21-02-2021 காலை முரளி ஓம் சாந்தி "அவ்யக்த பாப்தாதா" ரிவைஸ் 06/11/1987


நிரந்தர சேவாதாரி ஆவதற்கான சாதனம் - நான்கு விதமான சேவைகள்

இன்று விஷ்வ கல்யாணக்காரி (உலகத்திற்கு நன்மை செய்யக் கூடிய), விஷ்வ சேவாதாரி யான பாபா தனது ஒவ்வொரு குழந்தைகளும் நிரந்தர சகஜயோகியின் கூடவே எந்தளவு நிரந்தர சேவாதாரியாக இருக்கிறார்கள்? என்று விஷ்வ சேவாதாரி, சகயோகியான அனைத்து குழந்தை களையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஏனெனில் நினைவு மற்றும் சேவை - இரண்டின் பேலன்ஸ் (சமநிலை) சதா பிராமண வாழ்க்கையில் பாப்தாதா மற்றும் அனைத்து சிரேஷ்ட பிராமண ஆத்மாக்கள் மூலம் ஆசீர்வாதத்திற்கு தகுதியுடைவராக மாற்றுகிறது. இந்த சங்கமயுகத்தி மட்டும் தான் பிராமண வாழ்க்கையில் பரமாத்மாவின் ஆசீர்வாதமும், பிராமண குடும்பத்தின் ஆசீர்வாத மும் அடைய முடியும். ஆகையால் இந்த சிறிய கால வாழ்க்கையில் அனைத்து பிராப்திகளையும் சதா காலத்தின் பிராப்திகள் எளிதாக கிடைத்து விடுகிறது. இந்த சங்கமயுகத்தை விசேஷமாக ஆசீர்வாதங்களின் யுகம் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் தான் இந்த யுகத்தை மகான் யுகம் என்று சொல்லபடுகிறது. சுயம் தந்தை ஒவ்வொரு சிரேஷ்ட கர்மத்தின், ஒவ்வொரு சிரேஷ்ட எண்ணத்தின் ஆதாரத்தில் ஒவ்வொரு பிராமணர் குழந்தைகளுக்கும் ஒவ்வொரு சமயமும் மனதார ஆசீர்வாதம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். இந்த பிராமண வாழ்க்கையில் பரமாத்மா ஆசீர்வாதத்தின் பாலணையின் (வளர்ப்பு) மூலம் வளர்ச்சியை அடையக் கூடிய வாழ்க்கையாக இருக்கிறது. கள்ளம் கபடமற்ற பாபா அனைவருக்கு ஆசீர்வாதங்களின் பைகளை திறந்த மனதோடு குழந்தைகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அனைத்து ஆசீர்வாதங் களையும் பெறுவதற் கான ஆதாரம் - நினைவு மற்றும் சேவையின் சமநிலையாகும். ஒருவேளை நிரந்தர யோகி ஆகவேண்டுமென்றால் கூடவே நிரந்தர சேவாதாரியாகவும் இருக்க வேண்டும், சேவையின் மகத்துவம் சதா புத்தியில் இருக்கிறதா?

-சேவையின் வாய்ப்பு கிடைக்கும் பொழுது, அல்லது ஏதாவது சாதனம் மற்றும் சமயம் கிடைக்கும் பொழுது தான் சேவை செய்ய முடியும் என்று பல குழந்தைகள் புரிந்துக் கொள்கிறார்கள். ஆனால் பாப்தாதா நிரந்தரமான நினைவை எளிதாக அனுபவம் செய்ய வைப்பதை போன்று, சேவையை கூட நிரந்தரமாகவும் சகஜமாகவும் செய்ய முடியும். எனவே இன்று பாப்தாதா சேவாதாரி குழந்தைகளின் சேவைக்கான சார்டை பார்த்துக் கொண்டிருந்தார். நிரந்தர சேவாதாரி ஆகாதவரை சதா ஆசீர்வாதங்களின் அனுபவசாலி ஆக முடியாது. நேரத்திற்கு தகுந்தபடி, சேவையின் வாய்ப்பிற்கு தகுந்தபடி, நிகழ்ச்சிகளுக்கு தகுந்தபடி சேவை செய்கிறீர்கள், அந்த சமயத்தில் சேவையின் பலனை பாபாவின் மூலம் குடும்பத்தின் ஆசீர்வாதம் மற்றும் வெற்றியை அடைகிறீர்கள், ஆனால் அது சதா காலத்திற்காக அல்ல, எனவே அவ்வபொழுது ஆசீர்வாதத்தின் காரணத்தினால் எளிதாகவே தானாகவே சேவையில் முன்னேற்றத்தை அனுபவம் செய்கிறீர்கள், மேலும் அவ்வபொழுது கடின முயற்சிக்கும் பிறகு வெற்றியை அனுபவம் செய்கிறீர்கள், ஏனென்றால் நிரந்தர நினைவு மற்றும் சேவையின் சமநிலை இருப்பதில்லை. இன்று அந்த சேவையின் மகத்துவத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

