05.05.2019                           காலை முரளி                ஓம் சாந்தி                        ''அவ்யக்த பாப்தாதா''

ரிவைஸ்           26.11.1984           மதுபன்


 

'' உண்மையான சகயோகி தான் உண்மையான யோகி ''

 

இன்று குழந்தைகளின் சந்திக்கும் அன்பை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பலம் ஒரே ஒருவர் மீதான நம்பிக்கை என்ற இதே குடை நிழலின் கீழ் சந்திப்பதற்கான ஊக்கம் உற்சாகத்தை சிறிதளவு குழப்பம் கூட ஆர்வத்தை அசைக்க முடியவில்லை. தடை, களைப்பு அனைத்தும் மாறி அன்பின் சகஜமான பாதை என்று அனுபவம் செய்து வந்து சேர்ந்து விட்டீர்கள். இதைத் தான் தைரியம் உள்ள குழந்தைகளுக்கு தந்தையின் உதவி இருக்கிறது என்று கூறுவது. எங்கு தைரியம் இருக்கிறதோ அங்கு உற்சாகமும் இருக்கும். தைரியம் இல்லை என்றால் உற்சாகமும் இருப்பதில்லை. அந்த மாதிரி எப்பொழுதும் தைரியம் உற்சாகத்தில் இருக்கும் குழந்தைகள் ஒரே சீரான நிலை மூலமாக நம்பர் ஒன்-னை பெற்று விடுகிறார்கள். எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையாக இருந்தாலும், தைரியம் மற்றும் உற்சாகத்தின் இறக்கைகள் மூலமாக ஒரு நொடியில் பறக்கும் கலையின் உயர்ந்த நிலை மூலம் ஒவ்வொரு பெரிய மற்றும் கடுமையான சூழ்நிலையும் சிறியதாக மற்றும் சகஜமாக அனுபவம் ஆகும். ஏனென்றால் பறக்கும் கலையின் எதிரில் அனைத்தும் சின்னஞ்சிறு விளையாட்டு பொம்மைகள் என்று அனுபவம் ஆகும். எவ்வளவு தான் பயங்கரமான விஷயமாக இருந்தாலும் பயங்கரமானதிற்குப் பதிலாக இயல்பானதாக அனுபவம் ஆகும். வேதனையளிக்கும் விஷயங்கள் திடத்தன்மையை கொடுப்பவை என்று அனுபவம் ஆகும். எவ்வளவு தான் துக்கம் நிறைந்த காட்சிகள் வந்தாலும், குஷியின் முரசு துக்கத்தின் காட்சிகளின் பிரபாவத்தை ஏற்படுத்தாது, மேலும் இன்னும் அமைதி மற்றும் சக்தி மூலம் மற்றவர்களின் துக்கம், வேதனையின் அக்னியை குளுமையான நீருக்குச் சமமாக அனைவருக்கும் சகயோகியாக ஆவார்கள். அந்த மாதிரியான நேரத்தில் துடித்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு சகயோகத்தின் அவசியம் இருக்கும். இதே சகயோகம் மூலம் தான் சிரேஷ்ட யோகாவை அனுபவம் செய்வார்கள். அனைவரும் உங்களுடைய இந்த உண்மையான சகயோகத்தைத் தான் உண்மையான யோகி என்று ஏற்றுக் கொள்வார்கள். மேலும் அந்த மாதிரியே இறுதியில் ஐயோ ஐயோ! என்று அலறும் நேரத்தில் 'உண்மையான சகயோகியாக இருப்பவரிலிருந்து உண்மையான யோகி' என்ற இந்த வெளிப்படையான பலனை அடைவதன் மூலமாகத் தான் வெற்றி முழக்கம் ஏற்படும். உங்களுடைய ஒரு துளிக்கான தாகத்தில் இருக்கிறோம் என்பது இந்த நேரத்தின் மகிமை தான் . . . இது அமைதியின் சக்தியின், ஒரு நொடியின் அனுபவம் என்ற துளி துடித்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு திருப்தியின் அனுபவம் செய்விக்கும். அந்த மாதிரி நேரத்தில் ஒரு நொடியின் பிராப்தி அவர்களுக்கு, - ஒரு நொடியில் அனேக ஜென்மங்களின் பிராப்தி மற்றும் திருப்தியின் அனுபவம் செய்விக்கும். ஆனால் அந்த ஒரு நொடியின் சக்திசாலி நிலையின் நீண்ட காலத்து பயிற்சி உள்ள ஆத்மாவே தாகத்தில் இருப்பவரின் தாகத்தைத் தீர்க்க முடியும். அந்த மாதிரி துக்கம், வேதனை நிறைந்த பயங்கரமான வாயுமண்டலத்தின் மத்தியில் ஒரு நொடியில் மாஸ்டர் உருவாக்குபவர், மாஸ்டர் வரமளிக்கும் வள்ளல், மாஸ்டர் கடல் ஆகி அந்த மாதிரி சக்திசாலி நிலையின் அனுபவத்தை செய்விக்க முடியுமா? அந்த மாதிரி நேரத்தில் இது என்ன நடந்து கொண்டிருக்கிறது (எதிர்மறை விசயங்கள்) என்று அதைப் பார்ப்பதிலும் மற்றும் கேட்பதிலும் ஈடுபட்டு விட்டீர்கள் என்றாலும் கூட சகயோகி ஆக முடியாது. எனவே எப்பொழுதும் தன்னை அற்ப காலத்து இச்சை என்றால் என்னவென்று தெரியாத சக்திசாலி நிலையில் நிலைத்திருப்பதற்கான பயிற்சியினை இப்பொழுதிலிருந்தே செய்யுங்கள். ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு மூச்சு மூலம் இடைவிடாத சேவாதாரி, இடைவிடாத சகயோகியாக இருப்பவரிலிருந்து யோகியாகுங்கள். எப்படி உடைந்த சிலைக்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. பூஜைக்குரியதாக ஆவதற்கான தகுதி கிடைக்க முடியாது. அவ்வாறு துண்டுப்பட்ட  சேவாதாரி, துண்டுபட்ட யோகி அந்த மாதிரியான நேரத்தில் உரிமையை (தகுதி) அடையச் செய்யும் அதிகாரியாக ஆக முடியாது. எனவே அந்த மாதிரி சக்திசாலியான சேவை செய்வதற்கான நேரம் அருகில் வந்து கொண்டிருக்கிறது. நேரம் மணி அடித்துக் கொண்டிருக்கிறது. எப்படி பக்தர்கள் தன்னுடைய இஷ்ட தேவதை மற்றும் தேவிகளை மணி அடித்து எழுப்புகிறார்கள், தூங்க வைக்கிறார்கள் மற்றும் பிரசாதம் படைக்கிறார்கள். அதேபோன்று இப்பொழுது நேரம் மணி அடித்து இஷ்ட தேவதை மற்றும் தேவிகளை உஷார் படுத்துகிறது. விழித்தெழுந்தவர் களாக ஆகியிருக்கிறீர்கள். ஆனால் தூய்மையான இல்லறத்தில் அதிகம் பிஸியாகி விட்டீர்கள். தாகத்தில் இருக்கும் ஆத்மாக்களின் தாகத்தை தணிப்பதற்கு, ஒரு நொடியில் அனேக பிறவிகளின் பிராப்தியை செய்விக்கும் சக்திசாலி நிலையின் பயிற்சிக்காக தயார் ஆக்கும் நேரத்தின் மணி அடித்துக் கொண்டிருக்கிறது. பிரத்யக்ஷத்தின் திரைச்சீலையை அகற்றுவதற்கான நேரம் சம்பன்ன இஷ்ட ஆத்மாக்கள் உங்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. புரிந்ததா? நேரத்தின் மணியோசையையோ நீங்கள் அனைவரும் கேட்டீர்கள் இல்லையா. நல்லது.

 

அந்த மாதிரி ஒவ்வொரு சூழ்நிலையையும் பறக்கும் கலை மூலமாக எளிதாகக் கடந்து செல்லக்கூடிய நீண்ட காலத்தின் ஒரு நொடியின் பிராப்தி மூலமாக திருப்தி படுத்தக்கூடிய இடைவிடாத சேவாதாரி, இடைவிடாத யோகி, எப்பொழுதும் மாஸ்டர் வள்ளல், வரமளிக்கும் வள்ளல் சொரூபத்தில் இருக்கும், எப்பொழுதும் ஆசை என்றால் என்னவென்று அறியாத நிலை மூலம் அனைவரது ஆசைகளை நிறைவேற்றக்கூடிய மாஸ்டர் சர்வ சக்திவான் சக்திசாகுழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

(கான்பூரின் செய்தியை கங்கை சகோதரி பாப்தாதாவிடம் கூறினார்). நீங்கள் எப்பொழுதும் ஆடாத அசையாத ஆத்மா. ஒவ்வொரு சூழ்நிலையிலும் பாப்தாதாவின் பாதுகாப்பு குடைநிழலின் அனுபவம் நிறைந்தவர் தான் இல்லையா? பாப்தாதா குழந்தைகளை எப்பொழுதும் பாதுகாப்பாக வைக்கிறார். எப்பொழுதுமே பாதுகாப்பிற்கான சாதனம் தந்தை மூலமாக கிடைத்திருக்கிறது. எனவே எப்பொழுதுமே தந்தையின் அன்பின் கரம் மற்றும் துணை இருக்கிறது. 'ஒன்றும் புதிதல்ல' என்ற இந்த பயிற்சி உடையவர் ஆகிவிட்டீர்கள் தான் இல்லையா? என்ன நடந்து முடிந்ததோ அது ஒன்றும் புதிதல்ல. என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதுவும் புதிதல்ல! இயல்பாகவே புத்தியில் டச்சிங் (உணர்த்துதல்) ஆகிக் கொண்டே இருக்கிறது. ஒத்திகை இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரியான நேரத்தில் பாதுகாப்பிற்கான, சேவைக்கான என்ன சாதனம் இருக்க வேண்டும்? என்ன சொரூபம் இருக்க வேண்டும்? இதனுடைய ஒத்திகை நடக்கிறது. இறுதியில் ஐயோ, ஐயோ என்ற அலறலின் நடுவே வெற்றி முழக்கம் ஏற்படும். அளவற்றதற்கு பிறகு முடிவு. மேலும் புது யுகத்தின் ஆரம்பம் ஆகிவிடும். அந்த மாதிரியான நேரத்தில் விரும்பாவிட்டாலும் அனைவரின் மனதில் இந்த பிரத்யக்ஷதாவின் (வெளிப்பாடு) முரசு கொட்டும். காட்சிகள் மிக மென்மையானதாக இருக்கும். ஆனால் பிரத்யக்ஷதாவின் முரசு தான் ஒலிக்கும். அப்படி ஒத்திகையை கடந்து வந்து விட்டீர்கள். எல்லைக்கப்பாற்பட்ட கவலையில்லா இராஜா ஆகி தனது பங்கை செய்தீர்கள். மிக நன்றாக செய்தீர்கள். இங்கு வந்து சேர்ந்து விட்டீர்கள், இது தான் அன்பின் சொரூபம். நல்லதை யோசிப்பதற்குப் பதிலாக, யோசிக்காமல் இருப்பதும் இருக்கிறது. என்ன நடந்ததோ அதுவும் ஆஹா, ஆஹா. இதில் கூட அனேகர்களுக்கு ஏதாவது நன்மை ஏற்படும். எனவே எரிந்து போவதிலும் நன்மை இருக்கிறது என்றால் தப்பித்துக் கொள்வதிலும் நன்மை இருக்கிறது. ஐயோ என்று கூற மாட்டீர்கள். அய்யோ எரிந்து விட்டது என்று அப்படியும் வேண்டாம். இதிலும் நன்மை இருக்கிறது. எப்படி தப்பித்துக் கொள்ளும் நேரத்தில் ஆஹா, ஆஹா என்று பாராட்டுதல் செய்கிறார்கள். ஆஹா தப்பித்துக் கொண்டார், அதே போலவே எரியும் நேரத்திலும் ஆஹா! ஆஹா! என்றிருக்க வேண்டும். இதைத் தான் ஒரே சீரான நிலை என்று கூறுவது. காப்பாற்றுவது நம்முடைய கடமை, ஆனால் எரியக்கூடிய பொருள் எரியத் தான் செய்யும். இதிலேயும் பல கணக்கு வழக்குகள் இருக்கலாம். நீங்களோ கவலையில்லா இராஜா ஒன்றை இழந்தோம், லட்சத்தை அடைந்தோம் என்ற இது தான் பிராமணர்களின் சுலோகன். இழக்கவில்லை ஆனால் அடைந்திருக்கிறீர்கள். எனவே கவலையில்லாதவர். மேலும் நல்லது ஏதோ கிடைக்கப்போகிறது, எனவே எரிவதும் நாடகம். காப்பாற்றப்படுவதும் நாடகம். இரண்டுமே நாடகம் தான். இவர் எந்த அளவு கவலையற்ற இராஜாவாக இருக்கிறார் என்ற இதைத் தானே பார்ப்போம். எரிந்து கொண்டிருக்கிறது, ஆனால் இவர் இராஜா ஏனென்றால் பாதுகாப்பு குடைநிழலின் கீழ் இருக்கிறார். அவர்கள் என்னவாகும், எப்படி ஆகும் என்ற கவலையில் வந்து விடுவார்கள். எப்படி சாப்பிடுவோம், எப்படி வாழ்க்கையை நடத்துவோம் என்ற கவலை இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு கவலையே இல்லை. நல்லது.

 

இப்பொழுது ஏற்பாடுகளையோ செய்யத் தான் வேண்டும் இல்லையா? செல்வேன் என்று இதை இப்படி நினைக்காதீர்கள். ஆனால் அனைவரையும் அழைத்துச் செல்வேன் என்று நினையுங்கள். அனைவருக்கும் சாட்சாத்காரம் செய்வித்து திருப்தி படுத்தி பிரத்யக்ஷதாவின் முரசை அடித்துக் கொண்டே பிறகு செல்வோம். முதலில் ஏன் செல்ல வேண்டும். நீங்களோ தந்தையுடன் சேர்ந்தே செல்வீர்கள். பிரத்யக்ஷதாவின் அதிசயமான காட்சிகளை அனுபவம் செய்து செல்வீர்கள் இல்லையா? இவர்களும் ஏன் இறந்து விட வேண்டும், இந்த மனமுவந்த பக்தி, மனமுவந்த பூஜை அன்பின் புஷ்பங்கள் என்ற இந்த இறுதி காட்சிகள் மிகவும் அதிசயமாக இருந்தது. அட்வான்ஸ் பார்ட்டியில் யாருக்கு பங்கு இருக்கிறது என்பது வேறு விஷயம். மற்றபடி இந்தக் காட்சியை பார்ப்பதோ மிகவும் அவசியம். யார் இறுதியில் செய்தார்களோ அவர்கள் அனைத்தையும் செய்தார்கள். எனவே தந்தை இறுதியில் வருகிறார் என்றால் அனைத்தையும் செய்து விட்டார் இல்லையா? எனவே தந்தையுடன் சேர்ந்து இந்த அதிசய காட்சிகளைப் பார்த்துக் கொண்டே ஏன் உடன் செல்லக்கூடாது. இதுவும் சிலருடைய பங்காக இருக்கிறது. எனவே செல்ல வேண்டும் என்ற எண்ணம் வைக்காதீர்கள். சென்று விட்டார்கள் என்றாலும் நல்லது. இருந்து விட்டார்கள் என்பதும் மிகவும் நல்லது. தனியாக சென்றீர்கள் என்றால் அட்வான்ஸ் பார்ட்டியில் சேவை செய்ய வேண்டும் என்பதிருக்கும். எனவே செல்ல வேண்டும் என்ற இதை மட்டும் யோசிக்காதீர்கள். அனைவரையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற இதையும் யோசியுங்கள். நல்லது. இதுவும் ஒரு நல்ல அனுபவத்தை அதிகரித்தது. என்ன நடக்கிறதோ அதன் மூலம் அனுபவத்தின் அளவு அதிகரித்து விடுகிறது. எப்படி மற்றவர்களுக்கு படிப்பில் பட்டம் கிடைக்கிறது. அதே போல் நீங்கள் அனுபவம் செய்தீர்கள் என்றால் டிகிரி அதாவது பட்டம் கிடைத்தது.

 

பார்ட்டிகளுடன் சந்திப்பு -

அனைவரும் தன்னை சுயராஜ்ஜிய அதிகாரி என்று நினைக்கிறீர்களா? இப்பொழுது சங்கமயுகத்தில் சுயராஜ்ஜியம், உலகின் இராஜ்ஜியம் எதிர்காலத்திற்கான விஷயம். சுயராஜ்ஜிய அதிகாரி தான் உலக இராஜ்ஜிய அதிகாரி ஆகிறார். எப்பொழுதும் தன்னை சுயராஜ்ஜிய அதிகாரி என்று புரிந்து இந்த கர்ம இந்திரியங்களை வேலைக்காரர்கள் என்று புரிந்து தன்னுடைய அதிகாரத்தினால் நடத்துவிக்கிறீர்களா அல்லது சில நேரம் ஏதாவது கர்ம இந்திரியம் (உங்களை மீறி) இராஜா ஆகிவிடுகிறதா? சுயம் நீங்களே இராஜாவா அல்லது எப்பொழுதாவது, ஏதாவது ஒரு கர்ம இந்திரியம் இராஜா ஆகிவிடுகிறதா? எப்பொழுதாவது ஏதாவது ஒரு கர்ம இந்திரியம் ஏமாற்றத்தையோ கொடுப்பதில்லையே? ஒருவேளை எதன் மூலமாவது ஏமாற்றம் அடைந்தீர்கள் என்றால் துக்கத்தை அடைந்தீர்கள். ஏமாற்றம் துக்கத்தை பிராப்தி செய்விக்கிறது. ஏமாற்றம் இல்லை என்றால், துக்கம் இல்லை. அப்படி நீங்கள் சுயராஜ்யத்தின் குஷியில், போதையில், சக்தியில் இருப்பவர்கள். சுயராஜ்ஜியத்தின் போதை பறக்கும் கலையில் எடுத்துச் செல்லக்கூடிய போதை எல்லைக்குட்பட்ட போதை நஷ்டத்தை பிராப்தி செய்விக்கிறது. இந்த எல்லைக்கப்பாற்பட்ட போதை ஆன்மீக போதை சுகத்தின் பிராப்தி செய்விப்பது. அப்படி யதார்த்த இராஜ்யம் என்றால் இராஜாவின் இராஜ்யம், பிரஜைகளின் இராஜ்யம் குழப்பங்களை ஏற்படுத்தும் இராஜ்யம். தொடக்கத்திலிருந்து இராஜாக்களின் இராஜ்யம் தான் இருந்து வந்திருக்கிறது. இப்பொழுது கடைசி பிறவியில் பிரஜைகளின் இராஜ்யம் வந்தது.இப்பொழுது நீங்கள் அனைவரும் இராஜ்ய அதிகாரியாக ஆகி விட்டீர்கள். அனேக பிறவிகள் யாசிப்பவர்களாக இருந்தீர்கள், இப்பொழுது யாசிப்பவரிலிருந்து அதிகாரி ஆகிவிட்டீர்கள். குழந்தைகளே குஷியாக இருங்கள், சந்தோஷமாக இருங்கள் என்று பாப்தாதா எப்பொழுதும் கூறுகிறார். எந்த அளவு தன்னை சிரேஷ்ட ஆத்மா என்று புரிந்து சிரேஷ்ட காரியம், சிரேஷ்ட பேச்சு, சிரேஷ்ட எண்ணம் வைப்பீர்களோ அந்த அளவு இந்த சிரேஷ்ட எண்ணத்தின் மூலம் சிரேஷ்ட உலகத்தின் அதிகாரி ஆகிவிடுவீர்கள். இந்த சுயராஜ்யம் உங்களுடைய பிறப்புரிமை, இது தான் உங்களை பல பிறவிகளுக்கு அதிகாரியாக ஆக்கக்கூடியது. நல்லது.

 

அவ்யக்த பாப்தாதாவின் பிரேரணை அளிக்கும் விலைமதிக்கமுடியாத மகாவாக்கியம்

1) அனைவருக்கும் ஒரு விஷயத்தின் காத்திருத்தல் இருக்கிறது, அது எந்த விஷயம் தொடக்கத்தில் நான் யார் என்ற கேள்வி இருந்தது. அது தான் இறுதி வரையிலும் இருக்கிறது. அனைவருக்கும் நான் எதிர்காலத்தில் என்னவாக ஆவேன் அல்லது மாலையில் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்ற காத்திருத்தல் இருக்கிறது. இப்பொழுது இந்த காத்திருத்தல் எப்பொழுது முடிவடையும். நீங்கள் அனைவரும் ஒவ்வொரு வருடனும் 8-ல் யார் வருவார்கள், 100-ல் யார் வருவார்கள், 16000-ற்கான கேள்வியே இல்லை என்று ஆன்மீக உரையாடல் செய்கிறீர்கள். கடைசியில் 8-ல் மற்றும் 100-ல் யார் இருப்பார்கள்? வெளிநாட்டினர், நான் எந்த மாலையில் இருப்பேன் என்று யோசிக்கிறார்கள். மேலும் தொடக்கத்தில் வந்தவர்கள், கடைசியில் வந்தவர்கள் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். என்னுடைய தகுதி எங்கிருக்கிறது என்று தெரியவில்லை அல்லது கடைசியில் வந்தவர்களுக்காகத் தான் இருக்கிறதா? இருந்தும் இந்த கணக்குத் தான் என்ன? புத்தகமோ தந்தையிடம் இருக்கிறது இல்லையா? இன்னும் நிர்ணயம் செய்யவில்லை, நீங்களும் கூட ஓவியப்போட்டியில் எந்தப் படத்தை தேர்ந்தெடுத்தீர்கள். முதலில் கொஞ்சம் தனியாக பிரித்து எடுத்தீர்கள். அதிலிருந்து ஒன்று, இரண்டு, மூன்று என்ற நம்பர் கொடுத்தீர்கள். முதலில் தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது, பிறகு வரிசைக்கிரமமாக நிர்ணயக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. அப்படி இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டீர்கள். ஆனால் நிச்சயிக்கப்படவில்லை. பிற்காலத்தில் வருபவர்களுக்கு என்ன ஆகும்? எப்பொழுதுமே சில இடங்கள் கடைசி வரையிலும் காலியாகத்தான் இருக்கும். முன்பதிவு செய்த போதிலும் கடைசி வரை கொஞ்சம் கோட்டா இடங்களை வைத்திருப்பார்கள். ஆனால் அது கோடியில் சிலர், அந்த சிலரிலும் சிலரானவர்களாகத்தான் இருப்பார்கள்.

 

நல்லது. நீங்கள் அனைவரும் எந்த மாலையில் இருக்கிறீர்கள்? தன் மீது நம்பிக்கை வையுங்கள். ஏதாவது அந்த மாதிரி அதிசயமான விஷயம் நடக்கும் அதன் ஆதாரத்தில் உங்கள் அனைவரின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறிவிடும். அஷ்ட இரத்தினங்களின் விசேஷம், ஒரு விசேஷமான விஷயத்தின் மேல் இருக்கிறது. அஷ்ட இரத்தினங்கள் எப்படி நினைவுச் சின்னமாக இருக்கிறதோ, அது நடைமுறையில் அந்த அஷ்ட சக்திகள் இருக்கும். அந்த ஒவ்வொரு சக்தியும் அவர்களுடைய வாழ்க்கையில் நடைமுறையில் தென்படும். ஒருவேளை நடைமுறை வாழ்க்கையில் ஒரு சக்தியாவது குறைவாகத் தென்படுகிறது என்றால், எப்படி ஒருவேளை சிலையின் ஒரு கை உடைந்து விட்டது என்றால் பூஜைக்குரியதாக ஆவதில்லை. அதே பிரகாரம் ஒருவேளை ஒரு சக்தியின் குறை தென்படுகிறது என்றால் அஷ்ட தேவதைகளின் பட்டியலில் இதுவரை இவர் நிச்சயிக்கப்படவில்லை என்று கூறுவோம். இன்னொரு விஷயம் அஷ்ட தேவதைகளின் பக்தர்களைப் பொருத்தளவில் விசேஷ இஷ்ட தேவதையாக நம்புகிறார்கள். இஷ்ட தேவதை என்றால் மகான் பூஜைக்குரியவர். இஷ்டமானவர் மூலமாக ஒவ்வொரு பக்தனுக்கும் அனைத்து விதமான விதி மற்றும் சித்தி (வெற்றி) பிராப்தி ஏற்படுகிறது. இங்கேயும் யார் அஷ்ட இரத்தினமான இருப்பாரோ அவர் அனைத்து பிராமண குடும்பத்தின் எதிரில் இப்பொழுது கூட இஷ்டமானவராக அதாவது ஒவ்வொரு எண்ணம் மற்றும் நடத்தை மூலம் விதி மற்றும் சித்திக்கான மார்க்கதர்ஷனம் (வழிகாட்டல்) செய்விப்பவர்கள். அனைவரின் எதிரில் இப்பொழுது கூட அந்த மாதிரியே மகான் மூர்த்தியாக ஏற்றுக் கொள்ளப்படுவார். அந்த மாதிரி அஷ்ட சக்திகளும் இருக்கும், மேலும் குடும்பத்தின் எதிரில் இஷ்டமானவர் அதாவது சிரேஷ்ட ஆத்மா, மகான் ஆத்மா, வரதானி ஆத்மாவின் ரூபத்தில் இருப்பார்கள். இது தான் அஷ்ட இரத்தினங்களின் விசேஷம். நல்லது.

 

2) உலகத்தின் வைப்ரேஷனிலிருந்து மற்றும் மாயாவிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான சாதனம் -எப்பொழுதும் 'ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை' என்று யார் இதே ஈடுபாட்டில் மூழ்கியிருக்கிறாரோ அவர் மாயாவின் அனைத்து விதமான தாக்குதலிலிருந்து பாதுகாப்பாக இருப்பார். எப்படி யுத்த நேரத்தில் குண்டுகள் போடும் போது பூமிக்கு அடியில் சென்று விடுகிறார்கள் என்றால் அந்த குண்டின் பாதிப்பு அவர்களுக்கு இருக்காது. அது போலவே எப்பொழுது ஒரே ஈடுபாட்டில் மூழ்கியிருக்கிறார்களோ அப்போது உலகத்தின் வைப்ரேஷனிலிருந்து, (அதிர்வுகள்) மாயாவிடமிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள். அவரைத் தாக்குவதற்கு மாயாவிற்கு தைரியமே இருக்காது. முழு ஈடுபாட்டில் மூழ்கியிருங்கள். இது தான் பாதுகாப்பிற்கான சாதனம்.

 

3) தந்தையின் நெருக்கமான இரத்தினங்களின் அடையாளம் - தந்தையின் நெருக்கமாக இருப்பவர்கள், சத்தியமான தந்தையின் நெருக்கத்தின் வர்ணம் பூசப்பட்டவர்களாக இருப்பார்கள். சத்தியமான தந்தையின் நெருக்கத்தின் வர்ணம் ஆன்மீகத்தன்மை. அப்படி நெருக்கமான இரத்தினங்கள் எப்பொழுதும் ஆன்மீக நிலையில் நிலைத்திருப்பார்கள். உடலில் இருந்து கொண்டும் விலகியிருப்பவராக ஆன்மீகத் தன்மையில் நிலைத்திருப்பார்கள். உடலைப் பார்த்துக் கொண்டும் அதைப் பார்க்காமல் மேலும் ஆத்மா எது கண்ணால் பார்க்க முடியாத ஒன்றோ அது வெளிப்படையாகத் தென்பட வேண்டும். இது தான் அதிசயம். ஆன்மீக மகிழ்ச்சியில் இருப்பவர்கள் தான் தந்தையை துணைவனாக ஆக்க முடியும். ஏனென்றால் தந்தை ஆத்மாவாக இருக்கிறார்.

 

4) பழைய உலகத்தின் அனைத்து கவர்ச்சிகளிலிலிருந்தும் விலகுவதற்கான சகஜ யுக்தி - நான் அழியாத பொக்கிஷத்தின் எஜமானன் என்ற போதையில் எப்பொழுதும் இருங்கள். தந்தையின் பொக்கிஷமாக ஞானம், சுகம், சாந்தி, ஆனந்தம் என்று என்னென்ன இருக்கிறதோ அவை அனைத்தும் என்னுடையவை. குழந்தை, தந்தையின் சொத்திற்கு இயல்பாகவே உரிமையுள்ளவர் ஆகிவிடுவார். அதிகாரி ஆத்மாவிற்கு தன்னுடைய அதிகாரத்தின் போதை இருக்கும், போதையில் அனைத்தும் மறந்து விடும் இல்லையா? வேறு எந்த நினைவும் இருக்காது. நான் மற்றும் தந்தை என்ற ஒரே நினைவு மட்டும் இருந்தது என்றால் பழைய உலகத்தின் கவர்ச்சிகளிலிலிருந்து தானாகவே விலகிவிடுவீர்கள். போதையில் இருப்பவர்களின் எதிரில் எப்பொழுதும் இலக்கும் தெளிவாக இருக்கும். ஃபரிஷ்தா மற்றும் தேவதை ஆவது தான் இலக்கு.

 

5) ஒரு விநாடிக்கான அதிசயம் நிறைந்த காட்சி அதில் மதிப்புடன் தேர்ச்சி பெறுபவர் ஆகிவிட வேண்டும் -ஒரு விநாடிக்கான காட்சி - இந்த நேரம் உடலில் வர வேண்டும், அடுத்த நேரம் உடலிலிருந்து விலகி அவ்யக்த நிலையில் நிலைத்து விட வேண்டும். இந்த ஒரு நொடிக்கான விளையாட்டின் பயிற்சி இருக்கிறதா? எப்பொழுது விரும்புகிறீர்களோ, எப்படி விரும்புகிறீர்களோ அதே நிலையில் நிலைத்திருக்க முடிய வேண்டும். கடைசி பரீட்சை ஒரு நொடிக்கானது தான். யார் இந்த ஒரு விநாடியில் குழப்பத்தில் அல்லது மேலே கீழே செல்வதில் வந்து விட்டார் என்றால், தோல்வி அடைவார். உறுதியாக இருந்தார் என்றால் தேர்ச்சி அடைவார். அந்த மாதிரி கட்டுப்படுத்தும் சக்தி இருக்கிறதா? இப்பொழுது அந்த மாதிரி பயிற்சி தீவிர ரூபத்தில் இருக்க வேண்டும். எவ்வளவு குழப்பம் இருக்குமோ அந்த அளவு தன்னுடைய நிலை மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். எப்படி கடலானது வெளியே சப்தம் நிரம்பியதாக இருக்கும், ஆனால் உள்ளுக்குள் முற்றிலும் அமைதியாக இருக்கும். அந்த மாதிரி பயிற்சி வேண்டும். கட்டுப்படுத்தும் சக்தி உள்ளவர்கள் தான் உலகைக் கட்டுப்படுத்த முடியும். யார் தன்னை செய்ய (மாற்ற) முடியாதோ அவர் உலக இராஜ்ஜியத்தை எப்படி செய்வார்? சுருக்கத்தில் கொண்டு வரும் சக்தி வேண்டும். ஒரு விநாடியில் விஸ்தாரத்தில் இருந்து சாரத்தில் சென்று விட வேண்டும். மேலும் ஒரு விநாடியில் சாரத்திலிருந்து விஸ்தாரத்தில் வந்து விட வேண்டும். இது தான் அதிசயமான காட்சி அல்லது விளையாட்டு.

 

6) அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருங்கள் - உங்களை அனைவரும் சுகத்தின் ஊஞ்சலில் ஆடுவதைப் பார்த்து துக்கமானவர், சுகமானவர் ஆகிவிட வேண்டும். உங்களுடைய கண்கள், வாய், முகம் அனைத்தும் சுகம் கொடுக்க வேண்டும், அந்த மாதிரி சுகம் நிறைந்தவர்கள் ஆகுங்கள். அந்த மாதிரி சுகம் நிறைந்தவராக யார் ஆகுகிறார்களோ, அவருக்கு எண்ணத்தில் கூட துக்க உணர்வு வர முடியாது. நல்லது.

 

வரதானம் :

மனம், புத்தியின் ஒருமித்த நிலை மூலமாக அனைத்து சித்திகளை (வெற்றிகளை), பிராப்திகளை பிராப்தி செய்யக்கூடிய எப்பொழுதும் சக்தி நிறைந்த ஆத்மா ஆகுக.

 

அனைத்து சித்திகளை பிராப்தி செய்வதற்காக ஒருமித்த நிலையின் சக்தியை அதிகரியுங்கள். இந்த ஒருமித்த நிலையின் சக்தி சுலபமாக தடையற்றவர் ஆக்கிவிடும். கடின உழைப்பு செய்வதற்கு அவசியம் இருக்காது. ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது சுலபமாக அனுபவம் ஆகும். பிறகு சுலபமாக ஒரே சீரான நிலை உருவாகி விடும். அனைவருக்காகவும் நன்மை பயக்கும் உள்உணர்வு, சகோதரன் சகோதரன் என்ற பார்வை இருக்கும். ஆனால் ஒருமித்த நிலை உடையவராக ஆவதற்காக உங்களுடைய மனம் மற்றும் புத்தி எப்பொழுதும் உங்களுடைய கட்டளைக்கேற்றபடி நடக்க வேண்டும். கனவில் கூட ஒரு விநாடி கூட குழப்பம் இருக்கக் கூடாது.

 

சுலோகன் :

தாமரை மலருக்குச் சமமாக விலகி இருந்தீர்கள் என்றால், பிரபுவின் அன்பிற்குப் பாத்திரமானவர் ஆகிவிடுவீர்கள்.

 

ஓம்சாந்தி