ஓம் சாந்தி. இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாடலாகும். இதனுடைய அர்த்தத்தை யாரும் எதுவும் தெரிந்திருக்க வில்லை. பாட்டு பஜனை போன்றவற்றை பாடுகிறார்கள், பக்தர்கள் மகிமை பாடுகிறார்கள் ஆனால் எதையும் தெரிந்திருக்க வில்லை. நிறைய மகிமை பாடுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மகிமைகள் எதையும் செய்ய வேண்டியதில்லை. குழந்தைகள் தந்தையை மகிமை பாடுவதில்லை. இவர்கள் நம்முடைய குழந்தைகள் என்று தந்தைக்குத் தெரியும். இவர் நம்முடைய தந்தை என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். இப்போது இது எல்லையற்ற விசயமாகும். இருந்தாலும் அனைவரும் எல்லையற்ற தந்தையை நினைவு செய்கிறார்கள். இப்போது வரை கூட நினைவு செய்து கொண்டிருக்கிறார்கள். பகவானை ஹே தந்தையே, என்று அழைக்கிறார்கள், இவருடைய பெயர் சிவபாபா ஆகும். எப்படி ஆத்மாக்களாகிய நாம் இருக்கிறோமோ, அதுபோல் சிவபாபாவும் ஆவார். அவர் பரம் ஆத்மா, அவரை சுப்ரீம் என்று சொல்லப் படுகிறது, நாம் அவருடைய குழந்தைகளாவோம். அவரை சுப்ரீம் சோல் (உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா) என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கே வசிக்கிறார்? பரந்தாமத்தில். அனைத்து ஆத்மாக்களும் அங்கே இருக்கின்றன. நடிகர்கள் தான் ஆத்மாக்கள். நாடகத்தில் நடிகர்கள் வரிசைக்கிரமமாக இருப்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஒவ்வொருவருடைய பாகத்திற்கு ஏற்றவாறு சம்பளம் கிடைக்கிறது. அங்கே இருக்கக் கூடிய ஆத்மாக்கள் அனைத்தும் நடிகர்கள் ஆகும், ஆனால் அனைவருக்கும் வரிசைக்கிரமமான நடிப்பு கிடைத்திருக்கிறது. ஆத்மாக்களிடம் எப்படி அழிவற்ற நடிப்பு பதிவாகியிருக்கிறது என்பதை ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக் கின்றார். அனைத்து ஆத்மாக்களின் நடிப்பும் ஒரே மாதிரி இருக்க முடியாது. அனைத்திலும் ஒரே விதமாக சக்தி இல்லை. அனைத்திலும் நல்ல நடிப்பு ருத்ரனுடைய மாலையில் இருப்பவர்களுக்கு என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாடகத்தில் யார் மிகவும் நல்ல- நல்ல நடிகர்களாக இருக் கிறார்களோ, அவர்களுக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது. வெறுமனே அவர்களை பார்ப்பதற்கும் கூட மக்கள் செல்கிறார்கள். ஆக இது எல்லையற்ற நாடகமாகும். இந்த எல்லையற்ற நாடகத் திலும் கூட உயர்ந்தவர் ஒரு பாபா ஆவார். உயர்ந்ததிலும் உயர்ந்த நடிகர், படைப்பவர், டைரக்டர் என்றும் சொல்லலாம், அவர்கள் அனைவரும் எல்லைக்குட்பட்ட நடிகர்கள், டைரக்டர் போன்றவர் கள். அவர்களுக்கு தங்களுடைய சிறிய நடிப்பு கிடைத்திருக்கிறது. நடிப்பை ஆத்மா நடிக்கிறது ஆனால் தேக- அபிமானத்தின் காரணத்தினால் மனிதர்களுக்கு இப்படிப்பட்ட நடிப்பு இருக்கிறது என்று சொல்லி விடுகிறார்கள். நடிப்பு அனைத்தும் ஆத்மாவினுடையது என்று பாபா கூறுகின்றார். ஆத்ம-அபிமானிகளாக ஆக வேண்டி யிருக்கிறது. சத்யுகத்தில் ஆத்ம- அபிமானிகளாக இருக்கிறார்கள் என்று பாபா புரிய வைத்திருக்கிறார். தந்தையை தெரிந்திருக்கவில்லை. இங்கே கலியுகத்தில் ஆத்ம-அபிமானிகளும் இல்லை மேலும் தந்தையையும் தெரிந்திருக்க வில்லை. இப்போது நீங்கள் ஆத்ம- அபிமானிகளாக ஆகின்றீர்கள். தந்தையையும் தெரிந்துள்ளீர்கள்.
பிராமணர்களாகிய உங்களுக்கு மிக மிக அரிய ஞானம் கிடைக்கிறது. நாம் அனைவரும் ஆத்மாக்கள், நடிகர்கள் என்று நீங்கள் ஆத்மாவை தெரிந்து கொண்டீர்கள். அனைவருக்கும் நடிப்பு கிடைத்திருக்கிறது, அது ஒருவருடையது மற்றவருடையதோடு வேறுபட்டது. அந்த நடிப்பு அனைத்தும் ஆத்மாவில் இருக்கிறது. சொல்லப்போனால் என்ன நாடகம் உருவாக்குகிறார்களோ, அந்த நடிப்பையும் கூட ஆத்மா தான் தாரணை செய்கிறது. நல்ல நடிப்பையும் ஆத்மா தான் ஏற்கிறது. ஆத்மா தான் நான் கவர்னர், நான் இன்னார் என்று சொல்கிறது. ஆனால் ஆத்ம- அபிமானியாக ஆவதில்லை. சத்யுகத்தில் நான் ஆத்மா என்று புரிந்து கொள்வார்கள். ஒரு சரீரத்தை விட்டு விட்டு மற்றொன்றை எடுக்க வேண்டும். பரமாத்மாவை அங்கே யாரும் தெரிந்திருக்கவில்லை, இந்த சமயத்தில் நீங்கள் அனைத்தையும் தெரிந்துள்ளீர்கள். சூத்திரர்கள் மற்றும் தேவதைகளை விட பிராமணர்களாகிய நீங்கள் உத்தமமானவர்களாவீர்கள். இவ்வளவு அதிகமான பிராமணர்கள் எங்கிருந்து வருவார்கள், பிராமணர்களாக ஆவார்கள். இலட்சக்கணக் கானவர்கள் கண்காட்சிக்கு வருகிறார்கள். யார் நல்ல விதத்தில் புரிந்து கொண்டார்களோ, ஞானத்தைக் கேட்டார்களோ அவர்கள் பிரஜைகளாகி விட்டார்கள். ஒவ்வொரு ராஜாவிற்கும் நிறைய பிரஜைகள் இருக்கிறார்கள். நீங்கள் அதிகமான பிரஜைகளை உருவாக்கிக் கொண்டிருக் கிறீர்கள். கண்காட்சி, புரொஜக்டரின் மூலம் புரிந்து கொண்டு சிலர் நல்லவர்களாகவும் ஆகி விடுவார்கள். கற்றுக் கொள்வார்கள் யோகத்தில் ஈடுபடுவார்கள். இப்போது அவர்கள் தேவதா தர்மத்திற்கு வந்து கொண்டே இருப்பார்கள். பிரஜைகளும் வருவார்கள் பிறகு செல்வந்தர்களும், ராஜா-ராணி, ஏழைகள் போன்ற அனைவரும் வருவர். இளவரசன் - இளவரசிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். சத்யுகத்திலிருந்து திரேதாயுகம் வரை இளவரசன் - இளவரசிகள் உருவாக வேண்டும். வெறும் 8 அல்லது 108 மட்டும் இருக்க மாட்டார்கள் அல்லவா. ஆனால் இப்போது அனைவரும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சேவை செய்து கொண்டே இருக்கிறீர்கள். இது கூட புதிதல்ல. நீங்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தினீர்கள், என்றால் அது கூட ஒன்றும் புதிய விசயம் இல்லை. அனேக முறை செய்துள்ளீர்கள் பிறகு சங்கமயுகத்தில் இதே காரியத்தை செய்வீர்கள் வேறு என்ன செய்வீர்கள்! தூய்மையற்றவர்களை தூய்மையாக்க பாபா வருவார். இதைத் தான் உலகத்தின் வரலாறு- புவியியல் என்று சொல்லப்படுகிறது. வரிசைக்கிரமம் என்பது ஒவ்வொரு விசயத்திலும் இருக்கிறது. உங்களில் யாராவது நன்றாக சொற்பொழிவாற்றுகிறார்கள் என்றால் மிக நன்றாக சொற்பொழிவாற்றினார் என்று அனைவரும் சொல்வார்கள். வேறொரு வருடையதை கேட்டாலும் முன்னால் வந்தவர் நன்றாகப் புரிய வைத்தார் என்று சொல்வார்கள். மூன்றாமவர் அவரை விட கூர்மையானவராக இருந்தால் இவர் அவரை விடவும் புத்திசாலி என்று சொல்வார்கள். ஒவ்வொரு விசயத்திலும் நாம் அவரை விட மேலே செல்ல வேண்டும் என்று முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. யார் புத்திசாலிகளோ, அவர்கள் சொற்பொழிவாற்றுவதற்கு உடனே கையை உயர்த்துவார் கள். நீங்கள் அனைவரும் முயற்சியாளர்களாவீர்கள், இன்னும் போகப்போக அதிவேக இரயிலாகி விடுவீர்கள். எப்படி மம்மா குறிப்பிட்டு சொல்லக்கூடிய மெயில் ரயிலாக இருந்தார்(இப்போது சூப்பர் ஃபாஸ்ட் இரயில் இருப்பதைப் போல் ஆகும்). பாபாவிற்கு தெரியவே இல்லை ஏனென்றால் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். யார் சொல்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் எப்போதும் சிவபாபா புரிய வைக்கின்றார் என்றே புரிந்து கொள்ளுங்கள். பாபா மற்றும் தாதா இருவருமே தெரிந்திருக்கிறார்கள் ஆனால் அவர் அந்தர்யாமி(உள்ளிருப்பதை தெரிந்தவர்). வெளியில் இவர் மிகவும் புத்திசாலி என்று சொல்கிறார். பாபாவும் கூட மகிமையை கேட்டு குஷியடைகிறார். லௌகீகத்தில் கூட தந்தையின் ஒரு குழந்தை நல்ல விதத்தில் படித்து உயர்ந்த பதவி அடைகிறார் என்றால் இந்த குழந்தை நல்ல பெயர் எடுப்பான் என்று தந்தை புரிந்து கொள்கிறார். இவரும் கூட இந்த குழந்தை இந்த ஆன்மீக சேவையில் புத்திசாலி என்று புரிந்து கொள்கிறார். முக்கியமானது சொற்பொழிவாகும், யாருக்கும் தந்தையின் அறிமுகத்தை கொடுப்பது, புரியவைப்பது ஆகும். பாபா உதாரணம் கூட கூறியிருக் கிறார், யாருக்கோ 5 குழந்தைகள் இருந்தார்கள், அப்போது அவரிடம் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று யாரோ கேட்டார்கள்? அவர் எனக்கு இரண்டு குழந்தைகள் என்று சொன்னார். உங்களுக்கு 5 குழந்தைகள் தானே என்று கேட்டார்கள்! சொல்படி கேட்பவர்கள் இரண்டு என்று சொன்னார். இங்கேயும் அப்படித் தான் ஆகும். நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த டாக்டர் நிர்மலா குழந்தை மிகவும் நல்லவர் என்று பாபா சொல்வார். மிகவும் அன்போடு லௌகீக தந்தைக்குப் புரியவைத்து செண்டர் திறக்க வைத்து விட்டார். இது பாரதத்தின் சேவையாகும். நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகின்றீர்கள். இந்த பாரதத்தை இராவணன் நரகமாக்கினான். ஒரு சீதை மட்டும் சிறையில் இல்லை ஆனால் சீதைகளாகிய நீங்கள் அனைவருமே இராவணனின் கைதியாக இருந்தீர்கள். மற்றபடி சாஸ்திரங்களில் அனைத்தும் கட்டுக் கதை களாகும். இந்த பக்திமார்க்கம் கூட நாடகத்தில் இருக்கிறது. சத்யுகத்திலிருந்து எது கடந்ததோ அது திரும்பவும் நடக்கும் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நீங்களே பூஜிக்கத் தக்கவர்களாகவும், நீங்களே பூஜாரிகளாகவும் ஆகின்றீர்கள். நான் வந்து பூஜாரியிலிருந்து பூஜிக்கத்தக்கவர்களாக மாற்ற வேண்டியுள்ளது. என்று பாபா கூறுகின்றார். முதலில் சத்யுகத்தவர்களாகவும் பிறகு கலியுகத்தவர்களாகவும் ஆக வேண்டும். சத்யுகத்தில் சூரியவம்சத்து லஷ்மி- நாராயணனுடைய இராஜ்யம் இருந்தது. இராம இராஜ்யம் சந்திரவம்சமாக இருந்தது.
இந்த சமயத்தில் நீங்கள் அனைவரும் ஆன்மீக போர்வீரர்களாவீர்கள். யுத்த மைதானத்தில் வருபவர்களை போர்வீரர்கள் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் ஆன்மீக போர்வீரர்களாவீர்கள். மற்றபடி அவர்கள் உலகாயத போர்வீரர்களாவர். அதை உடல்பலத்தின் மூலம் சண்டையிடுதல் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் கைகளினால் மல்யுத்தம் நடைபெற்றது. தங்களுக்குள் சண்டையிடுவார்கள் பிறகு வெற்றி அடைந்தார்கள். இப்போது பாருங்கள் அணுகுண்டுகள் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன. நீங்களும் போர்வீரர்களே, அவர்களும் போர் வீரர்கள் தான். நீங்கள் மாயையின் மீது ஸ்ரீமத்படி நடந்து வெற்றி அடைகிறீர்கள். நீங்கள் ஆன்மீக போர்வீர களாவீர்கள். ஆத்மா இந்த சரீரத்தின் கர்மேந்திரியங்களின் மூலம் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. ஆத்மாவிற்கு பாபா வந்து கற்றுக் கொடுக்கின்றார் - குழந்தைகளே, என்னை நினைவு செய்வதினால் மாயை உங்களை தன் வசமாக்காது. உங்களுடைய விகர்மங்கள் வினாசம் ஆகும் மற்றும் உங்களுக்கு தலைகீழான எண்ணங்கள் வராது. பாபாவை நினைவு செய்வதின் மூலம் குஷியும் இருக்கும் ஆகையினால் அதிகாலையில் எழுந்து பயிற்சி செய்யுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். பாபா நீங்கள் எவ்வளவு இனிமையானவராக இருக்கிறீர்கள். பாபா என்று ஆத்மா சொல்கிறது. நான் உங்களுடைய தந்தை, உங்களுக்கு உலகத்தின் முதல்-இடை-கடைசியின் ஞானத்தை சொல்வதற்கு வந்துள்ளேன் என்று பாபா கூறுகின்றார். பாபா என்று ஆத்மா சொல்கிறது. நான் உங்களுடைய தந்தையாக இருக்கின்றேன், உங்களுக்கு சிருஷ்டியின் முதல்-இடை- கடைசியின் ஞானத்தைச் சொல்ல வந்துள்ளேன் என்று பாபா அறிமுகம் கொடுத் திருக்கிறார். இது வித-விதமான தர்மங்களின் மனித உலகமாகும், இதனை விராட லீலை என்று சொல்லப்படுகிறது. இந்த மனித மரத்தின் விதை ரூபமாக நான் இருக்கின்றேன் என்று பாபா புரிய வைத்துள்ளார். என்னை நினைவு செய்கிறார்கள். சிலர் ஒரு குலத்தைச் சேர்ந்தவர் களாகவும், சிலர் வேறொரு குலத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். பிறகு வரிசைக் கிரமமாக வருகிறார்கள். இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னார் தர்ம ஸ்தாபகர் தூது வரை அனுப்பியுள்ளார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்து அனுப்பு வதில்லை. இது நாடகப்படி திரும்பவும் நடக்கிறது. இவர் ஒருவர் தான் தர்மம் மற்றும் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். இதை உலகத்தில் யாரும் தெரிந்திருக்கவில்லை. இப்போது சங்கம யுகமாகும். வினாச ஜீவாலை (தீ பிழம்பு) வெளிவர வேண்டும். இது சிவபாபாவின் ஞான யக்ஞமாகும். அவர்கள் ருத்ரன் என்று பெயர் வைத்து விட்டார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் பிராமணர்களாகிய நீங்கள் பிறந்துள்ளீர்கள். நீங்கள் உயர்ந்தவர்கள் அல்லவா. பின்னால் மற்ற கிளைகள் (சகோதர ஆத்மாக்கள்) வருகின்றன. உண்மையில் அனைவரும் பிரம்மாவின் குழந்தைகளே. பிரம்மாவை தாத்தாவுக்கெல்லாம் தாத்தா என்று சொல்லப் படுகிறது. குலம் என்பது இருக்கிறது, முதல்-முதலில் பிரம்மா உயர்ந்தவர் பிறகு பிராமண குலம் வருகிறது. பகவான் உலகத்தை எவ்வாறு படைக்கிறார் என்று சொல்கிறார்கள். படைப்பு என்பது இருக்கிறது அல்லவா. எப்போது அவர்கள் தூய்மையற்றவர்களாக ஆகிறார்களோ, அப்போது அவரை அழைக் கிறார்கள். அவர் தான் வந்து துக்கமான உலகத்தை சுகமுடையதாக ஆக்குகின்றார், ஆகையினால் தான் துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்கும் பாபாவே வாருங்கள் என்று அழைக்கிறார்கள். ஹரித்துவார் என்று பெயர் வைத்துள்ளார்கள். ஹரித்துவார் என்றால் ஹரியின் நுழை வாயில் என்பதாகும். அங்கே கங்கை பாய்கிறது. நாம் கங்கையில் குளிப்பதின் மூலம் ஹரியின் வாசலுக்கு சென்று விடுவோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஹரியின் வாசல் எங்கே இருக்கிறது? பிறகு அதை கிருஷ்ணருக்கு சொல்லி விடுகிறார்கள். ஹரியின் வாசல் சிவபாபா ஆவார். துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்குபவர் ஆவார். முதலில் நீங்கள் உங்களுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும். குழந்தை களாகிய உங்களுக்கு தங்களுடைய தந்தை மற்றும் வீட்டைப் பற்றி இப்போது தெரிந்துள்ளது. பாபாவின் ஆசனம் கொஞ்சம் மேலே இருக்கிறது. மேலே மலர் இருக்கிறது பிறகு ஜோடி மணி அதற்கு கீழே இருக்கிறது. பிறகு ருத்ர மாலை என்று சொல்கிறார்கள். ருத்ர மாலை தான் பிறகு விஷ்ணு மாலையாக ஆகிறது. விஷ்ணுவின் கழுத்து மாலை, அவர்களே தான் பிறகு விஷ்ணுபுரியில் இராஜ்யம் செய்கிறார்கள். பிராமணர்களின் மாலை கிடையாது ஏனென்றால் அடிக்கடி உடைந்து விடுகிறது. வரிசைக்கிரமம் என்பது இருக்கிறது அல்லவா என்று பாபா புரியவைக்கின்றார். இன்று நன்றாக இருக்கிறார்கள், நாளை புயல் வந்து விடுகிறது, கிரகச்சாரம் வந்து விடுவதின் மூலம் மெத்தனமாகி விடுகிறார்கள். பாபா கூறுகின்றார், என்னுடையவர்களாக ஆகிறார்கள், ஆச்சரியமாக கேட்கிறார்கள், மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள், தியானத்தில் செல்கிறார்கள், மாலையில் கோர்க்கப்படுகிறார்கள்.............. பிறகு ஒரேயடியாக ஓடிவிடுகிறார்கள், சண்டாளர்களாக (கீழானவர்களாக) ஆகி விடுகிறார்கள். பிறகு மாலை எப்படி உருவாகும்? எனவே பாபா புரிய வைக்கின்றார், பிராமணர்களின் மாலை உருவாவ தில்லை. பக்த மாலை தனிப்பட்டது, ருத்ர மாலை தனிப்பட்டதாகும். பக்தமாலையில் பெண் களில் முக்கியமானவர் மீரா பிறகு ஆண்களில் நாரதராவார். இது ருத்ர மாலையாகும். சங்கம யுகத்தில் பாபா தான் வந்து முக்தி-ஜீவன்முக்தியை அளிக்கின்றார். நாம் தான் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இருந்தோம் என்று குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். இப்போது நரகத்தில் இருக்கிறார்கள். பாபா கூறுகின்றார், நரகத்தை உதைத்து தள்ளுங்கள், இராவணன் உங்களிட மிருந்து அபகரித்த சொர்க்கத்தின் இராஜ்யத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதை பாபா தான் வந்து கூறுகின்றார். அவர் இந்த சாஸ்திரங்கள், தீர்த்தங்கள் போன்ற அனைத்தையும் தெரிந்திருக் கின்றார். விதை ரூபம் அல்லவா. ஞானக்கடல், அமைதிக்கடல்............ இதை ஆத்மா கூறுகிறது.
இந்த லஷ்மி - நாராயணன் சத்யுகத்தின் எஜமானர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் என்ன இருந்தது? கண்டிப்பாக கலியுகத்தின் கடைசி இருந்திருக்கும் என்றால் சங்கமயுகமாக இருந்திருக்கும் பிறகு இப்போது சொர்க்கமாக ஆகின்றது. பாபாவை சொர்க்கத்தை படைப்பவர் என்று சொல்லப்படுகிறது, சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர். இந்த லஷ்மி - நாராயணன் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இருந்தனர். இவர்களுக்கு ஆஸ்தி எங்கிருந்து கிடைத்தது? சொர்க்கத்தைப் படைக்கக் கூடிய தந்தையிடமிருந்து ஆகும். இது தந்தையினுடைய ஆஸ்தியே ஆகும். இந்த லஷ்மி - நாராயணனுக்கு சத்யுகத்தின் இராஜ்யம் இருந்தது, இவர்களுக்கு இது எப்படி கிடைத்தது? என்று நீங்கள் யாரிடத்தில் வேண்டுமானாலும் கேட்கலாம். யாரும் சொல்ல முடியாது. எனக்குத் தெரியாது என்று இந்த தாதா கூட கூறுகின்றார். பூஜை செய்தேன் ஆனால் எனக்குத் தெரியாது என்று கூறுகின்றார். இவர்கள் சங்கமயுகத்தில் இராஜயோகம் கற்கிறார்கள் என்று பாபா இப்போது புரிய வைத்திருக்கிறார். கீதையில் தான் இராஜயோகத்தைப் பற்றிய வர்ணனை இருக்கிறது. கீதையைத் தவிர வேறு எந்த சாஸ்திரத்திலும் இராஜயோகத்தின் விசயம் இல்லை. நான் உங்களை ராஜாவுக்கெல்லாம் ராஜாவாக ஆக்குகின்றேன் என்று பாபா கூறுகின்றார். பகவான் தான் வந்து நரனிலிருந்து நாராயணனாக ஆவதற்கான ஞானத்தை கொடுத்திருக்கின்றார். பாரதத்தின் முக்கியமான சாஸ்திரம் கீதையாகும். கீதை எப்போது உருவாக்கப்பட்டது என்பதை தெரிந்திருக்க வில்லை. பாபா கூறுகின்றார், ஒவ்வொரு கல்பமும் சங்கமயுகத்தில் வருகின்றேன். யாருக்கு இராஜ்யத்தை கொடுத்திருந்தேனோ, அவர்கள் இராஜ்யத்தை இழந்து விட்டு பிறகு தமோபிரதானமாக துக்கமுடையவர்களாக ஆகி விட்டுள்ளார்கள். இராவணனுடைய இராஜ்யமாக இருக்கிறது. முழு பாரதத்தினுடைய கதை யாகும். பாரதம் முழு சக்கரத்திலும் வருகிறது, மற்றவை அனைத்தும் பிறகு வருகின்றன. உங்களுக்கு 84 பிறவிகளின் ரகசியத்தை கூறுகின்றேன் என்று பாபா கூறுகின்றார். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் தேவி-தேவதைகளாக இருந்தீர்கள் பிறகு தங்களுடைய பிறவிகளை தெரிந்திருக்கவில்லை. ஹே பாரதவாசிகளே - பாபா கடைசியில் வருகின்றார். முதலில் வந்தால் முதல்-கடைசியின் ஞானத்தை எப்படி சொல்ல முடியும்? சிருஷ்டி வளரவே இல்லையென்றால் எப்படி புரிய வைக்க முடியும்? அங்கே ஞானத்திற்கு அவசியமே இல்லை. பாபா இப்போது சங்கமயுகத்தில் தான் ஞானத்தை கொடுக்கின்றார். ஞானக்கடல் அல்லவா. எனவே கண்டிப்பாக ஞானத்தை சொல்வதற்கு கடைசியில் வர வேண்டும். கல்பத்தின் ஆரம்பத்தில் உங்கள் என்ன சொல்ல முடியும்! இவை புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். பகவானுடைய மகாவாக்கியம் - நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றேன். இது பாண்டவ அரசாங்கத்தின் பல்கலைக்கழகமாகும். இப்போது சங்கமயுகமாகும் - யாதவர், கௌரவர், மற்றும் பாண்டவ சேனைகளை அவர்கள் காட்டி விட்டார்கள். யாதவர்களுக்கும்-கௌரவர் களுக்கும் வினாச காலத்தில் அன்பற்ற புத்தி என்று பாபா புரிய வைக்கின்றார். ஒருவர்-மற்றவரை திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். தந்தையிடம் அன்பு இல்லை. நாய்-பூனை அனைத்திலும் பரமாத்மா இருக்கின்றார் என்று சொல்லி விடுகிறார்கள். மீதமுள்ள பாண்டவர்களுக்கு அன்பான புத்தி இருந்தது. பாண்டவர்களுக்கு சுயம் பரமாத்மா துணையாக இருந்தார். பாண்டவர்கள் என்றால் ஆன்மீக வழிகாட்டிகள். அவர்கள் உலகாயத வழிகாட்டிகள், நீங்கள் ஆன்மீக வழி காட்டிகளாவீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஆத்ம-அபிமானிகளாக ஆகி இந்த எல்லையற்ற நாடகத்தில் (ஹீரோ) முக்கிய கதா பாத்திர நடிப்பை நடிக்க வேண்டும். ஒவ்வொரு நடிகருடைய நடிப்பும் அவரவருடையதாகும் ஆகையினால் யாருடைய நடிப்பைப் பார்த்தும் போட்டி போடக்கூடாது.
2. அதிகாலையில் எழுந்து தங்களிடம் தாங்களே பேச வேண்டும், நான் இந்த சரீரத்தின் கர்மேந்திரியங்களிலிருந்து தனிப்பட்டவன், பாபா தாங்கள் எவ்வளவு இனிமையாக இருக்கிறீர்கள், நீங்கள் எங்களுக்கு சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் ஞானத்தை கொடுக்கிறீர்கள் (ஆன்மீக உரையாடல்) என்று பயிற்சி செய்ய வேண்டும்.