30.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும். ஆகையால் பழைய தேகம் மற்றும் பழைய உலகிலிருந்து விடுபட்டவராக ஆகுங்கள். தனது பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக யோக பட்டியில் அமருங்கள்.

 

கேள்வி:

யோகாவில் தந்தையின் முழு சக்தியானது எந்த குழந்தைகளுக்குக் கிடைக்கின்றது?

 

பதில்:

யாருடைய புத்தி வெளியில் அலையவில்லையோ! யார் தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையின் நினைவில் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு தந்தையிடமிருந்து சக்தி கிடைக்கின்றது. பாபா குழந்தைகளுக்கு சக்திகளைக் கொடுக்கின்றார். தந்தையின் சக்திகளை (அடைவது) செய்வது தான் குழந்தைகளின் காரியமாகும். ஏனெனில் அந்த சக்தியின் மூலம் தான் ஆத்மா என்ற பேட்டரி சார்ஜ் ஆகும், சக்தி கிடைக்கும், விகர்மம் விநாசம் ஆகும். இதனையே யோக அக்னி என்று கூறப்படுகின்றது. இதற்கான பயிற்சி செய்ய வேண்டும்.

 

ஓம் சாந்தி.

பகவானின் மகாவாக்கியம். இப்பொழுது குழந்தைகளுக்கு வீட்டின் நினைவும் வருகிறது. வீடு மற்றும் இராஜ்யத்தின் விசயத்தை மட்டுமே தந்தை கூறுவார். மேலும் குழந்தைகளும் ஆத்மாக்களாகிய நமக்கு வீடு எது? ஆத்மா என்றால் என்ன? போன்ற விசயங்களை புரிந்து கொள்கின்றனர். பாபா வந்து நமக்கு படிப்பிக்கின்றார் என்பதையும் நன்றாகப் புரிந்திருக்கின்றீர்கள். தந்தை எங்கிருந்து வருகின்றார்? பரந்தாமத்திலிருந்து. பாவன உலகைப் படைப்பதற்காக பாவன உலகிலிருந்து வருகின்றார் என்பது கிடையாது. இல்லை. தந்தை கூறுகின்றார் - நான் சத்யுக பாவன உலகிலிருந்து வருவது கிடையாது. நான் வீட்டிலிருந்து வந்திருக்கின்றேன். அந்த வீட்டிலிருந்து தான் குழந்தைகளாகிய நீங்களும் நடிப்பதற்காக வந்திருக்கின்றீர்கள். நானும் நாடகப்படி ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு வீட்டிலிருந்து வருகின்றேன். நான் இருப்பதே வீட்டில் தான், பரந்தாமத்தில் இருக்கின்றேன். ஊரிலிருந்து வருவது போன்று எளிதாக தந்தையே புரிய வைக்கின்றார். நான் ஞானம் நிறைந்தவனாக இருக்கின்றேன். நாடகப்படி நான் அனைத்து விசயங்களையும் அறிந்திருக்கின்றேன்.

 

கல்ப கல்பத்திற்கு நான் இதே விசயத்தை உங்களுக்குக் கூறுகின்றேன். நீங்கள் காமச்சிதையினால் கருப்பாகி அழிந்து விடுகின்றீர்கள். நெருப்பினால் மனிதர்கள் கருப்பாகி விடுகின்றனர். நீங்களும் அழுக்காகி விடுகின்றீர்கள். சதோ பிரதானத்திற்கான சக்தி முழுமையாக நீங்கி விட்டது. ஆத்மா என்ற பேட்டரியில் ஒரேயடியாக சார்ஜ் இல்லாமல் வண்டி நின்று விடுமளவிற்கு இருக்கக் கூடாது. இப்பொழுது அனைவரும் சக்தியை இழக்கும் நேரம் வந்து விட்டது. அப்பொழுது தான் நாடகப்படி தந்தை வருகின்றார், யார் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனரோ அவர்களது பேட்டரி சார்ஜ் ஆகின்றது. உங்களது பேட்டரி கண்டிப்பாக இப்பொழுது சார்ஜ் ஆக வேண்டும். காலையில் இங்கு வந்து அமர்வதால் மட்டும் சார்ஜ் ஆகி விடும் என்று நினைக்காதீர்கள். இல்லை. எழுந்தாலும், அமர்ந்தாலும், நடந்தாலும் நினைவின் மூலம் தான் சார்ஜ் செய்ய முடியும். நீங்கள் முதலில் தூய்மையான ஆத்மாவாக, சதோ பிரதானமாக இருந்தீர்கள். உண்மையான தங்க நகையாக இருந்தீர்கள். இப்பொழுது தமோ பிரதானமாக ஆகி விட்டீர்கள். இப்பொழுது மீண்டும் ஆத்மா சதோ பிரதானமாக ஆகின்றபொழுது சரீரமும் தூய்மையானதாகக் கிடைக்கும். எளிதில் தூய்மையாவதற்கான பட்டி இது. இதனை யோக பட்டி என்றும் கூறலாம். தங்கத்தையும் நெருப்பில் இடுகின்றனர். இது தங்கத்தை சுத்தமாக்குவதற்கான பட்டி, தந்தையை நினைவு செய்வதற்கான பட்டியாகும். கண்டிப்பாக தூய்மையானவர்களாக ஆக வேண்டும். நினைவு செய்யவில்லையெனில் தூய்மையாக ஆக முடியாது. பிறகு கணக்கு வழக்குகளை முடித்தே ஆக வேண்டும். ஏனெனில் கடைசி நேரமாக இருக்கின்றது. அனைவரும் வீட்டிற்குச் செல்ல வேண்டும். புத்தியல் வீட்டின் நினைவு இருக்கின்றது. வேறு யாருடைய புத்தியிலும் இருக்காது. அவர்கள் பிரம்மத்தை ஈஸ்வரன் என்று கூறி விடுகின்றனர். அதனை வீடு என்று நினைப்பது கிடையாது. நீங்கள் இந்த எல்லையற்ற நாடகத்தில் நடிகர்களாக இருக்கின்றீர்கள். நாடகத்தை நீங்கள் நல்ல முறையில் அறிந்து கொண்டீர்கள். இப்பொழுது 84 பிறப்புச் சக்கரம் முடிவடைகின்றது, இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். ஆத்மா இப்பொழுது பதீதமாக இருக்கின்றது. அதனால் தான் வீட்டிற்குச் செல்வதற்காக - பாபா, வந்து பாவனமாக ஆக்குங்கள் , இல்லையெனில் நாம் செல்ல முடியாது என்று அழைக்கின்றது. தந்தை தான் அமர்ந்து இந்த விசயங்களை குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். இதனைக் குழந்தைகளும் புரிந்து கொண்டீர்கள், அதனால் தான் அவரை பதீத பாவனன் என்று கூறுகின்றோம். ஆசிரியர் என்றும் கூறுகின்றோம். மனிதர்கள் கிருஷ்ணரை ஆசிரியர் என்று நினைக்கின்றனர். கிருஷ்ணர் சத்யுகத்தில் தானே படிக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். கிருஷ்ணர் ஒருபொழுதும் யாருக்கும் ஆசிரியராக ஆகவில்லை. படித்தார், பிறகு ஆசிரியராக ஆனார் என்பதும் கிடையாது. கிருஷ்ணரின் குழந்தைப்பருவத்திலிருந்து வயோதிக நிலைவரைக்குமான கதையை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். மனிதர்கள் கிருஷ்ணரை பகவான் என்று நினைத்து எங்கு பார்த்தாலும் கிருஷ்ணர் தான் என்று கூறிவிடுகின்றனர். எங்கு பார்த்தாலும் இராமர் தான் என்று இராமரின் பக்தர்கள் கூறுவர். சிக்கலான நூலாக ஆகி விட்டது. பாரதத்தின் பழமையான யோகா மற்றும் ஞானம் மிகவும் பிரபலமானது என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கின்றீர்கள். மனிதர்கள் எதையும் அறிந்து கொள்வதில்லை. ஞானக்கடலானவர் ஒரே ஒரு தந்தை தான், அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கொடுக்கின்றார். ஆக உங்களையும் மாஸ்டர் ஞானக்கடல் என்று கூறலாம். ஆனால் வரிசைக்கிரமமாக. கடல் என்று கூறலாமா? அல்லது நதி என்று கூறலாமா? நீங்கள் ஞான கங்கைகளாக இருக்கின்றீர்கள், இதில் மனிதர்கள் குழப்பமடைகின்றனர். மாஸ்டர் ஞானக்கடல் என்று கூறுவது முற்றிலும் சரியானதாகும்.

 

தந்தை குழந்தைகளுக்குப் படிப்பிக்கின்றார், இதில் ஆண், பெண் என்ற விசயம் கிடையாது. ஆஸ்தியை ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் அடைகின்றீர்கள். ஆகையால் தான் தந்தை கூறுகின்றார் ஆத்ம அபிமானியாக ஆகுங்கள். பரமாத்மாவாகிய நான் எப்படி ஞானக்கடலாக இருக்கின்றேனோ அதுபோன்று நீங்களும் ஞானக்கடலாக இருக்கின்றீர்கள். நான் பரம்பிதா பரமாத்மா என்று அழைக்கப்படுகின்றேன், எனது கடமை அனைவரையும் விட உயர்ந்ததாகும். இராஜா இராணியின் கடமையும் அனைவரையும் விட உயர்ந்ததாக இருக்குமல்லவா! உங்களதும் உயர்ந்ததாக இருக்கின்றது. ஆத்மாக்களாகிய நாம் படிக்கின்றோம், பரமாத்மா படிப்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். ஆகையால் ஆத்மா அபிமானிகளாக ஆகுங்கள். அனைவரும் சகோதரர்களாக ஆகி விடுகின்றனர். தந்தை எவ்வளவு முயற்சி செய்கின்றார்! இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் ஞானம் அடைந்து கொண்டிருக்கின்றீர்கள். பிறகு அங்கு சென்றால் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். அங்கு அனைவருக்கும் சகோதரத்துவ அன்பு இருக்கும். சகோதரத்துவ அன்பு மிகவும் நன்றாக இருக்க வேண்டும். சிலருக்கு மரியாதை கொடுப்பது, சிலருக்குக் கொடுக்காமல் இருப்பது....... இவ்வாறு இருக்கக் கூடாது. இந்து மூஸ்லீம் சகோதரர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது கிடையாது. சகோதரன் சகோதரி கிடையாது. சகோதரன் சகோதரன் என்று கூறுவது சரியானதாகும். சகோதரத்துவம். இங்கு நடிப்பு நடிப்பதற்காக ஆத்மா வந்திருக்கின்றது. அங்கும் சகோதரன் சகோதரனாக இருப்பார்கள். வீட்டீல் அனைவரும் கண்டிப்பாக சகோதரன் சகோதரனாக இருப்பார்கள். சகோதரன், சகோதரி என்ற இந்த ஆடையை இங்கு விட்டு விட வேண்டும். சகோதரன் சகோதரன் என்ற ஞானத்தை தந்தை மட்டுமே கொடுக்கின்றார். ஆத்மா நெற்றியின் நடுவில் இருக்கின்றது. நீங்களும் இங்கு தான் பார்வையை செலுத்த வேண்டும். நாம் ஆத்மாக்கள், சரீரம் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றோம். இது ஆத்மாவின் சிம்மாசனம் அல்லது அழிவற்ற சிம்மாசனம் ஆகும். ஆத்மாவை ஒருபொழுதும் காலன் அழிப்பதில்லை. நெற்றியின் நடுப்பகுதி தான் அனைவரின் சிம்மாசனமாகும். இதில் அந்த அழிவற்ற ஆத்மா அமர்ந்திருக்கின்றது. எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய விசயமாக இருக்கின்றது! குழந்தையிடத்தில் ஆத்மா செல்கின்ற பொழுதும் நெற்றியின் நடுவில் அமருகின்றது. அந்த சிறிய சிம்மாசனம் பிறகு பெரியதாக ஆகிவிடுகின்றது. இங்கு கர்பத்தில் ஆத்மா கணக்கை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. அப்பொழுது நான் ஒருபொழுதும் பாவ ஆத்மாவாக ஆக மாட்டேன் என்று பட்சாதாபப்படுகின்றது. அரைகல்பத்திற்கு பாவ ஆத்மாவாக ஆகின்றது. இப்பொழுது தந்தையின் மூலமாக பாவன ஆத்மாவாக ஆகின்றீர்கள். நீங்கள் உடல், மனம், செல்வம் அனைத்தையும் தந்தையிடம் கொடுக்கின்றீர்கள். இப்படிப்பட்ட தானத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. தானத்தைப் பெறக் கூடியவரும் மற்றும் கொடுக்கக் கூடியவரும் பாரதத்தில் தான் வருகின்றார். இவையனைத்தும் புரிந்து கொள்வதற்ககான ஆழமான விசயங்களாகும். பாரதம் மிகவும் அழிவற்ற கண்டமாக ஆகியிருக்கின்றது. மற்ற அனைத்து கண்டங்களும் அழியப் போகின்றன. இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகமாகும். இது உங்களது புத்தியில் இருக்கின்றது. உலகத்தினருக்குத் தெரியாது, இதனை ஞானம் என்று கூறுவது சிறந்ததாகும். ஞானம் தான் வருமானத்திற்கு ஆதாரமாகும். இதன் மூலம் அதிக வருமானம் ஏற்படுகின்றது. தந்தையை நினைவு செய்யுங்கள் என்ற ஞானத்தையும் கொடுக்கின்றார், பிறகு சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தையும் கொடுக்கின்றார். இதில் தான் முயற்சியிருக்கின்றது. ஆத்மாக்களாகிய நாம் இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும். ஆகையால் இந்த பழைய உலகம் மற்றும் பழைய உடலிலிருந்து விடுபட்டு இருக்க வேண்டும். தேக உட்பட பார்க்கும் அனைத்தும் அழிந்து விடும். இப்பொழுது நாம் மாற்றல் ஆகின்றோம். இதனை தந்தை மட்டுமே கூற முடியும். இது மிகப்பெரிய பரீட்சையாகும். இதனை தந்தை மட்டுமே படிப்பிக்கின்றார். இதில் புத்தகம் போன்றவைகளுக்கான அவசியம் ஏதுமில்லை. தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தை 84 பிறப்புச் சக்கரத்தை புரிய வைத்து விட்டார். நாடகத்தின் ஆயுளை யாரும் அறிந்து கொள்ளவில்லை. ஆழ்ந்த இருளில் இருக்கின்றனர். நீங்கள் இப்பொழுது விழிப்படைந்திருக்கின்றீர்கள். மனிதர்கள் விழிப்படைவதே கிடையாது. நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கின்றீர்கள்! பகவான் வந்து இவர்களுக்கு படிப்பிக்கின்றார் என்று நம்பிக்கை கொள்வதில்லை. கண்டிப்பாக யார் மூலமாவது வருவார் அல்லவா! இப்பொழுது தந்தை ஆத்மாக்களுக்கு வழி கொடுக்கின்றார் - மனிதர்களுக்கு புரிய வைப்பதற்காக இப்படி, இப்படி செய்யுங்கள். உங்களுக்கு மிகவும் சகஜமாகும். வரிசைக்கிரமம் இருக்கவே செய்கின்றது. பள்ளியிலும் வரிசைக்கிரமம் இருக்கின்றது. படிப்பிலும் வரிசைக்கிரமம் இருக்கின்றது. இந்தப் படிப்பின் மூலம் மிகப் பெரிய இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. இராஜா ஆகக்கூடியளவிற்கு முயற்சி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் என்ன முயற்சி செய்கின்றீர்களோ அதனை கல்ப கல்பத்திற்கும் செய்து கொண்டே இருப்பீர்கள். இதற்கு ஈஸ்வரிய லாட்டரி என்று கூறப்படுகின்றது. சிலருக்கு சிறிதும், சிலருக்கு மிகப் பெரிய லாட்டரியும் கிடைக்கின்றது. இராஜ்யத்திற்கான லாட்டரியும் இருக்கின்றது. ஆத்மா எப்படிப்பட்ட காரியங்களைச் செய்கின்றதோ அவ்வாறு லாட்டரி கிடைக்கின்றது. சிலர் ஏழையாக ஆகின்றனர், சிலர் செல்வந்தர்களாக ஆகின்றனர். இந்த நேரத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு முழு லாட்டரியும் தந்தையிடமிருந்து கிடைக்கின்றது. இந்த நேரத்திற்கான முயற்சி தான் ஆதாரமாகும். நினைவின் முயற்சி தான் நம்பர் ஒன் ஆகும். ஆக முதலில் யோக பலத்தின் மூலம் தூய்மையானவர்களாக ஆகுங்கள். எந்த அளவிற்கு நாம் தந்தையை நினைக்கின்றோமோ அந்த அளவிற்கு ஞான தாரணை ஏற்படும் மற்றும் அதிகமானவர்களுக்கு புரிய வைத்து தனது பிரஜைகளை உருவாக்க முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். எந்த தர்மத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, உங்களை சந்திக்கும் பொழுது தந்தையின் அறிமுகத்தை கொடுங்கள். விநாசம் எதிரில் இருப்பதை அவர்கள் நாளடைவில் பார்ப்பார்கள். விநாச நேரத்தில் மனிதர்களுக்கு வைராக்கியம் வருகின்றது. நீங்கள் ஆத்மாக்கள் என்பதை மட்டும் நாம் அவர்களுக்குக் கூற வேண்டும். ஹே, இறை தந்தையே! என்று கூறுவது யார்? ஆத்மா. இப்பொழுது தந்தை ஆத்மாக்களுக்குக் கூறுகின்றார் - உங்களுக்கு வழிகாட்டியாக வந்து உங்களை முக்திதாமத்திற்கு அழைத்துச் செல்வேன். மற்றபடி ஆத்மா ஒருபொழுதும் அழிவது கிடையாது எனில் மோட்சத்திற்கான கேள்வியும் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர்களது நடிப்பை நடிக்க வேண்டும். ஆத்மாக்கள் அனைத்தும் அழிவற்றதாகும். ஒருபொழுதும் அழிவது கிடையாது. மற்றபடி அங்கு செல்வதற்காக தந்தையை நினைவு செய்யுங்கள், விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும். வீட்டிற்குச் சென்று விடுவீர்கள். இறுதியில் பெரிய பெரிய சந்நியாசிகளும் புரிந்து கொள்வார்கள், அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். உங்களது செய்தி அனைவரது புத்தியிலும் அமரும். ஹே பிரபு! உங்களது லீலைகள் (கட்டளைகள்) ...... என்று பாடியிருக்கின்றனர். ஆக யாருக்காவது தனது கட்டளைகளைக் கூறுவாரா? அல்லது தன்னிடமே வைத்துக் கொள்வாரா? அவரது வழியின் மூலம் சத்கதி எப்படி ஏற்படு கின்றது? கண்டிப்பாக கூறுவாரல்லவா! உங்களது வழிமுறைகள் பற்றி உங்களுக்கு மட்டுமே தெரியும், எங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறுகின்றனர். இதுவும் ஒரு பேச்சா! தந்தை கூறுகின்றார் - இந்த ஸ்ரீமத் மூலமாக உங்களுக்கு கதி ஏற்படுகின்றது. பாபா தான் அறிந்த அனைத்தையும் நமக்கு கற்பிக்கின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். நாம் பாபாவை அறிந்திருக்கின்றோம் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். உனது லீலைகள் உனக்கு மட்டுமே தெரியும் என்று அவர்கள் பாடுகின்றனர். ஆனால் நீங்கள் அவ்வாறு கூறுவது கிடையாது. புத்தியில் அனைத்து ஞானமும் வருவதற்கு நேரம் தேவைப்படுகின்றது. சம்பூர்ண நிலையை இன்னும் யாரும் அடையவில்லை. சம்பூர்ணம் ஆகிவிட்டால் இங்கிருந்து சென்று விட வேண்டும். போவதேயில்லை. இப்பொழுது அனைவரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். பாபாவிற்கு முதலில் வேகமாக வைராக்கியம் வந்தது, இரண்டு கிரீடதாரியாக ஆகின்றேன் என்பதைப் பார்த்தார். நாடகப்படி பாபாவும் காண்பித்தார். உடனேயே நான் குஷியாகி விட்டேன். சந்தோசத்தால் அனைத்தையும் விட்டு விட்டேன், விநாசத்தையும் பார்த்தேன் சதுர்புஜதாரியையும் பார்த்தேன். இப்பொழுது இராஜ்யம் கிடைப்பதாக நினைத்தேன். சிறிது காலத்தில் விநாசம் ஆகிவிடும். இவ்வாறு நஷா ஏறிவிட்டது. இது சரியானது தான், இராஜ்யம் உருவாகும், பலருக்கு இராஜ்யம் கிடைக்கும். நான் ஒருவர் சென்று என்ன செய்யப் போகின்றேன்? என்ற இந்த ஞானம் இப்பொழுது கிடைக்கின்றது. முதலில் குஷியின் அளவு அதிகரித்து இருந்தது. அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் முயற்சி செய்வதற்காகவே அமர்ந்திருக்கின்றீர்கள். அதிகாலையில் நினைவில் அமர்கின்றீர்கள். இவ்வாறு அமருவதும் மிகவும் நல்லது. பாபா வந்திருக்கின்றார் என்பதை அறிந்திருக்கின்றீர்கள். தந்தை வந்திருக்கின்றாரா அல்லது தாதா வந்திருக்கின்றாரா? என்பது வெல்லத்தை அது இருக்கும் பையே அறியும். (பகவானுக்கே வெளிச்சம்). ஒவ்வொரு குழந்தையையும் பார்த்துக் கொண்டே இருப்பார். ஒவ்வொருவருக்கும் அமர்ந்து சக்தியை கொடுக்கின்றார். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சக்தியை கொடுக்கின்றார். நான் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் கரன்ட் கொடுப்பதாக பாபா கூறுவது போன்று தனக்குள் சக்தியை நிறைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை புத்தி வெளியில் சென்றால் பிறகு சக்தியைப் பெற முடியாது. புத்தி எங்கேயாவது அலைந்து கொண்டேயிருக்கும். அவர்களுக்கு என்ன கிடைக்கும்? நீங்கள் அன்பு கொடுத்தீர்கள் எனில், அன்பை அடைவீர்கள் என்று கூறுகின்றனர். புத்தி வெளியில் அலைந்து கொண்டே இருந்தால் பேட்டரி சார்ஜ் ஆகாது. தந்தை பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக வந்திருக்கின்றார். அவரது கடமை சேவை செய்வதாகும். குழந்தைகள் சேவையை ஏற்று செய்கின்றார்களா? இல்லையா? என்பது அந்த ஆத்மாவிற்குத் தெரியும். எந்த எண்ணத்துடன் அமர்கின்றனர்? இவ்வாறு அனைத்து விசயங்களையும் தந்தை புரிய வைக்கின்றார். நானும் பரம் ஆத்மாவாக இருக்கின்றேன். பேட்டரியாகிய என்னுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றீர்கள். நானும் சக்தி கொடுப்பேன். மிக அன்புடன் ஒவ்வொருவருக்கும் சக்தியை கொடுக்கின்றேன். நீங்கள் தந்தையை நினைவு செய்வதற்காக அமருகின்றீர்கள். நான் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சக்தியைக் கொடுக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். எதிரில் அமர்ந்து ஒளி கொடுக்கின்றேன். நீங்கள் இவ்வாறு செய்வது கிடையாது. பிடித்துக் கொள்ளக் கூடியவர்கள் பிடித்து விடுகின்றனர், அவர்களது பேட்டரி சார்ஜ் ஆகின்றது. பாபா நாளுக்கு நாள் யுக்திகளைக் கூறிக் கொண்டே இருக்கின்றார். மற்றபடி புரிந்து கொள்வது, புரிந்து கொள்ளாமல் இருப்பது - இது வரிசைப்படியான மாணவர்களின் மீது இருக்கின்றது. உங்களுக்கு பசுமையான செல்வம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஜீரணிக்கவும் வேண்டுமல்லவா! மிகப் பெரிய லாட்டரி ஆகும், ஜென்ம ஜென்மத்திற்கு, கல்ப கல்பத்திற்கான லாட்டரி ஆகும். இதில் முழுமையான கவனம் கொடுக்க வேண்டும். பாபாவிடமிருந்து நாம் கரன்ட் அடைந்து கொண்டிருக்கின்றோம். தந்தையும் நெற்றியின் நடுவில் அமர்ந்திருக்கின்றார், அருகில் அமர்ந்திருக்கின்றார். நீங்களும் தன்னை ஆத்மா என்று நினைத்து பாபாவை நினைவு செய்ய வேண்டுமே தவிர பிரம்மாவை அல்ல. நாம் அவரிடத்தில் யோகா வைத்து அமர்ந்திருக்கின்றோம். இவரைப் பார்த்தாலும் நாம் அவரை நினைவு செய்கின்றோம். ஆத்மாவிற்கான விசயமல்லவா! நல்லது.

 

இனிமையிலும் இனிய செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஆத்மாவைத் தூய்மையாக்குவதற்காக அதிகாலையில் தந்தையிடமிருந்து சக்தியை அடைய வேண்டும். புத்தியோகத்தை வெளியிலிருந்து நீக்கி ஒரு தந்தையிடத்தில் செலுத்த வேண்டும். தந்தையின் கரன்டைப் பெற (ஸ்ரீஹற்ஸ்ரீட்) வேண்டும்.

 

2) தங்களுக்குள் சகோதர, சகோதரத்துவத்திற்கான உண்மையான அன்புடன் இருக்க வேண்டும். அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஆத்மா என்ற சகோதரன் அழிவற்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றது. ஆகையால் நெற்றியின் நடுவில் மட்டுமே பார்த்து பேச வேண்டும்.

 

வரதானம்:

பாபாவின் சன்ஸ்காரங்களை தனது உண்மையான சன்ஸ்காரங்களாகக்கக் கூடிய சுபபாவனை மற்றும் நல்விருப்பமுள்ளவர் ஆகுக.

 

இதுவரை நிறைய குழந்தைகளுக்கு ஃபீலிங்கில் வரக்கூடிய, ஒதுங்கி விடக்கூடிய, பிறரைப் பற்றி சிந்திக்கக் கூடிய மற்றும் கேட்கக் கூடிய வித விதமான சன்ஸ்காரங்கள் இருக்கின்றன, இவைகளைத் தான் என்ன செய்வது? இது எனது சன்ஸ்காரம் என்று கூறுகின்றனர். இந்த எனது என்ற வார்த்தை தான் முயற்சியைத் தளர்வாக்குகிறது. இது இராவணனுடையதாகும், எனதல்ல. ஆனால் எவை பாபாவின் சன்ஸ்காரங்களோ, அவைகளே பிராமணர்களின் அசலான சன்ஸ்காரங்களாகும். அந்த சன்ஸ்காரங்கள் உலகிற்கு நன்மை செய்பவர், நற்சிந்தனையாளர் மற்றும் அனைவருக்காகவும் சுப பாவனை, நல் விருப்பம் உள்ளவர் என்பவைகளாகும்.

 

சுலோகன்:

யாரிடத்தில் சக்திகள் (திறமைகள்) இருக்கிறதோ, அவர்களே சர்வ சக்திகளின் பொக்கிஷங்களுக்கு அதிகாரி ஆகின்றனர்

 

ஓம்சாந்தி