18.11.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே
!
எல்லைக்குட்பட்ட
உலகத்தின்
வீணான
விஷயங்களில்
தங்களது நேரத்தை
வீணடிக்கக்
கூடாது.
புத்தியில்
எப்பொழுதும்
உன்னதமான
(ராயல்)
சிந்தனைகள் எழுந்துக்
கொண்டே
இருக்க
வேண்டும்.
கேள்வி:
எந்த
குழந்தைகளால்
தந்தையின்
ஒவ்வொரு
உத்தரவையும்
அமலுக்கு
எடுத்து
வர
முடியும்?
பதில்:
யார்
உள்முகமாக
இருக்கிறார்களோ,
தங்களது
வெளிப்பகட்டை
காண்பித்துக்
கொள்வதில்லையோ மற்றும்
ஆன்மீக
போதையில்
இருக்கிறார்களோ
அவர்களால்
தான்
தந்தையின்
ஒவ்வொரு
(டைரக்ஷன்)
உத்தரவையும் அமலுக்குக்
கொண்டு
வர
முடியும்.
உங்களுக்கு
பொய்யான
அகங்காரம்
ஒரு
பொழுதும்
வரக்
கூடாது.
உள்ளுக்குள் மிகுந்த
பரிசுத்த
தன்மை
இருக்க
வேண்டும்.
ஆத்மா
மிகவும்
நல்லதாக
இருக்க
வேண்டும்.
ஒரு
தந்தையிடம் உண்மையான
அன்பு
இருக்க
வேண்டும்.
ஒரு
பொழுதும்
உப்புத்
தண்ணீர்
அதாவது
கசப்பான
சம்ஸ்காரம் இருக்கக்
கூடாது.
அப்பொழுது
தான்
தந்தையின்
ஒவ்வொரு
உத்தரவும்
அமலுக்கு
வரும்.
ஓம்
சாந்தி.
குழந்தைகள்
நினைவு
யாத்திரையில்
மட்டும்
அமரவில்லை.
நாம்
ஸ்ரீமத்படி
நமது
பரிஸ்தானத்தை ஸ்தாபனை
செய்து
கொண்டிருக்கிறோம்
என்ற
பெருமிதம்
குழந்தைகளுக்கு
உள்ளது.
அந்த
அளவிற்கு
ஊக்கம் குஷி
இருக்க
வேண்டும்.
குப்பைக்
கூளம்
போன்ற
அனைத்து
வீணான
விஷயங்களும்
நீங்கிப்
போய்
விட வேண்டும்.
எல்லையில்லாத
தந்தையைப்
பார்த்தவுடனேயே
உல்லாசமான
உணர்வில்
வந்து
விட
வேண்டும்.
எந்த
அளவிற்கு
நீங்கள்
நினைவு
யாத்திரையில்
இருப்பீர்களோ,
அந்த
அளவிற்கு
முன்னேற்றம்
வந்து
கொண்டே போகும்.
குழந்தைகளுக்காக
ஆன்மீகப்
பல்கலைக்
கழகம்
இருக்க
வேண்டும்
என்று
தந்தை
கூறுகிறார்.
உங்களுடையது
தான்
உலக
ஆன்மீக
பல்கலைக்
கழகம்.
ஆக
அந்த
பல்கலைக்
கழகம்
எங்கே
இருக்கிறது?
குறிப்பாக
பல்கலை
கழகம்
நிறுவப்படுகிறது.
அதனுடன்
கூடவே
மிகவும்
(ராயல்
ஹாஸ்டல்)
இராஜரீகமான
தங்கும் விடுதி
இருக்க
வேண்டும்.
உங்களுடைய
சிந்தனைகள்
எவ்வளவு
இராஜரீகமாக
இருக்க
வேண்டும்.
குழந்தைகளுக்கு
எப்படி
கற்பித்து
உயர்ந்த
தேர்வில்
தேர்ச்சி
அடையுமாறு
செய்விக்க
வேண்டும்,
அதன்
மூலம் இவர்கள்
உலகத்திற்கு
அதிபதியாக
ஆகப்
போகிறார்கள்
என்று
தந்தைக்கோ
இரவு
பகலாக
இதே
சிந்தனை இருக்கிறது.
உண்மையில்
உங்களுடைய
ஆத்மா
தூய்மையாக
-
சதோபிரதானமாக
இருக்கும்
பொழுது
உடல் கூட
எவ்வளவு
சதோபிரதானமாக,
அழகாக
இருந்தது.
இராஜ்ஜியம்
கூட
எவ்வளவு
உயர்ந்ததாக
இருந்தது.
உங்களுடைய
நேரம்
எல்லைக்குட்பட்ட
உலகத்தின்
குப்பைக்
கூளம்
போன்ற
விஷயங்களில்
நிறைய
வீணாகிறது.
மாணவர்களாகிய
உங்களுக்குள்
அசுத்தமான
எண்ணங்கள்
இருக்கக்
கூடாது.
குழுக்கள்
ஆகியவையோ
(கமிட்டி)
மிகவும்
நல்லதாக
அமைக்கிறார்கள்.
ஆனால்
யோகபலம்
இல்லை.
நாம்
இதை
செய்வோம்,
அதைச்
செய்வோம் என்று
நிறைய
பொய்
கூறுகிறார்கள்.
நான்
இவர்களை
க்கால்,
காதால்
பிடிப்பேன்
என்று
மாயை
கூட
கூறுகிறது.
தந்தையிடம்
அன்பே
இல்லை.
மனிதன்
ஒன்று
நினைக்க
..
என்று
கூறப்படுகிறது
அல்லவா?
எனவே
மாயை கூட
ஒன்றுமே
செய்யவிடுவதில்லை.
மாயை
மிகவுமே
ஏமாற்றக்
கூடியது
ஆகும்.
காதையே
வெட்டி
விடுகிறது.
தந்தை
குழந்தைகளை
எவ்வளவு
உயர்ந்தவர்களாக
ஆக்குகிறார்.
இது
இது
செய்யுங்கள்
என்று
உத்தரவு
கொடுக்கிறார்.
பாபா
மிகவுமே
ராயல்,
கம்பீரமான
பெண்
குழந்தைகளை
அனுப்பி
விடுகிறார்.
பாபா
நாங்கள்
(டிரெயினிங்)
பயிற்சிக்காக செல்லலாமா
என்று
ஒரு
சிலர்
கூறுகிறார்கள்.
குழந்தைகளே,
முதல் நீங்கள்
உங்களது
குறைகளை
நீக்குங்கள் என்று
பாபா
கூறுகிறார்.
என்னிடம்
எவ்வளவு
அவ
குணங்கள்
உள்ளன
என்று
தங்களைப்
பாருங்கள்.
நல்ல நல்ல
மகாரதிகளைக்
கூட
மாயை
ஒரேயடியாக
உப்புத்
தண்ணீராக
ஆக்கி
விடுகிறது.
தந்தையை
ஒரு
பொழுதும் நினைவு
கூட
செய்யாத
அப்பேர்ப்பட்ட
கசப்பான
குழந்தைகள்
கூட
இருக்கிறார்கள்.
ஞானத்தினுடைய
ஒரு எழுத்து
கூட
தெரியாது.
வெளியில்
ஷோ
மிகவுமே
அதிகமாக
காட்டிக்
கொள்கிறார்கள்.
இதிலோ
மிகவுமே உள்முகமாக
இருக்க
வேண்டும்.
ஆனால்
நிறைய
பேருடைய
நடத்தை
முற்றிலுமே
படிக்காத,
ஏமாற்றுபவர்கள் போல
இருக்கிறது.
கொஞ்சம்
பைசா
இருக்கிறது
என்றால்,
அதனுடைய
போதை
ஏறி
விடுகிறது.
அட
நாமோ ஏழையாக
இருக்கிறோம்
என்று
புரிந்து
கொள்வதில்லை.
மாயை
புரிந்து
கொள்ள
விடுவதில்லை.
மாயை
மிகவுமே பலசாலியாக இருக்கிறது.
பாபா
கொஞ்சம்
மகிமை
செய்தார்
என்றால்,
அதிலேயே
மிகவும்
மகிழ்ச்சி
அடைந்து விடுகிறார்கள்.
குழந்தைகள்
நல்ல
முறையில்
படிக்கும்
வகையில்
பல்கலை
கழகம்
(யுனிவர்சிட்டி)
மிகவுமே
முதல்தரமாக இருக்க
வேண்டும்
என்று
இதே
சிந்தனை
பாபாவிற்கு
இரவு
பகலாக
இருக்கிறது.
நாம்
சொர்க்கத்திற்கு
செல்கிறோம் என்று
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
எனவே
அளவு
கடந்த
குஷி
இருக்க
வேண்டும்
அல்லவா?
இங்கு
பாபா
வித விதமான
டோஸ்
-
அறிவுரை
கொடுக்கிறார்.
போதை
ஏற்றுகிறார்.
யாராவது
திவாலா
ஆகி
விட்டிருப்பார்.
அவருக்கு
சாராயம்
குடிக்க
செய்தீர்கள்
என்றால்
நான்
சக்கரவர்த்தி
ஆகி
விட்டேன்
என்று
நினைப்பார்.
பின் போதை
நீங்கிய
உடனேயே
பழைய
மாதிரியே
ஆகி
விடுவார்.
இப்பொழுது
இதுவோ
ஆன்மீக
போதை
ஆகும்.
எல்லையில்லாத
தந்தை
ஆசிரியராக
ஆகி
நமக்கு
படிப்பிக்கிறார்
என்பதை
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
மேலும் இப்படி
இப்படி
செய்யுங்கள்
என்று
உத்தரவு
கொடுக்கிறார்.
ஒரு
சில
நேரங்களில்
சிலருக்கு
பொய்யான
அகங்காரம் கூட
வந்து
விடுகிறது.
மாயை
இருக்கிறது
அல்லவா?
எப்படி
எப்படியான
விஷயங்களை
உருவாக்குகிறார்கள் என்றால்
கேட்கவே
வேண்டாம்.
இவர்களால்
நடக்க
முடியாது
என்று
பாபா
புரிந்து
கொள்வார்.
உள்ளுக்குள் மிகுந்த
சுத்தம்
வேண்டும்.
ஆத்மா
மிகவும்
நல்லதாக
இருக்க
வேண்டும்.
உங்களுக்கு
காதல்
திருமணம்
(லவ்
மேரேஜ்)
ஆகி
உள்ளது
அல்லவா?
காதல்
திருமணத்தில்
எவ்வளவு
அன்பு
இருக்கிறது.
இவரோ
கணவர்களுக்கெல்லாம் கணவன்
ஆவார்.
அது
கூட
எத்தனை
பேருக்கு
காதல்
திருமணம்
ஆகிறது.
ஒருவருக்கு
மட்டுமே
ஆகிறதா என்ன?
எங்களுக்கோ
சிவபாபாவுடன்
நிச்சயதார்த்தம்
ஆகி
விட்டது
என்று
எல்லாரும்
கூறுகிறார்கள்.
நாமோ சொர்க்கத்தில்
போய்
அமருவோம்.
குஷியின்
விஷயம்
ஆகும்
அல்லவா?
பாபா
நமக்கு
எவ்வளவு
அலங்காரம் செய்கிறார்
என்று
உள்ளுக்குள்
உணர்வு
வர
வேண்டும்
அல்லவா?
சிவபாபா
இவர்
மூலமாக
அலங்காரம் செய்கிறார்.
நாம்
தந்தையை
நினைவு
செய்து
செய்து
சதோபிரதானமாக
ஆகி
விடுவோம்
என்பது
உங்களது புத்தியில்
உள்ளது.
இந்த
ஞானம்
வேறு
யாருக்கும்
தெரியவே
தெரியாது.
இதில்
மிகுந்த
போதை
இருக்கிறது.
இப்பொழுது
இதுவரையும்
இந்த
அளவிற்கு
போதை
ஏறுவதில்லை.
அவசியம்
ஆகத்
தான்
போகிறது.
அதீந்தீரிய சுகம்
பற்றி
கோப
கோபியர்களிடம்
கேளுங்கள்
என்று
பாடல்
கூட
உள்ளது.
இப்பொழுது
உங்களது
ஆத்மாக்கள் எவ்வளவு
சீ
-
சீயாக
உள்ளது.
எப்படி
மிகவும்
சீசீ
யான
குப்பையில்
அமர்ந்தது
போல.
அவர்களை
தந்தை
வந்து மாற்றுகிறார்.
மறுமலர்ச்சி
ஏற்படுத்துகிறார்.
மனிதர்கள்
சுரப்பிகளை
மாற்றம்
செய்கிறார்கள்.
அப்பொழுது
எவ்வளவு குஷி
ஏற்படுகிறது.
உங்களுக்கோ
இப்பொழுது
தந்தை
கிடைத்துள்ளார்.
எனவே
படகோ
கரையேறி
விட்டது.
நாம்
எல்லையில்லாத
தந்தையினுடையவராக
ஆகி
விட்டோம்.
ஆகவே
எவ்வளவு
சீக்கிரம்
திருந்த
வேண்டும் என்று
புரிந்துள்ளீர்கள்.
இரவு
பகலாக
இதே
குஷி,
இதே
சிந்தனை
இருக்க
வேண்டும்
-
யார்
உங்களுக்கு
மார்ஷல்
-
சேனாதிபதி
கிடைத்துள்ளார்
பாருங்கள்.
இரவு
பகலாக
இதே
சிந்தனையில்
இருக்க
வேண்டி
உள்ளது.
யார்
யார் நல்ல
முறையில்
புரிந்துள்ளார்களோ,
அடையாளம்
கண்டு
கொண்டுள்ளார்களோ
அவர்களோ
அப்படியே
பறந்து செல்பவர்கள்
போல
ஆகி
விடுகிறார்கள்.
குழந்தைகளாகிய
நீங்கள்
இப்பொழுது
சங்கமத்தில்
உள்ளீர்கள்.
மற்றபடி
அவர்கள்
அனைவருமோ
அசுத்தத்தில் விழுந்துள்ளார்கள்.
எப்படி
குப்பைக்
கூளங்களின்
ஓரத்தில்
குடிசைகளை
அமைத்து
அசுத்தத்தில்
அமர்ந்திருக்கிறார்கள் அல்லவா?
எவ்வளவு
குடிசைகள்
அமைக்கப்பட்டு
உள்ளன.
இது
பிறகு
எல்லையில்லாத
விஷயம்
ஆகும்.
இப்பொழுது
அவற்றிலிருந்து வெளியேறுவதற்காக
சிவபாபா
உங்களுக்கு
மிகவும்
எளிய
வழி
முறையைக் கூறுகிறார்.
இனிமையிலும்
இனிமையான
குழந்தைகளே,
இச்சமயம்
உங்களது
ஆத்மா
மற்றும்
சரீரம்
இரண்டுமே தூய்மையற்றதாக
உள்ளது
என்பதை
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
இப்பொழுது
நீங்கள்
வெளியேறி
வந்துள்ளீர்கள்.
யார்
யாரெல்லாம்
வெளியேறி
வந்துள்ளார்களோ
அவர்களிடம்
ஞானத்தின்
உச்சநிலை
உள்ளது
அல்லவா?
உங்களுக்கு தந்தை
கிடைத்துள்ளார்.
பிறகு
என்ன?
இந்த
போதை
ஏறும்
பொழுது
தான்
நீங்கள்
பிறருக்கும்
புரிய
வைக்க முடியும்.
தந்தை
வந்து
விட்டுள்ளார்.
தந்தை
நமது
ஆத்மாவை
தூய்மையாக
ஆக்கி
விடுகிறார்.
ஆத்மா
தூய்மை யாக
ஆகி
விடும்
பொழுது
பிறகு
சரீரம்
கூட
முதல்
தரமானதாக
கிடைக்கிறது.
இப்பொழுது
உங்களுடைய
ஆத்மா எங்கு
அமர்ந்துள்ளது?
இந்த
குடிசையில்
(சரீரம்)
அமர்ந்துள்ளது.
தமோபிரதானமான
உலகம்
ஆகும்
அல்லவா?
குப்பைகளின்
ஓரத்தில்
வந்து
அமர்ந்துள்ளீர்கள்
அல்லவா?
நாம்
எங்கிருந்து
வெளியேறி
உள்ளோம்
என்பதை சிந்தித்து
பாருங்கள்.
தந்தை
அசுத்தமான
வாய்க்காலிலிருந்து நம்மை
வெளியேற்றி
உள்ளார்.
இப்பொழுது
நமது ஆத்மா
தூய்மையாக
ஆகி
விடும்.
அங்கு
வசிப்பவர்கள்
கூட
முதல்தரமான
அரண்மனைகளை
அமைப்பார்கள்.
நமது
ஆத்மாவை
தந்தை
அலங்காரம்
செய்து
சொர்க்கத்திற்கு
அழைத்துச்
செல்கிறார்.
உள்ளுக்குள்
இது
போன்ற சிந்தனைகள்
குழந்தைகளுக்கு
வர
வேண்டும்.
தந்தை
எவ்வளவு
போதை
ஏற்றுகிறார்.
நீங்கள்
இவ்வளவு உயர்ந்தவர்களாக
இருந்தீர்கள்.
பிறகு
விழுந்து,
வந்து
கீழே
வந்துள்ளீர்கள்.
சிவாலயத்தில்
இருக்கும்
பொழுது ஆத்மா
எவ்வளவு
தூய்மையாக
இருந்தது.
ஆக
மீண்டும்
தங்களுக்குள்
ஒன்று
சேர்ந்து
சீக்கிரம்
சீக்கிரமாக சிவாலயத்திற்குச்
செல்வதற்கான
வழி
தேட
வேண்டும்.
குழந்தைகளுக்கு
அந்த
புத்தி
இல்லை
என்று
பாபாவிற்கோ
ஆச்சரியம்
ஏற்படுகிறது.
பாபா
நம்மை
எங்கிருந்து வெளியேற்றுகிறார்.
பாண்டவ
அரசாங்கத்தை
நிலை
நாட்டுபவர்
தந்தை
ஆவார்.
சொர்க்கமாக
இருந்த
பாரதம் இப்பொழுது
நரகமாக
உள்ளது.
ஆத்மாவின்
விஷயம்
ஆகும்.
ஆத்மா
மீது
தான்
இரக்கம்
ஏற்படுகிறது.
ஒரேயடியாக தமோபிரதானமான
உலகத்தில்
வந்து
ஆத்மா
அமர்ந்துள்ளது.
எனவே
பாபா
எங்களை
அங்கு
அழைத்துச்
செல்லுங்கள் என்று
தந்தையை
நினைவு
செய்கிறது.
இங்கு
அமர்ந்திருந்த
போதிலும்
நீங்கள்
இது
போன்ற
சிந்தனைகளை செலுத்த
வேண்டும்.
எனவே
குழந்தைகளுக்காக
முதல்தரமான
யுனிவர்சிட்டி
(பல்கலை
கழகம்)
அமையுங்கள் என்று
பாபா
கூறுகிறார்.
கல்ப
கல்பமாக
அமைகிறது.
உங்களது
சின்தனைகள்
மிகவுமே
மேன்மையானதாக
இருக்க வேண்டும்.
இப்பொழுது
அந்த
போதை
ஏறவில்லை.
போதை
இருந்திருந்தால்
என்ன
தான்
செய்து காண்பித்திருப்பீர்களோ
தெரியாது.
குழந்தைகள்
யுனிவர்சிட்டி
என்பதன்
பொருள்
புரியாமல்
இருக்கிறார்கள்
அந்த ராயல்ட்டி
பெருமையின்
போதையில்
இருப்பதில்லை.
மாயை
அமுக்கி
விட்டு
அமர்ந்துள்ளது.
குழந்தைகளே தங்களது
தவறான
போதையை
ஏற்றிக்
கொள்ளாதீர்கள்
என்று
பாபா
புரிய
வைக்கிறார்.
ஒவ்வொருவரும்
அவரவர் தகுதிகளைப்
பாருங்கள்.
நாம்
எப்படி
படிக்கிறோம்,
என்ன
உதவி
செய்கிறோம்.
வெறும்
வார்த்தைகளின்
பக்கோடா சாப்பிடக்
கூடாது.
என்ன
கூறுகிறீர்களோ
அதை
செய்ய
வேண்டும்.
இது
செய்வோம்,
அது
செய்வோம்
என்று பொய்
கூறுவதல்ல.
இது
செய்வோம்
என்று
இன்று
கூறுவார்கள்.
நாளைக்கே
சாவு
வந்தது
என்றால்,
முடிந்து போய்
விடுவார்கள்.
சத்யுகத்திலோ
இவ்வாறு
கூற
மாட்டார்கள்.
அங்கு
ஒரு
பொழுதும்
அகால
மரணம்
ஏற்படாது.
காலன்
வர
முடியாது.
அது
இருப்பதே
சுகதாமம்
ஆக.
சுகதாமத்தில்
காலனுக்கு
வருவதற்கான
கட்டளை கிடையாது.
இராவண
இராஜ்யம்
மற்றும்
இராமராஜ்யத்தின்
பொருளைக்
கூட
புரிந்து
கொள்ள
வேண்டும்.
இப்பொழுது உங்களுடைய
சண்டை
இருப்பதே
இராவணனுடன்.
தேக
அபிமானம்
கூட
என்ன
அற்புதம்
செய்து
விடுகிறது என்றால்
முற்றிலுமே
பதீதமாக
-
தூய்மையற்றவராக
ஆக்கி
விடுகிறது.
தேஹீ
அபிமானி
-
ஆத்ம
உணர்வுடையவராக ஆகி
விடும்
பொழுது,
ஆத்மா
பரிசுத்தமாக
ஆகி
விடுகிறது.
அங்கு
நமது
அரண்மனைகள்
எப்படி
அமையும் என்பதை
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்
அல்லவா?
இப்பொழுது
நீங்களோ
சங்கமத்தில்
வந்துள்ளீர்கள்.
வரிசைக்கிரமமாக திருந்திக்
கொண்டிருக்கிறீர்கள்.
உங்களது
ஆத்மா
தூய்மையற்று
இருக்கும்
காரணத்தால்
சரீரம்
கூட
பதீதமாக
(தூய்மையற்றதாக)
கிடைத்துள்ளது.
இப்பொழுது
உங்களை
சொர்க்கவாசி
ஆக்குவதற்காக
நான்
வந்துள்ளேன்.
நினைவினுடன்
கூடவே
தெய்வீக
குணங்கள்
கூட
வேண்டும்.
சித்தி
வீடா
என்ன
(அவ்வளவு
சுலபமா
என்ன).
பாபா
நம்மை
நரனிலிருந்து நாராயணனாக
ஆக்க
வந்துள்ளார்
என்பதைப்
புரிந்துள்ளீர்கள்.
ஆனால்
மாயையினுடைய மிகவுமே
மறைமுகமான
எதிர்ப்பு
உள்ளது.
உங்களது
சண்டையே
மறைமுகமானது.
எனவே
உங்களுக்கு அன்நோன்
வாரியர்ஸ்
-
பெயர்
தெரியாத
வீரர்கள்
என்று
கூறப்பட்டுள்ளது.
வேறு
யாருமே
பெயர்
தெரியாத வீரர்கள்
என்று
இருப்பதே
இல்லை.
உங்களுடைய
பெயர்
தான்
வீரர்கள்
என்பதாகும்.
மற்ற
எல்லாருடைய பெயர்களும்
அவசியம்
பதிவேட்டில்
இருக்கவே
இருக்கும்.
பெயர்
தெரியாத
வீரர்களாகிய
உங்களுடைய அடையாளத்தை
அவர்கள்
பிடித்துக்
கொண்டு
விட்டுள்ளார்கள்.
நீங்கள்
எவ்வளவு
மறைமுகமாக
உள்ளீர்கள் என்பது
யாருக்குமே
தெரியாது.
நீங்கள்
மாயையை
வசப்படுத்துவதற்காக
உலகத்தின்
மீது
வெற்றி
அடைந்து கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள்
தந்தையை
நினைவு
செய்கிறீர்கள்.
பிறகும்
மாயை
மறக்க
வைத்து
விடுகிறது.
கல்ப கல்பமாக
நீங்கள்
தங்களது
இராஜ்யத்தை
நிலை
நாட்டி
கொண்டு
விடுகிறீர்கள்.
எனவே
பெயர்
தெரியாத
வீரர்கள் நீங்கள்
ஆவீர்கள்
-
நீங்கள்
தந்தையை
நினைவு
மட்டும்
செய்கிறீர்கள்.
இதில்
கை,
கால்கள்
எதையுமே
அசைப்பதில்லை.
நினைவிற்கான
வழி
முறைகள்
கூட
பாபா
நிறைய
கூறுகிறார்.
நடந்தாலும்
சென்றாலும்
நீங்கள்
நினைவு
யாத்திரை மேற்கொள்ளுங்கள்.
படிப்பையும்
படியுங்கள்.
நாம்
எப்படி
இருந்தோம்,
என்னவாக
ஆகி
விட்டுள்ளோம் என்பதை
இப்பொழுது
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
இப்பொழுது
மீண்டும்
பாபா
நம்மை
என்னவாக
ஆக்குகிறார்.
எவ்வளவு
சுலபமான
வழிமுறையைக்
கூறுகிறார்.
எங்கு
இருந்தாலும்
நினைவு
செய்தீர்கள்
என்றால்
துரு
நீங்கி விடும்.
கல்ப
கல்பமாக
இந்த
வழிமுறையை
(யுக்தி)
அளித்துக்
கொண்டே
வந்துள்ளார்.
தன்னை
ஆத்மா
என்று புரிந்து
தந்தையை
நினைவு
செய்தீர்கள்
என்றால்,
சதோபிரதானமாக
ஆகி
விடுவீர்கள்.
வேறு
எந்த
பந்தனமும் கிடையாது.
குளியலறைக்குச்
செல்லுங்கள்,
அப்பொழுது
கூட
தங்களை
ஆத்மா
என்று
புரிந்து
தந்தையை நினைவு
செய்தீர்கள்
என்றால்
சதோபிரதானமாக
ஆகி
விடுவீர்கள்.
ஆத்மாவிற்கு
ஒன்றும்
திலகம்
இட
வேண்டிய அவசியம்
இல்லை.
இவை
அனைத்துமே
பக்தி
மார்க்கத்தின்
அடையாளங்கள்
ஆகும்.
இந்த
ஞான
மார்க்கத்தில் எந்த
அவசியமும்
இல்லை.
ஒரு
பைசா
செலவும்
கிடையாது.
வீட்டில்
அமர்ந்தபடியே
நினைவு
செய்து
கொண்டே இருங்கள்.
எவ்வளவு
சுலபமானது.
அந்த
பாபா
நமது
தந்தையும்
ஆவார்.
ஆசிரியர்
மற்றும்
குருவும்
ஆவார்.
முதலில் தந்தையின்
நினைவு.
பிறகு
ஆசிரியரின்
நினைவு.
பிறகு
குருவினுடைய
நினைவு.
சட்டம் அவ்வாறு
கூறுகிறது.
ஆசிரியரையோ
அவசியம்
நினைவு
செய்வார்கள்.
அவரிடமிருந்து
படிப்பினுடைய
ஆஸ்தி கிடைக்கிறது.
பிறகு
வானப்பிரஸ்த
நிலையில்
குரு
கிடைக்கிறார்.
இந்த
தந்தையோ
எல்லாமே
ஒட்டு
மொத்தமாக
(ஹோல்
சேல்)
கொடுத்து
விடுகிறார்.
உங்களுக்கு
21
பிறவிகளுக்காக
இராஜ்யத்தை
ஒட்டு
மொத்தமாக
கொடுத்து விடுகிறார்.
திருமணத்தில்
கன்னிகைக்கு
வரதட்சிணை
மறைமுகமாக
கொடுக்கிறார்கள்
அல்லவா?
ஷோ
–
வெளிப்பகட்டு செய்ய
வேண்டிய
அவசியம்
இல்லை.
மறைமுகமான
தானம்
என்று
கூறப்படுகிறது.
சிவபாபா
கூட
மறைமுகமாக இருக்கிறார்
அல்லவா?
இதில்
அகங்காரத்தின்
எந்த
விஷயமும்
கூட
கிடையாது.
ஒரு
சிலருக்கு
நம்மை
எல்லாரும் பார்க்க
வேண்டும்
என்ற
அகங்காரம்
இருக்கும்.
இங்கு
எல்லாமே
மறைமுகமாக
உள்ளது.
தந்தை
உங்களுக்கு உலக
அரசாட்சியை
வரதட்சிணையாக
கொடுக்கிறார்.
எவ்வளவு
மறைமுகமாக
உங்களது
அலங்காரம்
ஆகிக் கொண்டிருக்கிறது.
எவ்வளவு
பெரிய
வரதட்சிணை
கிடைக்கிறது.
தந்தை
எவ்வளவு
யுக்தியுடன்
கொடுக்கிறார்.
யாருக்குமே
தெரிய
வருவதில்லை.
இங்கு
நீங்கள்
ஏழையாக
உள்ளீர்கள்.
அடுத்த
பிறவியில்
கோல்டன்
ஸ்பூன்
இன் மௌத்
-
வாயில்
தங்கக்
கரண்டி
இருக்கும்.
நீங்கள்
பொன்னான
உலகிற்கு
செல்கிறீர்கள்
அல்லவா?
அங்கு எல்லாமே
தங்கமாக
இருக்கும்.
செல்வந்தர்களினுடைய
அரண்மனைகளில்
நல்லவிதமாக
பதிக்கப்பட்டு
இருக்கும்.
வித்தியாசமோ
அவசியம்
இருக்கும்.
மாயை
எல்லாரையும்
தலைகீழாகத்
தொங்க
விட்டு
விடுகிறது
என்பதைக் கூட
இப்பொழுது
தான்
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
இப்பொழுது
தந்தை
வந்துள்ளார்.
எனவே
குழந்தைகளிடம் எவ்வளவு
உற்சாகம்
இருக்க
வேண்டும்.
ஆனால்
மாயை
மறக்க
வைத்து
விடுகிறது
-
தந்தையின்
உத்தரவு ஆகுமா,
இல்லை
பிரம்மாவினுடையதா?
சகோதரனுடையதா?
இல்லை
தந்தையினுடையதா?
இதிலேயே
நிறைய குழம்பி
விடுகிறார்கள்.
நல்லதோ
கெட்டதோ
-
நீங்கள்
தந்தையினுடைய
உத்தரவு
என்றே
உணருங்கள்
என்று தந்தை
கூறுகிறார்.
அதன்படி
நடக்க
வேண்டி
இருக்கும்.
இவருடையது
ஏதாவது
தவறு
ஏற்பட்டு
விட்டது என்றாலும்
கூட
தவறில்லாதபடி
அவர்
செய்வித்து
விடுவார்.
அவரிடம்
சக்தியோ
உள்ளது
அல்லவா?
இவர் எப்படி
நடக்கிறார்.
இவரது
சிரத்தின்
மீது
யார்
அமர்ந்துள்ளார்
என்பதை
நீங்கள்
பார்க்கிறீர்கள்.
ஒரேடியாக
அருகில் அமர்ந்துள்ளார்.
குருமார்கள்
அருகாமையில்
அமரச்
செய்து
கற்பிக்கிறார்கள்
அல்லவா?
இருந்தாலும்
கூட
இவரும் உழைப்பு
செய்ய
வேண்டி
உள்ளது.
தமோபிரதான
நிலையிலிருந்து சதோபிரதானமாக
ஆவதில்
புருஷார்த்தம்
(முயற்சி)
செய்ய
வேண்டி
உள்ளது.
என்னை
நினைவு
செய்து
உணவு
தயாரியுங்கள்
என்று
தந்தை
கூறுகிறார்.
சிவபாபாவின்
நினைவினுடைய உணவு
வேறு.
யாருக்கும்
கிடைக்க
முடியாது.
இப்பொழுதைய
உணவிற்கு
தான்
பாடல்
உள்ளது.
அந்த பிராமணர்கள்
ஸ்துதி
பாடுகிறார்கள்
என்றாலும்
கூட
பொருள்
எதுவுமே
புரியாமல்
உள்ளார்கள்.
என்ன
மகிமை செய்கிறார்களோ
அது
பற்றி
எதுவுமே
புரிந்து
கொள்வதில்லை.
இவர்கள்
பக்திமான்கள்
என்று
மட்டுமே
புரியப்படுகிறது.
ஏனெனில்
பூசாரி
ஆவார்கள்.
அங்கோ
பக்திமான்கள்
என்ற
விஷயமே
கிடையாது.
அங்கு
பக்தி
இருப்பது இல்லை.
பக்தி
என்றால்
என்ன
பொருள்
என்பது
கூட
யாருக்குமே
தெரியாது.
ஞானம்,
பக்தி,
வைராக்கியம்
என்று கூறிக்
கொண்டிருந்தார்கள்.
எவ்வளவு
முதல்தரமான
வார்த்தைகள்
ஆகும்.
ஞானம்
பகல்,
பக்தி
இரவு.
பிறகு இரவின்
மீது
வைராக்கியம்
ஏற்படும்
பொழுது
பகலில் செல்கிறார்கள்.
எவ்வளவு
தெளிவாக
உள்ளது.
இப்பொழுது நீங்கள்
புரிந்து
கொண்டு
விட்டுள்ளீர்கள்.
எனவே
நீங்கள்
தடுக்கி
விழ
வேண்டிய
அவசியம்
இல்லை.
என்னை
நினைவு
செய்யுங்கள்,
நான்
உங்களை
உலகிற்கு
அதிபதியாக
ஆக்குகிறேன்
என்று
தந்தை கூறுகிறார்.
நான்
உங்களுடைய
எல்லையில்லாத
தந்தை
ஆவேன்.
சிருஷ்டிச்
சக்கரத்தை
அறிந்து
கொள்வது கூட
எவ்வளவு
சுலபமானது.
விதை
மற்றும்
விருட்சத்தை
நினைவு
செய்யுங்கள்.
இப்பொழுது
கலியுகத்தின்
முடிவு ஆகும்.
பிறகு
சத்யுகம்
வரப்
போகிறது.
இப்பொழுது
நீங்கள்
சங்கமயுகத்தில்
மலர்
போல
ஆகிறீர்கள்.
ஆத்மா சதோபிரதானமாக
ஆகி
விடும்.
பிறகு
வசிப்பதற்குக்
கூட
சதோபிரதானமான
மாளிகை
கிடைக்கும்.
உலகமே புதியதாக
ஆகி
விடுகிறது.
எனவே
குழந்தைகளுக்கு
எவ்வளவு
குஷி
இருக்க
வேண்டும்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
வெகுகாலம்
கழித்து
தேடி
கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு,
தாயும்
தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும் காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு,
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
நாம்
ஸ்ரீமத்படி
நமது
(பரிஸ்தான்)
சொர்க்கத்தை
நிலைநாட்டி
கொண்டிருக்கிறோம்
என்ற
போதை
எப்பொழுதும்
இருக்கட்டும்.
வீணான
குப்பை
கூளம்
போன்ற
அசுத்தமான
விஷயங்களை
விடுத்து மிகுந்த
உல்லாசத்துடன்
இருக்க
வேண்டும்.
2.
தங்களது
சிந்தனைகளை
மிகவும்
மேன்மையானதாக
வைத்திருக்க
வேண்டும்.
மிகவும்
நல்ல இராஜரீகமான
பல்கலை
கழகம்
மற்றும்
தங்கும்
விடுதியை
திறப்பதற்கான
ஏற்பாடு
செய்ய
வேண்டும்.
தந்தைக்கு
மறைமுகமான
உதவியாளர்
ஆக
வேண்டும்.
தங்களது
பகட்டினை
காண்பித்துக் கொள்ளக்
கூடாது.
வரதானம்:
ஞானம்
நிறைந்த
வள்ளலாக
ஆகி
அனைத்து
ஆத்மாக்களிடத்தும் சுபசிந்தனையாளராக
ஆகக்
கூடிய
சிறந்த
சேவாதாரி
ஆவீர்களாக.
சுப
சிந்தனையாளராக
ஆவதற்கான
விசேஷ
ஆதாரம்
சுப
சிந்தனை
ஆகும்.
யார்
வீணான
சிந்தனை அல்லது
பரசிந்தனை
செய்கிறார்களோ,
அவர்கள்
சுப
சிந்தனையாளராக
ஆக
முடியாது.
சுப
சிந்தனையாளரான மணிகளிடம்
சுப
சிந்தனையின்
சக்திசாபொக்கிஷம்
எப்பொழுதும்
நிரம்பி
இருக்கும்.
நிரம்பிய
தன்மை காரணமாகத்
தான்
மற்றவர்களிடத்தும்
சுப
சிந்தனை
உடையவர்களாக
ஆக
முடியும்.
சுபசிந்தனையாளர்
என்றால் அனைத்து
ஞான
இரத்தினங்களினாலும்
நிரம்பியவர்கள்.
அப்பேர்ப்பட்ட
ஞானத்தின்
நிறைந்த
வள்ளல்
தான் நடந்தாலும்
சென்றாலும்
ஒவ்வொருவருக்கும்
சேவை
செய்தபடி
சிறந்த
சேவாதாரி
ஆகி
விடுகிறார்கள்.
சுலோகன்:
உலக
இராஜ்ய
அதிகாரி
ஆக
வேண்டும்
என்றால்
உலக
மாற்றத்தின்
காரியத்தில்
கருவி
ஆகுங்கள்.
ஓம்சாந்தி