24.12.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இந்த சரீரம் என்ற பொம்மையானது ஆத்மா என்ற உணர்வுள்ள (சைத்தன்ய) சாவியின் மூலம் இயங்கிக் கொண்டிருக்கிறது, நீங்கள் தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்யும் பொழுது பயமற்றவர்களாக ஆகிவிடுவீர்கள்.

 

கேள்வி:

ஆத்மா சரீரத்துடன் விளையாட்டு விளையாடிக் கொண்டே கீழே வந்திருக்கிறது, ஆகையால் அதற்கு என்ன பெயர் கொடுக்கலாம்?

 

பதில்:

மரப்பொம்மை. நாடகத்தில் மரப்பொம்மைகளின் விளையாட்டு காண்பிப்பது போன்று ஆத்மாக்களாகிய நீங்களும் மரப்பொம்மை 5 ஆயிரம் ஆண்டுகளில் விளையாட்டு விளையாடிக் கொண்டே கீழே வந்து விட்டீர்கள். மரப்பொம்மைகளாகிய உங்களை மீண்டும் மேலே செல்வதற்கான வழி காண்பிப்பதற்காக தந்தை வந்திருக்கின்றார். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத் என்ற சாவி பயன்படுத்தும் பொழுது மேலே சென்று விடுவீர்கள்.

 

பாட்டு: கூட்டத்தின் நடுவே உயர்வாய் எரியும் தீபம்...

 

ஓம்சாந்தி.

ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஸ்ரீமத் கொடுக்கின்றார் - யாருடைய (குழந்தையின்) நடத்தை நன்றாகயில்லையெனில் உனக்கு ஈஸ்வரன் தான் நல்ல வழி காண்பிக்க வேண்டும் என்று தாய், தந்தை கூறுவர். ஆனால் ஈஸ்வரன் உண்மை யிலேயே வழி காண்பிப்பார் என்பது அவர்களுக்குத் தெரியாது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு ஈஸ்வரிய வழி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஆன்மீகத் தந்தை குழந்தைகள் சிரேஷ்டமாவதற்காக சிரேஷ்ட வழியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது நாம் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். தந்தை நமக்கு எவ்வளவு உயர்ந்த வழி கொடுத்துக் கொண்டிருக்கின்றார்! நாம் அவரது வழிப்படி நடந்து மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம். ஆக மனிதனை தேவதையாக ஆக்கக் கூடியவர் தந்தை என்பது நிரூபணம் ஆகிறது. மனிதனை தேவதையாக ஆக்கினார் ... என்று சீக்கியர்களும் பாடுகின்றனர். ஆக அவசியம் மனிதனை தேவதையாக ஆக்கக் கூடிய வழி கொடுக்கின்றார். ஏக் ஓங்கார் (கடவுள் ஒருவரே)... செய்பவர் செய்விப்பவர், பயமற்றவர்களாக ... என்றும் அவரது மகிமை பாடப்படுகிறது. நீங்கள் அனைவரும் பயமற்றவர்களாக ஆகிவிடுகிறீர்கள். தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்கிறீர்கள் அல்லவா! ஆத்மாவிற்கு எந்த பயமும் இருப்பது கிடையாது. பயமற்றவர்களாக ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். எதற்கு பயப்பட வேண்டும்? உங்களுக்கு எந்த பயமும் கிடையாது. நீங்கள் தங்களது வீட்டில் அமர்ந்தபடியே தந்தையின் ஸ்ரீமத் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். யாருடைய ஸ்ரீமத்? கொடுப்பது யார்? இந்த விசயங்கள் கீதையில் கிடையாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். நீங்கள் பதீதம் ஆகிவிட்டீர்கள், பாவனம் ஆவதற்காக என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். புருஷோத்தம் ஆகக் கூடிய இந்த மேளா (சந்திப்பு) சங்கமயுகத்தில் தான் ஏற்படுகிறது. பலர் வந்து ஸ்ரீமத் பெறுகின்றனர். இது தான் ஈஸ்வரனுடன் குழந்தைகளின் மேளா என்று கூறப்படுகிறது. ஈஸ்வரனும் நிராகாராக இருக்கின்றார். குழந்தைகளும் (ஆத்மாக் களும்) நிராகாராக இருக்கின்றனர். நான் ஆத்மா என்ற இந்த பழக்கத்தை மிகவும் பக்காவாக (உறுதியாக) ஆக்கிக் கொள்ள வேண்டும். எவ்வாறு பொம்மைக்குச் சாவி கொடுத்து விட்டால் அது நடனம் ஆட ஆரம்பித்து விடும். ஆக ஆத்மாவும் இந்த சரீரம் என்ற பொம்மைக்கு சாவி ஆகும். ஆத்மா இதில் இல்லையெனில் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் சைத்தன்ய பொம்மைகள். பொம்மைக்கு சாவி கொடுக்கவில்லையெனில் எந்த வேலைக்கும் பயன்படாது. நின்று விடும். ஆத்மாவும் சைத்தன்ய சாவியாகும். இது அழிவற்ற சாவியாகும். நான் ஆத்மாவைத் தான் பார்க்கிறேன் என்று தந்தை புரிய வைக்கின்றார். ஆத்மா தான் கேட்கிறது என்ற பழக்கத்தை பக்கா ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்த சாவியின்றி சரீரம் இயங்காது. இவருக்கும் அழிவற்ற சாவி கிடைத்திருக்கிறது. இவரது சாவி 5 ஆயிரம் ஆண்டிற்கு இயங்குகிறது. சைத்தன்ய சாவியாக இருக்கின்ற காரணத்தினால் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இது சைத்தன்யமான பொம்மையாகும். தந்தையும் சைத்தன்ய ஆத்மா ஆவார். சாவி முடி வடையும் பொழுது தந்தை மீண்டும் புதிய யுக்தி அதாவது என்னை நினைவு செய்தால் மீண்டும் சாவி கொடுக்கப்பட்டு விடும், ஆத்மா தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆகிவிடும் என்று கூறுகின்றார். எவ்வாறு மோட்டாரில் பெட்ரோல் தீர்ந்ததும் மீண்டும் நிரப்பப் படுகிறது அல்லவா! எனக்குள் இப்பொழுது பெட்ரோல் எப்படி நிரப்புவது? என்பதை உங்களது ஆத்மா புரிந்திருக்கிறது. பேட்டரியில் சக்தி (சார்ஜ்) குறைந்ததும் அதில் மீண்டும் சக்தி நிரப்பப்படுகிறது அல்லவா! எந்த அளவிற்கு நினைவு செய்கிறீர்களோ அந்த அளவிற்கு சக்தி நிரம்பும். 84 பிறவிகள் எடுத்து பேட்டரியில் சக்தி காலியாகி விட்டது. சதோ, ரஜோ, தமோவாக ஆகிவிட்டது. இப்பொழுது மீண்டும் சாவி கொடுப்பதற்காக தந்தை வந்திருக் கின்றார், அதாவது சக்தியை நிரப்புவதற்காக வந்திருக்கின்றார். சக்தியில்லையெனில் மனிதர்கள் என்னவாக ஆகிவிடுகின்றனர்! ஆக இப்பொழுது நினைவின் மூலம் தான் பேட்டரியில் சக்தியை நிரப்ப வேண்டும். இதை மனித பேட்டரி என்றும் கூறலாம். என்னிடத்தில் தொடர்பு வையுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த ஞானம் ஒரே ஒரு தந்தை தான் கொடுக்கின்றார். சத்கதி கொடுக்கும் வள்ளல் அந்த ஒரே ஒரு தந்தை ஆவார். இப்பொழுது பேட்டரி முழுவதும் சக்தி நிரப்பப்படுகிறது, இதன் மூலம் நீங்கள் முழு 84 பிறவிகள் நடிப்பு நடிக் கிறீர்கள். எவ்வாறு நாடகத்தில் மரப்பொம்மைளை நடனமாடச் செய்வர் அல்லவா! ஆத்மாக்களாகிய நீங்களும் இவ்வாறு மரப்பொம்மை போன்று இருக்கிறீர்கள். மேலிருந்து கீழே இறங்கி 5 ஆயிரம் ஆண்டுகளில் முற்றிலும் கீழான நிலைக்கு வந்து விட்டீர்கள், பிறகு தந்தை வந்து மேலே அழைத்துச் செல்கிறார். அவர் மரப்பொம்மைகளை ஆட்டுவிப்பர் ஆவார். கீழிறங்கும் கலை மற்றும் முன்னேறும் கலையின் அர்த்தத்தை தந்தை புரிய வைக்கின்றார், 5 ஆயிரம் ஆண்டிற்கான விசயமாகும். ஸ்ரீமத் மூலம் நமக்கு சாவி கொடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் முழு சதோ பிரதானமாக ஆகிவிடுவோம், பிறகு மீண்டும் முழு பாகத்தையும் நடிப்போம். புரிந்து கொள்ள மற்றும் புரிய வைப்பதற்கு எவ்வளவு எளிய விசயமாகும்! யார் கல்பத்திற்கு முன்பு புரிந்திருந் திருந்தார்களோ அவர்கள் தான் புரிந்து கொள்ள முடியும் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் எவ்வளவு தான் தலையை உடைத்துக் கொண்டாலும் அதிகம் புரிந்து கொள்ளமாட்டார்கள். அனைவருக்கும் ஒரே மாதிரியாகத் தான் தந்தை புரிய வைக்கின்றார். எங்கு அமர்ந்திருந்தாலும் தந்தையை நினைவு செய்ய வேண்டும். எதிரில் பிராமணி (நிமித்தமானவர்) இல்லாமல் இருந்தாலும் நினைவில் அமர்ந்திருக்க வேண்டும். தந்தையின் நினைவின் மூலம் தான் நமது விகர்மங்கள் அழியும் என்பதை அறிவீர்கள். ஆக அப்படிப்பட்ட நினைவில் அமர்ந்து விட வேண்டும். யாரையும் அமரச் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. சாப்பிட்டாலும், குடித்தாலும், குளித்தாலும் தந்தையை நினைவு செய்யுங் கள். சிறிது நேரத்தில் வேறு யாராவது எதிரில் அமர்ந்து விடுகின்றனர். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வர் என்பது கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு உதவி செய்து கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் செய்யுங்கள், உங்களது புத்தி தெய்வீகமானதாக ஆகிவிடும் என்று ஈஸ்வரன் வழி கூறியிருக்கின்றார். இந்த தூண்டுதல் கொடுக்கப்படுகிறது. அனைவருக் கும் ஸ்ரீமத் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் சிலரது புத்தி மந்தமாக, சிலரது புத்தி வேகமாக இருக்கிறது. பாவனமானவருடன் தொடர்பு வைக்க வில்லையெனில் பேட்டரியில் சக்தி நிரம்பாது. தந்தையின் ஸ்ரீமத்தை ஏற்றுக் கொள்வது இல்லையெனில், தொடர்பு ஏற்படுவதே கிடையாது. நமது பேட்டரி இப்பொழுது நிரம்பிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக அவசியம் ஆக வேண்டும். இந்த நேரத்தில் உங்களுக்கு பரமாத்மாவின் ஸ்ரீமத் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதனை உலகத்தினர் முற்றிலும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். எனது இந்த வழியின் மூலம் நீங்கள் தேவதைகளாக ஆகிவிடுகிறீர்கள், இதை விட உயர்ந்த விசயம் வேறு எதுவும் கிடையாது என்று தந்தை கூறுகின்றார். அங்கு இந்த ஞானம் இருக்காது. இவ்வாறு நாடகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. உங்களை புருஷோத்தமர்களாக ஆக்குவதற்கு தந்தை சங்கமத்தில் தான் வருகின்றார். இதன் நினைவுச் சின்னம் தான் பக்தி மார்க்கத்தில் கொண்டாடுகின்றனர், தசராவும் கொண்டாடு கின்றனர் அல்லவா! எப்பொழுது தந்தை வருகின்றாரோ அப்பொழுது தசாரா ஏற்படுகிறது. 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு ஒவ்வொரு விசயமும் திரும்பவும் நடைபெறும்.

 

குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் இந்த ஈஸ்வரிய வழி அதாவது ஸ்ரீமத் கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் சிரேஷ்டமானவர்களாக ஆகிறீர்கள். உங்களது ஆத்மா சதோ பிரதானமாக இருந்தது, அது கீழே இறங்கி இறங்கி தமோ பிரதானமாக, கீழானதாக ஆகிவிடுகிறது. பிறகு தந்தை வந்து ஞானம் மற்றும் யோகா கற்றுக் கொடுத்து சதோ பிரதானமாக, சிரேஷ்டமாக ஆக்குகின்றார். நீங்கள் ஏணியில் எவ்வாறு கீழே இறங்குகிறீர்கள்? என்று விளக்கி கூறுகின்றார். நாடகம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த நாடகத்தின் முதல், இடை, கடையை யாரும் அறியவில்லை. தந்தை புரிய வைத்திருக்கின்றார், உங்களுக்கு இப்பொழுது நினைவிற்கு வருகிறது அல்லவா! ஒவ்வொருவரின் வாழ்க்கைக் கதையைக் கூற முடியாது. படித்து கூறப் படுமளவிற்கு எழுதப்படுவதும் கிடையாது. இதை தந்தை வந்து புரிய வைக்கின்றார். இப்பொழுது நீங்கள் பிராமணர்களாக ஆகியிருக்கிறீர்கள், மீண்டும் தேவதைகளாக ஆக வேண்டும். பிராமணன், தேவதா, சத்ரியன் மூன்று தர்மங்களையும் ஸ்தாபனை செய்கிறேன் என்று தந்தை புரிய வைக்கின்றார். நாம் தந்தையின் மூலம் பிரம்மாவின் வம்சத்தினர்களாக ஆகியிருக்கிறோம், பிறகு சூரியவம்சி, சந்திரவம்சிகளாக ஆவோம் என்பது இப்பொழுது உங்களது புத்தியில் இருக்கிறது. யார் தோல்வி அடைவார்களோ அவர்கள் சந்திரவம்சிகளாக ஆகிவிடுவர். எதில் தோல்வி அடைவர்? யோகாவில். ஞானம் மிக எளிய முறையில் புரிய வைக்கப்படுகிறது. நீங்கள் எப்படி 84 பிறவிகள் எடுக்கிறீர்கள்? மனிதர்கள் 84 லட்சம் பிறவி கள் என்று கூறிவிட்டபடியால் எவ்வளவு தூரத்திற்குச் சென்று விட்டனர்! இப்பொழுது உங்களுக்கு ஈஸ்வரிய வழி கிடைக்கிறது. ஈஸ்வரன் ஒரே ஒருமுறை தான் வருகின்றார். ஆக அவரது வழியும் ஒரே ஒருமுறை தான் கிடைக்கும். ஒரு தேவி தேவதா தர்மம் இருந்தது. அவசியம் அவர்களுக்கு ஈஸ்வரிய வழி கிடைத்திருக்க வேண்டும். அதற்கு முன்பு சங்கமயுகம் இருந்திருக்கிறது. தந்தை வந்து உலகை மாற்றுகின்றார். நீங்கள் இப்பொழுது மாறிக் கொண்டி ருக்கிறீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு தந்தை கூறுகின்றார். நாம் கல்ப கல்பத்திற்கும் மாறிக் கொண்டு வருகிறோம், மாறிக் கொண்டே இருப்போம் என்று நீங்கள் கூறுவீர்கள். இது சைத்தன்ய பேட்டரி அல்லவா! அது ஜடமானது. 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு தந்தை வந்திருக்கின்றார் என்பது குழந்தைகளுக்குத் தெரியும். உயர்ந்ததிலும் உயர்ந்த வழியும் கொடுக்கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானின் உயர்ந்த வழி கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் உயர்ந்த பதவி அடைகிறீர்கள். உங்களிடம் யாராவது வருகின்ற பொழுது நீங்கள் ஈஸ்வரிய குழந்தை அல்லவா என்று கூறுங்கள். ஈஸ்வரன் சிவபாபா ஆவார், சிவஜெயந்தியும் கொண்டாடுகிறீர்கள். அவர் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஆவார். தனக்கென்று அவருக்கு சரீரம் கிடையாது. ஆக யார் மூலம் வழி கொடுக் கின்றார்? நீங்களும் ஆத்மா தான், இந்த சரீரத்தின் மூலம் உரையாடல் செய்கிறீர்கள் அல்லவா! சரீரமின்றி ஆத்மா ஒன்றும் செய்ய முடியாது. நிராகார தந்தையும் எப்படி வருவார்? ரதத்தில் வருவார் என்றும் பாடப் பட்டிருக்கிறது. பிறகு சிலர் இவ்வாறு வருகின்றார் என்றும், சிலர் இவ்வாறு வருகின்றார் என்றும் (கதை) உருவாக்கி விட்டனர். திரிமூர்த்தி யையும் சூட்சுமவதனத்தில் காண்பித்திருக்கின்றனர். இவை அனைத்தும் சாட்சாத்காரத்திற்கான விசயம் என்று தந்தை புரிய வைக்கின்றார். மற்றபடி படைப்புகள் அனைத்தும் இங்கு தான் நடைபெறும் அல்லவா! ஆக படைப்பவர் தந்தையும் இங்கு வர வேண்டியிருக்கிறது. பதீத உலகிற்கு வந்து பாவனம் ஆக்க வேண்டும். இங்கு குழந்தைகளை நேரடியாக பாவனம் ஆக்கிக் கொண்டிருக்கின்றார். புரிந்து கொள்கிறீர்கள், இருப்பினும் ஞானம் புத்தியில் அமருவது கிடையாது. பிறருக்கு புரிய வைக்க முடிவதும் கிடையாது. ஸ்ரீமத் படி நடக்கவில்லையெனில் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவர்களாக ஆக முடியாது. யார் புரிந்து கொள்ளவில்லையோ அவர்கள் என்ன பதவி அடைவார்கள்? எந்த அளவிற்கு சேவை செய்வீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். ஒவ்வொரு எலும்பையும் சேவைக்காக கொடுக்க வேண்டும் என்று தந்தை கூறியிருக்கின்றார். ஆல்ரவுண்ட் சேவை செய்ய வேண்டும். தந்தையின் சேவையில் எலும்பைக் கொடுப்பதற்கும் நாம் தயாராக இருக்கிறோம். பல குழந்தைகள் சேவைக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். பாபா, எங்களை விடுவித்து விடுங்கள், நாங்கள் சேவையில் ஈடுபட்டு விடுவோம், இதன் மூலம் பலருக்கு நன்மை ஏற்பட்டு விடும். முழு உலகமும் பௌதீக சேவை செய்கிறது, அதன் மூலம் ஏணியில் கீழே இறங்கித் தான் வந்தீர்கள். இப்பொழுது இந்த ஆன்மீக சேவையின் மூலம் முன்னேறும் கலை ஏற்படுகிறது. இன்னார் என்னை விட அதிகம் சேவை செய்கிறார் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். சேவை செய்யும் நல்ல சகோதரிகளும் இருக்கின்றனர், சென்டரையும் கவனிக்கின்றனர். வகுப்பில் வரிசைக் கிரமமாக அமர்கின்றனர். இங்கு வரிசைக்கிரமமாக அமர வைப்பது கிடையாது. மனம் உடைந்து விடுவர். புரிந்து கொள்ள முடியும் அல்லவா! சேவை செய்யவில்லையெனில் அவசியம் பதவியும் குறைந்து விடும். வரிசைக் கிரமமான பதவிகள் பல உள்ளன. ஆனால் அது சுகதாமம், இது துக்கதாமம் ஆகும். அங்கு வியாதிகள் போன்றவைகள் இருக்காது. புத்திக்கு வேலை கொடுக்க வேண்டியிருக்கிறது. நாம் மிகக் குறைந்த பதவி அடைவோம், ஏனெனில் சேவை செய்வதே கிடையாது. சேவையின் மூலம் தான் பதவி அடைய முடியும். தன்னை சோதித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது மனநிலையை அறிவீர்கள். மம்மா, பாபாவும் சேவை செய்து வந்தனர். நல்ல நல்ல குழந்தைகளும் இருக்கின்றனர். பௌதீக வேலையும் செய்கின்றனர், பாதி சம்பளத்திலும் விடுப்பு எடுத்துக் கொண்டு சேவை செய்யுங்கள் என்று அவர்களுக்கும் கூறப்படுகிறது. யார் பாபாவின் உள்ளத்தில் அமர்கிறார்களோ அவர்கள் தான் தங்க சிம்மாசனத்தில் அமர்வர் - வரிசைக்கிரமமான முயற்சியின் படி. இவ்வாறே வெற்றி மாலையிலும் வந்து விடுவர். அர்ப்பணமும் ஆகின்றனர், சேவையும் செய்கின்றனர். சிலர் அர்ப்பணம் ஆகி விட்டு சேவை செய்யவில்லையெனில் பதவி குறைந்து விடும் அல்லவா! ஸ்ரீமத் மூலமாக இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு எப்போதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதாவது படிப்பின் மூலம் இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பார்த்திருக்கிறீர்களா? தானம், புண்ணியம் செய்வதன் மூலம் அரச குடுப்பத்தில் பிறவி எடுக்க முடியும். ஆனால் படிப்பின் மூலம் இராஜ்ய பதவி கிடைத்தது என்று ஒருபொழுதும் எங்கும் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். யாருக்கும் தெரியாது. நீங்கள் தான் முழுமையாக 84 பிறவிகள் எடுத்திருக்கிறீர்கள் என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். நீங்கள் இப்பொழுது மேலே செல்ல வேண்டும். செல்வதும் மிக எளிது தான். நீங்கள் கல்ப கல்பமாக வரிசைக்கிரமமாக புரிந்து கொள்கிறீர்கள். தந்தையும் அன்பு நினைவுகளை வரிசைக்கிரமமாகக் (முயற்சிக் கேற்ப) கொடுக்கின்றார். யார் சேவை செய்கிறார் களோ அவர்களுக்கு மிக அதிகமான அன்பு நினைவுகளைக் கொடுப்பார். ஆக நான் உள்ளத்தில் அமர்ந்திருக்கிறேனா? மாலையில் மணியாக ஆக முடியுமா? என்று தன்னை சோதித்துப் பார்க்க வேண்டும். படிக்காதவர்கள் அவசியம் படித்தவர்கள் முன் வேலை செய்வார்கள் (சுமை தூக்கியவர்கள்). குழந்தைகளே! முயற்சி செய்யுங்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். ஆனால் நாடகத்தில் பாகம் இல்லையெனில், எவ்வளவு தான் தலையை உடைத்துக் கொண்டாலும் முன்னேறவே மாட்டார்கள். ஏதாவது கிரஹச்சாரம் பிடித்துக் கொள்கிறது. தேக அபிமானத்தினால் தான் மற்ற விகாரங்கள் வந்து விடுகின்றன. முக்கியமான, கடுமையான வியாதி தேக அபிமானம் ஆகும். சத்யுகத்தில் தேக அபிமானத் திற்கான பெயரே இருக்காது. அது உங்களது பிராப்தி ஆகும். இதை இங்கு தான் தந்தை புரிய வைக்கின்றார். தன்னை ஆத்மா என்ற புரிந்து கொண்டு என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று ஸ்ரீமத் வேறு யாரும் கொடுப்பது கிடையாது. இது முக்கியமான விசயமாகும். ஒருவேளை நினைவு செய்யுங்கள் என்று நிராகார பகவான் கூறுகின்றார் என்ற எழுத வேண்டும், தன்னை ஆத்மா என்ற புரிந்து கொள்ளுங்கள். தனது தேகத்தையும் நினைவு செய்யாதீர்கள். எவ்வாறு பக்தியிலும் ஒரே ஒரு சிவனை மட்டுமே பூஜை செய்கிறீர்கள்! இப்பொழுது ஞானத்தையும் நான் தான் கொடுக்கிறேன். மற்ற அனைத்தும் பக்தியாகும், கலப்படமற்ற ஞானம் ஒரே ஒரு சிவபாபாவிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கிறது. இந்த ரத்தினம் ஞானக் கடலிடமிருந்து வெளிப்படுகிறது. அந்த கடலுக்குகான விசயம் கிடையாது. இந்த ஞானக் கடல் குழந்தை களாகிய உங்களுக்கு ஞான இரத்தினங்களைக் கொடுக்கின்றார்.

 

இதன் மூலம் நீங்கள் தேவதைகளாக ஆகிறீர்கள். சாஸ்திரங்களின் என்ன என்னவெல்லாம் எழுதி வைத்து விட்டனர்! கடலிருந்து தேவதைகள் வெளிப்பட்டனர், ரத்தினங்களைக் கொடுத்தனர். இந்த ஞானக் கடலானவர் குழந்தைகளாகிய உங்களுக்கு ரத்தினங்களைக் கொடுக்கின்றார். நீங்கள் ஞான ரத்தினங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். முன்பு கற்களைத் தேர்ந்தெடுத்தீர்கள், அதனால் கல் புத்தி யுடையவர்களாக ஆகிவிட்டீர்கள். இப்பொழுது ரத்தினங்களை தேர்ந்தெடுப் பதால் தங்கப் புத்தியுடையவர்களாக ஆகிவிடுகிறீர்கள். பாரஸ்நாத் ஆகிறீர்கள் அல்லவா! இந்த பாரஸ்நாத் (லெட்சுமி, நாராயணன்) உலகிற்கு எஜமானர் களாக இருந்தனர்! பக்தி மார்க்கத்தில் அவர்களது பெயர், அவர்களது சிலைகளை உருவாக்கி வைத்திருக் கின்றனர். உண்மையில் லெட்சுமி, நாராயணன் அல்லது பாரஸ்நாத் ஒரே ஒருவர் தான். நேபாளத்தில் பசுபதிநாத்திற்கு திருவிழாவும் கொண்டாடுகின்றனர், அவரும் பாரஸ்நாத் ஆவார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தந்தை எந்த ஞான ரத்தினங்களை கொடுத்திருக்கின்றாரோ அதை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும், கற்களை அல்ல. தேக அபிமானம் என்ற கடுமையான நோயி-ருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

 

2) தனது பேட்டரியில் முழுமையாக சக்தியை நிரப்பிக் கொள்வதற்காக பவர் ஹவுஸ் தந்தையிடத்தில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஆத்ம அபிமானியாக இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். பயமற்று இருக்க வேண்டும்.

 

வரதானம்:

அனைத்து சம்மந்தங்கள் மற்றும் அனைத்து குணங்களின் அனுபவம் செய்வதில் நிறைவானவராக ஆகக் கூடிய (சம்பூர்ண) முழுமையான மூர்த்தி ஆகுக!

 

சங்கம யுகத்தில் விசேசமான அனைத்து பிராப்திகளால் தன்னை நிறைந்தவராக ஆக்கிக் கொள்ள வேண்டும், ஆகையால் அனைத்து பொக்கிசங்கள், அனைத்து சம்மந்தங்கள், அனைத்து குணங்கள் மற்றும் காரியங்களை முன்னால் வைத்து சோதியுங்கள் - அனைத்து விசயங்களிலும் அனுபவம் நிறைந்தவனாக ஆகி யுள்ளேனா? ஒருவேளை எந்த விசயத் திலாவது அனுபவத்தில் குறைபாடு இருக்கிறதெனில் அதனை தனக்குள் நிரப்பிக் கொள்ளுங்கள். ஒரு சம்மந்தம் அல்லது குணத்தின் குறைவு இருக்கிறது எனில் முழுமை நிலை (சம்பூர்ண நிலை) அல்லது சம்பூர்ண மூர்த்தி என சொல்லிக் கொள்ள முடியாது. ஆகையால் தந்தையின் குணங்கள் மற்றும் தனது ஆதி சொரூபத்தின் (தேவதா சொரூபம்) குணங்களின் அனுபவத்தை செய்யுங்கள், அப்போது சம்பூர்ண மூர்த்தி ஆவீர்கள்.

 

சுலோகன் :

ஆவேசத்தில் வருவது கூட மனதின் அழுகையாகும் - இப்போது அழுகையின் கோப்புகளுக்கு (ஃபைல்களுக்கு) முடிவு கட்டுங்கள்.

 

ஓம்சாந்தி