14.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் வரிசைக்கிரமத்தில் சதோபிரதானமாக மாறும் பொழுது இந்த இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவின் வேகம் அதிகரிக்கும். இந்தப் பழைய உலகம் அழியும்.

 

கேள்வி:

பாபாவின் முழு சொத்தும் அடைய எந்த முயற்சி செய்ய வேண்டும்?

 

பதில்:

முழு சொத்தும் அடைய வேண்டும் என்றால், முதலில் பாபாவை தனது குழந்தையாக மாற்றிக் கொள்ளுங்கள். அதாவது உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை பாபாவிற்கு அர்ப்பணம் செய்யுங்கள். பாபாவை தன்னுடைய முழுமையான வாரிசாக மாற்றிக் கொண்டால் முழு சொத்துக்கும் அதிபதியாக மாறிவிடுவீர்கள். 2. சம்பூர்ண தூய்மையாகும் பொழுது முழு சொத்து கிடைக்கும். சம்பூரணமாகத் தூய்மையாக வில்லை என்றால், தண்டனை அடைந்து சிறிதளவு உணவு (பதவி) கிடைக்கும்.

 

ஓம் சாந்தி.

குழந்தைகள் ஒருவரின் நினைவில் மட்டும் இருக்கக்கூடாது. மூவரின் நினைவில் இருக்க வேண்டும். ஒருவர் தான், ஆனால் அவரே தந்தை, ஆசிரியர், சத்குருவாக இருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். நம் அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். இந்த புது விஷயங்களை நீங்கள் தான் புரிந்து ள்கிறீர்கள். பக்தியைக் கற்பிப்பவர்கள், சாஸ்திரங்களைக் கற்றுத்தருபவர்கள் அனைவரும் மனிதர்களே என குழந்தைகளுக்குத் தெரியும். இவரை மனிதர் என்று கூற முடியாது அல்லவா? இவர் நிராகாரர். நிராகார ஆத்மாக்களைப் படிக்க வைக்கின்றார். ஆத்மா சரீரத்தின் மூலமாக கேட்கின்றது. இந்த ஞானம் புத்தியில் இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையின் நினைவில் இருக்கின்றீர்கள். ஆன்மீகக் குழந்தைகளே, என்னை நினைவு செய்தால் பாவங்கள் நீங்கும் என எல்லையற்ற தந்தை கூறியிருக்கின்றார். இங்கே சாஸ்திரம் போன்ற எந்த விஷயமும் கிடையாது. பாபா நமக்கு இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டு இருக்கின்றார் என அறிகிறீர்கள். எவ்வளவு பெரிய டீச்சர், உயர்ந்ததிலும் உயர்ந்தவர்! எனவே உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை அடைய வைக்கின்றார். நீங்கள் வரிசைக்கிரமத்தில் சதோபிரதானமாக மாறும்போது சண்டைகள் ஏற்படும். இயற்கையின் சீற்றங்களும் நடக்கும். நிச்சயம் நினைக்கவும் வேண்டும். அனைத்து ஞானமும் புத்தியில் இருக்க வேண்டும். புருஷோத்தம சங்கமயுகத்தில் ஒருமுறை மட்டுமே தந்தை வந்து புதிய உலகத்திற்காகப் படிக்க வைக்கின்றார். சிறிய குழந்தைகள் கூட தந்தையை நினைக்கின்றார்கள். நீங்கள் புத்திசாலிகள், தந்தையை நினைவு செய்வதால் விகர்மங்கள் அழியும், தந்தையிடமிருந்து உயர்ந்த பதவி பெறுவோம் என்பதை புரிந்து கொள்கிறீர்கள். இந்த இலட்சுமி நாராயணன் புது உலகத்தில் பதவியை அடைந்தனர் என்றால் சிவபாபாவிடமிருந்து தான் அடைந்தனர் என அறிகிறீர்கள். இந்த இலட்சுமி நாராயணன் தான் 84 பிறவிகளின் சக்கரத்தில் சுழன்று பிரம்மா சரஸ்வதி ஆகியிருக்கின்றனர். இவர்களே பிறகு இலட்சுமி நாராயணன் ஆகிறார்கள். இப்போது முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள். சிருஷ்டியின் முதல், இடை, கடையைப் பற்றிய ஞானம் உங்களுக்கு இருக்கிறது. இப்பொழுது தேவதைகளுக்கு முன்பு குருட்டு நம்பிக்கையோடு தலைவணங்க மாட்டீர்கள். மனிதர்கள் தேவதைகளுக்கு முன்பு சென்று தன்னை பதீதமானவர்கள் என்று நிரூபிக்கிறார்கள். தாங்கள் சர்வ குணங்களும் நிறைந்தவர், நாங்கள் பாவி விகாரி, எங்களுக்குள் எந்த குணங்களும் இல்லை எனக் கூறுகின்றார்கள். நீங்கள் யாருடைய மகிமையைப் பாடினீர்களோ அவர்களாகவே இப்போது மாறுகிறீர்கள். பாபா, இந்த சாஸ்திரங்களை எப்போதிலிருந்து படிக்க ஆரம்பித்தோம் எனக் கேட்கின்றீர்கள். எப்போது இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆகியதோ அப்போதிலிருந்து என பாபா கூறுகின்றார். இது அனைத்தும் பக்தியின் விஷயம் ஆகும். நீங்கள் இங்கே அமரும்போது இந்த ஞானம் அனைத்தும் புத்தியில் தாரணை ஆக வேண்டும். இந்த சம்ஸ்காரத்தை ஆத்மா எடுத்துச் செல்கின்றது. பக்தியின் சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்வதில்லை. பக்தியின் சம்ஸ்காரமுடையவர்கள் பழைய உலகத்தில் மனிதர்களிடம் தான் பிறப்பார்கள். இது நிச்சயமாகும். குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இந்த ஞானச் சக்கரம் சுழல வேண்டும். மேலும் தந்தையையும் நினைக்க வேண்டும். பாபா நமக்கு தந்தையாகவும் இருக்கின்றார். பாபாவை நினைத்தால் விகர்மங்கள் அழியும். பாபா நமது ஆசிரியராகவும் இருக்கின்றார் என்றால் புத்தியில் படித்தவை நினைவில் வர வேண்டும். மேலும் சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானமும் புத்தியில் இருந்தால் நீங்கள் சக்கரவர்த்தி இராஜா ஆகலாம். (நினைவு யாத்திரை நடந்து கொண்டு இருக்கின்றது).

 

ஓம் சாந்தி. பக்தி மற்றும் ஞானம். பாபாவிற்கு ஞானக்கடல் என்று பெயர். பக்தி எப்பொழுது ஆரம்பித்தது? எப்பொழுது முடிவடைகின்றது என பக்தியைப் பற்றி அனைத்தும் அவருக்குத் தெரியும். மனிதர்களுக்கு இது தெரியாது. பாபா தான் வந்து புரிய வைக்கின்றார். சத்யுகத்தில் நீங்கள் தேவி தேவதைகளாக உலகத்திற்கே அதிபதியாக இருந்தீர்கள். அங்கே பக்தியின் பெயர் கிடையாது. ஒரு கோவிலும் இல்லை. அனைவரும் தேவி தேவதைகளாக இருந்தனர். பிறகு உலகம் பாதி பழையதாகியதும் அதாவது 2500 வருடங்கள் முடிவடைந்து திரேதா மற்றும் துவாபர யுகத்தின் சங்கமம் நடக்கும்பொழுது இராவணன் வருகின்றான். நிச்சயம் சங்கமம் வேண்டும். திரேதா மற்றும் துவாபர யுகத்தின் சங்கமத்தில் இராவணன் வரும்பொழுது தேவி தேவதைகள் வாம மார்க்கத்தில் விழுகிறார்கள். இது உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. பாபா கலியுகத்தின் முடிவு சத்யுகத்தின் ஆரம்பமாகிய சங்கமயுகத்தில் வருகின்றார். இராவணன் திரேதா மற்றும் துவாபர யுகத்தின் சங்கமத்தில் வருகின்றான். அந்த சங்கமத்திற்கு நன்மை நடக்கும் நேரம் என்று கூற முடியாது. அது தீமை விளைவிக்கும் நேரம் என்றே கூறலாம். பாபாவின் பெயரே நன்மை செய்யக்கூடியவர். துவாபர யுகத்தில் இருந்தே தீமை நடக்கக்கூடிய நேரம் ஆரம்பமாகிறது. பாபா சைத்தன்ய விதை வடிவமாக இருக்கின்றார். அவருக்கு முழு மரத்தைப் பற்றிய ஞானம் இருக்கின்றது. அந்த விதை கூட சைத்தன்யமாக இருந்தால் தனக்குள் இருந்து மரம் எப்படி வருகிறது என்பதைப் புரிய வைக்கலாம். ஆனால் ஜடமாக இருப்பதால் சொல்ல முடியாது. விதை விதைப்பதனால் முதலில் சிறிய மரம் வருகின்றது என நாம் புரிந்து கொள்ள முடியும். பிறகு பெரியதாகி பலனைக் கொடுக்க ஆரம்பிக்கின்றது. ஆனால் சைத்தன்யமானது தான் அனைத்தையும் தெரிவிக்க முடியும். இன்று உலகத்தில் மனிதர்கள் என்னென்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்! புதிதாக கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கின்றார்கள். சந்திரனை அடைய முயற்சி செய்கிறார்கள். இந்த விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள். சந்திரனை நோக்கி எவ்வளவு உயரத்தில் இலட்சக்கணக்கான மைல்கள் கடந்து சந்திரன் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகச் செல்கிறார்கள். சமுத்திரத்தில் எவ்வளவு ஆழம் வரை சென்று ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால் முடிவை அடைய முடியவில்லை. தண்ணீர் தண்ணீர் தான். விமானத்தில் மேலே செல்கிறார்கள். அதில் திரும்பி வரும் அளவிற்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும். ஆகாயம் எல்லையற்றது அல்லவா? கடல் கூட எல்லையற்றது. இந்த எல்லையற்ற ஞானக் கடலைப் போன்று அது தண்ணீரின் எல்லையற்ற கடலாகும். ஆகாய தத்துவமும் எல்லையற்றதாகும். பூமியும் எல்லையற்றதாகும். சென்று கொண்டே இருங்கள். கடலுக்கு அடியில் பூமி இருக்கிறது. மலை எதன் மீது நிற்கிறது. பூமியின் மீது. பிறகு பூமியை தோண்டிக் கொண்டே சென்றால் மலை வருகிறது. அதற்குக் கீழே தண்ணீரும் வருகிறது. கடல் பூமியின் மீது இருக்கிறது. எவ்வளவு தூரம் பூமி இருக்கிறது என்பதற்கு முடிவு கிடையாது. பரம் பிதா பரமாத்மா எல்லையற்ற தந்தையை முடிவற்றவர் என்று கூற மாட்டோம். மனிதர்கள் ஈஸ்வரன் முடிவற்றவர், மாயாவும் முடிவற்றது என கூறுகிறார்கள். ஆனால் ஈஸ்வரனை அந்தமில்லாதவர் எனக் கூற முடியாது. மற்றபடி இந்த ஆகாயம் முடிவற்றது. இந்த தத்துவங்கள் ஆகாயம், காற்று...... இந்த 5 தத்துவங்களும் தமோபிரதானமாக மாறியிருக்கிறது. ஆத்மா தமோபிரதானமாக இருக்கிறது. தந்தை சதோபிரதானமாக மாற்றுகிறார். எவ்வளவு சிறிய ஆத்மா, 84 பிறவிகளை எடுக்கிறது. இந்த சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்கிறது. இது அனாதி நாடகம் ஆகும். இதற்கு முடிவு கிடையாது. இது பரம்பரையாக சென்று கொண்டே இருக்கிறது. எப்போதிலிருந்து ஆரம்பமாகியது என்று கூறினால் பிறகு முடிவும் இருக்கும். எப்போதிலிருந்து புதிய உலகம் ஆரம்பமாகியது? பிறகு பழையதாகிறது, இந்த 5000 வருடத்தின் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது என்பதை எல்லாம் புரிய வைக்க வேண்டும். இப்போது நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள் அவர்கள் பொய் கூறிவிட்டனர். சத்யுகத்தின் ஆயுள் இவ்வளவு வருடங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. மனிதர்கள் அவற்றைக் கேட்டு உண்மை என நினைக்கின்றனர். பகவான் எப்போது வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார் என்பது தெரியாது. நீங்கள் புரிய வைக்காத வரை தெரியாத காரணத்தால் கலியுகத்தின் ஆயுள் 40000 வருடங்கள் இன்னும் இருக்கிறது எனக் கூறுகின்றனர். இப்போது நீங்கள் கல்பத்தின் ஆயுள் 5000 வருடம் தான், இலட்சக்கணக்கான வருடங்கள் கிடையாது என்பதைப் புரிய வைப்பதற்கு நிமித்தமாக இருக்கிறீர்கள்.

 

பக்தி மார்க்கத்தில் எவ்வளவு பொருட்கள் இருக்கிறது. மனிதர்களுக்கு பணம் கிடைக்கிறது. பிறகு செலவு செய்கிறார்கள். நான் உங்களுக்கு எவ்வளவு பைசா கொடுத்து விட்டுச் செல்கிறேன் என பாபா கேட்கிறார். எல்லையற்ற தந்தை எல்லையற்ற சொத்தை நிச்சயம் கொடுக்கிறார். இதனால் சுகமும் கிடைக்கிறது, ஆயுளும் அதிகரிக்கிறது. என்னுடைய செல்லமான குழந்தைகளே! ஆயுஷ்வான் பவ என பாபா கூறுகிறார். அங்கே உங்களின் ஆயுள் 150 வருடம் ஆகும். ஒருபோதும் காலன் சாப்பிட முடியாது. பாபா வரம் அளிக்கிறார். உங்களை ஆயுள் நிறைந்தவராக மாற்றுகிறார். நீங்கள் அமரர் ஆவீர்கள். அங்கே ஒருபோதும் அகால மரணம் கிடையாது. அங்கே நீங்கள் மிகவும் சுகமுடையவராக இருக்கிறீர்கள். எனவே அதற்கு சுகதாமம் என்று பெயர். ஆயுளும் அதிகமாகிறது. செல்வமும் நிறைய கிடைக்கிறது. நிறைய சுகமுடையவராகவும் இருக்கிறீர்கள். கீழான நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலையை அடைகிறீர்கள். தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக தந்தை வந்திருக்கிறார் என்பது உங்களது புத்தியில் இருக்கிறது. அது மிகச் சிறிய மரமாகும். அங்கே ஒரு தர்மம், ஒரு இராஜ்யம், ஒரு மொழி தான் இருக்கும். அதற்குத் தான் அமைதி நிலவும் உலகம் எனக் கூற முடியும். முழு உலகத்திலும் நாம் தான் நடிகர்கள். இதை உலகம் அறியவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் நாம் எப்போதிலிருந்து நடித்து வந்திருக்கிறோம் என்பதைக் கூறட்டும். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். பாபாவிடமிருந்து என்ன கிடைக்கிறதோ அது வேறு யாரிடமிருந்தும் கிடைக்காது என்று பாட்டில் கூட இருக்கிறது. முழு பூமி, ஆகாயம், முழு உலகத்தின் இராஜ்யத்தைக் கொடுத்து விடுகிறார். இந்த இலஷ்மி நாராயணன் உலகத்திற்கே அதிபதியாக இருந்தனர். பிறகு வந்த ராஜாக்கள் பாரதத்திற்கு மட்டும் தான் ராஜாக்கள். பாபா கொடுப்பதை வேறு யாரும் கொடுக்க முடியாது. பாபா தான் வந்து பிராப்தியை அடைய வைக்கிறார். இந்த ஞானம் முழுவதையும் புத்தியில் வைத்துக் கொண்டால் தான் பிறருக்கும் புரிய வைக்க முடியும். இவ்வளவு புரிந்து கொள்ள வேண்டும். இப்போது யார் புரிய வைக்க முடியும். யார் பந்தனத்திலிருந்து விடுபட்டிருக்கிறார்களோ அவர்களே! பாபா தன்னிடம் வருபவர்களைப் பார்த்து உங்களுக்கு எத்தனை குழந்தைகள் எனக் கேட்பார். 