25.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! எப்படியெல்லாம் பாபா உங்களை அலங்கரிக்கிறாரோ அதுபோல் நீங்களும் மற்றவர்களை அலங்கரிக்க வேண்டும், முழு நாளும் சேவை செய்யுங்கள், யார் வருகிறார்களோ அவர்களுக்குப் புரிய வையுங்கள், கவலைப்படுவதற்கான விஷயம் எதுவும் இல்லை.

 

கேள்வி:

இந்த ஞானத்தை கோடியில் சிலர் தான் புரிந்து கொள்கிறார்கள் மற்றும் தாரணை செய்கிறார்கள் - ஏன்?

 

பதில்:

ஏனென்றால் நீங்கள் அனைவரும் புதிய விஷயங்களைக் கூறுகிறீர்கள். நீங்கள் பரமாத்மா புள்ளியாக இருக்கின்றார் என்று சொல்லும்போது கேட்டு குழம்பி விடுகிறார்கள். சாஸ்திரங்களில் இந்த விஷயங்களை எல்லாம் கேட்டதே இல்லை. இவ்வளவு காலம் செய்துள்ள பக்தி இழுக்கிறது ஆகையினால் உடனே புரிந்து கொள்வதில்லை. பாபா நாங்கள் கண்டிப்பாக உலகத்திற்கு எஜமானர்களாக ஆவோம் என்று சொல்லும் விட்டில் பூச்சி போன்றவர்களும் சிலர் இருக்கிறார்கள். நமக்கு இப்படிப்பட்ட பாபா கிடைத்திருக்கிறார் என்றால் நாம் எப்படி விட்டு விட முடியும்? அனைத்தையும் அர்ப்பணம் செய்வதற்கு உற்சாகம் பொங்கி வரும்.

 

பாட்டு:-

தூர தேசத்தில் இருக்கக் கூடியவரே..........

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் நாம் வழி போக்கர்கள் என்பதை நல்ல விதத்தில் தெரிந்துள்ளார்கள். இது நம்முடைய தேசம் இல்லை. இது எல்லையற்ற நாடகம் மிகப்பெரிய மேடையாகும். எவ்வளவு பெரிய-பெரிய (சூரிய, சந்திரன்) விளக்குகள் இருக்கின்றன, இவை எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்றன. நாம் அனைவரும் நடிகர்கள் மற்றும் வரிசைக்கிரமமாக தம்முடைய நடிப்பின்படி நேரத்திற்கு இங்கே நடிப்பை நடிக்க வருகின்றோம் என்பதை ஆத்மா தெரிந்திருக்கிறது. முதல்-முதலில் நீங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்கிறீர்கள் பிறகு இங்கே வருகின்றீர்கள். இது நன்றாகப் புரிந்து கொள்ள மற்றும் தாரணை செய்வதற்கான விஷயமாகும். நாடகத்தின் நடிகர்களாக இருந்து கொண்டு, ஒருவேளை ஒருவர் மற்றவருடைய தொழிலை தெரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்களை என்னவென்று சொல்வது? நாடகத்தின் முதல்-இடை-கடைசியைத் தெரிந்து கொள்வதின் மூலம் நீங்கள் இப்படி ஆகின்றீர்கள். ஆக இந்தப் படிப்பு அனைத்திலும் தனிப்பட்டதாகும். பாபா விதை ரூபமாக இருக்கின்றார், ஞானக்கடலாக இருக்கின்றார். எப்படி அந்த பொதுவான மரம் மற்றும் விதை இருக்கிறது அதை தெரிந்துள்ளீர்கள் அல்லவா! முதலில் சிறு-சிறு இலைகள் வருகின்றன. பிறகு பெரிய-பெரியதாக ஆகி மரம் எந்தளவு வளருகிறது! எவ்வளவு காலம் பிடிக்கிறது உங்களுடைய புத்தியில் இந்த ஞானம் இருக்கிறது. பாபா ஒரு முறை தான் வருகின்றார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! இது அனாதியான நாடகமாகும். பாபா சொர்க்கத்தைப் படைப்பவராக இருக்கின்றார், சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யும் இறை தந்தையாக இருக்கின்றார். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய தந்தை வர வேண்டியிருக்கிறது. தூர தேசத்தில் இருப்பவரே......... என்ற புகழும் இருக்கிறது. இது இராவண இராஜ்யம் மாற்றானுடையதாகும். இராவண இராஜ்யத்தில் இராமன் வர வேண்டும். உங்களுடைய புத்தியில் தான் ஞானம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் வழிபோக்கர்கள், ஒன்றாக நடிப்பை நடிக்க வர மாட்டீர்கள் என்பதை பாபா ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார். அனைவருக்கும் முதலாவதாக தேவதைகள் பற்றி உங்களுக்கு தெரியும், அந்த சமயத்தில் வேறு யாரும் இருக்கவில்லை. மிகவும் குறைவானவர்களே இருக்கிறார்கள் பிறகு அதிகரிக் கிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சரீரத்தை விட்டு விட்டு அங்கே வருகிறீர்கள். பாபா தான் இந்த புத்தியை கொடுக்கிறார். ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்போது ஞானம் கிடைத்திருக்கிறது. நாம் விதை மற்றும் மரத்தின் முதல்-இடை-கடைசியை தெரிந்திருக்கிறோம். விதை மேலே இருக்கிறது கீழே முழு மரமும் பரவியிருக்கிறது. இப்போது மரம் முழுவதும் உளுத்துப்போன நிலையில் இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த மரத்தின் முதல்-இடை-கடைசியை தெரிந்து கொண்டீர்கள். முன்பு ரிஷி முனிவர்களிடம் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல் இடை கடைசியை தெரியுமா என்று கேட்ட போது தெரியாது-தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். அவர்களே தெரிந்திராத போது பரம்பரையாக எப்படி இருக்க முடியும். இந்த விஷயங்கள் அனைத்தையும் நல்ல விதத்தில் தாரணை செய்ய வேண்டும். மறக்கக் கூடாது. படிப்பை படிக்கத்தான் வேண்டும். படிப்பு மற்றும் யோகபலத்தின் மூலம் தான் நீங்கள் பதவியை அடைகிறீர்கள். கண்டிப்பாக தூய்மையும் ஆக வேண்டும். பாபாவைத் தவிர வேறு யாரும் தூய்மையாக்க முடியாது. அழியக்கூடிய செல்வத்தை தானம் செய்கிறார்கள் என்றால் இராஜ்ய குலத்தில் அல்லது நல்ல குலத்தில் பிறவி எடுக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு மிகப்பெரிய வீட்டில் பிறவி கிடைக்கிறது. புதிய உலகம் மிகவும் சிறியதாக இருக்கிறது. சத்யுகத்தில் தேவதைகளுடையது ஒரு கிராமம் போல் இருக்கிறது. ஆரம்பத்தில் மும்பை எவ்வளவு சிறியதாக இருந்தது. இப்போது பாருங்கள் எவ்வளவு வளர்ந்து விட்டது. ஆத்மாக்கள் அனைத்தும் தன்னுடைய நடிப்பை நடிக்கிறது, அனைத்தும் வழிபோக்கர்களாக இருக்கின்றன. பாபா ஒரு முறையே வரும் வழிபோக்கர் ஆவார். நீங்களும் கூட ஒரு முறையே வரும் வழிபோக்கர்களாவீர்கள். நீங்களும் ஒருமுறை தான் வருகிறீர்கள். பிறகு மறுபிறவி எடுத்து நடிப்பை நடித்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் அமரலோகத்திற்குச் செல்வதற்காக அமரகதை கேட்கிறீர்கள், இதன்மூலம் நீங்கள் 21 பிறவிகள் உயர்ந்த பதவி அடைகிறீர்கள். 21 தலைமுறை என்று சொல்கிறார்கள் அல்லவா, தலைமுறை என்றால் வயதாகும் வரையாகும். பிறகு வேறொரு சரீரத்தை தாங்களாகவே எடுப்பீர்கள். அகால மரணம் நடக்காது. அது அமரலோகமாகும். காலன் என்ற பெயரே கிடையாது. திடீரென்று மரணம் நடப்பதில்லை. நீங்கள் ஒரு சரீரத்தை விட்டு விட்டு மற்றொன்றை எடுக்கிறீர்கள். துக்கத்தின் விஷயம் எதுவும் கிடையாது. பாம்பிற்கு தூக்கம் ஏற்படுமா என்ன? இன்னுமே குஷி ஏற்படும். இபோது உங்களுக்கு ஆத்மாவின் ஞானம் கிடைக்கிறது. ஆத்மா தான் அனைத்தையும் செய்கிறது. ஆத்மாவில் தான் புத்தி இருக்கிறது. ஒவ்வொரு விஷயமும் அதிசயமாக இருக்கிறது.

 

பாபா கூறுகின்றார், இனிமையிலும் இனிமையான குழந்தைகளே உங்களுடைய சொர்க்கம் மிகவும் அதிசயமான உலகமாகும். இராவண ராஜ்யத்தில் 7 அதிசயங்களை காட்டுகிறார்கள். இராம இராஜ்யத்தில் பாபாவின் ஒரேயொரு அதிசயம் சொர்க்கமாகும், அது அரைக்கல்பம் அழியாமல் இருக்கிறது. மனிதர்கள் அதை பார்த்தது கூட கிடையாது, இருந்தாலும் அனைவருடைய வாயிலிருந்தும் சொர்க்கம் என்ற பெயர் கண்டிப்பாக வருகிறது. இப்போது நீங்கள் புத்தியின் மூலம் தெரிந்துள்ளீர்கள் மற்றும் சிலர் காட்சியும் பார்த்திருக்கிறார்கள். பாபாவும் கூட வினாசம் மற்றும் நம்முடைய இராஜ்யத்தை பார்த்திருக்கிறார். அர்ஜூனனுக்கும் கூட காட்சியில் காட்டியிருக்கிறார். சரியாக இப்போது கீதையின் கதையாகும். பாபா கூறுகின்றார், குழந்தைகளே இது புருஷோத்தம சங்கமயுகம் இப்போது நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தை கற்றுக் கொடுக்கின்றேன் மேலும் அந்தளவிற்கு உயர்ந்தவர்களாக மாற்றுகின்றேன். உலகத்தில் இந்த விஷயங்களை யாரும் தெரிந்திருக்க வில்லை. நீங்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றீர்கள். இங்கே மனிதர்கள் இறக்கிறார்கள் என்றால் ஆத்மா இருளில் இருக்கக் கூடாது என்று தீபம் ஏற்றுகிறார்கள். சத்யுகத்தில் இது போன்ற விஷயங்கள் நடப்பதில்லை. சத்யுகத்தில் ஆத்மாக்கள் அனைவருடைய தீபமும் ஏற்றப்பட்டே இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒளி இருக்கிறது. இங்கே மனிதர்கள் வீட்டிற்கு வீடு விளக்கு ஏற்றுகிறார்கள். இந்த விஷயங்கள் அனைத்தையும் நன்றாக புத்தியில் தாரணை செய்ய வேண்டும் என்று பாபா கூறுகின்றார். பாபா மற்றும் இராஜ்யத்தை நினைவு செய்து கொண்டே இருங்கள். இவ்வளவு காலம் நாம் இராஜ்யம் செய்தோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். யார் நீண்ட காலம் தொலைந்து போய் இருக்கிறார்களோ, அவர்களிடம் தான் பாபா பேசுகின்றார், படிப்பிக்கின்றார். இந்த சமயத்தின் விஷயங்களைத் தான் பண்டிகைகளாக கொண்டாடுகிறார்கள் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள். பாரதத்தில் தான் சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள். சிவன் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் ஆவார். அவர் பாரதத்தில் எப்படி வருகின்றார் என்பதை அவரே கூறியிருக்கின்றார், நான் இயற்கையை ஆதார மாக எடுத்து வர வேண்டியிருக்கிறது, ஆகையினால் தான் பேசுகின்றேன். இல்லையென்றால் குழந்தைகளை ஞானத்தினால் எப்படி அலங்கரிக்க முடியும். இப்போது உங்களுடைய அலங்காரம் நடந்து கொண்டிருக்கிறது. பிறகு நீங்கள் மற்றவர்களுக்கு மனிதனிலிருந்து தேவதையாக மாற்றும் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இது மிகவும் சகஜமானதாகும். ஆனால் எதையும் புரிந்து கொள்ளாத அளவிற்கு மனிதர்களுடைய புத்தி மந்தமாகி விட்டது. நேரம் பிடிக்கிறது. நீங்கள் கண்காட்சியில் அனைத்து விஷயங்களையும் புரிய வைக்கின்றீர்கள். யார் வந்தார்களோ எப்படி புரிய வைத்தீர்களோ அனைத்தும் நாடகமாகும். கவலைபடுவதற்கான விஷயம் எதுவும் இல்லை. பாபா, நிறைய மண்டை உடைத்துக் கொள்கிறோம் கோடியில் சிலர் தான் வருகிறார்கள், என்று குழந்தைகள் கூறுகிறார்கள். அப்படித் தான் நடக்கும். நீங்கள் பரமாத்மா புள்ளி என்று சொல்கிறீர்கள். சாஸ்திரங்களில் அப்படிப்பட்ட விஷயங்கள் எதுவும் இல்லை ஆகையினால் குழம்பி விடுகிறார்கள். நீங்களும் கூட ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. சிலருக்கு புரிந்து கொள்வதற்கு இரண்டு வருடங்கள் கூட ஆனது. போய் விடுகிறார்கள் பிறகு வருகிறார்கள். அவ்வளவு சுலபமாக பக்தி விடுவதில்லை, அது தன் பக்கம் இழுக்கிறது. இதுவும் நாடகத்தில் நடிப்பாக இருக்கிறது. இதை பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாரும் தெரிந்திருக்கவில்லை. விராட ரூபத்தின் அர்த்தத்தையும் கூட புரிந்துள்ளீர்கள், இது உங்களுடைய குட்டிகர்ண விளையாட்டாகும். நீங்கள் சக்கரத்தை சுற்றுகிறீர்கள். இதனை விராட நாடகம் என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றிய ஞானமும் உங்களுக்கு இருக்கிறது. அந்த கல்லூரிகளில் என்னென்ன படித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே அந்த விஷயங்கள் கிடையாது. அறிவியல் வளர்ந்து கொண்டே இருக்கிறது, அதன்மூலம் வினாசம் நடக்க வேண்டும். இப்போது நீங்கள் புரிய வைக்கலாம் ஆனால் யாராவது சிலர் தான் இது மிகவும் நல்ல விஷயம் என்று சொல்பவர்கள் கிடைப்பார்கள். இதை தினமும் புரிய வைக்க வேண்டும். எவ்வளவு தான் வேலை இருந்தாலும் நாங்கள் பாபாவிடமிருந்து கண்டிப்பாக ஆஸ்தி எடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். இது குறைவற்ற, கணக்கிலடங்காத வருமானமாகும்.

 

குழந்தைகளே என்னுடைய புத்தியில் முழு மரத்தின் ஞானம் இருக்கிறது, இப்போது அதை நீங்களும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பாபா கூறுகின்றார். பாபா என்ன புரிய வைக்கின்றாரோ, அது மிகவும் மிகச்சரியானதாகும். ஒரு வினாடியைப் போல் மற்றொன்று இருக்காது. எவ்வளவு ஆழமானதாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு சக்கரத்தை சுற்றியிருக்கிறீர்கள். இந்த நாடகம் பேன் போல் சென்று கொண்டிருக்கிறது. ஒரு முறை சுற்றுவதற்கு 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. அதில் முழு விளையாட்டும் நடக்கிறது. அதைத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கே பசுக்கள் கூட மிகவும் நன்றாக இருக்கும். உங்களுடைய பதவி எப்படியோ அப்படி பொருட்கள், அப்படி மாளிகை இருக்கும். பகட்டு இருக்கிறது. குஷியும் கூட ஆத்மாவிற்குத் தான் ஏற்படுகிறது. நம்முடைய ஆத்மா திருப்தி அடைகிறது. திருப்தியான பரமாத்மா என்று சொல்லப்படுவதில்லை. உங்களுடைய ஆத்மா திருப்தி அடைந்ததா என்று கேட்பார்கள்? ஆமாம் பாபா திருப்தி அடைந்தது. ஆக இந்த விளையாட்டு நடந்து வருகிறது. பாபா என்ன புரிய வைக்கின்றாரோ, இதுவும் நாடகத்தின் விளையாட்டாகும். பாபா இப்போது உங்களை உயிர்ப்பிக்கின்றார். உங்களுடைய சரீரம் கல்பவிருட்சத்திற்குச் சமமாக ஆகி விடுகிறது. அதனுடைய பெயரே அமரலோகமாகும். ஆத்மாவும் அழிவற்றதாக இருக்கிறது, காலன் கொண்டுபோக முடியாது. பாபா ஆத்மாக்களாகிய உங்களோடு பேசுகின்றார். இந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அழிவற்ற ஆத்மாவோடு பேசுகின்றார். ஆத்மா இந்த காதுகளின் மூலம் கேட்கிறது. ஆத்மாக்களாகிய நமக்குத் தான் பாபா படிப்பிக்க வருகின்றார். பாபாவினுடைய பார்வை எப்போதும் ஆத்மாக்களின் மீது இருக்கிறது. உங்களுக்கும் பாபா புரிய வைக்கின்றார், எப்போதும் சகோதர-சகோதர பார்வை வையுங்கள். சகோதரனிடம் நாம் பேசுகின்றோம், பிறகு குற்ற பார்வை செல்லாது. இந்த பயிற்சி நன்றாக இருக்க வேண்டும். நாம் ஆத்மாக்கள், நாம் இத்தனை பிறவிகள் எடுத்து நடிப்பை நடித்திருக்கிறோம். நாம் புண்ணிய ஆத்மாக்களாக இருந்தோம். நாம் தான் தூய்மை யான ஆத்மாக்களாக ஆகியிருக்கிறோம். தங்கத்தின் மீது தான் அழுக்கு சேருகிறது. பின்னால் வரக்கூடிய ஆத்மாக்களுக்கு என்ன சொல்வீர்கள். சில சதவீதம் தங்கத்தினுடையது இருக்கும். தூய்மையாக ஆகி செல்கிறார்கள் ஆனால் சக்தி குறைவாக இருக்கும் அல்லவா. ஓரிரு பிறவிகள் எடுத்திருப்பார்கள், இதனால் என்னவாயிற்று.

 

பாபா என்ன முரளி சொல்கிறாரோ, அது தான் பொக்கிஷமாகும். எதுவரை பாபா கொடுக்கிறாரோ அதுவரை நீங்கள் பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். நினைவின் மூலம் தான் நீங்கள் எப்போதைக்கும் ஆரோக்கியமானவர்களாக ஆகின்றீர்கள். அமைதியாக அமருவதின் மூலம் நிறைய நன்மை இருக்கிறது, மன்மனாபவ. இதனுடைய அர்த்தத்தையும் யாரும் தெரிந்திருக்க வில்லை. பாபா தான் ஒவ்வொரு விஷயத்தின் அர்த்தத்தையும் புரிய வைக்கின்றார். இங்கேயோ அர்த்தமற்றதாக (மாறுபட்டு) இருக்கிறது. அனைத்திலும் பெரிய தவறு ஒருவர் மற்றவர் மீது காமக் கோடாரி வீசுவதாகும், இதன்மூலம் முதல் இடை கடைசி வரை துக்கம் அடைகிறார்கள். அனைத்திலும் மோசமான இம்சை இதுவாகும், ஆகையினால் இதை நரகம் என்று சொல்லப்படுகிறது. சொர்க்கம் மற்றும் நரகத்தின் அர்த்தத்தைக் கூட யாரும் புரிந்து கொள்வதில்லை. சொர்க்கம் முதலாவதாகும், நரகம் கடைசியாகும். நாம் இந்த உலக நாடகத்தின் நடிகர்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நீங்கள் எங்களுக்குத் தெரியாது-தெரியாது என்று சொல்ல மாட்டீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தின் மூலம் எவ்வளவு நல்ல சித்திரங்களை உருவாக்குகிறீர்கள் அதை மனிதர்கள் பார்த்தவுடனேயே குஷியடைந்து விடுவார்கள் மேலும் சகஜமாகவே புரிந்து கொள்வார்கள். இந்த சித்திரங்களை உருவாக்குவதும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. கடைசியில் நீங்கள் நினைவியிலேயே இருப்பீர்கள். சிருஷ்டி சக்கரம் கூட புத்தியில் வந்து விடும். புதிய உலகத்தை உருவாக்குவது யார், பழைய உலகத்தை உருவாக்குவது யார், என்பது போன்ற விஷயங்களை நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். அனைவரும் சதோ ரஜோ தமோவில் வரத்தான் வேண்டும். இப்போது கலியுகமாகும். பாபா வந்து நம்மை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக மாற்றுவார் என்பது யாருக்கும் தெரிய வில்லை. யாருடைய சிந்தனையிலும் வருவதில்லை. உங்களுக்கோ இப்போது முழு சிருஷ்டியின் முதல் இடை கடைசியின் ஞானம் இருக்கிறது. படைப்பவர் தந்தை இவருக்குள் அமர்ந்து நான் ஆத்மாக்களாகிய உங்களுடைய தந்தை என்பதை புரிய வைக்கின்றார். எல்லையற்ற டீச்சராக இருக்கின்றேன். இந்த சங்கமயுகம் புருஷோத்தம யுகமாகும். சத்யுகம் மற்றும் கலியுகத்தை புருஷோத்தமம் என்று சொல்ல முடியாது. சங்கமயுகத்தில் தான் நீங்கள் புருஷோத்தமர்களாக ஆகின்றீர்கள், இப்போது பாபா வந்து இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றார். நாளுக்கு நாள் குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைப்பது மிகவும் சகஜமாக இருக்கும். மரம் வளர்ந்து கொண்டே இருக்கும். விளக்கில் பலியாவதற்கு நிறைய விட்டில் பூச்சிகள் வருகின்றன. இப்படிப்பட்ட பாபாவை யார் விடுவார்கள். பாபா நாங்கள் தங்களுக்கு அருகிலேயே தான் அமர்ந்திருப்போம் என்று சொல்வார்கள். இவை யனைத்தும் தங்களுடையது. இப்படிப்பட்ட உயர்ந்த தந்தையை நாங்கள் ஏன் விட வேண்டும்? நிறைய பேரிடத்தில் அதிக வேகம் வருகிறது. பாபாவிடமிருந்து உலகத்தின் இராஜ்யம் கிடைக்கிறது என்றால் நாங்கள் ஏன் விட்டுவிட்டு செல்ல வேண்டும். இங்கே நாங்கள் சொர்க்கத்தில் அமர்ந்திருக்கிறோம். இங்கே எந்த காலனும் வர முடியாது, ஆனால் பாபாவின் ஸ்ரீமத்தை வாங்க வேண்டும். இப்படி செய்யக் கூடாது என்று பாபா சொல்வார். உற்சாகம் வரும் ஆனால் இப்படி அனைவரும் இங்கே வந்து அமர்ந்து கொள்ள நாடகத்தில் இல்லை. ஆர்வம், உற்சாகம் வருகிறது ஏனென்றால் இவையனைத்தும் அழியப்போகிறது என்பதை தெரிந்திருக்கிறார்கள். யாருக்கு நடிப்பு இருக்கிறதோ அவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் எல்.எல்.பி., .பி.எஸ். போன்றவை படிக்கின்றீர்கள் இதன் மூலம் என்ன கிடைக்கும் என்று பாபா கேட்கின்றார்? நாளை சரீரத்தை விட்டு விட்டால் என்ன கிடைக்கும்? எதுவும் இல்லை. அவை அழியக்கூடிய கல்வியாகும், இது அழிவற்ற கல்வியாகும், இதை அழிவற்ற தந்தை கொடுக்கின்றார். நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக இந்த பிறவியிலேயே தான் ஆக வேண்டும். அந்த நிலை நினைவின் மூலம் தான் ஆவீர்கள். மற்ற அனைத்து தேகத்தின் தர்மங்களையும் விட்டு விட்டு என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். சரீரத்தின் மீது நம்பிக்கை இல்லை. படித்து-படித்து இறந்து விடுகிறார்கள். ஆக பாபாவினுடைய வேலை புரிய வைப்பதாகும். அந்த படிப்பில் என்ன வருமானம் இருக்கிறது மற்றும் இந்த படிப்பில் என்ன வருமானம் இருக்கிறது, என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சிவபாபாவின் பண்டாரா எப்போதும் நிறைந்திருக்கிறது. இவ்வளவு குழந்தைகள் அனைவரும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள், கவலைப்பட எந்தவொரு விஷயமும் இல்லை. பட்டினியால் இறந்து விட முடியாது. குழந்தைகளுக்கு உணவு இல்லையென்றால் லௌகீக தந்தை அவரும் உண்பதில்லை. குழந்தைகளின் துக்கத்தை பாபா பொருத்துக் கொள்ள முடியாது. முதலில் குழந்தைகள் பிறகு தந்தை. அம்மா அனைவருக்கும் கடைசியாக சாப்பிடுகிறார், மிச்சம், மீதி காய்ந்ததை அவர் சாப்பிடுகிறார். நம்முடைய பண்டாராவும் அப்படி ஆகும். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) சகோதர-சகோதர பார்வையை உறுதியாக்க வேண்டும். நாம் ஆத்மா, ஆத்மா சகோதரனிடம் பேசுகிறோம் என்ற பயிற்சியை செய்து குற்ற பார்வையை மாற்ற வேண்டும்.

 

2) பாபா ஞான பொக்கிஷத்தை கொடுக்கின்றார் என்றால் நினைவில் அமர்ந்து அதை புத்தி எனும் பையின் மூலம் பொக்கிஷத்தை நிரப்ப வேண்டும். அமைதியாக அமர்ந்து அழிவற்ற வருமானத்தை சேமிக்க வேண்டும்.

 

வரதானம்:

திரிகாலதர்சி என்ற இருக்கையில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு காரியமும் செய்யக் கூடிய சக்திசாலி ஆத்மா ஆகுக.

 

எந்த குழந்தைகள் திரிகாலதர்சி என்ற இருக்கையில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு காரியமும் செய்கிறார்களோ, பல விசயங்கள் வரும், நடக்கவே செய்யும், தன் மூலமாகவோ, மற்றவர்கள் மூலமாகவோ, மாயையின் மூலம் அல்லது இயற்கையின் மூலம் அனைத்து வகையான பிரச்சனைகள் வரத் தான் செய்யும் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் சுய ஸ்திதி சக்திசாலியாக இருக்கும் போது பிரச்சனைகள் என்பது அவர்கள் முன்பு எதுவும் கிடையாது. ஒவ்வொரு காரியம் செய்வதற்கு முன்பும் அதன் முதல், இடை, கடை மூன்று காலங்களையும் சோதனை செய்து, புரிந்து கொண்டு பிறகு எது செய்தாலும் சக்திசாலியாகி பிரச்சனைகளை கடந்து விடுவீர்கள்.

 

சுலோகன்:

சர்வ சக்தி அல்லது ஞானம் நிறைந்தவர்களாக ஆவது தான் சங்கமயுகத்தின் பிராப்தியாகும்.

 

பிரம்மா பாபாவிற்கு சமம் ஆவதற்கான விசேஷ முயற்சி:

பிரம்மா பாபா விஸ்தாரத்தை சாரத்தில் கொண்டு வந்து தன்னை முழுமையாக ஆக்கிக் கொண்டார். இவ்வாறு சார சொரூபத்தில் இருந்து கொண்டு வீணானவைகளிலிருந்து விடுபடுங்கள். விதை ரூப ஸ்திதியில் நிலைத்திருந்து பல ஆத்மாக்களிடத்தில் நேரத்தின் அறிமுகம் மற்றும் தந்தையின் அறிமுகம் என்ற விதை தெளியுங்கள். அப்போது அந்த விதையின் பலன் மிக நல்லதாக மற்றும் எளிதாக கிடைக்கும்.

 

ஓம்சாந்தி