28.02.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்பொழுது அன்னப்பறவை ஆவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் இந்த லெட்சுமி நாராயணனைப் போன்று அன்னப்பறவையாக அதாவது சம்பூர்ண நிர்விகாரிகளாக ஆக வேண்டும்.

 

கேள்வி:

இந்த ஞான மார்க்கத்தில் தீவிரமாக செல்வதற்கான எளிய விதி என்ன?

 

பதில்:

இந்த ஞானத்தில் தீவிரமாக செல்ல வேண்டுமெனில் மற்ற அனைத்து சிந்தனைகளையும் விடுத்து தந்தையின் நினைவில் ஈடுபட்டு விடுங்கள். இதன் மூலம் விகர்மம் விநாசம் ஆகிவிடும் மற்றும் முழு அசுத்தமும் நீங்கி விடும். நினைவு யாத்திரை தான் உயர்ந்த பதவிக்கு ஆதாரமாகும். இதன் மூலம் தான் நீங்கள் சோழியிலிருந்து வைரமாக ஆக முடியும். உங்களை சோழியிலிருந்து வைரமாக, தூய்மை இல்லாமலிருந்து தூய்மை ஆக்குவது தான் தந்தையின் கடமையாகும். இது இல்லாமல் தந்தையாலும் கூட இருந்து விட முடியாது.

 

ஓம்சாந்தி.

இந்த உலகில் சிலர் அன்னப்பறவைகளாகவும் இருக்கின்றனர், சிலர் கொக்குகளாகவும் இருக்கின்றனர் என்று தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். இந்த லெட்சுமி நாராயணன் அன்னப்பறவைகளாக இருக்கின்றனர், இவர்களைப் போன்று நீங்கள் ஆக வேண்டும். நாம் தெய்வீக வம்சத்தினர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள். நீங்கள் தெய்வீக வம்சத்தினர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தந்தை கூறுவார், நான் உங்களை அன்னப்பறவைகளாக ஆக்குகிறேன், இப்பொழுது முழுமையாக ஆகவில்லை, ஆக வேண்டும். அன்னப்பறவையானது முத்துக்களைத் தேர்ந்தெடுக்கும், கொக்கு அசுத்தம் சாப்பிடும். இப்பொழுது நாம் அன்னப்பறவைகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம், அதனால் தான் தேவதைகள் மலர் என்று கூறப்படுகின்றனர், இவர்கள் முட்கள் என்று கூறப்படுகின்றனர். அன்னப்பறவைகளாக இருந்தீர்கள், பிறகு கீழே இறங்கி நாரைகளாக ஆகிவிட்டீர்கள். அரைகல்பம் அன்னப்பறவையாக, அரைக்கல்பம் கொக்குகளாக ஆகிறீர்கள். அன்னப்பறவை ஆவதிலும் மாயை அதிக தடைகளைப் போடுகிறது. ஏதாவது சரிவு ஏற்பட்டு விடுகிறது. முக்கியமாக சரிவுக்குக் காரணமாக வருவது தேக அபிமானமாகும். இந்த சங்கமத்தில் தான் குழந்தைகளாகிய நீங்கள் மாற வேண்டும். எப்பொழுது நீங்கள் அன்னப்பறவை ஆகிவிடுவீர்களோ அப்பொழுது எங்கும் அன்னமாகவே தென்படும். அன்னம் என்றால் புது உலகில் தேவி தேவதைகள். பழைய உலகில் ஒருவர் கூட அன்னமாக இருக்க முடியாது. சந்நியாசியாக இருக்கலாம், ஆனால் அவரும் எல்லைக்குட்பட்ட சந்நியாசி ஆவார். நீங்கள் எல்லையற்ற சந்நியாசிகள். பாபா எல்லையற்ற சந்நியாசத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த தேவதைகளைப் போன்று சர்வ குணங்கள் நிறைந்தவர்களாக வேறு எந்த தர்மத்தைச் சார்ந்தவர்களும் ஆவது கிடையாது. இப்பொழுது ஆதி சனாதன தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக தந்தை வந்திருக்கிறார். நீங்கள் புது உலகில் முதன் முதலில் சுகத்திற்கு வருகிறீர்கள், வேறு யாரும் வருவது கிடையாது. இப்பொழுது இந்த தேவதா தர்மம் மறைந்து விட்டது. இந்த விசயங்களை நீங்கள் இப்பொழுது தான் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் மற்றும் புரிந்து கொள்கிறீர்கள், வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. அவர்களது அனைத்தும் மனித வழியாகும், விகாரத்தின் மூலம் அனைவரும் படைக்கப்பட்டிருக்கின்றனர் அல்லவா! சத்யுகத்தில் விகாரத்திற்கான எந்த விசயமும் கிடையாது. தேவதைகள் தூய்மையாக இருந்தனர். அங்கு யோகா பலத்தின் மூலம் தான் அனைத்தும் நடைபெறும். அங்கு குழந்தைகள் எவ்வாறு பிறப்பர்? என்பது இங்கிருக்கும் தூய்மை இல்லாத மனிதர்களுக்கு எப்படித் தெரியும்! அங்கு யோக பலமாகும், விகாரத்தின் விசயமே கிடையாது என்று கூறுங்கள். 100 சதவிகிதம் விகாரமற்றநிலை. நாம் சுபமான வார்த்தைகள் தான் பேசுகிறோம். நீங்கள் சுபமற்ற வார்த்தைகள் ஏன் கூறுகிறீர்கள்? இதன் பெயரே (வைஷ்யாலயம்) விரதம் நிறைந்த உலகம் அதன் பெயர் சிவாலயம். அந்த சிவாலயம் சிவபாபா ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். சிவபாபா உயர்ந்ததிலும் உயர்ந்த கோபுரம் அல்லவா! சிவாலயத்தையும் இவ்வாறு உயரமாக உருவாக்கு கின்றனர். சிவபாபா உங்களை சுகத்தின் கோபுரமாக ஆக்குகின்றார், சுகமான உலகிற்கு அழைத்துச் செல்கிறார். அதனால் தான் பாபாவின் மீது அதிக அன்பு இருக்கிறது. பக்தி மார்க்கத்திலும் சிவபாபாவின் மீது அன்பு இருக்கிறது. சிவபாபாவின் கோயிலுக்கு மிக அன்பாகச் செல்கின்றனர். ஆனால் எதுவும் புரிந்து கொள்வது கிடையாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் சர்வ குணங்களில் சம்பன்னமாக (முழுமை) ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது சம்பூர்ணம் ஆகவில்லை. எப்பொழுது உங்களது இராஜ்யம் முழுமையாக ஸ்தாபனை ஆகிவிடுமோ அப்பொழுது உங்களுக்கு பரீட்சை ஏற்படும். பிறகு மற்ற அனைவரும் அழிந்து விடுவர். பிறகு வரிசைக்கிரமமாக சிறிது சிறிதாக வந்து கொண்டே இருப்பீர்கள். உங்களது இராஜ்யம் முதலிலேயே ஆரம்பமாகி விடும். மற்ற தர்மங்களில் முதலில் இராஜ்யம் ஆரம்பம் ஆவது கிடையாது. இராஜ்யமே உங்களுடையதாக ஆகிவிடும். இந்த விசயங்களை குழந்தைகள் தான் அறிவீர்கள். சேவைக்காக குழந்தைகள் காசிக்குச் சென்றனர், புரிய வைப்பதில் அவர்களுக்கு போதை இருக்கிறது. ஆனால் அங்குள்ளவர்கள் அந்த அளவிற்குப் புரிந்து கொள்ள முடியாது. கோடியில் சிலர் என்று பாடப்பட்டிருக்கிறது. அன்னப்பறவைகளாக மிகச் சிலரே ஆகின்றனர். ஆகவில்லையெனில் பிறகு அதிக தண்டனைகளை அடைகின்றனர். சிலர் 95 சதவிகிதம் தண்டனை அடைகின்றனர், 5 சதவிகிதம் மட்டுமே மாறுகின்றனர். முதல் நம்பர் மற்றும் கடைசி நம்பர் ஏற்படுகிறது அல்லவா! இப்பொழுது யாரும் தன்னை அன்னம் என்று கூறிக் கொள்ள முடியாது. முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். எப்பொழுது ஞானம் முடிவடைந்து விடுகிறதோ அப்பொழுது யுத்தமும் ஏற்படும். முழு ஞானமும் அடைய வேண்டும் அல்லவா! அந்த யுத்தம் தான் கடைசியானதாக இருக்கும். இப்பொழுது யாரும் 100 சதவிகிதம் ஆகவில்லை. இப்பொழுது வீடாக வீடு செய்தியைக் கொண்டு செல்ல வேண்டும். மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டு விடும். உருவாக்கியிருக்கும் பெரிய பெரிய மாளிகைகள் எல்லாம் ஆட ஆரம்பித்து விடும். பக்தியின் சிம்மாசனமும் அசைய ஆரம்பித்து விடும். இப்பொழுது பக்தர்களின் இராஜ்யம் அல்லவா! அதன் மீது நீங்கள் வெற்றி அடைகிறீர்கள். இப்பொழுது பிரஜைகளின் மீது பிரஜைகளின் இராஜ்யம் ஆகும், பிறகு மீண்டும் மாற்றம் ஏற்படும். இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் ஆகிவிடும். நீங்கள் சாட்சாத்காரம் செய்து கொண்டே இருப்பீர்கள். ஆரம்பத்தில் உங்களுக்கு அதிக சாட்சாத்காரம் செய்வித்துக் கொண்டிருந்தார் - இராஜ்யம் எவ்வாறு நடைபெறும்? ஆனால் சாட்சாத்காரம்  செய்தவர்கள் இன்று கிடையாது. நாடகத்தில் யாருக்கு என்ன பாகம் கிடைத்திருக்கிறதோ அது நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இதில் நாம் யாருக்கும் மகிமை செய்ய வேண்டியதில்லை. நீங்கள் எனக்கு ஏன் மகிமை செய்கிறீர்கள்? என்று தந்தையும் கேட்கிறார். தூய்மை இல்லாதவர்களை தூய்மை ஆக்குவது எனது கடமையாகும். கற்பிப்பது ஆசிரியரின் கடமையாகும். தனது கடமை செய்பவர்களை ஏன் மகிமை செய்ய வேண்டும்? நானும் நாடகத்திற்கு வசமாகியிருக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இதில் சக்தி யாருக்கு இருக்கிறது? இது எனது கடமையாகும். கல்ப கல்பம் சங்கமத்தில் வந்து தூய்மை இல்லாதவர்களை தூய்மை ஆக்கும் வழி கூறுகிறேன். தூய்மை ஆக்காமல் என்னால் இருக்க முடியாது. எனது பாகம் மிகச் சரியானதாகும். ஒரு விநாடி கூட முன் பின் ஏற்பட முடியாது. முற்றிலும் சரியான நேரத்தில் சேவைக்கான பாகத்தை நடிக்கிறேன். கடக்கும் ஒவ்வொரு விநாடியும் நாடகம் என் மூலமாக செய்விக்கிறது. நானும் வசமாகியிருக்கிறேன், இதில் மகிமைக்கான விசயம் கிடையாது. நான் கல்ப கல்பத்திற்கு வருகிறேன். தூய்மை இல்லாதவர்களை தூய்மை ஆக்குபவரே வாருங்கள் என்று என்னை அழைக்கிறீர்கள். எவ்வளவு தூய்மை அற்றவர்களாக ஆகிவிட்டீர்கள்! ஒவ்வொரு அவகுணத்தையும் விட வைப்பதில் எவ்வளவு உழைப்பு ஏற்படுகிறது! அதிக காலம் தூய்மையாக இருந்தும் கூட நாளடைவில் மாயையின் தாக்குதல் ஏற்படுவதன் மூலம் முகத்தைக் கருப்பாக்கிக் கொள்கின்றனர்.

 

இது தமோ பிரதான உலகமாகும். மாயை என்ற எதிரி அதிகமாக எதிர்கொள்கிறது. சந்நியாசிகளும் விகாரத்தின் மூலம் தான் பிறப்பு எடுக்கின்றனர். யாரும் ஜோதி ஜோதியுடன் கலந்து விடுவது கிடையாது, திரும்பிச் செல்லவும் முடியாது. ஆத்மா அழிவற்றது ஆகும், மேலும் அதன் நடிப்பும் அழிவற்றதாகும். பிறகு ஜோதி ஜோதியுடன் எவ்வாறு ஐக்கியமாக முடியும்? எத்தனை மனிதர்கள் இருக்கின்றனரோ அவ்வளவு விசயங்கள் உள்ளன. அவையனைத்தும் மனித வழிகள் ஆகும். ஈஸ்வரிய வழி ஒன்று தான். தேவதைகளின் வழி இங்கு இருக்கவே முடியாது. தேவதைகள் சத்யுகத்தில் இருப்பர். ஆக இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். மனிதர்கள் எதையும் அறியவில்லை, அதனால் தான் கருணை காட்டுங்கள் என்று ஈஸ்வரனை அழைக்கின்றனர். தந்தை கூறுகின்றார் - உங்களை பூஜைக்குத் தகுதியானவர்களாக நான்  ஆக்குகிறேன். இப்பொழுது பூஜைக்குத் தகுதியானவர்களாக கிடையாது, ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நாம் இவ்வாறு ஆவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள், பிறகு பக்தி மார்க்கத்தில் நமக்குத் தான் மகிமை ஏற்படும், நமது கோயில்கள் உருவாகும். சண்டிகா தேவிக்கும் திருவிழா நடைபெறுவதை நீங்கள் அறிவீர்கள். யார் தந்தையின் ஸ்ரீமத்படி நடக்கவில்லையோ அவர்கள் சண்டிகர்கள். இருப்பினும் உலகைத் தூய்மையாக ஆக்குவதில் ஏதாவது உதவி செய்கின்றனர் அல்லவா! சேனை அல்லவா! தண்டனை போன்றவைகள் அனுபவித்த பிறகும் உலகிற்கு எஜமானர்களாக ஆகின்றனர் அல்லவா! இங்கு ஆதிவாசிகளாக இருப்பவர்களும் கூட நாம் பாரதத்திற்கு எஜமானர்கள் என்று கூறுகின்றனர். இன்றைய நாட்களில் நமது பாரதம் அனைத்தையும் விட உயர்ந்த தேசம் என்று ஒருபுறம் கூறுகின்றனர், மறுபுறம் பாரதத்தின் நிலை என்னவாகி விட்டது என்றும் பாடுகின்றனர். ரத்த நதி ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒருபுறம் மகிமை, மறுபுறம் நிந்தனை. எதையும் புரிந்து கொள்வது கிடையாது. உங்களுக்கு யதார்த்த முறையில் தந்தை இப்பொழுது புரிய வைக்கிறார். இவர்களுக்கு பகவான் கற்பிக்கிறார் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. இவர்கள் பகவானை ஆசிரியராக ஆக்கியிருக்கின்றனர், ஆஹா என்று கூறுவர். அரே, பகவானின் மகாவாக்கியம் - நான் உங்களை இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன். கீதையில் மனிதனின் பெயர் வைத்து கீதையை தவறானதாக ஆக்கி விட்டனர். கிருஷ்ண பகவானின் மகாவாக்கியம் என்பது மனித வழி ஆகிவிட்டது அல்லவா! கிருஷ்ணர் எப்படி இங்கு வருவார்? அவர் சத்யுகத்தின் இளவரசராக இருந்தார். அவர் இந்த தூய்மை இல்லாத உலகிற்கு வருவதற்கு என்ன அவசியம் இருக்கிறது.

 

தந்தையை குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். ஆனால் உங்களிலும் மிகச் சிலரே யதார்த்தமாக அறிந்திருக்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களது வாயிலிருந்து சதா ரத்தினங்கள் தான் வெளிப்பட வேண்டும், கற்கள் அல்ல. நான் இவ்வாறு ஆகியிருக்கிறேனா? என்று தனக்குள் கேளுங்கள். நான் அசுத்தத்திலிருந்து விரைவில் வெளி வர வேண்டும் என்று விரும்பவும் செய்கிறீர்கள். ஆனால் விரைவில் ஏற்பட முடியாது. கால தாமதம் ஏற்படுகிறது. நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. புரிய வைப்பவர்களிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. கடைசியில் யுக்தியுக்தாகப் புரிய வைப்பீர்கள். அப்பொழுது உங்களது அம்பு பாயும். நாம் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். கற்பிப்பவர் ஒரே ஒருவர். அனைவரும் அவரிடம் படிக்கக் கூடியவர்கள். நாட்கள் செல்ல செல்ல நீங்கள் அப்படிப்பட்ட யுத்தங்களைப் பார்ப்பீர்கள், கேட்கவே கேட்காதீர்கள். யுத்தத்தில் பலர் இறந்து போவார்கள். பிறகு இவ்வளவு ஆத்மாக்கள் எங்கு செல்வார்கள்! ஒன்றாகச் சென்று பிறப்பு எடுப்பார்களா? மரம் பெரியதாக இருக்கும், பல கிளைகள், இலைகள் ஆகிவிடுகிறது. தினமும் எத்தனை பேர் பிறக்கின்றனர், எத்தனையோ பேர் இறக்கவும் செய்கின்றனர். திரும்பி யாரும் செல்ல முடியாது. மனிதர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர். இந்த சிறு விசயங்களில் செல்வதற்கு முன் தந்தையை நினைவு செய்தால் விகர்மம் விநாசம் ஆகும் மற்றும் அசுத்தம் நீங்கி விடும். மற்றவைகள் எல்லாம் அடுத்த விசயங்களாகும். நீங்கள் இதைப் பற்றி எந்த சிந்தனையும் செய்ய வேண்டாம். முதலில் இவ்வாறு ஆவதற்கான முயற்சி செய்யுங்கள். முக்கியமானது நினைவு யாத்திரையாகும், மேலும் அனைவருக்கும் செய்தி கொடுப்பதாகும். தூதுவர் ஒரே ஒருவர் தான். தர்மத் தலைவர்களையும் தூதுவர்கள் என்று கூற முடியாது. சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு சத்குரு ஆவார். மற்றபடி பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் சிறிதளவு விழிப்படைகின்றனர். ஏதாவது தானமும் செய்கின்றனர். தீர்த்த யாத்திரைகளுக்கும் செல்கின்றனர் எனில் ஏதாவது தானம் கொடுத்து விட்டு வருகின்றனர். இந்த கடைசிப் பிறவில் தந்தை நம்மை வைரம் போன்று ஆக்குகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது தான் விலை மதிக்க முடியாத வாழ்க்கை என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த அளவிற்கு முயற்சி செய்ய வேண்டும். நமது குற்றம் எதுவும் கிடையாது என்று நீங்கள் கூறுவீர்கள். அட, நான் மலர்களாக ஆக்குவதற்காக வந்திருக்கிறேன் எனில் ஏன் ஆவது கிடையாது? தூய்மை ஆக்குவது எனது கடமையாகும். ஆக நீங்கள் ஏன் முயற்சி செய்வது கிடையாது. முயற்சி செய்விக்கும் தந்தை கிடைத்திருக்கிறார். இந்த லெட்சுமி நாராயணனை இவ்வாறு ஆக்கியது யார்? உலகத்தினர் அறியவில்லை. தந்தை வருவதே சங்கமத்தில். இப்பொழுது உங்களது விசயங்களை சிலர் புரிந்து கொள்வது கிடையாது. நாளடைவில் உங்களிடம் பலர் வருகின்ற பொழுது அவர்களது வாடிக்கையாளர்கள் குறைந்து விடுவார்கள். தந்தை கூறுகின்றார் - இந்த வேத சாஸ்திரங்களின் சாரத்தை நான் கூறுகிறேன். பல குருக்கள் உள்ளனர், அனைவரும் பக்தி மார்க்கத்தைச் சார்ந்தவர்கள். சத்யுகத்தில் அனைவரும் தூய்மையாகவே இருந்தீர்கள், பிறகு தூய்மையற்றவர்களாக ஆனீர்கள். இப்பொழுது தந்தை மீண்டும் வந்து உங்களை எல்லையற்ற சந்நியாசம் செய்ய வைக்கிறார். ஏனெனில் இந்த பழைய உலகம் அழியப் போகிறது. அதனால் தந்தை கூறுகிறார் சுடுகாட்டிலிருந்து புத்தியை நீக்கி தந்தையாகிய என்னை நினைவு செய்தால் விகர்மம் விநாசம் ஆகும். இது கடைசி நேரமாகும். அனைவரின் கணக்கு வழக்கும் முடிவடையப் போகிறது. முழு உலக ஆத்மாக்களுக்குள்ளும் முழு நடிப்பு நிறைந்திருக்கிறது. ஆத்மா சரீரத்தை தாரணை செய்து நடிக்கிறது. ஆக ஆத்மாவும் அழிவற்றது, நடிப்பும் அழிவற்றதாகும். இதில் எந்த மாற்றமும் ஏற்படாது. அவ்வாறே திரும்பவும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இது மிகப் பெரிய எல்லையற்ற நாடகமாகும். வரிசைக்கிரமம் ஏற்படவே செய்கிறது. சிலர் ஆன்மீக சேவை செய்கின்றனர், சிலர் ஸ்தூல சேவை செய்கின்றனர். பாபா, நான் உங்களது டிரைவராக ஆக வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர், ஆக அங்கும் விமானத்திற்கு எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள். இன்றைய நாட்களில் பெரிய மனிதர்கள் இதுவே நமக்கு சொர்க்கம் என்று நினைக்கின்றனர். பெரிய பெரிய மாளிகை, விமானம் இருக்கிறது. தந்தை கூறுகின்றார் - இவை அனைத்தும் செயற்கையானவை, இது மாயையின் கவர்ச்சி என்று கூறுகிறோம். என்ன என்ன கற்றுக் கொண்டிருக்கின்றனர்! கப்பல் போன்றவைகளை உருவாக்குகின்றனர். இந்த கப்பல் போன்றவைகள் அங்கு காரியத்திற்கு உதவாது. அணுகுண்டு தயாரிக்கின்றனர், இவைகள் அங்கு காரியத்திற்குப் பயன்படாது. சுகம் கொடுக்கும் பொருட்கள் காரியத்திற்கு பயன்படும். விநாசம் ஏற்பட விஞ்ஞானம் உதவி செய்கிறது. பிறகு அதே விஞ்ஞானம் உங்களுக்கு புது உலகை உருவாக்கு வதில் உதவி செய்யும். இந்த நாடகம் மிக அதிசயமானதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) அழிவுக்கான இறுதி காலத்தில் பழைய உலகை எல்லையற்ற அளவில் துறக்க வேண்டும். இந்த சுடுகாட்டிலிருந்து புத்தியை நீக்கி விட வேண்டும். நினைவில் இருந்து அனைத்து பழைய கணக்கு வழக்குகளையும் முடிக்க வேண்டும்.

 

2) வாயில் எப்பொழுதும் ஞான ரத்தினங்கள் வெளிப்பட வேண்டும், கற்கள் அல்ல. முழுமையான அன்னப்பறவையாக ஆக வேண்டும். முட்களை மலர் ஆக்கும் சேவை செய்ய வேண்டும்.

 

வரதானம்:

எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்து மாயையின் இராயல் ரூபத்தின் நிழலிருந்து பாதுகாப்பாக இருக்கக் கூடிய மாயையால் பாதிக்கப்படாதவர் (மாயா ப்ரூஃப்) ஆகுக.

 

தற்சமயத்தில் மாயை உண்மையான விழிப்புணர்வை, அனுபவத்தின் சக்தியை மாயமாக்கி விட்டு தவறை சரியானதாக அனுபவம் செய்விக்கிறது. எப்படி ஏதாவது மாய மந்திரம் செய்தால் பிறர் வசப்பட்டு விடுகின்றனரோ அப்படி இராயல் மாயை உண்மையை புரிந்து கொள்ள விடுவதில்லை. ஆகையால் பாப்தாதா கவனம் என்பதை இரட்டை அடிக்கோடு (அண்டர் லைன்) இடுகிறார். மிகவும் எச்சரிக்கை நிறைந்தவராக இருங்கள், அதன் மூலம் மாயையின் நிழலிலிருந்து பாதுகாப்பானவராக மாயையால் பாதிக்கப் படாதவராக ஆகி விடுங்கள். குறிப்பாக மனம்-புத்தியை தந்தையின் குடை நிழலின் ஆதரவில் கீழ் கொண்டு வாருங்கள்.

 

சுலோகன்:

யார் சகஜயோகியோ அவர்களைப் பார்த்து மற்றவர்களின் யோகம் (நினைவின் தொடர்பு) கூட சகஜமாக ஏற்பட்டு விடுகிறது.

 

ஓம்சாந்தி