09.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! சிவ பாபா அதிசயமான தந்தை, ஆசிரியர் மற்றும் சத்குரு ஆவார். அவருக்கு தனக்கென ஒரு தந்தையும் இல்லை. அவர் ஒருபொழுதும் யாரிடமும் எதுவும் கற்பதும் இல்லை. அவருக்கு குருவின் அவசியம் இல்லை. இது போல ஆச்சரியப்பட்டு நீங்கள் நினைவு செய்ய வேண்டும்.

 

கேள்வி :

நினைவில் எந்த ஒரு புதுமை இருந்தால் ஆத்மா சுலபமாகவே பாவனம் ஆக முடியும்?

 

பதில்:

நினைவில் அமரும் பொழுது தந்தையின் சக்தியை (கரண்ட்) ஈர்த்துக் கொண்டே இருங்கள். தந்தை உங்களைப் பார்க்க வேண்டும் மற்றும் நீங்கள் தந்தையைப் பாருங்கள். அப்பேர்ப்பட்ட நினைவு தான் ஆத்மாவை பாவனமாக (தூய்மை) ஆக்க முடியும். இது மிகவும் சுலபமான நினைவு ஆகும். ஆனால்  ழந்தைகள் நாம் ஆத்மாக்கள், ஆவோம் சரீரம் அல்ல என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள். தேஹீ (ஆத்ம) அபிமானி குழந்தைகளே நினைவில் நிலைத்திருக்க முடியும்.

 

ஓம் சாந்தி!

இவர் நமது எல்லையில்லாத தந்தை ஆவார். அவருக்கென்று எந்த தந்தையும் இல்லை என்ற நிச்சயம் இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு உள்ளது. உலகில் தந்தையே இல்லாத எந்த ஒரு மனிதனும் இருக்க முடியாது. ஒவ்வொரு விஷயமும் மிகவும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. மேலும் ஞானம் கூட அவரே கூறுகிறார். ஆனால் அவர் ஒரு பொழுதும் படிப்பதில்லை. மனிதர்கள் எல்லாருமே ஏதாவது அவசியம் படிக்கிறார்கள். கிருஷ்ணர் கூட படித்திருக்கிறார். நான் என்ன படிக்க வேண்டி உள்ளது என்று தந்தை கூறுகிறார். நானோ படிப்பிக்க வந்துள்ளேன். நான் எதுவுமே படிக்கவில்லை. நான் யாரிடமிருந்தும் கல்வி பெறவில்லை. எந்த ஒரு குருவும் வைத்துக் கொள்ளவில்லை. நாடகத்தின் திட்டப்படி அவசியம் தந்தைக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த மகிமை இருக்கக் கூடும். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் என்றும் பாடப்படுகிறது. அவரை விட உயர்ந்தவர் பின் யாராக இருக்க முடியும். தந்தையும் இல்லை, ஆசிரியரும் இல்லை, குருவும் இல்லை, இந்த எல்லையில்லாத தந்தைக்கு தந்தையும் யாரும் இல்லை, ஆசிரியரும் இல்லை, குருவும் இல்லை. இவர் தானே தந்தை, ஆசிரியர், குரு ஆவார். இதையோ நல்ல முறையில் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் ஆவீர்கள். இதுபோல எந்த மனிதரும் இருக்க முடியாது. இதையே ஆச்சரியப்பட்டு நினைத்து அப்பேர்ப்பட்ட தந்தை ஆசிரியர் சத்குருவை நினைவு செய்ய வேண்டும். மனிதர்கள் ஓ, காட் பாதர்! என்று கூறவும் செய்கிறார்கள். அவர் ஞானம் நிறைந்த ஆசிரியரும் ஆவார். சுப்ரீம் குருவும் ஆவார். ஒரே ஒருவர் ஆவார். இதுபோல வேறு எந்த ஒரு மனிதரும் இருக்க முடியாது. அவர் படிப்பிப்பதும் மனித சரீரத்தில் வந்து தான். படிப்பிப்பதற்கு வாயோ அவசியம் வேண்டும். இதுவும் குழந்தைகளுக்கு அடிக்கடி நினைவில் இருந்தால் கூட படகு அவசியம் கரையேறிவிடும். தந்தையை நினைவு செய்தாலே விகர்மங்கள் விநாசம் ஆகும். சுப்ரீம் டீச்சர் என்று உணருவதால் முழு ஞானமும் புத்தியில் வந்து விடும். அவர் சத்குருவும் ஆவார். நமக்கு யோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். ஒருவருடன் தான் யோகம் கொள்ள வேண்டும். அனைத்து ஆத்மாக்களுக்கும் ஒரே ஒரு தந்தை ஆவார். அனைத்து ஆத்மாக்களும் என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார். ஆத்மாதான் எல்லாமே செய்கிறது. இந்த சரீரம் என்ற மோட்டாரை இயக்கக் கூடியது ஆத்மா ஆகும். அதை இரதம் என்று கூறினாலும் சரி அல்லது வேறு என்ன வாகக் கூறினாலும் சரி. முக்கியமாக இயக்கக் கூடியது ஆத்மா தான். ஆத்மாவின் தந்தை ஒரே ஒருவர் ஆவார். வாயால் நாங்கள் அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவோம் என்று கூறவும் செய்கிறீர்கள். ஒரு தந்தையின் குழந்தைகள் நாம் அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவோம். பிரஜா பிதா பிரம்மாவின் சரீரத்தில் தந்தை வரும்பொழுது சகோதர சகோதரிகள் ஆக வேண்டி வருகிறது. பிரஜா பிதா பிரம்மா வாய்வம்சாவளியோ சகோதர சகோதரிகள் ஆவார்கள் அல்லவா? சகோதர சகோதரிகள் ஒருபொழுதும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். எனவே இவர்கள் எல்லோரும் பிரஜா பிரதா பிரம்மா குமார், குமாரிகள் ஆகி விட்டார்கள். எனவே சகோதர சகோதரி என்று உணருவதால் தந்தையின் அன்பான குழந்தைகள் ஈசுவரிய சம்பிரதாயம் ஆகி விட்டீர்கள். நாம் நேரடியாக ஈசுவரிய சம்பிரதாயத்தினர் (வழியினர்) ஆவோம் என்று நீங்கள் கூறுவீர்கள். இறைவன் பாபா நமக்கு அனைத்தையும் கற்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் யாரிடமிருந்தும் கற்றுக் கொண்டவர் அல்ல. அவர் இருப்பதே எப்பொழுதும் சம்பூர்ணமாக. அவரது கலைகள் ஒருபொழுதும் குறைவதில்லை. மற்ற அனைவரது கலைகளும் குறைந்து விடுகின்றன. நாங்களோ சிவ பாபாவிற்கு நிறைய மகிமை செய்கிறோம். சிவ பாபா என்று கூறுவது மிகவும் சுலபமாகும் மற்றும் தந்தையே பதீத பாவனர் ஆவார். இறைவன் என்று கூறுவதால் மட்டும் அவ்வளவு பதிவதில்லை. இப்பொழுது குழந்தை களாகிய உங்களது இதயத்தில் பதிகிறது. தந்தை எப்படி வந்து பதீதர்களை பாவனமாக ஆக்குகிறார்! லௌகீக தந்தையும் இருக்கிறார். பரலௌகீக தந்தையும் இருக்கிறார். பரலோக தந்தையை அனைவரும் நினைவு செய்கிறார்கள், ஏனெனில் பதீதமாக உள்ளார்கள். அதனால் நினைவு செய்கிறார்கள். பாவனம் ஆகி விட்டீர்கள் என்றால் பதீதபாவனரை அழைக்க வேண்டிய அவசியமே இருக்காது. நாடகம் பாருங்கள் எப்படி உள்ளது! பதீத பாவன (தூய்மைப்படுத்தும்) தந்தையை நினைவு செய்கிறார்கள். நாம் பாவன (தூய்மையான) உலகிற்கு எஜமானன் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

 

தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் யுத்தம் நிகழ்ந்தது என்று சாஸ்திரங்களில் காண்பித்துள்ளார்கள் ஆனால் அப்படிக் கிடையாது. இப்பொழுது நாம் அசுரரும் அல்ல, தேவதையும் அல்ல என்று நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது நாம் இடையில் உள்ளோம். எல்லாரும் உங்களை இடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த நாடகம் மிகவும் களிப்பூட்டக் கூடியது ஆகும். நாடகத்தை மகிழ்ச்சிக்காகத் தான் பார்க்கச் செய்கிறார்கள் அல்லவா? அவை அனைத்தும் எல்லைக்குட்பட்ட நாடகங்கள். இது எல்லையில்லாத நாடகம் ஆகும். இது வேறு யாருக்கும் தெரியாது. தேவதைகளோ தெரிந்து கொள்ளவும் முடியாது. இப்பொழுது நீங்கள் கலியுகத்திலிருந்து வெளியேறி வந்துள்ளீர்கள். யார் சுயம் அறிந்துள்ளார்களோ அவர்கள் மற்றவர்களுக்கும் புரிய வைக்க முடியும். ஒரு முறை நாடகத்தைப் பார்த்தீர்கள் என்றால் பின் முழு நாடகத்தை புத்தியில் வந்து விடும். இந்த மனித சிருஷ்டி என்ற விருட்சத்தின் விதை மேலே உள்ளது என்று பாபா புரிய வைத்துள்ளார். விராட ரூபம் (விஷ்ணுவின் பிரம்மாண்ட ரூபம்) என்று கூறுகிறார்கள் அல்லவா? தந்தை அமர்ந்து குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறார். மனிதர்களுக்கு இது தெரியாது. சிவ பாபா யாரிடமாவது கற்றிருப்பாரா என்ன? அவருக்கென்று யாருமே ஆசிரியராக இல்லை என்றால் பின் என்ன சாஸ்திரம் கற்றிருப்பார்? எனவே அவசியம் எந்த இரதத்தில் வருகிறாரோ அவரது சரீரத்தை. காரியத்தில் பயன்படுத்துவார். அவருக்கென்று தனக்கென்று சரீரம் என்ற எதுவும் இல்லை. அவர் எதுவுமே படிப்பதோ கற்பதோ கிடையவே கிடையாது. அவருக்கென்று யாரும் டீச்சர் இருப்பதில்லை. கிருஷ்ணரோ கற்கிறார். அவருக்கு தாய், தந்தை, டீச்சர் இருக்கிறார்கள். அவருக்கு குருவின் (சத்யுகத்தில்) அவசியமே இல்லை. ஏனெனில் அவருக்கோ சத்கதி கிடைத்து விட்டிருக்கிறது. இதுவும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு படிப்பிப்பவர் தந்தை ஆவார். நாம் இப்பொழுது பிராமணர்கள் ஆவோம். பிராமணர், தேவதை எவ்வளவு தெளிவாக உள்ளது! தந்தைக்கோ முன் கூட்டியே அவர் அனைத்தையும் அறிந்தவர் என்று கூறி விட்டுள்ளார்கள். என்ன அறிந்துள்ளார் என்பது யாருக்கும் தெரியாது. அவர் ஞானம் நிறைந்தவர் ஆவார். முழு சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் உள்ளது. விதைக்கு முழு மரத்தின் ஞானம் இருக்கும். அது ஜட விதை ஆகும். நீங்கள் சைதன்ய மானவர்கள். நீங்கள் நமது விருட்சத்தின் ஞானத்தைப் புரிய வைக்கிறீர்கள். நான் இந்த வித விதமான மனித சிருஷ்டியின் விதை ஆவேன் என்று தந்தை கூறுகிறார். எல்லாருமே மனிதர்கள் ஆவார்கள் தான், ஆனால் பலவிதத்தினர் ஆவார்கள். ஒரு ஆத்மாவின் சரீரதத்தின் தோற்றம் கூட இன்னொருவருடையது போல இருக்க முடியாது. இரண்டு நடிகர்கள் ஒன்று போல இருக்க முடியாது. இது எல்லையில்லாத நாடகம் ஆகும். நாம் மனிதர்களை நடிகர்கள் என்று கூறுவதில்லை. ஆத்மாவிற்கு கூறுகிறோம். அந்த மனிதர்கள், மனிதர்களுக்கு தான் கூறுகிறோம் என்று நினைக்கிறார்கள். நாம் ஆத்மாக்கள் நடிகர்கள் ஆவோம் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. அவர்கள் மனிதர்கள் நடனம் செய்கிறார்கள். எப்படி மனிதர்கள் குரங்குகளை நடனமாட வைக்கிறார்கள். இதுவும் ஆத்மா சரீரத்தை நடனம் ஆட வைக்கின்றது. பாகத்தை நடிக்க வைக்கிறது. இது மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். எல்லையில்லாத தந்தை அவசியம் வரவும் செய்கிறார். வருவது இல்லை என்பதல்ல. சிவஜெயந்தியும் ஆகிறது. தந்தை வருவதே உலகம் மாற வேண்டி இருக்கும்பொழுது. பக்தி மார்க்கத்தில் கிருஷ்ணரை நினைவு செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணர் எப்படி வருவார்? கலியுகத்திலோ, சங்கமத்திலோ கிருஷ்ணரின் ரூபம் இந்த கண்களால் பார்க்கப்பட முடியாது. பிறகு அவரை பகவான் என்று எப்படிக் கூறுவது? அவரோ சத்யுகத்தின் முதல் நம்பர் இளவரசர் ஆவார். அவருக்கு தந்தை ஆசிரியரும் இருப்பார்கள். அவருக்கு குருவின் அவசியம் இல்லை ஏனெனில் சத்கதியில் இருக்கிறார். சொர்க்கம் சத்கதி என்று கூறப்படுகிறது. கணக்கு கூட தெளிவாக உள்ளது. மனிதர்கள் 84 பிறவிகள் எடுக்கிறார்கள் என்று குழந்தைகள் புரிந்துள்ளீர்கள். யார் யார் எவ்வளவு பிறவி எடுக்கிறார்கள் என்ற கணக்கை அறிந்துள்ளீர்கள். தேவதா குடும்பம் அவசியம் முதன் முதலில் வருகிறது. முதல் பிறவி அவர்களுடையாகத்தான் இருக்கும். ஒருவருடையது ஆகிறது. பின் அவர் பின்னால் எல்லோரும் வந்து விடுகிறார்கள். இந்த விஷயங்களை நீங்கள் அறிந்துள்ளீர்கள். உங்களிடையேயும் ஒரு சிலர் நல்ல முறையில் புரிந்திருக்கிறார்கள். எப்படி அந்த படிப்பிலும் ஆகிறது இதுவோ மிகவும் சுலபமானது. ஒரே ஒரு இரகசியமான கஷ்டம் மட்டும் உள்ளது. நீங்கள் தந்தையை நினைவு செய்யும் பொழுது அதில் மாயை தடை ஏற்படுத்துகிறது. ஏனெனில் மாயை இராவணனுக்கு பொறாமை ஏற்படுகிறது. நீங்கள் இராமரை நினைவு செய்யும் பொழுது என்னுடைய சீடர்கள் இராமரை ஏன் நினைவு செய்கிறார்கள் என்று இராவணனுக்கு பொறாமை ஏற்படுகிறது. இதுவும் நாடகத்தில் முன் கூட்டியே அமைந்து உள்ளது. புது விஷயம் அல்ல. முந்தைய கல்பத்தில் என்ன பாகத்தை நடித்தார்களோ அதையே நடிப்பார்கள். இப்பொழுது நீங்கள் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். முந்தைய கல்பத்தில் என்ன புருஷார்த்தம் செய்தீர்களோ அதை இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு பொழுதும் நின்று விடாது. காலத்தின் டிக் டிக் ஆகிக் கொண்டே இருக்கும். இது 5 ஆயிர வருடத்தின் நாடகம் என்று தந்தை புரியவைக்கிறார். சாஸ்திரங்களிலோ எப்படி எப்படியோ விஷயங்களை எழுதி விட்டுள்ளார்கள். பக்தியை விடுங்கள் என்று தந்தை ஒரு பொழுதும் கூற மாட்டார். ஏனெனில் ஒருவேளை இங்கும் நடக்க முடியவில்லை. மற்றும் அதுவும் விடுபட்டுவிட்டால் இங்கேயும் இல்லை, அங்கேயும் இல்லை என்று ஆகிவிடுவார்கள். எந்த வேலைக்கும் உதவாதவராக இருந்து விடுவார்கள். எனவே நீங்கள் பார்க்கிறீர்கள் ஒரு சில மனிதர்கள் அப்படியும் இருக்கிறார்கள். பக்தி ஆகியவை எதுவுமே செய்வதில்லை. அப்படியே போய்க் கொண்டிருக்கும் ஒரு சிலரோ பகவான் தான் அநேக ரூபங்களை தரிக்கிறார் என்று கூறிவிடுகிறார்கள். அட! இதுவே எல்லை யில்லாத அனாதி ஏற்கனவே அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். அது திரும்பத் திரும்ப நடந்து கொண்டே இருக்கும். எனவே இது அனாதி அவினாஷி உலக நாடகம் என்று கூறப்படுகிறது. இதையும் குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இதில் கூட குமாரிகளாகிய உங்களுக்கோ மிகவும் சுலபம் ஆகும். தாய்மார்களோ தாங்கள் ஏறிய படியிலிருந்து இறங்க வேண்டி உள்ளது. குமாரிக்கோ வேறு எந்த பந்தனமும் இல்லை. சிந்தனையே இல்லை. தந்தையினுடையவர் ஆகி விட வேண்டும். லௌகீக சம்பந்தத்தை மறந்து பரலோக சம்பந்தத்தை இணைக்க வேண்டும். கலியுகத்தில் இருப்பதே துர்கதி. கீழே இறங்கியே ஆக வேண்டும். நாடகப்படி.

 

பாரதவாசிகள் இவை அனைத்தும் இறைவனினுடையது, அவர் தான் எஜமானர் என்று கூறுகிறார்கள். நீங்கள் யார்? நாம் ஆத்மாக்கள் ஆவோம். மற்றபடி இவை அனைத்தும் இறைவனுடையது. இந்த தேகம் மற்றும் எதுவெல்லாம் உள்ளதோ பரமாத்மா அறிந்துள்ளார். வாயால் கூறுவது சரியாகத்தான் உள்ளது. இவை எல்லாமே இறைவன் அறிந்துள்ளார் என்று கூறிவிடுகிறார்கள். நல்லது பின் அவரால் அளிக்கப்பட்ட பொருட்களில் கையாடல் செய்வார்களா என்ன? ஆனால் அதன் படியும் நடப்பதில்லை. இராவணன் வழிப்படி நடக்கிறார்கள். நீங்களோ டிரஸ்டி (கௌரவ பாதுகாவலர்) ஆவீர்கள் என்று தந்தை விளக்குகிறார். ஆனால் இராவண சம்பிரதாயத்தினர் ஆன காரணத்தினால் நீங்கள் டிரஸ்டி தன்மையில் உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறீர்கள். வாயால் கூறுவது ஒன்று, செய்வது மற்றொன்று. தந்தை பொருள் கொடுத்தார். பின் எடுத்துக் கொண்டு விட்டார். ஆக உங்களுக்கு அதில் ஏன் துக்கம் ஏற்படுகிறது? பற்றை நீக்குவதறக்காகவே இந்த விஷயங்களை தந்தை தனது குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இப்பொழுது தந்தை வந்துள்ளார். நீங்கள் தான் பாபா எங்களை கூட அழைத்து செல்லுங்கள் என்று அழைத்துள்ளீர்கள். வந்து எங்களை பாவனமாக (தூய்மை) ஆக்குங்கள். ஏனெனில் பாவனம் ஆகாமல் நாம் போக முடியாது என்று புரிந்துள்ளார்கள். எங்களை அழைத்துச் செல்லுங்கள். எங்கே? வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். நாம் வீடு செல்வோம் என்று எல்லோரும் கூறுகிறார்கள். கிருஷ்ணரின் பக்தர்கள் நாம் கிருஷ்ணபுரி வைகுண்டம் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். சத்யுகம் தான் நினைவில் உள்ளது. பிரியமான பொருள் ஆகும். மனிதர்கள் இறக்கும் பொழுது சொர்க்கம் செல்வதில்லை. சொர்க்கமோ சத்யுகத்தில் தான் இருக்கும். கலியுகத்தில் இருப்பது நரகம். எனவே அவசியம் புனர் ஜன்மம் நரகத்தில் தான் ஆகும். இது சத்யுகம் ஆகுமா என்ன? அதுவோ உலகத்தின் அதிசயம் ஆகும். கூறவும் செய்கிறார்கள். புரிந்தும் உள்ளார்கள். பிறகும் யாராவது இறக்கும் பொழுது அவரது உறவினர்கள் எதுவும் புரிந்து கொள்வதில்லை. தந்தையிடம் இருக்கும் 84 பிறவி சக்கரத்தின் ஞானத்தை தந்தை தான் அளிக்க முடியும். நீங்களோ உங்களை தேகம் என்று நினைத்து இருந்தீர்கள், அது தவறாக இருந்தது. இப்பொழுது தேஹீ அபிமானி பவ (ஆத்ம அபிமானி ஆகுங்கள்) என்று தந்தை கூறுகிறார். தேஹீ அபிமானி பவ என்று கிருஷ்ணர் கூற முடியாது. அவருக்கோ தனக்கென்று தேகம் உள்ளது. அல்லவா? சிவ பாபாவிற்கு தனக்கென்று தேகம் இல்லை. இதுவோ அவரது இரதம் ஆகும். அதில் அவர் வீற்றிருக்கிறார் அவருக்கும் இரதம் ஆகும், பின் இவருக்கும் இரதம் ஆகும். இவருக்கென்று அவரது ஆத்மாவும் உள்ளது. தந்தையும் கடனாக எடுத்துள்ளார். நான் இதன் ஆதாரம் எடுக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். தன்னுடைய சரீரமோ அல்ல. பின் எப்படி கற்பிப்பார்? தந்தை தினமும் வந்து தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையைப் பாருங்கள் என்று குழந்தைகளைக் கவருகிறார். இந்த சரீரமும் மறந்து விட வேண்டும். நான் உங்களைப் பார்க்க நீங்கள் என்னைப் பாருங்கள். நீங்கள் எந்த அளவு தந்தையைப் பார்ப்பீர்களோ அந்த அளவு பவித்திரமாக ஆகிக் கொண்டே செல்வீர்கள். பாவனம் ஆகுவதற்கு வேறு வழியே இல்லை. இருந்தால் பின் கூறுங்கள், ஆத்மா பவித்திரமாவதற்கு கங்கையின் தண்ணீரினாலோ ஆகாது. முதலில் அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் அளிக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட தந்தையாக வேறு யாரும் இருக்க மாட்டார்கள். நாடியைப் பாருங்கள் இவ்வாறு ஆச்சரியப்படும் வகைளில் புரிந்திருக்கிறாரா என்று? உண்மையில் இவருக்கு பரமாத்மா என்று கூறப்படுகிறது என்பதைப் புரிந்திருக்கிறாரா? இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை தனது அறிமுகத்தை அளித்துக் கொண்டிருக்கிறார். நான் யார்? இதுவும் குழந்தைகளுக்குத் தெரியும். சரித்திரம் திரும்ப நடைபெறுகிறது. யார் இந்தக் குலத்தை சேர்ந்தவர்களோ அவர்களே வருவார்கள். மற்றவர்களோ எல்லாரும் அவரவர் தர்மத்தில் சென்று விடுவார்கள். யார் மற்ற தர்மங்களில் மாற்றம் ஆகிச் சென்றுள்ளார்களோ அவர்கள் மீண்டும் வெளியேறி அவரவர் பிரிவுகளில் சென்று விடுவார்கள். எனவே நிராகாரி விருட்சம் கூட காண்பித்துள்ளார்கள். இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்துள்ளீர்கள். மற்றவர்களில் யாரோ ஒரு சிலர் தான் புரிந்து கொள்கிறார்கள். 7-8 பேரில் யாராவது 1-2 பேர் வெளிப்படுவார்கள். அவர்கள் இந்த ஞானமோ மிகவும் நல்லது என்று புரிந்து கொள்வார்கள். இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு புயல் குறைவாக வரும். மீண்டும் போகலாம் போய் கேட்கலாம், என்று மனம் விரும்பும். ஒரு சிலர் பின் தீயசகவாசத்தின் தொடர்பில் வந்து விடுகிறார்கள். ஆகவே அதன் பிறகு வருவதே இல்லை. எங்கு பார்ட்டியினர் சென்று கொண்டிருப்பதை பார்க்கிறார்களோ அங்கு சென்று மாட்டிக் கொண்டு விடுவார்கள். மிகவும் உழைப்பு தேவைப்படுகிறது. எவ்வளவு உழைப்பு செய்ய வேண்டி வருகிறது. அடிக்கடி நாம் மறந்து விடுகிறோம் என்று கூறுகிறார்கள். நான் ஆத்மா ஆவேன் சரீரம் அல்ல என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள். குழந்தைகள் காமச் சிதையில் அமர்ந்து கருப்பாகி விட்டுள்ளார்கள் என்று தந்தையும் அறிந்துள்ளார். சுடுகாடு சேர்ந்து விட்டுள்ளார்கள். எனவே கருப்பாக ஆகி விட்டுள்ளார்கள். அவர்களைத் தான் எனது குழந்தைகள் எல்லாரும் எரிந்து இறந்து விட்டுள்ளார்கள் என்று தந்தை பின் கூறுகிறார். இது எல்லையில்லாத விஷயம் ஆகும். எத்தனை கோடி ஆத்மாக்கள் எனது இல்லத்தில் இருப்பவர்கள் ஆவார்கள். அதாவது பிரம்ம லோகத்தில் இருப்பவர்கள். தந்தையோ எல்லைக்கு அப்பால் நின்றுள்ளார் அல்லவா! நீங்களும் எல்லைக்கு அப்பால் நின்று விடுவீர்கள். பாபா ஸ்தாபனை செய்தபின் சென்று விடுவார். பின் நீங்கள் ஆட்சி புரிவீர்கள் என்று அறிந்துள்ளீர்கள். மற்ற எல்லா ஆத்மாக்களும் சாந்தி தாமத்திற்குச் சென்று விடுவார்கள் நல்லது.

 

இனிமையிலும் இனிமையான வெகுகாலம் காணாமல் போய் கண்டெடுக்கக்ப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. எந்த ஒரு நடிகர் மூலமாக இராவணன் பொறாமைப்பட்டு தடை ஏற்படுத்தினாலும், புயலாக வந்தாலும், அதைப் பார்க்காமல் தனது புருஷார்த்தத்தில் மூழ்கி இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு நடிகரின் பாகமும் இந்த நாடகத்தில் தனித் தனி ஆகும். இந்த அனாதி நாடகம் அமைக்கப்பட்டுள்ளது.

 

2. இராவணனின் வழிப் படி இறைவனிடம் அடகு வைத்த பொருளை கையாடக்கூடாது. அனைத்திலிருந்தும் பற்றை நீக்கி முழுமையாக டிரஸ்டி ஆகி இருக்க வேண்டும்.

 

வரதானம்:

கெட்டதிலும் கூட நல்லதை அனுபவம் செய்யக் கூடிய நிச்சயபுத்தியுள்ள கவலையற்ற மகாராஜா ஆகுக.

 

எப்போதும் இந்த சுலோகன் நினைவில் இருக்கட்டும் - என்ன நடந்ததோ நன்றாக நடந்தது, நல்லதாக நடக்கிறது, நல்லதே நடக்கும். கெட்டதை கெட்ட ரூபத்தில் பார்க்காதீர்கள். ஆனால் கெட்டதில் கூட நல்லதின் அனுபவம் செய்ய வேண்டும், கெட்டதில் இருந்தும் கூட தனக்கான பாடத்தைப் படித்துக் கொள்ள வேண்டும். ஏதாவது விசயம் வந்தாலும் கூட என்ன ஆகுமோ என்ற சங்கல்பம் வரக் கூடாது, ஆனால் உடனே நல்லதே நடக்கும் என்ற சங்கல்பம் வர வேண்டும். நடந்து முடிந்தது நன்றாக நடந்தது. எங்கே நல்லது இருக்குமோ அங்கே எப்போதும் கவலையற்ற மகாராஜாவாக இருப்பார்கள். நிச்சய புத்தியின் அர்த்தமே கலையற்ற மகாராஜா.

 

சுலோகன்:

யார் தனக்கும் பிறருக்கும் மரியாதை கொடுக்கிறாரோ அவருடைய பதிவேடு எப்போதும் சரியாக இருக்கும்.

 

ஓம்சாந்தி