24.08.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! தந்தை, ஆசிரியர் மற்றும் சத்குரு - இந்த மூன்று சொற்களை நினைவு செய்யுங்கள். அப்போது அநேக விசேஷங்கள் (சிறந்த குணங்கள்) உங்களுக்குள் வந்துவிடும்.

 

கேள்வி :

எந்தக் குழந்தைகளின் ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு வருமானம் ஆகிக் கொண்டே இருக்கும்?

 

பதில் :

யார் சேவையில் தங்களின் ஒவ்வொரு அடியையும் முன்னெடுத்து வைத்து சென்று கொண்டே இருக்கின்றனரோ, அவர்கள் தான் பல மடங்கு வருமானத்தைச் சேமிப்பார்கள். பாபாவின் சேவையில் அடியெடுத்து வைக்கவில்லை எனறால் பல மடங்கு எப்படிப் பெறுவார்கள்? சேவை தான் ஒவ்வோர் அடியிலும் பல மடங்கு வருமானத்தை அளிக்கின்றது. இதன் மூலம் தான் பல கோடிக்கு அதிபதி ஆகிறீர்கள்.

 

கேள்வி :

எந்த ஓர் இரகசியத்தை அறிந்திருக்கும் காரணத்தால் குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் கல்யாணகாரி (நன்மை புரிபவர்கள்) ஆகிறீர்கள்?

 

பதில்:

பாபா குழந்தைகளாகிய நமக்கு இந்த இரகசியத்தைப் புரிய வைத்துள்ளார், அதாவது அனைவருக்கும் இது ஒன்று தான் புகலிடம். (கடை) இங்கே அனைவரும் வந்தாக வேண்டும். இது மிகவும் ஆழமான இரகசியமாகும். இந்த இரகசியத்தை அறிந்துள்ள குழந்தைகள் தான் அனைவருக்கும் கல்யாணகாரி ஆகின்றனர்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகள் என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருப்பார்கள். அதாவது பாபா நம்முடைய தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார், மற்றும் சத்குருவாகவும் இருக்கிறார். குழந்தைகள் அறிவார்கள், அறிந்திருந்தும் கூட அடிக்கடி மறந்து போகின்றனர். இங்கே அமர்ந்திருப்பவர்கள் அறிந்திருப்பார்கள் இல்லையா? ஆனால் மறந்து போகின்றனர். உலகத்தினரோ முற்றிலும் அறியாதிருக்கின்றனர். பாபா சொல்கிறார், இந்த மூன்று சொற்கள் மட்டுமே நினைவிருந்தாலும் கூட அதிக சேவை செய்ய முடியும். கண்காட்சி அல்லது மியூசியத்திற்கு உங்களிடம் அநேகர் வருகின்றனர். வீட்டிலும் உற்றார் உறவினர் முதலானோர் அதிகமாக வருகின்றனர். யாராவது வந்தால் புரிய வைக்க வேண்டும், யார் பகவான் எனச் சொல்லப் படுகிறாரோ, அவர் தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார், சத்குருவாகவும் இருக்கிறார், இந்த நினைவு இருந்தாலே சரி தான், வேறு யாருடைய நினைவும் வரக்கூடாது. வேறு யாரையுமோ இதுபோல் சொல்ல முடியாது. குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நம்முடைய பாபா, தந்தை யாகவும் உள்ளார், ஆசிரியராகவும் உள்ளார், சத்குருவாகவும் உள்ளார். எவ்வளவு சுலபம்! ஆனால் ஒரு சிலருக்கோ அப்படிப்பட்ட கல்புத்தி உள்ளது, இந்த மூன்று வார்த்தைகள் கூட புத்தியில் தாரணை ஆவதில்லை. மறந்து போகின்றனர். பாபா நம்மை மனிதரில் இருந்து தேவதை ஆக்குகின்றார். ஏனென்றால் எல்லையற்ற தந்தை இல்லையா? எல்லையற்ற தந்தை என்றால் நிச்சயமாக எல்லையற்ற ஆஸ்தி தான் தருவார். எல்லையற்ற ஆஸ்தி தேவதைகளிடம் உள்ளது. இவ்வளவு மட்டுமே நினைவு செய்தாலும் கூட, வீட்டிலும் சேவை அதிகம் செய்ய முடியும். ஆனால் இதையும் கூட மறந்து விடுகிற காரணத்தால் யாருக்கும் சொல்ல முடிவதில்லை. அடிக்கடி மறந்து போகின்றனர். ஏனென்றால் முழுக் கல்பத்தினையும் மறந்து விட்டுள்ளனர். இப்போது பாபா வந்து புரிய வைக்கிறார். உண்மையில் இந்த ஞானம் மிகவும் எளிமையானது. மற்றப்படி நினைவு யாத்திரையின் மூலம் சம்பூர்ணமாவதில் முயற்சி உள்ளது. பாபா நம்முடைய தந்தையாகவும் இருக்கிறார், கல்வி கற்பிக்கவும் செய்கிறார், பவித்திரமாகவும் ஆக்குகிறார். ஏனென்றால் பதீதபாவனர் தந்தை. அனைவருக்கும் இதையே சொல்லுங்கள் - அதாவது என்னை நினைவு செய்யுங்கள் என்பதை மட்டுமே சொல்கிறார். பாபாவின் சேவையில் ஒரு சிறிதும் அடி எடுத்து வைக்கவில்லை என்றால் அவர்கள் பிறகு பல மடங்கு வருமானத்தை எப்படி அடைவார்கள்? பல கோடிக்கு அதிபதியாகவோ, சேவையின் மூலம் தான் ஆக முடியும். சேவை தான் ஒவ்வோர் அடியிலும் பல மடங்கு வருமானத்தைக் கொண்டு வருகின்றது. சேவைக்காகக் குழந்தைகள் எங்கெங்கிருந்தோ ஓடோடி வருகின்றனர். எவ்வளவு பேர் முன்னேற்றமடைந்து செல்கின்றனர்! பல கோடியோ அவர்களுக்குக் கிடைக்கும் தானே? இதையும் புத்தி சொல்கிறது முதலில் சூத்திரர்களை பிராமணர்களாக ஆக்க வேண்டும். பிராமணராகவே ஆக வில்லை என்றால் என்னவாக ஆவார்கள்? சேவையோ வேண்டும் இல்லையா? குழந்தை களுக்கு சேவையின் செய்தி சொல்லப்படுவது ஏனென்றால் சேவைக்கான உத்வேகம் வரட்டும் என்று தான். சேவையினால் தான் பல மடங்கு வருமானம் கிடைத்துள்ளது. ஒரு விஷயத்தை மட்டும் சொல்லுங்கள் - உலகத்தில் வேறு யாரும் அறிந்திராதது. எல்லைகடந்திருக்கின்ற அந்த தந்தை, அனைவருக்கும் தந்தையாக உள்ளார். ஆனால் தந்தை பற்றி யாருக்கும் தெரியாது. வாயால் காட்ஃபாதர் என்று மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஆசிரியராக உள்ளார் என்பதோ யாருடைய புத்தியிலும் இருக்காது. மாணவனின் புத்தியில் எப்போதுமே ஆசிரியரின் நினைவு இருக்கும். யார் முழுமையாகப் படிப்பதில்லையோ, அவர்கள் படிக்காதவர்கள் எனச் சொல்லப்படுவார்கள். பாபா சொல்கிறார், அதனால் குறை ஒன்றும் இல்லை. நீங்கள் எதையும் படிக்காதவர்கள், இதையோ புரிந்து கொள்ள முடியும் இல்லையா - நாம் சகோதர-சகோதரர்கள் என்று? நம்முடைய தந்தை எல்லையற்ற தந்தை. பாபா வருவதே ஒரு தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக, பிரம்மா மூலம் செய்கிறார். ஆனால் மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. ஈஸ்வரன் ஒருபோதும் வந்திருக்கவில்லை என்றால் அவரை அழைப்பது ஏன்? - ஹே லிபரேட்டர்! (விடுவிப்பவரே!) வாருங்கள், ஹே பதீதபாவனா வாருங்கள் என்று. பதீதபாவனரை நினைவு செய்கின்றனர், பிறகு சாஸ்திரங்களை ஏன் படிக்கின்றனர்? தீர்த்த ஸ்தலங்களுக்கு ஏன் செல்கின்றனர்? அங்கே என்ன தான் இருக்கிறது? யாரும் அறிந்திருக்கவே இல்லை - பதீத-பாவனர் ஈஸ்வரன் இருக்கிறார் என்றால் கங்கா ஸ்நானம் முதலியவற்றினால் எப்படி பாவனமாவார்கள்? சொர்க்கத்திற்கு யாராவது எப்படிப் போக முடியும்? ஜென்மமோ இங்கேயே தான் எடுக்க வேண்டும். புது உலகம் மற்றும் பழைய உலகத்திற்கிடையில் வேறுபாடோ உள்ளது இல்லையா? இந்த உலகத்தை சத்யுகம் எனச் சொல்ல மாட்டார்கள். இப்போதோ கலியுகம் இல்லையா? மனிதர்களுக்கோ முற்றிலும் கல்புத்தி தான் உள்ளது. எங்காவது கொஞ்சம் சுகத்தைப் பார்த்தால் உடனே சொர்க்கம் என நினைத்து விடுகின்றனர். இதை பாபா தான் புரிய வைக்கிறார். பாபா நிந்தனை எதுவும் செய்வதில்லை. பாபா போதனையும் தருகிறார், அனைவருக்கும் சத்கதியும் தருகிறார். பகவான் தந்தையாக உள்ளார் என்றால் தந்தையிடமிருந்து நிச்சயமாக ஏதாவது கிடைக்க வேண்டும். பாபா என்ற சொல்லும் அப்படிப்பட்டது, அவரிடமிருந்து ஆஸ்தியின் நறுமணம் நிச்சயமாக வருகின்றது. மேலும் எவ்வளவு தான் சித்தப்பா, பெரியப்பா, மாமா முதலானோர் இருந்தாலும் அவர்களிடமிருந்து ஆஸ்தியின் மணம் வராது. உள்முகமாக இருந்து சிந்தனை செய்ய வேண்டும், பாபா சரியாகவே சொல்கிறார். குருவிடம் எந்த ஒரு சொத்தும் இருக்காது. அவர்களோ, தாங்களே வீடு-வாசலை விட்டுவிடுகின்றனர். நீங்கள் விகாரங்களை சந்நியாசம் செய்து விட்டிருக்கிறீர்கள். புது உலகத்திற்குச் செல்வது எவ்வளவு சுலபம்! நாம் முழு பழைய சிருஷ்டியை, தமோபிரதான உலகத்தை சந்நியாசம் செய்கிறோம். சத்யுகம் தான் புது உலகம். இதையும் அறிவீர்கள், புது உலகம் நிச்சயமாக இருந்தது. அனைவரும் பாடுகின்றனர். புது உலகம் தான் சொர்க்கம் எனச் சொல்லப்படுகின்றது. ஆனால் அந்த மனிதர்கள் வெறுமனே சொல்கின்றனர், எதையும் புரிந்து கொள்ளவில்லை. ஆக, தந்தை குழந்தைகளுக்குச் சொல்கிறார், இதை மட்டும் சிந்தனை செய்யுங்கள் - பாபா, நம்முடைய தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார், சத்குருவாகவும் இருக்கிறார். அனைவரையும் அழைத்துச் செல்வார். இரண்டே வார்த்தை தான் - மன்மனாபவ. இதில் அனைத்தும் வந்து விடும். ஆனால் இதையும் மறந்து போகின்றனர். புத்தியில் என்னென்ன நினைவிருக்கிறது என்று தெரியவில்லை. இல்லையென்றால் தினமும் எழுதிக் கொடுங்கள் - இவ்வளவு நேரம் நான் எந்த மனநிலையில் அமர்ந்திருந்தேன் என்று. நீங்கள் தந்தை, ஆசிரியர் மற்றும் சத்குருவின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அவர் தான் நினைவு வர வேண்டும் இல்லையா? மாணவனுக்கு ஆசிரியர் தான் நினைவுக்கு வருவார் இல்லையா? ஆனால் இங்கே மாயா உள்ளது இல்லையா? முற்றிலும் தலையையே திருப்பி வைத்து விடுகின்றது. முழு இராஜ்ய பாக்யத்தையே அபகரித்துக் கொண்டு விடுகின்றது. உங்களுக்குத் தெரியவே செய்யாது. வந்ததோ ஆஸ்தி பெறுவதற்காக. ஆனால் எதுவும் கிடைப்பதில்லை. இதுபோல் தான் சொல்வார்கள் இல்லையா? சொர்க்கத்திற்கோ செல்வார்கள், ஆனால் அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. வந்தீர்கள், ஆனால் படிக்கவில்லை. பிறகு சொர்க்கத்திற்கோ செல்வார்கள் இல்லையா? இங்கோ அமர்ந்துள்ளனர் இல்லையா? புரிந்து கொண்டுள்ளனர், சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு என்னவாகவும் ஆகலாம். அதுவோ படிப்பு இல்லை அல்லவா? கொஞ்சம் கேட்டாலும் அதனுடைய பலன் கிடைத்து விடும். படிப்பினாலோ பெரிய பதவி கிடைக்கின்றது. பாபாவிடமிருந்து உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி பெற வேண்டும் என்றால் புருஷார்த்தம் செய்ய வேண்டும். படிப்பு நினைவிருந்தால் 84 பிறவிகளின் சக்கரமும் நினைவு வந்து விடும். இங்கே அமர்வதால் அனைத்தும் நினைவு வர வேண்டும். ஆனால் இதுவும் கூட நினைவு வருவதில்லை. நினைவு வந்தால் யாருக்காவது சொல்லவும் செய்வார்கள். சித்திரங்களோ அனைவரிடமும் உள்ளன. சிவனுடைய சித்திரத்தை வைத்து நீங்கள் யாருக்காவது சொல்வீர் களானால் ஒருபோதும் கோபப்பட மாட்டார்கள். சொல்லுங்கள், வருவீர்களானால் உங்களுக்குச் சொல்வோம், இந்த சிவன் எல்லையற்ற தந்தை இல்லையா? இவரோடு உங்களுக்கு என்ன சம்மந்தம்? அதுபோன்ற தவறான சித்திரமோ இருக்க முடியாது. சிவனை பகவான் என்று நிச்சயம் சொல்வார்கள். பகவானோ நிராகாராகவே உள்ளார். அவர் தந்தை எனச் சொல்லப்படுகிறார். அவர் கல்வியும் கற்பிக்கிறார். ஆத்மாவாகிய நீங்கள் போதனை பெறுகிறீர்கள். ஆத்மா தான் அனைத்தையும் செய்கின்றது. ஆசிரியராகவும் ஆத்மா தான் ஆகிறது. பாபாவும் இந்த இரதத்தில் வந்து படிப்பு சொல்லித் தருகிறார். சத்யுகத்தை ஸ்தாபனை செய்கிறார். அங்கே கலியுகத்தின் பெயர் அடையாளமே இருக்காது. மனிதர்கள் எங்கிருந்து வருவார்கள்? சேவாதாரிக் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கிறது. சேவை செய்யவில்லை என்றால் புரிய வைக்கப்படுகின்றது - புத்தியே வேலை செய்யவில்லை. புத்தியற்றவர் அமர்ந்திருப்பது போல் இருக்கும். தந்தையைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. பதீத பாவனராகிய பாபாவை நினைவு செய்வதன் மூலம் தான் ஆஸ்தி கிடைக்கும். நினைவு செய்து-செய்தே இறந்து விட்டால் தந்தையின் அனைத்து ஆஸ்திகளும் கிடைத்து விடும். எல்லையற்ற தந்தையின் ஆஸ்தி சொர்க்கமாகும்.

 

குழந்தைகளிடம் பேட்ஜ் கூட உள்ளது. வீட்டில் உற்றார் உறவினர்களோ, அநேகர் வருகின்றனர். யாரேனும் இறந்தால் கூட அநேகர் வருகின்றனர். அவர்களுக்கும் கூட நீங்கள் நல்ல சேவை செய்ய முடியும். சிவபாபாவின் சித்திரமோ மிக நன்றாக உள்ளது. பெரியதாகவே வைத்துக் கொள்ளுங்கள். இதில் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். இவர் பிரம்மா என்று சொல்ல மாட்டார்கள். இவர் குப்தமாக (மறைமுகமாக) உள்ளார். நீங்கள் குப்தமாகவும் புரிய வைக்க முடியும். சிவனுடைய சித்திரத்தை மட்டும் வையுங்கள். மற்ற அனைத்து சித்திரங்களையும் எடுத்து விடுங்கள். இந்த சிவபாபா, தந்தையாக, ஆசிரியராக, சத்குருவாக இருக்கிறார். இவர் புது உலகை ஸ்தாபனை செய்வதற்காக வருகிறார், அதுவும் சங்கமயுகத்தில் தான் வருகிறார். இந்த ஞானமோ புத்தியில் உள்ளது இல்லையா? சொல்லுங்கள், சிவபாபாவை நினைவு செய்யுங்கள், வேறு யாரையும் நினைவு செய்யாதீர்கள் என்று. சிவபாபா பதீதபாவன், அவர் சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள் என்னோடு வந்து சந்திப்பீர்கள். நீங்கள் குப்தமான சேவை செய்ய முடியும். இந்த இலட்சுமி-நாராயணர் இந்த ஞானத்தினால் தான் இதுபோல் ஆகியிருக்கிறார்கள். சிவபாபா நிராகார், அவர் எப்படி வருவார் எனக் கேட்பார்கள். அட, நீங்கள் ஆத்மாவும் நிராகார் தான். ஆத்மா எப்படி வருகிறது? அதுவும் மேலிருந்து வருகிறது இல்லையா, பாகத்தை நடிப்பதற்காக? இதையும் பாபா வந்து புரிய வைக்கிறார். காளை மாட்டிலோ வர முடியாது. எப்படிப் பேசுவார்? சாதாரண வயோதிகரின் சரீரத்தில் வருகிறார். இதைப் புரிய வைப்பதற்கும் மிகுந்த யுக்தி வேண்டும். நீங்கள் பக்தி செய்வதில்லையா என்று யாராவது கேட்டால் சொல்லுங்கள், நாங்களோ அனைத்தும் செய்கிறோம். யுக்தியுடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. யாரையாவது எழுந்து நிற்கச் செய்வதற்கு (முன்னேற்றுவதற்கு) என்ன யுக்தியை உருவாக்கலாம் என யோசிக்க வேண்டும். யார் மீதும் கோபப்படவும் கூடாது. இல்லறத்தில் இருந்து கொண்டே பவித்திரமாக மட்டும் இருக்க வேண்டும். நீங்கள் சொல்கிறீர்கள் - பாபா, சேவை கிடைப்பதில்லை என்று. அட, சேவையோ அநேகம் செய்ய முடியும். கங்கை நதிக்கரை மீது சென்று அமர்ந்து கொள்ளுங்கள். கேளுங்கள், இந்தத் தண்ணீரில் குளிப்பதால் என்ன ஆகும்? பாவனமாகி விடுவீர்களா? நீங்களோ, பகவானை அழைக்கிறீர்கள், பதீதபாவனா வாருங்கள், வந்து பாவனமாக்குங்கள் என்று. பிறகு அவர் பதீதபாவனரா, அல்லது இந்த கங்கையா? இதுபோல் நதிகளோ ஏராளம் உள்ளன. தந்தை பதீத-பாவனரோ ஒருவர் தான். இந்தத் தண்ணீரின் நதிகளோ எப்போதுமே இருப்பவை தான். தந்தையோ பாவனமாக்குவதற்காக வரவேண்டி உள்ளது. அவர் வருவதும் சங்கமயுகத்தில், வந்து பாவனமாக்குகிறார். அங்கே பதீதர்கள் யாரும் கிடையாது. பெயரே சொர்க்கம், புது உலகம். இப்போது உள்ளதோ பழைய உலகம். இந்த சங்கமயுகத்தைப் பற்றி உங்களுக்குத் தான் தெரியும். வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. பாபாவோ அநேக விதமான சேவைக்கான யுக்திகளைப் புரிய வைக்கிறார். புத்தியற்றவராகவும் ஆகாதீர்கள். சொல்கின்றனர், அமர்நாத்திலும் கூட புறாக்கள் உள்ளன. புறாக்கள் செய்தியைக் கொண்டு சேர்க்கின்றன. பரமாத்மாவின் செய்தியை மேலிருந்து புறாக்கள் கொண்டு வரும் என்பதெல்லாம் கிடையாது. இதன் காலில் எழுதிக் கட்டி விட்டால் கொண்டு செல்லும் என்ற இதையும் கற்பிக்கின்றனர்... அதற்கு சுலபமாக தானியங்கள் கிடைக்குமானால் எங்கும் அலைய வேண்டிய தேவை இருக்காது. உங்களுக்கும் இங்கே தானியம் கிடைக்கிறது. உங்களுடைய புத்தியில் உள்ளது, உலகத்தின் இராஜபதவி, அது இங்கே கிடைக்கின்றது. பிறகு அவர்கள் நினைக்கின்றனர். தானியம் இங்கு கிடைக்கிறது, பிறகும் இழந்து விடுகின்றனர். இங்கோ நீங்கள் சைதன்யமானவர், உங்களுக்கு அழிவற்ற ஞான இரத்தினங்கள் என்ற தானியம் கிடைக்கிறது. சாஸ்திரங்களிலும் உள்ளது - குருவிகள் கடலை வற்றச் செய்தன என்பதாக. அநேகக் கதைகள் எழுதியுள்ளனர். மனிதர்கள் சொல்வார்கள், சத்தியம் என்று. பிறகு சொல்கின்றனர், கடலில் இருந்து தேவதைகள் வெளிப்பட்டனர் என்று. இரத்தினங்களைத் தட்டுகளில் நிரப்பிக் கொண்டு வந்ததாகச் சொல்கின்றனர். இதையும் சத்தியம் எனச் சொல்வார்கள். இப்போது சமுத்திரத்திலிருந்து தேவதைகள் எப்படி வெளிப்படுவார்கள்? சமுத்திரத்தில் மனிதர்களோ தேவதைகளோ வசிக்கிறார்களா என்ன? எதையும் புரிந்து கொள்வதில்லை. ஜென்ம-ஜென்மாந்தரமாகப் பொய்யையே படித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கின்றனர். அதனால் சொல்கின்றனர், பொய்யான மாயா......... உண்மையான மற்றும் பொய்யான உலகத்திற்கிடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது! பொய் பேசிப் பேசியே ஒன்றுமில்லாதவர்களாக ஆகி விட்டுள்ளனர். நீங்கள் எவ்வளவு யுக்தியுடன் சொல்லிப் புரிய வைக்கிறீர்கள்! பிறகும் கோடியில் சிலருக்குத் தான் புத்தியில் பதிகின்றது. இது மிகவும் சகஜமான ஞானம் மற்றும் சகஜமான யோகம். தந்தை, ஆசிரியர், சத்குருவை நினைவு செய்வதன் மூலம் அவருடைய போதனைகளும் புத்தியில் வந்து விடும். தன்னை சோதித்தறிய வேண்டும். நாம் அனைவரும் பாபாவை நினைவு செய்கிறோமா, அல்லது வேறு பக்கம் புத்தி செல்கிறதா? உங்களுடைய புத்திக்கு இப்போது ஞானம் (புரிதல்) கிடைத்து விட்டது. எவ்வளவு இனிமையிலும் இனிமையான விஷயங்களை பாபா புரிய வைக்கிறார்! யுக்திகள் சொல்கிறார். நீங்கள் யாருக்காவது அமர்ந்து புரிய வைப்பீர்களானால் உங்களுக்கு விரோதியாகவும் ஆக மாட்டார்கள். சிவபாபா தான் உங்களுடைய தந்தை, ஆசிரியர், சத்குருவாக உள்ளார். அவரை நினைவு செய்யுங்கள். புரிய வைப்பதற்கான யுக்திகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக பிரம்மாவின் சித்திரத்தைப் பார்த்து அநேகர் ஏதேனும் சொல்கின்றனர். சிவபாபாவின் சித்திரத்தைப் பார்த்து அதுபோல் சொல்வதில்லை. அட, இவரோ ஆத்மாக்களின் தந்தை இல்லையா? ஆக, பாபாவை நினைவு செய்யுங்கள் இவரால் அநேகருக்கு நன்மை ஏற்பட முடியும். இவரை நினைவு செய்வதால் பதீதத்திலிருந்து பாவனமாக ஆகி விடுவீர்கள். இவர் அனைவரின் தந்தை ஆவார். ஒரு தந்தையைத் தவிர வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது. மற்ற சேர்க்கையை எல்லாம் விட்டு ஒரு சேர்க்கையில் இணைய வேண்டும். இவை யாருக்காவது நன்மை செய்வதற்கான யுக்திகளாகும். பாபாவை நினைவு செய்யவே முடியவில்லை என்றால் எப்படிப் பாவனமாவீர்கள்? வீட்டிலும் கூட நீங்கள் அதிக சேவை செய்ய முடியும். அநேக உற்றார் உறவினர் முதலானோர் உங்களுக்குக் கிடைப்பார்கள். வெவ்வேறு யுக்திகளை உருவாக்குங்கள். அநேகருக்கு நன்மை செய்ய உங்களால் முடியும். புகலிடமோ ஒன்று தான். ஆகவே எங்கே செல்வார்கள்? நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) இல்லற விவகாரங்களில் மிகவும் யுக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். யார் மீதும் கோபப்படவும் கூடாது. பவித்திரமாகவும் அவசியம் ஆக வேண்டும்.

 

2) ஒரு பாபாவிடம் அழியாத ஞான இரத்தினங்களின் மணிகளைப் பெற்று தனது புத்தியாகிய பையை நிரம்பியதாக வைத்திருக்க வேண்டும். புத்தியை அலையவிடக் கூடாது. இறைதூதர் ஆகி அனைவருக்கும் பாபாவின் செய்தியைக் கொடுக்க வேண்டும்.

 

வரதானம்:

பிராமண வாழ்வில் விதவிதமான (வெரைட்டி) அனுபவங்கள் மூலம் இரமணீகரத்தை அனுபவம் செய்யக்கூடிய சம்பன்ன ஆத்மா ஆகுக.

 

வாழ்வில் ஒவ்வொரு மனித ஆத்மாவிற்கும் வெரைட்டி (பல வகை) பிடிக்கிறது. எனவே, முழு நாளில் விதவிதமான சம்பந்தங்கள், விதவிதமான சொரூபங்களின் விதவிதமான அனுபவம் செய்யுங்கள். அப்பொழுது மிகுந்த இரம்மியமான வாழ்க்கையின் அனுபவம் செய்வீர்கள். பிராமண வாழ்க்கை என்பது பகவானிடம் சர்வ சம்பந்தங்களின் அனுபவங்களை செய்யக்கூடிய சம்பன்ன வாழ்க்கை ஆகும். ஆகையினால், ஒரு சம்பந்தத்தின் குறை கூட இருக்கக்கூடாது. ஒருவேளை, ஏதாவது சிறிய அல்லது சாதாரண ஆத்மாவின் சம்பந்தம் கலப்படம் ஆகிவிட்டால், சர்வம் (அனைத்து) என்ற வார்த்தை முடிந்துவிடும். எங்கு சர்வம் உள்ளதோ, அங்கு தான் சம்பன்ன நிலை உள்ளது. ஆகையினால், சர்வ சம்பந்தங்கள் மூலம் நினைவு சொரூபம் ஆகுங்கள்.

 

சுலோகன்:

தந்தைக்கு சமமாக அவ்யக்த ரூபம் உடையவர்கள் ஆகி இயற்கையின் ஒவ்வொரு காட்சியையும் பாருங்கள், அப்பொழுது குழப்பத்தில் வர மாட்டீர்கள்.

 

ஓம்சாந்தி