16.12.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே!
பாவங்களிலிருந்து விடுபட்டு இலேசாவதற்காக உண்மையாகவும்,
நேர்மையாகவும் தன்னுடைய கர்மங்களின் கதையை தந்தைக்கு எழுதிக்
கொடுத்தீர்கள் என்றால் மன்னிப்பு கிடைக்கும்.
கேள்வி:
சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய
நீங்கள் எந்த விதையை விதைக்க முடியாது?
பதில்:
தேக அபிமானத்தின் விதை. இந்த
விதையிலிருந்து அனைத்து விகாரங்களின் மரம் தோன்றி வளர்ந்து
விடும். இந்த சமயத்தில் முழு உலகத்திலும் 5 விகாரங்களின் மரம்
முளைத்து வளர்ந்து விட்டது. அனைவரும் காம-குரோதத்தின் விதைகளை
விதைத்தபடி இருக்கின்றனர். குழந்தைகளே யோக பலத்தின் மூலம்
தூய்மை அடையுங்கள் என்பது தந்தை உங்களுக்கு கொடுக்கும்
அறிவுரையாகும். இந்த விதை விதைப்பதை நிறுத்துங்கள்.
பாடல்:
உங்களை அடைந்து நாங்கள் உலகை அடைந்தோம். . .
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக்
குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். இப்போது குறைவான எண்ணிக்கை
உள்ளனர். அதிகமான குழந்தைகள் ஆகி விடுவார்கள். இந்த சமயத்தில்
நடைமுறையில் குறைவாகவே உருவாகியுள்ளீர்கள். ஆயினும் இந்த பிரஜா
பிதா பிரம்மாவை அனைவருக்கும் தெரியும் அல்லவா. பெயரே பிரஜாபிதா
பிரம்மா என்பதாகும். எவ்வளவு அளவற்ற பிரஜைகள் உள்ளனர். அனைத்து
தர்மத்தவர்களும் இவரை கண்டிப்பாக ஏற்பார்கள். அவர் மூலமாகத்தான்
மனிதர்களின் படைப்பு உண்டானது அல்லவா. லௌகிக தந்தையும் கூட
எல்லைக்குட்பட்ட பிரம்மா ஆவார் என பாபா புரிய வைத்துள்ளார்,
ஏனெனில் குலம் (தலை முறை) உருவாகிறது அல்லவா. குலப்பெயருடன்
பரம்பரை தழைக்கிறது அல்லவா. அவர்கள் எல்லைக்குட்பட்டவர்கள்.
இவரோ எல்லைக்கபாற்பட்ட தந்தை. இவருடைய பெயரே பிரஜாபிதா. அந்த
லௌகிக தந்தையர் எல்லைக்குட்பட்ட பிரஜைகளை உருவாக்கு கின்றனர்,
சிலர் உருவாக்குவதும் கூட இல்லை. இவர் கண்டிப்பாக உருவாக்குவார்.
பிரஜாபிதா பிரம்மாவுக்கு குழந்தைகள் இல்லையா என சிலர்
கேட்பார்கள். முழு உலகமுமே இவருடைய குழந்தைகள் ஆகும். முதன்
முதலில் பிரஜாபிதா பிரம்மாதான் உள்ளார். முஸ்லிம்கள் கூட ஆதம்
பீவி என யாரையாவது குறிப்பிடுவார்கள் அல்லவா. ஆதாம் ஏவாள், ஆதி
தேவன், ஆதி தேவி என பிரஜாபிதா பிரம்மாவைத்தான்
குறிப்பிடுகின்றனர். எந்த தர்மத்தவர்கள் என்றாலும் இவரை
ஏற்பார்கள். ஒருவர் எல்லைக்குட்பட்ட தந்தை, மற்றவர் எல்லைக்
கப்பாற்பட்டவர். இந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தை
எல்லைக்கப்பாற்பட்ட சுகத்தைக் கொடுப்பவர். நீங்கள் முயற்சியும்
கூட எல்லைக்கப்பாற்பட்ட சொர்க்கத்தின் சுகத்திற்காக
செய்கிறீர்கள். இங்கே எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடம்
எல்லைக்கப்பாற்பட்ட சுகத்தின் ஆஸ்தியை அடைய வந்துள்ளீர்கள்.
சொர்க்கத்தில் எல்லைக்கப்பாற்பட்ட சுகம், நரகத்தில்
எல்லைக்கப்பாற்பட்ட துக்கம் என்றும் கூட சொல்ல முடியும்.
துக்கமும் கூட மேலும் நிறைய வரவுள்ளது. ஐயோ ஐயோ என்றபடி
இருப்பார்கள். தந்தை உங்களுக்கு முழு உலகின் முதல், இடை,
கடைசியைப் பற்றிய இரகசியத்தைப் புரிய வைத்திருக்கிறார்.
குழந்தைகளாகிய நீங்கள் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள் மற்றும்
முயற்சியும் செய்கிறீர்கள். இவர் தாய் தந்தையாக ஆகியுள்ளார்
அல்லவா. இவ்வளவு அளவற்ற குழந்தைகள் உள்ளனர்.
எல்லைக்கப்பாற்பட்ட தாய் தந்தையரிடம் ஒருபோதும் யாரும் பகைமை
வைக்க மாட்டார்கள். தாய் தந்தையரிடம் எவ்வளவு சுகம் கிடைக்கிறது.
நீயே தாயும் தந்தையும் என பாடவும் செய்கின்றனர். இதை
குழந்தைகள்தான் புரிந்து கொள்கின்றனர். மற்ற தர்மத்தவர்கள்
அனைவருமே தந்தையைத்தான் அழைக்கின்றனர். தாய் தந்தை என சொல்ல
மாட்டார்கள். இங்கேதான் நீங்கள் தாய் தந்தை, நாங்கள் குழந்தைகள்
. . . என பாடுகின்றனர். நாம் படித்து மனிதரிலிருந்து
தேவதைகளாகவும், முள்ளிலிருந்து மலர்களாகவும் ஆகிக் கொண்டிருக்
கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை
படகோட்டியாகவும் இருக்கிறார், தோட்டத்தின் சொந்தக்காரராகவும்
இருக்கிறார். மற்றபடி பிராமணர்களாகிய நீங்கள் பல விதமான தோட்ட
வேலைக்காரர்களாக இருக்கிறீர்கள். முகலாய தோட்டத்தின்
தோட்டக்காரரும் இருக்கிறார் அல்லவா. அவர்களுடைய சம்பளமும் கூட
எவ்வளவு நன்றாக இருக்கும். தோட்டக்காரர்களும் வரிசைக்கிரமமாக
உள்ளனர் அல்லவா. ஒரு சில தோட்டக் காரர்கள் எவ்வளவு நல்ல நல்ல
மலர்களை உருவாக்குகின்றனர். மலர்களில் ஒன்று மலர்களின்
ராஜாவாகவும் இருக்கும். சத்யுகத்தில் ராஜா ராணி மலர்களும்
உள்ளனர் அல்லவா. இங்கே மகாராஜா மகாராணி இருக்கின்றனர், ஆனால்
மலர்களாக இல்லை. தூய்மையற்றவராக ஆகும் போது முள்ளாக ஆகி
விடுகின்றனர். பாதையில் செல்லச் செல்ல முள்ளாகக் குத்தி ஓடி
விடுகின்றனர். அவர்கள் அஜாமில் எனவும் சொல்லப் படுகின்றனர்.
அனைவரையும் விட அதிகமான பக்தியும் நீங்கள் செய்கிறீர்கள். வாம
மார்க்கத்தில் விழக்கூடியவர் களின் சித்திரங்களைப் பாருங்கள்,
எப்படி எப்படியெல்லாம் அழுக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
தேவதைகளின் படங்களைத்தான் கொடுத்துள்ளனர். இப்போது அவை வாம (இல்லற)
மார்க்கத்தின் படங்கள். இப்போதுதான் குழந்தைகளாகிய நீங்கள்
இந்த விஷயங்களைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள்
இப்போது பிராமணர்களாகி யிருக்கிறீர்கள். நாம் விகாரங்
களிலிருந்து மிகவும் தூர தூரமாகச் செல்கிறோம்.
பிராமணர்களுக்குள் சகோதரன் சகோதரியுடன் விகாரத்தில் செல்வது
என்பது மிகவும் பெரிய குற்றமாகி விடும். பெயரே
கெட்டுப்போய்விடும், ஆகையால் சிறுவயதிலிருந்தே ஏதாவது கெட்ட
காரியம் செய்திருந்தால் அதையும் கூட பாபாவிடம் சொன்னால் பாதி
மன்னிப்பு கிடைத்துவிடும். நினைவு இருக்கவே செய்யும் அல்லவா.
இன்ன சமயத்தில் நான் இந்த அழுக்கான காரியம் செய்தேன். என்பது.
பாபாவுக்கு எழுதி கொடுக்கின்றனர். மிகவும் உண்மையாகவும்
நேர்மையாகவும் உள்ளவர்கள் பாபாவுக்கு எழுதுகின்றனர் - பாபா நான்
இன்ன இன்ன அழுக்கான காரியம் செய்தேன். மன்னியுங்கள். மன்னிப்பு
ஏதும் கிடையாது, மற்றபடி உண்மை சொன்னால் அது இலேசாகி விடும்
என்று தந்தை சொல்கிறார். மறந்து விடும் என்று சொல்ல முடியாது.
மறக்க முடியாது. இனிமேல் மீண்டும் அப்படிப்பட்ட காரியம் ஆகி
விடக் கூடாது, அதற்காக எச்சரிக்கை செய்கிறேன். மற்றபடி
கண்டிப்பாக மனதுக்குள் அரிக்கும். பாபா நாங்கள் அஜாமில் போல்
இருந்தோம் என்று சொல்கின்றனர். இந்தப் பிறவியின் விஷயம் தான்.
இதுவும் கூட இப்போதுதான் நீங்கள் அறிகிறீர்கள். எப்போதிலிருந்து
வாம மார்க்கத்தில் வந்து பாவ ஆத்மா ஆகினீர்கள்? இப்போது தந்தை
மீண்டும் நம்மை புண்ணிய ஆத்மாவாக ஆக்குகிறார். புண்ணிய
ஆத்மாக்களின் உலகமே தனியானது. உலகம் ஒன்றுதான் ஆனாலும் இரண்டு
பாகங்களில் உள்ளது என புரிந்து கொண்டு விட்டீர்கள். ஒன்று
புண்ணிய ஆத்மாக்களின் உலகம், அது சொர்க்கம் எனப்படுகிறது.
மற்றொன்று பாவாத்மாக்களின் உலகம், அது நரகம், துக்கதாமம்
எனப்படுகிறது. சுகமான உலகம் மற்றும் துக்கமான உலகம்.
துக்கத்தின் உலகத்திலிருந்து எங்களை விடுவியுங்கள், நம்
வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என அனைவரும் கதறியபடி
இருக்கின்றனர். வீட்டில் சென்று அமர்ந்துவிடக் கூடாது, மீண்டும்
நடிப்பை நடிக்க வர வேண்டும் என்பதையும் குழந்தைகள் அறிவார்கள்.
இந்த நேரத்தில் முழு உலகமும் தூய்மை யற்றதாக உள்ளது. இப்போது
தந்தையின் மூலம் நீங்கள் தூய்மை யடைந்து கொண்டி ருக்கிறீர்கள்.
இலட்சியம், குறிக்கோள் நம் முன் உள்ளது. வேறு யாரும் நாங்கள்
இவ்வாறு ஆகிக் கொண்டிருக்கிறோம் என இந்த லட்சியம் குறிக்கோளைக்
காட்ட மாட்டார்கள். குழந்தைகளே நீங்கள் இப்படி இருந்தீர்கள்,
இப்போது இல்லை என தந்தை சொல்கிறார். பூஜைக்குரியவர்களாக
இருந்தீர்கள், இப்போது பூஜாரிகளாகி விட்டீர்கள், மீண்டும்
பூஜைக்குரியவர்களாக ஆவதற்காக முயற்சி தேவைப்படுகிறது. தந்தை
எவ்வளவு நன்றாக முயற்சி செய்விக்கிறார். இந்த பாபா (பிரம்மா)
நான் இளவரசன் ஆகப் போகிறேன் என புரிந்து கொள்கிறார் அல்லவா.
இவர் முதல் நம்பரில் உள்ளவர் என்றாலும் அனைத்து சமயங் களிலும்
நினைவு நிலைப்பதில்லை. மறந்து விடுகிறார். யார் எவ்வளவு முயற்சி
செய்தாலும் இப்போது அந்த நிலை உருவாகாது. கர்மாதீத் நிலை என்பது
சண்டை ஏற்படும் நேரத்தில் உருவாகும். அனைவருமே முயற்சி செய்ய
வேண்டுமல்லவா. இவரும் கூட செய்ய வேண்டும். படத்தில் பாருங்கள்,
பாபாவின் படம் எங்குள்ளது? என கேட்டு நீங்கள் புரிய
வைக்கிறீர்கள். கல்ப மரத்தின் உச்சியில் தூய்மையற்ற உலகத்தில்
நிற்கின்றார், பிறகு கீழே தபஸ் செய்து கொண்டிருக்கிறார்.
எவ்வளவு எளிதாகப் புரிய வைக்கப்படுகிறது. இந்த அனைத்து விசயங்
களையும் தந்தை தான் புரிய வைத்துள்ளார். இவரும் கூட
அறிந்திருக்கவில்லை. தந்தைதான் ஞானம் நிறைந்தவர், அவரைத்தான்
அனைவரும் நினைக்கின்றனர் - ஓ பரமபிதா பரமாத்மாவே! வந்து
எங்களின் துக்கத்தை நீக்குங்கள். பிரம்மா விஷ்ணு சங்கரர்
தேவதைகள் ஆவர். மூல வதனத்தில் இருப்பவர்களை தேவதைகள் என
சொல்லப்படுவதில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் இரகசியத்தைக்
கூட தந்தை புரிய வைத்திருக்கிறார். பிரம்மா, லட்சுமி-நாராயணர்
போன்ற இவர்கள் அனைவரும் இங்கு தான் இருக்கின்றனர் அல்லவா.
சூட்சும வதனம் குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே காட்சியில்
தெரிகிறது. இந்த பாபாவும் கூட ஃபரிஸ்தா ஆகி விடுவார். ஏணியின்
உச்சியில் நின்றிருப்பவர்தான் பிறகு கீழே தபஸ் செய்து
கொண்டிருக் கின்றார் என்பதை குழந்தைகள் அறிவார்கள். படத்தில்
முற்றிலும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அவர் தன்னை பகவான் என
ஒருபோதும் சொல்லிக் கொள்வதில்லை. இவர் சொல்கிறார்? - நான் பைசா
அளவுக்கும் மதிப்பற்று இருந்தேன், ததத்வம் (நானே அது, அதுவே
நான்). இப்போது மதிப்பு மிகுந்தவனாக ஆகிக்கொண்டிருக்கிறாய்,
ததத்வம். எவ்வளவு சகஜமான, புரிந்து கொள்ளக் கூடிய விசயங்கள்.
யாராவது பேசும்போது சொல்லுங்கள் - பாருங்கள், இவர் கலியுகத்தின்
கடைசியில் நின்றிருக்கிறார் அல்லவா. எப்போது பட்டுப்போகும் நிலை,
வானபிரஸ்த நிலை ஏற்படுகிறதோ அப்போது நான் இவருக்குள் பிரவேசம்
செய்கிறேன் என தந்தை சொல்கிறார். இப்போது இராஜயோகத்தின் தபஸ்
செய்து கொண்டிருக்கிறார். தபஸ் செய்பவர்களை எப்படி தேவதை என
சொல்ல முடியும்? இராஜ யோகத்தைக் கற்றுக்கொண்டு இதுவாக
தேவதையாகப் போகிறார். குழந்தைகளாகிய உங்களையும் இப்படிப்பட்ட
கிரீடதாரிகளாக ஆக்குகிறார் அல்லவா. இவரே தேவதையாக ஆகிறார்.
இப்படி 10-20 குழந்தைகளின் படங்களையும் வைக்க முடியும் -
இவர்கள் இப்படி ஆகின்றனர் என காட்டுவதற்காக. முன்னர் இப்படி
அனைவரின் படமும் எடுக்கப்பட்டது. இது புரிந்து கொள்ள வேண்டிய
விஷயமல்லவா. ஒரு புறம் சாதாரணமாக, மற்றொரு புறம் இரட்டை
கிரீடதாரி. நாம் இப்படி ஆகிக்கொண்டிருக்கிறோம் என நீங்கள்
புரிந்து கொள்கிறீர்கள். யாருடைய புத்தியின் தொடர்பு தெளிவாக
உள்ளதோ அவர்கள் ஆவார்கள், மேலும் மிகவும் இனிமையானவராகவும் ஆக
வேண்டும். இந்த சமயம் மனிதர்களுக்குள் காமம், கோபம்
முதலானவைகளின் விதை எவ்வளவு ஆகி விட்டுள்ளது. அனைவருக்குள்ளும்
5 விகாரங்களின் விதையின் மரம் வளர்ந்து விட்டது. இப்படிப்பட்ட
விதையை இனி விதைக்கக் கூடாது என இப்போது தந்தை சொல்கிறார்.
சங்கம யுகத்தில் நீங்கள் தேகாபிமானத்தின் விதையை விதைக்கக்
கூடாது. காமத்தின் விதையை விதைக்கக் கூடாது. அரைக் கல்பத்
திற்கு பிறகு இராவணனே இருக்க மாட்டான். அனைத்து விஷயங்களையும்
தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். முக்கியமான ஒரே
விஷயம் - மன்மனாபவ. என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை
சொல்கிறார். அனைவருக்கும் பின்னால் இவர் இருக்கிறார், பிறகு
அனைவருக்கும் முன்பாகவும் (முதலாவதாக) இருக்கிறார். யோகபலத்தின்
மூலம் எவ்வளவு தூய்மையடைகிறார். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு
நிறைய காட்சிகள் தெரிந்தது. பக்தி மார்க்கத்தில் தீவிர பக்தி
செய்யும்போது காட்சிகள் தெரிகிறது. இங்கே இவர்கள் அமர்ந்த படியே
தியானத்தில் சென்று கொண்டிருந்தனர், அதை மாயாஜாலம் என புரிந்து
கொண்டனர். இது முதல் தரமான மாயாஜாலமாகும். மீரா மிகவும் தபஸ்
செய்தார், சாது சன்னியாசிகளின் சத்சங்கங்களுக்குச் சென்றார்.
இங்கே சாது முதலானவர்கள் எங்கே உள்ளனர்? இவர் தந்தை அல்லவா.
அனைவரின் தந்தை சிவபாபா ஆவார். குருவைச் சந்திக்க வேண்டும் என
சொல்கின்றனர். இங்கேயோ குரு யாரும் இல்லை. சிவபாபா நிராகாரமாக
உள்ளவர், பிறகு யாரைச் சந்திக்க விரும்புகிறீர்கள்? அந்த
குருமார்களிடம் சென்று வெகுமதிகளை கொடுக் கின்றனர். இந்த தந்தை
எல்லைக்கப்பாற்பட்ட எஜமானர் ஆவார். இங்கே காணிக்கை முதலானவைகளை
கொடுக்க வேண்டியதில்லை. இந்த பணத்தை என்ன செய்வார்? இந்த
பிரம்மாவும் கூட நாம் உலகின் எஜமானர் ஆகிறோம் என புரிந்து
கொள்கிறார். குழந்தைகள் கொடுக்கும் பணம் அனைத்தையும் அவர்
களுக்காகவே வீடு முதலானவைகளை கட்டி விடுகிறார். பணம்
சிவபாபாவுக்கோ அல்லது பிரம்மா பாபாவுக்கோ பயன்படப் போவதில்லை.
இந்த வீடு முதலானவைகள் குழந்தைகளுக்காகவே கட்டப்பட்டன,
குழந்தைகள்தான் வந்து தங்குகின்றனர். சிலர் ஏழைகள், சிலர்
செல்வந்தர்கள், சிலர் இரண்டு ரூபாய் கூட அனுப்பி வைக்கின்றனர்
- பாபா என் சார்பாக ஒரு செங்கல் வையுங்கள். சிலர் ஆயிரம் ரூபாய்
அனுப்புகின்றனர். இருவரின் பாவனையும் ஒன்றல்லவா. ஆக
இருவருடயதும் சரி சமமாக ஆகி விடுகிறது. பிறகு குழந்தைகள்
வரும்போது, எங்கு வேண்டுமோ அங்கு தங்கலாம். யார் வீட்டை கட்ட
வைத்தாரோ அவர் வரும்போது அவரை சுகமாக தங்க வைக்கலாம். பாபா
விடம் கூட தனி உபசரிப்பு செய்வது எல்லாம் நடக்கிறது என பலர்
சொல்கின்றனர். அட, அப்படி செய்து தான் ஆக வேண்டியுள்ளது அல்லவா.
சிலர் ஒரு விதமாக உள்ளனர், சிலர் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து
கொண்டு விடுகின்றனர். சிலர் மிகவும் நாசூக்கானவர்களாக
இருக்கின்றனர், வெளி நாட்டில் இருப்பவர்கள் பெரிய பெரிய
மாளிகைகளில் வசிப்பவர்களாக இருக்கின்றனர், ஒவ்வொரு நாட்டிலும்
பெரிய பெரிய செல்வந்தர்கள் வெளிப்படுகின்றனர் எனும்போது வீடு
முதலானவைகள் அதற்கேற்றாற்போல் கட்டுகிறோம். இங்கே பாருங்கள்,
எவ்வளவு அளவற்ற குழந்தைகள் வருகின்றனர். மற்ற எந்த
தந்தையருக்கும் இந்த யோசனை இருக்காது. ஏதோ சுமார் 10-12-20
பேரன் பேத்திகள் இருக்கலாம். நல்லது, சிலருக்கு 200-500 பேர்
கூட இருக்கலாம், அதை விட அதிகம் இருக்க முடியாது. இந்த பாபாவின்
குடும்பம் எவ்வளவு பெரியது, இன்னும் கூட பெரியதாக ஆகவுள்ளது.
இந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. தந்தையின்
குடும்பம் எவ்வளவு உருவாகும். பிறகு பிரஜாபிதா பிரம்மாவின்
குடும்பம் எவ்வளவு ஆகி விட்டது. ஒவ்வொரு கல்பத்திலும் அவர்
வரும் போது தான் அதிசயமான விசயங்கள் உங்கள் காதுகளில்
விழுகின்றன. தந்தை குறித்து சொல்கிறீர்கள் அல்லவா - உங்களின்
கதியும் வழியும் தனிப்பட்டது என்பது தொடங்குகிறது. பக்தி
மற்றும் ஞானத்திற்கிடையில் வித்தியாசத்தைப் பாருங்கள் எவ்வளவு
உள்ளது.
தந்தை உங்களுக்குப் புரிய வைக்கிறார் - சொர்க்கத்திற்குச்
செல்ல வேண்டும் என்றால் தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய
வேண்டும். இப்போது முள்ளாக இருக்கின்றனர் அல்லவா. குணமற்ற
எங்களுக்குள் எந்த குணமும் இல்லை என பாடியபடி இருக்கின்றனர்
அல்லவா. மற்றபடி 5 விகாரங்களின் அவகுணங்கள் உள்ளன, இராவண
இராஜ்யமாக உள்ளது. இப்போது உங்களுக்கு எவ்வளவு நல்ல ஞானம்
கிடைக்கிறது. இது கொடுக்கும் அளவு குஷியை அந்த ஞானம்
கொடுப்பதில்லை. ஆத்மாக்களாகிய நாம் மூலவதனத்தில் வசிப்பவர்கள்
என நீங்கள் அறிவீர்கள். சூட்சும வதனத்தில் பிரம்மா, விஷ்ணு
சங்கர் உள்ளனர், அதுவும் காட்சியாக மட்டுமே தெரிகிறது.
பிரம்மாவும் இங்கே, லட்சுமி நாராயணரும் இங்கே உள்ளவர் களாவர்.
இது காட்சியாக மட்டுமே தெரிகிறது. வியக்த (ஸ்தூலமான) பிரம்மாவே
பிறகு சூட்சுமவதனவாசி பிரம்மா ஃபரிஸ்தாவாக எப்படி ஆகி
விடுகிறார் என்பதன் அடையாளமாகும். மற்றபடி அங்கே எதுவும்
கிடையாது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அனைத்து விஷயங்
களையும் புரிந்து கொண்டபடி இருக்கிறீர்கள், தாரணை செய்தபடி
செல்கிறீர்கள். புதிய விஷயம் கிடையாது. நீங்கள் பல முறை
தேவதையாக ஆகியுள்ளீர்கள். தேவதா இராஜ்யம் இருந்தது அல்லவா !
இந்த சக்கரம் சுற்றியபடி இருக்கும். அது அழியக்கூடிய நாடகம்,
இது அனாதி, அழிவற்ற நாடகமாகும். இது உங்களைத் தவிர வேறு
யாருடைய புத்தியிலும் இல்லை. இவையனைத்தையும் தந்தை அமர்ந்து
புரிய வைக்கிறார். பரம்பரை பரம்பரையாக நடந்து வருவதல்ல. இந்த
ஞானத்தை இப்போதுதான் சொல்கிறேன் என தந்தை கூறுகிறார். பிறகு
இது மறைந்து விடும். நீங்கள் இராஜ்ய பதவி பிராப்தி செய்து
கொள்கிறீர்கள், பிறகு சத்யுகத்தில் இந்த ஞானம் இருக்காது.
நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாம் இப்போது பிராமணராக இருக்கிறோம், ஆகையால்
விகாரங்களிலிருந்து மிக மிக தூரமாக விலகி இருக்க வேண்டும் என்ற
நினைவு எப்போதும் இருக்க வேண்டும். ஒருபோதும் சட்டத்தை மீறி
குற்ற செயலால் தாக்குதல் நடத்தக் கூடாது. தந்தையிடம் மிக மிக
நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும்.
2. இரட்டை கிரீடதாரி தேவதையாக ஆகுவதற்காக மிகவும் இனிமையானவராக
வேண்டும். புத்தியின் கோடு தெளிவாக இருக்க வேண்டும்.
இராஜயோகத்தின் தபஸ்யா செய்ய வேண்டும்.
வரதானம்:
ஈஸ்வரிய போதையின் மூலம் பழைய
உலகத்தை மறக்கக் கூடிய அனைத்து பிராப்திகளும் நிறைந்தவர் ஆகுக!
எப்படி அந்த போதை அனைத்தையும்
மறக்கச் செய்கிறதோ, அது போல் இந்த ஈஸ்வரிய போதை துக்கத்தின்
உலகத்தை எளிதாக மறக்கச் செய்து விடும். அந்த போதையால் அதிக
நஷ்டம் ஏற்படும், அதிகம் அருந்துவதால் அழிந்து போகின்றனர்.
ஆனால் இந்த போதை அழியாதவராக ஆக்கி விடும். யார் எப்போதும்
ஈஸ்வரிய போதையில் மூழ்கியிருக்கிறார்களோ, அவர்கள் அனைத்துப்
பிராப்திகளும் நிரம்பப் பெற்றவராக ஆகி விடுவார்கள். ஒரு பாபாவை
தவிர வேறு யாரும் இல்லை -- இந்த நினைவு தான் போதையை ஏற்றுகிறது.
இந்த நினைவு மூலம் தான் சக்தி வந்து விடுகிறது.
சுலோகன் :
ஒருவர் மற்றவரைக்
காப்பியடிப்பதற்கு (பின்பற்றுவது) பதிலாக பாபாவைக்
காப்பியடியுங்கள் (பின்பற்றுங்கள்).
ஓம்சாந்தி