13.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! பாபாவின் ஸ்ரீமத் படி நடப்பது தான் பாபாவுக்கு மரியாதை கொடுப்பதாகும். மனதின் வழிப்படி நடப்பவர்கள் அவமரியாதை செய்கின்றனர்.

 

கேள்வி :

இல்லற விவகாரங்களில் இருப்பவர்களுக்காக எந்த ஒரு விஷயத்தில் பாபா தடை சொல்வதில்லை, ஆனால் ஒரு கட்டளையிடுகிறார் - அது என்ன?

 

பதில் :

பாபா சொல்கிறார் - குழந்தைகளே, நீங்கள் அனைவருடைய தொடர்பில் வாருங்கள், எந்த ஒரு வேலை முதலியவற்றையும் செய்யுங்கள், தொடர்பில் வரவேண்டி உள்ளது, வண்ண ஆடைகள் அணிய வேண்டி உள்ளது என்றால் அணிந்து கொள்ளுங்கள். பாபா தடை செய்வதில்லை. பாபாவோ வழி சொல்கிறார் - குழந்தைகளே, தேகத்துடன் கூட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களில் இருந்தும் பற்றுதலை விட்டு என்னை நினைவு செய்யுங்கள்.

 

ஓம் சாந்தி.

சிவபாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், அதாவது தம்மைப் போல் ஆக்குவதற்கான முயற்சி செய்விக்கிறார். எப்படி நான் ஞானக்கடலாக இருக்கிறேனோ, அதுபோல் குழந்தைகளும் ஆக வேண்டும். இதையோ இனிமையான குழந்தைகள் அறிவார்கள், அனைவரும் ஒரே மாதிரி ஆக மாட்டார்கள். முயற்சியோ ஒவ்வொருவரும் அவரவருடையதைச் செய்ய வேண்டும். பள்ளிக்கூடத்தில் மாணவர்களோ அநேகர் படிக்கின்றனர். ஆனால் அனைவரும் ஒரே மாதிரி பாஸ் வித் ஆனர் ஆக மாட்டார்கள். பிறகும் கூட ஆசிரியர் முயற்சி செய்ய வைக்கிறார். குழந்தைகள் நீங்களும் முயற்சி செய்கிறீர்கள். பாபா கேட்கிறார் - நீங்கள் என்னவாக ஆவீர்கள்? அனைவரும் சொல்வார்கள், நாங்கள் வந்திருப்பதே நரனிலிருந்து நாராயணனாக, நாரியிலிருந்து லட்சுமியாக ஆவதற்காக என்று. இதுவோ சரி தான். ஆனால் தன்னுடைய செயல்பாடுகளையும் பாருங்களேன். பாபாவும் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர். ஆசிரியராகவும் உள்ளார், குருவாகவும் உள்ளார். இந்த தந்தையை யாருமே அறிந்திருக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், சிவபாபா நம்முடைய தந்தையாகவும் உள்ளார், ஆசிரியராகவும் உள்ளார், சத்குருவாகவும் உள்ளார். ஆனால் அவர் எப்படி இருக்கிறார், யாராக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது கடினம். தந்தையை அறிந்து கொண்டால் ஆசிரியர் என்பது மறந்து போகும். பிறகு குரு என்பது மறந்து போகும். குழந்தைகள் தந்தைக்கும் மதிப்பு தர வேண்டியுள்ளது. மதிப்பு என்று சொல்லப்படுவது எது? பாபா சொல்லித் தருவதை நல்லபடியாகப் படிக்கிறார்கள் என்றால் மதிப்பு தருகிறார்கள் என்று ஆகும். பாபாவோ மிக இனிமையானவர். உள்ளுக்குள் மிகவும் குஷியின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். எல்லையற்ற குஷி இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தன்னைக் கேட்டுக் கொள்ள வேண்டும், நமக்கு அதுபோன்ற குஷி உள்ளதா? ஒரே மாதிரி அனைவருமோ இருக்க முடியாது. படிப்பிலும் கூட அதிக வேறுபாடு உள்ளது. அந்தப் பள்ளிக்கூடங்களிலும் கூட எவ்வளவு வேறுபாடு உள்ளது! அங்கோ பொதுவான ஆசிரியர் கற்பிக்கிறார். இவரோ சாதாரணமானவரல்ல. இவர் போல் ஆசிரியர் வேறு யாரும் கிடையாது. ஸ்ரீகிருஷ்ணரின் பெயர் கூறப்பட்டுள்ளது என்ற போதிலும் அவர் எப்படி தந்தையாக முடியும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அவ்வாறே கிருஷ்ணர் என்ற பெயர் அநேகருக்கு உள்ளது. ஆனால் கிருஷ்ணர் எனச் சொன்னதுமே ஸ்ரீகிருஷ்ணர் முன்னால் வந்து விடுவார். அவரோ தேகதாரி இல்லையா? நீங்கள் அறிவீர்கள், இந்த சரீரம் அவருடையது அல்ல. அவரே (சிவபாபா) சொல்கிறார் நான் கடனாகப் பெற்றுள்ளேன். இதற்கு முன்பும் (பிரம்மா) மனிதராக இருந்தார். இப்போதும் மனிதராக உள்ளார். இவர் பகவான் அல்ல. அவர் ஒருவர் தான் நிராகார். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு இரகசியங்கள் சொல்லிப் புரிய வைக்கிறார்! ஆனால் பிறகும் கூட இறுதியாகத் தான் தந்தை எனப்புரிந்து கொள்வது, ஆசிரியர் எனப் புரிந்து கொள்வது - இது இப்போது நடைபெற முடியாது. அடிக்கடி மறந்து விடுவீர்கள். தேகதாரியின் பக்கம் புத்தி சென்று விடுகின்றது. இறுதியில் தந்தை, தந்தையாக, ஆசிரியராக, சத்குருவாக உள்ளார் - இந்த நிச்சயம், புத்தியில் இப்போது இல்லை. இப்போதோ மறந்து போகின்றனர். மாணவர்கள் எப்போதாவது ஆசிரியரை மறந்து போவார்களா என்ன? பள்ளி விடுதியில் (ஹாஸ்டல்) இருக்கும் மாணவர்களோ ஒருபோதும் மறக்க மாட்டார்கள். விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கோ பக்காவாக இருக்கும் இல்லையா? இங்கோ அந்தப் பக்கா நிச்சயம் கூட இல்லை. நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் விடுதியில் அமர்ந்துள்ளனர் என்றால் நிச்சயமாக மாணவர்கள் தான். ஆனால் இந்தப் பக்கா நிச்சயம் இல்லை. அனைவரும் அவரவர் புருஷார்த்தத்தின் அனுசாரம் பதவி பெறுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அந்தப் படிப்பிலும் பிறகும் கூட யாராவது வக்கீலாகின்றனர், இஞ்சினியர் ஆகின்றனர், டாக்டர் ஆகின்றனர். இங்கோ நீங்கள் உலகத்தின் எஜமானர் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆக, இப்படிப்பட்ட மாணவர்களின் புத்தி எப்படி இருக்க வேண்டும்? நடத்தை, பேச்சு எவ்வளவு நன்றாக இருக்க வேண்டும்?

 

பாபா புரிய வைக்கிறார் - குழந்தைகளே, நீங்கள் ஒருபோதும் அழக் கூடாது. நீங்கள் உலகத்தின் எஜமானர் ஆகிறீர்கள். யா-ஹூசேன் (ஐயோ கடவுளே) என்று சப்தமிடக் கூடாது. யா-ஹூசேன் எனக் கூக்குரலிடுவது என்பது மிகவும் அதிகமாக அழுவதாகும். பாபாவோ சொல்கிறார்-யார் அழுகிறார்களோ, அவர்கள் இழந்து விடுகிறார்கள்......... உலகத்தின் உயர்ந்ததிலும் உயர்ந்த இராஜபதவியை இழந்து விடுகிறார்கள். சொல்லவோ செய்கின்றனர், நாங்கள் நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக வந்துள்ளோம் என்று. ஆனால் அதற்குரிய நடத்தை எங்கே? நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் அனைவரும் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கின்றனர். சிலரோ நல்லபடியாகப் பாஸாகி ஸ்காலர்ஷிப் பெற்றுக் கொள்கின்றனர். சிலர் ஃபெயிலாகி விடுகின்றனர். உங்களிலும் கூட சிலர் படிக்கின்றனர், சிலர் படிப்பதும் கிடையாது. எப்படி கிராமத்தினருக்கு படிப்பது பிடிக்காது. புல்லறுக்கச் சொல்வீர்களானால் மகிழ்ச்சியுடன் செல்வார்கள். அதில் சுதந்திரமான வாழ்க்கை இருப்பதாக நினைக்கின்றனர். படிப்பது பந்தனம் என நினைக்கின்றனர். இப்படியும் அநேகர் உள்ளனர். பணக்காரர்களில் ஜமீன்தார்களும் குறைந்தவர்கள் இல்லை. தங்களை சுதந்திரமானவர்களாக, மிகுந்த குஷியில் இருப்பதாக நினைக்கின்றனர். வேலை என்ற பெயரோ கிடையாது இல்லையா? ஆபீசர் பதவி முதலியவற்றிலும் மனிதர்கள் பணி செய்கின்றனர் இல்லையா? இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா படிப்பு சொல்லித் தருகிறார், உலகத்தின் எஜமானர் ஆக்குவதற்காக. வேலைக்காக படிப்பு சொல்லித் தரவில்லை. நீங்களோ இந்தப் படிப்பினால் உலகத்தின் மாலிக் ஆகக்கூடியவர்கள் அல்லவா? மிக உயர்ந்த பதவி ஆகின்றது. நீங்களோ உலகத்தின் எஜமானர் முற்றிலும் சுதந்திரமாக ஆகி விடுகின்றீர்கள். விஷயம் எவ்வளவு எளிமையானது! ஒரே படிப்பு-இதன் மூலம் நீங்கள் இவ்வளவு உயர்ந்த மகாராஜா-மகாராணி ஆகிறீர்கள், அதுவும் தூய்மையானவர்களாக. நீங்களும் கூட சொல்கிறீர்கள், எந்த தர்மத்தைச் சேர்ந்தவராயினும் வந்து படிக்கலாம். இந்தப் படிப்போ மிக உயர்ந்தது எனப்புரிந்து கொள்வார்கள். உலகத்தின் எஜமானர் ஆகிறீர்கள். இதை பாபா கற்பிக்கிறார். உங்களுக்கு புத்தி இப்போது எவ்வளவு விசாலமாக ஆகியுள்ளது! எல்லைக்குட்பட்ட புத்தியிலிருந்து எல்லையற்ற புத்தியில் வந்திருக்கிறீர்கள், நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம். எவ்வளவு குஷி இருக்கின்றது-நாம் அனைவரும் மற்றவர்களை உலகத்தின் எஜமானர் ஆக்க வேண்டும் என்பதில்! உண்மையில் பணியாளராக இருப்பதென்பது அங்கேயும் உள்ளது. தாச-தாசிகள், வேலையாட்கள் முதலானவர்களோ வேண்டும் தானே? படித்தவர்கள் முன்பு படிக்காதவர்கள் தலை வணங்கி நிற்பார்கள். அதனால் பாபா சொல்கிறார், நல்லபடியாகப் படிப்பீர்களானால் நீங்கள் இதுபோல் (தேவதைகளாக) ஆக முடியும். சொல்லவும் செய்கின்றனர், நாங்கள் இதுபோல் ஆவோம் என்று. ஆனால் படிக்கவில்லை என்றால் என்னவாக ஆவார்கள்? படிப்பதில்லை என்றால் பிறகு தந்தையை இவ்வளவு மரியாதையுடன் நினைவு செய்வதில்லை. பாபா சொல்கிறார், நீங்கள் எவ்வளவு நினைவு செய்கிறீர்களோ, அவ்வளவு உங்கள் விகர்மங்கள் விநாசமாகும். குழந்தைகள் சொல்கின்றனர், பாபா, நீங்கள் எப்படி வழி நடத்துகிறீர்களோ, அவ்வாறே நடப்போம் என்று. பாபாவும் வழிமுறையை இவர் (பிரம்மா பாபா) மூலம் தான் தருவார் இல்லையா? ஆனால் இவருடைய அறிவுரையையும் கூடப் பெற்றுக் கொள்வதில்லை. பிறகும் பழைய மட்டமான (மூடத்தனமான) வழிமுறைப்படி தான் நடக்கின்றனர். பார்க்கவும் செய்கின்றனர், சிவபாபா இந்த ரதத்தின் மூலம் வழிமுறை தருகிறார் என்று. பிறகும் கூட தங்கள் வழிப்படியே நடக்கின்றனர். எதை பைசா பெறாத சோழி போன்ற வழிமுறை எனச் சொல்கின்றனரோ, அந்த வழிப்படி நடக்கின்றனர். இராவணனின் வழிப்படி நடந்து-நடந்து இச்சமயம் சோழி போல் ஆகி விட்டுள்ளனர். இப்போது இராமராகிய சிவபாபா வழிமுறை தருகிறார். நிச்சயத்தில் தான் வெற்றி உள்ளது. இதில் ஒருபோதும் நஷ்டம் ஏற்படாது. நஷ்டத்தையும் பாபா லாபமாக மாற்றி விடுவார். ஆனால் அது நிச்சய புத்தி உள்ளவர்களுக்குத் தான். சந்தேக புத்தி உள்ளவர்கள் ஏமாற்றமடைவார்கள். நிச்சயபுத்தி உள்ளவர்களுக்கு ஒருபோதும் ஏமாற்றமோ, ஒருபோதும் நஷ்டமோ ஏற்பட முடியாது. பாபா தாமே உறுதி (கேரண்டி) தருகிறார்- ஸ்ரீமத்படி நடப்பதால் ஒருபோதும் தீமை ஏற்படாது. மனித வழிமுறை தேகதாரியின் வழிமுறை எனச் சொல்லப் படுகின்றது. இங்கே இருப்பதோ மனித வழிமுறை. பாடவும் படுகின்றது - மனித வழிமுறை, ஈஸ்வரிய வழிமுறை, தெய்வீக வழிமுறை. இப்போது உங்களுக்கு ஈஸ்வரிய வழிமுறை கிடைக்கின்றது. இதன் மூலம் நீங்கள் மனிதரிலிருந்து தேவதை ஆகிறீர்கள். பிறகு அங்கோ சொர்க்கத்தில் நீங்கள் சுகம் மட்டுமே அடைகிறீர்கள். எந்த ஒரு துக்கத்தின் விஷயமும் கிடையாது. அதுவும் நிலையான சுகமாக ஆகி விடுகின்றது. இச்சமயம் உங்களை சுய உணர்வில் கொண்டுவர வேண்டியுள்ளது. வருங்காலத்தின் உணர்வு வருகின்றது.

 

இப்போது இது புருஷோத்தம சங்கமயுகம். இதில் தான் ஸ்ரீமத் கிடைக்கின்றது. பாபா சொல்கிறார், நான் கல்ப-கல்பமாக, கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன். அதை நீங்கள் அறிவீர்கள். அவருடைய வழிப்படி நீங்கள் செல்கிறீர்கள். பாபா சொல்கிறார் - குழந்தைகளே, இல்லறத்தில் வேண்டுமானால் இருங்கள். நீங்கள் ஆடை முதலியவற்றை மாற்றுங்கள் என்று யார் சொல்கிறார்கள்? எதை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள். அநேகருடன் தொடர்பில் வரவேண்டியுள்ளது. வண்ண ஆடைகளுக்கு யாரும் தடை விதிக்கவில்லை. எந்த ஆடையை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள். இதனுடன் எந்தத் தொடர்பும் கிடையாது. பாபா சொல்கிறார், தேகத்துடன் கூட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு விடுங்கள்.

 

மற்றப்படி அனைத்தையும் அணிந்து கொள்ளுங்கள். தன்னை ஆத்மா என்று மட்டும் உணர்ந்து பாபாவை நினைவு செய்யுங்கள். இதைப் பக்காவாக நிச்சயம் செய்யுங்கள். இதையும் அறிவீர்கள், ஆத்மா தான் பதீத் மற்றும் பாவனமாக ஆகின்றது. மகாத்மாவையும் கூட மகான் ஆத்மா எனச் சொல்வார்கள். மகான் பரமாத்மா எனச் சொல்ல மாட்டார்கள். அவ்வாறு சொல்வதும் அழகாக (சரியாக) இருக்காது. புரிந்து கொள்வதற்கான எவ்வளவு நல்ல பாயின்ட்டுகள்! சத்குரு அனைவருக்கும் சத்கதி அளிப்பவரோ ஒரே ஒரு பாபா தான். அங்கே ஒருபோதும் அகால மரணம் ஏற்படுவதில்லை. இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், பாபா மீண்டும் நம்மை இதுபோல் தேவதா ஆக்குகிறார். முன்பு இது புத்தியில் இருந்ததில்லை. கல்பத்தின் ஆயுள் எவ்வளவு என்பதையும் அறிந்திருக்கவில்லை. இப்போதோ முழு நினைவும் வந்து விட்டது. இதையும் குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர், ஆத்மாவுக்குத் தான் பாவாத்மா, புண்ணியாத்மா எனச் சொல்லப் படுகின்றது. பாவ பரமாத்மா என்று ஒரு போதும் சொல்லப் படுவதில்லை. பிறகு யாராவது பரமாத்மா சர்வவியாபி எனச் சொல்வார்களானால் எவ்வளவு புத்தியற்ற நிலை! இதை பாபா தான் வந்து புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் அறிந்து கொண்டீர்கள், 5000 ஆண்டுகளுக்குப் பிறகு பாவாத்மாக்களைப் புண்ணியாத்மாக்களாக பாபா தான் வந்து மாற்றுகிறார். ஒருவரை மட்டுமல்ல, குழந்தைகள் அனைவரையும் மாற்றுகிறார். பாபா சொல்கிறார், குழந்தைகளாகிய உங்களை மாற்றுபவர் எல்லையற்ற தந்தையாகிய நான் தான். நிச்சயமாகக் குழந்தைகளுக்கு எல்லையற்ற சுகம் தருவேன். சத்யுகத்தில் இருப்பவர்கள் பவித்திர ஆத்மாக்கள். இராவணன் மீது வெற்றி கொள்வதால் தான் நீங்கள் புண்ணியாத்மா ஆகிறீர்கள். மாயா எவ்வளவு தடைகளை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். ஒரேயடியாக மூக்கில் குத்து விட்டு விடுகின்றது. நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், மாயாவோடு யுத்தம் எப்படி நடைபெறுகின்றது என்று. அவர்கள் பிறகு கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் யுத்தம், சேனைகள் முதலியன, என்னென்னவெல்லாம் உட்கார்ந்து காட்டியுள்ளனர்! இந்த யுத்தம் பற்றி யாருக்கும் தெரியாது. இது குப்தமானது. இதைப் பற்றி நீங்கள் தான் அறிவீர்கள். மாயாவோடு ஆத்மாக்கள் நாம் யுத்தம் செய்ய வேண்டும். பாபா சொல்கிறார், உங்கள் விரோதிகளில் மிகப்பெரிய விரோதி காமம். யோக பலத்தின் மூலம் நீங்கள் இதன் மீது வெற்றி கொள்கிறீர்கள். யோக பலத்தின் அர்த்தத்தையும் கூட யாரும் புரிந்து கொள்ளவில்லை. யார் சதோபிரதானமாக இருந்தனரோ, அவர்கள் தான் தமோபிரதானமாக ஆகியுள்ளனர். பாபா தாமே சொல்கிறார், அநேக பிறவிகளின் கடைசியில் நான் இவருக்குள் பிரவேசமாகிறேன். அவர் தான் தமோபிரதானமாக ஆகியுள்ளார், தத த்வம் (அவர் தாம் இவர்). பாபா ஒருவரை மட்டும் சொல்ல மாட்டார். நம்பர்வார் அனைவரையும் சொல்கிறார். நம்பர்வார் யார்-யார் உள்ளனர், இங்கே உங்களுக்குத் தெரிய வரும். இன்னும் போனால் உங்களுக்கு அதிகம் தெரிய வரும். மாலையின் சாட்சாத்காரம் உங்களுக்குச் செய்விப்பேன். பள்ளிக்கூடத்தில் அடுத்த வகுப்புக்கு மாறும் போது அனைத்தும் தெரிய வருகிறது இல்லையா? முடிவுகள் அனைத்தும் வெளியாகி விடும்.

 

பாபா ஒரு பெண் குழந்தையிடம் கேட்டார் - உனது பரீட்சைக்கான பேப்பர் எங்கிருந்து வருகிறது? லண்டனில் இருந்து வருவதாகக் குழந்தை சொன்னது. இப்போது உங்கள் பேப்பர்கள் எங்கிருந்து வெளிவரும்? மேலிருந்து. உங்கள் பேப்பர் மேலே இருந்து வரும். அனைத்து சாட்சாத்காரங்களும் பார்ப்பீர்கள். எவ்வளவு அற்புதமான படிப்பு! யார் படிப்பிக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. கிருஷ்ண பகவான் வாக்கு எனச் சொல்லிவிடுகின்றனர். படிப்பில் அனைவரும் நம்பர்வார். ஆக, குஷியும் நம்பர்வார் இருக்கும். அதிந்திரிய சுகம் என்றால் என்னவென்று கோப-கோபியரிடம் கேளுங்கள் என்ற பாடல் கடைசி நேரத்தின் விஷயம். பாபா புரிய வைத்துள்ளார், பாபாவுக்குத் தெரியும் - இந்தக் குழந்தைகள் ஒருபோதும் கீழே விழுகிறவர்கள் அல்ல, ஆனால் பிறகும் கூட என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. படிப்பையே படிப்பதில்லை. அதிர்ஷ்டத்தில் இல்லை. போய் அந்த உலகத்தில் உங்கள் வீட்டுக்குள் குடியேறுங்கள் என்று கொஞ்சம் சொன்னால் போதும், உடனே சென்று விடுவார்கள். எங்கிருந்து வெளியேறி எங்கோ சென்று விடுகின்றனர்! அவர்களின் நடத்தை, பேச்சு, செயலும் கூட அவ்வாறு உள்ளது. நமக்கு இவ்வளவு கிடைத்தால் நாம் போய்த் தனியாக இருக்கலாம் என நினைக்கின்றனர். நடத்தை மூலம் புரிந்து கொள்ளப் படும். இதன் அர்த்தம் நிச்சயம் உள்ளது என்பதல்ல. வேறு வழியின்றி அமர்ந்துள்ளனர். அநேகருக்கு ஞானத்தின் முதல் எழுத்துக்கூடத் தெரியாது. ஒருபோதும் அமர்வது கூட இல்லை. மாயா படிக்க விடுவதில்லை. இதுபோல் அனைத்து சென்டர்களிலும் உள்ளனர். ஒருபோதும் படிக்க வருவதில்லை. அதிசயம் இல்லையா? எவ்வளவு உயர்ந்த ஞானம்! பகவான் கற்றுத் தருகிறார். இந்த வேலையைச் செய்யாதீர்கள் என்று பாபா சொன்னால் கேட்க மாட்டார்கள். நிச்சயமாகத் தலைகீழான காரியம் செய்து காட்டுவார்கள். இராஜதானி ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது. அதிலோ பல விதமானவர்களும் வேண்டும் இல்லையா? மேலிருந்து தொடங்கிக் கீழே வரை அனைவரும் உருவாகிறார்கள். பதவிகளில் வேறுபாடோ இருக்கும் இல்லையா? இங்கேயும் நம்பர்வார் பதவிகள் உள்ளன. வேறு பாடு என்ன? அங்கே ஆயுள் அதிகம், மேலும் சுகம் இருக்கும். இங்கே ஆயுள் குறைவு மற்றும் துக்கமும் உள்ளது. குழந்தைகளின் புத்தியில் இந்த அற்புதமான விஷயங்கள் உள்ளன. இந்த டிராமா எப்படி உருவாக்கப் பட்டுள்ளது! பிறகு கல்ப-கல்பமாக நாம் அதே பாகத்தை நடிப்போம். கல்ப-கல்பமாக நடித்துக் கொண்டே இருப்போம். இவ்வளவு மிகச்சிறிய ஆத்மாவுக்குள் எவ்வளவு பாகம் நிரம்பியுள்ளது! அதே தோற்ற அமைப்பு, அதே செயல்பாடு..... இந்த சிருஷ்டிச் சக்கரம் சுற்றிக் கொண்டே உள்ளது. உருவாக்கப்பட்ட, உருவாகிக் கொண்டிருக்கிற......... இந்தச் சக்கரம் பிறகும் கூட அதேபோல் திரும்பவும் நடைபெறும். சதோபிரதான், சதோ, ரஜோ, தமோவில் வருவார்கள். இதில் குழப்பமடைவதற்கான விஷயம் கிடையாது. நல்லது, தன்னை ஆத்மா என உணர்கிறீர்களா? ஆத்மாவின் தந்தை சிவபாபா - இதையோ புரிந்து கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? யார் சதோபிரதானமாக ஆகிறார்களோ, அவர்கள் தான் பிறகு தமோபிரதானமாக ஆகிறார்கள். பிறகு பாபாவை நினைவு செய்வீர்களானால் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். இதுவோ நல்லது தான் இல்லையா? அவ்வளவு தான், இதுவரை மட்டும் தான் உறுதியாக இருக்க நிற்க வைக்க வேண்டும். சொல்லுங்கள், எல்லையற்ற தந்தை இந்த சொர்க்கத்தின் ஆஸ்தியைத் தருகிறார். அவரே பதீத பாவனர். பாபா ஞானம் தருகிறார். இதில் சாஸ்திரங்கள் முதலியவற்றின் விஷயமே கிடையாது. சாஸ்திரங்கள் ஆரம்பத்தில் எங்கிருந்து வரும்? இதுவோ ஜனத்தொகை அதிகமாகிவிட்ட பிறகு பின்னாளில் அமர்ந்து சாஸ்திரங்களை உருவாக்குகின்றனர். சத்யுகத்தில் சாஸ்திரங்கள் இருப்பதில்லை. பரம்பரையாகவோ எந்த ஒரு பொருளும் இருப்பதில்லை. பெயர்-வடிவமோ மாறி விடும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) ஒருபோதும் யாஹூசேன் என்று கூச்சல் போடக் (கதறல்) கூடாது. புத்தியில் இருக்க வேண்டும் - நாம் உலகின் எஜமானர் ஆகப் போகிறவர்கள். நம்முடைய நடத்தையும் பேச்சும் மிக நன்றாக இருக்க வேண்டும். ஒருபோதும் அழக் கூடாது.

 

2) நிச்சயபுத்தி உள்ளவராகி ஒரு பாபாவின் வழிப்படி நடந்து கொண்டே இருக்க வேண்டும். ஒருபோதும் குழப்பமடைவதோ, மூச்சுத் திணறிப் (மூர்ச்சித்து) போவதோ கூடாது. நிச்சயத்தில் தான் வெற்றி உள்ளது. அதனால் தனது ஒன்றுக்கும் உதவாத வழிமுறையில் நடக்கக் கூடாது.

 

வரதானம் :

தனது முயற்சியின் செயல்முறை மூலம் தன்னுடைய முன்னேற்றத்தை அனுபவம் செய்யக்கூடிய வெற்றி நட்சத்திரம் ஆகுக.

 

யார் தங்களுடைய முயற்சியின் செயல்பாட்டின் மூலம் தங்களின் முன்னேற்றம் அல்லது வெற்றியை அனுபவம் செய்கின்றனரோ, அவர்கள் தான் வெற்றியின் நட்சத்திரங்கள் ஆவர். அவர்களின் சங்கல்பத்தில் தனது முயற்சியின் பலன் பற்றிக் கூட ஒரு போதும் -- நடக்குமா நடக்காதா, செய்ய முடியுமா முடியாதா -- இந்த மாதிரி தோல்வியின் எண்ணம் அம்ச மாத்திரம் கூட இருக்காது. தனக்குள் வெற்றியை அதிகார ரூபத்தில் அனுபவம் செய்வார்கள். அவர்களுக்கு சகஜமாக மற்றும் தானாக வெற்றி கிடைத்துக் கொண்டே இருக்கும்.

 

சுலோகன் :

சுகம் தரும் சொரூபம் ஆகி, சுகம் கொடுப்பீர்களானால் முயற்சியில் ஆசிர்வாதங்கள் சேர்ந்து விடும்.

 

ஓம்சாந்தி