30.11.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
குழந்தைகளாகிய
உங்களை
பக்த
ஆத்மாவிலிருந்து
ஞானி
ஆத்மாக்களாக,
பதீதத்திலிருந்து
பாவனம்
ஆக்குவதற்காக
தந்தை
வந்திருக்கின்றார்.
கேள்வி:
ஞானமுள்ள
குழந்தைகள்
எந்த
சிந்தனையில்
சதா
இருப்பர்?
பதில்:
நான்
அழிவற்ற
ஆத்மா,
இந்த
சரீரம்
அழியக்
கூடியது.
நான்
84
சரீரத்தை
தாரணை
செய்திருக்கிறேன்.
இப்பொழுது
இது
கடைசிப்
பிறப்பாகும்.
ஆத்மா
ஒருபொழுதும்
சிறிது
பெரிதாக
ஆவது
கிடையாது.
சரீரம்
தான் சிறியது,
பெரிதாக
ஆகிறது.
இந்தக்
கண்கள்
சரீரத்தில்
இருக்கிறது.
ஆனால்
இதன்
மூலம்
பார்க்கக்
கூடியவன் நான்
ஆத்மா.
பாபா
ஆத்மாக்களுக்குத்
தான்
ஞானம்
என்ற
மூன்றாவது
கண்
கொடுக்கின்றார்.
அவரும் எதுவரை
சரீரத்தை
ஆதாரமாக
எடுக்கவில்லையோ
அதுவரை
கற்பிக்க
முடியாது.
இப்படிப்பட்ட
சிந்தனைகளை ஞானமுள்ள
குழந்தைகள்
சதா
செய்வர்.
ஓம்சாந்தி.
இவ்வாறு
கூறியது
யார்?
ஆத்மா.
அழிவற்ற
ஆத்மா
சரீரத்தின்
மூலம்
கூறுகிறது.
சரீரம்
மற்றும் ஆத்மாவில்
எவ்வளவு
வித்தியாசம்
இருக்கிறது!
5
தத்துவங்களினால்
ஆக்கப்பட்ட
சரீரம்
மிகப்
பெரிய பொம்மையாக
ஆகிவிடுகிறது.
சிறியதாக
இருந்தாலும்
ஆத்மாவை
விட
நிச்சயம்
பெரியது
ஆகும்.
முதலில் ஒரு
சிறிய
பிண்டமாக
இருக்கும்,
பிறகு
சற்று
பெரியதாகின்ற
பொழுது
தான்
ஆத்மா
பிரவேசிக்கிறது.
பெரியதாக ஆகி
ஆகி
பிறகு
மிகவும்
பெரியதாக
ஆகிவிடுகிறது.
ஆத்மா
சைத்தன்யமானது
அல்லவா!
எதுவரை
ஆத்மா பிரவேசிக்கவில்லையோ
அதுவரை
உடல்
எதற்கும்
பயன்படாது.
எவ்வளவு
வித்தியாசம்
இருக்கிறது!
பேசுவதும்,
நடப்பதும்
ஆத்மா
தான்!
அது
மிகச்
சிறிய
பிந்துவாகத்
தான்
இருக்கிறது.
அது
ஒருபொழுதும்
சிறிது,
பெரிதாக ஆவது
கிடையாது.
விநாசம்
ஆவது
கிடையாது.
நான்
அழிவற்றவன்,
இந்த
சரீரம்
அழியக்
கூடியது
என்பதை இப்பொழுது
பரம்
ஆத்மா
தந்தை
புரிய
வைத்திருக்கின்றார்.
அதில்
நான்
பிரவேசித்து
பாகத்தை
நடிக்கிறேன்.
இந்த
விசயங்களை
இப்பொழுது
நீங்கள்
சிந்தனையில்
கொண்டு
வருகிறீர்கள்.
முன்பு
ஆத்மாவையும் அறியவில்லை,
பரமாத்மாவையும்
அறிந்திருக்கவில்லை.
பெயரளவிற்கு
ஹே!
பரம்பிதா
பரமாத்மா
என்று கூறினோம்.
ஆத்மாவையும்
புரிந்திருந்தோம்,
ஆனால்
சிலர்
நீ
பரமாத்மா
என்று
கூறிவிட்டனர்.
இவ்வாறு கூறியது
யார்?
இந்த
பக்தி
மார்க்கத்தின்
குருக்கள்
மற்றும்
சாஸ்திரங்கள்.
சத்யுகத்தில்
யாரும்
கூறமாட்டார்கள்.
நீங்கள்
என்னுடைய
குழந்தைகள்
என்று
இப்பொழுது
தந்தை
புரிய
வைத்திருக்கின்றார்.
ஆத்மா
இயற்கையானது,
சரீரம்
இயற்கையற்ற,
மண்ணால்
செய்யப்பட்டது
ஆகும்.
ஆத்மா
இருக்கும்
பொழுது
தான்
பேச,
நடக்க முடிகிறது.
ஆத்மாக்களாகிய
நமது
தந்தை
வந்து
புரிய
வைக்கின்றார்
என்பதை
இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள்
அறிவீர்கள்.
நிராகார
சிவபாபா
இந்த
சங்கமயுகத்தில்
தான்
இந்த
சரீரத்தின்
மூலம்
வந்து
கூறுகின்றார்.
இந்த
கண்கள்
சரீரத்தில்
இருக்கின்றது.
இப்பொழுது
தந்தை
ஞானக்
கண்
கொடுக்கின்றார்.
ஆத்மாவில்
ஞானம் இல்லையெனில்
அஞ்ஞான
கண்ணாக
ஆகிவிடுகிறது.
தந்தை
வருகின்ற
பொழுது
ஆத்மாவிற்கு
ஞானக்
கண் கிடைக்கிறது.
ஆத்மா
தான்
அனைத்தும்
செய்கிறது.
ஆத்மா
சரீரத்தின்
மூலம்
காரியங்கள்
செய்கிறது.
தந்தை இந்த
சரீரத்தை
தாரணை
செய்திருக்கின்றார்
என்பதை
இப்பொழுது
நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள்.
தனது
இரகசியங் களையும்
கூறுகின்றார்.
சிருஷ்டியின்
முதல்,
இடை,
கடையின்
இரகசியத்தையும்
கூறுகின்றார்.
முழு
நாடகத்தின் ஞானத்தையும்
கொடுக்கின்றார்.
முன்பு
உங்களுக்கு
எதுவும்
தெரியாமல்
இருந்தது.
ஆம்,
நாடகம்
என்பது தெரிந்திருந்தது.
சிருஷ்டிச்
சக்கரம்
சுற்றிக்
கொண்டே
இருக்கிறது.
ஆனால்
எப்படி
சுற்றுகிறது?
என்பதை யாரும்
அறியவில்லை.
படைப்பவர்
மற்றும்
படைப்பின்
முதல்,
இடை,
கடையின்
ஞானம்
இப்பொழுது உங்களுக்கு
கிடைக்கிறது.
மற்ற
அனைத்தும்
பக்தியாகும்.
தந்தை
வந்து
தான்
உங்களை
ஞான
ஆத்மாக்களாக ஆக்குகின்றார்.
முன்பு
நீங்கள்
பக்த
ஆத்மாக்களாக
இருந்தீர்கள்.
ஆத்மாக்களாகிய
நீங்கள்
பக்தி
செய்து வந்தீர்கள்.
இப்பொழுது
ஆத்மாக்களாகிய
நீங்கள்
ஞானம்
கேட்கிறீர்கள்.
பக்தி
என்றாலே
இருள்
என்று கூறப்படுகிறது.
பக்தியின்
மூலம்
பகவானை
அடைவேன்
என்பது
கிடையாது.
பக்தியின்
பாகமும்
இருக்கிறது,
ஞானத்தின்
பாகமும்
இருக்கிறது
என்பதை
தந்தை
புரிய
வைத்திருக்கின்றார்.
நாம்
பக்தி
செய்து
வந்த
பொழுது எந்த
சுகமும்
இல்லை
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
பக்தி
செய்து
ஏமாற்றம்
அடைந்து
வந்தோம்.
தந்தையைத் தேடி
அலைந்தோம்.
யக்ஞம்,
தவம்,
தானம்,
புண்ணியம்
போன்றவைகள்
செய்து
செய்து,
தேடி
அலைந்து அலைந்து
ஏமாற்றம்
அடைந்து
அடைந்து
தொந்தரவுக்கு
ஆளாகிவிட்டோம்
என்பதை
இப்பொழுது
புரிந்து கொண்டீர்கள்.
தமோ
பிரதானமாக
ஆகிவிடுகிறோம்,
ஏனெனில்
வீழ்ச்சி
அடைய
வேண்டும்
அல்லவா!
பொய்யான காரியம்
செய்வது
என்பது
சீ
சீ
ஆவதாகும்.
பதீதமாகவும்
ஆகிவிட்டீர்கள்.
பாவனம்
ஆவதற்காகத்
தான்
பக்தி செய்தீர்கள்
என்பது
கிடையாது.
பகவானின்
மூலம்
பாவனம்
ஆகாமல்
நாம்
பாவன
உலகிற்குச்
செல்ல முடியாது.
பாவனம்
ஆகாமல்
பகவானைச்
சந்திக்க
முடியாது
என்பது
கிடையாது.
வந்து
பாவனம்
ஆக்குங்கள் என்று
பகவானை
அழைக்கிறோம்.
பதீதமானவர்கள்
தான்
பாவனம்
ஆவதற்காக
பகவானை
சந்திக்கின்றனர்.
பாவனமானவர்களுடன்
பகவான்
சந்திப்பதே
கிடையாது.
சத்யுகத்தில்
இந்த
இலட்சுமி
நாராயணனை
பகவான் சந்திப்பது
கிடையாது.
பகவான்
வந்து
பதீதமான
உங்களை
பாவனம்
ஆக்குகின்றார்.
பிறகு
நீங்கள்
இந்த சரீரத்தை
விட்டு
விடுகிறீர்கள்.
பாவனமானவர்கள்
இந்த
தமோ
பிரதான
உலகில்
இருக்க
முடியாது.
தந்தை உங்களை
பாவனம்
ஆக்கிவிட்டு
மறைந்து
விடுகின்றார்.
நாடகத்தில்
அவரது
பாகம்
ஆச்சரியமானது
ஆகும்.
ஆத்மாவைப்
பார்க்க
முடியாதது
போன்று!
சாட்சாத்காரம்
ஏற்படலாம்,
இருந்தாலும்
புரிந்து
கொள்ள
முடியாது.
இவர்
இன்னார்,
இவர்
இன்னார்
என்று
மற்ற
அனைவரையும்
புரிந்து
கொள்ள
முடிகிறது.
நினைவு
செய்கிறீர்கள்.
இன்னாரை
சைத்தன்யமாக
சாட்சாத்காரம்
செய்ய
வேண்டும்
என்று
விரும்புகின்றனர்,
சரி,
சைத்தன்யமாகப் பார்க்கிறீர்கள்,
பிறகு
என்ன
ஆகும்?
சாட்சாத்காரம்
ஏற்பட்ட
பிறகு
மறைந்து
விடும்.
அற்பகால
துளியளவு சுகத்தின்
ஆசை
நிறைவேறி
விடுகிறது.
அது
தான்
அற்பகால
துளியளவு
சுகம்
என்று
கூறப்படுகிறது.
சாட்சாத்காரத்தின்
விரும்பம்
இருந்தது,
அது
கிடைத்து
விட்டது.
ஆனால்
இங்கு
மூல
விசயம்
பதீதத்திலிருந்து பாவனம்
ஆவதாகும்.
பாவனம்
ஆகிவிட்டால்
தேவதையாக
ஆகிவிடுவீர்கள்.
அதாவது
சொர்க்கத்திற்குச் சென்று
விடுவீர்கள்.
சாஸ்திரங்களில்
கல்பத்தின்
ஆயுள்
இலட்சம்
ஆண்டுகள்
என்று
எழுதி
வைத்து
விட்டனர்.
கலியுகம் இன்னும்
40
ஆயிரம்
ஆண்டுகள்
உள்ளன
என்று
நினைக்கின்றனர்.
முழு
கல்பமும்
5
ஆயிரம்
ஆண்டுகள் தான்
என்று
பாபா
புரிய
வைக்கின்றார்.
ஆக
மனிதர்கள்
இருளில்
இருக்கின்றனர்
அல்லவா!
இது
தான் ஆழ்ந்த
இருள்
(காரிருள்)
என்று
கூறப்படுகிறது.
யாரிடத்திலும்
ஞானம்
கிடையாது.
அவையனைத்தும்
பக்தியாகும்.
எப்பொழுது
இராவணன்
(விகாரங்கள்)
வருகிறதோ
அதன்
கூடவே
பக்தியும்
வந்து
விடுகிறது.
மேலும் எப்பொழுது
தந்தை
வருகின்றாரோ
அவர்
கூடவே
ஞானம்
வந்து
விடுகிறது.
தந்தையிடமிருந்து
ஒரே
ஒருமுறை தான்
ஞான
ஆஸ்தி
கிடைக்கிறது.
அடிக்கடி
கிடைக்க
முடியாது.
அங்கு
நீங்கள்
யாருக்கும்
ஞானம்
கொடுப்பது கிடையாது.
அவசியமும்
கிடையாது.
யார்
அஞ்ஞானத்தில்
இருக்கிறார்களோ
அவர்களுக்குத்
தான்
ஞானம் கிடைக்கிறது.
தந்தையை
யாரும்
அறியவேயில்லை.
தந்தையை
நிந்திப்பதைத்
தவிர
வேறு
எந்த
விசயமும் பேசுவது
கிடையாது.
இதையும்
குழந்தைகளாகிய
நீங்கள்
இப்பொழுது
புரிந்து
கொள்கிறீர்கள்.
ஈஸ்வரன்
சர்வவியாபி கிடையாது,
அவர்
ஆத்மாக்களாகிய
நமது
தந்தை
என்று
நீங்கள்
இப்பொழுது
கூறுகிறீர்கள்.
ஆனால்
பரமாத்மா கல்லில்,
முள்ளில்
இருப்பதாகக்
கூறிவிட்டனர்.
குழந்தைகளாகிய
நீங்கள்
நல்ல
முறையில்
புரிந்திருக்கிறீர்கள்
-
பக்தி
முற்றிலும்
தனிப்பட்டது,
அதில்
துளியளவும்
ஞானம்
இருப்பது
கிடையாது.
காலமும்
முழுமையாக
மாறி விடுகிறது.
பகவானின்
பெயரும்
மாறி
விடுகிறது,
பிறகு
மனிதர்களின்
பெயரும்
மாறி
விடுகிறது.
முதலில் தேவதைகள்
என்று
கூறப்பட்டனர்,
பிறகு
சத்திரியர்கள்,
வைஷ்யர்கள்,
சூத்திரர்கள்
என்று
கூறப்பட்டனர்.
அவர்கள்
தெய்வீக
குணங்களுடைய
மனிதர்கள்,
இவர்கள்
அசுர
குணங்களுடைய
மனிதர்கள்.
முற்றிலும் சீ
சீ
ஆக
இருக்கின்றனர்.
குருநானக்கும்
கெட்ட
சகவாசத்திலிருந்து
.......என்று
கூறியிருக்கின்றார்.
மனிதர்கள் யாராவது
இவ்வாறு
கூறினால்
நீங்கள்
ஏன்
இவ்வாறு
நிந்தனை
செய்கிறீர்கள்?
என்று
உடனேயே
கூறிவிடுவர்.
ஆனால்
தந்தை
கூறுகின்றார்
-
இவையனைத்தும்
அசுத்த
சம்பிரதாயமாகும்.
உங்களுக்குத்
தெளிவாகப்
புரிய வைக்கின்றார்.
அவர்கள்
இராவண
சம்பிரதாயம்,
இவர்கள்
இராம
சம்பிரதாயம்.
நமக்கு
இராம
இராஜ்யம் தேவை
என்று
காந்திஜியும்
கூறினார்.
இராம
இராஜ்யத்தில்
அனைவரும்
நிர்விகாரிகளாக
இருப்பர்,
இராவண இராஜ்யத்தில்
அனைவரும்
விகாரிகளாக
இருக்கின்றனர்.
இதன்
பெயரே
வைஷ்யாலயம்
ஆகும்.
பயங்கரமான நரகம்
அல்லவா!
இந்த
நேரத்து
மனிதர்கள்
விஷ
நதியில்
விழுந்து
கிடக்கின்றனர்.
மனிதர்கள்,
மிருகங்கள் அனைத்தும்
ஒன்று
போல
இருக்கின்றன.
மனிதர்களுக்கு
எந்த
மகிமைகளும்
கிடையாது.
5
விகாரங்களின் மீது
குழந்தைகளாகிய
நீங்கள்
வெற்றியடைந்து
மனிதனிலிருந்து
தேவதா
பதவி
அடைகிறீர்கள்.
மற்ற
அனைத்தும் அழிந்து
போய்விடும்.
தேவதைகள்
சத்யுகத்தில்
இருந்தனர்.
இப்பொழுது
இந்த
கலியுகத்தில்
அசுரர்கள் இருக்கின்றனர்.
அசுரர்களின்
அடையாளம்
என்ன?
5
விகாரங்கள்
ஆகும்.
தேவதைகள்
சம்பூர்ண
நிர்விகாரிகள் என்று
கூறப்படுகின்றனர்,
அசுரர்கள்
சம்பூர்ண
விகாரிகள்
என்று
கூறப்படுகின்றனர்.
அவர்கள்
16
கலைகள் நிறைந்தவர்கள்,
இங்கு
எந்த
கலைகளும்
இல்லை.
அனைவரின்
கலைகளும்
மறைந்து
போய்விட்டது.
இதை தந்தை
வந்து
குழந்தைகளுக்குப்
புரிய
வைக்கின்றார்.
பழைய
அசுர
உலகை
மாற்றுவதற்காகத்
தான்
தந்தை வருகின்றார்.
இராவண
இராஜ்யம்,
வைஷ்யாலயத்தை
சிவாலயமாக
ஆக்குகின்றார்.
அவர்கள்
இங்கேயே
திரிமூர்த்தி ஹவுஸ்,
திரிமூர்த்தி
ரோடு
......
என்று
இங்கு
பெயர்
வைத்து
விட்டனர்.
முன்பு
இம்மாதிரியான
பெயர்கள் கிடையாது.
இப்பொழுது
என்ன
ஆக
வேண்டும்?
இந்த
முழு
உலகமும்
யாருடையது?
பரமாத்மாவினுடையது அல்லவா!
பரமாத்மாவின்
உலகம்
அதாவது
அரைக்
கல்பம்
தூய்மையாக
இருந்த
உலகம்
அரைக்
கல்பம் அசுத்தமானதாக
ஆகிவிடுகிறது.
படைப்பவர்
என்று
தந்தை
தான்
கூறப்படுகின்றார்
அல்லவா!
ஆக
இந்த உலகம்
அவருடையதாக
ஆகிவிடுகிறது
அல்லவா!
தந்தை
புரிய
வைக்கின்றார்
-
நான்
தான்
எஜமானாக இருக்கிறேன்,
நான்
விதை
ரூபமாக
இருக்கிறேன்,
சைத்தன்யமாக,
ஞானக்
கடலாக
இருக்கிறேன்.
என்னிடத்தில் முழு
ஞானமும்
இருக்கிறது,
வேறு
யாரிடத்திலும்
கிடையாது.
இந்த
சிருஷ்டிச்
சக்கரத்தின்
முதல்,
இடை,
கடையின்
ஞானம்
தந்தையிடம்
மட்டுமே
இருக்கிறது
என்பதை
நீங்கள்
புரிந்து
கொள்ள
முடியும்.
மற்ற அனைத்தும்
கட்டுக்
கதைகளாகும்.
மிகவும்
கெடுக்கக்
கூடிய
கட்டுக்
கதை
அதைத்
தான்
தந்தை
புகாராகக் கூறுகின்றார்,
அதாவது
நீங்கள்
என்னை
கல்,
முள்,
நாய்,
பூனைக்குள்
இருப்பதாக
நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்.
உங்களது
நிலை
எப்படி
துர்திசை
ஆகிவிட்டது!
புது
உலக
மனிதர்களுக்கும்
பழைய
உலக
மனிதர்களுக்கும்
இரவு
பகல்
வித்தியாசம்
இருக்கிறது.
அரைக்
கல்பமாக
அசுத்த
மனிதர்கள்
தூய்மையான
தேவதைகளுக்கு
தலைவணங்குகின்றனர்.
முதன்
முதலில் சிவபாபாவிற்குத்
தான்
பூஜைகள்
நடைபெறுகிறது
என்பதும்
குழந்தைகளுக்குப்
புரிய
வைக்கப்பட்டிருக்கிறது.
அந்த
சிவபாபா
தான்
உங்களை
பூஜாரியிலிருந்து
பூஜைக்குரியவர்களாக
ஆக்குகின்றார்.
இராவணன்
உங்களை பூஜ்ய
நிலையிலிருந்து
பூஜாரிகளாக
ஆக்குகிறது.
பிறகு
நாடகப்படி
தந்தை
உங்களை
பூஜைக்குரியவர்களாக ஆக்குகின்றார்.
இராவணன்
போன்ற
பெயர்கள்
இருக்கிறது
அல்லவா!
தசரா
விழா
கொண்டாடுகின்ற
பொழுது வெளிநாட்டிலிருந்து
எத்தனை
மனிதர்களை
அழைக்கின்றனர்!
ஆனால்
எந்த
பொருளையும்
புரிந்து
கொள்வது கிடையாது.
தேவதைகளை
எவ்வளவு
நிந்தனை
செய்கின்றனர்!
இந்த
மாதிரியான
விசயங்கள்
எதுவும்
கிடையாது.
ஈஸ்வரன்
பெயர்,
உருவமற்றவர்
என்று
கூறுவது
போன்று
இந்த
மாதிரியான
விளையாட்டுகளையும் உருவாக்குகின்றனர்,
அதில்
ஒன்றும்
கிடையாது.
இவையனைத்தும்
மனிதர்களின்
புத்தியாகும்.
மனித
வழி தான்
அசுர
வழி
என்று
கூறப்படுகிறது.
இராஜா
இராணி
எப்படியோ
பிரஜைகளும்
அப்படியே!
அனைவரும் அவ்வாறே
ஆகிவிடுகின்றனர்.
இது
அசுர
உலகம்
என்று
கூறப்படுகிறது.
அனைவரும்
ஒருவரையொருவர் நிந்தனை
செய்து
கொண்டே
இருக்கின்றனர்.
ஆக
தந்தை
புரிய
வைக்கின்றார்
-
குழந்தைகளே!
எப்பொழுது அமர்கிறீர்களோ
அப்பொழுது
தன்னை
ஆத்மா
என்று
உணர்ந்து
தந்தையை
நினைவு
செய்யுங்கள்.
நீங்கள் அஞ்ஞானத்தில்
இருந்த
பொழுது
பரமாத்மா
மேலே
இருப்பதாக
நினைத்தீர்கள்.
இப்பொழுது
தந்தை
இங்கு வந்திருக்கின்றார்
என்பதை
அறிந்திருப்பதால்
மேலே
இருப்பதாக
நினைப்பது
கிடையாது.
நீங்கள்
தந்தையை இந்த
உடலில்
இங்கு
அழைத்தீர்கள்.
நீங்கள்
அவரவர்களது
சென்டரில்
அமர்ந்திருக்கும்
பொழுது
சிவபாபா மதுவனத்தில்
இவரது
உடலில்
இருக்கின்றார்
என்பதைப்
புரிந்து
கொள்வீர்கள்.
பக்தி
மார்க்கத்தில்
பரமாத்மாவை மேலே
இருப்பதாக
ஏற்றுக்
கொள்கின்றனர்.
ஹே
பகவான்
......
இப்பொழுது
நீங்கள்
தந்தையை
எங்கு
நினைவு செய்கிறீர்கள்?
அமர்ந்து
கொண்டு
நினைக்கிறீர்களா
என்ன?
பிரம்மாவின்
உடலில்
இருக்கின்றார்
எனில்,
இங்கு தான்
நினைவு
செய்ய
வேண்டும்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
மேலே
கிடையவே
கிடையாது.
இங்கு புருஷோத்தம
சங்கமயுகத்தில்
வந்திருக்கின்றார்.
உங்களை
அந்த
அளவிற்கு
உயர்ந்தவர்களாக
ஆக்குவதற்காக நான்
வந்திருக்கிறேன்
என்று
தந்தை
கூறுகின்றார்.
குழந்தைகளாகிய
நீங்கள்
இங்கு
நினைவு
செய்வீர்கள்.
பக்தர்கள்
மேலே
நினைவு
செய்வர்.
நீங்கள்
அயல்நாட்டில்
இருக்கலாம்,
இருந்தாலும்
பிரம்மாவின்
உடலில் சிவபாபா
இருக்கின்றார்
என்று
கூறுவீர்கள்.
உடல்
அவசியம்
தேவை
அல்லவா!
நீங்கள்
எங்கு
அமர்ந்திருந்தாலும் அவசியம்
இங்கு
தான்
நினைவு
செய்வீர்கள்.
பிரம்மாவின்
உடலில்
தான்
நினைவு
செய்ய
வேண்டியிருக்கும்.
புத்தியற்ற
சிலர்
பிரம்மாவை
ஏற்றுக்
கொள்வது
கிடையாது.
பிரம்மாவை
நினைவு
செய்யாதீர்கள்
என்று
பாபா கூறுவது
கிடையாது.
பிரம்மாயின்றி
சிவபாபாவை
எப்படி
நினைவு
செய்ய
முடியும்?
நான்
இந்த
சரீரத்தில் இருக்கிறேன்
என்று
தந்தை
கூறுகின்றார்.
இதில்
நான்
இருப்பதாக
நினைவு
செய்யுங்கள்,
அதனால்
தான் நீங்கள்
பாபா
மற்றும்
தாதா
இருவரையும்
நினைவு
செய்கிறீர்கள்.
புத்தியில்
இந்த
ஞானம்
இருக்கிறது,
இவரது ஆத்மாவும்
இருக்கிறது.
சிவபாபாவிற்கு
தனக்கென்று
சரீரம்
கிடையாது.
நான்
இந்த
இயற்கையை
ஆதாரமாக எடுக்கிறேன்
என்று
தந்தை
கூறியிருக்கின்றார்.
தந்தை
வந்து
முழு
பிரம்மாண்டம்
மற்றும்
சிருஷ்டியின்
முதல்,
இடை,
கடையின்
இரகசியத்தைப்
புரிய
வைக்கின்றார்.
வேறு
யாரும்
பிரம்மாண்டத்தைப்
பற்றி
அறியவேயில்லை.
எந்த
பிரம்மத்தில்
நான்
மற்றும்
நீங்கள்
இருந்தோமோ,
சுப்ரீம்
தந்தை
மற்றும்
சுப்ரீமற்ற
ஆத்மாக்கள்
இருக்கக் கூடிய
அந்த
பிரம்மலோகம்
தான்
சாந்திதாமம்
ஆகும்.
சாந்திதாமம்
மிகவும்
இனிமையான
பெயர்
ஆகும்.
இந்த
அனைத்து
விசயங்களும்
உங்களது
புத்தியில்
இருக்கிறது.
உண்மையில்
நாம்
பிரம்ம
மகத்தத்துவத்தில் வசிக்கக்
கூடியவர்கள்,
அது
தான்
நிர்வாண்தாமம்,
வானப்பிரஸ்தம்
என்று
கூறப்படுகிறது.
இந்த
விசயங்கள் இப்பொழுது
உங்களது
புத்தியில்
இருக்கிறது.
எப்பொழுது
பக்தியிருந்ததோ
அப்பொழுது
ஞானம்
என்ற
வார்த்தையே கிடையாது.
இது
புருஷோத்தம
சங்கமயுகம்
என்று
கூறப்படுகிறது.
இதில்
தான்
மாற்றம்
ஏற்படுகிறது.
பழைய உலகில்
அசுரர்கள்
இருப்பர்,
புது
உலகில்
தேவதைகள்
இருப்பர்.
ஆக
இதை
மாற்றுவதற்காக
தந்தை
வர வேண்டியிருக்கிறது.
சத்யுகத்தில்
உங்களுக்கு
எதுவும்
நினைவில்
இருக்காது.
இப்பொழுது
நீங்கள்
கலியுகத்தில் இருக்கிறீர்கள்,
இப்பொழுதும்
எதுவும்
தெரியாது.
எப்பொழுது
புது
உலகில்
இருப்பீர்களோ
அப்பொழுதும் பழைய
உலகின்
எதுவும்
நினைவில்
இருக்காது.
இப்பொழுது
பழைய
உலகில்
இருக்கிறீர்கள்
எனில்
புதிய உலகின்
நினைவு
எதுவும்
இருக்காது.
புது
உலகம்
எப்பொழுது
இருந்தது?
என்று
தெரியாது.
அவர்கள் இலட்சம்
ஆண்டுகள்
என்று
கூறி
விட்டனர்.
கல்ப
கல்பத்திற்கும்
இந்த
சங்கமயுகத்தில்
தான்
தந்தை
வருகின்றார்,
வந்து
இந்த
மரத்தின்
இரகசியத்தைப்
புரிய
வைக்கின்றார்.
மேலும்
இந்த
சக்கரம்
எப்படிச்
சுற்றுகிறது?
என்பதை
குழந்தைகளாகிய
நீங்கள்
அறிவீர்கள்.
இதைப்
புரிய
வைப்பது
தான்
உங்களது
தொழில்
ஆகும்.
இப்பொழுது
ஒவ்வொருவருக்கும்
புரிய
வைக்க
வேண்டுமெனில்
அதிக
நேரம்
ஏற்பட்டு
விடும்,
அதனால் தான்
இப்பொழுது
நீங்கள்
பலருக்கு
புரிய
வைக்கிறீர்கள்.
பலர்
புரிந்து
கொள்கின்றனர்.
இந்த
இனிமையிலும் இனிய
விசயங்களைப்
பலருக்குப்
புரிய
வைக்க
வேண்டும்.
கண்காட்சி
போன்றவைகளில்
நீங்கள்
புரிய வைக்கிறீர்கள்
அல்லவா!
இப்பொழுது
சிவஜெயந்தி
அன்று
பலரை
அழைத்து
மிகவும்
நல்ல
முறையில்
புரிய வைக்க
வேண்டும்.
விளையாட்டின்
காலம்
எவ்வளவு?
என்பதை
நீங்கள்
மிகவும்
சரியாகக்
கூறுவீர்கள்.
இது தலைப்பாக
ஆகிவிடுகிறது.
நாமும்
இதைப்
புரிய
வைப்போம்.
உங்களுக்கு
தந்தை
புரிய
வைக்கிறார்
அல்லவா
-
இதன்
மூலம்
நீங்கள்
தேவதைகளாக
ஆகிவிடுகிறீர்கள்.
எவ்வாறு
நீங்கள்
புரிந்து
கொண்டு
தேவதைகளாக ஆகிறீர்களோ
அவ்வாறு
மற்றவர்களையும்
ஆக்குகிறீர்கள்.
தந்தை
நமக்கு
இதை
புரிய
வைத்திருக்கின்றார்.
நாம்
யாரையும்
நிந்திப்பது
கிடையாது.
ஞானம்
தான்
சத்கதி
மார்க்கம்
(வழி)
என்று
கூறப்படுகிறது,
ஒரே
ஒரு சத்குரு
தான்
கரையேற்றக்
கூடியவர்
என்று
நாம்
கூறுகிறோம்.
இவ்வாறு
முக்கிய
கருத்துக்களை
எடுத்து
புரிய வையுங்கள்.
இந்த
முழு
ஞானம்
தந்தையைத்
தவிர
வேறு
யாரும்
கொடுக்க
முடியாது.
நல்லது.
இனிமையிலும்
இனிய,
தேடிக்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு,
தாயும்
தந்தையுமான பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின்
நன்ஸ்தே.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1)
பூஜாரியிலிருந்து
பூஜைக்குரியவர்களாக
ஆவதற்கு
சம்பூர்ண
நிர்விகாரியாக
ஆக
வேண்டும்.
ஞானமுடையவர்களாக
ஆகி
தன்னைத்
தானே
மாற்றிக்
கொள்ள
வேண்டும்.
அற்ப
கால
சுகத்தின் பின்
செல்லக்
கூடாது.
2)
பாபா
மற்றும்
தாதா
இருவரையும்
நினைவு
செய்ய
வேண்டும்.
பிரம்மா
இல்லாது
சிவபாபாவின் நினைவு
வராது.
பக்தியில்
மேலே
நினைவு
செய்தோம்,
இப்பொழுது
பிரம்மாவின்
உடலில் வந்திருக்கின்றார்,
ஆகையால்
இருவரின்
நினைவும்
வர
வேண்டும்.
வரதானம்:-
எல்லைக்குட்பட்ட
விருப்பங்களிலிருந்து விடுபட்டு
அனைத்து
கேள்விகளையும்
கடந்து இருக்கக்கூடிய
சதா
மகிழ்ச்சியான
உள்ளம்
உடையவர்
ஆகுக.
எந்தக்
குழந்தைகள்
எல்லைக்குட்பட்ட
விருப்பங்களிலிருந்து விடுபட்டு
இருக்கிறார்களோ,
அவர்களுடைய
முகத்தில்
மகிழ்ச்சியின்
ஜொலிப்பு தென்படும்.
மகிழ்ச்சியான
உள்ளம்
உடையவர்கள்
எந்த விசயத்திலும்
கேள்வி
நிறைந்த
உள்ளம்
உடையவராக
இருக்கமாட்டார்கள்.
அவர்கள்
சதா
சுயநலமற்றவர்களாக மற்றும்
சதா
அனைவரையும்
குற்றமற்றவர்களாக
அனுபவம்
செய்வார்கள்.
பிறர்
மீது
குற்றம்
சாட்டமாட்டார்கள்.
எத்தகைய
சூழ்நிலை
வேண்டுமானாலும்
வரட்டும்,
கணக்கு
வழக்கை
முடிக்கக்கூடிய
ஆத்மா
எதிர்ப்பதற்கு வந்துகொண்டே
இருக்கட்டும்,
சரீரத்தின்
கர்மவினைப்பயன்
எதிர்ப்பதற்கு
வந்துகொண்டே
இருக்கட்டும்,
ஆனால்,
திருப்தியின்
காரணத்தால்
அவர்கள்
சதா
மகிழ்ச்சியான
உள்ளம்
உடையவர்களாக
இருப்பார்கள்.
சுலோகன்:-
வீணானவற்றின்
சோதனையை
கவனத்துடன்
செய்யுங்கள்,
அலட்சியத்துடன்
அல்ல.
ஓம்சாந்தி