20.10.2019                           காலை முரளி                ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           24.02.1985           மதுபன்


 

சங்கமயுகம் - சர்வசிரேஷ்ட பிராப்திகளுக்கான யுகம்

 

இன்று பாப்தாதா நாலாபுறங்களினுடைய பிராப்தி சொரூப விசேஷ ஆத்மாக்களைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஒருபுறம் அல்பகால பிராப்தி அடையும் அனேக ஆத்மாக்கள் உள்ளனர், அதில் பிராப்தியின் கூடவே அப்பிராப்தியும் உள்ளது. இன்று பிராப்தி கிடைக்கின்றது, நாளை அப்பிராப்தி ஆகிவிடுகிறது. ஒருபுறம் அனேக பிராப்திகளின் கூடவே அப்பிராப்தி சொரூபமாகவும் உள்ளனர். மற்றொருபுறம் சதாகாலத்தின் பிராப்தி சொரூப விசேஷ ஆத்மாக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இரண்டிற்கும் உள்ள மகான் வித்தியாசத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பாப்தாதா பிராப்தி சொரூப குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துகொண்டு இருந்தார்கள். பிராப்தி சொரூப குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு பத்மாபதம் பாக்கியசாலிகள்! விசேஷ ஆத்மாக்களாகிய உங்களுடைய ஒவ்வொரு அடியிலும் பலகோடி மடங்கு பிராப்தி கிடைக்குமளவு அவ்வளவு பிராப்தியை அடைந்துவிட்டீர்கள். லௌகீகத்தில் பிராப்தி சொரூப வாழ்வில் விசேஷமாக நான்கு விசயங்களின் பிராப்தி அவசியமாகும். 1) சுகமயமான சம்பந்தம். 2) சுபாவம் மற்றும் சம்ஸ்காரம் சதா சீதளமாக (குளிர்ந்ததன்மை உடையதாக) மற்றும் சிநேகம் நிறைந்ததாக இருப்பது. 3) உண்மையான வருமானத்தின் சிரேஷ்ட செல்வம். 4) சிரேஷ்ட கர்மம், சிரேஷ்ட தொடர்பு. ஒருவேளை, இந்த நான்கு விசயங்களும் பிராப்தியாக உள்ளன எனில், லௌகீக வாழ்வில் கூட வெற்றி மற்றும் குஷி இருக்கும். ஆனால், லௌகீக வாழ்வின் பிராப்திகள் அல்பகால பிராப்திகள் ஆகும். இன்று சுகமயமான சம்பந்தம் உள்ளது, நாளை அதே சம்பந்தம் துக்கமயமானதாக ஆகிவிடுகின்றது. இன்று வெற்றி கிடைக்கின்றது, மறுநாள் கிடைப்பதில்லை. இதற்கு மாறாக பிராப்தி சொரூப சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த அலௌகீக சிரேஷ்ட வாழ்வில் நான்கு விசயங்களும் சதா பிராப்தமாகக் கிடைத்துள்ளன. ஏனெனில், சுகத்தை வழங்கும் வள்ளல், சர்வபிராப்திகளின் வள்ளலுடன் நேரடியான அழிவற்ற சம்பந்தம் உள்ளது. இந்த அழிவற்ற சம்பந்தமானது ஒருபொழுதும் துக்கமோ அல்லது ஏமாற்றமோ கொடுக்கக் கூடியது அல்ல. அழியக்கூடிய சம்பந்தங்களில் நிகழ்கால சமயத்தில் துக்கமும் உள்ளது மற்றும் ஏமாற்றமும் உள்ளது. அழிவற்ற சம்பந்தத்தில் உண்மையான அன்பு உள்ளது, சுகம் உள்ளது. எனவே, சதா