16.12.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! அளவற்ற குஷி மற்றும் போதையில் இருப்பதற்கு தேக உணர்வு என்ற நோயை விட்டு விட்டு அன்பான புத்தி உடையவர் ஆகுங்கள். தன்னுடைய நடத்தையை திருத்திக் கொள்ளுங்கள்.

 

கேள்வி:

எந்த குழந்தைகளுக்கு ஞானத்தின் தலை கீழான போதை ஏறாது?

 

பதில்:

யார் பாபாவை யதார்த்தமாக புரிந்து கொண்டு நினைக்கிறார்களோ, மனப்பூர்வமாக பாபாவின் மகிமை செய்கிறார்களோ, யாருக்கு படிப்பின் மீது முழு கவனம் இருக்கிறதோ அவர்களுக்கு ஞானத்தின் தலை கீழான போதை ஏற முடியாது. யார் பாபாவை சாதாரணமாக புரிந்துள்ளார்களோ அவர்கள் பாபாவை நினைக்க முடியாது. உண்மையாக நினைக்கிறார்கள் என்றால் நிச்சயமாக தனது செய்திகளையும் அவசியம் பாபாவிற்குக் கொடுப்பார்கள். குழந்தைகள் செய்தியைத் தெரிவிக்கவில்லை என்றால் குழந்தைகள் எங்காவது மயக்கமடைந்திருப்பார்களோ என்ற கவலை பாபாவிற்கு ஏற்படுகிறது.

 

ஓம் சாந்தி!

குழந்தைகளே புதியதாக யாராவது வந்தால் முதலில் அவர்களுக்கு எல்லைக்குட்பட்ட மற்றும் எல்லைக்கப்பாற்பட்ட இரண்டு தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள் என பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். எல்லையற்ற தந்தை என்றாலே எல்லையற்ற ஆத்மாக்களின் தந்தை. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவிற்கும் தனித்தனியாக எல்லைக்குட்பட்ட ஒரு தந்தை இருக்கிறார். இந்த ஞானத்தை அனைவரும் ஒரே மாதிரி தாரணை செய்ய முடியாது. சிலர் ஒரு சதவீதம், சிலர் 95 சதவீதம் தாரணை செய்கிறார்கள். சூரிய வம்சம், சந்திர வம்சத்தினர் என இருப்பார்கள் அல்லவா! இராஜா இராணி மற்றும் பிரஜைகள். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். பிரஜைகளில் கூட அனைத்து விதமான மனிதர்களும் இருக்கிறார்கள். பிரஜை என்றாலே சாதாரண பிரஜை தான். இது படிப்பு, ஒவ்வொருவரும் அவரவர் புத்திக்கு ஏற்ப படிக்கின்றனர் என பாபா புரிய வைக்கிறார். ஒவ்வொருவருக்கும் அவரவருக்கென நடிப்பு கிடைத்திருக்கிறது. யார் போன கல்பத்தில் அறிவுரையை எவ்வளவு கடைப்பிடித்தார்களோ அவ்வளவு இப்போதும் கடைபிடிக்கிறார்கள். படிப்பை ஒரு போதும் மறைக்க முடியாது படிப்பிற்கு ஏற்ப பதவி கிடைக்கிறது. பாபா புரிய வைத்திருக்கிறார். இன்னும் செல்ல செல்ல பரீட்சை அதிகம் இருக்கும் என பாபா புரிய வைத்திருக்கிறார். தேர்ச்சி பெறாமல் (புதிய உலகிற்கு) டிரான்ஸ்பர் ஆக முடியாது. கடைசியில் அனைத்தும் தெரிய வரும். ஆனால் இப்போது கூட நாம் எந்த பதவிக்கு தகுதி பெற்றிருக்கிறோம் என புரிந்து கொள்ள முடியும். வெட்கமாக இருப்பதால் அனைவரும் கை தூக்கி விடுகிறார்கள். ஆனால் நாம் எப்படி மாறுவோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் கையை உயர்த்தி விடுகிறார்கள். இதையும் அறியாமை என்றே கூறலாம். இவரைக் காட்டிலும் அதிகமான புத்தி லௌகீகமானவருக்குக் கூட இருக்கிறது என பாபா உடனடியாக புரிந்து கொள்கிறார். அவர்கள் ஸ்காலர்ஷிப் அடைவதற்கு நமக்கு தகுதி இல்லை, தேர்ச்சி பெற மாட்டோம் எனப் புரிந்து கொள்கிறார்கள். ஆசிரியர் எவ்வளவு படிக்க வைக்கிறாரோ அதில் நாம் எவ்வளவு மதிப்பெண்கள் பெறுவோம் என அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். நாங்கள் மதிப்புடன் தேர்ச்சி பெறுவோம் எனக் கூற மாட்டார்கள். இங்கேயோ பல குழந்தைகளுக்குள் இந்த அறிவு இல்லை. தேக உணர்வு நிறைய இருக்கிறது. தேவதையாவதற்காக வந்துள்ளனர். ஆனால் அதற்கேற்ப நடத்தையும் வேண்டும். வினாசக் காலத்தில் விபரீத புத்தி என பாபா கூறுகின்றார். ஏனென்றால் முறைப்படி பாபாவிடம் அன்பில்லை.

 

வினாசக் காலத்தில் விபரீத புத்தி என்பதன் யதார்த்தமான பொருள் என்ன என்பதை பாபா குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைத்திருக்கிறார். குழந்தைகள் தாங்களே முழுமையாக புரிந்து கொள்ள வில்லை என்றால் மற்றவர்கள் என்ன புரிந்துக் கொள்வார்கள்? பாபாவை நினைக்க வேண்டும். இது குப்தமான (மறைமுகமான) விஷயம் ஆகும். படிப்பு குப்தமாக இல்லை அல்லவா! படிப்பில் வரிசைக் கிரமத்தில் இருக்கிறார்கள். ஒரே மாதிரி படிக்க முடியாது. இப்போது சிறு குழந்தையாக இருக்கின்றனர் என பாபா புரிந்து கொள்கிறார். இப்படிப் பட்ட எல்லையற்ற தந்தையை 3-3 மாதம், 4-4 மாதங்கள் கூட நினைப்பதில்லை. நினைக்கிறார்கள் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? பாபா, நான் எப்படி நடந்து கொண்டிருக்கிறேன்? என்னென்ன சேவை செய்து கொண்டிருக்கிறேன் என்பதை கடிதம் மூலம் தெரிவிப்பதில்லை. குழந்தைகள் மயக்கமடைந்து விட வில்லையே, இறந்து போய் விடவில்லையே என குழந்தைகளைப் பற்றி பாபாவிற்கு எவ்வளவு கவலை இருக்கிறது! சிலர் பாபாவிற்கு எவ்வளவு நல்ல நல்ல சேவை செய்திகளை எழுதுகிறார்கள். குழந்தை உயிரோடு இருக்கிறது என பாபா புரிந்து கொள்கிறார். சேவை செய்யக் கூடிய குழந்தைகள் ஒரு போதும் மறைந்திருக்க முடியாது. எந்தக் குழந்தை எப்படி இருக்கிறது என ஒவ்வொரு குழந்தையின் மனதைப் பற்றியும் பாபா அறிகிறார். தேக உணர்வு என்ற நோய் மிகவும் கடுமையாக இருக்கிறது. பாபா முரளியில் புரிய வைக்கிறார், நிறைய பேருக்கு ஞானத்தின் தலைகீழான போதை இருக்கிறது. அகங்காரம் வந்து விடுகிறது. பிறகு நினைப்பதும் இல்லை. கடிதமும் எழுதுவது இல்லை. பிறகு பாபா எப்படி நினைப்பார் நினைவின் மூலம் தான் நினைவு கிடைக்கிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் பாபாவை சரியாகப் புரிந்து கொண்டு நினைக்கிறீர்கள். மனதார மகிமை செய்கிறீர்கள். சில குழந்தைகள் பாபாவை சாதாரணமாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆகவே நினைப்பதில்லை. பாபா வெளி பகட்டு எதையும் காண்பிக்க முடியாது. பகவான் வாக்கு- நான் உங்களுக்கு உலகத்தின் இராஜ்ய பதவி கொடுப்பதற்காக இராஜயோகத்தை கற்பிக்கிறேன். நாம் விஷ்வத்தின் இராஜ்ய பதவி அடைவதற்காக எல்லையற்ற தந்தையிடம் படிக்கிறோம் என நீங்கள் புரிந்து கொள்வதில்லை. இந்த போதை இருந்தால் அளவற்ற குஷி சதா ஏறிக் கொண்டே இருக்கும். கீதையைப் படிப்பவர்கள் ஸ்ரீகிருஷ்ண பகவான் வாக்கு-நான் இராஜயோகத்தை கற்பிக்கிறேன், அவ்வளவு தான் எனக் கூறுகிறார்கள். இதனால் அவர்களுக்கு இராஜ்ய பதவியைப் பெறுவோம் என்ற குஷி இருக்க முடியாது. கீதையைப் படித்து முடித்து விட்டு அவரவர் வேலைக்குச் செல்வார்கள். நமக்கு எல்லயற்ற தந்தை படிக்க வைக்கிறார் என்பது இப்போது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. அவர்களுடைய புத்தியில் இவ்வாறு இருக்காது. எனவே முதன் முதலில் யார் வந்தாலும் அவர்களுக்கு இரண்டு தந்தையரின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். பாரதம் சொர்க்கமாக இருந்தது. இப்போது நரகமாக இருக்கிறது. இது கலியுகம், இதை சொர்க்கம் என்று கூற முடியாது. சத்யுகத்திலும் இருக்கிறார்கள், கலியுகத்திலும் இருக்கிறார்கள் என்று கூற முடியாது. யாருக்காவது துக்கம் ஏற்பட்டால் நரகத்தில் இருக்கிறார்கள் எனக் கூறுவார்கள். யாருக்கு சுகம் இருக்கிறதோ அவர்கள் சொர்க்கத்தில் இருப்பதாகக் கூறுவார்கள். இவ்வாறு நிறைய கூறுவார்கள். துக்கத்தில் இருக்கும் மனிதர்கள் நரகத்தில் இருக்கிறார்கள். நாங்கள் மிகவும் சுகத்தில் இருக்கிறோம், மாட மாளிகைகள், கார் போன்றவைகள் இருக்கின்றன. சொர்க்கத்தில் இருக்கிறோம். சத்யுகம், கலியுகம் ஒன்று தான் என நினைக்கிறார்கள்.

 

எனவே முதன் முதலில் இரண்டு தந்தைகளின் விஷயத்தை புத்தியில் பதிய வைக்க வேண்டும். தந்தையே வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கிறார். அவர் எப்படி சர்வ வியாபியாக இருக்க முடியும்? லௌகீக தந்தையை சர்வ வியாபி எனக் கூறுவார்களா? ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ரூபம் ஒன்று தான். அதில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நீங்கள் படங்களில் காண்பிக்கிறீர்கள். ஆத்மா மற்றும் பரமாத்மா சிறியதோ பெரியதோ இல்லை. அனைவரும் ஆத்மாக்கள், அவரும் ஆத்மா. அவர் எப்போதும் பரந்தாமத்தில் இருக்கிறார். ஆகவே அவருக்கு பரமாத்மா என்று கூறப்படுகிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் பிறவியில் வருவது போல் நான் வருவதில்லை. நான் கடைசியில் இந்த உடலில் வந்து பிரவேசம் ஆகிறேன். இந்த விஷயங்களை வெளியில் இருப்பவர் யாரும் புரிந்து கொள்ளவில்லை. விஷயங்கள் மிகவும் எளிதாகும். பாபாவிற்குப் பதிலாக வைகுண்டவாசி கிருஷ்ணரின் பெயரை போட்டு விட்டனர், இந்த ஒரு வித்தியாசம் மட்டும் தான். கிருஷ்ணரா வைகுண்டத்திருந்து நரகத்தில் வந்து இராஜயோகத்தை கற்பித்தார்? தேகம் உட்பட...... என்னை மட்டும் நினையுங்கள். இதைக் கிருஷ்ணர் எப்படிக் கூற முடியும்? தேகதாரியை நினைப்பதால் பாவங்கள் எப்படிப் போகும்? கிருஷ்ணர் ஒரு சிறிய குழந்தை. அவர் எங்கே, நான் சாதாரண மனிதனின் வயதான உடலில் வருகிறேன். எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! இந்த ஒரே ஒரு தவறினால் அனைத்து மனிதர்களும் பதீதமாகவும், ஏழைகளாகவும் ஆகி விட்டனர். நானும் சர்வ வியாபி இல்லை, கிருஷ்ணரும் சர்வவியாபி இல்லை. ஒவ்வொரு உடலிலும் ஆத்மா தான் சர்வ வியாபி. எனக்கென்று உடலும் கிடையாது. மற்ற ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அதற்கென்று உடல் இருக்கிறது. ஒவ்வொரு உடலுக்குகென்று தனித்தனி பெயர் இருக்கிறது. எனக்கு உடலும் இல்லை. என்னுடைய உடலுக்கென்று பெயரும் இல்லை. நான் வயோதிக உடலை எடுக்கிறேன். இவருடைய பெயரை மாற்றி பிரம்மா என வைக்கப்பட்டுள்ளது. எனக்கு பிரம்மா என்ற பெயர் கிடையாது. என்னை சதாசிவன் என்று கூறுகிறார்கள். நான் தான் அனைவருக்கும் சத்கதி அளிக்கக் கூடிய வள்ளல். ஆத்மாவை அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் எனக் கூற முடியாது. பரமாத்மாவிற்கு எப்போதாவது துர்கதி ஏற்பட முடியுமா? ஆத்மாவிற்குத் தான் சத்கதி மற்றும் ஆத்மாவிற்குத் தான் துர்கதி ஏற்படுகிறது. இந்த விஷயங்களை சிந்திக்க வேண்டும். இல்லையென்றால் மற்றவர்களுக்கு எப்படி புரிய வைப்பீர்கள். ஆனால் மாயை குழந்தைகளின் புத்தியை முன்னேற விடாத அளவிற்கு மோசமானதாக இருக்கிறது. நாள் முழுவதும் வீண் விஷயங்களிலேயே நேரத்தை வீணாக்குகிறார்கள். பாபாவிடமிருந்து பிரிப்பதற்காக மாயா எவ்வளவு வேகமாக முயற்சிக்கிறது! நிறைய குழந்தைகள் விட்டு விடுகிறார்கள். பாபாவை நினைக்காததால் நிலை ஆடாமல் அசையாமல் இருக்க முடிவதில்லை. பாபா அடிக்கடி தூக்கி நிறுத்துகிறார். மாயை விழ வைக்கிறது. பாபா ஒரு போதும் தோல்வி அடையாதீர்கள் எனக் கூறகிறார். கல்ப கல்பமாக இவ்வாறே நடக்கிறது. இது ஒன்றும் புதியதல்ல. கடைசியில் மாயாஜீத் ஆகிவிடுவீர்கள். இராவண இராஜ்யம் அழியப் போகிறது. பிறகு நாம் புதிய உலகத்தில் இராஜ்யம் செய்வோம். கல்ப கல்பமாக மாயாவை வெற்றி அடைத்திருக்கிறோம். பல முறை புது உலகத்தில் இராஜ்யம் செய்திருக்கிறோம். புத்தியை சதா பிஸியாக வைத்துக் கொண்டால் சதா பாதுகாப்பாக இருக்கலாம் என பாபா கூறுகின்றார். இதற்குத் தான் சுய தரிசன சக்கரதாரி என்று பெயர். மற்றபடி இம்சை போன்ற எதுவும் கிடையாது. பிராமணர்கள் தான் சுயதரிசன சக்கரதாரி ஆகிறார்கள். தேவதைகளை சுயதரிசன சக்கரதாரி என்று கூற முடியாது. பதீத உலகத்தின் பழக்க வழக்கங்கள் மற்றும் தேவி தேவதைகளின் பழக்க வழக்கங்களில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மரண உலகத்தில் இருப்பவர்கள் தான் பதீத பாவனர் தந்தையை பதீதமாகிய எங்களைப் பாவனமாக்க வாருங்கள், பாவன உலகத்திற்கு அழைத்து செல்லுங்கள் என அழைக்கிறார்கள். இன்றிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு பாவனமான உலகம் இருந்தது. அதற்கு சத்யுகம் என்று பெயர் என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. திரேதா யுகத்திற்கு புது உலகம் என்று கூற முடியாது. அது முதல் தரமானது, இது இரண்டாம் தரம் என்பதை பாபா புரிய வைக்கிறார். ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு தாரணை செய்ய வேண்டும். யாராவது வந்து கேட்டால் அதிசயப்படுவார்கள்! ஒரு சிலர் அதிசயப் படுகிறார்கள். ஆனால் முயற்சி செய்வதற்கு நேரம் இல்லை. நிச்சயம் தூய்மையாக வேண்டும் என்ற அறிவுரையைக் கேட்கிறார்கள். இந்த காம விகாரம் தான் மனிதனை பதீதமாக்கி இருக்கிறது. அதை வெற்றி அடைவதால் நீங்கள் உலகத்தை வென்றவர் ஆகிறீர்கள். ஆனால் காம விகாரம் அவர்களுக்கு முக்கிய செல்வம். ஆகையால் அந்த வார்த்தையைக் கூறுவதில்லை. மனதை வசப்படுத்துங்கள் என்று மட்டும் கூறுகிறார்கள். ஆனால் மனம் சரீரத்தில் இல்லாத போது தான் அமைதி அடையும். மற்றபடி ஒரு போதும் மனம் அமைதியில் இருப்பதில்லை. கர்மம் செய்வதற்காக தேகம் கிடைத்திருக்கிறது என்றால் கர்மாதீத நிலையில் எப்படி இருப்பீர்கள்? பிணத்திற்குத் தான் கர்மாதீத்நிலை என்று கூறப்படுகிறது. வாழ்ந்து கொண்டே இறந்த நிலையில் இருத்தல் அதாவது சரீரத்திலிருந்து விடுபடுதல். பாபா உங்களை சரீரத்திலிருந்து விலகியிருப்பதற்கான படிப்பை படிக்க வைக்கிறார். சரீரத்திலிருந்து ஆத்மா தனிப்பட்டது. ஆத்மா பரந்தாமத்தில் வசிக்கிறது. ஆத்மா சரீரத்தில் வருகின்றது என்றால் அதை மனிதன் என்கிறோம். கர்மம் செய்வதற்காக சரீரம் கிடைக்கிறது. ஒரு சரீரத்தை விட்டு இன்னொரு சரீரத்தை கர்மம் செய்வதற்காக எடுக்கிறது. சரீரத்தில் இல்லாத போது தான் அமைதி அடைகிறது. மூல வதனத்தில் கர்மம் கிடையாது. சூட்சும வதனத்தின் விஷயமே கிடையாது. சிருஷ்டி சக்கரம் இங்கே தான் சுழல்கிறது. பாபா மற்றும் சிருஷ்டி சக்கரத்தை தெரிந்து கொள்வதையே ஞானம் என்று கூறப்படுகிறது. சூட்சும வதனத்தில் வெண்மை ஆடை அணிந்தவரும் இல்லை, அலங்காரம் செய்யப்பட்டவரும் இல்லை, பாம்பு கிரீடம் உடைய சங்கரரும் இல்லை. மற்றபடி பிரம்மா, விஷ்ணுவின் இரகசியத்தை பாபா புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். பிரம்மா இங்கே தான் இருக்கிறார். விஷ்ணுவின் இரண்டு வடிவங்களும் இங்கே தான் இருக்கிறது. சாட்சாத்காரத்தின் பாகம் மட்டும் நாடகத்தில் இருக்கிறது. திவ்ய திருஷ்டியினால் பார்க்கப்படுகிறது. கிரிமினல் கண்களுக்கு பரிசுத்தமான பொருள் தெரியாது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தன்னைத் தான் சதா பாதுகாப்பாக வைப்பதற்காக விசார சாகர மந்தனத்தில் புத்தியை பிஸியாக வைக்க வேண்டும். சுய தரிசன சக்கரதாரி ஆக வேண்டும். வீண் விஷயங்களில் தனது நேரத்தை இழக்க வேண்டாம்.

 

2. சரீரத்திலிருந்து விடுபடுவதற்காக பாபா படிக்க வைக்கிறார். அதைப் படிக்க வேண்டும். மாயாவின் கவர்ச்சியிலிருந்து தப்பிப்பதற்காக தனது நிலையை ஆடாமல் அசையாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

வரதானம்:

சதா ஊக்க-உற்சாகத்தில் இருந்து மனதினால் குஷியின் பாடலை பாடக்கூடிய அழிவற்ற பாக்கியசாலி ஆகுக.

 

பாக்கியசாலி குழந்தைகளாகிய நீங்கள் அழிவற்ற விதியின் மூலம் அழிவற்ற வெற்றிகளை (சித்தி) அடைகிறீர்கள். உங்களுடைய மனதிலிருந்து ஆஹா! ஆஹா! என்ற குஷி நிறைந்த பாடலை பாடிக் கொண்டேயிருக்கிறீர்கள். ஆஹா பாபா! ஆஹா பாக்கியம்! ஆஹா இனிமையான குடும்பம்! ஆஹா சிரேஷ்ட சங்கமயுகத்தின் அழகான (மங்களமான) நேரம்! ஒவ்வொரு காரியத்திலும் ஆஹா! ஆஹா! என்று நினைத்து செய்கிறீர்கள், ஆகையால் நீங்கள் அழிவற்ற பாக்கியசாலியாக இருக்கிறீர்கள். உங்களுடைய மனதில் ஒருபொழுதும் ஏன்? நான் (ரட்ஹ், ) என்பது வரமுடியாது. ஏன் என்பதற்கு பதிலாக ஆஹா! ஆஹா! மேலும் நான் என்பதற்கு பதிலாக பாபா - பாபா என்ற வார்த்தை தான் வரும்.

 

சுலோகன்:

எந்தவொரு எண்ணத்தை கொண்டு வருகிறீர்களோ, அதற்கு அழிவற்ற அரசாங்கத்தின் (Goverment) முத்திரையை (Stamp) போட்டு விட்டீர்கள் என்றால் நிலைத்து விடும்.

ஓம்சாந்தி