20.12.2020    காலை முரளி            ஓம் சாந்தி         அவ்யக்த பாப்தாதா,     

ரிவைஸ் 20.03.1987 மதுபன்


 

அன்பு மற்றும் சத்தியத்தினுடைய அதிகாரத்தின் சமநிலை

 

இன்று சத்திய தந்தை, சத்திய ஆசிரியர், சத்குரு தன்னுடைய சத்தியத்தின் சக்தி நிறைந்த சத்தியமான குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்கின்றார்கள். அனைத்தையும்விட உயர்ந்த திலும் உயர்ந்த சக்தி அல்லது அதிகாரம் (அத்தாரிட்டி) சத்தியத்தின் சக்தியே ஆகும். சத்தியம் என்பது இரண்டு அர்த்தத்தில் கூறப்படுகின்றது. ஒன்று - சத்தியம் என்றால் உண்மை; இரண்டாவது - சத்தியம் என்றால் அழிவற்றது. இந்த இரண்டு அர்த்தங் களின்படி சத்தியத்தின் சக்தி அனைத்தையும்விட உயர்ந்தது ஆகும். தந்தையை சத்தியமான தந்தை என்று கூறப் படுகின்றது. தந்தையரோ அநேகர் இருக்கின்றார்கள், ஆனால், சத்தியமான தந்தை ஒருவரே ஆவார். சத்தியமான ஆசிரியர், சத்குரு ஒருவரே ஆவார். சத்தியமானவரையே பரமாத்மா என்று கூறுகின்றார்கள் அதாவது பரம ஆத்மாவினுடைய விசேஷத்தன்மை சத்தியம் ஆகும். சத்தியமே சிவம். என்ற உங்களுடைய பாடலும் உள்ளது. சத்தியம் சிவம் சுந்தரம் என்று உலகத்திலும் கூறுகின்றார்கள். கூடவே, பரமாத்ம தந்தையை சத் சித் ஆனந்த சொரூபமானவர் என்று கூறுகின்றனர். ஆத்மாக்களாகிய உங்களையும் சத் சித் ஆனந்த சொரூபம் என்று கூறுகின்றனர். எனவே, சத்தியம் என்ற வார்த்தைக்கு மிகுந்த மகிமை உள்ளது. மேலும், எப்பொழுதாவது ஒரு காரியத்தை அதிகாரப்பூர்வமாக சொல்லும்பொழுது நான் சத்தியமானவன், ஆகையினால், அதிகாரப்பூர்வமாக சொல்கின்றேன் என்று கூறுவார்கள். சத்தியத்தின் படகு தடுமாறும் ஆனால், மூழ்காது என்பது சத்தியத்திற்காக சொல்லப்படும் மகிமையாகும். சத்திய மானவர்கள் நடனம் ஆடிக்கொண்டே இருப்பார்கள் என்று நீங்களும் கூட கூறுகின்றீர்கள். சத்தியத்தின் சக்தி உடையவர்கள் சதா நடனம் ஆடிக்கொண்டே இருப்பார்கள், ஒருபொழுதும் வாடிப் போகமாட்டார்கள், எதிலும் சிக்கிக் கொள்ளமாட்டார்கள், பயப்படமாட்டார்கள், பலவீனம் அடைய மாட்டார்கள். சத்தியத்தின் சக்தி உடையவர்கள் சதா குஷியில் நடனம் ஆடிக்கொண்டே இருப்பார்கள். சக்திசாலியாக இருப்பார்கள், அவர்களிடம் எதிர்கொள்ளும் சக்தி இருக்கும், ஆகையினால், பயப்பட மாட்டார்கள். சத்தியத்தை தங்கத்திற்கு சமமானது என்று கூறுவார்கள், அசத்தியத்தை மண்ணிற்கு சமமானது என்று கூறுவார்கள். பக்தியில் கூட யார் பரமாத்மாவுடன் அன்பு கொண்டிருப்பார்களோ, அவர்களை சத்சங்கி அதாவது சத்தியமானவருடன் தொடர்பில் இருக்கக்கூடியவர் என்று கூறப்படுகிறது. மேலும், இறுதியில் ஆத்மா எப்பொழுது சரீரத்தை விடுகின்றதோ, அப்பொழுது கூட என்ன கூறுகின்றார்கள்? சத்தியமானவர் உடன் இருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். எனவே, சத்தியம் என்பது அழிவற்றது, சத்தியம் என்பது உண்மை ஆகும். சத்தியத்தின் சக்தி மகான் சக்தியாகும். நிகழ் காலத்தில் பெரும்பான்மையானோர் உங்கள் அனைவரையும் பார்த்து என்ன கூறுகின்றார்கள்? இவர்களிடம் சத்தியத்தின் சக்தி இருக்கின்றது, ஆகையினால் தான் இத்தனை காலம் முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்கள். சத்தியம் ஒருபொழுதும் அசைவதில்லை, உறுதியாக இருக்கின்றது. சத்தியமானது, வளர்ச்சி அடைவதற் கான விதியாகும். சத்தியத்தின் சக்தி மூலம் சத்யுகத்தை உருவாக்குகின்றீர்கள், சுயம் தானும் சத்திய நாராயணராக, சத்திய லெட்சுமியாக ஆகின்றீர்கள். இது சத்திய ஞானம் ஆகும், சத்திய தந்தையின் ஞானம் ஆகும். ஆகையினால், உலகத்திலிருந்து தனிப்பட்டது மற்றும் அன்பானது ஆகும்.

