29.09.2019                           காலை முரளி               ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           16.02.1985           மதுபன்


 

ஒவ்வொரு மூச்சிலும் குஷியின் இசை ஒலிப்பது தான் இந்த சிரேஷ்ட ஜென்மத்தின் பரிசு

 

இன்று போலாநாத் (கள்ளம் கபடமற்ற) தந்தை, கள்ளம் கபடமற்ற பண்டாரி களஞ்சியத்தின் தலைவன் தன்னுடைய மிக அன்பிற்குரிய, நிரந்தர சகயோகி, சகஜயோகி அனைத்து பொக்கிஷங்களின் அதிபதி, குழந்தைளைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். இப்பொழுதும் அதிபதி, எதிர்காலத்திலும் அதிபதி. இப்பொழுது உலகத்தைப் படைக்கும் தந்தையின் குழந்தையாக இருப்பதினால் அதிபதி, எதிர்காலத்தில் உலகத்தின் அதிபதியாக ஆகிறீர்கள். பாப்தாதா தன்னுடைய அந்தமாதிரி அதிபதி குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். குழந்தையாக இருப்பதினால் அதிபதி ஆவது என்பது ஆன்மீக போதை மற்றும் ஆன்மீக குஷி. அந்தமாதிரி எப்பொழுதும் குஷி நிறைந்த, எப்பொழுதும் சம்பன்ன சிரேஷ்ட ஆத்மாக்கள் நீங்கள்! இன்று அனைத்து குழந்தைகளும் தந்தையின் அவதாரத்தின் ஜெயந்தியைக் கொண்டுவதற்காக ஊக்கம் உற்சாகத்தில் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள். தந்தையின் ஜெயந்தியாக இருப்பது தான், குழந்தைகளினுடைய ஜெயந்தியும் தான், எனவே இது அதிசயமான ஜெயந்தி என்று பாப்தாதா கூறுகிறார். பொதுவாக தந்தை மற்றும் குழந்தைகளுக்கு ஒரே நாளில் ஜெயந்தி இருக்காது. இருக்குமா? தந்தையின் ஜென்மத்தின் நாளும் அதுதான், குழந்தைகளின் பிறந்த நாளும் அது தான் என்று எப்பொழுதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இது தான் ஆன்மீக ஜெயந்தி. எந்த நேரம் தந்தை, குழந்தை பிரம்மாவில் அவதரித்தரோ, அதே நாள், அதே நேரம், பிரம்மாவிற்கும் ஆன்மீகப் பிறவியாக ஆனது. என்பது சேர்ந்தே ஜென்மம் ஆகிவிட்டது இல்லையா! மேலும் பிரம்மாவுடன் சேர்ந்து, நெருக்கமான பிராமணர்களுக்கும் ஆனது. எனவே தெய்வீக ஜென்மத்தின் நாள், நேரம், ரேகை, பிரம்மாவின் மற்றும் சிவபாபாவின் அவதாரத்தின் ஒன்றாகவே இருக்கும் காரணத்தினால், சிவ தந்தை மற்றும் பிரம்மா குழந்தை பரமாத்மா மற்றும் மகான் ஆத்மாவாக இருந்த போதிலும், பிரம்மா தந்தைக்குச் சமமானவர் ஆனார். சமநிலை காரணமாக இணைந்த ரூபம் ஆகிவிட்டார்கள். பாப்தாதா, பாப்தாதா என்று எப்பொழுதும் சேர்த்தே கூறுகிறீகள், பிரித்துக் கூறுவதில்லை. அதேபோல் நெருக்கமான பிராமணர்கள், பாப்தாதாவுடன் சேர்ந்தே பிரம்மா குமார், பிரம்மா குமாரியின் ரூபத்தில் அவதரித்தார்கள்.

 

அப்படி பிரம்மா மற்றும் குமார், குமாரி இதுவும் இணைந்த தந்தை மற்றும் குழந்தைகளின் நினைவிற்கான பெயர். அப்படி பாப்தாதா குழந்தைகளின் பிராமண வாழ்க்கையின் அவதார ஜெயந்தியைக் கொண்டாட வந்திருக்கிறார். நீங்கள் அனைவரும் அவதாரம் தான் இல்லையா? அவதாரம் என்றால், சிரேஷ்ட நினைவு - நான் தெய்வீக ஜென்மம் எடுத்த பிராமண ஆத்மா இது புதிய ஜென்மம் ஆனது இல்லையா! உயர்ந்த நினைவினால் இந்த ஸ்தூல சரீரத்தில் அவதரித்து, உலக நன்மைக் காரியத்திற்கு பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்கள். எனவே அவதாரம் தான் இல்லையா?. எப்படி தந்தை அவதரித்திருக்கிறார், அதேபோல் நீங்கள் அனைவரும் உலக மாற்றத்திற்காக அவதரித்திருக்கிறீர்கள். பரிவர்த்தனை ஆவது தான், அவதாரம் ஆவது. இது அவதாரங்களின் சபை. தந்தையின் கூடவே, பிராமண குழந்தைகளின் ஆன்மீகப் பிறந்த நாளும் தான். அப்படியானால், குழந்தைகள் தந்தையின் ஜெயந்தியை கொண்டாடுகிறீர்களா அல்லது தந்தையும் குழந்தைகளின் ஜெயந்தியைக் கொண்டாடுவாரா? அல்லது அனைவரும் சேர்ந்து ஒருவரின் ஜெயந்தியைக் கொண்டாடுவீர்களா? பக்தர்களோ, நினைவாக மட்டும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் நீங்கள் நேர் எதிரில், தந்தையுடன் சேர்ந்து கொண்டாடுகிறீர்கள். அந்தமாதிரியான சிரேஷ்ட பாக்கியம், ஒவ்வொரு கல்பத்திற்கான பாக்கியத்தின் ரேகை அழியாததாக போடப்பட்டு விட்டது. எனக்கு பகவானுடன் சேர்ந்து பாக்கியம் இருக்கிறது என்ற இந்த நினைவில் எப்பொழுதும் இருங்கள். நேரடியாக பாக்கியத்தை வழங்குபவருடன் சேர்ந்து, பாக்கியத்தை பிராப்தி செய்வதற்கான (அடையும்) பங்கு எனக்கு இருக்கிறது. அந்தமாதிரி இரட்டை கதாநாயகன், கதாநாயக பாத்திரம் ஏற்று செய்பவர்கள் மற்றும் வைரத்திற்குச் சமமான வாழ்க்கையுள்ளவர்களும் தான். அப்படி இரட்டை கதாநாயகன் ஆகிவிட்டீர்கள் இல்லையா? முழு உலகத்தின் பார்வை, கதாநாயகன் ஆத்மா உங்கள் பக்கம் இருக்கிறது. பாக்கியம் நிறைந்த ஆத்மாக்கள் உங்களுக்கு, இன்று கடைசி ஜென்மத்திலும், கல்பத்திலும் கடைசி காலத்திலும் கூட எவ்வளவு நினைவு, சின்னத்தின் ரூபத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தந்தையின் மற்றும் பிராமணர்களின் வார்த்தைகள் நினைவுச் சின்ன ரூபத்தில் சாஸ்திரம் ஆகிவிட்டது. இப்பொழுது கூட அதனுடைய இரண்டு வார்த்தைகள் கேட்பதற்காக தாகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இரண்டு வார்த்தைகள் கேட்பதினால், அமைதியின், சுகத்தின் அனுபவம் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

 

பாக்கியம் நிறைந்த ஆத்மாக்கள், உங்களுடைய சிரேஷ்ட காரியம் சரித்திரத்தின் ரூபத்தில், இதுவரையிலும் மகிமை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாக்கியம் நிறைந்த ஆத்மாக்களாகிய உங்களுடைய சிரேஷ்ட பாவனை, சிரேஷ்ட விருப்பங்களின் சிரேஷ்ட எண்ணம், ஆசிர்வாதத்தின் ரூபத்தில், மகிமை செய்யப் படுகிறது. எந்தவொரு தேவதையின் எதிரிலும் ஆசிர்வாதம் கேட்கச் செல்வார்கள். பாக்கியம் நிறைந்த ஆத்மாக்கள் உங்களுடைய சிரேஷ்ட நினைவு, ஜெபிக்கும் ரூபத்தில் இன்று வரையிலும் நினைவுச் சின்னமாக இருக்கிறது. ஜெபிப்பதை எவ்வளவு மகிமை செய்கிறார்கள். பெயரைக் கூறி ஜெபித்தலோ, அல்லது மாலையின் ரூபத்திலோ ஜெபிக்கிறார்கள். இது நினைவின் நினைவுச் சின்னமாக ஜெபிக்கும் ரூபத்தில் இருக்கிறது. அந்தமாதிரி, பாக்கியம் நிறைந்தவராக எப்படி ஆனீர்கள்! ஏனென்றால், பாக்கியத்தை வழங்குபவருடன் சேர்ந்து, பாக்கியம் நிறைந்தவர்களாக ஆகியிருக்கிறீர்கள். எனவே இது அந்தளவு பாக்கியம் நிறைந்த தெய்வீக ஜென்மம் என்று நினைக்கிறீர்களா? அந்த மாதிரி தெய்வீக ஜென்மத்திற்கு பாப்தாதா பகவான், பாக்கியம் நிறைந்த குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் கூறுகிறார். எப்பொழுதும் வாழ்த்துக்களே, வாழ்த்துக்கள்! இது ஒரு நாளுக்கான வாழ்த்துக்கள் மட்டுமில்லை, இந்த பாக்கியம் நிறைந்த பிறவி, ஒவ்வொரு வினாடி, ஒவ்வொரு நேரமும் வாழ்த்துக்களால் நிரம்பியிருக்கிறது. தன்னுடைய இந்த சிரேஷ்ட ஜென்மத்தைத் தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? ஒவ்வொரு மூச்சிலும் குஷியின் இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. மூச்சு ஓடிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் குஷியின் இசை ஓடிக் கொண்டிருக்கிறது. இசையைக் கேட்க முடிகிறது தான் இல்லையா? இயற்கையான இசை எவ்வளவு சிரேஷ்டமானது. இந்த தெய்வீக ஜென்மத்தின், இந்த குஷியின் இசை அதாவது மூச்சு தெய்வீக ஜென்மத்தின் உயர்ந்த பரிசு. பிராமண ஜென்மம் ஏற்பட்ட உடனேயே, இந்த குஷியின் இசை பரிசாக கிடைத்துவிட்டது இல்லையா? இசையை இசைக்கும் பொழுதும், விரல்களை மேலே கீழே கொண்டு செல்வீர்கள் இல்லையா? அதேபோல் மூச்சும் மேலே கிழே செல்கிறது. அப்படி மூச்சு ஒடுவது என்றால், இசை ஒலிப்பது. மூச்சு நிற்க முடியாது. எனவே இந்த விஷயம் நிற்க முடியாது. உங்கள்

அனைவரின் குஷியின் இசை, சரியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது தான் இல்லையா? இரட்டை வெளிநாட்டினர் என்ன நினைக்கிறீர்கள்? கள்ளம் கபடமற்ற களஞ்சியத்தின் அதிபதியிடமிருந்து, அனைத்து பொக்கிஷங்களையும் பெற்று, தன்னுடைய களஞ்சியத்தை நிரப்பி விட்டீர்கள் இல்லையா? அதனால் 21 ஜென்மங்கள் களஞ்சியம் நிரம்பியதாக இருக்கும். நிரப்புவதற்காக உழைக்க வேண்டியதாக இருக்காது. சுலபமாக பிராப்தி ஆகிக்கொண்டேயிருக்கும். இப்பொழுது செய்யும் முயற்சி 21 ஜென்மங்களுக்குப் பலனாக இருக்கும். 21 ஜென்மங்கள் எப்பொழுதும் நிரம்பிய சொரூபத்தில் இருப்பீர்கள். அப்படியானால், முயற்சி என்று என்ன செய்தீர்கள்? கடினமாக இருந்ததா? முயற்சி என்றால், தன்னை இந்த இரதத்தில் அமர்ந்திருக்கும் ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். இதைத் தான் முயற்சி செய்வது என்று கூறுவது. இந்த முயற்சி செய்தீர்கள் இல்லையா? இந்த முயற்சி செய்ததின் பலன் சொரூபமாக 21 பிறவிகள் எப்பொழுதும் குஷியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். இப்பொழுது கூட சங்கமயுகம் மகிழ்ச்சிகள் நிறைந்த யுகம். குழப்பம் அடைவதற்கானது அல்ல, மகிழ்ச்சிகள் நிறைந்த யுகம். ஒருவேளை ஏதாவது ஒரு விஷயத்தில் குழப்பம் அடைகிறீர்கள் என்றால், சங்கமயுகத்திலிருந்து உங்களுடைய காலை கொஞ்சம் கலியுகம் பக்கம் எடுத்து செல்கிறீர்கள், எனவே குழப்பம் அடைகிறீர்கள். எண்ணம் மற்றும் புத்தி என்ற கால்கள் சங்கமயுகத்தில் இருக்கிறது என்றால், எப்பொழுதும் மகிழ்ச்சியில் இருப்பீர்கள். சங்கமயுகம் என்றால், இரண்டின் சந்திப்பைக் கொண்டாடும் யுகம். அப்படி தந்தை மற்றும் குழந்தைகளின் சந்திப்பை கொண்டாடுவதற்கான சங்கமயுகம். எங்கு சந்திப்பு இருக்கிறதோ, அங்கு மகிழ்ச்சியிருக்கும். இது மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கான பிறவி. தான் இல்லையா? குழப்பம் அடைவதற்கான பெயர், அடையாளம் இல்லை. மகிழ்ச்சிகள் நிறைந்த நேரத்தில், அளவற்ற ஆன்மீக மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள். இரட்டை வெளிநாட்டினரோ, இரட்டை மகிழ்ச்சியில் இருப்பவர் தான் இல்லையா. அந்தமாதிரி மகிழ்ச்சிகள் நிறைந்த ஜென்மத்திற்காக வாழ்த்துக்கள். குழப்பம் அடைவதற்காக உலகில் அநேக ஆத்மாக்கள் இருக்கிறார்கள், அது நீங்கள் இல்லை. முன்பாகவே அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். மேலும் மகிழ்ச்சியை கொண்டாடுபவர்களாகிய நீங்கள் எதில் குறைந்தவர்கள். உங்களுடைய இந்த சிரேஷ்ட ஜெயந்தியை (பிறந்த நாளை) புரிந்துக் கொண்டீர்களா? பொதுவாகவே இன்றைய நாட்களில் ஜோதிடம் தெரிந்தவர்கள், நாள், கிழமை, நேரத்தின் ஆதாரத்தில் பாக்கியத்தை கூறுவார்கள். உங்களின் அனைவரின் நேரம் எது, கிழமை எது? தந்தையின் கூடவே பிராமணர்களுக்கும் ஜென்மம் ஏற்பட்டது இல்லையா? எனவே பகவானின் நாள், கிழமை எதுவோ, அதுவே உங்களுடையதும் தான்.

 

பகவானின் அவதாரம் அதாவது தெய்வீக ஜென்மத்தின் நேரமாக எது இருக்கிறதோ, அதுவே உங்களுடைய நேரமாக ஆகிவிட்டது. எவ்வளவு உயர்ந்த நேரம். எவ்வளவு உயர்ந்த ரேகை, அதைத் தான் திசை என்று கூறுவார்கள். எனவே தந்தையுடன் சேர்ந்து, என்னுடைய ஜென்மம் (பிறவி) ஏற்பட்டது என்று எப்பொழுதும் ஊக்கம் உற்சாகத்திலேயே இருங்கள். பிரம்மா, பிராமணர்களின்றி ஒன்றும் செய்ய முடியாது. தந்தை சிவபாபாவும், பிரம்மாவின்றி ஒன்றும் செய்ய முடியாது. அப்படி சேர்ந்தே ஏற்பட்டது தான் இல்லையா? எனவே ஜென்மத்தின் கிழமை மற்றும் நேரத்தின் மகத்துவத்தை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். எந்த கிழமையில் பகவான் கீழே இறங்கினாரோ, அந்த கிழமையில் தான் ஆத்மாக்கள் நாமும் அவதரித்திருக்கிறோம். பெயர், இராசியைக் கூட பாருங்கள் - பிரம்மா - பிராமணன். பிரம்மா குமார், பிரம்மா குமாரி. பெயர் இராசியும் அதே சிரேஷ்டமானது. அந்தமாதிரி சிரேஷ்ட ஜென்மம் மற்றும் வாழ்க்கையுள்ள குழந்தைகளைப் பார்த்து, தந்தை எப்பொழுதும் மகிழ்ச்சியடைகிறார். குழந்தைகள் ஆஹா பாபா, ஆஹா பாபா! என்று கூறுகிறார்கள், மேலும் தந்தை ஆஹா குழந்தைகளே! என்று கூறுகிறார். அந்த மாதிரி குழந்தைகளும் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்.

 

இன்றைய இந்த தெய்வீக தினத்தின் விசேஷ பரிசாக பாப்தாதா அனைத்து அன்பிற்குரிய குழந்தைகளுக்கும், இரண்டு பொன்னான வார்த்தைகள் கூறுகிறார். ஒன்று நான் தந்தையின் கண்ணின் மணி,. என்று எப்பொழுதும் தன்னை உணர்ந்து கொள்ளுங்கள். கண்ணின் மணி என்றால், எப்பொழுதும் கண்களில் நிரம்பியிருப்பவர். கண்களில் நிரம்பி இருப்பதின் சொரூபம் கண்மணி ஆகும். கண்களில் கண்மணி தான் அதிசயம். அப்படி கண்ணின் மணி என்றால், பிந்து தந்தையின் நிரம்பியிருக்கிறேன். அன்பில் மூழ்கியிருக்கிறேன். அந்தமாதிரி ஒன்று இந்த கண்ணின் மணி என்ற பொன்னான வார்த்தையை நினைவில் வையுங்கள். இன்னொன்று எப்பொழுதும் தந்தையின் துணை மற்றும் கரம் என் மேல் இருக்கிறது துணையும் இருக்கிறது, மேலும் கரமும் இருக்கிறது. எப்பொழுதும் ஆசீர்வாதத்தின் கரம், மேலும் சகயோகத்தின் துணை. அந்தமாதிரி, எப்பொழுதும் தந்தையின் துணை மற்றும் கை கண்டிப்பாக இருக்கிறது. துணை கொடுப்பது கை வைப்பது என்று அல்ல, இருக்கவே இருக்கிறது. எப்பொழுதும் கை, மற்றும் எப்பொழுதும் துணை என்பது இரண்டாவது பொன்னான வார்த்தை. இது இன்றைய தெய்வீக ஜென்மத்திற்கான பரிசு. நல்லது.

 

அந்தமாதிரி நாலாபுறங்களிலும் உள்ள எப்பொழுதும் சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த குழந்தைகளுக்கு,

எப்பொழுதும் ஒவ்வொரு சுவாசத்தையும் குஷியின் இசையாக அனுபவம் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு, இரட்டை கதாநாயக குழந்தைகளுக்கு, எப்பொழுதும் பகவான் மற்றும் பாக்கியம் என்பதின் நினைவு சொரூப குழந்தைகளுக்கு, எப்பொழுதும் அனைத்து பொக்கி􀀀ங்களினால் நிரம்பிய களஞ்சியம் உள்ள குழந்தைகளுக்கு, போலாநாத், அமர்நாத், வரமளிக்கும் வள்ளல், தெய்வீக ஜென்மத்திற்கான தந்தையின் மிகுந்த வாழ்த்துக்களுடன் சேர்ந்து அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

தாதிகளுடன் சந்திப்பு::

எல்லையற்ற தந்தையின் அன்பு புஜங்கள் மிகப் பெரியது, அந்த அன்பின் புஜங்களில் மற்றும் அரவணைப்பில் நீங்கள் அனைவரும் நிரம்பியிருக்கிறீர்கள். எப்பொழுதுமே அனைத்து குழந்தைகளும் தந்தையின் புஜங்களின் உள்ளே, புஜங்களின் மாலையின் உள்ளே இருந்தால் தான், மாயாவை வென்றவராக இருப்பீர்கள். பிரம்மாவுடன் சேர்ந்து ஜென்மம் எடுக்கக் கூடிய, சிரேஷ்ட ஆத்மாக்கள் நீங்கள் இல்லையா? தேதியில் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை, எனவே பிரம்மாவிற்கு அதிக முகங்கள் காண்பித்திருக்கிறார்கள். பிரம்மாவிற்குச் தான் 5 முகங்கள் மற்றும் 3 முகங்கள் காண்பிக்கிறார்கள். ஏனென்றால், பிரம்மாவுடன் சேர்ந்து பிராமணர்கள் இருக்கிறார்கள். அப்படியானால் நீங்கள் 3 முகத்தைச் சேர்ந்தவர்களா அல்லது 5 முகத்தைச் சேர்ந்தவர்களா? முகமும் சகயோகியாக இருக்கும் இல்லையா? தந்தைக்கும் போதை இருக்கிறது, எந்த போதை இருக்கிறது? முழு உலகத்தில் எந்தவொரு தந்தை இந்த மாதிரி குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடித்தால், கிடைப்பார்களா. (இல்லை) தந்தை கூறுகிறார் - இந்த மாதிரி குழந்தைகள் கிடைக்கமாட்டார்கள், குழந்தைகள் கூறுகிறார்கள் இந்த தந்தை மாதிரி கிடைக்கமாட்டார். நல்லது - குழந்தைகள் தான் வீட்டின் அழகாகவும், கலகலப்பாகவும் இருப்பார்கள். தனியாக தந்தை மூலம் வீட்டின் அழகு (கலகலப்பு) இருக்காது. எனவே குழந்தைகள் இந்த உலகம் என்ற வீட்டின் அழகு. இத்தனை முழு பிராமணர்களின் கலகலப்பு ஏற்படுவதற்கு யார் பொறுப்பாளர் ஆனார்? குழந்தைகள் தான் ஆனார்கள் இல்லையா. தந்தையும் குழந்தைகளும் கலகலப்பை பார்த்து, குஷியடைகிறார். தந்தைக்கு உங்களை விட அதிகமாக மாலைகளை ஜெபிக்க வேண்டியதாக இருக்கிறது. உங்களுக்கோ ஒரே ஒரு தந்தையே நினைவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. மேலும் தந்தைக்கோ எத்தனை மாலைகளை நினைக்க வேண்டியதாக இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் எத்தனை மாலைகள் போட்டீர்களோ, அத்தனை மாலைகளை தந்தைக்கு இப்பொழுது நினைக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு குழந்தையின் மாலையை கூட தந்தை ஒரு நாளாவது நினைவு செய்யவில்லை என்று இருக்க முடியாது. அப்படி தந்தையும் நௌதா (இடைவிடாத) பக்தனாக அகிவிட்டார் இல்லையா? ஒவ்வொரு குழந்தையும் விசேஷங்களின், குணங்களின் மாலையை தந்தை நினைவு செய்கிறார். மேலும் எத்தனை முறை நினைவு செய்கிறாரோ, அந்தளவு அந்த குணங்கள் விசேஷங்கள் இன்னும் புத்துணர்வு ஆகிக் கொண்டேயிருக்கிறது. தந்தை மாலையை நினைவு செய்கிறார், ஆனால் மாலையின் பலனை குழந்தைகளுக்கு கொடுக்கிறார், அவர் எடுத்துக் கொள்வதில்லை. நல்லது. - பாப்தாதாவோ எப்பொழுதும் குழந்தைகளின் கூடவே தான் இருக்கிறார், ஒரு வினாடி கூட குழந்தைகளை விட்டு, பிரிந்திருக்க முடியாது. பிரிந்திருக்க விரும்பினாலும், இருக்க முடியாது. ஏன்? எந்தளவு குழந்தைகள் நினைவு செய்கிறார்களோ, அதற்கான பிரதிபலனோ கொடுப்போம் இல்லையா? நினைவு செய்வதற்கான பலன் கொடுக்க வேண்டுமல்லவா. அந்தமாதிரி ஒரு வினாடி கூட குழந்தைகளின்றி இருக்க முடியாது. எப்பொழுதும் கூடவே இருக்கிறார் என்ற அதிசயத்தையும் எங்கும் பார்த்திருக்க முடியாது. தந்தை, குழந்தைகளை விட்டுப் பிரிந்தே இருக்க முடியாது என்ற தந்தை மற்றும் குழந்தைகளின் ஜோடியை ஒருபொழுதும் பார்த்திருக்க முடியாது. மிக நல்ல, பூந்தோட்டம் உருவாகியிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கூட இந்த பூந்தோட்டம் பிடித்தமானதாக இருக்கிறது இல்லையா. ஒவ்வொன்றின் நறுமணம் வித்தியாசமானது மற்றும் மிகவும் விரும்பமானது. எனவே அல்லாவின் பூந்தோட்டம் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் ஆதிரத்தினங்கள், ஒவ்வொரு இரத்தினத்தின் மதிப்பு, எவ்வளவு இருக்கிறது, மேலும் ஒவ்வொரு இரத்தினத்தின் அவசியமும், ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு காரியத்திலும் தேவையாக இருக்கிறது. அந்தமாதிரி நீங்கள் அனைவருமே சிரேஷ்ட இரத்தினங்கள். உங்களுக்கு இப்பொழுது கூட இரத்தினங்களின் ரூபத்தில் பூஜை நடைபெறுகிறது. இப்பொழுது அநேக ஆத்மாக்களின் விக்னவினாசக் (தடைகளை அழிப்பவர்) ஆகும் சேவை செய்கிறீர்கள். அதனால் தான் நினைவு ரூபத்தில் ஒவ்வொரு இரத்தினத் திற்கும் மதிப்பு இருக்கிறது. ஒவ்வொரு இரத்தினத்தின் விசேஷம் இருக்கிறது. சில தடைகளை அழிக்கும் இரத்தினங்களாக இருக்கும், சில இரத்தினங்கள் வேறுமாதிரியாக இருக்கும். இப்பொழுது இறுதிவரையிலும் ஸ்தூலமாக நினைவு சின்ன ரூபத்தில் சேவை செய்து கொண்டிருக்கிறது. நீங்கள் அந்தமாதிரியான சேவாதாரியாகி இருக்கிறீகள். புரிந்ததா.

 

மகாநாட்டிற்கு வந்திருக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் அவ்யக்த் பாப்தாதாவின் சந்திப்பு :-

அனைவரும் எங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள்? தந்தையின் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள், அந்தமாதிரி அனுபவம் செய்கிறீர்களா? தந்தையின் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்களா அல்லது குழந்தைகள் வருவார்களா? நீங்கள் குழந்தைகளா, உரிமையுள்ளவர்களா, அல்லது விருந்தினர்களா? தந்தையின் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள், தந்தையின் வீட்டிற்கு எப்பொழுதும் உரிமையுள்ள குழந்தைகள் தான் வருவார்கள். இப்பொழுதிலிருந்து தன்னை விருந்தினராக நினைக்காமல் தந்தையின் குழந்தை மகான் ஆத்மா என்று உணர்ந்து கொண்டு முன்னேறிச் செல்லுங்கள். நீங்கள் பாக்கியசாலியாக இருக்கிறீர்கள், அதனால் தான் இந்த ஸ்தானத்திற்கு வந்து சேர்ந்தீர்கள். இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? இங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். இதுவோ பாக்கியமாகும் ஆனது, ஆனால் மேலே என்ன செய்ய வேண்டும். இப்பொழுது எப்பொழுதுமே கூடவே இருங்கள், நினைவில் இருப்பது தான் கூடவே இருப்பது. தனியாக என்று சொல்லாதீர்கள், இணைந்தவர்கள் ஆகி, எங்கே சென்றாலும், என்ன காரியம் செய்தாலும், அதை இணைந்த ரூபத்தில் செய்வதினால், எப்பொழுதும் சகஜமானதாகவும் வெற்றியையும் அனுபவம் செய்வீர்கள். எப்பொழுதும் நான் தந்தையின் கூடவே இருப்பேன் என்ற எண்ணத்தை அவசியம் வைத்து செல்லுங்கள். பார்க்கலாம், முயற்சி செய்யலாம் என்று அப்படி இருக்க வேண்டாம். கண்டிப்பாக செய்ய வேண்டும், ஏனென்றால் திடத் தன்மை தான் வெற்றியின் சாவி. எனவே இந்த சாவியை எப்பொழுதும் உங்கள் கூடவே வைத்துக் கொள்ளுங்கள். இது அந்தமாதிரியான சாவி, என்ன பொக்கிஷம் வேண்டுமோ, அதை நினைபீர்கள், உடனே அது வந்து சேர்ந்துவிடும். இது அப்படிப்பட்ட சாவி. இந்த சாவியை எப்பொழுதும் உடன் வைத்துக் கொள்வது என்றால், எப்பொழுதும் வெற்றியை அடைவது! இப்பொழுது நீங்கள் விருந்தினர் இல்லை, உரிமையுள்ள ஆத்மாக்கள். பாப்தாதாவும் அந்தமாதிரியான அதிகாரி குழந்தைகளைப் பார்த்து, மகிழ்ச்சியடைகிறார். என்ன அனுபவம் செய்தீர்களோ, அந்த அனுபவத்தின் பொக்கிஷத்தை எப்பொழுதும் மற்றவர்களுக்கு வழங்கிக் கொண்டேயிருங்கள். எந்தளவு கொடுப்பீர்களோ, அந்தளவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். பெரும் வள்ளலாக ஆகுங்கள், தன்னிடம் மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள். நல்லது.

 

விடைபெறும் நேரம் காலை 3.30 மணிக்கு: -

அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துகளுடன் சேர்த்து, காலை வணக்கம். எப்படி இன்றைய இரவு மங்களமான சந்திப்பின் மகிழ்ச்சியில் கழிந்தது. அதேபோல் எப்பொழுதும் இரவும் பகலும் தந்தையின் சந்திப்பின் மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டேயிருங்கள். முழு சங்கமயுகமே எப்பொழுதும் தந்தையிடமிருந்து, வாழ்த்துக்களைக் பெற்றுக் கொண்டே வளர்ச்சியடைந்து கொண்டே, முன்னேறிச் சென்று கொண்டே பிறரையும் முன்னேற்றிக் கொண்டே இருங்கள். எப்பொழுதும் பெரும் வள்ளல், வரமளிகும் வள்ளலாகி, அநேக ஆத்மாக்களுக்கு தானமும் கொடுங்கள், வரதானமும் கொடுங்கள். நல்லது அந்தமாதிரியான எப்பொழுதும் உலகிற்கு நன்மை செய்யும், எப்பொழுதும் இரக்க மனமுடைய எப்பொழுதும் அனைவருக்காகவும் சுபபாவனை வைக்கக் கூடிய, குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.

 

வரதானம்:

உணரும் சக்தி மூலமாக சுய பரிவர்த்தனை செய்யக் கூடிய தீவிர முயற்சியாளர் ஆகுக.

 

எந்தவொரு பரிவர்த்தனைக்கான சுலபமான ஆதாரம் உணரும் சக்தி. எதுவரையிலும் உணரும் சக்தி வருவதில்லையோ, அதுவரை அனுபவம் ஆகாது. மேலும் எதுவரையிலும் அனுபவம் இல்லையோ, அதுவரையிலும் பிராமண வாழ்க்கையில் விசேஷங்களின் அஸ்திவாரம் உறுதியாக இருக்காது. ஊக்கம் உற்சாகம் நிறைந்த நடத்தை இருக்காது. எப்பொழுது உணரும் சக்தி ஒவ்வொரு வி􀀀யத்தின் அனுபவியாக ஆக்குகிறது, அப்பொழுது தான் தீவிரமாக முயற்சி செய்பவர் ஆகிவிடுகிறார். உணரும் சக்தி சதா காலத்திற்காக சகஜ பரிவர்த்தனை செய்து விடுகிறது.

 

சுலோகன்:

அன்பின் சொரூபத்தை நடைமுறையில் வெளிப்படுத்தி பிரம்மா பாபாவிற்கு சமமானவர்கள் ஆகுக.

 

ஓம்சாந்தி