28.04.2019                           காலை முரளி      ஓம் சாந்தி                       அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           19.11.1984           மதுபன்


 

எல்லைக்கப்பாற்ப்பட்ட வைராக்கிய உணர்வின் மூலம் சித்திகளின் (வெற்றிகளின்) பிராப்தி

 

இன்று உலகைப் படைப்பவர் தன்னுடைய சிரேஷ்ட படைப்பை மற்றும் படைப்பின் பூர்வஜ் ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாலாபுறங்களின் பூர்வஜ் மற்றும் பூஜைக்குரிய ஆத்மாக்கள் பாப்தாதாவின் எதிரில் இருக்கிறார்கள். பூர்வஜ் ஆத்மாக்களின் ஆதாரத்தினால் உலகின் அனைத்து ஆத்மாக்களுக்கும் சக்தி மற்றும் சாந்தி பிராப்தி ஆகிக் கொண்டிருக்கிறது. மேலும் ஆகவும் செய்யும். அனேக ஆத்மாக்கள், பூர்வஜ் பூஜைக்குரிய ஆத்மாக்களை சாந்தி தேவா, (வழங்கும்) சக்தி தேவா என்று கூறி நினைவு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரியான நேரத்தில் சாந்தி தேவா ஆத்மாக்கள் மாஸ்டர் சாந்தியின் கடல், மாஸ்டர் சாந்தியின் சூரியன் தன்னுடைய சாந்தியின் கிரணங்கள், சாந்தியின் அலைகளை வள்ளலின் குழந்தைகள் தேவா அதாவது வழங்குபவர்களாகி, அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விசேஷ சேவை செய்வதற்கு பயிற்சி உடையவர்கள் ஆகியிருக்கிறீர்களா அல்லது மற்ற பல விதமான சேவைகளில் அந்த அளவு பிஸியாக இருக்கிறீர்கள், அதனால் இந்த விசேஷ சேவை செய்வதற்கு நேரமும் பயிற்சியும் குறைவாக உள்ளதா? எப்படி நேரமோ அப்படி சேவையின் சொரூபத்தைக் கடைபிடிக்க முடியுமா? ஒருவேளை யாருக்காவது தண்ணீர் தாகம் எடுக்கிறது, ஆனால் நீங்கள் மிக நல்ல வகைவகையாய் உணவை அவருக்கு கொடுக்கிறீர்கள் என்றால் அவர் திருப்தி அடைவாரா? அந்த மாதிரி தற்சமயம் சாந்தி மற்றும் சக்தியின் அவசியம் உள்ளது. மனதின் அமைதி சக்தி மூலமாக ஆத்மாக்களுக்கு மனஅமைதியை அனுபவம் செய்விக்க முடியுமா? வாய்மொழி மூலம் காதுகள் வரை நீங்கள் கூறுவதை சென்றடையச் செய்ய முடியும். ஆனால் வார்த்தைகளின் கூடவே மனசக்தி மூலமாக மனம் வரை சென்றடையச் செய்ய முடியும். மனதின் ஓசை மனம் வரை சென்றடையும். வாய்களின் வார்த்தைகள் காது மற்றும் வாய் வரை மட்டுமே செல்லும். வாய்மொழி மூலம் வர்ணனை சக்தியும், மனம் மூலம் சிந்தனை சக்தி மற்றும் மூழ்கியிருக்கும் சொரூபத்தின் சக்தி ஆகிய இரண்டும் பிராப்தி ஆகிறது. அவர் கூறுபவராக மேலும் இவர் ஆகுபவராக ஆகிவிடுகிறார். இருவரிலும் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. எனவே எப்பொழுதும் வாய்மொழி மற்றும் மனசக்தி இரண்டின் மூலமாக சேவையில் இருங்கள்.

 

தற்சமயம் விசேஷமாக பாரதவாசிகளின் என்ன நிலைமையை பார்த்தோம்? அனைவரும் சுடுகாட்டு வைராக்கிய உணர்வில் இருக்கிறார்கள். அந்த மாதிரி சுடுகாட்டு வைராக்கிய உணர்வு உள்ளவர்களிடம் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கிய உணர்வைக் கொண்டு வருவதற்காக நீங்கள் சுயம் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கிய உணர்வு உள்ளவர்களாக ஆகுங்கள். சில நேரம் பற்றுதல் சில நேரம் வைராக்கியம் என்று இரண்டும் இருக்கிறதா? அல்லது எப்பொழுதும் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உள்ளவராக ஆகியிருக்கிறீர்களா? என்று உங்களை நீங்களே சோதனை செய்யுங்கள். எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உடையவர் என்றால் உடல் என்ற வீட்டிலிருந்தும் அப்பால் சென்று விட்டவர். இந்த உடலும் தந்தையினுடையதேயன்றி என்னுடையது அல்ல என்று அந்த அளவு உடல் உணர்விலிருந்து விலகியிருப்பவர். எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உடையவர் ஒருபொழுதும் சம்ஸ்காரம், சுபாவம், சாதனம் என்று எதனுடைய வசமானவராகவும் இருக்க மாட்டார். விலகியிருப்பவராகி, எஜமானன் ஆகி சாதனங்கள் மூலமாக வெற்றி சொரூபமானவராக ஆவார். சாதனத்தை உபயோகிப்பதற்கு விதியை உருவாக்குவார்கள். விதி மூலமாக சுயமுன்னேற்றத்தின் வளர்ச்சியின் வெற்றி அடைவார்கள். சேவை மூலம் வளர்ச்சியின் வெற்றியை அடைவார்கள். ஏதோவொரு காரணத்திற்காக அவை ஆதாரமாக இருக்கும், ஆனால் அடிமை ஆக மாட்டார்கள். ஆதாரத்தின் அடிமை ஆவது என்றால் வசமாகிவிடுவது. வசிபூத் அதாவது வசம் ஆகிவிடுவது என்ற வார்த்தையின் அர்த்தமே, எப்படி பூத ஆத்மா மற்றவர்களை வசப்படுத்தி மிகவும் தொந்தரவு செய்கிறதோ அதே போல் எந்தவொரு சாதனம், சம்ஸ்காரம், சுபாவம் மற்றும் தொடர்பின் வசமாகிவிடுகிறார்கள் என்றால் பூதத்திற்குச் சமமாக தொந்தரவு அடைபவர்களாகவும் மேலும் மற்றதின் / மற்றவர்களின் வசமாகியும் ஆகி விடுகிறார்கள். எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உடையவர், எப்பொழுதும் செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார் என்ற நினைவின் மகிழ்ச்சியில் சுற்றி வரும் யோகியிலிருந்தும் மேலே பறக்கும் யோகியாக இருப்பார். எப்படி எல்லைக்குட்பட்ட வைராக்கியம் உடையவர் ஹடயோக விதி மூலம் நிலம், நெருப்பு, தண்ணீர் ஆகியவற்றிலிருந்து மேலே உயரே அமர்ந்திருப்பதாக காண்பிக்கிறார்கள். அந்த நிலையை யோகாவின் சித்தி சொரூப நிலை என்று நம்புகிறார்கள். அது அற்ப காலத்தின் ஹடயோகத்தின் விதியின் சித்தி. அதே போல் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கிய உணர்வு உள்ளவர் இந்த விதி மூலமாக தேக உணர்வு என்ற பூமியின் மேலே மாயாவின் பலவிதமான விகாரங்கள் என்ற அக்னியின் மேலே, பல விதமான சாதனங்கள் மூலமாக தொடர்பின் வெள்ளப் பெருக்கில் வருவதிலிருந்து விலகியிருப்பவராக ஆகிவிடுகிறார். எப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது தன் பக்கம் இழுத்து விடுகிறது, தன்னுடையவராக்கி விடுகிறது. அதே போல் எந்த விதமான அற்ப காலத்தின் வெள்ளப்பெருக்கு தன் பக்கம் ஈர்த்து விட வேண்டாம். அந்த மாதிரி நீரின் வெள்ளப்பெருக்கிலிருந்தும் மேலே என்ற நிலையை பறக்கும் யோகி என்று கூறுவோம். இந்த அனைத்து சித்திகளும் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியத்தின் விதி மூலம் பிராப்தி ஆகிறது.

 

எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உடையவர் என்றால் ஒவ்வொரு எண்ணம், வார்த்தை மற்றும் சேவையில் எல்லைக்கப்பாற்பட்ட உள்உணர்வு, நினைவின் பாவனை மற்றும் விருப்பம் இருக்கட்டும். ஒவ்வொரு எண்ணமும் எல்லைக்கப்பாற்பட்ட சேவையில் சமர்ப்பணம் ஆகியிருக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையிலும் சுயநலமற்ற பாவனை இருக்க வேண்டும். ஒவ்வொரு காரியத்திலும் செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார் என்ற இந்த எண்ண அலைகள் அனைவருக்கும் அனுபவம் ஆக வேண்டும். இதைத் தான் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உள்ளவர் என்று கூறுவோம். எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உள்ளவர் என்றால், தன்னுடையது என்பது முற்றிலும் அகன்று விட வேண்டும். பாபாவினுடையது என்பது வந்து விட வேண்டும். எப்படி இடைவிடாது மந்திரத்தை ஜபிக்கிறார்கள், அதே போன்று இடைவிடாத நினைவு சொரூபம் இருக்க வேண்டும். ஒவ்வொரு எண்ணத்திலும், ஒவ்வொரு மூச்சிலும் எல்லைக்கப்பாற்பட்ட நிலை மற்றும் பாபா நிரம்பியிருக்க வேண்டும். எனவே எல்லைக்குட்பட்ட வைராக்கியம் உள்ளவர்களுக்கு, சுடுகாட்டு வைராக்கியம் உள்ள ஆத்மாக்களுக்கு நீங்கள் தற்சமயம் சாந்தி மற்றும் சக்தி கொடுக்கும் தேவதை ஆகி எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உடையவர் ஆகுங்கள்.

 

தற்சமயத்திற்கு ஏற்றபடி குழந்தைகள் ரிசல்ட் என்னவாக இருந்தது என்ற இந்த தொலைக்காட்சியை பாப்தாதா பார்த்தார். மேலும் குழந்தைகள் இந்திரா காந்தியின் டி.வி-யை பார்த்தீர்கள். அந்த நேரம் பார்த்தீர்கள், தெரிந்து கொள்வதற்காக பார்த்தீர்கள், செய்திக்காக பார்த்தீர்கள். இதில் ஒன்றும் பாதகமில்லை. ஆனால் என்ன ஆனது! என்ன ஆகும்! என்ற அந்த விதத்தில் பார்க்காதீர்கள். ஞானம் நிறைந்தவராகி ஒவ்வொரு காட்சியையும் சென்ற கல்பத்தின் நினைவோடு பாருங்கள். அப்படி பாப்தாதா குழந்தைகளினுடைய எதைப் பார்த்தார். குழந்தைகளின் காட்சியும் ரமணீகரமாக இருந்தது. மூன்று விதமான ரிசல்ட் பார்த்தோம்.

 

1) முதல் விதமானவர்கள் - இந்த வாழ்க்கையில் காலப்போக்கில் அலட்சியம் என்ற தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாக்கள். எப்படி ஏதாவது மிகுந்த சப்தம் எழுகிறது அல்லது யாராவது அசைக்கிறார் என்றால் தூங்கிக் கொண்டிருந்தவர் எழுந்து விடுவார். ஆனால் என்ன ஆனது என்ற இந்த எண்ணத்தோடு கொஞ்ச நேரம் விழித்தார், பிறகு மெதுமெதுவாக அதே அலட்சியத்தின் தூக்கம். இதெல்லாம் நடக்கத் தான் செய்யும் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு மீண்டும் தூங்கி விடுவார். இப்பொழுதோ ஒத்திகை தான் நடக்கிறது. இறுதி பின்னால் நடக்கும் என்று இந்த எண்ணத்தோடு முகத்தையும் போர்வையால் மூடிக் கொண்டு தூங்கி விடுவார்.

 

2) இரண்டாவது விதமானவர்கள் - அலட்சியத்தின் தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்துமே நடக்கத் தான் செய்யும். அதனால் அது நடந்தது. முயற்சியோ செய்து கொண்டு தான் இருக்கிறோம், மேலும் வரும் காலங்களிலும் செய்தே விடுவோம். சங்கமயுகத்திலோ முயற்சியோ செய்யத் தான் வேண்டும். கொஞ்சம் செய்திருக்கிறோம், இன்னும் கொஞ்சத்தை வரும் நாட்களில் செய்து விடுவோம். மற்றவர்களை எழுப்பி விட்டு விட்டு பார்த்துக் கொண்டே இருப்பார்கள். எப்படி போர்வையிலிருந்து முகத்தை விடுவித்து தூங்கிக் கொண்டிருக்கும் மற்றவர்களைப் பார்ப்பார்கள் இல்லையா? பெயர் பெற்றவர்களோ இந்த அளவு வேகத்தில் தான் சென்று கொண்டிருக்கிறார்கள். நானும் அந்த மாதிரி நடந்து கொண்டிருக்கிறேன். அந்த மாதிரி மற்றவர்களின் பலஹீனங்களைப் பார்த்து தந்தையைப் பின்பற்ற வேண்டும் என்பதற்குப் பதிலாக சகோதரிகள் மற்றும் சகோதரர்களைப் பின்பற்றி விடுகிறார்கள். மேலும் அவர்களின் பலஹீனங்களையும் பின் தொடர்ந்து பார்க்கிறார்கள். அந்த மாதிரி எண்ணம் செய்பவர்கள் அலட்சியத்தின் தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்களும் அவசியம் விழித்தெழுவார்கள். ஊக்கம் மற்றும் உற்சாகத்தின் ஆதாரத்தினால் சோம்பலின் தூக்கத்தை அனேகர்கள் தியாகமும் செய்திருக்கிறார்கள்.சுய முன்னேற்றம் மற்றும் சேவையின் முன்னேற்றத்தில் முன்னுக்கு அடியெடுத்தும் வைத்திருக்கிறார்கள். குழப்பங்கள் அவர்களை ஆட்டியது, இருப்பினும் அவர்கள் முன்னேறி சென்றும் இருக்கிறார்கள். ஆனால் சோம்பலின் சம்ஸ்காரம் இடையிடையே தன் பக்கம் இழுத்துக் கொண்டே இருக்கிறது. இருந்த போதிலும், குழப்பம் அவரை அசைத்தாலும் அவர் முன்னேறிச் சென்று கொண்டுமிருக்கிறார்.

 

3) மூன்றாவது விதமானவர்கள் - குழப்பத்தைப் பார்த்து ஆடாமல் அசையாமல் இருப்பவர்கள், சேவை செய்ய வேண்டும் என்ற சிரேஷ்ட எண்ணத்தில் சேவைக்கான பல விதமான திட்டங்களை யோசிப்பது மற்றும் செய்வது. இவர்கள் முழு உலகிற்கும் அமைதி மற்றும் சக்தியின் உதவி செய்பவர்கள், துணிச்சலாக இருப்பவர்கள். மற்றவர்களுக்கும் தைரியம் கொடுப்பவர்கள். அந்த மாதிரி குழந்தைகளையும் பார்த்தோம். ஆனால் சுடுகாட்டு ஊக்கம், உற்சாகம் மற்றும் சுடுகாட்டு தீவிர முயற்சி செய்வது மற்றும் பலஹீனங்களின் மேல் வைராக்கிய உணர்வு என்ற இந்த நிலையிலேயே இருக்காதீர்கள். எப்பொழுதும் சூழ்நிலையை, சுயநிலையின் சக்தி மூலம் பரிவர்த்தனை (மாற்றம்) செய்யும் உலகை மாற்றம் செய்பவன் என்ற நினைவில் இருங்கள். சூழ்நிலை சுயநிலையை முன்னேற வைப்பது மற்றும் வாயுமண்டலம் மாஸ்டர் சர்வ சக்திவானை நடத்திவிப்பது, மனித ஆத்மாக்களை சுடுகாட்டு வைராக்கியம், அற்பகாலத்திற்காக எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உள்ளவராக ஆக்குவது பூர்வஜ் ஆத்மாக்கள் செய்யும் காரியம் இல்லை. நேரம் படைப்பு அது மாஸ்டர் படைப்பவரை முன்னேற்ற வேண்டும் என்பது மாஸ்டர் படைப்பவரின் பலஹீனம். உங்களுடைய சிரேஷ்ட எண்ணம் தான் நேரத்தை பரிவர்த்தனை செய்யக்கூடியது. நேரம் உலகத்தை மாற்றும் ஆத்மாக்கயாகிய உங்களுடைய சகயோகி. புரிந்ததா? நேரத்தைப் பார்த்து, நேரம் தள்ளிவிடுவதினால் முன்னேறிச் செல்பவர்கள் இல்லை. ஆனால் தானே முன்னேறிச் சென்று நேரத்தை அருகில் கொண்டு வாருங்கள். இப்பொழுது என்ன ஆகும் என்ற கேள்வியும் அனைவர் மனதிலும் எழுந்தது. ஆனால் கேள்விக்குறியை முற்றுப்புள்ளியின் ரூபத்தில் பரிவர்த்தனை செய்யுங்கள் அதாவது தன்னை அனைத்து பாடங்களிலும் முழுமையானவர் ஆக்குங்கள். இது தான் முற்றுப்புள்ளி. அந்த மாதிரி நேரத்தில் என்ன ஆகும் என்ற இந்தக் கேள்வி எழாது. ஆனால் என்ன செய்ய வேண்டும், அந்த மாதிரியான நேரத்தில் என்னுடைய கடமை என்ன என்பதை உணர்ந்து அந்த சேவையில் ஈடுபட்டு விடுங்கள். எப்படி தீயை அணைப்பவர்கள் தீயை அணைப்பதிலேயே ஈடுபட்டு விடுவார்கள். இது என்ன இப்படி ஆயிற்று என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். தன்னுடைய சேவையில் ஈடுபட்டு விடுவார்கள் இல்லையா? அந்த மாதிரி ஆன்மீக சேவாதாரியின் கடமை தன்னுடைய ஆன்மீக சேவையில் ஈடுபட்டு விடுவது. உலகத்தினருக்கும் வித்தியாசமானவர் என்ற அனுபவம் ஏற்படட்டும். புரிந்ததா? இருந்தும் நேரத்திற்கு ஏற்றபடி வந்தோ சேர்ந்து விட்டீர்கள் இல்லையா? என்னுடைய பாக்கியம் இங்கே வந்து சேர்ந்து விட்டேன் என்ற குஷி இருக்கிறது தான் இல்லையா. நன்றாக வாருங்கள், வாருங்கள்.  குழந்தைகள் நீங்கள் அனைவரும் தான் மதுபனின் கலகலப்பு. மதுபனின் அலங்காரம் மதுபனில் வந்து சேர்ந்து விட்டது. மதுபனைச் சேர்ந்த பாபா மட்டுமில்லை, மதுபனைச் சேர்ந்த குழந்தைகளும் இருக்கிறார்கள். நல்லது.

 

நாலாபுறங்களிலும் எண்ணம் மூலம், அன்பு மூலம், ஒளி வடிவமான உடல் மூலம் வந்து சேர்ந்திருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பாப்தாதா எப்பொழுதும் உறுதியாக இருங்கள், எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உள்ளவர்களுக்கு, எப்பொழுதும் பறந்து கொண்டிருக்கும் யோகி ஆகுக! என்ற ஆஸ்தியையும் வரதானத்தையும் கொடுக்கிறார். எப்பொழுதும் இடைவிடாத நினைவு சொரூப, அலட்சியம் மற்றும் சோம்பலின் தூக்கத்தை வென்ற, எப்பொழுதும் எல்லைக்கப்பாற்பட்ட நினைவு சொரூப பூர்வஜ் மற்றும் பூஜைக்குரிய ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

தாதி அவர்கள் மற்றும் ஜகதீஷ் சகோதரர் வெளிநாட்டு யாத்திரையின் செய்தியை கூறினார்கள் மற்றும் அன்பு நினைவுகளைக் கொடுத்தார்கள்.

 

அனைவருக்கும் செய்தி கொடுத்து அனுபவம் செய்வித்தீர்கள்.அன்பு மற்றும் சம்மந்தத்தை அதிகரித்தீர்கள். இப்பொழுது அதிகாரத்தைப் பெறுவதற்காக வரும் நாட்களில் வருவார்கள். ஒவ்வொரு அடியிலும் அனேக ஆத்மாக்களின் நன்மைக்கான பங்கு நிரம்பியிருக்கிறது. இந்த நிரம்பியிருத்தன் மூலம் அனைவரின் இதயத்தை ஊக்கம் உற்சாகத்தில் கொண்டு வந்தீர்கள். மிக நல்ல சேவை மற்றும் அன்பின் பங்கை  செய்தீர்கள். பாப்தாதா செய்விப்பவராகவும் இருக்கிறார் மேலும் சாட்சியாகி பார்ப்பவராகவும் இருக்கிறார். செய்விக்கவும் செய்தார் மற்றும் பார்க்கவும் செய்தார். குழந்தைகளின் ஊக்கம் உற்சாகம் மற்றும் தைரியத்தின் மேல் பாப்தாதா விற்கு பெருமிதம் இருக்கிறது. இன்னும் வரும் நாட்களிலும் செய்தி வலுவாக பரவும். நிலத்தை உருவாக்கி வந்திருக்கிறீர்கள், விதை போட்டு விட்டு வந்திருக்கிறீர்கள். இப்பொழுது விரைவில் விதையின் பழம் அதாவது பலனும் கிடைக்கும். பிரத்யக்ஷ பலன் வெளியாகப் போகிறது, நேரம் அருகில் வந்து கொண்டிருக்கிறது. இப்பொழுதோ நீங்கள் சென்றிருந்தீர்கள், ஆனால் என்ன சேவை செய்து வந்திருக்கிறீர்களோ அந்த சேவையின் பலன் சொரூபமாக அவர்களே ஓடி ஓடி வருவார்கள். காந்தம் தூரத்திலிருந்து இழுப்பதாக அனுபவம் செய்வார்கள். யாரோ என்னை இழுக்கிறார் என்று அனுபவம் செய்வார்கள். எப்படி தொடக்க காலத்தில் அனேக ஆத்மாக்களுக்கு என்னை யாரோ இழுக்கிறார் என்று ஆன்மீக ஈர்ப்பு ஏற்பட்டது. அதே போல் இவர்களும் இழுக்கப்பட்டு வருவார்கள். இந்த ஆன்மீக ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று அனுபவம் செய்வீர்கள் இல்லையா? அதிகரித்து அதிகரித்து ஈர்க்கப்பட்டவர்கள் பறந்து வந்து சேர்ந்து விடுவார்கள் அந்தக் காட்சியும் இப்பொழுது நடக்கப் போகிறது. இப்பொழுது இது தான் இன்னும் பாக்கி (நடக்க) உள்ளது. செய்தியை கொடுப்பவர்கள் செல்கிறீர்கள் ஆனால் அவர்கள் சுயம் சத்திய தீர்த்த ஸ்தலத்திற்கு வந்து  சேருவார்கள் என்ற இது இறுதி நிலை ஆகும். இப்பொழுது இது தான் இன்னும் நடக்க வேண்டியதாக இருக்கிறது. இதற்காக இப்பொழுது நிலம் தயாராகி விட்டது, விதையும் போடப்பட்டு விட்டது. இப்பொழுது விரைவிலேயே பழமும் வெளியாகிவிடும். நல்லது. இரண்டு பக்கங்களுக்கும் சென்றிருந்தீர்கள். பாப்தாதாவிடம் அனைவரின் தைரியம் ஊக்கம் உற்சாகத்தின் செய்தி வந்து சேருகிறது. பெரும்பான்மையோரிடம் சேவையின் ஊக்கம் உற்சாகம் இருக்கும் காரணத்தினால் மாயாவை வென்றவர் ஆவதிலும் சுலபமாகவே முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஓய்வாக இருக்கிறார் என்றால் மாயாவின் தாக்குதலும் இருக்கும். ஆனால் உள்ளப்பூர்வமாக பிஸியாக இருக்கிறீர்கள், செய்யும் வேலையினால் இல்லை. யார் உள்ளப்பூர்வமாக சேவையில் பிஸியாக இருக்கிறார்களோ அவர்கள் சுலபமாகவே மாயாவை வென்றவர் ஆகிவிடுகிறார். பாப்தாதா குழந்தைகளின் ஊக்கம் உற்சாகத்தைப் பார்த்து குஷி அடைகிறார். அங்கு சாதனமும் சுலபமாக கிடைத்து விடுகிறது. இவர்களுக்கு பிராப்தியும் ஆகிவிடுகிறது. லட்சியம் இருக்கிறது, உழைப்பும் இருக்கிறது மேலும் சாதனமும் சகஜமாக பிராப்தி ஆகிறது. இந்த மூன்று விஷயங்களின் காரணமாக பந்தயத்தில் நன்றாக முன் வரிசை எண்ணை பெற்றுக் கொள்கிறார்கள். நல்லது. ஆனால் பாரதத்திலும் யாரும் குறைந்தவர்கள் இல்லை. அனைவரும் அவரவர்களின் ஊக்கம் உற்சாகத்தின் ஆதாரத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பாரதத்திலிருந்து தான் பெயர் வெளியாகும். வெளிநாட்டினரின் வெற்றியும் பாரதத்திலிருந்து தான் உருவாகும். இது அவர்களுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. மேலும் நான் பெயரை புகழடையச் செய்ய வேண்டும் இது என்னுடைய கடமை என்று நினைக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் செய்தி மூலம் பாரதம் விழித்தெழ வேண்டும். இந்த லட்சியம் உறுதியாக இருக்கிறது. மேலும் அதை செய்து கொண்டும் இருக்கிறார்கள். தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது வெளிநாடு வரை செய்தி சென்றிருக்கிறது. வெளிநாட்டினுடையது பாரதம் வரை வந்தடைய வேண்டும். மேலும் அவர்கள் பறந்து பறந்து வந்து கொண்டிருக்கிறார்கள். செய்தி அவர்களை பயணம் செய்ய வைக்கிறது. பறந்து வருகிறார்கள். இங்கே வந்து சேர்ந்து விடுவார்கள். இப்பொழுது வெளிநாட்டில் நன்றாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் வெளிநாட்டின் செய்தி பாரதம் வரை வந்து சேர்வது என்பதும் நடக்கும். நீங்கள் என்னென்ன தனது பங்கை செய்தீர்களோ அதை மிக நன்றாகச் செய்தீர்கள். இப்பொழுதும் முன்னேறிச் செல்வதற்கான சகயோகம் மற்றும் வரதானம் இருக்கிறது. ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அவரவர்களுக்கென்ற பங்கு இருக்கிறது. எந்த அளவு அனுபவியாக ஆகிக் கொண்டே இருப்பீர்களோ அந்த அளவு இன்னும் அனுபவங்களின் ஆதாரத்தினால் முன்னேறிச் சென்று கொண்டே இருப்பீர்கள். செய்விப்பவர் யார் மூலமாக செய்வித்தாரோ அது நாடகத்தின் அனுசாரம் மிக நன்றாக செய்வித்தார். கருவி என்ற உணர்வு சேவையை செய்வித்தே விடுகிறது. அந்த மாதிரி சேவையை செய்வித்தார், நீங்கள் கருவியாக ஆனீர்கள், சேமிப்பும் ஆனது. மேலும் எதிர்காலத்திலும் சேமிப்பு ஆகிக் கொண்டே இருக்கும். நல்லது.

 

பார்ட்டிகளுடன் சந்திப்பு

எப்பொழுதும் சந்திப்பு என்கிற மேளாவில் இருப்பவர்கள் தான் இல்லையா? இந்த சந்திப்பின் மேளா அழியாத சந்திப்பு மேளாவின் அனுபவத்தை செய்வித்து விடுகிறது. நீங்கள் எங்கிருந்தாலும் ஆனால் மேளாவில் இருக்கிறீர்கள். மேளாவில் இருந்து தூரமாக இருப்பதில்லை. மேளா என்றால் சந்திப்பு. அந்த மாதிரி நீங்கள் எப்பொழுதுமே சந்திப்பிலேயே இருக்கிறீர்கள். யார் எப்பொழுதுமே சந்திப்பில் இருக்கிறார்களோ அவர் மாதிரி பாக்கியவான் வேறு யாராவது இருக்க முடியுமா? பொதுவாக உலகத்தில் மேளா இருக்கும் பிறகு முடிவடைந்து விடும். ஆனால் யாருமே நிரந்தரமாக மேளாவில் இருப்பதில்லை. நீங்கள் பாக்கியம் நிறைந்த ஆத்மாக்கள் எப்பொழுதும் மேளாவிலேயே இருக்கிறீர்கள். உங்களுக்காக எப்பொழுதும் சந்திப்பு மேளா தான். மேளாவில் என்ன நடக்கும்? சந்திப்பது மற்றும் ஊஞ்சலில் ஆடுவது. ஊஞ்சலில் ஆடுவதும் இருக்கிறது தான் இல்லையா? நீங்கள் எப்பொழுதும் பிராப்திகளின் ஊஞ்சலில் ஆடுபவர்கள். அது அந்த மாதிரியான ஊஞ்சல், அதில் எப்பொழுதுமே சுகம் மற்றும் அனைத்து பிராப்திகளின் அனுபவத்தை செய்விக்கக்கூடியது. நீங்கள் அந்த மாதிரி கோடியில் சிலரான பாக்கியம் நிறைந்த ஆத்மாக்கள். முன்பு மகிமையை கேட்டுக் கொண்டிருந்தோம் இப்பொழுது மகான் ஆகிவிட்டோம். நல்லது.

 

வரதானம் :

சாந்தியின் சக்தியின் மூலமாக அசம்பவத்தை சம்பவம் ஆக்கக்கூடிய சகஜயோகி ஆகுக.

 

சாந்தியின் சக்தி அனைத்தையும் விட சிரேஷ்ட சக்தி. சாந்தியின் சக்தியின் மூலமாகத் தான் மற்ற அனைத்து சக்திகளும் உருவாகிறது. அறிவியல் சக்தியின் பிரபாவம் இன்று உலகத்தில் அந்த அளவு இருக்கிறது, அந்த அறிவியலும் அமைதியில் இருந்து தான் உருவானது. எனவே சாந்தியின் சக்தி மூலம் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதைச் செய்ய முடியும். அசம்பவத்தையும் சம்பவமாக ஆக்க முடியும். எதை உலகத்தினர் அசம்பவம் என்று கூறுகிறார்களோ அது உங்களைப் பொறுத்தவரை சம்பவமானது. மேலும் சம்பவமாக இருக்கும் காரணத்தினால் சகஜமாகவும் இருக்கிறது. சாந்தியின் சக்தியை தாரணை செய்து சகஜயோகி ஆகுங்கள்.

 

சுலோகன்

வாய்மொழி மூலம் அனைவருக்கும் சுகம் மற்றும் சாந்தி கொடுத்தீர்கள் என்றால் மகிமைக்குத் தகுதியானவர் ஆகிவிடுவீர்கள்.

 

ஓம்சாந்தி