09.02.19 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நீங்கள் உடல் - மனம் - செல்வத்தின் மூலம்
உண்மையான ஆன்மிக சேவை செய்ய வேண்டும் . ஆன்மிக சேவையின் மூலம்
தான் பாரதம் பொற்கால தேசமாக ஆகும் .
கேள்வி:
கவலையற்று இருப்பதற்காக சதா எந்த ஒரு வி ˆ யத்தை நினைவில்
வைக்க வேண்டும் ?
பதில்:
கவலையற்று இருப்பதற்காக சதா நினைவிருக்கட்டும், இந்த டிராமா
முற்றிலும் மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளது. டிராமாவின்
அனுசாரம் என்னவெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ, இது
முற்றிலும் மிகச்சரியானது தான். ஆனால் இப்போது குழந்தைகளாகிய
நீங்கள் கவலையற்றவர்களாக இருக்க முடிவதில்லை. எப்போது
உங்களுக்குக் கர்மாதீத் (அவஸ்தா) நிலை ஏற்படுகிறதோ, அப்போது
நீங்கள் கவலை யற்றவராகி விடுவீர்கள். இதற்காக யோகம் மிக நன்றாக
இருக்க வேண்டும். யோகி மற்றும் ஞானி குழந்தைகள் மறைந்திருக்க
முடியாது.
ஓம் சாந்தி .
பதீத பாவன் சிவபகவான் வாக்கு. பாபா புரிய வைத்துள்ளார், தேகதாரி
மனிதர்களை ஒரு போதும் பகவான் எனச் சொல்ல முடியாது. மனிதர்கள்
இதையும் அறிந்துள்ளனர், பதீத பாவன் பகவான் மட்டுமே!
ஸ்ரீகிருஷ்ணரை பகவான் எனச் சொல்ல மாட்டார்கள். பாவம், அதிகமாகக்
குழம்பிப் போயுள்ளனர். பாரதத்தில் எப்போது குழப்பங்கள்
ஏற்படுகின்றனவோ, அப்போது சிவபாபா வரவேண்டியுள்ளது. பாபாவைத்
தவிர அதை வேறு யாராலும் இந்தச் சிக்கலை விடுவிக்க இயலாது. அவர்
தாம் பதீத பாவனர் சிவபாபா. அவரைப் பற்றிக் குழந்தைகளாகிய
நீங்கள் தாம் அறிவீர்கள். அதுவும் நம்பர்வார் புருˆôர்த்தத்தின்
அனுசாரம். இங்கே அமர்ந்துள்ளார்கள் என்ற போதிலும் தினந்தோறும்
கேட்கிறார்கள் என்றாலும் கூட, நாம் சிவபாபாவுக்கு அருகில்
அமர்ந்துள்ளோம், அவர் அவருக்குள் (பிரம்மாவுக்குள்)
அமர்ந்துள்ளார், நமக்குப் கல்வியைக் கற்றுத் தந்து
கொண்டிருக்கிறார், பாவனமாக்கிக் கொண்டிருக்கிறார், யுக்திகள்
சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது கவனத்தில் வருவதில்லை.
நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரி ஆகி, படைப்பவர் மற்றும் படைப்பு
பற்றிய ஞானம் பெற்று, காமத்தை வென்று, உலகை வென்றவராக
ஆகிறீர்கள். ஆக, அந்தத் தந்தை பதீத பாவனாகவும் ஆகிறார். புதுப்
படைப்பினைப் படைப்பவராகவும் ஆகிறார். இப்போது எல்லையற்ற
இராஜ்யத்தை அடைவதற்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்.
ஒவ்வொருவரும் புரிந்து கொண்டுள்ளனர், நாம் சிவபாபாவிடமிருந்து
இராஜ்ய- பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று.
இதையும் கூட யதார்த்த ரீதியில் புரிந்து கொள்ள முடிவதில்லை.
சிலர் கொஞ்சம் தெரிந்து கொண்டுள்ளனர், சிலரோ முற்றிலும் அறிந்து
கொள்ளாமல் உள்ளனர். சிவபாபாவோ, பதிதபாவன் நான் எனச் சொல்கிறார்.
என்னிடம் யாராவது வந்து கேட்பார்களானால் நான் எனது அறிமுகத்தைக்
கொடுக்க முடியும். உங்களுக்கும் கூட பாபா தம்முடைய அறிமுகத்தை
கொடுத்திருக்கிறார் இல்லையா? சிவபாபா சொல்கிறார், நான் சாதாரண
உடலில் பிரவேசமாகிறேன். இது சாதாரண சரீரம். விருட்சத்தின்
கடைசியில் நின்று கொண்டுள்ளார். பதீத உலகத்தில் நின்று
கொண்டிருக்கிறார். மேலும் பிறகு கீழே தவம் செய்து
கொண்டிருக்கிறார். இவருக்கும் கூட தவம் செய்வதற்கு சிவபாபா
கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். இராஜயோகத்தை சிவபாபா கற்றுத்
தருகிறார். கீழே ஆதி தேவர், மேலே ஆதி நாதர். குழந்தைகளாகிய
நீங்கள் புரிய வைக்க முடியும், நாங்கள் பிராமணர்கள் சிவபாபாவின்
குழந்தைகள். நீங்களும் கூட சிவபாபாவின் குழந்தைகள் தாம். ஆனால்
அறிந்து கொள்ளவில்லை. பகவான் ஒருவர், மற்ற அனைவரும் சகோதரர்கள்.
பாபா சொல்கிறார், நான் என்னுடைய குழந்தைகளுக்குத் தான் கல்வி
புகட்டுகிறேன். யார் என்னை அறிந்து கொள்கிறார்களோ,
அவர்களுக்குத் தான் கல்வி கற்றுத் தந்து தேவதைகளாக ஆக்குகிறேன்.
பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது, இப்போது நரகமாக உள்ளது. யார்
காமத்தை வெல்கிறார்களோ, அவர்கள் தாம் உலகை வென்றவர்களாக
ஆகிறார்கள். நான் பொன்னுலகை ஸ்தாபனை செய்கிறேன். அநேக தடவை
இந்த பாரதம் பொன்யுகத்தில் இருந்தது. பிறகு இரும்பு யுகத்தில்
வந்துள்ளது - இதை யாரும் அறிந்து கொள்ளவில்லை. நான் ஞானம்
நிறைந்தவன். இது நோக்கம் மற்றும் குறிக்கோள். நான் அவருடைய
சாதாரண சரீரத்தில் பிரவேசமாகி ஞானம் கொடுக்கிறேன். இப்போது
நீங்களும் பவித்திரமாகுங்கள். இந்த விகாரங்களை வெல்வதன் மூலம்
நீங்கள் உலகை வென்றவராக ஆவீர்கள். இந்தக் குழந்தைகள் அனைவரும்
முயற்சி செய்து கொண்டிருக் கின்றனர். உடல்-மனம்-செல்வத்தால்
ஆன்மிக சேவை செய்கின்றனர், உலகீய சேவை அல்ல. இது ஆன்மிக ஞானம்
எனச் சொல்லப் படுகின்றது. இது பக்தி கிடையாது. பக்தியின்
யுகங்கள் துவாபர-கலியுகமாகும். அது பிரம்மாவின் இரவு எனச்
சொல்லப்படுகின்றது, மற்றும் சத்யுக-திரேதா யுகம் பிரம்மாவின்
பகல் எனச் சொல்லப் படுகின்றது. யாரேனும் கீதை படிப்பவர் வந்தால்
அவருக்கும் சொல்லிப் புரிய வைப்பீர்கள், கீதையில் பிழை உள்ளது
என்று. கீதையை யார் சொன்னது, இராஜயோகத்தைக் கற்றுத் தந்தது யார்,
காமத்தின் மீது வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் உலகை வென்றவராக
ஆகி விடுவீர்கள் என்று சொன்னவர் யார்? இந்த லட்சுமி-நாராயணரும்
கூட உலகை வென்றவராக ஆகி யிருக்கிறார்கள் இல்லையா? இவர்களின் 84
பிறவி களின் ரகசியத்தை அமர்ந்து சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.
யாராயிருந்தாலும் சரி, ஞானத்தைப் பெறுவதற்கோ இங்கே வந்தாக
வேண்டும் இல்லையா? நானோ குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித்
தருகிறேன். ஆனால் உங்களிலும் கூட யாராவது இந்த அளவு புரிந்து
கொள்வதில்லை. அதனால் தான் பாடல் உள்ளது, கோடியில் சிலர்.......
நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்பதை சிலரோ 5
சதவிகிதம் கூட அறிந்து கொள்ளவில்லை. நீங்கள் தந்தையை அறிந்து
கொண்டு முழுமையாக நினைவு செய்ய வேண்டும். என்னை மட்டுமே ஏன்
நினைவு செய்ய மாட்டேனென்கிறீர்கள்? சொல்கிறார்கள், பாபா, நினைவு
செய்ய மறந்து போகிறது என்று. அட, நீங்கள் தந்தையை நினைவு செய்ய
முடிவதில்லையா? அவ்வாறே பாபா புரிய வைக்கிறார், இது முயற்சியின்
காரியம். பிறகும் கூட முயற்சி செய்ய வைப்பதற்காக வலியுறுத்திச்
சொல்லிக் கொண்டே இருக்கிறார். அட, எந்தத் தந்தை உங்களைப்
பாற்கடலுக்கு அழைத்துச் செல்கிறாரோ, உலகின் எஜமானராக
ஆக்குகிறாரோ, அவரை மறந்து போகிறீர்களா? மாயா அவசியம்
மறக்கடிக்கவும் செய்யும். (தொடர்ந்த நினைவு இருப்பதற்கு) நேரம்
பிடிக்கும். மாயா நிச்சயமாக மறக்கடிக்கவே செய்யும், அதனால்
குளிர்ந்துபோய் அமர்ந்திருங்கள் என்பதல்ல. அவசியம் முயற்சி
செய்தாக வேண்டும். காம விகாரத்தின் மீது வெற்றி கொள்ள வேண்டும்.
என்னை மட்டுமே நினைவு செய்வீர்களானால் பாவ கர்மங்கள் வினாசமாகி
விடும். எப்படி குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்கிறேன், அதுபோல்
எந்த ஒரு மிகப்பெரிய நீதிபதி வந்தாலும் அவரையும் கூட பாபா
குழந்தாய்! என்று தான் சொல்வார் இல்லையா? ஏனெனில் நானோ
உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான். உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பை
நான் தான் கற்றுத் தருகிறேன், இளவரசர், இளவரசி பதவி
பெறுவதற்காக. பாபா சொல்கிறார், நான் இவருக்குக் கற்றுத் தந்து
கொண்டிருக்கிறேன். இவர் தாம் பிறகு ஸ்ரீகிருஷ்ணராக ஆகிறார்.
பிரம்மா-சரஸ்வதி - அவர்கள் தாம் பிறகு லட்சுமி-நாராயண் ஆவார்கள்.
இந்த இல்லற மார்க்கம் நடந்து வந்துள்ளது. துறவற மார்க்கத்தினர்
இராஜயோகம் கற்றுத்தர இயலாது. இராஜா-ராணி இருவருமே வேண்டும்.
வெளிநாடுகளில் போய்ச் சொல்கின்றனர், நாங்கள் இராஜயோகம்
கற்பிக்கின்றோம் என்று. ஆனால் அவர்களோ, சுகத்தை காக்கையின்
எச்சத்திற்குச் சமமான தென்று சொல்கின்றனர். பிறகு ராஜயோகம்
எப்படிக் கற்றுத் தருவார்கள்? ஆக, குழந்தைகளுக்கு உற்சாகம் வர
வேண்டும். ஆனால் குழந்தைகள் இன்னும் சிறியவர்களாக உள்ளனர்.
