29.12.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! சங்கமயுகத்தில் நீங்கள் பிராமண குலத்தினராக (சம்பிரதாயத்தினராக) ஆகியிருக்கிறீர்கள். நீங்கள் இப்போது மரண உலகத்தின் மனிதரில் இருந்து அமரலோகத்தின் தேவதை ஆக வேண்டும்.

 

கேள்வி :

குழந்தைகள் நீங்கள் எந்த ஞானத்தைப் புரிந்து கொண்ட காரணத்தால் எல்லையற்ற சந்நியாசம் செய்கிறீர்கள்?

 

பதில்:

உங்களுக்கு டிராமாவின் மிகச் சரியான ஞானம் உள்ளது. நீங்கள் அறிவீர்கள், டிராமாவின் படி இப்போது இந்த முழு உலகமும் எரிந்து சாம்பலாகி விட்டது. இப்போது இந்த உலகம் ஒரு பைசா அளவிற்குக் கூட மதிப்பற்றதாகி விட்டுள்ளது. நாம் மதிப்பு மிக்கதாக ஆக்க வேண்டும். இதில் என்னென்ன நடைபெறுகிறதோ, அது அப்படியே கல்பத்திற்குப் பிறகு திரும்பவும் நடைபெறும். அதனால் நீங்கள் இந்த முழு உலகில் இருந்து எல்லையற்ற சந்நியாசம் மேற்கொண்டிருக்கிறீர்கள்.

 

பாடல் : வரப்போகிற நாளைய சித்திரம் நீங்கள்...

 

ஓம் சாந்தி.

