16.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு முதலாவதாக நமக்கு படிப்பிப்பவர் சுயம் சாந்திக்கடல், சுகக்கடலாகிய தந்தை என்ற இந்த நம்பிக்கை இருக்க வேண்டும் -எந்த மனிதரும் யாருக்கும் சுகம் சாந்தி கொடுக்க முடியாது.

 

கேள்வி:

அனைத்தையும் விட உயர்ந்த குறிக்கோள் எது? அந்த குறிக்கோளை அடைவதற்கான முயற்சி என்ன?

 

பதில்:

ஒரு பாபாவின் நினைவு உறுதியாகிவிட வேண்டும், புத்தி வேறு எந்தப் பக்கமும் செல்லக் கூடாது, இது தான் உயர்ந்த குறிக்கோள் ஆகும். இதற்காக ஆத்ம அபிமானி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆத்ம அபிமானி ஆகி விடும்போது, அனைத்து விகார எண்ணங்களும் முடிந்து போய்விடும், புத்தி அலைவது நின்றுவிடும். தேகத்தின் பக்கம் முற்றிலும் பார்வை போகாது, இதுவே குறிக்கோள் ஆகும். இதனை அடைவதற்காக ஆத்ம அபிமானி ஆகுங்கள்.

 

ஓம் சாந்தி!

ஆன்மீகக் குழந்தைகளுக்காக ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கிறார் - இவரை (பிரம்மா பாபாவை) ஆன்மீகத் தந்தை என்று சொல்ல மாட்டோம். இன்றைய நாளை சத்குருவார் (வியாழக்கிழமை) என்று சொல்கிறோம், குருவார் என்று சொல்வது தவறாகும். இது சத்குருவார் ஆகும். குருக்கள் நிறைய பேர் இருக்கின்றனர், சத்குரு ஒரே ஒருவர் தான் ஆவார். நிறைய பேர் தன்னை குரு என்றும் சொல்லிக் கொள்கின்றனர், சத்குரு என்றும் சொல்லிக் கொள்கின்றனர். குரு மற்றும் சத்குரு என்பதில் வித்தியாசம் இருக்கிறது என்று குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்திருக்கிறீர்கள். சத் என்றால் உண்மை. சத்தியமானவர் (உண்மையானவர்) என்று ஒரே ஒரு நிராகார் தந்தையை மட்டும் தான் சொல்லப்படுகிறது, மனிதர்களை அல்ல. சத்தியமான ஞானத்தை ஒரே ஒரு முறை ஞானக்கடலாகிய பாபா வந்து கொடுக்கின்றார். மனிதர்கள் மனிதர்களுக்கு ஒருபோதும் சத்தியமான ஞானத்தைக் கொடுக்க முடியாது. சத்தியமானவர் ஒரே ஒரு நிராகார் தந்தை மட்டும் தான் ஆவார். இவருடைய பெயரோ பிரம்மா ஆகும், இவர் யாருக்கும் ஞானம் கொடுக்க முடியாது. பிரம்மாவிடம் ஞானம் கொஞ்சமும் இருக்கவில்லை. இவருக்குள் முழு ஞானமும் இல்லை என்று இப்போது கூட சொல்கிறோம். முழுமையான ஞானம் பரமபிதா பரமாத்மாவிடம் தான் இருக்கிறது. தன்னை சத்குரு என்று சொல்லிக் கொள்ளுமளவு எந்த மனிதரும் இப்போது கிடையாது. சத்குரு என்றாலே முழுமையான சத்தியம். நீங்கள் சத்தியமானவராக ஆகி விட்ட பிறகு இந்த சரீரம் இருக்காது. மனிதர்களை ஒருபோதும் சத்குரு என்று சொல்ல முடியாது. மனிதர்களிடம் கொஞ்சம் கூட சக்தி இல்லை. நான் கூட உங்களைப் போல மனிதராக இருக்கின்றேன் என்று இவர் (பிரம்மா பாபா) கூட சொல்கிறார். இவருக்குள் சக்திக்கான விசயமே கிடையாது. தந்தை தான் கற்பிக்கின்றார், பிரம்மா கற்பிப்பதில்லை. இந்த பிரம்மா கூட அவரிடமிருந்து கற்று, பிறகு கற்பிக்கின்றார். பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள் என்று சொல்க்கொள்ளும் நீங்கள் கூட பரம்பிதா பரமாத்மா சத்குருவிடமிருந்து படிக்கின்றீர்கள். உங்களுக்கு அவரிடமிருந்து சக்தி கிடைக்கிறது. சக்தி என்றால், யாரையும் ஓங்கி அடித்தால் அவர் கீழே விழுந்து விடுவார் என்று அர்த்தம் அல்ல. இது ஆன்மீகத் தந்தை மூலமாகக் கிடைக்கும் ஆன்மீக சக்தி ஆகும். நினைவு பலத்தின் மூலம் நீங்கள் அமைதியை அடைகின்றீகள் மற்றும் படிப்பின் மூலம் உங்களுக்கு சுகம் கிடைக்கிறது. எப்படி மற்ற ஆசிரியர்கள் உங்களுக்கு கற்பிக்கின்றனரோ, அது போல் பாபா கூட கற்பிக்கின்றார். பிரம்மா கூட கற்கின்றார், மாணவராகவும் உள்ளார். தேகதாரிகள் அனைவருமே மாணவர்கள் தான். பாபாவுக்கு தேகம் கூட கிடையாது, அவர் நிராகாரமானவர். அவர் தான் கற்றுத்தருகின்றார். மற்ற மாணவர்கள் படிப்பதைப் போல நீங்களும் படிக்கின்றீர்கள். இதில் உழைப்பிற்கான விசயமே இல்லை. படிக்கும் போது எப்போதும் பிரம்மச்சரியத்தில் இருக்கின்றனர். பிரம்மச்சரியத்தில் இருந்து படித்து முடித்த பின் விகாரத்தில் போய் விழுகின்றனர். மனிதர்களோ, மனிதர்களைப் போலவே பார்க்கத் தென்படுகிறார்கள். இவர் இந்த மனிதர், இவர் சட்டம் பயின்றவர் (எல். எல். பி) இவர் இந்த ஆபீசர் என்கிறோம். படிப்பின் மூலம் பட்டம் கிடைக்கிறது. ஆனால் அதே உருவம் தான். அந்த எல்லைக்குட்பட்ட படிப்பைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள். சாது, சன்னியாசிகள் போன்றோர் எந்த சாஸ்திரங்களைப் படிக்கின்றனரோ மற்றும் கற்றுத்தருகின்றனரோ, அது ஒன்றும் பெரிய விசயமல்ல, அதன் மூலம் யாருக்கும் அமைதி கிடைக்க முடியாது. அவர்களே அமைதிக்காக முட்டி மோதிக் கொள்கின்றனர். ஒருவேளை காட்டில் அமைதி கிடைக்கிறது என்றால் ஏன் அங்கிருந்து திரும்பி வருகின்றார்கள். முக்தியை யாரும் அடைவதில்லை. யார் யார் இராம கிருஷ்ண பரமஹம்சர் போல நல்ல பெயரோடு சென்றனரோ, அவர்கள் கூட மறுபிறவி எடுத்து எடுத்து கீழே தான் வந்திருக்கின்றனர். முக்தி ஜீவமுக்தியை யாரும் அடைவதில்லை. தமோபிரதானம் ஆகித் தான் தீர வேண்டும். குருவிடம் செல்வதன் மூலம் ஒன்றும் கிடைத்து விடுவதில்லை. உங்களுக்கு குருவிடமிருந்து என்ன கிடைத்தது? என்று யாரிடமாவது கேட்டால், அமைதி கிடைக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் ஒன்றுமே கிடைப்பதில்லை. அமைதி என்பதன் அர்த்தம் கூட தெரியாமல் இருக்கிறார்கள். பாபா ஞானக்கடல் என்று குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்திருக்கின்றீர்கள். மற்ற எந்த சாது, சன்னியாசிகள், குருக்கள் போன்றோர் அமைதிக்கடல் ஆக முடியாது. மனிதர்கள் யாருக்கும் உண்மையான அமைதியை கொடுக்க முடியாது. அமைதிக்கடல் ஒரே ஒரு தந்தை மட்டும் தான், அவர் நமக்கு கற்றுத்தருகின்றார் என்ற நம்பிக்கை முதலில் குழந்தைகளாகிய உங்களுக்கு வேண்டும். சிருஷ்டிச்சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதைக் கூட பாபா புரிய வைத்திருக்கின்றார். மனிதர்கள் மனிதர்களுக்கு ஒருபோதும் சுகம் சாந்தி கொடுக்க முடியாது. இவர் (பிரம்மா) அவருடைய ரதமாவார். உங்களைப் போல மாணவர் ஆவார். இவர் கூட குடும்ப விவகாரங்களில் இருந்தார். பாபாவுக்கு தன்னுடைய ரதத்தை (சரீரத்தை) கடனாகக் கொடுத்திருக்கின்றார், அது கூட வானபிரஸ்த (வயோதிக) நிலையில் தான் கொடுத்திருக்கின்றார். உங்களுக்கு புரிய வைப்பவர் ஒரே ஒரு பாபா ஆவார், அந்த பாபா சொல்கின்றார் - அனைவரும் நிர்விகாரி ஆக வேண்டும். அவ்வாறு சுயம் நிர்விகாரி ஆக முடியாதவர்கள் அநேக விதமான விசயங்களைச் சொல்வார்கள், நிந்தனை கூட செய்வார்கள். சிலர் நம்முடைய பல பிறவி களுக்கான பலனாக பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது என்று புரிந்து கொள்கின்றனர். பாபா நம்மை விடுவிக்கின்றார். எல்லையற்ற தந்தை தான் நம்மை விடுவிக்கின்றார் அல்லவா! இவரைக் (பிரம்மா) கூட அவர் தான் விடுவிக்கின்றார். குழந்தைகளைக் கூட பாதுகாக்க முயற்சி செய்தார். யாரால் விடுபட முடியுமோ, அவர்களை விடுவித்தார். நமக்கு கற்பிப்பவர் எந்த மனிதரும் கிடையாது என்று இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்கிறது. சர்வசக்திவான் என்று ஒரே ஒரு நிராகார் தந்தையைத் தான் சொல்லப்படுகிறது, வேறு யாரையும் அப்படி சொல்ல முடியாது. அவர் தான் உங்களுக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பாபா தான் உங்களுக்குப் புரிய வைக்கின்றார். இந்த விகாரங்கள் உங்களுக்கு அனைத்தையும் விட பெரிய எதிரி ஆகும். இவற்றை விட்டு விடுங்கள். பிறகு யாரால் விட முடியவில்லையோ, அவர்கள் (வீட்டில்) எவ்வளவு சண்டையிடு கின்றனர்! தாய்மார்கள் கூட சிலபேர் விகாரத்திற்காக பெரிய பிரச்சினை செய்பவர்களாக இருக்கின்றனர்.

 

இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். இது புருஷோத்தம சங்கமயுகம் என்று கூட யாருக்கும் தெரியாது. பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கின்றார். நிறைய பேருக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. சிலருக்கு பாதி நம்பிக்கை இருக்கிறது, சிலருக்கு 100 சதவீதம், சிலருக்கோ 10 சதவீதம் தான் நம்பிக்கை இருக்கிறது. இப்போது பகவான் ஸ்ரீமத் கொடுக்கின்றார் - குழந்தைகளே! என்னை நினைவு செய்யுங்கள். இது பாபாவின் பெரிய கட்டளை ஆகும். நம்பிக்கை ஏற்பட்டால் தான், அந்தக் கட்டளைப்படி நடப்போம் அல்லவா! என்னுடைய இனிமையான குழந்தைகளே, நீங்கள் உங்களை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்று பாபா சொல்கின்றார். இவரை (பிரம்மா பாபா) நினைவு செய்யக் கூடாது. பிரம்மா சொல்கிறார் நான் சொல்வதில்லை, என் மூலமாக பாபா உங்களுக்குச் சொல்கின்றார். எப்படி குழந்தைகளாகிய நீங்கள் படிக்கின்றீர்களோ, அது போல இவரும் படிக்கின்றார், அனைவரும் மாணவர்கள் ஆவர். கற்றுத்தருபவர் ஒரு டீச்சர் ஆவார். அங்கே அனைவரும் மனிதர்களிடம் படிக்கின்றனர். இங்கே உங்களுக்கு ஈஸ்வரன் கற்பிக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் படிக்கின்றீர்கள். பிறகு நீங்கள் மற்றவர்களுக்கு கற்பிக்கின்றீர்கள். இதில் மிகவும் ஆத்ம அபிமானி ஆக வேண்டும். வக்கீலாகவும், பொறியாளராகவும் ஆத்மா தான் ஆகின்றது. ஆத்மாவுக்கு இப்போது தேக அபிமானம் வந்து விட்டது. ஆத்ம அபிமானிக்கு பதில் தேக அபிமானியாக ஆகி விட்டனர். ஆத்ம அபிமானி ஆகிவிடும் போது அவர்களை விகாரி என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு விகார எண்ணம் கூட ஒருபோதும் வர முடியாது. தேக அபிமானத்தால் தான் விகார எண்ணங்கள் வருகின்றன. பிறகு விகார பார்வையோடு பார்க்கின்றனர். தேவதைகளுக்கு ஒருபோதும் விகார பார்வை இருக்க முடியாது. ஞானத்தினால் பார்வை மாறி விடுகின்றது. சத்யுகத்தில் இப்படி (விகார) அன்பு செய்வார்களா? அல்லது ஆடுவார்களா என்ன! அங்கே கூட அன்பு செய்வார்கள், ஆனால் விகாரத்தின் துர்நாற்றம் இருக்காது. பல பிறவிகளாக விகாரத்தில் சென்று விட்டனர், ஆக அந்த போதை எளிதில் இறங்குவதில்லை. பாபா நிர்விகாரி ஆக்குகின்றார், ஆக நிறைய குழந்தைகள் முற்றிலும் உறுதியாக ஆகி விடுகின்றனர். நாங்கள் முழுமையான நிர்விகாரி ஆக வேண்டும், நாம் தனியாக இருந்தோம், தனியாகத் தான் செல்ல வேண்டும் என்று புரிந்து கொள்கின்றனர். அவர்களை யாரேனும் தொட்டால் கூட அவர்களுக்குப் பிடிக்காது, இவர்கள் நம்மை ஏன் தொடுகிறார்கள், இவர்களுக்குள் விகாரத்தின் துர்நாற்றம் இருக்கிறது என்று சொல்வார்கள். விகாரி நம்மை தொடக் கூட கூடாது. இந்த குறிக்கோளை அடைய வேண்டும். தேகத்தின் மீது முற்றிலுமாக பார்வை கூட இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட கர்மாதீத் நிலையை இப்போது உருவாக்க வேண்டும். ஆத்மாவை மட்டுமே பார்க்கக்கூடிய நிலை இன்னும் ஏற்படவில்லை. இது குறிக்கோள் ஆகும். பாபா எப்போதும் சொல்க்

கொண்டே இருக்கிறார் -தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். இந்த சரீரம் ஒரு உருப்பு, சாதனம் ஆகும், இதில் நீங்கள் உங்கள் பாகத்தை நடிக்கின்றீர்கள்.

 

இவருக்குள் சக்தி இருக்கிறது என்று நிறைய பேர் சொல்கின்றனர். ஆனால் சக்திக்கான எந்த விசயமும் கிடையாது. இது படிப்பாகும். எப்படி மற்றவர்கள் படிக்கின்றார்களோ, அது போல இவர்களும் படிக்கின்றார்கள். தூய்மைக்காக எவ்வளவு தலையை உடைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்கு மிகுந்த உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால் தான் பாபா சொல்கின்றார் - ஒருவரையொருவர் ஆத்மா என்றே பாருங்கள். சத்யுகத்தில் கூட நீங்கள் ஆத்ம அபிமானியாக இருக்கின்றீர்கள். அங்கே இராவண இராஜ்யமே கிடையாது, விகாரத்தின் விசயமே கிடையாது. இங்கே இராவண இராஜ்யத்தில் அனைவரும் விகாரிகளாக இருக்கின்றனர். ஆகையால் பாபா வந்து நிர்விகாரி ஆக்குகின்றார். நிர்விகாரி ஆகவில்லை என்றால் தண்டனை அடைய வேண்டி வரும். ஆத்மா தூய்மை ஆகாமல் மேலே செல்ல முடியாது. கணக்கு வழக்கை முடிக்க வேண்டி இருக்கிறது. பிறகும் கூட பதவி குறைந்து போய்விடுகிறது. இந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சொர்க்கத்தில் ஒரு ஆதி சனாதன தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என்று குழந்தைகள் தெரிந்திருக்கின்றனர். முதன் முதலில் கண்டிப்பாக ஒரு ராஜா ராணி இருந்திருப்பார்கள். பிறகு வம்சம் உருவாகிறது. நிறைய பிரஜைகள் உருவாகின்றனர். அவர்களுடைய நிலையில் கூட வித்தியாசம் இருக்கும். யாருக்கு முழுமையான நம்பிக்கை இல்லையோ, அவர்கள் முழுமையாக படிக்கக் கூட முடியாது, தூய்மை ஆக முடியாது. அரைக்கல்பமாக தூய்மையற்று இருந்தவர்கள், ஒரு பிறவியில் 21 பிறவிகளுக்காக தூய்மை ஆகி விடுவது என்பது சித்தி வீடா என்ன! முக்கியமானது காம விகாரத்தின் விசயம் ஆகும். கோபம் போன்றவற்றின் விசயம் அவ்வளவு கிடையாது. எங்காவது புத்தி செல்கிறது என்றால், பாபாவை கண்டிப்பாக நினைக்கவில்லை என்பதாகும். பாபாவின் நினைவு உறுதி ஆகி விட்டால், பிறகு எந்தப் பக்கமும் புத்தி போகாது. மிக உயர்ந்த குறிக்கோள் ஆகும். தூய்மையின் விசயத்தைக் கேட்டு நெருப்பில் எரிந்து போகின்றனர். இப்படிப்பட்ட விசயங்களை யாரும் ஒருபோதும் சொன்னதில்லை, எந்த சாஸ்திரத்திலும் கிடையாது என்று சொல்கின்றனர். இதை மிக கஷ்டமாக புரிந்து கொள்கின்றனர். துறவற மார்க்கத்தின் தர்மமே (வழிமுறை) தனிப்பட்டது ஆகும். அவர்கள் மறுபிறவி எடுத்து மீண்டும் சந்நியாச தர்மத்தில் தான் செல்ல வேண்டும். அதே சமஸ்காரத்தைக் கொண்டு செல்கின்றனர். உங்களுக்கோ வீடு வாசலை விட வேண்டியதில்லை. வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கும் 'இது சங்கமயுகம்' என்று புரிய வையுங்கள். தூய்மையாகாமல் சத்யுகத்தில் தேவதை ஆக முடியாது. கொஞ்சம் ஞானம் கேட்டாலும் சத்யுகத்தில் அவர்கள் பிரஜை ஆகி விடுகின்றார்கள். நிறைய பிரஜைகள் உருவாகின்றனர் அல்லவா! சத்யுகத்தில் மந்திரி கூட இருக்க மாட்டார்கள், ஏனெனில் பாபா முழுமையாக ஞானி ஆக்கி விடுகின்றார். அஞ்ஞானிகளுக்கு தான் மந்திரி போன்றோர் வேண்டும். இப்போது பாருங்கள், ஒருவரையொருவர் எப்படி அடித்துக் கொள்கின்றனர்! பகை உணர்வு எவ்வளவு கடுமையாக இருக்கிறது! இப்போது நாம் இந்த பழைய சரீரத்தை விடுத்து மற்றொரு சரீரம் எடுக்கின்றோம் என்று நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இது பெரிய விசயமா என்ன! அவர்கள் துக்கத்தில் இறக்கின்றனர். நீங்கள் சுகத்துடன் பாபா நினைவில் செல்ல வேண்டும். எந்தளவு தந்தையாகிய என்னை நினைவு செய்வீர்களோ, அந்தளவு மற்ற அனைத்தையும் மறந்து விடுவீர்கள். யாரும் நினைவில் இருக்க மாட்டார்கள். எப்போது உறுதியான நம்பிக்கை ஏற்படுமோ, அப்போது இந்த நிலை ஏற்படும். நம்பிக்கை இல்லை என்றால் பாபா நினைவில் இருக்கவும் முடியாது. வெறும் பெயரளவில் சொல்கின்றனர். நம்பிக்கை இல்லை என்றால் நினைவு செய்ய மாட்டார்கள். அனைவருக்கும் ஒரே மாதிரியாக நம்பிக்கை இருப்பதில்லை அல்லவா! மாயை நம்பிக்கையை உடைத்து விடுகிறது. எப்படி நம்பிக்கையோ, அப்படியே ஆகிவிடுகின்றார்கள். முதன் முதலில் பாபா மீது நம்பிக்கை வேண்டும். இவர் தந்தையா? இல்லையா, என்று சந்தேகம் வருமா என்ன! எல்லையற்ற தந்தை தான் ஞானம் கொடுக்கின்றார். சிருஷ்டியின் படைப்பவர் மற்றும் படைப்பைப் பற்றி நான் தெரிந்திருக்கவில்லை என்று இவர் (பிரம்மா பாபா) சொல்கின்றார். எனக்கு யாரேனும் சொல்வார்களா என்ன! எனக்கு (பிரம்மா) 12 குருக்கள் இருந்தனர், அவர்கள் அனைவரையும் விட வேண்டியதாயிற்று. குருக்கள் யாரும் ஞானம் கொடுக்கவில்லை. சத்குரு திடீரென வந்து பிரவேசம் செய்தார். என்ன ஆகப்போகிறது என்றே எனக்கு அப்போது தெரியவில்லை. அர்ஜுனனுக்குக் சாட்சாத்காரம் செய்வித்ததாக கீதையில் கூட இருக்கிறதல்லவா! இங்கே அர்ஜுனரின் விசயமே கிடையாது. இவர் ரதமல்லவா! இவர் கூட முன்பு கீதையை படித்திருந்தார். பாபா பிரவேசம் செய்தார், ஞானம் கொடுக்கக்கூடியவர் தந்தை மட்டும் தான் என்று சாட்சாத்காரம் காண்பித்தார். ஆக அந்த (பக்தியின்) கீதையை விட்டு விட்டார். பாபா ஞானக்கடலாக இருக்கின்றார். நமக்கு அவர் தான் ஞானம் சொல்வார் அல்லவா! கீதை தாயும் தந்தையுமாக இருக்கிறது. நீங்கள் தான் தாயும் தந்தையும் என்று பாபாவைத் தான் சொல்கின்றனர். அவர் படைப்பைப் படைக்கின்றார், தத்தெடுக் கின்றார் அல்லவா! இந்த பிரம்மா கூட உங்களைப் போலத் தான். இவர் கூட எப்போது வானபிரஸ்த நிலை அடைகின்றாரோ, அப்போது நான் பிரவேசம் செய்கின்றேன் என்று பாபா சொல்கின்றார். குமாரிகளோ தூய்மையாகத் தான் இருக்கின்றாகள். அவர்களுக்கு இது எளிதாகும். திருமணத்துக்குப் பின் எவ்வளவு உறவுகள் அதிகரித்து விடுகின்றன. ஆகையால் ஆத்ம அபிமானி ஆவதில் மிகுந்த முயற்சி தேவைப் படுகிறது. உண்மையில் ஆத்மா சரீரத்திலிருந்து தனிப்பட்டதாகும், ஆனால் அரைக்கல்பம் தேக அபிமானியாக இருந்தனர். பாபா வந்து கடைசிப் பிறவியில் ஆத்ம அபிமானியாக ஆக்கும் போது கஷ்டமாக அனுபவமாகிறது. முயற்சி செய்து செய்து கொஞ்சம் பேர் தான் தேர்ச்சி அடைகின்றனர். 8 ரத்தினங்கள் உருவாகின்றனர். என்னுடைய புத்தி லைன் தெளிவாக இருக்கிறதா? ஒரு பாபாவைத் தவிர வேறு எதுவும் நினைவு வருவதில்லை தானே? என்று உங்களிடம் நீங்களே கேளுங்கள். இந்த நிலை கடைசி யில் ஏற்படும். ஆத்ம அபிமானி ஆவதில் தான் மிகுந்த உழைப்பு இருக்கிறது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஞானத்தின் மூலம் தன்னுடைய பார்வையை மாற்றம் செய்ய வேண்டும். ஆத்ம அபிமானி ஆகி விகார எண்ணங்களை முடித்து விட வேண்டும். எந்த விகாரத்தின் துர்நாற்றமும் இருக்கக் கூடாது, தேகத்தின் பக்கம் பார்வை முற்றிலும் போகவே கூடாது.

 

2. எல்லையற்ற தந்தை தான் நமக்கு கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கை உறுதியாகும்போது தான் நினைவும் உறுதியானதாக இருக்கும். மாயை நம்பிக்கையிலிருந்து நம்மை கொஞ்சமும் அசைத்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

 

வரதானம்:

தூய்மையின் அடித்தளத்தின் மூலம் எப்போதும் உயர்ந்த கர்மங்கள் செய்யக் கூடிய பூஜைக்குரிய ஆத்மா ஆகுக.

 

தூய்மை பூஜைக்குரியவராக ஆக்குகிறது. எப்போதும் உயர்ந்த கர்மங்கள் செய்பவர்கள் தான் பூஜைக்குரியவர்களாக ஆகின்றனர். ஆனால் தூய்மை என்பது வெறும் பிரம்மச்சரியம் மட்டுமல்ல, மனதின் எண்ணத்தின் அளவிலும் கூட யாரைக் குறித்தும் எதிர்மறை எண்ணம் உருவாகக் கூடாது. பேச்சும் உண்மைக்குப் புறம்பானதாக இருக்கக் கூடாது, சம்மந்தம் - தொடர்பிலும் எந்த வேறுபாடும் கூடாது, அனைவரோடும் நல்லவிதமான ஒரே மாதிரியான தொடர்பு இருக்கட்டும். மனம், சொல், செயல் என எதிலுமே தூய்மையின் குறைபாடு கூடாது, அப்போது பூஜைக்குரிய ஆத்மா என சொல்லலாம். நான் பரம பூஜைக்குரிய ஆத்மா - இந்த நினைவின் மூலமே தூய்மையின் அடித்தளத்தை உறுதியாக்குங்கள்.

 

சுலோகன்:

ஆஹா நான் என்ற இதே அலௌகிக போதையில் எப்போதும் இருந்தீர்கள் என்றால், மனம் மற்றும் உடலால் இயல்பான குஷியின் நடனத்தை ஆடிக் கொண்டே இருப்பீர்கள்.

 

ஓம்சாந்தி