29.01.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
தந்தையின்
ஸ்ரீமத்
உங்களுக்கு
21
பிறவிகளுக்கான
சுகம்
கொடுக்கிறது,
இந்த
அளவிற்கு
தனிப்பட்ட
வழியை
தந்தையைத்
தவிர
வேறு
யாரும்
கொடுக்க
முடியாது,
நீங்கள் ஸ்ரீமத்படி
நடந்து
கொண்டே
இருங்கள்.
கேள்வி:
தனக்குத்
தானே
இராஜ்ய
திலகம்
கொடுத்துக்
(இட்டுக்)
கொள்வதற்கான
எளிய
முயற்சி
என்ன?
பதில்:
1)
தனக்குத்
தானே
இராஜ்யதிலகம்
கொடுத்துக்
(இட்டுக்)
கொள்வதற்கு
தந்தையிடமிருந்து
என்ன போதனைகள்
கிடைக்கிறதோ
அதன்படி
நல்ல
முறையில்
நடந்து
கொள்ள
வேண்டும்,
இதில்
ஆசிர்வாதம்
அல்லது கருணைக்கான
விசயம்
கிடையாது.
2)
தந்தையைப்
பின்பற்றுங்கள்,
மற்றவர்களைப்
பார்க்காதீர்கள்,
மன்மனாபவ,
இதன் மூலம்
தனக்குத்
தானே
திலகம்
கிடைத்து
விடுகிறது.
படிப்பு
மற்றும்
நினைவு
யாத்திரையின்
மூலம்
தான்
நீங்கள் யாசிப்பவரிலிருந்து
(பிச்சைக்காரன்)
இளவரசர்
ஆகிறீர்கள்.
பாட்டு:
ஓம்
நமச்
சிவாய
.......
ஓம்
சாந்தி.
எப்பொழுது
பாபா
மற்றும்
தாதா
ஓம்
சாந்தி
என்று
கூறுகின்றார்களோ
அப்பொழுது
இரண்டு
முறை
கூற
முடியும்.
ஏனெனில்
இருவரும்
ஒருவரிடமே
இருக்கின்றனர்.
ஒருவர்
அவ்யக்தமானவர்,
மற்றொருவர் வியக்தமானவர்,
இருவரும்
ஒன்றாக
இருக்கின்றனர்.
இருவரின்
ஓசைகளும்
ஒன்றாகவே
இருக்கிறது.
தனித்தனியாகவும் இருக்கும்.
இது
ஒரு
ஆச்சரியமானதாகும்.
பரம்பிதா
பரமாத்மா
இவரது
சரீரத்தில்
அமர்ந்து
ஞானம்
கூறுகின்றார் என்பது
உலகத்தினர்
யாருக்கும்
தெரியாது.
இது
எங்கும்
எழுதப்படவும்
இல்லை.
தந்தை
கல்பத்திற்கும்
முன்பும்
கூறியிருந்தார்,
இப்பொழுதும்
கூறுகின்றார்
-
நான்
இவரது
சரீரத்தில்
பல
பிறவிகளின்
கடைசியில்
பிரவேசம்
செய்கின்றேன்,
இவரை
ஆதாரமாக
எடுத்துக்
கொள்கிறேன்.
கீதையில்
சில
கூற்றுகள்
உண்மையானதாகவும்
இருக்கிறது.
நான்
பல பிறவிகளின்
கடைசியில்,
அதுவும்
இவர்
வானபிரஸ்த
நிலையில்
இருக்கும்
பொழுது
பிரவேசம்
செய்கிறேன்
என்பது உண்மையான
வார்த்தையாகும்.
இவருக்காக
இவ்வாறு
கூறுவது
சரியானது
ஆகும்.
சத்யுகத்தின்
முதன்
முதலில் பிறப்பும்
இவருடையது
(பிரம்மா
பாபா)
ஆகும்.
பிறகு
கடைசியில்
வானபிரஸ்த
நிலையில்
இருக்கின்றார்,
அவரிடம் தான்
தந்தை
பிரவேசம்
செய்கின்றார்.
ஆக
இவருக்குத்
தான்
கூறுகின்றார்
-
நான்
எத்தனை
பிறப்புகள்
எடுக்கிறேன்?
என்பதை
இவர்
அறியவில்லை.
சாஸ்திரங்களில்
84
இலட்சம்
பிறப்புகள்
என்று
எழுதி
விட்டனர்.
இவையனைத்தும் பக்திமார்க்கமாகும்.
இதைத்
தான்
பக்தியின்
வழிமுறை
(கலாச்சாரம்)
என்று
கூறப்படுகிறது.
ஞானக்காண்டம்
தனிப்பட்டது,
பக்திகாண்டம்
தனிப்பட்டது.
பக்தி
செய்து
செய்து
கீழ்
இறங்கியே
வந்தீர்கள்.
இந்த
ஞானம்
ஒரே
ஒருமுறை
தான் கிடைக்கிறது.
தந்தை
ஒரே
ஒருமுறை
அனைவருக்கும்
சத்கதியை
அளிக்க
வருகின்றார்.
பாபா
வந்து
ஒரே
ஒரு
முறை எதிர்காலத்தின்
பிராப்தியை
உருவாக்குகின்றார்.
எதிர்கால
புது
உலகிற்காகத்
தான்
நீங்கள்
படிக்கிறீர்கள்.
புது
இராஜ்யத்தை ஸ்தாபனை
செய்வதற்காகவே
தந்தை
வருகின்றார்.
அதனால்
தான்
இது
இராஜயோகம்
என்று
கூறப்படுகிறது.
இதற்கு மிகுந்த
மகத்துவம்
இருக்கிறது.
பாரதத்தின்
பழமையான
இராஜயோகத்தை
யாராவது
கற்றுக்
கொடுக்க
வேண்டும் என்று
விரும்புகின்றனர்,
ஆனால்
இன்றைய
நாட்களில்
இந்த
சந்நியாசிகள்
வெளி
நாடுகளுக்குச்
சென்று
கூறுகின்றனர்
-
நாங்கள்
பழமையான
இராஜயோகம்
கற்பிக்க
வந்திருக்கிறோம்
என்று.
ஆக
நாமும்
கற்றுக்
கொள்ள
வேண்டும்
என்று அவர்கள்
நினைக்கின்றனர்.
ஏனெனில்
யோகத்தின்
மூலம்
தான்
சொர்க்கம்
ஸ்தாபனை
ஆகியிருந்தது
என்பதைப் புரிந்திருக்கின்றனர்.
தந்தை
புரிய
வைக்கின்றார்
-
யோக
பலத்தின்
மூலம்
நீங்கள்
சொர்க்கத்திற்கு
எஜமானர்களாக ஆகிறீர்கள்.
தந்தை
தான்
சொர்க்கத்தை
ஸ்தாபனை
செய்திருந்தார்.
எப்படி
ஸ்தாபனை
செய்திருந்தார்?
என்பதை அறியவில்லை.
இந்த
இராஜயோகத்தை
ஆன்மீகத்
தந்தை
தான்
கற்றுக்கொடுக்கிறார்.
எந்த
உலகாய
மனிதர்களும் கற்றுக்
கொடுக்க
முடியாது.
இன்றைய
நாட்களில்
கலப்படம்,
இலஞ்சம்
அதிகமாக
இருக்கிறது
அல்லவா!
ஆகையால் தந்தை
கூறியிருக்கின்றார்
-
நான்
பதீதமானவர்களை
பாவனம்
ஆக்கக்
கூடியவன்.
பிறகு
பதீதமாக
ஆக்கக்
கூடியவரும் அவசியம்
யாராவது
இருக்கக்
கூடும்.
இப்பொழுது
நீங்கள்
முடிவெடுங்கள்
-
உண்மையில்
இவ்வாறு
இருக்கிறது அல்லவா?
நான்
வந்து
தான்
அனைத்து
வேதம்,
சாஸ்திரங்களின்
சாரத்தைக்
கூறுகின்றேன்.
ஞானத்தின்
மூலம் உங்களுக்கு
21
பிறவிகளுக்கான
சுகம்
கிடைக்கிறது.
பக்தி
மார்க்கத்தில்
அல்பகால
துளியளவு
சுகமாகும்,
இது
21
பிறவிகளுக்கான
சுகம்
ஆகும்,
இதனை
தந்தை
தான்
கொடுக்கின்றார்.
தந்தை
உங்களுக்கு
சத்கதி
கொடுப்பதற்காக என்ன
ஸ்ரீமத்
கொடுக்கின்றாரோ
அது
அனைத்தையும்
விட
மிக
தனிப்பட்டது
ஆகும்.
இந்த
தந்தை
அனைவரின் உள்ளத்தையும்
கொள்ளை
கொள்ளக்
கூடியவர்
ஆவார்.
எவ்வாறு
அந்த
ஜட
தில்வாலா
கோயில்
இருக்கிறதோ
அதே போன்று
இது
சைத்தன்ய
தில்வாலா
கோயில்
ஆகும்.
உங்களது
மிகச்
சரியான
நடத்தைகளின்
சிலைகள்
தான் உருவாக்கப்
பட்டிருக்கிறது.
இந்த
நேரத்தில்
உங்களது
நடத்தைகள்
மாறிக்
கொண்டிருக்கிறது.
அனைவருக்கும்
சத்கதி அளிக்கும்
தில்வாலா,
அனைவரின்
துக்கத்தையும்
நீக்கி
சுகம்
கொடுக்கும்
தில்வாலா
தந்தை
கிடைத்திருக்கின்றார்.
எவ்வளவு
உயர்வாகப்
பாடப்பட்டிருக்கிறது!
உயர்ந்ததிலும்
உயர்ந்தவர்
பகவான்
சிவனின்
மகிமையாகும்.
சித்திரங்களின் சங்கர்
போன்றோரின்
முன்னால்
கூட
சிவனின்
சித்திரத்தையும்
காண்பித்திருக்கின்றனர்.
உண்மையில்
தேவதைகளின் முன்
சிவனின்
சித்திரம்
வைக்கக்
கூடாது.
அவர்கள்
பக்தி
செய்வது
கிடையாது.
தேவதைகள்
பக்தி
செய்வது கிடையாது,
சந்நியாசிகளும்
செய்வது
கிடையாது.
அவர்கள்
பிரம்ம
ஞானி,
தத்துவ
ஞானிகள்.
எவ்வாறு
இந்த
ஆகாயம் ஒரு
தத்துவமோ
அதே
போன்று
அந்த
பிரம்மமும்
தத்துவமாகும்.
அவர்கள்
தந்தையை
நினைவு
செய்வதே கிடையாது,
அவர்களுக்கு
இந்த
மகா
மந்திரமும்
கிடைப்பது
கிடையாது.
இந்த
மகா
மந்திரத்தை
தந்தை
இந்த
சங்கமயுகத்தில்
வந்து
தான்
கொடுக்கின்றார்.
அனைவருக்கும்
சத்கதி
கொடுக்கும்
வள்ளல்
ஒரே
ஒரு
முறை
வந்து மன்மனாபவ
என்ற
மந்திரம்
கொடுக்கின்றார்.
தந்தை
கூறுகின்றார்
-
குழந்தைகளே!
தேகம்
மற்றும்
தேகத்தின் அனைத்து
தர்மத்தையும்
தியாகம்
செய்து
தன்னை
அசரீரி
ஆத்மா
என்று
புரிந்து
கொண்டு
தந்தையாகிய
என்னை நினைவு
செய்யுங்கள்.
எவ்வளவு
எளிதாகப்
புரிய
வைக்கின்றார்!
இராவண
இராஜ்யத்தின்
காரணத்தினால்
நீங்கள் அனைவரும்
தேக
அபிமானிகளாக
ஆகியிருக்கிறீர்கள்.
இப்பொழுது
தந்தை
உங்களை
ஆத்ம
அபிமானிகளாக ஆக்குகின்றார்.
தன்னை
ஆத்மா
என்று
உணர்ந்து
தந்தையாகிய
என்னை
நினைவு
செய்து
கொண்டேயிருந்தால் ஆத்மாவில்
பதிந்திருக்கும்
கறைகள்
நீங்கிவிடும்.
சதோ
பிரதானத்திலிருந்து
சதோ
ஆகின்ற
பொழுது
கலைகள் குறைந்து
விடுகிறது
அல்லவா!
தங்கத்திற்கும்
கேரட்
(என்ற
அளவு
கோல்)
இருக்கிறது
அல்லவா!
இப்பொழுது
இந்த கலியுகக்
கடைசியில்
தங்கம்
பார்க்கவும்
முடிவதுக்
கிடையாது,
சத்யுகத்தில்
தங்க
மாளிகைகள்
இருக்கும்.
எவ்வளவு இரவு
பகல்
வித்தியாசம்
இருக்கிறது!
அதன்
பெயரே
தங்கயுக
உலகம்.
அங்கு
கற்கள்,
செங்கல்
போன்றவைகளுக்கு வேலையே
கிடையாது.
கட்டிடம்
உருவாகிறது
எனில்
அதில்
தங்கம்
வெள்ளியைத்
தவிர
வேறு
எந்த
அசுத்தங்களும் இருக்காது.
அங்கு
விஞ்ஞானத்தின்
மூலம்
அதிக
சுகம்
கிடைக்கும்.
இதுவும்
நாடகத்தில்
உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த
நேரத்தில்
விஞ்ஞானத்தின்
கர்வம்
இருக்கிறது,
சத்யுகத்தில்
கர்வம்
என்று
கூறமாட்டோம்.
அங்கு
விஞ்ஞானத்தின் மூலம்
உங்களுக்கு
சுகம்
கிடைக்கும்.
இங்கு
அல்பகால
சுகம்,
பிறகு
இதன்
மூலமும்
அளவற்ற
துக்கமும்
ஏற்படுகிறது.
அணுகுண்டு
போன்றவைகள்
விநாசத்திற்காகவே
உருவாக்கிக்
கொண்டிருக்கின்றனர்.
அணுகுண்டு
தயாரிப்பதற்கு மற்றவர்களுக்கு
தடையிடுகின்றனர்,
பிறகு
தான்
உருவாக்கிக்
கொண்டே
இருக்கின்றனர்.
இந்த
அணுகுண்டின்
மூலம் நமக்குத்
தான்
மரணம்
ஏற்படும்
என்பதையும்
புரிந்திருக்கின்றனர்.
ஆனால்
யார்
தூண்டுதல்
கொடுக்
கின்றனர்?
எங்களால்
உருவாக்காமல்
இருக்க
முடியவில்லை.
அவசியம்
உருவாக்கியே
ஆக
வேண்டும்.
விநாசமும்
நாடகத்தில் பதிவாகியிருக்கிறது.
எவ்வளவு
தான்
அமைதிப்பரிசு
யாருக்காவது
கொடுக்கட்டும்,
ஆனால்
அமைதியை
ஸ்தாபனை செய்யக்
கூடியவர்
ஒரே
ஒரு
தந்தை
மட்டுமே.
அமைதியின்
கடலான
தந்தை
அமைதி,
சுகம்,
தூய்மைக்கான
ஆஸ்தி கொடுக்கின்றார்.
சத்யுகத்தில்
எல்லையற்ற
செல்வம்
இருக்கும்.
அங்கு
பாலாறு
ஓடும்.
விஷ்ணுவை
பாற்கடலில்
காண்பிக் கின்றனர்.
இது
ஒப்பிட்டப்படுகிறது.
பாற்கடல்
எப்படி
இருக்கிறது!
இந்த
விஷக்கடல்
எப்படி
இருக்கிறது!
பக்தி மார்க்கத்தில்
குளம்
போன்று
உருவாக்கி
அதில்
விஷ்ணுவின்
கற்சிலையைப்
படுக்க
வைத்து
விடுகின்றனர்.
பக்தியில் எவ்வளவு
செலவு
செய்கின்றனர்!
நேரத்தை
எவ்வளவு
வீணாக்குகின்றனர்!
எவ்வளவு
செல்வத்தை
வீணாக்குகின்றனர்!
தேவிகளின்
மூர்த்திகளை
எவ்வளவு
செலவு
செய்து
உருவாக்குகின்றனர்,
பிறகு
சமுத்திரத்தில்
கரைத்து
விடுகின்றனர் எனில்
செல்வம்
வீண்
ஆகிவிடுகிறது
அல்லவா!
இது
பொம்மை
விளையாட்டு
ஆகும்.
யாருடைய
சரித்திரமும் யாருக்கும்
தெரியாது.
நீங்கள்
இப்பொழுது
எந்த
கோயிலுக்குச்
சென்றாலும்
ஒவ்வொருவரின்
சரித்திரத்தையும்
நீங்கள் அறிவீர்கள்.
குழந்தைகள்
எங்கு
வேண்டுமென்றாலும்
செல்லலாம்,
தடை
கிடையாது.
முன்பு
அறிவில்லாமல்
சென்று வந்தோம்,
இப்பொழுது
புத்திசாலிகளாகி
செல்கிறீர்கள்.
நாம்
இவர்களது
84
பிறவிகளைப்
பற்றி
அறிவோம்
என்று
நீங்கள் கூறுவீர்கள்.
பாரதவாசிகளுக்கு
கிருஷ்ணரின்
பிறப்பு
பற்றியும்
தெரியாது.
உங்களது
புத்தியில்
இந்த
முழு
ஞானம் இருக்கிறது.
ஞானம்
தான்
வருமானத்திற்கு
ஆதாரமாகும்.
வேதங்கள்,
சாஸ்திரங்களில்
எந்த
இலட்சியமும்,
குறிக்கோளும் கிடையாது.
பள்ளியில்
எப்பொழுதும்
இலட்சியம்,
குறிக்கோள்
இருக்கும்.
இந்தப்
படிப்பின்
மூலம்
நீங்கள்
எவ்வளவு செல்வந்தர்களாக
ஆகிறீர்கள்!
ஞானத்தின்
மூலம்
சத்கதி
ஏற்படுகிறது.
இந்த
ஞானத்தின்
மூலம்
நீங்கள்
செல்வந்தர்களாக
ஆகிறீர்கள்.
நீங்கள் எந்த
கோயிலுக்குச்
சென்றாலும்
உடனேயே
புரிந்து
கொள்வீர்கள்
-
இது
யாருடைய
நினைவுச்
சின்னமாகும்.
தில்வாலா கோயில்
இருக்கிறது,
அது
ஜடமானது,
இது
சைத்தன்யமானது.
இங்கு
எவ்வாறு
மரம்
காண்பிக்கப்பட்டிருக்கிறதோ அதே
போன்று
கோயிலும்
உருவாக்கப்பட்டிருக்கிறது.
கீழே
தபஸ்யாவில்
அமர்ந்திருக்
கின்றனர்,
மேலே
கூரையில் முழு
சொர்க்கமும்
இருக்கிறது.
அதிக
செலவில்
உருவாக்கப்பட்டிருக்கிறது.
இங்கு
எதுவும்
கிடையாது.
பாரதம்
100
சதவிகிதம்
செல்வமிகுந்து,
பாவனமாக
இருந்தது.
இப்பொழுது
பாரதம்
100
சதவிகிதம்
செல்வமற்றதாக,
பதீதமாக ஆகிவிட்டது.
ஏனெனில்
இங்கு
அனைவரும்
விகாரத்தின்
மூலம்
உருவாகின்றனர்.
அங்கு
அசுத்தத்திற்கான
விசயம் இருக்காது.
கருட
புராணத்தில்
புல்லரிக்கும்
விசயங்கள்
ஏன்
எழுதப்பட்டிருக்கிறது,
அதனால்
மனிதர்கள்
சிறிது விழிப்படைய
வேண்டும்
என்பதற்காக
ஆனால்
நாடகத்தில்
மனிதர்கள்
விழிப்படையவே
இல்லை.
இப்பொழுது ஈஸ்வரிய
ஸ்தாபனை
ஆகிக்
கொண்டிருக்கிறது.
ஈஸ்வரன்
தான்
சொர்க்கம்
ஸ்தாபனை
செய்வார்
அல்லவா!
அவர்
தான் சொர்க்கத்தை
ஸ்தாபனை
செய்யும்
தந்தை
என்று
கூறப்படுகின்றார்.
அங்கு
படைகள்
சண்டையிட்டுக்
கொள்வது இராஜா
இராணிக்காக!
இங்கு
நீங்கள்
மாயாவை
வெல்கிறீர்கள்
தனக்காக!
எவ்வளவு
செய்கிறீர்களோ
அவ்வளவு அடைவீர்கள்.
நீங்கள்
ஒவ்வொருவரும்
தனது
உடல்,
மனம்,
பொருளை
பாரதத்தை
சொர்க்கமாக்குவதற்கு
செலவு செய்ய
வேண்டும்.
எவ்வளவு
செய்வீர்களோ
அவ்வளவு
உயர்ந்த
பதவி
அடைவீர்கள்.
இங்கு
இருக்கப்
போவது எதுவும்
கிடையாது.
இப்போதைய
நிலைக்குத்
தான்
பாடப்பட்டிருக்கிறது
-
சிலருடைய
செல்வம்
மண்ணில்
போகும்....
இப்பொழுது
தந்தை
வந்திருக்கின்றார்,
உங்களுக்கு
இராஜ்ய
பாக்கியம்
கொடுப்பதற்காக.
இப்பொழுது
தனது
உடல்,
மனம்,
பொருள்
அனைத்தையும்
இதில்
ஈடுபடுத்துங்கள்
என்று
கூறுகின்றார்.
இவர்
(பிரம்மா)
அனைத்தையும்
(தியாகம்)
அர்ப்பணம்
செய்துவிட்டார்
அல்லவா!
இது
தான்
மகாதானி
என்று
கூறப்படுகிறது.
அழியக்கூடிய
செல்வத்தை
தான் தானம்
செய்ய
வேண்டும்,
அழிவற்ற
செல்வத்தையும்
தானம்
செய்ய
வேண்டும்.
யார்
எவ்வளவு
தானம்
செய்கிறார்களோ.!
தானத்தில்
சிறந்து
விளங்குபவரை
பெரிய
நன்கொடையாளர்
என்று
கூறுவர்.
பெயர்
ஏற்படுகிறது
அல்லவா!
அவர்கள் மறைமுகமாக
ஈஸ்வரன்
பெயரில்
செய்கின்றனர்.
இராஜ்யம்
ஸ்தாபனை
ஆவது
கிடையாது.
இப்பொழுது
இராஜ்யம் ஸ்தாபனை
ஆகிறது.
ஆகையால்
முழுமையாக
நன்கொடையாளராக
ஆக
வேண்டும்.
நாம்
பலியாகி
விடுவோம்...
என்று பக்தியில்
பாடினீர்கள்.
இதில்
எந்த
செலவும்
கிடையாது.
அரசாங்கத்திற்கு
எவ்வளவு
செலவு
ஏற்படுகிறது!
இங்கு
நீங்கள் என்ன
செய்தாலும்
தனக்காகவே
செய்து
கொள்கிறீர்கள்,
பிறகு
8
மாலையில்
வந்தாலும்,
108-ல்
வந்தாலும்
அல்லது
16108 -
ல்
வந்தாலும்
சரியே.
தேர்ச்சி
பெற
வேண்டும்.
கர்மாதீத
நிலை
ஏற்படுமளவிற்கு
யோகத்தில்
சம்பாதியுங்கள்,
பிறகு
எந்த
மதிப்புடன்
தண்டணை
அடைய
மாட்டீர்கள்.
நீங்கள்
அனைவரும்
போர்
வீரர்கள்.
உங்களது
யுத்தம்
இராவணனுடன்,
எந்த
மனிதனிடத்திலும்
கிடையாது.
தேர்ச்சி
பெறாத
காரணத்தினால்
2
கலைகள்
குறைந்து
விட்டன.
திரேதாவை
இரண்டு
கலைகள்
குறைந்த
சொர்க்கம் என்று
கூறலாம்.
தந்தையை
முழுமையாகப்
பின்பற்ற
முயற்சி
செய்ய
வேண்டும்
அல்லவா!
இதற்கு
மனம்,
புத்தியினால் அர்ப்பணம்
ஆக
வேண்டும்.
பாபா,
இவையனைத்தும்
உங்களுடையது.
இதை
சேவையில்
பயன்படுத்துங்கள்
என்று தந்தை
கூறுவார்.
நான்
உங்களுக்கு
என்ன
வழி
கூறுகிறேனோ
அவ்வாறு
காரியங்கள்
செய்யுங்கள்.
பல்கலைக்கழகம் திறவுங்கள்,
சென்டர்
திறவுங்கள்.
பலருக்கு
நன்மை
ஏற்பட்டு
விடும்.
தந்தையை
நினைவு
செய்யுங்கள்
மற்றும் ஆஸ்தியை
எடுத்துக்
கொள்ளுங்கள்
என்ற
செய்தியைக்
கொடுக்க
வேண்டும்.
குழந்தைகளாகிய
நீங்கள்
தான்
தூதுவர்கள் என்று
கூறப்படுகிறீர்கள்.
தந்தை
பிரம்மாவின்
மூலம்
கூறுகின்றார்
-
என்னை
நினைவு
செய்தால்
உங்களது
விகர்மங்கள் அழிந்து
விடும்,
ஜீவன்முக்தி
கிடைத்து
விடும்
என்ற
செய்தியை
அனைவருக்கும்
கூறுங்கள்.
இப்பொழுது ஜீவன்பந்தனத்தில்
இருக்கிறீர்கள்,
பிறகு
ஜீவன்முக்தி
ஏற்படும்.
நான்
பாரதத்தில்
தான்
வருகிறேன்
என்று
தந்தை கூறுகின்றார்.
இந்த
நாடகம்
அழிவற்றதாகும்.
எப்பொழுது
உருவாக்கப்பட்டது?
எப்பொழுது
முடிவடையும்?
என்ற கேள்வி
எழவே
முடியாது.
இந்த
நாடகம்
அழிவற்று
நடைபெற்றுக்
கொண்டே
இருக்கிறது.
ஆத்மா
எவ்வளவு
சிறிய பிந்துவாக
இருக்கிறது!
இதில்
இந்த
அழிவற்ற
பாகம்
பதிவாகியிருக்கிறது.
எவ்வளவு
ஆழமான
விசயமாகும்!
நட்சத்திரம் போன்று
சிறிய
பிந்துவாகும்.
தாய்மார்களும்
இந்த
நெற்றியில்
திலகமிட்டுக்
கொள்கின்றனர்.
இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள்
முயற்சி
செய்து
தனக்குத்
தானே
இராஜ்ய
திலகம்
இட்டுக்
கொள்கிறீர்கள்.
நீங்கள்
தந்தையின்
போதனைகள் படி
நன்றாக
நடக்கிறீர்கள்
எனில்
உங்களுக்கு
நீங்களே
இராஜ்ய
திலகம்
இட்டுக்
கொள்கிறீர்கள்.
இதில்
ஆசிர்வாதம் அல்லது
கருணை
என்பது
கிடையாது.
நீங்களே
தனக்குத்
தானே
இராஜ்ய
திலகம்
கொடுத்துக்
கொள்கிறீர்கள்.
இது தான்
உண்மையான
இராஜ்ய
திலகமாகும்.
தந்தையைப்
பின்பற்றக்
கூடிய
முயற்சி
செய்ய
வேண்டும்.
மற்றவர்களைப் பார்க்கக்
கூடாது.
இது
தான்
மன்மனாபவ
ஆகும்,
இதன்
மூலம்
தானாகவே
திலகம்
கிடைத்து
விடுகிறது,
தந்தை கொடுப்பது
கிடையாது.
இது
இராஜயோகமாகும்.
நீங்கள்
யாசிப்பவரிலிருந்து
இளவரசராக
ஆகிறீர்கள்.
ஆக
எவ்வளவு நன்றாக
முயற்சி
செய்ய
வேண்டும்!
பிறகு
இவரையும்
பின்பற்ற
வேண்டும்.
இது
புரிந்து
கொள்ள
வேண்டிய
விசயம் அல்லவா!
படிப்பின்
மூலம்
வருமானம்
ஏற்படும்.
எந்த
அளவிற்கு
யோகா
அந்த
அளவிற்கு
தாரணை
ஏற்படும்.
யோகாவில்
தான்
முயற்சி
இருக்கிறது.
அதனால்
தான்
பாரதத்தின்
இராஜயோகம்
என்று
பாடப்பட்டிருக்கிறது.
மற்றபடி கங்கையில்
குளித்து
குளித்து
ஆயுளே
போனாலும்
பாவனம்
ஆக
முடியாது.
பக்தி
மார்க்கத்தில்
ஈஸ்வரனின்
பொருட்டு ஏழைகளுக்கு
கொடுக்கின்றனர்.
இங்கு
சுயம்
ஈஸ்வரன்
வந்து
ஏழைகளுக்குத்
தான்
உலக
இராஜ்யத்தை
கொடுக்கின்றார்.
ஏழைப்பங்காளன்
அல்லவா!
100
சதவிகிதம்
செல்வமிக்கதாக
இருந்த
பாரதம்,
இந்த
நேரத்தில்
100
சதவிகிதம்
செல்வமற்றதாக
ஆகிவிட்டது.
எப்பொழுதும்
ஏழைகளுக்குத்
தான்
தானம்
கொடுக்கப்படும்.
தந்தை
எவ்வளவு
உயர்ந்தவர்களாக ஆக்குகின்றார்!
இப்படிப்பட்ட
தந்தையை
நிந்தனை
செய்கின்றனர்.
தந்தை
கூறுகின்றார்
-
இவ்வாறு
எப்பொழுது நிந்தனை
செய்கிறீர்களோ
அப்பொழுது
நான்
வர
வேண்டியிருக்கிறது.
இதுவும்
நாடகத்தில்
உருவாக்கப்பட்டிருக்கிறது.
இவர்
தந்தையாகவும்
இருக்கின்றார்,
ஆசிரியராகவும்
இருக்கின்றார்.
சத்குரு
அகால்
(அழிவற்றவர்)
என்று
சீக்கியர்கள் கூறுகின்றனர்.
மற்றபடி
பக்தி
மார்க்கத்தின்
குருக்கள்
பலர்
உள்ளனர்.
அழிவற்றவருக்கு
இந்த
சிம்மாசனம்
தான் கிடைக்கிறது.
குழந்தைகளாகிய
நீங்களும்
சிம்மாசனத்தைப்
பயன்படுத்துகிறீர்கள்.
நான்
இவரிடத்தில்
பிரவேசம்
செய்து அனைவருக்கும்
நன்மை
செய்கிறேன்
என்று
கூறுகின்றார்.
இந்த
நேரத்தில்
இவரது
பாகம்
இதுவாகும்.
இது
மிகவும் புரிந்து
கொள்ள
வேண்டிய
விசயமாகும்.
புதியவர்கள்
யாரும்
புரிந்து
கொள்ள
முடியாது.
நல்லது.
இனிமையிலும்
இனிய,
தேடிக்
கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாய்
தந்தையுமான பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின்
நன்ஸ்தே.
தாரணைக்காண
முக்கிய
சாரம்:
1)
அழிவற்ற
ஞான
செல்வத்தை
தானம்
செய்து
மகாதானி
ஆக
வேண்டும்.
எவ்வாறு
பிரம்மா
பாபா
தன்னுடைய
அனைத்தையும்
இதில்
ஈடுபடுத்தினாரோ
அவ்வாறு
தந்தையைப்
பின்பற்றி
இராஜ்யத்தில் உயர்ந்த
பதவி
அடைய
வேண்டும்.
2)
தண்டனையிலிருந்து
தப்பித்துக்
கொள்வதற்கு
கர்மாதீத
நிலை
அடையுமளவிற்கு
யோக
வருமானம் செய்ய
வேண்டும்.
நிறைய
மதிப்பெண்
பெற்று
தேர்ச்சி
அடைவதற்கு
முழுமையிலும்
முழுமையான முயற்சி
செய்ய
வேண்டும்.
மற்றவர்களைப்
பார்க்கக்
கூடாது.
வரதானம்:
தனது
மூதாதையர்
சொரூபத்தின்
ஸ்மிருதி
மூலம்
சர்வ
ஆத்மாக்களையும் சக்திசாலி ஆக்கக் கூடிய
ஆதார,
உத்தார
(உயரச்செய்கிற)
மூர்த்தி
ஆகுக.
இந்த
சிருஷ்டி
விருட்சத்தின்
மூலத்தண்டு
(அடிமரம்),
அனைவரின்
முன்னோர்,
பிராமணரில்
இருந்து
தேவதை ஆகக்கூடிய
நீங்கள்
தான்.
ஒவ்வொரு
கர்மத்தின்
ஆதாரம்,
குல
மரியாதாக்களின்
ஆதாரம்,
பழக்க
வழக்கங்களின் ஆதாரம்,
மூதாதையராகிய
நீங்கள்
சர்வ
ஆத்மாக்களின்
ஆதார
மற்றும்
உத்தார
மூர்த்தி
ஆவீர்கள்.
மரத்தின்
அடித்தண்டுப் பாகமாகிய
உங்கள்
மூலமாகத்
தான்
சர்வ
ஆத்மாக்களுக்கும்
சிரேஷ்ட
சங்கல்பங்களின்
சக்தி
மற்றும்
சர்வ
சக்திகள் கிடைக்கின்றன.
உங்களை
அனைவரும்
பின்பற்றிக்
கொண்டுள்ளனர்.
எனவே
இவ்வளவு
பெரிய
பொறுப்புள்ளவர்கள் என்பதை
உணர்ந்து
கொண்டு,
ஒவ்வொரு
சங்கல்பம்
மற்றும்
கர்மம்
செய்யுங்கள்.
ஏனென்றால்
மூதாதையர்
ஆத்மாக்களாகிய உங்களுடைய
ஆதாரத்தில்
தான்
சிருஷ்டியின்
சமயம்
மற்றும்
ஸ்திதியின்
ஆதாரம்
உள்ளது.
சுலோகன்:
யார்
சர்வ
சக்திகள்
என்ற
கிரணங்களை
நாலாபுறமும்
பரப்புகிறார்களோ,
அவர்கள்
தாம்
மாஸ்டர்
ஞான-சூரியன்
ஆவார்கள்.
அவ்யக்த
ஸ்திதியின்
அனுபவம்
செய்வதற்காக
விசேஷ
வீட்டுப்பாடம்
இடையிடையில்
சங்கல்பங்களின்
போக்குவரத்தை
நிறுத்தி
வைப்பதற்கான
அப்பியாசம்
செய்யுங்கள்.
ஒரு
நிமிடத்திற்கு
சங்கல்பங்களை,
சரீரத்தின்
மூலமாக
நடைபெறும்
கர்மங்களை
நிறுத்தி
விட்டு,
பிந்து
ரூபப்
பயிற்சி செய்யுங்கள்.
இந்த
ஒரு
விநாடியின்
அனுபவம்
கூட
நாள்
முழுவதும்
அவ்யக்த
ஸ்திதியை
உருவாக்குவதில்
உதவி
செய்யும்.
ஓம்சாந்தி