19.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் விகாரியிலிருந்து நிர்விகாரியாக ஆவதற்காக எல்லையில்லாத தந்தையிடம் வந்துள்ளீர்கள். எனவே உங்களுக்குள் எந்த ஒரு பூதமும் இருக்கக் கூடாது.

 

கேள்வி:

முழு கல்பத்தில் கற்பிக்கப்படாத அப்பேர்ப்பட்ட எந்த ஒரு படிப்பை தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கிறார்?

 

பதில்:

புதிய இராஜதானியை ஸ்தாபனை செய்வதற்கான கல்வி, மனிதனுக்கு இராஜ்ய பதவியை அளிப்ப தற்கான கல்வியை இச்சமயத்தில் சுப்ரீம் (உயர்ந்த) தந்தை தான் கற்பிக்கிறார். இந்த புதிய கல்வி முழு கல்பத்தில் கற்பிக்கப்படுவதில்லை. இதே கல்வியின் மூலம் சத்யுக இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது.

 

ஓம் சாந்தி.

நாம் ஆத்மாக்கள் ஆவோம். சரீரம் அல்ல என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். இதற்கு தேஹீ அபிமானி (ஆத்ம உணர்வு) என்று கூறப்படுகிறது. மனிதர்கள் எல்லோருமே தேக அபிமானி (தேக உணர்வுடையவர்கள்) ஆவார்கள். இது இருப்பதே பாவ ஆத்மாக்களின் உலகமாக. அதாவது விகாரி உலகமாக. இராவண ராஜ்யம் ஆகும். சத்யுகம் கடந்து போய் விட்டுள்ளது. அங்கு எல்லோரும் நிர்விகாரிகளாக இருந்தார்கள். நாமே தான் தூய்மையான தேவி தேவதைகளாக இருந்தோம் மற்றும் 84 பிறவிகளுக்குப் பின் பதீதமாக (தூய்மையற்றவர்கள்) ஆகியுள்ளோம் என்பதைக் குழந்தைகள் அறிந்துள்ளார்கள். எல்லோரும் ஒன்றும் 84 பிறவிகள் எடுப்பதில்லை. பாரதவாசிகள் தான் தேவி தேவதைகளாக இருந்தார்கள். அவர்கள் தான் 82, 83, 84 பிறவிகள் எடுத்துள்ளார்கள். அவர்கள் தான் பதீதமாக (தூய்மையற்றவர்களாக) ஆகியுள்ளார்கள். பாரதம் தான் அழியாத கண்டம் என்று பாடப்பட்டுள்ளது. பாரதத்தில் இலட்சுமி நாராயணரின் ஆட்சி இருக்கும் பொழுது இது புதிய உலகம் புதிய பாரதம் என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது இருப்பது பழைய உலகம் பழைய பாரதம். அவர்களோ சம்பூர்ண நிர்விகாரியாக இருந்தார்கள். எந்த ஒரு விகாரமும் இருக்கவில்லை. இந்த தேவதைகள் தான் 84 பிறவிகள் எடுத்து இப்பொழுது பதீதமாக (தூய்மையற்றதாக) ஆகி உள்ளார்கள். காமத்தின் பூதம், கோபத்தின் பூதம், பேராசையின் பூதம் - இவை எல்லாமே கொடிய பூதங்கள் ஆகும். இவற்றில் முக்கியமானது தேக அபிமானத்தின் பூதமாகும். இராவணனின் இராஜ்யம் அல்லவா? இந்த இராவணன் பாரதத்தின் அரை கல்பத்தின் எதிரி ஆவான். அப்பொழுது மனிதனுக்குள் 5 விகாரங்கள் பிரவேசம் செய்கின்றன. இந்த தேவதைகளுக்குள் இந்த பூதங்கள் இருக்கவில்லை. பிறகு புனர்ஜென்மம் எடுத்து எடுத்து இவருடைய ஆத்மா கூட விகாரங்களில் வந்து விட்டது. நாம் தேவி தேவதைகளாக இருக்கும் பொழுது எந்த ஒரு விகாரத்தின் பூதம் கூட இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுக திரேதாவிற்கு கூறப்படுவதே இராம ராஜ்யம் என்று. துவாபர கலியுகத்திற்கு இராவண இராஜ்யம் என்று கூறப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண், பெண்ணிற்குள்ளும் 5 விகாரங்கள் உள்ளன. துவாபர முதல் கலியுகம் வரையும் 5 விகாரங்கள் இருக்கின்றன. இப்பொழுது நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தில் அமர்ந்துள்ளீர்கள். விகாரியிருந்து

நிர்விகாரி ஆவதற்காக எல்லையில்லாத தந்தையிடம் வந்துள்ளீர்கள். நிர்விகாரி ஆகி ஒரு வேளை யாராவது விகாரத்தில் விழுந்து விடுகிறீர்கள் என்றால், நீங்கள் முகத்தை கறுப்பாக்கிக் கொள்கிறீர்கள். இப்பொழுது மீண்டும் வெண்மையான முகம் (தூய்மை) ஆவது கடினம். 5 அடுக்கு மாடியிலிருந்து விழுந்து விடுவது போலாகும். எலும்புகள் நொறுங்கி விடுகின்றன. காமம் மகா எதிரி ஆகும் என பகவான் கூறுகிறார் என்று கீதையிலும் உள்ளது. பாரதத்தின் உண்மையான தர்ம சாஸ்திரமாக இருப்பதே கீதை ஆகும். ஒவ்வொரு தர்மத்தின் சாஸ்திரம் கூட ஒன்றே தான். பாரதவாசிகளுக்கோ ஏராளமான சாஸ்திரங்கள் உள்ளன. அதற்கு பக்தி என்று கூறப்படுகிறது. புதிய உலகம் சதோபிரதானமான கோல்டன் ஏஜ் - தங்கயுகம் ஆகும். அங்கு எந்த ஒரு சண்டை சச்சரவுகளும் இருக்கவில்லை. நீண்ட ஆயுள் இருந்தது. எவர் ஹெல்தி, வெல்தி எப்போதும் ஆரோக்கியமாகவும், செல்வந்தராகவும் இருந்தார்கள். தேவதைகளாகிய நாம் மிகவும் சுகமாக இருந்தோம் என்ற நினைவு உங்களுக்கு வந்துள்ளது. அங்கு அகால மரணம் இருக்காது. காலன் பற்றிய பயம் இருப்பதில்லை. அங்கு ஹெல்த், வெல்த், ஹேப்பினெஸ் - ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி எல்லாமே இருக்கும். நரகத்தில் மகிழ்ச்சி இருப்பதில்லை. ஏதாவது கொஞ்சம் சரீரத்திற்கு நோய் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இது இருப்பதே அளவற்ற துக்கங்களின் உலகமாக! அது அளவற்ற சுகங்களின் உலகம் ஆகும். எல்லையில்லாத தந்தை துக்கங்களின் உலகத்தைப் படைப்பாரா என்ன? தந்தையோ சுகத்தின் உலகத்தைப் படைத்தார். பிறகு இராவண இராஜ்யம் வந்தது. பின் அவனிடமிருந்து துக்கம் அசாந்தி கிடைத்தது. சத்யுகம் என்பது சுகதாமம் ஆகும். கலியுகம் துக்கதாமம் ஆகும். விகாரத்தில் செல்வது என்பது ஒருவர் மற்றவர் மீது காமவாள் செலுத்துவது. இதுவோ பகவானின் படைப்பல்லவா? என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் கிடையாது. பகவானின் படைப்பு அல்ல. இது இராவணனின் படைப்பு ஆகும். பகவானோ சொர்க்கத்தைப் படைத்தார். அங்கு காம வாள் இருக்காது. அப்படியின்றி துக்கம், சுகத்தை பகவான் கொடுக்கிறார் என்பதல்ல. அட பகவான் எல்லையில்லாத தந்தை, குழந்தைகளுக்கு எப்படி துக்கம் கொடுப்பார்? அவரோ நான் சுகத்தின் ஆஸ்தி அளிக்கிறேன் என்று கூறுகிறார். பிறகு அரைகல்பத்திற்கு பின்னர் இராவணன் சாபக்கேடுக்கு உள்ளாக்குகிறான். சத்யுகத்திலோ ஏராளமான சுகம் இருந்தது. மிகுந்த செல்வமுடையவர்களாக இருந்தார்கள். ஒரே ஒரு சோமநாத் கோவிலில் எவ்வளவு வைரம் வைடூரியங்கள் இருந்தன! பாரதம் எவ்வளவு செழிப்புடையதாக இருந்தது! இப்பொழுதோ திவால் ஆகி விட்டுள்ளது. சத்யுகத்தில் 100 சதவிகிதம் (சால்வென்ட்) செழிப்பு, கலியுகத்தில் 100 சதவிகிதம் (இன்சால்வென்ட்) திவால் - இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.. இப்பொழுது இருப்பது இரும்பு யுகம். துரு ஏறி ஏறி முற்றிலுமே தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளார்கள். எவ்வளவு துக்கம் உள்ளது! இந்த ஆகாய விமானம் ஆகியவை கூட 100 வருடங்களாகத்தான் உருவாக்கியுள்ளனர். இதற்கு மாயையின் பகட்டு என்று கூறப்படுகிறது. எனவே மனிதர்கள் விஞ்ஞானம் (சையன்ஸ்) தான் சொர்க்கத்தை உருவாக்குகிறது என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால் இது இராவணனினுடைய சொர்க்கம் ஆகும். கலியுகத்தில் மாயையின் ஆடம்பரத்தைப் பார்த்து உங்களிடம் வருபவர்கள் அபூர்வம். எங்களிடமோ மாளிகை, மோட்டார் ஆகியவை உள்ளன என்று நினைக்கிறார் கள். சொர்க்கம் என்று சத்யுகமே கூறப்படுகிறது என்று தந்தை கூறுகிறார். அப்பொழுது இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. இப்பொழுது அந்த இலட்சுமி நாராயணரின் ராஜ்யம் இருக்கிறதா என்ன? இப்பொழுது கலியுகத்திற்குப் பிறகு மீண்டும் இவர்களின் இராஜ்யம் வரும். முதலில் பாரதம் மிகவும் சிறியதாக இருந்தது. புது உலகத்தில் இருப்பதே 9 இலட்சம் தேவதைகள். அவ்வளவே! பின்னால் விருத்தி அடைந்து கொண்டே இருக்கிறார்கள். முழு சிருஷ்டி விருத்தி அடைகிறது அல்லவா? முதன் முதலில் தேவி தேவதைகள் மட்டுமே இருந்தார்கள். எனவே எல்லையில்லாத தந்தை வந்து உலகத்தின் சரித்திரம் பூகோளம் பற்றி புரிய வைக்கிறார். தந்தையில்லாது வேறு யாருமே கூற முடியாது. அவரே ஞானம் நிறைந்த இறை தந்தை என்று அழைக்கப்படுகிறார். அனைத்து அத்மாக்களின் தந்தை (ஃபாதர்) ஆவார். ஆத்மாக்கள் அனைவருமே சகோதர சகோதரர்கள் ஆவார்கள். பிறகு சகோதரன் மற்றும் சகோதரி ஆகிறார்கள். நீங்கள் அனைவரும் ஒரு பிரஜாபிதா பிரம்மா மூலம் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் ஆவீர்கள். அனைத்து ஆத்மாக்களும் அவருடைய குழந்தைகளாக இருக்கவே இருக்கிறார்கள். அவருக்கு பரமபிதா என்று கூறப்படுகிறது. அவருடைய பெயர் சிவன் என்பதாகும். அவ்வளவே. எனது பெயர் ஒரே ஒரு சிவன் என்பதாகும் என்று தந்தை புரிய வைக்கிறார். பிறகு பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் நிறைய கோவில்களைக் கட்டினார்கள். எனவே நிறைய பெயர்கள் வைத்து விட்டுள்ளார்கள். பக்தியின் சாமான்கள் எவ்வளவு ஏராளமாக உள்ளன! அதை படிப்பு என்று கூறமாட்டார்கள். அதில் இலட்சியம் எதுவும் கிடையாது. இருப்பதே கீழே இறங்குவதற்கான வழியாக. கீழே இறங்கி இறங்கி தமோபிரதானமாக ஆகி விடும் பொழுது பின் அனைவரும் சதோபிரதானமாக ஆக வேண்டி உள்ளது. நீங்கள் சதோபிரதானமாக ஆகி சொர்க்கத்திற்குச் செல்வீர்கள். மற்றவர்கள் எல்லோரும் சதோபிரதானமாக ஆகி சாந்தி தாமத்தில் இருப்பார்கள். இதை நல்ல முறையில் நினைவு செய்யுங்கள். பாபா பதீதர்களாகிய (தூய்மையற்ற) எங்களை வந்து பாவனமாக (தூய்மையாக) ஆக்குங்கள் என்று நீங்கள் என்னை அழைத்தீர்கள். எனவே இப்பொழுது நான் முழு உலகத்தைப் பாவனமாக ஆக்க வந்துள்ளேன் என்று பாபா கூறுகிறார். மனிதர்கள் கங்கை ஸ்நானம் செய்வதால் பாவனமாக ஆகி விடலாம் என்று நினைக்கிறார்கள். கங்கையை பதீத பாவனி என்று நினைக்கிறார்கள். கிணற்றிலிருந்து தண்ணீர் வருகிறது. அதையும் கங்கை தண்ணீர் என்று நினைத்து குளிக்கிறார்கள். மறைமுகமான கங்கை என்று நினைக்கிறார்கள். தீர்த்த யாத்திரையில் அல்லது எந்த ஒரு மலை மீது சென்றாலும் அதற்கும் மறைமுகமான கங்கை என்பார்கள். இது பொய்யாகும் காட் இஸ் ட்ரூத்" - இறைவனே சத்தியம் என்று கூறுகிறார்கள். மற்றபடி இராவண இராஜ்யத்தில் எல்லோருமே பொய் பேசுபவர்கள் ஆவார்கள். காட்ஃபாதர் தான் உண்மையான கண்டத்தை ஸ்தாபனை செய்கிறார். அங்கு பொய் என்ற விஷயமே கிடையாது. தேவதைகளுக்கு போக் (நைவேத்தியம்) கூட தூய்மையானதாகப் படைக்கிறார்கள். இப்பொழுது இருப்பதே அசுர இராஜ்யம். சத்யுக திரேதாவில் இருப்பது ஈசுவரிய இராஜ்யம். அது இப்பொழுது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இறைவனே வந்து அனைவரையும் பாவனமாக ஆக்குகிறார். தேவதைகளிடம் எந்த விகாரமும் இருப்பது இல்லை. இராஜா இராணி எப்படியோ அப்படியே பிரஜைகள். எல்லோரும் தூய்மையாக (பவித்திரமாக) இருப்பார்கள். இங்கு இருப்பவர்கள் எல்லோருமே பாவம் செய்பவர்களாக, காம விகாரம் உடையவர்களாக மற்றும் கோபக்காரர்களாக இருக்கிறார்கள். புதிய உலகத்திற்கு சொர்க்கம் என்றும் இதற்கு நரகம் என்றும் கூறப்படுகிறது. தந்தையைத் தவிர நரகத்தை சொர்க்கமாக வேறு யாரும் ஆக்க முடியாது. இங்கு இருப்பவர்கள் எல்லோருமே நரகவாசிகளாக, பதீதமாக (தூய்மையற்றவர்களாக) உள்ளார்கள். சத்யுகத்தில் இருப்பவர்கள் பாவனமானவர்கள் (தூய்மையானவர்கள்) அங்கு நாங்கள் பதீத நிலையிலிருந்து பாவனம் ஆவதற்காக ஸ்நானம் செய்ய செல்கிறோம் என்று கூற மாட்டார்கள்.

 

இது பல்வேறுவிதமான (வெரைட்டி) மனித சிருஷ்டி என்ற விருட்சம் ஆகும். விதை ரூபமாக இருப்பவர் பகவான் ஆவார். அவரே படைப்பைப் படைக்கிறார். முதன் முதலில் தேவி தேவதைகளைப் படைக்கிறார். பிறகு விருத்தி அடைந்து அடைந்து இத்தனை தர்மங்கள் ஆகி விடுகின்றன. முதலில் ஒரு தர்மம் ஒரு இராஜ்யம் இருந்தது. சுகமே சுகமாக இருந்தது. உலகத்தில் அமைதி வேண்டும் என்று மனிதர்கள் விரும்பவும் செய்கிறார்கள். அதை இப்பொழுது நீங்கள் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். மற்ற எல்லாமே முடிந்து போய் விடும். மற்றபடி கொஞ்சம் பேர் இருப்பார்கள். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது இருப்பது கலியுகக் கடைசி மற்றும் சத்யுக ஆரம்பத்திற்கு இடைப்பட்ட புருஷோத்தம சங்கமயுகம் ஆகும். இதற்கு கல்யாணகாரி புருஷோத்தம சங்கமயுகம் என்று கூறப்படுகிறது. கலியுகத்திற்குப் பின்னர் சத்யுகத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் சங்கமத்தில் படிக்கிறீர்கள். இதன் பலன் சத்யுகத்தில் கிடைக்கும். இங்கு எந்த அளவிற்கு தூய்மை ஆவீர்கள் மற்றும் படிப்பீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவியை அடைவீர்கள். இப்பேர்ப்பட்ட படிப்பு வேறு எங்கும் இருப்பதில்லை. உங்களுக்கு இந்தப் படிப்பின் சுகம் புது உலகத்தில் கிடைக்கும். ஏதாவது பூதம் இருந்தது என்றால், ஒன்று தண்டனை வாங்க வேண்டி வரும். மற்றொன்று அங்கு குறைவான பதவி அடைவார்கள். யார் சம்பூர்ணமாக ஆகி மற்றவர்களுக்கும் கற்பிப்பார்களோ பின் அவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள். எத்தனை சென்டர்கள் உள்ளன! இலட்சக்கணக்கான சென்டர்கள் ஆகி விடும். முழு உலகத்திலும் சென்டர்கள் திறந்து விடும். பாவ ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மாவாக ஆகவே வேண்டும். உங்களுடைய இலட்சியம் (ஏம்-ஆப்ஜெக்ட்) கூட உள்ளது. கற்பிப்பவர் ஒரு சிவ பாபா ஆவார். அவர் ஞானக் கடல், சுகக் கடல் ஆவார். தந்தை தான் வந்து கற்ப்பிக்கிறார். இவர் கற்பிப்பதில்லை. இவர் மூலமாக அவர் கற்பிக்கிறார். இவருக்கு பகவானின் இரதம், பாக்கியசாலி இரதம் என்று பாடப்படுகிறது. உங்களை எவ்வளவு கோடானுகோடி பாக்கியசாலியாக ஆக்குகிறார். நீங்கள் மிகவும் செல்வந்தர் ஆகிறீர்கள். ஒரு பொழுதும் நோய்வாய்ப்படுவதில்லை. ஹெல்த், வெல்த், ஹேப்பினெஸ், (ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி) எல்லாம் கிடைத்து விடுகிறது. இங்கு செல்வம் உள்ளது என்றாலும் கூட வியாதிகள் ஆகியவையும் உள்ளன. அந்த மகிழ்ச்சி இருக்க முடியாது. ஏதாவது சிறிதளவாவது துக்கம் இருக்கிறது. அதனுடைய பெயரே சுகதாமம், சொர்க்கம், பேரடைஸ் என்பதாகும். இந்த இலட்சமி நாராயணருக்கு இந்த இராஜ்யத்தை யார் வழங்கியது? இது யாருக்குமே தெரியாது. இவர்கள் பாரதத்தில் இருந்தார்கள். உலகிற்கு அதிபதியாக இருந்தார்கள். எந்த ஒரு பிரிவும் இருக்கவில்லை. இப்பொழுதோ எவ்வளவு பிரிவுகள் (பார்ட்டிஷன்) உள்ளன. இராவண இராஜ்யம் ஆகும். எவ்வளவு துண்டு துண்டுகளாக ஆகி விட்டுள்ளன! சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அங்கோ முழு பாரதத்தில் இந்த தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அங்கு மந்திரிகள் ஆகியோர் இருப்பதில்லை. இங்கோ பாருங்கள்! மந்திரிகள் எத்தனை பேர் உள்ளார்கள்! ஏனெனில் அறிவற்றவர்களாக இருக்கிறார்கள். அதனால் மந்திரிகளும் அவ்வாறே தமோபிரதானமாக பதீதமாக (தூய்மையற்றவராக) உள்ளார்கள். பதீதர்களை பதீதர்கள் சந்தித்தார்கள்.... நீண்ட நீண்ட கை நீட்டினார்கள்.... ஏழை ஆகிக் கொண்டே போகிறார்கள். கடன் வாங்கிக் கொண்டே போகிறார்கள். சத்யுகத்திலோ தானியங்கள், பழங்கள் ஆகியவை மிகவும் ருசியாக இருக்கும். நீங்கள் அங்கு சென்று எல்லாமே அனுபவம் செய்து வருகிறீர்கள். சூட்சுமவதனத்திற்கும் செல்கிறீர்கள். பின் சொர்க்கத்திற்கும் செல்கிறீர்கள். சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பது பற்றி தந்தை கூறுகிறார். முதலில் பாரதத்தில் ஒரே ஒரு தேவி தேவதா தர்மம் இருந்தது. வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. பிறகு துவாபரத்திலிருந்து இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறது. இப்பொழுது இருப்பது விகாரி உலகம்.பிறகு நீங்கள் தூய்மையாக ஆகி நிர்விகாரி தேவதை ஆகிறீர்கள்.இது பள்ளிக் கூடம் ஆகும். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன் என்று பகவான் கூறுகிறார். (பகவானுவாச) நீங்கள் வருங்காலத்தில் இது போல ஆவீர்கள். இராஜ்யத்திற்கான கல்வி வேறு எங்குமே கிடைப்பதில்லை. தந்தை தான் கற்பித்து புதிய உலகத்தின் ராஜாங்கத்தை அளிக்கிறார். (சுப்ரீம் ஃபாதர்) உயர்ந்த தந்தை, ஆசிரியர் சத்குரு ஒரே ஒரு சிவபாபா ஆவார். பாபா (தந்தை) என்றாலே அவசியம் ஆஸ்தி கிடைக்க வேண்டும். பகவான் அவசியம் சொர்க்கத்தின் ஆஸ்தி தான் அளிப்பார். வருடா வருடம் எரிக்கப்படும் இராவணன் பாரதத்தினுடைய முதலில் நம்பர் எதிரி ஆவார். இராவணன் எப்பேர்ப்பட்ட அசுரனாக ஆகி விட்டுள்ளான்! இவனுடைய இராஜ்யம் 2500 வருடம் நடக்கிறது. நான் உங்களை சுகதாமத்திற்கு அதிபதியாக ஆக்குகிறேன் என்று உங்களுக்குத் தந்தை கூறுகிறார். இராவணன் உங்களை துக்கதாமத்திற்கு கூட்டிச் செல்கிறான். உங்களுடைய ஆயுளும் குறைந்து விடுகிறது. திடீரென்று அகால மரணம் ஏற்பட்டு விடுகிறது. அநேக வியாதிகள் வந்து கொண்டே இருக்கின்றன. அங்கு இப்பேர்ப்பட்ட எந்த ஒரு விஷயமும் இருப்பதில்லை. பெயரே சொர்க்கம் என்பதாகும். இப்பொழுது தங்களை இந்து என்று அழைத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் பதீதமாக (தூய்மையற்று) இருக்கிறார்கள். எனவே தேவதை என்று அழைத்துக் கொள்ள தகுதி இல்லை. தந்தை இந்த இரதத்தின் மூலம் அமர்ந்து புரிய வைக்கிறார். உங்களுக்கு கற்பிப்பதற்காக இவருக்கு அருகாமையில் வந்து அமருகிறார். ஆக இவரும் படிக்கிறார். நாம் அனைவரும் மாணவர்கள் ஆவோம். ஒரு தந்தை தான் ஆசிரியர் ஆவார். இப்பொழுது தந்தை கற்பிக்கிறார். பிறகு 5000 வருடங்களுக்கு பின்னால் வந்து கற்பிப்பார். இந்த ஞானம், இந்தப் படிப்பு பிறகு மறைந்து போய் விடும். படித்து நீங்கள் தேவதை ஆவீர்கள். 2500 வருடங்கள் சுகத்தின் ஆஸ்தி எடுத்தீர்கள். பிறகு இருப்பது துக்கம். இராவணனின் சாபம். இப்பொழுது பாரதம் மிகவும் துக்கமுடையதாக உள்ளது.இது துக்கதாமம் ஆகும். பதீத பாவனரே வாருங்கள், வந்து பாவனமாக ஆக்குங்கள் என்று அழைக்கவும் செய்கிறார்கள் அல்லவா? இப்பொழுது உங்களுக்குள் எந்த ஒரு விகாரமும் இருக்கக் கூடாது. ஆனால் அரை கல்பத்தின் வியாதி அவ்வளவு சீக்கிரம் நீங்கி விடுமா என்ன? அந்தப் படிப்பில் கூட யார் நல்ல முறையில் படிப்பதில்லையோ அவர்கள் தோல்வி அடைந்து விடுகிறார்கள். யார் பாஸ் வித் ஆனர் ஆகிறார்களோ அவர்களோ ஸ்காலர்μப் பெறுகிறார்கள். உங்களிலும் கூட யார் நல்ல முறையில் தூய்மையாக ஆகி பின் மற்றவர்களை ஆக்குகிறார்களோ அவர்கள் இந்த பரிசு பெறுகிறார்கள். 8 மணிகளின் மாலை உள்ளது. அது பாஸ் வித் ஆனர் ஆகுபவர் களினுடையது. பிறகு 108ன் மாலையும் உள்ளது. அந்த மாலை கூட நினைவு செய்யப்படுகிறது. மனிதர்கள் இதனுடைய ரகசியத்தை அறிந்துள்ளார்களா என்ன? மாலையின் மேலிருப்பது மலர். பிறகு இருப்பது இரட்டை மணி மேரு. பெண் மற்றும் ஆண் இருவரும் தூய்மை ஆகிறார்கள். இவர்கள் தூய்மையாக இருந்தார்கள் அல்லவா? சொர்க்கவாசி என்று அழைக்கப்பட்டு இருந்தார்கள். இதே ஆத்மா பின் மறுபிறவி எடுத்து எடுத்து இப்பொழுது பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகி விட்டுள்ளார். பிறகு இங்கிருந்து தூய்மையாக ஆகி பாவன உலகிற்குச் செல்வார்கள். உலகத்தின் சரித்திரம் பூகோளம் மீண்டும் நடைபெறுகிறது (ரிபீட்) அல்லவா? விகாரி இராஜாக்கள் நிர்விகாரி இராஜாக்களுக்கு கோவில் ஆகியவை கட்டி அவர்களை பூஜை செய்கிறார்கள். அவர்களே பிறகு பூஜிக்கத் தக்க நிலையிலிருந்து பூசாரி ஆகி விடுகிறார்கள். விகாரி ஆகி விடுவதால் பின் அந்த ஒளியின் கிரீடம் கூட இருப்பதில்லை. இது நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. இது எல்லையில்லாத அதிசயமான நாடகம் ஆகும். முதலில் ஒரே ஒரு தர்மம் இருக்கும். அதற்கு இராம இராஜ்யம் என்று கூறப்படுகிறது. பிறகு மற்ற தர்மத்தினர்கள் எல்லாம் வருகிறார்கள். இந்த சிருஷ்டியின் சக்கரம் எப்படி சுற்றிக் கொண்டே இருக்கிறது என்பதை ஒரு தந்தை தான் புரிய வைக்க முடியும். பகவானோ ஒரே ஒருவர் ஆவார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சுயம் பகவான் ஆசிரியராக ஆகி கற்பிக்கிறார். எனவே நல்ல முறையில் படிக்க வேண்டும். ஸ்காலர்μப் பெறுவதற்காக தூய்மையாக ஆகி மற்றவர்களை தூய்மையாக ஆக்குவதற்கான சேவை செய்ய வேண்டும்.

 

2. உள்ளுக்குள் காமம், கோபம் போன்ற என்னவெல்லாம் பூதங்கள் பிரவேசித்துள்ளனவோ அவற்றை நீக்க வேண்டும். (ஏம் ஆப்ஜெக்ட்) - இலட்சியம், நோக்கத்தை முன்னால் வைத்து புருஷார்ததம் (முயற்சி) செய்ய வேண்டும்.

 

வரதானம்:

உணர்ந்து கொள்ளும் சக்தியின் மூலம் பழைய சுபாவ, சம்ஸ்காரங்களிலிருந்து விடுபட்டு இருக்கக் கூடிய மாயையை வென்றவர் ஆகுக.

 

இந்தப் பழைய தேகத்தின் சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்கள் மிகவும் கடினத் தன்மை வாய்ந்தவை ஆகும், அவை மாயையை வென்றவராக ஆவதில் பெரிய தடை ரூபமாக ஆகின்றன. சுபாவ-சம்ஸ்காரங்கள் என்ற பாம்பு கூட இறந்து விடுகிறது, ஆனால் அதன் தடயம் தங்கி விடுகிறது, அது நேரம் வரும் போது மீண்டும் மீண்டும் அடி கொடுத்து விடுகிறது. பல முறை தவறை தவறு என புரிந்து கொள்ளவும் முடியாத அளவு மாயைக்கு வசப்பட்டு விடுகிறார்கள். பிறர் வசப்பட்டவராக ஆகி விடுகின்றனர். ஆகையால் சோதித்துப் பார்த்து உணர்ந்து கொள்ளும் சக்தியின் மூலம் மறைந்திருக்கக் கூடிய பழைய சுபாவ சம்ஸ்காரங்களிலிருந்து தனிப்பட்டவராக ஆகினீர்கள்

என்றால் மாயையை வென்றவராக ஆகி விடுவீர்கள்.

 

சுலோகன்:

விதேகி (தேகமற்ற) நிலையை பயிற்சி செய்யுங்கள் - இந்தப் பயிற்சி திடீரென்று வரக்கூடிய சோதனைகளிலிருந்து கடந்து போகச் செய்யும்.

 

ஓம்சாந்தி