28.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! பாபாவினுடைய ஸ்ரீமத்படி நடந்து தங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள், பரசிந்தனையின் மூலம் (மற்றவர்களைப் பற்றிய சிந்தனையின் மூலம்) தங்களுடைய அலங்காரத்தை அழித்துக் கொள்ளாதீர்கள், நேரத்தை வீணாக்காதீர்கள்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் பாபாவை விட சிறந்த மந்திரவாதிகள் - எப்படி?

 

பதில்:

இங்கே அமர்ந்து கொண்டே நீங்கள் இந்த லஷ்மி-நாராயணனைப் போல் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இங்கு அமர்ந்துக் கொண்டே தங்களை தாங்களே மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள், இது கூட மாயவித்தையாக இருக்கிறது. அல்லாவை (தந்தையை) நினைவு செய்வதினால் மட்டுமே உங்களுடைய அலங்காரம் நடந்துவிடுகிறது. கை-கால்களை அசைக்க வேண்டும் என்ற விஷயமும் இல்லை சிந்திக்க வேண்டிய விஷயம் மட்டுமே ஆகும். யோகத்தின் மூலம் நீங்கள் சுத்தமாகவும், தூய்மையாகவும் அழகாக ஆகி விடுகிறீர்கள், உங்களுடைய ஆத்மா மற்றும் சரீரம் தங்கமாகிவிடுகிறது, இது கூட அதிசயமாக இருக்கிறது அல்லவா.

 

ஓம் சாந்தி.

ஆன்மீக மந்திரவாதி அமர்ந்து ஆன்மீக குழந்தைகளுக்கு, யார் தந்தையை விடவும் சிறந்த மந்திரவாதிகளாக இருக்கிறார்களோ, அவர்களுக்குப் புரிய வைக்கின்றார் - நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இங்கே அமர்ந்துக் கொண்டே எந்த சப்தமும் எழுப்பவில்லை. பாபா அல்லது பிரியதர்ஷன், பிரியதர்ஷனிகளுக்கு யுக்தி சொல்லிக் கொண்டிருக்கிறார். இங்கே அமர்ந்து கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று பிரியதர்ஷன் கேட்கின்றார். நீங்கள் உங்களை இந்த லஷ்மி-நாராயணனை போல் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று யாராவது புரிந்து கொள்வார்களா? நீங்கள் இங்கே அமர்ந்துள்ளீர்கள், வரிசைகிரமமான முயற்சியின் படி தான் இருக்கின்றீர்கள் அல்லவா. இப்படி அலங்கரிக்கப்பட்டவர்களாக ஆக வேண்டும் என்று பாபா கூறுகின்றார். எதிர்கால அமரபுரிக்காக உங்களுடைய குறிக்கோளே இது தான் ஆகும். இங்கே அமர்ந்து கொண்டு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? சொர்க்கத்தின் அலங்காரத்திற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இதை என்னவென்று சொல்வது? இங்கே அமர்ந்துக் கொண்டு தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். எழும்போதும், அமரும்போதும், நடக்கும்போதும் பாபா ஒரு மன்மனாபவ எனும் சாவியை கொடுத்துவிட்டார். அவ்வளவு தான் ஒருவரைத் தவிர வேறு எந்த வீணான விஷயங்களையும் கேட்டு-பேசி நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் தங்களுடைய அலங்காரத்திலேயே ஈடுபட்டிருங்கள். மற்றவர்கள் செய்கிறார்களோ இல்லையோ, அதில் உங்களுக்கு என்ன ஆயிற்று! நீங்கள் தங்களுடைய முயற்சியில் இருங்கள். எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக இருக்கிறது. புதியவர்கள் யாராவது கேட்டால் கண்டிப்பாக அதிசயப்படுவார்கள். உங்களில் சிலர் தங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள், சிலர் இன்னும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றிய சிந்தனையில் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் உங்களை மட்டும் பாருங்கள் என்று பாபா குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார். மிகவும் சிறிய யுக்தியை கூறியுள்ளார், ஒரே ஒரு வார்த்தை தான் - மன்மனாபவ. நீங்கள் இங்கே அமர்ந்துள்ளீர்கள் ஆனால் முழு சிருஷ்டி சக்கரம் எவ்வாறு சுற்றுகின்றது என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. இப்போது மீண்டும் நாம் புதிய உலகத்திற்காக அலங்கரித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எவ்வளவு பதமாபதம் பாக்கியசாலிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் இங்கே அமர்ந்துக் கொண்டே எவ்வளவு காரியங்களை செய்கிறீர்கள். கை-கால்களை அசைக்க வேண்டிய விஷயமே இல்லை. சிந்தனையின் விஷயம் மட்டுமே ஆகும். நாங்கள் இங்கே அமர்ந்து கொண்டே உயர்ந்ததிலும் உயர்ந்த உலகத்திற்கான அலங்காரம் செய்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் சொல்வீர்கள். மன்மனாபவ என்ற மந்திரம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது. இந்த யோகத்தின் மூலம் தான் உங்களுடைய பாவங்கள் எரிந்து கொண்டே செல்லும் மேலும் நீங்கள் தூய்மையாக ஆகி-ஆகி பிறகு எவ்வளவு அழகாக ஆகிவிடுவீர்கள். இப்போது ஆத்மா தூய்மையற்றதாக இருக்கிறது என்றால் சரீரத்தின் நிலையையும் பாருங்கள் என்னவாகிவிட்டது. இப்போது உங்களுடைய ஆத்மா மற்றும் சரீரம் தங்கமாகிவிடும். இது அதிசயமாக இருக்கிறது அல்லவா. எனவே இப்படி தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். தெய்வீக குணத்தையும் தாரணை செய்ய வேண்டும். பாபா அனைவருக்கும் ஒரு வழியைத் தான் கூறுகின்றார் - அல்ஃப்- மற்றும் பே (அல்லா மற்றும் ஆஸ்தி). அல்லாவின் விஷயம் மட்டுமே ஆகும். பாபாவை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் உங்களுடைய அலங்காரங்கள்  அனைத்தும் மாறிவிடும்.

 

பாபாவை விடவும் நீங்கள் பெரிய மந்திரவாதிகளாவீர்கள். இப்படி- இப்படியெல்லாம் செய்வதின் மூலம் உங்களுக்கு அலங்காரம் ஆகிவிடும் என்று உங்களுக்கு யுக்தியை கூறுகின்றார். தங்களை அலங்கரித்துக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் எந்த செலவுமின்றி தானாகவே தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் என்னென்ன செய்தோம் என்பதையாவது புரிந்து கொள்கிறீர்கள். அலங்காரம் அனைத்தையும் கெடுத்துக் கொண்டு என்னவாக ஆகிவிட்டீர்கள்! இப்போது ஒரே வார்த்தையின் மூலம், பாபாவின் நினைவின் மூலம் உங்களுடைய அலங்காரம் நடக்கிறது. குழந்தைகளுக்கு எவ்வளவு நல்ல விதத்தில் புரிய வைத்து புத்துணர்வளிக்கின்றார். இங்கு அமர்ந்து கொண்டே நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? நினைவு யாத்திரையில் அமர்ந்துள்ளீர்கள். ஒருவேளை யாருடைய சிந்தனையாவது வேறு-வேறு பக்கம் இருந்தது என்றால் அலங்காரம் ஆகுமா என்ன. நீங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் மற்றவர்களுக்கும் வழியை சொல்ல வேண்டும். பாபா இப்படி அலங்கரிப்பதற்காகவே வருகின்றார். பாபா தங்களுடைய காரியம் அதிசயமானது, தாங்கள் எங்களை எவ்வளவு அலங்கரிக்கின்றீர்கள். எழும்போதும், அமரும்போதும், நடக்கும்போதும் நாம் நம்மை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். சிலர் தங்களை அலங்கரித்துக் கொண்டு பிறகு மற்றவர்களையும் அலங்கரிக்கின்றார்கள். சிலர் தங்களையும் அலங்கரித்துக் கொள்வதில்லை என்றால் மற்றவர்களுடைய அலங்காரத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வீணான விஷயங்களை சொல்லி அவர்களுடைய நிலையையும் கீழே விழ வைத்து விடுகிறார்கள். தாங்களும் அலங்கரித்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள், என்றால் மற்றவர்களையும் அப்படி இருக்க வைத்து விடுகிறார்கள். எனவே நல்ல விதத்தில் யோசித்து சிந்தனை செய்யுங்கள் பாபா எப்படி- எப்படியெல்லாம் யுக்தி கூறுகின்றார். பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களை படிப்பதின் முலம் இந்த யுக்திகள் வருவதில்லை. சாஸ்திரங்கள் பக்தி மார்க்கத்தினுடையதாகும். நீங்கள் ஏன் சாஸ்திரங்களை ஏற்றுக் கொள்வதில்லை? என்று உங்களை கேட்கிறார்கள். நாங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லுங்கள். அரைக்கல்பம் பக்தி செய்திருக்கிறோம். சாஸ்திரங்களைப் படிக்கிறோம் எனும் போது யார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இரவு மற்றும் பகலாக ஆகிறது என்றால் கண்டிப்பாக இரண்டையும் ஏற்றுக் கொள்வார்கள் அல்லவா. இது எல்லையற்ற பகல் மற்றும் இரவாகும்.

