21.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! தந்தைக்கு சமமாக ஆன்மீக ஆசிரியர் ஆகுங்கள். தந்தையிடம் படித்ததை மற்றவர்களுக்கும் படிப்பியுங்கள். தாரணை ஆகி உள்ளது என்றால் எவரொருவருக்கும் புரிய வைத்துக் காண்பியுங்கள்.

 

கேள்வி:

எந்த விஷயத்தில் பாபாவிற்கு நிலையான நிச்சயம் உள்ளது? குழந்தைகள் கூட அதில் நிலையான நிச்சயம் உடையவர் ஆக வேண்டும்?

 

பதில்:

பாபாவிற்கு நாடகத்தில் நிலையான நிச்சயம் உள்ளது. எது நடந்து முடிந்ததோ அது நாடகம் என்று பாபா கூறுவார். முந்தைய கல்பத்தில் என்ன செய்தோமோ அதையே தான் செய்தோம். நாடகம் உங்களை மேலே கீழே செல்ல விடாது. ஆனால் இதுவரையும் குழந்தைகளின் நிலை அது போல அமையவில்லை. எனவே "இப்படி ஆகி இருந்தால் இது போல செய்திருப்போம்; இப்படித் தெரிந்திருந்தால் இவ்வாறு செய்திருக்க மாட்டோம்" என்று வாயிலிருந்து வெளிப்படுகிறது. நடந்து முடிந்ததை சிந்தனை செய்யாதீர்கள். வருங்காலத்தில் மீண்டும் அது போல தவறு ஏற்படக் கூடாது என்று முயற்சி (புருஷார்த்தம்) செய்யுங்கள் என்று பாபா கூறுகிறார்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு புரிய வைக்கிறார். நான் வரும் பொழுது யாருக்குமே தெரிய வருவதில்லை என்று சுயம் தந்தை கூறுகிறார். ஏனெனில் நான் மறைமுகமாக உள்ளேன். கர்ப்பத்தில் கூட ஆத்மா பிரவேசம் செய்யும் பொழுது அது பற்றி தெரிய வருகிறதா என்ன? நாள், தேதி கூற முடியாது. கர்ப்பத்திலிருந்து வெளியில் வரும் பொழுது தான் நாள் தேதி கூற முடியும். எனவே பாபா பிரவேசம் செய்யும் நாள், கிழமை பற்றி கூட தெரிய வருவதில்லை. எப்பொழுது பிரவேசம் செய்தார். எப்பொழுது ரதத்தில் வருகை புரிகிறார் - எதுவுமே தெரிய வருவதில்லை. யாரையாவது பார்க்கிறார் என்றால் அவர்கள் போதையில் சென்று விடுவார்கள். ஏதோ பிரவேசம் ஆகி உள்ளது அல்லது ஏதோ சக்தி வந்துள்ளது என்று நினைப்பார்கள். சக்தி எங்கிருந்து வந்தது. நான் ஒன்றும் குறிப்பாக ஜபம், தவம் ஒன்றும் செய்யவில்லையே. இதற்கு தான் (குப்தமாக) மறைமுகமானது என்று கூறப்படுகிறது.தேதி, நாள் ஒன்றும் இல்லை. சூட்சும வதனத்தின் ஸ்தாபனை கூட எப்பொழுது ஆகிறது என்பது கூட ஒன்றுமே கூற முடியாது. முக்கியமான விஷயமே மன்மனாபவ என்பது ஆகும். ஹே ஆத்மாக்களே! நீங்கள் தந்தையாகிய என்னை "வந்து பதீதர்களை பாவனமாக ஆக்குங்கள், பாவன உலகத்தை அமையுங்கள்" என்று அழைக்கிறீர்கள் என்று தந்தை கூறுகிறார். நாடகத் திட்டப்படி நான் வர வேண்டி இருக்கும் பொழுது அவசியம் மாற்றம் ஏற்படுகிறது என்று தந்தை புரிய வைக்கிறார். சத்யுக முதற் கொண்டு எது கடந்து விட்டுள்ளதோ அது மீண்டும் திரும்ப நடைபெறும் (ரிபீட்). சத்யுகம், திரேதா அவசியம் மீண்டும் நடைபெறும். ஒவ்வொரு நொடியும் கடந்து கொண்டே போகிறது. நூற்றாண்டு கூட கடந்து கொண்டேபோகிறது. சத்யுகம் கடந்து விட்டது என்று கூறுகிறார்கள். பார்க்கவோ இல்லை. நீங்கள் கடந்து விட்டுள்ளீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் தான் முதன் முதலில் என்னிடமிருந்து பிரிந்துள்ளீர்கள். எனவே இதன் மீது ஆழ்ந்த சிந்தனை செய்ய வேண்டும். எப்படி நாம் 84 பிறவிகள் எடுத்துள்ளோம். பின் மீண்டும் அவ்வாறே மிகச் சரியாக எடுக்க வேண்டி வரும். அதாவது துக்கம் மற்றும் சுகத்தின் பார்ட்டை நடிக்க வேண்டி வரும். சத்யுகத்தில் சுகம் இருக்கும். வீடு பழையதாக ஆகி விடும் பொழுது சில இடங்களில் கூரையிலிருந்து தண்ணீர் ஒழுகி வடியும், சில இடங்களில் ஏதோ ஆகிக் கொண்டே இருக்கும். எனவே இதைப் பழுது பார்க்க வேண்டி உள்ளது என்ற கவலை ஏற்பட்டு விடும். மிகவுமே பழையதாக ஆகி விடும் பொழுது இந்த வீடு இருப்பதற்கு தகுதி உடையது அல்ல என்று புரிந்து கொள்கிறோம். புது உலகத்திற்கு அது போல கூற மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் புது உலகத்திற்குச் செல்வதற்கு தகுதி உடையவராக ஆகிறீர்கள். ஒவ்வொரு பொருளும் முதலில் புதியதாக இருக்கும். பிறகு பழையதாக ஆகிறது.

 

இப்பொழுது குழந்தைகளாகி உங்களுக்கு இது சிந்தனையில் வருகிறது.வேறு யாருமே இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. கீதை, இராமாயணம் ஆகியவை கூறிக் கொண்டே இருக்கிறார்கள். அதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள். நீங்களும் நானும் கூட இதே தொழிலில் மும்முரமாக இருந்தோம்.இப்பொழுது தந்தை எவ்வளவு அறிவாளியாக ஆக்கியுள்ளார். குழந்தைகளே இப்பொழுது இந்த பழைய உலகம் முடியப் போகிறது. இப்பொழுது புது உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று பாபா கூறுகிறார். எல்லோரும் செல்வார்கள் என்பதும் அல்ல. எல்லோரும் முக்தி தாமத்தில் அமர்ந்து விடுதல் - இதுவும் சட்டம் இல்லை பிரளயம் ஆகி விடும் என்பதும் கிடையாது. இது பழைய உலகம் மற்றும் புதிய உலகத்திற்கிடையே இருக்கும் மிகவுமே கல்யாணகாரி (மங்களகரமான) சங்கமயுகம் ஆகும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது மாற்றம் ஆக வேண்டி உள்ளது. பிறகு சாந்திதாமம் சென்று விடுவீர்கள்.அங்கு சுகத்தின் உணர்வினுடைய விஷயம் கூட எதுவும் கிடையாது. வேள்வியில் தடைகள் ஏற்படும் என்று பாடப்பட்டுள்ளது. அது நடந்து கொண்டு இருக்கிறது. கல்பத்திற்கு பின்னால் கூட ஏற்பட்டு கொண்டே இருக்கும். இப்பொழுது நீங்கள் பக்குவமானவர்களாக ஆகி விட்டுள்ளீர்கள். இந்த ஸ்தாபனை விநாசத்தின் காரியம் ஒன்றும் சிறியது அல்ல. தடைகள் எந்த விஷயத்தில் ஏற்படுகிறது? காமம் மகா எதிரி ஆகும் என்று தந்தை கூறுகிறார். இதன் காரணமாகத் தான் கொடுமைகள் ஆகின்றது. திரௌபதியின் விஷயம் கூட உள்ளது அல்லவா? பிரம்மச்சரியம் காரணமாகத் தான் எல்லா பூசல்களும் ஏற்படுகின்றன. சதோ பிரதான நிலையிலிருந்து அவசியம் தமோ பிரதானமாக ஆக வேண்டி உள்ளது. படி இறங்க வேண்டி உள்ளது. அவசியம் உலகம் பழையதாக ஆக வேண்டி உள்ளது. இந்த எல்லா விஷயங்களையும் நீங்கள் தான் புரிந்துள்ளீர்கள் மற்றும் நினைவும் செய்கிறீர்கள். மேலும் படித்து படிப்பிக்கவும் வேண்டும். ஆசிரியர் ஆக வேண்டும். ஞானம் அவசியம் புத்தியில் உள்ளது. அப்பொழுது தான் படித்து டீச்சர் ஆகிறார்கள். பின் ஆசிரியரிடம் யார் கற்று கொண்டு புத்திசாஆகிறார்களோ அவர்களை அரசாங்கம் தேர்ந்தெடுக்கிறது. நீங்களும் ஆசிரியர் ஆவீர்கள். தந்தை உங்களை ஆசிரியராக ஆக்கி உள்ளார். ஒரு ஆசிரியர் என்ன செய்ய முடியும்? நீங்கள் அனைவரும் ஆன்மீக ஆசிரியர்கள் ஆவீர்கள். எனவே புத்தியில் ஞானம் இருக்க வேண்டும். மனிதனிலிருந்து தேவதை ஆவதற்கான இந்த ஞானமோ முற்றிலுமே சரியானது ஆகும். இப்பொழுது எந்த அளவு குழந்தைகளாகி நீங்கள் நினைவு செய்கிறீர்களோ பின் தெளிவு (லைட்) வந்து கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கு சாட்சாத்காரம் ஆகிக் கொண்டே இருக்கும். ஏனெனில் நினைவினால் தான் ஆத்மா தூய்மையாக ஆகும். பிறகு எவரொருவருக்கும் சாட்சாத்காரம் கூட ஆகக் கூடும். உதவி செய்வதற்காக தந்தையும் அமர்ந்துள்ளார். தந்தை எப்பொழுதுமே குழந்தைகளுக்கு உதவி செய்பவர் ஆவார். படிப்பில் வரிசைக்கிரமமாக உள்ளார்கள். எனக்குள் எவ்வளவு தாரணை உள்ளது என்பதை ஒவ்வொருவரும் அவரவர் புத்தி மூலம் புரிந்து கொள்ள முடியும். தாரணை உள்ளது என்றால் யாருக்கேனும் புரிய வைத்துக் காண்பியுங்கள். இது செல்வம் ஆகும்.செல்வம் ஒருவருக்குக் கொடுக்கவில்லை என்றால் இவரிடம் செல்வம் உள்ளது என்பதை யாரும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். செல்வத்தை தானம் செய்தீர்கள் என்றால் மகாதானி என்று கூறுவார்கள். மகாரதி, மகாவீரர்-விஷயம் ஒன்றே தான். எல்லோரும் ஒன்று போலவோ இருக்க முடியாது. உங்களிடம் எத்தனை பேர் வருகிறார்கள்! ஒவ்வொருவரிடமும் அமர்ந்து "தலையிலடித்து"க் கொள்ள வேண்டி (உழைப்பு செய்ய வேண்டி) இருக்குமா என்ன? அவர்கள் பத்திரிகைகள் மூலமாக நிறைய விஷயங்கள் கேட்கும் பொழுது மிகவும் குழம்புகிறார்கள். பிறகு உங்களிடம் நேரிடையாக வந்து கேட்கும் பொழுது "நாங்கள் தவறான வழிப்படி என்ன செய்து விட்டோம், ஆனால் இங்கோ மிகவும் நன்றாக உள்ளது" என்கிறார்கள். ஒவ்வொருவராக சரி செய்வதில் உழைப்பு ஏற்படுகிறது. இங்கு கூட எவ்வளவு உழைப்பு ஏற்பட்டுள்ளது! பிறகும் ஒருவர் மகாரதி (யானைப்படை) ஒருவர் குதிரை படை, ஒருவர் காலாட் படை. நாடகத்தில் இப்படித்தான் உள்ளது. கடைசியில் உங்களுக்கு தான் வெற்றி ஏற்படப் போகிறது என்பதையோ புரிந்துள்ளீர்கள். யார் முந்தைய கல்பத்தில் ஆகி இருந்தார்களோ அவர்களே தான் ஆகி விடுவார்கள். புருஷார்த்தமோ (முயற்சி) குழந்தைகள் செய்தே ஆக வேண்டி உள்ளது. புரிய வைப்பதற்கான முயற்சி செய்யுங்கள் என்று தந்தை ஆலோசனை தருகிறார். முதலிலோ சிவபாபாவின் கோவிலுக்குச் சென்று சேவை செய்யுங்கள். இவர் யார்? இந்த லிங்கத்தின் மீது ஏன் தண்ணீர் அபிஷேகம் செய்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் நல்ல முறையில் அறிந்துள்ளீர்கள். "நெருப்பு கரியை கடன் வாங்க சென்றவள் அங்கேயே எஜமானி ஆகி அமர்ந்து விட்டாள்" என்பார்கள். இந்த உதாரணம் கூட உங்களுடையதே ஆகும். நீங்கள் விழிப்படைய செய்வதற்காக செல்கிறீர்கள். உங்களுக்கு அழைப்பு விடுத்து கூப்பிடுகிறார்கள். எனவே இது போல அழைப்பு வந்தால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். காசி போன்ற இடங்களில் பெரிய பெரிய பட்டங்கள் கொடுக்கிறார்கள். பக்தியில் எத்தனை ஏராளமான கோவில்கள் உள்ளன! இது கூட ஒரு தொழில் ஆகும். யாராவது ஒரு நல்ல பெண்ணைப் பார்த்தார்கள் என்றால் அவரை கீதையை மனப்பாடம் செய்வித்து முன்னால் வைத்து விடுகிறார்கள். பிறகு என்ன வருமானம் ஆகிறதோ அது கிடைத்து விடுகிறது. பார்க்கப் போனால் ஒன்றுமே இல்லை. மாந்த்ரீகம் போன்றவை நிறைய கற்கிறார்கள். அப்பேர்ப்பட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஒரு பொழுதும் சாஸ்திர விளக்கங்கள் கூற வேண்டியதில்லை. நீங்களோ சென்று தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். முக்தி, ஜீவன் முக்தி தாதா (வள்ளல்) ஒருவர் ஆவார்.அவருக்கு மகிமை செய்ய வேண்டும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து என்னை நினைவு செய்யுங்கள் என்று அவர் கூறுகிறார். மற்றபடி மன்மனாபவ என்பதன் பொருள் கங்கையில் சென்று குளிக்க வேண்டும் என்பதில்லை. மாமேக்கம் என்பதன் பொருள் என் ஒருவனை நினைவு செய்யுங்கள் - அப்பொழுது நான் "உங்களை அனைத்து பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன்" என்ற வாக்குறுதி அளிக்கிறேன். எப்பொழுது இராவணன் வந்தானோ அப்பொழுதிலிருந்து பாவங்கள் ஆரம்பமாகி உள்ளன. எனவே உயர்ந்த பதவியை அடைவதற்கான மிகுந்த முயற்சி (புருஷார்த்தம்) செய்ய வேண்டும். பதவிக்காக மனிதர்கள் இரவு பகலாக எவ்வளவு தலையிலடித்து கொள்கிறார்கள் (உழைக்கிறார்கள்)! இதுவும் படிப்பு ஆகும். இதில் எந்த ஒரு புத்தகம் ஆகியவை பயன்படுத்த வேண்டிய விஷயம் இல்லை. 84ன் சக்கரமோ புத்தியில் வந்து விட்டுள்ளது. ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. ஒவ்வொரு பிறவியின் விஸ்தாரத்தைக் கூறுகிறாரா என்ன? 84 பிறவிகள் முடிந்து விட்டுள்ளது. இப்பொழுது ஆத்மாக்களாகிய நாம் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பதீதமாக (தூய்மை இழந்து விட்டுள்ள) ஆகி இருக்கும் ஆத்மா அவசியம் பாவனமாக ஆக வேண்டும். "என் ஒருவனை நினைவு செய்யுங்கள்" என்று அனைவருக்கும் இதையே கூறிக் கொண்டு இருங்கள். பாபா யோகத்தில் இருக்க முடிவதில்லை என்று குழந்தைகள் கூறுகிறார்கள். அட, என்னை நினைவு செய்யுங்கள் என்று உங்களுக்கு நேரிடையாக கூறிக் கொண்டிருக்கிறேன். பிறகு யோகா என்ற வார்த்தையை ஏன் நீங்கள் கூறுகிறீர்கள்? யோகா என்று கூறுவதால் தான் நீங்கள் மறக்கவும் செய்கிறீர்கள். தந்தையை யார் தான் நினைவு செய்ய முடியாது? லௌகீக தாய் தந்தையை எப்படி நினைவு செய்கிறீர்கள்? இவரும் தாய் தந்தை ஆவார் அல்லவா? இவரும் படிக்கிறார். சரஸ்வதியும் படிக்கிறார். படிப்பிப்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார். நீங்கள் எவ்வளவு படிக்கிறீர்களோ பின் மற்றவர்களுக்குப் புரிய வைக்கிறீர்கள். குழந்தைகளே! சாஸ்திரங்கள் படிப்பதாலோ, ஜபம் தவம் செய்வதாலோ என்னை அடைய முடியாது என்று தந்தை கூறுகிறார். மற்றபடி அதனால் நன்மை தான் என்ன? படியோ இறங்கித் தான் வந்துள்ளீர்கள்.

 

உங்களுக்கு யாருமே எதிரி இல்லை. பிறகும் பாவம் மற்றும் புண்ணியம் எப்படி சேமிப்பு ஆகிறது என்பதை நீங்கள் அவசியம் புரிய வைக்க வேண்டும். இராவண ராஜ்யம் ஆரம்பமான பின் தன் நீங்கள் பாவம் செய்ய ஆரம்பிக்கிறீர்கள். புதிய உலகம் என்றால் என்ன? பழைய உலகம் என்றால் என்ன? என்பது கூட புரிய வைக்கத் தெரியாத குழந்தைகளும் இருக்கிறார்கள். இப்பொழுது எல்லையில்லாத தந்தையை நினைவு செய்யுங்கள். அவரே பதீத பாவனர் ஆவார் என்று தந்தை கூறுகிறார். மற்றபடி நீங்கள் எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பக்தி மார்க்கத்தில் எப்பொழுதும் கால்கள் வீட்டிற்கு வெளியே தான் போகும். "கிருஷ்ணரின் படம் வீட்டிலும் இருக்கிறது. பிறகு ஏன் வெளியில் செல்கிறீர்கள்? என்ன வித்தியாசம்" என்று கணவன் மனைவிக்கு கூறுகிறார். "கணவனே கண் கண்ட தெய்வம்" என்பதைக் கூட ஏற்பதில்லை. பக்தி மார்க்கத்தில் மனிதர்களுக்கு பாவனை ஏற்பட வேண்டும் என்பதற்காக மிகவும் தூர தூரத்தில் உயரமான இடத்தில் கோவில்களை அமைக்கிறார்கள். கோவில்களில் எவ்வளவு அடி வாங்குகிறார்கள் என்பதை நீங்கள் புரிய வைக்கிறீர்கள். இது ஒரு வழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவகாசிக்கு தீர்த்த யாத்திரை செல்கிறார்கள். ஆனால் பிராப்தி எதுவும் இல்லை. இப்பொழுது உங்களுக்கோ தந்தையின் ஸ்ரீமத் கிடைக்கிறது. நீங்கள் எங்குமே செல்ல வேண்டியது இல்லை. கணவர்களுக்கெல்லாம் கணவன் பரமேஷ்வரன் உண்மையில் அந்த ஒருவரே ஆவார். அவரை உங்களது கணவன், சித்தப்பா, மாமா எல்லோருமே நினைவு செய்கிறார்கள். அவர் தான் பதி பரமேஷ்வரன் அல்லது பிதா பரமேஷ்வரன் ஆவார். அவர் "என் ஒருவனை நினைவு செய்வதால் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகும்" என்று உங்களுக்குக் கூறுகிறார். உங்களது ஜோதி இப்பொழுது ஏற்றப்பட்டு கொண்டிருக்கிறது. எனவே உங்கள் மூலம் மனிதர்களுக்கு ஒளி தெரிய வருகிறது. எனவே குழந்தைகளின் பெயர் கூட பிரசித்தமாக ஆக வேண்டி உள்ளது. தந்தை குழந்தைகளின் பெயரையோ புகழடையச் செய்கிறார் அல்லவா? சுதேஷ் குழந்தை புரிய வைப்பதில் மிகவும் கூர்மையாக உள்ளார். புருஷார்த்தம் (முயற்சி) மிகவும் நன்றாக செய்திருப்பதால் பழையவர்களை விடவும் முன்னால் சென்றுள்ளார். இதில் கூட அதிகமாக முயற்சி செய்து முன்னால் சென்று விடுவார்.எல்லாமே முயற்சியை (புருஷார்த்தம்) பொருத்தது ஆகும். மனமுடைந்து போகக் கூடாது. பின்னால் வந்திருந்தீர்கள் என்றாலும் கூட ஒரு வினாடியில் நீங்கள் முக்தியை அடைய முடியும். நாளுக்கு நாள் இது போல நிறைய பேர் வெளிப்பட்டு கொண்டே இருப்பார்கள். நாடகத்தில் உங்களுக்கு வெற்றியின் பார்ட்டோ இருக்கவே இருக்கிறது. தடைகளும் ஏற்படுகின்றன. வேறு எந்த சத்சங்கங்களிலும் இது போல தடைகள் ஏற்படுவது இல்லை. இங்கு விகாரங்கள் காரணமாகத் தான் குழப்பம் ஏற்படுகின்றது. அமிருதத்தை விடுத்து எதற்காக விஷம் உட் கொள்ள வேண்டும் என்ற பாடல் கூட உள்ளது. ஞானத்தினால் ஒரு தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகி விடுகிறது. சத்யுகத்தில் இராவண ராஜ்யம் இருக்க முடியாது. விளக்கவுரை எவ்வளவு தெளிவாக உள்ளது! இராம ராஜ்யத்திற்கு அருகிலேயே இராவண ராஜ்யத்தைக் கூட காண்பித்துள்ளோம். நீங்கள் நேரத்தையும் காண்பிக்கிறீர்கள். இது சங்கமம் ஆகும். உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஸ்தாபனை, பாலனை மற்றும் விநாசம் செய்விப்பவர் ஒரு தந்தை ஆவார். மிகவும் சுலபமானது தான். ஆனால் தாரணை முழுமையாக ஆகவில்லை என்றால் வேறு எல்லா விஷயங்களும் நினைவு இருக்கிறது. ஞானம் மற்றும் யோகம் மறந்து விடுகிறது. நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானின் குழந்தைகள் ஆவீர்கள். நாளுக்கு நாள் நீங்கள் செழிப்புடையவர்களாக ஆகிக் கொண்டே செல்கிறீர்கள். செல்வம் கிடைக்கிறது அல்லவா? செலவிற்காகவும் வந்து கொண்டே இருக்கிறது. உண்டி நிரம்பிக் கொண்டே போகும் என்று பாபா கூறுகிறார். முந்தைய கல்பத்தைப் போலவே நீங்கள் செலவு செய்வீர்கள். குறைவாகவோ அதிகமாகவோ நாடகம் செய்ய விடாது. நாடகத்தின் மீது பாபாவிற்கு அசைக்க முடியாத நிச்சயம் உள்ளது. எது நடந்து முடிந்ததோ அது நாடகம் ஆகும். "இப்படி ஆகி இருந்தால் இது செய்திருக்க மாட்டோம்" என்று இது போல கூறக் கூடாது. இது வரையும் அந்த நிலை வரவில்லை. ஏதாவதொன்று வாயிலிருந்து வெளிப்பட்டு விடுகிறது. பிறகு பச்சாதாபம் ஆகிறது. நடந்தது பற்றி சிந்திக்காதீர்கள். மீண்டும் அந்த தவறு ஏற்படாத வகையில் மேற் கொண்டு புருஷார்த்தம் (முயற்சி) செய்யுங்கள் என்று பாபா கூறுகிறார். எனவே சார்ட் எழுதுங்கள் என்று பாபா கூறுகிறார். இதில் நிறைய நன்மை உள்ளது. ஒருவர் முழு வாழ்க்கை சரிதத்தை எழுதிக் கொண்டிருப்பதை பாபா பார்த்திருந்தார். குழந்தைகள் அதைப் படித்து கற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள். இங்கு பின் ஸ்ரீமத் படி நடப்பதில் தான் நன்மை உள்ளது. இங்கு பொய்யெல்லாம் நடக்காது. நாரதரினுடைய உதாரணம். சார்ட்டினால் நிறைய நன்மை உள்ளது. பாபா கட்டளையிடுகிறார் என்றால் குழந்தைகள் கட்டளைப் படி நடக்க வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஞானத்தை தாரணை செய்து மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஞான செல்வத்தை தானம் செய்து மகாதானி ஆக வேண்டும். யாரிடமும் சாஸ்திரங்களின் விளக்கங்களை கூறிக் கொண்டு இருக்காமல் தந்தையின் உண்மையான அறிமுகம் கொடுக்க வேண்டும்.

 

2. நீங்கள் நடந்து முடிந்த விஷயங்கள் பற்றி சிந்தனை செய்யக் கூடாது. மீண்டும் ஒரு பொழுதும் அந்த தவறு ஏற்படாத வகையில் அப்பேர்ப்பட்ட புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். தனது மிக உண்மையான சார்ட் வைக்க வேண்டும்.

 

வரதானம் :

சத்தியத்தின் அதிகாரத்தை கடைபிடித்து அனைவரையும் கவரக்கூடியவராகி பயமற்றவராகவும் வெற்றியாளராகவும் ஆகுக.

 

குழந்தைகளாகிய தாங்கள் சத்தியத்தின் சக்தியுடைய உயர்ந்த ஆத்மாக்கள். சத்திய ஞானம், சத்திய தந்தை, சத்திய பிராப்தி, சத்திய நினைவு, சத்திய குணம், சத்திய சக்திகள் அனைத்தும் கிடைத்திருக்கின்றது. இவ்வளவு பெரிய அதிகாரத்தின் போதை இருந்தால் இந்த சத்தியத்தின் அதிகாரம் ஒவ்வொரு ஆத்மாவையும் கவர்ந்து கொண்டே இருக்கும். பொய்யான கண்டத்தில் கூட இப்படிப்பட்ட சத்தியத்தின் சக்தி உடையவர் வெற்றியாளர் ஆகிறார்கள். சத்தியத்தின் பிராப்தி மகிழ்ச்சி மற்றும் பயமின்மை ஆகும். சத்தியத்தை பேசக் கூடியவர்கள். பயமற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஒருபோதும் பயம் இருக்காது.

 

சுலோகன் :

வாயு மண்டலத்தை பரிவர்த்தனை செய்வதற்கான சாதனம் நேர்மறையான எண்ணம் மற்றும் சக்திசாலியான உள்ளுணர்வு ஆகும்.

 

பிரம்மா பாபாவிற்கு சமமாக மாறுவதற்கான விஷேச முயற்சி

 

பிரம்மா பாபா ஒவ்வொரு கர்மத்தில், பேச்சில், தொடர்பு மற்றும் சம்பந்த்தில் அன்பு நிறைந்தவராக இருந்தார். மேலும் நினைவு மற்றும் ஸ்திதியில் அன்பில் மூழ்கியிருந்தார் இது போன்று பாபாவைப் பின்பற்றுங்கள். எவ்வளவு அன்புடையவராக இருக்கிறீர்களோ அவ்வளவு அன்பில் மூழ்கி இருக்க முடியும். மேலும் மற்றவர்களையும் எளிதாக தனக்கு சமமாகவும் பாபாவிற்கு சமமாகவும் மாற்ற முடியும்.

 

ஓம்சாந்தி