21.12.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள்
இப்பொழுது - புனிதத்திலும் புனிதமானவரின் (ஹோலியெஸ்ட் ஆஃப் தி
ஹோலி) மடியில் வந்துள்ளீர்கள். நீங்கள் மனதளவிலும் கூட
புனிதமானவராக (தூய்மையானவராக) ஆக வேண்டும்.
கேள்வி:
புனிதத்திலும் புனிதமான
குழந்தைகளின் போதை மற்றும் அடையாளங்கள் என்னவாக இருக்கும்?
பதில்:
நாங்கள் புனிதத்திலும் புனிதமான
தந்தையின் மடியை அடைந்துள்ளோம் என்ற போதை அவர்களுக்கு இருக்கும்.
நாங்கள் (ஹோலியெஸ்ட்) மிக புனிதமான தேவி தேவதை ஆகிறோம்.
அவர்களுக்கு உள் மனதில் கூட கெட்ட எண்ணங்கள் வர முடியாது.
அவர்கள் நறுமணமுள்ள மலர்களாக இருப்பார்கள். அவர்கள் மூலமாக
எந்த ஒரு தவறான செயலும் ஏற்பட முடியாது. அவர்கள் உள்முகமாக
இருந்து என்னிட மிருந்து எல்லோருக்கும் நறுமணம் வருகிறதா?
என்னுடைய கண்கள் யாரிடமும் மூழ்கி விடுவதில்லையே? என்று
தங்களையே சோதித்து கொள்வார்கள்.
பாடல்:
இறந்தாலும் உன் மடியில்....
ஓம் சாந்தி.
குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள்.
பிறகு உள்ளுக்குள் சிந்தனைக் கடலை கடைந்து அதனுடைய அர்த்தத்தை
உணர வேண்டும். இறந்தாலும் உன் மடியில் என்று கூறியது யார்?
ஆத்மா கூறுகிறது. ஏனெனில் ஆத்மா பதீதமாக (தூய்மையற்று)
இருக்கிறது. பாவனம் என்றோ கடைசியில் தான் கூறுவார்கள். அல்லது
சரீரம் கூட பாவனமாக கிடைக்கும் பொழுது தான் பாவனம் என்று
கூறலாம். இப்பொழுதோ முயற்சியாளர்கள் ஆவீர்கள். தந்தை யிடம்
வந்து இறக்க வேண்டியுள்ளது என்பதையும் அறிந்துள்ளீர்கள். ஒரு
தந்தையை விட்டு விட்டு மற்றொருவரிடம் செல்வது என்றால்,
ஒருவரிடம் இறந்து மற்றொருவரிடம் வாழ்வது. லௌகீக தந்தையினுடைய
குழந்தை கூட சரீரம் விட்டார் என்றால், மற்றொரு தந்தையிடம் போய்
ஜன்மம் எடுப்பார் அல்லவா? இங்கும் அவ்வாறே! இறந்து பிறகு ஹோலி
யெஸ்ட் ஆஃப் தி ஹோலியின் மடியில் நீங்கள் செல்கிறீர்கள்.
ஹோலியெஸ்ட் ஆஃப் தி ஹோலி யார்? (தந்தை) மேலும் ஹோலி யார்? (சந்நியாசி)
ஆம் இந்த சந்நியாசிகள் முதலியோரை ஹோலி என்று கூறுவார்கள்.
உங்களுக்கும் சந்நியாசிகளுக்குமிடையே வித்தியாசம் இருக்கிறது.
அவர்கள் ஹோலி ஆகிறார்கள். ஆனால் பிறவியோ பிறகும்
பதீதமானவர்களிடம் எடுக்கிறார்கள் அல்லவா? நீங்கள் ஹோலியெஸ்ட்
ஆஃப் ஹோலி ஆகிறீர்கள். உங்களை ஆக்குபவர் ஹோலியெஸ்ட் ஆஃப் தி
ஹோலி தந்தை. அவர்கள் வீடு வாசலை விட்டு விட்டு ஹோலி ஆகிறார்கள்.
ஆத்மா தூய்மையாக ஆகிறது அல்லவா? நீங்கள் சொர்க்கத்தில் தேவி
தேவதையாக இருக்கும் பொழுது நீங்கள் ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலி
ஆகிறீர்கள். உங்களுடைய இந்த சந்நியாசம் எல்லையில்லாதது ஆகும்.
அவர்களுடையது எல்லைக்குட்பட்டது ஆகும். அவர்கள் ஹோலி ஆகிறார்கள்.
நீங்கள் ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலி ஆகிறீர்கள். நாமோ புது உலகிற்குச்
செல்கிறோம் என்று புத்தியும் கூறுகிறது. அந்த சந்நியாசிகள்
வருவதே ரஜோ நிலையில். வித்தியாசம் உள்ளது அல்லவா? இரஜோ நிலை
எங்கே, சதோபிர தான நிலை எங்கே? நீங்கள் ஹோலியெஸ்ட் ஆஃப் தி ஹோலி
மூலமாக ஹோலியெஸ்ட் ஆகிறீர்கள். அவர் ஞானக் கடலும் ஆவார்.
அன்புக்கடலும் ஆவார். ஆங்கிலத்தில் ஓஷன் ஆஃப் நாலேஜ், ஓஷன் ஆஃப்
லவ் என்று கூறுகிறார்கள். உங்களை எவ்வளவு உயர்ந்தவராக
ஆக்குகிறார். இப்பேர்ப்பட்ட உயர்ந்ததிலும் உயர்ந்த ஹோலியெஸ்ட்
ஆஃப் தி ஹோலியை வந்து பதீதர்களை பாவனமாக ஆக்குங்கள் என்று
அழைக்கிறார்கள். பதீதமான உலகத்தில் வந்து எங்களை ஹோலியெஸ்ட்
ஆஃப் ஹோலி ஆக்குங்கள். எனவே நமக்கு யார் கற்பிக் கிறார் என்று
குழந்தைகளுக்கு அந்த அளவு போதை இருக்க வேண்டும். நாம் என்ன ஆகப்
போகிறோம்? தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். பாபா
எங்களுக்கு மாயையின் புயல்கள் நிறைய வருகிறது என்று குழந்தைகள்
எழுதுகிறார்கள். எங்களை மனதின் அளவில் கூட தூய்மையாக இருக்க
விடுவதில்லை. நாம் ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலியாக ஆக வேண்டும்
என்றிருக்கும் பொழுது ஏன் இது போன்ற தீய எண்ணங்கள் வருகின்றன?
தந்தை கூறுகிறார் - நீங்கள் இப்பொழுது முற்றிலுமே அன்ஹோலியஸ்ட்
ஆஃப் அன்ஹோலி ஆகி உள்ளீர்கள். அநேக பிறவிகளுக்கு கடைசியில்
இப்பொழுது தந்தை மீண்டும் உங்களுக்கு தெளிவாகக் கற்பிக்கிறார்.
எனவே நாம் என்னவாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்ற இந்த போதை
குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டும். இந்த லட்சுமி
நாராயணரை இது போல யார் ஆக்கியது? பாரதம் சொர்க்கமாக இருந்தது
அல்லவா? இந்த சமயத்தில் பாரதம் தமோபிரதானமாக இழிந்த நிலையில்
உள்ளது. மீண்டும் இதை நாம் ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலியாக ஆக்குகிறோம்.
ஆக்குபவரோ அவசியம் வேண்டும் அல்லவா? நாம் தேவதை ஆக வேண்டும்
என்ற அந்த போதை நமக்குள்ளும் வர வேண்டும். அதற்காக குணங்கள்
கூட அவ்வாறு இருக்க வேண்டும். ஒரேயடியாக கீழேயிருந்து மேலே ஏறி
இருக்க வேண்டும். ஏணிப்படியில் கூட உயர்வு மற்றும் தாழ்வு என்று
எழுதப்பட்டிருக்கிறது அல்லவா? யார் கீழே விழுந்திருக்கிறார்களோ
அவர்கள் எவ்வாறு தங்களை ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலி என்று அழைத்து
கொள்ள முடியும். ஹோலி யெஸ்ட் ஆஃப் தி ஹோலி தந்தை தான் வந்து
குழந்தைகளை அவ்வாறு ஆக்குகிறார். நீங்கள் இங்கு உலகத்திற்கு
அதிபதி ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோ ஆவதற்குத் தான் வந்துள்ளீர்கள். எனவே
எவ்வளவு போதை இருக்க வேண்டும். பாபா நம்மை இவ்வளவு உயர்ந்தவராக
ஆக்க வந்துள்ளார். மனம், சொல், செயலில் தூய்மையாக ஆக வேண்டும்.
நறுமணமுள்ள மலராக வேண்டும். சத்யுகத்திற்கு மலர்களின் தோட்டம்
என்றே கூறப்படுகிறது. எந்த ஒரு துர்நாற்றமும் இருக்கக் கூடாது.
துர்நாற்றம் என்று தேக அபிமானத்திற்கு கூறப்படுகிறது. எதிலுமே
தீய பார்வை கூட போகக் கூடாது. மனம் உறுத்தும் வகையில் பிறகு
கணக்கு ஏற்பட்டு விடும் வகையில் அப்போர்ப்பட்ட எந்த தவறான
செயலும் ஏற்படாதிருக்க வேண்டும். நீங்கள் 21 பிறவிகளுக்கு
செல்வம் சேமிக்கிறீர்கள். நாங்கள் மிகவும் செல்வந்தராக ஆகிக்
கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். நாம் தெய்வீக குணங்களால் நிரம்பியவர்களாக
இருக்கிறோமா என்று நமது ஆத்மாவைப் பார்க்க வேண்டும். எப்படி
பாபா கூறுகிறாரோ அவ்வாறு நாம் முயற்சி செய்கிறோமா? உங்களுடைய
லட்சியம் நோக்கம் பாருங்கள் எப்படி இருக்கிறது. சந்நியாசிகள்
எங்கே, நீங்கள் எங்கே?
நாம் யாருடைய மடியில்
வந்துள்ளோம் என்ற போதை குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க
வேண்டும். நம்மை என்னவாக ஆக்குகிறார்? நாம் எந்தளவு தகுதி
உடையவர்களாக ஆகி உள்ளோம் என்று உள்முகமாக ஆகிப் பார்க்க
வேண்டும். அனைவருக்கும் ஞானத்தின் நறுமணம் வரும் வகையில் நாம்
எந்தளவு மலர்களாக ஆக வேண்டும்?. நீங்கள் அநேகருக்கு நறுமணத்தை
அளிக்கிறீர்கள் அல்லவா? தனக்குச் சமானமாக ஆக்குகிறீர்கள்.
முதலிலோ நமக்கு படிப்பிப்பவர் யார் என்ற போதை இருக்க வேண்டும்.
அவர்களோ எல்லோரும் பக்தி மார்க்கத்தின் குருமார்கள் ஆவார்கள்.
ஒரு பரமபிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாருமே ஞானமார்க்கத்தில்
ஆக முடியாது. மற்றவர்களெல்லாம் பக்தி மார்க்கத்தினுடையவர்கள்
ஆவார்கள். பக்தி இருப்பதே கலியுகத்தில். இராவணனின் பிரவேசம்
ஆகிறது. இது கூட உலகத்தில் யாருக்குமே தெரியாது. சத்யுகத்தில்
நாம் 16 கலை சம்பூர்ணமாக இருந்தோம் என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர்கள். பிறகு ஒரு நாள் கூட கழிந்தது என்றால் அதை
முழு பௌர்ணமி என்று கூறுவார்களா என்ன? இதுவும் அவ்வாறே ஆகும்.
கொஞ்சம் கொஞ்சமாக பேன் போல மெல்ல மெல்ல நகர்ந்து சக்கரம்
சுற்றிக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது நீங்கள் முழுமையாக 16
கலை சம்பூர்ணம் ஆக வேண்டும். அதுவும் அரைக் கல்பத்திற்காக.
பிறகு கலைகள் குறைந்து கொண்டே போகின்றது. உங்களுடைய புத்தியில்
இந்த ஞானம் உள்ளது. எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு போதை
இருக்க வேண்டும். நமக்கு படிப்பிப்பவர் யார் என்பது அநேகருடைய
புத்தியில் வருவதில்லை. ஞானக்கடல் குழந்தைகளைப் பார்த்து நமஸ்தே
குழந்தைகளே என்று கூறுகிறார். நீங்கள் பிரம்மாண்டத்திற்கும்
கூட அதிபதி ஆகிறீர்கள். அங்கு எல்லோரும் இருக்கிறீர்கள். பிறகு
உலகத்திற்கும் நீங்கள் அதிபதி ஆகிறீர்கள். நீங்கள் என்னை விட
உயர்ந்தவர்கள் ஆகிறீர்கள் என்று தந்தை கூறுகிறார். நான்
உலகிற்கு அதிபதி ஆவதில்லை. என்னை விடவும் உங்களை உயர்ந்த மகிமை
உடையவர்களாக ஆக்குகிறேன். தந்தையினுடைய குழந்தைகள் உயர
ஏறிவிடும் பொழுது இவர்கள் படித்து இந்த அளவு உயர்ந்த பதவியை
அடைந்துள்ளார்கள் என்று தந்தை புரிந்து கொள்வார் அல்லவா?
தந்தையும் கூறுகிறார் - நான் உங்களுக்கு கற்பிக்கிறேன்.
இப்பொழுது உங்களுடைய பதவியை எந்த அளவு அமைத்துக் கொள்ள
விரும்புகிறீர்களோ முயற்சி செய்யுங்கள். தந்தை நமக்கு
கற்பிக்கிறார் - முதலிலோ போதை ஏற வேண்டும். தந்தையோ எப்பொழுது
வேண்டுமானாலும் வந்து பேசுகிறார். அவரோ இவருக்குள் இருக்கவே
இருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் அவருடையவர் ஆவீர்கள் அல்லவா?
இந்த ரதம் கூட அவருடையது ஆகும் அல்லவா? எனவே இப்பேர்ப்பட்ட
ஹோலியெஸ்ட் ஆஃப் தி ஹோலி தந்தை வந்து விட்டுள்ளார். உங்களை
பாவனமாக ஆக்குகிறார். இப்பொழுது நீங்கள் பின்னர் மற்றவர்களை
பாவனமாக ஆக்குங்கள். நான் (ரிடையர்) ஓய்வு பெற்று விடுகிறேன்.
நீங்கள் ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலி ஆகி விடும் பொழுது இங்கு யாருமே
பதீதமானவர்கள் (தூய்மையற்றவர்) வர முடியாது. இது ஹோலி யெஸ்ட்
ஆஃப் தி ஹோலியின் சர்ச் ஆகும்.அந்த சர்ச்சிலோ விகாரிகள்
எல்லோரும் செல்கிறார் கள். எல்லோருமே பதீதமானவர்கள், அன் ஹோலி
ஆவார்கள். இதுவோ மிகவும் பெரிய ஹோலி சர்ச் ஆகும். இங்கு
பதீதமானவர்கள் கால் கூட வைக்க முடியாது. ஆனால் இப்பொழுது
அவ்வாறு செய்ய முடியாது. குழந்தைகளும் அவ்வாறே ஆகி விடும்
பொழுது அப்பேர்ப்பட்ட சட்டங்கள் எடுத்து வரப்படும். இங்கு
யாருமே உள்ளே வர முடியாது. நாங்கள் சபையில் வந்து அமரலாமா என்று
கேட்கிறார்கள் அல்லவா? பாபா கூறுகிறார், அதிகாரிகள் ஆகியோரிடம்
வேலை இருப்பதால் அவர்களை அமர்த்த வேண்டி இருக்கும். உங்களுடைய
பெயர் புகழடைந்து விட்டது என்றால், பின்னர் நீங்கள் யாரையும்
பொருட் படுத்தத் தேவையில்லை. இப்பொழுது அமர வைக்க வேண்டி
இருக்கிறது. ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலி கூட துன்பத்தை பொறுத்து
கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது மறுக்க முடியாது. நன்கு (உங்கள்)
பிரபாவம் வெளிப்படும் பொழுது பின் மனிதர்களின் பகைமையும் கூட
குறைந்து போய் விடும். நீங்கள் கூட பிராமணர்களாகிய எங்களுக்கு
இராஜயோகம் கற்பிப்பவர் ஹோலியெஸ்ட் ஆஃப் தி ஹோலி தந்தை ஆவார்
என்று புரிய வைப்பீர்கள். சந்நியாசிகளுக்கு ஹோலியெஸ்ட் ஆஃப் தி
ஹோலி என்று கூறுவார்களா என்ன? அவர்கள் வருவதே இரஜோ குணத்தில்.
அவர்கள் உலகிற்கு அதிபதி ஆக முடியுமா என்ன? இப்பொழுது நீங்கள்
முயற்சியாளர்கள் ஆவீர்கள். சில நேரங்களிலோ மிகவும் நல்ல நடத்தை
இருக்கும்.சில நேரங்களில் அவப் பெயர் விளைவித்து விடும் வகையில்
அப்பேர்ப்பட்ட நடத்தை இருக்கும். அநேக சென்டர்களில் சிறிதளவு
கூட எதுவுமே அறிந்து கொள்ளாதவர்களாக வருகிறார்கள். நாம்
என்னவாகப் போகிறோம் என்று நீங்கள் உங்களையும் மறந்து
விடுகிறீர்கள். தந்தை கூட நடத்தை மூலமாக இவர்கள் என்ன ஆகப்
போகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு விடுகிறார். பாக்கியத்தில்
உயர்ந்த பதவி இருந்தது என்றால் நடத்தை மிகவும் (ராயல்ட்டி)
கௌரவ மாக நடப்பார்கள். நமக்கு கற்பிப்பவர் யார் என்பது மட்டும்
நினைவிருந்தால் கூட அளவு கடந்த குஷி இருக்கும். நாம் காட் ஃபாதர்லி
ஸ்டூடண்ட் ஆவோம் என்றால் எவ்வளவு மதிப்பு இருக்க வேண்டும்?
இப்பொழுது இதுவரையும் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். இனியும்
நேரம் பிடிக்கும் என்று தந்தை கருதுகிறார். வரிசைக்கிரமமாக
ஒவ்வொரு விஷயத் திலும் இருக்கவே இருக்கிறார்கள். வீடு கூட
முதலில் சதோபிரதானமாக இருக்கும். பிறகு சதோ ரஜோ தமோவில்
வருகிறது. இப்பொழுது நீங்கள் சதோபிரதானமாக 16 கலை சம்பூர்ண மாக
ஆகப் போகிறீர்கள். கட்டிடம் அமைந்து கொண்டே போகிறது. நீங்கள்
அனைவரும் ஒன்று சேர்ந்து சொர்க்கத்தின் கட்டிடத்தை அமைத்து
கொண்டிருக்கிறீர்கள். இது கூட உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க
வேண்டும். அன் ஹோலியெஸ்ட் ஆஃப் அன்ஹோலியாக ஆகி விட்டிருக்கும்
பாரதத்தை நாங்கள் ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலியாக ஆக்குகிறோம். எனவே
தங்கள் மீது எவ்வளவு எச்சரிக்கை கொள்ள வேண்டும். நமது பதவியே
கீழானதாக மாறி விடும் வகையில் நமது பார்வை தீமையானதாக இருக்கக்
கூடாது. அப்படியின்றி பாபாவிற்கு எழுதினால் பாபா என்ன சொல்வார்
என்பதல்ல. இப்பொழுதோ எல்லோரும் முயற்சி செய்து
கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இப்பொழுது ஹோலியெஸ்ட் ஆஃப்
ஹோலி என்று கூறுவார்களா என்ன? அவ்வாறு ஆகி விட்டார்கள் என்றால்,
இந்த சரீரம் கூட இருக்காது. நீங்கள் கூட ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலி
ஆகிறீர்கள். மற்றபடி அதில் பதவிகள் இருக்கும். அதற்காக முயற்சி
செய்ய வேண்டும் மற்றும் செய்விக்கவும் வேண்டும். பாபா
கருத்துக்களை நிறைய அளித்துக் கொண்டே இருக்கிறார். யாராவது
வந்தால் ஒப்பிட்டு காண்பியுங்கள். இந்த ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலி
எங்கே? அந்த ஹோலி எங்கே? இந்த லட்சுமி நாராயணருடைய ஜன்மமோ
சத்யுகத்தில் ஆகிறது. மற்றவர்கள் வருவதே பின்னால் தான். எவ்வளவு
வித்தியாசம் இருக்கிறது. சிவபாபா நம்மை இது போல ஆக்கிக்
கொண்டிருக்கிறார் என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள். என்
ஒருவனை நினைவு செய்யுங் கள் என்று கூறுகிறார். தன்னை அசரீரி
ஆத்மா என்று உணருங்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த சிவபாபா
கற்ப்பித்து உயர்ந்த திலும் உயர்ந்தவராக ஆக்குகிறார். பிரம்மா
மூலமாக நாம் இதை படிக்கிறோம். பிரம்மாவே விஷ்ணு ஆகிறார்.
இதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். மனிதர்களோ எதையும் புரிந்து
கொள்வதில்லை. இப்பொழுது முழு சிருஷ்டியின் மீது இராவண இராஜ்யம்
உள்ளது. நீங்கள் இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறீர்கள். அதைப் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
நாடகப்படி நாம் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வதற்கு தகுதி
உடையவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது பாபா
தகுதியுடையவராக ஆக்குகிறார். தந்தையைத் தவிர சாந்திதாமம்
சுகதாமத்திற்கு வேறு யாரும் அழைத்துச் செல்ல முடியாது. இன்னார்
சொர்க்கம் சென்றார், முக்தி தாமம் சென்றார் என்று பொய் கூறிக்
கொண்டே இருக்கிறார்கள். இந்த விகாரி பதீதமான ஆத்மாக்கள்
சாந்திதாமம் எப்படி செல்ல முடியும் என்று தந்தை கூறுகிறார்.
நீங்கள் இவ்வாறு கூறலாம். அப்பொழுது இவர்களுக்கு எவ்வளவு
பெருமிதம் உள்ளது என்பதை புரிந்து கொள்வார்கள். இது போல எப்படி
புரிய வைக்கலாம் என்பதற்காக சிந்தனைக் கடலைக் கடையுங்கள்.
நடந்தாலும் சென்றாலும் உள்ளுக்குள் தோன்ற வேண்டும்.
பொறுமையையும் கடைப் பிடிக்க வேண்டும். நாமும் தகுதியுடையவராக
ஆகி விட வேண்டும். பாரதவாசிகள் தான் முழுமையாக தகுதியுடைய
வராகவும் பிறகு முழுமையாக தகுதியில்லாதவர்களாகவும் ஆகிறார்கள்.
வேறு யாரும் இல்லை. இப்பொழுது தந்தை உங்களை திறமையானவராக
ஆக்கிக் கொண்டிருக்கிறார். ஞானம் மிகவும் ஆனந்தமானது. நாம்
இந்த பாரதத்தை ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலியாக ஆக்குவோம் என்று
உள்ளுக்குள் மிகுந்த குஷி இருக்கிறது. நடத்தை மிகவுமே ராயலாக
இருக்க வேண்டும். உணவு பழக்கம் நடத்தை மூலம் தெரிய வருகிறது.
சிவபாபா உங்களை இந்த அளவு உயர்ந்தவர்களாக ஆக்குகிறார். அவருடைய
குழந்தைகளாக ஆகி உள்ளீர்கள் என்றால் பெயரை புகழடையச் செய்ய
வேண்டும். இவர்களோ ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலியின் குழந்தை கள்
ஆவார்கள் என்று நினைக்கும் வகையில் அப்பேர்ப்பட்ட நடத்தை
இருக்க வேண்டும். மெல்ல மெல்ல நீங்கள் ஆகிக் கொண்டே செல்வீர்கள்.
மகிமை வெளிப்பட்டு கொண்டே போகும். பிறகு நியமங்கள், சட்டங்கள்
ஆகியவை எல்லாம் வெளிவரும். யாருமே பதீதமானவர் கள் உள்ளே வரக்
கூடாது. பாபா புரிந்து கொள்கிறார். இப்பொழுது நேரம் வேண்டும்.
குழந்தைகள் நிறைய முயற்சி செய்ய வேண்டும். நமது ராஜதானி கூட
தயாராகி விட வேண்டும். பிறகு அவ்வாறு செய்வதில் ஒன்றும் நஷ்டம்
இல்லை. பிறகோ இங்கிருந்து கீழே அபுரோடு வரையும் கியூ வரிசை
ஏற்பட்டு விடும். இப்பொழுது நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள்.
பாபா உங்களுடைய பாக்கியத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்.
பதமாபதம் (பலமடங்கு) பாக்கியசாலி என்ற வார்த்தை கூட நியமப்படி
கூறுகிறார் அல்லவா? பாதங்களில் பதம் தாமரை காண்பிக்கிறார்கள்
அல்லவா? இவை அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுடைய மகிமை ஆகும்.
பிறகும் தந்தை மன்மனாபவ - தந்தையை நினைவு செய்யுங்கள் என்று
கூறுகிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய்
தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. மனதை உறுத்திக் கொண்டிருக்கும் வகையில் எந்த ஒரு செயலும்
செய்யக் கூடாது. முழுமையான நறுமணமுள்ள மலர்களாக ஆக வேண்டும்.
தேக அபிமானத்தின் துர்நாற்றத்தை நீக்கி விட வேண்டும்.
2. நடத்தையை மிகவும் ராயலாக (கம்பீரமானதாக) வைக்க வேண்டும்.
புனிதத்திலும் புனிதமானவர் (ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலி) ஆகுவதற்கான
முழுமையான முயற்சி செய்ய வேண்டும். பதவி சிதைந்து (கீழான)
போகும் வகையில் அளவுக்கு உங்களது பார்வை இருக்கக் கூடாது.
வரதானம்:
ஒவ்வொரு பொக்கிசத்தையும்
காரியத்தில் பயன்படுத்தி பலமடங்கு வருமானத்தை சேமிக்கக் கூடிய
கோடான கோடி மடங்கு அதிர்ஷ்டசாலி ஆகுக.
ஒவ்வொரு நொடியும் பலமடங்கு
வருமானத்தை சேமிக்கக் கூடிய வரதானம் (ஆசீர்வாதம்) நாடகத்தில்
சங்கமயுகத்தில் கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட வரதானத்தை
தனக்காக சேமிப்பு செய்யுங்கள், மேலும் மற்றவர்களுக்காக தானம்
செய்யுங்கள், அதுபோன்று எண்ணங் களின் பொக்கிசம், ஞானத்தின்
பொக்கிஷத்தையும், ஸ்தூலமான செல்வத்தின் பொக்கிசங்களையும்
காரியத்தில் பயன்படுத்தி பலமடங்கு வருமானத்தை சேமிப்பு
செய்யுங்கள், ஏனெனில் இந்த சமயத்தில் ஸ்தூலமான செல்வத்தையும்
கூட ஈஸ்வரன் பெயரில் (பாபாவிற்காக) சமர்ப்பணம் செய்வதினால் ஒரு
பைசாவானவாலும், அது ஒரு இரத்தினத்திற்கு சமமாக மதிப்பு
உயர்த்தபடுகிறது, எனவே இந்த அனைத்து பொக்கிசங்களையும் தனக்காக
மற்றும் சேவைக்காக காரியத்தில் பயன்படுத்திவிட்டால், பலமடங்கு
பாக்கியசாலி ஆகிவிடலாம்.
சுலோகன்:
எங்கு உள்ளத்தின் அன்பு
இருக்கின்றதோ அங்கு அனைவரின் உதவி சுலபமாக அடைய முடியும்.
ஓம்சாந்தி