16.01.19    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே ! ஆத்ம அபிமானி ஆவதற்கான பயிற்சி செய்தால் விகார எண்ணங்கள் நீங்கி விடும் , தந்தையின் நினைவு இருக்கும் , ஆத்மா சதோ பிரதானமாக ஆகிவிடும் .

கேள்வி:
உலக மனிதர்கள் எந்த வழியை முற்றிலுமாக அறியாமல் இருக்கின்றனர் ?

பதில்:
தந்தையை சந்திப்பது மற்றும் ஜீவன்முக்தி அடையும் வழி யாருக்கும் தெரியாது. அமைதி, அமைதி என்று மட்டுமே கூறிக் கொண்டிருக்கின்றனர். மாநாடு நடத்திக் கொண்டிருக்கின்றனர். உலகில் அமைதி எப்பொழுது இருந்தது? மற்றும் எப்படி ஏற்பட்டது? என்பதை அறியவில்லை. அமைதியான உலகை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அமைதி எப்படி இருக்கும்? என்று நீங்கள் கேட்க முடியும். உலக அமைதி தந்தையின் மூலம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் வந்து புரிந்து கொள்ளுங்கள்.

ஓம்சாந்தி!
ஆன்மீகத் தந்தை அமர்ந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். நான் ஆத்மா என்ற திருஷ்டியை (உணர்வை) முதலில் உறுதி ஆக்குங்கள். நான் சகோதர சகோதரர்களைப் பார்த்துக் கொண்டிருக் கிறேன். நான் குழந்தைகளை (ஆத்மாக்களை) பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தந்தை கூறுவது போன்று! இந்த சகோதரர் தனது சகோதரரை பார்க்கின்றார். நீங்களும் சகோதரர்களாகப் பார்க்க வேண்டும். முதலில் இந்த திருஷ்டியை உறுதி ஆக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தீய எண்ணங்கள் நின்று விடும். இது பழக்கமாக ஆகிவிடும். ஆத்மா தான் கேட்கிறது, ஆத்மா தான் ஓசை எழுப்புகிறது. இந்த திருஷ்டி உறுதி ஆவதன் மூலம் மற்ற அனைத்து எண்ணங்களும் நீங்கி விடும். இது தான் நம்பர் ஒன் பாடமாகும். இதில் தெய்வீக குணங்களும் தானாகவே தாரணை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். தேக அபிமானத்தில் வருவதன் மூலம் தான் கர்மேந்திரியங்கள் இஷ்டம் போல நடந்து கொள்கின்றன. ஆத்ம அபிமானி ஆவதற்கு அதிக முயற்சி செய்கின்ற பொழுது உங்களுக்குள் அதிக சக்திகள் வந்து விடும். சர்வசக்திவான் தந்தையின் சக்தியின் மூலம் தான் ஆத்மா சதோ பிரதானமாக ஆகிறது. தந்தை சதோ பிரதானமாகத் தான் இருக்கின்றார். ஆக முதன் முதலில் இந்த திருஷ்டி பக்காவாக ஏற்படும் பொழுது தான் நான் ஆத்ம அபிமானியாக இருக்கிறேன் என்பதைப் புரிந்துக் கொள்ள முடியும். ஆத்ம அபிமானி மற்றும் தேக அபிமானி இரண்டிற்கும் இரவு-பகல் வித்தியாசம் இருக்கிறது. ஆத்மாக்களாகிய நாம் இப்பொழுது திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும். ஆத்ம அபிமானி ஆவதன் மூலம் தான் நாம் தூய்மையாக, சதோ பிரதானமாக ஆவோம். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் விகார எண்ணங்கள் நீங்கி விடும்.

பூமியின் நட்சத்திரங்கள் என்று மனிதர்கள் கூறுகின்றனர். உண்மையில் ஆத்மாக்களாகிய நாம் தான் நட்சத்திரங்களாக இருக்கிறோம். இந்த சரீரம் காரியங்கள் செய்வதற்காகவே கிடைத்திருக்கிறது. இப்பொழுது நாம் தமோ பிரதானமாக இருக்கிறோம், மீண்டும் சதோ பிரதானமாக ஆக வேண்டும். தந்தை புருஷோத்தம சங்கமயுகத்தில் வர வேண்டியிருக்கிறது. கிறிஸ்துவின் சரீரத்தில் வருகிறேன் என்று ஒருபொழுதும் கூறமாட்டார். அவர் ரஜோ பிரதான நேரத்தில் வருகிறார். புத்தர் அல்லது கிறிஸ்துவின் சரீரத்தில் பகவான் வந்தார் என்பது இருக்கவே முடியாது. அவர் வருவது ஒரே ஒருமுறை தான், மேலும் பழைய உலகில் வந்து புது உலகை உருவாக்க, தமோ பிரதான உலகை சதோ பிரதானமாக ஆக்குவதற்காக அவர் வருகின்றார். அவர் அவசியம் சங்கமத்தில் தான் வருவார். வேறு எந்த நேரத்திலும் அவர் வர முடியாது. அவர் வந்து புது உலகை ஸ்தாபனை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் தான் அவர் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யும் தந்தை என்று கூறப்படுகின்றார். நாடகப்படி சங்கமத்திற்கும் புகழ் இருக்கிறது, கிருஷ்ணரை தந்தை என்றோ அல்லது பதீத பாவனன் என்றோ கூறுவது கிடையாது. அவரது மகிமை முற்றிலும் தனிப்பட்டது. மற்றவர்களுக்கு முதலில் இலட்சியம் பற்றி புரிய வையுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். பாரதத்தில் இலட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்த பொழுது ஒரே தர்மம், ஒரே இராஜ்யமாக இருந்தது. ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. ஒரே ஒரு பிரிவினை இல்லாத தர்மம் இருந்தது. சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வது ஒரே ஒரு தந்தையின் காரியமாகும். எப்படி செய்கிறார்? என்பதும் தெளிவாக இருக்கிறது. சங்கமத்தில் வந்து தான் தந்தை புரிய வைக்கின்றார் - தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விடுத்து தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். இலட்சுமி நாராயணனின் சித்திரத்தின் மூலம் மட்டுமே முழு ஞானத்தையும் கொடுக்க வேண்டும். சிவபாபாவின் சித்திரமும் இருக்கிறது. மகிமைக்குரிய சித்திரம் மிக நன்றாக உருவாக்கப் பட்டிருக்கிறது. இது நரனிலிருந்து நாராயணன் ஆகக் கூடிய சத்திய கதையாகும். இராதா கிருஷ்ணரின் கதை என்று கூறுவது கிடையாது. சத்திய நாராயணனின் கதையாகும். உங்களை நரனிலிருந்து நாராயணனாக ஆக்குகின்றார். முதலில் சிறு குழந்தையாக இருப்பார். சிறு குழந்தையை மனிதன் என்று கூறுவது கிடையாது. ஆண் நாராயணன் என்றும் பெண் இலட்சுமி என்றும் கூறப்படுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இந்த சித்திரத்தின் மூலம் தான் புரிய வைக்க வேண்டும். சந்நியாசிகள் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்ய முடியாது. சங்கராச்சாரியர் வருவதே ரஜோ பிரதான நேரத்தில். அவர் இராஜயோகம் கற்பிக்க முடியாது. தந்தை சங்கமத்தில் வருகின்றார். பல பிறவிகளின் கடைசிப் பிறவியிலும் கடைசியில் பிரவேசம் செய்கிறேன் என்று கூறுகின்றார். மேலே திருமூர்த்தியும் இருக்கின்றனர். பிரம்மா யோகாவில் அமர்ந்திருக் கிறார், சங்கரின் விசயமே தனிப்பட்டதாகும். காளை மாட்டில் சவாரி செய்ய முடியாது. தந்தை இங்கு வந்து புரிய வைக்க வேண்டியிருக்கிறது. விநாசமும் இங்கு தான் ஏற்படுகிறது. உலகில் அமைதி ஏற்பட வேண்டும் என்று மனிதர்கள் கூறுகின்றனர். அது ஏற்படப் போகிறது, அதனால் தான் புத்தியில் வருகிறது. சித்திரங்களின் மூலம் நீங்கள் நன்றாகப் புரிய வைக்க முடியும். யார் சிவன் மற்றும் தேவதைகளின் பூஜை செய்கிறார்களோ அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் உடனேயே ஏற்றுக் கொள்வார்கள். மற்றபடி இயற்கை அல்லது விஞ்ஞானம் போன்றவைகளை ஏற்றுக் கொள்பவர்களின் புத்தியில் அமராது. மற்ற தர்மத்தைச் சார்ந்தவர்களின் புத்தியிலும் வராது, யார் மாற்றலாகிச் சென்றார்களோ அவர்கள் வெளிப்படுவார்கள். அவர்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் அல்லது அதிக பக்தி செய்பவர்கள் அவரவர்களது தர்மத்தில் மிகவும் பக்காவாக இருப்பார்கள். ஆக தேவதைகளின் பூஜாரிகளுக்குப் புரிய வையுங்கள். பெரிய ஆட்கள் ஒருபொழுதும் வரமாட்டார்கள். பிர்லா இருக்கிறார், இவ்வளவு கோயில்கள் கட்டியிருக்கின்றார், ஞானம் கேட்பதற்கு அவருக்கு நேரம் கிடையாது. முழு நாளும் தொழிலிலேயே மூழ்கி இருக்கிறார். அதிக செல்வம் கிடைக்கின்ற பொழுது கோயில் கட்டியதால் தான் செல்வம் கிடைக்கிறது என்று நினைக்கின்றனர்.

உங்களிடம் யாராவது வந்தால் இலட்சுமி நாராயணன் சித்திரத்தை அவர்களுக்குக் காண்பியுங்கள். நீங்கள் உலகில் அமைதியை விரும்புகிறீர்கள் எனில் உலகில் அமைதியான இராஜ்யம் இருந்தது, இந்த தேதியிலிருந்து இந்த தேதி வரை சூரியவம்ச இராஜ்யம் மிக அமைதியாக நடைபெற்றது, பிறகு இரண்டு கலைகள் குறைந்து விடுகிறது என்று கூறுங்கள். இந்த சித்திரம் தான் அனைத்திற்கும் ஆதாரமாகும். இப்பொழுது நீங்கள் உலக அமைதியை விரும்புகிறீர்கள். எங்கு செல்வீர்கள்? வீடு பற்றி அறியவேயில்லை. ஆத்மாவாகிய நான் சாந்த சொரூபமானவன், மூல வதனத்தில் இருப்பவன், அது தான் சாந்திதாமம் ஆகும். அது இந்த உலகில் கிடையாது. அது நிராகார உலகம் என்று கூறப்படுகிறது. மற்றபடி உலகம் என்று இதற்குத் தான் கூறப்படுகிறது. உலக அமைதியானது புது உலகில் ஏற்படும். உலகிற்கு எஜமானரானவர் இவர் அமர்ந்திருக்கிறார். ஏழைகள் இந்த விசயங்களை நன்றாகப் புரிந்து கொள்கின்றனர். இந்த மார்க்கம் மிக நன்றாக இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். அமைதி அமைதி ....... என்று கூறிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் எப்பொழுது அமைதி இருந்தது? எப்படி ஏற்பட்டது? என்பது யாருக்கும் தெரியாது. எவ்வளவு மாநாடுகள் நடத்துகின்றனர்! நீங்கள் உலகில் எப்பொழுதாவது அமைதியைப் பார்த்திருக்கிறீர்களா? அமைதியான உலகம் எப்படியிருக்கும்? என்று அவர்களிடம் கேட்க வேண்டும். பிரஜைகளாகிய நீங்கள் உங்களுக்குள் ஏன் குழப்பமடைகிறீர்கள்? மாநாடுகள் நடத்திக் கொண்டே இருக்கின்றனர், எங்கிருந்தும் பதில் கிடைப்பது கிடையாது. உலக அமைதியானது இப்பொழுது தந்தையின் மூலம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துவிலிருந்து 3 ஆயிரம் ஆண்டிற்கு முன் சொர்க்கம் இருந்த பொழுது அங்கு அமைதி இருந்தது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஒருவேளை அங்கும் அசாந்தி இருந்தால் பிறகு அமைதி எங்கிருந்து கிடைக்கும்! நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்களுக்கு இவ்வளவு நேரம் பேசுவதற்கு நேரம் கொடுப்பது கிடையாது. ஏனெனில் அவர்கள் கேட்கக் கூடிய நேரம் இன்னும் வரவில்லை. கேட்பதற்கும் சௌபாக்கியம் தேவை. பத்மாபதம் பாக்கியசாலி குழந்தைகளாகிய நீங்கள் தான் தந்தையிடம் கேட்பதற்கான உரிமையாளர் ஆகிறீர்கள். தந்தையைத் தவிர வேறு யாரும் கூற முடியாது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் கூறுகின்றார். இது இராவண இராஜ்யமாகும், இங்கு எப்படி அமைதி ஏற்பட முடியும்? இராவண இராஜ்யத்தில் அனைவரும் பதீதமாக இருக்கின்றனர். நம்மை பாவனம் ஆக்குங்கள் என்று அழைக்கின்றனர். பாவன உலகம் இந்த இலட்சுமி நாராயணனுடையது ஆகும். இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யத்திற்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! சூரியவம்சி, சந்திரவம்சி பிறகு இராவணவம்சி ஆகும். இந்த நேரத்தில் கலியுகம், இராவண சம்பிரதாயமாகும். பெரிய பெரிய மனிதர்களும் கூட ஒருவரையொருவர் உர் உர் என்று உறுமிக் கொண்டிருக் கின்றனர். நான் இன்னாராக இருக்கிறேன் என்ற அகங்காரம் அதிகம் இருக்கிறது. ஆக இந்த இலட்சுமி நாராயணன் சித்திரத்தின் மூலம் புரிய வைப்பது மிகவும் எளிதாகும். இவர்களது இராஜ்யத்தில் தான் உலகில் அமைதி இருந்தது, வேறு எந்த தர்மமும் இல்லாமல் இருந்தது என்று கூறுங்கள். உலகில் அமைதியோ இங்கு தான் ஏற்படும். ஆக முக்கியமான சித்திரம் இதுவாகும். மற்றபடி பல சித்திரங்களைப் புரிய வைப்பதனால் மனிதர்களின் எண்ணங்கள் வேறு திசைகளில் சென்று விடும். எதைப் புரிய வைத்தீர்களோ அதையும் மறந்து விடுகின்றனர். அதற்குத் தான் பலர் சேர்த்து சமைத்த பண்டம் பாழ் என்று கூறப்படுகிறது. பல சித்திரங்கள் உள்ளன, கே-க்குரிய விசயம் என்னவெனில் உரையாடல் போன்ற நிகழ்ச்சிகளில் மூல விசயம் புத்தியிலிருந்து நீங்கி விடுகிறது. தந்தை இதை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார் என்பதை மிகச் சிலரே புரிந்து கொள்கின்றனர். 84 பிறவிகளும் அவர்கள் மட்டுமே எடுக்கின்றனர். காண்பிப்பது ஒருவராகத் தான் இருக்கிறது. அனைவரையும் எப்படிக் காண்பிக்க முடியும்? சாஸ்திரங்களிலும் ஒரு அர்ஜுனனின் பெயர் கூறப்பட்டிருக்கிறது அல்லவா! பள்ளியில் ஆசிரியர் ஒரே ஒருவருக்கு மட்டும் கல்வி கற்பிக்கமாட்டார். இதுவும் பள்ளிக் கூடமாகும். கீதையில் பள்ளிக் கூடமாக காண்பிக்கப்படவில்லை. கிருஷ்ணன் சிறிய குழந்தை, அவர் எவ்வாறு கீதை கூறுவார்? இது பக்தி மார்க்கமாகும்.

உங்களது இந்த பேட்ஜ் அதிக காரியங்கள் செய்யும். இது அனைத்தையும் விட மிகச் சிறந்ததாகும். முதலில் சிவபாபாவின் சித்திரத்தின் எதிரில் அழைத்து வர வேண்டும். பிறகு இலட்சுமி நாராயணனின் சித்திரம் முன். நீங்கள் அமைதி கேட்கிறீர்கள், அது கல்ப கல்பத்திற்கும் தந்தையின் மூலம் ஸ்தாபனை ஆகிறது. நீங்கள் இந்த சக்கரத்தை அறிந்து கொண்டீர்கள். முன்பு நீங்கள் துச்ச புத்தியுடையவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது தந்தை தூய புத்தியுடையவர்களாக ஆக்குகின்றார். பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் யாருக்கும் சத்கதி செய்விக்க முடியாது, உலகில் அமைதி ஏற்படுத்த முடியாது என்று எழுத வேண்டும். தந்தை தான் அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றார். அவரைத் தான் நினைவும் செய்கின்றனர். முக்கிய சித்திரம் இந்த இரண்டும் ஆகும். எதுவரை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையோ அதுவரை இதிலிருந்து மாறிவிடக் கூடாது. இதைப் புரிந்து கொள்ளவில்லையெனில் எதுவும் புரிந்து கொள்ளவில்லை என்பதாகும். நேரம் வீணாகி விடுகிறது. புத்தியில் அமரவில்லையெனும் பொழுது அனுப்பி வைத்து விட வேண்டும். இதில் புரிய வைப்பவர்கள் மிக சிறந்தவர்களாக இருக்க வேண்டும். தாய்மார்களாக இருந்தால் மிகவும் நல்லது, ஏனெனில் யாரும் கோபப்பட மாட்டார்கள். யார் யார் புரிய வைப்பதில் தீவிரமாக இருக்கின்றனர்? என்பதை அனைவரும் அறிவர். மோகினி இருக்கிறார், மனோகர் இருக்கிறார், கீதா இருக்கிறார் - மிகவும் நல்ல நல்ல குழந்தைகள் உள்ளனர். ஆக முதலில் இலட்சுமி நாராயணனின் சித்திரத்தில் முற்றிலும் பக்காவாக ஆக்க வேண்டும். இந்த விசயங்களை நல்ல முறையில் புரிந்து கொள்ளும் பொழுது தான் அமைதியான உலகிற்குச் செல்ல முடியும் என்று கூறுங்கள். முக்தி, ஜீவன்முக்தி இரண்டும் கிடைத்து விடும். அனைவரும் முக்திக்குச் செல்வர், பிறகு வரிசைக்கிரமமாக நடிப்பு நடிப்பதற்கு வருவீர்கள். போதையுடன் புரிய வைக்க வேண்டும். இந்த சித்திரம் நம்பர் ஒன் ஆகும். அமைதியான உலகிற்கு இவர்கள் தான் எஜமானர்களாக இருந்தனர். இந்த விசயங்கள் புத்திசாலியின் புத்தியில் தான் அமர்கிறது. நன்றாக இருக்கிறது என்று கூறுகின்றனர், கால்களில் விழுகின்றனர். ஆனால் தந்தையை சிறிதும் அறியவில்லை. அவர்களையும் மாயை விடுவது கிடையாது. எந்த தந்தை இவ்வளவு உயர்ந்தவர்களாக ஆக்குகின்றாரோ அவரை எந்தளவு நினைவு செய்ய வேண்டும்! அதனால் தான் தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு செய்தால் உங்களது பாவங்கள் அழிந்து விடும். சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள். இங்கு உள்ளுக்குள் வந்ததும் குஷியில் புல்லரிக்க வேண்டும். நான் இவ்வாறு ஆகிறேன். நான் உள்ளுக்குள் வருகிறேன், இலட்சுமி