29.10.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
உட்கார்ந்தாலும்,
எழுந்தாலும்
ஞானம்
புத்தியில்
அலை
மோதிக் கொண்டே
இருந்தால்
அளவற்ற
மகிழ்ச்சியில்
இருப்பீர்கள்.
கேள்வி:
குழந்தைகள்
நீங்கள்
யாருடைய
சகவாசத்தில்
மிகுந்த
கவனத்துடன்
இருக்க
வேண்டும்?
பதில்:
யாருடைய
புத்தியில்
தந்தையின்
நினைவு
நிலையாக
இல்லாமல்,
புத்தி
அங்குமிங்கும்
அலைந்துக் கொண்டிருக்கிறதோ
அப்படிப்பட்டவர்களின்
சகவாசத்தில்
நீங்கள்
கவனமாக
இருக்க
வேண்டும்.
அவர்களின் அருகில்
ஒட்டிக்
கொண்டு
அமரக்
கூடாது.
ஏனென்றால்
நினைவில்
இல்லாமல்
இருப்பவர்கள்
சூழ்நிலையைக் கெடுத்து
விடுகின்றனர்.
கேள்வி:
மனிதர்கள்
எப்பொழுது
வருத்தப்படுவார்கள்?
பதில்:
இவர்களுக்கு
படிப்பு
சொல்லித் தருபவர்
சுயம்
பகவான்
என்பது
அவர்களுக்குத்
தெரிந்து
விடும்,
அப்பொழுது
அவர்களுடைய
முகம்
ஒளி
இழந்து
(வாடி)
விடும்.
நாம்
கவனக்குறைவாக,
படிக்காமல்
இருந்து விட்டோமே
என
வருத்தப்படுவார்கள்.
ஓம்சாந்தி.
இப்பொழுது
ஆன்மீக
யாத்திரையை
குழந்தைகள்
நல்ல
முறையில்
புரிந்துள்ளீர்கள்.
எந்த ஹடயோகத்திலும்
யாத்திரை
இருப்பதில்லை.
இங்கு
நினைவு
செய்யப்படுகிறது,
நினைவு
செய்வதில்
கஷ்டம் ஒன்றுமில்லை.
தந்தையை
நினைவு
செய்வதில்
கடினமான
விஷயம்
ஏதுமில்லை.
இங்கு
வகுப்பு
நடைபெறுகிறது எனவே
விதிப்பூர்வமாக
அமர
வேண்டும்.
நீங்கள்
தந்தையின்
குழந்தைகளாக
இருப்பதனால்
பாலனையும் ஏற்படுகிறது.
எப்படிப்பட்ட
பாலனை?
அழியாத
ஞான
ரத்தினங்களின்
பொக்கிஷம்
கிடைக்கிறது.
தந்தையை நினைவு
செய்வதில்
கடினமான
விஷயம்
ஏதுமில்லை,
ஆனாலும்,
மாயா
புத்தியின்
தெடர்பை
துண்டித்து விடுகிறது.
மற்றபடி
எப்படி
வேண்டுமானாலும்
அமரலாம்,
நினைவு
செய்வதற்கும்
அமரக்கூடிய
தன்மைக்கும் எந்த
சம்மந்தமும்
இல்லை.
நிறைய
குழந்தைகள்
ஹடயோகத்தைப்
போல்
3-4
மணி
நேரம்
அமர்கின்றனர்,
முழு
இரவும்
கூட
அமர்கின்றனர்.
ஆரம்பத்தில்
உங்களுக்கு
பட்டி
நடந்தது,
அந்த
விஷயம்
வேறுபட்டது,
அப்பொழுது
உங்களுக்கு
தொழில்,
காரியம்
ஏதுமில்லை,
எனவே
அவ்வாறு
கற்றுத்தரப்பட்டது.
இப்பொழுது தந்தை
கூறுகின்றார்,
நீங்கள்
குடும்ப
சூழ்நிலையில்
இருங்கள்,
தொழில்,
காரியங்கள்
செய்யுங்கள்.
எந்த காரியத்தைச்
செய்தாலும்
தந்தையை
நினைவு
செய்யுங்கள்.
இப்பொழுதே
நீங்கள்
நிரந்தரமாக
நினைவு
செய்ய முடியும்
என
சொல்வதற்கில்லை.
இந்த
நிலை
அடைவதற்கு
சிறிது
காலமாகும்.
இப்பொழுது
நிரந்தரமாக நினைவில்
இருந்து
விட்டால்
கர்மாதீத்
நிலை
ஏற்பட்டு
விடும்.
குழந்தைகளே,
நாடக
அனுசாரம்
இப்பொழுது கொஞ்ச
நேரம்
மட்டுமே
இருக்கிறது
என
தந்தை
கூறுகின்றார்.
முழு
கணக்கும்
உங்கள்
புத்தியில்
இருக்கிறது.
கிறிஸ்து
வருவதற்கு
3
ஆயிரம்
ஆண்டுகளுக்கு
முன்பாக
இந்த
பாரதம்
மட்டுமே
இருந்தது
என
கூறப்படுகிறது,
அது
சொர்க்கம்
என
கூறப்பட்டது.
இப்பொழுது
அவர்களுடைய
2ஆயிரம்
ஆண்டுகள்
முடிகின்றது,
ஆகவே
5000
ஆண்டுகளின்
கணக்கு
வந்துவிட்டது.
உங்களுடைய
பெருமை
வெளிநாட்டிலிருந்து வெளிப்படும்,
ஏனென்றால்
அவர்களுடைய
புத்தி பாரதவாசிகளை
விட
சக்திசாலியாக இருக்கிறது.
பாரதத்திலிருந்து அமைதியை
வேண்டுகின்றனர்.
பாரதவாசிகள் இலட்சக்கணக்கான
ஆண்டுகள்
எனக்
கூறி
மேலும்
சர்வ
வியாபி
என்ற
ஞானத்தை
கொடுத்து
புத்தியைக் கெடுத்துவிட்டனர்,
தமோ
பிரதானம்
ஆகிவிட்டனர்.
வெளிநாட்டினர்
இந்தளவு
தமோ
பிரதானம்
ஆகவில்லை,
அவர்களுடைய
புத்தி
சக்திசாலியாக இருக்கிறது.
பாரதவாசிகளிடமிருந்து
அவர்கள்
நிறைய
கற்றுக்
கொள்வார்கள்.
வெளிநாட்டிலிருந்து செய்தி
வெளிப்படும்போது
பாரதவாசிகள்
விழிப்படைவார்கள்.
ஏனென்றால்,
பாரதவாசிகள் முற்றிலும்
ஆழ்ந்த
உறக்கத்தில்
உள்ளனர்,
வெளிநாட்டினர்
இந்தளவு
உறங்கவில்லை.
வெளிநாட்டிலிருந்து இங்கு
வந்துள்ளோம்,
அமைதி
எப்படி
உருவாகும்?
என
யாராவது
கூறுங்கள்
என்ற
கேள்வி
வெளிப்படும்.
ஏனென்றால்,
பாரதத்தில்
தான்
தந்தை
வருகின்றார்.
உலகத்தில்
மீண்டும்
அமைதி
எப்பொழுது,
எப்படி
ஏற்படும் என்பதை
குழந்தைகள்
நீங்கள்
மட்டுமே
கூற
முடியும்.
உண்மையிலேயே
இந்த
பாரதம்
பாரடைஸ்
ஆக,
சொர்க்கமாக
இருந்தது
என்பதை
குழந்தைகள்
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்,
புதிய
உலகில்
பாரதம்
பாரடைஸ்
ஆக இருந்தது.
இதைப்
பற்றி
வேறு
யாருக்கும்
தெரியாது.
ஈஸ்வரர்
சர்வவியாபி
என்ற
விஷயம்
மட்டுமே
மனிதர்களின் புத்தியில்
தங்கி
விட்டது.
மேலும்
கல்பத்தின்
ஆயுட்காலத்தை
இலட்சக்கணக்கான
ஆண்டுகளாகக்
கூறிவிட்டனர்.
பாரதவாசிகள்
அனைவரையும்
விட
மிகவும்
கல்புத்தியாக
ஆகிவிட்டனர்.
இந்த
கீதை
சாஸ்திரங்கள்
போன்றவை பக்திமார்க்கத்திற்குரியவையாகும்,
மீண்டும்
இவையனைத்தும்
அவ்வாறே
உருவாகும்.
நாடகத்தைப் புரிந்திருந்தாலும்
கூட
தந்தை
முயற்சி
செய்ய
வைக்கின்றார்.