 

இன்று பாப்தாதா, சத்திய ஞானத்தினுடைய சத்தியத்தின் அதிகாரத்தை குழந்தைகள் எந்தளவு தாரணை செய்திருக்கின்றார்கள் என்று அனைத்து குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். சத்தியம் ஒவ்வொரு ஆத்மாவையும் கவர்ச்சி செய்கிறது. இன்றைய உலகம் பொய்யான கண்டமாக உள்ளது, அனைத்தும் பொய்யாக உள்ளது அதாவது அனைத் திலும் பொய் கலந்து இருக்கிறது. ஆனாலும், சத்தியத்தின் சக்தி உடையவர்களே வெற்றி யாளர்கள் ஆகின்றார்கள். குஷி மற்றும் பயமற்றதன்மை சத்தியத்தின் பிராப்தி ஆகும். சத்தியம் பேசக் கூடியவர்கள் சதா பயமற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஒருபொழுதும் பயம் ஏற்படாது. யார் சத்தியமாக இல்லையோ, அவர்களுக்கு அவசியம் பயம் இருக்கும். நீங்கள் அனைவரும் சத்தியத்தின் சக்தி கொண்டிருக் கக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்கள் ஆவீர்கள். சத்திய ஞானம், சத்திய தந்தை, சத்திய பிராப்தி, சத்திய நினைவு, சத்திய குணம், சத்திய சக்தி கள் ஆகிய அனைத்து பிராப்திகளும் உள்ளன. எனவே, இத்தகைய அதிகாரத்தின் போதை இருக்கிறதா? அதிகாரம் என்பதன் அர்த்தம் அபிமானம் என்பது அல்ல. எந்தளவு பெரியதிலும் பெரிய அதிகாரம் (அத்தாரிட்டி) இருக்கிறதோ, அந்தளவு அவர்களுடைய விருத்தியில் ஆன்மிக அதிகாரம் (அத்தாரிட்டி) இருக்கும். பேச்சில் அன்பு மற்றும் பணிவு இருக்கும். இதுவே அத்தாரிட்டியின் அடையாளம் ஆகும். எவ்வாறு நீங்கள் மரத்தின் உதாரணம் கொடுக்கின்றீர்கள், மரத்தில் எப்பொழுது பழத்தின் அத்தாரிட்டி முழுமையாக வந்துவிடுகிறதோ, அப்பொழுது மரம் தணிந்து அதாவது பணிவாகி சேவை செய்கிறது, அவ்வாறு ஆன்மிக அதிகாரம் உடைய குழந்தைகள் எந்தளவு உயர்ந்த அதிகாரிகளாக இருப்பார்களோ, அந்தளவு பணிவானவர்களாக மற்றும் அனைவருக்கும் அன்பானவர்களாக இருப்பார்கள். ஆனால், சத்தியத்தின் அதிகாரம் உடையவர்கள் நிரகங்காரியாக இருப்பார்கள். எனவே, அத்தாரிட்டியும் இருக்கிறது, போதையும் இருக்கிறது மற்றும் நிரகங்காரியாகவும் இருக்கின்றார்கள் என்றால் இதையே சத்திய ஞானத்தின் பிரத்யட்ச சொரூபம் என்று கூறப் படுகிறது.

 

எவ்வாறு இந்த பொய்யான கண்டத்தில், தந்தை பிரம்மாவை சத்தியத்தினுடைய அத்தாரிட்டியின் பிரத்யட் சமான, சாகார சொரூபமாக பார்த்து இருக்கின்றீர்கள் அல்லவா. அவருடைய அத்தாரிட்டியான பேச்சு ஒருபொழுதும் கூட அகங்காரத்தின் உணர்வை ஏற்படுத் தாது. முரளி கேட்கும்பொழுது எவ்வளவு அத்தாரிட்டியான வார்த்தை களாக இருக்கும்! ஆனால், அபிமானத்துடன் கூடியதாக இருக்காது. அத்தாரிட்டியான பேச்சில் அன்பு கலந்திருக் கிறது, பணிவு இருக்கிறது, நிரகங்காரதன்மை இருக்கிறது, ஆகையினால், அத்தாரிட்டியான பேச்சு அன்பானதாக இருக்கின்றது. அன்பானதாக மட்டும் இல்லை, ஆனால், பிரபாவத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. தந்தையை பின்பற்ற வேண்டும் அல்லவா. சேவையில் மற்றும் கர்மத்தில் தந்தை பிரம்மாவை பின்பற்ற வேண்டும். ஏனெனில், சாகாரி உலகத்தில் சாகார உதாரணம் ஆவார், சாம்பிள் (மாதிரி) ஆவார். எவ்வாறு தந்தை பிரம்மாவை, கர்மத்தில், சேவையில், முகத்தில், ஒவ்வொரு நடத்தையில், நடமாடும் அதிகார சொரூபமாக பார்த்தீர்களோ, அவ்வாறு தந்தையை பின்பற்றக் கூடியவர்களிடத்திலும் கூட அன்பு மற்றும் அத்தாரிட்டி (அதிகாரம்), பணிவு மற்றும் மகான் தன்மை ஆகிய இரண்டும் இணைந்தே தென்பட வேண்டும். அன்பு மட்டும் தென்படுகிறது மற்றும் அத்தாரிட்டி மறைந்துவிடுகிறது அல்லது அத்தாரிட்டி தென்படுகிறது மற்றும் அன்பு மறைந்துவிடுகிறது என்பது கூடாது. எவ்வாறு தந்தை பிரம்மாவை பார்த்து இருக்கின்றீர்கள் மற்றும் இப்பொழுதும் கூட முரளி கேட்கின்றீர்கள். நடைமுறை சான்று உள்ளது. குழந்தைகளே, குழந்தைகளே என்றும் கூறுவார், ஆனால், அதிகாரத்தையும் காண்பிப்பார். அன்போடு குழந்தைகளே என்றும் கூறுவார் மற்றும் அத்தாரிட்டியோடு அறிவுரையும் கொடுப்பார். சத்திய ஞானத்தை பிரத்யட்சமும் செய்வார், ஆனால், குழந்தைகளே, குழந்தைகளே என்று அழைத்து புதிய ஞானம் முழுவதையும் தெளிவுபடுத்துவார். இதையே அன்பு மற்றும் சத்தியத்தினுடைய அத்தாரிட்டியின் சமநிலை என்று கூறப்படுகிறது. எனவே, நிகழ்கால சமயம், சேவையில் இந்த சமநிலைக்கு அடிக்கோடிடுங்கள்.

 

நிலத்தை உருவாக்குவதில் ஸ்தாபனை காலத்திலிருந்து இப்பொழுது வரை 50 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. வெளிநாட்டு நிலம் கூட இப்பொழுது போதுமான அளவு உருவாகிவிட்டது. 50 வருடங்கள் ஆகவில்லை, ஆனால், உருவான உருவாக்கப்பட்ட சாதனங்களால் வந்திருக்கின்றீர்கள், ஆகையினால், துவக்கத்தின் 50 வருடங்களும் மற்றும் இப்போதைய 5 வருடங்களும் சமமானது ஆகும். நாங்கள் தாமதமாக வந்திருந்தாலும் வேகமாக முன்னேறி முதல் எண்ணில் வந்திருப்பவர்கள் ஆவோம் (லாஸ்ட் ஸோ ஃபாஸ்ட் ஸோ ஃபர்ஸ்ட்) என்று இரட்டை அயல்நாட்டினர் அனைவரும் கூறுகின்றனர். எனவே, சமயத்தில் கூட வேகமாக முன்னேறி முதல் எண்ணில் வருவீர்கள் அல்லவா. கட்டாயமாக பயமற்ற தன்மையின் அதிகாரத்தைக் கொண்டிருங்கள். ஒரே ஒரு தந்தையின் புதிய ஞானமே சத்திய ஞானம் ஆகும் மற்றும் புதிய ஞானத்தின் மூலம் புதிய உலகம் ஸ்தாபனை ஆகிறது - இந்த அத்தாரிட்டி மற்றும் போதை சொரூபத்தில் வெளிப்பட (எமர்ஜ்) வேண்டும். 50 வருடங்களாக மறைத்து வைத்திருந்தீர்கள். ஆனால், இதன் அர்த்தம், யார் வந்தாலும் அவர்களுக்கு முதலிலேயே புதிய ஞானத்தின் புதிய விசயங்களைச் சொல்லி குழப்பிவிட வேண்டும் என்பது கிடையாது, இந்த நோக்கம் கிடையாது. நிலம், நாடி, சமயம் ஆகிய இவை அனைத்தையும் பார்த்து ஞானம் கொடுக்க வேண்டும் - இதுவே ஞானம் நிறைந்து இருப்பவர்களின் அடை யாளம் ஆகும். ஆத்மாவின் விருப்பத்தைப் பாருங்கள், நாடி பாருங்கள், நிலத்தை உருவாக்குங் கள், ஆனால், உள்ளுக்குள் சத்தியத்தினுடைய பயமற்ற தன்மையின் சக்தி கட்டாயமாக இருக்க வேண்டும். உலகத்தினர் என்ன கூறுவார்களோ என்ற இந்த பயம் கூடாது. பயமற்ற வராகி நிலத்தை உருவாக்குங்கள். இந்த ஞானமோ புதியது, சிலரால் புரிந்துகொள்ளவே முடியாது என்று சில குழந்தைகள் நினைக்கின்றனர். ஆனால், புத்தியற்றவர்களுக்குத் தானே புரிய வைக்க வேண்டும். மனிதர்கள் எத்தகையவர்களாக இருக்கின்றார்களோ, அதற்கேற்றார் போல் வடிவமைப்பை உருவாக்க வேண்டியதும் அவசியம் ஆகும். ஆனால், மனிதர்களுடைய பிரபாவத்தில் வந்துவிடாதீர்கள். தங்களுடைய சத்திய ஞானத்தினுடைய அதிகாரத்தினால் மனிதரை பரிவர்த்தனை செய்தே ஆக வேண்டும் என்ற இந்த இலட்சியத்தை மறவாதீர்கள்.

 

இதுவரை என்ன செய்து இருக்கின்றீர்களோ, அது சரியே. செய்ய வேண்டியதாக இருந்தது, அவசியமானதாக இருந்தது, ஏனெனில், நிலத்தை உருவாக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், எதுவரை நிலத்தை உருவாக்குவீர்கள்? மேலும் எவ்வளவு சமயம் தேவை? மருந்து கொடுக்கும்பொழுது கூட முதலிலேயே அதிக சக்தி வாய்ந்ததைக் கொடுக்கமாட்டார் கள், முதலில் குறைவான வீரியம் உடையது கொடுக்கப்படுகிறது. ஆனால், சக்தி வாய்ந்த மருந்தைக் கொடுக்கவே இல்லை, வீரியம் குறைந்த மருந்துகளை மட்டும் கொடுப்பது என்பது கூடாது. ஒரு பலவீனமானவருக்கு அதிக சக்தி கொண்ட மருந்து கொடுப்பதும் கூட தவறாகும். கண்டறியும் சக்தியும் தேவை. ஆனால், தங்களுடைய சத்தியமான புதிய ஞானத்தின் அதிகாரமும் கட்டாயமாக இருக்க வேண்டும். உங்களுடைய சூட்சுமமான அத்தாரிட்டியின் விருத்தி தான் அவர்களுடைய விருத்திகளை மாற்ற மடையச் செய்யும். இதுவே நிலமாக உருவாகும். மேலும், விசேஷமாக சேவை செய்து எப்பொழுது மதுபன் வரை வந்து சேருகின்றீர்களோ, அப்பொழுது குறைந்ததிலும் குறைந்தது அவர்களுக்கு இது அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இந்த பூமியில் அவர்களுடைய நிலமும் உருவாகி விடுகின்றது. எவ்வளவு தான் பாறைப் போன்ற நிலமாகவும் இருக்கலாம், எந்த தர்மத்தினரா கவும் இருக்கலாம், எத்தகைய பதவி வகிப்பவராகவும் இருக்கலாம், ஆனால், இந்த பூமியில் அவர்களும் கூட மென்மையானவர்கள் ஆகிவிடுகின்றனர் மற்றும் மென்மையான நிலமாக ஆகிவிடும் காரணத்தினால் அதில் என்ன விதை போட்டாலும் அதற்கான பலன் சகஜமாக வெளிப்படும். பயம் மட்டும் கொள்ளாதீர்கள், அவசியம் பயமற்றவர்களாக ஆகுங்கள். யுக்தியுடன் கொடுங்கள். இத்தகைய பூமிக்கு நான் வந்திருக்கின்றேன், ஆனாலும், பரமாத்ம ஞானம் எது? என்பது தெரியவில்லை என்று அவர்கள் உங்களைப் பற்றி இந்தப் புகார் செய்யும் படியாக ஆகிவிடக்கூடாது. பரமாத்ம பூமியில் வந்து பரம ஆத்மாவினுடைய பிரத்யட்சத்தாவின் செய்தியை அவசியம் பெற்றுச் செல்ல வேண்டும். அத்தாரிட்டிக்கான இலட்சியம் இருக்க வேண்டும்.

 

தற்கால உலகத்தின் கணக்குபடியும் கூட புதுமைத்தன்மைக்கு மகத்துவம் உள்ளது. பிறகு, யாராவது முறையற்ற புதிய ஃபேஷனை (நாகரீகம்) உருவாக்கினாலும் கூட அதை பின்பற்றுகின்றனர். முன்பிருந்த ஓவியத்தைப் பாருங்கள் எவ்வளவு சிறந்ததாக இருந்தது! தற்காலத்தின் ஓவியமோ அதற்கு முன்னால் ஒரு கோடு போல் இருக்கின்றது. ஆனால், நவீன ஓவியத்தை விரும்புகின்றனர். ஒவ்வொரு விஷயத்திலும் மனிதர்கள் புதுமையை விரும்பு கின்றனர். மேலும், புதுமைத்தன்மை தானாகவே தன்பக்கம் கவர்ச்சி செய்யும். ஆகையினால், புதுமைத்தன்மை, சத்தியம், மகான்தன்மை ஆகியவற்றின் போதை அவசியம் இருக்க வேண்டும். பிறகு, சமயம் மற்றும் மனிதரைப் பார்த்து சேவை செய்யுங்கள். புதிய உலகிற்கான புதிய ஞானத்தை அவசியம் பிரத்யட்சம் செய்ய வேண்டும் என்ற இந்த இலட்சியத்தை கட்டாயமாகக் கொண்டிருங்கள். இப்பொழுது அன்பு மற்றும் சாந்தி பிரத்யட்சம் ஆகியிருக்கிறது. தந்தையினுடைய அன்புக் கடலின் சொரூபம், சாந்திக் கடலின் சொரூபத்தை பிரத்யட்சம் செய்துவிட்டீர்கள். ஆனால், ஞான சொரூப ஆத்மா மற்றும் ஞானக் கடலான தந்தை பற்றிய இந்த புதிய ஞானத்தை எவ்விதமாகக் கொடுக்கலாம் என்ற திட்டத்தை இப்பொழுது குறைவாகவே உருவாக்கி இருக்கின்றீர்கள். புதிய உலகிற்கான புதிய ஞானம் இது என்ற இந்த வார்த்தைகள் அனைவருடைய வாயிலிருந்தும் வெளிப்படும் சமயம் வரும். இப்பொழுது நன்றாக உள்ளது என்று மட்டும் கூறுகின்றனர், புதியது என்று கூறவில்லை. நினைவின் பாடத்தை நன்றாக பிரத்யட்சம் செய்திருக்கின்றீர்கள், ஆகையினால், நிலம் நன்றாக உருவாகி விட்டது, மேலும் நிலத்தை உருவாக்க வேண்டும் - முதலில் செய்த அவசியமான காரியமும் தேவையானதே. என்ன செய்து இருக்கின்றீர்களோ, அது மிகவும் நன்றாக செய்து இருக்கின்றீர் கள் மற்றும் அதிகமாக செய்திருக்கின்றீர்கள், உடல், மனம், செல்வத்தை ஈடுபடுத்தி செய்திருக் கின்றீர்கள். அதற்காக பரிசும் கொடுக்கின்றார்கள்.

 

முதலில் எப்பொழுது வெளிநாட்டிற்கு சென்றார்களோ, அப்பொழுது இந்த மும்மூர்த்தி சித்திரத்தை பற்றி புரிய வைப்பதை எவ்வளவு கடினமானதாக நினைத்தார்கள்! இப்பொழுது மும்மூர்த்தி சித்திரத்தைப் பார்த்தே கவர்ச்சிக்கப்படுகின்றார்கள். இந்த ஏணிப்படி சித்திரமானது பாரதத்தின் கதை என்று நினைத்தார்கள். ஆனால், வெளிநாட்டில் இந்தச் சித்திரங்களைப் பார்த்தே கவர்ச்சிக்கப்படுகின்றார்கள். எனவே, இந்தப் புது விசயத்தை எவ்விதத்தில் சொல்ல வேண்டும் என்று எவ்வாறு திட்டம் தீட்டினீர்களோ, அதுபோல் இப்பொழுதும் புதிய கண்டு பிடிப்பு செய்யுங்கள். இதை செய்து தானே ஆக வேண்டும் என்று நினைக்காதீர்கள். புதுமை யின் மகான்தன்மையினுடைய சக்தியை தாரணை செய்ய வேண்டும் என்பது மட்டுமே பாப்தாதாவினுடைய இலட்சியம் ஆகும். இதை மறக்காதீர்கள். உலகிற்குப் புரிய வைக்க வேண்டும், உலகத்தின் விசயங்களால் பயப்படாதீர்கள். தங்களுக்கான முறையை புதியதாகக் கண்டுபிடியுங்கள். ஏனெனில், கண்டுபிடிப்பாளர்கள் குழந்தைகளாகிய நீங்களே ஆவீர்கள் அல்லவா. சேவையினுடைய திட்டத்தை குழந்தைகளே அறிந்து இருக்கிறீர்கள். எத்தகைய இலட்சியம் வைத்தீர்களோ, அதற்கேற்றபடியான திட்டம் மிகவும் நல்லதிலும் நல்லதாக உருவாகிவிடும் மற்றும் வெற்றியோ ஏற்கனவே பிறப்பதிகாரமாக உள்ளது. ஆகையினால், புதுமையை பிரத்யட்சம் செய்யுங்கள். ஞானத்தின் ஆழமான விசயங்கள் என்ன இருக் கின்றனவோ, அவற்றை தெளிவுபடுத்துவதற்கான விதி உங்களிடம் மிகவும் நன்றாக உள்ளது மற்றும் தெளிவாக உள்ளது. ஒவ்வொரு கருத்தையும் அறிவுப்பூர்வமாக தெளிவுபடுத்த முடியும். அதிகாரப்பூர்வமானதாக இருக்க வேண்டும். ஏதோ மனதில் தோன்றிய அல்லது கற்பனையான விசயங்கள் கிடையாது. யதார்த்தமானது ஆகும். அனுபவம் உள்ளது. அனுபவத் தின் (அத்தாரிட்டி), ஞானத்தின் அதிகாரம், சத்தியத்தின் அதிகாரம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன! எனவே, அதிகாரம் மற்றும் அன்பு ஆகிய இரண்டையும் காரியத்தில் ஒருசேர ஈடுபடுத்துங்கள்.

 

உழைத்து சேவை செய்து செய்து இந்தளவு வளர்ச்சி அடையச் செய்திருக்கின்றீர்கள் என்று பாப்தாதா குஷி அடைகின்றார்கள், மேலும், வளர்ச்சி அடையச் செய்து கொண்டே இருப்பீர்கள், அது உள்நாடோ அல்லது வெளிநாடோ. உள்நாட்டில் கூட மனிதர் மற்றும் நாடி பார்த்து சேவை செய்வதில் வெற்றி கிடைக்கிறது. வெளி நாட்டிலும் கூட இந்த விதியினால் வெற்றி கிடைக்கிறது. முதலில் தொடர்பில் கொண்டு வருகிறீர்கள் - இது நிலம் உருவாகுவ தாகும். தொடர்பில் கொண்டு வந்த பிறகு சம்பந்தத்தில் கொண்டு வாருங்கள், தொடர்போடு மட்டும் விட்டுவிடாதீர்கள். சம்பந்தத்தில் கொண்டு வந்த பிறகு, அவர்களை புத்தியால் சமர்ப்பணம் செய்ய வைத்திடுங்கள். இது இறுதி நிலையாகும். தொடர்பில் கொண்டு வருவதும் அவசியம் ஆகும், பிறகு, சம்பந்தத்தில் கொண்டு வர வேண்டும். சம்பந்தத்தில் வர வர, தந்தை என்ன கூறினாரோ, அதுவே சத்தியமானது ஆகும் என்ற சமர்ப்பண புத்தி வந்து விடும். பிறகு, கேள்வி எழாது. பாபா என்ன கூறுகின்றாரோ, அதுவே சரியானது ஆகும், ஏனெனில், அனுபவம் ஏற்பட்டுவிட்டால் பிறகு, கேள்வி முடிவடைந்துவிடுகிறது. இதையே சமர்ப்பண புத்தி என்று சொல்லப்படுகிறது, இதில் அனைத்தும் தெளிவாக அனுபவம் ஆகிறது. உறுதியாக சமர்ப்பண புத்தி வரை கொண்டு வந்துவிட வேண்டும் என்ற இந்த இலட்சியம் கொள்ளுங்கள். அப்பொழுதே மைக் தயாராகி விட்டார்கள் என்று கூறலாம். மைக் என்ன சப்தம் எழுப்புவார்கள்? இவர்களது ஞானம் நன்றாக உள்ளது என்று மட்டும் அல்ல. இது புதிய ஞானம் ஆகும், இதுவே புதிய உலகத்தை கொண்டு வரும் என்ற இந்த சப்தம் வர வேண்டும், அப்பொழுதே கும்பகர்ணர்கள் கண் விழிப்பார்கள் அல்லவா. இல்லையெனில், கண்களைத் திறக்க மட்டும் செய்கின்றார்கள், மிகவும் நன்றாக உள்ளது, மிகவும் நன்றாக உள்ளது என்று கூறிவிட்ட பிறகு தூக்கம் வந்துவிடுகிறது. ஆகையினால், எவ்வாறு சுயம் குழந்தையிலிருந்து எஜமானன் ஆகிவிட்டீர்கள் அல்லவா, அவ்வாறு உருவாக்குங்கள். அவர் களை சாதாரண பிரஜை நிலை வரை மட்டும் கொண்டு வராதீர்கள், ஆனால், இராஜ்ய அதிகாரி ஆக்குங்கள். எந்த விதிப்படி செய்தால் குழப்பம் அடையவும்மாட்டார்கள் மற்றும் புத்தியும் சமர்ப்பணம் ஆகிவிடும் என்பதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். புதியதாகவும் தோன்ற வேண்டும், குழப்பத் தையும் அனுபவம் செய்யக்கூடாது. அன்பு மற்றும் புதுமைத் தன்மையின் அதிகாரம் தெரிய வேண்டும்.

 

இப்பொழுது வரை ரிசல்ட், சேவையின் விதி, பிராமணர்களின் விருத்தி என்ன இருக்கிறதோ, அது மிகவும் நன்றாக இருக்கிறது. ஏனெனில், முன்னர் விதையை குப்தமாக வைத்திருந்தீர்கள், அதுவும் அவசியமானதே ஆகும். விதை குப்தமாக வைக்கப்படுகிறது, வெளியில் வைக்கும்பொழுது பலன் தராது. நிலத்திற்கு அடியில் விதை விதைக்கப்படுகிறது, ஆனால், நிலத்திற்கு உள்ளேயே இருந்துவிடக்கூடாது. வெளியில் பிரத்யட்சம் ஆகவேண்டும், பலன் சொரூபம் ஆகவேண்டும் - இது அடுத்த நிலை ஆகும். புரிந்ததா? புதுமை யாகச் செய்ய வேண்டும் என்ற இலட்சியம் வையுங்கள். இந்த வருடமே நடந்துவிடும் என்பது கிடையாது. ஆனால், இலட்சியமானது விதையையும் கூட வெளியே பிரத்யட்சம் செய்யும். நேரடியாகச் சென்றவுடன் சொற்பொழிவாற்ற ஆரம்பத்துவிடக்கூடாது. முதலில் சத்தியத்தின் சக்தியினுடைய உணர்வை ஏற்படுத்துவதற்கான சொற்பொழிவாற்ற வேண்டும். அனை வருடைய வாயிலிருந்தும், இறுதியில் அந்த நாளும் வந்தது என்பது வெளிப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றே, ஒருவருடையவர்கள் என்று அனைத்து தர்மத்தினரும் இணைந்து கூறுவதாக நாடகத்தில் காண்பிக்கின்றீர்கள் அல்லவா. இதை நாடகமாகக் காண்பிக்கின்றீர்கள், இதை நடைமுறையில் மேடையில் அனைத்து தர்மத்தினரும் சேர்ந்து ஒன்றுபோல் சொல்ல வேண்டும். தந்தை ஒருவர், ஒரே ஞானம், ஒரே இலட்சியம், ஒரே வீடு இதுவே ஆகும் என்ற இந்த ஒலி இப்பொழுது கேட்க வேண்டும். எப்பொழுது எல்லைக்கப்பாற்பட்ட மேடையில் இத்தகைய காட்சி வருமோ, அப்பொழுது பிரத்யட்சதாவின் கொடி பறக்கும் மற்றும் இந்தக் கொடிக்குக் கீழே அனைவரும் இந்தப் பாடல் பாடுவார்கள். அனைவருடைய வாயிலிருந்தும் பாபா நம்முடையவர் என்ற ஒரு சப்தம் வெளிப்படும், அப்பொழுதே பிரத்யட்ச ரூபத்தில் சிவராத்திரி கொண்டாடப்பட்டதாகக் கூறலாம். இருள் முடிந்து பொன்னான காலை யினுடைய காட்சி தென்படும். இதையே இன்று மற்றும் நாளை என்பதன் விளையாட்டு என்று கூறப்படுகிறது. இன்று இருள், நாளை பொன்னான காலைப்பொழுது. இது கடைசி திரை ஆகும். புரிந்ததா?

 

மற்றபடி என்ன திட்டம் தீட்டி இருக்கின்றீர்களோ, அது நன்றாக உள்ளது. ஒவ்வொரு இடத்தினுடைய நிலத்தின் அனுசாரம் திட்டம் போட வேண்டியதாக உள்ளது. நிலத்தின் அனுசாரம் விதியில் ஒருவேளை ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியது இருக்கிறது என்றால் அது ஒன்றும் பெரிய விசயம் அல்ல. இறுதியில் அனைவரையும் தயார் செய்து மதுபன் பூமியில் அவசியம் முத்திரை பதிக்க வேண்டும். வெவ்வேறு துறையினரை தயார் செய்து அவசியம் முத்திரை பதிக்க வேண்டும். பாஸ்போர்ட்டில் கூட முத்திரை இல்லாமல் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் அல்லவா. எனவே, இங்கு மதுபனில் தான் முத்திரையிடப்படும்.

 

இவர்கள் அனைவருமே சமர்ப்பணம் ஆனவர்கள். ஒருவேளை, இவர்கள் சமர்ப்பணம் ஆகவில்லையெனில் சேவைக்கு நிமித்தமாக எவ்வாறு ஆகியிருப்பார்கள்! சமர்ப்பணம் ஆனவர்கள் நீங்கள், ஆகையினாலேயே, பிரம்மாகுமார், பிரம்மாகுமாரி ஆகி சேவைக்கு நிமித்தம் ஆகியிருக்கின்றீர்கள். உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ கிறிஸ்துவகுமாரி அல்லது பௌத்த குமாரி ஆகி எவரும் சேவை செய்யவில்லையே? பி.கு. ஆகியே சேவை செய்கின்றீர் கள் அல்லவா. எனவே, சமர்ப்பண பிராமணர்களுடைய பட்டியலில் அனைவரும் இருக்கின்றீர்கள். இப்பொழுது பிறரையும் ஆக்கவேண்டும். மறுபிறப்பு எடுத்துவிட்டீர்கள். பிராமணன் ஆகி விட்டீர்கள். என்னுடைய பாபா என்று குழந்தைகள் கூறுகின்றார்கள், உடனே பாபா, உன்னுடையவர் ஆகிவிட்டேன் என்று கூறுகின்றார். எனவே, சமர்ப்பணம் ஆகிவிட்டீர்கள் அல்லவா. நீங்கள் இல்லறத்தில் இருக்கின்றீர்களோ அல்லது சென்டரில் இருக்கின்றீர்களோ, ஆனால், என்னுடைய பாபா என்று உள்ளத்தில் இருந்து கூறினீர்கள், உடனே தந்தை தன்னுடையவர் ஆக்கிவிட்டார். இதுவோ உள்ளத்தின் வியாபாரம் ஆகும். வாயினால் செய்யும் ஸ்தூல வியாபாரம் கிடையாது. இது உள்ளத்தினுடையது ஆகும். சரண்டர் (சமர்ப்பணம்) என்றால் ஸ்ரீமத்திற்கு அண்டர் (கீழ்) இருப்பவர்கள். முழு சபையும் சமர்ப்பணம் ஆனவர்கள் அல்லவா, ஆகையினால், போட்டோவும் எடுக்கப்பட்டது அல்லவா. இப்பொழுது சித்திரத்தில் வந்து விட்டீர்கள், அதனால் மாற முடியாது. பரமாத்ம வீட்டில் சித்திரத்தில் வருவது என்பது ஒன்றும் குறைவான பாக்கியம் அல்ல. இது ஸ்தூல போட்டோ அல்ல, ஆனால், தந்தை யினுடைய உள்ளத்தில் போட்டோ எடுக்கப்பட்டுவிட்டது. நல்லது.

 

அனைத்து சத்தியத்தின் அதிகாரம் உடைய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, அனைத்து புதுமை மற்றும் மகான்தன்மையை பிரத்யட்சம் செய்யக்கூடிய உண்மையான சேவாதாரி குழந்தைகளுக்கு, அனைத்து அன்பு மற்றும் அதிகாரத்தின் சமநிலையில் இருக்கக்கூடிய, ஒவ்வொரு அடியிலும் தந்தை மூலம் ஆசிர்வாதம் பெறுவதற்கான அதிகாரி சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, அனைத்து சத்தியமான அதாவது அழிவற்ற இரத்தினங்களுக்கு, அழிவற்ற நடிப்பு நடிக்கக்கூடியவர்களுக்கு, அழிவற்ற பொக்கிசத்தின் குழந்தைகள் மற்றும் எஜமானர் களுக்கு விஷ்வ படைப்பாளரான சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர், சத்குருவினுடைய அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

வரதானம்:

மனதின் மௌனத்தால் சேவையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கக்கூடிய வெற்றி சொரூபம் ஆகுக.

 

எவ்வாறு முதன் முதலில் மௌன விரதத்தில் இருந்தபோது அனைவரும் ஃப்ரீயாக இருந்தீர்களோ, நேரம் சேமிப்பானதோ, அதுபோல் இப்பொழுது மனதினுடைய மௌனம் இருங்கள், இதன் மூலம் வீண் எண்ணங்கள் வரவேகூடாது. எவ்வாறு வாயிலிருந்து சப்தம் வெளிப்படவில்லையோ, அவ்வாறு வீண் சங்கல்பம் வரக்கூடாது. இதுவே மனதின் மௌனம் ஆகும். இதனால் நேரம் சேமிப்பாகிவிடும். இந்த மனதின் மௌனத்தினால் சேவையில் அப்பேர்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும், அதன் மூலம் உழைப்பு குறைவாகவும் மற்றும் வெற்றி அதிகமாகவும் ஏற்படும். எவ்வாறு அறிவியல் சாதனம் நொடியில் விதியை அடையச் செய்கின்றதோ, அவ்வாறு இந்த அமைதி சக்தி மூலம் நொடியில் விதி பிராப்தம் ஆகும்.

 

சுலோகன்:

யார் சுயம் சமர்ப்பண ஸ்திதியில் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு முன்னால் அனைவருடைய சகயோகமும் சமர்ப்பணம் ஆகிவிடுகிறது.

 

குறிப்பு:

இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஆகும். இராஜயோகி, தபஸ்வி சகோதர, சகோதரிகள் அனைவரும் மாலை 06.30 மணி முதல் 07.30 மணி வரை, விசேஷ யோகத்திற்கான சமயத்தில் தன்னுடைய லைட் மைட் சொரூபத்தில் நிலைத்திருந்து, புருவ மத்தியில் பாப்தாதாவை வரவழைத்து, இணைந்த சொரூபத்தின் அனுபவம் செய்ய வேண்டும் மற்றும் நாலாபுறங்களிலும் லைட் மைட்டின் கிரணங்களை பரப்பக்கூடிய சேவை செய்ய வேண்டும்.

 

ஓம்சாந்தி