15.12.2019
காலை
முரளி
ஓம்சாந்தி
அவ்யக்த
பாப்தாதா
ரிவைஸ்
21.03.1985
மதுபன்
சுயதரிசன
சக்கரத்தின்
மூலம்
வெற்றிச்
சக்கரத்தின்
பிராப்தி
இன்று
பாப்தாதா
ஆன்மிக
சேனாதிபதியின்
ரூபத்தில்
தனது
ஆன்மிக
சேனையைப்
பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
இந்த
ஆன்மிக
சேனையில்
எத்தகைய
மகாவீரர்கள்
உள்ளனர்,
என்ன
சக்திசாலியான ஆயுதத்தைத் தரித்துள்ளனர்.
எவ்வாறு
உலகீயப்
படையினர்
நாளுக்கு
நாள்
மிகவும்
சூட்சுமமான
மற்றும்
தீவிர
வேகத்தின் சக்தி
நிறைந்த
சாதனங்களை
உருவாக்கிக்கொண்டே
செல்கின்றனரோ,
அவ்வாறே
ஆன்மிக
சேனை
மிகவும் சூட்சுமமான
சக்திசாலியான படைவீரர்
ஆகிவிட்டீர்களா?
எவ்வாறு
விநாசம்
செய்யும்
ஆத்மாக்கள்
ஒரு இடத்தில்
அமர்ந்து
கொண்டு
எத்தனை
மைல்
தூரம்
வரை
விநாசம்
ஏற்படுத்தும்
கிரணங்கள்
மூலம்
விநாசம் செய்விப்பதற்காக
சாதனங்களை
உருவாக்கி
உள்ளனர்.
அங்கு
செல்ல
வேண்டிய
அவசியம்
கூட
கிடையாது.
தொலைவில்
அமர்ந்து
கொண்டே
இலக்கைத்
தாக்க
முடியும்.
அதுபோன்று
ஆன்மிக
சேனையானது
ஸ்தாபனை செய்யும்
சேனை
ஆகும்.
அவர்கள்
விநாசம்
செய்யக்கூடியவர்கள்,
நீங்கள்
ஸ்தாபனை
செய்யக்கூடியவர்கள்.
அவர்கள்
விநாசத்திற்கான
திட்டம்
தீட்டுகின்றனர்,
நீங்கள்
புதிய
படைப்பிற்கான,
உலக
மாற்றத்திற்கான
திட்டம் தீட்டுகிறீர்கள்.
ஸ்தாபனை
செய்யும்
சேனை,
அத்தகைய
தீவிர
வேகம்
கொண்ட
ஆன்மிக
சாதனத்தை தாரணை
செய்துவிட்டீர்களா?
ஒரு
இடத்தில்
அமர்ந்து
கொண்டு,
எங்கு
விரும்புகிறீர்களோ,
அங்கு
ஆன்மிக நினைவின்
கிரணங்கள்
மூலம்
எந்தவொரு
ஆத்மாவிற்கும்
தூண்டுதலை
ஏற்படுத்த
முடியும்.
அந்தளவு தீவிர
வேத்தில்
சேவை
செய்வதற்காக
பரிவர்த்தனை
சக்தி
தயாராக
உள்ளதா?
ஞானம்
அதாவது
சக்தி அனைவருக்கும்
கிடைத்துக்கொண்டு
இருக்கிறது
அல்லவா?
ஞானத்தின்
சக்தி
மூலம்
அத்தகைய
சக்திசாலியான படைவீரர்
ஆகிவிட்டீர்களா?
மகாவீரர்
ஆகியிருக்கிறீர்களா
அல்லது
வீரர்
ஆகியிருக்கிறீர்களா?
வெற்றியின் சக்கரத்தை
(பதக்கம்)
அடைந்துவிட்டீர்களா?
உலகீய
சேவைக்கு
அனேக
விதமான
சக்கரங்கள்
(கேடய
விருது)
பரிசாகக்
கிடைக்கின்றன.
உங்கள்
அனைவருக்கும்
வெற்றிக்கான
பரிசாக
வெற்றிச்
சக்கரம்
கிடைத்துள்ளதா?
வெற்றி
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய
நிச்சயபுத்தி
உடைய
மகாவீர
ஆத்மாக்கள்
வெற்றிச்
சக்கரத்தின் அதிகாரி
ஆவார்கள்.
யாருக்கு
வெற்றிச்
சக்கரம்
பிராப்தமாகி
உள்ளது
என்பதை
பாப்தாதா
பார்த்துக்கொண்டு
இருந்தார்கள்.
சுயதரிசன
சக்கரத்தின்
மூலம்
வெற்றிச்
சக்கரத்தைப்
பிராப்தம்
செய்வீர்கள்.
எனவே,
அனைவரும்
படைவீரர்கள் ஆகியிருக்கிறீர்கள்
அல்லவா!
இந்த
ஆன்மிக
ஆயுதங்களின்
நினைவுச்
சின்னமானது,
ஸ்தூல
ரூபத்தில் உங்களுடைய
நினைவுச்
சின்ன
சித்திரங்களில்
காண்பிக்கப்பட்டு
உள்ளது.
தேவிகளுடைய
சித்திரங்களில் ஆயுதம்
தரித்திருப்பவர்களாக
காண்பிக்கின்றனர்
அல்லவா?
பாண்டவர்களையும்
கூட
ஆயுதம்
தரித்தவர்களாகக் காண்பிக்கின்றனர்
அல்லவா?
இந்த
ஆன்மிக
ஆயுதத்தை
அதாவது
ஆன்மிக
சக்திகளை
ஸ்தூல
ஆயுதமாகக் காண்பித்துவிட்டனர்.
உண்மையில்
அனைத்துக்
குழந்தைகளுக்கும்
பாப்தாதா
மூலமாக
ஒரே
சமயம்
ஒரே மாதிரியான
ஞானத்தின்
சக்தி
பிராப்தமாகக்
கிடைக்கின்றது.
விதவிதமான
ஞானத்தைக்
கொடுப்பதில்லை,
ஆனாலும்,
ஏன்
வரிசைக்கிரமமானவர்களாக
ஆகின்றனர்?
பாப்தாதா
எப்பொழுதாவது
யாருக்காவது
தனிப்பட்ட முறையில்
கற்பித்திருக்கின்றாரா
என்ன?
அனைவரையும்
சேர்த்து
ஒன்றாகத்தான்
பாடம்
கற்பிக்கின்றார்
அல்லவா?
அனைவருக்கும்
ஒரே
பாடத்தைத்
தான்
கற்பிக்கின்றார்
அல்லவா?
அல்லது
ஒரு
குழுவிற்கு
ஒரு
பாடத்தையும் மற்றொரு
குழுவிற்கு
வேறொரு
பாடத்தையும்
கற்பிக்கின்றாரா
என்ன?
இங்கு
6
மாத
இறை
மாணவராக
இருந்தாலும்
அல்லது
50
வருடமானவர்களாக
இருந்தாலும்,
ஒரே வகுப்பில்
அமர்கிறீர்கள்.
தனித்தனியாக
அமர்கிறீர்களா
என்ன?
பாப்தாதா
ஒரே
சமயத்தில்
ஒரு
படிப்பை அனைவருக்கும்
சேர்த்து
கற்பிக்கின்றார்.
ஒருவேளை,
யாராவது
பின்னால்
வந்திருந்தாலும்,
முன்னர்
என்ன பாடம்
கற்பிக்கப்பட்டுள்ளதோ,
அதே
பாடத்தை
நீங்கள்
அனைவரும்
இப்பொழுது
கற்பித்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.
என்ன
ரிவைஸ்
கோர்ஸ்
நடந்து
கொண்டு
இருக்கிறதோ,
அதையே
நீங்களும்
படித்துக்கொண்டு இருக்கிறீர்களா
அல்லது
பழையவர்களுடைய
பாடம்
வேறு,
உங்களுடையது
வேறாக
உள்ளதா?
ஒரே
பாடம் தான்
அல்லவா?
40
வருடமானவர்களுக்காக
தனி
முரளி
மற்றும்
6
மாதத்தினருக்காக
தனி
முரளி
என்பது இல்லை
அல்லவா!
ஒரே
முரளி
தான்
அல்லவா!
படிப்பு
ஒன்று,
கற்பிப்பவர்
ஒருவர்
பிறகு,
வரிசைக்கிரமமாக ஏன்
ஆகிறீர்கள்?
அல்லது
அனைவரும்
முதல்
எண்ணில்
இருப்பவர்களா?
எண்
(நம்பர்)
ஏன்
உருவாகிறது?
ஏனெனில்,
படிப்பை
அனைவரும்
படிக்கிறீர்கள்,
ஆனால்,
படிப்பினுடைய
அதாவது
ஞானத்தினுடைய
ஒவ்வொரு விசயத்தையும்
ஆயுதம்
மற்றும்
சக்தி
ரூபத்தில்
தாரணை
செய்வது,
மேலும்
ஞானத்தின்
விசயத்தை
பாயிண்ட் ரூபத்தில்
தாரணை
செய்வது
-
இதில்
வேறுபாடு
ஏற்படுகிறது.
சிலர்
கேட்ட
பிறகு
பாயிண்ட்டாக
(கருத்தாக)
புத்தியில்
தாரணை
செய்கின்றனர்.
மேலும்,
அந்த
தாரணை
செய்யப்பட்ட
கருத்தை
மிகவும்
நன்றாக
வர்ணனையும் செய்கின்றனர்.
சொற்பொழிவு
ஆற்றுவதில்,
பாடம்
கற்பிப்பதில்
பெரும்பான்மையினர்
புத்திசாலிகளாக
உள்ளனர்.
பாப்தாதா
கூட
குழந்தைகள்
சொற்பொழிவு
ஆற்றுவது
மற்றும்
பாடம்
கற்பிப்பதைப்
பார்த்து
குஷி
அடைகின்றார்கள்.
சில
குழந்தைகளோ
பாப்தாதாவை
விட
நன்றாக
சொற்பொழிவு
ஆற்றுகின்றனர்.
கருத்துக்களை
மிக
நன்றாக வர்ணனையும்
செய்கின்றனர்,
ஆனால்,
ஞானத்தைக்
கருத்தாக
தாரணை
செய்வது
மற்றும்
ஞானத்தின்
ஒவ்வொரு விசயத்தையும்
சக்தியாக
தாரணை
செய்வது
-
இதில்
வித்தியாசம்
ஏற்பட்டுவிடுகிறது.
உதாரணத்திற்கு
நாடகத்தின் கருத்தை
எடுத்துக்
கொள்ளுங்கள்.
இது
மிகப்
பெரிய,
வெற்றியை
அடையச்
செய்யக்கூடிய
சக்திசாலியான ஆயுதமாகும்.
யாருக்கு
நாடகத்தின்
ஞானத்தினுடைய
சக்தி
நடைமுறை
வாழ்வில்
தாரணையாகி
உள்ளதோ,
அவர்கள்
ஒருபொழுதும்
குழப்பத்தில்
வரமுடியாது.
சதா
ஏக்ரஸ்
(ஒரே
ரசனை)
நிலை
உடையவராக,
ஆடாத,
அசையாதவர்
ஆகுவதற்கான
மற்றும்
ஆக்குவதற்கான
விசேஷ
சக்தி
இந்த
நாடகத்தின்
பாயிண்ட்
ஆகும்.
சக்தியாக
தாரணை
செய்யக்கூடியவர்கள்
ஒருபொழுதும்
தோல்வி
அடைய
முடியாது.
ஆனால்,
யார்
பாயிண்ட்டாக மட்டும்
தாரணை
செய்கின்றார்களோ,
அவர்கள்
என்ன
செய்கின்றார்கள்?
நாடகத்தின்
பாயிண்ட்டை
வர்ணனையும் செய்வார்கள்.
குழப்பத்திலும்
வந்து
கொண்டு
இருப்பார்கள்
மற்றும்
நாடகத்தின்
பாயிண்ட்டைப்
பற்றியும் பேசிக்கொண்டும்
இருக்கின்றார்கள்.
அவ்வப்போது
கண்களில்
கண்ணீரும்
வடிக்கின்றார்கள்.
என்னாகிவிட்டது தெரியவில்லை,
என்னவென்று
தெரியவில்லை
என்று
கூறுகின்றனர்.
மேலும்,
நாடகத்தின்
பாயிண்டடைப் பற்றியும்
பேசுகின்றனர்.
ஆம்,
வெற்றியாளராக
ஆகியே
தீர
வேண்டும்.
நானே
வெற்றியாளர்.
நாடகம்
என்பது நினைவு
உள்ளது,
ஆனால்,
என்னாகிவிட்டது
என்று
தெரியவில்லை
என்று
கூறுகின்றனர்.
எனில்,
இதை என்னவென்று
சொல்வது?
சக்தியாக,
ஆயுதமாக
தாரணை
செய்திருக்கிறார்களா
அல்லது
ஒரு
பாயிண்ட்டாக மட்டும்
தாரணை
செய்திருக்கிறார்களா?
இவ்வாறே,
ஆத்மாவைப்
பற்றியும்
கூறுவார்கள்
-
நானோ
சக்திசாலி ஆத்மா தான்,
சர்வசக்திவானின்
குழந்தை
தான்,
ஆனால்,
இந்த
விசயம்
மிகவும்
பெரியது.
இத்தகைய விசயத்தை
ஒருபொழுதும்
நான்
யோசித்ததே
இல்லை.
மாஸ்டர்
சர்வசக்திவான்
ஆத்மா
எங்கே?
மற்றும்
இந்த வார்த்தை
எங்கே?
நன்றாக
உள்ளதா?
இதை
என்னவென்று
கூறுவது?
ஆத்மா
என்ற
பாடம்,
பரமாத்மா
என்ற பாடம்,
நாடகத்தின்
பாடம்,
84
பிறவிகளின்
பாடம்,
எத்தனை
பாடங்கள்
உள்ளன?
அனைத்தையும்
சக்தியாக அதாவது
ஆயுதமாக
தாரணை
செய்வது
என்றால்
வெற்றியாளராகுவது
என்று
அர்த்தம்.
பாயிண்ட்டாக
மட்டும் தாரணை
செய்தால்
சில
நேரம்
பாயிண்ட்
வேலை
செய்யும்,
சில
நேரம்
செய்யாது.
பிறகும்
கூட
பாயிண்ட்டாக தாரணை
செய்யக்கூடியவர்கள்
சேவையில்
பிஸியாக
இருக்கும்
காரணத்தினால்
மற்றும்
கருத்துக்களை
அடிக்கடி வர்ணனை
செய்யும்
காரணத்தினால்
மாயையிடம்
இருந்து
பாதுகாப்பாக
இருக்கின்றனர்.
ஆனால்,
எப்பொழுது ஏதாவது
பிரச்சனை
அல்லது
மாயையின்
ராயல்
ரூபம்
முன்னால்
வருகிறதோ,
அப்பொழுது
வெற்றியாளராக ஆகமுடியாது.
அதே
கருத்துக்களை
வர்ணனை
செய்துகொண்டே
இருப்பார்கள்,
ஆனால்,
சக்தி
இல்லாத காரணத்தினால்
மாயையை
வென்றவர்களாக
ஆக
முடியாது.
வரிசைக்கிரமமாக
ஏன்
ஆகின்றீர்கள்
என்பது
புரிந்ததா?
ஒவ்வொரு
ஞானக்
கருத்தையும்
சக்தியாக,
ஆயுதமாக
தாரணை
செய்திருக்கிறேனா?
என்பதை
இப்பொழுது
சோதனை
செய்யுங்கள்.
ஞானவானாக
மட்டும் ஆகியிருக்கிறீர்களா
அல்லது
சக்திசாலியாகவும் ஆகியிருக்கிறீர்களா?
ஞானவானின்
கூடவே
சக்திசாயாகவும் ஆகியிருக்கிறீர்களா
அல்லது
ஞானவானாக
மட்டும்
தான்
ஆகியிருக்கிறீர்களா?
யதார்த்தமான
ஞானமானது ஒளி
மற்றும்
சக்தி
சொரூபம்
ஆகும்.
அந்த
ரூபத்தில்
தாரணை
செய்திருக்கிறீர்களா?
ஒருவேளை,
தக்க சமயத்தில்
ஞானமானது
வெற்றியாளர்
ஆக்கவில்லை
என்றால்,
ஞானத்தை
சக்தியாக
தாரணை
செய்யவில்லை.
ஒருவேளை,
ஒரு
போர்வீரர்
தக்க
சமயத்தில்
ஆயுதத்தை
காரியத்தில்
பயன்படுத்த
முடியவில்லை
எனில்,
அவரை
என்னவென்று
கூறுவது?
மகாவீரர்
என்று
கூற
முடியுமா?
இந்த
ஞானத்தின்
சக்தி
எதற்காகக் கிடைத்துள்ளது?
மாயையை
வென்றவர்
ஆவதற்காகக்
கிடைத்துள்ளது
அல்லவா!
அல்லது
சமயம்
கடந்துவிட்ட பிறகு,
இதை
செய்திருக்க
வேண்டும்,
இதை
யோசித்திருந்தேன்
என்று
பாயிண்ட்டை
நினைவு
செய்வீர்களா?
இதை
சோதனை
செய்யுங்கள்.
இப்பொழுது
எந்தளவு
சக்தியின்
பாடத்தைப்
பயின்றிருக்கிறீர்கள்?
பாடம்
கற்பிப்பதற்கு
அனைவரும்
தயாராக
உள்ளீர்கள்
அல்லவா?
பாடம்
கற்பிக்க
முடியாதவர்
எவராவது
இருக்கிறீர்களா?
அனைவரும்
கற்பிக்க
முடியும்
மற்றும்
மிகவும்
அன்போடு
நல்ல
முறையில்
பாடம்
கற்பிக்கிறீர்கள்.
மிகவும் அன்போடு,
களைப்படையாதவராகி,
ஈடுபாட்டுடன்
செய்கிறீர்கள்
மற்றும்
செய்விக்கிறீர்கள்
என்பதை
பாப்தாதா பார்க்கின்றார்கள்.
மிக
நல்ல
நிகழ்ச்சிகளை
செய்கிறீர்கள்.
உடல்,
மனம்,
பொருளை
ஈடுபடுத்துகிறீர்கள்.
ஆகையினாலேயே,
இந்தளவு
வளர்ச்சி
அடைந்துள்ளது.
மிகவும்
நன்றாகவும்
செய்கிறீர்கள்.
ஆனால்,
இப்பொழுது சமயத்தின்
அனுசாரமாக
இதைக்
கடந்துவிட்டீர்கள்.
குழந்தைப்
பருவம்
முடிவடைந்து
விட்டதல்லவா?
இப்பொழுது இளமைப்
பருவத்தில்
உள்ளீர்களா
அல்லது
வானப்பிரஸ்த
நிலையில்
உள்ளீர்களா?
எந்த
நிலை அடைந்திருக்கிறீர்கள்?
இந்தக்
குழுவில்
பெரும்பான்மையினர்
புதியவர்கள்.
ஆனால்,
அயல்நாட்டு
சேவையில் இத்தனை
வருடங்கள்
முடிவடைந்துவிட்டன
எனில்,
இப்பொழுது
குழந்தைப்
பருவம்
அல்ல,
இப்பொழுது இளமைப்
பருவம்
வரை
வந்தடைந்துவிட்டீர்கள்.
இப்பொழுது
சக்திசாலியான பாடம்
படியுங்கள்
மற்றும்
கற்றுக் கொடுங்கள்.
இவ்வாறு
இளைஞர்களிடத்திலும்
சக்தி
அதிகமாக
உள்ளது.
இளமைப்
பருவம்
மிகவும்
சக்தி
வாய்ந்தது.
என்ன
விரும்புகிறார்களோ,
அதை
செய்ய
முடியும்.
ஆகையினாலேயே
பாருங்கள்,
தற்காலத்தின்
அரசாங்கம் கூட
இளைஞர்களைக்
கண்டு
பயப்படுகிறது,
ஏனெனில்,
இளைஞர்
குழுவிடத்தில்
லௌகீக
ரூபத்தில்
புத்தியின் சக்தி
உள்ளது
மற்றும்
சரீரத்தின்
சக்தியும்
உள்ளது.
இங்கு
அழித்தல்
காரியம்
செய்பவர்கள்
கிடையாது.
உருவாக்கக்கூடியவர்கள்
ஆவீர்கள்.
அவர்கள்
ஆவேசம்
கொண்டவர்கள்
மற்றும்
இங்கு
சாந்த
சொரூப
ஆத்மாக்கள் ஆவீர்கள்.
கெட்டுப்
போனதை
சீர்திருத்தக்
கூடியவர்கள்
ஆவீர்கள்.
அனைவருடைய
துக்கத்தையும்
போக்கக் கூடியவர்கள்
ஆவீர்கள்.
அவர்கள்
துக்கத்தைக்
கொடுக்கக்
கூடியவர்கள்
மற்றும்
நீங்கள்
துக்கத்தைப்
போக்கக் கூடியவர்கள்.
