05.01.2020           காலை முரளி               ஓம் சாந்தி        ''அவ்யக்த பாப்தாதா''

ரிவைஸ்           30.03.1985           மதுபன்


  

'' மூன்று - மூன்று விஷயங்களின் பாடம் ''

 

இன்று பாப்தாதா தன்னுடைய சதா காலமும் துணைவர்களாக இருக்கும் குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். குழந்தைகள் தான் சதா தந்தையின் துணைவர்களாக சகயோகிகளாக இருக்கிறார்கள். ஏனென்றால் மிகவும் அன்பு வைத்திருக்கும் குழந்தைகள். யார் மீது அன்பு இருக்குமோ அவருக்குத் தான் சதா காலத்தின் துணைவர்களாக சகயோகிகளாக ஆவார்கள். எனவே அன்பான குழந்தைகளாக இருக்கும் காரணத்தினால் தந்தை குழந்தைகளின்றி ஒரு காரியமும் செய்ய முடியாது. மேலும் குழந்தைகள் தந்தையின்றி எந்தவொரு காரியமும் செய்ய முடியாது. எனவே ஸ்தாபனையின் தொடக்கத்தில் தந்தை பிரம்மாவுடன் சேர்த்து குழந்தை களையும் படைத்தார். தனியாக பிரம்மா மட்டும் படைக்கப்படவில்லை. பிரம்மாவுடன் சேர்த்து பிராமண குழந்தைகளும் ஜென்மம் எடுத்தார்கள். ஏன்? குழந்தைகள் சகயோகிகளாக, துணைவர்களாக இருக்கிறார்கள். எனவே எப்பொழுது தந்தையின் ஜெயந்தியை கொண்டாடுகிறீர்கள் என்றால், அதனுடன் சேர்த்து என்ன கூறுகிறீர்கள்? சிவஜெயந்தி ஆனதினால் பிரம்மாவின் ஜெயந்தி, பிராமணர்களின் ஜெயந்தியும் ஆனது. அம்மாதிரி பாப்தாதா மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் சேர்த்தே முதல் படைப்பாக ஆனது. மேலும் தொடக்கத்திலிருந்தே தந்தையின் சகயோகிகளாக, துணைவர்களாக ஆனீர்கள். அம்மாதிரி தந்தை தன்னுடைய சகயோகி, துணைவர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். துணைவர்கள் என்றால் ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு எண்ணத்திலும், வார்த்தையிலும் துணையாக இருந்து நடந்து கொள்பவர். பின்பற்றி நடப்பது என்றால் துணையாக இருந்து நடந்து கொள்வது. அந்த மாதிரி நீங்கள் ஒவ்வொரு அடியிலும் துணைவர்களாக அதாவது தந்தையை பின்பற்றி நடக்கக்கூடிய உண்மையான துணைவர்கள். அழியாத துணைவர்கள். யார் உண்மையான துணைவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடைய ஒவ்வொரு அடியிலும் இயல்பாக தந்தைக்குச் சமமானது இருந்து கொண்டே இருக்கும். கொஞ்சம் கூட வேறு பக்கம் இருப்பதாக இருக்காது. உண்மையான துணைவர்களுக்கு கடின உழைப்பு செய்ய வேண்டியதாக இருக்காது. இந்த அடியை இப்படி எடுத்து வைத்தாலும் அல்லது அப்படி எடுத்து வைத்தாலும் இயல்பாகவே தந்தையின் அடி மேல் அடி வைப்பதை தவிர கொஞ்சம் கூட வேறு பக்கம் இருக்க முடியாது. அந்த மாதிரி உண்மையான துணைவர்களாக இருக்கும் குழந்தைகளின் மனதில், புத்தியில், இதயத்தில் என்ன நிரம்பியிருக்கிறது? நான் தந்தையினுடையவன், தந்தை என்னுடையவர். தந்தையின் எல்லைக்கப்பாற்பட்ட கஜானாக்களின் ஆஸ்தி என்னுடையது என்பது புத்தியில் இருக்கிறது. இதயத்தில், இதயம் மற்றும் இதயத்தில் நிரம்பியிருக்கும் பாபாவைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே எப்பொழுது தந்தையே நினைவு ரூபத்தில் நிரம்பியிருக்கிறார் என்றால் எப்படி நினைவோ அப்படியே நிலையும் மற்றும் காரியமும் இயல்பாகவே இருந்து கொண்டே இருக்கும். எப்படி பக்தி மார்க்கத்தில் கூட தன்னுடைய நிச்சயத்தைக் காண்பிப்பதற்காக, பாருங்கள் என்னுடைய இதயத்தில் யார் இருக்கிறார் என்று - இதைத் தான் கூறுகிறார்கள். உண்மையான துணைவர்கள் ஒவ்வொரு அடியிலும் தந்தைக்குச் சமமாக மாஸ்டர் சர்வ சக்திவான்.

 

இன்று குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் கூறுவதற்காக பாப்தாதா வந்திருக்கிறார். அனைத்து சகயோகி துணைவர்களாக இருக்கும் குழந்தைகள் அவரவர்களின் ஊக்கம் உற்சாகத்தினால் நினைவில் இருப்பதில், சேவையில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் மனதில் வெற்றிக் கொடியை கண்டிப்பாக பறக்க விட வேண்டும் என்ற ஒரே ஒரு திட எண்ணம் தான் இருக்கிறது. நீங்கள் முழு உலகத்தில் ஒரு ஆன்மீகத் தந்தையை வெளிப்படுத்தும் (பிரத்யக்ஷத்தின்), கொடியை பறக்க விடுபவர்கள் தான். அந்த உயர்ந்த கொடியின் கீழே உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் ஒரு தந்தை வந்து விட்டார் என்ற பாடலை பாடுவார்கள். எப்படி நீங்கள் அனைவரும் கொடி ஏற்றுகிறீர்கள் என்றால், அனைவரும் கொடியின் கீழே நின்று பாடல் பாடுகிறீர்கள், மேலும் வேறு என்ன நடக்கிறது. கொடியைப் பறக்க விடுவதினால் உங்கள் அனைவரின் மீது மலர்கள் மழையாகப் பொழிகிறது. அதே போல் அனைவரது இதயத்திலிருந்தும் இயல்பாகவே அனைவருக்கும் ஒரு தந்தை, கதி சத்கதி வழங்குபவர் ஒரு தந்தை என்ற இந்தப் பாடல் இயல்பாகவே வெளிப்படும். அந்த மாதிரி பாடலைப் பாடிய உடனே அழியாத சுகம், சாந்தியின் ஆஸ்தியை மலர்களின் மழைக்குச் சமமாக அனுபவம் செய்வார்கள். தந்தை என்று கூறினார்கள், மேலும் ஆஸ்தியின் அனுபவம் செய்தார்கள். அம்மாதிரி அனைவரின் மனதில் இந்த ஒரே ஒரு ஊக்கம், உற்சாகம் தான் இருக்கிறது, எனவே பாப்தாதா குழந்தைகளின் ஊக்கம் உற்சாகத்திற்காக குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் கூறுகிறார். விடைபெறுதல் இல்லை, ஆனால் வாழ்த்துக்கள். சங்கமயுகத்தின் ஒவ்வொரு நேரமும் வாழ்த்துக்களுக்கான நேரம். அம்மாதிரி மனதின் ஈடுபாட்டின் மேல், சேவையின் ஈடுபாட்டின் மேல் பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்களைச் கூறுகிறார். சேவையில் எப்பொழுதும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று அனைவருக்கும் ஊக்கம் இருக்கிறது. சேவையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற ஊக்கம் இல்லாதவர் யாருமே இருக்க மாட்டார். ஒருவேளை ஊக்கம் இல்லை என்றால் இங்கே எப்படி வந்திருப்பார்? இதுவும் ஊக்கத்தின் அடையாளம் தான் இல்லையா? ஊக்கம் உற்சாகம் இருக்கிறது, மேலும் எப்பொழுதும் இருக்கும். கூடவே ஊக்கம் உற்சாகத்துடன் முன்னேறிச் சென்று கொண்டே சேவையில் எப்பொழுதும் தடையற்ற நிலை இருக்கிறதா? ஊக்கம் உற்சாகம் இருக்கிறது, அதுவோ மிக நல்ல விஷயம் தான், ஆனால் தடையற்ற சேவை மற்றும் தடையைக் கடந்து வந்து சேவை செய்வது என்பதில் வித்தியாசம் இருக்கிறது. தடையற்ற நிலை என்றால் யாருக்காகவும் தடை ரூபமாக ஆவதில்லை. மேலும் எந்த தடை சொரூபத்தைக் கண்டும் பயப்படுவதில்லை. ஊக்கம் உற்சாகத்துடன் சேர்த்து இந்த விசேஷத்தை அனுபவம் செய்கிறீர்களா? அல்லது தடை வருகிறதா? ஒன்று தடை, பாடம் கற்பிப்பதற்காக வருகிறது, இன்னொன்று, தடை நிலைகுலைய வைப்பதற்காக வருகிறது. ஒருவேளை பாடத்தைக் கற்றுக் கொண்டு உறுதியானவர்கள் ஆகிவிட்டீர்கள் என்றால், அந்த தடை ஈடுபாட்டில் மாறி விடும். ஒருவேளை தடையைக் கண்டு பயந்து விடுகிறீர்கள் என்றால், உங்களுடைய பதிவேட்டில் கரை படிந்து விடும். வித்தியாசம் இருக்கிறது தான் இல்லையா?

 

பிராமணன் ஆவது என்றால் வா, வா நான் வெற்றி அடைபவன், நீ ஒன்றுமே செய்ய முடியாது என்று மாயாவிற்கு சவால் விடுவது! முன்பு மாயாவின் நண்பர்களாக இருந்தீர்கள். இப்பொழுது மாயாவை வெற்றி அடைவோம் என்று சவால் விடுகிறீர்கள். சவால் விடுகிறீர்கள் தான் இல்லையா? இல்லை என்றால் எதன் மீது வெற்றி அடைபவர்களாக ஆகிறீர்கள்? தன் மேலேயா? வெற்றி இரத்தினம் ஆகிறீர்கள் என்றால் மாயா மீது தான் வெற்றியை அடைகிறீர்கள் இல்லையா? வெற்றி மாலையில் மணியாக வருகிறீர்கள், பூஜை செய்யப் படுகிறீர்கள். அம்மாதிரி மாயாவை வென்றவர் ஆவது என்றால், வெற்றி அடைபவர் ஆவது. பிராமணன் ஆவது என்றால், மாயாவிற்கு சவால் விடுவது. சவால் விடுபவர்கள் விளையாடுவார்கள். வந்தது மற்றும் சென்று விட்டது. தூரத்திலிருந்தே தெரிந்து கொள்கிறார்கள், தூரத்திலிருந்தே விரட்டி விடுகிறார்கள், நேரத்தை வீணாக்குவதில்லை. சேவையிலோ நீங்கள் அனைவரும் மிக நன்றாக சேவை செய்பவர்களாக இருக்கிறீர்கள். சேவையின் கூடவே தடையற்ற சேவை செய்தேன் என்ற பதிவும் இருக்க வேண்டும். எப்படி தூய்மை விஷயத்தில் தொடக்கத்தில் இருந்தே கடைபிடித்தேன் என்ற பதிவை வைக்கிறீர்கள் இல்லையா? தொடக்கத்திலிருந்து இதுவரையிலும் எண்ணத்தில் கூட தூய்மையற்றவன் ஆகவில்லை என்று உங்களில் யாராவது இருக்கிறீர்களா?அந்த மாதிரி இந்த விசேஷத்தை பார்க்கிறீர்களா இல்லையா? இந்த ஒரு தூய்மையின் விஷயத்தினால் மட்டும் மதிப்புடன் தேர்ச்சி அடைபவராக ஆக முடியாது. ஆனால் சேவையில், சுயநிலையில், தொடர்பில், சம்மந்தத்தில், நினைவு செய்வதில் அப்படி அனைத்திலும் யார் தொடக்கத்திலிருந்து இதுவரையிலும் உறுதியாக எந்தக் குழப்பத்திலும் வராத, எந்த ஒரு தடையின் வசமாகாதவராக இருக்க வேண்டும். தடைகளை வசப்படுத்த வேண்டுமேயன்றி தானே யாருடைய எதிரிலும் தடையாக ஆகக் கூடாது என்று ஏற்கனவே கூறியிருந்தோம். இதற்கும் மதிப்பெண்கள் சேமிப்பாகிறது. ஒன்று தூய்மை, இன்னொன்று ஒரு தந்தையின் தூய்மையான நினைவு. நினைவின் இடையில் சிறிதளவு கூட எந்தத் தடையும் இருக்க வேண்டாம். இதே முறையில் சேவையிலும் எப்பொழுதும் தடையற்ற நிலை இருக்கட்டும். மேலும் குணங்களில் எப்பொழுதும் திருப்தியாக இருப்பவராகவும் மற்றும் மற்றவர்களை திருப்திப்படுத்துபவராகவும் இருக்கவேண்டும். திருப்தி என்ற குணம் அனைத்து குணங்களின் தாரணையின் கண்ணாடி. எனவே குணங்களில் தனக்காகவும் மேலும் மற்றவர்களிடமிருந்தும் திருப்தி என்ற சான்றிதழைப் பெற வேண்டும். இது மதிப்புடன் தேர்ச்சி அடைவதின் அடையாளம், அஷ்ட இரத்தினங்களின் அடையாளம். அனைத்திலும் வரிசை எண்ணை பெறுபவர்கள் தான் இல்லையா? அல்லது ஒன்றில் மட்டுமே திருப்தியாக இருக்கிறீர்களா. சேவையில் நன்றாக இருக்கிறீர்கள். வாழ்த்துக்களோ தந்தை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார். அஷ்டமாக வேண்டும், இஷ்டமாக வேண்டும். அஷ்டம் ஆனீர்கள் என்றால் அந்த அளவு மகானாகவும் ஆவீர்கள். அதற்காக முழு வருடமும் மூன்று விஷயங்களை நினைவில் வைக்க வேண்டும் மற்றும் சோதனை செய்ய வேண்டும். மேலும் இந்த மூன்று விஷயங்களும் ஒருவேளை சிறிதளவாவது எண்ணத்தில் கூட இருக்கிறது என்றால் அதற்கு விடை கொடுத்து விடுங்கள். இன்று வாழ்த்துக்கள் பெறுவதற்கான நாள் இல்லையா? எப்பொழுது விடை கொடுக்கிறீர்கள் என்றால் விடை கொடுப்பதில் என்ன செய்கிறீர்கள்? (திராட்சை, பாதாம், ஏலக்காய்) அதில் மூன்று பொருட்கள் இருக்கும். பாப்தாதாவும் மூன்று பொருட்கள் கொடுப்பார் இல்லையா? விடை கொடுப்பது இல்லை, ஆனால் வாழ்த்துக்கள் எனவே தான் வாயை இனிப்பாக ஆக்குகிறீர்கள் இல்லையா? எப்படி இங்கு மூன்று பொருட்களையும் எதற்காக கொடுக்கிறீர்கள்? பிறகு விரைவில் வர வேண்டும் என்ற நினைவிருக்கும். பாப்தாதாவும் இன்று மூன்று விஷயங்களை கூறுகிறார், அவை சில நேரம் சேவையில் தடையாகவும் ஆகிவிடுகிறது. எனவே மூன்று விஷயங்களின் மேல் விசேஷமாக பாப்தாதா மீண்டும் கவனத்தை ஈர்க்கிறார், அந்த கவனத்தின் மூலம் இயல்பாகவே மதிப்புடன் தேர்ச்சி அடைபவராக ஆகிவிடுவீர்கள்.

 

ஒரு விஷயம் : எந்தவிதமான எல்லைக்குட்பட்ட பற்றுலும் இருக்க வேண்டாம். தந்தை மீதான பற்றுதல் வேறு விஷயம். ஆனால் எல்லைக்குட்பட்ட பற்றுதல் இருக்க வேண்டாம். இரண்டாவது விஷயம் எந்த விதமான தனக்கு தன் காரணமாகவோ, வேறு யாருடைய காரணமாகவோ அழுத்தம் அதாவது இழுபறி இருக்க வேண்டாம். பற்றுதல் இருக்க வேண்டாம், மாயாவுடன் யுத்தம் செய்வதற்குப் பதிலாக உங்களுக்குள் இழுபறி இருக்க வேண்டாம். மூன்றாவது விஷயம் - எந்தவிதமான பலஹீனமான சுபாவமும் இருக்க வேண்டாம். பற்றுதல், அழுத்தம் மற்றும் பலஹீனமான சுபாவம். உண்மையில் சுபாவம் என்ற வார்த்தை மிக நல்ல வார்த்தை. சுபாவம் என்றால் சுயத்தின் பாவனை. சுயம் என்று சிரேஷ்டமானதைக் கூறுவோம். சிரேஷ்ட பாவனை இருக்கிறது, சுயத்தின் பாவனை இருக்கிறது, ஆத்ம அபிமானம் இருக்கிறது. ஆனால் பாவ - சுபாவம், பாவ - சுபாவம் என்ற வார்த்தையை அதிகம் கூறுகிறீர்கள் இல்லையா? இது பலஹீனமான சுபாவம். இது அவ்வப்பொழுது பறக்கும் கலையில் தடை ரூபம் ஆகிவிடுகிறது. அதைத் தான் நீங்கள் இராயல் ரூபத்தில் என்னுடைய நேச்சர் அந்த மாதிரி என்று கூறுகிறீர்கள். நேச்சர் சிரேஷ்டமாக இருக்கிறது என்றால் தந்தைக்குச் சமமான நிலை. தடை ரூபம் ஆகிறது என்றால், பலஹீனமான சுபாவம். மூன்று வார்த்தைகளின் அர்த்தத்தை தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா. அனேக விதமான அழுத்தம் இருக்கிறது, அழுத்தத்திற்கான காரணம் 'நான், எனது'. நான் இதைச் செய்தேன்? நான் இதைச் செய்ய முடியும். நான் தான் செய்வேன். அப்படி இந்த நான், எனது என்பது மனஅழுத்தத்தை உருவாக்குகிறது. 'நான்' என்ற இது தேக அபிமானத் தினுடையது. ஒன்று நான் சிரேஷ்ட ஆத்மா. இன்னொன்று நான் இன்னார், நான் புத்திசாலி, நான் யோகி, நான் ஞானி. நான் சேவையில் வரிசை எண்ணில் முன்னுக்கு இருக்கிறேன். இந்த மாதிரியான நான் என்பது மன அழுத்தத்தை உருவாக்குகிறது. இந்தக் காரணத்தினால் சேவையில் அங்கங்கே என்ன தீவிர வேகம் இருக்க வேண்டுமோ அதற்குப் பதிலாக வேகம் குறைந்து விடுகிறது. சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேகம் இருக்க முடியாது. வேகத்தை அதிகப்படுத்துவதற்கான ஆதாரம் - மற்றவர்கள் முன்னேறிச் செல்வதைப் பார்த்து எப்பொழுதும் மற்றவர்களை முன்னேற்றுவது தான் தன்னுடைய முன்னேற்றம். சேவையில் எந்த விதமாக நான், எனது என்பது வருகிறது என்று புரிந்து கொண்டீர்கள் தான் இல்லையா. இந்த நான் என்பது தான், அதிவேகத்தை அழித்து விடுகிறது. புரிந்ததா.

 

இந்த மூன்று விஷயங்களையோ கொடுப்போம் இல்லையா. பிறகு நீங்கள் உங்களுடன் இதை எடுத்துச் செல்வீர்கள். இதைத் தான் தியாகத்தினால் கிடைத்த பாக்கியம் என்று கூறுவது. எப்பொழுதும் அனைவருக்கும் வழங்கி அருந்துங்கள் மற்றும் அதிகப்படுத்துங்கள். இது தியாகத்தின் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இந்த தியாகத்தின் பாக்கியம் தான் சேவைக்கான சாதனம். ஆனால் இந்த பாக்கியத்தை நான், எனது என்ற எல்லைக்குள் வைத்துக் கொண்டீர்கள் என்றால் அதிகரிக்காது. எப்பொழுதும் தியாகத்தின் பாக்கியத்தின் பழத்தை மற்றவர்களையும் சகயோகி ஆக்கி அவர்களுக்கும் வழங்கி முன்னேறிச் செல்லுங்கள். நான், நான் மட்டும் என்று கூறாதீர்கள், நீங்களும் அருந்துங்கள். அனைவருக்கும் வழங்கி ஒருவர், இன்னொருவருடன் கைகோர்த்து முன்னேறிச் செல்லுங்கள். இப்பொழுது சேவையின் இடையில் இந்த அதிர்வலைகள் தென்படுகிறது. இந்த விஷயத்தில் பரந்த மனமுடையவராக ஆகிவிடுங்கள். இதைத் தான் யார் முதலில் செய்கிறாரோ அவர் தான் அர்ஜுனன் என்று கூறுவது. மற்றவர்களைப் பார்க்காதீர்கள். இவரும் அப்படி செய்கிறார் இல்லையா? இதுவோ நடக்கத்தான் செய்யும் என்று பார்க்காதீர்கள். ஆனால் நான் விசேஷத்தைக் காண்பிப்பதற்காக பொறுப்பாளர் என்று ஆகிவிடுங்கள். பிரம்மா தந்தையின் விசேஷமாக என்ன இருந்தது? எப்பொழுதும் குழந்தைகளை முன்னுக்கு வைத்தார். என்னை விட குழந்தைகள் புத்திசாலிகள், குழந்தைகள் செய்வார்கள். இந்த அளவு தியாகத்தின் பாக்கியத்தை தியாகம் செய்தார். ஒருவேளை யாராவது அன்பின் காரணமாக, பிராப்தியின் காரணமாக பிரம்மாவின் மகிமை செய்தாலும் அவருக்கும் தந்தையின் நினைவை ஊட்டுவார். பிரம்மாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்காது, பிரம்மா வின் புகைப்படத்தை வைத்துக் கொள்ளாதீர்கள், பிரம்மா தான் அனைத்தும் என்று நினைக்காதீர்கள் என்று கூறினார். இதைத் தான் தியாகத்தின் பாக்கியத்தையும் தியாகம் செய்து சேவையில் ஈடுபட்டு விடுவது என்று கூறுவது. இந்த விஷயத்தில் இருமடங்கு பெறும் வள்ளல் ஆகிவிடுங்கள். மற்றவர்கள் வாய்ப்பளிக்க வேண்டாம், அவர்கள் தன் பக்கம் ஈர்க்க வேண்டாம். ஒருவேளை அவரே தன்னுடைய மகிமை செய்கிறார், தன் பக்கம் ஈர்க்கிறார் என்றால் அதற்கு என்ன வார்த்தை கூறுவீர்கள். முரளிகளில் கேட்டிருக்கிறீர்கள் இல்லையா. அந்த மாதிரி ஆகாதீர்கள். எந்தவொரு விஷயத்தையும் நீங்களே தன் பக்கம் இழுப்பதற்கான இழுபறியை ஒருபொழுதும் செய்யாதீர்கள். சுலபமாக கிடைத்தது என்றால் சிரேஷ்ட பாக்கியம். இழுத்து பெறுவதை சிரேஷ்ட பாக்கியம் என்று கூற மாட்டோம். அதில் வெற்றி கிடைக்காது. உழைப்பு அதிகம் வெற்றி குறைவாக இருக்கும், ஏனென்றால் அனைவரின் ஆசீர்வாதம் கிடைப்பதில்லை. எது சுலபமாக கிடைக்கிறதோ அதில் அனைவரின் ஆசீர்வாதம் நிரம்பியிருக்கும். புரிந்ததா?

 

மன அழுத்தம் என்றால் என்ன? பற்றுதலைப் பற்றி அன்றைய நாளில் தெளிவு படுத்தினோம். எந்தவொரு பலஹீனமான சுபாவமும் இருக்க வேண்டாம். நானோ இந்த தேசத்தில் வசிப்பவன் எனவே என்னுடைய சுபாவம், நான் நடந்து கொள்வது, நான் வசிப்பது அந்த மாதிரி இருக்கிறது என்று அப்படியும் நினைக்காதீர்கள். தேசத்தின் காரணமாக, தர்மத்தின் (மதத்தின்) காரணமாக, உடன் இருப்பவர்களின் (சங்) காரணமாக என்னுடைய சுபாவம் அந்த மாதிரி இருக்கிறது என்று அப்படியும் இல்லை. நீங்கள் எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள். இதுவோ சேவைக்காக ஒரு ஸ்தானம் கிடைக்கிறது. யாருமே வெளிநாட்டினரும் இல்லை மேலும் நான் பாரதவாசி என்ற போதையும் இருக்க வேண்டாம். அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள். பாரதவாசிகளும் பிராமண ஆத்மாக்கள். வெளிநாட்டில் வசிப்பவர்களும் பிராமண ஆத்மாக்கள். இதில் வேற்றுமை இல்லை., பாரதவாசிகள் அந்த மாதிரி இருக்கிறார்கள், மேலும் வெளிநாட்டினர் இந்த மாதிரி இருக்கிறார்கள் என்று அப்படியும் இல்லை. இந்த வார்த்தையையும் ஒருபொழுதும் கூறாதீர்கள். அனைவரும் பிராமண ஆத்மாக்கள். இதுவோ சேவைக்காக கிடைத்த ஸ்தானம். நீங்கள் வெளிநாட்டிற்கு ஏன் சென்றடைந்தீர்கள்? அங்கே ஏன் ஜென்மம் எடுத்தீர்கள்? பாரதத்தில் ஏன் ஜென்மம் எடுக்கவில்லை? அங்கு சேவா ஸ்தானத்தை திறப்பதற்காக சென்றிருக்கிறீர்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். இல்லையென்றால் பாரதவாசிகளுக்கு விசா கிடைப்பதில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. நீங்களோ அங்கு சுலபமாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். எத்தனை தேசங்களில் சேவை நடந்து கொண்டிருக்கிறது. எனவே சேவைக்காக வெளிநாட்டிற்குச் சென்றிருக்கிறீர்கள். மற்றபடி அனைவருமே பிராமண ஆத்மாக்கள், எனவே யாருமே எந்த ஆதாரத்தினால் சுபாவத்தை உருவாக்காதீர்கள். எது தந்தையின் சுபாவமோ அது குழந்தைகளின் சுபாவம். தந்தையின் சுபாவம் என்னவாக இருக்கிறது? எப்பொழுதும் ஒவ்வொரு ஆத்மாவிற்காக நன்மை பயக்கும் மற்றும் இரக்கத்தின் பாவனையின் சுபாவம். ஒவ்வொருவரையும் உயர்வாக தூக்கி விடுவதற்கான சுபாவம், இனிமையான சுபாவம், பணிவான சுபாவம். என்னுடைய சுபாவம் அந்த மாதிரி இருக்கிறது என்று ஒருபொழுதும் கூறாதீர்கள். என்னுடையது என்பது எங்கிருந்து வந்தது. எனக்கு வேகமாக பேசும் சுபாவம் இருக்கிறது, என்னுடைய சுபாவம் ஆவேசத்தில் வருவதற்கானது. சுபாவத்தின் காரணமாக அந்த மாதிரி ஆகிவிடுகிறது. இவை அனைத்தும் மாயா! அனேகர் களுக்கு அபிமானத்தின் சுபாவம், பொறாமைப் படுவதற்கான, ஆவேசத்தில் வருவதற்கான சுபாவம் இருக்கிறது. மனமுடைந்து போவதற்கான சுபாவம் இருக்கிறது. நன்றாக இருந்தாலும் கூட தன்னை நன்றாக இருக்கிறேன் என்று நினைக்க மாட்டார்கள். எப்பொழுதும் தன்னை பலஹீனமானவராகவே நினைப்பார். நான் முன்னுக்குச் செல்ல முடியாது, என்னால் செய்ய முடியாது. இம்மாதிரியான மனமுடைந்து போகும் சுபாவமும் தவறானது. அபிமானத்தில் வராதீர்கள். ஆனால் சுவமானத்தில் (சுயமரியாதையில்) இருந்தீர்கள் என்றால், இதே விதமான சுபாவத்தை பலஹீனமான சுபாவம் என்று கூறுவது. அம்மாதிரி முழு வருடமும் இந்த மூன்று விஷயங்களின் மேல் கவனம் வையுங்கள். இந்த மூன்று விஷயங்களிலிருந்து பாதுகாப்பாக இருங்கள். கடினமோ இல்லை தான் இல்லையா? துணைவர்கள் தொடக்கத்திலிருந்து இறுதி வரை சகயோகி துணைவர்கள். துணைவர்கள் என்றால் சமமானவர்கள் வேண்டும் இல்லையா? ஒருவேளை துணைவர்களில் சமநிலை இல்லை என்றால், துணையாக இருப்பவர்கள் அன்பு முறையோடு நடந்து கொள்ள முடியாது. நல்லது. இந்த மூன்று விஷயங்களின் மீதும் கவனம் வைப்பீர்கள். ஆனால் இந்த மூன்று விஷயங்களிலிருந்தும் நிரந்தரமாக விலகிவிடுவதற்காக இன்னும் மூன்று மூன்று விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்று மூன்றின் பாடத்தை படிப்பித்துக் கொண்டிருக்கிறோம். எப்பொழுதும் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு சமநிலை வைக்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் சமநிலை இருக்க வேண்டும். நினைவு மற்றும் சேவையில் சமநிலை இருக்க வேண்டும். சுவமானம், அபிமானத்தை அழித்து விடுகிறது. சுவமானத்தில் நிலைத்திருக்க வேண்டும். இந்த அனைத்து விஷயங்களும் நினைவில் இருக்கட்டும். அதிகமாக இரமணீகரமானவராகவும் இருக்க வேண்டாம். அதிகமாக கம்பீரமானவராகவும் இருக்க வேண்டாம், சமநிலை இருக்கட்டும். தேவையான நேரத்தில் இரமணீகரம் மேலும் தேவையான நேரத்தில் கம்பீரம். அப்படி ஒன்று - சமநிலை. இரண்டாவது - எப்பொழுதும் அமிர்த வேளையில் தந்தையிடமிருந்து விசேஷமாக ஆசீர்வாதங்களை பெற வேண்டும். தினசரி அமிர்தவேளையில் பாப்தாதா குழந்தைகளுக்காக ஆசீர்வாதங்களின் பையை திறக்கிறார். அதிலிருந்து எந்தளவு எடுக்க விரும்புகிறீர்களோ அந்தளவு எடுத்துக் கொள்ள முடியும். அம்மாதிரி சமநிலை,ஆசீர்வாதம் மற்றும் மூன்றாவது ஆனந்தம் நிறைந்த வாழ்க்கை. மூன்று விஷயங்கள் நினைவில் இருப்பதினால் கவனம் கொடுக்க வேண்டிய அந்த மூன்று விஷயங்கள் தானாகவே அகன்று விடும். புரிந்ததா? நல்லது. இன்னும் மூன்று விஷயங்களை கேளுங்கள்.

 

இலட்சிய ரூபத்தில் அல்லது தாரணையின் ரூபத்தில் விசேஷமாக மூன்று விஷயங்களைக் கவனத்தில் வைக்க வேண்டும். அவற்றை (மேலே கூறியவற்றை) விட வேண்டும். மேலும் இதை தாரணை செய்ய வேண்டும். விட வேண்டியதையோ சதா காலத்திற்காக விட்டு விட்டீர்கள் இல்லையா, அதை நினைவு

 

செய்வதின் அவசியம் இல்லை. ஆனால் இந்த மூன்று விஷயங்கள் என்ன கூறுகிறோமோ அதை நினைவில் வைக்க வேண்டும். மேலும் தாரணை சொரூபத்தில் விசேஷமாக நினைவு வைக்க வேண்டும். ஒன்று - அனைத்து விஷயங்களிலும் உண்மை இருக்க வேண்டும், கலப்படம் கூடாது. எண்ணத்தில், வார்த்தையில், அனைத்து விஷயங்களிலும் உண்மை இருக்க வேண்டும். இதைத் தான் உண்மையாக இருப்பது என்று கூறுவது. உண்மையான உள்ளத்தின் மீது தந்தை திருப்தியாக இருக்கிறார். உண்மையின் அடையாளமாக என்ன இருக்கும்? உண்மை இருக்கிறது என்றால் மனம் நடனமாடும். யார் உண்மையாக இருப்பாரோ அவர் எப்பொழுதும் குஷியில் நடனமாடிக் கொண்டே இருப்பார். அம்மாதிரி ஒன்று உண்மையாக இருப்பது. இரண்டாவது - இராயலாக (இராஜரீகமாக) இருப்பது. சிறு சிறு விஷயங்களில் ஒருபொழுதும் புத்தி ஈர்க்கப்படுவதில் வர வேண்டாம். எப்படி இராயல் குழந்தைகளாக யார் இருப்பார்களோ அவர்களுக்கு சிறிய பொருட்கள் மேல் பார்வை செல்லாது. ஒருவேளை பார்வை சென்றது என்றால் அவரை இராயல் என்று கூறமாட்டோம். எந்தவொரு சிறு சிறு விஷயங்களில் புத்தி ஈர்க்கப்பட்டு விடுகிறது என்றால் அவரை இராயலாக இருப்பவர் என்று கூற மாட்டோம். யார் இராயலாக இருப்பாரோ அவர் எப்பொழுதும் பிராப்தி சொரூபமாக இருப்பார். எங்கும் பார்வையும் மற்றும் புத்தியும் செல்லாது. அப்படி இது ஆன்மீக இராயல் தன்மை. துணிகளின் இராயல் தன்மை இல்லை. அம்மாதிரி உண்மையாக இருப்பது, இராயலாக இருப்பது மற்றும் மூன்றாவது ஒற்றுமையாக இருப்பது. ஒற்றுமையாக இருப்போம் என்று நான் விரும்புகிறேன் ஆனால் இவர் அப்படி இருப்பதில்லை என்று மற்றவர் களைப் பார்க்காதீர்கள். ஒருவேளை நீங்கள் இருந்து கொண்டே இருந்தீர்கள் என்றால் அவருக்கு ஒற்றுமையின்றி இருப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது. ஒருவேளை யாராவது கையை தட்டுவது போல் செய்கிறார் மற்றும் இன்னொருவர் செய்யவில்லை என்றால் சப்தமே எழாது. ஒருவேளை யாராவது ஒற்றுமையைக் கெடுக்கும் காரியம் செய்கிறார், ஆனால் நீங்கள் ஒற்றுமையாக இருந்தீர்கள் என்றால் அவரால் ஒற்றுமையைக் கெடுக்கும் காரியம் செய்யவே முடியாது. ஒற்றுமையில் அவர் வந்து தான் ஆக வேண்டும். எனவே இந்த மூன்று விஷயங்கள் அதாவது உண்மையாக, இராயலாக மற்றும் ஒற்றுமையாக இருப்பது எப்பொழுதும் தந்தைக்குச் சமமாக ஆவதில் சகயோகியாக இருக்கும். புரிந்ததா? இன்று மூன்று விஷயங்களின் பாடத்தை படித்து விட்டீர்கள் இல்லையா? தந்தைக்கோ குழந்தைகள் மீது பெருமிதம் இருக்கிறது. இந்த அளவு யோக்கியமான (தகுதியான) குழந்தைகள் மற்றும் யோகி குழந்தைகள் எந்த தந்தைக்குமே இருக்க முடியாது. யோக்கியமும் இருக்க வேண்டும், யோகியாகவும் இருக்க வேண்டும். மேலும் நீங்கள் ஒவ்வொருவரும் பல கோடி மடங்கு பாக்கியம் நிறைந்தவர்கள். முழு கல்பத்திலும் இந்த அளவு மற்றும் இம்மாதிரியான குழந்தைகள் இருக்கவே முடியாது. எனவே விசேஷமாக அமிர்தவேளையின் நேரத்தை பாப்தாதா பிராமண குழந்தைகளுக்காக ஏன் வைத்திருக்கிறார்? ஏனென்றால் பாப்தாதா விசேஷமாக ஒவ்வொரு குழந்தையின் விசேஷத்தை, சேவையை, குணங்களை எப்பொழுதும் தன் எதிரில் கொண்டு வருகிறார். மேலும் என்ன செய்கிறார்? ஒவ்வொரு குழந்தையின் விசேஷம், குணம் மற்றும் சேவையாக என்ன இருக்கிறதோ அவற்றை விசேஷ வரதானத்தினால் அழியாததாக ஆக்குகிறார். எனவே இந்த நேரத்தை பிரத்யேகமாக குழந்தைகளுக்காக வைத்திருக்கிறார். அமிர்தவேளையில் விசேஷ பாலனை கொடுக்கிறார். ஒவ்வொரு குழந்தைக்கும் பாப்தாதா அன்பின், சகயோகத்தின், வரதானத்தின் பாலனை கொடுக்கிறார். தந்தை என்ன செய்கிறார் என்று புரிந்ததா? மேலும் நீங்கள் குழந்தைகள் என்ன செய்கிறீர்கள்? சிவபாபா சுகம் அளிப்பவர், சாந்தி அளிப்பவர்... அந்த மாதிரி கூறுகிறீர்கள் தான் இல்லையா? மேலும் தந்தை பாலனை கொடுக்கிறார். எப்படி தாய் தந்தையர் காலையில் குழந்தைகளை தயார் செய்கிறார்கள், சுத்தம் செய்து பிறகு முழு நாளும் சாப்பிடுங்கள், குடியுங்கள் மற்றும் படியுங்கள் என்று கூறுகிறார்கள். பாப்தாதாவும் அமிர்தவேளையில் அந்த பாலனை கொடுக்கிறார் அதாவது முழு நாளுக்காக சக்தி நிரப்பி விடுகிறார். இது விசேஷ பாலனைக்கான நேரம். இது அதிகப்படியான வரதானத்தின், பாலனையின் நேரம். அமிர்தவேளையில் வரதானங்களின் பை திறக்கப்படுகிறது. எவ்வளவு யார் வரதானத்தை எடுக்க விரும்புகிறாரோ ஆனால் உண்மையான உள்ளத்தோடு ஏதாவது ஒரு சுயநலமாக இல்லை. ஒருவேளை சுயநலம் இருக்கிறது என்றால், அப்பொழுது தான் எனக்கு இதை கொடுங்கள் என்று கூறுவார். யார் சுயநலமாக கேட்கிறாரோ அதற்கு பாப்தாதா என்ன செய்கிறார். அவருடைய சுயநலம் நிறைவேறுவதற்காக அந்த அளவு சக்தி கொடுக்கிறார், சுயநலம் நிறைவேறி விட்டது மற்றும் சக்தியும் முடிந்து விட்டது. இருந்தாலும் குழந்தைகள் தான், இல்லை என்றால் செய்ய மாட்டார். ஆனால் எப்பொழுதுமே வரதானங்களினால் வளர்ந்து கொண்டே இருங்கள், நடந்து கொண்டே இருங்கள், பறந்து கொண்டே இருங்கள். அதற்காக எந்த அளவு அமிர்தவேளையில் தன்னை சக்திசாலியாக ஆக்குவீர்களோ அந்த அளவு முழு நாளும் சகஜமாக இருக்கும். புரிந்ததா?

 

எப்பொழுதும் தன்னை மதிப்புடன் தேர்ச்சி அடைபவருக்கான இலட்சியம் மற்றும் இலட்சணத்தை வைத்து நடந்து கொள்ளக்கூடிய, எப்பொழுதும் தன்னை பிரம்மா தந்தைக்குச் சமமாக தியாகத்தின் பாக்கியத்தை மற்றவர்களுக்கு வழங்கக்கூடிய நம்பர் ஒன் தியாகி சிரேஷ்ட பாக்கியத்தை உருவாக்கக்கூடிய, எப்பொழுதும் சகஜ பிராப்தியின் அதிகாரி ஆகி, சுயமுன்னேற்றம் மற்றும் சேவையின் முன்னேற்றம் செய்யக்கூடிய, எப்பொழுதும் ஒவ்வொரு அடியிலும் சகயோகி, துணைவனாகி முன்னேறிச் செல்லக்கூடிய, நினைவு மற்றும் மனநிலையை சக்திசாலியாக ஆக்கியதினால் எப்பொழுதும் தந்தையைப் பின்பற்றி நடக்கக்கூடிய, அம்மாதிரியான சதா காலத்தின் சகயோகி துணைவர்கள், கட்டளைப்படி நடக்கும், திருப்தியாக இருக்கும், அனைவரையும் திருப்தி படுத்துவதற்கான இரகசியத்தைத் தெரிந்திருக்கும் அந்த மாதிரியான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, மகான் புண்ணிய ஆத்மாக்களுக்கு, இரு மடங்கு பெரும் வள்ளல் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

வரதானம்:

மனதின் எண்ணங்களின் பந்தனங்களிலிருந்து விடுபட்டு, அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்யக்கூடிய முக்தி வள்ளல் ஆகுக.

 

அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுவது என்பது சங்கமயுக பிராமணர்களின் விசேஷம். ஆனால் மனதில் எழும் எண்ணங்களின் பந்தனம், மனதின் குஷி மற்றும் அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்ய விடுவதில்லை. வீணான எண்ணங்கள், பொறாமை, அலட்சியம் மற்றும் சோம்பலின் எண்ணங்களின் பந்தனத்தில் கட்டப்படுவது தான் மனதின் பந்தனம். அந்த மாதிரியான ஆத்மா அபிமானத்தின் வசமாகி மற்றவர்களின் குறையைத் தான் யோசித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு உணரும் சக்தி முடிவடைந்து விடுகிறது. எனவே இந்த சூட்சும பந்தனத்திலிருந்து விடுபட்டவர் ஆகுங்கள். அப்பொழுது தான் முக்தி வள்ளல் ஆக முடியும்.

 

சுலோகன் :

உங்களிடம் துக்கத்தின் எண்ண அலைகள் வராத அளவிற்கு குஷிகளின் சுரங்கத்தினால் நிரம்பியவராக இருங்கள்.

 

அவ்யக்த நிலையின் அனுபவம் செய்வதற்காக விசேஷ ஹோம் ஒர்க் (வீட்டுப் பாடம்) - உங்கள் எதிரில் யாராவது எவ்வளவு தான் வீணாக பேசினாலும் ஆனால் நீங்கள் வீணானதை பயனுள்ளதாக மாற்றம் செய்து விடுங்கள். வீணாதை தன்னுடைய புத்தியில் சுவீகாரம் (ஏற்றுக் கொள்ளாதீர்கள்) செய்யாதீர்கள். ஒருவேளை ஏதாவது ஒரு வீணான விஷயத்தை சுவீகாரம் செய்து விட்டீர்கள் என்றால், ஒரு வீணானது அனேக வீணானவைக்கு ஜென்மம் கொடுத்து விடும். தன்னுடைய வார்த்தைகள் மீதும் முழு கவனம் வையுங்கள் 'குறைவாகப் பேசுங்கள், மெதுவாகப் பேசுங்கள், மேலும் இனிமையாகப் பேசுங்கள்'. பிறகு அவ்யக்த நிலை சுலபமாக உருவாகி விடும்.

 

ஓம்சாந்தி