20.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இங்கு உங்களுக்கு இல்லற மார்க்கத்திற்கான அன்பு கிடைக்கிறது, ஏனெனில் தந்தை உள்ளப்பூர்வமாக எனது குழந்தைகளே! என்று கூறுகின்றார், தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது, இந்த அன்பினை தேகதாரி குருக்களினால் கொடுக்க முடியாது.

 

கேள்வி:

எந்தக் குழந்தைகளின் புத்தியில் ஞான தாரணை ஏற்படுகிறதோ, கற்பூர புத்தியுடன் இருக்கிறார்களோ அவர்களது அடையாளம் என்ன?

 

பதில்:

மற்றவர்களுக்குக் கூறுவதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். அவர்களது புத்தியானது உற்றார் உறவினர்களின் பக்கம் அலையாது. யார் கற்பூர புத்தியுடன் இருக்கிறார்களோ அவர்கள் வகுப்பு நேரத்தில் ஒரு பொழுதும் கொட்டாவி விடமாட்டார்கள். பள்ளியில் ஒருபொழுதும் கண்களை மூடிக் கொண்டு அமரமாட்டார்கள். எந்தக் குழந்தைகள் தோசைக் கல் போன்று அமர்ந்திருக்கிறார்களோ, யாருடைய புத்தி இங்கு அங்கு என்று அலைந்து கொண்டிருக்கிறதோ அவர்கள் ஞானத்தைப் புரிந்து கொள்வது கிடையாது, அவர்கள் தந்தையை நினைவு செய்வது மிகவும் கடினமாகும்.

 

ஓம்சாந்தி.

இது தந்தை மற்றும் குழந்தைகளின் சந்திப்பு ஆகும். குரு மற்றும் சிஷ்யர்களின் சந்திப்பு கிடையாது. இவர் எனது சிஷ்யர் அதாவது எனது ஆதரவாளர் அல்லது மாணவர் என்ற பார்வை அந்த குருக்களிடம் இருக்கும். பார்வை சாதாரணமாகி விடுகிறது அல்லவா! அவர்கள் அந்த பார்வையுடன் தான் பார்ப்பார்கள். ஆத்மாவை அல்ல. அவர்கள் சரீரத்தைப் பார்ப்பார்கள், மேலும் அந்த சிஷ்யர்களும் தேக அபிமானிகளாக அமர்ந்திருப்பர். அவர்களை தங்களது குருவாக நினைப்பர், நமது குரு என்ற பார்வை தான் அவர்களிடம் இருக்கும். குருவின் மீது மரியாதை வைத்திருப்பர். இங்கு அதிக வித்தியாசம் இருக்கிறது, இங்கு தந்தை தான் குழந்தைகளுக்கு மரியாதை கொடுக்கின்றார். இந்த குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்பதை அறிவார். இந்த சிருஷ்டி (உலக)ச் சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது? எல்லையற்ற சரித்திர பூகோளத்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். அந்த குருக்களிடத்தில் குழந்தைகளுக்கான அன்பு இருக்காது. தந்தையிடத்தில் குழந்தைகளின் மீது அதிக அன்பு இருக்கும், மேலும் குழந்தைகளுக்கும் தந்தையின் மீது அதிக அன்பு இருக்கும். பாபா நமக்கு சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம் கூறுகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் என்ன கற்றுக் கொடுக்கின்றார்? அரைக் கல்பமாக சாஸ்திரங்களைக் கூறினர், பக்தியின் காரியங்களை செய்தனர், காயத்ரி, சந்தியா வந்தனம் போன்றவைகளைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இங்கு தந்தை வந்திருக்கின்றார், தனது அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். நாம் முற்றிலும் தந்தையை அறியாமல் இருந்தோம். சர்வவியாபி என்றும் கூறி விட்டோம். பரமாத்மா எங்கு இருக்கின்றார்? என்று கேட்டால் உடனேயே சர்வவியாபி என்று கூறிவிடுவர். உங்களிடம் மனிதர்கள் வரும்பொழுது இங்கு என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்? என்று கேட்கின்றனர். நாம் இராஜயோகம் கற்றுக் கொடுக்கிறோம் என்று கூறுங்கள். இதன் மூலம் நீங்கள் மனிதரிலிருந்து தேவதை அதாவது இராஜாவாக ஆக முடியும். மேலும் மனிதரிலிருந்து தேவதை ஆகக் கூடிய கல்வி கொடுக்கும் சத்சங்கம் வேறு எதுவும் இருக்காது. தேவதைகள் சத்யுகத்தில் இருப்பர். கலியுகத்தில் மனிதர்கள் இருக்கின்றனர். இப்பொழுது நான் உங்களுக்கு முழு சிருஷ்டிச் சக்கரத்தின் இரகசியத்தையும் புரிய வைக்கின்றேன். இதன் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி இராஜாவாக ஆகிவிடுவீர்கள். மேலும் நீங்கள் பாவனம் ஆவதற்கான மிக நல்ல யுக்தியையும் கூறுகின்றேன். இந்த மாதிரியான யுக்தியை வேறு யாரும் ஒருபொழுதும் புரிய வைக்க முடியாது. இது எளிய இராஜயோகமாகும். தந்தை பதீத பாவனாக இருக்கின்றார். அவர் சர்வசக்திவானாக இருக்கின்றார், அவரை நினைவு செய்வதன் மூலம் தான் பாவங்கள் அழிந்து போகும். ஏனெனில் யோக அக்னி அல்லவா! ஆக இங்கு புதிய விசயங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

 

இது ஞான மார்க்கமாகும். ஞானக் கடலானவர் ஒரே ஒரு தந்தை ஆவார். ஞானம் மற்றும் பக்தி தனித் தனியானது. ஞானத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு தந்தை வர வேண்டியிருக்கிறது. ஏனெனில் அவர் தான் ஞானக் கடலாக இருக்கின்றார். அவர் சுயம் வந்து நான் அனைவருக்கும் தந்தையாக இருக்கிறேன், பிரம்மாவின் மூலம் முழு உலகையும் பாவனம் ஆக்குகிறேன் என்ற தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். சத்யுகம் பாவன உலகமாகும், கலியுகம் பதீத உலகமாகும். ஆக சத்யுகத்தின் ஆரம்பம் மற்றும் கலியுகத்தின் கடைசியாகிய இது தான் சங்கமயுகமாகும். இது லீப் யுகம் என்றும் கூறப்படுகிறது. இதில் தான் நாம் மேலே செல்கிறோம், எங்கு? பழைய உலகிலிருந்து புது உலகிற்குச் செல்கிறோம். ஏணிப்படியில் சிறிது சிறிதாக கீழே இறங்கி வந்தோம், இங்கு நாம் சீ சீ உலகிலிருந்து புது உலகிற்கு ஒரேயடியாக குதித்து விடுகிறோம். நேராக மேலே சென்று விடுகிறோம். பழைய உலகை விட்டு விட்டு நாம் புது உலகிற்குச் செல்கிறோம். இது எல்லையற்ற விசயமாகும். எல்லையற்ற பழைய உலகில் பல மனிதர்கள் இருக்கின்றனர். புது உலகில் மிகக் குறைந்து மனிதர்கள் இருப்பர், அது தான் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. அங்கு அனைவரும் தூய்மையாக இருப்பர். கலியுகத்தில் அனைவரும் அசுத்தமாக இருக் கின்றனர். இராவணன் அசுத்தமானவர்களாக ஆக்குகிறான். நீங்கள் இப்பொழுது இராவண இராஜ்யத்தில் அதாவது பழைய உலகத்தில் இருக்கிறீர்கள் என்பதை அனைவருக்கும் நீங்கள் புரிய வைக்கிறீர்கள். உண்மையில் இராம இராஜ்யத்தில் இருந்தீர்கள், அது தான் சொர்க்கம் என்று கூறப்பட்டது. பிறகு 84 பிறவிகள் எடுத்து எவ்வாறு கீழே இறங்கினோம்? என்பதை நம்மால் கூற முடியும். யார் நல்ல புத்திசாலிகளாக இருப்பார்களோ அவர்கள் உடனேயே புரிந்து கொள்வார்கள், யாருடைய புத்தியில் தோன்றவில்லையோ அவர்கள் தோசைக் கல் போன்று இங்கு அங்கு என்று பார்த்துக் கொண்டே இருப்பர். கவனத்துடன் கேட்கமாட்டார்கள். நீங்கள் தோசைக் கல் போன்று இருக்கிறீர்கள் என்று கூறுவர் அல்லவா! சந்நியாசிகளும் உட்கார்ந்து கதை கூறுகின்றபொழுது சிலர் தூங்கிவிடுவர் அல்லது கவனம் மற்ற பக்கம் சென்றுவிடுகிறது எனில், திடீரென இப்போது என்ன கேட்டீர்கள்? என்று அவர்களிடம் கேட்பர். தந்தையும் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். யாரும் தோசைக் கல்லாக அமரவில்லை தானே! நல்ல கற்பூர புத்தியுடைய குழந்தைகள் ஒருபொழுதும் கற்கும்பொழுது கொட்டாவி விடமாட்டார்கள். பள்ளியிலும் கண்களை மூடிக் கொண்டு அமருவது என்பது நியமம் கிடையாது. சிறிதும் ஞானத்தைப் புரிந்து கொள்வது கிடையாது. தந்தையை நினைவு செய்வது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும், பிறகு பாவங்கள் எவ்வாறு நீங்கும்? கற்பூர புத்தியுடையவர்கள் நல்ல முறையில் தாரணை செய்து மற்றவர்களுக்குக் கூறுவதில் ஆர்வத்துடன் இருப்பர். ஞானம் இல்லையெனில், புத்தி உற்றார் உறவினர்களின் பக்கம் சுற்றிக் கொண்டே இருக்கும். மற்ற அனைத்தையும் மறந்துவிடுங்கள் என்று இங்கு தந்தை கூறுகின்றார். கடைசியில் எதுவும் நினைவிற்கு வரக் கூடாது. பாபா சந்நியாசி போன்றவர்களையும் பார்த்திருக்கின்றார், யார் உறுதியான பிரம்ம ஞானி களாக இருக்கிறார்களோ அவர்கள் அதிகாலையில் எழுந்து பிரம்ம மகா தத்துவத்தை நினைத்து நினைத்து சரீரத்தை விட்டு விடுவர். அவர்களது அமைதியின் பிரபாவம் அதிகமாக இருக்கும். ஆனாலும் அவர்கள் பிரம்மத்தில் ஐக்கியமாகி விட முடியாது. பிறகும் தாயின் கர்ப்பத்தில் பிறப்பு எடுக்க வேண்டியிருக்கிறது.

 

உண்மையில் மகாத்மா என்று கிருஷ்ணரைத் தான் கூற முடியும் என்று தந்தை புரிய வைக்கின்றார். மனிதர்கள் பொருளின்றி அதாவது புரிந்து கொள்ளாமலேயே அவ்வாறு கூறிவிடுகின்றனர். ஸ்ரீகிருஷ்ணர் சம்பூர்ண நிர்விகாரி, ஆனால் அவர் சந்நியாசி என்று கூறப்படாமல் தேவதை என்று கூறப்படுகின்றார் என்பதை தந்தை புரிய வைக்கின்றார். சந்நியாசி என்று கூறுவதற்கும், தேவதை என்று கூறுவதற்கும் பொருள் இருக்கிறது. இவர் தேவதையாக எப்படி ஆனார்? சந்நியாசத்திலிருந்து தேவதையாக ஆகியிருக்கின்றார். எல்லையற்ற சந்நியாசம் செய்திருக்கின்றார், பிறகு புது உலகிற்குச் சென்று விட்டார். அவர்கள் எல்லைக்குட்பட்ட சந்நியாசம் செய்கின்றனர். எல்லையற்றதில் செல்ல முடியாது. விகாரங்களின் மூலம் எல்லைக்குட்பட்ட மறுபிறப்பு எடுக்க வேண்டியிருக்கிறது. எல்லையற்ற எஜமானர்களாக ஆக முடியாது. இராஜா இராணியாக ஒருபொழுதும் ஆக முடியாது. ஏனெனில் அவர்களது தர்மமே தனிப்பட்டது. சந்நியாச தர்மம் தேவி தேவதா தர்மம் கிடையாது. நான் அதர்மத்தை அழித்து தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். விகாரமும் அதர்மம் அல்லவா! அதனால் தான் தந்தை கூறுகின்றார் - இவையனைத்தையும் அழித்து விட்டு ஒரே ஒரு ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்ய நான் வர வேண்டியிருக்கிறது. பாரதத்தில் எப்பொழுது சத்யுகம் இருந்ததோ அப்பொழுது ஒரே ஒரு தர்மம் மட்டுமே இருந்தது, அதே தர்மம் தான் பிறகு அதர்மமாக மாறிவிடுகிறது. இப்பொழுது நீங்கள் மீண்டும் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். யார் எந்த அளவிற்கு முயற்சி செய்கிறீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். தன்னை ஆத்மா என்ற நிச்சயம் செய்ய வேண்டும். குடும்ப விவகாரத்தில் இருங்கள். அதிலும் எவ்வளவு முடியுமோ எழுந்திருக்கும்பொழுதும், அமரும்பொழுதும் இதை உறுதி செய்யுங்கள், எவ்வாறு பக்தர்கள் அதிகாலையில் எழுந்து ஏகாந்தத்தில் அமர்ந்து மாலையை உருட்டி ஜெபிக்கின்றனர். நீங்கள் முழு நாளின் கணக்கு எடுக்கிறீர்கள். இந்த நேரத்தில் இவ்வளவு நேரம் நினைவு இருந்தது, முழு நாளும் இவ்வளவு நேரம் நினைவு இருந்தது, மொத்தத்தைக் கணக்கு எடுக்கிறீர்கள். அவர்கள் அதிகாலையில் எழுந்து மாலை உருட்டுகின்றனர். சிலர் உண்மையான பக்தனாக இல்லாமலும் இருக்கின்றனர். சிலரது புத்தி எங்கெங்கோ வெளியில் அலைந்து கொண்டே இருக்கின்றது. பக்தியினால் எந்த இலாபமும் கிடைக்காது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இது ஞானமாகும், இதன் மூலம் அதிக இலாபம் ஏற்படுகிறது. இப்பொழுது உங்களுடையது முன்னேறும் கலையாகும். தந்தை அடிக்கடி மன்மனாபவ என்று கூறுகின்றார். கீதையிலும் வார்த்தை இருக்கிறது, ஆனால் இதன் பொருளை யாராலும் கூற முடியாது. பதில் கூற முடியாது. உண்மையில் அதன் பொருளும் எழுதப்பட்டிருக்கிறது, தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு, தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விட்டு விட்டு என் ஒருவனை நினைவு செய்யுங்கள். பகவானின் மகாவாக்கியம் அல்லவா! ஆனால் அவர்களது புத்தியில் கிருஷ்ண பகவானின் மகாவாக்கியம் என்று இருக்கிறது. அவர் தேகதாரி, பிறப்பு இறப்பில் வரக் கூடியவர் அல்லவா! அவரை பகவான் என்று எப்படிக் கூற முடியும்? ஆக சந்நியாசி போன்ற யாருடைய பார்வையும் தந்தை மற்றும் குழந்தைகளின் பார்வை போன்று இருக்க முடியாது. காந்தியை பாபு ஜீ என்று கூறலாம், ஆனால் தந்தை மற்றும் குழந்தைக்கான உறவு என்று கூறமாட்டார்கள். இருப்பினும் அவர் சாகாரமானவர் ஆகிவிடுகிறார் அல்லவா! தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று உங்களுக்கு புரிய வைக்கப்படுகிறீர்கள். இவரிடத்தில் அமர்ந்திருக்கும் தந்தை எல்லையற்ற பாபு ஜீ ஆவார். லௌகீக் மற்றும் பரலௌகீக் இருவரிடமிருந்தும் ஆஸ்தி கிடைக்கிறது. பாபு ஜீயிடமிருந்து எதுவும் கிடைப்பது கிடைக்கவில்லை. நல்லது, பாரதத்தின் இராஜ்யம் திரும்பவும் கிடைத்தது, ஆனால் இதை ஆஸ்தி என்று கூற முடியாது. சுகம் கிடைக்க வேண்டும் அல்லவா!

 

இரண்டு ஆஸ்திகள் உள்ளன - ஒன்று எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து, மற்றொன்று எல்லையற்ற தந்தையிடமிருந்து. பிரம்மாவிடமிருந்து எந்த ஆஸ்தியும் கிடைப்பது கிடையாது. முழு பிரஜைகளுக்கும் அவர் தந்தையாக இருக்கலாம், அவரைத் தான் கிரேட் கிரேட் கிரான்ட் ஃபாதர் (தந்தை) என்று கூறுகிறோம். அவர் பிரம்மா தானே கூறுகின்றார் - என்னிடமிருந்து உங்களுக்கு எந்த ஆஸ்தியும் கிடைப்பது கிடையாது, இவரிடமிருந்தே எதுவும் கிடைக்காது என்று இவர் கூறும் பொழுது அந்த பாபு (காந்தி)ஜி இடமிருந்து என்ன ஆஸ்தி கிடைக்கும்? எதுவும் கிடையாது. ஆங்கிலேயர்கள் சென்று விட்டனர். இப்பொழுது என்ன இருக்கிறது? உண்ணாவிரதம், கொள்ளையடித்தல், போராட்டம் போன்றவைகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. எவ்வளவு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன! எதற்கும் பயப்படுவது கிடையாது. பெரிய பெரிய ஆபிசர்களையும் கொலை செய்து விடுகின்றனர். சுகத்திற்குப் பதிலாக மேலும் துக்கமடைகின்றனர். ஆக எல்லையற்ற விசயம் இது தான். நான் சரீரம் அல்ல, ஆத்மா என்ற நம்பிக்கை முதலில் செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தந்தை நம்மை தத்தெடுத்திருக்கின்றார், நாம் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். ஞானக் கடலான தந்தை வந்திருக்கின்றார் மற்றும் சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம் தருகின்றார் என்பது உங்களுக்கு புரிய வைக்கப்படுகிறது. வேறு யாரும் புரிய வைக்க முடியாது. தேகம், தேகம் உட்பட அனைத்தையும் மறந்து என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். சதோபிரதானமாக அவசியம் ஆக வேண்டியிருக்கும். பழைய உலகம் விநாசம் ஆகியே தீரும் என்பதையும் அறிவீர்கள். புது உலகில் மிகவும் குறைவாக இருப்பர். கோடிக் கணக்கான ஆத்மாக்கள் எங்கே! 9 இலட்சம் ஆத்மாக்கள் எங்கே! அனைவரும் எங்கு செல்வர்? நாம் அனைத்து ஆத்மாக்களும் மேலே இருந்தோம் என்பது இப்பொழுது உங்களது புத்தியில் இருக்கிறது. பிறகு இங்கு நடிப்பை நடிப்பதற்காக வந்தோம். ஆத்மாவைத் தான் நடிகர் என்று கூறலாம். ஆத்மா இந்த சரீரத்தின் மூலம் நடிப்பை நடிக்கிறது. ஆத்மாவிற்கு இந்திரியங்கள் தேவை அல்லவா! ஆத்மா எவ்வளவு சிறியதாக இருக்கிறது! 84 இலட்சம் பிறவிகள் கிடையாது. ஒவ்வொருவரும் 84 இலட்சம் பிறவிகள் எடுத்தால் பிறகு பாகத்தை எவ்வாறு திரும்பவும் நடிப்பார்கள்! நினைவு செய்ய முடியாது. நினைவு நீங்கிவிடும். 84 பிறவிகளே உங்களுக்கு நினைவில் இல்லை, மறந்து விடுகிறீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்து அவசியம் தூய்மை ஆக வேண்டும். இந்த யோக அக்னியின் மூலம் விகர்மங்கள் விநாசம் ஆகும். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியை நாம் கல்ப கல்பத்திற்கு அடைகிறோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இப்பொழுது மீண்டும் சொர்க்கவாசி ஆவதற்காக தந்தை கூறுவது என்னவெனில், என் ஒருவனை நினைவு செய்யுங்கள், ஏனெனில் நான் தான் பதீத பாவனனாக இருக்கிறேன். நீங்கள் தந்தையை அழைத்தீர்கள் அல்லவா! ஆக இப்பொழுது தந்தை பாவனம் ஆக்குவதற்காக வந்திருக்கின்றார். பாவனமாக இருப்பவர்கள் தேவதைகள், பதீதமாக இருப்பவர்கள் மனிதர்கள். பாவனம் ஆகி பிறகு சாந்திதாமத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் சாந்திதாமம் செல்ல விரும்புகிறீர்களா? அல்லது சுகதாமம் வர விரும்புகிறீர்களா? சுகம் காக்கை எச்சிலுக்குச் சமமானது, எமக்கு சாந்தி தேவை என்று சந்நியாசிகள் கூறுகின்றனர். ஆக அவர்கள் ஒருபொழுதும் சத்யுகத்திற்கு வரவே முடியாது. சத்யுகத்தில் இல்லற மார்க்கத்தின் தர்மம் இருந்தது. தேவதைகள் விகாரமற்றவர்களாக இருந்தனர். அவர்களே மறுபிறப்பு எடுத்து எடுத்து பதீதமாக ஆகிவிடுகின்றனர். இப்பொழுது விகாரமற்றவர்களாக ஆக வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் எனில் என்னை நினைவு செய்யுங்கள், உங்களது பாவங்கள் அழிந்துவிடும், புண்ணிய ஆத்மாக்களாக ஆகிவிடுவீர்கள். பிறகு சாந்திதாமம் மற்றும் சுகதாமத்திற்குச் செல்வீர்கள். அங்கு அமைதியும் இருந்தது, சுகமும் இருந்தது. இப்பொழுது துக்கதாமமாக இருக்கிறது. பிறகு தந்தை வந்து சுகதாமத்தை ஸ்தாபனை, துக்கதாமத்தை விநாசம் செய்கின்றார். சித்திரமும் எதிரில் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் எங்கு நின்றிருக்கிறீர்கள்? என்று கூறுங்கள். இப்பொழுது கலியுகத்தின் இறுதியாகும். விநாசம் எதிரிலேயே உள்ளது. பிறகு மிகச் சிறிய பாகம் மட்டுமே இருக்கும். இவ்வளவு கண்டங்கள் அங்கு இருக்காது. இந்த உலகின் சரித்திர பூகோளத்தை தந்தை தான் வந்து புரிய வைக்கின்றார். இது பாடசாலையாகும். பகவானின் மகாவாக்கியம். முதன் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்பொழுது கலியுகமாக இருக்கிறது, பிறகு சத்யுகத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு சுகமே சுகம் தான். ஒருவரை மட்டுமே நினைவு செய்ய வேண்டும் - இது தான் கலப்படமற்ற நினைவு ஆகும். சரீரத்தையும் மறந்துவிட வேண்டும். சாந்திதாமத்திலிருந்து வந்திருக்கிறீர்கள், பிறகு மீண்டும் சாந்திதாமத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு பதீதமானவர்கள் யாரும் செல்ல முடியாது. தந்தையை நினைவு செய்து செய்து பாவனமாகி நீங்கள் முக்திதாமத்திற்குச் சென்றுவிடுவீர்கள். இதை நல்ல முறையில் வந்து புரிய வைக்க வேண்டியிருக்கிறது. முன்பு இவ்வளவு சித்திரங்கள் கிடையாது. படங்களே இல்லாமல் சுருக்கமாகப் புரிய வைக்கப்பட்டன. இந்த பாடசாலையின் மூலம் மனிதனிலிருந்து தேவதைகளாக ஆக வேண்டும். இது புது உலகிற்கான ஞானமாகும். அதை தந்தை தான் கொடுப்பார் அல்லவா! ஆக தந்தையின் பார்வை குழந்தைகளின் மீது இருக்கிறது. ஆத்மாக்களாகிய நமக்கு கற்பிக்கின்றார். நீங்களும் புரிய வைக்கிறீர்கள் - எல்லையற்ற தந்தை நமக்கு புரிய வைக்கின்றார், அவரது பெயர் சிவபாபா. எல்லையற்ற தந்தை என்று மட்டும் கூறினாலும் குழப்பமடைந்து விடுவார்கள், ஏனெனில் பாபாக்களும் பலர் ஆகிவிட்டனர். மாநகராட்சி மேயரையும் பாபா என்று கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார் - நான் இவருக்குள் வந்தாலும் எனது பெயர் சிவன் ஆகும். நான் இந்த இரதத்தின் மூலம் உங்களுக்கு ஞானம் கொடுக்கிறேன். இவரைத் தத்தெடுத்திருக்கிறேன். இவருக்கு பிரஜாபிதா பிரம்மா என்று பெயர் வைத்திருக்கிறேன். இவருக்கும் என் மூலமாக ஆஸ்தி கிடைக்கிறது. நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) இப்பொழுது பழைய உலகிலிருந்து புது உலகிற்கு செல்லக் கூடிய (குதிக்கக் கூடிய) நேரமாகும், ஆகையால் இந்த பழைய உலகை எல்லையற்ற சந்நியாசம் செய்ய வேண்டும். இதை புத்தியினால் மறக்க வேண்டும்.

 

2) படிப்பின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும். பள்ளியில் கண்களை மூடிக் கொண்டு அமருவது என்பது நியமம் கிடையாது. படிக்கும் நேரத்தில் புத்தி இங்கு அங்கு என்று அலையக் கூடாது, கொட்டாவி வரக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எதை கேட்கிறீர்களோ அது தாரணை ஆகிவிட வேண்டும்.

 

வரதானம்:

நேரத்திற்கு தகுந்தாற் போன்று தன்னை பரிசோதித்து மாற்றிக் கொண்டு சதா வெற்றியடையக் கூடிய சிரேஷ்ட ஆத்மா ஆகுக.

 

உண்மையான இராஜயோகிகள் ஒருபோதும் எந்த பிரச்சனையிலும் தனது உறுதியிலிருந்து பிறழ மாட்டார்கள். எனவே நேரத்திற்குத் தகுந்தாற் போன்று தன்னை இவ்வாறு பரிசோதித்து கொள்ள வேண்டும், பரிசோதித்த பின்பு மாற்றிக் கொள்ள வேண்டும். பரிசோதனை மட்டும் செய்து கொண்டிருந்தால் மனம் உடைந்து விடுவீர்கள். எனக்குள் இந்த குறையும் இருக்கிறது, மாற முடியுமா? முடியாதா? தெரியவில்லையே என்று சிந்திக்க ஆரம்பித்து விடுவீர்கள். ஆகையால் பரிசோதிக்க வேண்டும், மாற்றிக் கொள்ளவும் வேண்டும். ஏனெனில் நேரத்திற்கு தகுந்தாற் போன்று காரியங்கள் செய்பவர்களுக்கு சதா வெற்றி கிடைக்கும். ஆகையால் சதா வெற்றியடையக் கூடிய சிரேஷ்ட ஆத்மா ஆகி தீவிர முயற்சியின் மூலம் முதல் நம்பரில் வந்து விடுங்கள்.

 

சுலோகன்:

மனம், புத்தியை கட்டுப்படுத்தும் பயிற்சி இருந்தால் தான் விநாடியில் விதேஹி ஆக முடியும்.

 

ஓம்சாந்தி