13.12.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உண்மையான வருமானத்திற்கான முயற்சி முதலில் சுயம் செய்யுங்கள், பிறகு தனது உற்றார் உறவினர்களுக்கும் செய்வியுங்கள். தானம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

 

கேள்வி:

சுகம் மற்றும் அமைதியை பிராப்தியாக அடைவதற்கான விதி என்ன?

 

பதில்:

தூய்மை. எங்கு தூய்மை இருக்கிறதோ அங்கு சுகம், அமைதி இருக்கும். தந்தை தூய்மையான உலகம், சத்யுகத்தை ஸ்தாபனை செய்கின்றார். அங்கு விகாரம் இருக்கவே இருக்காது. யார் தேவதைகளின் பூஜாரிகளாக இருக்கிறார்களோ அவர்கள் ஒருபொழுதும் இப்படிப்பட்ட கேள்வி கேட்க முடியாது விகாரங்களின்றி உலகம் எப்படி இயங்கும்? இப்பொழுது நீங்கள் அமைதியான உலகிற்குச் செல்ல வேண்டும், ஆகையால் இந்த பதீத உலகை மறக்க வேண்டும். சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்ய வேண்டும்.

 

ஓம்சாந்தி.

ஓம்சாந்தி என்பதன் பொருள் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. சிவபாபாவும் ஓம்சாந்தி என்று கூறுகின்றார் எனில் சாலிகிராம் குழந்தைகளும் ஓம்சாந்தி என்று கூறுகின்றனர். ஆத்மா ஓம்சாந்தி என்று கூறுகிறது. அமைதித் தந்தையின் குழந்தைகள். அமைதிக்காக காடுகளுக்குச் சென்று வழி தேட வேண்டிய அவசியமில்லை. ஆத்மாவே அமைதியானது. பிறகு ஏன் வழி தேட வேண்டும்? இதை தந்தை வந்து புரிய வைக்கின்றார். அந்த தந்தையிடம் தான் எங்கு சுகம், அமைதி கிடைக்குமோ அங்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறுகின்றனர். அமைதி மற்றும் சுகத்தை அனைத்து மனிதர்களும் விரும்புகின்றனர். ஆனால் சுகம் மற்றும் அமைதிக்கு முன்பு தேவைப்படுவது தூய்மை. தூய்மையானவர்கள் பாவனம் என்றும், அசுத்தமானவர்கள் பதீதம் என்றும் கூறப்படுகிறனர். பதீத உலகிலுள்ள மனிதர்கள் அழைத்துக் கொண்டே இருக்கின்றனர் - வந்து எங்களை பாவன உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள். அவர் பதீத உலகிலிருந்து விடுவித்து பாவன உலகிற்கு அழைத்துச் செல்லக் கூடியவர் ஆவார். சத்யுகம் தூய்மையானது, கலியுகம் அசுத்தமானது. அது விகாரமற்ற உலகம், இது விகார உலகமாகும். உலகம் விருத்தியடைந்து கொண்டே இருக்கிறது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். சத்யுகம் விகாரமற்ற உலகம் எனில் அவசியம் மனிதர்கள் குறைவாக இருப்பர். அந்த சிலர் யாராக இருப்பர்? உண்மையில் சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அது தான் அமைதியான உலகம் அதாவது சுகதாமம் என்று கூறப்படுகிறது. இது துக்கதாமம் ஆகும். துக்கதாமத்தை மாற்றி சுகதாமமாக ஆக்கக் கூடியவர் ஒரே ஒரு பரம்பிதா பரமாத்மா ஆவார். சுகத்தின் ஆஸ்தியை கண்டிப்பாக தந்தை தான் கொடுப்பார். இப்பொழுது அந்த தந்தை கூறுகின்றார் துக்கதாமத்தை மறந்து விடுங்கள், சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்யுங்கள். இது தான் மன்மனாபவ என்று கூறப்படுகிறது. தந்தை வந்து குழந்தைகளுக்கு சுகதாமத்தின் சாட்சாத்காரம் செய்விக்கின்றார். துக்கதாமத்தை விநாசம் செய்வித்து சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இந்த சக்கரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 84 பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. யார் முதலில் சுகதாமத்திற்கு வருகிறார்களோ அவர்கள் தான் 84 பிறவிகள் எடுக்கின்றனர், இந்த விசயத்தை மட்டுமே நினைவு செய்தாலும் கூட குழந்தைகள் சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆகிவிட முடியும்.

