26.03.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே
-
பாபாவினுடைய
சக்தியை
அடைவதற்காக
மணமுள்ள
மலராகுங்கள்,
அதிகாலையில்
எழுந்து
நினைவில்
அமர்ந்து
அன்போடு
பாபாவிடம்
இனிமையிலும்
இனிமையாக
பேசுங்கள்.
கேள்வி
:
தந்தையை
அனைத்து
குழந்தைகளும்
வரிசைக்கிரமத்தில்
நினைக்கிறார்கள்.
ஆனால்
தந்தை
எந்த
குழந்தைகளை
நினைக்கின்றார்?
பதில்
:
எந்தக்
குழந்தைகள்
மிகவும்
இனிமையாக
இருக்கின்றார்களோ,
சேவையைத்
தவிர
வேறு
எதுவும்
தென்படுவதில்லையோ,
மிகவும்
அன்போடு
தந்தையை
நினைக்கின்றார்களோ,
குஷியில்
ஆனந்தக்
(அன்பின்)
கண்ணீர்
பெருகுகிறதோ
இப்படிப்பட்ட
குழந்தைகளை
தந்தையும்
நினைக்கின்றார்.
தந்தையின்
பார்வை
மலர்களை
நோக்கிப்
போகின்றது.
இந்த
ஆத்மா
மிகவும்
நன்றாக
இருக்கிறது.
இந்த
ஆத்மா
எங்கே
சேவையைப்
பார்த்தாலும்
ஓடிக்கொண்டே
இருக்கிறது.
பலருக்கும்
நன்மை
செய்கிறது
எனக்
கூறுவார்
எனவே,
தந்தை
அவர்களையே
நினைவு
செய்கிறார்.
ஓம்
சாந்தி!
தந்தை
அமர்ந்து
அனைத்து
ஆத்மாக்களுக்கும்
புரிய
வைக்கின்றார்.
சரீரம்
நினைவிற்கு
வருகிறது
என்றால்
ஆத்மாவும்
நினைவிற்கு
வருகிறது.
சரீரம்
இல்லாமல்
ஆத்மாவை
நினைக்க
முடியாது.
இந்த
ஆத்மா
நல்லது,
இது
வெளிநோக்கில்
இருக்கிறது,
இது
இந்த
உலகத்தைச்
சுற்றி
வரவிரும்புகிறது
எனப்
புரிந்து
கொள்ளலாம்.
இது
அந்த
உலகத்தை
மறந்திருக்கிறது.
முதலில் அவருடைய
பெயர்,
ரூபம்
எதிரில்
வருகிறது.
இன்னாருடைய
ஆத்மா
என
நினைவு
செய்யப்படுகிறது.
இன்னாருடைய
ஆத்மா
நன்றாக
சேவை
செய்கிறது,
இவருடைய
புத்தியோகம்
பாபாவிடம்
இருக்கிறது.
இவருக்குள்
இந்த
இந்த
குணங்கள்
இருக்கிறது.
முதலில் சரீரத்தை
நினைப்பதால்
பிறகு
ஆத்மா
நினைவுக்கு
வருகிறது.
முதலில் சரீரம்
நினைவிற்கு
வரும்.
ஏனென்றால் சரீரம்
பெரியதாக
இருக்கிறது.
பிறகு
சூட்சுமமாக
மிகவும்
சிறியதாக
இருக்கக்கூடிய
ஆத்மா
நினைவிற்கு
வரும்.
இந்த
பெரிய
சரீரத்திற்கு
எந்த
மகிமையும்
செய்யப்படுவதில்லை.
ஆத்மா
தான்
போற்றப்
படுகிறது.
இவருடைய ஆத்மா
நன்றாக
சேவை
செய்கிறது.
அவருடைய
ஆத்மா
இவரை
விட
நன்றாக
இருக்கிறது.
முதலில் சரீரம் தான்
நினைவிற்கு
வருகிறது.
இன்னாருடைய
ஆத்மா
என்று
சொல்லும்
போது
உடல்
நிச்சயமாக
நினைவிற்கு வரும்.
இந்த
தாதாவின்
உடலில் சிவதந்தை
வருகிறார்
எனப்
புரிந்து
கொள்வது
போல
இவருடைய
உடலில் பாபா
இருக்கிறார்
என்று
அறிகின்றீர்கள்.
சரீரம்
நிச்சயம்
நினைவிற்கு
வரும்,
நாம்
எப்படி
நினைப்பது
எனக் கேட்கின்றார்கள்.
சிவதந்தையை
பிரம்மாவின்
உடலில் நினைப்பதா
அல்லது
பரந்தாமத்தில்
நினைப்பதா?
பலருக்கு
கேள்வி
எழுகிறது.
ஆத்மாவைத்
தான்
நினைக்க
வேண்டும்
என
தந்தை
கூறுகிறார்.
ஆனால்
சரீரம் கூட
நிச்சயமாக
நினைவிற்கு
வருகிறது.
முதலில் சரீரம்
பிறகு
ஆத்மா.
தந்தை
இவருடைய
உடலில் அமர்ந்திருக்கிறார்
என்றால்
சரீரம்
கூட
நினைவிற்கு
வரும்.
இந்த
சரீரத்தை
உடைய
ஆத்மாவில்
இந்த
குணம் இருக்கிறது.
யார்
என்னை
நினைக்கிறார்கள்,
யாருக்குள்
நிறைய
குணங்கள்
இருக்கிறது,
எந்த
எந்த
மலர்கள் மணம்
வீசுகிறது
என
தந்தை
பார்த்துக்கொண்டிருக்கிறார்.
மலர்களிடம்
அனைவருக்கும்
அன்பு
ஏற்படுகிறது மலர்ச்செண்டு
செய்கிறார்கள்.
அதில்
இராஜா,
இராணி,
பிரஜை
என
விதவிதமான
மலர்,
இலைகள்
போன்ற அனைத்தையும்
வைத்து
செய்கிறார்கள்.
பாபாவின்
பார்வை
மலர்களை
நோக்கிப்
போகிறது.
இன்னாருடைய ஆத்மா
மிகவும்
நன்றாக
இருக்கிறது,
மிகவும்
சேவை
செய்கிறது,
ஆத்ம
உணர்வில்
இருந்து
தந்தையை நினைவு
செய்து
கொண்டிருக்கிறது
எனச்
சொல்வார்கள்.
எங்கே
சேவையை
பார்க்கிறார்களோ
அங்கே
ஓடுவார்கள்.
இருந்தாலும்
அதிகாலையில்
எழுந்து
நினைவில்
அமர்ந்தால்
யாரை
நினைவு
செய்வார்கள்?
சிவதந்தை,
பரந்தாமத்தில்
நினைவிற்கு
வருவாரா
அல்லது
மதுபனில்
நினைவிற்கு
வருவாரா?
தந்தை
நினைவிற்கு வருவாரல்லவா?
இவருக்குள்
சிவதந்தை
இருக்கிறார்
ஏனென்றால்
தந்தை
இப்பொழுது
கீழே
வந்துவிட்டார்.
முரளி
வாசிப்பதற்காக
கீழே
வந்திருக்கிறார்.
இவருக்கு
அவருடைய
வீட்டில்
எந்த
வேலையும்
இல்லை
அங்கே என்ன
செய்வார்?
இந்த
உடலில் தான்
பிரவேசம்
செய்கிறார்.
முதலில் நிச்சயமாக
சரீரம்
நினைவிற்கு
வரும்.
பிறகு
ஆத்மா.
இந்த
உடலில் இருக்கக்கூடிய
ஆத்மா
ஒப்பற்றது
நல்லது.
இவருக்கு
சேவையைத்
தவிர
வேறு எதுவும்
தென்படாது,
மிகவும்
இனிமையானவர்.
பாபா
அமர்ந்துகொண்டு
இருக்கிறார்
அனைவரையும்
பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்தக்
குழந்தை
மிகவும்
நல்ல
குழந்தை,
மிகவும்
நினைவு
செய்கிறது.
பந்தனத்தில் இருக்கக்கூடிய
குழந்தைகள்
விகாரத்திற்காக
எவ்வளவு
அடி
வாங்குகின்றார்கள்!
எவ்வளவு
அன்போடு
நினைவு செய்வார்கள்!
மிகவும்
நினைவு
செய்யும்
போது
ஏற்படுகின்ற
குஷியினால்
ஆனந்தக்
கண்ணீர்
(அன்பினால்)
கூட
வருகிறது.
அவ்வப்போது
அந்தக்
கண்ணீர்
கீழே
விழுகிறது.
தந்தைக்கு
வேறு
என்ன
வேலை
இருக்கிறது?
அனைவரையும்
நினைக்கின்றார்.
பல
குழந்தைகள்
நினைவிற்கு
வருகிறார்கள்.
இந்த
ஆத்மாவில்
மூச்சு
இல்லை தந்தையை
நினைவு
செய்வதில்லை
யாருக்கும்
சுகம்
கொடுப்பதில்லை;
இது
தனக்கே
நன்மை
செய்வதில்லை தந்தை
இதை
சோதித்துக்
கொண்டே
இருப்பார்.
நினைத்தல்
என்றால்
சக்தி
கொடுத்தல்
ஆகும்.
ஆத்மாவினுடைய தொடர்பு
பரமாத்மாவுடன்
இருக்கிறதல்லவா?
குழந்தைகள்
மிகவும்
யோகத்தில்
இருக்கக்கூடிய
ஒரு
நாள் வரும்,
இவர்
கூட
யாரையாவது
நினைத்தால்
உடனே
காட்சி
கிடைக்கும்.
ஆத்மா
சிறிய
புள்ளியாக
இருக்கிறது.
காட்சி
கிடைத்தால்
கூட
யாராலும்
புரிந்து
கொள்ள
முடிவதில்லை,
சரீரம்
தான்
நினைவிற்கு
வருகிறது.
ஆத்மா சிறியதாக
இருக்கிறது.
ஆனால்
நினைவு
செய்தால்
அவருடைய
ஆத்மா
தூய்மையாகிறது.
தோட்டத்தில் விதவிதமான
மலர்கள்
இருக்கின்றன.
இது
மிகவும்
நல்ல
மணமுள்ள
மலராக
இருக்கிறது,
இது
அவ்வளவு இல்லை
என
பாபா
கூட
பார்க்கிறார்;
ஆகையால்
பதவி
கூட
குறைவாக
இருக்கும்.
தந்தைக்கு
யார்
உதவியாளர் ஆகின்றார்களோ
அவர்களே
உயர்ந்த
பதவி
பெறுகிறார்கள்.
அதுவும்
யார்
தந்தையை
நினைவுசெய்து கொண்டிருப்பார்களோ
அவர்களே.
பிராமணரிலிருந்து மாறி
தேவதையாகின்றார்கள்.
இது
தெய்வீக
மலர் அல்லது
அசுர
மலர்
என்ற
வர்ணனை
கூட
சங்கமத்தில்
தான்
செய்ய
முடியும்.
அனைவரும்
மலர்களே ஆனால்
பல
விதமாக
இருக்கிறது,
தந்தை
கூட
நினைவு
செய்து
கொண்டே
இருக்கிறார்.
டீச்சர்
தன்னுடைய மாணவர்களை
நினைப்பார்கள்
அல்லவா?
இவர்கள்
குறைவாகப்
படிக்கிறார்கள்.
மனதில்
புரிந்து
கொள்வார்கள் அல்லவா?
இவர்
தந்தையாகவும்
இருக்கிறார்
டீச்சராகவும்
இருக்கிறார்.
தந்தைதான்
இவர்.
டீச்சராக
அதிகம் செயல்படுகிறார்.
டீச்சர்
என்றால்
தினந்தோறும்
படிக்க
வைக்க
வேண்டும்.
இந்த
படிப்பின்
சக்தியால்
அவர்கள் பதவி
அடைகிறார்கள்.
காலையில்
நீங்கள்
அனைத்து
சகோதரர்களும்.
தந்தையின்
நினைவில்
அமர்கிறீர்கள்.
இது
நினைவினுடைய
பாடம்.
பிறகு
முரளி
நடக்கிறது;
அது
படிப்பினுடைய
பாடம்.
முக்கியமானது
யோகம் மற்றும்
படிப்பு
தான்
இவற்றை
ஞானம்
மற்றும்
விஞ்ஞானம்
என்றும்
கூறலாம்.
தந்தை
எங்கு
வந்து சொல்லிக் கொடுக்கின்றாரோ
இதுவே
ஞான
-
விஞ்ஞான
பவனம்.
ஞானத்தினால்
அனைத்து
சிருஷ்டியினுடைய அறிவும்
கிடைக்கிறது.
விஞ்ஞானம்
என்றால்
நீங்கள்
யோகத்தில்
இருக்கிறீர்கள்;
அதனால்
தூய்மையாகிறீர்கள்.
உங்களுக்கு
அர்த்தம்
தெரிகிறது.
தந்தை
குழந்தைகளைப்
பார்த்துக்
கொண்டிருக்கிறார்.
ஆத்ம
அபிமானி ஆவதால்
தான்
பூதம்
வெளியேறும்.
அனைவரின்
பூதமும்
உடனே
வெளியேறிவிடாது.
கணக்கு
வழக்கு முடிகின்றபோது
தான்
நடத்தைக்கு
ஏற்றாற்
போல்
பதவி
பெறுவார்கள்.
வகுப்பு
மாறி
போகின்றார்கள்;
இந்த உலகத்தின்
மாற்றம்
கீழே
சென்று
கொண்டிருக்கிறது,
உங்களுடையது
மேலே
சென்று
கொண்டிருக்கிறது.
எவ்வளவு
வித்தியாசம்
இருக்கிறது!
அவர்கள்
கலியுகப்படியில்
கீழே
இறங்கிக்
கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் புருஷோத்தம
சங்கம
யுகத்தைச்
சார்ந்தவர்கள்
ஏணிப்படியில்
மேலே
சென்று
கொண்டிருக்கின்றீர்கள்.
உலகம் இதுவே
தான்.
புத்திக்கு
மட்டும்
தான்
வேலை.
நாம்
சங்கமயுகத்தைச்
சார்ந்தவர்கள்
என
நீங்கள்
கூறுகின்றீர்கள்.
புருஷோத்தமர்கள்
ஆக்குவதற்காக
தந்தை
வரவேண்டியுள்ளது.
உங்களுக்கு
இப்போது
புருஷோத்தம சங்கமயுகம்.
மற்றவர்கள்
அனைவரும்
பயங்கர
இருளில்
இருக்கிறார்கள்.
பக்தியை
அவர்கள்
மிகவும்
நல்லது என
நினைக்கின்றார்கள்.
ஏனென்றால்
அவர்களுக்கு
ஞானம்
எதுவுமே
தெரியாது.
இப்போது
உங்களுக்கு ஞானம்
கிடைத்திருப்பதால்
நீங்கள்
புரிந்து
கொள்கிறீர்கள்.
ஞானத்தின்
ஒரு
துளியினால்
நாம்
அரை
கல்பத்திற்கு ஏறிவிடுகிறோம்.
பிறகு
அங்கே
ஞானத்தின்
விஷயம்
எதுவும்
இருக்காது.
இந்த
அனைத்து
விஷயங்களையும் மகாரதி
குழந்தைகள்
தான்
கேட்டு,
கடைபிடித்து
சொல்லிக்கொண்டே இருப்பார்கள்,
மற்றவர்கள்
இங்கிருந்து சென்றதுமே
முடிந்தது.
கர்மம்,
அகர்மம்,
விகர்மத்தின்
இரகசியத்தை
பகவான்
தான்
புரியவைக்கின்றார்.
இது தான்
கல்பத்தின்
சங்கமயுகம்.
பழைய
உலகம்
முடிந்து
புதிய
உலகம்
ஸ்தாபனை
ஆக
வேண்டும்.
வினாசம் எதிரில்
நிற்கிறது.
நீங்கள்
சங்கமயுகத்தில்
நிற்கிறீர்கள்,
மற்ற
மனிதர்களுக்கு
கலியுகம் நடந்து
கொண்டிருக்கிறது.
எவ்வளவு
பயங்கரமான
இருள்!
விழுந்து
கொண்டே
இருக்கிறார்கள்,
விழவைப்பதற்கும்
சிலர்
நிமித்தமாக இருக்கிறார்கள்.
அவனே
இராவணன்.
இந்த
சபையில்
உண்மையில்
பதீதமானவர்
எவரும்
அமர
முடியாது.
தூய்மையில்லாதவர்கள்
வாயுமண்டலத்தைக்
கெடுத்துவிடுவார்கள்;
யாராவது
மறைந்து
வந்து
அமர்ந்தார்கள் என்றால்
அடி
விழுகிறது.
ஒரேயடியாக
விழுந்து
விடுவார்கள்.
ஈஸ்வரிய
சபையில்
யாராவது
அசுரர்கள்
வந்து அமர்ந்தால்
உடனே
தெரிந்து
விடும்.
கல்
புத்தியாகத்தான்
இருக்கிறார்கள்
மற்றவரும்
கூட
கல்புத்தி ஆகிவிடுவார்கள்.
நூறு
மடங்கு
தண்டனை
பெறுவார்கள்,
தனக்கு
நஷ்டத்தை
ஏற்படுத்திக்
கொள்வார்கள்.
இவர்களுக்கு
தெரிகிறதா
என
நாம்
பார்க்கலாம்
என்று
கூறுவார்கள்.
யார்
செய்வார்களோ
அவர்கள்
அடைவார்கள் நமக்கென்ன?
நாம்
அறிந்து
கொள்ள
வேண்டிய
அவசியமில்லை.
தந்தையிடம்
மிகவும்
உண்மையாக
இருக்க வேண்டும்.
உண்மை
என்ற
படகு
ஆடலாம்,
ஆனால்
மூழ்காது
என்று
கூறுவார்கள்.
உண்மையாக
இருந்தால் தன்னுடைய
இராஜ்ஜியத்தில்
நடனம்
ஆடுவார்கள்.
தந்தைதான்
சத்தியமானவர்
குழந்தைகள்
கூட
சத்தியமாக வேண்டும்.
சிவதந்தை
எங்கே
இருக்கிறார்
என
தந்தை
கேட்கின்றார்?
இவருக்குள்
இருக்கின்றார்
எனக் கூறுகின்றார்கள்.
பரந்தாமத்தை
விட்டு
தூர
தேசத்தில்
இருக்கக்கூடியவர்
அன்னிய
தேசத்தில்
வந்திருக்கிறார்.
அவர்தான்
இப்போது
மிகவும்
சேவை
செய்ய
வேண்டியிருக்கிறது.
நான்
இரவு
பகல்
இங்கே
சேவை
செய்ய வேண்டியிருக்கிறது
என
அவர்
கூறுகிறார்;
சந்தேஷி
(டிரான்ஸ்
மெசன்ஜர்)
மற்றும்
பக்தர்களுக்கு
காட்சி கொடுக்க
வேண்டியிருக்கிறது
இங்கேதான்,
அங்கே
எந்த
சேவையும்
இல்லை;
சேவையில்லாமல்
தந்தைக்கு சுகம்
கிடையாது.
முழுஉலகிற்கும்
சேவை
செய்ய
வேண்டும்.
தந்தையே
வாருங்கள்
என
அனைவரும் அழைக்கின்றார்கள்.
நான்
இந்த
இரதத்தில்
வருகின்றேன்
எனக்
கூறுகின்றார்.
அவர்கள்
குதிரை
வண்டியை செய்து
வைத்து
விட்டார்கள்.
இப்போது
குதிரை
வண்டியில்
கிருஷ்ணன்
எப்படி
அமர்வார்?.
யாருக்கும்
குதிரை வண்டியில்
அமர்வதற்கு
விருப்பம்
இருக்காது.
ஆத்ம
உணர்வு
மற்றும்
தேக
உணர்வு
அடையும்
விஷயங்கள்
சங்கமயுகத்தில்
தான்
இருக்கிறது.
தந்தையைத்
தவிர
வேறு
யாரும்
புரியவைக்க
முடியாது.
நீங்களும்
இப்போது
தான்
புரிந்து
கொள்கிறீர்கள்.
முதலில் அறிந்திருக்கவில்லை,
யாராவது
குரு
கற்பித்தார்களா?
நிறைய
குருக்கள்
வைத்திருந்தார்;
ஆனால் யாரும்
கற்பிக்கவில்லை.
நிறைய
பேர்
குருவை
ஏற்றுக்
கொள்கின்றனர்.
யாரிடமாவது
அமைதிக்கான
வழி கிடைக்கும்
என
எண்ணுகிறார்கள்.
அமைதியின்
கடல்
ஒரு
தந்தைதான்,
அவர்
கூடவே
அழைத்துச்
செல்கிறார் என
தந்தை
கூறுகின்றார்.
சுகதாமம்
-
சாந்திதாமம்
பற்றி
யாருக்கும்
தெரியவில்லை;
கலியுகத்தில்
இருப்பவர் சூத்திர
குலத்தினர்;
புருஷோத்தம
சங்கமயுகத்தில்
பிராமண
குலத்தினர்
இருக்கிறார்கள்.
இந்த
குலங்களைப்
பற்றி கூட
உங்களைத்
தவிர
வேறு
யாரும்
அறியவில்லை.
இங்கே
கேட்கின்றார்கள்
வெளியே
சென்றதும்
அனைத்தையும் மறந்து
விடுகின்றார்கள்;
தாரணை
ஆவதில்லை.
எங்கே
சென்றாலும்
பேட்ஜ்
இருக்க
வேண்டும்
என
பாபா கூறுகின்றார்.
இதில்
வெட்கப்படக்கூடிய
விஷயம்
எதுவும்
இல்லை;
இதை
பாபா
மிகுந்த
நன்மைக்காகவே உருவாக்கியிருக்கிறார்.
யாருக்கு
வேண்டுமானாலும்
புரிய
வைக்கலாம்.
புத்திசாலியாக இருப்பவர்கள்,
இதற்கு உங்களுக்கு
நிறைய
செலவாகும்
எனக்
கூறுவார்கள்,
செலவு
ஆகிறது
தான்,
ஏழைகளுக்கு
இலவசம்
தான் எனக்கூறுங்கள்.
அவர்கள்
கடைப்பிடித்தால்
உயர்ந்த
பதவி
பெறமுடியும்,
ஏழைகளிடம்
பணமே
இல்லை என்றால்
என்ன
செய்வார்கள்?
சிலரிம்
பணம்
இருக்கிறது;
ஆனால்
கருமிகளாக
இருக்கிறார்கள்.
இவர் நடைமுறையில்
செய்து
காட்டியிருக்கிறார்.
அனைத்தையும்
தாய்மார்களிடம்
ஒப்படைத்தார்.
நீங்கள்
அனைத்தையும் பார்த்துக்
கொள்ளுங்கள்.
ஏனென்றால்
இப்போது
தான்
இந்த
ஞானம்
கிடைத்திருக்கிறது
அதாவது
கடைசியில் எதுவும்
நினைவில்
வரக்கூடாது.
கடைசி
காலத்தில்
யாராவது
மனைவியை
நினைத்து...
பெரிய
கட்டிடங்கள் இருந்தால்
நிச்சயம்
நினைவிற்கு
வரும்.
ஆனால்
சிறிதாவது
ஞானம்
கேட்டால்
நிச்சயம்
பிரஜையில்
வருவார்கள்.
தந்தையோ
ஏழைப்பங்காளனாக
இருக்கிறார்.
சில
பேர்
பணம்
இருந்தாலும்
கூட
கருமியாக
இருக்கிறார்கள்.
முதல்
வாரிசு
சிவதந்தைதான்
எனப்
புரிந்து
கொள்வதில்லை,
பக்தி
மார்க்கத்தில்
கூட
பகவான்
வாரிசாக இருக்கிறார்;
ஈஸ்வரன்
பெயரில்
கொடுக்கிறார்கள்
அவருக்கு
கொடுக்கிறார்களே
அவர்
என்ன
ஏழையா?
ஈஸ்வரன்
பெயரில்
ஏழைகளுக்குக்
கொடுத்தால்
ஈஸ்வரன்
அதனுடைய
பலனைக்
கொடுப்பார்
என நினைக்கின்றார்கள்.
அடுத்த
பிறவியில்
கிடைக்கிறது.
தானம்
செய்தால்
கிரகணம்
விலகும்
என்பார்கள்.
தந்தைக்கு அனைத்தையும்
கொடுத்துவிட்டார்.
சரீரம்,
நண்பர்,
உற்றார்
உறவினர்
அனைத்தையும்
தந்தைக்கு
அர்ப்பணம் செய்து
விட்டார்;
இவை
அனைத்தும்
தங்களுடையது.
இந்த
நேரத்தில்
முழு
உலகின்
மீதும்
கிரகணம் பிடித்திருக்கிறது.
அது
எப்படி
ஒரு
நொடியில்
விடுபடுகிறது?
கருப்பிலிருந்து எப்படி
வெள்ளையாகிறது?
இவை அனைத்தும்
இப்போது
உங்களுக்குத்
தெரியும்
பிறகு
மற்றவர்களுக்குப்
புரியவைக்கிறீர்கள்.
நாங்கள்
உள்ளுக்குள் புரிந்து
கொள்கிறோம்,
ஆனால்
யாருக்கும்
புரியவைக்க
முடிவதில்லை
எனக்
கூறுவார்கள்
அவர்களும்
எதற்கும் பயனில்லை.
தானம்
செய்தால்
கிரகணம்
விலகும்
என
பாபா
கூறுகிறார்.
நான்
உங்களுக்கு
அழியாத இரத்தினங்களைக்
கொடுக்கின்றேன்;
அதை
அனைவருக்கும்
கொடுத்துக்
கொண்டே
சென்றால்
பாரதம்
மற்றும் முழுஉலகிலும்
உள்ள
இராகுவின்
கிரகணம்
விலகிப்போய்விடும்.
பிரகஸ்பதி
தசை
வந்து
விடும்.
எல்லாவற்றையும் விட
உயர்ந்தது
பிரகஸ்பதி
தசை,
முக்கியமாக
பொதுவாக
பாரதம்
முழுஉலகிலும்
இராகுவின்
கிரகணம் இருக்கிறது
என
உங்களுக்குத்
தெரியும்.
அது
எப்படி
போகும்?
இவர்
தந்தையல்லவா?
தந்தை
உங்களுடைய பழையவற்றை
எடுத்துக்
கொண்டு
புதியதாகக்
கொடுக்கிறார்.
இதற்குதான்
பிரகஸ்பதி
தசை
என்று
கூறுவார்கள்.
முக்திதாமத்திற்கு
செல்பவர்களுக்கு
பிரகஸ்பதி
தசை
என்று
கூறமாட்டார்கள்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு
தாயும்
தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே
தாரணைக்கான
முக்கிய
சாரம்
:-
1.
சதா
குஷியில்
நடனமாடுவதற்காக
உண்மையான
தந்தையிடம்
எப்போதும்
உண்மையாக இருக்க
வேண்டும்,
எதையும்
மறைக்கக்கூடாது.
2.
பாபா
கொடுக்கின்ற
அழியாத
இரத்தினங்களை
அனைவருக்கும்
பகிர்ந்தளிக்க
வேண்டும்;
கூடவே
சிவதந்தையை
தனது
வாரிசாக
ஏற்றுக்
கொண்டு
அனைத்தையும்
அர்ப்பணம்
செய்ய வேண்டும்.
இதில்
கருமித்தனமாக
இருக்கக்கூடாது.
வரதானம்:
கம்பீரம்
என்ற
குணம்
மூலமாக
முழு
மதிப்பெண்களை சேமிக்கக்
கூடிய
கம்பீரத்
தன்மையுடைய
தேவி
தேவதை
ஆகுக.
தற்காலத்தில்
கம்பீரத்தன்மை
என்ற
குணம்
மிக
மிக
அவசியமாகிறது.
ஏனெனில்
பேசும்
பழக்கம் அதிகமாகிவிட்டது,
என்ன
வருகிறதோ,
அதைப்
பேசிவிடுகின்றனர்.
யாரேனும்
நல்ல
காரியம்
செய்து
விட்டு,
அதைச்
சொல்லிவிட்டால்
பாதி
பலன்
முடிந்து
விடுகிறது.
பாதி
அளவு
தான்
சேமிப்பாகிறது.
மேலும்
யார் கம்பீரமாக
இருக்கின்றனரோ,
அவர்களுக்கு
முழு
மதிப்பெண்கள்
சேமிப்பாகி
விடுகிறது.
எனவே
கம்பீரத்தன்மையுடைய
தேவி
தேவதை
ஆகுங்கள்.
மற்றும்
முழு
மதிப்பெண்களையும்
சேர்த்துக்
கொள்ளுங்கள்.
வர்ணனை
செய்வதால்
மதிப்பெண்
குறைந்து
விடும்.
சுலோகன்:
பிந்து
(புள்ளி)
ரூபத்தில்
நிலைத்தீர்கள்
என்றால் பிரச்சனைகளுக்கு
வினாடியில்
பிந்து(புள்ளி)
வைக்க
முடியும்.
ஓம்சாந்தி