30.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! சதா ஸ்ரீமத் படி நடக்க வேண்டும், இதுவே உயர்ந்த முயற்சியாகும். ஸ்ரீமத் படி நடப்பதன் மூலம் ஆத்மாவின் தீபம் பிரகாசமாகும்.

 

கேள்வி:

முழுமையான முயற்சி யாரால் செய்ய முடியும்? உயர்ந்த முயற்சி என்பது என்ன?

 

பதில்:

யாருடைய கவனம் மற்றும் புத்தியின் தொடர்பு ஒருவரிடம் இருக்கிறதோ அவர்கள் தான் முழுமையான முயற்சி செய்ய முடியும். தந்தையிடம் முழுமையாக பலி ஆவது தான் அனைத்தையும் விட உயர்ந்த முயற்சியாகும். பலியாகக் கூடிய குழந்தைகள் தான் தந்தைக்கு மிகவும் பிரியமானவர்கள்.

 

கேள்வி:

உண்மையான தீபாவளி கொண்டாடுவதற்காக எல்லையற்ற தந்தை எப்படிபட்ட ஆலோசனை தருகின்றார்?

 

பதில்:

குழந்தைகளே! எல்லையற்ற தூய்மையை தாரணை செய்யுங்கள். இங்கு எப்போது எல்லையற்ற தூய்மையானவர்களாகி, அவ்வாறு உயர்ந்த முயற்சி செய்கிறீர்களோ அப்போது, லட்சுமி-நாரயணரின் இராஜ்யத்தில் செல்ல முடியும். அதாவது உண்மையான தீபாவளி மற்றும் முடிசூட்டு விழாவைக் கொண்டாடுவீர்கள்.

 

ஓம் சாந்தி.

குழந்தைகள் இப்பொழுது இங்கு அமர்ந்து என்ன செய்கின்றீர்கள்? நடந்தாலும், சுற்றினாலும் அல்லது அமர்ந்து கொண்டே பலபிறவிகளின் பாவங்கள் தலைமேல் உள்ள பாவங்களை நினைவு யாத்திரையில் அழிக்கின்றோம். நாம் எந்தளவு தந்தையை நினைவு செய்கின்றோமோ அந்தளவு பாவங்கள் நீங்கும் என்பதை ஆத்மா அறிந்துள்ளது. தந்தை நல்ல முறையில் புரிய வைக்கின்றார், இங்கு அமர்ந்து இருந்தாலும் கூட யார் ஸ்ரீமத்படி நடக்கின்றார்களோ, அவர்களுக்கு பாபாவின் ஆலோசனை பிடித்தமானதாக இருக்கும். எல்லையற்ற தந்தையுடைய ஆலோசனை, எல்லையற்ற தூய்மையானவராக வேண்டும். எல்லையற்ற தூய்மையானவராக ஆவதற்காக நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள், நினைவு யாத்திரையில் தூய்மை ஆவீர்கள். சிலரால் முற்றிலும் நினைவு செய்ய முடியவில்லை, சிலர் நினைவு யாத்திரையில் தன்னுடைய பாவத்தை அழிக்கின்றோம் என புரிந்துள்ளார்கள், அதாவது தனக்காக நன்மை செய்கின்றார்கள். வெளியே இருப்பவர்கள் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. உங்களுக்கு மட்டுமே தந்தை கிடைத்துள்ளார், நீங்கள் தந்தையின் அருகிலேயே இருக்கின்றீர்கள். இப்பொழுது நாம் ஈஸ்வரிய குழந்தைகளாக ஆகியிருக்கிறோம், இதற்கு முன் அசுர குழந்தைகளாக இருந்தோம் என்பதையும் புரிந்துள்ளோம். இப்போது ஈஸ்வரிய குழந்தைகளோடு நம்முடைய சகவாசம் இருக்கிறது. நல்ல சகவாசம் கரை சேர்க்கும், தீய சகவாசம் மூழ்கடிக்கும் என சொல்லப்பட்டிகிறது. நாம் ஈஸ்வரிய குழந்தைகளாக இருக்கின்றோம் என்பதை குழந்தைகள் அடிக்கடி மறந்துவிடுகிறார்கள். நாம் ஈஸ்வரிய வழிப்படி தான் நடக்க வேண்டும், தன்னுடைய மனவழிப்படி நடக்கக் கூடாது. மனவழியை மனிதர் வழி என சொல்லப்படுகிறது. மனிதர்வழி அசுர வழியாகத் தான் இருக்கும். எந்த குழந்தைகள் தான் நன்மையடைய வேண்டும் என விரும்புகிறார்களோ அவர்கள் சதோபிரதானமாக ஆவதற்கு தந்தையை நன்றாக நினைவு செய்கின்றனர். சதோபிரதானமான நிலைக்கு மகிமையும் ஏற்படுகிறது. நாம் சுகமான உலகிற்கு எஜமானராக வரிசைப்படி ஆகின்றோம் என்பதையும் அறிந்துள்ளீர்கள். எந்தளவு ஸ்ரீமத்படி நடக்கின்றனரோ அந்தளவு உயர்ந்த பதவி அடைவார்கள், எந்தளவு தன்னுடைய வழிப்படி நடக்கின்றனரோ அந்தளவு பதவி தாழ்ந்துவிடும். தனக்கு நன்மை ஏற்பட தந்தையின் வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. யார் எந்தளவு அதன்படி செய்கின்றனரோ அவ்வளவு பாவங்கள் நீங்கும், இது கூட முயற்சியாகும் என தந்தை கூறுகின்றார். நினைவு யாத்திரை செய்யாமல் தூய்மையாக முடியாது. எழுந்தாலும், உட்கார்ந்தாலும், நடந்தாலும் இந்தக் கவலைதான் இருக்க வேண்டும். குழந்தைகள் உங்களுக்கு எத்தனை வருடங்களாக போதனை கிடைத்து வருகிறது ஆனாலும், தாங்கள் வெகுதூரத்தில் இருப்பதை அறிவீர்கள். அந்தளவு தந்தையை நினைவு செய்ய முடியவில்லை. சதோபிரதானம் ஆவதற்கு வெகுகாலம் ஆகிவிடும். இதற்கிடையில் சரீரத்தை விட்டுச்சென்றால், கல்ப-கல்பமாக பதவி குறைந்துவிடும். ஈஸ்வரனுடையவராக ஆகிவிட்டீர்கள் எனவே, அவரிடமிருந்து முழு பிராப்தியை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். புத்தி ஒருவர் பக்கமே இருக்க வேண்டும். உங்களுக்கு இப்பொழுது ஸ்ரீமத் கிடைக்கிறது, அவரே உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான். அவருடைய வழிப்படி நடக்கவில்லையெனில், மிகவும் ஏமாற்றம் அடைவீர்கள். நடக்கின்றீர்களா அல்லது இல்லையா? என்பதை நீங்களே சோதித்து அறிந்து கொள்ளுங்கள், மேலும் சிவாபாபா அறிவார். சிவபாபா தான் உங்களை முயற்சி செய்ய வைப்பவர். தேகதாரிகள் அனைவரும் முயற்சி செய்பவர்கள். இவர் கூட தேகதாரியாக இருக்கிறார், இவரையும் சிவபாபா முயற்சி செய்ய வைக்கின்றார். குழந்தைகள் தான் முயற்சி செய்ய வேண்டும். பதீதமானவர்களை பாவனமாக்குவது முக்கியமான விசயமாகும். உலகத்தில் கூட நிறைய பேர் சுத்தமாக உள்ளனர். சந்நியாசிகளும் தூய்மையாக இருக்கின்றனர். அவர்கள் ஒரு பிறவிக்காக சுத்தமாக ஆகின்றனர். இந்த பிறவியிலேயே பால பிரம்மச்சாரியாக நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களால் இந்த உலகிற்கு தூய்மைக்கான உதவி செய்யமுடியாது. ஸ்ரீமத் படி நடந்து தூய்மையானால் தான் உலகத்தை தூய்மையாக்குவதில் உதவி செய்ய முடியும்.