துக்கத்தை
நீக்கி
சுகம்
கொடுப்பவர்கள்.
தந்தை
எப்படியோ
அப்படியே
குழந்தைகள்.
சதா ஒவ்வொரு
எண்ணம்,
ஒவ்வொரு
ஆத்மாவிற்காகவும்
மற்றும்
தனக்காகவும்
சுகம்
தரக்கூடிய
எண்ணமாக உள்ளது.
ஏனெனில்,
துக்கத்தின்
உலகத்தில்
இருந்து
வெளியேறிவிட்டீர்கள்.
இப்பொழுது
துக்கத்தின்
உலகத்தில் இல்லை.
துக்கதாமத்தில்
இருந்து
சங்கமயுகத்திற்கு
வந்துவிட்டீர்கள்.
புருஷோத்தம
யுகத்தில்
இருக்கிறீர்கள்.
அவர்கள்
கலியுக இளைஞர்கள்!
நீங்கள்
சங்கமயுக
இளைஞர்கள்
ஆவீர்கள்.
ஆகையினால்,
இப்பொழுது
சதா தனக்குள்
ஞானத்தை
சக்தியாக
தாரணையும்
செய்யுங்கள்
மற்றும்
செய்யவும்
வைத்திடுங்கள்.
எந்தளவு
சுயம் சக்திசாலியான பாடம்
பயின்றிருப்பீர்களோ,
அந்தளவு
பிறருக்கும்
கற்பிப்பீர்கள்.
இல்லையெனில்,
பாயிண்ட்டினுடைய பாடத்தை
மட்டும்
கற்பிப்பீர்கள்.
இப்பொழுது
பாடத்தை
மீண்டும்
திரும்பப்
படிக்க
வேண்டும்.
ஒவ்வொரு பாயிண்ட்டிலும்
என்னென்ன
சக்தி
உள்ளது,
எவ்வளவு
சக்தி
உள்ளது,
எந்த
சமயம்
எந்த
சக்தியை
எந்த ரூபத்தில்
பயன்படுத்த
முடியும்,
இந்தப்
பயிற்சியை
தனக்குத்
தானே
கொடுத்துக்
கொள்ள
முடியும்.
ஆத்மா என்ற
பாயிண்ட்டை
சக்திசாலியான ஆயுதமாக
நாள்
முழுவதும்
நடைமுறை
காரியத்தில்
பயன்படுத்தினேனா?
தனக்குத்
தானே
பயிற்சி
கொடுத்துக்
கொள்ள
முடியும்.
ஏனெனில்,
நீங்கள்
ஞானவான்கள்
தானே!
ஆத்மாக்களுக்கு சொல்வதற்காகக்
கருத்துக்களை
எடுக்கச்
சொன்னால்
எத்தனை
கருத்துக்களை
எடுப்பீர்கள்!
நிறைய
உள்ளன அல்லவா?
சொற்பொழிவாற்றுவதில்
புத்திசாலிகள்.
ஆனால்,
பிரச்சனையான
சமயத்தில்
ஒவ்வொரு
கருத்தையும் எந்தளவு
காரியத்தில்
கொண்டு
வருகிறேன்
என்பதைப்
பாருங்கள்.
நான்
நன்றாகவே
உள்ளேன்,
ஆனால்,
இப்படிப்பட்ட
விசயம்
ஏற்பட்டுவிட்டது,
பிரச்சனை
வந்துவிட்டது,
அதனால்
இவ்வாறு
ஆகிவிட்டது
என்று நினைக்காதீர்கள்.
ஆயுதம்
எதற்காக
உள்ளது?
எப்பொழுது
எதிரி
வருகிறாரோ,
அதற்காகத்தான்
உள்ளதா?
அல்லது
எதிரி
வந்துவிட்டார்,
ஆகையினால்,
நான்
தோல்வி
அடைந்துவிட்டேன்.
மாயை
வந்துவிட்டதால் தடுமாற்றம்
ஏற்பட்டுவிட்டது
என்று
கூறுகிறீர்கள்.
ஆனால்,
மாயைக்காக
(எதிரி)
தானே
ஆயுதங்கள்
உள்ளன!
சக்திகளை
எதற்காக
தாரணை
செய்திருக்கிறீர்கள்?
தக்க
சமயத்தில்
வெற்றியை
அடைவதற்காக
சக்திசாஆகி உள்ளீர்கள்
அல்லவா?
எனவே,
என்ன
செய்ய
வேண்டும்
என்பது
புரிந்ததா?
தங்களுக்குள்
நன்றாக
ஆன்மிக உரையாடல்
செய்கின்றீர்கள்.
பாப்தாதாவிற்கு
அனைத்து
செய்திகளும்
வருகின்றன.
பாப்தாதா
குழந்தைகளுடைய இந்த
ஊக்கத்தைப்
பார்த்து
மகிழ்ச்சி
அடைகின்றார்கள்.
படிப்பின்
மீது
அன்பு
உள்ளது,
தந்தை
மீது
அன்பு உள்ளது,
சேவை
மீது
அன்பு
உள்ளது,
ஆனால்,
அவ்வப்போது
மென்மையானவர்
ஆகிவிடுகின்றனர்,
அப்பொழுது ஆயுதம்
நழுவி
விடுகிறது.
அந்த
சமயம்
அவர்களுடைய
புகைப்படம்
எடுத்து
பிறகு,
அவர்களுக்கே
அதைக் காண்பிக்க
வேண்டும்.
கொஞ்ச
நேரத்திற்காகத்
தான்
அவ்வாறு
ஆகிறது,
அதிகமாக
இல்லை,
ஆனாலும்
கூட நிரந்தரமாக
அதாவது
சதா
தடையற்றவராக
இருப்பது
மற்றும்
சில
நேரம்
தடைக்கு
வசமாகுவது,
சில
நேரம் தடையற்றவராகுவது
ஆகிய
இந்த
இரண்டு
நிலைக்கும்
வேறுபாடு
உள்ளது
அல்லவா!
நூல் எவ்வளவு முடிச்சு
விழுகிறதோ,
அவ்வளவு
பலவீனமாகிறது.
இணைந்து
விடுகிறது.
ஆனால்,
இணைக்கப்பட்ட
பொருள் மற்றும்
முழுமையான
பொருள்
ஆகிய
இரண்டிற்கும்
வேறுபாடு
உள்ளது
அல்லவா?
இணைக்கப்பட்ட
பொருள் நன்றாக
இருக்குமா?
தடை
வருகிறது,
பிறகு,
தடையற்றவர்
ஆகிறீர்கள்,
பிறகு,
தடை
வருகிறது,
உடைந்த பிறகு
இணைத்தாலும்,
இணைக்கப்பட்டது
தானே!.
அதனால்
கூட
இதன்
பிரபாவம்
மனோ
நிலையில்
ஏற்படுகிறது.
சிலர்
மிகவும்
நல்ல,
தீவிர
முயற்சியாளர்களாகவும்
உள்ளனர்.
ஞானவான்களாக,
சேவாதாரிகளாகவும் உள்ளனர்.
பாப்தாதா,
பரிவாரத்தின்
கண்களிலும்
உள்ளனர்,
ஆனால்,
உடைந்த
பிறகு
சேரக்கூடிய
ஆத்மாக்கள் சதா
சக்திசாலியாக இருக்கமாட்டார்கள்.
சின்னச்
சின்ன
விசயத்தில்
அவர்கள்
உழைக்க
வேண்டியதிருக்கும்.
அவ்வப்போது
சதா
இலகுவானவர்களாக,
மகிழ்ச்சியாக,
குஷியில்
நடனமாடக்
கூடியவர்களாக
இருப்பார்கள்.
ஆனால்,
சதா
அவ்வாறு
காட்சி
அளிக்கமாட்டார்கள்.
மகாரதியின்
பட்டியலில் இருப்பார்கள்.
ஆனால்,
அத்தகைய சமஸ்காரம்
உடையவர்கள்
நிச்சயம்
பலவீனமாக
இருப்பார்கள்.
இதற்கான
காரணம்
என்ன?
இந்த
உடைந்து,
இணையக்
கூடிய
சமஸ்காரமானது
அவர்களை
உள்ளுக்குள்
பவீனமாக
ஆக்கிவிடுகிறது.
வெளிமுகமாக
எந்த விசயமும்
இருக்காது.
மிகவும்
நன்றாகத்
தென்படுவார்கள்,
ஆகையினால்,
இதை
சமஸ்காரமாக
ஒருபோதும் ஆக்கக்கூடாது.
மாயை
வரத்தான்
செய்கிறது,
நடந்து
கொண்டிருக்கிறோம்
என்று
நினைக்கக்கூடாது.
ஆனால்,
சிலர் நேரம்
உடைந்து
போவது,
சில
நேரம்
இணைவது,
இவ்வாறு
இருப்பது
எப்படி
உள்ளது?
சதா
இணைந்திருப்பது,
சதா
தடையற்றவராக
இருப்பது,
சதா
மகிழ்ச்சியாக,
சதா
குடை
நிழலுக்குள்
இருப்பது
ஆகிய
அந்த
வாழ்க்கைக்கும் மற்றும்
இந்த
வாழ்க்கைக்கும்
வித்தியாசம்
உள்ளது
அல்லவா?
ஆகையினால்,
பாப்தாதா
கூறுகின்றார்கள்
-
சிலரது
ஜாதகத்தின்
தாள்
முற்றிலும்
சுத்தமாக
உள்ளது.
சிலருடைய
ஜாதகத்தில்
இடை
இடையே
கரை படிந்துள்ளது.
அந்தக்
கரையை
அழிக்கிறார்கள்,
ஆனால்,
அதுவும்
தென்படுகிறது
அல்லவா?
கரையே இருக்கக்கூடாது.
சுத்தமான
தாள்
மற்றும்
கரை
நீக்கப்பட்ட
தாள்
. . .
எது
நன்றாக
இருக்கும்?
சுத்தமாகத் தாளை
வைப்பதற்கான
ஆதாரம்
மிகவும்
சுலபமானது.
இது
மிகவும்
கடினமாகும்
என்று
பயந்து
விடக்கூடாது.
மிகவும்
சுலபமானது,
ஏனெனில்,
சமயம்
அருகாமையில்
வந்து
கொண்டிருக்கிறது.
சமயத்திற்கும்
கூட
விசேஷமாக வரதானம்
கிடைத்துள்ளது.
யார்
எந்தளவிற்கு
பின்னால்
வருகின்றார்களோ,
அவர்களுக்கு
சமயத்தின்
அனுசாரம் அதிகப்படியான
லிஃப்ட்டினுடைய
கிஃப்ட்டும்
(பரிசு)
கிடைக்கிறது.
