10.12.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! அழியாத ஞான ரத்தினங்களின் தானம் தான் மகா தானம் ஆகும். இந்த தானத்தினால் தான் இராஜ்யம் பலன் கிடைக்கிறது. ஆகவே மகாதானி ஆகுங்கள்.

 

கேள்வி :

எந்த குழந்தைகளுக்கு சேவையில் ஆர்வம் இருக்கிறதோ அவர்களின் முக்கிய அடையாளங்கள் என்னவாக இருக்கும்?

 

பதில் :

1. அவர்களுக்கு பழைய உலகின் சூழ்நிலைகள் முற்றிலும் நன்றாக இருக்காது. 2. அவர்களுக்கு பலருக்கு சேவை செய்து தனக்குச் சமமாக மாற்றுவதில் மகிழ்ச்சி இருக்கும். 3. அவர்கள் படிப்பதிலும் படிக்க வைப்பதிலும் தான் ஓய்வைப் பெறுவார்கள். 4. புரிய வைத்து, புரிய வைத்து தொண்டை வலித்தாலும் மகிழ்ச்சியில் இருப்பார்கள். 5. அவர்களுக்கு யாருடைய சொத்தும் தேவை இல்லை. அவர்கள் யாருடைய சொத்திற்கு பின்பும் தன்னுடைய நேரத்தை இழக்க மாட்டார்கள். 6. அவர்களின் பற்று நாலாபுறங்களில் இருந்தும் துண்டிக்கப்பட்டிருக்கும் 7. அவர்கள் தந்தைக்குச் சமமாக பிறரை முன்னேற்றுபவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு சேவையைத் தவிர வேறு எதுவும் இனிமையாக இருக்காது.

 

பாடல் : ஓம் நமசிவாய...

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை என்று யாருடைய மகிமையைக் கேட்டீர்களோ அவர் உட்கார்ந்து குழந்தை களை பாடம் கற்க வைக்கிறார். இது பாட சாலை அல்லவா ! நீங்கள் அனைவரும் இங்கே டீச்சரிடம் பாடம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இவர் சுப்ரீம் டீச்சர் இவருக்கு பரம் பிதா என்று கூறப்படுகிறது. பரம பிதா என்று ஆன்மீகத் தந்தைக்குத் தான் கூறப்படுகிறது. லௌகீக தந்தையை ஒரு போதும் பரம தந்தை என்று கூற முடியாது. இப்போது நாம் பாரலௌகீக தந்தையிடம் அமர்ந்திருக்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். சிலர் அமர்ந்திருக்கிறார்கள், சிலர் விருந்தினராக வருகிறார்கள். நாம் எல்லையற்ற தந்தை யிடமிருந்து சொத்தை அடைவதற்காக அமர்ந்திருக்கிறோம் என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர் கள். எனவே உள்ளுக்குள் எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும். மனிதர்கள் பாவம் கதறிக் கொண்டிருக்கிறார்கள். இச்சமயம் உலகத்தில் அனைவரும் உலகில் அமைதி வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுவோ பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை. அமைதி என்றால் என்ன? ஞானக் கடல், அமைதியின் கடல் பாபா தான் அமைதியை ஸ்தாபனை செய்யக் கூடியவர் ஆவார். நிராகார உலகத்தில் தான் அமைதி இருக்கிறது. இங்கே உலகில் அமைதி எப்படி வரும் என்று கதறுகிறார்கள். இப்போது புது உலகம் சத்யுகத்தில் தான் அமைதி இருந்தது. அப்போது ஒரு தர்மம் இருந்தது. புது உலகிற்கு சொர்க்கம், தேவதைகளின் உலகம் என்கிறார்கள். சாஸ்திரங்களில் இங்கும் அங்கும் அசாந்தியின் விஷயங்களை எழுதி இருக்கிறார்கள். துவாபர யுகத்தில் கம்சன் இருந்தான், பிறகு இரண்ய கசிபுவை சத்யுகத்தில் காண்பிக்கிறார்கள். திரேதாவில் இராவணனின் சண்டை... என காண்பிக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் அசாந்தியைக் காண்பித்திருக்கிறார்கள். மனிதர்கள் பாவம் எவ்வளவு ஆழமான இருளில் இருக்கிறார்கள். எல்லையற்ற தந்தையை அழைக்கிறார்கள். இறை தந்தை வரும் போது தான் அவர் அமைதியை ஸ்தாபனை செய்வார். இறைவனை பாவம் அறியவேயில்லை. புது உலகில் தான் அமைதி இருக்கிறது. பழைய உலகத்தில் இல்லை. புது உலகத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் தந்தை தான். அமைதியை ஸ்தாபனை செய்யுங்கள் என அவரைத் தான் அழைக்கிறார்கள். ஆரிய சமாஜத்தினர் கூட சாந்தி தேவா என அழைக்கிறார்கள்.

 

முதலில் பவித்ரதா என பாபா கூறுகின்றார். இப்போது நீங்கள் தூய்மையாகிக் கொண்டி ருக்கிறீர்கள். அங்கே தூய்மையும் இருக்கிறது. அமைதியும் இருக்கிறது. ஆரோக்கியம், செல்வம் அனைத்தும் இருக்கிறது. செல்வம் இல்லை என்றால் மனிதர்கள் வாடிப் போகின்றார்கள். நீங்கள் இங்கே லஷ்மி நாராயணனைப் போன்று செல்வந்தர்களாக மாறுவதற்காக வருகிறீர்கள். இவர்கள் உலகத்திற்கே அதிபதியாக இருந்தார்கள் அல்லவா? நீங்கள் உலகத் திற்கு அதிபதியாவதற்காக வந்துள்ளீர்கள். ஆனால் அனைவரின் புத்தியும் வரிசைக் கிரமத்தில் இருக்கிறது. விடியற் காலையில் விழிக்கும் போது உடன் லஷ்மி நாராயணனின் சித்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு யுக்தி செய்யுங்கள். இப்போது குழந்தைகளின் புத்தி தங்க புத்தியாக மாற வேண்டும். இச்சமயம் இன்னும் தமோபிரதானத்திலிருந்து ரஜோ வரை வந்திருக்கின்றது. இப்போது சதோ, சதோபிரதானம் வரை போக வேண்டும். அந்த சக்தி இப்போது இல்லை. நினைவில் இருப்பதில்லை. யோக பலம் மிகவும் குறைவாக இருக்கிறது. உடனடியாக சதோபிரதானமாக மாற முடியவில்லை. ஒரு நொடியில் ஜீவன் முக்தி என்று பாடப்பட்டிருக்கிறது. அது சரிதான், நீங்கள் பிராமணன் ஆகிவிட்டீர்கள் என்றால், ஜீவன் முக்தி அடைந்து விட்டீர்கள். பிறகு ஜீவன் முக்தியில் கூட சர்வோத்தம. மத்திய, கீழான என்று இருக்கிறது. பாபாவினுடையவராக மாறுபவர்களுக்கு நிச்சயம் ஜீவன் முக்தி கிடைக்கிறது. பாபாவினுடையவராகிய பிறகு பாபாவை விட்டு விட்டாலும் கூட ஜீவன் முக்தி நிச்சயம் கிடைக்கும். சொர்க்கத்தில் பெருக்கக் கூடியவர்களாக மாறிவிடு வார்கள். சொர்க்கத்தில் போவார்கள். மற்றபடி குறைந்த பதவி கிடைக்கிறது. பாபா அழிவற்ற ஞானம் கொடுக்கிறார். அது ஒரு போதும் அழிவதில்லை. குழந்தைகளுக்குள் மகிழ்ச்சியின் மத்தளம் முழங்க வேண்டும். இந்த ஐயோ ஐயோ என்பதற்கு பிறகு ஆஹா, ஆஹா என்பது வர வேண்டும்.

 

நீங்கள் இப்போது ஈஸ்வரிய சந்ததியினர். பிறகு தெய்வீக சந்ததியினராக மாறுவீர்கள். இச்சமயம் உங்களுடைய இந்த வாழ்க்கை வைரம் போன்றதாகும். நீங்கள் பாரதத்திற்கு சேவை செய்து பாரதத்தை அமைதி நிறைந்ததாக மாற்றுகிறீர்கள். அங்கே தூய்மை சுகம், அமைதி அனைத்தும் இருக்கின்றது. உங்களுடைய இந்த வாழ்க்கை தேவதைகளை விட உயர்ந்ததாகும். இப்போது நீங்கள் படைக்கக் கூடியவர் அப்பா மற்றும் சிருஷ்டி சக்கரத்தை அறிந்துள்ளீர்கள். இந்த பண்டிகைகள் போன்றவை பரம்பரையாக நடக்கிறது என்று கூறு கிறார்கள். ஆனால் எப்போதிலிருந்து என்பது யாருக்கும் தெரியவில்லை. எப்போது இந்த சிருஷ்டி ஆரம்பம் ஆகிறதோ அப்போதிலிருந்து இராவணனை எரித்தல் போன்றவை பரம்பரையாக நடக்கிறது என நினைக்கிறார்கள். இப்போது சத்யுகத்தில் இராவணன் இல்லை. அங்கே யாரும் துக்கம் உடையவர் கிடையாது. ஆகவே, இறைவனையும் நினைப்பதில்லை. இங்கே அனைவரும் இறைவனை நினைக்கிறார்கள். இறைவன் தான் உலகத்தில் அமைதியைக் கொண்டு வருவார் என புரிந்துக் கொள்கிறார்கள். எனவே தான் வந்து இரக்கம் காட்டுங்கள், எங்களை துக்கத்திலிருந்து விடுவியுங்கள் என்கிறார்கள். குழந்தைகள் தான் தந்தையை அழைக் கிறார்கள். ஏனென்றால் குழந்தைகள் தான் சுகத்தைப் பார்த்திருக் கிறார்கள். உங்களை தூய்மையாக மாற்றி உடன் அழைத்துச் செல்வேன் என பாபா கூறுகிறார். யார் தூய்மையாவதில்லையோ அவர்கள் தண்டனை அடைவார்கள். இதில் எண்ணம், சொல், செயல் தூய்மையாக இருக்க வேண்டும். எண்ணமும் மிகவும் நன்றாக இருக்க வேண்டும். கடைசியில் மனதில் எந்த ஒரு வீணான எண்ணமும் வரக் கூடாது. அது வராத அளவிற்கு கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை. இப்போது கர்மாதீத நிலையை அடையும் வரை எண்ணங்களில் வரும் என்று பாபா புரிய வைக்கிறார். அனுமானைப் போன்று அசையாமல் இருங்கள். அதில் தான் மிகவும் முயற்சி வேண்டும். யார் கட்டளைக்குக் கீழ்ப் படிந்தவர்களாக நன்றி உள்ளவர்களாக நல்ல குழந்தைகளாக இருக்கிறார்களோ அவர்கள் மீது பாபாவும் மிகுந்த அன்பு வைக்கிறார். 5 விகாரங்கள் மீது வெற்றி அடையாதவர்கள் இந்த அளவு அன்பைப் பெற முடியாது. நாம் கல்ப கல்பமாக பாபாவிடமிருந்து சொத்தை அடைகிறோம் என்றால், எவ்வளவு மகிழ்ச்சியின் அளவு அதிகரிக்க வேண்டும் என குழந்தைகள் அறிகிறார்கள். ஸ்தாபனை நிச்சயம் நடக்க வேண்டும் என அறிவீர்கள். இந்த பழைய உலகம் நிச்சயம் சுடுகாடாக மாறும். நாம் சொர்க்கத்திற்குச் செல்வதற்காக போன கல்பத்தை போன்று முயற்சி செய்துக் கொண்டே இருக்கிறோம். இது சுடுகாடு அல்லவா? பழைய உலகம் மற்றும் புது உலகத்தின் விளக்கங்கள் ஏணிப்படியில் இருக்கிறது. இந்த ஏணிப்படி எவ்வளவு நன்றாக இருக்கிறது என்றாலும், மனிதர்கள் புரிந்துக் கொள்வதில்லை. இங்கே கடற்கரையில் வசிப்பவர்களே கூட முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை. நீங்கள் ஞானச் செல்வத்தை நிச்சயம் தானம் செய்ய வேண்டும். செல்வத்தைக் தானமாகக் கொடுத்தால் செல்வம் குறையாது. தானி, மகாதானி என்று கூறுகிறார்கள் அல்லவா? மருத்துவமனை, தர்மசாலை களை உருவாக்கு பவர்களை மகாதானி என்கிறார்கள். அதனுடைய பலன் அடுத்த பிறவியில் கிடைக்கிறது. தர்மசாலை கட்டுகிறார்கள் என்றால், அடுத்த பிறவியில் கட்டிடத்தின் சுகம் கிடைக்கும் என புரிந்துக் கொள்ளுங்கள். சிலர் நிறைய செல்வத்தை தானம் செய்கிறார்கள் என்றால், ராஜாவின் வீட்டில் அல்லது பணக்காரர்களின் வீட்டில் பிறவி எடுக்கிறார்கள். அவர்கள் தானத்தினால் மாறுகிறார்கள். நீங்கள் படிப்பினால் இராஜ்ய பதவியைப் பெறுகிறீர்கள் படிப்பும் இருக்கிறது. தானமும் இருக்கிறது. இங்கே நேரடியாக செய்கிறீர்கள், பக்தி மார்க்கத்தில் மறைமுகமாகச் செய்கிறார்கள். சிவபாபா உங்களை கல்வியின் மூலம் இவ்வாறு மாற்றுகிறார். சிவபாபாவிடம் தான் அழியாத ஞான ரத்தினங்கள் உள்ளன. ஒவ்வொரு ரத்தினமும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பாகும். பக்தி பற்றி இவ்வாறு கூற முடியாது. இதற்கு ஞானம் என்று பெயர். சாஸ்திரங்களில் பக்தியின் ஞானம் இருக்கிறது. எப்படி பக்தி செய்வது என்ற போதனைகள் கிடைக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின் போதை இருக்கிறது. உங்களுக்கு பக்திக்கு பிறகு ஞானம் கிடைக்கிறது. ஞானத்தினால் உலக இராஜ்ய பதவியின் அளவற்ற போதை இருந்தது. யார் அதிகமாக சேவை செய்கிறார்களோ அவர்களுக்கு போதை ஏறும். படக் கண்காட்சி மற்றும் மியூசியத்தில் கூட நன்கு சொற்பொழிவு ஆற்றுபவர்களை அழைக்கிறார்கள் அல்லவா ! அங்கேயும் நிச்சயம் வரிசைக் கிரமத்தில் இருப்பார்கள். யானைப் படையினர், குதிரைப் படையினர், காலாட்படையினர் இருக்கின்றனர். தில்வாடா கோவிலிலும் நினைவு சின்னங் கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது சைத்தன்ய தில்வாடா, அது ஜட தில்வாடா என நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் குப்தமாக இருக்கிறீர்கள். ஆகவே உங்களைப் பற்றித் தெரியவில்லை.

 

நீங்கள் ராஜ ரிஷி, அவர்கள் ஹடயோக ரிஷி ஆவார்கள். இப்போது நீங்கள் ஞான ஞானேஸ்வரி ! ஞானக் கடல் பாபா உங்களுக்கு ஞானம் கொடுக்கிறார். நீங்கள் அழிவற்ற சர்ஜனின் (மருத்துவர்) குழந்தைகள் ! சர்ஜன் தான் நாடி பார்ப்பார். யார் தன்னுடைய நாடியைத் தெரிந்துக் கொள்ளவில்லையோ அவர்கள் மற்றவர்களுடையதை எப்படி அறிவார்கள். நீங்கள் அழிவற்ற சர்ஜனின் குழந்தைகள் அல்லவா? ஞான மையை சத்குரு அளித்தார்... இது ஞான ஊசி அல்லவா ! ஆத்மாவிற்குத்தான் ஊசி போடப்படுகிறது. இந்த மகிமைகளும் இப்போதையது தான். சத்குருவிற்கும் மகிமை இருக்கிறது. குருக் களுக்கும் ஞான ஊசியை சத்குரு தான் போடுவார். நீங்கள் அழிவற்ற சர்ஜனின் குழந்தைகள் என்றால், உங்களுடைய வேலையே ஞான ஊசி போடுதல் ஆகும். மருத்துவர் களில் கூட ஒரு சிலர் மாதத்திற்கு லட்சம் என்றும் ஒரு சிலர் 500 கூட கஷ்டப் பட்டு சம்பாதிக்கின்றனர். வரிசைக் கிரமத்தில் ஒருவர் இன்னொருவரிடம் செல்கிறார்கள் அல்லவா? உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தூக்கில் போட வேண்டும் என தீர்ப்பு கிடைக்கிறது. பிறகு குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்தால், அவர் மன்னித்தும் விடுகிறார்.

 

குழந்தைகளாகிய உங்களுக்கு போதை இருக்க வேண்டும், பரந்த மனம் இருக்க வேண்டும். இந்த பாக்கிய ரதத்தில் பாபா நுழைந்திருக்கிறார் என்றால், இவரை பாபா பரந்த மனம் உடையவராக ஆக்கிவிட்டார் அல்லவா? தான் எது வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா? அவர் இவருக்குள் வந்து அதிபதியாக அமர்ந்திருக்கிறார். இது அனைத்தையும் பாரதத்தின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் பணத்தை பாரதத்தின் நன்மைக்காகப் போடுகிறீர்கள். செலவிற்கு எங்கிருந்து வருகிறது என சிலர் கேட்கிறார்கள். நாங்கள் எங்களுடைய உடல்,மனம் பொருளால் சேவை செய்கிறோம் என்று கூறுங்கள். நாம் இராஜ்யம் செய்கிறோம் என்றால் பணமும் நாம் தான் போட வேண்டும். நாங்களே தான் எங்களுக்காக செலவு செய்கிறோம். பிராமணர்களாகிய நாம் ஸ்ரீமத் படி ராஜ்ஜியத்தை ஸ்தாபனை செய்கிறோம். யார் பிராமணன் ஆகிறார்களோ அவர்களே செலவு செய்வார்கள். சூத்திரனிலிருந்து பிராமணன் ஆக வேண்டும். பிறகு தேவதை ஆக வேண்டும். அனைத்து படங்களையும் இவ்வாறு டிரான்ஸ்லைட்டாக செய்து விட்டால் அது மனிதர்களைக் கவரும் என பாபா கூறுகிறார். ஒரு சிலருக்கு அம்பு உடனே பாய்ந்து விடுகிறது. ஒரு சிலர் மாயா ஜாலத்தின் பயத்தினால் வருவதில்லை. மனிதனிலிருந்து தேவதையாகுதல் மாயாஜாலம் அல்லவா! நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன்-பகவான் வாக்கு. ஹடயோகி ஒரு போதும் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. இந்த விஷயங்களை இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். நீங்கள் கோவிலில் இடம் பெறும் அளவிற்கு தகுதியை அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். இச்சமயம் இந்த உலகம் முழுவதும் எல்லையற்ற இலங்கையாக இருக்கிறது. முழு உலகத்திலும் இராவணனின் ராஜ்ஜியம் நடக்கிறது. மற்றபடி சத்யுகம் திரேதாவில் இந்த இராவணன் எப்படி இருக்க முடியும். நான் இப்போது என்ன கூறுகிறேனோ அதைக் கேளுங்கள் என பாபா கூறுகிறார். இந்த கண்களினால் எதையும் பார்க்காதீர்கள். இந்த பழைய உலகமே அழியப் போகிறது. ஆகவே, நாம் நம்முடைய சாந்திதாமம் சுகதாமத்தைத் தான் நினைக்கிறோம். இப்போது நீங்கள் பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர் ஆகிறீர்கள். இவர் நம்பர் ஒன் பூஜாரியாக இருந்தார். நாராயணனின் பூஜை நிறைய செய்திருக்கிறார். இப்போது மீண்டும் பூஜைக்குரிய நாராயணனாக மாறிக் கொண்டிருக்கிறார். நீங்களும் முயற்சி செய்து மாற முடியும். ராஜ்ஜியம் நடக்கிறது அல்லவா? முதலாம் எட்வர்ட், இரண்டாம் எட்வர்ட், மூன்றாம் எட்வர்ட் என்று இருப்பது போல ஆகும். நீங்கள் சர்வ வியாபி என்று கூறி என்னைப் புறக்கணித்து வந்துள்ளீர்கள் என பாபா கூறியுள்ளார். இருப்பினும் நான் உங்களுக்கு உபகாரம் செய்கிறேன். இந்த விளையாட்டே இவ்வாறு அதிசயமாக உருவாக்கப் பட்டிருக்கிறது. நிச்சயம் முயற்சி செய்ய வேண்டும். போன கல்பத்தில் யார் முயற்சி செய்தார்களோ அவ்வாறே நாடகத்தின் படி செய்வார்கள். எந்த குழந்தைகளுக்கு சேவையின் ஆர்வம் இருக்கிறதோ அவர்களுக்கு இரவும் பகலும் இந்த சிந்தனை ஓடுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு பாபாவிடமிருந்து வழி கிடைக்கிறது என்றால், குழந்தைகளாகிய உங்களுக்கு சேவையைத் தவிர வேறு எதுவும் நன்றாக இருக்காது. உலகச் சூழ்நிலைகள் பிடிக்காது. சேவை செய்யக் கூடியவர்களுக்கு சேவை இல்லாமல் ஓய்வில்லை. ஆசிரியருக்கு படிக்க வைப்பதில் ஆனந்தம் வருகிறது. இப்போது நீங்கள் உயர்ந்த ஆசிரியராகிறீர்கள், உங்களுடைய தொழிலே இதுவாகும். எவ்வளவு பேரை தனக்குச் சமமாக நல்லவர்களாக ஆசிரியர் மாற்றுகிறார்களோ அவ்வளவு அவருக்குப் பரிசு கிடைக்கிறது. அவர்களால் படிக்க வைக்கமால் ஓய்வாக இருக்க முடியாது. படக்கண்காட்சிகளில் இரவு பனிரெண்டு மணி ஆகிவிட்டாலும் கூட மகிழ்ச்சி ஏற்படுகிறது. களைப்பு ஏற்பட்டாலும், தொண்டை கட்டிப்போனாலும் கூட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள், ஈஸ்வரிய சேவை அல்லவா ! இது மிகவும் நல்ல உயர்ந்த சேவை. அவர்களுக்கு வேறு எதுவும் இனிமையாக இருக்காது. நாங்கள் இந்த கட்டிடம் போன்றவைகளை வாங்கி என்ன செய்வோம்? நாங்கள் படிக்க வைக்க வேண்டும் என்பார்கள். இந்த சேவை செய்ய வேண்டும். சொத்து போன்றவைகளில் சண்டைகளை பார்த்தால் இந்த தங்கம் எதற்குக் காதை துண்டிப்பதற்கு என்பார்கள். சேவையின் மூலமாக கரையைக் கடக்க வேண்டும். கட்டிடம் அவர்களின் பெயரிலேயே இருக்கட்டும் என்று பாபா கூறுகிறார். பி.கே. சேவை செய்ய வேண்டும். இந்த சேவையில் வெளி பந்தனம் நன்றாக இல்லை. சிலருக்கு பற்று போகிறது. சிலருடைய பற்று துண்டிக்கப்பட்டு விடுகிறது. மன்மனாபவ என்றால் உங்களின் விகர்மங்கள் அழியும் என்று பாபா கூறுகின்றார், மிகவும் உதவி கிடைக்கிறது. இந்த சேவையில் ஈடு பட வேண்டும். இதில் நிறைய வருமானம் இருக்கிறது. கட்டிடங்கள் போன்றவை இல்லை. கட்டிடங்களையும் கொடுத்து பந்தனத்தை ஏற்படுத்தினால் அதைப் பெற மாட்டார்கள். யார் சேவையைப் பற்றி அறியவில்லையோ அவர்களுக்கே அவர்கள் பயன்பட மாட்டார்கள். டீச்சர் தனக்குச் சமமாக மாற்றுவார். மாற வில்லை என்றால் அவர்கள் எதற்குப் பயன்படுவர். நிறைய கைகளின் தேவை இருக்கிறது அல்லவா? இதிலும் கூட கன்னியர்கள், தாய்மார்கள் அதிகமாக தேவைப் படுகிறார்கள். அப்பா டீச்சராக இருக்கிறார். குழந்தைகளும் டீச்சர் ஆக வேண்டும் என குழந்தைகள் புரிந்துக் கொள்கிறார்கள். டீச்சர், வேறு எந்த வேலையும் செய்ய கூடாது என்பது கிடையாது. அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. இரவும், பகலும் சேவையின் சிந்நதனையிலேயே இருக்க வேண்டும். மேலும் அனைத்து பற்றுகளையும் துண்டித்து விட வேண்டும். சேவை இல்லாமல் ஓய்வு இல்லை, சேவை செய்து தனக்குச் சமமாக மாற்ற வேண்டும்.

 

2. பாபாவிற்குச் சமமாக பிறரை முன்னேற்றம் செய்பவராக வேண்டும். அனைவரின் நாடியும் பார்த்து சேவை செய்ய வேண்டும். தன்னுடைய உடல், மனம், பொருளை பாரதத்தின் நன்மைக்காக ஈடுபடுத்த வேண்டும். ஆடாமல் அசையாமல் இருப்பதற்கு கீழ்படிந்தவராக நன்றி உள்ளவராக வேண்டும்.

 

வரதானம்:

உள்நோக்குத்தன்மை எனும் குகைக்குள் இருக்கக் கூடிய தேகத்திலிருந்து விடுபட்ட ஆத்மா ஆகுக.

 

பாண்டவர்களின் குகைகளை காட்டுகின்றனர் - அது இந்த உள்நோக்குத்தன்மை எனும் குகை ஆகும். எந்த அளவு தேகத்திலிருந்து விடுபட்ட, ஆத்ம ரூபத்தில் நிலைத் திருக்கக் கூடிய குகையில் இருப்பீர்களோ அந்த அளவு உலகின் சுற்றுச் சூழலிலிருந்து கடந்து சென்று விடுகிறீர்கள், சுற்றுச் சூழலின் தாக்கத்தில் வருவதில்லை. குகைக்குள் இருப்பதன் மூலம் வெளியில் இருக்கும் சுற்றுச்சூழலிலிருந்து கடந்து சென்று விடுவது போல இந்த உள்நோக்குத்தன்மையின் குகையும் கூட அனைத்திலிருந்தும் விடுபட்டவராகவும் தந்தைக்கு அன்பானவராகவும் ஆக்கி விடும். மேலும் தந்தைக்கு அன்பானவர்கள், இயல்பாகவே அனைவரிடம் இருந்து விலகி இருப்பார்கள்.

 

சுலோகன்:

சாதனை (முயற்சி) விதையாகும், சாதனம் அதன் விஸ்தாரமாகும். விஸ்தாரத்தில் சாதனையை மறைத்து விடக் கூடாது.

 

ஓம்சாந்தி