27.09.20 Avyakt Bapdada Tamil Lanka Murli 27.03.86 Om Shanti Madhuban
சதா அன்பானவர் ஆகுங்கள்.
இன்று, அன்புக்கடலான தந்தை, தனது அன்பான குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். இந்த ஆன்மீக அன்பானது ஒவ்வொரு குழந்தையையும் இலகு யோகி ஆக்குகிறது. இந்த அன்பானது பழைய உலகம் முழுவதையும் மறப்பதற்கு ஓர் இலகுவான வழிமுறையாகும். இந்த அன்பு மட்டுமே ஒவ்வோர் ஆத்மாவையும் தந்தைக்குரியவர் ஆக்குவதற்கான சக்திவாய்ந்த வழிமுறையாகும். அன்பு, பிராமண வாழ்க்கையின் அத்திவாரம் ஆகும். ஒரு சக்திவாய்ந்த வாழ்க்கையை உருவாக்குவதற்குத் தேவையான பராமரிப்பின் அடிப்படை அன்பே ஆகும். தந்தையின் முன்னால் தனிப்பட்ட முறையில் வந்திருக்கும் மேன்மையான ஆத்மாக்கள் அனைவரும் இங்கு தமது அன்பின் அடிப்படையிலேயே வந்துள்ளார்கள். நீங்கள் இங்கு அன்பு இறக்கைகளை விரித்துப் பறந்து வந்து மதுவனவாசிகள் ஆகியுள்ளீர்கள். அன்பான குழந்தைகளான நீங்கள் அனைவரும், எவ்வாறு அன்பானவர்களாக இருக்கிறீர்கள் என்பதை பாப்தாதா பார்த்தார். ஆனால் உங்களுக்கு இடையேயுள்ள வேறுபாடு என்ன? நீங்கள் ஏன் வரிசைக்கிரமமானவர் ஆகுகிறீர்கள்? இதற்கான காரணம் என்ன? நீங்கள் அனைவரும் அன்பானவர்களே. ஆனால் உங்களில் சிலர் எப்போதும் அன்புடையவர்கள். ஆனால் மற்றவர்களோ, வெறுமனே அன்பானவர்கள். மூன்றாவது வகையினர், காலத்திற்கேற்ப அன்பின் பொறுப்புக்களை நிறைவேற்றுபவர்கள். பாப்தாதா இந்த மூன்று வகையான அன்பான குழந்தைகளையும் கண்டார்.
சதா அன்பானவர்கள், அன்பிலே அமிழ்ந்திருப்பதனால், அவர்கள் எப்போதும் எந்தவிதமான முயற்சி செய்வதில் இருந்து அல்லது கஷ்டத்தை அனுபவிப்பதில் இருந்து அப்பாற்பட்டே இருப்பார்கள். அவர்கள் முயற்சி செய்ய வேண்டியதுமில்லை. அவர்கள் எதையும் கஷ்டமாகவும் உணர்வதில்லை. அவர்கள் சதா அன்பானவர்களாக இருப்பதனால், இயற்கையின் பஞ்சபூதங்களும் மாயையும் இப்பொழுதில் இருந்தே அவர்களின் சேவகர்கள் ஆகிவிடுகின்றன. அதாவது, சதா அன்பான ஆத்மாக்கள் அதிபதிகள் ஆகுகிறார்கள். ஆகவே, பஞ்சபூதங்களும் மாயையும் இயல்பாகவே அவர்களின் சேவகர்கள் ஆகுகின்றன. சதா அன்பான ஆத்மாக்களை, அவர்களின் நேரத்தையும் எண்ணங்களையும் தமக்காகப் பயன்படுத்தச் செய்யும் தைரியம் பஞ்ச பூதங்களுக்கும் மாயைக்கும் கிடையாது. சதா அன்பான ஆத்மாக்களின் ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் எண்ணமும் தந்தையின் நினைவிற்காகவும் சேவைக்காகவுமே இருக்கும். இதனாலேயே, இத்தகைய சதா அன்பான குழந்தைகள் ஒருபோதும் தங்களின் எண்ணங்களிலேனும் தம்மில் தங்கியிருக்க மாட்டார்கள் என்பதை மாயையும் பஞ்சபூதங்களும் அறிவார்கள். அவர்கள் சகல சக்திகளின் உரிமையும் உள்ள ஆத்மாக்கள் ஆவார்கள். சதா அன்பான ஆத்மாக்களின் ஸ்திதியானது, வேறு எவருக்கும் அன்றி ஒரேயொரு தந்தைக்கு உரியவர்கள் எனப் புகழப்படுகிறது. தந்தையே அவர்களின் உலகம் ஆவார்.
இரண்டாவது வகையான, அன்பான ஆத்மாக்கள், நிச்சயமாக அன்பாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் நிலையாக இல்லாததால், அவர்களின் எண்ணங்களும், அவற்றினூடாக அவர்களின் அன்பும் சிலவேளைகளில் வேறு திசைகளில் செல்கின்றன. தங்களை மாற்றிக் கொள்வதில், அவ்வப்போது அவர்கள் முயற்சி செய்ய வேண்டியிருப்பதை அனுபவம் செய்வார்கள். சிலவேளைகளில், அவர்கள் கஷ்டமாக உணர்வார்கள். ஆனால் அது மிகக் குறைவாகவே இருக்கும். பஞ்சபூதங்களால் அல்லது மாயையால் சூட்சுமமான தாக்குதல் ஏற்படும்போதெல்லாம், அன்பின் காரணத்தினால், அவர்கள் மிக விரைவாக நினைவு செய்கிறார்கள். தமது நினைவின் சக்தியால் அவர்கள் மிக விரைவாகத் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்களின் நேரத்திலும் எண்ணத்திலும் ஒரு பகுதி கஷ்டத்தை வெற்றி கொள்வதிலும் முயற்சி செய்வதிலும் பயன்படுத்தப்படுகின்றன. சிலவேளைகளில், அவர்களின் அன்பு சாதாரணம் ஆகிவிடுகிறது. ஏனைய வேளைகளில், அவர்கள் அன்பிலே திளைத்திருப்பார்கள். அவர்களின் ஸ்திதியில் தொடர்ந்து ஒரு வேறுபாடு காணப்படும். எவ்வாறாயினும், அவர்களின் நேரத்தில் அல்லது அவர்களின் எண்ணங்களில் அதிகளவு வீணாகுவதில்லை. இதனாலேயே, அவர்கள் அன்பானவர்களாக இருந்தாலும், சதா அன்பானவர்களாக இருப்பதில்லை. அதனால் அவர்கள் இரண்டாம் இலக்கத்தவர் ஆகுகிறார்கள்.
மூன்றாவது வகையினர, காலத்திற்கேற்ப அன்பின் பொறுப்பை நிறைவேற்றுபவர்கள். உண்மையான அன்பை தந்தையைத் தவிர வேறு எவரிடமிருந்தும் பெற முடியாது, இந்த ஆன்மீக அன்பானது எல்லா வேளையும் உங்களை மேன்மையானவர்கள் ஆக்கும் என இத்தகைய ஆத்மாக்கள் நம்புகிறார்கள். அவர்களிடம் முழுமையான ஞானம் அதாவது, புரிந்துணர்வு உள்ளது. அவர்கள் இந்த அன்பான வாழ்க்கையை விரும்புகிறார்கள். எவ்வாறாயினும், கட்டுப்படுத்தும் சக்தி இல்லாததால், தமது சரீரங்களின் அல்லது சம்ஸ்காரங்களின் மீதுள்ள பற்றினால், அல்லது குறிப்பிட்டதொரு பழைய சம்ஸ்காரத்தின் மீதுள்ள பற்றினால், ஒரு நபரின் அல்லது உடமையின் சம்ஸ்காரத்தின் மீதுள்ள பற்றினால், அல்லது வீணான எண்ணங்களைக் கொண்டிருக்கும் சம்ஸ்காரத்தின் மீதுள்ள பற்றினால், அவர்கள் வீணான எண்ணங்களின் சுமையைச் சுமக்கிறார்கள். அல்லது, அவர்களிடம் ஒன்றுகூடலின் சக்தி குறைவாக இருப்பதனால், அவர்களால் ஓர் ஒன்றுகூடலில் வெற்றி அடைய முடிவதில்லை. ஒன்றுகூடலில் உள்ள சூழ்நிலை அவர்களின் அன்பை முடித்து, அதை நோக்கி அவர்களை ஈர்க்கிறது. அவர்களில் சிலர் எப்போதும் மிக விரைவாக மனச்சோர்வு அடைகிறார்கள். ஒரு நிமிடம், அவர்கள் உயரே பறந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களை அடுத்த நிமிடம் நீங்கள் பார்த்தால், அவர்கள் தங்களுடனேயே மனச்சோர்வு அடைந்திருப்பார்கள். தங்களுடன் மனச்சோர்வு அடையும் இந்த சம்ஸ்காரம், அவர்களை சதா அன்பானவர்கள் ஆகுவதற்கு அனுமதிப்பதில்லை. சில வகையான சம்ஸ்காரங்கள் அவர்களை சூழ்நிலைகளை அல்லது இயற்கையை நோக்கி கவரச் செய்கின்றன. அவர்கள் குழப்பத்திற்கு உள்ளாகுகிறார்கள். பின்னர், அவர்கள் அன்பை அனுபவம் செய்வதனாலும், அன்பான வாழ்க்கையை விரும்புவதனாலும், அவர்களால் தந்தையை நினைவு செய்யக்கூடியதாக உள்ளது. அவர்கள் மீண்டும் தந்தையின் நினைவில் அமிழ்ந்து போவதற்கு முயற்சி செய்கிறார்கள். எனவே, காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப அவர்கள் குழப்பத்திற்கு உள்ளாகுவதனால், அவர்களிடம் சிலவேளைகளில் நினைவு உள்ளது. சிலவேளைகளில் அவர்கள் போராடுகிறார்கள். அவர்கள் தமது வாழ்க்கைகளின் பெரும்பாலான பகுதியைப் போராடுவதில் கழிப்பதனால், அன்பிலே அமிழ்ந்திருக்கும் அவர்களின் வாழ்க்கை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. இதனாலேயே, அவர்கள் மூன்றாம் இலக்கத்தைப் பெறுகிறார்கள். எவ்வாறாயினும், உலகிலுள்ள ஆத்மாக்களுடன் ஒப்பிடும்போது, மூன்றாம் இலக்கத்தில் இருப்பதும் அதிகபட்ச மேன்மையானவராக இருத்தல் என்றே சொல்லப்படும். ஏனென்றால், அவர்கள் தந்தையை இனங்கண்டுள்ளார்கள். தந்தைக்கும் பிராமண குடும்பத்திற்கும் சொந்தமாகியுள்ளார்கள். அவர்கள் குறைந்தபட்சம் அதிமேன்மையான பிராமண ஆத்மாக்கள், பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளும் என்று அழைக்கப்படுகிறார்கள். இதனாலேயே, உலகுடன் ஒப்பிடும்போது, அவர்களும் (மூன்றாம் வகையினர்) அன்பான ஆத்மாக்களே. எவ்வாறாயினும், முழுமையுடன் ஒப்பிடும்போது, அவர்கள் மூன்றாம் இலக்கத்தில் இருக்கிறார்கள். எனவே, அனைவரும் அன்பானவர்களே. ஆனால் வரிசைக்கிரமமானவர்கள். முதலாம் இலக்க, சதா அன்பான ஆத்மாக்கள் சதா தாமரை மலர்களைப் போன்றவர்கள். அவர்கள் பற்றற்றவர்களாகவும் தந்தையிடம் அதிகபட்ச அன்பானவர்களாகவும் இருக்கிறார்கள். அன்பான ஆத்மாக்கள் பற்றற்றவர்களும் அன்பானவர்களும் ஆவார்கள். ஆனால் அவர்கள் தந்தையைப் போல் சக்திநிறைந்த வெற்றியாளர்கள் ஆகுவதில்லை. அவர்கள் அன்பிலே திளைத்திருப்பதில்லை. ஆனால் அன்பானவர்கள். ‘நான் உங்களுக்குச் சொந்தமானவன், நான் உங்களுடையவனாகவே இருப்பேன்’ என்பதே அவர்களின் விசேடமான சுலோகம் ஆகும். அவர்கள் சதா இந்தப் பாடலைத் தொடர்ந்து பாடுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்களிடம் அன்பு இருப்பதனால், அவர்கள் 80மூ பாதுகாப்பாக இருக்கிறார்கள். எவ்வாறாயினும், இன்னமும் ‘சிலவேளைகளில்’ என்ற வார்த்தை இடையில் உள்ளது. ‘சதா’ என்ற வார்த்தையை அவர்களுக்குப் பயன்படுத்த முடியாது. மூன்றாம் இலக்க ஆத்மாக்கள், மீண்டும் மீண்டும் அவர்களின் அன்பை இணைக்க வேண்டியிருப்பதனால், அவர்கள் தொடர்ந்து அன்புடன் சத்தியங்களையும் செய்கிறார்கள். ‘அவ்வளவுதான். இன்றிலிருந்து, நான் இவ்வாறு ஆகுவேன். இப்பொழுதில் இருந்து நான் இதைச் செய்வேன்.’ அவர்கள் அந்த வேறுபாட்டை அறிந்ததால், அவர்கள் சத்தியங்கள் செய்து, முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட சம்ஸ்காரம் அல்லது ஏதாவதொன்று அவர்களை அன்பிலே திளைத்திருக்க அனுமதிப்பதில்லை. அன்பிலே திளைத்திருக்கும் ஸ்திதியில் இருந்து ஒரு தடை அவர்களைக் கீழே கொண்டுவந்துவிடுகிறது. அதனால், சதா என்ற வார்த்தையை அவர்களுக்காகப் பயன்படுத்த முடியாது. அவர்கள் சிலவேளைகளில் இவ்வாறும், ஏனைய வேளைகளில் அவ்வாறும் இருப்பதனால், அவர்களிடம் இன்னமும் குறிப்பிட்டதொரு பலவீனம் இருக்கிறது. இத்தகைய ஆத்மாக்கள் பாப்தாதாவுடன் மிக இனிமையான இதயபூர்வமான சம்பாஷணை செய்கிறார்கள். அவர்கள் அதிகளவு உரிமையை நிலைநாட்டுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: இந்த வழிகாட்டல் உங்களிடமிருந்து வந்துள்ளது. ஆனால் நீங்களும் இதை எங்களுக்காகச் செய்யலாம். நான் அதற்கான வெகுமதியைப் பெறுவேன். ‘நீங்கள் எங்களை உங்களுக்குச் சொந்தமாக ஆக்கியிருப்பதனால், இது இப்போது உங்களைப் பொறுத்த விடயம்’ என அவர்கள் அன்புடனும் உரிமையுடனும் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: தந்தை அறிவார். ஆனால் குறைந்தபட்சம் குழந்தை அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், அந்தக் குழந்தைகள் உரிமையுடன் கூறுகிறார்கள்: நான் அதை ஏற்றுக் கொள்கிறேனோ இல்லையோ, நீங்கள் என்னை நான் எப்படியோ அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே, இத்தகைய குழந்தைகளுக்காகத் தந்தை இப்போதும் கருணைகொள்கிறார். ஏனென்றால், அவர்களும் பிராமணக் குழந்தைகளே. ஆகவே, கருவி ஆத்மாக்களினூடாகவும் அவர் விசேடமான சக்தியைக் கொடுக்கிறார். எவ்வாறாயினும், சிலர் அவர்களின் சக்தியைப் பெற்று தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ, சக்தியைப் பெற்றாலும், தமது சொந்த சம்ஸ்காரங்களில் மூழ்கிப் போயிருப்பதனால், அவர்களால் அந்த சக்தியைக் கிரகிக்க முடிவதில்லை. நீங்கள் போஷாக்கான ஒன்றை ஒருவருக்கு உண்ணக் கொடுத்தாலும், அவர் அதை உண்ணாவிட்டால், என்ன நிகழும்?
தந்தை விசேடமான அன்பைக் கொடுக்கிறார். சிலர் அதனால் படிப்படியாக சக்திசாலிகள் ஆகுகிறார்கள். மூன்றாம் வகை ஆத்மாக்களில் இருந்து இரண்டாம் வகை ஆத்மாக்கள் ஆகுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்களில் சிலர் மிகவும் கவனக்குறைவாக இருப்பதனால், அவர்களால் தாம் எடுக்க வேண்டியதை எடுக்க முடியாமல் உள்ளது. மூன்று வகையான குழந்தைகளும் அன்பான குழந்தைகளே. அவர்கள் அனைவருக்கும் அன்பான குழந்தைகள் என்ற பட்டம் உள்ளது. ஆனால் அவர்கள் வரிசைக்கிரமமானவர்கள்.
இன்று, இது ஜேர்மனியின் முறையாகும். குழு முழுவதும் முதலாம் இலக்கத்தவர்கள். நீங்கள் முதலாம் இலக்க, நெருக்கமான இரத்தினங்கள் ஆவீர்கள். ஏனென்றால், சமமாக இருப்பவர்கள் நெருக்கமாகவும் இருப்பார்கள். பௌதீகமாக நீங்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், நீங்கள் இதயத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் இதயத்திலேயே இருக்கிறீர்கள். நீங்கள் தந்தையின் இதய சிம்மாசனத்தில் இருப்பதனால், இயல்பாகவே தந்தையைத் தவிர வேறு எவரும் உங்களின் இதயங்களில் இல்லை. ஏனென்றால், பிராமண வாழ்க்கையில், தந்தை இதயத்துடனேயே ஒரு பேரத்தை ஏற்படுத்துகிறார். நீங்கள் அவரின் இதயத்தை வென்றுவிட்டீர்கள். நீங்கள் உங்களின் இதயங்களைக் கொடுத்துவிட்டீர்கள். நீங்கள் உங்களின் இதயத்தால் பேரம் செய்தீர்கள், இல்லையா? நீங்கள் உங்களின் இதயங்களில் தந்தையுடன் இருக்கிறீர்கள். பௌதீகமாக, உங்களில் சிலர் ஓரிடத்திலும், ஏனையோர் இன்னோர் இடத்திலும் இருக்கக்கூடும். நீங்கள் அனைவரும் இங்கேயே இருந்தால், இங்கிருந்து நீங்கள் என்ன செய்வீர்கள்? மதுவனத்தில் வசிப்பவர்களையும் வெளியிலே சேவை செய்வதற்கு அனுப்ப வேண்டியுள்ளது. வேறு எவ்வாறு உலகிற்கே சேவை செய்ய முடியும்? உங்களுக்குத் தந்தையிடம் அன்பு உள்ளது. சேவை செய்வதற்கும் விருப்பம் உள்ளது. இதனாலேயே, நாடகத்தின்படி, நீங்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று, அங்கு சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். எனவே, இதுவும் நாடகத்தின் பாகமாக நிச்சயிக்கப்பட்;டுள்ளது. நீங்கள் உங்களுக்குச் சமமானவர்களுக்குச் சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். ஜேர்மனியைச் சேர்ந்தவர்கள் சதா சந்தோஷமாக இருப்பவர்கள். எல்லா வேளைக்குமான ஆஸ்தியை நீங்கள் தந்தையிடமிருந்து மிக இலகுவாகப் பெறும்போது, எல்லா வேளைக்குமாக நீங்கள் பெறுவதை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, சிறிதளவை அல்லது சிறிதளவு நேரத்திற்கானதை மட்டும் ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள்? அருள்பவர் வழங்குகிறார். ஏன் எடுப்பவர்கள் சிறிதளவை எடுத்துக் கொள்ள வேண்டும்? ஆகவே, எப்போதும் சந்தோஷ ஊஞ்சலில் தொடர்ந்து ஆடுங்கள். எப்போதும் மாயையை வென்றவர்களாகவும், இயற்கையை வென்றவர்களாகவும் இருங்கள். வெற்றியாளராகி, உலகின் முன்னால் வெற்றி முரசங்களை உரத்து அடியுங்கள்.
தற்காலத்தில் ஆத்மாக்கள் தற்காலிக வசதிகளால் முழுமையான போதையுடன் இருக்கிறார்கள். அல்லது துன்பத்தாலும் அமைதியின்மையாலும் களைப்படைந்துள்ளார்கள். அதனால் அவர்களுக்குச் சிறிதளவு சத்தமேனும் கேட்காத வகையில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறார்கள். அந்த வகையான போதையில் மூழ்கியிருப்பவர்களை விழித்தெழச் செய்வதற்கு அவர்களை அசைக்க வேண்டியுள்ளது. நீங்களும் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கியிருப்பவர்களை அசைத்து, அவர்களை விழித்தெழச் செய்ய வேண்டும். எனவே, ஹாம்பேர்க்கில் இருந்து வந்திருப்பவர்கள் என்ன செய்கிறீர்கள்? இது மிக நல்லதொரு சக்திவாய்ந்த குழுவாகும். உங்கள் அனைவருக்கும் தந்தையிடமும் கல்விக்கும் ஆழ்ந்த அன்பு உள்ளது. இந்தப் படிப்பை விரும்புவர்கள் சதா சக்திசாலிகளாக இருப்பார்கள். தந்தையிடம், அதாவது, முரளிதாரில் (முரளியைக் கூறுபவர்) அன்பு வைத்திருத்தல் என்றால் முரளியிலும் அன்பு வைத்திருத்தல் என்று அர்த்தம். உங்களுக்கு முரளியின் மீது அன்பில்லாவிட்டால், முரளிதாரிலும் அன்பு இருக்க முடியாது. தந்தையிடம் அன்பு உள்ளது என அவர்கள் எந்தளவிற்குக் கூறினாலும், படிப்பிற்கு நேரம் இல்லாவிட்டால், தந்தை அவர்களை நம்ப மாட்டார். எங்கு ஆழ்ந்த அன்பு உள்ளதோ. அங்கு தடைகள் இருக்க முடியாது. அவை இயல்பாகவே முடிந்துவிடும். படிப்பிலும் முரளியிலும் அன்பு வைத்திருப்பவர்கள் இலகுவாகத் தடைகளை வெற்றி கொள்கிறார்கள். அவர்களின் பறக்கும் ஸ்திதியால், அவர்கள் தடைகளுக்கு மேலே செல்கிறார்கள். தடைகள் கீழேயே தங்கிவிடும். பறக்கும் ஸ்திதியில் இருப்பவர்களுக்கு ஒரு மலையும் ஒரு கல்போல் ஆகிவிடும். படிப்பில் அன்பு வைத்திருப்பவர்களால் எந்தவிதமான சாக்குப்போக்கும் கூற முடியாது. எந்தவிதமான கஷ்டங்களையும் அன்பானது இலகுவானது ஆக்கிவிடும். முரளியில் அன்பு, படிப்பில் அன்பு, குடும்பத்தில் அன்பு என்பவை ஒரு கோட்டையைப் போல் ஆகிவிடும். இந்தக் கோட்டைக்குள் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இந்தச் சிறப்பியல்புகள் இரண்டும் இந்தக் குழுவினரை முன்னேறச் செய்கிறது. படிப்பிலும் குடும்பத்திலும் உள்ள அன்பினால், நீங்கள் அதன் விளைவாக ஒருவரையொருவர் நெருக்கமாகக் கொண்டுவருகிறீர்கள். உங்களின் கருவி ஆத்மாவும் ஓர் அன்பான ஆத்மா ஆவார் (புஷ்பல் தீதி). அன்பு மொழியைப் பார்ப்பதில்லை. அன்பின் மொழியானது, ஏனைய மொழிகளை விட மிகவும் மேன்மையானது. அனைவரும் அவரை நினைக்கிறார்கள். பாப்தாதாவும் அவரை நினைக்கிறார். பாபா மிக நல்லதொரு நடைமுறை அத்தாட்சியைப் பார்க்கிறார். சேவையில் வளர்ச்சி காணப்படுகிறது. தொடர்ந்து எந்தளவிற்கு அதிக விரிவாக்கம் இடம்பெறுகிறதோ, அந்தளவிற்கு மகாத்மாக்கள் ஆகுவதற்கான பலனாக அனைவரிடமிருந்தும் தொடர்ந்து அதிக ஆசீர்வாதங்களையும் நீங்கள் பெறுவீர்கள். புண்ணியாத்மாக்கள் மட்டுமே பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்கள் ஆகுவார்கள். இந்த வேளையில் நீங்கள் ஒரு புண்ணியாத்மா ஆகாவிட்டால், உங்களால் எதிர்காலத்தில் ஒரு பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மா ஆகமுடியாது. ஒரு புண்ணியாத்மா ஆகுவதும் அவசியமே. அச்சா.
அவ்யக்த முரளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்.
கேள்வி: பிராமண வாழ்க்கையின் விசேடமான நற்குணம், அலங்காரம், பொக்கிஷம் என்ன?
பதில்: திருப்தி. எதையாவது விரும்பும்போது, நீங்கள் விரும்பியதை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள். திருப்தி ஒரு சிறப்பியல்பு. அது பிராமண வாழ்க்கையில் மாற்றத்திற்கான ஒரு விசேடமான கண்ணாடி. எங்கு திருப்தி இருக்கிறதோ, அங்கு நிச்சயமாக சந்தோஷம் இருக்கும். பிராமண வாழ்க்கையில் திருப்தி இல்லாவிட்டால், அது சாதாரணமானதொரு வாழ்க்கையே.
கேள்வி: திருப்தி இரத்தினங்களின் சிறப்பியல்புகள் எவை?
பதில்: திருப்தி இரத்தினங்கள் ஒருபோதும் தங்களுடனும் ஏனைய ஆத்மாக்களுடனும், தமது சொந்த சம்ஸ்காரங்களுடனும் அல்லது சூழலின் ஆதிக்கத்திலும் அதிருப்தி அடைவதில்லை. நான் திருப்தியாக இருக்கிறேன், ஆனால் மற்றவர்களை என்னை அதிருப்தி அடைய வைக்கிறார்கள் என அவர்கள் ஒருபோதும் கூறுவதில்லை. என்ன நிகழ்ந்தாலும், இரத்தினங்களால் ஒருபோதும் தமது திருப்தி என்ற சிறப்பியல்பைக் கைவிட முடியாது.
கேள்வி: எப்போதும் திருப்தியாக இருப்பவர்களின் அடையாளங்கள் எவை?
பதில்: 1. எப்போதும் திருப்தியாக இருப்பவர்கள், இயல்பாகவே அனைவராலும் நேசிக்கப்படுவார்கள். ஏனென்றால், திருப்தியானது உங்களைப் பிராமணக் குடும்பத்தால் நேசிக்கச் செய்யும்.
2. திருப்தியான ஆத்மாக்களைத் தமக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதற்கு ஏனையவர்கள் முயற்சி செய்வார்கள். அத்துடன் மேன்மையான பணியில் அவர்கள் ஒத்துழைப்பதையும் விரும்புவார்கள்.
3. திருப்தி என்ற சிறப்பியல்பே உங்களை ஒரு பணிக்குப் பொன்னான வேந்தர் (சான்சிலர்) ஆக்கிவிடும். இத்தகைய ஆத்மாக்கள் எதைப்பற்றியும் கூறவோ அல்லது சிந்திக்கவோ வேண்டியதில்லை.
4. திருப்தியானது அனைவரின் சுபாவத்திலும் சம்ஸ்காரங்களிலும் ஒத்திசைவை ஏற்படுத்தும். திருப்தியான ஆத்மாக்கள் ஒருபோதும் எவரின் சுபாவத்தை அல்லது சம்ஸ்காரங்களை இட்டுப் பயப்பட மாட்டார்கள்.
5. இத்தகைய ஆத்மாக்களை அனைவரும் தமது இதயபூர்வமாக விரும்புவார்கள். அவர்கள் அனைவரின் அன்பையும் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள். இத்தகைய ஆத்மாக்களின் அறிமுகம் அவர்களின் திருப்தியே ஆகும். ஒவ்வொருவரின் இதய ஆசையும் இத்தகைய ஆத்மாக்களுடன் பேசவேண்டும், அவர்களுடன் அமர்ந்திருக்க வேண்டும் என்பதே ஆகும்.
6. திருப்தி ஆத்மாக்கள் சதா மாயையை வென்றவர்களாக இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் கீழ்ப்படிவானவர்கள். எப்போதும் ஒழுக்கக் கோட்பாடுகள் என்ற கோட்டிற்குள் இருப்பவர்கள். அவர்கள் தொலைவில் இருந்தே மாயையை இனங்கண்டு கொள்வார்கள்.
கேள்வி: ஏன் உங்களால் சரியான நேரத்தில் மாயையை இனங்காண முடிவதில்லை? ஏன் நீங்கள் மீண்டும் மீண்டும் மாயையால் ஏமாற்றப்படுகிறீர்கள்?
பதில்: மாயை இனங்காண முடியாதிருப்பதற்கான காரணம், நீங்கள் எப்போதும் தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில்லை. சிலவேளைகளில் நீங்கள் அவற்றைப் பின்பற்றுகிறீர்கள். சிலவேளைகளில் அவற்றைப் பின்பற்றுவதில்லை. சிலவேளைகளில் நீங்கள் அவரை நினைவு செய்கிறீர்கள். சிலவேளைகளில் நினைப்பதில்லை. சிலவேளைகளில் உங்களுக்குள் ஊக்கமும் உற்சாகமும் உள்ளன. சிலவேளைகளில் அவை இருப்பதில்லை. நீங்கள் எப்போதும் வழிகாட்டல்கள் என்ற கோட்டிற்குள் இருப்பதில்லை. எனவே, அந்த வேளையில் மாயை உங்களை ஏமாற்றி விடுகிறாள். மாயையிடம் அதிகளவு வேறுபிரித்தறியும் சக்தி உள்ளது. நீங்கள் எப்போது பலவீனம் அடைகிறீர்கள் என்பதை அவள் பார்க்கிறாள். அந்தப் பலவீனத்தினூடாக அவள் உங்களைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறாள். மாயை உட்பிரவேசிப்பதற்கான கதவு பலவீனமே ஆகும்.
கேள்வி: மாயையை வென்றவர் ஆகுவதற்கான இலகுவான வழிமுறை என்ன?
பதில்: சதா தந்தையுடன் இருங்கள். அவருடன் இருத்தல் என்றால், இயல்பாகவே ஒழுக்கக் கோட்பாடுகள் என்ற கோட்டுக்குள் இருத்தல் என்று அர்த்தம். அப்போது நீங்கள் முயற்சி செய்வதில் இருந்து விடுபடுவீர்கள். தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு விகாரத்தில் இருந்தும் விடுபடுவீர்கள். நீங்கள் அவருடன் இருக்கும்போது, தந்தை எத்தகையவரோ, அவ்வாறே நீங்களும் இருப்பீர்கள். நீங்கள் இயல்பாகவே அவரின் சகவாசம் என்ற நிறத்தால் நிறமூட்டப்படுவீர்கள். அதனால் விதையானவரைக் கைவிடாதீர்கள். அல்லது கிளைகளை வெட்டுவதற்கு முயற்சி செய்யாதீர்கள். இன்று, நான் காமத்தை வென்றவன் ஆகியுள்ளேன். அடுத்தநாள், நான் கோபத்தை வென்றவன் ஆகியுள்ளேன். இல்லை. சதா வெற்றியாளர் ஆகுங்கள். விதையானவரை உங்களுடன் வைத்திருங்கள். அப்போது மாயையின் விதை, அதன் சுவடே எஞ்சியிருக்காதவாறு எரிந்துவிடும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் தைரியத்தையும் உற்சாகத்தையும் வழங்கும் கருணைநிறைந்த உலக உபகாரி ஆகுவீர்களாக.பிராமணக் குடும்பத்தில் ஒரு பலவீனமான ஆத்மாவிடம் ஒருபோதும், ‘நீங்கள் பலவீனமானவர்’ எனக் கூறாதீர்கள். கருணைநிறைந்த உலக உபகாரிக் குழந்தைகளான உங்களின் உதடுகளில் இருந்து ஒவ்வோர் ஆத்மாவிற்கும் சதா நல்ல வார்த்தைகளே வெளிப்பட வேண்டும். எவரையும் மனச்சோர்வடையும் வார்த்தைகள் வெளிப்படக்கூடாது. சிலர் எவ்வளவுதான் பலவீனமாக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு சமிக்கையை அல்லது கற்பித்தலை நீங்கள் வழங்க வேண்டியிருந்தாலும், அனைத்திற்கும் முதலில் அவர்களைச் சக்திசாலிகள் ஆக்குங்கள். பின்னர் அவர்களுக்குக் கற்பித்தல்களை வழங்குங்கள். அனைத்திற்கும் முதலில், தைரியத்தினாலும் உற்சாகத்தினாலும் நிலத்தை உழுதிடுங்கள். பின்னர் விதைகளை விதையுங்கள். அப்போது ஒவ்வோர் ஆத்மாவும் இலகுவாகப் பழத்தைப் பெறுவார். இவ்வாறு செய்வதன் மூலம், உலக நன்மை என்ற சேவை வேகமாக நடைபெறும்.
சுலோகம்:
தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதன்மூலம் சதா நிரம்பியிருக்கும் அனுபவத்தைப் பெறுங்கள்.