சுபசிந்தக்மணி ஆகி விஷ்வத்தை கவலைகளிலிருந்து விடுவித்துவிடுங்கள்
இன்று இரத்தினாகர் (இரத்தின வியாபாரி) தந்தை தன்னுடைய நாலாபுறங்களிலும் உள்ள விசேஷ சுபசிந்தக்மணிகளைப் (சுபசிந்தனை செய்யும் மணிகள்) பார்த்துக் கொண்டு இருக்கின்றார். இரத்தினாகர் தந்தையினுடைய மணிகள் விஷ்வத்தை தங்களுடைய சுபசிந்தனை கிரணங்களால் பிரகாசமாக ஆக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். ஏனெனில், இன்றைய இந்த செயற்கையான ஜொலிப்புடைய விஷ்வத்தில் அனைத்து ஆத்மாக்களும் சிந்தாமணியாக (சிந்தா - கவலை) இருக் கின்றனர். அத்தகைய அல்பகாலத்திற்கு ஜொலிக்கக்கூடிய சிந்தாமணிகளை சுபசிந்தக் மணி களாகிய நீங்கள் தங்களுடைய சுபசிந்தனையின் சக்தி மூலம் பரிவர்த்தனை (மாற்றம்) செய்து கொண்டு இருக்கின்றீர்கள். எவ்வாறு சூரியனின் கிரணங்கள் வெகு தூரம் வரை இருளை அகற்று கின்றதோ, அவ்வாறு சுபசிந்தக் மணிகளுடைய சுபசங்கல்பம் என்ற ஒளி என்று கூறினாலும் சரி, கிரணங்கள் என்று கூறினாலும் சரி, அது விஷ்வத்தின் நாலாபுறங்களிலும் பரவிக் கொண்டு இருக்கின்றது. ஏதோ ஒரு ஆன்மிக ஒளி மறைமுகமாக தனது காரியத்தை செய்து கொண்டு இருக்கின்றது என்று தற்சமயம் சில ஆத்மாக்கள் புரிந்து இருக்கின்றனர். ஆனால், அந்த ஒளி எங்கிருந்து காரியம் செய்து கொண்டு இருக்கின்றது என்பதை அறிய முடியவில்லை. ஏதோ ஒன்று இருக்கின்றது என்பதை உணரும் நிலை ஆரம்பம் ஆகிவிட்டது. தேடித் தேடி இறுதியில் சரியான இடத்திற்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். இந்த உணர்வு நிலையானது, சுபசிந்தக் மணிகளாகிய உங்களுடைய சிரேஷ்ட சங்கல்பத்தின் ஜொலிப்பாகும். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றி மணியின் ஜொலிப்பைப் பார்க்கின்றார்கள், ஏனெனில், ஜொலிப்பானது வரிசைக்கிரமமாக உள்ளது. அனைவருமே சுபசிந்தக் மணிகளே ஆவீர்கள், ஆனால், ஜொலிப்பு வரிசைக்கிரமமாக உள்ளது.
சுபசிந்தக் ஆகுவது என்ற இதுவே சுலபமான முறையில் மனதால் செய்யப்படும் சேவை (மனசா சேவை) ஆகும், இதை எங்கு போகும்போதும், வரும்போதும் ஒவ்வொரு பிராமண ஆத்மா மற்றும் ஞானம் அறிந்திராத ஆத்மாக்களுக்காக செய்ய முடியும். நீங்கள் அனைவரும் சுபசிந்தக் ஆகுவதனால் பரவும் அதிர்வலைகள் வாயுமண்டலத்தை மற்றும் சிந்தாமணி (கவலையான) ஆத்மாக்களின் விருத்தியை மிகவும் சுலபமாக மாற்றிவிடும். இன்றைய மனித ஆத்மாக்களின் வாழ்வில், நாலாபுறங்களில் இருந்தும் மனிதர்கள் மூலமும், வைபவங்கள் மூலமும், மனித ர்களிடத்தில் சுயநலம் இருக்கும் காரணத்தினால், வைபவங்களில் அல்பகால பிராப்தி கிடைக்கும் காரணத்தினால் கொஞ்ச சமயத்திற்காக சிரேஷ்ட