24.06.2019                           காலை முரளி               ஒம்சாந்தி          மாதேஸ்வரி

ரிவைஸ்    21.06.1964          மதுபன்


 

(காலை வகுப்பில் படிப்பதற்காக மாதேஸ்வரி அவர்களின் இனிமையான மகா வாக்கியம்)

 பாடல்:

இது என்னுடைய சின்னஞ்சிறிய உலகம்.....

ஓம்சாந்தி:

ஞானம் நிறைந்த, எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தை ஆத்மாக்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். ஆத்மாவின் உண்மையான நிலை என்னவாக இருந்ததோ, அது இப்பொழுது வேறு நிலையில் இருக்கிறது. ஆத்மா என்றுமே ஒரே நிலையில் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆத்மா அனாதியாகத் (முதலிலும் முடிவும் இல்லாதததாக) தான் இருக்கிறது, ஆனால் அதனுடைய நிலை மாறிக்கொண்டே இருக்கிறது. எவ்வாறு நேரம் முடிகிறதோ, அதற்குத் தகுந்தபடி ஆத்மாவின் நிலையும் மாறிக்கொண்டே இருக்கிறது., ஆத்மா அனாதி அழிவில்லாதது தான், ஆனால் ஆத்மா எவ்வாறு காரியம் செய்கிறதோ, அவ்வாறு பலனும் அடைகிறது. ஆகையால் செய்ய வைக்கும் ஆத்மாவிற்குத் தான் பொறுப்பு இருக்கிறது. அதனால் இப்பொழுது பாபாவும் கூட அதனிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். ஆத்மாவின் தந்தை பரமபிதா பரமாத்மா என்று அனைவருடைய புத்தியிலும் இருக்கிறது. தந்தை என்று கூறுகிறோம் என்றால் நாம் அவருடைய குழந்தைகள் ஆகிவிட்டோம், அவரும் தந்தை தான் நாமும் தந்தை என்பது அல்ல. ஒருவேளை ஆத்மா தான், பரமாத்மா என்று சொன்னால், ஆத்மாவை தான் பரமபிதா என்றும் சொல்ல வேண்டும். ஆனால் தந்தை மற்றும் மகன் என்ற உறவுமுறையில் தந்தை என்று தான் சொல்ல முடிகிறது. ஒருவேளை நாம் அனைவரும் கூட தந்தையர்கள் என்றால், தந்தை என்று யாரைச் சொல்வது! மகன் மற்றும் தந்தை என்று இரு விசயங்கள் உள்ளன. தந்தை என்ற உறவுமுறை மகனால் உருவாகிறது. மேலும் மகன் என்ற உறவுமுறையால் தான் தந்தை என்ற உறவு வருகிறது. அதனால் தான் பரமபிதா பரமாத்மா என்று சொல்லப்படுகிறது. இப்பொழுது உள்ள மனநிலைக்கும் இதற்கு முன் இருந்த மனநிலைக்கும், வித்தியாசம் உள்ளது என்று இப்பொழுது அப்படிப்பட்ட தந்தை வந்து புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது நான் வந்திருக்கிறேன் அந்த வித்தியாசத்தை அழிப்பதற்காக. உங்களுடைய உண்மையான நிலை என்னவாக இருந்ததோ, அதை இப்பொழுது பிடித்து கொள்ளுங்கள் என்று பாபா ஞானத்தைக் கொடுத்து புரியவைத்துக் கொண்டிருக்கிறார். அதை எவ்வாறு பிடிக்க வேண்டுமென்ற ஞானத்தையும் தருகிறார், மேலும் பலத்தையும் தருகிறார். என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது சிறந்த காரியம் செய்வதற்கான பலம் வரும், இல்லையென்றால், உங்களது செயல் உயர்ந்தாக இருக்காது என்று கூறுகிறார். நாங்கள் நல்ல செயல் செய்ய விரும்புகின்றோம், ஆனால் பிறகு என்ன ஆகிறது என்று தெரிய வில்லை, எங்களது மனம் நல்லதின் பக்கம் செல்வதில்லை, வேறு பக்கம் சென்று விடுகிறது என்று சிலர் கூறுகின்றனர். ஏனெனில், ஆத்மாவில் நல்ல செயல் செய்வதற்கான பலம் இல்லை. நமது மனநிலை தமோபிரதானமாக இருப்பதன் காரணத்தினால், தமோவின் தாக்கம் இப்பொழுது வேகமாக இருக்கிறது, அது நம்மை அழுத்துகிறது. எனவே புத்தி அந்தப் பக்கம் சென்று விடுகிறது, மேலும் நன்மையின் பக்கம் புத்தி செல்வதில் தடை வந்து விடுகிறது. அதனால் பாபா கூறுகிறார் - இப்பொழுது என்னுடன் யோகத்தை ஈடுபடுத்துங்கள். மேலும் நான் என்ன ஞானம் கொடுக்கின்றேனோ, அதன் ஆதாரத்தில் உங்களது பாவச் சுமைகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ, பந்தனங்கள் இருக்கின்றனவோ, எவையெல்லாம் தடைகள் ஆகி, எதிரில் வருகின்றனவோ, அவைகளிடமிருந்து தனது வழியை சுத்தப்படுத்திக் கொண்டே செல்லுங்கள். பின்னர் சிறந்த செயல் செய்து கொண்டேயிருப்பீர்கள், உங்களுக்குள் சதோபிரதானத்தின் அந்த சக்தி வந்துவிடும், அதன் ஆதாரத்தினால், மீண்டும் உங்களுடைய உண்மையான நிலை எதுவாக இருந்ததோ, அதனை அடைந்துவிடுவீர்கள்.

 

பின்னர் எவ்வாறு ஆத்மாவோ, அவ்வாறு உடலும் கிடைக்கும், உலகமும் அவ்வாறே இருக்கும். ஆகவே அப்பேர்ப்பட்ட உலகத்தை இப்பொழுது பரமபிதா பரமாத்மா உருவாக்குகிறார். அதனால் தான் அவரை உலகத்தைப் படைப்பவர் (World creater) என்று சொல்கிறோம். ஆனால் உலகம் என்று ஒன்று ஒருபொழுதும் இல்லவே இல்லை, அதை அவர் அமர்ந்து உருவாக்குகிறார் என்று அர்த்தமல்ல. ஆனால் அம்மாதிரி மற்றும் இந்த முறையில் (இராஜ யோக மூலம்) உலகத்தை உருவாக்குகிறார். வேறுயாரையுமே உலகத்தை உருவாக்குபவர் என்று சொல்லமாட்டோம், கிறிஸ்து வந்தார், புத்தர் வந்தார், அவர்களெல்லாம் தங்களது புதிய தர்மத்தினை ஸ்தாபனை செய்தனர். ஆனால் உலகத்தை மாற்றுவது மற்றும் உலகை உருவாகுவது என்பது உலகைப் படைப்பவர், உலகின் சர்வ சக்திவான் யாரோ, அவருடைய வேலையாகும். அதனால் அவரது செயல் அனைத்து ஆத்மாக்களிலிருந்தும் வேறுபட்டது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவரும் கூட தனது கடமை மற்றும் செயலை மற்ற ஆத்மாக்களைப் போல இந்த மனித உலகில் வந்து தான் செய்கிறார். மற்றபடி ஒவ்வொரு ஆத்மாவின் நடிப்பும் அவரவர்க்குரியதாகும். இந்த அனைத்து செயலையும் பரமாத்மா தான் நடத்துகிறார் என்று சொல்லமாட்டோம், இது ஒவ்வொரு ஆத்மாவின் தத்தமது கர்மத்தின் கணக்கின்படி நடைபெறுகிறது. என்ன கர்மங்களை செய்கின்றார்களோ, அதனை அடைகின்றார்கள், அதிலும் சில நல்ல ஆத்மாக்களும் இருக்கின்றனர்.. எவ்வாறு கிறிஸ்து, புத்தர் வந்தனர், இஸ்லாமியர்கள் வந்தனர், காந்தி வந்தார், யாரெல்லாம் நல்ல, நல்லவர்கள் வந்தனரோ, அவர்கள் அனைவரும் அவரவரது நடிப்பை நடித்து விட்டு சென்றனர். இவ்வாறே ஆத்மாக்களாகிய உங்களுக்கும் கூட பல பிறவிகளின் நடிப்பு உள்ளது. ஒரு உடலை விட்டு, வேறொன்று எடுத்தோம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பிறவிகளின் கணக்கு இருக்குமோ, ஆத்மா அந்த நடிப்பை நடிக்கிறது. ஆத்மாவில் என்னென்ன (Record) பதிவுகள் நிரம்பியுள்ளதோ, அதை அது நடிக்கிறது. இது நடிப்பதற்கான இடமாகும், எனவே இதனை நாடகம் என்றும் சொல்கிறோம். டிராமா (சினிமா) என்றும் சொல்கிறோம். இதில் ஒருமுறை பரமாத்மாவிற்கும் நடிப்புள்ளது. அதனால் அவரது நடிப்பிற்கு மகிமை அனைவரையும் விட உயர்ந்தாகும். ஆனால் எதில் உயர்ந்தாக இருக்கிறார்? அவர் வந்து நமது உலகத்தை மாற்றுகின்றார்.

 

இது கர்மத்தின் வயலாகும். இங்கு ஒவ்வொரு மனித ஆத்மாவும் அவரவரது நடிப்பை நடிக்கின்றது. இதில் பரமாத்மாவிற்கும் நடிப்புள்ளது. ஆனால் அவர் ஆத்மாக்களைப் போல பிறப்பு இறப்பில் வருவதில்லை. ஆத்மாக்களுக்கு அவரது கர்ம கணக்கு தவறாகுவதில்லை. நானோ, ஆத்மாக்களாகிய உங்களை விடுவிக்க மட்டும் வருகிறேன். அதனால் என்னை லிபரேட்டர், பந்தனங்களிலிருந்து விடுவிக்கக் கூடிய கதி. சத்கதி வழங்கும் வள்ளல் என்று கூறுகின்றனர், என்று அவர் கூறுகின்றார். ஆத்மா மீது என்ன பந்தனம் ஏறியுள்ளதோ, அதனை இறக்கி தூய்மையாக்குகிறார், மேலும் எனது வேலை ஆத்மாக்களை அனைத்து பந்தனங்களிலிருந்தும் விடுவித்து, திரும்பி அழைத்துச் செல்வதாகும் என்று கூறுகிறார். அதனால் உலகத்திலும் அனாதி நியமம் மற்றும் சட்டம் என்ன உள்ளதோ, அவைகளையும் புரிந்து கொள்ள வேண்டும், பிறகு இந்த மனித உலகின் வளர்ச்சி எந்தப் பக்கம் சென்று கொண்டிருக்கிறதோ, அது குறைவதற்கான நேரமும் பிறகு வருகிறது. வளர்ச்சி யடைகிறது என்றால் வளர்ச்சியடைந்து கொண்டேயிருக்கும் என்பது அல்ல. குறையவும் செய்கிறது. ஆகவே ஒவ்வொரு பொருளுக்கும் நியமம் உள்ளது. குழந்தை, சிறுவன், இளைஞன், பிறகு வயோதிகன் என்று உடலுக்கும் கூட நியமம் உள்ளது. வயோதிக நிலையும் உடனே அடைவதில்லை, வயது ஆகி ஆகி, தள்ளாத நிலை ஏற்படுகிறது. எனவே ஒவ்வொரு விசயத்திற்கும் வளர்ச்சி மற்றும் முடிவு ஏற்படுகிறது. இதுவும் நியமம் ஆகும். இவ்வாறு உலகத்தின் தலைமுறையினருக்கும் நியமம் உள்ளது. ஒரு வாழ்க்கைக்கே நிலைகள் இருக்கின்ற பொழுது, பல பிறவிகளுக்கும் நிலைகள் இருக்கின்றன. பிறகு என்ன தலைமுறைகள் தொடர்ந்து வருகின்றனவோ, அதற்கும் கூட நிலைகள் இருக்கின்றன. இதே போன்று அனைத்து தர்மங்களுக்கும் கூட நிலைகள் இருக்கின்றன. முதலில் என்ன தர்மம் வருகிறதோ, அது அனைத்திலும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. பின்னால் மெது மெதுவாக எவையெல்லாம் வருகின்றனவோ, அவைகளது சக்தி குறைந்து விடுகிறது. எனவே மதங்களின் பிரிவு, மதங்களின் நடைமுறை, ஒவ்வொரு விஷயமும் நியமங்களால் தான் நடந்து வருகிறது. எனவே இந்த அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கணக்கின் படி எனக்கும் இதில் பங்கு உள்ளது என்று பாபாவும் கூறுகின்றார். நானும் ஒரு ஆத்மா, நான் கடவுள், வேறு ஏதோ ஒரு பொருள் அல்ல. நானும் ஆத்மா தான், ஆனால் எனது வேலை மிகப் பெரியதும், உயர்ந்ததும் ஆகும், அதனால் என்னை கடவுள் என்று கூறுகின்றனர். எவ்வாறு நீங்கள் ஆத்மாக்கள் இருக்கின்றீர்களோ, அவ்வாறே நானும் இருக்கின்றேன். எவ்வாறு உங்களது குழந்தையும் மனிதனாகத் தான் இருக்கிறது. நீங்களும் மனிதர்கள் தான். அதில் எந்த வேறுபாடும் இல்லை தானே! அவ்வாறே நானும் ஆத்மா தான், ஆத்மா - ஆத்மாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் செயலில் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. அதனால் தான் எனது காரியம் என்னவோ, அது அனைவரிமிருந்து தனிப்பட்டது என்று பாபா கூறுகின்றார். நான் ஒன்றும் எல்லைக்குட்பட்ட ஸ்தாபனை செய்பவன் அல்ல. நானோ உலகத்தையே படைப்பவன், அவர்களோ தர்மத்தைப் படைப்பவர் ஆகிவிட்டனர். எவ்வாறு அந்த ஆத்மாக்கள் தனது காரியத்தை தனது நேரப்படி செய்கிறார்களோ, அவ்வாறே நானும் எனது நேரப்படி வருகிறேன். எனது காரியம் விசாலமானது., எனது கடமை மிக உயர்ந்தது மற்றும் அனைத்திலும் தனிப்பட்டதாகும். அதனால் தான் உனது செயல் தனிப்பட்டது என்று கூறுகின்றனர். அவரை சர்வ சக்திவான் என்றும் கூறுகின்றனர். அனைத்தையும் விட சக்திசாலியான செயல் ஆத்மாக்களை மாயையின் பந்தனங்களிலிருந்து விடுவிப்பது மற்றும் புதிய உலகின் மரக்கன்று நடுவதாகும். எனவே அவரை ஆங்கிலத்தில் ஹெவன்லி காட் ஃபாதர் என்று கூறுகின்றோம். எவ்வாறு கிறிஸ்துவை கிறிஸ்துவத்தின் தந்தை என்று கூறுகிறோம், அவரை ஹெவன்லிகாட் ஃபாதர் என்று கூறுவதில்லை. சொர்க்கத்தைப் படைப்பவர் பரமாத்மா ஆவார். அதனால் சொர்க்கம் என்பது உலகமாகிவிட்டது அல்லவா! சொர்க்கம் என்பது மதம் (தர்மம்) அல்ல. அதனால் அவர் உலகத்தைப் படைப்பவர் ஆகிவிட்டார். மேலும் அந்த உலகத்தில் ஒரு தர்மம், ஒரு இராஜ்யம் இருக்கும், தத்துவங்கள் போன்ற அனைத்தும் மாறிவிடும். எனவே தான் பாபாவை ஹெவன்லிகாட் ஃபாதர் என்று கூறுகின்றோம்.

 

அடுத்ததாக, கடவுள் சத்யமானவர் என்று கூறுகின்றோம், அப்படியென்றால் சத்தியம் என்பதின் பொருள் என்ன, எதில் சத்தியமானவர்? இது கூட புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். யார் உண்மை பேசுகின்றனரோ, அவர்களே கடவுள் என்று சிலர் நினைக்கின்றனர். கடவுள் என்று தனிப்பட்ட பொருள் இல்லை, அது உண்மை பேசுவது தான் என்று நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு அல்ல. கடவுள் சத்தியமானவர் என்பதன் அர்த்தமே கடவுள் தான் வந்து, அனைத்து விஷயங்கள் பற்றிய உண்மையைக் கூறுகிறார் என்பதாகும். கடவுள் சத்தியமானவர் என்றாலே, கடவுள் மட்டும் தான் உண்மையைக் கூறக் கூடியவர், அவருக்குள் தான் உண்மை இருக்கிறது. அதனால் தான் ஞானம் நிறைந்தவர் என்று கூறுகின்றோம். ஞானக் கடல், ஆனந்தக் கடல், இறைவன் அனைத்தும் அறிந்தவர், என்கிறோம் என்றால், கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று இருகிறது தானே! அப்படியென்றால், அவருக்கு எதைப் பற்றித் தெரியும்? இவர் திருடி விட்டார், இதை இறைவன் தெரிந்து கொண்டார் என்பதல்ல. அவர் அனைத்தும் தெரிந்திருக்கிறார் தான், ஆனால் அவருடைய மகிமை எதற்காக என்றால், நமது உலகம் கீழே விழுந்து விட்டது (தாழ்ந்து விட்டது), அதை எவ்வாறு உயர்த்துவது? இந்த சக்கரத்தின் விஷயங்களை அவர் தெரிந்திருக்கிறார். அதனாலேயே கடவுளுக்குத் தெரியும் என்று கூறுகின்றனர். அதனால் பரமாத்மாவிற்கு இந்த முறையினால் தான் மகிமை பாடப் பாடப்படுகிறது, அது மனிதரிலிருந்து தனிப்பட்டதாகும். ஏனெனில் அவர் தெரிந்திருப்பது அனைத்திலும் வேறுபட்டதாகும். மனிதர்கள் தெரிந்திருப்பது எல்லைக்குட்பட்டது. மனிதர்களை குறைவான ஞானம் உள்ளவர்கள் என்றும், கடவுளை அனைத்தும் அறிந்தவர் என்றும் கூறுகின்றனர், இதனையே ஆங்கிலத்தில் நாலேட்ஜ்ஃபுல் (ஞானம் நிறைந்தவர்) என்று கூறுகின்றோம். அதாவது அனைத்தைப் பற்றியும் அறிந்தவர், அதாவது தெரிந்துள்ளவர் என்பதாகும். ஆகவே யார் அனைத்தும் அறிந்தவரோ, அவரே சத்தியத்தைத் தெரிந்திருக்க முடியும், சரியாக எல்லா விசயங்களைப் பற்றிய ஞானம் யாரிடம் இருக்குமோ, அதனை அவசியம் அவர் அனைவருக்கும் கொடுப்பார் தானே! ஒரு வேளை தனக்குத் தெரிந்திருந்து, பிறருக்கு சொல்லவில்லையென்றால், அதனால் நமக்கு என்ன இலாபம்! போகட்டும் விட்டுவிடு, ஆனால் அவ்வாறு அல்ல. அவரின் ஞானத்தினால் நமக்கு ஏதேனும் இலாபம் கிடைக்கும் பொழுது தான் அவரது தகுதியை மகிமையாகப் பாடுகின்றோம். அவர் பின்னாலேயே இருக்கின்றோம். எப்போதேனும் ஏதாவது நடக்கிறதென்றால், ஹே! பகவான்! இப்பொழுது இதை செய் நன்மை செய், இரக்கம் காட்டு, எனது துன்பத்தை தூரமாக்கு, என்று கூறுகின்றோம். அப்படியென்றால் நாம் அவரிடமிருந்து யாசிக்கிறோம் தானே! அவரிடம் ஏதோ சம்மந்தம் உள்ளது, அதனால் அந்த முறையில் நினைவு செய்கின்றோம், அதாவது அவர் நம்மீது சலுகை காட்டியது போன்று, ஒருவேளை எப்போதும் அவர் எதுவும் செய்ய வில்லையென்றால், நாம் ஏன் அவருக்காக தலையில் குட்டிக் கொள்கிறோம்! எப்பொழுதேனும் யாராவது கஷ்டமான நேரத்தில் உதவி செய்யும் பொழுது, இவர் மிக கஷ்டமான நேரத்தில் எனக்கு உதவி செய்தார் என்று தோன்றுகிறது. சரியான நேரத்தில் என்னைப் பாதுகாத்தார், எனும் பொழுது அவருக்காக உள்ளத்தில் அன்பு வருகிறது. அவ்வாறே பரமாத்மாவின் மீதும், அவர் எனக்கு நேரத்தில் உதவி செய்தார் என்று அவர் மீதும் அன்பு வருகிறது. ஆனால் எப்போதேனும் யாராவது ஒரு மனிதருக்கு நல்லது நடக்கிறது என்றால், இதை பகவான் செய்தார், பகவான் அவ்வாறுதான் செய்கிறார் என்பது அல்ல. ஆனால் அவரது செயல் மிகப் பெரியதாகும், உலக காரியமாகும், உலக சம்மந்தப்பட்ட விஷயமாகும். மற்றபடி யாருக்காவது சிறிது பணம் கிடைத்து விட்டால், இதை பகவான் செய்தார் என்பதல்ல. இதுவோ நாம் செய்த நல்ல செயலின் பலனாகக் கிடைத்தது. நல்ல, கெட்ட கணக்கு நடந்து வருகிறது, அதை நாம் அடைந்து கொண்டிருக்கிறோம். ஆனால் பரமாத்மா வந்து என்ன செயல் செய்ய கற்றுக் கொடுத்தாரோ, அதற்கான பலன் தனிப்பட்டதாகும். குறைந்த கால சுகம் புத்தியின் ஆதாரத்தில் கூட கிடைக்கிறது. ஆனால் அவர் என்ன ஞானம் கொடுத்தாரோ, நாம் எப்பொழுதும் சுகத்தை அடைகின்றோம், எனவே பரமாத்மாவின் காரியம் தனிப்பட்டதாகி விட்டது அல்லவா! அதனால் தான் நானே வந்து கர்மத்தின் யதார்த்த ஞானம் எதுவோ, அதனைக் கற்றுக் கொடுக்கிறேன் என்று கூறுகின்றார். கர்மயோகம் சிறந்தது என்று எதைக் கூறுகிறோமோ, அதில் செயலை, இல்லறத்தை விட்டுச் செல்வதற்கான விஷயமில்லை. நீங்கள் தனது செயல்களை எவ்வாறு தூய்மையாக்குவது என்ற ஞானத்தை மட்டுமே நான் சொல்கின்றேன், ஆகவே செயலைத் தூய்மையாகுவது என்பது செயலிலிருந்து விடுபடுவது அல்ல. செயல் என்பதோ, அனாதியான (முதலும் முடிவும் இல்லாதது) விசயமாகும். இந்த கர்மக்ஷேத்திரம் (உலகம்) அனாதியாகும். மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால், செயலும் இருக்கிறது, ஆனால் அந்த செயலை எவ்வாறு உயர்ந்ததாக்குவது என்பதை நான் கற்றுக் கொடுக்கிறேன். அதன் மூலம் உங்களது செயலின் கணக்கும் அகர்மம் ஆகிவிடுகிறது. அகர்மம் என்பதின் பொருள் எந்த ஒரு கெட்ட கணக்கு உருவாகுவதில்லை. நல்லது.

 

அப்படிப்பட்ட பாப்தாதா மற்றும் அன்னையின் இனிமையிலும் இனிமையான மிக நல்ல, எச்சரிக்கையுடைய குழந்தைகளுக்கு அன்பு நினைவுகளும், காலை வணக்கமும். நல்லது.

 

வரதானம்:

எப்பொழுதும் ஊக்கம் உற்சாகத்திலிருந்து மனதில் மகிழ்ச்சியான பாடலை பாடக்கூடிய அழிவற்ற பாக்கியசாலி ஆகுக.

 

பாக்கியசாலி குழந்தைகளாகிய நீங்கள் அழிவற்ற விதியினால், அழிவற்ற சித்திகளை (உழைப்பின்றி வெற்றி) அடைகின்றீர்கள். உங்களது மனதில் எப்பொழுதும் ஆஹா! ஆஹா! என்ற மகிழ்ச்சியின் பாடல் ஒத்துக் கொண்டேயிருக்கின்றது. ஆஹா பாபா! ஆஹா அதிர்ஷ்டமே! ஆஹா இனிய குடும்பமே! ஆஹா சிறந்த சங்கமத்தின் சுகமான நேரமே! இவ்வாறு ஒவ்வாறு செயலும் ஆஹா ஆஹா! தான். அதனால் நீங்கள் அழிவற்ற பாக்கியசாலியாக இருக்கிறீர்கள். உங்களது மனதில் ஒருபொழுதும் ஏன், நான் என்பது வரமுடியாது. ஏன் என்பதற்குப் பதிலாக ஆஹா ஆஹா என்றும், நான் என்பதற்குப் பதிலாக, பாபா, பாபா! என்ற வார்த்தையும் தான் வருகிறது.

 

சுலோகன்:

என்ன நினைக்கிறீர்களோ, அதற்கு அழிவற்ற அரசாங்கத்தின் முத்திரை (stamp) இட்டுவிடுங்கள். அப்பொழுது நிலையாக நிலைத்து விடும்

 

ஓம்சாந்தி