மேலும்,
இப்போதைய
அவ்யக்த
ரூபத்தின் நடிப்பு
கூட
வரதானி
நடிப்பு
ஆகும்.
எனவே,
சமயத்தின்
உதவியும்
உங்களுக்கு
உள்ளது.
அவ்யக்த நடிப்பினுடைய
அவ்யக்த
சகயோகத்தினுடைய
உதவியும்
உள்ளது.
வேகமாகச்
செல்லும்
சமயம்
ஆகும்,
இதனுடைய
உதவியும்
உள்ளது.
முதலில் புதியதை
உருவாக்குவதற்கு
சமயம்
ஆனது.
இப்பொழுது
உருவான உருவாக்கப்பட்டதாக
உள்ளது.
நீங்கள்
உருவான
உருவாக்கப்பட்டதற்கு
வந்துவிட்டீர்கள்.
இந்த
வரதானமும் குறைந்ததல்ல.
யார்
முதலில் வந்தார்களோ,
அவர்கள்
வெண்ணெய்
எடுத்தார்கள்,
நீங்கள்
வெண்ணெய் சாப்பிடுவதற்கு
வந்துவிட்டீர்கள்,
எனில்,
வரதானி
ஆவீர்கள்
அல்லவா?
சிறிது
மட்டும்
கவனம்
கொடுங்கள்.
மற்றபடி
ஒன்றும்
பெரிய
விசயம்
அல்ல.
அனைத்து
விதமான
உதவியும்
உங்களுக்காக
உள்ளது.
இப்பொழுது உங்களுக்கு
மகாரதி
நிமித்த
ஆத்மாக்களின்
பாலனை
எவ்வளவு
கிடைக்கிறதோ,
அவ்வளவு
முன்னர் வந்தவர்களுக்குக்
கிடைக்கவில்லை.
ஒவ்வொருவருக்காகவும்
எவ்வளவு
உழைப்பு
கொடுத்து
நேரம்
கொடுக்கின்றார்கள்.
முதலில் பொதுவான
பாலனை
கிடைத்தது.
ஆனால்,
நீங்கள்
செல்லக்
குழந்தைகளாகி
பாலனை அடைந்து
கொண்டிருக்கிறீர்கள்.
பாலனைக்கான
கைம்மாறும்
(ரிட்டன்)
கொடுக்கக்கூடியவர்கள்
ஆவீர்கள்
அல்லவா!
கடினம்
அல்ல.
ஒவ்வொரு
விசயத்தையும்
சக்தி
ரூபத்தில்
பயன்படுத்துவதில்
மட்டும்
கவனம்
கொடுங்கள்.
புரிந்ததா?
நல்லது!
சதா
மகாவீரர்
ஆகி
வெற்றிக்
குடையின்
கீழ்
வீற்றிருக்கும்
ஆத்மாக்கள்,
சதா
ஞானத்தின்
சக்தியை நேரத்தின்
அனுசாரம்
காரியத்தில்
ஈடுபடுத்தக்
கூடிய,
சதா
உறுதியான,
அசையாத,
துண்டிக்கப்படாத
ஸ்திதியை தாரணை
செய்யக்கூடிய,
சதா
தன்னை
மாஸ்டர்
சர்வசக்திவான்
என்று
அனுபவம்
செய்யக்கூடிய,
அத்தகைய சிரேஷ்டமான,
சதா
மாயையை
வென்ற
வெற்றியாளர்
குழந்தைகளுக்கு,
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள் மற்றும்
நமஸ்காரம்.
தாதிகளுடன்:
ஒப்பற்ற
இரத்தினங்களுடைய
ஒவ்வொரு
அடியிலும்
சுயத்திற்கு
பல
கோடி
மடங்கு வருமானம்
உள்ளது,
ஆனால்,
கூடவே
பிறருக்கும்
பல
கோடி
மடங்கு
வருமானம்
கிடைக்கிறது.
ஒப்பற்ற இரத்தினங்கள்
சதா
ஒவ்வொரு
அடியிலும்
முன்னேறிக்
கொண்டே
இருப்பார்கள்.
அனாதி
சாவி
கிடைத்துள்ளது.
இது
ஆட்டோமேடிக்
(தானியங்கி)
சாவியாகும்.
நிமித்தமானவர்
ஆகுவது
என்றால்,
ஆட்டோமேடிக்
சாவியைப் போடுவது
என்று
அர்த்தம்.
ஒப்பற்ற
இரத்தினங்கள்
அனாதி
சாவியின்
மூலம்
முன்னேறித்
தான்
ஆக வேண்டும்.
உங்கள்
அனைவருடைய
ஒவ்வொரு
எண்ணத்திலும்
சேவை
நிறைந்துள்ளது.
அனேக ஆத்மாக்களுக்குள்
ஊக்கம்,
உற்சாகத்தைக்
கொண்டு
வருவதற்கு
ஒருவர்
நிமித்தம்
ஆகின்றார்.
உழைக்க வேண்டியது
இருக்காது,
ஆனால்,
நிமித்தமானவரைப்
பார்த்தவுடனேயே
அந்த
அலை
பரவி
விடுகிறது.
எவ்வாறு
ஒருவரை
ஒருவர்
பார்த்தவுடன்
வண்ணம்
ஒட்டிக்
கொள்கிறது
அல்லவா?
இந்த
ஆட்டோமேடிக் ஊக்க
உற்சாகத்தின்
அலையானது
பிறருடைய
ஊக்க
உற்சாகத்தையும்
அதிகரிக்கிறது.
எவ்வாறு
ஒருவர் நன்றாக
நடனமாடுகிறார்
எனில்,
அதைப்
பார்ப்பவர்களுடைய
கால்களும்
நடனமாடத்
துவங்கிவிடுகின்றன,
அலை
பரவி
விடுகிறது.
விரும்பாமலேயே
கூட
கை,
கால்
இயங்க
ஆரம்பித்துவிடுகிறது.
நல்லது.
மதுவனத்தின்
அனைத்து
காரியங்களும்
சரியாக
நடைபெறுகின்றன.
மதுபன்
நிவாசிகளால்
மதுவனம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
பாப்தாதா
நிமித்தமான
குழந்தைகளைப்
பார்த்து
சதா
கவலையற்றவர்களாக இருக்கின்றார்கள்.
ஏனெனில்,
குழந்தைகள்
எவ்வளவு
புத்திசாகளாக
உள்ளனர்.
குழந்தைகளும்
குறைந்தவர்கள் அல்ல.
தந்தைக்குக்
குழந்தைகள்
மீது
முழுமையான
நம்பிக்கை
உள்ளது.
குழந்தைகள்
தந்தையை
விட முன்னால்
உள்ளனர்.
நிமித்தமாகி
இருப்பவர்கள்
சதா
தந்தையைக்
கூட
கவலையற்றவராக
இருக்க
வைப்பவர்கள்.
உண்மையில்
கவலை
என்பது
கிடையாது,
ஆனாலும்,
தந்தைக்கு
நற்செய்தியை
சொல்லக்
கூடியவர்கள்.
ஒவ்வொரு
குழந்தையும்
ஒருவரை
விட
ஒருவர்
மேலானவர்கள்,
ஒவ்வொரு
குழந்தையும்
விசேஷமானவர்,
இத்தகைய
குழந்தைகள்
வேறு
எங்கும்
இருக்கமாட்டார்கள்.
ஒருவருக்கு
இத்தனை
குழந்தைகள்
இருக்கவே முடியாது.
ஒருவர்
சண்டை
போடக்கூடியவராக
இருப்பார்,
மற்றொருவர்
படிக்கக்கூடியவராக
இருப்பார்.
இங்கேயோ ஒவ்வொருவரும்
விசேஷமான
மணிகள்
ஆவீர்கள்,
ஒவ்வொருவரிடமும்
விசேஷதன்மை
உள்ளது.
வரதானம்:
தூய்மையின்
சக்திசாலியான திருஷ்டி,
விருத்தி
மூலம்
சர்வ
பிராப்திகளை செய்விக்கக்கூடிய
துக்கத்தைப்
போக்கி
சுகம்
கொடுப்பவர்
ஆகுக!
விஞ்ஞானத்தின்
மருந்தில்
அல்ப
காலத்தின்
சக்தி
உள்ளது,
அது
துக்கம்,
வலியை நீக்கி
விடுகிறது.
ஆனால்,
தூய்மையின்
சக்தி
அதாவது
அமைதி
சக்தியிலோ
ஆசீர்வாதத்தின்
சக்தி
உள்ளது.
இந்தத்
தூய்மையின் சக்திசாலியான திருஷ்டி
மற்றும்
விருத்தி
சதா
காலத்திற்கான
பிராப்தியை
செய்விக்கக்கூடியது.
ஆகையினால்,
உங்களுடைய
ஜடச்சித்திரங்களுக்கு
முன்னால்
ஓ!
கருணை
காட்டுபவரே!
கருணை
காட்டுங்கள்
என்று
கூறி கருணை
மற்றும்
ஆசீர்வாதத்தைக்
கேட்கின்றார்கள்.
சைத்தன்யத்தில்
மாஸ்டர்
துக்கத்தைப்
போக்கி
சுகத்தைக் கொடுப்பவராகி,
கருணை
காட்டியதனாலேயே
பக்தியில்
பூஜிக்கப்படுகிறீர்கள்.
சுலோகன்:
சமயத்தின்
அருகாமையின்
அனுசாரம்
எல்லையற்ற வைராக்கியமே
உண்மையான
தவம்
அல்லது
சாதனா
ஆகும்.
குறிப்பு:-
இன்று
மாதத்தின்
மூன்றாவது
ஞாயிற்றுக்கிழமை
ஆகும்.
அனைவரும்
குழுவாக
மாலை
6.30
முதல்
7.30
மணி
வரை
சர்வதேச
யோகத்தில்
பங்கேற்க
வேண்டும்.
அவதரிக்கப்பட்ட
அவதார
ஆத்மா நான்
என்ற
இந்த
நினைவின்
மூலம்
சரீரத்தில்
பிரவேசம்
செய்ய
வேண்டும்
மேலும்
சரீரத்தில்
இருந்து விடுபட
வேண்டும்.
தன்னுடைய
விதை
ரூப
ஸ்திதியில்
அமர்ந்து
பரமாத்ம
சக்திகளை
வாயுமண்டலத்தில் பரப்பக்கூடிய
சேவை
செய்ய
வேண்டும்.
ஓம்சாந்தி