08.09.2019                           காலை முரளி               ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           23.01.1985           மதுபன்


 

தெய்வீக ஜென்மத்தின் பரிசு - தெய்வீகக் கண்கள்

 

இன்று மூன்று காலங்களையும் அறிந்த தந்தை, தன்னுடைய மூன்று காலங்களையும் தெரிந்த, மூன்று கண்களுடைய குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தெய்வீக புத்தி மற்றும் தெய்வீகக் கண்கள், எதை மூன்றாவது என்று கூறுகிறோமோ, அந்தக் கண் எந்தளவு தெளிவாகவும், மற்றும் சக்திசாலியாகவும் இருக்கிறது என்று பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் தெய்வீகக் கண்ணின் சக்தியின் சதவிகிதத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பாப்தாதா அனைவருக்கும், 100 சதவிகிதம் சக்திசாலியான தெய்வீகக் கண்களை ஜென்மத்தின் பரிசாகக் கொடுத்திருக்கிறார். பாப்தாதா வரிசைக்கிரமமான சக்தி நிறைந்த கண்களை கொடுக்கவில்லை, ஆனால் இந்த தெய்வீகக் கண்களை, ஒவ்வொரு குழந்தையும் அவரவர்களின் நியமத்தின் பிரகாரம், பத்தியத்தின் பிரகாரம், கவனம் கொடுப்பதின் பிரகாரம், நடைமுறையில் காரியத்தில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். எனவே தெய்வீகக் கண்களின் சக்தி, சிலருடையது. சம்பூரண சக்திசாலியாகவும், சிலருடைய சக்தியில் சதவிகிதமும் இருந்துவிட்டது. பாப்தாதா மூலமாகக் கிடைத்திருக்கும் இந்த மூன்றாவது கண், தெய்வீகக் கண், இன்றைய நாட்களில் அறிவியல் சாதனமான தொலை நோக்கு கண்ணாடி (டெலஸ்கோப்) இருக்கிறது, அது தூரத்தில் இருக்கும் பொருளை அருகிலும் மற்றும் தெளிவாகவும் அனுபவம் செய்விக்கும். அதேபோல் இந்த தெய்வீகக் கண்களும் தெய்வீக தொலைநோக்கு கண்ணாடியின் காரியம் செய்யும். ஒரு நொடியில் பரந்தாமம், அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது. அது எத்தனை மைல் தூரத்தில் இருக்கிறது என்று கணக்கிட முடியாது. பரந்தாமம் தொலை தூரத்து தேசம் எவ்வளவு அருகிலும் மற்றும் தெளிவாகவும் தென்படுகிறது. அறிவியலின் சாதனம், இந்த பௌதீக உலகத்தின் சூரியன். சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் வரை பார்க்க முடியும். ஆனால் இந்த தெய்வீகக் கண்கள் மூன்று உலகங்களையும், மூன்று காலங்களையும் பார்க்க முடியும். இந்த தெய்வீகக் கண்களை அனுபவத்தின் கண்கள் என்றும் கூறுகிறார்கள். அனுபவத்தின் கண், அந்தக் கண் மூலமாக 5 ஆயிரம் ஆண்டின் விஷயத்தை நேற்று நடந்ததை போன்று அந்தளவு தெளிவாகப் பார்க்கிறீர்கள். எங்கு 5 ஆயிரம் வருடம், எங்கு நேற்றைய விஷயம். அப்படி தூரமான விஷயத்தை அருகிலும், மற்றும் தெளிவாகவும் பார்க்கிறீர்கள் இல்லையா? நான் நேற்று பூஜைக்குரிய தேவ ஆத்மாவாக இருந்தேன், மேலும் நாளை மீண்டும் ஆவேன் என்று அனுபவம் செய்கிறீர்கள். இன்று பிராமணன், நாளை தேவதை. அப்படி இன்று மற்றும் நாளையின் விஷயம் சுலபமாகிவிட்டது இல்லையா? சக்திசாலியான கண்கள் உடைய குழந்தைகள் மது இரட்டை கீரிடம் அணிந்த அலங்கரிக்கப்பட்ட சொரூபத்தை எப்பொழுதும் எதிரில் தெளிவாகப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். எப்படி ஸ்தூலமான ஆடை அலங்கரிக்கப்பட்டு, எதிரில் தென்படுகிறது. மேலும் இப்பொழுதே அதை அணிந்துவிடுவேன் என்று நினைக்கிறீர்கள். அதேபோல் இந்த தேவதைகள் உடல் என்ற ஆடையை எதிரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? நாளை அதை அணிய வேண்டும். தென்படுகிறது இல்லையா? இப்பொழுது தயாராகிக் கொண்டியிருக்கிறதா, அல்லது தயாரானது எதிரில் தென்படுகிறதா? எப்படி பிரம்மா பாபாவைப் பார்த்திருக்கிறீர்கள், அவருக்கு தன்னுடைய எதிர்கால ஆடை, ஸ்ரீ கிருஷ்ணரின் சொரூபம் எப்பொழுதும் எதிரில் தெளிவாக இருந்தது. அதேபோல் உங்கள் அனைவருக்கும் சக்திசாலியான கண்கள் மூலமாகத் தெளிவாக, மற்றும் எதிரில் தென்படுகிறதா? இந்த நேரம் ஃபரிஸ்தா, அடுத்த நேரம் ஃபரிஸ்தாவாக ஆகி, பிறகு தேவதை. போதையும் இருக்கிறது, மேலும் சாட்சாத் தேவதை ஆவதற்கான, சாட்சாத்காரத்தையும், தெய்வீகக் கண்கள் மூலமாக பார்த்திருக்கிறீர்கள். அந்தமாதிரி சக்திசாலியான கண்கள் இருக்கின்றனவா? அல்லது சிலவற்றைப் பார்க்கும் சக்தி குறைந்து விட்டதா? எப்படி ஸ்தூல கண்களின் சக்தி குறைந்து விடுகிறது என்றால், மிகத் தெளிவான பொருள் கூட திரைச்சீலைக்குப் பின்னால் இருப்பது போலவும், மேகங்களின் இடையே இருப்பது போலவும் தென்படும். அந்தமாதிரி நீங்களும் தேவதையாக ஆக வேண்டும், ஆகியிருந்திருக்கிறீர்கள், ஆனால் என்னவாக இருந்தீர்கள், எப்படி இருந்தீர்கள் என்பது இந்த இருந்தீர்கள்- என்பது திறைச்சீலைக்கு உள்ளே தென்படவில்லையே! தெளிவாக இருக்கிறதா? நிச்சயம் என்ற திறைச்சீலை மேலும் நினைவு என்ற மணிகள் இரண்டும் சக்திசாலியாக இருக்கிறது இல்லையா? அல்லது மணிகள் சரியாக இருக்கிறது, ஆனால் திறைச்சீலை பலஹீனமாக இருக்கிறதா? ஒன்று பலஹீனமாக இருந்தாலும், தெளிவாக இருக்காது. எனவே கண்களின் சக்தி குறைந்து விடவில்லையே என்று சோதனை செய்யுங்கள். மற்றும் சோதனை செய்யவையுங்கள். ஒருவேளை பிறந்ததிலிருந்தே ஸ்ரீமத் என்ற பத்தியத்தை கடைப்பிடித்து வந்திருக்கிறீர்கள் என்றால், கண்கள் எப்பொழுதும் சக்திசாலியாக இருக்கும். ஸ்ரீமத்தின் பத்தியத்தில் குறையிருக்கும் பொழுது தான், சக்தியும் குறைந்துவிடுகிறது. மீண்டும் ஸ்ரீமத்தின் ஆசீர்வாதம் என்று கூறினாலும், மருந்து என்று கூறினாலும், பத்தியம் என்று கூறினாலும் அதைக் கடைப்பிடித்தீர்கள் என்றால், மீண்டும் சக்திசாலியாக ஆகிவிடுவீர்கள். அப்படி இந்தக் கண்கள் தெய்வீக, தொலைநோக்கு கண்ணாடியாகும்.

 

இந்தக் கண்கள் சக்திசாலியான இயந்திரமும் ஆகும். இதன் மூலமாக யார் எப்படி இருக்கிறார் என்று, ஆத்மீக ரூபத்தில், ஆத்மாவின் விசேஷத்தை சுலபமாக மற்றும் தெளிவாகப் பார்க்க முடியும். உடலின் உள்ளே அமர்ந்திருக்கும் குப்தமான (மறைவான) ஆத்மாவை எப்படி ஸ்தூல கண்கள் மூலமாக, ஸ்தூல உடலைப் பார்க்கிறீர்கள். அந்தமாதிரி பார்க்க முடியும். அந்தமாதிரி தெளிவாக ஆத்மா தென்படுகிறது தான் இல்லையா? அல்லது உடல் தென்படுகிறதா? தெய்வீகக் கண்கள் மூலமாக, தெய்வீக சூட்சும ஆத்மா தான் தென்படும். மேலும் ஒவ்வொரு ஆத்மாவின் விசேஷம் தான் தென்படும். எப்படி கண்கள் தெய்வீகமாக இருக்கிறது என்றால், விசேஷம் அதாவது குணமும், தெய்வீகமானதாக இருக்கும். அவகுணமும் ஒரு பலஹீனம். பலஹீனமான கண்களே பலஹீனத்தைப் பார்க்கும். எப்படி ஸ்தூல கண்கள் பலஹீனமாகிறது என்றால், கருப்பு கருப்பான புள்ளி தென்படும். அதேபோல் பலஹீனமான கண்கள் அவகுணத்தின் கருப்பைத் தான் பார்க்கும். பாப்தாதா பலஹீனமான கண்களைக் கொடுக்க வில்லை. அவர்களே பலஹீனமானதாக ஆக்கினார்கள். உண்மையில் இந்த சக்திசாலியான இயந்திரம் என்ற கண்கள், நடைமுறையில் இயற்கையான ரூபத்தில், எப்பொழுதும் ஆத்மீக ரூபத்தைப் பார்க்கும். இது உடலா அல்லது ஆத்மாவா என்று கடும் முயற்சி செய்ய வேண்டியதாக இருக்காது. இதுவா அல்லது அதுவா என்றால், இது பலஹீனமான கண்களின் அடையாளம். எப்படி அறிவியலைச் சேர்ந்தவர்கள், சக்திசாலியான கண்ணாடி மூலமாக அனைத்து கிரிமிகளையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இந்த சக்திசாலியான கண்கள் மூலம் மாயாவின் மிக சூட்சம சொரூபத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். எனவே கிரிமிகளை வளரவிடுவதில்லை, உடனே அழித்து விடுகிறார்கள். யாருடைய மாயாவின் நோயையும் முன்பாகத் தெரிந்து கொண்டு அழித்து விட்டு, எப்பொழுதும் நோயற்றவராக இருப்பார்கள்.

 

இந்த தெய்வீகக் கண்கள் அந்தமாதிரி சக்திசாலியானது. இந்த தெய்வீகக் கண்கள் தெய்வீகத் தொலைக்காட்சி பெட்டியும் தான். இன்றைய நாட்களில் தொலைக்காட்சி பெட்டி, அனைவருக்கும் விருப்பமானதாக இருக்கிறது இல்லையா? இதை டி.வி என்று கூறினாலும் தூர்தர்ஷன் என்று கூறினாலும், இதில் தன்னுடைய சொர்க்கத்தின் அனைத்து ஜென்மங்களை அதாவது தன்னுடைய 21 ஜென்மங்களின் தெய்வீகத் திரைப்படத்தைப் பார்க்க முடியும். தன்னுடைய இராஜ்யத்தின் அழகான காட்சிகளைப் பார்க்க முடியும். ஆத்மாவின் ஒவ்வொரு ஜென்மத்தின் கதையைப் பார்க்க முடியும். தன்னுடைய கீரிடம், சிம்மாசனம், இராஜ்ய பாக்கியத்தைப் பார்க்க முடியும். தெய்வீக தரிசனம் என்று கூறினாலும், அல்லது தூர்தர்ஷன் என்று கூறினாலும் ஒன்று தான். தெய்வீக தர்சனத்தின் கண்கள் சக்திசாலியாக இருக்கிறது இல்லையா? எப்பொழுது நீங்கள் ஓய்வாக இருக்கிறீர்களோ, அப்பொழுது இந்த திரைப்படத்தைப் பாருங்கள், இன்றைய நாட்களின் நடனத்தைப் பார்க்காதீர்கள், அது ஆபத்தான நடனம். ஃபரிஸ்தாக்களின் நடனம், தேவதைகளின் நடனத்தை பாருங்கள். நினைவு என்ற பொத்தான் சரியாக வேலை செய்கிறது தான் இல்லையா? ஒருவேளை பொத்தான் சரியாக இல்லையென்றால் இயக்கினாலும், ஒன்றும் தென்படாது. இந்தக் கண்கள் எவ்வளவு சிரேஷ்டமானது என்று புரிந்து கொண்டீர்களா? இன்றைய நாட்களில் ஏதாவது ஒரு பொருளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்றால், இந்தப் பொருள் பலவிதமான காரியத்தில் உபயோகத்தில் வரவேண்டும் என்று பெருபான்மையோர் இலட்சியம் வைக்கிறார்கள். அதேபோல் இந்த தெய்வீகக் கண்கள், அநேக காரியத்தை நிரூபிக்கக் கூடியது. பாப்தாதா குழந்தைகளின் பலஹீனத்தின் புகார்களை அவ்வப்பொழுது கேட்டு, தெய்வீக புத்தி கிடைத்திருக்கிறது, தெய்வீகக் கண்கள் கிடைத்திருக்கிறது, இதை விதிப் பூர்வமாக எப்பொழுதும் உபயோகித்து கொண்டேயிருந்தீர்கள் என்றால், யோசிப்பதற்கும் நேரம் இருக்காது, பார்ப்பதற்கும் நேரம் இருக்காது. வேறு எதையும் யோசிக்க மாட்டீர்கள், பார்க்க மாட்டீர்கள். பிறகு எந்தவிதமான புகாரும் இருக்க முடியாது. யோசிப்பது மற்றும் பார்ப்பது, இந்த இரண்டும் தான் முழுமையாக ஆவதற்கும் மற்றும் புகார் செய்வதற்குமான ஆதாரமாகும். பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் எப்பொழுது,ம் தெய்வீகமாக யோசியுங்கள், எப்படி யோசிப்பீர்களோ, அப்படி செய்வதாக இருக்கும், எனவே இந்த இரண்டு தெய்வீக பிராப்திகளை எப்பொழுதும் உடன் வைத்துக் கொள்ளுங்கள். சுலபம் தான் இல்லையா? நீங்கள் சக்திசாலியானவர்கள்தான், ஆனால் என்னவாக ஆகிவிடுகிறீர்கள், எப்பொழுது ஸ்தாபனை ஆனதோ, அப்பொழுது சின்னஞ்சிறிய குழந்தைகள் போலாபாய் (வெகுளியான சகோதரன்) வசனம் பேசுவார்கள். அப்படி நீங்களோ சக்திசாலியானவர், ஆனால் போலாபாய் ஆகிவிடுகிறீர்கள். எனவே போலாபாயாக ஆகாதீர்கள். எப்பொழுதும் சக்திசாலியானவராக ஆகுங்கள். மேலும் மற்றவர்களையும் சக்திசாலியாக ஆக்குங்கள். புரிந்ததா? நல்லது.

 

எப்பொழுதும் தெய்வீக புத்தி மற்றும் தெய்வீகக் கண்களை காரியத்தில் ஈடுபடுத்தக் கூடிய, எப்பொழுதும் தெய்வீக புத்தி மூலமாக சிரேஷ்ட சிந்தனை, தெய்வீகக் கண்கள் மூலமாக தெய்வீக காட்சியை பார்ப்பதில் மூழ்கியிருக்கக் கூடிய, எப்பொழுதும் தன்னுடைய எதிர்கால தேவதை சொரூபத்தை தெளிவாக அனுபவம் செய்யக் கூடிய, எப்பொழுதும் இன்று மற்றும் நாளையை அந்தளவு அருகாமையில் அனுபவம் செய்யக் கூடிய, அந்தமாதிரியான சக்திசாலியான, தெய்வீக கண்கள் உள்ள திரிநேத்திரி, திரிகாலதரிசி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

தனிப்பட்ட சந்திப்பு:

1. சகஜயோகி ஆவதற்கான விதி: நீங்கள் அனைவரும் சகஜயோகி ஆத்மாக்கள் இல்லையா. எப்பொழுதும் தந்தையின் அனைத்து சம்மந்தங்களின் அன்பில் மூழ்கியிருப்பவர்கள். அனைத்து சம்மந்தங்களின் அன்பு தான் சகஜமாக்கி விடுகிறது. எங்கு அன்பு நிறைந்த சம்மந்தம் இருக்குமோ, அங்கு சுலபமாக இருக்கும். மேலும் எது சகஜமாக இருக்குமோ, அது நிரந்தரமாக இருக்கும். நீங்கள் அந்தமாதிரி சகஜ யோகி ஆத்மாக்கள், தந்தையின் அனைத்து அன்பு நிறைந்த உறவுகளையும் அனுபவம் செய்கிறீர்களா? உதவ் - க்கு சமமானவர்களாக, அல்லது கோபிகளுக்கு சமமானவர்களா? உதவ் ஞானத்தை வர்ணனை மட்டும் செய்து கொண்டேயிருந்தார். கோபர்கள், கோபிகள் பிரபுவின் அன்பை அனுபவம் செய்பவர்கள். அப்படி அனைத்து சம்மந்தங்களின் அனுபவம் என்பது தான் விசேஷம். இந்த சங்கமயுகத்தில் இந்த விசேஷ அனுபவம் செய்வது தான் வரதானத்தை பிராப்தி செய்வது. ஞானம் கேட்பது, கூறுவது வேறு விஷயம். சம்மந்தத்தை வைத்து நடந்து கொள்வது, சம்மந்ததின் சக்தி மூலம் நிரந்தர ஈடுபாட்டில் முழ்கியிருப்பது வேறு விஷயம். எனவே எப்பொழுதும் அனைத்து சம்மந்தங்களின் ஆதாரத்தினால், சகயோகி ஆகுக. இந்த அனுபவத்தை அதிகப்படுத்திக் கொண்டேயிருங்கள். இம்மாதிரி முழ்கியிருக்கும் நிலை, கோப - கோபியர்களின் விசேஷமாகும். அன்பு வைப்பது வேறு விஷயம், அன்பில் முழ்கியிருப்பது, இது தான் சிரேஷ்ட அனுபவம்.

 

2. உயர்ந்த நிலை தடைகளின் பிராபவத்திலிருந்து விலகியிருப்பது: - எப்பொழுதாவது, ஏதாவது தடையின் பிரபாவத்தில் வருவதில்லையே? உயர்ந்த நிலை இருக்கிறது என்றால், உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தடைகளின் பிரபாவத்திலிருந்து விலகி இருந்து விடுவார்கள். எப்படி விண்வெளியில் செல்கிறார்கள் என்றால், உயர்வாகச் செல்கிறார்கள், பூமியின் பிரபாவத்திலிருந்து விலகிச் சென்றுவிடுகிறார்கள். அதேபோல் இவர்கள் எந்தவொரு தடைகளின் பிரபாவத்திலிருந்தும் எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பார்கள். யார் அன்பில் இருப்பதில்லையோ, அவர்கள் ஏதாவது விதமான கடின உழைப்பின் அனுபவம் செய்ய வேண்டியதாக இருக்கும். எனவே அனைத்து சம்மந்தங்களின் அன்பின் அனுபவத்தில் இருங்கள். அன்பு இருக்கிறது, ஆனால் அதை வெளிப்படும் ரூபத்தில் வையுங்கள், அமிர்தவேளை மட்டும் நினைவு செய்தீர்கள், பிறகு காரியத்தில் பிஸியாக விட்டீர்கள் என்றால், உள்ளடங்கி இருந்து விடும். வெளிப்படும் ரூபத்தில் வைத்தீர்கள் என்றால், எப்பொழுதும் சக்திசாலியாக இருப்பீர்கள்.

 

விசேஷமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்யக்த மகாவாக்கியம்

அனைவருக்காகவும் நற்சிந்தனையாளர் ஆகுங்கள்.

 

யார் அனைவரின் நற்சிந்தனையாளரோ, அவருக்கு அனைவரின் சகயோகம் இயல்பாகவே பிராப்தி ஆகும். நற்சிந்தனையின் பாவனை மற்றவர்களின் மனதில் சகயோகத்தின் பாவனையை சகஜமாகவும், இயல்பாகவும் உருவாக்கும். அன்பு தான் சகயோகி ஆக்கிவிடும். எனவே எப்பொழுதும் நற்சிந்தனையில் நிரம்பியிருங்கள், நற்சிந்தனையாளர் ஆகி, அனைவரையும் அன்பிற்குரியவர்களாக, சகயோகியாக ஆக்குங்கள். எந்தளவு யார் தேவையான நேரத்தில் சகயோகியாக ஆனார்கள், வாழ்க்கை மூலமாகவோ, சேவை மூலமாகவோ. அவர்களுக்கு நாடகத்தின் அனுசாரம், விசேஷ பலம் கிடைக்கிறது. தன்னுடைய முயற்சியோ இருக்கவே இருக்கிறது, ஆனால் அதிகப்படியான பலம் கிடைக்கிறது. சேவையின் திட்டத்தில் எந்தளவு தொடர்பில் அருகில் கொண்டு வருவீர்களோ, அந்தளவு சேவையின் பிரத்யக்ஷமான முடிவு தென்படும். செய்தி கொடுக்கும் சேவையோ, செய்தே வந்திருக்கிறீர்கள், செய்து கொண்டேயிருங்கள், ஆனால் விசேஷமாக இந்த வருடம், செய்தி மட்டும் கொடுக்க வேண்டாம், சகயோகியாக ஆக்குங்கள், அதாவது தொடர்பில் அருகில் கொண்டு வாருங்கள். ஒரு மணி நேரத்திற்காக மட்டும் அல்லது படிவத்தை நிரப்பும் நேரம் வரையிலும் சகயோகியாக ஆக்காதீர்கள், ஆனால் சகயோகம் மூலமாக, அவரை நெருங்கிய தொடர்பில் சம்மந்தத்தில் கொண்டு வாருங்கள்.

 

எந்தவொரு சேவை செய்தாலும், அதில் இதன் மூலம் அந்தமாதிரி யாராவது சகயோகி ஆகவேண்டும், அதில் நீங்கள் சுயம் மைட் ஆகிவிடுங்கள், மேலும் அவர் மைக் ஆகிவிட வேண்டும் என்ற இலட்சியம் வையுங்கள். அப்படி சேவையின் இலட்சியம் மைக் தயார் செய்வது, அவர் அனுபவத்தின் ஆதாரத்தினால் உங்களுடைய அல்லது தந்தையின் ஞானத்தை பிரத்யக்ஷம் செய்யட்டும். யாருடைய பிரபாவம் இயல்பாகவே மற்றவர்கள் மேல் சுலபமாக ஏற்படுமோ, அந்தமாதிரி மைக் தயார் செய்யுங்கள். நம்முடைய சக்தியை ஈடுபடுத்து வதற்குப் பதிலாக, மற்றவர்களின் சக்தியை இந்த ஈஸ்வரிய காரியத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற இலட்சியத்தை வையுங்கள். எந்தவொரு வர்க்கத்தின் சகயோகி சேத்திரம், ஒவ்வொரு சிறிய அல்லது பெரிய தேசத்தில் -கிடைக்க முடியும். தற்சமயம் அந்தமாதிரி அநேக இயக்கங்கள் இருக்கின்றன, அவர்களிடம் சக்தி இருக்கிறது, ஆனால் அதை உபயோகிப்பதற்கான விதி தெரியாது. அவர்களுக்கு அந்தமாதிரியாகப் பார்க்கத் தெரியாது. அவர்கள் மிகுந்த அன்புடன் உங்களுக்கு சகயோகம் கொடுப்பார்கள், அருகில் வருவார்கள். மேலும் உங்களுடைய 9 இலட்சம் பிரஜையிலும் வளர்ச்சி ஆகிவிடும். ஒரு சிலர் வாரிசாகவும், ஒரு சிலர் பிரஜையும் ஆவார்கள். இது வரையிலும் யாரை சகயோகியாக ஆக்கியிருக்கிறீர்களோ, அவர்களை வாரிசாக ஆக்குங்கள். ஒரு பக்கம் வாரிசை உருவாக்குங்கள், இன்னொரு பக்கம் மைக் உருவாக்குங்கள். உலகிற்கு நன்மை செய்பவர்களாக ஆகுங்கள். எப்படி சகயோகத்தின் அடையாளமாக கை மேல் கை கோர்த்திருப்பதாக காண்பிக்கிறார்கள் இல்லையா? அப்படி தந்தையின் நிரந்தர சகயோகி ஆவது என்பது தான் எப்பொழுதும் கையோடு கை கோர்த்திருப்பது, மேலும் எப்பொழுதும் புத்தியால் உடன் இருப்பது.

 

எந்தவொரு காரியம் செய்தாலும், நீங்கள் செய்வதிலும் பெரிய மனமுடையவர்களாக, மேலும் மற்றவர்களை சகயோகி ஆக்குவதிலும் பெரிய மனமுடையவராக ஆகுங்கள். ஒருபொழுதும் தனக்காகவும், சகயோகி ஆத்மாக்களுக்காகவும், உடன் இருப்பவர்களாகவும் குறுகிய மனதை வைக்காதீர்கள். பெரிய மனம் வைப்பதினால் - எப்படி மண்ணும் பொன்னாகிவிடும் என்று வர்ணித்து இருக்கிறார்கள் - பலஹீனமான உடன் இருப்பவர்களும், சக்திசாலியான துணைவர்கள் ஆகிவிடுவார்கள், அசம்பவம் வெற்றி நிறைந்த சம்பவம் ஆகிவிடும். சிலர் அந்தமாதிரி ஆத்மாக்களும் அவர்கள் நேரடியாக சகஜயோகி ஆகமாட்டார்கள், ஆனால் அவர்களுடைய சகயோகத்தைப் பெற்றுக் கொண்டேயிருங்கள், சகயோகியாக ஆக்கிக் கொண்டேயிருங்கள். அப்படி சகயோகத்தில் முன்னேறிச் சென்று கொண்டேயிருங்கள், சகயோகம் அவர்களை யோகி ஆக்கி விடும். இப்பொழுது சகயோகி ஆத்மாக்களை மேடையில் கொண்டு வாருங்கள், அவர்களுடைய சகயோகத்தை பயனுள்ளதாக ஆக்குங்கள்.

 

வரதானம்:

நிலம், நாடி மற்றும் நேரத்தைப் பார்த்து சத்திய ஞானத்தை பிரத்யக்ஷம் செய்யக் கூடிய ஞானம் நிறைந்தவர் ஆகுக.

 

தந்தையின் இது புதிய ஞானம், சத்திய ஞானம். இந்த ஞானத்தின் மூலம் தான் புதிய உலகம் ஸ்தாபனை ஆகிறது. இது அதிகாரம் மற்றும் போதை சொரூபத்தில் வெளிப்படும் வகையில் இருக்கட்டும். ஆனால் யாராவது வந்தவுடனேயே, புது ஞானத்தின் புதுப்புது விசயங்களைக் கூறி குழப்பமடைய வைப்பது என்று அர்த்தமில்லை. நிலம், நாடி மற்றும் நேரம் அனைத்தையும் பார்த்து, ஞானம் சொல்ல வேண்டும். இது ஞானம் நிறைந்தவரின் அடையாளம். ஆத்மாவின் விருப்பத்தைப் பாருங்கள், நாடி பாருங்கள், நிலத்தை உருவாக்குங்கள், ஆனால் உள்ளே சத்தியத்தின் பயமின்மையின் சக்தியும் அவசியம் இருக்க வேண்டும், அப்பொழுது தான் சத்திய ஞானத்தை பிரத்யக்ஷம் (வெளிப்படுத்துதல்) செய்ய முடியும்.

 

சுலோகன்:

என்னுடையது என்று கூறுவது என்றால், சிறிய விசயத்தைப் பெரியதாக்குவது, உன்னுடையது என்று கூறுவது என்றால், மலை போன்ற விசயத்தையும் பஞ்சாக ஆக்கிவிடுவது.

 

ஓம்சாந்தி