13.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

"இனிமையான குழந்தைகளே! ஆத்ம அபிமானியாகிய தந்தை உங்களுக்கு ஆத்ம அபிமானி ஆகுங்கள் எனும் பாடத்தை கற்பிக்கின்றார், உங்களுடைய முயற்சி தேக அபிமானத்தை விட வேண்டும்"

 

கேள்வி:

தேக அபிமானியாக ஆவதின் மூலம் எந்த முதல் வியாதி உருவாகிறது?

 

பதில்:

பெயர் ரூபத்தின் வியாதியாகும். இந்த வியாதி தான் விகாரியாக மாற்றிவிடுகிறது. ஆகையினால் ஆத்ம அபிமானியாகி இருப்பதற்கான பயிற்சி செய்யுங்கள், என்று கூறுகின்றார். இந்த சரீரத்தின் மீது உங்களுடைய பற்று இருக்கக் கூடாது. தேகத்தின் பற்றை விட்டுவிட்டு ஒரு பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் தூய்மையாகி விடுவீர்கள். பாபா உங்களை வாழ்க்கை பந்தனத்திலிருந்து ஜீவன் முக்தர்களாக மாறுவதற்கான யுக்தியை கூறுகின்றார். இது தான் படிப்பாகும்.

 

ஓம் சாந்தி.

ஆத்ம அபிமானியாக இருப்பதற்கான பயிற்சி செய்யுங்கள், என்று பாபா கூறுகின்றார். யாரை நினைவு செய்ய வேண்டும்? பாபாவை. பாபாவைத் தவிற வேறு யாரையும் நினைவு செய்யக் கூடாது. பாபாவிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி கிடைக்கிறது என்றால் அவரை நினைவு செய்ய வேண்டும். எல்லைக்கப்பாற்பட்ட பாபா வந்து ஆத்ம-அபிமானியாகுங்கள் என்று புரிய வைக்கின்றார். தேக அபிமானத்தை விட்டுக் கொண்டே செல்லுங்கள். அரைக்கல்பம் நீங்கள் தேக அபிமானிகளாக இருக்கின்றீர்கள், பிறகு அரைக்கல்பம் ஆத்ம அபிமானியாக ஆகி இருக்க வேண்டும். சத்யுகம்-திரேதாவில் நீங்கள் ஆத்ம- அபிமானிகளாக இருந்தீர்கள். அங்கே நாம் ஆத்மா என்பது தெரிந்திருக்கிறது, இப்போது இந்த சரீரம் வயதாகி விட்டது, அதனை இப்போது விடுகிறோம். இதை மாற்ற வேண்டும் (பாம்பைப் போல்). நீங்கள் கூட பழைய சரீரத்தை விட்டுவிட்டு மற்றொரு சரீரத்தில் பிரவேசம் ஆகின்றீர்கள். ஆகையினால் நீங்கள் இப்போது ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். யார் ஆத்ம அபிமானியாக ஆக்குவது? பாபா. யார் எப்போதும் ஆத்ம அபிமானியாக இருக்கின்றாரோ, அவர். அவர் ஒருபோதும் தேக அபிமானியாக ஆவதில்லை. ஒரு முறை வருகின்றார் என்றாலும் கூட தேக-அபிமானியாக ஆவதில்லை, ஏனென்றால் இந்த சரீரம் வேறொருவருடையது கடனாக வாங்கியிருக்கின்றார். இந்த சரீரத்தின் மீது (பிரம்மாவின் சரீரத்தின் மீது) அவருக்கு பற்று இருப்பதில்லை. கடன் வாங்குபவர்களுக்கு பற்று இருப்பதில்லை. இந்த சரீரத்தை விட வேண்டும், என்பதை தெரிந்திருக்கின்றார். நான் தான் வந்து குழந்தைகளாகிய உங்களை தூய்மையாக்குகின்றேன், என்று பாபா புரிய வைக்கின்றார். நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள் பிறகு தமோபிரதானமாக ஆகியிருக்கின்றீர்கள். பிறகு இப்போது தூய்மை ஆவதற்காக உங்களுக்கு என்னோடு யோகம் கற்றுத் தருகின்றேன். குழந்தைகள் தந்தையை நினைவு செய்கிறார்கள். இப்போது நீங்களும் கூட பாபாவை நினைவு செய்ய வேண்டும். ஆத்மா தான் நினைவு செய்கிறது. இராவண இராஜ்யம் ஆரம்பமாகும்போது குழந்தைகளாகிய நீங்கள் தேக அபிமானிகளாக ஆகி விடுகின்றீர்கள். பிறகு பாபா வந்து ஆத்ம அபிமானியாக மாற்றுகின்றார். தேக அபிமானிகளாக ஆவதின் மூலம் பெயர்-ரூபத்தில் மாட்டிக் கொள்கிறீர்கள். விகாரிகளாக ஆகி விடுகிறீர்கள். இல்லையென்றால் நீங்கள் அனைவரும் நிர்விகாரிகளாக இருந்தீர்கள். பிறகு மறுபிறவி எடுத்து-எடுத்து விகாரிகளாக ஆகி விடுகிறீர்கள். எதை ஞானம் என்றும், எதை பக்தி என்றும் சொல்லப்படுகிறது, என்பதை பாபா தான் புரிய வைத்தார். பக்தி துவாபர யுகத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. எப்போது ஐந்து விகாரங்கள் எனும் இராவணனின் இராஜ்யம் ஸ்தாபனை ஆகின்றதோ, அப்போதிலிருந்து ஆகும். பாரதத்தில் தான் இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எவ்வளவு காலம் இராம இராஜ்யம், எவ்வளவு காலம் இராவண இராஜ்யம் நடக்கிறது என்பது தெரியாது. இந்த சமயம் அனைவரும் தமோபிரதானம், கல்லுபுத்தியுடையவர்களாக இருக்கின்றார்கள். கீழான தன்மையினால் பிறப்பே நடக்கிறது ஆகையினால் இதனை விகார உலகம், என்று சொல்லப்படுகிறது. புதிய உலகம் மற்றும் பழைய உலகத்திற்கும் இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. புதிய உலகத்தில் பாரதம் மட்டும் தான் இருந்தது. பாரதத்தைப் போல் தூய்மையான கண்டமாக வேறு எதுவும் ஆக முடியாது. பிறகு பாரதத்தைப்போல தூய்மை இழந்ததாக வேறு எதுவும் ஆவதில்லை. எது தூய்மையாக இருந்ததோ, அது தான் பிறகு தூய்மையற்றதாக ஆகின்றது. தேவி-தேவதைகள் தூய்மையாக இருந்தார்கள், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு மறுபிறவி எடுத்து-எடுத்து தூய்மையற்றவர்களாக ஆகிவிட்டார்கள். அனைவரையும் விட அதிக பிறவிகளும் இவர்கள் தான் எடுக்கிறார்கள். பாபா புரிய வைக்கின்றார், நான் நிறைய பிறவிகளின் கடைசி பிறவியில் அதிலும் கடைசியில் வருகின்றேன். இந்த முதல் நம்பரில் இருப்பவர் தான் 84 பிறவிகளை முடித்து வானப்பிரஸ்த்தத்தில் வருகின்றார், அப்போது நான் பிரவேசம் செய்கின்றேன். திருமூர்த்தி பிரம்மா-விஷ்ணு-சங்கர் கூட இருக்கின்றனர், ஆனால் யாருக்கும் தெரியாது, ஏனென்றால் தமோபிரதானமாக இருக்கின்றார்கள் அல்லவா. யாருடைய வரலாறும் எந்த மனிதர்களுக்கும் தெரியவில்லை. பூஜை செய்கிறார்கள் ஆனால் அனைத்தும் கண்மூடித்தனமானது. பக்தி பிராமணர்களின் இரவு மற்றும் சத்யுகம்-திரேதா பிராமணர் களின் பகலாகும். இப்போது பிரம்மா பிரஜாபிதாவாக இருக்கின்றார் என்றால் கண்டிப்பாக குழந்தைகளும் இருப்பார்கள் அல்லவா. பிராமணர்களின் குலம் இருக்கிறது, இராஜ்யம் இல்லை, என்பதும் புரிய வைக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் உயர்ந்தவர்கள் (உச்சிக் குடுமி போன்றவர்கள்). குடுமி பார்ப்பதற்கும் தெரிகிறது. கற்பிக்கக் கூடியவர் உயர்ந்ததிலும் உயர்ந்த பரமபிதா பரமாத்மா ஆவார். அவருடைய பெயர் ஒன்று தான், ஆனால் பக்தி மார்க்கத்தில் அளவற்ற பெயர்கள் வைத்து விட்டனர். பக்தி மார்க்கத்தில் பகட்டு அதிகமாகி விடுகிறது. எவ்வளவு சித்திரங்கள், எவ்வளவு கோவில்கள், யக்ஞங்கள், தவம், தானம், புண்ணியம் போன்றவைகள் செய்கிறார்கள். பிறகு பக்தியின் மூலம் பகவான் கிடைக்கின்றார், என்று கூறுகிறார்கள். யாருக்கு கிடைக்கின்றார்? யார் முதல்-முதலில் வருகிறார்களோ, அவர்கள் தான் முதல்-முதலில் பக்தியை ஆரம்பிக்கின்றனர். யார் பிராமணனிலிருந்து தேவதையாக ஆகின்றார்களோ, அவர்கள் தான் எப்படி இராஜா-இராணியோ, அப்படி பிரஜைகளும்........ சர்வகுணங்களும் நிறைந்தவர்கள், 16 கலைகள் முழுமையானவர்களாக, முழுமையாக விகாரமற்றவர்களாக, அகிம்சையை முதன்மையாக கொண்ட தேவி-தேவதா தர்மத்தவர்களாக இருந்தனர். பாரதத்தில் ஒரு ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது அப்போது அளவற்ற செல்வம் இருந்தது. பாபா நினைவூட்டுகின்றார் - முதல்-முதலில் தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் தான் 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள். 84 பிறவிகள் மட்டுமே, பிறகு அவர்கள் 84 லட்சம் பிறவிகள் என்று சொல்லிவிட்டார்கள். கல்பத்தின் ஆயுளும் கூட இலட்சக் கணக்கான ஆண்டுகள், என்று கூறி விட்டார்கள். பாபா கூறுகின்றார், இது 5 ஆயிரம் ஆண்டுகளின் நாடகமாகும். எனவே இது ஞானமாகும். ஒரேயொரு சிவபாபா தான் ஞானக்கடல் என்று பாடப்படுகின்றார். அவர்கள் எல்லைக்குட்பட்ட தந்தை, இவர் எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தையாவார். எல்லைக்குட்பட்ட தந்தைகள் இருந்தாலும், துக்கம் வரும்போது எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தையை நினைவு செய்கிறார்கள். மறுபிறவி எடுத்து-எடுத்து உலகம் பழையதாக தமோபிரதானமாக ஆகி விடுகிறது, அப்போது பாபா மீண்டும் வருகின்றார். ஒரு வினாடியில் ஜீவன் முக்தி கிடைக்கிறது. யாரிடமிருந்து? எல்லையற்ற தந்தையிடமிருந்து. எனவே கண்டிப்பாக ஜீவன் பந்தனத்தில் இருக்கின்றீர்கள். தூய்மையற்றவர்களாக இருக்கின்றீர்கள் பிறகு தூய்மையானவர்களாக ஆக வேண்டும். இது ஒரு வினாடியின் விஷயமாகும். ஞானம் ஒரு வினாடியினுடையதாகும், ஏனென்றால் படிப்பு நீங்கள் நிறைய படிக்கின்றீர்கள். அவர்கள் அனைவரும் மனிதர்கள், மனிதர்களுக்கு படிப்பிக்கின்றார்கள். ஆத்மா தான் படிக்கின்றது. ஆனால் தேக-அபிமானத்தின் காரணத்தினால் தன்னை ஆத்மா என்பதை மறந்து நான் மந்திரியாக இருக்கின்றேன், இன்னாராக இருக்கின்றேன், என்று சொல்லிவிடுகிறார்கள். உண்மையில் ஆத்மாக்களாவர். ஆத்மா ஆண்-பெண் உடலின் மூலம் நடிப்பை நடிக்கிறது, என்பதை மறந்து விடுகிறார்கள். இல்லையென்றால் ஆத்மா தான் சரீரத்தின் மூலம் நடிப்பை நடிக்கிறது. லர் என்னவாக, சிலர் என்னவாக ஆகின்றார்கள்.

 

பாபா புரிய வைக்கின்றார், இப்போது இந்த பழைய உலகம் மாறி புதியதாக ஆகின்றது. உலகத்தின் வரலாறு-புவியியல் கண்டிப்பாக திரும்பவும் நடக்கிறது. புதிய உலகம் சதோபிரதானமானதாகும். வீடு கூட முதலில் புதியதாக இருக்கிறது என்றால் சதோபிரதானம், என்று சொல்வார்கள் பிறகு பழையதாக வலுவிழந்து தமோபிரதானமாக ஆகிறது. இந்த எல்லையற்ற நாடகம் அல்லது சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தை புரிந்து கொள்ள வேண்டும், எனென்றால் இது படிப்பாகும். பக்தி அல்ல. பக்தியை படிப்பு என்று சொல்வதில்லை, ஏனென்றால் பக்தியில் குறிக்கோள் ஏதும் இருப்பதில்லை. பிறவி-பிறவியாக வேத-சாஸ்திரம் போன்றவைகளை படித்துக் கொண்டே இருங்கள். இங்கே உலகம் மாற வேண்டும், சத்யுகம்-திரேதாவில் பக்தி இல்லை. பக்தி துவாபர யுகத்திலிருந்து ஆரம்பமாகிறது. ஆக இதை பாபா அமர்ந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். இதனை ஆன்மீக ஞானம் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீக ஞானத்தை யாரும் கற்றுக் கொடுப்பார்கள்? பரம் ஆத்மா அதாவது பரமாத்மா தான் கற்றுக் கொடுப்பார். அவர் அனைவருக்குமானவர் அல்லவா. லௌகீகத் தந்தையை ஒருபோதும் பரமபிதா என்று சொல்ல மாட்டார்கள். பரலௌகீகமானவரை பரமபிதா என்று சொல்லப்படுகிறது. அவர் பரந்தாமத்தில் வசிக்கக் கூடியவர் ஆவார். பாபாவை ஹே காட் (ஏர்க்), ஹே ஈஸ்வரா, என்று நினைவு செய்கிறார்கள். உண்மையில் அவருடைய பெயர் ஒன்று தான் ஆகும். ஆனால் பக்தியில் அனேக பெயர்கள் கொடுத்து விட்டார்கள். பக்தி அதிகமாக பரவியிருக்கிறது. அவையனைத்தும் மனிதர்களின் வழியாகும். இப்போது மனிதர்களுக்கு ஈஸ்வரிய வழி வேண்டும். ஈஸ்வரனுடைய வழி, உயர்ந்த வழியாகும் (ஸ்ரீமத்). ஸ்ரீ ஸ்ரீ 108 மாலை கூட உருவாகிறது அல்லவா. இது குடும்ப மார்க்கத்தின் மாலை உருவாகிறது. பிறகு மறுபிறவி எடுத்து-எடுத்து ஏணிப்படியில் இறங்கி எதுவும் இல்லாதவர்களாக ஆகி விடுகின்றீர் கள். புத்தி தெளிவற்றதாக ஆகும்போது மனிதர்கள் திவாலாகி விடுகிறார்கள். யார் 100 சதவீதம் அனைத்தும் நிறைந்தவர்களாக இருந்தார்களோ, அதிலிருந்து இந்த சமயம் எதுவும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். புத்திக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. அந்த பூட்டை யார் போட்டது? காட்ரெஜ் பூட்டு பூட்டப்பட்டு விடுகிறது. பாரதம் எந்தளவிற்கு நம்பர் ஒன் ஆக இருந்ததோ, அந்தளவிற்கு வேறு எந்த கண்டமும் இல்லை. பாரதத்திற்கு நிறைய மகிமைகள் இருக்கிறது. பாரதம் அனைத்து தர்மத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மிகப்பெரியதிலும் பெரிய தீர்த்த ஸ்தலமாக இருக்கிறது. ஆனால் நாடகத்தின் படி கீதையை அவமதித்து விட்டார்கள். பாரதம் மற்றும் முழு உலகத்தின் தவறாகும். எந்த கீதை ஞானத்தின் மூலம் பாபா புதிய உலகத்தை உருவாக்குகிறாரோ, மேலும் அனைவருக்கும் சத்கதியை ஏற்படுத்துகிறாரோ, அந்த கீதையை பாரதத்தில் தான் அவமதித்து  விட்டார்கள்,

 

பாரதம் அனைத்திலும் உயர்ந்தது மேலும் மிகுந்த செல்வம் மிக்க கண்டமாக இருந்தது அது மீண்டும் அப்படி ஆகிக் கொண்டிருக்கிறது. இது தலைகீழான மரமாகும், இதனுடைய விதை மேலே இருக்கிறது. அவரை விருக்ஷபதி என்று சொல்லப்படுகிறது. பிரகஸ்பதி திசை அமருகிறது அல்லவா. பாபா புரிய வைக்கின்றார், விருக்ஷபதியாகிய நான் வரும்போது பாரதத்தில் பிரகஸ்பதியின் திசை அமருகிறது. உயர்ந்ததாக ஆகி விடுகிறது. பிறகு இராவணன் வந்தான் என்றால் இராகு திசை அமர்ந்து விடுகிறது. பாரதத்தின் நிலை என்னவாகி விடுகிறது. அங்கே உங்களுடைய ஆயுளும் அதிகமாகி விடுகிறது, ஏனென்றால் தூய்மையாக இருக்கின்றீர்கள். அரைக்கல்பம் நீங்கள் 21 பிறவிகள் எடுக்கின்றீர்கள். மீதி அரைக்கல்பம் போகியாக ஆவதினால் ஆயுளும் குறைந்து விடுகிறது பிறகு நீங்கள் 63 பிறவிகள் எடுக்கின்றீர்கள். இப்போது பாபா புரிய வைக்கின்றார், சதோ பிரதானம் ஆக வேண்டும் ஆகையினால் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். அனைத்து தர்மத்தைச் சேர்ந்தவர்களும் இந்த சமயத்தில் தமோபிரதானமாக இருக்கின்றார்கள். நீங்கள் அனைவருக்கும் இந்த ஞானத்தை கொடுக்கலாம். ஆத்மாக்களின் தந்தை ஒருவரே ஆவார். அனைவரும் சகோதரர்கள், ஏனென்றால் ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகளாவோம். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் சகோதரர்கள், என்று என்னவோ சொல்கிறார்கள், ஆனால் அர்த்தம் தெரிந்திருக்கவில்லை. ஆத்மா சரி என்று சொல்கிறது. அனைத்து சகோதரர்களின் தந்தை ஒருவர் ஆவார். பெரிய தந்தை தான் ஆஸ்தி கொடுக்க வேண்டும். அவர் பாரதத்தில் தான் வருகின்றார். சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள், ஆனால் அவர் எப்போது வந்தார், என்பது யாருக்கும் தெரியாது. உங்களுடைய யுத்தம் 5 விகாரங்களோடு ஆகும். காமம் உங்களுடைய முதல் நம்பர் எதிரியாகும். இராவணனை எரிக்கிறார்கள். ஆனால் அவன் யார்? ஏன் எரிக்கிறார்கள்? எதுவும் தெரியாது. துவாபர யுகத்திருந்து நீங்கள் கீழே இறங்கி இந்த சமயம் தூய்மையற்றவர்களாக ஆகி விட்டீர்கள். ஒருபுறம் சிவபாபாவை நினைத்து பூஜிக்கிறீர்கள், மற்றொருபுறம் அவர் சர்வவியாபி, என்று சொல்கிறீர்கள். யார் உங்களை உலகத்திற்கு எஜமானர்களாக மாற்றினாரோ அவரை நீங்கள் மாயையின் மயக்கத்திற்குள்ளாகி திட்டுகிறீர்கள். பாபா கூறுகின்றார்: இனிமையான குழந்தைகளே, நீங்கள் என்னை கணக்கிலடங்கா பிறவிகளில் கொண்டு சென்று விட்டீர்கள். என்னை ஒவ்வொரு அணுவிலும் இருக்கின்றேன், என்று கூறிவிட்டீர்கள். இப்படி கூட நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லையற்ற தந்தையை நிந்தனை செய்து எவ்வளவு பாவ ஆத்மாக்களாக ஆகி விட்டீர்கள். இராவண இராஜ்யம் அல்லவா.

