23.12.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்படி நடப்பதே மிக உயர்ந்த சார்ட் ஆகும். ஸ்ரீமத்திற்கு மதிப்பளிக்கக் கூடிய குழந்தைகள் நிச்சயமாக முரளியைப் படிப்பார்கள்.

 

கேள்வி:

ஈஸ்வரனுடைய குழந்தைகளாகிய உங்களிடம் எந்த கேள்வியை யாரும் கேட்க முடியாது?

 

பதில்:

குழந்தைகளாகிய உங்களிடம் நீங்கள் உடல் நலமாக இருக்கிறீர்களா என யாரும் கேட்க முடியாது. ஏனென்றால் நாம் எப்போதும் நலமாக இருக்கிறோம் என கூறுகிறீர்கள். எல்லாவற்றையும் கடந்து பிரம்மத்தில் இருக்கக் கூடிய தந்தையைப் பற்றிய கவலை இருந்தது. அவர் கிடைத்து விட்டார். வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் நோய்வாய்ப் பட்டிருந்தாலும் கூட நாங்கள் நலமாக இருக்கிறோம் என்பீர்கள். ஈஸ்வரனுடைய குழந்தைகளுக்கு எந்த விஷயத்தைப் பற்றியும் கவலை இல்லை. இவர்களுடன் மாயை போரிட்டிருக்கிறது என்று பாபா பார்க்கும் போது குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா எனக் கேட்பார்.

 

ஓம் சாந்தி.

பாபா தந்தையாகவும், ஆசிரியராகவும், சுப்ரீம் குருவாகவும் இருக்கிறார் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்கும் என பாபா புரிய வைக்கிறார். இந்த நினைவில் நிச்சயம் இருப்பார்கள். இந்த நினைவை வேறு யாரும் கற்றுத் தர முடியாது. கல்ப கல்பமாக தந்தை தான் வந்து கற்றுக் கொடுக்கிறார். அவர் ஞானக் கடல் பதீத பாவனர். இப்போது தான் இது புரிந்து கொள்ளப்படுகிறது. ஞானத்தின் மூன்றாவது கண் தெய்வீக புத்தி கிடைத்திருக்கிறது. குழந்தைகள் புரிந்து கொண்டிருக்கலாம், ஆனால் தந்தையையே மறந்து விட்டீர்கள் என்றால் டீச்சர், குரு எப்படி நினைவிற்கு வருவார்கள். மாயா மிகவும் பலசாலியாக இருக்கிறது. பாபாவின் மூன்று ரூபங்களையும் மறக்க வைக்கிறது. நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என கூறுகிறார்கள். உங்களுக்கு ஒவ்வொரு அடியிலும் பல கோடி மடங்கு இருக்கிறது. ஆனால் தோல்வி அடைந்தால் பல கோடியை எப்படிப் பெற முடியும்?. தேவதைகளுக்குக் கூட தாமரையின் அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஈஸ்வரனுடைய படிப்பாகும். மனிதர்களின் படிப்பு இவ்வாறு இருக்க முடியாது. தேவதையின் மகிமை பாடுகிறார்கள். இருப்பினும் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரு தந்தை தான். மற்றபடி அவர்களின் பெருமை என்ன? இன்று கழுதை, நாளை இராஜா. இப்போது நீங்கள் முயற்சி செய்து இவ்வாறு மாறிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த முயற்சியில் நிறைய பேர் தோல்வி அடைகிறார்கள் என அறிகிறீர்கள். ஞானம் மிகவும் எளிது. இருப்பினும் மிகச்சிலரே தேர்ச்சி அடைகிறார்கள். ஏன்? மாயை அடிக்கடி மறக்க வைக்கிறது. தனது சார்ட்டை வையுங்கள் என பாபா கூறுகிறார். ஆனால் எழுதுவதில்லை. எதுவரை எழுதுவது? எழுதுகிறார்கள் என்றாலும் கூட சில நேரம் மேலான நிலை, சில நேரம் கீழானநிலை. யார் ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் படி நடிக்கிறார்களோ அதுவே உயர்ந்த சார்ட் ஆகும். பாவம் இவர்களுக்கு வெட்கம் ஏற்பட்டிருக்கிறது என பாபா புரிந்துக் கொள்வார். இல்லையென்றால் ஸ்ரீமத்தை அமல்படுத்த வேண்டும். 1-2 சதவீதம் கஷ்டபட்டு எழுதுகிறார்கள். ஸ்ரீமத்துக்கு இவ்வளவு மதிப்பளிப்பதில்லை. முரளி கிடைக்கிறது. அப்போதும் படிப்பதில்லை. பாபா கூறுகிறார் என்றால் உண்மை, முரளி படிக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கு என்ன கற்பிக்க முடியும் என மனதில் அவர்களுக்கு நிச்சயம் தோன்றும்.

 

என்னை நினைத்தால் சொர்க்கத்திற்கு அதிபதியாகி விடுவீர்கள் என பாபா கூறுகிறார். இதில் பாபாவும் வந்து விட்டார். படிக்க வைப்பவரும் வந்து விட்டார். சத்கதி அளிக்கும் வள்ளலும் வந்து விட்டார். சில வார்த்தைகளிலேயே அனைத்து ஞானமும் வந்து விடுகிறது. இங்கே நீங்கள் ரிவைஸ் செய்வதற்காக வருகிறீர்கள். பாபாவும் இதைத் தான் புரிய வைக்கிறார். ஏனென்றால் நாங்கள் மறந்து விட்டோம் என்று நீங்களே கூறுகிறீர்கள். ஆகவே இங்கு ரிவைஸ் செய்வதற்காக வருகிறார்கள். சிலர் செய்தாலும் கூட ரிவைஸ் செய்வதில்லை. அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் முயற்சி என்ன செய்வார்கள்? முயற்சி செய்விப்பவர் ஒரே ஒரு தந்தை தான். இதில் யாருக்கும் அதிக உபச்சாரம் (விருந்தோம்பல்) செய்யத் தேவை இல்லை. அந்தப் படிப்பில் அதிகமாக படிப்பதற்காக ஆசிரியரை அழைக்கிறார்கள். இங்கே அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்காக அனைவரையும் ஒன்று போல படிக்க வைக்கிறார். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எதுவரை படிக்க வைப்பார்கள்? எவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள்! அந்தப் படிப்பில் யாராவது பெரிய ஆட்களின் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அதிகமாக படிக்க வைப்பதற்காக வாய்ப்பளிப்பார்கள். இவ்வளவு டல்லாக இருக்கிறார். ஆகையால் படிக்க வைத்து அவர்களை தகுதி அடைய வைக்க வேண்டும் என ஆசிரியருக்குத் தெரியும். இந்த டீச்சர் அவ்வாறு செய்வதில்லை. இவர் அனைவரையும் ஒன்று போல கற்க வைக்கிறார். அதிகமான முயற்சி என்றால் டீச்சர் சிறிது கருணை காண்பிக்கிறார். சிலர் பைசாவும் பெறுகிறார்கள். முக்கியமாக நேரம் எடுத்து படிக்க வைக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் அதிகமாகப் படித்து புத்திசாலியாக ஆகிறார்கள். இந்த தந்தையோ அனைவருக்கும் மன்மனாபவ என்ற ஒரே மந்திரத்தை அளிக்கிறார். தந்தை ஒருவரே பதீத பாவனர். அவருடைய நினைவில் தான் நாம் தூய்மையாக மாறுவோம். அது குழந்தைகளாகிய உங்களின் கையில் இருக்கிறது. எவ்வளவு நினைப்பீர்களோ அவ்வளவு தூய்மையாவீர்கள். பதவிக்கு ஆதாரம் ஒவ்வொருவரின் முயற்சி ஆகும். அவர்கள் தீர்த்த யாத்திரைகளுக்குச் செல்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தும் செல்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் கூட நிறைய யாத்திரைகள் செய்தீர்கள். பிறகு என்ன நடந்தது?. கீழே தான் விழுந்து வந்துள்ளீர்கள். யாத்திரைகள் எதற்காக? பிறகு என்ன நடக்கும் எதுவும் தெரியவில்லை. இப்போது உங்களுடையது நினைவு யாத்திரையாகும். மன்மனாபவ என்ற ஒரே வார்த்தை தான். உங்களுடைய இந்த யாத்திரை அனாதி ஆகும். அவர்களோ நாங்கள் இந்த யாத்திரையை அனாதி காலத்திலிருந்து செய்கிறோம் என்று. இப்போது நீங்கள் ஞானத்துடன் நாங்கள் கல்ப கல்பமாக இந்த யாத்திரையை செய்கிறோம் என கூறுகிறீர்கள். இந்த யாத்திரையை தந்தையே வந்து கற்றுக் கொடுக்கிறார். அந்த யாத்திரைகளில் எவ்வளவு ஏமாற்றம் அடைகிறார்கள். எவ்வளவு சட்டம் இருக்கிறது! இந்த யாத்திரை மயான அமைதியினுடையது. ஒரு தந்தையைத் தான் நினைக்க வேண்டும். இதன் மூலம் தான் தூய்மையாக முடியும். பாபா உங்களுக்கு இந்த உண்மையிலும் உண்மையான ஆன்மீக யாத்திரையைக் கற்பிக்கிறார். அந்த யாத்திரைகளை நீங்கள் பல பிறவிகளாக செய்து கொண்டிருக்கிறீர்கள். இருப்பினும் நாலாபுறமும் சுற்றி அலைந்தோம்...... பகவானிடமிருந்து விலகியே இருக்கிறோம் எனப் பாடுகிறார்கள். யாத்திரையிலிருந்து திரும்பிய பிறகு விகாரங்களில் விழுவதால் என்ன நன்மை? இப்போது தந்தை வந்திருக்கிறார், இதுவே புருஷோத்தம சங்கமயுகம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். தந்தை வந்துவிட்டார் என அனைவரும் ஒரு நாளில் புரிந்து கொள்வார்கள். பகவான் கடைசியில் எப்படி கிடைப்பார். இதை யாரும் அறியவில்லை. சிலர் நாய், பூனையில் கூட இருக்கிறார் என நினைக்கிறார்கள். இது அனைத்திலும் பகவான் கிடைப்பாரா? எவ்வளவு பொய்யாக இருக்கிறது! பொய்யாகவே சாப்பிடுகிறார்கள், பொய்யாகவே குடிக்கிறார்கள், பொய்யாகவே இரவைக் கழிக்கிறார்கள். ஆகவே இதற்கு பொய்யான கண்டம் என்று பெயர். உண்மையான கண்டம் என சொர்க்கத்திற்கு கூறப்படுகிறது. பாரதம் சொர்க்கமாக இருந்தது. சொர்க்கத்தில் அனைவரும் பாரதவாசிகளாக இருந்தனர். இன்று அதே பாரத வாசிகள் நரகத்தில் இருக்கிறார்கள். இதை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் பாபாவிடமிருந்து நாம் ஸ்ரீமதத்தைப் பெற்று பாரதத்தை மீண்டும் சொர்க்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என அறிகிறீர்கள். அச்சமயம் பாரதத்தில் வேறு யாரும் கிடையாது. உலகம் முழுவதும் தூய்மையாக மாறுகிறது. இப்போது எவ்வளவு நிறைய தர்மங்கள் இருக்கிறது! பாபா முழு மரத்தின் ஞானத்தைக் கூறுகிறார். உங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறார். நீங்கள் தான் தேவதைகளாக இருந்தீர்கள். பிறகு வைஷியர்கள், சூத்திரர்கள் ஆகிவிட்டீர்கள். இப்போது நீங்கள் பிராமணன் ஆகியிருக்கிறீர்கள். இந்த வார்த்தைகளை ஒரு போதும் சன்னியாசியோ, வித்வான்கள் மூலமாகவோ கேட்டிருக்கிறீர்களா? நானே அது என்பதன் பொருளை பாபா எவ்வளவு எளிதாகக் கூறுகின்றார். நானே அது என்றால் நான் ஆத்மா, ஆத்மாக்களாகிய நாம் இவ்வாறு சுழல்கிறோம். அவர்களோ ஆத்மாக்ளாகிய நாமே பரமாத்மா ஆகிறோம். பரமாத்மாவிலிருந்து ஆத்மா ஆகிறோம் எனக் கூறிவிட்டார்கள். நானே அது என்பதன் பொருள் ஒருவருக்குக் கூடத்தெரியவில்லை. நானே அது என்ற மந்திரத்தை சதா புத்தியில் நினைவில் நிறுத்த வேண்டும் என பாபா கூறுகிறார். இல்லையென்றால் எப்படி சக்கரவர்த்தி இராஜா ஆவீர்கள்? அவர்கள் 84ன் பொருளைக் கூட புரிந்துக் கொள்ளவில்லை. பாரதத்தின் உயர்வும் வீழ்ச்சியும் என பாடப்பட்டிருக்கிறது. சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ. சூரிய வம்சம், சந்திர வம்சம்......

 

இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது. ஒரேயொரு தந்தை விதையின் ரூபத்தை தான் ஞானக் கடல் என கூறப்படுகிறது. அவர் இந்த சிருஷ்டி சக்கரத்தில் வருவதில்லை. ஆத்மாக்களாகிய நாமே பரமாத்மா ஆகிறோம் என்பது கிடையாது. இல்லவே இல்லை. பாபா தனக்குச் சமமாக நாலேட்ஜ்ஃபுல்லாக (ஞானம் நிறைந்த) மாற்றுகிறார். தனக்குச் சமமாக கடவுளாக மாற்றவில்லை. இந்த விஷயங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் புத்தியில் சக்கரம் சுழலும். நாம் எப்படி 84 பிறவிகளின் சக்கரத்தில் வருகிறோம் என நீங்கள் புத்தியின் மூலம் புரிந்து கொள்ள முடியும். இதில் நேரம், வர்ணம், வம்சம் அனைத்தும் வந்து விடுகிறது. இந்த ஞானத்தினால் தான் உயர்ந்தவரிலும் உயர்ந்தவராகிறீர்கள். ஞானம் இருந்தால் தான் மற்றவர்களுக்குக் கொடுக்கலாம். இந்த பள்ளிக் கூடங்களில் தேர்வு நடக்கும் போது விடைதாள்களை நிரப்புகிறார்கள். வெளிநாட்டிலிருந்து கூட வினாத்தாள் வருகிறது. வெளிநாட்டில் யார் படிக்கிறார்களோ அவர்களில் கூட யாராவது பெரிய கல்வித் துறை அமைச்சராக இருக்கலாம். சோதித்து பார்த்திருக்கலாம். இங்கே உங்களுடைய விடைத்தாள்களை யார் சோதிப்பார்கள். நீங்களே தான் செய்ய வேண்டும். நீங்கள் என்ன வேண்டுமோ செய்யுங்கள். படித்து எந்த பதவியை தந்தையிடமிருந்து பெற வேண்டுமோ அதைப் பெறுங்கள். எவ்வளவு தந்தையை நினைக்கிறீர்களோ மற்றவர்களுக்கு சேவை செய்கிறீர்களோ அவ்வளவு பலன் கிடைக்கும். அவர்களுக்கு இராஜ்யம் உருவாகிக்கொண்டிருக்கிறது. பிரஜைகள் கூட வேண்டும் அல்லவா?. ஆகவே சேவை செய்ய வேண்டும் என்ற கவலை இருக்கும். அங்கே அமைச்சர் போன்றவர்களின் அவசியம் இருக்காது. இங்கே புத்தி குறையும் போது அமைச்சர்களின் அவசியம் ஏற்படுகிறது. இங்கே பாபா பைசா இருக்கிறது என்ன செய்வது? எப்படிப்பட்ட தொழில் செய்வது? என பாபாவிடம் ஆலோசனை கேட்க வருகிறார்கள். உலகீயத் தொழிலைப் பற்றிய விஷயங்களை இங்கே கொண்டு வராதீர்கள் என பாபா கூறுகிறார். ஆம், யாராவது மனச்சோர்வு அடைந்திருந்தால் சிறிது மன அறுதல் அளிப்பதற்காக தெரிவிக்கிறார். ஆனால் இது என்னுடைய வேலை இல்லை. அழுக்காகிய உங்களை தூய்மையாக்கி உலகத்திற்கே அதிபதியாக்குவது தான் என்னுடைய வேலையாகும். நீங்கள் பாபாவிடமிருந்து சதா ஸ்ரீமத் பெற்றுக் கொண்டே இருங்கள். இப்போது அனைவருடையதும் அசுர வழியாகும். அதுவோ சுகதாமம் ஆகும். அங்கே ஒரு போதும் நலமாக இருக்கிறீர்களா என கேட்க மாட்டார்கள். உடம்பு நன்றாக இருக்கிறதா? இந்த வார்த்தைகளை இங்கே தான் கேட்கிறார்கள். அங்கே இந்த வார்த்தைகளே இருக்காது. துக்க தாமத்தின் எந்த வார்த்தைகளும் கிடையாது. குழந்தைகளுக்குள் மாயையின் பிரவேசம் ஏற்பட்டிருக்கிறது என்பது பாபாவிற்குத் தெரிகிறது என்பதால் நலமாக உள்ளீர்களா என பாபா கேட்கலாம். மனிதர்கள் இங்கே கூறப்படும் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாது. வேறு யாராவது மனிதர்கள் கேட்டால் நாங்கள் ஈஸ்வருடைய குழந்தைகள். எங்களை ஏன் நலம் விசாரிக்கிறீர்கள் எனக் கேட்கலாம். பரபிரம்மத்திருக்கக் கூடிய தந்தையைப் பற்றிய சிந்தனை இருந்தது. இப்போது அவரும் கிடைத்து விட்டார். இப்போது வேறு என்ன கவலை? இது எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் யாருடைய குழந்தைகள் என்ற ஞானம் கூட புத்தியில் இருக்கிறது. நாம் தூய்மையாக மாறும் போது போர் ஆரம்பம் ஆகும். உங்களை நிச்சயம் கேட்பார்கள். நாம் எப்போதும் நலமாக இருக்கிறோம் என நீங்கள் கூறுவீர்கள். நோய் இருந்தாலும் கூட நலத்துடன் குஷியாக இருக்கிறீர்கள். பாபாவின் நினைவில் இருப்பதால் சொர்க்கத்தை விட இங்கே அதிகமாக திருப்தியாக இருக்கிறீர்கள். சொர்க்கத்தின் இராஜ்ய பதவியை கொடுக்கக் கூடிய தந்தை கிடைத்திருக்கிறார். நம்மை எவ்வளவு தகுதி அடைய வைக்கிறார்? பிறகு நமக்கு என்ன கவலை இருக்கிறது? ஈஸ்வரனுடைய குழந்தைகளுக்கு எதைப் பற்றிய கவலை. அங்கே தேவதைகளுக்குக் கூட கவலை இல்லை. தேவதைகளை விட மேலோனவர் ஈஸ்வர். எனவே ஈஸ்வருடைய குழந்தைகளுக்கு என்ன கவலை இருக்க முடியும்?. பாபா நம்மை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பாபா நம்முடைய டீச்சராகவும், சத்குருவாகவும் இருக்கிறார். பாபா நம்மீது கிரீடத்தை வைக்கிறார். இதற்கு ஆங்கிலத்தில் கிரவுன் பிரின்ஸ் எனக் கூறுவார்கள். தந்தையின் கிரீடத்தைப் பிள்ளை அணிவார். சத்யுகத்தில் சுகமே சுகம் என நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அங்கே செல்லும் போது இயல்பாகவே அந்த சுகத்தைப் பெறலாம். அது உங்களுக்குத் தான் தெரியும். சத்யுகத்தில் என்ன நடக்கும். இந்த உடலை விட்டு நாம் எங்கே செல்வோம், இப்போது உங்களுக்கு பாபா பிராக்டிகலாக படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். நாம் சொர்க்கத்திற்குப் போகிறோம் என்பது உண்மை என நீங்கள் அறிகிறீர்கள். இன்னார் சொர்க்கத்திற்கு சென்றுவிட்டனர் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சொர்க்கம் எது நரகம் எது எனத் தெரியாது. கல்பத்தின் ஆயுளை இலட்கணக்கான வருடங்கள் என எழுதி இருக்கின்றனர். இந்த ஞானத்தை ஜன்ம ஜன்மாக கேட்டு கேட்டு விழுந்து கொண்டே வந்துள்ளீர்கள். இப்போது நாம் எங்கிருந்து எங்கே வந்து விழுந்திருக்கிறோம் என உங்களுடைய புத்தியில் இருக்கிறது. சத்யுகத்தில் இருந்து விழுந்து கொண்டே வந்துள்ளோம். இப்போது நாம் இந்த புருஷோத்தம சங்கமயுகத்தை வந்தடைந்திருக்கிறோம். கல்ப கல்பமாக தந்தை படிக்க வைப்பதற்காக வருகிறார். பாபாவுடன் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவா?. இவரே நம்முடைய உண்மையிலும் உண்மையான சத்குரு. அவரே முக்தி ஜீவன் முக்தியின் வழியைத் தெரிவிக்கிறார். இந்த பாபா கற்றுக் கொள்வதைப் போல் இவரைப் பார்த்து குழந்தைகளாகிய நீங்களும் கற்றுக் கொள்கிறீர்கள். ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கை வைக்க வேண்டியிருக்கிறது. எண்ணம், சொல், செயல் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளுக்குள் எந்த அழுக்கும் இருக்கக் கூடாது. தந்தையை அடிக்கடி குழந்தைகள் மறந்து போகிறீர்கள். தந்தையை மறப்பதால் தந்தையின் போதனைகளையும் மறக்கிறீர்கள். நாம் மாணவர்கள் என்பதையும் மறக்கிறீர்கள். மிகவும் எளிதாகும். பாபாவின் நினைவில் தான் அற்புதம் இருக்கிறது. இப்படிபட்ட அற்புதத்தை வேறு எந்த தந்தையும் கற்பிக்க முடியாது. இந்த அற்புதத்தினால் தான் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதனாமாக மாறுகிறார்கள்.

 

சிவபாபா பிரம்மா மூலமாக ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினை ஸ்தாபனை செய்திருக்கிறார் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். அந்த தர்மம் சத்யுகம் மற்றும் திரேதா அரை கல்பத்திற்கு இருக்கிறது. மற்ற தர்மத்தினர் பிறகு தான் வளர்ச்சி அடைகிறார்கள். கிறிஸ்து வந்தார். முதலில் மிகச் சிலரே வந்தனர். எப்போது அதிகரிக்கிறார்களோ அப்போது இராஜ்யம் செய்ய முடியும். கிறிஸ்துவ தர்மம் இதுவரை இருக்கிறது. வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. கிறிஸ்து மூலமாக நாம் கிறிஸ்துவர்கள் ஆகியிருக்கிறோம் என அவர்கள் அறிகிறார்கள். இன்றிலிருந்து 2000 வருடங்களுக்கு முன்பு கிறிஸ்து வந்தார். இப்போது வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. நாங்கள் கிறிஸ்துவினுடையவர் என கிறிஸ்துவர்கள் கூறுவார்கள். முதலில் ஒரு கிறிஸ்து வந்தார். பிறகு அவர்களுடைய தர்மம் உருவாகிறது. வளர்ச்சி அடைகிறது. ஒன்றிலிருந்து இரண்டு, இரண்டிலிருந்து நான்கு...... பிறகு இப்படியே வளர்ச்சி பெறுகிறது. இப்போது கிறிஸ்துவர்களின் மரம் எவ்வளவு பெரிதாகிவிட்டது எனப் பாருங்கள். தேவி தேவதா வம்சம் தான் அடிமரம். ஆகவே பிரம்மாவிற்கு கிரேட் கிரேட் கிராட்ண்ட் பாதர் எனக் கூறப்படுகிறது. ஆனால் பாரத வாசிகள் நாம் பரம்பிதா பரமாத்மா சிவனின் டைரக்ட் குழந்தைகள் என்பதை மறந்து விட்டனர்.

 

ஆதி தேவ் இருந்துவிட்டு போயிருக்கிறார். இந்த மனிதர்கள் அவருடைய வம்சாவளி என கிறிஸ்துவர்கள் கூட புரிந்துக் கொள்கிறார்கள். மற்றபடி அவர்கள் தங்களின் கிறிஸ்துவை தான் ஏற்றுக் கொள்வார்கள். கிறிஸ்துவை, புத்தரை தந்தை என நினைக்கிறார்கள். குலம் அல்லவா! கிறிஸ்துவின் நினைவுச் சின்னம் கிறிஸ்துவர்களின் தேத்தில் இருக்கிறது. அவ்வாறே குழந்தைகளாகிய நீங்களும் இங்கே தவம் செய்துள்ளீர்கள். எனவே, உங்களுடைய நினைவுச் சின்னம் இங்கே (அபுவில்) இருக்கிறது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. மயான அமைதியின் உண்மையிலும் உண்மையான ஆன்மீக யாத்திரை செய்ய வேண்டும். நானே அது என்ற மந்திரத்தை சதா நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் சக்ரவர்த்தி இராஜா ஆகலாம்.

                                     

2. எண்ணம், சொல், செயல் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளுக்குள் எந்த அழுக்கும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கை இருக்க வேண்டும். ஸ்ரீமத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

 

வரதானம்:

பாபா என்ற வார்த்தையின் சாவி மூலம் அனைத்து பொக்கிஷங்களையும் அடையக் கூடிய பாக்கியவான் ஆத்மா ஆகுக

 

ஞானத்தை விரிவாக ஆழமாகத் தெரிந்து கொள்ளமால் இருக்கலாம், சொல்ல முடியாமல் இருக்கலாம், ஆனால் ஒரே ஒரு பாபா என்ற வார்த்தையை மனதார ஏற்றுக் கொண்டு மேலும் மனதார மற்றவர்களுக்கு சொன்னீர்கள் என்றால் விசேஷ ஆத்மா ஆகிவிடுவீர்கள். உலகிற்கு முன்னால் மகான் ஆத்மா என்ற செரூபத்தில் புகழுக்குத் தகுதியுடையவர் ஆகிவிடுவீர்கள், ஒரே ஒரு பாபா என்ற வார்த்தை அனைத்து பொக்கிஷங்களின் மற்றும் பாக்கியத்தின் சாவி ஆகும். சாவியை பயன்படுத்துவதற்கான விதி மனதார தெரிந்து கொள்வது மற்றும் ஏற்றுக் கொள்வதாகும். மனதார பாபா என்று சொன்னீர்கள் என்றால் பொக்கிஷம் சதா ஆஜர் ஆகிவிடும்.

 

சுலோகன்:

பாப்தாதாவிடம் அன்பு இருக்கிறது என்றால் அன்பில் பழைய உலகத்தை அர்பணித்து விடுங்கள்.

 

ஓம்சாந்தி