அன்பு மற்றும் சுகத்தினுடைய சர்வசம்பந்தங்கள் தந்தையிடமிருந்து பிராப்தியாகக் கிடைத்துள்ளன. ஒரு சம்பந்தத்தின் குறை கூட கிடையாது. எந்த சம்பந்தத்தை விரும்புகிறீர்களோ, அந்த சம்பந்தத்தின் மூலம் பிராப்தியின் அனுபவம் செய்ய முடியும். எந்த ஆத்மாவிற்கு எந்த சம்பந்தம் அன்பானதாக உள்ளதோ, அந்த சம்பந்தத்தில் பகவான் அன்பைப் பூர்த்தி செய்துகொண்டிருக்கின்றார். பகவானை சர்வ சம்பந்தத்திலும் கொண்டு வந்துவிட்டீர்கள். அத்தகைய சிரேஷ்ட சம்பந்தம் முழு கல்பத்திலும் பிராப்தியாகக் கிடைக்க முடியாது. எனவே, சம்பந்தமும் பிராப்தியாகக் கிடைத்துள்ளது, கூடவே இந்த அலௌகீக தெய்வீக பிறப்பில் சதா சிரேஷ்ட சுபாவம், ஈஸ்வரிய சம்ஸ்காரம் இருக்கின்ற காரணத்தினால் சுபாவம், சம்ஸ்காரம் ஒருபோதும் துக்கம் தருவதில்லை. பாப்தாதாவின் சம்ஸ்காரம் எதுவோ, அதுவே குழந்தைகளின் சம்ஸ்காரம் ஆகும். பாப்தாதாவின் சுபாவம் எதுவோ, அதுவே குழந்தைகளின் சுபாவம் ஆகும். சுய - பாவம் (உணர்வு) என்றால் சதா ஒவ்வொருவரையும் சுயம் அதாவது ஆத்ம உணர்வோடு பார்ப்பது. சுயம் என்று சிரேஷ்டமானதையும் கூறப்படுகின்றது. சுயத்தின் பாவம் (உணர்வு) அல்லது சிரேஷ்டமான உணர்வே சுபாவம் ஆகும். சதா மகாதானி, கருணை உள்ளம், விஷ்வகல்யாணகாரி ஆகிய இந்த தந்தையின் சம்ஸ்காரமே உங்களின் சம்ஸ்காரம் ஆகும். ஆகையினால், சுபாவம் மற்றும் சம்ஸ்காரம் சதா குஷியின் பிராப்தியை செய்விக்கின்றது. இவ்வாறே உண்மையான வருமானத்தின் சுகமயமான செல்வம் கிடைத்துள்ளது. அழிவற்ற பொக்கிஷங்கள் எத்தனை கிடைத்துள்ளன? நீங்கள் ஒவ்வொரு பொக்கிஷத்தினுடைய சுரங்கங்களின் எஜமானர்கள் ஆவீர்கள். வெறும் பொக்கிஷம் மட்டும் அல்ல, குறையாத, எண்ணிலடங்காத பொக்கிஷங்கள் கிடைத்துள்ளன. அதை செலவு செய்யுங்கள் மற்றும் அதிகரித்துக்கொண்டே இருங்கள். எவ்வளவு செலவு செய்கின்றீர்களோ, அவ்வளவு அதிகரிக்கின்றது. இதன் அனுபவி ஆவீர்கள் அல்லவா! ஸ்தூல செல்வத்தை எதற்காக சம்பாதிக்கின்றனர்? உணவை (கஷ்டமில்லாது சம்பாதித்தது) சுகமாக உண்பதற்காக, குடும்பம் சுகமாக இருப்பதற்காக, உலகத்தில் நல்ல பெயர் கிடைப்பதற்காக சம்பாதிக்கின்றனர். நீங்கள் தன்னைப் பாருங்கள். எவ்வளவு சுகம் மற்றும் குஷியின் உணவு கிடைத்துக்கொண்டு இருக்கின்றது. உணவு உண்ணுங்கள் (எளிமையான உணவு), பகவான் மகிமை பாடுங்கள் என்று மகிமை கூட உள்ளது. இவ்வாறு மகிமை பாடப்பட்ட உணவை சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்றீர்கள். பிராமண குழந்தை உண்ண உணவு கூட இல்லாது வஞ்சிக்கப்பட்டவர் ஆகமுடியாது என்பது பிராமண குழந்தைகளுக்கு பாப்தாதா அளித்துள்ள உத்திரவாதம் ஆகும். விருப்பம் கொண்ட உணவு கிடைக்காது, ஆனால், உணவு அவசியம் கிடைக்கும். சாதம், ரசம் உள்ளது. குடும்பமும் சரியாக (நன்றாக) உள்ளது மற்றும் பெயரும் எவ்வளவு புகழ்வாய்ந்ததாக உள்ளது! அவ்வளவு உங்களுடைய பெயர் புகழ் அடைந்துள்ளது. இன்று இந்த கடைசி பிறவி வரை நீங்கள் வந்தடைந்து விட்டீர்கள், ஆனால், உங்களுடைய ஜடசித்திரங்களின் (சிலைகள்) பெயரைக் கொண்டே அனேக ஆத்மாக்கள் தங்களுடைய காரியத்தில் வெற்றி அடைந்து கொண்டிருக்கின்றார்கள். தேவி, தேவதைகளாகிய உங்களுடைய பெயரையே கூறுகின்றார்கள், தன்னுடைய வேலையை வெற்றி அடையச்செய்கின்றனர். அந்தளவு பெயர், புகழுடையதாக உள்ளது. ஒரு பிறவியில் மட்டும் பெயர், புகழடையவில்லை. முழு கல்பமும் உங்களுடைய பெயர் புகழுடையதாக உள்ளது. எனவே, சுகமாயமான, உண்மையான செல்வந்தரும் ஆவீர்கள். தந்தையினுடைய தொடர்பில் வந்ததினால் உங்களுடைய தொடர்பும் சிரேஷ்டமான தொடர்பாக ஆகிவிட்டது. உங்களுடைய தொடர்பு அத்தகைய சிரேஷ்ட தொடர்பாகும், உங்களுடைய ஜடசித்திரங்களுடைய ஒரு வினாடி தொடர்புக்காக தாகத்துடன் காத்திருக்கின்றனர். தரிசனத்தின் தொடர்புக்காக மட்டும் எவ்வளவு தாகத்துடன் உள்ளனர்! எத்தனையோ இரவுகள் விழித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு வினாடி தரிசனத்தின் தொடர்புக்காக அழைத்துக் கொண்டு இருக்கின்றனர். கூச்சட்டுக்கொண்டு இருக்கின்றனர் மற்றும் முன்னால் செல்வதற்காக மட்டும் எவ்வளவு பொறுத்துக்கொள்கின்றனர்! வெறும் சித்திரம் தான் மற்றும் அத்தகைய சித்திரம் வீட்டிலும் உள்ளது, ஒரு வினாடி முன்னால் சென்று தரிசிப்பதற்காக (தொடர்புக்காக) எவ்வளவு தாகத்துடன் உள்ளனர்! ஒரு எல்லையற்ற தந்தையினுடையவர் ஆன காரணத்தினால் முழு உலகின் ஆத்மாக்களுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. எல்லையற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆகிவிட்டீர்கள்.உலகின் அனைத்து ஆத்மாக் களுடன் தொடர்பு உருவாகிவிட்டது. எனவே, நான்கு விசயங்களும் அழிவற்ற பிராப்தியாகக் கிடைத்துள்ளன. ஆகையினால், வாழ்க்கை சதா சுகமான வாழ்க்கையாக உள்ளது. பிராப்தி சொரூப வாழ்க்கையாக உள்ளது. பிராமணர்களின் வாழ்வில் அப்பிராப்தியான எந்தப் பொருளும் கிடையாது. இதுவே உங்களுடைய பாடலாகும். அத்தகைய பிராப்தி சொரூபமானவர்கள் அல்லவா நீங்கள்! அல்லது ஆக வேண்டுமா? இன்று பிராப்தி சொரூப குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்று கூறப்பட்டது அல்லவா? இந்த சிரேஷ்ட வாழ்க்கைக்காக உலகத்தினர் எவ்வளவு உழைக்கின்றனர், ஆனால், நீங்கள் என்ன செய்திருக்கின்றீர்கள்? உழைத்தீர்களா? அல்லது அன்பு செலுத்தினீர்களா? அன்பிலேயே தந்தையைத் தன்னுடையவர் ஆக்கிவிட்டீர்கள். உலகத்தினர் உழைக்கின்றனர் மற்றும் நீங்கள் அன்பினால் அடைந்துவிட்டீர்கள். பாபா என்று கூறினீர்கள் மற்றும் பொக்கிஷத்தின் சாவி கிடைத்துவிட்டது. உலகத்தினரிடம் கேட்டீர்கள் என்றால் என்ன கூறுவார்கள்? வருமானம் செய்வது மிகவும் கடினமாகும், இந்த உலகத்தில் வாழ்வது மிகவும் கடினமானது என்று கூறுவார்கள். மேலும், நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? ஒரு அடியில் பலகோடி மடங்கு வருமானம் உள்ளது மேலும் வாழ்வது எவ்வளவு சுலபமாக உள்ளது! பறக்கும் கலையாகும். ஆதலால், நடப்பதிலிருந்தும் தப்பித்துவிட்டீர்கள். நடப்பதென்ன, பறக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்கள், எவ்வளவு வேறுபாடு உள்ளது! பாப்தாதா இன்று விஷ்வத்தின் அனைத்துக் குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அனைவரும் அவரவர் பிராப்தியின் ஈடுபாட்டில் ஈடுபட்டு இருக்கின்றனர், ஆனால், முடிவு என்ன? அனைவரும் தேடுவதிலேயே ஈடுபட்டிருக்கின்றனர். விஞ்ஞானிகளைப் பாருங்கள், தன்னுடைய தேடுதலில் (கண்டுபிடிப்பில்) அவ்வளவு மூழ்கி உள்ளனர். வேறு எதுவும் நினைவில் வருவதே இல்லை. மகான் ஆத்மாக்களைப் பாருங்கள், பிரபுவை அடையும் தேடலில் ஈடுபட்டு இருக்கின்றனர். சிறிய சந்தேகத்தின் காரணத்தினால் பிராப்தியிலிருந்து வஞ்சிக்கப்பட்டுள்ளனர். ஆத்மா தான் பரமாத்மாவா? அல்லது பரமாத்மா சர்வவியாபியா? என்ற இந்த சந்தேகத்தின் காரணத்தினால் தேடுதலேயே இருக்கின்றனர். பிராப்தியிலிருந்து வஞ்சிக்கப்பட்டிருக்கின்றனர். விஞ்ஞானிகள் கூட இப்பொழுது இன்னும் முன்னேற வேண்டும், இன்னும் முன்னேற வேண்டும் என்று முயற்சி செய்து, செய்து சந்திரனில், நட்சத்திரங்களில் உலகை உருவாக்குவோம் என்று தேடித் தேடி அதிலேயே மூழ்கிவிட்டனர். சாஸ்திரவாதிகளைப் பாருங்கள், சாஸ்திரங்களின் அர்த்தம் காணுவதின் விஸ்தாரத்தில் மூழ்கி இருக்கின்றனர். சாஸ்திரங்களுக்கு அர்த்தம் காணும் இலட்சியம் வைத்து, அதிலிருந்து வஞ்சிக்கப்பட்டவர் ஆகிவிட்டனர். அரசியல் தலைவர்களைப் பாருங்கள், நாற்காலிக்காக ஓடுவதில் மூழ்கி இருக்கின்றனர். மேலும், உலகத்தின் அறியாமையில் இருக்கும் ஆத்மாக்களைப் பாருங்கள், அழியக்கூடிய பிராப்தியின் துரும்பின் ஆதாரத்தினை உண்மையான ஆதாரம் என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அவர்கள் தேடுவதிலேயே மூழ்கி இருக்கின்றனர் மற்றும் நீங்கள் அடைந்துவிட்டீர்கள், சந்தேகத்தை நீக்கிவிட்டீர்கள், எனவே, பிராப்தி சொரூபம் ஆகிவிட்டீர்கள். ஆகையினால், நீங்கள் பிராப்தி சொரூப சிரேஷ்ட ஆத்மா ஆவீர்கள்.

 

பாப்தாதா விசேஷமாக இரட்டை அயல்நாட்டு குழந்தைகளுக்கு வாழ்த்துக்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார் - விஷ்வத்தின் அனேக ஆத்மாக்களுக்கு மத்தியில் சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களுடைய கண்டறியும் நேத்திரம் சக்திசாலியாக இருந்தது. அதனால், கண்டறிந்தீர்கள் மற்றும் அடைந்துவிட்டீர்கள். எனவே, பாப்தாதா இரட்டை அயல்நாட்டு குழந்தைகளின் கண்டறியும் நேத்திரத்தைப் பார்த்து குழந்தைகளின் மகிமை பாடிக்கொண்டு இருக்கின்றார்கள்- ஆஹா! குழந்தைகளே ஆஹா! தூர தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், வெவ்வேறு தர்மத்தினராக இருந்தபோதிலும், வெவ்வேறு பழக்க வழக்கம் கொண்டவராக இருந்தபோதிலும், தங்களுடைய உண்மையான தந்தை தொலைவில் இருந்தபோதிலும் அருகாமையில் கண்டறிந்துவிட்டீர்கள். நெருக்கமான சம்பந்தத்தில் வந்துவிட்டீர்கள். பிராமண வாழ்க்கையின் பழக்க வழக்கத்தினை தங்களது ஆதி பழக்க வழக்கம் என புரிந்து சகஜமாக தனது வாழ்வில் நடைமுறைப் படுத்தியிருக்கின்றீர்கள். இத்தகையவர்களே, விசேஷமான, அன்பான மற்றும் அதிர்ஷ்டசாலிக் குழந்தைகள் என்று கூறப்படுகின்றது. எவ்வாறு குழந்தைகளுக்கு விசேஷ குஷி உள்ளதோ, அவ்வாறே பாப்தாதாவிற்கு விசேஷ குஷி உள்ளது. பிராமண பரிவாரத்தின் ஆத்மாக்கள் உலகத்தின் பல மூலைகளுக்கும் சென்றுவிட்டிருந்தனர், ஆனால், பல மூலையிலிருந்தும் பிரிந்து போன சிரேஷ்ட ஆத்மாக்கள் மீண்டும் தன்னுடைய பரிவாரத்தை வந்தடைந்துவிட்டனர். பாபா தேடினார். நீங்கள் கண்டறிந்துவிட்டீர்கள். ஆகையினால், பிராப்தியின் அதிகாரி ஆகிவிட்டீர்கள். நல்லது.

 

இத்தகைய அழிவற்ற பிராப்தி சொரூப குழந்தைகளுக்கு, சதா சர்வ சம்பந்தங்களின் அனுபவம் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு, சதா அழிவற்ற செல்வந்தக் குழந்தைகளுக்கு, சதா தந்தைக்கு சமமாக சிரேஷ்ட சம்ஸ்காரம்

 

மற்றும் சுயத்தின் உணர்வில் இருக்கக்கூடிய சர்வ பிராப்திகளின் களஞ்சியம், சர்வ பிராப்திகளை மகான் தானம் செய்யும் வள்ளல் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

யுகல் (கணவன்-மனைவி) குழந்தைகளுடன் - அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு

இல்லறத்தில் இருந்தாலும் அனைத்து பந்தனங்களில் இருந்தும் விடுபட்டவர்களாக மற்றும் தந்தைக்கு அன்பானவர்களாக இருக்கிறீர்கள் அல்லவா? மாட்டிக்கொண்டு இருக்கவில்லைதானே? கூண்டுப்பறவையல்லாமல் பறக்கும் பறவை ஆவீர்கள் அல்லவா! சிறிதளவு பந்தனம் கூட மாட்டிவிடுகிறது. பந்தன்முக்த் ஆக இருந்தால் சதா பறந்துகொண்டே இருப்பீர்கள். எனவே, எந்தவிதமான பந்தனமும் கூடாது. தேகத்தினுடைய, சம்பந்தத்தினுடைய, இல்லறத்தினுடைய, பொருட்களுடைய எந்தவொரு பந்தனமும் இருக்கக்கூடாது. இதையே பற்றற்ற மற்றும் அன்பான நிலை என்று கூறப்படுகிறது. சுதந்திரமானவர்கள் சதா பறக்கும் கலையில் பறப்பார்கள் மற்றும் மாட்டிக் கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் பறக்கவும் செய்வார்கள், பிறகு, பந்தனம் அவர்களை இழுத்து கீழே கொண்டுவந்துவிடும். எனவே, சில சமயம் கீழே, சிலசமயம் மேலே, இவ்வாறு நேரம் கடந்துவிடும். சதா ஏக்ரஸ் பறக்கும் கலையின் நிலை மற்றும் அவ்வப்போது கீழே, அவ்வப்போது மேலே என்ற நிலை, இவ்விரண்டிற்கும் இரவுக்கும் பகலுக்குமான வேறுபாடு உள்ளது. நீங்கள் எந்த நிலை உடையவர்கள்? சதா பந்தனமற்றவரா, சதா சுதந்திரப் பறவையா? சதா தந்தையுடன் இருப்பவர்களா? எந்தவொரு கவர்ச்சியிலும் கவர்ச்சிக்கப்பட்டவர்கள் இல்லையே? இத்தகைய வாழ்க்கையே அன்பான வாழ்க்கையாகும். யார் தந்தையின் அன்பானவர் ஆகிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கை சதா அன்பானதாக ஆகிறது. பிரச்சனையான வாழ்க்கையாக இருக்காது. இன்று இது நடந்தது, நேற்று இது நடந்தது, என்பது இருக்காது. ஆனால், சதா தந்தையுடன் இருக்கக்கூடியவர்கள் ஏக்ரஸ் ஸ்திதியில் இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இதுவே ஆனந்தமான வாழ்க்கையாகும். ஆனந்தத்தில் இல்லை எனில், அவசியம் குழப்பம் ஏற்படும். இன்று இந்தப் பிரச்சனை வந்துவிட்டது, நேற்று வேறு பிரச்சனை வந்துவிட்டது, இந்த துக்கதாமத்தின் விசயங்கள் துக்கதாமத்தில் வரத்தான் செய்யும். ஆனால், சங்கமயுக பிராமணர்கள் என்றால், துக்கம் கீழே தங்கிவிடும். துக்கதாமத்தில் இருந்து ஒதுங்கிவிட்டீர்கள் எனில், துக்கம் தென்பட்டாலும் கூட உங்களைத் தீண்டாது. கயுகத்தை விட்டு விட்டீர்கள். ஆதாரத்தை விட்டுவிட்டீர்கள், இப்பொழுது சங்கமயுகத்திற்கு வந்துவிட்டீர்கள். சங்கமயுகத்தை சதா மேலே காண்பிக்கின்றனர். சங்கமயுக ஆத்மாக்கள் சதா உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் அல்ல! எப்பொழுது தந்தை பறக்கவைக்க வந்திருக்கின்றாரோ, அப்பொழுது பறக்கும் கலையிலிருந்து கீழே வருவதே எதற்காக? கீழே வருவது என்றால் மாட்டிக்கொள்வதாகும். இப்பொழுது இறக்கைகள் கிடைத்திருக்கின்றன எனில், பறந்துகொண்டே இருங்கள், கீழே வரவே வராதீர்கள். நல்லது.

 

அதர்குமாரர்களுடன்:- அனைவரும் ஒருவருடைய அன்பில் மூழ்கியிருக்கக் கூடியவர்கள் அல்லவா? ஒன்று பாபா, இரண்டாவது நான், மூன்றாவது எவரும் இல்லை. இவர்களையே அன்பில் மூழ்கியிருக்கக் கூடியவர்கள் என்று கூறப்படுகின்றது. நான் மற்றும் என்னுடைய பாபா. இதைத் தவிர வேறு ஏதாவது எனது என்பது உள்ளதா? என்னுடைய குழந்தை, என்னுடைய பேரன்... இவ்வாறு இல்லை தானே? எனது - என்பதில் பற்று உள்ளது. எனது என்பது சமாப்தி (முடிந்து போவது) ஆகுவது என்றால் பற்று சமாப்தி ஆகுவதாகும். முழு பற்று அதாவது மோகம் தந்தையிடம் ஏற்பட்டுவிட்டது எனில், மாறிவிட்டது, சுத்தமான மோகம் ஆகிவிட்டது. தந்தை சதா சுத்தமானவர். எனவே, மோகம் மாற்றமடைந்து அன்பாக ஆகிவிட்டது. ஒரே என்னுடைய பாபா, இந்த ஒரு என்னுடையதின் மூலம் அனைத்தும் முடிவடைந்துவிடுகிறது. மேலும், ஒருவருடைய நினைவு சகஜமாகிவிடுகிறது. ஆகையினால், சகஜயோகியாக ஆகிவிடுகின்றீர்கள். நான் சிரேஷ்ட ஆத்மா மற்றும் என்னுடைய பாபா, அவ்வளவு தான். சிரேஷ்ட ஆத்மா என உணர்வதன் மூலம் கர்மா (செயல்) தானாகவே சிரேஷ்டமாகிவிடும். சிரேஷ்ட ஆத்மாவிற்கு முன் மாயை வர முடியாது.

