24.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஆன்மீக சர்ஜன் உங்களுக்கு ஞானம், யோகம் என்ற முதல் தரமான, மிகச் சிறந்த உணவு பரிமாறுகின்றார், இந்த ஆன்மீக உணவை மட்டுமே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு உபசரிப்பு செய்து கொண்டே இருங்கள்.

 

கேள்வி:

உலக இராஜ்ய பாக்கியம் அடைவதற்காக எந்த ஒரு முயற்சி செய்ய வேண்டும்? எந்த பழக்கத்தை உறுதியாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்?

 

பதில்:

ஞானம் என்ற மூன்றாவது கண் மூலம் அழிவற்ற சிம்மாசனதாரி ஆத்மா, சகோதரரரைப் பார்க்கும் முயற்சி செய்யுங்கள். சகோதரன், சகோதரன் (பாயி பாயி) என்று புரிந்து கொண்டு அனைவருக்கும் ஞானம் கொடுங்கள். முதலில் தன்னை ஆத்மா என்று உணர்ந்து பிறகு சகோதரர்களுக்குப் புரிய வையுங்கள். இந்தப் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால் உலக இராஜ்ஜிய பாக்கியம் கிடைத்து விடும். இந்த பழக்கத்தின் மூலம் தான் சரீர உணர்வு நீங்கி விடும். மாயையின் புயல் அல்லது கெட்ட எண்ணங்களும் வராது. மற்றவர்களுக்கும் ஞான அம்பும் நன்றாகப் பதியும்.

 

ஓம்சாந்தி.

ஞானம் என்ற மூன்றாவது கண் கொடுக்கும் ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தை களுக்குப் புரிய வைக்கின்றார். ஞானம் என்ற மூன்றாவது கண் தந்தையைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. இந்த பழைய உலகம் மாறப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். மாற்றக் கூடியவர் யார்? எப்படி மாற்றுவார்? என்பது மனிதர்களுக்குத் தெரியாது. ஏனெனில் அவர்களுக்கு ஞானம் என்ற மூன்றாவது கண் கிடையாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது, இதன் மூலம் நீங்கள் சிருஷ்டியின் முதல், இடை, கடையை அறிந்து கொண்டீர்கள். இது ஞானத்தின் சாக்கிரின் ஆகும். சாக்கிரினின் ஒரு துளி கூட எவ்வளவு இனிப்பாக இருக்கும்! ஞானத்திலும் ஒரே ஒரு வார்த்தை மன்மனாபவ. தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தின் வழியைக் கூறிக் கொண்டிருக்கிறார். குழந்தைகளுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி கொடுப்பதற்காக தந்தை வந்திருக்கிறார் எனில் குழந்தைகளுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! குஷி போன்ற சத்தான உணவு கிடையாது என்றும் கூறுகிறார். யார் சதா குஷியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு அது சத்தான உணவாக ஆகிவிடுகிறது. 21 பிறவிகளுக்கு போதையில் இருப்பதற்கான சிறந்த உணவாக இது இருக்கிறது. இந்த உணவையே சதா ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டே இருங்கள். நீங்கள் ஸ்ரீமத் மூலம் அனைவருக்கும் உபசரிப்பு செய்கிறீர்கள். உண்மையிலும் உண்மையான நலம் விசாரிப்பு என்பது அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுப்பதில் இருக்கிறது. எல்லையற்ற தந்தையின் மூலம் நமக்கு ஜீவன்முக்தியின் உணவு கிடைக்கிறது என்பதை இனிய குழந்தைகள் அறிவீர்கள். சத்யுகத்தில் பாரதம் ஜீவன்முக்தியாக இருந்தது, பாவனமாக இருந்தது. தந்தை மிகச் சிறந்த உணவு கொடுக்கிறார், அதனால் தான் அதீந்திரிய சுகம் பற்றி கேட்க வேண்டுமென்றால் கோப கோபியர்களிடம் கேளுங்கள் என்று பாடப்பட்டிருக்கிறது. இந்த ஞானம் மற்றும் யோகா என்பது முதல் தரமான சிறப்பான உணவாகும். மேலும் இந்த உணவு ஒரே ஒரு ஆன்மீக சர்ஜனிடம் மட்டுமே இருக்கிறது. வேறு யாருக்கும் இந்த உணவு பற்றித் தெரியாது.

 

தந்தை கூறுகின்றார் - இனிமையான குழந்தைகளே! உங்களுக்காக உள்ளங்கையில் பரிசு கொண்டு வந்திருக்கிறேன். முக்தி, ஜீவன்முக்திக்கான பரிசு என்னிடம் மட்டுமே இருக்கிறது. கல்ப கல்பத்திற்கு நான் வந்து தான் உங்களுக்குக் கொடுக்கிறேன். பிறகு இராவணன் அபகரித்து விடுகிறான். ஆக குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது குஷி எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும்! நமது ஒரே ஒரு தந்தை தான் ஆசிரியர் மற்றும் உண்மையிலும் உண்மையான சத்குருவாக இருந்து நம்மை தன் கூடவே அழைத்துச் செல்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். மிக அன்பான தந்தையிடமிருந்து உலக இராஜ்ஜியம் கிடைக்கிறது, இது சிறிய விசயமா என்ன! சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இறை மாணவ வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாகும். இது இப்போதைய புகழ் ஆகும். பிறகு புது உலகிலும் நீங்கள் சதா குஷியாக கொண்டாடிக்கொண்டே இருப்பீர்கள். உண்மையிலும் உண்மையான குஷி எப்பொழுது கொண்டாடப்படுகிறது? என்பது உலகத்தினருக்குத் தெரியாது. மனிதர்களிடத்தில் சத்யுகத்தின் ஞானமே கிடையாது. அதனால் இங்கேயே கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த பழைய தமோ பிரதான உலகில் குஷி எங்கிருந்து கிடைக்கும்? இங்கு ஐயோ! ஐயோ! என்று கூறிக் கொண்டே இருக்கின்றனர். எவ்வளவு துக்கமான உலகமாக இருக்கிறது!

 

தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு எளிய வழிகளைக் கூறுகின்றார்! இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று இருங்கள். தொழில் போன்றவைகள் செய்தாலும் என்னை நினைவு செய்து கொண்டே இருங்கள். எவ்வாறு நாயகன் நாயகி ஒருவரையொருவர் நினைவு செய்து கொண்டே இருக்கின்றனர்! அங்கு அவளுக்கு அவர் நாயகனாக, அவருக்கு அவள் நாயகியாக இருப்பர். இங்கு அந்த விசயம் கிடையாது, இங்கு நீங்கள் அனைவரும் ஒரே ஒரு நாயகனுக்கு பல பிறவிகளுக்கு நாயகிகளாக இருக்கிறீர்கள். தந்தை உங்களுக்கு நாயகியாக ஆவது கிடையாது. அந்த நாயகன் வர வேண்டுமென்பதற்காக நீங்கள் அவரை நினைவு செய்து வந்தீர்கள். எப்பொழுது அதிக துக்கம் ஏற்படுகிறதோ அப்பொழுது அதிகமாக நினைவு செய்கிறீர்கள். அதனால் தான் துக்கம் வரும் பொழுது அனைவரும் நினைக்கின்றனர், சுகமாக இருக்கும் பொழுது யாரும் நினைப்பதில்லை என்றும் பாடப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் தந்தையும் சர்வசக்திவானாக இருக்கின்றார், நாளுக்கு நாள் மாயையும் சர்வசக்திவானாக, தமோ பிரதானமாக ஆகிக் கொண்டே செல்கிறது. ஆகையால் இப்பொழுது தந்தை கூறுகின்றார் - இனிய குழந்தைகளே! ஆத்ம அபிமானியாக ஆகுங்கள். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், கூடவே தெய்வீக குணங்களையும் தாரணை செய்தால் நீங்கள் இவ்வாறு (லெட்சுமி நாராயணனாக) ஆகிவிடுவீர்கள். இந்த படிப்பில் முக்கியமானது நினைவு ஆகும். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையை மிக அன்பாக நினைவு செய்ய வேண்டும். அந்த தந்தை தான் புது உலகை ஸ்தாபனை செய்யக் கூடியவர் ஆவார். தந்தை கூறுகின்றார் - குழந்தைகளாகிய உங்களை உலகிற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக நான் வந்திருக்கிறேன். ஆகையால் இப்பொழுது என்னை நினைவு செய்தால் உங்களது பல பிறவிகளின் பாவங்கள் அழிந்து போய் விடும். பதீத பாவன் தந்தையை அழைக்கின்றனர் அல்லவா! இப்பொழுது தந்தை வந்திருக்கின்றார் எனில் கண்டிப்பாக பாவனம் ஆக வேண்டும். தந்தை துக்கம் நீக்கி சுகம் கொடுப்பவராக இருக்கின்றார். சத்யுகம் பாவன உலகமாக இருந்த பொழுது அனைவரும் சுகமானவர்களாக இருந்தனர். இப்பொழுது தந்தை மீண்டும் கூறுகின்றார் - குழந்தைகளே! சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்து கொண்டே இருங்கள். இது சங்கமயுகமாகும். படகோட்டி உங்களை இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு அழைத்துச் செல்கிறார். ஒரே ஒரு படகு என்று கிடையாது, முழு உலகமும் ஒரு பெரிய படகு ஆகும், அதை அக்கரைக்கு கொண்டு செல்கிறார்.

 

இனிய குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! உங்களுக்கு எப்பொழுதும் குஷியோ குஷி தான். எல்லையற்ற தந்தை நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார் - ஆஹா, இவ்வாறு ஒருபொழுதும் கேள்விப்படவும் இல்லை, படிக்கவும் இல்லை. பகவானின் மகாவாக்கியம் - நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறேன் எனில் முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா! தாரணை செய்ய வேண்டும். முழுமையாகப் படிக்க வேண்டும். படிப்பில் வரிசைக்கிரமம் என்பது எப்பொழுதும் இருக்கவே செய்கிறது. நான் உத்தமமாக இருக்கிறேனா? மத்தியமாகவா? அல்லது தாழ்ந்த நிலையில் இருக்கிறேனா? என்று தன்னைப் பார்க்க வேண்டும். தந்தை கூறுகின்றார் - நான் உயர்ந்த பதவி அடைவதற்குத் தகுதியானவனா? ஆன்மீக சேவை செய்கிறேனா? என்று தன்னைப் பாருங்கள். ஏனெனில் தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! சேவாதாரி ஆகுங்கள், பின்பற்றுங்கள். நான் வந்திருப்பதே சேவைக்காகத் தான், தினமும் சேவை செய்கிறேன். அதற்காகத் தான் இந்த இரதத்தை எடுத்திருக்கிறேன். இவரது இரதம் நோய்வாய்ப்படும் பொழுது நான் இவர் மூலம் முரளி எழுதுகிறேன். வாயினால் கூற முடியாது எனும் பொழுது நான் எழுதி விடுகிறேன். அதாவது குழந்தைகள் முரளியைத் தவற விடக் கூடாது. ஆக நானும் சேவையில் இருக்கிறேன் அல்லவா! இது ஆன்மீக சேவையாகும்.

 

தந்தை இனிமையிலும் இனிய குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் - குழந்தைகளே! நீங்களும் தந்தையின் சேவையில் ஈடுபட்டு விடுங்கள். இறை தந்தையின் சேவையில் (ஞய் ஏர்க் எஹற்ட்ங்ழ்ப்ஹ் நங்ழ்ண்ஸ்ஸ்ரீங்)! முழு உலகிற்கும் தந்தை தான் உங்களை முழு உலகிற்கும் எஜமானர்களாக ஆக்குவதற்கு வந்திருக்கிறார். யார் நன்றாக முயற்சி செய்கிறார்களோ அவர்கள் மகாவீர்கள் என்று கூறப்படுகின்றனர். யார் மகாவீரர்களாக இருந்து பாபாவின் கட்டளைப்படி நடக்கின்றனர் என்பதைப் பார்க்கிறார். தந்தையின் கட்டளை - தன்னை ஆத்மா என்று உணர்ந்து சகோதர சகோரராகப் பாருங்கள். இந்த சரீரத்தை மறந்து விடுங்கள். பாபாவும் இந்த சரீரங்களைப் பார்ப்பது கிடையாது. நான் ஆத்மாக்களைப் பார்க்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். மற்றபடி ஆத்மா இந்த சரீரமின்றி பேச முடியாது என்ற ஞானம் இருக்கிறது. நானும் இந்த சரீரத்தில் வந்திருக்கிறேன், கடனாக எடுத்திருக்கிறேன். சரீரத்துடன் தான் ஆத்மாவினால் படிக்க முடியும். பாபா இங்கு தான் அமர்ந்திருக்கிறார். இது அழிவற்ற சிம்மாசனம் ஆகும். ஆத்மா அகால்மூரத் (அழிவற்ற மூர்த்தி) ஆகும். ஆத்மா ஒருபொழுதும் சிறியதாக, பெரியதாக ஆவது கிடையாது. சரீரம் சிறியது பெரியதாக ஆகிறது. எத்தனை ஆத்மாக்கள் உள்ளனவோ, அவை அனைவற்றிற்கும் சிம்மாசனம் இந்த பிருகுட்டி ஆகும். அனைவரின் சரீரமும் வித விதமாக இருக்கின்றன. சிலர் ஆண்களாக, சிலர் பெண்களாக இருக்கின்றனர், சிலர் குழந்தைகளாக இருக்கின்றனர். தந்தை வந்து குழந்தைகளுக்கு ஆன்மீக டிரில் கற்றுக் கொடுக்கிறார். யாரிடத்திலாவது பேசும் பெழுது முதலில் தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். ஆத்மாவாகிய நான் இந்த சகோதரனுடன் பேசுகிறேன். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று தந்தையின் செய்தி கொடுக்கிறேன். நினைவின் மூலம் தான் கரைகள் நீங்கும். தங்கத்தில் எப்பொழுது கலப்படம் ஏற்பட்டு விடுகிறதோ அப்பொழுது தங்கத்தின் மதிப்பு குறைந்து விடுகிறது. ஆத்மாக்களாகிய உங்களிடத்திலும் கரை படிவதன் மூலம் மதிப்பற்றவர்களாக ஆகிவிட்டீர்கள். இப்பொழுது மீண்டும் பாவனமாக ஆக வேண்டும். ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்பொழுது ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. அந்த கண் மூலம் தனது சகோதரர்களைப் பாருங்கள். (பாயி பாயி) சகோதரர்களைப் பார்ப்பதன் மூலம் கர்மேந்திரியங்கள் ஒருபொழுதும் சஞ்சலம் ஆகாது. இராஜ்ஜிய பாக்கியம் அடைய வேண்டும், உலகிற்கு எஜமானர்களாக ஆக வேண்டுமெனில் இந்த முயற்சி செய்யுங்கள். சகோதர, சகோதரன் என்று புரிந்து கொண்டு அனைவருக்கும் ஞானம் கொடுத்தால் பிறகு இந்தப் பழக்கம் பக்காவாக ஆகிவிடும். நீங்கள் அனைவரும் தான் உண்மையிலும் உண்மையான சகோதரர்கள். தந்தையும் மேலிருந்து வந்திருக்கிறார், நீங்களும் வந்திருக்கிறீர்கள். தந்தை குழந்தைகளுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார். சேவை செய்வதற்கான தைரியத்தை தந்தை கொடுக்கிறார். தைரியம் இழந்தால் ..... ஆக நான் ஆத்மா, சகோதரனுக்குக் கற்பிக்கிறேன் என்ற பயிற்சி செய்ய வேண்டும். ஆத்மா படிக்கிறது அல்லவா! இது ஆன்மீக ஞானம் என்று கூறப்படுகிறது, அது ஆன்மீக தந்தையிடமிருந்து தான் கிடைக்கிறது. தன்னை ஆத்மாவாக உணருங்கள் என்று சங்கமத்தில் வந்து தான் தந்தை இந்த ஞானம் கொடுக்கிறார். நீங்கள் ஆடையின்றி (அசரீரியாக) வந்தீர்கள், பிறகு இங்கு சரீரத்தை தாரணை செய்து நீங்கள் 84 பிறவிகளின் நடிப்பை நடித்தீர்கள். இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். எனவே தன்னை ஆத்மா எனப் புரிந்து சகோதர, சகோதரன் என்ற பார்வையில் பார்க்க வேண்டும். இந்த முயற்சி செய்ய வேண்டும். தனமு முயற்சியை செய்ய வேண்டும், பிறரைப் பற்றி நமக்கென்ன ? தர்மம் தன்னிடமிருந்து துவங்க வேண்டும். (ஈட்ஹழ்ண்ற்ஹ் க்ஷங்ஞ்ண்ய்ள் ஹற் ட்ர்ம்ங்) அதாவது முதலில் தன்னை ஆத்மா எனப் புரிந்து பிறகு சகோதரர்களுக்குப் புரிய வைத்தீர்களென்றால் நல்ல முறையில் அம்பு தைக்கும். இந்த கூர்மையை நிரப்ப வேண்டும். உழைத்தால் தான் உயர்ந்த பதவி அடைவீர்கள். பாபா வந்திருப்பதே பலனைக் கொடுப்பதற்காகத்தான் எனவே உழைக்க வேண்டியிருக்கிறது. சிலவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

 

யாராவது ஏதாவது தலைகீழான விசயங்கள் பேசுகிறார்கள் எனில் நீங்கள் அமைதியாக இருங்கள். நீங்கள் அமைதியாக இருந்தால் மற்றவர்கள் என்ன செய்ய முடியும்! இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை எழும். . ஒருவர் வாயினால் தட்டினார், மற்றவர் அமைதியாக இருந்து விட்டால் அந்த ஒருவரும் அமைதியாகி விடுவார். இரண்டு கைகள் தட்டப்படும் பொழுது தான் ஓசை ஏற்படுகிறது. குழந்தைகள் ஒருவரையொருவர் நன்மை செய்து கொள்ள வேண்டும். தந்தை புரிய வைக்கின்றார் - குழந்தைகளே! சதா குஷியாக இருக்க விரும்புகிறீர்கள் எனில் மன்மனாபவ. தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். சகோதரராக (ஆத்மாவை) பாருங்கள். சகோதரர்களுக்கும் இந்த ஞானம் கொடுங்கள். யோகா செய்விக்கும் பொழுதும் தன்னை ஆத்மா என்று உணர்ந்து சகோதர்களைப் பார்க்கின்ற பொழுது நன்றாக சேவை நடைபெறும். சகோதர்களுக்குப் புரிய வையுங்கள் என்று பாபா கூறியிருக்கிறார். அனைத்து சகோதர்களும் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைகின்றனர். இந்த ஆன்மீக ஞானம் ஒரே ஒரு முறை தான் பிராமணக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் பிராமணர்களாக இருக்கிறீர்கள், பிறகு தேவதைகளாக ஆகக் கூடியவர்கள். இந்த சங்கமயுகத்தை விட்டு விடக் கூடாது, இல்லையெனில் எப்படி கரை சேர முடியும்? குதிக்க முடியாது. இது ஆச்சரியமான சங்கமயுகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீக யாத்திரையில் இருக்கும் பழக்கம் உருவாக்க வேண்டும். உங்களுக்குத் தான் நன்மை ஏற்படும். தந்தையின் போதனைகளை சகோதரர்களுக்குக் கொடுக்க வேண்டும். தந்தை கூறுகின்றார் - நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், ஆத்மாவைத் தான் பார்க்கிறேன். மனிதர்கள் மனிதர்களிடத்தில் பேசுகின்ற பொழுது அவரது முகத்தைப் பார்ப்பார்கள் அல்லவா! நீங்கள் ஆத்மாவிடம் பேசுகிறீர்கள் எனில் ஆத்மாவைத் தான் பார்க்க வேண்டும். சரீரத்தின் மூலம் ஞானம் கொடுத்தாலும் கூட சரீர உணர்வை நீக்கி விட வேண்டும். பரமாத்ம தந்தை நமக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை உங்களது ஆத்மா புரிந்திருக்கிறது. தந்தையும் கூறுகின்றார் - ஆத்மாக்களைப் பார்க்கிறேன், ஆத்மாக்களும் கூறுகின்றன - நாம் பரமாத்ம தந்தையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்து ஞானம் அடைந்து கொண்டிருக்கிறோம். இது தான் ஆத்மா ஆத்மாவிடம் ஆன்மீக ஞானத்தின் கொடுக்கல் வாங்கல் செய்கிறது என்று கூறப்படுகிறது. ஆத்மாவில் தான் ஞானம் இருக்கிறது, ஆத்மாவிற்குத் தான் கொடுக்க வேண்டும். இது கூர்மை போன்றது. உங்களது இந்த ஞானத்தில் கூர்மை ஏற்பட்டு விட்டால் யாருக்குப் புரிய வைத்தாலும் உடனே அம்பு சென்று தைத்து விடும். பயிற்சி செய்து பாருங்கள், அம்பு தைக்கிறது அல்லவா என்று தந்தை கூறுகின்றார். இந்த புதுப் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால் பிறகு சரீர உணர்வு நீங்கி விடும். மாயையின் புயல்கள் குறைவாக வரும். கெட்ட எண்ணங்கள் வராது. கெட்ட பார்வையும் இருக்காது. ஆத்மாவாகிய நான் 84 பிறவிகள் எடுத்திருக்கிறேன். இப்பொழுது நாடகம் முடிவடைகிறது. இப்பொழுது பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். நினைவின் மூலம் தான் தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாகி, சதோ பிரதான உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள். எவ்வளவு எளிதாக இருக்கிறது! குழந்தைகளுக்கு இந்த போதனைகள் கொடுப்பதும் எனது பாகம் என்பதை தந்தை அறிவார். புது விசயம் ஏதுமில்லை. ஒவ்வொரு 5000 ஆண்டிற்குப் பிறகும் நான் வர வேண்டியிருக்கிறது. நான் கட்டுப்பட்டிருக்கிறேன். இனிய குழந்தைகளே! ஆன்மீக நினைவு யாத்திரையில் இருந்தால் கடைசி நிலை நல்ல நிலையாக ஆகிவிடும் என்று குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கிறேன். இது கடைசி காலம் அல்லவா! என் ஒருவனை நினைவு செய்தால் உங்களுக்கு சத்கதி ஏற்பட்டு விடும். ஆத்ம அபிமானி ஆவதற்கான இந்த ஞானம் ஒரே ஒரு முறை தான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கிறது. எவ்வளவு அதிசயமான ஞானம் இது! பாபா அதிசயமானவர் எனில் பாபாவின் ஞானமும் அதிசயமானது ஆகும். ஒருபொழுதும் யாரும் கூற முடியாது. இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும். ஆகையால் தந்தை கூறுகின்றார் - இனிய குழந்தைகளே! இந்த பயிற்சி செய்யுங்கள். தன்னை ஆத்மா என்று உணர்ந்து ஆத்மாவிற்கு ஞானம் கொடுங்கள். மூன்றாவது கண் மூலம் சகோதர, சகோதரர்களைப் பாருங்கள். இது தான் உயர்ந்த முயற்சியாகும். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) எவ்வாறு தந்தை குழந்தைகளுக்கு ஆன்மீக சேவை செய்ய வந்திருக்கிறாரோ, அதே போன்று தந்தையைப் பின்பற்றி ஆன்மீக சேவை செய்ய வேண்டும். தந்தையின் கட்டளைப்படி நடந்து குஷி என்ற சத்தான உணவு சாப்பிட வேண்டும் மற்றும் பரிமாற வேண்டும்.

 

2) யாராவது தலைகீழான விசயங்கள் பேசினால் அமைதியாக இருங்கள், வாய் மூலம் எதுவும் பேசி விடக் கூடாது. பொறுத்துக் கொள்ள வேண்டும்.

 

வரதானம்:

அமைதியின் சாதனங்களின் மூலம் மாயையை தூரத்திலிருந்தே தெரிந்து கொண்டு விரட்டக் கூடிய மாயையை வென்றவர் (மாயாஜீத்) ஆகுக.

 

மாயை இறுதி வரை வரும், ஆனால் மாயையின் வேலை வருவது, உங்களின் வேலை அதனை தூரத்திலிருந்தே துரத்துவது ஆகும். மாயை வருவதும், உங்களை அசைப்பதும், பின் நீங்கள் அதனை விரட்டுவதும் கூட நேரத்தை வீணாக்குவதாகும். ஆகையால் அமைதியின் சாதனங்களின் மூலம் நீங்கள் தூரத்திலிருந்தே அதனை மாயை எனப் புரிந்து கொள்ளுங்கள். அதனை அருகில் வர விடாதீர்கள். என்ன செய்வது, எப்படி செய்வது, இப்போது முயற்சியாளனாக இருக்கிறேன் - இப்படி யோசித்தீர்கள் என்றால் இதுவும் கூட மாயையை உபசரிப்பது போலாகும், பிறகு கஷ்டப்படுகிறீர்கள், ஆகையால் தூரத்திருந்தே பகுத்தறிந்து விரட்டி விட்டீர்கள் என்றால் மாயையை வென்றவர் (மாயாஜீத்) ஆகி விடுவீர்கள்.

 

சுலோகன்:

உயர்ந்த பாக்கியத்தின் கோடுகளை முன்னால் கொண்டு வந்தீர்கள் (இமர்ஜ் செய்தீர்கள்) என்றால் பழைய சம்ஸ்காரங்களின் கோடுகள் மறைந்து போய் விடும்.

 

பிரம்மா தந்தைக்குச் சமமாக ஆவதற்கான விஷேச முயற்சி:

 

எப்படி மரத்தை படைக்கக் கூடிய விதை, மரத்தின் இறுதிக் காலத்தில் மீண்டும் மேலே வந்து விடுகிறதோ அப்படி எல்லைக்கப்பாற்பட்ட மாஸ்டர் படைப்பவராகிய நீங்கள் எப்போதும் தன்னை இந்த கல்ப விருட்சத்தின் மேலே இருப்பதாக அனுபவம் செய்யுங்கள், தந்தையுடன் மரத்தின் மேலே மாஸ்டர் விதை ரூபமாகி சக்திகளின், குணங்களின், சுப பாவனை - சுப விருப்பங்களின், அன்பின், சகயோகத்தின் கிரணங்களை பரவச் செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி