10.01.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
பாபாவுடையவர்களாக
ஆகிவிட்டு,
பாபாவின்
பெயரை
விளங்கச் செய்யுங்கள்.
சம்பூர்ண
பவித்திரமாவதன்
மூலம்
தான்
பெயர்
விளங்கும்.
நீங்கள்
சம்பூர்ண இனிமையானவர்களாகவும்
ஆக
வேண்டும்.
கேள்வி
:
சங்கமயுகத்தில்
குழந்தைகளாகிய
உங்களுக்கு
எந்த
ஒரு
கவலை
உள்ளது,
அது
சத்யுகத்தில்
இருக்காது?
பதில்
:
சங்கமயுகத்தில்
உங்களுக்கு
பாவனமாவதற்கான
கவலை
தான்
உள்ளது.
பாபா
உங்களை
அனைத்து விஷயங்களில்
இருந்தும்
கவலையற்றவர்களாக
ஆக்கியுள்ளார்.
நீங்கள்
புருஷார்த்தம்
செய்கிறீர்கள்,
இந்தப் பழைய
சரீரத்தைக்
குஷி-குஷியுடன்
விட்டுவிட
வேண்டும்.
நீங்கள்
அறிவீர்கள்,
பழைய
ஆடையைக்
களைந்து புதியதைப்
பெறுவோம்.
ஒவ்வொரு
குழந்தையும்
தன்னைத்தான்
கேட்டுக்கொள்ள
வேண்டும்,
நமக்கு
எவ்வளவு குஷி
இருக்கிறது?
நாம்
பாபாவை
எவ்வளவு
நினைவு
செய்கிறோம்?
ஓம்
சாந்தி.
இனிமையிலும்
இனிமையான
தேடிக்
கண்டெடுக்கப்பட்ட
குழந்தைகளுக்கு
ஆன்மிகத்
தந்தை சொல்லிப் புரிய
வைக்கிறார்.
படிப்பிக்கவும்
செய்கிறார்,
புரிய
வைக்கவும்
செய்கிறார்.
கற்பிக்கிறார்,
படைப்பவர் மற்றும்
படைப்பினுடைய
முதல்,
இடை,
கடை
பற்றிய
ரகசியத்தை.
மேலும்
புரிய
வைக்கிறார்,
சர்வகுண சம்பன்னம்
ஆகுங்கள்,
தெய்வீக
குணங்களை
தாரணை
செய்யுங்கள்.
நினைவு
செய்து-செய்தே
நீங்கள்
சதோபிரதான் ஆகி
விடுவீர்கள்.
நீங்கள்
அறிவீர்கள்,
இச்சமயம்
இது
தமோபிரதான்
சிருஷ்டி.
சதோப்ரதான்
சிருஷ்டியாக இருந்தது
தான்
5000
ஆண்டுகளில்
தமோப்ரதான்
ஆகிவிட்டுள்ளது.
இது
பழைய
உலகம்.
அனைவருக்காகவும் சொல்வார்கள்
இல்லையா?
இவர்கள்
புது
உலகத்தில்
இருந்தார்களா,
சாந்திதாமத்தில்
இருந்தார்களா?
பாபா ஆத்மாக்களுக்குத்
தான்
வந்து
புரிய
வைக்கிறார்
-
ஹே
ஆன்மிகக்
குழந்தைகளே,
நீங்கள்
சதோபிரதானாக அவசியம்
ஆக
வேண்டும்.
தந்தையிடமிருந்து
அவசியம்
ஆஸ்தியைப்
பெற
வேண்டும்.
உங்கள்
தந்தையாகிய என்னை
அவசியம்
நினைவு
செய்ய
வேண்டும்.
லௌகிக்
குழந்தைகள்
கூட
நினைவு
செய்கின்றனர்.
எவ்வளவு பெரியவர்களாக
ஆகிக்
கொண்டே
செல்கிறார்களோ,
எல்லைக்குட்பட்ட
ஆஸ்தி
பெறுவதற்கு
உரிமையுள்ளவர்களாக ஆகிக்
கொண்டே
செல்கின்றனர்.
நீங்கள்
எல்லையற்ற
தந்தையின்
குழந்தைகள்.
தந்தையிடம்
இருந்து
எல்லையற்ற ஆஸ்தியைப்
பெற
வேண்டும்.
இப்போது
பக்தி
முதலியவை செய்வதற்கான
அவசியம்
இல்லை.
இதையோ குழந்தைகள்
புரிந்து
கொண்டு
விட்டனர்
-
இது
ஒரு
பல்கலைக்கழகம்.
மனிதர்கள்
அனைவரும்
படிக்க வேண்டும்.
எல்லையற்ற
புத்தியை
தாரணை
செய்ய
வேண்டும்.
இப்போது
இந்தப்
பழைய
உலகம் மாறப்போகின்றது.
யார்
இப்போது
தமோபிரதானாக
உள்ளனரோ,
அவர்கள்
சதோபிரதானாக
ஆவார்கள்.
குழந்தைகள் அறிவார்கள்,
இச்சமயம்
நாம்
எல்லையற்ற
தந்தையிடமிருந்து
எல்லையற்ற
சுகத்தைப்
பெற்றுக்
கொண்டிருக்கிறோம்.
இப்போது
நாம்
ஒரே
ஓர்
ஆன்மிகத்
தந்தையின்
அறிவுரைப்படி
நடக்க
வேண்டும்.
இந்த
ஆன்மிக
நினைவின் யாத்திரை
மூலமாகத்
தான்
ஆத்மா
நீஙகள்
சதோபிரதான்
ஆகிக்
கொண்டே
செல்வீர்கள்.
பிறகு
சதோபிரதான் உலகத்திற்குச்
செல்ல
வேண்டும்.
நாம்
பிராமணர்கள்
என்பது
இப்போது
உங்களுக்குப்
புரிந்து
விட்டது.
நாம் பாபாவுடையவர்களாக
ஆகியிருக்கிறோம்.
படிப்பைப்
படித்துக்
கொண்டிருக்கிறோம்.
மேலும்,
படிப்பதைத்
தான் ஞானம்
எனச்
சொல்கிறோம்.
பக்தி
வேறு.
பிராமணர்களாகிய
உங்களுக்கு
பாபா
ஞானம்
சொல்கிறார்.
வேறு யாருக்கும்
இந்த
ஞானத்தைப்
பற்றித்
தெரியாது.
ஞானக்கடலாகிய
பாபா,
ஆசிரியராகவும்
இருப்பவர்,
எப்படிப் படிப்பு
சொல்லித் தருகிறார்
என்பது
அவர்களுக்குத்
தெரியாது.
பாபா
தலைப்புகளையோ
நிறைய
சொல்லிப்புரிய
வைத்துக்
கொண்டே
இருக்கிறார்.
நம்பர்
ஒன்
விஷயம்
பாபாவுடையவர்களாக
ஆகிவிட்டு
பாபாவின் பெயரைப்
புகழ்
பெறச்
செய்ய
வேண்டும்.
சம்பூர்ண
பவித்திரமாக
ஆக
வேண்டும்.
சம்பூர்ண
இனிமையாகவும் ஆக
வேண்டும்.
இது
ஈஸ்வரியக்
கல்வியாகும்.
பகவானே
வந்து
கற்பிக்கிறார்.
அந்த
உயர்ந்தவரிலும்
உயர்ந்தவரான தந்தையை
நினைவு
செய்ய
வேண்டும்.
ஒரு
விநாடியின்
விஷயம்
தான்.
தன்னை
ஆத்மா
என
உணருங்கள்.
நீங்கள்
அறிவீர்கள்,
ஆத்மாக்கள்
நாம்
சாந்திதாமத்தில்
வசிக்கிறோம்,
பிறகு
இங்கே
வருகிறோம்,
பாகத்தை நடிப்பதற்காக.
புனர்ஜென்மத்தில்
வந்து
கொண்டே
தான்
இருக்கிறோம்.
நம்பர்வார்
84
பிறவிகளின்
பாகத்தை நாம்
இப்போது
முடித்துள்ளோம்.
இந்தப்
படிப்பையும்
புரிந்து
கொள்ள
வேண்டும்.
நடிப்பின்
பாகத்தையும் புரிந்து
கொள்ள
வேண்டும்.
டிராமாவின்
ரகசியமும்
புத்தியில்
உள்ளது.
நீங்கள்
அறிவீர்கள்,
இது
நம்முடைய கடைசிப்
பிறவி,
இதில்
பாபா
கிடைத்துள்ளார்.
எப்போது
84
பிறவிகள்
முடிவடைகின்றனவோ,
அப்போது பழைய
உலகம்
மாறுகின்றது.
நீங்கள்
இந்த
எல்லையற்ற
டிராமாவை,
84
பிறவி
களை,
மற்றும்
இந்தப் படிப்பைப்
பற்றி
அறிவீர்கள்.
84
பிறவிகள்
எடுத்து-எடுத்தே
இப்போது
கடைசியில்
வந்து
நிற்கிறீர்கள்.
இப்போது படித்துக்
கொண்டிருக்கிறீர்கள்,
பிறகு
புது
உலகத்திற்குச்
செல்வீர்கள்.
புதிய-புதியவர்களாக
வந்து கொண்டே
இருக்கின்றனர்.
ஏதேனும்
நிச்சயமாகிக்
கொண்டே
இருக்கின்றது.
சிலரோ
இந்தப்
படிப்பில்
முழுமையாக ஈடுபட்டு
விடுகின்றனர்.
புத்தியில்
உள்ளது,
நாம்
சதோப்ரதான்,
பவித்திரமாக
ஆகிக்
கொண்டிருக்கிறோம்.
நாம் பவித்திரமாகி
ஆகியே
முன்னேற்றத்தை
அடைந்து
கொண்டே
இருப்போம்.
பாபா
புரிய
வைத்துள்ளார்,
நீங்கள்
எவ்வளவு
நினைவு
செய்கிறீர்களோ,
ஆத்மா
நீங்கள்
பவித்திரமாகிக் கொண்டே
செல்வீர்கள்.
குழந்தைகளின்
புத்தியில்
டிராமா
முழுவதும்
நிறைந்துள்ளது.
இதையும்
அறிவீர்கள்,
இந்த
உலகத்தின்
அனைத்தையும்
விட்டுவிட்டு
வந்திருக்கிறீர்கள்.
எதையெல்லாம்
இந்தக்
கண்களால் பார்க்கிறீர்களோ,
அவை
பார்ப்பதற்கானவை
அல்ல.
இவை
அனைத்தும்
அழிந்துவிடப்
போகின்றன.
இப்போது இது
உங்களுடைய
கடைசி
ஜென்மம்.
வேறு
யாரும்
இந்த
எல்லையற்ற
டிராமாப்
பற்றி
அறிந்திருக்கவில்லை.
நீங்கள்
இப்போது
முழுச்
சக்கரத்தையும்
அறிந்திருக்கிறீர்கள்.
பாபா
வந்திருக்கிறார்,
இப்போது
உங்களை தமோபிரதானில்
இருந்து
சதோபிரதான்
ஆக்குவதற்காக.
எப்படி
அந்தப்
பரீட்சை
12
மாதத்துக்குப்
பின் நடைபெறுகிறது,
உங்களுடைய
நினைவு
யாத்திரையும்
கூட
இப்போது
முடிந்து
விட்டது.
நிறைய
நினைவிருக்கிறது,
பிறகு
உறுதி
ஆகிக்கொண்டே
போகும்.
அப்போது
வேறு
எதுவுமே
நினைவில்
வராது.
ஆத்மா
முற்றிலும் அசரீரியாக
வந்தது,
அசரீரியாகவே
செல்ல
வேண்டும்.
நீங்கள்
முழு
சிருஷ்டியின்
மனிதர்கள்
அனைவருடைய பாகத்தையும்
பற்றி
அறிவீர்கள்.
அதிகமாக
மனிதர்கள்
விருத்தியாகிக்
கொண்டே
செல்கின்றனர்.
கோடிக்கணக்கில் ஆகி
விட்டது.
சத்யுகத்திலோ
நாம்
மிகக்
கொஞ்சம்
பேர்
தான்
இருப்போம்.
புனர்ஜென்மம்
எடுத்து-எடுத்தே
மற்ற
தர்மங்களின்
மடங்கள்-வழிகள்
கிளைகள்
விருத்தியாகி
ஆகியே
மிகப்
பெரியதாக
ஆகிவிட்டுள்ளன.
ஆதி
சநாதன
தேவி-தேவதா
தர்மமே
மறைந்து
விட்டது.
நாம்
தான்
தேவி-தேவதா
தர்மத்தில்
இருந்தோம்.
சதோபிரதானாக
இருந்தோம்.
இப்போது
அந்த
தர்மமே
தமோபிரதான்
ஆகிவிட்டுள்ளது.
இப்போது
மீண்டும் சதோப்ரதான்
ஆக
வேண்டும்.
மேலும்
ஆவதற்காகவே
நாம்
படித்துக்
கொண்டிருக்கிறோம்.
எவ்வளவு படிக்கிறோமோ,
படிப்பிக்கிறோமோ,
அவ்வளவு
அநேகருக்கு
நன்மை
நடைபெறும்.
மிகவும்
அன்போடு
புரிய வைக்க
வேண்டும்.
ஏரோப்ளேனில்
இருந்து
துண்டறிக்கைகளை
(நோட்டீஸ்)
போட
வேண்டும்.
அதில்
இதைத் தான்
புரிய
வைக்க
வேண்டும்
-
நீங்கள்
ஜென்ம-ஜென்மாந்தரமாக
பக்தி
செய்தே
வந்திருக்கிறீர்கள்.
கீதை படிப்பதும்
பக்தி
தான்.
