15.09.2019                           காலை முரளி               ஓம் சாந்தி                        அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்    28.01.1985          மதுபன்


 

உலக சேவைக்கான சகஜ சாதனம் மனசா சேவை

 

இன்று சர்வசக்திவான் தந்தை, தம்முடைய சக்தி சேனை, பாண்டவ சேனை, ஆன்மிக சேனையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சேனையின் மகாவீர் தமது ஆன்மிக சக்தி மூலம் எது வரை வெற்றியாளராக ஆகியிருக்கிறார்? விசேஷமாக மூன்று சக்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மகாவீர் ஆத்மாவின் மனசா சக்தி எது வரை சுய மாற்றத்திற்காகவும் சேவைக்காகவும் தாரணை ஆகியிருக்கிறது? அதே போல் வார்த்தையின் சக்தி, கர்மணா சக்தி, அதாவது சிரேஷ்ட கர்மத்தின் சக்தி எது வரை சேமிப்பாகி இருக்கிறது? வெற்றி ரத்தினம் ஆவதற்கு இந்த மூன்று சக்திகளும் அவசியமாகும். மூன்று சக்திகளில் ஒன்று குறைவாக இருந்தாலும் நிகழ்காலப் பிராப்தி மற்றும் பிராலப்தம் குறைவாகி விடும். வெற்றி ரத்தினம் என்றால் மூன்று சக்திகளும் நிரம்பியவர். உலக சேவாதாரியிலிருந்து உலக ராஜ்ய அதிகாரி ஆவதற்கான ஆதாரம் இந்த மூன்று சக்திகளும் நிரம்பிய நிலையாகும். சேவாதாரி ஆவது மற்றும் உலக சேவாதாரி ஆவது, உலக ராஜன் ஆவது அல்லது சத்யுக ராஜன் ஆவது இதற்கிடையிலும் வேறுபாடு உள்ளது. சேவாதாரிகள் அநேகர் உள்ளனர், உலக சேவாதாரிகள் ஒரு சிலர் மட்டுமே. சேவாதாரி என்றால் மூன்று சக்திகளையும் தங்களின் சக்திக்கேற்றவாறு தாரணை செய்தவர்கள். உலக சேவாதாரி என்றால் மூன்று சக்திகளும் நிரம்பப் பெற்றவர். இன்று ஒவ்வொருவரிடமும் மூன்று சக்திகளும் சதவிகிதத்தில் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சர்வ சிரேஷ்ட மனசா சக்தி மூலம் யாராவது ஆத்மா எதிரில் இருந்தாலும், அருகில் இருந்தாலும், அல்லது எவ்வளவு தான் தூரத்தில் இருந்தாலும் -- ஒரு விநாடியில் அந்த ஆத்மாவுக்குப் பிராப்தியின் சக்தியை அனுபவம் செய்விக்க முடியும். மனதின் சக்தியானது, எந்த ஓர் ஆத்மாவின் மனக்குழப்பம் நிறைந்த ஸ்திதியையும் கூட ஆடாது உறுதியாக ஆக்க முடியும். மனதின் சக்தி, அதாவது சுபபாவனை, சிரேஷ்ட விருப்பம் -- இந்த சிரேஷ்ட பாவனை மூலம் எந்த ஓர் ஆத்மாவையும், சந்தேக புத்தி உள்ளவர்களை, பாவனையுடன் கூடிய புத்தி உள்ளவர்களாக ஆக்க முடியும். சிரேஷ்ட பாவனை மூலம் எந்த ஓர் ஆத்மாவின் வீணான பாவனையையும் மாற்றி, சக்திசாலி பாவனையாக ஆக்க முடியும். சிரேஷ்ட பாவனை மூலம் எந்த ஓர் ஆத்மாவின் சுபாவத்தையும் கூட மாற்ற முடியும். சிரேஷ்ட பாவனையின் சக்தி மூலம் ஆத்மாவுக்கு பாவனையின் பலனை அனுபவம் செய்விக்க முடியும். சிரேஷ்ட பாவனை மூலம் பகவானுக்கு சமீபமாகக் கொண்டுவர முடியும். சிரேஷ்ட பாவனை எந்த ஓர் ஆத்மாவின் பாக்கியத்தின் ரேகையையும் மாற்ற முடியும். சிரேஷ்ட பாவனை தைரியமற்ற ஆத்மாவை தைரியவானாக ஆக்கி விடுகிறது. இதே சிரேஷ்ட பாவனையின் விதிப்படி மனசா சேவையை எந்த ஓர் ஆத்மாவுக்கும் செய்ய முடியும். மனசா சேவை என்பது இப்போதைய சமயத்தின் பிரமாணம் மிக அவசியமாகும். ஆனால் யாருக்கு தன்னுடைய மனம், அதாவது சங்கல்பம் சதா அனைவருக்காகவும் சிரேஷ்டமானதாக இருக்கிறதோ, சுயநலமற்றதாக உள்ளதோ, சதா பரோபகார பாவனை உள்ளதோ, அவர்கள் தாம் மனசா சேவை செய்ய முடியும். மேலும் அவர்களிடம் அபகாரிக்கும் கூட உபகாரம் செய்யும் சிரேஷ்ட பாவனை இருக்க வேண்டும். சதா கொடுக்கும் வள்ளலின் பாவனை இருக்க வேண்டும். சதா சுய மாற்றம், தனது சிரேஷ்ட கர்மத்தின் மூலம் மற்றவர்களுக்கு சிரேஷ்ட கர்மம் செய்வதற்கான தூண்டுதல் தருபவராக இருக்க வேண்டும். இவர்களும் செய்யட்டும், அப்போது நானும் செய்கிறேன், இவர் கொஞ்சம் செய்யட்டும், நானும் கொஞ்சம் செய்கிறேன், சிறிது இவரும் செய்யட்டும் என்ற இந்த பாவனையிலிருந்து அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். யாராவது செய்ய இயலாமல் இருந்தாலும், பிறகும் கூட இரக்கத்தின் பாவனை, சதா சகயோகத்தின் பாவனை, அவர்களின் தைரியத்தை அதிகரிப்பதற்கான பாவனை இருக்க வேண்டும். அத்தகையவர் தாம் மனசா சேவாதாரி எனச் சொல்லப் படுவார். மனசா சேவையை, ஓரிடத்தில் நிலைத்திருந்தவாறே கூட நாலாபுறத்துக்கான சேவை செய்ய முடியும். வாய்மொழி மூலமாகச் செய்யும் சேவை மற்றும் கர்மத்திற்காகவோ சென்று தான் ஆக வேண்டும். மனசா சேவையை எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு செய்ய முடியும்.

 

மனசா சேவை என்பது ஆன்மிக வயர்லெஸ் செட்டாகும். அதன் மூலம் தூரத்தின் சம்மந்தத்தை சமீபமாக ஆக்க முடியும். தூரத்தில் அமர்ந்தவாறே எந்த ஓர் ஆத்மாவையும் பாபாவுடையவராக ஆவதற்கான ஊக்கம்-உற்சாகத்தை உருவாக்குவதற்கான செய்தியைக் கொடுக்க முடியும். அப்போது யாரோ மகான் சக்தி என்னை அழைத்துக் கொண்டிருக்கிறது, சில விலைமதிக்க முடியாத பிரேரணைகளை எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதாக அந்த ஆத்மாவுக்கு அனுபவமாகும். எப்படி யாருக்காவது முன் செய்தி கொடுத்து ஊக்கம்-உற்சாகத்தில் கொண்டு வருகிறீர்களோ, அது போல. மனசா சக்தி மூலமாகவும் கூட அந்த ஆத்மா இது போலத்தான் அனுபவம் செய்வார் -- யாரோ எதிரில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதாக. தூரத்திலிருந்த போதும் முன்னால் அமர்ந்திருப்பதாக அனுபவம் ஆகும். உலக சேவாதாரி ஆவதற்கான சகஜ சாதனமே மனசா சேவை தான். எப்படி விஞ்ஞானிகள் இந்த சாகார சிருஷ்டியிலிருந்து, பூமியிலிருந்து மேலே விண்வெளி வாகனத்தின் மூலம் தங்களின் காரியத்தை சக்திசாஆக்குவதற்கான முயற்சி செய்து கொண்டுள்ளனர். ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். ஏன்? சூட்சுமம் சக்திசாலியாக உள்ளது. மனசா சக்தி கூட உள் நோக்குமுக வாகனமாகும். அதன் மூலம் எங்கே விரும்பினாலும் எவ்வளவு விரைவாகச் செல்ல விரும்பினாலும் சென்று சேர முடியும். எப்படி விஞ்ஞானத்தின் மூலம் பூமியின் ஈர்ப்பு சக்தியில் இருந்து அப்பால் செல்பவர்கள் தாமாகவே லேசாக ஆகி விடுகின்றனர். அது போல் மனசா சக்திசாஆத்மா தானாகவே டபுள் லைட் சொரூபமாக சதா அனுபவம் செய்கிறார். எப்படி விண்வெளி வாகனத்தில் செல்பவர் உயரத்தில் இருக்கும் காரணத்தால் பூமி முழுவதன் சித்திரத்தை வரைய விரும்பினாலும் வரைய முடியும். அது போல் அமைதியின் சக்தி மூலம் உள்முகநோக்கின் வாகனம் மூலம் மனசா சக்தி மூலம் எந்த ஓர் ஆத்மாவையும் சரித்திரவான் ஆக்குவதற்கான, சிரேஷ்ட ஆத்மா ஆக்குவதற்கான பிரேரணை கொடுக்க முடியும். விஞ்ஞானிகளோ ஒவ்வொரு பொருள் மீதும் சமயம் மற்றும் செல்வத்தை நன்கு ஈடுபடுத்துகின்றனர். ஆனால் நீங்கள் செலவே இல்லாமல் குறைவான சமயத்தில் அதிக சேவை செய்ய முடியும். எப்படி தற்சமயம் எங்கெங்கோ பறக்கும் தட்டைப் பார்க்கின்றனர். செய்திகளைக் கேட்கிறீர்கள் இல்லையா? அதுவும் ஒளி மட்டுமே காணப்படுகிறது. அது போல் மனசா சேவாதாரி ஆத்மாக்கள் உங்களுக்கு முன்பாகச் சென்று அனுபவம் செய்வார்கள் -- ஏதோ ஒளிப் புள்ளி வந்தது, விசித்திர அனுபவம் செய்வித்துச் சென்றது. இவர்கள் யாராக இருக்கும்? எங்கிருந்து வந்தனர்? என்ன கொடுத்து விட்டுச் சென்றனர்? இந்த விவாதம் அதிகரித்துக் கொண்டே செல்லும். எப்படி ஆகாயத்தின் நட்சத்திரங்கள் பக்கம் அனைவரின் பார்வை செல்கிறது, அது போல் பூமியின் நட்சத்திரங்களின் தெய்விக ஜோதியை நாலாபுறமும் அனுபவம் செய்வார்கள். மனசா சேவாதாரிகளின் சக்தி அத்தகையது. புரிந்ததா? மகான் தன்மை என்பதோ இன்னும் அதிகம். ஆனால் இன்று இவ்வளவு மட்டுமே சொல்கிறேன். மனசா சேவையை இப்போது தீவிரப் படுத்துங்கள், அப்போது 9 லட்சம் தயாராவார்கள். இப்போது பொன்விழா சமயம் வரை இவ்வளவு எண்ணிக்கை வந்துள்ளதா? சத்யுகத்தின் வைரவிழா வரை 9 லட்சமோ வேண்டும் இல்லையா? இல்லையென்றால் உலக ராஜன் யார் மீது ராஜ்யம் செய்வார்? 9 லட்சம் நட்சத்திரங்கள் பாடப் பட்டுள்ளனர் இல்லையா? நட்சத்திர ரூப ஆத்மாவின் அனுபவம் செய்வீர்களானால் அப்போது 9 லட்சம் நட்சத்திரங்கள் பாடப் படுவார்கள். ஆகவே இப்போது நட்சத்திரங்களின் அனுபவம் செய்வியுங்கள். நல்லது -- நாலாபுறமும் இருந்து வந்துள்ள குழந்தைகளுக்கு மதுபன் நிவாசி ஆவதற்கான வாழ்த்துகள் மற்றும் சந்திப்பின் விழாவுக்கான வாழ்த்துகள்! இதே அவிநாசி அனுபவத்தின் வாழ்த்துகளை சதா கூடவே வைத்திருங்கள். புரிந்ததா?

 

சதா மகாவீர் ஆகி, மனசா சக்தியின் மகான் தன்மை மூலம் சிரேஷ்ட சேவை செய்யக்கூடிய, சதா சிரேஷ்ட பாவனை மற்றும் சிரேஷ்ட விருப்பத்தின் விதி மூலம் எல்லையற்ற சேவையின் சித்தி பெறக்கூடிய, தனது உயர்ந்த ஸ்திதி மூலம் நாலாபுறமும் உள்ள ஆத்மாக்களுக்கு சிரேஷ்ட பிரேரணை கொடுக்கும் உலக சேவாதாரிகள், சதா தங்களின் சுப பாவனை மூலம் மற்ற ஆத்மாக்களுக்கும் கூட பாவனையின் பலனைக் கொடுக்கக் கூடிய, அத்தகைய விஷ்வ கல்யாண்காரி, பரோபகாரி, உலக சேவாதாரி குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

 

குமார்களுக்காக பாப்தாதாவின் விசேஷ மதுர மகாவாக்கியங்கள்

 

குமார், பிரம்மா குமாராகவோ ஆகி விட்டீர்கள். ஆனால் பிரம்மாகுமார் ஆன பிறகு என்னவாக ஆக

வேண்டும்? சக்திசாலி குமார். எது வரை சக்திசாலி ஆக வில்லையோ, அது வரை வெற்றியாளராக ஆக முடியாது. சக்திசாலி குமார் எப்போதுமே ஞானம் நிறைந்த, சக்தி நிறைந்த ஆத்மாவாக இருப்பார். ஞானம் நிறைந்தவர் என்றால் படைப்பவர் பற்றியும் அறிந்திருப்பவர், படைப்பு பற்றியும் அறிந்திருப்பவர் மற்றும் மாயாவின் பலவித ரூபங்களையும் அறிந்திருப்பவர். அத்தகைய ஞானம் நிறைந்த, சக்தி நிறைந்தவர் சதா வெற்றியாளராக இருப்பார். ஞானத்தை வாழ்க்கையில் தாரணை செய்வது என்றால் ஞானத்தை ஆயுதமாக (சஸ்திரம்) ஆக்குவது. ஆக, சஸ்திரதாரி சக்திசாலியாக இருப்பார் இல்லையா? இன்று இராணுவத்தினர் எந்த ஆதாரத்தில் சக்திசாலியாக உள்ளனர்? ஆயுதங்கள் உள்ளன, வெடிமருந்துகள் உள்ளன, அதனால் பயமற்றவராக ஆகி விடுகின்றனர். ஆக, யார் ஞானம் நிறைந்தவராக இருப்பாரோ, அவர் சக்திசாலியாக அவசியம் இருப்பார். ஆகவே மாயா பற்றியும் முழு ஞானம் உள்ளது. என்னவாகும், எப்படியாகும், தெரியாது, மாயா எப்படி வந்தது என்றால் ஞானம் நிறைந்தவர் இல்லை என்றாகிறது. ஞானம் நிறைந்த ஆத்மா முன்கூட்டியே அறிந்து கொள்வார். எப்படி புத்திசாலியாக இருப்பவர்கள், நோயை முன்பாகவே அறிந்து கொள்கின்றனர். காய்ச்சல் வரப் போகிறது என்றால் ஏதோ ஆகிக் கொண்டிருக்கிறதே என்று முன்கூட்டியே தெரிந்து கொண்டு, முதலிலேயே மருந்து எடுத்துக் கொண்டு அதைச் சரி செய்து, குணமாக்கிக் கொள்வார்கள். புத்தியற்றவர்களுக்குக் காய்ச்சல் வந்தாலும் கூட சுற்றிக் கொண்டே இருப்பார்கள். காய்ச்சலும் அதிகமாகிக் கொண்டே போகும். அப்படியே மாயாவும் வருகிறது, ஆனால் வருவதற்கு முன் புரிந்து கொண்டு, அதை தூரத்திலிருந்தே விரட்டிவிட வேண்டும். ஆக, அப்படிப்பட்ட புத்திசாலி குமார்கள் இல்லையா, நீங்கள்? அல்லது உங்களிடம் கூட மாயா வருமானால் அதை விரட்டுவதில் நேரம் பிடிக்கிறதா? சக்தியைப் பார்த்து, தூரத்திலிருந்தே விரோதி ஓடிப்போய் விடுகிறான். வந்த பிறகு அதை விரட்டுகிறீர்கள் என்றால் நேரமே வீணாகிறது மற்றும் பலவீனமான பழக்கமாக ஆகி விடும். யாராவது அடிக்கடி நோய்வாய்ப் படுவாரானால் பலவீனமாகி விடுகிறார் இல்லையா? அல்லது அடிக்கடி படிப்பில் ஃபெயிலாகிப் போனால் இவர் படிப்பில் பலவீனமாக உள்ளார் எனச் சொல்வார்கள் இல்லையா? அது போல் மாயா அடிக்கடி வருகிறது, போராடிக் கொண்டே இருக்கிறது என்றால் தோல்வியடைவதே பழக்கமாகி விடும் மற்றும் அடிக்கடி தோல்வியடைவதால் பலவீனமாகி விடுவீர்கள். அதனால் சக்திசாலி ஆகுங்கள். அத்தகைய சக்திசாலி ஆத்மா சதா பிராப்தியின் அனுபவம் செய்வார்கள். யுத்தத்தில் தங்கள் நேரத்தை