22.09.2019                           காலை முரளி                ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்    30.01.1985          மதுபன்


 

மாயாவை வென்றவர் மற்றும் இயற்கையை வென்றவர் தான் சுயராஜ்ய அதிகாரி

 

இன்று நாலாபுறங்கலுமுள்ள இராஜ்ய அதிகாரி குழந்தைகளின் இராஜய தர்பாரை, பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாலாபுறங்களிலும் தேடிக்கண்டெடுக்கப்பட்ட, அன்பிற்குரிய எல்லைக்கு அப்பாற்பட்ட சேவாதாரி நெருக்கமான குழந்தைகளாக இருக்கிறார்கள் அந்தமாதிரியான குழந்தைகள், இப்பொழுது கூட சுயராஜய அதிகாரி இராஜய தர்பாரில் அமர்ந்திருக்கிறார்கள், பாப்தாதா அந்தமாதிரி தகுதியான குழந்தகளை, நிரந்தர யோகி குழந்தை களை மிகவும் பணிவாக, உயர்ந்த சுய கௌவரவத்தில் இருக்கும் குழந்தைகளைப் பார்த்து, மகிழ்ச்சியடைகிறார். சுயராஜ்ய தர்பார் முழுக் கல்பத்திலும் ஆன்மீகமானது, மற்ற தர்பார்களை விட வேறுபட்டது, மேலும் மிகவும் பிரியமானது. ஒவ்வொரு சுயராஜ்ய அதிகாரி, உலக இராஜ்யத்தின் அஸ்திவாரம், புது உலகைப் படைப்பவர். ஒவ்வொரு சுயராஜ்ய அதிகாரி மின்னிக் கொண்டிருக்கும், தெய்வீகத் திலகமிட்டவர், அனைத்து விசேஷங்களினால் மின்னிக் கொண்டிருக்கும், விலைமதிக்க முடியாத மணிகளால் அலகரிக்கப்பட்ட கீரிடம் அணிந்தவர். அனைத்து தெய்வீக குணங்கள் என்ற மாலையை அணிந்து கொண்டு, சம்பூரண தூய்மையின் ஒளி வடிவான கீரிடத்தை அணிந்து கொண்டு, சிரேஷ்ட நிலை என்ற சுய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அந்தமாதிரி அலங்கரிக்கப் பட்டு இராஜ்ய அதிகாரி தர்பாரில் அமர்ந்திருக்கிறார்கள். அந்தமாதிரியான இராஜ்ய தர்பார் பாப்தாதாவின் எதிரில் இருக்கிறது. ஒவ்வொரு சுயராஜ்ய அதிகாரியின் எதிரில் எத்தனை தாசன், தாசிகள் இருக்கிறார்கள்? இயற்கையை வென்றவர்கள், மற்றும் விகாரங்களை வென்றவர்கள். விகாரம் கூட 5 இருக்கிறது, இயற்கையின் தத்துவமும் 5 இருக்கிறது. அப்படி இயற்கையே தாசியாகி விட்டது இல்லையா? எதிரி சேவகானாகி விட்டான். அந்தமாதிரி ஆன்மீகப் பெருமிதத்தில் இருக்கக் கூடியவர்கள், விகாரங்களையும் மாற்றம் செய்து, காம விகாரத்தை சுப விருப்பங்களாக மாற்றி. உயர்ந்த விருப்பங்களின் சொரூபத்தில் மாற்றி சேவையில் ஈடுபடுத்துபவர்கள். அந்தமாதிரி எதிரியை சேவாதாரியாக ஆக்கக்கூடிய, இயற்கையின் எந்தவொரு தத்துவத்தின் பக்கம் வசமாகிவிடுவதில்லை. ஆனால் ஒவ்வொரு தத்துவத்தையும் கீழ்த்தரமான ரூபத்தில் இருந்து, உயர்ந்த தூய்மையான சொரூபமாக மாற்றி விடுகிறார். கலியுகத்தில் இந்த தத்துவங்கள் ஏமாற்றம் மற்றும் துக்கத்தை கொடுப்பவை. சங்கமயுகத்தில் பரிவர்த்தைனை ஆகிறது. ரூபமும் மாறுகிறது. சத்தியுகத்தில் இந்த 5 தத்துவங்கள் தேவதைகளுக்கு, சுகத்தின் சாதனமாக ஆகிவிடுகின்றன. இந்த சூரியன் உங்களுடைய உணவை தயார் செய்யும் என்றால், சமையல்காரனாக ஆகிவிடும் இல்லையா? இந்தக் காற்று உங்களுடைய இயற்கையான விசிறி ஆகிவிடும். உங்களுடைய பொழுது போக்கின் சாதனம் ஆகிவிடும். காற்றடிக்கும், இந்த மரங்கள் அசையும், மேலும் இந்த கிளைகள் அந்தமாதிரி ஆடும். அவைகள் அசைவதினால், விதவிதமான இசை இயல்பாகவே ஒலித்துக் கொண்டேருக்கும். எனவே பொழுதுபோக்கிற்கான சாதனமாகிவிட்டது இல்லையா? இந்த ஆகாயம் உங்கள் அனைவருக்காக, இராஜ மார்க்கம் ஆகிவிடும். இந்த விமானங்களை எங்கே ஒட்டுவீர்கள்? இந்த ஆகாயமே உங்களுடைய பாதை ஆகிவிடும். இந்தளவு பெரிய நெடுஞ்சாலை வேறு எங்காவது இருக்கிறதா? வெளிநாட்டில் இருக்கிறதா, எத்தனை மைல்கள் சாலை அமைத்தாலும் கூட, ஆனால் ஆகாய பாதையை விட சிறியதாக இருக்கும் இல்லையா? இவ்வளவு பெரிய பாதை வேறு எங்காவது இருக்கிறதா? அமெரிக்காவில் இருக்கிறதா? மேலும் விபத்தே நடக்காத பாதையாக இருக்குமா? 8 வயதான குழந்தை ஓட்டினாலும் விழமாட்டார். புரிந்ததா! இந்த நீர் வாசனை திரவியத்தின் காரியம் செய்யும். எப்படி மூலிகைகளின் காரணமாக, கங்கை நீர் இப்பொழுதும் கூட மற்ற நீரை விட தூய்மையாக இருக்கிறது. அந்தமாதிரி நறுமணம் நிறைந்த மூலிகைகள் இருக்கும் காரணத்தினால், நீரும் இயற்கையாகவே நறுமணம் நிறைந்தாக இருக்கும். எப்படி இங்கே பால் சக்தி கொடுக்கிறது, அதேபோல் அங்கேயுள்ள நீரும் சக்திசாலியாக இருக்கும், தூய்மையாக இருக்கும். எனவே பாலாறு ஓடுகிறது என்று கூறுகிறார்கள். நீங்கள் அனைவரும் இப்பொழுதே குμயாகி விட்டீர்கள் இல்லையா? அதேபோலவே இந்த நிலம், அந்தமாதிரி உயர்ந்த பழங்களை கொடுக்கும், எப்படிப்பட்ட சுவையை விரும்புகிறீர்களோ, அந்த சுவை நிறைந்த பழங்கள் உங்கள் எதிரில் வந்து நிற்கும். அங்கே இந்த உப்பும் இருக்காது, சீனியும் இருக்காது. எப்படி இப்பொழுது தக்காளி இருக்கிறது என்றால், அந்த புளிப்பு வந்துவிடுகிறது தான் இல்லையா? அதேபோல் உங்களுக்கு சுவைக்கு ஏற்றபடி அங்கே பழங்கள் இருக்கும். நீங்கள் சாற்றை பிழிந்தீர்கள் என்றால், விரும்பிய சுவை உங்களுக்கு கிடைக்கும். அப்படி இந்த நிலமும் ஒன்றோ சிரேஷ்ட பழம் மற்றும் சிரேஷ்ட அன்னம் கொடுக்கும் சேவை செய்யும். இன்னொன்று இயற்கையான காட்சிகள் அதைத் தான் இயற்கை என்று கூறுகிறோம். எனவே இயற்கையான காட்சிகளும், மலையும் இருக்கும். இந்தமாதிரியான செங்குத்தான மலை இருக்காது, இயற்கையான அழகு நிரம்பிய, விதவிதமான ரூபத்தில் மலை இருக்கும். சில பறவைகளின் ரூபத்திலும், மேலும் சில மலர்களின் ரூபத்திலும் இருக்கும். அப்படி இயற்கையான அழகு நிறைந்ததாக இருக்கும். கொஞ்சம் கை மட்டும் வைக்க வேண்டும். அப்படி இந்த 5 தத்துவங்களும் சேவாதாரி ஆகிவிடும். ஆனால் யாருடைய சேவாதாரியாக ஆகும். சுயராஜ்ய அதிகாரி ஆத்மாக்களின் சேவாதாரியாக ஆகும். எனவே இப்பொழுது உங்களைப் பாருங்கள். 5 விகாரங்களும் எதிரி என்பதிலிருந்து மாறி. சேவாதாரியாக ஆகிவிட்டனவா? அப்பொழுது தான் சுயராஜ்ய அதிகாரி என்று கூறுவோம். கோப அக்னி, யோக அக்னியாக மாறிவிட வேண்டும். அதேபோல் பேராசை என்ற விகாரம், பேராசை என்றால் விரும்புவது, எல்லைக்குட்பட்ட விருப்பங்கள் மாறி, நான் எப்பொழுதும் ஒவ்வொரு எண்ணத்தினால், வார்த்தைகளினால், செய்யும் காரியத்தினால், சுயநலமற்ற, எல்லைக்கு அப்பாற்பட்ட சேவாதாரி ஆகிவிட வேண்டும் என்ற சுப விருப்பங்களாக மாறி விட வேண்டும். நான் தந்தைக்குச் சமமாக மாறிவிட வேண்டும் - அந்தமாதிரியான சுபவிருப்பங்கள் அதாவது பேராசையின் பரிவர்த்தனை சொரூபம். எதிரிக்குப் பதிலாக சேவையின் காரியத்தில் ஈடுபடுத்துங்கள். பற்றுதலும் உங்கள் அனைவருக்கும் அதிகமாக இருக்கிறது இல்லையா? பாப்தாதாவிடமோ பற்றுதல் இருக்கிறது இல்லையா? ஒரு வினாடி கூட பிரிந்திருக்க முடியாது என்ற இது பற்றுதல் தான் இல்லையா? ஆனால் இந்த பற்றுதல் சேவை செய்விக்கும். யார் உங்களுடைய கண்களைப் பார்த்தாலும், கண்களில் நிரம்பியிருக்கும் தந்தையைப் பார்க்கட்டும். வாய் மூலம் என்ன பேசினாலும் தந்தையின் விலை மதிக்க முடியாத ஞானத்தைக் கூறுங்கள். அப்படி இந்த பற்றுதல் என்ற விகாரமும் சேவையில் ஈடுபட்டுவிட்டது இல்லையா? மாறிவிட்டது தான் இல்லையா? அதேபோல் அகங்காரமும் கூட தேக அபிமானத்தில் இருப்பவரிலிருந்து, ஆத்ம அபிமானியாக ஆகிவிடுகிறார்கள். நல்ல அகங்காரம் அதாவது நான் ஆத்மா விசேஷ ஆத்மாவாக ஆகிவிட்டேன், பலகோடி மடங்கு ஆகிவிட்டேன், கவலையற்ற இராஜா ஆகிவிட்டேன். இந்த நல்ல அகங்காரம் ஈஸ்வரிய போதை சேவைக்கான காரணம் ஆகிவிடுகிறது. அந்தமாதிரி 5 விகாரங்களும் மாறி சேவையின் சாதனம் ஆகிவிட்டது என்றால், எதிரி தன்மையிலிருந்து சேவாதாரியாக ஆகிவிட்டன இல்லையா? எனவே மாயாவை வென்றவராக இயற்கையை வென்றவராக எந்தளவு ஆகியிருக்கிறேன் என்று சோதனை செய்யுங்கள். இராஜாவாக எப்பொழுது ஆகிவிடுவீர்கள் என்றால், எப்பொழுது முதலில் தாசன் - தாசிகள் தயார் ஆகிவிட வேண்டும். யார் அவரே தாசன் - தாசிகளின் அடிமையாக இருப்பாரோ, அவர் இராஜ அதிகாரியாக எப்படி ஆவார்!

 

இன்று பாரதத்தின் குழந்தைகளின் சந்திக்கும் நிகழ்ச்சியின் பிரகாரம், கடைசி நாள். அப்படி இன்று மேளாவின் கடைசியாக முங்கி எழுவது. இதற்கும் மகத்துவம் இருக்கிறது. இந்த மகத்துவத்தின் நாளில் எப்படி அந்த மேளாவில் செல்கிறார்கள் என்றால், என்னென்ன பாவங்கள் இருக்கிறதோ, அதை பஸ்மம் செய்து, அழித்து விட்டு செல்கிறோம் என்று நினைப்பார்கள். அப்படி அனைவரும் 5 விகாரங்களை நிரந்தரமாக அழிப்பதற்கான எண்ணம் வைப்பது, இது தான் கடைசியாக முங்கி எழுவதின் மகத்துவம். அப்படி நீங்கள் அனைவருமே பரிவர்த்தனை செய்வதற்கான திட எண்ணத்தை வைத்தீர்களா? விட்டு விடக் கூடாது, ஆனால் மாற வேண்டும். ஒருவேளை எதிரியானவர் உங்களுடைய சேவாதாரியாக ஆகிவிட்டார் என்றால், எதிரி விருப்பமா அல்லது சேவாதாரி விருப்பமா? எனவே இன்றைய தினத்தில் சோதனை செய்யுங்கள் மற்றும் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். அப்பொழுது தான் சந்திப்பு விழாவிற்கு மகத்துவம் இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்று புரிந்ததா? நான்கும் சரியாகத் தான் இருக்கிறது, மற்றபடி ஒன்று சரியில்லை என்றாலும், பாதகமில்லை என்று அப்படி நினைக்காதீர்கள். ஆனால் அந்த ஒன்று நான்கையும் திருப்பி அழைத்துச் சென்று விடும். இவைகளுக்குள்ளும் அவர்களிடையே ஒற்றுமை இருக்கிறது. எனவே இராவணனின் தலையை சேர்த்தே காண்பிக்கிறார்கள். எனவே தசாரா கொண்டாடி விட்டு செல்லுங்கள். 5 இயற்கை தத்துவங்களின் மேல் வெற்றி, 5 விகாரங்களின் மீது வெற்றி. அப்படி 10 ஆகிவிட்டது இல்லையா? எனவே விஐயயதசமி கொண்டாடி விட்டுச் செல்லுங்கள். அழித்து விட்டு, எரித்து விட்டு சாம்பலை உடன் எடுத்துச் செல்லாதீர்கள். சாம்பலை எடுத்துச் சென்றாலும் கூட அது மீண்டும் வந்து விடும், பூதமாக மாறி வந்து விடும், எனவே அதையும் ஞானக் கடலில் போட்டு கரைத்து விட்டுச் செல்லுங்கள். நல்லது.

 

எப்பொழுதும் சுயராஜ்ய அதிகாரி, ஆன்மீக திலகமிட்டிருக்கும், கீரிடம் அணிந்திருக்கும், இயற்கையை தாசியாக ஆக்கக் கூடியவர்களுக்கு, 5 எதிரிகளையும் சேவாதாரியாக்கக் கூடியவர்களுக்கு, எப்பொழுதும் கவலையில்லா இராஜா என்பதின் ஆன்மீக பெருமிதத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு, தந்தைக்குச் சமமாக எப்பொழுதும் வெற்றியடையும் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

குமாரிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு: -

அனைவரும் தன்னை சிரேஷ்ட குமாரிகள் என்று அனுபவம் செய்கிறீர்களா? சாதாரண குமாரிகளோ, ஒன்று வேலை என்ற கூடையைத் தூக்குகிறார்கள், அல்லது தாசியாகி விடுகிறார்கள். ஆனால் சிரேஷ்ட குமாரிகள் உலகிற்கு நன்மை செய்பவர்கள் ஆகிவிடுகிறார்கள். நீங்கள் அந்தமாதிரி சிரேஷ்ட குமாரிகள் தான் இல்லையா! உங்களுடைய வாழ்க்கையின் சிரேஷ்ட இலட்சியமாக என்ன இருக்கிறது? தீய சேர்க்கை அல்லது சம்மந்தத்தின் பந்தனத்திலிருந்து விடுபடுவது என்ற இது தான் இலட்சியம் இல்லையா. பந்தனத்தில் மாட்டிக் கொள்பவர்கள் இல்லை. என்ன செய்வது பந்தனம், என்ன செய்வது வேலை செய்ய வேண்டியதாக இருக்கிறது என்ற இதைத் தான் பந்தனத்தில் இருப்பவர் என்று கூறுவது. அப்படி உங்களுக்கு சம்மந்தத்தின் பந்தனமும் இல்லை, வேலை என்ற கூடையை தூக்கும் பந்தனமும் இல்லை. யார் இந்த இரண்டு பந்தனத்திலிருந்து விடுபட்டு இருக்கிறார்களோ, அவர்கள் தான் தந்தையின் பிரியமானவர்களாக ஆகிறார், நீங்கள் அந்த மாதிரி பந்தனமற்றவரா? இரண்டு வாழ்க்கையுமே எதிரில் இருக்கிறது. சாதாரண குமாரிகளின் எதிர்காலம், மேலும் விசேஷ குமாரிகளின் எதிர்காலம் இரண்டுமே எதிரில் இருக்கிறது. இரண்டையும் பார்த்து, நீங்களே முடிவு செய்ய முடியும். எப்படி (பெற்றோர்கள் ஆகியோர்) சொல்வார்களோ, அப்படி செய்வேன் என்று இருக்கக் கூடாது. தன்னுடைய முடிவை தானே தீர்மானித்து எடுக்க வேண்டும். பாபாவின் ஸ்ரீமத்தோ, உலகிற்கு நன்மை செய்பவராக ஆகு என்று இருக்கிறது. அதுவோ சரிதான், ஆனால் ஸ்ரீமத்தின் கூடவே தன்னுடைய மனதின் ஊக்கத்தினால் யார் முன்னேறிச் செல்கிறார்களோ, அவர் எப்பொழுதும் சுலபமாக முன்னேறிச் சென்று கொண்டேயிருப்பார். ஒருவேளை யாராவது கூறியதினால், அல்லது மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற வெட்கத்தின் காரணத்தினால் அல்லது நான் அப்படி ஆகவில்லையென்றால், எல்லோரும் என்னை வேறு மாதிரி பார்ப்பார்கள் என்ற இது பலஹீனமாகும். ஒருவேளை யாராவது யாருடைய வற்புறுத்தலினால் ஆகிறார் என்றால் கூட சோதனைகளில் வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பு செய்ய வேண்டியதாக இருக்கும். மேலும் தன்னுடைய ஆர்வம், ஊக்கத்தினால் ஆனவர், எவ்ளவு தான் பெரிய பரீட்சை வந்தாலும், அதை சுலபமாக அனுபவம் செய்வார், ஏனென்றால் மனதில் ஊக்கம் இருக்கிறது இல்லையா! தன்னுடைய ஊக்கம், உற்சாகம் இறக்கை ஆகிவிடுகிறது. எவ்வளவு தான் பெரிய மலையாக இருந்தாலும், பறக்கும் பறவை சுலபமாக கடந்து சென்றுவிடும். மேலும் நடந்து செல்பவர் அல்லது ஏறிச் செல்பவர் எவ்வளவு கடினத்துடன், எவ்வளவு நேரம் கழித்து கடந்து செல்ல முடியும். அப்படி மனதின் ஊக்கம் சிறகுகள் ஆகும். இந்த இறக்கைகள் மூலம் பறப்பவர்களுக்கு எப்பொழுதும் சுலபமாக இருக்கும். புரிந்ததா? அப்படி சிரேஷ்ட வழி உலகிற்கு நன்மை செய்பவராக ஆகு என்பது, ஆனால் நீங்களே உங்களுடைய நீதிபதி ஆகி, தன்னுடைய வாழ்க்கையை முடிவு செய்யுங்கள். தந்தையோ முடிவு கூறிவிட்டார், அது புதிய விசயமில்லை. இப்பொழுது நீங்கள் முடிவு செய்யுங்கள். பிறகு எப்பொழுதும் வெற்றி அடைபவராக இருப்பீர்கள். யார் யோசித்து, புரிந்து ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கிறாரோ, அவர் விவேகம் நிறைந்தவர். யோசித்துக் கொண்டே இருந்து விடக் கூடாது. ஆனால் யோசித்தீர்கள், புரிந்து கொண்டீர்கள் மற்றும் செய்தீர்கள் இதைத் தான் அறிவாளி அல்லது விவேகம் நிறைந்தவர் என்று கூறுவது. சங்கமயுகத்தில் குமாரி ஆவது என்பதே முதல் பாக்கியம். இந்த பாக்கியமோ நாடகப்படி கிடைத்திருக்கிறது. இப்பொழுது பாக்கியத்தின் மேல் பாக்கியத்தை உருவாக்கிக் கொண்டே செல்லுங்கள். இதே பாக்கியத்தை காரியத்தில் ஈடுபடுத்திக் கொண்டேயிருந்தீர்கள் என்றால் பாக்கியம் அதிகரித்துக் கொண்டேயிருக்கும். மேலும் இதே முதல் பாக்கியத்தை இழந்தீர்கள் என்றால், நிரந்தரமாக அனைத்து பாக்கியத்தையும் இழந்து விடுவீர்கள், எனவே நீங்கள் பாக்கியம் நிறைந்தவர்கள். பாக்கியம் நிறைந்தவராகி இப்பொழுது இன்னும் சேவாதாரியின் பாக்கியத்தை உருவாக்குங்கள். புரிந்ததா?

 

சேவாதாரி (டீச்சர் சகோதரிகளுடன்) சந்திப்பு :

சேவாதாரி என்றால், எப்பொழுதும் சேவையின் மகிழ்ச்சியில் இருப்பவர், எப்பொழுதும் தன்னை மகிழ்ச்சி நிறைந்த வாழ்கையில் இருப்பதாக அனுபவம் செய்பவர். சேவாதாரி வாழ்க்கை என்றாலே, மகிழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கை. நீங்கள் அந்தமாதிரி எப்பொழுதும் நினைவு மற்றும் சேவையின் மகிழ்ச்சியில் இருப்பவர்கள் தான் இல்லையா? நினைவின் மகிழ்ச்சியும் இருக்கிறது, மற்றும் சேவையின் மகிழ்ச்சியும் இருக்கிறது. வாழ்க்கையும் மகிழ்ச்சிகள் நிறைந்தது, மற்றும் யுகமும் மகிழ்ச்சிகளுக்குக்கானது. யார் எப்பொழுதும் மகிழ்ச்சியில் இருப்பாரோ, அவரைப் பார்த்து, மற்றவர்களும் தன்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவம் செய்வார்கள். யார் எவ்வளவு தான், குழப்பத்தில் வந்தாலும், இவர் மகிழ்ச்சியில் இருந்து மற்றவர்களையும் குழப்பத்திலிருந்து விடுவித்து மகிழ்ச்சியில் கொண்டு வந்துவிடுவார். அந்தமாதிரி சேவாதாரி யார் மகிழ்ச்சியில் இருப்பாரோ, அவர் எப்பொழுதும் உடலால், மனதால் ஆரோக்கியமாக இருப்பார். மகிழ்ச்சியில் இருப்பவர் எப்பொழுதும் பறந்து கொண்டே இருப்பார். ஏனென்றால் குμயிருக்கிறது. பொதுவாகவே இவரோ குμயில் ஆடிக் கொண்டேயிருக்கிறார் என்று கூறுவார்கள். நடந்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல மாட்டார்கள், நடனமாடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்வார்கள். நடனமாடுவது என்றால், மிக உயர்ந்து பறப்பது. உயர்ந்த கால்கள் இருந்தால் தானே நடனமாடுவார். அப்படி மகிழ்ச்சியில் இருப்பவர் என்றால், குμ நிறைந்து இருப்பவர். சேவாதாரி ஆவது என்றால், வரமளிக்கும் வள்ளடலிமிருந்து விசேஷ வரதானத்தைப் பெறுவது. சேவாதாரிக்கு விசேஷ வரதானம் இருக்கிறது. ஒன்று தன்னுடைய கவனம், இன்னொன்று வரதானம், இரட்டை லிஃப்ட் இருக்கிறது. சேவாதாரி ஆவது என்றால், எப்பொழுதும் முக்த் (விடுபட்ட) ஆத்மா ஆவது, ஜீவன் முக்தியை அனுபவம் செய்வது.

 

நீங்கள் எப்பொழுதும் வெற்றி சொரூப சேவாதாரியாக இருக்கிறீர்களா? வெற்றி என்பது பிறப்புரிமை. உரிமை எப்பொழுதும் சகஜமாக கிடைக்கும், கடின முயற்சி செய்ய வேண்டியது இருக்காது. அப்படி நீங்கள் உரிமையின் ரூபத்தில் வெற்றியை அனுபவம் செய்பவர்கள். வெற்றி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்ற நிச்சயம் மற்றும் போதை எப்பொழுதும் இருக்கட்டும். வெற்றி கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற எண்ணமோ இருப்பதில்லையே? எப்பொழுது அதிகாரம் இருக்கிறது என்றால். அதிகாரிக்கு, அதிகாரம் கிடைக்கவில்லை என்பது இருக்கவே முடியாது. நிச்சயம் இருக்கிறது என்றால், வெற்றியும் நிச்சயிக்கப்பட்டது. இது தான் சேவாதாரிக்கான விளக்கம். எது விளக்கமாக இருக்கிறதோ, அதுவே நடைமுறையாக இருக்கிறது. சேவாதாரி என்றால் சுலபமாக வெற்றியை அனுபவம் செய்பவர்.

 

விடைபெறும் நேரத்தில் :

(அனைவரும் இப்பொழுது எங்களை விட்டுச் செல்லாதீர்கள் என்ற பாடலை பாடினார்கள்) பாப்தாதா எந்தளவு அன்பின் கடலாக இருக்கிறாரோ, அந்தளவு விலகியும் இருக்கிறார். அன்பு நிறைந்த வார்த்தைகளைக் கூறினார், இதுவோ சங்கமயுகத்தின் மகிழ்ச்சிகள். மகிழ்ச்சியை நன்றாகக் கொண்டாடுங்கள், சாப்பிடுங்கள், குடியுங்கள், ஆடுங்கள், ஆனால் நிரந்தரமாக செய்யுங்கள். எப்படி இப்பொழுது அன்பில் மூழ்கியிருந்தீர்களோ, அந்தமாதிரி மூழ்கியிருங்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்தின் பாடலை கேட்டுக்கொண்டே இருக்கிறார், இன்று வாய் மூலம் பாடிய பாடலையும் கேட்டு விட்டார். பாப்தாதா வார்த்தைகளை பார்ப்பதில்லை, இசையைப் பார்ப்பதில்லை, இதயத்தின் ஓசையைக் கேட்கிறார். இப்பொழுதோ நிரந்தரமாக கூடவே இருக்கிறீர்கள், ஸ்தூலமாக இருந்தாலும், அவ்யக்த ரூபத்திலும் எப்பொழுதும் கூடவே இருக்கிறீர்கள். இப்பொழுது பிரிந்திருக்கும் நாட்கள் முடிவடைந்து விட்டது. இப்பொழுது சங்கமயுக முழுமையிலுமே சந்திப்புக் கொண்டாட்டம் தான். சந்திப்பில் பல விதமான காட்சிகள் மட்டும் மாறிக் கொண்டேயிருக்கிறது. சில நேரம் நேர் எதிரில், சில நேரம் அவ்யக்த்தத்தில். நல்லது. - காலை வணக்கம்.

 

வரதானம்:

ஆத்மீக சக்தியின் ஆதாரத்தில் உடலின் சக்தியை அனுபவம் செய்யக் கூடிய, எப்பொழுதும் ஆரோக்கியமானவர் ஆகுக.

 

இந்த ஆன்மீக வாழ்க்கையில் ஆத்மா மற்றும் இயற்கை (உடல்) இரண்டின் ஆரோக்கியம் அவசியமானது. எப்பொழுது ஆத்மா ஆரோக்கியமாக இருக்கிறது என்றால், உடலின் கணக்கு - வழக்கு மற்றும் உடலின் நோய் ஈட்டியிலிருந்து முள்ளாகி விடும் காரணத்தினால், சுய நிலையின் காரணமாக ஆரோக்கியத்தை அனுபவம் செய்கிறார்கள். அவருடைய வாயில், முகத்தில் நோய் கஷ்டத்தின் அடையாளம் இருக்காது. கர்மத்தின் விளைவை அனுபவிப்பவிப்பதை வர்ணனை செய்வதற்குப் பதிலாக, கர்ம யோகாவின் நிலையை வர்ணனை செய்வார். அவர் பரிவர்த்தனையின் சக்தி மூலமாக கஷ்டத்தை திருப்தியில் பரிவர்த்தனை செய்து திருப்தியாக இருப்பார். மற்றும் திருப்தியின் அலையைப் பரப்புவார்.

 

சுலோகன்:

உள்ளத்தால், உடலால், உங்களிடையே அன்பாக இருந்து, சேவை செய்தீர்கள் என்றால், நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ஓம்சாந்தி