09.02.20
காலை
முரளி
ஓம்
சாந்தி
''அவ்யக்த-பாப்தாதா''
ரிவைஸ்
20.11.1985
மதுபன்
''
சங்கமயுகத்து
பிராமணர்களின்
வேறுபட்ட,
அன்பான
சிரேஷ்ட
உலகம்
இன்று
பிராமணர்களைப்
படைக்கும்
தந்தை
தன்னுடைய
மிகச்
சிறிய
ஆன்மீக,
அழகான
உலகத்தை பார்த்துக்
கொண்டிருக்கிறார்.
இந்த
பிராமண
உலகம்
சத்யுகத்தின்
உலகத்தையும்
விட
மிக
வேறுபட்டது
மற்றும் மிக
அன்பானது.
இந்த
ஆன்மீக
உலகத்தின்
பிராமண
ஆத்மாக்கள்
எவ்வளவு
சிரேஷ்டமானவர்கள்,
விசேஷமான வர்கள்.
தேவதை
ரூபத்தையும்
விட
இந்த
பிராமண
சொரூபம்
விசேஷமானது.
இந்த
உலகத்தின்
மகிமை
விலகி யிருக்கும்
தன்மை.
இந்த
உலகத்தின்
ஒவ்வொரு
ஆத்மாவும்
விசேஷமானவர்.
ஒவ்வொரு
ஆத்மாவுமே
சுயராஜ்யம் உள்ள
இராஜா.
ஒவ்வொரு
ஆத்மாவும்
நினைவின்
திலமிட்டவர்,
அழியாத
திலகமிட்டவர்,
சுயராஜ
திலகமிட்டவர்,
பரமாத்மாவின்
இதய
சிம்மாசனத்தில்
அமர்ந்திருப்பவர்.
அம்மாதிரி
அனைத்து
ஆத்மாக்களும்
இந்த
அழகான உலகத்தின்
கிரீடம்,
ஆசனம்
மற்றும்
திலகம்
இட்டிருப்பவர்கள்.
இந்த
மாதிரியான
உலகத்தை
முழுக்
கல்பத்திலும் எப்பொழுதாவது
கேள்விப்பட்டிருக்கிறீர்களா
மற்றும்
பார்த்திருக்கிறீர்களா?
இந்த
உலகத்தின்
ஒவ்வொரு
பிராமண ஆத்மாவிற்கும்
ஒரே
தந்தை
ஒரே
குடும்பம்,
ஒரே
மொழி,
ஒரே
ஞானம்,
வாழ்க்கையின்
ஒரே
சிரேஷ்ட
லட்சியம்,
ஒரே
உள்
உணர்வு,
ஒரே
திருஷ்டி,
ஒரே
தர்மம்
மற்றும்
ஒரே
ஈஸ்வரிய
காரியம்.
அந்த
மாதிரியான
உலகம் எந்தளவு
சிறியதோ
அந்தளவு
பிரியமானது.
அந்த
மாதிரி
அனைத்து
பிராமண
ஆத்மாக்களும்
எங்களுடைய சின்னஞ்சிறு
இந்த
உலகம்
மிகவும்
வேறுபட்டது
மற்றும்
மிகவும்
அன்பானது
என்ற
பாடலை
மனதால்
பாடுகிறார்கள்.
இந்தப்
பாடலை
பாடுகிறீர்களா?
இந்த
சங்கமயுகத்தின்
உலகத்தைப்
பார்த்து
பார்த்து
மகிழ்ச்சி
அடைகிறீர்களா?
எவ்வளவு
வேறுபட்ட
உலகம்.
இந்த
உலகத்தின்
தினசரி
காரிய
நடவடிக்கைகளும்
வேறுபட்டது.
அவர்களுடைய இராஜ்யம்,
அவர்களுடைய
நியமம்,
அவர்களுடைய
முறைகள்,
பழக்கங்கள்,
ஆனால்
முறைகளும்
வேறுபட்டது மற்றும்
அன்பும்
வேறுபட்டது
நீங்கள்
அந்த
மாதிரி
உலகத்தில்
இருக்கும்
பிராமண
ஆத்மாக்கள்
தான்
இல்லையா?
இதே
உலகத்தில்
இருக்கிறீர்கள்
இல்லையா?
எப்பொழுதாவது
தன்னுடைய
உலகத்தை
விட்டு
விட்டு
பழைய உலகத்தில்
சென்று
விடுவதில்லையே?
எனவே
பழைய
உலகத்தின்
மனிதர்கள்
கடைசியில்
இந்த
பிராமணர்கள் என்றால்
என்ன
என்று
புரிந்து
கொள்ள
முடிவதில்லை.
பிரம்மா
குமாரிகளின்
நடைமுறையே
அவர்களுடையது,
ஞானமும்
அவர்களுக்கு
என்றிருக்கிறது
என்று
கூறுகிறார்கள்
இல்லையா?
எப்பொழுது
உலகமே
வேறுபட்டது என்றால்,
அனைத்தும்
புதியதாக
மற்றும்
வேறுபட்டதாகத்
தான்
இருக்கும்
இல்லையா?
அனைவரும்
தன்னை புதிய
உலகத்தின்
புதிய
எண்ணம்,
புதிய
மொழி,
புதிய
காரியம்
என்று
அந்த
மாதிரி
வேறுபட்டவராக
ஆகியிருக்கிறேனா என்று
தன்னைத்தானே
பார்க்க
வேண்டும்.
ஏதாவது
பழைய
தன்மை
இருந்து
விடவில்லையே?
சிறிதளவு
பழைய தன்மை
இருக்கிறது
என்றால்,
அது
பழைய
உலகத்தின்
பக்கம்
ஈர்த்து
விடும்.
மேலும்
உயர்ந்த
உலகத்திலிருந்து கீழான
உலகத்தில்
சென்று
விடக்கூடும்.
உயர்ந்த
அதாவது
சிரேஷ்டமாக
இருக்கும்
காரணத்தினால்
சொர்க்கத்தை உயரே
காண்பிக்கிறார்கள்.
மேலும்
நரகத்தை
கீழே
காண்பிக்கிறார்கள்.
சங்கமயுகத்தின்
சொர்க்கம்,
சத்யுகத்தின் சொர்க்கத்தை
விடவும்
உயர்ந்தது.
ஏனென்றால்,
இந்த
நேரம்
நீங்கள்
இரண்டு
உலகத்தின்
ஞானம்
நிறைந்தவர்களாக ஆகியிருக்கிறீர்கள்.
இங்கு
இப்பொழுது
பார்த்துக்
கொண்டும்,
தெரிந்திருந்தும்
விலகியிருந்து
அன்பானவராக இருக்கிறீர்கள்.
எனவே
மதுபனை
சொர்க்கம்
என்று
அனுபவம்
செய்கிறீர்கள்.
சொர்க்கத்தைப்
பார்க்க
வேண்டும் என்றால்,
இப்பொழுது
பாருங்கள்
என்று
கூறுகிறீர்கள்
இல்லையா?
அங்கே
சத்யுகத்தில்
சொர்க்கத்தை
வர்ணனை செய்ய
மாட்டோம்.
இப்பொழுது
நான்
சொர்க்கத்தை
பார்த்திருக்கிறேன்
என்று
நிச்சயத்துடன்
தங்குதடையின்றி கூறுகிறீர்கள்.
சொர்க்கத்தை
பார்க்க
வேண்டும்
என்றால்
இங்கே
வந்து
பாருங்கள்
என்று
சவால்
விடுகிறீர்கள் இல்லையா?
அந்த
மாதிரி
வர்ணனை
செய்கிறீர்கள்
இல்லையா.
முன்பு
சொர்க்கத்தின்
பரிகள்
அதாவது
தேவதைகள் மிகவும்
அழகாக
இருப்பார்கள்
என்று
நினைத்தீர்கள்,
கேட்டீர்கள்.
ஆனால்
யாரும்
பார்க்கவில்லை.
சொர்க்கத்தில் இதுவெல்லாம்
இருக்கும்
என்று
அதிகமாக
கேட்டிருக்கிறீர்கள்,
ஆனால்
இப்பொழுது
நீங்களே
சொர்க்கத்தின் உலகத்தில்
வந்து
சேர்ந்து
விட்டீர்கள்.
நீங்களே
சொர்க்கத்தின்
பரிகளாக
(தேவதைகளாக)
ஆகிவிட்டீர்கள்.
ஷியாமாக இருந்தவர்
சுந்தர்
ஆகிவிட்டீர்கள்
இல்லையா?
இறக்கை
கிடைத்து
விட்டது
இல்லையா?
அந்த
அளவு
வேறுபட்ட ஞானம்
மற்றும்
யோகாவின்
இறக்கைகள்
கிடைத்திருக்கின்றன.
அதன்
மூலம்
மூன்று
உலகங்களையும்
சுற்றி
வர முடியும்.
அறிவியலைச்
சேர்ந்தவர்களிடமும்
கூட
அந்த
மாதிரி
அதிவேகமாக
செல்லும்
சாதனம்
இல்லை.
உங்கள் அனைவருக்கும்
இறக்கை
கிடைத்திருக்கிறதா?
யாராவது
கிடைக்காமல்
தங்கிப்
போய்
விடவில்லையே?.
பிராப்தி இல்லாத
(கிடைக்காத)
பொருள்
பிராமண
உலகத்தில்
இல்லை
என்பது
தான்
இந்த
உலகத்தின்
மகிமையாக இருக்கிறது,
எனவே
ஒரு
தந்தை
கிடைத்தார்
என்றால்,
அனைத்தும்
கிடைத்து
விட்டது
என்ற
மகிமை
இருக்கிறது.
ஒரு
உலகம்
இல்லை,
ஆனால்
மூன்று
உலகங்களின்
எஜமானனாக
ஆகிவிடுகிறார்கள்.
அனைவரும்
ஊஞ்சலில் ஆடிக்கொண்டே
இருக்கிறார்கள்
என்பது
இந்த
உலகத்தின்
மகிமை.
ஊஞ்சலில் ஆடுவது
என்பது
பாக்கியத்தின் அடையாளம்
என்று
கூறுவார்கள்.
இந்த
உலகத்தின்
விசேஷமாக
என்ன
இருக்கிறது?
சில
நேரம்
அதீந்திரிய சுகம்
என்ற
ஊஞ்சலில் ஆடுவது,
சில
நேரம்
குஷியின்
ஊஞ்சலில் ஆடுவது,
சில
நேரம்
அமைதியின்
ஊஞ்சலில்,
சில
நேரம்
ஞானத்தின்
ஊஞ்சலில் ஆடுவது.
பரமாத்மா
மடியின்
ஊஞ்சலில் ஆடுவது,
பரமாத்மா
மடி
என்ற நினைவில்
அன்பில்
மூழ்கியிருந்த
நிலையில்
ஆடுவது.
எப்படி
மடியில்
ஒன்றிப்போய்
விடுகிறார்கள்.
அதே போல்
பரமாத்மா
நினைவில்
ஒன்றிப்
போய்
விடுகிறார்கள்,
அன்பில்
ஐக்கியமாகி
விடுகிறார்கள்.
இந்த
ஆன்மீக மடி
ஒரு
நொடியில்
அனேக
ஜென்மங்களின்
துக்கம்
வேதனையை
மறக்க
வைத்து
விடுகிறது.
அம்மாதிரி
நீங்கள் அனைவரும்
ஊஞ்சலில் ஆடிக்
கொண்டே
இருக்கிறீர்கள்.
இந்த
மாதிரி
உலகத்தின்
அதிகாரியாக
ஆகி
விடுவோம்
என்று
எப்பொழுதாவது
கனவில்
கூட
நினைத்த துண்டா?
இன்று
பாப்தாதா
தன்னுடைய
பிரியமான
உலகத்தைப்
பார்த்துக்
கொண்டிருக்கிறார்.
இந்த
உலகம் உங்களுக்கு
பிடித்திருக்கிறதா?
பிரியமானதாக
இருக்கிறதா?
சில
நேரம்
ஒரு
கால்
அந்த
உலகத்திலும்,
மற்றொரு காலை
இந்த
உலகத்திலும்
வைப்பதில்லையே?
63
ஜென்மங்கள்
அந்த
உலகத்தை
பார்த்து
விட்டீர்கள்,
அனுபவம் செய்து
விட்டீர்கள்.
என்ன
கிடைத்தது?
ஏதாவது
கிடைத்ததா
அல்லது
இழந்தீர்களா?
உடலையும்
இழந்தீர்கள்,
மனதின்
சுகம்,
சாந்தியையும்
இழந்தீர்கள்,
மேலும்
செல்வத்தையும்
இழந்தீர்கள்.
உறவையும்
இழந்தீர்கள்.
தந்தை எந்த
அழகான
உடல்
கொடுத்திருந்தாரோ
அதை
எங்கே
இழந்தீர்கள்.
ஒருவேளை
பணத்தையும்
சேர்த்து வைக்கிறீர்கள்
என்றால்,
கூட
அது
கறுப்பு
பணம்.
தூய்மையான
பணம்
செல்வம்
எங்கே
சென்று
விட்டது?
ஒரு வேளை
இருக்கிறது
என்றாலும்
கூட
உபயோகமற்றது.
சொல்வதற்கு
கோடீஸ்வரன்
ஆனால்
காண்பிக்க
முடியுமா?
எனவே
அனைத்தையும்
இழந்து
விட்டீர்கள்,
இருந்தும்
ஒருவேளை
புத்தி
அதன்
மேல்
செல்கிறது
என்றால் என்னவென்று
கூறுவோம்?
புத்திசாலி என்று கூறுவோமா?
எனவே
தன்னுடைய
இந்த
சிரேஷ்ட
உலகத்தை எப்பொழுதும்
நினைவில்
வையுங்கள்.
இந்த
உலகத்தின்
இந்த
வாழ்க்கையின்
விசேஷங்களை
எப்பொழுதும் நினைவில்
வைத்து
சக்திசாலியாக ஆகுங்கள்.
நினைவு
சொரூபமாக
ஆனீர்கள்
என்றால்
பற்றுதலை
வென்றவராக இயல்பாகவே
ஆகிவிடுவீர்கள்.
பழைய
உலகத்தின்
எந்தவொரு
பொருளையும்
புத்தியால்
சுவீகாரம்
செய்யாதீர்கள்.
அவ்வாறு
ஏற்றுக்
கொள்வீர்கள்
என்றால்,
ஏமாற்றம்
அடைவீர்கள்!
ஏமாற்றம்
அடைவது
என்ற,துக்கம்
அடைவது.
அப்படியானால்
எங்கு
இருக்க
வேண்டும்?
சிரேஷ்ட
உலகத்திலா
அல்லது
பழைய
உலகத்திலா?
இந்த
உலகம் என்ன
மற்றும்
அந்த
உலகம்
என்ன
என்பதை
எப்பொழுதும்
மனதில்
தெளிவாக
வெளிப்படும்
ரூபத்தில் வையுங்கள்.
நல்லது.
அந்த
மாதிரி
சின்னஞ்சிறு
மிகவும்
பிரியமான
உலகத்தில்
இருக்கும்
விசேஷ
பிராமண
ஆத்மாக்களுக்கு,
எப்பொழுதும்
சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும்
ஆத்மாக்களுக்கு,
எப்பொழுதும்
ஊஞ்சலில் ஆடிக்
கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கும்,
எப்பொழுதும்
விலகியிருக்கும்
மற்றும்
பரமாத்மாவின்
அன்பிற்குரிய
குழந்தைகளுக்கு
பரமாத்மாவின் அன்பு
நினைவுகள்
மற்றும்
நமஸ்காரம்.
சேவாதாரி
(டீச்சர்)
சகோதரிகளுடன்
சந்திப்பு
-
சேவாதாரி
என்றால்
தியாகி,
தபஸ்வி
ஆத்மாக்கள்!
சேவையின்
பலன்
என்பது
எப்பொழுதும்
கிடைக்கவே செய்யும்.
ஆனால்
தியாகம்
மற்றும்
தபஸ்யா
மூலம்
எப்பொழுதும்
முன்னேறி
சென்று
கொண்டே
இருப்பீர்கள்.
எப்பொழுதும்
தன்னை
விசேஷ
ஆத்மாக்கள்
என்று
புரிந்து
கொண்டு,
விசேஷ
சேவை
செய்வதை
நிரூபித்துக் காண்பிக்க
வேண்டும்.
இந்த
லட்சியத்தை
வைத்துக்
கொள்ளுங்கள்.
லட்சியம்
எவ்வளவு
உறுதியாக
இருக்கிறதோ அந்த
அளவு
கட்டிடம்
நன்றாக
உருவாகும்.
எனவே
எப்பொழுதும்
சேவாதாரி
என்று
புரிந்து
கொண்டு முன்னேறிச்
செல்லுங்கள்.
எப்படி
தந்தை
உங்களை
தேர்ந்தெடுத்திருக்கிறாரோ
அதே
போல்
நீங்கள்
பிரஜைகளைத் தேர்ந்தெடுங்கள்.
எப்பொழுதும்
நீங்கள்
தடையற்றவராகி
சேவையையும்
தடையற்றதாக
ஆக்கிக்
கொண்டே இருங்கள்.
சேவையோ
அனைவரும்
செய்கிறார்கள்.
ஆனால்
தடையற்ற
சேவையாக
இருக்க
வேண்டும்.
இதில் தான்
வரிசை
எண்
கிடைக்கிறது.
நீங்கள்
எந்த
இடத்தில்
இருந்தாலும்
அங்கு
ஒவ்வொரு
மாணவனும் தடையற்றவராக
இருக்கட்டும்.
தடையின்
அலைகள்
இருக்க
வேண்டாம்.
சக்திசாலியான சூழல்
இருக்கட்டும்.
இதைத்
தான்
தடையற்ற
ஆத்மா
என்று
கூறுவோம்.
நினைவின்
சூழ்நிலை
அந்த
மாதிரி
தடையே
வர
முடியாத அளவிற்கு
இருக்க
வேண்டும்
என்ற
இந்த
லட்சியத்தைத்
தான்
வைத்துக்
கொள்ளுங்கள்.
கோட்டை
இருக்கிறது என்றால்,
எதிரில்
வர
முடியாது.
எனவே
தடையற்றவராகி
தடையற்ற
சேவாதாரியாக
ஆகுங்கள்.
நல்லது.
தனித்தனியான
குரூப்களுடன்
சந்திப்பு
-
சேவை
செய்யுங்கள்
மற்றும்
திருப்தியை
அடையுங்கள்.
சேவை
மட்டும்
செய்யக்
கூடாது.
ஆனால் அந்த
மாதிரி
சேவை
செய்யுங்கள்.
அதில்
திருப்தி
இருக்க
வேண்டும்.
அனைவரின்
ஆசீர்வாதங்கள்
கிடைக்க வேண்டும்.
ஆசீர்வாதங்கள்
கொடுக்கும்
சேவை
சுலபமாக
வெற்றியையும்
கொடுக்கும்.
திட்டப்படி
சேவையோ செய்யத்
தான்
வேண்டும்,
மேலும்
அதிகமாக
செய்யுங்கள்.
குஷியோடு,
ஊக்கத்தோடு
செய்யுங்கள்.
ஆனால் என்ன
சேவை
செய்தோமோ
அதில்
ஆசீர்வாதங்கள்
கிடைத்தனவா
என்ற
கவனம்
வையுங்கள்.
அல்லது
உழைக்க மட்டும்
செய்தீர்களா?
எங்கு
ஆசீர்வாதங்கள்
இருக்குமோ
அங்கு
கடின
உழைப்பு
இருக்காது.
எனவே
யாருடைய தொடர்பில்
வந்தாலும்
அவருடைய
ஆசீர்வாதங்களைப்
பெற்றுக்
கொண்டே
இருக்க
வேண்டும்
என்ற
இந்த லட்சியத்தை
வைத்துக்
கொள்ளுங்கள்.
எப்பொழுது
அனைவரின்
ஆசீர்வாதங்களை
பெறுவீர்களோ
அப்பொழுது தான்
அரைக்
கல்பம்
உங்களுடைய
விக்ரகங்கள்,
படங்கள்
ஆசீர்வாதங்கள்
கொடுத்துக்
கொண்டே
இருக்கும்.
உங்களுடைய
விக்ரகங்களிடமிருந்து
ஆசீர்வாதங்கள்
பெற
வருகிறார்கள்
இல்லையா?
தேவி
அல்லது
தேவதையிடம் ஆசீர்வாதம்
பெற
செல்கிறார்கள்
இல்லையா?
அப்படி
இப்பொழுது
அனைவரின்
ஆசீர்வாதங்களைப்
சேமிப்பு செய்கிறீர்கள்
அதனால்
விக்ரகங்கள்
மூலமாகவும்
கொடுத்துக்
கொண்டே
இருக்கிறீர்கள்.
நிகழ்ச்சி
செய்யுங்கள்,
பேரணி
வையுங்கள்.
. .
வி.ஐ.பி-
க்கள்,
ஐ.பி-க்களின்
சேவை
செய்யுங்கள்,
அனைத்தையும்
செய்யுங்கள்
ஆனால் ஆசீர்வாதங்கள்
கொடுக்கும்
சேவை
செய்யுங்கள்,
(ஆசீர்வாதங்கள்
பெறுவதற்கான
வழி
என்ன).
சரிங்க..
அப்படியே செய்கிறேன்
என்ற
பாடத்தை
உறுதி
படுத்துங்கள்.
ஒருபொழுதும்
யாரிடமும்
முடியாது
என்று
கூறி
தைரியமற்றவராக ஆகாதீர்கள்.
உதாரணமாக
ஒருவேளை
யாராவது
தவறு
செய்தால்
கூட
அவரிடம்
நேரடியாக
தவறு
என்று கூறாதீர்கள்.
முதலில் அவருக்கு
ஆறுதல்
கொடுங்கள்,
தைரியம்
கொடுங்கள்.
அவரை
சம்மதிக்க
வைத்து
பிறகு புரிய
வைத்தீர்கள்
என்றால்
அவர்
புரிந்து
கொள்வார்.
முதலிலேயே தவறு
தவறு
என்று
கூறினீர்கள்
என்றால்,
அவரிடமிருந்த
கொஞ்ச
தைரியமும்
அகன்று
விடும்.
தவறும்
நடக்கலாம்
ஆனால்
தவறை
தவறு
என்று கூறினீர்கள்
என்றால்
அவர்
தன்னை
தவறு
என்று
ஒருபொழுதும்
புரிந்து
கொள்ள
மாட்டார்.
எனவே
முதலில் அவரை
சரி
ஆமாம்
என்று
சம்மதிக்க
வையுங்கள்,
தைரியத்தை
அதிகப்படுத்துங்கள்,
பிறகு
அவரே
தீர்மானித்துக் கொள்வார்.
மரியாதை
கொடுங்கள்.
இந்த
விதியை
மட்டும்
கடைப்பிடியுங்கள்.
தவறு
நடந்து
விட்டாலும்
கூட முதலில் நல்லது
என்று
கூறுங்கள்,
முதலில் அவருக்கு
தைரியம்
வரட்டும்.
யாராவது
கீழே
விழுந்து
விட்டார் என்றால்
அவரை
தள்ளி
விடுவீர்களா
அல்லது
தூக்கி
விடுவீர்களா?
அவருக்கு
ஆதரவு
கொடுத்து
முதலில் நிற்க வையுங்கள்.
இதைத்
தான்
பரோபகாரம்
செய்வது
என்று
கூறுவது.
சகயோகியாக
ஆகுபவர்களை
சகயோகியாக ஆக்கிக்
கொண்டே
இருங்கள்.
நீங்களும்
முன்னுக்கு
நானும்
முன்னுக்கு.
என்று
சேர்ந்தே
சென்று
கொண்டிருங்கள்.
கைகோர்த்து
சென்றீர்கள்
என்றால்
வெற்றி
கிடைக்கும்.
மேலும்
திருப்தியின்
ஆசீர்வாதங்கள்
கிடைக்கும்.
அந்த மாதிரி
ஆசீர்வாதங்கள்
பெறுவதில்
மகானாக
ஆனீர்கள்
என்றால்
சேவையில்
இயல்பாகவே
மகான்
ஆகிவிடுவீர்கள்.
சேவாதாரிகளுடன்
சந்திப்பு
-
சேவை
செய்து
கொண்டே
எப்பொழுதும்
தன்னை
கர்மயோகி
நிலையில்
நிலைத்திருப்பதை
அனுபவம் செய்கிறீர்களா
அல்லது
காரியம்
செய்து
கொண்டே
நினைவு
குறைந்து
விடுகிறது,
மேலும்
காரியத்தில்
புத்தி அதிகமாக
இருக்கிறதா?
ஏனென்றால்
நினைவில்
இருந்து
காரியம்
செய்வதனால்
ஒருபொழுதும்
களைப்பு
இருக்காது.
நினைவில்
இருந்து
காரியம்
செய்பவர்கள்
காரியம்
செய்து
கொண்டே
எப்பொழுதும்
குஷியை
அனுபவம்
செய்வார்கள்.
கர்மயோகி
ஆகி
காரியம்
அதாவது
சேவை
செய்கிறீர்கள்
தான்
இல்லையா?
கர்மயோகியின்
பயிற்சி
உள்ளவர் எப்பொழுதுமே
ஒவ்வொரு
அடியிலும்
நிகழ்காலம்
மற்றும்
எதிர்காலத்தை
சிரேஷ்டமாக
ஆக்குகிறார்.
எதிர்கால கணக்கு
எப்பொழுதும்
நிரம்பியிருக்கிறது,
மேலும்
நிகழ்காலமும்
எப்பொழுதும்
சிரேஷ்டமாக
இருக்கிறது.
அந்த மாதிரி
கர்மயோகி
ஆகி,
சேவையின்
பங்கை
செய்கிறீர்களா?
மறந்தோ
விடுவதில்லையே?
மதுபன்னில்
சேவாதாரிகளாக இருக்கிறீர்கள்
என்றால்
மதுபன்
இயல்பாகவே
தந்தையின்
நினைவை
ஊட்டுகிறது.
அனைத்து
சக்திகளின்
பொக்கிஷங்களை
சேமித்திருக்கிறீர்கள்
இல்லையா?
எப்பொழுதும்
நிரம்பியிருக்கும்
அளவிற்கு
சேமிப்பு
செய்திருக்கிறீர்களா?
சங்கமயுகத்தில்
பேட்டரி
எப்பொழுதும்
சார்ஜ்
ஆகி
இருக்கிறது.
துவாபர்
யுகத்தில்
பேட்டரி
மந்தமாகிவிடுகிறது.
சங்கமயுகத்தில்
எப்பொழுதும்
நிரம்பியிருக்கிறது,
எப்பொழுதும்
சார்ஜ்
ஆகியிருக்கிறது.
மதுபன்னிற்கு
பேட்டரியை நிரப்புவதற்காக
வருவதில்லை,
கொண்டாடுவதற்காக
வருகிறீர்கள்.
தந்தை
மற்றும்
குழந்தைகளுக்கு
அன்பு
இருக்கிறது.
எனவே
சந்திப்பது,
கேட்பது
இது
தான்
சங்கமயுகத்தின்
கொண்டாட்டம்.
நல்லது.
இளைஞர்
பேரணியின்
வெற்றிக்காக
பாப்தாதாவின்
வரதானங்கள்
நிறைந்த
மகாவாக்கியங்கள்-
இளைஞர்
அணியை
நன்றாக
உருவாக்குங்கள்.
நீங்கள்
என்ன
செய்தாலும்
அதில்
திருப்தி
இருக்கட்டும்,
வெற்றி
இருக்கட்டும்.
மற்றபடி
சேவை
செய்வதற்காகத்
தான்
இந்த
வாழ்க்கையே
இருக்கிறது.
தன்னுடைய ஊக்கத்தோடு
ஒருவேளை
யாராவது
காரியம்
செய்கிறார்
என்றால்
அதற்கு
எந்த
தடையும்
இல்லை.
நிகழ்ச்சி இருக்கிறது
எனவே
செய்ய
வேண்டும்
என்பது
வேறு
ரூபம்
ஆகிவிடுகிறது.
ஆனால்
தன்னுடைய
ஊக்கம் உற்சாகத்துடன்
செய்ய
விரும்புகிறார்கள்
என்றால்
அதற்கு
எந்த
தடையும்
இல்லை.
எங்கு
சென்றாலும்
அங்கு யாரைச்
சந்தித்தாலும்,
யாரைப்
பார்த்தாலும்
சேவையே
தான்.
பேசுவது
மட்டும்
தான்
சேவை
ஆகிவிடாது.
ஆனால்
தன்னுடைய
முகம்
எப்பொழுதும்
மகிழ்ச்சி
நிறைந்ததாக
இருக்க
வேண்டும்.
ஆன்மீக
முகமும்
சேவை செய்கிறது.
ஊக்கம்
உற்சாகத்துடன்
மிகவும்
குஷியுடன்
ஆன்மீக
குஷியின்
ஜொலிப்பை காண்பித்துக்
கொண்டே முன்னேற
வேண்டும்
என்ற
இலட்சியத்தை
வையுங்கள்.
வலுக்கட்டாயமாக
மட்டும்
யாரும்
செய்யக்
கூடாது.
நிகழ்ச்சி
உருவாக்கப்பட்டு
இருக்கிறது
எனவே
செய்யத்
தான்
வேண்டும்
என்று
அப்படி
ஒரு
விஷயமும் இல்லை.
ஊக்கம்
உற்சாகத்துடன்
செய்தார்கள்
என்றால்
நல்லது.
ஒருவேளை
யாரிடமாவது
ஊக்கம்
இல்லை
என்றால்
அவர்
கட்டுப்பட்டவர்
அல்ல.
ஒரு
பாதகமும்
இல்லை.
எப்படி
இந்த
பொன்விழா
வரை
அனைத்து
இடங்களிலும்
சேவை
செய்ய
வேண்டும்
என்ற
இலட்சியம்
இருந்தது அப்படி
நடந்து
வருபவர்கள்
அவர்களுடைய
குரூப்பில்
வருவார்கள்
அதே
போல்
பேருந்து
மூலமாக
வருபவர்களும் இருக்கட்டும்.
ஒவ்வொரு
ஜோனிலிருந்து மற்றும்
ஒவ்வொரு
இடங்களிலிருந்தும் பேருந்து
மூலமாக
சேவை செய்து
கொண்டே
டில்லி வரை வந்து
சேர
முடியும்.
இரண்டு
விதமான
குரூப்பை
உருவாக்குங்கள்.
ஒன்று பேருந்து
மூலமாக
வரட்டும்,
சேவை
செய்து
கொண்டே
வரட்டும்
மற்றும்
இன்னொன்று
கால்நடையாக
வரட்டும்.
இரண்டு
ஆகிவிடும்.
செய்ய
முடியும்,
இளைஞர்கள்
தான்
இல்லையா?
அவர்களுக்கு
எங்காவது
சக்தியை ஈடுபடுத்தத்
தான்
வேண்டும்.
சேவையில்
சக்தி
ஈடுபடுகிறது
என்றால்
நல்லது
தான்.
இதில்
இரண்டு
பாவனைகளும் நிரூபணம்
ஆகிவிடும்.
சேவையும்
நிரூபணம்
ஆகிவிடும்.
மேலும்
பெயரும்
பாதயாத்திரை
என்று
வைத்திருக்கிறீர்கள்,
அதுவும்
நிரூபணம்
ஆகிவிடும்.
ஒவ்வொரு
மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள்
ஒருவேளை
அவர்களுடைய
(பாதயாத்திரி
கர்களுடைய)
நேர்காணல்
(மீடியா
மூலம்)
எடுப்பதற்கு
முன்பாகவே
ஏற்பாடு
செய்தீர்கள்
என்றால்,
தானாகவே செய்தி
பரவி
விடும்.
ஆனால்
ஆன்மீக
யாத்திரை
தென்பட
வேண்டும்,
பாதயாத்திரை
மட்டும்
தென்பட
வேண்டாம்.
ஆன்மீகத்
தன்மை
மற்றும்
குஷியின்
ஜொலிப்பு இருக்க
வேண்டும்.
இது
அவசியம்
தோன்ற
வேண்டும்.
அப்பொழுது
தான்
புதுமை
தென்படும்.
சாதாரணமாக
எப்படி
மற்றவர்களின்
யாத்திரை
வருகிறது,
அது
போன்றே
இதுவும்
தென்பட
வேண்டாம்
ஆனால்
இவர்கள்
இரட்டை
யாத்திரை
செய்பவர்கள்.
நினைவு
யாத்திரை
செய்பவர் களாகவும்
இருக்கிறார்கள்,
பாதயாத்திரை
செய்பவர்களாகவும்
இருக்கிறார்கள்.
இரட்டை
யாத்திரையின்
பிரபாவம் முகம்
மூலம்
தென்பட்டது
என்றால்
நல்லது.
உலகின்
அரசியல்
தலைவர்களுக்காக
அவ்யக்த
பாப்தாதாவின்
இனிமையான
செய்தி
-
உலகின்
ஒவ்வொரு
அரசியல்
தலைவரும்
தன்னுடைய
தேசத்தை
மற்றும்
தேசவாசிகளை
வளர்ச்சியின் பக்கம்
எடுத்துச்
செல்வதின்
சுபபாவனை,
சுபவிருப்பங்களோடு
அவரவர்களின்
காரியத்தில்
ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆனால்
பாவனை
மிகவும்
சிரேஷ்டமானது.
ஆனால்
பிரத்யக்ஷ
எடுத்துக்காட்டுகள்
எவ்வளவு
விரும்புகிறார்களோ அந்த
அளவு
இருப்பதில்லை
-
இது
ஏன்?
ஏனென்றால்
இன்றைய
மக்கள்
மற்றும்
அதிகமான
தலைவர்களின் மனதின்
பாவனைகள்
சேவை
பாவனை,
அன்பு
பாவனைக்குப்
பதிலாக
சுயநலமான
பாவனை
பொறாமையின் பாவனையில்
மாறிவிட்டது.
எனவே
இந்த
அஸ்திவாரத்தை
அகற்றுவதற்காக
இயற்கையின்
சக்தி,
அறிவியல்
சக்தி உலக
ஞானத்தின்
சக்தி,
இராஜ்ய
அதிகாரத்தின்
சக்தி
முலமாகவோ
அவர்கள்
முயற்சி
செய்தார்கள்.
ஆனால் உண்மையான
சாதனம்
ஆன்மீக
சக்தி
ஆகும்.
அதன்
மூலம்
தான்
மனதின்
பாவனை
சுலபமாக
மாற
முடியும்.
அதன்
பக்கம்
கவனம்
குறைவாக
இருக்கிறது.
எனவே
மாறியிருக்கும்
பாவனைகளின்
விதை
அழிவதில்லை.
கொஞ்ச
காலத்திற்காக
உள்ளடங்கிவிடுகிறது.
ஆனால்
நேரத்திற்கு
ஏற்றபடி
இன்னும்
உக்கிரமான
ரூபத்தில்
பிரத்யக்ஷம் ஆகிவிடுகிறது.
எனவே
ஆன்மீக
தந்தையின்
ஆன்மீக
குழந்தைகள்
ஆத்மாக்களுக்காக
இந்த
செய்தி
–
எப்பொழுதும் தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
ஆத்மாவின்
தந்தையுடன்
சம்மந்தத்தை
இணைத்து
ஆத்மீக
சக்தியை
பெற்று தனது
மனதின்
தலைவராக
ஆகுங்கள்.
அப்பொழுது
தான்
அரசியல்
தலைவராகி
மற்றவர்களின்
மனதின்
பாவனை களை
மாற்ற
முடியும்.
உங்களுடைய
மனதின்
எண்ணம்
மற்றும்
மக்களின்
நடைமுறை
காரியம்
ஒன்றாக ஆகிவிடும்.
இருவர்களின்
சகயோகம்
மூலம்
வெற்றியின்
பிரத்யக்ஷ
எடுத்துக்காட்டு
அனுபவம்
ஆகும்.
தன்னை ஆளும்
அதிகாரி
தான்
எப்பொழுதும்
தகுதியான
அரசியல்
தலைவரை
ஆளும்
அதிகாரி
ஆக
முடியும்.
மேலும் சுயராஜ்ஜியம்
உங்களுடைய
ஆன்மீக
தந்தையின்
பிறப்புரிமை.
இந்த
பிறப்புரிமையின்
சக்தி
மூலம்
எப்பொழுதும் சரியாகச்
செய்யும்
சக்தியையும்
அனுபவம்
செய்வீர்கள்
மேலும்
வெற்றி
அடைவீர்கள்.
வரதானம்
:
குழுவில்
இருந்து
கொண்டே
இலட்சியம்
மற்றும்
இலட்சணத்தை
சமமாக ஆக்கக்கூடிய
எப்பொழுதும்
சக்திசாலி ஆத்மா ஆகுக.
குழுவில்
ஒவ்வொருவரையும்
பார்த்து
ஊக்கம்
உற்சாகமும்
வருகிறது
என்றால்
அலட்சியமும்
வருகிறது.
இவரும்
செய்கிறார்,
நானும்
செய்தேன்
என்றால்
என்ன
ஆகிவிட்டது
என்று
நினைக்கிறார்.
எனவே
குழுவில் சிரேஷ்டமாக
ஆவதற்காக
சகயோகத்தை
எடுத்துக்
கொள்ளுங்கள்.
ஒவ்வொரு
காரியம்
செய்வதற்கு
முன்பு
நான் என்னை
சம்பன்னம்
ஆக்கி,
ஒரு
எடுத்துக்காட்டாக
ஆக்க
வேண்டும்
என்ற
விசேஷ
கவனம்
மற்றும்
லட்சியம் இருக்கட்டும்.
நான்
செய்து
மற்றவர்களை
செய்விக்க
வேண்டும்.
பிறகு
அடிக்கடி
இந்த
லட்சியத்தை
வெளிக் கொணருங்கள்.
இலட்சியம்
மற்றும்
இலட்சணத்தை
ஒன்றாக
ஆக்கிக்
கொண்டே
இருந்தீர்கள்
என்றால்,
சக்திசாலி ஆகி விடுவீர்கள்.
சுலோகன்:
இறுதியில்
வேகமாக
செல்ல
வேண்டும்
என்றால்,
சாதாரண
மற்றும் வீணான
எண்ணங்களில்
நேரத்தை
இழக்காதீர்கள்.
ஓம்சாந்தி