04.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் தரணி (பூமி) யில் ஒளிரக் கூடிய சைதன்ய நட்சத்திரங்கள், நீங்கள் முழு உலகத்திற்கும் ஒளி கொடுக்க வேண்டும்.

 

கேள்வி:

சிவபாபா குழந்தைகளாகிய உங்களின் உடலை எப்படி தங்கமாக ஆக்குகிறார்?

 

பதில்:

பிரம்மா தாயின் மூலம் உங்களுக்கு ஞானப்பால் ஊட்டி உங்களின் உடலை தங்கமாக ஆக்கி விடுகிறார், ஆகையால் அவரது மகிமையை நீயே தாயும் தந்தையும் என்று பாடுகின்றனர். இப்போது நீங்கள் பிரம்மா தாயிடம் ஞானப்பால் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள், இதன் மூலம் உங்களின் அனைத்து பாவங்களும் நீங்கி விடும். தங்கமாக ஆகி விடுவீர்கள்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கிறார் - ஆகாயத்தில் நட்சத்திரங்கள் இருப்பது போல குழந்தைகள் குறித்தும் கூட பாடப்படுகிறது - இவர்கள் பூமியில் ஒளிரும் நட்சத்திரங்கள். அவைகள் கூட நட்சத்திர தேவதைகள் என்று கூறப்படுகின்றன. அவைகள் தேவதைகள் அல்ல. ஆக நீங்கள் அவற்றை விட மகா பலவான்களாக இருக்கிறீர்கள் ஏனென்றால் நட்சத்திரங்களாகிய நீங்கள் முழு உலகிற்கும் வெளிச்சத்தைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் தான் தேவதைகள் ஆகக் கூடியவர்கள். எழுச்சியும் வீழ்ச்சியும் உங்களுடையதுதான் ஆகிறது. அவைகளோ இந்த உலகம் என்ற மேடைக்கு வெளிச்சத்தைக் கொடுக்கக் கூடியவை ஆகும். அவைகளை தேவதைகள் என்று கூறுவதில்லை. நீங்கள் தேவதைகள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளை தேவதைகளாக்குவதற்காக வருகிறார். மனிதர்களோ அனைத்தையும் தேவதைகள் என்று புரிந்து கொள்கின்றனர். சூரியனையும் கூட தேவதை என்று சொல்லி விடுகின்றனர். ஆங்காங்கே சூரியனின் கொடியையும் கூட ஏற்றி வைக்கின்றனர். தம்மை சூரிய வம்சத்தவர் என்றும் கூட சொல்லிக் கொள்கின்றனர். உண்மையில் நீங்கள் தான் சூரிய வம்சத்தவர்கள் அல்லவா. ஆக தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறார். பாரதத்தில்தான் அடர்ந்த காரிருள் சூழ்ந்திருக்கிறது. இப்போது பாரதத்தில்தான் வெளிச்சம் தேவைப்படுகிறது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின் மையை கொடுத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அஞ்ஞானத்தின் காரிருளில் தூங்கிக் கொண்டிருந்தீர்கள், தந்தை வந்து இப்போது மீண்டும் எழுப்புகிறார். நாடகத்தின் திட்டப்படி ஒவ்வொரு கல்பத்தின் சங்கமயுகம் தோறும் நான் மீண்டும் வருகிறேன் என்று சொல்கிறார். இந்த புருஷோத்தம சங்கம யுகத்தைப் பற்றி எந்த சாஸ்திரத்திலும் இல்லை. இந்த யுகத்தைப் பற்றி இப்போதுதான் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்போது நட்சத்திரங்களாகிய நீங்கள் மீண்டும் தேவதைகள் ஆகின்றீர்கள். நட்சத்திர தேவதாய நமஹ: என்று உங்களைத்தான் கூறுவார்கள். இப்போது நீங்கள் பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர்கள் ஆகின்றீர்கள். அங்கே நீங்கள் பூஜைக்குரியவர்களாக ஆகிவிடுகிறீர்கள், இதுவு,ம் கூட புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளதல்லவா. இது ஆன்மீகப் படிப்பு என்று சொல்லப்படுகிறது. இதில் ஒருபோதும் யாருடனும் சண்டை ஏற்படுவதில்லை. ஆசிரியர் எளிமையான முறையில் படிப்பிக்கின்றார், குழந்தைகளும் எளிமையான முறையில் படிக்கின்றனர். இதில் ஒருபோதும் சண்டை போன்ற விஷயம் எதுவுமில்லை. நான் பகவான் என்று இவரை (பிரம்மா) ஒரு போதும் சொல்வதில்லை. படிப்பிக்கக் கூடியவர் சரீரமற்ற சிவபாபா என்று குழந்தைகளாகிய நீங்களும் அறிவீர்கள். அவருக்கு தனது சரீரம் கிடையாது. நான் இந்த ரதத்தை கடனாகப் பெறுகிறேன் என்று சொல்கிறார். பாகீரதி என்றும் ஏன் சொல்கின்றனர்? ஏனென்றால் மிக மிக பாக்கியசாலி ரதமாக இருக்கிறார். இவர்தான் பிறகு உலகின் எஜமான் ஆகிறார் எனும்போது பாகீரதி ஆகிறார் அல்லவா. ஆக அனைத்திற்கும் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. இது அனைத்திலும் உயர்ந்த படிப்பாகும். உலகிலோ வெறும் பொய்யே பொய்யாக உள்ளதல்லவா. சத்தியத்தின் படகு ஆடலாம். . . . என்று சொல்லப்படுகிறதல்லவா. இன்றைய நாட்களில் பல விதமான பகவான்கள் வந்து விட்டுள்ளனர். தன்னையே அவ்வாறு சொல்லிக் கொள்கிறார்கள் அதை விடுங்கள், ஆனால் கல்லிலும் மண்ணிலும் கூட பகவான் இருக்கிறார் என்று சொல்லிவிடுகின்றனர். பகவானை பற்றி எவ்வளவு தவறாக கூறிவிட்டனர். லௌகீக தந்தையும் கூட தன் குழந்தைகளுக்குப் புரிய வைப்பது போல தந்தை வந்து புரிய வைக்கிறார். ஆனால் அவர்கள் தந்தையாகவும், ஆசிரியராகவும் மற்றும் அவர்களே குருவாகவும் ஆவதில்லை. முதலில் தந்தையிடம் பிறவி எடுக்கின்றனர், பிறகு சற்று பெரியவர்களான பிறகு படிக்க வைப்பதற்காக ஆசிரியர் தேவைப்படுகிறார். பிறகு 60 வருடங்களுக்குப் பிறகு குரு தேவைப்படுகிறார். இவர் ஒருவரே தந்தை, ஆசிரியர் மற்றும் சத்குருவாகவும் இருக்கிறார். நான் ஆத்மாக்களாகிய உங்களுடைய தந்தை என்று சொல்கிறார். படிப்பதும் கூட ஆத்மாதான் ஆகும். ஆத்மாவை ஆத்மா என்று சொல்லப்படுகிறது. மற்றபடி சரீரங்களுக்கு பல பெயர்கள் இருக்கின்றன. சிந்தித்துப் பாருங்கள் - இது எல்லைக்கப்பாற்பட்ட நாடக மாகும். உருவாகி, உருவாக்கப்பட்டு, உருவாகிக் கொண்டு. . . . எதுவும் புதிய விஷயமில்லை. இது துவக்கமும் முடிவும் இல்லாமல் உருவாகி உருவாக்கப்பட்ட நாடகம், மீண்டும் மீண்டும் நடந்தபடி இருக்கும். ஆத்மாக்கள் நடிகர்கள் ஆவார்கள். ஆத்மா எங்கே வசிக்கிறது? நாம் நம்முடைய வீடாகிய பரமதாமத்தில் வசிப்பவர்கள், பிறகு இங்கே எல்லைக்கப்பாற்பட்ட நடிப்பை நடிப்பதற்காக நாம் இங்கே வருகிறோம் என்று சொல்வோம். தந்தை எப்போதும் அங்கேயேதான் வசிக்கிறார். அவர் மறுபிறவியில் வருவதில்லை. இப்போது உங்களுக்கு படைக்கக் கூடிய தந்தை, தனது மற்றும் படைப்பின் சாரத்தைக் கூறுகிறார். உங்களை சுயதரிசன சக்கரதாரி குழந்தைகள் என்று கூறுகிறார். இதனுடைய அர்த்தமும் கூட வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் விஷ்ணுதான் சுயதரிசன சக்கரதாரி, இவர்கள் பின் ஏன் மனிதர்களைச் சொல்கிறார்கள் என்று அவர்கள் புரிந்து கொள்கின்றனர். இதைக் குறித்து நீங்கள் அறிவீர்கள். சூத்திரர்களாக இருந்த போதும் மனிதர்களாகத்தான் இருந்தீர்கள், இப்போது பிராமணராகியுள்ள போதும் மனிதர்களாகத்தான் இருக்கிறீர்கள், பிறகு தேவதைகளாகும் போதும் கூட மனிதர்களாகத்தான் இருப்பீர்கள். ஆனால் குணங்கள் மாறுகின்றன. இராவணன் வரும்போது உங்களின் குணங்கள் எவ்வளவு கெட்டு விடுகின்றன. சத்யுகத்தில் இந்த விகாரங்கள் இருப்பதே இல்லை.

 

இப்போது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அமர கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். பக்தி மார்க்கத்தில் நீங்கள் எத்தனை கதைகள் கேட்டிருப்பீர்கள். அமர்நாத் பார்வதிக்கு கதை சொன்னார் என்று சொல்கின்றனர். அவருக்கு சங்கரர் சொல்வார் அல்லவா. சிவன் எப்படி சொல்வார். எவ்வளவு (நிறைய) மனிதர்கள் கேட்பதற்காக செல்கின்றனர். இந்த பக்தி மார்க்கத்தின் விஷயங்களை தந்தை வந்து புரிய வைக்கிறார். பக்தி ஏதோ கெட்ட விஷயம் என்று தந்தை சொல்வதில்லை. அல்ல, இந்த நாடகம் அனாதியானது என்பது புரிய வைக்கப்படுகிறது. ஒன்று தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று இப்போது தந்தை கூறுகிறார். இதுவே முக்கியமான விஷயமாகும். பகவானுடைய மஹா வாக்கியம் - மன்மனாபவ. இதனுடைய அர்த்தம் என்ன? இந்த தந்தை வந்து (பிரம்மா) வாய் மூலம் சொல்கிறார் எனும்போது இவர் கௌமுக் (பசுவின் வாய்) எனப்படுகிறார். நீயே தாயும் தந்தையும். . . என்று அவரைத்தான் கூறுகின்றனர் என்பதையும் புரிய வைத்திருக்கிறார். ஆக இந்த தாயின் (பிரம்மாவின்) மூலமாக உங்கள் அனைவரையும் தத்தெடுத்திருக்கிறார். இவர் வாயின் மூலமாக குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானப்பால் கொடுக்கிறேன், அப்போது உங்களுடைய பாவங்கள் அனைத்தும் பஸ்மமாகி உங்களுடைய ஆத்மா தங்கமாகி விடும் என்று சிவபாபா கூறுகிறார். அப்போது உடலும் கூட தங்கத்தைப் போல கிடைக்கிறது. ஆத்மாக்கள் முழுமையாக சொக்கத் தங்கம் ஆகி விடுகின்றனர், பின்னர் மெல்ல மெல்ல ஏணியில் கீழே இறங்குகின்றனர். ஆத்மாக்களாகிய நாம் கூட சொக்கத் தங்கமாக இருந்தோம், சரீரம் கூட சொக்கத் தங்கமாக இருந்தது, பிறகு நாடகத்தின்படி நாம் 84 பிறவிகளின் சக்கரத்தில் வந்தோம். இப்போது தங்கமாக இல்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது 9 காரட் என்று சொல்லலாம். கொஞ்சம் சதவிகிதம் மீதி இருக்கிறது. ஒரேயடியாக மறைந்து விட்டது என்று சொல்ல முடியாது. சிறிதளவு அமைதி இருக்கிறது. தந்தை இந்த அடையாளங்களையும் குறித்து சொல்லியிருக்கிறார். லட்சுமி நாராயணரின் படம் முதல் நம்பர் ஆகும். இப்போது உங்களின் புத்தியில் முழு சக்கரமும் வந்து விட்டது. தந்தையின் அறிமுகமும் வந்து விட்டது. இப்போது இன்னும் உங்களின் ஆத்மா முழுமையான தங்கமாக ஆகாமருக்கலாம், ஆனால் தந்தையின் அறிமுகம் புத்தியில் உள்ளது அல்லவா. தங்கமாக ஆவதற்கான யுக்தியை கூறுகிறார். ஆத்மாவில் படிந்திருக்கும் துரு எப்படி நீங்கும்? அதற்காக இந்த நினைவின் யாத்திரை உள்ளது. இது யுத்த மைதானம் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் தனித் தனியாக யுத்த மைதானத்தில் போர் வீரனாக இருக்கிறீர்கள். இப்போது ஒவ்வொருவரும் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். முயற்சி செய்வது மாணவர்களுடைய வேலை. எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், ஒருவருக்கொருவர் எச்சரிக்கை கொடுங்கள் - மன்மனாபவ. சிவபாபாவின் நினைவு இருக்கிறதா? ஒருவர் மற்றவருக்கு இதே சைகை காட்ட வேண்டும். தந்தையின் படிப்பே சைகையாகும். ஆகவேதான் தந்தை சொல்கிறார் - ஒரு வினாடியில் காயம் (உடல்) தங்கமாகி விடுகிறது. உலகின் எஜமானாக ஆக்கி விடுகிறேன். தந்தையின் குழந்தைகள் ஆகிவிட்டால் உலகின் எஜமான் ஆகி விட்டீர்கள். பிறகு உள்ளது உலக இராஜ்யம். அதில் உயர் பதவி அடைவது - இதுவே முயற்சி செய்வதாகும். மற்றபடி ஒரு வினாடியில் ஜீவன் முக்தி. உரிமை இருக்கிறதல்லவா. முயற்சி செய்வது என்பது அவரவர்களைப் பொறுத்ததாகும். நீங்கள் தந்தையை நினைவு செய்தபடி இருந்தீர்கள் என்றால் ஆத்மா ஒரேயடியாக தூய்மையடைந்து விடும். சதோபிரதானமாகி சதோபிரதான உலகின் எஜமான் ஆகி விடுவீர்கள். எவ்வளவு முறை நீங்கள் தமோபிரதானத்திலிருந்து பிறகு சதோபிரதானமாகி இருக்கிறீர்கள். இந்த சக்கரம் சுற்றியபடி இருக்கிறது. இதற்கு ஒருபோதும் முடிவு ஏற்படாது. தந்தை வந்து எவ்வளவு நல்ல விதமாக புரிய வைக்கிறார். நான் கல்பம் தோறும் வருகிறேன் என்று கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் இந்த சீச்சீ (கீழான) உலகத்தில் அழைக்கிறீர்கள். என்ன என்று அழைப்பு கொடுக்கிறீர்கள்? தூய்மை இழந்துள்ள எங்களை நீங்கள் வந்து தூய்மையாக்குங்கள். ஆஹா எப்பேர்ப்பட்ட அழைப்பு உங்களுடையது! எங்களை சாந்தி தாமத்திற்கும் சுக தாமத்திற்கும் அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்கிறீர்கள், ஆக நான் உங்களுடைய கீழ்ப்படிந்துள்ள சேவகனாக இருக்கிறேன். இதுவும் கூட நாடகத்தின் விளையாட்டாகும். நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் - நாம் ஒவ்வொரு கல்பமும் அதையே படிக்கிறோம், நடிப்பை நடிக்கிறோம். ஆத்மாதான் நடிப்பை நடிக்கிறது. இங்கே அமர்ந்திருப்பினும் பாபா ஆத்மாக்களை பார்க்கிறார். நட்சத்திரங்களைப் பார்க்கிறார். எவ்வளவு சிறிய ஆத்மா. நட்சத்திரங்களின் ஜொலிப்பைப் போல இருக்கிறது. சில நட்சத்திரங்கள் நன்றாக ஜொலிக்கின்றன, சில லேசாக ஜொலிக்கின்றன. சில சந்திரனுக்கு அருகாமையில் இருக்கும். நீங்களும் கூட யோக பலத்தின் மூலம் நன்றாக தூய்மையடைந்து விட்டீர்கள் என்றால் ஜொலிக்கிறீர்கள். குழந்தைகளுக்குள் நல்ல நட்சத்திரங்களாக இருப்பவர்களுக்கு மலர்களைக் கொடுங்கள் என்று பாபாவும் கூறுகிறார். குழந்தைகளும் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. சிலர் மிகவும் கூர்மையானவர்களாக இருக்கின்றனர், சிலர் மிகவும் மந்தமாக இருக்கின்றனர். அந்த நட்சத்திரங்களை தேவதைகள் என்று சொல்ல முடியாது. நீங்களும் மனிதர்கள்தான். ஆனால் உங்களுடைய ஆத்மாவை தந்தை தூய்மையாக்கி உலகின் எஜமானாக ஆக்குகிறார். எவ்வளவு சக்தியை தந்தை ஆஸ்தியாக கொடுக்கிறார். சர்வசக்திவான் தந்தை அல்லவா. நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இவ்வளவு சக்தி கொடுக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். பாடவும் செய்கிறார்கள் அல்லவா - சிவபாபா தாங்கள் எங்களை கற்க வைத்து மனிதரிலிருந்து தேவதைகளாக்குகிறீர்கள். ஆஹா! இப்படி யாரும் ஆக்குவதில்லை. படிப்பே வருமானத்தின் ஆதாரம் அல்லவா. முழு ஆகாயமும், பூமியும் அனைத்தும் எங்களுடையதாகி விடுகின்றன. யாரும் பறிக்க முடியாது. அது உறுதியான இராஜ்யம் என்று சொல்லப்படுகிறது. யாரும் துண்டிக்க முடியாது. யாரும் எரிக்க முடியாது. ஆக இப்படிப்பட்ட தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் அல்லவா. ஒவ்வொருவரும் தமது முயற்சியை செய்ய வேண்டும்.

 

குழந்தைகள் மியூசியம் (பொருட்காட்சி) முதலானவைகளை அமைக்கின்றனர் - இந்த படங்களின் மூலம் தம்மைப் போன்றவர்களுக்கு புரிய வைப்போம் என்று சொல்கின்றனர். தந்தை (வழி) அறிவுரை கூறுகிறார் - எந்த படம் தேவையோ அவைகளை உருவாக்குங்கள். அனைவரின் புத்தியுமே வேலை செய்கிறது. மனிதர்களின் நன்மைக்காகவே இவை உருவாக்கப்படுகின்றன. சென்டரில் (சேவை மையத்தில்) எப்போதாவது யாராவது வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது தாமாகவே மனிதர்கள் வந்து இனிப்பை ஞானத்தை பெறுவதற்கு என்ன யுக்தியை கையாளலாம். யாரிடமாவது (கடையில்) நல்ல இனிப்பு பண்டம் இருந்தது என்றால் நன்றாக விளம்பரம் ஆகி விடுகிறது.; அனைவரும் ஒருவர் மற்றவருக்குச் சொல்வார்கள் நீங்கள் இந்த கடைக்குச் செல்லுங்கள் என்று. அதுபோன்ற இனிப்பை யாராலும் தர முடியாது ஒருவர் பார்த்துச் சென்றார் என்றால் மற்றவர்களுக்கும் சொல்கிறார்கள். முழு பாரதமும் எப்படி தங்க யுகத்தில் வருவது என்று சிந்தனை நடக்கிறது, அதற்காக எவ்வளவு புரிய வைக்கிறார்கள். ஆனால் புத்தி கல்லாக உள்ளது உழைக்க வேண்டியுள்ளதல்லவா. வேட்டையாடுவதற்கும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளதல்லவா. முதன் முதலாக சிறிய அளவில் வேட்டையாட கற்றுக் கொடுக்கப் படுகிறது. பெரிய வேட்டைக்கு சக்தி தேவைப்படுகிறது அல்லவா. எவ்வளவு பெரிய பெரிய வித்வான்-பண்டிதர்கள் உள்ளனர். வேத சாஸ்திரங்கள் முதலானவைகளைப் படித்திருக்கின்றனர். தம்மை எவ்வளவு பெரிய அத்தாரிட்டியாக புரிந்து கொண்டிருக்கின்றனர். பனாரஸில் அவர்களுக்கு எவ்வளவு பெரிய பெரிய பட்டங்கள் கிடைக்கின்றன. அப்போது பாபா புரிய வைத்தார் - முதன் முதலில் பனாரஸில் சேவையின் முற்றுகையைப் போடுங்கள். பெரியவர்களின் சப்தம் வெளிப்பட்டது எனில் பிறர் கேட்பார்கள். சிறியவர்களின் பேச்சை யாரும் கேட்பதில்லை. தம்மை சாஸ்திரங்களின் அத்தாரிட்டியாக புரிந்து கொண்டிருக்கும் சிங்கங்களுக்கு புரிய வைக்க வேண்டும். எவ்வளவு பெரிய பெரிய பட்டங்களைக் கொடுக்கின்றனர். சிவபாபாவின் மகிமைகள் கூட அவ்வளவு இல்லை. பக்தி மார்க்கத்தின் இராஜ்யமாக இருக்கிறதல்லவா, பிறகு ஞான மார்க்கத்தின் இராஜ்யம் ஏற்படுகிறது. ஞான மார்க்கத்தில் பக்தி இருப்பதில்லை. பக்தியில் பிறகு ஞானம் முற்றிலுமாக இருப்பதில்லை. ஆக தந்தை புரிய வைக்கிறார், தந்தை பார்ப்பதும் அது போலதான், இந்த நட்சத்திரங்கள் அமர்ந்திருக்கின்றன என்று புரிந்து கொள்கிறார். தேகத்தின் உணர்வை விட்டு விட வேண்டும். ஆகாயத்தில் நட்சத்திரங்களின் ஜொலிப்பு இருப்பது போல இங்கும் கூட ஜொலிக்கிறது. சிலர் மிகவும் பிரகாசமானவராக ஆகி விட்டனர். இவர்கள் தரணியின் நட்சத்திரங்கள், இவர்கள்தான் தேவதைகள் என்று சொல்லப்படுகின்றனர். இது எவ்வளவு பெரிய எல்லைக்கப்பாற்பட்ட மேடையாக உள்ளது. அது எல்லைக்கப்பாற்பட்ட இரவு மற்றும் பகல் என்று தந்தை புரிய வைக்கிறார். இது பிறகு அரை கல்பத்தின் இரவு, அரை கல்பத்தின் பகல், எல்லைக்கப்பாற்பட்டதாகும். பகலில் சுகமே சுகம். எங்கேயும் ஏமாற்றம் அடைய வேண்டியதில்லை. ஞானத்தில் இருப்பது சுகம், பக்தியில் இருப்பது துக்கம். சத்யுகத்தில் துக்கத்தின் பெயர் இல்லை. அங்கே காலன் இருப்பதில்லை. நீங்கள் காலனின் மீது வெற்றி அடைகிறீர்கள். மரணம் என்ற பெயர் இருப்பதில்லை. அது அமரலோகம். தந்தை நமக்கு அமர லோகத்திற்கான அமர கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு மேலேயிருந்து தொடங்கி முழு சக்கரமும் புத்தியில் உள்ளது. ஆத்மாக்களாகிய நம்முடைய வீடு பிரம்ம லோகம் என்பதை அறிவீர்கள். அங்கிருந்து இங்கே நடிப்பை நடிப்பதற்காக வருகிறோம். அளவற்ற ஆத்மாக்கள் இருக்கின்றனர், ஒவ்வொருவரைப் பற்றியும் புரிய வைப்பதில்லை. சுருக்கமாக விளக்குகிறார். எத்தனை இலை, கிளைகள் இருக்கின்றன. கிளைகள் உருவாகின்றன, மரமும் வளர்ச்சியை அடைகிறது. தமது தர்மத்தைப் பற்றியே தெரியாதவர்கள் பலர் இருக்கின்றனர். நீங்கள் உண்மையில் தேவி தேவதா தர்மத்தவர்கள் என்று தந்தை வந்து புரிய வைக்கிறார். ஆனால் இப்போது தர்மத்திலும், கர்மத்திலும் கீழானவர்களாக ஆகி விட்டீர்கள்.

 

நாம் உண்மையில் சாந்தி தாமத்தில் வசிப்பவர்கள், பிறகு நடிப்பை நடிப்பதற்காக வருகிறோம் என்பது இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. இந்த லட்சுமி நாராயணருடைய இராஜ்யம் இருந்தது, இவர்களின் வம்சம் இருந்தது. பிறகு இப்போது சங்கம யுகத்தில் நின்றிருக்கின்றனர். நீங்கள் சூரிய வம்சத்தவராக இருந்தீர்கள், பிறகு சந்திர வம்சத்தவராக ஆகினீர்கள் என்று தந்தை கூறியுள்ளார். மற்றவை (மற்ற தர்மங்கள்) இடைப்பட்ட கிளைக்கதைகள் ஆகும். இது எல்லைக்கப்பாற்பட்ட விளையாட்டாகும். இது எவ்வளவு சிறிய மரமாக உள்ளது. பிராமணர்களின் குலமாகும். பிறகு எவ்வளவு பெரியதாகிவிடும், அனைவரையும் பார்க்கவோ சந்திக்கவோ முடியாமல் போய் விடும். அங்குமிங்குமாக முற்றுகை இட்டபடி செல்கிறோம். டில்யையும், பனாரஸையும் முற்றுகை இடுங்கள் என்று தந்தை சொல்கிறார். முழு உலகையும் நீங்கள் முற்றுகை இடக் கூடியவர்கள் என்று கூறுவார்கள். நீங்கள் யோக பலத்தின் மூலம் முழு உலகின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறீர்கள், எவ்வளவு குஷி ஏற்படுகிறது. சிலர் அங்கேயும் சிலர் இங்கேயும் சென்றபடி இருக்கின்றனர். இப்போது உங்களுடைய பேச்சை யாரும் கேட்பதில்லை. பெரிய பெரிய மனிதர்கள் வரும்போது, செய்தித்தாள்களில் வரும்போது புரிந்து கொள்வார்கள். இப்போது சிறிய சிறிய வேட்டைகள் நடக்கின்றன. பெரிய பெரிய பணக்கார மனிதர்கள் தங்களுக்கு சொர்க்கம் இங்கேயே உள்ளது என்று புரிந்து கொள்கின்றனர். ஏழைகள்தான் வந்து ஆஸ்தியை எடுக்கின்றனர். பாபா நீங்கள் என்னுடையவர், வேறு யாரும் கிடையாது என்று சொல்கின்றனர். ஆனாலும் முழு உலகின் மீதும் உள்ள மோகப் பற்றுதலை விட வேண்டுமே. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஆத்மாவை தங்கமாக்குவதற்காக ஒருவர் மற்றவருக்கு கவனத்தைக் கொடுக்க வேண்டும். மன்மனாபவ என்ற சைகையைக் காட்ட வேண்டும். யோக பலத்தின் மூலம் தூய்மையடைந்து ஜொலிக்கும் நட்சத்திரம் ஆக வேண்டும்.

 

2. இந்த எல்லைக்கப்பாற்பட்ட உருவாகி உருவாக்கப்பட்ட நாடகத்தை நல்ல விதமாக புரிந்து கொண்டு சுயதரிசன சக்கரதாரி ஆக வேண்டும். ஞான மையை கொடுத்து மனிதர்களை அஞ்ஞானத்தின் காரிருளிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

 

வரதானம் :

தனது நடைமுறை வாழ்க்கையின் நிரூபணத்தின் மூலமாக அமைதி சக்தியின் சப்தத்தைப் (ஒலியை) பரவச் செய்யும் விசேஷ சேவாதாரி ஆகுக.

 

ஒவ்வொருவருக்கும் அமைதி சக்தியின் அனுபவம் செய்விப்பது என்பது விசேஷ சேவை ஆகும். எப்படி விஞ்ஞானத்தின் சக்தி புகழ் பெற்றதாக உள்ளதோ, அது போல் அமைதி சக்தி புகழ் பெற்றதாக ஆகிவிட வேண்டும். அனைவரின் வாயிலிருந்தும் அந்த ஒலி வெளிப்பட வேண்டும் -- அதாவது அமைதி சக்தியானது, விஞ்ஞானத்தை விடவும் உயர்ந்தது. அந்த நாளும் வரப் போகிறது. அமைதி சக்தியின் பிரத்தியட்சதா (வெளிப்படுத்துவது) என்பது பாபாவை வெளிப்படுத்துவது ஆகும். அமைதி சக்தியின் நடைமுறை நிரூபணம் உங்களுடைய வாழ்க்கையாகும். ஒவ்வொருவரும் நடமாடும் போதும், சுற்றி வரும் போதும் அமைதியின் உதாரணமாகக் காணப்படுவீர்களானால் விஞ்ஞானிகளின் பார்வை அமைதி சக்தி உள்ளவர்களின் பக்கமாகச் செல்லும். அத்தகைய சேவை செய்வீர்களானால் விசேஷ சேவாதாரி என்று உங்களைச் சொல்வார்கள்.

 

சுலோகன் :

 சேவை மற்றும் கடமையின் மனநிலையை சமநிலையில் வைப்பீர்களானால் அனைவரின் ஆசீர்வாதங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்

 

ஓம்சாந்தி