13.12.2020 காலைமுரளி ஓம்சாந்தி அவ்யக்த
பாப்தாதா
ரிவைஸ் 18.03.1987
மதுபன்
உண்மையான ஆன்மீக நாயகியின்
அடையாளங்கள்
இன்று ஆன்மீக நாயகன் தனது
ஆன்மீக நாயகி ஆத்மாக்களை சந்திப்பதற்காக வந்திருக்கின்றார்.
முழு கல்பத்திலும் இந்த நேரத்தில் மட்டுமே ஆன்மீக நாயகள்
மற்றும் நாயகியின் சந்திப்பு ஏற்படுகிறது. பாப்தாதா தனது
ஒவ்வொரு ஆன்மீக நாயகி ஆத்மாவைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்
எவ்வாறு ஆன்மீக ஈர்ப்பில் ஈர்க்கப்பட்டு தனது உண்மை யான நாயகனை
அறிந்து கொண்டார்கள், அடைந்து விட்டார்கள்! காணாமல் போயிருந்த
நாயகிகளைப் பார்த்து நாயகனும் குஷியடைகின்றார் மீண்டும் தங்களது
உண்மையான புகழிலிடத்தை அடைந்து விட்டீர்கள். இவ்வாறு அனைத்து
பிராப்திகளையும் கொடுக்கக் கூடிய நாயகள் வேறு யாரும் கிடைக்க
முடியாது. ஆன்மீக நாயகன் சதா தனது ஆன்மீக நாயகிகளை
சந்திப்பதற்காக எங்கு வருகின்றார்? எவ்வாறு சிரேஷ்ட நாயகன்
மற்றும் நாயகியோ, அவ்வாறே சந்திப்பதற்கும் சிரேஷ்ட இடத்தில்
வருகின்றார். சந்திப்பு செய்யக் கூடிய அந்த இடம் எது? இந்த இடம்
தான், இந்த இடத்திற்கு எந்த பெயர் வேண்டு மென்றாலும் கூறிக்
கொள்ளுங்கள், அனைத்து பெயர்களும் இந்த இடத்திற்கு கொடுக்க
முடியும். பொதுவாக சந்திப்பு செய்வதற்கு மிகவும் பிரியமான இடம்
எது? சந்திப்பானது ஒன்று பூந்தோடத்தில் இருக்கும் அல்லது
கடற்கரையில் இருக்கும். இதை நீங்கள் பீச் என்று கூறுகிறீர்கள்.
ஆக இப்போது எங்கு அமர்ந்திருக்கிறீர்கள்? ஞானக் கடலின் கடற்
கரையில் ஆன்மீக சந்திப்பிற்கான இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்.
ஆன்மீக அல்லது இறை பூந்தோட்டமாகும் (அல்லாவின் பூந்தோட்டம்).
பல வகையான பூந்தோட்டங்களை பார்த்திருக்கிறீர்கள். ஆனால் இது
போன்ற பூந்தோட்டம், இங்கு ஒன்றை விட மற்றொன்று அதிகமாக
மலர்ந்திருக்கும் மலராக இருக்கின்றது, ஒவ்வொன்றும் சிரேஷ்ட
அழகின் மூலம் தனது நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட பூந்தோட்டமாகும். இந்த தோட்டத்தின் நடுவில்
பாப்தாதா அல்லது நாயகன் சந்திப்பதற்காக வருகின்றார். அங்கு பல
கடற்கரைகளை பார்த்திருப்பீர்கள், ஆனால் இப்படிப்பட்ட கடற்கரையை
எங்கேயாவது பார்த்திருப்பீர்களா? இங்கு ஞானக் கடலின் அன்பின்
அலைகள், சக்திகளின் அலைகள் என்று விதவிதமான அலைகள் சதா
காலத்திற்கும் புத்துணர்வு ஏற்படுத்தி விடுகிறது. இந்த இடம்
பிடித்திருக்கிறது அல்லவா? சுத்தமாகவும் இருக்கிறது மற்றும்
ரம்மியமாகவும் இருக்கிறது. அழகாகவும் இருக்கிறது. அந்த அளவிற்கு
பிராப்தியும் இருக்கிறது. இப்படிப்பட்ட மனதை மகிழ்விக்கக்
கூடிய விசேஷ இடத்தை நாயகிகளாகிய உங்களுக்காகவே நாயகன்
உருவாக்கியிருக்கின்றார். இங்கு வருவதன் மூலம் அன்பின்
அலைகளுக்குள் வந்தவுடன் பல வகையான கடின உழைப்பிலிருந்து
விடுபட்ட விடுகிறீர்கள். அனைத்தை யும் விட மிகப் பெரிய கடின
உழைப்பு நினைவில் இயற்கையாக இருப்பது. அதை சகஜமாக அனுபவம்
செய்கிறீர்கள். வேறு எந்த கடின உழைப்பிலிருந்து
விடுபடுகிறீர்கள்? லௌகீக காரியங்களிலிருந்தும் விடுபட்டு
விடுகிறீர்கள். உணவு சமைப்பதிலிருந்தும் விடு பட்டு
விடுகிறீர்கள். அனைத்தும் தயாராக கிடைக்கிறது அல்லவா! நினைவும்
தானாகவே அனுபவம் ஆகிறது. ஞான இரத்தினங்களின் பையும் நிறைந்து
கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட இடத்தில் கடின
உழைப்பிலிருந்தும் விடுபட்டு விடுகிறீர்கள் மற்றும் அன்பில்
மூழ்கி விடுகின்றீர்கள்.
அன்பின் அடையாளமாக விசேஷமாக கூறப்படக் கூடிய விசயம் இரண்டு
பேர், இரண்டாக இல்லாமல் இருவரும் இணைந்து ஒன்றாக ஆகிவிடுவர்.
இதைத் தான் கலந்து விடுவது என்று கூறுகின்றனர். பக்தர்கள் இந்த
அன்பான ஸ்திதியைத் தான் கலந்து விடுவது அல்லது ஐக்கியமாகி
விடுவது என்று கூறிவிட்டனர். ஐக்கியமாவதன் பொருளை அவர்கள்
புரிந்து கொள்ளவில்லை. அன்பில் ஐக்கியமாவது என்பது
ஸ்திதியாகும். ஆனால் அவர்கள் ஸ்திதிக்குப் பதிலாக ஆத்மாவின்
நிலையை சதா காலத்திற்கும் சமாப்தி செய்வதாக புரிந்திருக்
கின்றனர். ஐக்கியமாவது என்றால் சமம் ஆவதாகும். தந்தையின்
அல்லது ஆன்மீக நாயகனின் சந்திப்பில் மூழ்கிவிடும் போது
பாப்சமான் ஆவதற்கான அதாவது ஐக்கியமாகும் அதாவது சமம் ஆவதற்கான
அனுபவம் செய்கிறீர்கள். இந்த ஸ்திதியைத் தான் பக்தர்கள்
ஐக்கியமாவது என்று கூறுகின்றனர். மூழ்கவும் செய்கிறீர்கள்,
கலந்து விடுகிறீர்கள். ஆனால் இது சந்திப்பின் அன்பான
ஸ்திதியின் அனுபவமாகும். புரிந்ததா! ஆகையால் பாப்தாதா தனது
நாயகிகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
உண்மையான நாயகி என்றால் சதா நாயகி, இயல்பான நாயகி ஆவர்.
உண்மையான நாயகியின் விசேஷதாவை அறிவீர்கள். இருப்பினும்
அவர்களது முக்கிய அடையாளங்கள் -முதல் அடையாளம் நேரத்திற்கு
தகுந்தாற் போன்று ஒரு நாயகனிடம் சர்வ சம்பந்தத்தின் அனுபவம்
செய்வது. நாயகன் ஒருவர் தான். ஆனால் ஒருவருடன் அனைத்து
சம்பந்தங் களும் வைப்பதாகும். எந்த சம்பந்தம்
விரும்புகிறீர்களோ மற்றும் எந்த நேரத்தில் எந்த சம்பந்தம்
அவசியமோ, அந்த நேரத்தில் அந்த சம்பந்தத்தின் ரூபத்தில் அன்பின்
அனுபவம் செய்வதாகும். ஆக முதல் அடையாளம் சர்வ சம்பந்தத்தின்
அனுபவம். சர்வ என்ற வார்த்தையை மேற்கோள் காட்டுகின்றார்.
வெறும் சம்பந்தம் மட்டும் இருக்கக் கூடாது. சில குறும்புக்கார
நாயகிகளும் இருக்கின்றனர், தனக்கு சம்பந்தம் ஏற்பட்டு விட்டதாக
நினைக்கின்றனர். ஆனால் சர்வ சம்பந்தம் ஏற்பட்டிருக்கிறதா?
இரண்டாவது விசயம் சரியான நேரத்தில் சம்பந்தத்தின் அனுபவம்
ஏற்படுகிறதா? ஞானத்தின் ஆதாரத்தில் சம்பந்தம் இருக்கிறதா?
அல்லது உள்ளப்பூர்வமான அனுபவத்தின் ஆதாரத்தில் சம்பந்தம்
இருக்கிறதா? சத்தியமான உள்ளத்தில் பாப்தாதா மகிழ்ச்சியடைவார்.
புத்தி நன்றாக வேலை செய்தால் பார்த்து மகிழ்ச்சி அடைந்து
விடமாட்டார், திலாராம் உள்ளத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்.
ஆகையால் உள்ளத்தின் அனுபவத்தை உள்ளம் அறிந்து கொள்ளும்,
திலாராம் அறிவார். ஐக்கியமாகும் இடம் உள்ளம் என்று
கூறப்படுகிறது, புத்தி அல்ல. ஞானம் வைத்துக் கொள்ளும் இடம்
புத்தியாகும். ஆனால் நாயகனை வைத்துக் கொள்ளும் இடம் உள்ளம்
ஆகும். நாயகிகளின் விசயங்களைத் தான் நாயகன் கூறுவார் அல்லவா!
சில நாயகிகள் புத்தியை அதிகம் பயன்படுத்துகின்றனர், ஆனால்
உள்ளத்தின் மூலம் புத்தியின் உழைப்பு பாதியாக ஆகிவிடுகிறது.
யார் உள்ளப்பூர்வமாக சேவை செய்கிறார்களோ அல்லது நினைவு
செய்கிறார்களோ, அவர்களது உழைப்பு குறைந்து விடும் மற்றும்
திருப்தி அதிகமாக இருக்கும். மேலும் யார் உள்ளப்பூர்வமான
அன்புடன் நினைவு செய்யவில்லையோ, ஞானத்தின் ஆதாரத்தில் மட்டும்
புத்தியினால் நினைவு செய்கிறார்களோ அல்லது சேவை செய்கிறார்களோ
அவர்கள் அதிக உழைப்பு செய்ய வேண்டியிருக்கும், திருப்தி
குறைவாக இருக்கும். வெற்றி கிடைத்தாலும் கூட உள்ளத்தில்
திருப்தி குறைவாக இருக்கும். நன்றாகத் தான் நடந்தது, ஆனாலும் .
என்று சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள், கூறிக் கொண்டே
இருப்பார்கள். உள்ளப்பூர்வமானவர்கள் சதா திருப்தியின் பாடல்
பாடிக் கொண்டே இருப்பார்கள். உள்ளப்பூர்வமான திருப்தியின்
பாடல் வாயின் திருப்திக்கான பாடல் கிடையாது. உண்மையான
நாயகிகளாக இருப்பவர்கள் உள்ளப்பூர்வமாக நேரத்திற்கு தகுந்தாற்
போன்று சர்வ சம்பந்தத்தின் அனுபவம் செய்வார்கள்.
இரண்டாவது அடையாளம் - உண்மையான நாயகிகள் ஒவ்வொரு பிரச்சனையின்
போதும், ஒவ்வொரு காரியத்தின் போதும் சதா பிராப்திக்கான
குஷியுடன் இருப்பார்கள். ஒன்று அனுபவம், மற்றொன்று அதனால்
கிடைக்கும் பிராப்தி. சிலர் ஆம், அவர் எனது தந்தையாகவும்
இருக்கின்றார், நாயகனாகவும் இருக்கின்றார் என்று அனுபவமும்
செய்கின்றனர், குழந்தையாகவும் இருக்கின்றார். ஆனால் எவ்வளவு
பிராப்தியை விரும்பு கின்றார்களோ அவ்வளவு ஏற்படுவது கிடையாது.
தந்தையாக இருக்கின்றார், ஆனால் ஆஸ்திக்கான பிராப்தியின் குஷி
இருப்பது கிடையாது. சர்வ சம்பந்தத்தின் அனுபவத்தின் கூடவே
பிராப்திக்கான அனுபவமும் இருக்க வேண்டும். தந்தை என்ற
சம்பந்தத்தின் மூலம் சதா ஆஸ்திக்கான பிராப்தியை உணர வேண்டும்,
நிறைந்திருக்க வேண்டும். சத்குரு வின் மூலம் சதா
வரதானங்களினால் சம்பன்ன ஸ்திதி அல்லது சதா சம்பன்ன சொரூபத்தின்
அனுபவம் ஏற்பட வேண்டும். ஆக பிராப்தியின் அனுபவம் ஏற்படுவதம்
அவசியமாகும். அது சம்பந்தங்களின் அனுபவமாகும், இது
பிராப்திகளின் அனுபவமாகும். சிலருக்கு சர்வ பிராப்திகளின்
அனுபவம் ஏற்படுவது கிடையாது. மாஸ்டர் சர்வசக்திவனாக
இருக்கின்றனர், ஆனால் சரியான நேரத்தில் சக்திகள் பிராப்தியாவது
கிடையாது. பிராப்தியின் அனுபவம் இல்லையெனில் பிராப்தியிலும்
குறை இருக்கிறது. ஆக அனுபவத்தின் கூடவே பிராப்தி சொரூபமாகவும்
ஆக வேண்டும் இது தான் உண்மையான நாயகியின் அடையாளமாகும்.
மூன்றாவது அடையாளம் - எந்த நாயகிக்கு அனுபவமும் இருக்கிறதோ,
பிராப்தியும் இருக்கிறதோ அவர்கள் சதா திருப்தியாக
இருப்பார்கள். எந்த விசயத்திலும் அபிராப்தி ஆத்மாவாக
இருக்கமாட்டார்கள். ஆக திருப்தி - இது நாயகியின் விசேஷதா
ஆகும். எங்கு பிராப்தி இருக்கிறதோ, அங்கு அவசியம் திருப்தி
இருக்கும். ஒருவேளை திருப்தியில்லை யெனில் அவசியம்
பிராப்தியில் குறையிருக்கும். மேலும் பிராப்தி யில்லையெனில்
சர்வ சம்பந்தங்களின் அனுபவத்தில் குறையிருக்கும். ஆக மூன்று
அடையாளங்கள் அனுபவம், பிராப்தி மற்றும் திருப்தி. சதா திருப்தி
ஆத்மா. எப்படிப்பட்ட நேரமாக இருந்தாலும், எந்த சூழ்நிலையாக
இருந்தாலும், சேவைக்கான இடம் எப்படிப்பட்டதாக இருந்தாலும்,
சேவைக்கு துணையாக இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக
இருந்தாலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு நடத்தையிலும்
திருப்தியாக இருக்க வேண்டும். இவ்வாறு உண்மையான நாயகி களாக
இருக்கிறீர்கள் தானே? திருப்தியான ஆத்மாவிடம் எந்த
எல்லைக்குட்பட்ட இச்சைகள் இருக்காது. ஆனால் திருப்தியான
ஆத்மாக்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்கின்றனர். ஏதாவது ஒரு
விசயத்தில், அதாவது மரியாதைக்கான அல்லது புகழுக்கான பசியில்
இருக்கின்றனர். பசியுடன் இருப்பவர்கள் ஒருபோதும்
திருப்தியடையமாட்டார்கள். யாருடைய வயிறு சதா நிறைந்திருக்கிறதோ
அவர்கள் திருப்தியாக இருப்பார்கள். சரீத்திற்கு உணவு பசி
இருப்பது போன்று மனதிற்கும் பசி இருக்கிறது மரியாதை, புகழ்,
தீர்வு, சாதனம். இது மனதிற்கான பசியாகும். சரீரத்தில் (வயிறு)
நிறைந்தவர்கள் சதா திருப்தியாக இருப்பது போன்று, மனம்
நிறைந்திருப்பவர்கள் சதா திருப்தியாக இருப்பார்கள். திருப்தி
என்பது நிறைந்திருப்பதன் அடையாளமாகும். நிறைந்த ஆத்மாவாக
இல்லையெனில் அது சரீர பசியோ அல்லது மனதிற்கான பசியோ
அவர்களுக்கு எவ்வளவு கிடைத்தாலும், அதிக மாகவே கிடைக்கும்,
ஆனால் நிறையாத ஆத்மாவாக இருக்கின்ற காரணத்தினால் சதா
அதிருப்தியுடன் இருப்பார்கள். இராயலாக இருப்பவர்கள், சிறிது
அடைந்ததும் திருப்தி யடைந்து விடுவார்கள். இராயல் ஆத்மாக்களின்
அடையாளம் - சதா நிறைந்திருப்பார்கள், ஒரு ரொட்டி கிடைத் தாலும்
திருப்தியாகி விடுவார்கள், 36 வகையான உணவு கிடைத்தாலும்
திருப்தியடைந்து விடுவார்கள். நிறைவு இல்லாதவர்களுக்கு 36
வகையான உணவு கிடைத் தாலும் திருப்தியடையமாட்டார்கள். ஏனெனில்
மனம் பசியுடன் இருக்கிறது. உண்மையான நாயகியின் அடையாளம் - சதா
திருப்தி ஆத்மாவாக இருப்பார்கள். ஆக மூன்று அடையாளங் களையும்
சோதியுங்கள். நான் யாருக்கு நாயகியாக இருக்கின்றேன், யார் சதா
சம்பன்னமாக இருக்கின்றாரோ அப்படிப்பட்ட நாயகனுக்கு நாயகியாக
இருக்கின்றேன் என்று சதா நினையுங்கள். ஆக ஒருபோதும் திருப்தியை
விட்டு விடாதீர்கள். சேவையை விட்டு விடுங்கள், ஆனால்
திருப்தியை விட்டு விடாதீர்கள். எந்த சேவை அதிருப்தியை
உருவாக்கு கிறதோ, அந்த சேவை சேவை கிடையாது. சேவை என்பதன்
பொருள் பலன் கொடுக்கக் கூடியது சேவை. ஆக உண்மையான நாயகிகள்
அனைத்து எல்லைக்குட்பட்ட ஆசைகளிலருந்து விடுபட்டு சதா
சம்பன்னமாக மற்றும் சமமாக இருப்பார்கள்.
இன்று நாயகிகளின் கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றார். வேடிக்கை
விளை யாட்டும் அதிகம் செய்கின்றனர். நாயகனும் அதை பார்த்து
பார்த்து புன்முறுவல் செய்கின்றார். வேடிக்கை, விளையாட்டு
விளையாடுங் கள், ஆனால் நாயகனை நாயகன் என்று புரிந்து கொண்டு
அவர் எதிரில் செய்யுங்கள், மற்றவர்களது எதிரில் அல்ல. வித
விதமான எல்லைக்குட்பட்ட சுபாவம், சன்ஸ்காரத்திற்கான வேடிக்கை,
விளையாட்டு செய்கிறீர்கள். எங்கு என்னுடைய சுபாவம், என்னுடைய
சம்ஸ்காரம் என்ற வார்த்தை வருகிறதோ, அங்கு வேடிக்கை,
விளையாட்டு ஆரம்பமாகி விடுகிறது. தந்தையின் சுபாவம் எதுவோ,
அதுவே என்னுடைய சுபாவமாகும். என்னுடைய சுபாவம் தந்தையின்
சுபாவத்திலிருந்து தனிப் பட்டதாக இருக்கவே முடியாது. அது
மாயையின் சுபாவமாகும், மாற்றான் சுபாவமாகும். அதை எப்படி
என்னுடையத என்று கூறுவீர்கள்? மாயை மாற்றானுடையது, என்னுடையது
அல்ல. தந்தை என்னுடையவர். என்னுடைய சுபாவம் என்றால் தந்தையின்
சுபாவமாகும். மாயையின் சுபாவத்தை என்னுடையது என்று கூறுவதும்
தவறாகும். என்னுடையது என்ற வார்த்தையே வலையில் மாட்ட வைத்து
விடுகிறது அதாவது சக்கரத்தில் கொண்டு வந்து விடுகிறது.
நாயகிகள் நாயகனின் முன் இப்படிப்பட்ட வேடிக்கை விளையாட்டையும்
காண்பிக்கின்றனர். எது தந்தையினுடையதோ, அது என்னுடையது.
பக்தியிலும் ஒவ்வொரு விசயத்திலும் இதையே கூறுவர் எது
உன்னுடையதோ, அது என்னுடையது, என்னுடையது என்று எதுவும்
கிடையாது. ஆனால் எது உன்னுடையதோ அது என்னுடை யது. தந்தையின்
சங்கல்பம் எதுவோ, அது என்னுடைய சங்கல்பம். தந்தையின் சேவைக்
கான சுபாவ-சம்ஸ்காரம், அது என்னுடையது. இதனால் என்ன ஏற்படும்?
எல்லைக்குட் பட்ட எனது, உனதாக ஆகிவிடும். உன்னுடைய தெல்லாம்
என்னுடையதாக, என்னுடையது என்று தனிப்பட்டு எதுவுமில்லை.
எதுவெல்லாம் தந்தையிடமிருந்து தனிப்பட்டதாக இருக்கிறதோ, அது
என்னுடையது கிடையவே கிடையாது. அது மாயையின் வலையாகும். ஆகையால்
இந்த எல்லைக்குட்பட்ட வேடிக்கை, விளையாட்டிலிருந்து விடுபட்டு
ஆன்மீக போதை நான் உன்னுடையவன், நீ என்னுடையவன். விதவிதமான
சம்பந்தங்களின் அனுபவங்கள் என்ற ஆன்மீக விளையாட்டு
விளையாடுங்கள். ஆனால் அந்த விளையாட்டு விளையாடாதீர்கள்.
சம்பந்தங்கள் வைப்பதிலும் ஆன்மீக போதையுடன் இருக்க முடியும்.
அன்பிற்கான போதை மிகவும் நல்லதாகும். சில நேரம் நண்பன் என்ற
சம்பந்தத்தின் அன்பின் போதையை அனுபவம் செய்யுங்கள். அது
விளையாட்டு கிடையாது, ஆனால் தனிப்பட்ட விசயமாகும். அன்பான
விளையாட்டு அன்பானதாக இருப்ழும். எவ்வாறு சிறு குழந்தை மிகவும்
அன்பு மற்றும் தூய்மையாக இருக்கின்ற காரணத்தினால் அதன்
விளையாட்டு அனைவருக்கும் மிகவும் நன்றாக பிடிக்கும்.
குழந்தைகளிடம் சுத்தம் மற்றும் தூய்மை இருக்கும். பெரியவர்கள்
யாராவது விளையாட்டு காட்டினால் அதை கெட்டதாக நினைப்பர்.
ஒருவேளை வேடிக்கை, விளையாட்டு விளையாடியே ஆக வேண்டும் எனில்
தந்தையிடம் வித விதமான சம்பந்தத்தின், அன்பின், தூய்மையின்
வேடிக்கை, விளையாட்டு விளையாடுங்கள்.
சதா கை மற்றும் துணை தான் உண்மையான நாயகன் நாயகியின்
அடையாளமாகும். துணை மற்றும் கையை விட்டு விடாதீர்கள். சதா
புத்தி என்ற துணை இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு
காரியத்திலும் தந்தையின் சகயோகம் என்ற கை இருக்க வேண்டும்.
ஒருவருக்கொருவரின் சகயோகத்தின் அடையாளமாக கை மீது கை
வைத்திருப்பதாக காண்பிக்கின்றனர் அல்லவா! ஆக சதா தந்தைக்கு
சகயோகியாக ஆக வேண்டும் இது தான் சதா கை மீது கை வைப்பதாகும்.
மேலும் சதா புத்தியில் சதா துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மனதில் ஈடுபாடு, புத்தியில் துணை. இந்த ஸ்திதியில் இருப்பது
என்றால் உண்மையான நாயகன் மற்றும் நாயகியாக இருக்கிறீர்கள்.
புரிந்ததா? சதா துணையாக இருப்போம் என்று உறுதிமொழி
செய்திருக்கிறீர்கள். அவ்வபொழுது துணையாக இருப்பது என்பது
உறுதிமொழியல்ல. மனதின் ஈடுபாடு சில நேரங்களில் நாயகனிடம், சில
நேரங்களில் இல்லாமல் இருப்பது என்பது சதா துணையாக இல்லை என்று
ஆகிவிடுகிறது அல்லவா! ஆகையால் உண்மையான நாயகி என்ற இந்த
சுவமானத்தில் இருங்கள். திருஷ்டி யிலும் நாயகன்,
விருக்தியிலும் நாயகன், சிருஷ்டியிலும் நாயகன்.
ஆக இரு நாயகன் மற்றும் நாயகிகளின் சபையாகும். பூந்தோட்டமாகவும்
இருக்கிறது, கடற்கரையாகவும் இருக்கிறது. இது மிகவும்
ஆச்சரியமான தனிப்பட்ட கடற்கரையாகும், அதாவது
ஆயிரக்கணக்கானவர்களின் நடுவில் தனிப்பட்டதாக இருக்கிறது.
நாயகனுக்கு என்னிடத்தில் தனிப்பட்ட அன்பு இருக்கிறது என்று
ஒவ்வொருவரும் அனுபவம் செய் கின்றனர். ஒவ்வொருவருக்கும்
தனிப்பட்ட அன்பான உணர்வு ஏற்படுவது தான் அதிசயமான நாயகன்
மற்றும் நாயகி. நாயகன் ஒருவர் தான், ஆனால் அனைவருக்கும்.
அனைவரின் உரிமையும் மிக அதிகமாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும்
உரிமை இருக்கிறது. உரிமையில் நம்பர் கிடையாது. உரிமையை
பிராப்தியாக அடைவதில் நம்பர் உருவாகி விடுகிறது. இறை
பூந்தோடத்தில் கை மற்றும் துணையுடன் கைகோர்த்து நடந்து
கொண்டிருக்கின்றேன் அல்லது அமர்ந்திருக்கின்றேன். ஆன்மீக
விதையுடன் கை மற்றும் துணையாக இருந்து கொண்டாடிக்
கொண்டிருக்கின்றேன் என்ற நினைவு சதா இருக்கும் போது சதா மன
மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள், சதா குஷியாக இருப்பீர்கள், சதா
சம்பன்னமாக இருப்பீர்கள். நல்லது.
இந்த இரட்டை அயல்நாட்டினரும்
இரட்டை அதிஷ்டசாலிகள் ஆவர். இன்றைக்குள் வந்து சேர்ந்தது
மிகவும் நல்லதாகும். நாளடைவில் என்ன மாற்றங்கள் ஏற்படும், அது
நாடகமாகும். ஆனாலும் இரட்டை அதிர்ஷ்சாலிகள் ஆவீர்கள். சரியான
நேரத்தில் வந்து சேர்ந்து விட்டீர்கள். நல்லது.
சதா அழிவற்ற நாயகி ஆகி ஆன்மீக
நாயகனுடன் அன்பான சம்பந்தம் வைக்கக் கூடிய, சதா தன்னை அனைத்து
பிராப்திகளில் சம்பன்ன அனுபவம் செய்யக் கூடிய, சதா ஒவ்வொரு
ஸ்திதி மற்றும் பிரச்சனையிலும் நிறைந்திருக்கக் கூடிய, சதா
திருப்தி என்ற பொக்கிஷத்தில் நிறைந்தவர்களாக ஆகி மற்றவர்களையும்
நிறைந்தவர்களாக ஆக்கக் கூடிய, இவ்வாறு சதா துணை மற்றும்
கைகோர்க்கக் கூடிய உண்மையான நாயகிகளுக்கு ஆன்மீக நாயகனின்
உள்ளப்பூர்வமான அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
வரதானம்:
சதா சிரேஷ்ட மற்றும் புது
வகையான சேவையின் மூலம் விருத்தி செய்யக் கூடிய சகஜ சேவாதாரி
ஆகுக.
சங்கல்பத்தின் மூலம் ஈஸ்வரிய
சேவை செய்வது என்பதும் சேவைக்கான சிரேஷ்ட மற்றும் புது
வகையாகும். நகைக்கடையாளர் தினமும் காலையில் தனது ஒவ்வொரு
ரத்தினத் தையும் சோதிப்பார் சுத்தமாக இருக்கிறதா? ஜொலிப்பு
நன்றாக இருக்கின்றதா? சரியான இடத்தில் இருக்கின்றதா? அதே போன்று
தினமும் அமிர்தவேளையில் தனது தொடர்பில் வரக் கூடிய ஆத்மாக்களின்
மீது சங்கல்பத்தின் மூலம் பார்வையை சுற்றுங்கள் நீங்கள் எந்த
அளவிற்கு அவர்களை சங்கல்பத்தினால் நினைவு செய்வீர்களோ, அந்த
அளவிற்கு அந்த சங்கல்பம் அவர்களை சென்றடையும். இவ்வாறு
சேவைக்கான புது முறையை கடைபிடித்து விருத்தி செய்து கொண்டே
முன்னேறுங்கள். உங்களது சகயோகத்திற்கான சூட்சும சக்தியானது
ஆத்மாக்களை உங்கள் பக்கம் தானாகவே கவர்ச்சிக்கும்.
சுலோகன்:
சாக்கு போக்கு கூறுவதை
உள்ளடக்குங்கள், மேலும் எல்லையற்ற வைராக்கிய விருக்தியை
வெளிப்படுத்துங்கள்.
ஓம்சாந்தி