 

தாய்மார்களுடன்:- தாய்மார்கள் சதா தந்தையுடன் குஷியின் ஊஞ்சலில் ஆடக்கூடியவர்கள் தானே! கோப, கோபியர்கள் சதா குஷியில் நடனமாடக் கூடியவர்கள் அல்லது ஊஞ்சலில் ஆடக்கூடியவர்கள் ஆவார்கள். எனவே, சதா தந்தையுடன் இருக்கக்கூடியவர்கள் குஷியில் நடனமாடுகிறார்கள். தந்தை உடன் இருக்கின்றார் எனில், சர்வசக்திகளும் உடன் இருக்கும். தந்தையின் துணை சக்திசாலி ஆக்கி விடுகின்றது. தந்தையுடன் இருப்பவர்கள் சதா மோகமற்றவர்களாக இருப்பார்கள், அவர்களை யாருடைய மோகமும் தொல்லை செய்யாது. எனவே, மோகத்தை வென்றவர்கள் ஆவீர்கள் தானே? எத்தகைய சூழ்நிலை வந்தாலும் சரி, ஆனால், ஒவ்வொரு சூழ்நிலையிலும் நஷ்டமோஹா (மோகத்தை வென்ற நிலை). எந்தளவு மோகத்தை வென்றவர்களாக இருக்கின்றார்களோ, அந்தளவு நினைவு மற்றும் சேவையில் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள்.

 

மதுவனத்திற்கு வந்திருக்கும் சேவாதாரிகளுடன்:- சேவையின் கணக்கு சேமிப்பு ஆகிவிட்டதல்லவா? இப்பொழுது கூட மதுவனத்தின் வாயுமண்டலத்தில் சக்திசாலி ஸ்திதியை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது மற்றும் எதிர்காலத்திற்காகவும் கூட சேமிப்பு செய்திருக்கின்றீர்கள் எனில் இரட்டை பிராப்தி ஆகிவிட்டது. யக்ஞ சேவை என்றால் சிரேஷ்டமான சேவையில் சிரேஷ்டமான ஸ்திதியில் இருந்து செய்வதினால் பலகோடி மடங்கு பலன் கிடைத்துவிடுகின்றது. எந்தவொரு சேவை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால், அதற்கு முன்பாக சக்திசாலி ஸ்திதியில் நிலைத்திருந்து சேவாதாரியாகி சேவை செய்து கொண்டிருக்கின்றேனா? என்பதைப் பாருங்கள். சாதாரண சேவாதாரி அல்ல. ஆன்மிக சேவாதாரி ஆவீர்கள். ஆன்மிக சேவாதாரியின் ஆன்மிக ஜொலிப்பு, ஆன்மிகப் பெருமை சதா வெளிப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். சப்பாத்தி செய்யும்பொழுது கூட சுயதரிசன சக்கரம் சுழன்று கொண்டே இருக்க வேண்டும். லௌகீக ஸ்தூல காரியம் நிமித்தமாகிச் செய்ய வேண்டும், ஆனால், ஸ்தூலம், சூட்சுமம் இரண்டும் இணைந்திருக்க வேண்டும். கைகளால் ஸ்தூல காரியம் செய்யுங்கள் மற்றும் புத்தியால் மனசா சேவா செய்யுங்கள். அப்பொழுது இரண்டு சேவை ஆகிவிடும். கை மூலம் காரியம் செய்து கொண்டிருக்கும்பொழுதும் நினைவின் சக்தி மூலம் ஒரு இடத்தில் இருந்தபடியே அதிக சேவை செய்ய முடியும். மதுவனமோ லைட்ஹவுஸ் (கலங்கரை விளக்கு) ஆகும். லைட்ஹவுஸ் ஒரு இடத்தில் நின்றுகொண்டு நாலாபுறமும் சேவை செய்கின்றது. அத்தகைய சேவாதாரி தனக்கும் மற்றும் பிறருக்கும் மிகவும் சிரேஷ்டமான பிராப்தியை உருவாக்க முடியும். நல்லது. ஓம் சாந்தி.

 

இன்று பாப்தாதா முழு இரவும் அனைத்துக் குழந்தைகளுடன் சந்திப்பைக் கொண்டாடினார் மற்றும்  காலை 7 மணிக்கு அன்பு நினைவுகள் கொடுத்துவிட்டு விடை பெறுகின்றார். காலை வகுப்பை பாப்தாதாவே எடுத்துவிட்டார்.

 

தினமும் பாப்தாதா மூலம் மகாவாக்கியத்தை கேட்டுக் கேட்டு மகான் ஆத்மாக்கள் ஆகிவிட்டீர்கள்.  இன்றைய தினத்தின் மகாவாக்கியத்தினை கேட்பதினால் மகான் ஆகிவிட்டோம் என்ற இந்த சாரத்தை மனதின் இசையுடன் கேட்க வேண்டும். மகானிலும் மகான் ஆன காரியம் செய்வதற்காக சதா நிமித்தமானவர்கள். ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் மனதின் மூலம், பேச்சின் மூலம், தொடர்பின் மூலம் மகாதானம் செய்யும் ஆத்மாக்கள் மற்றும் மகான் யுகத்தை வரவேற்கக் கூடிய அதிகாரி ஆத்மாக்கள். இதையே நினைவில் வைக்க வேண்டும். சதா அத்தகைய மகான் நினைவில் இருக்கக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். வருங்கால மற்றும் நிகழ்கால சக்கரவர்த்திகளுக்கு தந்தையின் நமஸ்காரம். நல்லது.

 

வரதானம்:-

சுத்தமான மற்றும் சக்திசாலியான எண்ணங்களின் சக்தி மூலம் வீணான அதிர்வலைகளை சமாப்தி (முடிவு) செய்யக்கூடிய உண்மையான சேவாதாரி ஆகுக.

 

சங்கல்பம் கூட சிருஷ்டியை உருவாக்கிவிடுகின்றது என்று கூறப்படுகின்றது. எப்பொழுது பலவீனமான மற்றும் வீணான சங்கல்பம் செய்கின்றீர்களோ, அப்பொழுது வீணான வாயுமண்டலத்தின் சிருஷ்டி உருவாகிவிடுகின்றது. யார் தன்னுடைய சுத்தமான, சக்திசாலியான எண்ணங்கள் மூலம் பழைய அதிர்வலை களையும் சமாப்தி செய்துவிடுகின்றார்களோ, அவர்களே உண்மையான சேவாதாரி ஆவார்கள். எவ்வாறு விஞ்ஞானிகள் ஆயுதத்தின் மூலம் ஆயுதத்தை அழிக்கின்றனர். ஒரு விமானத்தின் மூலம் இன்னொரு விமானத்தை விழ வைக்கின்றனர். அவ்வாறே உங்களுடைய சுத்தமான, சக்திசாலியான எண்ணங்களின் அதிர்வலைகள் வீணான அதிர்வலைகளை சமாப்தி செய்துவிட வேண்டும். இப்பொழுது அத்தகைய சேவை செய்யுங்கள்.

 

சுலோகன்:-

தடை என்ற சூட்சுமமான தங்க கயிறுகளிலிருந்து முக்தி அடையுங்கள் (விடுபடுங்கள்), முக்தி வருடத்தினைக் கொண்டாடுங்கள்.

 

குறிப்பு:- இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையாகும். அனைவரும் குழுவாக மாலை 6.30 முதல் 7.30 மணி வரை சர்வதேச யோக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். இணைந்த சொரூபத்தின் நினைவில் இருந்து தன்னுடைய சூட்சும விருத்தி மூலம் சக்திசாலியான வாயுமண்டலத்தை உருவாக்கக்கூடிய சேவை செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி