20.09.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    25.03.86     Om Shanti     Madhuban


சங்கம யுகம், புனித வாழ்க்கைக்கான யுகம் ஆகும்.


இன்று, பாப்தாதா சுய அதிபதிகளான, சுய இராச்சியத்திற்குரிய, இராஜ, அலௌகீக சபையை அல்லது ஒன்றுகூடலைப் பார்க்கிறார். மேன்மையான ஆத்மாக்களான உங்கள் ஒவ்வொருவரிலும் ஒளிக்கிரீடம் பிரகாசிப்பதை அவர் பார்க்கிறார். இந்த இராஜ சபை அல்லது ஒன்றுகூடல், ஒரு புனிதமான ஒன்றுகூடல் ஆகும். தூய, பூஜித்தகுதிவாய்ந்த ஆத்மாக்களான நீங்கள் ஒவ்வொருவருமே இந்த ஒரு பிறவிக்கு மட்டும் தூய்மையானவர், அதாவது, புனிதமானவர் ஆகவில்லை. ஏனெனில், தூய்மை ஆகுவதற்கான, அதாவது, புனிதம் ஆகுவதற்கான கோடு, பல பிறவிகளுக்கான நீண்டதொரு கோடாக உள்ளது. கல்பம் முழுவதிலும், ஏனைய ஆத்மாக்களும் தூய்மையாகவும் புனிதமாகவும் ஆகுவார்கள். மதத்தாபகர்களான தூய ஆத்மாக்கள், ஒரு மதத்தைத் தாபிப்பதற்குக் கருவிகள் ஆகுவதைப் போல், அவர்களுடன் கூடவே, மகாத்மாக்கள் என்று அழைக்கப்படும் பலரும் தூய்மையானவர்கள் ஆகுவார்கள். எவ்வாறாயினும், அவர்களின் தூய்மைக்கும் ஆத்மாக்களான உங்களின் தூய்மைக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. நீங்கள் தூய்மை ஆகுவதற்கான வழிமுறை மிகவும் இலகுவானது. நீங்கள் எந்தவிதமான முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில், நீங்கள் இலகுவாகத் தந்தையிடமிருந்து அமைதி, சந்தோஷம், தூய்மை என்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இந்த விழிப்புணர்வை வைத்திருப்பதனால், நீங்கள் இலகுவாகவும் இயல்பாகவும் அழியாதவர் ஆகுகிறீர்கள். உலகிலுள்ள மக்கள் முயற்சி செய்தே தூய்மை ஆகுகிறார்கள். அவர்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியாகத் தூய்மையைப் பெறுவதில்லை. இன்று, உலக வழக்கப்படி, ஹோலிப் பண்டிகை தினமாகும். அவர்கள் ஹோலியைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் நீங்களோ, பரமாத்மாவின் நிறத்தால் நிறமூட்டப்பட்டு புனித ஆத்மாக்கள் ஆகுகிறீர்கள். கொண்டாட்டங்கள் குறுகிய நேரத்திற்கு மட்டுமே இருக்கும். ஆனால் அவ்வாறு ஆகுதல் என்பது வாழ்நாள் முழுவதற்கும் உரியதாகும். அவர்கள் ஒரு நாள் அதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் நீங்கள் உங்களின் வாழ்க்கையையே புனிதமானது ஆக்குகிறீர்கள். இந்த சங்மகயுகம், புனித வாழ்க்கைக்கான யுகம் ஆகும். எனவே, நீங்கள் நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள். அதாவது, நீங்கள் நிரந்தரமான நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள். அதைக் கழுவ வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் எல்லா வேளைக்கும் தந்தைக்குச் சமமானவர் ஆகுகிறீர்கள். சங்கமயுகத்தில், நீங்கள் தந்தைக்குச் சமமான கர்மாதீத் ஸ்திதியையும் அசரீரியான ஸ்திதியையும் அனுபவம் செய்கிறீர்கள். அத்துடன் 21 பிறவிகளுக்கு தந்தை பிரம்மாவிற்குச் சமமான சகல நற்குணங்களும் நிறைந்த, சம்பூரணமாக விகாரமற்ற மேன்மையான வாழ்க்கையை அனுபவம் செய்கிறீர்கள். எனவே, உங்களின் ஹோலியானது தந்தையின் சகவாசத்தினூடாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதாகும். நீங்கள் மற்றவர்களையும் சமமானவர்கள் ஆக்கும் வகையில் அந்த நிறம் மிக விரைவானதாக இருக்க வேண்டும். உலகிலுள்ள எவராவது இந்த முறையில் ஹோலியைக் கொண்டாடுகிறார்களா? நீங்கள் மற்றவர்களைத் தந்தைக்குச் சமமானவர்கள் ஆக்குவதற்காகவே இங்கு ஹோலி கொண்டாட வந்துள்ளீர்கள். ஒவ்வோர் ஆத்மாவும் தந்தையால் பல்வேறு வர்ணங்களால் என்றென்றும் நிறமூட்டப்படுகிறார்கள். ஞான வர்ணம், நினைவு வர்ணம், பல சக்திகளெனும் வர்ணம், தெய்வீகக்குணங்கள் என்ற வர்ணம், மேன்மையான பார்வை, மேன்மையான மனோபாவம், மேன்மையான நல்லாசிகள், மேன்மையான தூய உணர்வுகள் என்ற நிறங்களும் இயல்பாகவே உருவாக்கப்படுகின்றன. இந்த ஆன்மீக நிறம் மிக விரைவாகப் பூசப்படுகிறது. நீங்கள் ஹோலி ஆகியுள்ளீர்கள். அதாவது, நீங்கள் ஹோலியைக் கொண்டாடினீர்கள். அவர்கள் ஹோலி கொண்டாடும்போது, அவர்களின் உருவம் அவர்களின் தரத்தை ஒத்தது ஆகுகிறது. அந்த வேளையில் அவர்களின் புகைப்படங்களை யாராவது எடுத்தால், அவர்கள் எவ்வாறிருப்பார்கள்? ஹோலி கொண்டாடிய பின்னர், அவர்கள் என்னவாகின்றார்கள்? எவ்வாறாயினும், நீங்கள் ஹோலி கொண்டாடும்போது, நீங்கள் தேவதைகளாகவும் பின்னர் தேவர்களாகவும் ஆகுகிறீர்கள். இவை அனைத்தும் உங்களின் ஞாபகார்த்தங்களே. ஆனால் அவர்களிடம் ஆன்மீக சக்தி இல்லாததால், அவர்களால் ஆன்மீக முறையில் கொண்டாட முடியாமல் உள்ளது. உங்களின் கொண்டாட்டம், மிகச்சரியான, புண்ணிய சந்திப்பு ஆகும்.

ஹோலியின் சிறப்பியல்பானது, எரிப்பதாகும். முதலில் எரித்தல். பின்னர் கொண்டாடுதல். பின்னர் புண்ணிய சந்திப்பு. இந்த மூன்று சிறப்பியல்புகளினதும் ஞாபகார்த்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஏனென்றால், ஹோலி ஆகுவதற்கு, நீங்கள் எல்லோரும் உங்களின் பழைய சம்ஸ்காரங்களையும் பழைய ஞாபகங்களையும் யோக அக்கினியில் எரிக்க வேண்டும். அதன்பின்னரே நீங்கள் அவரின் சகவாசத்தின் நிறத்தால் ஹோலி கொண்டாடுகிறீர்கள். அதாவது, நீங்கள் தந்தையின் நிறத்தால் நிறமூட்டப்படுகிறீர்கள். நீங்கள் தந்தையின் சகவாசத்தால் நிறமூட்டப்படும்போது, உலகிலுள்ள ஒவ்வோர் ஆத்மாவும் இறை குடும்பத்தின் பாகம் ஆகுகிறார். நீங்கள் இறை குடும்பத்தின் பாகமாக இருப்பதனால், ஆத்மாக்களுக்கான நல்லாசிகள் இயல்பாகவே ஒரு இயல்பான சம்ஸ்காரம் ஆகுகிறது. ஆகவே, நீங்கள் எப்போதும் ஒருவரோடு ஒருவர் ஒரு புண்ணிய சந்திப்பைக் கொண்டாடுகிறீர்கள். ஒருவர் எதிரியாக இருந்தாலும் அல்லது அசுரத்தனமான சம்ஸ்காரங்களைக் கொண்டிருந்தாலும், நீங்கள் நிச்சயமாக இந்தப் புண்ணிய ஆன்மீக சந்திப்பினால் அவர்களின் மீது இறைவனின் நிறத்தின் துளிகளைத் தெளிக்கிறீர்கள். உங்களிடம் வருகின்ற எவருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அனைவரையும் கட்டியணைத்தல் என்றால் அவர்களை மேன்மையான ஆத்மாக்கள் எனக் கருதிய வண்ணம் அவர்களை ஏற்றுக் கொள்ளுதல் என்று அர்த்தம். அவர்கள் தந்தையின் குழந்தைகள். இந்த அன்பான சந்திப்பு, நல்லாசிகளின் சந்திப்பானது, அந்த ஆத்மாக்களைப் பழைய விடயங்களை மறக்கச் செய்துவிடும். அவர்களும் உற்சாகம் நிறைந்தவர்கள் ஆகிவிடுவார்கள். ஆகவே, இந்த ஞாபகார்த்தமே ஒரு பண்டிகையாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தந்தையுடன் ஹோலியைக் கொண்டாடுதல் என்றால், அதே நிரந்தரமான, ஆன்மீக நிறத்தால் தந்தைக்குச் சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். அந்த மக்களோ சந்தோஷமில்லாமல் இருக்கிறார்கள். இதனாலேயே, சந்தோஷத்துடன் கொண்டாடுவதற்காக அவர்களுக்கு விசேடமான தினங்கள் உள்ளன. எவ்வாறாயினும், நீங்கள் எப்போதும் சந்தோஷத்துடன் தொடர்ந்து ஆடிப்பாடுகிறீர்கள். களிப்புடன் கொண்டாடுகிறீர்கள். அதிகமாகக் குழப்பம் அடைந்தவர்கள், ‘என்ன நிகழ்ந்தது? ஏன் அது நிகழ்ந்தது? எவ்வாறு அது நிகழ்ந்தது?’ என்று நினைப்பார்கள். அதனால் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நீங்கள் திரிகாலதரிசிகள் ஆகியுள்ளீர்கள். அதனால், உங்களிடம் ‘என்ன?’ அல்லது ‘ஏன்?’ என்ற கேள்விகள் இருக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் முக்காலங்களையும் அறிவீர்கள். ‘அது ஏன் நிகழ்ந்தது?’ அது உங்களை முன்னேறச் செய்வதற்கான ஒரு பரீட்சைத்தாள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது ஏன் நிகழ்ந்தது? அது எதுவும் புதியதல்ல. எனவே, என்ன நிகழ்ந்தது அல்லது எவ்வாறு அது நிகழ்ந்தது என்ற கேள்விக்கே இடமில்லை. மாயை உங்களை மேலும் பலமானவர் ஆக்குவதற்காக வந்து பின்னர் சென்றுவிட்டாள். எனவே, திரிகாலதரிசி ஸ்திதியில் இருப்பவர்கள் இதைப் பற்றிக் குழப்பம் அடைய மாட்டார்கள். நீங்கள் திரிகாலதரிசி என்பதனால், கேள்விகளுடன் கூடவே பதில்களும் சேர்ந்து வரும். உங்களின் பெயர் திரிகாலதரிசியாக இருந்தும், உங்களுக்கு நிகழ்காலத்தையோ அல்லது அது ஏன் நிகழ்ந்தது அல்லது அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதோ தெரியாவிட்டால், எவ்வாறு உங்களைத் திரிகாலதரிசி என்று அழைப்பது? நீங்கள் பல தடவைகள் வெற்றியாளர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்தும் அவ்வாறு ஆகுவீர்கள். நீங்கள் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிவீர்கள். நீங்கள் இப்போது பிராமணர்கள். தேவதைகள் ஆகப் போகிறவர்கள். பின்னர் தேவதைகளில் இருந்து தேவர்கள் ஆகப் போகிறவர்கள். இது இன்று மற்றும் நாளைக்குரிய விடயம் ஆகும். கேள்விகள் முடிகின்றன. முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

ஹோலி என்பதன் அர்த்தம் ஹோ – லி என்பதாகும். (அது ஏற்கனவே நடந்துவிட்டது) கடந்தகாலம் கடந்து சென்றுவிட்டது. இந்த முறையில் ஒரு முற்றுப்புள்ளியை எவ்வாறு வைப்பது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதுவும் ஹோலி என்பதன் அர்த்தம் ஆகும்.

• நீங்கள் எதையாவது எரிக்கின்ற ஹோலியைப் பற்றி அறிவீர்கள்.

• நிறத்தால் உங்களை நிறமூட்டுகின்ற ஹோலியைப் பற்றி நீங்கள் அறிவீர்கள்.

• ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் ஹோலியைப் பற்றியும் நீங்கள் அறிவீர்கள்.

• ஒரு புண்ணிய சந்திப்பைக் கொண்டாடும் ஹோலியைப் பற்றியும் நீங்கள் அறிவீர்கள்.

நான்கு வகையான ஹோலிகளையும் எவ்வாறு கொண்டாடுவது என உங்களுக்குத் தெரியுமல்லவா? ஏதாவதொரு வகையான ஹோலி இல்லாவிட்டால், ஒளிக்கிரீடம் தங்கியிருக்காது. அது விழுந்து கொண்டே இருக்கும். ஒரு கிரீடம் சரியாகப் பொருந்தாவிட்டால், அது விழுந்து கொண்டே இருக்கும். நான்கு வகையான ஹோலிகளைக் கொண்டாடுவதிலும் நீங்கள் சித்தி அடைந்துவிட்டீர்களா? நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும். தந்தை சம்பூரணமானவரும் முழுமையானவரும் ஆவார். எவ்வளவு காலத்திற்கு சதவீதத்தில் உங்களின் ஸ்திதி இருக்க முடியும்? நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ, அவருக்குச் சமமானவர் ஆகுவது கஷ்டமானதல்ல. நீங்கள் எப்போதும் தந்தையை நேசிப்பவர்கள். எனவே, ஏன் எப்போதும் உங்களால் சமமானவர் ஆக முடிவதில்லை? இது இலகுதானே? அச்சா.

அதியுயர்ந்தவர்களில் அதியுயர்ந்தவரான தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்காக, பாப்தாதா சதா புனிதமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் புனித அன்னங்களான உங்கள் அனைவருக்கும் அழியாத பாராட்டுக்களை வழங்குகிறார். சதா தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்காகவும் எப்போதும் இந்தப் புனித யுகத்தில் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்கும் பாபா உங்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். சதா புனித அன்னமாக இருப்பதற்கும் ஞான இரத்தினங்களால் நிரம்புவர் ஆகுவதற்கும் பாபா உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். சகல நிறங்களாலும் நிறமூட்டப்படுபவர் ஆகுவதற்கும் ஒரு பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மா ஆகுவதற்காகவும் பாபா உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். அன்புடனும் நினைவுகளுடனும் உங்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்படுகின்றன. சேவையாளரான தந்தையின் அதிபதிகளான குழந்தைகளுக்கு, எப்போதும் வணக்கம் தெரிவிக்கப்படுபவர்களுக்கு, அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

இன்று, இது மலேசியன் குழுவின் முறையாகும். தென்கிழக்கு. நீங்கள் ஏன் எங்கும் பரந்து சென்றீர்கள் என உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் இறை குடும்பத்தின் நீராவிக் கப்பலை விட்டு இறங்கி, பல்வேறு திசைகளுக்குச் சென்றீர்கள். நீங்கள் உலகின் சமுத்திரத்தில் தொலைந்து போனீர்கள். ஏனென்றால், துவாபர யுகத்தில், ஆத்ம குண்டுக்குப் பதிலாக, நீங்கள் சரீர உணர்வின் குண்டால் தாக்கப்பட்டீர்கள். இராவணன் குண்டைப் போட்டான். அதனால் அந்தக் கப்பல் துண்டுகளாக உடைந்து போனது. இறை குடும்பம் என்ற நீராவிக் கப்பல் உடைந்ததால், நீங்கள் எங்கெல்லாம் ஆதாரத்தைப் பெற்றீர்களோ, அங்கு வெவ்வேறு இடங்களுக்குப் பரவிச் சென்றீர்கள். நீரில் மூழ்குபவர்கள் எங்கிருந்தாவது ஆதாரத்தைப் பெற்றுக் கொண்டாலும் அவர்கள் அதைப் பிடித்துக் கொள்வார்கள். எனவே, நீங்கள் எந்த மதத்திடமிருந்து, நாட்டிலிருந்து சிறிதளவு ஆதாரத்தைப் பெற்றுக் கொண்டீர்களோ, அங்கு நீங்கள் சென்றீர்கள். எவ்வாறாயினும், சம்ஸ்காரங்கள் ஒன்றாகவே இருக்கின்றன. இதனாலேயே, நீங்கள் வேறொரு மதத்திற்குச் சென்றாலும், உங்களின் நிஜ தர்மத்தின் அறிமுகத்தைப் பெற்ற உடனேயே, நீங்கள் இங்கு வந்தீர்கள். நீங்கள் உலகம் முழுவதும் பரந்து சென்றீர்கள். இந்தப் பிரிவும் நன்மை தருவதேயாகும். இது பல ஆத்மாக்கள் வெளிப்படச் செய்துள்ளது. நீங்கள் இறை குடும்பத்தின் அறிமுகத்தை உலகிற்கு வழங்குவதில் உபகாரிகள் ஆகியுள்ளீர்கள். அனைவரும் பாரதத்தில் இருந்தால், எவ்வாறு உலக சேவை இடம்பெறும்? இதனாலேயே, நீங்கள் வெவ்வேறு மூலைகளுக்குச் சென்றீர்கள். பிரதானமான மதங்கள் அனைத்திற்கும் யாராவதொருவர் சென்றுள்ளார். ஒருவர் வெளிப்பட்டாலும், அவர் நிச்சயமாகத் தனக்குச் சமமானவர்களை விழித்தெழச் செய்வார். பாப்தாதாவும் 5000 வருடங்களுக்குத் தன்னிடமிருந்து பிரிந்து சென்ற குழந்தைகளை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் அனைவரும் சந்தோஷப்படுகிறீர்கள், அல்லவா? நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளீர்கள்.

மலேசியாவில் இருந்து இன்னமும் ஒரு விஐபியும் வரவில்லை. சேவை செய்யும் இலக்குடனேயே அவர்களும் கருவிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் துரித கதியில் சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகுவார்கள். இதனாலேயே, அவர்களை முன்னால் வைக்க வேண்டும். தந்தைக்கு, நீங்கள் மட்டுமே மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். உங்களின் ஆன்மீக போதையில் நீங்கள் மேன்மையானவர்கள். பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்களான உங்களுக்கும் மாயையிடம் அகப்பட்டிருப்பவர்களுக்கும் இடையே அதிகளவு வேறுபாடு உள்ளது. நீங்கள் அறியாமையிலுள்ள ஆத்மாக்களுக்கு இனங்காணலை வழங்க வேண்டும். இப்போது சிங்கப்பூரிலும் விரிவாக்கம் உள்ளது. தந்தையின் விசேடமான அதியன்பிற்குரிய இரத்தினங்கள் எங்கு சென்றிருந்தாலும், அவர்கள் ஏனைய இரத்தினங்களையும் வெளிப்படச்; செய்கிறார்கள். தைரியத்தைப் பேணுவதன் மூலம், நீங்கள் அன்புடன் சேவையில் முன்னேறுகிறீர்கள். ஆகவே, நீங்கள் உங்களின் முயற்சிகளின் மேன்மையான பலனைப் பெறுவீர்கள். நீங்கள் உங்களின் குடும்பத்தை ஒன்றுசேர்க்க வேண்டும். உங்களின் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற யாராவது மீண்டும் குடும்பத்திற்குத் திரும்பி வந்தால், நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள். உங்களின் இதயபூர்வமாக நன்றி கூறுகிறீர்கள். அவர்களும் குடும்பத்திற்குத் திரும்பி வந்ததால், நன்றிகள் கூறும் பல பாடல்களைப் பாடுகிறார்கள். நீங்கள் கருவிகளாகி, அவர்களைத் தந்தைக்குச் சொந்தமானவர்கள் ஆக்கினீர்கள். சங்கமயுகத்தில், நீங்கள் நன்றிகளின் மாலைகள் பலவற்றைப் பெறுகிறீர்கள். அச்சா.

மேன்மையான வாசகங்கள் - சதா மகாதானி ஆகுங்கள்.

ஒரு மகாதானியாக இருத்தல் என்றால், நீங்கள் பெற்ற பொக்கிஷங்கள் அனைத்தையும் சகல ஆத்மாக்களுக்கும் எந்தவிதமான சுயநலமற்ற நோக்கங்களுடன் கொடுத்தல் என்று அர்த்தம். சுயநலமற்றவராக இருத்தல். எந்தவிதமான சுயநல நோக்கங்களுக்கும் அப்பாற்பட்ட ஆத்மாவால் மட்டுமே ஒரு மகாதானி ஆகமுடியும். மற்றவர்களின் சந்தோஷத்தில் சந்தோஷம் அடைவதே ஒரு மகாதானியாக இருத்தல் எனப்படும். ஒரு கடல் நிரம்பியதாகவும், எல்லையற்றதாகவும் நிலையாகவும் (என்றும் குறையாமல்) இருக்கிறதோ, அதேபோல், குழந்தைகளான நீங்களும் அதிபதிகள், எல்லையற்ற பொக்கிஷங்களின் அதிபதிகள் ஆவீர்கள். ஒரு மகாதானியாகி, நீங்கள் பெற்ற பொக்கிஷங்கள் அனைத்தையும் தொடர்ந்து மற்றவர்களுக்காகப் பயன்படுத்துங்கள். உங்களுடன் உறவுமுறையில் வருகின்ற ஆத்மாக்கள் அனைவரிடமும் சதா ஆழ்ந்த அன்பைக் கொண்டிருங்கள். பக்த ஆத்மாக்களோ அல்லது சாதாரணமான ஆத்மாக்களோ, அவர்கள் தமது பக்திக்கான பலனைப் பெற வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு அதிக கருணைநிறைந்தவர்கள் ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு அலைந்து திரியும் ஆத்மாக்களுக்குப் பாதையைக் காட்டுவது இலகுவாக இருக்கும்.

உங்களிடம் சகலவற்றிலும் மிகப் பெரிய பொக்கிஷம் உள்ளது. அதுவே சந்தோஷம். ஆகவே, தொடர்ந்து இந்த சந்தோஷப் பொக்கிஷத்தைத் தானம் செய்யுங்கள். யாருக்கெல்லாம் நீங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கிறீர்களோ, அவர்கள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நன்றிகள் சொல்வார்கள். சந்தோஷமற்ற ஆத்மாக்களுக்கு நீங்கள் சந்தோஷ தானத்தைக் கொடுத்ததும், அவர்கள் உங்களின் புகழைப் பாடுவார்கள். இதில் ஒரு மகாதானியாகி, சந்தோஷப் பொக்கிஷத்தைப் பகிர்ந்தளியுங்கள். உங்களுக்குச் சமமானவர்களை விழித்தெழச் செய்து, அவர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள். இப்போது, காலத்திற்கேற்ப, உங்களின் பௌதீகப் புலன்களால் ஒரு மகாதானியாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் ஆகுங்கள். உங்களின் நெற்றியால், அனைவருக்கும் அவர்களின் ஆதி ரூபத்தை நினைவூட்டுங்கள். உங்களின் கண்களால், அவர்களின் ஆதிதாமத்தை அவர்களுக்கு நினைவூட்டுங்கள். அத்துடன் அவர்களின் இராச்சியத்திற்கான வழியைக் காட்டுங்கள். உங்களின் உதடுகளால், படைப்பவரினதும் படைப்பினதும் ஞானத்தைத் தெளிவுபடுத்தி, அவர்களுக்கு ஒரு பிராமணரில் இருந்து தேவராகுவதற்கான ஆசீர்வாதத்தைக் கொடுங்கள். உங்களின் கைகளால், சதா ஓர் இலகுயோகியாகி, ஒரு கர்மயோகி ஆகுவதற்கான ஆசீர்வாதத்தை அவர்களுக்குக் கொடுங்கள். உங்களின் தாமரைப் பாதங்களால், தந்தையை ஒவ்வோர் அடியிலும் பின்பற்றி, ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்களைச் சேமிக்கும் ஆசீர்வாதத்தை அருள்பவர் ஆகுங்கள். இந்த முறையில், தொடர்ந்து ஒவ்வொரு பௌதீக அங்கங்களினூடாகவும் மகாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் வழங்குங்கள். ஒரு மாஸ்ரர் அருள்பவராகி, சந்தர்ப்பங்களை மாற்றுவதற்கும், பலவீனமான ஆத்மாக்களைச் சக்திசாலிகள் ஆக்குவதற்கும், உங்களின் சக்திகளால் சூழலையும் மனோபாவத்தையும் மாற்றுவதற்கும் உங்களைப் பொறுப்பானவர் எனக் கருதிக் கொள்ளுங்கள். ஒரு சதா உபகாரியாகி, ஒத்துழைப்பையும் சக்தியின் மகாதானத்தையும் வரதானத்தையும் வழங்கும் எண்ணத்தைக் கொண்டவராக இருங்கள். ‘நான் கொடுக்க வேண்டும்! நான் இதைச்செய்ய வேண்டும்! நான் மாற வேண்டும். நான் பணிவானவர் ஆகவேண்டும்!’ இதை ஆரம்பித்து வைப்பவர்களே அர்ஜூனன் ஆவார்கள். அவர்கள் மகாதானி என்ற சிறப்பியல்பைக் கிரகிக்கின்றார்கள்.

இப்போது, சகல ஆத்மாக்களுக்கும் அனுபவத்தின் சொரூபம் ஆகுங்கள். விசேடமான அனுபவங்களின் சுரங்கமாகி, உங்களின் அனுபவத்தின் அடிப்படையில் ஆத்மாக்களை அனுபவ சொரூபங்கள் ஆக்கும் மகாதானத்தை வழங்குங்கள். அதன்மூலம் ஒவ்வோர் ஆத்மாவும் அங்கதனைப் போல் ஆகவேண்டும். அவர்கள் தொடர்ந்து செயல்படுகிறார்கள், அனைத்தையும் செய்கிறார்கள், அனைத்தையும் செவிமடுக்கிறார்கள், அனைத்தையும் விவரிக்கிறார்கள் என்பதாக மட்டும் இருக்கக்கூடாது. இல்லை. அவர்கள் அனுபவத்தின் பொக்கிஷங்களைப் பெற்றுவிட்டார்கள் என்ற பாடலைப் பாட வேண்டும். சந்தோஷ ஊஞ்சலில் ஆடவேண்டும். குழந்தைகளான நீங்கள் தந்தையிடமிருந்து பெற்ற சகல பொக்கிஷங்களையும் தொடர்ந்து பகிர்ந்தளிக்க வேண்டும். அதாவது, நீங்கள் மகாதானிகள் ஆகவேண்டும். உங்களிடம் வருகின்ற எவரும் வெறுங்கையுடன் செல்லக்கூடாது. நீங்கள் அனைவரும் நீண்ட காலமாக சகபாடிகளாக இருக்கிறீர்கள். அத்துடன் நீண்ட காலத்திற்கு இராச்சிய உரிமையும் உங்களுக்கு உள்ளது. இறுதிக் காலப்பகுதியில் உள்ள பலவீனமான ஆத்மாக்களுக்கு ஒரு மகாதானியாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் ஆகி, தானம் செய்வதுடன் அவர்களுக்கு ஓர் அனுபவத்தை வழங்கும் புண்ணியச் செயலையும் செய்யுங்கள். இந்தப் புண்ணியச் செயல், உங்களை அரைக்கல்பத்திற்கு பூஜிக்கத்தகுதிவாய்ந்தவராகவும் புகழத்தகுதிவாய்ந்தவராகவும் ஆக்கும். நீங்கள் ஞானச்செல்வம் நிரம்பியுள்ள தேவிகள் ஆவீர்கள். நீங்கள் பிராமணர்கள் ஆகிய கணத்தில் இருந்து, நீங்கள் ஞானப் பொக்கிஷங்களையும் சக்திப் பொக்கிஷங்களையும் பெற்றீர்கள். இந்தப் பொக்கிஷங்களை உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்துங்கள். உங்களின் சந்தோஷம் அதிகரிக்கும். இதில் ஒரு மகாதானி ஆகுங்கள். ஒரு மகாதானி ஆகுதல் என்றால், இந்தத் தானம் சதா தொடரும் என்று அர்த்தம்.

இறைசேவையில் மிகப்பெரிய புண்ணியச் செயலானது, தூய்மையின் தானம் ஆகும். தூய்மையானவராகி, மற்றவர்களையும் தூய்மையாக்குதல் என்றால் ஒரு புண்ணியாத்மா ஆகுதல் என்று அர்த்தம். ஏனென்றால், இந்தத் தானம், ஆத்மாவின் தற்கொலை என்ற மகத்தான பாவம் செய்வதில் இருந்து ஆத்மாக்களை விடுவிக்கிறது. தூய்மையின்மை என்பது ஆத்மாவின் தற்கொலை ஆகும். ஆனால் தூய்மையோ வாழ்க்கைத்தானம் ஆகும். தூய்மையானவராகி, மற்றவர்களையும் தூய்மையாக்கும் மகாதானத்தை வழங்கி, ஒரு புண்ணியாத்மா ஆகுங்கள். ஒரு மகாதானி என்றால், ஆன்மீகமாகக் கருணைநிறைந்தவராகி, முற்றிலும் பலவீனமான, நம்பிக்கையிழந்த, சக்தியற்ற ஆத்மாக்களுக்கு மேலதிக சக்தியைக் கொடுப்பதாகும். ஒரு மகாதானி என்றால், முற்றிலும் நம்பிக்கை இழந்திருப்பவர்களில் நம்பிக்கையை உருவாக்குவதாகும். ஆகவே, ஒரு மாஸ்ரர் படைப்பவர் ஆகுங்கள். ஒரு மகாதானியாகி, தொடர்ந்து சக்திகளையும் ஞானத்தையும் நற்குணங்களையும் நீங்கள் பெற்ற சகல பொக்கிஷங்களையும் தானம் செய்யுங்கள். முற்றிலும் ஏழைகளாக இருப்பவர்களுக்கே எப்போதும் தானங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆதாரம் இல்லாதவர்களுக்கு ஆதாரம் வழங்கப்படுகிறது. ஆகவே, இறுதிக் காலப்பகுதியின் பிரஜைகளுக்கும் பக்த ஆத்மாக்களுக்கும் ஒரு மகாதானி ஆகுங்கள். பிராமணர்கள் ஒருவருக்கொருவர் மகாதானிகள் ஆகுவதில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கும் சகபாடிகள் ஆவார்கள். நீங்கள் சகோதரர்கள். சமமான முயற்சியாளர்கள். அதனால் நீங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் உலக உபகாரியாகி, உங்களின் மனதின் சக்திவாய்ந்த மனோபாவத்தால் சேவை செய்வீர்களாக.

உலகிலுள்ள பரிதவிக்கும் ஆத்மாக்களுக்கு சரியான பாதையைக் காட்டுவதற்கு, தந்தையை ஒத்தவராக வெளிச்சவீடாகவும் சக்தி வீடாகவும் ஆகுங்கள். ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நிச்சயமாக ஏதாவதொன்றைக் கொடுக்கும் இலக்கை வைத்திருங்கள். நீங்கள் முக்தியை அளித்தாலென்ன அல்லது ஜீவன்முக்தியை அளித்தாலென்ன, சகலருக்கும் மகாதானியாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் ஆகுங்கள். தற்சமயம், நீங்கள் உங்களின் சொந்த இடங்களில் சேவை செய்கிறீர்கள். ஆனால் இப்போது, ஓரிடத்தில் இருந்தவண்ணம், உங்களின் மனதின் சக்தியால் சூழலினூடாகவும் அதிர்வலைகளினூடாகவும் உலகிற்கே சேவை செய்யுங்கள். ஒரு சூழல் உருவாக்கப்படும் வகையில் ஒரு சக்திவாய்ந்த மனோபாவத்தை உருவாக்குங்கள். அப்போது நீங்கள் உலக உபகாரிகள் எனப்படுவீர்கள்.

சுலோகம்:
சரீரமற்றவராக இருக்கும் அப்பியாசத்தைச் செய்வதன் மூலமும், வீணான எண்ணங்கள் எதுவுமில்லாத உணவுமுறையைக் கடைப்பிடிப்பதாலும், உங்களை ஆரோக்கியமானவர் ஆக்குங்கள்.


அறிவித்தல்:
இன்று, மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சகல இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகளும் மாலை 6.30 இலிருந்து 7.30வரை, உங்களின் தேவதை ரூபத்தில் ஸ்திரப்படுத்தி, பக்தர்களின் அழைப்பைச் செவிமடுத்து, அவர்களை ஈடேற்றும் யோகத்தைச் செய்யுங்கள். மாஸ்ரர் கருணைநிறைந்தவராகவும் கனிவானவராகவும் ஆகி, அனைவர் மீதும் கருணைப் பார்வையைச் செலுத்துங்கள். முக்தி மற்றும் ஜீவன்முக்தியின் ஆசீர்வாதத்தை வழங்குங்கள்.