31.03.2019                           காலை முரளி                ஓம் சாந்தி                      'அவ்யக்த பாப்தாதா'

' ரிவைஸ்   11.05.1984          மதுபன்


 

'' பிராமணர்களின் ஒவ்வொரு காலடி, எண்ணம், செயலின் மூலம் சட்டத்தின் படைப்பு ''

 

உலகை படைப்பவர் தன்னுடைய புது உலகைப் படைக்கக்கூடிய புது உலகின் எதிர்கால குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சிரேஷ்ட பாக்கியவான் குழந்தைகள் உங்களுடைய எதிர்காலம் உலகின் எதிர்காலம். நீங்கள் புது உலகின் ஆதார சொரூப சிரேஷ்ட குழந்தைகள். புது உலகின் இராஜ்ய பாக்கியத்திற்கு உரிய விசேஷ ஆத்மாக்கள். உங்களுடைய புது வாழ்க்கை உலகின் புது படைப்பை செய்கிறது. உலகை சிரேஷ்டாச்சாரி, சுகம், சாந்தி நிரம்பியதாக ஆக்கத் தான் வேண்டும். உங்கள் அனைவருடைய இந்த சிரேஷ்ட திட எண்ணத்தின் விரல் மூலம் லியுகத்து துக்கமான உலகம் மாறி சுகமான உலகம் ஆகிவிடுகிறது. ஏனென்றால், சர்வ சக்திவான் தந்தையின் ஸ்ரீமத்படி நீங்கள் சகயோகி ஆகியிருக்கிறீர்கள். எனவே தந்தையுடன் சேர்த்து உங்கள் அனைவரின் சகயோகம், சிரேஷ்ட யோகம் உலக மாற்றத்தை செய்து விடுகிறது. சிரேஷ்ட ஆத்மாக்கள் உங்களுடைய இந்த நேரத்து சகஜயோகி, இராஜயோகி வாழ்க்கையின் ஒவ்வொரு அடி, ஒவ்வொரு காரியமும் புது உலகின் சட்டம் ஆகிவிடுகிறது. பிராமணர்களின் விதி நிரந்தரமாக விதான் அதாவது சட்டம் ஆகிவிடுகிறது. எனவே வள்ளலின் குழந்தைகள் வள்ளலாக உருவாக்குபவராக மேலும் விதியைப் படைப்பவராக ஆகிவிடுகிறார்கள். இந்தக் கடைசி ஜென்மம் வரையிலும் வள்ளலின் குழந்தைகள் உங்களுடைய படங்களிடம் பக்தர்கள் வேண்டுதல் செய்து கொண்டே இருக்கிறார்கள். அந்த மாதிரி விதியை உருவாக்குபவர்கள் ஆகிவிடுகிறீர்கள். இன்று வரையிலும் தலைமை நீதிபதியும் சத்திய பிரமாணம் செய்விக்கும் நேரம் ஈஸ்வரனின், இஷ்ட தேவதையின் நினைவு சொரூபமானவராக ஆக்கி, சத்திய பிரமாணத்தை எடுக்க வைக்கிறார்கள். கடைசி ஜென்மத்திலும் சட்டத்தில் விதியை உருவாக்கும் குழந்தைகள் உங்களின் சக்தி நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய உறுதிமொழி எடுப்பதில்லை, தந்தையின், உங்களின் மகத்துவம் வைப்பார்கள். நீங்கள் எப்பொழுதும் வரம் அளிக்கும் சொரூபமானவராகவும் இருக்கிறீர்கள். பல விதமான வரதானம், பல விதமான தேவதைகள் மற்றும் தேவிகளிடமிருந்து உங்களுடைய படங்கள் மூலமாகத் தான் வேண்டுதல் செய்கிறார்கள். சிலர் சக்தியின் தேவதையாக, சிலர் கல்வியின் தேவியாக இருக்கிறார். நீங்கள் வரமளிக்கும் சொரூபமாக ஆகியிருக்கிறீர்கள். அதனால் தான் இன்று வரையிலும் பரம்பரை பக்தியின் தொடக்கத்திலிருந்து இருந்து வந்திருக்கிறது. எப்பொழுதும் பாப்தாதா மூலமாக அனைத்து பிராப்தி சொரூப பிரசன்னம் (மலர்ச்சி) நிரம்பியவராக பாராட்டுக்குரிய சொரூபம் நிரம்பியவராக ஆகியிருக்கிறீர்கள். எனவே தான் தன்னை பிரசன்னம் ஆக்குவதற்கு தேவி தேவதைகளை பிரசன்னம் ஆக்குகிறார்கள். ஏனென்றால் இவர்கள் தான் நம்மை சதா காலத்திற்கும் பிரசன்னமாக ஆக்குவார்கள். அனைத்தையும் விட மிக உயர்ந்த பொக்கிஷம் திருப்தி. இதை நீங்கள் அனைவரும் தந்தையிடமிருந்து பெற்றிருக்கிறீர்கள். எனவே திருப்தியை பெறுவதற்காக சந்தோஷ தேவியை பூஜை செய்து கொண்டே இருக்கிறார்கள். திருப்தியான ஆத்மாக்கள் நீங்கள் அனைவரும் சந்தோஷமா தான் இல்லையா? நீங்கள் அனைவருமே சந்தோஷிகள் தான் இல்லையா? நீங்கள் அனைவரும் திருப்தியான ஆத்மாக்கள், திருப்தி மூர்த்திகள். பாப்தாதா மூலமாக வெற்றியை பிறப்புரிமை ரூபத்தில் பிராப்தி செய்திருக்கிறீர்கள். எனவே வெற்றியின் தானத்தை, வரதானத்தை உங்களுடைய படங்கள், விக்கிரகங்களிலிருந்து வேண்டுகிறார்கள். அல்ப புத்தியாக மட்டும் இருக்கும் காரணத்தினால், பலமற்ற ஆத்மாக்களாக இருக்கும் காரணத்தினால், பிச்சைக்கார ஆத்மாக்களாக இருக்கும் காரணத்தினால் அற்ப காலத்தின் வெற்றியைத் தான் கேட்கிறார்கள். எப்படி பிச்சைக்காரன் ஒருபொழுதும் ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்க மாட்டான். கொஞ்சம் பைசா கொடுத்து விடுங்கள், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுத்து விடுங்கள் என்று தான் கேட்பான். அதே போல் இந்த ஆத்மாக்களும் சுகம், சாந்தி தூய்மையின் பிச்சைக்காரர்கள். அற்ப காலத்திற்கான வெற்றியைக் கேட்பார்கள். என்னுடைய இந்த காரியம் நடந்து விட வேண்டும், இதில் வெற்றி கிடைத்து விட வேண்டும் என்று தான் கேட்பார்கள். ஆனால் வெற்றி சொரூப ஆத்மாக்கள் உங்களிடமிருந்து தான் கேட்பார்கள். திலாராம் தந்தையின் குழந்தைகள் நீங்கள் பரந்த இதயமுடைய தந்தைக்கு உங்களுடைய இதயத்தின் அனைத்து விஷயத்தையும் கூறுகிறீர்கள். வேறு எந்த ஆத்மாக்களுடனும் பேச முடியாத விஷயங்களை பாப்தாதாவிடம் கூறுகிறீர்கள். உண்மையான தந்தையின் உண்மையான குழந்தைகள் ஆகிறீர்கள். இப்பொழுதும் உங்களுடைய படங்கள் விக்கிரகங்களின் எதிரில் அனைவரும் தனது இதயத்தின் விஷயங்களைக் கூறிக் கொண்டே இருப்பார்கள். ஏதாவது மறைக்க வேண்டிய விஷயமாக இருந்தால் தன்னுடைய நண்பர்கள், உறவினர்களிடமிருந்து மறைத்து விடுவார்கள். ஆனால் தேவி தேவதைகளிடம் மறைக்க மாட்டார்கள். உலகத்தின் எதிரில் நான் இருப்போம், உண்மையானவன், மகான் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் தேவதைகளின் எதிரில் என்ன கூறுவார்கள்? நான் என்னவாக இருக்கிறேனோ அது இப்படி தான்! காமியாகவும் இருக்கிறேன் மற்றும் கபடனாகவும் இருக்கிறேன். ஆக, நீங்கள் புது உலகத்தின் எதிர்காலம். ஒவ்வொருவரின் எதிர்காலத்தில் தூய்மையான புது உலக இராஜ்ஜியத்தின் பாக்கியம் இருக்கிறது.

 

நீங்கள் அந்த மாதிரியான உருவாக்குபவர், வரமளிப்பவர், விதியை உருவாக்கக்கூடிய மிக சிரேஷ்ட ஆத்மாக்கள். ஒவ்வொருவரின் சிரேஷ்ட வழி என்ற கைகளில் சொர்க்கத்தின் சுயராஜ்ஜியத்தின் பூமி உருண்டை இருக்கிறது. இது தான் வெண்ணெய், இராஜ்ஜிய பாக்கியத்தின் வெண்ணெய். ஒவ்வொருவரின் தலை மேல் தூய்மையின் மகான் தன்மையின், ஒளியின் கிரீடம் இருக்கிறது. நீங்கள் இதயசிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்கள். சுயராஜ்ஜியத்தின் திலகம் இடப்பட்டவர்கள். எனவே நான் யார் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? நான் யார் என்ற கேள்விக்கு விடை பெறுவதற்காக வந்திருக்கிறீர்கள் இல்லையா? முதல் நாள் பாடத்தில் இதை படித்தீர்கள் இல்லையா? நான் யார்? நான் இது இல்லை மேலும் நான் இதுவாகும். இதிலேயே தான் முழு ஞானக்கடலின் ஞானம் நிரம்பியிருக்கிறது. அனைத்தையும் தெரிந்து கொண்டீர்கள் தான் இல்லையா? எப்பொழுதுமே இந்த ஆன்மீக போதை உங்களுடனேயே இருக்கட்டும். நீங்கள் அந்த அளவு சிரேஷ்ட ஆத்மாக்கள், மகான்கள். ஒவ்வொரு அடி, ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு செயலும் நினைவுச் சின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது. சட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதே உயர்ந்த நினைவில் எழுப்பி விடுங்கள். புரிந்ததா? முழு உலகத்தின் பார்வை ஆத்மாக்கள் உங்கள் பக்கம் இருக்கிறது. நான் என்ன செய்வேனோ அது உலகிற்காக சட்டமாகவும் மற்றும் நினைவுச்சின்னமாகவும் ஆகி விடும். நான் குழப்பத்தில் வந்தேன் என்றால் உலகம் குழப்பத்தில் வந்து விடும். நான் திருப்தியாக, மகிழ்ச்சியில் இருந்தேன் என்றால் உலகம் திருப்தியாக மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக உருவாகும். அந்த அளவு பொறுப்பு ஒவ்வொரு புது உலக படைப்பின் பொறுப்பாளர் ஆகியிருக்கும் ஆத்மாக்களிடம் இருக்கிறது. ஆனால் எவ்வளவு பெரியதோ அந்த அளவு லேசானது. ஏனென்றால், சர்வ சக்திவான் தந்தை உடன் இருக்கிறார். நல்லது.

 

அந்த மாதிரி எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் மாஸ்டர் படைப்பவர், வரமளிக்கும் குழந்தைகளுக்கு, எப்பொழுதும் அனைத்து பிராப்தி சொரூப திருப்தியான ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் நினைவு மூலமாக ஒவ்வொரு காரியத்தையும் நினைவுச் சின்னமாக ஆக்கக்கூடிய பூஜைக்குரிய மகான் ஆத்மாக்களுக்கு உருவாக்குபவர், வரமளிக்கும் பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

குமாரர்களின் தனித்தனி குரூப்புடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு

1) நீங்கள் அனைவரும் சிரேஷ்ட குமார் தான் இல்லையா? நீங்கள் சாதாரண குமார் இல்லை, சிரேஷ்ட குமார். உடலின் சக்தி, மனதின் சக்தி அனைத்தையும் சிரேஷ்ட காரியத்தில் ஈடுபடுத்துபவர்கள். எந்தவொரு சக்தியையும் விநாஷ காரியத்தில் ஈடுபடுத்துபவர்கள் இல்லை. விகார காரியம் தான் விநாஷ காரியம். சிரேஷ்ட காரியம் ஈஸ்வரிய காரியம். அந்த மாதிரி நீங்கள் அனைத்து சக்திகளையும் ஈஸ்வரிய காரியத்தில் ஈடுபடுத்தும் சிரேஷ்ட குமாரர்கள். எங்காவது வீணான கணக்கிலோ ஏதாவது சக்தியை ஈடுபடுத்தவில்லையே? இப்பொழுது தன்னுடைய சக்தியை எங்கு ஈடுபடுத்த வேண்டும் என்ற விவேகம் கிடைத்து விட்டது. இதே விவேகம் மூலமாக எப்பொழுதும் சிரேஷ்ட காரியம் செய்யுங்கள். அந்த மாதிரி எப்பொழுதும் சிரேஷ்ட காரியத்தில் இருப்பவர்கள் சிரேஷ்ட பிராப்தியின் அதிகாரி ஆகிவிடுகிறார்கள். நீங்கள் அந்த மாதிரியான அதிகாரியா? சிரேஷ்ட பிராப்தி ஆகிக்கொண்டிருக்கிறது என்று அனுபவம் செய்கிறீர்களா? அல்லது இனிமேல் தான் ஆக வேண்டுமா? ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு வருமானம் சேமிப்பாகிக் கொண்டிருக்கிறது என்ற இந்த அனுபவம் இருக்கிறது தான் இல்லையா? யாருக்கு ஒரு அடியில் பல மடங்கு வருமானம் சேமிப்பு ஆகிறது என்றால் அவர் எவ்வளவு சிரேஷ்டமானவராக இருப்பார். யாருக்கு இந்த அளவு செல்வம் சேமிப்பாகிறதோ, அவர் எவ்வளவு குஷியாக இருப்பார். இன்றைய நாட்களின் இலட்சாதிபதி, கோடீஸ்வரர்களுக்கும் அழியும் குஷி இருக்கிறது. உங்களுடையதோ அழியாத சொத்து. சிரேஷ்ட குமாரின் விளக்கத்தை புரிந்திருக்கிறீர்களா? எப்பொழுதுமே ஒவ்வொரு சக்தியையும் சிரேஷ்ட காரியத்தில் ஈடுபடுத்துபவர். வீணான கணக்கு நிரந்தரமாக முடிந்து விட்டதா, சிரேஷ்ட கணக்கின் சேமிப்பு ஆனதா அல்லது இரண்டுமே இருக்கிறதா? ஒன்று முடிவடைந்து விட்டது இரண்டாவது இப்பொழுது செல்வதற்கான காலம் இல்லை. இப்பொழுது அது (வீணானது) சதா காலத்திற்காக முடிந்து விட்டது. இரண்டுமே இருக்கிறது என்றால் எவ்வளவு சேமிப்பு ஆக வேண்டுமோ அவ்வளவு ஆகாது. இழக்கவில்லை, சேமிப்பு ஆனது என்றால் எவ்வளவு சேமிப்பு ஆனது. எனவே வீணான கணக்கு முடிவடைந்தது, பயனுள்ள கணக்கு சேமிப்பானது.

 

2) குமார வாழ்க்கை சக்திசாலியான வாழ்க்கை. குமார வாழ்க்கையில் என்ன விரும்புகிறீர்களோ அதைச் செய்ய முடியும். தன்னை சிரேஷ்டமாக ஆக்க விரும்பினாலும் சரி, அல்லது தன்னை கீழே விழ வைத்தாலும் சரி, அப்படி இந்த குமார வாழ்க்கை தான், உயர்வானதாக அல்லது தாழ்ந்ததாக ஆக்கக்கூடியது. அந்த மாதிரியான வாழ்க்கையில் நீங்கள் தந்தையின் குழந்தை ஆகிவிட்டீர்கள். அழியும் வாழ்க்கை துணைவியின் கர்ம பந்தனத்தில் மாட்டிக் கொள்வதற்கு பதிலாக உண்மையான வாழ்க்கை துணைவனை அடைந்து விட்டீர்கள். நீங்கள் எவ்வளவு பாக்கியம் நிறைந்தவர்கள். இப்பொழுது வந்திருக்கிறீர்கள் என்றால் தனியாக வந்தீர்களா அல்லது இணைந்தவராகி வந்தீர்களா? (இணைந்து) டிக்கெட் வாங்குவதற்காகவோ செலவு செய்யவில்லை தான் இல்லையா? அப்படி இதுவும் மிச்சமாகி விட்டது. ஒருவேளை சரீர ரீதியான துணைவர்களை அழைத்து வந்தீர்கள் என்றால் டிக்கெட்டிற்காக செலவு செய்ய வேண்டும், அவர்களுடைய சாமான்களையும் தூக்க வேண்டும். மேலும் சம்பாதித்து தினசரி உணவளிக்கவும் வேண்டும். இந்த துணைவனோ உணவருந்துவதும் இல்லை, வாசனையை மட்டும் எடுத்துக் கொள்கிறார். உணவு குறைந்து விடுவதில்லை, இன்னும் அதிக சக்தி நிறைந்து விடுகிறது. அந்த மாதிரி எந்த செலவில்லாமல் மேலும் எந்தக் கடினமும் இல்லாமல் மேலும் துணைவனும் அழியாதவர், சகயோகமும் முழுமையாக கிடைக்கிறது. கஷ்டப்பட வைப்பதில்லை மேலும் சகயோகம் கொடுக்கிறார். ஏதாவது கடினமான காரியம் வந்தது, நினைவு செய்தீர்கள் மேலும் சகயோகம் கிடைத்தது. நீங்கள் அந்த மாதிரி அனுபவிகள் தான் இல்லையா. எப்பொழுது பக்தர்களுக்கும் பக்தியின் பலன் கொடுப்பவராக இருக்கிறார் என்றால் யார் வாழ்க்கை துணையாக ஆகுபவர்களோ அவர்களுக்கு துணை கொடுக்க மாட்டாரா? குமாரர்கள் இணைந்தவர்களாகவோ ஆகியிருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு இணைந்ததில் எந்தக் கவலையும் இல்லாதவர்களாக ஆகிவிட்டார்கள். எந்தப் பிரச்சனையும் இல்லை, கவலையற்றவர். இன்று குழந்தை நோயுற்றது, இன்று குழந்தை பள்ளி செல்லவில்லை. . . இம்மாதிரி எந்தச் சுமையும் இல்லை. எப்பொழுதும் பந்தனமற்றவர். ஒருவரின் பந்தனத்தில் கட்டப்படுவதினால் அனேக பந்தனங்களிலிருந்து விடுபட்டுவிட்டீர்கள். உலகின் கணக்குப்படியும் நல்லவர்களாகவே இருக்கிறீர்கள். இந்த உலகத்தின் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொண்டேன் என்று நினைக்கிறீர்கள் தான் இல்லையா! ஆத்மாவின் விஷயத்தை விடுங்கள், உடலின் கர்ம பந்தனத்தின் கணக்கிலிருந்தும் தப்பித்துக் கொண்டீர்கள். அந்த மாதிரி பாதுகாப்பாக இருக்கிறீர்கள். எப்பொழுதாவது ஏதாவது ஒரு ஞானியை துணைவியாக ஆக்கிக் கொள்ளலாம் என்று மனம் விரும்புகிறதா? ஏதாவது குமாரிக்கு நன்மை செய்து விட வேண்டும் என்று மனம் விரும்புகிறதா? இது நன்மை செய்வதில்லை, ஆனால் தீமை செய்வது. ஏன்? ஒரு பந்தனத்தில் கட்டிப்போட்டீர்கள் மேலும் அனேக பந்தனம் தொடங்கியது. இந்த பந்தனம் அனேக பந்தனங்களை உருவாக்குகிறது, எனவே உதவி கிடைப்பதில்லை. சுமை ஆகிவிடும். பார்ப்பதற்கு உதவி செய்வது போல் இருக்கும், ஆனால் இருப்பது அனேக விஷயங்களின் சுமை. எந்தளவு சுமை என்று கூற முடியுமோ அந்த அளவு சுமை. அப்படி அனேக சுமைகளிலிருந்து பாதுகாப்பாகி விட்டீர்கள். ஒருபொழுதும் கனவில் கூட நினைக்காதீர்கள், இல்லையென்றால் அந்த மாதிரி சுமை அனுபவம் ஆகும். அதை தூக்குவதே மிகக் கடினமாக இருக்கும். சுதந்திரமாக இருந்து விட்டு பந்தனத்தில் மாட்டிக் கொண்டீர்கள் என்றால் பல மடங்கு சுமை இருக்கும். அவர்கள் பாவம் அறியாமையில் கட்டப்பட்டார்கள், ஆனால் நீங்கள் தெரிந்தும் வேண்டுமென்றே கட்டப்பட்டீர்கள் என்றால், இன்னும் வேதனைப்படுவதின் சுமை இருக்கும். நீங்களோ ஒன்றும் அறியாத முதிர்ச்சியற்ற குழந்தைகளோ இல்லை. முதிர்ச்சியற்றவர்களுக்கு பிராப்தி ஒன்றும் இருப்பதில்லை. அங்கேயும் இல்லை, இங்கேயும் இல்லை என்றாகிவிடுவார். உங்களுக்கோ சத்கதி ஆகிவிட்டது தான் இல்லையா. சத்கதி என்றால் சிரேஷ்ட கதி. சிறிதளவு எண்ணம் வருகிறதா? உங்களுடைய புகைப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒருவேளை கொஞ்சம் மேலே கீழே செய்தீர்கள் என்றால், புகைப்படத்தில் வந்து விடும். எந்தளவு உறுதியானவராக ஆவீர்களோ அந்தளவு நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் சிரேஷ்டமாக இருக்கும்.

 

3) நீங்கள் அனைவரும் சக்திசாலியான குமார்கள் தான் இல்லையா? சக்திசாலியாக இருக்கிறீர்களா?

எப்பொழுதும் சக்திசாலியாக இருக்கும் ஆத்மாக்கள், என்னென்ன எண்ணம் வைக்கிறார்கள், என்ன வார்த்தை பேசுகிறார்கள் மேலும் என்ன காரியம் செய்வார்களோ அது சக்திசாலியாக இருக்கும். சக்தி நிறைந்ததின் அர்த்தமே வீணானதை முடித்து விடுவது. வீணான கணக்கை முடித்து சக்திசாலியான கணக்கை எப்பொழுதும் சேமிப்பவர்கள். வீணானவை எப்பொழுதாவது இருக்கிறதா? வீணான எண்ணம் அல்லது வீணான பேச்சு அல்லது நேரம் வீணாவது. ஒருவேளை ஒரு விநாடிக் கூட வீணாக சென்று விட்டது என்றால் எவ்வளவு சென்று விட்டது. சங்கமயுகத்தில் ஒரு விநாடி கூட எவ்வளவு பெரியது. ஒரு விநாடி இல்லை ஆனால், ஒரு விநாடி ஒரு ஜென்மத்திற்குச் சமமானது. அப்படி ஒரு விநாடி இல்லை, ஒரு ஜென்மம் வீணாகச் சென்று விட்டது. நீங்கள் அந்த மாதிரி மகத்துவத்தைத் தெரிந்திருக்கும் சக்தி நிறைந்த ஆத்மாக்கள் தான் இல்லையா? நான் சர்வ சக்திவான் தந்தையின் குழந்தை, சக்திசாலியான ஆத்மா, சக்திசாலியான காரியங்கள் செய்வதற்கு பொறுப்பாளன் என்ற நினைவு எப்பொழுதுமே இருக்கட்டும். பிறகு எப்பொழுதுமே பறக்கும் கலையை அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்கள். பலஹீனமானவர் பறக்க முடியாது. சக்திசாலியானவர் எப்பொழுதும் பறந்து கொண்டே இருப்பார். நீங்கள் எந்தக் கலையைச் சேர்ந்தவர்கள், பறக்கும் கலையா அல்லது ஏறும் கலையா? ஏறுவதில் மூச்சு வாங்கும், களைப்படைந்தும் விடுவார்கள். மேலும் பறக்கும் கலை உள்ளவர்கள் ஒரு விநாடியில் லட்சியத்தை அடைந்து வெற்றி சொரூபம் ஆக வேண்டும். ஏறும் கலையிருக்கிறது என்றால் களைப்படைந்தும் விடுவார்கள். என்ன செய்வது, எப்படி செய்வது என்று பெருமூச்சு வாங்கும். பறக்கும் கலையில் அனைத்தையும் கடந்து சென்று விடுவர். இதைச் செய்ய வேண்டும் என்று புத்தியில் உணர்த்துதல் வரும், இது கண்டிப்பாக நடக்கும். அப்படி ஒரு நொடியில் வெற்றியின் இலக்கை அடைபவரைத் தான் சக்திசாயான ஆத்மா என்று கூறுவது. அனைவரும் பறக்கும் கலை உள்ள குழந்தைகள் என்று தந்தைக்கும் குஷி இருக்கிறது. ஏன் கடுமையாக உழைக்க வேண்டும். குழந்தைகள் கடும் உழைப்பிருந்து விடுபட்டு இருக்க வேண்டும் என்று தான் தந்தை கூறுவார். தந்தை வழியைக் காண்பிக்கிறார், டபுள் லைட்டாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்றால் ஏன் கீழே வருகிறீர்கள்? என்ன ஆகும், எப்படி ஆகும் என்ற இது சுமை. எப்பொழுதும் நன்மை ஏற்படும், எப்பொழுதும் உயர்ந்ததாக இருக்கும், எப்பொழுதும் வெற்றி எனது பிறப்புரிமை என்ற நினைவை வைத்து நடந்து கொள்ளுங்கள்.

 

4) குமாரர்களுக்கு பரீட்சை எழுதுவதில் யுத்தம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. தூய்மை ஆக வேண்டும் என்ற எண்ணத்தை வைத்தீர்கள் என்றால், மாயா யுத்தம் செய்ய தொடங்கி விடுகிறது.  குமாரர் வாழ்க்கை சிரேஷ்ட வாழ்க்கை, மகான் ஆத்மாக்கள். இப்பொழுது குமாரர்களுக்கு அதிசயக் காரியம் செய்து காண்பிக்க வேண்டும். அனைத்தையும் விட உயர்ந்த அதிசயக் காரியம் தந்தைக்குச் சமமானவராகி, தந்தையை துணைவனாக ஆக்குவது. எப்படி நீங்கள் தந்தையின் துணைவனாக ஆகியிருக்கிறீர்கள். அதே போல் மற்றவர்களையும் துணைவர்களாக ஆக்க வேண்டும். மாயாவின் துணைவர்களை தந்தையின் துணைவர்களாக ஆக்க வேண்டும். நீங்கள் அம்மாதிரியான சேவாதாரிகள். தன்னுடைய வரமளிக்கும் சொரூபத்தின் மூலம் சுபபாவனை மற்றும் சுப விருப்பங்கள் மூலம் தந்தையின் குழந்தையாக ஆக்க வேண்டும். இதே விதி மூலமாக எப்பொழுதும் சித்தியை பிராப்தி செய்ய வேண்டும். எங்கு சிரேஷ்ட விதி இருக்குமோ அங்கு சித்தி அவசியம் இருக்கும். குமார் என்றால் எப்பொழுதும் ஆடாத அசையாதவர். மேலே கீழே ஆடுபவர் இல்லை. ஆடாத ஆத்மாக்கள் மற்றவர்களையும் ஆடாத உறுதியானவர்களாக ஆக்குவார்கள்.

 

5) நீங்கள் அனைவரும் வெற்றி அடையும் குமாரர்கள் தான் இல்லையா/ எங்கு தந்தை உடன் இருக்கிறாரோ அங்கு எப்பொழுதும் வெற்றி இருக்கிறது. எப்பொழுதும் தந்தையின் துணையின் ஆதாரத்தினால் என்ன காரியம் செய்தாலும் அதில் உழைப்பு குறைவு பிராப்தி அதிகமாக இருப்பதாக அனுபவம் ஆகும். தந்தையிடமிருந்து கொஞ்சம் விலகிவிட்டாலும் உழைப்பு அதிகம், பிராப்தி குறைவாக இருக்கும். எனவே உழைப்பிலிருந்து விடுபடுவதற்கான வழி ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு எண்ணத்திலும் தந்தையின் துணை இருக்க வேண்டும். இந்த துணை மூலம் வெற்றி நிச்சயமாக ஏற்படும். நீங்கள் அந்த மாதிரியான தந்தையின் துணைவர்கள் தான் இல்லையா? தந்தையின் கட்டளை என்னவாக இருக்கிறதோ அந்தக் கட்டளையின் பிரகாரம் வாழ்க்கையில் உங்களுடைய ஒவ்வொரு அடியும் இருக்க வேண்டும். தந்தையின் அடி மேல் அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இங்கு அடி எடுத்து வைக்கலாமா அல்லது வைக்க வேண்டாமா, சரியா அல்லது தவறா என்று யோசிப்பதற்கும் அவசியம் இல்லை. புதியதாக ஏதாவது வழி இருக்கிறது என்றால் யோசிக்க வேண்டும். ஆனால் எப்பொழுது அடி மேல் அடி எடுத்து வைக்க வேண்டும் என்றால் யோசிப்பதற்கு என்ன விஷயம் இருக்கிறது? எப்பொழுதும் தந்தையின் அடி மேல் அடி எடுத்து வைத்து சென்று கொண்டே இருந்தீர்கள் என்றால் லட்சியம் கண்டிப்பாக அருகாமையில் இருக்கும். தந்தை எவ்வளவு சுலபமாக்கிக் கொடுக்கிறார். ஸ்ரீமத் தான் எடுத்து வைக்க வேண்டிய அடி. ஸ்ரீமத் என்ற அடி மேல் அடி எடுத்து வைத்தீர்கள் என்றால் எப்பொழுதும் கடின உழைப்பிலிருந்து விடுபட்டே இருப்பீர்கள். அனைத்து வெற்றிகளும் அதிகாரத்தின் ரூபத்தில் இருக்கும். சிறிய குமாரரும் மிகுந்த சேவை செய்ய முடியும். ஒருபொழுதும் ஓடுதல் ஆடுதல் செய்யாதீர்கள். உங்களுடைய நடத்தை, பேச்சு அந்த மாதிரி இருக்க வேண்டும். அதைப் பார்த்து இவர் எந்தப் பள்ளியில் படிக்கிறார் என்று அனைவரும் கேட்க வேண்டும். அது சேவையாகி விடும் இல்லையா! நல்லது.

 

வரதானம்:

ஸ்ரீமத் என்ற கடிவாளத்தை இறுக்கமாக பிடித்து மனதை வசப்படுத்தக் கூடிய குழந்தையாக இருப்பவரிலிருந்து எஜமானன் ஆகுக.

 

உலகத்தினர் மனம் ஒரு குதிரை அது மிகவும் வேகமாக அங்கு இங்கு ஓடுகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் உங்களுடைய மனம் இங்கு அங்கு ஓட முடியாது. ஏனென்றால் ஸ்ரீமத் என்ற கடிவாளம் மிக உறுதியாக இருக்கிறது. எப்பொழுது மனம், புத்தி பக்கத்து காட்சிகளை பார்ப்பதில் ஈடுபட்டு விடுகிறது, என்றால் கடிவாளம் தொய்வான காரணத்தினால் மனம் சஞ்சலம் ஆகிறது. எனவே எப்பொழுதெல்லாம் ஏதாவது விஷயம் வருகிறது, மனம் சஞ்சலம் ஆகிறது என்றால் ஸ்ரீமத் என்ற கடிவாளத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டீர்கள் என்றால், இலட்சியம் வரை சென்றடைந்து விடுவீர்கள். குழந்தையாக இருப்பதிலிருந்து நான் எஜமானன் ஆகுபவன் என்ற இந்த நினைவு மூலம் அதிகாரி ஆகி, மனதை தன் வசத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

சுலோகன்

என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதுவும் நல்லது மேலும் என்ன நடக்கப் போகிறதோ அது இன்னும் நல்லது என்று எப்பொழுதும் நிச்சயம் இருக்கிறது என்றால், ஆடாத அசையாதவர்களாக இருப்பீர்கள்.

ஓம்சாந்தி