12.12.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! தன்னுடைய
அதிர்ஷ்டத்தை உயர்ந்ததாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால்
யாரிடம் பேசினாலும் பார்த்தாலும் புத்தியின் நினைவை ஒரு
தந்தையிடம் ஈடுபடுத்துங்கள்.
கேள்வி :
புது உலகத்தின் ஸ்தாபனைக்கு
நிமித்தமாக (பொறுப்பாக) இருக்கும் குழந்தைகளுக்கு பாபாவின்
எந்த ஒரு வழிகாட்டுதல் கிடைத்துள்ளது?
பதில்:
குழந்தைகளே, உங்களுக்கு இந்தப்
பழைய உலகத்துடனான எந்த ஒரு தொடர்பும் கிடையாது. தன்னுடைய மனதை
இந்தப் பழைய உலகத்தின் மீது ஈடுபடுத் தாதீர்கள். சோதித்துப்
பாருங்கள், நாம் ஸ்ரீமத்துக்கு விரோதமான செயல் ஏதும் செய்யா
திருக்கிறோமா? ஆன்மிக சேவைக்கு பொறுப்பாளராக ஆகியிருக்கிறோமா?
பாடல் :
கள்ளங்கபடற்ற தன்மையினால் தனிப்பட்டவர்...
ஓம் சாந்தி.
இப்போது பாடலைக் கேட்பதற்கான
எந்த ஓர் அவசியமும் கிடையாது. பாடல்களை அதிகமாக பக்தர்கள் தான்
பாடுகின்றனர் மற்றும் கேட்கின்றனர். நீங்களோ கல்வி
கற்கின்றீர்கள். இந்தப் பாடல்களும் கூட குழந்தைகளுக்காகவே
குறிப்பாக வெளி யாகியுள்ளன. குழந்தைகள் அறிவார்கள், பாபா
நம்முடைய அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். இப்போது நாம்
பாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும் மற்றும் தெய்விக குணங்களை
தாரணை செய்ய வேண்டும். தனது அன்றாடக் கணக்கைப் பார்க்க வேண்டும்.
சேமிப்பாகிறதா அல்லது நஷ்டமாகிறதா? நமக்குள் எந்த ஒரு குறையும்
இல்லா மலிருக்கிறதா? அந்தக் குறையினால் நமது அதிர்ஷ்டத்தில்
நஷ்டம் ஏற்படுமானால் அதை நீக்கி விட வேண்டும். இச்சமயம்
ஒவ்வொருவரும் தனது அதிர்ஷ்டத்தை உயர்ந்ததாக அமைத்துக் கொள்ள
வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய வைக்கிறீர்கள்,
பாபாவைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்யாதிருந்தால் நாம்
இந்த லட்சுமி-நாராயணராக ஆக முடியும். யாரோடும் பேசிக் கொண்டு,
பார்த்துக் கொண்டிருந்தாலும் புத்தியோகத்தை அங்கே ஒருவரோடு
ஈடுபடுத்தி இருக்க வேண்டும். ஆத்மாக்கள் நாம் தந்தையைத் தான்
நினைவு செய்ய வேண்டும். தந்தையின் கட்டளை கிடைத்துள்ளது.
என்னைத் தவிர வேறு யாரிடமும் மனதை ஈடுபடுத்தாதீர்கள். தெய்விக
குணங்களையும் தாரணை செய்யுங்கள் என்று. பாபா புரிய வைக்கிறார்,
உங்களுடைய 84 பிறவிகள் இப்போது முடிவடைந்து விட்டன. இப்போது
மீண்டும் நீங்கள் போய் இராஜ்யத்தில் முதல் நம்பர் எடுத்துக்
கொள்ளுங்கள். இராஜ்ய பதவிக்கும் கீழே இறங்கி பிரஜையாகப்
போய்விடக் கூடாது, அல்லது பிரஜையிலும் கீழே சென்றுவிடக் கூடாது.
தன்னை சோதித்துக் கொண்டே இருங்கள். இந்தப் புரிதலை பாபாவைத்
தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. தந்தையை, ஆசிரியரை நினைவு
செய்வதன் மூலம் பயம் இருக்கும். நமக்கு ஏதாவது தண்டனை கிடைத்து
விடும் என்கிற மாதிரி ஆகிவிடக் கூடாது. பக்தி மார்க்கத்திலும்
புரிந்து கொண்டுள்ளனர், நாம் பாவ கர்மம் செய்வதால்
தண்டனைக்குரியவராக ஆகி விடுவோம். பெரிய பாபாவின் வழிகாட்டுதலோ
இப்போது தான் கிடைக்கிறது. அதை ஸ்ரீமத் எனச் சொல்கின்றனர்.
குழந்தைகள் அறிவார்கள், ஸ்ரீமத் மூலம் நாம் சிரேஷ்டமானவர்களாக
ஆகிறோம். தன்னை சோதித்துப் பார்க்க வேண்டும். எங்காவது நாம்
ஸ்ரீமத்துக்கு விரோதமாக எதையும் செய்யாதிருக்கிறோமா? எந்த
விசயம் நன்றாக இல்லையோ, அதைச் செய்யக் கூடாது. நல்லது-கெட்டதையோ
இப்போது புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இதற்கு முன்பு புரிந்து
கொண்டதில்லை. இப்போது நீங்கள் அப்படிப்பட்ட கர்மத்தைக் கற்றுக்
கொள்கிறீர் கள், அதனால் பிறகு ஜென்ம-ஜென்மாந்தரமாக கர்மம்
அகர்மம் ஆகி விடுகிறது. இச்சமயமோ அனைவருக்குள்ளும் 5 பூதங்கள்
பிரவேசமாகியுள்ளன. இப்போது நல்லபடியாகப் புருஷார்த்தம் செய்து
கர்மாதீத் ஆக வேண்டும். தெய்விக குணங்களையும் தாரணை செய்ய
வேண்டும். சமயம் ஆபத்தானதாக ஆகிக் கொண்டே செல்கிறது. உலகம்
கெட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் கெட்டுக்
கொண்டே தான் போகும். இந்த உலகத்தோடு உங்களுக்குத் தொடர்பே இல்லை
என்று ஆகிவிட வேண்டும். உங்களுடைய தொடர்பு புது உலகத்தோடு தான்.
அது இப்போது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அறிவீர்கள்,
புது உலக ஸ்தாபனைக்கு நாம் நிமித்தம் (பொறுப்பானவர்களாக)
ஆகிறோம். ஆகவே நோக்கம் குறிக்கோள் (லட்சுமி-நாராயணர்) முன்னால்
உள்ளது. அவர் களைப் போல் ஆக வேண்டும். எந்த ஓர் அசுர குணமும்
உள்ளுக்குள் இருக்கக் கூடாது. ஆன்மிக சேவையில் ஈடுபட்டிருப்பதன்
மூலம் முன்னேற்றம் அதிகம் ஏற்படுகின்றது. கண்காட்சி,
அருங்காட்சியகம் முதலியவற்றை உருவாக்குகின்றனர். அநேகர்
வருவார்கள், அவர்களுக்கு பாபாவின் அறிமுகம் கொடுப்போம், பிறகு
அவர்களும் பாபாவை நினைவு செய்யத் தொடங்குவார்கள் எனப் புரிந்து
கொண்டுள்ளனர். நாள் முழுவதும் இதே சிந்தனை ஓடிக் கொண்டிருக்க
வேண்டும். சென்டர் திறந்து சேவையை அதிகப் படுத்த வேண்டும்.
இந்த ஞான ரத்தினங்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளன. பாபா தெய்விக
குணங் களையும் தாரணை செய்ய வைக்கிறார். மேலும் கஜானா தருகிறார்.
நீங்கள் அமர்ந்திருக் கிறீர்கள். புத்தியில் உள்ளது,
சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி அறிந்துள்ளோம்.
பவித்திரமாகவும் இருக்கிறோம். மனம்-சொல்-செயலில் எந்த ஒரு தீய
கர்மமும் இருக்கக் கூடாது. அதனை முழுமையாக சோதிக்க
வேண்டியுள்ளது.. பாபா வந்திருப்பதே பதீதர் களைப்
பாவனமாக்குவதற்காக. அதற்காக யுக்திகளும் சொல்லிக் கொண்டே
இருக்கிறார். அதைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டே இருக்க
வேண்டும். சென்டர் திறந்து அநேகருக்கு அழைப்புக் கொடுக்க
வேண்டும். அன்போடு அமர்ந்து புரிய வைக்க வேண்டும். இந்தப் பழைய
உலகம் முடிந்துவிடப் போகிறது. அதற்கு முன் புது உலகத்தின்
ஸ்தாபனை மிகவும் அவசியம். ஸ்தாபனை சங்கமயுகத்தில் தான்
நடைபெறுகின்றது. இதுவும் மனிதர்களுக்குத் தெரியாது - இப்போது
சங்கமயுகம். புது உலகின் ஸ்தாபனை, பழைய உலகின் விநாசம், இந்த
இரண்டுக்குமிடையில் உள்ள சங்கமயுகம் இது என்பதையும் புரிய
வைக்க வேண்டும். புது உலகின் ஸ்தாபனை ஸ்ரீமத் படி நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. பாபாவைத் தவிர வேறு யாரும் புது உலகிற்கான
வழிமுறை தர மாட்டார்கள். பாபா தான் வந்து குழந்தைகளாகிய உங்கள்
மூலம் புது உலகின் திறப்பு விழா நடத்துகிறார். தனியாகவோ செய்ய
மாட்டார். குழந்தைகள் அனைவருடைய உதவியைப் பெற்றுக் கொள்கிறார்.
அந்த மனிதர்கள் திறப்பு விழா நடத்துவதற்காக உதவி பெற்றுக்
கொள்ள மாட்டார்கள். அவர்கள் வந்து கத்திரிக்கோலால் ரிப்பன்
வெட்டுவார்கள். இங்கோ அந்த விசயம் கிடையாது. இதில் பிராமணகுல
பூஷணர்கள் (குலத்தின் அணிகலன்கள்) நீங்கள் உதவியாளர்களாக
ஆகிறீர்கள். மனிதர்கள் அனைவரும் வழியை முற்றிலும் குழப்பி
விட்டுள்ளனர். பதீத் உலகத்தைப் பாவன மாக்குவது பாபாவின்
காரியமேயாகும். பாபா தான் புது உலகின் ஸ்தாபனை செய்கிறார்.
அதற்காக ஆன்மிக ஞானம் தருகிறார். நீங்கள் அறிவீர்கள், பாபாவிடம்
புது உலகை ஸ்தாபனை செய்வதற்கான யுக்தி உள்ளது. பக்தி
மார்க்கத்தில் அவரை அழைக்கின்றனர் இல்லையா? ஹே பதித பாவனா,
வாருங்கள். சிவனுக்குப் பூஜையும் செய்து கொண்டே இருக்கின்றனர்
என்றாலும் கூட இது அவர்களுக்குத் தெரிவதில்லை - பதித-பாவனர்
யார்? துக்கத்திலோ நினைவு செய்கின்றனர், ஹே பகவானே, ஹே ராம்
என்று. ராம் என்று சொல்வதும் நிராகார் பகவானைத் தான்
சொல்கின்றனர். நிராகாரைத் தான் உயர்ந்த பகவான் எனச்
சொல்கின்றனர். ஆனால் மனிதர்கள் அதிகமாகக் குழம்பிப் போயுள்ளனர்.
பாபா வந்து குழப்பத்திலிருந்து வெளியில் கொண்டு வந்துள்ளார்.
எப்படி பனிமூட்டத்தில் மனிதர்கள் திசை தெரியாமல் குழம்பிப்
போகின்றனர் இல்லையா? இதுவோ எல்லையற்ற விசயம். மிகப்பெரிய
காட்டிற்குள் வந்து விட்டுள்ளனர். உங்களுக்கும் கூட பாபா உணர
வைத்துள்ளார், நாம் எந்தக் காட்டில் விழுந்து கிடந்தோம் என்பதை.
இதுவும் இப்போது தெரிந்து விட்டது - இது பழைய உலகம். இதற்கும்
இப்போது கடைசி நேரம். மனிதர்களோ முற்றிலும் வழியை அறியாமலே
உள்ளனர். தந்தையை அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். நீங்கள்
இப்போது அழைப்பதில்லை. இப்போது குழந்தைகள் நீங்கள் டிராமாவின்
முதல்-இடை-கடை பற்றி அறிந்திருக்கிறீர்கள். அதுவும் வரிசைப்படி.
யார் அறிந்துள்ளனரோ, அவர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.
மற்றவர்களுக்கும் வழி சொல்வதில் ஈடுபட்டுள்ளனர். பாபாவோ
சொல்லிக் கொண்டே இருக்கிறார், பெரிய-பெரிய சென்டர் களைத்
திறந்து வையுங்கள். சித்திரங்கள் பெரிது-பெரிதாக இருக்குமானால்
மனிதர்கள் சுலபமாகப் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளுக்காக
மேப்கள் (வரைபடம்) அவசியம் வேண்டும். இதுவும் பள்ளிக்கூடம் தான்
என்று சொல்ல வேண்டும். இங்குள்ளவை யெல்லாம் அற்புதமான
வரைபடங்கள். அந்தப் பள்ளிக்கூடங்களின் படங்களிலோ எல்லைக்குட்
ட்ட விசயங்களே உள்ளன. இதுவும் பாடசாலை தான். இதில் பாபா நமக்கு
சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய இரகசியத்தைச் சொல்லி நம்மைத்
தகுதி உள்ளவர் களாக ஆக்குகிறார். இது மனிதரில் இருந்து தேவதை
ஆவதற்கான ஈஸ்வரிய பாடசாலை ஆகும். ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம்
என்றே எழுதப் பட்டுள்ளது. இது ஆன்மிகப் பாடசாலை. வெறுமனே
ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலம் என்றாலும் மனிதர்கள் புரிந்து கொள்ள
மாட்டார்கள். யுனிவர்சிட்டி என்றும் எழுத வேண்டும். இது போன்ற
ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம் வேறு எதுவும் கிடையாது. பாபா
கார்டுகளைப் (அஞ்சல் அட்டை) பார்த்தார். சில வார்த்தைகளை மறந்து
விட்டுள்ளனர். பாபா எத்தனை தடவை சொல்லி யிருக்கிறார், பிரஜாபிதா
என்ற வார்த்தையை அவசியம் போட வேண்டும் என்று? பிறகும் கூட
குழந்தைகள் மறந்து விடுகின்றனர். எழுத்து முழுமையாக இருக்க
வேண்டும். இது பெரிய ஈஸ்வரிய காலேஜ் என்று அதைப் பார்த்ததும்
மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சேவையில் ஈடுபட்டுள்ள
குழந்தைகள், யார் நல்ல சேவாதாரிகளாக உள்ளனரோ, அவர்களுக்கும்
மனதில் உள்ளது. நாம் இன்ன சென்டரைப் போய் உயர்த்த வேண்டும்,
கொஞ்சம் குளிர்ந்து விட்டுள்ளது. அவர்களை எழுப்ப வேண்டும்.
ஏனென்றால் மாயா அப்படிப்பட்டது, அது அடிக்கடி தூங்க வைத்து
விடும். நான் சுயதரிசனச் சக்கரதாரி என்பதையும் மறந்து
விடுகின்றனர். மாயா அதிக எதிர்ப்புக் காட்டுகிறது. நீங்கள்
யுத்த மைதானத்தில் இருக்கின்றீர்கள். மாயா தலையைத் திருப்பித்
தலைகீழான பக்கம் கொண்டு சென்று விடாத படி மிகவும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாயாவின் புயல்களோ அநேகருக்கு
அதிகமாக வருகின்றன. சிறியவர்கள் அல்லது பெரியவர்கள் அனைவரும்
யுத்த மைதானத்தில் உள்ளனர். பயில்வானை மாயாவின் புயல் அசைக்க
முடியாது. அந்த நிலைமையும் கூட வரப் போகிறது.
பாபா புரிய வைக்கிறார் - சமயம் மிக மோசமாக (ஆபத்தான நிலையில்)
உள்ளது. நிலைமை கெட்டுப் போயுள்ளது. இராஜ்யங்கள் அனைத்தும்
அழிந்துவிடப் போகின்றன. அனைவரையும் கீழே இறக்கி விடுவார்கள்.
பிறகு பிரஜைகள் மீது பிரஜைகளின் இராஜ்யம் முழு உலகத்திலும்
வந்து விடும். நீங்கள் உங்களுடைய புதிய இராஜதானியை ஸ்தாபனை
செய்கிறீர்கள் என்றால் இங்கே இராஜ்யத்தின் பெயரே முடிந்து
போகும். பஞ்சாயத்து இராஜ்யம் இருந்து கொண்டுள்ளது. எப்போது
பிரஜைகளின் இராஜ்யம் ஆகிறதோ, அப்போது தங்களுக்குள்
சண்டையிட்டுக் கொள்வார்கள். சுயராஜ்யமோ அல்லது இராம ராஜ்யமோ
உண்மையில் இப்போது இல்லை. அதனால் உலகம் முழுவதும் ஒரே சண்டை
சச்சரவுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. தற்சமயமோ எல்லா
இடங்களிலும் பிரச்சினை கள் உள்ளன. நீங்கள் அறிவீர்கள், நாம்
நம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள்
அனைவருக்கும் வழி சொல்கிறீர்கள். பாபா சொல்கிறார் - என்னை
மட்டுமே நினைவு செய்யுங்கள். பாபாவின் நினைவில் இருந்து
மற்றவர்களுக்கும் இதைப் புரிய வைக்க வேண்டும் - ஆத்ம அபிமானி
ஆகுங்கள். தேக அபிமானத்தை விட்டுவிடுங்கள். உங்களில் அனைவருமே
ஆத்ம அபிமானி ஆகி விட்டார்கள் என்ப தில்லை. ஆக வேண்டும்.
நீங்கள் முயற்சி செய்கிறீர்கள், மற்றவர் களையும் செய்ய
வைக்கிறீர்கள். நினைவு செய்வதற்கு முயற்சி செய்கிறீர்கள்.
பிறகு மறந்து போகிறீர்கள். இந்த முயற்சியைத் தான் செய்ய
வேண்டும். முக்கியமான விசயம் பாபாவை நினைவு செய்வது.
குழந்தைகளுக்கு எவ்வளவு சொல்லிப் புரிய வைக்கிறார்! மிக நல்ல
ஞானம் கிடைக்கிறது. முக்கியமான விசயம் பவித்திரமாக இருக்க
வேண்டும் என்பது தான். பாபா பாவனமாக்குவதற்காக வந்துள்ளார்
எனும் போது மீண்டும் பதித் ஆகக் கூடாது. நினைவின் மூலம் தான்
நீங்கள் சதோபிரதான் ஆவீர்கள். இதை மறக்கக் கூடாது. மாயா இதில்
தான் விக்னத்தை ஏற்படுத்தி மறக்கடித்து விடும். நாம் பாபாவை
நினைவு செய்து சதோபிரதான் ஆக வேண்டும் என்ற ஈடுபாடு இரவும்
பகலும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். கடைசியில் ஒரு தந்தை
தவிர வேறு யாரும் நினைவு வராதபடி நினைவு அவ்வளவு பக்காவாக
இருக்க வேண்டும். கண்காட்சியிலும் கூட, இவர் அனைவரின் தந்தை,
உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான் என்பதை முதல்-முதலில் புரிய
வைக்க வேண்டும். அனைவருக்கும் தந்தை, பதீத-பாவனர், சத்கதி
அளிப்பவர் அவர். சொர்க்கத்தைப் படைப்பவர் அவர் தான்.
இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், பாபா வருவதே
சங்கமயுகத்தில் தான். பாபா தான் இராஜயோகம் கற்றுத் தருகிறார்.
பதித-பாவனர் ஒருவரைத் தவிர வேறொருவர் இருக்க முடியாது.
முதல்-முதலிலோ தந்தையின் அறிமுகம் கொடுக்க வேணடியுள்ளது.
இப்போது ஒவ்வொருவருக்கும் இப்படி ஒவ்வொரு சித்திரத்தை வைத்துப்
புரிய வைப்பீர்களானால் இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு எப்படிப்
புரிய வைப்பீர்கள்? ஆனால் முதல்- முதலில் தந்தையின்
சித்திரத்தை வைத்துப் புரிய வைக்க வேண்டியது முக்கியமாகும்.
பக்தியில் பல வகை உள்ளது, ஞானம் என்பது ஒன்று தான். பாபா
எவ்வளவு யுக்திகள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டே
இருக்கிறார்! பதித-பாவனர் ஒரு தந்தை தான். (பாவனமாவதற்கான)
வழியும் சொல்கிறார். கீதையை எப்போது சொன்னார்? இதுவும்
யாருக்கும் தெரியாது. துவாபர யுகத்தின் சங்கமயுகம் என்று
எதுவும் சொல்லப் படுவதில்லை. ஒவ்வொரு யுகத்திலுமே பாபா
வருவதில்லை. மனிதர்களோ, முற்றிலும் குழம்பிப் போய்
இருக்கின்றனர். நாள் முழுவதும் இதே சிந்தனை ஓடிக்
கொண்டிருக்கிறது, எப்படி-எப்படிப் புரிய வைப்பது? பாபா அதற்கான
வழிகாட்டுதல் தர வேண்டியுள்ளது. டேப்பில் கூட முரளியை நீங்கள்
முழுமையாகக் கேட்க முடியும். சிலர் சொல்கின்றனர், டேப் மூலம்
நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம், நேரில் போய் ஏன் கேட்கக்
கூடாது என்று. அதனால் பாபாவுக்கு முன்னிலையில் வருகின்றனர்.
குழந்தைகள் நிறைய சேவை செய்ய வேண்டும். வழி சொல்ல வேண்டும்.
கண்காட்சிக்கு வருகின்றனர். நன்றாக உள்ளது-நன்றாக உள்ளது எனச்
சொல்லவும் செய்கின்றனர். பிறகு வெளியில் போனவுடன் மாயாவின்
வாயுமண்டலத்தில் அனைத்தும் காணாமல் போய் விடுகிறது. சிந்தனை
செய்வதில்லை. பிறகும் அவர்களைப் பின்தொடர்ந்து நினைவூட்ட
வேண்டும். வெளியில் சென்றதும் மாயா கவர்ந்து இழுத்து
விடுகின்றது. வேலை-தொழிலில் ஈடுபட்டு விடுகின்றனர். அதனால்
மதுபனுக்கு மகிமையின் பாடல் உள்ளது. நீங்கள் வெளியில் சென்றும்
கூடப் புரிய வைப்பீர்கள். கீதையின் பகவான் யார்? இதற்கு முன்
நீங்களும் இதுபோல் போய்த் தலை வணங்கி வந்தீர்கள். இப்போதோ
நீங்கள் முற்றிலும் மாறி விட்டீர்கள். பக்தியை விட்டு
விட்டீர்கள். நீங்கள் இப்போது மனிதரில் இருந்து தேவதையாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். புத்தியில் முழு ஞானமும் உள்ளது.
பிரஜாபிதா பிரம்மாகுமார் குமாரிகள் யாரென்று வேறு யாருக்குத்
தெரியும்? நீங்கள் புரிய வைக்கிறீர்கள், உண்மையில் நீங்களும்
கூட பிரஜாபிதா பிரம்மாகுமார் குமாரிகள் தான் என்று. இச்சமயம்
தான் பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிராமண குலமும் அவசியம் வேண்டும் இல்லையா? சங்கம யுகத்தில்
தான் பிராமண குலம் இருக்கும். முன்பு பிராமணர்களின் குடுமி
புகழ் பெற்றதாக இருந்தது. குடுமி அல்லது பூணூலால் இவர்கள்
இந்து என அறிந்து கொண்டனர். இப்போதோ அடையாளங்களும் போய்
விட்டன. இப்போது நாம் பிராமணர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பிராமணர் ஆன பிறகு தேவதை ஆக முடியும். பிராமணர்கள் தான் புது
உலகை ஸ்தாபித்துள்ளனர். யோகபலத்தினால் சதோபிரதான் ஆகிக்
கொண்டுள்ளனர். தன்னை சோதித்துப் பார்க்க வேண்டும். எந்த ஓர்
அசுர குணமும் இருக்கக் கூடாது. உப்பு நீராக ஆகக் கூடாது. இதுவோ
யக்ஞம் அல்லவா? யக்ஞத்தினால் அனைவருக்கும் பராமரிப்பு
நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. யக்ஞத்தில் பராமரிப் பவர்களான
டிரஸ்டிகளும் உள்ளனர். யக்ஞத்தின் எஜமானர் சிவபாபா. இந்த
பிரம்மாவும் டிரஸ்டி ஆவார். யக்ஞத்தைப் பராமரிக்க வேண்டி
உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு என்ன வேண்டுமோ,
யக்ஞத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம். வேறு யாரிடமாவது பெற்று
அணிந்து கொள்வீர்களானால் அவர்களின் நினைவு வந்து கொண்டே
இருக்கும். இதில் புத்தியின் லைன் மிகவும் தெளிவாக இருக்க
வேண்டும். இப்போதோ திரும்பிச் செல்ல வேண்டும். சமயம் மிகவும்
குறைவாக உள்ளது. அதனால் நினைவு யாத்திரை பக்காவாக இருக்க
வேண்டும். இதே புருஷார்த்தம் செய்ய வேணடும். நல்லது.
இனிமையிலும் இனிமையான
தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) தனது முன்னேற்றத்திற்காக ஆன்மிக சேவையில் முழு ஈடுபாட்டுடன்
இருக்க வேண்டும். கிடைத்துள்ள ஞான ரத்தினங்களை தாரணை செய்து
மற்றவர்களையும் தாரணை செய்ய வைக்க வேண்டும்.
2) தன்னை சோதித்துப் பார்க்க வேண்டும் - எனக்குள் எந்த ஓரு
அசுர குணமும் இல்லை தானே? நாம் அறங்காவலர் (டிரஸ்டி) ஆகி
இருக்கிறோமா? எப்போதாவது உப்பு நீராக இருந்திருக்கிறோமா?
புத்தியின் லைன் தெளிவாக உள்ளதா?
வரதானம்:
நினைப்பது, சொல்வது, செய்வது -
இந்த மூன்றையும் சமமாக மாற்றுகின்ற ஞானம் நிறைந்த ஆத்மா ஆகுக!
இப்பொழுது வானப்பிரஸ்த நிலையில்
செல்வதற்கான சமயம் அருகாமையில் வந்து கொண்டு இருக்கின்றது. எனவே,
பலவீனங்களுடைய எனது என்பதையும் மற்றும் வீணான வற்றின்
விளையாட்டையும் முடித்துவிட்டு சொல்வது, சிந்திப்பது மற்றும்
செய்வது ஆகியவற்றை சமமாக ஆக்குங்கள், அப்பொழுதே ஞான
சொரூபமானவர்கள் என்று கூறமுடியும். யாரெல்லாம் அவ்வாறு ஞான
சொரூப ஞானம் நிறைந்த ஆத்மாக்களாக இருக்கின்றார்களோ, அவர்களுடைய
ஒவ்வொரு கர்மம், சமஸ்காரம், குணம் மற்றும் காரியம் சக்தி
வாய்ந்ததாக, தந்தைக்கு சமமான தாக இருக்கும். அவர்கள்
ஒருபொழுதும் வீணானவற்றின் விசித்திரமான விளையாட்டை விளையாட
முடியாது. சதா பரமாத்ம சந்திப்பின் விளையாட்டில் (பிஸியாக)
மும்முரமாக இருப்பார்கள். ஒரு தந்தையுடன் சந்திப்பைக்
கொண்டாடுவார்கள். மேலும், மற்றவர்களையும் தந்தைக்கு சமமாக
ஆக்குவார்கள்.
சுலோகன்:
சேவையின் மீதுள்ள ஊக்கம் சிறிய
சிறிய வியாதிகளையெல்லாம் அழித்து விடுகிறது. எனவே, சேவையில்
எப்போதும் இணைந்தே இருங்கள்.
ஓம்சாந்தி