09.12.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஈஸ்வரிய சேவை குறித்து எடுக்கக் கூடிய சங்கல்பம் சுத்த சங்கல்பம் (தீர்மானம்) அல்லது நிர்சங்கல்பம் என்றுதான் சொல்லப்படும், வீணானது அல்ல.

 

கேள்வி:

பாவ கர்மங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எந்த கடமையையும் செய்துக் கொண்டிருந்தாலும் (நிறைவேற்றினாலும்) பற்றற்று இருக்க வேண்டும்?

 

பதில்:

நண்பர்கள், உற்றார்,. உறவினர்களுக்கும் கூட சேவை செய்யுங்கள், ஆனால் அலௌகிக ஈஸ்வரிய கண்ணோட்டத்தில் செய்யுங்கள், அவர்கள் மீது பற்றுதலின் கலர் (உணர்வு) சென்றுவிடக் கூடாது. ஒருவேளை ஏதாவது விகார சம்மந்தத்தின் மீது சங்கல்பம் சென்றால் கூட அது பாவ கர்மம் ஆகி விடும், ஆகையால் பற்றற்றவராகி கடமைகளை பின்பற்றுங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆத்ம அபிமானியாகி இருக்கக் கூடிய முயற்சி செய்யுங்கள்.

 

ஓம் சாந்தி.

இன்று குழந்தைகளாகிய உங்களுக்கு சங்கல்பம், விகல்பம், நிர்சங்கல்பம் அல்லது கர்மம், அகர்மம் மற்றும் விகர்மம் பற்றி புரிய வைக்கப் படுகிறது. இங்கே இருக்கும் வரை உங்களுக்கு உங்களுடைய சங்கல்பம் (எண்ணம்) கண்டிப்பாக நடக்கும். சங்கல்பத்தை தாரணை செய்யாமல் எந்த மனிதரும் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. இப்போது இந்த சங்கல்பம் இங்கும் நடக்கும், சத்யுகத்திலும் நடக்கும் மற்றும் அஞ்ஞான காலத்திலும் நடக்கும், ஆனால் ஞானத்தில் வந்ததால் சங்கல்பம், சாதாரண சங்கல்பம் அல்ல, ஏனெனில் நீங்கள் பரமாத்மாவின் சேவைக்காக நிமித்தமாகியுள்ளீர்கள் எனும்போது யக்ஞத்தைக் குறித்து நடக்கும் சங்கல்பம், சங்கல்பம் அல்ல, அது நிர்சங்கல்பம்தான் ஆகும். மற்றபடி நடக்கும் பயனற்ற வீணான சங்கல்பம் அதாவது கலியுகத்தின் உலகம் மற்றும் கலியுகத்தின் நண்பர்கள், உறவினர்கள் குறித்து நடப்பவை விகல்பம் தவறு எனப்படுகின்றன. அதன் மூலம்தான் விகர்மங்கள் (பாவ கர்மங்கள்) ஆகின்றன மற்றும் விகர்மங்களின் மூலம் துக்கம் கிடைக்கிறது. மற்றபடி யக்ஞத்தைக் குறித்து அல்லது சேவையைக் குறித்து நடக்கக் கூடிய சங்கல்பம் அது நிர்சங்கல்பம் (எண்ணங்களற்ற நிலை) ஆகும். சேவையைக் குறித்து சுத்த சங்கல்பம் எழலாம். பாருங்கள், பாபா குழந்தைகளாகிய உங்களை கவனித்துக் கொள்வதற்காக இங்கே அமர்ந்துள்ளார். அவர்களை கவனித்துக் கொள்ளும் (பராமரிக்கும்) பொருட்டு தாய், தந்தையின் எண்ணத்துடன் கண்டிப்பாக நடக்கவே செய்கிறது. ஆனால் இந்த சாதாரண சங்கல்பம் சங்கல்பம் அல்ல, இதனால் விகர்மம் ஆவதில்லை, ஆனால் ஒருவேளை யாருடைய சங்கல்பமாவது விகாரி சம்மந்தத்தின் அடிப்படையில் நடக்கிறது என்றால் அது விகர்மமாக அவசியம் ஏற்படும்.

