03.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! அபு அனைத்தையும் விடப் பெரிய தீர்த்த ஸ்தலமாகும் என்ற இந்த இரகசியத்தை அனைவருக்கும் சொல்லுங்கள். சுயம் பகவான் இங்கிருந்து அனைவருக்கும் சத்கதி அளித்துள்ளார்.

 

கேள்வி :

எந்த ஒரு விஷயத்தை மனிதர்கள் புரிந்து கொள்வார்களானால் இங்கே பெருங்கூட்டம் கூடி விடும்?

 

பதில்:

பாபா எந்த இராஜயோகத்தைக் கற்பித்திருந்தாரோ, அதை இப்போது மீண்டும் கற்பித்துக் கொண்டிருக்கிறார், இவர் சர்வவியாபி அல்ல. இந்த முக்கியமான விஷயத்தை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாபா இச்சமயம் அபுவில் வந்து உலகத்தில் சாந்தியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். அதனுடைய ஜட நினைவுச் சின்னமாக தில்வாடா கோவிலும் உள்ளது. ஆதி தேவர் இங்கே சைதன்யத்தில் அமர்ந்துள்ளார். இது சைதன்ய தில்வாடா கோவிலாகும். இந்த விஷயத்தைப் புரிந்து கொள்வார்களானால் அபுவுக்கு மகிமை ஏற்பட்டு விடும். மேலும் இங்கே பெருங்கூட்டம் கூடிவிடும். அபுவின் பெயர் விளங்குமானால் இங்கே அநேகர் வந்து விடுவார்கள்.

 

ஓம் சாந்தி.

குழந்தைகளுக்கு யோகம் செய்வது கற்பிக்கப்பட்டது. மற்ற அனைத்து இடங்களிலும் அனைவரும் தாமாகவே கற்றுக் கொள்கின்றனர். கற்றுக் கொடுக்கும் தந்தை இருப்பதில்லை. ஒருவர் மற்றவருக்கு தாங்களாகவே கற்பிக்கின்றனர். இங்கோ தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறார். இரவு-பகலுக்குள்ள வேறுபாடு! அங்கோ அநேக உற்றார்-உறவினர்களின் நினைவு வந்து கொண்டே இருக்கும். இந்த அளவுக்கு நினைவு செய்ய முடியாது. அதனால் ஆத்ம அபிமானி ஆவது கஷ்டமாக உள்ளது. இங்கோ நீங்கள் மிக விரைவாக ஆத்ம அபிமானி ஆக வேண்டும். ஆனால் அநேகருக்கு எதுவும் தெரிவதில்லை. சிவபாபா நமக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார். நமக்குச் சொல்கிறார், தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்று. எந்த தந்தை இவருக்குள் (பிரம்மா) வீற்றிருக்கிறாரோ, அவர் இங்கே அமர்ந்துள்ளார். அவரை நினைவு செய்ய வேண்டியுள்ளது. அநேகக் குழந்தைகளுக்கு சிவபாபா பிரம்மாவின் உடல் மூலம் நமக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற நிச்சயமே இல்லை. எப்படி மற்றவர்கள் சொல்கிறார்களோ, நாங்கள் எப்படி நம்புவது என்று - அதுபோல் சொல்பவர்கள் இங்கேயும் உள்ளனர். முழு நிச்சயம் இருக்குமானால் மிகுந்த அன்போடு பாபாவை நினைவு செய்து-செய்தே தனக்குள் சக்தியை நிரப்பிக் கொண்டு மிகுந்த சேவை செய்வார்கள். ஏனென்றால் முழு உலகத்தையும் தூய்மையாக்க வேண்டும் இல்லையா? யோகத்திலும் குறைவாக உள்ளனர் என்றால் ஞானத்திலும் குறைவாக உள்ளனர். கேட்கவோ செய்கின்றனர். ஆனால் தாரணை ஆவதில்லை. தாரணை ஆகிறதென்றால் பிறகு மற்றவர்களையும் தாரணை செய்ய வைப்பார்கள். பாபா புரிய வைத்திருந்தார்- உலகத்திலுள்ள மனிதர்கள் மகாநாடு முதலியன நடத்திக் கொண்டே இருக்கின்றனர், உலகத்தில் சாந்தி நிலவ வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் உலகத்தில் சாந்தி எப்போது இருந்தது, எவ்விதமாக உருவானது என்பது பற்றி எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. எந்த விதமான சாந்தி இருந்ததோ, அது தான் வேண்டும் அல்லவா? இதையோ குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிவீர்கள், உலகத்தில் சுகம்-சாந்தியின் ஸ்தாபனை இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாபா வந்து விட்டார். எப்படி இந்த தில்வாடா கோவில் உள்ளது, ஆதி தேவரும் இருக்கிறார். மேலே உலகத்தில் சாந்தியின் காட்சியும் உள்ளது. எங்காவது மகாநாடு முதலியவற்றில் உங்களை அழைக்கிறார்கள் என்றால் நீங்கள் கேளுங்கள் - உலகத்தில் எப்படிபட்ட சாந்தி வேண்டும்? இந்த லட்சுமி-நாராயணரின் இராஜ்யத்தில் உலகத்தில் சாந்தி இருந்தது. அதுவே தில்வாடா கோவில் முழு நினைவுச் சின்னமாக உள்ளது. உலகத்தில் சாந்தியின் உதாரணமோ வேண்டும் தானே? இலட்சுமி-நாராயணரின் சித்திரத்தின் மூலம் கூடப் புரிந்து கொள்வதில்லை. கல்புத்தி அல்லவா? ஆகவே அவர்களுக்குச் சொல்ல வேண்டும், நாங்கள் சொல்ல முடியும், உலகத்தில் சாந்தியின் உதாரணம் ஒன்று இந்த லட்சுமி-நாராயணர் உள்ளனர். மேலும் பிறகு இவர்களின் ராஜதானியையும் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் அதையும் தில்வாடா கோவிலுக்குப் போய் பாருங்கள். மாடல் தான் காட்டப் படும் இல்லையா? அதைப்போய் அபுவில் பாருங்கள். கோவிலைக் கட்டியிருப்பவர்கள் கூட தாங்களே இதை அறிந்திருக்கவில்லை. அவர்கள் தான் இந்த நினைவுச் சின்னத்தை உருவாக்கி யிருக்கிறார்கள். அதற்கு தில்வாடா கோவில் எனப் பெயரிட்டுள்ளனர். ஆதி தேவரையும் கூட அமர்த்தியுள்ளனர். மேலே சொர்க்கத்தையும் காட்டியுள்ளனர். எப்படி அது ஜடமாக உள்ளதோ, அதைப்போல் நீங்கள் சைதன்யமாக இருக்கிறீர்கள். இதற்கு சைத்தன்ய தில்வாடா கோவில் எனப் பெயரிட முடியும். ஆனால் எவ்வளவு பெரிய கூட்டம் சேர்ந்துவிடும் எனத் தெரியாது. இது பிறகு என்ன என்று மனிதர்களே குழம்பிப் போவார்கள். புரிய வைப்பதில் மிகுந்த முயற்சி தேவைப் படுகின்றது. அநேகக் குழந்தைகளும் கூடப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். வாசலில் அருகிலேயே கூட அமர்ந்திருக்கலாம்.ஆனால் எதுவும் புரிந்து கொள்ளவில்லை. கண்காட்சிக்குப் பல விதமான மனிதர்கள் செல்கின்றனர். ஏராளமான மடங்கள் -வழிமுறைகள் உள்ளன. வைஷ்ணவ தர்மத்தினர் கூட உள்ளனர். வைஷ்ணவ தர்மத்தின் அர்த்தம் கூட அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. கிருஷ்ணரின் இராஜ்யம் எங்கே உள்ளது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது. கிருஷ்ணரின் இராஜ்யம் கூட சொர்க்கம், வைகுண்டம் எனச் சொல்லப் படுகின்றது.

 

பாபா சொல்லியிருக்கிறார், எங்கே அழைப்பு வருகிறதோ, அங்கே சென்று நீங்கள் புரிய வையுங்கள்-உலகத்தில் சாந்தி எப்போது இருந்தது? இந்த அபு அனைத்திலும் உயர்ந்ததிலும் உயர்ந்த தீர்த்த ஸ்தலம். ஏனென்றால் இங்கே பாபா உலகிற்கு சத்கதி அளித்துக் கொண்டிருக்கிறார். அபு மலை மீது அதன் உதாரணம் பார்க்க வேண்டும் என்றால் போய் தில்வாடா கோவிலைப் பாருங்கள். உலகத்தில் சாந்தி எப்படி ஸ்தாபனை செய்யப்பட்டது - அதனுடைய உதாரணம். இதைக் கேட்டு அதிகக் குஷி அடைவார்கள். ஜைனர்களும் கூடக் குஷி அடைவார்கள். நீங்கள் சொல்வீர்கள், இந்தப் பிரஜாபிதா பிரம்மா நம்முடைய தந்தை ஆதி தேவர். நீங்கள் இதைப் புரிய வைக்கிறீர்கள். பிறகும் புரிந்து கொள்வதில்லை. பிரம்மாகுமாரிகள் என்ன சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை எனச் சொல்கின்றனர். ஆகவே குழந்தைகள் நீங்கள் அபுவுக்கு மிக உயர்ந்த மகிமை செய்து புரிய வைக்க வேண்டும். அபு பெரியதிலும் பெரியதொரு தீர்த்த ஸ்தலமாகும். பாம்பேயிலும் கூட நீங்கள் புரிய வைக்க முடியும் - அபு மலை பெரியதிலும் பெரிய தீர்த்த ஸ்தலம் என்று. ஏனென்றால் பரமபிதா பரமாத்மா அபுவில் வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்துள்ளார். எப்படி சொர்க்கத்தின் படைப்பைப் படைத்துள்ளார் - அந்த சொர்க்கத்தின் மற்றும் ஆதி தேவரின் மாதிரிகள் அனைத்தும் அபுவில் உள்ளன. அதை எந்த ஒரு மனிதரும் நாங்கள் புரிந்து கொள்வதில்லை. இப்போது அறிந்து கொண்டோம். உங்களுக்குத் தெரியாது. அதனால் உங்களுக்குப் புரிய வைக்கிறோம். முதலிலோ நீங்கள் கேளுங்கள், உலகத்தில் எந்த விதமான சாந்தியை விரும்புகிறீர்கள்? எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? உலகத்தில் சாந்தியோ இவர்களுடைய (லட்சுமி-நாராயணர்) இராஜ்யத்தில் இருந்தது. ஒரே ஒரு ஆதிசநாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது. இவர்களுடைய குலத்தின் இராஜ்யம் இருந்தது. நீங்கள் வருவீர்களானால் இவர்களுடைய ராஜதானியின் மாதிரி (மாடல்) உங்களுக்குக் காட்டுவோம். இதுவோ பழைய தூய்மை இல்லாத உலகம். புதிய உலகம் என்றோ இதைச் சொல்ல மாட்டார்கள் இல்லையா? புது உலகத்தின் மாதிரியோ இங்கே உள்ளது. புது உலகம் இப்போது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அதனால் சொல்கிறீர்கள். அனைவரும் அறிந்திருக்கவில்லை. சொல்வதுமில்லை, புரிந்து கொள்வதுமில்லை. விஷயம் மிகவும் சுலபமானது. மேலே சொர்க்கத்தின் ராஜதானி உள்ளது. கீழே ஆதி தேவர் அமர்ந்துள்ளார். அவரை ஆதாம் எனவும் சொல்கின்றனர். அவர் கிரேட்-கிரேட் கிராண்ட் ஃபாதர். இது போல் நீங்கள் மகிமையைச் சொல்வீர்களானால் கேட்டுக் குஷியாகி விடுவார்கள். மிகவும் சரியாக உள்ளது. சொல்லுங்கள், நீங்கள் கிருஷ்ணருக்கு மகிமை செய்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு எதுவும் தெரியாது. கிருஷ்ணரோ வைகுண்டத்தின் மகாராஜா, உலகத்தின் எஜமானராக இருந்தார். அவருடைய மாதிரி பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் அபுவுக்கு வாருங்கள். உங்களுக்கு வைகுண்டத்தின் மாதிரியைக் காட்டுகிறோம். எப்படி புருஷோத்தம சங்கமயுகத்தில் ராஜயோகம் கற்றுக் கொள்கின்றனர்.அதன் மூலம் பிறகு உலகத்தின் எஜமானராக ஆகியிருக்கிறார்கள். என்பதினுடைய மாதிரியையும் காட்டுகிறோம். சங்கமயுகத்தின் தபஸ்யாவையும் காட்டுகிறோம். நடை முறையில் என்ன நடைபெற்றதோ, அதன் நினைவுச் சின்னத்தைக் காட்டுகிறோம். சிவபாபா, லட்சுமி- நாராயணரின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்தார். அவர்களுடைய சித்திரமும் அம்பாளின் கோவிலும் கூட உள்ளது. அம்பாளுக்கு ஒன்றும் 10-20 புஜங்கள் கிடையாது. புஜங்களோ இரண்டு தான் இருக்கும். நீங்கள் வந்தால் உங்களுக்குக் காட்டுகிறோம். வைகுண்டத்தையும் கூட அபுவில் காட்டுகிறோம். அபுவில் தான் பாபா வந்து முழு உலகத்தையும் சொர்க்கமாக ஆக்கியுள்ளார். சத்கதி அளித்துள்ளார். அபு அனைத்திலும் பெரிய தீர்த்த ஸ்தலமாகும். அனைத்து தர்மத்தினர்க்கும் சத்கதி அளிப்பவர் ஒரு பாபா மட்டுமே! அவருடைய நினைவுச் சின்னத்தை உங்களுக்குக் காட்டுகிறோம், வாருங்கள் அபுவிற்கு. அபுவுக்கோ நீங்கள் அதிக மகிமை செய்ய முடியும். உங்களுக்கு அனைத்து நினைவுச் சின்னங்களையும் காட்டுகிறோம். கிறிஸ்தவர்களும் கூட அறிந்து கொள்ள விரும்புகின்றனர் - புராதன பாரதத்தின் இராஜயோகத்தை யார் கற்றுத் தந்தார், அது என்ன விவரம் என்று. அவர்களுக்குச் சொல்லுங்கள், அபுவுக்கு வாருங்கள் காட்டுகிறோம் என்று. வைகுண்டமும் கூட கூரை மீது முழுமையாகச் சரியாக உருவாக்கப் பட்டுள்ளன. நீங்கள் அதுபோல் செய்ய முடியாது. ஆக, இதை நன்றாகச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அலைந்து கஷ்டப் படுகின்றனர். அவர்களும் வந்து புரிந்து கொள்ளலாம். உங்களுடைய அபுவின் பெயர் புகழ் பெற்று விட்டால் அநேகர் வந்து விடுவார்கள். அபு மிகவும் புகழ் பெற்று விடும். உலகத்தில் சாந்தி எப்படி ஏற்படும் என்று யாராவது கேட்கலாம். சம்மேளனம் முதலியவற்றில் அழைப்பிதழ் கொடுத்தால் அவர்களிடம் கேட்க வேண்டும் - உலகத்தில் சாந்தி எப்போது இருந்தது என்பதை அறிவீர்களா? உலகத்தில் சாந்தி எப்படி இருந்தது? வாருங்கள், நாங்கள் அதைப் புரிய வைக்கிறோம்.. மாடல்கள் முதலிய அனைத்தையும் காண்பிக்கிறோம். இது போன்ற மாடல் வேறெங்கிலும் கிடையாது. அபு தான் அனைத்திலும் பெரியதிலும் பெரிய தீர்த்த ஸ்தலமாகும். அதில் பாபா வந்து உலகத்தில் சாந்தியை, அனைவருக்கும் சத்கதியை அளிக்கின்றார். இவ்விஷயங்களை வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. உங்களிலும் கூட நம்பர்வார் உள்ளனர். பெரிய மகாரதிகளாக, மியுசியம் முதயவற்றைப் பராமரிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் சரியானபடி யாருக்காவது புரிய வைக்கிறார்களா, இல்லையா என்பதை பாபாவோ அறிந்திருக்கிறார் இல்லையா? பாபா அனைத்தையும் அறிந்துள்ளார். யாராக இருந்தாலும் எங்கே இருந்தாலும் அவர்களைப் புரிந்து கொண்டிருக்கிறார். யார்-யார் புருஷார்த்தம் செய்கிறார்கள், என்ன பதவி பெறுவார்கள்? இச்சமயம் இறந்து போனால் எந்த ஒரு பதவியும் பெற முடியாது. நினைவு யாத்திரையின் முயற்சியை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. பாபா தினந்தோறும் புதுப்புது விஷயங்களைப் புரிய வைக்கிறார். இதுபோல் புரிய வைத்து அழைத்து வாருங்கள். இங்கோ நினைவுச் சின்னம் நிரந்தரமாக உள்ளது.

 

பாபா சொல்கிறார், நானும் இங்கே இருக்கிறேன். ஆதி தேவரும் இங்கே இருக்கிறார். வைகுண்டமும் இங்கே உள்ளது. அபுவுக்கு மிகப்பெரிய மகிமை ஆகி விடும். அபு என்னவாக ஆகிவிடும் என்பது தெரியாது! எப்படிப் பாருங்கள், குருசேத்திரத்தை நன்றாக ஆக்குவதற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கின்றனர். எவ்வளவு ஏராளமான மனிதர்கள் போய் அங்கே கூடுகின்றனர்! அவ்வளவு துர்நாற்றமும் அழுக்கும் சேர்ந்து விடுகின்றது. கேட்கவே வேண்டாம். எவ்வளவு பெருங்கூட்டம் சேர்ந்து விடுகிறது! செய்தி வந்தது-பஜன் மண்டலியின் ஒரு பஸ் மூழ்கிப் போனது என்று. இவையெல்லாம் துக்கம் தான் இல்லையா? அகால மரணம் நிகழ்ந்து கொண்டே உள்ளது. அங்கோ (சத்யுகத்தில்) இதுபோல் எதுவும் நடைபெறாது. இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் புரிய வைக்க முடியும். உரையாடுபவர்கள் மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும். பாபா ஞானத்தைப் பம்ப் செய்து (ஊட்டிக்) கொண்டிருக்கிறார். புத்தியில் பதிய வைத்துக் கொண்டிருக்கிறார். உலகம் இந்த விஷயங்களையெல்லாம் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் புது உலகைச் சுற்றிப் பார்க்கச் செல்வதாக நினைக்கின்றனர். பாபா சொல்கிறார், இந்த உலகம் பழையதாகவே ஆகி விட்டது. அவர்கள் சொல்கின்றனர், இன்னும் 40,000 வருடங்கள் உள்ளன என்று. நீங்களோ சொல்கிறீர்கள், முழு கல்பமே 5000 வருடங்கள் தான் என்று. பழைய உலகத்திற்கோ மரணம் எதிரிலேயே உள்ளது. இது காரிருள் எனச் சொல்லப்படுகின்றது. கும்பகர்ணனின் உறக்கத்தில் உறங்கிப் போயுள்ளனர். கும்பகர்ணன் அரைக்கல்பம் உறங்கினான். அரைக்கல்பம் விழித்திருந்தான். நீங்கள் குமபகர்ணர்களாக இருந்தீர்கள். இந்த விளையாட்டு மிக அற்புதமானது. இவ்விஷயங்களை அனைவராலும் புரிந்து கொள்ள இயலாது. அநேகரோ இப்படியே ஏதோ பாவனையில் வந்து விடுகின்றனர். இவர்களெல்லாம் செல்கின்றனர் என்பதைக் கேட்டால் வந்துவிடுகின்றனர். அவர்களிடம் சொல்கின்றனர், நாங்கள் சிவபாபாவிடம் செல்கிறோம், சிவபாபா சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். அந்த எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதன் மூலம் எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கின்றது. அவ்வளவு தான். ஆக, அவர்களும் கூட சொல்கின்றனர், சிவபாபா, நாங்கள் உங்களுடைய குழந்தைகள். உங்களிடமிருந்து அவசியம் ஆஸ்தியை அடைவோம். அவ்வளவு தான். துன்பமெல்லாம் நீங்கியது. பாவனையின் பலன் பாருங்கள், எவ்வளவு கிடைக்கின்றது! பக்தி மார்க்கத்திலோ அல்பகால சுகம். இங்கே குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கின்றது. அதுவோ பாவனையினுடையது, அல்பகால சுகத்தின் பலன். இங்கே உங்களுக்குக் கிடைத்துள்ளது 21 ஜென்மங்களுக்கான பாவனையின் பலன். மற்றப்படி சாட்சாத்காரம் முதலியவற்றில் எதுவுமே கிடையாது. சிலர் சொல்கின்றனர், சாட்சாத்காரம் கிடைக்க வேண்டும் என்று. அப்போது பாபா புரிந்து கொள்கிறார், இவர்கள் எதையுமே புரிந்து கொள்ளவில்லை என்று. சாட்சாத்காரம் வேண்டும் என்றால் போய் தீவிர பக்தி செய்யுங்கள். அதில் எதுவும் கிடைப்பதில்லை. அடுத்த ஜென்மத்தில் கொஞ்சம் நன்றாக ஆகி விடுவார்கள். அவ்வளவு தான். நல்ல பக்தராக இருந்தால் நல்ல ஜென்மம் கிடைக்கும். இந்த விஷயமே தனிப்பட்டது. இந்தப் பழைய உலகம் மாறிக் கொண்டுள்ளது. பாபா தான் உலகத்தை மாற்றுபவர். நினைவுச் சின்னம் இருக்கின்றது இல்லையா? மிகப் பழைய கோவில் இது. கொஞ்சம் உடைந்து விடுமானால் பிறகு மராமத்து (ரிப்பேர்) வேலை செய்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் அந்த அழகோ குறைந்து கொண்டே தான் செல்கிறது. இவை அனைத்துமே அழியக்கூடிய பொருள்கள். ஆக, பாபா புரிய வைக்கிறார் - குழந்தைகளே, உங்களுடைய நன்மைக்காக தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகி விடும். படிப்பின் விஷயம் இது. மற்றப்படி மதுராவில் மதுபன், குஞ்ஜ் (குறுகலான) தெரு முதலியவற்றை அமர்ந்து உருவாக்கி இருக்கின்றனர். அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. கோப-கோபியரின் விளையாட்டு என்பதும் கிடையாது. இதைப் புரிய வைப்பதில் அதிக முயற்சி செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு பாயின்ட்டையும் அமர்ந்து நல்லபடியாகப் புரிய வையுங்கள். மகாநாடு முதலியவற்றிலும் கூட யோகம் (ஆத்ம ஞானம்) உள்ளவர்கள் வேண்டும். வாளில் கூர்மை இல்லை என்றால் யாருடைய புத்தியிலும் ஞானம் பதியாது. அதனால் பாபாவும் சொல்கிறார், இப்போது இன்னும் தாமதமாகும். இப்போது பரமாத்மா சர்வவியாபி இல்லை என்பதை ஏற்றுக் கொள்வார்களானால் மக்கள் பெருங்கூட்டமாகக் கூடி விடுவார்கள். ஆனால் இப்போது அதற்கான நேரம் இல்லை. ஒரு விஷயத்தை முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டும், அதாவது இராஜயோகத்தை பாபா கற்பித்திருந்தார். அதை இப்போது மீண்டும் கற்பித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு பதிலாக அவரது (கிருஷ்ணர்) பெயரைப் போட்டு விட்டார்கள், அவர் இப்போது கருப்பாக ஆகிவிட்டுள்ளார். எவ்வளவு பெரிய பிழை! இதனால் தான் உங்களுடைய படகானது மூழ்கி போய் விட்டது.

 

இப்போது பாபா புரிய வைக்கிறார் - இந்தப் படிப்பு வருமானத்திற்கான ஆதாரமாகும். சுயம் தந்தை மனிதர்களை தேவதையாக ஆக்குவதற்கு படிப்பு சொல்லித் தருவதற்காக வருகின்றார். இதில் தூய்மையாகவும் அவசியம் ஆக வேண்டும். தெய்விக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். நம்பாவாரோ இருக்கவே செய்கின்றனர். சென்டர்கள் அனைத்திலுமே நம்பர்வார் உள்ளனர். இது முழு ராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சாதாரண விஷயம் கிடையாது. சொர்க்கம் எனச் சொல்லப்படுவது சத்யுகம் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். ஆனால் அங்குள்ள இராஜ்யம் எப்படி நடைபெறுகின்றது, மற்றும் தேவதைகளின் கூட்டத்தைப் பார்க்க வேண்டுமானால் அபுவுக்கு வாருங்கள். மேலே கூரையில் சொர்க்கம் காணப்படுவதாக வேறு எங்குமே கிடையாது. அஜ்மீரில் சொர்க்கத்தின் மாடல் இருந்தாலும் கூட அது வேறு விஷயம். இங்கோ ஆதி தேவரும் கூட இருக்கிறார் அல்லவா? சத்யுகத்தை யார் எப்படி ஸ்தாபனை செய்தார்? இதுவோ மிகச் சரியான நினைவுச் சின்னமாக உள்ளது. இப்போது நாம் சைதன்ய தில்வாடா என்ற பெயரை எழுத முடியாது. எப்போது மனிதர்கள் தாங்களே புரிந்து கொண்டு விடுவார்களோ, அப்போது தாங்களாகவே சொல்வார்கள், நீங்கள் எழுதுங்கள் என்று. இப்போது அல்ல. இப்போதோ பாருங்கள், கொஞ்சம் பிரச்சினை வந்தாலே என்ன செய்து விடுகிறார்கள்! கோபக்காரர்கள் அதிகம் உள்ளனர். தேக அபிமானம் உள்ளது இல்லையா? ஆத்ம அபிமானியாகவோ யாரும் இருக்க முடியாது, குழந்தைகளாகிய உங்களைத் தவிர. முயற்சி செய்ய வேண்டும். அதிர்ஷ்டத்தில் இருந்தால் நடக்கட்டும் என்று இருந்து விடக் கூடாது. முயற்சி செய்பவர்கள் இதுபோல் சொல்ல மாட்டார்கள். அவர்களோ முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். பிறகு ஃபெயிலாகி விட்டால் அப்போது சொல்வார்கள், அதிர்ஷ்டத்தில் எது இருந்ததோ, அது நடந்தது என்று. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) ஆத்ம அபிமானி ஆவதற்கான முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். எது அதிர்ஷ்டத்தில் இருக்குமோ, அது நடக்கட்டும் என்று ஒருபோதும் யோசிக்கக் கூடாது. புத்திசாலிகளாக ஆக வேண்டும்.

 

2) ஞானத்தைக் கேட்டு அதை சொரூபத்தில் (நடைமுறையில்) கொண்டுவர வேண்டும். நினைவின் கூர்மையை தாரணை செய்து பிறகு சேவை செய்ய வேண்டும். அனைவருக்கும் அபு என்ற மகான் தீர்த்த ஸ்தலத்தின் மகிமையைச் சொல்ல வேண்டும்.

 

வரதானம்:

தந்தையுடன் கூட இருந்து கொண்டே அவருக்கு சமானமாக ஆகி விடக் கூடிய அனைத்துக் கவர்ச்சிகளின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர் ஆவீர்களாக.

 

எங்கு தந்தையின் நினைவு இருக்கிறதோ, அதாவது தந்தையின் துணை இருக்கிறதோ, அங்கு தேக உணர்வின் எண்ணம் ஏற்பட முடியாது. தந்தையுடன் கூட அல்லது பக்கத்தில் இருப்பவர்கள் உலகத்தின் விகாரத்தின் எண்ண அதிர்வலை அல்லது பிற கவர்ச்சியின் தாக்கத்திலிருந்து தூர சென்று விடுகிறார்கள். இது போல கூட இருப்பவர்கள், கூட இருந்து கொண்டே தந்தைக்குச் சமானமாக ஆகி விடுகிறார்கள். எப்படி தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவராக இருக்கிறாரோ, அதே போல குழந்தைகளின் நிலைகூட உயர்ந்ததாக ஆகி விடுகிறது. கீழ் தரமான எந்த விஷயங்களும் கூட அவர்கள் மீது தனது தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

 

சுலோகன்:

மனம் மற்றும் புத்தி தனது கட்டுப்பாட்டில் இருந்தது என்றால் அசரீரி ஆவது சுலபமாக ஆகி விடும்.

 

ஓம்சாந்தி