24.02.2019                           காலை முரளி                ஓம் சாந்தி                        ''அவ்யக்த பாப்தாதா''

ரிவைஸ்    26.04.1984          மதுபன்


 

'' ஆன்மீக விசித்திர மேளாவில் (சந்திப்பில்) அனைத்து பொக்கிஷங்களின் பிராப்தி''

 

இன்று பாப்தாதா, சந்திக்க வேண்டும் என்று குழந்தைகளிடமிருக்கும் ஆர்வத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் தொலைதூரத்திலிருந்து எதற்காக வந்திருக்கிறீர்கள்? சந்திப்பதற்காக அதாவது மேளாவில் வந்திருக்கிறீர்கள். இந்த ஆன்மீக மேளா விசித்திர மேளா. இந்த மேளாவில் சந்திப்பதும் விசித்திரமானது. விசித்திர (உடலற்ற) ஆத்மாக்கள், விசித்திர தந்தையை சந்திக்கிறார்கள். இது கடல் மற்றும் நதிகளின் சந்திப்பு. ஈஸ்வரிய குடும்பத்தினர் சந்திப்பதற்கான மேளா. இந்த ஒரு தடவையின் சந்திப்பினால் அனேக தடவைகள் அனைத்து பிராப்திகளையும் செய்வதற்கான மேளாவாக ஆகிவிடுகிறது. இந்த மேளாவில் திறந்த களஞ்சியம், திறந்த பொக்கிஷங்கள் கிடைக்கின்றன. யாருக்கு என்ன பொக்கிஷம் வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ அந்த அளவு செலவின்றி அதிகாரத்துடன் எடுத்துக் கொள்ள முடியும். இது லாட்டரியும் கூடத் தான். எந்த அளவு பாக்கியத்தில் சிரேஷ்ட லாட்டரியைப் பெற விரும்புகிறீர்களோ அந்தளவு பெற முடியும். இப்பொழுது லாட்டரி சீட்டை வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு பின்னால் நம்பர் வெளியாகும் என்று அப்படியில்லை. இப்பொழுது என்ன பெற விரும்புகிறீர்களோ, எந்த அளவு பாக்கிய ரேகையை உறுதியான எண்ணம் மூலம் போட விரும்புகிறீர்களோ அந்தளவு போட முடியும். ஒரு விநாடியில் லாட்டரியைப் பெற முடியும். இந்த மேளாவில் பல ஜென்மங்களுக்காக இராஜ பதவியின் அதிகாரத்தை பெற முடியும். அதாவது இந்த மேளாவில் இராஜயோகியாக இருப்பவர் வரும் பல ஜென்மங்களுக்கு விஷ்வ இராஜா ஆக முடியும். எவ்வளவு பெரிய பிராப்தியின் ஆசனத்தை விரும்புகிறீர்களோ அந்த ஆசனத்திற்கு முன் பதிவு செய்ய முடியும். இந்த மேளாவில் அனைவருக்கும் விசேஷமாக ஒரு பொன்னான வாய்ப்பும் கிடைக்கிறது. அந்த பொன்னான வாய்ப்பு 'உள்ளப்பூர்வமாக என்னுடைய பாபா என்று கூறுங்கள். மேலும் தந்தையின் இதயசிம்மாசனதாரி ஆகுங்கள்'. இந்த மேளாவில் ஒரு விசேஷ பரிசும் கிடைக்கிறது. அந்தப் பரிசு 'சின்னஞ்சிறிய, சுகம் நிறைந்த மற்றும் சம்பன்ன உலகம்'. அந்த உலகத்தில் என்ன விரும்புகிறீர்களோ அது எப்பொழுதுமே பிராப்தி ஆகிறது. அந்த சின்னஞ்சிறு உலகம், தந்தையில் தான் அந்த உலகம் இருக்கிறது. இந்த உலகத்தில் இருப்பவர்கள் எப்பொழுதுமே பிராப்திகளின், குஷிகளின் ஆன்மீக ஊஞ்சலில் ஆடுகிறார்கள். இந்த உலகத்தில் இருப்பவர்கள் எப்பொழுதும் இந்த தேகம் என்ற மண்ணால் அழுக்காகாமல் ஃபரிஷ்தா ஆகி, மேலே பறந்து செல்லும் கலையில் பறந்து கொண்டே இருப்பார்கள். எப்பொழுதும் இரத்தினங்களுடன் விளையாடுகிறார்கள், எப்பொழுதும் பரமாத்மாவின் துணையை அனுபவம் செய்கிறார்கள். உன்னோடு தான் அருந்துவேன், நீ சொல்வதைத் தான் கேட்பேன், உன்னோடு தான் பேசுவேன், உன்னோடு தான் அனைத்து உறவுகளின் அன்பை வைத்து நடந்து கொள்வேன், உன்னுடைய ஸ்ரீமத்படி, கட்டளைப்படி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பேன். . . .' என்ற ஊக்கம் உற்சாகம் நிறைந்த, குஷி நிறைந்த பாடலைப் பாடிக் கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரியான உலகம் இந்த சந்திப்பு மேளாவில் கிடைக்கிறது. தந்தை கிடைத்தார், உலகம் கிடைத்தது அந்த மாதிரி இது சிரேஷ்ட மேளா. அந்த மாதிரி மேளாவில் வந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? மேளாவைப் பார்த்து பார்த்து ஒரே ஒரு பிராப்தியில் அந்த அளவு மூழ்கிவிடுகிறீர்கள், அதனால் அனைத்து பிராப்திகளையும் அடையாமல் இருந்து விட்டன என்று அப்படியும் ஆகிவிட வேண்டாம். இந்த ஆன்மீக மேளாவில் அனைத்து பிராப்திகளையும் அடைய வேண்டும். நிறைய கிடைத்திருக்கிறது என்று அதிலேயே குஷி அடைந்து சென்று விட்டேன் என்று அப்படிச் செய்யாதீர்கள். முழுமையாக அடைந்து விட்டுச் செல்லுங்கள். இந்த மேளாவில் அனைத்து பிராப்திகளையும் பிராப்தி செய்திருக்கிறேனா என்று இப்பொழுது கூட சோதனை செய்யுங்கள். எப்பொழுது திறந்த கஜானாவாக இருக்கிறது என்றால் நிரம்பியவராகித் தான் செல்ல வேண்டும். பிறகு அங்கே உங்கள் இடத்திற்குச் சென்ற பிறகு இதையும் செய்ய வேண்டியதாக இருந்தது, எவ்வளவு தேவையோ அந்த அளவு செய்யவில்லை என்று கூறாதீர்கள். அந்த மாதிரி கூற மாட்டீர்கள் இல்லையா? இந்த மேளாவின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டீர்களா? மேளா கொண்டாடுவது என்றால் மகான் ஆவது. வந்து போவது மட்டுமில்லை, ஆனால் நிரம்பிய பிராப்தி சொரூபம் ஆக வேண்டும். அந்த மாதிரி மேளாவைக் கொண்டாடினீர்களா? பொறுப்பாளராக இருக்கும் சேவாதாரிகள் என்ன நினைக்கிறீர்கள்? வளர்ச்சி விதியையும் மாற்றி விடுகிறது. வளர்ச்சி ஆவதும் அவசியம் மேலும் ஒவ்வொரு விதியில் சம்பன்னமாகவும் திருப்தியாக இருப்பதும் அவசியம். இப்பொழுதோ இருந்தும் தந்தை மற்றும் குழந்தைகள் என்ற சம்மந்தத்தில் சந்திக்கிறீர்கள். அருகில் வருகிறீர்கள். பின்போ தரிசனம் செய்தோம் என்று மட்டும் இருந்து விடும். நல்லது.

 

அனைத்து ஆன்மீக சந்திப்பு மேளாவை கொண்டாடக்கூடிய, அனைத்து பிராப்திகளின் சம்பூர்ண அதிகாரத்தை பெறக்கூடிய, எப்பொழுதும் சுகம் நிறைந்த சம்பன்ன உலகத்தில் இருக்கக்கூடிய, எப்பொழுதும் பிராப்திகளின் குஷியின் பாடல் பாடக்கூடிய, எப்பொழுதும் சிரேஷ்ட வழிப்படி நடந்து கொள்ளும், கட்டளைப்படி நடக்கும் நல்ல பாத்திரமான குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

டீச்சர்களுடன் சந்திப்பு -

எப்பொழுதும் நீங்கள் நினைவு மற்றும் சேவையின் சமநிலை வைப்பவர்கள். மேலும் எப்பொழுதும் தந்தையின் ஆசீர்வாதங்களைப் பெறுபவர்கள். எங்கு சமநிலை இருக்குமோ அங்கு தந்தை மூலமாக இயல்பாகவே ஆசீர்வாதம் என்ன வரதானமே பிராப்தியாகிறது. எங்கு சமநிலை இல்லையோ அங்கு வரதானமும் இல்லை. மேலும் எங்கு வரதானம் இல்லையோ அங்கு கடின உழைப்பு செய்ய வேண்டியதாக இருக்கும். வரதானம் பிராப்தி ஆகிக் கொண்டிருக்கிறது என்றால், அனைத்து பிராப்திகளும் சகஜமாக ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அந்த மாதிரி வரதானங்களை பிராப்தி செய்யும் சேவாதாரி தான் இல்லையா? எப்பொழுதும் ஒரு தந்தை, ஒரே சீரான நிலை மற்றும் ஒரு வழியில் நடப்பவர்களாகி இருக்கிறீர்கள் இல்லையா? அந்த மாதிரியான உண்மையான சேவாதாரி, எப்பொழுதும் தன்னை டபுள் லைட் என்று புரிந்து சேவை செய்து கொண்டே இருங்கள். எவ்வளவு லேசாக இருப்பீர்களோ அந்த அளவு சேவையில் சுமையற்ற நிலை இருக்கும். மேலும் எவ்வளவு சேவையில் லேசான நிலை வருமோ அந்த அளவு அனைவரும் சுலபமாகவே பறந்து செல்வார்கள், மற்றவர்களையும் பறக்க வைப்பார்கள். டபுள் லைட் ஆகி சேவை செய்வது, நினைவில் இருந்து சேவை செய்வது என்பது தான் வெற்றிக்கான ஆதாரம். அந்த சேவையின் பிரத்யக்ஷ பலன் அவசியம் கிடைக்கிறது.

 

பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:

சங்கமயுகம் எப்பொழுதும் அனைத்து பிராப்திகள் செய்வதற்கான யுகம். சங்கமயுகம் சிரேஷ்டமாக ஆவதற்கும், ஆக்குவதற்குமான யுகம். அந்த மாதிரி யுகத்தில் தனது பங்கை செய்யக்கூடிய ஆத்மாக்கள் எவ்வளவு சிரேஷ்டமாக ஆகிவிட்டார்கள். அப்படியானால் நான் சங்கமயுகத்தின் சிரேஷ்ட ஆத்மா என்று எப்பொழுதும் நினைவு இருக்கிறதா? அனைத்து பிராப்திகளின் அனுபவம் ஆகிறதா? தந்தையிடமிருந்து என்ன பிராப்தி ஆகிறதோ அந்த பிராப்தியின் ஆதாரத்தில் சதா தன்னை சம்பன்னமான நிரம்பிய ஆத்மா என்று நினைக்கிறீர்களா? அந்த அளவு நிரம்பியிருக்க வேண்டும் அதன் மூலம் நீங்களும் அருந்திக் கொண்டே இருங்கள். மேலும் மற்றவர்களுக்கும் கொடுங்கள். எப்படி தந்தையைப் பற்றி களஞ்சியம் எப்பொழுதும் நிரம்பியே இருக்கிறது என்று கூறுவார்கள். அதே போல் குழந்தைகள் உங்களுடைய களஞ்சியமும் எப்பொழுதும் நிரம்பியிருக்கிறது. ஒருபொழுதும் காலியாக முடியாது. எந்த அளவு மற்றவர்களுக்கு கொடுப்பீர்களோ அந்த அளவு இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். சங்கமயுகத்தின் விசேஷமாக என்ன இருக்கிறதோ அது உங்களுடைய விசேஷமாகவும் இருக்கிறது. நாம் சங்கமயுகத்தின் அனைத்து பிராப்தி சொரூப ஆத்மா என்ற இதே நினைவில் இருங்கள். சங்கமயுகம் புருஷோத்தம யுகம் இந்த யுகத்தில் தனது வாழ்க்கை பங்கை செய்பவர்களும் புருஷோத்தமர்கள் ஆனார்கள் இல்லையா? உலகத்தின் அனைத்து ஆத்மாக்களும் உங்களின் எதிரே சாதாரணமானவர்கள். நீங்கள் தெய்வீகமான மற்றும் விலகியிருக்கும் ஆத்மாக்கள். அவர்கள் அஞ்ஞானி, நீங்கள் ஞானி. அவர்கள் சூத்திரர்கள், நீங்கள் பிராமணர்கள். அவர்கள் துக்கமான உலகத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் நீங்கள் சங்கமயுகத்தைச் சேர்ந்தவர்கள். சங்கமயுகமும் சுகமான உலகம். எத்தனை துக்கங்களிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டீர்கள். இப்பொழுது இந்த உலகம் எவ்வளவு துக்கமானது என்று சாட்சியாக இருந்து பார்க்கிறீர்கள். அதை ஒப்பிடும் போது நீங்கள் எவ்வளவு சுகமானவர்கள். வித்தியாசம் தெரிகிறது தான் இல்லையா? எனவே எப்பொழுதும் நான் புருஷோத்தம யுகத்தின் புருஷோத்தம ஆத்மா, சுகசொரூப சிரேஷ்ட ஆத்மா என்ற இதே நினைவில் இருங்கள். ஒருவேளை சுகமில்லை, உயர்ந்த தன்மை இல்லை என்றால் அது வாழ்க்கை இல்லை.

 

எப்பொழுதும் நினைவின் குஷியில் இருக்கிறீர்கள் தான் இல்லையா? குஷி தான் அனைத்தையும் விட மிகப் பெரிய ஆசீர்வாதம் மற்றும் மருந்து. எப்பொழுதும் இந்த குஷியின் மருந்து மற்றும் ஆசீர்வாதத்தை எடுத்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால், எப்பொழுதும் குஷியாக இருக்கும் காரணத்தினால் உடலின் கணக்கு வழக்கும் தன் பக்கம் இழுக்காது. விலகி இருந்து மேலும் அன்பானவராகி, உடலின் கணக்கு வழக்கையும் முடிப்பீர்கள். எவ்வளவு தான் பெரிய கர்ம விளைவை அனுபவிப்பதாக இருந்தாலும், அதுவும் ஈட்டியிலிருந்து முள்ளாக ஆகிவிடும். பெரிய விஷயமாக அனுபவம் ஆகாது. இது கணக்கு வழக்கு என்று ஞானத்தின் ஆதாரத்தில் தெரிந்து கொண்டதினால் மிகவும் குஷியோடு கணக்கு வழக்கை முடிப்பவர்களுக்கு அனைத்தும் சுலபமாகி விடுகிறது. அஞ்ஞானி ஐயோ! ஐயோ! என்று கதறுவார், மேலும் ஞானி எப்பொழுதும் ஆஹா இனிமையான பாபா, ஆஹா, நாடகம் என்ற நினைவில் இருப்பார். எப்பொழுதும் குஷியின் பாடலைப் பாடுங்கள். நான் வாழ்க்கையில் என்ன அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டேன் என்ற இதை மட்டும் நினைவு செய்யுங்கள். என்ன பிராப்தி தேவையாக இருந்ததோ அவை அனைத்தும் கிடைத்து விட்டது. அனைத்து பிராப்திகளின் நிரம்பிய களஞ்சியம். எங்கு எப்பொழுதும் களஞ்சியம் நிரம்பி இருக்குமோ அங்கு துக்கம் வேதனை அனைத்தும் முடிவடைந்து விடும். எப்பொழுதும் தன்னுடைய பாக்கியத்தை பார்த்து ஆஹா, என்னுடைய சிரேஷ்ட பாக்கியமே! என்று மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருங்கள். எப்பொழுதும் மனதால் இந்தப் பாடலை பாடிக் கொண்டே இருங்கள். உங்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியம் இருக்கிறது. உலகத்தினருக்கோ பாக்கியத்தில் குழந்தை கிடைக்கும், பணம், செல்வம் கிடைக்கும் ஆனால் இங்கு என்ன கிடைக்கிறது? சுயம் பாக்கியத்தை உருவாக்குபவரே பாக்கியத்தில் கிடைத்து விடுகிறார். பாக்கியத்தை உருவாக்குபவரே என்னுடையவராக எப்பொழுது ஆகிவிடுகிறார் என்றால் வேறு என்ன மிச்சம் இருக்கிறது. இந்த அனுபவம் இருக்கிறது இல்லையா? அங்கிங்கு இருந்து கேள்விப்பட்டதின் ஆதாரத்தில் மட்டும் நீங்கள் இந்த வாழ்க்கையில் சென்று கொண்டிருக்கவில்லை. பெரியவர்கள் பாக்கியம் கிடைக்கிறது என்று கூறினார்கள். மேலும் நீங்கள் இந்த வாழ்க்கையில் வந்து விட்டீர்கள் என்பதைத் தான் அங்கு இங்கிருந்து கேள்விப்பட்டதின் ஆதாரத்தில் செல்வது என்று கூறுவது. கேட்பதினால் புரிந்து கொள்கிறீர்களா அல்லது அனுபவத்தினால் புரிந்து கொள்கிறீர்களா? அனைவரும் அனுபவிகளா? சங்கமயுகமே அனுபவம் செய்வதற்கான யுகம், இந்த யுகத்தில் அனைத்து பிராப்திக்கான அனுபவம் செய்ய முடியும். இப்பொழுது என்ன அனுபவம் செய்து கொண்டிருக்கிறீர்களோ அது சத்யுகத்தில் இருக்காது. இங்கு என்ன நினைவு இருக்கிறதோ அது சத்யுகத்தில் உள்ளடங்கிப் போய் விடும். இங்கு தந்தை கிடைத்திருக்கிறார் என்று அனுபவம் செய்கிறீர்கள், அங்கு தந்தையின் விஷயமே இருக்காது. சங்கமயுமே அனுபவம் செய்வதற்கான யுகம். இந்த யுகத்தில் நீங்கள் அனைவரும் அனுபவிகள் ஆகிவிட்டீர்கள். அனுபவி ஆத்மாக்கள் ஒருபொழுதும் மாயாவிடம் ஏமாற்றம் அடைய முடியாது. ஏமாற்றம் அடைபவர்களுக்கு துக்கம் ஏற்படுகிறது. அனுபவத்தின் அதிகாரம் உள்ளவர்கள் ஒருபொழுதும் ஏமாற்றம் அடைய முடியாது. எப்பொழுதுமே வெற்றியை பிராப்தி செய்து கொண்டே இருப்பார்கள். எப்பொழுதும் குஷியாக இருப்பார்கள். எனவே தற்சமயத்து சீசனின் வரதானமான - 'அனைத்து பிராப்தி சொரூப திருப்தியான ஆத்மா, அனைவரையும் திருப்தி படுத்துபவன்' என்பதை நினைவில் வையுங்கள். நல்லது.

 

பாப்தாதாவின் எதிரில் வருமான வரி அதிகாரி அமர்ந்திருக்கிறார், அவருக்காக கூறப்பட்ட இனிமையான மகாவாக்கியங்கள் -

 

தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறேன் என்று புரிந்து கொண்டீர்கள் தான் இல்லையா? இந்த வீடு யாருடையது? பரமாத்மாவின் வீடு என்பது அனைவரின் வீடாக ஆனது இல்லையா? அப்படி உங்களுடைய வீடாகவும் ஆனது இல்லையா? வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள், இதுவோ மிக நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது இன்னும் வேறு நல்லதிலும் நல்ல காரியம் என்ன செய்ய வேண்டும்? சிறந்ததிலும் சிறந்ததாகச் செய்ய வேண்டும். மேலும் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆக வேண்டும் - இதுவோ வாழ்க்கையின் இலட்சியமாக இருக்கவே இருக்கிறது. இப்பொழுது நல்லதிலும் நல்லதாக என்ன செய்ய வேண்டும்? என்ன பாடத்தை இப்பொழுது கூறினோமோ அந்த ஒரு பாடத்தை மட்டும் உறுதியாக்கி விட்டீர்கள் என்றால் இந்த ஒரு பாடத்தில் அனைத்து படிப்புகளும் நிரம்பியிருக்கிறது. இது அதிசயமான விஷ்வ வித்தியாலயம், பார்ப்பதற்கு வீடாகவும் இருக்கிறது. ஆனால் தந்தை தான் சத்தியமான ஆசிரியர். வீடாகவும் இருக்கிறது மேலும் வித்தியாலயமாகவும் இருக்கிறது, எனவே சிலர் இது வீடா அல்லது வித்தியாலயமா என்று புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் வீடாகவும் இருக்கிறது. மேலும் வித்தியாலயமாகவும் இருக்கிறது. ஏனென்றால் எது அனைத்தையும் விட உயர்ந்த பாடமோ அது இங்கு படிப்பிக்கப்படுகிறது. கல்லூரியில் மற்றும் பள்ளியில் கற்பிப்பதற்கான லட்சியமாக என்ன இருக்கும்? சரித்திரவான் ஆக வேண்டும், சம்பாதிப்பதற்கு தகுதியானவர் ஆக வேண்டும். பரிவாரத்தை நல்ல முறையில் பாலனை செய்பவராக ஆக வேண்டும் என்ற இந்த லட்சியம் தான் இருக்கும் இல்லையா? இங்கே அந்த அனைத்து இலட்சியமும் நிறைவேறியே விடுகிறது. ஒவ்வொருவரும் சரித்திரவான் ஆகிவிடுகிறார்கள்.

 

பாரத தேசத்தின் தலைவர்கள் என்ன விரும்புகிறார்கள்? பாரதத்தின் பாபுஜி (மகாத்மா காந்திஜி) என்ன விரும்பினார்? பாரதம் கலங்கரை விளக்கு ஆக வேண்டும் என்ற இதைத் தான் விரும்பினார் இல்லையா. பாரதம் உலகத்தின் ஆத்மீக சக்திக்கான கேந்திரம் ஆக வேண்டும் என்றும் விரும்பினார். அதே காரியங்கள் இங்கு குப்த ரூபத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை ஒருவராவது ராம் சீதைக்கு சமமாக ஆகிவிட்டார் என்றால் ஒரு ராம் சீதையின் காரணமாக ராம் இராஜ்யம் ஏற்பட்டது மேலும் அனைவரும் ராம் சீதைக்கு சமமாக ஆகிவிட்டார்கள் என்றால் என்ன ஆகிவிடும்? இந்த பாடம் கடினமானதில்லை, மிகவும் சுலபமானது. இந்தப் பாடத்தைப் படித்து உறுதியாக்கினீர்கள் என்றால் நீங்களும் சத்திய ஆசிரியர் மூலமாக ஆன்மீக சான்றிதழும் பெறுவீர்கள். மேலும் வருமானத்திற்கான ஆதாரத்திற்கு உத்திரவாதமும் பெற்றுக் கொள்வீர்கள். மற்றபடி அவசியம் அதிசயமானது. தாத்தாவும், தாத்தாவின் தந்தையும் இங்கே தான் படிக்கிறார்கள் என்றால் பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் இங்கே தான் படிக்கிறார்கள். ஒரே வகுப்பில் இருவர்களுமே படிக்கிறார்கள். ஏனென்றால் இங்கு ஆத்மாக்களுக்கு கற்பிக்கப்படுகிறது. உடலைப் பார்ப்பதில்லை. ஆத்மாவிற்கு கற்பிக்கப்படுகிறது. 5 வயது குழந்தையாக இருந்தாலும் கூட அவரும் இந்தப் பாடத்தை படிக்க முடியும் இல்லையா? மேலும் குழந்தை அதிக காரியம் செய்ய முடியும். மேலும் யார் வயோதிகர் ஆகிவிட்டாரோ அவர் களுக்கும் இந்தப் பாடம் மிக அவசியம், இல்லை என்றால் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து விடுவார்கள். படிக்காத மாதர்களுக்கும் உயர்ந்த வாழ்க்கை வேண்டும் இல்லையா. எனவே சத்தியமான ஆசிரியர் அனைவருக்கும் படிப்பிக்கிறார். அப்படியானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பாடத்தை படிப்பீர்கள் தான் இல்லையா? உங்களுக்குத் தான் லாபமாக இருக்கும். யார் செய்வார்களோ அவர்கள் அடைவார்கள். எவ்வளவு செய்வார்களோ அந்த அளவு லாபம் இருக்கும். ஏனென்றால் இங்கு ஒன்றிற்கு பல கோடி மடங்கு பலனாக கிடைக்கிறது. அங்கு (வெளியுலகில்) அழியக்கூடியதில் அந்த மாதிரியில்லை. அழியாத படிப்பில் ஒன்றிற்கு பல மடங்கு ஆகிவிடுகிறது. ஏனென்றால் வள்ளல் இல்லையா. நல்லது.

 

இராஜஸ்தான் மண்டலத்தோடு பாப்தாதாவின் சந்திப்பு -

இராஜஸ்தான் மண்டலத்தின் விசேஷம் என்ன? இராஜஸ்தானில் தான் தலைமையகம் இருக்கிறது. எப்படி மண்டலத்திற்கு விசேஷம் இருக்கிறதோ அதே போல் இராஜஸ்தான் நிவாசிகளுக்கும் விசேஷம் இருக்கும் இல்லையா. இப்பொழுது ஏதாவது விசேஷ வைரம் உருவாக வேண்டும் அல்லது நீங்களே விசேஷ வைரமா? நீங்களோ அனைவரையும் விட விசேஷமானவரே தான். ஆனால் சேவையின் ஷேத்திரத்தில், உலகத்தின் பார்வையில் யார் விசேஷமாக இருக்கிறாரோ அவரையும் சேவைக்கு பொறுப்பாளர் ஆக்க வேண்டும். அந்த மாதிரி சேவை செய்திருக்கிறீர்களா? இராஜஸ்தானோ அனைவரையும் விட நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும். எண்ணிக்கையில், தரத்தில், சேவையின் விசேஷத்தில் அப்படி அனைத்திலும் நம்பர் ஒன். தலைமையகமோ நம்பர் ஒன்னே தான். ஆனால் அதனுடைய பிரபாவம் முழு இராஜஸ்தானிலும் இருக்க வேண்டும். இப்பொழுது நம்பர் ஒன் எண்ணிக்கையில் மகாராஷ்ட்டிரா, குஜராத்தை கூறுகிறார்கள். இப்பொழுது அனைவரையும் விட நம்பர் ஒன் இராஜஸ்தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த வருடம் அதற்கான ஏற்பாடு செய்யுங்கள். அடுத்த வருடம் மகாராஷ்ட்டிரா மற்றும் குஜராத்தையும் விட நம்பர் ஒன்னில் செல்ல வேண்டும். நிச்சயபுத்தி உடையவர்கள் வெற்றி அடைவார்கள். எத்தனை நல்ல நல்ல அனுபவி இரத்தினங்கள் இருக்கிறார்கள். சேவையை முன்னேற்றி வளரச் செய்தீர்கள் என்றால் அது அவசியம் வளர்ச்சி அடையும். நல்லது.

 

வரதானம் :

பகவான் மற்றும் பாக்கியத்தின் நினைவின் மூலம் மற்றவர்களுக்கும் பாக்கியத்தை உருவாக்கக்கூடிய குஷி நிறைந்த அதிர்ஷ்டம் மிக்கவர் ஆகுக.

 

அமிர்தவேளையிலிருந்து இரவு வரை தன்னுடைய பல விதமான பாக்கியத்தை நினைவில் கொண்டு வாருங்கள். மேலும் ஆஹா, என்னுடைய சிரேஷ்ட பாக்கியமே! என்ற இதே பாடலை பாடிக் கொண்டே இருங்கள். யார் பகவான் மற்றும் பாக்கியத்தின் நினைவில் இருக்கிறார்களோ அவர்கள் தான் மற்றவர்களை பாக்கியவான் ஆக்க முடியும். பிராமணன் என்றாலே எப்பொழுதும் பாக்கியவான், எப்பொழுதும் அதிர்ஷ்டம் நிறைந்தவர். பிராமண ஆத்மாவின் குஷியைக் குறைப்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது. நீங்கள் ஒவ்வொருவரும் குஷி நிறைந்தவர்கள், அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். பிராமண வாழ்க்கையில் குஷி இல்லாமல் ஆவது அசம்பவம். உடலே சென்று விட்டாலும் குஷி செல்ல முடியாது.

 

சுலோகன்:

மாயாவின் ஊஞ்சலை விட்டு விட்டு அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சலில் எப்பொழுதும் ஆடிக் கொண்டே இருங்கள்.

 

ஓம்சாந்தி