13.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே - அழியக்கூடிய சரீரங்களின் மீது அன்பு செலுத்தாமல் அழிவற்ற தந்தையிடம் அன்பு வைத்தீர்கள் என்றால் அழுவதிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.

 

கேள்வி:-

தவறான அன்பு எது மற்றும் அதனுடைய விளைவு என்னவாக இருக்கிறது?

 

பதில்:-

அழியக்கூடிய சரீரங்களின் மீது பற்று வைப்பது தவறான அன்பாகும். யார் அழியக்கூடிய பொருட்களின் மீது பற்று வைக்கிறார்களோ, அவர்கள் அழுகிறார்கள். தேக-அபிமானத்தால் அழுகை வருகிறது. சத்யுகத்தில் அனைவரும் ஆத்ம-அபிமானிகளாக இருக்கிறார்கள், ஆகையினால் அழுவது என்ற விஷயமே இருப்பதில்லை. யார் அழுகிறார்களோ, அவர்கள் இழக்கிறார்கள். அழிவற்ற குழந்தைகளுக்கு அழிவற்ற தந்தையின் படிப்பினை கிடைக்கிறது, ஆத்ம- அபிமானிகளாக ஆனீர்கள் என்றால் அழுவதிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.

 

ஓம் சாந்தி.

ஆத்மாவும் அழிவற்றது பாபாவும் அழிவற்றவர் என்பதை குழந்தைகள் தான் தெரிந்துள்ளார்கள், எனவே யாரிடம் அன்பு செலுத்துவது? அழிவற்ற ஆத்மாவிடம். அழிவற்றதின் மீது தான் அன்பு செலுத்த வேண்டும், அழியக்கூடிய சரீரத்தின் மீது அன்பு செலுத்தலாகாது. முழு உலகமும் அழியக்கூடியதாகும், ஒவ்வொரு பொருளும் அழியக்கூடியதாகும், இந்த சரீரம் அழியக்கூடியது, ஆத்மா அழிவற்றதாகும். ஆத்மாவின் அன்பு அழிவற்றதாக இருக்கிறது. ஆத்மா ஒருபோதும் மரணமில்லை, அதனை சரியானது என்று சொல்லப்படுகிறது. நீங்கள் தவறானவர் ஆகி விட்டீர்கள் என்று பாபா கூறுகின்றார். உண்மையில் அழிவற்றதின் மேல் அழிவற்ற அன்பு இருக்க வேண்டும். உங்களுடைய அன்பு அழியக்கூடிய சரீரத்தோடு ஏற்பட்டு விட்டது, ஆகையினால் அழ வேண்டியிருக்கிறது. அழிவற்றதோடு அன்பு இல்லை. அழியக்கூடியதோடு அன்பு இருக்கின்ற காரணத்தினால் அழவேண்டியிருக்கிறது. இப்போது நீங்கள் தங்களை அழிவற்ற ஆத்மா என்று புரிந்து கொள்கிறீர்கள் என்றால் அழுவதற்கான விஷயமே இல்லை ஏனென்றால் ஆத்ம-அபிமானிகளாக இருக்கின்றீர்கள். எனவே பாபா இப்போது உங்களை ஆத்ம-அபிமானிகளாக மாற்றுகின்றார். தேக-அபிமானிகளாக இருப்பதின் மூலம் அழவேண்டியதாக இருக்கிறது. அழியக்கூடிய சரீரத்திற்காக அழுகிறார்கள். ஆத்மா இறப்பதில்லை என்று புரிந்தும் இருக்கிறார்கள். தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று பாபா கூறுகின்றார். நீங்கள் அழிவற்ற தந்தையின் குழந்தைகள் அழிவற்ற ஆத்மாக்களாவீர்கள், நீங்கள் அழ வேண்டிய அவசியம் இல்லை. ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு விட்டு சென்று வேறொரு நடிப்பை நடிக்கிறது. இது விளையாட்டாகும். நீங்கள் சரீரத்தின் மீது ஏன் பற்று வைக்கிறீர்கள். தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களிலிருந்து புத்தியின் தொடர்பை துண்டியுங்கள். தங்களை அழிவற்ற ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். ஆத்மா ஒருபோதும் இறப்பதில்லை. யார் அழுகிறார் களோ, அவர்கள் இழக்கிறார்கள் என்று பாடப்பட்டுள்ளது. ஆத்ம-அபிமானிகளாக ஆவதின் மூலம் தான் தகுதியானவர்களாக ஆவீர்கள். எனவே பாபா வந்து தேக- அபிமானியிலிருந்து ஆத்ம-அபிமானியாக மாற்றுகின்றார். நீங்கள் எப்படி மறந்து விட்டவர்களாக இருக்கின்றீர்கள். பிறவி-பிறவிகளாக நீங்கள் அழ வேண்டியிருக்கிறது. இப்போது மீண்டும் ஆத்ம-அபிமானிகளாக ஆவதற்கான படிப்பினை உங்களுக்குக் கிடைக்கிறது. பிறகு நீங்கள் ஒருபோதும் அழமாட்டீர்கள். இது அழுகின்ற உலகமாகும், அது சிரிக்கின்ற உலகமாகும். இது துக்கமான உலகம், அது சுகம் நிறைந்த உலகமாகும். பாபா மிகவும் நல்ல விதத்தில் படிப்பினை கொடுக்கின்றார். அழிவற்ற குழந்தைகளுக்கு அழிவற்ற தந்தையின் படிப்பினை கிடைக்கிறது. அவர்கள் தேக-அபிமானிகளாக இருக்கின்றார்கள் என்பதால் தேகத்தைப் பார்த்து தான் கல்வியைக் கொடுக்கிறார்கள். எனவே தேகத்தின் நினைவு வருவதினால் அழுகிறார்கள். சரீரம் அழிந்து விட்டதைப் பார்க்கிறார்கள் பிறகு அவர்களை நினைவு செய்வதின் மூலம் என்ன பலன்? மண்ணை நினைவு செய்வார்களா என்ன? அழிவற்ற பொருள் சென்று வேறொரு சரீரத்தை எடுக்கிறது.

 

யார் நல்ல கர்மம் செய்கிறார்களோ, அவர்களுக்கு சரீரமும் நல்லதாகக் கிடைக்கிறது, என்பதை குழந்தைகள் தெரிந்திருக்கிறார்கள். சிலருக்கு கெட்டுப் போன நோயுடைய சரீரம் கிடைக்கிறது, அதுவும் கூட கர்மத்தின் படி ஆகும். நல்ல கர்மம் செய்தால் மேலே சென்று விடுவார்கள் என்பது கிடையாது. இல்லை, மேலே யாரும் செல்ல முடியாது. நல்ல கர்மம் செய்தால் நல்லவர்கள் என்று சொல்லப்படுவார்கள். நல்ல பிறவி கிடைக்கும் இருந்தாலும் கீழே இறங்கத்தான் வேண்டும். நாம் எப்படி உயருகிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நல்ல கர்மங்களின் மூலம் சிலர் மகாத்மாக்களாக ஆகலாம், இருந்தாலும் கலை குறைந்து கொண்டே தான் செல்லும். இருந்தாலும் ஈஸ்வரனுடைய பெயரால் நல்ல கர்மம் செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அல்பகால சிறிது காலத்திற்கான சுகம் அளிக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். இருந்தாலும் ஏணிப்படியில் கீழே இறங்கத்தான் வேண்டும். நல்ல பெயர் கிடைக்கும். இங்கே மனிதர்கள் நல்ல-கெட்ட கர்மங்களைக் கூட தெரிந்திருக்கவில்லை. ரித்தி-சித்து வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள்! அனைத்தும் அஞ்ஞானமாகும். யாராவது மறைமுகமாக தானம்-புண்ணியம் செய்கிறார்கள், தர்மசாலை, மருத்துவமனை கட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த பிறவியில் அதற்குப் பதிலாக கண்டிப்பாக நன்மை கிடைக்கும். பாபாவை நினைவு செய்கிறார்கள், திட்டவும் செய்கிறார்கள் இருந்தாலும் கூட வாயினால் பகவானுடைய பெயரை சொல்கிறார்கள். மற்றபடி அஞ்ஞானிகளாக இருக்கின்ற காரணத்தினால் எதையும் தெரிந்திருக்கவில்லை. பகவானை நினைத்து ருத்ர பூஜை செய்கிறார்கள் ஆனால் முட்டாள்தனமாக என்னென்ன உருவாக்குகிறார்கள், என்னென்ன செய்கிறார்கள். எவ்வளவு மனிதர்களோ அவர்களுக்கு அத்தனை குருமார்கள் இருக்கிறார்கள். மரத்தில் புதுப்புது இலைகள், கிளைகள் போன்றவை வருகிறது என்றால் எவ்வளவு அழகாக இருக்கிறது! சதோகுணமுடையதாக இருக்கின்ற காரணத்தினால் அவற்றிற்கு மகிமை ஏற்படுகிறது. இந்த உலகமே அழியக்கூடிய பொருட்களின் மீது அன்பு செலுத்தக் கூடியது என்று பாபா கூறுகின்றார். சிலருக்கு மிகவும் அதிக அன்பு இருக்கிறது என்றால் பற்றின் காரணமாக பைத்தியமாகி விடுகிறார்கள். பெரிய-பெரிய செல்வந்தர்கள மோகத்திற்கு வசமாகி பைத்தியமாகி விடுகிறார்கள். தாய்மார்கள் ஞானம் இல்லாத காரணத்தினால் அழியக்கூடிய சரீரத்திற்காக விதவையாக ஆகி எவ்வளவு அழுகிறார்கள், நினைவு செய்து கொண்டே இருக்கிறார்கள். இப்போது நீங்கள் தங்களை ஆத்மா என்று புரிந்து, மற்றவர்களையும் ஆத்மா என்று பார்க்கின்றீர்கள் என்றால் கொஞ்சம் கூட துக்கம் ஏற்படாது. படிப்பை வருமானத்திற்கான ஆதாரம் என்று சொல்லப்படுகிறது. படிப்பில் குறிக்கோளும் இருக்கிறது. ஆனால் அது ஒரு பிறவிக்கு ஆகும். அரசாங்கத்திலிருந்து சம்பளம் கிடைக்கிறது. படித்து விட்டு வேலை செய்கிறார்கள், அப்போது பணம் போன்றவை கிடைக்கிறது. இங்கே விஷயமே புதியதாகும். நீங்கள் அழிவற்ற ஞான ரத்தினங்களின் மூலம் பையை எப்படி நிறைத்துக் கொள்கிறீர்கள். பாபா நமக்கு அழிவற்ற ஞான பொக்கிஷங்களை கொடுக்கின்றார் என்று ஆத்மா புரிந்து கொள்கிறது. பகவான் படிப்பிக்கின்றார் என்றால் கண்டிப்பாக பகவான் பகவதியாகத் தான் மாற்றுவார். ஆனால் உண்மையில் இந்த இலஷ்மி -நாராயணனை பகவான் - பகவதி என்று புரிந்து கொள்வது தவறாகும். ஐயோ, நாம் தேக அபிமானிகளாக ஆகி விடும்போது நம்முடைய புத்தி எவ்வளவு தாழ்ந்ததாக ஆகி விடுகிறது என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். விலங்குகளுடைய புத்தியை போல் ஆகி விடுகிறது. விலங்குகளுக்கு கூட நல்ல சேவை நடக்கிறது. மனிதர்களுக்கு ஒன்றுமே இல்லை. பந்தயக் குதிரைகளுக்கு எவ்வளவு கவனிப்பு நடக்கிறது. இங்கே உள்ள மனிதர்களுடைய நிலையைப் பாருங்கள் எப்படி இருக்கிறது! நாயை எவ்வளவு அன்போடு பராமரிக்கிறார்கள். முத்தமிடுகிறார்கள். தங்களோடு உறங்கவும் வைக்கிறார்கள். உலகத்தினுடைய நிலை எப்படி ஆகிவிட்டது என்று பாருங்கள்! அங்கே சத்யுகத்தில் இந்த வேலை நடப்பதில்லை.

 

எனவே பாபா கூறுகின்றார் - குழந்தைகளே, மாயை இராவணன் உங்களை தவறானவர்களாக மாற்றி விட்டான். நேர்மையற்ற இராஜ்யமல்லவா! மனிதர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றால் முழு உலகமும் ஒழுக்கமற்றதாக ஆகி விடுகிறது. ஒழுக்கமான மற்றும் ஒழுக்கமற்ற (பண்புள்ள) உலகத்திற்கு எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்! கலியுகத்தின் நிலை என்னவாக இருக்கிறது பாருங்கள்! நான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறேன் என்றால் மாயையும் கூட தன்னுடைய சொர்க்கத்தை காட்டுகிறது, கவர்ச்சிக்கிறது. செயற்கையான செல்வம் எவ்வளவு இருக்கிறது! நாம் இங்கேயே சொர்க்கத்தில் அமர்ந்திருக்கிறோம் என்று புரிந்துகொள்கிறார்கள். சொர்க்கத்தில் இவ்வளவு உயர்ந்த 100 மாடி கட்டிடங்கள் இருக்குமா என்ன? எப்படி எப்படியெல்லாம் கட்டிடங்களை அலங்கரிக்கின்றார்கள், அங்கே இரண்டு மாடி கட்டிடம் கூட இருப்பதில்லை. மனிதர்களே மிகக்குறைவாகத் தான் இருக்கிறார்கள். இவ்வளவு நிலத்தை நீங்கள் என்ன செய்வீர்கள்? இங்கே நிலத்தினால் எவ்வளவு சண்டைகள் நடக்கிறது. அங்கே நிலம் அனைத்தும் உங்களுடையதாக இருக்கிறது. எவ்வளவு இரவு-பகலுக்குண்டான வித்தியாசமாக இருக்கிறது. அவர் லௌகீக தந்தையாக இருக்கின்றார், இவர் பரலௌகீக தந்தையாக இருக்கின்றார். பரலௌகீக தந்தை குழந்தைகளுக்கு என்ன தான் கொடுப்பதில்லை! நீங்கள் அரைகல்பம் பக்தி செய்கிறீர்கள். பாபா தெளிவாக கூறுகின்றார், இதன் மூலம் முக்தி கிடைப்பதில்லை அதாவது என்னை சந்திப்பதில்லை. நீங்கள் முக்திதாமத்தில் என்னை சந்திக்கிறீர்கள். நானும் முக்திதாமத்தில் இருக்கின்றேன். நீங்களும் முக்திதாமத்தில் இருக்கின்றீர்கள் பிறகு அங்கிருந்து நீங்கள் சொர்க்கத்திற்கு செல்கிறீர்கள். அங்கே சொர்க்கத்தில் நான் இருப்பதில்லை. இது கூட நாடகமாகும். பிறகு அப்படியே திரும்பவும் நடக்கும் பிறகு இந்த ஞானம் மறந்து போகும். மறைந்து விடும். எதுவரை சங்கமயுகம் வரவில்லையோ, அதுவரை கீதை ஞானம் எப்படி இருக்க முடியும்? மற்றபடி என்னவெல்லாம் சாஸ்திரம் இருக்கிறதோ, அவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களாகும்.

 