வீணாக்க மாட்டார்கள். வெற்றியின் குஷியைக் கொண்டாடுவார்கள். ஆகவே ஒரு போதும் எந்த ஒரு விஷயத்திலும் பலவீனமாக ஆகாதீர்கள். குமார் என்றாலே புத்தி நிறைந்தவர்கள். அதர்குமார் ஆவதால் புத்தி பங்கிடப் பட்டு விடுகிறது. குமார்களுக்கு ஒரே வேலை தான் உள்ளது, அது தங்களுடைய வாழ்க்கை. அவர்களுக்கோ எவ்வளவு பொறுப்புகள் உள்ளன! நீங்கள் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக இருக்கிறீர்கள். யார் சுதந்திரமாக இருக்கிறார்களோ, அவர்கள் முன்னேறிச் செல்வார்கள். சுமை உள்ளவர்கள் மெது-மெதுவாகத் தான் செல்வார்கள். சுதந்திரமாக, லேசாக இருந்தால் அவர்கள் வேகமாகச் செல்வார்கள். ஆக, நீங்கள் மிக வேகமாகச் செல்பவர்களா, ஒரே சமநிலையில் (ஏக்ரஸ்) இருக்கிறீர்களா? சதா தீவிரம் என்றால் ஒரே சமநிலை. ஆறு மாதம் முடிந்த பிறகும் முதலில் எப்படி இருந்தார்களோ, அப்படியே சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் இருக்கக் கூடாது. இதையும் தீவிர வேகம் எனச் சொல்ல மாட்டார்கள். இன்று தீவிர வேகத்தில் செல்பவர்கள், நாளை அதை விட அதிகமாக முன்னால், நாளை மறுநாள் அதை விடவும் முன்னால் செல்வார்களானால் அவர்கள் தீவிர வேகத்தில் செல்பவர்கள் எனச் சொல்லப் படுவார்கள். ஆகவே சதா தன்னை சக்திசாலி குமார் என உணருங்கள்.  பிரம்மா குமார் ஆகி விட்டோம் என்ற இதே குஷியில் மட்டுமே இருந்து விட்டீர்கள், சக்திசாலி ஆகவில்லை என்றால் வெற்றியாளர் ஆக முடியாது. பிரம்மாகுமார் ஆவது என்பது மிகவும் நல்லது தான், ஆனால் சக்திசாலி பிரம்மாகுமார் சதா சமீபத்தில் இருக்கிறார்கள். இப்போது சமீபத்தில் இருப்பவர்கள், இராஜ்யத்திலும் கூட சமீபத்தில் இருப்பார்கள். இப்போதைய ஸ்திதியில் சமீபம் இல்லை என்றால் இராஜ்யத்திலும் சமீப நிலை என்பது இருக்காது. இப்போதைய பிராப்தி, சதா காலத்தின் பிராப்தியை உருவாக்கி விடுகிறது, ஆகவே சக்திசாலி அத்தகைய சக்திசாலிதான் விஷ்வ கல்யாண்காரி ஆக முடியும். குமார்களிடம் சக்தியோ இருக்கவே செய்கிறது சரீரத்தின் சக்தியாக இருந்தாலும் சரி, ஆத்மாவின் சக்தியாக இருந்தாலும் சரி. ஆனால் உலக நன்மைக்காக சக்தி உள்ளதா, அல்லது உலக விநாசத்திற்கான காரியத்தில் ஈடுபடுத்துவதற்கான சக்தி உள்ளதா? சங்கல்பத்தில் கூட சதா அனைவருக்காகவும் நன்மையின் பாவனை இருக்கட்டும். கனவில் கூட நன்மையின் பாவனை இருக்கட்டும். அவர் தாம் சிரேஷ்ட சக்திசாலி எனச் சொல்லப் படுவார். குமார் சக்தி மூலம் என்ன நினைக்கின்றனரோ, அதைச் செய்ய முடியும். அந்த சங்கல்பம் மற்றும் கர்மம் இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். இன்று சங்கல்பம் செய்வதும் பின்னால் கர்மம் செய்வதும் கூடாது. சங்கல்பம் மற்றும் கர்மம் இரண்டும் ஒன்றாகவும் இருக்க வேண்டும் சேர்ந்தாற்போலவும் இருக்க வேண்டும். அத்தகைய சக்தி இருக்க வேண்டும். அத்தகைய சக்தி உள்ளவர்கள் தாம் அநேக ஆத்மாக்களுக்கு நன்மை செய்ய முடியும். ஆக, நீங்கள் சதா வெற்றி பெறக் கூடியவர்களா அல்லது பிரச்சினை செய்யக் கூடியவர்களா? மனதில், கர்மத்தில், தங்களுக்குள் அனைத்திலும் சரி. எதிலும் பிரச்சினை கூடாது. சதா தன்னை விஷ்வ கல்யாண்காரி குமார் என உணர்ந்து கொள்வீர்களானால் என்னென்ன கர்மம் செய்வீர்களோ, அதில் நன்மையின் பாவனை நிறைந்திருக்கும். நல்லது.

