21.09.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அன்புக்கடலான தந்தை, சங்கமயுகத்தில் உங்களுக்கு உங்கள் ஆஸ்தியான அன்பைக் கொடுக்கிறார். ஆகையால், அனைவருக்கும் அன்பைக் கொடுங்கள், என்றுமே கோபப்படாதீர்கள்.கேள்வி:
உங்கள் பதிவேட்டை நன்றாக வைத்திருப்பதற்குத் தந்தை உங்களுக்குக் காட்டுகின்ற பாதை யாது?பதில்:
தந்தை உங்களுக்கு அன்பின் பாதையையே காட்டுகின்றார். அவர் உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, அனைவருடனும் அன்புடன் பழகுங்கள். எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதீர்கள். உங்கள் பௌதீகப் புலன்களினால் என்றுமே எப் பிழையானச் செயலையும் செய்யாதீர்கள். எப்பொழுதும் சோதியுங்கள்: என்னிடம் எந்த அசுர குணமேனும் உள்ளதா? மாறும் மனோநிலையை (அழழனல) நான் கொண்டிருக்கின்றேனா? நான் எதனையிட்டும் குழப்பம் அடைகின்றேனா?பாடல்:
காலம் கடந்து செல்கின்றது.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். நாளுக்கு நாள், எங்கள் வீட்டை, அதாவது, எங்கள் இலக்கை நாங்கள் அண்மிக்கின்றோம். இப்பொழுது, ஸ்ரீமத் கூறுவதையிட்டுக் கவனயீனமாக இருந்து விடாதீர்கள். நாங்கள், அனைவருக்கும் செய்தியைக் கொடுப்பதற்குத் தந்தையிடமிருந்து வழிகாட்டல்களைப் பெறுகின்றோம். நீங்கள் நூறாயிரக் கணக்கானோருக்குச் செய்தியைக் கொடுக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்;கின்றீர்கள். அவர்கள் வருகின்ற காலமும் வரும். பலரும் வரும்பொழுது, அவர்கள் மேலும் பலருக்குச் செய்தியைக் கொடுப்பார்கள். அனைவருமே தந்தையின் செய்தியைப் பெற உள்ளார்கள். இச்செய்தி மிகவும் இலகுவானது. அவர்களிடம் கூறுங்கள்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவுசெய்;யுங்கள். உங்கள் பௌதீகப் புலன்களினாலும், உங்கள் எண்ணங்களினாலும், வார்த்தைகளினாலும், செயல்களினாலும் எத் தீய செயல்களையும் செய்யாதீர்கள். முதலில், அது உங்கள் மனதில் தோன்றுகின்றது, பின்னர் அது வார்த்தைகளாகப் பேசப்படுகின்றது. பிழையானவற்றிலிருந்து சரியானவற்றைப்; புரிந்துகொள்ளக்கூடிய புத்தி இப்பொழுது உங்களுக்குத் தேவை: இது ஒரு புண்ணியச் செயல், இதனை நான் செய்ய வேண்டும். கோபப்பட வேண்டும் என்ற எண்ணம் உங்கள் இதயத்தில் ஏற்பட்டாலும், கோபப்பட்டால், அது ஒரு பாவம் என்பதை அறிந்துள்ளதொரு புத்தி உங்களுக்கு உள்ளது. தந்தையை நினைவுசெய்வதனால் நீங்கள் புண்ணியாத்மா ஆகுகின்றீர்கள். நீங்கள் பிழையான ஒன்றைச் செய்த பின்னர், மீண்டும் அவ்வாறு இடம்பெறாது என்று கூறுவதாக இருக்கக்கூடாது. அவ்வாறு தொடர்ந்தும் கூறுவதால், அது ஒரு பழக்கம் ஆகுகின்றது. மனிதர்கள் அத்தகைய செயல்களைச் செய்கின்றார்கள், இருப்பினும் அவை பாவகரமானவை என அவர்கள் எண்ணுவதில்லை. விகாரத்தில் ஈடுபடுதல் பாவம் என அவர்கள் நினைப்பதில்லை. அதுவே மகாபாவம் எனத் தந்தை இப்பொழுது உங்களுக்குக் கூறியுள்ளார். நீங்கள் அதனை வெற்றிகொண்டு, ‘என்னை நினைவுசெய்யுங்கள், ஏனெனில் மரணம் உங்கள் முன்னிலையில் உள்ளது’ என்று தந்தை கூறும் செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். ஒருவர் மரணிக்கும் தறுவாயில் அவருக்குக் கூறப்படுகின்றது: தந்தையான கடவுளை நினைவுசெய்யுங்கள்! தந்தையான கடவுளை நினைவுசெய்யுங்கள்! அவர் தந்தையான கடவுளிடம் செல்கின்றார் என அவர்கள் நினைத்த பொழுதிலும், தந்தையான கடவுளை நினைவுசெய்வதனால் என்ன நடைபெறுகின்றது என்பதையோ, அந்த ஆத்மா எங்கு செல்கின்றார் என்பதையோ அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அந்த ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி இன்னுமொன்றை எடுக்கின்றார். எவராலும் தந்தையான கடவுளிடம் செல்ல முடியாது. ஆகையால், குழந்தைகளாகிய நீங்கள் அநாதியான தந்தையின் அழிவற்ற நினைவைக் கொண்டிருப்பது அவசியம். மக்கள் தமோபிரதானாகவும், சந்தோஷமற்றும் உள்ளபொழுது, ஒருவருக்கொருவர் கூறுகின்றார்கள்: தந்தையான கடவுளை நினைவுசெய்யுங்கள். ஆத்மாக்கள் அனைவரும் இதனை ஒருவருக்கொருவர் கூறுகின்றார்கள். ஆத்மாக்களே இதனைக் கூறுகின்றார்கள், இல்லையா? இவ்வாறு பரமாத்மா கூறுவதில்லை. ஆத்மாக்களே ஆத்மாக்களிடம் கூறுகின்றார்கள்: தந்தையை நினைவுசெய்யுங்கள்! இது ஒரு பொதுவான வழக்கம். மரணிக்கும் நேரத்தில்;, அவர்கள் கடவுளை நினைவுசெய்கின்றார்கள், ஏனெனில் அவர்களுக்குக் கடவுளின் மீது பயம் உள்ளது. கடவுளே நல்ல, தீய செயல்களுக்கான பலனைக் கொடுக்கின்றார் என அவர்கள் நம்புகின்றார்கள். நீங்கள் தீய செயல்களைச் செய்துள்ளதால், பரம நீதிபதியான, தர்மராஜ் மூலம் கடவுள் பெருமளவு தண்டனையைக் கொடுக்கின்றார். ஆகையாலேயே அதிகளவு பயம் உள்ளது. நிச்சயமாகக் கர்ம வேதனை இருக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது செயல்கள், நடுநிலைச் செயல்கள், பாவச்செயல்கள் என்பற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்;கின்றீர்கள். அச் செயல்கள் நடுநிலைச் செயல்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நினைவுசெய்தவாறே நீங்கள் செய்கின்ற செயல்கள் நல்ல செயல்களாகும். இராவண இராச்சியத்தில் உள்ள மக்கள் தீய செயல்களை மாத்திரமே செய்கின்றார்கள். இராம இராச்சியத்தில் தீய செயல்கள் என்றுமே செய்யப்பட மாட்டாது. நீங்கள் இப்பொழுது தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். அனைத்திற்குமான ஆலோசனையை நீங்கள் தொடர்ந்தும் பெற வேண்டும். நீங்கள் எங்காவது அழைக்கப்படும்பொழுது, நீங்கள் செல்லலாமா, இல்லையா என ஆலோசனை பெறுங்கள். உதாரணமாக, ஒருவர் பொலீஸ்காரராகப் பணியாற்றினால், முதலில் அன்புடன் விளங்கப்படுத்துமாறு அவரிடம் கூறப்படுகின்றது. அவர்கள் உண்மையைக் கூறாவிட்டால் நீங்கள் பலத்தை உபயோகிக்க முடியும். அன்புடன் விளங்கப்படுத்துவதனால், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். எவ்வாறாயினும் அந்த அன்பானது யோகசக்தியினால் நிறைந்திருந்தால், நீங்கள் அன்புச் சக்தியுடன் விளங்கப்படுத்தும்பொழுது, எவரும் புரிந்துகொள்வார்கள்; அது கடவுளே விளங்கப்படுத்துவதைப் போன்றிருக்கும். கடவுளின் குழந்தைகளாகிய நீங்கள் யோகிகள், இல்லையா? உங்களுக்கு இறை சக்தியும் உள்ளது. கடவுளே அன்புக் கடல். அவரிடம் இந்தச் சக்தியுள்ளது, இல்லையா? அவர் உங்கள் அனைவருக்கும் அந்த ஆஸ்தியைக் கொடுக்கின்றார். சத்தியயுகத்தில் பெருமளவு அன்பு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது அன்பின் ஆஸ்தியை முழுமையாகப் பெறுகின்றீர்கள். இதனைக் கோரி, வரிசைக்கிரமமாக முயற்சி செய்யும்பொழுது, நீங்கள் அன்பானவர்கள் ஆகுவீர்கள். தந்தை கூறுகின்றார்: எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதீர்கள். இல்லையேல், நீங்கள் துன்பத்தில்; மரணிப்பீர்கள். தந்தை உங்களுக்கு அன்பின் பாதையையே காட்டுகின்றார். உங்கள் மனதில் ஏதாவது தோன்றும்பொழுது, அது முகத்திலும் தெரிகின்றது, அது உங்கள் பௌதீகப் புலன்களினால் செய்யப்பட்டால், உங்கள் பதிவேடும் பாழாகுகின்றது. தேவர்களின் குணாதிசயமும், செயற்பாடுகளும் புகழப்படுகின்றன. ஆகவே பாபா கூறுகின்றார்: தேவர்களை வழிபடுபவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். ‘நீங்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள், 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள்’ என அவர்கள் புகழ் பாடுகின்றார்கள். பின்னர் அவர்கள் தங்கள் சொந்தக் குணாதிசயத்தையும், நடத்தையையும் பற்றிப் பேசுகின்றார்கள். அவர்களிடம் கூறுங்கள்: நீங்களும் அவ்வாறே இருந்தீர்கள். நிச்சயமாக நீங்கள் மீண்டும் அவ்வாறு ஆகுவீர்கள் என்றாலும், இப்பொழுது நீங்கள் அவ்வாறில்லை. அத் தேவர்கள் போல் நீங்கள் ஆக வேண்டுமாயின், உங்கள் குணாதிசயத்தை அவர்களைப் போன்றதாக்குங்கள், அப்பொழுது நீங்களும் அவர்களைப் போன்றவர்கள்; ஆகுவீர்கள். உங்களைச் சோதித்துப் பாருங்கள்: நான் முற்றிலும் விகாரமற்றவர் ஆகியுள்ளேனா? எனக்கு அசுர குணங்கள் ஏதாவது உள்ளனவா? நான் எவ்விதமாகவேனும் குழப்பம் அடைகின்றேனா அல்லது மாறும் மனோநிலை உள்ளதா? நீங்கள் இந்த முயற்சியை எண்ணற்ற தடவைகள் செய்திருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அவ்வாறு ஆக வேண்டும். உங்களை அவ்வாறு ஆக்குகின்ற ஒரேயொருவரும் பிரசன்னமாகியுள்ளார். அவர் கூறுகின்றார்: கல்பம் கல்பமாக நான் உங்களை அவ்வாறு ஆக்குகின்றேன். ஒரு கல்பத்;தின் முன்னர் ஞானத்தைப் பெற்றவர்கள் நிச்சயமாக வந்து அதனைப் பெறுவார்கள். நீங்கள் முயற்சி செய்யத் தூண்டப்படுவதுடன், கவலையற்றவராகவும் இருக்கின்றீர்கள். நாடகம் இவ்வாறு நிச்சயிக்கப்பட்;டுள்ளது. சிலர் கூறுகின்றார்கள்: அது நாடகத்தில் இருந்தால், நான் நிச்சயமாக அதனைச் செய்வேன். அப்பாகம் எனக்கிருந்தால், அப்பொழுது நாடகம் என்னை அதைச் செய்ய வைக்கும். இதிலிருந்து அது அவர்களின் பாக்கியத்தில் இல்லை என்பது புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், குழப்பமடைந்த ஒருவர் இருந்தார்; அது அவரின் பாக்கியத்தில் இருக்கவில்லை. அவர் கூறினார்: அது நாடகத்தில் இருந்தால், நாடகம் என்னை முயற்சி செய்யத் தூண்டும்! பின்னர் அவர் நீங்கிச் சென்று விட்டார். அவ்வாறான பலரை நீங்கள் சந்திக்கின்றீர்கள். உங்கள் இலக்கும், இலட்சியமும் உங்கள் முன்னிலையில் உள்ளன. உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு பட்ஜ் உள்ளது. உங்கள் அட்டவணையை நீங்கள் பார்ப்பதைப் போன்று, உங்கள் பட்ஜையும் பாருங்கள். உங்கள் நடத்தையையும், உங்கள் குணாதிசயத்தையும் பாருங்கள். என்றுமே குற்றப் பார்வையைக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் உதடுகளிலிருந்து தீயது எதனையும் வெளிவர என்றுமே அனுமதிக்காதீர்கள். எவரும் தீய எதனையும் பேசாவிட்டால், எவ்வாறு உங்கள் காதுகளால் தீயதைக் கேட்க முடியும்? சத்தியயுகத்தில் அனைவரிடமும் தெய்வீகக் குணங்கள் இருக்கின்றன. அங்கே தீயது எதுவுமே இருக்க மாட்டாது. அவர்களும் தங்கள் வெகுமதியைத் தந்தையிடமிருந்து பெற்றிருப்பார்கள். அனைவரிடமும் கூறுங்கள்: தந்தையை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதில் இழப்பு எதுவும் இல்லை. ஒவ்வோர் ஆத்மாவும் தனது சம்ஸ்காரங்களைத் தன்னுடன் சுமந்து செல்கின்றார். சந்நியாசியாக இருப்பவர் சந்நியாசித் தர்மத்துக்கே செல்வார். அவர்களின் விருட்சம் தொடர்ந்தும் வளர்கின்றது. இந்நேரத்தில் நீங்கள் மாற்றமடைகின்றீர்கள். மனிதர்களே தேவர்களாக மாறுபவர்;கள். அனைவரும் ஒன்றாகக் கீழிறங்கி வருவார்;கள் என்றில்லை; அவர்கள் வரிசைக்கிரமமாகவே கீழிறங்கி வருவார்கள். ஒரு நாடகத்திலும் நடிகர்கள் தங்கள் தருணம் வரும்வரை மேடைக்கு வருவதில்லை; அவர்கள் அதுவரை மேடைக்குப் பின்னாலேயே இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் நேரம் வரும்பொழுது, தங்கள் பாகங்களை நடிப்பதற்காக மேடைக்கு வருகின்றார்கள். அந்த நாடகங்கள் எல்லைக்குட்பட்டவை, இந்த நாடகமோ எல்லையற்றது. நீங்கள் நடிகர்கள் என்பதும், உங்களுக்குரிய சரியான நேரத்தில் நீங்கள் உங்கள் பாகங்களை நடிக்க வேண்டும் என்பதும் உங்கள் புத்தியில் உள்ளது. இது ஓர் எல்லையற்ற, பெரியதொரு விருட்சம். நீங்கள் வரிசைக்கிரமமாக வந்து செல்கின்றீர்கள். முதலில் ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருந்தது. சமயங்கள் அனைத்தும் முதலில் வர முடியாது. தேவ தர்மத்தினரே தங்கள் பாகங்களை நடிப்பதற்கு முதலில் கீழே வருவார்கள். அதுவும் வரிசைக்கிரமமானது. நீங்கள் விருட்சத்தின் இரகசியங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை வந்து முழுக் கல்ப விருட்சத்தினதும் ஞானத்தை விளங்கப்படுத்துகின்றார். பின்னர் இந்த விருட்சம் அசரீரி விருட்சத்துடன் ஒப்பிடப்படுகின்றது. ஒரேயொரு தந்தை மாத்திரமே கூறுகின்றார்: நானே மனித உலக விருட்சத்தின் விதையாவேன். விருட்சம் விதையானவரில் அமிழ்ந்திருக்கவில்லை. ஆனால் விருட்சத்தின் ஞானம் விதையானவரில் அமிழ்ந்துள்ளது. ஒவ்வொருவரும் நடிப்பதற்குத் தனது சொந்தப் பாகத்தைக் கொண்டிருக்கின்றார். இது ஓர் உயிருள்ள விருட்சம். இந்த விருட்சத்தில் உள்ள இலைகளும் வரிசைக்கிரமமாகவே வெளிவரும். இந்த விருட்சத்தை எவரும் புரிந்துகொள்வதில்லை. இந்த விருட்சத்தின் விதையானவர் மேலே உள்ளார். ஆகவே இது ஒரு தலைகீழ் விருட்சம் என அழைக்கப்படுகின்றது. படைப்பவரான, தந்தை மேலேயே உள்ளார். நாங்கள் ஆத்மாக்கள் வாழும் இடமான, வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இப்பொழுது தூய்மையாகி, வீடு திரும்ப வேண்டும். உங்கள் யோக சக்தியின் மூலமே முழு உலகமும் தூய்மையாகுகின்றது. உங்களுக்கு ஒரு தூய உலகம் தேவைப்படுகின்றது. நீங்கள் தூய்மையாகும்பொழுது, உலகமும் தூய்மையாக்கப்பட வேண்டும். அனைவரும் தூய்மையானவர்கள் ஆகுகின்றார்கள். ஆத்மாவிலேயே மனமும், புத்தியும் உள்ளன என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. ஆத்மாக்கள் உயிர்வாழ்பவர்கள். ஆத்மாக்களே ஞானத்தைக் கிரகிக்கின்றார்கள். ஆகையால், இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் எவ்வாறு மறுபிறப்பு எடுக்கின்றீர்கள் என்பதன் முழு இரகசியத்தையும் உங்கள் புத்தி புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் 84 பிறவிச் சக்கரம் முடிவடையும்பொழுது, ஏனைய அனைவரது சக்கரமும் முடிவடைகின்றது. அனைவரும் தூய்மையானவர்கள் ஆகுகின்றார்கள். இந்த நாடகம் அநாதியானது. ஒரு விநாடியேனும் இது நிற்பதில்லை. விநாடிக்கு விநாடி நடப்பதெல்லாம் ஒரு சக்கரத்தின் பின்னரும் மீண்டும் நடக்கின்றது. ஒவ்வோர் ஆத்மாவிலும் ஓர் அழிவற்ற பாகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நடிகர்கள் தங்கள் பாகங்களை இரண்டு முதல் நான்கு மணித்தியாலங்களுக்கு நடிக்கின்றார்கள். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் இயற்கையான பாகங்களைப் பெறுகின்றார்கள். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். அதீந்திரிய சுகத்தின் புகழ் இந்தச் சங்கமயுகத்திற்கே உரியது. தந்தை வந்து, எங்களுக்கு 21 பிறவிகளுக்கான நிலையான சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். இது சந்தோஷத்திற்குரிய ஒன்று, அல்லவா? நன்றாகப் புரிந்துகொண்டு, நன்றாக விளங்கப்படுத்துபவர்கள் சேவையில் ஈடுபட்டிருக்கின்றார்கள். சில குழந்தைகள் கோபப்படும்பொழுது, அக் கோபம் ஏனையோரிலும் கோபத்தை ஏற்படுத்துகின்றது; தட்டுவதற்கு இரு கரங்கள் தேவை! அங்கே அவ்வாறில்லை. இங்கே, குழந்தைகளாகிய நீங்கள் கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள். ஒருவர் கோபப்பட்டால், அவர் மீது மலர்களைப் பொழியுங்கள். கோபம் ஒரு தீய ஆவி என அவருக்கு அன்புடன் விளங்கப்படுத்துங்கள்; அது பெருமளவு இழப்பை ஏற்படுத்துகின்றது. என்றுமே கோபப்படாதீர்கள்! கற்பிப்பவரின் மீது எக்கோபமும் இருக்கக்கூடாது. அனைவரும் வரிசைக்கிரமமாகத் தொடர்ந்தும் முயற்சி செய்கின்றார்கள். சிலர் தீவிர முயற்சியைச் செய்கின்றார்கள், ஏனையோர் தங்கள் முயற்சியில் பின்தங்கியுள்ளார்கள். தங்கள் முயற்சியில் பின்தங்கியுள்ளவர்கள் நிச்சயமாகத் தங்களுக்கே அவதூறை ஏற்படுத்துகின்றார்கள். கோபப்படுபவர்கள் எங்கு சென்றாலும் வெளியேற்றப்படுவார்கள். தீய நடத்தை உடையவர்களால் இங்கு தங்கியிருக்க முடியாது. பரீட்சை முடிவடையும்பொழுது, யார் என்னவாக ஆகுகின்றார் என்பது தெரிய வரும்; நீங்கள் அனைத்தினது காட்சிகளையும் காண்பீர்கள். ஒவ்வொருவரும் தத்தமது செயற்பாடுகளுக்கு ஏற்ப புகழப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவீர்கள். நீங்கள் அனைவருமே அகத்தில் உள்ளதை அறிந்திருக்கிறீர்கள் (அந்தர்யாமி). உங்களினுள் உள்ள ஆத்மா உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை அறியும். முழு உலகிலும் உள்ள மனிதர்கள் அனைவரின் செயற்பாட்டினதும், குணாதிசயத்தினதும் ஞானமும், அனைத்துச் சமயங்களின் ஞானமும் உங்களிடம் உள்ளது. இதுவே அனைத்தையும் அறிந்த ஆத்மாவாக, அந்தர்யாமியாக இருத்தல் எனப்படுகின்றது. கடவுள் சகல இடங்களிலும் வசிக்கின்றார் என்றில்லை. அவர் அனைத்தையும் பற்றி அறிந்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? இப்பொழுதும், அவர் எங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் எத்தகைய முயற்சிகளைச் செய்தாலும், அதற்கேற்ப அதன் வெகுமதியைப் பெறுவீர்கள். அவை அனைத்தையும் அறிந்துகொள்வதற்கு எனக்கு என்ன தேவை இருக்கின்றது? ஒருவர் எதைச் செய்தாலும், அதற்கான தண்டனையை அவர் அனுபவிப்பார். உங்கள் நடத்தை அவ்வாறிருந்தால், நீங்கள் மிகவும் சீரழிந்த அந்தஸ்தையே கோருவீர்கள்; உங்கள் அந்தஸ்து மிகவும் குறைவாக இருக்கும். ஒரு லௌகீகப் பாடசாலையில், நீங்கள் சித்தியெய்தாது விட்டால், இன்னுமொரு வருடம் கற்க வேண்டும். எவ்வாறாயினும், இக்கல்வி கல்பம் கல்பமாகத் தொடர்கின்றது. நீங்கள் இப்பொழுது கற்காது விட்டால், ஒவ்வொரு கல்பத்திலும் கற்க மாட்டீர்கள். நீங்கள் இறை அதிர்ஷ்ட இலாபச்சீட்டை முழுமையாகப் பெற வேண்டும், இல்லையா? குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்துகொள்கின்றீர்கள். பாரதம் சந்தோஷ தாமமாக இருக்கும்பொழுது, ஏனைய அனைவரும்; அமைதி தாமத்தில் இருப்பார்கள். உங்களின் சந்தோஷ நாட்கள் இப்பொழுது, இங்கேயே இருக்கின்றன என்பதையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். தீபாவளிக்கான நாட்கள் நெருங்கி வரும்பொழுது, மக்கள் புத்தாடைகளை அணிவதற்கு மேலும் ஒரு சில நாட்களே இருப்பதால், அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்களும், சுவர்க்கம் வருகின்றது எனக் கூறுகின்றீர்கள். நாங்கள் எங்களை அலங்கரித்தால். சுவர்க்கத்தில் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வோம். செல்வந்தர்கள் தங்களது செல்வத்தின் போதையைக் கொண்டுள்ளனர். மனிதர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். பின்னர், நீங்கள் சத்தியத்தையே கூறினீர்கள் என அவர்கள் பின்னர் சடுதியாக உணர்வார்கள். அவர்கள் சத்தியமானவரின் சகவாசத்தைக் கொண்டிருக்கும்பொழுதே, சத்தியத்தைப் புரிந்துகொள்வார்கள். நீங்கள் இப்பொழுது சத்தியமானவரின் சகவாசத்தில் உள்ளீர்கள். நீங்கள் உண்மையான தந்தை மூலம் உண்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். அவர்கள் அனைவரும் பொய்மையின் சகவாசத்தால் பொய்யானவர்கள் ஆகுகின்றார்கள். கடவுள் கூறுவதற்கும், மனிதர்கள் கூறுவதற்கும் இடையிலுள்ள வேறுபாட்டையும் நீங்கள் இப்பொழுது அச்சிட்டுள்ளீர்கள். நீங்கள் அதைச் சஞ்சிகைகளிலும் இடலாம். இறுதியில், வெற்றி உங்களுடையதாகும். முன்னர் ஓர் அந்தஸ்தைக் கோரியவர்கள் நிச்சயமாக அதை மீண்டும் கோருவார்கள். இது நிச்சயம். அங்கு, அகால மரணம் இல்லை. உங்களின் ஆயுட்காலம் நீண்டதாக இருக்கின்றது. தூய்மை இருந்தபொழுது, ஆயுட்காலம் நீண்டதாக இருந்தது. தந்தை தூய்மையாக்குபவர் என்பதால், நிச்சயமாக அவர் அனைவரையும் தூய்மையாக்கியிருப்பார். கிருஷ்ணரைப் பற்றி இவ்வாறு கூறுவது சரியாகப்படவில்லை. இந்த மேன்மையான சங்கம யுகத்தில் கிருஷ்ணர் எங்கிருந்து வருவார்? அதே முகச்சாயலுடன் எந்த மனிதரும் இருக்க முடியாது; 84 பிறவிகள், 84 முகச்சாயல்கள், 84 செயற்பாடுகள் அனைத்தும் நாடகத்தில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளன. அதில் எவ் வேறுபாடும் இருக்க முடியாது. உருவாக்கப்பட்டுள்ள இந்த நாடகம் எவ்வளவு அற்புதமானது! ஒவ்வோர் ஆத்மாவும் சின்னஞ்சிறிய ஒளிப்புள்ளி, அவரில் அநாதியான பாகமொன்று பதியப்பட்டுள்ளது. இது இயற்கையின் அற்புதம் என அழைக்கப்படுகின்றது. மக்கள் இதைக் கேள்விப்படும்பொழுது, அதிசயிப்பார்கள். எவ்வாறாயினும், அவர்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும் என்ற செய்தியை முதலில் அவர்களுக்குக் கொடுங்கள். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதி அருள்பவரும் ஆவார். சத்தியயுகத்தில் துன்பத்தின் குறிப்பே இல்லை. கலியுகத்திலேயே அதிகளவு துன்பம் உள்ளது. எவ்வாறாயினும், இவ்விடயங்களைப் புரிந்துகொள்பவர்கள் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். தந்தை தினமும் விளங்கப்படுத்துகின்றார். சிவபாபா எங்களுக்குக் கற்பிக்க வந்துள்ளார் என்பதையும், பின்னர் அவர் எங்களைத் திரும்பவும் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பாபாவுடன் இங்கிருப்பவர்களை விட பந்தனத்தில் உள்ளவர்கள் அதிகளவு நினைவுசெய்கின்றார்கள். அவர்களால் மேன்மையானதோர் அந்தஸ்தைக் கோர முடியும். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். சிலரால் பாபாவை நினைவுசெய்யாமல் வாழ முடியாது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, தந்தையின் நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். அப்பொழுது உங்கள் பந்தனம் முடிவடையும். பாவக் கலசமும் முடிவடையும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் குணாதிசயத்தையும், நடத்தையையும் ஒரு தேவரைப் போன்றவை ஆக்குங்கள். தீய வார்த்தைகள் எதனையும் பேசாதீர்கள். உங்கள் கண்கள் ஒருபொழுதும் குற்றமானவை ஆகக்கூடாது.2. கோபம் என்ற தீய ஆவி பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கைதட்ட இரு கரங்கள் தேவை. ஆகையால், எவராவது கோபப்பட்டால், அவரிடமிருந்து விலகி இருங்கள். அவருக்கு அன்புடன் விளங்கப்படுத்துங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தேவதை ரூபம் எனும் ஆன்மீக முயற்சி மூலம் சூழலைச் சக்திநிறைந்ததாக ஆக்குகின்ற, ஓர் அவ்யக்த தேவதை ஆகுவீர்களாக.உங்கள் தேவதை ரூபத்தின் மூலம் ஆன்மீக முயற்சி செய்வதே, சூழலைச் சக்திநிறைந்ததாக ஆக்குவதற்கான வழியாகும். இதில் மீண்டும் மீண்டும் கவனம் செலுத்துங்கள், ஏனெனில் நீங்கள் எவ்வாறு ஆன்மீக முயற்சி செய்தாலும், அதில் கவனம் செலுத்துகின்றீர்கள். எனவே அவ்யக்த ரூபம் எனும் ஆன்மீக முயற்சியைச் செய்வதெனில், நீங்கள் கவனம் செலுத்துதல் எனும் தபஸ்யாவைச் செய்ய வேண்டும். ஆகவே உங்கள் விழிப்புணர்வில் ஓர் அவ்யக்த தேவதை ஆகுகின்ற ஆசீர்வாதத்தை வைத்திருந்து, சூழலைச் சக்திநிறைந்ததாக ஆக்குவதற்கான தபஸ்யாவைச் செயயுங்கள். அப்பொழுது உங்கள் முன்னால் யார் வந்தாலும், பௌதீகமான எதற்கும் மற்றும் வீணான விடயங்கள் அனைத்துக்கும் அப்பால் செல்வார்கள்.
சுலோகம்:
சர்வசக்திவான் தந்தையை வெளிப்படுத்துவதற்கு, ஒருமைப்பாட்டுச் சக்தியை அதிகரியுங்கள்.