21.04.2019                           காலை முரளி                ஓம் சாந்தி                        அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           26.08.1984           மதுபன்


 

இலட்சியத்திற்கு ஏற்றபடி வெற்றியை அடைவதற்காக சுயநலத்திற்குப் பதிலாக சேவைக்காக காரியம் செய்யுங்கள்

 

இன்று திரிமூர்த்தி சந்திப்பை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஞான சூரியன், ஞான சந்திரன் மற்றும் ஞான நட்சத்திரங்களின் சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த திரிமூர்த்தி சந்திப்பு, இந்த பிராமண உலகத்தில் விசேஷமாக மதுபன் மண்டலத்தில் நடக்கிறது. ஆகாய மண்டலத்தில் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் சந்திப்பு நடக்கிறது. இந்த எல்லைக்கப்பாற்பட்ட மதுபன் மண்டலத்தில் சூரியன் மற்றும் சந்திரன் இருவர்களின் சந்திப்பு நடக்கிறது. இந்த இருவர்களின் சந்திப்பின் மூலம் நட்சத்திரங்களுக்கு ஞான சூரியனிடமிருந்து சக்தியின் விசேஷ வரதானம் கிடைக்கிறது. மேலும் சந்திரனிடமிருந்து அன்பின் விசேஷ வரதானம் கிடைக்கிறது. அதன் மூலம் அன்பானவர்களாகவும் மேலும் வழிகாட்டும் கலங்கரை விளக்காகவும் (லைட் ஹவுஸாகவும்) ஆகிவிடுகிறீர்கள். இந்த இரண்டு சக்திகளும் எப்பொழுதுமே சேர்ந்தே கூடவே இருக்கட்டும். தாயின் வரதானம் மற்றும் தந்தையின் வரதானம் இரண்டும் எப்பொழுதும் வெற்றி சொரூபம் ஆக்குகிறது. நீங்கள் அனைவரும் அம்மாதிரி வெற்றியின் சிரேஷ்ட நட்சத்திரங்கள், வெற்றி நட்சத்திரங்கள் அனைவரையும் வெற்றி சொரூபம் ஆக்குவதற்காக செய்தி கொடுப்பதற்காக செல்கிறீர்கள். எந்த துறையைச் சேர்ந்த ஆத்மாவாக இருந்தாலும், எந்தக் காரியம் செய்து கொண்டிருந்தாலும் அனைவரின் முக்கிய இலட்சியமாக நான் என்னுடைய காரியத்தில் வெற்றி அடைந்து விட வேண்டும் என்பது தான் இருக்கும். மேலும் வெற்றியை ஏன் விரும்புகிறார்கள்? ஏனென்றால் நம் மூலமாக அனைவருக்கும் சுகம், சாந்தியின் பிராப்தி ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். தன்னுடைய பெயரின் சுயநலத்தில் செய்தாலும், அற்பகால சாதனங்களின் மூலம் செய்தாலும், இலட்சியம் தனக்காகவும் மற்றும் அனைவருக்காகவும் சுகம், சாந்திக்கானதாகத் தான் இருக்கும். அனைவரின் இலட்சியமும் சரி தான்! ஆனால் இலட்சியத்திற்கு ஏற்றபடி தன்னுடைய சுயநலத்தின் காரணமாக தாரணை செய்ய முடிவதில்லை. எனவே இலட்சியம் மற்றும் இலட்சணத்தில் வித்தியாசம் இருக்கும் காரணத்தினால் வெற்றியை அடைய முடிவதில்லை. அந்த மாதிரி ஆத்மாக்களுக்கு தன்னுடைய முக்கிய இலட்சியத்தை அடைவதற்காக சகஜ சாதனமாக ஒரு வார்த்தையின் மாற்றம் செய்வதினால் வெற்றி அடைவதற்கான மந்திரம் கிடைத்து விடும். அது சுயநலத்திற்குப் பதிலாக அனைவரின் சேவைக்காக என்பது! சுயநலம் இலட்சியத்திலிருந்து தூரமாக்கிவிடும். சேவைக்காக என்ற இந்த எண்ணம் இலட்சியத்தை அடைவதில் சுலபமாக வெற்றியை பிராப்தி செய்விக்கிறது. எந்த உலகியல் காரியமாக இருந்தாலும் அல்லது ஆன்மீக காரியத்திற்கு பொறுப்பாளராக இருந்தாலும் (சேவைக்காக என்பது நினைவிலிருந்தால்) அவரவருடைய காரியத்தில் திருப்தி மற்றும் வெற்றியை சுலபமாக அடைந்து விடுவார்கள். இந்த ஒரு வார்த்தையின் மாற்றத்தின் மந்திரத்தை ஒவ்வொரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கூறுங்கள்.

 

அனைத்து பிரச்சனைகள், குழப்பம், அனேக விதமான உலகின் நாலாபுறங்களிலும் குழப்பம் ஏற்படுத்து வதற்கான காரணம் ஒரே வார்த்தை சுயநலம். எனவே சேவை உணர்வு இல்லாது போய் விடுகிறது. நீங்கள் யாரெல்லாம் எந்தெந்த பதவியில் இருக்கிறீர்களோ, உங்களுடைய காரியத்தை தொடங்குகிறீர்கள் என்றால், என்ன எண்ணம் வைக்கிறீர்கள்? சுயநலமற்ற சேவையின் எண்ணம் வைக்கிறீர்கள். ஆனால் இலட்சியம் மற்றும் இலட்சணம் காலப்போக்கில் மாறிவிடுகிறது. எனவே மூல காரணமாக ஏதாவது விகாரம் வருகிறது என்றாலும் அதன் விதை சுயநலம். எனவே அனைவருக்கும் அவர்களுடைய இலட்சியத்தை அடைவதற்காக வெற்றியின் சாவியை கொடுத்து வாருங்கள். பொதுவாக மனிதர்கள் முக்கியமாக சாவியைத் தான் கொடுக்கிறார்கள். எனவே நீங்கள் அனைவரும் வெற்றியின் சாவியை கொடுப்பதற்காகச் சென்று கொண்டிருக்கிறீர்கள். மற்றவர்கள் பிறருக்கு அனைத்தையும் கொடுப்பார்கள், ஆனால் பொக்கிஷங்களின் சாவியை யாரும் கொடுப்பதில்லை. எதை வேறு யாருமே கொடுப்பதில்லையோ அதை நீங்கள் கொடுக்க வேண்டும். எப்பொழுது அனைத்து பொக்கிஷங்களின் சாவி அவர்களிடம் வந்து விட்டது என்றால், பிறகு வெற்றியே வெற்றி தான். நல்லது - இன்றோ சந்திப்பதற்காக வந்திருக்கிறோம்.

 

இராஜதிலகமோ 21 ஜென்மங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். மேலும் நினைவுத் திலகமும் சங்கம யுகத்தில் பெயர் சூட்டும் நாளன்று பாப்தாதாவிடமிருந்து உங்களுக்கு கிடைத்தே விட்டது. பிராமணர்கள் என்றாலே நினைவின் திலகமிட்டவர்கள், மேலும் தேவதைகள் இராஜதிலகம் இட்டவர்கள். மற்றபடி இடையில் உள்ள ஃபரிஷ்தா சொரூபத்தின் திலகம் - சம்பன்ன சொரூபத்தின் திலகம், சமமான சொரூபத்தின் திலகம். பாப்தாதா எந்த திலகத்தை இடுவார்? சம்பன்னம் மற்றும் சமமான சொரூபத்தின் திலகம் மற்றும் அனைத்து விசேஷங்கள் என்ற மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம். நீங்கள் அந்த மாதிரியான திலகமிட்ட, கிரீடமணிந்த ஃபரிஷ்தா சொரூபமானவர்கள். எப்பொழுதும் டபுள் லைட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிரேஷ்ட ஆத்மாக்கள். பாப்தாதா இதே ஆன்மீக அலங்காரத்தின் மூலம் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார். நீங்கள் கிரீடம் அணிந்தவர்கள் ஆகி விட்டீர்கள். கிரீடம், திலகம் மற்றும் ஆசனம் இது தான் விசேஷமான விழா. நீங்கள் அனைவரும் விழா கொண்டாடுவதற்காக வந்திருக்கிறீர்கள் இல்லையா. நல்லது.

 

அனைத்து பாரதம் மற்றும் வெளிநாட்டின் வெற்றி நட்சத்திரங்களுக்கு பாப்தாதா வெற்றி மாலையை கழுத்தில் போடுகிறார். நீங்கள் ஒவ்வொரு கல்பத்தின் வெற்றியின் அதிகாரி விசேஷ ஆத்மாக்கள். எனவே ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றி உங்களுடைய பிறப்புரிமை. இதே நிச்சயம், போதையில் எப்பொழுதும் பறந்து கொண்டே இருங்கள். அனைத்து குழந்தைகளும் நினைவு மற்றும் அன்பின் மாலைகளை ஒவ்வொரு நாளும் மிக அன்புடன் விதிப்பூர்வமாக தந்தைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதை காப்பி செய்து (அதே மாதிரி செய்து) பக்தர்களும் தினசரி மாலை அணிவிக்கிறார்கள். யார் உண்மையான அன்பில் மூழ்கியிருக்கக்கூடிய குழந்தைகளோ அவர்கள் அமிர்தவேளையில் அன்பின் சிரேஷ்ட எண்ணங்கள் என்ற இரத்தினங்களின் நல்ல மாலைகளை, ஆன்மீக ரோஜா மாலைகளை பாப்தாதாவிற்கு தினசரி அவசியம் அணிவிக்கிறார்கள். அப்படி அனைத்து குழந்தைகளின் மாலைகளினால் பாப்தாதா அலங்கரிக்கப்பட்டு விடுகிறார். எப்படி பக்தர்களும் முதல் காரியமாக தன்னுடைய இஷ்ட தேவி தேவதைகளை மலர்களால் அலங்கரிப்பார்கள். புஷ்பத்தை அர்ப்பணம் செய்வார்கள். அதே போல் ஞானி ஆத்மாக்களும் மற்றும் அன்பு நிறைந்த குழந்தைகளும் பாப்தாதாவிற்கு தன்னுடைய ஊக்கம் உற்சாகத்தின் புஷ்பத்தை அர்ப்பணம் செய்கிறார்கள். அந்த மாதிரி அன்பு நிறைந்த குழந்தைகளின் அன்பிற்கு பிரதிபலனாக பாப்தாதா பல மடங்கு அன்பின், வரதானங்களின், சக்திகளின் மாலைகளை அணிவிக்கிறார். அனைவரின் குஷியின் நடனத்தையும் பாப்தாதா பார்க்கிறார். டபுள் லைட்டாகி பறந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் பறக்க வைப்பதற்கான திட்டத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து குழந்தைகளும் விசேஷமாக முதல் நம்பரில் தன்னுடைய பெயர் இருக்கிறது என்று புரிந்து முதல் நம்பரில் என்னுடைய நினைவு பாபாவிடமிருந்து வந்தது என்று அப்படி சுவீகாரம் செய்யுங்கள். பெயரோ அனேகம் இருக்கிறது, ஆனால் அனைவரும் வரிசைக்கிரமமாக நினைவு செய்வதற்கு பாத்திரமானவர்கள். நல்லது.

 

சகோதரர் ஜகதீஷ் அவர்களுடன் சந்திப்பு :

சேவையில் சக்திகளுடன் தனது பங்கை செய்வதற்கு பொறுப்பாளர் ஆவது, இதுவும் விசேஷ பங்கு தான். சேவை மூலம் ஜென்மம் கிடைத்தது, சேவை மூலம் வளர்க்கப்பட்டீர்கள். மேலும் எப்பொழுதும் சேவையில் முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். சேவையின் தொடக்கக்காலத்தில் நாடகத்தின் அனுசாரம் நீங்கள் முதல் பாண்டவன் பொறுப்பாளர் ஆனீர்கள். எனவே இதுவும் விசேஷமாக சகயோகத்தின் பிரதிபலன். எப்பொழுதுமே சகயோகம் பிராப்தி ஆகிறது. மேலும் வரும் காலத்திலும் இருக்கும். ஒவ்வொரு விசேஷ ஆத்மாவிற்கும் விசேஷம் இருக்கிறது. அதே விசேஷத்தை எப்பொழுதும் காரியத்தில் ஈடுபடுத்தி விசேஷத்தின் மூலம் நீங்கள் விசேஷ ஆத்மாவாக இருக்கிறீர்கள். சேவையின் களஞ்சியத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள். வெளிநாடு செல்வது என்றால் சேவையின் களஞ்சியத்தில் செல்வது. சக்திகளுடன் சேர்த்து பாண்டவர்களுக்கும் விசேஷ பங்கு இருக்கிறது. உங்களுக்கு எப்பொழுதும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருந்தது. மேலும் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதே போலவே அனைவரிலும் விசேஷத்தை நிரப்ப வேண்டும். நல்லது.

 

சகோதரி மோகினி அவர்களுடன் சந்திப்பு :

விசேஷமாக உடன் (தாதியுடன்) இருப்பதற்கான பங்கு. உள்ளத்தினாலும் எப்பொழுதும் உடன் இருக்கிறீர்கள். மேலும் சாகார ரூபத்தில் சிரேஷ்ட துணையின் வரம் பெற்றிருக்கிறீர்கள். அனைவருக்கும் இதே வரதானம் மூலமாக துணையின் அனுபவம் செய்வியுங்கள். தன்னுடைய வரதானம் மூலம் மற்றவர்களையும் வரம் பெறுபவர்களாக ஆக்க வேண்டும். கடும் உழைப்பு மாறி அன்பு என்பது என்ன, கடும் உழைப்பிலிருந்து விடுபடுவது! மேலும் அன்பில் இருப்பது என்ற இந்த விசேஷ அனுபவம் அனைவருக்கும் ஏற்படட்டும். அதற்காகத் தான் நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். வெளிநாட்டில் இருக்கும் ஆத்மாக்கள் கடும் உழைப்பு செய்ய விரும்புவதில்லை, களைப்படைந்து விட்டார்கள். அந்த மாதிரி ஆத்மாக்களுக்கு நிரந்தரமாக துணை அதாவது அன்பில் மூழ்கியிருப்பதற்கான சகஜ அனுபவம் செய்வியுங்கள். சேவைக்காக வாய்ப்பு கிடைத்திருப்பது என்ற இதுவும் ஒரு பொன்னான லாட்டரி. எப்பொழுதுமே லாட்டரியை அடையக்கூடிய சுலபமாக முயற்சி செய்பவர் நீங்கள். கடும் உழைப்பிலிருந்து விடுபட்டு அன்பின் அனுபவம் என்ன என்ற விசேஷத்தை அனைவருக்கும் கூறி, அவர்களை சொரூமாக்கி விடுங்கள். நீங்கள் என்ன திட எண்ணம் எடுத்திருக்கிறீர்களோ அதை மிக நன்றாகச் செய்தீர்கள். எப்பொழுதும் அமிர்தவேளையில் இந்த திட எண்ணத்தை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள். நல்லது.

 

பார்ட்டிகளுடன் சந்திப்பு:

எப்பொழுதும் தன்னுடைய விசேஷ பங்கைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறீர்களா? நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையுடன் சேர்ந்து தனது வாழ்க்கை பங்கைச் செய்யக்கூடிய விசேஷ பாத்திரம் ஏற்று செய்பவர்கள். எப்படி நினைவோ அப்படி நிலை இயல்பாகவே உருவாகிவிடும். உங்களுடைய ஒவ்வொரு காரியம் ஒவ்வொரு வார்த்தையும் விசேஷமானது, சாதாரணத்தன்மை முடிவடைந்து விட்டது. விசேஷ பாத்திரம் ஏற்று செய்பவர் இயல்பாகவே அனைவரையும் கவர்ந்திழுப்பார். என்னுடைய இந்த விசேஷ பங்கு மூலமாக அனேக ஆத்மாக்கள் அவர்களுடைய விசேஷத்தைத் தெரிந்து கொள்வார்கள் என்ற இந்த நினைவில் எப்பொழுதும் இருங்கள். எந்தவொரு விசேஷ ஆத்மாவைப் பார்க்கும்போது தானும் விசேஷம் ஆக வேண்டும் என்ற ஊக்கம் வரும். எங்கே இருந்தாலும், எவ்வளவு மாயாவி சூழ்நிலையில் இருந்தாலும், விசேஷ ஆத்மா ஒவ்வொரு ஸ்தானத்திலும் விசேஷமாகத் தென்படும். எப்படி வைரம் மண்ணுக்குள்ளும் மின்னிக் கொண்டிருப்பதாக தென்படும். வைரம் வைரமாகவே தான் இருக்கும். அதே போல் எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், விசேஷ ஆத்மா எப்பொழுதுமே தன்னுடைய விசேஷம் மூலம் அனைவரையும் கவர்ந்திழுப்பார். நான் விசேஷ யுகத்தின் விசேஷ ஆத்மா என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள்.

 

மும்பையைச் சேர்ந்தவர்களுக்காக அன்பு நினைவுகள்:

மும்பையில் முதலில் செய்தி கொடுக்க வேண்டும். மும்பையில் இருப்பவர்கள் மிகவும் பிஸியாகவும் இருப்பார்கள். பிஸியாக இருப்பவர்களுக்கு நீண்ட நேரத்திற்கு முன்பாகவே செய்தி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நானோ பிஸியாக இருந்தேன், நீங்கள் என்னிடம் கூறவில்லை என்று புகார் கூறுவார்கள். எனவே அவர்களை இப்பொழுதிலிருந்தே நல்ல முறையில் எழுப்பி விட வேண்டும். மும்பையைச் சேர்ந்தவர் களுக்கு தன்னுடைய ஜென்மத்தின் விசேஷத்தை சேவையில் விசேஷமாக ஈடுபடுத்திக் கொண்டே இருங்கள் என்று கூற வேண்டும். இதன் மூலம் தான் வெற்றியை சுலபமாக அனுபவம் செய்வார்கள். ஒவ்வொரு ஜென்மத்தின் விசேஷம் இருக்கிறது, அதே விசேஷத்தை ஒவ்வொரு நேரமும் காரியத்தில் மட்டும் ஈடுபடுத்துங் கள். தன்னுடைய விசேஷத்தை மேடையில் கொண்டு வாருங்கள். உள்ளுக்குள்ளே மட்டும் வைக்காதீர்கள். மேடையில் கொண்டு வாருங்கள். நல்லது.

 

அவ்யக்த முரளியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள்:

 

கேள்வி:

ஒருமித்த நிலையின் சக்தி என்னென்ன அனுபவங்களை செய்விக்கிறது?

 

பதில்:

ஒருமித்த நிலையின் சக்தி மூலம் எஜமானத்தன்மையின் சக்தி வருகிறது, அதன் மூலம் 1) சகஜமாக தடையற்ற நிலையின் அனுபவம் ஆகிறது. யுத்தம் செய்ய வேண்டியதாக இருக்காது. 2) இயல்பாகவே ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற இந்த அனுபவம் ஆகிறது. 3) ஒரே சீரான ஃபரிஷ்தா சொரூபத்தின் அனுபவம் இயல்பாக இருக்கும். 4) அனைவருக்காகவும் அன்பு, நன்மை பயப்பது, மரியாதை கொடுப்பதின் உள்உணர்வு இயல்பாக இருக்கும்.

 

கேள்வி:

பிரம்மா பாபாவிற்குச் சமமாக எப்படி சம்பன்ன நிலையின் நேரம் அருகில் வருமோ அப்படி எந்த சுயமரியாதை இருக்கும்?

 

பதில்:

 ஃபரிஷ்தா நிலையின் சுயமரியாதை இருக்கும். நடைமுறை காரியங்கள் செய்து கொண்டே தேக உணர்வற்ற ஃபரிஷ்தா ரூபம் இருக்கும். எப்படி பிரம்மா பாபா மூலமாக காரியங்கள் செய்து கொண்டும், பேசிக் கொண்டும், டைரக்ஷன் கொடுத்துக் கொண்டும், ஊக்கம் உற்சாகத்தை அதிகரித்துக் கொண்டும், உடலிலிருந்து விலகிய, சூட்சும பிரகாச ரூபத்தின் அனுபவம் செய்தீர்கள். பேசிக் கொண்டும் இருக்கிறார், ஆனால் இங்கு இல்லை என்று அனுபவம் ஆனது, பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆனால் பார்வை ஆன்மீகமாக இருந்தது. தேக உணர்விலிருந்து விடுபட்ட, மற்றவர்களுக்கும் தேகத்தின் உணர்வு வராத, விலகிய ரூபம் தென்பட வேண்டும். இதைத் தான் தேகத்தில் இருந்தும் ஃபரிஷ்தா சொரூபம் என்று கூறுவது.

 

கேள்வி:

ஃபரிஷ்தா ரூபத்தின் கூடவே ஃபரிஷ்தாவாக ஆகி வதனத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் எந்த விஷயத்தின் மீது கவனம் கொடுங்கள்?

 

பதில்:

மனதின் ஒருமித்த நிலையின் மேல் கவனம் கொடுக்க வேண்டும். தன்னுடைய கட்டளைப்படி மனதை நடத்துங்கள். எப்படி நம்பர் ஒன் பிரம்மாவின் ஆத்மா சாகார ரூபத்தில் ஃபரிஷ்தா வாழ்க்கையின் அனுபவத்தை பிறருக்கு செய்வித்தார், மேலும் அவர் ஃபரிஷ்தா ஆகிவிட்டார். அந்த மாதிரி ஃபரிஷ்தா தன்மையின் அனுபவத்தை நீங்களும் செய்யுங்கள், மற்றவர்களுக்கும் செய்வியுங்கள், ஏனென்றால் ஃபரிஷ்தா ஆகாமால் தேவதை ஆக முடியாது.

 

கேள்வி :

எந்த நிலை வசப்பட்ட நிலை, அது யாருக்கும் பிடிப்பதில்லை?

 

பதில்:

சில குழந்தைகள் விரும்பவில்லை, நினைக்கவில்லை ஆனால் ஆகிவிட்டது, செய்யக்கூடாது ஆனால் நடந்து விடுகிறது என்ற இது தான் மனதின் வசப்பட்ட நிலை. அந்த மாதிரியான நிலை நன்றாக இருக்காது, பிடிக்காது. செய்ய வேண்டும் என்றால் மனம் கூறி காரியம் நடக்கட்டும். செய்யக் கூடாது ஆனால் மனம் செய் என்று கூறுகிறது என்றால் இது எஜமானத்தன்மை இல்லை.

 

கேள்வி :

எந்த விஷயத்தில் பிரம்மா பாபாவையப் பின்பற்றி நடக்க வேண்டும்?

 

பதில்-

எப்படி பிரம்மா பாபாவிடம் எதிரில் ஃபரிஷ்தா நின்று கொண்டிருக்கிறார். ஃபரிஷ்தா திருஷ்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அனுபவம் செய்தீர்கள். அதே போல் பிரம்மா பாபாவை பின்பற்றிச் செய்யுங்கள். மனதின் ஒருமித்த நிலையின் சக்தி சகஜமாக அந்த மாதிரி ஃபரிஷ்தா ஆக்கி விடும்.

 

வரதானம்

வீணானவை மற்றும் மாயாவைப் பற்றி ஒன்றும் தெரியாதவராகி தெய்வீகத்தன்மையின் அனுபவம் செய்யக்கூடிய மகான் ஆத்மா ஆகுக!

 

மகான் ஆத்மா என்றால் சென்ட் (முழுமையானவர்) என்று கூறுவோம். யார் வீணானவை மற்றும் மாயாவிடமிருந்து இன்னொசென்ட் (கபடமில்லா) ஆக இருப்பவர். எப்படி தேவதைகள் இந்த விஷயத்தில் இன்னொசென்ட்டாக இருந்தார்கள். அந்த மாதிரி தன்னுடைய அந்த சம்ஸ்காரத்தை வெளிப்படுத்துங்கள், வீணானவைகளை அறியாத சொரூபமாக ஆகுங்கள். ஏனென்றால் இந்த வீணானவையின் பாதிப்பு அனேக தடவைகள் சத்தியத்தின், யதார்த்தத்தின் உணர்வை அகற்றி விடுகிறது. எனவே நேரம், மூச்சு, வார்த்தைகள், காரியம், அனைத்திலும் வீணானவற்றை அறியாதவர் ஆகுங்கள். எப்பொழுது வீணானவைகளை ஒன்றும் அறியாத நிலை இருக்குமோ அப்பொழுது தெய்வீகத் தன்மை இயல்பாக அனுபவம் ஆகும். மேலும் அனுபவம் செய்விக்கும்.

 

சுலோகன் :

முதல் டிவிஷனில் வர வேண்டும் என்றால் பிரம்மா பாபாவின் அடிமேல் அடியெடுத்து வையுங்கள்.

 

அறிவிப்பு : இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நீங்கள் அனைவரும் கூட்டாக மாலை 6.30 மணி முதல் 07.30 வரை இன்டெர்னேஷனல் யோகாவில் கலந்து கொண்டு தன்னுடைய ஃபரிஷ்தா சொரூபம் மூலமாக முழு உலகிற்கு அமைதியின் சக்தியைக் கொடுக்கும் சேவை செய்யுங்கள். முழு நாளும் காரியங்கள் செய்து கொண்டே தன்னை உடலற்ற ஆத்மா என்றும் மேலும் காரியங்கள் செய்து கொண்டிருக்கும் போதே ஃபரிஷ்தா என்று புரிந்து கர்மயோகியாக இருங்கள்.

 

ஓம்சாந்தி