 

பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு சொல்கிறார் - நண்பர்கள், உறவினர்களின் சேவையைச் செய்யுங்கள், ஆனால் அலௌகிகமான ஈஸ்வரிய திருஷ்டியின் மூலம் செய்யுங் கள். அந்த மோகத்தின் பற்று இருக்கக் கூடாது. பற்றற்றவராகி தனது கடமைகளைச் செய்ய வேண்டும். ஆனால் யார் இங்கே இருந்து கொண்டிருந்தாலும், கர்ம சம்மந்தத்தில் இருந்தபடியே அதனை விலக்க முடியாவிட்டாலும் கூட அவர்கள் பரமாத்மாவை விடக் கூடாது. தந்தையின் கை பற்றியபடி இருந்தால் ஏதாவது ஒரு பதவி பிராப்தி செய்து கொள்வார்கள். தனக்குள் எந்த விகாரம் இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் இப்போது தன்னைக் குறித்து அறிவார்கள். ஒருவேளை ஒரு விகாரம் இருந்தாலும் கூட அவர்கள் தேக அபிமானிகளாகத்தான் கண்டிப்பாக இருப்பார்கள், யாருக்குள் விகாரங்கள் இல்லையோ அவர்கள் ஆத்ம அபிமானிகள். யாருக்குள் எந்த ஒரு விகாரம் இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாகத் தண்டனையை அடைவார்கள் மற்றும் விகாரங்களற்று இருப்பவர்கள் தண்டனையிலிருந்து விடுபட்டு விடுவார்கள். பாருங்கள், ஒரு சில குழந்தைகள் இருக்கின்றனர், அவர்களுக்குள் காமம் இல்லை, கோபம் இல்லை பேராசை இல்லை, மோகப் பற்றுதல் இல்லை. . . அவர்கள் சேவையை நல்ல விதமாக செய்ய முடியும். இப்போது அவர்களுடைய நிலை மிகவும் ஞான விஞ்ஞானமயமானதாக உள்ளது. அந்த விதமாக நீங்கள் அனைவரும் கூட அவர்களுக்கு ஓட்டளிப்பீர்கள் (ஆதரிப்பீர்கள்). இப்போது இதை நான் தெரிந்திருப்பது போல் குழந்தைகளாகிய நீங்களும் அறிவீர்கள், நல்லவர்களை நல்லவர்கள் என்று சொல்வோம், யாருக்குள் கொஞ்சம் குறைபாடு உள்ளதோ அவர்களுக்கு அனைவரும் அதே போல ஆதரவு அளிப்பார்கள். யாருக்குள் ஏதாவது விகாரம் இருக்குமோ அவர்கள் சேவை செய்ய முடியாது என்பதை இப்போது நிச்சயம் செய்ய வேண்டும். யார் விகாரமற்றவர்களோ அவர்கள் சேவை செய்து மற்றவர்களை தமக்குச் சமமாகச் செய்ய முடியும். ஆகையால் விகாரங்களின் மீது முழுமையாக வெற்றி பெறவேண்டும், விகல்பங்களின் மீது முழுமையான வெற்றி பெற வேண்டும். ஈஸ்வரனின் பெயரால் செய்யும் சங்கல்பம், நிர்சங்கல்பம் (எதிர்மறை விளைவுகளற்றது) என கூறப்படும்.

 

உண்மையில் மனதில் எந்தவொரு எண்ணமுமே நடக்காமல், துக்கம் மற்றும் சுகத்திற்கும் அப்பாற்பட்டு இருப்பதை நிர்சங்கல்பம் என சொல்லப்படும், இறுதியில் நீங்கள் கணக்கு வழக்கை முடித்துக் கொண்டு சென்றுவிடும் போது, அங்கே துக்கம், சுகத்திற்கும் அப்பாற்பட்ட நிலையில் இருக்கும்போது, எந்த எண்ணங்களும் செல்லாது. அந்த சமயத்தில் கர்மம், அகர்மம் இரண்டிலிருந்தும் கடந்த அகர்ம நிலையில் இருப்பீர்கள். இங்கே உங்களுடைய சங்கல்பம் கண்டிப்பாக நடக்கும் ஏனெனில் நீங்கள் முழு உலகை சுத்தம் செய்வதற்காக நிமித்தமாக ஆகியுள்ளீர்கள் எனும்போது அதற்காக உங்களுடைய சுத்த சங்கல்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும். சத்யுகத்தில் சுத்த சங்கல்பம் (நல்லெண்ணங்களே) நடப்பதால் சங்கல்பம் தீய விளைவை ஏற்படுத்தும் சங்கல்பமல்ல, கர்மங்கள் செய்தாலும் கூட கர்மபந்தனம் ஏற்படாது. புரிந்ததா. இப்போது கர்மம், அகர்மம் மற்றும் விகர்மத்தின் விளைவு பற்றி பரமாத்மாதான் புரிய வைக்க முடியும். அவரே விகர்மங்களிலிருந்து விடுவிப்பவர், அவர் இந்த சங்கமயுகத்தில் உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார், ஆகையால் குழந்தைகளே தன் மீது மிகவும் கவனம் வையுங்கள். தனது கணக்கு வழக்குகளை பார்த்தபடி இருங்கள். நீங்கள் இங்கே வந்திருப்பது கணக்கு வழக்கை முடிப்பதற்காக. இங்கு வந்த பிறகும் கூட கணக்கு வழக்கை அதிகரித்துக் கொண்டே சென்று தண்டனை கிடைக்குமாறு ஆகி விடக் கூடாது. இந்த கர்ப்ப ஜெயிலின் தண்டனை ஏதும் குறைவானதல்ல. இதனால் மிகவும் முயற்சி செய்ய வேண்டும். இந்த இலட்சியம் மிகவும் உயர்ந்தது, ஆகையால் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். விகல்பங் களின் மீது கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இப்போது எந்த அளவு விகல்பங்களின் மீது வெற்றி பெற்றுள்ளீர்கள், எந்த அளவு இந்த நிர்சங்கல்பம் அதாவது துக்கம் சுகத்திலிருந்து விடுபட்ட நிலையில் இருக்கிறீர்கள், இது குறித்து நீங்கள் தன்னைப் பற்றி புரிந்து கொண்டபடி இருங்கள். தன்னால் புரிந்து கொள்ள முடியாவிடில் மம்மா, பாபாவிடம் கேட்கலாம், ஏனென்றால் நீங்கள் அவர்களுடைய வாரிசுகள் ஆவீர்கள், அவர்களால் உங்களுக்குப் புரிய வைக்க முடியும்.

 

நிர்சங்கல்ப நிலையில் இருப்பதன் மூலம் நீங்கள் தன்னுடயதை மட்டுமல்ல, யாருடைய விகர்மங்களையும் அமிழ்த்த (இல்லாமல் செய்து விட) முடியும். எந்த காமம் நிறைந்த மனிதர் உங்கள் முன்னால் வந்தாலும், அவர்களுக்குள் உள்ள விகாரம் நிறைந்த சங்கல்பம் நிறைவேறாது. யாராவது தேவதைகளின் முன்பாகச் சென்றால் எப்படி அமைதியடைந்து விடுகின்றனரோ அப்படி நீங்களும் கூட குப்தமான விதத்தில் தேவதைகளாக இருக்கிறீர்கள். உங்கள் முன்பாகவும் கூட யாருடைய விகாரம் நிறைந்த சங்கல்பமும் நடக்க வாய்ப்பில்லை, ஆனாலும் பல காமம் நிறைந்த மனிதர்கள் இருக்கின்றனர், அவர்களுடைய விகாரம் நிறைந்த சங்கல்பம் சிறிது நடந்தாலும் கூட நீங்கள் யோக யுக்தமாகி நின்றிருந்தீர்கள் என்றால் அது உங்கள் மீது போர் செய்ய முடியாது.

 

குழந்தைகளே, நீங்கள் பரமாத்மாவிடம் உங்களது விகாரங்களின் ஆஹூதி (வேள்வித் தீயில் போடும் பொருள்) கொடுக்க இங்கே வந்துள்ளீர்கள், ஆனால் ஒரு சிலர் இன்னும் கூட விதிப்படி (ஆகுதி) ப கொடுக்கவில்லை. அவர்களின் யோகம் (நினைவின் தொடர்பு) பரமபிதாவுடன் இணைக்கப்படவில்லை. முழு நாளும் புத்தி யோகம் அலைந்தபடி இருக்கிறது அதாவது ஆத்ம-அபிமானி ஆகவில்லை. தேகாபிமானி ஆவதால் பிறருடைய சுபாவத்தில் (வசத்தில்) வந்து விடுகின்றனர், அதன் காரணமாக பரமாத்மாவிடம் அன்பை நிலையாக வைக்க முடிவதில்லை, அதாவது பரமாத்மாவின் சேவை செய்யும் அதிகாரி ஆக முடிவதில்லை. ஆகவே யார் பரமாத்மாவிடம் சேவை பெற்றுக் கொண்டு பிறகு சேவை செய்து கொண்டிருக்கின்றனரோ அதாவது தூய்மையற்றவரை தூய்மையாக்கிக் கொண்டிருக்கின்றனரோ அவர்கள்தான் என்னுடைய உறுதியான குழந்தைகள் ஆவர். அவர்களுக்கு மிகவும் உயர்ந்த பதவி கிடைக்கும்.

 

இப்போது பரமாத்மா தாமே வந்து உங்களுடைய தந்தை ஆகியிருக்கிறார். அந்த தந்தையை சாதாரண ரூபத்தில் இருப்பதை அறிந்து கொள்ளாமல் எந்த விதமான சங்கல்பம் செய்தாலும் வினாசத்தை அடைந்தது போலாகும். இன்னும் 108 ஞான கங்கைகள் முழுமை யான நிலையை அடையப் போகும் அந்த நேரம் வரவுள்ளது. மற்றபடி படிக்காதவர்களாகிப் போனவர்கள் தன்னையே வீணடித்துக் கொள்வார்கள்.

 

யாராவது இந்த ஈஸ்வரிய யக்ஞத்தில் மறைத்து வைத்து வேலை செய்தார்கள் என்றால் அவர்களை அனைத்தும் அறிந்த பாபா பார்த்துக் கொண்டு இருப்பார், அவர் பிறகு தனது சாகார சொரூபத்தில் உள்ள (பிரம்மா) பாபாவுக்கு உணர்வு (தொடுதல்) கொடுப்பார் - அவர் களை எச்சரிப்பதற்காக. எனவே எந்த விஷயத்தை யும் மறைக்கக் கூடாது. தவறுகள் ஏற்படவே செய்கின்றன, ஆயினும் அவைகளைப் பற்றி தெரியப்படுத்தும் போதுதான் பின்னால் தப்பிக்க முடியும், ஆகையால் குழந்தைகளே எச்சரிக்கையுடன் இருங்கள்.

 

குழந்தைகள் முதலில் நான் யார்? குறிக்கோள் என்ன? என தன்னைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். நான் என்பது சரீரத்தைக் குறிப்பதில்லை, நான் என ஆத்மாவைச் சொல்கிறோம். ஆத்மாவாகிய நான் எங்கிருந்து வந்தேன்? யாருடைய குழந்தையாக இருக்கிறேன்? நான் ஆத்மா, பரமபிதா பரமாத்மாவின் குழந்தை என ஆத்மாவுக்கு தெரியும் போது தந்தையை நினைவு செய்வதன் மூலம் குஷி வந்து விடும். தந்தையின் தொழில் என்ன என தெரிந்து கொள்ளும் போது குழந்தைகளுக்கு குஷி வருகிறது. எதுவரை சிறியவர்களாக இருக் கின்றனரோ, தந்தையின் தொழிலைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனரோ அதுவரை குஷி இருக்காது. பெரியவராக ஆக ஆக, தந்தையின் தொழிலைப் பற்றித் தெரிந்து போகிறது, அப்போது அந்த போதை, அந்த குஷி ஏறி விடுகிறது. ஆக, முதலில் அவருடைய தொழிலைப் பற்றியும் நம்முடைய பாபா யார்? அவர் எங்கே வசிக்கிறார்? என தெரிந்து கொள்ள வேண்டும். ஆத்மா அவருக்குள் ஐக்கியமாகி விடும் என்று சொன்னால் ஆத்மா வினாசமாவது என ஆகி விடும், அப்போது குஷி யாருக்கு வரும்?

 

உங்களிடம் யாராவது புதிய மாணவர்கள் வந்தார்கள் என்றால் அவர்களைக் கேட்க வேண்டும் - நீங்கள் இங்கே என்ன படிக்கிறீர்கள்? இதன் மூலம் என்ன பதவி கிடைக்கிறது? அந்த கல்லூரியில் படிப்பவர்கள் சொல்வார்கள் - நாங்கள் டாக்டராகிக் கொண்டிருக்கிறோம், இன்ஜினீயர் ஆகிக் கொண்டிருக்கிறோம்... அப்போது இவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என அவர்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள் அல்லவா. இங்கும் கூட மாணவர்கள் சொல்வார்கள் - இது துக்கத்தின் உலகம், இது நரகம், அல்லது பிசாசுகளின் உலகம் என சொல்கிறோம். அதற்கு நேர்மறையானது சொர்க்கம் அல்லது தெய்வீக உலகம், அதனை சொர்க்கம் என சொல்கிறோம். இது அந்த சொர்க்கமல்ல இது நரகம் அல்லது துக்கத்தின் உலகம், பாவாத்மாக்களின் உலகம் என்பதை அனைவருமே அறிவார்கள், புரிந்து கொள்ளவும் முடியும், எனவே தான் எங்களை புண்ணிய ஆத்மாக்களின் உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என அவரைக் கூப்பிடுகின்றனர். ஆக படித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்தக் குழந்தைகள் பாபா நம்மை அந்த புண்ணிய ஆத்மாக்களின் உலகத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் என அறிவார்கள். ஆகவே வரக்கூடிய புதிய மாணவர்கள் குழந்தைகளிடம் கேட்க வேண்டும், குழந்தைகளிடம் விளக்கி கூற வேண்டும். அவர்கள் தம்முடைய ஆசிரியரின் அல்லது தந்தையின் தொழிலைப்பற்றி சொல்ல முடியும். தந்தை தம்மைப் பற்றித் தாமே பெருமையடித்துக் (மகிமை செய்துக்) கொள்ள மாட்டார், ஆசிரியர் தம் மகிமையைத் தாமே சொல்வாரா என்ன. அதைப் பற்றி மாணவர்கள் இவர் இப்படிப்பட்ட ஆசிரியர் என சொல்வார்கள், அப்போது மாணவர் ஆசிரியரை வெளிப்படுத்துவார் என சொல்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இவ்வளவு கோர்ஸ் படித்து வந்துள்ளீர்கள், உங்களுடைய வேலை புதியவர்களுக்குப் புரிய வைப்பது. மற்றபடி பி.ஏ., எம்.ஏ., கற்பித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் அமர்ந்து அ, ஆ, இ, ஈ சொல்லிக் கொடுப்பாரா என்ன? சிற்சில மாணவர்கள் நல்ல புத்திசாலியாக இருக்கின்றனர், அவர்கள் மற்றவர்களைப் படிக்க வைப்பார்கள். அவர்களில் மாதா குரு மிகவும் புகழ் வாய்ந்தவர். இவர் தெய்வீக தர்மத்தின் முதல் மாதா, அவரை ஜகதம்பா என சொல்கிறோம். மாதாவுக்கு மகிமை நிறைய உண்டு. வங்காளத்தில் காளி, துர்கா, சரஸ்வதி மற்றும் லட்சுமி என்ற இந்த நான்கு தேவியருக்கு நிறைய பூஜை செய்கின்றனர். இப்போது அந்த நால்வரின் தொழிலைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். லட்சுமி செல்வத்தின் தேவியாக இருக்கிறார். அவர் இங்கேதான் இராஜ்யம் செய்து விட்டுச் சென்றிருக்கிறார். மற்றபடி காளி, துர்கை முதலான பெயர்கள் அனைத்தும் இவருக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நான்கு மாதர்கள் இருந்தார்கள் என்றால் அவர்களின் நான்கு பதிகளும் (கணவன்மார்களும்) இருக்க வேண்டும். இப்போது லட்சுமியின் கணவர் நாராயணன் பிரசித்தமாக உள்ளார். காளியின் கணவர் யார்? (சங்கரன்) ஆனால் சங்கரனை பார்வதியின் பதி என சொல்கின்றனர். பார்வதி காளி அல்லவே. பலர் காளியைப் பூஜிக்கின்றனர். மாதாவை நினைவு செய்கின்றனர், ஆனால் பிதாவைப் பற்றி தெரியாது. காளிக்கு ஒன்று கணவராவது இருக்க வேண்டும் அல்லது தந்தையாவது இருக்க வேண்டும் ஆனால் இது யாருக்கும் தெரியாது.

 

உலகம் ஒன்று தான், அது ஒரு சமயம் துக்கத்தின் உலகமாகவும் அல்லது நரகமாகவும் ஆகி விடுகிறது, அதுவே பிறகு சத்யுகத்தில் மலர்த்தோட்டம் அல்லது சொர்க்கமாக ஆகிறது என நீங்கள் புரிய வைக்க வேண்டும். லட்சுமி நாராயணரும் கூட இந்த சிருஷ்டியில்தான் சத்யுகத்தின் சமயத்தில் இராஜ்யம் செய்து கொண்டிருந்தனர். மற்றபடி சூட்சுமமாக லட்சுமி நாராயணர் இருக்கும் வைகுண்டம் எதுவும் கிடையாது. அவர்களின் சித்திரங்கள் இங்குதான் உள்ளன, ஆகவே கண்டிப்பாக இங்குதான் இராஜ்யம் செய்து சென்றனர். விளையாட்டு அனைத்தும் இந்த சாகார உலகத்தில் நடக்கிறது. வரலாறு புவியியல் இந்த ஸ்தூல உலகத்தினுடையதாகும். சூட்சும வதனத்தின் வரலாறு புவியியல் என எதுவும் கிடையாது. ஆனால் அனைத்து விசயங்களையும் விட்டு நீங்கள் புதிய மாணவர்களுக்கு தந்தையைப் பற்றி கற்றுத் தர வேண்டும், பிறகு ஆஸ்தியைப் பற்றி புரிய வைக்க வேண்டும். தந்தைதான் இறைவன், அவர் பரமாத்மா ஆவார். எதுவரை இதை முழுமையாகப் புரிந்து கொள்ள வில்லையோ அதுவரை பரமபிதாவின் மீது அந்த அன்பு ஏற்படுவதில்லை. அந்த குஷி வருவதில்லை, ஏனென்றால் முதலில் தந்தையைத் தெரிந்து கொள்ளும்போதுதான் அவரது தொழிலைப் பற்றி தெரிந்து கொண்டு குஷியில் வருவார்கள். ஆக, இந்த முக்கியமான விசயத்தைப் புரிந்து கொள்வதில் குஷி உள்ளது. இறைவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர், ஆனந்த சொரூபமானவர். அவருடைய குழந்தைகள் நாம் எனும்போது அந்த குஷி ஏன் வரக் கூடாது? அந்த குதூகலம் ஏன் ஏற்படுவதில்லை. நான் கடவுளின் குழந்தை, நான் எப்போதும் மகிழ்ச்சியான மாஸ்டர் பகவான். அந்த குஷி வருவதில்லை என்றால் தன்னை குழந்தை என புரிந்து கொள்ளவில்லை என அர்த்தம். பகவான் எப்போதும் மகிழ்ச்சியானவர், ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்றால் தந்தையைத் தெரிந்து கொள்ளவில்லை என ஆகும். சகஜமான விஷயம் தான்.

 

ஒரு சிலருக்கு இந்த ஞானத்தைக் கேட்பதற்குப் பதிலாக அமைதி பிடித்திருக்கிறது. ஏனென்றால் ஞானத்தைக் கூட எடுக்க (தெரிந்து கொள்ள) முடியாத நிலையில் பலர் உள்ளனர். அவ்வளவு நேரம் எங்கே இருக்கிறது? இந்த தந்தையைப் பற்றி மட்டும் தெரிந்து கொண்டு அமைதியில் இருந்தால் கூட அதுவும் நல்லதே. சன்னியாசிகள் கூட மலைகளின் குகைகளில் சென்று பரமாத்மாவின் நினைவில் அமருகின்றனர். அப்படி பரமபிதா பரமாத்மாவின், அந்த பரம ஒளியின் நினைவில் இருந்தால் கூட நல்லதேயாகும். அவருடைய நினைவில் சன்னியாசிகள் கூட நிர்விகாரிகள் ஆக முடியும். ஆனால் வீட்டில் அமர்ந்தபடி நினைவு செய்ய முடியாது. அங்கே குழந்தை குட்டிகளின் மீது மோகப் பற்றுதல் ஏற்பட்டபடி இருக்கும், ஆகையால் சன்னியாசம் செய்கின்றனர். தூய்மை யானவராகி விட்டால் அதில் சுகம் இருக்கிறதல்லவா. சன்னியாசிகள் அனைவரையும் விட நல்லவர்கள். ஆதி தேவன் கூட சன்னியாசி ஆனார் அல்லவா. அவருடைய கோவில் (ஆதி தேவ்) முன்னால் உள்ளது, அங்கே தபஸ் செய்து கொண்டிருக்கின்றனர். கீதையில் கூட சொல்கின்றனர் - தேகத்தின் அனைத்து தர்மங்களையும் சன்னியாசம் செய். அவர்கள் சன்னியாசம் செய்து சென்று விட்டால் மஹாத்மா ஆகி விடுகின்றனர். இல்லறவாசியை மஹாத்மா என சொல்வது முறையல்ல. உங்களையோ பரமாத்மா வந்து சன்னியாசம் செய்வித்தார். சன்னியாசம் செய்வதே சுகத்திற்காக. மஹாத்மாக்கள் ஒருபோதும் துக்க மிக்கவர்களாக ஆவதில்லை. ராஜாக்கள் கூட சன்னியாசம் செய்யும்போது கிரீடம் முதலான வற்றை வீசி எறிந்து விடுகின்றனர். கோபிசந்த் என்பவர் சன்னியாசம் செய்தது போல. அதில் கண்டிப்பாக சுகம் இருக்கிறது. நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்

1. எந்த ஒரு தலைகீழ் காரியத்தையும் மறைத்து வைத்து செய்யக் கூடாது. பாப்தாதாவிடம் எந்த விஷயத்தையும் மறைக்கக் கூடாது. மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

 

2. மாணவர் ஆசிரியர் ஆகிய தந்தையை வெளிப்படுத்துபவர்கள். படித்ததை பிறருக்கும் கற்றுத் தர வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியான இறைவனின் குழந்தைகள், இந்த நினைவில் அளவற்ற குஷியில் இருக்க வேண்டும்.

 

வரதானம்:

ஒவ்வோர் ஆத்மாவையும் உயர்வடையச் செய்வதற்கான பாவனை மூலம் மதிப்பளிக்கக் கூடிய சுப சிந்தனையாளர் ஆகுக.

 

ஒவ்வோர் ஆத்மாவுக்காகவும் உயர்ந்த பாவனை, அதாவது உயர்ந்தவராக ஆக்குவதற் கான அல்லது முன்னேறச் செய்வதற்கான பாவனை வைப்பது என்றால் சுப சிந்தனையாளர் ஆவதாகும். தன்னுடைய நல்லெண்ணங்கள் மூலம் சுப சிந்தனையாளர் ஸ்திதி மூலம் மற்றவர்களின் அவகுணங்களை மாற்றியமைப்பது, எவர் ஒருவரின் பலவீனம் அல்லது அவகுணத்தையும் தனது பலவீனமாக உணர்ந்து, அதை வர்ணனை செய்வதற்கு பதிலாக அல்லது பரப்புவதற்குப் பதிலாக, உள்ளடக்கிக் கொள்வது மற்றும் மாற்றம் செய்வது தான் மதிப்பளிப்பதாகும். பெரிய விசயத்தைச் சிறியதாக ஆக்குவது, மனச்சோர்வடைந்தவரை சக்திவான் ஆக்குவது, அவர்களுடைய சேர்க்கையின் நிறத்தில் வராமல் இருப்பது, சதா அவர்களையும் ஊக்கம்-உற்சாகத்தில் கொண்டு வருவது - இது தான் மதிப்பளிப்பதாகும். அது போல் மதிப்பளிக்கக் கூடியவர்கள் தான் சுப சிந்தனையாளர் ஆவார்.

 

சுலோகன் :

பழைய சுபாவம், சம்ஸ்காரம் உங்களது தியாகத்தின் பாக்கியத்தை முடித்து விடும் ஆகையால் இதை கூட (பழைய சுபாவ, சம்ஸ்காரம்) தியாகம் செய்து விடுங்கள்.

 

ஓம்சாந்தி