30.12.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! சத்தியமான தந்தையின் மூலம் சங்கம யுகத்தில் உங்களுக்கு சத்தியத்தின் வரதானம் கிடைக்கிறது, ஆகையால் நீங்கள் ஒருபோதும் பொய் சொல்ல முடியாது.

 

கேள்வி:

விகாரமற்றவர்களாக ஆவதற்காக குழந்தைகளாகிய நீங்கள் என்ன முயற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும்?

 

பதில்:

ஆத்ம-அபிமானி ஆவதற்கான முயற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும். புருவ மத்தியில் ஆத்மாவை மட்டுமே பார்க்கக் கூடிய பயிற்சி செய்யுங்கள். ஆத்மா ஆகி ஆத்மாவிடம் பேசுங்கள், ஆத்மா ஆகி கேளுங்கள். தேகத்தின் மீது பார்வை போகக் கூடாது - இதுவே முக்கியமான முயற்சி ஆகும், இந்த முயற்சியில்தான் தடைகள் ஏற்படுகின்றன. முடிந்தவரை இந்த பயிற்சியைச் செய்யுங்கள் - நான் ஆத்மா, நான் ஆத்மா. . .

 

பாடல்: ஓம் நம: சிவாய. . .

 

ஓம் சாந்தி.

இனிமையான குழந்தைளுக்கு தந்தை சிருஷ்டியின் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்ற நினைவினைக் கொடுத்திருக்கிறார். நாம் தந்தையிடமிருந்து தெரிந்து கொண்டவையும், தந்தை சொன்ன வழியும் உலகில் யாருக்கும் தெரியாது. நீங்கள்தான் பூஜைக்குரியவர்கள், நீங்கள்தான் பூஜாரிகள் என்பதன் அர்த்தமும் கூட உங்களுக்குப் புரிய வைத்திருக்கிறார், யார் பூஜைக்குரியவர்களாக உலகின் எஜமானாக ஆகின்றனரோ, அவர்களே பிறகு பூஜாரிகள் ஆகின்றனர். பரமாத்மாவைக் குறித்து இப்படி சொல்லமாட்டார்கள். இப்போது உங்களுக்கு இது சரியான விசயம் என்பது நினைவில் வந்துள்ளது. சிருஷ்டியின் முதல் இடை கடைசியின் செய்தியை தந்தைதான் சொல்கிறார், வேறு யாரும் ஞானக் கடல் என சொல்லப்படுவதில்லை. இந்த மகிமை ஸ்ரீகிருஷ்ணருடையது அல்ல. கிருஷ்ணர் எனும் பெயர் சரீரத்தினுடையது அல்லவா. அவர் சரீரதாரி ஆவார், அவருக்குள் முழு ஞானமும் இருக்க முடியாது. இப்போது அவருடைய ஆத்மா ஞானத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இது அதிசயமான விசயமாகும். தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இப்படியே பல சாது சன்னியாசிகள், பலவிதமான ஹடயோகம் முதலான வைகளைக் கற்றுத்தந்தபடி இருக்கின்றனர். அவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும். சத்யுகத் தில் நீங்கள் யாருடைய பூஜையும் செய்வதில்லை. அங்கே நீங்கள் பூஜாரியாக ஆவதில்லை. இவரும் (பிரம்மா பாபா) கூட பூஜை செய்து கொண்டிருந்தார் அல்லவா. முழு உலகமும் இந்த சமயத்தில் பூஜாரியாக உள்ளது. புதிய உலகத்தில் ஒரே பூஜைக்குரிய தேவி தேவதா தர்மம் இருக்கும். நாடகத்தின் திட்டப்படி இது முற்றிலும் சரி என்பது குழந்தைகளுக்கு நினைவில் வந்துள்ளது. கீதையின் உண்மை கதை என்பது சரியாக உள்ளது. கீதையில் பெயர் மட்டும் மாற்றி விட்டனர். இதைப் புரிய வைப்பதற்காகத்தான் நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். 2500 வருடங்களாக கீதை கிருஷ்ணருடையது என புரிந்து வந்துள்ளனர். இப்போது ஒரு பிறவியில் கீதையை நிராகார பகவான் சொன்னார் என்பதைப் புரிந்து கொள்ள நேரம் பிடிக்கும் அல்லவா. பக்தியைப் பற்றியும் புரிய வைத்துள்ளார், மரம் எவ்வளவு உயரமாக, விரிவாக வளர்ந்துள்ளது. தந்தை எங்களுக்கு ராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என நீங்கள் எழுத முடியும். எந்த குழந்தைகளுக்கு நிச்சயம் ஏற்பட்டு விடுகிறதோ அவர்கள் நிச்சயத்துடன் புரியவும் வைக்கின்றனர். நிச்சயம் இல்லாவிட்டால் குழம்பியபடி இருக்கின்றனர் - எப்படி புரிய வைப்பது, ஏதும் கலவரம் நடக்காதுதானே. . . இன்னும் பயமற்றவராக ஆக வில்லையல்லவா. முழுமையாக ஆத்ம அபிமானி ஆகிவிடும்போது பயமற்றவர்களாக ஆவார்கள், பயப்படுவது என்பது பக்தி மார்க்கத்தில் நடக்கிறது. நீங்கள் அனைவரும் மஹா வீரர்கள். மாயையின் மீது எப்படி வெற்றி கொள்ளப்படுகிறது என்பது உலகில் யாருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது நினைவில் வந்துள்ளது. முன்னரும் கூட தந்தை மன்மனாபவ என சொல்லியிருக்கிறார். பதீத-பாவன தந்தை தான் வந்து இதைப் புரிய வைக்கிறார், கீதையில் வார்த்தை உள்ளது, ஆனால் இப்படி யாரும் புரிய வைப்பதில்லை. குழந்தைகளே, ஆத்ம அபிமானி ஆகுக என தந்தை சொல்கிறார். கீதையில் வார்த்தை உள்ளதல்லவா - மாவில் உப்பு போல. அனைத்து விசயங்கள் குறித்தும் தந்தை நம்பிக்கையைக் கொடுக்கிறார். நிச்சய புத்தியுள்ளவர்கள் வெற்றியடைகின்றனர்.

 

நீங்கள் இப்போது தந்தையிடம் ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இல்லற விஷயங்களிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என தந்தை சொல்கிறார். அனைவரும் இங்கே வந்து உட்கார்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. சேவை செய்ய வேண்டும், செண்டர்களைத் திறக்க வேண்டும். நீங்கள் மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள். ஈஸ்வரிய மிஷன் அல்லவா. முதலில் சூத்திரர்களின் மாயாவி மிஷனைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள், இப்போது நீங்கள் ஈஸ்வரிய மிஷனைச் சேர்ந்தவர்களாக ஆகியுள்ளீர்கள். உங்களுக்கு அதிகமான மகத்துவம் உள்ளது. இந்த லட்சுமி நாராயணருக்கு என்ன மகிமை உள்ளது. எப்படி ராஜாக்கள் இருக்கின்றனரோ அப்படி இராஜ்யம் செய்கின்றனர். மற்றபடி இவர்களை அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்கள், உலகின் எஜமானர் என சொல்வார்கள், ஏனெனில் அந்த சமயத்தில் வேறெந்த இராஜ்யமும் இருப்பதில்லை. உலகின் எஜமானராக எப்படி ஆகலாம் என்பதை குழந்தைகள் இப்போது புரிந்து கொண்டு விட்டனர். இப்போது நாமே தேவதைகள் என ஆகின்றனர், பிறகு அவர்கள் எப்படி தலை வணங்க முடியும். நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாக ஆகி விட்டீர்கள், யாருக்கு ஞானம் இல்லையோ அவர்கள் தலை வணங்கியபடி இருக்கின்றனர். நீங்கள் அனைவரின் தொழிலையும் குறித்து இப்போது தெரிந்து கொண்டு விட்டீர்கள். படங்கள் எவை சரியானவை, எவை தவறானவை என்பதையும் கூட நீங்கள் புரிய வைக்க முடியும். இராவண இராஜ்யத்தைப் பற்றியும் நீங்கள் புரிய வைக்கிறீர்கள். இது இராவண இராஜ்யம், இதில் தீப்பற்றிக் கொண்டிருக்கிறது. வைக்கோலுக்கு தீ பற்றப் போகிறது, உலகம் வைக்கோல் போர் என சொல்லப்படுகிறது. பாடப்படுகிற வார்த்தைகள் பற்றி புரிய வைக்கப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் பல படங்களை உருவாக்கியுள்ளனர். உண்மையில் சிவபாபாவின் பூஜை முதலில் நடக்கிறது, பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கு. திரிமூர்த்தியை உருவாக்குகின்றனர், அது சரியாக உள்ளது, பிறகு இந்த லட்சுமி நாராயணர், அவ்வளவு தான். திரிமூர்த்தியில் பிரம்மா, சரஸ்வதி வந்து விடுகின்றனர். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு படங்களை உருவாக்குகின்றனர். அனுமானுக்கும் பூஜை செய்கின்றனர். நீங்கள் மஹாவீர் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. கோவில்களிலும் கூட சிலரை யானை மீது (சவாரியாக) செய்பவராகவும் சிலரை குதிரையின் மீதும் காட்டுகின்றனர். இப்போது அப்படிப்பட்ட சவாரி செய்வது எதுவும் கிடையாது. மஹாரதி என்று தந்தை சொல்கிறார். மஹாரதி என்றால் யானை மீது சவாரி செய்வது. அவர்கள் பிறகு யானையை நடத்துபவராக காட்டி விட்டனர். எப்படி யானையை முதலை சாப்பிட்டது என்பதையும் புரிய வைத்துள்ளார். மஹாரதிகளையும் சில சமயம் மாயை எனும் முதலை விழுங்கி விடுகிறது என தந்தை புரிய வைக்கிறார். உங்களுக்கு இப்போது ஞானத்தின் விழிப்புணர்வு வந்துள்ளது. நல்ல நல்ல மஹாரதிகளையும் கூட மாயை தின்று விடுகிறது. இவை ஞானத்தின் விசயங்களாகும், இதனை யாரும் வர்ணிக்க இயலாது. விகாரமற்றவராக ஆகவேண்டும், தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும் என தந்தை சொல்கிறார். ஒவ்வொரு கல்பமும் தந்தை சொல்கிறார் - காமம் மிகப் பெரிய எதிரி. இதில் தான் உழைப்பு தேவை. இதன் மீது நீங்கள் வெற்றியடைகிறீர்கள். பிரஜாபிதாவுடையவராக ஆகும்போது சகோதரன் - சகோதரி ஆகிவிட்டீர்கள். உண்மையில் நீங்கள் ஆத்மாக்கள். ஆத்மா, ஆத்மாவிடம் பேசுகிறது. ஆத்மாதான் இந்த காதுகளின் மூலம் கேட்கிறது, இதை நினைவில் கொள்ள வேண்டும். நான் ஆத்மாவுக்கு சொல்கிறேன், தேகத்துக்கு அல்ல. உண்மையில் ஆத்மாக்களாகிய நாம் சகோதரன்-சகோதரன் ஆவோம் பிறகு ஒருவருக்கொருவர் சகோதரன்- சகோதரியாகவும் இருக்கிறோம். ஆத்மாவுக்குச் சொல்ல வேண்டும். திருஷ்டி ஆத்மாவின் பக்கம் செல்ல வேண்டும். நான் சகோதரனுக்குச் சொல் கிறேன். சகோதரனே, கேட்கிறீர்களா? ஆம் ஆத்மாவாகிய நான் கேட்கிறேன். பிகானேர் எனும் ஊரில் ஒரு குழந்தை உள்ளது, அது எப்போதும் ஆத்மா ஆத்மா என்றே எழுதுகிறது. என்னுடைய ஆத்மா இந்த சரீரத்தின் மூலம் எழுதிக் கொண்டிருக்கிறது. ஆத்மாவாகிய என்னுடைய கருத்து இது. என்னுடைய ஆத்மா இதை செய்து கொண்டிருக்கிறது. ஆக இந்த ஆத்மாபிமானி ஆவது என்பது முயற்சிக்க வேண்டிய விசயம் அல்லவா. என்னுடைய ஆத்மா நமஸ்காரம் செய்கிறது. பாபா சொல்வது போல - ஆன்மிக குழந்தைகளே! புருவத்தின் மத்தியை பார்க்க வேண்டும். ஆத்மா தான் கேட்பது, ஆத்மாவுக்கு நான் சொல்கிறேன். உங்கள் பார்வை ஆத்மாவின் பக்கம் செல்ல வேண்டும். ஆத்மா புருவ மத்தியில் உள்ளது. சரீரத்தின் மீது பார்வை விழும்போது தடைகள் வரும். ஆத்மாவிடம் பேச வேண்டும். ஆத்மா வைத்தான் பார்க்க வேண்டும். தேக அபிமானத்தை விடுங்கள். தந்தையும் கூட இங்கே (மதுபன்னில் பிரம்மாவின்) புருவ மத்தியில் அமர்ந்திருக்கிறார் என ஆத்மாவுக்குத் தெரியும். அவருக்கு நாம் நமஸ்காரம் செய்கிறோம். நான் ஆத்மா, ஆத்மாதான் கேட்கிறது என்ற இந்த ஞானம் புத்தியில் உள்ளது. இந்த ஞானம் முன்னர் இருக்கவில்லை. இந்த தேகம் நடிப்பை நடிப்பதற்காக கிடைத்துள்ளது, எனவே தேகத்திற்குத்தான் பெயர் வைக்கப்படுகிறது. இந்த சமயத்தில் நீங்கள் ஆத்ம-அபிமானி ஆகி திரும்பிச் செல்ல வேண்டும். இந்த பெயர் நடிப்பை நடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. பெயர் இல்லாமல் வேலை காரியங்கள் நடக்காது. அங்கும் கூட வேலை காரியங்கள் நடக்கும் அல்லவா. ஆனால் நீங்கள் சதோபிரதானமாக ஆகி விடுகிறீர்கள், அதனால் எந்த பாவ கர்மங்களும் நடக்காது. பாவ கர்மம் ஆகக் கூடிய எந்த கர்மங்களும் நீங்கள் செய்யப் போவதில்லை. மாயையின் இராஜ்யம் இல்லை. ஆத்மாக் களாகிய நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என இப்போது தந்தை சொல்கிறார். இவை பழைய சரீரங்களாகும், பிறகு சத்யுகம்-திரேதா யுகத்திற்குச் செல்வீர்கள். அங்கே ஞானத்தின் அவசியம் கிடையாது. இங்கே உங்களுக்கு ஏன் ஞானத்தைக் கொடுக்கிறார்? ஏனெனில் துர்க்கதியை அடைந்துள்ளீர்கள். கர்மம் அங்கும் கூட செய்யவே வேண்டும், ஆனால் அது அகர்மம் (எதிர் விளைவே இல்லாமல்) ஆகி விடும். இப்போது தந்தை சொல்கிறார் - கை வேலை செய்யட்டும். . . ஆத்மா தந்தையை நினைவு செய்கிறது. சத்யுகத்தில் நீங்கள் தூய்மையாக இருக்கிறீர்கள், எனவே அனைத்து வேலை காரியங்களும் தூய்மையாக ஆகிறது. தமோபிரதான இராவண இராஜ்யத்தில் உங்களுடைய வேலை காரியங்கள் கெட்டதாக ஆகி விடுகிறது, ஆகையால் மனிதர்கள் தீர்த்த யாத்திரை முதலானவைகளுக்குச் செல்கின்றனர். சத்யுகத்தில் தீர்த்த யாத்திரை செல்ல வேண்டியவாறு யாரும் பாவம் செய்வதில்லை, அங்கே நீங்கள் செய்யக் கூடிய காரியங்கள் சத்தியமானவையாகத்தான் செய்வீர்கள். சத்தியத்தின் வரதானம் கிடைத்து விட்டுள்ளது. விகாரத்தின் விசயமே இருக்காது. வேலை காரியங்களிலும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இங்கேயோ பேராசை இருப்பதால் மனிதர்கள் திருட்டு, ஏமாற்று வேலைகளைச் செய்கின்றனர், அங்கே இந்த விசயங்கள் இருப்பதில்லை. நாடகத்தின்படி நீங்கள் இப்படிப்பட்ட மலர்களாக ஆகி விடுகிறீர்கள். அது விகாரமேயற்ற உலகமாகும், இது விகாரமிக்க உலகமாகும். முழு விளையாட்டும் புத்தியில் உள்ளது. இந்த சமயத்தில் தான் தூய்மையடைவதற்காக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. யோகபலத்தின் மூலம் நீங்கள் உலகத்தின் எஜமானர் ஆகிறீர்கள், யோகபலம் முக்கியமானது. பக்தி மார்க்கத்தில் யக்ஞம், தபஸ் முதலானவற்றின் மூலம் யாரும் என்னை அடைவதில்லை. சதோ-ரஜோ- தமோவில் செல்லத்தான் வேண்டும். ஞானம் மிகவும் சகஜமானது மற்றும் சுவாரஸ்யமானது, முயற்சியும் உள்ளது. இந்த யோகத்திற்குத்தான் மகிமை உள்ளது, இதன் மூலம் நீங்கள் சதோபிரதானமாக ஆக வேண்டும். தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆவதற்கு தந்தைதான் வழி காட்டுகிறார். வேறு யாரும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. சிலர் சந்திரனுக்கே செல்லலாம், சிலர் நீரில் நடந்து செல்லலாம், ஆனால் அது ஏதும் இராஜயோகம் அல்ல. நரனிலிருந்து நாராயணனாக ஆக முடியாது. நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தவர்களாக இருந்தோம், மீண்டும் இப்போது ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை இங்கே நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஞாபகம் வந்துள்ளது. தந்தை கல்பத்திற்கு முன்பும் கூட இதைப் புரிய வைத்திருக்கிறார். தந்தை சொல்கிறார்: நிச்சய புத்தி விஜயந்தி (வெற்றியாளர்). நிச்சயம் இல்லாவிட்டால் அவர்கள் கேட்கவே வரமாட்டார்கள். நிச்சயபுத்தியுள்ளவராயிருந்து பிறகு சந்தேக புத்தியுள்ளவராகவும் ஆகி விடுகின்றனர். நிறைய நல்ல நல்ல மஹாரதிகளும் கூட சந்தேகத்தில் வந்து விடுகின்றனர். மாயையின் கொஞ்சம் புயல் காற்று வீசினாலும் கூட தேக அபிமானம் வந்து விடுகிறது.

 

இந்த பாப்தாதா இருவரும் இணைந்து இருக்கின்றனர் அல்லவா. சிவபாபா ஞானம் கொடுக்கிறார், பிறகு சென்றுவிடுகிறாரா அல்லது என்ன நடக்கிறது, யார் சொல்வது? நீங்கள் எப்போதும் இருப்பீர்களா அல்லது சென்று விடுகிறீர்களா? என பாபாவிடம் கேட்டார்கள். தந்தையிடம் இதைக் கேட்க முடியாதல்லவா? நான் உங்களுக்கு தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராவதற்கான வழி காட்டுகிறேன் என தந்தை சொல்கிறார். நான் வருவேன், போவேன், எனக்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கும். குழந்தைகளிடமும் செல்கிறேன், அவர்கள் மூலம் காரியங்கள் செய்விக்கிறேன். இதில் சந்தேகத்தின் விஷயம் எதுவும் கொண்டுவர வேண்டாம். உங்களுடைய வேலை - தந்தையை நினைவு செய்வது. சந்தேகத்தில் வந்தால் விழுந்து விடுகின்றனர். மாயை பலமாக அடி கொடுத்து விடுகிறது. பல பிறவிகளின் கடைசி பிறவியிலும் கடைசி காலத்தில் நான் இவருக்குள் வருகிறேன் என தந்தை சொல்லியிருக்கிறார். தந்தைதான் நமக்கு இந்த ஞானத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு உள்ளது. பிறகும் கூட இந்த நம்பிக்கையிலிருந்து எவ்வளவு பேர் விழுந்து (மாறி சென்று) விடுகின்றனர், தந்தை இதை அறிவார். நீங்கள் தூய்மையடைய வேண்டும் என்றால் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், வேறு எந்த விசயங்களிலும் சென்று விழ வேண்டாம். நீங்கள் இப்படிப்பட்ட விசயங்களைப் பேசினீர்கள் என்றால் உறுதியான நம்பிக்கை இல்லை என புரிந்து விடுகிறது. முதலில் உங்களுடைய பாவம் நாசமாகக் கூடிய ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ளுங்கள், மற்ற பயனற்ற விசயங் களைப் பேச வேண்டியதில்லை. தந்தையின் நினைவின் மூலம் பாவ கர்மங்கள் அழிகின்றன, பிறகு மற்ற விசயங்களில் ஏன் வருகிறீர்கள்? யாராவது ஏதேனும் கேள்வி-பதில்களில் குழப்ப மடைவதைப் பார்த்தீர்கள் என்றால் அவர்களுக்குச் சொல்லுங்கள் - நீங்கள் இந்த விசயங்களை விடுத்து ஒரு தந்தையின் நினைவில் இருக்கக் கூடிய முயற்சி செய்யுங்கள். சந்தேகத்தில் வந்தால் படிப்பையே விட்டு விடுவார்கள், பிறகு நன்மையே ஏற்படாது. நாடி பார்த்து புரிய வைக்க வேண்டும். சந்தேகத்தில் இருந்தால் ஒரு விசயத்தில் நிலைக்கச் செய்ய வேண்டும். மிக யுக்தியுடன் புரிய வைக்க வேண்டியுள்ளது. குழந்தைகளுக்கு முதலில் இந்த நிச்சயம் இருக்க வேண்டும் - பாபா வந்துள்ளார், நம்மை தூய்மையாக்கிக் கொண்டிருக்கிறார் என்ற நிச்சயம் குழந்தைகளுக்கு முதலில் இருக்க வேண்டும். இந்த குஷி இருக்கிறது. படிக்கவில்லை என்றால் தேர்ச்சி அடைய மாட்டார்கள், அவர்களுக்கு குஷியும் கூட எப்படி வரும்? பள்ளியில் படிப்பும் கூட ஒன்றுதான் இருக்கும். பிறகு சிலர் படித்து இலட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், சிலர் 5-10 ரூபாயும் சம்பாதிக்கின்றனர். உங்களின் இலட்சியமே லட்சுமி நாராயணன் ஆவதாகும். இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் மனிதரிலிருந்து தேவதை ஆகப்போகிறீர்கள். தேவதைகளின் இராஜ்யம் மிகப் பெரியது. அதில் உயர் பதவி அடைவது என்பது படிப்பு மற்றும் நடத்தையில் உள்ளது. உங்களுடைய நடவடிக்கைகள் மிகவும் நன்றாக இருக்க வேண்டும். (பிரம்மா) பாபா தன்னைப் பற்றிச் சொல்கிறார் - இன்னும் கர்மங்களை வென்ற (கர்மாதீத்) நிலை உருவாகவில்லை. நானும் கூட சம்பூரணமாக வேண்டும், இன்னும் ஆகவில்லை. ஞானம் மிகவும் சகஜமானதே. தந்தையை நினைவு செய்வதும் கூட சகஜமானதுதான், ஆனால் நினைவு செய்தால்தானே. நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்

1. எந்த ஒரு விஷயத்திலும் சந்தேக புத்தி கொண்டு படிப்பை விடக் கூடாது. முதலில் தூய்மையடைவதற்காக ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும், மற்ற விஷயங்களில் செல்லக் கூடாது.

 

2. சரீரத்தின் மீது பார்வை செல்லும்போது தான் தடைகள் வருகின்றன, ஆகையால் புருவ மத்தியைப் பார்க்க வேண்டும். ஆத்மா எனப் புரிந்து கொண்டு ஆத்மாவிடம் பேச வேண்டும். ஆத்மாபிமானி ஆக வேண்டும். பயமற்றவராகி சேவை செய்ய வேண்டும்.

 

வரதானம் :

திட சங்கல்பத்தின் மூலம் பலவீனங்கள் என்ற கலியுக மலையை அழித்துவிடக் கூடிய சக்தி சொரூபம் ஆகுக!

 

மனமுடைந்து போவது, எந்த ஒரு சம்ஸ்காரம் அல்லது சூழ்நிலையின் வசம் ஆவது, மனிதர் அல்லது ஆடம்பரத்தின் பக்கமாகக் கவர்ந்திழுக்கப்படுவது - இந்த அனைத்து பல வீனங்கள் என்ற கலியுக மலையை திட சங்கல்பம் என்ற கைவிரல் கொடுத்து, சதா காலத்திற்காக அழித்து விடுங்கள். அதாவது வெற்றியாளர் ஆகுங்கள். வெற்றி என்பது நமது கழுத்தின் மாலை ஆகும். சதா இந்த நினைவின் மூலம் சக்தி சொரூபம் ஆகுங்கள். இது தான் அன்பிற்கான பிரதிபலன் ஆகும். எப்படி சாகார் பிரம்மா பாபா ஸ்திதியின் தூணாக ஆகிக் காட்டினாரோ, அது போல் தந்தையைப் பின்பற்றி அனைத்து குணங்களின் தூண்கள் ஆகுங்கள்.

 

சுலோகன்:

சாதனங்கள் சேவைக்காக உள்ளன, ஓய்வுப் பிரியராக ஆவதற்காக அல்ல.

 

ஓம்சாந்தி