07.11.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
உங்களுக்கு
ஆன்மீகக்
கலையைக்
கற்றுக்
கொடுப்பதற்காக தந்தை
வந்திருக்கின்றார்,
இந்தக்
கலையின்
மூலம்
நீங்கள்
சூரிய,
சந்திர
மண்டலங்களையும் கடந்து
சாந்திதாமத்திற்குச்
செல்கிறீர்கள்.
கேள்வி:
விஞ்ஞான
கர்வத்திற்கும்
அமைதியின்
கர்வத்திற்கும்
உள்ள
வித்தியாசம்
என்ன?
பதில்:
விஞ்ஞான
கர்வமுடையவர்கள்
சந்திர,
நட்சத்திர
மண்டலம்
செல்வதற்கு
எவ்வளவு
செலவு செய்கின்றனர்!
சரீர
அபாயத்தை
உருவாக்கிச்
செல்கின்றனர்.
ராக்கெட்
எங்கும்
நின்றுவிடக்
கூடாது
என்ற
பயம் அவர்களிடத்தில்
இருக்கும்.
அமைதியின்
கர்வமுடைய
குழந்தைகளாகிய
நீங்கள்
எந்த
செலவுமின்றி
சூரிய,
சந்திர
மண்டலங்களையும்
கடந்து
மூலவதனத்திற்குச்
சென்று
விடுகிறீர்கள்.
உங்களுக்கு
எந்த
பயமும்
கிடையாது.
ஏனெனில்
நீங்கள்
சரீரத்தை
இங்கேயே
விட்டு
விட்டுச்
செல்கிறீர்கள்.
ஓம்சாந்தி.
ஆன்மீகத்
தந்தை
வந்து
ஆன்மீகக்
குழந்தைகளுக்குப்
புரிய
வைக்கின்றார்.
விஞ்ஞானிகள் சந்திர
மண்டலம்
செல்வதற்கு
முயன்று
கொண்டிருக்கின்றனர்
என்பதை
குழந்தைகள்
கேட்டுக்
கொண்டிருக்கின்றனர்.
ஆனால்
அவர்கள்
சந்திர
மண்டலம்
வரை
மட்டுமே
செல்வதற்கான
முயற்சி
செய்கின்றனர்,
எவ்வளவு
செலவு
செய்கின்றனர்!
மேலே
செல்வதில்
அதிகமாகப்
பயப்படுகின்றனர்!
இப்பொழுது
நீங்கள் உங்களைப்
பற்றி
சிந்தனை
செய்யுங்கள்,
நீங்கள்
எங்கு
வசிக்கக்
கூடிவர்கள்?
அவர்கள்
சந்திர
மண்டலத்திற்குச் செல்கின்றனர்.
நீங்கள்
சூரிய,
சந்திர
மண்டலங்களையும்
கடந்து
செல்கிறீர்கள்,
மூலவதனத்திற்குச்
செல்கிறீர்கள்.
அவர்கள்
மேலே
செல்வதனால்
அவர்களுக்கு
அதிக
பணம்
கிடைக்கிறது.
மேலே
சுற்றி
வந்தால்
அவர்களுக்கு இலட்சக்
கணக்கான
பரிசுகள்
கிடைக்கின்றன.
சரீர
ஆபத்துக்களை
உருவாக்கிச்
செல்கின்றனர்.
அது
விஞ்ஞான கர்வமாகும்.
உங்களிடம்
அமைதியின்
கர்வம்
இருக்கிறது.
ஆத்மாக்களாகிய
நாம்
நமது
சாந்திதாமம்,
பிரம்மாண்டத்திற்குச்
செல்கிறோம்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
ஆத்மா
தான்
அனைத்தும்
செய்கிறது.
அவர்களது ஆத்மாவும்
சரீரத்தின்
கூடவே
மேலே
செல்கிறது.
மிகவும்
அச்ச
மூட்டக்
கூடியதாகும்,
பயப்படவும்
செய்கின்றனர்,
மேலிருந்து
கீழே
விழுந்து
விட்டால்
உயிர்
பிரிந்து
விடும்.
இவையனைத்தும்
உலகீய
கலைகளாகும்.
உங்களுக்கு தந்தை
ஆன்மீகக்
கலையைக்
கற்றுக்
கொடுக்கின்றார்.
இந்த
கலையைக்
கற்றுக்
கொள்வதன்
மூலம்
உங்களுக்கு எவ்வளவு
உயர்ந்த
பரிசு
கிடைக்கிறது!
வரிசைக்கிரமமான
முயற்சியின்
படி
21
பிறவிகளுக்கான
பரிசு
கிடைக்கிறது.
இன்றைய
நாட்களில்
அரசாங்கம்
லாட்டரியையும்
வெளியிடுகிறது
அல்லவா!
இந்த
பரிசை
தந்தை
உங்களுக்கு கொடுக்கின்றார்.
மேலும்
எதைக்
கற்றுக்
கொடுக்கின்றார்?
உங்களை
ஒரேயடியாக
மேலே
அதாவது
நம்முடைய வீட்டிற்கு
அழைத்துச்
செல்கின்றார்.
நமது
வீடு
எங்கு
இருக்கிறது?
மேலும்
எந்த
இராஜ்யத்தை
இழந்தோமோ அது
எங்கு
இருக்கிறது?
என்ற
நினைவு
இப்பொழுது
உங்களுக்கு
வருகிறது.
இராவணன்
அபகரித்து
விட்டான் இப்பொழுது
நாம்
மீண்டும்
நமது
சொந்த
வீட்டிற்குச்
செல்கிறோம்
மற்றும்
இராஜ்யத்தையும்
அடைகிறோம்.
முக்திதாமம்
நமது
வீடாகும்
என்பது
யாருக்கும்
தெரியாது.
இப்பொழுது
குழந்தைகளாகிய
உங்களுக்கு
கற்றுக் கொடுப்பதற்காக
தந்தை
எங்கிருந்து
வருகின்றார்
பாருங்கள்!
எவ்வளவு
தொலைவிலிருந்து
வருகின்றார்!
ஆத்மாவும்
ராக்கெட்
போன்றிருக்கிறது.
மேலே
சென்று
சந்திரனில்
என்ன
இருக்கிறது?
நட்சத்திரத்தில்
என்ன இருக்கிறது?
என்று
அவர்கள்
முயற்சி
செய்கின்றனர்.
இவைகள்
இந்த
மேடையின்
விளக்குகள்
என்பதை குழந்தைகளாகிய
நீங்கள்
அறிவீர்கள்.
எவ்வாறு
மேடைகளை
விளக்குகளினால்
அலங்கரிக்கின்றனர்!
அருங்காட்சி யகத்திலும்
நீங்கள்
மின்விளக்குகளினால்
(சீரியல்
லைட்)
அலங்கரிக்கிறீர்கள்
அல்லவா!
இது
எல்லையற்ற உலகமாகும்!
இதற்கு
இந்த
சூரியன்,
சந்திரன்,
நட்சத்திரங்கள்
வெளிச்சம்
கொடுக்கக்
கூடியவைகள்
ஆகும்.
மனிதர்கள்
சூரியனை,
சந்திரனை
தேவதைகள்
என்று
நினைக்கின்றனர்.
ஆனால்
இவைகள்
தேவதைகள் அல்ல.
தந்தை
எவ்வாறு
வந்து
நம்மை
மனிதனிலிருந்து
தேவதைகளாக
ஆக்குகின்றார்
என்பதை
இப்பொழுது நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள்.
இது
ஞான
சூரியன்,
ஞான
சந்திரன்
மற்றும்
ஞான
அதிர்ஷ்ட
நட்சத்திரங்களாகும்.
ஞானத்தின்
மூலம்
தான்
குழந்தைகளாகிய
உங்களுக்கு
சத்கதி
ஏற்பட்டுக்
கொண்டிருக்கிறது.
நீங்கள்
எவ்வளவு தொலைதூரத்திற்குச்
செல்கிறீர்கள்!
தந்தை
தான்
வீட்டிற்குச்
செல்வதற்கான
வழி
கூறியிருக்கின்றார்.
தந்தையே வந்து
அழைத்துச்
செல்லாமல்
யாரும்
தனது
வீட்டிற்குத்
திரும்பிச்
செல்ல
முடியாது.
தந்தை
எப்பொழுது வந்து
தனது
அறிமுகம்
கொடுக்கிறாரோ
அப்பொழுது
நீங்கள்
அறிகின்றீர்கள்.
ஆத்மாக்களாகிய
நாம்
தூய்மையாகும் பொழுது
தான்
தனது
வீட்டிற்குச்
செல்ல
முடியும்
என்பதையும்
புரிந்திருக்கிறீர்கள்.
பிறகு
யோக
பலத்தின் மூலமாகவோ
அல்லது
தண்டனையின்
மூலமாகவோ
பாவனம்
ஆக
வேண்டும்.
எந்த
அளவிற்கு
நீங்கள் தந்தையை
நினைவு
செய்வீர்களோ
அந்த
அளவிற்கு
நீங்கள்
பாவனம்
ஆவீர்கள்
என்று
தந்தை
புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார்.
நினைவு
செய்யவில்லையெனில்
பதீதமாகவே
இருந்து
விடுவீர்கள்,
பிறகு
அதிக தண்டனை
அடைய
வேண்டியிருக்கும்,
மேலும்
பதவியும்
குறைந்து
விடும்.
தந்தை
சுயம்
வந்து
உங்களுக்கு புரிய
வைக்கின்றார்
-
இப்படி
இருப்பவர்கள்
தான்
வீட்டிற்குச்
செல்ல
முடியும்
என்று.
பிரம்மாண்டம்
என்றால் என்ன?
சூட்சுமவதனம்
என்றால்
என்ன?
என்று
எதுவும்
தெரியாது.
மாணவர்கள்
முதலில்
எதையும்
அறியாமல் தான்
இருப்பர்,
எப்பொழுது
படிக்க
ஆரம்பித்து
விடுகிறார்களோ
அப்பொழுது
ஞானம்
(அறிவு)
கிடைக்கிறது.
படிப்பிலும்
சில
உயர்ந்ததாகவும்,
சில
சாதாரணமாகவும்
இருக்கிறது.
ஐ.சி.எஸ்
படிப்பு
படித்திருந்தால்
ஞானம் நிறைந்தவர்
என்று
கூறுவர்.
இதைவிட
உயர்ந்த
படிப்பு
வேறு
எதுவும்
கிடையாது.
இப்பொழுது
நீங்களும் எவ்வளவு
உயர்ந்த
கல்வி
கற்கிறீர்கள்.
நீங்கள்
தூய்மையாவதற்கான
யுக்தியை
தந்தை
கூறுகின்றார்
-
குழந்தைகளே!
என்னை
மட்டும்
நினைவு
செய்தால்
நீங்கள்
பதீதத்திலிருந்து
பாவனமாக
ஆகிவிடுவீர்கள்.
உண்மையில்
ஆத்மாக்களாகிய
நீங்கள்
பாவனமாக
இருந்தீர்கள்.
மேலே
தனது
வீட்டில்
இருந்தீர்கள்,
எப்பொழுது நீங்கள்
சத்யுகத்தில்
ஜீவன்
முக்தியில்
இருந்தீர்களோ
அப்பொழுது
மற்ற
அனைவரும்
முக்திதாமத்தில்
இருந்தனர்.
முக்தி
மற்றும்
ஜீவன்
முக்தி
இரண்டையும்
நாம்
சிவாலயம்
என்று
கூற
முடியும்.
முக்தியில்
சிவபாபாவும் இருக்கின்றார்,
குழந்தைகளாகிய
(ஆத்மாக்களும்)
நாமும்
இருக்கின்றோம்.
இது
உயர்ந்த
ஆன்மீகப்
படிப்பாகும்.
சந்திரனுக்குச்
சென்று
நாம்
வசிப்போம்
என்று
அவர்கள்
கூறுகின்றனர்.
எவ்வளவு
தலையை
உடைத்துக் கொள்கின்றனர்!
புத்திசாலித்தனம்
காண்பிக்கின்றனர்.
கோடிக்கணக்கான
மைல்
தொலைவில்
மேலே
செல்கின்றனர்,
ஆனால்
அவர்களது
ஆசை
நிறைவேறுவது
கிடையாது,
உங்களது
ஆசை
நிறைவேறி
விடுகிறது.
அவர் களுடையது
பொய்யான,
உலகீய
கர்வமாகும்.
உங்களுடையது
ஆன்மீக
கர்வமாகும்.
அவர்கள்
மாயையின் புத்திசாலித்தனத்தை
எவ்வளவு
காண்பிக்கின்றனர்!
மனிதர்கள்
அதிகமாக
கை
தட்டுகின்றனர்,
வாழ்த்துக்கள் கூறுகின்றனர்.
அதிகம்
அடையவும்
செய்கின்றனர்.
அதிகபட்சம்
5-10
கோடி
கிடைக்கும்.
அவர்களுக்கு
கிடைக்கும் இந்த
செல்வம்
அனைத்தும்
அழிந்து
போய்விடும்
என்ற
ஞானம்
குழந்தைகளாகிய
உங்களிடம்
இருக்கிறது.
இன்னும்
குறுகிய
காலம்
தான்
இருக்கிறது
என்று
நினையுங்கள்.
இன்று
எப்படி
இருக்கிறோம்?
நாளை
என்ன ஆகும்?
இன்று
நீங்கள்
நரகவாசிகளாக
இருக்கிறீர்கள்,
நாளை
சொர்க்கவாசிகளாக
ஆகிவிடுவீர்கள்.
அதிக நேரம்
ஆகாது,
ஆக
அவர்களுடையது
உலகீய
சக்தியாகும்,
உங்களுடையது
ஆன்மீக
சக்தியாகும்.
இதை நீங்கள்
மட்டுமே
அறிவீர்கள்.
அந்த
உலகீய
சக்தியின்
மூலம்
எதுவரை
செல்ல
முடியும்?
சந்திரன்,
நட்சத்திரம் வரை
சென்றடைவர்,
மேலும்
யுத்தம்
ஆரம்பமாகி
விடும்.
பிறகு
அவை
அனைத்தும்
அழிந்து
போய்விடும்.
அவர்களது
கலை
இங்கேயே
அழிந்து
விடும்.
அது
உலகீய
உயர்ந்த
கலையாகும்,
உங்களுடையது
ஆன்மீக உயர்ந்த
கலையாகும்.
நீங்கள்
சாந்திதாமத்திற்குச்
செல்கிறீர்கள்.
அதன்
பெயரே
இனிய
வீடு
ஆகும்.
அவர்கள் மிகவும்
உயர்வாகச்
செல்கின்றனர்,
மேலும்
நீங்கள்
தனது
கணக்கு
எடுங்கள்
-
நீங்கள்
எவ்வளவு
தொலைவில்
(மைல்)
மேலே
செல்கிறோம்?
நீங்கள்
யார்?
ஆத்மாக்கள்.
நான்
எவ்வளவு
தொலைவில்
(மைல்)
மேலே இருக்கிறேன்!
என்று
தந்தை
கூறுகின்றார்.
கணக்கிட
முடியும்.
அவர்களிடத்தில்
கணக்கு
இருக்கிறது.
இவ்வளவு தொலைவிற்கு
மேலே
சென்று
பிறகு
திரும்பி
வந்தனர்
என்று
கூறுகின்றனர்.
மிக
எச்சரிக்கையாக
இருக்கின்றனர்,
கீழே
இறங்குவோம்,
இதைச்
செய்வோம்
எனும்
பொழுது
மிகவும்
பிரபலமாகி
விடுகின்றனர்.
நீங்கள்
எங்கு செல்கிறீர்கள்?
பிறகு
எப்படி
வருகிறீர்கள்?
என்பது
யாருக்கும்
தெரியாது.
உங்களுக்கு
என்ன
பரிசு
கிடைக்கிறது?
என்பதையும்
நீங்கள்
மட்டுமே
அறிவீர்கள்.
ஆச்சரியமாக
இருக்கிறது!
பாபாவின்
அதிசயமாகும்,
யாருக்கும் தெரியாது.
இது
ஒன்றும்
புதிய
விசயமில்லை
என்று
நீங்கள்
கூறுவீர்கள்.
ஒவ்வொரு
5
ஆயிரம்
ஆண்டிற்குப் பிறகும்
அவர்கள்
இந்த
பயிற்சி
செய்து
கொண்டே
இருப்பர்.
நீங்கள்
இந்த
சிருஷ்டி
என்ற
நாடகத்தின்
முதல்,
இடை,
கடை,
ஆயுள்
போன்றவைகளை
நன்றாக
அறிவீர்கள்.
ஆக
உங்களுக்குள்
போதை
இருக்க
வேண்டும்
-
பாபா
நமக்கு
என்ன
கற்றுக்
கொடுக்கின்றார்!
மிகவும்
உயர்ந்த
முயற்சி
செய்கிறீர்கள்,
மீண்டும்
செய்வீர்கள்.
இந்த
அனைத்து
விசயங்களையும்
வேறு
யாரும்
அறிந்திருக்கவில்லை.
தந்தை
குப்தமாக
(மறைவாக)
இருக்கின்றார்.
உங்களுக்கு
தினமும்
எவ்வளவு
புரிய
வைக்கின்றார்!
உங்களுக்கு
எவ்வளவு
ஞானம் கொடுக்கின்றார்!
அவர்கள்
வரையறைக்குட்பட்டு
தான்
செல்ல
வேண்டியிருக்கிறது,
நீங்கள்
எல்லையற்று செல்கிறீர்கள்.
அவர்கள்
சந்திர
மண்டலம்
வரை
செல்கின்றனர்,
அது
பெரிய
பெரிய
விளக்குகளாகும்,
வேறு எதுவும்
கிடையாது.
அவர்களுக்கு
பூமி
மிகவும்
சிறியதாதக
தென்படுகிறது.
ஆக
அவர்களுடைய
உலகீய படிப்பிற்கும்
உங்களுடைய
படிப்பிற்கும்
எவ்வளவு
வித்தியாசம்
இருக்கிறது!
உங்களது
ஆத்மா
எவ்வளவு சிறியதாக
இருக்கிறது!
ஆனால்
ராகெட்டை
விட
வேகமானது.
ஆத்மாக்கள்
மேலே
இருக்கின்றன,
பிறகு
நடிப்பு நடிப்பதற்கு
வருகின்றன.
அவரும்
சுப்ரீம்
ஆத்மா
ஆவார்.
ஆனால்
அவருக்கு
பூஜை
எப்படி
ஏற்படும்?
பக்தியும்
அவசியம்
நிகழ
வேண்டும்.
அரைக்கல்பம்
ஞானம்,
பகல்
-
அரைக்கல்பம்
பக்தி,
இரவு
என்று
பாபா
புரிய
வைத்திருக்கின்றார்.
இப்பொழுது
சங்கமயுகத்தில்
நீங்கள்
ஞானம்
அடைகிறீர்கள்.
சத்யுகத்தில்
ஞானம்
இருக்காது.
அதனால்
தான் இதை
புருஷோத்தம
சங்கமயுகம்
என்று
கூறப்படுகிறது.
அனைவரையும்
புருஷோத்தமர்களாக
ஆக்குகின்றார்.
உங்களது
ஆத்மா
எவ்வளவு
தூர
தூரத்திற்குச்
செல்கிறது!
உங்களுக்கு
குஷி
இருக்கிறது
அல்லவா!
அவர்கள் தங்களது
கலைகளை
வெளிப்படுத்தும்
பொழுது
அதிகம்
செல்வம்
அடைகின்றனர்.
எவ்வளவு
வேண்டுமென்றாலும் அடையட்டும்,
ஆனால்
அவை
அனைத்தும்
கூடவே
வராது
என்பதை
நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள்.
இறந்து போய்விடுவர்,
அனைத்தும்
அழியக்
கூடியவைகளாகும்.
இப்பொழுது
உங்களுக்கு
எவ்வளவு
மதிப்பான
வைரங்கள் கிடைக்கின்றன!
இதன்
மதிப்பை
யாரும்
கணக்கிட
முடியாது.
ஒவ்வொரு
வாக்கியமும்
இலட்சக்கணக்கான ரூபாயாகும்.
எவ்வளவு
காலமாக
நீங்கள்
கேட்டுக்
கொண்டே
வருகிறீர்கள்.
கீதையில்
எவ்வளவு
மதிப்பான படிப்பு
இருக்கிறது.
இந்த
ஒரே
ஒரு
கீதையைத்
தான்
மிகவும்
மதிப்பானது
என்று
கூறுகின்றனர்.
அனைத்து சாஸ்திரங்களுக்கும்
சிரோன்மணி
ஸ்ரீமத்
பகவத்
கீதையாகும்.
அவர்கள்
படித்துக்
கொண்டிருக்கின்றனர்,
ஆனால் பொருளைப்
புரிந்து
கொள்வது
கிடையாது.
கீதை
படிப்பதனால்
என்ன
கிடைக்கும்?
என்னை
நினைவு
செய்தால் நீங்கள்
பாவனம்
ஆகிவிடுவீர்கள்
என்று
இப்பொழுது
தந்தை
கூறுகின்றார்.
ஆனால்
கீதையை
படிக்கலாம்,
ஆனால்
ஒருவருக்குக்
கூட
தந்தையிடம்
யோகா
(தொடர்பு)
கிடையாது.
தந்தையை
சர்வவியாபி
என்று கூறிவிட்டனர்.
பாவனமாக
ஆகவும்
முடியாது.
இப்பொழுது
இந்த
லெட்சுமி
நாராயணன்
சித்திரம்
உங்கள்
முன் இருக்கிறது.
இவர்கள்
தேவதைகள்
என்று
கூறப்படுகின்றனர்,
ஏனெனில்
தெய்வீக
குணங்கள்
இருக்கின்றன.
ஆத்மாக்களாகிய
நீங்கள்
தூய்மையாகி
அனைவரும்
தங்களது
வீட்டிற்குச்
செல்ல
வேண்டும்.
புது
உலகில் இவ்வளவு
மனிதர்கள்
இருக்கமாட்டார்கள்.
மற்ற
அனைத்து
ஆத்மாக்களும்
தங்களது
வீட்டிற்குச்
செல்ல வேண்டியிருக்கும்.
உங்களுக்கு
தந்தையும்
ஆச்சரியமான
கல்வியைக்
கற்பிக்கின்றார்,
இதன்
மூலம்
நீங்கள் மனிதனிலிருந்து
தேவதைகளாக,
மிக
உயர்ந்தவர்களாக
ஆகிறீர்கள்.
ஆக
இப்படிப்பட்ட
படிப்பின்
மீது
அந்த அளவிற்கு
கவனமும்
செலுத்த
வேண்டும்.
கல்பத்திற்கு
முன்பு
யார்
எந்த
அளவிற்கு
கவனம்
செலுத்தி யிருந்தார்களோ
அந்த
அளவிற்கு
செலுத்துவர்
என்பதையும்
புரிந்திருக்கிறீர்கள்.
தெரிந்து
விடுகிறது.
சேவைச் செய்திகளை
கேட்டு
தந்தை
குஷி
அடைகிறார்.
தந்தைக்கு
ஒருபொழுதும்
கடிதம்
எழுதவில்லையெனில் இவரது
புத்தியோகமாகமானது
ஒன்றுக்கும்
உதவாத
பொருட்களின்
பக்கம்
சென்று
விட்டதாக
தந்தை
புரிந்து கொள்வார்.
தேக
அபிமானம்
வந்து
விட்டது,
தந்தையை
மறந்து
விட்டனர்.
இல்லையெனில்
சிறிது
சிந்தித்துப் பாருங்கள்
-
காதல்
திருமணம்
செய்து
கொள்கின்றனர்
எனில்
அவர்கள்
தங்களுக்குள்
எவ்வளவு
அன்பாக இருப்பர்!
ஆனால்,
ஒரு
சிலரது
எண்ணங்கள்
மாறி
விடுகின்றன
எனில்,
பிறகு
மனைவியை
அடிக்க
ஆரம்பித்து விடுகின்றனர்.
இது
உங்களுக்கும்
அவருக்குமான
காதல்
திருமணம்
ஆகும்.
தந்தை
வந்து
உங்களுக்கு
தனது அறிமுகம்
கொடுக்கின்றார்.
நீங்கள்
சுயமாகவே
அறிமுகம்
அடைவது
கிடையாது.
தந்தை
வர
வேண்டியிருக்கிறது.
எப்பொழுது
உலகம்
பழசாகிறதோ
அப்பொழுது
தான்
தந்தை
வர
வேண்டியிருக்கிறது.
பழையதை
புதியதாக ஆக்குவதற்கு
அவசியம்
சங்கமத்தில்
தான்
வருவார்.
புது
உலகை
ஸ்தாபனை
செய்வது
தான்
தந்தையின் கடமையாகும்.
உங்களை
சொர்க்கத்திற்கு
எஜமானர்களாக
ஆக்கிவிடுகிறார்
எனில்,
இப்படிப்பட்ட
தந்தையின் மீது
எவ்வளவு
அன்பு
செலுத்த
வேண்டும்!
பிறகு
பாபா,
நான்
மறந்து
விட்டேன்
என்று
ஏன்
கூறுகிறீர்கள்?
எவ்வளவு
உயர்ந்ததிலும்
உயர்ந்த
தந்தையாக
இருக்கின்றார்!
இவரை
விட
உயர்ந்தவர்
வேறு
யாரும் கிடையாது.
மனிதர்கள்
முக்திக்காக
எவ்வளவு
தலையை
உடைத்துக்
கொள்கின்றனர்,
பரிகாரம்
செய்கின்றனர்!
எவ்வளவு
பொய்,
ஏமாற்றம்
நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது!
மகரிஷி
போன்றவர்களுக்கு
எவ்வளவு
புகழ் இருக்கிறது.
அரசாங்கம்
10-20
ஏக்கர்
கொடுத்து
விடுகிறது.
அதற்காக
அரசாங்கம்
எந்த
சமயப்
பற்றுதல் இல்லாதது
என்று
கிடையாது.
இதில்
சில
அமைச்சர்கள்
சமயப்
பற்று
உள்ளவர்களாகவும்,
சிலர்
சமயப்
பற்று இல்லாதவர்களாகவும்
இருக்கின்றனர்.
சிலர்
தர்மத்தை
ஏற்றுக்
கொள்வதே
கிடையாது.
மதம்
தான்
சக்தி மிகுந்தது
என்று
கூறப்படுகிறது.
கிறிஸ்தவர்களிடம்
சக்தி
இருந்தது
அல்லவா!
முழு
பாரதத்தையும்
அடிமைப்படுத்தி விட்டனர்.
இப்பொழுது
பாரதத்தில்
எந்த
சக்தியும்
கிடையாது.
எவ்வளவு
சண்டை
சச்சரவுகள்
நிறைந்திருக்கிறது.
இதே
பாரதம்
எப்படி
இருந்தது!
தந்தை
எப்படி,
எங்கு
வருகின்றார்?
என்பது
யாருக்கும்
எதுவும்
தெரியாது.
எங்கு
பெரிய
மீன்கள்
உள்ளனவோ
அதாவது
மகத
தேசத்தில்
வருகின்றார்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
அனைத்தையும்
சாப்பிடும்
நிலையில்
மனிதர்கள்
இருக்கின்றனர்.
அனைத்தையும்
விட
உயர்ந்த
வைஷ்ணவமாக பாரதம்
இருந்தது.
இது
வைஷ்ணவ
இராஜ்யம்
அல்லவா!
இந்த
மகான்
தூய்மையான
தேவி
தேவதைகள் எங்கு
இருக்கின்றனர்!
ஆனால்
இன்றைய
நாட்களில்
பாருங்கள்
என்னெவெல்லாம்
சாப்பிடுகின்றனர்!
மனித மாமிசம்
சாப்பிடுபவர்களாகவும்
ஆகிவிடுகின்றனர்.
பாரதத்தின்
நிலை
எப்படி
ஆகிவிட்டது!
இப்பொழுது உங்களுக்கு
முழு
இரகசியத்தையும்
புரிய
வைத்துக்
கொண்டிருக்கின்றார்.
மேலிருந்து
கீழே
வரைக்குமான முழு
ஞானமும்
கொடுக்கின்றார்.
முதன்
முதலில்
நீங்கள்
தான்
இந்த
பூமியில்
இருந்தீர்கள்,
பிறகு
மனிதர்கள் விரக்தி
அடைகின்றனர்.
இப்பொழுது
குறுகிய
காலத்தில்
அச்சமான
சூழ்நிலை
ஏற்பட்டு
விடும்,
பிறகு
ஐயோ ஐயோ
என்று
கூறிக்
கொண்டே
இருப்பர்.
சொர்க்கத்தில்
பாருங்கள்
எவ்வளவு
சுகம்
இருக்கிறது!
இலட்சியத்திற்கான இந்த
அடையாளத்தைப்
பாருங்கள்.
இவையனைத்தையும்
குழந்தைகளாகிய
நீங்கள்
தாரணையும்
செய்ய வேண்டும்.
எவ்வளவு
உயர்ந்த
படிப்பாகும்!
தந்தை
எவ்வளவு
தெளிவாகப்
புரிய
வைக்கின்றார்!
மாலையின் ரகசியத்தையும்
புரிய
வைத்திருக்கின்றார்!
மேலே
மலராக
சிவபாபா
இருக்கின்றார்,
பிறகு
தண்டு.......
இல்லற மார்க்கம்
அல்லவா!
துறவர
மார்க்கத்தினர்
மாலை
உருட்டுவதற்கு
அதிகாரம்
கிடையாது.
இது
தேவதைகளுக்கான மாலையாகும்,
அவர்கள்
எவ்வாறு
இராஜ்யத்தை
அடைந்தனர்!
உங்களிலும்
வரிசைக்கிரமமாக
இருக்கிறீர்கள்.
சிலர்
அச்சமற்று
மற்றவர்களுக்குப்
புரிய
வைக்கின்றனர்
-
வாருங்கள்,
நாங்கள்
உங்களுக்கு
வேறு
யாரும்
கூற முடியாத
விசயத்தைக்
கூறுகின்றோம்.
சிவபாபாவைத்
தவிர
வேறு
யாரும்
அறியவேயில்லை.
அவர்களுக்கு இந்த
இராஜயோகம்
கற்றுக்
கொடுத்து
யார்?
மிகவும்
அழகாக,
சுவையுடன்
புரிய
வைக்க
வேண்டும்.
இவர்கள்
84
பிறவிகள்
எப்படி
எடுக்கிறார்கள்?
தேவதை,
சத்திரியர்,
வைஷ்யர்,
சூத்திரர்
.....!
தந்தை
எவ்வளவு
எளிய ஞானம்
கூறுகின்றார்!
மேலும்
தூய்மையாகவும்
ஆக
வேண்டும்,
அப்பொழுது
தான்
உயர்ந்த
பதவி
அடைவீர்கள்.
முழு
உலகிலும்
அமைதியை
ஸ்தாபனை
செய்யக்
கூடியவர்கள்
நீங்கள்.
தந்தை
உங்களுக்கு
இராஜ்ய
பாக்கியம் கொடுக்கின்றார்.
வள்ளல்
அல்லவா!
அவர்
எதையும்
பெறுவது
கிடையாது.
உங்களது
படிப்பிற்கான
பரிசு இதுவாகும்.
இவ்வாறான
பரிசு
வேறு
யாரும்
கொடுக்க
முடியாது.
ஆக
இப்படிப்பட்ட
தந்தையை
ஏன்
அன்பாக நினைவு
செய்வது
கிடையாது?
லௌகீகத்
தந்தையை
முழு
பிறவியிலும்
நினைவு
செய்கிறீர்கள்.
பரலௌகீகத் தந்தையை
ஏன்
நினைவு
செய்வது
கிடையாது?
யுத்த
மைதானம்,
தூய்மையாவதற்கு
நேரம்
தேவைப்படுகிறது என்று
தந்தை
புரிய
வைத்திருக்கின்றார்.
யுத்தம்
முடிவடைகின்ற
வரை
நேரம்
ஆகிறது.
யார்
ஆரம்பத்தில் வந்தார்களோ
அவர்கள்
முழு
பாவனமாக
இருப்பார்கள்
என்பது
கிடையாது.
மாயையின்
யுத்தம்
மிகவும் ஜோராக
நடைபெறுகிறது
என்று
பாபா
கூறுகின்றார்.
நல்ல
நல்ல
குழந்தைகளையும்
மாயை
வென்று
விடுகிறது.
அந்த
அளவிற்கு
பலசாலியாக
இருக்கிறது.
யார்
கீழே
விழுந்து
விடுகிறார்களோ
பிறகு
அவர்கள்
முரளி
எப்படி கேட்க
முடியும்?
சென்டருக்கு
வருவது
கிடையாது
எனும்
பொழுது
அவர்கள்
எப்படி
அறிந்து
கொள்ள முடியும்?
மாயை
முற்றிலும்
ஒரு
பைசாவிற்கு
உதவாதவர்களாக
ஆக்கிவிடுகிறது.
முரளி
படிக்கும்
பொழுது தான்
விழிப்புணர்வு
ஏற்படும்.
அசுத்தமான
காரியங்களில்
ஈடுபட்டு
விடுகின்றனர்.
யாராவது
புத்திசாலிகளாக குழந்தைகளாக
இருந்தால்
அவர்களுக்குப்
புரிய
வைக்க
முடியும்
-
நீங்கள்
மாயையிடம்
எவ்வாறு
தோல்வி அடைந்தீர்கள்?
பாபா
உங்களுக்கு
என்ன
கூறுகின்றார்!
நீங்கள்
எங்கு
சென்று
கொண்டிருக்கிறீர்கள்!
இவர்களை மாயை
விழுங்கிக்
கொண்டிருக்கிறது
என்பதைப்
பார்க்கிறீர்கள்
எனில்,
காப்பாற்றுவதற்கு
முயற்சி
செய்ய
வேண்டும்.
மாயை
முழுவதுமாக
விழுங்கி
விடக்
கூடாது.
மீண்டும்
விழிப்படைந்து
விட
வேண்டும்.
இல்லையெனில் உயர்ந்த
பதவி
அடைய
முடியாது.
சத்குருவை
நிந்தினை
செய்கின்றனர்.
நல்லது.
இனிமையிலும்
இனிய,
தேடிக்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாய்
தந்தையுமான
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு,
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1)
தந்தையிடம்
அமைதிக்கான
கலையைக்
கற்றுக்
கொண்டு
இந்த
எல்லைக்குட்பட்ட
உலகிலிருந்து
தூர
விலகி
எல்லைக்கப்பால்
செல்ல
வேண்டும்.
தந்தை
நமக்கு
எவ்வளவு
அற்புதமான ஞானம்
கொடுத்து
எவ்வளவு
உயர்ந்த
பரிசு
கொடுக்கின்றார்
என்ற
போதை
இருக்க
வேண்டும்.
2)
அச்சமற்றவர்களாகி
மிகவும்
(ஞானம்)
அன்பு
நிறைந்த
வழி
முறையில்
சேவை
செய்ய வேண்டும்.
மாயையின்
யுத்தத்தில்
பலசாலியாகி
வெற்றியடைய
வேண்டும்.
முரளி
கேட்டு விழிப்புணர்வுடன்
இருக்க
வேண்டும்
மற்றும்
அனைவரையும்
விழிப்படையச்
செய்ய வேண்டும்.
வரதானம்:
சுயராஜ்யத்தின்
சம்ஸ்காரங்களின்
மூலம்
எதிர்கால
இராஜ்ய அதிகாரத்தை
அடையக்
கூடிய
அதிர்ஷ்டசாலி ஆத்மா ஆகுக.
வெகு
காலத்திற்கு
சுயராஜ்ய
அதிகாரி
ஆகக்
கூடிய
சம்ஸ்காரங்கள்
வெகு
காலத்திற்கு
எதிர்கால இராஜ்ய
அதிகாரியாக
ஆக்கும்.
ஒரு
வேளை
மீண்டும்
மீண்டும்
(கர்மேந்திரியங்களுக்கு)
வசப்பட்டவராக ஆகினீர்கள்
என்றால்,
அதிகாரி
ஆகக்
கூடிய
சம்ஸ்காரங்கள்
இல்லை
என்றால்
இராஜ்ய
அதிகாரிகளின் இராஜ்யத்தில்
இருப்பீர்கள்,
இராஜ்ய
பாக்கியம்
பிராப்தியாகக்
கிடைக்காது.
ஆக
ஞானத்தின்
கண்ணாடியில் தனது
அதிர்ஷ்டம்
நிறைந்த
முகத்தைப்
பாருங்கள்.
வெகு
காலத்தின்
பயிற்சியின்
மூலமாக
தமது
சகயோகிகளான வேலைக்காரர்கள்
அதாவது
இராஜ்ய
காரியங்களின்
துணைவர்களை
தமது
அதிகாரத்தின்
மூலம்
நடத்துங்கள்.
இராஜாவாக
ஆகுங்கள்,
அப்போது
அதிர்ஷ்டசாலி ஆத்மா என்று
சொல்லலாம்.
சுலோகன்:
ஒளி
மற்றும்
சக்தியை
கொடுக்கும்
சேவை
செய்வதற்காக
எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கிய
உள்ளுணர்வை
முன்னிறுத்துங்கள்
(இமர்ஜ்
செய்யுங்கள்).
ஓம்சாந்தி