20.12.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உங்களை அனைத்து பொக்கிஷங்களினாலும் செல்வந்தர்களாக ஆக்குவதற்காக தந்தை வந்திருக்கின்றார், நீங்கள் ஈஸ்வரிய வழிப்படி நடந்தால் போதும், நல்ல முறையில் முயற்சி செய்து ஆஸ்தியை எடுத்துக் கொள்ளுங்கள், மாயையிடம் தோல்வியடையாதீர்கள்.

 

கேள்வி:

ஈஸ்வரிய வழி, தெய்வீக வழி மற்றும் மனித வழிகளில் உள்ள முக்கிய வேறுபாடு என்ன?

 

பதில்:

ஈஸ்வரிய வழியின் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் தங்களது வீட்டிற்கு செல்கிறீர்கள் பிறகு புது உலகில் உயர்ந்த பதவி அடைகிறீர்கள். தெய்வீக வழியின் மூலம் நீங்கள் சதா சுகமானவர்களாக இருக்கிறீர்கள். ஏனெனில் அதுவும் கூட தந்தையின் மூலம் இந்த நேரத்தில் அடைந்த வழியாகும். இருப்பினும் கீழே இறங்கியே வருகிறீர்கள். மனித வழி துக்கமானவர்களாக ஆக்குகிறது. ஈஸ்வரிய வழிப்படி நடப்பதற்காக முதன் முதலில் படிப்பு கற்பிக்கும் தந்தையின் மீது முழு நம்பிக்கை இருக்க வேண்டும்.

 

ஓம்சாந்தி.

தந்தை இதன் பொருளை புரிய வைத்திருக்கின்றார், நான் ஆத்மா, சாந்த சொரூபமானவன். எப்பொழுது ஓம்சாந்தி என்று கூறப்படுகிறதோ அப்பொழுது ஆத்மாவிற்கு தனது வீட்டின் நினைவு வருகிறது. நான் ஆத்மா, சாந்த சொரூபமானவன். பிறகு எப்பொழுது கர்மேந்திரியங்கள் கிடைக்கிறதோ அப்பொழுது சப்தங்களில் வந்து விடுகிறது. முதலில் கர்மேந்திரியங்கள் சிறியதாக இருக்கிறது, பிறகு பெரியதாக ஆகிவிடுகிறது. பரம்பிதா பரமாத்மா நிராகாராக இருக்கின்றார். சப்தத்தில் வருவதற்கு அவருக்கும் இரதம் தேவைப்படுகிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் பரந்தாமத்தில் இருக்கக் கூடியவர்கள், இங்கு வரும்பொழுது சப்தத்தில் வந்து விடுகிறீர்கள். நான் உங்களுக்கு ஞானம் கொடுப்பதற்காக சப்தத்தில் வருகின்றேன் என்று தந்தையும் கூறுகின்றார். தந்தை தனது மற்றும் படைப்பின் முதல், இடை, கடையின் அறிமுகம் கொடுக்கின்றார். இது ஆன்மீகப் படிப்பாகும், அது உலகீயப் படிப்பாகும். அவர்கள் தன்னை சரீரம் என்று புரிந்து கொள்கின்றனர். நான் ஆத்மா, இந்த காதுகளின் மூலம் கேட்கிறேன் என்று யாரும் கூறமாட்டார்கள். இப்பொழுது குழந்தைளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள் - தந்தை பதீத பாவன் ஆவார், நான் எப்படி வருகிறேன்? என்பதை அவரே வந்து புரிய வைக்கின்றார். உங்களைப் போன்று நான் கர்பத்தில் வருவது கிடையாது. நான் இவரிடத்தில் பிரவேசம் செய்கின்றேன். பிறகு எந்தக் கேள்வியும் எழுவது கிடையாது. இது இரதமாகும். இவர் தாய் என்றும் கூறப்படுகிறார். அனைத்தையும் விட மிகப் பெரிய நதி பிரம்மபுத்திரா நதியாகும். ஆக இவர் தான் அனைவரையும் விட மிகப் பெரிய நதி ஆவார். தண்ணீருக்கான விசயம் கிடையாது. இவர் மகாநதி அதாவது அனைவரையும் விட மிகப் பெரிய ஞான நதி ஆவார். ஆக தந்தை ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார் - நான் உங்களது தந்தை ஆவேன். நீங்கள் எப்படி பேசுகிறீர்களோ அதே போன்று நானும் பேசுகிறேன். எனது பாகம் அனைத்திலும் கடைசி பாகமாகும். எப்பொழுது நீங்கள் முற்றிலும் பதீதமாக ஆகிவிடுவீர்களோ அப்பொழுது உங்களை பாவனம் ஆக்குவதற்காக வர வேண்டியிருக்கிறது. இந்த இலட்சுமி நாராயணனை இவ்வாறு ஆக்கியது யார்? ஈஸ்வரனைத் தவிர வேறு யாரையும் கூற முடியாது.  எல்லையற்ற தந்தை தான் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கியிருப்பார் அல்லவா! தந்தை தான் ஞானக் கடலானவர். நான் இந்த மனித சிருஷ்டியின் சைத்தன்ய விதையானவன் என்று அவரே கூறுகின்றார். முதல், இடை, கடையை நான் அறிவேன். நான் சத்தியமானவன், நான் சைத்தன்ய விதை ரூபமானவன், இந்த சிருஷ்டி என்ற மரத்தின் ஞானம் என்னிடத்தில் இருக்கிறது. இதற்கு சிருஷ்டிச் சக்கரம் அதாவது நாடகம் என்று கூறப்படுகிறது. இது சுற்றிக் கொண்டே இருக்கிறது. அந்த எல்லைக்குட்பட்ட நாடகம் இரண்டு மணி நேரம் நடைபெறும். இதன் (ரீல்) படச் சுருள் 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு கடந்து செல்லும் நேரமும், 5 ஆயிரம் ஆண்டுகளில் குறைந்து கொண்டே செல்கிறது. முதலில் நாம் தேவி தேவதைகளாக இருந்தோம், பிறகு மெது மெதுவாக நாம் சத்ரிய குலத்திற்கு வந்து விட்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த அனைத்து இரகசியங்களும் புத்தியில் இருக்கிறது அல்லவா! ஆக இதை சிந்தனை செய்து கொண்டே இருக்க வேண்டும். நாம் ஆரம்பத்தில் நடிப்பு நடிக்க வந்த பொழுது நாம் தான் தேவி தேவதைகளாக இருந்தோம். 1250 ஆண்டுகள் இராஜ்யம் செய்தோம். காலம் கடந்து கொண்டே செல்கிறது அல்லவா! இலட்சம் ஆண்டிற்கான விசயமே கிடையாது. இலட்சம் ஆண்டிற்கான விசயத்தை யாரும் சிந்திக்கவே முடியாது.

 

குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள் - நாம் தான் இவ்வாறு தேவி தேவதைகளாக இருந்தோம். பிறகு நடிப்பு நடித்து, ஆண்டுகள் கடந்து கடந்து இப்பொழுது எவ்வளவு ஆண்டுகளைக் கடந்து விட்டோம்! சிறிது சிறிதாக சுகம் குறைந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு பொருளும் சதோ பிரதானம், சதோ, ரஜோ, தமோவாக ஆகிறது. அவசியம் பழையதாக ஆகிறது. இது எல்லையற்ற விசயமாகும். இந்த அனைத்து விசயங்களையும் நல்ல முறையில் புத்தியில் தாரணை செய்து பிறகு மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அனைவரும் ஒன்று போல் இருப்பது கிடையாது. அவசியம் வித விதமான முறையில் புரிய வைப்பர். சக்கரத்தைப் பற்றி புரிய வைப்பது அனைத்தையும் விட மிக எளிதாகும். சக்கரம் மற்றும் மரம் இரண்டும் முக்கியமான சித்திரங்களாகும். கல்ப விருட்சம் என்று பெயர் இருக்கிறது அல்லவா! கல்பத்தின் ஆயுள் எவ்வளவு ஆண்டுகள்? என்பதை யாரும் அறியவில்லை. மனிதர்களிடத்தில் பல வழிகள் உள்ளன. சிலர் இவ்வாறு கூறுகின்றனர், சிலர் அவ்வாறு கூறுகின்றனர்! இப்பொழுது நீங்கள் மனிதர்களின் பல வழிகளையும் புரிந்திருக்கிறீர்கள் மற்றும் ஒரு ஈஸ்வரிய வழியையும் புரிந்திருக்கிறீர்கள். எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! ஈஸ்வரிய வழிப்படி நீங்கள் மீண்டும் புது உலகிற்கு செல்ல வேண்டும், மற்றவர்களது வழியின் மூலம், தெய்வீக வழி அல்லது மனித வழியின் மூலம் யாரும் திரும்பிச் செல்ல முடியாது. தெய்வீக வழியின் மூலம் கீழே இறங்கவே செய்கிறீர்கள். ஏனெனில் கலைகள் குறைய ஆரம்பித்து விடுகிறது. அசுர வழியின் மூலமும் வீழ்ச்சியடைகிறோம். ஆனால் தெய்வீக வழியில் சுகம் இருக்கிறது, அசுர வழியில் துக்கம் இருக்கிறது. தெய்வீக வழியும் இந்த நேரத்தில் தந்தை கொடுத்தாகும், அதனால் தான் நீங்கள் சுகமாக இருக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தை எவ்வளவு தூர தூரத்திலிருந்து வருகின்றார்! மனிதர்கள் சம்பாதிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அதிக செல்வம் சேர்ந்த பின்பு திரும்பி வருகின்றனர். தந்தையும் கூறுகின்றார் - நான் குழந்தைகளாகிய உங்களுக்கு பல பொக்கிஷங்களை எடுத்து வந்திருக்கிறேன். ஏனெனில் உங்களுக்கு அதிக செல்வங்களை கொடுத்திருந்தேன் என்பதை அறிவேன். அவையனைத்தையும் நீங்கள் இழந்து விட்டீர்கள். யார் உண்மையாகவே அனைத்தையும் இழந்திருக்கிறார்களோ அவர்களிடத்தில் அதாவது உங்களிடத்தில் தான் பேசுகிறேன். 5 ஆயிரம் ஆண்டிற்கான விசயம் உங்களுக்கு நினைவிருக்கிறது அல்லவா! ஆம் பாபா, 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு உங்களை சந்தித்திருந்தோம், தாங்கள் ஆஸ்தி கொடுத்திருந்தீர்கள் என்று கூறுகிறீர்கள். இப்பொழுது உங்களுக்கு நினைவு வருகிறது, உண்மையில் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி அடைந்திருந்தோம். பாபா, உங்களிடமிருந்து புது உலகின் இராஜ்யத்தின் ஆஸ்தி அடைந்திருந்தோம்! நல்லது, மீண்டும் முயற்சி செய்யுங்கள். பாபா, மாயை என்ற பூதம் என்னை தோல்வியடைச் செய்து விட்டது என்று கூறக் கூடாது. தேக அபிமானத்தினால் தான் நீங்கள் மாயையிடம் தோல்வியடைகிறீர்கள். பேராசைப் பட்டீர்கள், இலஞ்சம் வாங்கினீர்கள். வேறு வழியில்லை என்ற நிலை என்பது வேறு. பேராசையின்றி வயிறு நிறையாது என்பதை பாபா அறிவார். பரவாயில்லை. பலே! சாப்பிடுங்கள், ஆனால் எதிலும் மாட்டிக் கொண்டு விடாதீர்கள். பிறகு உங்களுக்குத் தான் துக்கம் ஏற்படும். பைசா கிடைத்தால் குஷியாக சாப்பிடுவார்கள், போலீசிடம் மாட்டிக் கொண்டால் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட காரியம் செய்யாதீர்கள். அதற்கு நான் பொறுப்பாளி கிடையாது. பாவம் செய்கின்றனர் எனில் சிறைக்கு செல்கின்றனர். அங்கு சிறை போன்றவைகள் இருக்காது. ஆக நாடகப்படி கல்பத்திற்கு முன்பு நீங்கள் என்ன ஆஸ்தி அடைந்திருந்தீர்களோ 21 பிறவிகளுக்கு அதையே மீண்டும் அடைவீர்கள். முழு இராஜ்யமும் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏழை பிரஜைகள், செல்வந்த பிரஜைகள். ஆனால் அங்கு துக்கம் இருக்காது. இந்த உத்திரவாதம் தந்தை கொடுக்கின்றார். அனைவரும் ஒரே மாதிரியாக ஆகிவிட முடியாது. சூரியவம்சி, சந்திரவம்ச இராஜ்யத்திற்கு அனைவரும் தேவை அல்லவா! எவ்வாறு தந்தை நமக்கு உலக இராஜ்யம் கொடுக்கின்றார்! என்பதை குழந்தைகள் அறிவீர்கள். பிறகு நாம் கீழே இறங்குகின்றோம். நினைவிற்கு வருகின்றது அல்லவா! பள்ளியில் படித்தது நினைவில் இருக்கும் அல்லவா! இங்கும் தந்தை நினைவை ஏற்படுத்துகின்றார். இந்த ஆன்மீக படிப்பு உலகில் வேறு யாரும் கற்பிக்க முடியாது. கீதையிலும் மன்மனாபவ என்று எழுதப் பட்டி ருக்கிறது. இதை தான் மகா மந்திரம், வசீகர மந்திரம் என்று கூறுகின்றோம், அதாவது மாயாவை வெல்லக் கூடிய மந்திரமாகும். மாயாவை வெல்பவர்கள் உலகை வென்று விடுவர். 5 விகாரங்கள் தான் மாயை என்று கூறப்படுகிறது. இராவணனின் சித்திரம் முற்றிலும் தெளிவாக இருக்கிறது - 5 விகாரங்கள் பெண்களிடம், 5 விகாரங்கள் ஆண்களிடம் இருக்கிறது. இதன் மூலம் கழுதை போல ஆகிவிடுகிறீர்கள், அதனால் தான் மேலே கழுதையின் தலை காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஞானம் இல்லாமல் நாமும் அவ்வாறு தான் இருந்தோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். தந்தை எவ்வளவு இரமணீகரமான முறையில் அமர்ந்து கற்பிக்கின்றார். அவர் சுப்ரீம் ஆசிரியர் ஆவார். அவரிடமிருந்து நாம் என்ன படிக்கின்றோமோ அதை மற்றவர்களுக்கும் கூறுகின்றோம். முதலில் கற்பிக்கும் ஆசிரியரின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். தந்தை நமக்கு இதைப் புரிய வைத்திருக்கின்றார், ஏற்றுக் கொள்வது, ஏற்றுக் கொள்ளாதது உங்கள் விருப்பம் என்று கூறுங்கள். இவர் எல்லையற்ற தந்தை அல்லவா! ஸ்ரீமத் தான் சிரேஷ்டமாக ஆக்குகிறது. ஆக சிரேஷ்ட புது உலகமும் அவசியம் தேவை அல்லவா!

 

நாம் அசுத்தமான உலகில் அமர்ந்திருக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. அங்கு பூந்தோட்டமாகிய சொர்க்கத்தில் நாம் சதா சுகமானவர்களாக இருப்போம். இங்கு நரகத்தில் எவ்வளவு துக்கமானவர்களாக இருக்கிறோம்! இதை நரகம் என்று கூறினாலும் அல்லது விஷ வைதர்ண்ய நதி என்று கூறினாலும் அல்லது பழைய சீ சீ உலகம் என்று கூறினாலும் சரியே. சத்யுகம் எப்படி இருந்தது! கலியுகம் எப்படி இருக்கிறது! என்பதை இப்பொழுது நீங்கள் உணர்கிறீர்கள். சொர்க்கம் தான் உலக அதிசயம் என்று கூறப்படுகிறது. திரேதாவையும் கூற முடியாது. இங்கு இந்த அசுத்த உலகில் இருப்பதில் மனிதர் களுக்கு எவ்வளவு குஷி ஏற்படுகிறது! விஷம் நிறைந்த புழுவை குளவியானது பூம் பூம் என்று ரீங்காரமிட்டு தனக்குச் சமமாக ஆக்குகிறது. நீங்களும் அசுத்தத்தில் விழுந்து கிடந்தீர்கள். நான் வந்து பூம் பூம் என்று கூறி உங்களை புழுவிலிருந்து அதாவது சூத்திரனிலிருந்து பிராமணனாக ஆக்கியிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் இரட்டை கிரீடதாரிகளாக ஆகிறீர்கள் எனில் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! முயற்சியும் முழுமையாக செய்ய வேண்டும். எல்லையற்ற தந்தை மிகவும் எளிதாகவே புரிய வைக்கின்றார். பாபா உண்மையைத் தான் கூறுகின்றார் என்று உள்ளம் கூறுகிறது. இந்த நேரத்தில் அனைவரும் மாயையின் புதை குழியில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர்.வெளிக் கவர்ச்சிகள் எவ்வளவு இருக்கிறது! நான் உங்களை புதை குழியிலிருந்து விடுவிக்கிறேன், சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று பாபா புரிய வைக்கின்றார். சொர்க்கத்தின் பெயர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது சொர்க்கம் கிடையாது. இந்த சிலைகள் மட்டுமே இருக்கின்றன. இவர்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக, எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தனர்! பக்தி மார்க்கத்தில் கோயில்களுக்கு தினமும் சென்று வந்தீர்கள், ஆனால் இந்த ஞானம் எதுவும் கிடையாது. பாரதத்தில் இந்த ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் இருந்தது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இவர்களது இராஜ்யம் எப்போது இருந்தது? என்பது யாருக்கும் தெரியாது. தேவி தேவதா தர்மத்திற்குப் பதிலாக இப்பொழுது இந்து இந்து என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்து மகா சபையின் தலைவர் வந்திருந்தார். நாம் விகாரிகளாக, அசுரர்களாக இருக்கிறோம், பிறகு தங்களை தேவதை என்று எப்படி கூறிக் கொள்ள முடியும்? என்று கூறினார். நாம் கூறினோம் - நல்லது வாருங்கள், தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை மீண்டும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்குப் புரிய வைக்கின்றோம். நாம் உங்களை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கி விடுவோம். அமர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு அவர் மூத்த சகோதரரே, நேரம் எங்கு இருக்கிறது? என்று கூறினார். நேரமில்லையெனில் பிறகு எப்படி தேவதையாக ஆக முடியும்? இது படிப்பு அல்லவா! பாவம், அவரது அதிஷ்டத்தில் இல்லை. இறந்து விட்டார். இவர் பிரஜையாக வருவார் என்பதும் கிடையாது. அவர் தானாகவே வந்தார், இங்கு தூய்மைக்கான ஞானம் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டிருந்தார். ஆனால் சத்யுகத்திற்கு வந்து விட முடியாது. மீண்டும் இந்து தர்மத்தில் தான் வருவார்.

 

மாயை மிகவும் பிரபலமானது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஏதாவது தவறுகளை செய்வித்துக் கொண்டே இருக்கிறது. ஏதாவது தவறான, தலைகீழான பாவங்கள் ஏற்பட்டு விட்டால் தந்தையிடம் உண்மையான உள்ளத்துடன் கூற வேண்டும். இராவணனின் உலகில் பாவம் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நாம் ஜென்ம ஜென்மங்களாக பாவிகளாக இருக்கிறோம் என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறியது யார்? ஆத்மா கூறுகிறது - தந்தையின் முன் அல்லது தேவதைகளின் முன். இப்பொழுது நீங்கள் உணர்கிறீர்கள் - உண்மையில் நாம் ஜென்ம ஜென்மங்களாக பாவிகளாக இருந்தோம். இராவண இராஜ்யத்தில் அவசியம் பாவம் செய்திருக்கிறோம். பல பிறவிகளின் பாவங்களை வர்ணிக்க முடியாது. இந்தப் பிறவிக்கானதை வர்ணிக்க முடியும். அதைக் கூறுவதன் மூலம் இலேசானவர்களாக ஆகிவிடுவீர்கள். மருத்துவர் (சர்ஜன்) முன் உண்மையைக் கூறுவது - இன்னாரை அடித்தேன், திருடினேன் ...... இதைக் கூறுவதற்காக வெட்கம் ஏற்படுவது கிடையாது, விகார விசயங்கள் கூறுவதற்குத் தான் வெட்கம் ஏற்படுகிறது. மருத்துவரிடத்தில் வெட்கப்பட்டால் பிறகு வியாதிகள் எப்படி நீங்கும்? பிறகு உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருக்கும். தந்தையை நினைவு செய்ய முடியாது. உண்மையை கூறும் பொழுது நினைவு செய்ய முடியும். தந்தை கூறுகின்றார் - மருத்துவராகிய நான் உங்களுக்கு எவ்வளவு மருந்துக்களைக் கொடுக்கிறேன்! உங்களது உடல் சதா ஆரோக்கியமானதாக இருக்கும். மருத்துவரிடம் கூறுவதன் மூலம் இலேசானவர்களாக ஆகிவிடுவீர்கள். சிலர் தானாகவே எழுதி விடுகின்றனர் - பாபா, நான் ஜென்ம ஜென்மங்களாக பாவம் செய்திருக்கிறேன். பாவ ஆத்மாக்களின் உலகில் பாவ ஆத்மாக்களாகத் தான் ஆகியிருக்கிறீர்கள். இப்பொழுது தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! நீங்கள் பாவ ஆத்மாக்களிடத்தில் கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்ளக் கூடாது. சத்தியமான சத்குரு, அழிவற்ற மூர்த்தி தந்தை ஆவார், அவர் ஒருபொழுதும் மறுபிறப்பில் வருவது கிடையாது. அவர்கள் அகால்தக்த் என்று பெயர் வைத்திருக்கின்றனர். ஆனால் பொருள் புரிந்து கொள்வது கிடையாது. ஆத்மாவின் சிம்மாசனம் இது என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். இங்கு தான் அழகாகவும் இருக்கிறது, திலகமும் இங்கு தான் (நெற்றியில்) வைக்கிறீர்கள் அல்லவா! உண்மையில் திலகம் பிந்துவாக (புள்ளி) வைத்துக் கொண்டனர். இப்பொழுது நீங்கள் தனக்குத் தானே திலகம் வைத்துக் கொள்ள வேண்டும். தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள். யார் அதிகமாக சேவை செய்கிறார்களோ அவர்கள் உயர்ந்த மகாராஜாவாக ஆவார்கள். புது உலகில் பழைய உலகிற்கான படிப்பு படிக்கமாட்டீர்கள். ஆக இவ்வளவு உயர்ந்த படிப்பின் மீது கவனம் செலுத்த வேண்டும். இங்கு அமர்ந்திருந்தாலும் கூட சிலரது புத்தியோகம் நன்றாக இருக்கிறது, சிலருக்கு இங்கு அங்கு என்று சென்று விடுகிறது. சிலர் 10 நிமிடம் எழுதுகின்றனர், சிலர் 15 நிமடம் எழுதுகின்றனர். யாருடைய சார்ட் நன்றாக இருக்கிறதோ அவர்களுக்கு போதை அதிகரித்துக் கொண்டே இருக்கும் - பாபா, நான் உங்களை இவ்வளவு நேரம் நினைவு செய்தேன். 15 நிமிடத்திற்கும் மேலாக யாரும் எழுத முடியாது. புத்தி இங்கு அங்கு என்று அலைகிறது. ஒருவேளை அனைவரும் ஏக்ரஸ் ஆக ஆகிவிட்டால் பிறகு கர்மாதீத நிலை ஏற்பட்டு விடும். தந்தை எவ்வளவு இனிமையிலும் இனிய, அன்பான விசயங்களைக் கூறுகின்றார். இவ்வாறு எந்த குருவும் கற்றுக் கொடுக்கவில்லை. குருவிடமிருந்து ஒரே ஒருவர் மட்டும் கற்றுக் கொள்ளமாட்டார், குருவிடமிருந்து ஆயிரக் கணக்கில் கற்றிருப்பர் அல்லவா! சத்குருவிடமிருந்து நீங்கள் எவ்வளவு பேர் கற்றுக் கொள்கிறீர்கள்! இது மாயாவை வசப்படுத்தும் மந்திரமாகும். மாயை என்று 5 விகாரங்கள் கூறப்படுகின்றன. பணத்திற்கு செல்வம் என்று கூறப்படுகிறது. இலட்சுமி நாராயணனைப் பற்றி கூறுகையில் இவர்களிடத்தில் அதிக செல்வங்கள் இருந்தன. இலட்சுமி நாராயணனை ஒருபொழுதும் தாய் தந்தை என்று கூறமாட்டார்கள். ஆதிதேவன், ஆதிதேவியை ஜெகத்பிதா, ஜெகதம்பா என்று கூறுகின்றனர், இவர்களை அல்ல. இவர்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்கள். அழிவற்ற ஞான செல்வங்களை  அடைந்து நாம் இந்த அளவிற்கு செல்வந்தர்களாக ஆகின்றோம். அம்பாவிடம் (ஜெகதம்பாவிடம்) பல ஆசைகளை வைத்துக் கொண்டு செல்கின்றனர். இலட்சுமியிடம் செல்வத்திற்காக மட்டுமே செல்கின்றனரே தவிர வேறு எதற்காகவுமில்லை. ஆக உயர்ந்தவர் யார்? அம்பாவிடமிருந்து என்ன கிடைக்கிறது? இலட்சுமியிடமிருந்து என்ன கிடைக்கிறது? என்பது யாருக்கும் தெரியாது. இலட்சுமியிடம் செல்வத்தை மட்டுமே கேட்கின்றனர். அம்பாவிடமிருந்து உங்களுக்கு அனைத்துமே கிடைக்கிறது. அம்பாவின் புகழ் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் தாய்மார்களும் அதிக துக்கங்களை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆக தாய்மார்களின் புகழ் அதிகம் ஏற்படுகிறது. நல்லது, இருப்பினும் தந்தை கூறுகின்றார் - தந்தையை நினைவு செய்தால் பாவனம் ஆகிவிடுவீர்கள். சக்கரத்தை நினைவு செய்யுங்கள், தெய்வீக குணங்களையும் தாரணை செய்யுங்கள். பலரை தனக்குச் சமமாக ஆக்குங்கள். இறை தந்தையின் மாணவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். கல்பத்திற்கு முன்பும் ஆகியிருந்தீர்கள், இப்பொழுதும் அதே இலட்சியம், குறிக்கோளுடன் இருக்கிறீர்கள். இது சத்திய நரனிலிருந்து நாராயணன் ஆகக் கூடிய கதையாகும். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நன்ஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தனது வியாதியை ஒருபொழுதும் மருத்துவரிடம் மறைக்கக் கூடாது. மாயையின் பூதங்களிலி ருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தனக்குத் தானே இராஜ்ய திலகம் கொடுத்துக் கொள்வதற்காக அவசியம் சேவை செய்ய வேண்டும்.

 

2) தன்னை அழிவற்ற ஞான செல்வத்தின் மூலம் செல்வந்தனாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது பாவ ஆத்மாக்களிடத்தில் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளக் கூடாது. படிப்பின் மீது முழுமையிலும் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்.

 

வரதானம்:

கீதையின் பாடத்தைப் படித்து மற்றும் படிப்பிக்கக் கூடிய நஷ்ட மோஹா (பற்றற்றவர்) நினைவு சொரூபம் ஆகுக.

 

கீதை ஞானத்தின் முதல் பாடம்- அசரீரி ஆத்மா ஆகுங்கள். மற்றும் கடைசி பாடம் - நஷ்ட மோஹா நினைவு சொரூபம் ஆகுங்கள். முதல் பாடமானது விதியாகும். மற்றும் கடைசி பாடமானது விதி மூலம் வெற்றி, ஆகவே, ஒவ்வொரு நேரமும் முதலில், தான் இந்தப் பாடத்தை படியுங்கள் பிறகு மற்றவர்களுக்குப் படிப்பியுங்கள். உங்களுடைய சிரேஷ்ட கர்மங்களைப் பார்த்து அனேக ஆத்மாக்கள் சிரேஷ்ட கர்மம் செய்து, தனது பாக்கியத்தின் ரேகையை உருவாக்கும் அளவிற்கு அவ்வாறு சிரேஷ்ட கர்மத்தை செய்து காட்டுங்கள்.

 

சுலோகன்:

பரமாத்மாவின் அன்பில் மூழ்கி விட்டீர்கள் என்றால், கடின உழைப்பிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.

 

ஓம்சாந்தி