13.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நினைவின் உழைப்பை நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும், நீங்கள் தங்களை ஆத்மா என்று புரிந்து தந்தையாகிய என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நான் உங்களை அனைத்து பாவங்களிலிருந்தும் விடுவித்து விடுவேன்.

 

கேள்வி:

அனைவருடைய சத்கதிக்கான இடம் எது, அதனுடைய மகத்துவம் முழு உலகத்திற்கும் எவ்விதம் தெரிய வரும்?

 

பதில்:

அபு பூமி அனைவருடைய சத்கதிக்கான இடமாகும். நீங்கள் பிரம்மா குமாரிகள் என்ற பெயருக்கு முன்னால் அடைப்புக்குறியிட்டு, சர்வ உத்தமமான தீர்த்த ஸ்தானம் என்று எழுதலாம். முழு உலகத்தின் சத்கதி இங்கு தான் நடக்க வேண்டும். அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் பாபா மற்றும் ஆதாம்(பிரம்மா) இங்கே அமர்ந்து கொண்டு அனைவரையும் சத்கதி அடைய வைக்கின்றனர். ஆதாம் என்றால் மனிதன், அவர் தேவதை அல்ல. அவரை பகவான் என்றும் சொல்ல முடியாது.

 

ஓம் சாந்தி.

இரட்டை ஓம் சாந்தி ஏனென்றால் ஒன்று பாபாவினுடையது, மற்றொன்று தாதாவினுடையதாகும். இருவருடைய ஆத்மாவும் இருக்கிறது அல்லவா! அவர் பரம் ஆத்மா ஆவார், இவர் ஆத்மா. அவரும் இலட்சியத்தைக் கூறுகின்றார், நான் பரந்தாமத்தில் இருக்கக் கூடியவன், இருவரும் அப்படி கூறுகிறார்கள். பாபா கூறுகின்றார், ஓம் சாந்தி, இவரும் ஓம் சாந்தி என்று கூறுகின்றார். குழந்தைகளும் ஓம் சாந்தி என்று சொல்கிறார்கள் அதாவது ஆத்மாக்களாகிய நாம் சாந்தி தாமத்தில் இருக்கக் கூடியவர்கள். இங்கே தனித்தனியாக அமர வேண்டும். சரீரம் சரீரத்தோடு சேரக் (தொடக்) கூடாது ஏனென்றால் ஒவ்வொருவருடைய நிலையிலும், யோகத்திலும் இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. சிலர் மிகவும் நன்றாக நினைவு செய்கிறார்கள், சிலர் முற்றிலும் நினைவு செய்வதில்லை. எனவே யார் முற்றிலும் நினைவு செய்வதில்லையோ அவர்கள் பாவாத்மாக்கள், தமோபிரதானமானவர்கள், மேலும் யார் நினைவு செய்கிறார்களோ அவர்கள் புண்ணிய ஆத்மாக்கள், சதோபிரதானமானவர்கள். நிறைய வித்தியாசம் ஆகி விட்டது அல்லவா! வீட்டில் ஒன்றாக இருக்கிறார்கள் ஆனால் வித்தியாசம் இருக்கிறது அல்லவா! ஆகையினால் தான் பாகவதத்தில் அசுரர்கள் என்று பாடப்பட்டுள்ளது. அது இந்த சமயத்தின் விஷயமே ஆகும். பாபா அமர்ந்து குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார் இது ஈஸ்வரிய சரித்திரமாகும், இதை பக்தி மார்க்கத்தில் பாடுகிறார்கள். சத்யுகத்தில் எதுவும் நினைவிருக்காது, அனைத்தையும் மறந்து விடுவீர்கள். பாபா இப்போது தான் படிப்பினை கொடுக்கின்றார். சத்யுகத்தில் இதை முற்றிலும் மறந்து விடுகிறீர்கள், பிறகு துவாபர யுகத்தில் சாஸ்திரம் போன்றவைகளை உருவாக்குகிறார்கள் மேலும் இராஜயோகத்தை கற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் இராஜயோகத்தை கற்றுக் கொடுக்க முடியாது. அதை பாபா எப்போது நமக்கு முன்பாக வருகிறாரோ, அப்போது தான் வந்து கற்றுக் கொடுக்கின்றார். பாபா எப்படி இராஜயோகத்தை கற்றுக் கொடுக்கின்றார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்து இப்படித் தான் சொல்வார் - இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, இப்படி ஒருபோதும் எந்த மனிதனும், மனிதர்களை சொல்ல முடியாது. தேவதைகள் தேவதைகளையும் சொல்ல முடியாது. ஒரு ஆன்மீக தந்தை தான் ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கூறுகின்றார் - ஒரு முறை நடிப்பை நடித்தீர்கள் என்றால் பிறகு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பை நடிப்பீர்கள் ஏனென்றால் பிறகு ஏணிப்படியில் இறங்குகின்றீர்கள் அல்லவா! உங்களுடைய புத்தியில் இப்போது முதல்-இடை-கடைசியின் இரகசியம் இருக்கிறது. அது சாந்திதாமம் அல்லது பரந்தாமம் என்பதைத் தெரிந்துள்ளீர்கள். வித,விதமான தர்மத்தைச் சேர்ந்த ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் அங்கே வரிசைகிரமமாக இருக்கின்றோம், நிராகார உலகத்தில். எப்படி நட்சத்திரங்களை பார்க்கின்றீர்கள் அல்லவா! - எப்படி நிற்கின்றன என்பது பார்ப்பதற்குத் தெரிவதில்லை. மேலே எந்த பொருளும் இல்லை. பிரம்ம தத்துவம் இருக்கிறது. இங்கே நீங்கள் பூமியில் நிற்கின்றீர்கள், இது கர்ம க்ஷேத்திமாராகும். இங்கே வந்து சரீரத்தை எடுத்து கர்மம் செய்கிறீர்கள். நீங்கள் என்னிடமிருந்து ஆஸ்தியை அடைகிறீர்கள் என்றால் 21 பிறவிகளுக்கு உங்களுடைய கர்மம் அகர்மமாக ஆகி விடுகிறது. ஏனென்றால் அங்கே இராவண இராஜ்யமே இருப்பதில்லை என்று பாபா புரிய வைக்கின்றார். அது ஈஸ்வரிய இராஜ்யமாகும். அதை இப்போது ஈஸ்வரன் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். குழந்தைகளுக்கு புரியவைத்துக் கொண்டே இருக்கின்றார் - சிவபாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள். சொர்க்கத்தை சிவபாபா ஸ்தாபனை செய்கிறார் அல்லவா. எனவே சிவபாபாவை மற்றும் சுகதாமத்தை நினைவு செய்யுங்கள். முதல்-முதலில் சாந்திதாமத்தை நினைவு செய்தீர்கள் என்றால் சக்கரமும் நினைவிற்கு வந்துவிடும். குழந்தைகள் மறந்து விடுகிறார்கள், ஆகையினால் அடிக்கடி நினைவூட்ட வேண்டியிருக்கிறது. ஹே ! இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள்

 

மேலும் பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய பாவம் சாம்பலாகும். நீங்கள் நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்களிலிருந்து விடுவிப்பேன் என்று உறுதியளிக்கின்றேன். பாபா தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் சர்வசக்திவான் அதிகாரமுடையவர், அவரை உலக சர்வ சக்திவான் என்று சொல்லப்படுகிறது. அவர் முழு உலகத்தின் முதல்- இடை-கடைசியைத் தெரிந்திருக்கின்றார். வேதங்கள்-சாஸ்திரங்கள் போன்ற அனைத்தையும் தெரிந்திருக்கிறார் ஆகையினால் தான் இதில் எந்த சாரமும் இல்லை என்று கூறுகின்றார். கீதையில் கூட எந்த சாரமும் இல்லை. அது அனைத்து சாஸ்திரங்களுக்கு தாய் தந்தையாக இருக்கிறது, மற்றவை அனைத்தும் குழந்தைகளாகும். எப்படி முதலில் பிரம்மா இருக்கின்றார், மற்றவர்கள் அனைவரும் குழந்தைகளோ அதுபோல பிரஜாபிதா பிரம்மாவை ஆதாம் என்று சொல்லப்படுகிறது. ஆதாம் என்றால் மனிதன். இவர் மனிதன் அல்லவா! எனவே இவரை தேவதை என்று சொல்ல முடியாது. ஆங்கிலத்தில் ஏடம் என்பதை ஆதாம் என்று சொல்கிறார்கள். பக்தர்கள் பிரம்மா என்ற எடம் (மனிதனை) தேவதை என்று சொல்லி விடுகிறார்கள். ஏடம் என்றால் மனிதன் என்று பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார். தேவதையும் இல்லை, பகவானும் இல்லை. இலஷ்மி - நாராயணன் தேவதைகளாவர். தேவதைகள் சொர்க்கத்தில் இருந்தனர். புதிய உலகம் அல்லவா! அது உலத்தின் அதிசயமாகும். மற்றபடி அவையனைத்தும் மாயையின் அதிசயங்களாகும். துவாபர யுகத்திற்கு பிறகு மாயையின் அதிசயங்கள் வருகின்றன. ஈஸ்வரிய அதிசயம் - சொர்க்கம், ஹெவன், அதை பாபா ஸ்தாபனை செய்கின்றார். இப்போது ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த தில்வாரா கோயின் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. மனிதர்கள் யாத்திரைக்கு செல்கிறார்கள், என்றால் அனைத்தையும் விட நல்ல இடம் இதுவாகும். நீங்கள் எழுதுகிறீர்கள் அல்லவா! பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம், அபுமலை. அப்போது அடைப்புக் குறியிட்டு (சர்வ உத்தமமான தீர்த்த ஸ்தானம்) என்று எழுத வேண்டும். ஏனென்றால் அனைவருக்கும் சத்கதி இங்கிருந்து தான் நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இதை யாரும் தெரிந்திருக்க வில்லை. எப்படி கீதை அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாய்-தந்தையாக இருக்கிறதோ, அதுபோல் அனைத்து தீர்த்தங்களிலும் உயர்ந்த தீர்த்த ஸ்தலம் அபுமலையாகும். அப்போது மனிதர்கள் படிப்பார்கள், கவனம் செல்லும். முழு உலகத்திலும் உள்ள தீர்த்தங்களில் இது அனைத்திலும் பெரிய தீர்த்தமாகும், இங்கே பாபா அமர்ந்து அனைவருக்கும் சத்கதியை ஏற்படுத்துகின்றார். நிறைய தீர்த்தங்களாகிவிட்டன. காந்தியின் சமாதியைக் கூட தீர்த்தம் என்று புரிந்து கொள்கிறார்கள். அனைவரும் சென்று அங்கே மலர்கள் போன்றவற்றைத் தூவுகிறார்கள், அவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு தெரியும் அல்லவா! எனவே உங்களுக்கு இங்கே அமர்ந்து உள்ளுக்குள் மிகுந்த குஷி ஏற்பட வேண்டும். நாம் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். இப்போது பாபா கூறுகின்றார் - தங்களை ஆத்மா என்று புரிந்து என்னை நினைவு செய்யுங்கள். படிப்பு கூட மிகவும் சகஜமானதாகும். செலவு எதுவும் ஆவதில்லை. உங்களுடைய மம்மாவிற்கு ஒரு பைசா செலவானதா? ஒரு பைசா செலவாகாமல் படித்து எவ்வளவு புத்திசாலியாக நம்பர் ஒன்னாக ஆகி விட்டார்! இராஜயோகினியாக ஆகி விட்டார் அல்லவா! மம்மாவைப் போல் யாரும் வரவில்லை. பாருங்கள், பாபா ஆத்மாக்களுக்குத் தான் அமர்ந்து புரிய வைக்கின்றார். ஆத்மாக்களுக்குத் தான் இராஜ்யம் கிடைக்கிறது, ஆத்மா தான் இராஜ்யத்தை இழந்தது. இவ்வளவு சிறிய ஆத்மா எவ்வளவு காரியங்களை செய்கிறது! கெட்டதிலும் கெட்ட காரியம் விகாரத்தில் செல்வதாகும். ஆத்மா 84 பிறவிகளின் நடிப்பை நடிக்கிறது. சிறிய ஆத்மாவில் எவ்வளவு சக்தி இருக்கிறது! முழு உலகத்தின் மீதும் இராஜ்யம் செய்கிறது. இந்த தேவதைகளின் ஆத்மாவில் எவ்வளவு சக்தி இருக்கிறது! ஒவ்வொரு தர்மத்திலும் அதனதனுடைய சக்தி இருக்கிறது அல்லவா! கிறிஸ்துவ தர்மத்தில் எவ்வளவு சக்தி இருக்கிறது! ஆத்மாவில் சக்தி இருக்கிறது அது சரீரத்தின் மூலம் கர்மம் செய்கிறது. ஆத்மா தான் இங்கே வந்து இந்த கர்ம க்ஷேத்திரத்தில் கர்மம் செய்கிறது. அங்கே கெட்ட கர்மங்கள் நடப்பதில்லை. இராவண இராஜ்யம் நடக்கும்போது தான் ஆத்மா விகார வழியில் செல்கிறது. மனிதர்கள், விகாரம் எப்போதுமே இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்கள். அங்கே இராவண இராஜ்யமே இல்லை எனும்போது விகாரம் எப்படி இருக்க முடியும் என்று நீங்கள் புரிய வைக்க முடியும். அங்கே யோகபலம் தான் இருக்கிறது. பாரதத்தின் இராஜயோகம் புகழ்பெற்றதாகும். நிறைய பேர் கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் கற்றுக் கொடுத்தால் தான் முடியும். வேறு யாரும் கற்றுக் கொடுக்க முடியாது. எப்படி மகரிஷி இருந்தார், யோகத்தை கற்றுக்கொடுக்க எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் இவர்கள் ஹடயோகிகள் இவர்கள் எப்படி இராஜயோகத்தை கற்றுக் கொடுக்க முடியும் என்று உலகத்திற்கு தெரிந்ததா என்ன? சின்மயானந்தாவிடம் எவ்வளவு பேர் செல்கிறார்கள்! உண்மையில் பாரதத்தின் பழமையான இராஜயோகத்தை பிரம்மாகுமாரிகள் தான் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று ஒரு முறை அவர் சொல்லிவிடட்டும், அவ்வளவு தான்! ஆனால் இப்போது அந்த குரல் ஒலிப்பதற்கான (சொல்வதற்கான) விதி இல்லை. அனைவரும் புரிந்து கொள்வார்களா என்ன! மிகுந்த உழைப்பாகும், கடைசியில் தான் மகிமைகள் ஏற்படும், ஆஹா பிரபு! ஆஹா சிவபாபா! தங்களுடைய லீலையே லீலை ! என்று சொல்கிறார்கள் அல்லவா! உங்களைத் தவிர பரம தந்தையை, பரம ஆசிரியரை, பரம சத்குருவை வேறு யாரும் புரிந்து கொள்வதில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இங்கேயும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை போகப்போக மாயை துன்புறுத்தி விடுகிறது எனவே அவர்கள் எதுவும் புரியாதவர்களாக ஆகி விடுகிறார்கள். மிகப்பெரிய குறிக்கோளாகும். யுத்த மைதானமாக இருக்கிறது, இதில் மாயை நிறைய தடைகளை ஏற்படுத்துகிறது. அந்த மக்கள் வினாசத்திற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே நீங்கள் 5 விகாரங்களை வெல்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வெற்றிக்காகவும், அவர்கள் வினாசத்திற்காகவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு காரியங்களும் ஒன்றாக நடக்கும் அல்லவா! இன்னும் நேரம் இருக்கிறது. நம்முடைய இராஜ்யம் ஸ்தாபனை ஆகி விட்டதா என்ன! இராஜாக்கள், பிரஜைகள் இப்போது அனைவரும் உருவாக வேண்டும். நீங்கள் அரைக்கல்பத்திற்கான ஆஸ்தியை பாபாவிடமிருந்து பெறுகிறீர்கள். மற்றபடி யாருக்கும் மோட்சம் கிடைப்பதில்லை. உலகினர் இன்னார் மோட்சத்தை அடைந்து விட்டார் என்று சொல்கிறார்கள், இறந்த பிறகு அவர் எங்கு சென்றார் என்று அவர்களுக்கு தெரியுமா என்ன! வெறுமனே கட்டுக் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

யார் சரீரத்தை விடுகிறார்களோ, அவர்கள் மீண்டும் வேறொரு சரீரத்தை கண்டிப்பாக எடுப்பார்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மோட்சத்தை அடைவதில்லை. நீர்குமிழி நீரோடு கலந்து விடுகிறது என்பது போல் கிடையாது. இந்த சாஸ்திரங்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்தின் பொருட்கள் என்று பாபா கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் நேரடியாக கேட்கின்றீர்கள். சூடான ஹல்வா சாப்பிடுகிறீர்கள். அனைவரையும் விட சூடான ஹல்வாவை சாப்பிடுவது யார்? (பிரம்மா) இவர் முற்றிலும் அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். உடனே கேட்கின்றார் மற்றும் தாரணை செய்கின்றார் பிறகு இவர் தான் உயர்ந்த பதவியை அடைகின்றார். சூட்சுமவதனத்தில், வைகுண்டத்தில் இவருடைய காட்சியைத் தான் பார்க்கிறார்கள். இங்கேயும் கூட இந்தக் கண்களின் மூலம் அவரைத் தான் பார்க்கிறோம். பாபா அனைவருக்கும் படிப்பிக்கின்றார். மற்றபடி நினைவினுடைய உழைப்பு இருக்கிறது. நினைவிலிருப்பது உங்களுக்கு கடினமாக இருக்கிறது, அதுபோல் தான் இவருக்கும் இருக்கிறது. இதில் கிருபையின் விஷயம் எதுவும் இல்லை. நான் கடனாக எடுத்திருக்கிறேன், அவருக்கு அதனுடைய கணக்கு- வழக்கை கொடுத்து விடுவேன் என்று பாபா கூறுகின்றார். மற்றபடி நினைவினுடைய முயற்சியை இவரும் செய்ய வேண்டும். பக்கத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதையும் புரிந்துள்ளேன். பாபாவை நான் நினைவு செய்கின்றேன் இருந்தாலும் கூட மறந்து விடுகின்றேன். அனைத்திலும் அதிகமாக இவர் தான் உழைக்க வேண்டியுள்ளது. யுத்த மைதானத்தில் யார் மகாரதிகள் பலசாலிகளாக இருக்கிறார்களோ, அனுமனைப் போல், அவர்களை தான் மாயை சோதனை செய்கிறது. ஏனென்றால் அவர் மகாவீராக இருந்தார். எந்தளவிற்கு அதிக பலசாலியோ அந்தளவிற்கு அதிகமாக மாயை பரீட்சை செய்கிறது. அதிக புயல் வருகிறது. பாபா எங்களுக்கு இது-இதெல்லாம் நடக்கிறது, என்று குழந்தைகள் கடிதம் எழுதுகிறார்கள். இவையனைத்தும் நடக்கும் என்று பாபா கூறுகின்றார். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாபா தினமும் புரிய வைக்கின்றார். பாபா, மாயை நிறைய புயலைக் கொண்டு வருகிறது என்று கடிதம் எழுதுகிறார்கள். சிலருக்கு தேக-அபிமானம் வருகிறது எனும்போது பாபாவிற்கு சொல்வதில்லை. நாம் இப்போது மிகுந்த புத்திசாலிகளாக ஆகின்றோம். ஆத்மா தூய்மையாக ஆவதின் மூலம் பிறகு சரீரமும் தூய்மையாகக் கிடைக்கிறது. ஆத்மா எவ்வளவு ஜொலிக்கக் கூடியதாக ஆகி விடுகிறது! முதலில் ஏழைகள் தான் ஞானத்தை எடுத்துக் கொள்கிறார்கள். பாபாவும் கூட ஏழைப்பங்காளன் என்று பாடப்பட்டுள்ளார். மற்றபடி செல்வந்தர்கள் காலம் கடந்து வருவார்கள். எதுவரை சகோதர-சகோதரிகளாக ஆக வில்லையோ, அதுவரை சகோதர- சகோதரர்களாக எப்படி ஆகமுடியும், என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என்றால் சகோதர-சகோதரிகளே ஆவீர்கள். பிறகு சகோதர-சகோதரர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். இது கடைசி நேரத்தின் சம்மந்தமாகும், பிறகு மேலேயும் சென்று சகோதரர்களைத் தான் சந்திப்பீர்கள். பிறகு சத்யுகத்தில் புதிய சம்மந்தம் ஆரம்பமாகும். அங்கே மச்சினன், சித்தப்பா, மாமா போன்ற நிறைய சம்மந்தங்கள் இருக்காது. சம்மந்தங்கள் குறைவாகவே இருக்கும். பிறகு அதிகரிக்கப்படுகிறது. இப்போது பாபா கூறுகின்றார், சகோதர-சகோதரி கூட அல்ல, சகோதர-சகோதரர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். பெயர் ரூபத்திருந்தும் விடுபட்டு விட வேண்டும். பாபா சகோதரர்களுக்கு (ஆத்மாக்களுக்கு) தான் படிப்பிக்கின்றார். பிரஜாபிதா பிரம்மா இருக்கின்றார் என்றால் சகோதர-சகோதரிகள் அல்லவா! கிருஷ்ணர் அவரே குழந்தை ஆவார். பிறகு அவர் எப்படி சகோதர-சகோதரர்களாக மாற்றுவார்? கீதையில் கூட இந்த விஷயங்கள் இல்லை. இது முற்றிலும் தனிப்பட்ட ஞானமாகும். நாடகத்தில் அனைத்தும் பதிவாகியுள்ளது. ஒரு வினாடியினுடைய நடிப்பு மற்றொரு வினாடியில் ஒரே மாதிரியாக இருக்காது. எவ்வளவு மாதங்கள், எத்தனை மணிகள், எத்தனை நாட்கள் கடந்து செல்ல வேண்டும், பிறகு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் இப்படியே கடந்து செல்லும். குறைந்த புத்தி யுடையவர்கள் அந்தளவிற்கு தாரணை செய்ய முடியாது. ஆகையினால் பாபா கூறுகின்றார், தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள், எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள், இது மிகவும் சகஜமாகும். பழைய உலகத்தின் வினாசம் கூட நடக்க வேண்டும். நான் சங்கமம் ஏற்படும் போது தான் வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். நீங்கள் தான் தேவி-தேவதைகளாக இருந்தீர்கள். இவருடைய (இலஷ்மி - நாராயணனுடைய) இராஜ்யம் இருந்த போது வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது இவர்களுடைய இராஜ்யம் இல்லை. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) இப்போது கடைசி நேரமாகும், வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் ஆகையினால் தங்களுடைய புத்தியை பெயர்-ரூபத்திலிருந்து நீக்கி விட வேண்டும். நாம் ஆத்மாக்கள் சகோதர-சகோதரர்கள், என்ற பயிற்சியை செய்ய வேண்டும். தேக-அபிமானத்தில் வரக்கூடாது.

 

2) ஒவ்வொருவருடைய மனநிலை மற்றும் யோகத்தில் இரவு-பகலுக்கு உண்டான வித்தியாசம் இருக்கிறது, ஆகையினால் தனித்தனியாக அமர வேண்டும். சரீரம், சரீரத்தை தீண்டக்கூடாது. புண்ணிய ஆத்மாவாக ஆவதற்கு நினைவினுடைய உழைப்பில் ஈடுபட வேண்டும்.

 

வரதானம்:

நினைவு மற்றும் சேவை இதன் சம நிலையின் மூலம் தந்தையின் உதவியை அனுபவம் செய்யக் கூடிய ஆசிர்வாதத்திற்கு தகுதியான ஆத்மா ஆகுக.

 

எங்கு நினைவு மற்றும் சேவையில் சம நிலையிருக்கிறதோ அதாவது சமமாக இருக்கிறதோ அங்கு தந்தையின் விசேஷ  உதவியின் அனுபவம் ஏற்படும். தந்தையோ அசரீரியாக இருக்கின்றார், எனவே பாப்தாதாவின் ஆசிர்வாதம் எளிதாக, இயற்கையாகவே கிடைத்து விடும், அதன் மூலம் முடியாத காரியமும் முடிந்து விடும். இது தான் உதவி, அதாவது ஆசிர்வாதமாகும். இப்படிப்பட்ட ஆசிர்வாதம் அடைவதற்கு தகுதியான ஆத்மாக்களாக இருக்க வேண்டும், அதாவது ஒரு அடியில் பல மடங்கு வருமானம் சேமிப்பாகி விட வேண்டும்.

 

சுலோகன்:

சக்தி கொடுப்பதற்காக அழிவற்ற சுகம், அமைதி அல்லது உண்மையான அன்பிற்கான இருப்பை (ஸ்டாக்) சேமியுங்கள்.

 

ஓம்சாந்தி