17.12.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! தந்தை தினந்தோறும் கற்பிக்கும் கல்வியை ஒரு நாளும் தவற விடக் கூடாது. இந்தப் படிப்பின் மூலமாகத் தான் உள்ளுக்குள் இருக்கும் சந்தேகங்கள் நீங்கும்.

 

கேள்வி:

தந்தையின் உள்ளத்தை வெல்வதற்கான யுக்தி என்ன?

 

பதில்:

தந்தையின் உள்ளத்தை வெல்ல வேண்டும் என்றால் சங்கமயுகம் உள்ளவரையும் தந்தையிடம் எதையும் மறைக்காதீர்கள். தனது (கேரக்டர்ஸ்) நடத்தையின் மீது முழு கவனம் கொடுங்கள். ஒரு வேளை ஏதாவது பாவச் செயல் ஆகி விடுகிறது என்றால் அவினாஷி (சர்ஜன்) வைத்தியரிடம் கூறி விடுங்கள். அப்பொழுது லேசானவராக ஆகி விடுவீர்கள். தந்தை அளிக்கும் அறிவுரை தான் அவர் காட்டும் இரக்கம் கிருபை அல்லது ஆசீர்வாதம் ஆகும்.எனவே தந்தையிடம் தயை அல்லது கிருபை வேண்டுவதற்குப் பதிலாக சுயம் தன் மீது கிருபை புரியுங்கள். இப்பேர்ப்பட்ட புருஷார்த்தம் (முயற்சி) செய்து தந்தையின்உள்ளத்தை வென்று விடுங்கள்.

 

ஓம் சாந்தி.

புது உலகத்தில் சுகம் உள்ளது பழைய உலகத்தில் துக்கம் உள்ளது என்பதை இப்போழுது ஆன்மீகக் குழந்தைகள் அறிந்துள்ளார்கள். துக்கத்தில் எல்லோரும் துக்கத்தில் வந்து விடுகிறார்கள். மேலும் சுகத்தில் அனைவரும் சுகத்தில் வந்து வருகின்றனர். சுகமான உலகத்தில் துக்கத்தின் பெயர் அடையாளம் இல்லை. பின் எங்கு துக்கம் உள்ளதோ அங்கு சுகத்தின் பெயர் அடையாளம் இல்லை. எங்கு பாவம் உள்ளதோ அங்கு புண்ணியத்தின் பெயர் அடையாளம் இல்லை. எங்கு புண்ணியம் உள்ளதோ அங்கு பாவத்தின் பெயர் அடையாளம் இல்லை. அது எந்தெந்த இடங்கள்? ஒன்று சத்யுகம் மற்றொன்று கலியுகம். இதுவோ குழந்தைகளின் புத்தியில் அவசியம் இருக்கவே இருக்கும். இப்பொழுது துக்கத்தின் காலம் முடிவடைகிறது. மேலும் சத்யுகத்திற்கான ஏற்பாடுகள் ஆகிக் கொண்டிருக்கின்றது. நாம் இப்பொழுது இந்த பதீதமான (தூய்மையற்ற) சீ-சீ உலகத்திலிருந்து வெளியேறி அந்தக் கரையான சத்யுகத்திற்கு அதாவது இராம இராஜ்யத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். புதிய உலகத்தில் இருப்பது சுகம், பழைய உலகத்தில் இருப்பது துக்கம். அப்படியின்றி யார் சுகம் அளிக்கிறாரோ அவரே துக்கமும் அளிக்கிறார் என்பதல்ல. சுகத்தை தந்தை அளிக்கிறார். துக்கம் அளிப்பது மாயை இராவணன் ஆவான். அந்த எதிரிக்கு கொடும்பாவி செய்து ஒவ்வொரு வருடமும் எரிக்கிறார்கள். துக்கம் அளிப்பவன் எப்பொழுதும் எரிக்கப்படுகிறான்.அவனது இராஜ்யம் முடிவடையும் பொழுது அவன் எப்பொழுதிற்குமாக முடிந்து போய் விடுகிறான் என்பதைக் குழந்தைகள் அறிந்துள்ளார்கள். 5 விகாரங்கள் தான் அனைவருக்கும் முதல், இடை, கடை காலங்களில் துக்கத்தைக் கொடுத்துக் கொண்டே வந்துள்ளன. நீங்கள் இங்கு அமர்ந்துள்ளீர்கள். அப்பொழுது கூட நாம் பாபாவிடம் செல்வோம் என்பதே உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இராவணனையோ நீங்கள் தந்தை என்று கூற மாட்டீர்கள். இராவணனை யாராவது பரமபிதா பரமாத்மா என்று கூறி எப்பொழுதாவது கேள்விப்  பட்டுள்ளீர்களா? ஒரு பொழுதும் கிடையாது. ஒரு சிலர் இலங்கையில் இராவணன் இருந்தான் என்று நினைக்கிறார்கள். இந்த முழு உலகமே இலங்கை ஆகும் என்று தந்தை கூறுகிறார். வாஸ்கோடகாமா ஸ்டீமர் (கப்பல்) அல்லது போட் (படகு) மூலமாக சுற்றி வந்தார் என்று கூறுகிறார்கள். அவர் சுற்றி வந்த அந்த காலத்தில் (ஏரோப்ளேன்) ஆகாய விமானம் ஆகியவை இருக்கவில்லை. டிரெயின் கூட நீராவி மூலம் இயங்கி கொண்டிருந்தது. மின்சாரம் தனி பொருள் ஆகும். உலகமோ ஒன்றே தான் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். புதியதிலிருந்து பழையதாகவும் பழையதிலிருந்து புதியதாகவும் ஆகிறது. ஸ்தாபனை, பாலனை, விநாசம் என்று கூறப்படுவது இல்லை. கிடையாது. முதலில் ஸ்தாபனை (படைத்தல்) பிறகு விநாசம் (அழித்தல்) பின்னால் பாலனை. இது சரியான வார்த்தைகள் ஆகும். பின்னால் இராவணனின் பாலனை ஆரம்பமாகிறது. அது பொய்யான விகாரி, பதீதமாக (தூய்மையற்றவராக) ஆவதற்கான பாலனை ஆகும். அதனால் எல்லோரும் துக்கமுடையவர்களாக ஆகிறார்கள். தந்தையோ ஒரு பொழுதும் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. இங்கோ தமோபிரதானமாக ஆகிவிட்ட காரணத்தால் தந்தையையே சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) என்று கூறி விடுகிறார்கள். பாருங்கள், எந்த மாதிரி ஆகி இருக்கிறார்கள்!. குழந்தைகளாகிய நீங்கள் நடந்தாலும் சென்றாலும் புத்தியிருக்க வேண்டும். விஷயமோ மிகவும் சுலபமானதாகும். "அல்ஃப்"- தந்தை பற்றிய விஷயம் மட்டுமே ஆகும். முகம்மதியர்கள் கூட "எழுந்து அல்லாவை நினைவு செய்யுங்கள்" என்று கூறுகிறார்கள். தாங்களும் அதிகாலையில் எழுந்திருக்கிறார்கள். அவர்கள் அல்லா அல்லது குதாவை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள் என்று கூறுவீர்கள். பாபா என்ற வார்த்தை மிகவும் இனிமையானது ஆகும். அல்லா என்று கூறுவதால் ஆஸ்தி நினைவிற்கு வராது. பாபா என்று கூறுவதால் ஆஸ்தி நினைவிற்கு வந்து விடுகிறது. முகம்மதியர்கள் தந்தை என்று கூறுவது இல்லை.அவர்கள் பின் அல்லா மியா என்பார்கள். ""மியா பீபீ" இந்த அனைத்து வார்த்தைகளும் பாரதத்தில் உள்ளன. பரம பிதா பரமாத்மா என்று கூறும் பொழுதோ சிவலிங்கம் மட்டுமே நினைவிற்கு வந்து விடும். ஐரோப்பியர்கள் காட்ஃபாதர் என்று கூறுகிறார்கள். பாரதத்திலோ கல், மண்ணை கூட பகவான் என்று நினைத்துக் கொண்டு விடுகிறார்கள். சிவலிங்கம் கூட கல்லினால் ஆனது ஆகும். இந்தக் கல்லில் பகவான் அமர்ந்துள்ளார் என்று நினைக்கிறார்கள். பகவானை நினைவு செய்யும் பொழுது கல் தான் முன்னால் வந்து விடுகிறது. கல்லினை பகவான் என்று நினைத்து பூஜிக்கிறார்கள். கல் எங்கிருந்து வருகிறது? மலைகளின் அருவிகளில் விழுந்து விழுந்து வழ வழப்பான உருண்டையாக ஆகி விடுகிறது. பிறகு இயற்கையான ஒரு அடையாளமாகவும் ஆகி விடுகிறது. தேவி தேவதைகளின் விக்கிரகங்கள் இது போல ஆவதில்லை. கல்லை செதுக்கி செதுக்கி காது, வாய், மூக்கு மற்றும் கண் ஆகியவைகளை எவ்வளவு அழகாக வடிவமைக்கிறார்கள்! நிறைய செலவு செய்கிறார்கள். சிவபாபாவின் விக்கிரகத்திற்கு பெரிய செலவு ஒன்றும் கிடையாது. நாம் அதே உயிருள்ள (சைதன்யமாக) தேவி தேவதையாக சுயம் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். (சைதன்யமாக) உயிருள்ளவர்களாக இருக்கும் பொழுது பூஜை ஆகியவை ஆவதில்லை. கல் போன்ற புத்தி உடையவர்கள் ஆகும் பொழுது கல்லுக்கு பூஜை செய்கிறார்கள். சைத்தன்யமாக இருக்கும் பொழுது பூஜிக்கத்தக்கவர்களாக இருந்தார்கள். பிறகு பூசாரி ஆகி விடுகிறார்கள். அங்கு யாரும் பூசாரியும் இருப்பது இல்லை. கல்லினுடைய விக்கிரமும் இருப்பதில்லை. அவசியமே கிடையாது. யார் சைதன்யமாக (உயிருள்ளவர்களாக) இருந்தார்களோ அவர்களுடைய அடையாளம் நினைவார்த்தத்திற்காக கற்களினுடையதை வைக்கிறார்கள். இப்பொழுது இந்த தேவதைகளின் கதை பற்றி உங்களுக்குத் தெரிய வந்துள்ளது. இந்த தேவதைகளின் வாழ்க்கை சரித்திரம் எப்படி இருந்தது? மீண்டும் அதுவே (ரிபீட்) திரும்ப நடைபெறுகிறது. இதற்கு முன்பு இந்த ஞானக் கண் இருக்கவில்லை. அப்பொழுது கல் புத்தியினராக இருந்தோம். இப்பொழுது தந்தை மூலமாக ஞானம் கிடைத்துள்ளது. ஞானம் ஒன்றே தான். ஆனால் எடுப்பவர்கள் வரிசைக்கிரமமாக உள்ளார்கள்.

 

உங்களுடைய ருத்ரமாலை கூட இந்த தாரணைக்கு ஏற்பவே அமைகிறது. ஒன்று ருத்ரமாலை ஆகும். மற்றொன்று ருண்ட மாலை ஆகும். ஒன்று (பிரதர்ஸ்) சகோதரர்களினுடையது. மற்றொன்று (பிரதர்ஸ் மற்றும் சிஸ்டர்ஸ்) சகோதர சகோதரிகளினுடையது. ஆத்மாக்களாகிய நாம் மிகவுமே சிறிய சிறிய புள்ளிகளைப் போல இருக்கிறோம் என்பது புத்தியில் வருகிறது. புருவ மத்தியில் பிரகாசிக்கும் அதிசயமான நட்சத்திரம் என்ற பாடலும் உள்ளது. ஆத்மாக்களாகிய நாம் உயிருள்ளவர்கள் (சைதன்யமானவர்கள்) என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஒரு சிறிய நட்சத்திரம் போல் உள்ளோம். பிறகு கர்ப்பத்தில் வரும் பொழுது முதலில் எவ்வளவு சிறிய பிண்டமாக இருக்கும். பிறகு எவ்வளவு பெரியதாக ஆகி விடுகிறது! அதே ஆத்மா தனது சரீரத்தின் மூலமாக அழியாத (அவினாஷி) பாகத்தை நடித்துக் கொண்டே இருக்கிறார். இந்த சரீரத்தைத் தான் பின் அனைவரும் நினைவு செய்ய முற்பட்டு விடுகிறார்கள். இந்த சரீரம் தான் நல்லது அல்லது கெட்டதாக இருக்கும் காரணத்தால் அனைவரையும் கவருகிறது. சத்யுகத்தில் (ஆத்ம அபிமானி) ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று அது போலக் கூற மாட்டார்கள். இந்த ஞானம் உங்களுக்கு இப்பொழுது தான் கிடைக்கிறது. ஏனெனில் இப்பொழுது ஆத்மா (பதீதமாக) தூய்மையற்றதாக ஆகி விட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பதீதமாக இருக்கும் காரணத்தால் என்ன காரியம் செய்கிறாரோ அவை அனைத்தும் தவறானதாக ஆகி விடுகிறது. தந்தை சரியான காரியம் செய்விக்கிறார். மாயை தவறான காரியம் செய்விக்கிறது. எல்லாவற்றையும் விட தவறான காரியமாவது தந்தையை சர்வ வியாபி என்று கூறுவது. ஆத்மா நடிக்கும் பாகமானது அவினாஷி (அழியாதது) ஆகும். அது எரிக்கப்படுவதில்லை. அதற்கு பூஜை நடக்கிறது. சரீரம் எரிக்கப்படுகிறது. ஆத்மா சரீரத்தை விட்டு விடும் பொழுது சரீரத்தை எரிக்கிறார்கள். ஆத்மா மற்றொரு உடலில் பிரவேசம் செய்து சென்று விடுகிறது. ஆத்மா இன்றி சரீரத்தை 2-4 நாட்கள் கூட வைக்க முடியாது. ஒரு சிலரோ சரீரத்தில் மருந்துகள் ஆகியவை போட்டு வைக்கவும் செய்கிறார்கள். ஆனால் என்ன பயன்? கிறித்துவர்களின் ஒரு செயிண்ட் சேவியர் இருக்கிறார். அவருடைய உடல் இன்னும் வைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். அவருக்கும் கோவில் போல அமைக்கப்பட்டுள்ளது. யாருக்கும் காண்பிப்பதில்லை. அவருடைய பாதங்கள் மட்டும் காண்பிக்கிறார்கள். யாராவது பாதத்தை தொட்டு வணங்கினார்கள் என்றால் நோய் ஏற்படாது என்று கூறுகிறார்கள். பாதங்களைத் தொடுவதால் வியாதியிலிருந்து இலேசானவர் ஆகி விடுகிறார்கள். எனவே அவரது அருள் என்று நினைக்கிறார்கள். பாவனைக்கான பலன் கிடைத்து விடுகிறது என்று தந்தை கூறுகிறார். நிச்சய புத்தி உடையவர் ஆகிவிடும் பொழுது கொஞ்சம் நன்மை ஏற்படுகிறது. மற்றபடி அப்படியே ஆகி விட்டால் ஏராளமான பேர்கள் அங்கு சென்று விடுவார்கள். மேளா ஏற்பட்டு விடுமே. தந்தையும் இங்கு வந்துள்ளார். பிறகும் இவ்வளவு ஏராளமானோர் இருப்பதில்லை. ஏராளமானவர்கள் வருவதற்கு இடம் கூட இல்லை. ஏராளமானோர் ஆகி விடுவதற்கான நேரம் வரும் பொழுது விநாசம் ஆகி விடுகிறது. இதுவும் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆரம்பம் அல்லது முடிவு இல்லை. ஆம், விருட்சத்திற்கு பட்டுப் போன நிலை ஏற்பட்டு விடும் பொழுது அதாவது தமோபிரதானமாக ஆகி விடும் பொழுது. இந்த விருட்சம் மாறி விடுகிறது. இது எவ்வளவு பெரிய எல்லையில்லாத விருட்சம் ஆகும். யார் முதல் நம்பரில் செல்ல வேண்டி உள்ளதோ அவர்கள் முதலில் வருவார்கள். வரிசைக் கிரமமாக வருவார்கள் அல்லவா? எல்லா சூரிய வம்சத்தினர்களும் ஒன்றாக வர மாட்டார்கள். சந்திர வம்சத்தினரும் எல்லோரும் ஒன்று சேர்ந்து வருவதில்லை. வரிசைக்கிரமமாக மாலைக் கேற்ப தான் வருவார்கள். பார்ட்தாரி அனைவரும் ஒன்றாக சேர்ந்து எப்படி வருவார்கள்?. நாடகமே கெட்டுப் போய் விடும். இந்த நாடகம் மிகவுமே (ஏக்யுரேட்) சரியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட முடியாது.

 

இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இங்கு அமரும் பொழுது புத்தியில் இது தான் நினைவில் இருக்க வேண்டும். மற்ற சத்சங்கங்களிலோ வெவ்வேறு விஷயங்கள் புத்தியில் வரும். இதுவோ ஒரே ஒரு படிப்பு ஆகும். இதன் மூலம் உங்களுக்கு வருமானம் ஏற்படுகிறது. அந்த சாஸ்திரங்கள் ஆகியவை படிப்பதால் சம்பாத்தியம் ஆவதில்லை. ஆம் கொஞ்ச நஞ்ச நல்ல குணங்கள் இருக்கும். கிரந்தம் படிப்பதற்காக அமருகிறார்கள் என்றால் எல்லோரும் நிர்விகாரியாக இருப்பார்கள் என்பதல்ல. இந்த உலகத்தில் எல்லோருமே ப்ரஷ்டாசாரத்தால் (விகாரத்தால்) பிறக்கிறார்கள் என்று தந்தை கூறுகிறார். அங்கு ஜென்மம் எப்படி ஏற்படும் என்று குழந்தைகளாகிய உங்களிடம் சிலர் கேட்பார்கள். அங்கோ 5 விகாரங்களே கிடையாது என்று கூறுங்கள். யோக பலத்தினால் குழந்தைகள் பிறக்கிறார்கள். குழந்தை வரப் போகிறது என்று முன் கூட்டியே சாட்சாத்காரம் ஆகும். அங்கு விகாரத்தின் விஷயம் கிடையாது. இங்கோ குழந்தைகளையும் கூட மாயை வீழ்த்தி விடுகிறது. ஒரு சிலரோ தந்தையிடம் வந்து கூறவும் செய்கிறார்கள். கூறவே இல்லை என்றால் நூறு மடங்கு தண்டனை ஏற்பட்டு விடும். ஏதாவது பாவச் செயலில் ஏற்பட்டு விட்டால் தந்தையிடம் உடனே கூறி விட வேண்டும் என்று தந்தையோ எல்லா குழந்தைகளுக்கும் கூறுகிறார். தந்தை அவினாஷி வைத்தியர் ஆவார். சர்ஜனிடம் (வைத்தியர்) கூறி விடுவதால் நீங்கள் இலேசாக ஆகி விடுவீர்கள். சங்கமயுகம் உள்ளவரையும் தந்தையிடம் எதையும் மறைக்கக் கூடாது. யாராவது மறைக்கிறார்கள் என்றால் தந்தையின் உள்ளத்தை வென்று விட முடியாது. எல்லாமே முயற்சியை (புருஷார்த்தம்) பொருத்தது ஆகும். பள்ளிக் கூடத்திற்கு வரவே இல்லை என்றால் (கேரக்டர்) நடத்தை எப்படி திருந்தும்? இச்சமயத்தில் எல்லோருடைய (கேரக்டர்ஸ்) நடத்தைகளும் மோசமாகி விட்டுள்ளது. விகாரம் தான் முதல் நம்பரில் மோசமான நடத்தை ஆகும். எனவே குழந்தைகளே காம விகாரம் உங்களுடைய மகா எதிரி ஆகும் என்று தந்தை கூறுகிறார். இதற்கு முன்பேயும் இந்த கீதையின் ஞானம் கேட்டிருந்தார். ஆனால் இந்த எல்லா விஷயங்களும் புரியாமல் இருந்தது. இப்பொழுது தந்தை நேரடியாக (டைரக்ட்) கீதையைக் கூறுகிறார். இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு திவ்ய புத்தி அளித்துள்ளார். எனவே பக்தியின் பெயரைக் கேட்கையில் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தோம் என்று சிரிப்பு வருகிறது. இப்பொழுது தந்தை அறிவுரை அளிக்கிறார். இதில் தயை, கிருபை அல்லது ஆசீர்வாதத்தின் விஷயம் இருப்பதில்லை. சுயம் தங்கள் மீதே தயை, கிருபை அல்லது ஆசீர்வாதம் அளித்துக் கொள்ள வேண்டும். தந்தையோ ஒவ்வொரு குழந்தையையும் புருஷார்த்தம் (முயற்சி) செய்விக்கிறார். ஒரு சிலரோ புருஷார்த்தம் (முயற்சி) செய்து தந்தையின் உள்ளத்தை வென்று விடுகிறார்கள். ஒரு சிலரோ புருஷார்த்தம் (முயற்சி) செய்து செய்து, இறந்தும் விடுகிறார்கள். தந்தையோ ஒவ்வொரு குழந்தைக்கும் ஒன்று போலத் தான் கற்பிக்கிறார். பிறகு ஒரு சில நேரங்களில் எவ்வளவு ஆழமான விஷயங்கள் வெளிப்படுகின்றன என்றால் பழைய சந்தேகங்களே பறந்து போய் விடுகிறது. பிறகு சுதாரித்துக் கொண்டு விடுகிறார்கள். எனவே பாபாவின் படிப்பை ஒரு பொழுதும் தவற விடக் கூடாது. முக்கியமானது தந்தையின் நினைவு ஆகும். தெய்வீக குணங்களும் தாரணை செய்ய வேண்டும். யாராவது ஏதாவது சீ-சீ ஆக பேசினார்கள் என்றால் கேட்டும் கேட்காமல் இருந்து விட வேண்டும். ஹியர் நோ ஈவில் .. தீயதைக் கேட்காதீர்கள்..... உயர்ந்த பதவியை அடையவேண்டும் என்றால் மானம் - அவமானம், துக்கம் - சுகம், வெற்றி - தோல்வி, அனைத்தையும் அவசியம் சகித்துக் கொள்ள வேண்டும். தந்தை எவ்வளவு யுக்திகளைக் (வழி முறைகள்) கூறுகிறார். பிறகும் குழந்தைகள் தந்தை கூறுவதையும் கேட்டும் கேட்காமல் இருந்து விடுகிறார்கள் என்றால், என்ன பதவியை அடைவார்கள்? அசரீரி ஆகாதவரை மாயையினுடைய ஏதாவதொரு காயம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்று தந்தை கூறுகிறார். தந்தை கூறுவதை ஏற்பதில்லை என்றால் தந்தையை அவமதிக்கிறார்கள். பிறகும் தந்தை குழந்தைகளே சதா நீடுழி வாழ்ந்து கொண்டே இருங்கள் மற்றும் தந்தையை நினைவு செய்து உயர்ந்த பதவியை அடையுங்கள்" என்று கூறுகிறார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. யாராவது தப்பும் தவறுமான விஷயங்களைப் பேசினால் கேட்டும் கேட்காமல் இருந்து விட வேண்டும். ஹியர் நோ ஈவில்.. .. .. தீயதைக் கேட்காதீர்கள். துக்கம்-சுகம், மானம்-அவமானம் அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும்.

 

2. தந்தை கூறுவதை கேட்டும் கேட்காமல் இருந்து விட்டு தந்தையை அவமதிக்கக் கூடாது. மாயை காயப்படுத்துவதிலிருந்து தப்பித்திருப்பதற்காக அசரீரியாக இருப்பதற்கான பயிற்சி அவசியம் செய்ய வேண்டும்.

 

வரதானம்:

எல்லைக்குட்பட்ட ராயல் (பகட்டான) இச்சைகளிலிருந்து விடுபட்டு சேவை செய்யக் கூடிய சுயநலமற்ற சேவாதாரி ஆவீர்களாக.

 

எப்படி பிரம்மா தந்தை கர்மத்தின் பந்தனத்திலிருந்து விடுபட்டு தனிப்பட்டு இருப்பதற்கான நிரூபணம் அளித்தார். சேவையைத் தவிர வேறு எந்தவொரு பந்தனமும் இல்லை. சேவையில் இருக்கக் கூடிய எல்லைக்குட்பட்ட இராயல் இச்சைகள் கூட கணக்கு வழக்கின் பந்தனத்தில் கட்டுப்படுத்தி விடுகிறது. எப்படி தேகத்தின் பந்தனம் தேகத்தின் சம்பந்தத்தின் பந்தனம் உள்ளதோ, அதே போல சேவையில் சுயநலம் இது கூட பந்தனம் ஆகும். இந்த பந்தனம் அல்லது இராயல் கணக்கு வழக்குகளிலிருந்தும் விடுபட்ட சுயநலமில்லாத சேவாதாரி ஆகுங்கள்.

 

ஸ்லோகன்:

வாக்குறுதிகளின் ஃபைல் - (கோப்பு) இல் வைக்காதீர்கள், ஃபைனல் - சம்பூர்ணம் ஆகி காண்பியுங்கள்.

 

ஓம்சாந்தி