08.10.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உண்மையான தந்தையுடன் உண்மையாக இருங்கள், உண்மையான சார்ட் வையுங்கள். ஞானத்தின் அகங்காரத்தை விட்டு விட்டு நினைவில் இருப்பதற்காக முழுமையாக முயற்சி செய்யுங்கள்.

 

கேள்வி:

மகாவீர் குழந்தைகளின் முக்கிய அடையாளம் என்ன?

 

பதில்:

மகாவீர் குழந்தைகளின் புத்தியில் நிரந்தரமாக பாபாவின் நினைவு இருக்கும். மகாவீர் என்றால் சக்திவான். யார் நிரந்தரமாக குஷியில் இருப்பார்களோ அவர்களே மகாவீர். அவர்கள் ஆத்ம உணர்வுடன் இருப்பர். சிறிதளவும் தேக அகங்காரம் இருக்காது. இப்படிபட்ட மகாவீர் குழந்தைகளின் புத்தியில் நாம் ஆத்மா, பாபா நம்மை கற்க வைத்துக் கொண்டு இருக்கின்றார் என்பது இருக்கும்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளிடம் தன்னை ஆத்மா என உணர்ந்து அமர்ந்திருக்கின்றீர்களா என கேட்கின்றார். ஏனென்றால் இது சற்று கடினம். இதில் கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என பாபாவிற்குத் தெரியும். ஆத்ம உணர்வுடன் அமர்ந்திருப்பவர்களுக்குத் தான் மகாவீர் என்று பெயர். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைப்பவரையே மகாவீர் என்று கூறப்படுகின்றது. நான் ஆத்ம உணர்வுடன் இருக்கின்றேனா என எப்பொழுதும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டே இருங்கள். நினைவினால் தான் மகாவீர் ஆகின்றார்கள். அதாவது சுப்ரீம் ஆகிறார்கள். மற்ற தர்மத்தைச் சார்ந்தவர்கள் யார் வந்தாலும் அவர்கள் சுப்ரீம் ஆக முடியாது. அவர்கள் வருவதே தாமதமாகத்தான். நீங்கள் வரிசைக்கிரமத்தில் சுப்ரீம் ஆகிறீர்கள். சுப்ரீம் என்றால் சக்திவான் அல்லது மகாவீர். உள்ளுக்குள் நான் ஆத்மா என்று குஷி இருக்கும். அனைத்து ஆத்மாக்களாகிய நம்மை தந்தை படிக்க வைக்கின்றார். சிலர் தன்னுடைய சார்ட் 25 சதவீதம் காண்பிக்கிறார்கள். சிலர் 100 சதவீதம் காண்பிக்கிறார்கள் என பாபாவிற்குத் தெரியும். சிலர் 24 மணி நேரத்தில் அரை மணி நேரம் தான் நினைவு இருக்கிறது என்று கூறுகின்றார்கள். அப்படியானால் எத்தனை சதவீதம்? தன்மீது தானே மிகவும் கவனம் வைக்க வேண்டும். மெல்ல மெல்ல மகாவீர் ஆகவேண்டும். உடனடியாக ஆக முடியாது. கடினமான முயற்சி தேவை. அந்த பிரம்ம ஞானிகளோ தத்துவ ஞானிகளோ தன்னை ஆத்மா என உணர்கிறார்கள் என நினைக்காதீர்கள். அவர்கள் வீடாகிய பிரம்மத்தை பரமாத்மா என நினைக்கிறார்கள். தானே பிரம்மம் என கூறிக்கொள்கிறார்கள். இப்பொழுது வீட்டை யாரும் தொடர்பு கொள்வதில்லை. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தன்னை ஆத்மா என உணருகிறீர்கள். 24 மணி நேரத்தில் எவ்வளவு நேரம் தன்னை ஆத்மா என நினைக்கிறோம் என உங்களின் சார்ட்டைப் பாருங்கள். இப்பொழுது நாம் ஈஸ்வரிய சேவையில் இருக்கிறோம், ஆன்காட்லிசர்விஸ் (இறை பணியில்) என குழந்தைகளுக்குத் தெரியும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைக்க வேண்டும். இதுவே மன்மனாபவ என்பதன் பொருள். இதை மட்டுமே பாபா கூறுகின்றார் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். இதுவே உங்களின் சேவையாகும். எவ்வளவு நீங்கள் சேவை செய்கிறீர்களோ அவ்வளவு பலன் கிடைக்கும். இந்த விஷயங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நல்ல நல்ல மகாரதி குழந்தைகள் கூட இந்த விஷயத்தைப் புரிந்து கொள்வதில்லை. இதில் கடின முயற்சி தேவை. உழைக்காமல் பலனை பெற முடியாது.

 

சிலர் சார்ட் எழுதி அனுப்புகிறார்கள். சிலர் எழுதுவது வந்து சேருவதே கிடையாது. ஞானத்தின் அகங்காரம் இருக்கின்றது. நினைவில் அமருவதற்கான முயற்சி கிடையாது என்பதை பாபா பார்க்கின்றார். முக்கியமான விஷயம் நினைவு தான் என்பதை பாபா புரிய வைக்கின்றார். நம்முடைய சார்ட் எப்படி இருக்கின்றது என தன்னைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். அதை குறிப்பு எடுக்க வேண்டும். சிலர் சார்ட் எழுதுவதற்கு நேரம் இல்லை என்கிறார்கள். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினையுங்கள். இதுவே முக்கியமான விஷயம் என பாபா கூறுகின்றார். இங்கே எவ்வளவு நேரம் அமருகிறீர்களோ அச்சமயம் இடையிடையே உங்கள் மனதை எவ்வளவு நேரம் நினைவில் அமர்ந்தேன் என கேளுங்கள். இங்கே அமரும் பொழுது நினைவில் அமரவேண்டும். மேலும் சக்கரத்தை சுழற்றினாலும் பரவாயில்லை. நான் நிச்சயமாக பாபாவிடம் செல்ல வேண்டும். பவித்திரமாக சதோபிரதானமாக மாற வேண்டும். இந்த விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பலர் உடனே மறந்து போகிறார்கள். தன்னுடைய உண்மையிலும் உண்மையான சார்ட்டை தெரிவிப்பதே இல்லை. இவ்வாறு பல மகாரதிகள் இருக்கிறார்கள். உண்மையை ஒருபோதும் தெரிவிக்க மாட்டார்கள். அரைக்கல்பம் பொய்யாக இருந்தமையால் உள்ளுக்குள் பொய் பற்றிக் கொண்டு இருக்கின்றது. இதில் சாதாரண மானவர்கள் உடனே சார்ட் எழுதுவார்கள். நீங்கள் நினைவு யாத்திரையினால் பாவங்களை எரித்து பாவனமாவீர்கள் என பாபா கூறுகின்றார். வெறும் ஞானத்தால் தூய்மையாக முடியாது. மற்றபடி நன்மை என்ன? தூய்மை யாவதற்காகத் தான் அழைத்தீர்கள். அதற்கு நினைவு வேண்டும். ஒவ்வொருவரும் உண்மையாக தன்னுடைய சார்ட்டை தெரிவிக்க வேண்டும். இங்கே நீங்கள் முக்கால் மணி நேரம் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் முக்கால் மணி நேரத்தில் எவ்வளவு நேரம் தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைத்தீர்கள் எனப் பாருங்கள். பலருக்கு உண்மையைத் தெரிவிப்பதில் வெட்கம் வருகிறது. பாபாவிற்கு உண்மையைத் தெரிவிப்பது இல்லை. இந்த சேவை செய்தேன். இவ்வளவு பேருக்குப் புரிய வைத்தேன் என்ற செய்திகளை கொடுப்பார்கள். ஆனால் நினைவு யாத்திரையின் சார்ட் எழுதுவதில்லை. நினைவு யாத்திரையில் இல்லாத காரணத்தினால் தான் உங்களுடைய அம்பு யார் மீதும் பாய்வதில்லை என பாபா கூறுகின்றார். ஞான வாளில் கூர்மை இல்லை. ஞானத்தைக் கூறுகிறார்கள். ஆனால் யோகத்தின் அம்பு பாய்வது மிகவும் கடினமாக இருக்கின்றது. முக்கால் மணி நேரத்தில் 5 நிமிடம் கூட நினைவு யாத்திரையில் அமருவதில்லை என பாபா கூறுகின்றார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை எப்படி நினைப்பது என்பதைப் புரிந்து கொள்வதில்லை. ஒரு சிலர் நாங்கள் நிரந்தரமாக நினைவில் இருக்கின்றோம் என்று கூறுகின்றார்கள். இந்த நிலையை இப்போது அடையமுடியாது என பாபா கூறுகின்றார். ஒரு வேளை நிரந்தரமாக நினைவில் இருந்தால் கர்மாதீத நிலையை அடைந்து விடலாம். ஞானத்தின் கடைசி எல்லையை நெருங்கி விடலாம். சிறிதளவு யாருக்காவது புரிய வைத்தாலும் அம்பு பாய்ந்து விடும். கடின உழைப்பு இருக்கின்றதல்லவா! உலகத்திற்கே அதிபதியாக அப்படியே மாறி விட முடியாது. மாயை உங்களின் புத்தியோகத்தை எங்கெங்கோ எடுத்துச் செல்கிறது. உற்றார் உறவினர் போன்றவர்களின் நினைவு வந்து கொண்டே இருக்கும். சிலர் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால் அவர்களுக்கு உறவினர், நண்பர், கப்பல், விமானம் போன்ற நினைவு வந்து கொண்டே இருக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை இழுக்கும். புத்தி யோகம் முற்றிலும் துண்டிக்கப்படுகிறது. வேறு எந்த பக்கமும் புத்தி செல்லக் கூடாது. இதில் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ஒரு தந்தையை நினைக்க வேண்டும். இந்த தேகம் கூட நினைவிற்கு வரக்கூடாது. இந்த நிலையை நீங்கள் கடைசியில் அடைந்து விடுவீர்கள்.

 

நாளுக்கு நாள் நினைவு யாத்திரையை அதிகரிப்பதில் உங்களுக்குத் தான் நன்மை இருக்கிறது. எவ்வளவு நினைவில் இருப்பீர்களோ அவ்வளவு வருமானம் கிடைக்கும். ஒரு வேளை சரீரத்தை விட்டு விட்டால் இந்த வருமானத்தை சம்பாதிக்க முடியாது. குழந்தையாக பிறப்பீர்கள். அப்போது எப்படி சம்பாதிக்க முடியும். ஆத்மா இந்த சம்ஸ்காரத்தை எடுத்து செல்லலாம். ஆனால் உங்களுக்கு நினைவு படுத்துவதற்கு ஆசிரியர் வேண்டும் அல்லவா! தந்தையும் நினைவு படுத்துகிறார்! தந்தையை நினையுங்கள் தந்தையை நினைத்தால் தான் தூய்மை யாகலாம் என்பது உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் கங்கா ஸ்நானத்தை உயர்ந்ததாக நினைக்கிறார்கள். ஆகையால் கங்கையில் நீராடச் செல்கிறார்கள். பாபாவிற்கு இந்த விஷயங்களில் அனுபவம் இருக்கிறது அல்லவா! இவர் நிறைய குருக்களிடம் சென்றுள்ளார். அவர்கள் தண்ணீரில் நீராடச் செல்கிறார்கள். இங்கே நினைவு யாத்திரையினால் நீங்கள் நீராடுகிறீர்கள். தந்தையின் நினைவைத் தவிர வேறு எதனாலும் உங்களுடைய ஆத்மா தூய்மையாக முடியாது. இதனுடைய பெயரே யோகா. அதாவது நினைவு யாத்திரையாகும். ஞானத்தை நீராடுதல் என நினைக்காதீர்கள். இது யோகத்தின் நீராடல் ஆகும். ஞானம் என்பது படிப்பு, யோகத்தின் நீராடுதலால் பாவங்கள் விலகும். ஞானம் மற்றும் யோகம் இரண்டு விஷயங்கள் இருக்கிறது. நினைவினால் தான் பல பிறவிகளின் பாவம் எரிந்து போகிறது. இந்த நினைவு யாத்திரையினால் தான் நீங்கள் தூய்மையாகி சதோபிரதானமாவீர்கள் என பாபா கூறுகிறார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே இந்த விஷயங்களை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள் என பாபா மிகவும் நன்றாகப் புரிய வைக்கிறார். இதை மறக்காதீர்கள். நினைவு யாத்திரையினால் பல பிறவிகளின் பாவங்கள் விலகும். மற்றபடி ஞானம் என்பது வருமானம் ஆகும். நினைவு மற்றும் படிப்பு இரண்டும் தனித்தனியானது. ஞானம் மற்றும் விஞ்ஞானம்-ஞானம் என்றால் படிப்பு, விஞ்ஞானம் என்றால் யோகா, அதாவது நினைவு. எது உயர்ந்தது என ஏற்பீர்கள் ஞானமா? யோகமா? நினைவு யாத்திரை மிகவும் உயர்ந்தது. இதில் கடின உழைப்பு இருக்கிறது. சொர்க்கத்திற்கு அனைவரும் போவார்கள். சத்யுகம் என்பது சொர்க்கம். திரேதா என்பது பாதி சொர்க்கம் ஆகும். அங்கே இந்த படிப்பிற்கு ஏற்ப நிலையை அடைவீர்கள். மற்றபடி யோகத்தின் விஷயம் முக்கியமானது. பட கண்காட்சி அல்லது மியூசியம் போன்றவைகளில் நீங்கள் ஞானத்தைப் புரிய வைக்கிறீர்கள். யோகத்தைப் புரிய வைக்க முடியாது. தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினையுங்கள் என்று மட்டும் கூறலாம். மற்றபடி ஞானம் நிறைய கூறலாம். முதன் முதல் விஷயம் தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினையுங்கள் என்று தெரிவியுங்கள் என பாபா கூறுகிறார். இந்த ஞானத்தைக் கொடுப்பதற்காகத் தான் நீங்கள் இவ்வளவு சித்திரங்களை உருவாக்கியிருக்கிறீர்கள். யோகத்திற்கு எந்த படமும் அவசியம் இல்லை. சித்திரங்கள் அனைத்தும் ஞானத்தை புரிய வைப்பதற்காகத் தான் உருவாக்கப்படுகிறது. தன்னை ஆத்மா என்று உணர்வதால் தேகத்தின் அகங்காரம் முற்றிலும் விலகுகிறது. ஞானத்தை வர்ணணை செய்வதற்கு (விவரிக்க) நிச்சயம் வாய் வேண்டும். யோகத்தில் தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைக்க வேண்டும் என்ற ஒரு விஷயம் தான் முக்கியம். படிப்பில் தேகத்தின் அவசியம் இருக்கிறது. சரீரம் இல்லாமல் எப்படி படிப்பீர்கள் அல்லது படிக்க வைப்பீர்கள்.

 

பதீத பாவனர் தந்தை என்றால் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லவா? ஆனால் யாருக்கும் தெரியவில்லை. தந்தையே வந்து கற்பிக்கிறார். மனிதர்கள் மனிதர்களுக்கு கற்றுத் தர முடியாது. தந்தை தான் என்னை நினையுங்கள் என்று கூறுகிறார். இதற்கு பரமாத்ம ஞானம் என்று பெயர். பரமாத்மா தான் ஞானக் கடல் ஆவார். இது மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும், எல்லையற்ற தந்தையை நினையுங்கள் என்று அனைவருக்கும் கூறுங்கள், அந்த தந்தை புதிய உலகத்தை ஸ்தாபனை செய்கிறார். புதிய உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த பகவானை நினைக்க வேண்டும் என்று அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. கவனத்தில் இல்லை என்றால் ஏன் சிந்திப்பார்கள்? இதை நீங்கள் தான் அறிகிறீர்கள். பரம்பிதா பரமாத்மா சிவ பகவான் ஒருவரே! பிரம்மா தேவதாய நமஹ என்று கூறுகிறார்கள். பிறகு கடைசியில் சிவ பரமாத்மாய நமஹ என்றும் கூறுகிறார்கள். அந்த தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவர். ஆனால் அவர் யார் என்பதைப் புரிந்துக் கொள்ளவில்லை. ஒருவேளை கல்லிலும் முள்ளிலும் இருக்கிறார் என்றால் நமஹ என்று ஏன் கூற வேண்டும். அர்த்தம் புரியாமல் கூறிக் கொண்டே இறக்கிறார்கள். இங்கே நீங்கள் சத்தத்தில் இருந்து விடுபட்டு போக வேண்டும். அதாவது நிர்வாண தாமம், சாந்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். சாந்திதாமம், சுகதாமம் என்று கூறப்படுகிறது. அது சொர்க்கதாமம் ஆகும். நரகத்தை தாமம் என்று கூற மாட்டார்கள். வார்த்தைகள் மிகவும் எளிதாக இருக்கிறது. கிறிஸ்துவ தர்மம் எதுவரை இருக்கும்? இதுவும் அவர்களுக்கு தெரியாது. கிறிஸ்து வருவதற்கு 3000 வருடங்களுக்கு முன்பு சொர்க்கம் இருந்தது. அதாவது தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. பிறகு கிறிஸ்துவர்கள் வந்து 2000 வருடம் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் தேவதா தர்மம் வர வேண்டும் அல்லவா! மனிதர்களின் புத்தி வேலை செய்வதில்லை. நாடகத்தின் ரசசியத்தை தெரிந்துக் கொள்ளாத காரணத்தினால் எத்தனை திட்டங்களை உருவாக்குகிறார்கள். இந்த விசயங்களை மிகவும் வயதான தாய்மார்கள் புரிந்துக் கொள்ள முடியாது. இப்போது நீங்கள் வானபிரஸ்த(வயோதிக) நிலையில் இருக்கிறீர்கள். சத்தத்திலிருந்து விடுபட்டு போக வேண்டும். அவர்கள் நிர்வாணதாமத்திற்கு சென்றனர் என்று கூறுகிறார்கள். ஆனால் யாரும் செல்லவில்லை. மறுபிறவி மீண்டும் நிச்சயம் எடுக்கிறார்கள். ஒருவரும் திரும்ப போக வில்லை. வயோதிக நிலையை அடையும் போது குருவிடம் செல்கிறார்கள். நிறைய வயோதிக ஆஸ்ரமங்கள் உள்ளன. தாய்மார்கள் கூட நிறைய இருக்கிறார்கள். நீங்கள் அங்கே கூட சேவை செய்யலாம். வான பிரஸ்த நிலை என்பதன் பொருள் என்ன? நீங்கள் அனைவரும் வயோதிகர்கள். முழு உலகமும் வயோதிகர்கள் தான் நீங்கள் பார்க்கும் மனிதர்கள் அனைவருமே வயோதிகர்கள் தான். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு சத்குரு தான். அனைவரும் போகத் தான் வேண்டும். யார் நன்றாக முயற்சி செய்கிறார்களோ அவர்களும் உயர்ந்த பதவி பெறுவார்கள். இது பாவ புண்ணியத்தின் விசாரணை நாள் எனப்படுகிறது. பாவ புண்ணியத்தின் விசாரணை நாள் என்பதன் பொருளைக் கூட அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் கூட வரிசைக்கிரமத்தில் புரிந்துக் கொள்கிறீர்கள். குறிக்கோள் மிகவும் உயர்ந்தது. இப்போது நாம் வீட்டிற்கு நிச்சயம் செல்ல வேண்டும் என அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். ஆத்மாக்கள் சத்தத்திலிருந்து விடுபட்டு போக வேண்டும். பிறகு அதே நடிப்பை மீண்டும் நடிப்பார்கள். ஆனால் தந்தையை நினைவு செய்து கொண்டே சென்றால் உயர்ந்த பதவி பெறுவார்கள். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். திருடுதல் போன்ற எந்த ஒரு தீய வேலைகளையும் செய்யக் கூடாது. நீங்கள் யோகத்தினால் தான் புண்ணிய ஆத்மாவாக மாறுகிறீர்கள், ஞானத்தினால் கிடையாது. ஆத்மா பவித்ரமாக வேண்டும். சாந்திதாமத்தில் பவித்ர ஆத்மாக்கள் தான் செல்ல முடியும். அனைத்து ஆத்மாக்களும் அங்கே வசிக்கிறது. இப்போது வந்துக் கொண்டு இருக்கிறது. இப்போது மீதமுள்ள அனைத்தும் (ஆத்மாக்கள்) வந்துக் கொண்டே இருக்கும்.

 

குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். இங்கே உங்களுக்கு நிறைய உதவி கிடைக்கும். ஒருவருக்கொருவரின் பலம் கிடைக்கிறது அல்லவா! மிகக் குறைவான குழந்தைகளாகிய உங்களுடைய சக்தி தான் பயன்படுகிறது. ஒரு விரலினால் கோவர்தன மலையைத் தூக்கியது போன்று காண்பிக்கிறார்கள். நீங்களே கோப கோபியர்கள் அல்லவா? சத்யுகத்தில் தேவி தேவதைகளை கோப கோபிகைகள் என கூற முடியாது. நீங்கள் தான் விரல் கொடுக்கிறீர்கள். கலியுகத்தை சத்யுகமாக அல்லது நரகத்தை சொர்க்கமாக மாற்று வதற்காக ஒரு பாபாவுடன் புத்தியின் தொடர்பை இணைக்கிறீர்கள். யோகத்தினால் தான் தூய்மையாக வேண்டும். இந்த விஷயங்களை மறக்கக் கூடாது. இந்த சக்தி உங்களுக்கு இங்கு தான் கிடைக்கிறது. வெளியில் அசுர மனிதர்களின் சங்கம் இருக்கிறது. அங்கே நினைவில் இருப்பது மிகவும் கடினம் ஆகும். இவ்வளவு உறுதியாக அங்கே நீங்கள் இருக்க முடியாது. ஒரு கூட்டம் வேண்டும் அல்லவா!. இங்கே அனைவரும் ஒன்றாக இணைந்து அமரும் போது உதவி கிடைக்கிறது. இங்கே வேலை போன்ற எதுவும் இல்லை. புத்தி எங்கே போகும்! தொழில் மற்றும் வீடு இருக்கும்போது வேலை நிச்சயமாக இழுக்கும். இங்கே எதுவும் இல்லை. இவ்விடத்தின் சூழ்நிலையே நன்றாக சுத்தமாக இருக்கிறது. நாடகத்தின் படி எவ்வளவு தொலைவில் மலையின் மீது நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். நினைவு சின்னங்கள் கூட எதிரில் துல்லியமாக இருக்கிறது. மேலே சொர்க்கம் காட்டப்பட்டிருக்கிறது. இல்லை என்றால் வேறு எங்கு காட்டுவது. இங்கே வந்து அமரும் போது நான் பாபாவின் நினைவில் இருக்கிறேனா என உங்களையே சோதியுங்கள் என பாபா கூறுகிறார். சுய தரிசன சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்கட்டும்.நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தன்னுடைய நினைவின் சார்ட்டில் முழு கவனம் வைக்க வேண்டும். நான் எவ்வளவு நேரம் பாபாவை நினைக்கிறேன், நினைக்கும் போது புத்தி எங்கெங்கு செல்கிறது என பார்க்க வேண்டும்.

 

2. இந்த (பாவ புண்ணியத்தின்) இறுதி விசாரணை நேரத்தில் சத்தத்திலிருந்து விடுபட்டு போக முயற்சி செய்ய வேண்டும். பாபாவின் நினைவுடன் கூடவே தெய்வீக குணங்களை நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். திருடுதல் போன்ற எந்த ஒரு தீய வேலையும் செய்யக் கூடாது.

 

வரதானம்:

எப்பொழுதும் அனைத்து பிராப்திகளிலும் நிரம்பி இருக்கக் கூடிய மகிழ்ச்சியான முகம் மற்றும் மகிழ்ச்சியான உள்ளம் உடையவர்கள் ஆவீர்களாக.

 

எந்தவொரு தேவி அல்லது தேவதையின் உருவத்தை அமைக்கும் பொழுதும் அதில் முகத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாகக் காண்பிக்கிறார்கள். ஆக உங்களுடைய இந்த நேரத்தில் மலர்ந்த முகமாக இருப்பதற்கான நினைவார்த்தத்தை சித்திரங்களில் கூட காண்பிக்கிறார்கள். மகிழ்ச்சியான முகம் என்றால், எப்பொழுதும் அனைத்துப் பிராப்திகளிலும் நிரம்பிய நிலை. யார் நிரம்பி இருப்பார்களோ, அவர்களே மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஒரு வேளை ஏதாவது அப்ராப்தி (அடையப் பெறாதது) இருந்தது என்றால், மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். யார் எவ்வளவு தான் மகிழ்ச்சியாக இருப்பதற்காக முயற்சி செய்தாலும் சரி, மேலோட்டமாக சிரிப்பார்களேயன்றி மனதார சிரிக்க முடியாது. நீங்களோ மனதார புன் முறுவலிக்கிறீர்கள். ஏனெனில் அனைத்து பிராப்திகளிலும் நிரம்பி மகிழ்ச்சியான உள்ளம் கொண்டவர்களாக இருக்கிறீர்கள்.

 

சுலோகன்:

பாஸ் வித் ஆனர் ஆக வேண்டும் என்றால், ஒவ்வொரு பொக்கிஷத்தின் சேமிப்பு கணக்கு கூட நிரம்பியதாக இருக்க வேண்டும்.

 

ஓம்சாந்தி