இப்போது நீங்கள் ஞானத்தை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் விதையாக இருக்கின்றேன், ஞானக்கடலாக இருக்கின்றேன். உங்களை எதையும் செய்ய விடுவதில்லை, காலில் விழக்கூட விடுவதில்லை. யாருடைய காலில் விழுவீர்கள். சிவபாபாவிற்கு கால்கள் கிடையாது. இது பிரம்மாவின் காலில் விழுவதாகி விடும். நான் உங்களுடைய அடிமையாவேன். அவரை நிராகாரி, நிரகங்காரி என்று சொல்லப் படுகிறது, அதுவும் அவர் கர்மத்தில் எப்போது வருகிறாரோ, அப்போது நிரகங்காரி என்று சொல்லப்படுவார். பாபா உங்களுக்கு அளவற்ற ஞானத்தைக் கொடுக்கின்றார். இது அழிவற்ற ஞான ரத்தினங்களின் தானமாகும். பிறகு யார் எவ்வளவு எடுத்துக் கொள்கிறார்களோ, அது அவர்களைப் பொருத்தது. அழிவற்ற ஞான ரத்தினங்களை பெற்றுக் கொண்டு பிறகு மற்றவர்களுக்கு தானம் செய்து கொண்டே செல்லுங்கள். ஒவ்வொரு இரத்தினமும் இலட்சக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பானது என்று இந்த ஞான இரத்தினங்களைப் பற்றி தான் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு அடியிலும் பலமடங்கு கொடுக்கக் கூடியவர் ஒரு பாபாவே ஆவார். சேவையின் மீது மிகுந்த கவனம் வேண்டும். நினைவு யாத்திரை தான் உங்களுடைய முன்னேற்றம், அதன்மூலம் நீங்கள் அமரர்களாகி விடுகிறீர்கள். அங்கே இறப்பதினுடைய கவலையெல்லாம் இருப்பதில்லை. ஒரு சரீரத்தை விட்டோம் மற்றொன்றை எடுத்தோம் அவ்வளவு தான். மோகத்தை வென்ற இராஜாவின் கதையைக் கூட கேட்டிருப்பீர்கள். பாபா வந்து இவற்றை புரிய வைக்கின்றார். இப்போது பாபா உங்களை அப்படி மாற்றுகின்றார், இப்போதைய விஷயமே ஆகும். இரக்க்ஷாபந்தன் பண்டிகை கூட கொண்டாடுகிறார்கள். இது எப்போதைய அடையாளம்? தூய்மை யாகுங்கள் என்று பகவான் எப்போது சொன்னார்? புதிய உலகம் எப்போது, மற்றும் பழைய உலகமாக எப்போது ஆகிறது என்று இந்த மனிதர்களுக்கு என்ன தெரியும்? இது கூட யாருக்கும் தெரியாது. இப்போது கலியுகமாக இருக்கிறது என்று மட்டும் சொல்கிறார்கள். சத்யுகம் இருந்தது, இப்போது இல்லை. மறுபிறவியைக் கூட ஏற்றுக் கொள்கிறார்கள். 84 இலட்சம் என்று சொல்லிவிடுகிறார்கள் என்றால் கண்டிப்பாக மறுபிறவி ஆகி விட்டது அல்லவா! அனைவரும் நிராகார தந்தையை நினைவு செய்கிறார்கள். அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாவார், அவர் தான் வந்து புரிய வைக்கின்றார். தேகதாரி தந்தை நிறைய பேர் இருக்கிறார்கள். விலங்குகள் கூட தன்னுடைய குழந்தைகளுக்கு தந்தையாகும். அவற்றை விலங்குகளின் தந்தை என்று சொல்ல மாட்டார்கள். சத்யுகத்தில் எந்த குப்பைகளும் இருப்ப தில்லை. மனிதர்கள் எப்படியோ அப்படி உபயோகப் பொருட்களும் இருக்கிறது. அங்கே பறவைகள் போன்றவைகளும் மிகவும் அழகானவைகளாக இருக்கிறது. அனைத்தும் நல்ல - நல்ல பொருட்களாக இருக்கும். அங்கே பழங்கள் எவ்வளவு இனிமையானதாக பெரியதாக இருக்கிறது!. பிறகு அவையனைத்தும் எங்கே சென்று விடுகிறது! இனிமை போய் கசப்பு வந்து விடுகிறது. மூன்றாம் தரமாக ஆகிவிடுகிறார்கள் எனும்போது பொருட்களும் மூன்றாம் தரமாக ஆகி விடுகிறது. சத்யுகம் முதல்தரமாக இருக்கிறது என்றால் அனைத்து பொருட்களும் முதல்தரமானதாக கிடைக்கிறது. கலியுகத்தில் மூன்றாம் தரமாக இருக்கிறது. அனைத்து பொருட்களும் சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து செல்கிறது. இங்கே எந்த மகிழ்ச்சியும் இல்லை. ஆத்மாவும் தமோபிரதானம் எனும்போது சரீரமும் தமோபிரதானமாக இருக்கிறது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் இருக்கிறது, அது எங்கே, இது எங்கே, இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. பாபா உங்களை எவ்வளவு உயர்ந்தவர்களாக மாற்றுகின்றார். எந்தளவிற்கு நினைவு செய்வீர்களோ, அந்தளவிற்கு ஆரோக்கியம்-செல்வம் இரண்டும் கிடைத்துவிடும். வேறு என்ன வேண்டும்? இரண்டில் ஒன்று இல்லை என்றாலும் மகிழ்ச்சி இருக்காது. ஆரோக்கியம் இருக்கிறது, செல்வம் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள் அது எந்த வேலைக்கு உதவும்? பணம் இருந்தால் உலகத்தை சுற்றிவாருங்கள், என்றும் பாடுகிறார்கள் அல்லவா! பாரதம் தங்கக் குருவியாக இருந்தது, என்று குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள், இப்போது தங்கம் எங்கே இருக்கிறது? தங்கம், வெள்ளி, தாமிரம் கூட சென்று விட்டது, இப்போது காகிதமே காகிதமாகும். காகிதம் தண்ணீரில் அடித்து சென்று விட்டால் பணம் எங்கிருந்து கிடைக்கும்? தங்கம் எடைமிக்கது, அது அங்கேயே இருக்கிறது. நெருப்பு கூட தங்கத்தை எரிக்க முடியாது. எனவே இங்கே அனைத்தும் துக்கத்தின் விஷயங்களாகும். அங்கே இந்த விஷயங்கள் எல்லாம் இருப்பதில்லை. இங்கே இந்த சமயத்தில் அளவற்ற துக்கம் இருக்கிறது. எப்போது அளவற்ற துக்கம் இருக்கிறதோ, அப்போது தான் பாபா வருகின்றார், பிறகு நாளை அளவற்ற