19.02.21 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் இந்த சுடுகாட்டை ஃபரிஸ்தாக்களின்
உலகமாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள், ஆகையால் உங்களுக்கு இந்த
பழைய உலகம், சுடுகாட்டின் மீது முழுமையிலும் முழுமையான
வைராக்கியம் தேவை.
கேள்வி:
எல்லையற்ற தந்தை தனது ஆன்மீகக் குழந்தைகளுக்கு அதிசயமான
சேவகனாக இருக்கின்றார், எப்படி?
பதில்:
பாபா கூறுகின்றார் - குழந்தைகளே! நான் உங்களது ஆடைகளை வெளுப்
பவனாக இருக்கிறேன், குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமின்றி முழு
உலகம் என்ற சீ சீ ஆன அசுத்த ஆடையை விநாடியில் சுத்தப்படுத்தி
விடுகிறேன். ஆத்மா என்ற ஆடை தூய்மை ஆவதன் மூலம் சரீரமும்
தூய்மையானதாக கிடைக்கிறது. மன்மனாபவ என்ற மந்திரத்தின் மூலம்
அனைவரையும் விநாடியில் தூய்மைப்படுத்தி விடும் அளவிற்கு அதிசய
சேவகனாக இருக்கின்றார்.
ஓம் சாந்தி .
ஓம்சாந்தி என்பதன் பொருளை குழந்தைகளுக்கு தந்தை புரிய
வைத்திருக்கின்றார். உள்ளுக்குள் இருக்கும் ஆத்மாவின் சுய
தர்மம் அமைதியாகும். சாந்திதாமம் செல்வதற்கு எந்த முயற்சியும்
செய்ய வேண்டி யிருக்காது. ஆத்மா சுயம் சாந்த சொரூபமானது,
சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியது. ஆம், சிறிது காலத்திற்கு
சாந்தியாக இருக்க முடியும். நான் கர்மேந்திரியங்களின்
சுமைகளினால் களைப்படைந்து விட்டேன், நான் எனது சுயதர்மத்தில்
நிலைத்து விடுகிறேன், சரீரத்தி-ருந்து விடுபட்டு விடுகிறேன்
என்று ஆத்மா கூறுகிறது. ஆனால் காரியங்கள் செய்தே ஆக வேண்டும்.
அமைதியாக எவ்வளவு காலம் அமர்ந்திருப் பீர்கள்! நான் சாந்தி
தேசத்தில் வசிக்கக் கூடியவன் என்று ஆத்மா கூறுகிறது. இங்கு
இந்த சரீரத்தில் வருவதன் மூலம் நான் வாய் மூலம் பேசுபவனாக
ஆகிறேன். உள்ளுக்குள் இருக்கும் ஆத்மா அழிவற்றது, சரீரம் அழியக்
கூடியது. ஆத்மா வானது தூய்மையாக மற்றும் தூய்மையற்றதாகவும்
ஆகிறது. சத்யுகத்தில் 5 தத்துவங்களும் சதோ பிரதானமாக இருக்கும்.
இங்கு 5 தத்துவங்களும் தமோ பிரதானமாக இருக்கிறது. தங்கத்தில்
கறை படிவதன் மூலம் தங்கம் அசுத்தமாக ஆகிவிடுகிறது, பிறகு அதை
சுத்தப் படுத்துவதற்கு நெருப்பில் இடுகின்றனர். இதற்குப் பெயரே
யோக அக்னியாகும். உலகில் பல வகையான ஹடயோகம் போன்றவைகளை கற்றுக்
கொடுக்கின்றனர். அது யோக அக்னி என்று கூறப்படுவது கிடையாது.
பாவங்கள் எரிந்து போய் விடுகின்றன. யோக முறைக்குத் தான் யோக
அக்னி எனப்படும். ஆத்மாவை தூய்மையற்றதி-ருந்து தூய்மை யாக
ஆக்கக் கூடியவர் பரமாத்மா ஆவார், தூய்மை யாக்குபவரே வாருங்கள்
என்ற அழைக்கின்றனர். நாடகப்படி அனைவரும் தூய்மை இழந்து தமோ
பிரதானமாக ஆகியே தீர வேண்டும். இது மரமாகும், இதற்கு விதையாக
இருப்பவர் மேலே இருக்கின்றார். தந்தை அழைக்கின்ற பொழுது புத்தி
மேலே சென்று விடுகிறது. அவரிடமிருந்து நீங்கள் ஆஸ்தி அடைந்து
கொண்டிருக் கிறீர்கள். அவர் இப்பொழுது கீழே வந்திருக்கின்றார்.
நான் வர வேண்டியிருக்கிறது என்று கூறுகின்றார். மனித
சிருஷ்டியின் மரமானது பலதரப்பட்ட தர்மங்கள் உடையதாகும், அவைகள்
இப்பொழுது தமோ பிரதானமாக, தூய்மையின்றி இருக்கிறது. இற்றுப்
போன நிலையை அடைந்திருக்கிறது. தந்தை அமர்ந்து குழந்தைகளுக்கு
புரிய வைக்கின்றார். சத்யுகத்தில் தேவதைகள், க-யுகத்தில்
அசுரர்கள் உள்ளனர். மற்றபடி அசுரர்கள் மற்றும் தேவதைகளுக்கு
யுத்தம் நடைபெறவில்லை. நீங்கள் இந்த அசுர 5 விகாரங்களின் மீது
யோக பலத்தின் மூலம் வெற்றி அடைகிறீர்கள். மற்றபடி இம்சைக்கான
யுத்தத்தின் விசயம் கிடையாது. நீங்கள் எந்த வகையான இம்சையும்
செய்வது கிடையாது. ஒருபொழுதும் யாரையும் தொடுவும் மாட்டீர்கள்.
நீங்கள் இரட்டை அகிம்சாதாரிகள் ஆவீர்கள். காமத்தில் செல்வது
என்பது மிகப் பெரிய பாவம் ஆகும். காம விகாரம் முதல், இடை, கடை
வரையிலும் துக்கம் கொடுக்கிறது என்று தந்தை கூறுகின்றார்.
விகாரத்தில் செல்லக் கூடாது. நீங்கள் அனைத்து குணங்களும்
நிறைந்தவர்கள்....... என்று தேவதைகள் முன் சென்று மகிமை
பாடுக்கின்றனர் அல்லவா! நாம் தூய்மையற்றவர்களாகிவிட்டோம் என்று
ஆத்மா கூறுகிறது. அதனால் தான் தூய்மையாக்குபவரே வாருங்கள் என்று
அழைக் கின்றனர். எப்பொழுது தூய்மையாக இருந்தீர்களோ அப்பொழுது
யாரையும் அழைக்கவே யில்லை. அது சொர்க்கம் என்று கூறப்படுகிறது.
பதீத பாவன சீதாராம் ...... என்று இங்கு சாது, சந்நியாசிகள்
எவ்வளவு ஆர்வத்துடன் பாடுகின்றனர்! இந்த நேரத்தில் முழு உலகமும்
தூய்மையின்றி இருக்கிறது, இதற்கு யாரையும் குற்றம் கூற முடியாது
என்று தந்தை கூறுகின்றார். இந்த நாடகம் ஏற்கெனவே
உருவாக்கப்பட்டதாகும். நான் வரும் வரை இவர் (பிரம்மா பாபா) தனது
நடிப்பு நடித்தே ஆக வேண்டும். ஞானம் மற்றும் பக்தி, பிறகு
வைராக்கியம். பழைய உலகின் மீது வைராக்கியம். இது எல்லையற்ற
வைராக்கியன்ôகும். அவர்களுடையது எல்லைக்குட்பட்ட
வைராக்கியமாகும்.
இந்த பழைய உலகம் இப்பொழுது அழியப் போகிறது என்பதை நீங்கள்
அறிவீர்கள். புது வீடு கட்டுகிறீர்கள் எனில் பழைய வீட்டின் மீது
வைராக்கியம் ஏற்பட்டு விடுகிறது அல்லவா! இப்பொழுது உங்களுக்கு
சொர்க்கம் என்ற வீட்டை கட்டிக் கொடுக்கிறேன் என்று எல்லையற்ற
தந்தை கூறுகின்றார். இப்பொழுது பழைய உலகில் இருந்து கொண்டே புது
உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். பழைய சுடுகாடு உலகை நாம்
ஃபரிஸ்தாக் களின் உலகமாக ஆக்குவோம். இதே யமுனை நதிக்கரையில்
தான் இருக்கும். இங்கு மாளிகை கட்டுவோம். இதே டில்-, யமுனை நதி
போன்றவைகள் இருக்கும், மற்றபடி பாண்டவர்களின் கோட்டை இருந்ததாக
காண்பிக்கப்படுவது அனைத்தும் கட்டுக் கதைகளாகும். நாடகத்தின்
திட்டப்படி மீண்டும் இதுவே உருவாகும். எவ்வாறு நீங்கள் யாகம்,
தவம், தானம் போன்றவைகள் செய்து வந்தீர்களோ, மீண்டும் செய்ய
வேண்டி யிருக்கும். முத-ல் நீங்கள் சிவ பக்தி செய்தீர்கள்,
முதல் தரமான கோயில்களை உருவாக் கினீர்கள். அது கலப்பட பக்தி
என்று கூறப்படுகிறது. இப்பொழுது நீங்கள் ஞான மார்க்கத்தில்
இருக்கிறீர்கள். இது கலப்பட மற்ற ஞானமாகும். ஒரே ஒரு சிவபாபா
கூறுவதை மட்டுமே நீங்கள் கேட்கிறீர்கள். அவரைத் தான் முதன் முத-ல்
நீங்கள் பக்தி செய்தீர்கள், அந்த நேரத்தில் வேறு எந்த தர்மமும்
கிடையாது. நீங்கள் மட்டுமே இருந்தீர்கள். நீங்கள் மிகுந்த
சுகத்துடன் இருந்தீர்கள். தேவதா தர்மம் மிகுந்த சுகம் கொடுக்கக்
கூடியது ஆகும். பெயர் கூறியதும் வாய் இனிப்பாகி விடுகிறது. ஆக
நீங்கள் ஒரே ஒரு தந்தையிடம் மட்டுமே ஞானம் கேட்கிறீர்கள். வேறு
யார் கூறுவதையும் கேட்காதீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இது
உங்களது கலப்பட மற்ற ஞானமாகும். எல்லையற்ற தந்தை
யினுடையவர்களாக நீங்கள் ஆகிவிட்டீர்கள். தந்தையிடமிருந்து தான்
வரிசைக்கிரமமான முயற்சியின் படி ஆஸ்தி கிடைக்கும். தந்தையும்
சிறிது காலத்திற்காக சாகாரத் திற்கு (சரீரத்தில் பிரவேசமாகி)
வந்திருக்கின்றார். நான் தான் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம்
கொடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறுகின்றார். எனக்கென்று
நிரந்தர சரீரம் கிடையாது. நான் இவர் சரீரத்தில் பிரவேசம்
செய்கிறேன். சிவஜெயந்தி ஏற்பட்டவுடன் கீதா ஜெயந்தி ஏற்பட்டு
விடுகிறது. அதி-ருந்தே ஞானம் ஆரம்பமாகி விடுகிறது. இந்த
ஆன்மீகக் கல்வியை பரம் ஆத்மா தான் உங்களுக்குக் கொடுத்துக்
கொண்டிருக்கின்றார். தண்ணீருக்கான விசயம் கிடையாது. தண்ணீரை
ஞானம் என்ற கூறுவது கிடையாது. ஞானத்தின் மூலம் தான் தூய்மையாக
ஆவீர்கள், தண்ணீரினால் தூய்மை ஆக முடியாது. நதிகள் முழு
உலகிலும் இருக்கவே செய்கிறது. இங்கு ஞானக் கடலான தந்தை
வருகின்றார், இவர் உட-ல் பிரவேசம் செய்து ஞானம் கூறுகின்றார்.
இங்கு யாராவது இறந்து விட்டால் வாயில் கங்கை நீரை ஊற்றுகின்றனர்.
இந்த நீர் தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்கக் கூடியது, ஆகையால்
சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள் என்ற நினைக்கின்றனர்.
இங்கும் கௌமுக் செல் கின்றனர். உண்மையில் நீங்கள் தான்
சைத்தன்ய கௌமுக் ஆக இருக்கின்றீர்கள். உங்களது வாயில் ஞான
அமிர்தம் வெளிப்படுகிறது. பசுவிடமிருந்து பால் கிடைக்குமே தவிர
தண்ணீருக்கான விசயம் கிடையாது. இதுவெல்லாம் இப்பொழுது
உங்களுக்கு தெரிய வருகிறது. நாடகத்தில் ஒரே ஒரு முறை நடந்து
விட்டால் அது மீண்டும் 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு இதே போன்று
நடக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதை தந்தை அமர்ந்து புரிய
வைக்கின்றார், அவர் தான் அனைவருக்கும் சத்கதி கொடுக்கும்
வள்ளலாக இருக்கின்றார். இப்பொழுது அனைவரும் துர்கதியில்
இருக்கின்றனர். இராவணனை ஏன் எரிக்கிறோம்? என்பதை முன் நீங்கள்
அறியாமல் இருந்தீர்கள். எல்லை யற்ற தசரா ஏற்பட வேண்டும் என்பதை
இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். முழு உலகிலும் இராவண
இராஜ்யம் நடைபெறுகிறது அல்லவா! இந்த முழு உலகமும் இலங்கை ஆகும்.
இராவணன் எல்லைக் குட்பட்டு இருப்பது கிடையாது. இராவணனின்
இராஜ்யம் முழு உலகிலும் இருக்கிறது. பக்தியும் அரைக்
கல்பத்திற்கு நடைபெறுகிறது. முத-ல் கலப்படமற்ற பக்தி இருந்தது,
பிறகு கலப்பட பக்தி ஆரம்பமாகி விடுகிறது. தசரா, ரக்ஷாபந்தன்
போன்ற அனைத்தும் இப்போதைய திருவிழாக்களாகும். சிவஜெயந்திக்குப்
பிறகு ஏற்படுவது கிருஷ்ண ஜெயந்தி ஆகும். இப்பொழுது கிருஷ்ணபுரி
ஸ்தாபனை ஆகிறது. இன்று கம்சபுரியில் இருக்கிறீர்கள், நாளை
கிருஷ்ணபுரியில் இருப்பீர்கள். இங்கு கிருஷ்ணர் இருக்க முடியாது.
கிருஷ்ணர் பிறப்பு எடுப்பதே சத்யுகத்தில். அவர் தான் முதல்
இளவரசர். படிப்பதற்கு பள்ளிக்குச் செல்வார், பெரியவராக ஆகின்ற
பொழுது சிம்மாசனத்திற்கு எஜமானராக ஆகின்றார். மற்றபடி ராஸ்லீலை
(நடனம்) போன்றவைகள் அவர்கள் தங்களுக்குள் குஷியாக கொண்டாடுவர்.
கிருஷ்ணர் அமர்ந்து யாருக்காவது ஞானம் கூறினார் என்பது எப்படி
இருக்க முடியும்? முழு மகிமையும் ஒரு சிவபாபாவிற்குத் தான்,
அவர் தான் பதீதமானவர்களை தூய்மையாக ஆக்குகின்றார். நீங்கள்
பெரிய ஆபிஸர்களுக்கு புரிய வைக்கும் பொழுது நீங்கள் சரியாகத்
தான் கூறுகிறீர்கள் என்று கூறுவர். ஆனால் அவர்களால்
மற்றவர்களுக்கு கூற முடியாது. அவர்கள் கூறுவதை யாரும் கேட்க
மாட்டார்கள். பி.கு வாக ஆகிவிட்டால் இவருக்கு மந்திரித்து
விட்டார்கள் என்று அனைவரும் கூறுவர். பி.கு என்ற பெயர் கேட்டாலே
போதும், அவ்வளவு தான். இவர்கள் மாயாஜாலம் செய்யக் கூடியவர்கள்
என்று நினைக்கின்றனர். யாருக்காவது சிறிது ஞானம் கொடுத்தால்,
இவர்கள் பி.கு வின் மாயாஜாலத்தை காண்பிக்கின்றனர் என்று
கூறிவிடுகின்றனர். இவர்கள் தங்களது தாதாவைத் தவிர வேறு யாரையும்
ஏற்றுக் கொள்வதே கிடையாது. பக்தி போன்ற எதுவும் செய்வது
கிடையாது. பக்தி செய்யாதீர்கள் என்று யாரையும் தடை போடாதீர்கள்.
தானாகவே விட்டு விடுவார்கள். நீங்கள் பக்தியை விட்டு
விடுகிறீர்கள், விகாரங்களை விட்டு விடுகிறீர்கள், இதற்குத் தான்
பிரச்சனைகள் ஏற்படுகிறது. நான் ருத்ர ஞான யக்ஞத்தை படைக்கிறேன்,
இதில் அசுர வம்சத்தினர்களின் தடைகள் ஏற்படும் என்பதை பாபா
கூறியிருக்கின்றார். இது சிவபாபாவின் எல்லையற்ற யக்ஞமாகும்,
இதில் மனிதனி-ருந்து தேவதைகளாக ஆகிறீர்கள். ஞான யக்ஞத்தி-ருந்து
விநாச நெருப்பு உருவானது என்றும் பாடப்பட்டிருக்கிறது.
எப்பொழுது பழைய உலகம் விநாசம் ஆகிறதோ அப்பொழுது தான் நீங்கள்
புது உலகில் இராஜ்யம் செய்வீர்கள். அமைதி வேண்டும் என்று நாம்
கூறுகிறோம், ஆனால் விநாசம் ஏற்பட வேண்டும் என்று இந்த பி.கு
கூறுகின்றனர் என்று மனிதர்கள் கூறுவர். முழு பழைய உலகமும் இந்த
ஞான யக்ஞத்தில் சுவாஹா ஆகிவிடும். இந்த பழைய உலகம் எரியப்
போகிறது. இயற்கையின் சீற்றங்களும் ஏற்படும். விநாசம் ஏற்பட்டே
ஆக வேண்டும். கடுகு போன்று அனைத்து மனிதர்களும் எரிந்து அழிந்து
விடுவர். மற்றபடி ஆத்மாக்கள் தப்பித்து விடும். ஆத்மா அழிவற்றது
என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது இந்த
எல்லையற்ற ஹோ- ஏற்பட வேண்டும். இதில் சரீரம் அனைத்தும் அழிந்து
விடும். மற்றபடி ஆத்மாக்கள் தூய்மையாக ஆகி சென்று விடும்.
நெருப்பினால் பொருட்கள் தூய்மையாகி விடும் அல்லவா! தூய்மைக்காக
ஹோமம் செய்கின்றனர். அவை அனைத்தும் பௌதீக விசயங்களாகும்.
இப்பொழுது முழு உலகமும் சுவாஹா ஆகிவிடும். விநாசத்திற்கு முன்பு
அவசியம் ஸ்தாபனை ஆகிவிட வேண்டும். யாருக்கு கூறினாலும் முத-ல்
ஸ்தாபனை பிறகு விநாசம் என்று கூறுங்கள். பிரம்மாவின் மூலம்
ஸ்தாபனை. பிரஜாபிதா பிரபலமானவர் அல்லவா! ஆதிதேவன் மற்றும்
ஆதிதேவி. ஜெகதம்பாவிற்கும் இலட்சக் கணக்கான கோயில்கள் உள்ளன.
எவ்வளவு திருவிழாக்கள் நடைபெறுகின்றன! நீங்கள் ஜெகதம்பாவின்
குழந்தை களாக இருக்கின்றீர்கள், ஞான ஞானேஸ்வரிகளாக பிறகு இராஜ
இராஜேஸ்வரிகளாக ஆவீர்கள். நீங்கள் மிகுந்த செல்வந்தர் களாக
ஆகிறீர்கள், பிறகு பக்தி மார்க்கத்தில் தீபாவளியன்று
லெட்சுமியிடம் அழியக் கூடிய செல்வம் கேட்கின்றீர்கள். இங்கு
அனைத்தும் கிடைத்து விடுகிறது. நீண்ட ஆயுளுடன் இருங்கள், (ஆயுஸ்வான்
பவ), புத்திரவான் பவ! நமது ஆயுள் 150 ஆண்டுகள் இருக்கும் என்பதை
நீங்கள் அறிவீர்கள். எந்த அளவிற்கு யோகா செய்வீர்களோ அந்த
அளவிற்கு ஆயுள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று தந்தை
கூறுகின்றார். நீங்கள் யோகேஸ் வரனிடம் தொடர்பு வைத்து
யோகேஸ்வரனாக ஆகின்றீர்கள். மனிதர்கள் போகேஸ்வரர்களாக
இருக்கின்றனர். விகாரிகள் மற்றும் அசுத்தமான ஆடைகளை துவைக்கக்
கூடியவர் ....... என்றும் கூறுகின்றனர். என்னை ஆடைகளை
சுத்தப்படுத்தி வெண்மையாக்குபவர் என்றும் கூறுகிறீர்கள். நான்
வந்து அனைத்து ஆத்மாக் களையும் சுத்தம் செய்கிறேன், பிறகு
சரீரமும் சுத்தமானதாக கிடைக்கும். நான் விநாடியில் முழு
உலகத்தின் ஆடையை சுத்தப்படுத்தி விடுகிறேன் என்று தந்தை
கூறுகின்றார். மன்மனாபவ என்று இருப்பதன் மூலம் ஆத்மா மற்றும்
சரீரம் தூய்மையானதாக ஆகிவிடும். சூ மந்திரம் அல்லவா! விநாடியில்
ஜீவன்முக்தி. எவ்வளவு எளிய உபாயமாகும்! தந்தையை நினைவு
செய்யுங்கள், தூய்மையாக ஆகிவிடுவீர்கள். நடந்தாலும், காரியங்கள்
செய்தாலும் தந்தையை மட்டுமே நினைவு செய்யுங்கள், வேறு எந்த
கஷ்டமும் உங்களுக்கு கொடுப்பது கிடையாது. நினைவு செய்தால்
போதும். இப்பொழுது உங்களுக்கு ஒவ்வொரு விநாடியும் முன்னேறும்
கலை ஏற்படுகிறது.
குழந்தைகளாகிய உங்களுக்கு நான் சேவகனாக ஆகி வந்திருக்கிறேன்
என்று தந்தை கூறுகின்றார். தூய்மையாக்குபவரே வாருங்கள், வந்து
எம்மை தூய்மை ஆக்குங்கள் என்று தான் நீங்கள் அழைத்தீர்கள். ஆக
குழந்தைகளே நான் வந்திருக்கிறேன் எனில் சேவகனாக ஆகிவிடுகிறது
அல்லவா! எப்பொழுது நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்களாக
ஆகிவிடுகிறீர் களோ அப்பொழுது அதிகம் கதறுகிறீர்கள். இப்பொழுது
நான் வந்திருக்கிறேன். கல்ப கல்பத்திற்கும் நான் வந்து
குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த மந்திரம் கொடுக் கிறேன். என்னை
நினைவு செய்தால் நீங்கள் தூய்மையாகிவிடுவீர்கள். மன்மனாபவ
என்பதன் பொருள் - மன்மனாபவ, மத்தியாஜீ பவ என்றால் தந்தையை
நினைவு செய்யுங்கள், விஷ்ணுபுரிக்கு எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள்
என்பதாகும். விஷ்ணுபுரியின் இராஜ்யம் அடைவதற்காகத் தான் நீங்கள்
வந்திருக்கிறீர்கள். இராவணபுரிக்குப் பின்பு விஷ்ணுபுரி ஆகும்.
கம்சபுரிக்குப் பின்பு கிருஷ்ணபுரி. எவ்வளவு எளிதாக புரிய
வைக்கப்படுகிறது! இந்த பழைய உலகின் மீதிருக்கும் பற்றுதலை
நீக்கி விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்பொழுது நாம் 84
பிறவிகள் எடுத்து முடித்து விட்டோம். இந்த பழைய ஆடையை நீக்கி
நாம் புது உலகிற்குச் செல்வோம். நினைவின் மூலம் தான் உங்களது
பாவங்கள் அழிந்து கொண்டே செல்லும். அந்த அளவிற்கு தைரியம்
வைக்க வேண்டும். அவர்கள் பிரம்மத்தை நினைவு செய்கின்றனர்.
பிரம்மத்தில் ஐக்கியம் ஆகிவிடுவோம் என்று நினைக் கின்றனர்.
ஆனால் பிரம்மம் என்பது வசிக்கும் இடமாகும். அவர்கள் தபஸ்யாவில்
அமர்ந்து விடுகின்றனர். அவ்வளவு தான், நாம் பிரம்மத்திற்கு
சென்று ஐக்கியமாகி விடுவோம். ஆனால் யாரும் திரும்பிச் செல்ல
முடியாது. பிரம்மத்தை நினைவு செய்வதால் பாவனமாக ஆகிவிட முடியாது.
ஒருவர் கூட செல்ல முடியாது. மறுபிறப்பு எடுத்தே ஆக வேண்டும்.
தந்தை வந்து உண்மையைக் கூறுகின்றார். சத்திய கண்டத்தை சத்திய
பாபா ஸ்தாபனை செய்கின்றார். இராவணன் வந்து பொய்யான உலகை
உருவாக்கிறது. இப்பொழுது சங்கம யுகமாகும். இதில் நீங்கள்
உத்தமத்திலும் உத்தமமானவர்களாக ஆகிறீர்கள். அதனால் தான் இதற்கு
புருஷோத்தம் என்று கூறப்படுகிறது. நீங்கள் சோழியி-ருந்து வைரம்
போன்று ஆகிறீர்கள். இது எல்லையற்ற விசயமாகும். உத்தமத்திலும்
உத்தமமான மனிதர்கள் தேவதைகள் ஆவர். ஆக நீங்கள் இப்பொழுது
புருஷோத்தம சங்கமயுகத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களை
புருஷோத்தமர்களாக ஆக்கக் கூடியவர் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை
ஆவார். உயர்ந்ததிலும் உயர்ந்த சொர்க்கத்தின் ஆஸ்தியை
கொடுக்கின்றார், பிறகு நீங்கள் ஏன் அவரை மறக்கின்றீர்கள்? என்னை
நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். பாபா, உங்களது
கருணையிருந்தால் நாங்கள் உங்களை மறக்கவே மாட்டோம் என்று
குழந்தைகள் கூறுகின்றீர்கள். இது எப்படி சாத்தியமாகும்?
பாபாவின் கட்டளைப்படி நடக்க வேண்டும் அல்லவா! என்னை நினைவு
செய்தால் நீங்கள் தூய்மையானவர்களாக ஆகிவிடுவீர்கள் என்று தந்தை
கூறுகின்றார். வழிப்படி நடந்து பாருங்களேன்! மற்றபடி ஆசிர்வாதம்
ஏன் செய்ய வேண்டும்? நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தையின் ஒவ்வொரு கட்டளைப் படியும் நடந்து தன்னை
சோழியி-ருந்து வைரமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒரு தந்தையின்
நினைவி-ருந்து தனது ஆடையை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
2) இப்பொழுது புது வீட்டிற்குச் செல்ல வேண்டும், ஆகையால் இந்த
பழைய வீட்டின் மீது எல்லையற்ற வைராக்கியம் வைக்க வேண்டும்.
இந்த பழைய சுடுகாட்டை நாம் பரிஸ்தாக்களின் உலகமாக ஆக்குவோம்
என்ற போதை இருக்க வேண்டும்.
வரதானம்:
சங்கமயுகத்தின் சிரேஷ்ட சித்திரத்தை எதிரில் வைத்து எதிர்கால
தரிசனம் செய்யக் கூடிய திரிகாலதர்சி ஆகுக.
எதிர்காலத்திற்கு முன்பாக அனைத்து பிராப்திகளின் அனுபவம்
சங்கமயுக பிராமணர்களாகிய நீங்கள் செய்கிறீர்கள். இப்போது இரட்டை
கிரீடம், சிம்மாசனம், திலகம், அனைத்திலும் அதிகாரி
மூர்த்திகளாக ஆகிறீர்கள். எதிர்காலத்தில் வாயில் தங்க ஸ்பூனுடன்
இருப்பீர்கள். ஆனாலும் இப்போது வைரம் போன்று ஆகிவிடுகிறீர்கள்.
வாழ்க்கையே வைரமாக ஆகிவிடுகிறது. அங்கு தங்கம், வைரத்தின் ஊஞ்ச-ல்
ஆடுவீர்கள். இங்கு பாப்தாதாவின் மடியில், அதீந்திரிய சுகத்தின்
ஊஞ்ச-ல் ஆடுகிறீர்கள். ஆக திரிகாலதர்சி ஆகி நிகழ் காலம் மற்றும்
எதிர்கால சிரேஷ்ட சித்திரத்தைப் பார்த்து அனைத்து பிராப்திகளின்
அனுபவம் செய்யுங்கள்.
சுலோகன்:
கர்மா மற்றும் யோகா - இதன் சமநிலை தான் பரமாத்ம
ஆசிர்வாதத்திற்கு அதிகாரியாக ஆக்கி விடுகிறது.