22.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! அழியாத ஞான ரத்தினங்கள் உங்களை ராஜா ஆக்குகிறது, இது எல்லைக்கப்பாற்பட்ட பள்ளிக்கூடம் ஆகும். நீங்கள் படிக்கவும் படிப்பிக்கவும் வேண்டும், ஞான ரத்தினங்களால் பையை (புத்தி) நிரப்பிக் கொள்ள வேண்டும்.

 

கேள்வி:

எந்த குழந்தைகள் அனைவருக்கும் பிரியமானவர்களாக இருக்கிறார்கள்? உயர்ந்த பதவிக்கு எந்த முயற்சி அவசியமானதாக இருக்கிறது?

 

பதில்:

எந்தக் குழந்தைகள் தன்னுடைய பையை நிரப்பி அனைவருக்கும் தானம் செய்கிறார்களோ, அவர்களே அனைவருக்கும் பிரியமானவர்களாக இருக்கிறார்கள். உயர்ந்த பதவிக்கு பலருடைய ஆசிர்வாதம் தேவை. இதில் செல்வத்துக்கான எந்த விசயமும் இல்லை, ஆனால் ஞானச் செல்வத்தின் மூலம் பலருக்கும் நன்மை செய்து கொண்டே இருங்கள். நற்குணமுள்ள மற்றும் யோகி குழந்தைகள் தான் பாபாவின் பெயரை வெளிப்படுத்துகிறார்கள்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். நாம் இப்போது வீடு திரும்ப வேண்டும் என்று குழந்தைகள் தெரிந்திருக்கின்றனர், முன்பு முற்றிலும் அறியாதவர்களாக இருந்தனர். பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், இவர் புரிய வைப்பதும் கூட நாடகப்படி, இப்போது தான் சரியாக தெரிந்து கொள்ள முடிகிறது. வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும். தூய்மையற்றவர்கள் யாரும் திரும்பிச் செல்ல முடியாது. இந்த ஞானம் கூட இந்த சமயத்தில் தான் கிடைக்கிறது, அதுவும் ஒரு பாபா தான் கொடுக்கின்றார். நாம் திரும்பிச் செல்ல வேண்டும், என்பதை முதலில் நினைவு செய்ய வேண்டும். எதுவும் தெரியாமருந்தார்கள், ஆகவே பாபாவை அழைக்கிறார்கள். திடீரென்று நேரம் வந்தது பாபா வந்து விட்டார். இப்போது புதிய-புதிய விஷயங்களைப் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும், என்று குழந்தைகள் தெரிந்திருக்கிறார்கள், ஆகவே இப்போது தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக ஆக வேண்டும். இல்லையென்றால் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும், மேலும் பதவியும் குறைந்து விடும். அவ்வளவு வித்தியாசம் இருக்கிறது, எப்படி இங்கே ராஜா மற்றும் ஏழை இருக்கின்றனரோ அதைப்போலாகும். அதேபோல் அங்கே ராஜா மற்றும் ஏழை ஆகின்றார்கள். அனைத்தும் முயற்சியில் தான் ஆதாரப்பட்டிருக்கிறது. நீங்களே தூய்மையற்றவர்களாக இருந்தீர்கள், ஆகையினால் தான் அழைத்தீர்கள். இதைக் கூட இப்போது உங்களுக்கு புரிய வைக்கின்றேன். அஞ்ஞான காலத்தில் இவை புத்தியில் இருப்பதில்லை. தமோபிரதானமாக ஆகியுள்ள ஆத்மாவை சதோபிர தானமாக்க வேண்டும், என்று பாபா கூறுகின்றார். எப்போது எப்படி சதோபிரதானம் ஆவது - இதைக் கூட ஏணிப்படியில் புரிய வைக்கப்பட்டுள்ளது. இதன் கூடவே தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். இது எல்லையற்ற பள்ளிக்கூடம் ஆகும். பள்ளிக் கூடத்தில் கூட நல்லது, மிக நல்லது, மிக-மிக நல்லது என்று ரிஜிஸ்டர் வைக்கிறார்கள். யார் சேவாதாரி குழந்தைகளோ, அவர்கள் மிகவும் இனிமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய ரிஜிஸ்டர் நன்றாக இருக்கிறது. ரிஜிஸ்டர் சரியாக இல்லையென்றால் அவர்கள் முன்னேறுவதில்லை. அனைத்தும் படிப்பு, யோகம் மற்றும் தெய்வீக குணங்களில் ஆதாரப்பட்டிருக்கிறது. எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தை நமக்கு கற்பிக்கின்றார், என்று குழந்தைகள் தெரிந்திருக்கிறார்கள். முதலில் நாம் சூத்திர வர்ணத்தவர்களாக இருந்தோம், இப்போது பிராமண வர்ணத்தவர்களாக இருக்கின்றோம். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகிய நாம் பிராமணர்களாக இருக்கின்றோம், என்பது நிறைய பேருக்கு மறந்து விடுகிறது. எப்போதெல்லாம் நீங்கள் பாபாவை நினைவு செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் பிரம்மாவையும் நினைவு செய்ய வேண்டியதிருக்கும். நாம் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள், என்ற போதை கூட ஏற்பட வேண்டும். இது மறந்து போய் விடும் போது, நாம் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள், பிறகு தேவதை குலத்தைச் சேர்ந்தவர்களாக ஆவோம், என்ற போதை ஏறுவதில்லை. பிராமண குலத்தை யார் உருவாக்கியது? பிரம்மாவின் மூலம் நான் உங்களை பிராமண குலத்திற்கு கொண்டு வருகின்றேன். இது பிராமணர்களின் இராஜ்ஜியம் கிடையாது. மிகச் சிறிய குலமாகும். இப்போது தன்னை பிராமணன், என்று புரிந்து கொள்ளும் போது தேவதையாக ஆகி விடுவீர்கள். தன்னுடைய தொழிலில் ஈடுபட்டு விடுவதின் மூலம் அனைத்தும் மறந்து போய் விடுகிறது. பிராமணன் என்பது கூட மறந்து போய் விடுகிறது. தொழில் முடிந்ததும், முயற்சி செய்ய வேண்டும். சிலருக்கு தொழிலில் அதிக கவனம் கொடுக்க வேண்டியதாய் இருக்கிறது. காரியம் முடிந்ததும் தன்னுடைய விஷயங்களைப் பாருங்கள். நினைவில் அமர்ந்து விடுங்கள். உங்களிடமுள்ள பேட்ஜ் மிக நன்றாக இருக்கிறது, இதில் லஷ்மி-நாராயணனுடைய சித்திரமும் இருக்கிறது, திருமூர்த்தியும் இருக்கின்றது. பாபா நம்மை அப்படி ஆக்குகின்றார். அவ்வளவு தான், இது தான் மன்மனாபவ ஆகும். சிலருக்கு பழக்கமாகி விடுகிறது, சிலருக்கு ஆவதில்லை. பக்தியோ இப்போது முடிந்து விட்டது. இப்போது பாபாவை நினைவு செய்ய வேண்டும். இப்போது எல்லை யற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார், எனவே மகிழ்ச்சி ஏற்படுகின்றது. சிலருக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு விடுகிறது, சிலருக்கு குறைவான ஈடுபாடு ஏற்படுகிறது. இது மிகவும் சகஜமானதாகும்.

 

கீதையின் ஆரம்பம் மற்றும் முடிவில் மன்மனாபவ, என்ற வார்த்தை இருக்கின்றது. இது அதே கீதையின் நிகழ்வாகும். கிருஷ்ணரின் பெயரை மட்டும் போட்டு விட்டார்கள். பக்தி மார்க்கத்தில் என்ன வெல்லாம் உதாரணம் போன்றவை இருக்கின்றனவோ, அவை அனைத்தும் இந்த நேரத்திற்கானதாகும். தேக உணர்வையும் விட்டு விடுங்கள், தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று இப்படி பக்தி மார்க்கத்தில் யாரும் சொல்ல மாட்டார்கள். இங்கே உங்களுக்கு இந்த படிப்பை பாபா வந்ததும் கொடுக்கின்றார். தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நம் மூலமாக ஏற்படுகிறது. என்று நிச்சயம் இருக்கிறது. இராஜ்யம் கூட ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதில் சண்டை போன்ற எந்த விஷயமும் கிடையாது. பாபா இப்போது உங்களுக்கு தூய்மையைக் கற்றுக் கொடுக்கின்றார், அதுவும் அரைகல்பத்திற்கு அழியமால் இருக்கும். அங்கே இராவண இராஜ்யம் என்பதே கிடையாது. இப்போது நீங்கள் விகாரத்தின் மீது வெற்றி அடைகின்றீர்கள். நாம் கல்பத்திற்கு முன்பு எப்படி இராஜ்யத்தை ஸ்தாபனை செய்திருந்தோமோ, அப்படியே இப்போதும் செய்து கொண்டிருக்கின்றோம், என்று நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள். நமக்காக இந்த பழைய உலகம் அழியப்போகிறது. நாடகச் சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கிறது. அங்கே தங்கமே-தங்கமாக இருக்கும். எது இருந்ததோ அது மீண்டும் இருக்கும். இதில் குழப்பமடைவதற்கான விஷயம் எதுவும் இல்லை. மாயா மச்சந்திராவின் விளையாட்டைக் காட்டுகிறார்கள். காட்சியில் தங்கத்தினாலான கற்களைப் பார்த்தார்கள். நீங்கள் கூட வைகுண்டத்தில் தங்க மாளிகைகளைப் பார்க்கின்றீர்கள். அங்கேயுள்ள பொருட்களை நீங்கள் இங்கே கொண்டு வர முடியாது. இது சாட்சாத்காரமாகும். பக்தியில் நீங்கள் இந்த விஷயங்களைத் தெரிந்திருக்கவில்லை. நான் வந்திருப்பதே உங்களை அழைத்துச் செல்வதற்குத் தான் என்று பாபா கூறுகின்றார். நீங்கள் இல்லாமல் கவலை வந்து விடுகிறது. சமயம் வரும் போது எனக்கு ஓய்வு முடிந்து விடுகிறது-- போதும் செல்லவேண்டும், குழந்தைகள் மிகவும் துக்கத்திலிருக்கிறார்கள், அழைக்கிறார்கள். இரக்கம் வருகிறது--போதும், செல்ல வேண்டும். இவ்வாறு நாடகத்தில் சமயம் வரும்போது தான் செல்ல வேண்டும் என்ற சிந்தனை வருகிறது. விஷ்ணு அவதாரத்தின் நாடகம் காட்டுகிறார்கள். ஆனால் விஷ்ணுவின் அவதாரம் நிகழ்வதில்லை. நாளுக்கு-நாள் மனிதர்களின் புத்தி முடிந்து கொண்டே செல்கிறது. எதுவும் புரிவதில்லை. ஆத்மா தூய்மையற்றதாக ஆகி விட்டது. இப்போது பாபா கூறுகின்றார்-- குழந்தைகளே! தூய்மையடைந்தீர்கள் என்றால் இராம இராஜ்யம் ஏற்படும். இராமரை தெரிந்திருக்கவே இல்லை. சிவனின் பூஜை செய்யப்படுகிறதே, அவரை இராமன் என்று சொல்ல மாட்டார்கள். சிவபாபா என்று சொல்வது அழகாக இருக்கிறது. பக்தியில் எந்த இரசமும் இல்லை. இப்போது உங்களுக்கு சுவை கிடைக்கிறது. பாபா அவரே கூறுகின்றார்--இனிமையான குழந்தைகளே, நான் உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன். பிறகு உங்களுடைய ஆத்மா அங்கிருந்து தானாகவே சுகதாமத்திற்குச் சென்று விடும். அங்கே உங்களுக்கு துணைவனாக ஆக மாட்டேன். தங்களுடைய நிலையின் படி உங்களுடைய ஆத்மா சென்று மற்றொரு சரீரத்தில், கர்ப்பத்தில் பிரவேசம் ஆகும். கடலில் ஆலையில் கிருஷ்ணர் வந்தார், என்று காட்டுகிறார்கள். கடலின் விஷயமே இல்லை. கர்ப்பத்தில் மிகவும் சுகமாக இருக்கின்றார். நான் கர்ப்பத்தில் வருவதில்லை, என்று பாபா கூறுகின்றார். நான் பிரவேசம் ஆகின்றேன். நான் குழந்தையாக ஆவதில்லை. எனக்குப் பதிலாக கிருஷ்ணரை குழந்தை என்று நினைத்து மனம் மகிழ்கிறார்கள். கிருஷ்ணர் ஞானம் கொடுத்தார், என்று புரிந்து கொள்கிறார்கள், ஆகையினால் அவரை மிகவும் நேசிக்கிறார்கள். நான் அனைவரையும் உடன் அழைத்துச் செல்கிறேன். பிறகு உங்களை அனுப்பி வைத்து விடுகிறேன். பிறகு என்னுடைய நடிப்பு முடிந்தது. அரைகல்பத்திற்கு எந்த நடிப்பும் கிடையாது. பிறகு பக்தி மார்க்கத்தில் நடிப்பு ஆரம்பமாகிறது. இது கூட நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இப்போது குழந்தைகளுக்கு ஞானத்தைப் புரிந்து கொள்வதும் புரிய வைப்பதும் சகஜமாகும். மற்றவர்களுக்கு கூறினீர்கள் என்றால் குஷி இருக்கும் மேலும் உயர்ந்த பதவியும் அடைவீர்கள். இங்கே அமர்ந்து கேட்கும் போது நன்றாக இருக்கிறது. வெளியில் சென்றதும் மறந்து விடுகிறீர்கள். சிறைப்பறவைகள் போல் இருக்கிறீர்கள். ஏதாவதொரு குறும்பு செய்து சிறைக்குச் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். உங்களுடைய நிலையும் அப்படித் தான் இருக்கிறது. கர்ப்பத்தில் பலனை அனுபவித்து ஆத்மா அங்கேயே முடித்து விடுகிறது. இந்த அனைத்து விசயங்களையும் கூறினால் மனிதர்கள் பாவ காரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆத்மா தன்னுடன் சமஸ்காரத்தைக் கொண்டு செல்கிறது.ஆகையால் சிலர் சிறு வயதிலிருந்தே பண்டிதன் ஆகிவிடுகிறார்கள். ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஆத்மா நிர்லேப் (எதுவும் ஒட்டாத நிலை) அல்ல. நல்ல அல்லது கெட்ட சமஸ்காரத்தை ஆத்மா தான் கொண்டு செல்கிறது. ஆகையால் தான் கர்மங்களின் வினை ஏற்படுகிறது. இப்போது நீங்கள் தூய்மையான சமஸ்காரத்தைக் கொண்டு செல்கின்றீர்கள். நீங்கள் படித்து, பிறகு பதவி அடைகின்றீர்கள். பாபா அனைத்து ஆத்மாக்களின் கூட்டத்தையும் திரும்ப கொண்டு செல்கிறார். மீதம் கொஞ்சம் பேர் இருப்பார்கள். அவர்கள் பின்னால் வந்து கொண்டே இருக்கிறார்கள். யார் பிறகு வர வேண்டுமோ, அவர்கள் மட்டும் இருக்கிறார்கள். மாலை இருக்கிறதல்லவா! வரிசைக்கிரமமாக ஆகிக்கொண்டே போகிறது. மீதம் யார் உருவாகின்றனரோ, அவர்கள் சொர்க்கத்திலும் கடைசியில் வருவார்கள். பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கிறார், சிலருக்கு தாரணை ஏற்படுகிறது, சிலருக்கு தாரணை ஆவதில்லை. நிலை எப்படியோ, அப்படியே பதவியும் கிடைத்து விடுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இரக்கமனமுடையவராக, நன்மை செய்பவராக ஆக வேண்டும். யார் மீதும் தோஷம் சொல்ல முடியாத படி தான் நாடகம் கூட உருவாக்கப்பட்டிருக்கிறது. கல்பத்திற்கு முன்பு எந்தளவு படித்தார்களோ, அந்தளவு தான் ஏற்படும். அதிகம் ஏற்படாது, எவ்வளவு தான் முயற்சித்தாலும், எந்த வித்தியாசமும் ஏற்படாது. யாருக்கேனும் சொல்லும்போது தான் வித்தியாசம் ஏற்படும். வரிசைக்கிரமமாகத் தான் இருக்கிறார்கள் அல்லவா! எங்கே ராஜா, எங்கே ஏழை! இந்த அழியாத ஞான ரத்தினங்கள் ராஜா ஆக்குகிறது. முயற்சி செய்ய வில்லையானால், ஏழை ஆகிவிடுகிறார்கள். இது எல்லையற்ற பள்ளிக்கூடம் ஆகும். இதில் முதலாம், இரண்டாம், மூன்றாம் என்று இருக்கிறது. பக்தியில் படிப்புக்கான விசயமே இல்லை. அங்கே இறங்குவதற்கான விசயம் ஆகும். பெருமை அதிகம் ஆகும். வாத்தியம் இசைக்கிறார்கள், புகழ் பாடுகிறார்கள், இங்கே அமைதியாக இருக்க வேண்டும். பஜனை போன்ற எதுவுமே கிடையாது. நீங்கள் அரைகல்பம் பக்தி செய்திருக்கிறீர்கள். பக்தியில் எவ்வளவு பிரசித்தமாக இருக்கிறது. அனைவருக்கும் அவரவருடைய நடிப்பு உள்ளது. சிலர் விழுகின்றனர், சிலர் ஏறுகின்றனர், சிலருடையது நல்ல அதிர்ஷ்டம், சிலருடைய அதிர்ஷ்டம் குறைவு. பாபா ஒரே மாதிரியாக முயற்சி செய்ய வைக்கிறார். படிப்பு கூட ஒரேவிதமாக இருக்கும்போது, டீச்சர் கூட ஒரே ஒருவர் தான். மற்ற அனைவரும் மாஸ்டர்ஸ் ஆவர். ஒரு பெரிய மனிதர் நேரம் இல்லை என்று சொன்னால், ஆக அவரிடம் வீட்டுக்கு வந்து கற்றுத்தரலாமா? என்று கேளுங்கள். ஏனெனில் அவர்களுக்கு தன்னுடைய அகங்காரம் இருக்கிறது. ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் மற்றவர்களுக்குக் கூட தாக்கம் ஏற்படுகிறது. ஒருவேளை அவரும் யாரிடமாவது, இந்த ஞானம் நன்றாக இருக்கிறது என்று சொன்னால், "இவர்களுக்கும் பிரம்மாகுமாரிகளிடம் தொடர்பு ஏற்பட்டுவிட்டது, ஆகையால் நன்றாக இருக்கிறது என்று மட்டும் சொல்லி விடுகின்றனர்" என்பார்கள். குழந்தைகளிடம் யோகத்தின் சக்தி நன்றாக இருக்க வேண்டும். ஞானம் என்ற வாளில் யோகத்தின் கூர்மை வேண்டும். நற்குணமுள்ளவராகவும் யோகியாகவும் இருந்தால் பெயரை வெளிப்படுத்துவார்கள். வரிசைக்கிரமமாக இருக்கத் தான் செய்கின்றனர். இராஜ்யம் உருவாக வேண்டும். தாரணை மிக சகஜமானது என்று பாபா சொல்கிறார். பாபாவை எந்த அளவு நினைவு செய்வார்களோ, அந்தளவு அன்பு இருக்கும். ஈர்ப்பு ஏற்படும். ஊசி சுத்தமாக இருந்தால் காந்தத்தின் பக்கம் ஈர்க்கப்படுகிறது. துரு இருந்தால் ஈர்க்கப்பட மாட்டாது. இது கூட அப்படித்தான். நீங்கள் தூய்மையாகிவிடும்போது முதல் நம்பரில் போய் விடுகிறீர்கள். பாபா நினைவின் மூலம் துரு நீங்குகிறது.

 

'குருவே தங்களுக்கு பலி ஆகி ன்றேன்' என்ற பாடல் உள்ளது. ஆகையால் குரு பிரம்மா..குரு விஷ்ணு..என்று சொல்கிறார்கள். நிச்சயதார்த்தம் செய்விக்கக்கூடிய அந்த குருக்கள் மனிதர்கள் ஆவர். நீங்கள் சிவனோடு நிச்சயதார்த்தம் செய்துள்ளீர்களே தவிர பிரம்மாவோடு அல்ல. ஆக சிவனைத் தான் நினைவு செய்ய வேண்டும். தரகரின் படத்துக்கு அவசியம் இல்லை. நிச்சயதார்த்தம் முடிந்து விட்டால், ஒருவரை ஒருவர் நினைவு செய்து கொண்டே இருக்கின்றனர். ஆக இவருக்கும் (பிரம்மாவுக்கும்) தரகு ஊதியம் கிடைத்து விடுகிறது. இது நிச்சயதார்த்தத்திற்கும் கிடைக்கிறது அல்லவா! மற்றபடி இவருக்குள் பிரவேசம் ஆகின்றேன், கடனாக எடுக்கின்றேன், ஆக அவரும் (பிரம்மாவும்) சிவபாபாவிடம் கவரப்படுகிறார். ஆகையால் குழந்தைகளுக்கும் புரிய வைக்கிறார் - எந்தளவு நீங்கள் பலருக்கு நன்மை செய்வீர்களோ, அந்தளவு உங்களுக்கு ஞானத்தெளிவு (ஒளி) கிடைக்கும். இவை ஞானத்தின் விசயங்களாகும். மற்றவர்களுக்கு ஞானம் கொடுத்துக் கொண்டே இருந்தால், ஆசீர்வாதம் கிடைத்து விடுகிறது. பைசாவுக்கு அவசியமே இல்லை. மம்மாவிடம் பணம் இல்லை என்றாலும் பலருக்கு நன்மை செய்தார். நாடகத்தில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நடிப்பு இருக்கிறது. ஏதாவது பணக்காரர் பணம் கொடுக்கிறார், மியூசியம் உருவாக்குகிறார் என்றால் பலருடைய ஆசீர்வாதம் கிடைத்து விடுகிறது. நல்லது, செல்வந்தரின் பதவி கிடைத்து விடுகிறது. செல்வந்தரிடம் தாச தாசிகள் நிறைய பேர் இருப்பார்கள். பிரஜைகளில் செல்வந்தர்களிடம் நிறைய பணம் இருக்கும், பிறகு அவரிடமிருந்து கடன் பெறுகின்றனர். செல்வந்தர் ஆவதும் நல்லது. அதுவும் ஏழைகள் தான் செல்வந்தர் ஆகின்றனர்.மற்றபடி செல்வந்தர்களிடம் தைரியம் எங்கே இருக்கிறது! உடனே இந்த பிரம்மா அனைத்தையும் கொடுத்து விட்டார். என்று சொல்கிறார்கள், 'இப்படிப்பட்ட (கொடுக்கக்கூடிய) கை வேறு யாருக்கு இருக்கும்...' பாபா பிரவேசம் ஆனதும் அனைத்தையும் விட்டுவிட்டார். கராச்சியில் நீங்கள் எப்படி வசித்திருந்தீர்கள். பெரிய பெரிய மாளிகைகள், வாகனங்கள், பஸ் போன்ற அனைத்தும் இருந்தது. இப்போது பாபா சொல்கிறார், ஆத்ம அபிமானி ஆகுங்கள். பகவான் நமக்குப் படிப்பிக்கின்றார் என்றால் எந்தளவு போதை ஏற வேண்டும்! பாபா உங்களுக்கு அளவற்ற பொக்கிஷங்களைத் தருகின்றார். நீங்கள் தாரணை செய்வதில்லை, பொக்கிஷங்களை எடுப்பதற்கான சக்தி இல்லை. ஸ்ரீமத் படி நடப்பதில்லை. பாபா சொல்கின்றார், குழந்தைகளே உங்கள் பையை நிரப்பிக் கொள்ளுங்கள். மனிதர்கள் சங்கரர் முன் சென்று பையை நிரப்புங்கள் என்று கூறுகின்றனர். பாபா இங்கே பலரது பையை நிரப்புகின்றார். வெளியே செல்வதன் மூலம் பை காலியாகி விடுகிறது. உங்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷம் தருகின்றேன், ஞான ரத்தினங்களால் பையை முழுவதுமாக நிரப்பிக் கொடுக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். பிறகும் கூட குழந்தைகள் வரிசைக்கிரமமாக தன்னுடைய பையை நிரப்பிக் கொள்கின்றனர். அவர்கள் பிறகு தானமும் செய்கின்றனர், அனைவருக்கும் பிரியமானவராகவும் இருக்கின்றனர். தன்னிடமே இல்லை என்றால் என்ன கொடுப்பார்?

 

நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தை நல்ல முறையில் புரிந்து கொள்ளவும் புரிய வைக்கவும் வேண்டும். மற்றபடி யோகத்தில் உழைப்பு வேண்டும். இப்போது யுத்த மைதானத்தில் இருக்கிறீர்கள். மாயையிடம் வெற்றி அடைவதற்காக சண்டை புரிகின்றீர்கள். தோல்வி அடைந்து விட்டால் சந்திர வம்சத்தில் சென்று விடுவார்கள். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயம் ஆகும். பாபா நீங்கள் எவ்வளவு அஸ்தி கொடுக்கின்றீர்கள்! என்று குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். எழும்போதும்-அமரும் போதும் முழு நாள் இது புத்தியில் இருந்தால் தான் தாரணை ஏற்பட முடியும். யோகம் முக்கியமானது. யோகத்தின் மூலம் தான் நீங்கள் உலகத்தை தூய்மை ஆக்குகின்றீர்கள். ஞானத்தின் அனுசாரமாக நீங்கள் ராஜ்ஜியம் செய்கின்றீர்கள். இந்த பைசா போன்றவை மண்ணோடு போய் சேர்ந்து விடும். மற்றபடி இந்த அழியாத வருமானம் அனைத்தும் கூடவே வரும். யார் புத்திசாலிகளாக இருப்பார்களோ, அவர்கள் 'நாங்கள் பாபாவிடமிருந்து முழுமையான ஆஸ்தி எடுப்போம்' என்று சொல்வார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லையானால் ஒரு பைசாவுக்கான பதவி அடைவார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தன்னுடைய படிப்பு மற்றும் தெய்வீக குணங்களுக்கான ரிஜிஸ்டரை நன்றாக வைக்க வேண்டும். மிக மிக இனிமையானவராக வேண்டும். நாம் பிரம்மா முக வம்சாவளி பிராமணர் என்ற போதையில் இருக்க வேண்டும்.

 

2. அனைவருடைய அன்பு மற்றும் ஆசீர்வாதம் அடைவதற்கு ஞான ரத்தினங்களால் தன்னுடைய பையை நிரப்பி தானம் செய்ய வேண்டும். பலருடைய நன்மைக்கு நிமித்தமாக ஆக வேண்டும்.

 

வரதானம்:

தந்தையின் அன்பில் தனது மூலாதார பலவீனத்தை அர்ப்பணம் செய்யக் கூடிய ஞானி ஆத்மா ஆகுக.

 

இன்று வரை ஐந்து விகாரங்களின் வீண் எண்ணங்கள் பலருக்கு வந்து கொண்டிருப்பதை பாப்தாதா பார்க்கின்றார். ஞானி ஆத்மாக்களிடத்திலும் அவ்வப்போது தனது குணத்தின் அல்லது சிறப்பம்சத்தின் அபிமானம் வந்து விடுகிறது. ஒவ்வொருவரும் தனது மூலாதார பலவீனம் அல்லது மூல சன்ஸ்காரத்தை அறிவீர்கள், அந்த பலவீனத்தை தந்தையின் அன்பில் அர்பணித்து விடுங்கள். இதுவே அன்பின் நிரூபணம் ஆகும். அன்பான அல்லது ஞானி ஆத்மாக்கள் தன்தையின் அன்பில் வீண் எண்ணங்களையும் பலி கொடுத்து விடுவார்கள்.

 

சுலோகன்:

சுவமானம் என்ற இருக்கையில் நிலைத்திருந்து மரியாதை கொடுக்கும் மரியாதைக்குரியவர் ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி