16.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! துக்கத்தை நீக்கக் கூடிய பாபா நம்மை சுகதாமத்திற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார் என்ற மகிழ்ச்சி உங்களுக்கு இருக்க வேண்டும். நாம் சொர்க்கத்தின் அழகிய தேவதைகள் (அரசர்களாக) ஆகப் போகிறோம்.

 

கேள்வி:

குழந்தைகளின் எந்த ஒரு நிலையைப் பார்த்தாலும் தந்தைக்கு கவலை ஏற்படுவதில்லை -ஏன்?

 

பதில்:

ஒரு சில குழந்தைகள் முதல் தரமான நறுமணமுள்ள மலராக இருக்கிறார்கள். ஒரு சிலரிடம் சிறிதளவு கூட நறுமணம் இல்லை. ஒரு சிலருடைய நிலை மிகவும் நன்றாக உள்ளது. ஒரு சிலர் மாயையின் புயல்களில் தோற்று விடுகிறார்கள். இவை எல்லாவற்றையும் பார்த்தாலும் கூட தந்தைக்குக் கவலை ஏற்படுவதில்லை. ஏனெனில் சத்யுகத்தின் இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை தந்தை அறிந்துள்ளார். பிறகும் "குழந்தைகளே, கூடுமானவரை நினைவில் இருங்கள். மாயையின் புயல்களுக்கு பயப்படாதீர்கள்" என்று தந்தை அறிவுரை அளிக்கிறார்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான எல்லையில்லாத தந்தை, இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கிறார். மிகவுமே இனிமையிலும் இனிமையான தந்தை அவர் என்பதையோ புரிந்துள்ளீர்கள் தானே! பிறகு கல்வி அளிக்கும் ஆசிரியர் கூட மிகவும் இனிமையிலும் இனிமையானவர் அவரே. இங்கு நீங்கள் அமர்ந்திருக்கும் பொழுது மிகவும் இனிமையிலும் இனிமையான பாபா ஆவார், அவரிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்க வேண்டி உள்ளது என்பது நினைவில் இருக்க வேண்டும். இங்கோ வைசியாலயத்தில் (விகார உலகில்) அமர்ந்துள்ளீர்கள். எவ்வளவு இனிமையான தந்தை ஆவார். அந்த குஷி இதயத்தில் இருக்க வேண்டும். தந்தை நம்மை அரைக்கல்பம் சுக தாமத்திற்கு அழைத்து செல்பவர் ஆவார். துக்கத்தை அழிப்பவர் ஆவார். ஒன்றோ இப்பேர்ப்பட்ட பாபா உள்ளார். பிறகு பாபா தான் ஆசிரியராகவும் இருக்கிறார். நமக்கு முழு சிருஷ்டி சக்கரத்தின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார். இதை வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இந்த சக்கரம் எப்படி சுற்றுகிறது? 84 பிறவிகள் எப்படி கடந்து செல்கிறது இந்த எல்லா விஷயங்களையும் ஒரு நொடியில் புரிய வைக்கிறார். பிறகு கூடவே அழைத்துச் செல்வார். இங்கோ இருக்க போவதில்லை. அனைத்து ஆத்மாக்களையும் கூட அழைத்துச் செல்வார். மீதி இன்னும் சில நாட்களே உள்ளன. நிறைய கழிந்து விட்டது, கொஞ்சம் தான் மீதம் உள்ளது என்று கூறப்படுகிறது. மீதி சிறிது காலமே உள்ளது. எனவே சீக்கிரம் சீக்கிரமாக என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பல பிறவிகளாக சேர்ந்துள்ள பாவங்களின் சுமை உங்களை விட்டு அகன்று விடும். மாயையின் யுத்தம் நடக்கிறது தான். நீங்கள் என்னை நினைவு செய்வீர்களானால் அது நின்று போகும். இதையும் பாபா கூறி விடுகிறார். எனவே ஒரு பொழுதும் சிந்தனை செய்யாதீர்கள். எவ்வளவு தான் சங்கல்பங்கள், விகல்பங்கள், புயல்கள் வந்தாலும் சரி, இரவு முழுவதும் சங்கல்பங்களில் (எண்ணங்கள்) தூக்கம் கெட்டு போனாலும் சரி, ஆனாலும் பயப்படக் கூடாது. தைரியமாக இருக்க வேண்டும். இவை அவசியம் வரும் என்று பாபா கூறி விடுகிறார். கனவுகள் கூட வரும். இந்த எல்லா விஷயங்களுக்கும் பயப்படக் கூடாது. போர்க்களம் ஆகும் அல்லவா? இவை எல்லாம் அழியப் போகிறது. நீங்கள் மாயையை வெல்வதற்காக போரிடுகிறீர்கள். மற்றபடி இதில் மூச்சு ஆகியவற்றை ஒன்றும் நிறுத்த வேண்டியதில்லை. ஆத்மா சரீரத்தில் இருக்கும் வரை மூச்சு இருக்கும். இதில் மூச்சு (சுவாசம்) ஆகிய வற்றை நிறுத்துவதற்காக கூட முயற்சி செய்யக் கூடாது. ஹட யோகம் ஆகியவற்றில் எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள். பாபாவிற்கு (பிரம்மா) அனுபவம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டிருந்தார். ஆனால் நேரமும் வேண்டும் அல்லவா? எப்படி தற்காலத்தில் "ஞானமோ நன்றாக உள்ளது ஆனால் நேரம் எங்கே"? இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளன..... இது உள்ளது.. என்று உங்களிடம் கூறுகிறார்கள். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! ஒன்று தந்தையை நினைவு செய்யுங்கள், அடுத்து, சக்கரத்தை நினைவு செய்யுங்கள், அவ்வளவே! என்று தந்தை உங்களுக்குக் கூறுகிறார். இது கடினமா என்ன? சத்யுக திரேதாவில் இவர்களுடைய தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. பிறகு இஸ்லாமியர், பௌத்தியர் ஆகியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றன. அவர்கள் தங்களது தர்மத்தை மறந்து விட்டார்கள். தங்களை தேவி தேவதை என்று கூற முடியவில்லை. ஏனெனில் அபவித்திரமாக (தூய்மையற்றவராக) ஆகி விட்டார்கள். தேவதைகளோ தூய்மையாக இருந்தார்கள். நாடகத் திட்டப்படி பிறகு அவர்கள் இந்து என்று அழைக்க முற்பட்டு விடுகிறார்கள். உண்மையில் இந்து தர்மமோ கிடையாது. ஹிந்துஸ்தான் என்ற பெயரோ பின்னால் ஏற்பட்டது. உண்மையான பெயர் பாரதம் என்பதாகும். "பாரத மாதாவிற்கு ஜே" என்கிறார்கள். ஹிந்துஸ்தானின் மாதாக்கள் என்று கூறுகிறார்களா என்ன? பாரதத்தில் தான் இந்த தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. பாரதத்திற்குத் தான் மகிமை செய்கிறார்கள். எனவே தந்தையை எவ்வாறு நினைவு செய்ய வேண்டும் என்பதை தந்தை குழந்தைகளுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். தந்தை வந்திருப்பதே வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, யாரை? ஆத்மாக்களை. நீங்கள் எந்த அளவிற்கு தந்தையை நினைவு செய்கிறீர்களோ அந்த அளவு நீங்கள் தூய்மையாக ஆகிறீர்கள். தூய்மையாகிக் கொண்டே சென்றீர்கள் என்றால், பிறகு தண்டனை பெற மாட்டீர்கள். ஒரு வேளை தண்டனை வாங்கினீர்கள் என்றால், பதவி குறைந்து போய் விடும். எனவே எந்த அளவு நினைவு செய்வீர்களோ அந்த அளவு விகர்மங்கள் விநாசம் ஆகிக் கொண்டே இருக்கும். நிறைய குழந்தைகள் நினைவு செய்ய முடியாமல் இருக்கிறார்கள். சத்துப்போய் விட்டு விடுகிறார்கள். யுத்தம் செய்வதே இல்லை. அப்படியும் இருக்கிறார்கள். இராஜ்யம் ஸ்தாபனை ஆக வேண்டி உள்ளது என்று புரியப்படுகிறது. தேர்ச்சி அடையாமல் போய் விடுபவர்களும் நிறைய பேர் இருப்பார்கள். ஏழை பிரஜைகளும் வேண்டும் அல்லவா? அங்கு துக்கம் இருக்காது என்றாலும் கூட ஏழை மற்றும் செல்வந்தரோ ஒவ்வொரு நிலைமையிலும் இருப்பார்கள். இது கலியுகம் ஆகும். இங்கு பணக்காரர் அல்லது ஏழைகள் இருவரும் துக்கம் அனுபவிக்கிறார்கள். அங்கு இருவரும் சுகமுடைவர்களாக இருப்பார்கள். ஆனால் ஏழை, செல்வந்தர் என்ற உணர்வோ இருக்கும். துக்கத்தின் பெயர் இருக்காது. மற்றபடி வரிசைக்கிரமமாகவோ இருக்கவே இருப்பார்கள். எந்த ஒரு நோயும் இருக்காது. ஆயுள் கூட நீண்டதாக இருக்கும். இந்த துக்க தாமத்தை மறந்து விடுகிறோம். சத்யுகத்தில் உங்களுக்கு துக்கம் நினைவில் கூட இருக்காது. இப்பொழுது தந்தை துக்கதாமம் மற்றும் சுகதாமத்தின் நினைவூட்டுகிறார். மனிதர்கள் சொர்க்கம் இருந்தது என்று கூறுகிறார்கள். ஆனால் எப்பொழுது இருந்தது எப்படி இருந்தது? என்பது எதுவும் தெரியாது. இலட்சக்கணக்கான வருடங்களின் விஷயமோ யாருக்குமே நினைவிற்கு வர முடியாது. நேற்றைக்கு உங்களுக்கு சுகம் இருந்தது. நாளைக்கு மீண்டும் ஆகும் என்று தந்தை கூறுகிறார். எனவே இங்கு அமர்ந்து மலர்களை பார்க்கிறார். இது நல்ல மலர் ஆகும். இவர் இந்த விதமாக உழைப்பு செய்கிறார். இவர் நிலையாக இல்லை. இவர் கல் போன்ற புத்தி உடையவராக இருக்கிறார். தந்தைக்கோ எந்த ஒரு விஷயத்தின் கவலையும் இருப்பதில்லை. ஆம், குழந்தைகள் சீக்கிரமாகப் படித்து செல்வந்தராக ஆகி விட வேண்டும் என்று நினைக்கிறார். படிப்பிக்கவும் வேண்டும். குழந்தைகளாகவோ ஆகியுள்ளார்கள். ஆனால் சீக்கிரம் படித்து புத்திசாலியாக ஆக வேண்டும். அதுவும் எந்த அளவிற்குப் படிக்கிறார்கள் மற்றும் படிப்பிக்கிறார்கள் மற்றும் எப்பேர்ப்பட்ட மலர் ஆவார்கள் என்பதை தந்தை வந்து பார்க்கிறார். ஏனென்றால், இது (சைதன்ய) உயிருள்ள மலர்களின் தோட்டம் ஆகும். மலர்களைப் பார்த்தால் கூட எவ்வளவு குஷி ஆகிறது. பாபா சொர்க்கத்தின் ஆஸ்தி அளிக்கிறார் என்பதை சுயம் குழந்தைகளும் புரிந்துள்ளார்கள். தந்தையை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் பாவங்கள் நீங்கிக் கொண்டே போகும். இல்லையென்றால் தண்டனை வாங்கி பிறகு பதவி அடைவீர்கள். அதற்கு "ரொட்டி துண்டும் கொடுத்து அடியும் கொடுப்பது" என்று கூறப்படுகிறது. தந்தையை எவ்வாறு நினைவு செய்ய வேண்டும் என்றால் ஜன்ம ஜன்மாந்திரத்தின் பாவங்கள் நீங்கி விட வேண்டும். சக்கரத்தை அறிந்து கொள்ளவும் வேண்டும். சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும். ஒரு பொழுதும் நின்று போகாது. பேன் ஊர்வது போல நடந்து கொண்டே இருக்கும். பேன் எல்லாவற்றையும் விட மெதுவாகச் செல்கிறது. இந்த எல்லையில்லாத நாடகம் கூட மிகவும் மெதுவாக நடக்கிறது. டிக் - டிக் என்று ஆகிக் கொண்டே இருக்கிறது. 5 ஆயிரம் வருடங்களில் விநாடிகள், நிமிடங்கள் எவ்வளவு என்ற கணக்கைக் கூட குழந்தைகள் கணக்கிட்டு அனுப்பி உள்ளார்கள். இலட்சக்கணக்கான வருடங்களின் விஷயமாக இருந்திருந்தால் யாருமே கணக்கிட முடியாது. இங்கு தந்தை மற்றும் குழந்தைகள் அமர்ந்துள்ளார்கள். பாபா ஒவ்வொருவரையாகப் பார்க்கிறார் - "இவர் பாபாவை எவ்வளவு நினைவு செய்கிறார், எவ்வளவு ஞானம் எடுத்துள்ளார், மற்றவர்களுக்குப் எவ்வளவு புரிய வைக்கிறார்"" மிகவுமே சுலபமானது ஆகும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள் அவ்வளவே! பேட்ஜ் கூட குழந்தைகளிடம் இருக்கவே இருக்கிறது. இவர் சிவபாபா ஆவார் என்று கூறுங்கள். காசிக்குச் சென்றீர்கள் என்றால், அங்கு கூட சிவபாபா சிவபாபா என்று கூறி நினைவு செய்கிறார்கள். அடித்து கொள்கிறார்கள். நீங்கள் சாலிக்கிராமங்கள் ஆவீர்கள். ஆத்மா முற்றிலுமே சிறிய நட்சத்திரம் ஆகும். அதில் எவ்வளவு பாகம் நிரம்பி உள்ளது. ஆத்மா தேய்வதோ வளருவதோ கிடையாது. அழிந்து போவது இல்லை. ஆத்மாவோ அழியாதது ஆகும். அதில் நாடகத்தின் பாகம் நிரம்பி உள்ளது. வைரம் எல்லாவற்றையும் விட உறுதியானது ஆகும். அது போன்ற கடினமான கல் வேறு எதுவும் கிடையாது. ரத்தின வியாபாரிகள் அறிந்துள்ளார்கள். ஆத்மா பற்றி சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு சிறியதாக உள்ளது. அதில் எவ்வளவு பாகம் நிரம்பி உள்ளது. அது ஒரு பொழுதும் தேய்ந்து போவது இல்லை. வேறு ஆத்மாவாக ஆவதில்லை. இந்த உலகத்தில் நாம் தந்தை, ஆசிரியர், சத்குரு என்று கூறக் கூடிய அப்பேர்ப்பட்ட எந்த ஒரு மனிதனும் கிடையாது. இவர் ஒரே ஒரு எல்லையில்லாத தந்தை ஆவார். ஆசிரியர் ஆவார். எல்லோருக்கும் மன்மனாபவ என்ற அறிவுரை அளிக்கிறார். எந்த தர்மத்தினரைச் சந்தித்தாலும் கூட "அல்லாவை நினைவு செய்கிறீர்கள் தானே"" என்று அவர்களுக்குக் கூறுங்கள் என்று உங்களுக்கும் கூறுகிறார். ஆத்மாக்கள் அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவார்கள். என் ஒருவனை நினைவு செய்தால் விகர்மங்கள் விநாசம் ஆகி விடும் என்று இப்பொழுது தந்தை அறிவுரை கூறுகிறார். தந்தை தான் பதீத பாவனர் ஆவார். இதை கூறியது யார்? ஆத்மா கூறினார். மனிதர்கள் பாடுகிறார்கள் தான். ஆனால் பொருள் புரியாமல் உள்ளார்கள்.

 

நீங்கள் அனைவரும் சீதைகள் என்று தந்தை கூறுகிறார். நான் இராமன் ஆவேன். அனைத்து பக்தர்களின் சத்கதி அளிப்பவன் நான். அனைவருக்கும் சத்கதி அளித்து விடுகிறார். மற்ற அனைவரும் முக்தி தாமத்திற்குச் சென்று விடுகிறார்கள். சத்யுகத்தில் மற்ற தர்மம் எதுவும் இருப்பதில்லை. நாம் மட்டுமே இருப்போம். ஏனெனில் நாம் தான் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுகிறோம். இங்கோ பாருங்கள் எவ்வளவு ஏராளமான கோவில்கள் உள்ளன. எவ்வளவு பெரிய உலகம் ஆகும். என்னென்ன பொருட்கள் உள்ளன. அங்கு இவை எதுவும் இருக்காது. பாரதம் மட்டுமே இருக்கும். இந்த ரெயில் வண்டி ஆகியவை கூட இருக்காது. இவை எல்லாமே இல்லாது போய் விடும். அங்கு ரெயில் வண்டியின் அவசியமே இருக்காது. சிறிய நகரமாக இருக்கும். ரெயில் வண்டியோ வெகு தூரமான கிராமங்களுக்கு செல்லத் தேவையிருக்கும். பாபா புத்துணர்வூட்டிக் கொண்டிருக்கிறார். குழந்தைகளுக்கு வெவ்வேறு கருத்துகளை புரிய வைத்து கொண்டே இருக்கிறார். இங்கு அமர்ந்துள்ளீர்கள். புத்தியில் முழு ஞானம் உள்ளது. எப்படி பரமபிதா பரமாத்மாவிற்கும் முழு ஞானம் நிரம்பி உள்ளது. அதை உங்களுக்குப் புரிய வைத்து கொண்டே இருக்கிறார். உயர்ந்ததிலும் உயர்ந்த சாந்திதாமத்தில் வசிப்பவர் சாந்திக் கடலான தந்தை ஆவார். ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் கூட அங்கு இனிமையான இல்லத்தில் (ஸ்வீட் ஹோம்) வசிப்பவர்கள் ஆவோம். அமைதிக்காக மனிதர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள். சாதுக்கள் கூட மன அமைதி எப்படி கிடைக்க முடியும் என்று கூறுகிறார்கள். என்னவெல்லாம் யுக்திகளைக் கையாளுகிறார்கள். ஆத்மாவோ மனம் புத்தியுடன் கூடியது என்று பாடப்படுகிறது. ஆத்மாவின் சுய தர்மமே சாந்தி ஆகும். வாயே இல்லை. கர்ம இந்திரியங்களே இல்லை என்றால் அவசியம் அமைதியாகத் தான் இருக்கும். ஆத்மாக்களாகிய நமக்கு வசிக்கும் இடம் சாந்தி தாமம் இனிமையான இல்லம் ஆகும். அங்கு முற்றிலுமே அமைதி இருக்கும். பிறகு அங்கிருந்து முதலில் நாம் சுகதாமத்திற்கு வருகிறோம். இப்பொழுதோ இந்த துக்கதாமத்திலிருந்து சுகதாமத்திற்கு மாற்றமாகி செல்கிறோம். தந்தை தூய்மையானவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு பெரிய உலகம் ஆகும். இவ்வளவு காடுகள் ஆகியவை அங்கு எதுவுமே இருக்காது. இத்தனை மலைகள் ஆகியவை எதுவுமே இருக்காது. நம்முடைய ராஜதானி இருக்கும். எப்படி சொர்க்கத்தின் சிறிய மாதிரி (மாடல்) அமைக்கிறார்கள். அது போல சிறிய சொர்க்கம் இருக்கும். என்ன ஆகப் போகிறது! அதிசயத்தைப் பாருங்கள்! எவ்வளவு பெரிய படைப்பு ஆகும். இங்கோ எல்லோருக்கும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பிறகு இவ்வளவு முழு உலகமே இருக்காது. மற்றபடி நம்முடைய இராஜ்யம் இருக்கும். இத்தனை எல்லாமே முடிந்து போய் அவை எல்லாமே எங்கே போய் விடும். சமுத்திரம் பூமி ஆகியவற்றிற்குள் போய் விடும். இவற்றின் பெயர் அடையாளம் கூட இருக்காது. சமுத்திரத்தில் என்ன பொருட்கள் போய் விடுகிறதோ அவை உள்ளுக்குள்ளேயே முடிந்து போய் விடும். கடல் விழுங்கி விடுகிறது. தத்துவம் தத்துவத்துடனும், மண் மண்ணுடனும் கலந்து விடுகிறது. பிறகு உலகமே சதோ பிரதானமாக ஆகிறது. அச்சமயம் புதிய சதோபிரதான இயற்கை என்று கூறப்படுகிறது. அங்கு உங்களுடைய இயற்கையான அழகு இருக்கும். "ப்ஸ் டிக்" ஆகிய எதையுமே உபயோகிக்க மாட்டார்கள். எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு குஷி ஏற்பட வேண்டும். நீங்கள் சொர்க்கத்தின் இளவரசி ஆகிறீர்கள்.

 

ஞான ஸ்நானம் செய்யவில்லை என்றால் நீங்கள் தேவதை ஆக மாட்டீர்கள். வேறு எந்த வழியும் கிடையாது. தந்தையோ எப்பொழுதுமே அழகானவர். ஆத்மாக்களாகிய நீங்கள் கருமையாக (தூய்மையற்றவர்களாக) ஆகி உள்ளீர்கள். பிரியதரிசனரோ மிகவும் அழகான பிரயாணி ஆவார். அவர் வந்து உங்களை அழகானவர்களாக ஆக்குகிறார். நான் இவருக்குள் பிரவேசம் செய்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். நான் ஒரு பொழுதும் கருமையாக ஆவதில்லை. நீங்கள் கருமையிலிருந்து அழகாக ஆகிறீர்கள். எப்பொழுதுமே அழகானவரோ ஒரே ஒரு பிரயாணி மட்டுமே ஆவார். இந்த பாபா (பிரம்மா) கருமையாக மற்றும் அழகாக ஆகிறார். சிவபாபா உங்கள் அனைவரையும் அழகாக ஆக்கி கூட அழைத்துச் செல்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் அழகாக ஆகி பின் மற்ற அனைவரையும் அழகாக ஆக்க வேண்டும். தந்தையோ "ஷியாம் சுந்தர்" ஆவது இல்லை. கீதையில் தந்தைக்குப் பதிலாக ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டு தவறு செய்து விட்டுள்ளார்கள். இதைத் தான் ஒரே ஒரு தவறு என்று கூறப்படுகிறது. முழு உலகத்தை அழகாக ஆக்கி விடும் சிவபாபாவிற்குப் பதிலாக சொர்க்கத்தில் முதல் நம்பர் அழகாக ஆகுபவரின் பெயரைப் போட்டு விட்டுள்ளார்கள். இதை யாராவது புரிந்து கொள்கிறார்களா என்ன? பாரதம் மீண்டும் அழகாக ஆகப்போகிறது. அவர்களோ 40 ஆயிரம் ஆண்டு களுக்குப் பிறகு சொர்க்கம் வரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நீங்களோ முழு கல்பமே 5 ஆயிரம் வருடங்களினுடையது ஆகும் என்று கூறுகிறீர்கள். எனவே தந்தை ஆத்மாக்களிடம் உரையாடுகிறார். நான் அரைக் கல்பத்தின் பிரியதரிசனன் ஆவேன் என்று கூறுகிறார். ஹே பதீத பாவனரே! வாருங்கள், வந்து ஆத்மாக்களாகிய எங்களைப் பிரியதரிசினிகளாகிய எங்களை தூய்மையாக்குங்கள் என்று நீங்கள் என்னை அழைத்துக் கொண்டே வந்துள்ளீர்கள். எனவே அவரது வழிப்படி நடக்க வேண்டும். கடின முயற்சி வேண்டும். பாபா, நீங்கள் தொழில் ஆகியவை செய்யாதீர்கள் என்று அப்படி ஒன்றும் கூறுவதில்லை. அவை எல்லாமே செய்ய வேண்டும். இல்லறத்தில் இருந்தபடியே குழந்தை குட்டிகளைப் பராமரித்தபடியே தன்னை ஆத்மா என்று உணர்ந்து என்னை நினைவு செய்யுங்கள் அவ்வளவே! ஏனெனில், நான் பதீத பாவனன் ஆவேன். குழந்தைகளை தாராளமாகப் பராமரியுங்கள். மற்றபடி மேற்கொண்டு குழந்தைகளை பெற்றெடுக்காதீர்கள். இல்லையென்றால் அவர்கள் நினைவிற்கு வந்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் எல்லோரும் இருக்கும் பொழுது கூட இவற்றை மறந்து விட வேண்டும். எதெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்களோ இவை எல்லாமே முடிந்து போய் விடப்போகிறது. சரீரம் முடிந்து போய் விடும். தந்தையின் நினைவினால் ஆத்மா தூய்மையாக ஆகி விடும். பிறகு சரீரமும் புதியதாகக் கிடைக்கும் இது எல்லையில்லாத சந்நியாசம் ஆகும். தந்தை புதிய வீடு கட்டுகிறார் என்றால் பின் பழைய வீட்டிலிருந்து மனம் அகன்று விடுகிறது. சொர்க்கத்தில் என்ன தான் இருக்காது? அளவற்ற சுகம் இருக்கும். சொர்க்கமோ இங்கு ஆகும். தில்வாலா கோவில் கூட முழுமையான நினைவார்த்தம் ஆகும். கீழே தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறகு சொர்க்கத்தை எங்கே காண்பிப்பது? அதை மேற் கூரையில் வைத்து விட்டுள்ளார்கள். கீழே இராஜயோகத்தின் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். மேலே இராஜ்ய பதவி நின்றுள்ளது. எவ்வளவு நல்ல கோவில் ஆகும். மேலே அச்சல்கர் இருக்கிறது. தங்க விக்கிரகங்கள் உள்ளன. அவற்றிற்கும் மேலே பின் இருப்பது குருஷிக்கர். குரு எல்லாவற்றிற்கும் மேலே அமர்ந்துள்ளார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சத்குரு ஆவார். பிறகு நடுவில் சொர்க்கத்தை காண்பித்துள்ளார்கள். எனவே இந்த தில்வாலா கோவில் முழுமையான நினைவார்த்தமாகும். இராஜயோகத்தை நீங்கள் கற்கிறீர்கள். பிறகு சொர்க்கம் இங்கு ஆகும். தேவதைகள் இங்கு இருந்தார்கள் அல்லவா? ஆனால் அவர்களுக்காக தூய்மையான உலகம் இப்பொழுது ஆகிக் கொண்டிருக்கிறது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இந்த கண்களால் அனைத்தையும் பார்த்தபடியே இவற்றை மறப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும். பழைய வீட்டிலிருந்து, உலகத்திலிருந்து மனதை அகற்றி விட வேண்டும். புதிய வீட்டை நினைவு செய்ய வேண்டும்.

 

2. ஞான ஸ்நானம் செய்து அழகான இளவரசர் ஆக வேண்டும். எப்படி தந்தை அழகான வெண்மையான பிரயாணியாக இருக்கிறார். அதுபோல அவருடைய நினைவின் மூலம் ஆத்மாவை கருமையிலிருந்து வெண்மையாக ஆக்க வேண்டும். மாயையின் யுத்தத்திற்கு பயப்படக் கூடாது. வெற்றி அடைபவராக ஆக்கிக் காண்பிக்க வேண்டும்.

 

வரதானம்:

எல்லையற்ற வைராக்கிய உணர்வின் மூலம் பழைய பழக்கவழக்கங்களின் யுத்தத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கக் கூடிய மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் ஆகுக.

 

பழைய சம்ஸ்காரங்களின் காரணத்தினால் சேவையில் அல்லது சம்மந்தம் - தொடர்புகளில் தடைகள் ஏற்படுகிறது. சம்ஸ்காரம் தான் வித விதமான ரூபத்தில் தன் பக்கம் ஈர்க்கிறது. ஏதாவது ஒன்றில் ஈர்ப்பு இருக்கும் போது அங்கு வைராக்கியம் இருக்க முடியாது. சம்ஸ்காரங்கள் துளியளவும் (அம்சம்) மறைந்திருந்தால் அது தகுந்த நேரத்தில் வம்சமாக ஆகிவிடும், வசப்படுத்தி விடும். ஆகையால் ஞானம் நிறைந்தவராக ஆகி, எல்லையற்ற வைராக்கிய மனப்பாங்கு மூலம் சம்மந்தம், பொருட்களின் யுத்திலிருந்து விடுபட்டிருந்தால் பாதுகாப்பாக இருப்பீர்கள்.

 

சுலோகன்:

மாயையிடம் பயமற்றவர்களாகவும், தனது சம்மந்தங்களில் பணிவானவர்களாகவும் ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி