07.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உணர்வுள்ள (சைத்தன்ய) நிலையிலிருந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும், சூன்ய நிலையில் செல்வது அல்லது தூங்கி விடுவது என்பது யோகா அல்ல.

 

கேள்வி:

கண்களை மூடிக் கொண்டு அமருவதற்கு உங்களுக்கு ஏன் தடை செய்யப்பட்டுள்ளது?

 

பதில்:

ஒருவேளை நீங்கள் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தால் கடையிலுள்ள அனைத்து பொருட்களையும் திருடன் திருடிக் கொண்டு சென்றுவிடுவான். மாயை என்ற திருடன் புத்தியில் எதையும் தாரணை செய்ய விடாது. கண்களை மூடிக் கொண்டு யோகாவில் அமர்ந்தால் தூக்கம் வந்துவிடும், (திருடு போவது) தெரியாமலேயே போய்விடும். ஆகையால் கண்களை திறந்து கொண்டு அமருங்கள். காரியங்கள் செய்தாலும் புத்தியினால் தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதில் ஹடயோகாவிற்கான விசயம் கிடையாது.

 

ஓம்சாந்தி.

குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை கூறுகின்றார், இவரும் குழந்தை அல்லவா! தேகதாரிகள் அனைவரும் குழந்தைகள். ஆக ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களுக்கு கூறுகின்றார், ஆத்மா தான் முக்கியமானது. இதனை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இங்கு எதிரில் அமர்கின்றபொழுது சரீரத்திலிருந்து விடுபட்டு மறைந்து விட வேண்டும் என்பது கிடையாது. சரீரத்திலிருந்து விடுபட்டு மறைந்து போய்விடுவது என்பது நினைவு யாத்திரைக்கான நிலை கிடையாது. இங்கு விழிப்புணர்வுடன் அமர வேண்டும். நடந்தாலும், காரியங்கள் செய்தாலும், எழுந்தாலும், அமர்ந்தாலும் தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். இங்கு அமர்ந்து கொண்டு மயக்க நிலைக்கு சென்றுவிடுங்கள் என்று தந்தை கூறுவது கிடையாது. இவ்வாறு பலர் அமர்ந்திருக்கும் பொழுதே மறைந்துவிடுகின்றனர். நீங்கள் விழிப்புணர்வுடன் அமர வேண்டும், மேலும் தூய்மை யாகவும் ஆக வேண்டும். தூய்மையின்றி தாரணை ஏற்படாது, யாருக்கும் நன்மை செய்ய முடியாது, யாருக்கும் கூற முடியாது. தானே தூய்மையாக இருக்காமல் மற்றவர்களுக்குக் கூறுவது என்பது பண்டிதராக ஆவதாகும். அதிபுத்திசாலிகளாகவும் ஆகக் கூடாது. பிறகு அது உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருக்கும். நான் சூன்யத்தில் சென்றுவிடுகிறேன் என்று நினைக்காதீர்கள். கண்கள் மூடப்பட்டு விடுகிறது, இது நினைவிற்கான நிலை கிடையாது, இங்கு சைத்தன்ய நிலையிலிருந்து கொண்டு தந்தையை நினைவு செய்ய வேண்டும். தூங்குவது என்பது நினைவு கிடையாது. குழந்தைகளுக்கு பல கருத்துக்கள் புரிய வைக்கப்படுகிறது. ஏழாவது உலகிற்கு சென்றுவிட்டால் அவர்களுக்கு உலகைப் பற்றி எதுவும் தெரியாது என்று சாஸ்திரங்களில் காண்பிக்கப்பட்டிருக்கிறது, உங்களுக்கு உலகைப் பற்றி தெரியும் அல்லவா! இது சீ சீ உலகமாகும். தந்தையை யாரும் அறியவில்லை. ஒருவேளை தந்தையை அறிந்திருந்தால் சிருஷ்டி சக்கரத்தையும் அறிந்திருப்பர். இந்த சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது? மனிதர்கள் மறுபிறப்பு எவ்வாறு எடுக்கின்றனர்? என்று தந்தை கூறுகின்றார். சத்யுகத்தில் நீண்ட ஆயுளாக இருந்தாலும் முகம் அருவருப்பானதாக ஆகாது. மற்றபடி சந்நியாசிகளுடையது ஹடயோகமாகும். கண்களை மூடுவது, குகைகளில் அமர்ந்து அமர்ந்து அருவருப்பான முகமாக ஆவது ..... இல்லறத்தில் இருந்து கொண்டே விழிப்புணர்வுடன் இருங்கள் என்று தந்தை உங்களுக்கு கூறுகின்றார். சூன்யத்தில் செல்வது என்பது எந்த ஒரு நிலையும் கிடையாது. தொழில் போன்றவைகளும் செய்ய வேண்டும், இல்லற காரியங்களையும் கவனிக்க வேண்டும். சூன்யத்தில் சென்றுவிடக் கூடாது. காரியங்கள் செய்துக் கொண்டே புத்தியினால் தந்தையை நினைவு செய்ய வேண்டும். அவசியம் காரியங்களை செய்ய வேண்டும், கண்களை திறந்து கொண்டு தான் செய்வீர்கள் அல்லவா! தொழில் போன்ற அனைத்தையும் செய்து கொண்டே இருங்கள். புத்தியோகம் தந்தையிடம் இருக்க வேண்டும். இதில் எந்த தவறும் செய்யக் கூடாது. கடையில் அமர்ந்திருக்கும் பொழுது கண்களை மூடிக் கொண்டால் பிறகு யாராவது பொருட்களை எடுத்துக் சென்றுவிடுவர், மேலும் அது தெரியாமலேயே இருந்துவிடும். இது ஒரு ஸ்திதியே கிடையாது. நாம் தேகத்திலிருந்து விடுபட்டவர்களாக ஆகிவிடுகிறோம் என்பது ஹடயோகிகளின் விசயமாகும். மாயா ஜாலம் செய்பவர்கள் இவ்வாறு செய்கின்றனர். தந்தை நல்ல முறையில் அமர்ந்து புரிய வைக்கின்றார். இதில் கண்களை மூடிவிடக் கூடாது.

 

எந்த உற்றார் உறவினர்களை நினைவு செய்து வந்தீர்களோ அனைத்தையும் மறந்துவிடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஒரே ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். நினைவு யாத்திரையின்றி பாவங்கள் அழியாது. போக் எடுத்து செல்கின்றனர், சூட்சும லோகத்தில் மறைந்துவிடுகின்றனர். இதில் என்ன இருக்கிறது? எவ்வளவு நேரம் அங்கு இருப்பார்களோ விகர்மம் விநாசம் ஆகாது. சிவபாபாவை நினைவு செய்ய முடியாது. பாபாவின் முரளியும் கேட்க முடியாது. ஆக நஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் நாடகத்தில் இதுவும் பதிவாகியிருக்கிறது, அதனால் தான் செல்கின்றனர். பிறகு வந்து முரளி கேட்கின்றனர், அதனால் தான் பாபா கூறுகின்றார் - செல்லுங்கள், உடனேயே வந்துவிடுங்கள், அமர்ந்துவிடாதீர்கள். விளையாடுவது போன்றவைகளை பாபா நிறுத்திவிட்டார். இதுவும் சுற்றுவது, வலம் வருவது போன்றதாக ஆகிவிடுகிறது அல்லவா! பக்தி மார்க்கத்தில் தான் சுற்றுவது, வலம் வருவது அதிகமாக இருக்கும். ஏனெனில் இருள் மார்க்கம் அல்லவா! மீரா தியானத்தில் வைகுண்டத்திற்கு சென்று வந்தார். அது யோகாவோ அல்லது படிப்போ கிடையாது. அவர் சத்கதி அடைந்தாரா என்ன? சொர்க்கம் செல்ல தகுதியானவராக ஆனாரா? பல பிறவிகளின் பாவங்கள் அழிந்ததா? முற்றிலும் கிடையாது. பல பிறவிகளின் பாவங்கள் தந்தையின் நினைவின் மூலம் தான் அழியும். மற்றபடி சாட்சாத்கார் போன்றவைகளினால் எந்த இலாபமும் கிடையாது. இது வெறும் பக்தியாகும். நினைவும் கிடையாது, ஞானமும் கிடையாது. பக்தி மார்க்கத்தில் இதை கற்றுக் கொடுப்பவர்கள் யாருமில்லையெனில் சத்கதியும் அடைய முடியாது. எவ்வளவு தான் சாட்சாத்காரம் ஏற்படலாம், ஆரம்பத்தில் குழந்தைகள் தானாகவே சென்றுவிடுவர், மம்மா, பாபா சென்றது கிடையாது. ஆரம்பத்தில் பாபாவிற்கு ஸ்தாபனை மற்றும் விநாசத்தின் சாட்சாத்காரம் ஏற்பட்டது. பிறகு எதுவும் ஏற்படவில்லை. நான் யாரையும் அனுப்புவது கிடையாது. பாபா, இவரது கயிறை இழுத்துக் கொள்ளுங்கள் என்று அமர வைத்து கூறிவிடுவேன். அதுவும் நாடகத்தில் இருந்தால் தான் கயிறும் இழுப்பார், இல்லையெனில் கிடையாது. பல சாட்சாத்காரங்கள் ஏற்படுகின்றன. எவ்வாறு ஆரம்பத்தில் பலர் சாட்சாத்காரம் செய்தனரோ, கடைசியிலும் அதிக சாட்சாத்காரங்கள் செய்வர், வேட்டை யாடப்பட்டது இறந்துவிடும், வேட்டைக்காரனுக்கு குஷி ஏற்பட்டுவிடும்.... அவர்கள் அனைவரும் சரீரம் விட்டு விடுவர். சரீர சகிதமாக யாரும் சத்யுகத்திற்கோ அல்லது சாந்திதாமத்திற்கோ செல்ல முடியாது. எவ்வளவு மனிதர்கள் இருக்கின்றனர்! அனைவரும் அழிந்துவிடுவர். பிரம்மாவின் மூலம் ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் ஊர் ஊராகச் சென்று எவ்வளவு சேவை செய்கிறீர்கள்! தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்பதை மட்டுமே கூறுகிறீர்கள். சந்நியாசிகள் இராஜயோகம் கற்பிக்கும் அளவிற்கு அறிந்திருக்கவில்லை. தந்தையைத் தவிர இராஜயோகம் வேறு யார் கற்பிக்க முடியும்? குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தந்தை இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். பிறகு இராஜ்யம் கிடைத்துவிடும். நீங்கள் அளவற்ற சுகத்தில் இருப்பீர்கள். பிறகு அங்கு நினைவு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. துளியளவும் துக்கம் இருக்காது. ஆயுளும் அதிகமாக இருக்கும், உடலும் ஆரோக்கியமாக (நோயற்றதாக) இருக்கும். இங்கு எவ்வளவு துக்கம் இருக்கிறது! தந்தை துக்கத்திற்காகவே விளையாட்டை உருவாக்கியிருக்கின்றார் என்பது கிடையாது. இந்த சுகம்-துக்கம், வெற்றி-தோல்விக்கான இந்த விளையாட்டு போன்றவை, அழிவற்றதாகும். இந்த அனைத்து விசயங்களையும் சந்நியாசிகள் அறிந்திருக்க வில்லையெனில் பிறகு எப்படி புரிய வைக்க முடியும்? அவர்கள் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களை படிக்கக் கூடியவர்கள். தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள் என்று உங்களுக்கு கூறப்படுகிறது. அந்த சந்நியாசிகள் ஆத்மா என்று உணர்ந்து பிரம்மத்தை நினைவு செய்கின்றனர். பிரம்மத்தை பரமாத்மா என்று நினைக்கின்றனர், பிரம்ம ஞானிகளாக இருக்கின்றனர். உண்மையில் பிரம்மம் என்பது வசிக்கும் இடமாகும். அங்கு தான் ஆத்மாக்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள், அதிலேயே ஐக்கியமாகி விடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்களது முழு ஞானமும் தலைகீழானது ஆகும். இங்கு எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு கற்பிக்கின்றார். பகவான் 40 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு வருவார் என்று அவர்கள் கூறுகின்றனர், இது தான் அஞ்ஞான இருள் என்று கூறப்படுகிறது. தந்தை கூறுகின்றார் - புது உலக ஸ்தாபனை மற்றும் பழைய உலக விநாசம் செய்பவன் நான் தான். நான் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறேன், விநாசமும் எதிரில் இருக்கிறது. இப்பொழுது சீக்கிரமாக செய்யுங்கள். பாவனம் ஆகுங்கள், அப்பொழுது தான் பாவன உலகிற்கு செல்வீர்கள். இது பழைய தமோபிரதான உலகமாகும். இலட்சுமி நாராயணனின் இராஜ்யம் கிடையாது. இவர்களது இராஜ்யம் புது உலகில் இருந்தது, இப்பொழுது கிடையாது. இவர்கள் மறுபிறப்பு எடுத்து வந்தனர். சாஸ்திரங்களின் என்னவெல்லாம் எழுதி வைத்துவிட்டனர்! அர்ஜுனனின் குதிரை வண்டியில் கிருஷ்ணர் அமர்ந்திருப்பதாக காண்பிக்கின்றனர். அர்ஜுனனின் உள்ளுக்குள் கிருஷ்ணர் அமர்ந்திருக்கிறார் என்பது கிடையாது. கிருஷ்ணர் தேகதாரி அல்லவா! யுத்தத்திற்கான விசயம் எதுவும் கிடையாது. அவர்கள் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் படையை தனித்தனியாக ஆக்கிவிட்டனர். இங்கு அந்த விசயம் கிடையாது. இந்த பக்தி மார்க்கத்தில் அநேக சாஸ்திரங்கள் உள்ளன. சத்யுகத்தில் இது இருக்காது. அங்கு ஞானத்தின் பிராப்தியாக இராஜ்யம் இருக்கும். அங்கு சுகமோ சுகம் தான் இருக்கும். தந்தை புது உலகை ஸ்தாபனை செய்கின்றார் எனில் புது உலகில் அவசியம் சுகம் இருக்கும் அல்லவா! பழைய கட்டிடத்தை தந்தை கட்டுவாரா என்ன! தந்தை புது கட்டிடத்தை கட்டுகின்றார். அது எல்லையற்ற கட்டிடம் ஆகும். இவர் புது உலகை உருவாக்கக் கூடியவர், இது தான் சதோபிரதானம் என்று கூறப்படுகிறது. இப்பொழுது தமோபிரதானம், அசுத்தமானதாக இருக்கிறது. இப்பொழுது நீங்கள் மாற்றான் இராவணனின் இராஜ்யத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்.

 

சிவாபா தான் இராமர் என்று கூறப்படுகின்றார், இராம் இராம் என்று கூறி இராம நாமத்தை தானம் செய்கின்றனர். சிவபாபா எங்கிருக்கின்றார்! இராமர் எங்கிருக்கின்றார்! இப்பொழுது சிவபாபா குழந்தைகளாகிய உங்களுக்கு கூறுகின்றார் - என் ஒருவனை நினைவு செய்யுங்கள். எங்கிருந்து வந்தீர்களோ பிறகு அங்கேயே செல்ல வேண்டும். எதுவரை தந்தையை நினைவு செய்து தூய்மையாக ஆகவில்லையோ அதுவரை திரும்பிச் செல்லவும் முடியாது. உங்களிலும் மிகச் சிலர் மட்டுமே தந்தையை மிக நல்ல முறையில் நினைவு செய்கின்றீர்கள். வாயில் கூற வேண்டிய விசயம் கிடையாது. பக்தியில் இராம், இராம் என்று வாயில் கூறுகின்றனர். யாராவது கூறவில்லையெனில் இவர் நாஸ்திகன் என்று கூறிவிடுவர். எவ்வளவு சப்தத்துடன் பாடுகின்றனர்! மரம் எந்த அளவிற்கு பெரியதாக ஆகிறதோ அந்த அளவிற்கு பக்தியின் சடங்குகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விதை எவ்வளவு சிறியதாக இருக்கும்! உங்களுக்கு எந்த பொருட்களும் தேவையில்லை, எந்த சப்தங்களும் கிடையாது. தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு என்னை நினைவு செய்யுங்கள் என்று மட்டுமே கூறுகின்றார். வாயினால் கூறவும் வேண்டாம். லௌகீகத் தந்தையையும் குழந்தை புத்தியினால் நினைவு செய்கிறது. அப்பா, அப்பா என்று உட்கார்ந்து கூறிக் கொண்டே இருக்காது. ஆத்மாக்களின் தந்தை யார்? என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதர சகோதரர்கள். ஆத்மாவிற்கு வேறு எந்த பெயரும் கிடையாது. மற்றபடி சரீரத்தின் பெயர் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆத்மா ஆத்மா தான். அவரும் பரம் ஆத்மா ஆவார். அவரது பெயர் சிவன். அவருக்கென்று சரீரம் கிடையாது. எனக்கும் சரீரம் இருந்தால் மறுபிறப்பில் வர வேண்டியிருக்கும் என்று தந்தை கூறுகின்றார். பிறகு உங்களுக்கு யார் சத்கதி கொடுப்பர்? பக்தி மார்க்கத்தில் என்னை நினைவு செய்கின்றனர். பல சிலைகள் உள்ளன. இப்பொழுது நீங்கள் நரகவாசியிலிருந்து சொர்க்கவாசிகளாக ஆகிறீர்கள் அல்லவா! பிறப்பு எடுத்ததோ நரகத்தில், இறப்பதோ சொர்க்கத்திற்காக! சொர்க்கம் செல்வதற்காகவே இங்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். யாராவது மேம்பாலம் கட்டுகின்றனர் எனில் முதலில் அடிக்கல் நாட்டு விழா கொண்டாடுவர், பிறகு மேம்பாலம் கட்டுவர். சொர்க்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தந்தை செய்துவிட்டார், இப்பொழுது ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது. அயல்நாட்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தயாராக கிடைக்கின்றன. சொர்க்கத்தில் மிகுந்த விசால புத்தியுடையவர்களாக, சதோபிரதானமாக இருப்பர். அறிவியலின் புத்தி வேகமாக இருக்கும். கட்டிடங்களில் இரத்தினங்களும் பதிக்கப்படும். இன்றைய நாட்களில் போலியான பொருட்கள் எவ்வளவு வேகமாக உருவாக்குகின்றனர் என்பதைப் பாருங்கள்! அது உண்மையானதைவிட மிக அதிகமாக ஜொலிக்கின்றன. மேலும் இன்றைய நாட்களில் இயந்திரங்களின் மூலம் உடனேயே உருவாக்கிவிடுகின்றனர். அங்கு கட்டிடம் கட்டுவதற்கு தாமதம் ஏற்படாது. சுத்தப்படுத்துவதற்கு கால தாமதம் ஏற்படும். தங்க துவாரகை சமுத்திரத்தில் வெளிப்படும் என்பது கிடையாது. ஆக தந்தை கூறுகின்றார் - நன்றாக சாப்பிடுங்கள், குடியுங்கள், தந்தையை மட்டும் நினைவு செய்தால் போதும், விகர்மம் விநாசம் ஆகிவிடும். வேறு எந்த உபாயமும் கிடையாது. பல பிறவிகளாக இந்த கங்கை குளியல் செய்து வந்தீர்கள், ஆனால் யாருமே முக்தி, ஜீவன்முக்தியை அடைந்தது கிடையாது. இங்கு பாவனம் ஆவதற்கான யுக்தி தந்தை கூறுகின்றார். நான் தான் பதீத பாவன் என்று தந்தை கூறுகின்றார். ஹே பதீத பாவன் பாபா, வாருங்கள், வந்து நம்மை பாவனம் ஆக்குங்கள் என்று நீங்கள் அழைத்தீர்கள். நாடகம் முடிவடைந்துவிட்டால் பிறகு அனைத்து நடிகர்களும் மேடைக்கு வர வேண்டும். படைப்பவரும் வந்துவிட வேண்டும். அனைவரும் வந்துவிடுவர் அல்லவா! இதுவும் அவ்வாறு தான். அனைத்து ஆத்மாக்களும் வந்துவிட்டால் பிறகு திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். இப்பொழுது நீங்கள் தயார் ஆகவில்லை. கர்மாதீத நிலை அடையவில்லையெனில் பிறகு விநாசம் எப்படி ஏற்படும்? புது உலகிற்காக படிப்பு கற்பிப்பதற்காகவே தந்தை வந்திருக்கின்றார், அங்கு காலன் கிடையவே கிடையாது. நீங்கள் காலன் மீது வெற்றி அடைகிறீர்கள். வெற்றி அடையச் செய்வது யார்? காலனுக்கெல்லாம் காலன். அவர் எத்தனை பேரை தன் கூடவே அழைத்துச் செல்கின்றார்! நீங்கள் குஷியாக செல்கிறீர்கள். அனைவரின் துக்கங்களை தூரமாக்குவதற்காக இப்பொழுது தந்தை வந்திருக்கின்றார், அதனால் அவருக்கு மகிமை பாடுகின்றனர் - துக்கத்திலிருந்து விடுவியுங்கள். சாந்திதாமம், சுகதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். ஆனால் இப்பொழுது தந்தை சொர்க்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. நீங்கள் சொர்க்கத்திற்கு சென்ற பின் அங்கே மரம் மிகவும் சிறியதாக இருக்கும். பிறகு விருத்தியடைந்து கொண்டே இருக்கும். இப்பொழுது மற்ற அனைத்து தர்மங்களும் உள்ளன, அந்த ஒரு தர்மம் கிடையாது. பெயர், உருவம், இராஜ்யம் அனைத்தும் மாறிவிட்டன. முன்பு இரட்டை கிரீடம், பிறகு ஒற்றை கிரீடமுடையவர்களாக இருப்பர். சோமநாத் கோயில் கட்டியிருக்கின்றனர் எனில் எவ்வளவு செல்வம் இருந்திருக்கும்! அனைத்தையும்விட மிகப் பெரிய கோயில் இது ஒன்று தான், இதை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். தந்தை கூறுகின்றார் - நீங்கள் பலமடங்கு பாக்கியசாலிகளாக ஆகிறீர்கள். ஒவ்வொரு அடியிலும் தந்தையை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் எனில் பலமடங்கு சேர்ந்து கொண்டே இருக்கும். இந்த அளவிற்கு வருமானம் தந்தையை நினைவு செய்வதனால் ஏற்படுகிறது. பிறகு இப்படிப்பட்ட தந்தையை நீங்கள் நினைவு செய்வதற்கு ஏன் மறக்கிறீர்கள்? எந்த அளவிற்கு தந்தையை நினைவு செய்வீர்களோ, சேவை செய்வீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். நல்ல நல்ல குழந்தைகள் நாளடைவில் கீழே விழுந்துவிடுகின்றனர். முகத்தை கருப்பாக்கிக் கொண்டால் செய்த வருமானம் எல்லாம் அழிந்துப் போய்விடும். மிக உயர்ந்த இலாட்டரியை இழுந்து விடுகின்றனர். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) இல்லறத்தை பராமரித்துக் கொண்டே புத்தியோகம் தந்தையிடத்தில் வைக்க வேண்டும். தவறு செய்யக் கூடாது. தூய்மையின் தாரணையின் மூலம் தனக்கும், அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.

 

2) நினைவு யாத்திரை மற்றும் படிப்பில் தான் வருமானம் இருக்கிறது. காட்சி பார்ப்பது என்பது சுற்றுவது போன்றதாகும், அதனால் எந்த இலாபமும் கிடையாது. எவ்வளவு முடியுமோ விழிப்புணர்வுடன் இருந்து தந்தையை நினைவு செய்து தனது விகர்மங்களை விநாசம் செய்ய வேண்டும்.

 

வரதானம் :

பாபாவிடம் சக்தி பெற்று, ஒவ்வொரு பரிஸ்திதிக்கும் (பாதகமான புறச்சூழல்) தீர்வு காணக்கூடிய சாட்சியாக இருந்து பார்ப்பவர் ஆகுக.

 

குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள் -- அதிகபட்சம் வந்த பிறகு தான் இறுதி வரும். ஆக, ஒவ்வொரு விதமான குழப்பமும் அதிகபட்சத்தில் நடைபெறும். பரிவாரத்தில் கூட சச்சரவு நடைபெறும். மனதிலும் கூட அநேக சிக்கல்கள் வரும். செல்வமும் மேலே-கீழே ஆகும். ஆனால் யார் பாபாவின் துணையாக இருக்கின்றனரோ, உண்மையுள்ளவராக இருக்கின்றனரோ, அவர்களுக்கு பாபா பொறுப்பாகிறார். அத்தகைய சமயத்தில் மனம் பாபாவின் பக்கம் இருக்குமானால் நிர்ணய சக்தியினால் அனைத்தையும் கடந்து சென்று விடுவீர்கள். சாட்சியாக இருந்து பார்ப்பவராக ஆகி விட்டீர்களானால் பாபாவின் சக்தி மூலம் ஒவ்வொரு பரிஸ்திதிக்கும் சுலபமாகத் தீர்வு கண்டு விடுவீர்கள்.

 

சுலோகன் :

இப்போது அனைத்துப் பற்றுக்கோடுகளையும் விட்டுவிட்டு வீட்டிற்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி