06.12.2020    காலை முரளி     ஓம் சாந்தி      அவ்யக்த பாப்தாதா,     

ரிவைஸ் 20.02.1987 மதுபன்


  

நினைவு, பவித்திரதா (தூய்மை) மற்றும் உண்மையான சேவாதாரியின் மூன்று ரேகைகள்

 

இன்று அனைவருக்கும் அன்பான, உலக சேவாதாரி பாபா தம்முடைய சதா சேவாதாரியாக இருக்கும் குழந்தைகளைச் சந்திக்க வந்துள்ளார். சேவாதாரி பாப்தாதாவுக்கு சமமான சேவாதாரிக் குழந்தைகள் சதா பிரிய மானவர்கள். இன்று விசேசமாக, சர்வ சேவாதாரிக் குழந்தைகளின் நெற்றியின் மீது ஜொலிக்கின்ற விசேஷமான மூன்று கோடுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரின் நெற்றியும் திரிமூர்த்தி திலகத்திற்கு சமமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று கோடுகள் எதனுடைய அடையாளம்? இந்த மூன்று விதமான திலகத்தின் மூலமாக ஒவ்வொரு குழந்தையின் நிகழ்கால ரிசல்ட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒன்று சம்பூர்ண யோகி வாழ்க்கையின் கோடு. இரண்டாவது பவித்திரதாவின் ரேகை அல்லது கோடு. மூன்றாவது உண்மையான சேவாதாரியின் கோடு. மூன்று ரேகைகளிலும் ஒவ்வொரு குழந்தையின் ரிசல்ட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நினைவின் கோடு அனைவருக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் நம்பர்வார். சிலருடைய கோடு அல்லது ரேகை முதலியவற்றின் மூலம் இது வரை கலப்படமற்ற, அதாவது சதா ஒருவரின் ஈடுபாட்டில் மூழ்கி இருக்கிறார்களா? அல்லது யாராவது நிமித்த ஆத்மாக்களின் மூலமாக பாபாவுடன் சம்மந்தத்தை இணைப்பதற்கான அனுபவியாக உள்ளனரா? நேரடியாக பாபாவின் உதவியாளரா? அல்லது யாராவது ஆத்மாவின் உதவி மூலமாக பாபாவுக்கு உதவியாளரா? ஒன்று நேரடியான கோடு உள்ளவர்கள். இரண்டாவது இடையிடையில் கொஞ்சம் வளைந்த கோடு உள்ளவர்கள். இது தான் நினவு என்ற கோட்டினுடைய விசேசத் தன்மைகள். இரண்டாவது சம்பூர்ண பவித்திரதாவின் கோடு அல்லது ரேகை. ஒன்று, பிராண வாழ்க்கையை எடுத்ததுமே பிராமண வாழ்க்கையின், விசேச தந்தையின் வரதானம் பெற்று சதா மற்றும் சகஜமாக இந்த வரதானத்தை வாழ்க்கையில் அனுபவம் செய்பவர்கள். அவர்களின் ரேகை ஆரம்பத்திலிருந்து இப்போது வரை நேராக உள்ளது.

 