குழந்தைகள் பாடலின் வரியைக் கேட்டீர்கள். வரப்போவது அமர உலகம். அமர உலகம் மற்றும் மரண உலகத்தின் இடையிலுள்ள இது புருஷோத்தம சங்கமயுகம். இப்போது பாபா சங்கமயுகத்தில் பாடம் கற்றுத் தருகிறார். அதனால் ஆத்ம அபிமானி ஆகி அமர்ந்திருங்கள் என்று குழந்தைகளுக்குச் சொல்கிறார். இதை நிச்சயம் செய்ய வேண்டும் - நமக்கு எல்லையற்ற தந்தை படிப்பு சொல்லித் தருகிறார். நமது நோக்கம் குறிக்கோள் இது - லட்சுமி-நாராயணனாக அல்லது மரண உலகத்தின் மனிதரில் இருந்து அமர உலகத்தின் தேவதை ஆக வேண்டும். இப்படிப்பட்ட படிப்பையோ ஒரு போதும் காதுகளால் கேட்ட தில்லை, மேலும் குழந்தைகளே, நீங்கள் ஆத்ம அபிமானி ஆகி அமர்ந்திருங்கள் என்று யாராவது சொல்வதைப் பார்த்ததும் இல்லை. எல்லையற்ற தந்தை நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார் என்பதை நிச்சயம் செய்யுங்கள். எந்தத் தந்தை? எல்லையற்ற நிராகார் சிவதந்தை. இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக் கிறோம். இப்போது நீங்கள் பிராமண சம்பிரதாயத்தினராக ஆகியிருக்கிறீர்கள். பிறகு நீங்கள் தேவதை ஆக வேண்டும். முதலில் சூத்திர சம்பிரதாயத்தினராக இருந்தீர்கள். பாபா வந்து கல்புத்தியில் இருந்து பாரஸ் தங்க புத்தியாக ஆக்கியிருக்கிறார். முதலில் சதோபிரதான தங்க புத்தி உள்ளவர்களாக இருந்தீர்கள். இப்போது மீண்டும் ஆகிறீர்கள். சத்யுகத்தின் எஜமானராக இருந்தீர்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. சத்யுகத்தில் உலகத்தின் எஜமானராக இருந்தீர்கள். பிறகு 84 பிறவிகள் எடுத்து ஏணிப்படியில் இறங்கி-இறங்கியே சதோபிரதானத்திலிருந்து சதோ, ரஜோ, தமோவில் வந்திருக்கிறீர்கள். முதலில் சதோபிரதானமாக இருக்கும் போது தங்க புத்தி உள்ளவர்களாக இருந்தீர்கள். பிறகு ஆத்மா மீது கறை படிகின்றது. மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. பாபா சொல்கிறார், நீங்கள் எதுவுமே தெரியாமல் இருந்தீர் கள். குருட்டு நம்பிக்கை இருந்தது. எதையும் தெரிந்து கொள்ளாமல் யாருக்காவது பூஜை செய்வது அல்லது நினைவு செய்வது குருட்டு நம்பிக்கை எனச் சொல்லப் படும். மேலும் தனது சிரேஷ்ட தர்மம், சிரேஷ்ட கர்மத்தையும் மறந்ததால் கர்ம பிரஷ்டம் (கர்மத்தின் இழிந்த நிலை), தர்மத்திலும் தாழ்வடைந்து விட்டுள்ளனர். பாரதவாசிகள் இச்சமயம் தெய்வீக தர்மத்திலும் கீழானவராகியுள்ளனர். பாபா புரிய வைக்கிறார், நீங்கள் இல்லற மார்க்கத்தினர். அதே தேவதைகள் இப்போது அபவித்திரமாகி விட்டதால் தேவி-தேவதா எனச் சொல்லிக் கொள்ள முடியவில்லை. அதனால் பெயரை மாற்றி இந்து என வைத்துள்ளனர். இதுவும் டிராமாவின் திட்டப்படி நடைபெறுகின்றது. அனைவரும் ஒரு தந்தையைத் தான் அழைக்கின்றனர் - ஹே பதீத-பாவனா வாருங்கள் என்று. அந்த ஒரே இறைத் தந்தை தான் பிறப்பு-இறப்பு இல்லாதவராக உள்ளார். பெயர்-வடிவத்திற்கு அப்பாற் பட்ட பொருள் உள்ளது என்பதெல்லாம் கிடையாது. ஆத்மாவின் அல்லது பரமாத்மாவின் ரூபம் மிகவும் சூட்சுமமானது. அதை நட்சத்திரம் அல்லது பிந்து எனச் சொல்கின்றனர். சிவனுக்குப் பூஜை செய்கின்றனர். அவருக்கு சரீரமோ கிடையாது. இப்போது ஆத்மா பிந்தியின் பூஜை செய்ய முடியாது. அதனால் அவரைப் பெரிய உருவமாகச் செய்கின்றனர், பூஜை செய்வதற்காக. சிவனுக்குப் பூஜை செய்வதாக நினைக்கின்றனர். ஆனால் அவரது வடிவம் என்ன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த அனைத்து விசயங்களையும் பாபா இந்தச் சமயம் தான் வந்து புரிய வைக்கிறார். பாபா சொல்கிறார், நீங்கள் உங்களுடைய பிறவிகள் பற்றி அறிய மாட்டீர்கள். 84 லட்சம் பிறவிகள் என்று பொய் சொல்லி விட்டனர். இப்போது பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு வந்து புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் பிராமணர் ஆகியிருக்கிறீர்கள். பிறகு தேவதை ஆக வேண்டும். கலியுக மனிதர்கள் சூத்திரர்கள். பிராமணர்களாகிய உங்களுடைய நோக்கம் குறிக்கோள் மனிதரில் இருந்து தேவதை ஆக வேண்டுமென்பது. இந்த மரணலோகம் பதீத் தூய்மையற்ற உலகமாக உள்ளது. புது உலகம் இந்த தேவி-தேவதைகள் இராஜ்யம் செய்கிற உலகமாக இருந்தது. இவர்களுக்கு ஒரே ராஜ்யம் இருந்தது. இவர்கள் முழு உலகத்திற்கும் எஜமானர்களாக இருந்தனர். இப்போதோ தமோபிரதான உலகம். அநேக தர்மங்கள் உள்ளன. இந்த தேவி-தேவதா தர்மம் மறைந்து விட்டுள்ளது. தேவி-தேவதாக்களின் இராஜ்யம் எப்போது இருந்தது, எவ்வளவு காலம் நடைபெற்றது, இந்த உலகத்தின் சரித்திர-பூகோளம் யாருக்கும் தெரியாது. பாபா தான் வந்து உங்களுக்குப் புரிய வைக்கிறார். இது இறைத் தந்தை யின் உலகப் பல்கலைக்கழகம். இதன் நோக்கம் குறிக்கோள் அமரலோகத்தின் தேவதை ஆக்குவது. இது அமரகதை என்றும் சொல்லப் படுகின்றது. நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் தேவதை ஆகி காலன் மீது வெற்றி பெறுகிறீர்கள். அங்கே ஒருபோதும் காலன் விழுங்கு வதில்லை. மரணத்தின் பெயரே அங்கே கிடையாது. இப்போது நீங்கள் காலன் மீது வெற்றி யடைந்து கொண்டிருக்கிறீர்கள், டிராமா பிளான் அனுசாரம். பாரதவாசிகளும் 5 வருடம் அல்லது 10 வருடங்களின் திட்டம் தயாரிக்கின்றனர் இல்லையா? அவர்கள் இராம ராஜ்யம் ஸ்தாபனை செய்வதாக நினைக்கின்றனர். எல்லையற்ற தந்தைக்கும் ராமராஜ்யத்தை உருவாக்குவதற்கான திட்டம் உள்ளது. அவர்கள் அனைவருமோ மனிதர்கள். மனிதர்களோ இராமராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய முடியாது. இராமராஜ்யம் எனச் சொல்லப் படுவதே சத்யுகம் தான். இந்த விசயங்கள் யாருக்கும் தெரியாது. மனிதர்கள் எவ்வளவு பக்தி செய்கின்றனர்! சரீர சம்மந்தமான யாத்திரைகள் செய்கின்றனர். பகலில், அதாவது சத்யுக-திரேதாவில் இந்த தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. பிறகு இரவில் பக்தி மார்க்கம் ஆரம்பமாகின்றது. சத்யுகத்தில் பக்தி இருப்பதில்லை. ஞானம், பக்தி, வைராக்கியம், இதை பாபா புரிய வைக்கிறார். வைராக்கியம் இரண்டு வகையானது - ஒன்று, ஹடயோகி, துறவற மார்க்கத்தினருடையது. அவர்கள் வீடு-வாசலை விட்டுக் காட்டுக்குச் செல்கின்றனர். இப்போது நீங்களோ, முழு மரண உலகத்தின் எல்லையற்ற சந்நியாசம் செய்ய வேண்டும். பாபா சொல்கிறார், இந்த முழு உலகமும் எரிந்து சாம்பலாகப் போகிறது. டிராமாவை மிக நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பேன் போல டிக்-டிக் என்று ஊர்ந்து சென்று கொண்டுள்ளது. என்னென்ன நடைபெறுகிறதோ, அது பிறகு கல்பத்தின் 5000 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படியே திரும்பவும் நடைபெறும். இதை மிக நன்றாகப் புரிந்து கொண்டு எல்லையற்ற சந்நியாசம் மேற்கொள்ள வேண்டும். யாராவது வெளிநாடு செல்கின்றனர் என்றால் அங்கே இந்த ஞானத்தைப் படிக்க முடியுமா எனக் கேட்பார்கள். பாபா சொல்கிறார் - ஆம், எங்கே இருந்தாலும் நீங்கள் இதைப் படிக்க முடியும். இதில் முதலில் 7 நாள் கோர்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். மிகவும் சுலபம். ஆத்மா- இதைப் புரிந்து கொண்டால் போதும். நாம் சதோபிரதான உலகத்தின் எஜமானராக இருந்த போது சதோபிரதானமானவர்களாக இருந்தோம். இப்போது தமோபிரதானமாக ஆகி விட்டிருக் கிறோம். 84 பிறவிகளில் முற்றிலும் பைசா பெறாதவர்களாக ஆகி விட்டிருக்கிறோம். இப்போது மீண்டும் நாம் மதிப்பு மிக்கவர்களாக எப்படி ஆவது? இப்போது கலியுகம். இதன் பிறகு நிச்சயமாக சத்யுகம் வரப் போகிறது. பாபா எவ்வளவு எளிமையாகப் புரிய வைக்கிறார்! 7 நாள் கோர்ஸைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி நாம் சதோபிரதானில் இருந்து தமோபிரதான் ஆனோம்? காமசிதையில் அமர்ந்து தமோபிரதான் ஆகியுள்ளோம். இப்போது மீண்டும் ஞான சிதையில் அமர்ந்து சதோபிரதானமாக ஆக வேண்டும். உலகத்தின் சரித்திரம்-பூகோளம் திரும்பவும் அதே போல் நடைபெறும். சக்கரம் சுற்றிக் கொண்டே உள்ளது இல்லையா? இப்போது சங்கமயுகம். இதன் பிறகு சத்யுகம் வரும். இப்போது நாம் கலியுக விகாரிகளாகி விட்டோம். இதிலிருந்து பிறகு சத்யுக நிர்விகாரியாக எப்படி ஆவது? அதற்காக பாபா வழி சொல்கிறார். எங்களிடம் எந்த ஒரு நற்குணமும் இல்லை எனச் சொல்லி அவரை அழைக்கவும் செய்கின்றனர். இப்போது எங்களை அப்படிப்பட்ட குணவான் ஆக்குங்கள் எனச் சொல்கின்றனர். யார் கல்பத்திற்கு முன்பு ஆகியிருந்தார்களோ, அவர்கள் தான் மீண்டும் ஆக வேண்டும். பாபா புரிய வைக்கிறார் - முதல்-முதலிலோ தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள். ஆத்மா தான் ஒரு சரீரம் விட்டு வேறொன்றை எடுக்கிறது. இப்போது நீங்கள் ஆத்ம அபிமானி ஆக வேண்டும். இப்போது தான் ஆத்ம அபிமானி ஆவதற்கான கல்வி உங்களுக்குக் கிடைக்கின்றது. எப்போதுமே ஆத்ம அபிமானி நிலையில் நீங்கள் இருப்பீர்கள் என்பதெல்லாம் கிடையாது. சத்யுகத்திலோ சரீரத்திற்கு பெயர் உள்ளது. லட்சுமி-நாராயணரின் பெயரில் தான் அனைத்து செயல்பாடுகளும் அங்கே நடைபெறு கின்றன. இப்போது சங்கம யுகம். இதில் பாபா வந்து புரிய வைக்கிறார். நீங்கள் ஆத்மா அசரீரியாக வந்தீர்கள். அசரீரியாகவே செல்ல வேண்டும். தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்யுங்கள். இது ஆன்மிக யாத்திரை. ஆத்மா தன்னுடைய ஆன்மிகத் தந்தையை நினைவு செய்கின்றது. பாபாவை நினைவு செய்வதன் மூலம் தான் பாவங்கள் பஸ்பமாகும். இது யோக அக்னி எனச் சொல்லப் படுகின்றது. நினைவோ நீங்கள் எங்கே இருந்தாலும் செய்ய முடியும். 7 நாளில் புரிய வைக்க வேண்டியுள்ளது. இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது, நாம் எப்படி ஏணிப்படியில் இறங்கி வருகிறோம்? இப்போது பிறகு இந்த ஒரே பிறவியில் உயரும் கலை நிகழ்கின்றது. வெளிநாடுகளில் குழந்தைகள் உள்ளனர். அங்கேயும் கூட முரளி செல்கின்றது. இது பாடசாலை அல்லவா? உண்மையில் இது இறைத்தந்தையின் பல்கலைக் கழகம். கீதையினுடையது தான் இராஜயோகம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணரை பகவான் எனச் சொல்ல முடியாது. பிரம்மா-விஷ்ணு-சங்கரும் கூட தேவதை எனச் சொல்லப்படுகின்றனர். இப்போது நீங்கள் புருஷார்த்தம் செய்து நீங்களே பிறகு தேவதை ஆகிறீர்கள். பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாக இங்கே தான் இருப்பார் இல்லையா? பிரஜாபிதாவோ மனிதர் தான் இல்லையா? பிரஜைகள் நிச்சயமாக இங்கே தான் படைக்கப் படுகின்றனர். ஹம் ஸோ என்பதன் அர்த்தத்தை பாபா மிக எளிமையான ரீதியில் புரிய வைத்துள்ளார். பக்தி மார்க்கத்திலோ நாம் ஆத்மா தான் பரமாத்மா, என்று கூறியதனால் பரமாத்மாவை சர்வவியாபி எனச் சொல்லி விடுகின்றனர். பாபா சொல்கிறார், அனைவருக்குள்ளும் வியாபித்திருப்பது ஆத்மா. நான் எப்படி வியாபித்திருக்க (பரவி) முடியும்? நீங்கள் என்னை அழைக்கவும் செய்கிறீர்கள் - ஹே பதித-பாவனா வாருங்கள், எங்களைப் பாவனமாக்குங்கள் என்று. நிராகார் ஆத்மாக்கள் அனைவரும் வந்து அவரவரது சரீரத்தை எடுத்துக் கொள்கின்றனர். ஒவ்வோர் அகாலமூரத் (அழிவற்ற) ஆத்மாவின் ஆசனம் இது. ஆசனம் என்றும் சொல்லலாம், ரதம் என்றும் சொல்லலாம். தந்தைக்கோ ரதம் கிடையாது. அவர் நிராகார் என்று தான் பாடப் படு கிறார். அவருக்கு சூட்சும சரீரமும் கிடையாது, ஸ்தூல சரீரமும் கிடையாது. நிராகார் தாமே எப்போது ரதத்தில் அமர்கிறாரோ, அப்போது தான் பேச முடியும். ரதம் இல்லாமல் தூய்மையற்றவர்களை தூய்மையாக எப்படி ஆக்குவார்? பாபா சொல்கிறார், நான் நிராகார் வந்து இவருடைய சரீரத்தைக் கடனாகப் பெற்றுக் கொள்கிறேன். தற்காலிகமாக லோன் பெற்றுக் கொண்டுள்ளேன். இவர் பாக்கியசாலி ரதம் எனச் சொல்லப் படுகின்றார். பாபா தான் சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிச் சொல்லி, குழந்தைகளாகிய உங்களைத் திரிகால தரிசி ஆக்குகிறார். வேறு எந்த ஒரு மனிதரும் இந்த ஞானத்தை அறிந்து கொள்ள முடியாது. இச்சமயம் அனைவரும் நாஸ்திகர்கள். பாபா வந்து ஆஸ்திகராக ஆக்குகிறார். படைப்பவர்- படைப்பு பற்றிய ரகசியத்தை பாபா உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். இப்போது உங்களைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. நீங்கள் தான் இந்த ஞானத்தினால் இவ்வளவு உயர்ந்த பதவியைப் பெறுகிறீர்கள். இந்த ஞானம் இப்போது தான் பிராமணர்களாகிய உங்களுக்குக் கிடைக்கின்றது. பாபா சங்கமயுகத்தில் தான் வந்து இந்த ஞானத்தைத் தருகிறார். சத்கதி அளிப்பவர் ஒரு பாபா மட்டுமே. மனிதர் மனிதருக்கு சத்கதி அளிக்க முடியாது. அவர் களெல்லாம் பக்தி மார்க்கத்தின் குருமார் ஆவர். சத்குரு என்பவர் ஒருவர் தான். அவருக்கு ஆஹா சத்குரு ஆஹா! என்று சொல்லப்படுகின்றது. இது பாடசாலை என்றும் சொல்லப் படும். இதனுடைய நோக்கம் குறிக்கோள் நரனிலிருந்து நாராயணனாக ஆவதாகும். அவை யனைத்தும் பக்தி மார்க்கத்தின் கதைகள். கீதை மூலமாகவும் எந்த ஒரு பிராப்தியும் கிடைப் பதில்லை. பாபா சொல்கிறார், நான் குழந்தைகளாகிய உங்களுக்கு நேராக வந்து படிப்பு சொல்லித் தருகிறேன். இதன் மூலம் நீங்கள் இந்தப் பதவியை அடைகிறீர்கள். இதில் முக்கிய மானது தூய்மையாவதற்கான விசயமாகும். பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். இதில் தான் மாயா தடை ஏற்படுத்துகின்றது. நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைப் பெறுவதற்காக பாபாவை நினைவு செய்கிறீர்கள். இந்த ஞானம் அனைத்துக் குழந்தைகளிடமும் செல்கிறது. ஒரு போதும் முரளியைத் தவறவிடக் கூடாது. முரளியைத் தவற விட்டால் ஆப்ஸென்ட் ஆகி விட்டீர்கள் என்றாகிறது. முரளியினால் எங்கே அமர்ந்திருந்தாலும் புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டே இருப்பீர்கள். ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். வெளியில் எங்கு சென்றாலும் கூட தூய்மையாக இருக்க வேண்டும் என்று பாபா புரிய வைக்கிறார் - வைஷ்ணவர் ஆகி இருக்க வேண்டும். வைஷ்ணவர்களும் இரண்டு விதமாக உள்ளனர். வைஷ்ணவர் வல்லபாச்சாரி யாகவும் உள்ளனர். ஆனால் விகாரத்தில் செல்பவர்களும் உள்ளனர். பவித்திரமோ கிடையாது. நீங்கள் பவித்திரமாகி விஷ்ணு வம்சத்தினராக ஆகிறீர்கள். அங்கே நீங்கள் வைஷ்ணவராக இருப்பீர்கள். விகாரத்தில் செல்ல மாட்டீர்கள். அது அமரலோகம். இது மரணலோகம். இங்கே விகாரத்தில் செல்கின்றனர். இப்போது நீங்கள் விஷ்ணுபுரி செல்கிறீர்கள் அங்கே விகாரம் இருப்பதில்லை. அது நிர்விகாரி உலகம். யோகபலத்தால் நீங்கள் உலகத்தின் ராஜபதவி பெறுகிறீர்கள். அவர்கள் இருவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். வெண்ணெய் இடையில் உங்களுக்குக் கிடைக்கின்றது. நீங்கள் உங்களுடைய ராஜதானியை ஸ்தாபனை செய்து கொண்டி ருக்கிறீர்கள். அனைவருக்கும் இதே செய்தியைக் கொடுக்க வேண்டும். சின்னக் குழந்தைகளுக்கும் உரிமை உள்ளது. சிவபாபாவின் குழந்தைகள் இல்லையா? ஆக, அனைவருககும் உரிமை உள்ளது. தன்னை ஆத்மா என உணர வேண்டும் என்று அனை வருக்கும் சொல்ல வேண்டும். தாய்-தந்தைக்கு ஞானம் இருக்குமானால் குழந்தைகளுக்கும் கற்றுத் தருவார்கள் - சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று. சிவபாபாவைத் தவிர வேறு யாரும் கிடையாது. ஒருவருடைய நினைவினால் தான் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாகி விடுவீர்கள். படிப்பில் மிக நன்றாக இருக்க வேண்டும். வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருந்தாலும் கூட நீங்கள் இதைப் படிக்க முடியும். இதில் புத்தகம் எதுவுமே வேண்டாம். எங்கே அமர்ந்திருந்தாலும் நீங்கள் படிக்க முடியும். புத்தி மூலம் நினைவு செய்ய முடியும். இந்தப் படிப்பு அவ்வளவு சுலபமானதாகும். யோகம் அல்லது நினைவின் மூலம் பலம் கிடைக்கிறது. நீங்கள் இப்போது உலகத்தின் எஜமானராகிக் கொண்டிருக்கிறீர்கள். பாபா இராஜயோகம் கற்பித்துப் தூய்மையாக்குகிறார். அது ஹடயோகம். இது இராஜயோகம். இதில் பத்தியம் மிக நன்றாக இருக்க வேண்டும். இந்த லட்சுமி-நாராயணரைப் போல் சர்வகுண சம்பன்னம் ஆக வேண்டும் இல்லையா? உணவு-பானத்தின் பத்தியமும் அவசியமாகும். இரண்டாவது விசயம், பாபாவை நினைவு செய்ய வேண்டும். அப்போது ஜென்ம- ஜென்மாந்தரத்தின் பாவங்கள் நீங்கி விடும். இது ராஜ்யத்தை அடைவதற்கான சகஜ இராஜயோகம் எனச் சொல்லப்படுகின்றது. இராஜ்யத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ஏழையாகி விடுவீர்கள். ஸ்ரீமத்படி முழுமையாக நடப்பதன் மூலம் சிரேஷ்டமானவராகி விடுவீர்கள். கீழானநிலையில் இருந்து உயர்வானவராக ஆக வேண்டும். அதற்காக பாபாவை நினைவு செய்ய வேண்டும். கல்பத்திற்கு முன்பும் கூட நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுக் கொண்டிருந்தீர்கள். இப்போது அதை மீண்டும் பெறுகிறீர்கள். சத்யுகத்தில் வேறு எந்த ஒரு இராஜ்யமும் கிடையாது. அது சுகதாமம் எனச் சொல்லப்படுகின்றது. இப்போது இது துக்க தாமம். மேலும் நாம் எங்கிருந்து வந்திருக்கிறோமோ, அது சாந்திதாமம். சிவபாபாவுக்கு ஆச்சரிய மாக உள்ளது - உலகத்தில் மனிதர்கள் என்னென்ன செய்கிறார்கள்! குழந்தைகள் குறைவாகப் பிறக்க வேண்டும் என்பதற்காகவும் என்னவெல்லாம் கஷ்டப்படுகின்றனர்! இதுவோ பாபா வின் காரியம் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. பாபா ஒரு தர்மத்தின் ஸ்தாபனை செய்து, உடனடியாக மற்ற அனைத்து தர்மங்களையும் விநாசம் செய்விக்கிறார். அந்த மனிதர்கள் பிறப்பு சதவிகிதத்தைக் குறைப்பதற்காக எவ்வளவு மருந்துகள் முதலிய வற்றை உருவாக்குகின்றனர்! பாபாவிடமோ ஒரே ஒரு மருந்து தான் உள்ளது. ஒரு தர்மத்தின் ஸ்தாபனை ஆகப் போகிறது. அந்த மாதிரி சமயம் வரப் போகிறது - அனைவரும் சொல்வார்கள், இவர்களோ தூய்மையாகி விட்டனர். பிறகு மருந்து முதலானவற்றிற்கு அவசியம் என்ன உள்ளது? உங்களுக்கு பாபா அப்படிப்பட்ட மருந்து தந்துள்ளார்-மன்மனாபவ என்ற மருந்து- அதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்குப் தூய்மையாகி விடுகிறீர்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) தூய்மையாகி உண்மையான வைஷ்ணவர் ஆக வேண்டும். உணவு-பானத்திலும் முழுமையான பத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சிரேஷ்டமானவராக ஆவதற்கு ஸ்ரீமத் படி அவசியம் நடக்க வேண்டும்.

 

2) முரளி மூலம் தன்னைப் புத்துணர்ச்சி உள்ளவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். எங்கே இருந்தாலும் சதோபிரதானம் ஆவதற்கான புருஷார்த்தம் செய்ய வேண்டும். முரளியை ஒரு நாள் கூடத் தவறவிடக் கூடாது.

 

வரதானம்:

பிரிந்திருக்கும் (ஜுதாயி) தன்மைக்கு சதாகாலத்திற்கு விடை கொடுத்து விடும் (விதாயி) சிநேகத்தின் சொரூபம் ஆகுக!

 

எது நண்பனுக்கு பிடித்தமானதாக உள்ளதோ அது தான் நட்பு செய்பவருக்கும் விருப்ப மானதாக இருக்கும். இதுவே அன்பின் சொரூபம் ஆகும். நடப்பது, உண்பது, பருகுவது மற்றும் இருப்பது அனைத்தும் சிநேகத்திற்குரியவரின் மனதிற்கு பிரியமானதாக இருக்க வேண்டும். எனவே எந்தவொரு சங்கல்பம் (எண்ணம்) அல்லது கர்மம் செய்கிறீர்களோ, அது சிநேகத்திற்குரிய தந்தையின் மனதிற்கு விருப்பமானதா? என்பதை முதலில் யோசியுங்கள். அது போல் உண்மையான சிநேகம் உடையவர் ஆனீர்கள் என்றால் நிலையான யோகி (நிரந்தர யோகி) எளிதான யோகி (சகஜயோகி) ஆகி விடுவீர்கள். சிநேகம் உடைய சொரூபத்தை சமானமான சொரூபமாக மாற்றி விட்டீர்கள் என்றால் அமரபவ என்ற வரதானம் கிடைத்து விடும். மேலும் பிரிந்திருக்கும் (ஜுதாயி) தன்மைக்கு சதாகாலத்திற்காக விடை கொடுத்து விடுதல் (விதாயி) ஆகிவிடும்.

 

சுலோகன்:

சுபாவத்தினை சரளமானதாகவும், முயற்சியினை கவனமுடையதாக ஆக்கிக் கொள்ளக் கூடியவர்களாக ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி