15.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நினைவிலிருந்து உணவு சமைக்கின்ற பொழுது சாப்பிடக் கூடியவர்களின் இருதயம் சுத்தமாகி விடும். பிராமணர்களாகிய உங்களது உணவு மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

 

கேள்வி:

சத்யுகத்தில் உங்கள் வீட்டு வாசலில் ஒருபொழுதும் காலன் வருவதில்லை - ஏன்?

 

பதில்:

ஏனெனில் சங்கமத்தில் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் மூலமாக உயிருடன் இருந்து இறப்பதற்கு கற்றுக் கொண்டீர்கள். யார் இப்பொழுது உயிருடன் இருந்து இறக்கின்றார்களோ அவர்களது வாசலில் ஒருபொழுதும் காலன் வர முடியாது. இறக்கக் கற்றுக் கொள்வதற்காக நீங்கள் இங்கு வருகின்றீர்கள். சத்யுகம் அமரலோகமாகும். அங்கு காலன் யாரையும் சாப்பிடுவது கிடையாது. இராவண இராஜ்யம் மரண உலகமாக இருக்கின்றது. ஆகையால் இங்கு அனைவருக்கும் அகால மரணம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 

ஓம்சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகள் கண்காட்சியைப் பார்த்து விட்டு வருகின்றீர்களெனில் புத்தியில் அதுவே நினைவில் இருக்க வேண்டும். நாம் எப்படி சூத்திரர்களாக இருந்தோம், இப்பொழுது பிராமணர்களாக இருக்கின்றோம், பிறகு சூரியவம்சம், சந்திரவம்சத்தில் தேவதைகளாக ஆவோம். இந்த சங்கமயுகத்தின் மாடல் கண்காட்சியில் வைக்க வேண்டும். கலியுகம் மற்றும் சத்யுகத்தின் நடுவில் இருப்பது இந்த சங்கமயுகமாகும். ஆக சங்கமயுகத்தின் மாடல் இடையில் இருக்க வேண்டும். அதில் 15-20 வெள்ளை உடை அணிந்தவர்களை தபஸ்யா (தியானம்) செய்வதாக அமர்த்தி விட வேண்டும். சூரிய வம்சத்தை காண்பிப்பது போல் சந்திரவம்சத்தையும் காண்பிக்க வேண்டும். இவர்கள் தபஸ்யா செய்து இவ்வாறு ஆகின்றார்கள் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ளும் படியாக உருவாக்க வேண்டும். உங்களது ஆரம்ப கால சித்திரம் இருப்பது போன்று, சாதாரண ரூபத்தில் தபஸ்யா மற்றும் எதிர்கால இராஜ்ய பதவி போன்று இதையும் உருவாக்க வேண்டும். ஆக இவர்கள் அவ்வாறு ஆகின்றார்கள் என்பதை நீங்கள் புரிய வைக்க முடியும். மிகச் சரியாக காண்பிக்க வேண்டும். நாம் பிரம்மா குமார், பிரம்மா குமாரிகள் இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டு இவ்வாறு ஆகின்றோம். ஆக சங்கமயுகத்தையும் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பார்த்து விட்டு வருகின்றீர்கள் எனில், முழு நாளிலும் இந்த ஞானம் புத்தியில் இருக்க வேண்டும். அப்பொழுது தான் ஞானக்கடலின் குழந்தைகள் உங்களையும் மாஸ்டர் ஞானக் கடல் என்று கூற முடியும். ஞானம் புத்தியில் இல்லையெனில் ஞானக்கடல் என்று கூற முடியாது. முழு நாளும் புத்தி இதிலேயே ஈடுபட்டிருக்கும் பொழுது தான் பந்தனம் நீங்கிக் கொண்டே செல்லும். நாம் இப்பொழுது பிராமணர்களாக இருக்கின்றோம், பிறகு தேவதைகளாக ஆகின்றோம். ஒருவேளை நல்ல முறையில் முயற்சி செய்யவில்லையெனில், சத்ரிய குலத்திற்குச் சென்று விடுவீர்கள். வைகுண்டத்தைப் பார்க்கவும் முடியாது. முக்கியமானது வைகுண்டம் ஆகும். அதிசய உலகம் என்று சத்யுகத்தை கூறப்படுகின்றது. ஆகையால் முயற்சி செய்ய வேண்டும். உங்களது இரண்டு சித்திரங்களும் இருக்க வேண்டும். அவர்கள் ஜொலிக்கின்ற ஆடை அல்லது ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டவர்கள் மற்றும் இவர்கள் தபஸ்யா செய்யக் கூடியவர்கள். இவர்களே சூட்சும லோகத்தில் அமர்ந்திருப்பதாக அவர்கள் நினைப்பர். ஆடை மாறலாம், தோற்றத்தை மாற்ற முடியாது. அவர்கள் அபவித்திர இல்லற மார்க்கத்தைச் சார்ந்தவர்கள், இவர்கள் பவித்திரமான இல்லற மார்க்கத்தைச் சார்ந்தவர்கள். இதன் மூலம் இது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள முடியும். இவர்களே பிறகு அவர்களாக ஆகின்றனர். யார் முயற்சி செய்கின்றார்களோ அவர்களே அடைவார்கள். பிராமணர்களாக பலர் ஆகின்றனர் அல்லவா! இந்த நேரத்தில் நீங்கள் சிலர் மட்டுமே இருக்கின்றீர்கள். நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். முழு சிருஷ்டிச் சக்கரம் எப்படி சுற்றுகின்றது? நாம் தபஸ்யா செய்து கொண்டிருக்கின்றோம், பிறகு இவ்வாறு ஆவோம் என்பது புத்தியில் இருக்கின்றது. இதனையே சுவதரிசன சக்கரதாரியாக ஆகி அமர்வது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் புத்தியில் முழு ஞானமும் இருக்கின்றது. நான் எப்படியிருந்தேன்? இப்பொழுது மீண்டும் என்ன ஆகிக் கொண்டிருக்கின்றேன்? மாணவர்கள் கண்டிப்பாக ஆசிரியரை நினைப்பார்கள். நீங்களும் தந்தையை நினைவு செய்ய வேண்டும். நினைவு யாத்திரையின் மூலம் தான் பாவங்கள் அழியும். ஆத்மா பவித்திரமானதாக ஆகிவிடுகின்றது, பிறகு சரீரமும் பவித்திரமானதாக கிடைக்கின்றது. யார் சூத்திரனிலிருந்து பிராமணர்களாக ஆகின்றார்களோ அவர்களே பிறகு தேவதைகளாக ஆகின்றனர். இதற்கான மாடல் எவ்வளவு பெரியதாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு நல்லது. ஏனெனில் சங்கமயுகத்தில் புருஷோத்தமர்களாக ஆகக் கூடிய பிராமணர்கள் என்று எழுத வேண்டியிருக்கின்றது. இப்பொழுது தந்தை வந்து உங்களுக்குப் கற்பிக்கின்றார். மேலே சிவபாபாவின் சித்திரம் இருக்கின்றது, அவர் உங்களுக்கு கற்பிக்கின்றார். நீங்கள் இவ்வாறு ஆகின்றீர்கள். இந்த பிரம்மாவும் உங்கள் கூடவே இருக்கின்றார். அவரும் வெள்ளை ஆடை அணிந்த மாணவன் ஆக இருக்கின்றார். மனிதர்கள் இராம இராஜ்யத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. இராம இராஜ்யம், இராவண இராஜ்யம் என்றும் பாடப்பட்டிருக்கின்றது. சத்யுகத்தில் தர்ம இராஜ்யம் இருக்கும். மற்றபடி திரேதா யுகத்தில் சத்ரியர்களை நிந்தனை செய்து விட்டனர். சூரிய வம்சத்தினரை நிந்திக்கவில்லை. ஆக இவைகளையும் எழுத வேண்டும். இராம இராஜ்யம், இராவண இராஜ்யம்...... தர்மத்தின் முன்னேற்றம் ஆகும். அதுவும் பாதி சொர்க்கமாகும். ஏனெனில் 14 கலைகள் இருக்கின்றதல்லவா! அங்கு இப்படிப்பட்ட நிந்தனைக்கான விசயங்கள் ஏற்படாது. நாம் என்ன ஆகிக் கொண்டிருக்கின்றோம் என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்தி விடுங்கள். நாமே நமக்காக சுய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றோம். உலகில் எந்த அமைதி என்ற சுய ராஜ்ஜியத்தை அனைவரும் கேட்கின்றனரோ அதனை நாம் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றோம்.

 

பாபா கண்காட்சி போன்றவற்றை பார்க்கின்ற பொழுது சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் வீட்டிற்குச் சென்ற பின்பு இவை அனைத்தையும் மறந்து விடுவீர்கள். ஆனால் இவை அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கண்காட்சியை விட்டு வெளியில் சென்றதும் முடிந்து விட்டது என்று இருந்து விடக் கூடாது. முயற்சி செய்யக் கூடிய நல்ல நல்ல குழந்தைகளின் புத்தியில் சிந்தனை ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். பாபாவிற்கு ஓடிக் கொண்டே இருக்கின்ற தல்லவா! புத்தியில் முழு ஞானம் இருக்கும் பொழுது பாபாவின் நினைவும் இருக்கும். முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சதோபிரதானமாக ஆகவில்லையெனில் பிறகு சத்யுகத்திற்குச் செல்ல மாட்டீர்கள். ஆகையால் தன்னை நினைவு யாத்திரையில் உறுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் இராஜயோகிகளாக இருக்கின்றீர்கள். உங்களுக்கு மிகப் பெரிய சடை இருக்கின்றது. மகிமைகள் அனைத்தும் தாய்மார்களாகிய உங்களுக்குத் தான். சடைகளும் இயற்கையாக இருக்கின்றது. இராஜயோகி மற்றும் யோகினி, இவர்களின் உண்மையிலும்  உண்மையான தபஸ்யாவின் ரூபத்தை காண்பிக்கின்றனர். இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விட்டு விட்டு தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். மற்ற அனைத்து தேக சம்பந்தங்களையும் மறந்து விடுங்கள். ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள். அவர் உங்களை மிகப் பெரிய செல்வந்தர்களாக ஆக்குகின்றார். உயிருடன் இருந்து இறந்து விடுங்கள். தந்தை வந்து உயிருடன் இருந்து இறப்பதற்குக் கற்றுக் கொடுக்கின்றார். நான் காலனுக்கெல்லாம் காலனாக இருக்கின்றேன், உங்களது வாசற் படியில் காலன் வர முடியாதபடி நான் உங்களுக்கு இறப்பதற்குக் கற்றுக் கொடுக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். அங்கு இராவண ராஜ்ஜியமே கிடையாது. சத்யுகத்தில் காலன் ஒருபொழுதும் வருவது கிடையாது. அதனை அமரபுரி என்று கூறப்படுகின்றது. பாபா உங்களை அமரபுரிக்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். இது மரண உலகமாகும். அது அமரபுரியாகும். பாரதத்தின் பழமையான இராஜயோகம் மீண்டும் கற்பிக்கப்படுகின்றது என்று நீங்கள் எழுதுங்கள். கண்காட்சியைப் பார்க்கக் கூடியவர்கள், இதில் வேறு என்ன இருக்கின்றது? என்று சிந்தித்து மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதனை நடைமுறையில் (ல்ழ்ஹஸ்ரீற்ண்ஸ்ரீஹப்) மிக நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும். இராஜா ராணி எப்படியோ அவ்வாறே பிரஜைகள் என்பது இதில் வந்து விடுகின்றது. தந்தை எவ்வளவு தெளிவாக ஆக்கிப் புரிய வைக்கின்றார். தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள். இதில் தான் முக்கியமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். உலகில் தூய்மை, சுகம், சாந்தி எவ்வாறு ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது? என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தங்களுக்காகவே செய்கின்றீர்கள். எந்த அளவிற்கு முயற்சி செய்கின்றீர்களோ அந்த அளவிற்கு பதவி கிடைக்கின்றது. அதுவும் வரிசைக்கிரமமாக. வரிசைக்கிரமம் எவ்வாறு ஏற்படுகின்றது? என்பதையும் காண்பியுங்கள். பிரஜைகளையும் காண்பியுங்கள், செல்வந்த பிரஜைகளையும், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பிரஜைகளையும் காண்பியுங்கள். மிக நல்ல முறையில் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிகச் சரியானதாக உருவாக்குங்கள். முயற்சி என்பது செய்தே ஆக வேண்டும். குறைந்த நேரம் தான் இருக்கின்றது. ஞானம் உங்களுக்காகவே இருக்கின்றது. நாம் ஒரு தந்தையை நினைவு செய்தால் தான் இவ்வாறு ஆக முடியும் என்று மனிதர்கள் புரிந்து கொள்ளும்படி நீங்கள் கண்காட்சிகளில் புரிய வையுங்கள்.

 

நீங்கள் மகாரதி குழந்தைகள் எனில் உங்களது புத்தி சிந்தித்துக் கொண்டே இருக்கும். நல்ல நல்ல சகோதரர்களும் உள்ளனர். முதலாவதாக ஜெகதீஸ் இருக்கின்றார், அவர் பத்திரிக்கை வெளியிடுகின்றார். பிரிஜ்மோகனுக்கும் எழுதுவதில் நல்ல ஆர்வம் இருக்கின்றது. மூன்றாவதாகவும் யாராவது வெளிப்பட்டு வரலாம். நாளுக்கு நாள் நீங்கள் ஒவ்வொரு விசயத்தையும் தெளிவுபடுத்திக் கொண்டே செல்வீர்கள். தந்தை ஞானக்கடலாக இருக்கின்றார். அந்த பரம் ஆத்மாவிடத்தில் ஞானம் நிறைந்திருக்கின்றதல்லவா! பாட்டு கேட்கின்றீர்கள் அல்லவா! அதில் முழு ரிகார்டும் நிறைந்திருக்கின்றது. இதுவும் அவ்வாறே. தந்தையிடத்தில் என்ன செல்வம் இருக்கின்றதோ அது நாடகப்படி கிடைத்துக் கொண்டே இருக்கும். குழந்தைகளின் புத்தியில் இந்த சிந்தனை இருக்க வேண்டும். எந்த காரியங்களை வேண்டுமென்றாலும் செய்யுங்கள், கைகளினால் உணவு தயாரித்தாலும் புத்தி சிவபாபாவிடம் இருக்க வேண்டும். பிரம்மா போஜனமும் தூய்மையானதாக இருக்க வேண்டும். பிரம்மா போஜனம் என்பது பிராமணர்களின் போஜனம் ஆகும். பிராமணர்கள் எந்த அளவிற்கு யோகத்திலிருந்து உருவாக்குகின்றீர்களோ அந்த அளவிற்கு அந்த உணவில் சக்தி வந்து விடுகின்றது. தேவதைகளும் பிரம்மா போஜனத்திற்கு மகிமை செய்வதாக பாடப்பட்டிருக்கின்றது. அதன் மூலம் இருதயம் தூய்மையாகின்றது எனும் பொழுது பிராமணர்களும் அவ்வாறே இருக்க வேண்டும். இப்பொழுது கிடையாது. ஒருவேளை இப்பொழுது அவ்வாறு ஆகி விட்டால் உங்களது விருத்தி மிக நன்றாக ஏற்பட்டு விடும். ஆனால் நாடகப்படி சிறிது சிறிதாக விருத்தி ஏற்பட வேண்டும். நாம் பாபாவின் நினைவில் இருந்து உணவு தயாரிப்போம் என்று கூறும் பிராமணர்களும் வெளிப்படுவார்கள். பாபா சவால் விடுகின்றார் அல்லவா! யோகத்திலிருந்து இருந்து உணவு சமைக்கும் பிராமணர்களாக இருக்க வேண்டும். உணவு தூய்மையானதாக இருக்க வேண்டும். உணவு தான் அனைத்திற்கும் ஆதாரமாகும். வெளியில் குழந்தைகளுக்கு கிடைக்காததால் இங்கு வருகின்றனர். குழந்தைகள் உணவின் மூலமாகவும் புத்துணர்வை அடைகின்றனர். யோகியாக உள்ளவர்கள் ஞானியாகவும் இருப்பர். ஆகையால் அவர்களை சேவைக்கும் அனுப்பி விடுகின்றனர். அதிகமானவர்கள் ஆகி விட்டால் பிறகு இங்கும் அப்படிப்பட்ட பிராமணர்களை வைத்து விடுவார். இல்லையெனில் யோகயுக்தாக சமைப்பதற்கு மகாரதிகளும் சமையலறையில் தேவை. நாமும் பிரம்மா போஜனத்தை சாப்பிட்டதனால் தான் தேவதைகளாக ஆகியிருக்கின்றோம் என்று தேவதைகளும் நினைக்கின்றனர். ஆக மிகவும் ருசியுடன் உங்களை சந்திப்பதற்காக உங்களிடத்தில் வருகின்றன. உங்களை எவ்வாறு சந்திக்கின்றனர்? என்பதும் நாடகத்தில் யுக்தி இருக்கின்றது. சூட்சுமவதனத்தில் அது, இது என்று கிடைக்கின்றது. இதுவும் அதிசயமான சாட்சாத்கார் ஆகும். அதிசயமான ஞானம் அல்லவா! ஆக அர்த்தமுள்ள சாட்சாத்காரமும் அதிசயமானதாக இருக்கின்றது. பக்தி மார்க்கத்தில் அதிக உழைப்பிற்குப் பின் தான் சாட்சாத்கார் ஏற்படுகின்றது. காட்சியை பார்ப்பதற்காகவே தீவிர பக்தி செய்கின்றனர். காட்சி கண்டுவிட்டால் நமக்கு முக்தி கிடைத்து விடும் என்று நினைக்கின்றனர். அவர்கள் இந்த படிப்பின் மூலம் தான் இவ்வாறு ஆகியிருக்கின்றார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினர் இந்த படிப்பின் மூலம் தான் ஆகின்றனர். மற்றபடி இவ்வளவு சித்திரங்களை உருவாக்கி வைத்திருப்பது போன்று எதுவும் கிடையாது. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஸ்தாரமாகும். மிகப் பெரிய காரியமாகும். இப்பொழுது ஞானம் மற்றும் பக்தியின் ரகசியங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இதனை தந்தை வந்து தான் புரிய வைக்கின்றார். அவரும் ஆன்மீகத் தந்தையாக இருக்கின்றார். அவர் ஞானக்கடலாக இருக்கின்றார். கல்ப கல்பமாக பழைய உலகை புது உலகமாக ஆக்குவது, இராஜயோகத்தைக் கற்பிப்பது தந்தையின் காரியமாகும். ஆனால் கீதையில் பெயரை மாற்றி விட்டனர். இதுவும் கல்ப கல்பத்திற்கான விளையாட்டு என்று தந்தை புரிய வைக்கின்றார். நாம் வீட்டிலிருந்து நடிப்பு நடிப்பதற்காக இங்கு வந்திருக்கின்றோம். யாருக்கு, எப்படி புரிய வைப்பது என்று மரத்தின் பக்கமும் உங்களது புத்தி சென்று விட வேண்டும். நாம் சொர்க்கத்திற்கு வரமாட்டோம் என்று எங்களுக்கு கூறுகின்றீர்களா என்ன? உங்களது தர்மத்தை ஸ்தாபனை செய்தவர் சொர்க்கத்திற்கு வருவதே கிடையாது என்று கூறுங்கள். அவர் சொர்க்கத்திற்கு வந்தால் தான் நீங்களும் சொர்க்கத்திற்கு வரமுடியும். ஒவ்வொரு தர்மத்தினருக்கும் அவரவர்களது சமயத்திற்கான பாகம் இருக்கின்றது. இது பல விதமான தர்மத்தினருக்கான நாடகம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கெனவே உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். இதில் எதுவும் கூற வேண்டிய அவசியமே கிடையாது. முக்கிய தர்மம் காண்பிக்கப்பட்டிருக்கின்றது. இதனை குழந்தைகள் அறிந்திருக்கின்றீர்கள். இந்த சித்திரம் போன்றவைகளும் ஒன்றும் புதிது கிடையாது. கல்ப கல்பத்திற்கும் இவ்வாறே நடைபெற்று வரும். அநேக விதமான தடைகளும் வருகின்றன. அடி, உதைக்கான தடைகளும் வருகின்றதல்லவா! குழந்தைகள் எவ்வளவு யுக்தியாக புரிய வைக்கின்றனர்! பகவானின் மகாவாக்கியம் - காமம் மிகப் பெரிய எதிரியாகும். இப்பொழுது இந்த கலியுகம் விநாசம் ஆக வேண்டும். தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது. ஆகையால் தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! நீங்கள் தூய்மையாக ஆகுங்கள். காமத்தை வெல்லுங்கள். இதில் தான் சண்டை ஏற்படுகின்றது. நீங்கள் பெரிய பெரிய மனிதர்களுக்கு புரிய வைக்கின்றீர்கள். கவர்னரின் பெயரைக் கேட்டு அனைவரும் வருகின்றனர். ஆகையால் யுக்தி உருவாக்கப் படுகின்றது. அதன் மூலம் யாராவது நல்ல முறையில் புரிந்தும் கொள்ளலாம். பெரியவர்களின் பெயரைக் கேட்டு பலர் வருவார்கள். பெரியவர்களும் வந்து விடலாம். ஆனால் மிகவும் கடினமாகும். குழந்தைகளே! யார் மூலமாக நீங்கள் திறப்பு விழா செய்கின்றீர்களோ முதலில் அவருக்கு மனிதனிலிருந்து தேவதைகளாக ஆக முடியும், உலகில் அமைதி ஏற்படுத்த முடியும் என்பதைப் புரிய வையுங்கள். சொர்க்கத்தில் தான் உலகில் அமைதி மற்றும் சுகம் இருந்தது. இவ்வாறெல்லாம் சொற்பொழிவு செய்யுங்கள் மற்றும் செய்தித்தாளில் வெளிவரும் பொழுது தான் உங்களை தூங்க விடாத அளவிற்கு பலர் வந்து விடுவார்கள். தூக்கத்தை விட வேண்டியிருக்கும். சேவையின் மூலம், யோகாவின் மூலம் பலமும் கிடைக்கின்றது. ஏனெனில் உங்களுக்கு வருமானம் ஏற்படுகின்றது. வருமானம் செய்பவர்களுக்கு ஒருபொழுதும் கொட்டாவி வராது. தூக்கமும் வராது. வருமானத்தினால் வயிறு நிறைந்த பிறகு தூக்கம் வராது. இது நிரந்தரமாக ஆகி விடுகின்றது. நீங்களும் மிகப் பெரிய வருமானம் செய்கின்றீர்கள். திவால் ஆனவர்கள் தான் கொட்டாவி விடுவார்கள். யார் நல்ல முறையில் புரிந்திருக்கின்றார்களோ, நினைவில் இருக்கின்றார்களோ அவர்களுக்கு கொட்டாவி வராது. ஒருவேளை சொந்த, பந்தங்களின் நினைவு வந்து விட்டால் கொட்டாவி வந்து கொண்டே இருக்கும். இது அடையாளமாகும். சொர்க்கத்தில் உங்களுக்கு ஒருபொழுதும் கொட்டாவி வரவே வராது. தந்தையின் ஆஸ்தியை அடைந்து விட்டீர்கள் எனில், அங்கு தூங்குவது, அமருவது, எழுந்திருப்பது நியமப்படி நடைபெறும். ஆத்மா மிகச்சரியான லீவராக ஆகி விடுகின்றது. இப்பொழுது சலெண்டராக இருக்கின்றது, அது லீவராக (கடிகாரங்களின் பாகங்கள்) ஆக வேண்டும். சிலரால் (லீவரால் தான் கடிகாரம் இயங்கும்) ஆக முடிகின்றது, சிலரால் ஆக முடிவதில்லை. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளு, காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) பந்தன் முக்த் (பந்தனத்தில் இருந்து விடுபட்டவர்) ஆவதற்கு அல்லது சுய முன்னேற்றம் செய்வதற்காக புத்தியை சதா ஞானத்தினால் நிறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாஸ்டர் ஞானக்கடலாகி, சுவதரிசன சக்கரதாரியாகி நினைவில் அமர வேண்டும்.

 

2) தூக்கத்தை வென்றவர்களாக ஆகி நினைவு மற்றும் சேவையின் பலத்தை சேமிக்க வேண்டும். வருமானம் செய்வதில் ஒருபொழுதும் சோம்பல் ஏற்படக் கூடாது. தூங்கி வழியக் கூடாது

 

வரதானம்:

அனைவரிடத்தும் தங்களின் பார்வை மற்றும் பாவனையை அன்புடன் கூடியதாக வைத்திருக்கக் கூடிய அனைவருக்கும் அன்பான ஃபரிஸ்தா ஆகுக.

 

கனவிலும் கூட யாரிடமாவது ஃபரிஸ்தா வந்தால் குஷி ஏற்படுகிறது. ஃபரிஸ்தா என்றால் அனைவருக்கும் பிரியமானவர், எல்லைக்குட்பட்ட அன்பானவர் இல்லை, எல்லைக்கப்பாற்பட்ட அன்பானவர். யார் அன்பு செலுத்துகிறாரோ, அவருக்கு அன்பானவர் என்று அல்ல. ஆனால்  அனைவருக்கும் அன்பானவர். ஒருவர் எப்படிப்பட்ட ஆத்மாவாக இருந்தாலும் உங்கள் திருஷ்டி, உங்களது பாவனை அன்பினுடையதாக இருக்க வேண்டும் -- இது தான் அனைவருக்கும் அன்பானவர் எனச் சொல்லப்படுவது. யாராவது நிந்தனை செய்கின்றனர் அல்லது வெறுப்பைக் காட்டுகின்றனர் என்றாலும், அவர் மீதும் கூட அன்பு மற்றும் நன்மையின் பாவனை உருவாக வேண்டும். ஏனென்றால் அச்சமயம் அவர் வேறு (மாயா) வசமாக உள்ளார்.

 

சுலோகன் :

யார் அனைத்துப் பிராப்திகளும் நிரம்பியவராக உள்ளாரோ, அவர் தாம் சதா மகிழ்ச்சியான, சதா சுகமான மற்றும் பாக்கியசாலியாக இருப்பார்.

 

ஓம்சாந்தி