11.12.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! மதுபன் (ஹோலியெஸ்ட்
ஆஃப்தி ஹோலி) புனிதத்திலும் புனிதமான தந்தையின் வீடாகும். இங்கு
நீங்கள் எந்த ஒரு தூய்மையற்றவரை (பதீதமானவர்) கூட்டிக் கொண்டு
வர முடியாது.
கேள்வி:
இந்த ஈசுவரிய (மிஷன்) சேவையில்
யார் உறுதியான நிச்சயபுத்தி உடையவர்களாக இருக்கிறார் களோ
அவர்களுடைய அடையாளங்கள் என்னவாக இருக்கும்?
பதில்:
(1) அவர்கள் புகழ்ச்சி, இகழ்ச்சி ... அனைத்திலும் நிதானத்துடன்
காரியம் செய்வார்கள். (2) கோபப் பட மாட்டார்கள். (3) யாரையுமே
தேகத்தைப் பார்க்கும் பார்வையில் பார்க்க மாட்டார்கள்.
ஆத்மாவைத் தான் பார்ப்பார்கள். ஆத்மாவாகி (ஆத்ம உணர்வுடன்)
பேசுவார்கள். (4) கணவன் மனைவி சேர்ந்து இருந்தாலும் தாமரை மலர்
போல இருப்பார்கள் (5) எந்த விதமான ஆசைகளும் வைத்துக் கொள்ள
மாட்டார்கள்.
பாடல்:
விட்டில் பூச்சி ஏன் எரிந்து போகாது.. .. ..
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தை புரிய வைக்கிறார். அதாவது பகவான் ஆன்மீக
மாணவர்களுக்கு கற்பிக்கிறார். அந்த பள்ளிக் கூடங்களில்
படிக்கும் குழந்தைகளுக்கு ஆன்மீக மாணவர்கள் என்று கூற
மாட்டார்கள். அவர்கள் இருப்பதே அசுர விகாரி சம்பிரதாயத்தினராக.
இதற்கு முன்பு நீங்கள் கூட அசுர அதாவது இராவண
சம்பிரதாயத்தினராக இருந்தீர்கள். இப்பொழுது இராம
இராஜ்யத்திற்குச் செல்வதற்காக 5 விகாரங்கள் என்ற இராவணன் மீது
வெற்றி அடைவதற்காக முயற்சி செய்து கொண்டிருக் கிறீர்கள். இந்த
ஞானத்தைப் பெறாதவர்களுக்கு நீங்கள் இராவண இராஜ்யத்தில்
இருக்கிறீர்கள் என்று புரிய வைக்க வேண்டி வருகிறது. சுயம்
புரிந்து கொள்வதில்லை. நாங்கள் எல்லையில்லாத தந்தையிடம்
படிக்கிறோம் என்று நீங்கள் உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள்
ஆகியோருக்குக் கூறும் பொழுது அவர்கள் நிச்சயம் செய்து
கொள்கிறார்கள் என்பதல்ல. எவ்வளவு தான் தந்தை என்று கூறினாலும்
பகவான் என்று கூறினாலும் கூட நிச்சயம் செய்து கொள்வதில்லை.
புதியவர்களுக்கோ இங்கு வருவதற்கான அனுமதி கிடையாது. கடிதம்
இல்லாமல் கேட்காமலோ யாரும் வரவும் முடியாது. ஆனால் அவ்வப்போது
யாராவது வந்து விடுகிறார்கள். இது கூட நியமத்திற்குப்
புறம்பானதாகும். ஒவ்வொருவருடைய முழு விவரம், பெயர் ஆகியவற்றை
எழுதிக் கேட்க வேண்டி உள்ளது. இவரை அனுப்பலாமா? பிறகு பாபா
கூறுவார், சரி அனுப்பி விடு. அசுர பதீத உலகத்தின் மாணவர்களாக
இருந்தார்கள் என்றால் தந்தை புரிய வைப்பார், அந்த படிப்போ
விகாரிகள் பதீதர்கள் படிப்பிக்கிறார்கள். இங்கு இறைவன்
கற்பிக்கிறார். அந்த படிப்பினால் ஒரு பைசா மதிப்பின் பதவி
கிடைக்கிறது. எவ்வளவு தான் மிகப் பெரிய தேர்வில் தேர்ச்சி
பெற்றாலும் சரி, பிறகும் எதுவரை சம்பாதித்துக் கொண்டு
இருப்பார்கள். விநாசமோ முன்னால் நின்றுள்ளது. இயற்கை சேதங்கள்
கூட எல்லாமே வரப் போகிறது. இதுவும் நீங்கள் புரிந்துள்ளீர்கள்
- யார் புரிந்து கொள்வதில்லையோ அவர்களை வெளியில் வரவேற்பு
அறையில் அமரச் செய்து புரிய வைக்கப்படுகிறது. இது ஈசுவரிய
கல்வியாகும். இதில் நிச்சயபுத்தி உடையவர்களே வெற்றி
அடைகிறார்கள். அதாவது உலகத்தின் மீது ஆட்சி புரிவார்கள். இராவண
சம்பிரதாயத்தினரோ இதை அறியாமல் உள்ளார்கள். இதில் மிகவும்
எச்சரிக்கை வேண்டும். அனுமதியின்றி யாருமே உள்ளே வர முடியாது.
இது ஒன்றும் உலாவுவதற்கான இடம் கிடையாது. சிறிது காலத்திற்குள்
சட்டங்கள் கடுமையானதாகி விடும். ஏனெனில் இது ஹோலியெஸ்ட் ஆஃப் த
ஹோலி ஆகும். சிவபாபாவிற்கு இந்திரன் என்றும் கூறுகிறார்கள்
அல்லவா? இது இந்திர சபையாகும். 9 ரத்தினங்களின் மோதிரங்களைக்
கூட அணிகிறார்கள் அல்லவா? அந்த ரத்தினங்களில் நீலம் கூட
இருக்கும். மரகதம், மாணிக்கம் கூட இருக்கும். இவை எல்லாம்
பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. பரிகளின் (தேவதை) பெயர்கள் கூட
உள்ளன அல்லவா? பரிகளாகிய நீங்கள் பறக்கக் கூடிய ஆத்மாக்கள்
ஆவீர்கள். உங்களுடைய வர்ணனைதான் உள்ளது. ஆனால் மனிதர்கள் இந்த
விஷயங்கள் எதுவுமே புரிந்து கொள்வதில்லை.
மோதிரத்தில் கூட ரத்தினங்களை பதிக்கும் பொழுது அதில்
புஷ்பராகம், நீலம், கோமேதகம் கூட இருக்கும். ஒரு கல்லின் விலை
ஆயிரம் ரூபாய் பின் மற்றொன்றினுடையது 10-20 ரூபாய்.
குழந்தைகளிலும் வரிசைக்கிரமமாக உள்ளார்கள். ஒரு சிலரோ படித்து
எஜமானர் ஆகி விடுகிறார்கள். ஒரு சிலர் படித்து தாசர் தாசிகள்
(வேலையாட்கள்) ஆகி விடுகிறார்கள். ராஜதானி ஸ்தாபனை ஆகிறது
அல்லவா? எனவே தந்தை வந்து கற்பிக்கிறார். இந்திரன் என்றும்
அவருக்குத் தான் கூறப்படுகிறது. இது ஞான மழையாகும். ஞானமோ
தந்தையைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. உங்களுடைய
லட்சியம் நோக்கமே இது தான். இறைவனே கற்பிக்கிறார் என்ற
நிச்சயம் ஏற்பட்டுவிட்டால் பிறகு அவர்கள் படிப்பை விட
மாட்டார்கள். யாருக்கு இருப்பதே கல்புத்தி என்றால்,
அவர்களுக்கு ஒரு பொழுதும் அம்பு போல பதியாது. வந்து விட்டு
பிறகு போகப்போக விழுந்து விடு கிறார்கள். 5 விகாரங்கள்
அரைகல்பத்தின் எதிரியாகும். தேக அபிமானத்தில் வந்து ஓங்கி
அறைந்து விடுகின்றன. பிறகு ஆச்சரியப்படும் வகையில்
கேட்டார்கள், (பிறருக்கு) கூறினார்கள் பின் ஓடி விடுபவர்களாக
ஆகிறார்கள். மாயை மிகவுமே கொடியது. ஒரு அறை அறைந்து வீழ்த்தி
விடுகிறது. நாம் ஒரு பொழுதும் விழமாட்டோம் என்று
நினைக்கிறார்கள். பிறகும் மாயை அறைந்து விடுகிறது. இங்கு கணவன்
மனைவி இருவருமே தூய்மையாக ஆக்கப்படுகிறார்கள். அது கூட
இறைவனைத் தவிர வேறு யாருமே ஆக்க முடியாது. இது ஈசுவரிய மிஷன்
(சேவை) ஆகும்.
தந்தைக்கு படகோட்டி என்றும் கூறப்படுகிறது. நீங்கள் படகு
ஆவீர்கள். அனைவருடைய படகுகளையும் கரையேற்றுபவர். உண்மையின்
படகு ஆகும். ஆடும், அசையும் ஆனால் மூழ்கி விடாது என்று கூறவும்
செய்கிறார்கள். எவ்வளவு ஏராளமான மடங்கள் வழிகள் உள்ளன. ஞானம்
மற்றும் பக்திக்கிடையே சண்டை ஏற்படுவது போல உள்ளது. சில சமயம்
பக்திக்குக் கூட வெற்றி ஏற்படும். கடைசியிலோ ஞானத்திற்குத்
தான் வெற்றி ஆகும். பக்தியின் பக்கம் பாருங்கள் எவ்வளவு
பெரியப் பெரிய படை வீரர்கள் இருக்கிறார்கள். ஞான மார்க்கத்தின்
பக்கம் கூட எவ்வளவு பெரியப் பெரிய படைவீரர்கள் இருக்கிறார்கள்.
அர்ஜுனர், பீமன் ஆகிய பெயர்கள் வைத்துள்ளார்கள். இதுவோ
அமர்ந்து எல்லாமே கதைகளாக உருவாக்கி உள்ளார்கள். பாடலோ
உங்களுடையது ஆகும். ஹீரோ ஹீரோயின் பாகம் உங்களுடையது.
இப்பொழுது நடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இச்சமயத்தில்
தான் யுத்தம் நடக்கிறது. உங்களிலும் கூட நிறைய பேர் இந்த
விஷயங்களை முற்றிலும் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.
யார் மிக நல்லவர்களாக இருப்பார்களோ அவர்களுக்குத் தான் அம்பு
போல பதியும். மூன்றாம் தரமோ வந்து அமரவே முடியாது. நாளுக்கு
நாள் மிகவும் கடுமையான சட்டங்கள் ஆகிக் கொண்டே போகும். எதுவுமே
புரியாது. கல்புத்தியினர்களோ இங்கு வந்து அமர்வது கூட
சட்டத்திற்கு புறம்பானது.
இந்த ஹால் ஹோலியெஸ்ட் ஆஃப் ஹோலி (புனிதத்திலும் புனிதமானது)
ஆகும்.போப்பிற்கு ஹோ என்கிறார்கள். இந்த தந்தையோ ஹோலியெஸ்ட்
ஆஃப் ஹோலி ஆவார். இவர்கள் அனைவருக்குமே நான் நன்மை செய்ய
வேண்டி உள்ளது என்று தந்தை கூறுகிறார். இவை அனைத்துமே விநாசம்
ஆகப்போகிறது. இதைக் கூட எல்லோரும் புரிந்து கொள்கிறார்களா
என்ன? கேட்கிறார்கள் என்றாலும் கூட ஒரு காதால் கேட்டு மறு
காதால் வெளியேற்றி விடுகிறார்கள். தாரணை செய்வதுமில்லை
செய்விப்பதும் இல்லை. இது போல ஊமைகள் செவிடர்கள் கூட நிறைய
பேர் இருக்கிறார்கள். தீயதை கேட்காதீர்கள் (ஹியர் நோ ஈவில்..
.. ..) என்று தந்தை கூறுகிறார். அவர்களோ குரங்கின் படத்தைக்
காண்பிக்கிறார்கள். ஆனால் இதுவோ மனிதர்களுக்காக கூறப்படுகிறது.
மனிதர்கள் இச்சமயம் குரங்கை விட கேவலமாக இருக்கிறார்கள்.
நாரதருடையதும் அமர்ந்து கதை அமைத்துள்ளார்கள். அவருக்கு
கூறினார்கள் - நீ உனது முகத்தைப் பார் - 5 விகாரங்கள் ஒன்றும்
உள்ளுக்குள் இல்லையே? சாட்சாத்காரம் ஆவது போல! அனுமாருடையதும்
கூட சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்) ஆகிறது அல்லவா? இது கல்ப
கல்பமாக நடக்கிறது என்று தந்தை கூறுகிறார். சத்யுகத்தில் இந்த
விஷயங்கள் எதுவுமே ஆவதில்லை. இந்த பழைய உலகமே முடிந்து போய்
விடும். யார் பக்குவமான நிச்சய புத்தி உடையவர்களோ அவர்கள்
முந்தைய கல்பத்திலும் கூட நாம் இந்த ஆட்சி புரிந்திருந்தோம்
என்று புரிந்திருப்பார்கள். குழந்தைகளே இப்பொழுது தெய்வீக
குணங்களை தாரணை செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். எந்த ஒரு
சட்டத்திற்கு புறம்பான காரியத்தையும் செய்யாதீர்கள். நிந்தை
புகழ் எல்லாவற்றிலும் பொறுமையை தாரணை செய்ய வேண்டும். கோபம்
வரக் கூடாது. நீங்கள் எவ்வளவு உயர்ந்த மாணவர்கள் ஆவீர்கள்.
பகவான் தந்தை கற்பிக்கிறார். அவர் நேரிடையாக கற்கிறார்.
பிறகும் எவ்வளவு குழந்தைகள் மறந்து விடுகிறார்கள். ஏனெனில்
சாதாரண உடல் இல்லையா ! தேகதாரியை பார்ப்பதால் நீங்கள் அந்த
அளவிற்கு உயர முடியாது என்று தந்தை கூறுகிறார். ஆத்மாவைப்
பாருங்கள். ஆத்மா இங்கு புருவமத்தியில் இருக்கிறது. ஆத்மா
கேட்டு விட்டு தலை அசைக்கிறது. எப்பொழுதுமே ஆத்மாவிடம்
பேசுங்கள். ஆத்மாவாகிய நீங்கள் இந்த சரீரம் என்ற பீடத்தில்
அமர்ந்துள்ளீர்கள். நீங்கள் தமோபிரதானமாக இருந்தீர்கள்.
இப்பொழுது சதோபிர தானமாக ஆகுங்கள். தன்னை ஆத்மா என்று உணர்ந்து
தந்தையை நினைவு செய்வதால் தேக உணர்வு விடுபட்டு விடும். அரை
கல்பத்தின் தேக அபிமானம் தங்கி இருக்கிறது. இச்சமயம் எல்லோருமே
தேக அபிமானியாக இருக்கிறார்கள்.
இப்பொழுது (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக ஆகுங்கள் என்று
தந்தை கூறுகிறார். ஆத்மா தான் எல்லாவற்றையும் தாரணை செய்கிறது.
உண்பது, அருந்துவது எல்லாமே ஆத்மாதான் செய்கிறது. தந்தைக்கோ
அபோக்தா (எதையும் அனுபவிக்காதவர்) என்று கூறப்படுகிறது. அவர்
நிராகாரமானவர் ஆவார். இந்த சரீரதாரிகள் எல்லாமே செய்கிறார்கள்.
அவர் உண்பது அருந்துவது எதுவும் கிடையாது. அபோக்தா ஆவார். எனவே
இதை பிறகு அவர்கள் வந்து காப்பி அடிக்கிறார்கள். எத்தனை
மனிதர்களை ஏமாற்று கிறார்கள். உங்களுடைய புத்தியில் இப்பொழுது
முழு ஞானம் உள்ளது. முந்தைய கல்பத்தில் யார் புரிந்து
கொண்டார்களோ அவர்களே புரிந்து கொள்வார்கள். நான் தான் கல்ப
கல்பமாக வந்து உங்களுக்கு படிப்பிக்கிறேன். மேலும் சாட்சி
(பார்வையாளர்) ஆகிப் பார்க்கிறேன் என்று தந்தை கூறுகிறார்.
வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப யார் படித்தார்களோ அவர்கள் தான்
படிப்பார்கள். நேரம் பிடிக்கிறது. கூறுகிறார்கள்,
கலியுகத்திற்கு இப்பொழுது இன்னும் 40 ஆயிரம் வருடங்கள் மீதம்
உள்ளது என்று. எனவே கோரமான இருளில் இருக்கிறார்கள் அல்லவா?
இதற்கு அறியாமை என்ற இருள் என்று கூறப்படுகிறது. பக்தி
மார்க்கம் மற்றும் ஞான மார்க்கத்தில் இரவு பகலுக்கான
வித்தியாசம் உள்ளது. இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய
விஷயமாகும். குழந்தைகள் மிகுந்த குஷியில் மூழ்கி இருக்க
வேண்டும். எல்லாமே உள்ளது. எந்த ஒரு இச்சையும் இல்லை. முந்தைய
கல்பத்தைப் போல நமது எல்லா விருப்பங்களும் பூர்த்தி ஆகி
விடுகிறது என்பதை அறிந்துள்ளீர்கள். எனவே வயிறு நிரம்பி
இருக்கிறது. யாருக்கு ஞானம் இல்லையோ அவர்களுக்கு வயிறு நிரம்பி
இருக்குமா என்ன? குஷி போன்ற சத்துணவு இல்லை என்று
கூறப்படுகிறது. ஜன்ம ஜன்மாந்திரத்திற்கு இராஜ்யம் கிடைக்கிறது.
தாசர் தாசியாக ஆகப் போகிறவர்களுக்கு இந்த அளவு குஷி
இருப்பதில்லை. முழுமையாக மகாவீரர் ஆக வேண்டும். மாயை அசைக்க
முடியாமல் இருக்க வேண்டும்.
கண்கள் மீது மிகுந்த கவனம்
செலுத்த வேண்டும் என்று தந்தை கூறுகிறார். குற்றப் பார்வை
ஏற்படக் கூடாது. பெண்ணை பார்ப்பதால் சஞ்சலத்தன்மை உடையவர்களாக
ஆகி விடுகிறார்கள். அட, நீங்கள் சகோதர சகோதரி, குமார் குமாரி
ஆவீர்கள் அல்லவா? பிறகு கர்ம இந்திரியங்கள் ஏன் சஞ்சலப்பட
வேண்டும். பெரிய பெரிய லட்சாதிபதி, கோடீசுவரரைக் கூட மாயை
அழித்து விடுகிறது. ஏழைகளைக் கூட மாயை ஒரேயடியாகக் கொன்று
விடுகிறது. பிறகு பாபா நாங்கள் அடி வாங்கினோம் என்று
கூறுகிறார்கள். அட 10 வருடங்களுக்குப் பிறகும் தோல்வி அடைந்து
விட்டீர்களா? இப்பொழுதோ பாதாளத்தில் விழுந்து விட்டீர்கள்.
இவருடைய நிலை எப்படி இருக்கிறது என்பதை உள்ளுக்குள்
புரிந்துள்ளார்கள். ஒரு சிலரோ மிகவும் நன்றாக சேவை
செய்கிறார்கள். கன்னியர்கள் கூட பீஷ்ம பிதாமகர் ஆகியோர் மீது
அம்பு எய்திருக்கிறார்கள் அல்லவா? கீதையில் கொஞ்ச நஞ்சம்
இருக்கிறது. இது இருப்பதே பகவானுவாச (பகவானின் கூற்று). ஒரு
வேளை கிருஷ்ண பகவான் கீதை கூறி இருந்தார் என்றால் பின் நான்
யாராக இருக்கிறேன்? எப்படி இருக்கிறேன்? என்பதை யாரோ ஒருவர்
தான் அறிந்துள்ளார்கள் என்று ஏன் கூற வேண்டும். கிருஷ்ணர் இங்கு
இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்களோ தெரியாது.
கிருஷ்ணருடைய சரீரம் இருப்பதே சத்யுகத்தில். கிருஷ்ணருடைய அநேக
ஜன்மங்களின் கடைசி பிறவியின் சரீரத்தில் நான் பிரவேசிக்கிறேன்
என்பதை அறியாமல் உள்ளார்கள். கிருஷ்ணருக்கு முன்னாலோ சட்டென்று
எல்லோரும் ஓடி வந்து விடுவார்கள். போப் ஆகியோர் வருகிறார்கள்
என்றால் எவ்வளவு எவ்வளவு கூட்டம் வந்து சேருகிறது. இச்
சமயத்தில் எல்லோருமே பதீதமாக (தூய்மையற்றவர்களாக) தமோபிரதானமாக
உள்ளார்கள் என்பதை மனிதர்கள் புரிந்துள்ளார்களா என்ன? ஹே பதீத
பாவனரே ! வாருங்கள் என்று கூறவும் செய்கிறார்கள். ஆனால் நாம்
பதீதமாக இருக்கிறோம் என்பதை புரியாமல் உள்ளார்கள்.
குழந்தைகளுக்கு தந்தை எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கிறார்.
பாபாவின் புத்தியோ எல்லா சென்டர்களின் நெருங்கிய குழந்தைகள்
பக்கம் சென்று விடுகிறது. அதிகமான நெருங்கிய குழந்தைகள் இங்கே
வரும் பொழுது பிறகு இங்கே பார்க்கிறேன். இல்லை என்றால் வெளியில்
இருக்கும் குழந்தைகளை நினைவு செய்ய வேண்டி வருகிறது.
அவர்களுக்கு முன்னால் ஞான நடனம் புரிகிறேன். பெரும்பான்மையானோர்
ஞானம் உடைய ஆத்மாக்களாக இருக்கும் பொழுது ஆனந்தமும் ஏற்படுகிறது.
இல்லையென்றால் பெண் குழந்தைகள் மீது எவ்வளவு கொடுமை ஏற்படுகிறது.
கல்ப கல்பமாக சகித்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஞானத்தில் வந்து
விடும் பொழுது பிறகு பக்தியும் விடுபட்டு விடுகிறது.
உதாரணத்திற்கு வீட்டில் கோவில் இருக்கிறது என்று வைத்துக்
கொள்வோம். கணவன் மனைவி இருவரும் பக்தி செய்கிறார்கள். மனைவிக்கு
ஞானத்தில் ஆர்வம் ஏற்பட்டு விடுகிறது மற்றும் பக்தியை விட்டு
விட்டார் என்றால் எவ்வளவு குழப்பம் ஏற்பட்டு விடும் !
விகாரத்திலும் போவதில்லை சாஸ்திரமும் படிப்பதில்லை என்றால்
சண்டை ஏற்படும் அல்லவா? இதில் நிறைய தடைகள் ஏற்படுகின்றன. வேறு
சத்சங்கங்களில் செல்வதற்கு தடுப்பதில்லை. இங்கு தூய்மையின்
விஷயம் உள்ளது. ஆண்களால் இருக்க முடியவில்லை என்றால்,
காட்டிற்குச் சென்று விடுகிறார்கள். பெண்கள் எங்கே செல்வது?
பெண்களுக்கு அவர்கள் நரகத்தின் வாசல் என்று நினைக்கிறார்கள்.
இவர்களோ சொர்க்கத்தின் வாசல் ஆவார்கள் என்று தந்தை கூறுகிறார்.
பெண் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சொர்க்கத்தை ஸ்தாபனை
செய்கிறீர்கள். இதற்கு முன்பு நரகத்தின் வாசலாக இருந்தது.
இப்பொழுது சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆகிறது. சத்யுகம் என்பது
சொர்க்க வாசல். கலியுகம் என்பது நரகத்தின் வாசல். இது புரிந்து
கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் கூட
வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப புரிந்துள்ளீர்கள். தூய்மை யாகவோ
பரமாத்மாவைத் தவிர இந்த விஷயங்களை யாருமே புரிய வைக்க முடியாது.
சந்நியாசிகள் ஆகியோர் ஆத்மாவை பார்க்கிறார்களா என்ன? அவர்களோ
ஆத்மாவை பரமாத்மா என்று நினைக்கிறார்கள். இரண்டாவது, ஆத்மாவில்
பதிவுகள் எதுவும் ஏற்படுவ தில்லை என்கிறார்கள். சரீரத்தைக்
கழுவ கங்கைக்குச் செல்கிறார்கள். ஆத்மா தான் பதீதமாக ஆகிறது
என்பதைப் புரிந்து கொள்வதில்லை. ஆத்மா தான் எல்லாமே செய்கிறது.
தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார் - நான் இன்னார் ஆவேன்,
இவர் இன்னார் ஆவார் என்று நினைக்காதீர்கள். எல்லோரும்
ஆத்மாக்களே. ஜாதி மதம் போன்ற எந்த வேற்றுமையும் இருக்கக் கூடாது.
தன்னை ஆத்மா என்று உணருங்கள். அரசாங்கம் எந்த தர்மத்தையும்
ஏற்றுக் கொள்வதில்லை. இந்த எல்லா தர்மங்களும் தேகத்தினுடையது
ஆகும். ஆனால் அனைத்து ஆத்மாக்களின் தந்தையோ ஒரே ஒருவர் ஆவார்.
பார்ப்பது கூட ஆத்மாவைத் தான் பார்க்க வேண்டும். அனைத்து
ஆத்மாக்களின் சுயதர்மம் சாந்தி ஆகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய்
தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எந்த விஷயம் பயனுள்ளதாக இல்லையோ அதை ஒரு காதில் வாங்கி மறு
காதில் விட்டு விட வேண்டும். கெட்டதை கேட்காதீர்கள் ... தந்தை
என்ன படிப்பினை கொடுக்கின்றாரோ அதை தாரணை செய்ய வேண்டும்.
2. எந்த ஒரு எல்லைக்குட்பட்ட ஆசைகளும் கொள்ளக் கூடாது. கண்கள்
மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். குற்றப் பார்வை பார்க்கக்
கூடாது. எந்த ஒரு கர்ம இந்திரியங்களும் சஞ்சலப்படக் கூடாது.
குஷியில் நிரம்பியவராக இருக்க வேண்டும்.
வரதானம்:
கவனம் என்ற நெய் மூலம் ஆன்மீக
சொரூபம் என்ற நட்சத்திரத்தின் ஜொலிப்பை அதிகப்படுத்தக் கூடிய
கவர்ச்சிக்கும் மூர்த்தி ஆகுக.
எப்போது தந்தையின் மூலம்,
ஞானத்தின் மூலம் ஆன்மீக சொரூபம் என்ற நட்சத்திரம்
ஜொலிக்கப்பட்டு விடுகின்றதோ அதை அணைக்க முடியாது. ஆனால்
ஜொலிப்பின் சதவிகிதம் குறைவாகவும் மற்றும் அதிகமாகவும் ஆகலாம்.
எப்போது தினம் அமிர்த வேளையில் கவனம் என்ற நெய் ஊற்றி கொண்டே
இருந்தீர்கள் என்றால் இந்த நட்சத்திரம் எப்போதும் ஜொலிக்கும்
அனைவரையும் கவர்ச்சிக்கும் எப்படி தீபத்தில் நெய் ஊற்றும் போது
ஒரே மாதிரியாக எரிந்து கொண்டே இருக்கும். அதே போன்று முழுமையான
கவனம் கொடுப்பது என்றால் தந்தையின் அனைத்து குணங்கள் மற்றும்
சக்திகளை தனக்குள் தாரணை செய்யுங்கள். இந்த கவனத்தின் மூலம்
கவர்ச்சிக்கும் மூர்த்திகளாக ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
எல்லையற்ற வைராக்கிய எண்ணத்தின்
மூலம் சாதனை என்ற விதையை வெளிப்படுத்துங்கள்.
ஓம்சாந்தி