04.12.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே!
குழந்தைகளாகிய உங்களை ஞானத்தால் அலங்கரிப்பதற்காக எல்லையற்ற
தந்தை வந்திருக்கின்றார். உயர்ந்த பதவி பெற வேண்டுமானால்
எப்போதும் அலங்கரிக்கப்பட்டவர்களாக இருங்கள்.
கேள்வி :
எந்தக்
குழந்தைகளைப்
பார்த்து
எல்லையற்ற
தந்தை
மிகவும்
மகிழ்ச்சி
அடைகின்றார்?
பதில்:
எந்தக் குழந்தைகள் சேவைக்காக
எப்போதும் தயார் நிலையில் (எவர் ரெடி) உள்ளனரோ, அலௌகிக மற்றும்
பரலௌகிக இரண்டு தந்தையரையும் முழுமையாகப் பின்பற்றுகின்றனரோ,
ஞானம்- யோகத்தினால் ஆத்மாவை அலங்கரித்துக் கொள்கின்றனரோ,
தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்கக்கூடிய சேவை செய் கின்றனரோ,
அப்படிப்பட்ட குழந்தைகளைப் பார்த்து எல்லையற்ற தந்தைக்கு
மிகுந்த குஷி ஏற்படுகின்றது. பாபாவின் விருப்பம் என்னவென்றால்
என்னுடைய குழந்தைகள் முயற்சி செய்து உயர்ந்த பதவி பெற வேண்டும்.
ஓம் சாந்தி.
ஆன்மிகத் தந்தை ஆன்மிகக்
குழந்தைகளுக்குச் சொல்கிறார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே,
எப்படி லௌகிகக் தந்தைக்கு குழந்தைகள் பிடித்தமானவர்களாக உள்ளனரோ,
அதுபோல் எல்லையற்ற தந்தைக்கும் எல்லையற்ற குழந்தைகள்
பிரியமானவர்களாக உள்ளனர். தந்தை குழந்தைகளுக்கு கல்வி (அறிவுரை)
மற்றும் எச்சரிக்கை தருகிறார் - குழந்தைகள் உயர்ந்த பதவி பெற
வேண்டும். இது தான் தந்தையின் விருப்பமாக உள்ளது. ஆக,
எல்லையற்ற தந்தைக்கும் கூட இந்த ஆசை உள்ளது. குழந்தைகளை ஞானம்
மற்றும் யோகத்தின் ஆபரணங்களால் அலங்கரிக்கிறார். உங்களை இரண்டு
தந்தையரும் மிக நன்றாக அலங்கரிக்கின்றனர்-குழந்தைகள் உயர்ந்த
பதவி பெற வேண்டும் என்பதற்காக. யார் நன்றாகப் புருஷார்த்தம்
செய்கின்றனரோ, அவர்களைப் பார்த்து அலௌகிக தந்தையும்
குஷியடைகிறார் கூடவே பரலௌகிக் தந்தையும் குஷியடைகிறார்.
பாடப்படவும் செய்கிறது, தந்தையைப் பின்பற்றுங்கள் என்று. ஆக,
இருவரையும் பின்பற்ற வேண்டும். ஒருவர் ஆன்மிகத் தந்தை. இந்த
இன்னொருவர் பிறகு அலௌகிக் தந்தை. ஆக, புருஷார்த்தம் செய்து
உயர்ந்த பதவி பெற வேண்டும்.
நீங்கள் பட்டியில் இருந்த போது அனைவருக்கும் கிரீடத்துடன் கூட
ஃபோட்டோ எடுக்கப்பட்டது. பாபாவோ புரிய வைத்துள்ளார்,
ஒளிக்கிரீடம் என்று எதுவும் இருப்ப தில்லை. இது தூய்மையின் ஓர்
அடையாள மாகும். அதை அனைவருக்கும் கொடுக்கின்றனர். ஏதோ வெள்ளை
ஒளியுடன் கிரீடம் உள்ளதென்பதெல்லாம் கிடையாது. இது தூய்மையின்
அடையாளம் என்பது புரிய வைக்கப்படுகின்றது. முதல்-முதலில்
நீங்கள் இருப்பது சத்யுகத்தில். நீங்கள் தாம் இருந்தீர்கள்
இல்லையா? பாபாவும் சொல்கிறார், ஆத்மாக்களும் பரமாத்மா வும்
நீண்ட காலமாகப் பிரிந்திருந்து விட்டனர்... குழந்தைகள் நீங்கள்
தான் முதல்-முதலில் வருகிறீர்கள். பிறகு முதலில் நீங்கள் தான்
செல்ல வேண்டும். முக்திதாமத்தின் கேட்டும் கூட நீங்கள் தான்
திறக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களை பாபா அலங்கரிக்கிறார்.
தந்தையின் வீட்டில் வனவாசத்தில் இருக்கிறீர்கள். இச்சமயம்
நீங்களும் சாதாரணமாக இருக்க வேண்டும். உயர்ந்தவராகவும் இல்லை,
தாழ்ந்தவராகவும் இல்லை என்று இருக்க வேண்டும். சாதாரண உடலில்
பிரவேசமாகிறேன் என்று பாபாவும் சொல்கிறார். எந்த ஒரு
தேகதாரியையும் பகவான் எனச் சொல்ல முடியாது. மனிதர்கள்
மனிதர்களுக்கு சத்கதி அளிக்க முடியாது. சத்கதியோ குரு தான்
அளிக்கிறார். மனிதர்கள் 60 வயதுக்குப் பிறகு வானப்ரஸ்த
நிலையில் செல்கின்றனர். பிறகு குரு வைத்துக் கொள்கின்றனர்.
இந்த வழக்கமும் இப்போதைய சமயத்தினுடையது தான். இது பிறகு பக்தி
மார்க்கத்தில் நடை பெறுகின்றது. தற்சமயத்திலோ சின்னக்
குழந்தைகளுக்கும் கூட குருவை ஏற்பாடு செய் கின்றனர். வானப்ரஸ்த
அவஸ்தா இல்லை என்றாலும் கூட திடீரென்று மரணம் வந்து விடுகிறது
இல்லையா? அதனால் குழந்தைகளுக்கும் கூட குருவை ஏற்பாடு
செய்கின்றனர். எப்படி பாபா சொல்கிறார், நீங்கள் அனைவரும்
ஆத்மாக்கள், ஆஸ்தி பெறுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.
அவர்கள், குரு இல்லாமல் நற்கதி கிடைக்காது எனச் சொல்லி
விடுகின்றனர். அதாவது பிரம்மத்தில் ஐக்கியமாக மாட்டார்கள்
என்கின்றனர். நீங்களோ பிரம்மத்தில் ஐக்கியமாக வேண்டியதில்லை.
இது பக்தி மார்க்கத்தின் வார்த்தையாகும். ஆத்மாவோ நட்சத்திரம்
போல் ஒரு புள்ளியாக உள்ளது. பாபாவும் புள்ளியாகவே உள்ளார்.
அந்த புள்ளியைத் தான் ஞானக்கடல் எனச் சொல்லப் படுகிறார்.
நீங்களும் கூட சிறிய ஆத்மா தான். அதில் ஞானம் முழுவதும்
நிரப்பப் படுகிறது. நீங்கள் முழுமையான ஞானத்தைப்
பெறுகிறீர்கள். பாஸ் வித் ஆனர் ஆகின்றனர் இல்லையா? சிவலிங்கம்
ஒன்றும் பெரியது என்ப தெல்லாம் கிடையாது. எவ்வளவு பெரிய
ஆத்மாவானாலும் பரம (மிக மேலான) ஆத்மாவும் அதே அளவே (புள்ளி)
உள்ளார். ஆத்மா தன்னுடைய பார்ட்டை நடிப்பதற்காகப்
பரந்தாமத்திலிருந்து வருகிறது. பாபா சொல்கிறார், நானும் கூட
அங்கிருந்து தான் வருகிறேன். ஆனால் எனக்கு என்னுடைய சரீரம்
என்பது கிடையாது. நான் ரூப் (யோகி) ஆகவும் இருக்கிறேன், பஸந்த்
(ஞானி) ஆகவும் இருக்கிறேன். பரம ஆத்மா ரூப் - அவருக்குள் முழு
ஞானமும் நிரம்பியுள்ளது. ஞானத்தின் மழை பொழிவிக்கிறார் என்றால்
மனிதர்கள் அனைவரும் பாவாத்மா வில் இருந்து புண்ணியாத்மாவாக ஆகி
விடுகின்றனர். பாபா கதி, சத்கதி (முக்தி, ஜீவன் முக்தி)
இரண்டுமே தருகிறார். நீங்கள் சத்கதியில் செல்கிறீர்கள். மற்ற
அனைவரும் கதியில், அதாவது தங்களது வீட்டுக்குச் செல் கின்றனர்.
அது இனிமையான வீடு. ஆத்மா தான் இந்தக் காதுகள் மூலம்
கேட்கின்றது.
இப்போது பாபா சொல்கிறார், இனிமையிலும் இனிமையான தேடிக்
கண்டுக்கப்பட்ட குழந்தைகளே, திரும்பிச் செல்ல வேண்டும்.
அதற்காக அவசியம் தூய்மையாக வேண்டும். பவித்திர ஆத்மா தவிர வேறு
யாரும் திரும்பிச் செல்ல முடியாது. நான் அனைவரையும் அழைத்துச்
செல்வதற்காக வந்துள்ளேன். ஆத்மாக் களுக்கு சிவனின் ஊர்வலம்
எனச் சொல்கின்றனர். இப்போது சிவபாபா சிவாலயத்தின் ஸ்தாபனை
செய்து கொண்டிருக்கிறார். பிறகு இராவணன் வந்து வேஷ்யாலயத்தை
ஸ்தாபனை செய்கிறான். வாம (நேர் மாறான) மார்க்கம் வேஷ்யாலயம்
எனச் சொல்லப்படுகின்றது. பாபாவிடம் அநேகக் குழந்தைகள் உள்ளனர்,
அவர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகும் கூட பவித்திரமாக
உள்ளனர். சந்நியாசிகளோ, இருவரும் சேர்ந்து வாழ்வது என்பது
முடியாது, இது நடக்க முடியாதது எனச் சொல்கின்றனர். இங்கே புரிய
வைக்கப் படுகின்றது, இதனால் வருமானம் அதிகம். பவித்திரமாக
இருப்பதால் 21 பிறவிகளுக்கு இராஜதானி கிடைக்கின்றது எனும்போது
ஒரு பிறவி பவித்திரமாக இருப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. பாபா
சொல்கிறார், நீங்கள் காம சிதையில் அமர்ந்து முற்றிலும்
கருப்பாக ஆகி விட்டிருக்கிறீர்கள். கிருஷ்ணர் பற்றியும்
சொல்கின்றனர், வெள்ளை மற்றும் கறுப்பு - ஷியாம் சுந்தர் என்று.
இந்தப் புரிதல் என்பது இப்போதைய சமயத்தினுடையதாகும். காம
சிதையில் அமர்வதால் கருப்பாகி விட்டார். பிறகு அவரை
கிராமத்துச் சிறுவன் என்றும் சொல்கின்றனர். அப்படித் தான்
(பிரம்மா) இருந்தார் இல்லையா? கிருஷ்ணர் அப்படி இருக்க
முடியாது. இவருடைய அநேக ஜென்மங்களின் கடைசியில் பாபா
பிரவேசமாகி வெள்ளையாக ஆக்குகிறார். இப்போது நீங்கள் ஒரு
தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். பாபா, தாங்கள் எவ்வளவு
இனிமையானவர்! எவ்வளவு இனிமையான ஆஸ்தி தருகிறீர்கள்! எங்களை
மனிதரில் இருந்து தேவதையாக, கோவிலுக்குத் தகுதி உள்ளவர்களாக
ஆக்குகிறீர்கள். இப்படியெல்லாம் தனக்குள் உரையாட வேண்டும்.
வாயினால் சப்தமாக எதுவும் பேச வேண்டிய தில்லை. பக்தி
மார்க்கத்தில் நாயகனாகிய உங்களை எவ்வளவு நினைவு செய்து
வந்திருக்கிறோம்! இப்போது நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள்.
பாபா, நீங்களோ அனைவரிலும் இனிமையானவர்! உங்களை நாங்கள் ஏன்
நினைவு செய்ய மாட்டோம்? நீங்கள் அன்புக்கடல், சாந்திக் கடல்
என்றெல்லாம் சொல்லப்படுகிறீர்கள். நீங்கள் தான் ஆஸ்தி
தருகிறீர்கள். மற்றப்படி பிரேர ணையினால் எதுவும்
கிடைப்பதில்லை. பாபாவோ முன்னிலையில் வந்து குழந்தைகளாகிய
உங்களுக்குக் கற்றுத் தருகிறார். இது பாடசாலை அல்லவா? பாபா
சொல்கிறார், நான் உங்களை ராஜாவுக்கெல்லாம் மேலான ராஜா
ஆக்குகிறேன். இது இராஜயோகமாகும். இப்போது நீங்கள் மூல வதனம்,
சூட்சும வதனம் மற்றும் ஸ்தூல வதனம் பற்றி அறிந்து கொண்டு
விட்டீர்கள். இவ்வளவு சிறிய ஆத்மா எப்படி பார்ட்டை
நடிக்கின்றது! அதுவும் ஏற்கனவே உருவாக்கப் பட்டது. இது
அனாதி-அவிநாசி உலக டிராமா எனச் சொல்லப் படும். டிராமா சுற்றிக்
கொண்டே இருக்கிறது. இதில் சந்தேகத்திற்கான எந்த ஒரு விஷயமும்
கிடையாது. பாபா சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ஞானத்தைச்
சொல்லிப் புரிய வைக்கிறார். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள்.
உங்களுடைய புத்தியில் சக்கரம் முழுவதும் சுற்றிக் கொண்டே
இருக்கிறது. ஆக, அதனால் உங்களுடைய பாவங்கள் நீங்கி விடுகின்றன.
மற்றப்படி கிருஷ்ணர் சுயதரிசனச் சக்கரத்தினைச் செலுத்தி இம்சை
எதுவும் செய்யவில்லை. அங்கோ சண்டையின் இம்சையும் கிடையாது,
காமக் கட்டாரியின் இம்சையும் கிடையாது. இரட்டை அகிம்சையாளர்கள்
இருப்பார்கள். இச்சமயம் 5 விகாரங்களோடு உங்களுக்கு யுத்தம்
நடைபெறுகின்றது. மற்றப்படி வேறு எந்த ஒரு யுத்தத்தின் விஷயமும்
கிடையாது. இப்போது பாபா உயர்ந்தவரிலும் உயர்ந்தவர், பிறகு
உயர்ந்ததிலும் உயர்ந்த இந்த ஆஸ்தி - லட்சுமி-நாராயணர் -
இவர்களைப் போல் உயர்ந்தவர்களாக ஆக வேண்டும். எவ்வளவு நீங்கள்
புருஷார்த்தம் செய்கிறீர்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி
பெறுவீர்கள். கல்ப- கல்பமாக அதே உங்கள் படிப்பாக இருக்கும்.
இப்போது நன்கு புருஷார்த்தம் செய்தீர்கள் என்றால்
கல்ப-கல்பமாகச் செய்து கொண்டே இருப்பீர்கள். ஆன்மிகப்
படிப்பினால் எத்தகைய பதவி கிடைக்கிறதோ, ,அந்த மாதிரி சரீர
சம்மந்தமான படிப்பினால் பதவி கிடைப்பதில்லை. உயர்ந்தவரிலும்
உயர்ந்தவர்களாக இந்த லட்சுமி-நாராயணர் ஆகின்றனர். இவர்களும்
கூட மனிதர்கள் தான். ஆனால் தெய்விக குணங்களை தாரணை
செய்கின்றனர். அதனால் தேவதை எனச் சொல்லப்படுகின்றனர்.
மற்றப்படி 8-10 புஜங்கள் உள்ளவர்கள் யாரும் கிடையாது.
பக்தியில் காட்சி கிடைக்குமானால் அதிகமாக அழுகின்றனர்.
துக்கத்தில் வந்து மிகவும் கண்ணீர் விடுகின்றனர். இங்கோ பாபா
சொல்கிறார், கண்ணீர் வந்தது என்றாலே ஃபெயிலாகி விட்டீர்கள்.
அம்மா இறந்தாலும் அல்வா சாப்பிடுங்கள்... இப்போதெல்லாம்
பாம்பேயில் கூட யாராவது நோய்வாய்ப்படுகின்றனர் அல்லது இறந்து
போகின்றனர் என்றால் பி.கே.க்களை அழைக்கின்றனர் - வந்து சாந்தி
கொடுங்கள் என்று. நீங்கள் புரிய வைக்கிறீர்கள், ஆத்மா ஒரு
சரீரத்தை விட்டு வேறொரு சரீரத்தை எடுத்துக் கொண்டு விட்டது,
இதில் உங்களுக்கு என்ன ஆகிறது? அழுவதால் என்ன நன்மை?
சொல்கின்றனர், இவரைக் காலன் சாப்பிட்டு விட்டான்... அப்படி
எந்த ஒரு பொருளும் கிடையாது. இதுவோ ஆத்மா தானாகவே ஒரு சரீரத்தை
விட்டுச் சென்று விடுகின்றது. மற்றப்படி காலன் என்று எந்த ஒரு
பொருளும் கிடையாது. சத்யுகத்தில் கர்ப்ப மாளிகை இருக்கும்.
தண்டனையின் விஷயமே அங்கே கிடையாது. அங்கே உங்கள் கர்மம்
அகர்மம் ஆகி விடுகின்றது. விகர்மம் ஆவதற்கு அங்கே மாயாவே
கிடையாது. நீங்கள் விகர்மாஜீத் ஆகிறீர்கள். முதல்-முதலில்
விகர்மாஜீத் சகாப்தம் நடைபெறு கின்றது. பிறகு பக்தி மார்க்கம்
ஆரம்பமாகிறது என்றால் ராஜா விகர்ம சகாப்தம் ஆரம்ப மாகின்றது.
இச்சமயம் என்ன விகர்மங்கள் செய்திருக்கிறீர்களோ, அவற்றின் மீது
வெற்றி பெறுகிறீர்கள். விகர்மாஜீத் என்று பெயர்
வைக்கப்படுகின்றது. பிறகு துவாபரயுகத்தில் விகர்ம ராஜா ஆகி
விடுகின்றனர். விகர்மங்களைச் செய்து கொண்டே இருக்கின்றனர்.
ஊசியின் மீது துரு ஏறியுள்ளது என்றால் காந்தம் அதை ஈர்க்காது.
எந்த அளவு பாவங்களின் கறை நீங்கிக் கொண்டே செல்லுமோ, அப்போது
காந்தம் ஈர்க்கும். பாபாவோ முழுத் தூய்மையானவர். உங்களையும்
கூட யோக பலத்தின் மூலம் பவித்திரமாக்குகின்றார். எப்படி லௌகிக்
தந்தையும் கூட குழந்தைகளைப் பார்த்துக் குஷி அடைகிறார்
இல்லையா? எல்லையற்ற தந்தையும் கூட குழந்தைகளின் சேவையில்
குஷியடைகிறார். குழந்தைகள் அதிக முயற்சியும் செய்து
கொண்டுள்ளனர். சேவையிலோ எப்போதும் தயார் நிலையில் இருக்க
வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பதிதர்களைப் பாவனமாக்கக்
கூடிய ஈஸ்வரிய மிஷன் (இயக்கம்). இப்போது நீங்கள் ஈஸ்வரியக்
குழந்தைகளாக இருக்கிறீர்கள். எல்லையற்ற தந்தை மற்றும் நீங்கள்
சகோதர- சகோதரிகள். இதைத் தவிர வேறு சம்மந்தம் எதுவும்
கிடையாது. முக்திதாமத்தில் தந்தை மற்றும் ஆத்மாக்கள் நீங்கள்
சகோதர-சகோதரர்கள். பிறகு நீங்கள் சத்யுகத்திற்குச் செல்கிறீர்
கள் என்றால் அங்கே ஓர் ஆண்குழந்தை, ஒரு பெண்குழந்தை, அவ்வளவு
தான். இங்கோ அநேக சம்மந்தங்கள் உள்ளன - சித்தப்பா, பெரியப்பா,
மாமா முதலியவை.
மூலவதனம் என்பது தான் இனிமையான வீடு, முக்திதாமம். அதற்காக
மனிதர்கள் எவ்வளவு யக்ஞம், தவம் முதலியவற்றைச் செய்கின்றனர்!
ஆனால் யாருமே திரும்பிச் செல்ல முடியாது. பொய்களை நிறைய
சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். அனைவருக்கும் சத்கதி அளிப்பவரோ
ஒருவர் தான். வேறு யாரும் கிடையாது. இப்போது நீங்கள்
சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இங்கே ஏராளமான மனிதர்கள்
உள்ளனர். சத்யுகத்திலோ மிகக் கொஞ்சம் பேர் இருப்பார்கள்.
ஸ்தாபனை, அதன்பிறகு விநாசம் நடைபெறுகின்றது. இப்போது அநேக
தர்மங்கள் இருக்கிற காரணத்தால் எவ்வளவு கஷ்டங்கள்! நீங்கள்
நூறு சதவிகிதம் செல்வந்தர்களாக இருந்தீர்கள். பிறகு 84
பிறவிகளுக்குப் பின் நூறு சதவிகிதம் ஒன்றுமில்லாதவர்களாக ஆகி
விட்டீர்கள். இப்போது பாபா வந்து அனைவரையும் எழுப்புகிறார்.
இப்போது எழுந்திருங்கள், சத்யுகம் வந்து கொண்டிருக்கிறது.
சத்தியமான தந்தை தான் உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தி
தருகிறார். பாரதம் தான் உண்மையான கண்டமாக ஆகின்றது. பாபா
உண்மையான கண்டமாக ஆக்குகிறார். பொய்யான கண்டமாகப் பிறகு யார்
ஆக்குகிறார்? 5 விகாரங்கள் என்ற இராவணன். இராவணனுக்கு எவ்வளவு
பெரிய உருவத்தைச் செய்கின்றனர். பிறகு அதை எரிக்கின்றனர்.
ஏனென்றால் இவன் நம்பர் ஒன் விரோதி. மனிதர்களுக்கு இது தெரியாது
- எப்போதிருந்து இராவணனின் இராஜ்யம் இருந்து வந்துள்ளது என்று.
பாபா புரிய வைக்கிறார், அரைக்கல்பம் இராமராஜ்யம், அரைக்கல்பம்
இராவண இராஜ்யம். மற்றப்படி இராவணன் ஒன்றும் மனிதன் கிடையாது,
அவனைக் கொல்வதற்கு. இச்சமயம் முழு உலகின் மீதும் இராவண
இராஜ்யம் உள்ளது. பாபா வந்து இராம ராஜ்யத்தை ஸ்தாபனை
செய்கிறார். பிறகு ஜெய-ஜெய என்ற வெற்றி முழக்கம் எழும். அங்கே
சதா குஷி இருக்கும். அதுவே சுகதாமம். இப்போது இருப்பது
புருஷோத்தம சங்கமயுகம். பாபா சொல்கிறார், இந்தப்
புருஷார்த்தத்தின் மூலம் நீங்கள் இதுபோல் ஆகக் கூடியவர்கள்.
உங்கள் சித்திரங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. அநேகர் வந்தனர்.
பாபா சொல்வதைக் கேட்டார்கள், மற்றவர்களுக்கும் சொன்னார்கள்,
பிறகு ஓடிப்போய் விட்டார்கள். பாபா வந்து குழந்தைகளாகிய
உங்களுக்கு மிகுந்த அன்போடு புரிய வைக்கிறார். தந்தை, ஆசிரியர்
அன்பு செலுத்துகிறார், குருவும் அன்பு செலுத்துகின்றார்.
சத்குருவுக்கு நிந்தனை செய்தவர்கள் நல்ல பதவி பெற முடியாது.
உங்களுடைய நோக்கம் குறிக்கோள் முன்னால் நின்று கொண்டுள்ளது.
அந்த குருக்களுக்கோ நோக்கம் குறிக்கோள் எதுவும் கிடையாது. அது
ஒன்றும் படிப்பல்ல. இதுவோ படிப்பாகும். இது யுனிவர்சிட்டி
மற்றும் ஆஸ்பத்திரி எனச் சொல்லப் படுகின்றது. இதன் மூலம்
நீங்கள் சதா ஆரோக்கிய மானவர்களாக, செல்வந்தர்களாக ஆகிறீர்கள்.
இங்கோ பொய் தான் உள்ளது. பாடவும் செய்கின்றனர், பொய்யான
தேகம்... சத்யுகம் என்பது உண்மையான கண்டம். அங்கோ
வைர-வைடூரியங்களால் ஆன மாளிகைகள் இருக்கும். சோமநாதர் ஆலயம்
கூட பக்தி மார்க்கத்தில் கட்டப்பட்டுள்ளது. எவ்வளவு செல்வம்
இருந்தது, அதைப் பிறகு முகமதியர்கள் வந்து கொள்ளை யடித்துச்
சென்றனர்! அதை வைத்துப் பெரிய-பெரிய மசூதிகளைக் கட்டினர். பாபா
உங்களுக்கு அளவற்ற கஜானாவைத் தருகிறார். ஆரம்பத்திலிருந்தே
உங்களுக்கு அனைத்தையும் சாட்சாத்காரம் செய்வித்தே வந்துள்ளார்.
அல்லாஹ் அவல்தீன் பாபா இல்லையா? முதல்-முதல் தர்மத்தை ஸ்தாபனை
செய்கிறார். அது தேவதா தர்மம். அப்போது எந்த தர்மங்கள்
இல்லையோ, அவை பின்னால் ஸ்தாபனை ஆகின்றன. அனைவரும் அறிவார்கள்,
புராதன பாரதத்தில் இவர்களின் இராஜ்யம் தான் இருந்தது.
அவர்களுக்கு மேல் வேறு யாரும் கிடையாது. தெய்விக இராஜ்யம் தான்
பேரடைஸ் (சொர்க்கம்) எனச் சொல்லப்படுவது. இப்போது நீங்கள்
தெரிந்து கொண்டீர்கள். பிறகு மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
அனைவருக்கும் எப்படித் தெரிய வரும், அவர்கள் பிறகு
எங்களுக்குத் தெரியாது என்று புகார் சொல்லக் கூடாது. நீங்கள்
அனைவருக்கும் சொல்கிறீர்கள். பிறகும் கூட பாபாவை
விட்டுவிட்டுச் சென்று விடுகின்றனர். இந்த சரித்திரம்
திரும்பவும் நடைபெற வேண்டும். பாபாவிடம் வருகின்றனர் என்றால்
பாபா கேட்கிறார் - முன்பு எப்போதேனும் சந்தித்திருக்கிறீர்களா?
சொல்கின்றனர், ஆம் பாபா, 5000 ஆண்டு களுக்கு முன் சந்திக்க
வந்திருக்கிறோம். எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவதற்காக
வந்திருந்தனர். சிலர்வந்து கேட்கின்றனர், சிலருக்கு
பிரம்மாவின் சாட்சாத்காரம் ஆகின்றது என்றால் அவர்களுக்குப்
பிறகு நினைவு வருகின்றது. பிறகு சொல்கின்றனர், நானோ இதே
ரூபத்தைப் பார்த்திருக்கிறேன். பாபாவும் கூடக் குழந்தைகளைப்
பார்த்துக் குஷியடைகிறார். அவிநாசி ஞான ரத்தினங்களால் உங்கள்
(புத்தியாகிய) பை நிரம்புகிறது இல்லையா? இது படிப்பாகும்.7
நாள் கோர்ஸ் எடுத்துக் கொண்டு பிறகு எங்கே இருந்தாலும்
முரளியின் ஆதாரத்தில் செல்ல முடியும். முரளியைப் புரிந்து
கொள்கிற அளவுக்கு 7 நாளில் அவ்வளவு புரிய வைக்கப் படுகின்றது.
பாபாவோ குழந்தைகளுக்கு அனைத்து ரகசியங்களையும் நன்றாகப் புரிய
வைத்துக் கொண்டே இருக்கிறார்.
இனிமையிலும் இனிமையான
தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) சுயதரிசனச் சக்கரத்தைச் சுற்றிக் கொண்டே பாவங்களை அழிக்க (பஸ்மம்
செய்ய) வேண்டும். ஆன்மிகக் படிப்பின் மூலம் தனது பதவியை (சிரேஷ்டமாக)
உயர்ந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும்
கண்ணீர் விடக் கூடாது.
2) இது வானப்ரஸ்த நிலையில் இருப்பதற்கான சமயமாகும். அதனால்
வனவாசத்தில் மிகவும் சாதாரணமாக இருக்க வேண்டும் - மிக அதிக
உயர்வாகவோ மிகத் தாழ்வாகவோ இருக்கக்கூடாது. வீட்டிற்கு
திரும்பிச் செல்வதற்காக ஆத்மாவை முழுமையான தூய்மையாக ஆக்க
வேண்டும்.
வரதானம்:
சிந்தனை சக்தியின் மூலம்
புத்தியை சக்திசாலியாக ஆக்கக் கூடிய மாஸ்டர் சர்வசக்திவான்
ஆகுக.
சிந்தனை சக்தி தான் திவ்ய
புத்தியின் மருந்தாகும். எவ்வாறு பக்தியில் நினைப்பது என்பது
பயிற்சியாக இருக்கிறதோ, அவ்வாறு ஞானத்தில் நினைவு ஒரு சக்தியாக
இருக்கிறது. இந்த சக்தியின் மூலம் மாஸ்டர் சர்வ சக்திவானாக
ஆகுங்கள். தினமும் அமிர்தவேளையில் தனது ஒரு பட்டத்தை நினைவில்
கொண்டு வந்து பிறகு சிந்தனை செய்யும் போது சிந்தனை சக்தியின்
மூலம் புத்தி சக்திசாலியாக இருக்கும். சக்திசாலியான புத்தியிடம்
மாயை ஒருபோதும் யுத்தம் செய்ய முடியாது, வசமாக்க முடியாது.
ஏனெனில் மாயை முதலில் வீண் எண்ணங்கள் என்ற அம்பு மூலம் திவ்ய
புத்தியை பலவீனமாக ஆக்குகிறது. இந்த பலவீனத்திடமிருந்து
தப்பிப்பதற்கான சாதனம் சிந்தனை சக்தியாகும்.
சுலோகன்:
கட்டளைப்படி நடக்கும் குழந்தைகள்
தான் ஆசிர்வாதத்திற்கு தகுதியான குழந்தைகள் ஆவர்.
ஆசிர்வாதத்தின் பிரபாவம் (தாக்கம்) உள்ளத்தை சதா திருப்தியாக
வைத்திருக்கும்.
ஓம்சாந்தி