06.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! நீங்கள் பாபாவிற்குச் சமமாக இறைவனின் உதவியாளர்களாக ஆக வேண்டும், பாபா சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்ய வருகின்றார்

 

கேள்வி:-

இந்த புருஷோத்தம சங்கமயுகம் தான் அனைத்திலும் மகிழ்ச்சியானது மற்றும் நன்மையானது - எப்படி?

 

பதில்:-

இந்த சமயத்தில் குழந்தைகளாகிய நீங்கள் ஆண் மற்றும் பெண் இருவருமே உத்தமர்களாக ஆகின்றீர்கள். இந்த சங்கமயுகமே கலியுகத்தின் கடைசி மற்றும் சத்யுகத்தின் ஆரம்பத்திற்கு இடைப்பட்ட காலமாகும். இந்த சமயத்தில் தான் பாபா குழந்தைகளாகிய உங்களுக்காக ஈஸ்வரிய பல்கலைக்கழகத்தை திறக்கின்றார், இங்கே நீங்கள் மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகின்றீர்கள். இப்படிப்பட்ட பல்கலைக் கழகம் முழு கல்பத்திலும் வேறு எப்போதும் இருப்பதில்லை. இந்த சமயத்தில் அனைவருக்கும் சத்கதி ஏற்படுகிறது.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். இங்கே அமர்ந்து கொண்டு முதலாவதாக நீங்கள் பாபாவை நினைவு செய்கின்றீர்கள் ஏனென்றால் அவர் தூய்மையற்றவர்களை தூய்மையாக்கக் கூடியவர், அவரை நினைவு செய்வதின் மூலம் தூய்மையாக சதோபிரதானமாக ஆவது தான் உங்களுடைய குறிக்கோளாகும். சதோ வரை ஆவது குறிக்கோள் என்பது கிடையாது. சதோபிரதானமாக ஆக வேண்டும் ஆகையினால் பாபாவையும் கண்டிப்பாக நினைவு செய்ய வேண்டும் பிறகு இனிமையான வீட்டையும் நினைவு செய்ய வேண்டும் ஏனென்றால் அதன் மூலம் அங்கே செல்ல வேண்டும் பிறகு செல்வம், ஆஸ்தியும் வேண்டும் ஆகையினால் தங்களுடைய சொர்க்கத்தையும் நினைவு செய்ய வேண்டும் ஏனென்றால் நினைவின் மூலம் இந்த பலன் கிடைக்கிறது. நாம் பாபாவின் குழந்தைகளாக ஆகியுள்ளோம் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள், பாபாவிடமிருந்து அறிவுரை (ஸ்ரீமத்) பெற்று நாம் வரிசைக்கிரமமான முயற்சியின்படி சொர்க்கத்திற்குச் செல்வோம். மற்றபடி மீதம் இருக்கின்ற ஆத்மாக்கள் அனைத்தும் சாந்திதாமத்திற்கு சென்று விடும். வீட்டிற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இப்போது இராவண இராஜ்யம் என்பதும் குழந்தைகளுக்குத் தெரிந்துள்ளது. இதற்கு மாற்றாக சத்யுகத்திற்கு இராம இராஜ்யம் என்று பெயர் அளிக்கப்படுகிறது. இரண்டு கலைகள் குறைந்து விடுகிறது. அவர்களை சூரிய வம்சத்தவர் என்றும் இவர்களை சந்திரவம்சத்தவர் என்றும் சொல்லப்படுகிறது. எப்படி கிறிஸ்துவ இராஜ்யம் ஒன்று தான் நடக்கிறதோ, அதேபோல் இதுவும் கூட ஒரு இராஜ்யமே ஆகும். ஆனால் அதில் சூரியவம்சத்தவர் மற்றும் சந்திரவம்சத்தவர் இருக்கிறார்கள். இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார், இதைத் தான் ஞானம் அல்லது நாலேட்ஜ் என்று சொல்லப்படுகிறது. சொர்க்கம் ஸ்தாபனை ஆகிவிட்டது என்றால் ஞானத்திற்கு அவசியம் இல்லை. இந்த ஞானம் குழந்தைகளுக்கு புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. சகோதர- சகோதரிகளே இது புருஷோத்தம சங்கமயுகமாகும், இது ஒரு முறை தான் வருகின்றது என்று தங்களுடைய சேவை நிலையங்கள் மற்றும் அருங்காட்சியகத்தில் பெரிய-பெரிய எழுத்துக்களில் கண்டிப்பாக எழுதப்பட்டிருக்க வேண்டும். புருஷோத்தம சங்கமயுகத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால், கலியுகத்தின் கடைசி மற்றும் சத்யுகத்தின் ஆரம்பத்தின் சங்கமம் என்று எழுத வேண்டும். எனவே சங்கமயுகம் அனைத்திலும் மகிழ்ச்சிகரமானதும், நன்மை விளைவிப்பதுமாக ஆகி விடுகிறது. நான் புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் வருகின்றேன், என்று பாபாவும் கூறுகின்றார். எனவே சங்கமயுகத்தின் அர்த்தத்தையும் புரிய வைக்கப்படுகிறது. விகாரம் நிறைந்த உலகத்தின் கடைசி, சிவாலயத்தின் ஆரம்பத்தை புருஷோத்தம சங்கமயுகம் என்று சொல்லப்படுகிறது. இங்கே அனைவரும் விகாரிகளாக இருக்கிறார்கள், அங்கே அனைவரும் நிர்விகாரிகளாக இருக்கிறார்கள். எனவே நிர்விகாரிகளைத் தான் உத்தமமானவர்கள் என்று சொல்ல முடியும் அல்லவா. ஆண் மற்றும் பெண் இருவருமே உத்தமமானவர்களாக ஆகின்றனர், ஆகையினால் இதனுடைய பெயரே புருஷோத்தம சங்கமயுகம் என்ற இந்த விஷயங்கள் பாபா மற்றும் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. புருஷோத்தம சங்கமயுகம் எப்போது நடக்கிறது என்பது யாருடைய சிந்தனையிலும் வருவதில்லை. இப்போது பாபா வந்துள்ளார், அவர் மனித சிருஷ்டியின் விதையாக இருக்கின்றார். அவருக்குத் தான் இவ்வளவு மகிமைகள் இருக்கின்றன, அவர்கள் ஞானக்கடல், ஆனந்தக் கடல், தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவராக இருக்கின்றார். ஞானத்தின் மூலம் சத்கதி அடைய வைக்கின்றார். பக்தியின் மூலம் சத்கதி என்று ஒரு போதும் நீங்கள் சொல்ல முடியாது. ஞானத்தின் மூலம் சத்கதி ஏற்படுகிறது, மேலும் சத்யுகத்தில் தான் சத்கதியாகும். எனவே கண்டிப்பாக கலியுகத்தின் கடைசி மற்றும் சத்யுக ஆரம்பத்தின் சங்கமயுகத்தில் தான் வருவார். பாபா எவ்வளவு தெளிவாகப் புரிய வைக்கின்றார். புதியவர்களும் அப்படியே கல்பத்திற்கு முன்னால் எப்படி வந்தார்களோ அப்படியே வருகிறார்கள், வந்து கொண்டே இருக்கிறார்கள். இராஜ்யம் அப்படித் தான் ஸ்தாபனை ஆக வேண்டும். நாம் இறைவனுடைய சேவாதாரிகள் உண்மையிலும் உண்மையானவர்கள், என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஒருவருக்கு மட்டுமே படிப்பிக்க முடியுமா? ஒருவர் (பிரம்மா பாபா) படிக்கின்றார் பிறகு இவர் மூலம் நீங்கள் படித்து மற்றவர்களுக்கும் படிப்பிக்கின்றீர்கள் ஆகையினால் இங்கே இந்த பெரிய பல்கலைக்கழகத்தை திறக்க வேண்டியிருக்கிறது. முழு உலகத்திலும் வேறு எந்த பல்கலைக்கழகமும் இல்லை. ஈஸ்வரிய பல்கலைக்கழகமும் இருக்கிறது என்பதை உலகத்தில் யாரும் தெரிந்திருக்கவில்லை. கீதையின் பகவான் சிவன் வந்து இந்த பல்கலைக்கழகத்தை திறக்கின்றார் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். புதிய உலகத்தின் எஜமானர்கள் தேவி-தேவதைகளாக மாற்றுகின்றார். இந்த சமயத்தில் தமோபிரதான ஆத்மாவாக ஆகிவிட்டது பிறகு அந்த ஆத்மாவே சதோபிரதானமாக ஆக வேண்டும். இந்த சமயத்தில் அனைத்தும் தமோபிரதானமாக இருக்கிறது அல்லவா. நிறைய குமாரர்கள் கூட தூய்மையாக இருக்கிறார்கள், குமாரிகளும் தூய்மையாக இருக்கிறார்கள், சன்னியாசிகள் கூட தூய்மையாக இருக்கிறார்கள் ஆனால் இன்றைக்கு அந்த தூய்மை இல்லை. முதல்-முதலில் ஆத்மாக்கள் வரும்போது, அது தூய்மையாக இருக்கிறது. பிறகு தூய்மையற்றதாக ஆகி விடுகிறது ஏனென்றால் அனைவரும் சதோபிரதானம், சதோ, ரஜோ, தமோவை கடக்க வேண்டியிருக்கிரது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். கடைசியில் அனைவரும் தமோபிரதானமாகி விடுகிறார்கள். இப்போது பாபா நேரடியாக அமர்ந்து புரிய வைக்கின்றார் - இந்த மரமானது தமோபிரதானமானதாக உளுத்துப்போன நிலையை அடைந்திருக்கிறது, பழையதாகி விட்டது எனவே கண்டிப்பாக இதனுடைய வினாசம் நடக்க வேண்டும். இது வித-விதமான தர்மங்களின் மரமாகும், ஆகையினால் இதை பெரிய லீலை என்று சொல்லப்படுகிறது. எவ்வளவு பெரிய எல்லையற்ற மரமாக இருக்கிறது. அது ஜட மரமாக இருக்கிறது,, விதை போட்டீர்கள் என்றால் அந்த மரம் வருகிறது. இது வித-விதமான தர்மங்களின் வித-விதமான சித்திரங்களாகும். அனைவருமே மனிதர்கள் தான் ஆனால் அதில் நிறைய விதங்கள் (பிரிவுகள்) இருக்கின்றன, ஆகையினால் மிகப் பெரிய லீலை என்று சொல்லப்படுகிறது. தர்மங்கள் அனைத்தும் எப்படி வரிசைகிரமமாக வருகிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அனைவரும் செல்ல வேண்டும் பிறகு வர வேண்டும். இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இயற்கையின் நாடகமாகும். இவ்வளவு சிறிய ஆத்மாவில் அல்லது பரம் ஆத்மாவில் எவ்வளவு நடிப்பு நிறைந்துள்ளது, இது தான் இயற்கையாகும். பரம் ஆத்மாவை சேர்த்து பரமாத்மா என்று சொல்லப்படுகிறது. நீங்கள் அவரை பாபா என்று சொல்கிறீர்கள் ஏனென்றால் அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் பரம தந்தையாவார். ஆத்மா தான் நடிப்பு அனைத்தையும் நடிக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மனிதர்கள் இதை தெரிந்திருக்க வில்லை. அவர்கள் ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்று சொல்லிவிட்டார்கள். உண்மையில் இந்த வார்த்தை தவறாகும். இதையும் பெரிய-பெரிய எழுத்துக்களில் எழுதி விட வேண்டும் - ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்பது இல்லை. ஆத்மா எப்படி-எப்படி நல்ல அல்லது கெட்ட கர்மம் செய்கிறதோ அதற்கேற்ப பலனை அடைகிறது. கெட்ட சம்ஸ்காரங்களினால் தூய்மையற்றதாக ஆகி விடுகிறது, ஆகையினால் தான் தேவதைகளுக்கு முன்னால் சென்று அவர்களை மகிமை பாடுகிறார்கள். இப்போது உங்களுக்கு 84 பிறவிகளைப் பற்றி தெரிந்து விட்டது, வேறு எந்த மனிதர்களும் தெரிந்திருக்கவில்லை. நீங்கள் அவர்களுக்கு 84 பிறவிகளை நிரூபித்து கூறுகின்றீர்கள் எனும்போது, சாஸ்திரங்கள் அனைத்தும் பொய்யா என்று கேட்கிறார்கள்? 84 லட்சம் யோனிகளை (பிறவிகளை) எடுக்கிறது என்று கேள்விபட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். உண்மையில் அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாய் கீதை என்பதை பாபா அமர்ந்து இப்போது புரிய வைக்கின்றார். பாபா இப்போது நமக்கு இராஜயோகத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார், இதை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் கற்றுக் கொடுத்திருந்தார்.

 

நாம் தூய்மையாக இருந்தோம், தூய்மையான இல்லற தர்மம் இருந்தது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது இதை தர்மம் என்று சொல்ல முடியாது. அதர்மிகளாக ஆகி விட்டார்கள் அதாவது விகாரமுடையவர் களாக ஆகி விட்டார்கள். இந்த விளையாட்டை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். இது எல்லையற்ற நாடகமாகும், இதை ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான ஆண்டுகளின் விஷயமாக இருந்தால் யாரும் புரிந்து கொள்ள கூட முடியாது. இது நேற்றைய விசயத்தைப் போன்றதாகும். நீங்கள் சிவாலயத்தில் இருந்தீர்கள், இன்று விகார உலகத்தில் இருக்கின்றீர்கள் பிறகு நாளை சிவாலயத்தில் இருப்பீர்கள். சத்யுகத்தை சிவாலயம் என்று சொல்லப்படுகிறது, திரேதாவை பாதி சொர்க்கம் என்று சொல்லப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் அங்கே இருப்பீர்கள். மறுபிறவியில் வரத்தான் வேண்டும். இதனை இராவண இராஜ்யம் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் அரைக்கல்பம் தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளீர்கள், இப்போது பாபா கூறுகின்றார், இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக ஆகுங்கள். குமார் மற்றும் குமாரிகள் தூய்மையாகத் தான் இருக்கிறார்கள் இவர்களுக்கு பாபா கூறுகிறார் இல்லற மார்க்கத்திற்குச் செல்ல வேண்டாம் ஏனெனில் மீண்டும் தூய்மை ஆவதற்காக முயற்சி செய்ய வேண்டிவரும். என்று புரிய வைக்கப்படுகிறது. பகவானுடைய மகாவாக்கியம் தூய்மையாக ஆகுங்கள் என்பதாகும், எனவே எல்லையற்ற தந்தை சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா. நீங்கள் குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக இருக்க முடியும். பாபா 21 பிறவிகளுக்கு தூய்மையற்றவர்களாக ஆவதிலிருந்து காப்பாற்ற வந்திருக்கும்போது குழந்தைகளை தூய்மை யற்றவர்களாக ஆவதற்கான பழக்கத்தை ஏன் ஏற்படுத்துகிறீர்கள். இதில் குல வழக்கங்களை மரியாதைகளைக் கூட விட வேண்டியிருக்கும். இது எல்லையற்ற விஷயமாகும். குமாரர்கள் அனைத்து தர்மங்களிலும் நிறைய பேர் இருக்கிறார்கள் ஆனால் பாதுகாப்பாக இருப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது, ஏனெனில் இராவண இராஜ்யத்தில் இருக்கிறார்கள். வெளி நாடுகளில் கூட நிறைய மனிதர்கள் திருமணம் செய்வதில்லை பிறகு கடைசியில் துணை வேண்டும் என்பதற்காக செய்து கொள்கிறார்கள். குற்றப்பார்வையோடு செய்வதில்லை. இப்படி கூட உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். முழுமையாக பராமரிக்கிறார்கள் பிறகு இறக்கும்போது ஏதாவது அவர்களுக்கு கொடுத்து விட்டு செல்கிறார்கள். கொஞ்சம் தர்மத்திற்கென்று வைத்து விடுகிறார்கள். ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கிவிட்டு செல்கிறார்கள். வெளி நாடுகளில் கூட பெரிய-பெரிய டிரஸ்டுகள் இருக்கின்றன, அவை இங்கேயும் கூட உதவிபுரிகின்றன. வெளி நாடுகளுக்கும் உதவக்கூடிய டிரஸ்ட் எதுவும் இங்கே இருக்காது. இங்கே ஏழை மக்கள் இருக்கிறார்கள், என்ன உதவி செய்வார்கள்! அங்கே அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. பாரதம் ஏழ்மையானது அல்லவா. பாரதவாசிகளுடைய நிலை என்னவாக இருக்கிறது! பாரதம் எவ்வளவு உயர்ந்ததாக(கிரீடத்தைப்போல்) இருந்தது, நேற்றைய விஷயமாகும். அவர்களே கூட சொல்கிறார்கள், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொர்க்கமாக இருந்தது. பாபா தான் மாற்றுகின்றார். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்கு பாபா எப்படி மேலேயிருந்து வருகின்றார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அவர் ஞானக்கடலாக இருக்கின்றார், தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர், அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் அதாவது அனைவரையும் தூய்மையாக்குபவர் ஆவார். அனைவரும் என்னுடைய மகிமையை பாடுகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நான் இங்கே உங்களை தூய்மையாக்க தூய்மையற்ற உலகத்தில் தான் வருகின்றேன். நீங்கள் தூய்மையாகி விடுகிறீர்கள் எனும்போது முதல்-முதலில் தூய்மையான உலகத்தில் வருகிறீர்கள். நிறைய சுகத்தை அடைகிறீர்கள் பிறகு இராவண இராஜ்யத்தில் வந்து விடுகிறீர்கள். பரமபிதா பரமாத்மா ஞானக்கடல், அமைதியின் கடல், தூய்மையற்றவர் களை தூய்மையாக்குபவர் என்று என்னவோ பாடுகிறார்கள். ஆனால் எப்போது தூய்மையாக்க வருவார் என்பதை யாரும் தெரிந்திருக்கவே இல்லை. நீங்கள் என்னை மகிமை பாடுகிறீர்கள் அல்லவா என்று பாபா கேட்கின்றார். இப்போது நான் வந்து உங்களுக்கு என்னுடைய அறிமுகத்தை அளித்துக் கொண்டிருக்கின்றேன். நான் ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு இந்த புருஷோத்தம சங்கமயுகத்தில் வருகின்றேன், எப்படி வருகின்றேன் என்பதையும் புரிய வைக்கின்றேன். சித்திரம் கூட இருக்கிறது. பிரம்மா ஒன்றும் சூட்சும வதனத்தில் இருப்பதில்லை. பிரம்மா இங்கே இருக்கின்றார் மற்றும் பிராமணர்களும் இங்கே இருக்கிறார்கள், இவரைத் தான் கொள்ளு தாத்தா என்று சொல்லப்படுகிறது, இதனுடைய மரம் பிறகு உருவாகிறது. மனித சிருஷ்டியின் மரம் பிரஜாபிதா பிரம்மாவிலிருந்து தான் ஆரம்பிக்கும் அல்லவா. பிரஜாபிதா இருக்கின்றார் என்றால் கண்டிப்பாக அவருடைய பிரஜைகளும் இருப்பார்கள். சரீரத்தின் வழி வந்தவர்களாக இருக்க முடியாது, கண்டிப்பாக தத்தெடுக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். எள்ளு-கொள்ளு தாத்தா என்றால் கண்டிப்பாக தத்தெடுத்திருப்பார். நீங்கள் அனைவரும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாவீர்கள். இப்போது நீங்கள் பிராமணர் களாக ஆகியுள்ளீர்கள் பிறகு நீங்கள் தேவதைகளாக ஆக வேண்டும். சூத்திரனிலிருந்து பிராமணன் பிறகு பிராமணனிலிருந்து தேவதை, இது குட்டிகர்ண விளையாட்டாகும். விராட ரூப சித்திரம் கூட இருக்கிறது அல்லவா. அங்கிருந்து அனைவரும் இங்கே கண்டிப்பாக வர வேண்டும். அனைவரும் வந்து விடும்போது பிறகு படைப்பவரும் வருகின்றார். அவர் படைப்பவர் இயக்குனர், நடிக்கவும் செய்கின்றார். ஹே ஆத்மாக்களே நீங்கள் என்னை தெரிந்துள்ளீர்கள் என்று பாபா கூறுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் என்னுடைய குழந்தைகள் அல்லவா. நீங்கள் முதலில் சத்யுகத்தில் சரீரதாரிகளாக ஆகி எவ்வளவு நல்ல சுகத்தின் நடிப்பை நடித்தீர்கள் பிறகு 84 பிறவிகளுக்கு பிறகு நீங்கள் எவ்வளவு துக்கத்தில் வந்து விட்டீர்கள். நாடகத்தின் படைப்பாளி, இயக்குனர், தயாரிப்பாளர் இருக்கின்றார்கள் அல்லவா. இது எல்லையற்ற நாடகமாகும். எல்லையற்ற நாடகத்தை யாரும் தெரிந்திருக்க வில்லை. பக்தி மார்க்கத்தில் எப்படி-எப்படிப்பட்ட விஷயங்களை சொல்கிறார்கள், மனிதர்களுடைய புத்தியில் அந்த விஷயங்களே நின்று விட்டது.

 

இப்போது பாபா கூறுகின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களாகும். பக்திமார்க்கத்தின் பொருட்கள் நிறைய இருக்கின்றன, எப்படி விதையின் பொருள் (சக்தி) மரமாக ஆகிறது, இவ்வளவு சிறிய விதை மரம் எவ்வளவு அளவற்றதாக பரந்து விரிந்து விடுகிறது. பக்தி கூட அந்தளவிற்கு விஸ்தாரமானதாகும். ஞானம் என்பது விதையாக இருக்கிறது, அதில் எந்த பொருளுக்கும் அவசியம் இருப்பதில்லை. தங்களை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்யுங்கள் வேறு எந்த விரத நியமமும் இல்லை என்று பாபா கூறுகின்றார். இவையனைத்தும் நின்று விடுகிறது. உங்களுக்கு சத்கதி கிடைத்து விடும் பிறகு எந்த விஷயத்திற்கும் அவசியம் இல்லை. நீங்கள் தான் அதிக பக்தி செய்துள்ளீர்கள். அதனுடைய பலனை உங்களுக்கு கொடுப்பதற்காக வந்துள்ளேன். தேவதைகள் சிவாலயத்தில் இருந்தார்கள் அல்லவா, ஆகையினால் தான் கோயில்களுக்குச் சென்று அவர்களின் மகிமை பாடுகிறார்கள். இப்போது பாபா புரிய வைக்கின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் 5 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னால் கூட தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புரிய வைத்திருந்தேன். தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு விட்டு தந்தையாகிய என் ஒருவரை நினைவு செய்தீர்கள் என்றால் இந்த யோக அக்னியில் உங்களுடைய பாவங்கள் பஸ்மமாகி விடும். பாபா எதையெல்லாம் இப்போது புரிய வைக்கின்றாரோ, இதை கல்பம்-கல்பமாக புரிய வைத்துக் கொண்டே வருகின்றார். கீதையில் கூட சில-சில வார்த்தைகள் நன்றாக இருக்கிறது. மன்மனாபவ என்றால் என்னை நினைவு செய்யுங்கள் என்பதாகும். நான் இங்கே வந்துள்ளேன் என்று சிவபாபா கூறுகின்றார். யாருடைய உடலில் வருகின்றேன் என்பதையும் கூறுகின்றேன். பிரம்மாவின் மூலம் அனைத்து வேத-சாஸ்திரங்களின் சாரத்தை உங்களுக்கு கூறுகின்றேன். சித்திரத்தை கூட காட்டுகிறார்கள் ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. சிவபாபா பிரம்மாவின் உடலின் மூலம் அனைத்து வேதங்கள் போன்றவற்றின் சாரத்தை எப்படி சொல்கின்றார் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். 84 பிறவிகளின் நாடகத்தின் இரகசியத்தையும் கூட உங்களுக்குப் புரிய வைக்கின்றார். இவருடைய நிறைய பிறவிகளின் கடைசியில் வருகின்றேன். இவர் தான் முதல் இளவரசனாக ஆகின்றார் பிறகு 84 பிறவிகளில் வருகின்றார். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும் ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) இந்த இராவண இராஜ்யத்தில் இருந்து கொண்டே தூய்மையற்ற உலகாய குல மரியாதைகளை விட்டு விட்டு எல்லையற்ற தந்தையின் விஷயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லற விவகாரங்களில் தாமரை மலருக்குச் சமமாக இருக்க வேண்டும்.

 

2) இந்த வித-விதமான பெரிய லீலையை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், இதில் நடிப்பை நடிக்கக் கூடிய ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்பது அல்ல, நல்ல-கெட்ட கர்மம் செய்கிறது மற்றும் அதனுடைய பலனை அடைகிறது, இந்த இரகசியத்தைப் புரிந்து கொண்டு உயர்ந்த கர்மங்களை செய்ய வேண்டும்.

 

வரதானம்:

ஆன்மீக அதிகாரத்தின் கூடவே அகங்காரமற்றவர்களாகி சத்திய ஞானத்தின் வெளிப்படையான ரூபத்தை காண்பிக்கக் கூடிய உண்மையான சேவாதாரி ஆகுக.

 

மரத்தில் பழங்கள் நிறைந்து விடும் போது மரம் வளைந்து கொடுக்கிறது, அதாவது பணிவாக இருப்பதற்கான சேவை செய்கிறது. இதே போன்று ஆன்மீக அதிகாரம் உடைய குழந்தைகள் எவ்வளவு உயர்ந்த அதிகாரமோ அவ்வளவு பணிவு மற்றும் அனைவருக்கும் பிரியமானவர்களாக இருப்பர். அல்பகால அதிகாரமுடையவர்கள் அகங்காரத்துடன் இருப்பர், ஆனால் சத்தியத்தின் அதிகாரமுடையவர்கள் அதிகாரத்தின் கூடவே அகங்காரமற்றவர்களாக இருப்பர் - இதுவே சத்திய ஞானத்தின் வெளிப்படையான சொரூபமாகும். உண்மையான சேவாதாரியின் விருத்தியில் (செய்முறையில்) எவ்வளவு அதிகாரம் இருக்குமோ அவ்வளவு வார்த்தைகளில் அன்பு மற்றும் பணிவு இருக்கும்..

 

சுலோகன்:

தியாகமின்றி பாக்கியம் கிடைக்காது.

 

ஓம்சாந்தி