11.05.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
நீங்கள்
ஒருபோதும்
தடைக்கு
காரணமாகக்
கூடாது,
உள்ளுக்குள் ஏதேனும்
குறை
இருந்தால்
நீக்கி
விடுங்கள்.
இதுவே
உண்மையான
வைரமாக
ஆவதற்கான நேரமாகும்.
கேள்வி:
எந்த
விசயத்தில்
குறைபாடு
ஏற்பட்டதும்,
ஆத்மாவின்
மதிப்பு
குறைந்து
போய்
விடுகிறது?
பதில்:
தூய்மையற்ற
தன்மை
முதல்
குறைபாடாக
வருகிறது.
எப்போது
ஆத்மா
தூய்மையாக
இருக்கிறதோ,
அப்போது
அதன்
தரம்
கூட
மிக
உயர்ந்து
இருக்கிறது.
அவர்கள்
மதிப்பு
மிக்க
இரத்தினமாக,
வணக்கத்திற்குரியவர்களாக
இருக்கின்றனர்.
கொஞ்சம்
தூய்மையற்ற
தன்மையின்
குறைபாடு
இருந்தாலும்
கூட
மதிப்பு
போய் விடுகிறது.
இப்போது
நீங்கள்
பாபாவுக்குச்
சமமாக
நிரந்தர
தூய்மையான
வைரமாக
ஆக
வேண்டும்.
உங்களைத் தனக்குச்
சமமாக
தூய்மையாக்குவதற்காக
பாபா
வந்திருக்கின்றார்.
தூய்மையான
குழந்தைகளுக்குத்
தான்
ஒரு பாபாவின்
நினைவு
இருந்து
கொண்டே
இருக்கும்,
பாபாவிடம்
உறுதியான
அன்பு
இருக்கும்.
அவர்கள் ஒருபோதும்
யாருக்கும்
துக்கம்
தர
மாட்டார்கள்,
மிக
இனிமையானவர்களாக
இருப்பார்கள்.
ஓம்
சாந்தி.
டபுள்
ஓம்
சாந்தி
கூட
சொல்ல
முடியும்.
இதன்
அர்த்தம்
குழந்தைகளுக்கும்
தெரியும்,
பாப்தாதாவுக்கும்
தெரியும்.
இதன்
அர்த்தமே
நான்
ஆத்மா
சாந்த
சொரூபம்
என்பதாகும்.
கூடவே
அமைதிக் கடலாக,
சுகக்கடலாக,
தூய்மைக்கடலாக
இருக்கும்
பாபாவின்
குழந்தை
ஆவேன்.
அனைத்திலும்
முதலாவது தூய்மைக்கடல்
ஆகும்.
தூய்மை
ஆவதில்
தான்
மனிதர்களுக்கு
கஷ்டம்
ஏற்படுகிறது.
மேலும்
தூய்மை ஆவதில்
மிகுந்த
தரவரிசை
இருக்கிறது.
ஒவ்வொரு
குழந்தையும்
தன்னுடைய
தரத்தைப்
புரிந்து
கொள்ள முடியும்.
இந்த
தரம்
கூட
அதிகரித்துக்
கொண்டே
போகிறது.
நாம்
இன்னும்
சம்பூர்ணம்
ஆகவில்லை.
சிலருக்குள்
தூய்மை
மற்றும்
யோகத்தில்
ஏதேனும்
குறைபாடுகள்
கண்டிப்பாக
இருக்கிறது.
தேக
அபிமானத்தில் வருவதன்
மூலம்
குறைபாடுடையவர்களாக
ஆகின்றனர்.
சிலருக்குள்
அதிகமாக,
சிலருக்குள்
குறைவாக குறைபாடுகள்
உள்ளன.
வித
விதமான
வைரங்கள்
இருக்கின்றன.
அதன்
பிறகு
பூதக்கண்ணாடியால்
பார்க்கப்படுகிறது.
எப்படி
பரமாத்மா
என்று
புரிந்து
கொள்ளப்படுகின்றாரோ,
அப்படியே
ஆத்மாக்களையும்
(குழந்தை
களையும்)
புரிந்து
கொள்ள
வேண்டி
இருக்கிறது.
இவர்கள்
இரத்தினங்கள்
அல்லவா!
ரத்தினங்கள்
கூட
அனைத்தும் வணக்கத்திற்குரியதாக
இருக்கின்றன.
முத்து,
மாணிக்கம்,
புக்ராஜ்
போன்ற
அனைத்தும்
வணங்குவதற்கு உரியதாகும்.
ஆகையால்
தான்
அனைத்து
விதமான
இரத்தினங்களும்
அணியப்படுகின்றன.
வரிசைக்கிரமமான முயற்சியின்படி
இருக்கின்றார்கள்
அல்லவா!
எல்லைக்கப்பாற்பட்ட
தந்தை
அழியாத
ஞான
ரத்தினங்களின் வியாபாரி,
அவர்
ஒருவரே
ஆவார்
என்று
புரிந்து
கொள்கின்றனர்.
இரத்தின
வியாபாரி
என்றும்
அவரைக் கண்டிப்பாகச்
சொல்வார்கள்.
ஞான
இரத்தினங்களைக்
கொடுக்கின்றார்
அல்லவா!
மேலும்
இந்த
ரதம்
கூட
(பிரம்மா
பாபா)
ரத்தின
வியாபாரி,
அவர்
கூட
இரத்தினங்களின்
மதிப்பை
தெரிந்திருக்கின்றார்.
வைர
வைடூர்யங்களை பூதக்
கண்ணாடியால்
நன்றாகப்
பார்க்க
வேண்டி
இருக்கிறது.
இவருக்குள்
எந்தளவு
குறைபாடு
இருக்கிறது?
இவர்
எந்த
வகையான
ரத்தினம்?
எந்தளவு
சேவாதாரியாக
இருக்கின்றார்?
இரத்தினங்களைப்
பார்க்க
மனம் விரும்புகிறது.
நல்ல
இரத்தினம்
என்றால்
மிகுந்த
அன்போடு
பாபா
பார்ப்பார்.
இவர்
மிக
நன்றாக
இருக்கின்றார்.
இவரை
தங்கப்பேழையில்
வைக்க
வேண்டும்.
புக்ராஜ்
போன்ற
இரத்தினங்களை
தங்கப்
பேழையில்
வைப்பதில்லை.
இங்கே
கூட
எல்லையற்ற
இரத்தினங்களாக
இருக்கின்றார்கள்.
ஒவ்வொருவரும்
தன்னுடைய
மனதில்,
நான் எந்தவிதமான
ரத்தினம்,
எனக்குள்
எந்த
குறைபாடும்
இல்லை
தானே?
என்று
தெரிந்திருக்கின்றார்கள்.
எப்படி வைடூரியங்கள்
கூர்ந்து
பார்க்கப்படுகிறதோ,
அப்படியே
ஒவ்வொரு
வரையும்
பார்க்க
வேண்டி
இருக்கிறது.
நீங்களோ
சைதன்ய
(உயிரோட்டமுடைய)
இரத்தினங்களாக
இருக்கின்றீர்கள்.
நாம்
எந்தளவு
சப்ஜபரி,
நீலாம்பரி
(இரத்தின
வகைகள்)
ஆகி
இருக்கின்றோம்
என்று
ஒவ்வொருவரும்
தன்னைப்
பார்க்க
வேண்டும்.
பூக்களில் கூட
சில
பூக்கள்
எப்போதும்
ரோஜாவாகவும்,
சில
பூக்கள்
வேறு
விதமாகவும்
இருக்கின்றன.
உங்களில்
கூட வரிசைக்கிரமமாக
இருக்கின்றீர்கள்.
ஒவ்வொருவரும்
தன்னைப்
பற்றி
நன்றாக
தெரிந்து
கொள்ள
முடியும்.
முழு
நாளும்
நான்
என்ன
செய்தேன்?
பாபாவை
எந்தளவு
நினைவு
செய்தேன்?
என்று
தன்னைத்
தானே பாருங்கள்.
குடும்ப
விவகாரத்தில்
இருந்து
கொண்டே
பாபாவை
நினைவு
செய்ய
வேண்டும்
என்பதைக்
கூட பாபா
சொல்லிவிட்டார்.
பாபா
நாரதரைப்
பற்றி
கூட
சொல்லி இருக்கின்றார்
-
உன்னுடைய
முகத்தை
பார்.
இது
கூட
ஒரு
உதாரணம்
ஆகும்.
குழந்தைகளாகிய
நீங்கள்
ஒவ்வொருவரும்
தன்னை
நன்றாக
சோதித்துக் கொள்ள
வேண்டும்.
எந்த
பாபா
மூலமாக
நாம்
வைரத்துக்கு
சமமாக
ஆகின்றோமோ,
அவர்
மீது
நம்
அன்பு எந்தளவு
இருக்கிறது,
வேறு
யாரிடமும்
உள்ளுணர்வு
போக
வில்லை
தானே?
என்னுடைய
தெய்வீக
சுபாவம் எந்தளவு
இருக்கிறது?
என்று
சோதனை
செய்ய
வேண்டும்.
சுபாவம்
கூட
மனிதர்களை
மிகவும்
பாதிக்கிறது.
ஒவ்வொருவருக்கும்
மூன்றாம்
கண்
கிடைத்திருக்கிறது.
அதன்
மூலமாக
தன்னை
சோதனை
செய்ய
வேண்டும்.
எந்தளவு
நான்
பாபாவின்
நினைவில்
இருக்கின்றேன்?
எந்தளவு
என்
நினைவு
பாபாவிடம்
சென்றடைகிறது?
அவருடைய
நினைவில்
இருந்து
ஒரேடியாக
புல்லரித்துப்
போய்விட
வேண்டும்.
மகிழ்ச்சியாக
இருக்க
விடாதபடி மாயை
தடை
போடுகிறது
என்று
பாபா
அவரே
சொல்கின்றார்.
இப்போது
நாம்
அனைவரும்
முயற்சியாளர்கள் என்று
குழந்தைகள்
தெரிந்திருக்கின்றார்கள்.
முடிவு
கடைசியில்
தெரியும்.
தன்னை
சோதனை
செய்ய
வேண்டும்.
குறைபாடுகளை
இப்போது
நீங்கள்
நீக்க
முடியும்.
ஒரேடியாக
தூய்மையான
வைரமாக
ஆக
வேண்டும்.
குறைபாடு
இருந்தால்,
நம்முடைய
மதிப்பும்
குறைந்து
விடும்
என்று
கூட
புரிந்து
கொள்கின்றார்கள்.
இரத்தினங்கள் அல்லவா!
நிரந்தர
தூய்மையான
மதிப்புமிக்க
வைரமாக
ஆக
வேண்டும்
என்று
பாபா
புரிய
வைக்கின்றார்.
முயற்சி
செய்வதற்காக
பாபா
விதவிதமாகப்
புரிய
வைக்கின்றார்.
(இன்று
யோகத்தின்
நேரத்தில்
பாப்தாதா
கதியில்
இருந்து
(பாபா
அமரும்
பீடம்)
எழுந்து
சபையை
சுற்றி வந்து
ஒவ்வொரு
குழந்தைளையும்
கண்களால்
(திருஷ்டி
மூலம்)
சந்தித்துக்
கொண்டிருந்தார்.)
பாபா
இன்று ஏன்
எழுந்தார்?
யார்-யார்
சேவாதாரிக்
குழந்தைகள்
என்று
பார்ப்பதற்காக
எழுந்து
வந்தார்.
ஏனெனில்
குழந்தைகள் ஆங்காங்கே
அமர்ந்திருக்கின்றனர்.
ஆகையால்
பாப்தாதா
எழுந்து
ஒவ்வொரு
வரையும்
பார்த்தார்
–
இவருக்குள் என்ன
குணம்
இருக்கிறது?
இவருடைய
அன்பு
எந்தளவு
இருக்கிறது?
எல்லாக்
குழந்தைகளும்
முன்னே அமர்ந்திருக்கின்றனர்.
ஆக
அனைவரும்
பாபாவுக்கு
மிகப்
பிரியமானவர்களாக
இருக்கின்றனர்.
ஆனால்
வரிசைக் கிரமமான
முயற்சிப்படி
தான்
அன்புக்குரியவர்களாக
இருப்பார்கள்.
யார்
யாருக்குள்
என்னென்ன
குறைபாடுகள் இருக்கின்றன
என்று
பாபாவுக்குத்
தெரியும்.
ஏனெனில்
எந்த
சரீரத்தில்
பாபா
பிரவேசம்
செய்திருகின்றாரோ,
அவர்
(பிரம்மா
பாபா)
கூட
சோதனை
செய்கின்றார்.
இந்த
இரண்டு
தந்தையரும்
(பாப்தாதா)
சேர்ந்திருக்கின்றனர் அல்லவா!
ஆகையால்
யார்
எந்தளவு
மற்றவர்களுக்கு
சுகம்
கொடுக்கிறார்களோ,
யாருக்கும்
துக்கம் கொடுக்கவில்லையோ
அவர்கள்
மறைந்திருக்க
முடியாது.
ரோஜா,
முத்துக்களை
ஒருபோதும்
மறைத்து
வைக்க முடியாது.
பாபா
அனைத்தையும்
குழந்தைகளுக்குப்
புரிய
வைத்து,
பிறகு
குழந்தைகளிடம்
'என்
ஒருவனையே நினைவு
செய்தீர்கள்
என்றால்
உங்கள்
துரு
நீங்கி
விடும்'
என்று
சொல்கின்றார்.
நினைவு
செய்யும்போது
முழு நாளும்
என்னவெல்லாம்
செய்தீர்களோ
அவற்றையும்
சோதனை
செய்து
பார்க்க
வேண்டும்.
எனக்குள்
என்ன அவகுணம்
இருக்கின்ற
காரணத்தினால்
பாபாவின்
மனதில்
அமர
முடியவில்லை?
மனதில்
அமரக்கூடியவர்கள் தான்
சிம்மாசனத்தில்
அமரமுடியும்.
ஆக
பாபா
எழுந்து
குழந்தைகளைப்
பார்க்கின்றார்,
என்
மன
சிம்மாசனத்தில் அமரக்கூடிய
குழந்தைகளாக
யாரெல்லாம்
ஆக
முடியும்?
நாம்
எந்தளவு
பாஸ்
ஆவோம்
என்று
நேரம் வரும்போது,
குழந்தைகளுக்கு
உடனடியாக
தெரிய
வருகின்றது.
தேர்ச்சி
அடைய
முடியாதவர்களுக்கு முதலிலேயே
'என்னுடைய
மதிப்பெண்கள்
குறைந்து
விடும்'
என்று
தெரிந்து
விடுகிறது.
நமக்கு
மதிப்பெண்கள் கிடைக்க
வேண்டும்
என்று
நீங்கள்
புரிந்திருக்கின்றீர்கள்.
நாம்
யாருடைய
மாணவர்கள்?
பகவானுடைய மாணவர்கள்.
சிவபாபா
இந்த
தாதா
மூலம்
படிப்பிக்கின்றார்
என்று
தெரிந்திருக்கின்றனர்.
ஆக
எவ்வளவு
குஷி
இருக்க
வேண்டும்!
பாபா
நம்மை
எவ்வளவு
அன்பு
செய்கின்றார்,
எவ்வளவு
இனிமையானவர்,
எந்த கஷ்டமும்
கொடுப்பதில்லை.
இந்த
சக்கரத்தை
நினைவு
செய்யுங்கள்
என்று
மட்டும்
சொல்கின்றார்.
படிப்பு ஒன்றும்
அதிகம்
கிடையாது.
நாம்
இப்படி
ஆக
வேண்டும்
என்ற
குறிக்கோள்
நம்
முன்னே
இருக்கிறது.
தெய்வீக
குணங்களின்
குறிக்கோள்
இருக்கிறது.
நீங்கள்
தெய்வீக
குணங்களை
தாரணை
செய்து
இவர்களைப் போல
(இலக்ஷ்மி
நாராயணர்)
தூய்மை
ஆகின்றீர்கள்.
ஆகையால்
தான்
மாலையில்
உருட்டப்படுகின்றீர்கள்.
எல்லையற்ற
தந்தை
நமக்கு
படிப்பிக்கின்றார்.
இது
மகிழ்ச்சியைத்
தருகின்றது
அல்லவா!
கண்டிப்பாக
தனக்குச் சமமாக
தூய்மை
மற்றும்
ஞானம்
நிறைந்தவராக
ஆக்குவார்.
இதில்
தூய்மை,
சுகம்
சாந்தி
அனைத்தும்
வந்து விடுகிறது.
இப்போது
யாரும்
பரிபூரணம்
ஆகவில்லை.
கடைசியில்
அப்படி
ஆக
வேண்டும்.
அதற்காக
முயற்சி செய்ய
வேண்டும்.
பாபாவை
அனைவரும்
அன்பு
செய்கின்றனர்.
பாபா
என்று
சொன்னதும்
மனமே
மலர்ந்து விடுகிறது.
பாபாவிடமிருந்து
எவ்வளவு
பெரிய
ஆஸ்தி
கிடைக்கிறது.
பாபாவைத்
தவிர
வேறு
எங்கும்
மனம் போகாது.
பாபாவின்
நினைவு
தான்
அதிகமாக
வர
வேண்டும்.
பாபா,
பாபா,
பாபா,
மிக
அன்புடன்
பாபாவை நினைவு
செய்ய
வேண்டும்.
இராஜாவின்
குழந்தை
என்றால்
அவருக்கு
இராஜ்ஜியத்தின்
போதை
இருக்குமல்லவா!
இப்போது
இராஜாக்களின்
புகழ்
அவ்வளவு
இல்லை.
எப்போது
ஆங்கிலேய
ஆட்சி
இருந்ததோ,
அப்போது அவர்களின்
மதிப்பு
அதிகமாக
இருந்தது.
அனைவரும்
இராஜாக்களுக்கு
வணக்கம்
செலுத்தினர்.
வைஸ்ராயைத் தவிர
அனைவரும்
அவருக்கு
வணக்கம்
செலுத்தினர்.
இப்போது
அவர்களின்
நிலை
என்ன
ஆகி
விட்டது!
யாரேனும்
வந்து
இராஜ்ய
பதவியை
அடைந்து
விட
முடியாது
என்றும்
கூட
நீங்கள்
தெரிந்திருக்கின்றீர்கள்.
நான்
ஏழைப்பங்காளன்
(கரீப்
நிவாஸ்)
என்று
பாபா
புரிய
வைக்கின்றார்.
ஏழைகள்
உடனடியாக
பாபாவைத் தெரிந்து
கொள்கின்றனர்.
இவையனைத்தும்
பாபாவுடையது,
அவருடைய
ஸ்ரீமத்படி
தான்
நாம்
அனைத்தும் செய்வோம்
என்று
புரிந்து
கொள்கின்றனர்.
பணக்காரர்களுக்கு
அவர்களுடைய
பணத்தின்
போதை
இருக்கின்ற காரணத்தால்,
அவர்கள்
இப்படிச்
செய்ய
முடியாது
(ஸ்ரீமத்படி
நடக்க
முடியாது)
ஆகையால்
பாபா
சொல்கின்றார் நான்
ஏழைப்
பங்காளன்.
ஆமாம்,
பெரியவர்கள்
(பணக்காரர்கள்)
வரவேற்கப்படுகிறார்கள்,
ஏனெனில்
அவர்கள் மூலமாக
பிறகு
ஏழைகள்
கூட
உடனடியாக
வந்து
விடுவார்கள்.
எவ்வளவு
பெரிய
பெரிய
மனிதர்கள்
கூட இங்கே
போகின்றார்கள்
என்று
பார்த்து
அவர்களும்
வந்து
விடுவார்கள்.
ஆனால்
அப்பாவி
ஏழைகள்
மிகவும் பயப்படுகிறார்கள்.
ஒரு
நாள்
அவர்கள்
கூட
உங்களிடம்
வருவார்கள்.
அந்த
நாள்
கூட
வரும்.
பிறகு
எப்போது நீங்கள்
அவர்களுக்கு
புரிய
வைப்பீர்களோ,
அப்போது
மிகவும்
மகிழ்ச்சி
அடைவார்கள்.
உடனடியாக
பலி ஆகி விடுவார்கள்.
அவர்களுக்காக
கூட
நீங்கள்
தனியாக
நேரம்
ஒதுக்குவீர்கள்.
நாம்
அனைவருக்கும்
நன்மை செய்ய
வேண்டும்
என்று
குழந்தைகளின்
மனம்
விரும்புகிறது.
அவர்கள்
கூட
படித்து
பெரிய
அலுவலர்கள் ஆகின்றார்கள்
அல்லவா!
நீங்கள்
ஈஸ்வரிய
அமைப்பைச்
சேர்ந்தவர்கள்.
நீங்கள்
அனைவருக்கும்
நன்மை செய்ய
வேண்டும்.
காட்டுவாசி
(சபரி)
கொடுத்த
நெல்லிக்கனியை
இராமர்
சாப்பிட்டதாக
பாடல்
கூட
இருகிறதல்லவா!
தானம்
எப்போதும்
ஏழைகளுக்கு
செய்ய
வேண்டும்,
பணக்காரர்களுக்கு
அல்ல
என்று
புத்தி
கூட
சொல்கிறது.
நீங்கள்
போகப்போக
இவையனைத்தும்
செய்ய
வேண்டும்.
இதில்
யோக
பலம்
வேண்டும்,
அதில்
கவரப்பட்டு மனிதர்கள்
வருவார்கள்.
தேக
அபிமானம்
இருக்கின்ற
காரணத்தினால்
யோக
பலம்
கூட
குறைவாக
இருக்கிறது.
நமக்கு
எந்தளவு
பாபாவின்
நினைவு
இருக்கிறது?
நாம்
எங்கேயும்
மாட்டிக்
கொள்ளவில்லை
தானே?
என்று ஒவ்வொருவரும்
தன்னுடைய
மனதிடம்
கேட்க
வேண்டும்.
யாரைப்
பார்த்தும்
அசைந்து
விடாதபடி
நம்முடைய நிலை
இருக்க
வேண்டும்.
தேக
அபிமானியாக
ஆகாதீர்கள்,
அனைவரையும்
தன்னுடைய
சகோதரன்
என்று புரிந்து
கொள்ளுங்கள்
என்று
பாபாவின்
கட்டளை
இருக்கிறது.
நாம்
சகோதர-சகோதரன்
என்று
ஆத்மா தெரிந்திருக்கிறது.
தேகத்தின்
அனைத்து
தர்மங்களையும்
விட
வேண்டும்.
கடைசியில்
தேகத்தின்
நினைவு கொஞ்சம்
இருந்தாலும்,
தண்டனை
அடைய
வேண்டி
வரும்.
அந்தளவு
தன்னுடைய
நிலையை
உறுதியாக்க வேண்டும்,
சேவையும்
செய்ய
வேண்டும்.
எப்போது
அந்த
நிலையை
அடைவோமோ,
அப்போது
இந்தப் பதவி
கிடைக்கும்
என்று
உள்ளுக்குள்
புரிந்து
கொள்ள
வேண்டும்.
நிறைய
சேவை
மிச்சம்
இருக்கிறது
பாபா நன்றாகப்
புரிய
வைக்கிறார்.
உங்களுக்குக்
கூட
யோகபலம்
இருந்தால்,
மனிதர்கள்
கவரப்பட்டு
வருவார்கள்.
அநேக
பிறவிகளின்
அழுக்கு
படிந்திருக்கிறது.
அனைத்து
ஆத்மாக்களையும்
தூய்மையாக்க
வேண்டும்
என்ற எண்ணம்
பிராமணர்களாகிய
உங்களுக்கு
வர
வேண்டும்.
மனிதர்கள்
இதைத்
தெரிந்து
கொள்வதில்லை.
நீங்கள் முயற்சியின்படி
இதைத்
தெரிந்து
கொள்கின்றீர்கள்.
தன்னை
சோதனை
செய்ய
வேண்டும்
என்று
பாபா அனைத்து
விசயங்களையும்
புரிய
வைத்துக்
கொண்டே
இருக்கிறார்.
எப்படி
பாபா
எல்லையற்றவராக இருக்கின்றாரோ,
அதுபோல்
குழந்தைகள்
கூட
எல்லையற்ற
எண்ணம்
வைக்க
வேண்டும்.
பாபாவுக்கு
ஆத்மாக்கள் மேல்
எவ்வளவு
அன்பு
இருக்கிறது!
இத்தனை
நாளாக
ஏன்
அன்பு
இல்லை?
ஏனெனில்
குறைபாடுடையவகளாக இருந்தார்கள்.
தூய்மையற்ற
ஆத்மாக்களை
என்ன
அன்பு
செய்வது?
இப்போது
பாபா
அனைவரையும்
தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்க
வந்திருக்கின்றார்.
ஆக
கண்டிப்பாக
லவ்லி
ஆக
வேண்டும்.
பாபாவே
லவ்குழந்தைகளை மிகவும்
ஈர்க்கின்றார்.
நாளுக்கு
நாள்
எவ்வளவு
தூய்மை
ஆகிக்கொண்டே
போவோமோ,
அவ்வளவு
உங்களுக்குள்
ஈர்ப்பு
ஏற்படும்.
பாபாவை
நோக்கி
கவரப்படுவீர்கள்.
நீங்கள்
பாபாவிடம்
செல்லாமல் இருக்க
முடியாது,
அந்தளவு
கவரப்படுவீர்கள்.
உங்கள்
நிலை
வரிசைக்கிரமமான
முயற்சியின்
படி
அந்தளவு வந்துவிடும்.
இங்கே
பாபாவை
பார்த்துக்
கொண்டே
இருக்கலாம்,
இப்போது
சென்று
பாபாவை
சந்திக்கலாம் என்று
புரிந்து
கொள்வீர்கள்.
அப்படிப்பட்ட
பாபாவை
ஒருபோதும்
பிரிந்து
செல்லமாட்டீர்கள்.
இந்தக்
குழந்தை அதிசயம்
செய்கின்றது,
மிக
நல்ல
சேவை
செய்கின்றது
என்று
பிறகு
பாபா
குழந்தைகளால்
கவர்ச்சிக்கப்படுகின்றார்.
கொஞ்சம்
குறைபாடு
இருந்தாலும்
தன்னுடைய
நிலையின்படி
சமயப்படி
நல்ல
சேவை
செய்கிறது.
யாருக்கும் துக்கம்
கொடுப்பது
போன்ற
தவறுகள்
செய்வதில்லை.
நோய்
போன்றவை
ஏற்படுகிறது
என்றால்
அது
கூட கர்மகணக்கு
ஆகும்.
எதுவரை
இங்கே
இருகின்றோமோ,
அதுவரை
ஏதாவது
ஆகிக்கொண்டே
தான்
இருக்கும் என்று
அவர்களே
புரிந்து
கொள்கின்றார்கள்.
இது
இரதமாக
(பிரம்மா
பாபா)
இருந்தாலும்
கூட
கர்மக்கணக்கை கடைசி
வரை
அனுபவிக்க
வேண்டும்.
நான்
இவருக்கு
ஆசீர்வாதம்
செய்வேன்
என்பதெல்லாம்
கிடையாது.
இவர்
கூட
தன்னுடைய
முயற்சியை
செய்யத்
தான்
வேண்டும்.
ஆமாம்,
இரதத்தைக்
கொடுக்கின்றார்,
அதற்காக கொஞ்சம்
உதவி
செய்வேன்.
நிறைய
பந்தனத்தில்
சிக்குண்டவர்கள்
எப்படி
எப்படியெல்லாம்
வருகின்றார்கள்!
எப்படி
யுக்தியோடு
பந்தனத்திலிருந்து விடுபட்டு
வருகின்றனர்,
அவர்களுக்கு
எந்தளவு
அன்பு
இருக்கிறதோ அந்தளவு
யாருக்கும்
கிடையாது.
நிறைய
பேருக்கு
முற்றிலும்
அன்பு
இல்லை.
பந்தனமுள்ள
அவர்களின் அன்பை
வேறு
யாருடைய
அன்புக்குக்கும்
ஒப்பிட
முடியாது.
பந்தனமுள்ளவர்களின்
யோகத்தைக்
கூட சாதாரணமாக
நினைக்காதீர்கள்.
மிகுந்த
நினைவு
செய்து
அழுகின்றனர்.
பாபா,
ஓ,
பாபா!
நாங்கள்
உங்களை எப்போது
சந்திப்போம்?
பாபா,
உலகத்தின்
எஜமானர்
ஆக்ககூடிய
பாபா,
உங்களை
நாங்கள்
எப்படி
சந்திப்போம்?
இப்படி
இப்படியாக
பந்தனத்தில்
சிக்குண்டவர்கள்
அன்புக்கண்ணீர்
விட்டுக்
கொண்டே
இருக்கின்றனர்.
அது அவர்களின்
துக்கத்தின்
கண்ணீர்
கிடையாது.
அந்தக்
கண்ணீர்
அன்பின்
முத்துக்கள்
ஆகி
விடுகின்றன.
ஆக அந்த
பந்தனத்தில்
சிக்குண்டவர்
களின்
யோகம்
குறைவானதா
என்ன!
நினைவு
செய்யும்
போது
மிகவும் துடிக்கின்றனர்.
ஓ
பாபா,
நாங்கள்
உங்களை
எப்போது
சந்திப்போம்?
அனைத்து
துக்கங்களையும்
நீக்கக்கூடிய பாபா!
எவ்வளவு
நேரம்
நீங்கள்
நினைவு
செய்கின்றீர்கள்,
சேவையும்
செய்கின்றீர்கள்!
பந்தனத்தில்
சிக்குண்டவர்கள் சேவை
செய்ய
முடிவதில்லை,
ஆனால்
நினைவின்
மூலமாகவே
அவர்களுக்கு
நிறைய
பலம்
கிடைக்கிறது.
நினைவில்
தான்
அனைத்தும்
அடங்கி
இருக்கிறது.
அவர்கள்
துடித்துக்
கொண்டிருக்கின்றனர்.
பாபா
நாங்கள் எப்போது
விடுதலை
ஆவோம்,
உங்களை
சந்திப்போம்?
என்று
மிகவும்
நினைவு
செய்கின்றனர்!
போகப்போக நாளுக்கு
நாள்
நீங்கள்
மிகவும்
பாபாவை
நோக்கி
ஈர்க்கப்பட்டுக்
கொண்டே
இருப்பீர்கள்.
குளிக்கும்
போதும்,
காரியங்கள்
செய்யும்
போதும்,
நினைவிலேயே
இருப்பீர்கள்.
பாபா,
இந்த
பந்தனங்கள்
முடிந்து
போகக்கூடிய நாள்
வருமா?
என்று
அந்த
அப்பாவிகள்
கேட்டுக்
கொண்டே
இருக்கின்றனர்.
பாபா,
இவர்கள்
எங்களுக்கு மிகவும்
தொந்தரவு
செய்கிறார்கள்,
என்ன
செய்வது?
குழந்தைகளை
அடிக்கலாமா?
பாவம்
ஆகி
விடாதே?
இன்றைய
குழந்தைகளைப்
பற்றி
கேட்கவே
செய்யாதீர்கள்
என்று
பாபா
கூறுகின்றார்.
யாருக்காவது
கணவன் மூலம்
துக்கம்
ஏற்பட்டால்,
அவர்கள்
உள்ளுக்குள்
'இந்த
பந்தனம்
எப்போது
விடுபட்டு,
நாம்
பாபாவை சந்திப்பது'
என்று
நினைக்கின்றனர்.
பாபா,
மிகக்
கடுமையான
பந்தனமாக
இருக்கிறது,
என்ன
செய்வது?
கணவனுடைய
பந்தனம்
எப்போது
விடுபடும்?
பாபா,
பாபா
என்று
சொல்லிக் கொண்டே
இருக்கின்றனர்.
அவர்கள்
மீது
பாபாவுக்கு
ஈர்ப்பு
வருகிறதல்லவா!
அபலைகள்
மிகவும்
சகித்துக்
கொள்கின்றனர்.
பாபா
குழந்தை களுக்கு
தைரியம்
கொடுக்கின்றார்
-
குழந்தைகளே!
நீங்கள்
பாபாவை
நினைத்துக்
கொண்டே
இருந்தால்
இந்த அனைத்து
பந்தனங்களும்
முடிந்து
போய்விடும்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கங்கள்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே.
தாரணைக்கான
முக்கிய
சாராம்:
1.
எனக்குள்
எந்த
அவகுணமும்
இல்லை
தானே?
எந்தளவு
என்னுடைய
நினைவு
பாபா
வரை
சென்றடைகிறது?
என்னுடைய
சுபாவம்
தெய்வீகமானதாக
இருக்கிறதா?
என்
உள்ளுணர்வு எங்கும்
அலையவில்லை
தானே?
என்று
தன்னை
சோதனை
செய்ய
வேண்டும்.
2.
பாபாவையே
ஈர்க்குமளவு
மிக
இனிமையானவராக
(லவ்லி)
ஆக
வேண்டும்.
அனைவருக்கும் சுகம்
கொடுக்க
வேண்டும்.
அன்போடு
பாபாவை
நினைவு
செய்ய
வேண்டும்.
வரதானம்:
வீணான
எண்ணம்
என்ற
தூண்களை
ஆதாரமாக
ஆக்குவதற்குப்
பதிலாக அனைத்து
சம்பந்தங்களின்
அனுபவத்தை
அதிகரிக்கக்கூடிய
உண்மையான
சிநேகி
ஆகுக.
மாயை
பலவீனமான
எண்ணத்தை
உறுதி
ஆக்குவதற்காக
மிகவும்
இராயலான
தூண்களை உருவாக்குகிறது,
இவ்வாறு
நடக்கத்தான்
செய்கிறது,
பெரியவர்கள்
கூட
இவ்வாறு
செய்கின்றனர்,
இப்பொழுது சம்பூரணம்
ஆகவில்லையே,
அவசியம்
ஏதாவது,
ஏதாவது
பலவீனம்
இருக்கத்தான்
செய்யும்
…
மாயை
இது போன்ற
சங்கல்பங்களை
அடிக்கடி
வரவழைக்கின்றது.
இந்த
வீண்
எண்ணங்கள்
என்ற
தூண்கள்
பலவீனத்தை மேலும்
உறுதியாக்கிவிடுகின்றன.
இப்பொழுது
அத்தகைய
தூண்களை
ஆதாரமாகக்
கொள்வதற்குப்
பதிலாக அனைத்து
சம்பந்தங்களின்
அனுபவத்தை
அதிகரியுங்கள்.
சாகார
ரூபத்தில்
துணையின்
அனுபவத்தை
செய்து உண்மையான
சிநேகி
ஆகுங்கள்.
சுலோகன்:
திருப்தி
அனைத்தையும்
விட
உயர்ந்த
குணம்
ஆகும்,
யார்
சதா
திருப்தியாக இருக்கிறார்களோ,
அவர்களே
பிரபுவிற்குப்
பிரியமானவர்கள்.
உலகிற்குப்
பிரியமானவர்கள் மற்றும்
தனக்குப்
பிரியமானவர்கள்
ஆகின்றனர்.
ஓம்சாந்தி