02.09.2019    காலை முரளி 

    ஓம் சாந்தி  பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இது அதிசயமான சத்சங்கம் ஆகும். இங்கு உங்களுக்கு உயிருடனிருந்தே இறப்பது கற்பிக்கப்படுகிறது. உயிருடனிருந்தே இறப்பவர்களே அன்னப்பறவை ஆகிறார்கள்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது என்ன ஒரு கவலை உள்ளது?

 

பதில்:

நாம் விநாசத்திற்கு முன்னதாக சம்பன்னம் (முழுமை) ஆக வேண்டும். எந்த குழந்தைகள் ஞானம் மற்றும் யோகத்தில் வலுவானவர்களாக ஆகிக் கொண்டே செல்கிறார்களோ அவர்களுக்கு மனிதனை தேவதை ஆக்குவது மனதிற்கினிய பழக்கமாகிக் (ஹாபி) கொண்டே போகிறது. அவர்களால் சேவை செய்யாமல் இருக்க முடியாது. ஜின் பூதம் போல ஓடிக் கொண்டே இருப்பார்கள். சேவையுடன் கூடவே தங்களையும் சம்பன்னமாக ஆக்கும் கவனம் இருக்கும்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் ஆத்மாக்கள் அனைவரும் சாகாரத்தில் (உடலில் வசிப்பது) இருக்கிறார்கள். மேலும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆவார்கள். ஏனெனில் தத்து எடுக்கப்பட்டவர்களாக உள்ளார்கள். இவர்கள் சகோதர சகோதரியாக ஆக்குகிறார்கள் என்று உங்களை எல்லோரும் கூறுகிறார்கள். உண்மையில் ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதர சகோதரர்கள் ஆவீர்கள் என்று குழந்தைகளுக்குத் தந்தை புரிய வைத்துள்ளார். இப்பொழுது புதிய சிருஷ்டி (படைப்பு) ஆகிறது. எனவே முதன் முதலில் பிராமணர்கள், குடுமி வேண்டும். நீங்கள் சூத்திரர்களாக இருந்தீர்கள். இப்பொழுது "டிரான்ஸ்ஃபர்" (மாற்றம்) ஆகி உள்ளீர்கள். பிராமணர்கள் கூட அவசியம் வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவின் பெயரோ பிரசித்தமானது. இந்த கணக்குப்படி குழந்தைகளாகிய நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் ஆகிறோம். யாரெல்லாம் தங்களை பிரம்மா குமாரர் குமாரி என்று அழைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் அவசியம் சகோதர சகோதரி ஆகிறார்கள். எல்லோருமே பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆவார்கள். எனவே அவசியம் சகோதர சகோதரியாக இருக்க வேண்டும். இதை அறியாதவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அறியாதவர்களும் உள்ளார்கள். பின்னர் குருட்டு நம்பிக்கை உடையவர்களும் உள்ளார்கள். யாருக்கு பூஜை செய்கிறார்களோ, இவர் இன்னார் என்று நம்பிக்கை கொள்கிறார்களோ பின் அவர் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கிறார்கள். இலட்சுமி நாராயணருக்கு பூஜை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுது வந்தார்கள், எப்படி ஆனார்கள் பிறகு எங்கு சென்றார்கள்? எதுவுமே தெரியாமல் உள்ளார்கள். எந்த ஒரு மனிதனும் நேரு போன்றோரை அறிந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய சரித்திரம், பூகோளம் பற்றிக் கூட எல்லாமே தெரிந்திருப்பார்கள். வாழ்க்கை சரித்திரம் பற்றி அறியாமல் உள்ளார்கள் என்றால் பின் அவர்களால் என்ன பயன்? பூஜை செய்கிறார்கள், ஆனால் அவர்களது வாழ்க்கை சரித்திரத்தை அறியாமல் உள்ளார்கள். மனிதர்களின் வாழ்க்கை சரித்திரத்தையோ அறிந்துள்ளார்கள். ஆனால் யாரெல்லாம் முன்னோர்கள் வாழ்ந்து சென்றுள்ளார்களோ அவர்கள் ஒருவருடைய வாழ்க்கை சரித்திரம் பற்றிக் கூட அறியாமல் உள்ளார்கள். சிவனுக்கு எத்தனை ஏராளமான பூசாரிகள் உள்ளார்கள்! பூஜை செய்கிறார்கள். பிறகு அவரோ கல் மண்ணில் உள்ளார், அணு அணுவிலும் உள்ளார் என்று வாயால் கூறி விடுகிறார்கள். இது என்ன வாழ்க்கை சரித்திரம் ஆகியதா? இதுவோ அறிவுப் பூர்வமான விஷயம் ஆகவில்லை. தங்களைக் கூட பதீதமானவர் என்று கூறுகிறார்கள். பதீத நிலை என்ற வார்த்தை எவ்வளவு பொருத்தமானது! பதீத நிலை என்றால் விகாரி. நாங்கள் பிரம்மா குமார் குமாரி என்று ஏன் அழைக்கப்படுகிறோம் என்பதை நீங்கள் புரிய வைக்கலாம். ஏனெனில் பிரம்மாவின் குழந்தைகள் ஆவோம் மற்றும் தத்து எடுக்கப்பட்டவர்கள் ஆவோம். நாம் குகவம்சாவளி அல்ல. முகவம்சாவளி ஆவோம். பிராமணர் பிராமணிகளோ சகோதர சகோதரிகள் ஆகிறார்கள் அல்லவா? எனவே அவர்களிடையே (கிரிமினல் ) குற்றப் பார்வை இருக்க முடியாது. மோசமான சிந்தனைகளில் முக்கியமானதே காமத்தினுடையது. நாங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் சகோதர சகோதரி ஆகிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நாம் அனைவருமே சிவபாபாவின் குழந்தைகள் சகோதர சகோதரர்கள் ஆவோம் என்று நீங்கள் புரிந்துள்ளீர்கள். இதுவும் உறுதியாக உள்ளது. உலகத்திற்கு எதுவுமே தெரியாது. வெறுமனே அவ்வாறே கூறி விடுகிறார்கள். அனைத்து ஆத்மாக்களின் தந்தை அவர் ஒருவர் ஆவார் என்று நீங்கள் புரிய வைக்கலாம். அவரை எல்லோரும் அழைக்கிறார்கள். நீங்கள் படமும் காண்பித்துள்ளீர்கள். பெரிய பெரிய தர்மத்தினர் கூட இந்த நிராகார தந்தையை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர் நிராகார ஆத்மாக்களின் தந்தை ஆவார். மேலும் பின் சாகாரத்தில் அனைவரின் தந்தை பிரஜாபிதா பிரம்மா ஆவார். அவர் மூலமாக பின் விருத்தி அடைந்து கொண்டே போகிறார்கள். மரம் வளர்ந்து கொண்டே போகிறது. பல்வேறு தர்மங்களில் வந்து கொண்டே செல்கிறார்கள். ஆத்மாவோ இந்த சரீரத்திலிருந்து தனிப்பட்டது ஆகும். சரீரத்தைப் பார்த்து "இவர் அமெரிக்கர், இவர் இன்னார்" என்கிறார்கள். ஆத்மாவிற்கோ அவ்வாறு கூறுவதில்லை. ஆத்மாக்கள் எல்லோரும் சாந்தி தாமத்தில் இருக்கிறார்கள். அங்கிருந்து பாகத்தை நடிக்க வருகிறார்கள். நீங்கள் எந்த ஒரு தர்மத்தினருக்கும் கூறுங்கள். மறு பிறவியோ எல்லோரும் எடுக்கிறார்கள். மேலும் மேலிருந்தும் புது ஆத்மாக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். எனவே தந்தை புரிய வைக்கிறார் - நீங்களும் மனிதர்கள் ஆவீர்கள். மனிதர்களுக்குத் தான் இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது, இதன் படைப்புக்கர்த்தா யார், இந்த சிருஷ்டி சக்கரம் சுற்றுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கிறது என்று இந்த படைப்பின் முதல், இடை, கடை பற்றி தெரிந்திருக்க வேண்டும். இதை நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். தேவதைகள் அறிவதில்லை. மனிதர்கள் தான் அறிந்து, பிறகு தேவதை ஆகிறார்கள். மனிதனை தேவதையாக ஆக்குபவர் தந்தை ஆவார். தந்தை தன்னுடைய மற்றும் படைப்பினுடைய அறிமுகத்தை அளிக்கிறார். நாம் விதை ரூப தந்தையின் விதை ரூபக் குழந்தைகள் ஆவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எப்படி தந்தை இந்த தலைகீழான விருட்சத்தைப் பற்றி அறிந்துள்ளார். அதே போல நாமும் அறிந்துள்ளோம். மனிதர்கள் மனிதர்களுக்கு ஒருபொழுதும் இதைப் புரிய வைக்க முடியாது. ஆனால் உங்களுக்கு தந்தை புரிய வைத்துள்ளார்.

 

நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள் ஆகாதவரை இங்கு வர முடியாது. முழுமையான (கோர்ஸ்) பாட முறை பெற்று புரியாத வரை நீங்கள் பிராமணர்களின் சபையில் எவ்வாறு அமர முடியும்? இதற்கு இந்திர சபை என்றும் கூறுகிறார்கள். இந்திரன் ஒன்றும் அந்த தண்ணீரின் மழை பொழிவதில்லை. இந்திர சபை என்று கூறப்படுகிறது. "பரிகள்" (தேவ மங்கைகள்) கூட நீங்கள் ஆக வேண்டும். அநேகவிதமான தேவலோகப் பெண்கள் பாடப்பட்டுள்ளார்கள். ஒரு சில குழந்தைகள் நல்ல அழகானவர்களாக இருக்கும் பொழுது இவர்களோ "பரிகள்" போல இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் அல்லவா? பவுடர் ஆகியவை போட்டு அழகானவர்களாக ஆகிவிடுகிறார்கள். சத்யுகத்தில் நீங்கள் பரிகளாக, தேவதைகளாக ஆகிறீர்கள். இப்பொழுது நீங்கள் ஞானக் கடலில் ஞான ஸ்நானம் செய்வதால் பரிகள் (தேவி தேவதைகள்) ஆகிவிடுகிறீர்கள். எப்படி இருந்த நாம் எப்படி ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். யார் என்றுமே தூய்மையான தந்தையோ, என்றுமே மிகவும் அழகானவராக இருக்கிறாரோ அந்த பிரயாணி உங்களை அது போல ஆக்குவதற்காக கருமையான (தூய்மையற்ற) உடலில் பிரவேசம் செய்கிறார். இப்பொழுது வெண்மையானவராக (தூய்மையானவராக) யார் ஆக்க முடியும்? பாபா தானே ஆக்க முடியும் இல்லையா? சிருஷ்டியின் சக்கரமோ சுற்ற வேண்டி உள்ளது. இப்பொழுது நீங்கள் வெண்மையாக (தூய்மையானவராக) ஆக வேண்டி உள்ளது. படிப்பிக்கக் கூடிய ஞானக் கடல் ஒரே ஒரு தந்தை ஆவார். ஞானத்தின் கடல் அன்பின் கடல் ஆவார். அந்த தந்தைக்கு பாடப்படும் மகிமை லௌகீக தந்தைக்கு இருக்க முடியுமா என்ன? எல்லையில்லாத தந்தைக்குத் தான் மகிமை உள்ளது. "எங்களை வந்து இது போல மகிமை உடையவர்களாக ஆக்குங்கள்" என்று அவரைத் தான் எல்லோரும் அழைக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் வரிசைக்கிரமமான முயற்சிக்கேற்ப ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா? படிப்பில் எல்லோரும் ஒரே இரசனை உடையவர்களாக இருப்பதில்லை. இரவு பகலுக்கான வித்தியாசம் இருக்கிறது அல்லவா? உங்களிடம் கூட நிறைய பேர் வருவார்கள். பிராமணராக அவசியம் ஆக வேண்டும். பிறகு ஒரு சிலர் நல்ல முறையில் படிப்பார்கள். ஒரு சிலர் குறைவாக. யார் படிப்பில் எல்லோரையும் விட நன்றாக இருப்பார்களோ அவர்களால் மற்றவர்களுக்கும் கற்பிக்க முடியும். இத்தனை கல்லூரிகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இந்தக் கல்லூரியில் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் கிடைக்கிறது என்று யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளும் வகையில் அப்பேர்ப்பட்ட கல்லூரியை அமையுங்கள் என்று பாபாவும் கூறுகிறார். தந்தை பாரதத்தில் தான் வருகிறார். எனவே பாரதத்தில் தான் கல்லூரிகள் திறந்து கொண்டே இருக்கின்றன. இனி போகப் போக வெளிநாட்டில் கூட திறந்து கொண்டே போகும். நிறைய கல்லூரிகள் (யுனிவர்சிட்டி) பல்கலைக் கழகங்கள் வேண்டும் அல்லவா? இங்கு நிறைய பேர் வந்து படிப்பார்கள். பின் படிப்பு முடிந்தவுடன் தேவி தேவதா தர்மத்தில் எல்லோரும் (டிரான்ஸ்ஃபர்) மாற்றப்பட்டு விடுவார்கள். அதாவது மனிதனிலிருந்து தேவதையாக ஆகி விடுவார்கள். நீங்கள் மனிதனிலிருந்து தேவதை ஆகிறீர்கள் அல்லவா?மனிதனிலிருந்து தேவதையாக.. .. .. என்ற பாடலும் உள்ளது. இங்கு இது இருப்பது மனிதர்களின் உலகம். அது தேவதைகளின் உலகம் ஆகும். தேவதைகள் மற்றும் மனிதர்களுக்கிடையில் இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. பகலில் இருப்பவர்கள் தேவதைகள் ஆவார்கள். இரவில் இருப்பவர்கள் மனிதர்கள். எல்லோருமே பக்தர்களே! பக்தர்கள் பூசாரி ஆவார்கள். இப்பொழுது நீங்கள் பூசாரியிலிருந்து பூஜிக்கத்தக்கவர் ஆகிறீர்கள். சத்யுகத்தில் சாஸ்திரங்கள், பக்தி ஆகியவற்றின் பெயர் இருப்பதில்லை. அங்கு எல்லோரும் தேவதைகளாக இருப்பார்கள். மனிதர்களாக இருப்பவர்கள் பக்தர்கள். மனிதர்கள் தான் பிறகு தேவதையாக ஆகிறார்கள். அது தெய்வீக உலகம் ஆகும். இதற்கு அசுர உலகம் என்று கூறப்படுகிறது. இராம ராஜ்யம் மற்றும் இராவண ராஜ்யம். இராவண ராஜ்யம் என்று எதற்குக் கூறப்படுகிறது என்பது இதற்கு முன்பு உங்கள் புத்தியில் இருந்ததா என்ன? இராவணன் எப்பொழுது வந்தான்? எதுவுமே தெரியாமல் இருந்தது. இலங்கை சமுத்திரத்தில் மூழ்கி விட்டது என்று கூறுகிறார்கள். இதே போல துவாரகைக்கும் கூறுகிறார்கள். இந்த முழு இலங்கையே மூழ்கப் போகிறது. முழு உலகம் கூட எல்லையில்லாத இலங்கை ஆகும் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். இவை எல்லாமே மூழ்கிப் போய் விடும். தண்ணீர் வந்து விடும். மற்றபடி சொர்க்கம் மூழ்கி விடுகிறதா என்ன? எவ்வளவு ஏராளமான செல்வம் இருந்தது! ஒரே ஒரு சோமநாத் கோவிலை முகம்மதியர்கள் எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பதை தந்தை புரிய வைத்துள்ளார். இப்பொழுது பாருங்கள் எதுவுமே இல்லை! பாரதத்தில் எவ்வளவு ஏராளமான செல்வம் இருந்தது! பாரதத்திற்குத் தான் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. இப்பொழுது சொர்க்கம் என்று கூறுவார்களா? இப்பொழுதோ நரகம் ஆகும். மீண்டும் சொர்க்கம் உருவாகும். சொர்க்கத்தை யார் உருவாக்குகிறார்கள், நரகத்தை யார் அமைக்கிறார்கள் என்பதையும் இப்பொழுது நீங்கள் அறிந்து விட்டுள்ளீர்கள். இராவண இராஜ்யம் எவ்வளவு காலம் நடக்கிறது என்பதையும் கூறியுள்ளார். இராவண இராஜ்யத்தில் எவ்வளவு ஏராளமான தர்மங்கள் ஆகி விடுகின்றன. இராம இராஜ்யத்திலோ சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினர் மட்டுமே இருப்பார்கள். இப்பொழுது நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த படிப்பு வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. அவர்கள் இருப்பதே இராவண இராஜ்யத்தில். இராம இராஜ்யம் என்பது சத்யுகத்தில் இருக்கும். நான் உங்களை தகுதியுடையவராக ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகிறார். பிறகு நீங்கள் தகுதியற்றவர்களாக ஆகிவிடுகிறீர்கள். தகுதியற்றவர் என்று ஏன் கூறுகிறார்கள்? ஏனெனில் பதீதமானவர்களாக ஆகி விடுகிறீர்கள். தேவதைகளின் தகுதிகளின் மகிமை மற்றும் தங்களுடைய தகுதியற்ற நிலையின் மகிமை பாடுகிறார்கள்.

 

நீங்கள் பூஜிக்கத் தக்கவர்களாக இருக்கும்பொழுது புதிய உலகம் இருந்தது என்று தந்தை புரிய வைக்கிறார். மிகவும் குறைவாக மனிதர்கள் இருந்தார்கள். முழு உலகிற்கு நீங்கள் தான் அதிபதியாக இருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். சகோதரன் சகோதரியாக ஆகிறீர்கள் இல்லையா! இவர்கள் வீட்டை பிளவு படுத்துகிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களே பின் வந்து இந்த கல்வியைப் பெறுகிறார்கள். இங்கே வந்த பிறகு ஞானமோ மிகவும் நன்றாக உள்ளது என்று புரிந்து கொள்கிறார்கள். அர்த்தத்தை தெரிந்து கொள்கிறார்கள் அல்லவா? சகோதர சகோதரி அல்லாது தூய்மை எங்கிருந்து வரும்? எல்லாமே தூய்மையைத் தான் பொருத்துள்ளது. தந்தை வருவது கூட மிகவுமே கீழே விழுந்திருக்கும் தேசமான மகத தேசத்தில் ஆகும். மிகவும் பதீதமாக (தூய்மையற்றவராக) இருக்கிறார்கள். உணவுப் பழக்கங்கள் கூட அசுத்தமாக உள்ளது. நான் அநேக பிறவிகளின் கடைசி சரீரத்தில் தான் பிரவேசம் செய்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இவரே 84 பிறவிகள் எடுக்கிறார். "லாஸ்ட் சோ ஃபர்ஸ்ட், ஃபர்ஸ்ட் சோ லாஸ்ட்" கடைசியில் வந்தவரே முதலில் வருவார். பின் முதலில் வந்தவரே கடைசியில் வருவார். உதாரணமோ ஒருவருனுடையதைத் தான் கூறுவார்கள் அல்லவா? உங்களுடைய பரம்பரை அமைய வேண்டி உள்ளது. எந்த அளவு நல்ல முறையில் புரிந்து கொண்டே செல்வார்களோ பின் உங்களிடம் நிறைய பேர் வருவார்கள். இப்பொழுது இது மிகச் சிறிய செடி ஆகும். புயல்கள் கூட நிறைய ஏற்படுகின்றன. சத்யுகத்தில் புயல்களின் விஷயமே கிடையாது. மேலிருந்து புதுப் புது ஆத்மாக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இங்கு புயல்கள் ஏற்பட்ட உடனேயே விழுந்து விடுகிறார்கள். அங்கோ மாயையின் புயல்கள் இருப்பதே இல்லை. இங்கோ அமர்ந்தபடியே இறந்து விடுகிறார்கள். மேலும் உங்களுடைய யுத்தம் மாயையுடன் உள்ளது. எனவே அதுவும் தொல்லை செய்கிறது. சத்யுகத்தில் இது இருக்காது. மற்ற எந்த தர்மத்திலும் இது போன்ற விஷயங்கள் ஆவதில்லை. இராவண இராஜ்யம் மற்றும் இராம இராஜ்யம் பற்றி வேறு யாரும் புரிந்து கொள்வதே இல்லை. சத்சங்கங்களுக்குச் செல்கிறார்கள் என்றாலும் கூட அங்கு இறப்பது, வாழ்வது பற்றிய விஷயம் இருப்பதில்லை. இங்கோ குழந்தைகள் தத்து எடுக்கப்படுகிறார்கள். நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம். அவரிடமிருந்து ஆஸ்தி பெறுகிறோம் என்கிறார்கள். ஆஸ்தி எடுக்க எடுக்க பின் விழுந்து விடுகிறார்கள் என்றால், ஆஸ்தியும் முடிந்து போய் விடும். அன்னத்திலிருந்து மாறி கொக்காக ஆகிவிடுகிறார்கள். பிறகும் தந்தை கருணையுள்ளம் உடையவர், ஆதலால் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். ஒரு சிலர் மீண்டும் ஏறி விடுகிறார்கள். யார் நிலையாக (ஸ்திரமாக) இருக்கிறார்களோ அவர்களுக்கு மகாவீரர் ஹனுமான் என்பார்கள். நீங்கள் மகாவீரர், மகாவீராங்கனை ஆவீர்கள். வரிசைக்கிரமமாகவோ இருக்கவே இருப்பார்கள். எல்லோரையும் விட பயில்வானுக்கு மகாவீரர் என்று கூறப்படுகிறது. ஆதி தேவனுக்கும் கூட மகாவீர் என்று கூறப்படுகிறது. அவர் மூலமாகத் தான் இந்த மகாவீரர்கள் பிறக்கிறார்கள், பின்னர் உலகத்தின் மீது ஆட்சி புரிகிறார்கள். வரிசைக்கிரமப்படி புருஷார்த்தத்திற்கேற்ப (முயற்சி) இராவணன் மீது வெற்றி அடைவதற்காக முயற்சி (புருஷார்த்தம்) செய்து கொண்டே இருக்கிறார்கள். இராவணன் என்பது 5 விகாரமாகும். இதுவோ புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். இப்பொழுது உங்களது புத்தியின் பூட்டை தந்தை திறக்கிறார். பிறகு பூட்டு ஒரேயடியாக மூடப்பட்டு விடுகிறது. இங்கும் அவ்வாறே. யாருடைய பூட்டு திறக்கிறதோ அவர்கள் போய் சேவை செய்கிறார்கள். தந்தை கூறுகிறார் - "போய் சேவை செய்யுங்கள், சாக்கடையில் விழுந்திருப்பவர்களை வெளியேற்றுங்கள்". அப்படியின்றி நீங்களும் சாக்கடையில் விழுந்து விடுவதல்ல. நீங்கள் வெளியே வந்து மற்றவர்களையும் வெளியேற்றுங்கள். விஷ வைதர்ணிய நதியில் அளவற்ற துக்கம் உள்ளது. இப்பொழுது அளவற்ற சுகங்களில் செல்ல வேண்டும். யார் அளவற்ற சுகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு மகிமை பாடப்படுகிறது. துக்கம் கொடுக்கும் இராவணனுக்கு மகிமை ஆகுமா என்ன? இராவணனுக்கு அரக்கன் என்று கூறப்படுகிறது. நீங்கள் இராவண இராஜ்யத்தில் இருந்தீர்கள். இப்பொழுது அளவற்ற சுகத்தை பெறுவதற்காக நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள் என்று தந்தை கூறுகிறார். உங்களுக்கு எவ்வளவு அளவற்ற சுகம் கிடைக்கிறது! எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும்! மேலும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். பதவியோ வரிசைக்கிரமமாக இருக்கும். ஒவ்வொரு நடிகரினுடைய பதவியும் தனியானது ஆகும். எல்லோருக்குள்ளும் இறைவனோ இருக்க முடியாது. தந்தை வந்து ஒவ்வொரு விஷயத்தையும் புரிய வைக்கிறார். நீங்கள் தந்தை பற்றியும் படைப்பின் முதல், இடை, கடை பற்றியும் வரிசைக்கிரமமாக முயற்சிக் கேற்ப அறிந்து கொண்டு விடுகிறீர்கள். படிப்பில் வரிசைக்கிரமமாகத் தான் மதிப்பெண்கள் இருக்கும். இது எல்லையில்லாத படிப்பு ஆகும். இதில் குழந்தைகள் மிகவும் கவனம் கொள்ள வேண்டும். படிப்பை ஒரு நாளும் தவற விடக் கூடாது. நாம் மாணவர்கள் ஆவோம். (காட்ஃபாதர்) இறை தந்தை படிப்பிக்கிறார் - அந்த போதை குழந்தைகளுக்கு ஏறி இருக்க வேண்டும். பகவானுவாச் - பகவான் கூறுகிறார். அவருடைய பெயரை மாற்றி கிருஷ்ணருடைய பெயரைப் போட்டு விட்டுள்ளார்கள், அவ்வளவே! தவறாக "கிருஷ்ண பகவானுவாச்" என்று நினைத்துக் கொண்டு விட்டுள்ளார்கள். ஏனெனில் கிருஷ்ணர் "நெக்ஸ்ட் டு காட்" (இறைவனுக்கு அடுத்தவர்) ஆவார். தந்தை ஸ்தாபனை செய்யும் சொர்க்கத்தில் முதல் நம்பர் இவர் ஆவார் அல்லவா? இந்த ஞானம் இப்பொழுது உங்களுக்குக் கிடைத்துள்ளது. வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப தங்களுக்கும் நன்மை செய்கிறார்கள் மற்றும் மற்றவர்களுக்கும் நன்மை செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு சேவை இன்றி ஒரு பொழுதும் சுகம் ஏற்படாது. குழந்தைகளாகிய நீங்கள் யோகம் மற்றும் ஞானத்தில் வலிமை உடையவர்களாக ஆகினீர்கள் என்றால் ஜின் பூதம் போல (இடைவிடாமல்) காரியம் செய்வீர்கள். மனிதனை தேவதையாக ஆக்கக் கூடிய "ஹாபி" (பழக்கம்) ஏற்பட்டு விடும். இறப்பதற்கு முன்னதாகவே தேர்ச்சி அடைய வேண்டும். சேவையும் நிறைய செய்ய வேண்டும். பின்னாலோ சண்டை மூண்டு விடும். இயற்கை சீற்றங்கள் கூட வரும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. லாஸ்ட் சோ ஃபர்ஸ்ட் கடைசியிலிருந்து முதலில் செல்வதற்காக மகாவீரர் ஆகி புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். மாயையின் புயல்களில் ஆடிப் போகக் கூடாது. தந்தைக்கு சமானமாக கருணையுள்ளம் உடையவராக ஆகி மனிதர்களின் புத்தியின் பூட்டை திறப்பதற்கான சேவை செய்ய வேண்டும்.

 

2. ஞானக்கடலில் தினமும் ஞான ஸ்நானம் செய்து பரிஜாதா இளவரசி ஆக வேண்டும். ஒரு நாள் கூட படிப்பை தவற விடக் கூடாது. பகவானுக்கு நாம் மாணவர்களாக இருக்கிறோம் என்ற இந்த போதையில் இருக்க வேண்டும்.

 

வரதானம்:

மனதார என்னுடைய பாபா என்று சொல்உண்மையான வியாபாரம் செய்யக் கூடிய சமர்பணம் மற்றும் மறுபிறவி எடுத்தவர் ஆகுக.

 

பிரம்மா குமார், பிரம்மா குமாரி ஆவதென்றாலே சரண்டர் ஆவது. எப்பொழுது மனதார என்னுடைய பாபா என்று சொல்லும் பொழுது, பாபா கூட சொல்கிறார் அனைத்தும் உன்னுடையது என்று கூறுகிறார். இல்லறத்தில் இருந்தாலும், சென்டரில் இருந்தாலும், ஆனால் யார் மனதார என்னுடைய பாபா என்று கூறுகிறார் என்றால் பாபா தன்னுடையவராக ஆக்கிக் கொண்டார். இது தான் மனதினுடைய வியாபாரம், வாயின் மூலம் செய்யும் ஸ்தூலமான வியாபாரம் இல்லை. சரண்டர் என்றால் ஸ்ரீமத்திற்கு கட்டுப்பட்டு இருக்ககூடியவர். அப்படி சரண்டர் ஆகக் கூடியவர் தான் மறுபிறவி எடுத்த பிராமணன்.

 

சுலோகன்:

ஒருவேளை என்னுடையது என்ற வார்த்தையில் அன்பு இருக்கிறது என்றால், அநேகவிதமான என்னுடையது என்பதை எனக்கு ஒரு பாபா என்பதில் அடக்கிவிடுங்கள்.

 

ஓம்சாந்தி