15.01.19    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே ! பாபா எப்படி இனிப்பு மலையாக இருக்கிறாரோ அதுபோல குழந்தைகளாகிய நீங்கள் கூட இனிமையான தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து மிக மிக இனிமையானவராக ஆக வேண்டும் .

கேள்வி:
நீங்கள் இப்போது எந்த விதியின் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு தன்னுடைய அனைத்தையும் பாதுகாத்துக் கொள்கிறீர்கள் ?

பதில்:
பாபா! தேகத்துடன் சேர்த்து பழைய சாமான்கள் (குப்பை, கூளங்கள்) என்னவெல்லாம் உள்ளதோ அனைத்தையும் நாங்கள் உங்களுக்கு கொடுத்து விடுகிறோம் மற்றும் உங்களிடமிருந்து மீண்டும் அங்கே (எதிர் காலத்தில்) அனைத்தையும் பெற்றுக் கொள்வோம். ஆக நீங்கள் பாதுகாப் பானவராக ஆகிவிட்டீர்கள். அனைத்தையும் பாபாவுடைய இரும்புப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்து விடுகிறீர்கள். இது சிவபாபாவினுடைய பாதுகாப்பான வங்கி ஆகும். நீங்கள் பாபாவுடைய பாதுகாப்பில் இருந்து அமரராக ஆகிறீர்கள். நீங்கள் காலனின் மீது கூட வெற்றி அடைகிறீர்கள். சிவபாபாவினுடையவராக ஆகிவிட்டீர்கள் என்றால், பாதுகாப்பாக ஆகிவிட்டீர்கள். மற்றபடி உயர் பதவியை அடைவதற்காக முயற்சி செய்ய வேண்டும்.

ஓம் சாந்தி !
தந்தை குழந்தைகளிடம் கேட்கிறார் - இனிமையான குழந்தைகளே! தம்முடைய எதிர்காலத்தின் புருஷோத்தம முகத்தை பார்க்கிறீர்களா? புருஷோத்தம சரீரத்தை பார்க்கிறீர்களா? நாம் எதிர்கால புதிய சத்யுகத்தினுடைய உலகத்தில் இவர்களுடைய (லட்சுமி நாராயணருடைய) வம்சாவளியில் செல்வோம் அல்லது சுக தாமத்திற்குச் செல்வோம் அல்லது புருஷோத்தமர் ஆவோம் என்பது புரிகிறதா? மாணவர்கள் படிக்கும் போது நான் இன்னார் ஆக ஆகப்போகிறேன் என்பது புத்தியில் இருக்கும் அல்லவா! நீங்கள் கூட நாம் விஷ்ணுவினுடைய இராஜ்யத்தில் செல்லப் போகிறோம் என்பதை அறிந்திருக்கிறீர்கள் ஏனென்றால் விஷ்ணுவினுடைய இரண்டு ரூபங்கள் லட்சுமி-நாராயணன். இப்போது உங்களுடைய புத்தி (அலௌகீகமாக) இவ்வுலகிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. வேறு யாருடைய புத்தியிலும் இந்த விஷயங்கள் இருக்காது. இங்கே நாம் உண்மையான பாபா சிவபாபாவுடன் அமர்ந்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் மிக மிக இனிமையானவர். அந்த இனிமையான தந்தையை மிகவும் அன்போடு நினைவு செய்ய வேண்டும். ஏனென்றால், தந்தை கூறுகிறார் - என்னை நினைவு செய்வதன் மூலமாக நீங்கள் இப்படிப்பட்ட புருஷோத்தமராக (உத்தமர்களாக) ஆவீர்கள். மேலும் ஞான ரத்தினங்களை தாரணை செய்வதன் மூலம் நீங்கள் எதிர்காலத்தில் 21 பிறவிகளுக்கு கோடான கோடிகளுக்கு அதிபதி ஆவீர்கள். தந்தை வரம் கொடுக்கிறார். இனிமையிலும் இனிமையான பிரிய (அன்பிற்குரிய) தர்ஷினிக்கு அல்லது இனிமையிலும் இனிமையான நல்ல குழந்தைக்கு வரம் கிடைக்கும்.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளைப் பார்த்து தந்தை குஷி அடைகிறார். இந்த நாடகத்தில் அனைவரும் தங்கள் தங்களுடைய நடிப்பை நடித்துக் கொண்டிக்கிறார்கள் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். எல்லைக்கப்பாற்பட்ட தந்தையும் இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தில் நேரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இனிமையான தந்தையின் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு மிக மிக இனிமையான தந்தை உங்கள் பார்வையின் முன்னால் இருக்கிறார். ஆத்மா தான் இந்த சரீரத்தின் உறுப்புகள் மூலம் ஒருவர் மற்றவரைப் பார்க்கிறது. ஆக நீங்கள் இனிமையான குழந்தைகள், குழந்தைகளை மிகவும் இனிமையானவராக ஆக்குவதற்காக வந்துள்ளேன் என்று தந்தை அறிந்துள்ளார். இந்த லட்சுமி நாராயணர் மிக மிக இனிமையானவர்கள் அல்லவா! இவர்களுடைய இராஜ்யம் இனிமையாக இருப்பது போல இவர்களுடைய பிரஜைகளும் இனிமையானவர்களாக இருப்பார்கள். கோவிலுக்குச் செல்லும் போது, இவர்களுடைய இனிமையான முகத்தைப் பார்க்கிறோம். எங்காவது கோவில் திறந்திருந்தால் நாம் இனிமையான தேவதைகளின் தரிசனத்தை செய்வோம் என்று செல்கிறார்கள். தரிசனம் செய்பவர்கள் புரிந்து கொள்கின்றனர் -இவர்கள் இனிமையான சொர்க்கத்திற்கு எஜமானராக இருந்தார்கள். சிவன் கோவிலுக்குக் கூட எவ்வளவு மனிதர்கள் செல்கின்றனர். ஏனென்றால், அவர் மிகவும் இனிமை யிலும் இனிமையானவர். அந்த மிகவும் இனிமையான சிவபாபாவின் மகிமைகளை நிறைய செய்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் கூட மிக மிக இனிமையானவர் ஆக வேண்டும். மிகவும் இனிமையான தந்தை குழந்தைகளாகிய உங்கள் முன்னால் அமர்ந்திருக்கிறார். ஏனென்றால், மறைமுகமானவராக இருக்கிறார். இவர் போல வேறு யாரும் இனிமையானவராக இருக்க முடியாது. தந்தை இனிப்பு மலையைப் போன்றவர். இனிமையான தந்தை தான் வந்து கசப்பான உலகத்தை மாற்றி இனிமையாக ஆக்குகிறார். மிகவும் இனிமையான பாபா நம்மை மிகவும் இனிமை யானவராக ஆக்கிக் கொண்டிருக்கிறார். மீண்டும் அதேபோல தனக்குச் சமமாக ஆக்குகிறார். யார் எப்படி இருப்பார்களோ அப்படியே பிறரையும் ஆக்குவார்கள் அல்லவா!. ஆக, இப்படி மிக மிக இனிமையானவராக ஆவதற்காக இனிமையான தந்தை மற்றும் இனிமையான ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும்.

பாபா மீண்டும் மீண்டும் குழந்தைகளுக்குக் கூறுகிறார் -இனிமையான குழந்தைளே! தன்னை அசரீரி என்று புரிந்து கொண்டு என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நினைவின் மூலம் உங்களுடைய அனைத்து துன்பங்களும் நீங்கி விடும். நீங்கள் எப்போதும் ஆரோக்கியமும் செல்வமும் நிறைந்தவர்களாக ஆகி விடுவீர்கள். நீங்கள் மிகவும் இனிமையானவராய் ஆகி விடுவீர்கள். ஆத்மா இனிமையானதாக ஆகி விட்டால் பிறகு சரீரமும் கூட இனிமையானதாக கிடைக்கும். நாம் மிகவும் அன்பான தந்தையின் குழந்தைகள் என்ற போதை இருக்க வேண்டும். ஆகவே, நாம் பாபாவின் வழிப்படி நடக்க வேண்டும். மிகவும் இனிமையிலும் இனிமையான பாபா நம்மை மிகவும் இனிமையானவராக ஆக்குகிறார். உங்களின் வாயிலிருந்து எப்போதும் இரத்தினங்கள் தான் வெளிப்பட வேண்டும் என்று மிகவும் அன்பான தந்தை கூறுகிறார். எந்த கற்களும் (கசப்பான வார்த்தைகள்) வெளிப்படக் கூடாது. எந்த அளவு இனிமையானவர் ஆகிறோமோ அந்த அளவு தந்தையின் பெயரை பிரபலப்படுத்துவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைப் பின்பற்றினீர்கள் என்றால் பிறகு உங்களை மற்ற அனைவரும் பின்பற்றுவார்கள்.

பாபா உங்களுடைய ஆசிரியராகவும் இருக்கிறார் அல்லவா. எனவே, ஆசிரியர் கண்டிப்பாக குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவார் - குழந்தைகளே, தினம்தோறும் தம்முடைய நினைவின் சார்ட்டை வையுங்கள். வியாபாரிகள் இரவில் கணக்கு பார்க்கிறார்கள் அல்லவா! ஆக நீங்களும் வியாபாரிகள், தந்தையிடம் எவ்வளவு உயர்ந்த வியாபாரத்தை செய்கிறீர்கள். எந்தளவு தந்தையை அதிகமாக நினைவு செய்வீர்களோ, அந்தளவு தந்தையிடமிருந்து அளவற்ற சுகத்தை அடைவீர்கள், சதோ பிரதானமாக ஆவீர்கள். தினந்தோறும் தன்னை சோதிக்க வேண்டும். நாரதருக்கு கூறப்பட்டதல்லவா - நான் லட்சுமியை மணமுடிக்க தகுதிவாய்ந்தவனாக உள்ளேனா? என்று கண்ணாடியில் தன் முகத்தை பார். நீங்களும் கூட நான் இப்படி ஆவதற்கு தகுதிவாய்ந்தவனா? என்று பார்க்க வேண்டும். நமக்குள் என்னென்ன குறைகள் இருக்கின்றன? ஏனென்றால் குழந்தைகளாகிய நீங்கள் முழுமை அடைய வேண்டும். தந்தை வந்திருப்பதே முழுமை ஆக்குவதற்காக. ஆக நேர்மையுடன் தன்னை சோதிக்க வேண்டும் - நான் உயர் பதவி அடைய முடியாதபடி எனக்குள் என்னென்ன குறைகள் இருக்கின்றன? என்று புரிந்து கொள்கிறோம். இந்த பூதங்களை விரட்டுவதற்கான யுக்திகளை தந்தை கூறிக் கொண்டே இருக்கிறார். தந்தை அமர்ந்து அனைத்து ஆத்மாக்களைப் பார்க்கிறார், யாருடைய குறையாவது பார்த்தார் என்றால், இவர்களுடைய இந்த தடை வெளியேறட்டும் என்று கரண்ட் (சக்தி) கொடுக்கிறார். எந்த அளவு தந்தைக்கு உதவி செய்து தந்தையின் மகிமை செய்து கொண்டே இருப்பீர்களோ அந்தளவு இந்த பூதங்கள் வெளியேறிக் கொண்டே இருக்கும் மேலும் உங்களுக்கு மிகவும் குஷியாக இருக்கும். ஆகையால், தன்னை முழுமையாக சோதிக்க வேண்டும் - முழு நாளில் மனம், சொல், செயலால் யாருக்கும் துக்கத்தை கொடுக்கவில்லை தானே? சாட்சியாகி தனது நடத்தையைப் பார்க்க வேண்டும். பிறருடைய நடத்தையைக் கூட பார்க்க முடிகிறது. ஆனால், முதலில் தன்னைப் பார்க்க வேண்டும். பிறரை மட்டும் பார்ப்பதனால் தன்னை மறந்துவிடுகிறீர்கள். ஒவ்வொருவரும் தம்முடைய சேவையை செய்ய வேண்டும். பிறருக்கு சேவை செய்வது என்றால், தனக்காக சேவை செய்வதாகும். நீங்கள் சிவபாபாவின் சேவையை செய்வதில்லை. சிவபாபாவோ சேவை செய்ய வந்துள்ளார் அல்லவா!

பிராமண குழந்தைகளாகிய நீங்கள் மிக மிக மதிப்பு வாய்ந்தவர்கள், நீங்கள் சிவபாபாவின் வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் அமர்ந்துள்ளீர்கள். நீங்கள் பாபாவின் பாதுகாப்பில் இருந்து அமரர் ஆகின்றீர்கள். நீங்கள் காலனின் மீது வெற்றி அடைகிறீர்கள். சிவாபாபாவுடையவராக ஆகிவிட்டீர்கள் என்றால், பாதுகாப்பு நிறைந்தவராக ஆகிவிட்டீர்கள். மற்றபடி உயர் பதவி அடைவதற்காக முயற்சி செய்ய வேண்டும். உலகில் மனிதர்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அவை அனைத்தும் அழியப் போகிறது. எதுவுமே இருக்காது. குழந்தைகளாகிய உங்களிடம் இப்போது எதுவுமே இல்லை. இந்த தேகம் கூட இல்லை. இதைக் கூட தந்தைக்கு கொடுத்துவிடுங்கள். யாரிடம் எதுவுமே இல்லையோ அவர்களிடம் எல்லாமே உள்ளது போலாகும். நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடம் வியாபாரம் செய்வதே எதிர்கால புதிய உலகத்திற்காக. பாபா தேகத்துடன் சேர்த்து இருக்கக் கூடிய அனைத்து குப்பைகளையும் உங்களுக்கு கொடுக்கிறோம் மற்றும் உங்களிடமிருந்து பிறகு அங்கே அனைத்தையும் பெற்றுக் கொள்வோம் என்று கூறுகிறீர்கள். ஆக, நீங்கள் பாதுகாக்கப்பட்டுவிட்டீர்கள். அனைத்தும் பாபாவுடைய இரும்பு பெட்டியில் பாதுகாக்கப்பட்டுவிட்டது. குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். இன்னும் சிறிது நேரம் தான் உள்ளது. பிறகு நாம் நம்முடைய இராஜ்யத்தில் இருப்போம். உங்களை யாராவது கேட்டால், ஆஹா நாங்களோ எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து சுகத்தின் ஆஸ்தியை அடைந்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறுங்கள். எப்போதும் ஆரோக்கியமும் செல்வமும் நிறைந்தவர்களாக ஆகிறோம். எங்களுடைய அனைத்து மன விருப்பங்களும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்று சொல்லுங்கள்.

தந்தை புரிய வைக்கின்றார் - இனிமையான குழந்தைகளே! இப்போது ஆத்ம அபிமானி ஆகுங்கள். யோக சக்தி மூலம் நீங்கள் பிறருக்கு கொஞ்சம் புரிய வைத்தீர்கள் என்றாலும் உடனடியாக அவர்களுக்கு அம்பு தைத்துவிடும் (புரிந்துவிடும்). யாருக்காவது அம்பு தைத்தது என்றால், ஒரேடியாக காயம் ஏற்பட்டுவிடுகிறது. முதலில் காயம் ஏற்படுகிறது பிறகு பாபாவுடையவர்களாக ஆகின்றனர். தந்தையை அன்போடு நினைவு செய்தார்கள் என்றால், தந்தையையும் கூட கவர்ந்து ஈர்க்கிறது. பலர் முற்றிலும் நினைவே செய்வதில்லை. பாபாவுக்கு இரக்கம் ஏற்படுகிறது. ஆனாலும் கூட குழந்தைகளே! முன்னேற்றத்தை அடையுங்கள் என்று கூறுவார். முன்வரிசையில் வாருங்கள். எவ்வளவு உயர்ந்த பதவியை அடைவீர்களோ அவ்வளவு அருகாமையில் வருவீர்கள் மற்றும் அந்தளவு அளவற்ற சுகத்தை அடைவீர்கள். பதீதபாவனர் ஒரு தந்தைதான் ஆவார். ஆகையால் ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஒரு தந்தை மட்டும் அல்ல, கூட கூடவே இனிமையான வீட்டையும் நினைவு செய்ய வேண்டும். இனிமையான வீட்டை மட்டும் கூட அல்ல. செல்வங்களும் தேவை ஆகவே சொர்க்கத்தையும் கூட நினைவு செய்ய வேண்டும். கண்டிப்பாக தூய்மை அடைய வேண்டும். முடிந்தளவு குழந்தைகள் உள்நோக்கு முகத்துடன் இருக்க வேண்டும். அதிகம் பேசாதீர்கள். அமைதியாக இருங்கள். உள்நோக்கு முகத்துடன் இருங்கள். மிகவும் இனிமையாகப் பேசுங்கள். யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். கோபம் என்ற பூதம் இருந்தது என்றால், நினைவில் இருக்க முடியாது. தந்தை எவ்வளவு இனிமையானவர், எனவே குழந்தைகளுக்கும் புரிய வைக்கிறார் - புத்திக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தாதீர்கள். வெளிமுகத்தவராக ஆகாதீர்கள், உள்நோக்கு முகத்தில் இருங்கள்.

தந்தை எவ்வளவு அன்பானவர் தூய்மையானவர். குழந்தைகளாகிய உங்களையும் கூட தமக்குச் சமமாக தூய்மையானவராக ஆக்குகிறார். நீங்கள் எவ்வளவு தந்தையை நினைவு செய்கிறீர்களோ அவ்வளவு அன்பு நிறைந்தவராக ஆவீர்கள். தேவதைகள் எவ்வளவு அன்பு நிறைந்தவர்கள். இன்று வரையிலும் கூட அவர்களுடைய ஜடசித்திரங்களை பூஜித்தபடி இருக்கின்றனர். குழந்தைகளே! நீங்கள் மீண்டும் இப்படி அன்பு நிறைந்தவர் ஆக வேண்டும் என்று தந்தை கூறுகிறார். எந்த தேகதாரியும் எந்த பொருளும் கடைசியில் நினைவுக்கு வரக்கூடாது. அமர்ந்தபடியே அன்பு கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க வேண்டும், அந்தளவு தந்தையை நினைவு செய்ய வேண்டும். பாபா, ஓ! இனிமையான பாபா தங்களிடமிருந்து எங்களுக்கு அனைத்தும் கிடைத்து விட்டன. பாபா நீங்கள் எங்களை எவ்வளவு அன்பு நிறைந்தவர்களாக ஆக்குகிறீர்கள். ஆத்மா அன்பு நிறைந்ததாக ஆகிறதல்லவா! தந்தை மிகவும் அன்பாகவும் தூய்மையாகவும் இருக்கிறார். அதுபோல தூய்மையானவர் ஆக வேண்டும். மிகுந்த அன்போடு தந்தையை நினைவு செய்ய வேண்டும். பாபா உங்களைத்தவிர எங்கள் முன்னால் வேறு யாரும் (நினைவில் கூட) வரக்கூடாது. தந்தை போன்ற அன்பானவர் யாரும் இல்லை. ஒவ்வொருவரும் அந்த ஒரு பிரியதர்ஷனின் பிரியதர்ஷினி ஆகின்றனர். ஆக, அந்த பிரியதர்ஷனை மிகவும் நினைவு செய்ய வேண்டும். அந்த ஸ்தூலமான பிரியதர்ஷன் - பிரியதர்ஷினிகள் ஒன்றாக இருப்பதில்லை. ஒருமுறை பார்த்துக் கொள்வார்கள் அவ்வளவு தான். ஆக தந்தை கூறுகிறார் - இனிமையான குழந்தைகளே என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் படகு கரைசேர்ந்துவிடும். எந்த இனிமையான தந்தை மூலமாக நாம் வைரம் போல் ஆகின்றோமோ, அப்படிப்பட்ட தந்தையிடம் நமக்கு எவ்வளவு அன்பு உள்ளது. மிகவும் அன்போடு நினைவு செய்து உள்ளுக்குள் மெய்சிலிர்க்க வேண்டும். என்னவெல்லாம் குறைகள் உள்ளனவோ அவைகளை நீக்கி தூய்மையான வைரம் ஆக வேண்டும். ஒருவேளை சிறிது குறை இருந்தது என்றாலும் மதிப்பு குறைந்து விடும். தன்னை மிகவும் மதிப்பு வாய்ந்த வைரமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். தந்தையின் நினைவு மனதை ஈர்க்க வேண்டும். மறக்கவேக் கூடாது. இன்னும் அதிகமாக நினைவு செய்ய வேண்டும். பாபா பாபா என்று ஒரேடியாக குளிர்ந்து விட வேண்டும். தந்தையிடமிருந்து ஆஸ்தி எவ்வளவு பெரியதாக கிடைக்கிறது.

குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் தமது தெய்வீக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். முயற்சி அனைவரும் செய்கின்றனர். யார் அதிக முயற்சி செய்கின்றனரோ அவர்கள் அதிகமான பரிசை அடைகின்றனர். இது சட்டமாகும். ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதை தெய்வீக இராஜ்யம் என்று கூறுங்கள் அல்லது மலர்த் தோட்டம் என்று கூறுங்கள். தோட்டத்திலும் கூட வரிசைக்கிரமமாக மலர்கள் இருக்கும். சில மிகவும் முதல் தரமான பழம் கொடுக்கின்றன, சில கொஞ்சம் பழங்களைக் கொடுக்கின்றன. இங்கும் கூட அப்படித்தான் உள்ளது. கல்பத்திற்கு முன்பு போலவே வரிசைக்கிரமமான முயற்சிக்குத் தகுந்தாற்போல இனிமையானவராக ஆகிக் கொண்டிருக்கின்றனர், நறுமணமிக்கவராகவும் ஆகிக் கொண்டிருக்கின்றனர். வித விதமான மலர்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு இந்த நிச்சயம் உள்ளது - எல்லைக்கப்பாற்பட்ட தந்தை மூலமாக நாம் சொர்க்கத்தின் எஜமானன் ஆகிக்கொண்டிருக்கிறோம். சொர்க்கத்தின் எஜமானனாக ஆவதில் மிகவும் குஷி ஏற்படுகிறது. ஆக, தந்தை அமர்ந்து குழந்தைகளைப் பார்க்கின்றார். வீட்டில் தலைவரின் பார்வை இருக்கும் அல்லவா. இவர்களிடம் என்னென்ன குணங்கள் உள்ளன என பார்க்கிறார். என்னென்ன அவகுணங்கள் உள்ளன. குழந்தைகளும் அறிவார்கள். இதனால் பாபா கூறுகிறார் - தமது குறைபாடுகளை நீங்களே எழுதிக் கொண்டு வாருங்கள். யாருமே சம்பூரணமாக ஆகவில்லை. ஆம், ஆக வேண்டும். ஒவ்வொரு கல்பமும் ஆகியிருந்தீர்கள். தந்தை புரிய வைக்கிறார் - அனைத்து குறைபாடுகளும் தேக அபிமானத்தினுடையதாக உள்ளது. தேக அபிமானம் மிகவும் கஷ்டப்படுத்துகிறது. நிலையை உயர்த்துவதற்கு விடுவதில்லை. இந்த தேகத்தையும் மறக்க வேண்டும். இந்த பழைய உடலை விட்டு விட்டுச் செல்ல வேண்டும். தெய்வீக குணங்களையும் இங்குதான் தாரணை செய்து செல்ல வேண்டும். (வீட்டுக்கு) செல்ல வேண்டும் என்றால் எந்த குறையும் இருக்கக் கூடாது. நீங்கள் வைரமாக ஆகிறீர்கள் அல்லவா. என்னென்ன குறைகள் உள்ளன என்பதை அறிந்துள்ளீர்கள். அந்த வைரத்தில் கூட குறை இருக்கிறது, ஆனால் அதிலிருந்து அதனை நீக்க முடியாது. ஏனென்றால் ஜடப் பொருள் அல்லவா. அதனை பிறகு துண்டிக்க வேண்டியிருக்கும். நீங்களோ சைதன்யமான (உயிரோட்டம் நிறைந்த) வைரங்கள். எனவே இருக்கக் கூடிய குறைகள் அனைத்தையும் ஒரேடியாக நீக்கிக் கொண்டு இறுதிவரை முயன்று குறையற்றவர் ஆக வேண்டும். ஒருவேளை குறையை நீக்கவில்லை என்றால் மதிப்பு குறைந்து விடும். நீங்கள் சைதன்யமானவர் என்பதால் குறையை நீக்க முடியும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும் . ஆன்மீகக் குழந்தைகளூக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம் .

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. முடிந்தவரை உள்நோக்கு முகமுடையவர் ஆகி அமைதியில் இருக்க வேண்டும், அதிகமாக பேசக் கூடாது. அசாந்தியை பரப்பக் கூடாது. மிகவும் இனிமையாகப் பேச வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. கோபம் கொள்ளக் கூடாது. வெளி முகத்தவர் ஆகி புத்திக்கு ஏமாற்றத்தை கொடுக்கக் கூடாது.

2. முழுமையடைவதற்காக எனக்குள் என்னென்ன குறைகள் உள்ளன என்று நேர்மையுடன் தன்னை சோதிக்க வேண்டும். சாட்சியாகி தனது நடத்தையைப் பார்க்க வேண்டும். பூதங்களை விரட்டுவதற்கான (யுக்தி) வழிமுறையை உருவாக்க வேண்டும்.

வரதானம்:
தன்னைத் தான் உணரக் கூடிய தன்மையின் சக்தி மூலமாக இனிமையான அனுபவம் செய்யக் கூடிய சதா சக்திசாலி ஆத்மா ஆவீர்களாக .

இந்த உணரக் கூடிய தன்மையின் சக்தி மிகவுமே இனிமையான அனுபவம் செய்விக்கிறது - சில நேரங்களில் தங்களை தந்தையின் கண்மணி ஆத்மா அதாவது கண்களில் ஒன்றி இருக்கக் கூடிய (சிரேஷ்ட) சிறந்த பிந்து (புள்ளி) என்று உணருங்கள். சில நேரங்களில் நெற்றியில் பிரகாசிக்கக் கூடிய நெற்றியின் மணி, சில நேரங்களில் தன்னை பிரம்மா தந்தையின் சகயோகி, வலது கரம், பிரம்மாவின் தோள்கள் என்று உணருங்கள். சில நேரங்களில் அவ்யக்த ஃபரிஷ்தா சொரூபத்தை உணருங்கள். இந்த உணரக் கூடிய தன்மையின் ஆற்றலை அதிகரியுங்கள். அப்பொழுது சக்திசாலி ஆகி விடுவீர்கள். பிறகு சிறிய கறை கூட தெளிவாக தென்படும் மேலும் அதை (பரிவர்த்தனை) மாற்றம் செய்து கொண்டு விடுவீர்கள்.

சுலோகன்:
அநேகரின் இதயங்களின் ஆசிகளை பெற்றுக் கொண்டே சென்றீர்கள் என்றால் உங்களது முயற்சி எளிதாகி விடும் .


பிரம்மா தந்தைக்கு சமானமாக ஆவதற்கான விசேஷ புருஷார்த்தம்

எப்படி பிரம்மா தந்தை விதை ரூப நிலை அதாவது சக்திசாலி நிலையின் விசேஷ பயிற்சி செய்து முழு உலகிற்கு சக்தி ( சகாஷ் ) அளித்தார் . அதே போல ( ஃபாலோ ஃபாதர் ) தந்தையை பின்பற்றுங்கள் , ஏனெனில் இந்த நிலை லைட் ஹவுஸ் , மைட் ஹவுஸ் - ன் ( ஒளி மற்றும் சக்தியின் இருப்பிடம் ) காரியம் செய்கிறது . எப்படி விதை மூலமாக இயல்பாகவே முழு விருட்சத்திற்கும் தண்ணீர் கிடைத்து விடுகிறது , அதே போல விதை ரூப நிலையில் நிலைத்திருந்தீர்கள் என்றால் இயல்பாகவே உலகிற்கு ஒளியின் தண்ணீர் கிடைத்து விடும் .