13.02.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! சதா தந்தையின் நினைவிற்கான சிந்தனை மற்றும் ஞானச் சிந்தனை செய்தால் புதுப் புது கருத்துகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும், குஷியாக இருப்பீர்கள்.

 

கேள்வி:

இந்த நாடகத்தில் அனைவரையும் விட மிகப் பெரிய அற்புதமான செயல் யாருடையது? எப்படி?

 

பதில்:

1) அனைவரையும் விட மிகப் பெரிய அற்புத செயல் சிவபாபாவினுடையதாகும். ஏனெனில் அவர் உங்களை விநாடியில் அழகான தேவதையாக ஆக்கி விடுகிறார். மனிதனிலிருந்து தேவதையாக ஆகக் கூடிய படிப்பு கற்பிக்கிறார். உலகில் இப்படிப்பட்ட படிப்பு தந்தையைத் தவிர வேறு யாரும் கற்பிக்க முடியாது. 2) ஞானம் என்ற மூன்றாவது கண் கொடுத்து இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்து வருவது, ஏமாற்றத்திலிருந்து பாதுகாப்பது தந்தையின் காரியமாகும். ஆகையால் அவரைப் போன்று அதிசய காரியம் வேறு யாரும் செய்ய முடியாது.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகக் தந்தை தினம் தினம் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் - குழந்தைகளே! தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தை கூறுவதைக் கேளுங்கள். எவ்வாறு தந்தை குப்தமாக இருக்கிறாரோ அதே போன்று ஞானமும் குப்தமாக இருக்கிறது. ஆத்மா என்றால் என்ன? பரம்பிதா பரமாத்மா யார்? என்பது யாருக்கும் தெரியாது. நான் ஆத்மா என்ற பழக்கம் குழந்தைகளாகிய உங்களுக்கு பக்காவாக ஆகிவிட வேண்டும். தந்தை ஆத்மாக்களாகிய நமக்கு கூறுகிறார். இதை புத்தியினால் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் நடைமுறையில் கொண்டு வர வேண்டும். மற்றபடி தொழில் போன்றவைகள் செய்தே ஆக வேண்டும். யாராவது அழைக்கிறார்கள் எனில் பெயர் கூறித் தான் அழைப்பார்கள். பெயர், உருவம் இருப்பதால் தான் பேச முடிகிறது. ஏதாவது செய்ய முடிகிறது. நான் ஆத்மா என்பதை உறுதி செய்து கொண்டால் போதும். அனைத்து மகிமையும் நிராகாரராகிய சிவபாபாவுக்கே. ஒருவேளை சாகாரத்தில் தேவதைகளுக்கு மகிமைகள் இருக்கிறது எனில் அவர்களையும் மகிமைக்குரியவர்களாக தந்தை ஆக்குகிறார். மகிமைக்குரியவர்களாக இருந்தனர், இப்பொழுது மீண்டும் தந்தை மகிமைக்குரியவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். ஆகையால் நிராகாராமானவருக்குத் தான் மகிமை ஆகும். தந்தையின் மகிமை எவ்வளவு! மற்றும் அவரது சேவை எப்படிப்பட்டது! என்று சிந்தனை செய்ய வேண்டும். அவர் சக்தி வாய்ந்தவர், அவரால் அனைத்தும் செய்ய முடியும். நாம் மிகக் குறைவாகத் தான் மகிமை செய்கிறோம். அவரது மகிமை நிறைய இருக்கின்றன. அல்லா இவ்வாறு கட்டளையிட்டிருக்கிறார் என்று முஸ்லீம்களும் கூறுகின்றனர். யாருக்கு கட்டளையிட்டார்? குழந்தைகளிடம் கட்டளையிடுகிறார். இதன் மூலம் நீங்கள் மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகிறீர்கள். அல்லா யாருக்காவது கட்டளையிட்டிருப்பார் அல்லவா! குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் புரிய