21.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உங்களுடைய இந்த படிப்பு வருமானத்திற்கான ஆதாரமாகும், இந்த படிப்பின் மூலம் 21 பிறவிகளுக்கு வருமானம் ஏற்பாடாகிவிடுகிறது.

 

கேள்வி:

முக்திதாமத்திற்குச் செல்வது வருமானமா அல்லது நஷ்டமா?

 

பதில்:

பக்தர்களுக்கு இது கூட வருமானமாகும் ஏனென்றால் அரைக் கல்பமாக அமைதி-அமைதி என்று கேட்டுக் கொண்டே வந்துள்ளார்கள். அதிக உழைப்பிற்கு பிறகும் கூட அமைதி கிடைக்கவில்லை. இப்போது பாபாவின் மூலம் அமைதி கிடைக்கிறது அதாவது முக்திதாமத்திற்குச் செல்கிறார்கள் எனும்போது இது கூட அரைக் கல்பத்தின் உழைப்பின் பலனாகிறது ஆகையினால் இதைக் கூட வருமானம் என்று சொல்லலாம், நஷ்டம் இல்லை. குழந்தைகளாகிய நீங்களோ ஜீவன்முக்திக்குச் செல்ல முயற்சி செய்கிறீர்கள். உங்களுடைய புத்தியில் இப்போது முழு உலகத்தின் வரலாறு-புவியியல் நடனமாடிக் கொண்டிருக்கிறது.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு, ஆத்மா தான் அனைத்தையும் புரிந்து கொள்கிறது என்று ஆன்மீகத் தந்தை புரிய வைத்துள்ளார். இந்த சமயத்தில் குழந்தைகளாகிய உங்களை பாபா ஆன்மீக உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அதனை ஆன்மீக தெய்வீக உலகம் என்று சொல்லப்படுகிறது, இதனை தேகத்தின் உலகம், மனிதர்களின் உலகம் என்று சொல்லப்படுகிறது. தெய்வீக உலகம் இருந்தது, அது தெய்வீக மனிதர்களுடைய தூய்மையான உலகமாக இருந்தது என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்கிறீர்கள். இப்போது மனிதர்கள் தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள் ஆகையினால் அந்த தேவதைகளுக்குப் புகழ் பாடி பூஜை செய்கிறார்கள். உண்மையில் முதலில் மரத்தில் ஒரு தர்மம் தான் இருக்கும் என்ற நினைவு இருக்கிறது. விராட ரூபத்தில் மரத்தை பற்றியும் புரிய வைக்க வேண்டும். இந்த மரத்தின் விதை மேலே இருக்கிறது. மரத்தின் விதை பாபா ஆவார், பிறகு எப்படி விதையோ அப்படி பலன் அதாவது இலை வருகிறது. இது கூட அதிசயமாக இருக்கிறது அல்லவா! எவ்வளவு சிறிய பொருள் எவ்வளவு பெரிய பழத்தைக் கொடுக்கிறது! அதனுடைய ரூபம் எவ்வளவு மாறிக் கொண்டே செல்கிறது! இந்த மனித சிருஷ்டி எனும் மரத்தை யாரும் தெரிந்திருக்க வில்லை, இதனை கல்ப மரம் என்று சொல்லப்படுகிறது, இதைப் பற்றிய வர்ணனை கீதையில் மட்டும் தான் இருக்கிறது. கீதை தான் நம்பர் ஒன் தர்ம சாஸ்திரம் என்பதை அனைவரும் தெரிந்திருக்கிறார்கள். சாஸ்திரங்கள் கூட வரிசைக்கிரமமாக இருக்கிறது அல்லவா! தர்மங்கள் எப்படி வரிசைகிரமமாக ஸ்தாபனை ஆகிறது என்பதையும் நீங்கள் மட்டும் தான் புரிந்து கொள்கிறீர்கள், வேறு யாரிடத்திலும் இந்த ஞானம் இருப்பதில்லை. முதல்-முதலில் எந்த தர்மத்தின் மரம் இருக்கிறது பிறகு அதில் மற்ற தர்மங்களின் வளர்ச்சி எவ்வாறு நடக்கிறது என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. இதனை விராட நாடகம் என்று சொல்லப்படுகிறது. குழந்தைகளுடைய புத்தியில் முழு மரமும் இருக்கிறது. மரம் எவ்வாறு உருவாகிறது என்பது தான் முக்கியமான விஷயமாகும். தேவி-தேவதைகளின் மரம் இப்போது இல்லை மற்ற அனைத்து கிளைகளும் நிற்கின்றன. மற்றபடி ஆதி-சனாதன தேவி-தேவதா தர்மத்தின் அடித்தளம் இல்லை. ஒரு ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்கிறார், மீதமுள்ள மற்ற அனைத்து தர்மங்களும் வினாசம் ஆகிவிடுகிறது. எவ்வளவு சிறிய தெய்வீக மரமாக இருக்கும் என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு மற்ற தர்மங்கள் அனைத்தும் இருக்கவே இருக்காது. மரம் முதலில் சிறியதாக இருக்கிறது பிறகு பெரியதாகிக் கொண்டே செல்கிறது. வளர்ந்து - வளர்ந்து இப்போது எவ்வளவு பெரியதாகிவிட்டது. இப்போது இதனுடைய ஆயுள் முடிகிறது, இதனோடு ஆலமரத்தின் உதாரணம் மிகவும் நன்றாகப் புரிய வைக்கப்படுகிறது. இது கூட கீதையின் ஞானமாகும், இதை பாபா உங்களுக்கு நேரடியாக அமர்ந்து கூறுகின்றார், இதன்மூலம் நீங்கள் இராஜாவுக்கெல்லாம் இராஜாவாக ஆகின்றீர்கள். பிறகு பக்தியில் இந்த கீதை சாஸ்திரம் போன்றவை உருவாகும். இந்த முதலும் முடிவுமற்ற நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. மீண்டும் இப்படித் தான் நடக்கும். பிறகு எந்தெந்த தர்மங்கள் உருவாகுமோ அவற்றின் அவைகளுடைய சாஸ்திரங்கள் ஏற்படும். சீக்கிய தர்மத்திற்கு அதனுடைய சாஸ்திரம், கிறிஸ்துவ மற்றும் பௌதர்களுக்கு அவர்களுடைய சாஸ்திரம் இருக்கும். இப்போது உங்களுடைய புத்தியில் முழு உலகத்தின் வரலாறு-புவியியல் நடனமாடிக் கொண்டிருக்கிறது. புத்தி ஞான நடனமாடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் முழு மரத்தையும் தெரிந்துக் கொண்டீர்கள். எப்படி-எப்படியெல்லாம் தர்மங்கள் வருகின்றன, எப்படி வளருகின்றன என்பதை எல்லாம் தெரிந்து கொண்டீர்கள். பிறகு நம்முடைய ஒரு தர்மமானது ஸ்தாபனை ஆகிறது, மற்றவை அழிந்துவிடுகின்றன. ஞான சூரியன் உதித்தது....... என்று பாடப்பட்டுள்ளது அல்லவா! இப்போது முற்றிலும் இரவாக இருக்கிறது அல்லவா! எவ்வளவு அதிகமான மனிதர்கள் இருக்கிறார்கள், பிறகு இவ்வளவு பேர் இருக்கவே மாட்டார்கள். இந்த இலஷ்மி - நாராயணனுடைய இராஜ்யத்தில் இவர்கள் இருக்கவே இல்லை. பிறகு ஒரு தர்மமானது ஸ்தாபனை ஆகத் தான் வேண்டும். இந்த ஞானத்தை பாபா தான் வந்து கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் வருமானத்திற்காக வந்து எவ்வளவு ஞானத்தை படிக்கின்றீர்கள்! பாபா டீச்சராக ஆகி வருகின்றார் எனும்போது உங்களுடைய அரைக் கல்பத்திற்கான வருமானம் ஏற்பாடாகி விடுகிறது. நீங்கள் மிகுந்த செல்வந்தர்களாகி விடுகிறீர்கள். நாம் இப்போது படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இது அழிவற்ற ஞான இரத்தினங்களின் படிப்பாகும். பக்தியை அழிவற்ற ஞான இரத்தினங்கள் என்று சொல்ல முடியாது. பக்தியில் மனிதர்கள் என்னவெல்லாம் படிக்கிறார்களோ, அதன்மூலம் நஷ்டம் தான் ஏற்படுகிறது. இரத்தினங்கள் உருவாவதில்லை. ஞான இரத்தினங்களின் கடல் என்று ஒருபாபாவைத் தான் அழைக்கப்படுகிறது. மற்றபடி அது பக்தியாகும். அதில் எந்த குறிக்கோளும் இல்லை. வருமானம் இல்லை. வருமானத்திற்காக பள்ளியில் படிக்கிறார்கள். பிறகு பக்தி செய்வதற்காக குருவிடம் செல்கிறார்கள். சிலர் இளமையில் குருவிடம் செல்கிறார்கள், சிலர் முதுமையில் குருவிடம் செல்கிறார்கள். சிலர் சிறு வயதிலேயே சன்னியாசம் வாங்கிவிடுகிறார்கள். கும்பமேளாவில் எவ்வளவு அதிகமானோர் வருகிறார்கள்! சத்யுகத்தில் இவை எதுவுமே இருக்காது. குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் அனைத்தும் வந்துவிட்டது. படைப்பவர் மற்றும் படைப்பினுடைய முதல்-இடை-கடைசியை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். அவர்கள் கல்பத்தின் ஆயுளை அதிகரித்துவிட்டார்கள். ஈஸ்வரன் சர்வவியாபி என்று சொல்லிவிட்டார்கள். ஞானத்தைப் பற்றி தெரியவில்லை. பாபா வந்து அஞ்ஞான உறக்கத்திலிருந்து விழிக்க வைக்கின்றார். இப்போது உங்களுக்கு ஞானத்தின் தாரணை ஆகிவிடுகிறது. பேட்டரி நிரம்பிக் கொண்டே செல்கிறது, ஞானம் மூலம் வருமானம். பக்தியின் மூலம் நஷ்டமாகும். காலத்தின்படி எப்போது நஷ்டத்தின் நேரம் முடிகிறதோ அப்போது பாபா வருமானத்தை ஈட்ட வைக்க வருகின்றார். முக்தியில் செல்வது கூட வருமானமாகும். அனைவரும் அமைதியை கேட்கிறார்கள். சாந்தி தேவா என்று சொல்வதின் மூலம் புத்தி பாபாவின் பக்கம் சென்று விடுகிறது. உலகத்தில் அமைதி வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆனால் அது எப்படி ஏற்படும் என்பது யாருக்கும் தெரியவில்லை. இப்போது உங்களுக்கும் ஞானம் முழுவதும் இருக்கிறது. நாம் இந்த கர்ம ஷேத்திரத்தில் கர்மத்தின் நடிப்பை நடிக்க வந்துள்ளோம், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். எங்கிருந்து வந்துள்ளீர்கள்? பிரம்மலோகத்திலிருந்து. நிராகார உலகத்திலிருந்து இந்த சாகார உலகத்திற்கு நடிப்பை நடிக்க வந்துள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நாம் வேறு இடத்தில் வசிக்கக்கூடியவர்களாவோம். இங்கே இந்த 5 தத்துவங்களினால் ஆன சரீரம் இருக்கிறது. சரீரம் இருக்கிறது ஆகையினால் தான் நாம் பேச முடிகிறது. நாம் உயிருள்ள நடிகர்கள். இப்போது, நாங்கள் இந்த நாடகத்தின் முதல்-இடை-கடைசியைத் தெரிந்திருக்கவில்லை என்று சொல்லமாட்டீர்கள். முன்னால் தெரிந்திருக்கவில்லை. தங்களுடைய தந்தையை, தங்களுடைய வீட்டை, தங்களுடைய ஆத்மாவை யதார்த்தமான விதத்தில் தெரிந்திருக்கவில்லை. ஆத்மா எவ்வாறு நடிப்பை நடிக்கிறது என்பதை இப்போது தெரிந்துள்ளீர்கள். நினைவு வந்துள்ளது. முதலில் நினைவு இருக்கவில்லை. உண்மையான தந்தை தான் உண்மையை கூறுகின்றார், அதன்மூலம் நாம் உண்மையான கண்டத்திற்கு எஜமானர்களாக ஆகிவிடுகிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உண்மையைப் பற்றி கிரந்தத்தில் கூட. உள்ளது. உண்மையான கண்டத்தை தான் சத்தியம் என்று சொல்லப்படுகிறது. தேவதைகள் அனைவரும் உண்மையை பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். உண்மையைக் கற்றுக் கொடுக்கக்கூடியவர் பாபா ஆவார். அவருடைய மகிமை எவ்வளவு இருக்கிறது பாருங்கள்! பாடப்பட்டுள்ள மகிமைகள் உங்களுக்கு உதவுகிறது. சிவபாபாவின் மகிமை செய்கிறோம். அவர் தான் மரத்தின் முதல்-இடை-கடைசியை தெரிந்துள்ளார். உண்மையான தந்தை சொல்கிறார் என்றால் குழந்தைகளாகிய நீங்கள் உண்மையானவர்களாக ஆகிவிடுகிறீர்கள். உண்மையான கண்டமாகவும் ஆகிவிடுகிறது. பாரதம் உண்மையான கண்டமாக இருந்தது. நம்பர் ஒன் உயர்ந்ததிலும் உயர்ந்த தீர்த்த ஸ்தலமும் இதுவே ஆகும். ஏனென்றால் அனைவரையும் சத்கதி அடைய வைக்கும் தந்தை பாரதத்தில் தான் வருகின்றார். ஒரு தர்மத்தின் ஸ்தாபனை நடக்கிறது, மற்றவை அனைத்தினுடைய வினாசம் நடந்துவிடுகிறது. சூட்சுமவதனத்தில் எதுவும் இல்லை என்று பாபா புரிய வைத்திருக்கிறார். இவையனைத்தும் காட்சி ஏற்படுகிறது. பக்தி மார்க்கத்தில் கூட காட்சி கிடைக்கிறது. காட்சி ஏற்படவில்லை என்றால் பிறகு இவ்வளவு கோயில்கள் போன்றவை எப்படி உருவாகும்! பூஜைகள் ஏன் நடக்கிறது. காட்சியைப் பார்க்கிறார்கள், இவர்கள் உயிருடன் இருந்தார்கள் என்று உணருகிறார்கள். பக்தி மார்க்கத்தில் கோயில்கள் என்னவெல்லாம் உருவாகின்றதோ, நீங்கள் எதையெல்லாம் பார்த்தீர்கள் கேட்டீர்களோ, அவையனைத்தும் திரும்பவும் நடக்கும் என்று பாபா புரிய வைக்கின்றார். சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஞானம் மற்றும் பக்தியின் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. எப்போதும் ஞானம், பக்தி, வைராக்கியம் என்று சொல்கிறார்கள். ஆனால் எதையும் விரிவாகத் தெரிந்திருக்கவில்லை. ஞானம் என்பது பகல், பக்தி என்பது இரவு என்பதை பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார். வைராக்கியம் இரவினுடையதாகும். பிறகு பகலாக ஆகிறது. பக்தியில் துக்கம் இருக்கிறது ஆகையினால் தான் வைராக்கியம். சுகத்தை வைராக்கியம் என்று சொல்ல முடியாது. துக்கத்தின் காரணத்தால் சன்னியாசம் போன்றவற்றை மேற்கொள்கிறார்கள். தூய்மையில் தான் சுகம் என்று புரிந்து கொள்கிறார்கள் ஆகையினால் மனைவியை தியாகம் செய்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். இன்றைக்கு செல்வந்தர்களாகவும் ஆகிவிட்டார்கள் ஏனென்றால் செல்வம் இல்லாமல் சுகம் கிடைக்க முடியாது. மாயை சண்டை போட்டு காட்டில் இருந்து நகரத்திற்கு அழைத்து வருகிறது. விவேகானந்தர் மற்றும் இராமகிருஷ்ணர் என்று இரண்டு பெரிய சன்னியாசிகள் இருந்துவிட்டு சென்றுள்ளனர். சந்நியாசத்தின் சக்தி இராமகிருஷ்ணருக்கு இருந்தது, மற்றபடி பக்தியைப் பற்றி விசயங்கள் விவேகானந்தரிடம் இருந்தது. இருவருடைய புத்தகங்களும் இருக்கின்றன. புத்தகம் எழுதும்போது ஒருமுகப்பட்டு அமர்ந்து எழுதுகிறார்கள். இராமகிருஷ்ணர் தன்னுடைய சுயசரிதை எழுதும்போது தன்னுடைய சிஷ்யரையும் தூரமாகச் சென்று அமரும்படி சொன்னார். மிகவும் கடுமையான சன்னியாசிக்கு, மிகப்பெரிய பெயர் இருக்கிறது. மனைவியை தாய் என்று சொல்லும்படி பாபா சொல்லவில்லை. அவரையும் ஆத்மா என்று புரிந்து கொள்ளும்படி பாபா கூறுகின்றார். ஆத்மாக்கள் அனைத்தும் சகோதர சகோதரர்களாகும். சன்னியாசி களுடைய விஷயம் தனிப்பட்டதாகும், அவர்கள் மனைவியை தாய் என்று புரிந்து கொண்டார்கள். தாயை மகிமை பாடினார்கள். இது ஞான வழியாகும், வைராக்கியத்தின் விஷயம் தனிப்பட்டதாகும். வைராக்கியத்தில் வந்து மனைவியை தாய் என்று புரிந்து கொண்டார்கள். தாய் என்ற வார்த்தையில் குற்றப்பார்வை இருக்காது. சகோதரியிடம் கூட குற்றப்பார்வை செல்லக்கூடும், ஆனால் தாயிடம் ஒருபோதும் கெட்ட சிந்தனை செல்லாது. தந்தைக்கு பெண் குழந்தை மீது கூட குற்றப்பார்வை செல்லலாம், தாயின் மீது ஒருபோதும் செல்லாது. சன்னியாசிகள் மனைவியை தாய் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். உலகம் எப்படி இயங்கும், பிறப்பு எப்படி நடக்கும் என்று அவர்களைப் பற்றி சொல்வதில்லை. அவர் ஒருவருக்கு வைராக்கியம் வந்தது, தாய் என்று சொல்லிவிட்டார். அவருக்கு எவ்வளவு மகிமை பாருங்கள். இங்கே சகோதரி-சகோதரன் என்று சொன்னாலும் கூட நிறைய பேருடைய பார்வை செல்கிறது ஆகையினால் பாபா கூறுகின்றார் - சகோதர-சகோதரர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். இது ஞானத்தினுடைய விஷயமாகும். அது ஒருவருடைய விஷயமாகும், இங்கே பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் நிறைய சகோதர-சகோதரிகள் இருக்கிறார்கள் அல்லவா! பாபா அமர்ந்து அனைத்து விஷயங்களையும் புரிய வைக்கின்றார். இவரும் கூட சாஸ்திரங்கள் போன்றவற்றை படித்திருக்கிறார். அந்த தர்மமே தனிப்பட்டதாகும், துறவற மார்க்கமாகும், அது ஆண்களுக்கு மட்டுமே ஆகும். அது எல்லைக்குட்பட்ட வைராக்கியமாகும், உங்களுடையது முழு எல்லையற்ற உலகத்தின் மீதும் வைராக்கியமாகும். சங்கம யுகத்தில் தான் பாபா வந்து எல்லையற்ற விஷயங்களை புரிய வைக்கின்றார். இப்போது இந்த பழைய உலகத்தின் மீது வைராக்கியம் வைக்க வேண்டும். இது மிகவும் மோசமான உலகமாகும். இங்கே சரீரம் தூய்மையாக இருக்க முடியாது. ஆத்மாவிற்கு புதிய சரீரம் சத்யுகத்தில் தான் கிடைக்க முடியும். இங்கே ஆத்மா தூய்மையாக ஆகலாம், இருந்தாலும் கர்மாதீத் நிலையை அடையும் வரை சரீரம் தூய்மையற்றதாகவே இருக்கின்றது, தங்கத்தில் கலப்படம் இருக்கிறது என்றால் ஆபரணமும் கலப்படமுடையதாக ஆகிறது. கலப்படம் நீங்கிவிட்டால் ஆபரணமும் உண்மையானதாக ஆகும். இந்த இலஷ்மி - நாராயணனுடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே சதோபிரதானமானதாகும். உங்களுடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே தமோபிரதான கருப்பாக இருக்கிறது. ஆத்மா காம சிதையில் அமர்ந்து கருப்பாக ஆகிவிட்டது. பிறகு நான் வந்து கருப்பிலிருந்து வெண்மையாக மாற்றுகின்றேன் என்று பாபா கூறுகின்றார். இவையனைத்தும் ஞானத்தின் விஷயங்களாகும். மற்றபடி தண்ணீர் போன்றவற்றின் விஷயம் அல்ல. அனைவரும் காம சிதையில் அமர்ந்து தூய்மையற்றவர்களாக ஆகிவிட்டார்கள், ஆகையினால் தான் தூய்மையாக ஆவதற்கான உறுதிமொழி எடுங்கள் என்று இராக்கி கட்டப்படுகிறது.

 

நான் ஆத்மாக்களிடம் பேசுகின்றேன் என்று பாபா கூறுகின்றார். நான் ஆத்மாக்களின் தந்தையாவேன், நீங்கள் அவரை நினைவு செய்து வந்தீர்கள் - பாபா வாருங்கள், எங்களை சுகதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். துக்கத்தை போக்குங்கள் என்று, கலியுகத்தில் அளவற்ற துக்கம் இருக்கிறது. நீங்கள் காம சிதையில் அமர்ந்து கருப்பாக தமோபிரதானமாக ஆகிவிட்டீர்கள். இப்போது காம சிதையிலிருந்து இறக்கி ஞான சிதையில் அமர்த்துவதற்காக நான் வந்துள்ளேன். இப்போது தூய்மையாகி சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா கவர்ச்சிக்கின்றார். பாபாவிடம் ஜோடியாக வருகிறார்கள் ஒருவருக்கு கவர்ச்சி ஏற்படுகிறது, மற்றவருக்கு ஏற்படுவதில்லை. நான் இந்தக் கடைசி பிறவியில் தூய்மையாக இருப்பேன், காம சிதையில் ஏற மாட்டேன் என்று கணவன் உடனே சொல்லிவிட்டார். நிச்சயம் ஏற்பட்டுவிட்டது என்பது கிடையாது. ஒருவேளை நிச்சயம் ஏற்பட்டுவிட்டது என்றால் எல்லையற்ற தந்தைக்கு கடிதம் எழுதுகிறார்கள், தொடர்பில் இருக்கிறார்கள். தூய்மையாக இருக்கிறார் என்று கேள்வியுற்றோம், தன்னுடைய தொழில் போன்ற வற்றிலேயே ஈடுபட்டிருக்கிறார். பாபாவின் நினைவு எங்கே இருக்கிறது? அப்படிப்பட்ட தந்தையை அதிகம் நினைவு செய்ய வேண்டும்? கணவன் மனைவிக்கிடையே தங்களுக்குள் எவ்வளவு அன்பு இருக்கிறது! கணவனை எவ்வளவு நினைவு செய்கிறார்கள். எல்லையற்ற தந்தையை அனைத்திலும் அதிகமாக நினைவு செய்ய வேண்டும். அன்பு செலுத்துங்கள் அல்லது (எட்டி உதையுங்கள்), அற்பமாக கருதினாலும் நாங்கள் ஒருபோதும் கையை விட மாட்டோம் என்று புகழ் இருக்கிறது அல்லவா! இங்கே வந்து இருக்க வேண்டும், வீடு வாசலை விட்டு விட்டு இங்கே வந்து இருக்க வேண்டும் என்பது இல்லை, பிறகு அது சன்னியாசமாகி விட்டது அல்லவா! குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே தூய்மையாகுங்கள் என்று உங்களுக்கு சொல்லப்படுகிறது. முதலில் பட்டி உருவாக்க வேண்டியிருந்தது, அதன் மூலம் இவ்வளவு பேர் தயாராகி வெளியே வந்தார்கள், அதனுடைய வர்ணனை கூட மிக நன்றாக இருக்கிறது. யார் பாபாவினுடையவர்களாக ஆகிவிட்டு உள்ளே (யக்ஞத்தில்) இருந்து கொண்டே ஆன்மீக சேவை செய்யவில்லையோ அவர்கள் சென்று தாச-தாசிகளாக ஆகின்றார்கள் பிறகு கடைசியில் வரிசைக்கிரமமான முயற்சியின்படி கிரீடம் கிடைத்துவிடுகிறது. அவர்களுடைய வம்சம் கூட இருக்கிறது, பிரஜையில் வர முடியாது. யாரும் வெளியிலிருந்து வந்து உள்ளே இருப்பவர்களாக ஆக முடியாது. வல்லபாச்சாரிகள் வெளியிலுள்ளவர்களை ஒருபோதும் உள்ளே வர விடுவதில்லை. இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். ஞானம் ஒரு வினாடியினுடையதாகும், பிறகு ஏன் பாபாவை ஞானக்கடல் என்று சொல்லப்படுகிறது? புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார், கடைசி வரை புரிய வைத்துக் கொண்டே இருப்பார். எப்போது இராஜ்யம் ஸ்தாபனை ஆகிவிடுமோ, நீங்கள் கர்மாதீத் நிலைக்கு வந்துவிடுவீர்களோ அப்போது ஞானம் முடிந்துவிடும். ஒரு வினாடியினுடைய விஷயமே ஆகும். ஆனால் புரிய வைக்க வேண்டியுள்ளது. எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தி, எல்லையற்ற தந்தை உலகத்திற்கு எஜமானர்களாக்கிவிடுகின்றார். நீங்கள் சுகதாமத்திற்கு செல்கிறீர்கள் என்றால் மற்றவர்கள் அனைவரும் சாந்திதாமத்திற்கு சென்றுவிடுவார்கள். அங்கு சுகமே சுகமாகும். பாபா வந்திருக்கிறார் என்பது திருப்திகரமானதாகும். நாம் இராஜயோக கல்வியின் மூலம் புதிய உலகத்திற்கு எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும் ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) இந்த தூய்மையற்ற மோசமான உலகத்தின் மீது எல்லையற்ற வைராக்கியம் வைத்து ஆத்மாவை தூய்மையாக்குவதற்கான முழுமையான முயற்சி செய்ய வேண்டும். ஒரு பாபாவின் கவர்ச்சியிலேயே இருக்க வேண்டும்.

 

2) ஞானத்தின் தாரணையின் மூலம் தங்களுடைய பேட்டரியை நிரப்ப வேண்டும். ஞான இரத்தினங்களின் மூலம் தன்னை செல்வந்தர்களாக மாற்ற வேண்டும். இப்போது வருமானத்திற்கான நேரமாகும் ஆகையினால் நஷ்டத்திலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்.

 

வரதானம்:

தந்தை மற்றும் வரதாதா ஆகிய இந்த இரண்டு சம்மந்தங்கள் மூலம் இரட்டைப் பிராப்திகளை அடையக்கூடிய சதா சக்திசாலி ஆத்மா ஆகுக !

 

சர்வ சக்திகளானது தந்தையினுடைய ஆஸ்தி மற்றும் வரதாதாவினுடைய வரதானம் ஆகும். தந்தை மற்றும் வரதாதா ஆகிய இந்த இரட்டை சம்பந்தங்கள் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த சிரேஷ்டமான பிராப்தி பிறந்த உடனேயே கிடைக்கிறது. பிறந்த உடனேயே தந்தை பாலகன் மற்றும் சர்வ சக்திகளின் எஜமானன் ஆக்கிவிடுகின்றார். கூடவே வரதாதா என்ற சம்மந்தத்தின் மூலம் பிறந்த உடனேயே மாஸ்டர் சர்வசக்திவான் ஆக்கி சர்வசக்தி பவ என்ற வரதானத்தைக் கொடுத்துவிடுகின்றார். எனவே, ஒருவர் மூலம் இந்த இரட்டை அதிகாரம் கிடைப்பதனால் சதா சக்திசாலி ஆகி விடுகிறீர்கள்.

 

சுலோகன்:

தேகம் மற்றும் தேகத்துடன் பழைய சுபாவம், சமஸ்காரம் மற்றும் பலவீனங்களில் இருந்து விடுபட்டு இருப்பது தான் விதேஹி ஆகுவது ஆகும்.

 

ஓம்சாந்தி