 

இப்பொழுது உங்களுக்கு ஸ்ரீமத் கிடைக்கிறது. பல பிறவிகளாக நீங்கள் அசுர வழிப்படி நடந்தீர்கள். சுகமான உலகத்தின் படைத்தல் நடக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். எந்தளவு நாம் ஸ்ரீமத் படி முயற்சி செய்கிறோமோ அந்தளவு உயர்ந்த பதவி அடைவோம். இது பிரம்மாவின் வழி அல்ல, அவரும் முயற்சியாளர். இவர்களின் முயற்சி அந்தளவு உயர்வாக இருக்கிறது, ஆகவே லட்சுமி-நாரயணராக ஆகின்றனர். ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்;, மனவழிப்படி நடக்கக் கூடாது. தனது ஆத்மாவின் தீபத்தை ஒளியேற்ற வேண்டும்;. இப்பொழுது தீபாவளி வருகின்றது, சத்யுகத்தில் தீபாவளி நடக்காது, முடிசூட்டு விழா மட்டும் நடக்கும். மற்றபடி ஆத்மாக்கள் சதோபிரதானமாக ஆகிவிடுவர். இங்கு கொண்டாடும் தீபாவளி பொய்யானது. வெளியே தீபத்தை ஏற்றுகிறார்கள், அங்கு ஒவ்வொரு வீட்டிலும் தீபங்கள் ஒளியேற்றப்பட்டிருக்கும், அதாவது அனைவரின் ஆத்மாவும் சதோபிரதானமாக இருக்கும். 21 பிறவிகளுக்காக ஞானம் என்ற நெய் நிறைந்து இருக்கும். பிறகு, படிப்படியாக குறைந்து, இந்த நேரம் முழு உலகிலும் ஆத்மா தீபம் மங்கிவிடுகிறது. குறிப்பாக பாரதவாசிகள், பொதுவாக முழு உலகம். இப்பொழுது அனைவரும் பாவ ஆத்மாக்கள், அனைவருக்கும் இது கடைசிக் காலமாகும், அனைவரும் கணக்கு-வழக்குகளை முடிக்க வேண்டும். இப்பொழுது குழந்தைகள் நீங்கள் மிக உயர்ந்த பதவி அடைய முயற்சி செய்ய வேண்டும், ஸ்ரீமத்படி நடந்தால் தான் அடைவீர்கள். இராவண இராஜ்யத்தில் சிவபாபாவை மிகவும் நிந்தனை செய்தீர்கள். இப்போது கூட அவருடைய கட்டளைப்படி நடக்கவில்லையெனில் மிகவும் ஏமாற்றம் அடைவீர்கள். எங்களை பாவனமாக்க வாருங்கள் என அவரை அழைத்தீர்கள். ஆகவே, இப்போது தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டுமானால் சிவபாபாவின் ஸ்ரீமத்படி நடந்தாக வேண்டும், இல்லையெனில் மிகவும் தீமை ஏற்படும். இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இதையும் அறிந்துள்ளீர்கள், அதாவது சிவபாபாவின் நினைவு செய்யாமல் நாம் முழுமையாகப் பாவனமாக முடியாது. உங்களுக்கு இவ்வளவு வருடம் ஆகியும் ஞானத்தின் தாரணை ஏன் ஆகவில்லை? புத்தி தங்கப் பாத்திரமானால்தான் தாரணை ஏற்படும். புதுப்புது குழந்தைகள் எவ்வளவு சேவைக்குரியவர்களாக இருக்கிறர்கள், வித்தியாசம் எவ்வளவு இருக்கிறது. எந்தளவு புதிய குழந்தைகள் நினைவு யாத்திரையில் இருக்கிறார்களோ அந்தளவு பழைய குழந்தைகள் இருப்பதில்லை. சிலர் நல்ல அன்பான குழந்தைகள் சிவபாபாவிடம் வருகின்றனர், எவ்வளவு சேவை செய்கின்றனர், அதாவது சிவபாபாவிடம் ஆத்மாவைப் பலியிடுகின்றனர். பலியான பிறகு எவ்வளவு சேவை செய்கின்றனர், எவ்வளவு அன்பானவராக, இனிமையானவராக இருக்கின்றனர். நினைவு யாத்திரையின் மூலம் தந்தைக்கு உதவி செய்கிறீர்கள். தந்தை கூறுகின்றார், என்னை நினைவு செய்வதால் நீங்கள் பாவனமாவீர்கள். எங்களை பாவனமாக்க வாருங்கள் என அழைத்தீர்கள், ஆகவே தந்தை கூறுகின்றார் என்னை நினைவு செய்து கொண்டே இருங்கள். தேக சம்மந்தங்கள் அனைத்தையும் தியாகம் செய்தாக வேண்டும். ஒரு தந்தையைத் தவிர, உற்றார்-உறவினர்களின் நினைவு இல்லாமால் இருப்பதன் மூலமே உயர்ந்த பதவி அடைய முடியும். நினைவு செய்யவில்லையெனில் உயர்ந்த பதவி அடைய முடியாது. இதனை பாப்தாதாவும் புரிந்துள்ளார், குழந்தைகள் உங்களுக்கும் தெரியும். புதுப்புது குழந்தைகள் வருகின்றனர், நாளுக்கு நாள் திருந்துகிறோம் என அறிந்துள்ளனர். ஸ்ரீமத்படி நடப்பதன் மூலமே திருந்துகின்றனர். முயற்சி செய்து கோபத்தின் மீது வெற்றி அடைகின்றனர். கெட்டவைகளை நீக்குங்கள் என தந்தையும் புரியவைக்கின்றார். கோபமும் மிகவும் கெட்டதாகும், தன்னையும் எரித்து, பிறரையும் எரித்துவிடும். எனவே அதை நீக்க வேண்டும். குழந்தைகள் தந்தையின் ஸ்ரீமத்படி நடக்கவில்லையெனில் பதவி குறைந்துவிடும், பல பிறவிகளுக்கும், கல்ப-கல்பத்திற்கும் நஷ்டம் ஏற்படும்.

 

குழந்தைகள் நீங்கள் அறிந்துள்ளீர்கள் அது உலகீயப் படிப்பாகும், இங்கு ஆன்மீகப் படிப்பை ஆன்மீகத் தந்தை கற்பிக்கின்றார். பல வகையிலும் கவனம் செலுத்த வேண்டியதாகிறது. எந்த விகாரிகளும் மதுபன் உள்ளே வர முடியாது. நோய்வாய்ப்பட்ட சூழலும் விகாரமான உற்றார்-உறவினர்கள் வருவதும் நல்லதல்ல. நாமும் அதை விரும்புவதில்லை. இல்லையெனில் கடைசி நேரத்தில் அந்த உற்றார்-உறவினர்களின் நினைவு வந்துவிடும், பிறகு அவர்கள் உயர்ந்த பதவி அடைய முடியாது. யாருடைய நினைவும் வராமலிருக்க தந்தையும் முயற்சி செய்யவைக்கின்றார். நமக்கு உடல்நிலை சரியில்லை எனவே, உற்றார்-உறவினர்கள் வந்து பார்க்கட்டும் என்பதல்ல, அவர்களை அழைப்பது விதிமுறையல்ல. விதிமுறைப்படி நடப்பதனால்தான் சத்கதி ஏற்படும். இல்லையெனில் தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால் தமோபிரதானமான புத்தி இதைப் புரிந்து கொள்வதில்லை. ஈஸ்வரன் ஆலோசனை கொடுத்தாலும் திருந்துவதில்லை. மிகவும் எச்சரிக்கையோடு நடந்து செல்ல வேண்டும். இந்த இடம் தூய்மையிலும் தூய்மையானது. பதீதமானவர்கள் தங்க முடியாது. உற்றார்-உறவினர்களின் நினைவு வந்தால் இறக்கும் நேரத்திலும் நிச்சயமாக அவர்கள் நினைவு வரும். தேக அபிமானத்தில் வருவதால் தனக்கே நஷ்டத்தை ஏற்படுத்துவார்கள், தண்டனையடைய நிமித்தமாவார்கள். ஸ்ரீமத்படி நடக்கவில்லையெனில் மிகவும் துர்கதி ஏற்படுகிறது, சேவைக்குத் தகுதியாக முடியாது. எவ்வளவு தான் புரியவைத்தாலும் சேவைக்கு தகுதியாக முடியாது. அவமரியாதை செய்தால் கல்புத்தியாக ஆகிவிடுவார்கள். முன்னேறுவதற்குப் பதிலாக கீழே விழுந்து விடுவார்கள். குழந்தைகள் கீழ்ப் படிந்தவர்களாக ஆக வேண்டுமென தந்தை கூறுகின்றார், இல்லையெனில் தாழ்ந்த பதவி ஏற்படும். லௌகீக தந்தையிடம் 4-5 குழந்தைகள் இருந்தாலும் அதில் யார் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தான் பிடித்தமானவர்களாக இருப்பார்கள், யார் கீழ்ப்படியாதவர்களோ அவர்கள் துக்கம் தான் கொடுப்பார்கள். இப்பொழுது குழந்தைகள் உங்களுக்கு மிகப்பெரிய இரண்டு தந்தை கிடைத்துள்ளனர், அவர்களை அவமரியாதை செய்யக் கூடாது. அவமரியாதை செய்தால் பலபிறவிகளுக்கு, கல்ப-கல்பமாக மிகவும் குறைந்த பதவி அடைவீர்கள். ஆகவே கடைசியில் ஒரு சிவபாபாவின் நினைவு மட்டுமே வரும் அளவிற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் என்ன முயற்சி செய்கின்றனர் என்பதை நான் அறிந்து கொள்ள முடியும் என்று தந்தை கூறுகின்றார், சிலர் மிகவும் குறைவாக நினைவு செய்கின்றனர், மற்றவர்கள் தன்னுடைய உற்றார்-உறவினர்களை மட்டுமே நினைவு செய்கின்றனர். அவர்களால் இந்தளவு மகிழ்ச்சியாக இருக்க முடியாது, உயர்ந்த பதவியும் அடைய முடியாது.

 

உங்களுக்கு தினமும் சத்குருவாரமாகும், இந்த நாளில் கல்லூரியில் சேர்க்கின்றார்கள். அங்கு உலகாய கல்வி இருக்கிறது, இங்கு ஆன்மீக கல்வி இருக்கிறது. சிவபாபா நமது தந்தையாக, ஆசிரியராக சத்குருவாக இருக்கிறார் என நீங்கள் அறிந்துள்ளீர்கள்; ஆகவே, அவருடைய வழிகாட்டுதலின்படி நடந்தால் தான் உயர்ந்த பதவி அடைவீர்கள். யார் முயற்சியாளர்களோ அவர்களுக்கு உள்ளுக்குள் மிகுந்த மகிழ்ச்சி இருக்கிறது, அதைப்பற்றி கேட்கவே வேண்டாம். மகிழ்ச்சியாக இருப்பதனால் மற்றவர்களையும் மகிழ்விக்க முயற்சி செய்கின்றனர். சகோதரிகள் இரவு-பகலாக எவ்வளவு முயற்சி செய்கின்றனர். ஏனென்றால் இது புதிய ஞானம் அல்லவா! சில குழந்தைகள் புரியாமல் எவ்வளவு நஷ்டத்தை அடைகின்றனர். தேக அபிமானத்தில் வந்து உள்ளுக்குள் மிகவும் எரிகின்றனர். கோபத்தில் மனிதர்களின் முகம் மிகவும் சிவந்து விடுகிறது. கோபம் மனிதர்களை எரிக்கின்றது, காமம் கருப்பாக்கி விடுகின்றது. பற்றுதல் மற்றும் பேராசையால் இந்தளவு எரிவதில்லை. கோபத்தினால் எரிக்கின்றனர், கோபத்தின் பூதம் நிறைய பேரிடத்தில் இருக்கிறது, எவ்வளவு சண்டைப் போடுகின்றனர். சண்டையிடுவதால் தனக்கு நஷ்டமடைகின்றனர். நிராகாரமான, சாகாரமான தந்தை இருவரையும் அவமரியாதை செய்கின்றனர். இவர்கள் பக்குவமில்லாதவர்கள் என தந்தை அறிவார். உழைப்பு செய்தால்தான் உயர்ந்த பதவி அடைவீர்கள். ஆகவே, தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டுமானால் அனைத்து சம்மந்தங்களையும் மறக்க வேண்டும். வீட்டில் இருந்தபடியே சம்மந்தங்களைப் பார்த்துக் கொண்டே சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். நீங்;கள் இருப்பது சங்கமயுகத்தில், இப்பொழுது புதிய வீட்டையும், சாந்தி தாமத்தையும் நினைவு செய்யுங்கள்.

 

இது எல்லையற்ற படிப்பாக இருக்கிறது அல்லவா? தந்தை போதனை தருவதால் குழந்தைகளுக்கு தான் நன்மை இருக்கிறது. சில குழந்தைகள் தனது தவறான நடத்தையினால் தனக்குத்தான் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர். உலக அரசாட்சியை அடைய முயற்சி செய்கின்றனர் ஆனால், மாயா என்ற பூனை காதை கடித்துவிடுகிறது. ஜென்மம் எடுத்த பிறகு, நாங்கள் இந்தப் பதவி அடைவோம் என கூறுகின்றனர். ஆனால், மாயா என்ற பூனை அடையவிடுவதில்லை, ஆகவே பதவி தாழ்ந்துவிடுகிறது. மாயா மிகுந்த வேகத்தோடு சண்டையிடுகிறது. நீங்கள் இராஜ்யத்தை அடைவதற்கு இங்கு வந்துள்ளீர்கள். ஆனால் மாயா தொந்தரவு செய்கிறது. பாவம் இவர்கள் உயர்ந்த பதவி அடைந்தால் நல்லது, என்னை நிந்தனை செய்வோராக ஆகிவிடக் கூடாது என தந்தைக்கு கருணை ஏற்படுகிறது. சத்குருவை நிந்தனை செய்தால் பிராப்தி அடையமாட்டார்கள், யாருக்கு நிந்தனை? சிவ பாபாவிற்கு. தந்தைக்கு நிந்தனை ஏற்படக்கூடிய எந்த நடத்தையும் இருக்கக் கூடாது, இதில் அகங்காரத்திற்கான விசயம் ஒன்றுமில்லை. நல்லது

 

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தனக்கு நன்மை ஏற்பட வேண்டுமானால் அனைத்து தேக சம்மந்தங்களையும் மறக்க வேண்டும், அவர்களிடம் பற்றுதல் வைக்கக் கூடாது. ஈஸ்வரிய வழிப்படி தான் நடக்க வேண்டும், தனது வழிப்படி நடக்கக் கூடாது. தீய சகவாசத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும், ஈஸ்வரிய சகவாசத்தில் இருக்க வேண்டும்.

 

2) கோபம் மிகவும் கெட்டதாகும், இது தன்னையே எரிக்கக்கூடியது, கோபத்திற்கு வசமாகி அவமரியாதை செய்யக் கூடாது. மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களையும் மகிழ்விக்க முயற்சி செய்ய வேண்டும்.

 

வரதானம்:

மனதினுடைய உணர்தலின் மூலம் திலாராம் (மனதை கவர்ந்தவரின்) ஆசிர்வாதங்களை அடையக் கூடிய தன்னை மாற்றிக்கொள்பவர் ஆகுக.

 

தன்னை மாற்றிக்கொள்வதற்காக இரண்டு விஷயங்களின் உணர்தலின் உண்மையான உள்ளம் தேவை 1. தனது பலஹீனங்களை உணர்ந்து கொள்ளுதல். 2. எந்தச் சூழ்நிலை அல்லது நபர் நிமித்தமாகிறார்களோ, அவர்களின் விருப்பம் மற்றும் அவர்களின் மனதின் பாவனையை உணர்ந்து கொள்தல். பிரச்சனைகள் (சூழ்நிலைகள்) என்ற பேப்பரின் காரணத்தை தெரிந்துக் கொண்டு, தன்னை தேர்ச்சி அடைய செய்வதற்கான சிரேஷ்ட சொரூபத்தின் உணர்தல் இருக்க வேண்டும் அதாவது தனது மனநிலை உயர்ந்தாக (ஸ்திதி) இருக்க வேண்டும், பிரச்சனை என்பது பேப்பராக இருக்கிறது - இந்த உனர்தல் தான் எளிதாக மாற்றம் செய்ய வைக்கும், மேலும் உண்மையான மனதின் மூலம் உணர்ந்து கொண்டால் திலாராமின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும்.

 

சுலோகன்:

யார் எவரெடி (எதற்கும் தயார் நிலையில்) ஆகி, ஒவ்வொரு காரியத்திலும் ஹா ஜீ (சரி செய்கிறேன்) என்று சொல்கிறார்களோ, அவர்கள் தான் வாரிசு.

 

ஓம்சாந்தி