07.07.2019                           காலை முரளி               ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           26.12.19.84          மதுபன்


 

சத்தியத்தின் சக்தி

 

சர்வசக்திவான் தந்தை இன்று விசேஷமாக இரண்டு சக்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒன்று இராஜ்ய சக்தி அதாவது அரசியல் சக்தி இன்னொன்று ஈஸ்வரிய சக்தி, இந்த இரண்டு சக்திகளுக்கும் இப்பொழுது சங்கமயுகத்தில் விசேஷ பங்கு நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் சக்தி குழப்பத்தில் இருக்கிறது. ஈஸ்வரிய சக்தி எப்பொழுதும் நிலையானதாக அழியாததாக இருக்கிறது. ஈஸ்வரிய சக்தியை சத்தியத்தின் சக்தி என்று கூறலாம், ஏனென்றால், கொடுப்பவர் சத்திய தந்தை, சத்திய ஆசிரியர், சத்திய குரு. எனவே சத்தியத்தின் சக்தி எப்பொழுதும் உயர்வானது. சத்தியத்தின் மூலமாக சத்யுகம், சத்திய கண்டத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். சத்தியம் என்றால் அழியாதது என்ற பொருளும் இருக்கிறது. எனவே சத்தியத்தின் சக்தி மூலமாக அழியாத ஆஸ்தி, அழியாத வாழ்க்கையை பிராப்தி செய்விக்கும் படிப்பு, அழியாத வரதானத்தை பிராப்தி செய்திருக்கிறீர்கள். இந்த பிராப்தியை யாரும் அழிக்க முடியாது. சத்தியத்தின் சக்தியின் காரணமாக சத்தியத்தின் சக்தியுள்ள உங்களுக்கு, பக்தி மார்க்கத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை முழு உலகமும் அழியாத மகிமை மற்றும் பூஜை செய்தே வருகிறது அதாவது மகிமையும், பூஜையும் அழியாததாகி விடுகிறது. அழியாதது என்றால் சத்தியமானது, எனவே முதன் முதலில் என்ன தெரிந்து கொண்டீர்கள்? தன்னைத் தானே அழியாத ஆத்மா என்று தெரிந்து கொண்டீர்கள். அழியாத தந்தையின் சத்தியமான அறிமுகத்தைத் தெரிந்து கொண்டீர்கள்.. இந்த சத்திய அறிமுகத்தினால், சத்திய ஞானத்தினால் சத்தியத்தின் சக்தி இயல்பாகவே சத்தியம் அதாவது அழியாதது ஆகிவிடுகிறது. சத்தியத்தின் சக்தி மூலமாக அசத்தியம் என்ற இருள், அஞ்ஞானம் என்ற இருள் இயல்பாகவே அகன்று விடுகிறது. அஞ்ஞானம் எப்பொழுதும் அசத்தியமாக இருக்கும். ஞானம் சத்தியமானது, எனவே பக்தர்களும் தந்தையின் மகிமையாக சத்தியம் சிவம் சுந்தரம் என்று கூறியிருக்கிறார்கள். சத்தியத்தின் சக்தி சுலபமாகவே இயற்கையை வென்றவர், மாயாவை வென்றவர் ஆக்கிவிடும். நான் சத்தியமான தந்தையின் குழந்தை என்றால், எனக்குள் சத்தியத்தின் சக்தி எந்தளவு தாரணை ஆகியிருக்கிறது என்று உங்களை நீங்களே கேளுங்கள்.

 

சத்தியத்தின் சக்தி இருக்கிறது என்பதின் அடையாளம், அவர் எப்பொழுதும் பயமற்றவராக இருப்பார். முரளியில் கேட்டிருக்கிறீர்கள், உண்மை இருக்கிறது என்றால் நடனமாடுவார்கள், அதாவது சத்தியத்தின் சக்தியுள்ளவர்கள் எப்பொழுதும் கவலையில்லாமல் இருக்கும் காரணத்தினால் எப்பொழுதும் நடனமாடிக் கொண்டிருப்பார். எங்கு பயமிருக்குமோ, கவலையிருக்குமோ அங்கு குஷியில் நடனமாட முடியாது. தன்னுடைய பலஹீனங்களின் கவலையும் இருக்கும். தன்னுடைய சம்ஸ்காரம் மற்றும் எண்ணம் பலஹீனமாக இருக்கிறது என்றால், சத்ய மார்க்கமாக இருக்கும் காரணத்தினால் மனதில் தன்னுடைய பலஹீனத்தின் சிந்தனை அவசியம் இருக்கும். பலஹீனம் மனநிலையை மேலே கீழே அவசியம் கொண்டு வரும், எவ்வளவு தான் தன்னை மறைத்தாலும், அற்பகாலத்தின் நேரத்திற்கு ஏற்றபடி சூழ்நிலைக்கேற்றபடி வெளிமுகமாக போலியான புன்சிரிப்பை காண்பித்தாலும், ஆனால் சத்தியத்தின் சக்தி தன்னை அவசியம் உணர வைக்கும். தந்தையிடமிருந்து மற்றும் தன்னிடமிருந்து மறைக்க முடியாது. மற்றவர்களிடமிருந்து மறைக்க முடியும். அலட்சியத்தின் காரணமாக சில நேரம் உணர்ந்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் தன்னைத் தானே நடத்திக் கொள்வார்கள். இருந்தாலும் சத்தியத்தின் சக்தி மனதில் குழப்பத்தின் ரூபத்தில், வீணான எண்ணங்கள் ரூபத்தில், சோர்வின் ரூபத்தில், அவசியம் வரும், ஏனென்றால் சத்தியத்தின் எதிரில் அசத்தியம் நிலைத்திருக்க முடியாது. எப்படி பக்தி மார்க்கத்தில் கடலின் நடுவே பாம்பின் மேல் நடனமாடிக் கொண்டிருக்கிறார் (ஸ்ரீ கிருஷ்ணர்) என்ற படத்தை காண்பித்திருக்கிறார்கள், அது பாம்பு தான், ஆனால் சத்தியத்தின் சக்தி மூலம் பாம்பும் நடனமாடுவதற்கான மேடை ஆகிவிடுகிறது. எப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலையாக இருந்தாலும், மாயாவின் கோரமான ரூபமாக இருந்தாலும், உறவு மற்றும் தொடர்பில் இருப்பவர்கள் தொந்தரவு செய்பவர்களாக இருந்தாலும், வாயுமண்டலம் எவ்வளவு தான் விஷமானதாக இருந்தாலும், சத்தியத்தின் சக்தி உள்ளவர், இவை அனைத்தையும் குஷியில் நடனமாடுவதற்கான மேடையாக ஆக்கிவிடுவார். அப்படியானால் இந்தப் படம் யாருடையது? உங்கள் அனைவரினுடையது தான் இல்லையா! அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகுபவர்கள். இதில் தான் கையை உயர்த்துகிறீர்கள் இல்லையா?! இராமரின் சரித்திரங்களில் அந்தமாதிரியான விஷயங்கள் இல்லை, அவருடையது இந்த நேரம் பிரிந்த நிலை, அடுத்த நேரம் குஷியில் இருப்பது என்றிருக்கும். எனவே ஸ்ரீ கிருஷ்ணன் ஆகக்கூடிய ஆத்மாக்கள் அம்மாதிரியான நிலை என்ற மேடையில் எப்பொழுதும் நடனமாடிக் கொண்டே இருப்பார்கள், எந்தவொரு இயற்கையும், மாயா அல்லது நபரும், வைபவங்களும் அவரை அசைக்க முடியாது. மாயாவையே தன்னுடைய மேடை மற்றும் படுக்கை ஆக்கிவிடுவார், இந்தப் படத்தையும் பார்த்திருக்கிறீர்கள் இல்லையா? பாம்பை படுக்கை ஆக்கிவிட்டார் என்றால், வெற்றியடைந்தவர் ஆகிவிடுவார். அம்மாதிரி சத்தியத்தின் சக்தியின் அடையாளமாக, சத்தியம் இருக்கிறது என்றால், நடனமாடலாம் என்று இந்தப் படம் இருக்கிறது. சத்தியத்தின் சக்தியுள்ளவர் ஒருபோதும் மூழ்க முடியாது. சத்தியம் என்ற படகு ஆடும், அசையும், ஆனால் மூழ்க முடியாது, ஆடுவது அசைவது கூட ஒரு விளையாட்டாக அனுபவம் ஆகும். இன்றைய நாட்களில் விளையாட்டைக் கூட வேண்டுமென்றே மேலே, கீழே ஆடக்கூடியதாக உருவாக்குகிறார்கள் இல்லையா? அது விழுவதாக இருக்கும் ஆனால் விளையாட்டாக இருக்கும் காரணத்தினால் வெற்றியடைந்தாக அனுபவம் செய்வார்கள். எவ்வளவு தான் மேலே, கீழே செல்வதாக இருந்தாலும், ஆனால் விளையாடுபவர் தான் வெற்றியடைந்தாக நினைப்பார். அந்த மாதிரி சத்தியத்தின் சக்தி என்றால் வெற்றியடைவதற்கான வரம் பெற்றவர் என்று தன்னை நினைக்கிறீர்களா? ஒருவேளை இதுவரையிலும் கூட ஏதாவது சஞ்சலம், பயம் இருக்கிறது என்றால், சத்தியத்தின் கூடவே அசத்தியமும் இன்னும் இருக்கிறது, எனவே சஞ்சலத்தில் கொண்டு வருகிறது. எனவே எண்ணம், பார்வை, உள்உணர்வு, வார்த்தை மற்றும் உறவு, தொடர்பில் சத்தியத்தின் சக்தி உறுதியாக இருக்கிறதா? என்று சோதனை செய்யுங்கள். நல்லது. இன்று சந்திப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே இந்த சத்தியத்தின் சக்தியை பற்றி, பிராமண வாழ்க்கையில் எப்படி விசேஷம் நிரம்பி நடந்து கொள்ள முடியும் என்ற விஸ்தாரத்தைப் பின்பு கூறுவோம். புரிந்ததா.

 

இரட்டை வெளிநாட்டினர் கிறிஸ்துமஸ் கொண்டாடி விட்டீர்களா அல்லது இன்றும் கிறிஸ்துமஸ்ஸா? பிராமண குழந்தைகளுக்காக சங்கமயுகமே கொண்டாடுவதற்கான யுகம் தான். எனவே தினசரி பாடுங்கள், ஆடுங்கள், குஷியாக இருங்கள். கல்பத்தின் கணக்குப்படி சங்கமயுகம் கொஞ்ச நாட்களுக்கு சமமானது இல்லையா? எனவே சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் பெரியது. நல்லது.

 

அனைத்து சத்தியத்தின் சக்தி சொரூபமான, சத்திய தந்தையின் மூலமாக சத்திய வரதானம் மற்றும் ஆஸ்தியைப் பெறக்கூடிய, எப்பொழுதும் சத்தியத்தின் சக்தி மூலமாக வெற்றியடையும் ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் இயற்கையை வென்ற, மாயாவை வென்ற, குஷியில் நடனமாடக் கூடிய சத்தியமான குழந்தைகளுக்கு சத்தியமான தந்தை, ஆசிரியர் மற்றும் சத்குருவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

தாதி சந்திரமணி அவர்கள் பாப்தாதாவிடம் விடைபெற்று பஞ்சாப் சென்று கொண்டிருக்கிறார்கள். அனைத்து பஞ்சாப் வாசிகளாக இருப்பவர்கள் இப்பொழுது மதுபன் வாசி ஆகியிருக்கும் குழந்தைகள், பாப்தாதாவின் அன்பு நினைவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். அனைத்து குழந்தைகளும் எப்பொழுதுமே கவலை யில்லாத இராஜாவாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஏன்? யோக சொரூப குழந்தைகள் எப்பொழுதும் குடைநிழலின் உள்ளே இருக்கிறார்கள். யோகி குழந்தைகள் பஞ்சாப்பில் இருக்கவில்லை, ஆனால் பாப்தாதாவின் பாதுகாப்பு குடைநிழலில் இருக்கிறார்கள். பஞ்சாப்பில் இருந்தாலும் சரி, அல்லது வேறு எங்கு இருந்தாலும் சரி, ஆனால் குடை நிழலின் உள்ளே இருக்கும் குழந்தைகள் எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஒருவேளை மேலே கீழே செல்லும் சஞ்சலத்தில் வந்துவிட்டீர்கள் என்றால், ஏதாவது காயம் ஏற்பட்டு விடுகிறது. ஆனால் ஆடாமல் அசையாமல் இருந்தீர்கள் என்றால், காயம் ஏற்படும் ஸ்தானத்தில் இருந்தபோதிலும், ஒரு முடியைக் கூட அசைக்க முடியாது. பாப்தாதாவின் கை மற்றும் துணை இருக்கிறது, எனவே கவலையில்லாத இராஜாவாக இருங்கள். மேலும் அந்தமாதிரி அமைதியற்ற சூழ்நிலையில் அதிகமாக அமைதியின் கிரஹணங்களைப் பரப்புங்கள். நம்பிக்கை இழந்தவர்களுக்கு, ஈஸ்வரிய ஆதரவின் நம்பிக்கையைக் கொடுங்கள். குழப்பத்தில் இருப்பவர்களுக்கு அழியாத ஆதரவை நினைவூட்டி, உறுதியானவர்களாக ஆக்குங்கள். பஞ்சாப்பைச் சேர்ந்தவர்களுக்கு விசேஷமாக இந்த சேவை தான் செய்ய வேண்டும். பஞ்சாப்பைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய பெயரை புகழடையச் செய்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறதென்று. ஏற்கனவே கூறி இருந்தோம். நாலாபுறங்களிலும் எந்தவொரு ஆதரவும் தென்படவில்லை. அந்தமாதிரியான நேரத்தில் இதயத்திற்கு ஆறுதல் கொடுப்பவர்கள், இதயத்திற்கு அமைதியின் ஆதரவு கொடுப்பவர்கள், இந்த சிரேஷ்ட ஆதமாக்கள் தான் என்று அனுபவம் செய்ய வேண்டும். அமைதி இல்லாத நேரத்தில், அமைதிக்கு மகத்துவம் இருக்கும், எனவே அம்மாதிரியான நேரத்தில் இந்த அனுபவத்தை செய்வியுங்கள். இதுவே பிரத்யக்சத்திற்கான ஒரு ஆதாரம் ஆகிவிடும். பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் பயப்படக் கூடாது, ஆனால் அந்தமாதிரியான நேரத்தில் மற்ற அனைவரும் பயமுறுத்துபவர்கள், ஆனால் இவர்கள் ஆதரவு கொடுப்பவர்கள் என்று அனுபவம் செய்ய வேண்டும். எனவே அந்தமாதிரி ஏதாவது மீட்டிங் வைத்து திட்டத்தை உருவாக்குங்கள். பிறகு அந்த அமைதியற்ற ஆத்மாக்களின் கூட்டத்தில் சென்று அமைதியின் அனுபவம் செய்வியுங்கள். ஒருவர் இருவருக்குக் கூட அமைதியின் அனுபவம் செய்வித்தீர்கள் என்றால், ஒருவர் இன்னொருவர் மூலமாக அலை பரவிக் கொண்டிருக்கும், மேலும் இந்த செய்தி வலுவாகச் சென்றடையும். மீட்டிங் செய்து கொண்டிருக்கிறீர்கள், மிகவும் நல்லது. நீங்கள் தைரியம் உள்ளவர்கள், உற்சாகம் உள்ளவர்கள், மேலும் எப்பொழுதுமே சகயோகியாக, அன்பானவராக உடன் இருந்திருக்கிறீர்கள், மேலும் எப்பொழுதும் இருப்பீர்கள். பஞ்சாப்பின் வரிசை எண் பின்னால் இல்லை, முன்னுக்கு இருக்கிறது. பஞ்சாப்பை சிங்கம் என்று கூறுவார்கள், சிங்கம் பின்னால் இருக்காது, முன்னுக்கு இருக்கும். என்னனென்ன நிகழ்ச்சி கிடைக்கிறதோ, அதில் சரி செய்கிறோம், சரி செய்கிறோம் என்று கூறினால், அசம்பவமும் சம்பவம் ஆகிவிடும். நல்லது.  அனைத்து குழந்தைகளுடன் சந்தித்த பிறகு காலை 5.30 மணிக்கு பாப்தாதா சத்குருவாருக்கான அன்பு நினைவுகள் கொடுத்தார்.

 

நாலாபுறங்களிலுமுள்ள சத்திய தந்தை, சத்திய ஆசிரியர், சத்குருவின் உண்மையிலும் உணமையான, மிக நெருக்கமான, அன்பான எப்பொழுதும் துணைவர்களாக இருக்கும் குழந்தைகளுக்கு, சத்குருவார் தினத்தன்று மிகுந்த அன்பு நினைவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். இன்று சத்குருவார் தினத்தன்று பாப்தாதா அனைவருக்கும் எப்பொழுதும் வெற்றி சொரூபமாக இருந்து, எப்பொழுதும் தைரியம், உற்சாகத்தில் இருங்கள். எப்பொழுதும் தந்தையின் குடைநிழலின் உள்ளே பாதுகாப்பாக இருங்கள். எப்பொழுதும் ஒரே பலம், ஒருவர் மேலுள்ள நம்பிக்கை என்ற நிலையில் நிலைத்திருந்து, பார்வையாளார் ஆகி, அனைத்து காட்சிகளைப் பார்த்துக் கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள். அந்தமாதிரி விசேஷ அன்பு நிறைந்த வரதானத்தை கொடுக்கிறோம். இதே வரதானங்களை நினைவில் வைத்துக் கொண்டு, எப்பொழுதும் சக்திசாலியாக இருங்கள், எப்பொழுதும் நினைவு இருக்கட்டும், மேலும் எப்பொழுதும் நினைவில் இருங்கள். நல்லது. - அனைவருக்கும் குட்மார்னிங் மேலும் ஒவ்வொரு நாளுக்குமான வாழ்த்துக்கள்! நல்லது.

 

விசேஷமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்யக்த மகா வாக்கியம்

நினைவை ஜுவாலா சொரூபம் ஆக்குங்கள்.

எப்பொழுது உங்களுடைய நினைவு ஜுவாலா சொரூபமாக இருக்குமோ, அப்பொழுது தான் தந்தைக்கு சமமாக பாவத்தை அழிப்பவராக ஆக முடியும். அந்தமாதிரியான நினைவு தான் உங்களுடைய தெய்வீக காட்சியளிக்கும் மூர்த்தியை பிரத்யக்சம் (வெளிப்படுத்தும்) செய்யும். இதற்காக எந்த நேரமும் நினைவு சாதாரணமானதாக இருக்க வேண்டாம். எப்பொழுதுமே ஜுவாலை சொரூப, சக்தி சொரூப நினைவில் இருங்கள். அன்பின் கூடவே சக்தி ரூபம் இணைந்து இருக்கட்டும்.

 

தற்சமயம் குழுவின் ரூபத்தில் ஜுவாலா சொரூபத்தின் அவசியம் இருக்கிறது. ஜுவாலா சொரூபத்தின் நினைவு தான் சக்திசாலியான வாயுமண்டலத்தை உருவாக்கும், மேலும் பலமற்ற ஆத்மாக்கள், சக்தி நிரம்பியவர்களாக ஆவார்கள். அனைத்து தடைகளும் சுலபமாக அகன்றுவிடும். மேலும் பழைய உலகத்தின் வினாசத்தின் ஜுவாலை சுடர் விட்டு எரியும்.

 

எப்படி சூரியன் உலகிற்கு வெளிச்சத்தையும், மேலும் அநேக அழியும் பிராப்திகளின் அனுபவம் செய்விக்கிறது. அதேபோல் குழந்தைகள் நீங்கள், உங்களுடைய மகான் தபஸ்வி ரூபம் மூலமாக பிராப்தியின் கிரணங்களின் அனுபவம் செய்வியுங்கள். இதற்காக முதலில் சேமிப்புக் கணக்கை அதிகரியுங்கள். எப்படி சூரியனின் கிரணங்கள் நாலாபுறங்களிலும் பரவுகிறது, அதேபோல் நீங்கள் மாஸ்டர் சர்வசக்திவானின் நிலையில் இருந்தீர்கள் என்றால், சக்திகள் விசேஷங்கள் என்ற கிரணங்கள், நாலாபுறங்களிலும் பரவுவதாக அனுபவம் செய்வீர்கள்.

 

ஜுவாலா ரூபம் ஆவதற்கான முக்கியமான மற்றும் சுலபமான முயற்சி - இப்பொழுது திரும்பி வீடு செல்ல வேண்டும் மற்றும் அனைவரையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எப்பொழுதுமே இருக்கட்டும். இந்த நினைவின் மூலம் இயல்பாகவே அனைத்து சம்மந்தம், அனைத்து இயற்கையின் கவர்ச்சியிருந்து விலகி அதாவது சாட்சியாக ஆகிவிடுவீர்கள். சாட்சி ஆவதினால், சுலபமாகவே தந்தையின் சாத்தி அதாவது துணைவன் மற்றும் தந்தைக்குச் சமமாக ஆகிவிடுவீர்கள்.

 

ஜுவாலா சொரூப நினைவு என்றால், லைட் ஹவுஸ் மற்றும் மைட் ஹவுஸ் நிலையைப் புரிந்து கொண்டு, அதே முயற்சி செய்வதில் இருங்கள். விசேஷமாக ஞான சொரூபத்தின் அனுபவி ஆகி, சக்திசாலியானவர் ஆகுங்கள். அதன் மூலம் சிரேஷ்ட ஆத்மாக்கள் உங்களுடைய நல்ல உள்ளுணர்வு மற்றும் நன்மை பயக்கும் உள்ளுணர்வு, மேலும் சக்திசாலியான சூழலின் மூலமாக துடித்துக் கொண்டிருக்கும், அலைந்து கொண்டிருக்கும், கூக்குரல் இட்டு கொண்டிருக்கும் அநேக ஆத்மாக்களுக்கு ஆனந்தம், சாந்தி மற்றும் சக்தியின் அனுபவம் ஆகட்டும்.

 

எப்படி அக்னியில் ஏதாவது ஒரு பொருளை போடுவதினால், அதனுடைய பெயர், ரூபம், குணம் அனைத்தும் மாறிவிடும், அதே போல் எப்பொழுது தந்தையின் முழு ஈடுபாட்டின் அக்னியில் இருக்கிறீர்கள் என்றால், பரிவர்த்தனை ஆகிவிடுகிறீர்கள். மனிதனிலிருந்து பிராமணன் ஆகி, பிறகு பிராமணிலிருந்து ஃபரிஸ்தா ஆகி, அதிலிருந்து தேவதை ஆகிவிடுகிறீர்கள். எப்படி களிமண்ணை அச்சில் போட்டு, நெருப்பு சூளையில் வைக்கிறார்கள் என்றால், அது செங்கலாகி விடுகிறது, அதே போல் இதுவும் பரிவர்த்தனை ஆகிவிடுகிறது. எனவே இந்த நினைவைத் தான் ஜுவாலா ரூபம் என்று கூறுவது.

 

நீங்கள் சேவாதாரியாக இருந்தாலும், அன்பிற்குரியவராக இருந்தாலும், ஒரு பலம், ஒருவர் மேல் நம்பிக்கையுள்ளவராக இருந்தாலும், இவை அனைத்துமே சரிதான். ஆனால் மாஸ்டர் சர்வசக்திவானின் நிலை அதாவது லைட் மைட் ஹவுஸின் நிலை என்ற அந்த நிலையில் வந்து விடவேண்டும். நினைவு ஜுவாலா ரூபம் ஆகிவிடுகிறது என்றால், அனைவரும் உங்கள் எதிரில் விட்டில் பூச்சி மாதிரி சுற்றி வரத் தொடங்குவார்கள்.

 

ஜுவாலா சொரூப நினைவிற்காக மனம் மற்றும் புத்தி இரண்டிற்கும், ஒன்று சக்திசாலியான ஃபரேக் வேண்டும், மேலும் வளைப்பதற்கான சக்தியும் வேண்டும். இதனால் புத்தியின் சக்தி மற்றும் வேறு எந்த சக்தியும் வீண் ஆகாமல் சேமிப்பு ஆகிக் கொண்டேயிருக்கும். எந்தளவு சேமிப்பு ஆகுமோ, அந்தளவே பகுத்தறியும் மற்றும் நிர்ணயம் செய்வதற்கான சக்தி அதிகரிக்கும். இதற்காக இப்பொழுது எண்ணங்களின் விஸ்தாரத்தை முடித்துக் கொண்டேயிருங்கள். அதாவது சுருக்கத்தில் கொண்டு வரும் சக்தியை தாரணை செய்யுங்கள். எந்தவொரு காரியம் செய்து கொண்டே அல்லது பேசிக் கொண்டே இடையிடையே எண்ணங்களின் போக்குவரத்தை நிறுத்துங்கள். ஒரு நிமிடத்திற்காகவாது மனதின் எண்ணங்களை, உடல் மூலமாக நடைமுறையில் காரியங்கள் செய்து கொண்டு இடையில் நிறுத்திக் கூட இந்தப் பயிற்சியை செய்யுங்கள். அப்பொழுது பிந்து ரூபத்தின் சக்திசாலியான நிலையில் நிலைத்திருக்க முடியும். எப்படி அவ்யக்த நிலையில் இருந்து காரியம் செய்வது சரளமாகிக் கொண்டேயிருக்கிறது, அதேபோலவே இந்த பிந்து ரூபத்தின் நிலையும் சுலபமாகிவிடும்.

 

எப்படி ஏதாவது கிரிமிகளை அழிப்பதற்காக டாக்டர்கள் மின்சாரத்தின் கிரணங்களை செலுத்துகிறார்கள். அதேபோல் நினைவின் சக்திசாலியான கிரணங்கள் ஒரு வினாடியில் அநேக பாவங்கள் என்ற கிரிமிகளை பஸ்மம் செய்துவிடுகிறது. பாவம் பஸ்மம் ஆகிவிட்டது என்றால், பிறகு தன்னை சுமையற்றதாக மற்றும் சக்திசாலியாக அனுபவம் செய்வீர்கள். நிரந்தர சகஜயோகியாகவோ இருக்கிறீர்கள், இந்த நினைவின் நிலையை இடையிடையே சக்திசாலியாக ஆக்குவதற்காக மட்டும் கவனம் என்ற சக்தியை நிரப்பிக் கொண்டேயிருங்கள். தூய்மையை கடைப்பிடிப்பது எப்பொழுது சம்பூரண ரூபத்தில் இருக்குமோ, அப்பொழுது உங்களுடைய சிரேஷ்ட எண்ணத்தின் சக்தி முழு ஈடுபாட்டின் அக்னியை பிரகாசமாக சுடர் விடச் செய்யும், அந்த அக்னியில் அனைத்து குப்பைகளும் பஸ்மம் ஆகிவிடும். பிறகு என்ன நினைப்பீர்களோ, அதுவே நடக்கும், விஸ்தாரமான சேவை இயல்பாகவே நடந்துவிடும்.

 

எப்படி தேவிகளின் நினைவு சின்னத்தில் ஜுவாலை மூலமாக அசுரர்களை பஸ்மம் செய்துவிட்டார்கள் என்றே காண்பிக்கிறார்கள். அசுரன் இல்லை, ஆனால் அசுர சக்திகளை அழித்து விட்டார்கள். இது இந்த நேரத்தின் நினைவு சின்னம். இப்பொழுது ஜுவாலாமுகி ஆகி அசுர சம்ஸ்காரம், அசுர சுபாவம் அனைத்தையும் பஸ்மம் செய்யுங்கள். இயற்கை மற்றும் ஆத்மாக்களின் உள்ளே என்ன கீழ் தரமான குணம் இருக்கிறதோ, அதை பஸ்மம் செய்பவர்களாக ஆகுங்கள். இது மிகப் பெரிய காரியம், அதிவேகத்தோடு செய்தீர்கள் என்றால் தான், முடிக்க முடியும்.

 

எந்தவொரு கணக்கும் அது இந்த ஜென்மத்தின் உடையதாகவோ அல்லது கடந்த ஜென்மத் தினுடையதாகவோ இருந்தாலோ, முழு ஈடுபாட்டின் அக்னி சொரூப் நிலையின்றி பஸ்மம் ஆகாது. எப்பொழுதும் அக்னி சொரூப நிலை என்றால், ஜுவாலா ரூபத்தின் சக்திசாலியான நினைவு, விதை ரூபம், லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் நிலையில் பழைய கணக்கு வழக்குகள் பஸ்மம் ஆகிவிடும், பிறகு தன்னை தானே டபுல் லைட்டாக அனுபவம் செய்வீர்கள். சக்திசாலியான ஜுவாலா சொரூபத்தின் நினைவு எப்பொழுது இருக்குமென்றால், எப்பொழுது நினைவின் தொடர்பு நிரந்தரமாக இணைந்திருக்க வேண்டும். ஒருவேளை அடிக்கடி தொடர்பு துண்டிக்கப் படுகிறது என்றால், அதை இணைப்பதில் நேரமும் எடுக்கும், கடின உழைப்பும் செய்யவேண்டியதிருக்கும், மேலும் சக்திசாலியாக ஆவதற்குப் பதிலாக பலஹீனமானவராக ஆகிவிடுகிறீர்கள். நினைவை சக்திசாலியாக ஆக்குவதற்காக விஸ்தாரத்தில் சென்று கொண்டும், சாரத்தின் நிலையின் பயிற்சி குறைய வேண்டாம், விஸ்தாரத்தில் சாரம் மறந்துவிட வேண்டாம். சாப்பிடுங்கள் - குடியுங்கள். சேவை செய்யுங்கள், ஆனால் விலகியிருக்கும் நிலையை மறக்காதீர்கள். சாதனா என்றால் சக்திசாலியான நினைவு நிரந்தரமாக தந்தையுடன் உள்ளப்பூர்வமான சம்மந்தம். யோகாவில் அமர்வதை மட்டும் சாதனா என்று கூற முடியாது. ஆனால் எப்படி உடலால் அமர்கிறீர்கள், அதே போல் உள்ளம், மனம், புத்தி தந்தையின் பக்கம், தந்தையின் கூடவே அமர்ந்துவிட வேண்டும். அந்தமாதிரியான ஒருமித்த நிலை தான் ஜுவாலையை சுடர் விடச் செய்யும். நல்லது - ஒம்சாந்தி

வரதானம்:

தன்னுடைய வார்த்தைகளின் மதிப்பை புரிந்து அதன் சிக்கனம் செய்யக் கூடிய மகான் ஆத்மா ஆகுக!

 

எப்படி மகான் ஆத்மாக்களை சத்திய வாக்கு கூறும் சுவாமி என்று கூறுகிறார்கள். அதே போல் உங்களுடைய வார்த்தை எப்பொழுதும் சத்திய வாக்காக அதாவது ஏதாவது பிராப்தி செய்விக்கும் வாக்காக இருக்க வேண்டும். பிராமணர்களின் வாயிலிருந்து ஒருபொழுதும் யாருக்கும் சாபமிடக்கூடிய வார்த்தைகள் வெளியாகக் கூடாது. எனவே யுக்தியுடன் பேசுங்கள். மேலும் காரியத்திற்காக பேசுங்கள். வார்த்தைகளின் மதிப்பைப் புரிந்து கொள்ளுங்கள். நல்ல வார்த்தைகள் சுகம் கொடுக்கும் வார்த்தைகள் பேசுங்கள், கேலியாக கிண்டல் என்று சிரித்து விளையாடும் வார்த்தைகளைப் பேசாதீர்கள். வார்த்தைகளில் சிக்கனம் செய்வீர்கள் என்றால் மகான் ஆத்மா ஆகிவிடுவீர்கள்.

 

சுலோகன்:

ஒருவேளை ஸ்ரீமத் என்ற கை எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறது என்றால், முழு யுகமுமே கையோடு கை கோர்த்து சென்று கொண்டேயிருப்பீர்கள்.

 

ஓம்சாந்தி