09.09.2019    காலை முரளி 

 ஓம் சாந்தி பாப்தாதா,  மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! பிராமணர்கள் குடுமி ஆவார்கள் மற்றும் சூத்திரர்கள் பாதம் ஆவார்கள். சூத்திரரிலிருந்து பிராமணர் ஆகும்பொழுது தான் தேவதை ஆக முடியும்.

 

கேள்வி:

உங்களுடைய எந்த ஒரு சுப பாவனையைக் கூட மனிதர்கள் எதிர்க்கிறார்கள்?

 

பதில்:

இந்தப் பழைய உலகம் முடிந்து போய் புதிய உலகம் ஸ்தாபனை ஆகிவிட வேண்டும் என்பது உங்களுடைய சுப பாவனை ஆகும். எனவே இந்த பழைய உலகம் இப்பொழுது விநாசம் ஆகிவிட்டது போலவே தான் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதைக் கூட மனிதர்கள் எதிர்க்கிறார்கள்.

 

கேள்வி:

இந்த இந்திர பிரஸ்தத்தின் முக்கியமான நியமம் என்ன?

 

பதில்:

எந்த ஒரு பதீதமான (தூய்மையற்ற) சூத்திரரை இந்த இந்திர பிரஸ்தத்தின் சபையில் அழைத்து வரக் கூடாது. ஒருவேளை யாராவது அழைத்து வந்தார்கள் என்றால் அவர்கள் மீதும் பாவம் ஏற்பட்டு விடுகிறது.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கிறார். நாம் நமக்காக நம்முடைய தெய்வீக இராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை ஆன்மீகக் குழந்தைகள் அறிந்துள்ளார்கள். ஏனெனில், நீங்கள் பிரம்மா குமார், குமாரிகள் ஆவீர்கள். நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். ஆனால் மாயை உங்களைக் கூட மறக்க வைத்து விடுகிறது. நீங்கள் தேவதை ஆக விரும்பு கிறீர்கள். ஆனால் மாயை உங்களை பிராமணரிலிருந்து சூத்திரராக ஆக்கிவிடுகிறது. சிவபாபாவை நினைவு செய்யாமலிருக்கும் பொழுது பிராமணர் சூத்திரராக ஆகிவிடுகிறார்கள். நாம் நமது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இராஜ்யம் ஸ்தாபனை ஆகிவிடும்பொழுது இந்தப் பழைய சிருஷ்டி இருக்காது. அனைவரையும் இந்த உலகத்திலிருந்து சாந்திதாமத்திற்கு அனுப்பி விடுகிறார். இது உங்களுடைய பாவனை ஆகும். ஆனால் இந்த உலகம் முடிந்துவிடப் போகிறது என்று கூறும் பொழுது அவசியம் ஜனங்கள் எதிர்ப்பார்கள் அல்லவா? பிரம்மாகுமாரிகள் இது என்ன இப்படிக் கூறுகிறார்கள் என்பார்கள். விநாசம், விநாசம் என்றே கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விநாசத்தில் தான் குறிப்பாக பாரதம் மற்றும் பொதுவாக உலகத்திற்கு நன்மை உள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த விஷயத்தை உலகத்தார் அறியாமல் உள்ளார்கள். விநாசம் ஆகும்பொழுது எல்லோரும் முக்தி தாமம் சென்று விடுவார்கள். இப்பொழுது நீங்கள் ஈசுவரிய சம்பிரதாயத்தினராக ஆகி உள்ளீர்கள். முதலில் அசுர சம்பிரதாயத்தினராக இருந்தீர்கள். உங்களுக்கு சுயம் இறைவன் "என் ஒருவனை நினைவு செய்யுங்கள்" என்று கூறுகிறார். எப்பொழுதும் நினைவு ஒன்றும் இருக்க முடியாது என்பதையோ தந்தை அறிந்துள்ளார். எப்பொழுதும் நினைவு இருந்திருந்தால் விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும். பிறகோ கர்மாதீத் நிலை ஆகிவிடும். இப்பொழுதோ எல்லோரும் புருஷார்த்திகள் (முயற்சி செய்பவர்கள்) ஆவார்கள். யார் பிராமணர்கள் ஆவார்களோ அவர்களே தேவதை ஆகிவிடுவார்கள். பிராமணர்களுக்குப் பிறகு இருப்பவர்கள் தேவதைகள் ஆவார்கள். பிராமணர்கள் குடுமி (உயர்ந்த) ஆவர் என்று தந்தை புரிய வைத்துள்ளார். எப்படி குழந்தைகள் குட்டிக் கரணம் போடுகிறார்கள் முதலில் வருவது தலையின் குடுமி. பிராமணர்களுக்கு எப்பொழுதும் குடுமி இருக்கும். நீங்கள் பிராமணர்கள் ஆவீர்கள். முதலில் சூத்திரர்கள் அதாவது கால்களாக (தாழ்ந்து) இருந்தோம். இப்பொழுது பிராமணர் குடுமி ஆகியுள்ளீர்கள். பிறகு தேவதை ஆகி விடுவீர்கள். தேவதை என்று முகத்திற்கு கூறுவார்கள். க்ஷத்திரியர் என்று புஜங்களுக்கும் வைசியர் என்று வயிற்றுக்கும் சூத்திரர் என்று கால்களுக்கும் கூறுவார்கள். சூத்திரர் என்றால் இழிந்த புத்தி துச்ச புத்தி. யார் தந்தையை அறியாமல் உள்ளார்களோ மற்றும் இன்னுமே தந்தையை நிந்தித்துக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களுக்கு இழிந்த புத்தி என்று கூறப்படுகிறது. அப்பொழுது தான் தந்தை கூறுகிறார், எப்பொழுதெல்லாம் பாரதத்தில் நிந்தை ஏற்படுகிறதோ அப்பொழுது நான் வருகிறேன். யார் பாரதவாசிகளாக இருக்கிறார்களோ அவர்களிடம் தான் உரையாடுகிறார். "யதா யதா ஹி தர்மஸ்ய. .." தந்தை வருவதும் பாரதத்தில் தான். வேறு எந்த இடத்திலும் வருவதே இல்லை. பாரதம் தான் அவினாஷி (அழியாத) கண்டம் ஆகும். தந்தையும் அவினாஷி ஆவார். அவர் ஒருபொழுதும் பிறப்பு இறப்பில் வருவது இல்லை. தந்தை வந்து அவினாஷி ஆத்மாக்களுக்குத் தான் கூறுகிறார். இந்த சரீரமோ அழியக் கூடியது ஆகும். இப்பொழுது நீங்கள் சரீர உணர்வை விடுத்து தன்னை ஆத்மா என்று உணருவதற்கு முற்பட்டுள்ளீர்கள். ஹோலியின் பொழுது கோக்கி என்ற தின்பண்டத்தை சுடும்பொழுது அந்த கோக்கி முழுவதுமாக எரிந்துவிடுகிறது. ஆனால் அது கட்டப்பட்டுள்ள நூல் எரிவதில்லை என்று தந்தை புரிய வைத்திருந்தார். ஆத்மா ஒருபொழுதும் அழிந்து விடுவதில்லை. இந்த உதாரணம் இதற்காகத் தான் உள்ளது. ஆத்மா அழியாதது என்பது எந்த ஒரு மனிதருக்கும் தெரியாது. அவர்களோ ஆத்மா "நிர்லேப்" ஆத்மாவில் எதுவும் பதிவது இல்லை என்று கூறி விடுகிறார்கள். தந்தை கூறுகிறார் - இல்லை ஆத்மா தான் இந்த சரீரத்தின் மூலமாக நல்லது அல்லது தீய செயல்களைச் செய்கிறது. ஒரு சரீரத்தை விட்டு பின் மற்றொன்றை எடுக்கிறது மற்றும் வினைப் பயனை அனுபவிக்கிறார். எனவே அவர் கணக்கு வழக்கு எடுத்துக் கொண்டு வந்துள்ளார் அல்லவா? எனவே அசுர உலகத்தில் மனிதர்கள் அளவற்ற துக்கத்தை அனுபவிக்கிறார்கள். ஆயுள் கூட குறைவாக உள்ளது. ஆனால் மனிதர்கள் இந்த துக்கங்களைக் கூட சுகம் என்று கருதி அமர்ந்துள்ளார்கள். நிர்விகாரி ஆகுங்கள் என்று குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு கூறுகிறீர்கள். பிறகும் விஷமின்றி எங்களால் இருக்க முடியாது என்று கூறுகிறார்கள். ஏனெனில் சூத்திர சம்பிரதாயம் ஆவார்கள் அல்லவா? இழிந்த புத்தி உடையவர்களாக உள்ளார்கள். நீங்கள் குடுமியாகிய பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள். குடுமியோ எல்லாவற்றையும் விட உயர்ந்தது ஆகும். தேவதைகளை விடவும் உயர்ந்தவர்கள் ஆவார்கள். நீங்கள் இச்சமயத்தில் தேவதைகளை விடவும் உயர்ந்தவர்கள் ஆவீர்கள். ஏனெனில் தந்தையுடன் கூட இருக்கிறீர்கள். தந்தை இச்சமயத்தில் உங்களுக்கு கற்பிக்கிறார். தந்தை குழந்தைகளின் கீழ்ப்படிதலுள்ள சேவகன் ஆவார் அல்லவா? குழந்தைகளைப் பெற்றெடுத்து, பராமரித்து, கற்பித்து பிறகு பெரியவர்களாக ஆக்கி பின் முதியவர் ஆகிவிடும் பொழுது முழு சொத்தையும் குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு சுயம் குருவிடம் சென்று தனிமையில் போய் அமருகிறார்கள். வானப்பிரஸ்தி ஆகிவிடுகிறார்கள். முக்தி தாமம் செல்வதற்காக குருவைப் பின்பற்றுகின்றனர். ஆனால் அவர்கள் முக்திதாமத்திற்கோ செல்ல முடியாது. எனவே தாய் தந்தை குழந்தைகளைப் பராமரிக்கிறார்கள். தாய் நோய்வாய்ப்பட்டு விட்டார் என்று வைத்து கொள்வோம். குழந்தைகள் மலம் கழித்து விடுகிறார்கள் என்றால் பின் தந்தை சுத்தம் செய்ய வேண்டி வரும் அல்லவா? எனவே தாய் தந்தை குழந்தைகளின் சேவகர்கள் ஆகிறார்கள் அல்லவா? முழு சொத்தையும் குழந்தைகளுக்குக் கொடுத்துவிடு கிறார்கள். எல்லையில்லாத தந்தையும் கூறுகிறார் - நான் வரும்பொழுது நான் ஒன்றும் சிறிய குழந்தைகளிடம் வருவதில்லை. நீங்களோ பெரியவர்கள் ஆவீர்கள் அல்லவா? உங்களுக்கு வந்து அறிவுரை கூறுகிறார். நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் ஆகிவிடும் பொழுது பி.கே. என்று அழைக்கப்படுகிறீர்கள். அதற்கு முன்பு சூத்திர குமாரர் குமாரிகளாக இருந்தீர்கள். வைசியாலயத்தில் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் வைசியாலயத்தில் இருப்பவர்கள் அல்ல. இங்கு யாருமே விகாரி இருக்க முடியாது. சட்டம் கிடையாது. நீங்கள் பி.கே. ஆவீர்கள். இந்த இடம் இருப்பதே பி.கேக்கள் இருப்பதற்காக. பதீதமாக (தூய்மையற்றவராக) விகாரத்தில் செல்பவர்களுக்குத் தான் சூத்திரர் என்று கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாத மிகவுமே அறியாத குழந்தைகள் கூட ஒரு சிலர் இருக்கிறார்கள். சூத்திரர்களுக்கு இங்கு இருப்பதற்கான சட்டம் கிடையாது. அவர்கள் இங்கு வர முடியாது. இந்திர சபையின் விஷயம் ஆகும் அல்லவா? ஞான மழை பொழிந்து கொண்டிருக்கும் இது தான் இந்திர சபை ஆகும். ஏதோ ஒரு பி.கே. தூய்மையற்றவரை (அபவித்திரமானவரை) ஒளித்து வைத்து சபையில் உட்கார வைத்தார். கல்லாகி விடு என்று இருவருக்கும் சாபம் கிடைத்து விட்டது. உண்மையிலும் உண்மையான இந்திர பிரஸ்தம் இது ஆகும் அல்லவா? இது ஒன்றும் சூத்திர குமாரர் குமாரிகள் சத் சங்கம் கிடையாது. தேவதைகள் பவித்திரமாக (தூய்மையாக) இருப்பார்கள். சூத்திரர்கள் பதீதமாக (தூய்மையற்றவராக) இருப்பார்கள். பதீதர்களை (தூய்மையற்றவர்களை) தந்தை வந்து பாவன தேவதை ஆக்குகிறார். இப்பொழுது நீங்கள் பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள். எனவே இது இந்திர சபை ஆகியது. கேட்காமல் யாராவது விகாரியைக் கூட்டி வருகிறார் என்றால், தண்டனை கிடைத்து விடுகிறது. கல்புத்தி ஆகிவிடுகிறார்கள். இங்கு தங்க புத்தியாக ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா? எனவே யார் அவர்களை அழைத்து வருகிறார்களோ அவர்களுக்கும் சாபம் கிடைத்துவிடுகிறது. நீங்கள் விகாரிகளை மறைத்து ஏன் கூட்டி வந்தீர்கள்? இந்திரனிடம் (தந்தை) கேட்கக் கூட இல்லை. எனவே எவ்வளவு தண்டனை கிடைக்கிறது! இவை மறைமுகமான விஷயங்கள் ஆகும். இப்பொழுது நீங்கள் தேவதை ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள். மிகவுமே கடுமையான சட்டங்கள் உள்ளன. நிலையே விழுந்துவிடுகிறது. ஒரேயடியாக கல்புத்தி ஆகி விடுகிறார்கள். இருப்பதே கல்புத்தியாக. தங்க புத்தி ஆவதற்கான புருஷார்த்தமே (முயற்சியே) செய்வதில்லை. இந்த மறைமுகமான விஷயங்களை குழந்தைகாளகிய நீங்கள் தான் புரிந்து கொள்ள முடியும். இங்கு "பி.கே.க்கள்" இருக்கிறார்கள். அவர்களை தேவதை அதாவது கல்புத்தியிலிருந்து தங்க புத்தியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

 

எந்த ஒரு சட்டத்தையும் மீறக் கூடாது என்று தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இல்லையென்றால் அவர்களை 5 பூதங்கள் பிடித்து கொண்டு விடும். காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவை அரைக் கல்பமாக இருக்கும் 5 பெரிய பெரிய பூதங்கள் ஆகும். நீங்கள் இங்கு பூதங்களை விரட்ட வந்துள்ளீர்கள். சுத்தமாக பவித்திரமாக இருந்த ஆத்மா அபவித்திரமாக, அசுத்தமாக, துக்கமுடையதாக, நோயாளியாக ஆகிவிட்டுள்ளது. இந்த உலகத்தில் ஏராளமான துக்கம் உள்ளது. தந்தை வந்து ஞான மழை பொழிகிறார். குழந்தைகளாகிய உங்கள் மூலமாகத் தான் செய்கிறார். உங்களுக்காக சொர்க்கத்தைப் படைக்கிறார். நீங்கள் தான் யோக பலத்தினால் தேவதை ஆகிறீர்கள். சுயம் தந்தை தேவதை ஆவதில்லை. தந்தையோ சேவகன் ஆவார். ஆசிரியர் கூட மாணவனின் சேவகன் ஆகிறார். சேவை செய்து படிப்பிக்கிறார். நான் உங்களுடைய மிகவுமே கீழ்ப்படிதலுள்ள சேவகன் ஆவேன் என்று ஆசிரியர் கூறுகிறார். ஒருவரை வழக்கறிஞர், பொறியாளர் போன்றவர்களாக ஆக்குகிறார் என்றால், சேவகன் ஆனார் அல்லவா? அதே போல குருமார்கள் கூட வழி கூறுகிறார்கள். சேவகர் ஆகி முக்திதாமம் அழைத்துச் செல்வதற்கான சேவை செய்கிறார்கள். ஆனால் தற்சமயத்திலோ குரு யாருமே அழைத்துச் செல்ல முடியாது. ஏனெனில் அவர்களும் பதீதமாக (தூய்மையற்று) இருக்கிறார்கள். ஒரே ஒரு சத்குரு சதா பவித்திரமாக இருக்கிறார். மற்ற குருமார்கள் கூட எல்லோருமே பதீதமாக (தூய்மையற்று) இருக்கிறார்கள். இந்த முழு உலகமே பதீதமாக உள்ளது. சத்யுகத்திற்கு பாவன உலகம் என்று கூறப்படுகிறது. கலியுகத்திற்கு பதீத உலகம் என்று கூறப்படுகிறது. சத்யுகத்தைத் தான் முழுமையான சொர்க்கம் என்று கூறுவார்கள். திரேதாவில் இரண்டு கலை குறைந்துவிடுகிறது. இந்த விஷயங்களை குழந்தைகள் தான் புரிந்து கொண்டு பின் தாரணை செய்கிறீர்கள். உலகத்தின் மனிதர்களோ ஒன்றும் அறியாமல் உள்ளார்கள். முழு உலகமும் சொர்க்கத்திற்குச் சென்றுவிடும் என்பது கூட அல்ல. யார் முந்தைய கல்பத்தில் இருந்தார்களோ அதே பாரதவாசிகள் மீண்டும் வருவார்கள் மற்றும் சத்யுக திரேதாவில் தேவதையாக ஆவார்கள். அவர்களே பின் துவாபர முதற் கொண்டு தங்களை இந்து என்று அழைத்துக் கொள்வார்கள். இவ்வாறாக இந்து தர்மத்தில் இதுவரையும் மேலிருந்து இறங்கும் ஆத்மாக்கள் கூட தங்களை இந்து என்று அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களோ தேவதை ஆக மாட்டார்கள். மேலும் சொர்க்கத்திலும் வர மாட்டார்கள். இருந்தாலும் அவர்கள் துவாபரத்திற்குப் பின் தங்களுடைய நேரத்தில் இறங்குவார்கள் மற்றும் தங்களை இந்து என்று அழைத்துக் கொள்வார்கள். தேவதைகளாகவோ நீங்கள் தான் ஆகிறீர்கள். உங்களுக்கு ஆரம்ப முதல் கடைசி வரையும் பாகம் உள்ளது. இந்த நாடகத்தில் மிகவுமே (யுக்தி) பொருத்தம் உள்ளது. அநேகருடைய புத்தியில் பதிவதில்லை. எனவே உயர்ந்த பதவியும் அடைய முடிவதில்லை. இது சத்திய நாராயணரின் கதை ஆகும். அவர்களோ பொய்யான கதை கூறுகிறார்கள். அதனால் யாரும் இலட்சுமி அல்லது நாராயணர் ஆகிறார்களா என்ன? இங்கு நீங்கள் இருப்பதே எல்லாமே பொய்யாக. பொய்யான மாயை .. இராவணனின் இராஜ்யமே பொய்யானது. உண்மையான கண்டத்தை தந்தை அமைக்கிறார். இதுவும் பிராமண குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதுவும் வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப. ஏனெனில் படிப்பு ஆகும். ஒரு சிலர் மிகவுமே குறைவாகப் படிக்கிறார்கள். எனவே தோல்வி அடைந்து விடுகிறார்கள். இதுவோ ஒரே ஒரு முறை இந்தப் படிப்பு இருக்க முடியும். பிறகோ படிப்பது கடினம் ஆகிவிடும். ஆரம்பத்தில் யார் படித்து சரீரத்தை விட்டு விட்டு சென்றிருக்கிறார்களோ அவர்கள் அந்த சம்ஸ்காரம் எடுத்து சென்றுள்ளார்கள். மீண்டும் வந்து படித்துக் கொண்டிருக்கக் கூடும். பெயர் ரூபமோ மாறிவிடுகிறது. ஆத்மாவிற்குத் தான் முழு 84ன் பாகம் கிடைத்துள்ளது. அதை வெவ்வேறு பெயர், ரூபம், தேசம் காலத்தில் பாகமாக ஏற்று நடிக்கிறார். இவ்வளவு சிறிய ஆத்மாவிற்கு எவ்வளவு பெரிய சரீரம் கிடைக்கிறது. ஆத்மாவோ எல்லோருக்குள்ளும் உள்ளது அல்லவா? இவ்வளவு சிறிய ஆத்மா இவ்வளவு சிறிய கொசுவில் கூட உள்ளது. இவை எல்லாமே மிகவுமே சூட்சுமமான, (நுணுக்கமான) புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். எந்த குழந்தைகள் இதை நல்ல முறையில் புரிந்திருக்கிறார்களோ அவர்களே மாலையின் மணி ஆகிறார்கள். மற்றவர்களோ போய் ஒரு பைசா அளவிற்கான பதவி அடைவார்கள். இப்பொழுது உங்களுடைய இந்த மலர்களின் தோட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது. முதலில் நீங்கள் முட்களாக இருந்தீர்கள். காம விகாரத்தின் முள் மிகவுமே மோசமானது என்று தந்தை கூறுகிறார். அது முதல், இடை, கடை துக்கம் கொடுக்கிறது. துக்கத்தின் அடிப்படை காரணமே காமம் ஆகும். காமத்தை வெல்வதால் தான் உலகத்தை வென்றவர் ஆவீர்கள். இது தான் நிறைய பேருக்கு கடினமாகத் தோன்றுகிறது. தூய்மையாக ஆவது மிகவுமே அரிதாக உள்ளது. யார் முந்தைய கல்பத்தில் ஆகி இருந்தார்களோ அவர்களே ஆவார்கள். யார் முயற்சி செய்து உயர்ந்ததிலும் உயர்ந்த தேவதை ஆவார்கள் என்பது புரியவைக்கப்படுகிறது. நரனிலிருந்து நாராயணர், நாரியிலிருந்து இலட்சுமி ஆகிறார்கள் அல்லவா? புது உலகத்தில் கணவன் மனைவி இருவருமே பாவனமாக இருந்தார்கள். இப்பொழுது பதீதமாக (தூய்மையற்று) உள்ளார்கள். பாவனமாக (தூய்மையாக) இருக்கும் பொழுது சதோபிரதானமாக இருந்தார்கள். இப்பொழுது தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளார்கள். இங்கு இருவருமே முயற்சி (புருஷார்த்தம்) செய்ய வேண்டும். இந்த ஞானத்தை சந்நியாசிகள் கொடுக்க முடியாது. அந்த தர்மமே துறவற மார்க்கத்தினுடையது, தனியானது ஆகும். இங்கு பகவானோ கணவன் மனைவி இருவருக்கும் கற்பிக்கிறார். இப்பொழுது சூத்திரரிலிருந்து பிராமணர் ஆகி பின் இலட்சுமி நாராயணர் ஆக வேண்டும் என்று இருவருக்குமே கூறுகிறார். எல்லோருமோ ஆக மாட்டார்கள். இலட்சுமி நாராயணரினுடையதும் பரம்பரையாக இருக்கும். அவர்கள் இராஜ்யத்தை எப்படி அடைந்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது. சத்யுகத்தில் இவர்களுடைய இராஜ்யம் இருந்தது என்பதையும் புரிந்துள்ளார்கள். ஆனால் சத்யுகத்திற்குப் பிறகு இலட்சக்கணக்கான வருடங்கள் கொடுத்து விட்டுள்ளார்கள். ஆக இதுவும் அறியாமை ஆகியது அல்லவா? இது இருப்பதே முட்களின் காடாக என்று தந்தை கூறுகிறார். அது மலர்களின் தோட்டம் ஆகும். இங்கு வருவதற்கு முன்னால் நீங்கள் அசுரராக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் அசுரரிலிருந்து தேவதையாக ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள். யார் ஆக்குகிறார்? எல்லையில்லாத தந்தை. தேவதைகளின் இராஜ்யம் இருக்கும் பொழுது வேறு யாரும் இருக்கவில்லை. இதுவும் நீங்கள் புரிந்துள்ளீர்கள். யார் புரிந்து கொள்ள முடியவில்லையோ அவர்களுக்குத் தான் பதீதர்கள் என்று கூறப்படுகிறது. இது பிரம்மா குமார் - குமாரிகளின் சபை ஆகும். யாராவது சாத்தானுக்குரிய காரியம் செய்கிறார்கள் என்றால் தங்களை சாபக்கேடிற்கு உள்ளாக்கி விடுகிறார்கள். கல் புத்தி உடையவர் ஆகிவிடுகிறார்கள். தங்க புத்தியுடையவராக நரனிலிருந்து நாராயணராக ஆகப் போகிறவர்களோ இல்லை என்ற நிரூபணம் கிடைத்துவிடுகிறது. மூன்றாவது தரமான தாசர் தாசிகளாக போய் ஆவார்கள். இப்பொழுது கூட இராஜாக்களிடம் தாசர், தாசிகள் இருக்கிறார்கள். "சிலரது மண்ணில் புதைந்து போகும்.. ..சிலரது" என்று கூட பாடல் உள்ளது. நெருப்பு குண்டுகளும் வரும். பின் விஷ குண்டுகளும் வரும். இறப்போ அவசியம் வர வேண்டி உள்ளது. மனிதர்கள் அல்லது ஆயுதங்களின் அவசியமே இல்லாத வகையில் அப்பேர்ப்பட்ட பொருட்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து உட்கார்ந்தபடியே அப்பேர்ப்பட்ட குண்டுகளை வீசுவார்கள். அதனுடைய காற்று எப்படிப் பரவும் என்றால், சட்டென்று அனைத்தையும் அழித்துவிடும். இத்தனை கோடிக்கணக்கான மனிதர்களின் அழிவு ஆக வேண்யுள்ளது. குறைவான விஷயமா என்ன? சத்யுகத்தில் எவ்வளவு குறைவானோர் இருப்பார்கள்! மற்றவர்கள் எல்லோருமே ஆத்மாக்களாகிய நாம் இருக்கும் சாந்திதாமத்திற்குச் சென்றுவிடுவார்கள். சுகதாமத்தில் இருப்பது சொர்க்கம். துக்கதாமத்தில் இருப்பது இந்த நரகம். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. பதீதமாக ஆகிவிடுவதால் துக்கதாமமாக ஆகிவிடுகிறது. மீண்டும் தந்தை சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். பரமபிதா பரமாத்மா இப்பொழுது அனைவருக்கும் சத்கதி அளித்துக் கொண்டிருக்கிறார். எனவே குஷி ஏற்பட வேண்டும் அல்லவா? மனிதர்கள் பயப்படுகிறார்கள். மரணத்தினால் தான் கதி-சத்கதி ஆகப் போகிறது என்பதைப் புரிந்து கொள்வதில்லை. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. மலர்களின் தோட்டத்திற்குச் செல்வதற்காக உள்ளுக்குள் இருக்கும் காமம் கோபத்தின் முட்களை நீக்கிவிட வேண்டும். சாபம் கிடைத்துவிடும் வகையில் எவ்வித செயலும் செய்யக் கூடாது.

 

2. உண்மையான கண்டத்திற்கு எஜமானன் ஆவதற்காக சத்திய நாராயணரின் உண்மையான கதையைக் கேட்க வேண்டும் மற்றும் கூற வேண்டும். இந்த பொய்யான கண்டத்திலிருந்து ஒதுங்கிவிட வேண்டும்.

 

வரதானம்:

சுயதர்சன சக்கரத்தின் மூலம் மாயாவின் அனைத்து விதமான பிரச்சனைகளை முடிக்கக்கூடிய மாயாஜுத் பவ.

 

தன்னை தானே அறிந்துக் கொள்வது என்றாலே சுயத்தை பற்றி தெரிந்துக் கொள்வது., சக்கரத்தின் ஞானத்தின் தெரிந்துக் கொள்வது. சுயதர்ஷன சக்கரதாரி ஆவது. எப்பொழுது சுயதர்ஷன சக்கரதாரி ஆகிறீர்கள் என்றால் அனைத்துவிதமான மாயாவின் சக்கரம் முடிந்துவிடும். தேக அபிமானத்தின் சக்கரம், சம்மந்தத்தின் சக்கரம், பிரச்சனைகள் என்ற சக்கரம் மாயாவிற்கு பலவித சக்கரங்கள் இருக்கின்றன. 63 பிறவிகளின் சக்கரம் அனைத்து சக்கரத்தில் மாட்டிக் கொண்டீர்கள். இப்பொழுது சுயதர்ஷன சக்கரதாரி ஆவதினால் மாயாஜுத் ஆகிவிட்டீர்கள். சுயதர்ஷன சக்கரதாரி ஆவது என்றால், ஞானம் மற்றும் யோகத்தின் இறக்கைகள் மூலம் பறக்கும் கலையில் செல்வது ஆகும்.

 

சுலோகன்:

விதேஹி (ஆத்ம அபிமானி) மனநிலையில் நிலைத்திருங்கள், இதன் மூலம் எந்த ஒரு பிரச்சனைகளையும் சகஜமாக கடந்துவிடலாம்.

 

ஓம்சாந்தி