14.02.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! சிவஜெயந்தி தான் கீதை ஜெயந்தி, பிறகு கீதையின் மூலம் தான் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது என்பதை பாரதவாசிகளுக்கு நிரூபித்து சொல்லுங்கள்

 

கேள்வி:

எந்தவொரு தர்மத்தையும் ஸ்தாபனை செய்வதற்கான ஆதாரம் என்ன? தர்மத்தை ஸ்தாபனை செய்பவர்கள் எந்தவொரு காரியத்தை செய்வதில்லை அதை பாபா செய்கின்றார்?

 

பதில்:

எந்தவொரு தர்மத்தையும் ஸ்தாபனை செய்வதற்கு தூய்மையின் பலம் வேண்டும். அனைத்து தர்மங்களும் தூய்மையின் பலத்தின் மூலம் ஸ்தாபனை ஆகியுள்ளது. ஆனால் எந்தவொரு தர்ம ஸ்தாபகரும் யாரையும் தூய்மையாக்குவதில்லை ஏனென்றால் எப்போது பிற தர்மம் ஸ்தாபனை ஆகிறதோ அப்போது மாயையின் இராஜ்யமாகிறது, அனைவரும் தூய்மையற்றவர்களாக ஆகத்தான் வேண்டும். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவது பாபாவினுடைய காரியமே ஆகும். அவர் தான் தூய்மையாவதற்கான ஸ்ரீமத் கொடுக்கின்றார்.

 

பாட்டு:

இந்த பாவம் நிறைந்த உலகத்திருந்து..............

 

ஓம் சாந்தி.

எதை பாவம் நிறைந்த உலகம் மற்றும் எதை புண்ணிய உலகம் அல்லது தூய்மையான உலகம் என்று சொல்லப்படுகிறது என்பதை இப்போது குழந்தைகள் புரிந்துக் கொண்டார்கள். உண்மையில் பாவம் நிறைந்த உலகம் இந்த பாரதமே ஆகும் மற்றும் பாரதம் தான் புண்ணிய உலகம் சொர்க்கமாக ஆகிறது. பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது, பாரதம் தான் நரகமாக ஆனது, ஏனென்றால் காம சிதையில் எரிந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே (சொர்க்கத்தில்) யாரும் காம சிதையில் எரிவதில்லை, அங்கு காம சிதையே இல்லை. சத்யுகத்தில் காம சிதை இருக்கிறது என்று சொல்ல முடியாது, இது புரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லவா. தூய்மையற்று- துக்கமுடையதாக இருந்த அதே பாரதம் தான் தூய்மையாக-சுகமுடையதாக இருந்ததா என்ற கேள்வி முதலில் எழுகிறது. ஆதி சனாதன ஹிந்து தர்மம் இருந்தது என்று சொல்கிறார்கள். ஆதி சனாதன என்று எதை சொல்லப்படுகிறது? ஆதி என்றால் என்ன மற்றும் சனாதன என்றால் என்ன? ஆதி என்றால் சத்யுகம். சத்யுகத்தில் யார் இருந்தது? லஷ்மி - நாராயணன் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கண்டிப்பாக அவர்களும் கூட யாருடைய குழந்தைகளாகவோ இருந்திருப்பார்கள் பிறகு சத்யுகத்தின் எஜமானர்களாக ஆகியுள்ளார்கள். சத்யுகத்தை ஸ்தாபனை செய்தவர் பரமபிதா பரமாத்மா ஆவார், அவருடைய குழந்தைகளாக இருந்தார்கள். ஆனால் இந்த சமயத்தில் அவருடைய குழந்தைகள் என்று புரிந்து கொள்வதில்லை. ஒருவேளை அவருடைய குழந்தைகள் என்று புரிந்து கொண்டிருந்தால் பாபாவை தெரிந்திருப்பார்கள், ஆனால் பாபாவை தெரிந்திருக்கவே இல்லை. ஹிந்து தர்மம் என்பது கீதையில் இல்லை. கீதையில் பாரதம் என்ற பெயர் போடப்பட்டுள்ளது, அவர்கள் ஹிந்து மகாசபை என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஸ்ரீமத் பகவத்கீதை என்பது அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாகும். கீதை ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது, சிவஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. சிவஜெயந்தி எப்போது நடந்தது என்பதும் தெரிய வேண்டும். பிறகு கிருஷ்ண ஜெயந்தியாகும். சிவஜெயந்திக்கு பிறகு கீதை ஜெயந்தி என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தெரிந்து கொண்டீர்கள். கீதை ஜெயந்திக்கு பிறகு கிருஷ்ண ஜெயந்தியாகும். கீதை ஜெயந்தியின் மூலம் தான் தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நடக்கிறது. கீதை ஜெயந்தியின் கூடவே மகாபாரதத்திற்கும் கூட தொடர்பு இருக்கிறது. பிறகு அதில் யுத்தத்தின் விசயம் வருகிறது. யுத்த மைதானத்தில் 3 சேனைகள் இருந்தது என்று காட்டுகிறார்கள். யாதவர்கள், கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களை காட்டுகிறார்கள். யாதவர்கள் ஏவுகணைகளை கொண்டுவருகிறார்கள். அங்கே சாராயம் குடிக்கிறார்கள் மற்றும் ஏவுகணைகளை உருவாக்குகிறார்கள். உண்மையில் இப்போது ஏவுகணைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அவர்களும் கூட தங்களுடைய குலத்தை வினாசம் செய்வதற்கு ஒருவர் மற்றவர்களை பயமுறுத்திக் கொண்டிருக் கிறார்கள். அனைவரும் கிறிஸ்துவர்கள். அவர்கள் தான் ஐரோப்பவாசிகள் யாதவர்கள் ஆவர். ஒன்று அவர்களுடைய சபையாகும். தங்களுக்குள் சண்டையிட்டு இறந்ததின் மூலம் அவர்களுடைய வினாசம் நடந்தது. அதில் முழு ஐரோப்பாவும் வந்து விட்டது. அதில் இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்துவர்கள் அனைவரும் வந்து விடுகிறார்கள். இங்கே கௌரவர்களும் பாண்டவர்களும் இருக்கிறார்கள். கௌரவர்களும் வினாசம் அடைந்தார்கள் வெற்றி பாண்டவர்களுக்கு கிடைத்தது. இப்போது கீதையின் பகவான் யார் என்ற கேள்வி வருகிறது, யார் சகஜ யோகம் மற்றும் சகஜ ஞானத்தை கற்றுக் கொடுத்து ராஜாவுக்கெல்லாம் ராஜாவாக மாற்றியது அல்லது தூய்மையான உலகத்தை ஸ்தாபனை செய்தது? ஸ்ரீகிருஷ்ணர் வந்தாரா என்ன? கௌரவர்கள் கலியுகத்தில் இருந்தார்கள். கௌரவர்களும் பாண்டவர்களும் இருக்கும் நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் எப்படி வர முடியும்? ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள், சத்யுக ஆரம்பத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு 16 கலைகளாகும். பிறகு திரேதாவில் ராமருக்கு 14 கலைகளாகும். கிருஷ்ணர் ராஜாவுக்கெல்லாம் ராஜா அல்லது இளவரசனுக்கெல்லாம் இளவரசன் ஆவார். விகார இளவரசர்கள் கூட ஸ்ரீகிருஷ்ணரை பூஜிக்கிறார்கள் ஏனென்றால் அவர் சத்யுகத்தின் 16 கலைகள் சம்பூரண இளவரசராக இருந்தார், நாம் விகாரிகளாக இருக்கிறோம். கண்டிப்பாக இளவரசர்கள் கூட இப்படி சொல்வார்கள் அல்லவா. இப்போது சிவஜெயந்தியும் இருக்கிறது, கோயில் கூட அவருடையது(சிவபாபாவிற்கு) பெரியதிலும் பெரியதாக உருவாக்கப்பட்டுள்ளது. அது நிராகார சிவனுடைய கோயிலாகும். அவரைத் தான் பரமபிதா பரமாத்மா என்று சொல்ல முடியும். பிரம்மா-விஷ்ணு-சங்கர் கூட தேவதைகளே ஆவர்.

