27.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இப்பொழுது உங்களுக்கு வானப்பிரஸ்த்த நிலை ஆகும். ஏனெனில் நீங்கள் சப்தத்திற்கு அப்பாற்பட்டு வீட்டிற்குச் செல்ல வேண்டும். எனவே நினைவில் இருந்து தூய்மையாக வேண்டும்.

 

கேள்வி:

உயர்ந்த குறிக்கோளை அடைய எந்த விஷயத்தில் அவசியம் மிக கவனமாக இருக்க வேண்டும்?.

 

பதில்:

கண்களைப் பற்றிய விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். இவையே மிகவும் ஏமாற்றம் கொடுக்கக் கூடியது. குற்றமான பார்வை மிகவும் தீமையை ஏற்படுத்தும். எனவே கூடுமான வரை தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள் சகோதர, சகோதரன் என்ற பார்வையை பயிற்சி செய்யுங்கள். அதிகாலை எழுந்து தனிமையில் அமர்ந்து தனக்குத் தானே பேசுங்கள். இனிமையான குழந்தைகளே! காமம் என்ற மகா எதிரியிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் என்பது பகவானின் கட்டளையாகும்.

 

ஓம் சாந்தி!

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இதைக் கூட புரிந்து இருக்கீறீர்கள் - ஏனெனில் இங்கு புரிந்து கொண்டவர்களே வர முடியும். இங்கு எந்த ஒரு மனிதனும் கற்பிப்பதில்லை. இதையோ பகவான் படிப்பிக்கின்றார். பகவானைப் பற்றிய அறிமுகம் கூட வேண்டும். பெயர் கூட எவ்வளவு பெரிதாக உள்ளது! பகவான் பெயர் ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் என்றும் கூறுகின்றார்கள். இப்பொழுது இருப்பதும் நடைமுறையில் தனிப்பட்டவராகத்தான், இவ்வளவு சிறிய புள்ளி. அவர் ஆத்மா நட்சத்திரம் என்று கூறவும் செய்கின்றார். அந்த நட்சத்திரம் சிறியது ஒன்றும் அல்ல. இந்த ஆத்மா என்ற நட்சத்திரமோ உண்மையிலேயே சிறியதாகத்தான் உள்ளது. தந்தையும் பிந்து ஆவார். தந்தையோ சதா தூய்மையானவர் ஆவார். அவரது மகிமை கூட ஞானக் கடல், சாந்திக் கடல்,........... என்று உள்ளது. இதில் குழப்பமடைய எந்த ஒரு விஷயமும் இல்லை. முக்கியமான விஷயமே தூய்மையாகுவதாகும். விகாரத்தின் காரணமாகத்தான் சண்டை ஏற்படுகிறது.. தூய்மை ஆகுவதற்காக பதீத பாவனரைக் கூப்பிடுகின்றார்கள். எனவே அவசியம் பாவனமாக வேண்டி உள்ளதல்லவா? இதில் குழப்பமடையக்கூடாது. எது நடந்து முடிந்ததோ, தடைகள் ஆகியவை ஏற்பட்டனவோ, எதுவும் புதிய விஷயம் அல்ல. அபலைகள் மீது கொடுமைகள் ஏற்படும். மற்ற சத்சங்கங்களில் இந்த விஷயங்கள் ஏற்படுவதில்லை. எங்குமே குழப்பம் ஏற்படுவதேயில்லை. இங்கு குறிப்பாக இந்த விஷயத்தின் காரணமாகத்தான் சச்சரவு ஏற்படுகிறது. தந்தை தூய்மையாக்க வரும்பொழுது எவ்வளவு தொல்லைகள் ஏற்படுகின்றன! தந்தை அமர்ந்து படிப்பிக்கின்றார். தந்தை கூறுகிறார், நான் வருவது கூட வானப்பிரஸ்த நிலை ஆகும். வானப்பிரஸ்த நிலையின் நியமம் கூட இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகின்றது எனவே வானப்பிரஸ்த நிலை உடையவர்கள் அவசியம் வானப்பிரஸ்தத்தில் தான் இருப்பார்கள். சப்தத்திற்கு அப்பாற்பட்டு செல்வதற்காக தந்தையை முழுமையாக நினைவு செய்து தூய்மையாக வேண்டும். தூய்மையாவதற்கான வழி ஒன்றே ஒன்றுதான். வீடு திரும்பிச் செல்ல வேண்டும் என்றால் அவசியம் தூய்மையாக வேண்டும். அனைவருமே வீடு திரும்ப வேண்டும். இரண்டு நான்கு பேர் மட்டும் செல்வதில்லை; முழு பதீத்த உலகமே மாற வேண்டியுள்ளது. இந்த நாடகம் பற்றி யாருக்குமே தெரியாது. சத்யுகத்திலிருந்து கலியுகம் வரை இது நாடகத்தின் சக்கரம் ஆகும். தந்தை கூறுகிறார்: தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். மேலும் அவசியம் தூய்மையாக வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் சாந்திதாம் மற்றும் சுகதாமத்திற்கு செல்ல முடியும். முக்தி, ஜீவன் முக்தி அளிக்கக் கூடியவர் ஒரே ஒருவர் தான் என்ற பாடலும் உள்ளது. சத்யுகத்தில் மிகவும் குறைவானவர்களே இருப்பார்கள் மற்றும் தூய்மையாக இருப்பார்கள். கலியுகத்தில் அனேக தர்மங்கள் உள்ளன மற்றும் அபவித்திரமாகி விடுகின்றார்கள். இதுவே சகஜமான விஷயம் ஆகும் மற்றும் தந்தை முன் கூட்டியே கூறிவிடுகின்றார் தந்தையோ களங்கம் அவசியம் ஏற்படும் என்பதை அறிந்துள்ளார். அறியாமல் இருந்திருந்தால் பின் ஞான அமிர்தத்தைப் பருகச் செல்ல வேண்டும் என்றால் கடிதம் எடுத்து வாருங்கள் என்ற யுக்திகளை ஏன் கையாண்டார் ? இந்த சண்டை சச்சரவு ஏற்படுவது கூட நாடகத்தின் அமைப்பாகும். அறிந்திருக்கின்றார்கள் ஆச்சரியப்படும் வகையில் நல்ல முறையில் அடையாளம் கண்டு கொண்டு ஞானம் கேட்கின்றார்கள் ; மற்றவர்களுக்கும் ஞானம் கொடுக்கின்றார்கள். பிறகும் ஐயோ! மாயா! அவர்களையும் கூட தன் பக்கம் இழுத்துக் கொண்டு விடுகிறது. இது எல்லாமே நாடகத்தின் அமைப்பாக உள்ளது. இந்த நாடகத்தின் விதியை யாருமே தவிர்க்க முடியாது. மனிதர்கள் வெறும் வார்த்தைகளைக் கூறிவிடுகின்றார்கள். ஆனால் பொருளை அறியாமல் உள்ளார்கள். குழந்தைகளே ! இது உயர்ந்த படிப்பாகும். கண்கள் எவ்வளவு ஏமாற்றக் கூடியது என்பதை கேட்கவே வேண்டாம். தமோபிரதான உலகமாகும். கல்லூரிகளில் கூட மிகவும் கெட்டுப் போய்விடுகின்றார்கள். வெளிநாட்டை பற்றி கேட்கவே வேண்டாம் சத்யுகத்தில் இதுபோன்ற விஷயங்கள் இருக்காது. அவர்கள் கூறுகின்றார்கள் சத்யுகத்திற்கு இலட்சக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன. தந்தை கூறுகின்றார் நேற்றைக்கு உங்களுக்கு இராஜ்யத்தை கொடுத்திருந்தேன் இப்பொழுது எல்லாமே இழந்துவிட்டீர்கள். லௌகீகத்தில் கூட தந்தை கூறுவார் - இவ்வளவு உங்களுக்கு சொத்து அளித்தேன் எல்லாமே இழந்துவிட்டீர்கள், ஒரே அடியில் சொத்து இல்லாமல் செய்து விடக்கூடிய குழந்தைகளை வெளியேற்றுகின்றனர். எல்லையில்லாத தந்தை கூட கூறுகின்றார்: நான் உங்களுக்கு எவ்வளவு செல்வம் அளித்து விட்டுச் சென்றேன், எவ்வளவு தகுதியுடைவர்களாக ஆக்கியிருந்தேன், உலகிற்கு எஜமானனாக மாற்றினேன். நாடகப்படி உங்களுக்கு என்ன நிலைமை ஆகி உள்ளது! நீங்கள் அதே என்னுடைய குழந்தைகள் ஆகியிருக்கின்றீர்கள் அல்லவா! எவ்வளவு நீங்கள் செல்வந்தர்களாக இருந்தீர்கள். இந்த எல்லையில்லாத விஷயத்தை பற்றி இப்பொழுது புரிந்திருக்கின்றீர்கள். ஒரு கதை கூட உள்ளது தினமும் சிங்கம் வருகின்றது, சிங்கம் வருகின்றது என்று கூறிக் கொண்டே இருந்தார். ஆனால் சிங்கம் வரவே இல்லை. ஒரு நாள் உண்மையில் சிங்கம் வந்துவிட்டது. நீங்கள் கூட மரணம் வந்துவிட்டது என்று கூறுகின்றீர்கள். இவர்கள் இதே போல் தினமும் கூறுகின்றார்கள், வினாசம் ஆவதே இல்லை. ஆனால் ஒரு நாள் அவசியம் வினாசம் ஆகத்தான் போகிறது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். அதை அவர்கள் பின்னர் கதையாக ஆக்கிவிட்டார்கள். எல்லையில்லாத தந்தை கூறுகின்றார் - அவர்களுடைய தவறு எதுவும் இல்லை. கல்பத்திற்கு முன்பும் இதே போல் நடந்துள்ளது. இது 5000 வருடங்களின் விஷயம் ஆகும். பாப்தாதாவோ அனேக முறை கூறியிருக்கின்றார் - இதைக் கூட எழுதி கொண்டே இருங்கள், 5000 வருடம் முன் இருந்ததுபோல இதே போன்ற அருங்காட்சியகம் திறந்தோம். பாரதத்தில் தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்யப்பட்டிருந்தது இதை தெளிவாக எழுதினீர்கள் என்றால் வந்து புரிந்து கொள்வார்கள். பாபா வந்துவிட்டார், தந்தையின் ஆஸ்தி சொர்க்கத்தின் அரசாட்சி ஆகும். பாரதம் சொர்க்கமாக இருந்தது. முதல் முதலில் புதிய உலகத்தில் புதிய பாரதம் சொர்க்கமாக இருந்தது. அதே சொர்க்கம் இப்பொழுது நரகமாக உள்ளது. இது மிகப் பெரிய எல்லையில்லாத நாடகம் ஆகும். இதில் எல்லோருமே நடிகர்கள் ஆவார்கள்; 84 பிறவிகளின் நடிப்பை நடித்து இப்பொழுது நாம் மீண்டும் திரும்பி செல்கின்றோம். முதலில் நாம் எஜமானர்களாக இருந்தோம். பிறகு ஏழை ஆனோம். இப்பொழுது மீண்டும் பாபாவின் வழிப்படி நடந்து எஜமானர் ஆகின்றோம். நாம் ஸ்ரீமத்படி கல்ப கல்பமாக பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகின்றோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவசியம் தூய்மையாக வேண்டும். தூய்மையாகும் காரணத்தால் கொடுமைகள் ஏற்படுகின்றன. பாபா குழந்தைகளுக்கு அதிகமாகப் புரிய வைக்கின்றார். பின் வெளியில் சென்ற உடன் புரியாதவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆச்சரியப்படும் வகையில் கேட்கின்றனர், கூறுகின்றார்கள், ஞானம் கொடுக்கின்றார்கள். ஐயோ! மாயா, எனது மாயையே! பிறகு எப்படி இருந்தார்களோ, அப்படியே ஆகிவிடுகின்றார்கள் பார்க்கப்போனால் இன்னும் மோசமாக ஆகிவிடுகின்றார்கள். காம விகாரத்தில் மாட்டி கொண்டு கீழே விழுந்துவிடுகின்றார்கள்.

 

சிவ பாபா இந்த பாரதத்தை சிவாலயமாக ஆக்குகின்றார். ஆகவே குழந்தைகள் தான் முயற்சி செய்ய வேண்டும் இந்த எல்லையில்லாத பாபா மிகவும் இனிமையான பாபா ஆவார். எல்லோருக்கும் ஒரு வேளை தெரிய வந்துவிட்டால் ஏராளமானோர் வந்துவிடுவார்கள். படிப்பது என்பது முடியாமல் போய்விடும். படிப்பிலோ தனிமை வேண்டும். அதிகாலை எவ்வளவு அமைதியாக இருக்கின்றது! நாம் நம்மை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்கின்றோம். நினைவு இன்றி பாவங்கள் எப்படி வினாசம் ஆகும்? இதே கவலை ஏற்பட்டுள்ளது. இப்பொழுது பதீதமாக ஏழையாக ஆகிவிட்டுள்ளோம், மீண்டும் தூய்மையின் கிரீடமாக எப்படி ஆக முடியும்? தந்தையோ முற்றிலும் சுலபமான விஷயங்களைப் புரிய வைக்கின்றார். தொந்தரவுகள் ஏற்படும். பயப்படுவதற்கான எந்த விஷயமும் இல்லை. தந்தையோ முற்றிலும் சாதாரணமானவர் ஆவார். ஆடை ஆகியவை அனைத்தும் அதேதான். சிறிதும் வித்தியாசம் இல்லை. சந்நியாசிகள் வீட்டை விட்டுச் சென்று காவி உடை அணிந்து கொள்கிறார்கள். இவருடையதோ அதே உடுப்புதான். தந்தை மட்டும் பிரவேசம் ஆகி உள்ளார் மற்ற எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. எப்படி தந்தை குழந்தைகளை அன்புடன் பராமரிக்கின்றாரோ, வளர்க்கின்றாரோ அதே போல் இவரும் செய்கின்றார். எந்த ஒரு அகங்காரத்தின் விஷயம் இல்லை. முற்றிலும் சாதாரணமாக இருக்கின்றார். மற்றபடி இருப்பதற்கு வீடுகளைக் கட்ட வேண்டியது இருக்கும், இதுவும் சாதாரணமாக உள்ளது. உங்களுக்கோ எல்லையில்லாத தந்தை படிப்பிக்கின்றார். தந்தையோ காந்தம் ஆவார். குறைந்தவரா என்ன? புதல்விகள் தூய்மையாக ஆகுகின்றார்கள் என்றால் நிறைய சுகம் கிடைக்கின்றது அவர்களிடத்தில் ஏதோ சக்தி உள்ளது என்று கூறுகின்றார்கள். ஆனால் சக்தி என்று எதற்குக் கூறப்படுகின்றது என்பதை அறிந்திருக்கவில்லை. சர்வ சக்திவான் தந்தை ஆவார். அவர் நம்மை இதைப் போல ஆக்குகின்றார். ஆனால் எல்லோரும் ஒன்று போல ஆக முடியாது. பின்னர் தோற்றங்கள் ஒன்று போல இருக்க வேண்டும் பதவியும் ஒன்றாக விட வேண்டும் இதுவோ நாடகத்தின் அமைப்பாகும் 84 பிறவிகளின் உங்களுக்கு அதே 84 தோற்றங்கள் கிடைக்கின்றன. முந்தைய கல்பத்தில் கிடைத்திருந்த அதே தோற்றங்கள் கிடைத்துக் கொண்டிருக்கும். இதில் வித்தியாசம் ஏற்பட முடியாது. எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய மற்றும் நடைமுறைபடுத்த வேண்டிய விஷயங்கள் ஆகும்! வினாசமோ அவசியம் ஆக வேண்டி உள்ளது. உலகத்தில் அமைதியோ இப்போது ஏற்பட முடியாது. தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டே இருக்கின்றார்கள்.. மரணம் தலை மீது உள்ளது. நாடகப்படி ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை மற்றும் மற்ற தர்மங்களின் வினாசம் ஆகப் போகின்றது. அணு குண்டுகள் கூட தயாரித்துக் கொண்டே இருக்கின்றார்கள் இயற்கைப் பேரழிவும் ஏற்படுகின்றன. எல்லா கட்டிடங்களும் இடிந்து விழும் வகையில் பெரிய பெரிய கற்கள் விழும். எவ்வளவுதான் உறுதியான கட்டிடங்கள் அமைந்தாலும் சரி, அஸ்திவாரம் உறுதியானதாக இருந்தாலும் சரி; ஆனால் எதுவும் இருக்கப் போவது இல்லை. அவர்கள் பூகம்பத்தால் ஒன்றும் ஆகாது என்று நினைக்கின்றனர். ஆனால் கூறுகின்றார்கள் எவ்வளவுதான் 100 மாடி கட்டிடங்கள் கட்டினாலும் வினாசம் ஆகியே தீரும். அவை ஒன்றும் இருக்க போவது இல்லை என்று கூறுகின்றார்.

 

குழந்தைகளாகிய நீங்கள் இந்த சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெறுவதற்காக வந்திருக்கின்றீர்கள். வெளிநாட்டவரை பாருங்கள் என்ன ஆகிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று. இது இராவணன் உடைய பகட்டு எனக் கூறப்படுகின்றது. நானும் குறைந்தவன் அல்ல என்று மாயை கூறுகிறது. அங்கே உங்களுக்கு வைர, வைடூரியங்களால் ஆன அரண்மனைகள் இருக்கும். எல்லா பொருட்களும் தங்கத்தால் ஆனதாக இருக்கும். அங்கு 2-3 மாடிகள் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது. நிலத்திற்காக செலவு செய்ய வேண்டியதில்லை. எல்லாமே தயாராக இருக்கும். எனவே குழந்தைகள் அதிகமான முயற்சி செய்ய வேண்டும். எல்லோருக்கும் செய்தி கொடுக்க வேண்டும். நல்ல, நல்ல வழிகாட்டிகளாக ஆகி வந்திருக்கின்றனர். குழந்தைகள் புத்துணர்வு அடைவதற்காக இதுவும் நாடகத்தின் அமைப்பாகும் பிறகும் வருவார்கள், இத்தனை பேர் எல்லாம் வந்துள்ளார்கள், இவர்கள் அனைவரையும் மீண்டும் பார்ப்போமா? இல்லையா? என்பது தெரியாது இவர்கள் எல்லோரும் நிலைத்திருக்க முடியுமா? முடியாதா? என்பது தெரியாது. ஏராளமானோர் வருகின்றனர். பின் ஆச்சரியப்படும் வகையில் ஓடிப் போய் விடுகின்றார்கள். பாபா நாங்கள் விழுந்துவிட்டோம் என்று எழுதுகின்றார்கள். உங்கள் சம்பாத்தியத்தை இல்லாமல் ஆக்கிவிட்டீர்கள். பிறகு இவ்வளவு உயர்ந்த நிலையை அடைய முடியாது. இதுதான் மிகப் பெரியதிலும் பெரிய அவமரியாதை ஆகும். அந்த மனிதர்கள் சட்டத்தை உருவாக்குகின்றார்கள்- குறிப்பிட்ட அந்த நேரத்தில் யாரும் வெளியே வரக்கூடாது இல்லாவிடில் சுட்டுவிடுவோம் என்று. தந்தைக் கூறுகின்றார், விகாரத்தில் சென்றீர்கள் என்றால் சுடப்படுவீர்கள். இது பகவானின் கட்டளை அல்லவா? ஆதலால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தற்சமயம் விஷ வாயுக்கள் ஆகிவற்றால் எப்பேர்பட்ட பொருட்களை கண்டுபிடித்திருக்கின்றார்கள் என்றால் மனிதர்கள் உட்கார்ந்தபடியே சட்டென்று அழிந்து போய் விடுவார்கள் இவை எல்லாம் நாடகத்தின் அமைப்பாகும். ஏனென்றால் கடைசியில் மருத்துவமனைகள் எல்லாம் இருக்காது. ஆத்மா உடனே ஒரு சரீரம் விட்டு மற்றொரு சரீரம் எடுக்கின்றது. துக்கம், துன்பம் ஆகியவை எல்லாமே விட்டுவிடும் அங்கு கஷ்டம் துன்பம் ஆகியவை இருக்கவே இருக்காது. ஆத்மா சுதந்திரமாக இருக்கும். எந்த நேரத்தில் ஆயுள் முடிந்துவிடுகின்றதோ ஆத்மா சரீரத்தை விட்டுவிடும். அங்கு காலன் இருக்க மாட்டான். இராவணனே இல்லை என்றால் காலன் பின் எங்கிருந்து வருவான்? அவன் இராவணனின் தூதுவன் ஆவான். பகவானினுடையவன் அல்ல. பகவானின் குழந்தைகளோ மிகவும் அன்பானவர்கள் ஆவார்கள். தந்தை ஒரு போதும் குழந்தைகளின் துக்கத்தை சகித்து கொள்ள முடியாது. நாடகப்படி கல்பத்தின் முக்கால் பங்கு நீங்கள் சுகம் பெறுகின்றீர்கள். தந்தை இவ்வளவு சுகம் அளிக்கின்றார் என்றால் பின் அவரது ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். இது கடைசிப் பிறவி ஆகும். இல்லறத்தில் இருந்த படியே கடைசி பிறவியில் பவித்திரமாக இருக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். தந்தையின் நினைவால் மட்டுமே விகர்மங்கள் வினாசம் ஆகும். ஜன்ம ஜன்மாந்திரத்தின் பாவங்கள் தலை மேல் உள்ளது. அவசியம் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆக வேண்டும். தந்தை சர்வ சக்திவான் (அதாரிட்டி) ஆவார். சாஸ்திரம் ஆகியவை படிக்கின்றார்கள், பின் அவர்கள் அவற்றை அதாரிட்டி என்று கூறுகின்றார்கள். இப்பொழுது தந்தை கூறுகின்றார்: அனைத்து அதாரிட்டியும் நான் ஆவேன். நான் இந்த பிரம்மா மூலமாக அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தை வந்து கூறுகின்றேன். தன்னை ஆத்மா என உணர்ந்து என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்கள் அழிந்து போய்விடும். மற்றபடி தண்ணீரில் ஸ்நானம் செய்வதால் எவ்வாறு தூய்மை ஆக முடியும்? எங்கு சிறிதளவு நீர் இருந்தாலும் கூட அதை தீர்த்தம் எனக் கருதி ஸ்நானம் செய்கின்றார்கள். நிச்சயம் இது தமோபிரதானம் என்று கூறப்படுகின்றது. உங்களுடையது சதோபிரதானம் நிச்சயம் ஆகும். இதில் பயப்படவேண்டிய விஷயம் இல்லை. என்று தந்தை புரிய வைக்கின்றார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான வெகுகாலம் காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயு தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) தூய்மையாக இருக்க வேண்டும் என்று பகவான் கட்டளை கொடுத்திருக்கின்றார். அதை ஒருபோதும் அவமரியாதை செய்யக் கூடாது. மிக மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பாப்தாதா இருவரின் வளர்ப்பிற்கு கைமாறாக தூய்மையாக ஆகிக் காட்ட வேண்டும்.

 

2) நாடகத்தின் செயல் நிச்சயிக்கப்பட்டதாக அமைந்துள்ளது. அதை அறிந்து சதா நிச்சிந்த் (கவலையில்லாதவர்களாக) இருக்க வேண்டும். வினாசத்திற்கு முன்பே அனைவருக்கும் தந்தையின் செய்தியைக் கொடுக்க வேண்டும்.

 

வரதானம் :

ஒரு பாபா என்ற சொல்லின் நினைவு மூலம் நினைவு மற்றும் சேவையில் இருக்கக் கூடிய உண்மையான யோகி, உண்மையான சேவாதாரி ஆகுக.

 

குழந்தைகள் நீங்கள் வாயினால் அல்லது மனதினால் அடிக்கடி பாபா என்ற சொல்லைச் கூறுகிறீர்கள். குழந்தைகள் என்றால் பாபா என்ற சொல் நினைவு வருவது அல்லது சிந்திப்பது தான் யோகமாகும். மேலும் வாயினால் அடிக்கடி சொல்வது -- பாபா இதுபோல் சொல்கிறார், பாபா இதைச் சொன்னார் -- இது தான் சேவை. ஆனால் இந்த பாபா என்ற சொல்லை சிலர் மனதாரச் சொல்பவராக உள்ளனர், சிலர் ஞானத்தின் புத்தியால் சொல்பவராக உள்ளனர். யார் மனப்பூர்வமாகச் சொல்கின்றனரோ, அவர்களுக்கு மனதில் வெளிப்படையான பிராப்தியாகக் குஷி மற்றும் சக்தி கிடைக்கின்றது. புத்தி மூலம் சொல்பவர்களுக்கு, சொல்கின்ற நேரத்தில் மட்டும் குஷி இருக்கும். சதா காலத்திற்கும் இருக்காது.

 

சுலோகன் :

பரமாத்மா என்ற ஜோதியில் விழுந்து மாய்ந்து விடுகிறவர்களே உண்மையான விட்டில்பூச்சி ஆவார்கள்.

 

ஓம்சாந்தி