10.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

"இனிமையான குழந்தைகளே! நீங்கள் கர்மாதீத நிலையடைந்து செல்ல வேண்டும். அதனால் உள்ளுக்குள் எந்த ஒரு கறையும் இருக்கக் கூடாது. தன்னை சோதித்தறிந்து குறைகளை நீக்கிக் கொண்டே செல்லுங்கள்.

 

கேள்வி :

எந்த நிலையை (அவஸ்தா) சேமிப்பதில் முயற்சி தேவைப்படுகிறது? அதற்கான புருஷார்த்தம் என்ன?

 

பதில் :

இந்தக் கண்களால் பார்க்கப்படுகின்ற எந்த ஒரு பொருளும் முன்னால் வரக் கூடாது. பார்த்தும் பார்க்காமல் இருக்க வேண்டும். தேகத்தில் இருந்து கொண்டே தேகி அபிமானியாக இருங்கள். இந்த நிலையை சேமிப்பதில் நேரம் பிடிக்கின்றது. புத்தியில் பாபா மற்றும் வீடு தவிர வேறு எந்த ஒரு பொருளும் நினைவு வரக்கூடாது. இதற்காக உள்முகநோக்கில் இருந்து தன்னை சோதித்தறிய வேண்டும். தன்னுடைய சார்ட் வைக்க வேண்டும்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட ஆன்மீகக் குழந்தைகள் இதை அறிவார்கள் -- நாம் நம்முடைய தெய்வீக இராஜாங்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். இதில் இராஜாக்களும் உள்ளனர் என்றால் பிரஜைகளும் உள்ளனர். புருஷார்த்தமோ (முயற்சி) அனைவருமே செய்கின்றனர். யார் அதிக முயற்சி செய்கிறார்களோ அவர்கள் அதிகப் பரிசு பெறுகிறார்கள். இதுவோ ஒரு பொதுவான விதிமுறையாகும். இது புதிய விஷயம் ஒன்றும் இல்லை. இதை தெய்வீகத் தோட்டம் என்றும் சொல்லலாம் அல்லது இராஜதானி என்றும் சொல்லலாம். இப்போது இது கலியுகத் தோட்டம் அல்லது முட்களின் காடு. அதிலும் கூட ஏதேனும் அதிகப் பழங்கள் கொடுக்கக் கூடிய மரங்கள் உள்ளன. சில குறைவான பழங்கள் கொடுப்பவையாக உள்ளன. சில குறைந்த சாறு கொண்ட பழங்கள் உள்ளன. இன்னும் சில வேறு மாதிரியாகவும் உள்ளன. பூக்களின், பழங்களின் வித-விதமான இதுபோன்ற மரங்கள் உள்ளன. அதே போல் குழந்தைகளாகிய உங்களிலும் கூட வரிசைக்கிரமமான புருஷார்த்தத்தின் அனுசாரம் இருக்கிறீர்கள். சில நல்ல பலன் தருகின்றன, சில குறைந்த பலன் தருகின்றன. வெவ்வேறு விதமான மரங்கள் உள்ளன. இது பழங்கள் தரக்கூடிய தோட்டம். இந்த தெய்வீக மரத்தின் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது பூந்தோட்டத்தின் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, கல்பத்திற்கு முன் போலவே. மெது-மெதுவாக வரிசைக்கிரம முயற்சியின்படி இனிமையான மணமுள்ளவர் களாகவும் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து விதங்களும் உள்ளன இல்லையா? பாபாவிடமும் வருகிறார்கள், பாபாவின் முகத்தைப் பார்ப்பதற்காக. இதையோ நிச்சயம் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், பாபா நம்மை சொர்க்கத்தின் எஜமானராக ஆக்குகின்றார். இதில் குழந்தைகளுக்கு அவசியம் நிச்சயம் உள்ளது. எல்லையற்ற தந்தை நம்மை எல்லையற்ற எஜமானராக ஆக்கிக் கொண்டிருக்கிறார். எஜமானர் ஆவதில் மிகுந்த குஷியும் உள்ளது. எல்லைக்குட்பட்ட அதிகாரித் தன்மையில் துக்கம் உள்ளது. இந்த விளையாட்டே சுகம் மற்றும் துக்கத்தால் ஆனதாகும். மேலும் இதுவும் கூட பாரதவாசிகளுக்காகத் தான். குழந்தைகளுக்கு பாபா சொல்கிறார், முதலில் உங்கள் வீட்டைப் பராமரியுங்கள். வீட்டின் மீது உரிமையாளாரின் பார்வை உள்ளது இல்லையா? ஆக, பாபாவும் ஒவ்வொரு குழந்தையையும் அமர்ந்து பார்க்கின்றார் -- இவர்களிடம் என்னென்ன குணங்கள் மற்றும் அவகுணங்கள் உள்ளன? குழந்தைகள் தாங்களே கூட அறிந்துள்ளனர். குழந்தைகளே, உங்களுடைய குறைபாடுகளை நீங்களே எழுதிக் கொண்டு வாருங்கள் என்று பாபா சொல்வாரானால் உடனே எழுத முடியும். நாம் நமக்குள் என்னென்ன குறைகளை உணர்ந்திருக்கிறோம்? ஏதேனும் ஒரு குறை நிச்சயமாக உள்ளது. யாருமே இன்னும் சம்பூர்ணமாகவில்லை. ஆம், நிச்சயமாக ஆகவேண்டும். கல்ப-கல்பமாக ஆகியிருக்கிறோம். இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் இச்சமயம் குறை உள்ளது. அதைச் சொல்வதால் பாபா அதைப் பற்றியே சொல்லிப் புரிய வைப்பார். இச்சமயமோ அநேக குறைபாடுகள் உள்ளன. முக்கியமான அனைத்துக் குறைபாடுகளும் தேக அபிமானத்தாலேயே உள்ளன. அவை பிறகு அதிகமாகத் தொந்தரவு செய்கின்றன. ஆன்ம நிலையை முன்னேற விடுவதில்லை. அதனால் இப்போது முழுமையாக முயற்சி செய்யுங்கள். இந்த சரீரத்தையும் இப்போது விட்டுச் செல்ல வேண்டும். தெய்வீக குணங்களையும் இங்கே தான் தாரணை செய்து செல்ல வேண்டும். கர்மாதீத் நிலைக்கு செல்வதன் அர்த்தத்தையும் பாபா சொல்லிப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். கர்மாதீத் ஆகிச் செல்ல வேண்டுமானால் எந்த ஒரு கறையும் இருக்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் வைரமாக ஆகிறீர்கள் இல்லையா? நமக்குள் என்னென்ன கறைகள் உள்ளன? இதையோ ஒவ்வொருவரும் அறிவார்கள். ஏனென்றால் நீங்கள் சைதன்யமானவர்கள். ஜட வைரத்தில் கறை இருக்குமானால் அதை நீக்க முடியாது. நீங்களோ சைதன்யமானவர்கள். நீங்கள் இந்தக் கறையை நீக்கிக் கொள்ள முடியும். நீங்கள் சோழியிலிருந்து வைரம் போல் ஆகிறீர்கள். நீங்கள் உங்களை நல்ல முறையில் அறிந்து கொண்டிருக்கிறீர்கள். சர்ஜன் கேட்கிறார், என்ன கறை உள்ளது? அது உங்களைத் தடுக்கின்றது, முன்னேற விடுவதில்லை? கறையற்றவர்களாக கடைசியில் தான் ஆகவேண்டும். அதையெல்லாம் இப்போது நீக்க வேண்டும். கறை நீங்கவில்லை என்றால் வைரத்தின் மதிப்பு குறைந்து விடும். இதுவும் கூட உறுதியான !பக்கா) நகை வியாபாரம் இல்லையா? வாழ்நாள் முழுவதும் பிரம்மா பாபா இந்தக் கண்களால் வைரங்களையே பார்த்திருக்கிறார். வைரங்களைக் கண்டறிவதில் அத்தனை ஆர்வம் உள்ளவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நீங்களும் வைரமாக ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். ஏதேனும் ஒரு கறை உள்ளது என்பதை அறிந்திருக்கிறீர்கள். இன்னும் சம்பூர்ணமாகவில்லை. சைத்தன்யமாக இருப்பதால் நீங்கள் புருஷார்த்தத்தின் மூலம் கறையை நீக்க முடியும். வைரம் போலவோ அவசியம் ஆகியே தீர வேண்டும். எப்போது முழுமையான புருஷார்த்தம் செய்கிறீர்களோ அப்போது தான் அதுபோல் ஆவீர்கள்.

 

பாபா சொல்கிறார், உங்களது ஆன்மீக நிலை அந்த அளவு உறுதியாக ஆகவேண்டும். சரீரத்தை விடும் போது கடைசியில் எந்த ஒரு நினைவும் வராதிருக்க வேண்டும். இதுவோ தெளிவாக உள்ளது. உற்றார் உறவினர் அனைவரையும் மறக்க வேண்டும். ஒரு பாபாவுடன் மட்டுமே சம்பந்தம் வைக்க வேண்டும். இப்போது நீங்கள் வைரமாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இது ஆபரணங்களின் கடை. நீங்கள் ஒவ்வொருவரும் ஆபரணமாக இருக்கிறீர்கள். இவ்விஷயத்தை வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்-- ஒவ்வொருவரின் மனதிலும் உள்ளது, முயற்சியின் ஆதாரத்தில் நாம் உலகத்தின் எஜமான் ஆகிக் கொண்டிருக்கிறோம். யாருக்கு உயர்ந்த பதவி கிடைத்திருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக முயற்சி செய்திருக்கிறார்கள். அதுவும் உங்களிலிருந்து தான் இல்லையா? குழந்தை களாகிய நீங்கள் தான் இவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். அதனால் பாபா ஒவ்வொரு குழந்தையையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். எப்படி பூக்கள் பார்க்கப்படுகின்றன இல்லையா? இது எத்தகைய மணமுள்ள மலர்? இது எப்படி உள்ளது? இவற்றில் வேறு எந்த மாதிரி கறை உள்ளது? ஏனென்றால் நீங்கள் சைதன்யமானவர்கள். சைத்தன்ய வைரம் தெரிந்து கொள்ள முடியும் இல்லையா? - நமக்குள் என்னென்ன கறை உள்ளது, அது பாபாவிடமிருந்து புத்தியோகத்தை விலக்கி எங்காவது அலைய விடுகின்றது? பாபாவோ சொல்கிறார் -- குழந்தைகளே! என்னையே நினைவு செய்யுங்கள். வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது. இல்லறத்தில் இருந்து கொண்டே ஒரு பாபாவை நினைவு செய்ய வேண்டும். இவர்களுக்காக பட்டி நடத்தப்பட்டது. அதில் தயாராகி சேவைக்காக வெளிப்பட்டார்கள். மிகப் பழையவர்கள் யார் இருக்கிறார்களோ அவர்கள் நல்ல சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பாபா பார்க்கிறார். கொஞ்சம் புதியவர்களும் சேர்ந்து கொள்கிறார்கள். பழையவர்களுக்கு பட்டி நடைபெற்றது. பழையவர்களாக இருந்த போதிலும் அவர்களிடமும் குறைகள் நிச்சயமாக உள்ளன. ஒவ்வொருவரும் அவர்களது மனதில் புரிந்து கொண்டுள்ளனர், பாபா எந்த ஒரு நிலையை அமைத்துக் கொள்ளச் சொல்கிறாரோ அது இன்னும் அமையவில்லை. நோக்கம் மற்றும் குறிக்கோளை பாபா சொல்லிப் புரிய வைக்கிறார். அனைத்தையும் விட அதிகமான கறை தேக அபிமானத்தினுடையதாகும். அதனால் தான் தேகத்தின் பக்கம் புத்தி சென்று விடுகின்றது. தேகத்தில் இருந்து கொண்டே தேகி அபிமானி ஆகவேண்டும். இந்தக் கண்களால் பார்க்கின்ற பொருள்கள் எதுவும் முன்னால் வரக்கூடாது. அப்படிப்பட்ட நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நமது புத்தியில் ஒரு பாபா மற்றும் சாந்திதாம் தவிர வேறு எந்த ஒரு பொருளும் நினைவு வரக்கூடாது. எதையும் உடன் எடுத்துச் செல்ல இயலாது. முதல்-முதலில் நாம் புதிய சம்பந்தத்தில் வந்தோம். இப்போது இருப்பது பழைய சம்பந்தம். பழைய சம்பந்தத்தின் நினைவு ஒரு சிறிதும் வரக்கூடாது. பாடலும் உள்ளது, கடைசிக் காலத்தில்.. இது இப்போதைய விஷயமாகும். பாடலை கலியுக மனிதர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இது பற்றித் தெரியாது. முக்கியமான விஷயம் பாபா சொல்லிப் புரிய வைக்கிறார், ஒரு பாபா தவிர வேறு எந்த ஒரு விஷயமும் நினைவில் வரக்கூடாது. ஒரு பாபா நினைவின் மூலம் தான் உங்களுடைய பாவங்கள் நீங்கும், பவித்திர வைரமாக நீங்கள் ஆவீர்கள். ஒரு சில கற்கள் மிகவும் விலை மதிப்புள்ளதாக உள்ளன. மாணிக்கங்களும் விலை மதிப்புள்ளதாக உள்ளன. பாபா தம்மைவிடவும் குழந்தைகளின் மதிப்பை மிக உயர்ந்ததாக ஆக்கிக் கொண்டே இருக்கின்றார். தன்னைத் தான் சோதித்தறிய வேண்டியதுள்ளது. பாபா சொல்கிறார் -- உள்முகநோக்கில் இருந்து தனக்குள் பாருங்கள் -- நமக்குள் என்ன குறை உள்ளது? தேக அபிமானம் எதுவரை உள்ளது? பாபா புருஷார்த்தத்திற்காக வெவ்வேறு யுக்திகளைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். எவ்வளவு முடியுமோ, ஒருவரின் நினைவிலேயே இருக்க வேண்டும். எவ்வளவு அன்பானவர்களாக இருந்தாலும் சரி, அழகான குழந்தைகளாக மிகவும் லவ்லியாக இருந்தாலும் சரி, வேறு யாருடைய நினைவும் வரக்கூடாது. இங்குள்ள எந்த ஒரு பொருளும் நினைவும் வரக்கூடாது. சில குழந்தைகளிடம் பற்று அதிகமாக உள்ளது. பாபா சொல்கிறார், அந்த அனைவரிடமும் உள்ள பற்றை நீக்கி ஒருவரின் நினைவை மட்டுமே வையுங்கள். ஒரே ஒரு அன்பான பாபாவிடம் மட்டுமே யோகம் வைக்க வேண்டும். அவரிடம் அனைத்துமே கிடைத்து விடுகின்றன. யோகத்தின் மூலம் தான் நீங்கள் அன்பானவர்களாக ஆகிறீர்கள். ஆத்மா அன்பானதாக ஆகின்றது. ஆத்மாவை அன்பானதாக, தூய்மையாக ஆக்குவதற்காக பாபா சொல்கிறார் -- குழந்தைகளே! எவ்வளவு என்னை நினைவு செய்வீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் மிகமிக அன்பானவர்களாக ஆவீர்கள். நீங்கள் அவ்வளவு அன்பானவர்களாக ஆகிறீர்கள், தேவி-தேவதைகளாகிய உங்களுக்கு இன்றளவும் கூட பூஜை நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது. மிகவும் லவ்லியாக ஆகிறீர்கள் இல்லையா? அரைகல்பம் நீங்கள் ஆட்சி செய்கிறீர்கள். பிறகு அரைக்கல்பம் நீங்கள் தாம் பூஜிக்கப்படுகிறீர்கள். நீங்களே பூஜாரியாகி உங்களுடைய உருவங்களையே பூஜிக்கிறீர்கள். நீங்கள் அனைவரைக்காட்டிலும் லவ்லியாக ஆகக்கூடியவர்கள். ஆனால் எப்போது லவ்லிபாபாவை நல்லபடியாக நினைவு செய்கிறீர்களோ அப்போது தான் லவ்லியாக ஆவீர்கள். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் நினைவில் வரக்கூடாது. அதனால் உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள், நாம் பாபாவை மிகுந்த அன்போடு நினைவு செய்கிறோமா? பாபாவின் நினைவில் அன்பின் கண்ணீர் வரவேண்டும். பாபா, எனக்கு உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. வேறு யாருடைய நினைவும் வரக்கூடாது, மாயாவின் புயல் வரக் கூடாது. புயல்களோ அதிகமாக வருகின்றன இல்லையா? தன் மீது மிகுந்த கவனம் வைக்க வேண்டும். நமது அன்பு பாபாவைத் தவிர வேறு யார் பக்கமும் போகாமல் இருக்கிறதா? எவ்வளவு தான் பிரியமான பொருளாக இருந்தாலும் சரி, ஒரு பாபாவின் நினைவு மட்டுமே வர வேண்டும். நீங்கள் அனைவரும் ஒரு நாயகனின் நாயகியாக ஆகிறீர்கள். நாயகி-நாயகன் ஒருமுறை ஒருவரை ஒருவர் பார்த்து விட்டால் போதும், திருமணம் முதலியன கூட செய்வதில்லை. தனியாகவே இருக்கிறார்கள். ஆனால் ஒருவர்-மற்றவரின் நினைவு புத்தியில் உள்ளது. இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் அனைவருமே ஒரு நாயகனின் நாயகிகள். அந்த நாயகனை நீங்கள் பக்தி மார்க்கத்திலும் கூட அதிகமாக நினைத்து வந்தீர்கள். இங்கும் கூட நீங்கள் அதிகம் நினைக்க வேண்டும், அவர் உங்கள் முன்னிலையிலேயே இருப்பதால். பாபா சொல்கிறார், என்னையே நினைவு செய்வீர்களானால் உங்கள் துன்பமெல்லாம் விலகி விடும். இதில் சந்தேகத்திற்கான எந்த ஒரு விஷயமும் இல்லை. பகவானுடன் சந்திப்பதற்காக அனைவரும் பக்தி செய்கிறார்கள்.

 

இங்கே குழந்தைகள் சிலர் மிகவும் கடுமையான சேவை (எலும்பு தேய) செய்கிறார்கள். சேவைக்காகவே துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகுந்த முயற்சி செய்கிறார்கள். இதையும் நீங்கள் அறிவீர்கள், பெரிய மனிதர்கள் இந்த அளவுக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் உங்களது முயற்சி வீணாகப் போகாது. சிலர் புரிந்து கொண்டு தகுதியுள்ளவராக ஆகிறார்கள். பிறகு பாபாவுக்கு முன்பு வருகிறார்கள். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், இவர் தகுதியுள்ளவரா இல்லையா? திருஷ்டியோ குழந்தைகளாகிய உங்களிடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கிறது, அலங்காரம் செய்பவர்கள் குழந்தைகளாகிய நீங்கள் தாம். யாரெல்லாம் இங்கே வந்திருக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் குழந்தைகளாகிய நீங்கள் அலங்காரம் செய்திருக்கிறீர்கள். பாபா உங்களுக்கு செய்திருக்கிறார், நீங்கள் பிறகு மற்றவர்களுக்கு அலங்காரம் செய்வித்து அழைத்து வருகிறீர்கள். பாபா வெகுமதி தருகிறார், எப்படி அலங்காரம் செய்தாரோ அதுபோலவே மற்றவர்களுக்கும் செய்விக்கிறார்கள். தங்களையும் விட நன்றாக மற்றவர்களுக்கு அலங்காரம் செய்விக்க முடியும். அனைவருக்கும் அவரவர் அதிர்ஷ்டம் என்பது உள்ளது இல்லையா? புரிந்து கொள்பவர்களில் ஒரு சிலர் புரிய வைப்பவர்களைக் காட்டிலும் திறமைசாகளாக ஆகிவிடுகின்றனர். இவர்களை விட நாம் நன்றாகப் புரிய வைக்க முடியும் எனப் புரிந்து கொண்டுள்ளனர். புரிய வைப்பதற்கான போதை அதிகரிக்கின்றது என்றால் அவர்கள் வெளிப்படுகின்றனர். பாப்தாதா இருவருடைய மனதிலும் இடம் பிடிக்கின்றனர். அநேக புதிய-புதியவர்கள் இருக்கிறார்கள், பழையவர்களைவிடத் திறமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். முள்ளிலிருந்து நல்ல மலர்களாக மாறியிருக்கிறார்கள். அதனால் பாபா ஒவ்வொரு வரையும் பார்க்கின்றார் -- இவர்களிடம் என்னென்ன குறைகள் உள்ளன? இந்தக் குறைகள் இவர்களிடமிருந்து வெளியேறி விட்டால் நல்ல சேவை செய்வார்கள். தோட்டக்காரர் இல்லையா? எழுந்து பின்னால் கூடப் போய்ப் பார்க்க மனதில் எண்ணம் தோன்றுகிறது. ஏனென்றால் பின்னாலும் கூடப் போய் அமர்கின்றனர். நல்ல-நல்ல மகாரதிகளோ முன்னால் அமர வேண்டும். இதில் யாருக்கும் கஷ்டம் வருவதற்கான விஷயம் எதுவுமில்லை. யாருக்காவது கஷ்டம் வந்தது, கோபித்துக் கொண்டார்கள் என்றால் தங்களின் அதிர்ஷ்டத்தின் மீதே கோபித்துக் கொள்வதாகும். முன்னால் பூக்களைப் பார்த்துப் பார்த்து மிகுந்த குஷி ஏற்படுகின்றது. இவர் மிக நன்றாக உள்ளார், இவரிடம் கொஞ்சம் குறை உள்ளது. இவர் மிக நல்ல தூய்மையானவராக உள்ளார். இவருக்கு உள்ளுக்குள் ஏதோ துரு படிந்துள்ளது. ஆக, அந்தக் குப்பை முழுவதையும் நீக்க வேண்டும். பாபாவைப் போல் யாரும் அன்பு செலுத்துவதில்லை. மனைவிக்கும் கூடக் கணவன் மீது அன்பு உள்ளது இல்லையா? கணவனுக்கு அந்த அளவு இருப்பதில்லை. அவர்களோ இரண்டாவது-மூன்றாவது என்று மனைவிகளை ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். மனைவிக்கோ, கணவன் சென்று விட்டால், யா ஹுசேன், யா ஹுசேன் (ஐயோ! ஐயோ!) என்றே சொல்லிக் கொண்டிருப் பார்கள். கணவன்மாருக்கோ ஒரு செருப்பு போய் விட்டால் இன்னொரு செருப்பு என்பது போல் இருக்கிறார்கள். சரீரம் செருப்பு எனப்படுகின்றது. சிவபாபாவுக்கும் கூட நீளமான செருப்பு (லாங் பூட்-பிரம்மா பாபா) உள்ளது இல்லையா? இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் பாபாவை நினைவு செய்து முதல் தரமானவர்களாக ஆவோம். சிலர் நவநாகரீகமானோர் என்றால் செருப்புகளும் 4-5 வைத்துக் கொள்கின்றனர். இல்லையென்றால் ஆத்மாவுக்கு செருப்பு என்பது ஒன்று தான். காலுக்குச் செருப்பும் ஒன்று தான் இருக்க வேண்டும். ஆனால் இது ஒரு ஃபேஷனாக ஆகி விட்டுள்ளது.

 

இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், பாபாவிடமிருந்து நாம் என்ன ஆஸ்தி அடைகின்றோம்? நாம் அந்த சொர்க்கத்தின் எஜமானராக ஆகிக் கொண்டிருக்கின்றோம். சொர்க்கம் (ஹெவன்) உலகின் அதிசயம் எனப்படுகின்றது. நிச்சயமாக ஹெவன்லி காட்ஃபாதர் தாம் ஹெவனை ஸ்தாபனை செய்வார். இப்போது நீங்கள் நடைமுறையில் ஸ்ரீமத் படி உங்களுக்காகவே சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். இங்கோ எவ்வளவு பெரிய-பெரிய மாளிகைகள் கட்டுகின்றனர்! இவை அனைத்தும் அழிந்து போகும். நீங்கள் அங்கே என்ன செய்வீர்கள்? மனதில் வர வேண்டும், இங்கோ நம்மிடம் எதுவுமே இல்லை. அதுபோலவே வெளியில் இல்லறத்தில் இருக்கின்றவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள், அனைத்தும் பாபாவுக்குரியவை. நம்மிடமோ எதுவுமில்லை, நாம் டிரஸ்டியாக இருக்கிறோம். டிரஸ்டி எதையுமே வைத்துக் கொள்வதில்லை. பாபா தாம் எஜமான். இவை அனைத்துமே பாபாவினுடையவை. வீட்டில் இருந்து கொண்டும் கூட இதுபோல் புரிந்து கொண்டு இருங்கள். பணக்காரர்களின் புத்தியிலோ இவ்விஷயங்கள் வராது. பாபா சொல்கிறார், டிரஸ்டியாகி இருங்கள். எது செய்தாலும் பாபாவுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருங்கள். பாபா, கட்டடம் கட்டட்டுமா எனக் கேட்டு பாபாவுக்கு எழுதுகின்றனர். பாபா சொல்வார், தாராளமாகக் கட்டுங்கள். டிரஸ்டியாகி இருங்கள். பாபாவோ அமர்ந்துள்ளார் இல்லையா? பாபா போவாரானால் அனைவரும் சேர்ந்து தங்கள் வீட்டிற்குச் செல்வார்கள். பிறகு நீங்கள் உங்கள் இராஜாங்கத்திற்குச் சென்று விடுவீர்கள். நான் பிறகு கல்ப-கல்பமாக வரவேண்டும், பாவனமாக்குவதற்காக. என்னுடைய சமயத்தில் வருகிறேன். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும், காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. அனைத்திலிருந்தும் பற்றை நீக்கி ஒரு லவ்லி(அன்பான) பாபாவை மட்டும் நினைவு செய்ய வேண்டும். உள்முகநோக்கில் இருந்து தன்னுடைய குறைகளை சோதித்தறிந்து நீக்க வேண்டும். மதிப்பு மிக்க வைரமாக ஆகவேண்டும்.

 

2. எப்படி பாபா குழந்தைகளாகிய நம்மை அலங்கரித்துள்ளாரோ அதுபோல் அனைவருக்கும் அலங்காரம் செய்ய வேண்டும். முட்களை மலராக்கும் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். டிரஸ்டி ஆகி இருக்க வேண்டும்.

 

வரதானம்:

சதா ஒருவரின் அன்பில் மூழ்கியிருந்து ஒரு தந்தையை ஆதரவாக ஆக்கக் கூடிய அனைத்து கவர்ச்சிகளிலுருந்தும் விடுபட்டவர் ஆகுக.

 

எந்தக் குழந்தைகள் ஒரு தந்தையின் அன்பில் மூழ்கியிருப்பார்களோ அவர்கள் அனைத்து பிராப்திகளிலும் நிறைந்தவர்களாக மற்றும் திருப்தியானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஒரு ஆதரவும் தன் பக்கம் ஈர்க்க முடியாது. அவர்களுக்கு எளிதாகவே ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமில்லை என்ற அனுபவம் ஏற்படும். அவர்களுக்கு ஒரு தந்தை மட்டுமே உலகமாக இருக்கும், ஒரு தந்தையிடம் மட்டுமே அனைத்து சம்பந்தங்களின் அனுபவம் ஏற்படும். அவர்களுக்கு அனைத்து பிராப்திகளுக்கு ஆதாரம் ஒரு தந்தையாக இருப்பாரே தவிர எந்த பொருளோ அல்லது சாதனங்களோ ஆதாரமாக இருக்காது. ஆகையால் அவர்கள் எளிதாக கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.

 

சுலோகன்:

தன்னை ஒரு கருவி (நிமித்தம்) என்று புரிந்து கொண்டு சதா டபுள் லைட்டாக இருந்தால் குஷியின் அனுபவம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

 

ஓம்சாந்தி