05.12.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்போது
வீட்டிற்குச் செல்ல வேண்டும், ஆகையால் ஆத்ம அபிமானி ஆகுங்கள்,
ஒரு தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் இறுதி மன நிலைக்குத்
தகுந்த நற்கதி ஏற்படும்.
கேள்வி:
அதிசயமான
தந்தை
உங்களுக்கு
எந்த
ஒரு
அதிசயமான
ரகசியத்தைச்
சொல்லியிருக்கிறார்?
பதில்:
பாபா சொல்கிறார் - குழந்தைகளே,
இது (அனாதியான) முதலும் முடிவுமற்ற அழிவற்ற நாடகமாக
உருவாகியுள்ளது, இதில் ஒவ்வொருவருடைய நடிப்பும் பதிவாகியுள்ளது.
எது நடந்தாலும் எதுவும் புதிதல்ல. குழந்தைகளே இதில் என்னுடையது
எந்த தற் பெருமையும் இல்லை. நானும் கூட நாடகத்தின் பந்தனத்தில்
கட்டப்பட்டுள்ளேன் என தந்தை சொல்கிறார். இந்த அதிசயமான
ரகசியத்தைச் சொல்லி தந்தை தனது நடிப்பின் மகத்துவத்தையும்
குறைத்துக் கொண்டு விட்டார்.
பாடல்:
இறுதியில் அந்த நாளும் வந்தது இன்று. . .
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக்
குழந்தைகள் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டி ருக்கின்றனர்.
கல்பத்திற்குப் பின் மீண்டும் நம்மை தனவான்களாக,
ஆரோக்கியமிக்கவர்களாக மற்றும் செல்வந்தர் களாக ஆக்குவதற்காக,
தூய்மை, சுகம், அமைதியின் ஆஸ்தியைக் கொடுப்பதற்காக தந்தை
வருகிறார் என குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர். பிராமணர்களும்
ஆசீர்வாதம் செய்கின்றனர் அல்லவா - ஆயுஷ்வான் பவ, தனவான் பவ,
புத்ரவான் பவ என்று. குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தி கிடைத்துக்
கொண்டிருக்கிறது. ஆசீர்வாதத்தின் விஷயம் எதுவுமில்லை.
குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கின்றனர். 5 ஆயிரம்
வருடங்களுக்கு முன்பும் கூட தந்தை வந்து மனிதரிலிருந்து
தேவதையாக, நரனிலிருந்து நாராயணராக ஆவதற்கான படிப்பை சொல்லிக்
கொடுத்திருந்தார் என்பதை தெரிந்திருக்கின்றனர். படிக்கக் கூடிய
குழந்தைகள் நாம் என்ன கற்றுக் கொண்டிருக்கிறோம், கற்பிப்பவர்
யார் என தெரிந்திருக்கின்றனர். அவர்களிலும் வரிசைக்கிரமமான
முயற்சியின்படி தெரிந்திருக்கின்றனர். இந்த இராஜ்யம் ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது மற்றும் தேவதா இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது என்பது குழந்தைகளாகிய எங்களுக்குத் தெரியும்
என சொல்வார்கள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. முதலில் சூத்திரர்களாக இருந்தோம், பிறகு
பிராமணர் ஆனோம், பிறகு தேவதை ஆக வேண்டும். இப்போது நாம்
சூத்திர வர்ணத்தவர் களாக இருக்கிறோம் என்பது உலகில் யாருக்கும்
தெரியாது. இது சத்தியமான விசயமாகும் என குழந்தைகளாகிய நீங்கள்
புரிந்து கொள்கிறீர்கள். தந்தை சத்தியத்தைச் சொல்லி சத்யமான
கண்டத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். சத்யுகத்தில் பொய்,
பாவம் முதலான எதுவும் இருக்காது. கலியுகத்தில்தான் அஜாமின்
போன்ற பாவாத்மாக்கள் இருக்கின்றனர். இந்த சமயம் முற்றிலும்
கொடுமையான நரகமாகவே உள்ளது. நாளுக்கு நாள் கொடுமையான நரகம்
காணப்படும். முற்றிலும் தமோபிரதானமாக உலகம் ஆகிக்
கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளும்படியாக மனிதர்கள்
காரியங்கள் செய்தபடி இருப்பார்கள். அதிலும் காமம் மிகப் பெரிய
எதிரி. யாரும் தூய்மையாக சுத்தமாக இருக்க முடியாது. முன்னர்
நாடோடி மனிதர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர் - 12-13 வயது
குமாரிகள் கூட குழந்தைகள் பெறும்படியான கலியுகம் வரப்போகிறது.
இப்போது அந்த சமயமாக உள்ளது. குமார்- குமாரிகள் முதலானவர்கள்
அழுக்கான காரியம் செய்தபடி இருக்கின்றனர். முற்றிலும் தமோபிர
தானமாக ஆகி விடும்போது நான் வருகிறேன், என்னுடைய நடிப்பும்
நாடகத்தில் பதிவாகியுள்ளது என தந்தை சொல்கிறார். நானும்
நாடகத்தின் பந்தனத்தில் கட்டுப்பட்டுள் ளேன். குழந்தைகளாகிய
உங்களுக்கு புதிய விசயம் எதுவுமில்லை. தந்தை புரிய வைப்பதும்
அப்படித்தான். சக்கரத்தைச் சுற்றிவிட்டீர்கள், நாடகம் முடிவடை
கிறது. இப்போது தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால்
சதோபிரதானமாகி சதோபிரதான உலகிற்கு எஜமானர் ஆகி விடுவீர்கள்.
எவ்வளவு சாதாரணமான முறையில் புரிய வைக்கிறார். தந்தை தன்னுடைய
நடிப்புக்கு அவ்வளவு மகத்துவம் கொடுப்பதில்லை. இது என்னுடைய
நடிப்பின் பாகம், புதிய விசயம் எதுவுமில்லை. ஒவ்வொரு 5 ஆயிரம்
வருடங்களுக்குப் பிறகும் நான் வர வேண்டியிருக்கிறது. நாடகத்தில்
நான் கட்டுப் பட்டிருக்கிறேன். வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு
மிகவும் எளிதான நினைவின் யாத்திரையை சொல்லித் தருகிறேன். இறுதி
நிலைக்கேற்ற கதி. . . அது இந்த சமயத்தைப் பற்றித்தான் சொல்லப்
பட்டிருக்கிறது. இது இறுதிக் காலமல்லவா. தந்தை யுக்தி
சொல்கிறார் - என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் சதோபிர
தானமாகி விடுவீர்கள். குழந்தைகளும் நாம் புதிய உலகின் எஜமானர்
ஆகப் போகிறோம் என புரிந்து கொள் கின்றனர். தந்தை அடிக்கடி
சொல்கிறார் - எதுவும் புதிதல்ல. ஜின் பூதம் பற்றிய ஒரு கதை
சொல்கின்றனர் அல்லவா - எனக்கு வேலை கொடு என்றது, ஏணியில் ஏறி
இறங்கிக் கொண்டே இரு என்று சொன்னாராம். இந்த விளையாட்டும் கூட
ஏறி இறங்கக் கூடியதே என தந்தை சொல்கிறார்.
தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக, தூய்மையானவரிலிருந்து
தூய்மையற்றவராக ஆக வேண்டும். இது எதுவும் கடினமான விசயம் அல்ல.
மிகவும் எளிதானது தான், ஆனால் யுத்தம் என்பது எது என
புரியாததால் சாஸ்திரங்களில் சண்டையைப் பற்றிய விசயங்களை எழுதி
விட்டனர். உண்மையில் மாயையாகிய இராவணனின் மீது வெற்றி பெறுவது
மிகப் பெரிய சண்டையாகும். குழந்தைகள் பார்க்கின்றனர், நாம்
அடிக்கடி தந்தையை நினைவு செய்கிறோம், பிறகு நினைவு
துண்டிக்கப்படுகிறது. மாயை தீபத்தை அணைத்து விடுகிறது. இதைப்
பற்றி குலேபகாவலியின் கதையும் உள்ளது. குழந்தைகள் வெற்றி
அடைகின்றனர். மிகவும் நன்றாகச் செல்கின்றனர், பிறகு மாயை வந்து
தீபத்தை அணைத்து விடுகிறது. பாபா! மாயையின் புயல்கள் நிறைய
வருகின்றன என குழந்தைகளும் சொல்கின்றனர். பலவிதமான புயல்களும்
குழந்தைகளிடம் வருகின்றன. சில சமயங்களில் 8 - 10 வருடங்கள்
பழமையான நல்ல நல்ல மரங்கள் கூட விழுந்து விடும்படியாக பலமான
புயல் வீசுகின்றது. குழந்தைகள் தெரிந்துள்ளனர், வர்ணனையும்
செய்கின்றனர். நல்ல நல்ல மாலையின் மணிகள் இருந்தனர். இப்போது
இல்லவே இல்லை. இதுவும் உதாரணமாகும் - யானையை முதலை சாப்பிட்டது.
இது மாயையின் புயல் காற்றாகும்.
இந்த 5 விகாரங்களிலிருந்து மிகவும் பாதுகாப்பாக இருங்கள் என
தந்தை சொல்கிறார். நினைவில் இருந்தீர்கள் என்றால் வலிமை
மிக்கவர்களாக ஆகி விடுவீர்கள். ஆத்ம உணர்வுள்ளவராகுங்கள்.
தந்தையின் இந்த படிப்பு ஒரு முறைதான் கிடைக்கிறது. நீங்கள்
ஆத்ம அபிமானியாகுங்கள் என வேறு யாரும் ஒருபோதும் சொல்ல
மாட்டார்கள். சத்யுகத்தில் கூட இப்படி சொல்ல மாட்டார்கள்.
பெயர், உருவம், தேசம், காலம் அனைத்தும் நினைவு இருக்கவே
செய்கிறது. இந்த சமயம் உங்களுக்குப் புரிய வைக்கிறேன் -
இப்போது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் முன்பு சதோபிரதானமாக
இருந்தீர்கள், சதோ-ரஜோ- தமோவில் நீங்கள் முழுமையாக 84 பிறவிகள்
எடுத்தீர்கள். அதிலும் கூட முதல் நம்பர் இவர் (பிரம்மா) ஆவார்.
மற்றவர்களுடையது 83 பிறவிகளும் இருக்கலாம், ஆனால் இவருக்கு 84
பிறவிகள் ஆகும். இவர் முதன் முதலில் ஸ்ரீ நாராயணராக இருந்தார்.
இவருக்காக சொன்னது அனைவருக்காகவும் சொன்னதாகப் புரிந்து
கொள்கிறார், பல பிறவிகளின் கடைசியில் ஞானத்தை எடுத்து பிறகு
அவர் ஸ்ரீ நாராயணன் ஆகிறார். (கல்ப) மரத்திலும்
காட்டப்பட்டுள்ளதல்லவா - இங்கே ஸ்ரீ நாராயணன் மற்றும்
கடைசியில் பிரம்மா நின்றிருக்கிறார். கீழே இராஜயோகம் கற்றுக்
கொண்டிருக்கிறார். பிரஜாபிதாவை ஒருபோதும் பரமபிதா என்று
சொல்வதில்லை. பரமபிதா என ஒருவர் தான் சொல்லப்படுகிறார். பிறகு
பிரஜாபிதா என இவர் (பிரம்மா) சொல்லப்படுகிறார். இவர் தேகதாரி
ஆவார், அவர் தேக மற்றவர், விசித்திரமானவர் ஆவார். லௌகிக
தந்தையை பிதா என்று சொல்வார்கள், இவரை பிரஜாபிதா என்பார்கள்.
அந்த பரமபிதா பரமதாமத்தில் வசிக்கிறார். பிரஜாபிதா பிரம்மா
பரமதாமத்தில் என சொல்வதில்லை. அவர் இங்கே சாகார உலகத்தில்
இருப்பவராகி விட்டார். சூட்சும வதனத்தில் கூட இல்லை. பிரஜைகள்
ஸ்தூல வதனத்தில்தான் இருக்கின்றனர். பிரஜாபிதா பகவான் என
சொல்லப்படுவதில்லை. பகவானுக்கு ஏதும் சரீரத்தின் பெயர் இல்லை.
பெயர் வைக்கக் கூடிய மனித சரீரத்திலிருந்து அவர் தனிப்பட்டவர்.
ஆத்மாக்கள் அங்கே இருக்கும்போது ஸ்தூலமான பெயர்
உருவத்திலிருந்து தனிப்பட்டவர்கள். ஆனால் ஆத்மா இருக்கின்றது
அல்லவா. சாது சன்னியாசிகள் முதலானவர்களுக்கு எதுவும் தெரியாது.
அவர்கள் வீடு வாசலை மட்டும் விடுகின்றனர். மற்றபடி உலகின்
விகாரங்களின் அனுபவ மிக்கவர்களாக உள்ளனர் அல்லவா. சிறு
குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது, ஆகையால் அவர்கள்
மஹாத்மாக்கள் எனப்படுகின்றனர். 5 விகாரங்களைக் குறித்து
அவர்களுக்கு எதுவும் தெரியாது. சிறு குழந்தைகள்
தூய்மையானவர்கள் என சொல்லப்படுகின்றனர். இந்த சமயத்தில் யாரும்
தூய்மையான ஆத்மாக்களாக இருக்க முடியாது. சிறியவரிலிருந்து
பெரியவர் ஆவார்கள், ஆனாலும் பதிதர்கள் (தூய்மையற்றவர்கள்)
என்றே சொல்வோம் அல்லவா. அனைவருடைய தனித் தனியான நடிப்பு இந்த
நாடகத்தில் பதிவாகியுள்ளது. இந்த சக்கரத்தில் எத்தனை சரீரங்கள்
எடுக்கிறோம், எவ்வளவு கர்மங்கள் செய்கிறோம், அவையனைத்தும்
மீண்டும் நடக்கும். முதன் முதலாக ஆத்மாவை புரிந்து கொள்ள
வேண்டும். இவ்வளவு சிறிய ஆத்மாவுக்குள் 84 பிறவிகளின் அழிவற்ற
நடிப்பு நிறைந்துள்ளது. இதுவே அனைத்திலும் அதிசயமான விசயம்
ஆகும். ஆத்மாவும் அழிவற்றது. நாடகமும் அழிவற்றது, உருவாகி
உருவாக்கப்பட்டது ஆகும். எப்போதி லிருந்து தொடங்கியது என சொல்ல
முடியாது. இயற்கை என சொல்கின்றனர் அல்லவா. ஆத்மா
எப்படிப்பட்டது, இந்த நாடகம் எப்படி உருவாகியுள்ளது, இதில்
யாரும் எதுவும் செய்ய முடியாது. கடல் அல்லது ஆகாயத்தின்
எல்லையைக் காண முடியாதது போல. இது அழிவற்ற நாடகம். எவ்வளவு
அதிசயமாக உள்ளது. எப்படி பாபா அதிசயமானவர், அதுபோல ஞானமும் கூட
மிகவும் அதிசயமானது. ஒருபோதும் யாரும் சொல்ல முடியாது. இவ்வளவு
நடிகர்கள் அனைவரும் தத்தமது நடிப்பை நடித்தபடிதான்
வருகின்றனர். நாடகம் எப்போது உருவாகியது என்பது குறித்து
யாரும் கேள்வியை எழுப்ப முடியாது. பகவானுக்கு ஏன் இப்படி
தோன்றியது, அவர் துக்கமும் சுகமும் நிறைந்த உலகத்தை ஏன்
அமர்ந்து உருவாக்கினார்? என பலரும் கேட்கின்றனர். அட, இது
அனாதியானது. பிரளயம் முதலானவை ஏற்படுவதில்லை. உருவாகி
உருவாக்கப்பட்டது, இது ஏன் உருவாக்கப்பட்டது என கேட்க
முடியாது. புத்திசாலிகளாக ஆகும்போது ஆத்மாவின் ஞானத்தையும் கூட
தந்தை உங்களுக்கு சொல்கிறார். ஆக, நீங்கள் நாளுக்கு நாள்
முன்னேற்றத்தை அடைந்தபடி இருக்கிறீர்கள். முதன் முதலில் பாபா
மிகவும் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொண்டிருந்தார். அதிசயமான
விஷயங்களாக இருந்தன, என்றாலும் ஈர்ப்பு இருந்தது அல்லவா. அவர்
கவர்ந்திழுத்தார். பட்டியின் ஈர்ப்பும் இருந்தது. கிருஷ்ணரை
கம்சபுரி யிலிருந்து அழைத்துச் சென்றார்கள் என சாஸ்திரங்களில்
காட்டியிருக்கின்றனர். அங்கே கம்சன் முதலானவர்கள் இருக்கவே
மாட்டார்கள் என நீங்கள் இப்போது தெரிந்திருக்கிறீர் கள். கீதா,
பாகவதம், மஹாபாரதம் இவையனைத்திற்கும் தொடர்பு வைக்கின்றனர்,
அப்படி எதுவும் கிடையாது. இந்த தசரா முதலானவை பரம்பரை
பரம்பரையாக நடந்து வருகிறது என புரிந்து கொள்கின்றனர். இராவணன்
என்பது என்ன என்பதும் கூட யாருக்கும் தெரியாது. தேவி தேவதைகளாக
இருந்தவர்கள் கீழே இறங்கி இறங்கி தூய்மையற்றவர்களாக ஆகி
விட்டனர். யார் அதிகமாக தூய்மை இழந்து விட்டனரோ அவர்கள்
தலையில் அடித்துக் கொள்கின்றனர் வருந்துகின்றனர். ஆகையால் பதித
பாவனா என கூக்குரலிடவும் செய்கின்றனர். இந்த விஷயங்கள்
அனைத்தையும் தந்தைதான் வந்து புரிய வைக்கிறார். சிருஷ்டி
சக்கரத்தின் முதல்-இடை-கடைசியை வேறு யாரும் அறிவதில்லை.
நீங்கள் அறிந்து கொள்வதன் மூலம் சக்ரவர்த்தி ராஜா ஆகி
விடுகிறீர்கள். திரிமூர்த்தி படத்தில் எழுதப் பட்டுள்ளது - இது
உங்களுடைய ஈஸ்வரிய பிறப்புரிமை. பிரம்மாவின் மூலம் படைத்தல்,
சங்கர் மூலமாக அழித்தல், விஷ்ணுவின் மூலமாக காத்தல். . .
வினாசமும் கூட கண்டிப்பாக ஆக வேண்டும். புதிய உலகத்தில் மிகச்
சிலரே இருப்பார்கள். இப்போது பல தர்மங்கள் இருக்கின்றன. ஒரு
ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் மட்டும் இல்லை என புரிந்து
கொள்கின்றனர். பிறகு கண்டிப்பாக அந்த ஒரு தர்மம் தேவை,
மஹாபாரதம் கூட கீதையுடன் தொடர்பு கொள்கிறது. இந்த சக்கரம்
சுற்றியபடி இருக்கிறது. ஒரு வினாடி கூட நின்று போக முடியாது.
புதிய விஷயம் ஏதுமில்லை, பல முறை இராஜ்யத்தை அடைந்தீர்கள்,
யாருடைய வயிறு நிரம்பியிருக்கிறதோ, அவர்கள் கம்பீரமாக
இருக்கின்றனர். நாம் எத்தனை முறை இராஜ்யத்தை எடுத்திருந்தோம்,
இது நேற்றைய விஷயம் என உள்ளுக்குள் புரிந்து கொள்கிறீர்கள்.
நேற்றுதான் தேவி தேவதைகளாக இருந்தோம், பிறகு சக்கரத்தைச்
சுற்றி வந்து இன்று நாம் தூய்மையற்றவராகியுள்ளோம், மீண்டும்
நாம் யோகபலத்தின் மூலம் உலகத்தின் இராஜ்யத்தை அடைகிறோம்.
ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள்தான் இராஜ்யத்தை அடைகின்றீர்கள்.
கொஞ்சமும் வித்தியாசம் ஏற்படாது. இராஜ்யத்தில் சிலர்
(பதவியில்) குறைந்தவர்களாகவும், சிலர் உயர்ந்தவர்களாகவும்
ஆவார்கள். இது முயற்சியின் மூலம்தான் நடக்கிறது.
முன்னர் நாம் குரங்குகளை விடவும் மோசமானவர்களாக இருந்தோம் என
நீங்கள் அறிவீர்கள். இப்போது தந்தை கோவிலுக்குத் தகுந்தவர்களாக
ஆக்கிக் கொண்டிருக்கிறார். நல்ல நல்ல குழந்தைகளின் ஆத்மா நாம்
எதற்கும் உதவாதவர்களாக இருந்தோம் என உணருகின்றன, இப்போது நாம்
மதிப்பு மிக்கவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு
கல்பமும் மதிப்பற்றவர்களிலிருந்து மதிப்பு மிக்கவர்களாக தந்தை
நம்மை ஆக்குகிறார். கல்பத்திற்கு முந்தையவர்கள்தான் இந்த
விசயங்களை நல்ல விதமாகப் புரிந்து கொள்வார்கள். நீங்களும்
கண்காட்சி முதலானவைகளை ஏற்பாடு செய்கிறீர்கள், எதுவும்
புதிதல்ல. இவர் மூலமாகத்தான் நீங்கள் அமரபுரியை ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் தேவிகள்
முதலானவர்களின் கோவில்கள் எவ்வளவு இருக்கின்றன. இவையனைத்தும்
பூஜை செய்வதற்குரிய பொருட்களாகும். பூஜிக்கத்தக்க தன்மையின்
பொருட்கள் என எதுவுமில்லை. நாளுக்கு நாள் உங்களுக்கு ஆழமான
விஷயங்களைப் புரியவைத்தபடி இருக்கிறேன் என தந்தை சொல்கிறார்.
முந்தைய பல விஷயங்களை உங்களிடம் வைத்திருக்கின்றீர்கள். அவற்றை
இப்போது என்ன செய்யப் போகிறீர்கள். அப்படியே உபயோகமின்றி
கிடக்கின்றன. தற்சமயத்தில் பாப்தாதா புதுப் புது விசயங்களை
புரிய வைத்தபடி இருக்கின்றனர். ஆத்மா இவ்வளவு சின்னஞ்சிறு
புள்ளியாக உள்ளது, அதில் நடிப்பு முழுவதும் அடங்கியுள்ளது.
இந்த விசயங்கள் முன்னர் எழுதி வைத்த தாள்களில் இருக்காது.
பிறகு பழைய பாய்ண்ட்களை (கருத்துகளை) என்ன செய்வீர்கள்?
இறுதித் தேர்வின் முடிவுகள்தான் உதவுகின்றன. கல்பத்திற்கு
முன்பும் கூட உங்களுக்கு இப்படித்தான் சொல்லியிருந்தேன் என
தந்தை சொல்கிறார். வரிசைக்கிரமமாக படித்தபடி இருக்கின்றனர்.
ஏதாவது பாடத்தில் மேலே கீழே ஆகியபடி உள்ளனர். வியாபாரத்தில்
கூட (கிரகாச்சாரம்) கெட்ட நேரம் ஆகிவிடுகிறது, இதில் மனச்
சோர்வு அடையக் கூடாது. மீண்டும் எழுந்து முயற்சி
செய்யப்படுகிறது. மனிதர்கள் திவாலாகிறார்கள், பிறகு தொழில்
செய்து மிகுந்த செல்வந்தர்களாக ஆகிவிடுகின்றனர். இங்கும் கூட
யாராவது விகாரத்தில் விழுந்து விடுகின்றனர் என்றாலும் தந்தை
சொல்கிறார் - நல்ல முறையில் முயற்சி செய்து உயர் பதவியை
அடையுங்கள். மீண்டும் ஏறத் தொடங்க வேண்டும். விழுந்து
விட்டீர்கள், மீண்டும் ஏறுங்கள் என தந்தை சொல்கிறார்.
விழுகின்றனர், பிறகு எழ முயற்சிக்கின்றனர் - இப்படியாக பலர்
உள்ளனர். பாபா மறுப்பதில்லை. இப்படிப்பட்டவர்களும் பலர்
வருவார்கள் என தந்தைக்குத் தெரியும். முயற்சி செய்யுங்கள் என
தந்தை சொல்வார். என்றாலும் கூட ஏதோ கொஞ்சம் உதவியாளர்களாக ஆகி
விடுவார்கள் அல்லவா. நாடகத் தின் திட்டப்படிதான் சொல்வார்.
தந்தை சொல்வார் - நல்லது குழந்தைகளே, இப்போது
திருப்தியடைந்தீர்கள், நிறைய அடி வாங்கினீர்கள், இப்போது
மீண்டும் முயற்சி செய்யுங்கள். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை
இப்படி சொல்வார் அல்லவா. பாபாவிடம் சந்திப்பதற்காக எவ்வளவு
பேர் வருகின்றனர். எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் அறிவுரையை
ஏற்க மாட்டீர்களா, தூய்மையடைய மாட்டீர்களா? என்று கேட்கிறேன்.
தந்தை ஆத்மா என புரிந்து ஆத்மாவுக்குச் சொல்கிறார் எனும்போது
கண்டிப்பாக அம்பு தைக்கும். மனைவிக்கு அம்பு தைக்கிறது
(புரிந்து விடுகிறது) என்று வைத்துக் கொள்ளுங்கள், நான்
உறுதிமொழி எடுக்கிறேன் என்பார். கணவருக்கு அம்பு தைப்பதில்லை.
பிறகு மேலும் போகப் போக அவரையும் முன்னேற்றுவதற்காக முயற்சி
செய்வார். பிறகு மனைவியால் ஞானத்தில் கொண்டுவரப் பட்டவர்களும்
பலர் வருகின்றனர். அப்போது மனைவி என்னுடைய குரு என்று
சொல்கின்றனர். அந்த பிராமணர்கள் தாலி கட்டும்போது இவர்
உன்னுடைய குரு, ஈஸ்வரன் என சொல்கின்றனர். இங்கே உங்கள் ஒரு
தந்தையே அனைத்துமாவார் என தந்தை சொல்கிறார். ஒருவரே
என்னுடையவர் வேறு யாருமில்லை. அனைவரும் அவரைத்தான் நினைவு
செய்கின்றனர். அந்த ஒருவருடன் மட்டுமே புத்தியின் தொடர்பை
வைக்க வேண்டும். இந்த தேகமும் கூட என்னுடையதில்லை. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்
1.
ஏதாவது கிரகாச்சாரம் (கெட்ட நேரம்) ஏற்பட்டது என்றாலும் மனச்
சோர்வடைந்து அமர்ந்து விடக் கூடாது. மீண்டும் முயற்சி செய்து
தந்தையின் நினைவில் இருந்து உயர் பதவி அடைய வேண்டும்.
2. சுயத்தின் நிலையை நினைவின் மூலம் மாயையின் எந்த புயலும்
சண்டை போட முடியாத அளவுக்கு வலிமை நிறைந்ததாக ஆக்க வேண்டும்.
விகாரங்களிலிருந்து தம்மை பாதுகாத்தபடி இருக்க வேண்டும்.
வரதானம்:
மூன்று காலத்தையும் அறிந்தவர் (திரிகாலதர்ஷி)
மற்றும் சாட்சி பார்வையாளர் ஆகி ஒவ்வொரு கர்மத்தையும்
செய்துகொண்டே பந்தனத்திலிருந்து விடுபட்ட (பந்தன்முக்த்)
ஸ்திதியின் அனுபவத்தின் மூலம் உதாரண ரூபம் ஆகுக.
ஒருவேளை திரிகாலதர்ஷி என்ற
நிலையில் நிலைத்து இருக்கின்றீர்கள், கர்மத்தின் முதல், இடை,
கடைசி நிலையினை அறிந்து கர்மம் செய்கின்றீர்கள் என்றால்
எந்தவொரு கர்மமும் விகர்மம் ஆக முடியாது, எப்பொழுதும் சுகர்மமே
ஏற்படும். இதுபோன்று சாட்சி பார்வையாளர் ஆகி கர்மம் செய்வதன்
மூலமாக எந்தவொரு கர்மத்தின் பந்தனத்தில் சிக்கிக்கொண்ட (கட்டுப்பட்ட)
ஆத்மா ஆகமாட்டீர்கள். கர்மத்தின் பலன் உயர்ந்ததாக கிடைக்கின்ற
காரணத்தினால் கர்ம சம்பந்தத்தில் வருவீர்கள், பந்தனத்தில் அல்ல.
கர்மம் செய்து கொண்டே விடுபட்டு மற்றும் அன்பானவராக
இருந்தீர்கள் என்றால் அநேக ஆத்மாக்களுக்கு முன்னால், நீங்கள்
உதாரண ரூபம் அதாவது எக்ஸாம்பிள் ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
யார் மனதினால் சதா திருப்தியாக
இருக்கின்றார்களோ, அவர்களே டபுள் லைட் ஆவார்கள்.
ஓம்சாந்தி