23.08.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
நினைவு
யாத்திரையினால்
தான்
உங்களுடைய
சம்பாத்தியம் சேமிப்பு
ஆகிறது.
நீங்கள்
நஷ்டத்திஇலிருந்து இலாபத்தில்
வருகிறீர்கள்.
உலகிற்கு
அதிபதி ஆகிறீர்கள்.
கேள்வி:
சத்தியத்தின்
தொடர்பு
உயர்த்தும்,
தீய
தொடர்பு
வீழ்த்தும்
-
இதன்
பொருள்
என்ன?
பதில்:
குழந்தைகளாகிய
உங்களுக்கு
சத்தியத்தின்
தொடர்பு
அதாவது
தந்தையின்
தொடர்பு
கிடைக்கும் பொழுது
உங்களுக்கு
முன்னேறும்
கலை
ஆகி
விடுகிறது.
இராவணனின்
தொடர்பு
தீய
தொடர்பு
ஆகும்.
அவனுடைய
சகவாசத்தினால்
நீங்கள்
கீழே
விழுகிறீர்கள்.
அதாவது
இராவணன்
உங்களை
மூழ்கடிக்கிறான்.
தந்தை
கரையேற்றி
அழைத்துச்
செல்கிறார்.
தந்தையினுடையது
அற்புதம்
என்னவென்றால்,
ஒரு
நொடியில் எப்பேர்ப்பட்ட
சகவாசம்
அளிக்கிறார்
என்றால்,
அதன்
மூலம்
உங்களுக்கு
கதி
சத்கதி
ஆகி
விடுகிறது.
எனவே
அவர்
மந்திரவாதி
என்றும்
அழைக்கப்படுகிறார்.
ஓம்
சாந்தி.
குழந்தைகள்
நினைவில்
அமர்ந்திருந்தார்கள்.
இதற்கு
நினைவு
யாத்திரை
என்று
கூறப்படுகிறது.
யோகம்
என்ற
வார்த்தையைப்
பயன்
படுத்தாதீர்கள்
என்று
தந்தை
கூறுகிறார்.
தந்தையை
நினைவு
செய்யுங்கள்.
அவர்
ஆத்மாக்களின்
தந்தை
பரமபிதா
பதீதபாவனர்
ஆவார்.
அந்த
பதீத
பாவனரைத்
தான்
நினைவு
செய்ய வேண்டும்.
தேகத்தின்
அனைத்து
சம்பந்தங்களையும்
விடுத்து
ஒரு
தந்தையை
நினைவு
செய்யுங்கள்
என்று தந்தை
கூறுகிறார்.
நீங்கள்
இறந்தால்
உலகமே
இறந்தது
போல..
..
என்று
கூறுகிறார்கள்
அல்லவா?
தேகத்துடன் சேர்த்து
தேகத்தின்
அனைத்து
சம்பந்தங்கள்
எவையெல்லாம்
இந்த
கண்களுக்கு
தென்பட்டுக்
கொண்டிருக்கிறதோ அவற்றை
நினைவு
செய்யாதீர்கள்.
ஒரு
தந்தையை
மட்டும்
நினைவு
செய்தீர்கள்
என்றால்,
உங்களுடைய பாவங்கள்
எரிந்து
போய்
விடும்.
நீங்கள்
பல
பிறவிகளின்
பாவ
ஆத்மாக்கள்
ஆவீர்கள்
அல்லவா?
இது இருப்பதே
பாவ
ஆத்மாக்களின்
உலகமாக.
சத்யுகம்
புண்ணிய
ஆத்மாக்களின்
உலகம்
ஆகும்.
இப்பொழுது பாவங்கள்
அனைத்தும்
நீங்கி
புண்ணியம்
எப்படி
சேமிப்பு
ஆகும்?
தந்தையின்
நினைவினால்
தான்
சேமிப்பு ஆகும்.
ஆத்மாவில்
மனம்,
புத்தி
உள்ளது
அல்லவா?
எனவே
ஆத்மா
புத்தி
மூலமாக
நினைவு
செய்ய வேண்டும்.
உங்களுடைய
நண்பர்கள்,
உறவினர்கள்
யாரெல்லாம்
இருக்கிறார்களோ
அவர்கள்
அனைவரையும் மறந்து
விடுங்கள்
என்று
தந்தை
கூறுகிறார்.
அவர்கள்
அனைவரும்
ஒருவருக்கொருவர்
துக்கம்
கொடுக்கிறார்கள்.
ஒன்று
காம
வாள்
செலுத்தும்
பாவம்
செய்கிறார்கள்.
மற்றொரு
பாவம்
என்ன
செய்கிறார்கள்?
எந்த
ஒரு தந்தை
அனைவருக்கும்
சத்கதி
அளிக்கும்
வள்ளலாக
இருக்கிறாரோ,
குழந்தைகளுக்கு
எல்லையில்லாத
சுகம் அளிக்கிறாரோ,
அதாவது
சொர்க்கத்தின்
அதிபதியாக
ஆக்குகிறாரோ,
அவரை
சர்வ
வியாபி
(எங்கும்
நிறைந்தவர்)
என்று
கூறி
விடுகிறார்கள்.
இது
பாடசாலை
ஆகும்.
நீங்கள்
இதைப்
படிக்க
வந்துள்ளீர்கள்.
இந்த
இலட்சுமி நாராயணர்
உங்களது
இலட்சியம்
மற்றும்
நோக்கம்
ஆகும்.
வேறு
யாரும்
இது
போல
கூற
முடியாது.
இப்பொழுது
நாம்
தூய்மையாக
ஆகி,
தூய்மையான
உலகிற்கு
அதிபதி
ஆக
வேண்டும்
என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
நாம்
தான்
உலகிற்கு
அதிபதியாக
இருந்தோம்.
முழுமையாக
5
ஆயிரம்
வருடங்கள்
ஆகி உள்ளது.
தேவி
தேவதைகள்
உலகிற்கு
அதிபதி
ஆவார்கள்
அல்லவா?
எவ்வளவு
உயர்ந்த
பதவி
ஆகும்!
அவசியம்
இந்த
தந்தை
தான்
ஆக்குவார்.
தந்தையைத்
தான்
பரமாத்மா
என்று
கூறுகிறார்கள்.
அவருடைய உண்மையான
பெயர்
சிவன்
என்பதாகும்.
பிறகு
நிறைய
பேர்
வைத்து
விட்டுள்ளார்கள்.
எப்படி
மும்பையில் பபுல்நாத்
கோவில்
உள்ளது.
அதாவது
முட்களின்
காட்டினை
மலர்களின்
தோட்டமாக
ஆக்குபவர்
ஆவார்.
அவருடைய
உண்மையான
பெயர்
ஒரே
ஒரு
சிவன்
என்பதாகும்.
இவருக்குள்
பிரவேசம்
செய்கிறார்
என்றாலும் கூட
பெயர்
சிவன்
என்பதே
ஆகும்.
நீங்கள்
இந்த
பிரம்மாவை
நினைவு
செய்ய
வேண்டியதில்லை.
இவரோ தேகதாரி
ஆவார்;
நீங்கள்
(விதேஹி)
தேகமற்றவரை
நினைவு
செய்ய
வேண்டும்.
உங்களுடைய
ஆத்மா பதீதமாக
(தூய்மையற்றதாக)
ஆகி
விட்டுள்ளது.
அதை
பாவனமாக
ஆக்க
வேண்டும்.
மகான்
ஆத்மா,
பாவ ஆத்மா
என்று
கூறவும்
செய்கிறார்கள்.
மகான்
பரமாத்மா
என்று
கூறுவதில்லை.
தங்களை
பரமாத்மா
அல்லது இறைவன்
என்று
கூட
யாரும்
கூற
முடியாது.
மகாத்மா,
பவித்திர
ஆத்மா
என்று
கூறுகிறார்கள்.
சந்நியாசிகள் சந்நியாசம்
செய்கிறார்கள்.
எனவே
பவித்திர
ஆத்மா
ஆவார்கள்.
அவர்கள்
கூட
அனைவரும்
புனர்ஜென்மம் எடுக்கிறார்கள்
என்று
தந்தை
புரிய
வைத்துள்ளார்.
தேகதாரிகள்
அவசியம்
புனர்
ஜென்மம்
எடுக்க
வேண்டி வருகிறது.
விகாரத்தினால்
ஜன்மம்
எடுத்து
பின்
பெரிய
வாலிபனாக
ஆகி
விடும்
பொழுது
சந்நியாசம்
செய்து விடுகிறார்கள்.
தேவதைகளோ
இவ்வாறு
செய்வதில்லை.
அவர்களோ
என்றைக்குமே
தூய்மையாக
உள்ளார்கள்.
தந்தை
இப்பொழுது
உங்களை
அசுரனிலிருந்து தெய்வீகமானவராக
ஆக்குகிறார்.
தெய்வீக
குணங்களை
தாரணை செய்வதால்
தெய்வீக
சம்பிரதாயத்தினர்
ஆவீர்கள்.
தெய்வீக
சம்பிரதாயத்தினர்
சத்யுகத்தில்
இருப்பார்கள்.
அசுர
சம்பிரதாயத்தினர்
கலியுகத்தில்
இருக்கிறார்கள்.
இப்பொழுது
இருப்பது
சங்கமயுகம்.
இப்பொழுது
உங்களுக்கு தந்தை
கிடைத்துள்ளார்.
இப்பொழுது
நீங்கள்
மீண்டும்
அவசியம்
தெய்வீக
சம்பிரதாயத்தினர்
ஆக
வேண்டும் என்று
கூறுகிறார்.
நீங்கள்
தெய்வீக
சம்பிரதாயத்தினராக
ஆவதற்காகவே
இங்கு
வந்துள்ளீர்கள்.
தெய்வீக சம்பிரதாயத்தினருக்கு
அளவற்ற
சுகம்
இருக்கும்.
இந்த
உலகம்
இம்சையானவர்களினுடையது
என்று
கூறப்படுகிறது.
தேவதைகள்
அஹிம்சையாளர்கள்
ஆவார்கள்.
இனிமையிலும்
இனிமையான
ஆன்மீகக்
குழந்தைகளே
தந்தையை
நினைவு
செய்யுங்கள்
என்று
தந்தை கூறுகிறார்.
உங்களுடைய
குருமார்கள்
அனைவரும்
கூட
தேகதாரி
ஆவார்கள்.
இப்பொழுது
ஆத்மாக்களாகிய நீங்கள்
பரமாத்மா
தந்தையை
நினைவு
செய்ய
வேண்டும்.
நீங்கள்
புண்ணிய
ஆத்மா
ஆகிவிடும்
பொழுதே சுகம்
கிடைக்கும்.
84
பிறவிகளுக்குப்
பின்னர்
தான்
நீங்கள்
பாவ
ஆத்மா
ஆகி
விடுகிறீர்கள்.
இப்பொழுது நீங்கள்
புண்ணியத்தை
சேமிப்பு
செய்கிறீர்கள்.
யோக
பலத்தினால்
பாவங்களை
முடித்து
விடுகிறீர்கள்.
இந்த நினைவு
யாத்திரையினால்
தான்
நீங்கள்
உலகிற்கு
அதிபதி
ஆகிறீர்கள்.
நீங்கள்
உலகின்
அதிபதியாக
இருந்தீர்கள் என்பது
சரிதானே?
அவர்கள்
பின்
எங்கு
சென்றார்கள்?
இதுவும்
தந்தை
தான்
கூறுகிறார்.
நீங்கள்
84
பிறவிகள் எடுத்தீர்கள்.
சூரிய
வம்சத்தினர்,
சந்திர
வம்சத்தினர்
ஆனீர்கள்.
பக்தியின்
பலன்
பகவான்
தருகிறார்
என்று கூறவும்
செய்கிறார்கள்.
பகவான்
என்று
எந்த
தேகதாரிக்கும்
கூறப்படுவதில்லை.
அவர்
நிராகாரமான
சிவனே ஆவார்.
அவருக்காக
சிவராத்திரி
கொண்டாடுகிறார்கள்
என்றால்
அவசியம்
வருகிறார்
அல்லவா?
ஆனால் நான்
உங்களைப்
போல
பிறவி
எடுப்பதில்லை
என்று
கூறுகிறார்.
நான்
சரீரத்தைக்
கடனாக
எடுக்க
வேண்டி வருகிறது.
எனக்கென்று
உடல்
கிடையாது.
ஒரு
வேளை
அவ்வாறு
இருந்திருந்தது
என்றால்
அதற்குப்
பெயர் இருந்திருக்கும்.
பிரம்மா
என்ற
பெயரே
இவருடையது
ஆகும்.
இவர்
சந்நியாசம்
செய்தார்.
அப்பொழுது பெயர்
பிரம்மா
என்று
வைக்கப்பட்டது.
நீங்கள்
பிரம்மாகுமார்
குமாரிகள்
ஆவீர்கள்.
இல்லையென்றால்
பிரம்மா எங்கிருந்து
வந்தார்.
பிரம்மா
சிவனின்
மகன்
ஆவார்
-
சிவ
பாபா
தனது
குழந்தையாகிய
பிரம்மாவிற்குள் பிரவேசம்
செய்து
உங்களுக்கு
ஞானம்
கொடுக்கிறார்.
பிரம்மா
விஷ்ணு
சங்கரன்
கூட
இவருடைய
குழந்தைகள் ஆவார்கள்.
நிராகார
தந்தையின்
அனைத்து
குழந்தைகளும்
நிராகாரமானவர்கள்
ஆவார்கள்.
ஆத்மாக்கள் இங்கு
வந்து
சரீரத்தை
தாரணை
செய்து
தத்தம்
பாகத்தை
நடிக்கிறார்கள்.
நான்
வருவதே
பதீதர்களை பாவனமாக
ஆக்க
என்று
தந்தை
கூறுகிறார்.
நான்
இந்த
சரீரத்தைக்
கடனாக
எடுக்கிறேன்.
சிவ
பகவானுவாச
(சிவ
பகவானின்
மகா
வாக்கியம்)
என்றுள்ளது
அல்லவா?
கிருஷ்ணரையோ
பகவான்
என்று
கூற
முடியாது.
பகவானோ
ஒரே
ஒருவர்
ஆவார்.
கிருஷ்ணரின்
மகிமையே
தனி
ஆகும்.
முதல்
நம்பர்
தேவதைகள்
இராதை கிருஷ்ணர்
ஆவார்கள்.
அவர்கள்
சுயம்வரத்திற்குப்
பிறகு
பின்
இலட்சுமி
நாராயணர்
ஆகிறார்கள்.
ஆனால்
இது யாருக்குமே
தெரியாது.
இராதை
கிருஷ்ணர்
பற்றி
யாருக்குமே
தெரியாது.
அவர்கள்
பின்
எங்கே
சென்று விடுகிறார்கள்?
இராதை
கிருஷ்ணர்
தான்
சுயம்வரத்திற்குப்
பின்
இலட்சுமி
நாராயணர்
ஆகிறார்கள்.
இருவருமே தனித்தனி
மகாராஜக்களின்
குழந்தைகள்
ஆவார்கள்.
அங்கு
அபவித்திரதாவின்
(தூய்மையற்ற
நிலை)
பெயரே இருக்காது.
ஏனெனில்
5
விகாரங்கள்
என்ற
இராவணனே
இல்லை.
இருப்பதே
இராம
இராஜ்யமாக.
இப்பொழுது தந்தை
ஆத்மாக்களுக்குக்
கூறுகிறார்,
என்னை
நினைவு
செய்தீர்கள்
என்றால்,
உங்களுடைய
பாவங்கள்
நீங்கி போய்
விடும்.
நீங்கள்
சதோபிரதானமாக
இருந்தீர்கள்.
இப்பொழுது
தமோபிரதானமாக
ஆகி
உள்ளீர்கள்.
கஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும்
சேமிப்பு
செய்ய
வேண்டும்.
பகவான்
வியாபாரி
என்றும்
கூறப்படுகிறார்.
யாராவது ஒருவர்
தான்
அவரிடம்
வியாபாரம்
செய்கிறார்கள்.
மந்திரவாதி
என்று
கூட
அவருக்குக்
கூறுகிறார்கள்.
முழு உலகிற்கும்
சத்கதி
அளிக்கும்
அற்புதம்
செய்கிறார்.
அனைவருக்கும்
முக்தி
ஜீவன்
முக்தி
அளிக்கிறார்.
மந்திர ஜாலம்
ஆகிறது
அல்லவா?
மனிதர்கள்
மனிதர்களுக்குக்
கொடுக்க
முடியாது.
நீங்கள்
63
பிறவிகள்
பக்தி செய்தபடியே
வந்துள்ளீர்கள்.
இந்த
பக்தியினால்
யாராவது
சத்கதியை
அடைந்துள்ளார்களா
என்ன?
யாராவது சத்கதி
அளிப்பவர்கள்
இருக்கிறார்களா?
இருக்க
முடியாது.
ஒருவர்
கூட
திரும்பிப்
போக
முடியாது.
எல்லையில்லாத தந்தை
தான்
வந்து
அனைவரையும்
திரும்ப
அழைத்துச்
செல்கிறார்.
கலியுகத்தில்
அநேக
இராஜாக்கள் இருக்கிறார்கள்.
அங்கு
நீங்கள்
கொஞ்சம்
பேர்
ஆட்சி
புரிகிறீர்கள்.
மற்ற
எல்லா
ஆத்மாக்களும்
முக்தியில் சென்று
விடுகிறார்கள்.
நீங்கள்
முக்தி
தாமம்
வழியாக
ஜீவன்
முக்தியில்
செல்கிறீர்கள்.
இந்த
சக்கரம்
சுற்றிக்கொண்டே
இருக்கிறது.
இப்பொழுது
ஆத்மாக்களாகிய
உங்களுக்கு
இந்த
சிருஷ்டி
சக்கரத்தின்,
படைப்பவர் மற்றும்
படைப்பின்
முதல்
இடை
கடையின்
தரிசனம்
ஆகி
உள்ளது.
நீங்கள்
தான்
இந்த
ஞானத்தினால் நரனிலிருந்து நாராயணர்
ஆகிறீர்கள்.
தேவதைகளின்
இராஜதானி
ஸ்தாபனை
ஆகி
விட்டது.
பிறகு
உங்களுக்கு ஞானத்தின்
அவசியம்
இருக்காது.
பக்தர்களுக்கு
பகவான்
அரைகல்பத்திற்கான
சுகத்தின்
பலனை
அளித்தார்.
பிறகு
இராவண
இராஜ்யத்தில்
துக்கம்
ஆரம்பமாகிறது.
மெது
மெதுவாக
படி
இறங்குகிறீர்கள்.
நீங்கள்
சத்யுகத்தில் இருக்கிறீர்கள்.
இருந்தாலும்
ஒரு
நாள்
கழிந்த
உடனேயே
படி
இறங்க
வேண்டி
வருகிறது.
நீங்கள்
16
கலை சம்பூர்ணம்
ஆகிறீர்கள்.
பிறகு
படி
இறங்கிக்
கொண்டே
இருக்கிறீர்கள்.
விநாடிக்கு
விநாடி
டிக்-டிக்
ஆகிறது.
இறங்கி
கொண்டே
செல்கிறீர்கள்.
காலம்
கழிந்து
கழிந்து
இந்த
இடத்தில்
வந்து
சேர்ந்துள்ளீர்கள்.
அங்கு
கூட இதே
போல
கணங்கள்
கழிந்து
கொண்டே
போகும்.
நாம்
படி
ஏறுவது
ஒரேயடியாக
சட்டென்று
ஏறி
விடுவோம்.
பிறகு
படி
இறங்க
வேண்டி
உள்ளது
பேன்
போல.
நான்
அனைவருக்கும்
சத்கதி
அளிப்பவன்
ஆவேன்
என்று
தந்தை
கூறுகிறார்.
மனிதர்கள்
மனிதர்களுக்கு சத்கதி
செய்ய
முடியாது.
ஏனெனில்
அவர்கள்
விகாரத்தில்
பிறக்கிறார்கள்.
பதீதமாக
(தூய்மையற்று)
இருக்கிறார்கள்.
உண்மையில்
கிருஷ்ணருக்குத்
தான்
உண்மையான
மகாத்மா
(சாமியார்)
என்று
கூற
முடியும்.
இந்த
மகாத்மாக்களோ
பிறகும்
விகாரத்தால்
ஜன்மம்
எடுத்து
பின்
சந்நியாசம்
செய்கிறார்கள்.
அவர்களோ
தேவதை
ஆவார்கள்.
தேவதைகளோ
என்றைக்கும்
தூய்மையாக
இருக்கிறார்கள்.
அவர்களுக்குள்
எந்த
ஒரு
விகாரமும்
இருப்பதில்லை.
அதற்கு
நிர்விகாரி
உலகம்
என்றே
கூறப்படுகிறது.
இது
விகாரி
உலகம்
என்று
அழைக்கப்
படுகிறது.
"நோ
ப்யூரிட்டி"
-
தூய்மையே
இல்லை.
நடத்தை
எவ்வளவு
மோசமாக
உள்ளது!
தேவதைகளின்
நடத்தையோ மிகவும்
நன்றாக
இருக்கும்.
எல்லோரும்
அவர்களை
வணங்குகிறார்கள்.
அவர்களுடைய
நடத்தை
நல்லதாக இருப்பதால்
தான்
அபவித்திரமான
(தூய்மையில்லாத)
மனிதர்கள்
அந்த
தூய்மையான
தேவதைகளுக்கு முன்னால்
தலை
வணங்குகிறார்கள்.
இப்பொழுதோ
சண்டை
சச்சரவு
என்னவெல்லாம்
ஆகி
விட்டுள்ளது!
மிகவுமே
குழப்பம்
உள்ளது.
இப்பொழுதோ
வசிப்பதற்குக்
கூட
இடம்
இல்லை.மனிதர்கள்
குறைய
வேண்டும் என்று
நினைக்கிறார்கள்.
ஆனால்
இதுவோ
தந்தையினுடைய
காரியம்
ஆகும்.
சத்யுகத்தில்
மிகவும்
குறைவான மனிதர்கள்
இருப்பார்கள்.
இத்தனை
எல்லா
சரீரங்களின்
அழிவு
ஏற்பட்டு
விடுகிறது.
