20.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே - ஞான மனனம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தனிமையில் அமர்ந்து அதிகாலையில் ஞான மனனம் செய்தீர்கள் என்றால் அநேக புது புது கருத்துகள் புத்தியில் வரும்.

 

கேள்வி:

குழந்தைகள் தங்களது மன நிலையை முதல் தரமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றால் எந்தெந்த விஷயங்கள் மீது சதா கவனம் இருக்க வேண்டும்?

 

பதில்:

(1) ஒரு தந்தை கூறுவதை மட்டுமே கேளுங்கள் மற்றபடி இந்த உலகத்தினுடையது எதையும் கேட்காதீர்கள் (2) சகவாசத்தில் எச்சரிக்கையாக இருங்கள் யார் நல்ல முறையில் படிக்கிறார்களோ, தாரணை செய்கிறார்களோ அவர்களுடைய சகவாசத்தில் மட்டும் இருந்தீர்கள் என்றால் உங்கள் மன நிலை முதலில் தரமானதாக ஆகி விடும். ஒரு சில குழந்தைகளின் நிலையைப் பார்க்கும் பொழுது நாடகத்தில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டால் நன்றாக இருக்குமே என்று பாபாவிற்கு யோசனை ஏற்படுகிறது. ஆனால் பிறகும் கூட இந்த ராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்.

 

ஓம் சாந்தி.

ஒரே ஒரு எல்லையில்லாத தந்தை, எல்லையில்லாத குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் அல்லது கற்பிக்கிறார். மற்றபடி மனிதர்கள் என்ன படிக்கிறார்களோ கேட்கிறார்களோ அவை எதையுமே நீங்கள் படிக்கவோ கேட்கவோ வேண்டியது இல்லை. ஏனெனில் இதுதான் ஒரே ஒரு ஈஸ்வரிய படிப்பு என்பதையோ புரிந்துக் கொண்டுள்ளர்கள். அதை இப்பொழுது நீங்கள் படிக்க வேண்டும். நீங்கள் ஒரு ஈஸ்வரவனிடம் (சிவபாபா) மட்டுமே படிக்க வேண்டும். தந்தை படிப்பிப்பதை, கற்பிப்பதை வாய் மொழி மூலம் படிக்க வேண்டும். அவர்களோ அநேக விதமான புத்தகங்கள் எழுதுகிறார்கள். அவற்றை முழு உலகம் படிக்கிறது. எத்தனை ஏராளமான புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார்கள். குழந்தைகளாக நீங்கள் மட்டும் தான் ஒரே ஒருவர் கூறுவதைக் கேளுங்கள் மற்றும் அதையே மற்றவர்களுக்கும் கூறுங்கள் என்று கூறுகிறீர்கள். ஏனெனில் அவர் கூறுவதைக் கேட்பதில் தான் நன்மை உள்ளது. மற்றது ஏராளமான புத்தகங்கள் உள்ளன. புதிது புதிதாக வெளிப்பட்டுக் கொண்டே உள்ளன. சத்தியமான விஷயங்களை ஒரு தந்தைதான் கூறுகிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே அவர் கூறுவதைத்தான் கேட்க வேண்டும். தந்தையோ குழந்தைகளுக்கு மிகக் குறைவான விஷயங்களே புரிய வைக்கிறார். அதை விளக்கமாகப் புரிய வைத்து மீண்டும் ஒரே ஒரு விஷயத்திற்கு வந்து விடுகிறார். பாபா மன்மனாபவ என்ற வார்த்தை சரியானது என்று கூறினாலும் கூட பாபா அவ்வாறு கூற வில்லை. தந்தையோ தன்னை ஆத்மா என்று உணருங்கள், தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் நான் கூறும் சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றிய ஞானத்தை தாரணை செய்யுங்கள் என்று கூறுகிறார். தேவதைகளாக ஆகும் நாமே பின்னால் வளர்ச்சி அடைகிறோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். குழந்தைகளுக்கு மூல வதனமும் நினைவில் உள்ளது மற்றும் புது உலகமும் நினைவில் உள்ளது.

