16.02.2020 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த-பாப்தாதா''

ரிவைஸ் 25.11.1985 மதுபன்


  

'' நிச்சயபுத்தி உடைய வெற்றி இரத்தினங்களின் அடையாளங்கள் ''

 

இன்று பாப்தாதா தன்னுடைய நிச்சயபுத்தி உடைய வெற்றி இரத்தினங்களின் மாலையை பார்த்துக் கொண்டிருந்தார். அனைத்து குழந்தைகளும் நான் நிச்சயத்தில் உறுதியாக இருக்கிறேன் என்று தன்னை நினைக்கிறார்கள். தன்னை நிச்சயபுத்தி இல்லாதவர் என்று நினைப்பவர் யாருமே இருக்க மாட்டார். நிச்சயம் இருக்கிறதா என்று யாரிடமாவது கேளுங்கள். அனைவருமே நிச்சயம் இல்லாவிட்டால் பிரம்மா குமார், பிரம்மா குமாரியாக எப்படி ஆகியிருப்போம் என்ற இதைத் தான் பதிலாக கூறுவார்கள். நிச்சயத்தின் கேள்விக்கு அனைவருமே ஆம் நிச்சயம் இருக்கிறது என்று கூறுவார்கள். அனைவருமே நிச்சயபுத்தி உள்ளவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று அப்படி கூறலாம் இல்லையா? இல்லை என்றால் உங்களில் யார் நிச்சயம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அவர்கள் கையை உயர்த்துங்கள். அனைவருமே நிச்சயபுத்தி உடையவர்கள். நல்லது. எப்பொழுது அனைவருக்குமே உறுதியான நிச்சயம் இருக்கிறது என்றால் பிறகு வெற்றி மாலையில் வரிசைக்கிரம எண் ஏன் உருவாகிறது? நிச்சயத்தில் அனைவருக்கும் ஒரே ஒரு பதில் தான் இல்லையா? பிறகு வரிசை எண் ஏன்? அஷ்ட இரத்தினங்கள் எங்கிருக்கிறார்கள், 100 இரத்தினங்கள் எங்கிருக்கிறார்கள் மற்றும் 16000 எங்கிருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன? அஷ்ட தேவதைகளுக்கு நடக்கும் பூஜை மகிமைக்கும் மற்றும் 16000-ன் மாலையின் பூஜை மகிமைக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. தந்தை ஒருவர் மற்றும் நான் அந்த ஒருவருடையவன் தான் என்ற இந்த நிச்சயம் இருக்கிறது. இருந்தும் ஏன் வித்தியாசம்? நிச்சயபுத்தியில் சதவிகிதம் இருக்குமா என்ன? நிச்சயத்தில் ஒருவேளை சதவிகிதம் இருக்கிறது என்றால் அதை நிச்சயம் என்று கூறுவோமா? 8 இரத்தினங்களும் நிச்சயபுத்தி உடையவர்கள், 16000-த்தினரும் நிச்சயபுத்தி உடையவர்கள் என்று கூறுவோம் இல்லையா!

 

நிச்சயபுத்தி உடையவரின் அடையாளம் வெற்றி அடைபவர்! எனவே நிச்சயபுத்தி உடையவர் வெற்றி அடைவார் என்ற புகழ் இருக்கிறது. அப்படி நிச்சயம் என்றால் வெற்றி அடைபவரே தான். சில நேரம் வெற்றி, சில நேரம் வெற்றி இல்லை என்பது இருக்க முடியாது. சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் கூட ஆனால் நிச்சயப்புத்தி உடைய குழந்தைகள் சூழ்நிலையில் தன்னுடைய சுயநிலையின் சக்தி மூலம் எப்பொழுதும் வெற்றியை அனுபவம் செய்வார்கள். யார் வெற்றி இரத்தினமோ அதாவது வெற்றி மாலையின் மணியாக ஆகிவிட்டார், கழுத்தின் மாலையாக ஆகிவிட்டாரோ அவருக்கு மாயாவிடம் தோல்வி ஒருபொழுதும் ஏற்பட முடியாது. உலகிலுள்ள மனிதர்கள் மற்றும் பிராமண பரிவாரத்தின் சம்மந்தம் தொடர்பில் அவரை வேறாகப் புரிந்து கொண்டாலும் மற்றும் இவர் தோல்வி அடைந்து விட்டார் என்று கூறினாலும், அது தோல்வி இல்லை, வெற்றி ஆகும். ஏனென்றால் சில நேரங்களில் பார்ப்பவர்களுக்கும் மற்றும் செய்பவர்களுக்கும் தவறான அபிப்ராயம் ஏற்பட்டு விடுகிறது. பணிவாக இருப்பவர் மற்றும் சரிங்க செய்கிறேன்! என்ற பாடத்தை படிக்கும் ஆத்மாக்கள் மேல் சில நேரம் தவறான அபிப்ராயத்தின் காரணமாக அவருக்கு தோல்வி ஏற்பட முடியும், மற்றவர்களுக்கு ரூபம் தோல்வியாக தென்படும். ஆனால் உண்மையில் வெற்றி அடைபவர். அந்த நேரம் மட்டும், மற்றவர்கள் கூறுவதினால் மற்றும் சூழ்நிலை காரணமாக தானே நிச்சயபுத்தி நிலையிலிருந்து மாறி சந்தேகம் உள்ள ரூபம் உருவாகி விடக்கூடாது. இது தோல்வியா? அல்லது வெற்றியா? என்று தெரியவில்லை என்ற இந்த சந்தேகத்தை வைக்காமல் தன்னுடைய நிச்சயத்தில் உறுதியாக இருக்க வேண்டும். யாரை இன்று மற்ற மனிதர்கள் தோல்வி அடைந்தவர் என்று கூறுகிறார்களோ அவர்களே நாளை ஆஹா! ஆஹா! என்ற மலர்களைத் தூவுவார்கள்.

 

வெற்றி அடையும் ஆத்மாவிற்கு தன்னுடைய மனதில், தன்னுடைய காரியத்தைப் பற்றி ஒருபொழுதும் நான் சரியா அல்லது தவறா என்று இருவேறுபட்ட கருத்து இருக்காது. மற்றவர்கள் கூறுவது வேறாகும். மற்றவர்களில் சிலர் சரி என்று கூறுவார்கள், சிலர் தவறு என்று கூறுவார்கள். ஆனால் தன்னுடைய மனதில் நான் வெற்றியடைந்தவன் என்ற நிச்சயபுத்தி இருக்க வேண்டும். தந்தை மேல் உள்ள நிச்சயத்தின் கூடவே தன் மேலும் நிச்சயம் வேண்டும். நிச்சயபுத்தி உடையவர் அதாவது வெற்றி அடைபவரின் மனம் அதாவது எண்ணத்தின் சக்தி எப்பொழுதும் தூய்மையாக இருக்கும் காரணத்தினால் தனக்காகவும் மற்றும் மற்றவர்களுக்காகவும் ஆம் மற்றும் இல்லை என்று நிர்ணயம் செய்வது சகஜமாக, சத்தியமானதாக, தெளிவானதாக இருக்கும். எனவே தெரியவில்லை என்ற இருவேறுபட்ட எண்ணம் இருக்காது. நிச்சயபுத்தி உடைய வெற்றி இரத்தினங்களின் அடையாளம் சத்தியமான முடிவு இருக்கும் காரணத்தினால் மனதில் சிறிதளவும் குழப்பம் இருக்காது, எப்பொழுதும் மகிழ்ச்சி இருக்கும். குஷியின் உணர்வலைகள் இருக்கும். சூழ்நிலை அக்னிக்கு சமமானதாக இருந்தாலும் கூட, அவரைப் பொருத்தளவில் அக்னி பரீட்சை வெற்றியின் குஷியை அனுபவம் செய்விக்கும். ஏனென்றால் பரீட்சையில் வெற்றி அடைபவராக ஆகியே விடுவார் இல்லையா? இப்பொழுது கூட உலகீய முறையில் ஏதாவது ஒரு விஷயத்தில் வெற்றி ஏற்படுகிறது என்றால், குஷியைக் கொண்டாடுவதற்காக சிரித்துக் கொண்டு, நடனமாடிக் கொண்டு கை தட்டுவார்கள். இது குஷியின் அடையாளம். நிச்சயபுத்தி உடையவர் ஒருபொழுதும் எந்தக் காரியத்திலும் தன்னை தனிமையாக அனுபவம் செய்ய மாட்டார். அனைவரும் ஒரு பக்கம், நான் தனியாக இன்னொரு பக்கம், பெரும்பான்மையோர் இன்னொரு பக்கம் இருந்தாலும் வெற்றி இரத்தினம் ஒரே ஒருவர் மட்டும் தான் இருந்தாலும் அவர் தன்னை ஒருவர் என்று இல்லாமல் தந்தை என்னுடன் இருக்கிறார் என்று நினைப்பார். எனவே தந்தையின் எதிரில் மிகப் பெரிய படை கூட ஒன்றும் இல்லை. எங்கு தந்தை இருக்கிறாரோ அங்கு முழு உலகமும் தந்தையில் இருக்கிறது. விதை இருக்கிறது என்றால், மரமோ அதில் இருக்கவே இருக்கிறது. வெற்றி அடையும் நிச்சயபுத்தி உடைய ஆத்மா எப்பொழுதும் தன்னை ஆதரவின் கீழே இருப்பவராக நினைப்பார். ஆதரவு கொடுக்கும் வள்ளல் என்னுடன் இருக்கிறார் என்பதை இயற்கையாக அனுபவம் செய்வார். எப்பொழுது பிரச்சனை வருகிறதோ அந்த நேரம் தந்தையின் எதிரில் பாபா நீங்களோ என்னுடன் தான் இருக்கிறீர்கள் இல்லையா, நீங்களே தான் உதவியாளர் இல்லையா, இப்பொழுது நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்கள் என்று சுயநலமான ஆதரவை பெற மாட்டார்கள். நீங்கள் இருக்கிறீர்கள் இல்லையா, இது இருக்கிறது இல்லையா என்பதின் அர்த்தமாக என்ன ஆகிறது? நிச்சயம் இருந்ததா? நீங்கள் என்னுடைய ஆதரவு என்று தந்தைக்கும் நினைவூட்டுகிறார்கள். நிச்சயபுத்தி உடையவர் ஒருபொழுதும் அந்த மாதிரியான எண்ணத்தை வைக்க முடியாது. அவருடைய மனதில் சிறிதளவும் ஆதரவற்ற நிலை மற்றும் தனிமை நிலை எண்ணத்தின் அளவில் கூட அனுபவம் ஆகாது. நிச்சயபுத்தி உடையவர் வெற்றி அடைபவராக இருக்கும் காரணத்தினால் எப்பொழுதும் குஷியில் நடனமாடிக் கொண்டே இருப்பார். எப்பொழுதாவது சோர்வுடையவராகவும் ஆகமாட்டார் மற்றும் அற்ப காலத்தின் எல்லைக்குட்பட்ட வைராக்கிய உணர்வுகளிலும் ஒருபொழுதும் வர மாட்டார். சில நேரம் எப்பொழுது மாயாவின் தாக்குதல் மிகவும் வலுவானதாக இருக்கிறதோ அந்த நேரம் அற்ப காலத்தின் வைராக்கியமும் வருகிறது. ஆனால் அது எல்லைக்குட்பட்ட அற்ப காலத்தின் வைராக்கியமாக இருக்கும். எல்லைக்கப்பாற்பட்டதாக, சதா காலத்தினுடையதாக இருக்காது. கட்டாயத்தினால் வைராக்கிய உணர்வு உற்பத்தி ஆகிறது. எனவே அந்த நேரத்தில் இதிலிருந்து இவரை விடுவித்து விடுங்கள் எனக்கு வைராக்கியம் வந்து விட்டது என்று அந்த நேரம் கூறிவிடுகிறார்கள். சேவையையும் விட்டு விட வேண்டும், இதையும் விட்டுவிட வேண்டும் என்ற வைராக்கியம் வருகிறது. ஆனால் அது எல்லைக்கப்பாற்பட்டதாக இருக்காது. வெற்றி இரத்தினங்கள் எப்பொழுதும் தோல்வியிலும் வெற்றியை, வெற்றியிலும் வெற்றியை அனுபவம் செய்வார்கள். எல்லைக்குட்பட்ட வைராக்கியத்தை ஒதுங்கி விடுவது என்று கூறுவது. பெயருக்கு வைராக்கியம் என்று கூறுவார்கள், ஆனால் உண்மையில் நடப்பது யாதெனில், ஒதுங்கி விடுவார்கள். வெற்றி இரத்தினங்கள் எந்தக் காரியத்தில் இருந்தும், பிரச்சனையில் இருந்தும், நபரிலிருந்தும் விலகி ஒதுங்க மாட்டார். ஆனால் அனைத்து காரியங்கள் செய்து கொண்டே எதிர்நோக்கிக் கொண்டே சகயோகியாக ஆகிக் கொண்டே எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கிய உள்உணர்வில் இருப்பார், அது சதா காலத்திற்காக இருக்கும். நிச்சயபுத்தி உடைய வெற்றியாளர் ஒருபொழுதும் தன்னுடைய வெற்றியை வர்ணிக்க மாட்டார். பார்த்தீர்களா? நான் சரியாக இருந்தேன் இல்லையா என்று மற்றவர்களிடம் புகார் சொல்ல மாட்டார். இந்த புகார், முறையீடு செய்வது மற்றும் வர்ணிப்பது ஒன்றுமில்லாத காலியாக இருக்கும் நிலையின் அடையாளம். காலியாக இருக்கும் பாத்திரத்தில் அதிகம் தளும்பும். எந்தளவு நிரம்பியிருக்குமோ அந்த அளவு தளும்பாது. வெற்றியாளர் எப்பொழுதும் மற்றவர்களின் தைரியத்தையும் அதிகரிப்பார். அவரை கீழாகப் பார்ப்பதற்கு முயற்சி செய்யமாட்டார். ஏனென்றால் வெற்றி இரத்தினங்கள் தந்தைக்குச் சமமாக மாஸ்டர் ஆதரவு அளிக்கும் வள்ளலாக இருப்பார்கள். கீழே இருந்து மேலே தூக்கி விடுபவர்கள். நிச்சயபுத்தி உடையவர்கள் எப்பொழுதும் வீணானவற்றிலிருந்து விலகியிருப்பார்கள். வீணான எண்ணமாக இருந்தாலும், வார்த்தையாக இருந்தாலும் அல்லது காரியமாக இருந்தாலும் அப்படி வீணானவற்றிலிருந்து விலகுவது என்றால் வெற்றியாளர் ஆவது. வீணானதின் காரணத்தினால் சில நேரம் தோல்வியும், சில நேரம் வெற்றியும் கிடைக்கிறது. வீணானது முடிந்து விட்டது என்றால் தோல்வியும் முடிவடைந்து விடும். வீணானவை முடிந்து விடுவது என்பது வெற்றி இரத்தினங்களின் அடையாளம். இப்பொழுது நிச்சயபுத்தி உடைய வெற்றி இரத்தினங்களின் அடையாளங்கள் எனக்கு அனுபவம் ஆகுகிறதா என்று சோதனை செய்யுங்கள். நிச்சயபுத்தி இருக்கிறது என்றால் உண்மை கூறுவார்கள் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம் இல்லையா. ஆனால் நிச்சயபுத்தி உடைய ஒருவர், தெரிந்து கொள்ளும், ஏற்றுக் கொள்ளும் வரையிலுமானவராக இருப்பார். மேலும் இன்னொருவர் அதன்படி நடப்பது வரை நிச்சயபுத்தி உடையவராக இருப்பார். ஆம் பகவான் கிடைத்து விட்டார் என்று அனைவருமே நம்பத்தான் செய்கிறார்கள். நான் பகவானின் குழந்தையாக ஆகிவிட்டேன். ஏற்றுக்கொள்வது மற்றும் தெரிந்து கொள்வது இரண்டுமே ஒன்று தான். ஆனால் நடப்பதில் வரிசைக்கிரமமாக ஆகிவிடுகிறார்கள். அந்த மாதிரி தெரிந்தும் இருக்கிறார்கள், ஏற்றுக் கொண்டு நம்பவும் செய்கிறார்கள். இதில் சரி தான் ஆனால் மூன்றாவது நிலை ஏற்றுக் கொண்டு, தெரிந்து கொண்டு நடப்பது. ஒவ்வொரு அடியிலும் நிச்சயத்தின் மற்றும் வெற்றியின் பிரத்யக்ஷ அடையாளங்கள் தென்பட வேண்டும். இதில் வித்தியாசம் இருக்கிறது. எனவே வரிசைக்கிரமமாக ஆகிவிட்டீர்கள். ஏன் வரிசை எண் உருவாகுகிறது என்று புரிந்து கொண்டீர்களா?

 

இதைத் தான் நஷ்டோமோகா அதாவது பற்றுதலை வென்ற நிலை என்று கூறுவது. நஷ்டோமோகாவின் விளக்கம் மிகவும் நுணுக்கமானது. அதை பின்பு எப்பொழுதாவது கூறுவோம். நிச்சயபுத்தி நஷ்டோமோகா என்பதின் ஏணிப்படி. நல்லது. இன்று இன்னொரு குரூப் வந்திருக்கிறார்கள். வீட்டின் குழந்தை தான் எஜமானன் என்றால் வீட்டின் எஜமானன் தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று அப்படி கூறுவோம் இல்லையா? வீட்டிற்கு வந்திருக்கிறீர்களா அல்லது வீட்டிலிருந்து வந்திருக்கிறீர்களா? ஒருவேளை அதை வீடு என்று நினைத்தீர்கள் என்றால், பற்றுதல் செல்லும். ஆனால் அது தற்காலிகமான சேவை ஸ்தானம். வீடோ அனைவருக்கும் மதுபன் தான் இல்லையா? ஆத்மா என்று பார்க்கும் போது பரம்தாமம். பிராமணன் என்பதினால் அவருடைய வீடு மதுபன். எப்பொழுது தலைமை அலுவலகம் மவுன்ட் அபு என்று கூறுகிறீர்கள் என்றால், நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அது எந்த இடமாக ஆனது? அலுவலகம் ஆனது தான் இல்லையா. அதனால் தான் தலைமை அலுவலகம் என்று கூறுகிறீர்கள். அம்மாதிரி வீட்டிலிருந்து வரவில்லை ஆனால் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். அலுவலகத்திலிருந்து யாரையும் எப்பொழுதும் மாற்றம் செய்ய முடியும், வீட்டிலிருந்து வெளியேற்ற முடியாது. அலுவலகத்திலோ மாற்றம் செய்ய முடியும். வீடு என்று நினைத்தீர்கள் என்றால் என்னுடையது என்ற உணர்வு இருக்கும். சென்டரையும் வீடாக ஆக்கி விடுகிறார்கள் அப்பொழுது தான் என்னுடைய என்ற உணர்வு வருகிறது. சென்டர் என்று புரிந்து கொண்டால் என்னுடையது என்பது இருக்காது. வீடாக ஆகிவிடுகிறது, ஓய்வுக்கான ஸ்தானமாக ஆகிவிடுகிறது. அப்பொழுது தான் என்னுடையது என்ற உணர்வு இருக்கிறது. அப்படி தன்னுடைய வீட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள். தன்னுடைய வீடு வள்ளலின் வீடு என்ற பழமொழி இருக்கிறது இல்லையா, இது எந்த ஸ்தானத்திற்கான மகிமை? உண்மையிலேயே வள்ளலின் வாசல் தன்னுடைய வீடோ மதுபன் தான் இல்லையா? தன்னுடைய வீட்டிற்கு அதாவது வள்ளலின் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். வீடு மற்றும் வாசல் என்று கூறினால் இரண்டுமே ஒரே விஷயம் தான். தன்னுடைய வீட்டில் வருவதினால் ஓய்வு கிடைக்கிறது. மனதின் ஓய்வும், உடலின் ஓய்வும் பணத்தின் ஓய்வும் கிடைக்கிறது. சம்பாத்தியம் செய்வதற்காக செல்ல வேண்டியது இருக்காது. உணவு சமைத்தீர்கள் என்றால் சாப்பிட முடியும் என்று இதிலிருந்தும் ஓய்வு கிடைத்து விடுகிறது, தட்டில் தயார் ஆன உணவு கிடைத்து விடுகிறது. இங்கோ டாகூர் (அதாவது எஜமானன்) ஆகிவிடுகிறீர்கள். எப்படி டாகூர்களின் (கடவுள், பிரபு) கோவில்களில் மணி அடிப்பார்கள். டாகூரை எழுப்ப வேண்டியதாக இருக்கிறது, தூங்க வைக்க வேண்டியதாக இருக்கிறது. எனவே மணி அடிக்கிறார்கள். பிரசாதம் படைத்தாலும் மணி அடிப்பார்கள். உங்களுக்கும் மணி அடிக்கப்படுகிறது தான் இல்லையா? இன்றைய நாட்களிலோ நாகரீகம் வளர்ந்து விட்டது. எனவே பாட்டு ஒலிக்கிறது. பாட்டைக் கேட்டுக் கொண்டே தூங்குகிறீர்கள், பிறகு பாட்டைக் கேட்டு எழுகிறீர்கள் என்றால் டாகூர் ஆகிவிட்டீர்கள் இல்லையா? இங்கே உள்ளவையைத் தான் பக்தி மார்க்கத்தில் அப்படியே செய்கிறார்கள். இங்கேயும் மூன்று நான்கு தடவைகள் போக் (பிரசாதம்) சுவீகாரம் செய்விக்கிறீர்கள். சைத்தன்ய டாகூர்களுக்கு நான்கு மணியிலிருந்தே போக் சுவீகாரம் செய்விப்பது தொடங்கி விடுகிறது. அமிர்தவேளையிலிருந்து போக் தொடங்கிவிடுகிறது. சைத்தன்ய சொரூபத்தில் பகவான் குழந்தைகளின் சேவை செய்து கொண்டிருக்கிறார். பகவானின் சேவையையோ அனைவரும் செய்கிறார்கள், ஆனால் இங்கு பகவான் சேவை செய்கிறார். யாருக்கு? சைத்தன்ய டாகூர்களுக்கு. இந்த நிச்சயம் எப்பொழுதுமே குஷியில் ஊஞ்சலாட வைத்துக் கொண்டே இருக்கும். புரிந்ததா? அனைத்து மண்டலங்களைச் சேர்ந்தவர்களும் செல்லமானவர்கள். எப்பொழுது எந்த மண்டலம் வருகிறதோ அவர்கள் செல்லமானவர்கள். செல்லமானவர்களாகவோ இருக்கிறீர்கள், ஆனால் தந்தையின் செல்லமானவர்களாக மட்டும் ஆகுங்கள். மாயாவின் செல்லமானவர்களாக ஆகிவிடாதீர்கள். மாயாவின் செல்லமானவர்களாக ஆகிறார்கள் என்றால் பிறகு மிகுந்த அதிகார தோரணை செய்கிறார்கள். யாரெல்லாம் வந்திருக்கிறீர்களோ அனைவரும் பாக்கியம் நிறைந்தவர்கள், பகவானிடம் வந்திருக்கிறீர்கள். நல்லது.

 

எப்பொழுதும் ஒவ்வொரு எண்ணத்தில் நிச்சயபுத்தி உடைய வெற்றி இரத்தினங்களுக்கு, எப்பொழுதும் பகவான் மற்றும் பாக்கியத்தின் நினைவு சொரூப ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் வெற்றி மற்றும் தோல்வி இரண்டிலும் வெற்றியை அனுபவம் செய்பவர்களுக்கு எப்பொழுதும் ஆதரவு அதாவது சகயோகம் கொடுக்கக்கூடிய மாஸ்டர் ஆதரவு அளிக்கும் ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் தன்னை தந்தையுடன் இருக்கும் அனுபவம் செய்யக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு :

1) நீங்கள் அனைவரும் ஒருவரின் அன்பில் மூழ்கியிருக்கக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களா? நீங்கள் சாதாரணமானவர்கள் இல்லை. சிரேஷ்ட ஆத்மாக்கள் எப்பொழுதும் என்ன காரியம் செய்தாலும் அது சிரேஷ்டமாக இருக்கும். ஜென்மமே சிரேஷ்டமாக இருக்கிறது என்றால், காரியம் எப்படி சாதாரணமானதாக இருக்கும்? எப்பொழுது ஜென்மம் மாறி விடுகிறது என்றால், கர்மமும் அதாவது செய்யும் காரியமும் மாறிவிடுகிறது. பெயர், ரூபம், தேசம், கர்மம் அனைத்தும் மாறிவிடுகிறது. அந்த மாதிரி எப்பொழுதும் புதிய ஜென்மம், புதிய ஜென்மத்தின் புதுமையின் ஊக்கம் உற்சாகத்தில் இருக்கிறீர்கள். யார் உங்களில் சில நேரம் இருப்பவர்களோ அவர்களுக்கு இராஜ்ஜியமும் சில நேரம் கிடைக்கும். யார் பொறுப்பாளர் ஆகியிருக்கும் ஆத்மாக்களோ அவர்களுக்கு பொறுப்பாளர் ஆனதற்கான பலன் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. மேலும் பலன் என்ற பழத்தை அருந்தும் ஆத்மாக்கள் எப்பொழுதும் சக்திசாலியாக இருப்பார்கள். இது பிரத்யக்ஷ பலன், சிரேஷ்ட யுகத்தின் பலன், இந்தப் பலன் என்ற பழத்தை அருந்துபவர் சக்திசாலியாக இருப்பார். அந்த மாதிரி சக்திசாலியான ஆத்மா சூழ்நிலை மேல் சுலபமாகவே வெற்றி அடைந்து விடுவார். சூழ்நிலை கீழே, அவர் மேலே இருப்பார். எப்படி ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி கூறும்பொழுது அவர் பாம்பின் மேல் வெற்றி அடைந்து அதன் தலை மேல் கால் வைத்து நடனம் ஆடினார் என்று காண்பிக்கிறார்கள். இது உங்களுடைய படம். எவ்வளவு தான் விஷம் நிறைந்த பாம்பாக இருந்தாலும் ஆனால் நீங்கள் அதன் மேலும் வெற்றியை அடைந்து நடனமாடுபவர்கள். இந்த சிரேஷ்ட சக்திசாலியான நினைவு தான் அனைவரையும் சக்திசாலியாக ஆக்கிவிடும். மேலும் எங்கு சக்திசாலியான நிலை இருக்கிறதோ அங்கு வீணானவை அகன்று விடும். சக்திசாலியான தந்தையுடன் இதே நினைவின் வரதானம் மூலம் எப்பொழுதும் முன்னேறிக் கொண்டே இருங்கள்.

2) நீங்கள் அனைவரும் அமர தந்தையின் அமர ஆத்மாக்கள் தான் இல்லையா? அமரர் ஆகிவிட்டீர்களா? உடலை விட்டாலும் கூட அமரர்கள், ஏன்? ஏனென்றால் பாக்கியத்தை உருவாக்கிக் கொண்டு செல்கிறீர்கள். கை காலியாகச் செல்வதில்லை, எனவே இறப்பதில்லை. நிரம்பிச் செல்ல வேண்டும். இறப்பது என்றால் கை காலியாகச் செல்வது. நிரம்பிச் செல்வது என்றால் ஆடையை மாற்றுவது. அந்த மாதிரி அமரர் ஆகிவிட்டீர்கள் இல்லையா? அமரர் ஆகுக என்ற வரதானம் கிடைத்து விட்டது, இதில் மரணத்தின் வசமாவதில்லை. செல்லவும் வேண்டும். பிறகு வரவும் வேண்டும் என்று தெரிந்திருக்கிறீர்கள், எனவே அமரர்கள். அமரக் கதை கேட்டு கேட்டு அமரர் ஆகிவிட்டீர்கள். தினசரி மிகவும் அன்புடன் கதை கேட்கிறீர்கள் இல்லையா. காலியாக இருந்தீர்கள். இப்பொழுது நிரம்பி விட்டீர்கள். அந்த மாதிரி நிரம்பிவிட்டீர்கள். அதன் காரணமாக அனேக ஜென்மங்கள் காலியாக ஆக முடியாது.

3) அனைவரும் நினைவின் யாத்திரையில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? இந்த ஆன்மீக யாத்திரை எப்பொழுதுமே சுகமான நிலையை அனுபவம் செய்விக்கும். இந்த யாத்திரையினால் சதா காலத்திற்காக அனைத்து யாத்திரைகளும் நிறைவேறி விடுகிறது. ஆன்மீக யாத்திரை செய்தீர்கள் என்றால் அனைத்து யாத்திரைகளும் செய்ததாக ஆகிவிட்டது. மேலும் வேறு எந்த யாத்திரையும் செய்வதற்கு அவசியமே இருப்பது இல்லை. ஏனென்றால் மகான் யாத்திரை இல்லையா? மகான் யாத்திரையில் அனைத்து யாத்திரைகளும் அடங்கி யிருக்கிறது. முன்பு யாத்திரைகளில் அங்கு இங்கு அலைந்தீர்கள். இப்பொழுது இந்த ஆன்மீக யாத்திரை மூலம் புகடலித்திற்கு வந்து சேர்ந்து விட்டீர்கள். இப்பொழுது மனதிற்கும் உடலிற்கும் புகலிடம் கிடைத்து விட்டது. ஒரே ஒரு யாத்திரை மூலம் அனேக விதமான அலைந்து திரிவது முடிவடைந்து விட்டது. எனவே எப்பொழுதும் நான் ஆன்மீக யாத்திரிகன் என்ற இந்த நினைவில் இருங்கள். இதன் காரணமாக எப்பொழுதும் விடுபட்டு இருப்பவராக, விலகியிருப்பவராக, பற்றற்றவராக இருப்பீர்கள். யார் மேலேயும் பற்றுதல் செல்லாது. யாத்திரிகனுக்கு எதன் மேலும் பற்றுதல் செல்லாது. அம்மாதிரியான நிலை எப்பொழுதுமே இருக்கட்டும்.

 

விடைபெறும் நேரம்: பாப்தாதா அனைத்து பாரதம் மற்றும் வெளிநாட்டு குழந்தைகளை பார்த்து குஷி அடைகிறார். ஏனென்றால் அனைவரும் சகயோகி குழந்தைகள். சகயோகி குழந்தைகளை பாப்தாதா எப்பொழுதும் இதய சிம்மாசனதாரிகள் என்று புரிந்து நினைவு செய்கிறார். அனைத்து நிச்சயபுத்தி உடைய ஆத்மாக்கள் தந்தைக்குப் பிரியமானவர்கள். ஏனென்றால் அனைவரும் கழுத்தின் மாலையாக ஆகிவிட்டார்கள். நல்லது. அனைத்து குழந்தைகளும் சேவையில் நல்ல வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். நல்லது.

 

வரதானம்:

உண்மையான சேவை மூலமாக அழியாத, ஆன்மீக குஷியின் கடலில் நீந்தக் கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த ஆத்மா ஆகுக.

 

எந்தக் குழந்தைகள் சேவைகளில் பாப்தாதா மற்றும் பொறுப்பில் இருக்கும் பெரியவர்களின் அன்பின் ஆசீர்வாதங்களை பிராப்தி செய்கிறாரோ அவர்களுக்கு மனதில் உலகீயமற்ற, ஆத்மீக குஷியின் அனுபவம் ஆகிறது. அவர்கள் சேவைகள் மூலமாக உள்மனதின் குஷி, ஆன்மீக மகிழ்ச்சி மற்றும் எல்லைக்கப்பாற்பட்ட பிராப்தியின் அனுபவம் செய்து கொண்டே எப்பொழுதும் குஷியின் கடலில் நீந்திக் கொண்டே இருப்பார்கள். உண்மையான சேவை அனைவரின் அன்பு, அனைவர் மூலமாக அழியாத மரியாதை மற்றும் குஷியின் ஆசீர்வாதங்கள் பிராப்தி செய்வதின் அதிர்ஷ்டத்தின் சிரேஷ்ட பாக்கியத்தை அனுபவம் செய்விக்கிறது. யார் எப்பொழுதும் குஷியாக இருக்கிறாரோ அவர் தான் அதிர்ஷ்டசாலி.

 

சுலோகன்:

எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்த மற்றும் ஈர்க்ககூடியவராக ஆவதற்காக திருப்திமணி ஆகுங்கள்.

 

அறிவிப்பு : இன்று அகில உலக யோக தினமான மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை, மாலை 6.30 மணி முதல் 7.30 வரை அனைத்து சகோதர சகோதரிகளும் ஒன்றாக கூடி ஒருமித்த யோக பயிற்சியில் இந்த நல்ல எண்ணத்தை வையுங்கள். ஆத்மா என் மூலமாக தூய்மையின் கிரணங்கள் வெளிப்பட்டு முழு உலகையும் தூய்மையாக்கிக் கொண்டிருக்கிறது. நான் மாஸ்டர் பதீத பாவனி ஆத்மா.!

 

ஓம்சாந்தி