 

விடைபெறும் சமயம், அமிர்த வேளையில் குழந்தைகள் அனைவருக்கும் அன்பு நினைவுகளைக் கொடுத்தார் ஒவ்வொரு காரியமும் மங்களகரமானதாக இருக்கட்டும். ஒவ்வொரு கர்மமும் சதா வெற்றி தருவதாக இருக்கட்டும். அதற்காகக் குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்! அப்படியே ஒவ்வொரு நாளும் சங்கம யுகத்தின் சுபம் தான், சிரேஷ்டமானது தான், ஊக்கம்-உற்சாகம் தருவது. ஆகவே ஒவ்வொரு நாளின் மகத்துவம் அதனதனுடையதாகும். இன்றைய நாள் ஒவ்வொரு சங்கல்பமும் கூட மங்கள மயமானதாக இருக்கட்டும். அதாவது சுப சிந்தனை ரூபம் உள்ளதாக இருக்கட்டும். ஆக, இன்றைய நாளின் இந்த மகத்துவத்தை சங்கல்பம், பேச்சு மற்றும் கர்மம் மூன்றிலும் விசேஷ நினைவில் வைக்க வேண்டும். மேலும் இந்த நினைவு வைப்பது தான் ஒவ்வொரு விநாடியும் பாப்தாதாவின் அன்பு நினைவை ஸ்வீகாரம் செய்வதாகும். ஆகவே வெறுமனே இப்போது அன்பு நினைவை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை, ஆனால் நடைமுறைப் படுத்த வேண்டும், அதாவது அன்பு நினைவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இன்று நாள் முழுவதும் அன்பு நினைவைப் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது நினைவில் இருந்து ஒவ்வொரு சங்கல்பம், பேச்சு மூலம் அன்பின் அலையில் ஆடிக் கொண்டே இருக்க வேண்டும். நல்லது. அனைவருக்கும் விசேஷ நினைவு, காலை வணக்கம்.

 

மாநாட்டுக்காக பாப்தாதாவின் விசேஷ செய்தி

 

பாப்தாதா சொன்னார், குழந்தைகள் மாநாடு நடத்திக் கொண்டுள்ளனர். மாநாடு (சம்மேளன்) என்பதன் பொருள் சமமான சந்திப்பு (சம்-மிலன்). ஆக, மாநாட்டுக்கு வருபவர்கள் பாப்-சமான் இல்லை என்றாலும் தனக்குச் சமமாக நிச்சய புத்தி உள்ளவராக அவசியம் ஆக்க வேண்டும். யாரெல்லாம் வருகின்றனரோ, ஏதாவது ஆகிச் செல்ல வேண்டும். வெறுமனே பேசி விட்டுச் செல்லக் கூடாது. இது வள்ளலின் வீடு. ஆகவே வருகிறவர்கள் இதைப் புரிந்து கொள்ளக் கூடாது -- அதாவது இவர்களுக்கு உதவி செய்ய வந்துள்ளோமா அல்லது இவர்களுக்கு சகயோகம் கொடுக்க வந்துள்ளோமா என்று. ஆனால் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் -- அதாவது இந்த இடம் பெற்றுக் கொள்வதற்கான இடம், கொடுப்பதற்கானதல்ல என்று. இங்கே ஒவ்வொருவரும் சிறியவர்-பெரியவர் யாரைச் சந்தித்தாலும் அச்சமயம் யார் இங்கே இருக்கின்றனரோ, அவர்கள் இந்த சங்கல்பம் செய்ய வேண்டும் -- திருஷ்டி மூலம், வாயுமண்டலம் மூலம் சம்மந்தம்-தொடர்பின் மூலம் மாஸ்டர் வள்ளல் ஆகி இருக்க வேண்டும். அனைவருக்கும் ஏதேனும் கொடுத்துத் தான் அனுப்ப வேண்டும். இது ஒவ்வொரு வருக்கும் லட்சியமாக இருக்க வேண்டும். வருகிறவர்களுக்கு மதிப்போ கொடுக்கத் தான் வேண்டும். ஆனால் அனைவரின் மதிப்பையும் ஒரு தந்தை மீது அமர்த்த வேண்டும். பாபா சொல்லிக் கொண்டிருந்தார் -- என்னுடைய இத்தனை லைட் ஹவுஸ் குழந்தைகள் அனைவரும் நாலாபுறத்திலிருந்தும் மனசா சேவை மூலம் ஒளி கொடுப்பார்களானால் வெற்றி கிடைத்தே விட்டது. அந்த ஒரு லைட் ஹவுஸ் எத்தனைப் பேருக்கு வழி காட்டுகிறது! -- லைட் ஹவுஸ் -- மைட் ஹவுஸ் குழந்தைகள் நீங்களோ அதிகமான அற்புதத்தைச் செய்ய முடியும். நல்லது.

 

வரதானம்:

ஈஸ்வரிய சேவையின் பந்தனத்தின் மூலம் சமீப-சம்மந்தத்தில் வரக்கூடிய ராயல் பரிவாரத்தின் அதிகாரி ஆகுக.

 

ஈஸ்வரிய சேவையின் பந்தனம் சமீப சம்மந்தத்தில் கொண்டு வருவதாகும். எவ்வளவு ஒருவர் சேவை செய்கிறாரோ, அவ்வளவு சேவையின் பலன் சமீப சம்மந்தத்தில் வருகிறது. இங்குள்ள சேவாதாரி அங்குள்ள ராயல் பரிவாரத்தின் அதிகாரி ஆவார்கள். எவ்வளவு இங்கே கடினமான சேவை செய்கின்றனரோ, அவ்வளவு அங்கே ஓய்வாக சிம்மாசனத்தில் அமர்வார்கள். மற்றும் இங்கே யார் ஓய்வாக இருக்கின்றனரோ, அவர்கள் அங்கே வேலை செய்வார்கள். ஒவ்வொரு விநாடியின், ஒவ்வொரு காரியத்தின் கணக்கு-வழக்கு பாபாவிடம் உள்ளது.

 

சுலோகன்:

சுய மாற்றத்தின் மூலம் உலக மாற்றத்தின் வைப்ரேஷன்களைத் (அதிர்வலைகள்) தீவிர வேகத்தில் பரவச் செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி