ஓம் சாந்தி. நிராகார (சரீரமற்ற தந்தை (சாகார) சரீரமின்றி எந்தக் காரியமும் செய்ய முடியாது. நடிப்பை நடிக்க முடியாது. ஆன்மீகத் தந்தை வந்து பிரம்மாவின் மூலம் ஆன்மீகக் குழந்தை களுக்குப் புரிய வைக்கிறார். யோக பலத்தின் மூலமே குழந்தைகள் சதோபிரதானமாக வேண்டும், பிறகு சதோபிரதான உலகின் எஜமான் ஆக வேண்டும். இது குழந்தைகளின் புத்தியில் உள்ளது. ஒவ்வொரு கல்பமும் தந்தை வந்து இராஜயோகம் கற்பிக்கிறார். பிரம்மாவின் மூலம் வந்து ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார். அதாவது மனிதர்களை தேவதைகளாக ஆக்குகிறார். தேவி தேவதைகளாக இருந்த மனிதர்கள்தான் இப்போது மாறி சூத்திரர்களாக தூய்மையற்றவர்களாக ஆகிவிட்டார்கள். பாரதம் பாரஸ்புரியாக (தங்கம் போன்று) இருந்த போது தூய்மை-சுகம்-அமைதி இருந்தது. இது 5 ஆயிரம் வருடங்களின் கதையாகும். துல்லியமான கணக்கு வழக்கை தந்தை வந்து புரிய வைக்கிறார். அவரை விடவும் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. சிருஷ்டி அல்லது மரம், அதனை கல்ப விருட்சம் என சொல்கிறோம், அதனுடைய முதல், இடை, கடைசியின் ரகசியத்தை தந்தைதான் சொல்ல முடியும். பாரதத்தி-ருந்த தேவி தேவதா தர்மம் இப்போது மறைந்து விட்டுள்ளது. தேவி தேவதா தர்மம் இப்போது இல்லை. தேவதை களின் படங்கள் கண்டிப்பாக உள்ளன. இதனை பாரதவாசிகள் அறிவார்கள். சத்யுகத்தில் லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. சாஸ்திரங்களில் இந்த ஒரு தவறைச் செய்து விட்டனர், கிருஷ்ணரை துவாபரத்திற்கு கொண்டு சென்று விட்டனர் தந்தைதான் வந்து மறந்துவிட்ட வர் களுக்கு முழுமையான வழியைச் சொல்கிறார். வழி காட்டுபவர் வரும்போது அனைத்து ஆத்மாக் களும் முக்தி தாமத்திற்குச் சென்று விடுகின்றனர், ஆகையால் அவர் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் எனப்படுகிறார். படைப்பவர் ஒருவரே இருப்பார். ஒரே சிருஷ்டிதான் உள்ளது. உலகின் வரலாறு புவியியல் ஒன்றுதான். அது மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும். சத்யுகம், திரேதா யுகம், துவாபர, கலியுகம், பிறகு வருவது சங்கமயுகமாகும். கலியுகத்தில், இருப்பவர்கள் தூய்மையற்றவர்கள், சத்யுகத்தில் இருப்பவர்கள் தூய்மையானவர்கள். சத்யுகம் வரும்போது கண்டிப்பாக கலியுகம் வினாசமாகிவிடும். வினாசத்திற்கு முன்பு ஸ்தாபனை ஆகிறது. சத்யுகத்தில் ஸ்தாபனை ஆகாது. தூய்மையற்ற உலகமாக இருக்கும்போது பகவான் வருவார். சத்யுகம் தூய்மையான உலகமாகத்தான் இருக்கும். தூய்மையற்ற உலகை தூய்மையான உலகமாக ஆக்குவதற்காக பகவான் வரவேண்டியுள்ளது. இப்போது தந்தை சகஜத்திலும் சகஜமான யுக்தி சொல்கிறார். தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விடுத்து ஆத்ம அபிமானி ஆகி தந்தையை நினைவு செய்யுங்கள். யாரோ ஒருவர் பதீத பாவனராக இருக்கின்றார் அல்லவா. பக்தர்களுக்கு பலனைக் கொடுப்பவர் ஒரு பகவானே ஆவார். பக்தர்களுக்கு ஞானத்தைக் கொடுக் கிறார். தூய்மையற்ற உலகை ஞானக்கடல்தான் தூய்மைபடுத்துவதற்காக வருகிறார். யோகத்தின் மூலம் தூய்மையடைகிறீர்கள். தந்தையைத் தவிர யாரும் தூய்மையாக்க முடியாது. பிறருக்கு புரிய வைப்பதற்காக இந்த விஷயங்கள் அனைத்தும் புத்தியில் பதிய வைக்கப்படுகிறது. வீடுகள் தோறும் செய்தி கொடுக்க வேண்டும். பகவான் வந்துள்ளார் என (நேரிடையாக) சொல்லக்கூடாது. மிகவும் யுக்தியுடன் புரியவைக்க வேண்டும். அவர் தந்தை அல்லவா என சொல்லுங்கள். ஒருவர் லௌகிக தந்தை, மற்றவர் பரலௌகிக தந்தை. துக்கத்தின் சமயத்தில் பரலௌகிக தந்தை யைத்தான் நினைவு செய்கின்றனர். சுகதாமத்தில் யாரும் நினைவு செய்வதில்லை. சத்யுகத்தில் லட்சுமி நாராயணரின் இராஜ்யத்தில் சுகமே சுகம்தான் இருந்தது. தூய்மை, அமைதி, செல்வ வளம் அனைத்தும் நிறைந்திருந்தது. தந்தையின் ஆஸ்தி கிடைத்து விட்டது, பிறகு ஏன் கூப்பிடப் போகிறீர்கள்? நமக்கு சுகம் நிறைந்துள்ளது என ஆத்மாவுக்குத் தெரியும். அங்கே சுகமே சுகம் நிறைந்திருக்கும் என யார் வேண்டுமானாலும் சொல்வார்கள். தந்தை துக்கத்திற்காக சிருஷ்டியைப் படைக்கவில்லை. இது உருவாகி உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். யாருடைய நடிப்பு கடைசி காலத்தில் இருக்குமோ, 2 முதல் 4 பிறவிகள் வரை எடுப்பார்களோ அவர்கள் கண்டிப்பாக மற்ற சமயத்தில் அமைதியில் சாந்திதாமத்தில் இருப்பார்கள். மற்றபடி நாடகத்தின் விளையாட்டி லிருந்தே வெளியேறி விடுவார்கள் என்பது நடக்காத விஷயம். விளையாட்டில் அனைவருமே வரவேண்டியிருக்கும். ஒன்றிரண்டு பிறவிகள் கிடைக்கும். ஆக, மற்ற சமயத்தில் மோட்சத்தில் (முக்தியில்) இருப்பது போல்தான். ஆத்மா நடிகனாக உள்ளது அல்லவா. ஒரு ஆத்மாவுக்கு உயர்ந்த நடிப்பு கிடைத்திருக்கிறது, ஒருவருக்கு குறைவானது கிடைத்திருக்கும். இதுவும் கூட இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், ஈஸ்வரனின் அடி முடி யாராலும் காண முடியாது என பாடப்பட்டுள்ளது. தந்தைதான் வந்து சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் எல்லையைக் காட்டுகிறார். படைப்பவர் தாமே வரும் வரை படைப்பவர் மற்றும் படைப்பைப் பற்றி அறிய முடியாது. தந்தைதான் வந்து சொல்கிறார். நான் சாதாரண உடலில் பிரவேசம் செய்கிறேன். நான் யாருடைய சரீரத்தில் பிரவேசம் ஆகியிருக்கிறேனோ அவருக்கு தம் பிறவிகள் குறித்து தெரியாது. அவருக்கு 84 பிறவிகளின் கதையைக் கூறுகிறேன். யாருடைய நடிப்பும் மாற முடியாது. இது உருவாகி உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். இதுவும் கூட யாருடைய புத்தியிலும் பதிவ தில்லை. தூய்மையடைந்து புரிந்து கொள்ளும்போதுதான் புத்தியில் பதியும். நல்ல விதமாக புரிந்து கொள்வதற்காகவே 7 நாட்களின் பட்டியாகும். பாகவதம் முதலானவற்றிற்கும் கூட 7 நாட்கள் வைக்கின்றனர். இங்கும் கூட புரிய வருகிறது - குறைந்தபட்சம் 7 நாட்கள் இல்லாமல் யாரும் புரிந்து கொள்ள முடியாது. ஒரு சிலரோ நன்றாகப் புரிந்து கொள்கின்றனர். ஒரு சிலர் 7 நாட்கள் வந்து புரிந்து கொண்டாலும் எதுவும் புரிந்து கொள்வதில்லை. புத்தியில் பதிவதில்லை. நாங்கள் 7 நாட்கள் வந்தோம், எங்களுடைய புத்தியில் எதுவும் நிலைக்கவில்லை என சொல்லி விடுகின்றனர். உயர்பதவி பெறப்போவதில்லை என்றால் புத்தியில் நிலைக்காது. ஆனாலும் கூட நல்லது, அவர்களுக்கு நன்மை ஏற்பட்டுவிட்டது அல்லவா. பிரஜைகள் இப்படித்தான் உருவா கின்றனர். மற்றபடி இராஜ்ய பாக்கியம் பெறுவதில் குப்தமான முயற்சி தேவைப்படுகிறது. தந்தையை நினைவு செய்வதில்தான் பாவ கர்மங்கள் அழிந்து போகின்றன. இனி நீங்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் தந்தையின் வழி இதுவேயாகும். அன்பான பொருள் நினைவு செய்யப்படுகிறது அல்லவா. ஓ பதித பாவனா வாருங்கள் என பக்தி மார்க்கத்திலும் பாடுகின்றனர். இப்போது அவர் கிடைத்துள்ளார், என்னை நினைவு செய்தால் துரு நீங்கும் என சொல்கிறார். சகஜமாக இராஜ்யம் கிடைத்து விடாது அல்லவா. கொஞ்சமாவது முயற்சி தேவைப்படும் அல்லவா. நினைவில்தான் முயற்சி தேவைப்படுகிறது. நினைவின் யாத்திரையே முக்கியமான தாகும். மிகவும் நினைவு செய்பவர்கள் கர்மாதீத (கர்மங்களிலிருந்து விடுபட்ட முழுமையான) நிலையை அடைவார்கள். முழுமையாக நினைவு செய்யாவிட்டால் பாவ கர்மங்கள் அழியாது. யோகபலத்தின் மூலம்தான் விகர்மாஜீத் (பாவ கர்மங்களை வென்றவர்) ஆக வேண்டும். முன்பும் கூட யோகபலத்தின் மூலம்தான் வெற்றியடைந்தீர்கள். கலியுகத்தின் இறுதியில் யாருமே தூய்மையாக இல்லாதபோது லட்சுமி நாராயணர் எப்படி இவ்வளவு தூய்மையானவர்களாக ஆனார்கள்? கீதா ஞானத்தின் அத்தியாயம் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவா கிறது. சிவ பகவானுடைய மகா வாக்கியம், தவறுகள் ஏற்பட்டபடி இருக்கின்றன அல்லவா. தந்தைதான் வந்து தவறற்றதாக ஆக்குகிறார். பாரதத்தில் உள்ள அனைத்து சாஸ்திரங்களுமே பக்தி மார்க்கத்தினுடையவையாகும். நான் என்ன சொல்லியிருந்தேனோ அது யாருக்கும் தெரியாது என தந்தை சொல்கிறார். யாருக்கு சொல்லியிருந்தேனோ அவர்கள் பதவியடைந்தார் கள். 21 பிறவிகளின் பலனை அடந்த பிறகு ஞானம் மறைந்து விடுகிறது. நீங்கள்தான் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள். கல்பத்திற்கு முன்பு யார் கேட்டார்களோ அவர்களே வருவார்கள். இப்போது நாம் மனிதரிலிருந்து தேவதையாவதற்கான மரக்கன்றினை நடுகிறோம் என நீங்கள் அறிவீர்கள். இது தெய்வீக மரத்தின் கன்று. அவர்கள் பிறகு அந்த மரக்கன்றுகளை நட்டபடி இருக்கின்றனர். தந்தை வந்து வித்தியாசத்தைப் புரிய வைக்கிறார். தந்தை தெய்வீக மலர்களின் நாற்றினை நடுகிறார். அவர்களோ காட்டு மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் காட்டவும் செய்கிறீர்கள் - கௌரவர்கள் என்ன செய்ய விரும்பினர், பாண்டவர்கள் என்ன செய்ய விரும்பினார்கள். அவர்களுடைய திட்டம் என்ன, உங்களுடைய திட்டங்கள் என்ன. அவர்கள் உலகம் (மக்கள் தொகை) பெருகக் கூடாது என தம்முடைய திட்டங்களை உருவாக்குகின்றனர். மக்கள் தொகை அதிகரிக்காமல் இருக்க குடும்பக் கட்டுப்பாடு செய்வோம் என முயற்சி செய்தபடி இருக்கின்றனர். தந்தை மிகவும் நல்ல விசயத்தைக் கூறுகிறார், பல தர்மங்கள் வினாசமாகி விடும் மற்றும் ஒரே ஒரு தேவி தேவதா தர்மத்தின் குடும்பத்தை ஸ்தாபனை செய்கிறார். சத்யுகத்தில் ஒரே ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் குடும்பம் இருந்தது, மற்ற இவ்வளவு குடும்பங்கள் (பிரிவுகள்) இருக்கவில்லை. பாரதத்தில் எத்தனை குடும்பங்கள் இருக்கின்றன. குஜராத்தி குடும்பம், மஹாராஷ்ட்ர குடும்பம். . .உண்மையில் பாரதவாசிகளின் குடும்பம் ஒன்றுதான் இருக்க வேண்டும். பல குடும்பங்கள் இருந்தன என்றால் கண்டிப்பாக தங்களுக்குள் சச்சரவுகள் செய்த படிதான் இருப்பார்கள். பிறகு கலவரங்கள் ஏற்படும். குடும்பத்திற்குள்ளும் கலவரங்கள் ஏற்படும். கிறிஸ்தவர்களுக்கு தம்முடைய குடும்பம் இருப்பது போல, அவர்களுக்குள்ளும் கூட சண்டை ஏற்படுகிறது. இரண்டு சகோதரர்கள் தங்களுக்குள் ஒத்துபோவதில்லை. தண்ணீர் கூட பிரித்துக் கொடுக்கப்படுகிறது. சீக்கிய தர்மத்தவர்கள் புரிந்து கொள்கின்றனர் - நாம் நம்முடைய சீக்கிய தர்மத்தவர்களுக்கு அதிகமான சுகம் கொடுக்கலாம். பிரிவுகள் ஏற்படும்போது குழப்பங்கள், சச்சரவு கள் ஏற்படுகின்றன. இறுதிச் சமயத்தின் போது கலவரங்கள் முதலானவைகள் அனைத்தும் வந்து விடுகின்றன. தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கி விடுகின்றனர். வினாசம் ஏற்படத்தான் போகிறது. அணு ஆயுதங்களை அதிக அளவில் உருவாக்கியபடி இருக்கின்றனர். பெரிய யுத்தம் நடந்தபோது இரண்டு குண்டுகளைப் போட்டார்கள், இன்னும் நிறைய உருவாக்கியிருக்கிறார்கள். புரிந்து கொள்ளக் கூடிய விசயம் அல்லவா. இந்த யுத்தம் அதே மகாபாரத யுத்தமாகும் என நீங்கள் புரிய வைக்க வேண்டும். இந்த யுத்தத்தை நிறுத்தாவிட்டால் முழு உலகமும் தீப்பற்றி விடும் என பெரிய பெரிய மனிதர்கள் சொல்கின்றனர். தீ பிடிக்கத்தான் போகிறது, இதை நீங்கள் அறிவீர்கள். தந்தை ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். இராஜ யோகமே சத்யுகத்திற்கானதாகும். அந்த தேவி தேவதா தர்மம் இப்போது மறைந்து விட்டுள்ளது. சித்திரங்களும் உருவாகியுள்ளன. கல்பத்திற்கு முன்பு ஏற்பட்டது போல எந்த தடைகள் ஏற்பட உள்ளனவோ அவை ஏற்படும் என தந்தை சொல்கிறார். முன்கூட்டியே தெரிய வராது. பிறகு கல்பத்திற்கு முன்பு இப்படி ஆகியிருக்கும் என புரிந்து கொள்ளப்படுகிறது. இது உருவாகி உருவாக்கப்பட்டுள்ள நாடகமாகும். நாடகத்தில் நாம் கட்டுண்டிருக்கிறோம். நினைவின் யாத்திரையை மறந்துவிடக் கூடாது. இது பரீட்சை எனப்படுகிறது. நினைவின் யாத்திரையில் இருக்க முடிவதில்லை, களைத்து விடுகின்றனர். இரவுப் பிரயாணியே . . . என்ற பாடல் உள்ளதல்லவா. இதனுடைய அர்த்தத்தை யாரும் புரிந்து கொள்ள முடிவதில்லை. இது நினைவின் யாத்திரையாகும். இதன் மூலம் இரவு முடிந்து பகல் வந்து விடும். அரை கல்பம் முடிந்து பிறகு சுகம் தொடங்கி விடும். தந்தைதான் மன்மனாபவ என்பதன் அர்த்தத்தைப் புரிய வைத்தார். கீதையில் கிருஷ்ணரின் பெயரைப் போட்டதால் அந்த சக்தி அதில் இல்லை. இப்போது அனை வருக்கும் நன்மை ஏற்பட வேண்டியுள்ளது. அதாவது மனிதர்களாகிய நம் அனைவரின் நன்மையைச் செய்து கொண்டிருக்கிறார். குறிப்பாக பாரதம் பொதுவாக உலகம். ஸ்ரீமத்படி அனைவருக்கும் நாம் நன்மை செய்து கொண்டிருக்கிறோம். யார் கல்யாணகாரி (நன்மை செய்பவர்) ஆகின்றனரோ ஆஸ்தியும் கூட அவர்களுக்குக் கிடைக்கும். நினைவின் யாத்திரை யின்றி நன்மை ஏற்பட முடியாது.
அவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை என இப்போது உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத்திருந்தது. பாரதவாசிகள்தான் 84 பிறவிகள் எடுத்திருந்தனர். மறுபிறவிகளுக்கும் கணக்கு உள்ளது. யார் 84 பிறவிகள் எடுப்பது என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. தாங்களாகவே சுலோகங்களை உருவாக்கி சொல்லியபடி இருக்கின்றனர். ஒரே கீதைக்கு பல விளக்கங்களை எழுதி விடுகின்றனர். கீதையை விடவும் பாகவதத்தைப் பெரிதாக ஆக்கி விட்டனர். கீதையில் இருப்பது ஞானம். பாகவதத்தில் இருப்பது வாழ்க்கைக் கதை. உண்மையில் கீதை பெரிதாக இருக்க வேண்டும். தந்தை ஞானக்கடலாக இருக்கிறார், அவருடைய ஞானம் நடந்தபடி இருக்கும். அந்த கீதையையோ அரை மணி நேரத்தில் படித்து விடுகின்றனர். இப்போது நீங்கள் எழுதுகிறீர்கள், ஞானத்தை கேட்டபடியே இருக்கிறீர்கள். நாளுக்கு நாள் உங்களிடம் வந்தபடி இருப்பார்கள். மெல்ல மெல்ல வருவார்கள். இப்போதே பெரிய பெரிய ராஜாக்கள் வந்துவிட்டால் பிறகு தாமதம் இருக்காது. உடனடியாக ஓசை வெளிப்பட்டு விடும், ஆகையால் யுக்தியுடன் மெது மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இது குப்தமான ஞானமாகும். இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இராவணனுடனான உங்களுடைய யுத்தம் எப்படி இருக்கிறது. இதனை நீங்கள்தான் அறிவீர்கள், யாரும் தெரிந்து கொள்ள முடியாது. பகவானுடைய மகா வாக்கியம் - நீங்கள் சதோபிரதானமாக ஆவதற்காக என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்கள் அழிந்து விடும். தூய்மையடையுங்கள், அப்போதுதான் நான் உங்களை அழைத்துச் செல்வேன். அனைவருக்கும் ஜீவன் முக்தி கிடைக்க வேண்டும். இராவண இராஜ்யத்திலிருந்து முக்தி கிடைத்து விடும். சிவசக்தி பிரம்மா குமார்-குமாரிகளாகிய நாங்கள் சிரேஷ்டாச்சாரி (உயர்வான) உலகத்தை உருவாக்குவோம் என நீங்கள் எழுதிப் போடவும் செய்கிறீர்கள். பரமபிதா பரமாத்மாவின் ஸ்ரீமத்படி 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆனது போல. 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சிரேஷ்டாச்சாரி உலகம் இருந்தது. இதை புத்தியில் பதிய வைக்க வேண்டும். முக்கியமான விசயங்கள் புத்தியில் தாரணை ஆகும்போது நினைவின் யாத்திரையில் இருப்பீர்கள். கல்புத்தியாக உள்ளது அல்லவா. இன்னும் காலம் இருக்கிறது, பிறகு முயற்சி செய்து கொள்வோம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் மரணத்திற்கு நியமம் (கால வரையறை) கிடையாது. நாளை இறந்து போகலாம், நாளை, நாளை என்றபடி இறந்து போய்விடுவார்கள். முயற்சி செய்யவில்லை, ஆகையால் இன்னும் நிறைய வருடங்கள் உள்ளன என நினைக்காதீர்கள். கடைசியில் தீவிர முயற்சி செய்துவிடலாம் - இந்த சிந்தனை மேலும் கீழே விழ வைத்துவிடும். முடிந்த வரை முயற்சி செய்தபடி இருங்கள். ஸ்ரீமத்படி ஒவ்வொருவரும் தன் நன்மையை செய்து கொள்ள வேண்டும். தன்னைச் சோதிக்க வேண்டும். எவ்வளவு தந்தையை நினைவு செய்கிறேன், எவ்வளவு தந்தையின் சேவை செய்கிறேன்? நீங்கள் ஆன்மீக இறை சேவகர் அல்லவா. நீங்கள் ஆத்மாக்களை மீட்கக் கூடிய சேவை செய்கிறீர்கள். ஆத்மா தூய்மையற்ற நிலையிலிருந்து எப்படி தூய்மையடைவது என்பதற்கான யுக்திகளைச் சொல்கிறோம். உலகில் நல்ல மற்றும் கெட்ட மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர், ஒவ்வொருவருடைய நடிப்பும் அவரவருடையதாக உள்ளது. இது எல்லைக்கப் பாற்பட்ட விசயம். முக்கியமான கிளைகள் (தர்மங்கள்) மட்டுமே கணக்கிடப்படு கின்றன. மற்றபடி இலைகள் (பிரிவுகள்) நிறைய உள்ளன. குழந்தைகளே, முயற்சி செய்யுங்கள் என தந்தை புரிய வைத்தபடி இருக்கின்றார். அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுத்தீர்கள் என்றால் தந்தையுடன் புத்தியின் தொடர்பு ஏற்பட்டுவிடும். தூய்மையடைந்தீர்கள் என்றால் முக்திதாமத் திற்குச் சென்று விடுவீர்கள் என தந்தை அனைத்து குழந்தைகளுக்கும் சொல்கிறார். மகாபாரதச் சண்டையினால் என்ன ஆகும் என உலகினருக்குத் தெரியாது. இந்த ஞான யக்ஞம் படைக்கப் பட்டுள்ளது, ஏனெனில் புதிய உலகம் தேவை. நம்முடைய யக்ஞம் முடிவடைந்து விட்டால் அனைத்தும் இந்த யக்ஞத்தில் ஸ்வாஹா ஆகி விடும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இது உருவாகி உருவாக்கப்பட்ட நாடகம், ஆகையால் தடைகளைக் கண்டு பயப்படக் கூடாது. தடைகளில் நினைவின் யாத்திரையை மறந்து விடக் கூடாது. நினைவின் யாத்திரை ஒருபோதும் நின்று விடக்கூடாது என்பதில் கவனம் வைக்க வேண்டும்.
2. பரலௌகிக தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுத்தபடி தூய்மையடைவதற் கான யுக்திகளைக் கூற வேண்டும். தெய்வீக மரத்தின் கன்றினை நட வேண்டும்.