06.11.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
எவ்வளவு
நேரம்
தந்தையின்
நினைவு
இருக்கின்றது என
தன்னை
சோதனை
செய்யுங்கள்,
ஏனென்றால்
நினைவு செய்வதில்
தான்
இலாபம்!
மறதியில்
நஷ்டம்.
கேள்வி:
இந்த
பாவத்மாக்களின்
உலகத்தில்
எப்படிப்பட்ட
விஷயம்
முற்றிலும்
(அசம்பவமாக)
நடந்தே முடியாததாகி
விடுகிறது,
ஏன்?
பதில்:
இங்கு
நாங்கள்
புண்ணிய
ஆத்மாவாக
இருக்கின்றோம்
என
யாராவது
கூறினால்
அது
முற்றிலும் அசம்பவமாகும்
(இயலாத
காரியம்).
ஏனென்றால்
இந்த
உலகம்
தமோபிரதானமாக,
கலியுகமாக இருக்கிறது.
மனிதர்கள்
எதனை
புண்ணிய
காரியம்
என
எண்ணுகின்றனரோ
அது
கூட
பாவமாக
விடுகிறது.
ஏனென்றால் ஒவ்வொரு
கர்மமும்
விகாரங்களின்
வசமாகி
செய்கின்றனர்.
ஓம்சாந்தி.
நாம்
இப்பொழுது
பிரம்மாகுமார்
-
குமாரிகளாக
இருக்கின்றோம்
என
குழந்தைகள்
புரிந்துள்ளீர்கள்.
பிறகு
தேவி-தேவதைகளாக
இருப்போம்.
இதனையும்
நீங்கள்
மட்டுமே
புரிந்துள்ளீர்கள்,
வேறு
யாரும்
புரிந்து கொள்ளவில்லை.
பிரம்மாகுமார்-
குமாரிகளாகிய
நாம்
எல்லையற்ற
படிப்பை
படிக்கின்றோம்
என
நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
84
பிறவிகளின்
படிப்பையும்,
காலச்சக்கரத்தின்
படிப்பையும்
படிக்கின்றோம்.
பிறகு
தூய்மையாக ஆக
வேண்டும்
என்ற
அறிவுரை
உங்களுக்குக்
கிடைக்கின்றது.
இங்கு
அமர்ந்து
தூய்மையாவதற்காக குழந்தைகள்
தந்தையை
அவசியம்
நினைவு
செய்கின்றீர்கள்.
முற்றிலும்
உண்மையாக
தந்தையின்
நினைவில் தான்
இருந்தோமா
அல்லது
மாயா
இராவணன்
புத்தியை
வேறு
பக்கம்
கொண்டு
சென்றுவிட்டதா
என
உங்கள் மனதைக்
கேளுங்கள்.
மனதால்
என்னை
நினைவு
செய்வதால்
மட்டுமே
பாவங்கள்
நீங்கும்
என
தந்தை கூறுகின்றார்
நாம்
பாபாவின்
நினைவில்
இருக்கின்றோமா
அல்லது
புத்தி
வேறு
எங்காவது
செல்கின்றதா?
என தன்னைத்தான்
கேளுங்கள்
எவ்வளவு
நேரம்
நாம்
பாபாவின்
நினைவில்
இருக்கின்றோம்
என
நினைத்துப் பாருங்கள்.
எவ்வளவு
நேரம்
எங்கெல்லாம்
புத்தி
சென்றது?
என
தனது
மனநிலையைப்
பாருங்கள்.
எவ்வளவு நேரம்
தந்தையை
நினைவு
செய்கின்றோமோ,
அதன்
மூலமாகவே
தூய்மையாவோம்.
சேமிப்பு
மற்றும்
நஷ்டத்தின் கணக்கைப்
பாருங்கள்.
நினைவு
செய்வதற்கான
பழக்கம்
இருந்தால்
தான்
கணக்கு
எழுத
முடியும்.
அனைவரின் பாக்கெட்டிலும்
டைரி
இருக்கின்றது.
வியாபாரம்
செய்வோரிடம்
எல்லைக்குட்பட்ட
டைரி
இருக்கும்.
உங்களிடம் எல்லையற்ற
டைரி
இருக்கிறது.
ஆகவே,
நீங்கள்
தன்னுடைய
சார்ட்டை
குறித்துக்
கொள்ள
வேண்டும்.
தந்தையின்
கட்டளை
-
தொழில்,
காரியங்கள்
அனைத்தும்
செய்யுங்கள்,
ஆனால்
சிறிது
நேரம்
ஒதுக்கி நினைவு
செய்யுங்கள்.
தன்னுடைய
கணக்குகளைப்
பார்த்து
இலாபத்தை
அதிகப்படுத்துங்கள்,
நஷ்டம் அடையாதீர்கள்.
உங்களிடம்
மாயையின்
யுத்தம்
நடக்கிறதல்லவா?
ஒரு
வினாடியில்
இலாபம்
அல்லது
நஷ்டம் ஏற்படுகிறது.
நாம்
இலாபம்
அடைந்தோமா
அல்லது
நஷ்டம்
அடைந்தோமா?
என
உடனே
தெரிந்துவிடும்.
நீங்கள்
வியபாரி
அல்லவா!
ஒரு
சிலரே
இந்த
வியபாரத்தை
செய்கின்றனர்.
நினைவின்
மூலமாக
இலாபம்,
மறதியின்
மூலமாக
நஷ்டம்
ஏற்படுகிறது.
நாம்
எவ்வளவு
நேரம்
மறதியில்
இருந்தோம்?
இதனை
தனக்குள் சோதனை
செய்ய
வேண்டும்,
யார்
உயர்ந்த
பதவி
அடைவார்களோ,
அவர்களுக்கு
இந்த
கவலை
இருக்கும்.
குழந்தைகள்
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்,
அதாவது
நம்
அனைத்து
ஆத்மாக்களின்
தந்தை
பதீத
பாவனராக இருக்கிறார்.
நாம்
உண்மை
யாகவே
ஆத்மாக்களாக
இருக்கின்றோம்.
தன்னுடைய
வீட்டிலிருந்து இங்கு
வந்து சரீரத்தை
ஏற்று
நமது
பங்கை
எடுத்து
நடித்துக்
கொண்டிருக்கிறோம்.
சரீரம்
அழியக்
கூடியதாக,
ஆத்மா அழியாததாக
இருக்கிறது.
ஆத்மாவில்
தான்
சம்ஸ்காரமும்
இருக்கிறது.
ஹே!
ஆத்மா
என்னை
நினைவு செய்யுங்கள்,
இந்த
பிறவியில்
சிறு
வயதில்
ஏதாவது
தலைகீழான
காரியம்
செய்யவில்லை
தானே?
நினைவு செய்து
பாருங்கள்;
என
தந்தை
கூறுகின்றார்
3-4
வயதிலிருந்து செய்தவை
நினைவில்
இருக்கும்,
நாம்
சிறு வயது
பருவத்தை
எப்படி
கழித்தோம்,
என்னென்ன
செய்தோம்?
ஏதாவது
விஷயம்
மனதை
உறுத்தவில்லை தானே?
நினைவு
செய்து
பாருங்கள்.
சத்யுகத்தில்
பாவ
கர்மங்கள்
ஏற்படுவதில்லை.
எனவே
கேட்பதற்கு அவசியமில்லை.
இங்கு
பாவங்கள்
தான்
ஏற்படுகிறது.
மனிதர்கள்
எதனை
புண்ணிய
காரியம்
என
புரிந்துள்ளனரோ அதுவும்
பாவமாகவே
ஆகிவிடுகிறது.
இதுதான்
பாவ
ஆத்மாகளின்
உலகம்
உங்களுடைய
கொடுக்கல்,
வாங்கலும்
பாவ
ஆத்மாக்களோடு
இருக்கிறது.
புண்ணிய
ஆத்மாக்களாக
இங்கு
யாருமில்லை.
புண்ணிய ஆத்மாக்களின்
உலகத்தில்
ஒருவர்
கூட
பாவ
ஆத்மாவாக
இருப்பதில்லை.
பாவ
ஆத்மாக்களின்
உலகத்தில் ஒருவர்
கூட
புண்ணிய
ஆத்மாவாக
இருப்பதில்லை.
எந்த
குருமார்களின்
காலடியில்
விழுகின்றார்களோ அவரும்
புண்ணிய
ஆத்மா
இல்லை.
இதுதான்
கலியுகம்.
ஆனாலும்
மிகவும்
தமோபிரதானமாகும்.
ஆக
இங்கு யாரேனும்
புண்ணிய
ஆத்மாவாக
இருப்பது
இயலாத
காரியமாகும்.
புண்ணிய
ஆத்மா
ஆவதற்காகவே
தந்தையை அழைக்கின்றனர்.
அதாவது
எங்களை
தூய்மையாக்க
வாருங்கள்.
யாரவது
மிகவும்
தானம்,
புண்ணியம் செய்கின்றனர்,
தர்ம
சாலைகளை
உருவாக்குகின்றனர்
என்றாலும்,
அவர்களை
புண்ணிய
ஆத்மா
என்று கூறமுடியாது.
திருமணத்திற்காக
பெரிய
மண்டபம்
(அரங்கம்)
உருவாக்குகின்றனர்,
இதனை
புண்ணிய
காரியம் என
கூற
முடியுமா?
இவையனைத்தும்
புரிந்து
கொள்ள
வேண்டிய
விஷயங்களாகும்.
இதுதான்
இராவண இராஜ்யம்,
பாவாத்மாக்களின்
அசுர
உலகமாகும்.
இந்த
விஷயங்கள்
உங்களைத்
தவிர
வேறு
யாருக்கும் தெரியாது.
இராவணன்
இருந்தாலும்
கூட
யாருக்காவது
அடையாளம்
தெரியுமா?
சிவனுடைய
சித்திரமும் இருக்கின்றது,
ஆனால்
புரிந்து
கொள்வதில்லை.
பெரிய
பெரிய
சிவலிங்கத்தை உருவாக்கி
பிறகு
அவருக்குப் பெயர்,
தோற்றம்
இல்லையெனவும்,
சர்வ
வியாபி
என்றும்
கூறுகின்றனர்.
எனவே
தந்தை
கூறுகின்றார்
-எப்பொழுதெல்லாம்
தர்மத்திற்கு
நிந்தனை
ஏற்படுகிறதோ
அந்த
நேரத்தில்
நான்
வருகின்றேன்
என்று.
பாரதத்தில் தான்
சிவபாபாவுக்கு
நிந்தனை
ஏற்படுகிறது.
எந்த
தந்தை
உங்களை
உலகிற்கு
எஜமானராக
ஆக்கினாரோ,
அவரை
நீங்கள்
மனித
வழிப்படி
நடந்து
நிந்தனை
செய்தீர்கள்.
மனித
வழி
மற்றும்
ஈஸ்வரிய
வழி
பற்றிய புத்தகமும்
இருக்கிறதல்லவா?
இதனை
நீங்கள்
மட்டும்
புரிந்துள்ளீர்கள்
மற்றும்
புரிய
வைப்பீர்கள்,
அதாவது நாங்கள்
ஸ்ரீமத்படி
நடந்து
தேவதைகளாக
ஆகின்றோம்.
இராவணன்
வழிப்படி
நடந்து
பிறகு
அசுர
மனிதர்களாக ஆகின்றோம்.
மனித
வழியானது
அசுர
வழி
என
கூறப்படுகிறது;
அசுர
காரியங்களே
செய்கின்றனர்.
முக்கியமான விஷயம்
ஈஸ்வரனை
சர்வ
வியாபி
என
கூறுகின்றனர்.
கச்ச
அவதாரம்,
மீன்
அவதாரம்..
ஆக
எந்தளவு அசுரராக
கெட்டுப்
போய்விட்டனர்.
உங்களுடைய
ஆத்மா
இம்மாதிரி
அவதாரம்
எடுப்பதில்லை,
மனித உடலில் மட்டுமே
வருகிறது.
நாம்
கச்ச
ரூபமாக,
மீன்
ரூபமாக
ஆவதில்லை,
84
லட்சம்
பிறவிகள்
எடுப்பதில்லை என்பதை
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
இப்பொழுது
உங்களுக்கு
தந்தையின்
ஸ்ரீமத்
கிடைத்துள்ளது-
குழந்தைகளே,
நீங்கள்
84
பிறவிகள்
எடுக்கின்றீர்கள்.
84
மற்றும்
84
லட்சம்
இதனை
எத்தனை
சதவீகிதமாக
கணக்கிடுவது?
பொய்யென்றால்
முற்றிலும்
பொய்யாகிவிட்டது,
உண்மை
துளியளவுமில்லை.
இதனுடைய
அர்த்தத்தைப்
புரிந்து கொள்ள
வேண்டும்.
பாரதத்தின்
நிலையை
என்னவென்று
பாருங்கள்.
பாரதம்
சத்தியமான
கண்டமாக
இருந்தது.
அது
சொர்க்கம்
என
அழைக்கப்பட்டது.
அரைக்
கல்பம்
இராம
இராஜ்யமாக,
அரைக்
கல்பம்
இராவண இராஜ்யமாக
இருக்கிறது.
இராவண
இராஜ்யத்தை
அசுர
சம்பிரதாயமாகக்
கூறப்படுகிறது.
எவ்வளவு
கடுமையான வார்த்தையாக
இருக்கிறது.
அரை
கல்பம்
தேவதைகளின்
இராஜ்யம்
நடக்கிறது.
இலட்சுமி-
நாரயணன்
முதலாவது,
இரண்டாவது,
மூன்றாவது
என
இருப்பதாக
தந்தை
கூறுகின்றார்,
எவ்வாறு
எட்வர்டு
முதலாவது,
இரண்டாவது என
சொல்லப்படுகிறதல்லவா!
முதலாவது
வம்சமாக,
இரண்டாவது
வம்சமாக
தெரிகிறது.
உங்களுடையது முதலில் சூரிய
வம்ச
இராஜ்யம்
பிறகு
சந்திர
வம்ச
இராஜ்யமாகும்.
தந்தை
வந்து
நாடகத்தின்
இரகசியத்தை நல்ல
முறையில்
புரிய
வைக்கின்றார்.
உங்களுடைய
சாஸ்திரங்களில்
இந்த
விஷயங்கள்
இல்லை.
சில சாஸ்திரங்களில்
துளியளவு
உண்மை
இருந்தாலும்
இதனை
யார்
புத்தகமாக
உருவாக்கினார்களோ
அவர்களுக்குத் தெரியவில்லை.
பாபாவும்
பனாரஸ்
சென்ற
நேரம்
இந்த
உலகம்
நன்றாகத்
தோன்றவில்லை,
அங்கு
எல்லா
சுவரிலும் கோடுபோட்டு
எழுதினார்,
தந்தை
அனைத்தையும்
செய்ய
வைத்தார்,
ஆனாலும்
அந்த
நேரம்
நாங்கள் குழந்தைகளாக
இருந்தோம்.
முற்றிலும்
புரிந்துகொள்ளமால்
இருந்தோம்.
யாரோ
எங்கள்
மூலமாக
செய்வதுபோல் இருந்தது.
வினாசத்தைப்
பார்த்து
உள்ளுக்குள்
மகிழ்ச்சியும்
இருந்தது.
இரவில்
உறங்கும்
போது
கூட
பறப்பதுபோல் இருந்தது,
ஆனாலும்
எதுவும்
புரியவில்லை.
அப்படியும்,
இப்படியுமாக
கோடுகள்
வரையப்பட்டதாக
இருந்தது.
ஏதோ
ஒரு
சக்தி
இவருக்குள்
பிரவேசம்
செய்திருந்தது.
நாங்கள்
அதிசயம்
அடைந்தோம்.
முதலில் வியாபரம் செய்து
கொண்டிருந்தார்
பிறகு
என்ன
ஆனது?
யாரையாவது
பார்த்தால்
உடனே
தியானத்தில்
சென்றுவிடுவார் யாரையாவது
பார்த்தால்
கண்கள்
மூடிவிடுகிறது,
அங்கே
என்ன
நடக்கின்றது,
என்று
சொல்வார்.
என்ன பார்த்தீர்கள்
என
கேட்டால்
வைகுண்டத்தைப்
பார்த்தேன்,
கிருஷணரைப்
பார்த்தேன்
என
கூறுவார்
இவை யனைத்தும்
புரிந்துகொள்ளவேண்டிய
விஷயங்கள்
அல்லவா!
எனவே
புரிந்து
கொள்வதற்காக
அனைத்தையும் விட்டுவிட்டு
பனாரஸ்
சென்று
விட்டார்.
முழு
நாளும்
அமர்ந்து
கொண்டு
பென்சிலால்
சுவரில்
எழுதிக் கொண்டிருந்தார்,
வேறு
வேலை
இல்லை,
பேபியாக
(குழந்தையாக)
இருந்தார்
அல்லவா?
அப்படியும்,
இப்படியுமாக பல
காட்சிகளைப்
பார்த்து
இப்பொழுது
வேறு
எதுவும்
செய்ய
வேண்டாம்,
வியாபரத்தை
விடத்தான்
வேண்டும் என
புரிந்து
கொண்டார்
இந்த
தொழிலையெல்லாம்
விட
வேண்டும்
என
மகிழ்ச்சி
இருந்தது.
இராவண இராஜ்யம்
அல்லவா!
இராவணன்
மீது
கழுதையின்
தலையைக்
காட்டியுள்ளனர்,
ஆகவே
இது
இராஜ்யமில்லை என்ற
சிந்தனை
ஏற்பட்டது.
கழுதை
அடிக்கடி
மண்ணில்
புரண்டு
சலவை
தொழிலாளி
துவைத்த
துணிகளை மீண்டும்
அழுக்காக்கி
விடும்.
நீங்கள்
எப்படி
இருந்தீர்கள்,
இப்பொழுது
உங்களுடைய
நிலை
என்னவாகி விட்டது
என
தந்தையும்
கூறுகின்றார்.
இந்த
தந்தையும்
வந்து
புரிய
வைக்கின்றார்
மேலும்
தாதாவும்
புரிய வைக்கின்றார்
இருவரும்
சேர்ந்து
செய்கின்றனர்.
ஞானத்தை
யார்
நல்ல
முறையில்
புரிய
வைக்கின்றார்களோ அவர்களே
திறமையானவர்கள்
என
கூறப்படுகிறது.
வரிசைப்
படிதான்
இருக்கும்
அல்லவா!
இந்த
இராஜ்யம் ஸ்தாபனை
ஆகின்றது
அவசியம்
வரிசைப்படி
பதவி
அடைவார்கள்
என
குழந்தைகளும்
புரிய
வைக்கின்றீர்கள்.
ஆத்மா
தன்னுடைய
பங்கை
ஒவ்வொரு
கல்பமும்
நடிக்கின்றது
அனைவரும்
ஒரே
மாதிரி
ஞானத்தை அடைய
மாட்டார்கள்.
இந்த
ஸ்தாபனை
அதிசயமானதாகும்.
வேறு
யாரும்
ஸ்தாபனைக்கான
ஞானத்தை கொடுக்க
முடியாதல்லவா!
சீக்கிய
தர்மத்தின்
ஸ்தாபனை
எவ்வாறு
ஏற்பட்டது
என
புரிந்து
கொள்ளுங்கள்.
தூய்மையான
ஆத்மா
இன்னொரு
உடலில் பிரவேசம்
செய்தது.
கொஞ்ச
காலத்திற்குப்
பிறகு
சீக்கிய
தர்மம் உருவானது.
அவர்களின்
தலைவர்
யார்?
குருநானக்.
அவர்
வந்து
தலைவனை
வணங்கினார்.
முதலில் புதிய ஆத்மாவாக
தூய்மையான
ஆத்மாவாக
இருப்பார்கள்.
தூய்மையானவர்களை
மஹான்
ஆத்மா
என
கூறப்படுகிறது.
சுப்ரீம்
என
ஒரு
தந்தையை
மட்டுமே
கூறப்படுகிறது.
அவர்களும்
தர்மத்தை
உருவாக்குவதால்
மஹான்
என கூறப்படுகிறது.
ஆனாலும்
வரிசைப்படியாக
பின்னால்
வருகின்றனர்.
500
ஆண்டுகளுக்கு
முன்பாக
ஒரு ஆத்மா
வந்து
சீக்கிய
தர்மத்தை
ஸ்தாபனை
செய்தார்.
அந்த
நேரத்தில்
கிரந்தம்
இருந்திருக்க
முடியாது.
என்ன போதனை
கொடுக்க
முடியும்,
நிச்சயமாக
பிற்காலத்தில்
தான்
உருவாக்கியிருப்பார்கள்.
ஆர்வம்
வந்ததனால் தந்தைக்கு
மகிமை
செய்தனர்.
மற்றபடி
இந்த
புத்தகம்
போன்றவை
பிற்காலத்தில்
நிறையபேர்
வந்த
பிறகு உருவக்கப்பட்டது.
ஏனென்றால்,
படிப்பவர்களும்
தேவையல்லவா!
அனைவருடைய
சாஸ்திரங்களும்
பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது.
பக்திமார்க்கம்
ஆரம்பமான
பிறகு
சாஸ்திரங்கள்
படிக்கப்பட்டது.
ஞானமும்
தேவையல்லவா!
முதலில் சதோபிரதனமாக
இருப்பார்கள்.
பிறகு
சதோ,
ரஜோ,
தமோ
நிலைக்கு
வருகின்றார்கள்.
நிறைய
பேர் வந்த
பிறகு
மகிமை
ஏற்படும்
மேலும்
சாஸ்திரங்கள்
உருவாக்கப்படும்.
இல்லையெனில்
வளர்ச்சியை
யார் செய்ய
முடியும்.
பின்பற்றக்
கூடியவர்களும்
உருவாக
வேண்டுமல்லவா?
சீக்கிய
தர்மத்தின்
ஆத்மாக்கள்
வந்து பின்பற்றுவார்கள்.
இதற்கு
மிகவும்
காலம்
தேவைப்படுகிறது.
புதிய
ஆத்மா
வந்தவுடன்
துக்கத்தை
அடையாது,
அது
விதிமுறையுமில்லை.
ஆத்மா
சதோ
பிரதானத்திலிருந்து சதோ,
ரஜோ,தமோ
நிலைக்கு
வரும்
பொழுது
துக்கம்
ஏற்படுகிறது,
இதுதான்
விதிமுறையாகும்.
இங்கு
இராவண
சம்பிரதாயமும்,
இராம
சம்பிரதாயமும்
கலந்து
இருக்கிறது.
இப்பொழுது
யாரும்
சம்பூரணம் ஆகவில்லை.
சம்பூரணம்
ஆகிவிட்டால்
சரீரத்தை
விட்டுவிடுவார்கள்.
கர்மாதீத்
அடைந்தவர்களுக்கு
எந்த துக்கமும்
ஏற்படாது.
அவர்கள்
இந்த
கெட்டுப்போன
உலகில்
இருக்க
முடியாது.
அவர்கள்
இங்கிருந்து
சென்று விடுவார்கள்.
மீதி
இருப்பவர்கள்
கர்மாதீத்
நிலை
அடையாமல்
இருப்பார்கள்.
அனைவரும்
ஒன்று
சேர்ந்து கர்மாதீத்
நிலை
அடைய
முடியாது.
வினாசம்
ஆனாலும்
கூட
கொஞ்சம்
மீதி
இருக்கும்,
பிரளயம்
ஏற்படாது.
இராமரும்
ஆண்டார்,
இராவணனும்
ஆண்டார்
என
கூறப்படுகிறது.
இராவணனின்
குடும்பம்
மிகப்
பெரியதாக இருந்தது,
நமது
குடும்பம்
மிகச்
சிறியது.
அங்கு
எத்தனை
தர்மத்தைச்
சேர்ந்தவர்கள்
இருக்கிறார்கள்
தேவி-
தேவதை
தர்மம்
தான்
அனைத்தையும்
விட
முதலாவதாகும்.
எனவே
நமது
குடும்பம்
தான்
மிகப்
பெரியதாக இருக்க
வேண்டும்
இப்பொழுது
அனைவரும்
கலந்து
விட்டனர்.
ஆகவே
நிறைய
பேர்
கிறிஸ்துவர்களாக ஆகிவிட்டனர்.
அங்கு
மனிதர்கள்
சுகத்தை,
அந்தஸ்தைப்
பார்த்து
அந்த
தர்மத்திற்கு
மாறிவிட்டனர்.
போப் ஆண்டவர்
வரும்
பொழுதெல்லாம்
நிறைய
பேர்
கிறிஸ்துவ
தர்மத்திற்கு
மாறிவிடுகின்றனர்.
பிறகு
நிறைய வளர்ச்சியும்
ஏற்படுகிறது.
சத்யுகத்தில்
ஒரு
குடும்பத்திற்கு
ஒரு
ஆண்,
ஒரு
பெண்
குழந்தை
இருக்கும்.
இப்பொழுது
பாருங்கள்
அனைவரை
காட்டிலும்
கிறிஸ்துவர்கள்
மிகவும்
திறமைசாலியாக இருக்கின்றனர்,
வேறு எந்த
தர்மமும்
இந்தளவு
வளர்ச்சிப்
பெறவில்லை
யார்
நிறைய
குழந்தைகளைப்
பெறுகின்றார்களோ
அவர்களுக்கு பரிசும்
கொடுக்கப்படுகிறது.
ஏனென்றால்,
அவர்களுக்கு
நிறைய
மனிதர்கள்
தேவைப்படுகிறது,
அவர்கள்
இராணுவம் மற்றும்
படைகளுக்கு
தேவைப்படுவார்கள்.
ரஷ்யா,
அமெரிக்காவில்
அனைவரும்
கிறிஸ்துவர்கள்,
ஆக
அனைவரும் கிறிஸ்துவர்கள்
தான்.
இரண்டு
குரங்குகள்
வெண்ணெய்க்காக
சண்டையிட்டது,
இடையில்
பூனை
வந்து
சாப்பிட்டது என
கதை
சொல்லப்படுகிறது.
இதுவும்
நாடகத்தில்
பதிவாகி
விட்டது.
ஆரம்பத்தில்
ஹிந்து
முஸ்லீம்
சேர்ந்து இருந்தனர்,
இருவரும்
பிரிந்த
பிறகு
பாகிஸ்தானில்
புதிய
அரசாங்கம்
ஏற்பட்டது.
இதுவும்
நாடகத்தில்
பதிவாகி விட்டது.
இருவரும்
சண்டையிட்டனர்.
ஆயுதங்களை
எடுப்பார்கள்,
வேலையும்
நடக்கும்.
அவர்களின் உயர்ந்ததிலும்
உயர்ந்த
காரியம்
இதுதான்
ஆகும்.
ஆனால்
நாடகத்தில்
வெற்றியடைய
வேண்டும்
என்ற
விதி உங்களுடையதாகும்.
100
சதவிதம்
உறுதி
செய்யப்பட்டது,
உங்களை
யாராலும்
வெல்ல
முடியாது.
மற்ற அனைவரும்
அழிந்துவிடுவார்கள்.
புதிய
உலகில்
நம்முடைய
இராஜ்யம்
இருக்கும்,
அதற்காகத்
தான்
படித்து,
தகுதியாகின்றோம்
என
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
நீங்கள்
தகுதியானவர்களாக
இருந்தீர்கள்,
இப்பொழுது தகுதியற்றவர்களாக
ஆகிவிட்டீர்கள்.
மீண்டும்
தகுதியானவர்களாக
ஆக
வேண்டும்.
பதீத
பாவனரே
வாருங்கள் என
பாடுகின்றனர்,
ஆனால்
அர்த்தத்தைப்
புரிந்து
கொள்ளவில்லை.
இதுதான்
முற்றிலும்
காடாக
உள்ளது.
இப்பொழுது
முள்
காடான
உலகத்தை
மலர்த்
தோட்டமாக
ஆக்குவதற்கு
தந்தை
வந்திருக்கிறார்.
அந்த
உலகம் தெய்வீகமானது,
இது
அசுர
உலகமாகும்.
முழு
மனித
உலகின்
இரகசியத்தையும்
புரிய
வைக்கப்படுகிறது.
நாம் தன்னுடைய
தர்மத்தை
மறந்து
தாழ்ந்த
நிலை
அடைந்துவிட்டோம்
என
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
ஆகவே எல்லா
கர்மங்களும்
பாவங்களாகிவிட்டது.
கர்மம்,
விகர்மம்,
அகர்மத்தின்
விளைவை
பாபா
உங்களுக்குப்
புரிய வைத்திருக்கிறார்.
உண்மையாகவே
நாம்
நேற்று
அவ்வாறு
இருந்தோம்
என
புரிந்து
கொள்கிறீர்கள்.
பிறகு இன்று
நாம்
மீண்டும்
இவ்வாறு
ஆகின்றோம்,
அருகாமையில்
உள்ளோம்
அல்லவா!
நேற்று
உங்களை தேவாத்மாவாக
ஆக்கியிருந்தேன்,
இராஜ்ய
பாக்கியத்தைக்
கொடுத்திருந்தேன்.
பிறகு
அவையனைத்தும்
எங்கு சென்று
விட்டது
என
பாபா
கேட்கின்றார்.
பக்திமார்க்கத்தில்
நாம்
எவ்வளவு
செல்வத்தை
இழந்தோம்
என உங்களுக்கு
நினைவு
வந்துவிட்டது.
நேற்றைய
விஷயமல்லவா!
தந்தை
உள்ளங்கையில்
சொர்க்கத்தை
கொண்டு வந்துள்ளார்.
இந்த
ஞானம்
புத்தியில்
இருக்க
வேண்டும்.
இந்த
கண்கள்
எவ்வளவு
ஏமாற்றம்
செய்கிறது,
கெட்ட
பார்வையை
ஞானத்தின்
மூலம்
சுத்தமானதாக ஆக்க
வேண்டும்
என
பாபா
புரிய
வைக்கின்றார்
நல்லது
இனிமையிலும்
இனிமையான
தேடிக்கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகளும்
காலை
வணக்கமும்!
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
தன்னுடைய
எல்லையற்ற
டைரியில்
குறித்துக்
கொள்ளுங்கள்
-
நாம்
நினைவில்
இருந்து எவ்வளவு
இலாபத்தை
அதிகப்படுத்தி
இருக்கிறோம்?
நஷ்டம்
அடையவில்லை
தானே?
நினைவில்
இருந்த
நேரத்தில்
புத்தி
எங்கெல்லாம்
சென்றது?
2.
இந்த
ஜென்மத்தில்
சிறு
வயதிலிருந்து என்னென்ன
தவறான
காரியங்கள்
மற்றும்
பாவங்கள் ஏற்பட்டதோ
அதனை
குறித்துக்
கொள்ளுங்கள்.
எந்த
விஷயங்கள்
மனதை
உறுத்துகிறதோ அதனை
தந்தையிடம்
கூறி
இலேசாக
ஆகுங்கள்.
இப்பொழுது
எந்த
ஒரு
பாவ
காரியமும் செய்யக்
கூடாது.
வரதானம்
:
நல்லது
என்பதால்
அதனால்
கவரப்படுவதற்குப்
பதிலாக,
அதை
தனக்குள்
தாரணை செய்யக்கூடிய
பரமாத்ம
சிநேகி
ஆகுக.
பரமாத்ம
சிநேகி
ஆக
வேண்டுமானால்
தேக
உணர்வினால்
ஏற்படும்
தடைகளை
சோதித்துப்
பாருங்கள்.
அநேகக்
குழந்தைகள்,
இவர்
நல்லவர்,
அதனால்
கொஞ்சம்
இரக்கம்
வருகிறது
எனச்
சொல்கின்றனர்.
சிலருக்கு யாருடைய
சரீரத்தின்
மீதாவது
பற்றுதல்
இருக்கலாம்.
சிலருக்கு
யாருடைய
குணங்கள்
மற்றும்
விசேஷங்கள் மீது
பற்றுதல்
இருக்கலாம்.
ஆனால்
அந்த
விசேஷங்களையோ
அல்லது
குணத்தையோ
கொடுப்பவர்
யார்?
ஒருவர்
நல்லவர்
என்றால்
அவரிடமுள்ள
நல்லதை
தாராளமாக
தாரணை
செய்யுங்கள்.
ஆனால்
அந்த
நல்லதின் மீது
கவரப்பட்டு
விடாதீர்கள்.
விலகியவராகவும்
பாபாவுக்கு
அன்பானவராகவும்
ஆகுங்கள்.
அது
போல் அன்பானவராக,
அதாவது
பரமாத்ம
சிநேகி
குழந்தைகள்
சதா
பாதுகாப்பாக
இருப்பார்கள்.
சுலோகன்:
அமைதி
சக்தியை
வெளிப்படுத்துவீர்களானால் சேவையின்
வேகம்
தீவிரமாகி
விடும்.
ஓம்சாந்தி