குழந்தைகள்
நீங்கள்
வினாசம்
அவசியம் ஆகுமென
புரிந்துள்ளீர்கள்.
புது
உலகத்தை
உருவாக்குவதற்கு
தந்தை
வந்திருக்கிறார்,
இது
மகிழ்ச்சியான விசயமல்லவா!
யாராவது
பெரிய
பரிட்சையில்
தேர்ச்சி
பெற்றால்
உள்ளுக்குள்
மகிழ்ச்சி
ஏற்படும்
தானே?
நாம் இங்கு
தேர்ச்சி
பெற்று
தேவதைகளாக
ஆவோம்.
எல்லா
ஆதாரமும்
படிப்பில்
இருக்கிறது.
தந்தையே
நமக்குக்
கற்பித்து
இவ்வாறு
ஆக்குகின்றார்
என்பதை
குழந்தைகள்
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
பாரதம்
பாரடைஸ்,
சொர்க்கமாக
இருந்தது.
அப்பாவி
மனிதர்கள்
முற்றிலும்
குழப்பத்தில்
உள்ளனர்.
எல்லையற்ற தந்தையிடம்
இருக்கும்
ஞானத்தை
அவர்
குழந்தைகளாகிய
உங்களுக்குத்
தருகின்றார்.
பாபா
ஞானக்கடலாக,
ஆனந்தக்கடலாக,
அனைத்து
பொக்கிஷத்தாலும்
நிறைந்திருக்கின்றார்
என
தந்தையை
நீங்கள்
மகிமை செய்கின்றீர்கள்.
உங்களை
இந்தளவு
செல்வந்தராக
ஆக்குவது
யார்?
இங்கு
நீங்கள்
எதற்காக
வந்துள்ளீர்கள்?
(பக்தியின்
பலனை)ஆஸ்தி
அடைவதற்காக.
சிலருக்கு
நல்ல
ஆரோக்கியம்
இருக்கிறது,
ஆனால்
செல்வம் இல்லையென்றால்
என்னவாகும்?
வைகுண்டத்தில்
உங்களிடம்
நிறைய
செல்வம்
இருக்கும்.
இந்த
உலகில்
யார் செல்வந்தர்களாக
இருக்கிறார்களோ,
அவர்களுக்கு
எங்களிடம்
இவ்வளவு
செல்வம்
இருக்கிறது,
இந்த
பொருட்கள் இருக்கிறது
என்ற
பெருமை
இருக்கும்.
ஆனால்
சரீரத்தை
விட்டுவிட்டால்
எல்லாம்
முடிந்து
விடும்.
பாபா நமக்கு
21
பிறவிகளுக்கான
பொக்கிஷத்தைக்
கொடுக்கின்றார்
என
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
தந்தை
பொக்கிஷத்திற்கு எஜமானராக
ஆவதில்லை,
குழந்தைகளை
எஜமானராக
ஆக்குகின்றார்.
இந்த
உலகில்
அமைதியை
உருவாக்க இறை
தந்தையைத்
தவிர
வேறு
யாராலும்
முடியாது.
திரிமூர்த்தி,
காலச்சக்கரம்
இவை
அனைத்தையும்
விட நல்ல
சித்திரங்களாகும்.
இந்த
காலச்சக்கரத்தில்
முழு
ஞானமும்
நிறைந்துள்ளது.
நீங்கள்
அப்படிபட்ட
அதிசயமான பொருட்களை
உருவாக்கினால்
அதன்
மூலம்
நல்ல
இரகசியங்கள்
இருப்பதாக
மற்றவர்கள்
புரிந்து
கொள்வார்கள்.
குழந்தைகள்
சின்னஞ்சிறிய
பொம்மைகளை
உருவாக்குகிறார்கள்,
அது
பாபாவுக்குப்
பிடிக்கவில்லை.
பெரிய சித்திரங்களை
உருவாக்குங்கள்
அதனை
தூரத்திலிருந்து படித்து
புரிந்து
கொள்ள
வேண்டுமென
பாபா
கூறுகின்றார்.
பெரிய
பொருட்களின்
மீது
தான்
மனிதர்கள்
கவனம்
வைப்பார்கள்.
இந்த
சித்திரத்தில்
தெளிவாக
காட்டப்பட்டுள்ளது,
அதாவது
இந்த
பக்கம்
கலியுகம் இருக்கிறது,
அந்த
பக்கம்
சத்யுகம்
இருக்கிறது.
பெரிய
பெரிய
சித்திரங்களை வைத்தால்
மனிதர்களின்
கவனம்
ஈர்க்கப்படும்.
யாத்திரை
செல்வோர்
நன்றாகப்
பார்த்து
புரிந்துகொள்வார்கள்.
கிறிஸ்து
வருவதற்கு
3
ஆயிரம்
ஆண்டுகளுக்கு
முன்பாக
சொர்க்கம்
இருந்தது
என்பதையும்
புரிந்துள்ளீர்கள்.
உலகத்தைச்
சேர்ந்தவர்களுக்கு
இவ்வாறு
தெரியாது.
5
ஆயிரம்
ஆண்டுகளின்
கணக்கை
நீங்கள்
தெளிவாகப் புரிய
வைக்க
வேண்டும்.
அதாவது
மிகப்
பெரிய
அளவில்
உருவாக்க
வேண்டும்.
அதனை,
வெகு
தூரத்திலிருந்து பார்த்து,
வார்த்தைகளைப்
படித்து,
அதன்
மூலம்
இந்த
உலகம்
கடைசி
காலத்தில்
இருப்பதாகப்
புரிந்து
கொள்ள வேண்டும்.
அனுகுண்டுகளும்
தயாரிக்கின்றனர்,
இயற்கையின்
சீற்றங்களும்
உண்டாகும்.
நீங்கள்
வினாசத்தின் பெயரைக்
கேட்டால்
மனதுக்குள்
மகிழ்ச்சி
அதிகமாக
வேண்டும்,
ஆனால்
ஞானம்
இல்லையென்றால்
மகிழ்ச்சி ஏற்படாது.
சரீரம்
உட்பட
அனைத்தையும்
விட்டுவிட்டு
தன்னைத்தான்
ஆத்மா
என
புரிந்து,
தன்னுடைய ஆத்மாவின்
புத்தியின்
தொடர்பை
தந்தையாகிய
என்னிடம்
கொண்டு
வாருங்கள்,
இது
தான்
உழைப்பதற்கான விசயமென
தந்தை
கூறுகின்றார்.
தூய்மையாகித்
தான்
தூய்மையான
உலகிற்குச்
செல்ல
வேண்டும்.
நாம்
தான் அரசாட்சியை
அடைகின்றோம்,
பிறகு
இழக்கின்றோம்
என்பதையும்
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
இது
மிகவும் சகஜமானது.
அமர்ந்தாலும்,
எழுந்தாலும்,
நடந்தாலும்
மனதிற்குள்
ஞானச்
சிந்தனையின்
அலை
அடிக்க வேண்டும்.
எவ்வாறு
பாபாவிடம்
ஞானம்
இருக்கிறதல்லவா!
தந்தை
தேவாத்மாவாக
ஆக்குவதற்கு
கற்பிக்க வந்திருக்கிறார்.
ஆக
அந்தளவு
அளவற்ற
மகிழ்ச்சி
குழந்தைகளுக்கு
இருக்க
வேண்டுமல்லவா!
தனக்குத் தானே
கேளுங்கள்
அவ்வளவு
அளவற்ற
மகிழ்ச்சி
இருக்கிறதா?
தந்தையை
அந்தளவு
நினைவு
செய்கிறோமா?
காலச்சக்கரத்தின்
முழு
ஞானமும்
புத்தியில்
இருக்கிறது,
ஆகவே
அவ்வளவு
மகிழ்ச்சி
இருக்க
வேண்டும்.
என்னை
நினைவு
செய்யுங்கள்
மேலும்,
அதிக
மகிழ்ச்சியில்
இருக்க
வேண்டும்.
உங்களுக்கு
கற்பிக்கின்றவர் யார்?
இந்த
விசயம்
மற்றவர்களுக்குத்
தெரிந்தவுடன்
அவர்களின்
முகம்
வாடிப்
போய்விடும்.
ஆனால் அவர்கள்
புரிந்து
கொள்வதற்கு
சற்று
நேரமாகும்.
இப்பொழுது
தேவதா
தர்மத்திற்கு
அந்தளவு
உறுப்பினர்கள் உருவாகவில்லை.
முழு
இராஜ்யமும்
உருவாகவில்லை.
இன்னும்
எவ்வளவு
மனிதர்களுக்கு
தந்தையின் செய்தியைக்
கொடுத்தாக
வேண்டும்.
எல்லையற்ற
தந்தை
மீண்டும்
நமக்கு
சொர்க்கத்தின்
அரசாட்சியை கொடுத்துக்
கொண்டு
இருக்கிறார்.
நீங்களும்
அந்த
தந்தையை
நினைவு
செய்யுங்கள்
எனக்
கூறுங்கள்.
எல்லையற்ற
தந்தை
நிச்சயமாக
எல்லையற்ற
சுகத்தைத்
தருவார்
அல்லவா!
குழந்தைகளின்
உள்ளத்தில் அளவற்ற
ஞானத்தின்
மகிழ்ச்சி
இருக்க
வேண்டும்
மேலும்,
எவ்வளவு
தந்தையை
நினைவு
செய்கிறீர்களோ அவ்வளவு
ஆத்மா
தூய்மையாகும்.
நாடகத்
திட்டத்தின்
படி
குழந்தைகள்
நீங்கள்
எவ்வளவு
சேவை
செய்து
பிரஜைகளை
உருவாக்கு கிறீர்களோ
அவ்வளவு
நன்மை
ஏற்படும்,
அவர்களின்
ஆசிர்வாதங்களும்
கிடைக்கும்.
ஏழைகளுக்கு
சேவை செய்யுங்கள்,
அழைப்புக்
கொடுங்கள்.
இரயிலிலும் நீங்கள்
நிறைய
சேவை
செய்ய
முடியும்.
இந்த
சிறிய பேட்ஜில்
எவ்வளவு
ஞானம்
அடங்கியுள்ளது.
முழு
கல்வியின்
சாரம்
இதில்
உள்ளது.
மிகவும்
நல்ல
நல்ல பேட்ஜ்களை
உருவாக்கி
அதைப்
பரிசாகவும்
கொடுக்கலாம்.
யாருக்கு
வேண்டுமானாலும
புரிய
வைப்பது மிகவும்
சகஜமாகும்.
சிவபாபாவை
மட்டும்
நினைவு
செய்யுங்கள்.
சிவபாபாவிடமிருந்து
தான்
ஆஸ்தி
கிடைக்கிறது,
ஆகவே
தந்தை
மற்றும்
தந்தையின்
ஆஸ்தியான
சொர்க்கத்தின்
அரசாட்சி,
கிருஷ்ணபுரியை
நினைவு
செய்யுங்கள்.
மனிதர்களின்
வழி
மிகவும்
குழப்பத்தில்
உள்ளது.
எதையும்
புரிந்து
கொள்ளவில்லை.
விகாரத்திற்காக
எவ்வளவு தொந்தரவு
செய்கின்றனர்.
காமத்திற்கு
பின்னாலேயே
மதி
மயங்கி
எவ்வளவு
இறக்கினறனர்.
எந்த
விசயத்தையும் புரிந்து
கொள்வதில்லை.
அனைவருடைய
புத்தியும்
பாதிப்படைந்து
விட்டது,
எனவே
தந்தையைப்
புரிந்து கொள்ளவில்லை.
இதுவும்
நாடகத்தில்
பதிவாகி
உள்ளது.
அனைவருடைய
மனநிலையும்
மோசமாகி
விட்டது.
குழந்தைகளே,
நீங்கள்
தூய்மையான
சொர்க்கத்தின்
எஜமானராக
ஆவீர்கள்
ஆனால்,
புரியாமல்
இருக்கின்றனர் என
தந்தை
கூறுகின்றார்.
ஆத்மாவின்
சக்தி
முற்றிலும்
காலியாகி விட்டது.
எவ்வளவு
புரிய
வைக்கப்படுகிறது,
இருப்பினும்
முயற்சி
செய்ய
வேண்டும்,
செய்விக்க
வேண்டும்.
முயற்சியில்
களைப்படையக்
கூடாது,
நம்பிக்கை இழக்கக்
கூடாது.
எவ்வளவு
முயற்சி
செய்து,
ஞானத்தை
உரையாற்றினேன்,
ஆனால்
ஒருவர்
கூட
வரவில்லை என
நம்பிக்கை
இழக்கக்
கூடாது.
ஆனால்
நீங்கள்
எதைக்
சொன்னீர்களோ
அதனை
யாரெல்லாம்
கேட்டார்களோ,
அவை
அவசியம்
அவர்களிடம்
பதிந்து
இருக்கும்.
கடைசியில்
நிச்சயமாக
அனைவரும்
புரிந்து
கொள்வார்கள்.
பிரம்மா
குமார்,
பிரம்மா
குமாரிகள்
உங்களுடைய
அளவற்ற
பெருமை
வெளிப்படும்.
ஆனால்,
நடைமுறைகளைப் பார்க்கும்
பொழுது
ஏதும்
அறியாதவர்கள்
போன்று
தென்படுகிறது.
எனவே
புரிந்து
கொள்வதில்லை,
மரியாதை செலுத்துவதில்லை.
புத்தி
இன்னும்
வெளியே
அலைகின்றது.
தந்தையை
நினைவு
செய்தால்
உதவியும்
கிடைக்கும்.
தந்தையை
நினைவு
செய்யவில்லையெனில்
அவர்கள்
தூய்மை
இல்லாதவர்கள்,
நீங்கள்
தூய்மையாக
ஆகின்றீர்கள்.
யார்
தந்தையை
நினைவு
செய்யவில்லையோ
அவர்களுடைய
புத்தி
அங்குமிங்கும்
அலைபாயும்,
ஆகவே அவர்களோடு
சேர்ந்து
கொண்டு
அமரக்
கூடாது.
ஏனென்றால்
நினைவில்
இல்லாமல்
இருப்பவர்கள்
சூழ்நிலையைக் கெடுத்துவிடுவார்கள்.
தூய்மையானவர்களும்
தூய்மையற்றவர்களும்
சேர்ந்திருக்க
முடியாது,
எனவே
தந்தை பழைய
உலகத்தை
முடிக்கின்றார்.
நாளுக்கு
நாள்
விதிமுறைகளும்
கடுமையாகும்.
தந்தையை
நினைவு செய்யவில்லையெனில்
இலாபத்திற்கு
பதிலாக
நஷ்டம்
ஏற்படும்.
தூய்மையின்
முழு
ஆதாரமும்
நினைவில் இருக்கிறது.
ஒரே
இடத்தில்
அமர
வேண்டியதில்லை.
இங்கு
சேர்ந்து
அமருவதற்குப்
பதிலாக
மலையில் தனித்தனியாக
அமருவது
நல்லது.
யார்
நினைவு
செய்வதில்லையோ
அவர்கள்
தூய்மையற்றவர்கள்.
அவர்களுடைய
சேர்க்கையில்
வரக்
கூடாது.
நடத்தையின்
மூலமாகத்
தெரிந்து
விடும்.
நினைவு
செய்யாமல் தூய்மையாக
முடியாது.
பலபிறவிகளின்
பாவச்
சுமை
ஒவ்வொருவரின்
மீதும்
உள்ளது.
அதனை
நினைவு யாத்திரை
செய்யாமல்
எவ்வாறு
நீக்குவது?
ஆகவே
அவர்கள்
தூய்மை
இல்லாதவர்களாகவே
இருப்பார்கள்;
குழந்தைகள்
உங்களுக்காக
இந்த
முழு
அழுக்கான
உலகத்தையும்
முடிவுக்கு
கொண்டு
வருகின்றேன் என
தந்தை
கூறுகின்றார்.
யாருடைய
சகவாசத்திலும்
இருக்கக்
கூடாது
என்பது
கூட
சிலருடைய
புத்திக்குத் தெரியவில்லை.
உங்களுடைய
அன்பு
தூய்மையானவர்களோடு
இருக்க
வேண்டும்.
இதற்கும்
புத்தி வேண்டுமல்லவா!
இனிமையான
தந்தை
மற்றும்
இனிமையான
இராஜ்யத்தை
தவிர
வேறு
எந்த
நினைவும் வரக்கூடாது.
இந்தளவு
அனைத்தையும்
தியாகம்
செய்வது
சாதாரண
விசயமல்ல.
தந்தைக்கு
குழந்தைகளின் மீது
அளவற்ற
அன்பு
இருக்கிறது.
குழந்தைகளே
தூய்மையானவர்களானால்
நீங்கள்
தூய்மையான
உலகிற்கு எஜமானர்
ஆவீர்கள்.
நான்
உங்களுக்காக
தூய்மையான
உலகத்தை
உருவாக்கிக்
கொண்டிருக்கின்றேன்,
இந்த தூய்மை
இல்லாத
உலகை
முற்றிலும்
முடித்துவிடுகின்றேன்.
இந்த
அழுக்கான
உலகத்தின்
ஒவ்வொரு
பொருளும் உங்களுக்கு
துக்கம்
தருகிறது.
ஆயுட்காலமும்
குறைந்து
வருகிறது,
இதைத்தான்
செல்லாக்காசு
போன்ற
நிலை எனக்
கூறப்படுகிறது.
சோளிக்கும்,
வைரத்திற்கும்
வித்தியாசம்
இருக்குமல்லவா!
ஆகவே,
குழந்தைகள்
உங்களுக்கு எவ்வளவு
மகிழ்ச்சி
இருக்க
வேண்டும்.
சத்தியமானவர்கள்
நடனமாடிக்
கொண்டே
இருப்பார்கள்
எனக் கூறப்படுகிறது.
நீங்கள்
சத்யுகத்தில்
மகிழ்ச்சியில்
நடனமாடிக்
கொண்டே
இருப்பீர்கள்.
இங்குள்ள
எந்த
பொருளின் மீதும்
உங்கள்
மனம்
செல்லக்
கூடாது.
இந்த
உலகத்தை
பார்த்தும்
பார்க்காமல்
இருக்க
வேண்டும்,
கண்கள் திறந்திருந்தும்
தூங்குவது
போல்
இருக்க
வேண்டும்,
ஆனால்
அதற்கு
தைரியமான
மனநிலை
வேண்டும்.
இந்த
பழைய
உலகம்
இருக்கப்போவதில்லை
என்ற
நம்பிக்கையும்
இருக்கிறது.
ஆகவே
அந்தளவு
மகிழ்ச்சி நிறைந்திருக்க
வேண்டும்.
ஆஹா,
நாம்
சிவபாபாவை
நினைவு
செய்தால்
உலக
அரசாட்சி
கிடைக்கும்.
ஹடயோகத்தை
போன்று
அமர
வேண்டாம்.
சாப்பிட்டாலும்,
அருந்தினாலும்,
காரியங்கள்
செய்தாலும்
தந்தையை நினைவு
செய்ய
வேண்டும்.
இராஜ்யம்
உருவாகிக்
கொண்டிருக்கிறது.
தந்தை
தாசியாக
வேண்டுமென
கூறுவாரா என்ன?
முயற்சி
செய்து
தூய்மையாக
வேண்டுமென
தந்தை
கூறுவார்.
தந்தை
தூய்மையாகுவதற்கு
முயற்சி செய்ய
வைக்கின்றார்,
நீங்கள்
மீண்டும்
தூய்மை
இழந்து
எவ்வளவு
பொய்யான,
பாவங்கள்
செய்கின்றீர்கள்.
இப்பொழுது
சிவபாபாவை
நினைவு
செய்தால்
அனைத்துப்
பாவங்களும்
முடிந்துவிடும்;.
இது
பாபாவின் மிகப்பெரிய
யக்ஞமாகும்.
உலகத்தில்
இலட்சக்கணக்கான
பணம்
செலவு
செய்து
யக்ஞத்தை
உருவாக்குகின்றனர்.
முழு
உலகமும்
இந்த
யக்ஞத்தில்
முடிந்துவிடும்
என்பது
உங்களுக்குத்
தெரியும்.
வெளிநாட்டிலிருந்து செய்தி பாரதத்தில்
பரவும்.
தந்தையிடம்
புத்தியின்
தொடர்பை
கொண்டு
சென்றால்
பாவங்கள்
நீங்கும்.
மேலும்,
உயர்ந்த
பதவியும்
கிடைக்கும்.
குழந்தைகளை
முயற்சி
செய்ய
வைப்பது
தந்தையின்
கடமையாகும்.
லௌகீக தந்தை
குழந்தைகளுக்கு
சேவை
செய்து,
சேவையை
எடுத்துக்
கொள்வார்.
இங்கு
தந்தை
கூறுகின்றார்.
நான் உங்களுக்கு
21
பிறவிகளுக்கான
பலனாக
ஆஸ்தியை
தருகின்றேன்,
ஆகவே
அப்படிப்பட்ட
தந்தையை அவசியம்
நினைவு
செய்ய
வேண்டும்.
இதனால்
பாவங்கள்
நீங்கும்.
மற்றபடி
தண்ணீரால்
பாவங்கள்
நீங்க முடியுமா!
தண்ணீர்
எல்லா
இடத்திலும்
இருக்கிறது.
வெளிநாட்டிலும்
நதிகள்
இருக்கின்றன.
இங்கு
இருக்கும் நதிகள்
தூய்மையாக்கும்,
வெளிநாட்டில்
உள்ள
நதிகள்
தூய்மை
இழக்கக்
கூடியது.
இவ்வாறு
கூறமுடியுமா?
மனிதர்களுக்கு
எதுவும்
புரியவில்லை.
தந்தைக்கு
இரக்கம்
தான்
வருகிறது.
குழந்தைகளே,
கவனக்குறைவாக இருக்காதீர்கள்
என
தந்தை
புரிய
வைக்கின்றார்.
தந்தை
இந்தளவு
நல்ல
மலராக
ஆக்குகின்றார்,
எனவே உழைப்பு
(முயற்சி)
செய்ய
வேண்டுமல்லவா!
தன்
மீது
இரக்கம்
காட்ட
வேண்டும்.
நல்லது
இனிமையிலும்
இனிமையான
தேடிக்கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு,
தாயும் தந்தையுமான
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகளும்
காலை
வணக்கமும்,
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
இந்த
உலகத்தின்
எந்த
பொருளின்
மீதும்
உங்கள்
மனம்
செல்லக்
கூடாது.
கண்கள் திறந்திருந்தாலும்
தூங்குவது
போன்று
இருந்து,
அப்படிப்பட்ட
மகிழ்ச்சியின்
ஆன்மீக போதையில்
இருக்க
வேண்டும்.
2.
எல்லா
ஆதாரமும்
தூய்மையில்
தான்
இருக்கிறது,
எனவே
தூய்மை
இல்லாதவர்களின்
அங்கம் நம்மோடு
நெருங்காமல்
பார்த்துக்
கொள்ள
வேண்டும்.
இனிமையான
தந்தை
மற்றும் இனிமையான
இராஜ்யத்தை
தவிர
வேறு
எந்த
நினைவும்
வரக்
கூடாது.
வரதானம்:
சேவை
(சேவா)
மூலமாக
பலனை
(மேவா
-
பழம்)
பெற்று
விடக்
கூடிய
அனைத்து எல்லைக்குட்பட்ட
விருப்பங்களுக்கு
அப்பாற்பட்டு
எப்பொழுதும்
நிறைந்தவர்
மற்றும் சமானமானவர்
ஆவீர்களாக.
சேவை
(சேவா)
என்பதன்
பொருளே
(மேவா)
பலன்
அளிக்கக்
கூடியது.
ஒரு
வேளை
ஏதாவதொரு சேவை
அதிருப்தியாக
ஆக்கி
விடுகிறது
என்றால்
அந்த
சேவை,
சேவை
கிடையாது.
அப்பேர்ப்பட்ட சேவையை
வேண்டுமானால்
விட்டு
விடுங்கள்.
ஆனால்
திருப்தியை
விடாதீர்கள்.
எப்படி
சரீரத்தில்
திருப்தியாக இருப்பவர்கள்
எப்பொழுதும்
சந்தோஷமாக
இருக்கிறார்களோ,
அதே
போல
மனதில்
திருப்தியாக
இருப்பவர்கள் கூட
சந்தோஷமாக
இருப்பார்கள்.
சந்தோஷம்
திருப்தியின்
அடையாளமாகும்.
திருப்தியான
ஆத்மாவில் எந்தவொரு
எல்லைக்குட்பட்ட
இச்சை,
மதிப்பு,
பெருமை,
வசதிகள்
மற்றும்
சாதனங்கள்
ஆகியவற்றிற்கான
பசி இருக்காது.
அவர்கள்
எல்லைக்குட்பட்ட
அனைத்து
விருப்பங்களுக்கும்
அப்பாற்பட்டு
எப்பொழுதும்
நிறைந்தவராக மற்றும்
சமானமாக
இருப்பார்கள்.
சுலோகன்:
உண்மையான
உள்ளத்துடன்
சுயநலமில்லாத
சேவையில்
முன்னேறுவது
என்றால் புண்ணியத்தின்
கணக்கு
சேமிப்பு
ஆவது
ஆகும்.
ஓம்சாந்தி