நாராயணனைப் பார்க்கிறேன், மிகுந்த குஷி ஏற்படுகிறது. ஆஹா! பாபா என்னை இவ்வாறு ஆக்குகின்றார். ஆஹா பாபா ஆஹா! லௌகீக வீட்டில் யாருடைய தந்தையாவது பெரிய பதவியில் இருந்தால் அந்த குழந்தைக்கு என் தந்தை அமைச்சர் என்ற குஷி இருக்கும். தந்தை (சிவபாபா) என்னை இவ்வாறு ஆக்குகின்றார் என்ற குஷி உங்களுக்குள் எவ்வளவு இருக்க வேண்டும்! ஆனால் மாயை மறக்க வைத்து விடுகிறது, மிக வேகமாக எதிர்க்கின்றது. குழந்தைகளாகிய உங்களுக்குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும், தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். ஆத்ம அபிமானி ஆகுக. ஆத்மா ஆத்மாவைப் பாருங்கள். பிறகு மனைவியையும் ஆத்மா என்ற ரூபத்தில் தான் பார்ப்பீர்கள். கெட்ட பார்வை இருக்கவே இருக்காது. நீங்கள் சகோதரன் சகோதரி என்ற பார்வையில் பார்க்காததால் தான் மனதில் புயல்கள் வருகின்றன. இதில் மிகுந்த முயற்சி இருக்கிறது. நல்ல பயிற்சி தேவை. ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும். கர்மாதீத நிலை கடைசியில் தான் ஏற்படும். சேவை செய்யும் குழந்தைகள் தான் தந்தையின் உள்ளத்தில் அமர முடியும். தாமதமாக வந்திருந்தாலும் கூட அவர்களும் முன்னேற முடியும், வேகமாகச் செல்ல முடியும். இவர்கள் வீடுவாசலை எப்படி விட்டனர்? என்ற முந்தைய சரித்திரத்தை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவோடு இரவாக ஓடி வந்து விட்டனர். பிறகு இவ்வளவு குழந்தைகளை வளர்த்தார். இது தான் பட்டி என்று கூறப்படுகிறது. பிறகு பட்டியிலிருந்து வரிசைக்கிரமமாக வெளிப்பட்டனர். பாபா உங்களை அதிசயமான உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார், ஆச்சரியமான விசயமாகும். இறை தந்தை உங்களுக்கு கற்பிக்கின்றார். எவ்வளவு சாதாரணமாக இருக்கின்றார்! குழந்தைகளுக்கு தினம் தினம் எவ்வளவு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்! மேலும் குழந்தைகளுக்கு நமஸ்தே என்று கூறுகின்றார். குழந்தைகளே! நீங்கள் என்னை விட உயர்ந்த நிலை அடைகிறீர்கள். நீங்கள் தான் ஏழையிலிருந்து இரட்டை கிரீடமுள்ள உலகிற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள். ஆக தந்தை மிகுந்த ஆர்வத்துடன் வருகின்றார். கணக்கிட முடியாத முறை வந்திருப்பார். இன்று நீங்கள் இராமராகி என்னிடமிருந்து இராஜ்யம் அடைகிறீர்கள். பிறகு இராவணனிடம் இராஜ்யம் இழந்து விடுகிறீர்கள். இது விளையாட்டாகும். நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஆத்மாவை சதோ பிரதானம் ஆக்குவதற்காக ஒரு சர்வசக்திவான் தந்தையிடமிருந்து சக்திகளைப் பெற வேண்டும். ஆத்ம அபிமானி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். நாம் ஆத்மாக்கள் சகோதரன் சகோதரி என்ற பயிற்சி நிரந்தரமாக செய்து கொண்டே இருக்க வேண்டும்.

2) தந்தை மற்றும் இலட்சிய (இலட்சுமி நாராயணன்) சித்திரத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் விரிவான முறையில் புரிய வைக்க வேண்டும். மற்ற விசயங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

வரதானம்:
சேவைகளில் சுபபாவனையைச் சேர்ப்பதன் மூலம் சக்திசாலி பலனை அடையக் கூடிய வெற்றி மூர்த்தி ஆகுக .

எந்த ஒரு சேவை செய்தாலும் அதில் அனைத்து ஆத்மாக்களுக்கான சகயோகத்தின் பாவனை இருக்க வேண்டும். குஷியின் பாவனை மற்றும் நல்ல பாவனை இருக்க வேண்டும். அப்போது ஒவ்வொரு காரியமும் சகஜமாக வெற்றி பெறும். எப்படி முன்பெல்லாம் உலகில் எந்த ஒரு காரியம் செய்வதற்காகச் சென்றாலும் முழு பரிவாரத்தின் ஆசி பெற்றுச் சென்றனர். ஆகவே இப்போதைய சேவைகளில் இதைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு அனைவரின் சுபபாவனைகள், சுப விருப்பங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். அனைவரின் திருப்தியின் பலத்தை நிரப்புவீர்களானால் சக்திசாலி பலன் வெளிப்படும்.

சுலோகன்:
எப்படி பாபா இதோ வந்தேன் , ஆஜராகி விட்டேன் என்று சொல்கிறாரோ , அது போல் நீங்களும் சேவையில் இதோ ஆஜராகி விட்டேன் , ஆஜராகி விட்டேன் எனச் சொல்வீர்களானால் புண்ணியம் சேமிப்பாகி விடும் .
 


பிரம்மாபாபாவிற்கு சமமாக ஆவதற்கான விசேஷ முயற்சி

எப்படி பிரம்மா பாபா சதா பரமாத்ம அன்பில் மூழ்கி இருந்தார் . சிவபாபாவைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தென்படவில்லை . சங்கல்பத்திலும் கூட பாபா , பேச்சிலும் பாபா , கர்மத்திலும் பாபாவின் துணை , அத்தகைய அன்பில் மூழ்கிய ஸ்திதியில் இருந்து , எந்த ஒரு வார்த்தை பேசினாலும் அன்பின் வார்த்தை , மற்ற ஆத்மாக்களையும் கூட அன்பில் கட்டிப் போட்டு விடுவார் . அத்தகைய அன்பில் மூழ்கிய ஸ்திதியில் இருப்பீர்களானால் பாபா என்ற ஒரு சொல்லே மாய மந்திரத்தின் வேலையைச் செய்யும் .