02.02.19 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! விதேகியாகி ( அசரீரியாகி ) பாபாவை நினைவு
செய்யுங்கள் , சுயதர்மத்தில் நிலைத்து விடுவீர்களானால் சக்தி
கிடைக்கும் . குஷி மற்றும் ஆரோக்கியம் இருக்கும் . பேட்டரி
நிரம்பிக் கொண்டே போகும் .
கேள்வி:
டிராமாவின் எந்த ஒரு விதியை அறிந்திருப்பதன் காரணத்தால்
குழந்தைகளாகிய நீங்கள் சதா அசையாத நிலையில் இருக்கிறீர்கள் ?
பதில்:
நீங்கள் அறிவீர்கள், இந்த வெடிகுண்டுகளையெல்லாம்
உருவாக்கியுள்ளார்கள் என்றால் அவற்றை அவசியம் போரில்
ஈடுபடுத்துவார்கள். விநாசம் நடைபெறும். அப்போது நமது புது உலகம்
உருவாகும். இது டிராமாவின் மாற்றமில்லாத விதிக்கப்பட்ட
ஒன்றாகும். அனைவரும் இறந்தே ஆக வேண்டும். உங்களுக்குக் குஷி
உள்ளது - நாம் இந்தப் பழைய சரீரத்தை விட்டு புதிய உலக
இராஜ்யத்தில் பிறவி எடுப்போம் என்று. நீங்கள் டிராமாவை
சாட்சியாக இருந்து பார்க்கிறீர்கள். இதில் அசைவதற்கான விஷயம்
இல்லை. அழுவதற்கான அவசியமும் இல்லை.
ஓம் சாந்தி .
பாபா அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், இந்த ஆதி
சநாதன தேவி-தேவதா தர்மம் இருந்ததே, அதை இந்து தர்மத்தில் ஏன்
கொண்டு வந்தனர்? காரணத்தை வெளிப்படுத்த வேண்டும். முதலிலோ ஆதி
சநாதன தேவி-தேவதா தர்மம் மட்டுமே இருந்தது. பிறகு எப்போது
விகாரியானார்களோ, அப்போது தங்களை தேவதை எனச் சொல்லிக் கொள்ள
முடியவில்லை. ஆகவே தங்களை ஆதி சநாதன தேவி-தேவதாவுக்குப் பதில்
ஆதி சநாதன இந்து எனச்சொல்லிக் கொண்டனர். ஆதி சநாதன் என்ற
வார்த்தையையும் வைத்துள்ளனர். தேவதாவை மட்டும் மாற்றி இந்து
என்று வைத்துக் கொண்டனர். அந்தச் சமயம் இஸ்லாமியர் வந்தனர்
என்றால் அதுபோல் வெளியிலுள்ளவர்கள் வந்து இந்து தர்மம் என்ற
பெயரை வைத்து விட்டனர். முதலில் இந்துஸ்தான் என்ற பெயர் கூட
இருந்ததில்லை. ஆக, ஆதி சநாதன இந்து தர்மத்தைச் சேர்ந்தவர்கள்
தான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சாதாரணமாக
தர்மாத்மாக்களாக உள்ளனர். அனைவரும் சநாதனி அல்ல. யார் பின்னால்
வந்தார்களோ, அவர்களை ஆதி சநாதனி எனச் சொல்ல மாட்டார்கள்.
இந்துக்களிலும் கூட பின்னால் வருபவர்கள் இருப்பார்கள். ஆதி
சநாதன என்று இந்துக்களுக்குச் சொல்ல வேண்டும், உங்களுடைய ஆதி
சநாதன தர்மம் தேவதா தர்மமமாக இருந்தது. நீங்கள் தான் சதோபிரதான
ஆதி சநாதனாக இருந்தீர்கள். பிறகு புனர்ஜென்மம் எடுத்து-எடுத்தே
தமோபிரதானமாக ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது மீண்டும் நினைவு
யாத்திரை மூலம் சதோபிரதானமாக ஆகுங்கள். அவர்களுக்கு இந்த
மருந்து (ஞானம்) பிடித்திருக்கும். பாபா சர்ஜன் இல்லையா?
யாருக்கு இந்த மருந்து பிடித்திருக்கிறதோ, அவர்களுக்குக்
கொடுக்க வேண்டும். யார் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தினராக
இருந்தனரோ, அவர்களுக்கு நினைவு படுத்த வேண்டும். எப்படி
குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவு வந்துள்ளது. பாபா புரிய
வைத்துள்ளார் - எப்படி நீங்கள் சதோபிரதானமாக இருந்து
தமோபிரதானமாக ஆகிவிட்டிருக்கிறீர்கள் என்று. இப்போது மீண்டும்
தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானமாக ஆக வேண்டும்.
குழந்தைகளாகிய நீங்கள் சதோபிரதானமாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்-
நினைவு யாத்திரை மூலம் ! யார் ஆதி சநாதன் இந்துவாக
இருக்கிறார்களோ, அவர்கள் தான் அசல் தேவி- தேவதைகளாக
இருப்பார்கள். மேலும் அவர்கள் தான் தேவதைகளைப் பூஜிப்பவர்
களாகவும் இருப்பார்கள். அவர்களிலும் யார் சிவனுடைய அல்லது
லட்சுமி-நாராயணருடைய, ராதை-கிருஷ்ணர், சீதா-ராம் முதலிய
தேவதாக்களின் பக்தர்களோ, அவர்கள் தேவதா குலத்தைச் சேர்ந்தவர்கள்.
இப்போது நினைவு வந்து விட்டது - யார் சூரியவம்சிகளாக இருந்தனரோ,
அவர்கள் தான் சந்திரவம்சி ஆகின்றனர். ஆக, இவ்வாறு பக்தர்களைத்
தேட வேண்டும். யார் புரிந்து கொள்வதற்காக வருகின்றனரோ,
அவர்களிடம் படிவம் நிரப்பி வாங்க வேண்டும். முக்கிய
சென்டர்களில் படிவங்கள் நிரப்புவதற்காக அவசியம் இருக்க வேண்டும்.
யாரெல்லாம் வருகிறார்களோ, அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே பாடம்
சொல்வார்கள். முதலான முக்கிய விஷயம், பாபாவை அறியாதவர்களுக்குச்
சொல்லிப் புரிய வைக்க வேண்டியுள்ளது. நீங்கள் உங்கள் பெரிய
தந்தையை அறிந்து கொள்ளவில்லை. நீங்கள் உண்மையில் பரலௌகிக்
தந்தையினுடை யவர்கள். இங்கே வந்து லௌகிக் தந்தையுடையவர்களாக
ஆகியிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் பரலௌகிக் தந்தையை மறந்து
விட்டீர்கள். எல்லையற்ற தந்தை தான் சொர்க்கத்தைப் படைப்பவர்.
அங்கே இந்த அநேக தர்மங்கள் இருப்பதில்லை. ஆக, நிரப்புகின்ற
படிவங்களில் தான் எல்லா ஆதாரமும் இருக்க வேண்டும். சில
குழந்தைகள் மிக நன்றாகச் சொல்லிப் புரிய வைக்கலாம், ஆனால் யோகம்
(பாபா நினைவு) இல்லை. அசரீரி ஆகி, பாபாவை நினைவு செய்ய வேண்டும்.
ஆனால் அது தான் இல்லை. நினைவில் நிலைத்திருக்க முடிவதில்லை.
புரிந்து கொண்டிருக்கலாம், நாம் நன்றாகச் சொல்லிப் புரிய
வைக்கிறோம், மியூசியம் முதலிய வற்றைத் திறந்து வைக்கிறோம்
என்பதாக. ஆனால் பாபாவின் நினைவு மிகக் குறைவாக உள்ளது. இதில்
தான் முயற்சி இருக்கிறது. பாபா எச்சரிக்கை செய்கிறார். நாம்
நன்றாக சமாதானப் படுத்திவிட முடியும் என நினைக் காதீர்கள்.
ஆனால் இதனால் என்ன பயன்? வாருங்கள், சுயதரிசனச் சக்கரதாரி ஆகி
விட்டீர்கள். ஆனால் இதிலோ அசரீரி ஆக வேண்டும். கர்மம் செய்யும்
போதும் தன்னை ஆத்மா என உணர்ந்திருக்க வேண்டும். ஆத்மா இந்த
சரீரத்தின் மூலம் காரியமாற்றுகின்றது - இந்த நினைவு செய்வதும்
கூட வர மாட்டேனென்கிறது. சிந்தனையில் வருவதில்லை. அவர்கள்
புத்தியற்றவர் எனச் சொல்லப் படுவார்கள். பாபாவை நினைவு செய்ய
முடிவதில்லை. சேவை செய்வதற்கான சக்தி இல்லை. நினைவாலன்றி
ஆத்மாவுக்குள் சக்தி எங்கிருந்து வரும்? பேட்டரி எப்படி
நிரம்பும்? போகப்போக நின்று போகும், சக்தி இருக்காது.
தர்மமே சக்தி எனச் சொல்லப்படுகின்றது. ஆத்மா சுயதர்மத்தில்
நிலைக்க வேண்டும், அப்போது சக்தி கிடைக்கும். அநேகருக்கு பாபாவை
நினைவு செய்ய வருவதில்லை. முகத்திலிருந்து தெரிய வரும். மற்ற
அனைத்து நினைவுகளும் வரும், பாபாவின் நினைவு நிற்காது.
யோகத்தின் மூலம் தான் பலம் கிடைக்கும். நினைவினால் தான் பெரும்
மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும். பிறகு அடுத்த
பிறவிலும் இதுபோன்ற தேஜஸ் (பொலிவுள்ள) நிறைந்த சரீரம்
கிடைக்கும். ஆத்மா தூய்மையானது என்றால் சரீரமும் தூய்மை
யானதாகக் கிடைக்கும். இது 24 கேரட் தங்கம் என்றால் நகையும் 24
கேரட். இச்சமயம் அனைத்தும் 9 கேரட் ஆகி விட்டுள்ளன. சதோபிதானம்
என்றால் 24 கேரட் எனச்சொல்வார்கள். சதோவை 22 கேரட் என்பார்கள்.
இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். பாபா புரிய
வைக்கிறார், முதலிலோ படிவம் நிரப்பச் செய்ய வேண்டும். அப்போது
தெரிய வரும், எதுவரை பதில் தருகிறார்கள் என்று! எவ்வளவு தாரணை
செய்திருக்கிறார்கள்? பிறகு இதுவும் வருகிறது, நினைவு
யாத்திரையில் இருக்கின்றனரா? தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக
நினைவு யாத்திரையின் மூலம் ஆக வேண்டும். அவை பக்தியினுடைய சரீர
சம்மந்த யாத்திரைகள். இது ஆன்மீக யாத்திரை. ஆத்மா யாத்திரை
செய்கின்றது. அதில் (வெளியுலகில்) ஆத்மா மற்றும் சரீரம்
இரண்டுமே யாத்திரை செய்கின்றன. பதீத பாவனன் பாபாவை நினைவு
செய்வதன் மூலம் தான் ஆத்மாவில் தேஜஸ் வருகின்றது. யாரேனும்
மாணவனுக்கு சோபை (அழகு, திறமை) முதலியன காட்ட வேண்டுமானால்
பாபாவின் பிரவேசமும் ஆகி விடுகின்றது. தாய்-தந்தை இருவருமே உதவி
செய்கின்றனர் - சிலருக்கு ஞானத்தினாலும் சிலருக்கு
யோகத்தினாலும். பாபாவோ சதா நிராகாரியாகவே உள்ளார். சரீர
உணர்வென்பதே அவருக்குக் கிடையாது. ஆக, பாபா இரண்டு சக்திகளின்
உதவியையும் தர முடியும். யோகம் இல்லையென்றால் சக்தி எங்கிருந்து
கிடைக்கும்? இவர் யோகியா அல்லது ஞானியா என்பது புரிய வைக்கப்
படுகின்றது. யோகத்திற்காக நாள்தோறும் புதுப்புது விஷயங்களைப்
புரிய வைக்கின்றார். முன்பு இவற்றைப் புரிய வைத்ததில்லை. தன்னை
ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்யுங்கள். இப்போது பாபா
மிகவும் வலியுறுத்திச் சொல்கிறார், இதன் மூலம் சகோதர-சகோதரியின்
சம்மந்தமும் கூட முடிந்துபோக வேண்டும். சகோதர-சகோதரன் என்ற
திருஷ்டி மட்டும் இருந்துவிட வேண்டும். நாம் ஆத்மா
சகோதர-சகோதரர்கள். இது மிக உயர்ந்த திருஷ்டியாகும். கடைசி வரை
இந்த முயற்சி நடைபெற வேண்டும். எப்போது சதோபிரதானம்
ஆகிவிடுகிறீர்களோ, அப்போது இந்த சரீரத்தை விட்டுவிடுவீர்கள்.
அதனால் எவ்வளவு முடியுமோ, புருஷார்த்தத்தை அதிகரிக்க வேண்டும்.
முதியவர்களுக்கு இன்னும் கூட சுலபமாகும். இப்போது அனைவரும்
அவசியம் திரும்பிச் செல்ல வேண்டும். இளைஞர்களுக்கு ஒருபோதும்
இது போன்ற சிந்தனைகள் வராது. முதியவர்கள் வானப்ரஸ்திகளாக
உள்ளனர். இப்போது திரும்பிச் செல்ல வேண்டும் என்பது புரிய
வைக்கப்படுகின்றது. ஆக, இந்த ஞான விஷயங்கள் அனைத்தையும்
புரிந்து கொள்ள வேண்டும். விருட்சத்தின் விருத்தியும் ஆகிக்
கொண்டே இருக்கிறது. விருத்தி ஆகி-ஆகியே முழு விருட்சமும்
தயாராகி விடும். முள்ளையெல்லாம் மாற்றி புதிய சிறு மலர்களின்
மரமாக ஆக்க வேண்டும். புதியதாகிப் பிறகு பழையதாக ஆகி விடும்.
முதலில் மரம் சிறியதாக இருக்கும். பிறகு வளர்ந்து கொண்டே போகும்.
விருத்தி ஆகி ஆகியே பின்னால் முள்ளாக ஆகி விடுகின்றன. முதலில்
பூவாக இருக்கின்றன. பெயரே சொர்க்கம். பின்னால் அதன் மணம், அந்த
சக்தி இருப்பதில்லை. முள்ளில் மணம் இருப்பதில்லை. இலேசான
பூக்களில் கூட மணம் இருப்பதில்லை. பாபா தோட்டக்காரராகவும்
உள்ளார் என்றால் படகோட்டியாகவும் உள்ளார். அனைவருடைய
படகுகளையும் அக்கரை சேர்க்கின்றார். படகுகளை எப்படி அக்கரை
சேர்க்கிறார்? எங்கே அழைத்துச் செல்கிறார் - இதையும் யார்
புத்திசாலிக் குழந்தைகளோ, அவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
யார் புரிந்து கொள்வதில்லையோ, அவர்கள் புருஷார்த்தமும்
செய்வதில்லை. நம்பர்வாரோ இருக்கவே செய்கின்றனர் இல்லையா? சில
விமானங்களோ சப்தத்தை விடவும் வேகமாகச் செல்கின்றன. ஆத்மா எப்படி
வேகமாக செல்கிறது - இதுவும் யாருக்கும் தெரியாது. ஆத்மாவோ
ராக்கெட்டை விடவும் வேகமாகச் செல்கின்றது. ஆத்மாவைக் காட்டிலும்
வேகமாகச் செல்லக் கூடிய பொருள் வேறெதுவும் கிடையாது. அந்த
ராக்கெட் முதலியவற்றில் அத்தகைய பொருளைப் போடுகின்றனர், அது
வெகு விரைவாகப் பறக்க வைக்கின்றது. விநாசத்திற்காக எவ்வளவு
வெடிமருந்து முதலானவற்றைத் தயார் செய்கின்றனர்! கப்பல், விமானம்
முதலியவற்றிலும் வெடிகுண்டுகளை எடுத்துச் செல்கின்றனர். இப்போது
முழு தயார் நிலையில் வைக்கின்றனர். செய்தித் தாள்களில்
எழுதுகின்றனர், வெடிகுண்டுகளைப் பயன்படுத்த மாட்டோம் என்று
யாரும் சொல்ல மாட்டார்கள். வெடிகுண்டுகளைப் போடலாம், இது
நடக்கக் கூடியது தான் - இதுபோல் சொல்லிக் கொண்டே உள்ளனர். இந்த
அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிக் கொண்டே இருக்கின்றன. விநாசமோ
நிச்சயமாக நடைபெறப் போகின்றது. வெடிகுண்டுகள் போடாதிருக்க
வேண்டும், விநாசம் நடக்கக் கூடாது என்பதெல்லாம் நடக்காது.
உங்களுக்காகப் புது உலகம் அவசியம் வேண்டும். இது டிராமாவில்
விதிக்கப்பட்டுள்ளது. அதனால் உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க
வேண்டும். வேட்டைக்காரனுக்குக் கொண்டாட்டம், வேட்டையாடப்படும்
விலங்குக்குத் திண்டாட்டம்......... டிராமா அனுசாரம் அனைவரும்
இறந்தாக வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு டிராமா பற்றிய
ஞானம் இருப்பதால் நீங்கள் அசைவதில்லை, சாட்சியாக இருந்து
பார்க்கிறீர்கள். அழுவது போன்றவற்றின் அவசியம் கிடையாது.
சமயத்தில் சரீரத்தையோ விடவேண்டியது தான் உள்ளது. ஆத்மா நீங்கள்
அறிவீர்கள், நாம் அடுத்த ஜென்மத்தை புதிய இராஜ்யத்தில்
எடுப்போம். நான் ராஜகுமாரனாக ஆவேன். ஆத்மாவுக்குத் தெரியும்,
அதனால் தான் ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுக்கிறது.
பாம்புக்குள்ளும் ஆத்மா உள்ளது இல்லையா? நான் ஒரு தோலை விட்டு
வேறொன்றை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லும். எப்போதாவது
அதுவும் சரீரத்தை விடும். பிறகு குழந்தை ஆகும். குழந்தைகளோ
பிறக்கின்றன இல்லையா? புனர்ஜென்மமோ அனைவரும் எடுத்தாக வேண்டும்.
இவையனைத்தையும் விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டியுள்ளது.
அனைத்திலும் முக்கிய விஷயம் தந்தையை மிகவும் அன்புடன் நினைவு
செய்ய வேண்டும். எப்படி குழந்தைகள் தாய்-தந்தையரோடு ஒட்டிக்
கொள்கின்றனர். அதுபோல் மிகுந்த அன்புடன் புத்தியோகத்தின் மூலம்
பாபாவுடன் முற்றிலும் ஒட்டிக் கொள்ள வேண்டும். தன்னைத் தான்
பார்க்கவும் வேண்டும், நாம் எந்த அளவுக்கு தாரணை செய்கிறோம்
என்று. (நாரதரின் உதாரணம்). பக்தர்கள் எதுவரை ஞானத்தைப்
பெற்றுக் கொள்ளவில்லையோ, அதுவரை தேவதையாக ஆக முடியாது. இது
வெறுமனே லட்சுமியை மணக்கும் விஷயம் மட்டுமல்ல. இதுவோ புரிந்து
கொள்ள வேண்டிய விஷயம். குழந்தைகள் நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள், நாம் சதோபிரதானமாக இருந்த போது உலகத்தின்
மீது இராஜ்யம் செய்தோம். இப்போது மீண்டும் சதோபிரதானமாக
ஆவதற்காக பாபாவை நினைவு செய்ய வேண்டும். இந்த முயற்சியை நீங்கள்
கல்ப-கல்பமாக நினைவு மற்றும் சக்திக்கேற்றவாறு செய்தே
வந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும்,
நாம் எதுவரை யாருக்காவது புரிய வைக்க முடியும்? தேக
அபிமானத்திலிருந்து நாம் எதுவரை விலகிக் கொண்டே செல்கிறோம்?
நான் ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுக்கிறோம். நான்
ஆத்மா இவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறேன். இவை என்னுடைய
உறுப்புகள். நாம் அனைவரும் பாத்திரத்தை ஏற்று நடிப்பவர்கள்.
இந்த டிராமாவில் இது எல்லையற்ற பெரியதொரு நாடகம். இதில்
நம்பர்வார் அனைவரும் நடிகர்கள். நாம் புரிந்து கொள்ள முடியும்
- இவர்களில் யார்-யார் முக்கிய நடிகர்கள்? முதலாவது, இரண்டாவது,
மூன்றாவது கிரேடு யார்-யார்? குழந்தைகள் நீங்கள் பாபா மூலம்
டிராமாவின் முதல்-இடை-கடை பற்றி அறிந்து கொண்டு விட்டீர்கள்.
படைப்பவர் மூலம் படைப்பின் ஞானம் கிடைக்கின்றது. படைப்பவரே
வந்து தம்மைப் பற்றிய மற்றும் படைப்பினைப் பற்றிய ரகசியத்தைப்
புரிய வைக்கிறார். இது அவருடைய ரதம். இதில் அவர் பிரவேசம்
செய்து வருகிறார். அதனால் தான் இரண்டு ஆத்மாக்கள் எனச்
சொல்வார்கள். இதுவும் பொதுவான விஷயம். பித்ருவுக்கு
உணவளிக்கிறார்கள் என்றால் ஆத்மா வருகிறது இல்லையா? சிலர்
இப்போதும் கூட சொல்கின்றனர், முன்பு அநேகர் வந்தனர். அவர்களிடம்
கேட்டனர். இப்போதோ தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளனர். சிலர்
இப்போதும் சொல்கின்றனர், நான் முந்தைய பிறவியில் இன்னாராக
இருந்தேன். வருங்காலம் பற்றி யாரும் சொல்வதில்லை. கடைசி சமயம்
பற்றிச் சொல்கிறார். அனைத்தின் மீதும் சிலர் நம்பிக்கை
வைப்பதில்லை.
பாபா சொல்கிறார் - இனிமையான குழந்தைகளே, இப்போது நீங்கள்
அமைதியில் இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு ஞான-யோகத்தில்
வலிமையுள்ளவர்களாக இருக்கிறீர்களோ, பிறகு மிகவும் உறுதி
மிக்கவர்களாக ஆகி விடுவீர்கள். இப்போதோ அநேகக் குழந்தைகள்
வெகுளிகளாக உள்ளனர். பாரதவாசி தேவி-தேவதைகள் எவ்வளவு உறுதியாக
இருந்தார்கள்! செல்வத்தாலும் நிரம்பியவர்களாக இருந்தனர்.
இப்போதோ அனைத்தையும் இழந்தவர்களாக உள்ளனர். அவர்கள் செல்வம்
நிறைந்தவர்கள், நீங்கள் அனைத்தையும் இழந்தவர்கள். நீங்களே
அறிந்து கொண்டிருக்கிறீர்கள், பாரதம் என்னவாக இருந்தது, இப்போது
என்னவாக உள்ளது? பட்டினி கிடந்து சாகத்தான் வேண்டும்.
தானியம்-தண்ணீர் முதலிய எதுவும் கிடைக்காது. ஓரிடத்தில் வெள்ளம்
வந்து கொண்டே இருக்கும். இன்னோரிடத்தில் ஒரு துளித் தண்ணீர்
கூடக் கிடைக்காது. இச்சமயம் துக்கத்தின் மேகம் உள்ளது,
சத்யுகத்தில் சுகத்தின் மேகம் இருக்கும். இந்த விளையாட்டைக்
குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், வேறு
யாருக்குமே தெரியாது. பேட்ஜை வைத்தும் கூட சொல்லிப் புரிய
வைப்பது மிக நல்லது. அவர் லௌகிக் எல்லைக்குட் பட்ட தந்தை. இவர்
பரலௌகிக எல்லையற்ற தந்தை. இந்த தந்தை ஒரு முறை மட்டும்
சங்கமயுகத்தில் எல்லையற்ற ஆஸ்தி தருகிறார். புது உலகமாக ஆகி
விடுகின்றது. இது இரும்பு யுகம். பிறகு அவசியம் பொன்யுகமாக
ஆகும். நீங்கள் இப்போது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். மனம்
தூய்மையாக இருந்தால் நம்முடைய மனதின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறி
விடும். தினமும் தன்னைத் தான் கேளுங்கள் - தீய காரியம் எதையும்
செய்யவில்லையே? யாரைப் பற்றியும் உள்ளுக்குள் விகார சிந்தனைகள்
வரவில்லையே? தனது ஆன்மீக போதையில் இருந்தோமா, அல்லது வேண்டாத
பேச்சுகள் பேசி நேரத்தை வீணடித்தோமா? என்று! பாபாவின்
கட்டளையாவது - என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். நினைவு
செய்யவில்லை என்றால் கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்களாக ஆகி
விடுகிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம் . ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே !
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஞான-யோகத்தின் போதையில் இருக்க வேண்டும். மனதைத் தூய்மையாக
வைத்திருக்க வேண்டும். வேண்டாத வீண் பேச்சுகளில் தன்னுடைய
நேரத்தைப் போக்கிவிடக் கூடாது.
2) நாம் ஆத்மாக்கள், சகோதர-சகோதரர்கள். இப்போது வீட்டிற்குத்
திரும்பிச் செல்ல வேண்டும். இந்த அப்பியாசத்தைப் பக்கா ஆக்க
வேண்டும். அசரீரி ஆகி, சுயதர்மத்தில் நிலைத்திருந்து பாபாவை
நினைவு செய்ய வேண்டும்.
வரதானம்:
நன்மையற்ற ( அகல்யாண் ) எண்ணத்தை முடித்து அபகாரிகளுக்கும்
உபகாரம் செய்யக்கூடிய ஞான சொரூப ஆத்மா ஆகுக .
ஒருவர் தினமும் உங்களை வருத்தமுறச் செய்கிறார், தீமை
விளைவிக்கிறார், நிந்தனை செய்கிறார் என்றாலும் கூட அவருக்காக
மனதில் வெறுப்பு உணர்வு வரக்கூடாது, அபகாரிக்கும் உபகாரம்
செய்வது - இதுவே ஞான சொரூப ஆத்மாவின் கடமை ஆகும். எவ்வாறு
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை 63 பிறவிகளாக நிந்தனை
செய்தீர்கள், ஆனாலும் கூட தந்தை கல்யாணகாரி (நன்மை நிறைந்த)
பார்வையோடு பார்த்தார், எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள்.
அனைவருக்காகவும் நன்மை நிறைந்த பாவனை கொண்டிருப்பதே ஞான சொரூப
ஆத்மா என்பதன் பொருளாகும். தீமை என்பது எண்ணத்தளவில் கூட
இருக்கக்கூடாது.
சுலோகன்:
மன்மனாபவ என்ற ஸ்திதியில் ( நிலையில் ) நிலைத்திருந்தீர்கள்
என்றால்
றருடைய மனதின் உணர்வுகளை அறிந்து கொள்வீர்கள் .