16.04.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
தந்தை
கூறும்
அறிவுரைகளை
நடைமுறையில்
கொண்டு வாருங்கள்.
நீங்கள்
உறுதிமொழி
கொடுத்து
விட்டு
பிறகு
தனது
வாக்குறுதியிலிருந்து மாறி
விடக்கூடாது.
கட்டளைகளை
மீறக்
கூடாது.
கேள்வி:
உங்களது
படிப்பின்
சாரம்
என்ன?
நீங்கள்
எந்த
பயிற்சி
கண்டிப்பாக
செய்ய
வேண்டும்?
பதில்:
வானபிரஸ்த
நிலையில்
செல்வது
தான்
உங்களது
படிப்பாகும்.
இந்த
படிப்பின்
சாரமே
சப்தங்களை கடந்து
செல்ல
வேண்டும்.
தந்தை
தான்
அனைவரையும்
திரும்பி
அழைத்துச்
செல்கின்றார்.
குழந்தைகளாகிய நீங்கள்
வீட்டிற்குச்
செல்வதற்கு
முன்
சதோ
பிரதானமாக
ஆக
வேண்டும்.
இதற்காக
ஏகாந்தத்தில்
சென்று ஆத்மா
அபிமானியாக
இருக்கக்
கூடிய
பயிற்சி
செய்யுங்கள்.
அசரீரியாக
ஆகக்
கூடிய
பயிற்சியே
ஆத்மாவை சதோ
பிரதானமாக
ஆக்கும்.
ஓம்சாந்தி.
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
கொண்டு
பாபாவை
நினைவு
செய்வதன்
மூலம்
நீங்கள்
தமோ பிரதானத்திலிருந்து
(கீழான
நிலை)
சதோ
பிரதானமாக
(உயர்ந்த
நிலை)
ஆகி
விடுவீர்கள்.
மேலும்
உலகிற்கு எஜமானர்களாக
ஆகி
விடுவீர்கள்.
கல்ப
கல்பத்திற்கும்
நீங்கள்
இவ்வாறே
தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக
ஆகின்றீர்கள்,
பிறகு
84
பிறவிகளில்
தமோபிரதானமாக
ஆகின்றீர்கள்.
மீண்டும்
தந்தை அறிவுரைகள்
(ஞானம்)
கொடுக்கின்றார்.
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
தந்தையை
நினைவு
செய்யுங்கள்.
பக்தி மார்க்கத்திலும்
நீங்கள்
நினைவு
செய்தீர்கள்.
ஆனால்
அந்த
நேரத்தில்
மேலோட்டமான
புத்திக்கான
ஞானம் இருந்தது,
இப்பொழுது
ஆழமான
புத்திக்கான
ஞானம்
இருக்கின்றது.
நடைமுறையில்
(Practical
ஆக)
தந்தையை நினைவு
செய்ய
வேண்டும்.
ஆத்மாவும்
நட்சத்திரத்தைப்
போன்று
இருக்கின்றது,
தந்தையும்
நட்சத்திரத்தைப் போன்று
இருக்கின்றார்
என்பதை
புரிய
வைக்க
வேண்டும்.
அவர்
மறுபிறப்பு
எடுப்பது
கிடையாது.
நீங்கள் எடுக்கின்றீர்கள்.
ஆகையால்
நீங்கள்
தமோபிரதானம்
ஆக
வேண்டியிருக்கின்றது.
பிறகு
சதோபிரதானம்
ஆவதற்கு முயற்சி
செய்ய
வேண்டியிருக்கின்றது.
மாயை
அடிக்கடி
மறக்க
வைத்து
விடுகின்றது.
இப்பொழுது
தவறு செய்யாதவர்களாக
ஆக
வேண்டும்.
தவறுகள்
செய்யக்
கூடாது.
ஒருவேளை
தவறு
செய்து
கொண்டே இருந்தால்
நீங்கள்
மேலும்
தமோ
பிரதானமாக
ஆகி
விடுவீர்கள்.
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
கொண்டு தந்தையை
நினைவு
செய்யுங்கள்
என்ற
கட்டளை
கிடைக்கின்றது.
பேட்டரியை
சார்ஜ்
செய்தால்
நீங்கள்
சதோ பிரதானமாக,
உலகிற்கு
எஜமானர்களாக
ஆகிவிடுவீர்கள்.
ஆசிரியர்
அனைவருக்கும்
கற்பிக்கின்றார்.
மாணவர்களில்
வரிசைக்
கிரமமாக
தேர்ச்சி
அடைகின்றனர்.
வரிசைக்கிரமமாக
வருமானம்
செய்கின்றனர்.
நீங்களும்
வரிசைக்கிரமமாக
தேர்ச்சியடைகின்றீர்கள்.
பிறகு
வரிசைக்கிரமமாக
பதவி
அடைகின்றீர்கள்.
உலகிற்கு எஜமானர்
எங்கே!
பிரஜை,
தாச
தாசிகள்
எங்கே!
எந்த
மாணவர்
நல்ல,
கட்டளைப்படி
நடக்கக்
கூடிய,
நேர்மையானவராக
இருக்கின்றாரோ
அவர்
கண்டிப்பாக
ஆசிரியரின்
வழிப்படி
நடப்பார்.
எந்த
அளவிற்கு பதிவு
அட்டவணை
(ரிஜிஸ்டர்)
நன்றாக
இருக்கின்றதோ
அந்த
அளவிற்கு
மதிப்பெண்களும்
அதிகமாக கிடைக்கும்.
ஆகையால்
தந்தையும்
குழந்தை
களுக்கு
அடிக்கடி
புரிய
வைக்கின்றார்
-
தவறுகள்
செய்யாதீர்கள்.
கல்பத்திற்கு
முன்பும்
தோல்வியடைந்திருந்தேன்
என்று
நினைக்காதீர்கள்.
நான்
சேவை
செய்வதில்லை,
ஆகையால் தோல்வியடைந்து
விடுவேன்
என்று
பலரது
உள்ளத்தில்
வருகின்றன.
தந்தை
எச்சரிக்கை
கொடுத்துக்
கொண்டு இருக்கின்றார்,
நீங்கள்
சத்யுக
சதோபிரதானத்திலிருந்து கலியுக தமோ
பிரதானமாக
ஆகியிருக்கின்றீர்கள்.
மீண்டும்
உலக
சரித்திர
பூகோளம்
நடைபெறும்.
சதோபிரதானம்
ஆவதற்காக
தந்தை
மிக
எளிய
வழி
கூறுகின்றார்
-
என்னை
நினைவு
செய்தால்
விகர்மம்
விநாசம்
ஆகி
விடும்.
நீங்கள்
முன்னேற்றம்
அடைந்து
அடைந்து சதோபிரதானமாக
ஆகிவிடுவீர்கள்.
மெது
மெதுவாக
முன்னேறுவதால்
மறந்து
விடாதீர்கள்.
ஆனால்
மாயை மறக்க
வைத்து
விடுகின்றது.
கட்டளைகளை
மீறக்
கூடியவர்களாக
ஆக்கி
விடுகின்றது.
தந்தை
என்ன
கட்டளைகள் கூறுகின்றாரோ,
அதனை
ஏற்றுக்
கொள்கின்றீர்
கள்,
உறுதிமொழியும்
செய்கின்றீர்கள்.
பிறகு
அதன்படி
நடப்பது கிடையாது.
ஆக
கட்டளைகளை
அவமதித்து
தனது
வாக்குறுதிகளை
விட்டுவிடக்
கூடியவர்கள்
என்று
தந்தை கூறுகின்றார்.
தந்தையிடத்தில்
வாக்கு
கொடுத்து
அதனை
நடைமுறை
படுத்த
வேண்டும்.
எல்லையற்ற
தந்தை என்ன
கல்வி
கொடுக்கின்றாரோ
அப்படிப்பட்ட
கல்வியை
வேறு
யாரும்
கொடுக்க
முடியாது.
மாற்றமும் கண்டிப்பாக
ஏற்பட
வேண்டும்.
சித்திரங்கள்
எவ்வளவு
அழகாக
இருக்கின்றன!
பிரம்மாவின்
வம்சத்தினர்களாக இருக்கின்றீர்கள்,
பிறகு
விஷ்ணுவின்
வம்சத்தினர்களாக
ஆவீர்கள்.
இது
புது
உலகிற்கான
மொழியாகும்.
இதனையும்
புரிந்து
கொள்ள
வேண்டும்.
இந்த
ஆன்மீக
ஞானத்தை
யாரும்
கொடுப்பது
கிடையாது.
சில சங்கங்களுக்கு
ஆன்மீக
சங்கம்
என்று
பெயர்
வைத்திருக்கின்றனர்.
ஆனால்
ஆன்மீக
சங்கம்
உங்களுடைது தவிர
வேறு
எதுவும்
இருக்க
முடியாது.
அதிக
போலிகள் உருவாகின்றன.
இது
புது
விசயமாகும்.
நீங்கள்
மிகக் குறைந்தவர்களாக
இருக்கின்றீர்கள்,
வேறு
யாரும்
இந்த
விசயங்களைப்
புரிந்து
கொள்ள
முடியாது.
முழு
மரமும் இப்பொழுது
நின்று
கொண்டிருக்கின்றது.
மற்றபடி
வேர்
இல்லை,
பிறகு
மீண்டும்
வேர்
வந்து
விடும்.
கிளைகள் எதுவும்
இருக்காது.
அவை
அனைத்தும்
அழிந்து
விடும்.
எல்லையற்ற
தந்தை
மட்டுமே
எல்லையற்ற
ஞானம் கொடுக்கின்றார்.
இப்பொழுது
முழு
உலகின்
மீது
இராவண
இராஜ்யம்
இருக்கின்றது.
இது
இலங்கையாக இருக்கின்றது.
அந்த
இலங்கை
கடல்
கடந்து
இருக்கின்றது.
எல்லையற்ற
உலகம்
சமுத்திரத்தில்
இருக்கின்றது.
நாலாபுறமும்
தண்ணீராக
இருக்கின்றது.
அது
எல்லைக்குட்பட்ட
விசயம்,
தந்தை
எல்லையற்ற
விசயங்களைப் புரிய
வைக்கின்றார்.
புரிய
வைக்கக்
கூடியவர்
ஒரே
ஒரு
தந்தை
மட்டுமே.
இது
படிப்பாகும்.
வேலை
கிடைக்கும் வரை,
படிப்பிற்கான
ரிசல்ட்
வரும்
வரை
படிப்பு
படித்துக்
கொண்டே
இருப்பர்.
அதில்
மட்டுமே
புத்தி
சென்று கொண்டிருக்கும்.
மாணவர்களின்
கடமை
என்னவெனில்
படிப்பில்
கவனம்
செலுத்த
வேண்டும்.
எழுந்தாலும்,
அமர்ந்தாலும்,
நடந்தாலும்,
சுற்றினாலும்
நினைவு
செய்ய
வேண்டும்.
மாணவர்களின்
புத்தியில்
இந்த
படிப்பு இருக்கின்றது.
தேர்வு
நாட்களில்
தோல்வியடைந்து
விடக்
கூடாது
என்பதற்காக
கடினமாக
உழைப்பர்.
குறிப்பாக பூங்காகளுக்கு
அதிகாலையில்
சென்று
படிப்பர்.
ஏனெனில்
வீட்டின்
சுற்றுப்புற
சூழ்நிலைகள்
மோசமாக இருக்கின்றது.
ஆத்மா
அபிமானியாக
இருக்கக்
கூடிய
பயிற்சி
செய்யுங்கள்,
பிறகு
மறக்கவே
மாட்டீர்கள்
என்று
தந்தை புரிய
வைத்திருக்கின்றார்.
ஏகாந்தமான
(தனிப்பட்ட)
இடங்கள்
மிக
அதிகமாக
இருக்கின்றது.
ஆரம்பத்தில் வகுப்பு
முடித்து
விட்டு
நீங்கள்
அனைவரும்
மலைக்குச்
சென்று
விடுவீர்கள்.
இப்பொழுது
நாளுக்கு
நாள் ஞானம்
மிகவும்
ஆழமாக
சென்று
கொண்டிருக்கின்றது.
மாணவர்களுக்கு
இலட்சியத்தின்
நினைவு
இருக்கும்.
இது
வானபிரஸ்த
நிலைக்குச்
செல்லக்கூடிய
படிப்பாகும்.
ஒருவரைத்
தவிர
வேறு
யாரும்
படிப்பிக்க
முடியாது.
சாது,
சந்நியாசி
போன்றவர்கள்
பக்தியைத்
தான்
கற்றுக்
கொடுக்கின்றனர்.
சப்தங்களை
கடந்து
செல்லக்
கூடிய வழியை
ஒரு
தந்தை
மட்டுமே
கூறுகின்றார்.
ஒரு
தந்தை
தான்
அனைவரையும்
திரும்பி
அழைத்துச்
செல்கின்றார்.
இப்பொழுது
உங்களுடையது
எல்லையற்ற
வான
பிரஸ்த
நிலையாகும்.
அதனை
யாரும்
அறிந்திருக்கவில்லை.
தந்தை
கூறுகின்றார்
-
குழந்தைகளே!
நீங்கள்
அனைவரும்
வானபிரஸ்திகளாக
இருக்கின்றீர்கள்.
முழு
உலகமும் வானபிரஸ்தியாக
இருக்கின்றது.
படித்தாலும்
படிக்காவிட்டாலும்
அனைவரும்
செல்ல
வேண்டும்.
மூல
வதனத்திற்கு செல்லக்
கூடிய
ஆத்மாக்கள்
அவரவர்களது
பிரிவிற்கு
(செக்ஷன்)
சென்று
விடுவார்கள்.
ஆத்மாக்களின் மரமும்
அதிசயமாக
உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இந்த
முழு
நாடகச்
சக்கரமும்
முற்றிலும்
சரியானதாகும்
(accurate).
சிறிதும்
வித்தியாசம்
ஏற்படாது.
லீவர்
மற்றும்
சிலிண்டர்
(சாவி
கொடுக்க
வேண்டிய)
வட்ட
வடிவ கடிகாரம்
இருக்கின்றதல்லவா!
லீவர்
கடிகாரம்
முற்றிலும்
சரியாக
இருக்கும்.
இங்கும்
கூட
சிலர்
லீவர்
கடிகாரமாகவும்,
சிலர்
சிலிண்டர்
கடிகாரமாகவும்
இருக்கின்றனர்.
சிலருக்கு
கடிகாரம்
போன்று
தோன்றுவதே
இல்லை.
கடிகாரம் ஓடுவதே
இல்லை.
நீங்கள்
முழுமையாக
லீவர்
கடிகாரமாக
ஆகும்
பொழுது
தான்
இராஜ்யத்திற்குச்
செல்வீர்கள்.
சிலிண்டராக
உள்ளவர்கள்
பிரஜைகளாக
சென்று
விடுவார்கள்.
லீவர்
ஆவதற்கான
முயற்சி
செய்ய
வேண்டும்.
இராஜ்ய
பதவியடையக்
கூடியவர்களையே
கோடியிலும்
சிலர்
என்று
கூறப்படுகின்றது.
அவர்களே
வெற்றி மாலையில்
வருகின்றனர்.
முயற்சி
செய்கின்றோம்
என்று
குழந்தைகள்
நினைக்கின்றனர்.
பாபாவை
அடிக்கடி மறந்து
விடுகின்றோம்
என்று
கூறுகின்றனர்.
குழந்தைகளே!
எந்தளவு
பலசாலிகளாக
ஆகின்றீர்களோ
அந்த அளவிற்கு
மாயையும்
பலமாக
சண்டையிடும்
என்று
பாபா
கூறுகின்றார்.
மல்யுத்தம்
இருக்கின்றதல்லவா!
அதில் மிகவும்
கவனமாக
இருக்க
வேண்டும்.
பலசாலிகளை பலசாலிகளாக
இருக்கக்
கூடியவர்கள்
அறிந்திருப்பார்கள்.
இங்கும்
அவ்வாறே.
மகாவீர்
குழந்தைகளும்
உள்ளனர்.
அவர்களிலும்
வரிசைக்கிரமம்
இருக்கின்றது.
நல்ல நல்ல
மகாரதிகளை
மாயையும்
நன்றாக
புயலில் கொண்டு
வந்து
விடுகின்றது.
மாயை
எவ்வளவு
தான்
தொந்தரவு செய்யட்டும்,
புயல்களில்
கொண்டு
வரலாம்,
நீங்கள்
எச்சரிக்கையுடன்
இருங்கள்.
எந்த
விசயத்திலும்
தோல்வி அடையக்
கூடாது.
மனதில்
புயல்கள்
வரட்டும்,
கர்மேந்திரியங்களின்
மூலம்
தவறுகள்
செய்து
விடக்
கூடாது.
கீழே
விழ
வைப்பதற்காகவே
புயல்கள்
வருகின்றன.
மாயையினுடைய
சண்டையில்லையெனில்
பலசாலி என்று எப்படி
கூறமுடியும்?
மாயையின்
புயல்களை
அலட்சியம்
செய்து
விடுங்கள்.
ஆனால்
போகப்போக கர்மேந்திரியங்களுக்கு
வசமாகி
உடனேயே
கீழே
விழுந்து
விடுகின்றீர்கள்.
கர்மேந்திரியங்களின்
மூலம் விகர்மங்களை
செய்து
விடாதீர்கள்
என்று
தந்தை
தினமும்
புரிய
வைக்கின்றார்.
நியமத்திற்கு
புறம்பான
காரியங்கள் செய்வதை
விடவில்லையெனில்
ஒன்றுக்கும்
உதவாத
பதவியை
அடைவீர்கள்.
நான்
தோல்வியடைந்து
விடுவேன் என்று
உள்ளுக்குள்
சுயம்
புரிந்து
கொள்கின்றீர்கள்.
அனைவரும்
சென்றே
ஆக
வேண்டும்.
தந்தை
கூறுகின்றார்
-
என்னை
நினைவு
செய்வதால்
அந்த
நினைவும்
கூட
விநாசம்
ஆவது
கிடையாது.
சிறிது
நினைவு
செய்தாலும் கூட
சொர்க்கத்திற்கு
வந்து
விடுவீர்கள்.
சிறிது
நினைவு
செய்வதனால்,
அல்லது
அதிகமாக
நினைவு
செய்வதால் என்ன
என்ன
பதவி
கிடைக்கும்?
என்பதையும்
நீங்கள்
அறிந்து
கொள்ள
முடியும்.
எதையும்
மறைக்க
முடியாது.
யார்
என்ன
அடைவார்கள்?
சுயத்தினாலும்
புரிந்து
கொள்ள
முடியும்.
ஒருவேளை
நாம்
இப்பொழுது
இதயம் நின்று
விட்டால்
(ஹார்ட்
பெயில்)
என்ன
பதவியை
அடைவோம்?
பாபாவிடமும்
கேட்கலாம்.
நாளடைவில் தானாகவே
புரிந்து
கொள்வீர்கள்.
விநாசம்
எதிரில்
இருக்கின்றது,
புயல்கள்,
அடைமழை,
இயற்கை
சீற்றங்கள் கேட்டுக்
கொண்டு
வராது.
இராவணன்
அமர்ந்திருக்கின்றான்.
இது
மிகப்
பெரிய
தேர்வு
(சோதனை)
ஆகும்.
இதில்
தேர்ச்சியடையக்
கூடியவர்கள்
உயர்ந்த
பதவி
அடைகின்றனர்.
இராஜாக்கள்
கண்டிப்பாக
புத்திசாலிகளாக இருப்பர்,
அப்பொழுது
தான்
பிரஜைகளை
கவனிக்க
முடியும்.
ஐ.சி.எஸ்
தேர்வில்
மிகச்
சிலரே
தேர்ச்சி அடைகின்றனர்.
தந்தை
உங்களுக்கு
கற்பித்து
சொர்க்கத்திற்கு
எஜமான்,
சதோ
பிரதானமானவர்களாக ஆக்குகின்றார்.
சதோபிரதானத்திலிருந்து மீண்டும்
தமோபிரதானமாக
ஆவோம்
என்பதை
நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள்,
இப்பொழுது
தந்தையின்
நினைவின்
மூலம்
சதோபிரதானமாக
ஆக
வேண்டும்.
பதீத பாவன்
தந்தையை
நினைவு
செய்ய
வேண்டும்.
தந்தை
கூறுகின்றார்
-
மன்மனாபவ.
இது
அதே
கீதையின்
ஒரு பாகமாகும்.
இரட்டை
கிரீடதாரிகளாக
ஆவதற்கான
கீதையாகும்.
தந்தை
தான்
அவ்வாறு
ஆக்குகின்றார்.
உங்களது
புத்தியில்
முழு
ஞானம்
இருக்கின்றது.
யார்
நல்ல
புத்திசாலிகளாக
இருக்கின்றார்களோ
அவர்களுக்கு தாராணையும்
நன்றாக
ஏற்படும்.
நல்லது.
இனிமையிலும்
இனிய
செல்லக்
குழந்தைகளுக்கு
தாய்
தந்தை
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள் மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்.
இரவு
வகுப்பு
– 05.01.1969
குழந்தைகள்
இங்கு
வகுப்பில்
அமர்ந்திருக்கின்றீர்கள்,
நமது
ஆசிரியர்
யார்?
என்பதையும்
அறிந்திருக்கின்றீர்கள்.
நமது
ஆசிரியர்
யார்?
என்பது
மாணவர்களுக்கு
முழு
நேரத்திலும்
நினைவில்
இருக்கின்றது.
இங்கு மறந்து
விடுகின்றீர்கள்.
குழந்தைகள்
அடிக்கடி
மறந்து
விடுகின்றனர்
என்பதை
ஆசிரியர்
அறிந்திருக்கின்றார்.
இப்படிப்பட்ட
ஆன்மீகத்
தந்தை
ஒருபொழுதும்
கிடைக்கமாட்டார்.
சங்கமயுகத்தில்
தான்
கிடைக்கின்றார்.
சத்யுகம் மற்றும்
கலியுகத்தில்
லௌகீக
தந்தை
கிடைப்பார்கள்.
இது
சங்கமயுகம்,
இதில்
குழந்தைகளாகிய
நாம் புருஷோத்தமர்களாக
(மிகவும்
உயர்நதவர்களாக-தேவதையாக)
ஆகக்
கூடியவர்கள்
என்பதை
நினைவுப்
படுத்தி குழந்தைகள்
இதில்
பக்காவாக
ஆக
வேண்டும்
என்று
நினைக்கின்றார்.
ஆக
தந்தையை
நினைவு
செய்வதன் மூலம்
மூவரின்
நினைவும்
வர
வேண்டும்.
ஆசிரியரை
நினைவு
செய்தாலும்
மூவரின்
நினைவு,
குருவை நினைவு
செய்தாலும்
மூவரின்
நினைவு
வர
வேண்டும்.
கண்டிப்பாக
இவர்களை
நினைவு
செய்ய
வேண்டும்.
தூய்மையாவது
தான்
முக்கிய
விசயமாகும்.
தூய்மையை
தான்
சதோபிரதானம்
என்று
கூறப்படுகின்றது.
அவர்கள் இருப்பது
சத்யுகத்தில்.
இப்பொழுது
சுற்றிக்
கொண்டு
வந்திருக்கின்றோம்.
சங்கமயுகத்தில்
இருக்கின்றோம்.
கல்ப கல்பத்திற்கு
தந்தையும்
வருகின்றார்,
கற்பிக்கின்றார்.
தந்தையின்
அருகில்
நீங்கள்
இருக்கின்றீர்கள்
அல்லவா!
இவர்
உண்மையான
சத்குரு
என்பதையும்
அறிந்திருக்கின்றீர்கள்.
முக்தி,
ஜீவன்முக்தி
தாமத்திற்கான
வழியை காண்பிக்கின்றார்.
நாடகப்படி
நாம்
முயற்சி
செய்து
தந்தையை
பின்பற்று
கின்றோம்.
இங்கு
கல்வியை
அடைந்து பின்பற்றுகின்றோம்.
எவ்வாறு
இவர்
(பிரம்மா)
கற்கின்றாரோ
அதே
போன்று
குழந்தைகளாகிய
நீங்களும்
முயற்சி செய்கின்றீர்கள்.
தேவதைகளாக
ஆக
வேண்டுமெனில்
தூய
காரியங்கள்
செய்ய
வேண்டும்.
அசுத்தம்
எதுவும் இருக்கக்
கூடாது.
மிக
முக்கியமான
விசயம்
என்னவெனில்
தந்தையை
நினைவு
செய்வதாகும்.
தந்தையை மறந்து
விடுகின்றோம்
என்பதை
அறிகின்றீர்கள்,
ஆசிரியரையும்
மறந்து
விடுகின்றோம்
மற்றும்
நினைவு யாத்திரையையே
மறந்து
விடுகின்றோம்.
தந்தையை
மறப்பதன்
மூலம்
ஞானமும்
மறந்து
விடுகின்றது.
நான் மாணவனாக
இருக்கின்றேன்
என்பதும்
மறந்து
விடுகின்றது.
மூவரின்
நினைவும்
வர
வேண்டும்.
தந்தையை நினைவு
செய்தால்
ஆசிரியர்,
சத்குருவின்
நினைவும்
கண்டிப்பாக
வரும்.
சிவபாபாவை
நினைவு
செய்கின்றீர்கள் எனில்
கூடவே
தெய்வீக
குணங்களும்
கண்டிப்பாக
தேவை.
தந்தையின்
நினைவில்
அதிசயமான
விசயங்கள் இருக்கின்றது.
தந்தை
எந்த
அளவிற்கு
குழந்தைகளுக்கு
அற்புதமான
விசயங்களை
கற்றுக்
கொடுக்கின்றாரோ அந்த
அளவிற்கு
வேறு
யாரும்
கற்றுக்
கொடுக்க
முடியாது.
தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக
நாம் இந்த
பிறப்பிலேயே
ஆகின்றோம்.
தமோபிரதானம்
ஆவதற்கு
முழு
கல்பம்
ஏற்படுகின்றது.
இப்பொழுது
இந்த ஒரு
பிறப்பில்
சதோபிரதானமாக
ஆக
வேண்டும்.
இதில்
யார்
எவ்வளவு
முயற்சி
செய்கின்றார்களோ
......
முழு உலகமும்
முயற்சி
செய்வது
கிடையாது.
மற்ற
தர்மத்தைச்
சார்ந்தவர்கள்
முயற்சி
செய்யமாட்டார்கள்.
குழந்தைகள் சாட்சாத்காரம்
செய்திருக்கின்றனர்.
தர்ம
ஸ்தாபகர்கள்
வருகின்றனர்.
குறிப்பிட்ட
ஆடை
(சரீரம்)
எடுத்து
நடிப்பு நடிக்கின்றனர்.
அவர்கள்
தமோபிரதானத்தில்
வருகின்றனர்.
நாம்
சதோ
பிரதானம்
ஆவது
போன்று
மற்றவர்கள் அனைவரும்
கூட
ஆவார்கள்
என்று
அறிவு
கூறுகின்றது.
தூய்மைக்கான
தானம்
தந்தையிடமிருந்து அடைவார்கள்.
நம்மை
இங்கிருந்து
விடுவித்து
வீட்டிற்கு
அழைத்துச்
செல்லுங்கள்
என்று
அனைவரும் அழைக்கின்றனர்.
வழிகாட்டியாக
ஆகுங்கள்.
நாடகப்படி
அனைவரும்
வீட்டிற்குச்
சென்றே
ஆக
வேண்டும்.
அநேக
முறை
வீட்டிற்குச்
சென்றிருக்கின்றீர்கள்.
சிலர்
முழு
5000
ஆண்டிற்கு
வீட்டில்
இருப்பது
கிடையாது.
சிலர்
முழு
5000
ஆண்டிற்கு
இருக்கின்றனர்.
கடைசியில்
வந்தால்
4999
ஆண்டுகள்
சாந்திதாமத்தில்
இருந்தார் என்று
கூறலாம்.
4999
ஆண்டுகள்
இந்த
உலகில்
இருக்க
வேண்டும்
என்று
நாம்
கூறுகின்றோம்.
83-84
பிறப்புகள்
எடுத்திருக்கின்றோம்
என்ற
நம்பிக்கை
குழந்தை
களிடத்தில்
இருக்கின்றது.
அதிக
புத்திசாலிகளாக இருக்கக்
கூடியவர்கள்
கண்டிப்பாக
முதலில் வருவார்கள்.
நல்லது.
இனிமையிலும்
இனிய
ஆன்மீக
குழந்தைகளுக்கு
அன்பு
நினைவுகள்
மற்றும்
இரவு
வணக்கம்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1)
சதோ
பிரதானம்
ஆவதற்காக
நினைவு
யாத்திரையின்
மூலம்
தனது
பேட்டரியை
சார்ஜ்
(ஆத்மாவில்
சக்தியை
நிறப்ப
வேண்டும்)
செய்து
கொள்ள
வேண்டும்.
தவறு
செய்யாதவர்களாக ஆக
வேண்டும்.
தனது
பதிவேட்டை
நன்றாக
வைத்துக்
கொள்ள
வேண்டும்.
எந்த
தவறும் செய்யக்
கூடாது.
2)
நியமத்திற்குப்
புறம்பாக
எந்த
காரியமும்
செய்யக்
கூடாது.
மாயையின்
புயல்களை அலட்சியம்
செய்து,
கர்மேந்திரியங்களை
வெல்ல
வேண்டும்.
லீவர்
கடிகாரம்
போன்று
சரியான
(accurate)
முயற்சி
செய்ய
வேண்டும்.
வரதானம்:
சம்மந்தம்
மற்றும்
பிராப்திகளின்
(அடையும்
பலன்களின்)
நினைவு
மூலமாக எப்பொழுதும்
குஷியில்
இருக்கக்
கூடிய
சகஜயோகி
ஆவீர்களாக.
சகஜயோகத்திற்கு
ஆதாரம்,
சம்மந்தம்
மற்றும்
பிராப்தி
ஆகும்.
சம்மந்தத்தின்
ஆதாரத்தில்
அன்பு உருவாகிறது.
மேலும்
எங்கு
பிராப்திகள்
இருக்குமோ
அங்கு
மனம்,
புத்தி
சுலபமாகவே
சென்று
விடுகிறது.
எனவே
சம்மந்தத்தில்
எனது
என்ற
தன்மையின்
அதிகாரத்துடன்
(உரிமையுடன்)
நினைவு
செய்யுங்கள்.
மேரா பாபா
(என்னுடைய
தந்தை)
என்று
இதயபூர்வமாக
கூறுங்கள்.
மேலும்
தந்தை
மூலமாக
கிடைத்திருக்கும் சக்திகளின்,
ஞானத்தின்,
குணங்களின்
சுகம்,
சாந்தி,
ஆனந்தம்,
அன்பு
ஆகிய
பொக்கிஷங்களை
நினைவில் வெளிக்
கொண்டுவாருங்கள்.
இதனால்
அளவற்ற
குஷி
இருக்கும்
மேலும்
சகஜயோகி
கூட
ஆகி
விடுவீர்கள்.
சுலோகன்:
தேக
உணர்விலிருந்து விடுபட்டவர்
ஆனீர்கள்
என்றால் மற்ற
எல்லா
பந்தனங்களும்
தானாகவே
முடிந்து
போய்
விடும்
ஓம்சாந்தி