25.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

"இனிமையான குழந்தைகளே! நீங்கள் இராயல் குலத்தின் ராயல் மாணவர்கள், உங்களுடைய நடத்தை மிகவும் இராயலாக இருக்க வேண்டும், அப்போது தான் பாபாவை வெளிப்படுத்த முடியும்"

 

கேள்வி:

வினாச நேரத்தில் கடைசி பேப்பரில் யார் தேர்ச்சி பெறுவார்கள்? அதற்கான முயற்சி என்ன?

 

பதில்:

யாருக்கு பாபாவைத் தவிர பழைய உலகத்தின் எந்த ஒரு பொருளும் நினைவு வர வில்லையோ, அவர்கள் தான் கடைசி பேப்பரில் தேர்ச்சி பெற முடியும். மற்ற பொருட்கள் நினைவு வந்தால் தேர்ச்சி பெற மாட்டார்கள். இதற்காக எல்லையற்ற முழு உலகத்திலிருந்தும் பற்றுதலை நீக்க வேண்டும். சகோதர-சகோதரன் என்ற உறுதியான நிலை வேண்டும். தேக-அபிமானம் உடைந்திருக்க வேண்டும்.

 

ஓம் சாந்தி.

நாம் எவ்வளவு இராயலான மாணவர்களாக இருக்கின்றோம், என்ற போதை குழந்தைகளுக்கு எப்போதும் இருக்க வேண்டும். எல்லையற்ற எஜமானர் நமக்கு படிப்பித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் எவ்வளவு உயர்ந்த குலத்தின் இராயலான மாணவர்கள், எனவே இராயல் மாணவர்களின் நடத்தை கூட இராயலாக இருக்க வேண்டும், அப்போது தான் பாபாவை காட்ட முடியும். நீங்கள் ஸ்ரீமத்படி உலகத்தில் அமைதியை ஸ்தாபனை செய்வதற்கு கருவியாகி இருக்கிறீர்கள். உங்களுக்கு அமைதியின் பரிசு கிடைக்கிறது. அதுவும் ஒரு பிறவிக்கு இல்லை, பிறவி-பிறவிகளுக்கும் கிடைக்கிறது. குழந்தைகள் பாபாவிற்கு என்ன நன்றி செலுத்துவார்கள்? பாபா அவரே வந்து கைகளில் சொர்க்கத்தை கொடுக்கிறார். பாபா வந்து இதைக் கொடுப்பார், என்று குழந்தைகளுக்கு தெரியுமா என்ன! இப்போது பாபா கூறுகின்றார் -- இனிமையான குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள். நினைவைப் பற்றி ஏன் சொல்கிறார்? ஏனென்றால் இந்த நினைவின் மூலம் தான் விகர்மங்கள் வினாசம் ஆக வேண்டும். எல்லையற்ற பாபாவின் அறிமுகம் கிடைத்தது மேலும்  நிச்சயம் ஏற்பட்டது. கஷ்டப்படுவதற்கான விஷயம் ஏதும் இல்லை. பக்தி மார்கத்தில் பாபா-பாபா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக பாபாவிடமிருந்து ஏதாவது ஆஸ்தி கிடைக்கும். உங்களுக்கு முயற்சிக்கான சிறிது நேரம் கிடைக்கிறது. எந்தளவிற்கு ஸ்ரீமத்படி முயற்சி செய்வீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்த பதவி கிடைக்கும். பாபா, டீச்சர், சத்குரு -- மூவரினுடைய ஸ்ரீமத் கிடைக்கிறது. அந்த வழிப்படி நடக்க வேண்டும். தங்களுடைய வீட்டிலேயே தான் இருக்க வேண்டும். வழிப்படி நடப்பதினால் தான் தடை ஏற்படுகிறது. மாயையின் முதல் தடையே தேக-அபிமானமாகும். தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள், என்று பாபா கூறுகின்றார். பிறகு ஏன் ஸ்ரீமத்தை ஏற்றுக் கொள்வதில்லை? நாங்கள் முயற்சி செய்கிறோம், ஆனால் மாயை செய்ய விடுவதில்லை, என்று குழந்தைகள் கூறுகின்றார்கள். படிப்பில் குறிப்பிட்ட முயற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும், என்று குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். யார் நல்ல குழந்தைகளோ, அவர்களைப் பின்பற்ற வேண்டும். நாம் பாபாவிடமிருந்து உயர்ந்த ஆஸ்தி எடுக்க வேண்டும், என்று அனைவரும் இந்த முயற்சியைத் தான் செய்கிறார்கள். முள்ளிலிருந்து மலராக ஆகுவதற்கு நினைவின் அவசியம் அதிகம் இருக்கிறது. 5 விகாரங்கள் எனும் முட்கள் நீங்கி விட்டால் மலர்களாக ஆகி விடுவீர்கள். அது யோகபலத்தின் மூலம் தான் நீங்கும். இன்னார் அப்படி சென்று விட்டார், நாமும் சென்று விடலாம், என்று குழந்தைகள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பார்த்து முயற்சியும் செய்ய வேண்டும் அல்லவா. சரீரத்தை விட்டால் பாபாவின் நினைவில் இருக்க வேண்டும், வசீகரன மந்திரம் நினைவிருக்க வேண்டும். ஒரு பாபாவை தவிர வேறு எதுவும் நினைவு வரக்கூடாது, அப்போது பிராணன் உடலை விட்டு நீங்க வேண்டும். பாபா, நாங்கள் தங்களிடம் வந்தே வந்து விட்டோம் அவ்வளவு தான். இப்படி பாபாவை நினைவு செய்வதின் மூலம் ஆத்மாவில் நிறைந்திருக்கும் குப்பைகள் அனைத்தும் எரிந்து விடும். ஆத்மாவில் இருக்கிறது என்றால் சரீரத்திலும் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பிறவி-பிறவிகளுக்கான குப்பைகள், அவையனைத்தும் எரிய வேண்டும். எப்போது உங்களுடைய குப்பைகள் அனைத்தும் எரிந்து விடுமோ, அப்போது உலகமும் தூய்மையாகி விடும். உங்களுக்காக, உலகத்திலிருந்து அனைத்து குப்பைகளும் நீங்க வேண்டும். நீங்கள் உங்களுடைய குப்பைகளை மட்டும் சுத்தப்படுத்துவதோடு இல்லாமல், அனைவருடைய குப்பைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். பாபாவை அழைப்பதே, பாபா வந்து இந்த உலகத்திலிருந்து குப்பைகளை சுத்தப்படுத்துங்கள் என்று தான். முழு உலகத்தையும் தூய்மை யாக்குங்கள். எதற்காக? அந்த தூய்மையான உலகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் தான் முதன்-முதலில் இராஜ்யம் செய்ய வருகின்றீர்கள். எனவே பாபா உங்களுக்காக உங்களுடைய தேசத்தில் வந்திருக்கின்றார்.

 

பக்தி மற்றும் ஞானத்திற்கு இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. பக்தியில் எவ்வளவு நல்ல-நல்ல பாடல்கள் பாடுகிறார்கள். ஆனால் யாருக்கும் நன்மை செய்வதில்லை. தன்னுடைய சுயதர்மத்தில் நிலைத்திருப்பதிலும் மேலும் பாபாவை நினைவு செய்வதிலும் தான் நன்மை இருக்கிறது. எப்படி கலங்கரை விளக்கம் சுற்றுகிறதோ, அப்படித் தான் உங்களுடைய நினைவு செய்வதும் ஆகும். சுயதரிசனத்தைத் தான் லைட் ஹவுஸ் என்று சொல்லப்படுகிறது. பாப்தாதாவிடமிருந்து நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்க வேண்டும், என்று குழந்தைகளாகிய நீங்கள் மனதிற்குள் புரிந்து கொள்கிறீர்கள். இது நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான சத்திய நாராயணனின் கதையாகும். தமோபிரதானமாக ஆகியிருக்கக் கூடிய உங்களுடைய ஆத்மாவை இப்போது சதோபிரதானமாக ஆக்க வேண்டும், என்று பாபா புரிய வைக்கின்றார். சத்யுகத்தில் சதோபிரதானமாக இருந்தீர்கள், இப்போது மீண்டும் சதோபிரதானமாக மாற்ற பாபா வந்திருக்கின்றார். என்னை நினைவு செய்வதின் மூலம் தான் நீங்கள் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள், பாபா கூறுகின்றார். பாபா தான் கீதையைச் சொல்லியிருந்தார். இப்போது மனிதர்கள் சொல்கிறார்கள், எவ்வளவு வித்தியாசம் ஆகி விட்டது! பகவான் பகவான் தான், அவர் தான் மனிதனிலிருந்து தேவதையாக மாற்றுகின்றார். புதிய உலகத்தில் தூய்மையான தேவதைகள் தான் இருக்கிறார்கள். எல்லையற்ற தந்தை தான் புதிய உலகத்தின் ஆஸ்தியைக் கொடுக்கக் கூடியவராவார். பாபாவை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால், அந்து மதி சோ கதி (கடைசி நேரத்தில் புத்தியில் என்ன இருக்கிறதோ, அதன் படி அடுத்த பிறவியில் நிலை இருக்கும்) ஆகி விடும். புருஷோத்தமர்களாக ஆக்குவதற்கு பாபா சங்கமயுகத்தில் வருகின்றார், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது இந்த 84 பிறவிகளின் சக்கரம் முடிகிறது, பிறகு ஆரம்பம் ஆகும். இந்தக் குஷி கூட இருக்க வேண்டும். கண்காட்சியில் வரும் மக்களைக் கூட முதலில் சிவபாபாவின் படத்திற்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்கள். பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்வதின் மூலம் நீங்கள் இதைப் போல் (தேவதைகளாக) ஆகி விடுவீர்கள். சத்யுகத்திற்கான ஆஸ்தி தான் தந்தையிடமிருந்து கிடைக்கிறது. பாரதம் சத்யுகமாக இருந்தது, இப்போது இல்லை, மீண்டும் ஆக வேண்டும். ஆகையினால் பாபா மற்றும் இராஜ்ஜியத்தை நினைவு செய்தீர்கள் என்றால், அந்து மதி சோ கதியாக ஆகி விடும். இவர் உண்மையான தந்தையாக இருக்கின்றார், இவருடைய குழந்தையாக ஆகுவதின் மூலம் நீங்கள் உண்மையான கண்டத்திற்கு எஜமானர்களாக ஆகி விடுவீர்கள். முதல்-முதலில் அல்ஃப் (அல்லா)வை உறுதியாக்குங்கள். அல்ஃப் பாபா, பே இராஜ்ஜியமாகும். பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால், நினைவின் மூலம் தான் பாவகர்மங்கள் அழியும் மேலும் நீங்கள் சொர்க்கத்திற்கு சென்று விடுவீர்கள். எவ்வளவு சகஜமானதாக இருக்கிறது! பிறவி-பிறவிகளாக பக்தியின் விஷயங்களைக் கேட்டு-கேட்டு புத்திக்கு மாயையின் பூட்டு போடப்பட்டு விட்டது. பாபா வந்து சாவியின் மூலம் பூட்டைத் திறக்கின்றார். இந்த சமயத்தில் அனைவருடைய காதுகளும் மூடப்பட்டதைப் போல் இருக்கிறது. கல் புத்தியாக இருக்கிறது. சிவபாபாவின் நினைவு இருக்கிறதா? சொர்க்கத்தின் ஆஸ்தி நினைவு இருக்கிறதா? என்று நீங்கள் எழுதவும் செய்கிறீர்கள். இராஜ்ஜியத்தை நினைவு செய்வதின் மூலம் வாய் இனிமையாக ஆகும் அல்லவா! பாபா கூறுகின்றார், நான் குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு உபகாரம் செய்கின்றேன்! நீங்களோ அபகாரம் தான் செய்து கொண்டு வந்தீர்கள். அது கூட நாடகத்தில் அடங்கியிருக்கிறது, யாருடைய தோஷமும் இல்லை. குழந்தைகளாகிய உங்களுடைய இந்த மிஷன் கல் புத்திகாரர்களை தங்கபுத்தி உடையவர்களாக, அதாவது முட்களை மலர்களாக மாற்றுவதற்கே ஆகும். உங்களுடைய இந்த மிஷன் ஆரம்பமாகியிருக்கிறது. அனைவரும் ஒருவர்-மற்றவரை முள்ளிலிருந்து மலராக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கூட அப்படி மாற்றக் கூடியவர் கண்டிப்பாக இராஜ மலராக இருப்பார். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் அல்லது மலர்களின் தோட்டத்தை உருவாக்கக் கூடியவர் ஒரேயொரு பாபா தான் ஆவார். நீங்கள் இறைவனின் உதவியாளர்களாவீர்கள். தமோபிரதானமானவர்களை சதோபிரதானம் ஆக்குவது - இது உதவியாகும், வேறு எந்த கஷ்டமும் கொடுப்பதில்லை. புரிய வைப்பதும் மிகவும் சுலபமாகும். கலியுகத்தில் தமோபிரதானம் தான் இருக்கிறது. ஒருவேளை கலியுகத்தின் ஆயுளை அதிகரித்து விட்டால் இன்னும் தான் தமோபிரதானம் ஆவார்கள்.

 

இப்போது நம்மை மலராக மாற்றக் கூடிய தந்தை வந்திருக்கின்றார், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். முள்ளாக்குவது இராவணனுடைய வேலையாகும். மலராக பாபா மாற்றுகின்றார். யாருக்கு சிவபாபாவின் நினைவு இருக்கிறதோ, அவர்களுக்கு கண்டிப்பாக சொர்க்கமும் நினைவிருக்கும். அதிகாலை ஊர்வலம் (பஜனை) செல்லும் போது கூட, நாங்கள் பிரஜாபிதா பிரம்மாகுமார-குமாரிகள் பாரதத்தில் இந்த லஷ்மி-நாராயணனின் இராஜ்ஜியத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றோம், என்பதை காட்டுங்கள். நாங்கள் பிராமணனிலிருந்து தேவதையாக ஆகின்றோம். தேவதையிலிருந்து பிறகு சத்திரியர், பிறகு வைசியர்................. இது குட்டிக் கரணமாகும். யாருக்கும் புரிய வைப்பது மிகவும் சுலபமாகும். நாம் பிராமணர்களாக இருக்கின்றோம். பிராமணர்களுக்கு குடுமி இருக்கிறது. நாம் 84 பிறவிகளின் சக்கரத்தை முடித்திருக்கிறோம், என்று நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். குழந்தைகளுக்கு எவ்வளவு நல்ல ஞானம் கிடைக்கிறது. மற்றவை அனைத்தும் பக்தியாகும். ஞானத்தை ஒரேயொரு பாபா தான் சொல்கிறார். அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் ஒரேயொரு பாபா தான் ஆவார். புருஷோத்தம சங்கமயுகமும் ஒன்று தான் ஆகும். இந்த சமயத்தில் பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு படிப்பிக்கின்றார். பிறகு பக்தியில் நினைவுச் சின்னம் நடக்கிறது. இந்த முயற்சி செய்வதின் மூலம் நீங்கள் இந்த ஆஸ்தியை அடையலாம், என்று பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு வழி சொன்னார். இந்த படிப்பு மிகவும் சகஜமானதாகும். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான படிப்பாகும். கதை என்று சொல்வது தவறாகும், ஏனென்றால் கதையில் குறிக்கோள் இருப்பதில்லை. படிப்பில் குறிக்கோள் இருக்கிறது. யார் படிப்பிப்பது? ஞானக்கடல். பாபா கூறுகின்றார், நான் வந்து உங்களுடைய பையை ஞான இரத்தினங்களின் மூலம் நிரப்புகின்றேன். எல்லையற்ற தந்தையிடம் நீங்கள் என்ன கேள்வி கேட்பீர்கள்? இந்த சமயத்தில் அனைவரும் கல்புத்தியாக இருக்கிறார்கள். இராவணனையே தெரிந்திருக்கவில்லை. இப்போது கேட்பதற்கு உங்களுக்கு புத்தி கிடைத்திருக்கிறது. இராவணன் யார்? எப்போது இவருடைய பிறவி ஏற்பட்டது? எப்போதிலிருந்து எரிக்கின்றீர்கள்? என்று மனிதர்களிடம் கேளுங்கள். அனாதியாக என்று சொல்வார்கள். நீங்கள் அனேக விதமான கேள்விகள் கேட்கலாம். அந்த சமயம் கூட வரும்போது கேட்பீர்கள். யாரும் பதில் சொல்ல முடியாது. உங்களுடைய ஆத்மா நினைவு யாத்திரையில் ஈடுபட்டு விடும். நாம் சதோபிரதானமாக ஆகியிருக்கிறோமா? என்று தங்களிடம் கேளுங்கள். மனம் சாட்சியம் தருகிறதா? இப்போது கர்மாதீத் நிலை ஒன்றும் ஏற்படவில்லை. ஏற்பட வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் மிகக் குறைவானவர்களே இருக்கின்றீர்கள், ஆகையினால் யாரும் கேட்பதில்லை, மேலும் உங்களுடைய விஷயமே தனிப்பட்டதாகும். முதல்-முதலில் பாபா சங்கமயுகத்தில் வருகின்றார், என்று சொல்லுங்கள். ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொண்ட பிறகு மேலே செல்லுங்கள். மிகவும் தைரியத்தோடு, அன்போடு உங்களுக்கு இரண்டு தந்தை, லௌகீகம் மற்றும் பரலௌகீகம், என்று புரிய வைக்க வேண்டும். எப்போது சதோபிரதானம் ஆகின்றீர்களோ, அப்போது பரலௌகீக தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. பாபாவின் நினைவு வந்தால் குஷியின் அளவு அதிகரிக்கும். குழந்தைகளாகிய உங்களிடத்தில் நிறைய குணங்கள் நிரப்பப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா வந்து தகுதிகளை கற்றுத் தருகின்றார், ஆரோக்கியம்-செல்வமும் கூட கொடுக்கின்றார், குணங்களையும் மாற்றுகின்றார், படிப்பும் கொடுக்கின்றார், ஜெயின் தண்டனைகளிலிருந்தும் விடுவிக்கின்றார்.

 

நீங்கள் நல்ல விதத்தில் மந்திரிகள் போன்றோருக்கும் புரிய வைக்கலாம். அவர்களுக்கு மிக எளிமையாகப் புரிய வைக்க வேண்டும். உங்களுடைய ஞானம் மிகவும் இனிமையானதாகும். அன்போடு அமர்ந்து கேட்டால் அன்பின் கண்ணீர் வந்து விடும். நாம் சகோதரனுக்கு வழி சொல்கிறோம், என்ற பார்வையோடு எப்போதும் பாருங்கள். நாங்கள் ஸ்ரீமத்படி பாரதத்திற்கு சேவை செய்து கொண்டிருக்கிறோம், என்று சொல்லுங்கள். பாரதத்தின் சேவையில் தான் பணத்தை ஈடுபடுத்துகிறோம். டில்லியில் நாலாபுறமும் சேவை செய்யுங்கள், விஸ்தரியுங்கள், என்று பாபா கூறுகின்றார். ஆனால் இது வரை யாரையும் பாதிப்புறச் செய்ய வில்லை, பாதிப்புறச் செய்வதற்கு யோகபலம் வேண்டும். யோகபலத்தின் மூலம் நீங்கள் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள். கூட-கூடவே ஞானமும் இருக்கிறது. யோகத்தின் மூலம் தான் நீங்கள் யாரையும் ஈர்க்க முடியும். குழந்தைகள் இப்போது நன்றாகப் பேசுகிறார்கள், ஆனால் யோகத்தின் ஈர்ப்பு குறைவாக இருக்கிறது. யோகம் தான் முக்கியமான விஷயமாகும். குழந்தைகளாகிய நீங்கள் யோகத்தின் மூலம் தங்களைத் தூய்மையாக்குகின்றீர்கள். எனவே யோகபலம் அதிகம் வேண்டும். அதனுடைய குறைபாடு நிறைய இருக்கிறது. உள்ளுக்குள் குஷியில் ஆட வேண்டும், இது குஷியின் நடனமாகும். இந்த ஞான-யோகத்தின் மூலம் உங்களுக்குள் நடனம் நடக்கிறது. பாபாவின் நினைவில் இருந்து-இருந்து நீங்கள் அசரீரி ஆகி விடுகிறீர்கள். ஞானத்தின் மூலம் அசரீரி ஆக வேண்டும், இதில் மறைந்து போவதற்கான விஷயம் இல்லை, புத்தியில் ஞானம் வேண்டும். இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும், பிறகு இராஜ்யத்தில் வருவீர்கள். பாபா வினாசம் மற்றும் ஸ்தாபனையின் காட்சி கூட காட்டியிருக்கிறார். இந்த உலகம் முழுவதும் எரியப் போகிறது, நாம் புதிய உலகத்திற்கு தகுதியானவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும். ஆகையினால் சரீரத்தின் மீது எந்தவொரு பற்றுதலும் வைக்கக் கூடாது. இந்த சரீரத்திலிருந்து, இந்த உலகத்திலிருந்து விடுபட்டு இருக்க வேண்டும். தங்களுடைய வீடு மற்றும் இராஜ்ஜியத்தை மட்டும் நினைவு செய்ய வேண்டும். எந்தவொரு பொருளின் மீது ஆசை (பற்று) இருக்கக் கூடாது. வினாசம் கூட வரப்போகிறது. வினாசம் ஆக ஆரம்பிக்கும் போது உங்களுக்கு குஷி இருக்கும்-அவ்வளவு தான், நாம் மாற்றலாகியே விட்டோம். பழைய உலகத்தின் பொருட்கள் ஏதாவது நினைவுக்கு வந்தால் ஃபெயில். குழந்தைகளிடம் எதுவும் இல்லை எனும்போது என்ன நினைவுக்கு வரும்? எல்லையற்ற முழு உலகத்தின் மீது பற்றுதல் நீங்கி விட வேண்டும், இதில் உழைப்பு இருக்கிறது. சகோதரன்- சகோதரன் என்ற திட நிலை, கூட தேக-அபிமானம் உடைந்தால் தான் இருக்க முடியும். தேக-அபிமானம் வருவதின் மூலம் ஏதாவது நஷ்டம் ஏற்படுகிறது. ஆத்ம-அபிமானம் இருப்பதின் மூலம் நஷ்டம் ஏற்படுவதில்லை. நாம் சகோதரருக்கு படிப்பிக்கின்றோம். சகோதரனிடம் பேசுகின்றோம், என்பது உறுதியான பழக்கமாகி விட வேண்டும். உதவித்தொகை வாங்க வேண்டும் என்றால் அந்தளவிற்கு முயற்சி செய்ய வேண்டும். புரிய வைக்கும்போதும் நாம் சகோதர-சகோதரர்கள், என்ற நினைவு இருக்க வேண்டும். அனைத்து ஆத்மாக்களும் ஒரு தந்தையின் குழந்தைகள். அனைத்து சகோதரர்களுக்கும் தந்தையின் ஆஸ்தியில் உரிமை இருக்கிறது. சகோதரி என்ற உணர்வு கூட வரக் கூடாது. இதைத் தான் ஆத்ம-அபிமானம், என்று சொல்லப்படுகிறது. ஆத்மாவிற்கு இந்த சரீரம் கிடைத்திருக்கிறது, அதில் சிலருக்கு ஆணினுடையதும், சிலருக்கு பெண்ணின் பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு மீதியிருப்பது ஆத்மா மட்டுமே ஆகும். பாபா என்ன வழி சொல்கிறாரோ, உண்மையில் அது சரியானதா, என்று யோசிக்க வேண்டும். குழந்தைகள் இங்கு வருவதே இந்தப் பயிற்சி செய்வதற்கே ஆகும். டிரெயினில் பேட்ஜை வைத்து யாருக்கும் புரிய வைக்கலாம். அமர்ந்து கொண்டு ஒவ்வொருவரிடமும், உங்களுக்கு எத்தனை தந்தை? என்று கேளுங்கள். பிறகு பதில் சொல்லுங்கள். இது தான் மற்றவர்களை ஈர்ப்பதற்கான யுக்தியாகும். உங்களுக்கு இரண்டு தந்தை, எங்களுக்கு மூன்று தந்தை இருக்கிறார்கள். இந்த அலௌகீக தந்தையின் மூலம் நமக்கு ஆஸ்தி கிடைக்கிறது. உங்களிடம் மிகவும் முதல் தரமான பொருள் இருக்கிறது. யாராவது இதில் என்ன நன்மை இருக்கிறது? என்று கேட்பார்கள். கண்ணில்லாதவர்களுக்கு ஊன்றுகோலாகி வழி காட்டுவது எம்முடைய கடமை, என்று சொல்லுங்கள். எப்படி சன்னியாசினிகள் (நன்ஸ்) சேவை செய்கிறார்களோ, அதுபோல் நீங்களும் செய்யுங்கள். நீங்கள் நிறைய பிரஜைகளை உருவாக்க வேண்டும். உயர்ந்த பதவி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் அனைவருக்கும் முன்னேறும் கலைக்கான வழி சொல்கிறீர்கள். ஒரு தந்தையை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் கூட அதிக குஷி இருக்கும் மேலும் விகர்மங்களும் வினாசம் ஆகும். பாபாவிடமிருந்து ஆஸ்தி எடுப்பது மிகவும் சகஜமாகும். ஆனால் நிறைய குழந்தைகள் தவறு செய்கிறார்கள். நல்லது!

 

"இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்"

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. கடைசி நேரத்தில் தேர்ச்சி பெறுவதற்காக இந்த சரீரம் மற்றும் உலகத்திலிருந்து விடுபட்டு இருக்க வேண்டும், எந்தவொரு பொருளின் மீதும் பற்று வைக்கக் கூடாது. இப்போது நாம் மாற்றலாகியே விட்டோம், என்பது புத்தியில் இருக்க வேண்டும்.

 

2. மிகவும் தைரியத்தோடும் அன்போடும் அனைவருக்கும் இரண்டு தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஞான இரத்தினங்களின் மூலம் பையை நிரப்பி தானம் செய்ய வேண்டும். முட்களை மலர்களாக மாற்றுவதற்கான சேவை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

 

வரதான்;

சேவையின் ஊக்கம், உற்சாகம் மூலம் பாதுகாப்பின் அனுபவம் செய்யக்கூடிய மாயாஜீத் ஆகுக

 

எந்தக் குழந்தைகள் ஸ்தூல வேலையுடன் ஆன்மீக சேவைக்காகவும் ஒடுகின்றனரோ, எவரெடியாக இருக்கின்றனரோ, அவர்களுக்கு இந்த சேவையின் ஊக்கம், உற்சாகம் கூட பாதுகாப்பிற்கான சாதனமாகிவிடுகிறது. யார் சேவையில் ஈடுபட்டு இருக்கிறார்களோ, அவர்கள் மாயாவிடமிருந்து தப்பித்து விடுகிறார்கள். மாயையும் பார்க்கிறது, இவர்களுக்கு நேரமில்லை என்று எண்ணி அதுவும் திரும்பிச் சென்று விடுகிறது. எந்தக் குழந்தைகளுக்கு பாபா மற்றும் சேவை மீது அன்பு இருக்கிறதோ, அவர்களுக்கு அதிகப்படியான தைரியம் என்ற உதவி கிடைக்கிறது. அதன் மூலம் எளிதாகவே மாயாஜீத் ஆகிவிடுகின்றனர்.

 

சுலோகன்:

ஞான யோகத்தை தனது வாழ்க்கையின் இயல்பு (நேச்சர்) ஆக்கி விடுங்கள், அப்போது பழைய இயல்பு (நேச்சர்) மாறிவிடும்.

ஓம்சாந்தி