 

முதலில் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஆவார். பிறகு இந்த புது உலகம் அங்கு லட்சுமி நாராயணர் உயர்ந்ததிலும் உயர்ந்த ஆட்சி புரிபவர்கள் ஆவார்கள். படங்களோ அவசியம் வேண்டும். எனவே மற்றபடி அந்த அடையாளங்கள் மட்டுமே உள்ளன. இதுவே ஒரு படம் ஆகும். இராமருடையதும் இருக்கிறது. ஆனால் இராம இராஜ்யத்தை சொர்க்கம் என்று கூற மாட்டார்கள். அது அரை சொர்க்கம் தான். இப்பொழுது உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஞானம் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். இதில் புத்தகங்கள் ஆகியவற்றின் எந்த அவசியமும் இல்லை. இந்த புத்தகங்கள் ஆகிய எதுவுமே அடுத்த ஜென்மத்தில் படிப்பதற்காக கூட வரப் போவதில்லை. இந்த படிப்பு இந்த பிறவிக்கானது மட்டுமே ஆகும். நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான கல்வி கூட தந்தை புது உலகத்திற்காக அளிக்கிறார். குழந்தைகள் 84பிறவியின் சக்கரத்தையும் அறிந்து கொண்டுள்ளார்கள். இது படிப்பிற்கான சமயம் ஆகும். புத்தியில் மனனம் ஆகிக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கும் கற்றுத் தர வேண்டும். அதிகாலை எழுந்து ஞான மனனம் செய்ய வேண்டும். அதிகாலையில்தான் நன்றாக ஞான மனனம் வரும். யார் புரிய வைக்கக் கூடியவர்களோ அவர்கள்தான் மனனம் செய்வார்கள். பக்தியின் விஷயங்கள் பல பிறவிகளாகவே கேட்டீர்கள். இந்த ஞானம் பல பிறவிகளுக்கு கேட்க மாட்டீர்கள். இந்த தந்தை ஒரு முறை கூறுகிறார். பிறகு இந்த ஞானம் உங்களுக்கும் மறந்து விடுகிறது. பக்தி மார்க்கத்தில் எத்தனை புத்தகங்கள் உள்ளன. வெளிநாட்டிலிருந்து கூட வருகின்றன. இவை எல்லாமே அழியப் போகின்றன. சத்யுகத்திலோ எந்த ஒரு புத்தகங்கள் ஆகியவற்றின் அவசியம் இருக்காது. இவை அனைத்தும் கலியுகத்தின் சாமான்கள் ஆகும். இங்கு நீங்கள் பார்க்கும் மருத்துவமனை, சிறைச்சாலை, விடுதிகள் ஆகியவை அங்கு எதுவும் இருக்காது. அந்த உலகமே வேறானதாக இருக்கும். உலகமோ இதுவேதான். ஆனால் புதியது மற்றும் பழையதில் வித்தியாசமோ அவசியம் இருக்கும் அல்லவா. அது சொர்க்கம் என்று கூறப்படுகிறது. அதே உலகம் பிறகு நரகமாக ஆகிறது. குறிப்பிட்ட இன்னார் சொர்க்க வாசி ஆனார் என்று வாயால் கூறுகிறார்கள். சந்நியாசிகளுக்கு பிரம்மத்துடன் கலந்து விட்டார். நிர்வாண நிலையை அடைந்தார் என்று கூறுகிறார்கள். ஆனால் நிர்வாணத்தில் யாரும் செல்வது இல்லை. இந்த ருத்ரமாலை எவ்வாறு உருவானது என்பது உங்களுக்குத் தெரியும். ருண்ட மாலையும் உள்ளது. விஷ்ணுவின் ராஜதானியின் மாலை அமைகிறது. இப்பொழுது மாலையின் ரகசியத்தை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். நம்பர் பிரகாரம் படிப்பிற்கு ஏற்ப மாலையில் கோர்க்கப்படுகிறார்கள். முதன் முதலில் இது ஈஸ்வரிய படிப்பு என்ற நிச்சயம் வேண்டும். அவர் உயர்ந்த தந்தை மற்றும் உயர்ந்த ஆசிரியரும் ஆவார். உங்கள் புத்தியில் இருக்கும் ஞானத்தை மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும். தனக்குச் சமானமாக ஆக்க வேண்டும். ஞான மனனம் செய்ய வேண்டும். பத்திரிகைத் தாள்கள் கூட அதிகாலையில் வெளிப்படுகின்றன. அது சாதாரண விஷயம் ஆகும். இதுவோ ஒவ்வொரு விஷயமும் இலட்ச ரூபாய்கள் மதிப்பு வாய்ந்தது. ஒரு சிலர் நல்ல முறையில் புரிந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் குறைவாக புரிந்து கொள்கிறார்கள். புரிவது மற்றும் புரிய வைப்பது இவற்றிற்கேற்ப புது உலகத்தில் பதவி கிடைக்கிறது. ஞான மனனம் செய்வதில் மிகுந்த தனிமை தேவை. ராமதீர்த்தருக்காக கூறுகிறார்கள். எழுத முற்படும் பொழுது சிஷ்யரிடமும் இரண்டு மைல் தூரம் போய் விடு இல்லாவிட்டால் வைப்ரேஷன் (எதிர்மறை தாக்கம்) வரும் என்று கூறுவாராம்.

 

நீங்கள் இப்பொழுது முழுமையானவர்களாக ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள். முழு உலகத்தினுடையது குறையுள்ள புத்தி ஆகும். நீங்கள் இந்த படிப்பின் மூலம் இந்த இலட்சுமி நாராயணர் ஆகிறீர்கள். எவ்வளவு உயர்ந்த படிப்பு ஆகும். ஆனால் நம்பர் பிரகாரம் அமர்த்தி வைக்க முடியாது. பின்னால் அமர்ந்துவிட்டால் பயந்துவிடுவார்கள். மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தால் வாயுமண்டலத்தை கெடுத்துவிடுவார்கள். பார்க்கப் போனால் நம்பர் பிரகாரம் அமர்த்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் இந்த எல்லா விஷயங்களும் வெல்லத்திற்கு தெரியும். வெல்லத்தின் பைக்கு தெரியும். இது மிகவும் உயர்ந்த ஞானம் ஆகும். உங்களுக்கு தனித்தனியாக வகுப்புகள் நடத்த முடியாது. உண்மையில் நீங்கள் வகுப்பில் எவ்வாறு அமர வேண்டும் என்றால் ஒருவரது உடல் மற்றவரது மீது படக்கூடாது. ஒலிப்பெருக்கி மூலம் தூரத்திலிருந்து கூட குரல் கேட்க முடியும். இந்த உலகத்தினுடைய எதையும் நீங்கள் கேட்கவும் வேண்டாம், படிக்கவும் வேண்டாம் என்று தந்தை கூறுகிறார். அவர்களது சகவாசம் கூட செய்யாதீர்கள். யார் நல்ல முறையில் படிக்கிறார்களோ அவர்களுடைய சகவாசத்தில் இருக்க வேண்டும். எங்கு நல்ல சேவை இருக்கிறதோ மியூசியம் ஆகியவை உள்ளதோ அங்கு மிகவும் புத்தி கூர்மையுள்ள யோகத்துடன் கூடிய சகோதரிகள் இருக்க வேண்டும்.

 

இந்த நாடகம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் தந்தை புரிய வைக்கிறார். சில சமயம் பாபா கொஞ்சம் நாடகத்தில் மாற்றம் ஏற்பட்டால் பரவாயில்லை என்று யோசிக்கிறார். ஆனால் மாற்றம் ஏற்பட முடியாது. இது ஏற்கனவே அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். குழந்தைகளின் நிலையை பார்த்து கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டால் பரவாயில்லை என்ற எண்ணம் வருகிறது. என்ன இது போன்றவர்கள் சொர்க்கம் செல்வார்களா? பிறகு சிந்தனை வருகிறது சொர்க்கத்திலோ முழு ராஜதானி வேண்டும். ஒரு சிலர் தாச, தாசிகள், சண்டாளர் ஆகியோரும் இருப்பார்கள். டிராமாவில் எந்த மாற்றமும் ஏற்படமுடியாது. பகவானுடைய வாக்கியம் - இந்த நாடகம் அமைக்கப்பட்டுள்ளது! இதை நான் கூட மாற்ற முடியாது. பகவானுக்கு மேலே வேறு யாருமே கிடையாது. மனிதர்களோ பகவான் என்ன தான் செய்ய முடியாது என்று கூறி விடுகிறார்கள். ஆனால் சுயம் பகவான் கூறுகிறார்: நான் எதுவும் செய்ய முடியாது. இது ஏற்கனவே அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். தடைகள் வருகின்றன. எதுவும் செய்ய முடியாது. நாடகத்தில் பொருந்தி உள்ளது. நான் என்ன செய்ய முடியும். நிறைய பெண் குழந்தைகள் எங்களை மான பங்கத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று முறையிடுகிறார்கள். இப்பொழுது தந்தை என்ன செய்வார்? டிராமாவின் செயல் என்று மட்டுமே தந்தை கூறிவிடுகிறார். இதுவோ ஏற்கனவே அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். பகவானின் செயல் என்று நினைக்காதீர்கள். பகவானின் கையில் இருந்தது என்றால் உதாரணமாக யாராவது நெருங்கியவர் சரீரம் விட்டு விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம், அவரையும் காப்பாற்றி விட்டிருப்பார். இதுபோல அநேகருக்கு சந்தேகம் வருகிறது. பகவான் கற்பிக்கிறார். பகவானின் குழந்தைகள் என்றால் பகவான் கூட தங்களது குழந்தைகளை காப்பாற்ற முடியாதா என்ன? நிறைய புகார்கள் கொடுக்கிறார்கள். கூறுகிறார்கள் இதுபோல சாதுக்களோ ஒருவரது உயிரைக் கூட காப்பாற்ற முடியும். உயிர் மீண்டும் வந்து விடுகிறது. சிதையிலிருந்து கூட எழுந்து விடுகிறார்கள். பிறகு கூறுவார்கள். இறைவன் உயிரை திரும்ப செய்துவிட்டார். காலன் அழைத்து சென்று விட்டான். பின் இறைவன் கருணை புரிந்தார். தந்தை புரிய வைக்கிறார் நாடகத்தில் எது பொருந்தி உள்ளதோ அதுவே நடக்கும். தந்தை கூட எதுவுமே செய்ய முடியாது. இது டிராமாவின் செயல் என்று கூறப்படுகிறது. டிராமா என்ற வார்த்தையை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எது நடக்க வேண்டி இருந்ததோ அது நடந்தது. எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று அவர் கூறுகிறார். உங்களை கவலையற்றவராக ஆக்குகிறார். ஒவ்வொரு வினாடியும் எது நடக்கிறதோ அது நாடகம் என்றே உணருங்கள். ஆத்மா சரீரத்தை விட்டுப்போய் மற்றொரு பார்ட் நடிக்கிறது. அனாதி பார்ட்டை நீங்கள் எப்படி திருப்ப முடியும்? இப்பொழுது கொஞ்சம் பக்குவமற்ற நிலை உள்ளது, அதிக அளவில் சிந்தனை வந்துவிடுகிறது. ஆனால் நாடகத்தின் செயல் எதுவுமே மாற்ற முடியாது. ஜனங்கள் என்னென்ன கூறினாலும் சரி ஆனால் நமது புத்தியில் நாடகத்தின் ரகசியம் உள்ளது. பார்ட் நடிக்க வேண்டும். கவலையின் விஷயம் இல்லை. பக்குவமற்ற நிலை உள்ளவரையிலும் அதிக அளவில் அலைகள் வருகின்றன.

 

இச்சமயம் நீங்கள் அனைவரும் படித்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் தேகதாரி ஆவீர்கள். நான் ஒருவன் மட்டும் அசரீரி ஆவேன். எல்லா தேகதாரிகளுக்கும் கற்பிக்கிறேன். ஒரு சில நேரங்களில் குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த பிரம்மா கூட அமர்ந்து புரிய வைக்கிறார் என்று தந்தை விளக்குகிறார். இந்த தந்தையினுடைய பார்ட் மற்றும் பிரஜாபிதா பிரம்மாவின் பார்ட் அதிசயமானது. இந்த தந்தை ஞான மனனம் செய்து உங்களுக்கு கூறிக் கொண்டே இருக்கிறார். எவ்வளவு அதிசயமான ஞானம் ஆகும். எந்த அளவு புத்தியை செலுத்த வேண்டி வருகிறது. பாபாவின் ஞான மனனம் அதிகாலை நடக்கிறது. நீங்களும் அது போல ஆசிரியர் எப்படியோ அப்படியே ஆக வேண்டும். பிறகும் வித்தியாசம் அவசியம் இருக்கும் டீச்சர் மாணவருக்கு ஒருபொழுதும் 100 மார்க்கு கொடுக்க மாட்டார்கள். கொஞ்சம் குறைவாக கொடுப்பார்கள். அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் நாம் தேகதாரி ஆவோம். எனவே பாபா போல 100 சதவிகிதம் எப்படி ஆக முடியும்? இது மிகவும் ஆழமான விஷயங்கள் ஆகும். ஒரு சிலரே கேட்டு தாரணை செய்கிறார்கள். குஷி ஆகிறது. ஒரு சிலர் கூறுகிறார்கள், பாபா ஒரே மாதிரி வாணி கூறுகிறார், அதையே திரும்ப, திரும்ப கூறுகிறார் என்று இப்பொழுது யாராவது புது புது குழந்தைகள் வருகிறார்கள் என்றால் நான் முதல் பாயிண்ட் எடுத்து கூற வேண்டி வருகிறது. ஏதாவது புது பாயிண்ட் கூட வெளிப்படுகிறது என்றாலும் கூட மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்காக, குழந்தைகள் பிறகும் தந்தைக்கு உதவி செய்ய வேண்டி வருகிறது. மாத இதழ்கள் பிரசுரிக்கிறார்கள். முந்தைய கல்பத்திலும் இப்படியே எழுதி இருப்பார்கள். மாத இதழ்கள் பிரசுரிக்கிறீர்கள் என்றால் அதன் மீது மிகவும் கவனம் அளிக்க வேண்டி வரும். மனிதர்கள் படித்து கோபப்படும் வகையில் அப்பேர்ப்பட்ட எந்த விஷயமும் இருக்கக் கூடாது. பத்திரிகை இதழ்களோ நீங்கள் படிக்கிறீர்கள் ஏதாவது அரை குறை விஷயங்கள் இருந்தால் இதுவரையும் சம்பூர்ணம் ஆகவில்லை என்று கூறுவார்கள். மிகச் சரியாக 16 கலை சம்பூர்ணம் ஆவதிலோ நேரம் பிடிக்கும். இப்பொழுதோ நிறைய சேவை செய்ய வேண்டும். நிறைய பிரஜைகள் உருவாக்க வேண்டும். அநேக விதமான மார்க்குகள் என்பதும் தந்தை புரிய வைத்துள்ளார். ஒரு சிலர் நிறைய பேர் ஞானம் எடுப்பதற்கு ஏற்பாடு செய்ய நிமித்தம் ஆகிறார்கள் என்றால் அதற்கும் பலன் கிடைக்கிறது. இப்பொழுதோ பழைய உலகமே முடியப் போகிறது. இங்கு அல்பகால சுகம் தான் உள்ளது. வியாதி ஆகியவையோ அனைவருக்கும் ஏற்படுகிறது. பாபா எல்லா விஷயங்களிலும் அனுபவி ஆவார். உலகத்தின் விஷயங்கள் கூட புரியவைக்கிறார். பாபா கூறி இருந்தார் பத்திரிகை அல்லது மாத இதழ்களில் அதிசயமான விஷயங்கள் எழுதுங்கள். பிரம்மா குமாரிகள் இந்த விஷயம் முற்றிலும் சரியாகவே எழுதி உள்ளார்கள் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இந்த போர் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக நடந்து இருந்தது. எப்படி! இதை வந்து புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பெயரும் புகழடையும் மனிதர்கள் கேட்டு குஷியும் அடைவார்கள். மிக பெரிய விஷயமாகும். ஆனால் ஒருவரது புத்தியில் பதிந்தால் தானே. யார் எழுதுகிறார்களோ அவர்கள் பிறகு புரியவைக்கவும் வேண்டும். புரிய வைக்கவே தெரிவதில்லை என்றால் பிறகு எழுதுவதும் இல்லை நல்லது.

 

இனிமையிலும் இனிமையான வெகுகாலம் காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் குட்மார்னிங். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் வணக்கம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

(1) ஒரு தந்தை கூறுவதை அல்லது கற்பிப்பதை மட்டுமே கேளுங்கள் மற்றும் படியுங்கள் மற்றது எதுவும் படிக்கவோ, கேட்க வேண்டிய அவசியமே இல்லை. சகவாசத்தில் மிக மிக எச்சரிக்கை கொள்ளுங்கள். அதிகாலையில் தனிமையில் அமர்ந்து ஞான மனனம் செய்யுங்கள்.

 

(2) டிராமாவின் விதிமுறை நிச்சயிக்கப்பட்டதாக அமைந்துள்ளது. எனவே சதா கவலையற்று இருங்கள். எந்த விஷயத்திலும் சந்தேகம் எழுப்பாதீர்கள். மக்கள் என்ன கூறினாலும் சரி ஆனால் நீங்கள் நாடகத்தின் மீது உறுதியாக இருங்கள்.

 

வரதானம் :

ஹோலி என்ற சொல்லின் அர்த்த சொரூபத்தில் நிலைத்திருந்து, உண்மையான ஹோலியைக் கொண்டாடக் கூடிய தீவிர புருஷார்த்தி ஆகுக.

 

ஹோலி கொண்டாடுவது என்றால், எந்த விஷயம் நடந்து முடிந்ததோ, முடிந்து விட்ட அதை முற்றிலும் முடித்து விடுவதற்கான உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்து விட்ட விஷயத்தை, மிகப் பழைய ஏதோ ஒரு பிறவியின் விஷயமாக உணருங்கள். எப்போது அந்த மாதிரி மன நிலை இருக்குமோ, அப்போது புருஷார்த்தத்தின் வேகம் அதிகமாகும். தன்னுடைய அல்லது மற்றவர்களின் நடந்து முடிந்த விஷயங்களைப் பற்றிச் சிந்தனையில் கொண்டு வராமல், உள்ளத்தில் வைக்காமல் இருப்பது தான் உண்மையான ஹோலி கொண்டாடுவதாகும். அதாவது உறுதியான (பக்கா) நிறம் படியச் செய்வதாகும்.

 

சுலோகன்:

யாருக்கு நேரடியாக பகவான் மூலமாகப் பாலனை, படிப்பு மற்றும் சிரேஷ்ட வாழ்க்கைக்கான ஸ்ரீமத் கிடைத்துள்ளதோ, அவர்களுடையது தான் சிரேஷ்ட பாக்கியமாகும்.

 

ஓம்சாந்தி