முழு நாளில் வித விதமான முறையில் சேவை செய்ய முடியும். இதில் முதலாவது - சுயத்தின் சேவை அதாவது தன்மீது சம்பன்னமானவராகவும் சம்பூரணமானவராகவும் ஆவதற்கான சதா கவனம் வைப்பது. உங்களுடைய இந்த படிப்பில் என்னவெல்லாம் முக்கிய பாடங்களாக இருக்கிறதோ, அந்த அனைத்திலும் தன்னை பாஸ் வித் (தகுதியுடன் தேர்ச்சி பெறுதல்) ஆனராக ஆக்க வேண்டும். இதில் ஞான சொரூபம், நினைவு சொரூபம், தாரணை சொரூபம் - அனைத்திலும் முழுமையானவர் ஆவது. இந்த சுய சேவை சதா புத்தியில் இருக்க வேண்டும். இந்த சுய சேவை தானாகவே உங்களின் சம்பன்ன (முழுமையான) சொரூபத்தின் மூலம் சேவை செய்ய வைக்கிறது, ஆனால் இதற்கான விதி - கவனம் மற்றும் சோதனை செய்து கொள்வது. தன்னை சோதனை செய்ய வேண்டும், மற்றவர்களை செய்ய வேண்டாம். இரண்டாவது - உலக சேவையில் வித விதமான சாதனங்கள் மூலம், பல விதமான முறையில், வார்த்தைகள் மூலம் மற்றும் சம்மந்தம் தொடர்பின் மூலம் என்னவெல்லம் செய்ய வேண்டுமோ, இதை நல்ல முறையில் தெரிந்திருக்கிறோம். மூன்றாவது - யக்ஞ சேவை உடல் மற்றும் செல்வதில் மூலம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ.

நான்காவது - மனதின் சேவை. தனது சுப பாவணை, சிரேஷ்ட விருப்பம், சிரேஷ்ட உள்ளுணர்வு, சிரேஷ்ட வைப்ரேஷன் மூலம் எந்த இடத்தில் இருந்தாலும் அநேக ஆத்மாக்களுக்கு சேவை செய்ய முடியும். இதற்கான விதி - லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஆவது. லைட் ஹவுஸ் ஒரே இடத்தில் நிலையாக இருந்தாலும் கூட வெகு தொலைவிற்கு சேவை செய்கிறது. அதுபோல நீங்கள் அனைவரும் கூட ஒரே இடத்தில் இருந்துக் கொண்டே பலருக்கு சேவைக்காக நிமித்தம் ஆக முடியும். இந்த சக்திகளின் பொக்கிஷங்கள் சேமிப்பு ஆகியிருக்கிறது என்றால் எளிதாகவே செய்ய முடியும். இதில் ஸ்துலமான சாதனம் மற்றும் வாய்ப்பு அல்லது நேரத்தின் பிரச்சனை கிடையாது. லைட் மைட்டில் நிறைந்தவர் ஆவதின் அவசியம் தான் இருக்கிறது. சதா மனம் மற்றும் புத்தி வீணாக யோசிப்பதிலிருந்து விடுபட்டு இருக்க வேண்டும், மன்மனா பவ என்ற மந்திரத்தின் சொரூபம் எளிதாக ஆகி விட வேண்டும். இந்த நான்கு விதமான சேவையை நிரந்தரமாக செய்ய முடியாதா என்ன? நான்கு விதமான சேவைகளிலிருந்து ஒவ்வொரு நேரமும் ஏதாவதொரு சேவையை செய்துக் கொண்டேயிருந்தால், சகஜமாக நிரந்தர சேவாதாரி ஆகிவிடலாம், மேலும் நிரந்தர சேவைகளில் தற்சமயம் இருக்கும் காரணத்தினால், சதா பிஸியாக இருக்கும் காரணத்தினால் எளிதாகவே மாயாவை வென்றவர் ஆகிவிடலாம். நான்கு விதமான சேவைகளில் எந்த நேரம் எந்த சேவையை செய்ய முடியுமோ, அதை செய்யுங்கள், ஆனால் ஒரு நிமிடம் கூட சேவையின்றி இருந்து விடாதீர்கள். 24 மணி நேரமும் சேவாதாரியாக இருக்க வேண்டும். 8 மணி நேரம் யோகி மற்றும் சேவாதாரியாக இருப்பதல்ல, ஆனால் நிர்ந்தர சேவாதாரி. எளிதாக இருக்கிறதல்லவா? மேலும் இல்லையென்றாலும் சுயத்தின் சேவை நன்றாக இருக்கிறது. எந்த சமயம் என்ன வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த சேவையை செய்ய முடியும்.