 

பாபா கூறுகின்றார், நீங்கள் தங்களை அலங்கரியுங்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. உங்களுடைய புத்தி மிகவும் பரந்ததாக இருக்க வேண்டும். தங்களுக்குள் மிகுந்த அன்போடு இருக்க வேண்டும். நேரத்தை வீணாக்கக் கூடாது ஏனென்றால் உங்களுடைய நேரம் மிகவும் மதிப்புமிக்கதாகும். நீங்கள் சோழியிலிருந்து வைரத்தைப் போல் ஆகின்றீர்கள். இலவசமாகவா கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இது என்ன கதையா. பாபா ஒரு வார்த்தை தான் கூறுகின்றார். பெரிய- பெரிய மனிதர்கள் அதிகம் பேசலாமா. பாபா ஒரு வினாடியில் ஜீவன்முக்திக்கான வழியைக் கூறுகின்றார். இவர்கள் உயர்ந்த அலங்காரமுடையவர்கள், ஆகையினால் தான் அவர்களுடைய சித்திரங்களை அதிகம் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தளவிற்கு பெரிய மனிதர்களாக இருப்பார்களோ, அந்தளவிற்கு பெரிய கோயிலாக உருவாக்குவார்கள், அதிகம் அலங்கரிப்பார்கள். முன்பெல்லாம் தேவதைகளின் சித்திரங்கள் மீது வைர மாலை அணிவித்தார்கள்.. பாபாவிற்கு அனுபவம் இருக்கிறது அல்லவா. பாபா (பிரம்மா) அவரே லஷ்மி-நாராயணனுக்கு வைர மாலை செய்திருக்கிறார். உண்மையில் அவர்களைப் போல் அணிகலன்களை இங்கே யாரும் அணிந்திருக்க முடியாது. இப்போது நீங்கள் அப்படி வரிசைகிரமமான முயற்சியின்படி ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். எனவே பாபா புரிய வைக்கின்றார் - குழந்தைகளே, தங்களுடைய நேரத்தையும் வீணாக்காதீர்கள், மற்றவர்களுடையதையும் வீணாக்காதீர்கள். பாபா நிறைய சகஜமான யுக்திகளை கூறுகின்றார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவம் அழிந்துவிடும். நினைவு அன்றி இவ்வளவு அலங்காரங்கள் நடக்க முடியாது. நீங்கள் இவர்களைப் போல் ஆகக் கூடியவர் களாவீர்கள். எனவே தெய்வீக சுபாவத்தை தாரணை செய்ய வேண்டும். இதில் சொல்வதற்கான அவசியம் கூட இல்லை. ஆனால் கல்லுபுத்தியாக இருக்கின்ற காரணத்தினால் அனைத்தையும் புரிய வைக்க வேண்டியுள்ளது. ஒரு வினாடியினுடைய விஷயமாகும். பாபா கூறுகின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் தங்களுடைய தந்தையை மறக்கின்ற காரணத்தினால் அலங்காரத்தை கெடுத்துக் கொண்டீர்கள். நடக்கும்போதும்-சுற்றும்போதும் அலங்கரித்துக் கொண்டே இருங்கள் என்று பாபா கூறுகின்றார். ஆனால் மாயையும் ஒன்றும் குறைந்தது கிடையாது. சிலர் எழுதுகிறார்கள் - பாபா, தங்களுடைய மாயை அதிகம் துன்புறுத்துகிறது. அட, என்னுடைய மாயை எங்கே இருக்கிறது, இது விளையாட்டு அல்லவா! நான் உங்களை மாயையிலிருந்து விடுவிக்க வந்துள்ளேன். என்னுடைய மாயை பிறகு எங்கிருக்கிறது. இந்த சமயத்தில் முழுவதுமே இந்த மாயை இராவணனுடைய இராஜ்யமாகும். எப்படி இந்த இரவு மற்றும் பகல் வித்தியாசம் வர முடியாதோ அதுபோலாகும். இது எல்லையற்ற இரவு மற்றும் பகலாகும். இதில் ஒரு வினாடி கூட வித்தியாசப்பட முடியாது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அப்படி வரிசைகிரமமான முயற்சியின்படி அலங்கரித்துக் கொண்டிருக்கிறீர்கள். சக்கரவர்த்தி ராஜாவாக ஆக வேண்டும் என்றால் சக்கரத்தை சுற்றிக் கொண்டே இருங்கள் என்று பாபா கூறுகின்றார். குடும்ப விவகாரங்களில் என்னவோ இருங்கள், இதில் அனைத்தும் புத்தியின் வேலையாகும். ஆத்மாவில் தான் மனம்-புத்தி இருக்கிறது. இங்கே உங்களுக்கு வெளி உலகத்தின் சிக்கலான வேலைகள் போன்ற எதுவும் இல்லை. நீங்கள் இங்கு வருவதே தங்களை அலங்கரித்துக் கொள்வதற்கும், புத்துணர்வு பெறுவதற்கும் ஆகும். பாபா அனைவருக்கும் ஒரே விதமாகத்தான் படிப்பிக்கின்றார். இங்கே பாபாவிடம் புதிய-புதிய கருத்துக்களை நேரடியாக கேட்பதற்காக வருகிறார்கள், பிறகு வீட்டிற்குச் செல்கிறார்கள் என்றால் என்னவெல்லாம் கேட்டார்களோ, அது வெளியேறி விடுகிறது. இங்கிருந்து வெளியில் சென்றவுடனேயே பை காலியாகி விடுகிறது. என்ன கேட்கிறார்களோ, அதைப்பற்றி சிந்தனை செய்வதில்லை. உங்களுக்கு இங்கே நிறைய ஏகாந்தமான இடங்கள் இருக்கின்றன. வெளியில் சிறு இரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. ஒன்று மற்றொன்றை கொலை செய்கிறது, குடித்துக் கொண்டே இருக்கிறது.

 

எனவே பாபா புரிய வைக்கின்றார் - இது உங்களுடைய மிகவும் மதிப்புமிக்க நேரமாகும், இதை நீங்கள் வீணாக்காதீர்கள். தங்களை அலங்கரித்துக் கொள்வதற்கு நிறைய யுக்திகள் கிடைக்கின்றன. நான் அனைவரையும் கடைத்தேற்ற வந்துள்ளேன். நான் உங்களுக்கு உலகத்தின் இராஜ்யத்தை அளிக்க வந்துள்ளேன். எனவே இப்போது என்னை நினைவு செய்யுங்கள், நேரத்தை வீணாக்காதீர்கள். காரியங்களை செய்து கொண்டிருந்தாலும் பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். இவ்வளவு அதிகமான ஆத்மாக்கள் அனைத்தும் ஒரு பரமபிதா பரமாத்மா பிரியதர்ஷனின் பிரியதர்ஷனிகளாகும். அந்த உலகாய கதைகள் போன்றவற்றை நீங்கள் நிறைய கேட்கின்றீர்கள். அவையனைத்தையும் மறந்துவிடுங்கள் என்று பாபா இப்போது கூறுகின்றார். பக்தி மார்க்கத்தில் நீங்கள் என்னை நினைவு செய்தீர்கள் மற்றும் உறுதிமொழி அளித்தீர்கள், நாங்கள் தங்களுடையவர்களாகத் தான் ஆவோம் என்று. இவ்வளவு அதிகமான பிரியதர்ஷனிகளுக்கு ஒரு பிரியதர்ஷன் ஆவார். பிரம்மத்தில் ஐக்கியமாகிவிடுவோம், என்று பக்தி மார்க்கத்தில் கூறுகிறார்கள், இவையனைத்தும் வீணான விஷயங்களாகும். ஒரு மனிதன் கூட மோட்சத்தை அடைய முடியாது. இது ஆரம்பமும் முடிவுமற்ற நாடகமாகும், இவ்வளவு பேர்கள் அனைவரும் நடிகர்களாவர், இதில் கொஞ்சம் கூட வித்தியாசப் பட முடியாது. ஒரு அல்லாவை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய இந்த அலங்காரம் நடந்துவிடும் என்று பாபா கூறுகின்றார். இப்போது நீங்கள் இப்படி(லஷ்மி - நாராயணனை போல்) ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நாம் அனேக முறை இந்த அலங்காரத்தை செய்திருக்கிறோம் என்பது நினைவில் வருகிறது. பாபா தாங்கள் கல்பம்-கல்பமாக வருவீர்கள், நாங்கள் தங்களிடமிருந்து தான் கேட்போம். எவ்வளவு ஆழத்திலும் ஆழமான கருத்துகளாக இருக்கிறது. பாபா மிகவும் நல்ல யுக்திகளை கூறியுள்ளார். அப்படிப்பட்ட தந்தைக்கு நான் பலியாக வேண்டும். காதலன் காதலிகள் கூட அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இந்த அனைத்து ஆத்மாக்களுக்கும் ஒரே ஒரு பிரியதர்ஷன் ஆவார். சரீரத்தின் விஷயம் எதுவும் இல்லை. ஆனால் உங்களுக்கு சங்கம யுகத்தில் தான் பாபாவிடமிருந்து இந்த யுக்தி கிடைக்கிறது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், சாப்பிடுங்கள்-அருந்துங்கள், சுற்றுங்கள், வேலை செய்யுங்கள், தங்ளை அலங்காரம் செய்து கொண்டே இருங்கள். ஆத்மாக்கள் அனைத்தும் ஒரு பிரியதர்ஷனுடைய பிரியதர்ஷனிகளாகும். அவரையே நினைவு செய்து கொண்டிருங்கள். நாங்கள் 24 மணி நேரமும் நினைவு செய்துக் கொண்டே இருக்கின்றோம் என்று சில குழந்தைகள் கூறுகிறார்கள். ஆனால் எப்போதும் யாரும் நினைவு செய்ய முடியாது. அதிகத்திலும் அதிகம் இரண்டு இரண்டரை மணி நேரம் நினைவு செய்யலாம். ஒருவேளை அதிகமாக எழுதினால் பாபா ஏற்றுக் கொள்வதில்லை. மற்றவர்களுக்கு நினைவூட்டுவதில்லை என்றால் நீங்கள் நினைவு செய்கின்றீர்கள் என்று எப்படி புரிந்து கொள்ள முடியும்? ஏதாவது கடினமான விஷயமா என்ன? ஏதாவது செலவு இருக்கிறதா என்ன? எதுவுமே இல்லை. பாபாவை நினைவு செய்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் உங்களுடைய பாவங்கள் அழிந்து விடும் அவ்வளவு தான். தெய்வீககுணத்தையும் தாரணை செய்ய வேண்டும். தூய்மையற்றவர்கள் யாரும் சாந்திதாமம் அல்லது சுகதாமத்திற்குச் செல்ல முடியாது. தங்களை ஆத்மா சகோதர-சகோதரன் என்று புரிந்து கொள்ளுங்கள் என்று பாபா குழந்தைகளுக்கு கூறுகின்றார். 84 பிறவிகளின் நடிப்பு இப்போது முடிகிறது. இந்த பழைய சரீரத்தை விட வேண்டும். பாருங்கள் நாடகம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் வரிசைகிரமமான முயற்சியின் படி தெரிந்துள்ளீர்கள். உலகத்திலுள்ளவர்கள் யாரும் எதையும் புரிந்திருக்க வில்லை. நாம் பாபாவினுடைய வழிப்படி நடக்கின்றோமா, என்று ஒவ்வொருவரும் தங்களிடத்தில் கேளுங்கள்? நடந்தோம் என்றால் அலங்காரமும் நன்றாக நடக்கும். ஒருவர்-மற்றவருக்கு தலைகீழான விஷயங்களை சொல்லி அல்லது கேட்டு தங்களுடைய அலங்காரங்களை கெடுத்துக் கொள்கிறார்கள். நாம் இப்படி அலங்கரிக்கப்பட்டவர்களாக எப்படி ஆவது என்று குழந்தைகள் இந்த ஈடுபாட்டிலேயே இருக்க வேண்டும். மற்றபடி என்னவெல்லாம் இருக்கிறதோ அது சரியாகும். வயிற்றிற்கு இரண்டு ரொட்டி கிடைத்தால் போதும். உண்மையில் வயிறு அதிகம் சாப்பிடுவதில்லை. நீங்கள் சன்னியாசிகளாக இருக்கலாம் ஆனால் இராஜயோகிகளாவீர்கள். அதிகம் மேலேயும் கூடாது, கீழேயும் கூடாது. சாப்பிடுங்கள் ஆனால் அதிகம் பழக்கம் ஏற்பட்டு விடக்கூடாது. சிவபாபா நினைவிருக்கிறதா? ஆஸ்தி நினைவிருக்கிறதா? உலகத்தின் இராஜ்யம் நினைவிருக்கிறதா? என்று ஒருவர்-மற்றவருக்கு நினைவூட்டுங்கள். இங்கே அமர்ந்திருக்கும்போதே உங்களுடைய வருமானம் என்ன என்று சிந்தனை செய்யுங்கள்! இந்த வருமானத்தின் மூலம் அளவற்ற சுகம் கிடைக்க வேண்டும், நினைவு யாத்திரையின் மூலம் மட்டுமே, வேறு எந்த கஷ்டமும் இல்லை. பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் எவ்வளவு ஏமாற்றம் அடைகிறார்கள். இப்போது பாபா அலங்கரிக்க வந்துள்ளார். எனவே தங்களைப் பற்றி நன்றாக சிந்தனை செய்யுங்கள். மறக்காதீர்கள். மாயை மறக்கச் செய்துவிடுகிறது பிறகு அதிக நேரத்தை வீணாக்குகிறீர்கள். இது உங்களுடைய மிகவும் மதிப்புமிக்க நேரமாகும். படிப்பின் உழைப்பின் மூலம் மனிதர்கள் எந்த நிலையிலிருந்து என்னவாக ஆகி விடுகிறார்கள். பாபா உங்களுக்கு வேறு எந்த கஷ்டமும் கொடுப்பதில்லை. என்னை நினைவு செய்யுங்கள் என்று மட்டும் தான் கூறுகின்றார். எந்தவொரு புத்தகத்தையும் கையில் எடுக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. பாபா புத்தகம் எதையும் எடுக்கிறாரா என்ன? நான் வந்து இந்த பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். பிரஜாபிதா இருக்கிறார் அல்லவா. இவ்வளவு பேர் சரீர வம்சாவழி பிரஜைகளாக எப்படி இருக்க முடியும்? குழந்தைகள் தத்தெடுக்கப்படுகிறார்கள். ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கிறது. பாபா பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கின்றார், ஆகையினால் அவரை தாய்-தந்தை என்று சொல்லப்படுகிறது. இதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபாவின் வருகை மிகவும் துல்லியமானதாகும். துல்லியமான நேரத்தில் வருகின்றார், துல்லியமான நேரத்தில் செல்வார். உலகத்தின் மாற்றம் என்பது நடக்கத் தான் வேண்டும். இப்போது பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு புத்தியை(ஞானத்தை) கொடுக்கின்றார். பாபாவினுடைய வழிப்படி நடக்க வேண்டும். மாணவர்கள் எதை படிக்கிறார்களோ, அது தான் புத்தியில் ஓட வேண்டும். நீங்களும் கூட இந்த சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கிறீர்கள். எப்படி பாபாவினிடத்தில் சம்ஸ்காரம் இருக்கிறதோ, அதுபோல் உங்களுடைய ஆத்மாவிலும் கூட இந்த சம்ஸ்காரத்தை நிரப்புகின்றார். பிறகு இங்கே வரும்போது அதே நடிப்பு திரும்பவும் நடக்கும். வரிசைகிரமமான முயற்சியின்படி வருவீர்கள். தங்களை அலங்கரித்துக் கொள்வதற்கு, எவ்வளவு முயற்சி செய்துள்ளீர்கள் என்று தங்களுடைய மனதில் கேளுங்கள். எங்கேயும் நேரத்தை வீணாக்க வில்லை தானே? பாபா எச்சரிக்கின்றார் - வீணான விஷயங்களில் எங்கேயும் நேரத்தை இழந்து விடாதீர்கள். பாபாவினுடைய ஸ்ரீமத்தை நினைவில் வையுங்கள். மனிதர்களுடைய வழிப்படி நடக்காதீர்கள். நாம் பழைய உலகத்தில் இருக்கின்றோம் என்பது தெரிந்ததா என்ன. நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்று பாபா சொன்னார். இந்த பழைய உலகத்தில் எவ்வளவு அளவற்ற துக்கம் இருக்கிறது. இது கூட நாடகத்தின் படி நடிப்பு கிடைத்திருக்கிறது. நாடகத்தின்படி அனேக-அனேக தடைகளும் ஏற்படுகிறது. பாபா புரிய வைக்கின்றார் - குழந்தைகளே, இது ஞானம் மற்றும் பக்தியின் விளையாட்டாகும். அதிசயமான நாடகமாக இருக்கிறது. இவ்வளவு சிறிய ஆத்மாவில் முழு அழிவற்ற நடிப்பும் நிறைந்துள்ளது, அதை நடித்துக் கொண்டே இருக்கிறது. நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) மற்ற அனைத்து விஷயங்களையும் விட்டு-விட்டு நாம் எப்படி லஷ்மி-நாராயணனைப் போல் அலங்கரிக்கப்பட்டவர்களாக ஆவது என்ற ஈடுபாட்டிலேயே இருக்க வேண்டும்

 

2) தங்களிடம் கேட்க வேண்டும்: (1) நாம் ஸ்ரீமத்படி நடந்து மன்மனாபவ எனும் சாவியின் மூலம் தங்களை சரியாக அலங்கரித்துக் கொள்கிறோமா? (2) தலைகீழான விஷயங்களை கேட்டு அல்லது சொல்லி அலங்காரத்தை கெடுத்துக் கொள்ளவில்லை தானே? (3) தங்களுக்குள் அன்போடு இருக்கிறோமா? தங்களுடைய மதிப்புமிக்க நேரத்தை எங்கேயும் வீணாக்கவில்லை தானே? (4) தெய்வீக சுபாவத்தை தாரணை செய்திருக்கிறேனா?

 

வரதானம்:-

சுயமாற்றத்தின் மூலம் விஷ்வ மாற்றத்தின் காரியத்தில் உள்ளம் விரும்பும் வெற்றியை பிராப்தியாக அடையக்கூடிய வெற்றி சொரூபம் ஆகுக.

 

ஒவ்வொருவரும் சுயமாற்றத்தின் மூலம் விஷ்வ மாற்றம் செய்யக்கூடிய சேவையில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். இந்த விஷ்வத்தை மாற்றம் செய்தே ஆக வேண்டும் என்ற இந்த ஊக்கம், உற்சாகம் அனைவருடைய மனதிலும் உள்ளது மற்றும் மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. எங்கு தைரியம் உள்ளதோ, அங்கு ஊக்க உற்சாகம் இருக்கும். சுயமாற்றத்தின் மூலமே விஷ்வ மாற்றத்தின் காரியத்தில் உள்ளம் விரும்பும் வெற்றி பிராப்தியாகக் கிடைக்கிறது. ஆனால், எப்பொழுது ஒரே சமயத்தில் விருத்தி, அதிர்வலைகள் மற்றும் பேச்சு ஆகிய மூன்றும சக்திசாலியாக இருக்குமோ, அப்பொழுதே இந்த வெற்றி கிடைக்கும்.

 

சுலோகன்:-

எப்பொழுது பேச்சில் அன்பு மற்றும் பண்பு இருக்குமோ, அப்பொழுது பேச்சின் சக்தி சேமிப்பு ஆகும்.

 

ஓம்சாந்தி