31.12.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இது உங்களது ஈஸ்வரிய இயக்கமாகும், நீங்கள் அனைவரையும் ஈஸ்வரனுடையவர்களாக ஆக்கி அவர்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியை கிடைக்கச் செய்கின்றீர்கள்.

 

கேள்வி:

கர்ம இந்திரியங்களின் சஞ்சல நிலை எப்பொழுது முடிவடையும்?

 

பதில்:

எப்பொழுது உங்களது மனநிலை வெள்ளியுகம் வரை செல்கிறதோ அதாவது எப்பொழுது ஆத்மா வானது திரேதாவின் சதோ நிலை வரை செல்கிறதோ அப்பொழுது கர்மேந்திரிகளின் சஞ்சல நிலை முடிவடைந்து விடும். இப்பொழுது இது உங்களுக்கு திரும்பிச் செல்லும் பயணமாகும், ஆகையால் கர்ம இந்திரியங்களை தன் வசத்தில் வைத்திருக்க வேண்டும். ஆத்மா பதீதம் ஆகுமளவிற்கு எந்த ஒரு செயலையும் மறைத்து செய்யக் கூடாது. அழிவற்ற மருத்துவர் (சர்ஜன்) உங்களுக்கு என்ன பத்தியம் கூறுகின்றாரோ அதன் படி நடந்து கொண்டே இருங்கள்.

 

பாட்டு: தன் முகத்தை தானே பார்த்துக் கொள்ளுங்கள் பயணிகளே ...

 

ஓம்சாந்தி.

ஆன்மீகக் குழந்தைகளுக்காக ஆன்மீகத் தந்தை புரிய வைத்துக் கொண்டிருக் கின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமின்றி, பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழி வம்சத்தின் அனைத்து ஆன்மீகக் குழந்தைகளும் அறிவீர்கள். பிராமணர்களாகிய நமக்குத் தான் தந்தை புரிய வைக்கின்றார். முதலில் நீங்கள் சூத்திரர்களாக இருந்தீர்கள், பிறகு வந்து பிராமணர்களாக ஆகியிருக்கிறீர்கள். தந்தை வர்ணங்களின் கணக்குகளைப் பற்றியும் புரிய வைத்திருக்கின்றார். உலகத்தினர் வர்ணங்களைப் பற்றியும் புரிந்து கொள்வது கிடையாது. மகிமை மட்டுமே இருக்கிறது. இப்பொழுது நீங்கள் பிராமண வர்ணத்தில் இருக்கிறீர்கள், பிறகு தேவதா வர்ணத்தினர்களாக ஆவீர்கள். இந்த விசயம் சரி தானா? என்று சிந்தியுங்கள். உங்களுக்கு நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். எனது விசயத்தைக் கேளுங்கள், பிறகு ஒப்பிட்டுப் பாருங்கள். பல பிறவிகளாக கேட்டு வந்த சாஸ்திரம் மற்றும் ஞானக் கடலாகிய தந்தை புரிய வைப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள் - சரியானது எது? பிராமண தர்மம் அதாவது குலத்தை முற்றிலும் மறந்து விட்டனர். உங்களிடம் விராட ரூப சித்திரம் முற்றிலும் சரியாக உருவாக்கப்பட்டிருக்கிறது, இதன் மூலம் புரிய வைக்கப்படுகிறது. மற்றபடி இவ்வளவு கைகள் உடைய சித்திரங்களை உருவாக்கியிருப்பது மற்றும் தேவிகளிடம் ஆயுதங் களைக் காண்பித்திருப்பது போன்ற அனைத்தும் தவறாகும். இவைகள் பக்தி மார்க்கத்தின் சித்திரங்களாகும். இந்த கண்களினால் அனைத்தையும் பார்க்கின்றனர், ஆனால் புரிந்து கொள்வது கிடையாது. யாருடைய தொழிலும் அறியாமல் இருக்கின்றனர். இப்பொழுது குழந்தை களாகிய நீங்கள் தனது ஆத்மாவைப் பற்றி அறிந்து கொண்டீர்கள். மேலும் 84 பிறவிகள் பற்றியும் அறிந்து கொண்டீர்கள். எவ்வாறு தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கின்றாரோ அதே போன்று நீங்களும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். சிவபாபா அனைவரிடத்திலும் செல்லமாட்டார். தந்தைக்கு அவசியம் உதவியாளர்கள் தேவை அல்லவா! ஆகையால் உங்களுடையது ஈஸ்வரிய இயக்கமாகும். நீங்கள் அனைவரையும் ஈஸ்வரனுடையவர்களாக ஆக்குகிறீர்கள். அவர் ஆத்மாக்களாகிய நமது எல்லையற்ற தந்தை ஆவார் என்று புரிய வைக்கிறீர்கள். அவரிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கும். எவ்வாறு லௌகீகத் தந்தையை நினைவு செய்வீர்களோ, அவரை விட அதிகமாக பரலௌகீகத் தந்தையை நினைவு செய்ய வேண்டும். லௌகீகத் தந்தை அல்ப காலத்திற்கு சுகம் கொடுக்கின்றார். எல்லையற்ற தந்தை எல்லையற்ற சுகம் தருகின்றார். இந்த ஞானம் இப்பொழுது ஆத்மாக்களுக்கு கிடைக்கிறது. 3 தந்தைகள் உள்ளனர் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். லௌகீகம், பரலௌகீகம் மற்றும் அலௌகீகம். எல்லையற்ற தந்தை அலௌகீகத் தந்தையின் மூலம் உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். இந்த தந்தையை யாரும் அறியவில்லை. பிரம்மாவின் சரித்திரம் பற்றி யாருக்கும் தெரியாது. அவரது தொழிலையும் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா! சிவனின், கிருஷ்ணரின் மகிமையைப் பாடுகின்றனர், மற்றபடி பிரம்மாவின் மகிமை? நிராகார தந்தை அமிர்தம் கொடுப்பதற்கு அவசியம் வாய் தேவை அல்லவா! பக்தி மார்க்கத்தில் தந்தை ஒருபொழுதும் யதார்த்த முறையில் நினைவு செய்ய முடியாது. சிவபாபாவின் ரதம் இது என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள், புரிந்து கொண்டீர்கள். ரதத்தையும் அலங்காரம் செய்வர் அல்லவா! எவ்வாறு முகமதுவின் குதிரையையும் அலங்கரிக்கின்றனர்! குழந்தை களாகிய நீங்கள் எவ்வளவு நல்ல முறையில் மனிதர்களுக்குப் புரிய வைக்கிறீர்கள்! நீங்கள் அனைவரையும் புகழ்கிறீர்கள். நீங்கள் இவ்வாறு தேவதைகளாக இருந்தீர்கள், பிறகு 84 பிறவிகள் எடுத்து தமோ பிரதானமாக ஆகிவிட்டீர்கள் என்ற கூறுகிறீர்கள். இப்பொழுது மீண்டும் சதோ பிரதானமாக ஆக வேண்டு மெனில், அதற்கு யோகா அவசியம் ஆகும். ஆனால் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. புரிந்து கொண்டால் குஷியின் அளவு அதிகரித்து விடும். புரிய வைக்கக் கூடியவர்களுக்கு மேலும் அதிகமாக அதிகரித்து விடும். எல்லையற்ற தந்தையின் அறிமுகம் கொடுப்பது சிறிய விசயமா என்ன? புரிந்து கொள்வது கிடையாது. இவ்வாறு எப்படி இருக்க முடியும்? என்று கேட்கின்றனர். எல்லையற்ற தந்தையின் சரித்திரத்தைக் கூறுகிறீர்கள்.

 

இப்பொழுது தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! பாவனம் ஆகுங்கள். ஹே பதீத பாவனனே! வாருங்கள் என்று நீங்கள் அழைத்தீர்கள் அல்லவா? கீதையிலும் மன்மனாபவ என்ற வார்த்தை இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி புரிய வைக்க யாராலும் முடியாது. ஆத்மாவின் ஞானத்தையும் தந்தை எவ்வளவு தெளிவாக்கிப் புரிய வைக்கின்றார். எந்த சாஸ்திரங்களிலும் இந்த விசயங்கள் கிடையாது. ஆத்மா பிந்து என்று கூறுகின்றனர், பிருகுட்டியின் நடுவில் நட்சத்திரம் போன்று இருக்கிறது, ஆனால் யதார்த்த முறையில் யாருடைய புத்தியிலும் கிடையாது. அதையும் அறிந்து கொள்ள வேண்டும். கலியுகத்தில் அதர்மம் தான் இருக்கிறது. சத்யுகத்தில் அனைத்தும் தர்மத்துடன் இருக்கும். இவை அனைத்தும் ஈஸ்வரனை சந்திக்கும் வழிகள் என்று பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் நினைக் கின்றனர். அதனால் தான் நீங்கள் முன் கூட்டியே படிவம் நிரப்புகிறீர்கள் - இங்கு எதற்காக வந்திருக்கிறீர்கள்? இதன் மூலமாகவும் நீங்கள் எல்லையற்ற தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். ஆத்மாவின் தந்தை யார்? என்று கேட்கிறீர்கள். சர்வவியாபி என்று கூறுவதன் மூலம் எந்த பொருளும் வெளிப்படுவது கிடையாது. அனைவரின் தந்தையும் யார்? இது தான் முக்கிய விசயமாகும். அவரவர்களது வீட்டிலும் நீங்கள் புரிய வைக்க முடியும். ஒன்று அல்லது இரண்டு சித்திரங்கள், ஏணி, திரிமூர்த்தி, மரம் மிகவும் அவசியமாகும். நமது தர்மம் எப்போது ஆரம்பமானது? இந்த கணக்கின் படி நாம் சொர்க்கத்திற்குச் செல்ல முடியுமா? என்பதை மரத்தின் மூலம் அனைத்து தர்மத்தினரும் புரிந்து கொள்ள முடியும். யார் பின்னால் வருகிறார்களோ அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது. மற்றபடி சாந்திதாமத்திற்கு செல்ல முடியும். மரத்தின் மூலம் மிகத் தெளிவாகிறது. எந்த தர்மத்தினர்கள் பின்னால் வருவார்களோ அவர்களது ஆத்மாக்கள் அவசியம் மேலே சென்று அமர்ந்து விடும். உங்களது புத்தியில் முழு அஸ்திவாரமும் போடப்பட்டிருக்கிறது. ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தின் நாற்று நடப்பட்டு விட்டது, பிறகு மரத்தின் இலைகளை நீங்கள் தான் உருவாக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். இலைகள் இன்றி மரம் இருக்காது. அதனால் தான் தனக்குச் சமமாக ஆக்குவதற்கான முயற்சி பாபா செய்வித்துக் கொண்டிருக்கின்றார். மற்ற தர்மத்தினர்கள் இலையை உருவாக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் மேலிருந்து வருகின்றனர், அஸ்திவாரம் போடுகின்றனர். பிறகு இலைகள் மேலிருந்து கீழே வருகின்றன. மரத்தின் விருத்திக்காக நீங்கள் இந்த கண்காட்சி போன்றவைகள் செய்கிறீர்கள். இதன் மூலம் இலைகள் உருவாகின்றன, பிறகு புயல்கள் வருகின்ற பொழுது கீழே விழுந்து விடுகின்றன, வாடி விடு கின்றன. இந்த ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதில் யுத்தம் போன்றவைகளுக்கான விசயம் ஏதுமில்லை. தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும், அவ்வளவு தான். மற்ற அனைத்து படைப்புகளையும் விட்டு விடுங்கள் என்று நீங்கள் அனைவருக்கும் கூறுகிறீர்கள். படைப்பு களிடமிருந்து ஒருபொழுதும் ஆஸ்தி அடைய முடியாது. படைக்கக் கூடிய தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது. தந்தை யினுடையவராகி, ஞானத்திற்கு வந்த பின்பு ஒருவேளை அப்படிப்பட்ட காரியம் செய்தால் அதற்கான சுமை தலைமீது ஏறிவிடும். பாவனம் ஆக்குவதற்காக தந்தை வருகின்றார், பிறகு ஏதாவது அப்படிப்பட்ட காரியம் செய்தால், மேலும் பதீதமாக ஆகி விடுவீர்கள், ஆகையால் நஷ்டம் ஏற்படும் படியான எந்த காரியமும் செய்யாதீர்கள் என்று பாபா கூறுகின்றார். தந்தைக்கு நிந்தனை ஏற்படுகிறது அல்லவா! விகர்மம் அதிகமாகும் படியான எந்த காரியமும் செய்யாதீர்கள். பத்தியமும் கடைப்பிடிக்க வேண்டும். மருந்து உட்கொள்ளும் பொழுதும் பத்தியம் கடை பிடிப்பர். புளி போன்ற வைகளை சாப்பிடக் கூடாது என்று டாக்டர் கூறினால் ஏற்றுக் கொள்ள வேண்டும். கர்மேந்திரியங்களை வசப்படுத்த வேண்டும். ஒருவேளை மறைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தால் பிறகு மருந்து வேலை செய்யாது. இதற்குத் தான் பற்றற்ற நிலை என்று கூறப்படுகிறது. இதை செய்யாதீர்கள் என்று தந்தையும் போதனை கொடுக்கின்றார். சர்ஜன் அல்லவா! பாபா, மனதில் பல எண்ணங்கள் வருகின்றன என்று எழுது கின்றனர். எச்சரிக்கையுடன் இருங்கள். அசுத்தமான கனவுகள், மனதில் எண்ணங்கள் போன்ற வைகள் அதிகம் வரும், இதைப் பார்த்து பயந்து விடக் கூடாது. சத்யுகம், திரேதாவில் இந்த விசயங்கள் கிடையாது. நீங்கள் எந்த அளவிற்கு முன்னேறி நெருக்கத்தில் செல்வீர்களோ, வெள்ளியுகம் வரை சென்றடைவீர்களோ அப்பொழுது கர்மேந்திரியங்களின் சஞ்சலம் நின்று விடும். கர்மேந்திரியங்கள் வசமாகிவிடும். சத்யுகம், திரேதாவில் வசத்தில் தான் இருந்தது அல்லவா! அந்த திரேதாவின் மனநிலையை அடையும் பொழுது வசமாகி விடும். பிறகு சத்யுக மனநிலைக்கு வருகின்ற பொழுது சதோ பிரதானமாக ஆகிவிடும், கர்மேந்திரியங்கள் முழுமையாக வசமாகிவிடும். கர்மேந்திரியங்கள் வசத்தில் இருந்தது அல்லவா! புது விசயம் கிடையாது. இன்று கர்மேந்திரிகளுக்கு வசமாகியிருக்கிறீர்கள், நாளை முயற்சி செய்து கர்மேந்திரி யங்களை வசமாக்கி விடுகிறீர்கள். 84 பிறவிகள் எடுத்து கீழே இறங்கி வந்தீர்கள். இப்பொழுது திரும்பிச் செல்லும் பயணமாகும், அனைவரும் சதோ பிரதான நிலைக்குச் செல்ல வேண்டும். நான் எவ்வளவு பாவம் செய்திருக்கிறேன்? எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன்? என்று தன்னை சோதித்துக் கொள்ள வேண்டும். தந்தையை நினைவு செய்து செய்து வெள்ளியுகம் வரை சென்று விட்டால் கர்மேந்திரியங்கள் வசமாகி விடும். பிறகு இப்பொழுது எந்த புயலும் வருவது கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த நிலையும் வரும். பிறகு தங்க யுகத்திற்குச் சென்று விடுவீர்கள். முயற்சி செய்து பாவனம் ஆவதன் மூலம் குஷியின் அளவும் அதிகரிக்கும். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுக்கிறீர்கள்? என்பதை யார் வந்தாலும் புரிய வைக்க வேண்டும். யார் 84 பிறவிகள் எடுத்திருக் கிறார்களோ அவர்கள் தான் புரிந்து கொள்வார்கள். இப்பொழுது தந்தையை நினைவு செய்து எஜமானர்களாக ஆவோம் என்று கூறுவர். 84 பிறவிகளைப் பற்றி புரிந்து கொள்ளவில்லையெனில் இராஜ்யத்திற்கு எஜமானர் களாக ஆகியிருக்கமாட்டார்கள். நாம் தைரியம் கொடுக்கின்றோம், நல்ல விசயங்களைக் கூறுகின்றோம். நீங்கள் கீழே விழுந்து கிடக்கிறீர்கள். யார் 84 பிறவிகள் எடுத்திருக்கிறார்களோ அவர்கள் உடனேயே நினைவிற்கு வந்து விடும். நீங்கள் சாந்திதாமத்தில் தூய்மையாக இருந்தீர்கள் அல்லவா! இப்பொழுது மீண்டும் சாந்திதாமம், சுகதாமம் செல்வதற்கான வழி கூறுகின்றேன் என்று தந்தை கூறுகின்றார். வேறு யாரும் வழி கூற முடியாது. சாந்தி தாமத்திற்கும் பாவன ஆத்மாக்கள் தான் செல்ல முடியும். எந்த அளவிற்கு கரைகள் நீங்கிக் கொண்டே செல்கிறதோ, யார் எந்த அளவிற்கு முயற்சி செய்கிறார்களோ, அந்த அளவிற்கு உயர்ந்த பதவி கிடைக்கும். ஒவ்வொருவரின் முயற்சியை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், பாபாவும் மிக நன்றாக உதவி செய்கின்றார். இவர் பழைய பக்தர் ஆவார். ஒவ்வொருவரின் நாடியையும் புரிந்து கொள்கிறீர்கள் அல்லவா! தகுதிவாய்ந்தவர்கள் அப்பாற்பட்டவர்கள் உடனேயே புரிந்து கொள்வார்கள். எல்லையற்ற தந்தையாக இருக்கின்றார், அவரிடமிருந்து அவசியம் சொர்க்கத்தின் ஆஸ்தி அடைய வேண்டும். அடைந்திருந்தோம், இப்பொழுது கிடையாது, மீண்டும் அடைந்து கொண்டிருக்கிறோம். இலட்சியம் எதிரில் இருக்கிறது. தந்தை எப்பொழுது சொர்க்கத்தை ஸ்தாபனை செய்திருந்தாரோ அப்பொழுது நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இருந்தீர்கள். பிறகு 84 பிறவிகள் எடுத்து கீழே இறங்கி வந்தீர்கள். இப்பொழுது இது உங்களது கடைசிப் பிறவியாகும். சரித்திரம் அவசியம் திரும்பவும் நடைபெறும் அல்லவா! நீங்கள் முழு 84 பிறவியின் கணக்கைக் கூறுகிறீர்கள். எந்த அளவிற்குப் புரிந்து கொள்வார்களோ அந்த அளவிற்கு இலைகளாக ஆகிக் கொண்டே செல்வார்கள். நீங்களும் பலரை தனக்குச் சமமாக ஆக்குகிறீர்கள் அல்லவா! மாயையின் சிறையிலிருந்து விடுவிப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள். அனை வரையும் இராவணனிடமிருந்து விடுவிப்பதற்காக நான் வந்திருக்கிறேன் என்ற தந்தை கூறு கின்றார். தந்தை ஞானக் கடலாக இருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்களும் புரிந்திருக்கிறீர்கள். நீங்களும் ஞானத்தை அடைந்து மாஸ்டர் ஞானக் கடலாக ஆகிறீர்கள் அல்லவா! ஞானம் தனிப்பட்டது, பக்தி தனிப்பட்டது. பாரதத்தின் பழமையான இராஜ யோகத்தை தந்தை தான் கற்றுக் கொடுக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எந்த மனிதனும் கற்றுக் கொடுக்க முடியாது. ஆனால் இந்த விசயத்தை அனைவருக்கும் எப்படி கூறுவது? இங்கு அசுரர்களின் தடைகளும் அதிகம் ஏற்படுகிறது. குப்பைகள் போடுவார்கள் என்று முன்பு புரிந்திருந்தோம். ஆனால் எப்படி தடைகளை உருவாக்குகின்றனர் என்பதை இப்பொழுது புரிந்து கொண்டீர்கள். எதுவும் புதிதல்ல. கல்பத்திற்கு முன்பும் இவ்வாறு நடந்திருக்கிறது. உங்களது புத்தியில் இந்த முழு சக்கரமும் சுற்றிக் கொண்டே இருக்கிறது. பாபா நமக்கு சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ரகசியங்களைப் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். கலங்கரை விளக்கு என்ற பட்டத்தையும் பாபா நமக்கு கொடுக்கின்றார். ஒரு கண்ணில் முக்திதாமம், மறு கண்ணில் ஜீவன்முக்தி தாமம். நீங்கள் சாந்திதாமம் சென்ற பிறகு சுகதாமத்திற்கு வர வேண்டும். இது துக்கதாமம் ஆகும். இந்த கண்களினால் நீங்கள் எதையெல்லாம் பார்க் கிறீர்களோ அவைகளை மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தனது சாந்திதாமத்தை நினைவு செய்யுங்கள். ஆத்மாவானது தனது தந்தையை நினைவு செய்ய வேண்டும், இது தான் கலப்படமற்ற யோகா என்று கூறப் படுகிறது. ஞானமும் ஒருவரிடம் மட்டுமே கேட்க வேண்டும். இது கலப்படமற்ற ஞானமாகும். ஒரே ஒருவரை மட்டுமே நினைவு செய்யுங்கள். எனக்கு ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை. எதுவரை தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்யவில்லையோ அதுவரை ஒருவரின் நினைவு வராது. நான் ஒரே ஒரு பாபாவினுடைய வனாகவே இருப்பேன் என்ற ஆத்மா கூறுகிறது. நான் பாபாவிடம் செல்ல வேண்டும். இந்த சரீரம் பழையது, இற்றுப் போனது ஆகும். இது பழைய ஆடையாகும், இதை இப்பொழுது விட வேண்டும் என்று உள்ளுக்குள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடையது எல்லையற்ற சந்நியாசமாகும். அவர்கள் காட்டிற்குச் சென்று விடுகின்றனர். நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே நினைவில் இருக்க வேண்டும். நினைவில் இருந்து கொண்டே நீங்களும் சரீரத்தை விட முடியும். எங்கு இருந்தாலும் நீங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள். நினைவில் இருந்து, சுவதரிசன சக்கரதாரி ஆகின்ற பொழுது எங்கு இருந்தாலும் நீங்கள் உயர்ந்த பதவி அடைவீர்கள். எந்த அளவிற்கு நீங்கள் தனிப்பட்ட முயற்சி செய்வீர்களோ அந்த அளவிற்கு பதவி அடைவீர்கள். வீட்டில் இருந்தாலும் நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். இப்பொழுது கடைசி ரிசல்ட்டிற்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. பிறகு புது உலகமும் தயாராக இருக்க வேண்டும் அல்லவா! இப்பொழுது கர்மாதீத் நிலை அடைந்து விட்டால் பிறகு சூட்சுமவதனத்தில் இருக்க வேண்டியிருக்கும். சூட்சுமவதனத்தில் இருந்து பிறகு பிறவி எடுக்க வேண்டியிருக்கும். நாட்கள் செல்ல செல்ல உங்களுக்கு அனைத்தும் சாட்சாத் காரம் ஏற்படும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஒரு தந்தை கூறுவதை மட்டுமே கேட்க வேண்டும். ஒரே ஒருவரின் கலப்படமற்ற நினைவில் இருக்க வேண்டும். இந்த சரீரத்தை கவனிக்க வேண்டும், ஆனால் பற்றுதல் வைக்கக் கூடாது.

 

2) தந்தை என்ன பத்தியம் கூறியிருக்கிறாரோ அதை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். தந்தைக்கு இழிவு (நிந்தனை) ஏற்படும் படியான, பாவக் கணக்கு உருவாகும் படியான எந்த காரியமும் செய்யக் கூடாது. தன்னை நஷ்டப்படுத்திக் கொள்ளக் கூடாது.

 

வரதானம்:

தனது பரந்த (விசால) புத்தி எனும் பெட்டகத்தின் மூலம் ஞான ரத்தினங்களை தானம் செய்யக் கூடிய மஹாதானி ஆகுக.

 

புத்தி அனைத்து கர்ம இந்திரியங்களிலும் உயர்வானதாக பாடப்பட்டுள்ளது. யார் பரந்த புத்தி உள்ளவர் களோ அதாவது யாருடைய புத்தி நிரம்பியுள்ளதோ அவருடைய நெற்றி எப்போதும் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருக்கும், ஏனென்றால் புத்தி எனும் பெட்ட கத்தில் அனைத்து ஞானமும் நிரம்பியிருக்கிறது. அவர்கள் தனது புத்தி என்ற பெட்டகத்தில் இருந்து ஞான ரத்தினங்களை தானம் செய்து மகாதானி ஆகி விடுகின்றனர். நீங்கள் புத்திக்கு எப்போதும் ஞானம் எனும் உணவை கொடுத்தபடி இருங்கள், புத்தி ஞான பலத்தினால் நிறைந்ததாக இருந்தது என்றால் இயற்கையை கூட யோகபலம் சரிப்படுத்தி விட முடியும். அனைத்திலும் உத்தமமான புத்தியை உடையவர்கள் முழுமையான ஞானத்தின் மூலம் சர்வோத்தம (அனைத்திலும் உயர்வான) வருமானம் செய்து வைகுண்ட இராஜ்ஜியத்தை பலனாக அடைகின்றனர்.

 

சுலோகன் :

சக்தி சொரூப நிலையின் அனுபவம் செய்ய வேண்டும் என்றால் எண்ணங்களின் வேகத்தை நிதானமாக்குங்கள்.

 

ஓம்சாந்தி