13.01.2019           காலை முரளி                                ஓம் சாந்தி                        ''அவ்யக்த பாப்தாதா''

ரிவைஸ்           10.04.1984           மதுபன்


 

'' பிரபுவின் அன்பு - பிராமண வாழ்க்கைக்கான ஆதாரம் ''

 

இன்று பாப்தாதா தன்னுடைய அன்பிற்குரிய, சகயோகி, சகஜயோகி ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைவருமோ யோகி ஆத்மாக்கள் தான். இது யோகிகளின் சபை என்று அப்படித் தான் கூறுவோம். அனைத்து யோகியாக இருக்கும் ஆத்மாக்கள் அதாவது பிரபுவிற்கு பிரியமான ஆத்மாக்கள் அமர்ந்திருக்கிறார்கள். எது பிரபுவிற்கு பிரியமானதாக இருக்குமோ அது உலகத்தின் பிரியமானதாக ஆகியே விடுகிறது. அனைவருக்கும், நான் பரமாத்மாவின் அன்பிற்குரிய, பகவானின் பிரியமான மற்றும் உலகத்தின் பிரியமானவன் ஆகிவிட்டேன் என்ற ஆன்மீக போதை, ஆன்மீக பெருமிதம், ஆன்மீக கௌரவம் எப்பொழுதும் இருக்கிறதா? ஒரு அரை விநாடிக்கான பார்வை என் மேல் விழுந்து விட வேண்டும் என்று பக்தர்கள் இதன் தாகத்தில் இருக்கிறார்கள். மேலும் இதைத் தான் மகான் நிகழ்வு என்றும் நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஈஸ்வரிய அன்பிற்கு உரியவர் ஆகிவிட்டீர்கள். பிரபுவிற்கு பிரியமானவர் ஆகிவிட்டீர்கள். இது எவ்வளவு மகான் பாக்கியம்! இன்று ஒவ்வொரு ஆத்மாவும் குழந்தை பருவத்திலிருந்து மரணத்தின் வரை என்ன விரும்புகிறது? ஒன்றும் அறியாத குழந்தை கூட வாழ்க்கையில் அன்பை விரும்புகிறது. பணத்தை பின்னால் தான் விரும்புவர். ஆனால் முதல் அன்பு வேண்டும் என்று விரும்புவர். அன்பு இல்லை என்றால் வாழ்க்கை ஒரு நம்பிக்கையற்ற வாழ்க்கையாக அனுபவம் செய்வார்கள், இரசனையற்ற வாழ்க்கை என்று அனுபவம் செய்வார்கள். ஆனால் அனைத்து ஆத்மாக்கள் உங்களுக்கு பரமாத்மாவின் அன்பு கிடைத்திருக்கிறது, பரமாத்மாவின் பிரியமானவர் ஆகிவிட்டீர்கள், இதை விட பெரிய ஒன்று ஏதாவது இருக்கிறதா? அன்பு இருக்கிறது என்றால் உலகம் இருக்கிறது, உயிர் இருக்கிறது. அன்பு இல்லை என்றால் உயிரற்ற, உலகமற்ற நிலை. அன்பு கிடைத்தது என்றால் உலகம் கிடைத்தது. அந்த மாதிரியான அன்பை சிரேஷ்ட பாக்கியத்தை அனுபவம் செய்கிறீர்களா? உலகம் இதற்கு தாகமுள்ளதாக இருக்கிறது. ஒரு துளிக்கான தாகமுள்ளவர்களாக இருக்கிறார்கள். மேலும் குழந்தைகள் உங்களுக்கு இந்த பிரபுவின் அன்பு ஒரு சொத்தாக இருக்கிறது. இதே பிரபுவின் அன்பில் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள், அதாவது பிராமண வாழ்க்கையில் முன்னேறிச் செல்கிறீர்கள். அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்களா? அன்புக் கடலின் அன்பில் மூழ்கியிருக்கிறீர்களா? அல்லது கேட்க மட்டும் மற்றும் தெரிந்து மட்டும் இருக்கிறீர்களா? அதாவது கடலின் கரையில் நின்று கொண்டே யோசித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறீர்களா.? கேட்பது மற்றும் தெரிந்து மட்டும் கொள்வது என்பது கரையில் நிற்பது. நம்புவது மற்றும் மூழ்கிவிடுவது என்ற இது தான் அன்புக்கடல்

