18.05.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
பாபா
அனைத்து
சம்பந்தங்களின்
அன்பினுடைய
சாக்ரீன்.
(இனிமையானவர்)
ஒரே
இனிமையான
பிரியதரிசனை
நினைத்தால்
புத்தி
அனைத்து பக்கங்களிலிருந்தும் விலகிப்போய்விடும்.
கேள்வி
:
கர்மாதீத்
ஆவதற்கான
எளிய
முயற்சி
அல்லது
யுக்தி
என்ன?
பதில்
:
சகோதரன்-சகோதரன்
என்ற
பார்வையை
உறுதியாக்குவதற்கான
முயற்சி
செய்யுங்கள்.
புத்தியில்
ஒரு பாபாவைத்
தவிர
மற்ற
அனைத்தையும்
மறந்து
விடுங்கள்.
எந்த
ஒரு
தேகதாரியின்
சம்மந்தமும்
நினைவில் வராமல்
இருக்கும்
போதுதான்
கர்மாதீத்
ஆகலாம்.
தன்னை
ஆத்மா
சகோதரன்-சகோதரன்
என
உணர்வது
தான் முயற்சியினுடைய
குறிக்கோள்
ஆகும்.
சகோதரன்-சகோதரன்
என
புரிந்துக்
கொள்வதால்
தேகத்தின்
மீதான பார்வை,
விகார
எண்ணங்கள்
முடிந்து
போகும்.
ஓம்
சாந்தி:
டபுள்
ஓம்சாந்தி.
எப்படி
டபுள்
என்பது
குழந்தைகளாகிய
உங்களுடைய
புத்தியில்
இருக்கிறது.
தந்தை
கூட
குழந்தைகளுக்குத்தான்
புரிய
வைக்கின்றார்.
முதலில் தந்தையின்
மீது
நிச்சயம்
இருக்க
வேண்டும்.
ஏனென்றால்
இவர்
தந்தையாகவும்,
டீச்சராகவும்,
குருவாகவும்
இருக்கிறார்.
லௌகீக
முறையில்
தனித்தனியாக இருக்கிறார்கள்.
இளமைப்
பருவத்தில்
ஆசிரியர்
படிக்கவைப்பார்,
60
வயதிற்கு
பிறகு
குருவிடம்
செல்கின்றனர்.
இவர்
வரும்பொழுது
மூன்று
ரூபத்திலும்
சேர்ந்து
சேவை
செய்கிறார்.
சிறியவர்கள்
பெரியவர்கள்
அனைவரும் படிக்க
முடியும்
எனக்கூறுகிறார்.
குழந்தைகளின்
மூளை
நன்கு
புத்துணர்வுடன்
இருக்கிறது.
சிறியவர்கள்,
பெரியவர்கள் அனைவரும்
ஜீவாத்மாக்கள்
என்பதை
குழந்தைகள்
புரிந்து
கொண்டனர்.
ஆத்மா
உடலில் பிரவேசம்
ஆகிறது.
ஆத்மா
மற்றும்
உடல் வித்தியாசம்
இருக்கிறதல்லவா?
இங்கே
குழந்தைகளாகிய
உங்களுக்கு
ஆத்மா
மற்றும் பரமாத்மாவின்
ஞானம்
கொடுக்கப்படுகிறது.
ஆத்மா
அழிவற்றது.
மற்றபடி
உடல்
இங்கே
விகாரத்தால்
உருவாகியிருக்கிறது.
அங்கே
பிரஷ்டாச்சாரம்
(விகாரம்)
என்ற
பெயரே
இருக்காது.
சம்பூர்ண
நிர்விகார
உலகம்
என
போற்றப்பட்டிருக்கிறது.
சிரோஷ்டாச்சாரம்
(மிக
உயர்ந்த
நிலை)
மற்றும்
பிரஷ்டாச்சாரம்
(மிக
மோசமான
நிலை)
என்ற வார்த்தைகள்
உள்ளதல்லவா?
இது
அனைத்து
விஷயங்களையும்
பாபா
தான்
புரிய
வைக்கின்றார்.
ஆத்மாக்களாகிய நம்முடைய
தந்தை
நம்மை
படிக்க
வைக்கின்றார்
என்ற
உறுதியான
நிச்சயம்
குழந்தைகளுக்கு
ஏற்படவேண்டும்.
தந்தை
புருஷோத்தம
சங்கமயுகத்தில்
தான்
வருகிறார்.
இதன்
மூலம்
கீழான
நிலையிலிருந்து புருஷோத்தமராக மாற்றுகிறார்
என்பது
தெளிவாகிறது.
இந்த
உலகம்
தான்
கீழான
தமோபிரதானமாக
இருக்கிறது
இது
பயங்கரமான நரகம்
என்று
கூறப்படுகிறது.
இப்போது
நாம்
திரும்பிப்
போக
வேண்டும்.
ஆகையால்
தன்னை
ஆத்மா
என உணருங்கள்.
தந்தை
அழைத்துச்
செல்வதற்காக
வந்திருக்கிறார்.
நாம்
சகோதரன்-சகோதரன்
என்ற
உறுதியான நிச்சயத்தை
ஏற்படுத்திக்
கொள்ளுங்கள்.
இந்த
தேகமோ
இருக்கவே
இருக்காது.
பிறகு
விகாரப்பார்வை
முடிந்துவிடும்.
இது
மிகப்பெரிய
குறிக்கோள்.
இந்த
குறிக்கோளை
மிகவும்
சிலரே
அடைகின்றனர்.
கடினம்
இருக்கிறது.
கடைசியில் எந்த
ஒரு
பொருளும்
நினைவில்
வரக்கூடாது.
இதற்கு
கர்மாதீத்
நிலை
என்று
பெயர்.
இந்த
தேகம்
கூட
அழியக் கூடியது.
இதிலிருந்து பற்றை
நீக்குங்கள்.
பழைய
சம்மந்தத்தில்
பற்று
வைக்காதீர்கள்.
இப்போது
புதிய
சம்மந்தத்தில் போக
வேண்டும்.
கணவன்-மனைவி
என்ற
பழைய
அசுர
சம்மந்தம்
எவ்வளவு
சீச்சீயாக
இருக்கிறது.
தன்னை ஆத்மா
என
உணருங்கள்
என
பாபா
கூறுகின்றார்.
இப்போது
திரும்ப
வேண்டும்.
ஆத்மா
என
உணர்ந்து கொண்டே
இருந்தால்
சரீர
உணர்வு
இருக்காது.
கணவன்
-
மனைவி
என்ற
ஈர்ப்பு
விலகிப்போய்விடும்.
கடைசி காலத்தில்
மனைவியை
நினைத்து
இந்த
சிந்தனையில்
இறந்தால்...
என
எழுதப்
பட்டிருக்கிறது.
ஆகையால்
கடைசி காலத்தில்
வாயில்
கங்கை
நீர்
இருக்க
வேண்டும்,
கிருஷ்ணரின்
நினைவு
இருக்க
வேண்டும்
என
கூறுகின்றார்கள்.
பக்தி
மார்க்கத்தில்
கிருஷ்ணரின்
நினைவு
இருக்கிறது.
கிருஷ்ண
பகவான்
வாக்கு
என
கூறிவிடுகின்றனர்.
இங்கேயோ தேகத்தை
கூட
நினைக்கக்கூடாது
என
பாபா
கூறுகின்றார்.
தன்னை
ஆத்மா
என
உணருங்கள்
மற்ற
அனைத்திலிருந்தும் மனதை
விலக்குங்கள்.
அனைத்து
சம்மந்தங்களின்
அன்பு
ஒருவருக்குள்
சாக்ரீன்
(இனிமையாக)
போல
ஆகிவிடுகிறது.
அனைவருக்கும்
இனிமையானவர்
மற்றும்
அனைவருக்கும்
பிரியமானவர்
பிரியதர்ஷன் ஒருவர்
தான்
ஆனால்
பக்திமார்க்கத்தில்
எத்தனை
பெயர்களை
வைத்திருக்கின்றனர்.
பக்தி
மிகவும்
விஸ்தாரமாக இருக்கிறது.
யாகம்,
தவம்,
தானம்,
தீர்த்த
யாத்திரைகள்,
விரதம்
இருத்தல்,
சாஸ்திரங்கள்
படித்தல்
இவை
அனைத்தும் பக்தியினுடைய
விஷயங்கள்.
ஞான
விஷயங்கள்
எதுவும்
இல்லை.
இது
கூட
புரியவைப்பதற்காகவே
நீங்கள் குறிப்பெடுக்கின்றீர்கள்.
மற்றபடி
உங்களுடைய
(எழுதி
வைத்த)
காகிதம்
போன்றவை
எதுவும்
இருக்காது.
குழந்தைகளே நீங்கள்
சாந்திதாமத்திலிருந்து வந்தீர்கள்.
அமைதியாக
இருந்தீர்கள்
என
பாபா
புரியவைக்கிறார்.
சாந்தியின்
கடலிடம் சாந்தி,
தூய்மையினுடைய
சொத்தை
அடைகின்றீர்கள்.
இப்பொழுது
நீங்கள்
ஆஸ்தியை
அடைந்து
கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?
ஞானம்
கூட
எடுத்துக்
கொண்டிருக்கிறீர்கள்.
பதவி
(உயர்நிலை)
எதிரில்
இருக்கிறது.
இந்த
ஞானத்தை பாபாவைத்
தவிர
வேறு
யாரும்
கொடுக்க
முடியாது.
இது
ஆன்மீக
ஞானம்,
ஆன்மீகத்
தந்தை
ஆன்மீக ஞானத்தை
கொடுப்
பதற்காக
ஒரு
முறை
தான்
வருகிறார்.
அவரைத்தான்
பதீதபாவனர்
என்கிறார்கள்.
அதிகாலையில்
குழந்தைகளுக்கு
டிரில்
செய்ய
வைக்கின்றார்.
உண்மையில்
இதை
டிரில்
என்று
கூட சொல்லக்கூடாது.
குழந்தைகளே!
தன்னை
ஆத்மா
என்று
உணர்ந்து
என்னை
நினையுங்கள்
என்று
தான்
பாபா கூறுகின்றார்.
எவ்வளவு
எளிதாக
இருக்கிறது.
நீங்கள்
ஆத்மா
அல்லவா!
எங்கிருந்து
வந்தீர்கள்?
பரந்தாமத்திருந்து.
இது
போன்று
வேறு
யாரும்
கேட்க
மாட்டார்கள்.
குழந்தைகளே,
பரந்தாமத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்
அல்லவா!
இந்த
உடலில் நடிப்பதற்காக
என
பாரலௌகீக
தந்தை
தான்
குழந்தைகளிடம்
கேட்கிறார்.
தனது
பாகத்தை
நடித்து நடித்து
இந்த
நாடகம்
முடிவடையப்
போகிறது.
ஆத்மா
தூய்மை
இல்லாதிருப்பதால்
சரீரம்
கூட
தூய்மை இழந்ததாகிறது.
தங்கத்தில்
கலப்படம்
இருந்தால்
மீண்டும்
அது
உருக்கப்படுகிறது.
அந்த
சன்னியாசிகள்
இது போன்ற
அர்த்தத்தை
ஒரு
போதும்
புரிய
வைக்க
மாட்டார்கள்.
அவர்கள்
ஈஸ்வரனை
அறியவில்லை.
தந்தையை நினையுங்கள்
இதை
ஏற்றுக்கொள்வதே
இல்லை.
பாபா
கற்றுக்கொடுப்பதை
வேறு
யாரும்
கற்றுக்
கொடுக்க முடியாது.
இதில்
தான்
செயல்
முறையில்
உழைக்க
வேண்டியிருக்கிறது.
பாபா
எவ்வளவு
எளிமையாக்கி
புரிய வைக்கின்றார்.
பதீதபாவனர்,
சர்வசக்திவான்
எனப்படுகின்றனர்.
அவரைத்தான்
ஸ்ரீ
ஸ்ரீ
என்றும்
கூறுகின்றார்கள்.
மேலும்
தேவதைகளுக்கு
ஸ்ரீ
எனலாம்.
அவர்களுக்கு
அழகாக
இருக்கும்.
அவர்களுடைய
ஆத்மா
சரீரம் இரண்டுமே
தூய்மையாக
இருக்கிறது.
ஆத்மாவில்
எதுவும்
ஒட்டாது
என
யாரும்
கூறமுடியாது.
ஆத்மா
தான்
84
பிறவிகளை
எடுக்கிறது.
ஆனால்
மனிதர்கள்
புரிந்து
கொள்ளாத
காரணத்தால்
தலைகீழாக
இருக்கின்றனர்.
ஒரு தந்தைதான்
வந்து
சரி
செய்கின்றார்.
இராவணன்
சரியற்றவராக
(தலைகீழாக)
மாற்றுகின்றான்.
படங்கள்
உங்களிடம் இருக்கிறது.
மற்றபடி
இது
போன்று
பத்து
தலைகள்
உடைய
இராவணன்
யாரும்
இருக்க
முடியாது.
சத்யுகத்தில் இராவணன்
இல்லை.
இது
தெளிவாக
இருக்கிறது.
ஆனால்
யார்
கேட்கக்
கூடியவர்களாக
இருப்பார்களோ
அவர்கள் இவ்விடத்தின்
நாற்று
எனக்
கூறுவார்கள்.
சிலர்
குறைவாக
கேட்பார்கள்.
சிலர்
நிறைய
கேட்பார்கள்.
பக்திமார்க்கத்தினுடைய
விஸ்தாரம்
எவ்வளவு
இருக்கிறது.
பலவிதமான
பக்தர்கள்
இருக்கிறார்கள்.
மேலும்
(கன்னியர்களை)
கூட்டிக்கொண்டு
ஓடினார்கள்
என
கேட்டிருக்கின்றோம்.
கிருஷ்ணருக்கு
கூட
அவ்வாறு
அழைத்துச்
சென்றார்
என சொல்கிறார்கள்
அல்லவா!
பிறகு
இப்படிப்பட்ட
கிருஷ்ணர்
மீது
ஏன்
அன்பு
செலுத்துகின்றனர்?
ஏன்
பூஜை செய்கின்றனர்.
கிருஷ்ணர்;
முதல்
இளவரசர்
என்பதை
பாபா
புரிய
வைக்கின்றார்.
அவர்
எவ்வளவு
புத்திசாலியாக இருப்பார்.
முழு
உலகத்திற்கும்
எஜமானர்
என்றால்
குறைந்த
புத்தி
உடையவரா
என்ன!
அங்கே
அவர்களுக்கு மந்திரி
போன்றோர்
இருப்பதில்லை.
ஆலோசனை
கேட்க
வேண்டிய
அவசியமில்லை.
ஆலோசனை
அடைந்துதான் சம்பூர்ணமாகி
யிருக்கின்றனர்.
பிறகு
எதற்கு
ஆலோசனை
தேவை?
நீங்கள்
அரைக்கல்பத்திற்கு
யாருடைய அறிவுரையையும்
கேட்க
வேண்டியதில்லை.
சொர்க்கம்
மற்றும்
நரகத்தின்
பெயர்
கூட
கேள்விப்பட்டிருக்கின்றீர்கள்.
இது
சொர்க்கமாக
இருக்க
முடியாது.
இங்கே
நமக்கு
செல்வம்
இருக்கிறது,
மாளிகை
போன்ற
அனைத்தும் இருக்கிறது.
இதுவே
சொர்க்கம்
என
கல்
புத்தி
உடையவர்கள்
வேண்டுமானால்
புரிந்து
கொள்ளலாம்.
ஆனால்
புது உலகம்
தான்
சொர்க்கம்
என
நீங்கள்
அறிவீர்கள்.
சொர்க்கத்தில்
அனைவரும்
சத்கதியில்
இருக்கிறார்கள்.
சொர்க்கம்
-
நரகம்
ஒன்றாக
இருக்க
முடியாது.
சொர்க்கம்
என்று
எதைக்
கூறுகின்றோம்
அதனுடைய
ஆயுள்
எவ்வளவு என்பதனைத்தையும்
பாபா
உங்களுக்கு
புரியவைத்திருக்கிறார்.
உலகம்
ஒன்றுதான்
புதியதை
சத்யுகம்,
பழையது கலியுகம் எனப்படுகிறது.
இப்போது
பக்திமார்க்கம்
முடியப்போகிறது.
பக்திக்குப்
பிறகு
ஞானம்
வேண்டும்.
அனைத்து ஜீவாத்மாக்களும்
பாகத்தை
ஏற்று
நடித்து
நடித்து
தூய்மையின்றி
இருக்கின்றார்கள்.
இதையும்
பாபா
தான் புரியவைக்கின்றார்.
நீங்கள்
சுகம்
அதிகமாக
அடைகின்றீர்கள்.
முக்கால்
பங்கு
சுகம்,
கால்
பங்குதான்
துக்கம்.
இதிலும்
தமோபிரதானமாகும்
போதுதான்
துக்கம்
அதிகமாகிறது.
பாதி
பாதியாக
இருந்தால்
ஆனந்தம்
எப்படியிருக்கும்.
சொர்க்கத்தில்
துக்கத்தின்
பெயர்
அடையாளம்
இருக்காது
எனும்
போது
தான்
ஆனந்தம்
உண்டாகிறது.
அப்போது தான்
சொர்க்கத்தை
நினைவு
செய்கிறார்கள்.
இது
புது
உலகம்
மற்றும்
பழைய
உலகத்தின்
எல்லையற்ற
விளையாட்டு.
இதை
யாரும்
புரிந்து
கொள்ள
முடியாது.
பாபா
பாரதவாசிகளுக்குத்தான்
புரியவைக்கின்றார்.
மற்ற
அனைவரும் அரைக்கல்பமாகத்தான்
வருகின்றார்கள்.
அரைக்கல்பத்தில்
நீங்கள்
மட்டுமே
சூரிய
வம்சம்
மற்றும்
சந்திரவம்சத்தில் இருக்கின்றீர்கள்.
நீங்கள்
தூய்மையாக
இருப்பதால்
உங்களுடைய
ஆயுள்
அதிகமாகிறது.
மேலும்
உலகம்
கூட புதியது.
அங்கே
அனைத்தும்
புதியது.
தானியம்,
தண்ணீர்,
பூமி
போன்ற
அனைத்தும்
புதியது.
இன்னும்
செல்லச் செல்ல
இப்படி
இப்படி
இருக்கும்
என
குழந்தைகளாகிய
உங்களுக்கு
அனைத்து
சாட்சாத்காரமும்
செய்து
கொண்டே இருப்பார்.
ஆரம்பத்தில்
கூட
ஏற்பட்டது.
பிறகு
கடைசியிலும்
கூட
நடக்கும்.
அருகாமையில்
வரும்
போது குஷியும்
ஏற்படும்.
மனிதர்கள்
வெளிநாட்டிலிருந்து தமது
நாட்டிற்கு
வரும்
போது
குஷி
ஏற்படுகிறதல்லவா!
யாராவது
வெளியில்
எங்கேயாவது
இறந்து
விட்டாலும்
விமானம்
மூலமாக
தங்களது
நாட்டிற்கு
கொண்டு வருகின்றார்கள்.
எல்லாவற்றையும்
விட
முதல்
தரமான
தூய்மையிலும்
தூய்மையான
பூமி
பாரதம்.
பாரதத்தின் பெருமையை
குழந்தைகளாகிய
உங்களைத்
தவிர
வேறு
யாரும்
அறியவில்லை.
உலக
அதிசயம்
இருக்கிறதல்லவா!
அதனுடைய
பெயரே
சொர்க்கம்.
அவர்கள்
காண்பிக்கக்கூடிய
அதிசயங்கள்
நரகத்தினுடையது,
நரகத்தின்
அதிசயம் எங்கே!
சொர்க்கத்தின்
அதிசயம்
எங்கே!
இரவு-பகல்
வித்தியாசம்
இருக்கிறது.
நரகத்தின்
அதிசயங்களை
பார்பதற்காக பல
மனிதர்கள்
செல்கின்றனர்.
எவ்வளவு
நிறைய
கோவில்கள்
இருக்கிறது.
அங்கே
கோவில்
இருக்காது.
இயற்கையான அழகு
இருக்கிறது.
மனிதர்கள்
மிகவும்
சிலரே
இருப்பார்கள்.
வாசனை
போன்றவற்றிற்கு
அவசியம்
இல்லை.
ஒவ்வொருவருக்கும்
தனக்கென்று
முதல்
தரமான
தோட்டம்
இருக்கிறது.
முதல்
தரமான
மலர்கள்
இருக்கிறது.
அங்கே
வீசக்கூடிய
காற்றும்
முதல்
தரமானதாக
இருக்கும்.
வெயில்
போன்றவை
ஒரு
போதும்
துன்புறுத்தாது.
எப்போதும்
வசந்த
காலமாக
இருக்கும்.
ஊதுவத்தியின்
அவசியம்
இல்லை.
சொர்க்கத்தின்
பெயரை
கேட்கும் போதே
வாயில்
நீர்
ஊறுகிறதல்லவா?
இது
போன்று
சொர்க்கத்தில்
உடனே
செல்வோம்
என
நீங்கள்
கூறுகின்றீர்கள்.
ஏனென்றால்
சொர்க்கத்தை
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
இருப்பினும்
இப்போது
நாம்
எல்லையற்ற
தந்தையுடன் இருக்கிறோம்.
தந்தை
படிக்கவைக்கின்றார்,
இது
போன்ற
வாய்ப்பு
பிறகு
கிடைக்காது
என
மனம்
கூறுகிறது.
இங்கே மனிதர்கள்
மனிதர்களை
படிக்க
வைக்கின்றார்கள்.
அங்கே
தேவதைகள்
தேவதைகளைப்
படிக்க
வைப்பார்கள்.
இங்கேயோ
பாபா
படிக்க
வைக்கின்றார்.
இரவு
பகல்
வித்தியாசம்
இருக்கிறது.
எவ்வளவு
குஷி
ஏற்படவேண்டும்.
நீங்கள்தான்
84
பிறவிகள்
எடுத்துள்ளீர்கள்.
நீங்கள்தான்
உலகினுடைய
சரித்திரம்,
பூகோளத்தை அறிந்திருக்கிறீர்கள்.
நாம்
பலமுறை
இந்த
இராஜ்யத்தை
அடைந்துள்ளோம்
பிறகு
இராவண
இராஜ்யத்தில் வந்துள்ளோம்.
இப்போது
ஒரு
பிறவி
தூய்மையானால்
21
பிறவிக்கு
தூய்மையாக
இருக்கலாம்
என
பாபா
கூறுகின்றார்;.
ஏன்
ஆகக்கூடாது!
ஆனால்
மாயா
இப்படிப்பட்டது,
சகோதரன்-சகோதரி
என்பதில்
கூட
பயனில்லை
அரைகுறையாக இருக்கின்றார்கள்.
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
கொண்டு
சகோதரன்
-
சகோதரன்
என
உணரும்
போதுதான் நன்மை
ஏற்படுகிறது.
தேக
உணர்வு
விலகும்.
இதுவே
முயற்சி.
மிகவும்
எளிமையாக
இருக்கிறது.
யாருக்காவது மிகக்கடினமாக
இருக்கிறது
எனக்கூறினால்
அவருடைய
மனம்
விலகிப்போய்விடும்.
ஆகையால்
அதன்
பெயரே சகஜ
நினைவு.
ஞானம்
கூட
சகஜமானது.
84
பிறவியின்
சக்கரத்தினை
அறிந்து
கொள்ள
வேண்டும்.
முதன் முதலில் பாபாவின்
அறிமுகத்தைக்
கொடுக்க
வேண்டும்.
பாபாவின்
நினைவினால்தான்
ஆத்மாவினுடைய
துரு நீங்கும்.
தூய்மையான
(புனித)
உலகத்தின்
ஆஸ்தியை
அடைவார்கள்.
முதலில் பாபாவை
நினையுங்கள்.
பாரதத்தின் பழமையான
யோகம்
என்கிறார்கள்.
இதன்
மூலமாக
பாரதத்திற்கு
விஷ்வத்தினுடைய
இராஜ்யப்
பதவி
கிடைக்கிறது.
பழமை
என்றால்
எத்தனை
வருடங்கள்
ஆனது?
இலட்சக்கணக்கான
வருடங்கள்
என்கின்றனர்.
5000
வருடம் என
நீங்கள்
அறிவீர்கள்.
அதே
இராஜயோகத்தை
மீண்டும்
பாபா
கற்பித்துக்
கொண்டிருக்கின்றார்.
இதில்
குழப்பமடைய எதுவுமில்லை.
ஆத்மாக்களாகிய
உங்களுடைய
இருப்பிடம்
எங்கே
என
கேட்கப்படுகிறது.
நம்முடைய
இருப்பிடம் புருவமத்தி
என
கூறுவார்கள்.
எனவே
ஆத்மாவைத்தான்
பார்க்க
வேண்டும்.
இந்த
ஞானம்
இப்போது
உங்களுக்கு கிடைத்திருக்கிறது.
பிறகு
அங்கே
ஞானத்தின்
அவசியம்
இருக்காது.
முக்தி
ஜீவன்
முக்தி
பெற்றுவிட்டால்
முடிந்தது.
முக்தியில்
இருப்பவர்கள்
கூட
தனது
நேரத்தில்
ஜீவன்
முக்தியில்
வந்து
சுகம்
பெறுவார்கள்.
அனைவரும்
முக்தி வழியாக
ஜீவன்
முக்தியில்
வருவார்கள்.
இங்கிருந்து
சாந்திதாமத்திற்குச்
செல்வார்கள்
வேறு
உலகம்
எதுவுமில்லை.
நாடகப்படி
அனைவரும்
திரும்பிப்போக
வேண்டும்.
வினாசத்திற்கான
ஏற்பாடுகள்
நடந்து
கொண்டிருக்கிறது.
இவ்வளவு
செலவு
செய்து
அனுகுண்டுகளை
தயாரிக்கிறார்கள்
என்றால்
சும்மா
வைப்பதற்காக
செய்ய
மாட்டார்கள்.
வெடிகுண்டுகளே
வினாசத்திற்காகத்தான்.
சத்யுகம்
திரேதாயுகத்தில்
இந்த
பொருட்கள்
இருக்காது.
இப்போது
84
பிறவிகள்
முடிவடைந்து
விட்டது.
நாம்
இந்த
உடலை
விட்டு
விட்டு
வீட்டிற்குத்
திரும்புவோம்.
தீபாவளி
அன்று அனைவரும்
புதுப்புது
நல்ல
நல்ல
ஆடைகளை
அணிகின்றனர்
அல்லவா!
ஆத்மாக்களாகிய
நீங்களே
புதியதாகிறீர்கள்.
இது
எல்லையற்ற
விஷயம்.
ஆத்மா
தூய்மையாவதால்
சரீரம்
கூட
முதல்
தரமாக
கிடைக்கிறது.
இந்த
நேரத்தில் செயற்கையாக
அழகுபடுத்திக்
கொள்கின்றனர்.
பவுடர்
போன்றவற்றை
பூசிக்
கொண்டு
மிகவும்
அழகாகின்றனர்.
அங்கேயோ
இயற்கையாகவே
அழகு
இருக்கிறது.
ஆத்மா
எப்போதும்
அழகாகிவிடுகிறது
இதை
நீங்கள்
புரிந்து கொள்கிறீர்கள்.
பள்ளிக்கூடத்தில்
அனைவரும்
ஒன்று
போல
இருக்க
மாட்டார்கள்.
நீங்களும்
முயற்சி
செய்கிறீர்கள்.
நாம்
இதுபோல
லட்சுமி
நாராயணனாக
மாற
வேண்டும்.
இது
உங்களுடைய
ஈஸ்வரிய
குலம்
பிறகு
சூரியவம்சம்,
சந்திரவம்ச
குலம்
வருகிறது.
பிராமணர்களாகிய உங்களுக்கு
இராஜ்யப்
பதவி
இல்லை.
இப்போது
நீங்கள்
சங்கமத்தில்
இருக்கிறீர்கள்.
கலியுத்தில்
இராஜ்யப்
பதவி இல்லை.
யாராவது
இராஜ்யப்பதவியில்
இருக்கலாம்.
இல்லை
என்பது
ஒருபோதும்
இல்லை.
இப்போது
நீங்கள் இதுபோல
மாறுவதற்காக
முயற்சி
செய்து
கொண்டிருக்கிறீர்கள்.
நாம்
ஆத்மாக்கள்
நாம்
சகோதரன்
-
சகோதரன்.
அவர்
தந்தை.
ஒருவர்
மற்றொருவரை
சகேதரன்-சகோதரன்
எனப்பாருங்கள்
என
பாபா
கூறுகின்றார்.
ஞானத்தினுடைய மூன்றாவது
கண்
கிடைத்திருக்கிறது.
ஆத்மாவாகிய
நீங்கள்
எங்கே
வசிக்கிறீர்கள்.
சகோதர
ஆத்மா
கேட்கிறார்,
ஆத்மா
எங்கே
வசிக்கிறது.
இங்கே
புருவமத்தியில்
என
கூறுகிறார்கள்.
ஒரு
பாபாவைத்
தவிர
வேறு
எதுவும் நினைவில்
வரக்கூடாது.
கடைசியில்
சரீரத்தைக்
கூட
இதுபோன்று
பாபா
வின்
நினைவில்
விடவேண்டும்.
இந்த பயிற்சியை
உறுதியாக்கிக்
கொள்ளவேண்டும்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு
தாயும்
தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே.
தாரணைக்கான முக்கியசாரம்;
1.
சத்யுகத்தில்
முதல்
தரமான
அழகான
உடலை
அடைவதற்காக
இப்போது
ஆத்மாவை தூய்மையாக்க வேண்டும். துருவை நிக்க வேண்உம்
செயற்கையாக அழகுப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.
2.சதா
தூய்மையாவதற்காக ஒரு பாபாவைத் தவிர வேறு எதையும் நினைக்காமல்
இருப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும். இந்த தேகத்தைக் கூட மறந்து
இருக்க வேண்டும். சகோதரன் சகோதரன் என்ற பார்வை இயற்கையாக
உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்.
வரதானம்
:
உறுதியான
எண்ணம்
என்ற
விரதத்தின்
மூலம்
மனோபாவங்களை மாற்றிக்கொள்ளக்
கூடியமகான்
ஆத்மா
ஆகுக
.
மகான்
ஆவதற்கான
முக்கியமான
ஆதாரம்
தூய்மை
ஆகும்.
இந்தத்
தூய்மையின்
விரதத்தை உறுதிமொழியாக
தாரணை
செய்வது
என்றால்
மகான்
ஆத்மா
ஆவது
என்பதாகும்.
எந்தவொரு
உறுதியான எண்ணம்
என்ற
விரதமும்,
விருத்தியை
மாற்றிவிடுகிறது.
தூய்மையின்
விரதம்
எடுப்பது
என்றால்
தன்னுடைய மன
நிலையை
சிரேஷ்டம்
ஆக்குவது
என்பதாகும்.
விரதம்
இருப்பது
என்றால்
ஸ்தூல
ரீதியில்
பத்தியம்
இருப்பது,
மனதில்
உறுதியான
எண்ணம்
மேற்கொள்வது.
எனவே,
தூய்மை
ஆகுவதற்கான
விரதம்
எடுத்திருக்கிறீர்கள் மற்றும்
நாம்
ஆத்மாக்கள்
சகோதரன்,
சகோதரன்
ஆவோம்
என்ற
இந்த
சகோதரத்துவத்தின்
எண்ணத்தை உருவாக்கி
இருக்கிறீர்கள்.
இந்த
மேலான
எண்ணத்தின்
மூலம்
பிராமணன்
மகான்
ஆத்மா
ஆகிவிட்டீர்கள்.
சுலோகன்:
வீணானதிலிருந்து தப்பிக்க
வேண்டும்
என்றால்
வாயில் திட
எண்ணத்தின்
பட்டன்
(தாழ்)
போட்டுக்கொள்ளுங்கள்.
ஓம்சாந்தி