25.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இந்தப் பிறவியின் பாவங்களிலிருந்து லேசாவதற்காக தந்தையிடம் உண்மையைக் கூறுங்கள். மேலும் முற்பிறவியின் விகர்மங்களை யோக அக்னியினால் அழியுங்கள்.

 

கேள்வி :

இறைவனின் தொண்டர்களாக மாறுவதற்கு எந்த ஒரு கவலை வேண்டும்?

 

பதில்:

நாம் நினைவு யாத்திரையிலிருந்து நிச்சயமாக தூய்மையாக மாறவேண்டும். தூய்மையாக மாறுவதற்காக கவலை வேண்டும். இதுவே முக்கியமான பாடம். தூய்மையாக மாறக்கூடிய குழந்தைகள் தான் பாபாவின் தொண்டர் களாக மாற முடியும். பாபா தனியாக என்ன செய்வார்! ஆகையால் குழந்தைகள் தன்னுடைய யோக சக்தியால் உலகத்தை தூய்மையாக மாற்றி தூய்மையான இராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும். முதலில் தன்னை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

 

ஓம் சாந்தி!

நாம் பாபாவிடம் புத்துணர்வு அடைவதற்காக செல்கிறோம் என்பதை நிச்சயம் குழந்தைகள் புரிந்து கொள்கிறீர்கள். அங்கே சென்டருக்கு செல்லும் போது இவ்வாறு நினைப்பதில்லை. பாபா மதுபனில் இருக்கிறார் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது. பாபா முரளி சொல்வதே குழந்தைகளுக்காக. நாம் மதுபனிற்கு முரளி கேட்பதற்காக செல்கிறோம் என குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். முரளி என்ற வார்த்தை கிருஷ்ணருடையது என்று நினைக்கின்றனர். முரளியினுடைய அர்த்தம் வேறு எதுவும் இல்லை. ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது நன்றாக புரிய வந்துள்ளது அல்லவா! பாபா புரிய வைத்திருக்கிறார். முற்றிலுமாக நாம் மிகவும்  முட்டாள்களாக (அறியாதவர்களாக) இருந்தோம் என்பதை இப்போது நீங்கள் உணருகின்றீர்கள். இது போன்று வேறு யாரும் தன்னை நினைப்பதில்லை. இங்கே வருகின்ற பொழுது நிச்சயபுத்தி ஏற்படுகிறது. உண்மையில் நாம் மிகவும் முட்டாள்களாக இருந்தோம். நீங்கள் சத்யுகத்தில் எவ்வளவு புத்திசாலியாக உலகிற்கே அதிபதியாக இருந்தீர்கள். யாராவது முட்டாள், உலகிற்கு எஜமானன் ஆக முடியுமா என்ன? இந்த இலட்சுமி நாராயணன் உலகிற்கு அதிபதியாக இருந்தார்கள். இவ்வளவு புத்திசாலியாக இருந்ததால் தான் பக்தி மார்க்கத்தில் பூஜிக்கின்றனர். ஜட சிலைகள் எதுவும் பேச முடியாது. சிவபாபாவின் பூஜை செய்கின்றார்கள். அவர் ஏதாவது பேசுகின்றாரா! சிவதந்தை ஒரே முறை வந்து பேசுகின்றார். இந்த ஞானத்தை சொல்லிக் கொடுக்கக்கூடியவர் தந்தை என்பது பூஜை செய்பவருக்குக் கூட தெரியாது. கிருஷ்ணர் தான் முரளி (புல்லாங்குழல்) வாசித்தார் என நினைக்கின்றனர். யாரை பூஜிக்கின்றனரோ அவரின் தொழிலைப் பற்றி முற்றிலும் அறியவில்லை. பாபா வந்ததும் இந்த பூஜை போன்றவைகள் பலனற்றதாக ஆகிவிடுகின்றது. குழந்தைகளாகிய உங்களில் பலர் வேத சாஸ்திரங்கள் போன்ற எதையும் படிக்கவில்லை. இப்போது உங்களை ஒரு சத்தியமான தந்தை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் படிக்க வைக்கக் கூடியவர் ஒரு தந்தைதான் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். பாபாவைத்தான் சத்தியமானவர் என்கின்றோம். நரனிலிருந்து நாராயணனாவதற்கான உண்மையான கதையை சொல்கின்றார். பொருள் சரிதான். சத்தியமான தந்தை வருகிறார். இப்போது நரனிலிருந்து நாராயணனாவதற்காக நிச்சயம் சத்யுகம் ஸ்தாபனை செய்வார் அல்லவா? பழைய உலகம் கலியுகத்தையா உருவாக்குவார்? கதை கேட்கின்ற பொழுது நாம் நரனிலிருந்து நாராயணனாக மாறுவோம் என்பது யாருடைய புத்தியிலும் இருக்காது. இப்போது உங்களை நரனிலிருந்து நாராணனனாக மாற்றுவதற்காக இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. நான் கல்ப கலபமாக வந்து புரிய வைக்கின்றேன். யுக யுகமாக எப்படி வருவேன்! என பாபா கூறுகின்றார். பிரம்மாவின் படத்தை காண்பித்து இது இரதம் என நீங்கள் புரிய வைக்கலாம். இவர் பல பிறவிகளின் கடைசி பிறவியில் பதீதமாக இருக்கிறார். இப்போது இவர் கூட பாவனம் ஆகின்றார். நாம் கூட ஆகின்றோம். யோக பலம் இல்லாமல் யாரும் தூய்மையாக முடியாது. விகர்மம் வினாசமாக முடியாது. தண்ணீரில் குளிப்பதால் யாரும் தூய்மையாவதில்லை. இது யோக அக்னி. தண்ணீர் நெருப்பை அணைப்பதற்காக இருக்கிறது. நெருப்பு எரிப்பதற்காக இருக்கிறது. விகர்மத்தை வினாசம் செய்வதற்கு தண்ணீர் ஒன்றும் நெருப்பு கிடையாது. அனைவரையும் விட அதிகமாக இவர் குருக்களைப் பெற்றுள்ளார். சாஸ்திரங்களை மிகவும் படித்திருக்கிறார். இந்தப் பிறவியில் பண்டிதர் போல இருந்தார்; அதனால் எந்த நன்மையும் இல்லை. புண்ணிய ஆத்மா ஆகுவதேயில்லை. பாவம் செய்துகொண்டே வந்தனர். யார் தன்னை குழந்தை என புரிந்து கொள்கின்றனரோ, இந்த பிறவியில் பாவம் செய்துள்ளோம் என நினைக்கின்றனரோ, அவர்கள் பாபா நேரெதிரில் வருகின்ற பொழுது பாவ கர்மங்களை தெரிவிப்பதால் லேசாகிவிடுவார்கள் என பாபா புரியவைக்கின்றார். இந்தப் பிறவியில் லேசாகிவிடுவார்கள். பிறகு பல பிறவிகளின் பாவ கர்மங்களின் சுமையை தலையிலிருந்து இறக்குவதற்காக முயற்சி செய்ய வேண்டும். பாபா யோகத்தின் விஷயத்தை புரிய வைக்கின்றார். யோகத்தால் விகர்மம் வினாஷம் ஆகும். இந்த விஷயங்களை இப்பொழுது தான் நீங்கள் கேட்கின்றீர்கள். சத்யுகத்தில் இந்த விஷயங்களை யாரும் கேட்க முடியாது. இது முழு நாடகமும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியும் இந்த முழு நாடகமும் சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு நொடி கூட இன்னொரு நொடி போல இருக்காது. ஒவ்வொரு நொடியும் ஆயுள் குறைந்து கொண்டேயிருக்கிறது. இப்பொழுது உங்களுடைய ஆயுள் குறைவதிலிருந்து (பிரேக்) தடுக்கிறீர்கள். மேலும் யோகத்தால் ஆயுளை அதிகரிக்கிறீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தனது ஆயுளை யோக பலத்தால் அதிகரிக்க வேண்டும். பாபா யோகத்திற்காக மிகவும் வேகப்படுத்துகிறார். ஆனால் சிலர் புரிந்து கொள்வதில்லை. பாபா நாங்கள் மறந்துவிடுகின்றோம் என கூறுகின்றனர். அச்சமயம் யோகம் என்பது வேறு எதுவும் இல்லை. இது நினைவு யாத்திரை தான் என பாபா கூறுகின்றார். பாபாவை நினைவு செய்ய செய்ய பாவம் நீங்கிக் கொண்டே போகும்;. கடைசி நிலையைப் பொருத்து (நல்ல) கதி அடையலாம். இது பற்றி ஒரு எடுத்துக் காட்டு கூட இருக்கிறது. - நீ எருமை மாடு என யாரோ கூற அவர் தன்னை நான் எருமை என்றே நினைத்தார். இந்த வாயிற்படி வழியாக வெளியே செல் என்றால் நான் எருமை மாடு எப்படி வெளியே வரமுடியும். உண்மையில் எருமை போல ஆகிவிட்டார். இந்த ஒரு எடுத்துக்காட்டு சொல்லப்பட்டு இருக்கிறது. வேறு எதுவுமில்லை. இது ஏதோ உண்மையான எடுத்துக்காட்டு இல்லை. எப்போதும் உண்மை விஷயத்தை வைத்துத்தான் எடுத்துக்காட்டு கொடுக்கப்படுகிறது.

 

இந்த நேரத்தில் பாபா என்ன புரிய வைக்கின்றாரோ அதுவே பக்திமார்க்கத்தில் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. எத்தனை மேளா, திருவிழாக்கள் நடக்கின்றன. இந்த நேரத்தில் எது நடக்கிறதோ அவைகள் பண்டிகை களாகின்றன. நீங்கள் இங்கு எவ்வளவு தூய்மையாகின்றீர்கள். மேளா, திருவிழாக்களில் எவ்வளவு அழுக்காகின்றனர்! சரீரத்தின் மீது மண்ணைத் தேய்க்கின்றனர். பாவம் நீங்கிப்போகும் என நினைக் கின்றனர். பாபாவே (பிரம்மா) இவை அனைத்தையும் செய்திருக்கிறார். நாசிக்கில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருக்கிறது. அங்கே சென்று மண்ணைத் தேய்க்கின்றனர். பாவம் அழிந்து போகும் என நினைக்கின்றனர். பிறகு அந்த மண்னை அகற்றி சுத்தம் செய்வதற்காக தண்ணீர் எடுத்து வருகின்றனர். வெளிநாட்டில் யாராவது பெரிய மகாராஜா சென்றார்கள் என்றால் கங்கைத் தண்ணீரின் குடத்தை கூடவே எடுத்துச் செல்கின்றனர். ஸ்டீமரில் (கப்பல்) அதே தண்ணீரைக் குடித்தனர். முன்பு விமானம், கார் போன்றவைகள் இல்லை. 100-150 வருடங்களில் என்னென்ன உருவாகிவிட்டது! சத்யுகத்தின் ஆரம்பத்தில் இந்த விஞ்ஞானம் பயன்படுகிறது. அங்கே மாளிகை போன்றவற்றை அமைப்பதில் தாமதம் ஆகாது. இப்போது உங்களுடைய புத்தி பாரஸ் (இருப்பை தங்கமாக்கும் கல்) புத்தியாக இருப்பதால் அனைத்து வேலைகளும் எளிதாகிவிடுகிறது. எப்படி இங்கே மண்ணினுடைய செங்கல் உருவாக்கப்படுகிறதோ அங்கே தங்கத்தாலானதாக இருக்கும். இது பற்றி மாயா மச்சந்தரின் விளையாட்டு காண்பிக்கின்றனர். அவர்கள் காண்பிப்பதற்காக உருவாக்கியிருக் கின்றார்கள். உண்மையில் சொர்க்கத்தில் தங்க செங்கல் இருக்கின்றது. அதை கோல்டன் ஏஜ் என்று அழைக்கின்றோம். இதை அயர்ன் ஏஜ் என்கின்றோம். சொர்க்கத்தை அனைவரும் நினைக்கின்றார்கள். அவர்களுடைய சித்திரம் கூட இருக்கிறது. ஆதி சனாதன தர்மம் என்றும் கூறுகின்றார்கள்; பிறகு இந்து தர்மம் என கூறிவிடுகின்றனர். தேவதைகளுக்கு பதிலாக இந்து எனக்கூறுகின்றனர். ஏனென்றால் விகாரிகளை தேவதைகள் என எப்படிக் கூறமுடியும்? நீங்கள் எங்கு சென்றாலும் இதைப் புரிய வைக்கின்றீர்கள். ஏனென்றால் நீங்கள் தூதுவர்கள். செய்தியை கொடுக்கக்கூடியவர்கள். பாபாவின் அறிமுகத்தை ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும். நீங்கள் சரியாக சொல்கிறீர்கள் என்பதை சிலர் உடனே புரிந்து கொள்வார்கள். இரண்டு தந்தை உண்மையில் இருக்கிறார்கள். சிலர் பரமாத்மா சர்வவியாபி என்கிறார்கள். ஒருவரிடம் எல்லைக்குட்பட்ட சொத்து கிடைக்கிறது. பரலோக தந்தையிடம் 21 பிறவிகளுக்கு எல்லையற்ற சொத்து கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இந்த ஞானம் கூட இப்போது இருக்கிறது. அங்கே இந்த ஞானம் இருக்காது. சங்கமயுகத்தில் சொத்து கிடைக்கிறது. பிறகு அதை 21 தலைமுறைக்கு பல பிறவியாக நீங்கள் ஆட்சி செய்கிறீர்கள். நீங்கள் முழு உலகிற்கும் எஜமானன் ஆகின்றீர்கள். இது இப்பொது உங்களுக்கு தெரிந்திருக்கிறது. யார் உறுதியான நிச்சய புத்தி உடையவராக இருக்கின்றார்களோ அவர்களுக்கு எந்த சந்தேகமும் எழுவதற்கான விஷயம் இல்லை. எல்லையற்ற அப்பாவிடம் எல்லையற்ற சொத்து கிடைக்கிறது. சிவதந்தை வருகிறார் என்றால் நிச்சயம் சொத்து கொடுப்பார். ஆகையால் இந்த பேட்ஜ் மிகவும் நன்றாக இருக்கிறது என பாபா கூறுகின்றார். இது நிச்சயமாக இருக்கட்டும். யார் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் வீடு வீடாக செய்தியைக் கொடுக்க வேண்டும். வினாஷம் வந்தால் பகவான் வந்து விட்டார் என புரிந்து கொள்வார்கள். பிறகு யாருக்கெல்லாம் நீங்கள் செய்தியைக் கொடுத்தீர்களோ அவர்கள் இந்த வெண்ணிற ஆடை அணிந்த பரிஸ்தாக்கள் யார் என நினைவு செய்வார்கள். சூட்சும் வதனத்தில் கூட நீங்கள் பரிஸ்தாக்களைப் பார்க்கிறீர்கள் அல்லவா! மம்மா, பாபா யோக பலத்தால் பரிஸ்தா ஆகியிருக்கிறார்கள் என உங்களுக்குத் தெரியும். ஆகையால் நாமும் மாறலாம். அனைத்து விஷயங்களையும் பாபா இவருக்குள் பிரவேசமாகி உங்களுக்குப் புரிய வைக்கின்றார். நேரடியாக ஞானத்தைக் கொடுக்கிறார். பாபாவிடம் உள்ள ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்குள்ளும் இருக்கிறது. மேலே செல்லும் போது ஞானத்தின் பாகமும் முடிவடைந்து விடுகிறது. பிறகு கிடைக்கக்கூடிய பாகம் சுகத்தினுடைய பாகம் இந்த ஞானம் மறந்து விடுகிறது.

 

குழந்தைகளாகிய நீங்கள் எங்கே சென்றாலும் தூதுவருடைய அடையாளம் இந்த பேட்ஜ் நிச்சயம் அணிந்திருக்க வேண்டும். யாராவது சிரித்தாலும் கூட. இதில் எதற்காக சிரிப்பார்கள்? நீங்கள் உண்மையான விஷயத்தை சொல்கிறீர்கள். இவர் எல்லையற்ற தந்தை. அவருடைய பெயர் சிவபாபா, அவர் கல்யாணகாரி. அவர் வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். இதுவே புருஷோத்தம சங்கமயுகம். அனைத்து ஞானமும் குழந்தைகளுக்குக் கிடைத்திருக்கிறது. பின் ஏன் மறக்க வேண்டும்? மிகவும் எளிதான விஷயம். போகும் போதும், வரும் போதும், அப்பா மற்றும் ஆஸ்தியை நினையுங்கள். சாந்திதாமம் மற்றும் சுகதாமம். குழந்தை களாகிய நீங்கள் இங்கே வந்து முரளியைக் கேட்டுச் செல்கிறீர்கள். பிறகு கூறவும் வேண்டும். ஒரு பிராமணியே முரளி வகுப்பு எடுக்க வேண்டும் என்பது இல்லை. பிராமணியை தனக்குச் சமமாக மாற்றி தயார் செய்ய வேண்டும். அப்போது தான் பலருக்கு நன்மை செய்ய முடியும். ஒரு பிராமணி எங்காவது சென்றால் மற்றவர் ஏன் சென்டர் நடத்தக்கூடாது? தாரணை செய்யவில்லையா என்ன? மாணவர்களுக்கு படிக்கவும். படிக்க வைக்கவும் ஆர்வம் வேண்டும். முரளி மிகவும் எளிதானது. யார் வேண்டுமானாலும் தாரணை செய்து வகுப்பு எடுக்கலாம். இங்கேயோ தந்தை அமர்ந்திருக்கிறார். எந்த விஷயத்திலும் சந்தேகம் ஏற்படக்கூடாது என தந்தை கூறுகின்றார். ஒரு தந்தை தான் அனைத்தையும் அறிந்திருக்கிறார். ஒரேயொரு குறிக்கோள்தான், இதில் கேட்பதற்கு எந்தக் கேள்வியும் இல்லை. காலையில் கூட அமர்ந்து குழந்தைகள் நினைவு யாத்திரையில் இருக்க உதவி செய்கிறேன். அனைத்து எல்லையற்ற குழந்தைகளும் நினைவு செய்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இந்த நினைவின் உதவியால் முழு உலகத்தையும் தூய்மையாக்க வேண்டும். இதில் தான் நீங்கள் விரல் (ஒத்துழைப்பு) கொடுக்கிறீர்கள். முழு உலகையும் பரிசுத்தமாக ஆக்க வேண்டுமல்லவா? ஆகையால் பாபா அனைத்து குழந்தைகளையும் கவனிக்கின்றார் அல்லவா? அனைவரும் சாந்திதாமத்திற்குச் சென்று விடுவார்கள். அனைவரின் கவனத்தையும் இழுக்கின்றார். தந்தை எல்லையற்றதில்தான் அமர்ந்திருக்கின்றார். நான் முழு உலகையும் தூய்மையாக்குவதற்காக வந்துள்ளேன். முழு உலகையும் தூய்மையாக்குவதற்காக சக்தி (கரன்ட்) கொடுத்துக் கொண்டிருக்கிறேன். யாரிடம் முழுமையாக யோக பலம் இருக்கிறதோ அவர்கள், பாபா இப்போது நினைவு யாத்திரையை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார், இதன் மூலம் உலகில் அமைதி ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள். குழந்தைகள் கூட நினைவில் இருக்கும் போது உதவி கிடைக்கிறது. உதவியாளராக குழந்தைகள் கூட வேண்டுமல்லவா! இறை தொண்டர்கள் நிச்சயபுத்தி உடையவர்கள் தான் நினைப்பார்கள். உங்களுடைய முதல் பாடம் தூய்மையாகுவது தான். தந்தையுடன் குழந்தைகளாகிய நீங்களும் நிமித்தமாகின்றீர்கள். , பதீத பாவனா! வாருங்கள் என தந்தையை அழைக்கின்றார்கள். இப்பொழுது அவர் தனியாக என்ன செய்வார்? உதவி செய்பவர்கள் வேண்டுமல்லவா! நாம் உலகத்தைத் தூய்மையாக்கி பிறகு முழு உலகிலும் ஆட்சி செய்வோம் என உங்களுக்குத் தெரியும். இது போன்று புத்தியில் நிச்சயம் ஏற்படும் போது தான் போதை அதிகரிக்கும். நாம் பாபாவின் ஸ்ரீமத்தினால், தன்னுடைய யோக பலத்தினால் தனக்காக இராஜ்ஜியத்தை ஸ்தாபனை செய்துகொண்டிருக் கின்றோம் என நீங்கள் அறிகிறீர்கள். இந்த போதை அதிகரிக்க வேண்டும். இது ஆன்மீக விஷயம். ஒவ்வொரு கல்பமும் பாபா இந்த ஆன்மீக பலத்தால் நம்மை விஷ்வத்திற்கே எஜமானன் ஆக்குகின்றார் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். சிவதந்தையே வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார் என்பதை புரிந்து கொள்கிறீர்கள். இப்போது தலையில் இந்த நினைவு யாத்திரையைப் பற்றிய கவலை இருக்கிறது. முயற்சி செய்ய வேண்டும். தொழில் துறைகளில் வேலை செய்து கொண்டிருந்தாலும் நினைவு யாத்திரை இருக்கட்டும். சதா ஆரோக்கியம் அடைவதற்காக பாபா கட்டாயப்படுத்தி வருமானம் அடைய வைக்கின்றார். இந்த நேரத்தில் அனைத்தையும் மறக்க வேண்டியிருக்கிறது. ஆத்மாக்களாகிய நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஆத்ம அபிமானி ஆவதற்கான பயிற்சி செய்விக்கப்படுகிறது. சாப்பிடும் போதும், குடிக்கும் போதும், போகும் போதும், வரும் போதும் தந்தையை நினைவு செய்ய முடியாதா? துணி தைத்துக் கொண்டிருந்தாலும் புத்தியோகம் பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். மிகவும் எளிது. 84 பிறவிகளின் சக்கரம் முடிவடைகிறது என புரிந்து கொள்கிறீர்கள். இப்போது பாபா ஆத்மாக்களாகிய நமக்கு இராஜயோகம் கற்பிக்க வந்துள்ளார். இந்த உலகினுடைய சரித்திரம் பூகோளம் திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. போன கல்பத்திலும் இவ்வாறு நடந்தது. இப்போது மீண்டும் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சுழற்சியினுடைய இரகசியத்தை பாபா தான் புரியவைக்கின்றார். ஒவ்வொருவருக்கும் டிராமாவில் பாகம் கிடைத்திருக்கிறது. அதை நடித்துக் கொண்டே இருக்கிறோம். தந்தையை நினைவு செய்தால் சதோபிரதானம் ஆகலாம் என குழந்தைகளுக்கு வழி காட்டப்படுகிறது. பிறகு இந்த சரீரம் கூட விடுபட்டு விடும். நாம் ஆத்மா சதோபிரதானமாக வேண்டும். ஏனென்றால் வீட்டிற்கு திரும்ப வேண்டும். சத்யுகத்தில் இவ்வாறு கூறமாட்டார்கள். அங்கே ஒரு உடலை விட்டு விட்டு இன்னொரு உடல் எடுக்க வேண்டும் எனக் கூறுவார்கள். அங்கே துக்கமான விஷயம் எதுவும் இல்லை. இதுவோ துக்கதாமம். பழைய உடலாக இருப்பதால் இதை விட்டு விட்டு திரும்பி தன்னுடைய வீட்டிற்குப் போவோம் என நினைக்கின்றனர். தந்தையை நிரந்தரமாக நினைக்க வேண்டும். அந்த நிராகார தந்தைதான் ஞானக்கடல். அவரே வந்து அனைவருக்கும் சத்கதி கொடுக்கிறார்; சாதுக்களைக் கூட மேம்படுத்துகிறேன் என பாபா கூறுகின்றார். இப்போது நீங்கள் ஒரு பாபாவை நினையுங்கள். ஆத்மாக்களாகிய உங்கள் அனைவருக்கும் பாபாவிடமிருந்து ஆஸ்தியடைய உரிமையிருக்கிறது. தன்னை ஆத்மா என உணர்ந்து ஆத்ம அபிமானியாகுங்கள் மற்றும் தந்தையை நிரந்தரமாக நினைவு செய்தால் பாவம் அழிந்து கொண்டே போகும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :-

1. முரளி கேட்டு, பிறகு சொல்ல வேண்டும். படிப்பதுடன் படிக்க வைக்கவும் வேண்டும். கல்யாணகாரியாக வேண்டும். பேட்ஜ் தூதுவரின் அடையாளமாக இருக்கிறது. இதை சதா அணிந்திருக்க வேண்டும்.

 

2. உலகில் அமைதியை ஸ்தாபனை செய்வதற்காக நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். பாபாவின் பார்வை எல்லையற்றதாக இருக்கிறது. முழு உலகையும் தூய்மையாக்குவதற்காக சக்தி கொடுக்கின்றார். அப்படிப்பட்ட பாபாவைப் பின்பற்றி உதவியாளர் ஆகவேண்டும்.

 

வரதானம்:

ஒவ்வொரு ஆத்மாவின் சம்பந்தம், தொடர்பில் வரும்பொழுதும் அனைவருக்கும் தானம் கொடுக்கக்கூடிய மகாதானி, வரதானி ஆகுக.

 

முழு நாளில் யாரெல்லாம் சம்பந்தம், தொடர்பில் வருகிறார்களோ, அவர்களுக்கு ஏதாவது ஒரு சக்தியினுடைய, ஞானத்தினுடைய, குணத்தினுடைய தானம் கொடுங்கள். உங்களிடம் ஞானத்தின் பொக்கிஷமும் உள்ளது, சக்திகள் மற்றும் குணங்களின் பொக்கிஷங்களும் உள்ளன. எனவே, எந்த ஒரு நாளும் தானம் செய்யாமல் கழிந்துவிடக் கூடாது. அப்பொழுதே மகாதானி என்று கூறலாம். 2. தானம் என்ற வார்த்தையின் ஆன்மிக அர்த்தமே சகயோகம் (உதவி) கொடுப்பது ஆகும். எனவே, தன்னுடைய சிரேஷ்ட ஸ்திதியின் (சிறந்த மனநிலை) வாயுமண்டலத்தின் மூலம் மற்றும் தன்னுடைய விருத்தியின் அதிர்வலைகள் மூலம் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சகயோகம் கொடுங்கள், அப்பொழுதே வரதானி என்று கூறலாம்.

 

சுலோகன்:

யார் பாப்தாதா மற்றும் பரிவாரத்திற்கு நெருக்கமானவர்களோ, அவர்களுடைய முகத்தில் திருப்தி, ஆன்மிகத்தன்மை மற்றும் மகிழ்ச்சியின் புன்முறுவல் இருக்கும்.

 

ஓம்சாந்தி