01.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இப்பொழுது வீடு திரும்ப வேண்டும், ஆகையால் தந்தையை நினைவு செய்யும் மற்றும் தனது நடத்தைகளை மாற்றிக் கொள்ளும் முயற்சி செய்யுங்கள்.

 

கேள்வி:

அஞ்ஞான நித்திரையில் தூங்க வைக்கக் கூடிய விசயம் எது? அதனால் என்ன நஷ்டம் ஏற்படுகிறது?

 

பதில்:

கல்பத்தின் ஆயுள் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என்று கூறுவது தான் அஞ்ஞான நித்திரையில் தூங்க வைக்கக் கூடிய விசயமாகும். இதன் மூலம் ஞானக் கண் இல்லாதவர்களாக ஆகிவிட்டனர். வீடு மிகத் தொலைவில் இருப்பதாக உணர்கின்றனர். இங்கேயே இலட்சக்கணக்கான ஆண்டுகள் சுகம் துக்கத்தின் நடிப்பு நடிக்க வேண்டும் என்ற விசயம் புத்தியில் இருக்கிறது. ஆகையால் பாவனம் ஆவதற்கான முயற்சி செய்வது கிடையாது. வீடு நெருக்கத்தில் இருக்கிறது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது நாம் முயற்சி செய்து கர்மாதீத் நிலை அடைய வேண்டும்.

 

ஓம்சாந்தி.

இனிமையிலும் இனிய குழந்தைகளுக்கு தந்தை இப்பொழுது வீட்டின் நினைவு ஏற்படுத்தி யிருக்கின்றார். பக்தி மார்க்கத்திலும் வீட்டை நினைவு செய்கின்றனர், ஆனால் அங்கு எப்பொழுது செல்ல வேண்டும்? எப்படிச் செல்ல வேண்டும்? என்று எதுவும் தெரியாது. கல்பத்தின் ஆயுள் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என்று கூறிய காரணத்தினால் வீட்டையும் மறந்துவிட்டனர். இலட்சம் ஆண்டுகள் இங்கேயே நடிப்பை நடிக்கப் போகிறோம் என்பதால் வீட்டையும் மறந்துவிட்டனர். இப்பொழுது தந்தை நினைவு ஏற்படுத்துகின்றார் - குழந்தைகளே! வீடு மிக நெருக்கத்தில் இருக்கிறது, இப்பொழுது தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அழைத்ததால் தான் நான் வந்திருக்கிறேன். திரும்பிச் செல்லலாமா? எவ்வளவு எளிய விசயம்! எப்பொழுது முக்திதாமத்திற்குச் செல்வோம்? என்பது பக்திமார்க்கத்தில் தெரியவே தெரியாது. முக்தியைத் தான் வீடு என்று சொல்லப்படுகிறது. இலட்சம் ஆண்டுகள் என்று கூறிய காரணத்தினால் அனைத்தையும் மறந்துவிட்டனர். தந்தையையும் மற்றும் வீட்டையும் மறந்துவிட்டனர். இலட்சம் ஆண்டுகள் என்று கூறியதால் மிக அதிக வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறது. அஞ்ஞான நித்திரையில் தூங்கியவர் போல் ஆகிவிடுகின்றனர். யாரும் புரிந்து கொள்வது கிடையாது. பக்திமார்க்கத்தில் வீடு மிகத் தொலைவில் இருப்பதாகக் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார் - ஆஹா! இப்பொழுது முக்திதாமத்திற்குச் செல்ல வேண்டும். இலட்சம் ஆண்டுகளாக நீங்கள் இவ்வாறு பக்தி செய்து கொண்டிருப்பது கிடையாது. பக்தி எப்பொழுது ஆரம்பமானது? என்பது உங்களுக்குத் தெரியாது. இலட்சம் ஆண்டிற்கான கணக்கு பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. தந்தையை மற்றும் வீட்டை மறந்துவிட்டனர். இதுவும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. ஆனால் தேவையற்று இவ்வாறு தூரமாக்கிவிட்டனர். இப்பொழுது தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! வீடு மிகவும் அருகாமையில் இருக்கிறது. உங்களை அழைத்துச் செல்ல நான் வந்திருக்கின்றேன். வீட்டிற்குச் செல்ல வேண்டும், ஆனால் அவசியம் தூய்மையாக வேண்டும். கங்கையில் நீங்கள் குளித்து வந்தீர்கள், ஆனால் தூய்மையாக ஆகவில்லை. ஒருவேளை தூய்மையாக ஆகியிருந்தால் வீட்டிற்குச் சென்றிருப்பீர்கள். ஆனால் வீட்டைப் பற்றி அறிந்திருக்கவில்லை எனும் பொழுது தூய்மை பற்றியும் அறிந்திருக்கவில்லை. அரை கல்பமாக பக்தி செய்திருப்பதால் பக்தியை விடுவது கிடையாது. பக்தி முடிவடைகிறது என்று தந்தை இப்பொழுது கூறுகின்றார். பக்தியில் அளவற்ற துக்கம் இருக்கிறது. இலட்சம் ஆண்டுகள் குழந்தைகளாகிய நீங்கள் துக்கத்தை பார்த்திருக்கிறீர்கள் என்பது கிடையாது. இலட்சம் ஆண்டிற்கான விசயமே கிடையாது. உண்மையிலும் உண்மையான துக்கத்தை நீங்கள் கலியுகத்தில் தான் அனுபவிக்கிறீர்கள், ஏனெனில் இப்பொழுது தான் விகாரத்தில் அதிகம் சென்று அழுக்காகியிருக்கிறீர்கள். முன்பு இரஜோ நிலையில் இருந்த பொழுது சிறிது அறிவு இருந்தது. இப்பொழுது முற்றிலும் புத்தியற்றவர்களாக ஆகிவிட்டீர்கள். சுகதாமம் செல்ல வேண்டுமெனில், பாவனம் ஆகுங்கள் என்று குழந்தைகளுக்கு இப்பொழுது கூறுகின்றார். தலையில் இருக்கக் கூடிய பல பிறவிகளின் பாவங்களை நினைவின் மூலம் இறக்க வேண்டும். நினைவின் மூலம் மிகுந்த குஷி ஏற்படும். எந்த தந்தை உங்களை அரை கல்பத்திற்கு சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கிறாரோ அவரை நினைவு செய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார் நீங்கள் இவ்வாறு (இலட்சுமி நாராயணன்) ஆக வேண்டும் எனில் ஒன்று தூய்மையாக ஆகுங்கள் மற்றும் நடத்தைகளை மாற்றிக் கொள்ளுங்கள். விகாரங்கள் தான் பூதங்கள் என்று கூறப்படுகின்றன, பேராசை என்ற பூதமும் குறைந்தது கிடையாது. இந்த பூதம் மிகவும் அசுத்தமானது. மனிதர்களை ஒரேயடியாக அசுத்தமானவர்களாக ஆக்கிவிடுகிறது. பேராசையும் அதிக பாவங்களை செய்விக்கிறது. 5 விகாரங்கள் மிகவும் கெட்ட பூதங்களாகும். இவையனைத்தையும் விட வேண்டும். எவ்வாறு காமத்தை விடுவது கடினமோ, அதே போன்று பேராசையை விடுவதும் கடினமாகும். மோகத்தை விடுவதும் காமத்தை விடுவது போன்று கடினமாக இருக்கிறது. விடுவதே கிடையாது. முழு ஆயுளும் தந்தை புரிய வைத்துக் கொண்டே வருகின்றார் எனினும் பற்று நரம்புகளில் ஊறியிருக்கிறது. கோபத்தை விடுவதும் கடினûமாக இருக்கிறது. குழந்தையின் மீது கோபம் வருகிறது என்று கூறுகின்றனர். கோபம் என்ற பெயரை பயன்படுத்திக் கொள்கின்றனர் அல்லவா! எந்த பூதமும் இருக்கக் கூடாது, அதன் மீது வெற்றி அடைய வேண்டும்.

 

தந்தை கூறுகின்றார் - எதுவரை நான் இருப்பேனோ அதுவரை நீங்கள் முயற்சி செய்து கொண்டே இருங்கள். தந்தை எத்தனை ஆண்டுகள் இருப்பார்? தந்தை இத்தனை ஆண்டுகளாக இருந்து புரிய வைக்கின்றார், நன்றாகவே நேரம் கொடுக்கின்றார். சிருஷ்டிச் சக்கரத்தை அறிந்து கொள்வது மிகவும் எளிது. 7 நாட்களில் முழு ஞானமும் புத்தியில் வந்துவிடுகிறது. மற்றபடி பல பிறவிகளின் பாவங்கள் அழிவதற்கு தாமதம் ஏற்படுகிறது. இதுவே கடினமானதாகும். அதற்கு பாபா நேரம் கொடுக்கின்றார். மாயையின் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. முற்றிலும் மறக்க வைத்துவிடுகிறது. இங்கு அமர்ந்திருக்கிறீர்கள் என்றாலும் முழு நேரமும் நினைவில் அமர்ந்திருப்பது கிடையாது. பல இடங்களுக்கு புத்தி சென்று விடுகிறது. ஆகையால் நேரம் கொடுக்க வேண்டி யிருக்கிறது. முயற்சி செய்து கர்மாதீத நிலையடைய வேண்டும். படிப்பு மிகவும் எளிதாகும். புத்திசாலி குழந்தைகளாக இருப்பின் 7 நாட்களிலேயே 84 பிறவிச் சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது என்ற முழு ஞானத்தைப் புரிந்து கொண்டு விடுவர். மற்றபடி தூய்மை ஆவதில் தான் முயற்சி தேவைப்படுகிறது. இதற்கு எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சரியான விசயம் தான் என்று புரிந்து கொள்கின்றனர், பிரம்மா குமாரிகள் சகோதரன் சகோதரிகளாக ஆக்குகின்றனர் என்று நாம் தவறாக புரிந்திருந்தோம், ஆனால் விசயம் மிகவும் சரியானது தான். எதுவரை நாம் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாக ஆகவில்லையோ அதுவரை தூய்மையாக எவ்வாறு ஆக முடியும்? கெட்ட பார்வை நல்ல பார்வையாக எப்படி மாறும்? பிரம்மா குமார் குமாரிகளாகிய நாம் சகோதர சகோதரிகளாக ஆகிவிட்டோம் என்ற யுக்தி மிகவும் நன்றாக இருக்கிறது. பார்வையை நல்லதாக ஆக்குவதற்கு இது அதிக உதவி செய்கிறது. பிரம்மாவின் கடமையும் அல்லவா! பிரம்மாவின் மூலம் தேவி தேவதா தர்மம் அதாவது மனிதனை தேவதையாக ஆக்குவதாகும்.

 

தந்தை வருவதே புருஷோத்தம சங்கமயுகத்தில். ஆக புரிய வைப்பதற்கு எவ்வளவு முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது! தந்தையின் அறிமுகம் கொடுப்பதற்காகவே சென்டர்கள் திறக்கப்படுகின்றன. எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி அடைய வேண்டும். பகவான் நிராகாரமாக இருக்கின்றார். கிருஷ்ணர் தேகதாரி ஆவார், அவரை பகவான் என்று கூற முடியாது. பகவான் வந்து பக்தியின் பலனைக் கொடுப்பார் என்று கூறுகின்றனர். ஆனால் பகவானின் அறிமுகம் தெரியாது. நீங்கள் எவ்வளவு புரிய வைக்கிறீர்கள், இருப்பினும் புரிந்து கொள்வதே கிடையாது! தேகதாரிகள் பிறப்பு இறப்பில் அவசியம் வருகின்றனர். அவர்களிடமிருந்து ஆஸ்தி அடைய முடியாது. ஆத்மாக்களுக்கு ஒரே ஒரு பரம்பிதா பரமாத்மாவிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. மனிதன் மனிதனுக்கு ஜீவன்முக்தி கொடுக்க முடியாது. இந்த ஆஸ்தி அடைவதற்காகவே குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். அந்த தந்தையை அடைவதற்காக நீங்கள் எவ்வளவு அலைந்தீர்கள்! முதலில் ஒரே ஒரு சிவனை பூஜித்து வந்தீர்கள், வேறு எந்த பக்கமும் செல்லவில்லை. அது தான் கலப்படமற்ற பக்தியாகும், மற்றவர்களின் கோயில் அந்த அளவிற்கு கிடையாது. இப்பொழுது பல சிலைகள் உள்ளன, கோயில்கள் கட்டிக் கொண்டே இருக்கின்றனர். பக்தி மார்க்கத்தில் நீங்கள் எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது! சாஸ்திரங்களில் கதி, சத்கதிக்கான வழி எதுவும் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதை ஒரு தந்தை தான் கூறுகின்றார். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு கோயில்களைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்! உண்மையில் சத்யுகத்தில் வாழ்ந்த தேவி தேவதைகளுக்குத் தான் கோயில்கள் கட்ட வேண்டும். வேறு எந்த மனிதர்களுக்கும் கோயில் கட்டப்படக் கூடாது. ஏனெனில் மனிதர்கள் பதீதமானவர்களாக இருக்கின்றனர். பதீத மனிதர்கள் பாவன தேவதைகளுக்கு பூஜை செய்கின்றனர். அவர்களும் மனிதர்கள் தான், ஆனால் அவர்களிடத்தில் தெய்வீக குணங்கள் உள்ளன. யாரிடத்தில் தெய்வீக குணங்கள் இல்லையோ அவர்கள் இவர்களை பூஜை செய்கின்றனர். தானே சுயம் பூஜைக்குரியவர்களாக இருந்தீர்கள், பிறகு பூஜாரிகளாக ஆகிவிட்டீர்கள். மனிதர்களை பூஜிப்பது என்பது 5 தத்துவங்களைப் பூஜிப்பதாகும். சரீரம் 5 தத்துவங்களால் ஆக்கப்பட்டதாகும். இப்பொழுது குழந்தைகள் முக்திதாமத்திற்குச் செல்ல வேண்டும், அதற்காகத்தான் இவ்வளவு பக்தி செய்திருக்கிறீர்கள். இப்பொழுது தன் கூடவே அழைத்துச் செல்கிறேன். நீங்கள் சத்யுகத்திற்கு சென்று விடுவீர்கள். பதீத உலகிலிருந்து பாவன உலகிற்கு அழைத்துச் செல்லவே தந்தை வந்திருக்கின்றார். பாவன உலகமே இரண்டு தான் - முக்தி மற்றும் ஜீவன்முக்தி. தந்தை கூறுகின்றார் - இனிமையிலும் இனிய குழந்தைகளே! நான் கல்ப கல்பமாக சங்கமயுகத்தில் வருகிறேன். நீங்கள் பக்தி மார்க்கத்தில் எவ்வளவு துக்கம் அடைகிறீர்கள்! பாட்டும் இருக்கிறது அல்லவா? நாலாபுறமும் சுற்றி வந்தீர்கள் ..... யாரிடமிருந்து தூர விலகினீர்கள்? தந்தையிடமிருந்து! தந்தையை அடைவதற்காக பல பிறவிகளாக தேடி அலைந்தீர்கள், இருப்பினும் தந்தையிடமிருந்து தூர விலகியிருந்தீர்கள். அதனால் தான் பதீத பாவனனே வாருங்கள்! வந்து பாவனம் ஆக்குங்கள் என்று அழைத்தீர்கள். தந்தையைத் தவிர வேறு யாரும் ஆக்க முடியாது. ஆக இந்த விளையாட்டு 5 ஆயிரம் ஆண்டிற்கானதாகும். நாடகப்படி ஒவ்வொருவரும் முயற்சி செய்கிறீர்கள், எந்த வகையில் கல்பத்திற்கு முன்பு செய்தீர்களோ அதன் படி தான் இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அனைவரும் ஒரே மாதிரியாகப் படிக்க முடியாது. இது பாடசாலை அல்லவா! இராஜயோகப் படிப்பாகும், யார் தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களோ அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். மூலவதனத்தில் என்ன எண்ணிக்கை இருக்குமோ அது மிகச் சரியாகவே இருக்கும். முன் பின் இருக்காது. நாடகத்தில் நடிகர்களின் எண்ணிக்கை முற்றிலும் சரியாகவே இருக்கும். ஆனால் புரிந்து கொள்ள முடியாது. எத்தனை பேர் இருக்கின்றார்களோ அனைவரும் மிகச் சரியாகவே இருக்கின்றனர், பிறகு அவர்கள் வந்து நடிப்பு நடிப்பார்கள். பிறகு நீங்கள் புது உலகிற்கு வருவீர்கள். மற்ற அனைவரும் அங்கு சென்று விடுவார்கள். யாராவது கணக்கு எடுக்க வேண்டுமெனில், எடுக்கலாம். இப்பொழுது தந்தை உங்களுக்கு மிகவும் ஆழமான கருத்துக்களைக் கூறுகின்றார். ஆரம்பத்தில் புரிய வைத்ததற்கும் இப்பொழுது புரிய வைப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! படிப்பில் நேரம் தேவைப்படுகிறது. உடனேயே யாரும் .சி.எஸ் ஆக ஆகிவிட முடியாது. படிப்பு வரிசைக் கிரமமாக இருக்கிறது. மனிதர்களின் புத்தியில் எளிதாக அமருவதற்கு தந்தை எவ்வளவு எளிதாக்கிப் புரிய வைக்கின்றார்! நாளுக்கு நாள் புதுப் புது கருத்துக்களைப் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். இப்பொழுது தந்தை கூறுகின்றார் - பதீத பாவன் தந்தையாகிய என்னை அழைத்தீர்கள், நான் வந்திருக்கிறேன் எனில், நீங்கள் பாவனம் ஆக வேண்டும் அல்லவா! தன்னை ஆத்மா என்று உணர்ந்து என் ஒருவனை நினைவு செய்தால் நீங்கள் சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள். பிறகு இங்கு நடிப்பு நடிப்பதற்கு வர வேண்டியிருக்கும். தந்தை கூறுகின்றார் - ஆத்மா பதீதமாக ஆகியிருக்கிறது, அதனால் தான் பாவனம் ஆவதற்கு பதீத பாவனன் தந்தையை நினைவு செய்கின்றனர். இவ்வளவு சிறிய ஆத்மா, எவ்வளவு நடிப்பு நடிக்கிறது, எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது! இது தான் இயற்கையாகும். அதைப் பார்க்க முடியாது. நான் பரமாத்மாவின் சாட்சாத்காரம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார் - இவ்வளவு சிறிய பிந்துவின் (புள்ளி) சாட்சாத்காரம் நீங்கள் எப்படிச் செய்ய முடியும்? என்னைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர பார்ப்பது கடினமாகும். ஆத்மா நடிப்பு நடிப்பதற்கு இந்த அனைத்து கர்மேந்திரியங்களும் கிடைத்திருக்கின்றன. எவ்வளவு நடிப்பு நடிக்கிறது -ஆச்சரியம் அல்லவா! ஒருபொழுதும் ஆத்மா தேய்வது கிடையாது. இது அழிவற்ற நாடகமாகும். இது அழிவற்றது, ஏற்கெனவே உருவாக்கப்பட்டது ஆகும். எப்பொழுது உருவானது? என்று கேட்க முடியாது. இது அநாதி என்று கூறப்படுகிறது. இராவணனை எப்பொழுதிலிருந்து எரித்து வருகிறீர்கள்? எப்பொழுதிலிருந்து சாஸ்திரங்களைப் படித்து வருகிறீர்கள்? என்று மனிதர்களிடம் கேட்டால் அநாதி என்று கூறிவிடுகின்றனர், தெரிவது கிடையாது. குழப்பமடைந்து இருக்கின்றனர் அல்லவா! தந்தை வந்து புரிய வைக்கின்றார், மீண்டும் அது போலவே சிறு குழந்தைகளுக்கு கற்பிப்பது போன்று கற்பிக்கின்றார்.

 

நாம் முற்றிலும் புத்தியற்றவர்களாக இருந்தோம், பிறகு எல்லையற்ற புத்தி கிடைத்துவிட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது எல்லைக்குட்பட்ட படிப்பு, இது எல்லையற்றது. அரை கல்பம் பகல், அரைக் கல்பம் இரவு. 21 பிறவிகளுக்கு துளியளவும் நீங்கள் துக்கம் அடைய முடியாது. உங்களது தலையும் வழுக்கையாக ஆகாது என்று கூறுகின்றார் அல்லவா! யாரும் துக்கம் கொடுக்கவே முடியாது. பெயரே சுகதாமம். இங்கு சுகமே கிடையாது. மூல விசயம் தூய்மையாகும். நல்ல நடத்தைகள் இருக்க வேண்டும் அல்லவா!

 

குழந்தைகளுக்கு ஒவ்வொரு விசயத்தையும் தெளிவாக்கி புரிய வைக்கப்படுகிறது. நஷ்டம் மற்றும் இலாபம் ஏற்படுகிறது அல்லவா! இப்பொழுது தந்தை கூறுகின்றார் - இலாபத்திற்கான விசயமே நீங்கிவிட்டது, இப்பொழுது நஷ்டமே நஷ்டம் தான் ஏற்படப் போகிறது. விநாச நேரம் வந்து கொண்டிருக்கிறது, அந்த நேரத்தில் என்ன என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்! மழை பெய்யவில்லையெனில், தானியங்களின் விலை எவ்வளவு உயர்ந்து விடுகிறது! 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகப்படியான தானியங்கள் இருக்கும் என்று எவ்வளவு வேண்டுமென்றாலும் கூறலாம், இருப்பினும் தானியங்களை வெளியிலிருந்து வரவழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு தானியமும் கிடைக்காத நேரம் வரும், இவ்வளவு ஆபத்துக்கள் வரப் போகின்றன. இதை ஈஸ்வரிய ஆபத்துக்கள் என்றும் கூறுகின்றோம். மழை பெய்யவில்லையெனில் திடீர் மரணங்கள் அவசியம் ஏற்படும். அனைத்து தத்துவங்களும் சீர்கெட்டுப் போய்விடும். பல இடங்களில் மழை நஷ்டமாக்கி விடுகிறது.

 

தந்தை ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களது இலட்சியம் இதுவாகும், மீண்டும் உங்களை நரனிலிருந்து நாராயணனாக ஆக்குகின்றார். இந்த எல்லையற்ற பாடத்தை எல்லையற்ற தந்தை தான் கற்பிக்கின்றார். யார் எப்படி படிக்கின்றார்களோ அவ்வாறு பதவி அடைவார்கள். தந்தை முயற்சி செய்வித்துக் கொண்டிருக்கின்றார். முயற்சி குறைவாக செய்தால் பதவியும் குறைவாக அடைவீர்கள். ஆசிரியர் மாணவர்களுக்குப் புரிய வைப்பார் அல்லவா! மற்றவர்களை தனக்கு சமமாக ஆக்கும் பொழுது தான் இவர் நன்றாக படிக்கின்றார் மற்றும் கற்பிக்கின்றார் என்பது தெரிய வருகிறது. மூல விசயமே நினைவு யாத்திரையாகும். தலை மீது பாவத்தின் சுமைகள் அதிகமாக உள்ளது, என்னை நினைவு செய்தால் பாவங்கள் அழிந்துவிடும். இது ஆன்மீக யாத்திரையாகும். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று சிறு குழந்தைகளுக்கும் எழுத வையுங்கள். அவர்களுக்கும் உரிமை இருக்கிறது. தன்னை ஆத்மா என்று தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளமாட்டார்கள். சிவபாபாவை மட்டுமே நினைவு செய்வர். முயற்சி செய்வதன் மூலம் அவர்களுக்கும் நன்மை ஏற்பட்டுவிடும். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) நரனிலிருந்து நாராயணன் பதவி அடைவதற்காக எல்லையற்ற தந்தையிடத்தில் எல்லையற்ற கல்வியை கற்று மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். தனக்கு சமமாக்கும் சேவை செய்ய வேண்டும்.

 

2) பேராசை, பற்றுதல் போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்கான முயற்சி செய்ய வேண்டும். தனது நடத்தைகளை அந்த அளவிற்கு விழிப்படையச் செய்ய வேண்டும். அதாவது உள்ளுக்குள் எந்த பூதங்களும் பிரவேசமாகி விடக் கூடாது.

 

வரதானம்:

தனது இராஜ்ய அதிகாரி மற்றும் பூஜைக்குரிய சொரூபத்தின் நினைவின் மூலம் வள்ளலாக ஆகி கொடுக்கக் கூடிய அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்தவர் ஆகுக.

 

நான் பூஜைக்குரிய ஆத்மா, கொடுக்கக் கூடிய வள்ளலாக இருக்கிறேன், எடுக்கக் கூடியவன் அல்ல, கொடுக்கக் கூடியவன் என்ற நினைவிலேயே எப்போதும் இருங்கள். எப்படி தந்தை உங்கள் அனைவருக்கும் தாமாகவே கொடுத்தார், அது போல நீங்களும் கூட மாஸ்டர் வள்ளல் ஆகி கொடுத்தபடி செல்லுங்கள், கேட்காதீர்கள். தனது இராஜ்ய அதிகாரி மற்றும் பூஜைக்குரிய சொரூபத்தின் நினைவில் இருங்கள். இன்று வரையிலும் கூட உங்களின் ஜட சித்திரங்களுக்கு முன்னால் சென்று வேண்டுகிறார்கள், எங்களை காப்பாற்றுங்கள் என்று மன்றாடுகிறார்கள். ஆக, நீங்கள் காப்பாற்றக் கூடியவர்கள், காப்பாற்று, காப்பாற்று என கதறக் கூடியவர்கள் அல்ல. ஆனால் வள்ளலாக ஆவதற்காக நினைவின் மூலம், சேவையின் மூலம், சுப பாவனை, சுப விருப்பங்களின் மூலம் அனைத்து பொக்கிஷங்களிலும் நிரம்பியவராக ஆகுங்கள்.

 

சுலோகன்:

நடத்தை மற்றும் முகமலர்ச்சியே ஆன்மீக தனித்துவத்தின் (பர்சனாலிடியின்) அடையாளம் ஆகும்.

 

ஓம்சாந்தி