வாலிபராக இன்னும் ஆகவில்லை. வாலிபத்தின் தைரியம் வேண்டும்.
பாபா சொல்கிறார் - இது இராவண சம்பிரதாயம். நீங்கள்
அழைக்கிறீர்கள், பதீத பாவனா! வாருங்கள் என்று. ஆக, இது பதித்
உலகமா, பாவன உலகமா? நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்
இல்லையா, நாம் நரகவாசி என்று? இது என்ன தெய்வீக சம்பிரதாயமா?
இராமராஜ்யமா? நீங்கள் இராவண இராஜ்யத்தினர் இல்லையா? இப்போது
இராவண இராஜ்யத்தில் அனைவருக்கும் அசுர புத்தி உள்ளது. இப்போது
அசுர புத்தியை தெய்வீக புத்தியாக ஆக்குபவர் யார்? இதுபோல்
நாலைந்து கேள்விகள் கேட்பீர்களானால் மனிதர்கள் யோசிக்க
ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகளாகிய உங்கள் கடமை பாபாவின்
அறிமுகம் கொடுப்பது. மரமோ சிறிது-சிறிதாக வளரும். பிறகு
மிகுந்த விருத்தி அடையும். மாயாவும் சுற்ற வைத்து, முற்றிலும்
வீழ்த்தி விடுகின்றது. குத்துச்சண்டையிலும் அநேகர் இறக்கின்றனர்.
இதிலும் கூட அநேகர் இறந்து விடுகின்றனர். விகாரத்தில் சென்றனர்
என்றால் இறந்து விட்டனர். பிறகு புதிதாகப் புருˆôôத்தம் செய்ய
வேண்டும். விகாரம் ஒரேயடியாகச் சாகடித்து விடுகின்றது. துருவை
நீக்கிப் பதித்திலிருந்து பாவனமாக எந்த அளவுக்கு ஆனார்களோ,
சம்பாதித்த வருமானமெல்லாம் காலியாகி விடும். பிறகு புதிதாக
முயற்சி செய்ய வேண்டியுள்ளது. அவர்களை அனுமதிக்கவே கூடாது
என்பதில்லை. அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் - எந்த அளவு
நினைவு யாத்திரை செய்தார்களோ, படித்தார்களோ, அவையனைத்தும்
காலியாகி விட்டது. முற்றிலும் கீழே விழுந்து விடுகின்றனர்.
பிறகும் கூட அடிக்கடி கீழே விழுந்து கொண்டே இருப்பார்களானால்
வெளியில் செல்லுங்கள் எனச் சொல்லி விடுவார்கள். ஓரிரு தடவை
பரிசோதிக்கப் படுவார்கள். இரண்டு முறை மன்னிப்புக் கிடைத்தது,
பிறகு கேஸ் ஹோப்லெஸ் (தேறாத ஒன்றாக) ஆகிவிடும். மீண்டும்
வருவார்கள் என்றாலும் கூட முற்றிலும் அழுக்கானவர்களின் பிரிவில்
வருவார்கள். ஒப்பிடும் போதோ இதுபோல் சொல்வார்கள் இல்லையா? யார்
முற்றிலும் குறைந்த பதவி பெறுகிறார்களோ, அவர்களை அழுக்கான
பிரிவினர் எனச் சொல்வார்கள். தாச-தாசிகள், சண்டாளர்கள்,
பிரஜைகளுக்கும் வேலைக்காரர்களாக ஆகிறார்கள் இல்லையா? பாபாவோ
அறிந்துள்ளார், நான் இவர்களுக்குப் படிப்பு சொல்லித் தந்து
கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்குப் பிறகும்
கற்பிக்கிறேன். அந்த மனிதர்கள் லட்சக் கணக்கான ஆண்டுகள் எனச்
சொல்லி விடுகின்றனர். இன்னும் போகப்போக அவர்களும் சொல்லத்
தொடங்குவார்கள், நிச்சயமாக 5000 ஆண்டுகளின் விˆயம் தான் என்று.
அது தான் மகாபாரத யுத்தம். ஆனால் நினைவு யாத்திரையில் இருக்க
முடியாது. நாளுக்கு நாள் டூலேட் (மிகவும் தாமதம்) ஆகிக்கொண்டே
போகும். பாடவும் படுகின்றது - அதிக சமயம் முடிந்து விட்டது,
கொஞ்சம் மீதி உள்ளது.......... இவையனைத்தும் இச்சமயத்தின்
விˆயங்களாகும். பாவனமாவதில் இன்னும் கொஞ்சம் சமயம் உள்ளது.
யுத்தம் முன்னால் நின்று கொண்டுள்ளது. தனது மனதைக் கேட்க
வேண்டும்-நாம் நினைவு யாத்திரையில் இருக்கிறோமா? புதியவர்கள்
யாராவது வரும்போது படிவம் நிரப்பச் செய்ய வேண்டும். படிவம்
நிரப்பும்போது அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். யாருக்காவது
புரியவே இல்லை என்றால் படிவம் என்ன நிரப்புவார்கள்? இதுபோலவோ
அநேகர் வருகின்றனர். சொல்லுங்கள் - பாபாவை அழைக்கிறீர்கள்-
பதித பாவனா வாருங்கள் என்று. அப்போது நிச்சயமாக இது பதித் உலகம்
தான். அதனால் தான் அழைக்கின்றனர், வந்து பாவனமாக்குங்கள் என்று.
பிறகு சிலர் பாவனமாகின்றனர், சிலர் ஆவதில்லை. பாபாவுக்குக்
கடிதங்களோ அநேகம் வருகின்றன. அனைவரும் எழுதுகின்றனர், சிவபாபா
கேர் ஆஃப் பிரம்மா பாபா என்று. சிவபாபாவும் சொல்கிறார், நான்
சாதாரண சரீரத்தில் பிரவேசமாகிறேன் என்று. இவருக்கு (பிரம்மாவுக்கு)
84 பிறவிகளின் கதையைச் சொல்கிறேன். வேறு எந்த ஒரு மனிதரும்
படைப்பவர் மற்றும் படைப்பின் முதல்-இடை-கடை பற்றி
அறிந்திருக்கவில்லை. இப்போது பாபா தாம் உங்களுக்கச்
சொல்லியிருக்கிறார். இந்தச் சித்திரங்கள் முதலியவற்றையும் பாபா
திவ்ய திருஷ்டி கொடுத்து அனைத்தையும் உருவாக்கச் செய்துள்ளார்.
பாபா ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தான் படிப்பு சொல்லித்
தருகிறார். கஆத்மாக்கள் உடனே அசரீரி ஆகி விடுகின்றனர். இந்த
சரீரத்திலிருந்து தன்னைத் தனியாக உணர வேண்டும். பாபா சொல்கிறார்,
குழந்தைகளே, ஆத்ம அபிமானி ஆகுக. நான் ஆத்மாக்களுக்குக்
கற்பிக்கின்றேன். இது ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் திருவிழா.
இது சங்கமத்தின் திருவிழா எனச் சொல்லப் படுகின்றது. மற்றப்படி
தண்ணீரின் கங்கை ஒன்றும் பாவனமாக்காது. சாது, சந்நியாசி, ரிஷி,
முனி முதலான அனைவரும் குளிப்பதற்காக (கங்கைக்கு)ச் செல்கின்றனர்.
இப்போது கங்கை எப்படிப் பதித பாவனி ஆக மடியும்? பகவான் வாக்கு
இல்லையா - மாமம் மகாசத்ரு என்பது? இதனை வெற்றி கொள்வதன் மூலம்
நீங்கள் உலகை வென்றவராக ஆவீர்கள். கங்கை அல்லது கடலோ
சொல்வதில்லை. இதுவோ ஞானக்கடலாகிய தந்தை புரிய வைக்கிறார். இதை
வெற்றி கொள்வதற்காக என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். அப்போது
நீங்கள் பாவனமாகி விடுவீர்கள். தெய்வீக குணங்களை தாரணை
செய்யுங்கள். யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள். முதல் நம்பர்
துக்கம் காமக் கட்டாரியைச் செலுத்துவது. இது தான் முதல், இடை,
கடை முழுவதும் துக்கம் தருவது. சத்யுகத்தில் இதுவோ இருப்பதில்லை.
அது பாவன உலகம். அங்கே பதித் யாரும் இருப்பதில்லை. எப்படி
நீங்கள் யோகபலத்தின் மூலம் ராஜ்யத்தைப் பெறுகிறீர்கள், அதுபோல்
யோகபலத்தால் குழந்தை பிறக்கின்றது. இராவண ராஜ்யமே அங்கே
கிடையாது. நீங்கள் ராவணனை எரிக்கிறீர்கள்எப்போதிருந்து எரித்து
வருகிறீர்கள் என்பதே தெரியாது. இராமராஜ்யத்தில் இராவணன்
இருப்பதில்லை. இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விˆயங்கள்.
இதை பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். மிக நன்றாகவே புரிய
வைக்கிறார், ஆனால் கல்ப-கல்பமாக யார் எந்த அளவு
படித்திருக்கிறார்களோ, அவ்வளவு தான் படிக்கின்றனர்.
புருˆôர்த்தத்தின் மூலம் அனைத்தும் தெரிய வரும். ஸ்தூல சேவையின்
பாடமும் உள்ளது, மனசா இல்லையென்றால் வாய்வார்த்தை அல்லது
செயலின் அடிப்படையிலானது. வாய் வார்த்தையோ மிக சுலப மானது. மனது
என்றால் மன்மனாபவ, நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். தன்னை
ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
பாபாவிடமிருந்து அறிவுரை பெற்றுக் கொள்ள வேண்டும். அநேகரால்
தந்தையை நினைவு செய்ய முடிவதில்லை. என்னை மட்டுமே நினைவு செய்ய
அவர்களால் முடிவதில்லை. நினைவு செய்யவில்லை எனில் சக்தி
எப்படிக் கிடைக்கும்? பாபா சர்வசக்திவான். அவரை நினைவு செய்வதன்
மூலம் தான் சக்தி வரும். இது தான் கூர்மை எனச் சொல்லப் படுவது.
செயலாலும் யாராவது நல்ல சேவை செய்வார்களானால் பதவி கிடைக்கும்.
செயலாலும் சேவை செய்யவில்லை என்றால் பிறகு பதவி என்ன கிடைக்கும்?
அந்தப் பாடமும் (சப்ஜெக்ட்) உள்ளது இல்லையா? இவை மறைமுகமாகப்
புரிந்து கொள்ள வேண்டிய விˆயங்கள். அந்த மனிதர்கள் யோகம்-யோகம்
எனச் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர், ஆனால் புரிந்து
கொள்வதில்லை - யோகத்தினால் நீங்கள் உலகத்தின் ராஜபதவி
பெறுகிறீர்கள் என்பதை. யோகபலத்தின் மூலம் தான் அங்கே குழந்தை
பிறக்கின்றது. இதுவும் கூட யாருக்கும் தெரியாது. உங்களுக்குப்
புரிய வைக்கப்படுகின்றது- பிறகும் கூட அரைக்கல்பத்திற்குப் பின்
நீங்கள் யாமாவின் சீடர்களாக ஆகி விடுகிறீர்கள். பிறகு மாயா
இப்போதும் கூட உங்களை விடுவதில்லை. இப்போது நீங்கள் சிவபாபாவின்
சீடர்களாக ஆக வேண்டும். எந்த ஒரு தேகதாரிக்கும் சீடராகக் கூடாது.
சகோதர-சகோதரி என்றும் இப்போது சொல்லப்படுவது, பவித்திரமாக
வேண்டும் என்பதற்காக. பிறகோ அதனினும் மேலே செல்ல வேண்டும்.
சகோதர-சகோதரன் எனப் புரிந்து கொள்ள வேண்டும். சகோதர-சகோதரி
என்ற திருஷ்டியும் இல்லை. டிராமாவின் அனுசாரம் என்னென்ன
நடைபெறுகின்றதோ, முற்றிலும் சரியாகவே நடைபெறுகின்றது. பாபாவோ
கவலையற்றவர், இவருக்கோ (பிரம்மா) கவலை நிச்சயம் இருக்கும்.
எப்போது மர்மாதீத் அவஸ்தா ஏற்படுகிறதோ, அப்போது தான் கவலையற்று
இருப்பார். அதுவரை ஏதேனும் ஒன்று நடைபெற்றுக் கொண்டே தான்
இருக்கும். யோகம் ந்னறாக இருக்க வேண்டும். யோகத்தைப் பற்றி
இப்போது பாபா வலியுறுத்திச் சொல்கிறார். இதைப் பற்றிச்
சொலக்ன்றனர், அடிக்கடி மறந்து போகிறோம் என்று. பாபா புகார்
செய்கிறார் - எந்தத் தந்தை உங்களுக்கு இவ்வளவு கஜானா தருகிறாரோ,
அவரை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். பாபா அறிந்துள்ளார்,
யாரிடம் ஞானம் உள்ளது, யாரிடம் இல்லை என்று. ஞானி ஒருபோதும்
மறைந்திருக்க மாட்டார். அவர் உடனே சேவையின் நிரூபணத்தைத்
தருவார். ஆக, இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய
விˆயங்களாகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம் . ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மாயாவின் குத்துச்சண்டையில் தோல்வியடைந்து விடக் கூடாது.
புருˆôர்த்தத்தில் குளிர்ந்து (மந்தமாகி) அமர்ந்துவிடக் கூடாது.
தைரியம் வைத்து சேவை செய்ய வேண்டும்.
2) இந்த டிராமா மிகச்சரியாக உருவாக்கப் பட்டுள்ளது. அதனால்
எந்த ஒரு விˆயத்தைப் பற்றியும் கவலைப் படலாகாது. கர்மாதீத்
அவஸ்தாவை அடைவதற்காக ஒரு பாபாவின் நினைவில் இருக்க வேண்டும்.
எந்த ஒரு தேகதாரிக்கும் சீடராகக் கூடாது.
வரதானம்:
எல்லையற்ற வைராக்கிய விருத்தி மூலம் அனைத்து பற்றுகளிலிருந்து
விடுபட்டு இருக்கக்கூடிய உண்மையான இராஜரிஷி ஆகுக .
இராஜரிஷி என்றால் ஒருபுறம் இராஜ்யம் இன்னொருபுறம் ரிஷி அதாவது
எல்லையற்ற வைராக்கியம் உடையவர் என்று பொருள். ஒருவேளை, தன் மீது,
மனிதர் மீது, பொருள் மீது - இவ்வாறு எதன் மீதாவது பற்று
உள்ளதெனில் இராஜரிஷி கிடையாது. யாருடைய எண்ணத்தளவிலும் சிறிதளவு
பற்று இருக்கிறது என்றாலும், அவருடைய கால்கள் இரண்டு படகுகளில்
உள்ளன என்று அர்த்தம். பிறகு, அவர்கள் சங்கமயுகவாசியாகவும்
இருக்கமாட்டார்கள், கலியுகவாசியாகவும் இருக்கமாட்டார்கள்.
ஆகையினால், இராஜரிஷி ஆகுங்கள், எல்லை யற்ற வைராக்கியம் உடையவர்
ஆகுங்கள், அதாவது ஒரு தந்தையைத் தவிர வேறு எவருமில்லை என்ற
இந்தப் பாடத்தை உறுதியானதாக ஆக்குங்கள்.
சுலோகன்:
கோபம் என்பது அக்னி ரூபம் ஆகும் , அது தன்னையும் எரிக்கிறது
மற்றும் பிறரையும் எரித்துவிடுகிறது .