கீதை
படிப்பதால்
மனிதரில்
இருந்து
தேவதை
ஆகி
விடுவார்கள்
என்பதில்லை.
டிராமாவின்
அனுசாரம்
எப்போது
பாபா
வருகிறாரோ,
அப்போது
தான்
வந்து
சதோபிரதான்
ஆவதற்கான
யுக்தி சொல்கிறார்.
பிறகு
சதோபிரதான்
பதவி
கிடைத்து
விடுகிறது.
நீங்கள்
அறிவீர்கள்,
இந்தப்
படிப்பினால்
நாம்
இதுபோல்
ஆகக்கூடியவர்கள்.
இது
ஈஸ்வரியப்
பாடசாலை.
பகவான்
படிப்பு
சொல்லித் தந்து
உங்களை
நரனிலிருந்து நாராயண்
ஆக்குகிறார்.
நாம்
சதோபிரதானாக இருந்தோமென்றால்
சொர்க்கம்
இருந்தது.
தமோபிரதான்
ஆகி
விட்டோம்
என்றால்
நரகம்.
பிறகு
சக்கரம்
சுற்றி வரும்.
பாபா
தாம்
வந்து
மனிதரில்
இருந்து
தேவதையாக,
உலகத்தின்
எஜமானர்களாக
ஆவதற்கான
புருஷார்த்தம் செய்விக்கிறார்.
பாபாவை
நினைவு
செய்ய
வேண்டும்.
மேலும்
தெய்வீக
குணங்களை
தாரணை
செய்ய
வேண்டும்.
சண்டை-சச்சரவு
செய்தல்
கூடாது.
தேவதைகள்
சண்டை-சச்சரவு
செய்வது
கிடையாது.
நீங்களும்
அதுபோல் ஆக
வேண்டும்.
நீங்கள்
தாம்
அதுபோல்
சர்வகுண
சம்பன்னமாக
இருந்தீர்கள்.
மீண்டும்
ஸ்ரீமத்படி
அதுபோல் ஆக
வேண்டும்.
தன்னைத்
தான்
கேட்க
வேண்டும்,
நமக்குக்
குஷி
எதுவரை
உள்ளது?
நிச்சயம்
எதுவரை உள்ளது?
இதுவோ
நாள்
முழுவதும்
நினைவிருக்க
வேண்டும்.
ஆனால்
மாயா
அப்படிப்பட்டது,
மறக்கடித்து விடும்.
நீங்கள்
அறிவீர்கள்,
பாபாவுடன்
கூட
நாம்
உலகத்தின்
உதவியாளர்கள்.
முன்பு
நீங்கள்
எல்லைக்குட்பட்ட படிப்பைப்
படித்தீர்கள்.
இப்போது
எல்லையற்ற
படிப்பு,
எல்லையற்ற
தந்தை
மூலம்
படிக்கிறீர்கள்.
இந்தப் பழைய
சரீரம்
தனது
நேரம்
வரும்போது
விடுபட்டுப்
போகும்.
தானாகவே
விடுபடக்
கூடாது.
நாம்
குஷியுடன் சரீரத்தை
விட
வேண்டும்.
நாம்
இந்த
மோசமான
சரீரத்தை
விட்டு,
பழைய
உலகத்தையும்
கூட
விட்டு,
குஷியுடன்
செல்கிறோம்.
ஏதாவது
பெரிய
(பண்டிகை)
நாள்
வருகிறதென்றால்
புத்தாடை
அணிகின்றனர் இல்லையா?
இங்கே
நீங்கள்
அறிவீர்கள்,
நமக்குப்
புது
உலகில்
புதிய
சரீரம்
கிடைக்கும்.
நமக்கு
ஒரே
ஒரு கவலை
தான்
-
பாவனமாக
வேண்டும்,
மற்ற
அனைத்துக்
கவலைகளில்
இருந்தும்
விடுபட்டு
விடுகின்றோம்.
இவை
அனைத்தும்
அழிந்துவிடப்
போகின்றன.
பிறகு
எதற்காக
கவலை
கொள்ள
வேண்டும்?
அரைக்கல்பமாக நாம்
பக்தி
மார்க்கத்தில்,
கவலையில்
இருந்தோம்.
அடுத்த
அரைக்கல்பம்
எந்த
ஒரு
கவலையும்
இருக்காது.
இன்னும்
கொஞ்சம்
சமயமே
உள்ளது.
பாவனமாக
வேண்டும்
என்று
கொஞ்சம்
கவலை
உள்ளது.
பிறகு
ஒரு கவலை
கூட
இருக்காது.
இது
சுகம்-துக்கத்தின்
விளையாட்டு.
சத்யுகத்தில்
உள்ளது
சுகம்,
கலியுகத்தில்
உள்ளது,
துக்கம்.
பாபா
புரிய
வைத்துள்ளார்,
நீங்கள்
கேட்க
முடியும்
-
சத்யுக
சுகதாமத்தில்
வசிப்போரா
அல்லது
கலியுக துக்கதாமத்தில்
வசிப்போரா?
நீங்கள்
இந்தப்
புதுப்புது
விஷயங்களைச்
சொல்கிறீர்கள்.
நிச்சயமாகச்
சொல்வார்கள்,
இப்போது
துக்கதாமத்தில்
வசிப்போர்
என்று.
இவர்கள்
கேள்வி
கேட்கும்
யுக்தியோ
மிக
நன்றாக
உள்ளது என்று
மேலும்
சொல்வார்கள்.
எவ்வளவு
தான்
பெரிய
மனிதராக
இருக்கட்டும்,
தனவானாக
இருக்கட்டும்.
ஆனாலும்
அவர்கள்
நரகவாசி
தான்
இல்லையா?
சொர்க்கம்
என்றோ
புது
உலகம்
தான்
சொல்லப்படுகின்றது.
இப்போது
கலியுகம்,
பழைய
உலகம்.
இந்தக்
கேள்வி
மிக
நல்ல
கேள்வி.
ஏணிப்படியிலும்
தெளிவாக
உள்ளது.
நீங்கள்
சுகதாமத்தில்
இருக்கிறீர்களா,
அல்லது
துக்கதாமத்தில்
இருக்கிறீர்களா?
இது
நரகமா,
அல்லது
சொர்க்கமா?
தேவதையா
அல்லது
அசுரனா?
இதைக்
கேட்க
வேண்டும்.
நிச்சயமாக
சத்யுகத்தை
தெய்வீக
உலகம்
எனப் கூறுவார்கள்.
கலியுகத்தை நரகம்,
அசுர
உலகம்
எனக்
கூறுவார்கள்.
ஆகவே
கேட்க
வேண்டும்,
சத்யுக சொர்க்கமாகிய
தெய்வீக
உலகத்தில்
வசிப்போரா,
அல்லது
கலியுகமாகிய
அசுர
உலகத்தில்
வசிப்போரா?
எவ்வளவு தான்
தனவானாக
இருக்கலாம்,
ஆனால்
எந்த
உலகத்தில்
வசிப்பவர்?
இப்போது
உங்களுக்குள்
ஞானம் வந்துள்ளது.
முன்பு
இந்த
விஷயங்கள்
சிந்தனையில்
கூட
இல்லை.
இப்போது
நீங்கள்
புரிந்து
கொண்டிருக்கிறீர்கள்,
நாம்
சங்கமயுகத்தில்
இருக்கிறோம்.
யார்
கலியுகத்தில்
இருக்கிறார்களோ,
அவர்கள்
பதீத்
நரகவாசிகள்.
மீண்டும் பாவனமாக
வேண்டும்.
அதனால்
தான்
அழைக்கின்றனர்
-
ஹே
பதீத
பாவனா
வாருங்கள்,
வந்து
எங்களைப் பாவனமாக்குங்கள்.
இதையும்
புரிய
வைக்க
வேண்டும்.
உங்களிடம்
எவ்வளவு
ஏராளமான
மனிதர்கள்
வருகின்றனர்!
பிறகும்
கூட
கோடியில்
சிலரே
வெளிப்படுகின்றனர்.
நான்
யாராக
இருக்கிறேன்,
எப்படி
இருக்கிறேன்,
என்ன கற்பிக்கிறேன்?
-
அதன்படி
அபூர்வமாக
சிலர்
தாம்
நடக்கின்றனர்.
அதிகாலைப்
பிரதட்சணத்திலும்
(சாலை
ஊர்வலம்)
இதையே
காட்டுங்கள்,
அதாவது
நாம்
இந்தப்
படிப்பின்
மூலம்
சொர்க்கவாசி
ஆகிக்கொண்டிருக்கிறோம்.
சத்யுக-திரேதா-
துவாபர-கலியுகம்........
இந்தச்
சக்கரம்
சுழல்கின்றது
இல்லையா?
உங்களுடைய
புத்தியில்
முழுச் சக்கரமும்
உள்ளது.
மீண்டும்
நீங்கள்
சுகதாம்-சாந்திதாமின்
மாலிக் ஆகிறீர்கள்.
சுகதாமத்தில்
துக்கத்தின்
பெயர் கூடக்
கிடையாது.
முழுமையாகப்
படிக்கவில்லை
என்றால்
பதவியும்
குறைவாகப்
பெறுவீர்கள்.
இதுவோ பொதுவான
விஷயம்,
அதனால்
எல்லையற்ற
படிப்பைப்
படித்து
எல்லையற்ற
ஆஸ்தியைப்
பெற்றுக்
கொள்ளுங்கள்.
தன்னை
ஆத்மா
என்று
மட்டும்
உணர்ந்து
எல்லையற்ற
தந்தையை
நினைவு
செய்ய
வேண்டும்.
மிக இனிமையான
பாபா.
அவருடைய
கட்டளையாவது
-
தேகத்துடன்
கூடவே
தேகத்தின்
அனைத்து பந்தனங்களையும்
முடித்து
விடுங்கள்.
ஆத்மாவோ
அழியாதது..
அவ்வப்போது
சரீரத்தை
எடுத்தோம்,
அவ்வப்போது சரீரத்தை
விட்டோம்.
இதற்குத்
தாமதமாவதில்லை.
இச்சமயமோ
நாளுக்கு
நாள்
எல்லாருமே
தமோபிரதான் ஆகிக்
கொண்டே
செல்கின்றனர்.
நாம்
சதோபிரதானாக
இருந்தபோது
அதிக
ஆயுள்
உள்ளவர்களாக
இருந்தோம்.
மேலும்,
மிகச்
சிலரே
இருந்தோம்.
வேறு
எந்த
ஒரு
தர்மமும்
(மதம்)
அப்போது
கிடையாது.
உங்களுடைய ஆயுள்
இப்போதைய
புருஷார்த்தத்தினால்
தான்
அதிகமாகின்றது.
எவ்வளவு
நினைவு
செய்கிறீர்களோ,
அவ்வளவு உங்களுடைய
ஆயுள்
அதிகரிக்கும்.
நீங்கள்
சதோபிரதானாக
இருந்தபோது
உங்களுடைய
ஆயுள்
மிக
நீண்டதாக இருந்தது.
பிறகு
எவ்வளவு
கீழே
இறங்கிக்
கொண்டே
சென்றீர்களோ,
ஆயுள்
குறைந்து
கொண்டே
சென்றது.
ரஜோவில்
கீழே
இறங்கும்
போது
ஆயுள்
குறைவு.
தமோவில்
வந்தால்
இன்னும்
குறைவு.
எப்படி
கிணற்றிலிருந்து தண்ணீர்
இறைக்கும்
ராட்டினத்தின்
உதாரணம்
-
நீர்
நிரப்பும்
டப்பா
நிறைந்ததும்
காலியாகிக்
கொண்டே போகிறது,
அதுபோல.
இதுவும்
கூட
எல்லையற்ற
ராட்டினம்.
இப்போது
நீங்கள்
நிரப்பிக்
கொண்டிருக்கிறீர்கள்.
நிரப்பி-நிரப்பி
முழுவதும்
நிரம்பி
விடும்.
பிறகு
கொஞ்சம்-கொஞ்சமாகக்
காலியாகி விடும்.
இதனுடைய
ஒப்பீடு பேட்டரியுடனும்
செய்யப்படுகின்றது.
இப்போது
நாம்
சதோபிரதான்
ஆகிச்
செல்கிறோம்,
பிறகு
84
பிறவிகள் எடுக்கிறோம்.
அரைக்கல்பத்திற்குப்
பின்
இராவண
இராஜ்யம்
ஆரம்பமாகின்றது.
இராவண
இராஜ்யத்தில் அனைவரையும்
நரகவாசி
எனச்
சொல்வார்கள்.
பின்னால்
யார்
வருகிறார்களோ,
அவர்கள்
நரகத்தில்
தான் வருவார்கள்.
முதலில் நீங்கள்
சொர்க்கத்திற்குச்
செல்கிறீர்கள்.
பாபாவிடமிருந்து
இப்போது
இது
பக்தியின் பலனாகக்
கிடைக்கின்றது.
இவர்
அதிகமாக
பக்தி
செய்திருக்கிறார்,
அதனால்
ஞானமும்
பெறுகிறார்
என்பது புரிய
வைக்கப்படுகின்றது.
இந்த
அனைத்து
ரகசியங்களும்
பாபா
உங்ளுக்குப்
புரிய
வைத்துள்ளார்.
நீங்கள் பிறகு
மற்றவர்களுக்குப்
புரிய
வைக்க
வேண்டும்.
மனிதர்கள்
அநேகவிதமான
பாவங்களை
மேலும்
மேலும் செய்து
வந்துள்ளனர்.
இப்போது
பாபா
வந்துள்ளார்,
உங்களுக்கு
ஞானம்
கொடுத்துக்
கொண்டிருக்கிறார்.
பாபா எப்போது
வருகிறாரோ,
அப்போது
தான்
வந்து
படிப்பு
சொல்லித் தருகிறார்.
இவ்வளவு
காலமும்
இது
தெரியாமல் தான்
இருந்தது.
பாவாத்மாக்களாக
ஆகியே
சென்றுள்ளனர்.
புண்ணிய
ஆத்மாக்களாக
எப்படி
ஆகிறார்கள்,
பிறகு
பாவாத்மாக்களாக
எப்படி
ஆகிறார்கள்,
யார்
சத்யுக
நிவாசி
ஆகிறார்கள்,
யார்
கலியுக நிவாசி
ஆகிறார்கள்
-
எதுவுமே
தெரியாதிருந்தது.
இப்போது
பாபா
புரிய
வைத்துள்ளார்.
பாபாவை
ஜோதி
என்றும்
சொல்கின்றனர்.
அவரிடம்
ஒளியும்
உள்ளது,
சக்தியும்
உள்ளது.
ஒளியில்
வருகிறீர்கள்,
அதாவது
விழிப்படைகிறீர்கள்
என்றால் சக்தி
வந்து
விடுகிறது.
உங்களுடைய
வாழ்க்கையும்
சிறந்ததாக
ஆகி
விடுகிறது.
உங்களை
அங்கே
காலன் சாப்பிட
முடியாது.
குஷியுடன்
ஒரு
சரீரத்தை
விட்டு
வேறொன்றை
எடுக்கிறீர்கள்.
துக்கத்தின்
எந்த
ஒரு விஷயமும்
கிடையாது.
ஒரு
விளையாட்டைப்
போல்
ஆகி
விடுகின்றது.
(பாம்பின்
உதாரணம்).
நீங்கள்
சத்யுகத்தில் தொடங்கி
கலியுகம் வரை
பாகத்தை
நடித்துள்ளீர்கள்.
இது
புத்தியில்
பதிந்து
விட்டது.
பாபா
உங்களுக்கு
தந்தையாகவும்
இருக்கிறார்,
ஆசிரியராகவும்
இருக்கிறார்,
சத்குருவாகவும்
இருக்கிறார்.
இதைக்
குழந்தைகள்
மட்டுமே
நம்பர்வார்
புருஷார்த்தத்தின்
அனுசாரம்
அறிந்திருக்கிறார்கள்.
புனர்ஜென்மத்தையும் நீங்கள்
புரிந்து
கொண்டிருக்கிறீர்கள்
-
எத்தனை
ஜென்மங்கள்
எடுக்கிறீர்கள்
என்று.
பிராமண
தர்மத்தில்
நீங்கள் எத்தனை
ஜென்மங்கள்
எடுக்கிறீர்கள்?
(ஒரு
ஜென்மம்).
சிலர்
இரண்டு-மூன்று
ஜென்மங்களும்
எடுக்கின்றனர்.
யாராவது
சரீரத்தை
விடுகிறார்கள்
என்று
வைத்துக்
கொள்ளுங்கள்,
அவர்கள்
பிராமணத்
தன்மையின்
சம்ஸ்காரத்தை எடுத்துச்
செல்கின்றனர்.
ஆக,
பிராமணத்
தன்மையின்
சம்ஸ்காரமாக
இருக்கிற
காரணத்தால்
பிறகும்
கூட உண்மையிலும்
உண்மையான
பிராமண
குலத்தில்
வந்து
விடுவார்கள்.
பிராமண
குல
ஆத்மாக்களோ,
விருத்தியடைந்து
கொண்டே
செல்வார்கள்.
பிராமண
குலத்தின்
சம்ஸ்காரத்தையோ
எடுத்துச்
செல்கின்றனர் இல்லையா?
கொஞ்சம்
கணக்கு-வழக்கு
இருக்கிறதென்றால்
இரண்டு-மூன்று
ஜென்மங்களும்
எடுக்க
முடியும்.
ஒரு
சரீரம்
விட்டு
இன்னொரு
சரீரம்
எடுப்பார்கள்.
ஆத்மா
பிராமண
குலத்திலிருந்து தெய்வீக
குலத்தில் செல்லும்.
சரீரத்தினுடைய
விஷயமோ
இல்லை.
இப்போது
நீங்கள்
பாபாவுடையவர்களாக
ஆகியிருக்கிறீர்கள்.
நீங்கள்
ஈஸ்வரியக்
குழந்தைகள்.
பிறகு
பிரஜாபிதா
பிரம்மாவுக்கும்
குழந்தைகள்.
வேறு
எந்த
ஒரு
சம்பந்தமும் உங்களுக்கு
இல்லை.
எல்லையற்ற
தந்தையுடையவர்களாக
ஆவதென்பது
ஒன்றும்
சாதாரண
விஷயமல்ல.
நீங்கள்
சுகதாமத்தின்
மாலிக் ஆகி
விடுகிறீர்கள்.
பெரிய
தந்தையை
நீங்கள்
அறிந்து
கொண்டு
விட்டீர்கள்,
அவ்வளவு
தான்!
இதனாலும்
கூட
உங்கள்
படகு
அக்கரை
சேர்ந்து
விடும்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
தேடிக்கண்டெடுக்கப்
பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு,
தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவு
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு,
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே!
தாரணைக்கான
முக்கிய
சாரம்
:
1)
தன்னைத்
தான்
கேட்டுக்
கொள்ளுங்கள்
- 1.
நமக்குக்
குஷி
எந்தளவு
உள்ளது?
2.
சர்வகுண
சம்பன்னமாக
இருந்தோம்.
இப்போது
ஸ்ரீமத்
படி
மீண்டும்
ஆக
வேண்டும்,
இந்த நிச்சயம்
எதுவரை
உள்ளது?
3.
நாம்
சதோப்ரதானாக
எதுவரை
ஆகியிருக்கிறோம்?
இரவும் பகலும்
சதோப்ரதான்
ஆவதற்கான
கவலை
உள்ளதா?
2)
எல்லையற்ற
தந்தையுடன்
சேவை
செய்ய
வேண்டும்.
எல்லையற்ற
படிப்பைப்
படிக்க வேண்டும்
மற்றும்
படிப்பிக்க
வேண்டும்.
தேகத்துடன்
கூட
என்னென்ன
பந்தனங்கள் உள்ளனவோ,
அவற்றை
பாபாவின்
நினைவின்
மூலம்
அழித்துவிட
வேண்டும்.
வரதானம்:
சேவையில்
மதிப்பு,
கௌரவம்
என்ற
காயை
தியாகம்
செய்து
எப்போதும் மகிழ்ந்த
மனத்துடன்
இருக்கக்
கூடிய
அபிமானத்திலிருந்து விடுபட்டவர்
ஆகுக.
இராயல்
ரூபத்தின்
ஆசையின்
சொரூபம்
பெயர்,
மதிப்பு,
கௌரவம்
ஆகும்.
யார்
பெயர்,
புகழுக்கு ஆசைப்பட்டு
சேவை
செய்கிறாரோ
அவருடைய
பெயர்
அல்ப
காலத்திற்காக
புகழடைந்து
விடும்,
ஆனால் உயர்ந்த
பதவியில்
பெயர்
பின்னால்
போய்
விடும்,
ஏனென்றால்
காயை
சாப்பிட்டு
விட்டார்.
சேவையின்
(ரிசல்ட்)
முடிவில்
தனக்கு
மரியாதை
கிடைக்க
வேண்டும்
என்று
பல
குழந்தைகள்
நினைக்கின்றனர்.
ஆனால் இது
மரியாதை
அல்ல,
அபிமானம்
ஆகும்.
எங்கே
அபிமானம்
(பற்றுதல்)
இருக்குமோ
அங்கே
மகிழ்ச்சி இருக்காது,
ஆகையால்
அபிமானத்திலிருந்து விடுபட்டவர்
ஆகி,
எப்போதும்
மகிழ்ச்சியை
அனுபவம்
செய்யுங்கள்.
சுலோகன்:
பரமாத்ம
அன்பின்
சுகம்
மிக்க
ஊஞ்சலில் ஆடினீர்கள்
என்றால் துக்கத்தின்
அலைகள்
வர
முடியாது.
பிரம்மா
தந்தைக்குச்
சமமாக
ஆவதற்கான
விசேஷ
முயற்சி:
முதல்
நம்பரான
பிரம்மாவின்
ஆத்மாவுடன்
நீங்கள்
அனைவரும்
கூட
பரிஸ்தாவாக
ஆகி,
அவ்யக்த
வதனத்திற்குச்
சென்று
பிறகு
பரமதாமத்திற்குச்
செல்ல
வேண்டும்,
ஆகையால்
மனதின் ஒருமைப்பாட்டின்
மீது
கவனம்
வையுங்கள்.
கட்டளைப்படி
மனதை
நடத்துங்கள்.
அனைத்து விசயங்களிலும்,
உள்ளுணர்விலும்,
திருஷ்டியிலும்,
கர்மத்திலும்
விடுபட்ட
நிலையின்
அனுபவம் ஆக
வேண்டும்.
பரிஸ்தா
தன்மையின்
அனுபவத்தை
தானும்
செய்து,
பிறரையும்
செய்விக்க வேண்டும்.
ஓம்சாந்தி