26.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! இப்போது உங்களுடைய வழக்கு விசாரிக்கப்படுகிறது. பாபா உங்களை துக்கத்திலிருந்து விடுவித்து சுகத்தில் அழைத்துச் செல்கிறார். இப்பொழுது நீங்கள் அனைவரும் வானப்பிரஸ்த நிலையில் இருக்கிறீர்கள். வீட்டிற்குத் திரும்ப போக வேண்டும்.

 

கேள்வி:

சதா யோக நிலையில் இருக்க வேண்டும் மற்றும் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் என்ற கட்டளை அடிக்கடி ஒவ்வொரு குழந்தைக்கும் ஏன் கூறப்படுகிறது ?

 

பதில்:

ஏனென்றால் இப்பொழுது கடைசி வினாச காட்சிகள் எதிரில் இருக்கிறது. கோடிக்கணக்கான மனிதர்கள் இறப்பார்கள். இயற்கை சீற்றங்கள் நடக்கும். அச்சமயம் மனநிலை ஒரே நிலையாக இருக்க வேண்டும். அனைத்து காட்சிகளைப் பார்த்தாலும் அடிப்பட்ட விலங்கிற்கு திண்டாட்டம் வேட்டைக்காரனுக்கு (குஷி) கொண்டாட்டம்....... என்று அனுபவம் ஆக வேண்டும். அதற்காக யோக யுக்தாக இருக்க வேண்டும். ஸ்ரீமத்படி நடக்கக்கூடிய யோகி குழந்தைகள் தான் ஆனந்தமாக இருப்பார்கள். நாம் பழைய உடலை விட்டு விட்டு நம்முடைய இனிமையான வீட்டிற்குப் போவோம் என்பது அவர்களுடைய புத்தியில் இருக்கும்.

 

ஓம்சாந்தி.

ஆன்மீகத் தந்தை அமர்ந்து ஆன்மீகக் குழந்தைகளுடன் ஆன்மீக உரையாடல் செய்கிறார். அல்லது ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார். ஏனென்றால் ஆத்மாக்கள் பக்தி மார்க்கத்தில் மிகவும் நினைவு செய்தனர். அனைவரும் ஒரு பிரியதர்ஷனின் பிரியதர்ஷினிகள். அந்த பிரியதர்ஷனாகிய சிவபாபாவின் சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவருக்கு அமர்ந்து பூஜிக்கிறார்கள். அவரிடம் என்ன கேட்க விரும்புகிறார்கள், அது தெரியவில்லை. அனைவரும் பூஜிக்கிறார்கள். சங்கராச்சாரியார் கூட பூஜை செய்கிறார். அனைவரும் அவரை பெரியவர் என நினைக்கிறார்கள். ஆனால் தர்ம ஸ்தாபகராக இருக்கலாம், ஆனால் அவரும் மறுபிறவி எடுத்து எடுத்து கீழே வருகிறார். இப்போது அனைவரும் கடைசி பிறவியில் வந்தடைந்திருக்கிறார்கள். இப்போது சிறியவர் பெரியவர் அனைவரும் வானப்பிரஸ்த நிலையில் இருக்கிறார்கள் என பாபா கூறுகின்றார். நான் உங்கள் அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்கிறேன். தூய்மை இல்லாத இந்த உலகத்தில் வாருங்கள் என என்னை அழைக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள். தூய்மையற்ற உலகம், வேற்று நாட்டில் வாருங்கள் என்கிறார்கள். நிச்சயமாக துக்கத்தில் இருப்பார்கள். அதனால் தான் அழைக்கிறார்கள். துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவர், சீ சீ-யான பழைய உலகம், பழைய உடலில் அவசியம் வரவேண்டி இருக்கின்றது. அதுவும் தமோபிர தான உடலில் என கூறப்பட்டு இருக்கின்றது. சதோபிரதானமான உலகத்தில் என்னை யாரும் நினைப்பதில்லை. நாடகத்தின் படி நான் அனைவரையும் சுகமுடையவர்களாக மாற்றுகின்றேன். சத்யுகத்தில் நிச்சயமாக ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருக்கும், மற்ற சத்சங்கங்களில் வெறும் சாஸ்திரங்களைப் படித்து படித்து கலியுகத்திற்குத்தான் வருகிறார்கள் என்று புரிய வைக்க வேண்டும். புதைக் குழியில் சிக்கிக் கொண்டவர்கள் துக்கப்படுகிறார்கள். இதுவே துக்க உலகம் ஆகும். அது சுக உலகம் ஆகும். பாபா எவ்வளவு எளிதாக்கி புரிய வைக்கிறார். ஏனென்றால் பாவம், பெண்கள் எதுவும் அறியவில்லை. மீண்டும் திரும்பிப் போக வேண்டும் அல்லது எப்பொழுதும் மறுபிறவி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது யாருக்கும் புரியவில்லை. இப்பொழுது அனைத்து தர்மத்தினரும் இருக்கிறார்கள். முதன் முதலில் சொர்க்கம் இருந்தது என்றால் ஒரே ஒரு தர்மம் தான் இருந்தது. முழு சக்கரமும் உங்களுடைய புத்தியில் இருக்கின்றது. வேறு யாருடைய புத்தியிலும் இந்த விஷயங்கள் இருக்க முடியாது. கல்பத்தின் ஆயுள் லட்சக் கணக்கான வருடங்கள் என்கிறார்கள். இதற்குத் தான் காரிருள் என்கிறார்கள். ஞானம் என்பது நல்ல வெளிச்சம் ஆகும். இப்பொழுது குழந்தைகளின் புத்தியில் வெளிச்சம் இருக்கின்றது. நீங்கள் ஏதாவது கோவிலுக்குச் சென்றால், நாங்கள் சிவபாபாவிடம் செல்கிறோம் என்று கூறுவீர்கள், நாங்கள் இவ்வாறு லட்சுமி நாராயணராக மாறுகின்றோம் என்று கூறுவீர்கள். இந்த விஷயங்கள் வேறு சத்சங்கங்களில் இருக்காது. அது அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் ஆகும். இப்பொழுது நீங்கள் படைப்பவர் மற்றும் படைப்பினுடைய முதல், இடை, கடையை அறிகிறீர்கள். ரிஷி, முனி போன்றோர் நாங்கள் அறியவில்லை என்று கூறினார்கள். நீங்களும் முதலில் அறியவில்லை. இச்சமயம் முழு உலகத்திலும் பக்தி இருக்கின்றது. இது பழைய உலகம் ஆகும். எவ்வளவு மனிதர்கள் இருக்கின்றார்கள். சத்யுகம் புது உலகத்தில் ஒரே ஒரு (அத்வைத) தர்மம் தான் இருந்தது. பிறகு (துவைதம்) பிரிவு ஆகியுள்ளது. பல தர்மங்களில் ஓசை ஏற்படுகிறது. அனைத்திலும் ஒருவருக் கொருவர் சண்டையிட்டுக்கொள்கின்றனர். நாடகத்தின்படி அவர்கள் கொள்கை அப்படிதான். யாரையாவது பிரிக்க வேண்டும் என்றால் சண்டை ஏற்படுகிறது, பிரிவுகள் ஏற்படுகிறது. மனிதர்கள் பாபாவை தெரிந்து கொள்ளாத காரணத்தால் கல்புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள். இச்சமயம் தேவி தேவதா தர்மம் கீழான நிலைக்கு வந்து விட்டது என தந்தை புரிய வைக்கின்றார். இவர்களுடைய இராஜ்யம் இருந்தது என்று தெரிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை. இப்பொழுது நாம் தேவதையாகிக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். சிவபாபா நம்முடைய கீழ்படிந்த வேலைக்காரன் ஆவார். பெரிய மனிதர்கள் எப்பொழுதும் கடிதம் எழுதும் போது கீழே தங்கள் கீழ்படிந்த சேவகன் என எழுதுகிறார்கள். நான் கீழ்படிந்த வேலைக்காரன் என பாபாவும் கூறுகின்றார், இந்த தாதாவும் நானும் கீழ்படிந்த வேலைக்காரன் என்கிறார். நான் 5000 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு கல்பத்தின் புருஷோத்தம சங்கமயுகத்தில் வருகிறேன். வந்து குழந்தைகளுக்கு சேவை செய்கிறேன். தூர தேசத்தில் வசிக்கக்கூடியவரே....... என்று என்னை கூறுகின்றார்கள். இதனுடைய பொருளை அறியவில்லை. இத்தனை சாஸ்திரங் களைப் படிக்கிறார்கள். ஆனால் அதன் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. தந்தை வந்து அனைத்து வேதங்கள் சாஸ்திரங்களின் சாரத்தைப் புரியவைக்கின்றார்.

 

இச்சமயம் இராவணனின் இராஜ்யம் என குழந்தைகள் அறிகிறீர்கள். மனிதர்கள் தூய்மை இழந்துக் கொண்டே போகிறார்கள். இவ்வாறு நாடகம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. குழந்தைகளாகிய உங்களை நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு அழைத்துப் போகின்றார். அதற்குத் தான் அல்லாவின் தோட்டம் என்று கூறுகிறார்கள். இது முட்களின் காடு ஆகும். சங்கமயுகம் மலர்களின் தோட்டம் ஆகும். அங்கே நீங்கள் எப்பொழுதும் சுகமுடையவர்களாக இருக் கின்றீர்கள். சதா ஆரோக்கியமாக, சதா செல்வந்தர்களாகவும் மாறுகின்றீர்கள். அரைக்கல்பம் சுகம், பின் அரைக்கல்பம் துக்கம் என இந்த சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கின்றது. இதற்கு முடிவு கிடையாது. எல்லோரையும் விட பெரிய தந்தை வருகின்றார். அனைவரையும் சாந்திதாமம் சுகதாமத்திற்கு அழைத்துப் போகின்றார். இப்பொழுது நீங்கள் சுகதாமத்திற்குச் செல்லும் பொழுது மற்ற அனைவரும் சாந்தி தாமத்தில் இருக்கின்றார்கள். அரைக்கல்பம் சுகம், அரைக்கல்பம் துக்கம். அதிலும் சுகம் நிறைய இருக்கின்றது. ஒருவேளை பாதி பாதி என்றால் என்ன சுவை இருக்கும். பக்தி மார்க்கத்தில் கூட மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தீர்கள். நாம் எவ்வளவு பணக்காரர்களாக இருந்தோம் என்பது இப்போது நினைவு வருகின்றது. மிகப்பெரிய பணக்காரர்கள் நஷ்டம் அடையும் பொழுது நம்மிடம் என்னென்ன இருந்தது, எவ்வளவு செல்வம் இருந்து என்பது நினைவிற்கு வருகின்றது. பாரதம் பணக்கார நாடாக இருந்தது என பாபா புரிய வைக்கின்றார். சொர்க்கமாக இருந்தது. எவ்வளவு ஏழையாக இருக்கின்றது. ஏழைகள் மீது தான் இரக்கம் ஏற்படுகிறது. இப்பொழுது ஒரேயடியாக ஏழையாகி விட்டீர்கள். பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். யார் பணக்காரர்களாக இருந்தனரோ அவர்களே ஏழைகளாகி இருக்கின்றனர். இதுவும் நாடகம் ஆகும். மற்றபடி மற்ற தர்மங்கள் அனைத்தும் உப கிளைகள் ஆகும். எத்தனை தர்மத்தின் மனிதர்கள் வளர்ச்சி அடைந்து கொண்டேயிருக்கின்றார்கள். பாரத வாசிகள் தான் 84 பிறவிகள் எடுக்கின்றார்கள். ஒரு குழந்தை மற்ற தர்மங்களின் கணக்கு வழக்கை கணக்கிட்டு அனுப்பியிருந்தது. ஆனால் அதிகமாக இந்த விஷயங்களை தெரிந்து கொள்வதால் எந்த பயனும் இல்லை. இதுவும் நேரத்தை வீண் செய்வதாகும். அவ்வளவு நேரம் பாபாவின் நினைவில் அமர்ந்திருந்தால் வருமானம் சேமிப்பாகும். நமக்கு முக்கியமான விஷயம் முழுமையாக முயற்சி செய்து உலகத்திற்கே அதிபதியாக வேண்டும் என்பதாகும். நீங்கள் தான் சதோபிரதானமாக இருந்தீர்கள், நீங்கள் தான் தமோபிரதானமாகி இருக்கிறீர்கள் என பாபா கூறுகின்றார். 84 பிறவிகள் நீங்கள் எடுத்துள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் திரும்பப் போக வேண்டும். பாபாவிடம் இருந்து சொத்தை அடைய வேண்டும். நீங்கள் அரைக்கல்பமாக பாபாவை நினைத்தீர்கள், இப்பொழுது நீங்கள் கூறுவதை கேட்பதற்காக பாபா வந்திருக்கின்றார். பாபா மீண்டும் சுகதாமத்திற்கு அழைத்து போகின்றார். பாரதத்தின் உயர்வு தாழ்வு பற்றி கூட ஒரு கதை இருக்கின்றது. இப்பொழுது இது தூய்மையற்ற உலகம் ஆகும். உறவும் பழையதாகும். இப்பொழுது மீண்டும் புதிய உறவில் செல்ல வேண்டும். இச்சமயம் நடிகர்கள் அனைவரும் இருக்கிறார்கள். இவர்களில் எந்த வித்தியாசமும் ஏற்படாது. ஆத்மா அழிவற்றது. எவ்வளவு நிறைய ஆத்மாக்கள் இருக்கின்றனர். அவை ஒருபோதும் அழிவதில்லை. இத்தனை கோடிக் கணக்கான ஆத்மாக்களும் வீட்டிற்குப் போக வேண்டும். அனைவரின் சரீரமும் அழிந்து போகும். ஆகவே தான் ஹோலிகா கொண்டாடுகிறார்கள்.

 

நாம் தான் பூஜைக்குரியவராக இருந்தோம், பூஜாரி ஆகிவிட்டோம். இப்போது மீண்டும் பூஜைக்குரியவராக மாறிக் கொண்டு இருக்கின்றோம் என நீங்கள் அறிகிறீர்கள். அங்கே இந்த ஞானம் இருக்காது. இந்த சாஸ்திரங்களும் இருக்காது, அனைத்தும் அழிந்து போகும். யார் யோக யுக்தாக இருப்பார்களோ ஸ்ரீமத்படி நடப்பார்களோ அவர்கள் அனைத்தையும் பார்ப்பார்கள். பூகம்பத்தில் அனைத்தும் எப்படி அழிகின்றது என்பதை. முழு கிராமமும் எப்படி அழிந்து போகின்றது என்பது செய்தித்தாள்களிலும் வருகின்றது. முதலில் பாம்பே இவ்வளவு பெரியதாக கிடையாது. சமுத்திரம் வரண்டு விட்டது. மீண்டும் சமுத்திரம் ஆகிவிடும். இந்த கட்டிடம் எதுவும் இருக்காது. சத்யுகத்தில் இனிமையான நீரோட்டத்திற்கு அருகில் மாளிகை இருக்கும். உவர்ப்பு தண்ணீர் அருகில் இருக்காது. அது இருக்கவே இருக்காது. சமுத்திரம் ஒரே முறை பொங்கினாலே அனைத்தும் அழிந்து போகும். நிறைய துன்பம் ஏற்படும். கோடிக்கணக்கான மனிதர்கள் இறப்பார்கள். தானியங்கள் எங்கிருந்து வரும். ஆபத்துக்கள் வரும் என அவர்கள் கூட புரிந்து கொள்கிறார்கள். மனிதர்கள் இறக்கிறார்கள் என்றால் யார் யோக நிலையில் இருப்பார்களோ அச்சமயம் ஆனந்தமாக இருப்பார்கள். அடிப்பட்ட விலங்கிற்கு திண்டாட்டம் வேட்டைக்காரனுக்கு கொண்டாட்டம். பனி மழை பொழியும் போது நிறைய மனிதர்கள் இறந்து போவார்கள். நிறைய இயற்கை சீற்றங்கள் ஏற்படும். இது அனைத்தும் அழிந்து போகும். இதற்கு தான் இயற்கை சீற்றங்கள் என்று பெயர். கடவுளால் ஏற்பட்ட சீற்றங்கள் என்று கூறமுடியாது. கடவுள் மீது எப்படி குற்றம் சாட்ட முடியும். சங்கர் கண்ணை திறந்தார். வினாசம் ஆகிவிட்டது என்பது கிடையாது. இது அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயம் ஆகும். ஏவுகணைகள் பற்றி கூட சாஸ்திரங்களில் எழுதப்பட்டு இருக்கின்றது. இந்த ஏவுகணைகள் மூலமாக எவ்வாறு அழிக்கப்போகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நெருப்பு, விஷ வாயு அனைத்தும் அதில் சேர்ந்து விடும். கடைசியில் அனைவரும் உடனுக்குடன் இறக்க வேண்டும், குழந்தைகளும் துக்கப்படக் கூடாது. ஆகவே தான் இயற்கை சீற்றங்களினால் உடனுக்குடன் இறப்பார்கள் என பாபா புரிய வைக்கின்றார். இது அனைத்தும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம் ஆகும், ஒரு போதும் அழியாது. சிறியதாகவும், பெரியதாகவும் ஆகாது. சரீரம் இங்கே அழிந்து போகும். மற்ற ஆத்மாக்கள் அனைத்தும் இனிமையான வீட்டிற்கு சென்றுவிடும். பாபா கல்ப கல்பமாக சங்கமயுகத்தில் வருகின்றார். நீங்களும் இந்த புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் உயர்ந்ததிலும் உயர்ந்தவராக மாறுகின்றீர்கள். உண்மையில் சிவபாபாவிற்கு ஸ்ரீ ஸ்ரீ என்றும், இந்த தேவதைகளுக்கு ஸ்ரீ என்றும் கூறப்படுகிறது. இப்பொழுது பாருங்கள், அனைவருக்கும் ஸ்ரீ ஸ்ரீ என்று கூறிக் கொண்டேயிருக்கிறார்கள். ஸ்ரீமதி, ஸ்ரீ இன்னார் இப்பொழுது ஒரு தந்தை தான் ஸ்ரீமத் கொடுக்கின்றார். விகாரத்தில் ஈடுபடுவது ஸ்ரீமத்தா? இதுவோ பிரஷ்டாச்சாரி உலகம் ஆகும்.

 

இப்போது என்னை நினையுங்கள் அழுக்கு நீங்கிவிடும் என இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு தந்தை கூறுகின்றார். இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக இருங்கள். நமக்கு உலகத்தின் முதல், இடை, கடையின் சக்கரத்தைப் பற்றிய ஞானம் கிடைத்திருக்கின்றது. ஆனால் இந்த அலங்காரத்தை உங்களுக்குக் கொடுக்க முடியாது. இன்று நீங்கள் உங்களை சுயதர்சன சக்கரதாரி என நினைக்கிறீர்கள். நாளை மாயை அடி கொடுத்தால் ஞானம் பறந்து போகும். ஆகவே தான் பிராமணர்களாகிய உங்களின் மாலையை உருவாக்க முடியாது. மாயை அடி கொடுத்து நிறைய பேரை விழவைக்கிறது. அவர்களின் மாலையை எப்படி உருவாக்க முடியும், தசைகள் (நிலை) மாறிக் கொண்டேயிருக்கின்றது. ருத்திர மாலை சரி. விஷ்ணுவின் மாலையும் இருக்கின்றது. மற்றபடி பிராமணர்களின் மாலை கிடையாது. தேகம் உட்பட தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விட்டு என்னை மட்டும் நினையுங்கள் என குழந்தைகளுக்கு வழிமுறை கூறுகிறார். பாபா நிராகாரர். அவருக்கென்று சரீரம் கிடையாது. மேலும் இவருடைய வானப்பிரஸ்த நிலையில் வந்திருக்கின்றார். அதாவது 60 வயதில். வானப்பிரஸ்த நிலையில் குருவை வைத்துக் கொள்கிறார்கள். நானே சத்குரு. ஆனால் குப்த வேடத்தில் இருக்கின்றேன். அவர்கள் பக்தியின் குரு, நான் ஞான மார்க்கத்தின் குரு. பிரஜா பிதா பிரம்மாவைப் பாருங்கள். எவ்வளவு குழந்தைகள் இருக்கின்றார்கள். புத்தி எல்லைக்குட்பட்டதிலிருந்து எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது. முக்திக்கு சென்று பிறகு ஜீவன் முக்தியில் வருகின்றார்கள். நீங்கள் முதலில் வருகின்றீர்கள். மற்றவர்கள் பின்னால் வருகின்றார்கள். ஒவ்வொருவரும் முதலில் சுகம், பிறகு துக்கத்தை அனுபவிக்க வேண்டியிருக் கின்றது. இந்த உலகம் நாடகம் ஆகும். ஆஹா பிரபு ! உங்களுடைய லீலையே லீலை.......... எனக் கூறுகிறார்கள். உங்களுடைய புத்தி மேலிருந்து கீழ் வரை சுழன்று கொண்டு இருக்கின்றது. நீங்கள் லைட் ஹவுஸ், வழிகாட்டக் கூடியவர்கள். நீங்கள் தந்தையின் குழந்தைகள் அல்லவா. என்னை நினைத்தால் தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானமாக மாறிவிடுவீர்கள் என பாபா கூறுகின்றார். டிரெயினில் கூட நீங்கள் எல்லையற்ற தந்தை சொர்க்கத்தை படைக்கக்கூடியவர், பாரதம் சொர்க்கமாக இருந்தது. பாரதத்தில்தான் தந்தை வருகின்றார் என புரிய வைக்கலாம். சிவஜெயந்தி கூட பாரதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆனால் எப்போது நடக்கின்றது. இது யாருக்கும் தெரிவதில்லை. நேரம், நாள் இரண்டுமே இல்லை. ஏனென்றால் கர்பத்தினால் பிறக்கவில்லை. தன்னை ஆத்மா என உணருங்கள் என பாபா கூறுகின்றார். நீங்கள் அசரீரியாக வந்தீர்கள், தூய்மையாக இருந்தீர்கள். மீண்டும் அசரீரியாகி விடுவீர்கள். என்னை மட்டும் நினைத்துக் கொண்டே இருங்கள். பாவங்கள் அழிந்து போகும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. லைட் ஹவுஸ் ஆகி அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும். புத்தியை எல்லைக்குட்பட்டதில் இருந்து எல்லைக்கு அப்பால் செலுத்த வேண்டும். சுயதர்சன சக்கரதாரி ஆக வேண்டும்.

 

2. இப்பொழுது வீட்டிற்குத் திரும்ப போக வேண்டும். ஆகவே இந்த வானப்பிரஸ்த நிலையில் சதோபிரதானமாக மாற முயற்சி செய்ய வேண்டும். தங்களின் நேரத்தை வீணாக்கக் கூடாது.

 

வதானம்:

சிந்தித்து, புரிந்து ஒவ்வொரு காரியமும் செய்யக்கூடிய பச்சாதாபப்படுவதிலிருந்து விடுபட்ட ஞான சொரூப ஆத்மா ஆகுக.

 

முதலில் சிந்தியுங்கள் பிறகு செயல்படுங்கள் என்று உலகத்தில் கூட கூறுகின்றனர். யார் சிந்தித்து செயல்படுவதில்லை, செய்துவிட்டு பிறகு யோசிக்கின்றனர் எனில், அது பச்சாதாபத்தின் (செய்த தவறுக்கு வருந்துதல்) ரூபம் ஆகிவிடுகிறது. பின்னால் யோசிப்பது என்பது பச்சாதாபத்தின் ரூபம் ஆகும். மேலும், முதலில் சிந்திப்பது என்பது ஞான சொரூப ஆத்மாவின் குணம் ஆகும். துவாபர, கலியுகத்தில் ஆனேக விதமான துக்கம் அடைந்து கொண்டு வந்தீர்கள், ஆனால், இப்பொழுது சங்கமயுகத்தில் சிந்தித்து, புரிந்து சங்கல்பம் மற்றும் கர்மம் செய்யுங்கள். ஒருபொழுதும் மனதில் கூட, ஒரு நொடி கூட வருத்தம் ஏற்படக்கூடாது. அப்பொழுதே ஞான சொரூப ஆத்மா என்று கூற முடியும்.

 

சுலோகன்:

கருணை உள்ளம் உடையவராகி அனைத்து குணங்கள் மற்றும் சக்திகளை தானம் கொடுப்பவர்களே மாஸ்டர் வள்ளல் ஆவார்கள்.

  

பிரம்மா பாபாவிற்கு சமமாக ஆவதற்காக விசேஷ முயற்சி

 தந்தை பிரம்மாவிற்கு சமமாக விசேஷமாக அமிர்தவேளையில் சக்திசாலி நிலை அதாவது தந்தைக்கு சமமான விதை ரூப ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான பயிற்சி செய்யுங்கள். எத்தகைய சிரேஷ்டமான சமயமோ, அத்தகைய சிரேஷ்டமான ஸ்திதி இருக்க வேண்டும். இது விசேஷமாக வரதானத்திற்கான சமயம் ஆகும். இந்த சமயத்தை சரியான முறையில் பயன்படுத்தினீர்கள் என்றால் முழு நாளினுடைய நினைவின் ஸ்திதியில் அதனுடைய பிரபாவம் (தாக்கம்) இருக்கும்.

 

ஓம்சாந்தி