பிராப்திகளின் அனுபவம் கிடைக்கிறது, ஆனால், அல்பகாலத்திற்கான குஷி சிறிது காலத்திற்குப் பின்பு கவலையாக மாறிவிடுகிறது அதாவது வைபவங்கள் மற்றும் மனிதர்கள் கவலையை போக்குபவர்களாக அல்லாமல் கவலையை ஏற்படுத்துவதற்கு நிமித்தம் ஆகிவிடுகின்றனர். அத்தகைய ஏதாவதொரு கவலையில் துயரமடைந் திருக்கும் ஆத்மாக்களுக்கு மிகவும் குறைவான சுபசிந்தக் ஆத்மாக்களே தென்படு கின்றனர். எனவே, இன்று விஷ்வத்திற்கு சுபசிந்தக் ஆத்மாக்களின் தேவை உள்ளது. ஆகை யினால், சுபசிந்தக் மணிகளான ஆத்மாக்களான நீங்கள் விஷ்வத்திற்கு மிகவும் பிரியமானவர்கள் ஆவீர்கள். எப்பொழுது தொடர்பில் வருவார்களோ, அப்பொழுது உலகத்தில் இத்தகைய சுபசிந்தக் வேறு எவரும் தென்படவில்லை என்று அனுபவம் செய்வார்கள். எப்பொழுதும் சுபசிந்தக்காக இருக்க வேண்டும். இதற்கான விசேஷ ஆதாரம் சுபசிந்தனை ஆகும். யாருக்கு சதா சுபசிந்தனை உள்ளதோ, அவர்கள் அவசியம் சுபசிந்தக்காக இருப்பார்கள். ஒருவேளை, அவ்வப்பொழுது வீண் சிந்தனை அல்லது பரசிந்தனை வருகிறது என்றால் சதா சுபசிந்தக்காக இருக்க முடியாது. சுபசிந்தக் ஆத்மாக்கள் பிறருடைய வீண் சிந்தனை, பரசிந்தனையை சமாப்தி செய்பவர்கள் ஆவார்கள். எனவே, ஒவ்வொரு சிரேஷ்ட சேவாதாரி அதாவது சதா சுபசிந்தக் மணியினுடைய சுபசிந்தனை என்ற சக்திசாலி பொக்கிஷமானது எப்பொழுதும் நிறைந்திருக்கும் காரணத் தினாலேயே அவர்களால் பிறருக்காகவும் சுபசிந்தக்காக ஆகமுடிகிறது. சுபசிந்தக் என்றால் அனைத்து ஞான இரத்தினங்களால் நிறைந்திருக்கும் நிலையாகும். மேலும், அத்தகைய ஞானம் நிறைந்தவர்கள் வள்ளலாகி பிறருக்காக சதா சுபசிந்தக் ஆகமுடியும். எனவே, முழு நாளில் அதிக நேரம் சுபசிந்தனை உள்ளதா அல்லது பரசிந்தனை உள்ளதா? என்று சோதனை செய்யுங்கள். சுபசிந்தனை உள்ளவர்கள் சதா தன்னுடைய நிறைந்திருக்கும் நிலையின் (சம்பன்னதா) போதையில் இருப்பார்கள். ஆகையினால், சுபசிந்தக் சொரூபத்தின் மூலம் பிறருக்கும் கொடுத்துக் கொண்டே செல்வார்கள் மற்றும் நிறைந்துகொண்டே இருக்கும். பரசிந்தனை அல்லது வீண் சிந்தனை செய்பவர்கள் சதா காலியாக இருக்கும் காரணத்தினால் தன்னை பலவீனமாக அனுபவம் செய்வார்கள். ஆகையால், சுபசிந்தக் ஆகி பிறருக்குக் கொடுப்பதற்குத் தகுந்தவராக ஆகமுடியாது. நிகழ்காலத்தில் அனைவருடைய கவலையை நீக்குவதற்கு நிமித்தம் ஆகக்கூடிய சுபசிந்தக் மணிகளின் அவசியம் உள்ளது. இவர்களே பிறரை, கவலைக்குப் பதிலாக சுபசிந்தனை செய்யும் விதியை அனுபவம் செய்பவராக ஆக்கமுடியும். எங்கு சுபசிந்தனை இருக்குமோ, அங்கு கவலை தானாகவே முடிவடைந்துவிடும். எனவே, சதா சுபசிந்தக் ஆகி மறைமுகமான சேவை செய்து கொண்டு இருக்கின்றீர்கள் அல்லவா?
எல்லையற்ற விஷ்வ சேவைக்கான திட்டம் என்ன தீட்டியிருக்கின்றீர்களோ, அந்த திட்டத்தை சகஜமாக வெற்றிகரமானதாக ஆக்குவதற்கான ஆதாரம் கூட சுபசிந்தக் ஸ்திதி ஆகும். விதவிதமான ஆத்மாக்கள் சம்பந்தம், தொடர்பில் வருவார்கள். அப்பேற்பட்ட ஆத்மாக்களுக்காக சுபசிந்தக் ஆகவேண்டும். அதாவது அந்த ஆத்மாக்களுக்கு தைரியம் என்ற இறக்கை கொடுக்க வேண்டும். ஏனெனில், அனைத்து ஆத்மாக்களும் கவலை என்ற சிதையில் இருக்கும் காரணத்தால் அவர்களுடைய தைரியம், ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகள் பலவீனம் ஆகிவிட்டன. சுபசிந்தக் ஆத்மாக்களாகிய உங்களுடைய சுபபாவனை அவர்களுடைய இறக்கைகளில் சக்தியை நிரப்பும். மேலும், உங்களுடைய சுபசிந்தக் பாவனைகளின் ஆதாரத்தில் பறக்க ஆரம்பித்து விடுவார்கள். அதாவது சகயோகி ஆகிவிடுவார்கள். சிறந்ததொரு உலகை (சுகமயமான உலகை) உருவாக்குவதற்கு ஆத்மாக் களாகிய நமக்குள் என்ன சக்தி உள்ளது? என்று மனச்சோர்வு அடைந்துவிட்டனர். யாரால் தன்னையே உருவாக்க முடியவில்லையோ, அவர்கள் விஷ்வத்தை என்ன உருவாக்குவார்கள்? விஷ்வத்தை மாற்றுவது மிகவும் கடினம் என்று நினைக்கின்றனர். ஏனெனில், நிகழ்காலத்தில் அனைத்து சக்திகளின் ரிசல்ட்டை பார்த்தாகிவிட்டது, ஆகவே, கடினம் என்று நினைக்கின்றனர். அத்தகைய உள்ளச் சோர்வு அடைந்த ஆத்மாக்களை கவலையின் சிதையில் அமர்ந்திருக்கும் ஆத்மாக்களை உங்களுடைய சுபசிந்தக் சக்தியானது உள்ளச்சோர்வில் இருந்து மகிழ்ச்சி நிறைந்த உள்ளம் உடையவர்களாக ஆக்கிவிடும். எவ்வாறு மூழ்கிக் கொண்டி ருக்கும் மனிதருக்கு ஒரு துரும்பு கூட உள்ளத்தை மகிழ்ச்சி அடையச் செய்கிறது, தைரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே, உங்களுடைய சுபசிந்தக் ஸ்திதியானது அவர்களுக்கு ஆதரவாக அனுபவம் ஆகும், எரிந்து கொண்டு இருக்கும் ஆத்மாக்களுக்கு குளிர்ந்த நீர் கிடைத்தது போன்ற அனுபவம் ஏற்படும்.
அனைவருடைய சகயோகத்தைப் பிராப்தியாக அடைவதற்கான ஆதாரம் கூட சுபசிந்தக் ஸ்திதியாகும். யார் அனைவருக்காகவும் சுபசிந்தக்காக இருக்கின்றார்களோ, அவர்களுக்கு அனைவரிடமிருந்தும் தானாகவே சகயோகம் கிடைக்கின்றது. சுபசிந்தக் பாவனை பிறருடைய மனதில் சகயோகத்தின் பாவனையை சகஜமாக மற்றும் தானாக உருவாக்கும். சுபசிந்தக் ஆத்மாக்கள் மீது ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அன்பு தோன்றுகிறது மற்றும் அன்பு தான் சகயோகியாக ஆக்குகின்றது. எங்கு அன்பு உள்ளதோ, அங்கு சமயம், செல்வம், சகயோகம் ஆகிய வற்றை கொடுப்பதற்கு சதா தயாராக இருப்பார்கள். எனவே, சுபசிந்தக் அன்பானவர்களை உருவாக்குவார்கள் மற்றும் அன்பு அனைத்துவித சகயோகத்தைக் கொடுக்கச் செய்யும். ஆதலால், சதா சுபசிந்தனையில் நிறைந்திருங்கள், சுபசிந்தக் ஆகி அனைவரையும் சினேகியாக, சகயோகியாக ஆக்குங்கள். சுபசிந்தக் ஆத்மா அனைவரிடமிருந்தும் திருப்தியின் சான்றிதழை சுலபமாகப் பெற முடியும். சுபசிந்தக் தான் சதா மகிழ்ச்சியான பர்சனாலிட்டியுடன் (தோற்றத்துடன்) இருக்கமுடியும், விஷ்வத்திற்கு முன்பு விசேஷ பர்சனாலிட்டி உடையவர்களாக ஆக முடியும். தற்காலத்தில் பர்சனாலிட்டி உடைய ஆத்மாக்கள் புகழ் பெற்றவர்களாக மட்டும் ஆகின்றார்கள். அதாவது பெயர் புகழடைகின்றது. ஆனால், ஆன்மிக பர்சனாலிட்டி உடைய நீங்கள் புகழ் பெற்றவர்களாக அதாவது மகிமைக்குத் தகுந்தவராக மட்டும் அல்ல, ஆனால், மகிமைக்குத் தகுந்தவராகுவதன் கூடவே பூஜைக்குத் தகுந்தவர்களாகவும் ஆகின்றீர்கள். தர்ம சேத்திரம், இராஜ்ய சேத்திரம், விஞ்ஞான சேத்திரத்தில் பர்சனாலிட்டி உடையவர்கள் எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் சரி ஆனால், ஆன்மிக பர்சனாலிட்டி உடைய உங்களுக்கு சமமாக 63 பிறவிகளுக்கு பூஜைக்குரிய வர்கள் ஆகவில்லை. ஆகையினால், இது சுபசிந்தக்காக ஆகுவதன் சிறப்புத்தன்மை ஆகும். அனை வருக்கும், குஷி, ஆதரவு, தைரியத்தின் இறக்கைகள், ஊக்கம் உற்சாகத்தின் பிராப்தி என்ன கிடைக்கிறதோ, அந்த பிராப்தியின் ஆசீர்வாதங்கள் சிலரை அதிகாரி குழந்தைகள் ஆக்கிவிடு கின்றன, இன்னும் சிலரை பக்த ஆத்மாக்கள் ஆக்கிவிடுகின்றன, ஆகையால், அனேக பிறவிகள் பூஜைக்ககுரியவர்கள் ஆகிவிடுகின்றனர். சுபசிந்தக் என்றால் நீண்டகால பூஜைக்குரிய ஆத்மாக் கள் என்று அர்த்தம். ஆகையால், இந்த விசாலமான காரியத்தை ஆரம்பம் செய்வதன் கூடவே எவ்வாறு மற்ற நிகழ்ச்சிகளை உருவாக்குகின்றீர்களோ, அதன் கூடவே தனக்காகவும் இந்த நிகழ்ச்சியை உருவாக்குங்கள்:-
1. சதா காலத்திற்காக ஒவ்வொரு ஆத்மா மீதும் மற்ற அனைத்துவித பாவனைகளை மாற்றி ஒரு சுபசிந்தக் பாவனையை எப்பொழுதும் வைப்பேன்.
2. அனைவரையும் தன்னை விட முன்னேற்றுவதற்கான, முன்னால் வைப்பதற்கான சிரேஷ்ட சகயோகம் சதா கொடுத்துக்கொண்டே இருப்பேன்.
3. பெட்டர் வேர்ல்டு அதாவது சிரேஷ்டமான உலகை உருவாக்குவதற்காக சிரேஷ்ட காமனா (விருப்பம்) மூலம் அனைவருடைய சகயோகி ஆவேன்.
4. சதா வீண் சிந்தனை, பரசிந்தனையை முடித்து அதாவது முடிந்து போன விசயங்களுக்கு புள்ளி வைத்து, புள்ளி அதாவது மணி ஆகி சதா விஷ்வத்திற்கும், அனைவருக்கும் தன்னுடைய சிரேஷ்ட பாவனை, சிரேஷ்ட காமனா, அன்பான பாவனை, சக்திசாலி ஆக்கும் பாவனையின் கிரணங்களால் வெளிச்சம் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.
இந்த சுயத்திற்கான நிகழ்ச்சியே அனைத்து நிகழ்ச்சிகளின் வெற்றிக்கான அஸ்திவாரம் ஆகும். இந்த அஸ்திவாரத்தை சதா உறுதியானதாக வைக்க வேண்டும், அப்பொழுது பிரத்யட்சதாவின் சப்தம் தானாகவே உரக்க ஒலிக்கும். புரிந்ததா? அனைவரும் இந்த காரியத்திற்கு நிமித்தமான வர்கள் ஆவீர்கள் அல்லவா. விஷ்வத்தை சகயோகி ஆக்குகின்றீர்கள் எனில், முதலில் நீங்கள் நிமித்தமாக இருக்கின்றீர்கள். சிறியவர்களோ, பெரியவர்களோ, வியாதியஸ்தரோ அல்லது ஆரோக்கியமானவரோ, மகாரதியோ (யானைப்படை), குதிரைப்படையோ - அனைவருமே சக யோகிகள் ஆவீர்கள். காலாட்படையோ கிடையவே கிடையாது. எனவே, அனைவருடைய விரலும் தேவை. ஒவ்வொரு செங்கலுக்கும் மகத்துவம் உள்ளது. ஒன்று அஸ்திவாரத்தின் செங்கலாக இருக்கும், மற்றொன்று மேல் சுவரின் செங்கலாக இருக்கும், ஆனால், ஒவ்வொரு செங்கலும் மகத்துவமானதாகும். நாம் நிகழ்ச்சியை (புரோகிராம்) செய்து கொண்டிருக்கின்றோம் என்று நீங்கள் அனைவரும் புரிந்திருக்கின்றீர்களா அல்லது நிகழ்ச்சியை நடத்துபவர்கள் உருவாக்கு கின்றார்கள், நிகழ்ச்சியை உருவாக்குபவர்களின் நிகழ்ச்சியாகும் என்று புரிந்திருக் கின்றீர்களா? நம்முடைய நிகழ்ச்சி என்றே கூறுகின்றீர்கள் அல்லவா. எனவே, பாப்தாதா குழந்தைகளுடைய விசாலமான காரியத்தை, நிகழ்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்கள். உள்நாடு, மேலை நாடுகளில் விசால காரியத்திற்கான ஊக்க உற்சாகம் நன்றாக உள்ளது. தந்தை தன்னுடைய காரியத்தை செய்து கொண்டு இருக்கின்றார் என்ற தந்தையினுடைய பிரத்யட்சதாவின் இந்த சப்தத்தை நம்முடைய அனைத்து சகோதர சகோதரிகளும் கேட்க வேண்டும் என்று ஒவ்வொரு பிராமண ஆத்மாவிற்குள்ளும் விஷ்வத்தின் ஆத்மாக்கள் மீது கருணை உள்ளது, இரக்கம் உள்ளது. நெருக்கத்தில் வரட்டும், சம்பந்தத்தில் வரட்டும், அதிகாரி ஆகட்டும், பூஜைக்குரிய தேவதை யாகட்டும் அல்லது 33 கோடி பெயரை மகிமை பாடுபவர்களாக ஆகட்டும், ஆனால், சப்தத்தை கண்டிப்பாக கேட்க வேண்டும். அத்தகைய ஊக்கம் உள்ளது அல்லவா? இப்பொழுதோ, 9 இலட்சம் கூட உருவாக்கவில்லை. எனவே, தன்னுடைய நிகழ்ச்சி என்ன என்பது புரிந்ததா? தன்னுடையது என்பதுவே தன்னுடைய நிகழ்ச்சியில் தன்னுடைய விஷ்வத்தை உருவாக்கும். நல்லது.
இன்று ஐந்து இடங்களில் இருந்தும் பார்ட்டிகள் வந்திருக்கின்றனர். திரிவேணி என்று கூறுவார்கள், ஆனால், இது பஞ்சவேணி ஆகிவிட்டது. ஐந்து இடங்களிலிருந்து நதிகள் கடலை வந்தடைந்துவிட்டன. எனவே, நதி மற்றும் கடலினுடைய சந்திப்பானது சிரேஷ்டமான திருவிழா ஆகும். புதியவர்கள், பழையவர்கள் என அனைவரும் குஷியில் நடனம் ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள். எப்பொழுது நம்பிக்கையற்ற நிலையில் இருந்து நம்பிக்கை ஏற்பட்டுவிடு கின்றதோ, அப்பொழுது இன்னும் அதிகக் குஷி ஏற்படுகின்றது. பழையவர்களுக்குக் கூட திடீரென வாய்ப்பு கிடைத்துள்ளதால் இன்னும் அதிகக் குஷி இருக்கின்றது. எப்பொழுது சந்திப்போம் என்பது தெரியவில்லை என்று யோசித்துக்கொண்டு இருந்தீர்கள். இப்பொழுது சந்திப்போம் என்பதை நினைத்து கூட பார்க்கவில்லை. எப்பொழுது என்பதில் இருந்து இப்பொழுது என்று ஆகிவிடுகிறது என்றால் மகிழ்ச்சியின் அனுபவம் தனிப்பட்டதாக இருக்கும். நல்லது. இன்று அயல்நாட்டினரும் கூட விசேஷமான அன்பு நினைவுகள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். விசேஷ சேவாதாரி (ஜெயந்தி சகோதரி) வந்திருக்கின்றார் அல்லவா. அயல்நாட்டு சேவைக்கு முதலில் நிமித்தம் ஆனார்கள் அல்லவா. விருட்சத்தைப் பார்த்து விதை நினைவுக்கு வருகின்றது. விதை ரூப குடும்பத்தினரான இவர்கள் அயல்நாட்டு சேவைக்கு நிமித்தம் ஆனார்கள். எனவே, முதலில் நிமித்தமான குடும்பத்திற்கு நினைவுகள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
அயல்நாட்டின் அனைத்து நிமித்தமாகி இருக்கும் சேவாதாரி குழந்தைகள் சதா தந்தையை பிரத்யட்சம் செய்யக்கூடிய பிரயத்தனத்தில் ஊக்க உற்சாகத்துடன் இரவு பகலாக ஈடுபட்டு இருக்கின்றனர். அயல்நாட்டிலிருந்து வெளிப்படும் உரத்த ஒலி மூலம் பாரதத்தில் தந்தையை பிரத்யட்சம் செய்ய வேண்டும் என்ற இந்த சப்தமானது அவர்களது காதுகளில் அடிக்கடி ஒலிக்கின்றது. இந்த சப்தமானது சேவைக்கான அடியை சதா முன்னேற்றிக் கொண்டு செல்கின்றது. விசேஷ சேவையின் ஊக்க உற்சாகத்திற்கான காரணம் தந்தை மீது உள்ளத்தின் அன்பு, சினேகம் ஆகும். ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு நொடியும் வாயில் பாபா பாபா என்ற வார்த்தை வருகிறது.. எப்பொழுதாவது யாராவது கார்டு (வாழ்த்து அட்டை) அல்லது பரிசு அனுப்பு கின்றார்கள் என்றால் அதில் உள்ளம் (இருதயம்) போன்ற சித்திரத்தை அவசியம் உருவாக்கு கின்றார்கள். இதற்கான காரணம் உள்ளத்தில் சதா திலாராம் (உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர்) இருப்பதுவே ஆகும். உள்ளத்தைக் கொடுத்திருக்கின்றீர்கள் மற்றும் (தந்தையினுடைய) உள்ளத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். கொடுப்பது மற்றும் பெறுவதில் புத்திசாலிகள் ஆவீர்கள். ஆகையினால், உள்ளத்தின் வியாபாரம் செய்வதன், உள்ளத்தால் நினைவு செய்வதன் அடையாள மாக தன்னுடைய உள்ளத்தையே அனுப்புகின்றார்கள். மேலும், இந்த உள்ளத்தின் நினைவு மற்றும் உள்ளத்தின் அன்பானது பெரும்பான்மையினருக்கு தொலைவில் இருந்தாலும் அருகாமையில் இருக்கும் அனுபவத்தை செய்விக்கின்றது. பிரம்மா தந்தை மீது அதிக அன்பு உள்ளது என்பதையே அனைத்தையும் விட விசேஷமான சிறப்புத்தன்மையாக பாப்தாதா பார்க்கின்றார்கள். தந்தை மற்றும் தாதாவினுடைய ஆழமான இரகசியத்தை மிகவும் சுலபமாக அனுபவத்தில் கொண்டு வருகின்றீர்கள். பிரம்மா பாபாவினுடைய சாகார பாலனையினுடைய நடிப்பு இல்லாதபோதும் அவ்யக்த பாலனையின் அனுபவத்தை நன்றாக செய்து கொண்டு இருக்கின்றீர்கள். தந்தை மற்றும் தாதா ஆகிய இருவரின் சம்பந்தத்தை அனுபவம் செய்வது என்ற இந்த விசேஷத்தன்மையின் காரணத்தினால் தன்னுடைய வெற்றியில் மிக சுலபமாக முன்னேறிச் சென்று கொண்டு இருக் கின்றீர்கள். ஒவ்வொரு தேசத்தினரும் அவரவர் பெயர் முதலில் இருப்பதாகப் புரிந்து கொள்ளுங் கள்.ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய பெயருக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் கிடைப்பதாக நினைத்து அன்பு நினைவுகளை சுவீகாரம் செய்ய வேண்டும். புரிந்ததா?
திட்டத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றீர்கள். உள்நாடு மற்றும் வெளிநாட்டின் பழக்க வழக்கத்தில் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது. ஆனால், அன்பின் காரணத்தினால் பழக்க வழக்கத்தின் வித்தியாசம் கூட ஒன்றாக ஆகிவிடுகின்றது. அயல்நாட்டின் திட்டமோ அல்லது பாரதத்தின் திட்டமோ, எதுவாயினும் திட்டமோ ஒன்று தான். செய்யும் முறையை மட்டும் கொஞ்சம் மாற்ற வேண்டியதாக உள்ளது. உள்நாடு மற்றும் வெளி நாட்டின் சகயோகமானது இந்த விசால காரியத்திற்கு சதா வெற்றியை கிடைக்க வைத்துக்கொண்டே இருக்கும். வெற்றியோ சதா குழந்தைகளுக்கு உண்டு. உள்நாட்டினரின் ஊக்க உற்சாகம் மற்றும் அயல் நாட்டினரின் ஊக்க உற்சாகம் ஆகிய இரண்டும் இணைந்து காரியத்தை முன்னேற்றிக் கொண்டு இருக்கின்றது மற்றும் சதா முன்னேற்றிக் கொண்டே இருக்கும். நல்லது.
பாரதத்தின் நாலாபுறங்களிலும் இருக்கக்கூடிய சதா சிநேகி, சகயோகி குழந்தைகளின் அன்பு, சகயோகத்தின் சுபசங்கல்பம், சுபமான சப்தம் பாப்தாதாவிடம் சதா வந்துகொண்டே இருக்கின்றது. உள்நாடு, வெளிநாடு ஒன்றைவிட ஒன்று சிறந்தது. .ஒவ்வொரு இடத்தின் சிறப்புத்தன்மையும் தனித்தனியானது. பாரதம் தந்தையின் அவதார பூமியாகும் மற்றும் பாரதம் பிரத்யட்சத்தின் சப்தத்தை உரக்க ஒலிக்கச் செய்வதற்கு நிமித்தமான பூமியாகும். பாரதத்தில் தான் ஆதி மற்றும் அந்திமத்தின் நடிப்பு உள்ளது. அயல்நாட்டின் சகயோகமானது பாரதத்தில் பிரத்யட்சம் செய்விக்கும் மற்றும் பாரதத்தின் பிரத்யட்சத்தின் ஒலியானது அயல்நாடு வரை சென்ற டையும். ஆகையினால், பாரதக் குழந்தைகளின் சிறப்புத்தன்மை எப்பொழுதும் சிரேஷ்டமானது ஆகும். பாரதத்தினர் ஸ்தாபனைக்கு ஆதாரமாக ஆனார்கள். ஸ்தாபனையின் ஆதாரமூர்த்தி பாரதத்தின் குழந்தைகளே ஆவார்கள். ஆகையினால், பாரதவாசி குழந்தைகளுடைய பாக்கியத்தின் மகிமையை அனைவரும் பாடுகின்றார்கள். நினைவு மற்றும் சேவையில் சதா ஊக்க உற்சாகத்துடன் சதா முன்னேறிக் கொண்டு இருக்கின்றீர்கள் மற்றும் முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். ஆகையினால், பாரதத்தின் ஒவ்வொரு குழந்தையும் அவரவர் பெயருக்கு பாப்தாதா அன்பு நினைவுகள் கொடுப்பதை சுவீகாரம் செய்ய வேண்டும். உள்நாடு, வெளிநாட்டில் உள்ள எல்லையற்ற தந்தை யின் எல்லையற்ற சேவாதாரி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.