27.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

அன்பான, சகயோகி, சக்திசாலி குழந்தைகளின் மூன்று நிலைகள்

 

பாப்தாதா அனைத்து அன்பான, சகயோகி மற்றும் சக்திசாலி குழந்தைகளை ப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்பான குழந்தைகளில் அனேக விதமான அன்பானவர்கள் இருக்கிறார்கள். ஒரு வகையானவர்கள் -மற்றவர்களின் சிரேஷ்ட வாழ்க்கையைப் பார்த்து, மற்றவர்களின் பரிவர்த்தனையைப் பார்த்து அதில் பிரபாவம் அடைந்து அன்பானவர் ஆகியிருக்கிறார்கள். இரண்டாவது வகையினர் - ஏதாவது குணத்தின், சுகம் மற்றும் சாந்தியின் சிறிதளவு அனுபவத்தின் ஜொலிப்பைப் பார்த்து அன்பானவர் ஆகியிருக்கிறார்கள். மூன்றாவது - தொடர்பு அதாவது குழுவின், சுத்த ஆத்மாக்களின் ஆதரவை அனுபவம் செய்யும் அன்பான ஆத்மாக்கள். நான்காவது வகையினர்கள் - பரமாத்மா மேல் அன்பு வைத்திருக்கும் ஆத்மாக்கள். அனைவருமே அன்பானவர்கள் தான் அன்பிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. யதார்த்த அன்பு வைத்திருப்பவர்கள் என்றால் தந்தையை மிக சரியான முறையில் தெரிந்து அன்பானவர் ஆவது.

 

அதே போலவே சகயோகி ஆத்மாக்களிலும் பலவிதமான சகயோகிகள் இருக்கிறார்கள். ஒருவர் - பக்தியின் சம்ஸ்காரத்தின் பிரகாரம் சகயோகி. நல்ல விஷயங்கள். நல்ல இடம், நல்ல வாழ்க்கையுள்ளவர்கள், நல்ல இடத்திற்கு செய்வதினால் நல்ல பலன் கிடைக்கும், இதே ஆதாரத்தில், இதே கவர்ச்சியில் சகயோகி ஆவது என்றால் தன்னிடம் இருக்கும் உடல், மனம், பணம், செல்வத்தை ஈடுபடுத்துவது. இரண்டாவது வகையினர் - ஞானம் மற்றும் தாரணை மூலமாக கொஞ்சம் பிராப்தி செய்வதின் ஆதாரத்தில் சகயோகி ஆவது. மூன்றாவது வகையினர் - ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை. ஒரே ஒரு தந்தை, ஒரே ஒரு அனைத்து பிராப்திக்கான ஸ்தானம். தந்தையின் காரியம் தான் என்னுடைய காரியம். அந்தமாதிரி தன்னுடைய தந்தை, தன்னுடைய வீடு, தன்னுடைய காரியம், சிரேஷ்ட ஈஸ்வரிய காரியம் என்று புரிந்து நிரந்தரமான சகயோகி ஆவது. அப்படி வித்தியாசம் ஆகிவிட்டது தான் இல்லையா!

 

அதேபோலவே சக்திசாலி ஆத்மாக்கள், இதிலேயும் பலவிதமான நிலையுள்ளவர்கள் இருக்கிறார்கள்  ஞானத்தின் ஆதாரத்தில் மட்டும் நான் ஆத்மா சக்திசாலி சொரூபமானவன், சர்வ சக்திவான் தந்தையின் குழந்தை என்று தெரிந்து கொள்பவர்கள். இதைத் தெரிந்து சக்திசாலியான நிலையில் நிலைத்திருப்பதற்காக முயற்சி செய்கிறார்கள். ஆனால் தெரிந்து மட்டும் இருக்கிறார் என்ற காரணத்தினால், எப்பொழுது ஞானத்தின் துளி நினைவில் வருகிறதோ, அந்த நேரம் சக்திசாலியான துளியின் காரணமாக அவர் சிறிது நேரத்திற்காக சக்திசாலி ஆகலாம். பிறகு அந்தத் துளி மறந்து விடுகிறது என்றால் சக்தி இல்லாமல் ஆகிவிட்டது. சிறிதளவு மாயாவின் பிரபாவம் ஞானத்தை மறக்க வைத்து பலமற்றவர் ஆக்கி விடுகிறது. இன்னொரு வகையினர் ஞானத்தின் சிந்தனையும் செய்கிறார்கள், வர்ணனையும் செய்கிறார்கள், மற்றவர்களுக்கு சக்திசாலியான விஷயங்களைக் கூறுகிறார்கள், அந்த நேரம் சேவையின் பலன் கிடைக்கும் காரணத்தினால் தன்னை அவ்வளவு நேரம்

சக்திசாலியாக அனுபவம் செய்கிறார்கள், ஆனால் சிந்தனை செய்யும் நேரம் வரையிலும் மற்றும் வர்ணணிக்கும் நேரம் வரையிலும் தானே அன்றி சதா காலத்திற்கும் இல்லை. முதலில் சிந்தனை நிலை, இன்னொன்று வர்ணிக்கும் நிலை.

 

மூன்றாவது - எப்பொழுதும் சக்திசாலி ஆத்மாக்கள். சிந்தனை மற்றும் வர்ணனை செய்வது மட்டும் இல்லை ஆனால் மாஸ்டர் சர்வசக்திவான் சொரூபம் ஆகிவிடுகிறார்கள். சொரூபம் ஆவது என்றால் சக்திசாலி ஆவது. அவருடைய ஒவ்வொரு அடி, ஒவ்வொரு காரியமும் இயல்பாகவே சக்திசாலியாக இருக்கும். நினைவு சொரூபமாக இருக்கிறார், எனவே எப்பொழுதும் சக்திசாலி நிலை இருக்கிறது. சக்திசாஆத்மா எப்பொழுதும் தன்னை சர்வசக்திவான் தந்தையுடன் இருப்பதாக, இணைந்த ரூபத்தை அனுபவம் செய்வார்கள். மேலும் ஸ்ரீமத் என்ற கை பாதுகாப்பு குடை நிழலின் ரூபத்தில் எப்பொழுதும் அனுபவம் ஆகும். சக்திசாலி ஆத்மா எப்பொழுதும் திடத்தன்மையின் சாவியின் அதிகாரியாக இருக்கும் காரணத்தினால் வெற்றிக் களஞ்சியத்தின் எஜமானனாக அனுபவம் செய்கிறார்கள். எப்பொழுதும் அனைத்து பிராப்திகள் என்ற ஊஞ்சலில் ஆடிக்கொண்டேயிருப்பார்கள். எப்பொழுதும் தனது சிரேஷ்ட பாக்கியத்தின் பாடலை மனதில் பாடிக்கொண்டேயிருப்பார்கள். எப்பொழுதும் ஆன்மீக போதையில் இருக்கும் காரணத்தினால் பழைய உலகத்தின் கவர்ச்சியிலிருந்து சுலபமாகவே விலகியிருக்கிறார்கள். கடின முயற்சி செய்ய வேண்டியதிருக்காது. சக்திசாலி ஆத்மாவின் ஒவ்வொரு காரியம், வார்த்தை இயல்பாக மற்றும் சுலபமாக சேவை செய்வித்துக் கொண்டேயிருக்கும். சுயபரிவர்த்தனை மற்றும் உலக பரிவர்த்தனை சக்திசாலியாக இருக்கும் காரணத்தினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்ற இந்த அனுபவம் எப்பொழுதுமே இருக்கும். எந்தவிதமான காரியத்திலும் என்ன செய்வது, என்ன ஆகும் என்பது எண்ணத்தின் அளவில் கூட இருக்காது. வெற்றி மாலை எப்பொழுதும் வாழ்க்கையில் அணிவிக்கப்பட்டிருக்கிறது. வெற்றி அடைபவன் மேலும் நான் வெற்றி மாலையில் இருப்பவன். வெற்றி என்பது பிறப்புரிமை என்ற உறுதியான நிச்சயம் இயல்பாக மற்றும் எப்பொழுதுமே கண்டிப்பாக இருக்கும். புரிந்ததா? இப்பொழுது நான் யார் என்று தன்னைத் தானே கேளுங்கள். சக்திசாலி ஆத்மாக்கள் மிகக் குறைந்தவர்கள். அன்பானவர்கள், சகயோகி அதிலேயும் பெருபான்மையோர் பலவிதமானவர்கள். எனவே இப்பொழுது என்ன செய்வீர்கள்? சக்திசாலி ஆகுங்கள். சங்கமயுகத்தின் சிரேஷ்ட சுகத்தை அனுபவம் செய்யுங்கள். புரிந்ததா? தெரிந்து கொள்பவர்களாக மட்டுமின்றி அடைபவர்களாக ஆகுங்கள், நல்லது.

 

தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். மற்றும் தந்தையின் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். வந்து சேர்ந்து விட்டீர்கள், என்பதைப் பார்த்து பாப்தாதா குஷி அடைகிறார். நீங்களும் மிகவும் குஷி அடைகிறீர்கள் தான் இல்லையா, இந்தக் குஷி எப்பொழுதும் நிலைத்து இருக்கட்டும், மதுபன்னில் இருக்கும் வரையிலும் மட்டுமின்றி முழு சங்கமயுகமே உடன் இருக்கட்டும். குழந்தைகளின் குஷியில் தந்தையும் குஷியடைகிறார். எங்கு எங்கிருந்தெல்லாம் வந்து, சகித்துக்கொண்டே வந்து சேர்ந்தோ விட்டீர்கள் இல்லையா? வெப்பம் - குளிர், உணவு ஆகியவற்றை சகித்துக்கொண்டு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். மண், தூசி, மழையும் பெய்தது. இதுவெல்லாம் பழைய உலகத்தில் நடக்கத் தான் செய்யும். இருந்தும் சௌகரியம், ஒய்வு கிடைத்து விட்டது இல்லையா! ஒய்வு எடுத்தீர்களா? மூன்று அடி இல்லாவிட்டாலும் இரண்டு அடி இடமோ கிடைத்தது. இருந்தும் தன்னுடைய வீடு வள்ளலின் வீடு இனிமையாக அனுபவம் ஆகிறது இல்லையா! பக்தி மார்க்கத்தின் யாத்திரைகளை விடவும் நல்ல இடம். குடை நிழலின் கீழே வந்து விட்டீர்கள். அன்பின் பாலனையில் வந்துவிட்டீர்கள். யக்ஞத்தின் சிரேஷ்ட பூமியில் வந்து சேர்வது, யக்ஞத்தின் பிரசாதத்திற்கு அதிகாரி ஆவது, எவ்வளவு மகத்துவம் நிறைந்தது! ஒரு பருக்கை அனேக விலை மதிக்க முடியாதவைக்கு சமமானவை. இதையோ அனைவரும் தெரிந்திருக்கிறீர்கள் இல்லையா? அவர்களோ பிரசாதத்தின் ஒரு பருக்கை கிடைக்க வேண்டுமென்ற தாகம் உடையவர்களாக இருக்கிறார்கள், மேலும் உங்களுக்கோ வயிறு நிரம்ப பிரம்மா போஜனம் கிடைக்கும். அப்படியானால் நீங்கள் எவ்வளவு பாக்கியம் நிறைந்தவர்கள்! இந்த மகத்துவத்தோடு பிரம்மா போஜனத்தை அருந்தினீர்கள் என்றால், நிரந்தரமாக மனமும் மகான் ஆகி விடும்.

 

நல்லது - மிக அதிகமாக பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். இந்தத் தடவை அதிகமானவர்கள் ஏன் ஒடி வந்திருக்கிறீர்கள்? இத்தனை எண்ணிக்கையில் ஒருபொழுதும் வந்ததில்லை, புத்துணர்வில் வந்து விட்டார்கள், இருந்தாலும் பாப்தாதா - பஞ்சாப்பில் சத்சங்கம் மற்றும் அமிர்தவேளைக்கு மகத்துவம் இருக்கிறது என்ற சிரேஷ்ட விசேஷத்தை பார்க்கிறார். காலணி அணியாமல் கூட வெறும் காலால் கூட அமிர்தவேளைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். பாப்தாதாவும் பஞ்சாப்பில் வாழும் குழந்தைகளுக்கு, இதே மகத்துவத்தைத் தெரிந்திருக்கும் மகான் தன்மையுடன் பார்க்கிறார். பஞ்சாப்பில் வாழ்பவர்கள் என்றால் எப்பொழுதும் தொடர்பால் ஆன்மீக பிரபாவம் என்ற வண்ணத்தில் வண்ணமயமாக்கப்பட்டவர்கள். எப்பொழுதும் சத்சங் அதாவது சத்தியத்தின் சங்கத்தில் இருப்பவர்கள். நீங்கள் அந்தமாதிரி தான் இல்லையா? பஞ்சாப்பை சேர்ந்த அனைவரும் அமிர்த வேளையில் சக்திசாலி ஆகி சந்திப்பை செய்கிறீர்களா? பஞ்சாப்பை சேர்ந்தவர்களில் அமிர்தவேளைக்காக சோம்பல் இல்லை தான் இல்லையா? தூங்கி விழுவது இல்லையே? அப்படி பஞ்சாப்பின் விசேஷத்தை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நல்லது.

 

கிழக்கு மண்டலம் வந்திருக்கிறார்கள், கிழக்கில் விசேஷமாக என்ன இருக்கிறது? சூரிய உதயம் (சன்ரைஸ்). சூரியன் எப்பொழுதும் உதயமாகும், சூரியன் என்றால் வெளிச்சத்தின் குவியல் அனைத்து கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களும் மாஸ்டர் ஞான சூரியன். எப்பொழுதும் இருளை அகற்றி, வெளிச்சம் கொடுப்பவர்கள் தான் இல்லையா? இந்த விசேஷம் இருக்கிறது இல்லையா? ஒருபொழுதும் மாயாவின் இருளில் வராதவர்கள், இருளை அகற்றுபவர்கள் மாஸ்டர் வள்ளல் ஆகிவிட்டார்கள் இல்லையா? சூரியன் வள்ளல் தான் இல்லையா? அனைத்து மாஸ்டர் சூரியன் என்றால் மாஸ்டர் வள்ளல் ஆகி உலகிற்கு ஓளி கொடுக்கும் காரியத்தில் பிஸியாக இருக்கிறீர்கள் இல்லையா? யார் அவரே பிஸியாக இருக்கிறார், ஓய்வில் இருப்பதில்லையோ, அவர்களுக்காக மாயாவிற்கும் நேரம் கிடைப்பதில்லை, கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? கிழக்கு மண்டலத்தில் மாயா வருகிறதா? வருகிறது என்றாலும் நமஸ்காரம் செய்ய வருகிறதா அல்லது மிக்கி மவுஸாக ஆக்கி விடுகிறதா? மிக்கி மவுஸின் விளையாட்டு பிடித்திருக்கிறதா என்ன? கிழக்கு மண்டலத்தின் இருக்கை தந்தையின் இருக்கை அப்படி இராஜ சிம்மாசனம் ஆகிவிட்டது இல்லையா? இராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவர்கள், இராஜவாக இருப்பார்களா அல்லது மிக்கி மவுஸாக இருப்பார்களா? நீங்கள் அனைவரும் மாஸ்டர் சூரியன் இல்லையா? ஞான சூரியனின் உதயமும் அங்கு இருந்து தான் ஆனது இல்லையா. தன்னுடைய விசேஷத்தை புரிந்துக்கொண்டீர்களா? பிரவேசத்தின் சிரேஷ்ட இருக்கையின் அதாவது நீங்கள் வரதான ஸ்தானத்தில் இருக்கும் சிரேஷ்ட ஆத்மாக்கள். இந்த விசேஷம் வேறு எந்த மண்டலத்திலும் இல்லை. எப்பொழுதும் தன்னுடைய விசேஷத்தை உலக சேவையில் ஈடுப்படுத்துங்கள். என்ன விசேஷத்தை செய்வீர்கள்? எப்பொழுதும் மாஸ்டர் ஞான சூரியன். எப்பொழும் ஓளி மாஸ்டர் வள்ளல். நல்லது அனைவரும் சந்திப்பதற்காக வந்திருக்கிறீர்கள், எப்பொழுதும் சிரேஷ்ட சந்திப்பை செய்து கொண்டே இருங்கள். ஒரு வினாடி கூட சந்திப்பதிலிருந்து வஞ்சிக்கப்பட்டவராக ஆக வேண்டாம். நிரந்தர யோகியின் அனுபவத்தை உறுதி ஆக்கிச் செல்லுங்கள், நல்லது.

 

எப்பொழுதும் ஒரு தந்தையின் அன்பில் இருக்கக் கூடிய அன்பான ஆத்மாக்களுக்கு, ஒவ்வொரு அடியிலும் ஈஸ்வரிய காரியத்தின் சகயோகி ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் சக்திசாலியான ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் வெற்றியின் அதிகாரத்தை அனுபவம் செய்யக்கூடிய வெற்றியடையும் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

பார்டிகளுடன் சந்திப்பு

ஒரு பலம் மற்றும் ஒருவர் மீதுள்ள நம்பிக்கை மூலம் எப்பொழுதும் முன்னேற்றத்தை அடைந்துக் கொண்டேயிருங்கள். எப்பொழுதும் ஒரு தந்தையினுடையவர்கள், ஒரு தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். இதே முயற்சியின் மூலம் முன்னேறிச் சென்று கொண்டேயிருங்கள். சிரேஷ்ட ஞான சொரூபம் ஆவதற்கான அனுபவம் செய்யுங்கள். மகான் யோகி ஆவதற்காக ஆழத்தில் செல்லுங்கள், எந்தளவு ஞானத்தின் ஆழத்தில் செல்வீர்களோ, அந்தளவு விலைமதிக்க முடியாத அனுபவத்தின் இரத்தினங்களின் பிராப்தி செய்வீர்கள். ஒருமித்த புத்தியுள்ளவர்கள் ஆகுங்கள். எங்கு ஒருமித்த நிலையிருக்குமோ, அங்கு அனைத்து பிராப்திகளின் அனுபவம் இருக்கும். அல்பகால பிராப்தியின் பின்னால் செல்லாதீர்கள். அழியாத பிராப்தியை செய்யுங்கள். அழியும் விஷயங்களின் மேல் கவரப்படாதீர்கள். எப்பொழுதும் தன்னை அழியாத பொக்கிஷங்களின் அதிபதி எனப் புரிந்து எல்லைக்கு அப்பாற்பட்ட நிலையில் வாருங்கள். எல்லைக்குட்பட்டதில் வராதீர்கள். எல்லைக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சி மற்றும் எல்லைக்குட்பட்ட கவர்ச்சியின் மகிழ்ச்சி இதில் இரவுக்கும் பகலுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது, எனவே விவேகம் உள்ளவர் ஆகி விவேகத்துடன் காரியம் செய்யுங்கள், மேலும் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை சிரேஷ்டமானதாக ஆக்குங்கள்.

 

தேர்தெடுக்கப்பட்ட விசேஷ அவ்யக்த மகாவாக்கியம் -

அன்பான புத்தியுடைய வெற்றி அடையும் இரத்தினம் ஆகுங்கள்.

 

அன்பான புத்தி என்றால் எப்பொழுதும் அலௌகீக, அவ்யக்த நிலையில் இருக்கும் இறை மனிதர்கள். அவர்களுடைய ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு காரியம் அலௌகீகமாக இருக்கட்டும். பௌதீக தேசம் மற்றும் காரியத்தில் இருந்து கொண்டு தாமரை மலருக்கு சமமாக விலகியும் மேலும் எப்பொழுதும் ஒரு தந்தையின் பிரியமானவராக இருப்பது என்பது தான் அன்பான புத்தியுடையவர் ஆவது. அன்பான புத்தி என்றால் வெற்றி அடைபவர். வினாச காலத்தில் அன்பான புத்தியுடைவர்கள் வெற்றியடைவார்கள். மேலும் வினாசகாலத்தில் விபரீத புத்தியுடையவர்கள் அழிந்து விடுவார்கள் என்று உங்களுடைய சுலோகன் உள்ளது. எப்பொழுது இந்த சுலோகனை மற்றவர்களுக்கு வினாசகாலத்தில் விபரீத புத்தியுடையவர்களாக ஆகாதீர்கள், அன்பான புத்தியுடைவர்களாக ஆகுங்கள் என்று கூறுகிறீர்கள் என்றால் தன்னையும் பாருங்கள் ஒவ்வொரு நேரமும் அன்பான புத்தி இருக்கிறதா? சில நேரம் விபரீத புத்தியுடையவராகவோ ஆவதில்லையே?

 

அன்பான புத்தியுள்ளவர்கள் ஒருபொழுதும் ஸ்ரீமத்திற்கு விரோதமாக ஒரு எண்ணத்தைக் கூட வைக்க முடியாது. ஒருவேளை ஸ்ரீமத்திற்கு புறம்பாக எண்ணம், சொல் மற்றும் செயல் இருக்கிறது என்றால், அவரை அன்பான புத்தியுடையவர் என்று கூறமாட்டோம். எனவே ஒவ்வொரு எண்ணம் மற்றும் சொல் ஸ்ரீமத்படி இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள். அன்பான புத்தி என்றால் புத்தியின் ஈடுபாடு மற்றும் அன்பு ஒரு அன்பிற்குரியவருடன் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும். எப்பொழுது ஒருவருடன் அன்பு இருக்கிறது என்றால் மற்ற எந்தவொரு நபருடனோ மேலும் வைபவங்களுடனோ அன்பு இணைய முடியாது, ஏனென்றால் அன்பான புத்தியுடையவர் என்றால் எப்பொழுதும் பாப்தாதாவை தன் எதிரில் அனுபவம் செய்பவர்கள். அந்தமாதிரி எதிரில் இருப்பவர்கள் ஒருபொழுதும் முகத்தை திருப்பி பிரிந்து செல்ல முடியாது.

 

அன்பான புத்தியுடைவர்களின் வாயிலிருந்து, இதயத்திலிருந்து - உன்னோடு தான் அருந்துவேன், உன்னோடு தான் அமர்ந்திருப்பேன், உன்னோடு தான் பேசுவேன், உன்னிடமிருந்து தான் கேட்பேன், உன்னுடன் தான் அனைத்து சம்மந்தங்களையும் வைத்து நடந்து கொள்வேன், உன்னிடமிருந்து தான் அனைத்து பிராப்திகளையும் செய்வேன் என்ற இந்த வார்த்தைகள் தான் வெளியாகும். அவருடைய கண்கள், அவருடைய வாய் பேசாவிட்டாலும் பேசும். எனவே அந்தமாதிரி விநாச காலத்தில் அன்பான புத்தியுடையவராக ஆகியிருக்கிறேனா அதாவது ஒருவரின் அன்பில் முழ்கியிருந்து ஒரே சீரான நிலையுள்ளவனாக ஆகியிருக்கிறேனா என்று சோதனை செய்யுங்கள்?

 

எப்படி சூரியனை எதிரில் பார்த்தோம் என்றால், சூரியனின் கிரணங்கள் அவசியம் வரும். இதே விதமாக ஒருவேளை ஞான சூரியன் தந்தையின் எதிரில் எப்பொழுதும் இருக்கிறீர்கள் அதாவது உண்மையான அன்பான புத்தி இருக்கிறது என்றால், ஞான சூரியனின் அனைத்து குணங்களின் கிரணங்களை தன்னில் அனுபவம் செய்வீர்கள். அந்தமாதிரி அன்பான புத்தியுடைய குழந்தைகளின் முகத்தில் உள்நோக்குப் பார்வையின் ஜொலிப்பு மேலும் கூடவே சங்கமயுகத்தின் மற்றும் எதிர்காலத்தின் அனைத்து சுயமரியாதையின் பொலிவு இருக்கும்.

 

இந்த உடலின் அழிவு எந்த நேரமும் ஏற்படமுடியும் என்பது ஒருவேளை எப்பொழுதும் நினைவில் இருக்கிறது என்றால், விநாசகாலத்தில் இந்த நினைவின் இருப்பதினால் அன்பான புத்தியுடையவராக இயல்பாக ஆகிவிடுவார்கள். எப்படி விநாசகாலம் வருகிறதென்றால் அஞ்ஞானிகளும் தந்தையை நினைவு செய்வதற்கான முயற்சியை அவசியம் செய்வார்கள், ஆனால் அறிமுகமின்றி அன்பு இணைய முடியவதில்லை. ஒருவேளை இது இறுதி நேரம் என்பதை நினைவில் வைத்தீர்கள் என்றால், இந்த நினைவு இருப்பதினால் வேறு எந்த நினைவும் வராது.

 

யார் எப்பொழுதும் அன்பான புத்தியுடைவராக இருக்கிறாரோ, அவருடைய மனதில் கூட ஸ்ரீமத்திற்கு புறம்பான வீணான எண்ணம் மற்றும் தீய எண்ணம் வர முடியாது. அந்தமாதிரி அன்பான புத்தியுடையவர்கள் தான் வெற்றி இரத்தினம் ஆகிறார்கள். மேலும் ஏதாவதொரு தேகதாரி மேல் எந்த விதமான அன்பும் இருக்கவேண்டாம், இல்லையென்றால், விபரீத புத்தியுடைவர் என்ற பட்டியல் வந்துவிடுவீர்கள். எந்தக் குழந்தைகள் அன்பான புத்தியுடையவர்கள் ஆகி எப்பொழுதும் அன்பின் உறவை வைத்து  டந்துக்கொள் கிறார்களோ, அவர்களுக்கு முழு உலகத்தில் அனைத்து சுகங்களின் பிராப்தி சதா காலத்திற்கும் இருக்கும். அந்தமாதிரி அன்பு வைத்து நடந்துகொள்ளும் குழந்தைகளின் மகிமையை பாப்தாதா இரவு பகலாகப் பாடுகிறார். மற்ற அனைவரையும் முக்திதாமத்தில் அமரவைத்து விட்டு, அன்பு வைத்து நடந்துகொள்ளும் குழந்தைகளுக்கு உலக இராஜ பாக்கியத்தை பிராப்தி செய்விக்கிறார்.

 

ஒரு தந்தை மேல் உள்ளப் பூர்வமான உண்மையான அன்பு இருக்கிறது என்றால், மாயா ஒருபொழுதும் தொந்தரவு செய்யாது. அதனுடைய அழிவு ஏற்பட்டு விடும். ஆனால் ஒருவேளை உண்மையான உள்ளத்தின் அன்பு இல்லை, தந்தையின் கையை மட்டும் பிடித்திருக்கிறார், துணையை வைத்துக்கொள்ளவில்லையென்றால் மாயா மூலம் காயம் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். எப்பொழுது பழைய ஜென்மத்தில் இறந்து, புதிய பிறவில் இருக்கிறீர்கள், புதிய ஜென்மம், புதிய சம்ஸ்காரங்களை தாரணை செய்து இருக்கிறீர்கள் என்றால், பழைய சம்ஸ்காரம் என்ற ஆடைகள் மேல் ஏன் அன்பு இருக்கிறது? எந்த ஒன்று தந்தைக்கு பிரியமானதாக இல்லையோ, அது ஏன் குழந்தைகளுக்கு பிரியமானதாக இருக்கிறது? எனவே அன்பான புத்தியுடைவர் ஆகி உள்ளே உள்ள பலஹீனம், குறைகள், பலமின்மை மேலும் மென்மைத் தன்மையின் பழைய கணக்கை சதா காலத்திற்காக முடித்து விடுங்கள். இரத்தினம் பதித்த ஆடையை விட்டு விட்டு, இற்றுப்போன ஆடை மேல் அன்பு வைக்காதீர்கள்.

 

சில குழந்தைகள் அன்பை இணைத்து விடுகிறார்கள், ஆனால் அதன் படி நடப்பதில் வரிசைக்கிரடமாக இருக்கிறார்கள். அன்பை வைத்து நடப்பதில் வரிசை மாறி விடுகிறது. இலட்சியம் ஒன்றாக இருக்கிறது, இலட்சணம் வேறு ஒன்றாக இருக்கிறது. ஏதாவது ஒரு சம்மந்தத்தை வைத்து நடந்துக்கொள்வதில் ஒருவேளை குறை இருக்கிறது என்றால், உதாரணமாக 75% சம்மந்தம் தந்தையுடன் இருக்கிறது, மேலும் 25% சம்மந்தம் ஏதோ ஒரு ஆத்மாவின் மேல் இருக்கிறது என்றால், தந்தை மேல் அன்பு வைத்து நடந்துக்கொள்ளும் பட்டியலில் வரமுடியாது. கடமையை நிறைவேற்றுவது என்றால் கடமையை நிறைவேற்றுவது தான். எந்தமாதிரியான சூழ்நிலை இருந்தாலும், அது மனதின், உடலின் அல்லது தொடர்பினுடையதாக இருந்தாலும், ஆனால் எண்ணத்தில் கூட எந்தவொரு ஆத்மாவும் நினைவில் வரவேண்டாம். எண்ணத்தில் கூட ஏதாவதொரு ஆத்மாவின் நினைவு வந்ததது என்றால், அந்த வினாடிக்கும் கணக்கு உருவாகிவிடுகிறது. இது கர்மங்களின் ஆழமான விளைவுகள்.

 

சிற்சில குழந்தைகள் இதுவரையிலும் அன்பை வைப்பதிலேயே ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள், எனவே யோகா செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்கள், யாருக்கு சிறிது நேரம் யோகா செய்ய முடிகிறது, பிறகு துண்டிக்கப்பட்டு விடுகிறது என்றால், அந்தமாதிரியானவர்களை அன்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்கள் என்று கூறுவோம். யார் அன்பை வைத்து நடந்துக்கொள்பவர்களாக இருப்பார்களோ, அவர்கள் மூழ்கி இருப்பவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு தேகம் மற்றும் தேகத்தின் உறவினர்களின் உணர்வு மறந்த நிலை இருக்கும், எனவே நீங்களும் தந்தையுடன் அந்தமாதிரி அன்பை வைத்து நடந்துக்கொண்டீர்கள் என்றால், பிறகு தேகம் மற்றும் தேகத்தின் உறவினர்கள் நினைவில் வரமுடியாது.

 

வரதானம்:

நேரம் மற்றும் எண்ணம் என்ற பொக்கிஷங்களின் மேல் கவனம் கொடுத்து சேமிப்புக் கணக்கை அதிகரிக்கக் கூடிய பல கோடி மடங்கு செல்வந்தன் ஆகுக.

 

பொக்கிஷங்களோ அதிகம் இருக்கின்றன, ஆனால் நேரம் மற்றும் எண்ணம் என்ற இந்த இரண்டு பொக்கிஷங்கள் மேல் கவனம் கொடுங்கள். ஒவ்வொரு நேரமும் எண்ணம் நல்லதாக மற்றும் சிரேஷ்டமானதாக இருக்கிறதென்றால் சேமிப்புக் கணக்கு அதிகரித்துக்கொண்டேயிருக்கும். இந்த நேரம் ஒன்றை சேமிப்பு செய்தீர்கள் என்றால் பலமடங்கு சேமிப்பு கிடைக்கும், இது கணக்கு. ஒன்றிற்கு பலமடங்காக ஆக்கிக் கொடுக்கும் வங்கி இது, எனவே என்ன ஆனாலும் சரி, தியாகம் செய்ய வேண்டியதாக இருந்தாலும் சரி, தபஸ்யா செய்ய வேண்டும் என்றாலும் சரி, பணிவானவர் ஆகவேண்டும் என்றாலும் சரி, என்ன ஆனாலும் சரி இந்த இரண்டு விஷயங்களின் மேல் கவனம் இருக்கிறது என்றால் பலகோடி மடங்கு செல்வந்தனாக ஆகியே விடுவீர்கள்.

 

சுலோகன்:

மனோ பலத்தினால் சேவை செய்தீர்கள் என்றால் அதற்கான பிராப்தி பலமடங்கு அதிகம் கிடைக்கும்.

 

பிரம்மாபாபாவிற்கு சமமாக ஆவதற்கான விசேஷ முயற்சி

 எப்படி பிரம்மா பாபா நினைவின் சக்தி மற்றும் அவ்யக்த சக்தி மூலமாக மனம் மற்றும் புத்தி இரண்டையும் கட்டுபடுத்தினார், சக்திசாலியான பிரேக் மூலமாக மனம் மற்றும் புத்தியை கட்டுப்படுத்தி விதை ரூப நிலையை அனுபவம் செய்தார். அந்தமாதிரி குழந்தைகளாகிய நீங்களும் பிரேக் போடுவதற்கும் மேலும் வளைப்பதற்கான சக்தியை தாரணை செய்து விட்டீர்கள் என்றால் புத்தியின் சக்தி வீணாக செல்லாது. எந்தளவு சக்தி சேமிப்பு ஆகுமோ, அந்தளவே பகுத்தறியும், நிர்ணயம் செய்வதற்கான சக்தி அதிகரிக்கும்.

 

ஓம்சாந்தி