19.05.2019                           காலை முரளி                ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           28.11.19.84          மதுபன்


 

எண்ணத்தை வெற்றிகரமாக ஆக்குவதற்கான சுலபமான வழி

 

இன்று உலகைப் படைத்தவர், உலகிற்கு நன்மை செய்யும் தந்தை உலகை சுற்றி வலம் வருவதற்காக, விசேஷமாக அனைத்து குழந்தைகளையும் கண்காணிக்கப்பதற்காக நாலாபுறங்களிலும் சென்றார். ஞான சொரூப ஆத்மாமான குழந்தைகளையும் பார்த்தோம். அன்பான சகயோகி குழந்தைகளையும் பார்த்தோம். பக்த குழந்தைகளையும் பார்த்தோம். அஞ்ஞான குழந்தைகளையும் பார்த்தோம். பல விதமான ஆத்மாக்கள் அவரவர்களுடைய காரியத்தில் முழ்கியிருப்பதை பார்த்தோம். ஒரு சிலர் சில காரியங்களைச் செய்யும் ஈடுபாட்டில் முழ்கியிருந்தார்கள், சிலர் உடைக்கும் காரியத்தில் முழ்கியிருந்தார்கள், சிலர் இணைக்கும் காரியத்தில் முழ்கியிருந்தார்கள். ஆனால் அனைவரும் அவசியம் முழ்கியிருந்தார்கள். அனைவரின் மனதில் ஏதாவது கிடைக்க வேண்டும், ஏதாவது எடுக்க வேண்டும், ஏதாவது அடைய வேண்டும் என்ற இந்த எண்ணம் தான் இருந்தது. மேலும் இதே இலட்சியத்தோடு ஒவ்வொருவரும் அவரவர்களின் காரியத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். எல்லைக்குட்பட்ட பிராப்தியாக இருந்தாலும், ஏதாவது கிடைத்து விட வேண்டும் அல்லது ஏதாவது ஆகி விட வேண்டும் என்ற இந்த முழு ஆர்வத்தில் தான் அனைத்து பக்கமும் பார்த்தோம். இவர்களின் மத்தியில் விசேஷமாக பிராமண குழந்தைகளையும் பார்த்தோம். பாரதம் மற்றும் வெளிநாட்டு அனைத்து குழந்தைகளிடமும் இப்பொழுது ஏதாவது செய்து விடவேண்டும் என்ற ஒரு எண்ணம் இருப்பதை பார்த்தோம். எல்லைக்கு அப்பாற்பட்ட காரியத்தில் ஏதாவது விசேஷம் செய்து காண்பிக்க வேண்டும், மேலும் தனக்குள்ளும் ஏதாவது விசேஷத்தை தாரணை செய்து விசேஷ ஆத்மா ஆகிவிடவேண்டும் என்ற ஊக்கத்தைப் பெறுமான்மையான குழந்தைகளிடம் பார்த்தோம். ஊக்கம் உற்சாகத்தின் விதையை தன்னுடைய முயற்சி செய்வது, கூடவே நேரத்தின் சூழ்நிலையில் அனைவரின் மனதில் வெளிப்ப்டையாகவே பார்த்தோம். இதே ஊக்கத்தின் விதையை நிரந்தரமாக ஆக்குவதற்காக அடிக்கடி கவனம் கொடுக்கும் தண்ணீர் மற்றும் சோதனை அதாவது எப்பொழுதும் வளர்ச்சியடைவதற்கான விதி என்ற சூரிய ஒளி கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதில் வரிசைக்கிரமம் ஆகிவிடுகிறார்கள். விதை விதைக்க அனைவருக்கும் தெரிகிறது, ஆனால் பாலனை செய்து பழம் கொடுக்கும் சொரூபமாக ஆக்குவதில் வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறது..

 

பாப்தாதா அமிர்தவேளையிலிருந்து நாள் முழுவதும் குழந்தைகளின் இந்த விளையாட்டு என்று கூறினாலும் அல்லது முழு ஈடுபாட்டின் வளர்ச்சி என்று கூறினாலும், அதை தினசரி பார்க்கிறோம். ஒவ்வொருவரும் தனக்காக மற்றும் சேவைக்காக மிக நல்ல நல்ல ஊக்கம் நிறைந்த, இப்பொழுதிலிருந்து இதை செய்தேன், அப்படி செய்தேன், அவசியம் செய்வேன் என்ற எண்ணத்தை சிந்திக்கிறார்கள். கண்டிப்பாக செய்து காண்பிப்பேன் என்ற சிரேஷ்ட எண்ணத்தின் விதை விதைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். பாப்தாதாவுடன் ஆன்மீக உரையாடல் செய்யும் பொழுதும், மிகவும் இனிமையான விஷயங்களைக் கூறுகிறார்கள். ஆனால் எப்பொழுது அந்த எண்ணத்தை அதாவது விதையை நடைமுறையில் கொண்டு வருவதற்கான பாலணை செய்கிறார்கள் என்றால் என்ன ஆகிறது? ஏதாவதொரு விஷயத்தில் வளர்பதின் விதியில் மற்றும் பழ (பலன்) சொரூபமாக ஆக்கும் விசேஷத்தில் வரிசைக்கிரமமாக சக்திக்கு ஏற்றபடி செய்தவர்களாக ஆகிவிடுகிறார்கள். எந்தவொரு என்ணம் என்ற விதையை நன்றாக வளரச் செய்து பழம் கொடுக்க வைப்தற்கான சுலபமான வழி ஒன்றே ஒன்று தான். அது - எப்பொழுதும் விதை ரூப தந்தையிடம் ஒவ்வொரு நேரமும் அனைத்து சக்திகளின் பலத்தை அந்த விதையில் நிரப்பிக் கொண்டு இருக்க வேண்டும். விதை ரூபமாக உங்களுடைய எண்ணம் என்ற விதை இயல்பாக மற்றும் சுலபமாக வளர்ந்து பழம் கொடுப்பதாக மாறிவிடும். ஆனால் விதை ரூபத்தோடு நிரந்தர தொடர்பு இல்லாத காரணத்தினால் மற்ற ஆத்மாக்களை மற்றும் சாதனங்களை வளர்ப்பதற்கான விதியாக ஆக்கி விடுகிறார்கள். இந்த காரணத்தினால் அப்படிச் செய்யலாம், இப்படிச் செய்யலாம், இவர் மாதிரி செய்யலாம் என்ற விஸ்தாரத்தில் நேரம் மற்றும் உழைப்பை அதிகம் ஈடுபடுத்துகிறார்கள். ஏனென்றால் ஏதாவது ஆத்மாவை அல்லது சாதனத்தை ஆதாரமாக ஆக்கிவிடுகிறார்கள். கடல் மற்றும் சூரியனிடமிருந்து தண்ணீர் மற்றும் சூரிய ஒளி கிடைப்பதற்குப் பதிலாக எவ்வளவு தான் சாதனங்களின் தண்ணீர் மூலம் ஆத்மாக்களை ஆதாரம் என்று நினைத்து, சக்தி கொடுப்பதினால் விதை பழம் கொடுப்பதாக ஆக முடியாது. எனவே கடுமையாக உழைத்த பிறகு, அதிக நேரத்தை ஈடுபடுத்திய பிறகும் எப்பொழுது வெளிப்படையான பலன் ஆவதில்லையோ, அப்பொழுது நடைமுறையில் உற்சாகம் குறைந்து விடுகிறது. பிறகு தன் மீதும் தன்னுடன் இருப்பவர்கள் மீதும் சேவையின் மீதும் சோர்வுடைவர்களாக மாறிவிடுகிறார்கள். சில நேரம் குஷி, சில சோர்வு என்ற இரண்டு அலைகளும் பிராமண வாழ்க்கைப் படகை சில நேரம் ஆட்டுகிறது, சில நேரம் ஓட்டுகிறது. இன்றைய நாட்களில் அனேக குழந்தைகளின் வாழ்க்கை முறை இப்படியாகத் தென்பட்டது. அதாவது இந்த வாழ்க்கையில் இருக்கிறோம், காரியமும் செய்து கொண்டு இருக்கிறோம், ஆனால் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி அனுபவம் செய்வதில்லை, எனவே குஷி இருக்கிறது, ஆனால் குஷியில் நடனமாடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது இல்லை. போய் கொண்டிருக்கிறோம், ஆனால் அதி வேகத்தில் இல்லை. உயர்ந்த வாழ்க்கை உள்ளவர்களாக ஆகிவிட்டோம், தந்தையின் குழந்தை விட்டோம், சேவாதாரியாக ஆகிவிட்டோம், துக்கம், வேதனை நிறைந்த உலகத்திலிருந்தும் விலகி வந்துவிட்டோம் என்ற அதிர்ப்த்தியும் இருக்கிறது. ஆனால் திருப்தியின் இடையே அதிருப்தியின் அலை விரும்பாவிட்டாலும், புரிந்துக் கொண்ட போதிலும் வந்து விடுகிறது, ஏனென்றால், ஞானம் சுலபமானது, நினைவு செய்வதும் சுலபம் தான்! சம்மந்தம் மற்றும் தொடர்பில் விலகியிருப்பவர் மற்றும் அன்பானவர் ஆகி, அன்பை திருப்பிச் செய்வதில் சில நேரம் சுலபமாகவும், சில நேரம் கடினமாகவும் அனுபவம் ஆகிறது.

 

பிராமண குடும்பம் மற்றும் சேவையின் குடும்பம் இதைத் தான் சம்மந்தம் சம்பர்க்கம் (தொடர்பு) என்று கூறுவது. இதில் ஏதாவதொரு விஷயத்தில் எப்படி அனுபவம் ஆக வேண்டுமோ, அப்படி செய்வதில்லை. இந்த காரணத்தினால் இரண்டு அலைகளும் இருக்கிறது. இப்பொழுது நேரத்தின் அருகாமையின் காரணமாக, முயற்சியின் இந்த வேகம், நேரத்திற்கு ஏற்றாற்போல் சம்பூர்ண இலட்சியத்தை சென்றடைய விடாது. இப்பொழுதைய நேரமே தடைகளை அழிப்பவராகி, உலகின் தடைகளுக்கு நடுவில் துக்கமான ஆத்மாக்களுக்கு சுகம் நிம்மதியின் அனுபவத்தை செய்விப்பது. நீண்ட காலத்து தடையற்ற நிலையில் இருப்பது தான் தடைகளை அகற்றும் காரியத்தை செய்ய முடியும். இதுவரையிலும் தன்னுடைய வாழ்க்கையில் வரும் தடைகளை அகற்றுவதிலேயே பிஸியாக இருக்கிறீர்கள், மேலும் அதிலேயே சக்தியை ஈடுபடுத்திக் கொண்டேயிருந்தீர்கள் என்றால், மற்றவர்களுக்கு சக்தி கொடுப்பதற்காக பொறுப்பாளர் எப்படி ஆக முடியும்.? தடையற்றவராகி சக்திகளின் கையிருப்பை சேமிப்பு செய்யுங்கள். அப்பொழுது தான் சக்தி ரூபம் ஆகி, தடைகளை அழிக்கும் காரியத்தைச் செய்ய முடியும். புரிந்ததா!

 

விசேஷமாக இரண்டு விஷயங்கள் பார்த்தோம். அஞ்ஞானி குழந்தைகள் பாரதத்தில் பதவியை அடைவதிலும் மற்றும் பதவியை அடைய வைப்பதிலுமே ஈடுபட்டு இருக்கிறார்கள். இரவு பகலாக கனவில் கூட பதவி தான் தென்படுகிறது. மேலும் பிராமண குழந்தைகள் தன்னை நிலையாக வைத்துக் கொள்ளவதில்லேயே ஈடுபட்டு இருந்தார்கள். பதவி கிடைத்துவிட்டது, ஆனால் அதில் தன்னை நிலைக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளி நாட்டில் தங்களாலேயே உருவாக்கபட்ட அழிக்கும் சக்தியிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழியைத் தேடுவதிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள். பெரும்பான்மையோரின் வாழ்க்கை, வாழ்க்கையாக இல்லை. ஆனால் கேள்வி குறி ஆகிவிட்டது. அஞ்ஞானிகள் தங்களை காப்பாற்றுவதிலேயே ஈடுபட்டு இருக்கிறார்கள். மேலும் ஞானிகள் பிரத்யக்த்சதின் (வெளிப்படுத்தும்) கொடியைப் பறக்க விடுவதில்லேயே ஈடுபட்டிருக்கிறார்கள். இது தான் உலகின் நிலைமை. இப்பொழுது பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றுங்கள். பலவிதமான பிரச்சனைகளில் அலைந்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு அமைதியின் புகலிடம் கொடுங்கள். நல்லது.

 

எப்பொழுதும் சம்பன்ன நிலை என்ற இருக்கையில் தன்னை நிலைத்திருக்க வைக்கும், தன்னுடைய மற்றும் உலகின் தடைகளை அழிப்பவருக்கு, விதை ரூப தந்தையின் சம்மந்ததினால், ஒவ்வொரு சிரேஷ்ட எண்ணம் என்ற விதையை பலன் அளிப்பதாக ஆக்கி பிரத்யக்ச பலன் என்ற பழத்தை அருந்தக்கூடிய, எப்பொழுதும் திருப்தியாக இருக்கும் திருப்தி மணி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் வணக்கம்..

 

இந்தூர் விடுதியில் இருக்கும் குமாரிகளோடு பாப்தாதாவின் சந்திப்பு

தன்னுடைய பாக்கியத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் இல்லையா? தவறான மார்க்கத்தில் செல்வதிலிருந்து தப்பித்துக் கொண்டீர்கள். இழப்பதற்குப் பதிலாக வருமானம் செய்யும் வாழ்க்கையை உருவாக்கி விட்டீர்கள். உலகிய வாழ்க்கையில் ஞானமின்றி இழப்பே இழப்பு தான், மேலும் ஞானி வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியும் வருமானமே வருமானம் தான். பார்க்கப்போனால் அனைத்து பிராமணர்களும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் தான், ஆனால் இருந்தாலும் குமாரிகள் இரட்டை அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். மேலும் குமாரி வாழ்க்கையில்  பிரம்மாகுமாரி ஆவது, பிராமணன் ஆவது என்பது மிகவும் மகான் நிலை. இது சாதாரண விஷயம் இல்லை, மிகப் பெரிய விஷயம். நான் எப்படி அகியுள்ளேன் என்ற போதை இருக்கிறதா? சாதாரண குமாரியிலிருந்து, சக்தி ரூபம் ஆகிவிட்டேன். மாயாவை சம்ஹாரம் செய்யும் சக்திகள் தான் இல்லையா! நீங்கள் மாயாவைக் கண்டு பயப்படுவர்கள் இல்லை, ஆனால் சம்ஹாரம் செய்பவர்கள். பலஹீனமானவர்கள் இல்லை, ஆனால் மிகுந்த பலம் பொருந்தியவர்கள். எப்போதாவது சின்ன சின்ன விஷயங்களில் பயப்படுவது இல்லையே? எப்பொழுதும் சிரேஷ்ட பிராப்தியை நினைவு வைத்துக் கொண்டீர்கள் என்றால், சின்ன சின்ன விஷயங்கள் ஒன்றுமே இல்லை என்று அனுபவம் ஆகும். இப்பொழுது முழு வாழ்க்கையின் முடிவை எடுத்து விட்டீர்களா? அல்லது எதுவரை ஹாஸ்டலில் இருக்கிறீர்களோ, அதுவரையிலும் தான் இந்த முடிவா? யாரும் புரிந்துக் கொண்ட பிறகு ஒருபொழுதும் சிரேஷ்ட வாழ்க்கையில் இருந்து சாதரண வாழ்க்கையில் செல்ல முடியாது. ஒருவேளை யாராவது ஒரு இலட்சாதிபதியிடம் நீங்கள் ஏழை ஆகிவிடுங்கள் என்று கூறினால் ஆவாரா? சூழ்நிலை காரணமாக யாராவது ஏழையாக ஆகிவிட்டால் கூட நல்லதாக இருக்காது. இந்த வாழ்க்கையோ சுய இராஜ்ய வாழ்க்கை, அதிலிருந்து சாதாரண வாழ்க்கைக்குச் செல்ல முடியாது. இப்பொழுது நன்றாகப் புரிந்துக் கொண்டவராகி, அனுபவம் செய்துக் கொண்டீர்களா அல்லது மற்றவர்களின் தொடர்பின் காரணமாக இந்த வாழ்க்கையில் இருக்கிறீர்களா? தன்னுடைய புத்தியால் முடிவு எடுத்திருக்கிறீர்களா? தன்னுடைய விவேகத்தின் முடிவினால் தான் இந்த வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறீர்களா?. அல்லது தாய் தந்தையர் கூறினார்கள் என்பதால் வந்திருக்கிறீர்களா? நல்லது.

 

2. குமாரிகள் உங்களை நீங்களே அனைத்து சேவைக்கும் அர்ப்பணம் செய்திருக்கிறீர்களா? எங்காவது சேவைக்காக அனுப்பினால் செல்வீர்களா? உறுதியான முடிவு எடுத்திருக்கிறீர்களா? அல்லது கொஞ்சம் பலஹீனமானதா? உறுதியான முடிவு எடுத்திருக்கிறீர்கள் என்றால், எங்கே அமர வைக்கிறாரோ, என்ன செய்விக்கிறாரோ. அந்த மாதிரி தயாராக இருக்கிறீர்களா? ஒருவேளை ஏதாவது பந்தனம் இருக்கிறது என்றால், உறுதியான முடிவு இல்லை! ஒருவேளை நீங்களே தயாராக இருக்கிறீர்கள் என்றால், யாரும் நிறுத்த முடியாது. வெள்ளாட்டை கட்டி வைத்திருப்பார்கள், சிங்கத்தை யாரும் கட்ட முடியாது. எனவே சிங்கம் யாருடைய பந்தனத்திலும் எப்படி வரமுடியும்? அது காட்டில் இருந்தாலும், சுதந்திரமாக இருக்கிறது. அப்படியானால் நீங்கள் யார்? சிங்கம் என்றால் மைதானத்தில் வருபவர். எதுவரை ஒரே பலம், ஒருவர் மீதே நம்பிக்கை இருக்கிறது என்றால், தைரியம் குழந்தைகளுடையது, உதவி தந்தையினுடையது. எப்படிப்பட்ட கடுமையான பந்தனமாக இருந்தாலும், தைரியத்தின் ஆதாரத்தில் அந்த பந்தனமும் சுலபமாக விலகிவிடும். எப்படி (மகாபாரதத்தில்) ஜெயிலின் பூட்டும் தானாகவே திறந்து விட்டது என்று காண்பிக்கிறார்கள். அதேபோல் உங்களுடைய பந்தனமும் அகன்றுவிடும். எனவே அந்தமாதிரி ஆகுங்கள். ஒருவேளை சிறிதளவு பந்தனம் இருக்கிறது என்றால், அதை யோக அக்னியால் பஸ்மம் செய்துவிடுங்கள். பஸ்மம் ஆகிவிட்டது என்றால், பெயர் அடையாளம் மறைந்துவிடும். துண்டிப்பதினால் வடு ஏற்பட முடியும். எனவே துண்டிக்காதீர்கள் ஆனால் பஸ்மம் செய்தீர்கள் என்றால், நிரந்தரமாக விடுபட்டு விடுவீர்கள். நல்லது.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்யக்த மகாவாக்கியம்

சரளத்தன்மையுடையவர் (எளிமை) ஆனீர்கள் என்றால், வெற்றி கிடைத்து கொண்டேயிருக்கும். பிராமணர்களின் முக்கிய சம்ஸ்காரம் - சர்வஸ்சுவ (அனைத்தையும்) தியாகி. தியாகத்தின் மூலம் தான் வாழ்க்கையில் சரளத்தன்மை மற்றும் சகித்துக் கொள்ளும் குணம் சுலபமாக வந்துவிடும். யாரிடம் சரளத்தன்மை, சகித்துக் கொள்ளும் தன்மை இருக்கின்றதோ, அவர் மற்றவர்களையும் அவசியம் தன் பக்கம் கவர்ந்திழுப்பார், மேலும் ஒவ்வொருவரின் அன்பிற்குரியவராக ஆக முடியும். யார் அவரே சரளத்தன்மையுடைவராக இருக்கிறாரோ, அவர் மற்றவர்களையும் சரளத்தன்மையுடையவராக ஆக்க முடியும். சரளத்தன்மை என்றால், எந்த விஷயத்தைக் கேட்டாலும், பார்த்தாலும், செய்தாலும், அது சாரம் நிறைந்தாக இருக்க வேண்டும், மேலும் சாரத்தை மட்டும் தான் எடுக்க வேண்டும். மேலும் எந்த விஷயம் மற்றும் காரியத்தை அவர் செய்கிறாரோ, அவையும் சாரம் நிரம்பியதாக இருக்க வேண்டும்.

 

யார் சரள முயற்சி செய்பவராக இருப்பாரோ, அவர் மற்றவர்களையும் சரள முயற்சி செய்பவராக ஆக்கிவிடுவார். சரள முயற்சி செய்பவர் அனைத்து விஷயங்களிலும் ஆல்ரவுண்டராக இருப்பார். அதாவது அனைத்து காரியங்களையும் செய்பவராக இருப்பார். அவரில் எந்தவொரு விஷயத்தின் குறையும் தென்படாது. எந்தவொரு விஷயத்திலும் தைரியம் குறைவாக இருக்காது. அவர் இதை இப்பொழுது செய்ய முடியாது என்ற வார்த்தையைக் கூறமாட்டார். இந்த ஒரே ஒரு சரளத்தன்மை எனும் குணத்தின் மூலம் அவர் அனைத்து விஷயங்களிலும் உதாரணமாகி, மதிப்புடன் தேர்ச்சியடைபவர் ஆகிவிடுவார். எப்படி சாகார பாபாவைப் பார்த்தீர்கள் - எந்தளவு ஞானம் நிறைந்தவராக இருந்தாரோ, அந்தளவு சரள சுபாவம் உடையவராகவும் இருந்தார். இதைத் தான் குழந்தை பருவத்தின் சம்ஸ்காரம் என்று கூறுவது. வயதானவருக்கு வயதானவர், குழந்தை பருவத்திற்கு குழந்தை பருவம். அந்தமாதிரி தந்தையைப் பின்பற்றி நடந்து சரளத்தன்மை உடைவர் ஆகுங்கள்.

 

மற்றவர்களின் சம்ஸ்காரத்தை சரளமாக ஆக்குவதற்கான வழி - சரி செய்கிறேன்! என்று கூறுவது. எப்பொழுது நீங்கள் சரி, சரி என்று கூறிவீர்களோ, அந்தளவு அங்கு சத்தியுகத்தில் உங்களுடைய பிரஜை களும் அந்தளவு சரி, சரி என்று கூறுவார்கள். ஒருவேளை இங்கேயே இல்லை, முடியாது என்று கூறினீர்கள் என்றால், அங்கும் பிரஜை தூரத்தில் இருந்தே வணங்குவார். எனவே இல்லை, முடியாது என்ற வார்த்தையை அகற்றி விடுங்கள். எந்தவொரு விஷயமாக இருந்தாலும், முதலில் சரி என்று கூறவேண்டும். இதன் மூலம் சம்ஸ்காரங்களில் சரளத்தன்மை வந்துவிடும். வெற்றியடைபவராக ஆவதற்காக முக்கிய குணம் சரளத்தன்மை மற்றும் சகித்துக்கொள்ளும் தன்மையை தாரணை செய்யுங்கள். எப்படி யாராவது தைரியம் நிறைந்த மனிதர் யோசித்து புரிந்து காரியம் செய்கிறார் என்றால், வெற்றி கிடைக்கிறது. அதுபோலவே யார் சரள சுபாவம் மற்றும் சகித்துக் கொள்ளும் தன்மை உடையவராக இருப்பாரோ, அவர் தன்னுடைய சகித்துக் கொள்ளும் சக்தி மூலம் எப்படிப்பட்ட கடுமையான சம்ஸ்காரம் உள்ளவர்களையும் சீதளமாக்கி விடுவார், கடுமையான காரியத்தை சகஜமாகச் செய்து விடுவார்.

 

உங்களுடைய நினைவுச் சின்னமாக தேவதைகளின் விக்கிரகங்களை உருவாக்குகிறார்கள்.. அதில் முகத்தில் அவசியம் சரளத் தன்மையை காண்பிப்பார்கள். இந்த விஷயத்தை குணத்தைக் காண்பிக்கிறார்கள். யாருடைய லட்சணத்தில் சரளத் தன்மை இருக்கிறதோ, அவரை நீங்கள் வெகுளியானவர் என்று கூறுகிறீர்கள். யார் எந்தளவு சகஜ முயற்சி செய்பவராக இருப்பரோ, அவர் மனதின் எண்ணங்களிலும் சரளமாக, வார்த்தைகளிலும் சரளமாக, காரியத்திலும் சரளமாக இருப்பார். அவரைத் தான் ஃபரிஸ்தா என்று கூறுவது. சரளத் தன்மையின் குணத்தின் தாரணையின் கூடவே உள்ளடக்கம், சகித்துக் கொள்ளும் சக்தியும் அவசியம் வேண்டும். ஒருவேளை உள்ளடக்கம் மற்றும் சகித்துக் கொள்ளும் சக்தி இல்லையென்றால், சரளத் தன்மையானது மிகுந்த வெகுளியான ரூபத்தை தாரணை செய்து விடுகிறது. மேலும் சில நேரம் வெகுளித்தன்மை மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே அந்தமாதிரி (வெகுளியான) சரளத் தன்மையுடையவராக ஆகாதீர்கள்.

 

சரளத் தன்மையின் குணம் காரணமாக தந்தையையும் போலாநாத் அதாவது கள்ளம் கபடமற்றவர் என்று கூறுகிறீர்கள். ஆனால் அவர் போலாநாத்தாக இருப்பதுடன் சர்வ சக்திவானாகவும் இருக்கிறார். கள்ளம் கபடமற்றவர் மட்டும் இல்லை. எனவே நீங்களும் சரளத் தன்மை குணத்தை தாரணை செய்யுங்கள். ஆனால் தன்னுடைய சக்தி சொரூபத்தையும் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை சக்தி சொரூபத்தை மறந்து வெகுளியானவராக மட்டும் ஆகிவிடுகிறீர்கள் என்றால், மாயாவின் குண்டடி பட்டு விடுகிறது. எனவே அந்த மாதிரி சக்தி சொரூபமாக ஆகுங்கள். அதன் காரணமாக மாயா எதிர் தாக்குதல் செய்வதற்கு முன்பாகவே நமஸ்காரம் செய்து விட வேண்டும். மிகவும் கவனமானவர்களாக, எச்சரிக்கையுடைவராக, புத்திசாலியாக இருக்க வேண்டும். பிராமண வாழ்க்கையே அந்த மாதிரி விசேஷங்கள் நிரம்பியவராக ஆக்குங்கள். அதன் காரணமாக உங்களுடைய சுபாவம் எப்பொழுதும் சரளமாக, வார்த்தையும் சரளமாக, ஒவ்வொரு காரியமும் சரளத் தன்மை நிரம்பியதாக இருக்கட்டும். எப்பொழுதும் ஒருவரின் வழிப்படி நடப்பவராக, ஒருவருடன் அனைத்து சம்மந்தங்களை வைத்திருப்பவராக, ஒருவரிடமிருந்து அனைத்து பிராப்திகளும் செய்பவராகி எப்பொழுதும் ஒரே சீராக இருப்பதற்காக சகஜ பயிற்சியுடையவர் ஆகுங்கள். எப்பொழுதும் குஷியாக இருங்கள், மேலும் குஷியின் பொக்கிஷத்தை அனைவருக்கும் வழங்குங்கள்.

 

சரளத் தன்மையின் குணத்தை வாழ்க்கையில் கொண்டு வருவதற்காக தற்சமயம் ஒரு விஷயத்தின் மீது மட்டும் அவசியம் கவனம் வைக்க வேண்டும். உங்களுடைய மனநிலை (ஸ்திதி) மகிமை செய்யும் ஆதாரத்தில் இருக்க வேண்டாம். ஒருவேளை மகிமையின் ஆதாரத்தில் உங்களுடைய நிலை இருக்கிறது என்றால், நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்களோ, அதன் பலனின் இச்சை மற்றும் பேராசை இருக்கும். ஒருவேளை புகழ் பாடப்படுவீர்கள் என்றால், மனநிலை நன்றாகத் தான் இருக்கும். ஆனால் ஒருவேளை நிந்தனை செய்யப்படுகிறீர்கள் என்றால், ஒன்றுமில்லாதவர் ஆகிவிடுவீர்கள். உங்களுடைய நிலையை விட்டுவீர்கள். மேலும் தந்தையை மறந்து விடுகிறீர்கள். எனவே என்னுடைய புகழ்ச்சி ஏற்பட வேண்டும் என்று ஒருபொழுதும் நினைக்காதீர்கள். புகழ்ச்சியின் ஆதாரத்தில் மனநிலை வைக்காதீர்கள். அப்பொழுதுதான் சரளத்தன்மையுடைவர் என்று கூறுவோம். சரளத் தன்மையை தன்னுடைய உண்மையான சுபாவமாக ஆக்குவதினால் (விஸ்தாரத்தை) சுருக்கத்தில் கொண்டு வரும் சக்தியும் சுலபமாக வந்து விடுகிறது. யார் சரள சுபாவமுடையவராக இருப்பாரோ, அவர் அனைவரின் அன்பிற்குரியவராக இருப்பார், அவருக்கு அனைவர் மூலமாகவும் சக யோகமும் அவசியம் கிடைக்கும். எனவே அவர் அனைத்து விஷயங்களை சுலபமாகவே எதிர்நோக்கவும் முடியும், உள்ளடக்கவும் முடியும். யார் எந்தளவு சரள சுபாவம் உடையவராக இருப்பாரோ, அந்தளவு மாயாவும் குறைவாக எதிர்க்கவும் செய்யும். அவர் அனைவரின் பிரியமானவர் ஆகிவிடுவார்.

 

சரள சுபாவம் உடையவருக்கு வீணான எண்ணம் அதிகம் இருக்காது. அவருடைய நேரமும் வீணாகச் செல்லாது. வீணான எண்ணம் இல்லாத காரணத்தினால் அவருடைய புத்தி விசாலமானதாக மற்றும் தொலை நோக்குப் பார்வையுடையதாக இருக்கிறது, எனவே அவருடைய எதிரில் எந்தவொரு பிரச்சனையும் எதிர்நோக்க முடியாது. எவ்வளவு சரளத்தனமை இருக்குமோ, அந்தளவு தூய்மையும் இருக்கும். தூய்மை அனைவரையும் தன் பக்கம் கவர்ந்திழுக்கும். தூய்மை என்றால், உண்மையாக மற்றும் தெளிவாக இருப்பது, எப்பொழுது தனது சுபாவத்தை சரளமாக ஆக்குவீர்களோ, அப்பொழுது தான் அது வரும். சரள சுபாவம் உடையவர் பல ரூபங்கள் உடையவராக ஆக முடியும். மென்மையான பொருளை எந்த ரூபத்தில் கொண்டு வந்தாலும் அது வர முடியும். இப்பொழுது நீங்கள் தங்கமாக ஆகியிருக்கிறீர்கள். ஆனால் தங்கத்தை இப்பொழுது அக்னியில் உருக்கினீர்கள் என்றால், அதை வளைக்கவும் முடியும். இந்த குறையின் காரணமாக சேவையின் வெற்றியிலும் குறைவு ஏற்பட்டு விடுகிறது. தன்னுடைய மற்றும் மற்றவர்களின் கடந்த காலத்தைப் பார்க்காமல் இருந்தீர்கள் என்றால், சரளத் தன்மையுடைவர் ஆகிவிடுவீர்கள். யார் சரளத் தன்மையுடையவராக இருப்பாரோ, அவரிடமே இனிமையின் குணம் பிரத்யக்சமாக (வெளிப்படையாக) தென்படும். அவருடைய கண்களிலிருந்து, வாயிலிருந்து,நடத்தையிலிருந்து இனிமைத் தன்மை பிரத்யக்ச ரூபத்தில் பார்க்க தென்படும். யார் எந்தளவு தெளிவாக இருப்பரோ, அவர் அந்தளவே சரளமாகவும், சிரேஷ்டமாகவும் இருப்பார். தெளிவுத்தன்மை சிரேஷ்ட தன்மையின் அருகாமையில் இருக்கிறது. மேலும் எந்தளவு தெளிவுத் தன்மை இருக்குமோ, அந்தளவு வெற்றியும் ஏற்படும். மேலும் சமநிலையும் வந்துக் கொண்டேயிருக்கும். தெளிவுத் தன்மை, சரளத் தன்மை மற்றும் சிரேஷ்ட தன்மை ஆகியவை தந்தைக்குச் சம்மாக ஆக்கிவிடுகிறது.

 

வரதானம்:

எந்தவொரு சூழ்நிலையிலும் முற்றுப் புள்ளி வைத்து தன்னை பரிவர்த்தனை (மாற்றம்) செய்யக் கூடிய அனைவரின் ஆசீர்வாதங்களுக்கும் பாத்திரமானவர் ஆகுக.

 

எப்பொழுது புள்ளி சொரூப தந்தை மற்றும் புள்ளி சொரூப ஆத்மா இரண்டின் நினைவு இருக்கிறதோ, அப்பொழுது தான் எந்தவொரு சூழ்நிலையிலும் முற்றுப் புள்ளி இட முடியும். கட்டுப்படுத்தும் சக்தி இருக்க வேண்டும். எந்த குழந்தை எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னை பரிவர்த்தனை செய்து முற்றுப் புள்ளி இடுவதில் தன்னை முதலில் முன்னுக்கு வைக்கிறாரோ, அவர் ஆசீர்வாதங்களுக்குப் பாத்திரமானவர் ஆகிவிடுகிறார். அவருக்கு அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்கள் அதாவது குஷி கிடைக்கிறது, தந்தை மற்றும் பிராமண பரிவாரத்தின் மூலமாகவும் ஆசீர்வாதங்கள் கிடைக்கிறது.

 

சுலோகன்:

எந்த எண்ணத்தை வைக்கிறீர்களோ, அதன் மீது இடையிடையே திடத் தன்மையின் முத்திரை இட்டுக் கொண்டேயிருந்தீர்கள் என்றால் வெற்றியடைபவர் ஆகிவிடுவீர்கள்.

 

அறிவிப்பு:

இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்று கிழமை. அனைவரும் கூட்டாக அமைர்ந்து மாலை 6.30 முதல் 7.30 வரை இண்டர்நேஷனல் யோகாவில் கலந்துக் கொண்டு தன்னுடைய டபுள் லைட் சொரூபம் மூலமாக முழு உலகிற்கும் அமைதி மற்றும் சக்தியின் கிரஹணங்களைக் கொடுக்கும் சேவை செய்யுங்கள். முழு நாளும் உள்நோக்குப் பார்வை என்ற குகையில் இருந்து கர்மயோகியாகி காரியம் செய்யுங்கள்

 

ஓம்சாந்தி