20.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! முட்களை மலராக மாற்றுவதற்காக தந்தை வந்துள்ளார். அனைத்திலும் மிகப்பெரிய முள் தேக அபிமானம், இதன் மூலமாகவே மற்ற அனைத்து விகாரமும் உருவாகின்றது, எனவே ஆத்மா அபிமானி ஆகுக.

 

கேள்வி:

பக்தர்கள் தந்தையின் எந்த ஒரு செயலை புரிந்துக் கொள்ளாத காரணத்தால் சர்வவியாபி என்று சொல்லிவிட்டனர்?

 

பதில்:

பாபா பலவேடம் தரிப்பவராக இருக்கின்றார், எங்கு தேவை ஏற்படுகிறதோ அங்கே ஒரு வினாடியில் எந்த ஒரு குழந்தையிடமாவது பிரவேசம் செய்து எதிரில் உள்ள ஆத்மாவிற்கு நன்மை செய்து விடுகின்றார். பக்தர்களுக்கு சாட்சாத்காரம் செய்து விடுகிறார். அவர் எங்கும் நிறைந்தவர் அல்ல; ஆனால் மிக வேகமாக பறக்கும் ராக்கெட் அவர். பாபா வருவதற்கோ, செல்வதற்கோ நேரம் அதிகமாகாது. இந்த விசத்தைப் புரியாத காரணத்தால் பக்தர்கள் சர்வவியாபி என்று சொல்லி விட்டனர்.

 

ஓம் சாந்தி.

இது ஒரு சிறிய பூஞ்சோலை. மனிதர்களால் ஆன மலர்தோட்டம். பூங்காவனத்தில் சென்றால் அங்கே பழைய மரமும் இருக்கின்றது, விதவிதமாக இருக்கும். ஆங்காங்கே மொட்டுகளும், மலர்ந்து மலராத பாதி மொட்டுகளும் இருக்கின்றன. இதுவும் ஒரு பூஞ்சோலை ஆகும். இங்கே குழந்தைகள் புரிந்துள்ளார்கள், இங்கே நாம் முள்ளிலிருந்து மலராக மாற வந்துள்ளோம். ஸ்ரீமத்படி நாம் முள்ளிலிருந்து மலராக மாறிக் கொண்டிருக்கின்றோம். முட்கள் காட்டில் இருக்கும், மலர்கள் மலர் தோட்டத்தில் இருக்கும். மலர் தோட்டம் என்பது சொர்க்கம், முட்காடு என்பது நரகம். பாபாவும் புரிய வைக்கின்றார், இது அசுத்தமான முட்களால் ஆன காடு, அது மலர்வனம். இது மலர்வனமாக, பூஞ்சோலையாக இருந்தது. இப்போது முட் காடாகி விட்டது. தேகாபிமானமே மிகப்பெரிய முள் ஆகும். இதன்பிறகு மற்ற அனைத்து விகாரமும் வருகிறது. அங்கே ஆத்மா அபிமானியாக இருந்தீர்கள். ஆத்மாவின் ஞானம் இருந்தது. இப்போது நமது ஆயுள் முடிவடைகிறது. இப்போது நாம் இந்த பழைய உடலை விடுத்து வேறு உடல் எடுக்க வேண்டும். சாட்சாத்காரமும் கிடைக்கின்றது. நாம் கர்பமாளிகையில் சென்று அமர்வோம். பிறகு மொட்டாகி, மொட்டிலிருந்து மலராவோம். இந்த ஞானம் ஆத்மாவிற்கு உள்ளது. சிருஷ்டி சக்கரம் எப்படி சுழல்கிறது, இதைப்பற்றிய ஞானம் அங்கே கிடையாது. இது பழைய உடல், இதை இப்போது மாற்ற வேண்டும் என்ற இந்த ஞானம் மட்டும் இருக்கின்றது. அங்கே உள்ளூர குஷி இருக்கிறது. கலியுகத்தின் எந்தவிதமான பழக்க வழக்கமும் அங்கே இருப்பதில்லை. இங்கு குலமரியாதைகள் அனேகம் உள்ளது. வித்தியாசம் இருக்கும் அல்லவா? அங்குள்ள மரியாதை சத்ய மரியாதை என சொல்லப்படும். இங்கு பொய்யான மரியாதைகள். சிருஷ்டி இருந்து கொண்டேயிருக்கின்றதல்லவா? அசுர மரபு வழியினர் இருக்கும் பொழுது தான் தந்தையே வருகின்றார். அப்போது தான் தெய்வீக மரபு வழியினர் படைக்கப்பட்டு வினாசம் நடைபெறுகின்றது. அப்படியென்றால் அசுர மரபு இனத்தவர் தானே உள்ளனர். அதிலிருந்து தான் தெய்வீக குணமுடையவர்களின் வம்சம் (இராஜ்யம்) ஸ்தாபனை ஆகின்றது.

 

இதுவும் புரிய வைக்கப்பட்டுள்ளது, யோக பலத்தால் உங்களது பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படுகிறது, இந்த பிறவியிலும் பாவங்கள் செய்துள்ளோம், அதனையும் சொல்லிவிடவேண்டும். அதிலும் முக்கியமாக விகாரத்தின் விசயங்கள். நினைவில் உள்ளது சக்தி. பாபா சர்வ சக்திவான், உங்களுக்குத் தெரியும் அனைவருக்கும் தந்தையாக இருப்பவர், அவருடன் நினைவு இணைப்பதால் பாவம் எரிந்து சாம்பலாகின்றது. இந்த லட்சுமி-நாராயணன் சர்வ சக்திவானாக இருக்கின்றனர். உலகம் முழுவதும் இவர்களின் ராஜ்யம் உள்ளது. அது தான் புதிய உலகம். அங்கே ஒவ்வொரு பொருளும் புதியதே. இப்போது பூமியே வறட்சியடைந்து விட்டது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புதிய உலகிற்கு எஜமானனாகின்றீர்கள். எனவே அவ்வளவு மகிழ்ச்சியிருக்க வேண்டும். எப்படிப்பட்ட மாணவரோ அப்படி குஷியும் அதிகமாக இருக்கும். இது உங்களுடைய மிக உயர்ந்த பல்கலைக்கழகம். கற்பிப்பவரும் மிக உயர்ந்தவர். குழந்தைகள் படிப்பதும் உயர்ந்ததிலும் உயர்ந்த நிலை அடைவதற்காக, நீங்கள் எவ்வளவு கீழே இருந்தீர்கள். முற்றிலும் கீழ் தரத்திலிருந்து பிறகு உயர் நிலை அடைகின்றீர்கள். பாபா அவரே சொல்கின்றார், நீங்கள் சொர்க்கத்திற்கு தகுதியானவர் களா? தூய்மையற்றவர்கள் அங்கே செல்ல முடியாது. கீழ்த்தரமாக இருப்பதால் தான் உயர்ந்த தேவதைகளுக்கு முன்னால் சென்று அவர்களின் மகிமைப் பாடுகிறார்கள். கோவிலில் சென்று அவர்களின் புகழையும், தனது இயலாமையையும் வர்ணனை செய்கின்றார்கள். பிறகு இரக்கம் காண்பியுங்கள், நாங்களும் இப்படி உயர்நிலை அடைய வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் தலை வணங்குகின்றனர். அவர்களும் மனிதர்கள் தான். ஆனால் அவர்களிடம் தெய்வீக குணம் இருந்தது. கோவிலுக்குச் செல்கின்றனர், அவர்களுக்கு பூஜை செய்கின்றனர், தானும் அவர்களைப் போல மாற வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் அவர்களை இப்படி மாற்றியவர் யார்? என்பது யாருக்குமே தெரியாது. குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் நாடகம் முழுவதும் அடங்கியுள்ளது. எப்படி இந்த தெய்வீக மரத்தின் நாற்று நடப்படுகின்றது என்பதும் உங்கள் புத்தியில் உள்ளது. பாபா வருவதும் சங்கமயுகத்தில் தான். இது தூய்மை இல்லாத உலகம். எனவே எங்களையும் வந்து தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்குங்கள் என்று பாபாவை அழைக்கின்றனர். இப்போது நீங்கள் தூய்மையாவதற்காக முயற்சி செய்கின்றீர்கள். மற்ற அனைவரும் அனைத்து கணக்கு வழக்குகளையும் முடித்துக் கொண்டு சாந்திதாமம் செல்வார்கள். மன்மானபவ என்ற மந்திரம் முக்கியமானது. அதை பாபா உங்களுக்குக் கொடுக்கின்றார். பலவிதமான குருமார்களும் உள்ளனர், எவ்வளவு மந்திரம் தருகின்றனர். பாபாவினுடையது ஒரே ஒரு மந்திரம் தான். பாபா பாரதத்தில் வந்து மந்திரம் வழங்கியிருந்தார். அதனால் நீங்கள் தேவி தேவதை ஆகியிருந்தீர்கள். பகவான் வாக்கு அல்லவா? அவர்களும் சுலோகன் சொல்கிறார்கள். ஆனால் அர்த்தம் ஒன்றுமே புரிவதில்லை. நீங்கள் அர்த்தம் புரிந்துள்ளீர்கள். கும்பமேளாவிற்கு செல்கின்றனர், அங்கும் சென்று நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்கலாம். இது தூய்மையற்ற உலகம், நரகம். சத்யுகம் தூய்மையான உலகமாக இருந்தது, அதனையே சொர்க்கம் என்று சொல்லப்படுகின்றது. தூய்மை இல்லாத உலகில் தூய்மையானவர்கள் ஒருவரும் இருக்க முடியாது. மனிதர்கள் கங்கையில் நீராடி தூய்மையடையச் செல்கின்றார்கள், ஆத்மா எப்போதுமே தூய்மையாக இருக்கின்றது என்றும் ஆத்மாவே பரமாத்மா என்றறெல்லாம் சொல்லி விட்டார்கள். நீங்களும் எழுதலாம், ஆத்மா, ஞான நீராடுவதால் தான் தூய்மையாகுமே தவிர தண்ணீரில் நீராடுவதால் அல்ல. தண்ணீரில் தினமும் தான் நீராடிக் கொண்டேயிருக்கிறார்கள். எங்கெல்லாம் நதிகள் உள்ளதோ, அங்கெல்லாம் தினமும் சென்று நீராடிக் கொண்டே யிருக்கின்றனர். அதே நீரைத்தான் அருந்தவும் செய்கின்றனர். இப்போது நீரால் தான் அனைத்தும் செய்யப்படுகின்றது. விசயம் எவ்வளவு சுலபமானது தான் ஆனால் யாருடைய புத்தியிலும் இல்லை.

 

ஞானத்தால் தான் ஒரு வினாடியில் சத்கதி கிடைக்கின்றது. பிறகு இப்படியும் சொல்லப்படுகின்றது கடல் நீரையே மையாக்கினாலும், காட்டு மரங்களையெல்லாம் எழுது கோல் ஆக்கினாலும், பூமியையே காதிகதமாக்கினாலும் எழுத முடியாது என்று. ஞானம் அந்தளவு ஆளமானது, முடிவே இல்லாதது. பாபா விதவிதமாக கருத்துகளை தினமும் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். பாபா சொல்கின்றார் இன்று மிகவும் ஆழமான விசயங்களைக் கூறுகின்றேன். முன்பே ஏன் சொல்லவில்லை என்று குழந்தைகள் கேட்கின்றார்கள்., அட முதலிலேயே எப்படி சொல்ல முடியும். கதை என்றால் ஆரம்பத்திலிருந்து வரிசைக்கிரமமாகத் தானே சொல்ல முடியும் அல்லவா? கடைசியில் வரும் நடிப்பை முன்பே எப்படி சொல்ல முடியும்? இதையும் பாபா சொல்லிக் கொண்டேயிருக்கின்றார். இந்த சிருஷ்டி சக்கரத்தின் ஆதி-மத்ய-அந்திமம் இவற்றின் இரகசியத்தை நீங்கள் புரிந்துள்ளீர்கள். உங்களிடம் யாரேனும் கேட்டால் உடனடியாக பதில் சொல்ல முடியும். உங்களிலும் கூட வரிசைக்கிரமாகத்தான் புத்தியில் இடம் பெற்றுள்ளது. உங்களிடம் வருபவர்களுக்கு முழுமையாக பதில் கிடைக்கவில்லையெனில் அவர்கள் வெளியில் சென்று இங்கே முழுமையாக இவர்களால் புரிய வைக்கமுடிவதில்லை என்றும், வீணான சித்திரங்கள் வைத்துள்ளதாகவும் கூறுவார்கள். எனவே அவர்களுக்குப் புரிய வைப்பவர்கள் மிகவும் புத்திசாலிகளாக, இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களும் கூட புரிந்து கொள்வதில்லை, புரிய வைப்பரும் முழுமையாக புரிய வைக்கவில்லையெனில் இவருக்கேற்பத்தான் கேட்பவரும் முன் எப்படியோ அப்படியே இருப்பார். பாபா சொல்கிறார்: ஆங்காங்கே பார்க்கும்பொழுது, மனிதர்கள் மிகவும் புத்திசாலியாக இருக்கின்றனர், அங்கே குழந்தைகள் அந்தளவிற்கு புத்திசாலியாக இல்லாதபொழுது, நானே அவருக்குள் பிரவேசம் செய்து உதவி செய்து விடுகிறேன். ஏனெனில் பாபா மிகவும் சிறிய ராக்கெட்., பாபா வருவதற்கும், செல்வதற்கும் நேரமாகாது. இதையே அவர்கள் பல ரூபதாரி அல்லது சர்வவியாபி என்று புரிந்துக் கொண்டார்கள். இவற்றையெல்லாம் பாபாவே உங்களுக்குப் புரிய வைக்கின்றார். சிலசில மனிதர்கள் மிக நல்ல புத்திசாலியாக உள்ளனர். அவர்களுக்குப் புரிய வைப்பவரும் அப்படியே இருக்க வேண்டும். இப்போதெல்லாம் சிறிய குழந்தைகளே சாஸ்திர பாராயணம் செய்து விடுகின்றனர். ஏனெனில் ஆத்மா சம்ஸ்காரம் எடுத்து செல்கின்றது. எங்கேனும் சென்று அங்கு வேத சாஸ்திரம் படிப்பதில் ஈடுபடுகின்றனர். இறுதி நிலையிலே ஆதி நிலை உருவாக்குகிறது அல்லவா? ஆத்மா சம்ஸ்காரம் எடுத்துச் செல்கிறது அல்லவா! இப்போது நீங்கள் புரிந்துள்ளீர்கள், அந்த நாள் வந்தது என்று.... அந்த சொர்க்கத்தின் வாயில் கதவு உண்மையில் திறக்கப்படுகின்றது. புதிய உலக ஸ்தாபனை, பழைய உலகம் வினாசம் நடைபெறுகிறது. மனிதர்களுக்கு சொர்க்கம் புதிய உலகில் இருக்கிறது என்பது கூட தெரிவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள் உண்மையிலும் உண்மையான சத்ய நாராயணன் கதை மற்றும் அமரகதை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். கதையும் ஒன்று தான், அதனை சொல்பவரும் ஒருவர் தான். பிறகு அதனையே சாஸ்திரமாக்கி விட்டார்கள். கதைகள் அனைத்தும் உங்களையே குறிக்கும். அதனையே பின்னாளில் பக்தி மார்க்கத்தில் பயன்படுத்துகின்றனர். எனவே சங்கமயுகத்தில் தந்தையே வந்து அனைத்தையும் புரிய வைக்கின்றார். இதுமிகப்பெரிய எல்லையில்லா விளையாட்டு, இதில் முதலில் சத்யுகம்-திரேதாயுகம், இராம ராஜ்யம், பிறகு இராவண இராஜ்யம் நடைபெறுகிறது. இது நடாகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலும், முடிவும் இல்லாதது, அவினாசி (அழிவற்றது) என்று சொல்லப்படும். நாம் அனைவரும் ஆத்மாக்கள். இந்த ஞானம் எவருக்குமேயில்லை, இதனை உங்களுக்கு பாபாவே தருகின்றார். இங்குள்ள அனைத்து ஆத்மாக்களின் நடிப்பும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது. யாருக்கு எப்போது நடிப்பு இருக்குமோ, அவர் அந்த சமயத்தில் தான் வருவார், வளர்ச்சி அடைந்து கொண்டேயிருக்கும்.

 

குழந்தைகளுக்கு முக்கிய விசயம் தூய்மை அற்ற நிலையிலிருந்து தூய்மை ஆக வேண்டும். அழைப்பதும் பதீத பாவனரே வாருங்கள் என்று தான். குழந்தைகள் தான் அழைக்கின்றனர். பாபாவும் சொல்கின்றார், என் குழந்தைகள் காமச்சிதையில் அமர்ந்து பஸ்மமாகி விட்டனர், இது தான் யதார்த்தமான விசயங்கள். அழியாத ஆத்மா (அகால ஆத்மா) விற்கு இது (பிரம்மாவின் சரீரம்) இருக்கை (சிம்மாசனம்). வாடகைக்காக எடுக்கப்பட்டுள்ளது. பிரம்மாவைப் பற்றியும், உங்களிடம் இவர் யார்? என கேட்கின்றார்கள். கூறுங்கள், பாருங்கள் இங்கே எழுதப்பட்டுள்ளது பகவான் வாக்கு, நான் சாதாரண உடலில் வந்துள்ளேன். அந்த அலங்காரமான ஸ்ரீ கிருஷ்ணரே 84 பிறவிகள் எடுத்து சாதாரண நிலை அடைகின்றார், சாதாரணமானவரே பிறகு அந்த கிருஷ்ணராகின்றார். கீழே தபஸ்யா செய்கின்றனர், தெரிந்துள்ளனர், நாம் இப்படி மாறுவோம் என்று. திரிமூர்த்தியை அனேகர் பார்த்துள்ளார்கள், ஆனால் அதன் அர்த்தமும் வேண்டும் அல்லவா? ஸ்தாபனை செய்பவரே பிறகு அதனை பாலனை செய்வார். ஸ்தாபனை சமயத்தில் பெயர், ரூபம், தேசம், காலம் வேறு, பாலனை சமயத்தில் பெயர், ரூபம், தேசம், காலம் வேறு. இவையெல்லாம் புரிந்து கொள்வது சுலபமே. இவர்கள் கீழே தவம் செய்கின்றனர், பிறகு இப்படி மாறுகின்றனர். இவரே 84 பிறவி எடுத்து இப்படி மாறுகின்றார். எவ்வளவு வினாடியிலான மிக சுலபமான ஞானம். நாம் தேவதை ஆகின்றோம் என்ற இந்த ஞானம் புத்தியில் உள்ளது. 84 பிறவிகளும் இந்த தேவதைகள் தான் எடுக்க வேண்டும், வேறு யாரும் எடுப்பார்களா என்ன? 84 பிறவிகளின் இரகசியமும் புரிய வைக்கப்பட்டுள்ளது. தேவதைகள் தான் முதன் முதலில் வருகின்றனர். மீன்களின் பொம்மை உள்ளது. மீன் அதில் மேலிருந்து கீழும், கீழிலிருந்து மேலும் செல்கிறது. அதுவும் ஒரு ஏணிப்படி தான். குளவி, ஆமை இவ்வாறெல்லாம் உதாரணம் காட்டப்படுவதெல்லாம் இந்த சமயத்தில் உள்ளது தான். குளவியிடமும் எவ்வளவு அறிவு உள்ளது. மனிதர்கள் தன்னை மிகவும் புத்திசாலி என நினைக்கின்றனர், ஆனால் பாபா சொல்கின்றார், குளவியிடம் உள்ள அறிவு கூட கிடையாது. பாம்பு பழைய சட்டையைக் கழற்றி புதிய சட்டை அணிகிறது. குழந்தைகள் எவ்வளவு புத்திசாலியாக்கப்படுகின்றனர்? புத்திசாலி மற்றும் தகுதியுடையவர்கள். ஆத்மா தூய்மையிழந்ததால் தகுதியிழந்துவிட்டது. எனவே அதனை தூய்மையாக்கி தகுதியுடையதாக மாற்றப்படுகிறது. இது தான் தகுதியான உலகம். இது ஒரு பாபாவின் வேலை தான், இந்த முழு உலகையும், (நரகத்தை) சொர்க்கமாக்குகின்றார். சொர்க்கம் என்றால் என்ன? இது மனிதர்களுக்குத் தெரியாது. தேவி தேவதைகளின் ராஜதானி தான் சொர்க்கம் என்று சொல்லப்படும். சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜாங்கம் நடைபெறுகிறது. நீங்கள் புரிந்துள்ளீர்கள் சத்யுகம் புதிய உலகில் நாமே இராஜ்ய பாக்கியம் செய்தோம். 84 பிறவிகளும் நாமே எடுத்து வந்தோம், எத்தனை தலைமுறை இராஜ்யம் செய்தோம், பிறகு இழந்தோம் இதுவும் உங்களுக்குத் தெரியும். ராம் வழியால் நீங்கள் இராஜ்யம் அடைந்தீர்கள், இராவணன் வழியால் இராஜ்யம் இழந்தீர்கள். இப்போது மீண்டும் மேலே ஏறுவதற்காக உங்களுக்கு ராம் வழி கிடைக்கின்றது. கீழே விழுவதற்காகக் கிடைப்பதில்லை. மிக நன்றாகவே புரிய வைக்கப்படுகிறது. ஆனால் பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களின் புத்தியை மாற்றுவது மிகவும் கடினமாகிறது. பக்தி மார்க்கத்தில் ஆர்ப்பாட்டம் அதிகம். அது முற்றிலும் சேற்றுக்குழி. அதிலேயே கழுத்து வரை மூழ்கி யிருக்கின்றனர். எப்போது அனைவருக்கும் முடிவு வருகிறதோ அப்போது நான் வருகின்றேன். அனைவரையும் ஞானத்தால் கரையை கடந்து அழைத்துச் செல்கின்றேன். நான் வந்து இந்த குழந்தைகள் மூலமாக காரியம் செய்ய வைக்கின்றேன். பாபாவுடன் சேவை செய்பவர்கள் பிராமணர்கள் நீங்கள் தான், உங்களைத்தான் இறை சேவகன் என்று சொல்லப்படுகின்றது. இது அனைத்தையும் விட மிக நல்ல சேவையாகும். குழந்தை களுக்கு ஸ்ரீமத் கிடைக்கிறது. இப்படி இப்படி செய்யுங்கள் என்று. பிறகு இதிலிருந்து பிரித்தெடுக்கலாம். இதுவும் புதிய விசயம் அல்ல. கல்ப முன்பு கூட எவ்வளவு தேவி தேவதைகள் ஆனார்களோ அவர்களே வருவார்கள். நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது. நீங்கள் செய்தி மட்டும் அனுப்பினால் போதும். மிகவும் சுலபம் தான். உங்களுக்குத் தெரியும் பகவான் வருவதே கல்பத்தின் சங்கமயுகத்தில் பக்தியின் வேகம் அதிகரிக்கும்பொழுது தான். பாபா வந்து அனைவரையும் அழைத்துச் செல்கின்றார். இப்போது உங்கள் மீது குருதசை நடைபெறுகிறது. அனைவருமே சொர்க்கம் செல்வார்கள். பிறகு படிப்பில் வரிசைக்கிரமமாக உள்ளனர். சிலருக்கு செவ்வாய், சிலருக்கு ராகு தசை நடைபெறுகிறது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

(1) தகுதியுடையவராகவும், புத்திசாலியாகவும் மாறுவதற்காக தூய்மையாக வேண்டும். முழு உலகையும் நரகத்திலிருந்து சொர்க்கமாக மாற்றுவதற்காக பாபாவுடன் சேவை செய்ய வேண்டும். இறை சேவகன் ஆக வேண்டும்

 

 (2) கலியுகத்தின் பழக்க வழக்கம், குலமரியாதை, சடங்குகளை விடுத்து, சத்ய மரியாதைகளை கையாள வேண்டும். தெய்வீக குணத்தில் முழுமையடைந்து தெய்வீக சம்பிரதாயத்தை ஸ்தாபனை செய்ய வேண்டும்.

 

வரதானம்:

புயலை வெகுமதியாக புரிந்துக் கொண்டு சகஜமாக கடந்துச் செல்லக்கூடிய சம்பூரண (முழுமையாக) மற்றும் சம்பன்னமானவர் (நிரம்பியவர்) ஆகுக.

 

நம் அனைவருடைய இலட்சியம் சம்பூரணமானவராகவும் சம்பன்னமானவராகவும் ஆக வேண்டுமென்றால் சிறிய சிறிய விஷயங்களில் பயந்து விடாதீர்கள். மூர்த்தி (உருவசிலை) ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் கொஞ்சம் சுத்தியன் அடி விழத்தான் செய்யும். யார் எந்தளவு முன்னேறி செல்கிறார்களோ, அவர்களுக்கு புயல் கூட அனைவரையும் விட அதிகமாக கடந்துச் செல்ல வேண்டியிருக்கிறது, ஆனால் அந்த புயல் கூட அவர்களுக்கு புயலாக தெரியாது, வெகுமதியாக உணர்வார்கள். இந்த புயல் கூட அனுபவசாஆக்குவதற்கான வெகுமதி ஆகிவிடுகிறது ஆகையால் தடைகளை வரவேற்பு செய்யுங்கள். மேலும் அனுபவசாஆகி முன்னேறிக் கொண்டேச் செல்லுங்கள்.

 

சுலோகன்:

அலட்சியத்தன்மையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால் சுயசிந்தனையில் இருந்துக் கொண்டே தன்னை சோதனை செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி