29.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

"இனிமையான குழந்தைகளே! நீங்கள் சரீரத்தின் கூடவே அனைத்து பொருட்களின் மீதிருந்தும் பற்றை நீக்க வேண்டும். எப்போது ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக, கர்மாதீத் ஆகிவிடுவீர்களோ, அப்போது வீட்டுக்குப் போக முடியும்.

 

கேள்வி :

ஆத்மாவுக்கு எந்த விசயத்தில் மிகுந்த பயம் ஏற்படுகிறது மற்றும் அந்த பயம் ஏன் ஏற்படுகிறது?

 

பதில் :

ஆத்மாவுக்கு சரீரத்தை விடுவதில் மிகுந்த பயம் ஏற்படுகிறது. ஏனெனில் அதற்கு சரீரத்தின் மீது பற்று ஏற்பட்டுவிடுகிறது. ஏதேனும் துக்கத்தின் காரணமாக சரீரத்தை விட நினைத்தாலும், அவர்கள் பாவ கர்மங்களின் தண்டனையை அனுபவிக்கத்ததான் வேண்டியிருக்கிறது. சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு எந்த பயமும் இல்லை. நாம் பழைய சரீரத்தை விடுத்து பாபாவிடம் சென்று விடுவோம் என்று மிகுந்த மகிழ்ச்சி இருக்கிறது.

 

ஓம் சாந்தி.

ஒன்று ஞானம், மற்றொன்று பக்தி என்று இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தில் இது பதிவாகியுள்ளது. நாடகத்தின் முதல்-இடை-கடைசியை வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்களோ தெரிந்திருக்கிறீர்கள். சத்யுகத்தில் இறப்பதற்கான பயம் இருப்பதில்லை. நாம் ஒரு சரீரத்தை விட்டு இன்னொரு சரீரம் எடுக்க வேண்டும் என்று தெரிந்திருக்கின்றனர். துக்கம், அழுகை போன்ற விசயங்களே கிடையாது. இங்கே இறப்பதற்கு பயம் இருக்கிறது. ஆத்மாவுக்கு சரீரத்தை விடுவதால் துக்கம் ஏற்படுகிறது. பயப்படுகிறது. ஏனெனில் மீண்டும் மற்றொரு பிறவி எடுத்து துக்கம் தான் அனுபவிக்கக வேண்டும். நீங்களோ சங்கமயுகவாசிகள். இப்போது திரும்பிச் செல்ல வேண்டும் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா புரிய வைத்திருக்கிறார். எங்கே? வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பகவானுடைய வீடலல்லவா! இது வேறு எந்த வீடும் கிடையாது. இங்கே பகவான் மற்றும் குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மாக்கள் வசிக்கின்றீர்கள், அதைத் தான் வீடு என்றும் சொல்கிறோம். அங்கே இந்த சரீரம் கிடையாது. நாங்கள் பாரதத்தில் வசிக்கின்றோம், வீட்டில் வசிக்கின்றோம் என்று மனிதர்கள் சொல்வதைப்போல, நீங்கள் ஆத்மாக்களாகிய நாம் அங்கே நம்முடைய வீட்டில் (பரந்தாமத்தில்) வசிக்கின்றோம் என்று சொல்கிறீர்கள். அது ஆத்மாக்களுடைய வீடு, இது ஜீவாத்மாக்களுடைய வீடு ஆகும். அது முக்தி தாமம் என்று சொல்லப்படுகிறது. நாம் பகவானிடம் சென்று சேர வேண்டும் என்று மனிதர்கள் அங்கே செல்ல முயற்சி செய்கின்றனர். பகவானை சந்திப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியிருக்க வேண்டும். ஆத்மாவுக்கு அதனுடைய இந்த சரீரத்தின் மீது மோகம் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் கொஞ்சம் நோய்வாய்ப் பட்டாலும், சரீரம் பிரிந்து விடக்கூடாது என்ற பயம் ஏற்படுகிறது. அஞ்ஞான காலத்திலும் பயம் இருக்கிறது. நாம் பாபாவிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என்று இந்த சங்கமயுக நேரத்தில் நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். ஆக பயத்திற்கான விசயமே இல்லை. பாபா மிக நல்ல யுக்தி சொல்லி இருக்கிறார். தூய்மையற்ற ஆத்மாக்கள் என்னுடன் முக்திதாமம் வரமுடியாது. அது தூய்மையான ஆத்மாக்களின் வீடாகும். இது மனிதர்களின் வீடாகும்., இந்த சரீரம் 5 தத்துவங்களால் உருவாகிறது. ஆக 5 தத்துவங்களும் இங்கே வசிக்குமாறு இழுக் கின்றது. ஆகாயம், நீர், காற்று,..... அங்கே (மூலவதனத்தில்) இந்த தத்துவங்கள் கிடையாது. இது விசார் சாகர் மந்தனம் (ஞான சிந்தனை) செய்வதற்கான யுக்திகள் ஆகும். ஆத்மா இந்த சொத்தை (5 தத்துவங்களை) எடுத்திருக்கிறது. ஆகையால் சரீரத்தில் பற்று ஏற்பட்டுவிடுகிறது. இல்லையானால், ஆத்மாக்களாகிய நாம் அங்கே வசிக்ககூடியவர்கள் ஆவோம். இப்போது மீண்டும் அங்கே செல்ல முயற்சி செய்கின்றோம். நீங்கள் தூய்மையான ஆத்மாக்களாக ஆகிவிடும்போது, உங்களுக்கு சுகம் கிடைக்கிறது. துக்கத்தின் விசயமே கிடையாது. இந்த நேரம் துக்கதாமமாக இருக்கிறது. ஆகையால் இந்த 5 தத்துவங்கள் கூட மேலிருந்து கீழே வந்து நடிக்க இழுக்கிறது. கண்டிப்பாக இயற்கையின் ஆதாரத்தை எடுக்க வேண்டியிருக்கிறது. இல்லையானால் விளையாட்டு (நாடகம்) நடக்க முடியாது. சுகம் மற்றும் துக்கத்திற்கான இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் சுகமாக இருந்த போது, 5 தத்துவங்களால் ஆன சரீரத்தின் மீது பற்று இருப்பதில்லை. அங்கே தூய்மையாக இருக்கின்றனர். சரீரத்தில் அந்தளவு பற்று இருப்பதில்லை. இந்த 5 தத்துவங்களின் பற்றைக் கூட விட்டுவிடுகின்றோம். நாம் தூய்மையாகி விடும்போது சரீரம் கூட யோக பலத்தின் மூலம் ஏற்படுகிறது. ஆகையால் மாயை இழுப்பதில்லை. நம்முடைய இந்த சரீரம் யோக பலத்தினுடையது, ஆகையால் துக்கமே இருப்பதில்லை. நாடகம் எவ்வளவு அதிசயமாக உருவாக்கப்பட்டிருக்கிறது! இதுவும் மிக ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். யார் நல்ல புத்திசாலிகளோ, சேவையில் ஆர்வமாக இருக்கிறார்களோ, அவர்களே நல்ல விதத்தில் புரிய வைக்க முடியும். செல்வம் கொடுத்தால் ஒருபோதும் குறையாது என்று பாபா புரிய வைத்திருக்கிறார். தானம் செய்து கொண்டே இருந்தால் தாரணையும் ஏற்படும். இல்லையானால் தாரணை ஏற்படுவது கடினம் ஆகும். எழுதுவதால் தாரணை ஏற்படும் என்று நினைக்காதீர்கள். ஞானக் கருத்துக்களை எழுதி பிறருடைய நன்மைக்காக எழுதி அனுப்புகிறீர்கள். அது தனிப்பட்ட விசயம் ஆகும். அது தன்னுடைய காரியத்தில் வருவதில்லை. சிலர் காகிதத்தில் எழுதி அதை வீணாக எறிந்து விடுகின்றனர். நான் எழுகிறேன், அது எனக்குப் பயன்படுகிறது என்று உங்களுக்குள் புரிந்து கொள்ள வேண்டும். எழுதி எறிந்து விட்டால் அதனால் என்ன பயன் இருக்கிறது? இது தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்வதாகும். இது தாரணை செய்வதற்கான விசயம் ஆகும். பாபா எழுதி வைக்கப்பட்ட எதையும் உபதேசிப்பதில்லை. பாபா தினமும் புரிய வைத்துக் கொண்டேயிருக்கிறார். முதன் முதலில் உங்கள் தந்தையிடம் இணைப்பு ஏற்பட வேண்டும். பாபா நினைவின் மூலம் தான் உங்கள் ஆத்மா தூய்மையாகும். பிறகு அங்கேயும் நீங்கள் தூய்மையாக இருக்கின்றீர்கள். ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையாக இருக்கிறது. பிறகு அந்த தூய்மையின் பலம் முடிந்து போய்விடும் போது, 5 தத்துவங்களின் பலம் ஆத்மாவை இழுக்கிறது. ஆத்மாவுக்கு வீடு செல்வதற்காக, சரீரம் விட வேண்டும் என்று விரும்புகிறது. நீங்கள் தூய்மையாகி வெண்ணையிலிருந்து முடி எடுப்பது போல சரீரத்தை விட்டு விடுகின்றீர்கள்.

 

குழந்தைகளாகிய நீங்கள் சரீரத்தின் கூடவே அனைத்து பொருட்களின் மீதுள்ள பற்றையும் நீக்கி விட வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் சரீரம் இல்லாமல் வந்திருந்தோம், நாம் தூய்மையாக இருந்தோம். இந்த உலகத்தின் மீது பற்று இருந்ததில்லை. அங்கே சரீரம் விட்டால் யாரும் அழுவதில்லை. எந்த கஷ்டமும் இல்லை, நோயும் இல்லை. சரீரத்தின் மீது பற்றும் இல்லை. ஆத்மா நடிப்பது போல், ஒரு சரீரம் வயதானதும் நடிப்பை நடிப்பதற்கு மற்றொரு சரீரத்தை எடுக்கிறது. அங்கே இராவண இராஜ்யமே இல்லை. எனவே இந்த சமயத்தில் பாபாவிடம் செல்ல வேண்டும் என்று மனம் விரும்புகிறது. என்னை நினைவு செய்யுங்கள், என்று பாபா கூறுகின்றார். இந்த ஞானம் புத்தியில் இருக்கிறது. தூய்மையாகி வரவேண்டும் என்று பாபா கூறுகின்றார். இப்போது அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கின்றார்கள். ஆகையினால் 5 தத்துவத்தினால் ஆன பொம்மையின் மீது மோகம் உருவாகி விட்டது. இதை விடுவதற்கு மனம் வருவதில்லை. இல்லையென்றால், சரீரம் விட்டுவிட்டால் நாம் பாபாவிடம் சென்று விடலாம், என்று புத்தி சொல்கிறது. நாம் தூய்மையாகி பாபாவிடம் செல்ல வேண்டும் என்று முயற்சி செய்கின்றோம். நீங்கள் என்னுடையவர்கள், இப்போது என்னை நினைவு செய்வதன் மூலம் ஆத்மா தூய்மையாகி விடும், பிறகு இந்த சரீரத்தை தாரணை செய்வதில் கூட எந்த கஷ்டமும் இருக்காது, என்று பாபா கூறுகின்றார். இப்போது சரீரத்தின் மீது மோகம் இருக்கிறது, ஆகையால் டாக்டர் போன்றவர்களை அழைக்கின்றார்கள். நாம் பாபாவிடம் செல்கின்றோம், என்ற மகிழ்ச்சி உங்களுக்கு இருக்க வேண்டும். இந்த சரீரத்துடன் இப்போது நமக்கு எந்த தொடர்பும் கிடையாது. இந்த சரீரம் நடிப்பு நடிப்பதற்கு கிடைத்திருக்கிறது அங்கே ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே மிக ஆரோக்கியமாக இருக்கிறது. துக்கத்தின் பெயர் கூட இருப்பதில்லை. எனவே குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்! இப்போது நாம் பாபாவிடம் செல்கின்றோம், ஏன் இந்த சரீரத்தை விட்டுவிட்டு செல்லக்கூடாது? ஆனால் எதுவரை யோகம் ஈடுபடுத்தி தூய்மையாக வில்லையோ, கர்மாதீத் நிலையை அடையவில்லையோ அதுவரை போக முடியாது. இந்த எண்ணம் அஞ்ஞானி மனிதர்களுக்கு வரமுடியாது. குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் இந்த எண்ணம் வரும். இப்போது நாம் செல்ல வேண்டும். முதலில் ஆத்மாவிற்கு சக்தி இருக்கிறது. குஷி இருக்கிறது, ஒருபோதும் பயம் இருப்பதில்லை. இங்கே துக்கம் இருக்கிறது, ஆகையால் மனிதர்கள் பக்தி போன்றவற்றை செய்கின்றனர், ஆனால் திரும்பிச் செல்வதற் கான வழி தெரிவதில்லை. செல்வதற்கான வழியை ஒரு பாபா தான் கூறுகின்றார். நாம் பாபாவிடம் செல் கின்றோம் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. இங்கே நமக்கு சரீரத்தின் மீது மோகம் இருக்கிறது, என்று பாபா புரிய வைக்கின்றார். இந்த மோகத்தை விட்டுவிடுங்கள். இதுவோ ஐந்து தத்துவங்களினால் ஆன சரீரமாகும். இவையனைத்தும் மாயை தான் ஆகும். இந்தக் கண்களின் மூலம் ஆத்மா எதையெல்லாம் பார்க்கிறதோ, அனைத்தும் மாயையே மாயை. இங்கே ஒவ்வொரு பொருளிலும் துக்கம் தான் இருக்கிறது, எவ்வளவு அழுக்காக இருக்கிறது, சொர்க்கத்திலோ, சரீரம் கூட முதல் தரமானது, மாளிகை கூட முதல் தரமானதாக கிடைக்கும். துக்கத்தின் விஷயமே கிடையாது. விளையாட்டு எப்படி உருவாக்கப் பட்டிருக்கிறது! இது சிந்தனையில் வரவேண்டுமல்லவா! ஒன்றுமே புரியாவிட்டாலும், பாபாவை நினைவு செய்தால் பாவ கர்மங்கள் வினாசம் ஆகிவிடும், சொர்க்கத்திற்குச் சென்று விடுவீர்கள் என்று சொல்லுங்கள் என்று பாபா கூறுகின்றார். நாம் ஆத்மாக்களாவோம், இந்த சரீரம் என்ற வால் பிறகு கிடைக்கிறது. இதில் நாம் ஏன் மாட்டிக் கொள்கிறோம்? இது இராவண இராஜ்யம் என்று அழைக்கப்படுகிறது என்று பாபா புரிய வைத்கின்றார். இராவண இராஜ்யத்தில் துக்கமே துக்கமாகும். சத்யுகத்தில் துக்கத்தின் விஷயமே கிடையாது. இப்போது பாபாவின் நினைவின் மூலம் நாம் சக்தி பெறுகின்றோம், ஏனெனில், பலவீனமாக ஆகிவிட்டோம், அனைத்தையும் விட பலவீனமாக்கக்கூடியது தேக அபிமானம் ஆகும். ஆக இந்த நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பாபா புரிய வைத்திருக்கிறார். இது நின்று போக முடியாது. மோட்சம் போன்றவற்றின் விஷயமே கிடையாது. இது உருவாக்கப்பட்ட, உருவாக்கப்படுகின்ற நாடகமாகும். ஏன் கவலைப்பட வேண்டும்... என்று சொல்லவும் செய்கிறார்கள். எது நடந்து முடிந்ததோ ஆது மீண்டும் நடக்கத்தான் வேண்டும். கவலைக்கான விஷயமே கிடையாது. சத்யுகத்தில் மோசமானது எதுவும் இருப்பதில்லை. இங்கே கவலை இருக்கிறது. இது நாடகம் என்று பாபா கூறுகின்றார். பாபா வழி சொல்லியிருக்கின்றார், இப்படியாக நீங்கள் என்னிடம் வந்து சேர்ந்துவிடுவீர்கள். வெண்ணெயிலிருந்து முடி வெளியேறிவிடும். நீங்கள் என்னை மட்டும் நினைவு செய்தால் ஆத்மா தூய்மையாகி விடும். தூய்மையாவதற்கு வேறு எந்த வழியும் கிடையாது. இப்போது நாம் இராவண இராஜ்யத்தில் அமர்ந்திருக்கின்றோம் என்று நீங்கள் புரிந்திருக்கின்றீர்கள். அது ஈஸ்வரிய இராஜ்ஜியமாகும். ஈஸ்வரிய இராஜ்ஜியம் மற்றும் அசுர இராஜ்ஜியத்தின் விளையாட்டாகும். ஈஸ்வரன் எப்படி வந்து ஸ்தாபனை செய்கின்றார், என்று யாருக்கும் தெரியாது. பாவைத்தான் ஞானக்கடல் என்று சொல்லகிறோம். அவர் தான் வந்து அனைத்தையும் புரிய வைக்கின்றார். இப்போது நீங்கள் முழு ஞானத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். பிறகு இந்த ஞானம் மறந்து போய்விடும். எந்த படிப்பின் மூலம் நாம் இந்த பதவியை அடைந்தோம், என்ற அனைத்தும் மறந்து போய்விடுகிறது. சொர்க்கத்திற்குச் சென்றதும் இந்த ஞானம் மறைநது விடுகிறது. பகவான் எப்படி இரட்டை கிரீடதாரியாக ஆக்குகின்றார், என்று எதுவுமே தெரிந்து கொள்வதில்லை. இவர்களே தெரிந்து கொள்ளவில்லை எனும் போது, மற்ற சாஸ்திரங்கள் போன்றவற்றை படிப்பவர்கள் என்ன தெரிந்து கொள்வார்கள்? அவர்களுக்கு டச் கூட ஆகாது. நீங்கள் வந்து கேட்கும்போது உடனே டச் ஆகிவிடுகிறது. அனைத்தும் மறைமுகமானதாகும். பாபா கூறுகின்றார், பார்க்க முடிகிறதா என்ன? புரிந்து கொள்ள முடிகிறது. ஆத்மாவைப் பார்க்க முடிகிறதா என்ன? ஆத்மா என்று புரிந்து கொள்கிறீர்கள், தெய்வீகப் பார்வையின் மூலம் பார்க்கப்படுகிறது, பார்ப்பதின் மூலம் என்ன புரிந்து கொள்வீர்கள்? என்று பாபா கேட்கின்றார். ஆத்மா சிறிய புள்ளியாகும். நிறைய ஆத்மாக்கள் இருக்கின்றன. 10-20 ஆத்மாக்களின் காட்சியைக் கூட பார்ப்பீர்கள். ஒன்றை பார்பபதின் மூலம் ஒன்றும் தெரியாது. புரிந்து கொள்ளவும் முடியாது. நிறைய பேருக்குக் காட்சி கிடைக்கிறது. ஆத்மாவா அல்லது பரமாத்மாவா? என்று எப்படித் தெரியும்? வித்தியாசம் தெரிவதிலலை. அமர்ந்தவாறே சின்ன சின்ன ஆத்மாக்கள் தென்படுகின்றன. இது ஆத்மாவா அல்லது பரமாத்மாவா என்பது தெரிவதில்லை.

 

இந்த சிறிய ஆத்மாவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கிறது, என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள், ஆத்மா எஜமானனாக இருக்கிறது, ஒரு சரீரத்தை விட்டு மற்றொரு சரீரத்தில் நடிப்பதற்காக பிரவேசமாகின்றது. எவ்வளவு இயற்கையானதாக இருக்கிறது! சரீரம் நோய்வாய்ப்படும்போது அல்லது ஏதாவது திவாலாகி விடும்போது, இதைவிட சரீரத்தை விட்டுவிடலாம் என்று நினைக்கின்றனர். ஆத்மா வெளியேறிவிடும், துக்கத்திலிருந்து விடுபட்டுவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் தலை மீது என்ன பாவங்களின் சுமை உள்ளதோ அதை எப்படி இறக்குவது? நினைவின் மூலம் பாவங்கள் அழிந்து விடும் என்று நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். இராவணனின் மூலம் மிகுந்த பாவம் ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து விடுவடுவதற்கு வழியை பாபா கூறுகின்றார். என்னை நினைவு செய்து கொண்டேயிருங்கள், என்று மட்டும் கூறுகின்றார். நினைவு செய்து செய்து சரீரம் விடுபடட்டும். உங்களுடைய பாவம் போன்ற அனைத்தும் முடிந்து போய்விடும். நினைவு செய்வது ஒன்றும் சித்திவீடு கிடையாது. என்னை நினனவு செய்வதற்காக மாயை உங்களுக்கு மிகுந்த கஷ்டம் கொடுக்கிறது, அடிக்கடி மறக்க வைக்கிறது. நான் மிகுந்த முயற்சி செய்கின்றேன். ஆனாலும் மாயை மிகுந்த தடையை ஏற்படுத்துகிறது என்று (பிரம்மா) பாபா தன்னுடைய அனுபவத்தைக் கூறுகின்றார். இரண்டு பேரும் (சிவபாபா மற்றும் பிரம்மா) சேர்ந்து தான் இருக்கிறார்கள். சேர்ந்திருந்தாலும் கூட அடிக்கடி மறந்து விடுகின்றேன். மிகவும் கடினமாகும். அடிக்கடி இது ஞாபகம் வருகிறது, இன்னார் ஞாபகம் வருகிறார், நீங்களோ, மிக நன்றாக முயற்சி செய்கின்றீர்கள், சிலர் பொய் சொல்கிறார்கள். 10-15 நாட்கள் சார்ட் எழுதிவிட்டு விட்டுவிடுகிறார்கள், இதில் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியிருக்கிறது. எப்போது தூய்மையாக ஆவோமோ, கர்மாதீத் நிலையை அடைவோமோ அப்போது வெற்றி அடைவோம், என்று புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள். இது ஈஸ்வரிய லாட்டரி அல்லவா? பாபாவை நினைவு செய்வது என்பது நினைவின் தாலாட்டு ஆகும். புத்தியின் மூலம் புரிந்து கொள்வதற்கான விஷயமாகும். நாங்கள் பாபாவை நினைவு செய்கின்றோம், என்று சொன்னாலும் நினைவு செய்ய வருவதே இல்லை, என்று பாபா கூறுகின்றார். பதவியில் கூடவித்தியாசம் வருகிறது அல்லவா! எப்படி இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது? நீங்கள் பலமுறை இராஜ்யம் செய்திருக்கிறீர்கள், பிறகு இழந்திருக்கிறீர்கள். பாபா ஒவ்வொரு 5000 வருடத்திற்குப் பிறகும் படிப்பிக்கின்றார். பிறகு இராவண இராஜ்யத்தில் நீங்கள் இறங்கும் மார்க்கத்தில் சென்று விடுகிறீர்கள். யார் தேவதைகளாக இருந்தார்களோ, அவர்களே பிறகு இறங்கும் மார்க்கத்தில் விழுகின்றார்கள். ஆகையினால் பாபாவை நினைவு செய்வதற்கான ஆழமான விஷயங்களை பாபா புரிய வைக்கின்றார். மிகவும் சகஜமானதாகும். சரீரத்தை விட்டு பாபாவிடம் சென்று விடுவோம். யோக பலத்தின் மூலம் விகர்மங்கள் வினாசம் ஆகினால் தான் நான் செல்ல முடியும். அது கடைசியில் தான் நடக்க முடியும். ஆனால் யாரும் திரும்பி வருவதில்லை. யார் என்ன செய்தாலும், யதார்த்தமான யோகத்தை நான் தான் வந்து கற்றுக் கொடுக்கின்றேன். பிறகு அரை கல்பத்திற்கு யோக பலத்தின் மூலம் நடக்கிறது. அங்கே அளவற்ற சுகத்தை அனுபவிக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள். பாபா வந்து ஞானம் கொடுத்த பிறகு பக்தி நடப்பதில்லை. ஞானத்தின் மூலம் பகலாகி விடுகிறது. பிறகு எந்த கஷ்டமும் கிடையாது. பக்தி ஏமாற்றம் அடையும் இரவாகும். அங்கே துக்கத்தின் விஷயமே கிடையாது. யார் இவ்விடத்தைச் சேர்ந்த நாற்றுகளோ, அவர்களுடைய புத்தியில் தான் இந்த விஷயங்கள் அனைத்தும் அமரும். இவை மிகவும் ஆழமான விஷயங்களாகும். அதிசயமான ஞானமாகும். இதை பாபாவைத் தவிர வேறு யாராலும் புரிய வைக்க முடியாது. மிகக் குறைவானவர்களே புரிந்து கொள்கின்றனர். நாடகத்தில் அப்படி பதிவாகியிருக்கிறது. அதில் கொஞ்சமும் வித்தியாசம் ஏற்பட முடியாது. பரமாத்மா என்ன தான் செய்ய முடியாது, என்று மனிதர்கள் நினைக்கின்றனர். ஆனால் பகவான் வருவதே ஒரு முறை தான். வந்து உங்களுக்கு சொர்க்கத்திற்கான வழியைச் சொல்கின்றார். இப்போது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தி எவ்வளவு விசாலமானதாக ஆகிவிட்டது! இவர்கள் இருவருமே சேர்ந்திருக்கிறார்கள். இவர் (பிரம்மா) கூட யாரையாவது பார்த்தால், அமைதியின் தானம் கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறார். இவர் நம்முடைய குலத்தைச் சேர்ந்தவரா இல்லையா? என்று பார்க்கும் போதே தெரிந்து விடுகிறது. சேவாதாரி குழந்தைகளின் காரியமே நாடி பார்ப்பதாகும். நம்முடைய குலத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அமைதியாகி விடுவார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான வெகுகாலம் காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயு தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) தூய்மையாகி பாபாவுடன் வீடு செல்வதற்காக இந்த 5 தத்துவங்களால் ஆன பொம்மையின் (சரீரம்) மீதுள்ள பற்றை நீக்க வேண்டும். சரீரத்தை விடுவதற்கான பயத்தை விட்டுவிட வேண்டும்.