வைக்கிறார், அவரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. இப்பொழுது நீங்கள் அறிந்து கொண்டீர்கள், பிறகு இந்த ஞானம் மறைந்து போய் விடும். பௌத்தர்களும் இவ்வாறு கூறுவர், கிறிஸ்துவர்களும் இவ்வாறு கூறுவர். ஆனால் என்ன கட்டளையிட்டிருந்தார்? என்பது யாருக்கும் தெரியாது. தந்தை குழந்தை களாகிய உங்களுக்கு இறைவன் மற்றும் ஆஸ்தி பற்றி புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். ஆத்மாவிற்கு தந்தையின் நினைவு மறக்கவே முடியாது. ஆத்மா அழிவற்றது எனில் நினைவும் அழிவற்றதாக இருக்கிறது. தந்தையும் அழிவற்றவர். அல்லா இவ்வாறு கூறியிருந்தார் என்று பாடுகின்றனர், ஆனால் அவர் யார்? என்ன கூறுகின்றார்? என்று எதையும் அறியவில்லை. அல்லாவை கல், முள்ளில் இருக்கிறார் என்று கூறிய பிறகு எதை அறிந்து கொள்வர்? பக்தி மார்க்கத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். யாரெல்லாம் வருகிறார்களோ அவர்கள் அனைவரும் சதோ, ரஜோ, தமோவிற்கு வந்தே ஆக வேண்டும் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்திருக்கிறீர்கள். கிறிஸ்து, புத்தர் போன்று யார் வந்தாலும் அவர்கள் பின்னால் (அந்த சந்ததியினர்) அனைவரும் வர வேண்டும். முன்னேறும் விசயமே கிடையாது. தந்தை வந்து தான் அனைவரையும் முன்னேற்றுகின்றார். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒருவர் தான். வேறு யாரும் சத்கதி கொடுப்பதற்கு வருவது கிடையாது. கிறிஸ்து வருகிறார் எனில் யாருக்கு அமர்ந்து புரிய வைப்பார்? இந்த விசயங்களைப் புரிந்து கொள்வதற்கு நல்ல புத்தி தேவை. புதுப் புது யுக்திகளை உருவாக்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும், ரத்தினங்களை உருவாக்க வேண்டும். ஆகையால் பாபா கூறுகின்றார் - ஞானச் சிந்தனை செய்து எழுதுங்கள், பிறகு என்ன என்ன விடுபட்டிருக்கிறது? என்று பாருங்கள். பாபாவின் பாகம் எதுவோ அது நடைபெற்றுக் கொண்டே இருக்கும். தந்தை கல்பத்திற்கு முந்தைய ஞானம் கூறுகின்றார். யார் தர்மத்தை ஸ்தாபனை செய்ய வருகின்றார்களோ அவர்களுக்கு பின்னால் அவர்களது தர்மத்தைச் சார்ந்தவர்களும் கீழே (பூமியில்) இறங்க வேண்டும் என்பதை குழந்தைகள் அறிவர். அவர்கள் மற்றவர்களை எவ்வாறு முன்னேற்ற முடியும்? ஏணிப்படியில் கீழே இறங்கியே ஆக வேண்டும். முதலில் சுகம், பிறகு துக்கம். அவர்கள் தர்ம ஸ்தாபனைக்காக வருகின்றனர். ஞானக் கடல் ஒரே ஒருவர் தான், வேறு யாரிடத்திலும் ஞானம் கிடையாது. நாடகத்தில் துக்கம், சுகத்தின் விளையாட்டு அனைவருக்காகவும் இருக்கிறது. துக்கத்தை விட சுகம் அதிகமாக இருக்கிறது. நாடகத்தில் பாகத்தை நடிக்கிறீர்கள் எனில் அவசியம் சுகம் அதிகம் இருக்க வேண்டும். தந்தை துக்கத்தை ஸ்தாபனை செய்யமாட்டார். தந்தை அனைவருக்கும் சுகம் கொடுப்பார். உலகில் அமைதி ஏற்பட்டு விடுகிறது. துக்கதாமத்தில் அமைதி இருக்க முடியாது. எப்பொழுது திரும்பி வீட்டிற்குச் செல்வோமோ அப்பொழுது தான் அமைதி கிடைக்கும்.

 

தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். நாம் பாபாவுடன் இருக்கிறோம், அசுரனை தேவதையாக்க பாபா வந்திருக்கிறார் என்பதை ஒருபொழுதும் மறந்து விடக் கூடாது. இந்த தேவதைகள் சத்கதியில் இருக்கின்ற பொழுது மற்ற அனைத்து ஆத்மாக்களும் மூலவதனத்தில் இருப்பர். நாடகத்தில் அனைவரையும் விட மிகப் பெரிய அதிசய செயல் தந்தையினுடையது ஆகும். அவர் உங்களை அழகிய தேவதைகளாக ஆக்குகின்றார். படிப்பின் மூலம் நீங்கள் தேவதைகளாக ஆகிறீர்கள். பக்தி மார்க்கத்தில் எதையும் புரிந்து கொள்வது கிடையாது, மாலை உருட்டிக் கொண்டே இருக்கின்றனர். சிலர் ஹனுமானை, சிலர் யாரையாவது நினைத்துக் கொண்டே இருக்கின்றனர், அவர்களை நினைப்பதனால் என்ன நன்மை கிடைக்கும்? பாபா கூறியிருக்கிறார் மகாரதி, எனவே அவர்கள் யானை மீது சவாரி செய்பவர்களாக காண்பித்து விட்டனர். இவையனைத்து விசயங்களையும் தந்தை தான் புரிய வைக்கிறார். பெரிய பெரிய மனிதர்கள் எங்காவது செல்கின்றனர் எனில் எவ்வளவு மரியாதை செய்கின்றனர்! நீங்கள் வேறு யாருக்கும் மரியாதை கொடுப்பது கிடையாது. இந்த நேரத்தில் முழு மரமும் இற்றுப் போய்விட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். விஷத்தின் மூலம் உருவாகின்றனர். சத்யுகத்தில் விஷத்தின் விசயம் கிடையாது என்ற உணர்வு உங்களுக்கு வர வேண்டும். தந்தை கூறுகின்றார் - நான் உங்களை பலமடங்கு செல்வமிக்கவர்களாக ஆக்குகிறேன். சுதாமா பலமடங்கிற்கு செல்வந்தர் ஆனார் அல்லவா! அனைத்தும் தனக்காகவே செய்கிறீர்கள். தந்தை கூறுகிறார் -இந்த படிப்பின் மூலம் நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்களாக ஆகிறீர்கள்! அந்த கீதையை அனைவரும் படிக்கின்றனர், கேட்கின்றனர். இவரும் படித்து வந்தார், ஆனால் எப்பொழுது தந்தை அமர்ந்து புரிய வைத்தபோது அதிசயப்பட்டார். தந்தையின் கீதையின் மூலம் சத்கதி ஏற்பட்டது. இதை மனிதர்கள் எவ்வாறு உருவாக்கி விட்டனர்? அல்லா இவ்வாறெல்லாம் கூறியிருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அல்லா யார்? என்று புரிந்து கொள்வது கிடையாது. தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களே பகவானை அறியவில்லை எனும் பொழுது தாமதமாக வருபவர்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும்? அனைத்து சாஸ்திரங்களுக்கும் முதன்மையான கீதையையே தவறாக ஆக்கி விட்ட பின்பு மற்ற சாஸ்திரங்களினால் என்ன கிடைக்கும்? தந்தை குழந்தைகளாகிய நமக்கு என்ன கூறியிருந்தாரோ அது மறைந்து விட்டது. இப்பொழுது நீங்கள் தந்தையிடம் கேட்டு தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பழைய உலகின் கணக்கை அனைவரும் முடிக்க வேண்டும், பிறகு ஆத்மா தூய்மையாக ஆகிவிடும். மற்றவர்களுக்கும் இருக்கக் கூடிய சில கணக்கு வழக்குகளை முடித்து விடுவர். நாம் தான் முதன் முதலாக செல்கிறோம், பிறகு முதன் முதலாக வருவோம். மற்ற அனைவரும் தண்டனை அடைந்து கணக்கு வழக்குகளை முடிப்பர். இந்த விசயங்களில் அதிகம் செல்லாதீர்கள். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் தந்தை என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்துங்கள். ஆசிரியர், குருவாகவும் அந்த ஒரே ஒரு தந்தை தான் இருக்கிறார். அவர் அசரீரியானவர். அந்த ஆத்மாவிடம் எவ்வளவு ஞானம் இருக்கிறது! ஞானக் கடலானவர், சுகக் கடலானவர். அவரது மகிமை எவ்வளவு இருக்கிறது! அவரும் ஒரு ஆத்மா தான். ஆத்மா வந்து தான் சரீரத்தில் பிரவேசம் செய்கிறது. பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு எந்த ஆத்மாவிற்கும் மகிமை செய்ய முடியாது. மற்ற அனைவரும் சரீரதாரிகளுக்கு மகிமை செய்வர். இவர் சுப்ரீம் ஆத்மா ஆவார். சரீரமற்ற ஆத்மாவிற்கு மகிமையானது ஒரு நிராகார தந்தைக்குத் தானே தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது. ஆத்மாவில் தான் ஞான சம்ஸ்காரம் (அலங்காரம் ) இருக்கிறது. தந்தையிடத்தில் ஞான சம்ஸ்காரம் எவ்வளவு இருக்கிறது! அன்புக் கடலாக இருக்கிறார், ஞானக் கடலாக இருக்கிறார்....... இவை ஆத்மாவின் மகிமையா என்ன? எந்த மனிதனுக்கும் இந்த மகிமை இருக்க முடியாது. கிருஷ்ணருக்கும் இருக்க முடியாது. அவர் முதல் நம்பர் இளவரசர் ஆவார். தந்தையிடம் முழு ஞானமும் இருக்கிறது, அவர் வந்து குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுக்கிறார். அதனால் தான் மகிமை பாடப்படுகிறது. சிவஜெயந்தி வைரத்திற்குச் சமமானது ஆகும். தர்ம ஸ்தாபகர்கள் வருகின்றனர். என்ன செய்கின்றனர்? கிறிஸ்து வந்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த நேரத்தில் கிறிஸ்தவர்கள் கிடையாது. யாருக்கு என்ன ஞானம் கொடுப்பார்? நல்ல நடத்தையுடன் இருங்கள் என்று தான் கூறுவார். இவ்வாறு பல மனிதர்கள் புரிய வைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். மற்றபடி சத்கதிக்கான ஞானம் யாரும் கொடுக்க முடியாது. அவர்களுக்கு தங்களுக்கென்று பாகம் கிடைத்திருக்கிறது. சதா, ரஜோ, தமோவில் வந்தே ஆக வேண்டும். வந்தவுடனேயே கிறிஸ்தவர்களின் கிறிஸ்து ஆலயம் எப்படி உருவாகும்? எப்பொழுது அதிகமானவர்களாக ஆகிவிடுகின்றனரோ அப்பொழுது தான் சர்ச் (ஆலயத்தை) உருவாக்குவர். அதற்கு அதிக செல்வம் தேவைப்படுகிறது. யுத்தத்திற்கும் அதிக செல்வம் தேவை. ஆக தந்தை புரிய வைக்கிறார் - இது மனித சிருஷ்டியின் மரமாகும். மரம் எப்போதும் லட்சம் ஆண்டிற்கானதாக இருக்குமா என்ன? கணக்கு எடுக்க முடியாதா? தந்தை கூறுகின்றார் - ஹே குழந்தைகளே! நீங்கள் எவ்வளவு புத்தியற்றவர்களாக ஆகியிருந்தீர்கள்! நீங்கள் இப்பொழுது புத்திசாலிகளாக ஆகிறீர்கள். இராஜ்யம் செய்வதற்கு முன் கூட்டியே தயாராகி வருகிறீர்கள். அவர்கள் தனியாக வருகின்றனர், பிறகு தான் வளர்ச்சி அடைகிறது. மரத்தின் அஸ்திவாரம் தேவி தேவதா தர்மமாகும், அதிலிருந்து 3 கிளைகள் உருவாகிறது. பிறகு சிறிய சிறிய மடங்கள் வருகின்றன. வளர்ச்சி அடைகின்றன, பிறகு அவைகளுக்கு சிறிது மகிமைகள் ஏற்பட்டு விடுகின்றன. ஆனால் எந்த லாபமும் கிடையாது. அனைவரும் கீழே வந்தே ஆக வேண்டும். உங்களுக்கு இப்பொழுது முழு ஞானமும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இறைவன் ஞானம் நிறைந்தவர் என்று கூறப்படுகிறது. ஆனால் ஞானம் என்றால் என்ன? என்பது யாருக்கும் தெரியாது. உங்களுக்கு இப்பொழுது ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. பாக்கியசாலி ரதம் அவசியம் தேவை. தந்தை சாதாரண சரீரத்தில் வருகின்றார், அப்பொழுது தான் இவர் பாக்கியாசாலியாக ஆகின்றார். சத்யுகத்தில் அனைவரும் பத்மாபதம் பாக்கியசாலிகள். இப்பொழுது உங்களுக்கு ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் லெட்சுமி நாராயணன் போன்று ஆகிறீர்கள். ஞானம் ஒரே ஒரு முறை தான் கிடைக்கிறது. பக்தி மார்க்கத்தில் ஏமாற்றம் அடைகின்றனர். இருள் இருக்கிறது. ஞானம் என்றால் பகல், பகலில் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். தந்தை கூறுகின்றார் - வீட்டில் கீதா பாடசாலை திறங்கள். நாம் விழிப்படையாவிட்டாலும் மற்றவர்களுக்காக இடம் கொடுக்கிறோம் என்று பலர் கூறுகின்றனர். இதுவும் நல்லதாகும்.

 

இங்கு அதிகம் அமைதியாக இருக்க வேண்டும். இது தூய்மையிலும் தூய்மையான வகுப்பாகும். இங்கு அமைதியாக நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள். நாம் இப்பொழுது சாந்திதாமம் செல்ல வேண்டும். ஆகையால் தந்தையை மிக அன்பாக நினைவு செய்ய வேண்டும். சத்யுகத்தில் 21 பிறவிகளுக்கு நீங்கள் சுகம் சாந்தி இரண்டையும் அடைகிறீர்கள். எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஆஸ்தி கொடுக்கக் கூடியவர். ஆக இப்படிப்பட்ட தந்தையைப் பின்பற்ற வேண்டும். அகங்காரம் வரக் கூடாது, அது கீழே தள்ளி விடும். மிக உறுதியான மனநிலை தேவை. பிடிவாதம் இருக்கக் கூடாது. தேக அபிமானம் தான் பிடிவாதம் (பற்று) என்று கூறப்படுகிறது. மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். தேவதைகள் எவ்வளவு இனிமையாக இருக்கின்றனர்! எவ்வளவு கவர்ச்சிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்! தந்தை உங்களை இவ்வாறு ஆக்குகின்றார். ஆக இப்படிப்பட்ட தந்தையை எவ்வளவு நினைவு செய்ய வேண்டும்! குழந்தைகள் இந்த விசயங்களை அடிக்கடி நினைவு செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இவருக்கு நான் சரீரத்தை விட்டு விட்டு இவ்வாறு (லெட்சுமி நாராயணன்) ஆகப் போகிறேன் என்ற நிச்சயம் இருந்தது. இலட்சியத்தின் சித்திரத்தை முதன் முதலில் காண்பிக்க வேண்டும். அங்கு கற்பிக்கும் ஆசிரியர் தேகதாரியாக இருப்பர். இங்கு கற்பிப்பவர் நிராகார தந்தை ஆவார், அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் கற்பிக்கிறார். இந்த சிந்தனை செய்ததுமே குஷி ஏற்பட்டு விடும். பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மாவாக எப்படி ஆகிறேன் என்ற குஷி இவருக்கு இருந்தது. இந்த அதிசயமான விசயங்களை நீங்கள் கேட்டு தாரணை செய்த பிறகு மற்றவர்களுக்கும் கூறுகிறீர்கள். தந்தை அனைவரையும் உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகிறார். ஆனால் இராஜ்யத்திற்கு தகுதியானவர்களாக யார் யார் ஆவார்கள்? என்பதை புரிந்து கொள்ள முடியும். குழந்தைகளை முன்னேற்றத்தில் கொண்டு வருவது தான் தந்தையின் கடமையாகும். தந்தை அனைவரையும் உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். நான் உலகிற்கு எஜமானனாக ஆவது கிடையாது என்று தந்தை கூறுகின்றார். தந்தை பிரம்மா வாயின் மூலம் ஞானம் கூறுகின்றார். ஆகாஷ்வாணி என்று கூறுகின்றனர், ஆனால் பொருள் புரிந்து கொள்வது கிடையாது. உண்மையான ஆகாஷ்வாணி இவர் தான், தந்தை மேலிருந்து வந்த இந்த பசுவின் வாயின் மூலம் கூறுகின்றார். இந்த வாயின் மூலம் வாணி கூறுகின்றார்.

 

குழந்தைகள் மிக இனிமையானவர்களாக இருப்பர். பாபா, இன்று டோலி கொடுங்கள் என்று கூறுகின்றனர். மிக இனிய குழந்தைகள்! நாம் குழந்தைகளாகவும் இருக்கிறோம், சேவகர்களாகவும் இருக்கிறோம் என்று நல்ல குழந்தைகள் கூறுகின்றனர். குழந்தைகளைப் பார்க்கின்ற பொழுது பாபாவிற்கு மிகுந்த குஷி ஏற்படுகிறது. நேரம் மிகக் குறைவாக இருப்பதை குழந்தைகள் அறிவர். இவ்வளவு அணுகுண்டுகளை தயார் செய்து வைத்திருக்கின்றனர், அவை இப்படியே உபயோகப் படுத்தாமல் எறிந்து விடுவார்களா என்ன? என்ன கல்பத்திற்கு முன்பு நடந்ததோ அதுவே மீண்டும் நடைபெறும். உலகில் அமைதி ஏற்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் இவ்வாறு ஏற்பட முடியாது. உலகில் அமைதியை நீங்கள் ஸ்தாபனை செய்கிறீர்கள். உங்களுக்குத் தான் உலக இராஜ்யத்தின் பரிசு கிடைக்கிறது. கொடுக்கக் கூடியவர் தந்தை. யோக பலத்தின் மூலம் நீங்கள் உலக இராஜ்யத்தை அடைகிறீர்கள். சரீர பலத்தின் மூலம் உலக விநாசம் ஏற்படுகிறது. அமைதியின் மூலம் நீங்கள் வெற்றி அடைகிறீர்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தனது மனநிலையை மிக உறுதியானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். தந்தையைப் பின்பற்ற வேண்டும். எந்த விசயத்திலும் அகங்காரம் காண்பிக்கக் கூடாது. தேவதைகளைப் போன்று இனிமையானவர்களாக ஆக வேண்டும்.

 

2) சதா மகிழ்ச்சியாக இருப்பதற்காக ஞானச் சிந்தனை செய்து கொண்டே இருக்க வேண்டும். விசார சாகர மந்தன் செய்யுங்கள். நாம் பகவானின் குழந்தைகளாகவும் இருக்கிறோம், கூடவே சேவகர்களாகவும் இருக்கிறோம் என்ற நினைவிலிருந்து சேவையில் தயாராக இருக்க வேண்டும்.

 

வரதானம் :

ஒவ்வொரு நிமிடத்தையும் கடைசி நிமிடம் என உணர்ந்து, சதா ஆன்மிக மகிழ்ச்சியில் இருக்கக் கூடிய விசேஷ ஆத்மா ஆகுக.

 

சங்கமயுகம் என்பது ஆன்மிக மகிழ்ச்சி நிறைந்து இருப்பதற்கான யுகம். ஆகவே ஒவ்வொரு நிமிடமும் ஆன்மிக மகிழ்ச்சியை அனுபவம் செய்து கொண்டே இருங்கள். ஒரு போதும் எந்த ஒரு சூழ்நிலை அல்லது பரீட்சையில் குழப்பமடையக் கூடாது. ஏனென்றால் இது அகால மரணத்தின் காலம். கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சிக்கு பதிலாகக் குழப்பமடைந்து விட்டீர்கள் மற்றும் அதே சமயம் கடைசி நிமிடமாக வந்து விட்டால் அந்த் மதி ஸோ கதி என்னவாகும்? ஆகவே எப்போதும் தயார் நிலைக்கான பாடம் கற்பிக்கப் படுகிறது. ஒரு விநாடி கூட ஏமாற்றம் தருவதாக ஆகக் கூடும். ஆகவே தன்னை விசேஷ ஆத்மா எனப் புரிந்து, ஒவ்வொரு சங்கல்பம், பேச்சு மற்றும் கர்மத்தைச் செய்யுங்கள். மேலும் சதா ஆன்மிக மகிழ்ச்சியில் இருங்கள்.

 

சுலோகன் :

அசையாதவராக ஆக வேண்டுமானால் வீணானவை மற்றும் சுபமல்லாதவற்றை முடித்து விடுங்கள்.

 

ஓம்சாந்தி