அன்பில் ஐக்கியமாகி விடுவது. பிரபுவின் பிரியமானவர் ஆகியும் கூட கடலில் மூழ்கிவிடுவது மற்றும் ஐக்கியமாகிவிடுவது என்ற இந்த அனுபவத்தை செய்யவில்லை என்றால் பிரபுவின் அன்பிற்கு பாத்திரமானவர் ஆகி, அடைபவர்களாக இல்லை ஆனால் தாகமுள்ளவராகவே இருந்து விடுகிறார்கள். அருகில் வந்தும் கூட தாகத்தில் இருந்து விடுவது என்பதை என்னவென்று கூறுவது? யார் என்னை தன்னுடைய குழந்தையாக ஆக்கியிருக்கிறார், யாருடைய பிரியமானவராக ஆகியிருக்கிறேன்! மேலும் யாருடைய வளர்ப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். எப்பொழுதுமே அன்பில் மூழ்கியிருக்கும் காரணத்தினால் பிரச்சனைகள் மற்றும் எந்தவிதமான குழப்பத்தின் பிரபாவம் ஏற்பட முடியாது. எப்பொழுதும் தடைகளை அழிப்பவராக, சமாதான சொரூபமாக மாயாவை வென்றவராக அனுபவம் செய்வீர்கள்.

 

சில குழந்தைகள் ஞானத்தின் நுணுக்கமான விஷயங்கள் நினைவிருப்பதில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் நான் பரமாத்மாவின் அன்பிற்குரியவன் என்ற இந்த ஒரு விஷயம் நினைவிருக்கிறது. பரமாத்மாவின் அன்பிற்கு உரியவன் என்ற இந்த ஒரு நினைவின் மூலம் எப்பொழுதும் சக்திசாலி ஆகி விடுவீர்கள். இதுவோ சுலபம் தான் இல்லையா. இதுவும் மறந்து விடுகிறது என்றால் உள்ளே சென்று வெளியில் எப்படி வருவது என்று தெரியாத நிலையில் மாட்டிக் கொள்வது போல் ஆகியது. இந்த ஒரு விஷயம் மட்டும் அனைத்து பிராப்திகளின் அதிகாரியாக ஆக்கக்கூடியது. எனவே எப்பொழுதும் நான் பிரபுவின் அன்பிற்குரியவன் மேலும் உலகிற்கு அன்பிற்குரியவன் என்ற இந்த நினைவை வையுங்கள். மேலும் அனுபவம் செய்யுங்கள். புரிந்ததா. இதுவோ சுலபம் தான் இல்லையா! நல்லது. அதிகமாகக் கேட்டிருக்கிறீர்கள். இப்பொழுது நிரப்ப வேண்டும். நிரப்புவது தான், சமமாக ஆவது. புரிந்ததா. அனைத்து பிரபுவின் அன்பிற்கு பாத்திரமான குழந்தைகளுக்கு, அனைத்து அன்பில் மூழ்கியிருக்கும் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, அனைத்து அன்பின் வளர்ப்பிற்கு உரிய குழந்தைகளுக்கு, ஆன்மீகப் பெருமிதத்தில் இருக்கக்கூடிய, ஆன்மீக போதையில் இருக்கக்கூடிய, சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:

அனைவரும் சகஜயோகி ஆத்மாக்கள் தான் இல்லையா? அனைத்து உறவுகளினால் நினைவு செய்வது சகஜயோகி ஆக்கிவிடுகிறது. எங்கு சம்மந்தம் இருக்கிறதோ அங்கு சகஜமாக இருக்கும். நான் சகஜயோகி ஆத்மா என்ற இந்த நினைவு அனைத்து பிரச்சனைகளையும் சுலபமாகவே முடிவடையச் செய்து விடுகிறது. ஏனென்றால் சகஜயோகி என்றால் எப்பொழுதும் தந்தை உடன் இருப்பவர். எங்கு சர்வ சக்திவான் தந்தை உடன் இருக்கிறாரோ, அனைத்து சக்திகள் உடன் இருக்கிறது என்றால் பிரச்சனை சமாதான ரூபத்தில் மாறி விடும். எந்தவொரு பிரச்சனையையும் தந்தை தெரிந்து கொள்ளட்டும், பிரச்சனை தெரிந்து கொள்ளட்டும். அந்த மாதிரி சம்மந்தத்தின் அதிகாரம் மூலம் பிரச்சனை முடிவடைந்து விடும். நான் என்ன செய்வது என்பதற்கு பதிலாக தந்தைக்குத் தெரியும், பிரச்சனைக்குத் தெரியும். நான் விலகியிருப்பவன், மேலும் தந்தையின் அன்பிற்குரியவன். எனவே அனைத்து சுமையும் தந்தையினுடையதாக ஆகிவிடும், மேலும் நீங்கள் இலேசாகி விடுவீர்கள். எப்பொழுது நீங்களே இலேசாகிவிடுவீர்வகளோ அப்பொழுது அனைத்து விஷயங்களும் இலேசாகி விடும். கொஞ்சமாவது யோசிப்பது இருக்கிறது என்றால் சுமையாகிவிடுவீர்கள். மேலும் விஷயங்களும் சுமையாகிவிடும். எனவே நான் லேசாக இருக்கிறேன், விலகியிருக்கிறேன் என்றால் அனைத்து விஷயங்களும் லேசாக ஆகிவிடும். இது தான் விதி, இந்த விதி மூலம் சித்தி அதாவது வெற்றி பிராப்தி ஆகும். கடந்த காலத்து கணக்கு வழக்கு முடிவடைவதனால் சுமை அனுபவம் ஆகாது. கடந்த காலத்தின் விஷயங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. அந்த மாதிரி சாட்சியாகி பார்ப்பார்கள். மேலும் தற்சமயத்தின் சக்தி மூலம் சாட்சியாகி பார்த்துக் கொண்டிருக்கிறேன். சேமிப்பும் ஆகிக் கொண்டிருக்கிறது, மேலும் முடிக்கப்படுவதும் ஆகிக் கொண்டிருக்கிறது. சேமிப்பின் சக்தி மூலம் முடிப்பதற்கான சுமை இருக்காது. எனவே எப்பொழுதும் நிகழ்காலத்தை நினைவில் வையுங்கள். எப்பொழுது ஒரு பக்கம் சுமை ஆகிறது என்றால் இன்னொரு பக்கம் இயல்பாகவே இலேசாகிவிடும். எனவே நிகழ்காலம் சுமையாக இருக்கிறது என்றால் கடந்த காலம் இலேசாகிவிடும் இல்லையா! தற்சமயத்தின் பிராப்தியின் சொரூபத்தை எப்பொழுதும் நினைவின் வைத்தீர்கள் என்றால் அனைத்தும் லேசாகிவிடும். எனவே கடந்த காலத்து கணக்கை இலேசாக ஆக்குவதற்கான வழி நிகழ்காலத்தை சக்திசாலியாக ஆக்குங்கள். நிகழ்காலமோ சக்திசாலியே தான். தற்சமயத்து பிராப்தியை எதிரில் வைத்தீர்கள் என்றால் அனைத்தும் சுலபமாகி விடும். கடந்து காலத்து விஷயங்கள் ஈட்டியிலிருந்து முள்ளாகி விடும். என்ன, ஏன் என்றிருக்க வேண்டாம். கடந்த காலத்தினுடையது. கடந்ததை ஏன் பார்க்க வேண்டும். எங்கு முழு ஈடுபாடு இருக்கிறதோ அங்கு சுமை பளுவாக இருக்காது. விளையாட்டாக அனுபவம் ஆகும். தற்சமயத்தின் குஷியின் ஆசீர்வாதம் மற்றும் மருந்து மூலம் அனைத்து கணக்கு வழக்குகளை முடிவு கட்டுங்கள்.

 

டீச்சர்களுடன் சந்திப்பு

நீங்கள் ஒவ்வொரு அடியிலும் எப்பொழுதும் வெற்றியை அனுபவம் செய்பவர்கள் தான் இல்லையா? நீங்கள் அனுபவம் நிறைந்த ஆத்மாக்கள் தான் இல்லையா? அனுபவம் தான் அனைத்தையும் விட மிகப்பெரிய அதிகாரம். அனுபவத்தின் அதிகாரம் உள்ளவரின் ஒவ்வொரு அடி மற்றும் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி கண்டிப்பாக இருக்கும். சேவைக்கு பொறுப்பாளர் ஆவதற்கான வாய்ப்பு கிடைப்பது கூட ஒரு விசேஷத்தின் அடையாளம். என்ன வாய்ப்பு கிடைக்கிறதோ, அதையே அதிகரித்துக் கொண்டே இருங்கள். எப்பொழுதும் பொறுப்பில் இருப்பவராகி முன்னேறும் மற்றும் முன்னேற்றும் நான் பொறுப்பாளர் மற்றும் கருவி என்ற உணர்வு தான் வெற்றியை பிராப்தி செய்விக்கிறது. கருவி மற்றும் பணிவு என்ற விசேஷத்தை எப்பொழுதும் உங்கள் கூடவே வைத்துக் கொள்ளுங்கள். இந்த விசேஷம் தான் எப்பொழுதும் விசேஷமாக ஆக்கும். பொறுப்பாளர் ஆகும் பங்கு தனக்கும் லிஃப்ட் கொடுக்கும். மற்றவர்களுக்கு பொறுப்பாளர் ஆவது என்றால் தானே சம்பன்னம் ஆவது. திடத் தன்மையுடன் வெற்றியை பிராப்தி செய்து கொண்டே இருங்கள். கண்டிப்பாக வெற்றி இருக்கிறது என்ற இந்த திடத்தன்மை மூலம் வெற்றி தானாக முன்னுக்குச் செல்லும். பிறந்த உடனேயே சேவாதாரி ஆவதற்கான பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே மிகப்பெரிய சான்ஸ்லர் (வாய்ப்பை எடுப்பவர்) ஆகிவிட்டீர்கள் இல்லையா? குழந்தைப் பருவத்திலிருந்தே சேவாதாரி என்ற அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அதிர்ஷ்டத்தை எழுப்பி விட்டு விட்டு வந்திருக்கிறீர்கள்! எத்தனை ஆத்மாக்களின் சிரேஷ்ட அதிர்ஷ்டத்தை உருவாக்கும் காரியத்திற்கு பொறுப்பாளர் ஆகிவிட்டீர்கள்! எனவே ஆஹா! என்னுடைய சிரேஷ்ட அதிர்ஷ்டத்தின் சிரேஷ்ட ரேகை என்பது எப்பொழுதும் நினைவில் இருக்கட்டும். தந்தை கிடைத்தார், சேவை கிடைத்தது, சேவாஸ்தானம் கிடைத்தது, மேலும் சேவையின் கூடவே சிரேஷ்ட ஆத்மாக்களின் சிரேஷ்ட பரிவாரம் கிடைத்தது!. என்ன தான் கிடைக்கவில்லை!. இராஜ்ய பாக்கியம் அனைத்தும் கிடைத்து விட்டது! இந்தக் குஷி எப்பொழுதும் இருக்கட்டும். விதி மூலமாக எப்பொழுதும் வளர்ச்சியை அடைந்து கொண்டே இருங்கள். கருவி என்ற உணர்வின் விதி மூலம் சேவையில் வளர்ச்சி ஆகிக் கொண்டே இருக்கும்.

 

குமாரர்களுடன் சந்திப்பு

குமார வாழ்க்கையில் பாதுகாப்பாக ஆகிவிடுவது மிகப் பெரிய பாக்கியம். எத்தனை பிரச்சனைகளிலிருந்து தப்பித்து விட்டீர்கள். குமார் என்றால் பந்தனத்திலிருந்து விடுபட்ட ஆத்மாக்கள். குமார வாழ்க்கை பந்தனமற்ற வாழ்க்கை. ஆனால் குமார வாழ்க்கையிலும் சுதந்திரமாக இருப்பது என்றால் சுமையைத் தூக்குவது. குமாரர்களுக்காக பாப்தாதா உலகியல் வாழ்க்கையில் இருந்து கொண்டே ஆன்மீக சேவை செய்ய வேண்டும் என்ற டைரக்ஷன் கொடுக்கிறார். உலகியல் சேவை தொடர்பை உருவாக்குவதற்கான சாதனம். இதில் பிஸியாக இருந்தீர்கள் என்றால் ஆன்மீக சேவை செய்ய வேண்டும். உலகத்து குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே ஆன்மீக சேவை செய்யுங்கள். பிறகு புத்தி சுமையாக இருக்காது. அனைவருக்கும் தன்னுடைய அனுபவத்தை கூறி சேவை செய்யுங்கள். உலகியல் சேவையை சேவைக்கான சாதனம் என்று புரிந்து செய்யுங்கள். உலகியல் சாதனம் மிகுந்த சேவை செய்வதற்கான வாய்ப்பை கொடுக்கும். இலட்சியம் ஈஸ்வரிய சேவை செய்வதற்கானது, ஆனால் இது சாதனம் என்று புரிந்து செய்யுங்கள். குமார் என்றால் தைரியம் உள்ளவர்கள். என்ன விரும்புகிறார்களோ அதை செய்ய முடியும். எனவே அனைத்து சாதனங்கள் மூலமாக வெற்றியை பிராப்தி செய்வதற்கான அறிவுரையை பாப்தாதா கொடுக்கிறார். குமார் என்றால் நிரந்தர யோகி ஏனென்றால் குமாரர்களின் உலகமே ஒரு தந்தை தான். எப்பொழுது தந்தையே உலகம் என்றால் உலகத்தை தவிர புத்தி வேறு எங்கு செல்லும்? எப்பொழுது ஒருவரினுடையவராக ஆகிவிட்டீர்கள் என்றால் ஒருவரின் நினைவு தான் வரும் இல்லையா? மேலும் ஒருவரை நினைவு செய்வது மிக சுலபம். அனேகர்களிடமிருந்தோ விடுபட்டு விட்டீர்கள். அந்த ஒருவரில் தான் அனைத்தும் நிரம்பியிருக்கிறது. எப்பொழுதும் ஒவ்வொரு காரியம் மூலம் சேவை செய்ய வேண்டும். திருஷ்டி மூலம், வாய் மூலம் சேவையே சேவை தான். யார் மேல் அன்பு ஏற்படுமோ அவரை பிரத்யக்ஷம் செய்வதற்கான ஊக்கம் இருக்கும். ஒவ்வொரு அடியிலும் தந்தை மற்றும் சேவை. எப்பொழுதும் உடன் இருக்கட்டும். நல்லது.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட விசேஷ அவ்யக்த மகாவாக்கியம் -

கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டு கர்மாதீத், விதேகி ஆகுங்கள் விதேகி மற்றும் கர்மாதீத் நிலையை அனுபவம் செய்வதற்காக -

1) எல்லைக்குட்பட்ட என்னுடையது - என்னுடையது என்பதின் தேக அபிமானத்திலிருந்து விடுபட்டவர் ஆகுங்கள்.

2) குடும்பம் மற்றும் ஆன்மீகம், காரியம் மற்றும் சம்மந்தம் இரண்டிலும் சுயநல பாவனையிலிருந்து விடுபட்டவர் ஆகுங்கள்.

3) கடந்த ஜென்மங்களின் கர்மங்களின் கணக்கு வழக்கு மற்றும் தற்சமயத்து முயற்சி செய்வதின் பலஹீனத்தின் காரணமாக எந்தவொரு வீணான சுபாவம், சம்ஸ்காரத்தின் வசம் ஆவதிலிருந்து விடுபட்டவர் ஆகுங்கள்.

4) ஒருவேளை ஏதாவது சேவையின், குழுவின், இயற்கையின் சூழ்நிலை சுயநிலையை மற்றும் சிரேஷ்ட நிலையை மேலே கீழே ஆட வைக்கிறது என்றால் இதுவும் பந்தனத்திலிருந்து விடுபட்ட நிலை இல்லை. இந்த பந்தனத்திலிருந்தும் விடுபட்டவர் ஆகுங்கள்.

5) பழைய உலகத்தில், பழைய கடைசி உடலில் எந்த விதமான நோய் தன்னுடைய சிரேஷ்ட நிலையை குழப்பத்தில் கொண்டு வருவதிலிருந்தும் விடுபட்டவர் ஆகுங்கள். நோய் வருவது இதுவோ நாடகப்படி வரும் ஆனால் நிலை ஆடிப் போவது என்பது பந்தனம் நிறைந்த நிலையின் அடையாளம். சுயசிந்தனை, ஞானசிந்தனை, நற்சிந்தனையாளர் ஆவதற்கான சிந்தனை மாறி உடலின் நோயின் சிந்தனை இருப்பது இதிலிருந்தும் விடுபட்டவர் ஆகுங்கள். இதைத் தான் கர்மாதீத் நிலை என்று கூறுவது.

 

கர்மயோகி ஆகி கர்மத்தின் பந்தனத்திலிருந்து எப்பொழுதும் விலகியவராகி மேலும் எப்பொழுதும் தந்தையின் பிரியமானவராக ஆகுங்கள். இது தான் கர்மாதீத் விதேகி நிலை. கர்மாதீத் நிலை என்றால் காரியம் செய்வதிலிருந்து விடுபட்டு இருப்பது என்ற அர்த்தம் இல்லை. காரியம் செய்வதிலிருந்து விலகியவராக இருப்பதில்லை, கர்மத்தின் பந்தனத்தில் மாட்டிக் கொள்வதிலிருந்து விலகியவராக ஆகுங்கள். ஏதாவது எவ்வளவு தான் பெரிய காரியமாக இருந்தாலும் ஆனால் நான் காரியம் செய்து கொண்டிருக்கவில்லை ஆனால் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்று அனுபவம் ஆகட்டும். எந்தவொரு சூழ்நிலை வந்தாலும், ஏதாவது ஒரு ஆத்மா தன்னுடைய கணக்கு வழக்கை முடிக்கக்கூடியவர்கள் எதிர்கொள்வதற்கு வந்து கொண்டே இருந்தாலும் கூட, உடலின் செய்த பாவ கர்மத்தின் விளைவுகளை அனுபவிப்பது எதிர்கொள்ள வந்து கொண்டே இருந்தாலும் சரி ஆனால் எல்லைக்குட்பட்ட விருப்பங்களிருந்து விடுபட்டு இருப்பது தான் விதேகி நிலை. எதுவரை இந்த உடல் இருக்கிறதோ, கர்ம இந்திரி யங்களுடன் இந்த கர்ம ஷேத்திரத்தில் தனது வாழ்க்கைப் பங்கை செய்து கொண்டிருக்கிறீர்களோ அது வரை காரியம் செய்யாமல் ஒரு விநாடி கூட இருக்க முடியாது. ஆனால் காரியம் செய்து கொண்டே கர்மத்தின் பந்தனத்திலிருந்து விலகியிருப்பது தான் கர்மாதீத் விதேகி நிலை. எனவே கர்ம இந்திரியங்கள் மூலமாக கர்மத்தின் சம்மந்தத்தில் வர வேண்டும், கர்மத்தின் பந்தனத்தில் கட்டப்பட்டு விடக்கூடாது. கர்மத்தின் அழியும் பலனின் இச்சைக்கு வசமானவர் ஆகக்கூடாது. கர்மாதீத் என்றால் கர்மத்தின் வசமாகுபவர் இல்லை. ஆனால் எஜமானன் ஆகி, அதிகாரி ஆகி கர்ம இந்திரியங்களின் சம்மந்தத்தில் வர வேண்டும், அழியும் விருப்பங்களிலிருந்து விலகியவராகி கர்ம இந்திரியங்கள் மூலமாக காரியம் செய்விக்க வேண்டும். ஆத்மா எஜமானனை செய்யும் காரியம் தன்னுடைய அடிமையாக ஆக்க வேண்டாம், ஆனால் அதிகாரி ஆகி காரியத்தை செய்வித்துக் கொண்டே இருக்க வேண்டும். செய்விப்பவராகி காரியத்தை செய்விப்பது என்பதைத் தான் கர்மத்தில் சம்மந்தத்தில் வருவது. கர்மாதீத் ஆத்மா சம்மந்தத்தில் வருகிறது, பந்தனத்தில் இல்லை.

 கர்மாதீத் என்றால் தேகம், தேகத்தின் சம்மந்தம், பொருட்கள், குடும்பம் மற்றும் ஆன்மீக இரண்டு சம்மந்தங்களிலிருந்து, பந்தனத்திலிருந்து அதீத் அதாவது விலகியிருப்பவர். சம்மந்தம் என்ற வார்த்தை கூறுகிறோம் -

 தேகத்தின் சம்மந்தம், தேகத்தின் உறவினர்களின் சம்மந்தம் என்று கூறுகிறோம், ஆனால் தேகத்தில் மற்றும் சம்மந்தத்தில் ஒருவேளை அடிமைத்தனம் இருக்கிறது என்றால் சம்மந்தம் கூட பந்தனம் ஆகிவிடுகிறது. கர்மாதீத் நிலையில் கர்ம சம்மந்தம் மற்றும் கர்ம பந்தனத்தின் இரகசியத்தை தெரிந்திருக்கும் காரணத்தினால் எப்பொழுதும் ஒவ்வொரு விஷயத்தில் திருப்தியாக இருப்பார். ஒருபொழுதும் திருப்தியின்றி இருந்து கோபப்பட மாட்டார். அவர் தன்னுடைய பழைய கர்மங்களின் கணக்கு வழக்கின் பந்தனத்திலிருந்தும் விடுபட்டிருப்பார். கடந்த காலத்து கர்மங்களின் கணக்கு வழக்கின் விளைவாக உடல் நோயுற்று இருந்தாலும், மனதின் சம்ஸ்காரம், மற்ற ஆத்மாக்களின் சம்ஸ்காரங்களுடன் மோதுகிறது என்றாலும் ஆனால் கர்மாதீத், கர்ம விளைவுகளை அனுபவிப்பத்தன் வசம் ஆகாமல் எஜமானன் ஆகி முடித்து விடுவார். கர்மயோகி ஆகி கர்ம விளைவுகளின் அனுபவித்தலை முடிவு கட்டுவது தான் கர்மாதீத் ஆவதற்கான அடையாளம். யோகா மூலம் கர்மத்தின் விளைவுகளை அனுபவித்தலை ஈட்டியாக இருப்பதை முள்ளாக ஆக்கி சிரித்துக் கொண்டே பஸ்பம் செய்வது (சாம்பலாக்குவது) அதாவது கர்மத்தின் விளைவுகளை முடிவு கட்டுவது. கர்மயோகாவின் நிலை மூலம் கர்மத்தின் விளைவுகளை பரிவர்த்தனை செய்து விடுவது என்ற இது தான் கர்மாதீத் நிலை. வீணான எண்ணங்கள் தான் கர்ம பந்தனத்தின் சூட்சும கயிறுகள். கர்மாதீத் ஆத்மா தீயதிலும் நல்லதை அனுபவம் செய்வார். அவர், என்ன நடக்கிறதோ அது நல்லதாக நடக்கிறது, நானும் நல்லவன், தந்தையும் நல்லவர், நாடகமும் நல்லது. இந்த எண்ணம் பந்தனத்தை துண்டிப்பதற்காக கத்திரிக்கோலின் வேலை செய்யும். பந்தனம் துண்டிக்கப்பட்டு விட்டது என்றால் கர்மாதீத் ஆகிவிடுவார். விதேகி (உடலற்ற) நிலையை அனுபவம் செய்வதற்காக ஆசை என்றால் என்னவென்று தெரியாதவர் ஆகுங்கள். அந்த மாதிரி எல்லைக்குட்பட்ட ஆசையிலிருந்து விடுபட்ட ஆத்மா அனைவரின் ஆசைகளை நிறைவேற்றும் தந்தைக்குச் சமமாக 'காமதேனுவாக' இருப்பார். எப்படி தந்தையின் அனைத்து களஞ்சியங்கள், அனைத்து பொக்கிஷங்கள் எப்பொழுதும் நிரம்பியிருக்கிறது, பிராப்தியின்மைக்கான பெயர், அடையாளம் இல்லை, அதே போல் தந்தைக்குச் சமமாக எப்பொழுதும் மற்றும் அனைத்து பொக்கிஷங்களில் நிரம்பி யவராக ஆகுங்கள். சிருஷ்டி சக்கரத்தின் உள்ளே தனது பங்கை செய்து கொண்டே அனேக துக்கத்தின் சுழற்சியிலிருந்து விடுபட்டிருப்பது தான் ஜீவன்முக்தி நிலை. அந்த மாதிரி நிலையை அனுபவம் செய்வதற்காக அதிகாரி ஆகி, எஜமானன் ஆகி அனைத்து கர்ம இந்திரியங்கள் மூலமாக காரியம் செய்விப்பவராக ஆகுங்கள். காரியத்தில் வாருங்கள். பிறகு காரியம் முடிந்து விட்டது என்றால் விலகி விடுங்கள் - இது தான் விதேகி நிலைக்கான பயிற்சி. ஆத்மாவின் ஆதி மற்றும் அனாதி (இயற்கையான) சொரூபம் சுதந்திரம். ஆத்மா இராஜாவாக இருக்கிறது. எஜமானனாக இருக்கிறது. மனதின் பந்தனமும் இருக்க வேண்டாம். ஒருவேளை மனதின் பந்தனமும் இருக்கிறது என்றால் அந்த ஒரு பந்தனம் அனேக பந்தனங்களைக் கொண்டு வரும். எனவே சுயஇராஜ்ஜிய அதிகாரி அதாவது பந்தனமற்ற இராஜா ஆகுங்கள். இதற்காக பிரேக்கை சக்திசாயாக வைத்துக் கொள்ளுங்கள். என்ன பார்க்க விரும்புகிறீர்களோ அதை மட்டும் பாருங்கள், என்ன கேட்க விரும்புகிறீர்களோ அதை மட்டும் கேளுங்கள். அந்த அளவு கட்டுப்படுத்தும் சக்தி இருக்க வேண்டும். அப்பொழுது தான் இறுதியில் மதிப்புடன் தேர்ச்சி அடைவீர்கள். அதாவது முதல் டிவிசனில் வர முடியும்.

 வரதானம் :

தூய்மையை ஆதி, அனாதி விசேஷ குணத்தின் ரூபத்தில் சுலபமாக கடைபிடிக்கும் பூஜைக்குரிய ஆத்மா ஆகுக.

 பூஜைக்குரியவராக ஆவதற்காக விசேஷ ஆதாரம் தூய்மையின் மீது இருக்கிறது. எந்த அளவு அனைத்து விதமான தூய்மையை கடைபிடிக்கிறீர்களோ அந்த அளவு அனைத்து விதத்திலும் பூஜைக்குரியவர் ஆகிறீர்கள். யார் விதிப்பூர்வமாக ஆதி, அனாதி விசேஷ குணம் ரூபத்தில் தூய்மையை கடைபிடிக்கிறார்களோ அவர்கள் தான் விதிப்பூர்வமாக பூஜை செய்யப்படுகிறார்கள். யார் ஞானி மற்றும் அஞ்ஞானி ஆத்மாக்களின் தொடர்பில் வந்து கொண்டே தூய்மையான உள்உணர்வு மற்றும் திருஷ்டி, எண்ண அலைகள் மூலம் யதார்த்த உறவு தொடர்பை வைத்து நடந்து கொள்கிறாரோ, கனவில் கூட யாருடைய தூய்மை துண்டிக்கப்படுவதில்லையோ அவர் தான் விதிப்பூர்வமான பூஜைக்கு உரியவர் ஆகிறார்.

 சுலோகன்:

உடலில் இருந்து கொண்டே உடலற்ற ஃபரிஷ்தா ஆகி சேவை செய்தீர்கள் என்றால் உலக நன்மைக்கான காரியம் அதிவேகத்தில் நிறைவேறி விடும்.

 

பிரம்மா பாபாவிற்கு சமமாக ஆவதற்காக விசேஷ முயற்சி

 பிரம்மா பாபா மேல் அன்பு இருக்கிறது என்றால் பிரம்மா பாபாவிற்குச் சமமாக ஃபரிஷ்தா ஆகுங்கள். எப்பொழுதுமே தன்னுடைய ஓளி வடிவமான ஃபரிஷ்தா சொரூபம் நானும் அந்த மாதிரி ஆக வேண்டும் என்று எப்பொழுதும் எதிரில் தென்படட்டும், மேலும் எதிர்கால ரூபமும் தென்படட்டும். இப்பொழுது இதை விட்டேன், மேலும் அதை எடுத்து கொண்டேன். எப்பொழுது அந்த மாதிரி அனுபவம் ஆகிறதோ அப்பொழுது நான் சம்பூர்ண நிலையின் அருகில் இருக்கிறேன் என்று புரிந்து கொள்ளுங்கள்.

 

ஓம்சாந்தி