07.10.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! எப்போதும் குஷியில் இருந்தீர்கள் என்றால் நினைவின் யாத்திரை சகஜமாகி விடும், நினைவின் மூலம் தான் 21 பிறவிகளுக்கு புண்ணிய ஆத்மாவாக ஆக முடியும்.

 

கேள்வி:

உங்களின் அனைவரையும் விட நல்ல வேலைக்காரன் அல்லது அடிமை யார்?

 

பதில்:

இயற்கை சீற்றங்கள் மற்றும் அறிவியல் மூலமான கண்டுபிடிப்புகளாகும், அதன் மூலம் முழு உலகத்தின் அழுக்குகள் சுத்தமாகிறது. இவை உங்கள் அனைவரையும் விட நல்ல வேலைக்காரன் அல்லது அடிமையாகும். அவை சுத்தம் செய்வதில் உதவியாளர்களாக ஆகின்றன. முழு இயற்கையும் உங்களுடைய அதிகாரத்தில் இருக்கிறது.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? யுத்த மைதானத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். நின்று கொண்டல்ல, நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? உங்களுடைய சேனை எவ்வளவு நன்றாக இருக்கிறது. இது ஆன்மீகத் தந்தையின் ஆன்மீக சேனை என்று சொல்லப்படுகிறது. ஆன்மீகத் தந்தையோடு யோகத்தில் மூழ்கி இராவணன் மீது வெற்றி அடைவதற்கு எவ்வளவு சகஜமான முயற்சி செய்ய வைக்கின்றார். உங்களை மறைமுகமான போர் வீரர்கள், மறைமுகமான மகாவீரர்கள் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் ஐந்து விகாரங்களின் மீது வெற்றி அடைகின்றீர்கள், அதிலும் முதலில் இருப்பது தேக-அபிமானமாகும். பாபா உலகத்தின் மீது வெற்றி அடைய அல்லது உலகத்தில் அமைதியை ஸ்தாபனை செய்வதற்காக எவ்வளவு சகஜமான யுக்தியைக் கூறுகின்றார். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் தெரிந்திருக்கவில்லை. நீங்கள் உலகத்தில் அமைதியான இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். அங்கே அசாந்தி, துக்கம் வியாதி போன்றவற்றின் பெயர் அடையாளமே இருப்பதில்லை. இந்த படிப்பு உங்களை புதிய உலகத்திற்கு எஜமானர்களாக்குகிறது. பாபா கூறுகின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, காமத்தின் மீது வெற்றி அடைவதின் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கு உலகத்தை வென்றவர்களாக ஆகின்றீர்கள். இது மிகவும் சகஜமானதாகும். நீங்கள் சிவபாபாவின் ஆன்மீக சேனையாவீர்கள். இராமருடைய விஷயம் இல்லை, கிருஷ்ணருடைய விஷயமும் இல்லை. பரமபிதா பரமாத்மாவைத் தான் இராமன் என்று சொல்லப்படுகிறது. மற்றபடி அந்த இராமனுடைய சேனை போன்றவற்றை காட்டு கிறார்களே, அவையனைத்தும் தவறாகும். ஞான சூரியன் உதித்தது, அஞ்ஞான இருள் அழிந்தது (நீங்கியது) என்று பாடப்படுகிறது. கலியுகம் காரிருளாகும். எவ்வளவு சண்டை சச்சரவுகள் இருக்கின்றன. சத்யுகத்தில் இது நடப்பதில்லை. நீங்கள் தங்களுடைய இராஜ்யத்தை எப்படி ஸ்தாபனை செய்கிறீர்கள் பாருங்கள். இதில் கை கால்கள் எதையும் பயன்படுத்துவதில்லை, இதில் தேக-அபிமானத்திலிருந்து விடுபட வேண்டும். இல்லங்களில் இருக்கின்றீர்கள் என்றாலும் கூட முதலில், நான் ஆத்மா, தேகம் அல்ல என்பதை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தான் 84 பிறவிகளை அனுபவிக்கின்றீர்கள். இது உங்களுடைய கடைசி பிறவியாகும். பழைய உலகம் அழிய வேண்டும். இதை புருஷோத்தம சங்கமயுகம் லீப் யுகம் என்று சொல்லப்படுகிறது. குடுமி சிறியதாக இருக்கிறது அல்லவா? பிராமணர்களுடைய குடுமி புகழ்பெற்றதாகும். பாபா எவ்வளவு சகஜமாகப் புரிய வைக்கின்றார். நீங்கள் ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்து இராஜ்யத்தை அடைவதற்காக பாபாவிடம் இதை படிக்கின்றீர்கள். குறிக்கோள் கூட முன்னால் இருக்கிறது - சிவபாபாவின் மூலம் நாம் இப்படி ஆக வேண்டும். ஆமாம் குழந்தைகளே ஏன் ஆகக் கூடாது. தேக-அபிமானத்தை மட்டும் விட்டு விட்டு தங்களை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையாகிய என்னை நினைவு செய்தீர்கள் என்றால், பாவங்கள் அழிந்து விடும். இந்த பிறவியில் தூய்மையாவதின் மூலம் நாம் 21 பிறவிகள் புண்ணிய ஆத்மாக்களாக ஆகின்றோம் பிறகு இறங்குவது ஆரம்பமாகிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நமக்குத் தான் 84 பிறவிகள் என்பதையும் தெரிந்துள்ளீர்கள். முழு உலகமும் வருவதில்லை. 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றுபவர்கள் மற்றும் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் வருவார்கள். சத்யுகம் மற்றும் திரேதாயுகத்தை பாபா தான் ஸ்தாபனை செய்கின்றார், அதை இப்போது செய்து கொண்டிருக்கின்றார், பிறகு துவாபர-கலியுகம் இராவணனுடைய ஸ்தாபனையாகும். இராவணனுடைய சித்திரம் கூட இருக்கிறது அல்லவா? மேலே கழுதையின் தலை இருக்கிறது. விகாரமான மட்டக் (குள்ளமான) குதிரை ஆகி விடுகிறார்கள். நாம் எப்படி இருந்தோம், என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இந்த உலகமே பாவாத்மாக்களின் உலகமாகும். பாவாத்மாக்களின் உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள். புண்ணிய ஆத்மாக்களின் உலகம் 9 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது. நீங்கள் இப்போது முழு உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள். இந்த லஷ்மி- நாராயணன் உலகத்திற்கு எஜமானர்களாக இருந்தார்கள் அல்லவா? சொர்க்கத்தின் இராஜ்யத்தை கண்டிப்பாக பாபா தான் கொடுப்பார். நான் உங்களுக்கு உலகத்தின் இராஜ்யத்தை கொடுக்க வந்துள்ளேன் என்று பாபா கூறுகின்றார். இப்போது கண்டிப்பாக தூய்மையாக ஆக வேண்டும். அதுவும் இந்த மரணலோகத்தின் கடைசி பிறவியில் தூய்மையாக ஆகுங்கள். இந்த பழைய உலகத்தின் வினாசம் முன்னால் தயாராக இருக்கிறது. அங்கே வீட்டில் இருந்துகொண்டே அழித்து விடும் அளவிற்கு அணுகுண்டுகள் போன்றவற்றை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் இருந்து கொண்டே பழைய உலகத்தை அழித்து விடுவோம் என்று சொல்கிறார்கள். முழு உலகத்தையும் வீட்டில் இருந்து கொண்டே அணுகுண்டுகளைப் போட்டு அழித்து விடுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே யோகபலத்தின் மூலம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகி விடுகிறீர்கள். நீங்கள் யோகபலத்தின் மூலம் அமைதியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அறிவியல் பலத்தின் முலம் முழு உலகத்தையும் அழித்து விடுவார்கள். அவர்கள் உங்களுடைய வேலைக்காரர்களாவர். உங்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். பழைய உலகத்தை அழித்து விடுகிறார்கள். இயற்கை சீற்றங்கள் போன்ற இவையனைத்தும் உங்களுடைய அடிமைகளாகின்றன. முழு இயற்கையும் உங்களுக்கு அடிமையாகி விடுகிறது. நீங்கள் பாபாவோடு மட்டும் யோகத்தில் மூழ்குகிறீர்கள். எனவே குழந்தைகளாகிய உங்களுக்குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மிகவும் அன்பான தந்தையை எவ்வளவு நினைவு செய்ய வேண்டும். இதே பாரதம் முழுவதுமே சிவாலயமாக இருந்தது. சத்யுகத்தில் சம்பூரண நிர்விகாரிகள் இருக்கிறார்கள், இங்கே சம்பூரண விகாரிகள் இருக்கிறார்கள். தீயதைக் கேட்காதீர்கள்..... கெட்ட விஷயங்களைக் கேட்காதீர்கள். என்று பாபா நமக்கு சொல்லியிருந்தார் என்ற நினைவு இப்போது உங்களுக்கு வந்துள்ளது. வாயின் மூலம் பேசவும் கூடாது. நீங்கள் எவ்வளவு அழுக்கானவர்களாகி விட்டீர்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். உங்களிடம் அளவுகடந்த செல்வம் இருந்தது. நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் சொர்க்கத்திற்குப் பதிலாக நரகத்திற்கு எஜமானர்களாகி விட்டீர்கள். இது கூட நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளாகிய உங்களை நான் மோசமான நரகத்திலிருந்து நீக்கி சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். ஆன்மீக குழந்தைகளே! நீங்கள் என்னுடைய பேச்சை கேட்க மாட்டீர்களா? நீங்கள் தூய்மையான உலகத்திற்கு எஜமானர்களாக ஆகுங்கள் என்று பரமாத்மா சொல்கிறார் என்றால், நீங்கள் ஆக மாட்டீர்களா என்ன?

 

கண்டிப்பாக வினாசம் ஆகும். இந்த யோகபலத்தின் மூலமாகத் தான் உங்களுடைய பல-பிறவிகளுக்குமான பாவம் அழியும். மற்றபடி அனேக பிறவிகளின் பாவம் அழிவதில் கொஞ்சம் நேரம் பிடிக்கிறது. குழந்தைகள் ஆரம்பத்திலிருந்து வந்துள்ளார்கள், 10 சதவீதம் கூட யோகத்தில் நிலைத்திப்பதில்லை ஆகையினால் பாவம் அழிவதில்லை. புதிய-புதிய குழந்தைகள் உடனே யோகிகளாகி விடுகிறார்கள், எனவே பாவம் அழிந்து விடுகிறது மேலும் சேவை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாபா அழைத்துச் செல்ல வந்துள்ளார். பாவாத்மாக்கள் சாந்திதாமம் சுகதாமத்திற்கு செல்ல முடியாது. அவர்கள் துக்கதாமத்தில் இருக்கிறார்கள். ஆகையினால் இப்போது பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்தீர்கள் என்றால், உங்களுடைய பாவங்கள் பஸ்மமாகி விடும். ஆக, குழந்தைகளே, மலர்களாக ஆகி விடுங்கள். தெய்வீக குலத்திற்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் விகாரிகளாக ஆகின்ற காரணத்தினால் எவ்வளவு துக்கமுடையவர்களாக ஆகி விட்டீர்கள். இப்படி கூட நாடகத்தின் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தூய்மையாக ஆக வில்லை என்றால் தூய்மையான உலகமாகிய சொர்க்கத்திற்கு வர மாட்டீர்கள். பாரதம் சொர்க்கமாக இருந்தது, கிருஷ்ணபுரியில் இருந்தீர்கள் இப்போது நரகவாசியாக இருக்கின்றீர்கள். எனவே குழந்தைகளாகிய நீங்கள் குஷியோடு விகாரங்களை விட வேண்டும். விஷம் குடிப்பதை உடனே நிறுத்த வேண்டும். நீங்கள் விஷத்தை குடித்து - குடித்து வைகுண்டத்திற்குச் செல்ல முடியுமா என்ன! இப்போது நீங்கள் லஷ்மி-நாராயணனாக ஆவதற்கு தூய்மையாக ஆக வேண்டும். இவர்கள் இந்த இராஜ்யத்தை எவ்வாறு அடைந்தார்கள் என்று நீங்கள் புரிய வைக்கலாம். இராஜயோகத்தின் மூலம் அடைந்தார்கள். இது படிப்பு அல்லவா? எப்படி வக்கீல் கல்வி, டாக்டர் கல்வி இருக்கிறது அல்லவா? டாக்டரோடு தொடர்பு கல்வி கற்றால் டாக்டராக ஆவார்கள். இது பகவானுடைய மகாவாக்கியமாகும். ரதத்தில் எவ்வாறு பிரவேசிக்கின்றார்? அனேக பிறவிகளின் கடைசியில் நான் இவருக்குள் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தை கொடுக்கின்றேன் என்று கூறுகின்றார். இவர் உலகத்திற்கு எஜமானராக தூய்மையாக இருந்தார் என்பதை தெரிந்திருக்கிறேன். இப்போது தூய்மையற்றவராக எதுவுமில்லாதவராக ஆகிவிட்டார், மீண்டும் இவர் முதல் நம்பருக்குச் செல்வார். இவருக்குள் தான் பிரவேசித்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தை கொடுக்கின்றேன். எல்லையற்ற தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே, தூய்மையாக ஆனீர்கள் என்றால் நீங்கள் எப்போதும் சுகமானவர்களாக ஆவீர்கள். சத்யுகம் அமரலோகமாகும், துவாபர கலியுகம் மரணலோகமாகும். குழந்தைகளுக்கு எவ்வளவு நல்ல விதத்தில் புரிய வைக்கின்றார். இங்கே ஆத்ம-அபிமானிகளாக ஆகின்றார்கள், பிறகு தேக-அபிமானத்தில் வந்து மாயையிடம் தோல்வி அடைந்து விடுகிறார்கள். மாயையினுடைய அப்படியொரு பீரங்கி வெடிக்கிறது, ஒரேயடியாக சேற்றில் விழுந்து விடுகிறார்கள். இது சேறு (சாக்கடை) என்று பாபா கூறுகின்றார். இது சுகமானதா என்ன? பிறகு சொர்க்கம் என்பது என்ன! இந்த தேவதைகள் இருப்பது- செய்வது போன்றவற்றைப் பாருங்கள் எப்படி இருக்கிறது! பெயரே சொர்க்கமாகும். உங்களை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக மாற்றுகின்றேன், இருந்தாலும் விஷத்தை கண்டிப்பாக அருந்துவோம் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் சொர்க்கத்திற்கு வர முடியாது. தண்டனையும் நிறைய அனுபவிப்பீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு மாயையோடு சண்டையாகும். தேக-அபிமானத்தில் வந்து மிகவும் மோசமான காரியத்தைச் செய்கிறீர்கள். நம்மை யாராவது பார்க்கிறார்களா என்ன என்று புரிந்து கொள்கிறார்கள். கோபமோ-லோபமோ தனிப்பட்டதாக இருப்பதில்லை. காமத்தில் தனிமை என்பது இருக்கிறது. முகத்தை கருப்பாக்கிக் கொள்கிறார்கள். முகத்தை கருப்பாக்கி-கருப்பாக்கி நீங்கள் வெண்மையிலிருந்து கருப்பாகி விட்டீர்கள் எனும்போது முழு உலகமும் உங்கள் பின்னால் வந்து விட்டது. இப்படிப்பட்ட தூய்மையற்ற உலகம் கண்டிப்பாக மாற வேண்டும். உங்களுக்கு வெட்கமாக இல்லை! இந்த ஒரு பிறவி தூய்மையாக ஆக முடியவில்லையா? என்று பாபா கேட்கிறார்.

 

பகவானுடைய மகாவாக்கியம் - காமம் மிகப்பெரிய எதிரியாகும். உண்மையில் நீங்கள் சொர்க்கவாசிகளாக இருந்தபோது மிகுந்த செல்வந்தர்களாக இருந்தீர்கள். கேட்கவே கேட்காதீர்கள். பாபா எங்களுடைய நகரத்திற்கு வாருங்கள் என்று குழந்தைகள் அழைக்கிறார்கள். முட்கள் நிறைந்த காட்டிற்கு குரங்குகளைப் பார்க்க வரவா! நாடகத்தின் படி குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்யத் தான் வேண்டும். தந்தை மகனைக் காட்டுவார் என்று பாடப்பட்டுள்ளது. குழந்தைகள் தான் சென்று அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். பாபா குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார் - நாம் யுத்த மைதானத்தில் இருக்கின்றோம். உங்களுடைய யுத்தம் 5 விகாரங்களோடு ஆகும். இந்த ஞான மார்க்கம் முற்றிலும் தனிப்பட்டதாகும். நான் உங்களை 21 பிறவிகளுக்கு சொர்க்கத்திற்கு எஜமானர்களாக்குகின்றேன், பிறகு உங்களை நரகவாசிகளாக்குவது யார்? என்று பாபா கேட்கிறார். இராவணன். வித்தியாசத்தை பார்க்கின்றீர்கள் அல்லவா. நீங்கள் பக்தி மார்க்கத்தில் பல-பிறவிகளாக குருமார்களிடம் சென்றீர்கள், எதுவும் கிடைக்க வில்லை. இவரை சத்குரு என்று சொல்லப்படுகிறது. சத்குரு அகால மூர்த்தி என்று சீக்கியர்கள் சொல்கிறார்கள் அல்லவா? அவரை ஒருபோதும் காலன் சாப்பிடுவதில்லை. அந்த சத்குரு காலனுக்கெல்லாம் காலன் ஆவார். நான் குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் காலனின் சங்கிலியிருந்து விடுவிக்க வந்துள்ளேன் என்று பாபா கூறுகின்றார். பிறகு சத்யுகத்தில் காலன் வருவதில்லை, அதனை அமரலோகம் என்று சொல்லப்படுகிறது. இப்போது நீங்கள் ஸ்ரீமத்படி அமரலோகம் சத்யுகத்தின் எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய சண்டையைப் பாருங்கள் எப்படி இருக்கிறது. முழு உலகமும் ஒருவர்- மற்றவரோடு சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறது. உங்களுக்கு இராவணன் 5 விகாரங்களோடு யுத்தமாகும். அதன்மீது வெற்றி அடைகிறீர்கள். இது கடைசி பிறவியாகும்.

 

நான் ஏழைப்பங்காளன் என்று பாபா கூறுகின்றார். இங்கே ஏழைகள் தான் வருகிறார்கள். செல்வந்தர்களுக்கு அதிர்ஷ்டத்திலேயே இல்லை. செல்வத்தின் போதையிலேயே கர்வத்தோடு இருக்கிறார்கள். இவையனைத்தும் அழியக்கூடியதாகும். இன்னும் கொஞ்ச காலமே இருக்கிறது. நாடகத்தின் திட்டம் அல்லவா? இவ்வளவு அணுகுண்டுகள் போன்றவை உருவாக்கியுள்ளார்கள் அல்லவா, அதைக் கண்டிப்பாக காரியத்தில் கொண்டு வருவார்கள். முதலில் சண்டை பாணங்களின் மூலம், வாள்களின் மூலம், துப்பாக்கிகளின் மூலம் நடந்தன. இப்போது வீட்டிலிருந்து கொண்டே அழித்து விடும் அளவிற்கு அணுகுண்டுகள் வந்துள்ளன. இந்த பொருட்கள் சும்மா வைத்திருக்கவா உருவாக்கப்பட்டுள்ளன. எதுவரை வைத்திருப்பார்கள். பாபா வந்திருக்கின்றார் என்றால், கண்டிப்பாக வினாசம் நடக்க வேண்டும். நாடகத்தின் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது, உங்களுடைய இராஜ்யம் கண்டிப்பாக ஸ்தாபனை ஆக வேண்டும். இந்த லஷ்மி - நாராயணன் ஒருபோதும் சண்டையிடுவதில்லை. சாஸ்திரங்களில் என்னவோ காட்டியுள்ளார்கள் - அசுரர்கள் மற்றும் தேவதைகளின் சண்டை நடந்தது என்று ஆனால் தேவதைகள் சத்யுகத்தில் இருப்பவர்கள், அசுரர்கள் கலியுகத்தில் இருப்பவர்களாவர். அவர்கள் எப்படி சந்திப்பார்கள் சண்டை எப்படி நடக்கும். நாம் 5 விகாரங்களோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இதன் மீது வெற்றி அடைந்து சம்பூரண நிர்விகாரிகளாக ஆகி நிர்விகார உலகத்திற்கு எஜமானர்களாகி விடுவோம். எழும்போதும் அமரும்போதும் பாபாவை நினைவு செய்ய வேண்டும். தெய்வீக குணத்தை தாரணை செய்ய வேண்டும். இது உருவாக்கப்பட்ட உருவாக்கப்படுகின்ற நாடகமாகும். சிலருடைய அதிர்ஷ்டத்திலேயே இல்லை. யோகபலம் இருந்தால் தான் விகர்மம் வினாசம் ஆகும். சம்பூரணமாக ஆனால்தான் சம்பூரண உலகத்தில் வர முடியும். பாபாவும் சங்கொலி எழுப்பிக் கொண்டே இருக்கின்றார்.பிறகு அவர்கள் பக்தி மார்க்கத்தில் சங்கு அல்லது கொம்பூதி போன்றவற்றை வந்து உருவாக்கியுள்ளார்கள். பாபா இந்த வாயின் மூலம் புரிய வைக்கின்றார். இது இராஜயோகத்தின் படிப்பாகும். மிகவும் சகஜமான படிப்பாகும். பாபாவை நினைவு செய்யுங்கள் மற்றும் இராஜ்யத்தை நினைவு செய்யுங்கள். எல்லையற்ற தந்தையை அறிந்து கொள்ளுங்கள் மற்றும் இராஜ்யத்தை அடையுங்கள். இந்த உலகத்தை மறந்துவிடுங்கள். நீங்கள் எல்லையற்ற சன்னியாசிகளாவீர்கள். பழைய உலகம் அழிய வேண்டும் என்பதை தெரிந்துள்ளீர்கள். இந்த லஷ்மி-நாராயணனுடைய இராஜ்யத்தில் பாரதம் மட்டுமே இருந்தது. நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) தங்களுடைய தெய்வீக குலத்திற்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது. மலராக ஆக வேண்டும். அனேக ஆத்மாக்களின் நன்மைக்காக சேவை செய்து பாபாவை வெளிப்படுத்த வேண்டும்.

 

2) சம்பூரண நிர்விகாரியாக ஆவதற்கு தீய விஷயங்களை கேட்கவும் கூடாது வாயின் மூலம் பேசவும் கூடாது. தீயதை கேட்காதீர்கள், தீயதை பேசாதீர்கள்........... தேக-அபிமானத்திற்கு வசப்பட்டு எந்தவொரு மோசமான காரியத்தையும் செய்யக் கூடாது.

 

வரதானம்:

வைராக்கிய உள்ளுணர்வின் மூலம் சாரமற்ற உலகத்திலிருந்து பற்றற்றவராக இருக்கக் கூடிய உண்மையான இராஜரிஷி ஆகுக.

 

இராஜரிஷி என்றால் இராஜ்யம் செய்தாலும் கூட எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கியம், தேகம் மற்றும் தேகத்தின் பழைய உலகத்தில் சிறிதளவு கூட பற்றுதல் இருக்கக் கூடாது. ஏனெனில் இந்த பழைய உலகமே சாரமற்ற உலகமாக இருக்கிறது, இதில் எந்த விதமான சாரமுமில்லை, என்பதை தெரிந்திருக்கிறீர்கள். சாரமற்ற உலகத்தில் பிராமணர்களுக்கு சிரேஷ்ட உலகம் கிடைத்திருக்கிறது, அந்த உலகத்திலிருந்து எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கியம் அதாவது எந்தவித பற்றுதலும் இல்லை. இராஜரிஷி அல்லது தபஸ்வி என்றாலே எந்த விதமான பற்றுதலோ அல்லது தலைகுனிவோ இல்லை.

 

சுலோகன்:

யாரிடம் இனிமையான மற்றும் சுப பாவனை நிரம்பிய வார்த்தைள் இருக்கின்றதோ அது தான் யுக்தி யுக்தான வார்த்தையாகும்.

 

ஓம்சாந்தி