 

சிவஜெயந்தி பாரதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. இப்போது பாருங்கள் சிவஜெயந்தி வரப்போகிறது. சிவன் தான் ஞானக்கடல், அதாவது உலகத்தை தூய்மையாக்கக் கூடியவர் பரமபிதா பரமாத்மா தான் என்பதை நிரூபித்து புரிய வைக்க வேண்டும். காந்தி கூட பாடினார், கிருஷ்ணருடைய பெயரை எடுப்பதில்லை. சிவஜெயந்தியிலிருந்து கீதை ஜெயந்தியா அல்லது கிருஷ்ண ஜெயந்தியிலிருந்து கீதை ஜெயந்தியா என்ற கேள்வி எழுகிறது? கிருஷ்ண ஜெயந்தி சத்யுகத்தில் நடக்கும் என்று சொல்லலாம். சிவனுடைய ஜெயந்தி எப்போது நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. சிவன் நிராகார பரமபிதா பரமாத்மா ஆவார், அவர் சங்கமயுகத்தில் உலகத்தை படைத்தார். சத்யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணருடைய இராஜ்யம் இருந்தது. எனவே கண்டிப்பாக முதலில் சிவஜெயந்தி இருக்கும். குழந்தைகள் பிராமணகுல பூஷணர்கள் யார் சேவையில் ஈடுபட்டு இருக்கிறார்களோ அவர்கள் பாரதவாசிகளுக்கு சிவஜெயந்தியிலிருந்து தான் கீதை ஜெயந்தி என்று எப்படி நிரூபித்து புரிய வைப்பது என்ற விசயத்தை புத்தியில் கொண்டு வர வேண்டும். பிறகு கீதையின் மூலம் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நடக்கிறது அல்லது ராஜாவுக்கெல்லாம் ராஜாவின் ஜெயந்தி நடக்கிறது. கிருஷ்ணர் தூய்மையான உலகத்தின் ராஜா ஆவார். அங்கே இராஜ்யம் இருக்கிறது. அங்கே ஸ்ரீகிருஷ்ணர் பிறவி எடுத்து கீதை ஒன்றும் சொல்ல வில்லை மேலும் சத்யுகத்தில் மகாபாரத சண்டை போன்றவை நடக்க முடியாது. அது கண்டிப்பாக சங்கமயுகத்தில் தான் நடந்திருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த விசயங்களைப் பற்றி நல்ல விதத்தில் புரிய வைக்க வேண்டும்.

 

பாண்டவ மற்றும் கௌரவ சபை புகழ்பெற்றதாகும். ஸ்ரீகிருஷ்ணரை பாண்டவபதியாக (தலைவர்) காட்டுகிறார்கள். அவர் சகஜ ஞானம் மற்றும் சகஜ இராஜயோகத்தை கற்றுக் கொடுத்தார் என்று புரிந்து கொள்கிறார்கள். உண்மையில் சண்டையினுடைய விசயம் எதுவும் இல்லை. பாண்டவர்களுக்கு வெற்றி ஏற்பட்டது, அவர்களுக்கு பரமபிதா பரமாத்மா சகஜ இராஜயோகத்தை கற்றுக் கொடுத்தார். அவர்கள் தான் 21 பிறவிகள் சூரியவம்சத்தவர்களாகவும் சந்திரவம்சத்தவர்களாகவும் ஆகி விட்டார்கள். எனவே முதலில் ஹிந்து மகாசபாகாரர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். லோக்சபா, இராஜ்யசபா என்று இன்னும் சபாக்கள் இருக்கின்றன. இந்த ஹிந்து சபை முக்கியமானதாகும். யாதவர், கௌரவர் மற்றும் பாண்டவர்கள்......... என்று 3 சேனைகள் பாடப்பட்டுள்ளது மேலும் இது சங்கமயுகத்தில் நடந்ததாகும். இப்போது சத்யுகத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணருடைய பிறப்பிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சங்கமயுகத்தில் தான் கீதை பாடப்பட்டது. சங்கமயுகத்தில் யாரை கொண்டு வருவது? கிருஷ்ணர் வர முடியாது. தூய்மையான உலகத்தை விட்டு விட்டு தூய்மையற்ற உலகத்திற்கு வர அவருக்கு என்ன வந்தது, மேலும் கிருஷ்ணர் இப்போது இல்லவே இல்லை. இப்போது அவர் 84வது பிறவியில் இருக்கின்றார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள், நிறைய பேர் எங்கும் ஸ்ரீகிருஷ்ணர் தான் இருக்கின்றார், சர்வவியாபியாக இருக்கின்றார் என்று புரிந்து கொள்கிறார்கள். இவையனைத்தும் கிருஷ்ணரே கிருஷ்ணர் தான் என்று கிருஷ்ணருடைய பக்தர்கள் சொல்வார்கள். கிருஷ்ணர் இந்த ரூபத்தை தரித்துள்ளார். ராதையின் பக்தர்களாக இருந்தால் எங்கும் ராதையே ராதை தான் என்று சொல்வார்கள். நாங்களும் ராதை, நீங்களும் ராதை என்று சொல்வார்கள். நிறைய (மனித) வழிகள் வந்து விட்டன, சிலர் ஈஸ்வரன் சர்வவியாபி என்று சொல்வார்கள், சிலர் கிருஷ்ணர் சர்வவியாபி என்று சொல்வார்கள், சிலர் ராதை சர்வவியாபி என்று சொல்வார்கள். இப்போது பாபா குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கின்றார். அந்த பாபா உலக சர்வசக்திவான் எனும்போது குழந்தைகளாகிய உங்களுக்கும் இவர்கள் அனைவருக்கும் எப்படி புரிய வைப்பது என்ற அதிகாரத்தை இப்போது கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஹிந்து மகாசபைகாரர்களுக்குப் புரிய வையுங்கள், அவர்கள் இந்த விசயத்தை புரிந்துக் கொள்ள முடியும். அவர்கள் தங்களை தர்ம சிந்தனை உடையவர்கள் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். அரசாங்கம் எந்த தர்மத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் தாங்களே குழம்பி இருக்கிறார்கள். சிவபரமாத்மா நிராகாரமானவர் அவர் தான் ஞானக்கடல் வேறு யாரையும் ஞானக்கடல் என்று சொல்ல முடியாது. அவர் எப்போது நேரடியாக வந்து ஞானத்தை கொடுக்கிறாரோ, அப்போது தான் இராஜ்யம் ஸ்தாபனை ஆகும். இராஜ்யம் ஸ்தாபனை ஆகி விடுகிறது, பிறகு எப்போது இராஜ்யத்தை இழந்துவிடுகிறோமோ அப்போது தான் நேரடியாக வருவார். எனவே நீங்கள் சிவ பரமாத்மா நிராகாரமானவர் ஞானக்கடல், சிவஜெயந்தியின் மூலம் தான் கீதை ஜெயந்தி என்பதை நிரூபிக்க வேண்டும். இதை வைத்து நாடகத்தை உருவாக்க வேண்டும், அதன் மூலம் மனிதர்களுடைய புத்தியிலிருந்து கிருஷ்ணருடைய விசயம் நீங்கி விட வேண்டும். நிராகார சிவபரமாத்மாவைத் தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் என்று சொல்லப்படுகிறது. சாஸ்திரங்கள் போன்ற எதுவெல்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறதோ, அவை அனைத்தும் மனிதர் களுடைய வழிப்படி, மனிதர்கள் உருவாக்கினார்கள். பாபாவினுடைய சாஸ்திரம் எதுவும் இல்லை. நான் நேரடியாக வந்து குழந்தைகளாகிய உங்களை எதுவுமற்ற நிலையிலிருந்து (ஏழையிலிருந்து) இளவரசர்களாக மாற்றுகின்றேன் பிறகு நான் சென்று விடுகின்றேன் என்று பாபா கூறுகின்றார். இந்த ஞானத்தை நான் தான் நேரடியாக சொல்ல முடியும். அந்த கீதை சொல்லக் கூடியவர்கள் கீதை சொல்லலாம் ஆனால் அங்கே பகவான் நேரடியாக இல்லை. கீதையின் பகவான் நேரடியாக இருந்தார் அவர் சொர்க்கத்தை உருவாக்கிவிட்டு சென்று விட்டார் என்று சொல்கிறார்கள். அந்த கீதையை மட்டுமே கேட்பதின் மூலம் எந்த மனிதனாவது சொர்க்கவாசியாக ஆக முடியுமா என்ன? இறக்கும் நேரத்தில் கூட மனிதர்களுக்கு கீதை சொல்கிறார்கள் வேறு எந்த சாஸ்திரத்தையும் சொல்வதில்லை. கீதையின் மூலம் சொர்க்கத்தின் ஸ்தாபனை நடந்தது என்று புரிந்து கொள்கிறார்கள், ஆகையினால் தான் கீதையை சொல்கிறார்கள். எனவே அந்த கீதை ஒன்றாக இருக்க வேண்டும் அல்லவா. மற்ற தர்மங்கள் அனைத்தும் பின்னால் வந்தன. நீங்கள் சொர்க்கவாசியாக ஆகலாம் என்று வேறு யாரும் சொல்ல முடியாது. பிறகு மனிதர்களுக்கு கங்கை நீரை கொடுக்கிறார்கள், யமுனை நீரை கொடுப்பதில்லை. கங்கை நீருக்குத் தான் மகத்துவம் இருக்கிறது. நிறைய வைணவ மக்கள் செல்கிறார்கள், குடத்தை நிரப்பிக் கொண்டு வருகிறார்கள். பிறகு அதிலிருந்து சொட்டு-சொட்டாக அனைத்து வியாதிகளும் போய்விடட்டும் என்று குடித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது ஞான அமிர்த தாரையாகும் இதன்மூலம் 21 பிறவிகளுக்கு துக்கம் அழிந்து விடுகிறது. உயிருள்ள ஞான கங்கைகளான உங்களிடம் குளிப்பதின் (கற்பதன்) மூலம் மனிதர்கள் சொர்க்கவாசிகளாக ஆகி விடுகிறார்கள். எனவே கண்டிப்பாக கடைசியில் ஞான கங்கைகள் உருவாகக்கூடும். அந்த தண்ணீர் நதிகள் இருக்கவே இருக்கின்றன. தண்ணீரை குடிப்பதினாலேயே யாராவது சொர்க்கவாசிகளாக ஆகி விட முடியுமா என்ன? இங்கே யாராவது கொஞ்சம் ஞானமே கேட்டாலும் சொர்க்கத்திற்கு உரிமையுடையவர்களாக ஆகி விடுகிறார்கள். இவர்கள் ஞானக்கடல் சிவபாபாவின் ஞான கங்கைகளாவர். ஞானக்கடல், கீதை ஞானத்தை வழங்கும் வள்ளல் ஒரு சிவனே ஆவார், கிருஷ்ணர் கிடையாது. ஞானம் அளிக்க சத்யுகத்தில் தூய்மையற்றவர்கள் யாருமே கிடையாது. இவையனைத்தையும் பகவான் அமர்ந்து புரிய வைக்கின்றார். ஹே அர்ஜூனா அல்லது ஹே சஞ்ஜய்.... பெயர் புகழ்பெற்றதாக ஆகி விட்டது. எழுதுவதில் திறமையானவர், பொருப்பானவராகி உள்ளார். ஆக இப்போது சிவஜெயந்தி வருகிறது எனும்போது அதைப்பற்றி பெரிய-பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும். சிவன் நிராகாரமானவர் ஆவார். அவரை ஞானக்கடல், ஆனந்தக் கடல் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணரை ஞானக்கடல், ஆனந்தக்கடல் என்று சொல்ல முடியாது. சிவ பரமாத்மா தான் ஞானத்தை கொடுக்கின்றார், இரக்கம் காட்டுகின்றார். ஞானம் தான் இரக்கமாகும். ஆசிரியர் இரக்கம் வைத்து கற்பிக்கின்றார் என்றால் வக்கீலாகவோ இஞ்சினியராகவோ ஆகி விடுகிறார்கள். சத்யுகத்தில் ஆனந்தத்திற்கு அவசியம் இல்லை. எனவே முதல்-முதலில் நிராகார ஞானக்கடல் சிவனுடைய ஜெயந்தியின் மூலம் கீதை ஜெயந்தியா அல்லது சத்யுக சாகார கிருஷ்ணருடைய ஜெயந்தியின் மூலம் கீதையினுடைய ஜெயந்தியா என்பதை நிரூபித்து சொல்ல வேண்டும். இதை குழந்தைகளாகிய நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

 

யாரெல்லாம் தூதுவர்கள் வருகிறார்களோ அவர்கள் தூய்மையாக்குவது இல்லை என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். துவாபர யுகத்திலிருந்து மாயையின் இராஜ்யம் இருப்பதினால் அனைவரும் தூய்மையற்றவர்களாக ஆகி விடுகிறார்கள். பிறகு துன்பமடையும்போது நாம் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். யார் தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்களோ, அவர்களே தான் பிறகு வளர்க்கிறார்கள். தூய்மையின் பலத்தின் மூலம் தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்கள் பிறகு தூய்மையற்றவர்களாக ஆகத் தான் வேண்டும். முக்கியமானது 4 தர்மங்களாகும், அதிலிருந்து தான் வளருகிறது. கிளைகள் வருகின்றன. சிவ ஜெயந்தி மற்றும் கீதை ஜெயந்தி நிரூபணமாவதின் மூலம் மற்ற அனைத்து சாஸ்திரங்களும் பறந்து விடும் ஏனென்றால் அவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவையாகும். உண்மையில் பாரதத்தின் சாஸ்திரம் ஒரு கீதையே ஆகும். மிகவும் அன்பான பாபா எவ்வளவு சகஜமாக்கி புரிய வைக்கின்றார். அவருடையது உயர்ந்ததிலும் உயர்ந்த வழியாகும். நிராகார ஞானக்கடலின் ஜெயந்தியின் மூலம் கீதை ஜெயந்தியா அல்லது சத்யுக சாகார கிருஷ்ண ஜெயந்தியின் மூலம் கீதை ஜெயந்தியா? என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்காக பெரிய மாநாட்டைக் கூட்ட வேண்டும். இந்த விசயம் நிரூபணம் ஆகி விட்டால் பிறகு பண்டிதர்கள் அனைவரும் தங்களிடம் வந்து இந்த லட்சியத்தை எடுத்துக் கொள்வார்கள். சிவஜெயந்தி அன்று ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா. ஹிந்துமகா சபைகாரர்களுக்கு புரியவையுங்கள், அவர்களுடையது பெரிய அமைப்பாகும். சத்யுகத்தில் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் இருக்கிறது. மற்றபடி சபை போன்ற எதுவும் இல்லை. சபைகள் சங்கமயுகத்தில் இருக்கின்றன. உண்மையில் ஆதி சனாதன சபை இந்த பிராமணர்களுடையது, பாண்டவர்களுடையது என்பதை முதல்-முதலில் நிரூபிக்க வேண்டும். பாண்டவர்கள் தான் வெற்றியடைந்தார்கள் பிறகு சொர்க்கவாசிகளானார்கள். இப்போது யாரும் ஆதி சனாதன தேவி-தேவதைகளின் சபை என்று சொல்ல முடியாது. தேவதைகளின் சபை என்றும் சொல்ல முடியாது, அது இராஜ்யமாகும். கல்பத்தின் சங்கமத்தில் இந்த சபைகள் இருந்தன. அதில் ஒன்று பாண்டவ சபை இருந்தது, அதை ஆதிசனாதன பிராமணர்களுடைய சபை என்று சொல்லலாம். இதை யாரும் தெரிந்திருக்கவில்லை. கிருஷ்ணருடைய பெயரால் பிராமணர்கள் கிடையாது. பிராமணர்களின் உயர்வு பிரம்மாவின் பெயரினால் இருக்கிறது. பிரம்மாவின் பெயரால் நீங்கள் பிராமண சபை என்று சொல்லலாம். இந்த விசயங்களை புரிய வைப்பவர்களும் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். இதில் ஞானத்தின் எல்லை வேண்டும். நிராகார சிவன் தான் கீதை ஞானத்தை வழங்கும் வள்ளல் தெய்வீக கண்ணை வழங்கும் வள்ளலாவார். இவையனைத்தையும் தாரணை செய்து பிறகு மாநாட்டிற்கு அழைக்க வேண்டும், யார் நம்மால் நிரூபித்து சொல்ல முடியும் என்று புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் தங்களுக்குள் சந்திக்க வேண்டும். யுத்த மைதானத்தில் மேஜர்கள், கமாண்டர்களின் குழு இருக்கிறது. இங்கே மகாரதிகளை கமாண்டர்கள் என்று சொல்லப்படுகிறது. பாபா படைப்பவர், இயக்குபவராக இருக்கின்றார், சொர்க்கத்தை படைக்கின்றார் பிறகு வழி சொல்கின்றார் - மகாசபையை உருவாக்குங்கள் பிறகு இந்த விசயத்தை எடுங்கள். கீதையின் பகவான் நிரூபிக்கப்படுவதின் மூலம், அவரோடு யோகம் ஈடுபடுத்த வேண்டும் என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள். நான் வழிகாட்டியாக ஆகி வந்துள்ளேன் என்று பாபா கூறுகின்றார், நீங்கள் பறப்பதற்கு தகுதியானவர்களாக ஆகுங்கள். மாயை சிறகுகளை துண்டித்து விட்டது. யோகம் ஈடுபடுத்துவதின் மூலம் உங்களுடைய ஆத்மா தூய்மையாகிவிடும் மற்றும் பறக்கும். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஞான அமிர்த தாரையின் (மழை) முலம் அனைவரையும் நோயற்றவர்களாக அல்லது சொர்க்கவாசிகளாக மாற்றும் சேவையை செய்ய வேண்டும். மனிதர்களை தேவதைகளாக்க வேண்டும். பாபாவிற்கு சமமாக மாஸ்டர் இரக்கமனமுடையவராக ஆக வேண்டும்.

 

2) ஞானத்தின் எல்லையின் மூலம் புத்திவானாக ஆகி சிவஜெயந்தியை பற்றி சிவஜெயந்தி தான் கீதையின் ஜெயந்தி, கீதை ஞானத்தின் மூலம் தான் ஸ்ரீகிருஷ்ணருடைய பிறவி நடக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.

 

வரதானம்:

தந்தையின் அன்பை தாரணை செய்து அனைத்து ஈர்ப்புகளிலிருந்தும் விடுபட்டு இருக்கக் கூடிய உண்மையான அன்பானவர் ஆகுக.

 

தந்தை அனைவரையும் ஒரே மாதிரியாகத்தான் அன்பு செலுத்துகிறார், ஆனால் குழந்தைகள் தம்முடைய சக்திக்குத் தகுந்தாற்போல அன்பை தாரணை செய்கின்றனர். யார் அமிர்தவேளையின் ஆதி சமயத்தின் போது தந்தையின் அன்பை தாரணை செய்து கொள்கின்றனரோ, பரமாத்மாவின் அன்பு உள்ளத்தில் நிறைந்திருக்கும் காரணத்தினால், வேறு எந்த அன்பும் அவர்களை கவர்ந்து ஈர்ப்பதில்லை. உள்ளத்தில் முழுமையான அன்பு தாரணை செய்யவில்லை என்றால் உள்ளத்தில் காலி இடம் இருப்பதன் காரணத்தால் மாயை வித விதமான ரூபத்தில் பல விதமான அன்பில் கவர்ந்து ஈர்த்துக் கொள்கிறது, ஆகையால் உண்மையான அன்பானவர் ஆகி பரமாத்மாவின் அன்பினால் நிறைந்தவராகுங்கள்.

 

சுலோகன்:

தேகம், தேகத்தின் பழைய உலகம் மற்றும் சம்மந்தத்திற்கும் மேலே பறக்கக் கூடியவர்கள்தான் இந்திரபிரஸ்த நிவாசிகள் ஆவர்.

 

ஓம்சாந்தி