27.12.2020    காலை முரளி            ஓம் சாந்தி         அவ்யக்த பாப்தாதா,     

ரிவைஸ் 31.12.1986 மதுபன்


  

கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை சிறந்ததாக (சிரேஷ்டமாக) உருவாக்குவதற்கான விதி

 

இன்று பெரியதிலும் பெரிய தந்தை (பிரம்மா பாபா) மற்றும் காட் ஃபாதர் (இறை தந்தை - சிவபாபா) தனது மிகவும் இனிமையான, மிகவும் அன்பான குழந்தைகளுக்கு மனதார ஆசிர்வாதங்களின் வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு செல்லமான குழந்தைகளும் எவ்வளவு சிரேஷ்டமான, மகான் ஆத்மாவாக இருக்கிறார்கள் என்று பாப்தாதா தெரிந்திருக்கிறார். ஒவ்வொரு குழந்தைகளின் மகான் தன்மை மற்றும் தூய்மையின் தன்மை - பாபாவிடம் நம்பர்வாராக (வரிசைகிரமாக) சென்றடைகிறது. இன்றைய நாள் அனைவரும் விசேசமாக புது வருடத்தை கொண்டாடுவதற்கான ஊக்க உற்சாகத்துடன் வந்திருக்கிறீர்கள். உலகத்தினரை சேர்ந்தவர்கள் விளக்குகளையும் மெழுகுவர்த்திகளையும் ஏற்றி கொண்டாடு கிறார்கள். அவர்கள் விளக்கேற்றி கொண்டாடுகிறார்கள், மேலும் பாப்தாதா சுடர்விட்டு எரிந்துக் கொண்டிருக்கும் தீபங்களின் மூலம் புது வருடத்தை கொண்டாடுகிறார்கள். அணைந்து போனதை ஏற்றுவதில்லை, மேலும் ஏற்றிய விளக்குகளை அணைப்பதும் இல்லை. அப்படிப் பட்ட இலட்சக்கணக்கானவர்களின் ஏற்றியுள்ள ஆன்மீக ஜோதிகளின் குழுவினரோடு சேர்ந்து வருடத்தை கொண்டாடுவது - இது பாபா மற்றும் குழந்தைகளாகிய உங்களை தவிர வேறு யாராலும் கொண்டாட முடியாது. ஓளிரும் வண்ணமயமான தீபங்களின் ஆன்மீக அமைப்பின் காட்சி எவ்வளவு நன்றாக இருக்கிறது. அனைவருடைய ஆன்மீக ஜோதியும் பிரகாசமாகவும் ஒரே சீராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அனைவருடைய மனதிலும் ஒரே ஒரு பாபா - இந்த ஆர்வம் தான் ஆன்மீக தீபங்களையும் சுடர்விட்டு எரிய வைக்கிறது. ஒரே உலகம், ஒரே எண்ணம், ஒரே இரசனையின் மனநிலை - இதைத் தான் கொண்டாட வேண்டும், இதைத் தான் செய்ய வேண்டும். இதன் மூலம் தான் காலத்திற்கு விடைக் கொடுத்தல் மற்றும் வாழ்த்துக்கள் இரண்டின் சங்கமமாகும். பழையவற்றிற்கு விடைக் கொடுத்தல் மற்றும் புதுயுகத்திற்கான வாழ்த்துக்கள். இந்த சங்கமயுகத்தில் அனைவரும் வந்து சேர்ந்துவிட்டீர்கள். ஆகையால், பழைய எண்ணங்கள் மற்றும் புதுயுகத்திற்கான ஊக்க உற்சாகத்தோடு பறப்பதற்காகவும் கூட வாழ்த்துக்கள்.

 

எது இப்பொழுது நிகழ்காலமாக இருக்கிறதோ, அது சிறிது நேரத்திற்கு பிறகு கடந்த நேரமாக ஆகி விடுகிறது. நடந்துக் கொண்டிருக்கும் வருடம், அது இரவு 12 மணிக்கு கடந்த காலமாகி விடுகிறது. இந்த சமயத்தை நிகழ்காலம் என்று சொல்லாம், மேலும் நாளைய தினத்தை எதிர்காலம் (வருங்காலம்) என்று சொல் கிறார்கள். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் - இந்த மூன்றின் விளையாட்டு தான் நடக்கிறது. இந்த மூன்று வார்த்தைகளை இந்த புதிய வருடத்தில் புதுமையான முறையில் பயன்படுத்துங்கள். எப்படி? கடந்து காலத்தை சதா பாஸ் வித் ஆனர் (மரியாதையுடன் தேர்ச்சி பெறுதல்) ஆகி கடந்துச் செல்ல வேண்டும். நடந்தது நடந்து முடிந்தாக ஆகியே தீர வேண்டும், ஆனால் எப்படி கடக்க வேண்டும். நேரம் கடந்து விட்டது, இந்து காட்சியும் கடந்துவிட்டது என்று சொல்கிறார்கள் அல்லவா ! ஆனால் பாஸ் வித் ஆனர் ஆகி கடந்துச் சென்றீர்களா? நடந்து முடிந்ததை கடந்து விட்டோம், ஆனால் கடந்த காலத்தை நினைவில் கொண்டு வரும்பொழுது ஆஹா, ஆஹா ! என்ற வார்த்தை இதயத்திலிருந்து வெளிவருகிற மாதிரி சிரேஷ்ட விதியோடு கடந்து சென்றீர்களா? உங்களுடைய கடந்த காலத்திலிருந்து மற்றவர்கள் அனுபவ பாடம் கற்றுக்கொள்ளும்படி கடந்து வந்தீர்களா? உங்ளுடைய கடந்த காலம் நினைவு சொரூபமாகி விடுகிறது, கீர்த்தனை களை அதாவது புகழாக பாடிக்கொண்டிருக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் உங்களுடைய செயலின் புகழை தான் பாடுகிறார்கள், உங்களுடைய செயலின் புகழின் மூலம் அநேக ஆத்மாக்களுக்கு இப்பொழுது கூட உடல் நிர்வாகம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த புது வருடத்தில் ஒவ்வொரு முடிந்து போன எண்ணங்கள் மற்றும் நேரத்தை கூட சிரேஷ்ட முறையில் கடக்க வேண்டும். புரிந்ததா, என்ன செய்ய வேண்டும்?

 

இப்பொழுது தற்சமயத்திற்கு வாருங்கள், ஒவ்வொரு நொடி மற்றும் எண்ணத்தின் மூலம் விசேஷ ஆத்மாக் களாகிய உங்களின் மூலம் உலகில் யாருக்காவது வெகுமதி கிடைக்க வேண்டும், அந்தமாதிரி நிகழ்காலத்தை நடைமுறையில் கொண்டு வாருங்கள். அனைத்தையும் விட அதிகமான குஷி எந்த சமயத்தில் கிடைக்கிறது? யாரிடமிருந்தாவது ஏதாவது பரிசு கிடைக்கும் பொழுது, எப்படிப்பட்ட அசாந்தியில் இருந்தாலும் துக்கத்தில் இருந்தாலும் அல்லது குழப்பத்தில் இருக்கிறார்கள் என்றாலும் கூட, யாராவது ஏதாவது அன்போடு பரிசு கொடுக்கிறார்கள் என்றால், அந்த நிமிடம் குஷியின் அலை வருகிறது. வெளிதோற்றத்திற்காக அன்பளிப்பு கொடுப்பது அல்ல, மனதார அன்பளிப்பு கொடுக்கும் பொழுது, அனைவரும் அன்பளிப்பை எப்பொழுதுமே அன்பின் அடையாளமாக கருதப்படுகிறது. அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட பொருளின் மதிப்பு அன்பிற்கு தான் கொடுக்கப்படுகிறது, பொருளுக்கு அல்ல. எனவே நிகழ்காலத்தில் அன்பளிப்பு கொடுப்பதற்கான விதியின் மூலம் வளர்ச்சியை அடைந்துக் கொண்டிருக்க வேண்டும். புரிந்ததா? எளிதானதா அல்லது கடினமானதா? பொக்கிசம் நிறைந்திருக்கிறதா அல்லது வெகுமதி கொடுக்க - கொடுக்க பொக்கிசம் குறைந்து விடுமா என்ன? பொக்கிசம் சேமிப்பு ஆகியிருக்கிறதா என்ன? ஒரு நிமிடத்தின் அன்பான பார்வை, அன்பான உதவி, அன்பான பாவணை (உணர்வு), இனிமையான வார்த்தை, மனதின் உயர்ந்த எண்ணத்தின் உதவி - இது தான் வெகுமதி அதிகமாகவே இருக்கிறது. தற்சமயத்தில் பிராமண ஆத்மாக்களாகிய உங்களுக்குள், உங்களுடைய பக்தர்களாக இருந்தாலும், உங்களுடைய சம்மந்தத்தின் மூலம் தொடர்பில் வரக்கூடிய ஆத்மாக்களாக இருந்தாலும், குழப்பத்திலுள்ள ஆத்மாக்களாக இருந்தாலும்-அனைவருக்கும் இந்த அன்பளிப்பின் அவசியம் இருக்கிறது, மற்ற வெகுமதிகள் அல்ல. இந்த பொக்கிசங்களின் ஸ்டாக் (இருப்பு) இருக்கிறது அல்லவா? ஆகையால் ஒவ்வொரு நிகழ்கால நொடியிலும் வள்ளலாகி நிகழ்காலத்தை கடந்த காலத்தில் (சரித்திரமாக) மாற்ற வேண்டும், ஆதலால் அனைத்து ஆத்மாக்களும் மனதின் மூலம் உங்களின் புகழை பாடிக்கொண்டிருக்கிறார்கள். நல்லது.

 

எதிர்காலத்தில் என்ன செய்வீர்கள்? எதிர்காலம் என்னவாகும் என்று அனைவரும் உங்களிடம் கேட்கிறார்கள்? எதிர்காலத்தை தனது தோற்றத்தின் மூலம் வெளிப்படுத்துங்கள். உங்களுடைய தோற்றம் தான் எதிர்காலத்தை வெளிப்படுத்தும். எதிர்காலம் என்னாகுமோ, எதிர்கால காட்சி எப்படி இருக்குமோ, எதிர்காலத்தின் புன்னகை என்னாகுமோ, எதிர்கால சம்மந்தம் என்னாகுமோ, எதிர்கால வாழ்க்கை என்ன ஆகுமோ? - தனது தோற்றத்தின் மூலம் இந்த அனைத்து விசயங்களையும் (கேள்விகளையும்) சாட்சாத்காரம் செய்ய வைக்க வேண்டும். எதிர்கால உலகத்தை பார்வையின் மூலம் தெளிவுப்படுத்துங்கள். என்ன ஆகுமோ? - இந்த கேள்வி முடிந்து விட வேண்டும், அப்படித்தான் இருக்குமென்று மாறிவிட வேண்டும். எப்படி என்பதற்கு பதிலாக இப்படித் தான் என்று மாற வேண்டும். எதிர்காலம் என்றாலே தேவதை ஆவது. தேவதையின் சம்ஸ்காரம் என்றாலே வள்ளல் தன்மையின் சம்ஸ்காரம், தேவதையின் சம்ஸ்காரம் என்றாலே கீரிடம், சிம்மாசனதாரி ஆவதற்கான சம்ஸ்காரம். யார் உங்களை பார்த்தாலும், அவர்களுக்கு உங்களின் கீரிடம் மற்றும் சிம்மாசனம் அனுபவம் ஆக வேண்டும். எப்படிப்பட்ட கீரிடம்? சதா லைட்டாக (லேசாக) இருப்பதற்கான லைட்டின் (ஒளி) கீரிடம். மேலும் சதா உங்களின் கர்மத்தின் மூலம், வார்த்தையின் மூலம் ஆன்மீக நஷா மற்றும் கவலையற்றத் தன்மையின் மனநிலை அனுபவம் ஆக வேண்டும். சிம்மாசனதாரியின் அடையாளமே கவலையற்றத் தன்மை மற்றும் குஷியில் இருப்பது. நிச்சயிக்கப்பட்ட வெற்றியின் நஷா மற்றும் கவலையற்ற மனநிலை - இது தான் பாபாவின் இதய சிம்மாசன தாரியின் அடையாளமாகும். யார் வந்தாலும், அவர்கள் இந்த சிம்மாசனம் மற்றும் கீரிடதாரி மன நிலையின் அனுபவம் செய்ய வேண்டும் - இது தான் தோற்றத்தின் மூலம் எதிர்காலத்தை வெளிப்படுத்துவது. புது வருடத்தை கொண்டாடுவது என்றாலே அவ்வாறு ஆவது. புரிந்ததா, புது வருடத்தில் என்ன செய்ய வேண்டும்? மூன்று வார்த்தைகளின் மூலம் மாஸ்டர் திரிமூர்த்தி, மாஸ்டர் திர்காலதரிசி (முக்காலத்தையும் அறிந்தவர்) மற்றும் திரிலோகிநாத் (முன்று உலகத்தின் தலைவன்) ஆவது. இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று அனைவரும் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு அடியிலும் அதாவது நினைவின் மூலம், சேவையின் ஒவ்வொரு அடியிலும் இந்த மூன்று விதமான விதியின் மூலம் வெற்றி அடைந்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

 

புது வருடத்தின் ஊக்க உற்சாகம் மிகுதியாக இருக்கிறது அல்லவா. இரட்டை வெளி நாட்டினருக்கும் கூட இரட்டை ஊக்கம் இருக்கிறது அல்லவா. புது வருடத்தை கொண்டாடு வதில் எத்தனை சாதனங்களை தன்னுடையதாக்கி உள்ளீர்கள்? உலகத்தினரோ அழியக் கூடிய சாதனங்களை தன்னுடையதாக்கியுள்ளார்கள், மேலும் குறுகிய காலத்தின் பொழுது போக்காக இருக்கிறது. அப்பொழுதே ஏற்றி, அப்பொழுதே அணைத்து விடுவார்கள். ஆனால் பாப்தாதா அழிவற்ற விதியின் மூலம் அழிவற்ற வெற்றியை அடையக் கூடிய குழந்தை களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். நீங்கள் கூட என்ன செய்வீர்கள்? கேக் வெட்டு வீர்கள், மெழுகுவர்த்தி ஏற்றுவீர்கள், பாடல் பாடுவீர்கள், கை தட்டுவீர்கள். இதைக் கூட நன்றாகவே செய்யுங்கள், ஆனால் பாப்தாதா எப்பொழுதுமே அழிவற்ற குழந்தைகளுக்கு அழிவற்ற வாழ்த்துக்களை கொடுக்கிறார், மேலும் அழிவற்றவர் ஆவதற்கான விதியை சொல்கிறார். சாகார உலகத்தில் அவர்கள் கொண்டாடுவதை பாப்தாதா கூட பார்த்து குஷி அடைகிறார். ஏனெனில் முழு குடும்பமே கீரிடதாரி, சிம்மாசனதாரியாக இருக்கிறார்கள், மேலும் இத்தனை இலட்சணக் கணக்கானவர் ஒரு குடும்பமாக இருக்கிறார்கள், இப்படிப்பட்ட குடும்பம் முழு கல்பத்திலும் ஒருமுறை தான் கிடைக்கும், அப்படிப்பட்ட அழகான குடும்பமாக இருக்கிறது. ஆகையால் நன்றாக நாட்டியமாடுங்கள், சாப்பிடுங்கள், இனிப்பு உண்ணுங்கள். பாபா குழந்தைகளை பார்த்து, உணர்வுகளை ஏற்று குஷி அடைகிறார். அனைவரும் என்ன பாடலை மனதில் பாடிக்கொண்டிருக்கிறீர்கள்? குஷியின் பாடலை பாடிக்கொண்டிருக்கிறீர்கள். சதா ஆஹா ! ஆஹா ! என்ற பாடலை பாடுகின்றீர்கள். ஆஹா பாபா, ஆஹா அதிர்ஷ்டம் ! ஆஹா எனது இனிமையான குடும்பம் ! ஆஹா சிரேஷ்ட சங்கமயுகத்தின் மங்களகரமான நேரம் ! ஒவ்வொரு காரியமும் ஆஹா - ஆஹா என்று இருக்கிறது, ஆஹா ! ஆஹா ! என்ற பாடலை பாடிக்கொண்டிருங்கள். பாப்தாதா இன்று புன்முறுவல் செய்துக் கொண்டிருக்கிறார் - பல குழந்தைகள் ஆஹா என்ற பாடலுடன் கூடவே மற்ற பாடல்களையும் பாடிக் கொண்டிருக்கிறார். அது என்னவென்று தெரியுமா? இந்த வருடம் அந்த இரண்டு வார்த்தை களின் பாடலை பாட வேண்டாம். அந்த இரண்டு வார்த்தைகள் - ஏன் மற்றும் நான்? என்று சொல்வ தன் மூலம் பாப்தாதா குழந்தைகளை டி.வி-யில் பார்க்கிறார், குழந்தைகள் ஆஹா ஆஹா,... பதிலாக ஏன்? ஏன்? என்று கேட்கிறார்கள்.. எனவே நான் என்பதற்கு பதிலாக ஆஹா-ஆஹா! என்று சொல்ல வேண்டும் மற்றும் நான் என்பதற்கு பதிலாக பாபா - பாபா என்று சொல்ல வேண்டும். புரிந்ததா.

 

யாராக இருந்தாலும், எப்படி இருந்தாலும், ஆனாலும் பாப்தாதா அன்பானவராக இருக்கிறார், அதனால் அனைவரும் அன்போடு சந்திப்பதற்காக ஒடிவருகிறார்கள். அமிர்த வேளையில் அனைத்து குழந்தைகளும் - அன்பான பாபா, இனிமையான பாபா என்ற பாடலைத் தான் பாடுகிறார்கள் மற்றும் பாப்தாதாவும் கூட பதிலுக்கு அன்பான குழந்தைகளே, அன்பான குழந்தைகளே என்ற பாடலை பாடுகிறார். நல்லது. எப்படி இருந்தாலும், இந்த புது வருடத்தில் விடுபட்டவராகவும் அன்பானவராக இருப்பதற்கான பாடமாக இருக்கிறது, ஆனாலும் கூட குழந்தைகளின் அன்பின் அழைப்பிற்கு பாபாவை கூட தனிப்பட்ட உலகத் திலிருந்து அன்பான உலகத்தில் கொண்டு வருகிறது. ஆக்கார உலகத்தின் சட்டத்தில் இந்த அனைத்தையும் பார்ப்பதற்கான அவசியமில்லை. சூட்சம உலகத்தில் சந்திப்பதற்கான சட்ட முறையில் ஒரே சமயத்தில் அநேக எல்லைக்கு அப்பாற்பட்ட குழந்தைகளை சந்திப்பதற்கான அனுபவத்தை செய்ய வைக்கிறார். சாகார உலகத்தின் நியமத்தில் எப்படியிருந்தாலும் எல்லைக்குட்பட்ட நிலையில் வர வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு முரளியும், திருஷ்டியும் தானே வேண்டும். முரளியில் (வாணி) கூட சந்திக்க செய்கிறோம். தனிப்பட்ட முறையில் பேசினாலும், குழுவிற்காக பேசினாலும், பேசுகிறார் என்றாலே அதே விஷயம் தான். குழுவில் என்ன பேசுகிறாரோ, அதைத் தான் தனிப்பட்ட முறை யிலும் பேசுகிறார். ஆனாலும் கூட பார்க்க போனால், முதல் வாய்ப்பு இரட்டை வெளிநாட்டினருக்கு தான் கிடைக்கிறது. பாரதத்தை சேர்ந்த குழந்தைகள் ஜனவரி 18-ம் தேதி எதிர்பார்க்கபட்டுக் கொண்டிருக்கிறது, மற்றும் நீங்கள் அனைவரும் முதல் வாய்ப்பு பெற்றுவிட்டீர்கள். நல்லது. 35-36 நாடுகளிலிருந்து வந்துள்ளீர்கள்.. இது கூட 36 வகையான உணவு வகைகளாக மாறிவிட்டது. 36 க்கும் புகழ் இருக்கிறது அல்லவா. 36 வகைகள் ஆகிவிட்டது.

 

பாப்தாதா அனைத்து குழந்தைகளின் சேவையில் ஊக்க உற்சாகத்தை பார்த்து குஷி அடைகிறார். யாரெல்லாம் உடல், மனம், பொருள், சமயம், அன்பு மற்றும் தைரியத்தோடு அனைத்தையும் சேவையில் ஈடுபடுத்துகிறார்களோ, அவர்களுக்கு பாப்தாதா பலமடங்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் அருகாமை யில் இருந்தாலும், சூட்சமத்தில் அருகாமையில் இருந்தாலும் கூட பாப்தாதா அனைத்து குழந்தைகளும் சேவையில் அன்பில் மூழ்கியிருப்பதற்கான வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். உதவி யாளராக ஆகிவிட்டீர்கள், மற்றவர்களையும் உதவியாளராக மாற்றுங்கள். எனவே சகயோகி ஆவதற்கும் சகயோகி ஆக்குவதற்காகவும் கூட இரட்டை வாழ்த்துக்கள். பல குழந்தைகளின் சேவையில் ஊக்க-உற்சாகத்தின் செய்தி மற்றும் கூட கூடவே புது வருடத்தின் ஊக்க உற்சாகத்தின் வாழ்த்து மடலின் மாலை பாப்தாதாவின் கழுத்தில் சுழன்றுக் கொண்டிருக்கிறது. யாரெல்லாம் வாழ்த்து மடல் அனுப்பியிருக்கிறார்களோ, பாப்தாதா மடலுக்கு பதிலாக மரியாதை மற்றும் அன்பு இரண்டையும் தருகிறார். விசயங்களை கேட்டு-கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். மறைமுகமாக சேவை செய்திருந்தாலும், வெளிப்படையாக சேவை செய்திருந்தாலும், ஆனால் பாபாவை வெளிப்படுத்துவதற்கான சேவையில் சதா வெற்றியே தான் இருக்கிறது. அன்பினுடைய சேவையின் விளைவு - சகயோகி ஆத்மாக்கள் ஆவது மற்றும் பாபாவின் காரியத்தில் அருகாமையில் வருவது - இது தான் வெற்றியின் அடையாளமாகும். சகயோகியாக இருப்பவர்கள் இன்று சகயோகியாக இருப்பார்கள், ஆனால் நாளை யோகியாக கூட ஆகிவிடுவார்கள். எனவே சகயோகி ஆவதற்கான விசேஷமான சேவையில் நாலா பக்கத்திலும் உள்ள அனைவருக்காகவும் பாப்தாதா அழிவற்ற வெற்றி சொரூபம் ஆகுக என்ற வரதானம் கொடுக்கிறார். நல்லது.

 

உங்களுடைய பிரஜைகள், உதவியாளர்கள், உறவினர்களின் வளர்ச்சியை அடைகிறார்கள் என்றால், வளர்ச்சிக்கான விதிகள் கூட மாற வேண்டும். குஷியாக இருக்கிறீர்கள் அல்லவா, நன்றாக வளர்ச்சி அடையுங்கள். நல்லது.

 

எப்பொழுதுமே அன்பானவராக இருக்கும் அனைவருக்கும், சதா உதவியாளர் ஆகி, உதவியாளராக மாற்றக் கூடிய, சதா வாழ்த்துக்களை பெறக்கூடிய, சதா ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு எண்ணத்திலும் உயர்ந்ததிலும் உயர்ந்ததாக, புகழுக்கு தகுதியுடையவராக மாற்றக் கூடிய, சதா வள்ளல் ஆகி அனைவருக்கும் அன்பு மற்றும் உதவி தரக்கூடிய - அப்படிப்பட்ட சிரேஷ்ட, மகான் பாக்கியசாலி ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் சங்கமயுகத்தின் இரவு வணக்கம் மற்றும் காலை வணக்கம்.

 

வெளிநாட்டு சேவையில் பொறுப்பில் இருக்கும் டீச்சர்களுக்காக - அவ்யக்த மகாவாக்கியம்:

 

நிமித்தமாக உள்ள சேவாதாரி குழந்தைகளுக்கு பாப்தாதா சதா சமான் பவ (சமமானவர் ஆகுக) என்ற வரதானத்தின் மூலம் முன்னேற்றி கொண்டேயிருக்கிறார். பாப்தாதா அனை வருக்கும் பாண்டவர்களாக (சகோதரர்களாக), சக்திகளாக (சகோதரிகளாக), யாரெல்லாம் சேவைக்கு நிமித்தமாக (பொறுப்பில்) இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரையும் விசேசசமான கோடான கோடி மடங்கு சிரேஷ்ட ஆத்மாக்களாக புரிந்திருக்கிறார். சேவையின் வெளிப்படையான பலன் குஷி மற்றும் சக்தி, இந்த விசேசமான அனுபவத்தை செய்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். இப்பொழுது எந்தளவு தன்னை சக்திசாலியாக லைட் ஹவுஸ் (கலங்கரை விளக்கு) மைட் ஹவுஸ் (சக்தி ஸ்தலம்) ஆகி சேவை செய்வீர்களோ, அந்தளவு விரைவாக நாலாபக்கமும் மேலும் பாபாவின் பிரத்யக்சதாவின் (வெளிப்படுத்தலின்) கொடி பறக்கும். ஒவ்வொருவரும் பொறுப்பான சேவாதாரிகளும் விசேச மாக சேவையின் வெற்றிக் காக இரண்டு விசயங்களை கவனத்தில் வைக்க வேண்டும் - முதலாவது விசயம் சம்ஸ்காரங்கள் இணைந்து போவதற்கான ஒற்றுமை, ஒவ்வொரு இடத்திலும் இந்த விசேஷத்தன்மை தென்பட வேண்டும். இரண்டாவது சதா ஒவ்வொரு பொறுப்பான சேவாதாரிகளும் முதலில் தனக்கு இந்த இரண்டு சான்றிதழ்களை தரவேண்டும், ஒன்று ஒற்றுமை, மற்றொன்று திருப்தி. சம்ஸ்காரம் விதவிதமாக இருக்கும், மேலும் இருக்கத் தான் செய்யும், ஆனாலும் கூட சம்ஸ் காரங்களில் மோதல் வருவது அல்லது ஒதுங்கிச் சென்று தன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது - இது தன்னுடைய கையில் தான் இருக்கிறது. எது நடந்தாலும், ஒருவேளை ஏதாவது சம்ஸ்காரம் அப்படி இருந்தால் மற்றொருவர் கை தட்ட (ஒத்து போக) வேண்டாம். மற்றவர்களிடம் மாற்றம் ஏற்படுகிறதோ - இல்லையோ, ஆனால் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும் அல்லவா. ஒருவேளை ஒவ்வொருவரும் தன்னை மாற்றிக் கொள்கிறார்கள், புலனடக்க சக்தியை தாரனை செய்கிறீர்கள் என்றால், மற்றவர்களின் சம்ஸ்காரம் கூட அவசியம் சீதளமாகி விடும். எனவே ஒருவர் மற்றவர் களிடம் அன்பான உணர்வோடு, உயர்ந்த உணர்வோடு தொடர்பில் வாருங்கள், ஏனெனில் நிமித்தமான சேவாதாரி என்றாலே பாபாவை வெளிப் படுத்தும் கண்ணாடியாகும். எனவே உங்களுடைய நடைமுறை வாழ்க்கை தான் பாபாவை வெளிப்படுத்தும் கண்ணாடியாகும். ஆகையால் எப்பொழுதுமே பாபா யாராக இருக்கிறாரோ, எப்படி இருக்கிறாரோ, அப்படியே வெளிப்படுத்தும் கண்ணாடியாக நமது வாழ்க்கை இருக்க வேண்டும். மற்றபடி முயற்சி மிகவும் நன்றாகவே செய்கிறீர்கள், தைரியம் கூட நன்றாகவே வைக்கிறீர்கள். சேவையின் வளர்ச்சிக்கான ஊக்கம் கூட மிக நன்றாக இருக்கிறது, ஆகையால் வளர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். சேவை செய்வது கூட நன்றாக இருக்கிறது, இப்பொழுது பாபாவை வெளிப்படுத்துவதற்காக நடைமுறை வாழ்க்கையை சதா வெளிப்படுத்துங்கள். இந்த ஞானத்தின் தாரணை செய்வதில் நம்பர் ஒன்றாகத் தான் இருக்கிறீர்கள், ஆனால் சம்ஸ்காரம் இணைவதில் கூட முதல் நம்பரில் இருக்கிறோம் என்று அனைவரும் சேர்ந்து ஒருமித்த குரலில் சொல்லுங்கள். இந்தியாவின் டீச்சர்கள் வேறு, வெளிநாட்டை சேர்ந்த டீச்சர்கள் வேறு என்பது கிடையாது. அனைவரும் ஒன்று தான். இவர்களோ (வெளிநாட்டை சேர்ந்தவர்கள்) சேவைக்காக நிமித்தமாக இருக்கிறார்கள், ஸ்தாபனையின் காரியத்தில் உதவியாளர் ஆகியிருக்கிறார்கள், மேலும் இப்பொழுது கூட சகயோகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆகையால் இயல்பாகவே அனைவரிடத்திலும் விசேசமான நடிப்பு நடிக்க வேண்டியிருக் கிறது. பாப்தாதாவிடம் நிமித்தமான ஆத்மாக்களுக்குள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வேறு, பாரதத்தை சேர்ந்தவர்கள் வேறு என்ற பாகுபாடு கிடையாது. யாருக்கு எந்த சேவையில் விசேசத் தன்மை இருக்கிறதோ, யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அங்கு அவர்களின் விசேசத் தன்மையின் பயனை பெற வேண்டும். மற்றபடி ஒருவர் மற்றவர்களுக்கு மரியாதை தர வேண்டும், இது தான் பிராமண குலத்தின் நியமமாகும். அன்பை பெற வேண்டும், மரியாதை அளிக்க வேண்டும். மனிதர்களின் விசேசத்தன்மைக்கு மகத்துவம் தரப்படுகிறது அல்லவா. நல்லது.

 

வரதானம்:

ஒவ்வொரு நொடி மற்றும் எண்ணத்தையும் விலைமதிக்க முடியாத முறையில் கடந்து செல்லக் கூடிய விலைமதிக்க முடியாத இரத்தினம் ஆகுக!

 

சங்கமயுகத்தின் ஒவ்வொரு நொடியும் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். எப்படி ஒன்று இலட்ச மடங்கு ஆகிறதோ, அப்படியே ஒரு நொடி கூட வீணாகிறது என்றால் இலட்ச மடங்கு வீணாகி விடுகிறது - ஆகையால் அந்தளவு கவனம் வைத்தீர்கள் என்றால், சோம் பேறித்தனம் முடிந்துவிடும். இப்பொழுது கணக்கு பார்க்க யாருமில்லை, ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு வருத்தப்பட (பச்சாதாபம்) வேண்டியிருக்கும், ஏனெனில் இந்த சமயத்திற்கு மிகவும் மதிப்பு இருக்கிறது. யார் தனது ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு எண்ணத்தை யும் மதிப்பு வாய்ந்த முறையில் கடந்து செல்கிறார்களோ, அவர்கள் தான் விலைமதிப்பிட முடியாத இரத்தினம ஆகிறார்கள்.

 

சுலோகன்:

யார் சதா யோகயுக்த் (யோக நிலையில்) இருக்கிறார்களோ, அவர்கள் தான் உதவியின் (சகயோகத்தின்) அனுபவம் செய்து வெற்றியாளர் ஆகிறார்கள்.

 

ஓம்சாந்தி