.
பாட்டு: அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்திருக்கிறேன் .........
ஓம்சாந்தி. இனிமையிலும் இனிய குழந்தைகள் பாட்டைக் கேட்டீர்கள். புதியவர்களும் கேட்டீர்கள், பழைய ஆத்மாக்களும் கேட்டீர்கள். இது பாடசாலை என்பதை இளைஞர்களும் (குமார்கள்) உணர்ந்திருக்கிறீர்கள். பாடசாலையில் ஏதாவது ஒரு அதிர்ஷ்டம் உருவாக்கப்படுகிறது. அங்கு பல வகையான அதிர்ஷ்டங்கள் இருக்கின்றன. சிலர் டாக்டர், சிலர் வக்கீல் ஆவதற்கான அதிர்ஷ்டத்தை உருவாக்குகின்றனர். அதிர்ஷ்டம் என்றால் இலக்கு இலட்சியம் ஆகும். அதிர்ஷ்டமின்றி பாடசாலை யில் எப்படி படிக்க முடியும்? இங்கு நாமும் அதிர்ஷ்டத்தை உருவாக்கி வந்திருக்கிறோம் என்பதை குழந்தைகளும் அறிவீர்கள். புது உலகிற்காக தங்களது இராஜ்ய பாக்கியம் அடைவதற்கு வந்திருக்கிறீர்கள். இந்த இராஜயோகம் புது உலகிற்கானதாகும். மற்றது பழைய உலகிற்கானதாகும். அவர்கள் பழைய உலகிற்கு வக்கீலாக, இன்ஜினியராக, டாக்டராக ஆகின்றனர். அவ்வாறு ஆகி ஆகி இப்பொழுது பழைய உலகின் ஆயுட்காலம் மிகக் குறைவாக ஆகிவிட்டது. அவைகள் அழிந்து போய்விடும். அந்த அதிர்ஷ்டமானது இந்த மரண உலகிற்கானதாகும், அதாவது இந்த பிறப்பிற் கானதாகும். உங்களது இந்த படிப்பு புது உலகிற்கானது. நீங்கள் புது உலகிற்கான அதிஷ்டத்தை உருவாக்கி வந்திருக்கிறீர்கள். புது உலகில் உங்களுக்கு இராஜ்ய பாக்கியம் கிடைக்கும். கற்றுக் கொடுப்பது யார்? எல்லையற்ற தந்தை, அவரிடமிருந்து தான் ஆஸ்தி அடைய வேண்டும். எவ்வாறு டாக்டரிடமிருந்து டாக்டருக்கான ஆஸ்தி (படிப்பறிவு, வருமானம்) கிடைக்கிறதோ, அது இந்த பிறவிக்கான ஆஸ்தியாகும். ஒன்று தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது, மற்றொரு ஆஸ்தி தனது படிப்பின் மூலம் கிடைக்கிறது. நல்லது, எப்பொழுது வயோதிகர்களாக ஆகிறீர்களோ அப்பொழுது குருவிடம் செல்கின்றனர். என்ன விரும்புகின்றனர்? எமக்கு சாந்திதாமம் செல்வதற்கான கல்வி கொடுங்கள், எமக்கு சத்கதி கொடுங்கள், இங்கிருந்து விடுவித்து சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறுகின்றனர். இப்பொழுது லௌகிக தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது, ஆசிரியரிடமிருந்தும் இந்த பிறவிக்கான ஆஸ்தி கிடைக்கிறது, மற்றபடி குருவிடமிருந்து எதுவும் கிடைப்பது கிடையாது. ஆசிரியரிடத்தில் படித்து ஏதாவது சிறிது ஆஸ்தி கிடைக்கிறது. ஆசிரியராக ஆகின்றனர், தையல் ஆசிரியராக ஆகின்றனர். ஏனெனில் வாழ வேண்டும் அல்லவா! தந்தையின் ஆஸ்தி இருந்தாலும் கூட நாமும் வருமானம் செய்ய வேண்டும் என்பதற்காக படிக்கின்றனர். குருவிடமிருந்து எந்த வருமானமும் ஏற்படுவது கிடையாது. ஆம், சிலர் கீதையை நன்றாகப் படித்து விட்டு பிறகு கீதையைப் பற்றி சொற்பொழிவு செய்கின்றனர். இவையனைத்தும் அல்பகால சுகத்திற்கானது. இப்பொழுது இந்த மரண உலகிற்கு சிறிது காலம் தான் இருக்கிறது. பழைய உலகம் அழிந்து போக வேண்டும். நாம் புது உலகின் அதிர்ஷ்டம் உருவாக்கி வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த பழைய உலகம் அழிந்து போக வேண்டும். தந்தையின் அல்லது தனது சொத்துக்கள் எல்லாம் அழிந்து போய் விடும். வெறும் கைகளுடன் தான் செல்வீர்கள். இப்பொழுது புது உலகிற்காக சம்பாதிக்க வேண்டும். பழைய உலக மனிதர்களால் அதை செய்விக்க முடியாது. புது உலகிற்கான வருமானம் செய்விக்கக் கூடியவர் சிவபாபா. இங்கு நீங்கள் புது உலகிற்கான அதிர்ஷ்டத்தை உருவாக்கி வந்திருக்கிறீர்கள். இந்த தந்தை தான் உங்களது தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார், குருவாகவும் இருக்கின்றார். மேலும் அவர் வருவதே சங்கமயுகத்தில். எதிர்கால வருமானம் செய்ய கற்றுக் கொடுக்கின்றார். இப்பொழுது இந்த பழைய உலகிற்கு சிறிது காலம் தான் இருக்கிறது. இதை உலக மனிதர்கள் அறியவில்லை. புது உலகம் மீண்டும் எப்பொழுது வரும்? இவர்கள் கட்டுக் கதை கூறுகின்றனர் என்ற பேசுகின்றனர். இவ்வாறு புரிந்திருப்பவர்களும் பலர் உள்ளனர். புது உலகம் ஸ்தாபனை ஆகிறது என்று தந்தை கூறுவார். இது கட்டுக் கதை என்று குழந்தைகள் கூறுவர். புது உலகிற்காக இவர் நமது தந்தையாக, ஆசிரியராக, சத்குருவாக இருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். சாந்திதாமம், சுகதாமம் அழைத்துச் செல்வதற்காகவே தந்தை வருகின்றார். சிலர் அதிர்ஷ்டத்தை உருவாக்கவில்லையெனில் எதுவும் புரிந்து கொள்ள வில்லை என்று பொருள். ஒரே வீட்டில் மனைவி படிப்பாள், கணவர் படிக்க மாட்டார், குழந்தைகள் படிப்பர், தாய்லிதந்தை படிக்கமாட்டார்கள். இவ்வாறு நடந்து கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் குடும்பம் குடும்பமாக வந்தார்கள். ஆனால் மாயையின் புயல்கள் தாக்கும் பொழுது ஆச்சரியத்துடன் கேட்டனர், கூறினர், தந்தையை விட்டு சென்று விட்டனர். ஆச்சரியத்துடன் கேட்பர், தந்தையினுடையவர்களாக ஆவர், படிப்பு படிப்பர், இருப்பினும் ....... ஆஹா இயற்கையான (உண்மையான) நாடகமாகும். ஆஹா நாடகம், ஆஹா மாயை என்று தந்தையும் சுயம் பாடுகின்றார். நாடகத்தின் விசயம் தான் நடைபெற்றது அல்லவா! கணவன்-மனைவி ஒருவரையொருவர் விவாகரத்து செய்து விடுகின்றனர். குழந்தைகள் தந்தையை விட்டு சென்று விடுகின்றனர், இங்கு அது கிடையாது. இங்கு விவாகரத்து செய்ய முடியாது. குழந்தைகளுக்கு உண்மையான வருமானம் செய்விப்பதற்காகவே தந்தை வந்திருக்கின்றார். தந்தை ஒருபொழுதும் யாரையும் கீழே தள்ளி விடுவது கிடையாது. தந்தை பதீத பாவனாக, கருணை உள்ளம் உடையவராக இருக்கின்றார். தந்தை வந்து துக்கத்திலிருந்து விடுவிக்கின்றார் மற்றும் வழிகாட்டியாகி கூடவே அழைத்துச் செல்லக் கூடியவராகவும் இருக்கின்றார். நான் உங்களை கூடவே அழைத்துச் செல்வேன் என்று எந்த லௌகீக குருவும் கூற முடியாது. இப்படிப்பட்ட குருவை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களை இவ்வளவு பேர் பின்பற்றக் கூடியவர்களாக இருக்கின்றனர், ஒருவேளை நீங்கள் சரீரத்தை விட்டு விட்டால் உங்களை பின்பற்றக் கூடியவர்களையும் அழைத்துச் செல்வீர்களா? என்று நீங்கள் குருக்களிடம் கேளுங்கள். பின்பற்றக் கூடியவர்களை நான் அழைத்துச் செல்வேன் என்று ஒருபொழுதும் யாரும் கூறமாட்டார்கள். இவ்வாறு இருக்கவும் (நடக்கவும்) முடியாது. நான் அனைவரையும் நிர்வாண்தாமம் அல்லது முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்வúன் என்று யாரும் ஒருபொழுதும் கூற முடியாது. நீங்கள் எங்களை கூடவே அழைத்துச் செல்வீர்களா? என்ற கேள்வியும் யாரும் கேட்க முடியாது. பகவானின் மகாவாக்கியம் லி நான் உங்களை அழைத்துச் செல்வேன் என்று சாஸ்திரங்களில் இருக்கிறது. கொசுக்களைப் போன்று அனைவரும் செல்வார்கள். சத்யுகத்தில் மக்கள் குறைவாக இருப்பார்கள். கலியுகத்தில் அதிக மக்கள் உள்ளனர். சரீரத்தை விடுத்து ஆத்மாக்கள் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு சென்று விடுவர். அவசியம் பாவனை இருக்கிறது, இவ்வளவு மனிதர்கள் இருக்க முடியாது. இப்பொழுது நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும், இந்த சரீரத்தை விட வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் நல்ல முறையில் அறிந்திருக் கிறீர்கள். நீங்கள் இறந்து விட்டால் உலகமும் இறந்து விடும். தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள். இந்த பழைய ஆடையை விட வேண்டும். இந்த உலகமும் பழையது ஆகும். புது வீடு தயாராகிக் கொண்டிருக்கிறது எனில் பழைய வீட்டில் அமர்ந்திருந்தாலும் நமக்காக புதியது உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நினைப்பீர்கள். புத்தி புது வீட்டின் பக்கம் சென்று விடும். இங்கு இப்படி உருவாக்க வேண்டும், இதை செய்ய வேண்டும். பழைய வீட்டின் மீதிருக்கும் பற்றுதல் முழுமையாக நீங்கி புதியவை மீது ஏற்பட்டு விடும். அது எல்லைக்குட்பட்ட விசயமாகும். இது எல்லையற்ற உலகின் விசயமாகும். பழைய உலகின் மீதிருக்கும் பற்றுதலை நீக்க வேண்டும் மற்றும் புது உலகின் மீது செலுத்த வேண்டும். இந்த பழைய உலகம் அழிந்து போய்விடும் என்பதை அறிவீர்கள். புது உலகம் தான் சொர்க்கமாகும். அதில் நாம் இராஜ்ய பதவி அடைகிறோம். எந்த அளவு யோகாவில் இருப்பீர்களோ, ஞான தாரணை செய்வீர்களோ, மற்றவர்களுக்குப் புரிய வைப்பீர்களோ அந்த அளவு குஷியின் அளவு அதிகரிக்கும். மிகப் பெரிய தேர்வு (பரீட்சை) ஆகும். நாம் சொர்க்கத்தின் 21 பிறவிகளுக்கான ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். செல்வந்தர்களாக ஆவது நல்லது அல்லவா! நீண்ட ஆயுள் அடைவது நல்லது தானே! சிருஷ்டிச் சக்கரத்தை நினைவு செய்வது, எந்த அளவு தனக்குச் சமமாக ஆக்குவீர்களோ அந்த அளவு லாபமாகும். இராஜா ஆக வேண்டுமெனில் பிரஜைகளையும் உருவாக்க வேண்டும். கண்காட்சிகளில் பலர் வருகின்றனர். அவர்கள் அனைவரும் பிரஜைகளாக ஆவார்கள். ஏனெனில் இந்த அழிவற்ற ஞானம் விநாசம் ஆகவே ஆகாது. தூய்மையாக ஆகி, தூய்மையான உலகிற்கு எஜமானர்களாக ஆக வேண்டும் என்பது புத்தியில் வந்து விடும். அதிக முயற்சி செய்யும் பொழுது பிரஜைகளில் உயர்ந்த பதவி அடைவீர்கள். இல்லையெனில் குறைந்த பதவி அடைவீர்கள். வரிசைக்கிரமம் இருக்கிறது அல்லவா! இராம இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இராவண இராஜ்யம் அழிந்து விடும். சத்யுகத்தில் தேவதைகள் இருப்பார்கள்.
நினைவு யாத்திரையின் மூலம் நீங்கள் சதோ பிரதான உலகிற்கு எஜமானர்களாக ஆவீர்கள் என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். எஜமானர்களாக இராஜாவும், பிரஜைகளும் இருப்பர். நமது பாரதம் அனைத்தையும் விட மிக உயர்ந்தது என்று பிரஜைகளும் கூறுவர். உண்மையில் பாரதம் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. இப்பொழுது கிடையாது, அவசியம் இருந்தது. இப்பொழுது முற்றிலும் ஏழையாக ஆகிவிட்டது. பழமையான பாரதம் அனைத்தையும் விட செல்வமிக்கதாக இருந்தது. பாரதவாசிகளாகிய நாம் மிக உயர்ந்த தேவி தேவதா குலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். வேறு யாரையும் தேவதை என்று கூற முடியாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இதை படிக்கிறீர்கள், பிறகு மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். மனிதர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் அல்லவா! உங்களிடம் சித்திரங்களும் உள்ளன, இவர்கள் இந்த பதவியை எப்படி அடைந்தனர்? என்பதை நீங்கள் நிரூபித்துக் கூற முடியும். நாள், தேதி சகிதமாக நீங்கள் நிரூபித்துக் கூற முடியும். இப்பொழுது இவர்கள் மீண்டும் சிவபாபாவிடமிருந்து இந்த பதவியை அடைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களது சிலையும் இருக்கிறது. சிவன் பரம்பிதா பரமாத்மா ஆவார். பிரம்மாவின் மூலம் நீங்கள் யோக பலத்தினால் 21 பிறவிகளுக்கான ஆஸ்தி கிடைக்கிறது என்று தந்தை கூறுகின்றார். சூரியவம்சி தேவி தேவதைகளாகிய நீங்கள் விஷ்ணுபுரிக்கு எஜமானர்களாக ஆக முடியும். சிவபாபா பிரம்மா என்ற தாதாவின் மூலம் இந்த ஆஸ்தி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். முதலில் இவரது ஆத்மா கேட்கிறது, ஆத்மா தான் தாரணை செய்கிறது. மூல விசயமே இது தான். சிவபாபாவின் சித்திரம் காண்பிக்கிறீர்கள். இந்த சித்திரம் பரம்பிதா பரமாத்மா சிவனுடையது. பிரம்மா, விஷ்ணு, சங்கர் சூட்சுமவதன தேவதைகள் ஆவர். பிரஜாபிதா பிரம்மா அவசியம் இங்கு தான் தேவை. பிரஜாபிதா பிரம்மாவிற்கு பல பிரம்மா குமார், குமாரிகள் இருக்கின்றனர். எதுவரை பிரம்மாவின் குழந்தையாக ஆகவில்லையோ, பிராமணனாக ஆக வில்லையோ அதுவரை சிவபாபாவிடமிருந்து எப்படி ஆஸ்தி அடைய முடியும்? விகார பிறப்பு ஏற்பட முடியாது. முக்வம்சாவளி (வாய்வழி வம்சத்தினர்) என்று பாடப்பட்டிருக்கிறது. நாம் பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர்கள் என்று நீங்கள் கூறுவீர்கள். அவர்கள் உலகாயத குருக்களை பின்பற்றக் கூடியவர்களாக இருப்பர். இங்கு நீங்கள் ஒரே ஒருவரை மட்டுமே தந்தை, ஆசிரியர், சத்குரு என்று கூறுகிறீர்கள். அதுவும் இவரை (பிரம்மா) கூறுவது கிடையாது. நிராகார சிவபாபா ஆவார். ஞானக் கடலாக இருக்கின்றார். சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் கொடுக்கின்றார். ஆசிரியராகவும் அந்த நிராகாரமானவர் தான் இருக்கின்றார், அவர் சாகாரத்தின் மூலம் ஞானம் கூறுகின்றார். ஆத்மா தான் பேசுகிறது. எனது சரீரத்தை தொந்தரவு செய்யாதீர்கள் என்று ஆத்மா கூறுகிறது. ஆத்மா துக்கமானதாக ஆகின்ற பொழுது அதற்கு புரிய வைக்கப்படுகிறது, விநாசம் எதிரிலேயே இருக்கிறது, கடைசியில் அனைவரையும் அழைத்துச் செல்வதற்காகவே பரலௌகீகத் தந்தை வருகின்றார். மற்ற அனைத்தும் அழிந்து போய் விடும். இது தான் மரண உலகம் என்று கூறப்படுகிறது. சொர்க்கம் என்பது இங்கு இந்த பூமியில் தான் ஏற்படுகிறது. தில்வாலா கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. கீழே தபஸ்யா செய்து கொண்டிருக்கிறீர்கள், மேலே சொர்க்கம் இருக்கிறது. இல்லையெனில் வேறு எங்கு காண்பிப்பது? மேலே தேவதைகளின் சித்திரம் காண்பிக்கப் பட்டிருக்கிறது. அவர்களும் இங்கு தான் இருப்பார்கள் அல்லவா! புரிய வைப்பதற்கு மிகுந்த யுக்தி தேவை. கோயில்களுக்குச் சென்று புரிய வைக்க வேண்டும் லி இது சிவபாபாவின் நினைவுச் சின்னமாகும், அந்த சிவபாபா வந்து நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார். உண்மையில் சிவபாபா பிந்துவாக இருக்கின்றார். ஆனால் பிந்துவிற்கு பூஜை எப்படி செய்ய முடியும்? பால், பழம் எப்படி படைக்க முடியும்? அதனால் தான் உருவம் பெரியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரியதாக இருப்பது கிடையாது. புருவங்களுக்கு நடுவில் நட்சத்திரம் போன்று ஜொலிக்கிறது என்றும் பாடப்பட்டிருக்கிறது. மிக சூட்சுமமான, பிந்துவாக இருக்கின்றார். பெரிய பொருளாக இருந்தால் விஞ்ஞானிகள் உடனேயே பற்றிக் கொண்டு விடுவர். ஆயிரம் சூரியனை விட பிரகாசமானவர் என்பது போன்று கிடையாது. சில பக்தர்களும் வருகின்றனர் அல்லவா! நான் இந்த முகத்தை பார்ப்பதற்காகவே வருகிறேன் என்றும் கூறுகின்றனர். அவர்களுக்கு பரம்பிதா பரமாத்மாவின் முழு அறிமுகம் கிடைக்கவில்லை என்று பாபா புரிந்து கொள்வார். இன்னும் அதிர்ஷ்டம் திறக்கப் படவில்லை. எதுவரை தந்தையை அறியவில்லையோ, அதுவரை நான் ஆத்மா, பிந்து போன்று இருக்கிறேன், சிவபாபாவும் பிந்துவாக இருக்கின்றார், அவரை நினைவு செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவ்வாறு புரிந்து கொண்டு நினைவு செய்தால் அப்போது விகர்மங்கள் விநாசமாகி விடும். மற்றபடி இதைப் பார்த்தேன், இவ்வாறு பார்த்தேன்....... என்று கூறுவர். இது தான் மாயையின் தடைகள் என்று கூறுப்படுகிறது. எனக்கு தந்தை கிடைத்து விட்டார் என்ற குஷியில் இப்போது இருப்பர். கிருஷ்ணரின் சாட்சாத்காரம் செய்து மிகுந்த குஷியில் நடனம் ஆடுவர், ஆனால் அதன் மூலம் எந்த சத்கதியும் ஏற்படுவது கிடையாது என்று தந்தை கூறுகின்றார். இந்த சாட்சாத்காரம் வீணாக ஆகிவிடுகிறது. ஒருவேளை நல்ல முறையில் படிக்கவில்லையெனில் பிரஜையாக சென்று விடுவீர்கள். சாட்சாத்காரத்தின் நன்மையும் கிடைக்க வேண்டும் அல்லவா! பக்தி மார்க்கத்தில் அதிக முயற்சி செய்கின்றனர், அப்பொழுது தான் சாட்சாத்காரம் ஏற்படுகிறது. இங்கு சிறிது முயற்சி செய்து விட்டால் சாட்சாத்காரம் கிடைத்து விடுகிறது, ஆனால் எந்த லாபமுமில்லை. கிருஷ்ணபுரியில் சாதாரண பிரஜையாக ஆவார்கள். சிவபாபா நமக்கு இப்பொழுது இந்த ஞானம் கூறிக் கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவசியம் தூய்மையாக ஆக வேண்டும் என்பது தந்தையின் கட்டளையாகும். ஆனால் சிலரால் தூய்மையாக இருக்க முடிவதில்லை, பதீதமான சிலர் இங்கு மறைந்து வந்து விடுகின்றனர். அவர்கள் தங்களை நஷ்டப்படுத்திக் கொள்கின்றனர். தன்னை ஏமாற்றிக் கொள்கின்றனர். தந்தையை ஏமாற்றும் விசயம் கிடையாது. தந்தையை ஏமாற்றி ஏதாவது பணம் பெற வேண்டுமா என்ன? சிவபாபாவின் ஸ்ரீமத்படி நியமப்படி நடக்கவில்லை எனில் என்ன நிலை ஏற்படும்? அதிர்ஷ்டம் இல்லை என்று புரிந்து கொள்ளப்படும். படிக்கவில்லை, மேலும் மேலும் மற்றவர்களுக்கு துக்கம் கொடுத்துக் கொண்டே இருப்பர் எனில் ஒன்று அதிகப்படியான தண்டனை அடைய வேண்டியிருக்கும் மற்றொன்று பதவி குறைந்து விடும். நியமத்திற்குப் புறம்பான எந்த காரியமும் செய்யக் கூடாது. உங்களது நடத்தை நன்றாக இல்லை என்று தந்தை புரிய வைப்பார் அல்லவா! வருமானத்திற்கான வழியை தந்தை கூறுகின்றார், செய்வது, செய்யாதது அவர்களது அதிஷ்டமாகும். தண்டனைகள் அடைந்து திரும்பி சாந்திதாம வீட்டிற்குச் சென்றே ஆக வேண்டும். பதவி குறைந்து விடும். எதுவும் கிடைக்காமல் போய் விடும். பலர் வரத் தான் செய்கின்றனர். ஆனால் இங்கு வருவது தந்தையிடம் ஆஸ்தி அடைவதற்கான விசயமாகும். பாபா, நாம் சொர்க்கத்தின், சூரிய வம்சத்தின் இராஜ்ய பதவி அடைவோம் என்று குழந்தைகள் கூறுகின்றனர். இராஜயோகம் அல்லவா! மாணவர்கள் ஸ்காலர்சீப் உதவி பெறுவார்கள் அல்லவா! வெற்றி பெறுபவர்களுக்கு ஸ்காலர்சீப் (உதவி தொகை) கிடைக்கும். யாரெல்லாம் ஸ்காலர்சீப் அடைகிறார்களோ அவர்களுக்கான மாலை இதுவாகும். எந்த அளவிற்கு எப்படி தேர்ச்சி பெறுகிறார்களோ அந்த அளவிற்கு உதவியும் கிடைக்கும். இந்த மாலை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்காலர்சீப் பெறுபவர்கள் அதிக எண்ணிக்கை ஆகி ஆயிரக்கணக்கானவர்களாக ஆகிவிடுகின்றனர். இராஜ்ய பதவி தான் ஸ்காலர்சீப் ஆகும். யார் நல்ல முறையில் படிப்பு படிக்கிறார்களோ அவர்கள் மறைவாக இருக்க முடியாது. பல புதியவர்கள் பழையவர்களை விட முன்னால் செல்வார்கள். எனக்கு இந்த படிப்பு மிகவும் பிடித்திருக்கிறது, அந்த உலகாயத படிப்பு முடித்த பின்பு இந்த படிப்பிலேயே ஈடுபட்டு விடுவேன், எனது வாழ்க்கையை வைரம் போன்று ஆக்குவேன், நான் உண்மையான வருமானம் செய்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தி அடைவேன் என்று உறுதி செய்கிறேன் என்று கூறும் சில சகோதரிகளும் வருகின்றனர். எவ்வளவு குஷி ஏற்படுகிறது! இந்த ஆஸ்தியை இப்பொழுது அடையவில்லையெனில் பிறகு எப்பொழுதும் அடைய முடியாது என்பதை அறிந்திருக்கின்றனர். படிப்பில் ஆர்வம் இருக்கும் அல்லவா! சிலருக்கு புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதில் சிறிதும் ஆர்வமில்லாமல் இருக்கின்றனர். பழையவர்களுக்கும் புதியவர்கள் அளவிற்கு ஆர்வம் கிடையாது. ஆச்சரியம் அல்லவா! நாடகப்படி அதிர்ஷ்டத்தில் இல்லயெனில் பகவானும் என்ன செய்ய முடியும்? என்று கூறுவார். இருப்பினும் ஆசிரியர் கற்பிப்பார். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தனது பலவீனங்களை மறைப்பதும் கூட தன்னை ஏமாற்றிக் கொள்வதாகும், ஆகையால் ஒருபொழுதும் தன்னை ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
2) தனது அதிர்ஷ்டத்தை உயர்வானதாக்கிக் கொள்வதற்கு எந்த காரியமும் நியமத்திற்கு புறம்பாக செய்யக் கூடாது. படிப்பில் ஆர்வம் இருக்க வேண்டும். தனக்குச் சமமாக ஆக்கும் சேவை செய்ய வேண்டும்.