18.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் எந்த தூய்மையற்ற தேகதாரிகளுடனும் அன்பு வைக்கக் கூடாது, ஏனென்றால் நீங்கள் தூய்மையான உலகிற்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள், ஒரு தந்தை மீது அன்பு செலுத்த வேண்டும்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் எந்த பொருளால் துன்பப்படக் கூடாது, ஏன்?

 

பதில்:

நீங்கள் தனது இந்த பழைய சரீரத்தால் கொஞ்சம் கூட துன்பப்படக் கூடாது, ஏனென்றால் இந்த சரீரம் மிக மிக மதிப்புமிக்கதாகும். ஆத்மா இந்த சரீரத்தில் அமர்ந்து தந்தையை நினைவு செய்து மிகப் பெரிய லாட்டரியை எடுத்துக் கொண்டிருக்கிறது. தந்தையின் நினைவில் இருந்தால் குμயின் சத்துணவு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, இப்போது தூர தேசத்தில் இருக்கக் கூடியவர்கள், தூர தேசத்துப் பிரயாணிகளாக இருக்கிறீர்கள். நாம் ஆத்மாக்களாக இருக்கிறோம், மேலும் இப்போது தூரதேசம் செல்வதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஆத்மாக்களாகிய நாம் தூர தேசத்தில் வசிப்பவர்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே தெரிந்துள்ளீர்கள், மேலும் தூர தேசத்தில் வசிக்கும் தந்தையைக் கூட அழைக்கிறீர்கள் - வந்து எங்களையும் தூர தேசத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று. இப்போது தூர தேசத்தில் வசிக்கக்கூடிய தந்தை குழந்தைகளாகிய உங்களை அங்கே அழைத்துச் செல்கிறார். நீங்கள் ஆன்மீக பிரயாணிகளாக இருக்கிறீர்கள், ஏனென்றால் இந்த சரீரத்துடன் இருக்கிறீர்கள் அல்லவா! ஆத்மா தான் பிரயாணம் செய்யும். சரீரத்தை இங்கேயே விட்டுவிடும். மற்றபடி ஆத்மாதான் பிரயாணம் செய்யும். ஆத்மா எங்கே செல்லும்? தனது ஆன்மீக உலகிற்கு. இது ஸ்தூலமான உலகம், அது ஆன்மீக உலகம். இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும், அங்கிருந்து நடிப்பை நடிப்பதற்காக இங்கே வந்துள்ளோம் என்பதை குழந்தைகளுக்கு தந்தை புரிய வைத்திருக்கிறார். இது மிகப் பெரிய மண்டபம் அல்லது மேடையாகும். மேடையின் மீது நடிப்பை நடித்துவிட்டு பிறகு அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். நாடகம் முடிவடையும்போது செல்வோம் அல்லவா! இப்போது நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள், உங்களின் புத்தியின் தொடர்பு வீடு மற்றும் இராஜ்யத்தின் மீது உள்ளது. இதை உறுதியிலும் உறுதியாக ஆக்கிக் கொள்ளுங்கள், ஏனென்றால் இறுதி நிலைக்குத் தகுந்தவாறு கதி ஏற்படும் என்ற பாடல் உள்ளது. இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், பகவான் சிவபாபா நமக்கு படிப்பை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்துள்ளீர்கள். பகவான் இந்த சங்கம யுகத்தைத் தவிர வேறு எப்போதும் படிப்பிக்க மாட்டார். முழு 5 ஆயிரம் வருடங்களில் நிராகார பகவான் தந்தை ஒரே முறை மட்டும் வந்து படிப்பிக்கிறார். உங்களுக்கு இந்த உறுதியான நம்பிக்கை உள்ளது. படிப்பும் கூட எவ்வளவு சுலபமாக உள்ளது! இப்போது வீட்டுக்குச் செல்ல வேண்டும். அந்த வீட்டின் மீது முழு உலகத்திற்கும் அன்பு உள்ளது. முக்தி தாமம் செல்வதற்கு அனைவரும் விரும்புகின்றனர், ஆனால் அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை. மனிதர்களின் புத்தி இந்த சமயத்தில் எப்படி உள்ளது! மேலும் உங்களின் புத்தி இப்போது எப்படி ஆகியுள்ளது! எவ்வளவு வித்தியாசம் உள்ளது! உங்களுடையது சுத்தமான புத்தி - வரிசைக்கிரமமான முயற்சிக்குத் தகுந்தாற்போல. முழு உலகின் முதல், இடை, கடைசியின் ஞானம் உங்களுக்கு நன்றாக தெரிந்து உள்ளது. நாம் இப்போது முயற்சி செய்து நரனிலிருந்து நாராயணன் ஆக வேண்டும் என்பது உங்கள் மனதில் உள்ளது. இங்கிருந்து முதலில் நமது வீட்டிற்குச் செல்வோம் அல்லவா! எனவே மகிழ்ச்சியுடன் செல்ல வேண்டும். தேவதைகள் சத்யுகத்தில் மகிழ்ச்சியுடன் சரீரத்தை விடுவது போல இந்த பழைய உடலையும் மகிழ்ச்சியுடன் விட வேண்டும். இதனால் கஷ்டம் அடையக் கூடாது, ஏனென்றால் இது மிகவும் மதிப்பு வாய்ந்த சரீரம் ஆகும். இந்த சரீரத்தின் மூலம் தான் தந்தையிடமிருந்து லாட்டரி கிடைக்கிறது. நாம் தூய்மையடையாத வரை வீட்டிற்குச் செல்ல முடியாது. தந்தையை நினைவு செய்தபடி இருந்தோம் என்றால் அப்போது தான் அந்த யோகபலத்தின் மூலம் பாவங்களின் சுமை இறங்கும். இல்லாவிடில் மிகவும் தண்டனைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும். லௌகீக சம்மந்தத்திலும் கூட குழந்தை ஏதாவது அழுக்கான தூய்மையற்ற வேலை செய்தால் தந்தை கோபம் கொண்டு தடியாலும் கூட அடித்து விடுகிறார், ஏனென்றால் விதிகளுக்குப் புறம்பாக பதீதராகின்றனர். யாருடனாவது சட்ட விரோதமான அன்பு வைத்தாலும் கூட தாய், தந்தைக்குப் பிடிப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இங்கே இருக்கக் கூடாது என்று இந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தை கூறுகிறார். இப்போது நீங்கள் புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். அங்கே விகாரம் நிறைந்தவர்கள், பதீதர்கள் யாரும் இருப்பதில்லை. ஒரு பதீத பாவன தந்தைதான் வந்து உங்களை இப்படி தூய்மையாக்குகிறார். தந்தை தாமே கூறுகிறார் - என்னுடைய பிறவி தெய்வீகமானது மற்றும் அலௌகிகமானது, வேறு எந்த ஆத்மாவும் என்னைப் போல் சரீரத்தில் பிரவேசம் செய்ய முடியாது. தர்ம ஸ்தாபகர்கள் வருகின்றனர், அவர்களின் ஆத்மாவும் கூட பிரவேசம் செய்கின்றன, ஆனால் அந்த விஷயமே வேறாகும். நான் வருவதே அனைவரையும் திரும்பி அழைத்துச் செல்வதற்காக. அவர்கள் தம் நடிப்பை நடிப்பதற்காக மேலேயிருந்து கீழே இறங்குகின்றனர். நானோ அனைவரையும் அழைத்துச் செல்கிறேன், பிறகு எப்படி முதன் முதலாக புதிய உலகில் இறங்குவீர்கள் என்பதையும் கூறுகிறேன். அந்தப் புதிய உலகமாகிய சத்யுகத்தில் யாருமே கொக்காக இருப்பதில்லை. தந்தை வருவதே கொக்குகளுக்கு இடையில். பிறகு உங்களை அன்னங்களாக மாற்றுகிறார். இப்போது நீங்கள் அன்னங்களாக ஆகியிருக்கிறீர்கள், முத்துக்களையே தேர்ந்தெடுக்கிறீர்கள். சத்யுகத்தில் உங்களுக்கு இரத்தினங்கள் கிடைக்காது. இங்கு நீங்கள் இந்த ஞான இரத்தினங்களைத் தேர்ந்தெடுத்து அன்னப்ப பறவை ஆகிறீர்கள். கொக்கிலிருந்து அன்னங்களாக நீங்கள் எப்படி ஆகிறீர்கள் என்பதை தந்தை வந்து புரிய வைக்கிறார். இப்போது உங்களை அன்னங்களாக மாற்றுகிறார். தேவதைகளை அன்னங்கள் என்றும், அசுரர்களை கொக்குகள் என்றும் சொல்வோம். இப்போது நீங்கள் குப்பையை விட்டு விட்டு முத்துக்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

 

உங்களைத் தான் கோடான கோடி மடங்கு பாக்கியசாலி என்று சொல்கிறார். உங்களின் பாதங்களின் மீது கோடிகளின் முத்திரை (அடையாளம்) விழுகிறது. சிவபாபாவுக்கு கோடிகள் ஆகும்படியாக பாதங்கள் இல்லை. அவர் உங்களை கோடான கோடி மடங்குபாக்கியசாலியாக ஆக்குகிறார். நான் உங்களை உலகின் எஜமானன் ஆக்குவதற்காக வந்துள்ளேன். இந்த அனைத்து விஷயங்களும் நல்ல விதமாக புரிந்து கொள்ள வேண்டியவை. சொர்க்கம் இருந்தது என்று மனிதர்கள் புரிந்து கொள்கின்றனர் அல்லவா! . ஆனால் எப்போது இருந்தது பிறகு மீண்டும் எப்படி உருவாகும் என்பது தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறீர்கள். அவர்கள் அனைவரும் காரிருளில் இருக்கின்றனர். இந்த இலட்சுமி நாராயணர் எப்போது, எப்படி உலகின் எஜமான் ஆனார்கள் என்பதே தெரியாது. 5 ஆயிரம் வருடங்களின் விஷயம் ஆகும். நீங்கள் எப்படி நடிப்பை நடிப்பதற்காக வந்திருக்கிறீர்களோ, அப்படியே நானும் வருகிறேன் என்று தந்தை வந்து புரிய வைக்கிறார். நீங்கள் அழைப்பிதழ் கொடுத்து அழைக்கிறீர்கள் - பாபா பதீதர்களாகிய எங்களை வந்து பாவனமாக்குங்கள். வேறு யாரையும் இப்படிச் சொல்லி அழைப்பதில்லை, தர்மத்தை ஸ்தாபனை செய்பவர்களையும் கூட வந்து அனைவரையும் பாவனமாக்குங்கள் என்று சொல்வதில்லை. கிறிஸ்துவையோ, புத்தரையோ பதீத பாவனர் என்று சொல்வதில்லை. சத்கதியை வழங்குபவர்தான் குரு ஆவார். அவர்கள் வருகின்றனர், அவர்களுக்குப் பின்னால் அனைவரும் கீழே இறங்க வேண்டும். இங்கிருந்து திரும்ப அழைத்துச் செல்பவர், அனைவருக்கும் சத்கதி வழங்குபவர் அகால மூர்த்தியான ஒரு தந்தையே ஆவார். உண்மையில் சத்குரு என்ற வார்த்தை தான் சரியானதாகும். உங்கள் அனைவரையும் விட சரியான வார்த்தையை சீக்கியர்கள் சொல்கின்றனர். உரத்த குரலில் சொல்கின்றனர் - சத்குரு அகால் (அழிவற்றவர்). மிகவும் உரத்த குரலில் இராகத்துடன் சொல்கின்றனர் - சத்குரு அகால மூர்த்தி. மூர்த்தியே (உருவம்) இல்லை என்றால் அவர் பிறகு சத்குருவாக எப்படி ஆவார், சத்கதி எப்படி வழங்குவார்? அந்த சத்குரு தாமே வந்து தமது அறிமுகத்தைக் கொடுக்கிறார் - நான் உங்களைப் போல பிறவி எடுப்பதில்லை. மற்ற அனைத்து சரீரதாரிகளும் அமர்ந்து சொல்கின்றனர். உங்களுக்கு அசரீரியாக இருக்கும் ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கிறார். இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. இந்த சமயத்தில் மனிதர்கள் செய்பவை அனைத்தையும் தவறாகத் தான் செய்கின்றனர், ஏனென்றால் இராவணனின் வழியில் இருக்கின்றனர் அல்லவா! அனைவருக்குள்ளும் 5 விகாரங்கள் உள்ளன. இப்போது இராவண இராஜ்யம் நடக்கிறது, இந்த விஷயங்களை விரிவாக தந்தை வந்து புரிய வைக்கிறார். இல்லாவிட்டால் முழு உலகத்தின் சக்கரத்தைப் பற்றி எப்படி தெரியும்? இந்த சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பது தெரிய வேண்டும் அல்லவா! பாபா புரிய வையுங்கள் என்றும் கூட நீங்கள் சொல்வதில்லை. தாமாகவே தந்தை புரிய வைத்தபடி இருக்கிறார். நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்க வேண்டிய அவசியமிருப்பதில்லை. பகவான் தந்தையாக இருப்பவர். தந்தையின் வேலையே அனைத்தையும் தானாகவே சொல்வது, தானாகவே அனைத்தையும் செய்வது. குழந்தைகளை பள்ளிக் கூடத்தில் தந்தை தாமாகவே அமர்த்துகிறார். வேலையில் அமர்த்துகின்றனர், பிறகு அவர்களுக்குக் கூறுகின்றனர் - 60 வருடங்களுக்குப் பிறகு அனைத்தையும் விட்டு விட்டு பகவானை பஜனை செய்ய வேண்டும், வேத சாஸ்திரங்கள் முதலானவைகளைப் படிக்க வேண்டும், பூஜை செய்ய வேண்டும். நீங்கள் அரைக் கல்ப காலம் பூஜாரிகளாகி இருந்தீர்கள், பிறகு அரைக் கல்பத்திற்கு பூஜைக்குரியவர் ஆகிறீர்கள். தூய்மையடைவது எப்படி என்பதற்காக எவ்வளவு எளிதாகப் புரிய வைக்கப்படுகிறது. பிறகு பக்தி முழுமையாக விடுபட்டு விடுகிறது. அவர்கள் அனைவரும் பக்தி செய்து கொண்டிருக்கிறார்கள், நீங்கள் ஞானத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் இரவில் இருக்கிறார்கள், நீங்கள் பகலில் செல்கிறீர்கள் அதாவது சொர்க்கத்திற்கு. கீதையில் மன்மனாபவ என்று எழுதப் பட்டிருக்கிறது, இந்த வார்த்தை புகழ் வாய்ந்ததாகும். கீதையைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும் - மிகவும் எளிதாக எழுதப்பட்டிருக்கிறது .. ஆயுள் முழுவதும் படித்தபடி வந்தனர், எதையும் புரிந்து கொள்வதில்லை. இப்போது அதே கீதையின் பகவான் வந்து கற்றுக் கொடுக்கும்போது தூய்மையடைந்து விடுகின்றனர். இப்போது நாம் பகவானிடமிருந்து கீதையைக் கேட்கிறோம், பிறகு பிறருக்கும் கூறுகிறோம், தூய்மையடைகிறோம்.

 

தந்தையின் மகாவாக்கியமல்லவா ! - இது அதே சகஜ இராஜயோகம். மனிதர்கள் எவ்வளவு குருட்டு நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கின்றனர்! உங்கள் பேச்சை கேட்பதே இல்லை. நாடகத்தின்படி அவர்களின் அதிர்ஷ்டம், தொடங்கும்போது தான் உங்களிடம் வரமுடியும். உங்களைப் போன்ற அதிர்ஷ்டம் வேறு எந்த தர்மத்தவர்களுக்கும் இருப்பதில்லை. உங்களின் இந்த தேவி தேவதா தர்மம் மிகவும் சுகம் கொடுக்கக் கூடியது என்பதை தந்தை புரிய வைத்திருக்கிறார். தந்தை சொல்வது சரி என்று நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். சாஸ்திரங்களில் அங்கும் (சொர்க்கத்தில்) கூட கம்சன், இராவணன் முதலானவர்கள் இருந்ததாகக் காட்டியுள்ளனர். அங்குள்ள சுகத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. தேவதைகளை என்னவோ பூஜிக்கின்றனர், ஆனால் புத்தியில் எதுவும் பதிவதில்லை. இப்போது தந்தை கேட்கிறார் - குழந்தைகளே, என்னை நினைவு செய்கிறீர்களா? என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை குழந்தைகளைப் பார்த்து சொல்வதை எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? லௌகீக தந்தை எப்போதாவது இப்படி நினைவு செய்யும் முயற்சியை செய்விக்கிறாரா என்ன? இதை எல்லைக்கப்பாற்பட்ட தந்தை வந்து புரிய வைக்கிறார். நீங்கள் முழு உலகின் முதல், இடை, கடைசி பற்றி தெரிந்து கொண்டு சக்ரவர்த்தி இராஜா ஆகிவிடப் போகிறீர்கள். முதலில் நீங்கள் வீட்டுக்குச் செல்வீர்கள். பிறகு நடிகர்கள் ஆகி வர வேண்டும். இந்த ஆத்மா புதியதா அல்லது பழையதா என்று இப்போது யாருக்கும் தெரியாது. புதிய ஆத்மாவின் பெயர் கண்டிப்பாக பிரபலமாக இருக்கும். இப்போதும் கூட பாருங்கள் சிலருடைய பெயர் மிகவும் பிரபலமாக இருக்கிறது! அளவற்ற மனிதர்கள் வந்து விடுகின்றனர். உட்கார்ந்தபடி அனாயாசமாகவே வந்துவிடுகின்றனர். ஆக அவர்களின் தாக்கம் ஏற்படுகிறது. பாபாவும் கூட இவருக்குள் (பிரம்மாவுக்குள்) அனாயாசமாக வருகிறார் எனும்போது அந்த பிரபாவம் ஏற்படுகிறது. அந்த புதிய ஆத்மா வந்தால் பழையவர்கள் மீது தாக்கம் ஏற்படுகிறது. இலை, கிளைகள் வெளிப்பட்டபடி செல்லும்போது அவர்களின் மகிமை ஏற்படுகிறது. இவர்களுக்கு ஏன் இவ்வளவு பெயர் புகழ் என்பது யாருக்கும் தெரிவதில்லை. புதிய ஆத்மாவாக இருப்பதால் அவர்களிடம் ஈர்ப்பு இருக்கிறது. இப்போது பாருங்கள், எவ்வளவு அளவற்றவர்கள் பொய்யான பகவான்களாக ஆகிவிட்டனர்! ஆகையால் பாடல் இருக்கிறது - சத்தியத்தின் படகு ஆடலாம், அசையலாம், ஆனால் மூழ்காது. புயல் காற்றுகள் நிறைய வீசுகின்றன, ஏனென்றால் பகவான் படகோட்டியாக இருக்கிறார் அல்லவா! குழந்தைகளும் அசைகின்றனர், படகின் மீது புயல் காற்றுகள் வீசுகின்றன. மற்ற சத்சங்கங்களுக்கு நிறைய பேர் செல்கின்றனர், ஆனால் அங்கே ஒரு போதும் புயல் காற்றுகள் முதலான எந்த விஷயமும் வருவதில்லை. இங்கே அபலைகள் மீது எவ்வளவு கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. ஆனாலும் எப்படி இருந்தாலும் ஸ்தாபனை என்பது ஆகியே தீரும். தந்தை வந்து புரிய வைக்கிறார் - ஆத்மாக்களே, நீங்கள் எந்த அளவு காட்டு முள்ளாகி விட்டீர்கள்! பிறரை முள்ளாகி குத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கும் முள் குத்துகிறது. அனைத்து விஷயங்களுக்கும் பிரதி பலன் என்பது கிடைக்கவே செய்கிறது. அங்கே துக்கத்தின் சீச்சீ (கீழான) விஷயங்கள் இருப்பதில்லை, ஏனென்றால் அதன் பெயரே சொர்க்கம் என சொல்லப்படுகிறது. மனிதர்கள் சொர்க்கம் என்றும் நரகம் என்றும் சொல்கின்றனர், ஆனால் புரிந்து கொள்வதில்லை. இன்னார் சொக்கத்திற்குச் சென்றுவிட்டார் என்று சொல்கின்றனர், உண்மையில் இப்படி சொல்வதும் கூட தவறாகும். நிராகார உலகம் சொர்க்கம் என்று சொல்லப்படுவதில்லை. அது முக்தி தாமம் ஆகும். பிறகு இவர்கள் சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார் என்று சொல்கிறார்கள்.

 

இப்போது நீங்கள் அறிந்துள்ளீர்கள் - இந்த முக்தி தாமம் ஆத்மாக்களின் வீடு. இங்கே வீடுகள் இருப்பது போல. பக்தி மார்க்கத்தில் மிகவும் செல்வந்தர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்வான கோவில்கள் கட்டுகின்றனர். சிவன் கோவில்கள் எப்படி கட்டப்பட்டுள்ளன என்று பாருங்கள்! இலட்சுமி நாராயணன் கோவில்கள் கட்டினால் உண்மையான ஆபரணங்கள் முதலானவை எவ்வளவு இருக்கின்றன! அதிக அளவில் செல்வங்கள் இருக்கும். இப்போது பொய்யானதாக ஆகிவிட்டது. நீங்களும் கூட முன்னர் எவ்வளவு அசல் ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தீர்கள். இப்போது அரசாங்கத்தின் மீதிருக்கும் பயத்தின் காரணமாக அசல் நகைகளை மறைத்து விட்டு, போலிகளை அணிந்து கொள்கின்றனர். அங்கே உண்மையோ உண்மை தான் இருக்கும். பொய்யான எதுவும் இருக்காது. இங்கே உண்மையானவை இருந்தாலும் கூட மறைத்து வைத்துக் கொள்கின்றனர். நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அங்கே இருப்பதே சொர்க்கம். உங்களுக்கு அனைத்தும் புதியவையாக கிடைக்கும். புதிய உலகத்தில் அனைத்தும் புதியவையாக, அளவற்ற செல்வங்கள் இருந்தன. இப்போது பாருங்கள், அனைத்து பொருட்களுமே எவ்வளவு விலை அதிகரித்துவிட்டன! இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு மூல வதனத்திலிருந்து தொடங்கி அனைத்து இரகசியங்களும் புரிய வைத்துள்ளார். மூல வதனத்தின் இரகசியத்தை தந்தையைத் தவிர வேறு யார் புரிய வைப்பார்கள். நீங்களும் பிறகு ஆசிரியராக வேண்டும். இல்லற விஷயங்களிலும் இருங்கள். தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக இருங்கள். பிறரையும் தனக்குச் சமமாக ஆக்கினீர்கள் என்றால் மிகவும் உயர்ந்த பதவியை அடைய முடியும். இங்கே (மதுபனில்) இருப்பவர்களையும் விட அவர்கள் (வெளியில் இருப்பவர்கள்) உயர் பதவி அடைய முடியும். வரிசைக்கிரமமாகத்தான் இருக்கிறீர்கள், வெளியில் இருந்தபடியும் வெற்றி மாலையில் கோர்க்கப்பட முடியும். 7 நாள் பாடம் எடுத்துக் கொண்ட பிறகு வெளிநாட்டிற்கோ அல்லது வேறு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். முழு உலகிற்கும் செய்தி கிடைக்க வேண்டும். பாபா வந்து என்னை நினையுங்கள் என்று மட்டும் கூறுகிறார். அந்த தந்தை தான் -பரேட்டர், கைடு (வழிகாட்டி) அங்கு நீங்கள் சென்றீர்கள் எனில் செய்தித்தாளிலும் அதிகமாக உங்கள் பெயர் வரும். பிறருக்கும் கூட இது மிகவும் சகஜமான விஷயம் என்பது புரியும் ஆத்மா மற்றும் சரீரம் வேறு வேறு விஷயங்கள். ஆத்மாவில் மனம், புத்தி உள்ளது, சரீரமோ ஜடப் பொருளாகும். ஆத்மா நடிகனாக ஆகிறது. சிறந்த பொருள் ஆத்மா, எனவே இப்போது தந்தையை நினைவு செய்ய வேண்டும். இங்கே இருப்பவர்கள் வெளியே இருப்பவர்கள் அளவுக்கு நினைவு செய்வதில்லை. மிக அதிகமாக நினைவு செய்பவர்கள், பிறரை தகக்குச் சமமாக ஆக்குபவர்கள், முட்களை மலர்களாக ஆக்குபவர்கள் உயர்ந்த பதவியை அடைவார்கள். முன்னர் நாமும் முட்களாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது தந்தை அவசர சட்டம் பிறப்பித்துள்ளார் - காமம் மிகப் பெரிய எதிரியாகும். இதன் மீது வெற்றியடைவதன் மூலம் நீங்கள் உலகை வென்றவர் ஆகிவிடுவீர்கள். ஆனால் எழுதிப் போடுவதைப் பார்த்து யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்போது தந்தை புரிய வைத்திருக்கிறார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. எப்போதும் ஞான இரத்தினங்களை தேர்ந்தெடுக்கும் அன்னப்பறவைகள் ஆக வேண்டும் முத்துக்களைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். குப்பைகளை விட்டு விட வேண்டும். ஒவ்வொரு அடியிலும் கோடான கோடி வருமானத்தைச் சேமித்து கோடான கோடி மடங்கு பாக்கியசாலி ஆக வேண்டும்.

 

2. உயர் பதவி அடைவதற்காக ஆசிரியர் ஆகி பலருக்கும் சேவை செய்ய வேண்டும். தாமரை மலர் போல தூய்மையாக இருந்து தகக்கு சமமாக பிறரை ஆக்க வேண்டும். முட்களை மலர்களாக ஆக்க வேண்டும்.

 

வரதானம்

சகஜயோகத்தின் சாதனை மூலம் சாதனங்கள் மீது வெற்றி பெறக்கூடிய பிரயோகி ஆத்மா ஆகுக.

 

சாதனங்கள் இருந்த போதும், சாதனங்களைப் பிரயோகத்தில் கொண்டு வந்த போதும், யோகத்தின் ஸ்திதி மேலே-கீழே ஆகக் கூடாது. யோகி ஆகி, பிரயோகம் செய்வது தான் (புத்தி மூலம்) விலகி இருப்பது எனச் சொல்லப் படும். (சாதனங்கள்) இருந்தாலும் நிமித்த மாத்திரம், பற்றற்ற ரூபத்தில் பிரயோகம் செய்யுங்கள். ஆசை இருக்குமானால் அந்த ஆசை (இச்சா) உங்களை நல்லவராக (அச்சா) ஆகவிடாது. முயற்சி செய்வதிலேயே நேரம் கழிந்து விடும். அந்த சமயம் நீங்கள் (யோக) சாதனையில் இருப்பதற்கான முயற்சி செய்வீர்கள், ஆனால் சாதனங்கள் தம் பக்கமாகக் கவர்ந்திழுக்கும். ஆகவே பிரயோகி ஆத்மா ஆகி, சகஜ யோகத்தின் சாதனை மூலம் சாதனங்களின் மீது, அதாவது இயற்கையின் மீது வெற்றி பெற்றவராக ஆகுங்கள்.

 

சுலோகன்:

எனது என்பதன் அநேக உறவுகளை முடித்து விடுவது தான் ஃபரிஸ்தா ஆவதாகும்.

 

ஓம்சாந்தி