 

இந்த சமயத்தில் அனைவரும் பக்தர்களாக இருக்கின்றார்கள், என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அனைவருக்கும் சத்கதியை செய்விக்கக் கூடியவர் யார்? உண்மையான கண்டத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் அனைவருக்கும் தந்தையாவார். இராவணனை பாபா என்று சொல்லப்படுவதில்லை. ஒவ்வொரு வரிடத்திலும் 5 விகாரம் இருக்கிறது. விகாரத்தின் மூலம் பிறக்கிறார்கள், ஆகையினால் தான் கீழானவர்கள், என்று சொல்லப்படுகிறது. தேவதைகளை சம்பூரண நிர்விகாரிகள், என்று சொல்லப்படுகிறது. இப்போது சம்பூரண விகாரிகளாக இருக்கிறார்கள். தேவதைகள் யார் பூஜிக்கத்தக்கவர்களாக இருந்தார்களோ, அவர்கள் தான் பூஜாரிகளாக ஆகிறார்கள். அவர்கள் ஆத்மா தான் பரமாத்மா ஆகிறது, என்று சொல்லிவிட்டார்கள். இது தவறு, என்று பாபா கூறுகின்றார். முதன் முதலில் தங்களை ஆத்மா என்பதை நிச்சயம் செய்ய வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் இந்த சமயத்தில் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்களாவோம், பிறகு தேவதா குலத்திற்கு செல்வோம். இந்த பிராமண குலம் சர்வோத்தம குலமாகும். பிராமணர்களின் இராஜ்யம் கிடையாது. குடுமி பிராமணர்களுடையதாகும். நீங்கள் பிராமணர்கள் அல்லவா. அனைவருக்கும் மேலே சிவபாபா இருக்கின்றார். பாரதத்தில் விராட ரூபம் (நான்கு வர்ணங்களின் ரூபம்) உருவாக்குகிறார்கள். அதில் பிராமணர்களின் குடுமியும் இல்லை, பிராமணர்களின் தந்தையும் இல்லை. அர்த்தம் எதையும் புரிந்து கொள்வதில்லை. திருமூர்த்தியின் அர்த்தமும் புரிந்து கொள்வதில்லை. இல்லையென்றால் பாரதத்தின் இராஜ முத்திரை திருமூர்த்தி சிவனுடையதாக இருக்க வேண்டும். இப்போது இது முட்கள் நிறைந்த காடாக இருக்கிறது. எனவே காட்டு மிருகங்களின் இராஜ முத்திரை உருவாக்கி விட்டார்கள். பிறகு அதில் சத்தியமே வெல்லும், என்று எழுதியிருக்கிறார்கள். சத்யுகத்தில் சிங்கமும் ஆடும் ஒன்றாக நீர் அருந்துவதாக காட்டுகிறார்கள். சத்தியமே வெல்லும் என்றால் வெற்றியாகும். அனைவரும் இனிமையானவர்களாகி இருப்பார்கள். உவர்ப்பானவர்களாக இருப்பதில்லை. இராவண இராஜ்யத்தில் உவர்ப்பாகவும், இராம இராஜ்யத்தில் இனிமையானவர்களாகவும் ஆகி விடுகிறார்கள். இதனை முட்கள் நிறைந்த காடு, என்று சொல்லப்படுகிறது. ஒருவர் மற்றவருக்கு முதல் நம்பர் முள் விகாரத்தை தைக்கிறார்கள். பாபா கூறுகின்றார், காமம் மிகப்பெரிய எதிரியாகும். இது முதல், இடை, கடைசியில் துக்கம் கொடுக்கக் கூடியதாகும். பெயரே இராவண இராஜ்யமாகும். பாபா கூறுகின்றார், இந்த 5 விகாரங்களின் மீது வெற்றி அடைந்து உலகத்தை வென்றவர்களாக ஆகுங்கள். இந்த கடைசி பிறவியில் நிர்விகாரிகளாக ஆகுங்கள். நீங்கள் தூய்மையற்றவர்கள் தமோபிரதானமாக ஆகியுள்ளீர்கள், பிறகு சதோபிரதான தூய்மையானவர்களாக ஆகுங்கள். கங்கை ஒன்றும் பதீத-பாவனி (தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவது) இல்லை. சரீரத்தின் அழுக்கை வீட்டில் தண்ணீரின் மூலம் கூட நீக்க முடியும். ஆத்மா சுத்தமாக முடியாது. பக்தி மார்க்கத்தில் எவ்வளவு அதிகத்திலும் அதிகமான குருமார்கள் இருக்கிறார்கள். சத்குரு ஒருவரே சத்கதியை செய்விக்கக் கூடியவர். பரம தந்தை, பரம் டீச்சர், பரம் சத்குருவாகவும் இருக்கின்றார். அவர் தான் உங்களுக்கு சிருஷ்டியின் முதல், இடை, கடைசியின் ஞானத்தை சொல்கின்றார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் வணக்கம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சதோபிரதானம் ஆவதற்கு பாபாவைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்யக் கூடாது. ஆத்ம அபிமானியாக ஆவதற்கான பயிற்சி செய்ய வேண்டும்.

 

2. அனைவரிடமும் இனிமையானவர்களாக ஆகி இருக்க வேண்டும். இந்த கடைசி பிறவியில் விகாரங்களின் மீது வெற்றி அடைந்து உலகத்தை வென்றவர்களாக ஆக வேண்டும்.

 

வரதானம்:

ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியின் நிலையான நம்பிக்கை மற்றும் குஷியில் இருக்கக் கூடிய அதிகாரி ஆத்மா ஆகுக.

 

வெற்றி நமது பிறப்புரிமையாக இருக்கிறது - இந்த நினைவின் மூலம் சதா பறந்துக் கொண்டேயிருங்கள். என்ன நடந்தாலும் - நான் சதா வெற்றியாளன் என்ற நினைவை கொண்டு வாருங்கள். என்ன நடந்தாலும் - இந்த நம்பிக்கை நிலையானதாக இருக்க வேண்டும். குஷியின் ஆதாரம் நம்பிக்கை. நம்பிக்கை குறைவாக இருந்தால் குஷியும் குறைந்து விடும். ஆகையால் நம்பிக்கை புத்தியுடைவர் வெற்றியடைவர் என்று கூறப்படுகிறது. அவ்வப்பொழுது நம்பிகையுடையவர் ஆக வேண்டாம். அழிவற்ற தந்தை இருக்கிறார் என்றால் அழிவற்ற பிராப்திக்கு உரியவர் ஆகுங்கள். ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியின் நம்பிக்கை மற்றும் குஷியிருக்கும்.

 

சுலோகன்:

பாபாவினுடைய அன்பின் குடை நிழலுக்குக் கீழ் இருந்தால் எந்த விதமான தடையும் தடுத்து நிறுத்த முடியாது.

 

ஓம்சாந்தி