20.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இது எல்லையற்ற மிகப் பெரிய மேடையாகும், இதில் ஆத்மாக்களாகிய நீங்கள் நடிப்பு நடிப்பதற்காக கட்டுப்பட்டிருக்கிறீர்கள், இதில் ஒவ்வொருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட பாகம் இருக்கிறது.

 

கேள்வி:

கர்மாதீத் (கர்மங்களை வென்றவர்கள்) நிலையை பலனாக அடைவதற்கான முயற்சி என்ன?

 

பதில்:

கர்மாதீத் நிலையடைய வேண்டுமெனில் முழுமையிலும் முழுமையாக பலியாகி (சரண்டர்) விட வேண்டும். எனது என்று எதுவும் இல்லை. அனைத்தையும் மறந்திருக்கும் பொழுது தான் கர்மாதீத் நிலை அடைய முடியும். யாருக்கு செல்வம், பொருட்கள். செல்வங்களின் நினைவு வருகின்றதோ அவர்கள் கர்மாதீத் நிலை அடைய முடியாது. அதனால் தான் பாபா கூறுகின்றார் - நான் ஏழைப் பங்காளனாக இருக்கிறேன். ஏழைக் குழந்தைகள் விரைவாக சரண்டர் ஆகிவிடுகின்றனர். எளிதாக அனைத்தையும் மறந்து ஒரு தந்தையின் நினைவில் இருக்க முடியும்.

 

ஓம்சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து தனது ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார், இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது குழந்தைகளின் புத்தியில் அவசியம் இருக்கும். பக்தர்களின் புத்தியில் இருக்காது. இந்த 84 பிறவிச் சக்கரம் இப்பொழுது முடிவடைகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இது மிகப் பெரிய எல்லையற்ற மேடையாகும். இந்த பழைய மேடையை விடுத்து வீட்டிற்குச் செல்ல வேண்டும். அசுத்த ஆத்மாக்கள் செல்ல முடியாது. ஆக அவசியம் தூய்மையாக வேண்டும். இப்பொழுது இந்த விளையாட்டின் இறுதியாகும். அளவற்ற துக்கத்தின் கடைசியில் இப்பொழுது இருக்கிறோம். இந்த நேரத்தில் இவையனைத்தும் மாயையின் கவர்ச்சிகளாகும். இதையே மனிதர்கள் சொர்க்கமாக நினைக்கின்றனர். எவ்வளவு மாட மாளிகைகள், வாகன வசதி போன்றவைகள் உள்ளன, இதைத் தான் மாயையின் போட்டி என்று கூறப்படுகிறது. நரகத்திற்கும் சொர்க்கத்திற்குமான போட்டியாகும். அல்ப கால சுகம் இருக்கிறது. நாடகப்படி இது மாயையின் பேராசை ஆகும். எவ்வளவு மனிதர்கள் இருக்கின்றனர்! முதலில் ஒரே ஒரு ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் மட்டுமே இருந்தது. இப்பொழுது மேடை முழுவதுமாக (பல்வேறு தர்மங்களால்) நிறைந்து விட்டது. இப்பொழுது இந்த சக்கரம் முடிவடைகிறது, உலகமும் தமோ பிரதானமாக இருக்கிறது, பிறகு சதோ பிரதானமாக ஆக வேண்டும். முழு உலகமும் புதியதாக ஆக வேண்டும் அல்லவா! புதியதிலிருந்து பழையதாக ஆகிறது. பழையதிலிருந்து புதியதாக ஆகிறது. இது கணக்கிட முடியாத முறை நடைபெற்று வருகிறது. அழிவற்ற விளையாட்டாகும். எப்பொழுது ஆரம்பம் ஆனது என்று கூற முடியாது. அழிவில்லாமல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இதையும் நீங்கள் அறிவீர்கள், வேறு யாரும் அறியவில்லை. நீங்களும் இந்த ஞானம் அடைவதற்கு முன்பு எதையும் அறியாமல் இருந்தீர்கள். தேவதைகளும் அறிந்திருக்கவில்லை. சங்கமயுக பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள், பிறகு இந்த ஞானம் மறைந்து போய் விடும். தந்தை சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆக்கிவிடுகிறார். வேறு என்ன தேவை? தந்தையிடம் என்ன அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டோம், அடைவதற்கு வேறு ஒன்றும் இல்லை. ஆக தந்தை புரிய வைக்கின்றார் - குழந்தைகளே! நீங்கள் தான் அனைவரையும் விட தூய்மையில்லாதவர்களாக ஆகியிருக்கிறீர்கள். முதன் முதலில் நடிப்பு நடிப்பதற்காக நீங்கள் தான் வந்தீர்கள். நீங்கள் தான் முதலில் செல்ல வேண்டியிருக்கும். சக்கரம் அல்லவா! முதன் முதலில் நீங்கள் தான் மாலையில் வருவீர்கள். இது ருத்ர மாலை அல்லவா! நூலில் முழு உலகின் மனிதர்களும் கட்டப்பட்டுள்ளனர். நூலிலிருந்து விடுபட்டு பரந்தாமத்திற்குச் சென்று விடுவீர்கள், பிறகு இவ்வாறே மாலையில் கட்டுப்பட்டு வருவீர்கள். மிகப் பெரிய மாலையாகும். சிவபாபாவிற்கு எவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனர்! முதன் முதலில் தேவதைகளாகிய நீங்கள் வருகிறீர்கள். இது எல்லையற்ற மாலையாகும், இதில் அனைவரும் மணிகளைப் போன்று கட்டுண்டு இருக்கிறீர்கள். ருத்ர மாலை மற்றும் விஷ்ணு மாலை என்று பாடப்பட்டிருக்கிறது. பிரஜாபிதா பிரம்மாவிற்கு மாலை கிடையாது. பிரம்மா குமார், குமாரிகளாகிய உங்களுக்கு மாலை ஏற்படுவது கிடையாது, ஏனெனில் நீங்கள் முன்னேறுகிறீர்கள், கீழே விழுகிறீர்கள், தோல்வியடைகிறீர்கள். அடிக்கடி மாயை கீழே விழ வைத்து விடுகிறது. அதனால் தான் பிராமணர்களின் மாலை உருவாக்கப்படுவது கிடையாது. எப்பொழுது முழுமையாக தேர்ச்சி அடைந்து விடுவீர்களோ அப்பொழுது தான் விஷ்ணு மாலை உருவாகும். பிரஜாபிதா பிரம்மாவிற்கும் வம்சம் இருக்கிறது. எப்பொழுது தேர்ச்சி அடைந்து விடுகிறீர்களோ அப்பொழுது தான் பிரம்மாவின் மாலை என்று கூற முடியும். வம்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் மாலை உருவாக்க முடியாது, ஏனெனில் இன்று தூய்மையாக ஆகின்றனர், நாளை மாயை அடி கொடுத்து விட்டு கலைகளை இல்லாமல் செய்து விடுகிறது. செய்த வருமானம் அழிந்து விடுகிறது. சிதறி விடுகிறீர்கள், எங்கிருந்து விழுகிறீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்! தந்தை உலகிற்கு எஜமானர் ஆக்குகின்றார். அவரது ஸ்ரீமத்படி நடப்பதன் மூலம் நீங்கள் உயர்ந்த பதவி அடைய முடியும். தோல்வி அடைந்தால் முடிந்து விட்டது. காம விகாரம் மிகப் பெரிய எதிரியாகும், அதனிடம் தோல்வி அடையக் கூடாது. மற்ற அனைத்து விகாரங்களும் அதன் குழந்தைகளாகும். மிகப் பெரிய எதிரி காம விகாரமாகும். அதன் மீது தான் வெற்றியடைய வேண்டும். காமத்தை வெல்வதன் மூலம் மட்டுமே நீங்கள் உலகை வென்றவர்களாக ஆவீர்கள். இந்த 5 விகாரங்கள் அரைக் கல்பத்திற்கான எதிரிகளாகும். அதுவும் விடுவது கிடையாது. கோபப்பட வேண்டி யிருக்கிறது என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் என்ன அவசியம் இருக்கிறது! அன்பாகவும் காரியங்களை செய்விக்க முடியும். ஒருவேளை திருடனுக்கும் அன்பாக புரிய வைத்தால் அவர் உடனேயே உண்மையை கூறிவிடுவார். தந்தை கூறுகின்றார் - நான் அன்புக் கடல் அல்லவா! ஆக குழந்தைகளும் அன்பாக காரியங்களை செய்விக்க வேண்டும். எந்த பதவியில் இருப்பவர்களாக ஆனாலும் சரி! பாபா விடத்தில் இராணுவத்தினர்களும் வருகின்றனர். அவர்களுக்கும் பாபா புரிய வைக்கின்றார் - நீங்கள் சொர்க்கத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள் எனில் சிவபாபாவை மட்டுமே நினைவு செய்யுங்கள். நீங்கள் யுத்த மைதானத்தில் இறந்தால் சொர்க்கம் செல்வீர்கள் என்று அவர்கள் கூறுவர். உண்மையில் யுத்த மைதானம் இது தான். அவர்கள் யுத்தம் செய்து செய்தே இறந்து விடுகின்றனர். பிறகு அங்கு சென்று பிறப்பு எடுக்கின்றனர், ஏனெனில் சம்ஸ்காரம் எடுத்துச் செல்கின்றனர். சொர்க்கத்திற்கு செல்ல முடியாது. ஆக பாபா அவர்களுக்கும் புரிய வைத்தார் - சிவபாபாவை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு செல்ல முடியும். ஏனெனில் சொர்க்க ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சிவபாபாவின் நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசம் ஆகும். இந்த சிறிதும் ஞானம் கிடைத்தாலும் அழிவில்லாத ஞானம் ஒருபொழுதும் விநாசம் ஆகாது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த மேளா போன்றவைகள் ஏற்பாடு செய்கின்றீர்கள் எனில் எவ்வளவு பிரஜைகள் உருவாகின்றனர்! நீங்கள் ஆன்மீக சேனைகள் அல்லவா! இதில் கமாண்டர், மேஜர் போன்றவர்கள் குறைவாக இருப்பர். அதிக பிரஜைகள் உருவாகின்றனர். யார் நன்றாகப் புரிய வைக்கின்றார்களோ அவர்கள் ஏதாவது நல்ல பதவி அடைவார்கள். அதிலும் முதல், இரண்டு, மூன்றாம் நிலை கிரேட் (தரவரிசை) இருக்கும். நீங்கள் போதனைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். சிலர் முழுமையாக தனக்குச் சமமாக ஆகிவிடுகின்றனர். சிலர் அனைவரையும் விட மேலாகவும் செல்கின்றனர். ஒருவரை விட ஒருவர் உயர்ந்த நிலை அடைவதை பார்க்க முடிகிறது. புதியவர்கள் பழையவர்களை விட வேகமாக சென்று விடுகின்றனர். தந்தையிடம் முழு யோகா ஏற்பட்டு விட்டால் மிக உயரத்தில் சென்று விடுவர். அனைத்திற்கும் ஆதாரம் யோகா ஆகும். ஞானம் மிகவும் எளிது, நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். தந்தையின் நினைவில் தடைகள் ஏற்படுகிறது. தந்தை கூறுகின்றார் - உணவு சாப்பிட்டாலும் தந்தையின் நினைவில் சாப்பிடுங்கள். ஆனால் சிலர் 2 நிமிடம், சிலர் 5 நிமிடம் நினைவில் இருக்கின்றனர். முழு நேரமும் நினைவில் இருப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. மாயை எப்படியாவது ஊதித் தள்ளி விடுகிறது. தந்தையைத் தவிர வேறு யாருடைய நினைவும் இல்லாமல் இருக்கும் பொழுது தான் கர்மாதீத் நிலை ஏற்படும். ஒருவேளை ஏதாவது என்னுடையதாக இருந்தால் அது அவசியம் நினைவிற்கு வரும். இந்த பாபாவைப் போன்று எதுவும் நினைவிற்கு வரக்கூடாது. இவருக்கு என்ன நினைவிற்கு வரும்? குழந்தைகள், செல்வம் ஏதாவது இருக்கிறதா? குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே நினைவிற்கு வருவீர்கள். நீங்கள் அவசியமாக தந்தையின் நினைவிற்கு வருவீர்கள், ஏனெனில் நன்மை செய்வதற்காகவே தந்தை வந்திருக்கின்றார். அனைவரையும் நினைவு செய்கின்றார். இருப்பினும் புத்தி மலர்களின் பக்கம் தான் சென்று விடுகிறது. பல வகையான மலர்கள் உள்ளன. சில நறுமணமின்றியும் இருக்கின்றன. பூந்தோட்டம் அல்லவா! தந்தையை தோட்டக்காரன், எஐமான் என்றும் கூறுகிறோம். மனிதர்கள் கோபத்தில் வந்து எவ்வளவு சண்டையிட்டுக் கொள்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேக அபிமானம் அதிகமாக இருக்கிறது. யாராவது கோபப்பட்டால் அமைதியாக இருங்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். கோபம் பூதம் அல்லவா! பூதத்திற்கு முன்பு அமைதியாக பதிலுரைக்க வேண்டும்.

 

அனைத்து சாஸ்திரங்களின் சிரோண்மணியான ஸ்ரீமத் பகவத் கீதையானது ஈஸ்வரிய வழியாகும். ஈஸ்வரிய வழி, அசுர வழி மற்றும் தெய்வீக வழியை ஒரே ஒரு ஈஸ்வரன் வந்து தான் கூறுகின்றார். இராஐயோகத்தின் ஞானம் கொடுக்கின்றார். பிறகு இந்த ஞானம் மறைந்து போய்விடும். இராஜாவிற் கெல்லாம் இராஜாவாக ஆன பின்பு இந்த ஞானம் எதற்காக? 21 பிறவிகளுக்கு பிராப்தியை அனுபவிக் கிறீரர்கள். இந்த முயற்சியின் பலன் தான் இது என்பது அங்கு தெரியாது. பலமுறை நீங்கள் சத்யுகத்திற்கு சென்றிருக்கிறீர்கள். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும். சத்யுகம் திரேதா யுகம் ஞானத்தின் பலனாகும். அங்கு ஞானம் கிடைக்கும் என்று கிடையாது. தந்தை இங்கு வந்து பக்தியின் பலனாகிய ஞானம் கொடுக்கின்றார். நீங்கள் அதிகமாக பக்தி செய்திருக்கிறீர்கள் என்று தந்தை கூறியிருக்கின்றார். இப்பொழுது ஒரு தந்தையை நினைவு செய்தால் தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள். இதில் தான் முயற்சி இருக்கிறது. படைப்பின் முதல்,இடை, கடையை நினைவு செய்தால் சக்கரவர்த்தி ராஜா ஆகிவிடுவீர்கள். பகவான் குழந்தைகளை பகவான் பகவதிகளாக ஆக்குவார் அல்லவா! ஆனால் தேகதாரிகளை பகவான் பகவதி என்று கூறுவது தவறாகும். பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் மூவருக்கும் எவ்வளவு சம்மந்தம் இருக்கிறது! இந்த பிரம்மா பிறகு விஷ்ணுவாக ஆகக் கூடியவர் ஆவார். மேலும் இவரிடத்தில் சிவனும் பிரவேசம் செய்கின்றார். சூட்சுமவதன வாசிகள் பரிஸ்தாக்கள் என்று கூறப்படுகின்றனர். நீங்கள் ஃபரிஸ்தாக்களாக ஆக வேண்டும், சாட்சாத்காரம் ஏற்படுகிறது, மற்றபடி எதுவும் கிடையாது. அமைதி, சைகை மற்றும் இங்கு பேச்சுகள் இது விரிவான விசயமாகும். மற்றபடி சுருக்கமாக கூறுவது என்னவெனில் மன்மனாபவ, என் ஒருவனை நினனவு செய்யுங்கள் மற்றும் சிருஷ்டிச் சக்கரத்தை நினைவு செய்யுங்கள். இங்கு அமர்ந்திருந்தாலும் சாந்திதாமம், சுகதாமத்தை நினைவு செய்யுங்கள். இந்த பழைய துக்கதாமத்தை மறந்து விடுங்கள். இது புத்தியினால் எல்லையற்ற சந்நியாசமாகும். அவர்களுடையது எல்லைக்குட்பட்ட சந்நியாசமாகும். துறவற மார்க்கத்தைச் சார்ந்த அவர்களால் இல்லற மார்கத்தின் ஞானம் கொடுக்க முடியாது. இராஜா ராணி ஆவது என்பது இல்லற மார்க்கமாகும். அங்கு சுகம் மட்டுமே இருக்கும். அவர்கள் சுகத்தை ஏற்றுக் கொள்வதே கிடையாது. சந்நியாசிகளும் கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்களது வளர்ப்பு அல்லது வருமானம் இல்லற மார்க்கத்தினரிடமிருந்து தான் கிடைக்கிறது. ஒன்று நீங்கள் தானம் புண்ணியத்தில் ஈடுபடுத்தினீர்கள், பிறகு பாவ செயல்கள் செய்வதால் பாவ ஆத்மாக்களாக ஆகிவிடுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அழிவற்ற ஞான ரத்தினங்களின் கொடுக்கல் வாங்கல் செய்கிறீர்கள். அவர்கள் தர்மசாலை போன்றவைகளை உருவாக்குகின்றனர் எனில் அடுத்த பிறவியில் நல்ல பலன் கிடைக்கும். இவர் எல்லையற்ற தந்தை ஆவார். இது நேரடியானது, அது மறைமுகமானது. ஈஸ்வரிய அர்ப்பணம் என்று கூறி செய்கின்றனர். இப்பொழுது பசியானது இருவருக்கும் கிடையாது. சிவபாபா வள்ளலாக இருக்கின்றார். அவருக்கு பசிக்குமா என்ன? ஸ்ரீ கிருஷ்ணர் வள்ளல் அல்ல. அனைவருக்கும் கொடுக்கக் கூடியவர் தந்தையாவார், பெறக் கூடியவர் அல்ல. ஒன்று கொடுத்து 10 பெறுவது, ஏழைகள் 2 ரூபாய் கொடுக்கின்றனர் எனில் பல மடங்கு கிடைத்து விடுகிறது (சுதாமாவின் உதாரணம்). பாரதம் தங்கக் குருவியாக இருந்தது அல்லவா! தந்தை எவ்வளவு செல்வந்தர்களாக ஆக்கியிருந்தார்! சோமநாத் கோயிலில் கணக்கிட முடியாத அளவு செல்வங்கள் இருந்தன. எவ்வளவு கொள்ளையடித்து சென்றனர்! உயர்ந்த வைர நகைகள் இருந்தன. இப்பொழுது பார்க்கக் கூட முடிவதில்லை, காணாமல் போய் விட்டது. பிறகு சரித்திரம் திரும்பவும் நடைபெறும். அங்கு உங்களுக்காக அனைத்து பொக்கிஷங்களும் நிறைந்து விடும். வைரங்கள் உங்களுக்கு அங்கு கற்கள் போன்று இருக்கும். தந்தை அழிவற்ற ஞான ரத்தினங்களை கொடுக்கின்றார். இதன் மூலம் நீங்கள் அளவற்ற செல்வந்தர்களாக ஆகி விடுகிறீர்கள். ஆக இனிமையிலும் இனிய குழந்தைகளுக்கு எவ்வளவு குஷி ஏற்பட வேண்டும்! எந்த அளவிற்கு படிக்கிறீர்களோ அந்த அளவிற்கு குஷியும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பெரிய தேர்வில் தேர்ச்சி அடைந்து விட்டால் புத்தியில் இதில் தேர்ச்சி பெற்று இவ்வாறு ஆவேன், இதைச் செய்வேன் என்று இருக்கும் அல்லவா! இவ்வாறு தேவதைகளாக ஆவோம் என்பதை நீங்களும் அறிவீர்கள். இது ஐடச் சித்திரம் ஆகும். அங்கு நாம் சைத்தன்யமாக ஆவோம். நீங்கள் உருவாக்கியிருக்கும் இந்த சித்திரங்களும் எங்கிருந்து வந்தது? தெய்வீக திருஷ்டியினால் நீங்கள் பார்த்து வந்தீர்கள். சித்திரங்கள் மிகவும் ஆச்சரியமானதாக இருக்கிறது. இதை பிரம்மா உருவாக்கியிருப்பதாக சிலர் நினைப்பர். ஒருவேளை இவர் யாரிடமாவது கற்றிருந்தால் ஒரே ஒருவர் மட்டும் கற்றிருக்கமாட்டார், மற்றவர்களும் கற்றிருப்பர் அல்லவா! நான் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்று இவர் கூறுகின்றார். இதை தந்தை தெய்வீக திருஷ்டியினால் உருவாக்கி யிருக் கின்றார். இந்த சித்திரங்கள் அனைத்தும் ஸ்ரீமத்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. இது மனித வழி கிடையாது. இவையனைத்தும் அழிந்து போய் விடும். எந்த பெயர் அடையாளமும் இருக்காது. இந்த சிருஷ்டியின் கடைசியாகும். பக்தியில் எவ்வளவு சடங்குகள் உள்ளன! இங்கு கிடையாது. புது உலகில் அனைத்தும் புதிதாக இருக்கும். நீங்கள் பலமுறை சொர்க்கத்திற்கு எஜமானராக ஆகியிருக்கிறீர்கள். பிறகு மாயை தோல்வியடையச் செய்திருக்கிறது. மாயை என்று விகாரங்களைத் தான் கூறப்படுகிறதே தவிர செல்வத்தை அல்ல. குழந்தைகளாகிய நீங்கள் இராவணனின் சிறையில் அரைக் கல்பமாக அடைக்கப்பட்டியிருந்தீர்கள். இராவணன் அனைவருக்கும் பழைய எதிரி ஆகும். அரைக் கல்பத்திற்கு அவரது இராஜ்யம் நடந்தது. இலட்சம் ஆண்டுகள் என்று கூறுவதன் மூலம் பாதி பாதி என்ற கணக்கு இல்லாமலாகி விடுகிறது. எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! உங்களுக்கு தந்தை கூறியிருக்கின்றார், முழு கல்பத்தின் ஆயுளே 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். 84 லட்சம் பிறவிகள் கிடையவே கிடையாது. இது மிகப் பெரிய கட்டுக் கதையாகும். சூரியவம்சி சந்திரவம்சி தேவி தேவதைகள் இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆட்சி செய்தனரா என்ன! புத்தி வேலை செய்வது கிடையாது. இப்பொழுது நாம் கூறுவது தவறானது என்று ஏற்றுக் கொண்டால் பின்பற்றுபவர்கள் நம்மை விட்டு சென்று விடுவர் என்று சந்நியாசிகள் நினைக்கின்றனர். புரட்சி ஏற்பட்டு விடும். ஆகையால் அவர்கள் உங்களது வழிப்படி நடந்து தனது இராஜ்யத்தை விட்டு விடமாட்டார்கள். கடைசியில் சிறிது புரிந்து கொள்வார்கள், இப்பொழுது அல்ல. செல்வந்தர்களும் ஞானம் அடைய மாட்டார்கள். நான் ஏழைப் பங்காளன் என்று தந்தை கூறுகின்றார். செல்வந்தர்கள் சரண்டர் ஆகி கர்மாதீத் நிலையை அடைய முடியாது. தந்தை மிகப் பெரிய வியாபாரியாக இருக்கின்றார். ஏழைகளிடமிருந்து மட்டுமே பெறுவார். செல்வந்தர்களிடமிருந்து பெற்றால் பிறகு அந்த அளவிற்கு கொடுக்க வேண்டியிருக்கும். செல்வந்தர்கள் விழிப்படைவதே கடினமாகும், ஏனெனில் இதில் அனைத்தையும் மறக்க வேண்டியிருக்கிறது. எதையும் வைத்துக் கொள்ளக் கூடாது, அப்பொழுது தான் கர்மாதீத நிலை ஏற்படும். செல்வந்தர்களால் மறக்க முடியாது. யார் கல்பத்திற்கு முன்பு ஆஸ்தி அடைந்திருந்தார்களோ அவர்களே அடைவர். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) எவ்வாறு தந்தை அன்புக் கடலாக இருக்கின்றாரோ அவ்வாறு மாஸ்டர் அன்புக் கடலாக ஆகி அன்பாக காரியங்களை செய்விக்க வேண்டும். கோபப்படக் கூடாது. யாராவது கோபப்பட்டால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

 

2) புத்தியினால் இந்த பழைய துக்கமான உலகை மறந்து எல்லையற்ற சந்நியாசி ஆக வேண்டும். சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்ய வேண்டும். அழிவற்ற ஞான ரத்தினங்களின் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டும்.

 

வரதானம்:

மன் மனா பவ என்பதுடன் மத்யா ஜீ பவ என்ற மந்திரத்தின் சொரூபத்தில் நிலைத்து விடக் கூடிய மகான் ஆத்மா ஆவீர்களாக.

 

குழந்தைகளாகிய உங்களுக்கு மன் மனா பவ என்பதுடன் கூடவே மத்யா ஜீ பவ என்ற வரதானம் கூட உள்ளது. தனது சொர்க்கத்தின் நினைவில் இருப்பது - இதற்கு மத்யா ஜீ பவ என்று கூறுவார்கள். யார் தனது சிறந்த பிராப்திகளின் போதையில் இருப்பார்களோ அவர்களே மத்யா ஜீ பவ என்ற மந்திரத்தின் சொரூபத்தில் நிலைத்திருக்க முடியும். யார் மத்யா ஜீ பவ ஆக இருக்கிறார்களோ அவர்கள் மன் மனா பவ ஆக இருக்கவே இருப்பார்கள். அப்பேர்ப்பட்ட குழந்தைகளின் ஒவ்வொரு சங்கல்பம் ஒவ்வொரு வார்த்தை மற்றும் ஒவ்வொரு செயலும் (மகான்) உயர்ந்ததாக ஆகி விடும். ஸ்மிருதி சொரூபம் (நினைவின் வடிவம்) ஆவது என்றாலே மகான் ஆத்மா ஆவது ஆகும்.

 

சுலோகன்:

குஷி (மகிழ்ச்சி) என்பது உங்களது விசேஷமான கஜானா ஆகும். இந்த பொக்கிஷத்தை ஒரு பொழுதும் விட்டு விடாதீர்கள்.

 

ஓம்சாந்தி