04.08.2019                           காலை முரளி                ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           09.01.1985           மதுபன்


 

சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த ஆத்மாக்களின் ஆன்மீக தனிச்சிறப்பு

 

இன்று பாக்கியத்தை வழங்கும் தந்தை தன்னுடைய சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த குழந்தைகளை, ஒவ்வொரு குழந்தையின் பாக்கியத்தின் ரேகை எவ்வளவு சிரேஷ்டமாக மற்றும் அழியாததாக இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைத்து குழந்தைகளுமே பாக்கியம் நிறைந்தவர்கள் தான், ஏனென்றால், பாக்கியத்தை வழங்குபவரின் குழந்தைகளாக ஆகியிருக்கிறார்கள். எனவே பாக்கியம் பிறப்புரிமையாக இருக்கிறது. பிறப்புரிமையின் அதிகாரத்தின் ரூபத்தில் அனைவருக்கும் இயல்பாகவே கிடைத்திருக்கிறது. அதிகாரமோ அனைவருக்கும் இருக்கிறது, ஆனால் அந்த அதிகாரத்தை தனக்காக மற்றும் மற்றவர்களுக்காக வாழ்க்கையில் அனுபவம் செய்வது மற்றும் செய்விப்பதில் வித்தியாசம் இருக்கிறது. இந்த பாக்கியத்தின் அதிகாரத்தை, அதிகாரி ஆகி அந்த குஷியில் மற்றும் போதையில் இருக்க வேண்டும். மேலும் மற்றவர்களையும் பாக்கியத்தை வழங்குபவர் மூலமாக பாக்கியம் நிறைந்தவராக ஆக்க வேண்டும் - இது தான் அதிகாரத்தன்மையின் போதையில் இருப்பது. எப்படி பௌதீக செல்வந்தனின் நடத்தை மற்றும் முகத்தின் மூலம் செல்வத்தின் அற்பக் கால போதை தென்படுகிறதோ, அதே போல் பாக்கியத்தை வழங்குபவர் மூலமாக அழியாத சிரேஷ்ட பாக்கியத்தின் செல்வத்தின் போதை நடத்தை மற்றும் முகம் மூலம் இயல்பாகவே தென்படுகிறது. சிரேஷ்ட பாக்கியத்தின் செல்வத்தின் பிராப்தி சொரூபம் உலகியல் அல்லாதது மற்றும் ஆன்மீகமானது. சிரேஷ்ட பாக்கியத்தின் ஜொலிப்பு மற்றும் ஆன்மீகப் பொலிவு உலகில் மற்ற அனைத்து ஆத்மாக்களிலிருந்து சிரேஷ்டமான வித்தியாசனமானது மற்றும் அன்பானது. சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த ஆத்மா எப்பொழுதும் நிரம்பியவராக, பெருமிதத்தில் இருப்பவராக அனுபவம் ஆவார்கள். தூரத்தில் இருந்து சிரேஷ்ட பாக்கியத்தின் கிரணங்கள் மின்னிக் கொண்டிருப்பதாக அனுபவம் ஆகும். பாக்கியம் நிறைந்தவரின் பாக்கியத்தின் செல்வத்தின் தனிச்சிறப்பு தூரத்திலிருந்தே அனுபவம் ஆகும். சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த பார்வை மூலம் அனைவருக்கும் எப்பொழுதும் ஆன்மீக இராஜ அம்சம் அனுபவம் ஆகும். உலகத்தில் எத்தனை தான் பெரிய பெரிய இராஜ அம்சம் மற்றும் தனிச்சிறப்பு உள்ளவர்கள் இருந்தாலும், சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த ஆத்மாவின் எதிரில், அழியும் தனிச்சிறப்புள்ளவர்கள், இந்த ஆன்மீகத் தனிச்சிறப்பு உள்ளவர்கள் மிக உயர்ந்த புதுமையானவர்கள் என்று அவர்களே அனுபவம் செய்வார்கள். இந்த சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த ஆத்மாக்கள் வேறுபட்ட ஆன்மீக உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அனுபவம் செய்வார்கள். முற்றிலும் வித்தியாசமானவர்கள், அவர்களைத் தான் அல்லாவின் (இறைவனனின்) மனிதர்கள் என்று கூறுவது. எப்படி ஏதாவது ஒரு புதிய பொருள் இருக்கிறது என்றால், அனைவரும் மிகவும் அன்புடன் பார்த்துக் கொண்டே இருந்து விடுவார்கள். அதே போல் சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த ஆத்மாக்களைப் பார்த்து, பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த ஆத்மாக்களின் சிரேஷ்ட உள்ளுணர்வு மூலமாக வாயுமண்டலம் அந்தமாதிரி ஆகிவிடுகிறது. அதனால் மற்றவர்களும் கொஞ்சம் பிராப்தி ஆகிறது என்று அனுபவம் செய்கிறார்கள், அதாவது பிராப்தியின் சூழ்நிலையை அனுபவம் செய்கிறார்கள். கொஞ்சம் அடைந்து கொண்டிருக்கிறோம், கிடைத்துக் கொண்டிருக்கிறது என்ற இந்த அனுபவத்திலேயே தன்னை மறந்துவிடுவார்கள். சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த ஆத்மாவைப் பார்த்து, எப்படி தாகமுள்ளவர் எதிரில், கிணறே நடந்து வந்தது போல் அனுபவம் செய்வார்கள். அதே போல் பிராப்தி இல்லாத ஆத்மா, பிராப்தி என்ற கிடைக்கும் நம்பிக்கையை அனுபவம் செய்கிறார்கள். நாலாபுறங்களின் நம்பிக்கை இழந்த இருளின் நடுவில் நல்ல நம்பிக்கை என்ற தீபம் எரிந்துக் கொண்டிருப்பதாக அனுபவம் செய்வார்கள். மனமுடைந்து போன ஆத்மாக்களுக்கு மனதின் குஷியின் அனுபவம் ஆகும். நீங்கள் அந்தமாதிரி சிரேஷ்ட பாக்கியம் நிறைந்தவர்களாக ஆகியிருக்கிறீர்களா? தன்னுடைய இந்த ஆன்மீக சிறப்புகளை தெரிந்திருக்கிறீர்களா? நம்புகிறீர்களா? அனுபவம் செய்கிறீர்களா? அல்லது யோசிக்கவும் மற்றும் கேட்க மட்டும் செய்கிறீர்களா? நடைமுறையில் காரியம் செய்து கொண்டே, இந்த சாதாரண ரூபத்தில் மறைந்திருக்கும், விலை மதிக்க முடியாத வைரமான சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த ஆத்மாவை எப்பொழுதாவது நீங்களே மறந்து விடுவதில்லையே? தன்னை சாதாரண ஆத்மா என்றோ நினைக்க வில்லையே? உடல் பழையது, சாதாரணமானது, ஆனால் ஆத்மா மகான் மற்றும் விசேஷமானது. முழு உலகத்தில் உள்ளவர்களின் ஜாதகத்தில் அவர்களுடைய பாக்கியத்தைப் பாருங்கள், உங்களை மாதிரி சிரேஷ்ட பாக்கியத்தின் ரேகை யாருக்குமே இருக்க முடியாது. எவ்வளவு தான் செல்வத்தினால் நிரம்பிய ஆத்மாவாக இருந்தாலும், சாஸ்திரங்களின் ஞானப் பொக்கிஷங்களினால் நிரம்பிய ஆத்மாவாக இருந்தாலும், அறிவியல் ஞானத்தில் நிரம்பிய ஆத்மாவாக இருந்தாலும், உங்கள் அனைவரின் பாக்கியத்தின் நிரம்பிய நிலையின் எதிரில் அவர்கள் என்னவாக அனுபவம் ஆவார்கள்? அவர்களே இப்பொழுது நாங்கள் வெளிமுகமாக நிரம்பி இருக்கிறோம், ஆனால் உள்ளே காலியாக இருக்கிறோம் என்று இப்பொழுது அனுபவம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். மேலும் நீங்கள் உள்ளே நிரம்பி இருக்கிறீர்கள், வெளியே சாதரணமாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறார்கள். எனவே தன்னுடைய சிரேஷ்ட பாக்கியத்தை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டே, சக்தி நிறைந்த நிலையின் ஆன்மீக போதையில் இருங்கள். வெளிமுகமாக சாதரணமாகத் தென்பட்டாலும் சரி, ஆனால் சாதாரணத் தன்மையில் மகான் தன்மை தென்பட வேண்டும், எனவே ஒவ்வொரு காரியத்தில் சாதரணத் தன்மையில் மகான் தன்மை அனுபவம் ஆகிறதா என்று சோதனை செய்யுங்கள்? எப்பொழுது நீங்களே உங்களை அந்தமாதிரி அனுபவம் செய்வீர்களோ, அப்பொழுது தான் மற்றவர்களுக்கும் அனுபவம் செய்விப்பீர்கள். எப்படி மற்ற மனிதர்கள் காரியம் செய்கிறார்கள், அந்த மாதிரியே நீங்களும், உலகியல் காரியம் விவகாரம் தான் செய்கிறீர்களா, அல்லது உலகியல் அற்ற அல்லா மனிதர்கள் ஆகி, காரியம் செய்கிறீர்களா? போனாலும், வந்தாலும் அனைவரின் தொடர்பில் வந்து கொண்டே, இவர்களுடைய பார்வையில், முகத்தில் புதுமைத் தன்மை இருக்கிறது என்று அவசியம் அனுபவம் செய்வியுங்கள். மேலும் பார்த்ததும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், ஆனால் இது என்ன? இவர்கள் யார்? என்ற கேள்வி அவசியம் எழட்டும். இந்தக் கேள்வி என்ற அம்பு அவசியம் தந்தையின் அருகில் கொண்டே வந்து விடும். புரிந்ததா? நீங்கள் அந்தமாதிரி சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த ஆத்மாக்கள். பாப்தாதா சில நேரம் குழந்தைகளின் வெகுளித் தன்மையை பார்த்து புன்சிரிக்கிறார். பகவானின் குழந்தையாகி இருக்கிறார்கள், ஆனால் தன்னுடைய பாக்கியத்தையே மறந்துவிடும் அளவிற்கு வெகுளியாகி விடுகிறார்கள். எந்த விஷயத்தை யாருமே மறப்பது இல்லையோ, அதை வெகுளியான குழந்தைகள் மறந்துவிடுகிறார்கள். தன்னைத் தானே யாராவது மறப்பார்களா? தந்தையை யாராவது மறப்பார்களா/ எந்தளவு வெகுளியாகி விட்டீர்கள். 63 ஜென்மங்களாக தவறான பாடத்தை அந்தளவு உறுதியாக ஆக்கியிருக்கிறீர்கள். அதை மறந்துவிடுங்கள் என்று பகவான் கூறினாலும், மறப்பதில்லை. மேலும் சிரேஷ்ட விஷயங்களை மறந்துவிடுகிறீர்கள். அந்தமாதிரி எந்தளவு வெகுளியாக இருக்கிறீர்கள். தந்தையும் நாடகத்தில் இந்த வெகுளியானவருடன் தான் தன்னுடைய பங்கு இருக்கிறது என்று கூறுகிறார். நீண்ட காலம் வெகுளியாக ஆகியிருக்கிறீகள், இப்பொழுது தந்தைக்கு சமமாக மாஸ்டர் ஞானம் நிறைந்தவர், மாஸ்டர் சக்தி நிறைந்தவர் ஆகுங்கள். புரிந்ததா? நல்லது.

 

எப்பொழுதும் சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த, அனைவருக்கும் தன்னுடைய சிரேஷ்ட பாக்கியம் மூலமாக பாக்கியம் நிறைந்தவர் ஆவதற்கான சக்தி கொடுப்பவர்களுக்கு, சாதரணத் தன்மையில் மகான் தன்மையை அனுபவம் செய்விப்பவர்களுக்கு, வெகுளியாக இருப்பவரிலிருந்து பாக்கியம் நிறைந்தவர் ஆகுபவர்களுக்கு, எப்பொழுதும் பாக்கியத்தின் அதிகாரத்தில் மற்றும் குஷியில் இருப்பவர்களுக்கு, உலகத்தில் பாக்கியத்தின் நட்சத்திரமாகி மின்னிக் கொண்டிருப்பவர்களுக்கு, அந்தமாதிரி சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த ஆத்மாக்களுக்கு, பாக்கியத்தை வழங்கும் பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

மதுபன் நிவாசி சகோதர, சகோதரிகளுடன் சந்திப்பு:-

மதுபன் நிவாசி என்றால் எப்பொழுதும் தன்னுடைய மதுரத் தன்மை (இனிமைத் தன்மை) மூலமாக அனைவரையும் மதுரமாக (இனிமையாக) ஆக்குபவர்கள் மற்றும் எப்பொழுதும் தன்னுடைய எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கியம் உள்ளுணர்வு மூலமாக எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கியத்தை மற்றவர்களில் கொண்டு வருபவர்கள். இது தான் மதுபன் நிவாசிகளின் விசேஷம். மதுரத் தன்மையும் அளவற்றது, மேலும் வைராக்கிய உள்ளுணர்வும் அளவற்றது. அந்தமாதிரி சமநிலை வைப்பவர்கள், எப்பொழுதுமே சகஜமாக மற்றும் இயல்பாக முன்னேறிக் கொண்டிருப்பதை அனுபவம் செய்வார்கள். மதுபன்னின் இந்த இரண்டு விசேஷங்களின் பிரபாவம் உலகத்தின் மேல் ஏற்படுகிறது. அஞ்ஞானி ஆத்மாக்களாக இருந்தாலும் கூட மதுபன் லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ். அப்படி லைட் ஹவுஸின் வெளிச்சம் ஒருவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அனைவர் மீதும் விழும். எந்தளவு இந்த இடத்தின் வைப்ரேஷன் இருக்குமோ, அந்தளவு இது ஒரு வித்தியாசமானது என்று புரிந்து கொள்வார்கள். பிரச்சனையின் காரணமாக இருந்தாலும், சூழ்நிலையின் காரணமாக இருந்தாலும், பிராப்தியின்மையின் காரணமாக இருந்தாலும், அற்ப காலத்தின் வைராக்கிய உள்ளுணர்வின் பிரபாவம் கூட அவசியம் ஏற்படும். எப்பொழுது நீங்கள் இங்கே சக்திசாலியாகிறீர்கள் என்றால், அங்கேயும் சக்திசாலியான ஏதாவது விசேஷமான விஷயம் நடக்கும். இங்கே உள்ள அலை பிராமணர்களையும் சேர்த்து உலகத்தினரின் மேலும் விழுகிறது. ஒருவேளை விசேஷமாக பொறுப்பாளர் ஆகியிருப்பவர்கள் கொஞ்சம் ஊக்கத்தில் வருகிறார்கள், பிறகு சாதரணமாக ஆகிவிடுகிறார்கள் என்றால், அங்கேயும் ஊக்கத்தில் வந்து பிறகு சாதரணமாகி விடுவார்கள். அப்படி மதுபன் ஒரு விசேஷமான மேடை. எப்படி வெளியுலகத்திலுள்ள மேடையில் ஒருவர் சொற்பொழிவு நிகழ்த்துபவர் அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இருக்கிறார் என்றால், மேடையின் கவனம் இருக்கும் இல்லையா. அல்லது இதுவோ சொற்பொழிவு நிகழ்த்துபவர்களுக்கு மட்டும் என்று புரிந்து கொள்வார்களா. யாரோ ஒருவர் சிறிய பாடல் பாடுபவராக இருந்தாலும் பூச்சென்டு கொடுப்பவராக இருந்தாலும், எந்த நேரம் அவர் மேடையில் வருவாரோ, அப்பொழுது அதே விசேஷத்துடன், கவனத்துடன் வருவார். அப்படி மதுபன்னில் எந்த சேவையில் இருந்தாலும், தன்னை சிறியவர் என்று புரிந்துக் கொண்டாலும், அல்லது பெரியவர் என்று புரிந்துக் கொண்டாலும், ஆனால் அவர் மதுபன்னின் விசேஷ மேடையில் இருக்கிறார். மதுபன் என்றாலே மகான் மேடை. அப்படி மகான் மேடையில் பாத்திரம் ஏற்று நடிப்பவர் மகான் ஆகிறார் இல்லையா? அனைவரும் உங்களை உயர்ந்த பார்வையோடு பார்க்கிறார்கள் இல்லையா, ஏனென்றால் மதுபன்னின் மகிமை என்றால், மதுபன் நிவாசிகளின் மகிமை.

 

மதுபன்னைச் சேர்ந்தவர்களின் ஒவ்வொரு வார்த்தையும், வார்தை இல்லை, அது முத்து ஆகும். எப்படி முத்துகளின் மழை பொழிந்து கொண்டிருக்கிறது, பேசிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் முத்துகளின் மலை பொழிந்து கொண்டிருக்கிறது. இதைத் தான் மதுரத் தன்மை என்று கூறுவது. அந்தமாதிரியான வார்த்தைகளை பேச வேண்டும், கேட்பவரும் நானும் இந்த மாதிரியான வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று யோசிக்க வேண்டும். கேட்டு அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டும், இவர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற பிரேரணனை கிடைக்க வேண்டும். என்ன வார்த்தை வெளியாகிறதோ, அது அந்தமாதிரி இருக்க வேண்டும், யாராவது அதை பதிவு செய்து மீண்டும் மீண்டும் கேட்க்கும் அளவிற்கு. நல்ல விஷயமாக இருப்பதினால் தானே பதிவு செய்கிறார்கள், மேலும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். உங்களுடைய வார்த்தை அந்தமாதிரி மதுரத் தன்மையாக இருக்க வேண்டும். அந்த மாதிரியான இனிமையான வார்த்தையின் எண்ண அலைகள் உலகில் இயல்பாக பரவும். இந்த வாயுமண்டலம் எண்ண அலைகளை இயல்பாகவே இழுக்கும். எனவே உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மகானாக இருக்க வேண்டும். ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு ஆத்மாவிற்காக இனிமையானதாக, மகானாக இருக்கட்டும். மேலும் இன்னொரு விஷயம் மதுபன்னில் எந்தளவு களஞ்சியம் நிரம்பியிருக்கிறதோ, அந்தளவு எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கியம் உள்ளவர்களது, பிராப்தியும் அளவற்றது, மேலும் வைராக்கிய உள்ளுணர்வும் அந்தளவே தான், அப்பொழுது தான் எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கிய உள்ளுணர்வு என்று கூறுவோம். ஒன்றுமே இல்லைவே இல்லை என்றால், வைராக்கிய உள்ளுணர்வு எப்படி. இருக்க வேண்டும், மேலும் இருந்த போதிலும் வைராக்கிய உள்ளுணர்வு இருக்கவேண்டும், இதைத் தான் எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கிய உள்ளுணர்வு என்று கூறுவது. அந்த மாதிரி யார் எந்தளவு செய்கிறாரோ, அந்தளவு தற்சமயமும் பலன் அடைகிறார், எதிர்காலத்திலோ கண்டிப்பாக கிடைக்கும். தற்சமயத்தில் உண்மையான அன்பு மற்றும் உள்ளப்பூர்வமான ஆசிர்வாதமும் இப்பொழுது பிராப்தி ஆகிறது, மேலும் இந்த பிராப்தி சொர்க்கத்தின் இராஜ்ய பாக்கியத்தை விடவும் அதிகமானது. அனைவரின் அன்பு மற்றும் அசீர்வாதம் இதயத்தை எந்தளவு முன்னேறச் செய்கிறது என்று இப்பொழுது தெரிகிறது, அந்த அனைவரின் உள்ளப்பூர்வமான ஆசீர்வாதத்தின் குஷி மற்றும் சுகத்தின் அனுபவம் ஒரு விசித்திரமானது. யாரோ சகஜமாக கைகளால் தூக்கி சென்று கொண்டிருக்கிறார் என்று அனுபவம் செய்வீர்கள். இந்த அனைவரின் அன்பு, மேலும் அனைவரின் ஆசீர்வாதம், இந்தளவு அனுபவம் செய்விப்பதாகும். நல்லது.

 

இந்த புது வருடத்தில் அனைவரும் புதிய ஊக்கம், உற்சாகம் நிரம்பிய எண்ணத்தை வைத்தீர்கள் தான் இல்லையா? அதில் திடத் தன்மை இருக்கிறது இல்லையா? ஒருவேளை ஏதாவது ஒரு எண்ணத்தை தினசரி நினைவு செய்து கொண்டேயிருந்தீர்கள் என்றால், எப்படி ஒரு பொருளை உறுதியாக்கிக் கொண்டேயிருந்தீர்கள் என்றால் உறுதியாகி விடுகிறது. எனவே என்ன எண்ணம் வைத்தீர்களோ, அதை விட்டு விடாதீர்கள், தினசரி அந்த எண்ணத்தை மீண்டும் நினைவு செய்து, உறுதி ஆக்கினீர்கள் என்றால், பிறகு இதே திடத்தன்மை எப்பொழுதும் காரியத்தில் வரும். எப்பொழுதாவது என்ன எண்ணம் வைத்தேன் என யோசிக்கிறீர்கள், அல்லது நடைமுறையில் எண்ணமே மறந்துவிட்டது என்றால், என்ன செய்தாலும் அதில் பலஹீனம் வருகிறது. தினசரி நினைவு செய்யுங்கள், தினசரி தந்தையின் எதிரில் மீண்டும் நினைவு செய்தீர்கள் என்றால், உறுதியாகிக் கொண்டேயிருக்கும், மேலும் வெற்றியும் சுலபமாகக் கிடைக்கும். அனைவரும் எந்த அன்புடன் மதுபன்னில் ஒவ்வொரு ஆத்மாவையும் பார்க்கிறார்கள் என்பதை தந்தை தெரிந்திருக்கிறார். மதுபன் நிவாசி ஆத்மாக்களின் விசேஷங்களுக்கு குறைந்த மகத்துவம் கிடையாது. ஒருவேளை ஏதோ ஒரு சிறிய விசேஷ காரியமும் செய்கிறீர்கள் என்றால், ஒரு ஸ்தானத்தில் அந்தக் காரியம் நடக்கும், மேலும் அனைவருக்கும் பிரேரணை கிடைக்கிறது, பிறகு அந்த அனைத்து விசேஷத்தின் லாபங்களின் பங்கு அந்த ஆத்மாவிற்கு கிடைத்து விடுகிறது. அந்தமாதிரி மதுபன்னைச் சேர்ந்தவர்கள், எந்தவொரு சிரேஷ்ட எண்ணம் வைக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், காரியம் செய்கிறார்கள் என்றால், அதை அனைவருக்கும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற உற்சாகம் எழுகிறது. அந்த மாதிரி அனைவரின் உற்சாகத்தை அதிகபடுத்தும் ஆத்மாவிற்கு எவ்வளவு இலாபம் இருக்கும். உங்கள் அனைவருக்கும் இந்தளவு மகத்துவம் இருக்கிறது. ஒரு மூலையில் செய்கிறீர்கள், மேலும் அனைத்து இடங்களிலும் பரவுகிறது. நல்லது.

 

இந்த வருடத்திற்கான புதிய திட்டம்:

 

இந்த வருடம் அந்தமாதிரி ஏதாவது குரூப்பை உருவாக்குங்கள், அந்த குரூப்பின் விசேஷங்களை நடைமுறையில் பார்த்து, மற்றவர்களுக்கும் பிரேரணை கிடைக்கட்டும், மேலும் வைப்ரேஷன் பரவட்டும். எப்படி அரசாங்கமும் நீங்கள் ஏதாவது ஸ்தானத்தை எடுத்து, ஒரு கிராமத்தை தூக்கிவிட்டு, அந்தமாதிரி உதாரணத்தைக் காண்பியுங்கள். அதன் மூலம் நீங்கள் நடைமுறையில் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று புரிந்து கொண்டார்கள் என்றால், அதன் பிரபாவம் பரவும் என்று கூறுகிறது. அந்தமாதிரியே ஏதாவது ஒரு குரூப் உருவாகட்டும், அதன் மூலம் மற்றவர்களுக்கும் பிரேரணை கிடைக்கட்டும். யாராவது குணம் என்றால் என்ன? சக்தி என்றால் என்ன, ஞானம் என்றால் என்ன, நினைவு என்றால் என்ன என்று பார்க்க விரும்பினார் என்றால், அவருக்கு நடைமுறையில் அதன் சொரூபம் தென்படட்டும். அந்தமாதிரி ஒருவேளை சின்ன சின்ன குரூப் நடைமுறையில் எடுத்துகாட்டாக ஆகிவிட்டார்கள் என்றால், அந்த சிரேஷ்ட வைப்ரேஷன், வாயுமண்டலத்தில் இயல்பாகவே பரவும். இன்றைய நாட்களில் அனைவரும் கேட்க விரும்புவது இல்லை, நடைமுறையில் பார்க்க விரும்புகிறார்கள், நடைமுறையின் பிரபாவம் மிக விரைவாக சென்றடையும். எனவே அந்தமாதிரி ஏதாவது தீவிர ஊக்கம், உற்சாகத்தின் நடைமுறை ரூபம் இருக்கட்டும், குரூப் இருக்கட்டும், அதை அனைவரும் சுலபமாகப் பார்த்து, பிரேரணை எடுத்துக் கொள்ளட்டும், மேலும் நாலா பக்கங்களிலும் இந்த பிரேரணை சென்றடையட்டும். அப்படி ஒன்றிலிருந்து இரண்டு, இரண்டிலிருந்து மூன்று என்று பரவிக் கொண்டேயிருக்கும். எனவே அந்த மாதிரி ஏதாவது விசேஷத்தை செய்து காண்பியுங்கள். எப்படி விசேஷமாக பொறுப்பாளர் ஆகியிருக்கும் ஆத்மாக்களைப் பற்றி இவர் நிரூபணம் என்று அனைவரும் நினைக்கிறார்கள், மேலும் பிரேரணை கிடைக்கிறது, அந்தமாதிரி இன்னும் நிரூபணத்தை உருவாக்குங்கள். அவரைப் பார்த்து ஆமாம், நடைமுறையில் ஞானத்தின் சொரூபம், அனுபவம் ஆகிறது என்று அனைவரும் கூறவேண்டும். இந்த நல்ல சிரேஷ்ட காரியம், சிரேஷ்ட எண்ணத்தின் உள்ளுணர்வு மூலம், வாயுமண்டலத்தை உருவாக்குங்கள். அந்தமாதிரி ஏதாவது செய்து காண்பியுங்கள். இன்றைய நாட்களில் மனதின் எண்ணத்தின் பிரபாவம் எந்தளவு ஏற்படுகிறதோ, அந்தளவு வாய் மொழியின் பிரபாவம் ஏற்படுவதில்லை. வாய் மொழியின் ஒரு வார்த்தை பேசுங்கள். வைப்ரேஷனில் 100 வார்த்தைகளை பரப்புங்கள். அப்பொழுது தான் பாதிப்பு ஏற்படுகிறது. வார்த்தைகளோ பொதுவானதாக ஆகிவிட்டது, ஆனால் வார்த்தைகளுடன் சக்திசாலியான வைப்ரேஷன் என்ன இருக்கிறதோ, அது வேறு எங்கும் இருப்பதில்லை, அது இங்கு மட்டும் தான் இருக்கிறது. இந்த விசேஷத்தை செய்து காண்பியுங்கள். மற்றப்படி மாநாடு நடத்துவீர்கள், இளைஞர்களுக்கான நிகழ்ச்சி செய்வீர்கள், இதுவோ நடந்து கொண்டேயிருக்கும். மேலும் நடக்கவும் நடக்கும். இதன் மூலம் ஊக்கம் உற்சாகம் அதிகரிக்கிறது. ஆனால் இப்பொழுது ஆத்மீக சக்தியின் அவசியம் இருக்கிறது. இது தான் உள்ளூணர்வு மூலம் வைப்ரேஷனைப் பரப்புவது. அது சக்திசாலியானது. நல்லது.

 

வரதானம்:

சகித்துக் கொள்ளும் சக்தியின் தாரணை மூலமாக சத்தியத்தைக் கடைப்பிடிக்கக் கூடிய எப்பொழுதும் வெற்றியடைபவர் ஆகுக.

 

இன்றைய நாட்களில் உண்மையாக இருப்பவர்கள், வாழ்வதே கடினம், பொய் பேச வேண்டியிருக்கிறது என்று உலகத்தினர் கூறுகிறார்கள். சில பிராமண ஆத்மாக்களும் சிற்சில நேரங்களில் மிகவும் சாதுர்யமாக இப்படி அப்படி நடந்து கொள்ளத் தான் வேண்டியதிருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் பிரம்மா பாபாவைப் பார்த்தீர்கள், சத்தியம் மற்றும் தூய்மைக்காக எவ்வளவு எதிரிப்பு வந்தது, இருந்தும் பயப்படவில்லை. சத்தியமாக இருப்பதற்காக சகித்துக் கொள்ளும் சக்தி அவசியமாக இருக்கிறது,. சகித்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது, தலைவணங்க வேண்டியதாக இருக்கிறது, தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது, ஆனால் அது தோல்வி இல்லை, எப்பொழுதுக்குமான வெற்றி.

 

சுலோகன்:

மகிழ்ச்சியாக இருப்பது மேலும் மகிழ்ச்சிப்படுத்துவது -இது தான் ஆசீர்வாதங்கள் கொடுப்பது மற்றும் ஆசீர்வாதம் பெறுவது.

 

ஓம்சாந்தி