23.02.2020 காலை முரளி ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ் 27.11.1985 மதுபன்


 

பழைய உலகையும் பழைய சம்ஸ்காரத்தையும் மறப்பதற்கான உபாயம்

 

பாப்தாதா, நிச்சயபுத்தி உள்ள குழந்தைகள் அனைவரின் நிச்சயத்தின் பிரத்யட்ச வாழ்க்கையினுடைய சொரூபத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நிச்சயபுத்தியின் விசேஷங்களை அனைவரும் கேட்டீர்கள். அத்தகைய விசேஷங்கள் நிறைந்த நிச்சயபுத்தி வெற்றி ரத்தினங்கள் இந்த பிராமண வாழ்க்கை மற்றும் புருஷோத்தம சங்கமயுக வாழ்க்கையில் சதா நிச்சயத்தின் பிரமாணம், அந்த நஷாவில் இருப்பார்கள். ஆன்மிக நஷா, நிச்சயத்தின் கண்ணாடி சொரூபமாகும். நிச்சயம் என்பது வெறுமனே புத்தியில் ஸ்மிருதி வரை மட்டுமல்ல, ஆனால் ஒவ்வொரு அடியிலும் ஆன்மிக நஷாவின் ரூபத்தில், கர்மத்தின் மூலம் பிரத்யட்ச சொரூபத்தில் தனக்கும் அனுபவம் ஆகும், மற்றவர்களுக்கும் அனுபவம் ஆகும். ஏனென்றால் இது ஞானி மற்றும் யோகி வாழ்க்கையாகும். வெறுமனே கேட்பதற்கும் சொல்வதற்கும் மட்டுமல்ல, வாழ்க்கையை உருவாக்குவதற்கானது. வாழ்க்கையில் ஸ்மிருதி, அதாவது சங்கல்பம், பேச்சு, கர்மம், சம்மந்தம் அனைத்தும் வந்து விடுகிறது. நிச்சயபுத்தி என்றால் நஷாவின் வாழ்க்கை. அந்த மாதிரி ஆன்மிக நஷா உள்ள ஆத்மாவின் ஒவ்வொரு சங்கல்பமும் சதா நஷாவினால் நிரம்பியதாக இருக்கும். சங்கல்பம், பேச்சு, கர்மம் மூன்றின் மூலமாகவும் நிச்சயத்தின் நஷா (போதை) அனுபவம் ஆகும். எப்படி நஷாவோ, அது போல் குஷியின் ஜொலிப்பு முகத்தின் மூலம், நடத்தையின் மூலம் பிரத்தியட்சமாகும். நிச்சயத்தின் பிரமாணம் நஷா மற்றும் நஷாவின் பிரமாணம் குஷி இருக்கும். நஷா எத்தனை விதமாக உள்ளது, இதன் விஸ்தாரம் மிகவும் பெரியது. ஆனால் சார ரூபத்தில் ஒரு நஷா உள்ளது, அசரீரி ஆத்மிக சொரூபத்தினுடையது. இதன் விஸ்தாரம் பற்றி அறிவீர்களா? ஆத்மாவோ அனைவரும் தான், ஆனால் எப்போது நான் எத்தகைய ஆத்மா என்ற ஸ்மிருதியில் இருக்கிறீர்களோ, அப்போது தான் ஆன்மிக நஷா அனுபவம் ஆகும். இன்னும் இதனுடைய விஸ்தாரம் பற்றி உங்களுக்குள் கலந்து பேசி வெளிப்படுத்துங்கள் மற்றும் சுயம் சிந்தனை செய்யுங்கள்.

 

இரண்டாவது நஷாவின் விசேஷ ரூபம் சங்கமயுகத்தின் அலௌகிக வாழ்க்கையாகும். இந்த வாழ்க்கையிலும் கூட எந்த ஒரு வாழ்க்கை என்பது பற்றிய விஸ்தாரத்தை சிந்தனை செய்யுங்கள். ஆக, ஒன்று ஆன்மிக சொரூபத்தின் நஷா. இரண்டாவது அலௌகிக வாழ்க்கையின் நஷா. மூன்றாவது ஃபரிஸ்தா நிலையின் நஷா. ஃபரிஸ்தா என்று யார் சொல்லப்படுகின்றார்? இதையும் கூட விஸ்தாரமாக்குங்கள். நாலாவது வருங்காலத்தின் நஷா. இந்த நான்கு விதமான அலௌகிக நஷாவில் எந்த ஒரு நஷாவாவது வாழ்க்கையில் இருக்குமானால் தானாகவே குஷியில் நடனமாடிக் கொண்டே இருப்பீர்கள். நிச்சயமும் உள்ளது. ஆனால் குஷி இல்லை என்றால் அதற்கான காரணம்? நஷா இல்லை. நஷா சுலபமாகவே பழைய உலகம் மற்றும் பழைய சம்ஸ்காரத்தை மறக்க வைத்து விடும். இந்தப் புருஷார்த்தி வாழ்க்கையில் விசேஷ தடைகள் இந்த இரண்டு விஷயங்கள் தாம் பழைய உலகமாக இருக்கலாம், அல்லது பழைய சம்ஸ்காரமாக இருக்கலாம். உலகத்தில் தேகத்தின் சம்மந்தம் மற்றும் தேகத்தின் பதார்த்தம் (பொருள்கள்) இரண்டும் வந்து விடுகின்றன. அதோடு கூடவே, உலகத்தை விடவும் பழைய சம்ஸ்காரங்கள் அதிக விக்ன ரூபம் (தடை) ஆகின்றன. உலகை மறந்து விடுகின்றனர், ஆனால் சம்ஸ்காரத்தை மறப்பதில்லை. ஆக, சம்ஸ்காரங்களின் மாற்றத்திற்கான சாதனம் இந்த நான்கு வித நஷாக்களில் எந்த ஒரு நஷாவேனும் சாகார ரூபத்தில் இருக்க வேண்டும். வெறுமனே சங்கல்ப சொரூபத்தில் மட்டுமில்லை. சாகார சொரூபத்தில் இருப்பதால் ஒரு போதும் தடை ஆகாது. இது வரையிலும் சம்ஸ்கார மாற்றம் ஆகாததற்கான காரணம் இது தான். இந்த நஷாக்களை சங்கல்ப ரூபத்தில், அதாவது ஞானத்தின் ரூபத்தில் புத்தி வரை தாரணை செய்திருக்கிறீர்கள். எனவே எப்போதாவது யாருக்காவது பழைய சம்ஸ்காரம் வெளிப்படுகிறது என்றால், அப்போது இந்த பாஷா பேசுகிறீர்கள். நான் அனைத்தையும் புரிந்து கொண்டிருக்கிறேன். மாற வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது புத்தி வரை இல்லை. கர்மம் அதாவது வாழ்க்கை வரை வேண்டும். வாழ்க்கை மூலம் பரிவர்த்தன் (மாற்றம்) அனுபவத்தில் வர வேண்டும். இது தான் சாகார சொரூபத்தில் வருவது எனச் சொல்வது. இப்போது புத்தி வரை பாயின்ட்ஸ் ரூபத்தில் சிந்திப்பது மற்றும் வர்ணனை செய்வது வரை உள்ளது. ஆனால் ஒவ்வொரு கர்மத்திலும், தொடர்பிலும் பரிவர்த்தன் காணப்பட வேண்டும். இது தான் சாகார ரூபத்தில் அலௌகிக நஷா எனச் சொல்லப்படும். இப்போது ஒவ்வொரு நஷாவையும் வாழ்க்கை நடைமுறையில் கொண்டு வாருங்கள். யாராவது உங்கள் நெற்றியின் பக்கம் பார்ப்பார்களானால் நெற்றியின் மூலம் ஆன்மிக நஷாவின் விருத்தி (உள்ளுணர்வு) அனுபவமாக வேண்டும். யாராவது வர்ணனை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, விருத்தி, வாயுமண்டலம் மற்றும் வைப்ரேஷன்களைப் பரப்புகின்றனர். உங்களது விருத்தி மற்றவர்களுக்கும் குஷியின் வாயுமண்டலத்தில் குஷியின் வைப்ரேஷனை அனுபவம் செய்விக்க வேண்டும். இது தான் நஷாவில் நிலைத்திருப்பது எனச் சொல்லப்படுவது. அதே போல் திருஷ்டி மூலம், முகத்தின் புன்சிரிப்பு மூலம், வாய் வார்த்தை மூலம், ஆன்மிக நஷாவின் சாகார ரூபம் அனுபவம் ஆக வேண்டும். அப்போது தான் நஷாவில் இருக்கக் கூடிய நிச்சயபுத்தி வெற்றி ரத்தினம் எனச் சொல்வார்கள். இதில் குப்தமாக இருக்கக் கூடாது. அநேகர், நாங்கள் குப்தமாக (மறைவாக) இருக்கிறோம் என்று அந்த மாதிரியும் சாமர்த்தியத்தைக் காட்டுகின்றனர். எப்படி பழமொழி உள்ளது -- சூரியனை ஒரு போதும் யாராலும் மறைக்க முடியாது. எவ்வளவு தான் அடர்த்தியான மேகமாக இருந்தாலும் சூரியன் தனது பிரகாசத்தை விட்டுவிட முடியாது. சூரியன் விலகிப் போகிறதா அல்லது மேகங்கள் விலகிப் போகின்றனவா? மேகங்கள் வரவும் செய்கின்றன, விலகிப் போகவும் செய்கின்றன. ஆனால் சூரியன் தனது பிரகாச சொரூபத்தில் நிலைத்திருக்கிறது. ஆக, ஆன்மிக நஷா உள்ளவர்களும் கூட ஆன்மிக ஜொலிப்பிருந்து மறைந்திருக்க முடியாது. அவரது ஆன்மிக நஷாவின் ஜொலிப்பு பிரத்தியட்ச ரூபத்தில் அவசியம் அனுபவம் ஆகும். அவர்களின் வைப்ரேஷன்கள் தாமாகவே மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும். ஆன்மிக நஷாவில் இருப்பவர்களின் வைப்ரேஷன், தன் மீதும் மற்றவர்கள் மீதும் குடைநிழலின் காரியத்தைச் செய்யும். ஆக, இப்போது என்ன செய்ய வேண்டும்? சாகாரத்தில் வாருங்கள். ஞானத்தின் கணக்கின் படி ஞானம் நிறைந்தவர்களாக ஆகி விட்டீர்கள். ஆனால் ஞானத்தை சாகார வாழ்க்கையில் கொண்டு வருவதால் ஞானம் நிறைந்தவராக ஆவதுடன் வெற்றி நிறைந்தவராக. ஆனந்தம் நிறைந்தவராக அனுபவம் செய்வீர்கள். நல்லது, வெற்றி நிறைந்தவர் மற்றும் ஆனந்தம் நிறைந்தவரின் சொரூபம் என்னவாக இருக்கும் என்பது பற்றிப் பிறகு சொல்வோம்.

 

இன்றோ ஆன்மிக நஷாவின் விஷயம் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அனைவர்க்கும் நஷா அனுபவமாக வேண்டும். இந்த நான்கு நஷாக்களில் ஒரு நஷாவை விதவிதமான ரூபத்தில் பயன்படுத்துங்கள். எவ்வளவு இந்த நஷாவை வாழ்க்கையில் அனுபவம் செய்வீர்களோ, அப்போது சதா அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபட்ட, கவலையற்ற மகாராஜா ஆகி விடுவீர்கள். அனைவரும் உங்களைக் கவலையற்ற மகாராஜாவின் ரூபத்தில் பார்ப்பார்கள். ஆக, இப்போது விஸ்தாரத்தை வெளிப்படுத்துங்கள் அல்லது அப்பியாசத்தில் கொண்டு வாருங்கள். எங்கே குஷி உள்ளதோ, அங்கே மாயாவின் எந்த ஒரு செயலும் செல்லுபடியாகாது. கவலையற்ற மகாராஜாவின் இராஜ்யத்திற்குள் மாயா வர முடியாது. வருகிறது, விரட்டுகிறீர்கள், பிறகு வருகிறது, பிறகு விரட்டுகிறீர்கள். சில நேரம் தேகத்தின் ரூபத்தில் வருகிறது, சில நேரம் தேகத்தின் சம்மந்த ரூபத்தில் வருகிறது. இதைத் தான், மாயா சில நேரம் யானை ஆகி வருகிறது, சில நேரம் பூனை ஆகி வருகிறது, சில நேரம் எலி ஆகி வருகிறது எனச் சொல்கின்றனர். சில நேரம் எலியை வெளியேற்றுகின்றனர், சில நேரம் பூனையை வெளியேற்றுகின்றனர். இந்த விரட்டுகிற காரியத்திலேயே நேரம் போய் விடுகிறது. ஆகவே சதா ஆன்மிக நஷாவில் இருங்கள். முதலில் தன்னைப் பிரத்தியட்சம் செய்யுங்கள். அப்போது தான் பாபாவைப் பிரத்தியட்சம் செய்வீர்கள். ஏனென்றால் உங்கள் மூலமாக பாபா பிரத்தியட்சமாக (வெளிப்பட) வேண்டும். நல்லது.

 

சதா தன் மூலமாக சர்வசக்திவானைப் பிரத்தியட்சம் செய்யக்கூடிய, சதா தன்னுடைய சாகார (நடைமுறை) வாழ்க்கையின் கண்ணாடி மூலம் ஆன்மிக நஷாவின் விசேஷதாவைப் பிரத்தியட்சம் செய்யக்கூடிய, சதா கவலையற்ற மகாராஜா ஆகி, மாயாவுக்கு விடை கொடுக்கக்கூடிய, சதா ஞானத்தை சொரூபத்தில் கொண்டுவரக்கூடிய, அத்தகைய நிச்சயபுத்தி நஷாவில் இருக்கக்கூடிய, சதா குஷியில் ஆடக்கூடிய, அப்படிப்பட்ட சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, விசேஷ ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

 

சேவாதாரி (டீச்சர்) சகோதரிகளுடன்:

சேவாதாரி என்றால் தன்னுடைய சக்திகள் மூலம் மற்றவர்களையும் சக்திசாஆக்குபவர்கள். சேவாதாரியின் வாஸ்தவமான விசேஷதா இது தான். பலமற்றவர்களுக்குள் பலத்தை நிரப்புவதற்கான நிமித்தமாக ஆவது தான் உண்மையான சேவையாகும். அப்படிப்பட்ட சேவையின் பார்ட் கிடைப்பதும் கூட ஹீரோ பார்ட்டாகும். ஆக, ஹீரோ பார்ட்தாரிகள் எவ்வளவு நஷாவில் இருக்கிறீர்கள்? சேவையின் பார்ட் மூலம் எவ்வளவு தங்களை முன்னேற்ற விரும்புகிறீர்களோ, முன்னேற்ற முடியும். ஏனென்றால் சேவை என்பது முன்னேறிச் செல்வதற்கான சாதனமாகும். சேவையில் பிஸியாக இருப்பதால் தானாகவே அனைத்து விஷயங்களில் இருந்தும் விலகி விடுவீர்கள். ஒவ்வொரு சேவா நிலையமும் மேடையாகும். அந்த மேடை ஒவ்வொரு ஆத்மாவும் தத்தம் பாகத்தை நடித்துக் கொண்டிருக்கின்றனர். சாதனங்களோ அதிகம் உள்ளன. ஆனால் சதா சாதனங்களில் சக்தி இருக்க வேண்டும். சக்தி இல்லாத சாதனங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் சேவையின் ரிசல்ட்டாக என்ன வெளிப்பட வேண்டுமோ, அது வெளிப்படாது. பழைய காலத்தில் வீரர்கள் தங்களின் ஆயுதங்களை தேவதைகளுக்கு முன்னால் அர்ப்பணம் செய்து அதில் சக்தியை நிரப்பிக் கொண்டு பிறகு பயன்படுத்தினர். ஆக, நீங்கள் அனைவரும் கூட எந்த ஒரு சாதனத்தையும் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதைப் பயன்படுத்துவதற்கு முன்னால் அதே விதி பூர்வமாகக் காரியத்தில் ஈடுபடுத்துகிறீர்களா? இப்போது எந்த ஒரு சாதனத்தைக் காரியத்தில் ஈடுபடுத்துகிறீர்களோ, அதனால் கொஞ்ச சமயத்திற்கு மக்கள் கவரப்படுகிறார்கள். சதா காலத்திற்கும் கவரப்படுவதில்லை. ஏனென்றால் இவ்வளவு சக்திசாலி ஆத்மாக்கள், சக்தி மூலமாக மாற்றம் செய்து காண்பிப்பதில் நம்பர்வார் உள்ளனர். சேவையோ அனைவருமே செய்கின்றனர். அனைவரின் பெயரும் டீச்சர் தான். சேவாதாரியானாலும் டீச்சரானாலும் சரி, சேவையில் வித்தியாசம் என்ன உள்ளது? புரோகிராம் கூட ஒன்றையே செய்கிறீர்கள், திட்டமும் கூட ஒரே மாதிரி தான் செய்கிறீர்கள். செய்முறை வழக்கமும் கூட ஒரே மாதிரி தான் உருவாகிறது. பிறகும் கூட வெற்றியில் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. அதன் காரணம் என்ன? சக்தியின் குறைபாடு. ஆகவே சாதனத்தினுள் சக்தியை நிரப்புங்கள். எப்படி வாளில் கூர்மை இல்லை என்றால் வாள், வாளின் காரியத்தைச் செய்யாது. அது போல் சாதனம் என்பது வாள். ஆனால் அதில் சக்தியின் கூர்மை இருக்க வேண்டும். அதை எவ்வளவு தனக்குள் நிரப்பிக் கொண்டே செல்வீர்களோ, அவ்வளவு சேவையில் தானாகவே வெற்றி கிடைக்கும். ஆக, சக்திசாலி சேவாதாரி ஆகுங்கள். சதா விதி மூலம் விருத்தியை அடைவது -- இதுவும் கூட பெரிய விஷயம் கிடையாது. ஆனால் சக்திசாஆத்மாக்கள் விருத்தியை அடைய வேண்டும் என்பதில் விசேஷ கவனம் வைக்க வேண்டும். தரத்தை (குவாட்டி) வெளிப்படுத்துங்கள். எண்ணிக்கையோ (குவான்ட்டிட்டி) இன்னும் அதிகமாக வரும். தரத்தின் மீது கவனம் இருக்கட்டும்.

நம்பர் தரத்தின் மீது தான் கிடைக்கும். எண்ணிக்கையில் இல்லை. ஒரு குவாலிட்டி உள்ளவர் 100 எண்ணிக்கைக்கு சமமாகும்.

 

குமார்களுடன் :

குமார்கள் என்ன அற்புதம் செய்கிறீர்கள்? குழப்பம் விளைவிப்பவர்களோ இல்லை தானே? அற்புதம் செய்வதற்காக சக்திசாலி ஆகுங்கள் மற்றும் ஆக்குங்கள். சக்திசாலியாக ஆவதற்கு சதா தனது மாஸ்டர் சர்வசக்திவான் டைட்டிலை நினைவில் வையுங்கள். எங்கே சக்தி இருக்குமோ, அங்கே மாயாவிடமிருந்து விடுதலை கிடைக்கும். எவ்வளவு தன் மீது கவனம் இருக்குமோ, அவ்வளவு சேவையிலும் கூட கவனம் செல்லும். தன் மீது கவனம் இல்லை என்றால் சேவையில் சக்தி நிரம்புவதில்லை. அதனால் சதா தன்னை வெற்றி சொரூபமாக ஆக்குவதற்கு சக்திசாலி அப்பியாசத்திற்கான சாதனங்களை உருவாக்க வேண்டும். சதா புரோகிரஸ் (வளர்ச்சி, முன்னேற்றம்) இருக்கிற மாதிரி அத்தகைய புரோகிராம் உருவாக்குங்கள். முதலில் சுய முன்னேற்றத்திற்கான புரோகிராம், அப்போது சேவை சகஜமாகவும் வெற்றி தருவதாகவும் அமையும். குமார் வாழ்க்கை என்பது பாக்கியவான் வாழ்க்கையாகும். ஏனென்றால் அநேக பந்தனங்களில் இருந்து தப்பித்து விட்டீர்கள். இல்லையென்றால் இல்லற வாழ்க்கையில் எவ்வளவு பந்தனங்கள்! ஆக, அந்த மாதிரி பாக்கியவான் ஆகக்கூடிய ஆத்மாக்கள் ஒரு போதும் தங்களின் பாக்கியத்தை மறந்துவிடவில்லையே? சதா தங்களை சிரேஷ்ட பாக்கியவான் ஆத்மா என உணர்ந்து மற்றவர்களின் பாக்கியத்தின் ரேகையையும் வரைபவர்கள் நீங்கள். யார் பந்தனமற்றவர்களாக உள்ளனரோ, அவர்கள் தாமாகவே பறக்கும் கலை மூலம் முன்னேறிக் கொண்டே செல்வார்கள். ஆகவே குமார் மற்றும் குமாரி வாழ்க்கை பாப்தாதாவுக்கு சதா பிரியமானதாக உள்ளது. இல்லற வாழ்க்கை பந்தனமுள்ள வாழ்க்கை மற்றும் குமாரி வாழ்க்கை பந்தனங்களில் இருந்து விடுபட்ட வாழ்க்கை. ஆக, பந்தனமற்ற ஆத்மா ஆகி, மற்றவர்களையும் பந்தனமற்றவர்களாக ஆக்குங்கள். குமார் என்றால் சதா சேவை மற்றும் நினைவின் சமநிலை வைப்பவர்கள். சமநிலை இருக்குமானால் சதா பறக்கும் கலை இருக்கும். யார் சமநிலை வைக்கத் தெரிந்திருக்கிறார்களோ, அவர்கள் ஒரு போதும் எந்த ஒரு பிரச்சனையிலும் மேலே-கீழே ஆக மாட்டார்கள்.

 

அதர் குமார்களுடன்:

அனைவரும் தங்கள் வாழ்க்கையின் பிரத்தியட்சப் பிரமாணத்தின் மூலம் சேவை செய்பவர்கள் தாம் இல்லையா? அனைத்திலும் பெரியதிலும் பெரிய பிரத்தியட்சப் பிரமாணம் - உங்கள் அனைவரின் வாழ்க்கையின் மாற்றமாகும். கேட்பவர்கள், சொல்பவர்களையோ அதிகம் பார்த்து விட்டார்கள். இப்போது அனைவரும் பார்க்க விரும்புகின்றனர், கேட்க விரும்புவதில்லை. ஆக, சதா எப்போதெல்லாம் ஏதாவது கர்மம் செய்கிறீர்களோ, அப்போது இந்த லட்சியம் வையுங்கள் -- கர்மத்தை நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்றால் அதைப் பார்த்து மற்றவர்கள் மாற்றமடைந்து விடுகிற அளவுக்கு அந்த மாற்றம் இருக்க வேண்டும். இதனால் தானும் திருப்தியாக மற்றும் குஷியாக இருப்பீர்கள். மேலும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வீர்கள். ஆகவே ஒவ்வொரு கர்மத்தையும் சேவைக்காகச் செய்யுங்கள். எனது ஒவ்வொரு கர்மமும் சேவைக்காகவே என்ற நினைவு இருக்குமானால் தானாகவே சிரேஷ்ட கர்மத்தையே செய்வீர்கள். நினைவில் வையுங்கள் -- சுய மாற்றத்தின் மூலம் மற்றவர்களை மாற்ற வேண்டும். இந்த சேவை சுலபமானது என்பதுடன் சிரேஷ்டமானதும் ஆகும். வாயின் மூலமாகவும் சொற்பொழிவு மற்றும் நடைமுறை வாழ்க்கையின் மூலமாகவும் சேவை இருக்க வேண்டும். அத்தகையவரைத் தான் சேவாதாரி எனச் சொல்வார்கள். சதா தனது திருஷ்டி மூலம் மற்றவர்களின் திருஷ்டியை மாற்றுகின்ற சேவாதாரி. எவ்வளவு திருஷ்டியானது சக்திசாலியாக இருக்குமோ, அவ்வளவு அநேகரை மாற்ற முடியும். சதா திருஷ்டி மற்றும் சிரேஷ்ட கர்மத்தின் மூலம் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு நிமித்தமாக ஆகுங்கள்.

 

2. என்னவாக இருந்தோம், என்னவாக ஆகி விட்டோம்! இதை சதா நினைவில் வைக்கிறீர்களா? இந்த ஸ்மிருதியில் இருப்பதால் ஒரு போதும் பழைய சம்ஸ்காரம் வெளிப்படாது. அதோடு கூடவே வருங்காலத்திலும் என்னவாகப் போகிறவர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள். அப்போது நிகழ்காலம் மற்றும் வருங்காலம் சிரேஷ்டமாக இருப்பதால் குஷி இருக்கும் மற்றும் குஷியில் இருப்பதால் சதா முன்னேறிச் சென்று கொண்டே இருப்பீர்கள். நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தின் உலகம் சிரேஷ்டமானது என்றால், சிரேஷ்டத்திற்கு முன்னால் துக்கம் தரும் உலகம் நினைவு வராது. சதா தன்னுடைய இந்த எல்லையற்ற பரிவாரத்தைப் பார்த்துக் குஷியடைந்து கொண்டே இருங்கள். எப்போதாவது கனவில் கூட நினைத்திருப்பீர்களா, இது போல் பாக்கியவான் பரிவாரம் கிடைக்குமென்று? ஆனால் இப்போது சாகாரத்தில் (நடைமுறையில்) பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அனுபவம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒரே வழியில் நடக்கும் அத்தகைய பரிவாரம், இவ்வளவு பெரிய பரிவாரம் இந்தக் கல்பம் முழுவதிலும் இப்போது தான் உள்ளது. சத்யுகத்தில் கூட சிறிய பரிவாரம் இருக்கும். ஆக, பாப்தாதா மற்றும் பரிவாரத்தைப் பார்த்துக் குஷி ஏற்படுகிறது இல்லையா? இந்தப் பரிவாரம் பிடித்திருக்கிறதா? ஏனென்றால் இங்கே சுயநலம் கிடையாது. யார் இந்தப் பரிவாரத்தினராக ஆகின்றனரோ, அவர்கள் வருங்காலத்திலும் கூட ஒருவர் மற்றவர்க்கு சமீபமாக வருகின்றனர். சதா இந்த ஈஸ்வரியப் பரிவாரத்தின் விசேஷங்களைப் பார்த்துக் கொண்டே முன்னேறிச் சென்று கொண்டிருங்கள்.

 

குமாரிகளுடன்:

குமாரிகள் அனைவரும் தங்களை உலக நன்மை செய்பவர்கள் எனப் புரிந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்களா? இந்த ஸ்மிருதி சதா சமர்த் (சக்திசாலி) ஆக்கும். குமாரி வாழ்க்கை என்பது சக்திசாவாழ்க்கை. குமாரிகள் சுயம் சக்திசாலி ஆகி, மற்றவர்களையும் சக்திசாஆக்குபவர்கள். வீணானவற்றிற்கு சதா காலத்திற்கும் விடை கொடுப்பவர்கள். குமாரி வாழ்க்கையின் பாக்கியத்தை ஸ்மிருதியில் வைத்து, முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். இதுவும் சங்கமத்தில் மிகப்பெரிய பாக்கியமாகும் -- குமாரி ஆகியிருக்கிறீர்கள், குமாரி தன்னுடைய வாழ்க்கை மூலம் மற்றவர்களின் வாழ்க்கையை உருவாக்கக்கூடியவர்கள், பாபாவோடு கூட இருப்பவர்கள். சதா தன்னை சக்திசாலி என அனுபவம் செய்து, மற்றவர்களையும் சக்திசாலியாக ஆக்குபவர்கள். சதா சிரேஷ்டமான, ஒரு பாபாவைத்தவிர வேறு யாரும் இல்லை. அது போன்ற நஷாவில் ஒவ்வொரு அடியும் முன்னால் எடுத்து வைக்கக்கூடியவர்கள். ஆக, அத்தகைய குமாரிகள் தானே நீங்கள்? கேள்வி: எந்த விசேஷதா மற்றும் குணத்தினால் அனைவருக்கும் பிரியமானவராக ஆக முடியும்? பதில்: விலகியும் அன்பாகவும் இருப்பதற்கான குணம் மற்றும் சங்கல்பமற்று இருப்பதற்கான விசேஷதா - இந்த விசேஷதா மூலம் அனைவருக்கும் பிரியமானவராக ஆக முடியும். அன்பாக இருப்பதால் அனைவரின் மனதின் அன்பு தானாகவே கிடைக்கும். இந்த விசேஷத்தன்மையின் மூலம் வெற்றி பெற முடியும்.

 

வரதானம் :

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விடை கொடுக்கும் நாளைக் கொண்டாடக்கூடிய தீர்வு சொரூபம் ஆகுக.

 

நீங்கள் உங்களின் சம்பூர்ண ஸ்திதியில் நிலைத்து விடுவீர்களானால், அப்போது தீர்வு (சமாதான்) சொரூப ஆத்மாக்களின் மாலை தயாராகி விடும். சம்பூர்ண ஸ்திதியில் பிரச்சினைகள், குழந்தைப்பருவ விளையாட்டாக அனுபவம் ஆகும். அதாவது முடிந்து போகும். எப்படி பிரம்மா பாபாவின் முன்னால் குழந்தைகள் யாராவது பிரச்சினைகளைக் கொண்டு வந்தால் பிரச்சினையின் விஷயங்களைப் பேசுவதற்கான தைரியம் கூட இருக்காது. அந்த விஷயங்களே மறந்து போகும். அது போல் குழந்தைகள் நீங்கள் கூட தீர்வு சொரூபமாக ஆவீர்களானால் அரைக்கல்பத்திற்கு பிரச்சினைகளுக்கு விடை கொடுக்கும் விழாவாக ஆகி விடும். உலகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தான் மாற்றமாகும்.

 

சுலோகன்:

யார் சதா ஞானத்தை சிந்தனை செய்கின்றனரோ, அவர்கள் மாயாவின் கவர்ச்சியிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.

 

ஓம்சாந்தி