03.01.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
அல்ஃப்
மற்றும்
பே,
தந்தை
மற்றும்
ஆஸ்தி
நினைவிருந்தால் குஷியின்
அளவு
அதிகரித்துக்
கொண்டே
இருக்கும்.
இது
மிகவும்
சுலபமான,
ஒரு
விநாடியின் விசயமாகும்.
கேள்வி
:
எல்லையற்ற
குஷி
எந்தக்
குழந்தைகளுக்கு
இருக்கும்?
சதா
குஷியின்
அளவு
அதிகரித்துக் கொண்டே
இருக்க
வேண்டுமானால்
அதற்கான
சாதனம்
எது?
பதில்
:
எந்தக்
குழந்தைகள்
அசரீரி
ஆவதற்கான
அப்பியாசம்
செய்கின்றனரோ,
பாபா
சொல்வதை
நன்கு தாரணை
செய்து
மற்றவர்களுக்கும்
தாரணை
செய்விக்கின்றனரோ,
அவர்களுக்குத்
தான்
எல்லையற்ற
குஷி
இருக்கும்.
குஷி
சதா
அதிரித்துக்
கொண்டே
இருப்பதற்காக
அழிவற்ற
ஞான
ரத்தினங்கனை
தானம்
செய்து கொண்டே
இருங்கள்.
அநேகருக்கு
நன்மை
செய்யுங்கள்.
சதா
இந்த
நினைவு
இருக்க
வேண்டும்
–
நாம் இப்போது
சுகம்
மற்றும்
சாந்தியின்
சிகரத்திற்குச்
சென்று
கொண்டிருக்கிறோம்
-
அப்போது
குஷி
இருக்கும்.
ஓம்
சாந்தி.
பாப்தாதாவின்
சிந்தனை
-
ஒரு
விநாடியில்
குழந்தைகளை
எழுதச்
செய்ய
வேண்டும்,
யாருடைய
நினைவில்
அமர்ந்திருக்கிறீர்கள்
என்று.
இதை
எழுதுவதில்
நேரம்
ஒன்றும்
ஆகாது.
ஒவ்வொருவரும் ஒரு
விநாடியில்
எழுதி
பாபாவுக்குக்
காட்ட
வேண்டும்.
(அனைவரும்
எழுதி
பாப்தாதாவுக்குக்
காட்டினர்.
பிறகு பாபாவும்
எழுதினார்.
பாபா
எழுதியதை
யாருமே
எழுதவில்லை).
பாபா
எழுதியிருந்தார்
-
அல்ஃப்
மற்றும்
பே
-
எவ்வளவு
சுலபம்!
அல்ஃப்
என்றால்
பாபா,
பே
என்றால்
இராஜ்யம்
(ஆஸ்தி).
பாபா
படிப்பு
சொல்லித் தருகிறார்,
நீங்கள்
இராஜ்யத்தை
அடைகிறீர்கள்.
இதைவிட
அதிகமாக
எழுவதற்கான
அவசியம்
இல்லை.
நீங்களோ
எழுதுவதற்கு
இரண்டு
நிமிடங்கள்
எடுத்துக்
கொண்டீர்கள்.
அல்ஃப்,
பே
என்பது
ஒரு
விநாடியின் விசயம்.
சந்நியாசிகள்
அல்.ஃபை
மட்டும்
நினைவு
செய்வார்கள்.
உங்களுக்கு
இராஜ்யமும்
நினைவுள்ளது.
நினைவின்
பழக்கமாக
ஆகிவிடும்.
புத்தியில்
பதிந்து
விட்டால்
குஷியின்
அளவு
அதிகரித்துக்
கொண்டே இருக்கும்.
அல்ஃப்
என்பதன்
அர்த்தம்
எவ்வளவு
உயர்ந்ததிலும்
உயர்ந்தது!
அதை
விட
உயர்ந்த
பொருள் வேறு
எதுவும்
கிடையாது.
வசிக்கும்
இடமும்
உயர்ந்ததிலும்
உயர்ந்தது.
ஒரு
விநாடியில்
முக்தி-ஜீவன்முக்தி
என்பதன்
அர்த்தத்தையும்
யாரும்
அறிந்திருக்கவில்லை.
அதற்கும்
கூட
நிச்சயமாக
அர்த்தம்
இருக்கும்.
குழந்தை
பிறந்து
விட்டால்
எழுதுகின்றனர்,
இத்தனை
மணி,
இத்தனை
நிமிடம்,
இத்தனை
விநாடி
என்று.
டிக்-டிக்
என்று
நேரம்
சென்று
கொண்டே
இருக்கிறது.
டிக்
ஆனதும்
அல்ஃப்-பே,
அவ்வளவு
தான்,
ஒரு விநாடி
கூட
ஆகாது.
சொல்வதற்கும்
கூடத்
தேவை
யில்லை.
நினைவோ
இருக்கவே
செய்கிறது.
குழந்தைகளாகிய உங்களுக்கு
அவ்வளவு
நல்ல
மனநிலை
இருக்க
வேண்டும்.
ஆனால்
எப்போது
நினைவு
இருக்கிறதோ அப்போது
தான்
அந்த
நிலை
இருக்கும்.
இங்கே
அமர்ந்திருக்
கிறீர்கள்
என்றால்
தந்தை
மற்றும்
இராஜ்யம் நினைவிருக்க
வேண்டும்.
புத்தி
பார்க்கின்றது,
அது
திவ்ய
திருஷ்டி
எனச்
சொல்லப்படுகின்றது.
ஆத்மாவும் பார்க்கின்றது.
தந்தையை
ஆத்மா
தான்
நினைவு
செய்து
கொண்டிருக்கும்.
நீங்களும்
தந்தையை
நினைவு செய்வீர்களானால்
இராஜ்யமும்
சேர்ந்து
நினைவுக்கு
வரும்.
எவ்வளவு
நேரம்
பிடிக்கின்றது!
இங்கேயும்
கூட நினைவில்
அமர்வீர்களானால்
மிகவும்
குஷியாகி
விடுவீர்கள்.
பாபாவும்
இந்தக்
குஷியில்
அமர்ந்துள்ளார்.
பாபாவுக்கு
இங்குள்ள
எந்த
விசயமும்
நினைவே
இல்லை.
பாபா
நினைவு
செய்வது
அங்குள்ள
விசயங்கள்.
பாபா
மற்றும்
இராஜ்யம்
வாசலில் நின்று
கொண்டிருப்பது
போலத்
தான்.
தந்தை
சொல்கிறார்,
குழந்தைகளாகிய உங்களுக்காக
இராஜ்யத்தைக்
கொண்டு
வந்துள்ளேன்.
நீங்கள்
நினைவு
மட்டும்
செய்வதில்லை.
அதனால் குஷி
இருப்பதில்லை.
நீங்கள்
அமரும்போதும்
எழுந்திருக்கும்
போதும்
தன்னை
ஆத்மா
என
உணருங்கள்.
தந்தையாகிய
என்னையும்
ஆஸ்தியையும்
நினைவு
செய்யுங்கள்.
நீங்கள்
வசிக்கக்
கூடிய
இருப்பிடம்
எவ்வளவு உயர்ந்த
இடம்!
உலகத்துக்கு
இது
தெரியாது.
மனிதர்கள்
முக்தியில்
செல்வதற்காக
எவ்வளவு
கஷ்டப்படுகின்றனர்!
இப்போது
முக்திதாம்
எங்கே
உள்ளது?
நீங்கள்
புரிந்து
கொண்டிருக்கிறீர்கள்,
ஆத்மாவோ
ராக்கெட்
போன்றது.
அந்த
மனிதர்கள்
சந்திரன்
வரை
செல்கின்றனர்.
பிறகு
போலார்.
நீங்களோ
போலாரை
விடவும்
உயரத்தில் செல்கிறீர்கள்.
சந்திரனோ
இந்த
உலகத்தினுடையது.
சூரிய
சந்திரனுக்கெல்லாம்
அப்பால்,
சப்தத்தையும்
கடந்து அப்பால்
எனச்
சொல்லப்படுகின்றது.
இந்த
சரீரத்தை
விட்டுவிட
வேண்டும்.
இனிமையான
அமைதி
வீட்டிலிருந்து வருகிறீர்கள்.
வரவும்
போகவும்
நேரம்
பிடிப்பதில்லை.
அது
நம்முடைய
வீடு.
இங்கோ
எங்கே
சென்றாலும் நேரம்
பிடிக்கின்றது.
ஆத்மா
சரீரத்தை
விட்டால்
ஒரு
விநாடியில்
எங்கெங்கோ
சென்று
விடுகின்றது.
ஒரு சரீரத்தை
விட்டு
வேறொன்றில்
போய்ப்
பிரவேசமாகிறது.
ஆக,
தன்னை
ஆத்மா
என
உணர
வேண்டும்.
நீங்கள்
மிக
உயர்ந்த
சிகரத்திற்குச்
செல்கிறீர்கள்.
மனிதர்கள்
சாந்தியை
விரும்புகிறார்கள்.
சாந்தியின்
மிக உயர்ந்த
சிகரம்
நிராகாரி
உலகம்
மற்றும்
சுகத்தின்
மிக
உயர்ந்த
சிகரம்
சொர்க்கம்.
உயர்ந்ததிலும்
உயர்ந்த டவர்
(கோபுரம்)
எனச்
சொல்லப்படுகின்றது.
உங்களுயை
வீடு
கூட
எவ்வளவு
உயர்ந்தது!
உலக மனிதர்கள்
ஒருபோதும்
இந்த
விசயங்கள்
பற்றிச்
சிந்திப்
பதில்லை.
அவர்களுக்கு
இந்த
விசயங்களைப்
புரிய வைப்பவர்கள்
யாரும்
இல்லை.
அது
சாந்தியின்
டவர்
என்று
சொல்லப்படும்.
மனிதர்களோ
சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்,
உலகத்தில்
சாந்தி
வேண்டும்
என்று.
ஆனால்
அவர்களுக்கு
இதன்
அர்த்தம்
தெரியாது,
சாந்தி எங்கே
உள்ளது
என்று.
இந்த
லட்சுமி-நாராயணர்
சுகத்தின்
உச்சத்தில்
உள்ளனர்.
அங்கே
எந்த
ஒரு
பேராசையும் கிடையாது.
அங்கே
உள்ள
உணவு,
பானம்,
பேசுவது
எல்லாம்
மிகவும்
ராயலாக
இருக்கும்.
மேலும்
அங்கே சுகமும்
உயர்ந்ததாக
இருக்கும்.
அவர்களுடைய
மகிமை
பாருங்கள்,
எவ்வளவு!
ஏனென்றால்
அவர்கள்
மிகுந்த முயற்சி
செய்துள்ளனர்.
இது
ஒன்றல்ல.
முழு
மாலையும்
உருவாகியுள்ளது.
உண்மையில்
9
ரத்தினங்கள் என்பது
பாடப்
பட்டுள்ளது.
நிச்சயமாக
அவர்கள்
குப்தமாக
முயற்சி
செய்திருப்பார்கள்.
தந்தை
மற்றும்
ஆஸ்தியின் நினைவு
இருக்க
வேண்டும்.
அப்போது
தான்
விகர்மங்கள்
விநாசமாகும்.
ஆனால்
மாயா
நினைவு
செய்ய விடுவதில்லை.
சில
நேரம்
காமம்,
சில
நேரம்
கோபம்......
அநேகப்
புயல்களில்
கொண்டு
வந்து
விடுகின்றது.
தன்னுடைய
நாடியைப்
பார்க்க
வேண்டும்.
நாரதருக்கும்
சொல்லப்பட்டது,
முகத்தைப்
பார்
என்று.
ஆக,
அந்த மனநிலை
இப்போது
இல்லை.
உருவாக்க
வேண்டும்.
பாபா
நோக்கம்
மற்றும்
குறிக்கோளை
நிச்சயமாகச் சொல்வார்.
உள்ளுக்குள்
புருஷார்த்தம்
செய்து
கொண்டே
இருங்கள்.
இன்னும்
போகப்போக
அந்த
மனோபாவம் உங்களுடையதாக
இருக்கும்.
அசரீரியாக
இருப்பதற்கான
பயிற்சி
செய்ய
வேண்டும்.
இப்போது
திரும்பிச் செல்ல
வேண்டும்.
பாபா
சொல்லியிருக்கிறார்,
என்னை
நினைவு
செய்யுங்கள்
என்று.
நினைவு
செய்யவில்லை என்றால்
தண்டனைகளும்
அதிகம்
அடைய
நேரிடும்.
மேலும்
பதவியும்
குறைந்ததாகி
விடும்.
இவை
மிகவும் சூட்சுமமான
விசயங்கள்.
அந்த
மனிதர்கள்
அறிவியலில்
எவ்வளவு
ஆழமாகச்
செல்கின்றனர்!
என்னென்ன வெல்லாம்
உருவாக்கிக்
கொண்டே
செல்கின்றனர்!
அந்த
சம்ஸ்காரமும்
வேண்டும்
இல்லையா?
அவர்கள்
பிறகு அங்கேயும்
(சத்யுகத்தில்)
சென்று
இந்தப்
பொருள்களை
உருவாக்குவார்கள்.
இந்த
உலகம்
மாறப்
போகிறது,
அவ்வளவு
தான்.
இங்குள்ள
சம்ஸ்காரத்தின்
அனுசாரம்
தான்
போய்
ஜென்மம்
எடுப்பார்கள்.
எப்படி
போர் செய்பவர்களின்
புத்தியில்
போர்
செய்யும்
சம்ஸ்காரம்
உள்ளது,
அந்த
சம்ஸ்காரத்தை
அவர்கள்
எடுத்துச் செல்கின்றனர்.
சண்டையிடாமல்
அவர்களால்
இருக்க
முடியாது.
அதிகாரிகள்
முன்
வரிசையாக
நிற்கின்றனர்.
அவர்களை
தேர்ந்தெடுக்கும்
சமயம்
(சிப்பாய்களைத்
தேர்ந்தெடுக்கும்
போது)
சோதித்துப்
பார்க்கின்றனர்,
எந்த ஒரு
நோயும்
இல்லாதிருக்கிறதா
என்று.
கண்-காது
எல்லாம்
சரியாக
இருக்கிறதா
எனப்
பார்க்கின்றனர்.
போரிலோ அனைத்தும்
சரியாக
இருக்க
வேண்டும்.
இங்கேயும்
பார்க்கப்
படுகின்றது,
யார்-யார்
விஜயமாலையில்
மணியாக வருவார்கள்
என்று.
நீங்கள்
புருஷார்த்தம்
செய்து
கர்மாதீத்
நிலை
அடைய
வேண்டும்.
ஆத்மா
அசரீரியாக வந்துள்ளது.
அசரீரி
ஆகிச்
செல்ல
வேண்டும்.
அங்கே
சரீரத்தின்
எந்த
ஒரு
சம்மந்தமும்
கிடையாது.
இப்போது அசரீரி
ஆக
வேண்டும்.
ஆத்மாக்கள்
அங்கிருந்து
வருகின்றனர்.
வந்து
சரீரத்தில்
பிரவேசமாகின்றனர்.
ஏராளமான ஆத்மாக்கள்
வருகின்றனர்.
அனைவருக்கும்
அவரவர்
(நடிப்பதற்கான)
பாத்திரம்
கிடைத்துள்ளது.
புதிய தூய்மையான
ஆத்மாக்கள்
வரும்போது
அவர்களுக்கு
நிச்சயமாக
முதலில்
சுகம்
கிடைக்கின்றது..
அதனால் அவர்களுக்கு
மகிமை
இருக்கிறது.
பெரிய
மரம்
இல்லையா?
எவ்வளவு
பெயர்
பெற்ற
பெரிய
மனிதர்கள் உள்ளனர்!
அவரவர்
சக்தியின்
பிரகாரம்
மிகுந்த
சுகத்தில்
இருப்பார்கள்.
ஆக,
இப்போது
குழந்தைகள்
முயற்சி செய்ய
வேண்டும்.
கர்மாதீத்
நிலையில்
தூய்மையாகிச்
செல்ல
வேண்டும்.
தனது
நடத்தையைப்
பார்க்க வேண்டும்
-
யாருக்கும்
நாம்
துக்கம்
கொடுக்காமல்
இருக்கிறோமா?
பாபா
எவ்வளவு
இனிமையானவர்!
மிகமிக அன்பானவர்
இல்லையா?
ஆக,
குழந்தைகளும்
கூட
அதுபோல்
ஆக
வேண்டும்.
இதையோ
குழந்தைகள் நீங்கள்
அறிவீர்கள்,
பாபா
இங்கே
இருக்கிறார்.
மனிதர்களுக்கு
இது
தெரியாது
-
பாபா
இங்கே
ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறார்
என்று.
பிறகும்
கூட
ஜென்ம-ஜென்மாந்தரமாக
அவரை
நினைவு
செய்து
கொண்டே இருக்கின்றனர்.
சிவனுடைய
ஆலயத்திற்குச்
சென்று
எவ்வளவு
பூஜை
செய்கின்றனர்!
எவ்வளவு
உயர்ந்த மலையின்
சிகரத்தில்
உள்ள
பத்ரிநாத்
முதலான
கோவில்களுக்குச்
செல்கின்றனர்.
எவ்வளவு
திருவிழாக்களை நடத்துகின்றனர்!
ஏனென்றால்
மிக
இனிமையானவர்
அல்லவா?
பாடவும்
செய்கின்றனர்,
உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்
பகவான்.
புத்தியில்
நிராகார்
தான்
நினைவில்
வருவார்.
நிராகாரோ
இருக்கவே
செய்கிறார்.
அதன் பிறகு
பிரம்மா-விஷ்ணு-சங்கர்.
அவர்களை
பகவான்
எனச்
சொல்ல
மாட்டார்கள்.
இப்போது
குழந்தைகளாகிய
நீங்கள்
புரிந்து
கொண்டிருக்கிறீர்கள்,
நாம்
தான்
சதோபிரதான்
தேவதையாக இருந்தோம்.
நாம்
உலகத்தின்
எஜமானர்களாக
இருந்தபோது
இவ்வளவு
ஏராளமான
மனிதர்கள்
கிடையாது.
பாரதத்தில்
மட்டும்
தான்
இவர்களின்
இராஜ்யம்
இருக்கும்.
மற்ற
அனைவரும்
சென்று
விடுவார்கள்-
சாந்திதாமத்திற்கு.
இவை
அனைத்தையும்
நீங்கள்
பார்த்துக்
கொண்டே
இருப்பீர்கள்.
இதில்
மிகவும்
விசால புத்தி
வேண்டும்.
அங்கே
நீங்கள்
மலைகள்
முதலியவற்றின்
மீது
செல்வதற்கான
அவசியம்
கிடையாது.
அங்கே
எந்த
ஒரு
விபத்தும்
நடப்பதில்லை.
அது
சொர்க்கத்தின்
அற்புதம்.
அந்த
சொர்க்கத்தின்
அற்புதம் இல்லை
எனும்போது
மாயாவின்
அற்புதங்கள்
உருவாகின்றன.
இவ்விசயங்களை
உலகத்தவர்
புரிந்து
கொள்ள முடியாது.
இப்போது
நீங்கள்
சொர்க்கத்திற்குச்
செல்வதற்காக
முயற்சி
செய்து
கொண்டிருக்கிறீர்கள்.
அது சுகத்தின்
உச்சி.
இது
துக்கத்தின்
உச்சி.
யுத்தத்தில்
எவ்வளவு
மனிதர்கள்
தினந்தோறும்
இறக்கின்றனர்!
பிறகு பிறந்தும்
இருப்பார்கள்.
ஈஸ்வரனின்
எல்லையை
அடைய
முடியாது
எனப்
பாடப்
பட்டுள்ளது.
இப்போது ஈஸ்வரனோ
ஒரு
புள்ளியாக
இருக்கிறார்.
அவருடைய
எல்லை
என்று
எதை
அடைவார்கள்?
பாபா
சொல்கிறார்,
இந்தப்
படைப்பின்
முதல்-இடை-கடை
பற்றி
யாருக்கும்
தெரியாது.
சாது
சந்நியாசிகள்
ஒன்றும்
படைப்பவர் மற்றும்
படைப்பின்
எல்லையை
அடைய
முடியாது.
உங்களுக்கு
பாபா
படிப்பு
கற்றுத்
தருகிறார்.
இது
படிப்பு எனச்
சொல்லப்படுகிறது.
சிருஷ்டிச்
சக்கரத்தின்
இரகசியத்தைக்
குழந்தைகளாகிய
நீங்கள்
தான்
அறிந்து
கொண்டே செல்கிறீர்கள்.
அவர்களோ
எங்களுக்குத்
தெரியாது
என்றோ
அல்லது
லட்சம்
வருடங்கள்
என்று
சொல்லி விடுகின்றனர்.
இப்போது
பாபா
புரிய
வைத்துள்ளார்,
இங்கே
நீங்கள்
என்னென்ன
பார்க்கிறீர்களோ,
இவை
அங்கே இருக்காது.
சொர்க்கம்
என்பது
சுகத்தின்
உச்ச
நிலை.
இங்கே
இருப்பது
துக்கத்தின்
மேல்
துக்கம்.
திடீரென்று மரணம்
அப்படி
வரும்,
அனைத்தும்
அழிந்து
போகும்.
மரணத்தைப்
பார்ப்பதென்பது
சாதாரண
விசயம் இல்லை.
இது
துக்கத்தின்
சிகரம்
எனச்
சொல்லப்படுகின்றது.
அது
சுகத்தின்
சிகரம்.
அவ்வளவு
தான்,
மூன்றாவதாக எந்த
ஒரு
சொல்லும்
இல்லை.
உங்களிலும்
அநேகர்
உள்ளனர்,
கேட்கின்றனர்,
ஆனால்
தாரணை
ஆவதில்லை.
எப்போது
புத்தி
தங்கமாக
உள்ளதோ,
அப்போது
தான்
தாரணை
ஆகும்.
தாரணை
ஆகவில்லை
என்றால் குஷியும்
இருப்பதில்லை.
முற்றிலும்
உயர்ந்த
படிப்பு
படிப்போரும்
உள்ளனர்
என்றால்
தாழ்ந்ததும்
உள்ளது.
படிப்பில்
வித்தியாசமோ
உள்ளது
இல்லையா?
அவர்களுக்கு
எவ்வளவு
தான்
எல்லையற்ற
தந்தை
சொல்லிப் புரிய
வைத்தாலும்
ஒருபோதும்
புரிந்து
கொள்ள
மாட்டார்கள்.
நினைவினாலன்றி
நீங்கள்
தூய்மை
ஒருபோதும் ஆக
முடியாது.
தந்தை
காந்தமாக
இருக்கிறார்.
அவர்
மிக
அதிக
சக்தி
உள்ளவர்.
அவர்
மீது
ஒருபோதும்
கறை படிய
முடியாது.
மற்ற
அனைவர்
மீதும்
கறை
படிகின்றது.
அதை
நீக்கிவிட்டு
சதோபிரதான்
ஆக
வேண்டும்.
பாபா
சொல்கிறார்,
என்னை
மட்டுமே
நினைவு
செய்யுங்கள்,
வேறு
எவரிடமும்
பற்றுதல்
இருக்கக்
கூடாது.
பணக்காரர்களுக்கோ
நாள்
முழுவதும்
பணம்,
சொத்து
தான்
முன்னால்
(நினைவில்)
வந்து
கொண்டிருக்கும்.
ஏழைகளுக்கோ
எதுவும்
இல்லை.
ஆனால்
ஏழைகளும்
கொஞ்சம்
புத்திசாலியாக இருந்தால்
தாரணை
செய்ய முடியும்.
நினைவு
இல்லாமல்
குப்பை
எப்படி
வெளியேறும்?
நாம்
தூய்மையாக
எப்படி
ஆவது?
நீங்கள் இங்கே
வந்திருக்கிறீர்கள்,
உயர்ந்த
சிகரத்தின்
மீது
செல்வதற்காக.
நீங்கள்
அறிவீர்கள்,
பாபாவின்
அறிவுரைப்படி நடப்பதால்
நாம்
உயர்ந்த
சுகத்தின்
எல்லைக்கே
சென்று
விடுவோம்.
இதில்
முயற்சி
உள்ளது.
தந்தை வந்திருக்கிறார்,
உச்சிக்கு
அழைத்துச்
செல்வதற்காக.
ஆக,
ஸ்ரீமத்
படி
நடக்க
வேண்டும்.
முதல்
நம்பரில்
இந்த லட்சுமி-நாராயணருக்குத்
தான்
மகிமை
பாடப்
பட்டுள்ளது.
அவர்கள்
முற்றிலும்
டவரில்
(உயர்ந்த
இடத்தில்)
இருப்பார்கள்.
பிறகு
கொஞ்சம்
குறைவு.
புது
உலகம்
தான்
சுகத்தின்
உச்சம்
எனச்
சொல்லப்
படுகின்றது.
அங்கே
எந்த
ஒரு
அசுத்தமான
பொருளும்
கிடையாது.
இதுபோல்
மண்
கிடையாது.
இதுபோல்
காற்று
அங்கே இல்லை,
வீடுகளை
அசுத்தமாக்குவதற்கு.
சொர்க்கத்திற்கோ
மிகுந்த
மகிமை
உள்ளது.
அதற்காகப்
புருஷார்த்தம் செய்ய
வேண்டும்.
லட்சுமி-நாராயணர்
எவ்வளவு
உயர்ந்தவர்கள்!
அவர்களைப்
பார்த்தாலே
மனம்
குஷியடைந்து விடுகிறது.
இன்னும்
சில
காலம்
சென்றால்
அநேகருக்கு
சாட்சாத்காரம்
ஆகிக்
கொண்டே
இருக்கும்.
ஆரம்பத்தில் எவ்வளவு
சாட்சாத்காரங்கள்
ஆயின!
எவ்வளவு
பாபா
அழகிய
காட்சிகளைக்
காட்டினார்!
கிரீடம்
முதலியவற்றை அணிந்து
வந்தனர்.
அந்தப்
பொருள்களோ
இங்கே
கிடைக்காதவை.
பாபாவோ
நகை
வியாபாரி.
முன்பு
50,000
ரூபாய்க்குப்
பெற்ற
மணி
(ரத்தினம்)
இப்போது
50
லட்சத்துக்குக்
கூடக்
கிடைக்காது.
நீங்கள்
சொர்க்கத்திற்காகப் புருஷார்த்தம்
செய்து
கொண்டிருக்கிறீர்கள்.
அங்கே
அளவற்ற
சுகம்
உள்ளது.
பாபா
இவ்வளவு
விளக்கம் தருகிறார்.
ஆனால்
குழந்தைகளுக்கிடையில்
இரவு
பகலுக்குள்ள
வேறுபாடு
உள்ளது.
எங்கே
ராஜா
ராணி,
எங்கே
தாச
தாசிகள்!
யார்
நல்லபடியாகப்
படிக்கவும்
படிப்பிக்கவும்
செய்கிறார்களோ,
அவர்கள்
மறைந்திருக்க முடியாது.
உடனே
சொல்வார்கள்,
பாபா,
நாங்கள்
இன்ன
இடத்திற்குச்
சென்று
சேவை
செய்கிறோம்.
சேவைகளோ ஏராளம்
உள்ளன.
நீங்கள்
இந்தக்
காட்டைக்
கோயிலாக
மாற்ற
வேண்டும்.
ரொட்டித்
துண்டு
சாப்பிட்டாலும்,
சாப்பிடாவிட்டாலும்
சேவைக்காக
ஓடிச்
செல்ல
வேண்டும்.
தொழில்
செய்பவர்கள்
இதுபோல்
செய்கின்றனர்.
நல்ல
வாடிக்கையாளர்கள்
வந்து
விட்டாலோ
சாப்பிட்டாலும்,
சாப்பிடாவிட்டாலும்
ஓடுகின்றனர்.
பணம்
சம்பாதிக்க ஆர்வம்
உள்ளது.
இதுவோ
எல்லையற்ற
தந்தையிடமிருந்து
அளவற்ற
செல்வம்
கிடைக்கின்றது.
நேரம் குறைவாக
இருந்த
போதிலும்
நாளை
சரீரத்தை
விட்டாலும்
விடலாம்.
எந்த
ஒரு
நிச்சயமும்
இல்லை.
விநாசமோ
நிச்சயமாக
நடைபெறப்
போகின்றது.
உங்களுக்கோ
-
வேட்டைக்காரனுக்குக்
கொண்டாட்டம்,
வேட்டையாடப்
படும்
மிருகத்துக்குத்
திண்டாட்டம்.
உங்கள்
குஷிக்கு
எல்லை
கிடையாது.
உங்களுக்கு
முடிவற்ற குஷி
இருக்க
வேண்டும்.
நீங்கள்
அநேகருக்கு
நன்மை
செய்ய
வேண்டும்.
கடைசியில்
கர்மாதீத்
நிலை ஏற்படும்.
நீங்கள்
நினைவு
செய்து-செய்தே
அசரீரி
ஆகி
விடுவீர்கள்.
அப்போது
எந்த
சிரமும்
இல்லாமல் பறப்பீர்கள்.
இது
பெரிய
முயற்சியாகும்.
சிலரோ
அதிக
சேவை
செய்கின்றனர்.
நாள்
முழுவதும்
மியுசியத்தில் வருகிறவர்களுக்கு
ஞானம்
சொல்வதிலேயே
ஈடு
பட்டுள்ளனர்.
இரவும்
பகலும்
சேவையிலேயே ஈடுபட்டிருக்கின்றனர்.
பல்லாயிரக்
கணக்கில்
மியுசியங்கள்
திறக்கப்படும்.
லட்சக்
கணக்கான
மக்கள்
உங்களிடம் வருவார்கள்.
உங்களுக்கு
நேரம்
கிடைக்காது.
அனைத்திலும்
அதிகமாக
உங்களுடைய
இந்த
ஞான
ரத்தினங்களின் கடைகள்
வெளிப்படும்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
தேடிக்கண்டெடுக்கப்
பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவு
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே!
தாரணைக்கான
முக்கிய
சாரம்
:
1)
ஞான
தாரணை
செய்வதற்காக
முதலில் தனது
புத்தியைத்
தங்கயுகத்தினுடையதாக
ஆக்கிக் கொள்ளுங்கள்.
பாபாவின்
நினைவு
தவிர
வேறு
எந்த
ஒரு
பொருளின்
மீதும்
பற்றுதல்
கூடாது.
2)
கர்மாதீத்
நிலை
அடைந்து
வீட்டுக்குச்
செல்வதற்கு
அசரீரி
ஆவதற்கான
அப்பியாசம் செய்யுங்கள்.
தனது
நடத்தையையும்
பாருங்கள்,
யாருக்கும்
துக்கம்
கொடுக்காதிருக்கிறேனா?
பாபாவுக்கு
சமமாக
இனிமையானவராக
ஆக
வேண்டும்.
வரதானம்:
பிராமண
வாழ்வின்
இயல்பான
சுபாவத்தின்
மூலம்
கல்லையும்
கூட
நீராக
ஆக்கக் கூடிய
மாஸ்டர்
அன்பின்
கடல்
ஆகுக.
அன்பு
கல்லையும்
கரைக்கக்
கூடியது
என
உலகத்தினர்
சொல்வது
போல
பிராமணர்களாகிய
உங்களின் இயல்பான
தன்மை
அன்பின்
கடலாக
இருப்பதாகும்.
உங்களிடம்
ஆன்மீக
அன்பு,
பரமாத்மாவின்
அன்பின் சக்தி
நிறைந்துள்ளது,
அதன்
மூலம்
வித
விதமான
சுபாவங்களை
மாற்றம்
செய்ய
முடியும்.
அன்பின்
கடலில் எப்படி
தன்னுடைய
அன்பு
சொரூபத்தின்
அனாதி
(தனித்)
தன்மையால்
குழந்தைகளாகிய
உங்களை தன்னுடையவர்களாக
ஆக்கிக்
கொண்டாரோ
அப்படி
நீங்களும்
கூட
மாஸ்டர்
அன்பின்
கடலாக
ஆகி
உலக ஆத்மாக்களுக்கு
உண்மையான,
சுயநலமற்ற
ஆன்மீக
அன்பைக்
கொடுத்தீர்கள்
என்றால்
அவர்களின்
சுபாவம் மாறிப்
போய்
விடும்.
சுலோகன்:
தனது
விசேஷத்
தன்மைகளை
நினைவில்
வைத்து
அவற்றை
சேவையில் ஈடுபடுத்தினீர்கள்
என்றால்
பறக்கும்
கலையில்
பறந்து
கொண்டே
இருப்பீர்கள்.
பிரம்மா
தந்தைக்குச்
சமமாக
ஆவதற்கான
விசேஷ
முயற்சி:
உள்
நோக்கு
தன்மையின்
நிலையில்
இருந்து
பின்னர்
வெளி
முகத்தில்
வருவது
-
இந்த
பயிற்சி செய்வதற்காக
தன்
மீது
தனது
தனிப்பட்ட
கவனத்தை
வைக்க
வேண்டியது
மிக
அவசியம் ஆகும்.
உள்
நோக்குத்
தன்மையின்
நிலையில்
இருந்தீர்கள்
என்றால்
வெளி
முகத்தின் விசயங்கள்
தொந்தரவு
செய்யாது,
ஏனென்றால்
தேக
அபிமானத்திலிருந்து
விடுபட்டு
(ஆத்ம
அபிமானத்தில்)
இருப்பீர்கள்.
ஓம்சாந்தி