பல குழந்தைகள் சரீரத்தின் காரணத்தினால் அல்லது நேரம் கிடைக்காமல் இருக்கும் காரணத்தினால் நம்மால் சேவை செய்ய முடியாது என்று புரிந்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒருவேளை நான்கு விதமான சேவைகளிலிருந்து ஏதாவதொரு சேவையில் முறைபடி பிஸியாக இருந்தீர்கள் என்றால் சேவையின் பாடத்தில் மதிபெண் சேமிப்பாகிவிடுகிறது. மேலும் இதில் கிடைத்துள்ள நம்பர் இறுதி முடிவில் சேமிப்பாகிவிடும். வார்த்தையின் மூலம் சேவை செய்யக் கூடியவர்களின் மதிபெண் சேமிப்பாவதைப் போல யக்ஞ சேவையில் மற்றும் சுய சேவை மற்றும் மனதின் சேவை - இதற்கு கூட அந்தளவு மதிப்பு இருக்கிறது. இதில் கூட இந்தளவு மதிபெண் சேமிப்பாகிறது. ஒவ்வொரு விதமான சேவையின் நம்பர் இந்தளவு கிடைக்கிறது. ஆனால் யார் நான்கு விதமான சேவை செய்கிறார்களோ, அவர்களுக்கு அந்தளவு மதிபெண் கிடைக்கிறது. யார் ஒன்று அல்லது இரண்டு விதமான சேவை செய்கிறீர்கள், அதற்கான மதிபெண் அதற்கு தகுந்தபடி சேமிப்பாகும். ஆனாலும் கூட, ஒருவேளை நான்கு விதமான முறையில் செய்ய முடியவில்லை, இரண்டு விதமான முறையில் செய்ய முடியுமென்றால் கூட நிரந்தர சேவாதாரியாக ஆகிவிடலாம். எனவே நிரந்தரமாக இருக்கும் காரணத்தினால் நம்பர் அதிகரித்து விடும். ஆகையால் பிராமண வாழ்க்கை அதாவது நிரந்தர சேவாதாரி மற்றும் சகஜயோகியாக இருப்பது.

சதா நினைவில் தொடர்பு இணைந்திருக்க வேண்டுமென்று நிரந்தர நினைவிற்கு கவனம் வைப்பதைப் போன்று சேவையிலும் கூட சதா தொடர்பு இணைந்திருக்க வேண்டும். நினைவில் கூட வித விதமான மனநிலையின் அனுபவம் செய்கிறீர்கள் - அவ்வபொழுது விதை சொரூபம், அவ்வபொழுது ஃபரிஸ்தா சொரூபத்தின், மனன (சிந்தனை) சக்தியின், ஆன்மீக உரையாடல் செய்வது, ஆனால் ஸ்திதி வெவ்வேறாக இருந்தாலும் நினைவின் பாடத்தில் நிரந்தரமாக நினைவில் சேமிப்பாகிறது. அதுபோல இது கூட வித விதமான சேவையின் ரூபமாகும். ஆனால் சேவை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. ஒவ்வொரு மூச்சு காற்றிலும் நினைவும், ஒவ்வொரு மூச்சு காற்றிலும் சேவை செய்ய வேண்டும் - இதற்கு தான் சமநிலை என்று சொல்லபடுகிறது. அப்பொழுது தான் ஒவ்வொரு நேரத்திலு ஆசீர்வாதத்தை அடைந்துக் கொண்டிருப்பதின் அனுபவத்தை எப்பொழுதுமே செய்துக் கொண்டேயிருப்பீர்கள், மேலும் மனதார சதா தானாகவே ஆசீர்வாதங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் என்ற வார்த்தை வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆசீர்வாதத்தின் மூலம், பறக்கும் கலையின் அனுபவத்தின் மூலம் பறந்துக் கொண்டேயிருக்கிறோம். உழைப்பிலிருந்தும் யுத்தம் செய்வதிலிருந்தும் விடுபட்டு விடுவீர்கள். என்ன, ஏன், எப்படி - இந்த கேள்விகளிலிருந்து விடுபடுகிறீர்கள், சதா மகிழ்ச்சியாகவும் இருக்கிறீர்கள். வெற்றி என்பது பிறப்பு உரிமை என்ற அதிகாரத்தில் அனுபவம் செய்துக் கொண்டேயிருப்பீர்கள். என்ன ஆகுமென்று தெரியவில்லையே. வெற்றி கிடைக்குமா கிடைக்காதா? நாம் முன்னால் போக முடியுமா, முடியாதா என்றே தெரியவில்லையே? - இந்த தெரியவில்லையே என்ற எண்ணங்கள் மாற்றி அமைத்து மாஸ்டர் திரிகாலதரிசி மனநிலையின் அனுபவம் செய்யுங்கள். வெற்றி அடைந்தே தீருவேன்- இந்த நம்பிக்கை மற்றும் நஷô சதா அனுபவம் ஆகும். இது தான் ஆசீர்வாதத்தின் அடையாங்களாக இருக்கிறது. புரிந்ததா?

பிராமண வாழ்க்கையில், மகான் தன்மையுடைய யுகத்தில் பாப்தாதாவின் அதிகாரியாக இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது, எப்பொழுதுமே போராடும் மனநிலையிலேயே வாழ்க்கையை கழித்தால் - இது குழந்தைகளின் போராடும் வாழ்க்கை பாப்தாதாவினால் பார்க்க முடியவில்லை. ஆகையால் நிரந்தர யோகி, நிரந்தர சேவாதாரி ஆகுங்கள். புரிந்ததா? நல்லது.

பழைய குழந்தைகளின் ஆசைகள் பூர்த்தி அடைந்துவிட்டது அல்லவா. தண்ணீருக்காக சேவை செய்யக் கூடிய சேவாதாரி குழந்தைகளுக்கு சபாஸ் (நன்றாக செய்கிறீர்கள்) அவர்கள் பல குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவதில் இரவும் பகலும் உதவியாளர்களாக இருக்கிறார் கள், துக்கத்தையும் கூட வென்றவர் ஆகிவிட்டீர்கள், இயற்கையையும் கூட வென்று விட்டீர்கள். எனவே மதுபன் சேவாதாரிகளுக்கு, திட்டத்தை உருவாக்கியவர்களாக இருந்தாலும், தண்ணீர் கொண்டு வருபவர்களாக இருந்தாலும், வருபவர்களை அன்பாக வரவேற்பவர்களாக இருந்தாலும், உணவை சமயத்தில் தயார் செய்யக் கூடியவர்களாக இருந்தாலும் - யாரெல்லாம் பலவிதமான சேவைகளில் பொறுப்பானவர்களுக்கு, அவர்கள் அனைவருக்கும் நன்றி கொடுத்தார். பாப்தாதா தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அல்லவா. உலகத்தில் தண்ணீர் தண்ணீர் என்று அலறிக் கொண்டிருக்கிறார்கள், மேலும் பாபாவின் குழந்தைகள் எவ்வளவு எளிதாக காரியத்தை செய்துக் கொண்டிருக்கிறார்கள். பாப்தாதா அனைத்து சேவாதாரி குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக் கிறார். எவ்வளவு அமைதியாக உங்கள் அனைவருக்கும் மதுபன் நிவாசிகள் நிமித்தமாகி வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் கூட உதவியாளர் ஆகியிருக்கிறீர்கள் அல்லவா? எப்படி அவர்கள் சகயோகியாகி இருக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு உங்களின் சகயோகம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதுபோல நீங்களும் கூட அனைவருக்கும் ஒவ்வொரு காரியத்திலும் நேரத்திற்கு தகுந்தவாறு நடந்துக் கொண்டிருக்கிறீர்கள், எனவே உங்களுக்கும் சகயோகத்தின் பலன் மற்றும் பிராமணர்களுக்கும் கூட கிடைத்துக் கொண்டிருக்கிறது.

பாப்தாதா புன்முறுவல் செய்துக் கொண்டிருந்தார் - சத்யுகத்தில் பாலாறுகளின் நதிகள் ஓடும், ஆனால் சங்கமயுகத்தில் தண்ணீர், நெய்யாக மாறி விடுகிறது அல்லவா. நெய்யாறு குழாயில் வந்துக் கொண்டிருக்கிறது. தண்ணீர் நெய் ஆகிவிடுகிறது என்றால் மதிப்புடையதாகி விட்டது அல்லவா. இந்த விதியின் பலருக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் கூட பாருங்கள் உலகினருக்கும் உங்களுக்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது அல்லவா. பல இடங்களிலிருந்தும் கூட உங்கள் அனைவருக்கும் மிகவும் ஒய்வு கிடைக்கிறது மேலும் பயிற்சியும் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் இராஜயுக்த் (இரகசியத்தின் நுட்பத்தை தெரிந்தவர்) ஆகி ஒவ்வொரு சூழ்நிலையிலும் திருப்தியாக இருப்பதற்கான பயிற்சியை அதிகரியுங்கள். நல்லது.

அனைத்து நிரந்தர யோகி, நிரந்தர சேவாதாரியான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா திரிகாலதரிசி ஆகி வெற்றியின் அதிகாரியாக அனுபவம் செய்யக் கூடிய, சதா மகிழ்ச்சியான, திருப்தியான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, ஒவ்வொரு நொடியும் ஆசீர்வாதங்களின் அனுபவம் செய்யக் கூடிய குழந்தைகளுக்கு விதியை உருவாக்கக் கூடிய, வரத்தை அளிக்கக்கூடிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

தாதிஜி அவர்களிடம்: எண்ணம் வந்தது மற்றும் அனைவருக்கும் உயர்ந்த எண்ணங்களுக்கும் பலன் கிடைத்து விடுகிறது. எவ்வளவு ஆசீர்வாதங்களின் மாலைகள் வந்தடைகிறது. யார் நிமித்தமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு கூட, பாபாவின் கூடவே குணத்தை வர்ணனை (புகழ் பாடுகிறார்கள்) செய்கிறார்கள். எனவே தான் பாபாவின் கூடவே குழந்தைகளையும் சேர்த்து பூஜை செய்யபடுகிறது. தனியாக பாபாவிற்கு மட்டும் நடைபெறுவதில்லை. அனைவருக்கும் எவ்வளவு குஷி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆசீர்வாதங்களின் மாலைகள் பக்தியில் மாலைகளின் அதிகாரி ஆக்கி விடுகிறது.

பார்ட்டிகளோடு அவ்யக்த - பாப்தாதாவின் சந்திப்பு

1. சிரேஷ்ட ஆத்மாகளாகிய நீங்கள் அனைவரும், அனைவருடைய தாகத்தை தணிக்கக் கூடியவர்களாக இருக்கிறீர்கள் அல்லவா? அவர்களிடம் ஸ்துலமான தண்ணீர், மேலும் உங்களிடம் இருப்பது - ஞான அமிர்தம். தண்ணீர் குறுகிய காலத்தின் தாகத்தை தணித்து திருப்தியான ஆத்மா வாக மாற்றிவிடுகிறது. எனவே அனைத்து ஆத்மாக்களுக்கும் அமிர்தத்தின் மூலம் திருப்தி செய்வதற்கு நிமித்தமாகியிருக்கிறீர்கள் அல்லவா. இந்த உற்சாகம் சதா இருக்கிறது அல்லவா. ஏனெனில் தாகம் தீர்ப்பது - மகான் புண்ணியமாகும். தாகத்தில் இருப்பவரின் தாகத்தை தணிக்கக் கூடியவர்களை புண்ய ஆத்மா என்று சொல்லப் படுகிறது. நீங்கள் கூட மகான் புண்ணிய ஆத்மா ஆகி அனைவருடைய தாகத்தை தணிக்கக் கூடியவர்களாக இருக்கிறீர்கள். தாகத்தினால் மனிதர் கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள், ஒருவேளை தண்ணீர் கிடைக்க வில்லையென்றால், தாகத் தினால் தவித்து விடுகிறோம் அல்லவா. அதுபோல, ஞான அமிர்த்ததின் கிடைக்காத காரணத் தினால் ஆத்மாக்கள் துக்கம் அசாந்தியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஞான அமிர்தம் கொடுத்து தாகத்தை தணிக்கக் கூடிய புண்ணிய ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். எனவே புண்ணியத்தின் கணக்கை பல ஜென்மங்களுக்காக சேமித்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? ஒரே ஜென்மத்தில் தான் பல ஜென்மங்களின் கணக்கு, பல ஜென்மங்களுக்காக சேமித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு ஜென்மத்தில் தான் பல ஜென்மங்களின் கணக்கு சேமிப்பு ஆகிறது. எனவே நீங்கள் இந்தளவு சேமிப்பு செய்திருக்கிறீர்கள் அல்லவா? மற்றவர்களுக்கும் கூட பகிர்ந்தளிக்குமளவிற்கு செல்வந்தராகி விட்டீர்களா. தனக்காக சேமித்துக் கொள்ளுங்கள் மற்றும் மற்றவர்களுக்கும் கூட தரக்கூடிய வள்ளல் ஆகுங்கள். எனவே முழு நாளில் புண்ணிய ஆத்மாவாகி, புண்ணியத்தின் காரியம் செய்கிறீர்களா என்று சோதனை செய்யுங்கள். அல்லது தனக்காக மட்டும் சாப்பிட்டீர்கள்-அருந்தினீர்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்களா? சேமிக்கக் கூடியவர் களை தான் புத்திசாலி என்று சொல்ல படுகிறது, யார் சம்பாதிக்கிறார்கள் மேலும் சாப்பிட்டு விடுகிறார்கள் அவர்களை புத்திசாலி என்று சொல்ல முடியாது. உணவு உண்ணும் பொழுது நேரத்தை ஒதுக்குகிறோம், ஏனெனில் அவசியமாக இருக்கிறது. அதுபோல இந்த புண்ணியம் காரியம் செய்வது கூட அவசியமாக இருக்கிறது. எனவே எப்பொழுதுமே புண்ணிய ஆத்மாவாக இருங்கள், அவ்வபொழுது அல்ல. வாய்ப்பு கிடைத்தால் செய்வேன் என்பது அல்ல. வாய்ப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் என்பது அல்ல, நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்பொழுது சேமிப்பு செய்ய முடியும். இந்த சம்யம் எந்தளவு பாக்கியம் என்ற ரேகையை வரையை விரும்புகிறீர்களோ, அந்தளவு வரைய முடியும். ஏனெனில் பாபா பாக்கியத்தை உருவாக்கக் கூடிய மற்றும் வரத்தை அளிக்கக் கூடியவராக இருக்கிறார். சிரேஷ்ட ஞானம் என்ற பேனாவை பாபா தனது குழந்தைகளுக்கு கொடுத்திருக்கிறார். இந்த பேனாவின் மூலம் எந்தளவு கோடு-ஐ இழுக்க வேண்டுமோ, இழுக்க முடியும். நல்லது.

2. அனைவரும் இராஜரிஷியாக இருக்கிறீர்கள் அல்லவா? இராஜ் என்றால் அதிகாரி மற்றும் ரிஷி என்றால் தபஸ்யா ஆகும். தபஸ்யாவின் பலம் எளிதாக மாற்றம் செய்வதற்கான ஆதாரமாகும். பரமாத்மாவின் அன்பின் மூலம் தன்னையும் உலகத்தையும் சதா காலத்திற்காக தடைகளற்றவர்களாக மாற்றிவிட முடியும். தடைகளற்றவர் ஆவது மற்றும் தடைகளற்றவர் ஆக்குவது - இது தான் சேவை செய்கிறதல்லவா. பலவிதமான தடைகளிலிருந்து அனைத்து ஆத்மாக்களையும் முக்தி கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறீர்கள். எனவே ஜீவன்முக்தியின் ஆசீர்வாதம் பாபாவிடமிருந்து பெற்று மற்றவர்களுக்கும் கூட கொடுக்க கூடியவர்களாக இருக்கிறீர்கள் அல்லவா. பந்தனமற்றவர் என்றாலே ஜீவன் முக்தி.

3. தைரியமுள்ள குழந்தைகளுக்கு பாபாவின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் தைரியத்தில் சதா பாபாவின் உதவி பலமடங்கு கிடைக்கிறது. சுமைகள் பாபாவின் மீது தான் இருக்கிறது. ஆனால் டிரஸ்டி (நிமித்தம்) ஆகி சதா பாபாவின் நினைவு மூலம் முன்னேறிக் கொண்டே யிருங்கள். பாபாவின் நினைவு தான் குடைநிழலாக இருக்கிறது. பழைய கணக்கு மிகப்பெரிய சிலுவையாக இருக்கிறது, ஆனால் பாபாவின் உதவி முள்ளாக மாற்றிவிடுகிறது. பிரச்சனைகள் அவசியம் வரத்தான் செய்யும், ஏனெனில் இங்கு தான் முடிக்க வேண்டும். ஆனால் பாபாவின் உதவி முள்ளாக மாற்றி விடுகிறது. பெரிய விஷயத்தை சிறியதாக மாற்றிவிடுகிறது. ஏனெனில் பெரிய பாபாவின் (சிவபாபா) துணை இருக்கிறது. சதா நம்பிக்கையோடு முன்னேறிக் கொண்டே யிருங்கள். ஒவ்வொரு அடியிலும் டிரஸ்டி, டிரஸ்டி என்றால் அனைத்தும் உன்னுடையது, என்னுடையது அனைத்து முடிந்துவிடும். இல்லறம் என்றாலே என்னுடையது. உன்னுடையது (பாபா) என்றாலே பெரிய விஷயம் சிறியதாகிவிடும். மேலும் என்னுடையது என்றாலே சிறிய விஷயம் கூட பெரியதாகிவிடும். உன்னுடையது (பாபா) என்ற மனநிலை இலேசாக மாற்றி விடுகிறது, மேலும் என்னுடையது சுமையாக்கிவிடுகிறது. அதனால் எப்பொழுதெல்லாம் சுமையின் அனுபவம் ஏற்படுகிறது என்றால் எங்கு என்னுடையது என்பது இருக்கிறது என்பதை சோதனை செய்யுங்கள். என்னுடையதை உன்னுடையதாக மாற்றிவிட்டால், அந்த நிமிடம் இலேசான அனுபவம் ஏற்படும், அனைத்து சுமைகளும் ஒரு நொடியில் முடிந்துவிடும். நல்லது.

வரதானம்:

திருப்தியின் விசேஷத் தன்மை மற்றும் சிரேஷ்ட தன்மை மூலம் அனைவருக்கும் இஷ்டமானவர் ஆகக் கூடிய வரதானி மூர்த்தி ஆகுக.

யார் சதா தன்னிடம் மற்றும் அனைவரிடமும் திருப்தியாக இருக்கிறார்களோ, அவர்கள் தான் பல ஆத்மாக்களின் இஷ்ட தேவதை மற்றும் அஷ்ட தேவதை ஆகி முடியும். அனைத்தையும் விட பெரியதிலும் பெரிய குணம் என்றும் சொல்லாம், தானம் என்றும் சொல்லாம், அல்லது விசேஷத்தன்மை மற்றும் உயர்ந்த தன்மை என்றும் கூட சொல்லாம் - அது தான் திருப்தி ஆகும். திருப்தியான ஆத்மா தான் பிரபுவிற்கு பிரியமானவராகவும், உலகத்திற்கு பிரியமானவராகவும், தனக்கு பிடித்தமானவராகவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட திருப்தியான ஆத்மா தான் வரதானி ரூபத்தில் பிரபலமாகும். இப்பொழுது இந்த கடைசி சமயத்தில் மகாதானியைவிட அதிகமாக வரதானி ரூபத்தின் மூலம் சேவை ஆகும்.

சுலோகன்:

யாருடைய நெற்றியில் சதா வெற்றியின் திலகம் ஜொலித்துக் கொண்டிருக்கிறதோ, அவர்கள் தான் வெற்றி இரத்தினம் ஆவர்.