08.04.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
இந்த
சங்கமயுகம்
உத்தமத்திலும்
உத்தமமாக்கும்
யுகம்,
இங்கு தான்
நீங்கள்
தூய்மையற்ற
நிலையிலிருந்து
தூய்மையாகி,
தூய்மையான
உலகத்தை
உருவாக்க வேண்டும்.
கேள்வி:
கடைசி
கால
பயங்கர
விநாசக்
காட்சிகளைப்
பார்ப்பதற்கான
மனவலிமை
எந்த
ஆதாரத்தில்
வரும்?
பதில்:
சரீர
உணர்வை
அழித்துக்
கொண்டே
செல்லுங்கள்.
இறுதியான
காட்சி
மிகக்
கடுமையானது
–
பாபா குழந்தைகளை
திடமாக்குவதற்காக
அசரீரி
ஆவதற்கான
செய்தி
கொடுக்கின்றார்.
எப்படி
பாபா
இந்த
சரீரத்திலிருந்து
விடுபட்டு
உங்களுக்கு
கற்பிக்கின்றாரோ,
அப்படி
நீங்களும்
சரீரத்திலிருந்து
தன்னை
தனியாகப்
உணருங்கள்.
அசரீரி
ஆவதற்கான
பயிற்சி
செய்யுங்கள்.
இப்பொழுது
வீடு
செல்ல
வேண்டும்
என்பது
தான்
புத்தியில்
இருக்க வேண்டும்..
ஓம்
சாந்தி:
இனிமையிலும்
இனிமையான
ஆன்மீகக்
குழந்தைகள்
நீங்கள்
உடலுடன்
இருக்கிறீர்கள்.
தந்தையும்
இப்பொழுது
உடலுடன்
இருக்கின்றார்.
இந்த
குதிரை
வண்டியில்
(பிரம்மா
சரீரம்)
சவாரி
செய்கிறார் மற்றும்
குழந்தைகளுக்கு
என்ன
கற்பிக்கின்றார்?
வாழ்ந்து
கொண்டே
இறப்பது
எப்படி?
என்பதை
பாபாவைத் தவிர
வேறு
யாருமே
கற்றுத்
தரமுடியாது.
ஞானக்கடல்,
தூய்மையாக்குபவர்
பாபாவின்
அறிமுகம்
அனைத்து குழந்தைகளுக்கும்
கிடைத்துள்ளது.
ஞானத்தினால்
தான்
நீங்கள்
கீழான
நிலையிலிருந்து
மேலான
நிலையை அடைகின்றீர்கள்.
மேலும்
தூய்மையான
உலகத்தையும்
உருவாக்க
வேண்டும்.
இந்த
தூய்மையற்ற
உலகம் நாடக
சட்டத்திட்டத்தின்
படி
வினாசம்
ஆக
வேண்டும்.
யார்
பாபாவை
அறிந்து
பிராமணனாக
ஆனவர்களோ அவர்கள்
மட்டும்
தான்
தூய்மையான
உலகத்தில்
வந்து
இராஜ்யம்
செய்கின்றார்கள்.
தூய்மையான
பிராமணராக
அவசியம்
ஆக
வேண்டும்.
இந்த
சங்கமயுகம்
தான்
உயர்ந்ததிலும்
உயர்ந்த மனிதன்
ஆக்கும்
யுகம்.
சாது,
சன்னியாசி,
மகாத்மா,
அமைச்சர்,
பணக்காரர்,
குடியரசுத்தலைவர்
ஆகியோரை உயர்ந்தவர்கள்
என்று
கூறுகின்றனர்.
ஆனால்
இல்லை.
இது
கலியுக
கீழான
பழைய
தூய்மையற்ற
உலகில் தூய்மையானவர்
ஒருவர்
கூடயில்லை.
இப்பொழுது
நீங்கள்
சங்கமயுகத்தைச்
சேர்ந்தவர்கள்.
மக்கள்
தண்ணீரை பதீதபாவனி
(தூய்மையாக்கக்கூடியது)
என்கின்றனர்.
கங்கை
மட்டுமின்றி,
எந்த
நதியானாலும்,
தண்ணீரை கண்டுவிட்டால்
மக்கள்
தண்ணீர்
தூய்மை
செய்துவிடும்
என்று
புரிந்துள்ளனர்.
இது
புத்தியில்
பதிவாகிவிட்டது.
ஒருவேளை
தண்ணீரில்
குளிப்பதால்
உயர்ந்த
நிலையடைந்துவிட்டால்
பிறகு
இந்த
சமயம்
முழு
உலகமுமே உயர்ந்திருக்கும்.
அனைவரும்
தூய்மையான
உலகத்தில்
தான்
இருந்திருக்க
வேண்டும்.
இது
பழைய
பழக்க வழக்கமாக
இருந்து
வருகிறது.
கடலிலும்
அனைத்து
குப்பைகளும்
போய்
சேர்கிறது.
பிறகு
அது
எப்படி தூய்மையாகும்?
தூய்மையாக
வேண்டியது
ஆத்மா
தான்.
ஆத்மாக்களைப்
தூய்மையாக்கக்
கூடியவர்
பரமாத்மா.
நீங்கள்
புரிய
வைக்க
வேண்டும்!
தூய்மையாக
இருப்பது
சத்தியயுகத்தில்;
தூய்மையற்ற
நிலையில்
இருப்பது கலியுகத்தில்.
இப்போது
நீங்கள்
சங்கமயுகத்தில்
உள்ளீர்கள்.
தூய்மையற்ற
நிலையிலிருந்து
தூய்மையாக
முயற்சி
செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
நாம்
சூத்திரனாக
இருந்தோம்.
இப்பொழுது
பிராமணன்
ஆகியுள்ளோம்
என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
சிவபாபா
பிரஜாபிதா
பிரம்மா
மூலமாக
உருவாக்குகிறார்.
நாம்
சத்தியத்திலும்
சத்தியமான முகவம்சாவளி
பிராமணன்.
அவர்கள்
தாய்வழி
வம்சாவளி
பிரஜைகளின்
தந்தை
என்றால்
அனைவருமே அவருக்கு
பிரஜைகளாகி
விடுவோம்.
பிரஜைகளின்
(மக்களின்)
தந்தை
பிரம்மா.
அவர்
மிக
உயர்ந்ததிலும் உயர்ந்த
முதுமையான
தாத்தா
ஆகிவிட்டார்.
அவசியம்
அவர்
இருந்திருப்பார்;
பிறகு
அவர்
எங்கே
சென்று விட்டார்?
மறுபிறவி
எடுக்கின்றார்
அல்லவா!
பிரம்மாவும்
மறுபிறவி
எடுக்கிறார்
என்பதை
குழந்தைகளுக்குத் தெரியப்படுத்தி
இருக்கிறார்.
பிரம்மா
மற்றும்
சரஸ்வதி
தாய்
தந்தை
ஆவார்கள்.
அவர்களே
மீண்டும்
மகாராஜா,
மகாராணி
-
லட்சுமி-நாரயாணன்
ஆகிறார்கள்.
இவர்களே
விஷ்ணு
என அழைக்கப்படுகின்றனர்.
இவர்களே
மீண்டும்
84
பிறவிகளுக்குப்
பிறகு
வந்து
பிரம்மா
சரஸ்வதி
ஆகிறார்கள்.
இந்த
இரகசியத்தைப்
புரிய
வைத்து
இருக்கிறார்.
ஜெகதாம்பாவை
முழு
உலகத்தின்
தாய்
என்று
கூறவும் செய்கிறார்கள்.
லௌகீகதாய்,
ஒவ்வொருவருக்கும்
தங்களது
வீட்டில்
இருக்கிறார்கள்;
ஆனால்
ஜெகதாம்பாவை யாரும்
அறியவில்லை.
இது
போன்று
மூட
நம்பிக்கையில்
கூறிவிட்டார்கள்.
யாரும்
அறிந்திருக்கவில்லை,
யாருக்கு
பூஜை
செய்கின்றோமோ
அவர்களின்
தொழிலைப்
பற்றித்
தெரியாது;
இப்பொழுது
படைப்பவர்
உயர்ந்த திலும்
உயர்ந்தவர்
என்பதை
குழந்தைகளாகிய
நீங்கள்
அறிந்து
உள்ளீர்கள்.
இது
தலைகீழான
மரம்.
இதன் விதை
மேலே
இருக்கிறது.
உங்களை
தூய்மை
ஆக்குவதற்காக
பாபா
மேலே
இருந்து
கீழே
வரவேண்டியுள்ளது.
நம்மை
இந்த
சிருஷ்டியின்
ஆதி-மத்திய-இறுதியின்
ஞானத்தைக்
கொடுத்து
மீண்டும்
அந்த
புதிய
சிருஷ்டியின் சக்கரவர்த்தி
இராஜா-இராணி
ஆக்குகிறார்
என்பதை
குழந்தைகள்
அறிந்துள்ளார்கள்.
இந்த
சக்கரத்தின்
இரகசியத்தை உலகத்தில்
உங்களைத்
தவிர
வேறு
யாரும்
அறிந்திருக்கவில்லை.
நான்
5000
ஆண்டுகளுக்குப்
பிறகு
மீண்டும்
வந்து
உங்களுக்குக்
கூறுகிறேன்.
இந்த
நாடகம்
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது.
நாடகத்தின்
படைப்பவர்,
இயக்குநர்,
முக்கிய
நடிகர்
மற்றும்
நாடகத்தின்
ரகசியத்தை அறிந்திருக்கவில்லை
யென்றால்,
அவர்களை
முட்டாள்
என்று
கூறுவார்கள்
அல்லவா!
5000
ஆண்டுகளுக்கு முன்பும்
உங்களுக்கு
கூறியிருந்தேன்.
உங்களது
அறிமுகத்தைக்
கொடுத்திருந்தேன்.
அதே
போன்று
இப்பொழுதும் கொடுத்துக்
கொண்டிருக்கிறேன்.
உங்களை
தூய்மையாகவும்
ஆக்கியிருந்தேன்.
அதேபோல
இப்பொழுதும் ஆக்கிக்
கொண்டிருக்கிறேன்.
தன்னைத்
தான்
ஆத்மா
என
புரிந்து
தந்தையை
நினைவு
செய்யுங்கள்.
அவர் தான்
சர்வ
சக்திவான்,
தூய்மையாக்கக்கூடியவர்.
இறுதி
காலத்தில்
யாரை
நினைக்கிறோமோ...
அவருடன் ஒவ்வொரு
யுகமும்
வருவோம்
என்று
கூறப்பட்டு
இருக்கிறது.
இப்பொழுது
இந்த
சமயத்தில்
நீங்கள்
பிறவி எடுத்து
இருக்கிறீர்கள்;
ஆனால்
பன்றியாகவோ,
நாயாகவோ,
பூனையாகவோ
ஆவதில்லை.
இப்பொழுது
எல்லைக்கு அப்பாற்பட்ட
தந்தை
வந்துவிட்டார்.
நான்
அனைத்து
ஆத்மாக்களின்
தந்தை
என
கூறுகிறார்.
அனைவரும் காமம்
என்ற
நெருப்பில்
விழுந்து
கறுப்பாகி
விட்டார்கள்.
அவர்களை
மீண்டும்
ஞானத்தில்
அமர
வைக்க வேண்டும்.
இப்பொழுது
நீங்கள்
ஞானத்தில்
இருக்கிறீர்கள்.
பிறகு
விகாரத்தில்
போக
முடியாது.
தூய்மையாக இருப்போம்
என
உறுதிமொழி
செய்கிறீர்கள்.
பாபா
அந்த
இராக்கி
அணிவிப்பதில்லை.
இது
பக்தி
மார்க்கத்தின் பழக்கம்.
உண்மையில்
இது
இந்த
சமயத்தின்
விசயமாகும்.
தூய்மை
ஆகாமல்
தூய்மையான
உலகத்தில் எஜமானன்
எப்படி
ஆக
முடியும்?
என்பதை
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
ஆனாலும்
குழந்தைகளை
திடப்படுத்து வதற்காக
உறுதிமொழி
செய்விக்கப்ப்டுகிறது.
சிலர்
ரத்தத்தினால்
எழுதி
கொடுக்கிறார்கள்.
பாபா
நீங்கள்
வந்திருக்கும்
சமயத்தில்
உங்களிடமிருந்து
ஆஸ்தியை
(சொத்து)
கட்டாயம்
எடுப்போம்.
நிராகாரமானவர்
சாகார
உடலில்
வருகிறார்
அல்லவா!
எப்படி
பாபா
பரந்தாமத்திலிருந்து
இறங்குகின்றாரோ அதே
போல
ஆத்மாக்களும்
இறங்குகிறீர்கள்.
பாகத்தை
நடிப்பதற்காக
மேலிருந்து
கீழே
வருகிறீர்கள்.
இது சுகம்
மற்றும்
துக்கத்திற்கான
விளையாட்டு
என்பதைப்
புரிந்துள்ளீர்கள்.
பாதி
கல்பம்
சுகம்,
பாதி
கல்பம்
துக்கம் இருக்கிறது.
நீங்கள்
முக்கால்
பங்கைவிட
அதிகமாக
சுகத்தை
அனுபவிக்கிறீர்கள்.
பாதி
கல்பத்திற்குப்
பிறகும் நீங்கள்
செல்வந்தராக
இருக்கிறீர்கள்.
எவ்வளவு
பெரிய
கோயில்
முதலியவற்றை
உருவாக்கினீர்கள்.
எப்பொழுது பக்தி
தமோ
பிரதானமாக
ஆகிவிடுகிறதோ
அப்பொழுது
தான்
துக்கம்
ஏற்படுகிறது.
நீங்கள்
முதன்
முதலில் ஒரே
ஒருவரை
பக்தி
செய்தீர்கள்.
யார்
உங்களை
தேவதையாக
ஆக்கினாரோ,
சுகதாமத்திற்கு
அழைத்துச் சென்றாரோ
அந்த
தந்தையைத்
தான்
நீங்கள்
பூஜை
செய்து
வந்தீர்கள்.
பிறகு
அதுவே
பலரை
வணங்கும் பக்தியாக
ஆரம்பித்துவிடுகிறது.
முதலில்
ஒருவரின்
பூஜை,
பிறகு
தேவதைகளின்
பூஜை
செய்தீர்கள்.
இப்பொழுது
5
பூதங்களினால்
ஆன
உடலைக்
கூட
பூஜை
செய்கிறார்கள்.
.
பிராமணர்
மட்டும்
தான்
தேவதைகளை
தனது
கையினால்
தொட்டு
காரியங்கள்
செய்கிறார்.
உங்களுக்கு அதிகத்திலும்
அதிகமான
குருக்கள்
உள்ளனர்.
இந்த
தாதாவும்
கூட,
விதவிதமான
ஹடயோகம்,
காது
மூக்கைப் பிடிப்பது
போன்ற
அனைத்தையும்
செய்தார்
என்று
பாபா
கூறுகிறார்.
இறுதியாக
அனைத்தையும்
விட
வேண்டியது ஆகிவிட்டது.
அந்த
தொழிலைச்
செய்யவா?
அல்லது
இந்த
தொழிலைச்
செய்யவா?
தூங்கி
விழ
நேரிட்டது,
தொல்லை
ஏற்பட்டது.
பிரணாயாமம்
போன்றவைகளைக்
கற்றுக்
கொள்வதில்
மிக
கஷ்டம்
ஏற்பட்டது.
பாதி கல்பம்
பக்தி
மார்க்கத்தில்
இருந்தார்.
இப்பொழுது
தெரிந்துவிட்டது.
பாபா
மிகவும்
சரியாகக்
கூறுகிறார்.
பக்தி பரம்பரை
பரம்பரையாக
வருகிறது.
சத்தியுகத்தில்
பக்தி
என்பது
எங்கிருந்து
வந்தது?
மனிதர்கள்
முற்றிலும் புரிந்து
கொள்ளவில்லை.
அசட்டு
புத்தியாக
இருந்தது
அல்லவா?
சத்தியயுகத்தில்
அப்படி
கூறமாட்டார்கள்.
பாபா ஒவ்வொரு
5000
ஆண்டுகளுக்கு
பிறகு
வருகிறேன்
என்கின்றார்.
யார்
தனது
பிறவிகளைப்
பற்றியே
அறிய வில்லையோ
அவரின்
உடலைத்
தான்
எடுக்கிறேன்.
அவர்
தான்
நம்பர்
ஒன்
அழகாக
இருந்தவர்,
இப்பொழுது கருப்பாக
ஆகிவிட்டார்.
ஆத்மா
விதவிதமான
சரீரத்தை
எடுத்து
நடிக்கிறது.
யாரிடத்தில்
நான்
பிரவேசம் செய்கிறேனோ
அவர்
மூலம்
என்ன
கற்றுத்
தர
இப்பொழுது
அமர்ந்திருக்கிறேன்?
வாழ்ந்து
கொண்டே
இறக்க வேண்டும்.
இந்த
உலகத்திலிருந்து
இறக்க
வேண்டும்
அல்லவா!
இப்பொழுது
நீங்கள்
தூய்மையாகி
இறக்க வேண்டும்.
எனது
பாகமே
தூய்மையாக்குவது
தான்.
ஓ!
தூய்மையாக்குபவரே
என்று
பாரதவாசிகளாகிய
நீங்கள் தான்
அழைக்கின்றீர்கள்.
ஓ!
விடுதலை
அளிப்பவரே,
துக்கமான
உலகத்திலிருந்து
விடுவிப்பதற்கு
வா
என்று,
வேறு
யாரும்
அழைப்பதில்லை.
அனைவரும்
முக்தி
தாமம்
போவதற்குத்தான்
முயற்சி
செய்கின்றனர்.
குழந்தைகள் சுகதாமம்
செல்ல
முயற்சி
செய்கின்றீர்கள்.
இது
உலகவிவகாரங்களில்
ஈடுபட்டுள்ள
(பிரவிருத்தி
மார்க்கம்)
வர்களுக்கானது.
பிருவிருத்தி
மார்க்கத்தைச்
சேர்ந்த
நாம்
தூய்மையாக
இருந்தோம்.
பிறகு
தூய்மையை இழந்துவிட்டோம்.
பிருவிருத்தி
மார்க்கத்தைச்
சேர்ந்தவர்களின்
வேலையை
நிர்விருத்தி
(சன்யாசி)
மார்க்கத்தைச் சோந்தவர்கள்
செய்ய
முடியாது.
யக்ஞம்,
தவம்,
தானம்
முதலியன
அனைத்தும்
பிருவிருத்தி
மார்க்கத்தை சேர்ந்தவர்களும்
செய்கின்றனர்.
இப்பொழுது
நாம்
அனைத்தையும்
அறிந்துள்ளோம்
என்பதை
உணர்கிறோம்.
சிவபாபா
நம்
அனைவருக்கும்
வீட்டில்
அமர்ந்து
கொண்டே
கற்பித்துக்
கொண்டிருக்கின்றார்.
எல்லைக்கற்பாற்பட்ட சுகத்தைக்
கொடுக்கக்
கூடியவர்.
அவரிடம்
நீங்கள்
பல
ஆண்டுகளுக்குப்
பிறகு
சந்திப்பதால்
அன்புக்
கண்ணீர் வருகிறது.
ஆஹா!
பாபா
குழந்தைகளின்
சேவையில்
வந்துவிட்டார்
என்றதும்
மயிற்
கூச்செரிய
வேண்டும்.
பாபா
நம்மை
இந்த
படிப்பினால்
மலர்
போன்று
ஆக்கி,
அழைத்துச்
செல்கிறார்.
இந்த
அழுக்கான,
கீழான
உலகத்திலிருந்து
தன்னுடன்
நம்மை
அழைத்துச்
செல்வார்.
பாபா
நீங்கள் வந்தால்
நாங்கள்
உங்களிடம்
சரண்
ஆவோம்
என்று
பக்தி
மார்க்கத்தில்
உங்களின்
ஆத்மா
தான்
கூறியிருந்தது.நாங்கள்
உங்களைத்
தவிர
வேறு
யாருடையவரும்
அல்ல.
வரிசைக்கிரமம்
அல்லவா!
அனைவருக்கும் தங்களுக்கென
பாகம்
உள்ளது.
சிலர்
பாபாவிடம்
மிகவும்
அதிகமான
அன்பு
வைத்திருக்கின்றனர்.
அவர்கள் சொர்க்கத்தின்
ஆஸ்தி
எடுக்கின்றனர்.
சத்யுகத்தில்
அழுவது
போன்ற
பெயரே
கிடையாது.
இங்கு
எவ்வளவு அழுகின்றனர்.
யாராவது
சொர்க்கம்
போய்விட்டால்
அழுவது
ஏன்?
மேலும்
தாள
தம்பட்டம்
தானே
அடிக்க வேண்டும்.
அங்கு
வாத்தியம்
வாசிக்கப்படும்.
தமோபிரதான
உடலை
குஷியாக
விட்டுவிடுவார்கள்.
இந்த
பழக்கம்
கூட
இங்கிருந்து
தான்
ஆரம்பமானது.
இங்கு
நீங்கள்
தனது
வீடு
செல்ல
வேண்டும் என்று
கூறுகின்றீர்கள்.
அங்கு
மறுபிறவி
எடுக்க
வேண்டும்
என்று
புரிந்து
கொள்வீர்கள்.
ஆகையால்
பாபா அனைத்து
விசயத்தையும்
புரிய
வைக்கிறார்.
உங்களுக்கு
குளவியின்
கதை
கூட
கூறுகின்றார்.
நீங்கள்
பிரம்மா குமாரிகள்,
குளவிப்
புழுக்களுக்கு
ஞானத்தை
ஓதுகின்றார்.
இந்த
சரீரத்தையும்
விட்டுவிட
வேண்டும்
என்று உங்களுக்கு
பாபா
கூறுகிறார்.
வாழ்ந்து
கொண்டே
இறக்க
வேண்டும்.
தன்னைத்தான்
ஆத்மா
என
புரிந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது
திரும்பி
வீட்டிற்குச்
செல்ல
வேண்டும்.
தன்னைத்தான்
ஆத்மா
என
புரிந்து பாபாவை
நினைக்க
வேண்டும்.
தேகத்தை
மறந்து
விடுங்கள்.
பாபா
மிகவும்
இனிமையானவர்.
நான்
உங்களை உலகத்திற்கு
எஜமானர்
ஆக்க
வந்துள்ளேன்
என்கின்றார்.
இப்பொழுது
சாந்திதாமம்,
சுகதாமத்தை
நினைவு செய்யுங்கள்.
தந்தை
மற்றும்
அவரின்
ஆஸ்தி.
இது
துக்க
தாமம்.
சாந்திதாமம்
அனைத்து
ஆத்மாக்களின்
வீடு.
நாம் பாகத்தை
ஏற்று
நடித்தாகி
விட்டது.
இப்பொழுது
வீடு
செல்ல
வேண்டும்.
அங்கு
இந்த
கீழான
சரீரம் இருக்காது.
இப்பொழுது
இந்த
சரீரம்
மிகவும்
இற்றுப்போய்விட்டது.
இப்படிப்பட்ட
செய்திகளால்
பாபா,
நமக்கு வந்து
புரிய
வைக்கின்றார்.
நானும்
ஆத்மா,
நீயும்
ஆத்மா.
நான்
சரீரத்திலிருந்து
விடுபட்டு
உங்களுக்கும் அதையே
கற்பிக்கின்றேன்.
நீங்களும்
தன்னைச்
சரீரத்திலிருந்து
தனியாகப்
உணருங்கள்.
இப்பொழுது
வீடு செல்ல
வேண்டும்.
இங்கு
இருப்பதற்கான
நேரம்
இல்லை.
இப்பொழுது
வினாசம்
ஏற்படவேண்டும்
என்பதை நீங்கள்
அறிவீர்கள்.
பாரதத்தில்
இரத்த
நதிகள்
பெருக்கெடுத்து
ஓடும்.
பிறகு
பாரதத்தில்
தான்
பாலாறுகளும் பெருக்கெடுத்து
ஓடும்.
இங்கு
அனைத்து
தர்மங்களைச்
(மதம்)
சேர்ந்தவர்களும்
ஒன்றாக
உள்ளனர்.
அனைவரும் தங்களுக்குள்
சண்டையிட்டு
இறப்பார்கள்.
இது
இறுதி
மரணம்.
பாகிஸ்தானில்
என்னென்ன
நடந்தது.
மிக கஷ்டமான
காட்சிகள்.
ஒரு
சிலர்
பார்த்தால்
மயக்கமாகிவிடுவார்கள்.
இப்பொழுது
பாபா
உங்களை
மிகத்திடமாக உருவாக்கிக்
கொண்டிருக்கின்றார்;
சரீர
உணர்வையும்
நீக்கிவிடுகிறார்.
குழந்தைகள்
நினைவில்
இருப்பதில்லை.
மிக
பலஹீனமாகவும்
உள்ளனர்
என்பதை
பாபா
பார்த்தார்.
ஆகையால்
சேவையும்
அதிகரிப்பதில்லை.
அடிக்கடி
நினைவு
மறந்து
விடுகிறது.
புத்தி
இணைவதில்லை என்றும்
எழுதுகின்றனர்.
பாபா
யோகா
என்ற
சப்தத்தை
நீக்கிவிடக்
கூறுகிறார்.
என்ன!
உலக
ராஜ்யத்தை
தரும் பாபாவை
மறந்து
விடுகின்றீர்களா?
இதற்கு
முன்னதாக
பக்தியில்
புத்தி
ஆங்காங்கே
மற்ற
பக்கங்களில்
சென்றது.
உடம்பை
வருத்திக்
கொண்டும்,
சொடக்கு
போட்டுக்
கொண்டும்
இருந்தீர்கள்.
நீங்கள்
அழிவற்ற
ஆத்மா
என்று பாபா கூறூகிறார் நீங்கள் தூய்மையாகவும்
தூய்மையற்றவர்களாக மட்டும் ஆகிறீர்களே தவிர
ஆத்மா
எதுவும்
சிறியதோ,
பெரியதோ
ஆவது
கிடையாது.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு,
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே!
தாரணைக்கான
முக்கிய
சாரம்
:
1.
தனக்குத்தானே
பேசுங்கள்!
ஆஹா!
பாபாநமக்கு
சேவை
செய்ய
வந்துவிட்டார்.
அவர்
நமக்கு
வீட்டிலிருந்து
கொண்டே
கற்பித்துக்
கொண்டிருக்கிறார்!
எல்லைக்கப்பாற்பட்ட
பாபா
எல்லைக்கப்பாற்பட்ட
சுகம்
கொடுக்கக்
கூடியவர்.
அவரை
நாம்
இப்பொழுது
சந்தித்து இருக்கிறோம்.
அன்பாக
பாபா
என்று
சொல்லுங்கள்.
ஆனந்தக்
கண்ணீர்
வந்துவிடும்.
புளங்காகிதமடைந்து
மயிர்க்கூச்செரியும்.
2.
இப்பொழுது
வீட்டிற்குத்
திரும்பிச்
செல்ல
வேண்டும்.
ஆகையால்
அனைத்திலிருந்தும் விடுபட்டு,
வாழ்ந்து
கொண்டே
இறக்க
வேண்டும்.
இந்த
தேகத்தையும்
மறக்க
வேண்டும்.
இதிலிருந்து
தனியாவதற்கான
பயிற்சி
செய்ய
வேண்டும்.
வரதானம்:
கர்மத்தின்
கணக்கு
-
வழக்குகளைப்
புரிந்துக்
கொண்டு
தனது உண்மையான
ஸ்திதி
(மனநிலை)
யை
உருவாக்கக்
கூடிய
சகஜ
யோகி
ஆகுக.
போகப்
போக
ஒருவேளை
ஏதாவது
கர்மத்தின்
கணக்கு-வழக்கு
நம்
முன்னால்
வருகிறதென்றால்,
மனம் ஆடிப்
போக
வேண்டாம்,
ஸ்திதியை
மேலும்
கீழும்
செய்துவிடாதீர்கள்.
பார்க்கலாம்,
வந்தது
என்றால்
அதை பகுத்தறிந்து
அதை
வெகு
தூரத்தில்
இருக்கும்
பொழுதே
முடித்து
விடுங்கள்.
இப்பொழுது
போர்
வீரன் ஆகாதீர்கள்.
சர்வசக்திவான்
பாபா
உடன்
இருக்கிறார்
என்றால்
மாயா
ஒன்றும்
செய்து
விட
முடியாது.
நம்பிக்கை
என்ற
அஸ்திவாரத்தை
மட்டும்
நடைமுறையில்
கொண்டு
வாருங்கள்.
மேலும்
சமயத்தில்
பயன் படுத்தினீர்கள்
என்றால்,
சகஜயோகி
ஆகிவிடலாம்.
இப்பொழுது
நிரந்தர
யோகி
ஆகுங்கள்.
யுத்தம்
செய்யக் கூடிய
போர்வீரன்
ஆகாதீர்கள்.
சுலோகன்:
டபுள்
லைட்டாக
இருக்க
வேண்டுமென்றால்,
தனது
அனைத்து பொறுப்புகளின்
சுமையை
பாபாவிடம்
ஒப்படைத்து
விடுங்கள்.
ஓம்சாந்தி