11.08.2019                           காலை முரளி                ஓம்சாந்தி          அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்    14.01.19.85         மதுபன்


 

நற்சிந்தனையாளர் ஆவதற்கான ஆதாரம் சுய சிந்தனை மற்றும் நற்சிந்தனை

 

இன்று பாப்தாதா நாலாபுறங்களின் விசேஷ குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எந்தவிதமான விசேஷ குழந்தைகள், யார் எப்பொழுதும் சுய சிந்தனை மற்றும் நற்சிந்தனையில் இருக்கும் காரணத்தினால் அனைவரின் நற்சிந்தனையாளராக இருக்கிறார். யார் எப்பொழுதுமே நல்ல சிந்தனையிலேயே இருக்கிறாரோ, அவர் இயல்பாகவே நற்சிந்தனையாளர் ஆகிவிடுகிறார். நற்சிந்தனையின் ஆதாரம் நற்சிந்தனையாளர் ஆவதற்கானது. முதல் அடி சுய சிந்தனை. சுயசிந்தனை என்றால், பாப்தாதா நான் யார் என்ற கேள்விக்கு பதில் கூறியிருக்கிறார். அதை எப்பொழுதும் நினைவு சொரூபத்தில் வைப்பது. எப்படி தந்தை மற்றும் தாதா (பிரம்மா பாபா) என்னவாக இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், அப்படி அவர்களை தெரிந்து கொள்வது தான், யதார்த்தமாகத் தெரிந்து கொள்ளவது, மேலும் இருவரையும் தெரிந்து கொள்வது தான் தெரிந்து கொள்வது. அதேபோல் தன்னையும் என்னவாக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன், அதாவது எது என்னுடைய ஆதி, அனாதி சிரேஷ்ட சொரூபமாக இருக்கிறதோ, அந்த ரூபத்தில் தன்னைத் தானே தெரிந்து கொள்வது, மேலும் அதே சுயசிந்தனையில் இருப்பது, எனபதைத் தான் சுயசிந்தனை என்று கூறுவது. நான் பலஹீனமானவன், முயற்சி செய்பவன், ஆனால் வெற்றி சொரூபமாக இல்லை, மாயாவை வென்றவனாக இல்லை என்று யோசிப்பது சுயசிந்தனை இல்லை, ஏனென்றால் சங்கமயுகத்தின் புருஷோத்தம பிராமண ஆத்மா என்றால், சக்திசாலியான ஆத்மா. இந்த பலஹீனம் மற்றும் முயற்சி செய்யாமை அல்லது மந்தமாக முயற்சி செய்வது ஆகியவை தேக அபிமானத்தின் படைப்பு. சுயம் என்றால் ஆத்ம அபிமானி, இந்த நிலையில் பலஹீனத்தின் விஷயங்கள் வரமுடியாது. அந்தமாதிரி இந்த தேக அபிமானத்தின் படைப்பை சிந்தனை செய்வதும் சுய சிந்தனை இல்லை. சுய சிந்தனை என்றால், எப்படி தந்தையோ, அப்படி நான் சிரேஷ்ட ஆத்மா. அந்தமாதிரி சுய சிந்தனை செய்பவர், நற்சிந்தனை செய்ய முடியும். நற்சிந்தனை என்றால், ஞான இரத்தினங்களை சிந்தனை செய்வது. படைப்பவர் மற்றும் படைப்பின் ஆழமான இரமணீகரமான இரகசியங்களின் சிந்தனை செய்வது. ஒன்று அப்படியே சொல்வது மட்டும் , இன்னொன்று ஞானக் கடலின் அலைகளில் நீந்துவது, அதாவது ஞான பொக்கிஷத்தின் எஜமானத் தன்மையின் போதையில் இருந்து எப்பொழுதும் ஞான இரத்தனங்களுடன் விளையாடிக் கொண்டிருப்பது. ஞானத்தின் ஒவ்வொரு விலைமதிக்க முடியாத வார்த்தைகளை அனுபவத்தில் கொண்டு வருவது என்றால், தன்னை விலைமதிக்க முடியாத இரத்தினங்களால் எப்பொழுதும் மகான் ஆக்குவது. அந்தமாதிரி ஞானத்தை சிந்தனை செய்பவர் தான், நற்சிந்தனை செய்பவர். அந்த மாதிரி நற்சிந்தனை செய்பவர், இயல்பாகவே வீணான சிந்தனை மற்றும் மற்ற சிந்தனைகளிலிருந்து, விலகியிருக்கிறார். சுய சிந்தனை, நற்சிந்தனை செய்யக்கூடிய ஆத்மா ஒவ்வொரு விநாடியும் தன்னுடைய நற்சிந்தனையில் அந்தளவு பிஸியாக இருக்கிறார், அவருக்கு வேறு சிந்தனை செய்வதற்காக ஒரு வினாடி மற்றும் சுவாசத்திற்கும் நேரம் இருப்பதில்லை. எனவே எப்பொழுதுமே மற்ற சிந்தனை மற்றும் வீணான சிந்தனையிலிருந்து சுலபமாகவே பாதுகாப்பாக இருக்கிறார். புத்தியிலும் இடம் இல்லை, நேரமுமில்லை. நேரமும் நற்சிந்தனையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது, புத்தி எப்பொழுதும் ஞான இரத்தினங்களால் அதாவது நல்ல எண்ணங்களினால் நிரம்பியிருக்கிறது. மற்ற எந்த எண்ணமும் வருவதற்கு வாய்பே இல்லை. இவரைத் தான் நற்சிந்தனை செய்பவர் என்று கூறுவது. ஒவ்வொரு ஞானத்தின் வார்த்தையின் இரகசியத்தில் செல்பவர், இசையின் மகிழ்ச்சியில் மட்டும் இருப்பவர் இல்லை. இசை என்றால் சொன்ன வார்த்தைகளின் இரகசியத்தில் செல்பவர். எப்படி ஸ்தூலமான இசையைக் கேட்பதற்கும் மிகவும் விருப்பம் இருக்கிறது. அதேபோல் ஞான முரளி இசையும் மிக நன்றாக இருக்கிறது. ஆனால் இசையின் கூடவே இரகசியத்தைப் புரிந்து கொள்பவர், ஞான பொக்கிஷத்தின் அதிபதியாகி சிந்தனை செய்வதில் மூழ்கியிருக்கிறார். மூழ்கிய நிலையில் இருப்பவரின் எதிரில் எந்த தடையும் வரமுடியாது. அந்தமாதிரி சுய சிந்தனை செய்பவர் இயல்பாகவே அனைவரின் தொடர்பில் நற்சிந்தனையாளர் ஆகிவிடுகிறார். சியசிந்தனை பிறகு நற்சிந்தனை, அந்தமாதிரியான ஆத்மா நற்சிந்தனையாளர் ஆகிவிடுகிறார், ஏனென்றால் யார் இரவு பகலாக நற்சிந்தனையில் இருக்கிறாரோ, அவர் மற்றவர்களுக்காக ஒருபொழுதும் தீயதை யோசிப்பதுமில்லை, பார்ப்பதுமில்லை. அவருடைய இயற்கையான சம்ஸ்காரம் மற்றும் சுபாவம் நல்லதாக இருக்கும் காரணத்தினால் உள்ளுணர்வு, பார்வை அனைத்திலும் நல்லதையே பார்ப்பது மற்றும் நல்லதையே நினைப்பது என்ற பழக்கம் இயல்பாகவே உருவாகிவிடுகிறது. எனவே அவர் ஒவ்வொருவருக்காகவும் நற்சிந்தனையாளராக இருக்கிறார். எந்தவொரு ஆத்மாவின் பலஹீனமான சம்ஸ்காரத்தையும் பார்த்து, அந்த ஆத்மாவிற்காக இவர் அந்தமாதிரியானவர் என்று தீயதை மற்றும் வீணானதை யோசிக்க மாட்டார். ஆனால் அந்தமாதிரி பலஹீனமான ஆத்மாவிற்கு எப்பொழுதும் ஊக்கம் உற்சாகத்தின் இறக்கைக் கொடுத்து சக்திசாலியாக ஆக்கி, உயரே பறக்க வைப்பார். எப்பொழுதும் அந்த ஆத்மாவிற்காக சுப பாவனை, சுப விருப்பங்கள் மூலமாக சகயோகியாக ஆவார். நற்சிந்தனையாளர் என்றால் நம்பிக்கை இழந்தவரையும், நம்பிக்கை உள்ளவராக ஆக்குபவர். நற்சிந்தனையின் பொக்கிஷத்திருந்து பலஹீனமானவரையும் நிரப்பி முன்னேற வைப்பார். இவரிடமோ, ஞானமே இல்லையே என்று நினைக்க மாட்டார். இவர் ஞானத்திற்குப் பாத்திரமானவர் இல்லை, இவர் ஞானத்தில் செல்ல முடியாது என்று நினைக்கமாட்டார். நற்சிந்தனையாளர் பாப்தாதா மூலமாக பெற்றிருக்கும் ஆதரவு என்ற கால் கொடுத்து, முடமானவரையும் நடக்க வைப்பதற்கு பொறுப்பாளர் ஆகிவிடுவார். நற்சிந்தனையாளர் ஆத்மா தன்னுடைய நற்சிந்தனை நிலை மூலமாக மனமுடைந்து போன ஆத்மாவையும் கூட குஷிப் படுத்தும் இனிப்பு மூலமாக அவரை ஆரோக்கியமானவராக ஆக்கிவிடுவார். நீங்களும் தில்குஷ் மிட்டாய் (டோலி) அருந்துகிறீர்கள் இல்லையா? அப்படியானால் மற்றவர்களுக்கு கொடுக்கவும் தெரியும் இல்லையா? நற்சிந்தனையாளர் ஆத்மா யாருடைய பலஹீனத்தைத் தெரிந்து கொண்டும், அந்த ஆத்மாவின் பலஹீனத்தை மறந்து தன்னுடைய விசேஷ சக்தியின் பலத்தைக் கொடுத்து, அவரையும் சக்திசாலி ஆக்கி விடுவார். யார் மீதும் வெறுப்பு நிறைந்த பார்வை இருக்காது. எப்பொழுதும் கீழே விழுந்த ஆத்மாவை மேலே தூக்கிவிட வேண்டும் என்ற பார்வை இருக்கும். தான் மட்டும் நற்சிந்தனையில் இருப்பது மற்றும் சக்திசாலியான ஆத்மா ஆவது, இதுவும் முதல் நிலை இல்லை. இதையும் நற்சிந்தனையாளர் என்று கூறமாட்டோம். நற்சிந்தனையாளர் என்றால் தன்னுடைய பொக்கிஷங்களை எண்ணம் மூலமாக, வாய் மொழி மூலமாக தன்னுடைய ஆன்மீக உறவு தொடர்பு மூலமாக மற்ற ஆத்மாக்களுக்காக சேவையில் ஈடுபடுத்துவது. நற்சிந்தனையாளர் ஆத்மாக்கள் நம்பர் ஒன் சேவாதாரிகள், உண்மையான சேவாதாரிகள். நீங்கள் அந்தமாதிரி நிற்சிந்தனையாளர் ஆகியிருக்கிறீர்களா? எப்பொழுதும் நல்ல உள்ளுணர்வு, பார்வை இருக்க வேண்டும். பிறகு உலகமும் சிரேஷ்ட பிராமணர்களுக்கு நல்லதாகத் தென்படும். பொதுவாகவே சாதாரண ரூபத்தில் நல்லதை பேசு என்று கூறுவார்கள். பிராமண ஆத்மாக்களோ நல்ல ஜென்மம் எடுத்தவர்கள். நல்ல நேரத்தில் பிறந்திருக்கிறீர்கள். பிராமணர்களின் ஜென்மத்தின் நேரம் அதாவது வேளை நல்லது தான் இல்லையா? பாக்கியத்தின் திசையும் நல்லது. சம்மந்தமும் நல்லது, எனவே பிராமண ஆத்மாக்களுக்கு நடைமுறையில் மட்டுமின்றி கனவில் கூட தீயதின் பெயர் அடையாளம் கூட வராது. நீங்கள் அந்தமாதிரியான நற்சிந்தனையாளர் ஆத்மாக்கள் இல்லையா. நீங்கள் விசேஷமாக நினைவு தினத்திற்காக வந்திருக்கிறீர்கள் - நினைவு தினம் என்றால் சக்தி நிறைந்த தினம். அப்படி நீங்கள் விசேஷமாக சக்திசாலியான ஆத்மாக்கள் இல்லையா. பாப்தாதாவும் எப்பொழுதும் சக்திசாலியான ஆத்மாக்கள் சக்தி தினத்தைக் கொண்டாடுவதற்காக வருக! வருக என்று கூறுகிறார். சக்திசாலியான பாப்தாதா சக்திசாலியான குழந்தைகளை எப்பொழுதும் வரவேற்கிறார். புரிந்ததா? நல்லது.

 

எப்பொழுதும் சுய சிந்தனையின் ஆன்மீக போதையில் இருக்கும், நற்சிந்தனையின் பொக்கிஷத்தில் நிரம்பியிருக்கக் கூடிய நற்சிந்தனையாளர் ஆகி, அனைத்து ஆத்மாக்களையும் பறக்க வைக்கும், எப்பொழுதும் தந்தைக்குச் சமமாக வள்ளல் மற்றும் வரமளிக்கும் வள்ளல் ஆகி, அனைவரையும் சக்திசாலியாக ஆக்கும், சக்திசாலியான சமமான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

பார்ட்டிகளுடன் சந்திப்பு: - மாதர்களின் குரூப்:

மாதர்கள் நீங்கள் எப்பொழுதும் தன்னுடைய சிரேஷ்ட பாக்கியத்தை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் இல்லையா? காலடியில் பணிவிடை செய்பவரிலிருந்து தலையின் கீரிடம் ஆகிவிட்டீர்கள். இந்தக் குஷி எப்பொழுதும் இருக்கிறதா? எப்பொழுதாவது குஷியின் பொக்கிஷம் திருட்டு போய்விடுவதில்லையே? மாயா திருடுவதில் மிகவும் திறமை வாய்ந்தது. ஒருவேளை எப்பொழுதும் வீரம் நிறைந்தவராக புத்திசாலியாக இருந்தீர்கள் என்றால், மாயா ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் அது உங்களின் தாசியாகிவிடும். எதிரியிலிருந்து சேவாதாரி ஆகிவிடும். அந்தமாதிரி மாயாவை வென்றவராக நீங்கள் ஆகியிருக்கிறீர்களா? தந்தையின் நினைவு இருக்கிறது என்றால், எப்பொழுதும் அவருடன் இருப்பவர்கள். ஆன்மீக பிரபாவம் ஏற்பட்டுவிட்டது. தந்தையின் தொடர்பு இல்லையென்றால், ஆன்மீக பிரபாவம் இல்லை. அப்படி நீங்கள் அனைவரும் தந்தையின் தொடர்பு என்ற வண்ணத்தில் வண்ணமயமாக்கபட்டு பற்றுதலை வென்றவராக ஆகியிருக்கிறீர்களா? அல்லது கொஞ்சம் கொஞ்சம் மோகம் அதாவது பற்றுதல் இருக்கிறதா? தன்னுடைய குழந்தைகள் மேல் இருக்காது, ஆனால் பேரன் பேத்திகள் மீது இருக்கும், குழந்தைகளின் சேவை முடிந்தது. மற்றவர்களின் சேவை தொடங்கியது. குறைவதில்லை. ஒன்றன் பின் ஒன்றாக வரிசை ஏற்பட்டுவிடும். இந்த அனைத்து பந்தனத்தில் இருந்தும், விடுபட்டு இருக்கிறீர்களா? மாதர்களுக்கு எவ்வளவு சிரேஷ்ட பிராப்தி ஆகிவிட்டது. யார் முற்றிலும் கை காலியானவர் ஆகியிருந்தாரோ, அவர் இப்பொழுது அனைத்தும் நிறைந்தவர் ஆகிவிட்டார், அனைத்தும் இழந்துவிட்டார், இப்பொழுதும் மீண்டும் தந்தை மூலமாக அனைத்து பொக்கிஷங்களையும் பிராப்தி செய்துவிட்டீர்கள் என்றால், மாதர்கள் என்னவாக இருந்தவர்கள், என்னவாக ஆகிவிட்டீர்கள்? நான்கு சுவர்களுக்குள் இருந்தவர்கள், உலகத்தின் அதிபதி ஆகிவிட்டீர்கள். தந்தை என்னை அவருடைய குழந்தையாக ஆக்கிவிட்டார் என்றால், எனக்கு எவ்வளவு பாக்கியம் என்ற இந்த போதை இருக்கிறது தான் இல்லையா? பகவான் வந்து, தன்னுடைய குழந்தையாக ஆக்குவது மாதிரி சிரேஷ்ட பாக்கியம் ஒருபொழுதும் இருக்க முடியாது. எனவே தன்னுடைய பாக்கியத்தைப் பார்த்து எப்பொழுதும் குஷியாக இருக்கிறீர்கள் இல்லையா? ஒருபொழுதும் இந்த பொக்கிஷத்தை மாயா திருடி விடக் கூடாது.

 

அனைவரும் புண்ணிய ஆத்மாக்களாக ஆகியிருக்கிறீர்களா? அனைத்தையும் விட மிகப் பெரிய புண்ணியம் மற்றவர்களுக்கு சக்தி கொடுப்பது. எனவே எப்பொழுதும் அனைத்து ஆத்மாக்களுக்காக புண்ணிய ஆத்மா அதாவது தனக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷங்களின் பெரும் வள்ளல் ஆகுங்கள். அந்தமாதிரி தானம் செய்பவர்கள், எந்தளவு மற்றவர்களுக்கு கொடுக்கிறார்களோ, அந்தளவு பலமடங்கு அதிகரிக்கிறது. அப்படி இந்த கொடுப்பது என்பது பெறுவதாகிவிடுகிறது. அந்தமாதிரி ஊக்கம் இருக்கிறதா? இந்த ஊக்கத்தின் நடைமுறை சொரூபம் சேவையில் எப்பொழுதும் முன்னேறிச் சென்று கொண்டேயிருங்கள். எந்தளவு உடல், மனம், பணம், செல்வத்தை சேவையில் ஈடுபடுத்துகிறீர்களோ, அந்தளவு தற்சமயமும் பெரிய வள்ளல் புண்ணிய ஆத்மா ஆகிறீர்கள். மேலும் எதிர்காலத்திலும் சதா காலத்திற்காக சேமிப்பு செய்கிறீர்கள். தன்னுடைய அனைத்தையும் சேமிப்பு செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதும் நாடகத்தில் பாக்கியம் இருக்கிறது., அப்படி நீங்கள் இந்த பொன்னான வாய்ப்பை எடுத்துக் கொள்பவர்கள் தான் இல்லையா? யோசித்து செய்தீர்கள் என்றால், வெள்ளி வாய்ப்பு! பரந்த மனமுடையராகி செய்தீர்கள் என்றால், பொன்னான வாய்ய்பு! எனவே அனைவரும் நம்பர் ஒன் வாய்ப்பை எடுப்பவர்களாக ஆகுங்கள்.

 

இரட்டை வெளிநாட்டு குழந்தைகளுடன் சந்திப்பு: -

பாப்தாதா தினசரி அன்பான குழந்தைகளுக்கு அன்பிற்கான பிரதிபலனைக் கொடுக்கிறார், தந்தைக்கு குழந்தைகள் மீது அந்தளவு அன்பு இருக்கிறது. குழந்தைகள் எண்ணம் தான் வைக்கிறார்கள், வார்தைகள் வரையிலும் கூட வரவில்லை, மேலும் தந்தை அதற்கான பிரதிபலனை முன்பாகவே கொடுத்து விடுகிறார். சங்கமயுகத்தில் முழுக் கல்பத்திற்கான அன்பு நினைவுகளைக் கொடுத்து விடுகிறார். அந்தளவு அன்பு மற்றும் நினைவைக் கொடுக்கிறார், அது பல ஜென்மங்களுக்கு அன்பு நினைவினால் பை நிரம்பியதாக இருக்கும். பாப்தாதா அன்பான குழந்தைகளுக்கு எப்பொழுதும் சகயோகம் கொடுத்து, முன்னேற வைத்துக் கொண்டேயிருக்கிறார். தந்தை என்ன அன்பு கொடுத்திருக்கிறாரோ, அந்த அன்பின் சொரூபம் ஆகி யாரையாவது அன்பானவர்களாக ஆக்கினீர்கள் என்றால், அவர் தந்தையின் குழந்தை ஆகிவிடுவார். அன்பானவர் தான் அனைவரையும் ஆகர்ஷணம் செய்பவர். அனைத்து குழந்தைகளின் அன்பு தந்தையிடம் வந்து சேர்ந்து கொண்டேயிருக்கிறது. நல்லது.

 

மொரீசியஸ் பார்ட்டிகளுடன் சந்திப்பு: -

அனைவரும் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் தான் இல்லையா? எவ்வளவு பாக்கியத்தை பிராப்தி செய்து விட்டீர்கள். இது மாதிரியான பெரிய பாக்கியம், யாருக்கும் கிடைக்க முடியாது. ஏனென்றால், பாக்கியத்தை வழங்கும் தந்தையே உங்களுடையவர் ஆகிவிட்டார். நீங்கள் அவருடைய குழந்தை ஆகிவிட்டீர்கள், எப்பொழுது பாக்கியத்தை வழங்குபவர் தன்னுடையவர் ஆகிவிட்டார் என்றால், இதை விட சிரேஷ்ட பாக்கியம் என்ன இருக்கும். நீங்கள் அந்தமாதிரி சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள். மேலும் நீங்கள் அனைவரையும் பாக்கியம் நிறைந்தவர்களாக ஆக்குபவர்கள். ஏனென்றால், யாருக்கு ஏதாவது நல்ல பொருள் கிடைக்கிறது என்றால், அதை மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருக்க முடியாது. எப்படி தந்தையின் நினைவு இல்லாமல் இருக்க முடியாது, அதே போல் சேவை இல்லாமலும் இருக்க முடியாது. ஒவ்வொரு குழந்தையும் அநேகரின் தீபத்தை ஏற்றி, தீப ஒளியாக ஆக்குபவர்கள். தீபாவளி இராஜ திலகத்தின் அடையாளம், அப்படி தீபங்களின் மாலை செய்பவர்களுக்கு இராஜ திலகம் கிடைத்து விடுகிறது, சேவை செய்வது என்றால், இராஜ திலகம் இட்டவர் ஆவது. சேவையின் ஊக்க உற்சாகத்தில் இருப்பவர், மற்றவர்களுக்கும் ஊக்க உற்சாகத்தின் இறக்கை கொடுக்க முடியும்.

 

கேள்வி:

எந்த முக்கிய ஆதாரத்தில் சித்தியை (வெற்றியை) சகஜமாக பிராப்தி செய்ய முடியும்/

 

பதில்:

தன்னை பணிவு நிறைந்தவராக, மேலும் ஒவ்வொரு விஷயத்திலும் தன்னைத் தானே குணத்தை கிரஹிப்பவராக ஆக்கிவிட்டீர்கள் என்றால், சுலபமாக வெற்றியை அடைந்து விடுவீர்கள். யார் தன்னை நல்லவராக நிரூபிப்பதிலேயே, முனைந்திருப்பாரோ, அவர் பிடிவாதம் செய்கிறாரோ, அவர் ஒருபொழுதும் பிரசித்தி ஆகமுடியாது. பிடிவாதம் செய்பவர் ஒருபொழுதும் வெற்றியை அடைய முடியாது. அவர் பிரசித்தி ஆவதற்கு பதிலாக இன்னும் தூரமாகி விடுவார்.

 

கேள்வி:

உலகத்தின் மற்றும் ஈஸ்வரிய பரிவாரத்தின் பாராட்டுகளுக்கு உரியவராக எப்பொழுது ஆவீர்கள்?

 

பதில்:

எப்பொழுது தனக்காகவும், மேலும் மற்றவர்களுக்காகவும் அனைத்து கேள்விகளையும் முடித்து விடுகிறதோ, அப்பொழுது தான். எப்படி தன்னை மற்றவருடன் குறைந்தவர் என்று நினைப்பதில்லை, நினைப்பதில் தன்னை அதிகாரி என்று நினைக்கிறீர்கள், அதே போல் புரிந்து கொள்வது மற்றும் செய்வது என்ற இரண்டிலும் உரிமையுள்ளவர் ஆகுங்கள். அப்பொழுது தான் உலகின் மற்றும் ஈஸ்வரிய பரிவாரத்தின் பாராட்டுகளுக்கு உரியவர் ஆவீர்கள். எந்தவொரு விஷயத்திலும் யாசிப்பவராக ஆகாதீர்கள், வள்ளலாக ஆகுங்கள். ஒம்சாந்தி

 

வரதானம்:

ஸ்ரீமத் பிரகாரம் சேவையில் திருப்தியின் விசேஷத்தை அனுபவம் செய்யும் வெற்றி அடைபவர் ஆகுக.

 

எந்தவொரு சேவையும் செய்யுங்கள், ஏதாவது புது மாணவர்கள் வந்தாலும், வராவிட்டாலும், ஆனால் நீங்கள் உங்கள் மேல் திருப்தியாக இருங்கள். ஒருவேளை நான் திருப்தியாக இருக்கிறேன் என்றால், இந்த செய்தி அவசியம் வேலை செய்யும் என்ற நிச்சயத்தை வையுங்கள். இதில் சோர்வு அடையாதீர்கள். மாணவர்கள் அதிகரிக்க வில்லை என்றால், ஒன்றும் பாதகம் இல்லை. உங்களுடைய கணக்கிலோ சேமிப்பு ஆகிவிட்டது, மேலும் அவர்களுக்கு கிடைத்துவிட்டது. ஒருவேளை நீங்கள் திருப்தியாக இருந்தீர்கள் என்றால், செலவு பயனுள்ளதாக ஆனது. ஸ்ரீமத் பிரகாரம் காரியம் செய்தீர்கள் என்றால், ஸ்ரீமத்தை நம்பி நடப்பது கூட வெற்றியடைபவர் ஆவது.

 

சுலோகன்:

சக்தியற்ற ஆத்மாக்களுக்கு சக்தி கொடுத்தீர்கள் என்றால், அவர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும்.

 

ஓம்சாந்தி