5 குழந்தைகள் என்னுடையவர், மேலும் 6வது குழந்தை சிவபாபா என்றால் நிச்சயமாக எல்லோரையும் விட பெரிய பிள்ளை அல்லவா! சிவபாபாவினுடையவராகி விட்டீர்கள் என்றால் பிறகு சிவபாபா தனது குழந்தையாக்கி உலகத்திற்கே அதிபதியாக்குகிறார். குழந்தைகள் வாரிசாகி விடுகிறார்கள். இந்த இலஷ்மி நாராயணன் சிவபாபாவின் முழுமையான வாரிசு ஆவர். போன பிறவியில் சிவபாபாவிற்கு அனைத்தையும் கொடுத்துவிட்டனர். எனவே சொத்து நிச்சயமாக குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும். என்னை வாரிசாக்கிக் கொண்டால் வேறு யாரும் கிடையாது என பாபா கூறுகின்றார். பாபா இது அனைத்தும் உங்களுடையது. பிறகு தங்களுடையது அனைத்தும் எங்களுடையது எனக் கூறுகிறார்கள். தாங்கள் எனக்கு முழு உலகத்தின் இராஜ்யப் பதவியின் ஆஸ்தியைக் கொடுக்கிறீர்கள். ஏனென்றால் உங்களிடம் என்ன இருந்ததோ அதைக் கொடுத்துவிட்டீர். நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது அல்லவா? அர்ஜுனனுக்கு வினாசமும் காட்டப்பட்டது. நான்கு புஜங்களுடையவரும் காட்டப்பட்டது. அர்ஜுனன் வேறு யாரும் இல்லை. இவருக்குத் தான் காட்சி கிடைத்தது. இராஜ்யம் கிடைக்கின்றது என்றால், ஏன் சிவபாபாவை வாரிசாக்கிக் கொள்ளக் கூடாது. அவர் பிறகு நம்மை வாரிசாக்கிக் கொள்கிறார். இந்த வியாபாரம் மிகவும் நன்றாக இருக்கின்ற தல்ல வா! ஒருபோதும் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. அனைத்தையும் மறைமுகமாகக் கொடுத்துவிட்டார். இதற்குத் தான் குப்த தானம் என்று பெயர். இவருக்கு என்ன ஆயிற்று என்று யாருக்கு என்ன தெரியும்? சிலர் இவருக்கு வைராக்கியம் வந்துவிட்டது. சந்நியாசி ஆகிவிட்டார் என நினைத்தனர். இந்த பெண் குழந்தைகள் கூட 5 குழந்தைகள் தன்னுடையது, மேலும் இன்னொரு குழந்தையாக இவரை ஏற்றுக் கொள்வோம் என்கிறார்கள். இவர் அனைத்தையும் பாபா முன்பு வைத்துவிட்டார். இதன் மூலமாக சேவை நடக்கட்டும். பாபாவைப் பார்த்து அனைவருக்கும் எண்ணம் தோன்றியது. அவர்களும் வீடு வாசலைத் துறந்து ஓடி வந்தனர். அங்கிருந்து தான் பிரச்சனைகள் ஆரம்பமாகியது. வீடு வாசலை துறப்பதற்கான தைரியத்தை அவர்கள் வெளிப்படுத்தினர். பட்டி உருவாகியது. ஏனென்றால் அவர்களுக்கு தனிமை நிச்சயம் தேவைப்பட்டது. சாஸ்திரங்களில் கூட எழுதப்பட்டு இருக்கின்றது. பாபாவைத் தவிர வேறு யாரும் நினைவில் வரக்கூடாது. நண்பர்கள் உறவினர்கள் போன்றவர்களின் நினைவும் ஏற்படக் கூடாது. ஏனென்றால் ஆத்மா பதீதமாக ஆகியிருக்கின்றது. அதை தூய்மையாக ஆக்க வேண்டும். இல்லறத்தில் இருந்தாலும் தூய்மையாகுங்கள் என பாபா கூறுகின்றார். இதில் தான் கஷ்டம் வருகின்றது. இது கணவன் மனைவிக்கு இடையில் சண்டை ஏற்படுத்தக் கூடிய ஞானம் என்று கூறினர். ஏனென்றால் ஒருவர் தூய்மையாகின்றனர். இன்னொருவர் தூய்மை ஆகவில்லை என்றால் சண்டை ஏற்படுகின்றது. இவர்கள் அனைவரும் அடி வாங்கினர். ஏனென்றால் திடீர் என்று புதிய விஷயம் தோன்றியது அல்லவா? என்ன ஆயிற்று இத்தனை பேர் ஓடுகின்றனர் என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர். மனிதர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ சக்தி இருக்கின்றது என்று கூறினர். இவ்வாறு தங்களுடைய வீடு வாசலைத் துறந்து ஓடும் அளவிற்கு எப்பொழுதுமே நடக்கவில்லை. நாடகத்தில் இந்த அனைத்து சரித்திரமும் சிவபாபாவினுடையது ஆகும். சிலர் வெறும் கையோடு ஓடினர். இதுவும் விளையாட்டு ஆகும். வீடு வாசல் அனைத்தையும் விட்டு விட்டு ஓடினர். எதுவுமே நினைவில் இல்லை. இந்த சரீரம் மட்டும் இருக்கின்றது. இதன் மூலமாக வேலை செய்ய வேண்டும். ஆத்மாவை நினைவு யாத்திரையினால் தூய்மையாக மாற்ற வேண்டும். அப்போது தான் தூய்மையான ஆத்மாக்கள் வீட்டிற்குப் போக முடியும். சொர்க்கத்தில் அசுத்தமான ஆத்மாக்கள் போக முடியாது. சட்டம் கிடையாது. முக்தி தாமத்தில் பவித்திரமாகத் தான் வேண்டும். தூய்மையாக மாறுவதில் எவ்வளவு தடைகள் ஏற்படுகின்றது. முன்பு ஏதாவது சத்சங்கத்திற்குப் போக வேண்டும் என்றால் தடைகள் கிடையாது. எங்கு வேண்டுமானாலும் சென்றனர். இங்கே தூய்மையின் காரணமாக தடைகள் ஏற்படுகின்றது! தூய்மை ஆகாமல் வீட்டிற்குப் போக முடியாது எனப் புரிந்து கொள்கின்றனர். தர்மராஜ் மூலமாக தண்டனைகள் அடைய வேண்டியிருக்கும். பிறகு சிறிது உணவு (பதவி) கிடைக்கும். தண்டனை அடையவில்லை என்றால் நல்ல பதவி கிடைக்கும். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். இனிமையான குழந்தைகளே! நீங்கள் என்னிடம் வர வேண்டும் என பாபா கூறுகின்றார். இந்தப் பழைய உடலை விட்டு விட்டு தூய்மையான ஆத்மாவாக மாறி வர வேண்டும். ஜந்து தத்துவங்களும் சதோபிரதானம் ஆகும்போது உங்களுக்கு உடலும் சதோபிரதானமாக கிடைக்கும். அனைத்தும் உள்ளுக்குள் சென்று புதியதாக மாறிவிடும். பாபா இவருக்குள் வந்து அமருவது போல ஆத்மா எந்த துன்பமுமின்றி கர்ப மாளிகையில் சென்று அமரும். பிறகு வெளியே வரும்போது மின்னல் மின்னுவது போல பிரகாசிக்கும். ஏனென்றால் ஆத்மா தூய்மையாக இருக்கின்றது. இது அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஆத்மாவை தூய்மையாக்குவதற்காக தனிமையில் பட்டியில் இருக்க வேண்டும். ஒரு பாபாவைத் தவிர வேறு எந்த நண்பரும் உறவினரும் நினைவில் வரக் கூடாது.

