22.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்போது இந்த சரீரத்தை மறந்து பற்றற்றவராக, கர்மாதீத் ஆகி வீட்டுக்குச் செல்ல வேண்டும். அதனால் நல்ல கர்மங்களைச் செய்யுங்கள். எந்த ஒரு பாவகர்மமும் செய்யக் கூடாது.

 

கேள்வி:

தன்னுடைய மனநிலையை சோதிப்பதற்காக எந்த மூவரின் மகிமையை சதா நினைவில் வைக்க வேண்டும்?

 

பதில்:

1. நிராகாரரின் மகிமை. 2. தேவதைகளின் மகிமை. 3. தனது மகிமை. இப்போது சோதித்துப் பாருங்கள், நிராகார் பாபாவுக்கு சமமாகப் பூஜைக்குரியவனாக ஆகியிருக்கிறேனா? அவருடைய அனைத்து குணங்களையும் தாரணை செய்திருக்கிறேனா? தேவதைகளைப் போல் ராயல் நடத்தை உள்ளதா? தேவதைகளின் உணவு, பானம் மற்றும் அவர்களுடைய குணங்கள் நம்மிடம் உள்ளனவா? ஆத்மாவின் அனைத்து குணங்களையும் அறிந்து கொண்டு அவற்றின் சொரூபமாக ஆகியிருக்கிறோமா?

 

ஓம் சாந்தி.

குழந்தைகளுக்குப் புரிய வைக்கப் பட்டுள்ளது, ஆத்மாக்களின் வசிப்பிடம் டவர் ஆஃப் சைலன்ஸ் (அமைதியின் சிகரம் - சாந்தி தாமம்). எப்படி இமயமலையின் சிகரம் உள்ளது இல்லையா? அது மிக உயரமானது. நீங்கள் வசிப்பதும் உயர்ந்ததிலும் உயர்ந்ததோர் இடத்தில். அந்த மனிதர்கள் மலை மேல் ஏறுவதற்கான பயிற்சி மேற்கொள்கின்றனர். போட்டியிடுகின்றனர். மலை மீது ஏறுவதிலும் சிலர் சாமர்த்தியசாலிகளாக உள்ளனர். எல்லாருமே ஏறிவிட முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இதில் போட்டியிடத் தேவையில்லை. பதீதமாக உள்ள ஆத்மா, பாவனமாகி உயரத்தில் செல்ல வேண்டும். இது டவர் ஆஃப் சைலன்ஸ் என்று சொல்லப் படுகின்றது. அது பிறகு டவர் ஆஃப் சயின்ஸ் (விஞ்ஞானம்) அவர்களிடம் பெரிய-பெரிய பாம்ப்ஸ் (வெடிகுண்டுகள்) உள்ளன. அவர்களுக்கும் டவர் உள்ளது. அங்கே பயங்கரமான பொருள்களை வைக்கின்றனர். விஷம் முதலியவற்றை வெடிகுண்டுகளில் போட்டு வைக்கின்றனர். பாபா சொல்கிறார், குழந்தைகளே, நீங்களோ (பரந்தாமம் என்ற) வீட்டை நோக்கிப் பறக்க வேண்டும். அவர்கள் பிறகு வீட்டில் அமர்ந்தவாறே அப்படிப்பட்ட வெடிகுண்டுகளை வீசுகின்றனர், அதனால் அனைத்தையும் அழித்து விடுவார்கள். நீங்களோ இங்கிருந்து மேலே டவர் ஆஃப் சைலன்ஸ் நோக்கிச் செல்ல வேண்டும். அங்கிருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள், பிறகு எப்போது சதோபிரதான் ஆகி விடுவீர்களோ, அப்போது செல்வீர்கள். சதோபிரதானிலிருந்து தமோபிரதானில் வந்திருக்கிறீர்கள். மீண்டும் சதோபிரதான் ஆக வேண்டும். யார் சதோபிரதான் ஆவதற்கான புருஷார்த்தம் செய்கிறார்களோ, அவர்கள் பிறகு மற்றவர்களுக்கும் வழி சொல்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது நல்ல கர்மங்களைச் செய்ய வேண்டும். எந்த ஒரு பாவ கர்மமும் செய்யக் கூடாது. பாபா கர்மங்களின் கதி பற்றியும் புரிய வைத்துள்ளார். இராவண இராஜ்யத்தில் உங்களுக்கு துர்கதி ஏற்பட்டுள்ளது. இப்போது பாபா நல்ல கர்மங்கள் செய்வதற்குக் கற்றுத் தருகிறார். 5 விகாரங்கள் பெரிய விரோதிகள். மோகமும் கூட விகர்மமாகும். எந்த ஒரு விகாரமும் குறைந்ததல்ல. மோகம் வைப்பதாலும் கூட தேக அபிமானத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அதனால் பாபா கன்யாக்களுக்கு நிறைய சொல்லிப் புரிய வைக்கிறார். பவித்திரமானவர்கள் கன்யா எனச் சொல்லப் படுகிறார்கள். மாதாக்களும் கூடப் பவித்திரமாக வேண்டும். நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார்-குமாரிகள். நீங்கள் முதியவர்களாக இருக்கலாம், ஆனால் பிரம்மாவுக்கோ குழந்தைகள் இல்லையா?

 

பாபா புரிய வைக்கிறார், இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்போது குமார்-குமாரி நிலையில் இருந்தும் கூட மேலே செல்லுங்கள். எப்படி முதலில் சரீரத்தில் வந்தீர்கள், இப்போது இந்த சரீரத்திலிருந்து வெளியேறிச் செல்ல வேண்டும். அதற்கு முயற்சி செய்ய வேண்டும். உயர்ந்த பதவி பெற விரும்புகிறீர்கள் என்றால் வேறு எந்த நினைவும் வரக்கூடாது. நம்மிடம் என்ன உள்ளது? காலியான கையோடு வந்தோம் இல்லையா? எதுவுமே இல்லை. தன்னுடைய இந்த சரீரமும் கூடக் கிடையாது. இப்போது இந்த சரீரத்தை மறக்க வேண்டும். பற்றற்றவராக, கர்மாதீத் ஆக வேண்டும். டிரஸ்டி ஆகுங்கள். பாபா சொல்கிறார், சுற்றி, அலைந்து வாருங்கள், மற்றப்படி தவறான செலவுகள் செய்யாதீர்கள். மனிதர்கள் தானமும் அதிகம் செய்கின்றனர். செய்தித்தாளில் வருகிறது, இன்னார் பெரிய தானி என்று. மருத்துவமனை, தர்மசாலை முதலியன கட்டியிருக்கிறார். யார் அதிக தானம் செய்கின்றனரோ, அவர்களுக்கு பிறகு அரசாங்கத்திலிருந்து விருது கிடைக்கின்றது. முதல்-முதலில் விருது ஹிஸ் ஹோலினஸ், ஹர் ஹோலினஸ். ஹோஎன்று பவித்திரமானவர்கள் அழைக்கப்படுகிறார்கள். எப்படி தேவதைகள் பவித்திரமாக இருந்தனர், அதுபோல் ஆக வேண்டும். பிறகு அரைக்கல்பம் பவித்திரமாக இருப்பீர்கள். நிறைய பேர் சொல்வார்கள், இது எப்படி முடியும் என்று. அங்கேயும் கூடக் குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆக உடனே சொல்லுங்கள், அங்கே இராவணன் கிடையாது. இராவணன் மூலமாகத் தான் விகாரி உலகம் ஆகின்றது. இராமனாகிய பாபா வந்து பாவனமாக்குகிறார்.

 

அங்கே பதீத்தமானவர்கள் யாரும் இருக்க முடியாது.. சிலர் சொல்கின்றனர், பவித்திரதா பற்றியே பேசக் கூடாது என்று சரீரம் எப்படி இயங்க முடியும்? பவித்திர உலகமும் கூட இருந்தது என்று தெரியக்கூட இல்லை இப்போது அபவித்திர உலகம். இது விளையாட்டு. வேஷ்யாலயம், சிவாலயம்........ பதீத் உலகம், பாவன உலகம். முதலில் சுகம், பிறகு துக்கம். எப்படி இராஜ்யத்தை அடைந்து பிறகு இழந்தனர் என்பது பற்றிய கதை உள்ளது. இதை நல்லபடியாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தோல்வியடைந்துள்ளோம். நாம் தான் வெற்றி பெற வேண்டும். வீரராக ஆக வேண்டும். தனது மனநிலையை சேமிக்க வேண்டும். வீடு-வாசல் இருந்த போதும் அனைத்தையும் பராமரித்துக் கொண்டே பவித்திரமாக அவசியம் ஆக வேண்டும். எந்த ஓர் அபவித்திரக் காரியமும் செய்துவிடக் கூடாது. மோகமும் அநேகரிடம் உள்ளது. தன்னைத் தான் பார்க்க வேண்டும், உங்களைத் தவிர யாரிடமும் அன்பு வைக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளோமா என்று. பிறகு மற்றவர்களிடம் ஏன் அன்பு செலுத்துகிறீர்கள்? எது மிகமிகப் பிரியமான பொருளோ, அது நினைவு வர வேண்டும். பிறகு மற்ற தேக சம்மந்தங்கள் அனைத்தையும் மறந்து விடுவீர்கள். அனைவரையும் பார்த்துக் கொண்டே இதுபோல் புரிந்து கொள்ளுங்கள் - நாம் இப்போது சொர்க்கத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் கலியுக பந்தனங்கள். நாம் தெய்வீக சம்மந்தத்தில் சென்று கொண்டிருக்கிறோம். வேறு எந்த ஒரு மனிதரின் புத்தியிலும் இந்த ஞானம் கிடையாது. நீங்கள் பாபாவின் நினைவில் நல்லபடியாக இருப்பீர்களானால் குஷியின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். எவ்வளவு முடியுமோ, பந்தனங்களைக் குறைத்துக் கொண்டே செல்லுங்கள். தன்னை இலேசாக ஆக்கிக் கொள்ளுங்கள். பந்தனங்களை அதிகரிப்பதற்கான அவசியம் இல்லை. இந்த இராஜ்யத்தை அடைவதில் செலவின் அவசியம் இல்லை. செலவில்லாமல் உலகத்தின் இராஜ்யத்தை அடைகிறீர்கள். அவர்களின் ஆயுதங்கள், சேனைகள் முதயலிவற்றிற்காக எவ்வளவு செலவு ஆகின்றது! உங்களிடம் செலவு எதுவும் கிடையாது. நீங்கள் என்னென்ன பாபாவுக்குக் கொடுப்பீர்களோ, அது கொடுப்பதல்ல, பெற்றுக் கொள்கிறீர்கள். பாபாவோ குப்தமாக உள்ளார். அவர் ஸ்ரீமத் கொடுத்தக் கொண்டே இருக்கிறார் - மியுசியம் திறந்து வையுங்கள் மருத்துவமனை, யுனிவர்சிட்டி திறந்து வையுங்கள் இதன் மூலம் நீங்கள் ஞானத்தைப் பெறுகிறீர்கள். யோகத்தினால் நீங்கள் சதா காலத்துக்கும் நோயற்றவராக ஆகிறீர்கள். ஆரோக்கியம், செல்வம், அதனுடன் மகிழ்ச்சியும் இருக்கவே செய்கிறது - 21 பிறவிகளுக்கு. ஒரு விநாடியில் முக்தி-ஜீவன்முக்தி எப்படிக் கிடைக்கிறது என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள். வாசலிலேயே புரிய வைக்க முடியும். எப்படி வாசலில் பிச்சை எடுக்க வருகிறார்கள் இல்லையா? நீங்களும் பிச்சை அளிப்பது போலத்தான். இதனால் மனிதர்கள் முற்றிலும் செல்வந்தர்களாக ஆகி விடுகிறார்கள். யாராயிருந்தாலும் சொல்லுங்கள், நீங்கள் என்ன பிச்சை கேட்கிறீர்கள்? நாங்கள் அத்தகைய பிச்சையை (தானம்) உங்களுக்குக் கொடுக்கிறோம், அதனால் நீங்கள் பிறவி பிறவிகளாக பிச்சை எடுப்பதில் இருந்து விடுபட்டு விடுவீர்கள். எல்லையற்ற தந்தை மற்றும் சிருஷ்டிச் சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் இதுபோல் ஆகி விடுவீர்கள்.

 

உங்களுடைய இந்த பேட்ஜ் மூலம் கூட அற்புதம் செய்ய முடியும். ஒரு விநாடியில் எல்லையற்ற ஆஸ்தியை இதன் மூலம் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும். சேவை செய்ய வேண்டும். பாபா ஒரு விநாடியில் உலகத்தின் மாலிக் ஆக்குகிறார். பிறகு புருஷார்த்தத்தைப் பொருத்தது. சிறியவர் பெரியவர் அனைவருக்கும் சொல்லப் படுகின்றது - பாபாவை நினைவு செய்யுங்கள். இரயிலிலும் கூட நீங்கள் பேட்ஜை வைத்துப் புரிய வைக்க முடியும் - உங்களுக்கு இரண்டு தந்தையர் உள்ளனர். இருவரிடமிருந்து தான் (லௌகிக் மற்றும் பரலௌகிக் தந்தையர்) ஆஸ்தி கிடைக்கின்றது. பிரம்மாவிடமிருந்து ஆஸ்தி கிடைப்பதில்லை. அவரோ தரகர். இவர் மூலம் பாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார், மேலும் ஆஸ்தி தருகிறார். மனிதர், மனிதரைப் பார்த்துப் புரிய வைக்க வேண்டும். யாத்திரையிலும் அநேகர் செல்கின்றனர். அவையனைத்தும் சரீர சம்மந்த யாத்திரைகள். இது ஆன்மீக யாத்திரை. இதில் நீங்கள் உலகத்தின் மாலிக் ஆகிறீர்கள். சரீர சம்மந்த யாத்திரையினாலோ அடி வாங்கியே வந்திருக்கிறீர்கள். ஏணிப்படியின் சித்திரமும் உடன் இருக்க வேண்டும். சேவை செய்து கொண்டே இருங்கள். பிறகு அவர்களுக்கு உணவு முதலியவற்றின் அவசியம் கூட இருக்காது. குஷி போன்றதொரு டானிக் வேறு கிடையாது எனச் சொல்லப் படுகின்றது. பணம் இல்லை என்றால் அவர்களுக்கு அடிக்கடி பசி எடுத்துக் கொண்டே இருக்கும். தனவான்கள், இராஜாக்களுக்கெல்லாம் வயிறு நிரம்பியதாகவே இருக்கும். மிகவும் ராயல் நடத்தை இருக்கும். உரையாடலும் முதல் தரமானதாக இருக்கும். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் என்னவாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை. அங்கே உணவு பானம் முதலியவை மிகவும் ராயல்டியுடன் இருக்கும். நினைத்த நேரத்திற்கெல்லாம் உண்ண மாட்டார்கள். மிகவும் ராயல்டியுடன் சாந்தியாக உண்பார்கள். நீங்கள் அனைத்து நற்குணங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். நிராகாரரின் மகிமை, தேவதைகளின் மகிமை மற்றும் தன்னுடைய மகிமை மூன்றையும் சோதித்துப் பாருங்கள். இப்போது நீங்கள் பாபாவைப் போல் குணம் உள்ளவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு நீங்கள் தேவதைகளின் குணங்கள் உள்ளவர்களாக ஆவீர்கள். ஆக, அந்த குணங்களை இப்போதே தாரணை செய்ய வேண்டும். இப்போது நீங்கள் தெய்வீக குணங்களை தாரணை செய்து கொண்டிருக்கிறீர்கள். பாடுகிறார்கள், சாந்தியின் கடல், அன்பின் கடல்...... எப்படி பாபா பூஜிக்கப் படுகிறாரோ, அதுபோல் நீங்களும் பூஜிக்கப் படுகிறீர்கள். பாபா உங்களுக்கு நமஸ்தே செய்கிறார். உங்களுக்கோ பூஜையும் இரட்டையாக நடைபெறுகின்றது. இந்த அனைத்து விஷயங்களையும் பாபா தான் புரிய வைக்கிறார். உங்கள் மகிமையையும் புரிய வைக்கிறார்-புருஷார்த்தம் செய்து இதுபோல் ஆகுங்கள் என்று. மனதைக் கேட்டுக் கொள்ள வேண்டும், நாம் அதுபோல் ஆகியிருக்கிறோமா? எப்படி நாம் அசரீரியாக வந்துள்ளோமோ, அதுபோலவே அசரீரியாகிச் செல்ல வேண்டும். சாஸ்திரங்களிலும் உள்ளது, கைத்தடியை(உடல் ஆதாரம்) விட்டு விடுங்கள். ஆனால் இதில் கைத்தடி விஷயம் கிடையாது. இங்கே சரீரத்தை விட்டு விட வேண்டிய விஷயமாகும். மற்றப்படி அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள். இங்கே பாபாவை மட்டும் நினைவு செய்ய வேண்டும். பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை.

 

குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கிடைத்துள்ளது. நீங்கள் அறிவீர்கள், மனிதர்கள் எத்தனை குருக்களின் விலங்குகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்! அநேக விதமான குருமார் உள்ளனர். இப்போது உங்களுக்கு எந்த குருவும் வேண்டாம், எதையும் படிக்கவும் வேண்டாம். பாபா ஒரே ஒரு மந்திரம் கொடுத்துள்ளார் - என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் மற்றும் தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள். இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே பவித்திரமாக வேண்டும். புத்துணர்ச்சி பெறுவதற்காக (ரெஃப்ரெஷ் ஆவதற்கு) இங்கே வருகிறீர்கள். இங்கே நாம் பாபாவுக்கு முன்னிலையில் அமர்ந்துள்ளோம் என்பதைப் புரிந்து கொள்வார்கள். அங்கே (வெளியில் சென்டர்களில்) புரிந்து கொள்வார்கள், பாபா மதுபனில் அமர்ந்துள்ளார் என்பதாக. எப்படி நமது ஆத்மா ஆசனத்தில் அமர்ந்துள்ளதோ, அதேபோல் பாபாவும் இந்த (பிரம்மாவின் புருவமத்தி) ஆசனத்தில் அமர்ந்துள்ளார். பாபா ஒன்றும் கீதை முதலிய சாஸ்திரம் எதையும் கையில் எடுப்பதில்லை. அல்லது இவர் அதை மனப்பாடம் செய்துள்ளார் என்பதெல்லாம் கிடையாது. அதையோ சந்நியாசிகள் முதலானோர் மனப்பாடம் செய்கின்றனர். இவரோ ஞானக்கடலாக இருப்பவர். பிரம்மா மூலம் அனைத்து இரகசியங்களையும் சொல்லிப் புரிய வைக்கிறார். சிவபாபா ஒருபோதும் எந்த ஒரு பாடசாலைக்கோ, சத்சங்கத்திற்கோ சென்றிருக்கிறாரா என்ன? பாபாவோ அனைத்தையும் அறிந்திருக்கிறார். அவருக்கு சயின்ஸ் தெரியுமா என்று யாராவது கேட்கலாம். பாபா கேட்கிறார், சயின்ஸினால் நான் என்ன செய்யப் போகிறேன்? என்னை அழைப்பதே வந்து பவித்திரமாக்குங்கள் என்று தான் அழைக்கின்றனர். இதில் சயின்ஸ் என்ன கற்றுத் தருவேன்? சிவபாபா இன்ன சாஸ்திரம் படித்திருக்கிறாரா எனக் கேட்பார்கள். அட, அவரைப் பற்றியோ ஞானக்கடல் என்கிறார்கள். இவையோ பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்கள். விஷ்ணுவின் கையில் சங்கு, சக்கரம் முதலியவற்றைக் கொடுத்துள்ளனர். அர்த்தம் எதுவும் தெரியாது. உண்மையில் இந்த அலங்காரங்களை பிரம்மாவுக்கும், பிராமணர்களுக்கும் கொடுக்க வேண்டும். சூடசுமவதனத்திலோ இந்த சரீரமே கிடையாது. பிரம்மாவின் சாட்சாத்காரமும் கூட வீட்டில் அமர்ந்தவாறே அநேகருக்குக் கிடைத்துள்ளது. கிருஷ்ணரின் சாட்சாத்காரமும் கிடைக்கின்றது. இதனுடைய அர்த்தம், இந்த பிரம்மாவிடம் செல்வீர்களானால் கிருஷ்ணரைப் போல் ஆகி விடுவீர்கள், அல்லது கிருஷ்ணரின் மடியில் வந்து விடுவீர்கள். அதில் இளவரசரின் சாட்சாத்காரம் மட்டும் கிடைக்கின்றது. நீங்கள் நன்றாகப் படிப்பீர்களானால் இதுபோல் ஆக முடியும். இது நோக்கம் மற்றும் குறிக்கோளாகும். எடுத்துக்காட்டாக ஒருவரைத் தான் சொல்வார்கள் இல்லையா? அவரை மாடல் எனச் சொல்கின்றனர். நீங்கள் அறிவீர்கள், பாபா வந்துள்ளார், சத்யநாராயணரின் கதை சொல்வதற்காக, நரனில் இருந்து நாராயணன் ஆக்குவதற்காக. முதலிலோ நிச்சயமாக இளவரசராக ஆவீர்கள். சாஸ்திரங்களில் கிருஷ்ணர் வெண்ணெய் தின்றதாகக் காட்டப் பட்டுள்ளது. உண்மையில் இது உலக இராஜ்யத்தின் உருண்டையாகும். மற்றப்படி சந்திரன் முதலியவற்றை எப்படி வாயில் இருப்பதாகக் காட்டுவார்கள்? சொல்லவும் செய்கின்றனர். இரண்டு பூனைகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டன. இடையில் யார் உலகத்தின் எஜமான் ஆனாரோ, அவருக்கு வெண்ணெய் காட்டப் பட்டுள்ளது. இப்போது தன்னைத் தான் பாருங்கள், நாம் இதுபோல் ஆகியிருக்கிறோமா இல்லையா? இந்தப் படிப்பே இராஜ்ய பதவி பெறுவதற்கானது. பிரஜைகளின் பாடசாலை எனச் சொல்ல மாட்டார்கள். இது நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான பாடசாலையாகும். இறைவனின் பல்கலைக்கழகம் (காட்லி யுனிவர்சிட்டி). பகவான் படிப்பு சொல்லித் தருகிறார். பாபா சொல்லியிருக்கிறார், எழுதுங்கள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், அடைப்புக் குறிக்குள் எழுதுங்கள் - யுனிவர்சிட்டி. ஆனால் இதை எழுத மறந்து விடுகின்றனர். நீங்கள் எவ்வளவு தான் புத்தகம் முதலியவற்றை க் கொடுத்தாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இதில் எதிரிலேயே அமரச்செய்து புரிய வைக்க வேண்டியுள்ளது. எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கின்றது. பிறவி பிறவிகளாக நீங்கள் எல்லைக்குட் பட்ட ஆஸ்தியை அடைந்தே வந்திருக்கிறீர்கள். நீங்கள் பேட்ஜை வைத்து சேவை செய்ய முடியும். யாராவது ஒருவேளை சிரிக்கவும் செய்யலாம். இரண்டு தந்தையரின் விஷயம் நன்றாக உள்ளது. இதுபோல் அநேகர் தங்களின் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றனர். குழந்தைகளும் தந்தைக்குப் புரிய வைக்கின்றனர். மனைவி கணவரை அழைத்து வருகிறார். சில இடங்களில் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இப்போது நீங்கள் அறிவீர்கள், நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள், குழந்தைகள். ஆஸ்திக்கு உரிமையுள்ளவர்கள். லௌகிக சம்மந்தத்தில் பெண்குழந்தை திருமணம் செய்துகொண்டு வேறு வீட்டுக்குச் செல்கிறாள். அது கன்யா தானம் எனச் சொல்லப் படுகின்றது. இன்னொருவருக்குக் கொடுக்கின்றனர் இல்லையா? இப்போதோ அந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது. அங்கே சொர்க்கத்திலும் கூட கன்யா வேறு வீட்டுக்குச் செல்கிறாள் என்ற போதிலும் பவித்திரமாக இருக்கிறாள். இது பதீத் உலகம். அந்த சத்யுகம் சிவாலயம், பாவன உலகமாகும். குழந்தைகளாகிய உங்கள் மீது இப்போது பிரஹஸ்பதியின் தசா உள்ளது. நீங்கள் சொர்க்கத்திற்கோ அவசியம் செல்வீர்கள், இதுவோ உறுதியிலும் உறுதியானது. மற்றப்படி புருஷார்த்தத்தின் மூலம் உயர்ந்த பதவி பெற வேண்டும். மனதைக் கேட்க வேண்டும், நாம் இன்னாரைப் போல் சேவை செய்கிறோமா? பிராமணி (டீச்சர்) வேண்டும் என்றெல்லாம் கேட்கக் கூடாது. நீங்களே டீச்சராகுங்கள். நல்லது. குழந்தைகள் முயற்சி செய்ய வேண்டும். மற்றபடி யாரிடமும் பணத்தை வாங்கி பாபா என்ன செய்வார்? நீங்கள் சென்று மியூசியம் போன்றவற்றை திறவுங்கள். வீடுகள் அனைத்தும் இங்கேயே அழிந்துதான் போகப்போகின்றது. பாபாவோ வியாபாரி அல்வா ! பொற்கொல்லரும் கூட துன்பங்களின் சங்கிலிகளிலிருந்து விடுவித்து சுகம் கொடுக்கக் கூடியவர் இப்போது பாபா கூறுகின்றார். நீண்ட காலம் சென்ற விட்டது, குறைந்த காலம் தான் உள்ளது. நீங்கள் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள், நிறைய குழப்பங்கள் ஏற்படும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) டிரஸ்டி மற்றும் பற்றற்றவர் ஆகி இருங்கள். எந்த ஒரு வீணான செலவும் செய்யாதீர்கள். தன்னை தேவதைகளைப் போல் பவித்திரமாக ஆக்குவதற்கான முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

 

2) ஒரே ஒரு மிகமிக அன்பான பொருளை (பாபா) நினைவு செய்யுங்கள். எவ்வளவு முடியுமோ, கலியுக பந்தனங்களை இலேசாக்கிக் கொண்டே செல்லுங்கள். அதிகப் படுத்தாதீர்கள். சத்யுக தெய்வீக சம்மந்தத்தில் சென்று கொண்டிருக்கிறோம் இந்தக் குஷியிலேயே இருங்கள்.

 

வரதானம்:

நாலேஜ் ஃபுல் (ஞானம் நிறைந்தவர்) ஆகி அனைத்து வீணான கேள்விகளை யக்ஞத்தில் ஸ்வாஹா செய்து விடக் கூடிய தடையற்றவர் (நிர்விக்கினமானவர்) ஆவீர்களாக.

 

ஏதாவது தடை வரும் பொழுது என்ன, ஏன் என்ற அநேக கேள்விகளில் சென்று விடுகிறீர்கள். ப்ரஷ்னசித் -கேள்விகளில் உள்ளம் உடையவர் ஆவது என்றால் பரே‘ôன் - குழம்பி விடுவது. நாலேஜ்ஃபுல் ஆகி யக்ஞத்தில் அனைத்து வீணான கேள்விகளை ஸ்வாஹா செய்து விட்டீர்கள் என்றால் உங்களுடைய நேரமும் மிச்சமாகும் மேலும் மற்றவர்களுடைய நேரம் கூட மிச்சமாகி விடும். இதனால் சுலபமாகவே தடையற்றவர் (நிர்விக்கினம்) ஆகி விடுவீர்கள். நிச்சயம் மற்றும் வெற்றி பிறப்புரிமை ஆகும் என்ற இந்த பெருமையில் (‘ôன்) இருந்தீர்கள் என்றால் ஒரு பொழுதும் (பரே‘ôன்) குழம்பியவராக ஆக மாட்டீர்கள்.

 

ஸ்லோகன்:

எப்பொழுதும் உற்சாகத்தில் இருப்பது மேலும் மற்றவர்களுக்கு உற்சாகமூட்டுவதே உங்களுடைய தொழிலாகும்.

 

பிரம்மா தந்தைக்கு சமானமாக ஆவதற்கான விசேஷ புருஷார்த்தம்

 எப்படி பிரம்மா தந்தை எப்பொழுதும் (லவ்லீன்) லயித்திருக்கக் கூடிய நிலையில் நான் என்ற தன்மையின் (விருத்தி) உள்ளுணர்வை தியாகம் செய்தார், அனைவரது கவனத்தையும் தந்தையின் பக்கம் ஈர்க்குமாறு செய்தார். அது போல (ஃபாலோ ஃபாதர்) தந்தையை பின்பற்றுங்கள். ஞானத்தின் ஆதாரத்தில் தந்தையின் நினைவில் இது போல ஒன்றி இருங்கள். ஆக இது போல (சமானா) ஒன்றி இருப்பது தான் லயித்திருக்கும் நிலை ஆகும்.

 

ஓம்சாந்தி