30.10.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
ஒரே
ஒரு
தந்தையின்
நினைவில்
இருப்பது
தான்
கலப்படமற்ற நினைவு
ஆகும்.
இந்த
நினைவின்
மூலம்
தான்
உங்களது
பாவங்கள்
அழியும்.
கேள்வி:
தந்தை
என்ன
புரிய
வைக்கின்றாரோ
அதை
சிலர்
எளிதாக
ஏற்றுக்
கொள்கின்றனர்,
சிலர்
கடினமாக
நினைக்கின்றனர்.
இதற்கு
காரணம்
என்ன?
பதில்:
எந்த
குழந்தைகள்
அதிக
காலம்
பக்தி
செய்திருந்தார்களோ,
அரைக்
கல்ப
பழைய
(நீண்டகால)
பக்தர்களாக
இருக்கின்றார்களோ
அவர்கள்
தந்தையின்
ஒவ்வொரு
விசயத்தையும்
எளிதாக
ஏற்றுக்
கொள்வர்.
ஏனெனில்
அவர்களுக்கு
பக்தியின்
பலன்
கிடைக்கிறது.
யார்
பழைய
பக்தர்களாக
இல்லையோ
அவர்களுக்கு ஒவ்வொரு
விசயமும்
புரிந்துக்
கொள்வது
கடினமாக
இருக்கிறது.
மற்ற
தர்மத்தைச்
சார்ந்தவர்கள்
இந்த ஞானத்தை
புரிந்துக்
கொள்ளவே
முடியாது.
ஓம்சாந்தி.
இனிமையிலும்
இனிய
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தை
அமர்ந்து
புரிய வைக்கின்றார்,
குழந்தைகளாகிய
நீங்கள்
அனைவரும்
என்ன
செய்து
கொண்டிருக்கிறீர்கள்?
உங்களுடையது கலப்படமற்ற
நினைவு
ஆகும்.
ஒன்று
கலப்படமான
நினைவு,
மற்றொன்று
கலப்படமற்ற
நினைவு.
உங்கள் அனைவருடையதும்
கலப்படமற்ற
நினைவு
ஆகும்.
யாருடைய
நினைவு?
ஒரு
தந்தையின்
நினைவு.
தந்தையை நினைவு
செய்து
செய்து
பாவங்கள்
அழிந்து
போய்
விடும்,
மேலும்
நீங்கள்
அங்கு
(சத்யயுகம்)
சென்றடைந்து விடுவீர்கள்.
தூய்மை
ஆகி
பிறகு
புது
உலகிற்குச்
செல்ல
வேண்டும்.
ஆத்மாக்கள்
செல்ல
வேண்டும்.
ஆத்மா தான்
இந்த
கர்மேந்திரியங்களின்
மூலம்
அனைத்து
காரியங்களையும்
செய்கிறது
அல்லவா!
ஆக
தந்தை கூறுகின்றார்
-
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
கொள்ளுங்கள்
மற்றும்
தந்தையை
நினைவு
செய்யுங்கள்.
மனிதர்கள்
பலரை
நினைவு
செய்கின்றனர்.
பக்தி
மார்க்கத்தில்
நீங்கள்
ஒருவரைத்
தான்
நினைவு
செய்ய வேண்டும்.
பக்தியும்
கூட
நீங்கள்
முதன்
முதலில்
உயர்ந்ததிலும்
உயர்ந்த
சிவபாபாவிற்கு
மட்டுமே
செய்தீர்கள்.
அது
தான்
கலபடமற்ற
பக்தி
என்று
கூறப்படுகிறது.
அவர்
தான்
அனைவருக்கும்
சத்கதி
கொடுப்பவர்,
படைப்பவர்,
தந்தையாவார்.
அவரிடமிருந்து
குழந்தைகளுக்கு
எல்லையற்ற
ஆஸ்தி
கிடைக்கிறது.
சகோதரனுக்கு சகோதரனிடமிருந்து
ஆஸ்தி
கிடைக்காது.
ஆஸ்தியானது
எப்பொழுதுமே
குழந்தைகளுக்கு
தந்தையிடமிருந்து தான்
கிடைக்கும்.
மிகச்
சில
நேரங்களில்
தான்
கன்னிகைகளுக்கு
கிடைக்கிறது.
அவர்கள்
வேறுவீட்டிற்குச் சென்று
கணவருடன்
பங்குதாரராகி
விடுகின்றனர்.
இங்கு
நீங்கள்
அனைவரும்
ஆத்மாக்கள்.
அனைத்து ஆத்மாக்களுக்கும்
தந்தை
ஒரே
ஒருவர்
தான்.
அனைவருக்கும்
தந்தையிடமிருந்து
ஆஸ்தி
அடைவதற்கு உரிமை
இருக்கிறது.
நீங்கள்
சகோதர,
சகோதரர்களாக
இருக்கிறீர்கள்,
சரீரம்
ஆண்,
பெண்ணாக
இருக்கலாம்.
ஆத்மாக்கள்
அனைத்தும்
சகோதர,
சகோதரர்கள்
ஆகும்.
இந்துக்கள்,
முஸ்லீம்கள்
ஒருவருக்கொருவர்
சகோதரர் என்று
அவர்கள்
பெயரளவிற்குக்
கூறி
விடுகின்றனர்.
பொருள்
புரிந்து
கொள்வது
கிடையாது.
நீங்கள்
இப்பொழுது பொருளைப்
புரிந்து
கொண்டீர்கள்.
சகோதரர்கள்
என்றால்
அனைத்து
ஆத்மாக்களும்
ஒரு
தந்தையின்
குழந்தைகள் ஆவர்,
பிறகு
பிரஜாபிதா
பிரம்மாவின்
குழந்தைகளாக
ஆகின்ற
பொழுது
சகோதரன்,
சகோதரிகளாக ஆகிவிடுகிறோம்.
இந்த
உலகிலிருந்து
அனைவரும்
திரும்பிச்
செல்ல
வேண்டும்
என்பதை
இப்பொழுது நீங்கள்
அறிவீர்கள்.
மனிதர்கள்
அனைவரின்
நடிப்பின்
பாகமும்
இப்பொழுது
முடிவடைகிறது.
பிறகு
தந்தை வந்து
பழைய
உலகிலிருந்து
புது
உலகிற்கு
அழைத்துச்
செல்கின்றார்,
அக்கரைக்கு
அழைத்துச்
செல்கின்றார்.
படகோட்டியே!
கரையேற்றுங்கள்
அதாவது
சுகதாமத்திற்கு
அழைத்துச்
செல்லுங்கள்
என்று
பாடவும்
செய்கின்றனர்.
இந்த
பழைய
உலகம்
மாறி
பிறகு
புது
உலகம்
அவசியம்
ஏற்படும்.
மூலவதனம்
முதல்
முழு
உலகின் வரைபடம்
உங்களது
புத்தியில்
இருக்கிறது.
ஆத்மாக்களாகிய
நாம்
அனைவரும்
இனிய
வீடாகிய
சாந்திதாமத்தில் வசிப்பவர்களாக
இருக்கிறோம்.
இது
புத்தியில்
நினைவு
இருக்கிறது
அல்லவா!
நாம்
சத்யுகத்தில்
இருந்த பொழுது
மற்ற
அனைத்து
ஆத்மாக்களும்
சாந்திதாமத்தில்
இருப்பர்.
ஆத்மா
ஒருபொழுதும்
அழிவது
கிடையாது.
ஆத்மாவில்
அழிவற்ற
நடிப்பின்
பாகம்
நிறைந்திருக்கிறது.
அது
ஒருபொழுதும்
விநாசம்
ஆக
முடியாது.
இவர் இன்ஜினியராக
இருக்கிறார்
என்று
வைத்துக்
கொள்ளுங்கள்,
5
ஆயிரம்
ஆண்டிற்குப்
பிறகு
இவ்வாறே இன்ஜினியராக
ஆவார்.
இதே
பெயர்,
உருவம்,
தேசம்,
காலத்துடன்
இருப்பார்.
இந்த
அனைத்து
விசயங்களையும் தந்தை
வந்து
தான்
புரிய
வைக்கின்றார்.
இது
அநாதி,
அழிவற்ற
நாடகமாகும்.
இந்த
நாடகத்தின்
ஆயுள்
5
ஆயிரம்
ஆண்டுகளாகும்.
ஒரு
விநாடியும்
கூட
முன்
பின்
ஏற்பட
முடியாது.
இந்த
அழிவற்ற
நாடகம் ஏற்கெனவே
உருவாக்கப்பட்ட
நாடகமாகும்.
அனைவருக்கும்
நடிப்பின்
பாகம்
கிடைத்திருக்கிறது.
ஆத்ம அபிமானியாகி,
சாட்சியாக
இருந்து
விளையாட்டுக்களைப்
பார்க்க
வேண்டும்.
தந்தைக்கு
தேகம்
கிடையாது.
அவர்
ஞானம்
நிறைந்தவராக
இருக்கின்றார்,
விதை
ரூபமானவராக
இருக்கின்றார்.
மற்றபடி
மேலே
நிராகார உலகிலிருக்கும்
ஆத்மாக்கள்
வரிசைக்கிரமமாக
நடிப்பு
நடிப்பதற்காக
வருகின்றனர்.
முதன்
முதல்
நம்பர் ஆரம்பமாவது
தேவதைகளுடையது.
முதல்
நம்பருக்கான
இராஜ்யத்தின்
சிலைகள்
இருக்கின்றன,
பிறகு
சந்திர வம்சத்திற்கான
சிலைகளும்
இருக்கின்றன.
அனைத்தையும்
விட
உயர்ந்தது
சூரியவம்சத்தின்
லெட்சுமி நாராயணனின்
இராஜ்யமாகும்.
அவர்களது
இராஜ்யம்
எப்பொழுது,
எப்படி
ஸ்தாபனை
ஆனது?
என்பதை
எந்த மனிதனும்
அறியவில்லை.
சத்யுகத்தின்
ஆயுளை
இலட்சம்
ஆண்டுகள்
என்று
எழுதி
வைத்து
விட்டனர்.
யாருடைய
வாழ்க்கை
சரித்திரத்தைப்
பற்றியும்
அறியவில்லை.
இந்த
லெட்சுமி
நாராயணனின்
வாழ்க்கை சரித்திரத்தை
அறிந்து
கொள்ள
வேண்டும்.
அறிந்து
கொள்ளாமல்
தலை
வணங்குவது
அல்லது
மகிமை செய்வது
தவறாகும்.
முக்கியமானவர்களின்
வாழ்க்கை
சரித்திரத்தை
தந்தை
அமர்ந்து
கூறுகின்றார்.
அவர்களது இராஜ்யம்
எவ்வாறு
நடைபெறுகிறது
என்பதை
இப்பொழுது
நீங்கள்
அறிவீர்கள்.
சத்யுகத்தில்
ஸ்ரீகிருஷ்ணர் இருந்தார்
அல்லவா!
இப்பொழுது
மீண்டும்
அந்த
கிருஷ்ணபுரி
ஸ்தாபனை
ஆகிக்
கொண்டிருக்கிறது.
கிருஷ்ணர் சொர்க்கத்தின்
இளவரசர்
ஆவார்.
லெட்சுமி
நாராயணனின்
இராஜ்யம்
எவ்வாறு
ஸ்தாபனை
ஆகிக்
கொண்டிருக்கிறது என்பதை
நீங்கள்
புரிந்து
கொண்டீர்கள்.
வரிசைக்கிரமமாக
மாலையும்
உருவாக்கப்படுகிறது.
இன்னார்
எல்லாம்
மாலையில்
மணியாக
வருவார்கள்.
ஆனால்
நாளடைவில்
தோல்வியடைந்து
விடுகின்றனர்.
மாயை
தோற்க
வைத்து
விடுகிறது.
சேனையில் இருக்கின்ற
வரை
தான்,
இவர்கள்
கமாண்டர்
என்றும்,
இவர்
இன்னார்
என்றும்
கூறுவர்.
பிறகு
இறந்து விடுகின்றனர்.
இங்கு
இறப்பது
என்றால்
மனநிலை
(ஸ்திதி)
குறைந்து
விடுகிறது,
மாயையிடம்
தோல்வியடைந்து விடுவதாகும்.
அழிந்து
விடுகின்றனர்.
ஆச்சரியத்துடன்
ஞானத்தைக்
கேட்கின்றனர்,
மற்றவர்களுக்கு
கூறுகின்றனர்,
பிறகு
ஓடி
விடுகின்றனர்
......
ஆஹா
மாயா
......
மாயையிடம்
தோல்வியடைந்து
ஓடி
விடுகின்றனர்.
மறுபிறப்பு எடுத்து
தந்தையினுடையவர்களாக
ஆகின்றனர்,
பிறகு
மீண்டும்
இராம
இராஜ்யத்திலிருந்து
இராவண
இராஜ்யத்திற்கு சென்று
விடுகின்றனர்.
இதைத்
தான்
கௌரவர்கள்
-
பாண்டவர்களின்
யுத்தமாக
காண்பித்திருக்கின்றனர்.
பிறகு அசுரர்கள்
மற்றும்
தேவதைகளின்
யுத்தத்தையும்
காண்பித்திருக்கின்றனர்.
ஒரே
ஒரு
யுத்தம்
மட்டும் காண்பியுங்களேன்!
இரண்டு
எதற்காக?
இங்கு
நடக்கும்
விசயம்
தான்
என்று
தந்தை
புரிய
வைக்கின்றார்.
யுத்தம்
என்பது
இம்சையாக
ஆகிவிடுகிறது.
இது
அகிம்சா
பரமோ
தேவி
தேவதா
தர்மம்
ஆகும்.
நீங்கள் இப்பொழுது
இரட்டை
அகிம்சாதாரிகளாக
ஆகிறீர்கள்.
உங்களுடையது
யோக
பலத்திற்கான
விசயமாகும்.
ஆயுதங்களின்
மூலம்
நீங்கள்
யாருக்கும்
ஒன்றும்
செய்வது
கிடையாது.
அந்த
சக்தியானது
கிறிஸ்தவர்களிடத்திலும் அதிகமாக
இருக்கிறது.
ரஷ்யா
மற்றும்
அமெரிக்கா
இரண்டு
சகோதரர்கள்
ஆவர்.
இந்த
இருவருக்கும்
தான் அணுகுண்டு
தயாரிப்பதில்
போட்டி
நிலவுகிறது.
இருவரும்
ஒருவரை
விட
மற்றொருவர்
சக்தி
மிக்கவர்களாக உள்ளார்கள்.
ஒருவேளை
இருவரும்
தங்களுக்குள்
ஒன்றாக
சேர்ந்து
விட்டால்
முழு
உலகையும்
இராஜ்யம் செய்யுமளவிற்கு
சக்தி
மிக்கவர்களாக
ஆகிவிட
முடியும்.
ஆனால்
புஜ
பலத்தின்
மூலம்
யாரும்
உலக இராஜ்யம்
அடைவதற்கான
சட்டம்
கிடையாது.
இரண்டு
பூனைகள்
தங்களுக்குள்
சண்டையிட்டுக்
கொண்டது,
வெண்ணெய்யை
மூன்றாமவர்
சாப்பிட்டு
விட்டது
என்ற
கதையும்
காண்பிக்கின்றனர்.
இவை
அனைத்தையும் தந்தை
இப்பொழுது
புரிய
வைக்கின்றார்.
இதை
அறியாமலேயே
இருந்திருந்திருந்தோம்.
இந்த
சித்திரங்களையும் தந்தை
தான்
திவ்ய
திருஷ்டியின்
மூலம்
உருவாக்கியிருக்கின்றார்.
மேலும்
இப்பொழுது
புரிய
வைத்துக் கொண்டிருக்கின்றார்,
அவர்கள்
தங்களுக்குள்
சண்டையிட்டுக்
கொள்கின்றனர்.
முழு
உலகின்
இராஜ்யத்தையும் நீங்கள்
எடுத்துக்
கொள்கிறீர்கள்.
அந்த
இருவரும்
மிகவும்
சக்தி
வாய்ந்தவர்கள்.
அங்கு
இங்கு
என்று தங்களுக்குள்
சண்டையிட
வைக்கின்றனர்,
பிறகு
உதவியும்
செய்து
கொண்டிருக்கின்றனர்.
ஏனெனில்
அவர்களது வியாபாரமும்
உயர்ந்தது
ஆகும்.
எப்பொழுது
இரண்டு
பூனைகளும்
சண்டையிட்டுக்
கொள்கிறதோ
அப்பொழுது தான்
ஆயுதங்கள்
காரியத்தில்
பயன்படுத்தப்படும்.
அதனால்
ஆங்காங்கே
இருவரை
சண்டையிட
வைக்கின்றனர்.
இந்த
பாகிஸ்தானும்
இந்துஸ்தானும்
முன்பு
பிரிந்திருந்ததா
என்ன!
இரண்டும்
சேர்ந்து
இருந்தது.
இவையனைத்தும் நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது.
யோக
பலத்தின்
மூலம்
உலகிற்கு
எஜமானர்
ஆவதற்கான
முயற்சி
இப்பொழுது நீங்கள்
செய்து
கொண்டிருக்கிறீர்கள்.
அவர்கள்
தங்களுக்குள்
சண்டையிட்டுக்
கொள்கின்றனர்,
வெண்ணெயை இடையில்
நீங்கள்
சாப்பிட்டு
விடுவீர்கள்.
வெண்ணெய்
என்றால்
உலக
இராஜ்யம்
உங்களுக்கு
கிடைக்கும்,
என்று
பொருள்
அதுவும்
மிக
எளிதான
முறையில்
கிடைத்து
விடும்.
தந்தை
கூறுகின்றார்
–
இனிமையிலும் இனிய
குழந்தைகளே!
அவசியம்
தூய்மையாக
ஆக
வேண்டும்.
தூய்மையாகி
தூய்மையான
உலகிற்குச்
செல்ல வேண்டும்.
அது
விகாரமற்ற
உலகம்,
சம்பூர்ண
நிர்விகாரி
உலகம்
என்று
கூறப்படுகிறது.
ஒவ்வொரு
பொருளும் சதோ
பிரதானம்,
சதோ,
ரஜோ,
தமோவிற்கு
அவசியம்
வருகிறது.
உங்களுக்கும்
இந்த
புத்தி
இல்லாமல் இருந்தது
என்று
தந்தை
புரிய
வைக்கின்றார்.
ஏனெனில்
சாஸ்திரங்களில்
இலட்சம்
ஆண்டுகள்
என்று
கூறிவிட்டனர்.
பக்தி
என்றாலே
அஞ்ஞான
இருளாகும்.
இதுவும்
முன்பு
உங்களுக்கு
தெரியாமல்
இருந்தது.
இப்பொழுது புரிந்து
கொண்டீர்கள்,
கலியுகம்
இன்னும்
40
ஆயிரம்
ஆண்டுகள்
இருப்பதாக
அவர்கள்
கூறுகின்றனர்.
நல்லது,
40
ஆயிரம்
ஆண்டுகளுக்குப்
பிறகு
என்ன
ஆகும்?
என்பது
யாருக்கும்
தெரியாது.
அதனால்
தான்
அஞ்ஞான இருளில்
தூங்கிக்
கொண்டிருக்கின்றனர்
என்று
கூறப்படுகிறது.
பக்தி
என்றால்
அஞ்ஞானமாகும்.
ஞானம் கொடுப்பவர்
ஒரே
ஒரு
தந்தை
ஆவார்,
அவர்
ஞானக்
கடலாக
இருக்கின்றார்.
நீங்கள்
ஞான
நதிகளாக இருக்கிறீர்கள்.
தந்தை
வந்து
குழந்தைகளாகிய
உங்களுக்கு
அதாவது
ஆத்மாக்களுக்கு
கற்பிக்கின்றார்.
அவர் தந்தையாகவும்
இருக்கின்றார்,
ஆசிரியராகவும்
இருக்கின்றார்,
சத்குருவாகவும்
இருக்கின்றார்.
வேறு
யாரும் இவ்வாறு
கூற
முடியாது
-
அவர்
நமது
தந்தை,
ஆசிரியர்,
குருவாக
இருக்கின்றார்.
இது
எல்லையற்ற விசயமாகும்.
எல்லையற்ற
தந்தை,
ஆசிரியர்,
சத்குருவாக
இருக்கின்றார்.
சுயம்
அவரே
வந்து
புரிய
வைக்கின்றார்
-
நான்
உங்களது
சுப்ரீம்
தந்தையாகவும்,
நீங்கள்
அனைவரும்
எனது
குழந்தைகளாகவும்
இருக்கிறீர்கள்.
பாபா,
நீங்கள்
அவரே
தான்
என்று
நீங்களும்
கூறுகிறீர்கள்.
நீங்கள்
கல்ப
கல்பத்திற்கும்
சந்திக்கிறீர்கள்
என்று தந்தையும்
கூறுகின்றார்.
ஆக
அவர்
பரம்
ஆத்மா,
சுப்ரீம்
ஆவார்.
அவர்
வந்து
குழந்தைகளுக்கு
அனைத்து விசயங்களையும்
புரிய
வைக்கின்றார்.
கலியுகத்தின்
ஆயுள்
40
ஆயிரம்
ஆண்டுகள்
என்று
கூறுவது
முற்றிலும் கட்டுக்
கதையாகும்.
5
ஆயிரம்
ஆண்டுகளில்
அனைத்தும்
வந்து
விடுகிறது.
தந்தை
என்ன
புரிய
வைக்கின்றாரரோ அதை
நீங்கள்
ஏற்றுக்
கொள்கிறீர்கள்,
புரிந்து
கொள்கிறீர்கள்.
நீங்கள்
ஏற்றுக்
கொள்வதில்லை
என்பது
கிடையாது.
ஒருவேளை
ஏற்றுக்
கொள்ளவில்லையெனில்
இங்கு
வர
முடியாது.
இந்த
தர்மத்தைச்
சார்ந்தவராக
இல்லையெனில் ஏற்றுக்
கொள்ளமாட்டார்கள்.
அனைத்திற்கும்
ஆதாரம்
பக்தியில்
இருக்கிறது
என்று
தந்தை
புரிய
வைக்கின்றார்.
யார்
அதிக
பக்தி
செய்திருக்கிறார்களோ
அவர்கள்
பக்தியின்
பலன்
அடைய
வேண்டும்.
அவர்களுக்குத்
தான் தந்தையிடமிருந்து
எல்லையற்ற
ஆஸ்தி
கிடைக்கிறது.
நாம்
தான்
தேவதைகளாக
உலகிற்கு
எஜமானர்களாக ஆகிறோம்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
பாக்கி
குறைவான
நேரம்
தான்
இருக்கிறது.
இந்த
பழைய
உலகின் விநாசமும்
காண்பிக்கப்பட்டிருக்கிறது.
வேறு
எந்த
சாஸ்திரங்களிலும்
இப்படிப்பட்ட
விசயங்கள்
கிடையாது.
ஒரே
ஒரு
கீதை
தான்
பாரதத்தின்
தர்ம
சாஸ்திரமாகும்.
ஒவ்வொருவரும்
அவரவர்களது
தர்ம
சாஸ்திரம் படிக்க
வேண்டும்.
மேலும்
அந்த
தர்மம்
யார்
மூலம்
ஸ்தாபனை
செய்யப்பட்டதோ
அவரையும்
அறிந்து கொள்ள
வேண்டும்.
எவ்வாறு
கிறிஸ்தவர்கள்
கிறிஸ்துவை
அறிந்திருக்கின்றனர்,
அவரை
மட்டுமே
ஏற்றுக் கொள்கின்றனர்,
பூஜிக்கின்றனர்.
நீங்கள்
ஆதி
சநாதன
தேவி
தேவதா
தர்மத்தைச்
சார்ந்தவர்கள்
எனில் தேவதைகளை
மட்டுமே
பூஜிக்கிறீர்கள்.
ஆனால்
இன்றைய
நாட்களில்
தன்னை
இந்து
தர்மத்தைச்
சார்ந்தவன் என்று
கூறி
விடுகின்றனர்.
குழந்தைகளாகிய
நீங்கள்
இப்பொழுது
இராஜயோகம்
கற்றுக்
கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள்
இராஜரிஷிகளாக இருக்கிறீர்கள்.
அவர்கள்
ஹடயோக
ரிஷிகள்.
இரவு
பகல்
வித்தியாசம்
இருக்கிறது.
அவர்களது
சந்நியாசம் பக்குவமற்றது,
எல்லைக்குட்பட்டது
ஆகும்.
வீடு
வாசல்
விடுவது
மட்டுமாகும்.
உங்களது
சந்நியாசம்
அல்லது வைராக்கியம்
என்னவெனில்
முழு
பழைய
உலகை
விடுவதாகும்.
முதன்
முதலில்
தனது
இனிய
வீட்டிற்குச் சென்று
பிறகு
புது
உலகம்
சத்யுகத்திற்கு
வருவீர்கள்.
பிரம்மாவின்
மூலம்
ஆதி
சநாதன
தேவி
தேவதா
தர்மம் ஸ்தாபனை
ஆகிறது.
இப்பொழுது
இது
தூய்மை
இல்லாத
பழைய
உலகமாகும்.
இது
புரிந்து
கொள்ள
வேண்டிய விசயமாகும்.
தந்தையிடத்தில்
படிக்கிறீர்கள்.
இது
நிச்சயமாக
உண்மையானது
அல்லவா!
இதில்
நம்பிக்கையற்ற விசயம்
எதுவும்
கிடையாது.
இந்த
ஞானம்
தந்தை
தான்
கற்பிக்கின்றார்.
அந்த
தந்தை
ஆசிரியராகவும் இருக்கின்றார்,
உண்மையான
சத்குருவாகவும்
இருக்கின்றார்,
கூடவே
அழைத்துச்
செல்பவர்
ஆவார்.
அந்த குருமார்கள்
பாதியில்
விட்டு
விட்டு
சென்று
விடுவர்.
ஒரு
குரு
சென்று
விட்டால்
மற்றொருவரை
குருவாக்கி விடுகின்றனர்.
அவரது
சிஷ்யரை
சிம்மாசனத்தில்
அமர
வைப்பர்.
இங்கு
தந்தை
மற்றும்
குழந்தைக்கான விசயமாகும்.
அங்கு
குரு
மற்றும்
சிஷ்யனுக்கான
எல்லைக்குட்பட்ட
ஆஸ்தியாகும்.
தந்தையின்
ஆஸ்தி
தான் தேவை
அல்லவா!
சிவபாபா
வருவதே
பாரதத்தில்
தான்.
சிவராத்திரி
மற்றும்
கிருஷ்ண
ராத்திரி
கொண்டாடுகின்றனர் அல்லவா!
சிவனுக்கு
ஜாதகம்
கிடையாது.
பிறகு
எவ்வாறு
கூற
முடியும்?
அவரது
நாள்,
கிழமை
கிடையவே கிடையாது.
கிருஷ்ணர்
முதல்
நம்பரில்
வருபவர்
என்று
காண்பிக்கின்றனர்.
தீபாவளி
கொண்டாடுவது
உலகாய மனிதர்களின்
காரியமாகும்.
குழந்தைகளாகிய
உங்களுக்கு
தீபாவளி
கிடையாது.
நமது
புது
ஆண்டு,
என்று
புது உலகம்
சத்யுகம்
கூறப்படுகிறது.
இப்பொழுது
நீங்கள்
புது
உலகிற்காக
படித்துக்
கொண்டிருக்கிறீர்கள்.
இப்பொழுது நீங்கள்
புருஷோத்தம
சங்கமயுகத்தில்
இருக்கிறீர்கள்.
அந்த
கும்ப
மேளாவிற்கு
எவ்வளவு
மனிதர்கள்
செல்கின்றனர்!
அது
நதி
நீரின்
மேளா
ஆகும்.
எவ்வளவு
மேளாக்கள்
கொண்டாடப்படுகிறது.
அவர்களுக்குள்ளும்
பல பஞ்சாயத்துக்கள்
இருக்கின்றன.
சில
நேரங்களில்
அவர்களுக்கும்
மிகப்
பெரிய
சண்டை
ஏற்பட்டு
விடுகிறது,
ஏனெனில்
தேக
அபிமானிகள்
அல்லவா!
இங்கு
சண்டைக்கான
விசயமே
கிடையாது.
தந்தை
கூறுவது என்னவெனில்
இனிமையிலும்
இனிய
செல்லமான
குழந்தைகளே!
என்னை
நினைவு
செய்யுங்கள்.
சதோ பிரதானத்திலிருந்து
தமோ
பிரதானமாக
ஆகிவிட்ட
உங்களது
ஆத்மாவில்
கறை
படிந்திருக்கிறது
அல்லவா!
அதை
யோக
அக்னியின்
மூலம்
நீக்குங்கள்.
தங்க
வியாபாரிகள்
அறிவார்கள்,
தந்தையைத்
தான்
பதீத
பாவன் என்று
கூறுகின்றோம்.
தந்தை
சுப்ரீம்
தங்க
வியாபாரியாக
இருக்கின்றார்.
அனைவரின்
கறைகளையும்
நீக்கி சுத்தத்
தங்கமாக
ஆக்கிவிடுகின்றார்.
தங்கம்
நெருப்பில்
போடப்படுகிறது.
இது
யோகா
அதாவது
நினைவு அக்னியாகும்.
ஏனெனில்
நினைவின்
மூலம்
தான்
பாவங்கள்
அழியும்.
நினைவு
யாத்திரையின்
மூலம்
தான் தமோ
பிரதானத்திலிருந்து
சதோ
பிரதானமாக
ஆவீர்கள்.
அனைவரும்
சதோ
பிரதானமாக
ஆகிவிடமாட்டார்கள்.
முந்தைய
கல்பத்தைப்
போன்று
தான்
முயற்சி
செய்வார்கள்.
பரம்
ஆத்மாவிற்கும்
நாடகத்தில்
பாகம் பதிவாகியிருக்கிறது.
எது
பதிவாகியிருக்கிறதோ
அது
நடைபெற்றுக்
கொண்டே
இருக்கும்.
மாற்ற
முடியாது.
ரீல்
(படச்சுருள்)
சுற்றிக்
கொண்டே
இருக்கும்.
நாட்கள்
செல்ல
செல்ல
உங்களுக்கு
ஆழமான
விசயங்களை கூறுவேன்
என்று
தந்தை
கூறுகின்றார்.
முதன்
முதலில்
இந்த
நம்பிக்கை
இருக்க
வேண்டும்
–
அவர் அனைத்து
ஆத்மாக்களுக்கும்
தந்தையானவர்.
அவரை
நினைவு
செய்ய
வேண்டும்.
மன்மனாபவ
என்பதன் பொருளும்
இது
தான்.
மற்றபடி
கிருஷ்ண
பகவானின்
மகாவாக்கியம்
என்பது
கிடையாது.
ஒருவேளை கிருஷ்ணராக
இருந்தால்
பிறகு
அனைவரும்
அவரிடத்தில்
சென்று
விடுவர்.
அனைவரும்
அறிந்து
விடுவர்.
பிறகு
ஏன்
என்னை
கோடியில்
சிலர்,
சிலரிலும்
சிலர்
தான்
புரிந்து
கொள்வர்
என்று
கூறுகின்றார்?
இதை தந்தை
தான்
புரிய
வைக்கின்றார்,
அதனால்
தான்
மனிதர்கள்
புரிந்து
கொள்வதற்கு
கடினமாக
இருக்கிறது.
முன்பும்
இவ்வாறு
ஏற்பட்டிருந்தது.
நான்
வந்து
தான்
தேவி
தேவதா
தர்மத்தை
ஸ்தாபனை
செய்திருந்தேன்,
பிறகு
இந்த
சாஸ்திரங்கள்
அனைத்தும்
மறைந்து
விடும்.
பிறகு
தனது
சரியான
நேரத்தில்
பக்தி
மார்க்கத்தின் சாஸ்திரங்கள்
அனைத்தும்
வெளிப்படும்.
சத்யுகத்தில்
ஒரு
சாஸ்திரமும்
இருக்காது.
பக்தியின்
பெயர்,
அடையாளம் இருக்காது.
இப்பொழுது
பக்தியின்
இராஜ்யம்
ஆகும்.
அனைவரையும்
விட
உயர்ந்ததிலும்
உயர்ந்தவர்
ஸ்ரீ
ஸ்ரீ
108
ஜெகத்குரு
என்று
கூறிக்
கொள்பவர்
ஆவார்.
இன்றைய
நாட்களில்
ஆயிரத்து
எட்டு
என்றும்
கூறி விடுகின்றனர்.
உண்மையில்
இந்த
மாலை
இங்கு
சம்மந்தப்பட்டதாகும்.
மாலை
உருட்டுகின்ற
பொழுது
மணியாக இருப்பவர்
நிராகாரமானவர்
என்றும்,
பிறகு
இருப்பது
ஜோடியாகும்.
பிரம்மா
சரஸ்வதி
யுகல்
மணிகளாக இருக்கின்றனர்.
ஏனெனில்
இல்லற
மார்க்கம்
அல்லவா!
இல்லற
மார்க்கத்தினர்
துறவற
மார்க்கத்தினரை
குருவாக ஆக்கிக்
கொண்டால்
அவர்கள்
என்ன
கொடுப்பார்கள்?
ஹடயோகம்
கற்க
வேண்டியிருக்கும்.
அது
பல வகையான
ஹடயோகமாகும்,
இராஜயோகம்
என்றால்
ஒரே
மாதிரியானது
ஆகும்.
நினைவு
யாத்திரை
என்பது ஒன்றே
ஒன்று
தான்,
இதுவே
இராஜயோகம்
என்று
கூறப்படுகிறது.
மற்ற
அனைத்தும்
ஹடயோகங்களும்
சரீர ஆரோக்கியத்திற்கானது.
இந்த
இராஜயோகம்
தந்தை
தான்
கற்பிக்கின்றார்.
ஆத்மா
தான்
முதன்மையானது,
பிறகு
வருவது
தான்
சரீரம்.
நீங்கள்
தன்னை
ஆத்மாவிற்குப்
பதிலாக
சரீரம்
என்று
புரிந்து
கொண்டு
தலைகீழாக ஆகிவிட்டீர்கள்.
இப்பொழுது
தன்னை
ஆத்மா
என்று
உணர்ந்து
தந்தையை
நினைவு
செய்தால்
கடைசி
நிலை நல்ல
நிலையாக
ஆகிவிடும்.
நல்லது.
இனிமையிலும்
இனிய,
தேடிக்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாய்
தந்தையுமான
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1)
ஏற்கெனவே
உருவாக்கப்பட்ட
இந்த
அநாதி,
அழிவற்ற
நாடகத்தில்
ஒவ்வொருவரின் நடிப்பையும்
ஆத்ம
அபிமானியாகி,
சாட்சியாக
இருந்து
பார்க்க
வேண்டும்.
தனது
இனிய
வீடு
மற்றும்
இனிய
இராஜ்யத்தை
நினைவு
செய்ய
வேண்டும்.
இந்த
பழைய
உலகை
புத்தியினால் மறந்து
விட
வேண்டும்.
2)
மாயையிடம்
தோற்கக்
கூடாது.
நினைவு
அக்னியின்
மூலம்
பாவங்களை
அழித்து
ஆத்மாவை தூய்மையாக்குவதற்கான
முயற்சி
செய்ய
வேண்டும்.
வரதானம்
–
எல்லைக்குட்பட்ட
பகட்டுகளில்
இருந்து
விலகி,
ஆன்மிகப்
பெருமிதத்தில்
இருக்கக் கூடிய
அன்பான
புத்தி
உள்ளவர்
ஆகுக.
குழந்தைகள்
பலர்
எல்லைக்குட்பட்ட
சுபாவ-சம்ஸ்காரங்களின்
தளுக்கு-மினுக்குகளை
அதிகம்
செய்கின்றனர்.
எங்கே
என்னுடைய
சுபாவம்,
என்னுடைய
சம்ஸ்காரங்கள்
என்ற
வார்த்தை
வருகிறதோ,
அங்கே
இது
போன்ற கர்வம்
ஆரம்பமாகி
விடுகின்றன.
இந்த
எனது
என்ற
வார்த்தை
தான்
சுற்றல் கொண்டு
விடுகிறது.
ஆனால் எது
தந்தையிடமிருந்து
வேறுபட்டதாக
உள்ளதோ,
அது
என்னுடையதே
இல்லை.
எனது
சுபாவம்
தந்தையின் சுபாவத்திலிருந்து வேறுபட்டதாக
இருக்க
முடியாது.
அதனால்
எல்லைக்குட்பட்ட
அகங்காரத்தில்
இருந்து விலகி,
ஆன்மிகப்
பெருமிதத்தில்
இருங்கள்.
அன்பான
புத்தி
உள்ளவராகி,
அன்பினால்
கவர
வேண்டுமானால் செய்யுங்கள்.
சுலோகன்
–
தந்தை
மீது,
சேவை
மீது
மற்றும்
பரிவாரத்தின்
மீது
அன்பு
இருக்குமானால்
கடின
உழைப்பிலிருந்து விடுபட்டு
விடுவீர்கள்.
ஓம்சாந்தி