மற்ற
எல்லா
ஆத்மாக்களும் தங்களது
இனிமையான
இல்லத்திற்கு
(ஸ்வீட்
ஹோம்)
சென்று
விடுவார்கள்.
தண்டனைகளோ
வரிசைக்கிரமமாக அவசியம்
அனுபவிக்கிறார்கள்.
யார்
முழுமையாக
புருஷார்த்தம்
(முயற்சி)
செய்து
வெற்றி
மாலையின்
மணி ஆகிறார்களோ
அவர்கள்
தண்டனைகளிலிருந்து விடுபட்டு
விடுகிறார்கள்.
மாலை
ஒருவரினுடையதோ
ஆவது இல்லை.
யார்
அவர்களை
இது
போல
ஆக்கினாரோ
அவர்
மலர்
ஆவார்.
பிறகு
""மேரு""
-
இல்லற
மார்க்கம் ஆகும்
அல்லவா?
எனவே
ஜோடியின்
மாலை
ஆகும்
("சிங்கிள்")
ஒற்றை
மணியின்
மாலை
இருப்பதில்லை.
சந்நியாசிகளின்
மாலை
ஆவதில்லை.
அவர்கள்
துறவற
மார்க்கத்தினர்
ஆவார்கள்.
அவர்கள்
இல்லற
மார்க்கத்தினருக்கு
ஞானம்
அளிக்க
முடியாது.
தூய்மையாக
ஆவதற்காக
அவர்களுடையது
எல்லைக்குட்பட்ட
சந்நியாசம் ஆகும்.
அவர்கள்
ஹடயோகி
ஆவார்கள்.
இது
இராஜயோகம்
ஆகும்.
இராஜ்யத்தை
அடைவதற்காக
தந்தை உங்களுக்கு
இந்த
இராஜயோகத்தைக்
கற்பிக்கிறார்.
தந்தை
ஒவ்வொரு
5
ஆயிரம்
வருடங்களுக்குப்
பிறகு வருகிறார்.
அரை
கல்பம்
நீங்கள்
சுகத்தில்
ஆட்சி
புரிகிறீர்கள்.
பிறகு
இராவண
இராஜ்யத்தில்
மெல்ல
மெல்ல நீங்கள்
துக்கமுடையவர்களாக
ஆகி
விடுகிறீர்கள்.
இதற்கு
துக்கம்
சுகத்தின்
நாடகம்
என்று
கூறப்படுகிறது.
பாண்டவர்களாகிய
உங்களை
வெற்றி
அடையுமாறு
செய்விக்கிறார்.
இப்பொழுது
நீங்கள்
(பண்டா)
வழிகாட்டி ஆவீர்கள்.
வீடு
செல்வதற்கான
யாத்திரை
செய்விக்கிறீர்கள்.
அந்த
யாத்திரைகளோ
மனிதர்கள்
பல
பிறவிகளாக செய்தபடியே
வந்துள்ளார்கள்.
இப்பொழுது
உங்களுடைய
யாத்திரை
வீடு
செல்வதற்கானது
ஆகும்.
தந்தை வந்து
அனைவருக்கும்
முக்தி
ஜீவன்
முக்திக்கான
வழி
கூறுகிறார்.
நீங்கள்
ஜீவன்
முக்தியில்
மற்றபடி அனைவரும்
முக்தியில்
சென்று
விடுவார்கள்.
ஐயோ
என்ற
கதறலுக்கு
பின்
வெற்றி
முழக்கம்
ஆகி
விடுகிறது.
இப்பொழுது
இருப்பது
கலியுகத்தின்
கடைசி.
ஆபத்துக்களோ
நிறைய
வரப்
போகிறது.
பிறகு
அந்த
நேரத்தில் நீங்கள்
நினைவு
யாத்திரையில்
இருக்க
முடியாது.
ஏனெனில்
குழப்பங்கள்
நிறைய
ஏற்பட்டு
விடும்.
எனவே இப்பொழுது
நினைவு
யாத்திரையை
அதிகரித்துக்
கொண்டே
செல்லுங்கள்.
அப்பொழுது
பாவங்கள்
சாம்பலாகி விடும்
என்று
தந்தை
கூறுகிறார்.
மேலும்
பின்
சேமிப்பும்
செய்யுங்கள்.
சதோபிரதானமாகவோ
ஆகுங்கள்.
நான்
ஒவ்வொரு
கல்பத்தின்
புருஷோத்தம
சங்கமயுகத்தில்
வருகிறேன்
என்று
தந்தை
கூறுகிறார்.
இதுவோ மிகவும்
சிறிய
பிராமணர்களின்
யுகம்
ஆகும்.பிராமணங்களின்
அடையாளம்
குடுமி
இருக்கிறது.
பிராமணர்,
தேவதை,
க்ஷத்திரியர்,
வைசியர்,
சூத்திரர்
-
இந்த
சக்கரம்
சுற்றிக்
கொண்டே
இருக்கிறது.
பிராமணர்களுடைய மிகவும்
சிறிய
குலம்
இருக்கிறது.
இந்த
சிறிய
யுகத்தில்
தந்தை
வந்து
உங்களுக்கு
கற்பிக்கிறார்.
நீங்கள் குழந்தைகளும்
ஆவீர்கள்.
மாணவர்களும்
ஆவீர்கள்.
சீடர்களும்
ஆவீர்கள்.
ஒரே
ஒருவரினுடையவர்கள் ஆவீர்கள்.
இது
போல
தந்தையாகவும்,
கல்வி
அளிக்கும்
ஆசிரியராகவும்,
படைப்பின்
முதல்
இடை
கடை பற்றிய
ஞானம்
அளிப்பவராகவும்,
பிறகு
கூடவே
அழைத்துச்
செல்பவராகவும்
வேறு
எந்த
ஒரு
மனிதனும் இருப்பதில்லை.
இந்த
விஷயங்களை
இப்பொழுது
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
சத்யுகத்தில்
கூட
முதல்
முதலில் மிகவும்
சிறிய
செடியாக
இருக்கும்.
மற்ற
எல்லோரும்
சாந்திதாமத்திற்குச்
சென்று
விடுவார்கள்.
தந்தைக்கு அனைவருக்கும்
சத்கதி
அளிக்கும்
வள்ளல்
என்று
கூறப்படுகிறது.
தந்தையை
"ஹே
பதீத
பாவன
பாபா வாருங்கள்""
என்று
அழைக்கிறார்கள்.
மறு
பக்கம்
பிறகு
பரமாத்மா
நாய்,
பூனை,
கல்,
மண்
அனைத்திலும் இருக்கிறார்
என்று
கூறுகிறார்கள்.
எல்லையில்லாத
தந்தையை
அவமதிக்கிறார்கள்.
உலகத்திற்கு
அதிபதியாக ஆக்கும்
தந்தையை
தூஷிக்கிறார்கள்.
இதற்குத்
தான்
இராவணனின்
சகவாச
தோஷம்
என்று
கூறப்படுகிறது.
சத்தியத்தின்
தொடர்பு
உயர்த்தும்.
தீய
தொடர்பு
வீழ்த்தும்.
இராவண
இராஜ்யம்
ஆரம்பமாகி
விடும்
பொழுது நீங்கள்
விழ
ஆரம்பிக்கிறீர்கள்.
தந்தை
வந்து
உங்களை
ஏறும்
கலையில்
முன்னேற்றுகிறார்.
தந்தை
வந்து மனிதனை
தேவதையாக
ஆக்குகிறார்.
அப்பொழுது
அனைவருக்கும்
நன்மை
ஆகி
விடுகிறது.
இப்பொழுதோ எல்லோரும்
இங்கே
இருக்கிறார்கள்.
மீதி
யாரெல்லாம்
இன்னும்
இருக்கிறார்களோ
அவர்கள்
வந்து
கொண்டே இருக்கிறார்கள்.
எது
வரையும்
நிராகாரி
உலகத்திலிருந்து எல்லா
ஆத்மாக்களும்
வந்து
கொண்டு
இருப்பார்களோ அதற்குள்
நீங்கள்
தேர்வில்
கூட
வரிசைக்கிரமமாக
தேர்ச்சி
அடைந்து
கொண்டே
செல்வீர்கள்.
இதற்கு
ஆன்மீகக் கல்லூரி
என்று
கூறப்படுகிறது.
ஆன்மீகத்
தந்தை
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
கற்பிக்க
வருகிறார்.
இராவண இராஜ்யம்
வந்த
உடனேயே
பின்
சரீரம்
விட்டு
அபவித்திர
(தூய்மையில்லாத)
இராஜா
ஆனீர்கள்.
மேலும் தூய்மையான
தேவதைகளுக்கு
முன்னால்
தலை
வணங்க
முற்பட்டீர்கள்.
ஆத்மா
தான்
பதீதமாக
(தூய்மையற்றதாக)
அல்லது
தூய்மையானதாக
ஆகிறது.
ஆத்மா
பதீதமாக
இருக்கும்
பொழுது
சரீரம்
கூட
பதீதமானதாக
கிடைக்கிறது.
உண்மையான
தங்கத்தில்
கலப்படம்
செய்யப்படும்
பொழுது
கலப்படம்
உடைய
நகை
ஆகி
விடுகிறது.
இப்பொழுது
ஆத்மாவிலிருந்து துரு
நீங்குவது
எப்படி?
யோக
அக்னி
வேண்டும்.
அதன்
மூலம்
உங்களுடைய விகர்மங்கள்
விநாசம்
ஆகி
விடும்.
ஆத்மாவில்
வெள்ளி,
செம்பு
மற்றும்
இரும்பு
படிந்துள்ளது.
இது
தான்
துரு ஆகும்.ஆத்மா
உண்மையான
தங்கம்
ஆகும்.இப்பொழுது
பொய்யானதாக
ஆகி
விட்டுள்ளது.
அந்த
துரு நீங்குவது
எப்படி?
இது
யோக
அக்னியாகும்.
ஞான
சிதையில்
அமர்ந்துள்ளீர்கள்.இதற்கு
முன்பு
காம
சிதையில் இருந்தீர்கள்.
தந்தை
ஞான
சிதையில்
அமர்த்துகிறார்.
ஞானக்
கடலான
தந்தை
இன்றி
வேறு
யாரும்
ஞான சிதையில்அமர்த்த
முடியாது.
மனிதர்கள்
பக்தி
மார்க்கத்தில்
எவ்வளவு
பூஜை
செய்து
கொண்டே
இருக்கிறார்கள்!
ஆனால்
யாரைப்
பற்றியும்
அறியாமல்
இருக்கிறார்கள்.
இப்பொழுது
நீங்கள்
அனைவரைப்
பற்றியும்
அறிந்துள்ளீர்கள்.
நீங்கள்
அனைவரும்
தேவதை
ஆகிறீர்கள்.
பின்
பூஜையின்
விஷயமே
முடிந்து
போய்
விடுகிறது.
இராவண இராஜ்யம்
ஆரம்பமாகும்
பொழுது
பக்தி
ஆரம்பமாகிறது.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
வெகுகாலம்
கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு
தாய்
தந்தை
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
தண்டனைகளிலிருந்து விடுபட
வேண்டும்
என்றால்
வெற்றி
மாலையின்
மணி
ஆவதற்கான புருஷார்த்தம்
(முயற்சி)
செய்ய
வேண்டும்.
ஆன்மீக
வழி
காட்டி
ஆகி
அனைவருக்கும்
சாந்தி தாமமாகிய
வீட்டிற்கான
யாத்திரை
செய்விக்க
வேண்டும்.
2.
நினைவு
யாத்திரையை
அதிகரித்து
அதிகரித்து
அனைத்து
பாவங்களிலிருந்தும் விடுபட்டவர் ஆக
வேண்டும்.
யோக
அக்னி
மூலமாக
ஆத்மாவை
உண்மையான
தங்கமாக
ஆக்க
வேண்டும்.
சதோபிரதானமாக
ஆக
வேண்டும்.
வரதானம்:
ஒவ்வொரு
காரியத்திலும்
தந்தையுடன்
வித
விதமான
சம்பந்தத்தின்
நினைவு
சொரூபமாக
ஆகக்
கூடிய
சிரேஷ்ட
பாக்கியவான்
ஆகுக.
முழு
நாளும்
ஒவ்வொரு
காரியத்திலும்
சில
நேரம்
பகவானின்
தோழன்
அல்லது
தோழியாக,
சில நேரம்
வாழ்க்கைத்
துணை
ரூபத்தில்,
சில
நேரம்
பரிபா-க்கும்
குழந்தையின்
ரூபத்தில்,
மனம்
உடைந்த நேரங்களில்
சர்வசக்திவான்
சொரூபத்தின்
மாஸ்டர்
சர்வசக்திவான்
போன்ற
நினைவு
சொரூபத்தை வெளிபடுத்தினால்
மனம்
குஷியடைந்து
விடும்
மற்றும்
தந்தையின்
துணையின்
அனுபவம்
தானாகவே செய்வீர்கள்,
பிறகு
இந்த
பிராமண
வாழ்க்கை
சதா
விலை
மதிப்பிட
முடியாத,
உயர்ந்த
பாக்கியவான் வாழ்க்கை
என்ற
அனுபவம்
ஏற்பட்டுக்
கொண்டே
இருக்கும்.
சுலோகன்:
பிரம்மா
பாபாவிற்கு
சமம்
ஆவது
என்றால் சம்பூர்ண
நிலை
என்ற
இலட்சியத்தை
அடைவதாகும்.
ஓம்சாந்தி