சுகம் இருக்கும். பாபா கல்பம்-கல்பமாக வந்து படிப்பிக்கின்றார், இது புதிய விஷயமா என்ன? குஷியாக இருக்க வேண்டும். குஷியோ குஷி, இது கடைசியில் ஏற்படும் விஷயமாகும். அதீந்திரிய சுகத்தை கோப-கோபியரிடம் கேளுங்கள். கடைசியில் நீங்கள் மிகவும் நன்றாகப் புரிந்து கொள்கிறீர்கள். எதற்கு உண்மையான அமைதி என்று சொல்லப்படுகிறது, என்பதை பாபா தான் கூறுகின்றார். நீங்கள் பாபாவிடமிருந்து அமைதியின் ஆஸ்தியை அடைகின்றீர்கள். அவரை அனைவரும் நினைவு செய்கிறார்கள். பாபா அமைதிக் கடல் ஆவார். தன்னிடம் யார் வர முடியும் என்பதை பாபா புரிய வைக்கின்றார். அந்த-அந்த தர்மம் அந்த-அந்த சமயத்தில் வருகிறது. சொர்க்கத்திற்கு வர முடியாது. இப்போது சாது சன்னியாசிகள் நிறைய பேர் வந்து விட்டார்கள், எனவே அவர்களுக்கு மகிமை நடக்கிறது. தூய்மையாக இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அவர்களுக்கு மகிமை இருக்க வேண்டும். இப்போது புதிதாக இறங்கி உள்ளார்கள். பழையவர்களுக்கு அந்தளவிற்கு மகிமை இருக்க முடியாது. அவர்கள் சுகத்தை அனுபவித்து தமோபிரதானத்தில் சென்று விட்டார்கள். எவ்வளவு அதிகமான குருமார்கள் வித-விதமாக வந்து விடுகிறார்கள், இந்த எல்லையற்ற மரத்தை யாரும் தெரிந்திருக்க வில்லை. எந்தளவிற்கு எல்லைக்குட்பட்ட மனித மரம் படர்ந்திருக்கிறதோ, அந்தளவிற்கு பக்தியின் பொருட்கள் இருக்கிறது என்று பாபா புரிய வைக்கின்றார். ஞானம் என்பது விதையாகும், எவ்வளவு சிறியதாக இருக்கிறது! பக்திக்கு அரைக்கல்பமாகிறது. இந்த ஞானம் இந்த ஒரு கடைசி பிறவிக்காக மட்டுமாகும். ஞானத்தைப் பெற்று நீங்கள் அரைக்கல்பத்திற்கு எஜமானர்களாகி விடுகிறீர்கள். பக்தி (இருள்) முடிந்து விடுகிறது, பகல் (வெளிச்சம்) வந்து விடுகிறது. இப்போது நீங்கள் சதாகாலத்திற்கும் மகிழ்ச்சியானவர்களாக ஆகின்றீர்கள், இதை ஈஸ்வரனின் அழிவற்ற இலாட்டரி என்று சொல்லப்படுகிறது. அதற்காக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஈஸ்வரனுடைய இலாட்டரிக்கும் அசுர இலாட்டரிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கபட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) உங்களுடைய நினைவின் ஒவ்வொரு அடியிலும் பலமடங்கு பலன் இருக்கிறது, இதன் மூலமே அமர பதவியை அடைய வேண்டும். பாபாவிடமிருந்து என்ன அழிவற்ற ஞான ரத்தினங்கள் கிடைக்கிறதோ, அவற்றை தானம் செய்ய வேண்டும்.

 

2) ஆத்ம-அபிமானிகளாக ஆகி அளவற்ற குஷியை அனுபவம் செய்ய வேண்டும். சரீரங்களிலிருந்து பற்றை நீக்கி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பற்றை வென்றவர்களாக ஆக வேண்டும்.

 

வரதானம்:

சேவை மற்றும் சுய முயற்சியின் சமநிலை (பேலன்ஸ்) மூலமாக ஆசிகள் (பிளெஸ்ஸிங்) பெற்று விடக் கூடிய கர்மயோகி ஆவீர்களாக.

 

கர்மயோகி என்றால் கர்மத்தின் பொழுது கூட யோகத்தின் (பேலன்ஸ்) சமநிலை இருக்க வேண்டும். சேவை என்றால் கர்மம் மற்றும் சுய முயற்சி (சுய புருஷார்த்தம்) என்றால் யோக யுக்த் (யோகத்துடன் கூடிய நிலை) - இந்த இரண்டினுடைய (பேலன்ஸ்) சமநிலை வைப்பதற்காக தந்தை செய்விப்பவர் ஆவார், நான் ஆத்மா செய்பவன் ஆவேன் என்ற ஒரேயொரு வார்த்தையை (கராவன்ஹார் - செய்விப்பவர், கரன்ஹார் - செய்பவர்) நினைவில் கொள்ளுங்கள். இந்த ஒரு வார்த்தையின் (பேலன்ஸ்) சமநிலை மிகவும் சுலபமாக ஆக்கி விடும். மேலும் அனைவரின் (ப்ளெஸ்ஸிங்) ஆசிகள் கிடைத்து விடும். செய்பவருக்கு (கரன்ஹார்) பதிலாக தன்னை (கராவன்ஹார்) செய்விப்பவர் என்று நீங்கள் நினைத்து கொண்டு விடும் பொழுது பேலன்ஸ் சமநிலை இருப்பதில்லை. மேலும் மாயை சான்ஸ் - வாய்ப்பு எடுத்துக் கொண்டு விடுகிறது.

 

சுலோகன்:

நஜர் ஸே நிஹால் - பார்வையினாலேயே திருப்திபடுத்தும் சேவை செய்ய வேண்டும் என்றால் பாப்தாதாவை தனது நஜர் - பார்வையில் நிறைத்துக் கொண்டு விடுங்கள்.

 

ஓம்சாந்தி