24.03.2019                           காலை முரளி                ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்    09.05.19.84         மதுபன்


 

எப்பொழுதும் ஒரே சீராக பறக்கும் மற்றும் பறக்கக் வைக்கும் பாடலைப் பாடுங்கள்

 

இன்று அமிர்த வேளையிலிருந்து திலாராம் (பரந்த மனமுடைய) தந்தை ஒவ்வொரு இதயத்தின் அன்பிற்குரிய குழந்தைகளின் இதயத்தின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தோம். பாடலை அனைவரும் பாடுகிறார்கள். மேலும் பாடலின் வரிகளும் அனைவரினுடையதும் ஒன்றாகத் தான் உள்ளது. அது பாபா! அனைவரும் பாபா, பாபா என்ற பாடலைப் பாடுகிறார்கள். அனைவருக்கும் இந்தப் பாடலை பாடத் தெரியுமா? இரவு பகலாக பாடிக்கொண்டேயிருக்கிறார்களா? ஆனால் வார்த்தைகள் நன்றாக இருந்த போதிலும் ஒவ்வொரு வரின் பாடும் முறை ராகம் மற்றும் இசை வேறு வேறாக இருந்தது. சிலருடையது குஷியின் இசையாக இருந்தது, சிலருடையது பறக்கும் மற்றும் பறக்க வைக்கும் இசையாக இருந்தது, மேலும் சில குழந்தைகளுடையது பயிற்சி செய்யும் இசையாக இருந்தது. சில நேரம் மிக நன்றாக, மேலும் முழுமையான பயிற்சி இல்லாத காரணத்தினால் தட்டுத் தடுமாறியும் பாடுகிறார்கள். ஒரு இசையில் இன்னொரு இசை கலந்து விடுகிறது. எப்படி இங்கே பாடலுடன் எப்பொழுது இசையை கேட்கிறார்கள் என்றால், சில பாடல் மற்றும் இசை நடனமாட வைப்பதாக இருக்கும், சில அன்பில் மூழ்க வைப்பதாக இருக்கும்., சில கூப்பாடு போடுவதின் பாடலாக இருக்கும். சில பாடல் பிராப்தியின் பாடலாக இருக்கும். பாப்தாதாவிடமும் பலவிதமான இரகசியம் மற்றும் விஷயம் நிரம்பிய பாடல் வந்து சேர்கிறது. சிலர் இன்றைய அறிவியலின் கண்டுபிடிப்பிற்கு ஏற்றப்படி இயல்பாகவே நிரந்தரமாக பாடலைப் பாடுகிறார்கள். நினைவு என்ற பொத்தான் எப்பொழுதும் திறந்திருக்கிறது, எனவே இயல்பாகவே மற்றும் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. சில நேரம் எப்பொழுது ஸ்விட்சை ஆன் செய்கிறார்களோ, அப்பொழுது பாடல் ஒலிக்கிறது. அனைவருமே உள்ளப் பூர்வமாக பாடுகிறார்கள், ஆனால் சிலருடையது எப்பொழுதும் இயல்பாக மற்றும் ஒரே சீராக இருக்கும், சிலருடையது ஒலிக்க வைத்தால் ஒலிக்கும். ஆனால் சில நேரம் ஒரு மாதிரியும், வேறு சில நேரம் வேறு விதமான இசையாகவும் இருக்கும். குழந்தைகளின் பாடலைக் கேட்டு பாப்தாதா அனைவரின் இதயத்தில் ஒரே ஒரு தந்தை தான் நிரம்பியிருக்கிறார் என்று மகிழ்ச்சி அடைகிறார். ஆர்வம் மற்றும் ஈடுபாடும் ஒருவருடன் இருக்கிறது. அனைத்தையும் செய்துக் கொண்டிருந்தாலும் அனைத்தையும் ஒரு தந்தைக்காகக் செய்கிறார்கள். அனைத்து சம்மந்தமும் ஒரு தந்தையுடன் இணைந்து விட்டது. நினைவில், பார்வையில், வாயில், ஒரு தந்தை தான் இருக்கிறார். தந்தையை தன்னுடைய உலகமாக ஆக்கி விட்டார்கள். ஒவ்வொரு அடியிலும் தந்தையின் நினைவு மூலம் பல கோடி மடங்கு வருமானத்தையும் சேமித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

 

ஒவ்வொரு குழந்தையின் நெற்றியில் சிரேஷ்ட பாக்கியத்தின் நட்சத்திரமும் மின்னிக் கொண்டிருக்கிறது. அந்தமாதிரியான சிரேஷ்ட விசேஷ ஆத்மாக்கள் உலகின் எதிரில் உதாரணமானவர்களாகவும் ஆகிவிட்டார்கள். கீரிடம் அணிந்த, திலகம் இட்ட சிம்மாசனதாரியாகவும் ஆகிவிட்டார்கள். அந்த மாதிரியான சிரேஷ்ட ஆத்மாக்கள், அவர்கள் குணங்கள் அடங்கிய பாடலை சுயம் தந்தை பாடுகிறார். தந்தை ஒவ்வொரு குழந்தையின் பெயரின் மாலையை நினைவு செய்கிறார். அந்த மாதிரியான சிரேஷ்ட பாக்கியம் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது தான் இல்லையா! பிறகு பாடலைப் பாடிக்கொண்டிருக்கும் பொழுதே இசையை ஏன் மாற்றுகிறீர்கள்? சில நேரம் பிராப்தியின், சில நேரம் கதறி கடின உழைப்பின், சில நேரம் அழைப்பதின், சில நேரம் மனம் உடைந்து போவதின் இசையாக ஏன் மாற்றுகிறீர்கள்? எப்பொழுதும் ஒரே சீராக பறக்கும் மற்றும் பறக்க வைக்கும் பாடலை ஏன் பாடுவதில்லை? அந்த மாதிரி பாடலை பாடுங்கள். கேட்பவர்கள் சிறகு முளைத்து பறந்து விட வேண்டும். நொண்டியாக இருப்பவர் கால்கள் கிடைத்து நடனமாடி விடவேண்டும். துக்கம் என்ற படுகையில் இருந்து எழுந்து சுகத்தின் பாடலை பாடி விடவேண்டும். கவலை என்ற சிதையில் அமர்ந்திருக்கும் ஆத்மா சிதையிலிருந்து எழுந்து குஷியில் நடனமாடி விடவேண்டும். மனமுடைந்திருக்கும் ஆத்மாக்கள் ஊக்கம் உற்சாகம் நிறைந்தப் பாடலை பாடுவதிலேயே ஈடுபட்டு விடவேண்டும். பிச்சைக்கார ஆத்மாக்கள் அனைத்து பொக்கிஷங்களினால் நிரம்பியவராகி கிடைத்து விட்டது, அடைந்து விட்டேன் என்ற பாடலை பாடத் தொடங்கி விடவேண்டும். இந்த பிராப்தியை அடைவது உலக சேவைக்கு அவசியமாக இருக்கிறது. அல்ப கால சித்தியுள்ளவர்களின் (சாமியார்களின்) பின்னால் எவ்வளவு அலைந்துக் கொண்டிருக்கிறார்கள், எவ்வளவு தனது நேரத்தை பணத்தை அதற்காக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

தற்சமயம் அனைத்து ஆத்மாக்களும் கடுமையாக உழைத்து செய்து களைப்படைந்து விட்டார்கள், சித்தி (வெற்றி) விரும்புகிறார்கள், அற்ப காலத்தின் சித்தி மூலமாக திருப்தி ஆகிவிடுகிறார்கள், ஆனால் ஒரு விஷயத்தில் திருப்தி அடைகிறார்கள் என்றால், மற்ற அனேக விஷயங்கள் உருவாகிவிடுகின்றன. நொண்டியானவர் நடக்கத் தொடங்கிவிடுகிறார், ஆனால் மற்ற இச்சைகள் உருவாகிவிடுகின்றன. இதுவும் ஆகிவிட வேண்டும், இதுவும் ஆகிவிடவேண்டும் என்று இச்சை உருவாகிவிடுகிறது, எனவே தற்சமயத்திற்கு ஏற்றபடி ஆத்மாக்களாகிய நீங்கள் செய்யும் விதி இந்த சித்தி சொரூபத்திற்கானதாக இருக்கவேண்டும். அழியாத ஆன்மீக சித்தி மற்றும் ஆன்மீக அதிசயத்தைக் காண்பியுங்கள். இந்த அதிசயம் குறைந்ததா என்ன? முழு உலகத்தின் 99% சதவீகித ஆத்மாக்கள் கவலையின் சிதையில் இறந்துக் கிடக்கிறார்கள். அந்தமாதிரி இறந்தவர்களை உயிர் பெற்று எழச் செய்யுங்கள். புது வாழ்க்கை கொடுங்கள். ஒரு பிராப்தியின் கால்கள் இருக்கிறது மற்ற அனேக பிராப்திகளினால் நொண்டியாக இருக்கிறார்கள். அந்த மாதிரி ஆத்மாக்களுக்கு அழியாத அனைத்து பிராப்தியின் கால்களைக் கொடுங்கள். குருடர்களை மூன்று கண்கள் உள்ளவர்களாக ஆக்குங்கள். மூன்றாவது கண்ணைக் கொடுங்கள், தன்னுடைய வாழ்க்கையின் சிரேஷ்ட தற்சமயத்தையும் மேலும் எதிர்காலத்தையும் பார்ப்பதற்கான கண் கொடுங்கள். இந்த சித்தியை உங்களால் செய்ய முடியாதா, இந்த ஆன்மீக அதிசயத்தைக் காண்பிக்க முடியதா? பிச்சைக்காரனை மகாராஜாவாக ஆக்க முடியாதா? அந்தமாதிரி சித்தி சொரூபத்தின் சேவைக்கான சக்திகளை தந்தை மூலமாக பிராப்தி செய்ய வில்லையா என்ன? இப்பொழுது விதி சொரூபத்திலிருந்து சித்தி சொரூபம் ஆகுங்கள். சித்தி சொரூபத்தின் சேவைக்கு பொறுப்பாளர் ஆகுங்கள். விதி என்றால் முயற்சி செய்யும் நேரத்தில் முயற்சி செய்தீர்கள். இப்பொழுது முயற்சி செய்ததின் பலனாக சித்தி சொருபம் ஆகி சித்தி சேவையில் உலகின் எதிரில் பிரத்யக்ஷம் ஆகுங்கள். இப்பொழுது உலகத்தில் அழியாத சித்தி கொடுப்பவர்கள், காண்பிப்பவர்கள் மட்டுமில்லை, கொடுப்பவர்கள். சித்தி சொரூபமாக ஆக்குபவர்கள், இந்த ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம் ஒன்றே ஒன்று தான், ஒரே ஒரு ஸ்தானம் தான் என்ற செய்தி முழு உலகிலும் பரவ வேண்டும். நீங்களோ சித்தி சொரூபமாக ஆகியிருக்கிறீர்கள் தான் இல்லையா!

 

முதலில் மும்பையில் இந்தப் பெயரை புகழ் அடையச் செய்யுங்கள், அடிக்கடி கடின உழைப்பு செய்வதிலிருந்து விடுபட்டு விடட்டும். இன்று இந்த விஷயத்தில் கடுமையாக முயற்சி செய்தேன் இன்று இந்த விஷயத்தில் கடுமையாக முயற்சி செய்தேன் என்ற இது தான் முயற்சி செய்வதில் கடின உழைப்பு செய்வது. இந்த கடின உழைப்பிலிருந்து விடுபட்டு, பிராப்தி சொரூப சக்திசாலி ஆவது என்பது தான் சித்தி சொரூபம். இப்பொழுது சித்தி சொரூப, ஞான சொரூப ஆத்மாக்களாக ஆகுங்கள் மற்றும் ஆக்குங்கள், கடைசி வரை கடின உழைப்பை செய்துக் கொண்டேயிருப்பீர்களா என்ன? எதிர்காலத்தில் பிராப்தியை அடைவீர்களா? முயற்சி செய்வதன் பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தையோ இப்பொழுது தான் புசிக்க வேண்டும். இப்பொழுது பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்துங்கள், பிறகு எதிர்கால பலன் என்ற பழத்தை உண்ணுங்கள். எதிர்காலத்திற்காக காத்திருந்து பிரத்யக்ஷ பலனை இழந்து விடாதீர்கள், இறுதியில் பலன் கிடைக்கும் என்ற ஆறுதலேயே இருந்து விடாதீர்கள், ஒன்றை செய்யுங்கள், பலமடங்கை அடையுங்கள் என்பது இப்பொழுதைய விஷயம் தான். புரிந்ததா? மும்பையைச் சேர்ந்தவர்கள் என்ன ஆவீர்கள்? எதிர்ப்பார்ப்பிலேயே ஆறுதல் அடைந்து விடுபவராக ஆக மாட்டீர்கள் தான் இல்லையா! உலகத்தில் சித்து பாபா பிரபலமானவர்களாக இருப்பார்கள், இவர் சித்து பாபா, சித்து யோகி என்று கூறுகிறார்கள் இல்லையா! மும்பையைச் சேர்ந்தவர்களும் சித்து சகஜயோகி அதாவது சித்தியை பிராப்தி செய்திருப்பவர்கள் தான் இல்லையா, நல்லது.

 

எப்பொழுதும் இயல்பாக ஒரே சீராக பறக்க வைக்கும் பாடலைப் பாடக்கூடிய, எப்பொழுதும் சித்தி சொரூபம் ஆனவராகி, அழியாத ஆன்மீக சித்தியை பிராப்தி செய்விக்கக் கூடிய, ஆன்மீக அதிசயத்தை கான்பிக்கக்கூடிய அதிசயம் நிறைந்த ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் அனைத்து பிராப்தியினை சித்தி அனுபவம் செய்விக்கக் கூடிய, சித்தி சொரூப சகஜயோகி, ஞான சொரூப குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

குமாரிகளின் வெவ்வேறு குரூப்புடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு

1. நீங்கள் எப்பொழுதும் ஆன்மீக நினைவில் இருக்கக்கூடிய ஆன்மீக குமாரிகள் தான் இல்லையா? தேக அபிமானத்தில் உள்ள குமாரிகளோ அதிகம் இருக்கிறார்கள், ஆனால் நீங்களோ ஆன்மீக குமாரிகள். எப்பொழுதும் ஆத்மாவின் நினைவில் இருப்பவர்கள். ஆத்மாவாக ஆகி ஆத்மாவைப் பார்ப்பவர்கள். இவர்களைத் தான் ஆன்மீக குமாரிகள் என்று கூறுவது. அப்படியானால் நீங்கள் எந்தவிதமான குமாரிகள்? எப்பொழுதாவது தேக அபிமானத்தில் வருபவர்கள் இல்லை தானே! தேக அபிமானத்தில் வருவது என்றால் மாயாவின் பக்கம் விழுவது மேலும் ஆன்மீக நினைவில் இருப்பவர்கள் என்றால் தந்தையின் அருகில் வருவது. நீங்கள் விழுபவர்கள் இல்லை, தந்தையுடன் இருப்பவர்கள். தந்தையுடன் யார் இருப்பார்கள்? ஆன்மீக குமாரிகள் தான் தந்தையுடன் இருக்க முடியும். எப்படி தந்தை சுப்ரீமாக இருக்கிறார், ஒருபொழுதும் தேக அபிமானத்தில் வருவதில்லை, அதே போல் நீங்களும் தேக அபிமானத்தில் வருபவர்கள் இல்லை. யாருக்கு தந்தை மேல் அன்பு இருக்கிறதோ, அவர் தினசரி அன்போடு நினைவு செய்வார், அன்புடன் ஞானத்தின் படிப்பை படிப்பார். எந்தக் காரியம் அன்போடு செய்யப்படுகிறதோ, அதில் வெற்றி கிடைக்கும். சொன்ன காரணத்திற்காக செய்கிறார் என்றால், கொஞ்ச காலம் வெற்றி கிடைக்கும், அன்போடு தனது மன விருப்பத்தோடு நடந்துக் கொள்பவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். தந்தை என்னவாக இருக்கிறார், மாயை என்ன என்று எப்பொழுது ஒருமுறை அனுபவம் செய்துவிட்டார் என்றால், ஒருமுறையின் அனுபவி ஒருபொழுதும் ஏமாற்றத்தில் வரமுடியாது. மாயா பலவிதமான ரூபத்தில் வருகிறது. துணிமணிகளின் ரூபத்தில் வருகிறது, தாய் தந்தையின் பாசத்தின் ரூபத்தில் வருகிறது, சினிமா ரூபத்தில் வருகிறது, ஊர் சுற்றும் ரூபத்தில் வருகிறது. இந்த குமாரிகள் என்னுடையவர்கள் ஆகிவிட வேண்டும் என்று மாயா கூறும், தந்தை இவர்கள் என்னுடையவர்கள் ஆகிவிடவேண்டும் என்று கூறுவார். அப்படியானால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

 

மாயாவை விரட்டுவதில் திறமைசாலியாக இருக்கிறீர்களா? பயப்படக்கூடிய பலஹீனமானவராக இல்லையே? தோழிகளின் சேர்க்கையில் வந்து சினிமா பார்க்கச் சென்றுவிடுவீர்கள் என்று அப்படி இல்லையே.? சேர்க்கையின் பிரபாவத்தில் ஒருபொழுதும் வராதீர்கள். எப்பொழுதும் வீரம் நிறைந்தவராக, சதா அமரராக, சதா அழிவில்லாதவராக இருங்கள். எப்பொழுதும் தன்னுடைய வாழ்க்கையை சிரேஷ்டமானதாக ஆக்குங்கள். சாக்காடையில் விழாதீர்கள். சாக்கடை என்ற வார்த்தையே எப்படி இருக்கிறது. தந்தை கடலாக இருக்கிறார், கடலில் எப்பொழுதும் நீந்திக் கொண்டேயிருங்கள். குமாரி வாழ்க்கையில் ஞானம் கிடைத்து விட்டது, வழி கிடைத்து விட்டது, இலட்சியம் கிடைத்து விட்டது என்ற இவைகளைப் பார்த்து குஷி ஏற்படுகிறது, நீங்கள் மிகவும் பாக்கியம் நிறைந்தவர்கள். இன்றைய உலகத்தின் நிலைமையைப் பாருங்கள், துக்கம் வேதனையைத் தவிர வேறு எந்த விஷயமும் இல்லை. சாக்கடையில் விழுந்து காயத்தின் மேல் காயத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள், இது தான் இன்றைய உலகம். இன்று திருமணம் செய்தார், நாளை எரிந்து இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்கிறீர்கள் தான் இல்லையா, இன்று திருமணம் செய்தார், நாளை பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டார். ஒன்றோ சாக்கடையில் விழுந்தார், மற்றொன்று காயத்தின் மேல் காயம் ஏற்பட்டுவிட்டது. உங்களுக்கும் அந்தமாதிரி காயம் ஏற்பட வேண்டுமா என்ன? எனவே எப்பொழுதும் தன்னை பாக்கியவான் ஆத்மா என்று புரிந்து கொள்ளூங்கள். உங்களை தந்தை காப்பாற்றி விட்டார். தப்பித்துக் கொண்டேன், தந்தையின் குழந்தை ஆகிவிட்டேன் என்று அந்தமாதிரி குஷி ஏற்படுகிறது தான் இல்லையா? பாப்தாதாவிற்கும் குஷி ஏற்படுகிறது, ஏனென்றால், விழுவதிலிருந்து ஏமாற்றம் அடைவதிலிருந்து தப்பித்துக் கொண்டீர்கள். எனவே எப்பொழுதும் அந்தமாதிரி அழியாதவராக இருங்கள்.

 

2. நீங்கள் அனைவரும் சிரேஷ்ட குமாரிகள் தான் இல்லையா? சாதாரண குமாரியிலிருந்து சிரேஷ்ட குமாரியாக ஆகிவிட்டீர்கள். சிரேஷ்ட குமாரி எப்பொழுதும் சிரேஷ்ட காரியம் செய்வதற்குப் பொறுப்பாளர். நான் சிரேஷ்ட காரியம் செய்வதற்கு பொறுப்பாளராக இருக்கிறேன் என்று எப்பொழுதும் தன்னை அனுபவம் செய்கிறீர்களா? சிரேஷ்ட காரியம் எது? உலகிற்கு நன்மை செய்வது அப்படி நீங்களோ உலகிற்கு நன்மை செய்யக்கூடிய உலக நன்மை செய்யும் குமாரிகள். நீங்கள் வீட்டில் இருக்கக்கூடிய குமாரிகள், கூடையைத் தூக்கக் கூடிய குமாரிகள் இல்லை. உலகிற்கு நன்மை செய்யக்கூடியவர்கள். யார் குலத்திற்கு நன்மை செய்கிறார் களோ, அவரைத் தான் குமாரி என்று கூறுகிறார்கள். முழு உலகமும் உங்கள் குலம்., எல்லையற்ற குலம் ஆகி விட்டது, சாதாரண குமாரிகள் தனது எல்லைக்குட்பட்ட குலத்திற்கு நன்மை செய்கிறார்கள். மேலும் சிரேஷ்ட குமாரிகள் உலகின் குலத்திற்கு நன்மை செய்வார்கள். நீங்கள் அப்படிப்பட்டவர்கள் தான் இல்லையா.? பலஹீன மானவரோ பயப்படுபவரோ இல்லை, எப்பொழுதும் தந்தை உடன் இருக்கிறார். எப்பொழுது தந்தையின் துணை இருக்கிறது என்றால், பயப்படுவதற்கான எந்த விஷயமும் இல்லை. மிகவும் நல்லது. குமாரி வாழ்க்கையில் தப்பித்துக் கொண்டீர்கள். இது மிக நல்ல மிகப்பெரிய பாக்கியம். தவறான பாதையில் சென்று பிறகு திரும்பி வருவது இதில் வீணாகிறது நேரம் அல்லவா? அப்படி நேரம் சக்தி மிச்சம் ஆகிவிட்டன. அலைவதின் கஷ்டத்திலிருந்து விடுபட்டுவீட்டீர்கள், எவ்வளவு இலாபம் ஆகிவிட்டது. ஆஹா! எனது சிரேஷ்ட பாக்கியமே ஆஹா! என்பதை பார்த்து எப்பொழும் மகிழ்ச்சியாக இருங்கள். எந்தவொரு பலஹீனத்தின் காரணமாக தனது சிரேஷ்ட சேவையிலிருந்து வஞ்சிக்கப் பட்டவர் ஆகிவிடாதீர்கள்.

 

3. குமாரி என்றால் மகான். தூய்மையான ஆத்மாவை எப்பொழுதும் மகான் ஆத்மா என்று கூறப்படும். இன்றைய நாட்களில் மகாத்மாக்கள் கூட மகான் ஆத்மா எப்படி ஆனார்கள்? தூய்மையாக இருக்கிறார்கள். தூய்மையின் காரணமாகத் தான் மகான் ஆத்மா என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் மகான் ஆத்மாக்களாகிய உங்களின் எதிரில் அவர்கள் ஒன்றுமே இல்லை. உங்களுடைய மகான் தன்மை ஞானம் நிறைந்த அழியாத மகான் தன்மை. அவர்கள் ஒரு ஜென்மத்தில் மகானாக ஆவார்கள். பிறகு இன்னொரு ஜென்மத்தில் மீண்டும் ஆகவேண்டியதாக இருக்கும். நீங்கள் பல பிறவிகளுக்கு மகான் ஆத்மாக்கள். இப்பொழுதைய மகான் நிலை மூலமாக பல பிறவிகளுக்கு மகான் ஆகி விடுவீர்கள். 21 ஜென்மங்கள் மகானாக இருப்பீர்கள். எனவே என்னவானாலும் சரி, ஆனால் தந்தையின் குழந்தை ஆகியிருக்கிறேன் என்றால், எப்பொழுதும் தந்தையின் குழந்தையாக இருப்பேன் என்று அந்த மாதிரி உறுதியானவர் தான் இல்லையா? உறுதியற்றவராக ஆனீர்கள் என்றால் மாயை சாப்பிட்டு விடும். மாயா உறுதியானவரை சாப்பிடுவதில்லை, உறுதியற்றவரை சாப்பிட்டு விடும். உறுதியானவர்களாக இருங்கள், பாருங்கள் உங்கள் அனைவருடைய புகைப்படம் எடுக்கப் பட்டுப் கொண்டிருக்கிறது. நீங்கள் பயப்படுபவர்களோ இல்லை தானே. எந்தளவு உறுதியானவராக இருக்கிறீர்களோ, அந்தளவு குஷியின் அனுபவம், அனைத்து பிராப்திகளின் அனுபவம் செய்வீர்கள். உறுதியானவர் இல்லையென்றால் எப்பொழுதுமே குஷியாக இருக்காது. எப்பொழுதும் தன்னை மகான் ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். மகான் ஆத்மா மூலமாக அந்த மாதிரி எந்தவொரு சாதாரண காரியமும் நடக்க முடியாது. மகான் ஆத்மா ஒருபொழுதும் யார் எதிரிலும் தலை வணங்க முடியாது. எனவே நீங்கள் மாயாவின் பக்கம் ஒருபொழுதும் தலை குனிபவர்கள் இல்லை. குமாரி என்றால் கரங்கள். குமாரிகள் சக்தியாவது என்றால், சேவையில் வளர்ச்சியாவது. இவர்கள் வருங்காலத்தின் உலக சேவாதாரி உலகிற்கு நன்மை செய்யக்கூடிய விசேஷ ஆத்மாக்கள் என்று தந்தைக்கு குஷி இருக்கிறது.

 

4. குமாரிகள் சிறியவர்களோ அல்லது பெரியவர்களோ, ஆனால் அனைவரும் 100 பிரமணர்களை விட உத்தம குமாரிகள். தன்னை அப்படி நினைக்கிறீர்களா? 100 பிராமணர்களை விட உத்தம கன்னியா என்று ஏன் வர்ணிக்கப்படுகிறது? ஒவ்வொரு கன்னியாவும் குறைந்ததிலும் குறைந்தது 100 பிராமணர்களை அவசியம் தயார் செய்வார்கள், எனவே 100 பிராமணர்களை விட உத்தம கன்னியா என்று கூறபடுகிறது. 100 என்பது ஒன்றுமே இல்லை., நீங்களோ உலகிற்கு சேவை செய்வீர்கள். நீங்கள் அனைவரும் 100 பிராமணர்களை விட உத்தம கன்னியாக்கள். நீங்கள் அனைத்து ஆத்மாக்களையும் சிரேஷ்டமாக்கக் கூடிய சிரேஷ்டமானவர்கள். அம்மாதிரி போதை இருக்கிறதா? நீங்கள் கல்லுரியின், பள்ளியின் குமாரி இல்லை. ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலத்தின் குமாரிகள், நீங்கள் எந்தக் குமாரி என்று யாராவது கேட்டால், நாங்கள் ஈஷ்வரிய விஸ்வ வித்தியாலத்தின் குமாரிகள் என்று கூறுங்கள். இந்த ஒவ்வொரு குமாரிகளும் சேவாதாரி குமாரிகளாக ஆகுபவர்கள். எத்தனை செண்டர்களை திறப்பீர்கள். குமாரிகளைப் பார்த்து, இவர்கள் அனைவரும் எத்தனை சேவைக் கரங்களாக தயார் ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்று தந்தைக்கு இந்த குஷி தான் இருக்கிறது. நீங்கள் வலது கரம் தான் இல்லையா? இடது கரம் இல்லை. இடது கரத்தால் என்ன காரியம் செய்கிறார்களோ அது கொஞ்சம் மேலே கீழே போக முடியும். வலது கரம் மூலம் வேலை துரிதமாகவும், நல்லதாகவும் நடக்கும். எனவே இத்தனை அனைத்து குமாரிகளும் தயார் ஆகிவிட்டார்கள் என்றால், எத்தனை சென்டர்கள் திறக்கப் பட்டுவிடும். எங்கே அனுப்பினாலும் அங்கே செல்வீர்கள் தான் இல்லையா? எங்கு அமர வைக்கிறோமோ, அங்கு அமர்வீர்கள் இல்லையா? குமாரிகள் அனைவரும் மகான் ஆவார்கள். எப்பொழுதுமே மகானாக இருங்கள். ஒருபொழுதும் தீய சேர்க்கையில் வராதீர்கள். ஒருவேளை யாராவது உங்கள் மேல் பிரபாவம் ஏற்படுத்த விரும்புகிறார் என்றால், நீங்கள் அவர் மீது பிரபாவம் ஏற்படுத்தி விடுங்கள். தாய் தந்தையர் பந்தனத்தை போட விரும்பினாலும் கூட நீங்கள் பந்தனத்தில் மாட்டிக் கொள்பவர்கள் இல்லை. எப்பொழுதும் பந்தனமற்றவர், எப்பொழும் பாக்கியவான். குமாரி வாழ்க்கை பூஜைக்குரிய வாழ்க்கை. பூஜைக்குரியவர் ஒருபொழுதும் பூஜையாரியாக ஆக முடியாது. நீங்கள் எப்பொழுதுமே இதே போதையில் இருப்பவர்கள். நல்லது.

 

5. நீங்கள் அனைவரும் தேவிகள் தான் இல்லையா? குமாரி என்றால் அவர் தேவி. யார் தவறான மார்க்கத்தில் செல்கிறாரோ, அவர் தாசியாகி விடுகிறார். மேலும் யார் மகான் ஆத்மா ஆகிறாரோ, அவர்கள் தான் தேவிகள். தாசி தலை வணங்குவார், நீங்கள் அனைவருமே தாசிகள் ஆகுபவர்கள் இல்லை, தேவிகள். தேவிகளுக்கு எந்தளவு பூஜை நடக்கிறது. இந்த பூஜை உங்களுடையது தான் இல்லையா? சிறியவர்களோ அல்லது பெரியவர்களோ நீங்கள் அனைவரும் தேவிகள். எனவே நான் மகான் ஆத்மா தூய்மையான ஆத்மா என்ற இதே நினைவை எப்பொழுதும் வைத்துக்கொள்ளுங்கள், அது போதும். தந்தையின் குழந்தையாவது ஒன்றும் குறைந்த விஷயம் இல்லை. ஆனால் சொல்வதில் சகஜமான விஷயமாக ஆகிவிட்டது. ஆனால் யாருடையவராக ஆகியிருக்கிறீர்கள்? எவ்வளவு உயர்ந்தவர்களாக ஆகியிருக்கிறீர்கள்? எந்தளவு விசேஷ ஆத்மாவாக ஆகியிருக்கிறீர்கள்? நான் எந்தளவு மகான், எந்தளவு உயர்ந்த ஆத்மா என்று நடைமுறை காரியங்களை செய்துக் கொண்டே நினைவு இருக்கிறதா?. பாக்கியவான் ஆத்மாக்களுக்கு எப்பொழுதும் தன்னுடைய பாக்கியம் நினைவு இருக்க வேண்டும். நீங்கள் யார்? தேவி. தேவி எப்பொழுதும் புன்முறுவலுடன் இருப்பார். தேவி ஒருபொழுதும் அழுவதில்லை. தேவிகளின் படங்களின் எதிரில் சென்றீர்கள் என்றால் என்ன பார்க்க முடிகிறது? எப்பொழுதும் புன்முறுவலுடன் சிரித்துக் கொண்டேயிருக்கிறார். திருஷ்டி மூலம், கைகள் மூலம் எப்பொழுதும் கொடுக்கக் கூடிய தேவி. தேவதா அல்லது தேவி என்பதின் அர்த்தமே கொடுப்பவர். நீங்கள் என்ன கொடுப்பவர்கள்? அனைவருக்கும் சுகம், சாந்தி, ஆனந்தம், அன்பு அனைத்து பொக்கிங்களை கொடுக்கக் கூடிய தேவிகள் நீங்கள். நீங்கள் வலது கரங்கள். வலது கரம் என்றால் சிரேஷ்ட காரியம் செய்பவர்.

 

வரதானம்:

வீணான எண்ணங்களின் காரணத்தை தெரிந்து அதை அகற்றக்கூடிய சமாதான சொரூபம் ஆகுக.

 

வீணான எண்ணம் உருவாவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அபிமானம் மற்றும் இரண்டாவது அவமானம். எனக்கு ஏன் குறைவாக இருக்கிறது, எனக்கும் இந்த பதவி இருக்க வேண்டும், என்னையும் முன்னுக்கு வைக்க வேண்டும். இது தன்னுடைய அவமானம் என்று நினைக்கிறீர்கள் அல்லது பிறகு அபிமானத்தில் வருகிறீர்கள். பெயரில், மரியாதையில், முன்னுக்கு வருவதில், சேவையில். அபிமானம் அல்லது அவமானத்தை உணர்வது என்ற இது தான் வீணான எண்ணங்களுக்கான காரணம். இந்த காரணத்தை தெரிந்து நிவாரணம் செய்வது தான் சமாதான சொரூபம் ஆவது.

 

சுலோகன்:

அமைதியின் சக்தி மூலமாக இனிமையான இல்லத்திற்கு யாத்திரை செய்வது மிக சுலபம்.

 

ஓம்சாந்தி