28.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே, உலகத்திலுள்ள ஆத்மாக்கள் அனைவரும் அறியாமையிலும், துக்கத்திலும் உள்ளனர். நீங்கள் அவர்களுக்கு உபகாரம் செய்யுங்கள். பாபாவின் அறிமுகம் கொடுத்து குஷியில் கொண்டு வாருங்கள். அவர்களின் கண்கள் திறக்கட்டும்.

 

கேள்வி:

எந்த ஒரு சென்டரின் வளர்ச்சிக்கும் (முன்னேற்றும்) ஆதாரம் என்ன?

 

பதில்:

சுயநலமற்ற உண்மையான மனதுடன் கூடிய சேவை. உங்களுக்கு சதா சேவையில் ஆர்வம் இருக்கு மானால் உண்டியல் நிறைந்து கொண்டேயிருக்கும். எங்கே சேவை செய்ய முடியுமோ அங்கே ஏற்பாடு செய்ய வேண்டும். யாரிடமும் யாசித்தல் கூடாது. யாசிப்பதை விட இறத்தல் மேலானது. தாமாகவே அனைத்தும் வரும். நீங்கள் வெளியிலுள்ளவர்களைப் போல சந்தா வசூல் செய்யக் கூடாது. யாசிப்பதால் சென்டர் விரைவில் நிரம்பாது. அதனால் யாசிக்காமல் சென்டரைப் பராமரியுங்கள்.

 

ஓம் சாந்தி!

ஆன்மீகக் குழந்தைகள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். புத்தியில் இந்த ஞானம் உள்ளது. எப்படி நாம் ஆரம்பத்தில் மேலிருந்து வருகின்றோம். எப்படி விஷ்ணு அவதாரத்தின் ஒரு விளையாட்டைக் காட்டுகின்றனர். விமானத்தில் அமர்ந்து கொண்டு பிறகு கீழே வருகின்றனர். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டீர்கள், என்னென்ன காட்டுகின்றார்களோ அவை அனைத்துமே தவறானவை. இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள் - நாம் ஆத்மாக்கள் உண்மையில் எங்கே வசிப்பவர்கள்? எப்படி மேலிருந்து பிறகு இங்கே வருகின்றோம், எப்படி 84 பிறவிகளின் பாகத்தை நடித்து தூய்மைற்றவர்கள் ஆகின்றோம்? இது நினைவில் இருக்க வேண்டும். இப்போது மீண்டும் பாபா தூய்மையாக்குகின்றார். இதுவோ நிச்சயமாக மாணவர்களாகிய உங்களுடைய புத்தியில் இருக்க வேண்டும். 84 பிறவி சக்கரத்தை எப்படி சுற்றி வருகின்றோம்? இது நினைவில் இருக்க வேண்டும். பாபா தான் புரிய வைக்கிறார் - நீங்கள் எப்படி 84 பிறவிகள் எடுக்கிறீர்கள் என்று. கல்பத்தின் ஆயுளுக்கு மிக நீண்ட காலம் கொடுத்த காரணத்தால் இவ்வளவு சுலபமான விஷயங்களைக் கூட மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதனால் குருட்டு நம்பிக்கை என்று சொல்லப்படுகின்றது. வேறு என்னென்ன தர்மங்கள் உள்ளனவோ அவை எப்படி ஸ்தாபனை ஆகின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். மறுபிறவி எடுத்து, எடுத்து பாகத்தை நடித்து, நடித்து இப்போது கடைசியில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். இப்போது மீண்டும் திரும்பிச் செல்கிறீர்கள். இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் உள்ளது. உலகில் வேறு யாரும் இந்த ஞானத்தை அறிந்திருக்கவில்லை. 5000 ஆண்டுகளுக்கு முன்பு சொர்க்கம் இருந்ததாகச் சொல்லவும் செய்கிறார்கள். ஆனால் அது என்னவாக இருந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. நிச்சயமாக ஆதி சனாதன தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இதை முற்றிலும் அறியாமல் இருக்கிறார்கள். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாமும் முதலில் தெரியாமல் தான் இருந்தோம். மற்ற தர்மங்களைச் சேர்ந்தவர்கள் இதுபோல் தங்கள் தர்ம ஸ்தாபகர்களைப் பற்றியே அறியாதவர்களாக இருப்பதில்லை. நீங்கள் இப்போது அறிந்து கொண்டவர்களாக, ஞானம் நிறைந்தவர்களாக ஆகியிருக்கிறீர்கள். மற்றுமுள்ள முழு உலகத்தாரும் அறியாதிருக்கின்றனர். நாம் எவ்வளவு புத்திசாலிகளாக ஆகியிருந்தோம், பிறகு இப்போது புத்தியற்றவர்களாக, ஏதுமறியாதவர்களாக ஆகியிருக்கிறோம். மனிதர்களாக இருந்து கொண்டு அல்லது நடிகர்களாக இருந்து கொண்டு நாம் அறியாதிருந்தோம். ஞானத்தின் தாக்கத்தைப் பாருங்கள், எப்படி இருக்கிறது! இதை நீங்கள் தான் அறிவீர்கள். ஆக, குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுக்குள் எவ்வளவு மகிழ்ச்சி பொங்கி எழ வேண்டும்! எப்போது நடைமுறைபடத்தி அனுபவமாகின்றதோ அப்போது தான் உள்ளுக்குள் அந்தக் குஷி வரும். நீங்கள் அறிவீர்கள், நாம் ஆரம்பத்தில் எப்படி வந்தோம், பிறகு எப்படி சூத்திர குலத்திலிருந்து பிராமண குலத்திற்கு மாறினோம். இந்த சிருஷ்டியின் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்பதை உங்களைத் தவிர உலகத்தில் வேறு யாரும் அறிய மாட்டார்கள். உள்ளுக்குள் இந்த ஞான நாட்டியம் நடைபெற வேண்டும். பாபா நமக்கு எத்தகைய அற்புதமான ஞானத்தைக் கொடுக்கின்றார்! இந்த ஞானத்தின் மூலம் நாம் நம்முடைய ஆஸ்தியைப் பெறுகின்றோம். எழுதப்பட்டும் உள்ளது, இந்த இராஜயோகத்தின் மூலம் நான் உங்களை இராஜாவுக்கெல்லாம் மேலான இராஜா ஆக்குகின்றேன். ஆனால் எதுவும் புரியவில்லை. இப்போது புத்தியில் முழு ரகசியமும் வந்துவிட்டது. நாம் சூத்திரரில் இருந்து இப்போது மீண்டும் பிராமணர் ஆகின்றோம். இந்த மந்திரமும் புத்தியில் உள்ளது. பிராமணர் நாம் தான் பிறகு தேவதை ஆவோம். பிறகு நாம் இறங்கி இறங்கிக் கீழே வருகிறோம். எவ்வளவு மறுபிறவி எடுத்துச் சுற்றி வருகின்றோம்! இந்த ஞானம் புத்தியில் இருக்கும் காரணத்தால் குஷியும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் இந்த ஞானம் எப்படி கிடைப்பது? எவ்வளவு சிந்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன! எப்படி அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தைக் கொடுப்பது? பிராமணர்களாகிய நீங்கள் எவ்வளவு உபகாரம் செய்கிறீர்கள்! யார் முற்றிலும் அறியாமையில் இருக்கிறார்களோ அவர்களை சதா சுகமானவர்களாக ஆக்க வேண்டும். கண்கள் திறக்க வேண்டும். குஷி ஏற்படுகின்றதல்லவா! யாருக்கு சேவையில் ஆர்வம் உள்ளதோ அவர்களுக்கு உள்ளுக்குள் வர வேண்டும், மிகுந்த குஷி இருக்க வேண்டும். நாம் ஆத்மாக்கள் எங்கே வசிப்பவர்கள், பிறகு எப்படி வருகிறோம் பாகத்தை நடிப்பதற்கு? எவ்வளவு உயர்ந்தவர்களாக ஆகின்றோம், பிறகு எப்படிக் கீழே இறங்கி வருகின்றோம், பிறகு இராவண இராஜ்யம் எப்போது ஆரம்பமாகின்றது? இது இப்போது புத்தியில் வந்துள்ளது.

 

பக்தி மற்றும் ஞானத்திற்கிடையில் இரவு-பகலுக்குள்ள வேறுபாடு உள்ளது. ஆரம்பத்திலிருந்து பக்தி யார் செய்திருக்கிறார்கள்? நீங்கள் சொல்வீர்கள், முதல் முதலில் நாம் வந்தோம் என்றால் அதிகமான சுகத்தைப் பார்த்தோம். பிறகு நாம் பக்தி செய்யத் துவங்கினோம். பூஜைக்குரியவர் மற்றும் பூஜாரிக்கிடையில் எவ்வளவு வேறுபாடு! உங்களிடம் இப்போது எவ்வளவு ஞானம் உள்ளது! குஷி இருக்க வேண்டும் இல்லையா? எப்படி நாம் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்திருக்கிறோம்! எங்கே 84 பிறவிகள், எங்கே 84 லட்சம்! இவ்வளவு சிறிய விஷயம் கூட யாருடைய கவனத்திலும் வருவதில்லை. இலட்சம் வருடங்களோடு ஒப்பிட்டால் இது ஒரிரு நாளுக்குச் சமமாகி விடும். நல்ல நல்ல குழந்தைகளின் புத்தியில் இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கின்றது. அதனால் தான் சுயதரிசனச் சக்கரதாரி எனப் படுகிறது. சத்யுகத்தில் இந்த ஞானம் இருப்பதில்லை. சொர்க்கத்தைப் பற்றி எவ்வளவு மகிமைப்பாடப்பட்டுள்ளது! அங்கே பாரதம் மட்டுமே இருந்தது. எது இருந்ததோ அது மீண்டும் உருவாகியே தீரவேண்டும். வெளியில் பார்ப்பதற்கு எதுவும் தெரிவதில்லை. சாட்சாத்காரம் ஆகின்றது. நீங்கள் அறிவீர்கள், இந்தப் பழைய உலகம் முடிந்தாக வேண்டும், பிறகு நம்பர்வார் நாம் புதிய உலகத்தில் வருவோம். ஆத்மாக்கள் பாகத்தை நடிப்பதற்காக எப்படி வருகின்றன என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நாடகத்தில் காட்டப்படுவதுபோல் ஆத்மாக்கள் மேலிருந்து இறங்குவதில்லை. ஆத்மாவையோ இந்தக் கண்களால் பார்க்க முடியாது. ஆத்மா எப்படி வருகிறது, சிறிய உடலில் எப்படி பிரவேசமாகின்றது - இது மிகப்பெரிய அற்புதமான விளையாட்டாகும்! இது ஈஸ்வரியப் படிப்பு. இதில் இரவும் பகலும் சிந்தனை செல்ல வேண்டும். நாம் ஒரு தடவை புரிந்து கொள்கிறோம், அதாவது பார்க்கின்றோம், பிறகு வர்ணனை செய்கின்றோம். முன்பு மாயாஜாலம் செய்பவர்கள் அநேகப் பொருள்களை வெளியிலெடுத்துக் காட்டினார்கள். பாபாவையும் மந்திரவாதி, வியாபாரி, நகை வியாபாரி என்றெல்லாம் சொல்கிறார்கள் இல்லையா! ஆத்மாவில் தான் ஞானம் முழுவதும் இருக்கின்றது. ஆத்மா தான் ஞானக்கடல். பரமாத்மாவை ஞானக்கடல் எனச் சொல்கிறார்கள். ஆனால் அவர் யார், எப்படி அவர் மந்திரவாதி - இது யாருக்கும் தெரியாது. முன்பு நீங்களும் இதைப் புரிந்து கொள்ளாதிருந்தீர்கள். இப்போது பாபா வந்து தேவதையாக ஆக்குகின்றார். உள்ளுக்குள் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்( ஒரு பாபா தான் ஞானம் நிறைந்தவர். நமக்குக் கற்பிக்கவும் செய்கிறார். இதைக் குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிந்திருக்கிறீர்கள். இரவும் பகலும் இந்தச் சிந்தனை இருந்து கொண்டேயிருக்க வேண்டும். இந்த எல்லையற்ற நாடகத்தின் ஞானத்தை ஒரு பாபா மட்டுமே சொல்ல முடியும். வேறு யாராலும் சொல்ல முடியாது. பாபா பார்த்திருக்கிறாரா என்ன? ஆனால் அவருக்குள் ஞானம் முழுவதும் உள்ளது. பாபா சொல்கிறார், சத்யுக-திரேதாவில் நான் வருவதில்லை, ஆனால் ஞானம் முழுவதையும் சொல்கிறேன். அதிசயமாக இருக்கிறது இல்லையா? யார் இந்த நாடகத்தில் பாகம் எதையும் எடுத்துக் கொண்ட தில்லையோ, அவர் எப்படிச் சொல்கிறார்! பாபா சொல்கிறார், நான் எதையும் பார்ப்பதில்லை, நான் சத்யுக-திரேதாயுகத்திலும் வருவதில்லை. ஆனால் எனக்குள் எவ்வளவு ஞானம் உள்ளது! நான் அதை ஒரே ஒரு முறை வந்து உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் பாகத்தை நடித்தீர்கள், நீங்கள் அதை அறிந்திருக்கவில்லை. யார் எந்த ஒரு பாகத்தையும் நடிக்கவே இல்லையோ அவர் அனைத்தையும் சொல்கிறார் - இது அதிசயம் இல்லையா? நாம் பார்ட்தாரி (பாகத்தை ஏற்று நடிப்பவர்கள்) நாம் எதையும் அறிந்து கொண்டிருக்கவில்லை, ஆனால் பாபாவிடம் எவ்வளவு ஞானம் முழுவதும் உள்ளது! பாபா சொல்கிறார், நான் சத்யுக-திரேதா யுகத்தில் வருவதில்லை, உங்களுக்கு அனுபவம் சொல்வதற்கு. டிராமாவின் அனுசாரம் பார்க்காமலே, அனுபவம் செய்யாமலே முழு ஞானத்தையம் தருகின்றேன். எவ்வளவு பெரிய அதிசயம் - நான் பாகத்தை நடிப்பதற்கு வருவதேயில்லை. ஆனால் உங்களுக்கு பாகம் முழுவதையும் சொல்லிப் புரிய வைக்கிறேன்! அதனால் தான் என்னை ஞானம் நிறைந்தவர் (நாலட்ஜ் ஃபுல்) என்கின்றனர்.

 

ஆக, பாபா சொல்கிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! தனக்கு முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமானால் தன்னை ஆத்மா என உணருங்கள். இது விளையாட்டு. நீங்கள் மீண்டும் இது போலவே விளையாடுவீர்கள். தேவி-தேவதை ஆவீர்கள். பிறகு கடைசியில் சுற்றி வந்து மனிதர்களாக ஆவீர்கள். வியப்படைய வேண்டும் இல்லையா? பாபாவுக்கு இந்த ஞானம் எங்கிருந்து வந்தது? அவருக்கோ எந்த ஒரு குருவும் கிடையாது. டிராமாவின்படி முதலில் இருந்தே அவருக்குள் பாகத்தை நடிப்பதற்கென்று விதிக்கப்பட்டுள்ளது. இதை இயற்கை என்று தானே சொல்வீர்கள் இல்லையா? ஒவ்வொரு விஷயமும் அற்புதமானதாகும். ஆக, பாபா அமர்ந்து புதிய புதிய விஷயங்களைச் சொல்லிப் புரிய வைக்கிறார். அத்தகைய தந்தையை எவ்வளவு நினைவு செய்ய வேண்டும்! 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவு செய்ய வேண்டும். இந்த ரகசியத்தையும் பாபா தான் சொல்லிப் புரிய வைத்திருக்கிறார். விராட ரூப சித்திரம் எவ்வளவு நன்றாக இருக்கிறது! இலட்சுமி-நாராயணர் அல்லது விஷ்ணுவின் சித்திரத்தை உருவாக்குகிறார்கள் - நாம் எப்படி 84 பிறவிகளில் வருகிறோம் என்பதைக் காட்டுகிறார்கள். நாம் தான் தேவதையாக, பிறகு சத்திரியராக, வைசியராக, பிறகு சூத்திரரராக ஆனோம். இதை நினைவு செய்வதில் என்ன கஷ்டம் உள்ளது? பாபா ஞானம் நிறைந்தவர். அவர் யாரிடமும் படித்ததில்லை. சாஸ்திரங்கள் முதலியவற்றையும் படித்ததில்லை. எதையும் படிக்காமல், எந்த ஒரு குருவையும் வைத்துக் கொள்ளாமல் இவ்வளவு ஞானம் முழுவதையும் அமர்ந்து சொல்கிறார் என்றால் இது போல் ஒரு போதும் யாரையும் பார்த்ததில்லை. பாபா எவ்வளவு இனிமையானவர்! பக்தி மார்க்கத்தில் யார் யாரையோ இனிமையானவர்கள் என நினைக்கிறார்கள். யாருக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி பூஜை செய்யத் தொடங்குகின்றனர். பாபா வந்து அனைத்து ரகசியங்களையும் சொல்லிப் புரிய வைக்கின்றார். ஆத்மா தான் ஆனந்த சொரூபம். பிறகு ஆத்மா தான் துக்க ரூபத்தில் சீச்சி ஆகிவிடுகின்றது. பக்தி மார்க்கத்திலோ நீங்கள் எதுவுமே தெரியாதிருந்தீர்கள். எனக்கு எவ்வளவு மகிமை செய்கிறார்கள்! ஆனால் எதையும் தெரிந்து கொண்டிருக்கவில்லை. இதுவும் கூட எவ்வளவு அற்புதமான விளையாட்டு! இந்த விளையாட்டு முழுவதையும் பாபா சொல்லிப் புரிய வைத்திருக்கிறார். இவ்வளவு சித்திரங்கள் - ஏணிப்படி முதலியவற்றை ஒருபோதும் பார்த்தது கூட இல்லை. இப்போது பார்க்கிறார்கள், கேட்கிறார்கள் என்றால் சொல்லவும் செய்கிறார்கள் - இந்த ஞானமோ யதமார்த்த ரீதியானது என்று. ஆனால் காமம் மகாசத்ரு (மிகப்பெரிய எதிரி) இதன் மீது வெற்றி கொள்ள வேண்டும். இதைக் கேட்டு மந்தமாகி விடுகிறார்கள். நீங்கள் எவ்வளவு சொல்லிப் புரிய வைக்கிறீர்கள், ஆனாலும் புரிந்து கொள்வதேயில்லை. எவ்வளவு முயற்சி செய்ய வேண்டியுள்ளது! இதையும் அறிந்திருக்கிறீர்கள், கல்பத்திற்கு முன் யார் புரிந்து கொண்டார்களோ அவர்கள் தான் புரிந்து கொள்வார்கள். தெய்வீகப் பரிவாரத்தைச் சேர்ந்தவர்களாக ஆகக்கூடியவர்கள் யாரோ அவர்களுக்குத் தான் தாரணையாகும். நீங்கள் அறிவீர்கள், நாம் ஸ்ரீமத்படி இராஜதானியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். பாபாவின் கட்டளையாவது - மற்றவர்களையும் உங்களைப்போல ஆக்குங்கள். பாபா ஞானம் முழுவதையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். நீங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆக, நிச்சயமாக இந்த சிவபாபாவின் ரதமும் கூட சொல்ல முடியும். ஆனால் தம்மை குப்தமாக ஆக்கிக் கொள்கிறார். நீங்கள் சிவபாபாவையே நினைவு செய்து கொண்டிருங்கள். இவருக்கு (பிரம்மாவுக்கு) மகிமையும் கூட செய்ய வேண்டாம். அனைவருக்கும் சத்கதி அளிப்பவர், மாயாவின் விலங்குகளிலிருந்து விடுவிப்பவர் ஒருவர் தான்.

 

பாபா எப்படி வந்து உங்களுக்குப் புரிய வைக்கிறார் - இது குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இராவணன் என்பது என்ன பொருள் என்பது கூட மனிதர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு வருடமும் எரித்துக் கொண்டே வந்திருக்கின்றனர். விரோதியின் உருவ பொம்மையைத் தான் (எரிப்பதற்காக) உருவாக்குவார்கள் இல்லையா? உங்களுக்கு இப்போது தெரிந்து விட்டது - இராவணன் பாரத தேசத்தின் விரோதி, பாரதத்தை எவ்வளவு துக்கம் நிறைந்ததாக, ஏழையாக ஆக்கிவிட்டுள்ளான். அனைவரும் 5 விகாரங்களாகிய இராவணனின் கூண்டிற்குள் (சிறை) அடைப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு உள்ளுக்குள் இது வரவேண்டும். எப்படி மறற்வர்களையும் இராவணனிடமிருந்து விடுவிப்பது? சேவை நடைபெற முடியுமென்றால் அதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். உண்மையான மனதுடன், சுயநலமற்ற பாவத்துடன் சேவை செய்ய வேண்டும். பாபா சொல்கிறார், இத்தகைய குழந்தைகளின் உண்டியை நான் நிரப்புகிறேன். டிராமாவில் இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேவைக்கான நல்ல வாய்ப்பு இருக்குமானால் இதில் கேட்க வேண்டிய தேவையும் இல்லை. பாபா சொல்லி யிருக்கிறார், சேவை செய்து கொண்டே இருங்கள். யாரிடமும் எதையும் யாசிகக்க வேண்டாம். யாசிப்பதைவிட இறப்பது மேல். தானாகவே உங்களிடம் வந்துவிடும். யாசிப்பதால் சென்டர் இவ்வளவு வேகமாக நிரம்பாது. யாசிக்காமல் நீங்கள் சென்டரைப் பராமரியுங்கள். தானாகவே அனைத்தும் வந்து கொண்டிருக்கும். அதில் சக்தியிருக்கும். எப்படி வெளி யிலுள்ளவர்கள் சந்தா வசூலிக்கிறார்களோ அதுபோல் நீங்கள் செய்யக்கூடாது.

 

மனிதர்களை ஒருபோதும் பகவான் என்று சொல்ல மாட்டார்கள். ஞானமோ விதையாக உள்ளது. விதை வடிவமான பாபா வந்து உங்களுக்கு ஞானம் தருகின்றார். விதைதான் ஞானம் நிறைந்தது இல்லையா? அந்த ஜட விதைகளோ வர்ணனை செய்ய முடியாது. நீங்கள் வர்ணனை செய்கிறீர்கள். அனைத்து விஷயங்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். இந்த எல்லையற்ற மரத்தைப் பற்றி யாரும் புரிந்து கொள்ளவில்லை. எல்லையற்ற குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம். பாபா சொல்லிப் புரிய வைக்கிறார், மாயாவும் சக்தி வாய்ந்தது. கொஞ்சம் சகித்துக் கொள்ளவும் வேண்டியுள்ளது. எவ்வளவு கடுமையான விகாரங்கள்! நல்ல நல்ல சேவை செய்கின்ற குழந்தைகளுக்கும் கூட போகப்போக மாயாவின் அடி விழுந்து விடுகின்றது. நாங்களோ விழுந்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். ஏணிப்படியில் மேலே ஏறி ஏறி பிறகு கீழே விழுந்து விடுகின்றனர். ஆக, சம்பாதித்த வருமானமெல்லாம் காணாமல் போய் விடுகிறது. தண்டனை கண்டிப்பாகக் கிடைத்தாக வேண்டும். பாபாவிடம் உறுதிமொழி எடுக்கின்றனர், இரத்தத்தினால் கூட எழுதிக் கொடுக்கின்றனர், பிறகு காணாமல் போய் விடுகின்றனர். பாபா பக்காவாக ஆக்குவதற்காகப் பார்க்கவும் செய்கின்றார், இவ்வளவு யுக்திகள் செய்தும் கூட மீண்டும் உலகத்தின் (பழக்கத்தின்) பக்கம் போய் விடுகின்றனர். எவ்வளவு சுலபமாகச் சொல்லிப் புரிய வைக்கிறார், பாகத்தை நடிப்பவர் தன்னுடைய பாகத்தைப் பற்றிச் சிந்தனை செய்ய வேண்டும். தன்னுடைய பாகம் யாருக்கும் மறக்காது. பாபாவோ தினந்தோறும் விதவிதமாகச் சொல்லிப் புரிய வைத்துக் கொண்டேயிருக்கிறார். நீங்களும் அநேகருக்குச் சொல்லி புரிய வைக்கிறீர்கள். பிறகும் சொல்கிறார்கள், நாம் பாபாவிடம் நேராக சந்திக்கப்போக வேண்டும். பாபாவின் அற்புதம் இது. தினந்தோறும் முரளி சொல்கிறார் - அவர் நிராகார். பெயர், வடிவம், தேசம், காலமெல்லாம் கிடையாது, பிறகு எப்படி முரளி சொல்வார்? வியப்படைகிறார்கள், பிறகு பக்காவாக ஆகி வருகிறார்கள். இப்படிப்பட்ட தந்தை ஆஸ்தி தருகின்றார். அவரிடமிருந்து அது கிடைக்க வேண்டுமென்று மனம் விரும்புகின்றது. இந்த அறிமுகத்துடன் வந்து சந்தித்தால் பாபாவிடமிருந்து ஞான ரத்தினங்களை தாரணை செய்ய முடியும்., ஸ்ரீமத்தைப் பின்பற்றி நடக்க முடியும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. ஞானத்தை வாழ்க்கையில் நடைமுறை படுத்தி, மிகுந்த குஷியில் மகிழ்ந்திருக்க வேண்டும். அற்புதமான ஞானம் மற்றும் ஞான வள்ளலை நினைவு செய்து ஞான நாட்டியம் ஆடவேண்டும்.

 

2. தன்னுடைய நாடக பாகத்தை மட்டுமே சிந்திக்க வேண்டும். மற்றவர்களின் பாகத்தைப் பார்க்கக் கூடாது. மாயா மிகவும் சக்தி நிறைந்தது. அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன்னேற்றத்திலேயே ஈடுபட்டிருங்கள். சேவையில் ஆர்வம் வையுங்கள்.

 

வரதானம்:

எப்பொழுதும் தந்தையின் நினைவு என்ற குடைநிழலுக்கு கீழே நியமம் (மரியாதை) என்ற எல்லைக்கோட்டிற்கு உள்ளே இருக்கக் கூடிய (மாயாஜீத்) - மாயையை வென்றவர் ஆவீர்களாக.

 

தந்தையின் நினைவு தான் குடைநிழல் ஆகும். குடைநிழலில் இருப்பது என்றால் மாயாவை வெல்லக்கூடியவர் ஆவது. எப்பொழுதும் நினைவின் குடைநிழலுக்கு கீழே மற்றும் (மரியாதை) நியமங்கள் என்ற எல்லைக்கோட்டுக்குள் இருந்தீர்கள் என்றால் உள்ளே வருவதற்கு யாருக்குமே தைரியம் இருக்காது. நியமங்கள் என்ற எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்று விட்டீர்கள் என்றால் மாயை கூட தன்னுடையவராக ஆக்குவதில் புத்திசாலியாக இருக்கும். ஆனால் நாம் அனேக முறை வெற்றியாளர்களாக ஆகி உள்ளோம். வெற்றி மாலை நம்முடையதே நினைவார்த்தமாகும் என்ற இந்த நினைவில் எப்பொழுதும் சக்திசாலியாக இருந்தீர்கள் என்றால் மாயையிடம் தோல்வி ஏற்பட முடியாது.

 

சுலோகன்:

அனைத்து பொக்கிஷங்களையும் சுயம் தங்களுக்குள் நிறைத்து கொண்டீர்கள் என்றால் (சமானா) முழுமையான நிலையின் (சம்பன்னதா) அனுபவம் ஆகிக் கொண்டே இருக்கும்.

 

ஓம்சாந்தி