24.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! யோக பலத்தினால் தீய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு தங்களுக்குள் நல்ல பழக்க வழக்கங்ககளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஞானம் மற்றும் தூய்மையின் கடைபிடித்தல் மற்றும் பழக்கம் நல்ல ஒழுக்க முறை ஆகும்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய உங்களுடைய பிறப்புரிமை எது? உங்களுக்கு இப்பொழுது என்ன ஒரு உணர்வு (எண்ணம்) வருகிறது?

 

பதில்:

முக்தி மற்றும் ஜீவன் முக்தி உங்களுடைய பிறப்புரிமை ஆகும். நாம் தந்தையுடன் கூட திரும்பிச் செல்ல வேண்டும் என்ற உணர்வு (எண்ணம்) இப்பொழுது உங்களுக்கு வருகிறது. தந்தை பக்தியின் பலனான முக்தி மற்றும் ஜீவன் முக்தி அளிக்க வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது எல்லோரும் சாந்திதாமம் செல்ல வேண்டும். எல்லோரும் தங்களது வீட்டை (சாட்சாத்காரம்) மனக்கண் மூலம் காண வேண்டும்.

 

ஓம் சாந்தி.

மனிதர்கள் தந்தையை உண்மையான "பாதுஷா" (பாதுகாவலர்) என்றும் கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் "பாதுஷா" என்று கூறுவதில்லை. அவர்கள் உண்மையான ஃபாதர் (தந்தை) என்று மட்டுமே கூறுகிறார்கள். "காட் இஸ் ட்ரூத்" - இறைவனே சத்தியம் என்கிறார்கள். பாரதத்தில் தான் உண்மையான "பாதுஷா" (பாதுகாவலர்) என்று கூறுகிறார்கள். இப்பொழுது வித்தியாசமோ நிறைய உள்ளது. அவர் உண்மையை மட்டுமே கூறுகிறார். உண்மையைக் கற்பிக்கிறார். உண்மையானவராக ஆக்குகிறார். இங்கு உண்மையான "பாதுஷா" (பாதுகாவலர்) என்கிறார்கள். உண்மையானவராகவும் ஆக்குகின்றார். மேலும் உண்மையான கண்டத்திற்கு சக்கரவர்த்தியாகவும் ஆக்குகிறார். "முக்தியும் அளிக்கிறார். ஜீவன் முக்தியும் அளிக்கிறார். இதை பக்தியின் பலன் என்று கூறுகிறார்கள்" என்பது சரியானதே ஆகும். "லிபரேஷன் மற்றும் ஃப்ரூஷன்" - முக்தி மற்றும் ஜீவன் முக்தியை பக்தியின் பலனாக அளிக்கிறார் மற்றும் லிபரேட் செய்கிறார் (விடுவிக்கிறார்). நமக்கு இரண்டுமே தருகிறார் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். "லிபரேட்" - எல்லோருக்குமே முக்தியோ அளிக்கிறார். பலன் உங்களுக்கு அளிக்கிறார். "லிபரேஷன் (விடுதலை) மற்றும் ஃப்ருஷன்" (பலனை அடைதல்) இது கூட ஆங்கிலத்தில் வார்த்தைகள் அமைக்கப்பட்டுள்ளது அல்லவா? மொழிகளோ நிறைய உள்ளது. சிவபாபாவிற்கும் கூட நிறைய பெயர்கள் வைத்து விடுகிறார்கள். யாரிடமாவது அவர் பெயர் "சிவ பாபா" என்று கூறினீர்கள் என்றால், நாங்களோ அவரை "மாலிக்" என்று தான் கூறுகிறோம் என்பார்கள். "மாலிக்" என்றால் எஜமானன் சரி தான். ஆனால் அதற்கும் பெயர் வேண்டும் அல்லவா? பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்ட பொருள் எதுவும் கிடையாது. "மாலிக்" - எஜமானர் கூட ஏதோ ஒரு பொருளினால் ஆனவர் தானே. பெயர் ரூபமோ அவசியம் உள்ளது. தந்தை உண்மையில் லிபரேட் கூட செய்கிறார் (விடுவிக்கிறார்). பின் சாந்தி தாமத்திற்கு அவசியம் அனைவரும் செல்ல வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். தங்களது வீட்டை அனைவரும் அனுபவம் செய்ய வேண்டும். வீட்டிலிருந்து வந்துள்ளோம். எனவே முதலில் அதை சாட்சாத்காரம் செய்ய வேண்டும். அதற்கு கதி சத்கதி என்று கூறுவார்கள். வார்த்தையை என்னவோ கூறுகிறார்கள். ஆனால் அர்த்தமில்லாமல் கூறுகிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கோ (ஃபீலிங்) உணர்வு இருக்கிறது. நாம் நமது வீட்டிற்கும் செல்வோம். மேலும் பலனும் கிடைக்கும். வரிசைக்கிரமமாக உங்களுக்கு கிடைக்கிறது. பின் மற்ற தர்மத்தினருக்கும் காலத்திற்கேற்ப கிடைக்கிறது. நீங்கள் சொர்க்கவாசி ஆவீர்களா இல்லை நரகவாசி ஆவீர்களா என்ற இந்த பிரசுர துண்டு மிகவும் நன்றாக உள்ளது என்று தந்தை புரிய வைத்திருந்தார். இந்த முக்தி, ஜீவன் முக்தி இரண்டும் "காட் ஃபாதர் பர்த் ரைட்" - ஈசுவரிய பிறப்புரிமை ஆகும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். நீங்கள் எழுதவும் செய்யலாம்.தந்தையிடமிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த பிறப்புரிமை கிடைக்கிறது. தந்தையினுடையவர் ஆவதால் இரண்டு பொருட்களும் பிராப்தி ஆகிறது. அது இராவணனினுடைய (பார்த் ரைட்) பிறப்புரிமை. இது பரமபிதா பரமாத்மாவின் பிறப்புரிமை. இது பகவானின் பிறப்புரிமை. அது சாத்தானின் பிறப்புரிமை. இதுபோல கொஞ்சம் புரிந்து கொள்ள கூடிய வகையில் இவ்வாறு எழுதவேண்டும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் சொர்க்கத்தை (ஹெவென்) ஸ்தாபனை செய்ய வேண்டும். எவ்வளவு வேலை செய்ய வேண்டும். இப்பொழுதோ சிறு பிள்ளைகள் போல. எப்படி கலியுகத்திற்கு மனிதர்கள் "கலியுகம் இப்பொழுது குழந்தை ஆகும்" என்கிறார்கள். சத்யுகத்தை ஸ்தாபனை செய்வதில் சிறு பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இராவணனுடையதை ஒன்றும் ஆஸ்தி என்று கூற மாட்டார்கள். காட் ஃபாதரிடமிருந்தோ ஆஸ்தி கிடைக்கிறது. அவன் (இராவணன்) "ஃபாதர்" - தந்தை ஆவானா என்ன? அவனுக்கோ சாத்தான் (இராவணன் 5 விகாரங்கள்) என்று கூறப்படுகிறது. சாத்தானிடமிருந்து என்ன ஆஸ்தி கிடைக்கிறது? 5 விகாரங்கள் கிடைக்கின்றது. "ஷோ" - வெளிப்பகட்டும் அவ்வாறே செய்கிறார்கள். தமோபிரதானமாக ஆகி விடுகிறார்கள். இப்பொழுது தசரா விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். விழா கொண்டாடுகிறார்கள். நிறைய செலவு செய்கிறார்கள். வெளி நாடுகளுக்கும் அழைப்பு கொடுத்து வரவழைக்கிறார்கள். மைசூரில் எல்லாவற்றையும் விட புகழ் பெற்ற தசரா கொண்டாடுகிறார்கள். பைசா உடையவர்களும் நிறைய பேர் உள்ளார்கள். இராவண இராஜ்யத்தில் பைசா கிடைக்கிறது. பின் அறிவே இல்லாமல் போய் விடுகிறது. தந்தை விளக்கமாக புரிய வைக்கிறார். இதனுடைய பெயரே இராவண இராஜ்யம் என்பதாகும். அதற்குப் பிறகு ஈசுவரிய இராஜ்யம் என்று கூறப்படுகிறது. இராம இராஜ்யம் என்று கூறுவதும் தவறு ஆகிவிடுகிறது. காந்தி அடிகள் இராம இராஜ்யத்தை விரும்பினார். மனிதர்கள் காந்தி அடிகளைக் கூட அவதாரமாக இருந்தார் என்று நினைக்கிறார்கள். அவருக்கு எவ்வளவு பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவரை பாரதத்தின் தந்தை என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது இவரோ முழு உலகத்தின் தந்தை ஆவார். இப்பொழுது நீங்கள் இங்கு அமர்ந்துள்ளீர்கள். எத்தனை ஜீவ ஆத்மாக்கள் இருக்கக்கூடும் என்பதை அறிந்துள்ளீர்கள். ஜீவன் (சரீரமோ) அழியக் கூடியது. மற்றது ஆத்மா அழியாதது ஆகும். ஆத்மாக்களோ ஏராளமாக உள்ளார்கள். எப்படி மேலே நட்சத்திரங்கள் உள்ளன அல்லவா? நட்சத்திரங்கள் அதிகமாக உள்ளனவா, இல்லை ஆத்மாக்கள் அதிகமாக உள்ளனவா? ஏனெனில் நீங்கள் பூமியின் நட்சத்திரங்கள் ஆவீர்கள். மேலும் அவை ஆகாயத்தின் நட்சத்திரங்கள் ஆகும். உங்களுக்கு தேவதை என்று கூறப்படுகிறது. அவர்கள் அவற்றையும் தேவதை என்று கூறிவிடுகிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்று கூறப்படுகிறது அல்லவா?

 

நல்லது. இது பற்றி பின் தங்களுக்குள் விவாதியுங்கள். பாபா இப்பொழுது இந்த விஷயத்தைத் தூண்டிவிடுவதில்லை. அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒருவர் ஆவார் என்பதோ புரிய வைக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் அவர் தந்தை ஆவார் என்பது அவர் புத்தியில் உள்ளது. முழு சிருஷ்டி சமுத்திரத்தின் மீது நின்றுள்ளது என்பதையோ அனைவரும் அறிந்துள்ளார்கள். இது கூட எல்லோருக்கும் ஒன்றும் தெரியாது. இந்த இராவண இராஜ்யம் முழு சிருஷ்டியின் மீது உள்ளது என்பதை தந்தை புரிய வைத்திருந்தார். அப்படியின்றி இராவண இராஜ்யம் ஏதோ கடலுக்கு அப்பாற்பட்டு உள்ளது என்பதல்ல. கடலோ நாலா புறங்களிலும் இருக்கவே இருக்கிறது. கூறுகிறார்கள் அல்லவா - "கீழே எருது உள்ளது. அதனுடைய கொம்புகளின் மீது சிருஷ்டி (படைப்பு) நின்றுள்ளது" என்று. பிறகு அது களைத்து விடும்பொழுது கொம்பினை மாற்றிக் கொள்கிறது. இப்பொழுது பழைய உலகம் முடிந்து போய் புதிய உலகத்தின் ஸ்தாபனை ஆகிறது. சாஸ்திரங்களிலோ அநேக விதமான விஷயங்கள் கட்டுக் கதைகளாக எழுதி விட்டுள்ளார்கள். இங்கு எல்லா ஆத்மாக்களும் சரீரத்துடன் கூட இருக்கிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள். இவர் களை ஜீவ ஆத்மாக்கள் என்பார்கள். அது ஆத்மாக்களின் வீடு ஆகும். அங்கோ சரீரம் இல்லை. அதற்கு நிராகாரி என்று கூறப்படுகிறது. ஜீவன் (உடல்) ஆகாரி (உருவம் உடையது) ஆகும்.எனவே சாகார் என்று கூறப்படுகிறது. நிராகாரமானவருக்கு சரீரம் இருப்பதில்லை. இது சாகார சிருஷ்டி ஆகும். அது நிராகாரி ஆத்மாக்களின் உலகம் ஆகும். இதற்கு சிருஷ்டி என்று கூறுவார்கள். அதற்கு "இன் கார்ப்போரியல் வர்ல்டு" நிராகார உலகம் என்று கூறப்படுகிறது. ஆத்மா சரீரத்தில் வரும்பொழுது இந்த அசைவுகள் நிகழ்கின்றன. இல்லையென்றால் சரீரமோ எந்தவொரு வேலைக்கும் உதவாது. எனவே அதற்கு நிராகாரி உலகம் என்றே கூறப்படுகிறது. எத்தனை ஆத்மாக்கள் இருந்தாலும் சரி, அவர்கள் எல்லோரும் பின்னால் வர வேண்டியுள்ளது. எனவே அதற்கு புருஷோத்தம சங்கமயுகம் என்று கூறப்படுகிறது. எல்லா ஆத்மாக்களும் இங்கு வந்துவிடும் பொழுது அங்கு ஒருவர் கூட இருப்பதில்லை. அங்கு முற்றிலுமாக காலி ஆகிவிடும் பொழுது எல்லோரும் மீண்டும் திரும்பிச் செல்வார்கள். நீங்கள் இங்குள்ள சம்ஸ்காரத்தை வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப எடுத்துச் செல்கிறீர்கள். ஒருவர் ஞானத்தின் சம்ஸ்காரத்தை எடுத்து செல்கிறார். ஒருவர் தூய்மையின் சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கிறார். பிறகும் இங்கு தான் வர வேண்டி உள்ளது. ஆனால் முதலிலோ வீட்டிற்குச் செல்ல வேண்டும். அங்கு இருப்பது நல்ல சம்ஸ்காரம். இங்கு இருப்பது தீய சம்ஸ்காரம். நல்ல சம்ஸ்காரம் மாறி தீய சம்ஸ்காரம் ஆகிவிடுகிறது. பிறகு தீய சம்ஸ்காரம் யோக பலத்தினால் நல்லதாக ஆகிவிடுகிறது. நல்ல சம்ஸ்காரத்தை அங்கு எடுத்துச் செல்வீர்கள். தந்தையிடம் கூட படிப்பிக்கும் சம்ஸ்காரம் உள்ளது அல்லவா? அதனால் வந்து புரிய வைக்கிறார். படைப்பவர் மற்றும் படைப்பின் முதல் இடை கடையின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார். விதை பற்றிய விளக்கமும் அளிக்கிறார். மற்றும் முழு விருட்சத்தின் விளக்கமும் அளிக்கிறார். விதை பற்றிய விளக்கம் என்பது ஞானம் ஆகும். மேலும் விருட்சத்தின் பற்றிய விளக்கமாவது பக்தி. பக்தியில் நிறைய விரிவாக்கம் உள்ளது அல்லவா? விதையை நினைவு செய்வதோ எளிதாகும். அங்கேயே சென்று விட வேண்டும். தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆவதில் சிறிது காலம் தான் பிடிக்கிறது. பிறகு சதோபிரதான நிலையிலிருந்து தமோபிரதானமாக ஆவதில் மிகச் சரியாக 5 ஆயிரம் வருடங்கள் பிடிக்கின்றது. இந்த சக்கரம் மிகவுமே (அக்யூரேட்) சரியாக அமைக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது. வேறு யாரும் இந்த விஷயங்களைக் கூற முடியாது. உங்களால் கூற முடியும். பாதிப் பாதி பிரிக்கப்படுகிறது. பாதி சொர்க்கம், பாதி நரகம். பிறகு அதன் விளக்கம் கூட கூறுகிறார். சொர்க்கத்தில் பிறவிகள் குறைவு. ஆயுள் நீண்டு இருக்கும். நரகத்தில் பிறவிகள் அதிகம். ஆயுள் குறைவாக இருக்கும். அங்கு இருப்பவர்கள் யோகிகள். இங்கு இருப்பவர்கள் போகிகள். எனவே இங்கு நிறைய பிறவிகள் இருக்கும். இந்த விஷயங்கள் வேறு யாருக்கும் தெரியாது. மனிதர்களுக்கு எதுவுமே தெரியாது. எப்பொழுது தேவதைகளாக இருந்தோம், அவர்கள் எப்படி ஆனார்கள், எவ்வளவு அறிவாளியாக ஆகி உள்ளோம் - இதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தை இச்சமயத்தில் குழந்தைகளுக்குக் கற்பித்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தி அளிக்கிறார். பிறகு உங்களுடைய இந்த சம்ஸ்காரம் இருக்காது. பிறகு துக்கத்தின் சம்ஸ்காரம் ஆகிவிடுகிறது. எப்படி இராஜ்யம் ஆளும் சம்ஸ்காரம் ஆகிவிடுகிறதோ அதன் பின் ஞானத்தின் படிப்பின் சம்ஸ்காரம் முடிந்துவிடுகிறது.இந்த சம்ஸ்காரம் முடிந்துவிட்டது என்றால் பிறகு வரிசைக்கிரமமாக முயற்சிக்கு ஏற்ப ருத்ர மாலையில் கோர்க்கப்பட்டு விடுவீர்கள். பிறகு பாகத்தை ஏற்று நடிக்க வரிசைக்கிரமமாக வருவீர்கள். யார் முழுமையாக 84 பிறவிகள் எடுத்துள்ளார்களோ அவர்கள் முதலில் வருகிறார்கள். அவருடைய பெயர் கூட கூறுகிறார். கிருஷ்ணரோ சொர்க்கத்தின் முதல் இளவரசர் ஒருவர் மட்டுமா இருப்பார். முழு ராஜதானி இருக்கும் அல்லவா? என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ராஜாவுடன் கூடவே பிரஜைகளும் வேண்டும். ஒருவர் மூலமாக மற்றவர் பிறந்து கொண்டே செல்லக் கூடும். ஒரு வேளை 8 பேர் சேர்ந்து வருகிறார்கள் என்று கூறினாலும் கூட ஸ்ரீகிருஷ்ணரோ முதல் நம்பரில் வருவார் அல்லவா? 8 பேர் ஒன்றாக வருகிறார்கள் என்றால் கிருஷ்ணருக்கு இவ்வளவு மகிமை பாடல் ஏன்? இந்த எல்லா விஷயங்களையும் மேலும் போகப்போக புரிய வைப்பார். இன்று உங்களுக்கு மிகவும் ஆழத்திலும் ஆழமான விஷயங்களைக் கூறுகிறேன் என்று கூறுகிறார் அல்லவா? இன்னமும் கூற வேண்டியது மீதி இருக்கும் அல்லவா? எந்த விஷயத்திலாவது புரியவில்லை என்றால், "எங்களுடைய மூத்த சகோதரியால் பதில் கூற முடியும்" என்று கூறுங்கள் என்ற யுக்தி மிகவும் நன்றாக உள்ளது. அல்லது இதுவரையும் தந்தை கூறவில்லை என்று கூற வேண்டும். நாளுக்கு நாள் ஆழத்திலும் ஆழமான விஷயங்களைக் கூறுகிறார். இதைக் கூறுவதில் வெட்கப்படுவது என்கிற விஷயமே கிடையாது. உங்களுக்கு ஆழத்திலும் ஆழமான விஷயங்களைக் கூறும் பொழுது கேட்டு மிகுந்த குஷி ஏற்படுகிறது. கடைசியில் "மன்மனாபவ மத்யாஜி பவ" என்று கூறி விடுகிறார். இந்த வார்த்தைகள் கூட சாஸ்திரங்களை எழுதியவர்கள் எழுதி உள்ளார்கள். குழம்ப வேண்டிய அவசியமே இல்லை. குழந்தை தந்தையினுடையவர் ஆனார் என்றால், பின் எல்லையில்லாத சுகம் கிடைத்துவிட்டது. இதில் மனம், சொல், செயல் தூய்மையின் அவசியம் உள்ளது. லட்சுமி நாராயணருக்கு தந்தையின் ஆஸ்தி கிடைத்துள்ளது அல்லவா? இவர்கள் முதல் நம்பரில் உள்ளார்கள். அவர்களுக்குத் தான் பூஜை நடக்கிறது. நம்மிடம் இது போன்ற குணங்கள் உள்ளனவா என்று தங்களையும் பாருங்கள். இப்பொழுதோ குணமற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? தங்களுடைய அவகுணங்களைப் பற்றியும் யாருக்குமே தெரியாது.

 

இப்பொழுது நீங்கள் தந்தையினுடையவராக ஆகி உள்ளீர்கள் என்றால் அவசியம் மாற வேண்டி உள்ளது. தந்தை புத்தியின் பூட்டை திறந்துள்ளார். பிரம்மா மற்றும் விஷ்ணு பற்றிய ரகசியத்தைக் கூட புரிய வைத்துள்ளார். இவர் தூய்மை இல்லாதவர். அவர் தூய்மையானவர். தத்து எடுப்பது என்பது இந்த புருஷோத்தம சங்கம யுகத்தில் தான் ஆகிறது. எப்பொழுது பிரஜாபிதா பிரம்மா உள்ளாரோ அப்பொழுது தான் தத்து எடுப்பது நடக்கிறது. பிரஜாபிதாவிற்குக் கூட அவசியம் பிராமண குழந்தைகள் வேண்டும். இவர்கள் முகவம்சாவளி ஆவார்கள். அவர்கள் (குக) விகார வம்சாவளி ஆவார்கள். பிரம்மாவோ பிரசித்தமானவர் ஆவார். அவருடைய அடைப் பெயரே (சர்நேம்) எல்லையில்லாதது ஆகும். அவை எல்லாமே எல்லைக்குட்பட்ட அடைப் பெயர்கள் ஆகும். பிரஜாபிதா பிரம்மா ஆதி தேவன் ஆவார் என்பதை எல்லோரும் புரிந்துள்ளார்கள். அவருக்கு ஆங்கிலத்தில் "கிரேட் கிரேட் கிராண்டு ஃபாதர்" என்று கூறுவார்கள். இது எல்லையில்லாத அடைப்பெயர். குறிப்பிட்ட பரிவாரத்தை குறிக்கும் அவைகள் எல்லாமே எல்லைக்குட்பட்ட அடைப் பெயர்கள் ஆகும். எனவே பாரதம் பெரியதிலும் பெரிய தீர்த்தம் ஆகும். இங்கு தான் எல்லையில்லாத தந்தை வருகிறார் என்பது அவசியம் அனைவருக்கும் தெரிய வர வேண்டும் என்பதை தந்தை புரிய வைக்கிறார். அப்படி இன்றி முழு பாரதத்தில் வீற்றிருக்கிறார் என்பதல்ல. சாஸ்திரங்களில் மகத தேசம் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஞானம் எங்கு கற்பித்தார்? அபுவில் எப்படி வந்தார்? தில்வாலா கோவில் கூட இங்கு முழுமையான நினைவார்த்தம் உள்ளது. யாரெல்லாம் அமைத்தார்களோ அவர்களது புத்தியில் தோன்றியது, பிறகு அமர்ந்து கட்டினார்கள். (அக்யூரேட் மாடல்) மிகச் சரியான மாதிரியோ அமைக்க முடியாது. தந்தை இங்கு தான் வந்து அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். மகத தேசத்தில் அல்ல. அதுவோ பாகிஸ்தான் ஆகியது. இது "பாக் ஸ்தான்" (தூய்மையான இடம்) ஆகும். உண்மையில் "பாக் ஸ்தான்" என்று சொர்க்கத்திற்கு கூறப்படுகிறது. முழு நாடகமே "பாக்" மற்றும் "நாபாக்" தூய்மையானது மற்றும் தூய்மையற்றது பற்றியே அமைக்கப்பட்டுள்ளது.

 

எனவே இனிமையிலும் இனிமையான அருமைக் குழந்தைகளே - ஆத்மாக்களும் பரமாத்மாவும் வெகு காலமாக பிரிந்திருந்தார்கள்.... என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். எவ்வளவு காலத்திற்குப் பின்னர் சந்தித்துள்ளீர்கள்? மீண்டும் எப்பொழுது சந்திப்பீர்கள்? சத்குரு இடைத் தரகர் ரூபத்தில் கிடைக்கும் பொழுது அழகான சந்திப்பு (மேளா) நிகழ்த்திவிட்டார். குருக்களோ நிறைய உள்ளார்கள் அல்லவா? எனவே சத்குரு என்று கூறப்படுகிறது. பெண்ணிற்குத் தாலி கட்டும் பொழுது இந்த கணவன் உன்னுடைய குரு இறைவன் ஆவார் என்பார்கள். கணவனோ முதன் முதலில் தூய்மையற்றவராக ஆக்குகிறார். தற்காலத்திலோ உலகத்தில் மிகவுமே அசுத்தம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்களோ மலர் போல ஆக வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு உறுதியான கயிற்றை தந்தை கட்டுகிறார். இப்படித்தான் சிவஜெயந்தியுடன் கூடவே ரட்சாபந்தன் ஆகிவிடுகிறது. கீதா ஜெயந்தி கூட ஆக வேண்டியுள்ளது. கிருஷ்ணரின் ஜெயந்தி சிறிது தாமதமாக புதிய உலகத்தில் ஆகியுள்ளது. மற்றபடி எல்லா பண்டிகைகளும் இந்த நேரத்தினுடையது ஆகும். ராம நவமி எப்பொழுது ஆகியது என்பது கூட யாருக்காவது தெரியுமா என்ன? புதிய உலகத்தில் 1250 வருடங்களுக்குப் பிறகு ராம நவமி ஆகிறது என்று நீங்கள் கூறுவீர்கள். சிவஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ராம ஜெயந்தி எப்பொழுது ஆகியது..? இது யாருமே கூற முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் கூட இப்பொழுது தந்தை மூலமாக அறிந்து கொண்டு விட்டுள்ளீர்கள். (அக்யூரேட்) மிகச் சரியாக உங்களால் கூற முடியும். அதாவது முழு உலகத்தின் வாழ்க்கைச் சரித்திரத்தை உங்களால் கூற முடியும். லட்சக்கணக்கான வருடங்களின் விஷயம் கூற முடியுமா என்ன? தந்தை எவ்வளவு நன்றாக எல்லையில்லாத கல்வியைக் கற்பிக்கிறார். ஒரே ஒரு முறை நீங்கள் 21 பிறவிகளுக்குத் தூய்மையை இழப்பதிலிருந்து காப்பாற்றப்பட்டு விடுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் 5 விகாரங்கள் என்ற இராவணனின் அந்நிய தேசத்தில் உள்ளீர்கள். இப்பொழுது முழு 84ன் சக்கரம் உங்கள் நினைவில் வந்துள்ளது. நல்லது,

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. எல்லையில்லாத சுகத்தின் ஆஸ்தியை அடைவதற்காக மனம், சொல், செயல் அவசியம் தூய்மை ஆக வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை யோக பலத்தினால் தாரணை செய்ய வேண்டும். தங்களை குணவானாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

2. சதா மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக தந்தை தினமும் கூறும் ஆழத்திலும் ஆழமான விஷயங்களைக் கேட்க வேண்டும் மற்றும் பிறருக்கும் கூற வேண்டும். எந்த விஷயத்திலும் குழப்பமடையக் கூடாது. யுக்தியுடன் (பொருத்தமான) பதிலளிக்க வேண்டும். வெட்கப்படக் கூடாது.

 

வரதானம்:

சுயமரியாதை என்ற (சீட்) இருக்கையில் நிலைத்திருந்து சக்திகளை கட்டளைப்படி நடத்தக் கூடிய விசாலமான புத்தி உடையவர் ஆவீர்களாக.

 

தங்களது விசால புத்தி மூலமாக அனைத்து சக்திகள் என்ற சேவாதாரிகளை தக்க தருணத்தில் காரியத்தில் ஈடுபடுத்துங்கள். என்னவெல்லாம் தலைப்புக்கள் (டைட்டில்) பரமாத்மா மூலமாக நேரிடையாக கிடைத்துள்ளதோ, அவற்றின் போதையில் இருங்கள். மரியாதையின் ஸ்திதி (நிலை) என்ற சீட்டில் செட் ஆகி இருந்தீர்கள் என்றால் அனைத்து சக்திகளும் சேவைக்காக எப்பொழுதும் ஆஜராக இருக்கும் அனுபவம் ஆகும். உங்களது கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். எனவே வரதானம் மற்றும் ஆஸ்தியை காரியத்தில் ஈடுபடுத்துங்கள். எஜமானராக ஆகி, யோகத்துடன் கூடியவராக ஆகி (யோகயுக்த்), யுக்தியுக்த் (யுக்திகளுடன் கூடிய) சேவையை சேவாதாரிகளிடமிருந்து பெறுங்கள். அப்பொழுது எப்பொழுதுமே திருப்தியாக இருப்பார்கள். திரும்ப திரும்ப விண்ணப்பம் அளிக்க மாட்டார்கள்.

 

சுலோகன்:

எந்தவொரு செயலையும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக வெற்றி சிரேஷ்ட பிராமண ஆத்மாவாகிய எனது பிறப்புரிமை என்ற (ஸ்மிருதி) நினைவை வெளிப்படுத்துங்கள் (இமர்ஜ் செய்யுங்கள்).

 

ஓம்சாந்தி