10.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் எவ்வளவு நேரம் பாபாவின் நினைவில் இருக்கிறீர்களோ, அவ்வளவு நேரமும் வருமானத்தின் மேல் வருமானம் தான். நினைவின் மூலம் தான் நீங்கள் பாபாவின் அருகில் வந்து கொண்டே இருப்பீர்கள்.

 

கேள்வி:

எந்த குழந்தைகள் நினைவில் இருக்க முடிவதில்லையோ, அவர்களுக்கு எந்த விஷயத்தில் வெட்கம் வருகின்றது?

 

பதில்:

தனது சார்ட்டை எழுதி வைப்பதில் அவர்களுக்கு வெட்கம் வருகின்றது. உண்மையை எழுதினால் பாபா என்ன சொல்வாரோ என நினைக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் நன்மை இதில் தான் உள்ளது - உண்மையிலும் உண்மையான சார்ட்டை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். சார்ட் எழுதுவதால் மிகுந்த நன்மை உள்ளது. பாபா சொல்கிறார் - குழந்தைகளே, இதில் வெட்கப் படாதீர்கள்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இப்போது குழந்தைகள் நீங்கள் 15 நிமிடத்திற்கு முன் வந்து இங்கே பாபாவின் நினைவில் அமர்கிறீர்கள். இப்போது இங்கே வேறு வேலையோ கிடையாது. பாபாவின் நினைவில் தான் வந்து அமர்கிறீர்கள். பக்தி மார்க்கத்திலோ தந்தையின் அறிமுகம் கிடையாது. இங்கே தந்தையின் அறிமுகம் கிடைத்துள்ளது. மேலும் பாபா சொல்கிறார்-என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். நானோ குழந்தைகள் அனைவருக்கும் தந்தையாக இருக்கிறேன். தந்தையை நினைவு செய்வதன் மூலம் ஆஸ்தி தானாகவே நினைவு வர வேண்டும். சிறு குழந்தைகளோ இல்லை அல்லவா? நாங்கள் 5 மாதங்கள் அல்லது 2 மாதங்களின் குழந்தைகள் என்று கூறிக் கொள்ள. ஆனால் உங்கள் கர்மேந்திரியங்களோ பெரியவை. ஆகவே ஆன்மீகத் தந்தை சொல்லிப் புரிய வைக்கிறார், இங்கே தந்தை மற்றும் ஆஸ்தியின் நினைவில் அமர வேண்டும். நீங்கள் அறிவீர்கள், நாம் நரனிலிருந்து நாராயணனாக ஆவதற்கான புருஷார்த்தத்தில் ஈடுபட்டுள்ளோம், அல்லது சொர்க்கத்திற்குச் செல்வதற்கான புருஷோர்த்தம் செய்து கொண்டிருக்கிறோம். ஆக, இதைக் குழந்தைகள் குறித்துக் கொள்ள வேண்டும் - நாம் இங்கே அமர்ந்தவாறே எவ்வளவு நேரம் நினைவு செய்தோம்? சார்ட் எழுதுவதால் பாபா புரிந்து கொள்வார். ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் நினைவு செய்கின்றனர் என்பது பாபாவுக்குத் தெரியும் என்பதெல்லாம் கிடையாது. அதையோ ஒவ்வொருவரும் தங்களின் சார்ட் மூலம் புரிந்து கொள்ள முடியும் - பாபாவின் நினைவு இருந்ததா அல்லது புத்தி வேறெங்காவது சென்று விட்டதா? இதுவும் புத்தியில் உள்ளது, அதாவது இப்போது பாபா வருவார் என்றால் இதுவும் கூட நினைவாகிறது இல்லையா? எவ்வளவு நேரம் நினைவு செய்தோம் என்பதை சார்ட்டில் உள்ளபடி எழுதுவீர்கள். பொய் எழுதுவதாலோ மேலும் நூறு மடங்கு பாவம் அதிகமாகும். மேலும் நஷ்டம் ஏற்பட்டு விடும். அதனால் உண்மையை எழுத வேண்டும் - எவ்வளவு நினைவு செய்கிறீர்களோ, அவ்வளவு விகர்மங்கள் விநாசமாகும். மேலும் இதையும் அறிவீர்கள், நாம் அருகில் வந்து கொண்டே இருக்கிறோம். கடைசியில் நினைவு முடிவடையும் போது நாம் மீண்டும் பாபாவின் அருகில் சென்று விடுவோம். பிறகு சிலரோ உடனே புது உலகில் வந்து பாகத்தை நடிப்பார்கள். சிலர் அங்கேயே அமர்ந்திருப்பார்கள். அங்கே எந்த ஒரு சங்கல்பமும் வராது. அது தான் முக்தி தாமம், சுகம்-துக்கத்திற்கு அப்பாற் பட்டது. சுகதாமம் செல்வதற்காக இப்போது நீங்கள் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு நீங்கள் நினைவு செய்கிறீர்களோ, அவ்வளவு விகர்மங்கள் விநாசமாகும். நினைவின் சார்ட் வைப்பதால் ஞானத்தின் தாரணையும் நன்றாக இருக்கும். சார்ட் வைப்பதாலோ நன்மை தான். பாபாவுக்குத் தெரியும், நினைவில் இருக்காத காரணத்தால் எழுதுவதற்கு வெட்கம் வருகின்றது. பாபா என்ன சொல்வாரோ, முரளியில் சொல்லிவிடுவார் என்று. பாபா கேட்கிறார், இதில் வெட்கத்திற்கான விஷயம் என்ன இருக்கிறது? மனதுக்குள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும் - நாம் நினைவு செய்கின்றோமா இல்லையா? கல்யாண்காரி பாபாவோ புரிய வைக்கிறார், குறித்து வைப்பீர்களானால் நன்மை ஏற்படும். பாபா வருகிற வரை யார் அமர்ந்திருக்கிறார்களோ, அதில் நினைவின் சார்ட் எவ்வளவு இருந்தது? வேறுபாட்டைப் பார்க்க வேண்டும். அன்பிற்குரிய பொருளோ மிகவும் நினைவு செய்யப் படுகின்றது. குமார்-குமாரியின் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டால் மனதில் ஒருவர் மற்றவரின் நினைவு நிலைத்து விடுகின்றது. பிறகு திருமணம் நடப்பதன் மூலம் உறுதி ஆகி விடுகின்றது. பார்க்காமலே புரிந்து கொண்டு விடுகின்றனர்-நமக்கு நிச்சயதார்த்தம் நிகழ்ந்துள்ளது. இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், சிவபாபா நம்முடைய எல்லையற்ற தந்தை. பார்த்ததில்லை என்றாலும் புத்தி மூலம் புரிந்து கொள்ள முடியும். அந்தத் தந்தை பெயர்-வடிவத்திற்கு அப்பாற்பட்டவர் என்றால் பிறகு பூஜை யாருக்கு செய்கிறீர்கள்? ஏன் நினைவு செய்கிறீர்கள்? பெயர்-வடிவத்திற்கு அப்பாற்பட்ட, எல்லையற்றதாகவோ எந்த ஒரு பொருளும் கிடையாது. நிச்சயமாகப் பொருள் பார்க்கப் படுகின்றது. அதனால் தான் வர்ணனை செய்யப் படுகின்றது. ஆகாயத்தையும் கூட பார்க்கிறோம் இல்லையா? எல்லையற்றது எனச் சொல்ல முடியாது. பக்தி மார்க்கத்தில் பகவானை நினைவு செய்கின்றனர் - ஹே பகவானே என்றால் எல்லையற்றவர் எனச் சொல்ல மாட்டார்கள். ஹே பகவானே எனச் சொல்வதன் மூலமோ உடனே அவரது நினைவு வந்து விடுகின்றது எனும்போது நிச்சயமாக ஒரு பொருள் உள்ளது. ஆத்மாவும் அறிந்து கொள்ளப்படுகின்றது. பார்க்கப் படுவதில்லை.

 

ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை ஒருவர் தான். அவரும் அறிந்து கொள்ளப் படுகின்றார். குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள் - பாபா வந்து படிப்பு சொல்லித்தரவும் செய்கிறார். முன்பு இது தெரியாதிருந்தது, அதாவது அவர் படிப்பு சொல்லித்தரவும் செய்கிறார் என்று. கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டனர். கிருஷ்ணரையோ இந்தக் கண்களால் பார்க்க முடியும். அவரைப் பற்றியோ, முடிவற்றவர், பெயர்-வடிவத்திற்கு அப்பாற்பட்டவர் என்றெல்லாம் சொல்ல முடியாது. கிருஷ்ணரோ, என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள் என சொல்ல முடியாது. அவரோ முன்னிலையில் உள்ளார். அவரை பாபா எனவும் சொல்ல மாட்டார்கள். தாய்மார்களோ கிருஷ்ணரைக் குழந்தையாக நினைத்து மடியில் அமர்த்திக் கொள்கின்றனர். ஜென்மாஷ்டமி அன்று சிறிய கிருஷ்ணரை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவார்கள். அவர் எப்போதுமே சிறு குழந்தையாகவே இருப்பாரா என்ன? பிறகு ராஸ்-விலாஸ் (நடனம்) கூட செய்கின்றனர். ஆக., நிச்சயமாகக் கொஞ்சம் பெரியவராக ஆனார். பிறகு அதைவிடப் பெரியவராக ஆனார் அல்லது என்ன நடந்தது, எங்கே சென்றார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. சதா காலமும் சிறிய சரீரமே இருக்காது இல்லையா? சிறிதும் சிந்தனை செய்வதில்லை. இந்த பூஜை முதலிய வழக்கங்கள் இருந்து வந்துள்ளன. ஞானமோ எவரிடமும் கிடையாது. கிருஷ்ணர் கம்சபுரியில் பிறவி எடுத்ததாகக் காட்டுகின்றனர். இப்போது கம்சபுரியின் விஷயமோ கிடையாது. யாருக்கும் சிந்தனை நடைபெறுவதில்லை. பக்தர்களோ சொல்வார்கள், கிருஷ்ணர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்று. பிறகு அவரைக் குளிப்பாட்டவும் செய்கின்றனர். உணவு ஊட்டுகின்றனர். இப்போது அவர் சாப்பிடுவதோ கிடையாது. மூர்த்திக்கு முன் வைக்கின்றனர், ஆனால் தாங்களே சாப்பிட்டு விடுகின்றனர். இதுவும் கூட பக்தி மார்க்கம் ஆகிறது இல்லையா? ஸ்ரீநாத்ஜி முன்பு அவ்வளவு பிரசாதம் படைக்கின்றனர். அவரோ சாப்பிடுவதில்லை. தாங்களே அனைத்தையும் சாப்பிட்டு விடுகின்றனர். தேவிகளின் பூஜையிலும் கூட இதுபோல் செய்கின்றனர். தாங்களே தேவிகளை உருவாக்குகின்றனர், அவர்களுக்குப் பூஜை முதலியன செய்து பிறகு நீரில் மூழ்கடித்து விடுகின்றனர். நகைகள் முதலியவற்றைக் கழற்றி விட்டுப் பிறகு மூழ்கடிக்கின்றனர். பிறகு அங்கோ நிறைய பேர் இருக்கின்றனர். யாருக்கு எது கையில் வருகிறதோ அதை எடுத்துக் கொள்கின்றனர். தேவிகளுக்குத் தான் அதிகப் பூஜை நடைபெறுகின்றது. இலட்சுமி மற்றும் துர்கா இருவரின் மூர்த்திகளை உருவாக்குகின்றனர். பெரிய அம்மாவும் கூட இங்கே அமர்ந்துள்ளார் இல்லையா? அவரை பிரம்மபுத்ரா எனவும் சொல்கின்றனர். புரிந்து கொள்வார்கள் இல்லையா, இந்தப் பிறவி மற்றும் வருங்கால ரூபத்தின் பூஜை செய்து கொண்டிருக்கிறோம் என்று? எவ்வளவு அற்புதமான டிராமா! இதுபோன்ற விஷயங்கள் சாஸ்திரங்களில் வர முடியாது. இது நடைமுறை செயல்பாடு. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது ஞானம் உள்ளது. அனைத்திலும் அதிகமாக ஆத்மாக்களின் சித்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ருத்ர யக்ஞம் படைக்கும் போது இலட்சக் கணக்கான சாலிகிராம்களை உருவாக்குகின்றனர். தேவிகளுக்கு ஒருபோதும் இலட்சம் சித்திரங்களை உருவாக்க மாட்டார்கள். அதுவோ எத்தனைப் பூஜாரிகளோ அத்தனை தேவிகளை உருவாக்கியிருப்பார்கள். அவர்களோ, ஒரே நேரத்தில் இலட்சம் சாலிகிராம்களை உருவாக்குகின்றனர். அதற்காகக் குறிப்பிட்ட நாள் எதுவும் இருப்பதில்லை. அதற்கென்று எந்த ஒரு முகூர்த்தமும் கிடையாது. எப்படி தேவிகளின் பூஜை குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறுகின்றது. பணக்காரர்களுக்கோ எப்போது சிந்தனையில் வருகிறதோ, ருத்ரனை அல்லது சாலிகிராம்களைப் படைக்க வேண்டும் என்றால் பிராமணர்களை அழைப்பார்கள். ருத்ரன் எனச் சொல்லப்படுபவர் ஒரு தந்தை. பிறகு அவருடன் கூட ஏராளமான சாலிகிராம்களை உருவாக்குகின்றனர். அந்த சேட்டுகள் (செல்வந்தர்கள்) சொல்கின்றனர், இத்தனை சாலிகிராம்களைத் தயார் செய்யுங்கள் என்று. அதற்காக குறிப்பிட்ட நாள் கிழமை எதுவும் கிடையாது. சிவஜெயந்தியன்று தான் ருத்ர பூஜை செய்கின்றனர் என்பது கிடையாது. அதிகமாக சுபதினம் பிரகஸ்பதி (குருவாரம்) அன்று தான் வைக்கின்றனர். தீபாவளியின் போது லட்சுமியின் உருவத்தைத் தட்டில் வைத்து அதற்குப் பூஜை செய்கின்றனர். பிறகு அப்படியே வைத்து விடுகின்றனர். அவர் மகாலட்சுமி. யுகல் (தம்பதியர்) இல்லையா? மனிதர்கள் இவ்விஷயங்களை அறிந்திருக்கவில்லை. இலட்சுமிக்கு பணம் எங்கிருந்து கிடைக்கும்? யுகலோ (ஜோடி) வேண்டும் இல்லையா? ஆக, இவர்கள் (லட்சுமி-நாராயணர்) யுகல் ஆவர். பெயரை பிறகு மகாலட்சுமி என வைத்துள்ளனர். தேவிகள் எப்போது இருந்தனர்? மகாலட்சுமி எப்போது இருந்து சென்றுள்ளார்? இந்த விஷயங்கள் அனைத்தையும் மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. உங்களுக்கு இப்போது பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். உங்களிலும் கூட அனைவருக்கும் ஒரே மாதிரி தாரணை ஆவதில்லை. பாபா இவ்வளவையும் புரிய வைத்துவிட்டு பிறகும் கேட்கிறார், சிவபாபாவின் நினைவு இருக்கிறதா? ஆஸ்தி நினைவிருக்கிறதா? முக்கியமான விஷயம் இது தான். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு பணத்தை வீணடிக்கின்றனர்! நீங்கள் சேவை செய்கிறீர்கள், செல்வந்தர்களாக ஆவதற்காக. பக்தி மார்க்கத்திலோ மிகுந்த பணம் செலவு செய்கின்றனர், இங்கோ உங்களுடைய ஒருபைசாவும் வீணாவதில்லை. நீங்கள் செல்வந்தர் ஆவதற்காக சேவை செய்கிறீர்கள். பக்தி மார்க்கத்திலோ அதிக பணம் செலவு செய்கின்றனர். ஒன்றுமில்லாதவர்களாக ஆகிவிடுகின்றனர். அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடுகின்றன. எவ்வளவு வேறுபாடு! இச்சமயம் என்னென்ன செய்கின்றனரோ, அதை ஈஸ்வரிய சேவையில் சிவபாபாவுக்குக் கொடுக்கின்றீர்கள். சிவபாபாவோ சாப்பிடுவதில்லை. நீங்கள் தான் சாப்பிடுகிறீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் இடையில் டிரஸ்டியாக இருக்கிறீர்கள். பிரம்மாவுக்கு நீங்கள் கொடுப்பதில்லை. நீங்கள் சிவபாபாவுக்குக் கொடுக்கிறீர்கள். சொல்கின்றனர், பாபா, உங்களுக்காக வேட்டி-சட்டை கொண்டு வந்திருக்கிறோம். பாபா சொல்கிறார் - இவருக்குக் கொடுப்பதால் உங்களுக்கு எதுவும் சேமிப்பாகாது. நீங்கள் சிவபாபாவை நினைவு செய்து இவருக்கு எதைக் கொடுக்கிறீர்களோ, அது தான் சேமிப்பாகும். பிறகு இதையோ புரிந்து கொண்டிருக்கிறீர்கள், பிராமணர்கள் சிவபாபாவின் கஜானாவின் மூலம் தான் வளர்கிறார்கள். என்ன அனுப்ப வேண்டும் என்று பாபாவிடம் கேட்க வேண்டிய தேவை கிடையாது. இவரோ பெற்றுக் கொள்வதில்லை. பிரம்மாவை நினைவு செய்வீர்களானால் உங்களுக்கு சேமிப்பாகாது. பிரம்மாவோ சிவபாபாவின் பண்டாராவிலிருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆக, சிவபாபாவின் நினைவு தான் இருக்கும். உங்களுடைய பொருட்களை ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும்? பி.கே.க்குக் கொடுப்பதும் கூடத் தவறாகும். பாபா புரிய வைத்துள்ளார், நீங்கள் யாரிடமாவது பொருளைப் பெற்று அணிந்து கொள்வீர்களானால் அவருடைய நினைவு வந்து கொண்டே இருக்கும். ஏதாவது சாதாரண பொருள் என்றால் அதனுடைய விஷயம் ஒன்றுமில்லை. நல்ல பொருள் என்றால் மேலும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் - இன்னார் இதைக் கொடுத்தார் என்பதாக. அவருக்கு எதுவும் சேமிப்பாகாது. ஆக, நஷ்டமாகிறது இல்லையா? சிவபாபா சொல்கிறார், என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். எனக்கு துணிமணிகள் முதலானவற்றிற்கான தேவை கிடையாது. இதுவோ சிவபாபாவின் கஜானாவிலிருந்து பெற்றுக் கொள்வதற்கு உரிமை உள்ளது. இராஜ்யத்திற்கும் உரிமை உள்ளது. தந்தையின் வீட்டில் தான் குழந்தைகள் உண்ணவும் அருந்தவும் செய்கின்றனர் இல்லையா? நீங்களும் சேவை செய்து கொண்டே, வருமானம் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எவ்வளவு சேவை அதிகம் உள்ளதோ, அவ்வளவு வருமானம் அதிகம் இருக்கும். சிவபாபாவின் பண்டாராவிலிருந்து உண்ணவும் அருந்தவும் செய்வார்கள். அவர்களுக்குக் கொடுக்கவில்லை என்றால் சேமிப்பே ஆகாது. சிவபாபாவுக்குத் தான் கொடுக்க வேண்டும். பாபா, உங்களிடமிருந்து வரப்போகும் 21 பிறவிகளுக்குப் பல மடங்காக உருவாகும். பணமோ அழிந்து போகும். அதனால் சக்திசாலிக்கு நாம் கொடுத்து விடுகிறோம். பாபா சக்திசாலி அல்லவா? 21 பிறவிகளுக்கு அவர் கொடுக்கிறார். மறைமுகமாகவும் ஈஸ்வரன் பெயரால் கொடுக் கின்றனர் இல்லையா? மறைமுகமாக அவ்வளவு சக்திசாலி கிடையாது. இப்போதோ மிகவும் சக்திசாலி, ஏனென்றால் முன்னிலையில் உள்ளார். சர்வசக்திவான் (வேர்ல்டு ஆல்மைட்டி அத்தாரிட்டி) இந்த சமயத்திற்காகத் தான்.

 

ஈஸ்வரன் பெயரால் கொஞ்சம் தான-புண்ணியம் செய்கின்றனர் என்றால் அல்பகாலத்திற்குக் கொஞ்சம் கிடைக்கிறது. இங்கோ பாபா உங்களுக்குப் புரிய வைக்கிறார் - நான் உங்களுக்கு முன்னிலையில் இருக்கிறேன். கொடுப்பது நான் தான். இவரும் (பிரம்மா) சிவபாபாவுக்கு அனைத்தும் கொடுத்து விட்டு முழு உலகத்தின் இராஜ பதவியைப் பெற்றுக் கொண்டார் இல்லையா? இதையும் அறிவீர்கள் - இந்த மனிதருடைய அவ்யக்த ரூபத்தில் சாட்சாத்காரம் ஆகின்றது. இவருக்குள் சிவபாபா வந்து குழந்தைகளோடு பேசுகிறார். ஒருபோதும் இந்த சிந்தனை வரக்கூடாது - நாம் மனிதர்களிடம் பெற்றுக் கொள்வோம் என்று. சொல்லுங்கள், சிவபாபாவின் பண்டாராவுக்கு அனுப்பி வையுங்கள், இவருக்குக் கொடுப்பதன் மூலமோ எதுவும் கிடைக்கப் போவதில்லை. மேலும் நஷ்டம் தான் ஏற்படும். ஏழையாக இருப்பவர்கள் 3-4 ரூபாய்க்கான ஏதேனும் பொருள் உங்களுக்குக் கொடுப்பார்கள். இதைவிடவோ சிவபாபாவின் பண்டாராவில் போடுவதன் மூலம் பல மடங்காக ஆகி விடும். தனக்குத்தானே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. பூஜை அதிகமாக தேவியருக்குத் தான் நடைபெறுகின்றது. ஏனென்றால் தேவிகள் நீங்கள் தான் குறிப்பாக ஞானம் கொடுப்பதற்கு நிமித்தம் ஆகிறீர்கள். கோபர்களும் (சகோதரர்கள்) புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் அதிகமாக பெண்கள் தான் பிராமணிகள் ஆகி வழி சொல்கின்றனர். அதனால் தேவிகளுக்குப் பெயர் அதிகம் உள்ளது. தேவிகளுக்கு அதிகம் பூஜை நடைபெறுகின்றது. இதையும் குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், அரைக்கல்பமாக நாம் பூஜைக்குரியவர்களாக இருந்தோம். முதலில் முழு பூஜைக்குரியவர்கள், பிறகு அரைப் பூஜைக்குரியவர்கள். ஏனென்றால் இரண்டு கலைகள் குறைந்து விடுகின்றது. திரேதாவில் இராமரின் இராஜ்யம் எனச் சொல்வார்கள். அவர்களோ, இலட்சக்கணக்கான வருடங்களின் விஷயம் எனச் சொல்லிவிடுகின்றனர். ஆக, அதனுடைய கணக்கு எதுவும் இருக்க முடியாது. பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்களின் புத்தியில் மற்றும் உங்களுடைய புத்தியில் எவ்வளவு இரவு-பகலுக்குள்ள வேறுபாடு உள்ளது! நீங்கள் ஈஸ்வரிய புத்தியுள்ளவர்கள். அவர்கள் இராவணனின் புத்தியுள்ளவர்கள். உங்களுடைய புத்தியில் உள்ளது, இந்த முழுச் சக்கரமே 5000 ஆண்டுகளினுடையது, அது சுற்றிக் கொண்டே உள்ளது என்று. யார் இரவில் இருக்கின்றனரோ, அவர்கள் சொல்கின்றனர், இலட்சக்கணக்கான வருடங்கள் என்று. யார் பகலில் உள்ளனரோ, அவர்கள் சொல்கின்றனர், 5000 வருடங்கள் என்று. அரைக்கல்பமாக பக்தி மார்க்கத்தில் நீங்கள் சத்தியமல்லாத விஷயங்களைக் கேட்டிருக்கிறீர்கள். சத்யுகத்தில் இதுபோன்ற விஷயங்கள் இருப்பதில்லை. அங்கோ ஆஸ்தி கிடைக்கின்றது. இப்போது உங்களுக்கு நேரடியாக வழிமுறை கிடைக்கின்றது. ஸ்ரீமத் பகவத் கீதை உள்ளது இல்லையா? வேறு எந்த ஒரு சாஸ்திரத்திலும் ஸ்ரீமத் என்ற பெயர் கிடையாது. ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் பிறகு இந்தப் புருஷோத்தம சங்கமயுகம், கீதையின் யுகம் வருகின்றது. லட்சம் வருடங்களின் விஷயமே இருக்க முடியாது. எப்போதாவது யாராவது வந்தால் சங்கமயுகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். எல்லையற்ற தந்தை படைப்பவர், அதாவது தம்மைப் பற்றிய மற்றும் படைப்பின் முழு அறிமுகம் தந்துள்ளார். பிறகும் சொல்கிறார் - நல்லது, தந்தையை நினைவு செய்யுங்கள். வேறு எந்த தாரணையும் செய்ய இயலாவிட்டாலும் தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். பவித்திரமாகவோ ஆகியே தீர வேண்டும். பாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுகிறீர்கள் என்றால் தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) 21 பிறவிகளுக்காகப் பலமடங்கு வருமானத்தைச் சேமிப்பதற்காக நேரடியாக ஈஸ்வரிய சேவையில் அனைத்தையும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். டிரஸ்டி ஆகி சிவபாபாவின் பெயரில் சேவை செய்ய வேண்டும்.

 

2) நினைவில் எவ்வளவு நேரம் அமர்கிறீர்களோ, அவ்வளவு நேரம் புத்தி எங்கெல்லாம் சென்றது - இதை சோதித்தறிய வேண்டும். தன்னுடைய உண்மையிலும் உண்மையான கணக்கு-வழக்கை எழுதி வைக்க வேண்டும். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக பாபா மற்றும் ஆஸ்தியின் நினைவில் இருக்க வேண்டும்.

 

வரதானம்:

அழிவில்லாத பிராப்திகளின் நினைவு மூலமாக தங்களது சிறந்த பாக்கியத்தின் மகிழ்ச்சியில் இருக்கக் கூடிய (இச்சா மாத்ரம் அவித்யா)- இச்சை என்றால் என்னவென்றே அறியாத நிலை அடைந்தவர் ஆவீர்களாக !

 

எவருக்கு தந்தையே, பாக்கிய விதாதா பாக்கியத்தை அமைப்பவராக இருக்கிறாரோ, அவரது பாக்கியம் என்னவாக இருக்கும் பாக்கியமோ நமது பிறப்புரிமை ஆகும் என்ற இதே குஷி எப்பொழுதும் இருக்கட்டும். ஆஹா எனது சிறந்த பாக்கியம், மேலும் பாக்கிய விதாதா தந்தை என்ற இதே கீதம் பாடியபடியே குஷியில் பறந்து கொண்டே இருங்கள். எப்பேர்ப்பட்ட அழியாத பொக்கிஷம் கிடைத்துள்ளது என்றால் அது அநேக பிறவிகள் கூடவே இருக்கும். யாருமே பறிக்க முடியாது, கொள்ளை அடிக்க முடியாது. எப்பேர்ப்பட்ட பெரிய பாக்கியம் என்றால் அதில் எந்தவொரு இச்சையும் இல்லை. மனதின் மகிழ்ச்சி கிடைத்து விட்டது. ஆக சர்வ பிராப்திகள் ஆகிவிட்டது. கிடைக்காத எந்த பொருளும் இல்லவே இல்லை. எனவே இச்சா மாத்ரம் அவித்யா- இச்சை என்றால் என்னவென்றே அறியாதவராக ஆகிவிட்டீர்கள்.

 

சுலோகன் :

விகர்மங்கள் (தவறான செயல்கள்) செய்வதற்கான நேரமோ முடிந்து விட்டது. இப்பொழுது வீணான எண்ணங்கள் வீணான பேச்சுக் கூட மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

 

ஓம்சாந்தி