30.08.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
துக்கத்தைப்
போக்கி
சுகமளிப்பவராகிய
பாபாவை
நினைவு செய்வீர்களானால்
உங்களுடைய
அனைத்து
துக்கங்களும்
விலகிப்
போய்விடும்.
அந்த்
மதி
ஸோ
கதி
(கடைசி
மனநிலை
என்னவோ
அதுபோல்
பிறவி)
ஆகிவிடும்.
கேள்வி:
பாபா,
குழந்தைகளாகிய
உங்களுக்கு
நடமாடும்
போதெல்லாம்
நினைவில்
இருப்பதற்கான கட்டளை
ஏன்
கொடுத்துள்ளார்?
பதில்:
1.
ஏனென்றால்
நினைவின்
மூலம்
தான்
பிறவி,
பிறவிகளின்
பாவங்களின்
சுமை
இறங்கும்.
2.
நினைவின்
மூலம்
தான்
ஆத்மா
சதோபிரதானமாக
ஆகும்.
3.
இப்போதிருந்தே
நினைவில்
இருப்பதற்கான பயிற்சி
இருக்குமானால்
கடைசி
நேரத்தில்
ஒரு
பாபாவின்
நினைவில்
இருக்க
முடியும்.
கடைசிக்
காலத்தைப் பற்றித்
தான்
பாடல்
உள்ளது
-
கடைசிக்
காலத்தில்
பெண்ணை
நினைத்தால்.........
4.
பாபாவை
நினைவு செய்வதன்
மூலம்
21
பிறவிகளின்
சுகம்
மனக்கண்
முன்னால்
வந்துவிடுகின்றது.
பாபாவைப்
போன்ற
இனிமையான பொருள்
உலகத்தில்
எதுவும்
கிடையாது.
அதனால்
பாபாவின்
கட்டளையாவது
-
குழந்தைகளே,
நடமாடும் போதும்
என்னையே
நினைவு
செய்யுங்கள்.
ஓம்
சாந்தி.
யாருடைய
நினைவில்
அமர்ந்திருக்கிறீர்கள்?
இது
ஒருவருடன்
மிகமிக
அன்பான
சம்மந்தம்.
அந்த
ஒருவர்
தான்
அனைவரையும்
துக்கங்களில்
இருந்து
விடுவிப்பவர்.
தந்தை
குழந்தைகளைப்
பார்க்கிறார் என்றால்
அனைத்துப்
பாவங்களும்
நீங்கிக்
கொண்டே
செல்லும்.
ஆத்மா
சதோபிரதானத்தின்
பக்கம்
போய்க் கொண்டிருக்கிறது.
துக்கமோ
அளவற்றதாக
உள்ளது
இல்லையா?
பாடவும்
செய்கின்றனர்,
துக்கத்தைப்
போக்கி சுகம்
கொடுப்பவர்
என்று.
இப்போது
பாபா
உங்களை
உண்மையிலும்
உண்மையாக
அனைத்து
துக்கங்களில் இருந்தும்
விடுவிப்பதற்காக
வந்துள்ளார்.
சொர்க்கத்தில்
துக்கத்தின்
பெயர்
அடையாளம்
எதுவும்
இருக்காது.
அப்படிப்பட்ட
தந்தையை
நினைவு
செய்ய
வேண்டியது
மிகவும்
அவசியமாகும்.
தந்தைக்கு
குழந்தைகளிடம் அன்பு
இருக்கும்
இல்லையா?
பாபாவுக்கு
எந்த-எந்தக்
குழந்தைகளிடம்
அன்பு
உள்ளது
என்பதை
நீங்கள் அறிவீர்கள்,
குழந்தைகளுக்குப்
புரிய
வைக்கப்பட்டுள்ளது
-
தன்னை
ஆத்மா
என
உணருங்கள்.
தேகமாக உணராதீர்கள்.
யார்
நல்ல
இரத்தினங்களாக
இருக்கிறார்களோ,
அவர்கள்
பாபாவை
நடமாடும்போதும்
கூட நினைவு
செய்கின்றனர்.
இதையும்
ஏன்
சொல்கிறார்?
ஏனென்றால்
ஜென்ம-ஜென்மாந்தரமாக
உங்களின் பாவங்களின்
குடம்
நிரம்பி
வந்துள்ளது.
ஆகவே
இந்த
நினைவு
யாத்திரை
மூலம்
தான்
நீங்கள்
பாவாத்மாவிலிருந்து புண்ணியாத்மாவாக
ஆகிவிடுவீர்கள்.
இதையும்
குழந்தைகள்
நீங்கள்
அறிவீர்கள்,
இது
பழைய சரீரம்.
துக்கம்
ஆத்மாவுக்குத்
தான்
கிடைக்கிறது.
சரீரத்திற்குக்
காயம்
ஏற்படுவதால்
ஆத்மா
அதை
உணர்கின்றது.
ஆத்மா
சொல்கிறது,
நான்
நோயாளியாக,
துக்கத்தில்
இருக்கிறேன்.
இது
துக்க
உலகம்.
எங்கே
நீங்கள்
சென்றாலும் துக்கத்தின்
மேல்
துக்கம்
தான்.
சுகதாமத்திலோ
துக்கம்
இருக்க
முடியாது.
துக்கத்தின்
பெயரை
எடுத்தாலே நீங்கள்
துக்க
உலகில்
இருக்கிறீர்கள்
என்றாகிறது.
சுகதாமத்திலோ
கொஞ்சம்
கூட
துக்கம்
இருக்காது.
காலமும் இன்னும்
கொஞ்சம்
தான்
உள்ளது.
இதில்
பாபாவை
நினைவு
செய்வதற்கான
முழு
முயற்சி
செய்ய
வேண்டும்.
எவ்வளவு
நினைவு
செய்து
கொண்டே
இருக்கிறீர்களோ,
அவ்வளவு
சதோபிரதானமாக
ஆகிக்
கொண்டே செல்வீர்கள்.
புருஷார்த்தம்
செய்து
மன
நிலையை
அந்த
மாதிரி
சேமித்துக்
கொள்ள
வேண்டும்,
உங்களுக்குக் கடைசியில்
ஒரு
பாபாவைத்
தவிர
வேறெதுவும்
நினைவு
வரக்கூடாது.
ஒரு
பாடலும்
உள்ளது
–
கடைசிக் காலத்தில்
யார்
பெண்ணை
நினைக்கிறார்களோ.......
இது
கடைசிக்
காலம்
இல்லையா?
பழைய
உலகமாகிய துக்கதாமத்தின்
கடைசி
நேரம்.
இப்போது
நீங்கள்
சுகதாமம்
செல்வதற்கான
முயற்சி
செய்கிறீர்கள்.
நீங்கள் சூத்திரரில்
இருந்து
பிராமணராக
ஆகியிருக்கிறீர்கள்.
இதுவோ
நினைவிருக்க
வேண்டும்
இல்லையா?
சூத்திரர்களுக்கு
உள்ளது
துக்கம்.
நாம்
துக்கத்திலிருந்து விடுபட்டு
இப்போது
சிகரத்தின்
மீது
ஏறிக்
கொண்டிருக்கிறோம்.
அதனால்
ஒரு
பாபாவை
மட்டுமே
நினைவு
செய்ய
வேண்டும்.
மிகமிக
அன்பான
பாபா.
அவரை
விடவும் இனிமையான
பொருள்
என்ன
இருக்கிறது?
ஆத்மா
அந்தப்
பரமபிதா
பரமாத்மாவைத்
தான்
நினைவு
செய்கிறது இல்லையா?
ஆத்மாக்கள்
அனைவருக்கும்
தந்தை,
அவரைக்
காட்டிலும்
இனிமையான
பொருள்
இவ்வுலகில் வேறெதுவும்
இருக்க
முடியாது.
இவ்வளவு
ஏராளமான
குழந்தைகள்
உள்ளனர்.
இவர்களில்
எத்தனைப் பேருக்கு
நினைவு
வந்திருக்கும்?-ஒரு
விநாடியில்.
நல்லது,
முழு
சிருஷ்டியின்
சக்கரம்
எப்படிச்
சுற்றுகிறது?
அதுவும்
குழந்தைகள்
உங்களுடைய
புத்தியில்
அர்த்தத்துடன்
கூட
உள்ளது.
எப்படி
யாராவது
டிராமா
பார்த்து விட்டு
வருகிறார்கள்.
டிராமா
நினைவிருக்கிறதா
என்று
யாராவது
கேட்டால்,
ஆம்
என்று
சொன்னதுமே முழுவதும்
புத்தியில்
வந்துவிடுகின்றது,
ஆரம்பத்திலிருந்து கடைசி
வரை!
மற்றப்படி
அதை
வர்ணனை
செய்து சொல்வதற்கோ
நேரம்
பிடிக்கும்.
பாபா
எல்லையற்ற
பாபா.
அவரை
நினைவு
செய்வதாலே
21
பிறவிகளுக்கான சுகம்
மனக்
கண்
முன்னால்
வந்துவிடும்.
பாபாவிடமிருந்து
இந்த
ஆஸ்தி
கிடைக்கின்றது.
ஒரு
விநாடியில் குழந்தைகளுக்கு
பாபாவின்
ஆஸ்தி
முன்னால்
வந்துவிடுகின்றது.
குழந்தை
பிறந்தது
என்றால்
தந்தை
தெரிந்து கொள்கிறார்,
வாரிசு
பிறவி
எடுத்தது
என்று.
முழு
ஆஸ்தியும்
நினைவு
வந்துவிடும்.
நீங்களும்
தனியாக வெவ்வேறு
குழந்தைகள்
என்றால்
தனித்தனி
ஆஸ்தி
கிடைக்கிறது
இல்லையா?
தனித்தனியாக
நினைவு செய்கிறீர்கள்.
நாம்
எல்லையற்ற
தந்தையின்
வாரிசுகள்.
சத்யுகத்திலோ
ஒரே
ஒரு
குழந்தை
இருக்கும்.
அது முழு
ஆஸ்திக்கும்
வாரிசு
ஆகிறது.
குழந்தைகளுக்குத்
தந்தை
கிடைத்தார்
என்றால்
ஒரு
விநாடியில்
உலகத்துக்கு மாலிக்
(எஜமானன்)
ஆகிவிட்டனர்.
தாமதமாவதில்லை.
பாபா
சொல்கிறார்,
நீங்கள்
தங்களை
ஆத்மா
என உணருங்கள்.
பெண்
என
உணராதீர்கள்.
ஆத்மாவோ
ஆண்
குழந்தை
இல்லையா?
பாபா
சொல்கிறார்,
எனக்கு எல்லாக்
குழந்தைகளும்
நினைவில்
வருகிறார்கள்.
ஆத்மாக்கள்
அனைவரும்
சகோதர-சகோதரர்கள்.
வருகின்ற அனைத்து
தர்மங்களைச்
சேர்ந்தவர்களும்
சொல்கின்றனர்,
அனைத்து
தர்மத்தினரும்
சகோதர-சகோதரர்கள்.
ஆனால்
புரிந்து
கொள்வதில்லை.
இப்போது
நீங்கள்
புரிந்து
கொள்கிறீர்கள்,
நாம்
பாபாவின்
மிகமிக
அன்பான குழந்தைகள்.
பாபாவிடமிருந்து
முழுமையான
எல்லையற்ற
ஆஸ்தி
நிச்சயமாகக்
கிடைக்கும்.
எப்படிப்
பெறுவீர்கள்?
அதுவும்
குழந்தைகளாகிய
உங்களுக்கு
ஒரு
விநாடியில்
நினைவுக்கு
வந்துவிடுகின்றது.
நாம்
சதோபிரதானமாக இருந்தோம்,
பிறகு
தமோபிரதானமாக
ஆனோம்.
இப்போது
மீண்டும்
சதோபிரதானமாக
ஆக
வேண்டும்.
நீங்கள்
அறிவீர்கள்,
பாபாவிடமிருந்து
நமக்கு
சொர்க்கத்தின்
சுகத்தினுடைய
ஆஸ்தி
கிடைக்கின்றது.
பாபா
சொல்கிறார்,
தன்னை
ஆத்மா
என
உணருங்கள்.
தேகமோ
அழியக்
கூடியது.
ஆத்மா
தான் சரீரத்தை
விட்டுச்
சென்று
விடுகின்றது.
பிறகு
போய்
வேறொரு
புதிய
சரீரத்தைக்
கர்ப்பத்தில்
பெறுகிறது.
சரீரம் தயாரானவுடன்
ஆத்மா
அதில்
பிரவேசமாகிறது.
ஆனால்
அதுவோ
இராவணனின்
வசமாக
உள்ளது.
விகாரங்களின் வசமாகி
சிறைக்குள்
செல்கின்றது.
அங்கோ
இராவணன்
இருப்பதில்லை.
துக்கத்தின்
விஷயமே
கிடையாது.
வயோதிகராக
ஆனதும்
தெரிய
வரும்
-
இப்போது
இந்த
சரீரத்தை
விட்டு
நாம்
வேறொரு
சரீரத்தில்
போய் பிரவேசமாகப்
போகிறோம்.
அங்கோ
பயத்தின்
விஷயம்
எதுவும்
இருக்காது.
இங்கோ
எவ்வளவு
பயப்படுகின்றனர்!
அங்கே
பயமற்றவர்களாக
இருப்பார்கள்.
பாபா
குழந்தைகளாகிய
உங்களை
அளவற்ற
சுகத்திற்கு
கொண்டு செல்கிறார்.
சத்யுகத்தில்
அளவற்ற
சுகம்,
கலியுகத்தில்
அளவற்ற
துக்கம்.
அதனால்
இதை
துக்கதாமம்
என்கின்றனர்.
பாபாவோ
எந்த
ஒரு
கஷ்டமும்
தரவில்லை.
இல்லறத்தில்
இருங்கள்,
குழந்தைகளைப்
பராமரியுங்கள்,
பாபாவை மட்டும்
நினைவு
செய்யுங்கள்.
குரு-கோசாயி
அனைவரையும்
விட்டுவிடுங்கள்.
நானோ
அனைத்து
குருக்களையும் விட
மேலானவன்
இல்லையா?
அவர்கள்
அனைவரும்
என்னுடைய
படைப்புகள்.
என்னைத்
தவிர
வேறு யாரையும்
பதீத-பாவனர்
எனச்
சொல்ல
மாட்டார்கள்.
பிரம்மா,
விஷ்ணு,
சங்கரைப்
பதீத
பாவன்
எனச் சொல்வார்களா
என்ன?
கிடையாது.
என்னைத்
தவிர,
தேவதைகளையும்
கூட
சொல்ல
முடியாது.
இப்போது குழந்தைகள்
நீங்கள்
கங்கையை
பதீத
பாவனி
எனச்
சொல்வீர்களா?
இந்தத்
தண்ணீரின்
நதிகளோ
எப்போதுமே ஓடிக்
கொண்டிருப்பவை
தான்.
கங்கா,
பிரம்மபுத்திரா
முதலியவை எல்லாம்
இருந்தே
வந்துள்ளன.
இவற்றிலோ குளித்துக்
கொண்டே
தான்
இருக்கின்றனர்.
மழை
பெய்தால்
வெள்ளம்
வந்து
விடுகின்றது.
இதுவும்
கூட துக்கம்
ஆகிறது
இல்லையா?
அளவற்ற
துக்கம்!
வெள்ளத்தில்
பாருங்கள்,
எவ்வளவு
மனிதர்கள்
இறந்து போயினர்!
சத்யுகத்தில்
துக்கத்தின்
விஷயம்
கிடையாது.
மிருகங்களுக்கும்
கூட
அங்கே
துக்கம்
இருக்காது.
அவற்றிற்கும்
அகால
மரணம்
ஏற்படாது.
இந்த
டிராமாவே
அதுபோல்
உருவாக்கப்
பட்டுள்ளது.
பக்தியில் பாடுகின்றனர்,
பாபா,
நீங்கள்
எப்போது
வருகிறீர்களோ,
அப்போது
நாங்கள்
உங்களுடையவர்களாகவே ஆகிவிடுவோம்.
வரத்தான்
செய்கிறார்
இல்லையா?
துக்கதாமத்தின்
கடைசி
மற்றும்
சுகதாமத்தின்
ஆரம்பத்திற்கு இடையில்
தான்
வருவார்.
ஆனால்
இது
யாருக்கும்
தெரியாது.
சிருஷ்டியின்
ஆயுள்
எவ்வளவு
இருக்கும் என்பது
கூட
யாருக்கும்
தெரியாது.
பாபா
எவ்வளவு
சுலபமாகப்
புரிய
வைக்கிறார்!
சிருஷ்டிச்
சக்கரத்தின் ஆயுள்
5000
ஆண்டுகள்
என்பது
இதற்கு
முன்பு
உங்களுக்குத்
தெரியுமா
என்ன?
அவர்களோ,
இலட்சக்கணக்கான
வருடங்கள்
எனச்
சொல்லி விடுகின்றனர்.
இப்போது
பாபா
புரிய
வைத்துள்ளார்.
1250
வருடங்கள் உள்ளதாக
ஒவ்வொரு
யுகமும்
உள்ளது.
சுவஸ்திகாவில்
முழுமையாக
4
பாகங்கள்
இருப்பதாகக்
காட்டுகின்றனர்.
ஒரு
சிறிதும்
வேறுபாடு
இருப்பதில்லை.
விவேகமும்
சொல்கிறது
-
மிகச்சரியான
கணக்கு
இருக்க
வேண்டும்.
ஜெகந்நாத்
பூரியிலும்
சோறு
சமைத்து
வைத்தால்
4
பாகங்கள்
தாமாகவே
ஆகிவிடுகின்றது
-
அதுபோல்
யுக்தி உருவாக்கப்பட்டுள்ளது.
அங்கே
சோறு
அதிகம்
சாப்பிடுகின்றனர்.
ஜெகந்நாத்
என்று
சொன்னாலும்
சரி,
ஸ்ரீநாத் என்று
சொன்னாலும்
சரி,
விஷயம்
ஒன்று
தான்.
இருவரையுமே
கருப்பாகக்
காட்டுகின்றனர்.
ஸ்ரீநாத்
கோவிலில் நெய்க்களஞ்சியம்
உள்ளது.
அனைத்தும்
நெய்யில்
பொரித்த
நல்ல-நல்ல
உணவுப்
பொருள்கள்
(பிரசாதமாகக்)
கிடைக்கின்றன.
வெளியில்
கடைகள்
வைக்கப்படுகின்றன.
எவ்வளவு
பிரசாதம்
வைக்கப்பட்டிருக்கும்!
யாத்திரிகர்கள் அனைவரும்
கடைக்காரர்களிடம்
சென்று
வாங்குகின்றனர்.
ஜெகந்நாத்தில்
பிறகு
சோறு
தான்
அதிகமாக உள்ளது.
அது
ஜெகந்நாத்,
இது
ஸ்ரீநாத்.
சுகதாமம்
மற்றும்
துக்கதாமத்தைக்
காட்டுகின்றனர்.
ஸ்ரீநாத் சுகதாமத்தினுடையதாக
இருந்தது.
அது
(ஜெகந்நாத்)
துக்கதாமத்தினுடையது.
கருப்பாகவோ
இச்சமயம் ஆகிவிட்டுள்ளனர்
-
காமசிதையில்
அமர்ந்ததால்.
ஜெகந்நாத்தில்
சோற்றுப்
படையல்
மட்டும்
செய்கின்றனர்.
இவரை
ஏழையாகவும்,
அவரை
பணக்காரராகவும்
காட்டுகின்றனர்.
ஞானக்கடலாக
இருப்பவர்
ஒரு
பாபா மட்டுமே.
பக்தியை,
அஞ்ஞானம்
எனச்
சொல்லப்படுகின்றது.
அதனால்
எதுவும்
கிடைப்பதில்லை.
அங்கே குருமார்களுக்கு
மட்டும்
வருமானம்
அதிகம்
கிடைக்கிறது.
திறமைசாலிகளாக
உள்ளனர்,
அவர்களிடம்
யாராவது கற்றுக்
கொள்கிறார்கள்
என்றால்
அவர்
எங்களுடைய
குரு,
அவர்
எங்களுக்கு
இதைக்
கற்பித்தார்
எனச் சொல்வார்கள்.
அவர்கள்
அனைவரும்
சரீரதாரிகள்,
ஜென்மம்
எடுப்பவர்கள்.
இப்போது
உங்களுடன்
யார்
இருக்கிறார்?
விசித்திர
பாபா!(சரீரமற்றவர்).
அவர்
சொல்கிறார்,
இது
என்னுடைய சரீரம்
அல்ல.
இது
உங்களுடைய
இந்த
தாதாவின்
சரீரம்.
அவர்
முழு
84
பிறவிகள்
எடுத்துள்ளார்.
இவருடைய அநேக
ஜென்மங்களின்
கடைசியில்
நான்
இவருக்குள்
பிரவேசமாகிறேன்,
உங்களை
சுகதாமத்திற்கு
அழைத்துச் செல்வதற்காக.
இவரை
கௌமுக்
(பசுவின்
வாய்)
எனவும்
சொல்லிவிடுகின்றனர்.
கௌமுகத்துக்கு
எவ்வளவு தூர-தூரத்தில்
இருந்தெல்லாம்
வருகின்றனர்!
இங்கேயும்
கௌமுக்
உள்ளது.
மலையில்
இருந்து
தண்ணீரோ நிச்சயமாக
வரும்.
கிணறுகளுக்கும்
தண்ணீர்
தினந்தோறும்
மலையிலிருந்து வருகின்றது.
அது
ஒருபோதும் நிற்பதில்லை.
எங்கிருந்தாவது
கால்வாய்
வெளிப்பட்டால்
அதை
கங்கை
நீர்
எனச்
சொல்லிவிடுவார்கள்.
அங்கே
போய்
குளிக்கின்றனர்.
கங்கை
நீர்
எனப்
புரிந்து
கொண்டிருக்கின்றனர்.
ஆனால்
பதீத்திலிருந்து பாவனமாக
இந்த
கங்கை
நீரினால்
ஆகமாட்டார்கள்.
பாபா
சொல்கிறார்,
பதீத
பாவன்
நான்
மட்டுமே!
ஹே ஆத்மாக்களே,
என்னை
மட்டுமே
நினைவு
செய்யுங்கள்.
தேகத்துடன்
கூட
தேகத்தின்
அனைத்து சம்மந்தங்களையும்
விட்டுத்
தன்னை
ஆத்மா
என
உணர்ந்து
என்னை
நினைவு
செய்யுங்கள்.
அப்போது உங்களுடைய
ஜென்ம-ஜென்மாந்தரத்தின்
பாவங்கள்
பஸ்மமாகிவிடும்.
பாபா
உங்களை
ஜென்ம-ஜென்மாந்தரத்தின்
பாவங்களில்
இருந்து
விடுவிக்கிறார்.
இச்சமயமோ
உலகில்
அனைவருமே
பாவம்
செய்து
கொண்டே
இருக்கின்றனர்.
கர்மபோகம்
இல்லையா?
முந்தைய
ஜென்மத்தில்
பாவம்
செய்துள்ளனர்,
63
பிறவிகளின்
கணக்கு-வழக்கு
உள்ளது!
கொஞ்சம்-கொஞ்சமாகக்
கலைகள்
குறைந்து
கொண்டே
செல்கின்றன.
எப்படி
சந்திரனின்
கலைகள் குறைகின்றன
இல்லையா?
இது
எல்லையற்ற
இரவு-பகல்.
இப்போது
முழு
உலகத்தின்
மீது,
அதிலும்
குறிப்பாக பாரதத்தின்
மீது
இராகுவின்
தசா
அமர்ந்துள்ளது.
இராகுவின்
கிரஹணம்
பிடித்துள்ளது.
இப்போது
குழந்தைகளாகிய நீங்கள்
ஷியாமிருந்து
(கருப்பு)
சுந்தராக
(அழகாக)
ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள்.
அதனால்
கிருஷ்ணரையும் ஷியாம்-சுந்தர்
எனச்
சொல்கின்றனர்.
உண்மையிலேயே
கருப்பாக
ஆக்கிவிட்டுள்ளனர்.
காமசிதையில் அமர்ந்துள்ளார்
என்றால்
அதனுடைய
அடையாளம்
காட்டப்பட்டுள்ளது.
ஆனால்
மனிதர்களுக்குக்
கொஞ்சம் புத்தி
வேலை
செய்கிறது
இல்லையா?
ஒன்றைக்
கருப்பாக,
இன்னொன்றை
வெள்ளையாக
செய்துவிடுகின்றனர்.
இப்போது
நீங்கள்
வெள்ளையாக
ஆவதற்கான
புருஷார்த்தம்
செய்து
கொண்டிருக்கிறீர்கள்.
சதோபிரதானமாக ஆவதற்கான
புருஷார்த்தம்
செய்வீர்களானால்
அப்போது
அதுபோல்
ஆவீர்கள்
இல்லையா?
இதில்
கஷ்டத்தின் விஷயம்
எதுவும்
இல்லை.
இந்த
ஞானத்தை
இப்போது
நீங்கள்
கேட்கிறீர்கள்.
பிறகு
மறைந்து
போகும்.
கீதை படித்துச்
சொல்வார்கள்.
ஆனால்
இந்த
ஞானத்தையோ
சொல்ல
முடியாது.
அது
பக்தி
மார்க்கத்திற்கான
புத்தகம் ஆகிறது.
பக்தி
மார்க்கத்திற்காக
ஏராளமான
சாதனங்கள்
உள்ளன.
ஏராளமான
சாஸ்திரங்கள்
உள்ளன.
ஒவ்வொருவரும்
ஒவ்வொன்றைப்
படிக்கின்றனர்,
ஏதேனும்
செய்கின்றனர்.
இராமரின்
கோவிலுக்கும்
செல்கின்றனர்.
இராமரையும்
கருப்பாக
ஆக்கிவிட்டுள்ளனர்.
கருப்பாக
ஏன்
ஆக்குகின்றனர்
என்பது
பற்றி
சிந்தனை
செய்ய வேண்டும்.
கல்கத்தாவின்
காளியும்
உள்ளார்.
அம்மா-அம்மா
என்று
உருகுகின்றனர்.
அனைத்தையும்
விட பயங்கரமாகக்
காட்டப்படுபவர்
காளி.
அவரைப்
பிறகு
மாதா
என்கின்றனர்.
உங்களிடம்
இந்த
ஞான
பாணம்,
ஞானக்
கட்டாரி
முதலியவை உள்ளன.
ஆக,
அவர்கள்
பிறகு
ஆயுதங்களைக்
கொடுத்துவிட்டுள்ளனர்.
வாஸ்தவத்தில்
காளிக்கு
முதலில் மனிதர்களை
பலியிட்டு
வந்தனர்.
இப்போது
அரசாங்கம்
அதை
நிறுத்திவிட்டது.
முன்பு
சிந்து
மாகாணத்தில்
தேவியின்
கோவில்
கிடையாது.
எப்போது
வெடிகுண்டு
வெடித்ததோ,
அப்போது ஒரு
பிராமணர்
சொன்னார்
-
காளி
நமக்குச்
சொல்லிவிட்டார்
-
நம்முடைய
கோவில்
இல்லை,
சீக்கிரம் கட்டுங்கள்.
இல்லையென்றால்
இன்னும்
குண்டுகள்
வெடிக்கும்.
அவ்வளவு
தான்,
ஏராளமான
பணம்
சேர்ந்தது,
கோவில்
உருவானது.
இப்போது
பாருங்கள்,
ஏராளமான
கோவில்கள்.
எத்தனை
இடங்களுக்கு
அலைகின்றனர்!
பாபா
உங்களை
இந்த
அனைத்து
விஷயங்களில்
இருந்தும்
விடுவிப்பதற்காகப்
புரிய
வைக்கிறார்,
யாருக்கும் நிந்தனை
செய்யவில்லை.
பாபா
டிராமாவைப்
புரிய
வைக்கிறார்.
இந்த
சிருஷ்டிச்
சக்கரம்
எப்படி உருவாக்கப்பட்டுள்ளது.
நீங்கள்
எதையெல்லாம்
பார்த்தீர்களோ,
அவை
மீண்டும்
நடைபெறும்.
எந்தப் பொருள்
இல்லையோ,
அது
உருவாகும்.
நீங்கள்
புரிந்து
கொண்டு
விட்டீர்கள்,
நம்முடைய
இராஜ்யம்
இருந்தது,
அதை
நாம்
இழந்துவிட்டோம்.
இப்போது
மீண்டும்
பாபா
சொல்கிறார்
-
குழந்தைகளே,
நரனிலிருந்து நாராயணன் ஆக
வேண்டுமானால்
புருஷார்த்தம்
செய்யுங்கள்.
பக்தி
மார்க்கத்தில்
நீங்கள்
அநேகக்
கதைகளைக்
கேட்டே வந்திருக்கிறீர்கள்.
பிறகு
யாராவது
அமரராக
ஆனார்களா?
யாருக்காவது
ஞானத்தின்
மூன்றாவது
கண்
கிடைத்ததா?
இதை
பாபா
வந்து
புரிய
வைக்கிறார்.
இந்தக்
கண்களால்
எந்த
ஒரு
தீயதையும்
பார்க்காதீர்கள்.
குற்றமற்ற
தூய கண்களால்
பாருங்கள்.
இந்த
பழைய
உலகத்தை
பார்க்காதீர்கள்.
இதுவோ
அழிந்துவிடப்
போகின்றது.
பாபா சொல்கிறார்
-
இனிமையிலும்
இனிமையான
குழந்தைகளே,
நான்
உங்களுக்கு
இராஜ்யத்தைக்
கொடுத்துவிட்டுப் போகிறேன்,
21
பிறவிகளுக்காக.
அங்கே
வேறு
யாருடைய
இராஜ்யமும்
இருக்காது.
துக்கத்தின்
பெயர்
இருக்காது.
நீங்கள்
மிகுந்த
சுகம்
மற்றும்
செல்வம்
நிறைந்தவர்களாக,
ஆகிவிடுவீர்கள்.
இங்கோ
மனிதர்கள்
எவ்வளவு பட்டினி
கிடந்து
சாகிறார்கள்!
அங்கோ
முழு
உலகின்
மீதும்
நீங்கள்
இராஜ்யம்
செய்வீர்கள்.
எவ்வளவு கொஞ்சமாக
நிலம்
வேண்டியதிருக்கும்!
சிறிய
தோட்டம்,
பிறகு
விருத்தி
அடைந்து
அடைந்து
கலியுகக் கடைசி வரை
எவ்வளவு
பெரியதாக
ஆகிவிடுகின்றது!
மேலும்
5
விகாரங்களின்
பிரவேசத்தின்
காரணத்தால்
அது
முள் நிறைந்த
காடாக
ஆகிவிடுகின்றது.
பாபா
சொல்கிறார்,
காமம்
மகா
சத்ரு
(எதிரி)
-
அதனால்
நீங்கள்
முதல்,இடை,
கடை
முழுவதும்
துக்கத்தை
அடைகிறீர்கள்.
ஞானம்
மற்றும்
பக்தி
பற்றியும்
இப்போது
நீங்கள்
புரிந்து கொண்டீர்கள்.
விநாசம்
எதிரிலேயே
உள்ளது.
அதனால்
இப்போது
சீக்கிரம்-சீக்கிரமாக
முயற்சி
செய்ய
வேண்டும்.
இல்லையென்றால்
பாவங்கள்
பஸ்மமாகாது(சாம்பல்).
பாபாவின்
நினைவின்
மூலம்
தான்
பாவங்கள்
நீங்கும்.
பதீத-பாவன்
ஒரு
தந்தை
தான்.
கல்பத்திற்கு
முன்
யார்
புருஷார்த்தம்
செய்திருக்கிறார்களோ,
அவர்கள்
செய்தே காட்டுவார்கள்.
மந்தமாக
ஆகிவிடாதீர்கள்.
ஒரு
பாபாவைத்
தவிர
வேறு
யாரையும்
நினைவு
செய்யாதீர்கள்.
அனைவரும்
துக்கம்
தருபவர்கள்.
யார்
சதா
சுகம்
தருபவரோ,
அவரை
நினைவு
வையுங்கள்.
இதில்
தவறு செய்யாதீர்கள்..
நினைவு
செய்யவில்லை
என்றால்
பாவனமாக
எப்படி
ஆவீர்கள்?
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
தேடிக்கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவு
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே!
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1)
இந்தக்
கண்களால்
தீயதைப்
பார்க்காதீர்கள்.
பாபா
கொடுத்துள்ள
மூன்றாவது ஞானக்கண்-அந்தக்
குற்றமற்ற
தூய
கண்களால்
பார்க்க
வேண்டும்.
சதோபிரதானமாக ஆவதற்கான
முழு
முயற்சி
செய்ய
வேண்டும்.
2)
இல்லற
நடவடிக்கைகளைப்
பராமரித்துக்
கொண்டே
அன்பான
பொருளாகிய
பாபாவை நினைவு
செய்ய
வேண்டும்.
மன
நிலையை
அதுபோல்
தயார்ப்படுத்திக்
கொள்ள
வேண்டும்
கடைசி
நேரத்தில்
ஒரு
பாபாவைத்
தவிர
வேறு
எதுவுமே
நினைவு
வரக்
கூடாது.
வரதானம்:
கவனம்
மற்றும்
பரிசோதனையின்
மூலம்
சுய
சேவை
செய்யக்
கூடிய
சம்பன்னம்
(நிறைந்த)
மற்றும்
சம்பூர்னமானவர்
ஆகுக.
சுய
சேவை
என்றால்
தன்
மீது
சம்பன்னம்
மற்றும்
சம்பூர்ணம்
ஆவதில்
சதா
கவனம்
செலுத்துவதாகும்.
படிப்பின்
முக்கிய
பாடங்களில்
தன்னை
நேர்மையுடன்
தேர்ச்சியடையச்
செய்வதாகும்.
ஞான
சொரூபம்,
நினைவு
சொரூபம்
மற்றும்
தாரணை
சொரூபம்
-
என்ற
சுய
சேவை
சதா
புத்தியில்
இருந்தால்
இந்த
சேவை உங்களது
இந்த
சம்பன்ன
சொரூபத்தின்
மூலம்
பலருக்கு
சேவை
தானாகவே
செய்வித்துக்
கொண்டிருக்கும்.
ஆனால்
இதற்கான
விதி
-
கவனம்
மற்றும்
பரிசோதனை
செய்வதாகும்.
சுய
பரிசோதனை
செய்ய
வேண்டுமே தவிர
மற்றவர்களை
அல்ல.
சுலோகன்:
அதிகம்
பேசுவதனால்
புத்தியின்
சக்தி
குறைந்து
விடுகிறது,
ஆகையால்
குறைவாக
மற்றும்
இனிமையாக
பேசுங்கள்.
ஓம்சாந்தி