 

2) நினைவு யாத்திரைக்கான சார்ட்டை மிகுந்த எச்சரிக்கையோடு அதிகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். யோக பலத்தின் மூலம் ஆத்மாவை தூய்மையாக்கி, கர்மாதீத் ஆகி ஈஸ்வரிய லாட்டரியை வெற்றி கொள்ள வேண்டும்.

 

வரதானம்:

மனதையும், புத்தியையும் வீணானவைகளிலிருந்து விடுவித்து பிராமண சன்ஸ்காரத்தை உருவாக்கக் கூடிய ஆட்சியாளர் (ரூலர்) ஆகுக.

 

எந்த ஒரு சிறிய வீண் விசயம், வீண் சூழ்நிலை அல்லது வீண் காட்சிகளின் பாதிப்பு முதலில் மனதில் ஏற்படுகிறது. பிறகு புத்தி அதற்கு உதவி செய்கிறது. மனம் மற்றும் புத்தி அவ்வாறே நடந்து கொண்டிருந்தால் சன்ஸ்காரமாக ஆகிவிடும். பிறகு பிராமண சன்ஸ்காரங்கள் அல்லாத விதவிதமான சன்ஸ்காரங்கள் தென்படும். எந்த ஒரு வீண் சன்ஸ்காரத்திற்கு வசமாவது, தனக்குள்ளேயே யுத்தம் செய்வது, அடிக்கடி குஷி மறைந்து விடுவது - இது சத்திரியனின் சன்ஸ்காரமாகும். பிராமணன் என்றால் ஆட்சியாளர் (தனக்குத் தானே இராஜா), வீண் சன்ஸ்காரங்களிலிருந்து விடுபட்டு இருப்பார்கள், வசமாகமாட்டார்கள்.

 

சுலோகன்:

திட உறுதிமொழியின் மூலம் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாகக் கடந்து செல்பவர்களே மாஸ்டர் சர்வசக்திவான்

 

ஓம்சாந்தி