 

தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! சாந்திதாமத்தை நினைவு செய்யுங்கள், பிறகு ஆஸ்தியை அதாவது சுகதாமத்தை நினைவு செய்யுங்கள். முதன் முதலில் நீங்கள் சாந்திதாமத்திற்குச் செல்கிறீர்கள். ஆகையால் தன்னை சாந்திதாமம், பிரம்மாண்டத்திற்கு எஜமானன் என்று புரிந்து கொள்ளுங்கள். நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் தன்னை அங்கு வசிக்கக் கூடியவன் என்று புரிந்து கொண்டால் இந்த உலகை மறந்து கொண்டே செல்வீர்கள். சத்யுகம் சுகதாமம் ஆகும், ஆனால் அனைவரும் சத்யுகத்திற்கு வந்து விட முடியாது. யார் தேவதைகளின் பூஜாரிகளாக இருக்கிறார்களோ அவர்கள் தான் இந்த விசயங்களையும் புரிந்து கொள்ள முடியும். இது உண்மையான வருமானமாகும், இது உண்மையான தந்தை கற்பிக்கின்றார். மற்ற அனைத்தும் பொய்யான வருமானங்களாகும். அழிவற்ற ஞான ரத்தினங்களின் வருமானம் தான் உண்மையான வருமானம் என்று கூறப்படுகிறது. மற்றபடி அழியக் கூடிய செல்வங்கள் பொய்யான வருமானங்களாகும். துவாபரயுகத்திலிருந்து அந்த பொய்யான வருமானம் செய்து வந்தீர்கள். இந்த அழிவற்ற, உண்மையான வருமானத்தின் பிராப்தி சத்யுகத்தில் ஆரம்பித்து திரேதாவில் முடிவடைகிறது. அதாவது அரை கல்பத்திற்கு அனுபவிக்கிறீர்கள். பிறகு பொய்யான வருமானம் ஆரம்பமாகி விடுகிறது. இதன் மூலம் அரை கல்பத்திற்கு துளியளவு சுகம் கிடைக்கிறது. இந்த அழிவற்ற ஞான ரத்தினங்களை ஞானக் கடலானவர் தான் கொடுக்கின்றார். உண்மையான வருமானத்தை உண்மையான தந்தை செய்விக்கின்றார். பாரதம் சத்திய கண்டமாக இருந்தது, பாரதம் தான் இப்பொழுது பொய்யான கண்டமாக ஆகியிருக்கிறது. வேறு எந்த கண்டங்களையும் உண்மையான கண்டம், பொய்யான கண்டம் என்று கூறுவது கிடையாது. உண்மையான கண்டத்தை உருவாக்கக் கூடிய சத்திய சக்கரவர்த்தி அவர் ஒருவரே ஆவார். ஒரே ஒரு இறை தந்தை தான் சத்தியமானவர், மற்றவர்கள் பொய்யான தந்தைகள். சத்யுகத்திலும் உண்மையான தந்தையர் கிடைக்கின்றனர். ஏனெனில் அங்கு பொய், பாவங்கள் இருக்காது. இது பாவ ஆத்மாக்களின் உலகமாகும், அது புண்ணிய ஆத்மாக்களின் உலகமாகும். ஆக இப்பொழுது இந்த உண்மையான வருமானத்திற்காக எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்! யார் முந்தைய கல்பத்தில் வருமானம் செய்திருந்தார்களோ அவர்கள் தான் செய்வர். முதலில் சுயம் உண்மையான வருமானம் செய்து பிறகு தாய்வீடு மற்றும் மாமியார் வீட்டிலுள்ளவர்களுக்கு உண்மையான வருமானம் செய்விக்க வேண்டும். இவ்வாறு முதலில் தமது வீட்டில் புண்ணிய காரியத்தை ஆரம்பிக்க வேண்டும்.

 

சர்வவியாபி என்ற ஞானம் உடையவர்கள் பக்தி செய்ய முடியாது. எப்பொழுது அனைவரும் பகவானின் ரூபங்களாக ஆகிவிடுகிறார்களோ பிறகு யாருக்கு பக்தி செய்வர்? ஆக இந்த புதை குழியிலிருந்து விடுவிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. சந்நியாசிகள் தமது வீட்டிலுள்ளவர்களுக்கு (ஞான தானம்) எப்படி செய்ய முடியும்? முதலில் அவர்கள் வீட்டுச் செய்திகளை கூறுவதே கிடையாது. ஏன் கூறுவதில்லை? என்று கேளுங்கள். அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா! கூறுவதில் என்ன இருக்கிறது! இன்னாரது குடும்பத்தில் இருந்தேன், பிறகு சந்நியாசம் செய்தேன்! உங்களிடத்தில் கேட்டால் நீங்கள் உடனேயே கூறிவிடுவீர்கள். சந்நியாசிகளுக்கு பல சீடர்கள் (பின்பற்றுபவர்கள்) இருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் அனைவரும் பகவான் ஒருவர் தான் கூறினால், அவர்களிடத்தில் அனைவரும் கேட்பர் - உங்களுக்கு இந்த ஞானத்தைக் கூறியது யார்? பி.கு, கூறினர் என்றால், அவர்களது தொழிலே அழிந்து போய்விடும். இவ்வாறு தனது மதிப்பை யார் கெடுத்துக் கொள்வர்? பிறகு யாரும் உணவும் கொடுக்கமாட்டார்கள், ஆகையால் சந்நியாசிகளுக்கு மிகவும் கடினமாகும். முதலில் தனது உற்றார், உறவினர்களுக்கு ஞானம் கொடுத்து உண்மையான வருமானம் செய்விக்க வேண்டும், இதன் மூலம் அவர்கள் 21 பிறவிகளுக்கு சுகம் அடைய வேண்டும். விசயம் எளியது தான். ஆனால் நாடகத்தில் இவ்வளவு சாஸ்திரங்கள், கோயில் போன்றவைகள் உருவாக்குவதும் பதிவாகியிருக்கிறது.

 

பதீத உலகில் இருப்பவர்கள் இப்பொழுது பாவன உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறுகின்றனர். சத்யுகம் இருந்து 5000 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்கள் கலியுகத்தின் ஆயுள் இலட்சம் ஆண்டுகள் என்று கூறி விட்டனர், பிறகு மனிதர்கள் சுகதாமம் எங்கு இருக்கிறது? எப்போது ஏற்படும்? என்பதை எப்படிப் புரிந்து கொள்வர்? மகா பிரளயம் ஏற்படும், அதன் பிறகு தான் சத்யுகம் வரும் என்று அவர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஸ்ரீகிருஷ்ணர் கால் விரல்களை சப்பிக் கொண்டு கடலில் ஆல இலையின் மீது வருவார். எங்கிருக்கும் விசயத்தை எங்கே கொண்டு சென்று விட்டனர்! இப்பொழுது தந்தை கூறுகின்றார் - நான் பிரம்மாவின் மூலம் அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைக் கூறுகின்றேன், அதனால் தான் விஷ்ணுவின் நாபி கமலத்திலிருந்து பிரம்மா வந்ததாகக் காண்பிக்கின்றனர், பிறகு கைகளில் சாஸ்திரங்களைக் கொடுத்து விட்டனர். இப்பொழுது பிரம்மா அவசியம் இங்கு தான் இருக்க வேண்டும். விஷ்ணுவும் இலட்சுமி நாராயணனின் ரூபத்திலும் இங்கு தான் இருக்கிறார்கள். பிரம்மா தான் விஷ்ணுவாக ஆகின்றார், பிறகு விஷ்ணுவே பிரம்மாவாக ஆகின்றார். இப்பொழுது பிரம்மாவிலிருந்து விஷ்ணுவாக உருவாகின்றாரா? அல்லது விஷ்ணுவிலிருந்து பிரம்மா உருவாகின்றாரா? இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். ஆனால் யார் நன்றாகப் படிக்கிறார்களோ அவர்கள் தான் இந்த விசயங்களைப் புரிந்து கொள்வர். தந்தை கூறுகின்றார் - நீங்கள் சரீரம் விடுகின்ற வரைக்கும் புரிந்து கொண்டே இருப்பீர்கள். நீங்கள் முற்றிலுமாக 100 சதவிகிதம் புத்தியற்றவர்களாக, ஏழைகளாக ஆகிவிட்டீர்கள். நீங்களே தான் புத்திசாலிகளாக, தேவி தேவதைகளாக இருந்தீர்கள். இப்பொழுது மீண்டும் தேவி தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களால் உருவாக்க முடியாது. நீங்கள் தேவதைகளாக இருந்தீர்கள், பிறகு 84 பிறவிகள் எடுத்து எடுத்து முற்றிலும் கலைகள் அற்றவர்களாக ஆகிவிட்டீர்கள். நீங்கள் சுகதாமத்தில் மிகுந்த அமைதியுடன் இருந்தீர்கள், இப்பொழுது அமைதியற்றவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் கணக்கைக் கூற முடியும். இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் ஈஸாயி மடம் போன்றவர்கள் எத்தனை பிறவிகள் எடுக்கின்றனர்? இந்த கணக்கு எடுப்பது மிகவும் எளிதாகும். சொர்க்கத்திற்கு எஜமானர்களாக பாரதவாசிகள் தான் ஆவர். நாற்று நடப்படுகிறது அல்லவா! இதைத் தான் புரிந்து கொள்ள வேண்டும். சுயம் புரிந்து கொண்ட பிறகு முதன் முதலில் தனது தாய்-தந்தை, சகோதர-சகோதரிகளுக்கு ஞானம் கொடுக்க வேண்டும். இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று இருக்க வேண்டும், பிறகு தமது வீட்டிலுள்ளவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். தாய்வீடு, மாமியார் வீட்டிலுள்ளவர்களுக்கும் ஞானம் கூற வேண்டும். தொழில் போன்றவைகளிலும் முதலில் தனது சகோதரர்களைத் தான் கூட்டாளியாக ஆக்கிக் கொள்கின்றனர். இங்கும் அப்படித் தான் இருக்கிறது. கன்னியர் என்றாலே தனது தாய்வீடு மற்றும் மாமியார் வீட்டை முன்னேற்றத்தில் கொண்டு செல்பவர் என்று பாடப்பட்டிருக்கிறது. அசுத்தமானவர்களால் முன்னேற்ற முடியாது. அப்படியெனில் எந்த கன்னியர்கள்? இந்த பிரம்மாவின் கன்னிகைகள், பிரம்மா குமாரிகள் அல்லவா! இங்கு அதர் கன்னிகை (மாதர்கள்), குன்வாரி கன்னிகைகளுக்கு (குமாரிகள்) கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது அல்லவா! இங்கு உங்களது நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நான் மீண்டும் பாரதத்தை சொர்க்கமாக்குவதற்காக வந்திருக்கின்றேன். இந்த தில்வாடா கோயில் மிகச் சரியானது ஆகும், மேலே சொர்க்கம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கு தான் சொர்கம் இருக்கிறது. இராஜயோகத்தின் தபஸ்யாவும் இங்கு தான் நடைபெறுகிறது. யாருடைய கோயிலோ அவர்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா! உள்ளுக்குள் ஜெகத்பிதா, ஜெகதம்பா, ஆதிதேவன் போன்றவர்கள் அமர்ந்திருக்கின்றனர். நல்லது, ஆதிதேவன் யாருடைய குழந்தை? சிவபாபாவின் குழந்தை. அதர்குமாரி, குன்வாரி கன்யா போன்ற அனைவரும் இராஜயோகத்தில் அமர்ந்திருக்கின்றனர். தந்தை கூறுகின்றார் - மன்மனாபவ. இவ்வாறு இருந்தால் நீங்கள் வைகுண்டத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள். முக்தி, ஜீவன்முக்தி தாமத்தை நினைவு செய்யுங்கள். இது உங்களது சந்நியாசம் ஆகும். ஜைனர்களின் (சமணர்) சந்நியாசம் எவ்வளவு கடினமானதாக இருக்கிறது. தலைமுடியை கையாலேயே நீக்கக் கூடிய கடுமையான நியமம் இருக்கிறது. இங்கு இருப்பதோ எளிய இராஜயோகம் ஆகும். இது இல்லற மார்க்கத்தினுடையது ஆகும். இது நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. ஒரு ஜெயின் முனி தனது புது தர்மத்தை ஸ்தாபனை செய்திருக்கின்றார் எனில், அதை ஆதி சநானதன தேவி தேவதா தர்மம் என்று கூறமாட்டோம் அல்லவா! அது இப்பொழுது மறைந்து விட்டது. யாரோ ஒருவர் ஜெயின் மதத்தை நடத்தினார், பிறகு நடந்து கொண்டிருக்கிறது. இதுவும் நாடகத்தில் இருக்கிறது. ஆதிதேவனை பிதா என்றும், ஜெகதம்பாவை தாய் என்றும் கூறுகின்றோம். ஆதிதேவன் பிரம்மா என்பதை அனைவரும் அறிவர். ஆதம்-பீபி, ஆதாம்-ஏவாள் என்றும் கூறுகின்றனர். இந்த ஆதாம்-ஏவாள் இப்பொழுது தபஸ்யா செய்து கொண்டிருக்கின்றனர் என்பது கிறிஸ்துவர்களுக்குத் தெரியாது. மனித சிருஷ்டியின் தலைவர் இவர் ஆவார். இந்த இரகசியத்தையும் தந்தை வந்து புரிய வைக்கின்றார். சிவனுக்கு மற்றும் இலட்சுமி நாராயணனுக்கு இவ்வளவு கோயில்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது எனில் அவர்களது சரித்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா! இதையும் ஞானக் கடலான தந்தை வந்து புரிய வைக்கின்றார். பரம்பிதா பரமாத்மா தான் ஞானம் நிறைந்தவர், ஞானக் கடலானவர், ஆனந்தத்தின் கடலானவர் என்று கூறப்படுகின்றார். பரமாத்மாவின் இந்த மகிமைகளை சாது, சந்நியாசி போன்றவர்கள் எவரும் அறியவில்லை. அவர் சர்வவியாபி என்று அவர்கள் கூறிவிட்டனர். பிறகு யாருக்கு மகிமை செய்ய முடியும்? பரமாத்மாவை அறியாத காரணத்தினால் தான் தன்னையே சிவன் என்று கூறிக் கொள்கின்றனர். இல்லையெனில் பரமாத்மாவின் மகிமை எவ்வளவு உயர்ந்தது! அவர் மனித சிருஷ்டியின் விதையானவர். நம்மை குதா (இறைவன்) படைத்திருக்கின்றார், நாம் அவரது படைப்புகள் என்று முஸ்லீம்களும் கூறுகின்றனர். படைப்பு மற்றொரு படைப்பிற்கு ஆஸ்தி கொடுக்க முடியாது. கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. இந்த விசயத்தை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. அந்த விதை வடிவானவர் சத்தியமானவராக, சைத்தன்யமானவராக, சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் அவரிடம் இருக்கிறது. விதையிடம் மட்டுமின்றி முதல், இடை, கடையின் ஞானம் எந்த மனிதனிடத்திலும் இருக்கவே முடியாது. விதையானவர் சைத்தன்யமாக இருக்கின்றார் எனில் ஞானமும் அவரிடம் அவசியம் இருக்கும். அவர் வந்து தான் உங்களுக்கு முழு சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் கொடுக்கின்றார். இந்த சக்கரத்தை அறிவதன் மூலம் நீங்கள் சத்யுகத்தின் சக்கரவர்த்தி இராஜா அதாவது சொர்கத்திற்கு இராஜாவாக ஆகிவிடுவீர்கள் என்பதையும் விளம்பரப் பலகையில் எழுத வேண்டும். எவ்வளவு எளிய விசயமாகும்! தந்தை கூறுகின்றார் - எதுவரை உயிர் வாழ்வீர்களோ, அதுவரை என்னை நினைவு செய்ய வேண்டும். நான் சுயம் இந்த வசீகர மந்திரத்தைக் கொடுக்கிறேன். இப்பொழுது நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசம் ஆகும். இந்த சுயதரிசன சக்கரத்தைச் சுற்றிக் கொண்டே இருந்தால் மாயையின் கழுத்து துண்டிக்கப்பட்டு விடும். நான் உங்களது ஆத்மாவை தூய்மையாக்கி அழைத்துச் செல்வேன், பிறகு நீங்கள் சதோ பிரதான சரீரத்தை அடைவீர்கள். அங்கு விகாரம் இருக்காது. விகாரமின்றி உலகம் எப்படி இயங்கும்? என்று கேட்கின்றனர். நீங்கள் தேவதைகளின் பூஜாரிகளாக இல்லை என்று கூறுங்கள். லெட்சுமி நாராயணனை சம்பூர்ண நிர்விகாரி என்று மகிமை பாடுகின்றனர். ஜெகதம்பா, ஜெகத்பிதா நிர்விகாரிகளாக இருக்கின்றனர், இராஜயோகத்தின் தபஸ்யா செய்து பதீதத்திலிருந்து பாவனம், சொர்கத்திற்கு எஜமானர்களாக ஆகின்றனர். புண்ணிய ஆத்மா ஆவதற்காகவே தபஸ்யா செய்கின்றனர். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நன்ஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) இந்த பழைய உலகை புத்தியினால் மறப்பதற்காக நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் தன்னை சாந்திதாமத்தில் வசிப்பவன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்து உண்மையான வருமானம் செய்ய வேண்டும் மற்றும் மற்றவர்களுக்கும் செய்விக்க வேண்டும்.

 

2) இராஜயோகத்தின் தபஸ்யா செய்து தன்னை புண்ணிய ஆத்மாவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். மாயையின் தலையை துண்டிப்பதற்கு சதா சுயதரிசன சக்கரத்தை சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

 

வரதானம்:

அமைதி சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு காரியத்திலும் எளிதாகவே வெற்றியடையக் கூடிய பிரயோகி (பயன்படுத்தும்) ஆத்மா ஆகுக.

 

தற்போதைய கால மாற்றத்தின் படி அமைதி சக்தி என்ற சாதனத்தை பயன்படுத்தி பிரயோகி ஆத்மா ஆகுங்கள். வார்த்தைகளின் மூலம் ஆத்மாக்களுக்கு அன்பு என்ற சகயோகத்தின் பாவனையை உருவாக்குவது போன்று சுபபாவனை, அன்பான பாவனையில் நிலைத்திருந்து, அவர்களுக்குள் சிரேஷ்ட பாவனையை உருவாக்குங்கள். ஒரு தீபம் மற்றொரு தீபத்தை ஏற்றுவது போன்று உங்களது சக்திசாலியான சுபபாவனை மற்றவர்களுக்குள் சர்வசிரேஷ்ட பாவனையை உருவாக்கிவிடும். இந்த சக்தியின் மூலம் ஸ்தூல காரியத்திலும் மிக எளிதாக வெற்றியை பலனாக அடைந்து விடுவீர்கள். பிரயோகம் செய்து பாருங்கள்.

 

சுலோகன்:

அனைவருக்கும் அன்பானவர் ஆகவேண்டுமெனில், மலர்ந்திருக்கும் ரோஜா ஆகுங்கள், வாடிவிடாதீர்கள்.

 

ஓம்சாந்தி