18.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! சத்தியத்தைக் கூறுபவர் ஒரு தந்தை ஆவார். எனவே தந்தை கூறுவதை மட்டுமே கேளுங்கள். மனிதர்களுடையதை அல்ல. ஒரு தந்தையிடம் கேட்பவரே ஞானி எனப்படுவார்.

 

கேள்வி :

யார் தேவி தேவதா குடும்பத்தைச் சேர்ந்த ஆத்மாக்களாக இருப்பார்களோ அவர்களின் முக்கிய அடையாளம் என்னவாக இருக்கும்?

 

பதில்:

அவர்களுக்கு இந்த ஞானம் மிகவும் நல்லதாக மற்றும் இனிமையானதாகப்படும். அவர்கள் மனித வழியை விடுத்து ஈஸ்வரிய வழிப்படி நடக்க முற்படுவார்கள். ஸ்ரீமத் மூலமாகவே நாம் சிரேஷ்டமாக ஆவோம் என்பது புத்தியில் வந்துவிடும். இப்பொழுது இந்த புருஷோத்தம சங்கமயுகம் நடந்து கொண்டிருக்கிறது. நாம் தான் உத்தம புருஷர் ஆக வேண்டும்.

 

ஓம் சாந்தி!

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, ஆத்ம உணர்வில் இருப்பீர்களாக. தேக அபிமானத்தை விடுத்து தங்களை ஆத்மா என்று உணருங்கள். பரமாத்மா ஒருவரே என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிரம்மாவை பரமாத்மா என்று கூறப்படுவதில்லை. பிரம்மாவின் 84 பிறவிகளின் கதையை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது அவருடைய கடைசி பிறவி ஆகும். யார் முழுமையாக 84 பிறவிகள் எடுத்துள்ளாரோ அவருக்குள் தான் நான் வரவேண்டி உள்ளது என்பதை அவருக்கு நான் தான் கூறுகிறேன். நீங்கள் 84 பிறவிகளைப் பற்றி அறியாமல் இருக்கிறீர்கள், நான் தான் உங்களுக்குக் கூறுகிறேன். முதன் முதலில் நீங்கள் இந்த தேவி தேவதையாக இருந்தீர்கள். இப்பொழுது இதுபோல ஆவதற்கு மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். மறுபிறவியோ முதல் பிறவியிலிருந்தே ஆரம்பமாகிறது. இப்பொழுது தந்தை கூறுகிறார் - நான் உங்களுக்கு என்ன கூறுகிறேனோ, அவை தான் சரியானது. மற்றது நீங்கள் என்னவெல்லாம் கேட்டுள்ளீர்களோ அவை தவறானது. என்னை சத்தியம், சத்தியத்தை கூறுபவர் என்று கூறுகிறார்கள். நான் சத்திய தர்மத்தினை ஸ்தாபனை செய்ய வருகிறேன். சத்தியம் இருந்தால் மகிழ்ச்சியில் நடனமாடுவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஞான நடனம் ஆகும். இந்த மனிதர்கள் கிருஷ்ணரைக் காண்பிக்கிறார்கள் - புல்லாங்குழல் வாசித்தார், நடனமாடினார் என்று. அவர் சத்தியமான கண்டத்தின் எஜமானர் ஆவார். ஆனால் அவரையும் அவ்வாறு உருவாக்குபவர் யார்? சத்தியமான கண்டத்தை ஸ்தாபனை செய்பவர் யார்? அது சத்தியமான கண்டம். இது பொய்யான கண்டம். இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருக்கும்பொழுது பாரதம் உண்மையான கண்டமாக இருந்தது. அச்சமயத்தில் வேறு எந்த கண்டமும் இருக்கவில்லை. சொர்க்கம் எங்கே உள்ளது? என்பது மனிதர்களுக்குத் தெரியாது. யாராவது இறந்தால் சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்று கூறுகிறார்கள். நீங்கள் தலைகீழாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள், மாயைக்கு அடிமையாகி விட்டுள்ளீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். இப்பொழுது உங்களை தந்தை வந்து நேராக ஆக்குகிறார். பக்தர்களுக்கு பக்தியின் பலன் அளிப்பவர் பகவான் ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இச்சமயம் எல்லோரும் பக்தியில் உள்ளார்கள். சாஸ்திரம் ஆகியவை எதெல்லாம் உள்ளதோ அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தினு டையவை. இந்த பாட்டு பாடுவது ஆகிய அனைத்துமே பக்தி மார்க்கம் ஆகும். ஞான மார்க்கத்தில் பஜனை ஆகியவை இருப்பதில்லை. நாம் சப்தத்திற்கு அப்பாற்பட்டு செல்ல வேண்டும், திரும்பச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இனிமையான குழந்தைகளே! வாயால் ஹே, பகவான்! என்று கூட ஒருபோதும் கூறாதீர்கள் என்று தந்தை கூறுகிறார். இதுவும் பக்தி மார்க்கம் ஆகும். கலியுக கடைசி வரையும் பக்தி மார்க்கம் நடக்கிறது. இப்பொழுது இது புருஷோத்தம சங்கமயுகம் ஆகும். இப்பொழுது தந்தை வந்து ஞானத்தினால் உங்களை உத்தம மனிதர்களாக ஆக்குகிறார். நீங்கள் ஒரு ஈஸ்வரிய வழிப்படி நடக்க வேண்டும். இறைவன் என்ன கூறுகிறாரோ அதுவே சரியானது. பாபா மனித சரீரத்தில் வந்து கூறுகிறார் - நீங்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தீர்கள். இப்பொழுது எவ்வளவு அறிவற்றவராக ஆகிவிட்டுள்ளீர்கள். நீங்கள் பொன்யுகத்தில் இருந்தீர்கள். இப்பொழுது இரும்பு யுகத்தில் வந்து விட்டீர்கள். இந்த (தேவி, தேவதா) தர்மத்தைச் சேர்ந்தவராக இருப்பார்களோ அவர்களுக்கு இந்த ஞானம் மிகவும் நல்லதாக தோன்றும். மிகவும் இனிமையானதாக தோன்றும். இந்த பாபா (பிரம்மா) கூட கீதை படித்துக் கொண்டிருந்தார். பாபா கிடைத்தவுடன் எல்லாமே விட்டுவிட்டார். குருவும் நிறைய வைத்திருந்தார். இவர்கள் எல்லோரும் பக்தி மார்க்கத்தின் குருக்கள் ஆவார்கள். ஞான மார்க்கத்தின் குரு நான் ஒருவனே என்று தந்தை கூறியுள்ளார். என்னிடமிருந்து ஞானம் கேட்கின்றார்களோ அவரை ஞானி என்று கூறமுடியும். மற்ற அனைவரும் பக்தர்கள் ஆவார்கள். ஸ்ரீமத் தான் மிகவும் உயர்ந்தது. மற்ற எல்லாமே மனித வழி ஆகும். இது ஈஸ்வரிய வழி. அது இராவணனுடைய வழி. இது பகவானின் வழி ஆகும். பகவான் கூறுகிறார் - நீங்கள் எவ்வளவு மகான் பாக்கியசாலிகளாக உள்ளீர்கள். எனவே இப்பொழுது உங்களுடையது வைரம் போன்ற பிறவி ஆகும். மோதிரத்தில் கூட நடுவில் வைரம் பதிக்கிறார்கள். மாலையில் மேலே மலர் இருக்கும். பிறகு மேரு இரண்டு மணிகள் பெயரும் ஆதாம்-பீபீ என்றுள்ளது. நீங்கள் மம்மா-பாபா என்று கூறுவீர்கள். ஆதி தேவன் மற்றும் ஆதி தேவி சங்கமயுகத்தினர் ஆவார்கள். சங்கமயுகமே எல்லாவற்றையும் விட உத்தமமானது. ஏனெனில் இந்த இராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இங்கு தான் 16 கலை சம்பூர்ணம் ஆகவேண்டும். பழைய உலகத்தை புதியதாக மாற்ற தந்தை வருகிறார். இந்த உலகத்தின் ஆயுள் எவ்வளவு என்பதையும் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இலட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறிவிடுகிறார்கள். இவை எல்லாம் பொய்யான விஷயங்கள் ஆகும். பொய்யான மாயை, பொய்யான சரீரம்... என்று கூறப்படுகிறது. புதிய உலகம் தான் உண்மையிலும் உண்மையானது. இது பொய்யான கண்டம் ஆகும். பிறகு பொய்யான கண்டத்தை உண்மையான கண்டாக ஆக்குவது தந்தையினுடைய காரியமாகும். பக்தி மார்க்கத்தில் படித்த அனைத்தையும் மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகிறார். இது உங்களது எல்லையில்லாத வைராக்கியம் ஆகும். அவர்கள் வெறுமனே வீடு, வாசலை மட்டும் விட்டுவிட்டு இதே உலகத்தில் காட்டிற்குச் சென்று விடுகிறார்கள். இதுவும் நாடகத்தில் பொருந்தியுள்ளது. ஏன் என்ற கேள்வி எழுவதில்லை. இதுவோ ஏற்கனவே அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். இது இப்படி ஆகிறது என்று குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை புரிய வைக்கின்றார். மற்ற எந்த தர்மத்தினரும் சொர்க்கத்திற்கு வரவே முடியாது. புத்த பரம்பரை, கிறிஸ்துவ பரம்பரை யாருமே சொர்க்கத்தில் வருவதில்லை. அவர்கள் பின்னால் வருகிறார்கள். முதன் முதலில் தேவதா பரம்பரை பிறகு இப்ராஹீம், புத்தர், கிறிஸ்து வந்து தங்கள் தர்மங்களை ஸ்தாபனை செய்கிறார்கள். பாபா புருஷோத்தம சங்கமயுகத்தில் வந்து இந்த தேவதா பரம்பரையை ஸ்தாபனை செய்கிறார்.

 

எந்த ஒரு ஆத்மாவும் கர்ப்பத்தில் தான் வருகிறது. சிறிய குழந்தை பிறகு பெரியதாக ஆகிறது. சிவபாபாவோ சிறியவர் - பெரியவராக ஆவதில்லை. அவர் கர்ப்பத்தில் வந்து பிறவி எடுப்பதும் இல்லை. புத்தரது ஆத்மா பிரவேசம் செய்தது. புத்த தர்மம் முதலிலேயே இருப்பதில்லை. அவசியம் இங்கு இருக்கும் யாராவது மனிதருக்குள் பிரவேசம் செய்வார். அதன் பின் கர்ப்பத்திலோ அவசியம் செல்வார்கள். புத்த தர்மத்தை ஒருவர் தான் ஸ்தாபனை செய்தார். பிறகு அவருக்குப் பின்னால் மற்றவர்கள் வந்தார்கள். பிறகு வளர்ச்சி ஆகிக் கொண்டே சென்றது. இலட்சக்கணக்கானோராக ஆகிவிடும் பொழுது இராஜ்யம் நடக்கிறது. பௌத்தர்களுடையதும் இராஜ்யம் இருந்தது. இவர்கள் எல்லோருமே பின்னால் வருகிறார்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். இவர்களை குரு என்று கூறப்படுவதில்லை. குரு ஒருவரே இருப்பார். அவர்களோ தங்களது தர்மத்தை ஸ்தாபனை செய்த பிறகு கீழே வந்து விடுகிறார்கள். நீங்கள் கூட ஜீவன் முக்தியிலிருந்து கீழே வருகிறீர்கள். அதே போல அவர்கள் பின் முக்தியிலிருந்து கீழே வருகிறார்கள். அவர்களுக்கு என்ன மகிமை உள்ளது. ஞானமோ அச்சமயம் மறைந்து விடுகிறது. தந்தை கதி-சத்கதிக்காக ஞானம் அளிக்கிறார். அவர் கர்ப்பத்தில் வருவது இல்லை. இவருக்குள் அமர்ந்துள்ளார். இவருக்கு வேறு பெயர் கிடையாது. மற்றவர்களுக்கு சரீரங்களுக்கு பெயர் உள்ளது. ,வர் இருப்பதே பரம ஆத்மாவாக. இவர் ஞானக்கடல் ஆவார். இந்த ஞானம் முதலில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஆத்மாக்களுக்கு கிடைக்கிறது. ஏனெனில் அவர்களுக்குத் தான் பக்தியின் பலன் கிடைக்க வேண்டியுள்ளது. பக்தி நீங்கள் தான் ஆரம்பிக்கிறீர்கள். உங்களுக்குத் தான் பலன் கொடுக்கிறேன். மற்றது அனைத்தும் துணை காட்சிகள் ஆகும். அவர்கள் 84 பிறவிகள் கூட எடுப்பதில்லை. குழந்தைகளோ, நீங்களும் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். அங்கு கூட ஒரு சரீரம் விட்டு மற்றொன்று எடுக்கிறோம் என்று அறிந்திருப்பார்கள். துக்கத்தின் விஷயம் இல்லை. விகாரங்களின் விஷயம் இல்லை. விகாரங்கள் இருப்பது இராவண இராஜ்யத்தில். அது நிர்விகாரி உலகம் ஆகும். நீங்கள் புரிய வைத்தாலும் கூட பிறகு ஏற்றுக் கொள்வது இல்லை. முந்தையை கல்பத்தை போல யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே பதவி அடைகிறார்கள். யார் ஏற்று கொள்வது இல்லையோ அவர்கள் அடைவது இல்லை. சத்யுகத்தில் எல்லோரும் தூய்மை, சுகம், சாந்தியில் இருக்கிறார்கள். எல்லா மனோவிருப்பங்களும் 21 பிறவி களுக்கு பூர்த்தி ஆகிவிடுகிறது. சத்யுகத்தில் எந்த விருப்பமும் இருப்பதில்லை. தானியங்கள் ஆகியவை அனைத்தும் ஏராளமாக கிடைத்து விடுகிறது. இந்த மும்பை முதலில் இருக்கவில்லை. தேவதைகள் உவர்ப்பு நிலத்தில் வசிப்பது இல்லை. எங்கு இனிமையான நதிகள் இருந்தனவோ அங்கு தேவதைகள் இருந்தார்கள். மனிதர்கள் குறைவாக இருந்தனர். ஒவ்வொருவருக்கும் நிறைய நிலங்கள் இருந்தன. குசலேர் இரண்டு கைப் பிடி அவல் கொடுத்தார், அரண்மனை கிடைத்துவிட்டது என்று காண்பிக்கிறார்கள். மனிதர்கள் இறைவன் பெயரில் தான புண்ணியம் செய்கிறார்கள். இப்பொழுது அவர் பிச்சைக்காரரா என்ன? ஈஸ்வரன் வள்ளலாக இருப்பவர். ஈஸ்வரன் அடுத்த பிறவிக்கு நிறைய கொடுப்பார் என புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இரண்டு பிடி கொடுக்கிறீர்கள். புது உலகத்தில் நிறைய பெற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் செலவு செய்து சென்டர் ஆகியவை திறக்கிறீர்கள், அனைவருக்கும் கல்வி பெற வேண்டும் என்பதற்காக. உங்களது பணத்தை செலவு செய்கிறீர்கள். பிறகு இராஜ்யம் கூட நீங்கள் தான் பெறுகிறீர்கள். நான் தான் உங்களுக்கு எனது அறிமுகத்தை அளிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். என்னைப்பற்றிய அறிமுகம் யாருக்கும் இல்லை. நான் வேறு யாருடைய சரீரத்திலும் வருவதில்லை. நான் ஒரே ஒரு முறை தான் வருகிறேன். தூய்மை இல்லாத உலகத்தை மாற்ற வேண்டி வரும் பொழுது வருகிறேன். நான் தான் பதீத பாவனன் ஆவேன். எனது பாகமே சங்கமயுகத்தில் தான் ஆகும். அதுவும் மிகச்சரியான நேரத்தில் வருகிறேன். சிவபாபா இவருக்குள் எப்பொழுது பிரேவசம் ஆகிறார் என்பது உங்களுக்குத் தெரிய வருகிறதா என்ன? கிருஷ்ணருடைய திதி, தேதி, நிமிடம், வினாடிகள் எழுதுகிறார்கள். இவருடையது நிமிடம் ஆகியவை கூறமுடியாது. இந்த பிரம்மா கூட அறியாமல் இருந்தார் ஞானம் கூறப்படும் பொழுதே அவருக்கு தெரிய வந்தது. ஈர்ப்பு ஏற்படுகிறது. இவருக்குள்ளோ துரு ஏறி இருந்தது. பரமபிதா பரமாத்மா பிரவேசித்த உடனேயே உங்களுக்கு கவர்ச்சி ஏற்பட்டது மற்றும் நீங்கள் ஓடிவந்தீர்கள். எதையும் நீங்கள் பொருட்படுத்தவில்லை. நானோ சம்பூர்ண தூய்மை ஆவேன் என்று தந்தை கூறுகிறார்.  ஆத்மாக்களாகிய உங்கள் மீது துரு ஏறி உள்ளது. இப்பொழுது அது எப்படி நீங்குவது? நாடகத்தில் அனைத்து ஆத்மாக்களுக்கும் அவரவர் பாகம் கிடைத்துள்ளது. இது மிகவும் ஆழமான ரகசியங்கள் நிறைந்த விஷயம் ஆகும். ஆத்மா எவ்வளவு சிறியதாக உள்ளது. திவ்ய திருஷ்டி இன்றி அதை யாரும் பார்க்க முடியாது. தந்தை வந்து உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கொடுக்கிறார். ஆத்மாக்களாகிய நமக்குத்தான் தந்தை கற்பிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பக்தி மார்க்கத்திலோ ஞானம் மாவில் ஒரு துளி உப்பு அளவிற்கு உள்ளது. உதாரணமாக பகவான் வாக்கு என்ற வார்த்தை சரியானது. பிறகு கிருஷ்ணர் என்று கூறுவதால் தவறு ஆகி விடுகிறது. மன்மனாபவ என்ற வார்த்தை சரியானது. இது கீதையின் யுகம் ஆகும். பகவான் இச்சமயம் இந்த ரதத்தில் வருகிறார். அவர்கள் குதிரை வண்டியை காண்பித்துள்ளார்கள். அதில் கிருஷ்ணர் அமர்ந்துள்ளார். இப்பொழுது பகவானின் இந்த ரதம் எங்கே. குதிரை வண்டி எங்கே. ஒன்றுமே புரிந்து கொள்வது இல்லை. இது எல்லையில்லாத தந்தையின் வீடு ஆகும். தந்தை அனைத்து ஆத்மாக்களுக்கும் (குழந்தைகளுக்கும்) 21 பிறவிகளுக்கு ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி (ஹெல்த், வெல்த், ஹாப்பினஸ்) அளிக்கிறார். இதுவும் அனாதி அவினாசி. ஏற்கனவே அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். எப்பொழுது ஆரம்பமாகியது என்று கூறமுடியாது. சக்கரம் சுற்றி கொண்டேயிருக்கிறது. இந்த சங்கமத்தை பற்றியோ யாருக்குமே தெரியாது. இந்த நாடகம் 5000 வருடத்தினுடையது என்று தந்தை கூறுகிறார். பாதியில் சூரியவம்சம், சந்திரவம்சம் மறு பாதியில் அதாவது 2500 வருடங்களில் மற்ற எல்லா தர்மங்கள். சத்யுகத்தில் இருப்பதே நிர்விகாரி உலகம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது யோகப் பலத்தினால் உலக இராஜ்யம் பெறுகிறீர்கள். கிறிஸ்துவ மனிதர்கள் அவர்களே உணருகிறார்கள் - எங்களுக்கு யாரோ தூண்டுகிறார்கள். நாம் விநாசத்திற்காக இவை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் - என்று கூறுகிறார்கள் நாங்கள் அப்பேர்ப்பட்ட அணுகுண்டுகள் தயாரிக்கிறோம் என்றால் இந்த ஒரு உலகம் மட்டும் என்ன இது போன்ற 10 உலகங்களை எங்களால் அழிக்க முடியம். நான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய வந்துள்ளேன் மற்றது விநாசமோ இவர்கள் செய்வார்கள் என்று தந்தை கூறுகிறார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான வெகுகாலம் காணாமல் போய் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

(1) எல்லையில்லாத வைராக்கியம் உள்ளவர் ஆகி இதுவரையும் பக்தியில் படித்தது அல்லது கேட்டதை மறந்து விடவேண்டும். ஒரு தந்தை கூறுவதை கேட்டு, அவரது ஸ்ரீமத் மூலம் சுயம் தம்மை சிரேஷ்டமாக ஆக்க வேண்டும்.

 

(2) எப்படி தந்தை சம்பூர்ண தூய்மையாக இருக்கிறாரோ, அவர் மீது எந்த கறையும் இல்லையோ அதுபோல தூய்மையானவர்களாக வேண்டும். டிராமாவின் ஒவ்வொரு பாகம் ஏற்று நடிப்பவருக்கும் மிக துல்லியமான பாகம் உள்ளது. இந்த ஆழமான ரகசியத்தையும் புரிந்து நடக்க வேண்டும்.

 

வரதானம்:

அழிவற்ற மற்றும் எல்லைக்கு அப்பாற்பட்ட அதிகாரத்தின் குஷி அல்லது மகிழ்ச்சியின் மூலம் சதா கவலையற்றவர் ஆகுக.

 

உலகத்தில் மிகவும் கடின உழைப்பு செய்து அதிகாரத்தைப் (உரிமை) பெறுகிறார்கள். ஆனால் நீங்களோ உழைப்பே இல்லாமல் அதிகாரம் (உரிமை) கிடைத்து விடுகிறது. குழந்தை ஆவது என்றாலே ஆஸ்திக்கான உரிமையைப் பெறுவது.. ஆஹா நான் சிரேஷ்ட அதிகாரி ஆத்மா இந்த எல்லைக்கு அப்பாற்பட்ட அதிகாரத்தின் மகிழ்ச்சி மற்றும் குஷியில் இருப்பீர்கள் என்றால் சதா கவலையற்றவராக இருக்கலாம். இந்த அழிவற்ற அதிகாரம் நிச்சயக்கப் பட்டதாகவே இருக்கிறது. நம்பிக்கை இருக்குமிடத்தில் கவலையற்ற நிலை இருக்கும். தனது அனைத்து பொறுப்புகளையும் பாபாவிடம் ஒப்படைத்து விட்டால் அனைத்து கவலைகளிலிருந்து விடுபட்டு விடலாம்.

 

சுலோகன்:

யார் தாராள உள்ளத்துடன், (கொடையாளி), பரந்த மனப்பான்மையுடனும் இருக்கிறார்களோ, அவர்களே ஓற்றுமையின் அடித்தளம் ஆவார்கள்.

 

ஓம்சாந்தி