15.02.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
இதுவரையில்
படித்த
அனைத்தும்
மறந்து
ஒரேடியாக குழந்தைப்
பருவத்திற்குச்
சென்று
விடுங்கள்.
அப்போது
இந்த
ஆன்மீகப்
படிப்பில் தேர்ச்சி
அடைய
முடியும்.
கேள்வி:
எந்த
குழந்தைகளுக்கு
தெய்வீக
புத்தி
கிடைத்துள்ளதோ
அவர்களின்
அடையாளம் என்னவாக
இருக்கும்?
பதில்:
அந்த
குழந்தைகள்
இந்த
பழைய
உலகத்தை
இந்த
கண்களால்
பார்த்துக்
கொண்டிருந்தாலும் பார்க்க
மாட்டார்கள்.
இந்த
பழைய
உலகம்
அழிந்தே
விட்டது
என்பது
அவர்களின்
புத்தியில்
எப்போதும் இருக்கும்.
இந்த
சரீரமும்
பழையது,
தமோபிரதானமாக
உள்ளது,
ஆத்மாவும்
தமோபிரதானமாக
உள்ளது,
இதில்
என்ன
அன்பு
வைப்பது?
இப்படிப்பட்ட
தெய்வீக
புத்தியுள்ள
குழந்தைகளின்
மீதுதான்
தந்தையின் மனதிற்கும்
ஈடுபாடு
ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட
குழந்தைகள்தான்
தந்தையின்
நினைவில்
நிரந்தரமாக
இருக்க முடியும்.
சேவையிலும்
முன்னே
செல்ல
முடியும்.
ஓம்
சாந்தி.
இனிமையிலும்
இனிமையான
ஆன்மீக
குழந்தைகளுக்கு
ஆன்மீக
தந்தை
புரிய
வைக்கிறார்.
எல்லைக்குட்பட்ட
சன்னியாசிகள்
வீடு
வாசலை
விட்டுவிடுகின்றனர்.
ஏனென்றால்
நாம்
பிரம்மத்தில்
ஐக்கியமாகி விடுவோம்,
ஆகையால்
உலகின்
மீதுள்ள
ஆசையைத்
துறக்க
வேண்டும்
என்று
புரிந்து
கொள்கின்றனர்.
பயிற்சியும்
கூட
இப்படி
செய்து
கொண்டிருப்பார்கள்.
ஏகாந்தத்தில்
சென்று
இருக்கின்றனர்.
அவர்கள் ஹடயோகிகள்,
தத்துவ
ஞானிகள்.
பிரம்மத்தில்
ஐக்கியமாகி
விடுவோம்
என்று
புரிந்து
கொள்கின்றனர்,
ஆகையால்
பற்றுதலை
நீக்குவதற்காக
வீடு
வாசலை
விட்டுவிடுகின்றனர்.
வைராக்கியம்
வந்து
விடுகிறது.
ஆனால்
சட்டென்று
பற்றுதல்
நீங்குவதில்லை.
மனைவி,
குழந்தைகள்
முதலானவர்களின்
நினைவுகள்
வந்தபடி இருக்கின்றன.
இங்கே
நீங்கள்
ஞானத்தின்
புத்தியின்
மூலம்
அனைத்தையும்
மறக்க
வேண்டியுள்ளது.
எந்த பொருளும்
விரைவாக
மறப்பதில்லை.
இப்போது
நீங்கள்
இந்த
எல்லைக்கப்பாற்பட்ட
சன்னியாசத்தை
செய்கிறீர்கள்.
நினைவு
அனைத்து
சன்னியாசிகளுக்குமே
இருக்கிறது.
ஆனால்,
புத்தியில்
புரிந்து
கொள்கிறார்கள்
–
நாம் பிரம்மத்தில்
ஐக்கியம்
ஆகிவிடுவோம்.
நாம்
சாந்தி
தாமத்திற்கு
எப்படி
செல்ல
முடியும்
என்பது
அவர்களுக்கு தெரியாது.
நாம்
நமது
வீட்டிற்குச்
செல்ல
வேண்டும்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
வெளிநாட்டிலிருந்து வருகிறார்கள்
என்றால்
நாம்
இந்த
ஊர்
வழியாக
பம்பாய்
செல்ல
வேண்டும்
என்று
புரிந்து
கொள்கின்றனர்.
இப்போது
குழந்தைகளாகிய
உங்களுக்கும்
கூட
உறுதியான
நம்பிக்கை
உள்ளது.
இவர்களுடைய
தூய்மை நன்றாக
உள்ளது,
ஞானம்
நன்றாக
உள்ளது,
அமைப்பு
நன்றாக
உள்ளது
என்று
பலரும்
கூறுகின்றனர்.
மாதர்கள்
நன்றாக
முயற்சி
செய்கின்றனர்.
ஏனென்றால்,
களைப்பற்றவராகி
புரிய
வைக்கின்றனர்.
தனது
உடல்,
மனம்,
பொருள்
முதலானவைகள்
ஈடுபடுத்தப்படுகின்றன.
ஆகையால்
நன்றாக
இருப்பதாக
தோன்றுகிறது.
ஆனால்
நாமும்
இப்படி
பயிற்சி
செய்வோம்
என்ற
சிந்தனை
வருவதில்லை.
அபூர்வமாக
சிலர்
வருகின்றனர்.
கோடியில்
சிலர்
என்று
தந்தையும்
கூறுகிறார்,
அதாவது
உங்களிடம்
வருபவர்களில்
யாராவது
சிலர்
வருகின்றனர்.
மற்றபடி
இந்த
பழைய
உலகம்
அழிய
உள்ளது.
இப்போது
தந்தை
வந்துள்ளார்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
காட்சி
தெரிகிறதோ
இல்லையோ
தந்தை
வந்துவிட்டார்
என்பதை
புத்தி
கூறுகிறது.
தந்தை
ஒருவர்தான்
அவர் தான்
பரலௌகீக
தந்தை
ஞானக்கடலாக
இருப்பவர்
என்பதையும்
கூட
நீங்கள்
அறிவீர்கள்.
லௌகீக
தந்தையை ஒருபோதும்
ஞானக்கடல்
என்று
கூற
மாட்டார்கள்.
தந்தைதான்
வந்து
குழந்தைகளாகிய
உங்களுக்கு
தன்னுடைய அறிமுகத்தை
கொடுக்கிறார்.
இப்போது
பழைய
உலகம்
அழிய
உள்ளது
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
நாம்
84
பிறவிகளின்
சக்கரத்தை
சுற்றி
முடித்துள்ளோம்.
மீண்டும்
சுகதாமத்திற்குச்
சாந்திதாமம்
வழியாக
செல்வதற்கான முயற்சி
இப்போது
நாம்
செய்கிறோம்.
கண்டிப்பாக
சாந்திதாமத்திற்கு
செல்ல
வேண்டும்.
அங்கிருந்து
இங்கே மீண்டும்
திரும்பி
வரவேண்டும்.
மனிதர்கள்
இந்த
விஷயங்களில்
குழம்பியுள்ளனர்.
யாராவது
இறந்துவிட்டால் வைகுண்டத்திற்கு
சென்றுவிட்டார்
என்று
புரிந்து
கொள்கின்றனர்.
ஆனால்
வைகுண்டம்
எங்கே
இருக்கிறது?
வைகுண்டத்தின்
பெயரை
பாரதவாசிகள்
தான்
தெரிந்திருக்கின்றனர்,
மற்ற
தர்மங்களைச்
சேர்ந்தவர்களுக்கு தெரியவே
தெரியாது.
பெயரை
மட்டும்
கேட்டிருக்கின்றனர்
படத்தை
பார்த்திருக்கின்றனர்.
தேவதைகளின் கோவில்கள்
முதலானவற்றை
நிறைய
பார்த்திருக்கின்றனர்.
இந்த
தில்வாடா
கோவில்
இருப்பதைப்
போல.
லட்சக்கணக்கான,
கோடிக்கணக்கான
ரூபாய்
செலவு
செய்து
உருவாக்கியுள்ளனர்.
உருவாக்கிக்
கொண்டே இருக்கின்றனர்.
தேவி
தேவதைகளை
வைஷ்ணவர்கள்
என்று
கூறுவோம்
அவர்கள்
விஷ்ணுவின் வம்சாவளியினர்
ஆவார்கள்.
அவர்கள்
தூய்மையாகத்தான்
இருப்பார்கள்.
சத்யுகம்
தூய்மையான
யுகம்
என்று கூறப்படுகிறது.
இது
தூய்மையற்ற
உலகம்.
சத்யுகத்தின்
வசதிகள்
முதலானவை
இங்கே
இருப்பதில்லை.
இங்கே
தானியங்கள்
முதலானவை
தமோபிரதானமாக
ஆகிவிடுகின்றன.
வாசனைக்
கூட
தமோபிரதானம்.
குழந்தைகள்
தியானத்தில்
செல்கின்றனர்
(காட்சிகள்
பார்க்கின்றனர்).
நாங்கள்
சோமரசத்தை
அருந்திவிட்டு வந்தோம்,
மிகவும்
நறுமணம்
நிறைந்ததாக
இருந்தது
என்று
கூறுகின்றனர்.
இங்கும்
கூட
உங்கள்
கைகளால் சாப்பிடும்
போது
மிகவும்
சுவையாக
இருக்கிறது
என்று
கூறுகின்றனர்.
ஏனென்றால்,
நீங்கள்
நல்ல
விதத்தில் சமைக்கிறீர்கள்.
அனைவரும்
நிறைந்த
மனதோடு
சாப்பிடுகின்றனர்.
நீங்கள்
யோகத்தில்
இருந்து
சமைப்பதால் சுவையாக
இருக்கிறது
என்பதல்ல,
இதுவும்
கூட
ஒரு
பயிற்சியாக
உள்ளது.
சிலர்
மிகவும்
நன்றாக
உணவை சமைக்கின்றனர்.
அங்கேயோ
(சத்யுகத்தில்)
அனைத்து
பொருட்களும்
சதோபிரதானமாக
இருக்கும்
ஆகையால் மிகவும்
சத்து
நிறைந்ததாக
இருக்கும்.
தமோபிரதானமாக
ஆவதால்
சக்தி
குறைந்துவிடுகிறது.
பிறகு
அதில் உடல்
நல
குறைவு,
துக்கம்
முதலானவை
ஏற்படுகிறது.
பெயரே
துக்கதாமம்.
சுகதாமத்தில்
துக்கத்தின் விஷயமே
இருப்பதில்லை.
நாம்
அந்த
அளவு
சுகத்தில்
செல்கிறோம்
அது
சொர்க்கத்தின்
சுகம்
என கூறப்படுகிறது.
நீங்கள்
தூய்மையாக
மட்டும்
ஆக
வேண்டும்.
அதுவும்
கூட
இந்த
ஒரு
பிறவியில்
மட்டும்.
பிற்காலத்தைப்
பற்றிய
சிந்தனையை
செய்ய
வேண்டாம்.
இப்போது
நீங்கள்
தூய்மையாக
ஆகுங்கள்.
கூறுவது யார்
என்பதை
முதலில் சிந்தியுங்கள்.
எல்லைக்கப்பாற்பட்ட
தந்தையின்
அறிமுகத்தை
கொடுக்க
வேண்டும்.
எல்லைக்கப்பாற்பட்ட
தந்தையிடமிருந்து
சுகத்தின்
ஆஸ்தி
கிடைக்கிறது.
லௌகீக
தந்தை
கூட
பரலௌகீக தந்தையை
நினைவு
செய்கிறார்.
புத்தி
மேலே
சென்றுவிடுகிறது.
குழந்தைகளாகிய
உங்களில்
நிச்சயபுத்தி உறுதியாக
இருப்பவர்களுக்கு
உள்ளுக்குள்
இந்த
உலகத்தில்
நாம்
இன்னும்
கொஞ்ச
நாட்கள்
இருப்போம் என்ற
நினைவு
இருக்கும்.
இது
சோழிக்கு
சமமான
உடலாக
உள்ளது.
ஆத்மாவும்
கூட
சோழியைப்
போல ஆகிக்
கிடக்கிறது,
இது
வைராக்கியம்
என்று
கூறப்படுகிறது.
இப்போது
குழந்தைகளாகிய
நீங்கள்
நாடகத்தை
அறிந்து
கொண்டுவிட்டீர்கள்.
பக்தி
மார்க்கத்தின்
நடிப்பு நடக்கத்தான்
வேண்டியுள்ளது.
அனைவரும்
பக்தியில்
இருக்கின்றனர்.
வெறுப்படைய
வேண்டியதில்லை.
சன்னியாசிகள்
தாமே
வெறுப்படையச்
செய்கின்றனர்.
வீட்டில்
அனைவரும்
துக்கம்
நிறைந்தவராக ஆகிவிடுகின்றனர்,
அவர்கள்
சென்று
தம்மை
கொஞ்சம்
சுகம்
நிறைந்தவர்களாக
ஆக்கிக்
கொள்கின்றனர்.
யாரும்
முக்திக்கு
திரும்பிச்
செல்ல
முடியாது.
வந்தவர்கள்
யாரும்
திரும்பிச்
செல்லவில்லை.
அனைவரும் இங்குதான்
இருக்கின்றனர்.
ஒருவர்
கூட
நிர்வாணதாமம்
அல்லது
பிரம்மத்திற்கு
திரும்பிச்
செல்லவில்லை.
இன்னார்
பிரம்மத்தில்
ஐக்கியமாகிவிட்டார்
என்று
அவர்கள்
புரிந்து
கொள்கின்றனர்.
இவை
அனைத்தும்
பக்தி மார்க்கத்தின்
சாஸ்திரங்களில்
இருக்கின்றன.
இந்த
சாஸ்திரங்கள்
முதலானவைகளில்
இருப்பது
எல்லாம்
பக்தி மார்க்கமாகும்.
குழந்தைகளாகிய
உங்களுக்கு
இப்போது
ஞானம்
கிடைத்துக்
கொண்டிருக்கிறது.
ஆகையால் நீங்கள்
எதையும்
படிக்க
வேண்டிய
அவசியமில்லை.
ஆனால்
சிலருக்குள்
நாவல்கள்
முதலானவைகளை படிக்கக்
கூடிய
பழக்கம்
உள்ளது.
ஞானம்
முழுமையாக
இல்லை.
அவர்கள்
அரைகுறை
ஞானிகள்
என்று கூறப்படுகின்றனர்.
இரவில்
நாவல்களை
படித்துவிட்டு
உறங்கினார்கள்
என்றால்
அவர்களின்
கதி
என்னவாகும்?
இங்கேயோ
தந்தை
கூறுகிறார்
-
படித்த
அனைத்தையும்
மறந்து
விடுங்கள்.
இந்த
ஆன்மீக
படிப்பில் ஈடுபட்டுவிடுங்கள்.
இதை
பகவான்
கற்பிக்கிறார்,
இதன்
மூலம்
நீங்கள்
21
ஜென்மத்திற்கு
தேவதைகளாக ஆகிவிடுவீர்கள்.
மற்றபடி
படித்த
அனைத்தையும்
மறக்க
வேண்டும்.
ஒரேடியாக
குழந்தைப்
பருவத்திற்குச் சென்றுவிடுங்கள்.
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
கொள்ளுங்கள்.
இந்த
கண்களால்
பார்த்துக்
கொண்டு இருந்தாலும்,
எதையும்
பார்க்காதீர்கள்.
உங்களுக்கு
தெய்வீக
திருஷ்டியும்
(பார்வையும்),
தெய்வீக
புத்தியும் கிடைத்திருக்கிறது.
எனவே
இது
முழுமையான
பழைய
உலகமாக
உள்ளது
என்று
புரிந்து
கொள்கிறீர்கள்.
இது
அழிந்து
போக
வேண்டும்.
இவர்கள்
அனைவரும்
சுடுகாட்டில்
இருக்கிறார்கள்,
இவர்களிடம்
மனதை ஈடுபடுத்துவீர்களா
என்ன?
இப்போது
பரிஸ்தானை
(தேவதைகள்
வாழுமிடத்தை)
சேர்ந்தவர்களாக
ஆக வேண்டும்.
நீங்கள்
இப்போது
சுடுகாட்டுக்கும்
பரிஸ்தானுக்கும்
இடையில்
அமர்ந்திருக்கிறீர்கள்.
பரிஸ்தான் இப்போது
உருவாகிக்
கொண்டிருக்கிறது.
இப்போது
பழைய
உலகத்தில்
அமர்ந்திருக்கிறீர்கள்.
ஆனால்
இடையில் புத்தியின்
தொடர்பு
அங்கே
சென்றுவிட்டது.
நீங்கள்
செய்யும்
முயற்சியே
புதிய
உலகத்திற்கு
செல்வதற்கானதாகும்.
இப்போது
இரண்டிற்கும்
இடையில்
அமர்ந்திருக்கிறீர்கள்-புருஷோத்தமர்
ஆவதற்காக.
புருஷோத்தம சங்கமயுகத்தைப்
பற்றி
யாருக்கும்
தெரியாது.
புருஷோத்தம
மாதம்,
புருஷோத்தம
வருடத்தின்
அர்த்தத்தைக் கூட
புரிந்து
கொள்வதில்லை.
புருஷோத்தம
சங்கமயுகத்திற்கு
மிகவும்
குறைவான
நேரம்
கிடைத்திருக்கிறது.
தாமதமாக
பல்கலைக்கழகத்திற்கு
வந்தார்கள்
என்றால்
அதிகமாக
உழைக்க
வேண்டியிருக்கும்.
நினைவில் இருப்பது
மிகவும்
கஷ்டமாக
இருக்கிறது,
மாயை
தடைகளை
ஏற்படுத்தியபடி
இருக்கிறது.
ஆக,
இந்த
பழைய உலகம்
அழிய
வேண்டி
உள்ளது
என்பதை
தந்தை
புரிய
வைக்கிறார்.
தந்தை
இங்கே
அமர்ந்திருக்கிறார்,
பார்த்துக்
கொண்டிருக்கிறார்.
ஆனால்,
இவை
அனைத்தும்
அழியப்
போகின்றன
என்பது
புத்தியில்
இருக்கிறது.
எதுவும்
இருக்கப்
போவதில்லை.
இது
பழைய
உலகம்.
இதன்
மீது
வைராக்கியம்
ஏற்பட்டுவிடுகிறது.
தேகதாரிகள்
கூட
அனைவரும்
பழையவர்கள்.
சரீரம்
பழையதாக,
தமோபிரதானமாக
இருக்கிறது.
ஆத்மாவும் கூட
தமோபிரதானமாக
இருக்கிறது.
இப்படிப்பட்ட
பொருட்களைப்
பார்த்து
நான்
என்ன
செய்யப்
போகிறேன்.
இவை
எதுவுமே
இருக்கப்
போவதில்லை.
இவைகளின்
மீது
அன்பு
இல்லை.
குழந்தைகளுக்குள்ளும்
கூட யார்
நல்ல
விதமாக
நினைவு
செய்து
சேவை
செய்கின்றார்களோ
அவர்களின்
மீது
பாபாவின்
மனம்
ஈடுபடுகிறது.
மற்றபடி
அனைவரும்
குழந்தைகள்
தான்.
எவ்வளவு
அளவற்ற
குழந்தைகள்
இருக்கின்றன.
அனைவருமே பார்க்கவும்
மாட்டார்கள்.
பிரஜாபிதா
பிரம்மாவை
தெரிந்து
கொள்வதே
இல்லை.
பிரஜாபிதா
பிரம்மாவின் பெயரை
கேட்டிருக்கின்றனர்.
ஆனால்
அவரிடமிருந்து
என்ன
கிடைக்கிறது
என்பது
கொஞ்சமும்
தெரியாது.
பிரம்மாவின்
கோவில்
இருக்கிறது.
தாடிக்காரராக
காட்டியுள்ளனர்.
ஆனால்
அவரை
யாரும்
நினைவு
செய்வதில்லை.
ஏனென்றால்
அவரிடமிருந்து
ஆஸ்தி
கிடைக்கப்
போவதில்லை.
ஆத்மாக்களுக்கு
ஒன்று
லௌகீக தந்தையிடமிருந்து
ஆஸ்தி
கிடைக்கிறது
மற்றொன்று
பரலௌகீக
தந்தையிடமிருந்து
ஆஸ்தி
கிடைக்கிறது.
பிரஜாபிதா
பிரம்மாவை
யாரும்
தெரிந்து
கொள்வதே
இல்லை.
அதிசயமாக
இருக்கிறது.
தந்தையாகி
ஆஸ்தி கொடுக்கவில்லை என்றால் அலெளகீகமானவராக இருப்பவர் அல்லவா!
ஆஸ்தி என்பதில் எல்லைக்குட்பட்டவருடையது
மற்றும்
எல்லைக்கப்பாற்பட்டவருடையது
என
உள்ளது.
இடையில்
இருப்பவரிடம்
(பிரம்மா)
ஆஸ்தி
இருப்பதில்லை.
பிரஜாபிதா
என்று
கூறுகின்றனர்
ஆனால்
ஆஸ்தி
எதுவும்
கிடையாது.
இந்த அலௌகீக
தந்தைக்கும்
கூட
பரலௌகீக
தந்தையிடமிருந்து
கிடைக்கிறது
எனும்
போது
அவர்
எப்படி கொடுப்பார்.
பரலௌகீக
தந்தை
இவர்
மூலமாக
கொடுக்கிறார்.
இவர்
ரதமாக
இருக்கிறார்.
இவரை
என்னவென்று நினைவு
செய்வது.
இவரோ
தானும்
கூட
அந்த
தந்தையை
தான்
நினைவு
செய்ய
வேண்டியிருக்கிறது.
இந்த பிரம்மாவைத்தான்
பரமாத்மாவாக
புரிந்து
கொள்கிறார்கள்
என்று
அந்த
மனிதர்கள்
புரிந்து
கொள்கிறார்கள்.
ஆனால்
இவரிடமிருந்து
ஆஸ்தி
கிடைப்பதில்லை.
ஆஸ்தி
சிவபாபாவிடமிருந்து
கிடைக்கிறது.
இவரோ இடையில்
தரகரைப்
போல
இருக்கிறார்.
இவரும்
கூட
நம்மைப்
போல
மாணவர்
தான்.
பயப்பட
வேண்டிய விஷயம்
எதுவும்
இல்லை.
இந்த
சமயம்
முழு
உலகமும்
தமோ
பிரதானமாக
இருக்கிறது
என்று
தந்தை
கூறுகிறார்.
நீங்கள் யோக
பலத்தின்
மூலம்
சதோபிரதானமாக
ஆக
வேண்டும்.
லௌகீக
தந்தையிடமிருந்து
எல்லைக்குட்பட்ட ஆஸ்தி
கிடைக்கிறது.
நீங்கள்
இப்போது
எல்லைக்கப்பாற்பட்ட
தந்தையின்
மீது
புத்தியை
ஈடுபடுத்த
வேண்டும்.
தந்தையைத்
தவிர
வேறு
யாரிடமிருந்தும்
எதுவும்
கிடைப்பதில்லை.
பிறகு
தேவதைகள்
ஏன்
இருக்க
மாட்டார்கள்.
இந்த
சமயத்தில்
அனைவருமே
தமோபிரதானமாக
இருக்கின்றனர்.
லௌகீக
தந்தையிடமிருந்து
ஆஸ்தி கிடைக்கவே
செய்கிறது.
மற்றபடி
இந்த
லட்சுமி
நாராயணரிடமிருந்து
நீங்கள்
எதை
எதிர்
பார்க்கிறீர்கள்.
இவர்கள்
அமரர்கள்
ஒருபோதும்
இறப்பதே
இல்லை,
தமோபிரதானமாக
ஆவதே
இல்லை
என்று
அவர்கள் புரிந்து
கொள்கிறார்கள்.
ஆனால்
சதோபிரதானமாக
இருந்தவர்கள்
தான்
தமோபிரதானத்தில்
வருகின்றனர் என்று
நீங்கள்
அறிந்திருக்கிறீர்கள்.
ஸ்ரீ
கிருஷ்ணரை
லட்சுமி
நாராயணரை
விட
உயர்ந்தவராக
புரிந்து கொள்கின்றனர்.
ஏனென்றால்
அவர்கள்
திருமணம்
ஆனவர்கள்.
கிருஷ்ணர்
பிறந்ததிலிருந்தே தூய்மையாக இருப்பவர்
ஆகையால்
கிருஷ்ணருக்கு
அதிகமாக
மகிமை
உள்ளது.
கிருஷ்ணரை
ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர்.
ஜெயந்தியும்
கூட
கிருஷ்ணருடையதை
கொண்டாடுகின்றனர்.
லட்சுமி
நாராயணருடையதை ஏன்
கொண்டாடுவதில்லை.
ஞானம்
இல்லாத
காரணத்தினால்
கிருஷ்ணரை
துவாபரயுகத்தில்
கொண்டு சென்றுவிட்டனர்.
கீதையின்
ஞானத்தை
துவாபரயுகத்தில்
கொடுத்தார்
என்று
கூறுகின்றனர்.
ஒருவருக்கு
புரிய வைப்பது
எவ்வளவு
கடினமாக
உள்ளது.
ஞானம்
பரம்பரை
பரம்பரையாக
இருந்து
வருகிறது
என்று கூறிவிடுகின்றனர்.
ஆனால்
பரம்பரை
பரம்பரையாக
என்றாலும்
எப்போதிலிருந்து?
இது
யாருக்கும்
தெரியாது.
பூஜை
எப்போதிலிருந்து தொடங்கியது
என்பதும்
கூட
தெரியாது.
ஆகையால்
படைப்பவர்
மற்றும்
படைப்பின் முதல்,
இடை,
கடைசியைப்
பற்றி
தெரியாது
என்று
கூறிவிடுகின்றனர்.
கல்பத்தின்
ஆயுள்
லட்சக்கணக்கான வருடங்கள்
என்று
கூறுவதன்
மூலம்
பரம்பரை
என்று
கூறி
விடுகின்றனர்.
நாள்
கிழமை
எதுவும்
தெரியாது.
லட்சுமி
நாராயணருடைய
பிறந்த
நாளைக்
கூட
கொண்டாடுவதில்லை.
இது
அஞ்ஞானத்தின்
காரிருள்
என்று கூறப்படுகிறது.
உங்களுக்குள்ளும்
சிலர்
இந்த
விஷயங்களை
சரியாக
தெரிந்து
கொள்வதில்லை.
ஆகவேதான் சொல்லப்படுகிறது
-
மஹாரதி
(யானைப்
படை),
குதிரைப்படை
மற்றும்
காலாட்படை.
யானையை
முதலை சாப்பிட்டது.
முதலைகள்
பெரியதாக
இருக்கின்றன,
பாம்பு
தவளையை
விழுங்குவது
போல
ஒரேடியாக விழுங்கிவிடுகின்றன.
பகவானை
தோட்டக்காரர்,
தோட்ட
வேலைக்காரர்,
படகோட்டி
என்றெல்லாம்
ஏன்
கூறுகின்றனர்?
இதுவும்
கூட
இப்போது
நீங்கள்
புரிந்து
கொள்கிறீர்கள்.
தந்தை
வந்து
விஷக்கடலிலிருந்து கரைக்கு
அழைத்துச் செல்கிறார்,
ஆகவே
எனது
படகை
கரை
சேர்த்துவிடுங்கள்
என்று
கூறுகின்றனர்.
உங்களுக்கும்
கூட
நாம் எப்படி
கரை
சேர்ந்து
கொண்டிருக்கிறோம்
என்பது
இப்போது
தெரிந்துவிட்டுள்ளது.
பாபா
நம்மை
பாற்கடலுக்கு அழைத்துச்
செல்கிறார்.
அங்கே
துக்கம்,
வலியின்
விஷயம்
இல்லை.
நீங்கள்
கேட்டு
பின்
மற்றவர்களுக்கும் கூறுகிறீர்கள்
-
படகை
கரை
சேர்க்கக்
கூடிய
படகோட்டி
கூறுகிறார்
-
ஓ
குழந்தைகளே,
நீங்கள்
அனைவரும் தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
கொள்ளுங்கள்.
நீங்கள்
முதலில் பாற்கடலில் இருந்தீர்கள்,
இப்போது விஷக்கடலுக்கு
வந்து
சேர்ந்திருக்கிறீர்கள்.
முதலில் நீங்கள்
தேவதைகளாக
இருந்தீர்கள்.
சொர்க்கம்
தான்
உலக அதிசயமாகும்.
முழு
உலகத்திலும்
ஆன்மீக
அதிசயம்
சொர்க்கமாகும்.
பெயரைக்
கேட்டாலே
குஷி
ஏற்படுகிறது.
சொர்க்கத்தில்
நீங்கள்
தான்
இருந்தீர்கள்.
இங்கே
7
அதிசயங்களை
காட்டுகிறார்கள்.
தாஜ்மகாலைக்
கூட அதிசயம்
என்று
சொல்கிறார்கள்.
அங்கே
வசிக்க
வேண்டியதில்லை.
நீங்கள்
உலக
அதிசயத்தின்
எஜமானர் ஆகிறீர்கள்.
நீங்கள்
வசிப்பதற்காக
தந்தை
எவ்வளவு
அதிசயமான
வைகுண்டத்தை
உருவாக்கியுள்ளார்,
21
ஜென்மங்களுக்காக
கோடான
கோடிகளின்
அதிபதி
ஆகிறீர்கள்.
குழந்தைகளாகிய
உங்களுக்கு
எவ்வளவு
குஷி
இருக்க
வேண்டும்.
நாம்
அந்த
கரைக்குச்
செல்கிறோம்.
பல
முறை
குழந்தைகளாகிய
நீங்கள்
சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறீர்கள்.
இந்த
சக்கரத்தை
நீங்கள்
சுற்றிக்
கொண்டே
இருக்கிறீர்கள்.
புது
உலகத்தில்
முதன் முதலில் வருவதற்கான
முயற்சி
செய்ய
வேண்டும்.
பழைய
வீட்டிற்குச்
செல்ல
வேண்டும்
என்று
மனம் விரும்பாது.
முயற்சி
செய்து
புது
உலகத்திற்குச்
செல்லுங்கள்
என்று
தந்தை
வலியுறுத்துகிறார்.
தந்தை
நம்மை உலக
அதிசயத்தின்
எஜமானர்
ஆக்குகிறார்.
அப்படிப்பட்ட
தந்தையை
நாம்
ஏன்
நினைவு
செய்ய
மாட்டோம்.
நிறைய
உழைக்க
வேண்டியிருக்கிறது.
இதைப்
பார்த்தாலும்
பார்க்காதீர்கள்.
தந்தை
கூறுகிறார்
–
நான் இதனை
பார்த்தாலும்
என்னில்
ஞானம்
இருக்கிறது
-
நான்
கொஞ்ச
நாட்களுக்கான
பிரயாணியாக
இருக்கிறேன்.
நீங்களும்
கூட
பாகத்தை
நடிப்பதற்காக
வந்துள்ளீர்கள்.
எனவே
இதன்
மீதான
பற்றுதலை
நீக்கிவிடுங்கள்.
நல்லது!
இனிமையிலும்
இனிமையான
தேடிக்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகளும்
காலை
வணக்கமும்.
ஆன்மீக குழந்தைகளூக்கு
ஆன்மீக
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
ஆன்மீக
படிப்பில்
எப்பொழுதுமே
பிஸியாக
(மும்முரமாக
ஈடுபட்டு)
இருக்க
வேண்டும்.
ஒருபோதும்
நாவல்
போன்றவற்றை
படிக்கும்
கெட்ட
பழக்கத்தை
ஏற்படுத்திக்
கொள்ளக் கூடாது,
இதுவரை
படித்தவற்றை
மறந்து
தந்தையை
நினைவு
செய்ய
வேண்டும்.
2.
இந்த
பழைய
உலகில்
தன்னை
விருந்தினர்
என்று
புரிந்து
கொள்ள
வேண்டும்.
இதன்
மீது
அன்பு
வைக்க
கூடாது.
எதைப்
பார்த்தாலும்
பார்க்க
கூடாது.
வரதானம்:
அதிகாரியாகி
பிரச்சனைகளை
விளையாட்டாக கடந்து
செல்லக்
கூடிய
ஹீரோ
நடிகர்
ஆகுக.
சூழ்நிலைகள்
எப்படிப்பட்டதாக
வேண்டுமென்றாலும்
இருக்கலாம்,
பிரச்சனைகள்
இருக்கலாம்.
ஆனால் பிரச்சனைகளுக்கு
அடிமையாகக்
கூடாது,
அதிகாரியாகி
பிரச்சனைகளை
விளையாட்டு
போன்று
கடந்து
சென்று விடுங்கள்.
வெளியில்
கண்ணீர்
விடுவதற்கான
பாகமும்
இருக்கலாம்,
ஆனால்
உள்ளுக்குள்
இது
விளையாட்டு என்று
நினைக்க
வேண்டும்,
இது
தான்
நாடகம்
மற்றும்
நாடகத்தில்
நாம்
ஹீரோ
நடிகர்கள்.
ஹீரோ
நடிகன் என்றால்
மிகச்
சரியாக
நடிப்பு
நடிக்கக்
கூடியவர்,
ஆகையால்
மிக
கடுமையான
பிரச்சனையையும்
விளையாட்டு என்று
புரிந்து
கொண்டு
இலேசாக
ஆக்கி
விடுங்கள்,
எந்த
சுமையும்
இருக்கக்
கூடாது.
சுலோகன்:
சதா
ஞானச்
சிந்தனையில்
இருந்தால்
சதா
புன்முறுவலுடன்
இருப்பீர்கள்,
மாயையின்
கவர்ச்சியிலிருந்து
தப்பித்து
விடுவீர்கள்.
ஓம்சாந்தி