இரண்டாவது -- பிராமண வாழ்க்கையின் இந்த வரதானத்தை அதிகாரத்தின் ரூபத்தில் அனுபவம் செய்வதில்லை, சில நேரம் சகஜமாக, சில நேரம் உழைப்பினால், மிகுந்த முயற்சியோடு தனதாக்கிக் கொள்பவர்கள். அவர்களின் ரேகை சதா நேராக மற்றும் ஜொலிப்பதாக இருப்பதில்லை. உண்மையில் நினைவு அல்லது சேவையின் வெற்றிக்கு ஆதாரம் - பவித்திரதா. வெறுமனே பிரம்மச்சாரி ஆவது என்பது மட்டும் பவித்திரா கிடையாது. ஆனால் பவித்திரத் தாவின் சம்பூர்ண ரூபம் -- பிரம்மச்சாரி யுடன் கூடவே பிரம்மாச்சாரி ஆவதாகும். பிரம்மாச்சாரி என்றால் பிரம்மாவின் நடத்தை நெறி முறைகளின் படி நடப்பவர்கள், அவர்கள் தந்தையைப் பின்பற்றி நடப்பவர் எனச் சொல்லப் படுவார்கள். ஏனென்றால் பிரம்மா தந்தையைப் பின்பற்றி நடக்க வேண்டும். சிவதந்தையின் ஸ்திதிக்கு சமமாக ஆக வேண்டும், ஆனால் நடத்தையில் மற்றும் கர்மத்தில் பிரம்மா தந்தையைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வோரடியிலும் பிரம்மச்சாரி. பிரம்மச்சரிய விரதம் சதா சங்கல்பம் மற்றும் கனவு வரை இருக்க வேண்டும். பவித்திரதாவின் அர்த்தம் - சதா பாபாவைத் துணைவராக்குவது (கம்பேனியன்) மற்றும் பாபாவின் துணையில் (கம்பெனி) சதா இருப்பது. துணைவராக ஆக்கிக் கொண்டு விட்டீர்களா? பாபா என்னுடையவர் - இதுவும் அவசியம், ஆனால் ஒவ்வொரு சமயமும் பாபாவின் துணையும் இருக்க வேண்டும். இது தான் சம்பூர்ண பவித்திரதா எனப்படும். குழுவின் துணை, பரிவாரத்தின் அன்பிற்கான நியமம் என்பது வேறு. அதுவும் அவசியம். ஆனால் பாபாவின் காரணத்தால் தான் இந்தக் குழுவின் அன்பினுடைய துணை உள்ளது - இதை மறக்கக் கூடாது. பரிவாரத்தின் அன்பு உள்ளது, ஆனால் பரிவாரம் யாருடையது? பாபாவுடையது. பாபா இல்லையென்றால் பரிவாரம் எங்கிருந்து வந்தது? பரிவாரத்தின் அன்பு, பரிவாரத்தின் குழு மிக நல்லது. ஆனால் பரிவாரத்தின் விதையை மறந்துவிடக் கூடாது. பாபாவை மறந்து, பரிவாரத்தையே துணையாக ஆக்கிக் கொண்டு விடுகின்றனர். இடையிடையில் பாபாவை விட்டு விட்டால் காலி இடம் ஆகி விடும். அங்கே மாயா வந்து விடும். ஆகவே அன்பில் இருந்து கொண்டே, அன்பைக் கொடுத்துக்கொண்டு, பெற்றுக் கொண்டு, சமூகத்தை மறக்கக் கூடாது. இது தான் பவித்திரதா எனப் படும். புரிந்து கொள்வதிலோ நீங்கள் சாமர்த்தியசாலிகள் தாம் இல்லையா?

 

அநேகக் குழந்தைகளுக்கு சம்பூர்ண பவித்திரதாவின் ஸ்திதியில் முன்னேறிச் செல்வதில் கடினமாக உழைக்க வேண்டி உள்ளது. அதனால் இடையிடையில் சிலருக்கு துணையை உருவாக்கிக் கொள்வதற்கான சங்கல்பமும் வருகிறது மற்றும் துணையும் அவசியம் - இந்த சங்கல்பமும் வருகிறது. சந்நியாசியாகவோ ஆகக் கூடாது. ஆனால் ஆத்மாக்களின் துணையில் இருந்து கொண்டு, தந்தையின் துணையை மறந்து விடாதீர்கள். இல்லையென்றால் சமயத்தில் அந்தத் துணையின் நினைவு வரும் மற்றும் தந்தையின் நினைவு மறந்து போகும். ஆக, சமயத்தில் ஏமாற்றம் நிகழ முடியும். ஏனென்றால் சாகார சரீரதாரிகளின் உதவி பெறுவது பழக்கமாகி விட்டது என்றால் அவ்யக்த தந்தை மற்றும் நிராகாரத் தந்தை பின்னால் நினைவு வரும், முதலில் சரீரதாரி நினைவு வரும். எந்த ஒரு சமயத்திலாவது சாகார சரீரதாரியின் உதவி நினைவு வந்தால் நம்பர் ஒன்னாக அவர் ஆகி விடுகிறார், இரண்டாவது நம்பராக பாபா ஆகி விடுகிறார். யார் பாபாவை இரண்டாவது நம்பரில் வைக்கிறாரோ, அப்போது அவருக்கு என்ன பதவி கிடைக்கும்? நம்பர் ஒன்னா, இரண்டாவதா? வெறுமனே சகயோகம் பெறுவது, சிநேகியாக இருப்பது என்பது வேறு விசயம். ஆனால் ஆதரவை உருவாக்கிக் கொள்வது வேறு விசயம். இது மிகவும் ஆழமான விசயமாகும். இதை யதார்த்த ரீதியில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலர் சங்கட்டனில் சிநேகி ஆவதற்கு பதிலாக விலகியவராகவும் ஆகி விடுகின்றனர். பயப்படுகிறார்கள், சிக்கிக் கொள்வோமோ என்னவோ தெரியாது, அதைவிட விலகி இருப்பது சரியாக இருக்கும் என நினைக்கின்றனர். ஆனால் அப்படி இல்லை. 21 பிறவிகளிலும் இல்லறத்தில், பரிவாரத்தில் இருக்க வேண்டும் இல்லையா? பயத்தின் காரணத்தால் விலகி விடுகின்றனர், விலகியவராக ஆகி விடுகின்றனர் என்றால் அது கர்ம சந்நியாசியின் சம்ஸ்காரம் ஆகி விடுகிறது. கர்மயோகி ஆக வேண்டும், கர்ம சந்நியாசியாக அல்ல. குழுவில் இருக்க வேண்டும். சிநேகி ஆக வேண்டும். ஆனால் புத்திக்கு ஆதரவாக ஒரு பாபா மட்டும் இருக்க வேண்டும், ஒரு பாபா தவிர வேறு யாரும் இல்லை. புத்தியை எந்த ஓர் ஆத்மாவின் துணை அல்லது குணம் அல்லது ஏதேனும் விசேஷதா கவர்ந்திழுக்கக் கூடாது. இது தான் பவித்திரதா எனச் சொல்லப்படுவதாகும்.

 

பவித்திரதாவில் முயற்சி செய்ய வேண்டியுள்ளது - இதிலிருந்து உறுதியாகிறது, வரதாதா தந்தையிடமிருந்து ஜென்மத்தின் வரதானத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. வரதானத்தில் முயற்சி இருப்பதில்லை. ஒவ்வொரு பிராமண ஆத்மாவுக்கும் பிராமண ஜென்மத்தின் முதல் வரதானம் - பவித்திரமாகுக, யோகி ஆகுக என்ற வரதானம் கிடைத்துள்ளது. ஆகவே தன்னைத் தான் கேட்டுக் கொள்ளுங்கள் - பவித்திரதாவின் வரதானியா? அல்லது கடின முயற்சியால் பவித்திரதாவைத் தன்னுடையதாக ஆக்குபவரா? இதை நினைவு வையுங்கள் - நம்முடையது பிராமண ஜென்மம். வெறுமனே வாழ்க்கை மாற்றம் மட்டுமில்லை, ஆனால் பிராமண ஜென்மத்தின் ஆதாரத்தில் வாழ்க்கையின் மாற்றம். ஜென்மத்தின் சம்ஸ்காரம் மிக சகஜமான தாகவும் இயல்பானதாகவும் இருக்கும். தங்களுக்குள்ளும் சொல்கின்றனர் இல்லையா - எனது ஜென்மத்தில் இருந்தே இந்த மாதிரி சம்ஸ்காரங்கள் உள்ளன. பிராமண ஜென்மத்தின் வரதானமே பவித்திரமாகுக, யோகி ஆகுக. வரதானமும் கூட, ஒரிஜினல் சம்ஸ்காரமும் கூட. வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் அவசியம். ஒன்று - கம்பேனியன், இன்னொன்று - கம்பெனி. அதனால் திரிகாலதரிசி பாபா அனைவரின் தேவைகளை அறிந்து கொண்டு, பெரிய கம்பேனியன் மற்றும் பெரிய கம்பெனி கொடுக்கிறார். விசேஷமாக இரட்டை வெளி நாட்டுக் குழந்தைகளுக்கு இரண்டுமே வேண்டும். அதனால் பாப்தாதா ஜென்மம் எடுத்ததுமே கம்பேனியனின் அனுபவத்தைச் செய்வித்திருக்கிறார். சுமங்கலி ஆக்கியிருக்கிறார். ஜென்மம் எடுத்ததுமே கம்பேனியன் கிடைத்து விட்டார் இல்லையா? கம்பேனியன் கிடைத்து விட்டாரா அல்லது இன்னும் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? ஆக, பவித்திரதாவை ஒரிஜினல் சம்ஸ்கார ரூபத்தில் அனுபவம் செய்ய வேண்டும். இதைத் தான் சிரேஷ்டமான கோடு அல்லது சிரேஷ்ட ரேகை உள்ளவர்கள் எனச் சொல்கின்றனர். அஸ்திவாரம் பக்காவாக உள்ளது இல்லையா?

 

மூன்றாவது கோடு உண்மையான சேவாதாரியினுடையது. இந்த சோவாதாரியின் கோடும் கூட அனைவரின் நெற்றியின் மீது உள்ளது. சேவை இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. சேவை பிராமண வாழ்க்கையை சதா நிர்விக்னமாக்குகிற சாதனமாகவும் உள்ளது மற்றும் சேவையில் தான் விக்னங்களின் பேப்பர் அதிகம் வருகிறது. நிர்விக்ன சேவாதாரி உண்மையான சேவாதாரி எனச் சொல்லப் படுகிறார். விக்னங்கள் வருவதும் கூட டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. வரத்தான் செய்யும் மற்றும் வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் இந்த விக்னங்கள் அல்லது பேப்பர்கள் அனுபவி ஆக்குகின்றன. இதை விக்னம் எனப் புரிந்து கொள்ளாமல், அனுபவத்தின் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது - இந்த உணர்வுடன் பார்ப்பீர்களானால் முன்னேற்றத்தின் ஏணிப்படி அனுபவமாகும். இதிலிருந்து இன்னும் முன்னேற வேண்டும். ஏனென்றால் சேவை என்பதன் அர்த்தம், குழுவின், அனைத்து ஆத்மாக்களின் ஆசிர்வாதங்களை அனுபவம் செய்வதாகும். சேவை என்பது அனைவரின் ஆசிர்வாதங்கள் கிடைப் பதற்கான சாதனமாகும். இந்த விதியின் மூலம், இந்த உள்ளுணர்வுடன் பார்ப்பீர்களானால் சதா அந்த மாதிரி அனுபவம் செய்வீர்கள் - அனுபவத்தின் அத்தாரிட்டி நம்மை மேலும் முன்னேறச் செய்து கொண்டிருக்கிறது. விக்னத்தை விக்னமாகப் புரிந்து கொள்ளாதீர்கள். மேலும் விக்னத்திற்காக நிமித்தமாகியுள்ள ஆத்மாவை விக்னத்தை ஏற்படுத்தும் (விக்னகாரி) ஆத்மா எனப் புரிந்து கொள்ளாதீர்கள். அனுபவி ஆக்குகிற ஆசிரியர் எனப் புரிந்து கொள்ளுங்கள். நிந்தனை செய்பவர் என் நண்பர் எனச் சொல்கிறீர்கள் என்றால் விக்னங்களைக் கடந்து செல்ல வைத்து அனுபவி ஆக்கும் ஆசிரியர் ஆகிறார் இல்லையா? படிப்பினை தந்தார் இல்லையா? எப்படி இன்றைய உலகில் நோய்களைப் போக்குகிற டாக்டர் கள் உடற்பயிற்சி செய்ய வைக்கிறார்கள், அந்த உடற்பயிற்சியில் முதலில் வலி இருக்கும். ஆனால் அந்த வேதனை சதா காலத்திற்கும் வலியற்றவராக ஆக்குவதற்கு நிமித்தமாக உள்ளது. யாருக்கு இந்தப் புரிதல் இல்லையோ, அவர்கள் கதறுவார்கள் -- இவரோ இன்னும் அதிக வேதனையை உண்டாக்கி விட்டார் எனச் சொல்வார்கள். ஆனால் இந்த வேதனைக்குள் மருந்து அடங்கியுள்ளது. இதே விதமாக வடிவம் விக்னமாக இருக்கலாம், உங்களுக்கு விக்னம் செய்யக்கூடிய ஆத்மா காணப்படுகிறார். ஆனால் சதா காலத்திற்கும் விக்னங்களைக் கடந்து செல்வதற்கு நிமித்தமாக, அசையாதவராக ஆக்குவதற்கு நிமித்தமாக அவர் தாம் ஆகிறார். அதனால் சதா நிர்விக்ன சேவாதாரியாக இருப்பவர் தாம் உண்மையான சேவாதாரி எனச் சொல்லப்படுகிறார். அத்தகைய சிரேஷ்ட ரேகை உள்ளவர் உண்மையான சேவாதாரி எனச் சொல்லப்படுவார்.

 

சேவையில் எப்போதும் தூய புத்தி, தூய விருத்தி மற்றும் தூய கர்மம் வெற்றிக்கான சகஜ ஆதாரமாகும். எந்த ஒரு சேவையின் காரியத்தையும் ஆரம்பிக்கும் போது முதலில் சோதித்துப் பாருங்கள் - புத்தியில் எந்த ஆத்மாவைப் பற்றியாவது தூய்மைக்கு பதிலாக கடந்து போன விசயங்களின் நினைவு கொஞ்சமாவது இருக்குமானால், அதே விருத்தி, திருஷ்டியுடன் அவரைப் பார்க்கவும் பேசவும் வேண்டி உள்ளது. ஆக, சேவையினால் தூய்மையின் மூலமாக நடைபெற வேண்டிய சம்பூர்ண வெற்றி ஏற்படுவதில்லை. நடந்து முடிந்த விசயங்களை மற்றும் விருத்திகள் முதலியவற்றை முடித்து விட வேண்டும். இது தான் தூய்மையாகும். நடந்து முடிந்தவற்றை சங்கல்பம் செய்வதும் கூட கொஞ்சம் சதவிகிதத்தில் லேசான பாவமாகிறது. சங்கல்பம் கூட சிருஷ்டியை உருவாக்கி விடுகிறது. வர்ணனை செய்வதோ இன்னும் பெரிய விசயம். ஆனால் சங்கல்பம் செய்வதால் கூட பழைய சங்கல்பத்தின் ஸ்மிருதியானது, சிருஷ்டி அல்லது வாயுமண்டலத்தையும் கூட அது போல் ஆக்கி விடுகிறது. பிறகு சொல்லி விடுகின்றனர் - நான் சொன்னேன் இல்லையா, அப்படியே நடந்து விட்டது இல்லையா? ஆனால் ஏன் நடந்தது? உங்களது பலவீனமான, வீணான சங்கல்பம் இந்த வீணான வாயுமண்டலத்தின் சிருஷ்டியை உருவாக்கியது. அதனால் சதா உண்மையான சேவாதாரி என்றால் பழைய வைப்ரேசன்களை முடித்து விடுபவர்கள். எப்படி விஞ்ஞானிகள் சஸ்திரங்கள் (ஆயுதங்கள்) மூலம் சஸ்திரங்களை அழித்து விடுகின்றனர், ஒரு விமானத்தின் மூலம் இன்னொரு விமானத்தை வீழ்த்தி விடுகின்றனர். யுத்தம் செய்கின்றனர் என்றால் அழித்து விடுகின்றனர் இல்லையா? ஆக, உங்களுடைய சுத்த வைப்ரேசன்கள், சுத்த வைப்ரேசன்களை இமர்ஜ் செய்ய முடியும் மற்றும் வீணான வைப்ரேசன்களை அழிக்க முடியும். சங்கல்பம் சங்கல்பத்தை அழிக்க முடியும். உங்களுடையது சக்திசாலி சங்கல்பம் என்றால் சக்திசாலி சங்கல்பம் வீணான சங்கல்பத்தை அவசியம் அழித்து விடும். புரிந்ததா? சேவையில் முதலில் தூய்மை, அதாவது பவித்திரதாவின் சக்தி வேண்டும். இந்த மூன்று ரேகைகள் ஜொலிப்புடன் காணப்படுகின்றன.

 

சேவையின் விசேசதாக்கள் பற்றி இன்னும் அநேக விசயங்கள் கேட்டிருக்கவும் செய்கிறீர்கள். அனைத்து விசயங்களின் சாரம் - சுயநலமற்ற, நிர்விகல்ப ஸ்திதி மூலம் சேவை செய்வது வெற்றிக்கான ஆதாரமாகும். இந்த சேவையில் தான் தானும் திருப்தியாக, புன்சிரிப்புடன் இருப்பீர்கள், மற்றவர்களும் திருப்தியாக இருப்பார்கள். சேவை இல்லாமல் குழு இருப்பதில்லை. குழுவில் பல்வேறு விசயங்கள், பலவிதமான சிந்தனைகள், பலவிதமான வழிமுறைகள், சாதனங்கள் - இவை இருக்கத் தான் செய்யும். ஆனால் பிரச்சினைகள் வந்தாலும், பலவித சாதனங்கள் கேட்டாலும் கூட சுயம் சதா வேற்றுமையில் இருப்பதை ஒரு தந்தையின் நினைவில் ஒருங்கிணைக்கக் கூடிய, ஏக்ரஸ் ஸ்திதி உள்ளவர்களாக இருங்கள். ஒரு போதும் குழப்பமடையாதீர்கள் - இப்போது என்ன செய்வது, அநேக சிந்தனைகள் ஆகி விட்டன, யாருடையதை ஏற்றுக் கொள்வது, யாருடையதை ஏற்றுக் கொள்ளாமல் விடுவது? சுயநலமற்ற, நிர்விகல்ப உணர்வுடன் நிர்ணயம் செய்வீர்களானால் ஒரு போதும் யாருக்கும் எந்த ஒரு வீணான சங்கல்பமும் வராது. ஏனென்றால் சேவை இல்லாமலும் இருக்க முடியாது, நினைவு இல்லமாலும் இருக்க முடியாது. அதனால் சேவையையும் அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள். தன்னையும் கூட அன்பு, சகயோகம் மற்றும் சுயநலமற்ற உணர்வில் முன்னேறச் செய்து கொண்டே செல்லுங்கள். புரிந்ததா?

 

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் ஊக்கம்-உற்சாகத்துடன் சேவையின் நிரூபணத்தைக் கொடுத்தார்கள். வெளிநாட்டு சேவையின் காரியமும் கூட வெற்றிகரமாக நிறைவடைந்தது மற்றும் உள்நாட்டிலும் கூட அனைவரின் சகயோகத்தினால் அனைத்துக் காரியங்களும் நிறைவடைந்தன, வெற்றியடைந்தன. பாப்தாதா குழந்தைகளின் சேவையின் ஈடுபாட்டைப் பார்த்து மகிழ்ச்சிடைகிறார். அனைவர்க்கும் பாபாவைப் பிரத்தி யட்சம் செய்வதற்கான லட்சியம் நன்றாக இருந்தது மற்றும் பாபாவின் அன்பில் கடின உழைப்பை அன்பாக மாற்றி, காரியத்தின் பிரத்தியட்ச பலனைக் காட்டினீர்கள். குழந்தைகள் அனைவரும் விசேஷமாக சேவையின் நிமித்தமாக வந்துள்ளனர். பாப்தாதாவும் ஆஹா குழந்தாய் ஆஹா! என்ற பாடலைப் பாடுகிறார். அனைவரும் மிக நன்றாகச் செய்தீர்கள். சிலர் செய்தனர், சிலர் செய்யவில்லை என்பதில்லை. சிறிய இடமாக இருந்தாலும் சரி, பெரிய இடமாக இருந்தாலும் சரி, சிறிய இடத்துக்காரர்களும் குறைவாகச் செய்யவில்லை. அதனால் அனைவரின் சிரேஷ்ட பாவனைகள் மற்றும் சிரேஷ்ட விருப்பங்களால் காரியங்கள் நன்றாக இருந்தன. சதா நன்றாகவே இருக்கும். சமயத்தையும் நன்றாக ஈடுபடுத்தினீர்கள், சங்கல்பத்தையும் நன்றாக ஈடுபடுத்தினீர்கள், பிளான் உருவாக்கினீர்கள் என்றால் சங்கல்பம் செய்தீர்கள் இல்லையா? சரீரத்தின் சக்தியையும் ஈடுபடுத்தினீர்கள், செல்வத்தின் சக்தியையும் ஈடுபடுத்தினீர்கள், குழுவின் சக்தியையும் ஈடுபடுத்தினீர்கள். சர்வ சக்திகளின் ஆகுதிகளால் சேவையின் யக்ஞம் இரண்டு பக்கங்களிலும் (உள்நாடு மற்றும் வெளிநாடுகள்) வெற்றி யடைந்தது. காரியம் மிக நன்றாக இருந்தது. சரியாகச் செய்தார்களா இல்லையா -- இந்தக் கேள்வியே இல்லை. சதா சரியாக இருந்துள்ளது மற்றும் சதா சரியாகவே இருக்கும். மல்ட்டி மில்லியன் பீஸ் காரியம் செய்தாலும் சரி, கோல்டன் ஜுபிலியின் காரியம் செய்தாலும் சரி -- இரண்டு காரியங்களுமே அழகாக இருந்தன. எந்த விதிப்படி செய்தீர்களோ, அந்த விதியும் சரியாக உள்ளது. எங்கெங்கோ பொருள்களின் விலையை அதிகரிப்பதற்காக திரைக்குள் அந்தப் பொருள் வைக்கப் படுகிறது. திரையானது விலைமதிப்பை இன்னும் கூட அதிகரித்து விடுகிறது மற்றும் தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்படுகிறது - என்னவென்று பார்க்கலாம் என்று. திரைக்கு உள்ளே உள்ளதென்றால் அவசியம் அதில் ஏதோ இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் இதே திரை பிரத்தியட்சதாவிற்கான திரையாக மாறி விடும். இப்போது பூமியை உருவாக்கி விட்டீர்கள். பூமியில் விதை போடப் படும் போது உள்ளுக்குள் மறைந்திருக்குமாறு போடப்படுகிறது. பொருளை வெளியில் வைப்பதில்லை, உள்ளே மறைவாக வைக்கின்றனர். ஆனால் மறைவாக வைக்கப்பட்ட விதையின் மலர்கள், பழங்களின் சொரூபம் தான் வெளிப் படையாகத் தெரிகின்றது. ஆக, இப்போது விதை போடப் பட்டுள்ளது. மரம் வெளியில் ஸ்டேஜ் மீது தானாகவே வந்து கொண்டிருக்கும்.

 

குஷியில் நடனமாடிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? ஆஹா பாபா என்று சொல்கிறீர்கள். ஆனால் ஆஹா சேவை என்றும் சொல்கிறீர்கள். நல்லது. செய்திகள் அனைத்தையுமே பாப்தாதா கேட்டு விட்டார். இந்த சேவை மூலம் உள்நாட்டு வெளிநாட்டுக் குழு மூலம் வர்க்கங்களின் சேவை நடந்தது. இது நாலாபுறமும் ஒரே சமயத்தில் ஒரே குரலை ஒலிக்கச் செய்வதற்கான அல்லது பரவச் செய்வதற்கான சாதனம் நன்றாக உள்ளது. இனியும் கூட என்ன நிகழ்ச்சிகள் நடத்தினாலும் சரி, ஆனால் ஒரே சமயத்தில் உள்நாடு-வெளிநாடுகளில் நாலாபுறமும் ஒரே விதமான சேவையின் பலன் சொரூபமாக மதுபனில் குழு ரூபத்தில் இருக்கிறீர்கள். நாலாபுறமும் ஒரே அலை இருக்கும் காரணத்தால் அனைவரிடமும் ஊக்கம்- உற்சாகமும் ஏற்படுகிறது மற்றும் நாலாபுறமும் ஆன்மிகப் பந்தயம் நடைபெறுகிறது - ரேஸ், ரீஸ் (பொறாமை) அல்ல. அதாவது நாம் இன்னும் அதிகத்திலும் அதிகமாக சேவையின் நிரூபணம் கொடுக்க வேண்டும். ஆக, இந்த ஊக்கத்துடன் நாலாபுறமும் பெயர் ஒலிக்கின்றது. அதனால் எந்த ஒரு வர்க்கத்தினுடையதையும் உருவாக்குங்கள். ஆனால் நாலாபுறமும் ஒரே ரூபத்தில் ஒரே விதமான சேவை ஒரே வழிமுறைப்படி செய்வதற்கான கவனம் வையுங்கள். அப்போது அந்த ஆத்மாக்களுக்கும் கூட நாலாபுறத்தின் குழுவைப் பார்த்து ஊக்கம் வருகிறது, முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இந்த விதியின் மூலம் திட்டத்தை உருவாக்கி, முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். முதலில் அவரவரின் பகுதியில் அந்த வர்க்கத்தின் சேவை செய்து, சின்னச்சின்ன குழுக்களின் ரூபத்தில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டே இருங்கள். மேலும் அந்தக் குழுவின் மூலம் விசேஷ ஆத்மாக்கள் யார் இருக்கிறார்களோ, அவர்களை இந்தப் பெரிய குழுவுக்காகத் தயார் செய்யுங்கள். ஆனால் ஒவ்வொரு சென்டர் அல்லது அக்கம்பக்கம் ஒன்றாகச் சேர்ந்து செய்யுங்கள். ஏனென்றால் அநேகர் இங்கு வரை வந்து சேர முடியவில்லை என்றால் அங்கேயே கூட குழுவின் நிகழ்ச்சி என்ன நடைபெறு கிறதோ, அதனாலும் கூட அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. ஆகவே முதலில் சின்னச்சின்ன சிநேக சந்திப்புகளை நிகழ்த்துங்கள். பிறகு மண்டல அளவில் ஒன்றாகச் சேர்த்து குழுவாக நடத்துங்கள். பிறகு மதுபனின் பெரிய குழு உருவாக வேண்டும். ஆக, முதலில் இருந்தே அனுபவி ஆகிப் பிறகு இங்கு வரை வருவார்கள். ஆனால் இதற்காக உள்நாடு-வெளிநாடுகளில் ஒரே தலைப்பு இருக்க வேண்டும், ஒரே வர்க்கத்தின் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். இரண்டு - நான்கு வர்க்கத்தினர் ஒன்றாகச் சேர்ந்து நடத்துகிற மாதிரி அத்தகைய தலைப்புகளும் உள்ளன. தலைப்புகள் விசாலமாக இருந்தால் இரண்டு-மூன்று வர்க்கங்களுக்கும் கூட அதே தலைப்பின் நடுவே வர முடியும். ஆக, இப்போது உள்நாடு-வெளிநாடுகளின் தர்மத் தலைவர்கள், அரசாங்கத் தலைவர்கள் மற்றும் அறிவியல் தலைவர்கள் - இந்த மூவரின் சேம்பிள்களைத் தயார் செய்யுங்கள். நல்லது.

 

சர்வ பவித்திரதாவின் வரதானத்தின் அதிகாரி ஆத்மாக்களுக்கு, சதா ஏக்ரஸ், நிரந்தர யோகி வாழ்க்கையின் அனுபவி ஆத்மாக்களுக்கு, சதா ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு சமயம், உண்மையான சேவாதாரி ஆகக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, உலக-சிநேகி, உலக சேவாதாரி பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

வரதானம்:

கம்பைண்டு (இணைந்த) சொரூபத்தின் நினைவின் மூலம் மறதியற்றவராக ஆகக்கூடிய நிரந்தர யோகி ஆகுக.

 

எந்தக் குழந்தைகள் தங்களை பாபாவுடன் இணைந்தவராக அனுபவம் செய்கிறார்களோ, அவர்களுக்கு நிரந்தர யோகி ஆகுக என்ற வரதானம் இயல்பாகவே கிடைத்து விடுகிறது. ஏனென்றால் அவர்கள் எங்கே இருந்தாலும் சந்திப்பின் திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது. அவர்களை யாராவது எவ்வளவு தான் மறக்கடிக்க முயற்சி செய்தாலும் மறக்காத வர்களாக உள்ளனர். அத்தகைய மறதியற்ற குழந்தைகள், பாபாவுக்கு மிகப் பிரியமானவர்கள், அவர்கள் தான் நிரந்தர யோகிகள். ஏனென்றால் அன்பின் அடையாளம் - இயல்பான நினைவு. அவர்களின் சங்கல்ப ரூப நகத்தையும் கூட மாயாவினால் அசைக்க முடியாது.

 

சுலோகன்:

காரணத்தைச் சொல்வதற்கு பதிலாக அதற்கான நிவாரணம் செய்வீர்களானால் ஆசிர்வாதங்களுக்கு அதிகாரி ஆகி விடுவீர்கள்.

 

ஓம்சாந்தி