நீங்கள் இங்கே தான் நடிக்கிறீர்கள். சூட்சுமவதனத்தில் எந்த நடிப்பும் இல்லை. இது தியானத்தின் காட்சியின் விஷயமாகும். நேற்று மற்றும் இன்று, இது நல்ல விதத்தில் புத்தியில் இருக்க வேண்டும். நேற்று நாம் சத்யுகத்தில் இருந்தோம் பிறகு 84 பிறவிகள் எடுத்து-எடுத்து இன்று நரகத்தில் வந்து விட்டோம். பாபாவை நரகத்தில் தான் அழைக்கிறோம். சத்யுகத்தில் அளவற்ற சுகம் இருக்கிறது, எனவே யாரும் அழைப்பதில்லை. இங்கே நீங்கள் சரீரத்தில் இருக்கின்றீர்கள் எனவே பேசுகிறீர்கள். பாபாவும் கூறுகின்றார், நான் அனைத்தையும் அறிந்தவன் அதாவது சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியை தெரிந்திருக்கின்றேன். ஆனால் எப்படி சொல்வது! சிந்திக்க வேண்டிய விஷயம் அல்லவா, ஆகையினால் தான் பாபா ரதத்தை எடுக்கின்றார் என்று எழுதப்பட்டுள்ளது. என்னுடைய பிறவி உங்களைப்போல் கிடையாது என்று கூறுகின்றார். நான் இவருக்குள் பிரவேசிக்கின்றேன். ரதத்தினுடைய அறிமுகத்தையும் அளிக்கின்றார். இந்த ஆத்மா கூட பெயர்-ரூபத்தை தாரணை செய்து-செய்து தமோபிரதானமாக ஆகியுள்ளது. இந்த சமயத்தில் அனைவரும் பாதுகாப்பற்றவர்களாக (அனாதைகளாக) இருக்கிறார்கள், ஏனென்றால் பாபாவை  தெரிந்திருக்கவில்லை. எனவே அனைவரும் அனாதைகளாக ஆகி விட்டார்கள். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்றால் அனாதைகளே ஏன் அடித்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனவே பாபா கூறுகின்றார், என்னை அனைவரும் மறந்து விட்டார்கள். ஆத்மா தான் பாதுகாக்க யாருமில்லாதவர்கள் என்று சொல்கிறது. லௌகீக தந்தை கூட அப்படி சொல்கிறார், எல்லையற்ற தந்தை கூட அனாதை குழந்தைகளே உங்களுக்கு ஏன் இந்த நிலை வந்தது என்று கேட்கிறார்? தாய் தந்தையர் யாரும் இருக்கிறார்களா? எந்த எல்லையற்ற தந்தை யார் உங்களை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக மாற்றுகிறாரோ, யாரை அரைக்கல்பமாக அழைத்து வந்தீர்களோ, அவரை கல்லிலும் முள்ளிலும் இருக்கின்றார் என்று சொல்கிறீர்கள். பாபா இப்போது முன்னால் அமர்ந்து புரிய வைக்கின்றார். நாம் பாபாவிடம் வந்துள்ளோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்துக் கொள்கிறீர்கள். இந்த பாபா தான் நமக்கு கற்பிக்கின்றார். நம்முடைய படகை கரை சேர்க்கின்றார், ஏனென்றால் இந்த படகு மிகவும் பழையதாகி விட்டது. எனவே இதனை கரை சேருங்கள் பிறகு எங்களுக்கு புதியதைக் கொடுங்கள் என்று கூறுகிறார்கள். பழைய படகு அச்சமூட்டக் கூடியதாக இருக்கிறது. எங்கேயாவது வழியில் உடைந்து, விபத்துக்குள்ளாகி விட்டால்! எனவே எங்களுடைய படகு பழையதாகி விட்டது, இப்போது எங்களுக்கு புதியதைக் கொடுங்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதனை ஆடை என்றும் சொல்லப்படுகிறது. பாபா எங்களுக்கு லஷ்மி நாராயணனைப் போல் சரீரம் வேண்டும் என்று குழந்தைகள் கேட்கிறார்கள். பாபா கூறுகின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, சொர்க்கவாசிகளாக ஆக விரும்புகிறீர்களா? ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் உங்களுடைய இந்த ஆடை பழையதாக ஆகிறது பிறகு புதியதைக் கொடுக்கின்றேன். இது சைத்தானுடைய ஆடையாகும். ஆத்மாவும் அசுரத்தனமானதாக இருக்கிறது. மனிதர்கள் ஏழையாக இருந்தால் ஆடையும் கூட ஏழ்மையானதாகத் தான் அணிவார்கள். செல்வந்தர்களாக இருந்தால் ஆடையும் செல்வச் செழிப்போடு அணிவார்கள். இந்த விஷயங்களை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாம் யாருக்கு முன்னால் அமர்ந்திருக்கிறோம் என்று இங்கே அமர்ந்திருக்கும்போது உங்களுக்கு போதை ஏறுகிறது. சென்டர்களில் அமர்ந்திருந்தீர்கள் என்றால் அங்கே உங்களுக்கு இந்த உணர்வு வராது. இங்கே முன்னால் இருப்பதின் மூலம் குஷி ஏற்படுகிறது, ஏனென்றால் பாபா நேரடியாக அமர்ந்து புரிய வைக்கின்றார். அங்கே யாராவது புரிய வைத்தார்கள் என்றால் புத்தியோகம் எங்கெங்கேயோ ஓடிக்கொண்டு இருக்கும். சிக்கலான வேலைகளில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள் அல்லவா. நேரம் எங்கே கிடைக்கிறது. நான் உங்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன். பாபா இந்த (பிரம்மாவின்) வாயின் மூலம் நமக்கு புரிய வைக்கின்றார் என்று நீங்களும் புரிந்துக் கொள்கிறீர்கள். இந்த வாயிற்கும் கூட எவ்வளவு மகிமை இருக்கிறது. பசுவாயிலிருந்து அமிர்தத்தை குடிக்க எங்கெங்கெல்லாமோ சென்று ஏமாற்றம் அடைகிறார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டு செல்கிறார்கள். இந்த பசுவாய் என்பது என்ன என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வதே இல்லை. எவ்வளவு புத்திசாலி மனிதர்கள் அங்கே செல்கிறார்கள், இதனால் என்ன பயன்? இன்னும் நேரம் தான் வீணாகிறது. இந்த சூரிய அஸ்தமனம் போன்றவற்றை என்ன பார்ப்பது. இதில் எந்த நன்மையும் இல்லையே. படிப்பில் தான் நன்மை இருக்கிறது. கீதையில் படிப்பு இருக்கிறது அல்லவா. கீதையில் ஹடயோகம் போன்றவற்றின் விஷயம் எதுவும் இல்லை. அதில் இராஜயோகம் இருக்கிறது. நீங்கள் இராஜ்யத்தை அடைவதற்காகவே வருகிறீர்கள். இந்த அசுர உலகத்தில் எவ்வளவு சண்டை சச்சரவுகள் போன்றவை இருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா நமக்கு யோகபலத்தின் மூலம் தூய்மையாக்கி உலகத்திற்கு எஜமானர்களாக்கி விடுகின்றார். தேவிகளுக்கு ஆயுதங்களை கொடுத்திருக்கிறார்கள், ஆனால் உண்மையில் இதில் ஆயுதங்கள் போன்ற விஷயம் எதுவும் இல்லை. காளியை எவ்வளவு பயங்கரமாக உருவாக்கியுள்ளார்கள் பாருங்கள். இவை அனைத்தும் அவரவருடைய மன நிலைக்கு ஏற்றவாறு அமர்ந்து உருவாக்கியுள்ளார்காள். தேவிகள் யாராவது இப்படி 4-8 கைகளை உடையவர்களாக இருப்பார்களா என்ன? இவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். எனவே பாபா புரிய வைக்கின்றார் - இது ஒரு எல்லையற்ற நாடகமாகும். இதில் யாருடைய நிந்தனையின் விஷயமும் இல்லை. ஆரம்பமும் முடிவுமற்ற நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எந்த வித்தியாசமும் ஏற்படுவதில்லை. ஞானம் என்று எதை சொல்லப்படுகிறது, பக்தி என்று எதை சொல்லப்படுகிறது என்று பாபா புரிய வைக்கின்றார். நீங்கள் பக்திமார்க்கத்தை மீண்டும் கடக்க வேண்டியிருக்கும். இப்படியே 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றி- சுற்றி நீங்கள் கீழே வருவீர்கள். இது ஆரம்பமும் முடிவுமற்றதாக உருவாக்கப்பட்ட உருவாக்கப்படுகின்ற பெரிய நல்ல நாடகமாகும், இதை பாபா புரிய வைக்கின்றார். இந்த நாடகத்தின் இரகசியத்தைப் புரிந்து கொள்வதின் மூலம் நீங்கள் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகி விடுகின்றீர்கள். அதிசயமாக இருக்கிறது அல்லவா. பக்தி எப்படி நடக்கிறது, ஞானம் எப்படி நடக்கிறது, இந்த விளையாட்டு ஆரம்பமும் முடிவுமற்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் ஏற்பட முடியாது. பிரம்மத்தில் ஐக்கியமாகி விட்டார், ஜோதி-ஜோதியோடு கலந்து விட்டது என்று அவர்கள் சொல்கிறார்கள், இது எண்ணங்களின் கற்பனை உலகமாகும், யாருக்கு என்ன வருகிறதோ அதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். மனிதர்கள் சினிமா பார்த்து விட்டு வருகிறர்கள். அதனை சங்கல்பத்தின் விளையாட்டு என்று சொல்ல முடியுமா? பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார் - குழந்தைகளே, இது எல்லையற்ற நாடகம் இது அப்படியே திரும்பவும் நடக்கும். பாபா தான் வந்து இந்த ஞானத்தை அளிக்கின்றார், ஏனென்றால் அவர் ஞானக்கடலாக இருக்கின்றார். மனித சிருஷ்டியின் விதையாக இருக்கின்றார், உயிருள்ளவராக இருக்கின்றார், அவருக்குத் தான் அனைத்து ஞானமும் இருக்கிறது. மனிதர்கள் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என்று ஆயுளை காட்டி விட்டார்கள். இவ்வளவு ஆயுள் இருக்க முடியுமா என்று பாபா கேட்கின்றார். சினிமா லட்சக்கணக்கான ஆண்டுகளுடையதாக இருந்தால் யாருடைய புத்தியிலும் நிற்காது. நீங்கள் அனைத்தையும் வர்ணனை செய்கிறீர்கள். இலட்சக்கணக்கான விஷயத்தை எப்படி வர்ணனை செய்வீர்கள். எனவே அவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். நீங்கள் தான் பக்தி மார்க்கத்தின் நடிப்பை நடித்தீர்கள். இப்படி-இப்படியெல்லாம் துக்கத்தை அனுபவித்து- அனுபவித்து இப்போது கடைசியில் வந்து விட்டீர்கள். முழு மரமும் உளுத்துப்போன நிலையை அடைந்து விட்டது. இப்போது அங்கே செல்ல வேண்டும். தங்களை இலேசாக்கிக் கொள்ளுங்கள். இவர் கூட இலேசாக்கிக் கொண்டார் அல்லவா. எனவே அனைத்து பந்தங்களும் துண்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் குழந்தைகள், செல்வம், தொழில், வாடிக்கையாளர், ராஜாக்கள் போன்றவை நினைவு வந்து கொண்டே இருக்கும். தொழிலையே விட்டு விட்டால் பிறகு என்ன நினைவிற்கு வரும். இங்கே அனைத்தையும் மறக்க வேண்டும். இவற்றை மறந்து தங்களுடைய வீடு மற்றும் இராஜ்யத்தை நினைவு செய்ய வேண்டும். சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்ய வேண்டும். சாந்திதாமத்திலிருந்து பிறகு நாம் இங்கு வர வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள், இதைத் தான் யோக அக்னி என்று சொல்லப் படுகிறது. இது இராஜயோகம் அல்லவா. நீங்கள் ராஜரிஷிகளாவீர்கள். தூய்மையானவர்களைத் தான் ரிஷிகள் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் இராஜ்யத்திற்காக தூய்மையாகின்றீர்கள். பாபா தான் உங்களுக்கு சத்தியம் அனைத்தையும் கூறுகின்றார். நீங்களும் இதை நாடகம் என்று புரிந்து கொள்கிறீர்கள். நடிகர்கள் அனைவரும் இங்கே கண்டிப்பாக இருக்க வேண்டும். பிறகு பாபா அனைவரையும் அழைத்துச் செல்வார். இது ஈஸ்வரனுடைய கல்யாண ஊர்வலமாகும் அல்லவா. அங்கே தந்தை மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள் பிறகு இங்கே நடிப்பை நடிக்க வருகிறார்கள். பாபா எப்போதும் அங்கே இருக்கிறார். என்னை துக்கத்தில் தான் நினைவு செய்கிறார்கள். பிறகு நான் அங்கே என்ன செய்வேன். உங்களை சாந்திதாமம், சுகதாமத்திற்கு அனுப்பி விட்டேன் பிறகு என்ன வேண்டும். நீங்கள் சுகதாமத்தில் இருந்தீர்கள் மற்ற அனைத்து ஆத்மாக்களும் சாந்திதாமத்தில் இருந்தார்கள் பிறகு வரிசைக்கிரமமாக வந்து கொண்டே இருக்கிறார்கள். நாடகம் முடிந்து விட்டது. பாபா கூறுகின்றார் - குழந்தைகளே, இப்போது தவறு செய்யாதீர்கள். கண்டிப்பாக தூய்மையாக ஆக வேண்டும். இவர் அவரே தான் நாடகத்தின்படி நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்காக நாடகத்தின்படி நான் கல்பம்-கல்பமாக வருகின்றேன். இப்போது புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டும் அல்லவா. நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) இப்போது இந்த மரம் பழையதாக உளுத்துப்போன நிலையை அடைந்து விட்டது, ஆத்மா திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும் ஆகையினால் தங்களை அனைத்து பந்தனங்களிலிருந்தும் விடுவித்து இலேசாக்கிக் கொள்ள வேண்டும். இங்கே இருப்பது அனைத்தையும் புத்தியின் மூலம் மறந்து விட வேண்டும்.

 

2) ஆரம்பமும் முடிவுமற்ற நாடகத்தை புத்தியில் வைத்து எந்தவொரு நடிகரையும் (ஆத்மாவையும்) நிந்தனை செய்யக் கூடாது. நாடகத்தின் இரகசியத்தை புரிந்து கொண்டு உலகத்திற்கு எஜமானர்களாக ஆக வேண்டும்.

 

வரதானம்:

புத்தியின் துணை மற்றும் சகயோகத்தின் கரத்தின் மூலம் மகிழ்ச்சியை அனுபவம் செய்யக் கூடிய குஷியின் அதிர்ஷ்டம் மிக்க ஆத்மா ஆகுக.

 

விளக்கம்:

சகயோகத்தின் அடையாளமாக கை மீது கை இருப்பதாக காட்டுகின்றனர், அது போல எப்போதும் தந்தையின் சகயோகியாக ஆவது - இது கை மீது கை மற்றும் எப்போதும் புத்தியின் மூலம் உடன் இருப்பது அதாவது மனதின் ஈடுபாடு ஒருவர் மீது இருப்பதாகும். எப்போதும் இந்த நினைவிலேயே இருங்கள் - இறைவனுடைய மலர் தோட்டத்தில் கையுடன் கை சேர்த்து கூடவே நடந்து கொண்டிருக்கிறோம். இதன் மூலம் எப்போதும் மனோகரமான பொழுது போக்கில் இருப்பீர்கள், எப்போதும் குஷியாகவும் நிரம்பியவராகவும் இருப்பீர்கள். இப்படிப்பட்ட குஷியின் அதிர்ஷ்டம் நிறைந்த ஆத்மாக்கள் எப்போதுமே மகிழ்ச்சியின் அனுபவத்தை செய்தபடி இருப்பார்கள்.

 

சுலோகன்:

ஆசீர்வாதங்களின் கணக்கை சேமிப்பதற்கான சாதனம் - திருப்தியாக இருப்பது மற்றும் திருப்திப் படுத்துவதாகும்.

ஓம்சாந்தி