23.12.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த
தூய்மையற்ற உலகம் (பதீதமான) ஒரு பழைய கிராமம் ஆகும். இது
நீங்கள் வசிக்கத் தகுதியற்றது. நீங்கள் இப்போது புதிய
தூய்மையான (பாவனமான) உலகத்திற்குச் செல்ல வேண்டும்.
கேள்வி:
தந்தை தன் குழந்தைகளின்
முன்னேற்றத்திற்காக எந்த ஒரு உதவி குறிப்பை (யுக்தியை)
சொல்கிறார்?
பதில்:
குழந்தைகளே, நீங்கள் கட்டளைக்கு
கீழ்ப்படிந்தவர்களாகி தந்தையின் வழிப்படி நடந்தபடி இருங்கள்.
பாப்தாதா இருவரும் ஒன்றாக இருக்கின்றனர், ஆகையால் ஒருவேளை இவர்
(பிரம்மா பாபா) சொல்வதினால் ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் கூட தந்தை
அதற்கு பொறுப்பாவார், அனைத்தையும் சரி செய்து விடுவார். நீங்கள்
உங்களுடைய வழிப்படி நடந்து கொள்ள வேண்டாம், சிவபாபாவின் வழி என
புரிந்து கொண்டு நடந்து கொண்டிருந்தீர்கள் என்றால் மிகவும்
முன்னேற்றம் ஏற்படும்.
ஓம் சாந்தி.
முதன் முதல் முக்கியமான விஷயம்
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைக்கிறார் -
தன்னை ஆத்மா என நிச்சயப்படுத்திக் கொண்டு அமர்ந்து தந்தையை
நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய அனைத்து துக்கமும் நீங்கி
விடும். அந்த மனிதர்கள் ஆசீர்வாதம் செய்கின்றனர் அல்லவா. இந்த
தந்தையும் சொல்கிறார் - குழந்தைகளே, உங்களுடைய துக்கம்
அனைத்தும் தூரமாகப் போய் விடும். தன்னை ஆத்மா என புரிந்து
கொண்டு தந்தையை நினைவு மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சகஜ
மாகும். இது பாரதத்தின் பழமையான சகஜ இராஜயோகமாகும். பழமை
என்பதற்கு நேரம் (கால அளவு) தேவை அல்லவா. நீண்ட நீண்ட
காலத்திற்கு முன்பு என்றால் எவ்வளவு காலம்? முழுமையாக 5 ஆயிரம்
வருடங்களுக்கு முன்பு இந்த இராஜயோகத்தைக் கற்றுக் கொடுத் தேன்
என தந்தை புரிய வைக்கிறார். இதை தந்தையைத் தவிர வேறு யாரும்
புரிய வைக்க முடியாது, மேலும் குழந்தைகளைத் தவிர வேறு யாரும்
புரிந்து கொள்ள முடியாது. ஆத்மாக் களாகிய குழந்தைகளும் பரமாத்ம
தந்தையும் வெகு காலம் பிரிந்திருந்தனர் என பாடலும் உள்ளது.
நீங்கள் ஏணியில் இறங்கி இறங்கி தூய்மையற்றவர்களாகி விட்டீர்கள்
என தந்தை தான் சொல்கிறார். இப்போது நினைவு வந்துள்ளது. ஓ பதித
பாவனா என அனைவரும் கதறுகின்றனர். கலியுகத்தில் தூய்மை
இல்லாதவர்கள்தான் உள்ளனர். சத்யுகத்தில் தூய்மை யானவர்கள்
இருப்பார்கள். அதுவே தூய்மையான உலகமாகும். இந்த பழைய தூய்மை
இல்லாத உலகம் வசிக்கத் தகுந்த இடமல்ல. ஆனால் மாயையின் தாக்கமும்
குறைவானதல்ல. இங்கே பாருங்கள் 100-125 மாடிகள் கொண்ட பெரிய
பெரிய வீடுகளைக் கட்டியபடி இருக்கின்றனர். இது மாயையின் பகட்டு
என சொல்லப்படுகிறது. சொர்க்கத்திற்கு வாருங்கள் என்றால்
எங்களுக்கு இதுவே சொர்க்கம் என சொல்லிவிடுகின்றனர், மாயையின்
ஜாலம் அப்படிப்பட்டதாக உள்ளது. இது மாயையின் ஜாலம் என
சொல்லப்படுகிறது. ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள் - இது
பழைய கிராமமாகியுள்ளது, இது நரகம் என சொல்லப்படுகிறது, பழைய
உலகம், இதுவே கொடுமையான நரகம். சத்யுகத்திற்குத்தான் சொர்க்கம்
என சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை உள்ளதல்லவா. இது விஷம்
நிறைந்த உலகம் என அனைவருமே சொல்வார்கள். இந்த சொர்க்கமே
நிர்விகாரி உலகமாக இருந்தது. சொர்க்கம் நிர்விகாரி உலகம்
என்றுதான் சொல்லப்படுகிறது, நரகம் விஷமான உலகம் எனப் படுகிறது.
இவ்வளவு சகஜமான விஷயம் கூட ஏன் யாருடைய புத்தியிலும் வருவதில்லை?
மனிதர்கள் எவ்வளவு துக்கமிக்கவர்களாக உள்ளனர். எவ்வளவு சண்டை
சச்சரவுகள் நடந்தபடி இருக்கின்றன. நாளுக்கு நாள், அணுகுண்டு
போட்ட உடனேயே மனிதர்கள் அழிந்து போகும் அளவு (சக்தி வாய்ந்த)
அணுகுண்டு முதலானவைகளை உருவாக்கியபடி இருக்கின்றனர். ஆனாலும்
இன்னும் என்னவெல்லாம் நடக்கவுள்ளது என துச்ச புத்தியுள்ள
மனிதர்கள் புரிந்துக் கொள்வதில்லை. என்ன நடக்கவுள்ளது என்ற
விஷயங்களை தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது.
பழைய உலகின் வினாசம் ஏற்படவுள்ளது மற்றும் புதிய உலகின்
ஸ்தாபனையும் குப்தமாக நடந்து கொண்டிருக்கிறது.
குழந்தைகளாகிய நீங்கள் குப்தமான போராளிகள் என்றே
சொல்லப்படுகிறீர்கள். நீங்கள் சண்டை போட்டுக்
கொண்டிருக்கிறீர்கள் என யாராவது புரிந்து கொள்கிறார்களா என்ன?
உங்களின் சண்டையே 5 விகாரங்களுடன். தூய்மையடையுங்கள் என
அனைவருக்கும் சொல்கிறீர்கள். ஒரு தந்தையின் குழந்தைகளாக
இருக்கிறீர்கள் அல்லவா. பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள்
அனைவரும் சகோதர-சகோதரிகளாகியுள்ளனர் அல்லவா. புரிய வைப்பதற்கு
மிகவும் யுக்திகள் தேவை. பிரஜாபிதா பிரம்மாவுக்கு அளவற்ற
குழந்தைகள் உள்ளனர், ஒருவர் அல்ல. பெயரே பிரஜாபிதா ஆகும்.
லௌகிக தந்தையை ஒருபோதும் பிரஜாபிதா என்று சொல்ல மாட்டார்கள்.
பிரஜாபிதா பிரம்மா எனும்போது அவருடைய அனைத்து குழந்தைகளும்
தங்களுக்குள் சகோதர- சகோதரிகள், பிரம்மாகுமார்-குமாரிகளாக
உள்ளனர் அல்லவா. ஆனால் புரிந்து கொள்வதில்லை - கல் புத்தி போல,
புரிந்து கொள்ள முயற்சியும் கூட செய்வதில்லை. பிரஜாபிதா
பிரம்மாவின் குழந்தைகள் சகோதரன்- சகோதரிகளாக ஆகி விட்டனர்.
விகாரத்தில் செல்ல முடியாது. உங்களின் பெயர்ப் பலகையிலும் கூட
பிரஜாபிதா எனும் வார்த்தை மிகவும் அவசியமாகும். இந்த
வார்த்தையை கண்டிப்பாகப் போட வேண்டும். வெறுமனே பிரம்மா என
எழுதுவதால் அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆக, பெயர்ப்
பலகையிலும் கூட சரியான வார்த்தையை எழுதி திருத்தம் செய்ய
வேண்டும். இது மிகவும் அவசியமான வார்த்தையாகும். பிரம்மா எனும்
பெயர் பெண் களுடையதாகவும் உள்ளது. பெயரே கிடைக்கவில்லை என்றால்
ஆண் பெயரை பெண்ணுக்கு வைத்து விடுகின்றனர். இவ்வளவு பெயர்களை
எங்கிருந்து கொண்டு வந்தனர்? நாடகத்தின் திட்டப்படிதான்
அனைத்தும் உள்ளது. தந்தைக்கு உண்மையானவர்களாக, கட்டளைக்கு
கீழ்ப்படிந்தவர்களாக ஆவது என்பது சித்தி வீடு போல் அல்ல. தந்தை
மற்றும் தாதா ஒன்றாக உள்ளனர் அல்லவா. இவர் யார் என புரிந்து
கொள்ள முடிவ தில்லை. ஆக, என்னுடைய கட்டளையைக் கூட புரிந்து
கொள்ள முடிவதில்லை என சிவபாபா சொல்கிறார். தலை கீழாக
சொன்னாலும், சரியாகச் சொன்னாலும் சிவபாபா சொன்னார் என நீங்கள்
புரிந்து கொண்டீர்கள் என்றால் அவர் (சிவபாபா) பொறுப்பாளியாக
ஆகி விடுகிறார். இவர் (பிரம்மா பாபா) சொல்லி நஷ்டம் ஏற்பட்டு
விட்டாலும் கூட அவர் பொறுப்பானவராக இருக்கும்போது அவர்
அனைத்தையும் சரி செய்து விடுவார். சிவபாபாவுடைய வழி என
புரிந்து கொண்டபடி இருந்தீர்கள் என்றால் மிகவும் முன்னேற்றம்
ஏற்படும். ஆனால் புரிந்து கொள்வதே கடினமாகிறது. சிலர் பிறகு
தன் வழியில் நடந்தபடி இருக்கின்றனர். தந்தை குழந்தைகளாகிய
உங்களுக்கு வழி கொடுப்பதற் காகவும், புரிய வைப்பதற்காகவும்
எவ்வளவு தூரத்திலிருந்து வருகிறார். வேறு யாரிடமும் இந்த
ஆன்மீக ஞானம் இல்லை. முழு நாளும் இந்த சிந்தனை செய்தபடி இருக்க
வேண்டும் - மனிதர்கள் புரிந்து கொள்ளும்படியாக என்ன எழுதலாம்?
இப்படி இப்படியாக நேரான வார்த்தைகள் மனிதர்களின் பார்வையில்
படுமாறு எழுத வேண்டும். நீங்கள் மற்றவர்கள் கேள்வியே கேட்க
முடியாத அளவு புரிய வையுங்கள். சொல்லுங்கள் - தன்னை ஆத்மா என
புரிந்து கொண்டு என்னை நினைவு செய்தீர்கள் என்றால் அனைத்து
துக்கங்களும் தூரமாகி விடும் என தந்தை சொல்கிறார். யார் நல்ல
விதமாக நினைவில் இருப்பார்களோ அவர்கள் தான் உயர்ந்த பதவியை
அடைவார்கள். இது ஒரு வினாடியின் விசயமாகும். மனிதர்கள்
என்னென்ன வெல்லாம் கேட்டபடி இருக்கிறார்கள் - நீங்கள் எதுவும்
சொல்லாதீர்கள். அதிகமாக எதுவும் கேட்காதீர்கள் என சொல்லுங்கள்.
முதலில் ஒரு விஷயத்தை நிச்சயப்படுத்துங்கள், அதிகமான கேள்வி
களின் அடர்ந்த காட்டில் விழுந்து விட்டால் பிறகு வெளியேற வழி
கிடைக்காது. மனிதர்கள் மூடுபனியில் சிக்கி குழப்பமடைந்து
விட்டால் பிறகு அதிலிருந்து வெளிவர முடிவதில்லை, இதுவும் அது
போலத்தான், மனிதர்கள் எங்கிருந்து எங்கோ மாயையின் பக்கமாக
வெளியேறி விடுகின்றனர், ஆகையால் முதலில் அனைவருக்கும் ஒரு
விஷயத்தை சொல்லுங்கள் - நீங்கள் அழிவற்ற ஆத்மா. தந்தையும் கூட
அழிவற்றவர், பதித-பாவனர். நீங்கள் தூய்மையற்றவராக
இருக்கிறீர்கள். இப்போது ஒன்று வீட்டுக்குச் செல்ல வேண்டும்,
இல்லையென்றால் புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டும். பழைய
உலகத்தில் கடைசி வரை வந்தபடி இருக்கின்றனர். யார் முழுமையாக
படிக்க வில்லையோ அவர்கள் கடைசியில் வருவார்கள். எவ்வளவு கணக்கு
உள்ளது மற்றும் முதலில் யார் செல்வார்கள் என படிப்பிலிருந்து
புரிந்து கொள்ளப்பட்டு விடும். பள்ளியில் கூட இலக்கை
வைக்கின்றனர் அல்லவா. ஓடிச் சென்று தொட்டுவிட்டு வரவேண்டும்.
முதலில் வருபவர்களுக்கு பரிசு கிடைக்கிறது. இது
எல்லைக்கப்பாற்பட்ட விஷயம். எல்லைக்கப் பாற்பட்ட பரிசு
கிடைக்கிறது. நினைவின் யாத்திரையில் இருங்கள் என தந்தை
சொல்கிறார். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். அனைத்து
குணங்களிலும் நிறைந்தவர் களாக இங்கே ஆக வேண்டும், ஆகையால்
சார்ட் வையுங்கள் என பாபா சொல்கிறார். நினைவின் யாத்திரையின்
சார்ட் வைத்தீர்கள் என்றால் நாம் லாபத்தில் இருக்கிறோமா அல்லது
நஷ்டத்தில் இருக்கிறோமா என தெரிந்து போகும். ஆனால் குழந்தைகள்
சார்ட் வைப்பதில்லை. பாபா சொல்கிறார், ஆனால் குழந்தைகள்
செய்வதில்லை. மிகச் சிலரே செய்கின்றனர், ஆகையால் மாலையும் கூட
எவ்வளவு குறைந்தவர் களுடையதாகத்தான் உள்ளது. 8 பேர் பெரிய
ஸ்காலர்ஷிப் (உதவித்தொகை) எடுப்பார்கள், பிறகு 108 பேர்
கூடுதலாக வருவார்கள். கூடுதலாக யார் வருவார்கள்? பாதுஷா (ராஜா)
மற்றும் ராணி. மிகவும் குறைந்த அளவு வித்தியாசம் இருக்கும்.
தந்தை சொல்கிறார் - முதலில்
தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள் மற்றும் தந்தையை நினைவு
செய்யுங்கள் - இதுவே நினைவின் யாத்திரையாகும். தந்தையின் இந்த
செய்தியைத்தான் கொடுக்க வேண்டும், அவ்வளவுதான். அதையும் இதையும்
சொல்லிக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை, மன்மனாபவ.
தேகத்தின் அனைத்து சம்மந்தங் களையும் விட்டு, பழைய உலகில்
அனைத்தையும் புத்தியிலிருந்து தியாகம் செய்ய வேண்டும்,
ஏனென்றால் இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். அசரீரி ஆக
வேண்டும். இங்கே பாபா நினைவூட்டுகிறார், பிறகு நாள் முழுவதும்
முற்றிலும் நினைவும் செய்வதில்லை, ஸ்ரீமத்படியும் நடப்பதில்லை.
புத்தியில் பதிவதில்லை. புதிய உலகிற்குச் செல்ல வேண்டும்
என்றால் தமோ பிரதானத்திலிந்து சதோபிரதானமாக ஆகவேண்டும். பாபா
நமக்கு இராஜ்ய பாக்கியம் கொடுத்தார், நாம் பிறகு இப்படி
இழந்தோம், 84 பிறவிகள் எடுத்தோம். இலட்சக்கணக்கான வருடங்களின்
விஷயம் அல்ல, பல குழந்தைகள் தந்தையை அறியாத காரணத்தால் நிறைய
கேள்விகளைக் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். முதலில் என்னை மட்டும்
நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்கள் நீங்கும் மேலும் தெய்வீக
குணங்களை தாரணை செய்தால் தேவதை ஆகி விடுவீர்கள், வேறு எதுவும்
கேட்க வேண்டிய அவசியமில்லை என தந்தை சொல்கிறார், தந்தையை
புரிந்து கொள்ளாமல் அதையும் இதையும் கூறிக் கொண்டிருந்தால்
தானும் குழம்பி விடுகின்றனர், பிறகு சலிப்படைந்து விடுகின்றனர்.
முதலில் தந்தையை தெரிந்து கொள்வதன் மூலம் அனைத்தையும் தெரிந்து
கொண்டு விடுவார்கள். என் மூலமாக என்னைத் தெரிந்து கொள்வதன்
மூலம் நீங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு விடுவீர்கள்.
தெரிந்து கொள்வதற்கு வேறு எதுவும் இருக்காது. ஆகையால் 7 நாட்கள்
வைக்கப்படுகின்றனர். 7 நாட்களில் நிறைய புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் புரிந்து கொள்பவர்கள் வரிசைக்கிரமமாக இருக்கின்றனர்.
சிலர் கொஞ்சம் கூட புரிந்து கொள்வதில்லை. அவர்கள் ராஜா-ராணி
ஆவார்களா என்ன? ஒருவர் மீதாவது (பிரஜை) இராஜ்யத்தை ஆள்வார்களா
என்ன? ஒவ்வொருவரும் தமது பிரஜைகளை உருவாக்க வேண்டும். நேரத்தை
மிகவும் வீணாக்குகின்றனர். தந்தை அவர்கள் பாவப்பட்டவர்கள் என
சொல்கிறார். எவ்வளவு தான் பெரிய பெரிய பதவியில்
இருப்பவர்களாகட்டும், ஆனால் இதெல்லாம் மண்ணோடு மண்ணாகப் போகிறது
என தந்தை அறிவார். இன்னும் கொஞ்சம் சமயம் இருக்கிறது. வினாச
காலத்தில் விபரீத புத்தியுள்ளவர்களின் வினாசம் ஆகவுள்ளது.
ஆத்மாக்களாகிய நம்முடைய புத்தி எவ்வளவு அன்பானது என்பதைப்
புரிந்து கொள்ள முடியும். சிலர் ஒன்றிரண்டு மணி நேரம் நினைவு
இருக்கிறது என்று சொல்கின்றனர். லௌகிக தந்தையிடம் ஒன்றிரண்டு
மணி நேரம் அன்பு வைக்கிறீர்களா என்ன? முழு நாளும் பாபா பாபா (அப்பா)
என சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். இங்கே பாபா பாபா
என்கின்றனர், ஆனால் ஆழமான அன்பு இருப்பதில்லை. சிவபாபாவை நினைவு
செய்யுங்கள் என மீண்டும் மீண்டும் சொல்கிறார். உண்மையிலும்
உண்மையாக அன்பு செலுத்த வேண்டும். தந்திரம் செல்லுபடியாகாது.
நாங்கள் சிவபாபாவை மிகவும் நினைவு செய்கிறோம் என பலர் சொல்
கின்றனர், பிறகு அவர்கள் பறக்கத் தொடங்கி விடுகின்றனர். பாபா,
அவ்வளவு தான், நாங்கள் சேவையில் பலருக்கும் நன்மை செய்வதற்காகச்
செல்கிறோம். எந்த அளவு பலருக்கு செய்தி கொடுக்கின்றனரோ அந்த
அளவு நினைவில் இருப்பார்கள். பல குழந்தைகள் பந்தனம் உள்ளது என
சொல் கின்றனர். அட, பந்தனம் முழு உலகிற்கும் உள்ளது, பந்தனத்தை
யுக்தியின் மூலம் நீக்க வேண்டும். யுக்திகள் நிறைய உள்ளன, நாளை
இறந்து விட்டீர்கள் என்றால் குழந்தைகளை யார் கவனிப்பார்கள்?
கண்டிப்பாக யாரேனும் ஒருவர் கவனிப்பதற்காக வெளிப்படுவார்கள்.
அஞ்ஞான காலத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த
சமயத்தில் திருமணமும் கூட தொந்தரவு மிக்கதாக உள்ளது.
யாருக்காவது கொஞ்சம் பணம் கொடுத்து குழந்தைகளைப் பார்த்துக்
கொள்ளுங்கள் என சொல்லுங்கள். இது உங்களுக்கு மறுபிறவி
வாழ்க்கையாகும். வாழ்ந்தபடியே இறந்து விட்டால் பிறகு யார்
கவனித்துக் கொள்வார்கள்? எனவே கண்டிப்பாக நர்ஸ் வைத்துக் கொள்ள
வேண்டியிருக்கும். பணத்தால் என்னதான் நடக்காது? கண்டிப்பாக
பந்தனத்திலிருந்து விடுபட்டவராக வேண்டும். சேவையில் ஆர்வம்
இருப்பவர்கள் தாமாகவே ஓடுவார்கள். உலகிலிருந்து இறந்து விட்டனர்
அல்லவா. இங்கே தந்தை சொல்கிறார் - நண்பர்கள், உறவினர்கள்
முதலானவர்களையும் கூட முன்னேற்றுங்கள். அனைவருக்கும் மன்மனாபவ
எனும் செய்தி கொடுக்கும் போது தமோபிரதானத்திலிருந்து
சதோபிரதானமாகி விடுவார்கள். இதை தந்தைதான் சொல்கிறார்,
மற்றவர்கள் மேலேயிருந்து வருகின்றனர். அவர்களின் பிரஜைகளும்
கூட அவர்களுக்குப் பின்னால் வந்தபடி இருப்பார் கள். கிறிஸ்து
அனைவரையும் கீழே அழைத்து வருவது போல. கீழே நடிப்பை நடித்து
நடித்து அமைதியற்றவராக ஆகும்போது எங்களுக்கு அமைதி தேவை
என்கின்றனர். அமைதியில் தான் அமர்ந்திருந்தனர். பிறகு தமது மதத்
தலைவரின் பின்னால் வர வேண்டி யிருக்கிறது. பிறகு ஓ பதித பாவனா
வாருங்கள் என சொல்கின்றனர். விளையாட்டு எப்படி உருவாகியுள்ளது.
அவர்கள் கடைசியில் வந்து இலட்சியத்தை மேற்கொள்வார்கள். குழந்தை
கள் காட்சியைப் பார்த்தனர். மன்மனாபவ என்பதன் இலட்சியத்தை வந்து
எடுத்துக் கொள்வார்கள். இப்போது நீங்கள் பிச்சைக்காரரிலிருந்து
இளவரசனாக ஆகிறீர்கள். இந்த சமயத்தில் யார் செல்வந்தர்களாக
இருக்கின்றனரோ அவர்கள் பிச்சைக்காரர்களாகஆவார்கள்.
ஆச்சரியமாகும். இந்த விளையாட்டை யாரும் கொஞ்சம் கூட தெரிந்து
கொள்ளவில்லை. முழு இராஜ்யம் உருவாகிக் கொண்டி ருக்கிறது. சிலர்
ஏழையாகவும் ஆவார்கள் அல்லவா. இது மிகவும் தொலைநோக்கு
புத்தியுடன் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களாகும். பின்னால்
நாம் எப்படி இடமாற்றம் அடையப் போகிறோம் என்பது அனைத்தும்
காட்சியாகத் தெரியும். நீங்கள் புதிய உலகிற்காக படிக்கிறீர்கள்.
இப்போது சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். படித்து
தேர்ச்சியடைந்தால் தெய்வீக குலத்திற்குச் செல்வீர்கள். இப்போது
பிராமண குலத்தில் இருக்கிறீர்கள். இந்த விஷயங்களை யாரும்
புரிந்து கொள்ள முடியாது. பகவான் படிப்பிக்கிறார், இது கொஞ்சம்
கூட யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. நிராகார பகவான்
கண்டிப்பாக வருவார் அல்லவா. இந்த நாடகம் மிகவும் அதிசயமாக
உருவாகியுள்ளது. அதை நீங்கள் அறிவீர்கள், நடிப்பை நடித்துக்
கொண்டிருக்கிறீர்கள். திரிமூர்த்தி படத்தை வைத்தும் கூட புரிய
வைக்க வேண்டும் - பிரம்மாவின் மூலம் படைப்பு. வினாசம் தானாகவே
ஏற்படத்தான் வேண்டும். வெறுமனே பெயர் வைத்து விட்டனர். இதுவும்
நாடகத்தில் உருவாகியுள்ளது. முக்கியமான விஷயம் - தன்னை ஆத்மா
என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் அழுக்கு
நீங்கி விடும். பள்ளியில் எந்த அளவு நன்றாகப் படிக்கின்றனரோ
அந்த அளவு அதிக வருமானம் ஏற்படும். உங்களுக்கு 21 பிறவிகளுக்கு
ஆரோக்கியமும் செல்வமும் கிடைக்கும், குறைந்த விஷயமா என்ன? இங்கே
செல்வம் இருக்கலாம், ஆனால் பேரன் பேத்திகள் சாப்பிட அவகாசம்
இல்லை. தந்தை அனைத்தும் இந்த சேவையில் ஈடுபடுத்தி விட்டார்
எனும்போது எவ்வளவு சேமிப்பாகி விட்டது. அனைவருக்கும் சேமிப்பு
ஏற்படுவதில்லை. இவ்வளவு இலட்சாதிபதிகள் இருக்கின்றனர்,
அவர்களின் செல்வம் பயன் படாது. தந்தை ஏற்பதே இல்லை, பிறகு
கொடுக்க வேண்டியிருக்கும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்
1. பந்தனத்தை நீக்குவதற்காக உதவி குறிப்பு (யுக்தியை) உருவாக்க
வேண்டும். மிக உயர்ந்த தந்தையிடம் இதயபூர்வமான அன்பு வைக்க
வேண்டும். தந்தையின் செய்தியை அனைவருக்கும் கொடுத்து
அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.
2. தொலை நோக்கு புத்தியுடன் இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தைப்
புரிந்து கொள்ள வேண்டும். பிச்சைக்காரரிலிருந்து இளவரசன் ஆகக்
கூடிய படிப்பில் முழு கவனம் கொடுக்க வேண்டும். நினைவிற்கான
உண்மையிலும் உண்மையான சார்ட் (அட்டவணை) வைக்க வேண்டும்.
வரதானம்:
சத்தியத்தின் ஆதாரப்படி ஒரு
தந்தையை வெளிப்படுத்தக்கூடிய பயமற்ற நிலையின் அதிகாரியின்
சொரூபமானவர் ஆகுக!
சத்தியம் தான் பாபாவை
வெளிப்படுத்துவதற்கான ஆதாரமாகும் (அஸ்திவாரம்). தந்தையை வெளிப்
படுத்துவதற்காக பயமற்றவராகவும் அதிகாரமுடையவராகவும் இருந்து
சத்தியத்தை கூறுங்கள். தயக்கம் வேண்டாம். நம் அனைவரின் தந்தை
ஒருவரே, அவர் தான் தற்சமயம் எல்லா காரியங்களையும் செய்து
கொண்டிருக்கிறார், நாம் அனைவரும் அந்த ஒருவருடைய வாரிசுகள்,
மேலும் இவர் ஒருவர்தான் உண்மை யானவர் (சத்தியமானவர்) என்பதை
அநேக வழிமுறைகளை பின்பற்றுவார்களோ, ஏற்றுக்கொள்வார்களோ, அப்போது
வெற்றிக்கோடி ஏற்றப் (பறக்கவிடப்) படும். இதே எண்ணத்துடன்
முக்திதாமம் செல்வோம், பிறகு தத்தமது பாகத்தை ஏற்று நடிப்பதற்கு
வருவோம் எனும் போது இறைவன் ஒருவரே என்ற மனப்பாங்கு முதலாவதாக
வெளிவரக்கூடும். இது தான் பொன்னுலகத்திற்கான நினைவாகும்.
சுலோகன்:
ஏற்றுக்கொள்வது (சகித்துக்கொள்வது)
தான் சுயத்தின் சக்தி சொரூபத்தை வெளிப்படுத்துவதாகும்.
ஓம்சாந்தி