12.02.19 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! ஆசிரியர் ( சிவபாபா ) அசரீரியாக
இருக்கிறார் . ஆகவே நினைவில் இருப்பதற்கு கடினமாக முயற்சி
செய்ய வேண்டும் . நினைவு செய்துக் கொண்டே இருந்தால் தேர்வு
முடிந்ததும் வீட்டிற்குச் சென்று விடலாம் .
கேள்வி:
குழந்தைகள் நினைவில் இருப்பதற்கு கடினமாக முயற்சி செய்ய
வேண்டும் . எந்த ஏமாற்றத்தில் ஒரு போதும் வரக் கூடாது ?
பதில்:
ஆத்மாவின் சாட்சாத்காரம் கிடைத்தது, மினுமினுப்பதை பார்த்தல்
என்பதில் எந்த நன்மையும் இல்லை. சாட்சாத்காரம் ஏற்படுவதால்
அல்லது பாபாவின் பார்வை படுவதால் எந்த பாவமும் நீங்காது. மேலும்
முக்தி கிடைக்காது. இது இன்னும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
நினைவில் இருப்பதற்கு கடினமாக முயற்சி செய்யுங்கள். உழைப்பினால்
கர்மாதீத் நிலையை அடையலாம். பாபா திருஷ்டி கொடுத்தால்
தூய்மையாவீர்கள் என்பது கிடையாது. கடினமாக உழைக்க வேண்டும்.
ஓம் சாந்தி .
ஆன்மீகத் தந்தை ஆன்மீக குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்,
படிக்க வைக்கிறார், யோகத்தை கற்பிக்கிறார். யோகம் ஒன்றும்
பெரிய விஷயம் அல்ல. குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால் இந்த
ஆசிரியர் தனக்குச் சமமாக மாற்றுவதற்காக படிக்க வைக்கிறார் என்ற
நினைவு நிச்சயமாக ஆசிரியரிடம் இருக்கிறது. குறிக்கோள்
இருக்கிறது. இந்த வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறோம் எனப்
புரிகிறது. இதில் என்னிடம் தொடர்பு வையுங்கள் என ஆசிரியர் கூறத்
தேவை இல்லை, தானாகவே படிக்க வைப்பவருடன் தொடர்பு இருக்கிறது.
முழு நாளும் படிப்பதில்லை. அதை பல பிறவிகளாகப் படித்துக் கொண்டே
வந்துள்ளார்கள். பயிற்சி ஆகிவிடுகிறது. இங்கோ முற்றிலும் புதிய
பயிற்சி ஆகும். இவர் தேகத்தை உடைய ஆசிரியர் அல்ல. இவர் விதேகி
ஆசிரியர். 5000 வருடத்திற்குப் பிறகு உங்களுக்குக்
கிடைத்திருக்கிறார். நான் உங்களுடைய தேகதாரி ஆசிரியர் இல்லை என
அவரே கூறுகிறார். ஆகவே இந்த நினைவு நிலைத்திருப்தில்லை. தன்னை
ஆத்மா என உணர வேண்டும். நமக்கு பரம்பிதா பரமாத்மா ஆசிரியர்
படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியரை தேர்வில் தேர்ச்சி
அடையும் வரை நிச்சயமாக நினைக்க வேண்டும். நினைவு செய்து செய்து
தேர்வு முடிந்து விடும், வீட்டிற்குச் சென்று விடுவோம். தேர்வு
முடிந்ததுமே நாடகம் முடிந்து விடுகிறது. நம்முடைய ஆத்மாவில் 84
பிறவிகளின் பாகம் பதிந்து இருக்கிறது, அதை நடிக்க வேண்டும்
என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இதுவும்
உங்களுக்குத் தெரியும். பிறகு அங்கே எதுவும் நினைவிருக்காது.
இங்கே உங்களுக்கு அனைத்து ஞானமும் இருக்கிறது. ஆசிரியரே வந்து
அனைத்து ஞானத்தையும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். அதை
புரிந்தும் கொள்ள வேண்டும், நினைவிலும் நிச்சயம் இருக்க
வேண்டும். அடிக்கடி பாபா மன்மனாபவ என கூறுகின்றார். மன்மனாபவ
என்பதற்கு பொருள் இருக்கிறது. சரியான வார்த்தை என குழந்தைகள்
புரிந்துக் கொள்கிறீர்கள். என்னை நினையுங்கள் விகர்மங்கள்
அழியும் என பாபாவே கூறுகின்றார். இதில் நேரமாகிறது. தன்னை
சோதிக்க வேண்டும். படிப்பில் வரலாறு, கணக்கு, அறிவியல் என்ற
பாடங்கள் இருக்கின்றது. நாம் எவ்வளவு தேர்ச்சி அடைவோம் என்பதை
மாணவர்கள் புரிந்துக் கொள்கிறார்கள். குழந்தை களாகிய உங்கள்
புத்தியிலும் நாம் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி
அடைவோம் என்பது இருக்கிறது. நாம் பாபாவை மறந்து விடவில்லையா என
தன்னைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். பாபா, மாயா அடிக்கடி
மறக்க வைக்கிறது என நிறைய பேர் எழுதுகிறார்கள். நிறைய மாயாவின்
புயல் வருகிறது. விகல்பங்கள் தவறான எண்ணங்கள் வருகின்றது.
புரிந்துக் கொள்ளாத காரணத்தால் பாபா இது பாவம் ஆகாதா என
எழுதுகிறார்கள். இவ்வாறு சங்கல்பம் விகல்பம் வருகின்றது.
பார்க்கும் போது இப்படி செய்யலாம் என்ற எண்ணம் வருகின்றது-
இதில் பாவம் ஏற்படாதா? ஆனால் பாபா கூறுகிறார்-இல்லை,
கர்மேந்திரியங்களால் விகர்மம் செய்யும் போது தான் பாவம்
ஏற்படுகிறது.
பாபா அடிக்கடி புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்,
குழந்தைகளுக்கு ஞானம் இருக்கிறது. விஷ்ணு மற்றும் கிருஷ்ணருக்கு
சுயதரிசன சக்கரத்தை ஏன் கொடுத்திருக்கிறார்கள் என அறிகிறீர்கள்.
அகாசூரன், பகாசூரனைக் கொன்றதாகக் காண்பிக்கிறார்கள். இப்போது
கொல்வதற்கான விஷயம் இல்லை. இதுவோ தன்னுடைய பாவத்தை
நீக்குவதற்கான விஷயம் ஆகும். சிவபாபாவிற்குக் கூட சுயதரிசன
சக்கரதாரி என்கிறார்கள் அல்லவா? அவருக்கு முழு சக்கரத்தின்
ஞானமும் இருக்கிறது. ஆத்மாவிற்கு பாபாவிடமிருந்து இந்த சிருஷ்டி
சக்கரம் எப்படி சுழல்கிறது என்ற ஞானம் கிடைத்திருக்கிறது.
சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றி தனது பாவங்களை எரிக்க வேண்டும்.
ஞானத்தை தாரணை செய்து பாபாவை நினையுங்கள். பாபாவை நினைவு
செய்வதால் தான் விகர்மங்கள் வினாசம் ஆகிறது. ஒவ்வொருவரும்
தனக்காக கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. பாபா
திருஷ்டி கொடுத்தால் இவருடைய பாவம் நீங்கி விடும் என்பது
கிடையாது. பாபா இந்த வேலையை செய்யவில்லை. நீங்கள் அனைவரையும்
பார்ப்பீர்கள். பார்ப்பதாலோ, ஞானம் கொடுப்பதாலோ விகர்மம்
வினாசம் ஆகாது. இப்படி செய்தால் விகர்மம் வினாசம் ஆகும் என்று
பாபா வழி காண்பிக்கிறார். ஸ்ரீமத் கொடுக்கின்றார். சரி, பாபா
வருகிறார். ஆத்மா என உணர்ந்து பார்க்கிறார் என வைத்துக்
கொள்ளுங்கள். இதனால் நம்முடைய பாவம் போய் விடும் என்பது
கிடையாது. தன்னுடைய முயற்சியினால் தான் பாவம் விலகுகிறது.
இவ்வாறு தந்தை அமர்ந்து செய்தால் இது ஒரு வேலையாகி விடும்.
நீங்கள் உங்களுடைய தந்தையை இவ்வாறு நினையுங்கள் என பாபா புரிய
வைக்கிறார். பாபா தான் ஸ்ரீமத் கொடுக்கக் கூடியவர். தாங்கள்
தான் முயற்சி செய்ய வேண்டும். இந்த சாது சன்னியாசியின்
திருஷ்டியே போதும் என பலர் நினைக்கிறார்கள். ஆசீர்வாதம். கருணை
பெற்று பெற்று கீழே தான் விழுந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் என்ன கருணை காட்ட முடியும்? அவர்கள் தங்களுடைய
பிரம்மமகா தத்துவத்தைத் தான் நினைப்பார்கள். பாபா, இப்படிச்
செய்யுங்கள் என்று தெளிவான வழியைக் காண்பிக்கிறார். நிர்வாணமாக
வந்தோம் நிர்வாணமாகப் போகிறோம் என பாடுகிறார்கள். இப்பாடலும்
இச்சமயத்தினுடையது தான். பாபாவின் வார்த்தைகள் பக்தியில்
பயன்படுகிறது. என்னை நினைவு செய்தால் விகர்மங்கள் அழியும் என
பாபா கூறுகின்றார். பாபா ஸ்ரீமத் கொடுக்கிறார். இதுவும்
நாடகத்தில் அவருடைய பாகம் ஆகும். இதற்குத் தான் உதவி என்று
வேண்டுமானாலும் கூறலாம். நாடகத்தின் படி ஸ்ரீமத் என்றும்
பாடப்பட்டிருக்கிறது. பாபா தான் வழி காட்ட வேண்டும். தன்னை
ஆத்மா என புரிந்துக் கொள்ளுங்கள் என கூறுகின்றார். உதவி செய்தல்
என்றால் கர்மாதீத் நிலைக்கு அழைத்துச் சென்று விடுவார் என்பது
இல்லை. இல்லை. அதற்கு நேரம் ஆகும். மிகவும் முயற்சி செய்ய
வேண்டும். தன்னை ஆத்மா என உணர்வதற்கு மிகவும் முயற்சி செய்ய
வேண்டும். உண்மையில் தாய்மார்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது.
ஆண்களுக்கு வேலையைப் பற்றிய கவலை இருக்கிறது. குழந்தைகளாகிய
நீங்கள் பாபாவை நினைத்து நினைத்து லாட்டரி (பலன்) அடைய வேண்டும்.
அதாவது அனைத்து துருவும் விலகிப் போக வேண்டும். இவர்கள் நல்ல
முயற்சியாளர்கள் எனத் தெரிகிறது. சார்ட் வைக்கிறார்கள்.
பக்தியில் கூட இரண்டு மூன்று மணி நேரம் அமர்கிறார்கள் அல்லவா?
வானபிரஸ்திகள் குரு போன்றவர்களை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால்
தேவதைகளை நினைக்கும் அளவிற்கு அவர்களை கூட நினைப்பதில்லை.
உண்மையில் தேவதைகளை நினைக்க வேண்டியதில்லை. தேவதைகள் ஒரு போதும்
கற்பிப்பதில்லை.
குழந்தைகளாகிய உங்களுக்கு எதுவும் புதிய விஷயம் அல்ல. மேலும்
லட்சகணக்கான வருடங்களின் விஷயம் எதுவும் இல்லை. ஸ்தாபனை மற்றும்
வினாசத்தின் காரியம் நடக்கும் போது தான் பாபா வருகிறார். இந்த
வினாசம் கல்ப கல்பமாக நடக்கிறது. குழந்தைகள் அறிந்துக்
கொள்கிறீர்கள். போன கல்பத்திலும் இது நடந்தது. 5000
வருடத்திற்கு முன்பு இது நடந்தது என நீங்கள் எழுதிக்
கொண்டிருக்கிறீர்கள். பாபா தன்னை சந்திப்பதற்காகச் சொல்லக்
கூடிய வழியானது புதியது கிடையாது. நான் கல்ப கல்பமாக வந்து வழி
காண்பிக்கிறேன் என பாபா கூறுகின்றார். இது நம்முடைய
இராஜ்யத்தின் ஸ்தாபனை நடந்துக் கொண்டிருக்கிறது என
குழந்தைகளுக்குத் தெரிகிறது. எந்த தேவதைகளை பூஜை செய்து
வந்தார்களோ அவர்களுடைய இராஜ்யம் மீண்டும் உருவாகிக்
கொண்டிருக்கிறது. 5000 வருடத்தின் சக்கரம் ஆகும். இது சுழன்றுக்
கொண்டே இருக்கிறது. மனிதர்கள். மாயையின் வழிப்படி அனைவரும்
நடந்துக் கொண்டிருக் கிறார்கள். இராவணனை ஏன் எரிக்கிறார்கள்?
பொருள் எதுவும் புரியவில்லை. உங்களுடைய பெயரே சுயதரிசன
சக்கரதாரி ஆகும். குறிக்கோள் இதோ இருக்கிறது. பாபாவிற்குள்
என்ன ஞானம் இருக்கிறதோ அது ஆத்மாவிற்குக் கொடுக்கப்படுகிறது.
நாடகச் சக்கரம் முடியும் போது பாபா வந்து ஞானம் கொடுக்கிறார்.
பாபா தான் வந்து இந்த கர்மத்தைக் கற்பிக்கிறார். பிறகு வாம
மார்க்கத்தில் போவதால் தான் இரவு ஆரம்பமாகிறது. பிறகு நாம் கீழே
இறங்கிக் கொண்டே வருகிறோம். சுகம் குறைந்துக் கொண்டே போகிறது
உங்களுடைய புத்தியில் அனைத்து சக்கரமும் பாபாவின் புத்தியில்
இருப்பது போன்றே இருக்கிறது. மற்றபடி நீங்கள் தூய்மையாவதற்கு
முயற்சி செய்ய வேண்டும். பாபா தூய்மை இழந்தவர்களாகிய எங்களை
தூய்மையாக்குங்கள் என்றுதான் அழைக்கிறார்கள். பிறகு ஞானமும்
வேண்டும். மனிதனிலிருந்து தேவதையாக வேண்டும். குழந்தைகளுக்கு
இராஜயோகம் கற்பிப்பதற்காக பாபா வருகின்றார். வேறு யாரும்
கற்பிப்பதற்காக வருவதில்லை. பாபா எங்களை தூய்மை படுத்துங்கள்
என பதீத பாவனர் தந்தையை அழைக்கிறார்கள். இப்போது நீங்கள்
புண்ணிய ஆத்மாவாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். உலகத்தின் வரலாறு
புவியியல் திரும்பவும் நடக்கிறது. எவ்வளவு ஆழமான விஷயங்கள்.
மனிதர்கள் ஆத்மாவையும் தெரிந்துக் கொள்ள வில்லை. பரமாத்மாவையும்
தெரிந்துக் கொள்ள வில்லை. ஆத்மா எப்படி இருக்கிறது? எப்படி
நடிக்கிறது என்பதை பாபா தான் புரிய வைக்கிறார். இவ்வளவு சிறிய
ஆத்மாவில் என்னென்ன நடிப்பு பதிவாகி இருக்கிறது. அதிசயமாக
இருக்கிறது. கேட்கும் போதே புல்லரித்துப் போகிறது. சிலருக்கு
ஆத்மாவின் சாட்சாத்காரம் கிடைக்கிறது. ஆத்மாக்களின்
மினுமினுப்பு தெரிகிறது. ஆனால் அதனால் நன்மை என்ன? இங்கே யோகா
செய்ய வேண்டும். மனிதர்கள் சாட்சாத்காரம் கிடைத்து விட்டால்
முக்தி கிடைத்து விடும், பாவங்கள் எரிந்து விடும் என
நினைக்கிறார்கள். இன்னும் அவர்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
பாபா ஒவ்வொரு விஷயத்தையும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்.
உங்களுக்கு ஆழமான விஷயங்களைக் கூறுகிறேன் என்று கூறகிறார்.
உங்களுடைய புத்தியில் சக்கரத்தின் முழு ஞானமும் இருக்கிறது.
அவ்வளவுதான். பாபாவையும், சக்கரத்தையும் நினையுங்கள்.
டீச்சரையும் நினைக்க வேண்டும், ஞானத்தையும் நினைக்க வேண்டும்.
நினைவு செய்து செய்து நாடகத்தின் படி கர்மாதீத் நிலையைப்
பெறுவீர்கள். எப்படி நிர்வாணமாக வந்தீர்களோ அப்படித் தான் போக
வேண்டும். நீங்கள் தெய்வீக சம்ஸ்காரத்தை எடுத்து செல்வீர்கள்.
அங்கே எந்த ஞானமும் கிடையாது. இதற்கு சகஜமான நினைவு என்று பெயர்
யோகம் என்ற வார்த்தையால் மனிதர்கள் குழம்பிப் போகிறார்கள்.
அவர்கள் ஹடயோகிகள். பாபா சகஜயோகத்தை கற்பிக்கிறார். கீதையின்
பகவான் சகஜயோகத்தைக் கற்பித்தார் என முன்பு கூறினார்கள். ஆனால்
அவரை அறியவில்லை. 100 சதவீதம் தவறாகப் புரிந்துக் கொண்டனர்.
இதனால் மனிதர்கள் தூய்மை இழந்து விட்டனர். பல வழிகள்
இருக்கின்றது. யார் குடும்ப விவகாரத்தில் இருக்கிறார்களோ
அவர்களுக்கு தான் இந்த கீதா சாஸ்திரம். நீங்கள் இல்லற
மார்க்கத்தினர். முதலில் உங்களுடையது தூய்மையான
இல்லறமார்க்கமாக இருந்தது. இப்போது தூய்மையற்றதாகி விட்டது.
இப்போது மீண்டும் தூய்மையாக வேண்டும். பாபா சதா தூய்மையாக
இருக்கிறார் அவர் ஸ்ரீமத் கொடுப்பதற்காகவே வருகிறார்.
இச்சமயம் அனைவரும் தமோபிரதானமாக இருக்கிறார்கள் என பாபா
கூறுகிறார். முதலில் சதோபிரதான மாக இருந்தார்கள். நாமும்
முதலில் சதோபிரதானமாக இருந்தோம். பிறகு தமோபிரதானமாகி விட்டோம்.
போப்பாண்டவர் போன்ற யார் வந்தாலும் முதலில் சதோபிரதானமாக
இருக்கிறார்கள். பிறகு பின்பற்றுவோர் சேர சேர முழு மரமும்
தமோபிரதானமாகி விடுகிறது. இப்போது செல்லரித்த நிலையில்
இருக்கிறது. நாம் சதோபிரதானமாக இருந்தோம். பிறகு வரிசைக்
கிரமத்தில் தமோபிரதானமாகியிருக்கிறோம் என புரிந்துக்
கொள்கிறீர்கள். மீண்டும் சதோபிரதானமாக வேண்டும். வரிசைக்
கிரமத்தில் மாறிக் கொண்டே போவீர்கள். நாடகத்தின் படி நிறைய
விளக்கங்கள் இருக்கிறது. விதைக்கு எவ்வாறு மரம் வளரும் என்பது
தெரியும். இந்த மனித சிருஷ்டியின் ரகசியத்தை பாபா தான் புரிய
வைக்கிறார். அவரே தோட்டக்காரர். நம்முடைய தோட்டம் எப்படி
நன்றாக இருந்தது என தெரியும். பாபாவிற்கு ஞானம் இருக்கிறது
அல்லவா? எவ்வளவு நல்ல இறைத் தோட்டமாக இருந்தது. இப்போதோ
சைத்தானின் தோட்டமாக இருக்கிறது. இராவண இராஜ்யத்திற்கு சைத்தான்
என்று பெயர். ஆங்காங்கே அடிதடி கொள்ளை நடைபெறுகிறது. இப்போது
மீதம் இருக்கும் அணுகுண்டுகளையும் தாயார் செய்துக்
கொண்டிருக்கிறார்கள். இது அப்படியே வைத்திருக்கும் பொருள்
கிடையாது. இதன் மூலமாக நிச்சயம் அழிவு ஏற்படும் என அனைவரும்
அறிகிறார்கள். ஒரு வேளை அழிவே நடக்கவில்லை என்றால் சத்யுகம்
எப்படி வரும். இது முற்றிலும் தெளிவாக இருக்கிறது. மிகப் பெரிய
மகாபாரத போர் நடந்தது, 5 பாண்டவர்களைத் தப்பித்தனர் என
காண்பிக்கிறார்கள். அவர்களும் கரைந்து இறந்தனர். ஆனால் ரிசல்ட்
ஒன்றும் இல்லை. இவ்வாறு நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை
பாபா வந்து புரிய வைக்கிறார். பாரதத்திலிருந்து தான்
கொள்ளையடிக்கப்பட்டது. இப்போது மீண்டும் திரும்பக் கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள். வினாசத்தில் அனைத்தும் அழிந்து போகும்
என்பது உங்களுக்குத் தெரியும். நம்முடைய இராஜ்யம் இருந்த போது
வேறு எந்த இராஜ்யமும் இல்லை. வரலாறு நிச்சயம் திரும்பவும்
நடைபெறுகிறது. பாரதம் மீண்டும் சொர்க்கமாக மாறும். லஷ்மி
நாராயணனின் இராஜ்யம் நடக்கும். வேறு எந்த கண்டத்தின் பெயரும்
அங்கே கிடையாது. இப்போது கலியுகத்தின் முடிவாகும். பிறகு இந்த
லஷ்மி நாராயணனின் ஆட்சி வரும். நாம் மீண்டும் இவ்வாறு
மாறுகிறோம். நான் இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காக வந்துள்ளேன் என
பாபா கூறுகிறார். கல்ப கல்பமாக பல முறை நீங்கள் அதிபதியாகி
இருக்கிறீர்கள். முழு உலகத்தில் இவர்களுடைய இராஜ்யம் இருந்தது.
பெரிய புத்திசாலி களாக இருந்தனர். அங்கே அவர்கள் மந்திரி
போன்றவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த
நாடகம் உருவாக்கப் பட்டிருக்கிறது மீண்டும் ரிபீட் ஆகும்.
கிருஷ்ணரின் கோவிலுக்கு சுகதாமம் என்று கூறுகிறார்கள். சிவபாபா
வந்து சுகதாமத்தை ஸ்தாபனை செய்கிறார். கிறிஸ்து வருவதற்கு
முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது என்று அவரே கூறுகிறார்.
முதலில் ஒரு தர்மம் இருந்தது. பிறகு அடுத்த தர்மம் வந்தது. பாபா
நமக்கு எவ்வாறு இராஜ்ய பதவியைக் கொடுக்கிறார் என குழந்தைகள்
ஆச்சரியப்பட வேண்டும். தந்தையே வந்து பக்தியின் பலனைக்
கொடுகிறார் எவ்வளவு எளிதாக இருக்கிறது. போன கல்பத்தில் யார்
புரிந்துக் கொண்டார்களோ அவர்களே வரிசைக் கிரமத்தில் புரிந்துக்
கொள்வார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சுயதரிசன சக்கரத்தை தாரணை செய்து தனது பாவங்களை எரிக்க
வேண்டும். கர்மேந்திரியங்களால் எந்த பாவ கர்மமும் நடக்காமல்
இருக்க கவனமாக இருங்கள். கர்மாதீத நிலையை அடைவதற்குக் கடினமாக
முயற்சி செய்யுங்கள்.
2. சாட்சாத்காரம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வேண்டாம்.
சாட்சாத்காரம் கிடைப்பதால் முக்தி கிடைப் பதில்லை. பாவங்கள்
விலகுவதில்லை. சாட்சாத்காரத்தினால் பயன் இல்லை. தந்தையையும்
ஞானத்தை யும் நினைப்பதால் தான் துரு நீங்கும்.
வரதானம்:
சுயம் தங்களை கருவி என்று உணர்ந்து வீண் சங்கல்பம் மற்றும்
வீணான உள்ளுணர்விலிருந்து விடுபட்டு இருக்கக் கூடிய விஷ்வ
கல்யாணகாரி ஆவீர்களாக.
நான் உலக நன்மையின் காரியத்தின் பொருட்டு கருவி ஆவேன் என்ற
இந்த பொறுப்பின் நினைவில் இருந்தீர்கள் என்றால் ஒரு பொழுதும்
யார் பொருட்டும் அல்லது தன் பொருட்டும் வீண் சங்கல்பம் அல்லது
வீணான உள்ளுணர்வு இருக்க முடியாது. பொறுப்புள்ள ஆத்மாக்கள்
ஒரேயொரு நன்மை காரியத்திற்கு எதிரான தீமையான சங்கல்பம் கூட
கொண்டிருக்க முடியாது. ஒரு செகண்டு கூட வீணான உள்ளுணர்வு ஏற்பட
முடியாது. ஏனெனில் அவர்களது உள்ளுணர்வு மூலமாக வாயு மண்டலம்
பரிவர்த்தனை மாற்றம் வேண்டி உள்ளது. எனவே அனைவரிடத்தும்
அவர்களுக்கு நல்லெண்ணம் மற்றும் நல்விருப்பம் இயல்பாகவே
இருக்கும்.
சுலோகன்:
அஞ்ஞானத்தின் சக்தி கோபம் ஆகும் . மேலும் ஞானத்தின் சக்தி அமைதி
ஆகும் .