 

2. புத்தியில் முழு ஞானத்தையும் வைத்து பந்தனத்திலிருந்து விடுபட்டு மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். பாபாவிடம் உண்மையான வியாபாரம் செய்ய வேண்டும். பாபா அனைத்தையும் குப்தமாக (மறைமுகமாக) செய்தது போல குப்தமாக தானம் செய்ய வேண்டும்,

 

வரதானம்:

நிமித்தம் மற்றும் நிர்மான் (பணிவு) பாவனையுடன் சேவை செய்யக் கூடிய, சிரேஷ்ட வெற்றி மூர்த்தி ஆகுக.

 

சேவாதாரி என்றால், சதா பாபா சமமாக நிமித்தமாகவும், பணிவாகவும் இருப்போர். பணிவே சிரேஷ்ட வெற்றியின் சாதனமாகும். எந்த ஒரு சேவையிலும் வெற்றி பெற பணிவுத் தன்மை மற்றும் நிமித்த உணர்வை தாரணை செய்யுங்கள். இதன் மூலம் சேவையில் ஆனந்தத்தை அனுபவம் செய்வீர்கள். சேவையில் ஒருபோதும் களைப்பு ஏற்படாது. எந்த ஒரு சேவை கிடைத்தாலும், இந்த இரு விசேஷத்தின் மூலம் வெற்றியை அடைந்து வெற்றியின் சொரூபமாக ஆகிவிடுவீர்கள்.

 

சுலோகன்:

ஒரு வினாடியில் விதேகி ஆகும் பயிற்சி செய்தால், சூரிய வம்சத்தில் வந்து விடுவீர்கள்.

 

ஓம்சாந்தி