09.03.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! நம்முடைய பாரலௌகீக தந்தை உலக அதிசயத்தை
(சொர்க்கம்) உருவாக்குகிறார். அதற்கு நாம் அதிபதியாகின்றோம்
என்ற போதை உங்களுக்கு இருக்க வேண்டும்.
கேள்வி:
பாபாவின் சங்கத்தில் (தொடர்பில்) இருப்பதால் உங்களுக்கு
என்னென்ன பிராப்திகள் கிடைக்கின்றது?
பதில்:
பாபாவின் தொடர்பினால் நாம் முக்தி,
ஜீவன் முக்தியின் அதிகாரத்தைப் பெறுகின்றோம். பாபாவின் தொடர்பு
கரையேற கயிற்றைக் கொடுக்கிறது. (அக்கரை அழைத்து செல்கிறது)
பாபா நம்மை தன்னுடையவராக்கி ஆஸ்திகராகவும் திரிகால
தர்ஷியாகவும் மாற்றுகின்றார். நாம் படைப்பவர் மற்றும்
படைப்பின் முதல் இடை கடையை தெரிந்துக் கொள்கிறோம்.
பாட்டு
பொறுமையாக இரு மனிதா......
ஓம் சாந்தி.
இதை யார் கூறுகிறார்கள்?
குழந்தைகளுக்கு தந்தை தான் கூறுகிறார். அனைத்து
குழந்தைகளுக்கும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அனைவரும்
துக்கத்தில் இருக்கிறார்கள். தைரியம் அற்றவர்களாக
இருக்கிறார்கள். தந்தையை நினைக்கிறார்கள். துக்கத்திலிருந்து
எங்களை விடுவியுங்கள். சுகத்தின் வழிகாட்டுங்கள் என்கிறார்கள்.
இப்போது மனிதர்களுக்கு,
குறிப்பாக பாரதவாசிகளுக்கு,
பாரதவாசிகளாகிய நாம் சுகத்தில் இருந்தோம் என்ற நினைவில்லை.
பாரதம் பழமையிலும் பழமையான அதிசயமான நாடாக இருந்தது. உலக
அதிசயம் என கூறுகிறார்கள் அல்லவா. இங்கே மாயாவின் இராஜ்யத்தில்
ஏழு அதிசயங்கள் பாடப்பட்டிருக்கிறது. அது ஸ்தூல அதிசயம் ஆகும்.
இது மாயாவின் அதிசயம் ஆகும். இதில் துக்கம் இருக்கிறது. ராமர்,
பாபாவின் அதிசயம் சொர்க்கம் ஆகும். அதுவே உலக அதிசயம் ஆகும்.
பாரதம் சொர்க்கமாக இருந்தது. வைரம் போன்று இருந்தது. இங்கே
தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. பாரதவாசிகள் அனைவரும் இதை
மறந்து விட்டனர். தேவதைகளுக்கு முன்பு தலை வணங்குகின்றனர்.
பூஜை செய்கின்றனர். ஆனால் யாருக்கு பூஜை செய்கிறார்களோ
அவர்களுடைய வரலாற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா. இங்கே
பாரலௌகீக தந்தையிடம் வந்துள்ளீர்கள் என எல்லையற்ற தந்தை புரிய
வைக்கின்றார். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் பாரலௌகீக
தந்தையாவார். இந்த காரியத்தை எந்த மனிதரும் செய்ய முடியாது.
இவருக்கு(பிரம்மா) கூட பாபா கூறுகின்றார்-,
கிருஷ்ணனின் பழைய தமோபிரதான ஆத்மா நீ,
உன்னுடைய பிறவிகளை பற்றி அறியவில்லை. நீ கிருஷ்ணனாக இருக்கும்
போது சதோபிரதானமாக இருந்தாய். பின்
84
பிறவிகளை எடுத்து இப்போது தமோபிரதானமாக ஆகியிருக்கிறீர்.
விதவிதமான பெயர் இருக்கின்றது. இப்போது உன்னுடைய பெயர் பிரம்மா
என வைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாவிலிருந்து விஷ்ணு அல்லது
ஸ்ரீகிருஷ்ணர் ஆகிறார். பிரம்மாவிலிருந்து விஷ்ணு,
விஷ்ணுவிலிருந்து பிரம்மா என்றாலும் விசயம் ஒன்று தான்.
பிரம்மாவின் வாய் வழி வம்சம் பிராமணர்களிலிருந்து
தேவதையாகிறீர்கள். பிறகு அதே தேவி தேவதைகள் தான் சூத்திரர்கள்
ஆகிறார்கள். இப்போது நீங்கள் பிராமணன் ஆகிவிட்டீர்கள். இப்போது
பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இதுவே பகவான் வாக்கு
ஆகும். நீங்கள் மாணவர்கள் ஆகிவிட்டீர்கள். எனவே உங்களுக்கு
எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு மகிழ்ச்சி
இருப்பதில்லை. செல்வந்தர்கள் செல்வத்தின் போதையில் மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அல்லவா. இங்கே பகவானின் குழந்தை
ஆகியும் அவ்வளவு மகிழ்ச்சி இல்லை. புரிந்துக் கொள்வதில்லை. கல்
புத்தி அல்லவா. அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் ஞானத்தை தாரணை
செய்ய முடியாது. இப்போது பாபா உங்களை கோவிலில் வைக்கும்
அளவிற்கு தகுதி அடைய வைத்திருக்கிறார். ஆனால் மாயாவின் நட்பு
குறைந்தது அல்ல. நல்ல நட்பில் இருந்தால் உயர்வர். கெட்ட
தொடர்பில் இருந்தால் அழிவர் என பாடப்பட்டிருக்கிறது. பாபாவின்
தொடர்பு உங்களை முக்தி ஜீவன் முக்திக்கு அழைத்துச் செல்கிறது.
பிறகு இராவணனின் கெட்ட சகவாசம் துர்கதியில் அழைத்துச்
செல்கிறது.
5
விகாரங்களின் தொடர்பாகிறது அல்லவா. பக்தியில் சத்சங்கம் என்று
கூறுகிறார்கள். ஆனால் ஏணியில் கீழே இறங்கிக் கொண்டே
வருகிறார்கள். ஏணியில் இருந்து யாராவது விழுந்தால் நிச்சயம்
கீழே தான் விழுவார்கள் அல்லவா. அனைவருக்கும் சத்கதியை
அளிக்கும் வள்ளல் ஒரு தந்தை தான். யாராக இருந்தாலும் பகவானை
மேலே தான் காட்டுகின்றார்கள். இப்போது தந்தை இல்லாமல்
குழந்தைகளுக்கு யார் அறிமுகம் கொடுப்பார்கள். தந்தை தான்
குழந்தைகளுக்கு தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். அவர்
தன்னுடையவராக்கி சிருஷ்டியின் முதல்,
இடை கடை ஞானத்தைக் கொடுக்கின்றார். நான் வந்து உங்களை
ஆஸ்திகராக மாற்றுகிறேன். திரிகால தர்ஷியாக மாற்றுகிறேன் என
தந்தை கூறுகின்றார். இது நாடகம்,
இதை எந்த சாது சன்னியாசியும் தெரிந்துக் கொள்ள வில்லை. அது
எல்லைக்குட்பட்ட நாடகம் ஆகும். இது எல்லைக்கப்பாற் பட்டதாகும்.
இந்த எல்லையற்ற நாடகத்தில் நாம் நிறைய சுகத்தையும்
பார்க்கின்றோம். நிறைய துக்கத்தையும் பார்க்கின்றோம்.
கிருஷ்ணர் மற்றும் கிருஸ்துவர்களின் கணக்கு வழக்கு எப்படி
இருக்கிறது என்று பாருங்கள். அவர்கள் பாரதத்தில் சண்டையிட்டு
இராஜ்யத்தை அடைந்தனர். இப்போது நீங்கள் சண்டையிடவில்லை.
அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இராஜ்யம்
உங்களுக்கு கிடைக்கிறது. இது நாடகத்தில்
நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இந்த விசயங்களை வேறு யாரும்
அறியவில்லை. ஞானம் கொடுக்கக் கூடியவர் ஞானக் கடலாகிய ஒரே ஒரு
தந்தை தான். அவர் அனைவருக்கும் சத்கதி கொடுக்கிறார்.
பாரதத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என்றால் சத்கதி
இருந்தது. மற்ற ஆத்மாக்கள் அனைவரும் முக்தி தாமத்தில்
இருந்தனர். பாரதம் தங்கமாக இருந்தது. நீங்கள் தான் இராஜ்யம்
செய்தீர்கள். சத்யுகத்தில் சூரிய வம்ச இராஜ்யம் இருந்தது.
இப்போது நீங்கள் சத்ய நாராயணனின் கதையைக் கேட்கிறீர்கள்.
நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான கதை இதுவாகும். உண்மையான
கீதையினால் பாரதம் உண்மையான கண்டமாக,
மிகவும் மதிப்புடையதாக மாறுகிறது என்று பெரிய எழுத்துக்களில்
எழுதுங்கள். தந்தை வந்து உண்மையான கீதையை கூறுகின்றார். சகஜ
இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்றால் மதிப்புடையதாக
மாறுகின்றது. பாபா மந்திர வித்தைகளை மிகவும் நன்கு புரிய
வைக்கிறார். ஆனால் குழந்தைகள் தேக அபிமானத்தால் மறந்து
போகிறார்கள். ஆத்ம அபிமானி ஆகினால் தாரணையும் ஆகும். தேக
அபிமானத்தின் காரணாமாக தாரணை ஆவதில்லை.
நான் சர்வ வியாபி என்று நான் ஒருபோதும் கூறுவதில்லை என பாபா
புரிய வைக்கிறார். தாயும் நீயே தந்தையும் நீயே...... என எனக்கு
கூறுகிறார்கள். இதன் பொருள் என்ன?
உமது கருணையால் அளவிட முடியாத சுகம் கிடைக்கிறது. இப்போதோ
துக்கம். இந்த வார்த்தைகள் எந்த சமயத்தில் கூறப்பட்டவை என
புரியவில்லை. பறவைகள் கீச் கீச் சப்தம் என செய்துக் கொண்டே
இருக்கிறது. அர்த்தம் புரிவதில்லை. அவ்வாறே இவர்களும் கீச்
கீச் என செய்துக் கொண்டே இருக்கிறார்கள். பொருள் புரிய வில்லை.
இது அனைத்தும் தவறு என பாபா புரிய வைக்கிறார். யார் தவறாக
மாற்றியது?
இராவணன். பாரதம் உண்மையான கண்டமாக இருந்தது என்றால் அனைவரும்
உண்மையைப் பேசினர். திருடவோ ஏமாற்றவோ இல்லை. இங்கே எவ்வளவு
திருடுகிறார்கள். உலகில் ஏமாற்றமே ஏமாற்றம். இதற்கு பாவ உலகம்,
துக்க உலகம் என்று கூறப்படுகிறது. சத்யுகத்திற்கு சுக உலகம்
என்று பெயர். இது விகார உலகம் ஆகும்,
வேசியாலம் ஆகும். சத்யுகம் சிவாலயம் ஆகும். பாபா எவ்வளவு
நன்றாக புரிய வைக்கின்றார். பிரம்மா குமாரி ஈஸ்வரிய விஷ்வ
வித்யாலம் என்ற பெயர் கூட எவ்வளவு நன்றாக இருக்கிறது. இப்போது
பாபா வந்து புத்திசாலி ஆக்குகிறார். இந்த விகாரங்களை வெற்றி
அடைந்தால் இந்த ஜகத்தையே வெற்றி அடையலாம் என கூறுகின்றார்கள்.
இந்த காமம் தான் மிகப் பெரிய எதிரி ஆகும். எங்களை தேவி
தேவதையாக ஆக்குங்கள் என குழந்தைகள் அழைக்கிறார்கள்.
பாபாவின் உண்மையான மகிமைகளை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக்
கொள்கிறீர்கள். மனிதர்களுக்கு தந்தை பற்றியும் தெரியவில்லை.
தந்தையின் மகிமைகளைப் பற்றியும் தெரியவில்லை. அவர் அன்பின்
கடல் என நீங்கள் அறிகிறீர்கள். பாபா உங்களுக்கு இவ்வளவு ஞானம்
கூறுகின்றார்,
இதுவே அவரின் அன்பாகும். ஆசிரியர்கள் மாணவர்களைப் படிக்க
வைக்கிறார்கள் என்றால் மாணவர்கள் எப்படி மாறுகிறார்கள்.
குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைப் போன்று அன்பின் கடலாக
வேண்டும். அன்போடு யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்கலாம்.
நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாக இருங்கள் என பாபா
கூறுகின்றார். நம்பர் ஒன் அன்பு பாபாவின் அறிமுகத்தைக்
கொடுப்பது. நீங்கள் குப்தமான தானம் செய்கிறீர்கள். ஒருவரை
ஒருவர் வெறுக்கக் கூடாது. இல்லையென்றால் நீங்களும் தண்டனை அடைய
வேண்டியிருக்கும். யாரையாவது அவமதித்தால் தண்டனை அடைய
வேண்டியிருக்கும். ஒரு போதும் யார் மீதும் வெறுப்பு
காட்டாதீர்கள்,
அவமதிக்காதீர்கள். தேக அபிமானத்தில் வருவதால் தான்
பதீதமாகிறீர்கள். பாபா ஆத்ம அபிமானி ஆக்குகிறார் என்றால்
நீங்கள் தூய்மையாகிறீர்கள். இப்போது
84
பிறவிகளின் சக்கரம் முடிகிறது என அனைவருக்கும் புரிய
வையுங்கள். சூரிய வம்சத்தின் மகாராஜா மகாராணியாக யார்
இருந்தனரோ அவர்களே
84
பிறவிகளை எடுத்து கீழே இறங்கி இறங்கி இப்போது தரையில்
இருக்கின்றனர். இப்போது பாபா மீண்டும் மகாராஜா
மகாராணியாக்குகின்றார். என்னை மட்டும் நினைத்தால் தூய்மையாகி
விடுவீர்கள் என பாபா கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள்
இரக்க மனம் உடையவராகி முழு நாளும் சேவையை பற்றி சிந்தித்துக்
கொண்டே இருக்க வேண்டும். இனிமையான குழந்தைகளே,
இரக்க மனமுடையவராகி துக்க ஆத்மாக்களாக இருக்கிறார்கள்,
அந்த துக்க ஆத்மாக்களுக்கு சுகம் அளியுங்கள் என பாபா டைரக்ஷன்
கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு மிகவும் சுருக்கமாக
கடிதங்களை எழுத வேண்டும். என்னை நினையுங்கள் மற்றும் சொத்தை
நினையுங்கள் என பாபா கூறுகின்றார். ஒரு சிவபாபாவிற்குத் தான்
மகிமை இருக்கிறது. மனிதர்களுக்கு பாபாவின் மகிமையைப் பற்றி
தெரியவில்லை. இந்தியில் கூட கடிதம் எழுதலாம். சேவை செய்ய
வேண்டும் என்று குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். பலர்
தற்கொலை செய்துக் கொள்ள நினைக்கிறார்கள். அவர்களுக்கு கூட
தற்கொலை மகா பாவம் என நீங்கள் புரிய வைக்கலாம். இப்போது
குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத் அளிப்பவர் சிவபாபா ஆவார்.
அவரே ஸ்ரீஸ்ரீ சிவபாபா ஆவார். உங்களை ஸ்ரீ லஷ்மி ஸ்ரீ நாராயணன்
ஆக்குகிறார். ஸ்ரீஸ்ரீ அவர் ஒருவர் தான். அவர் ஒரு போதும்
சக்கரத்தில் வருவதில்லை. மற்ற படி உங்களுக்கு ஸ்ரீ என்ற பட்டம்
கிடைக்கிறது. தற்காலத்தில் பலருக்கு ஸ்ரீ என்ற பட்டம்
கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கே அந்த நிர்விகாரி?
எங்கே இந்த விகாரிகள்?
இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. தந்தை தினந்தோறும் ஆத்ம
உணர்வுடைவராகுங்கள் மற்றும் அவைருக்கும் செய்தியைக் கொடுங்கள்
என புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். நீங்கள்
செய்தியாளர்களின் குழந்தைகள். அனைவருக்கும் சத்கதியை வழங்கக்
கூடிய வள்ளல் ஒருவர் தான். மற்ற தர்ம ஸ்தாபகர்களை குரு என கூற
முடியாது. சக்தி அளிப்பவர் ஒருவரே. நல்லது
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
யார் மீதும் வெறுப்பு காண்பிக்கக் கூடாது. இரக்க மனமுடையவராகி
துக்கத்திலிருக்கும் ஆத்மாக்களை சுகமுடையவராக மாற்றும் சேவை
செய்ய வேண்டும். தந்தைக்குச் சமமாக மாஸ்டர் அன்பு கடல் ஆக
வேண்டும்.
2.
நாம் பகவானின் குழந்தைகள். இந்த போதையில் அல்லது மகிழ்ச்சியில்
இருக்க வேண்டும். ஒரு போதும் மாயையின் தலைகீழான தொடர்பில்
போய்விடக் கூடாது. ஆத்ம உணர்வுடையவராகி ஞானத்தை கடைபிடிக்க
வேண்டும்.
வரதானம் :
நினைவின் சுவிட்ச் மூலமாக
தன்னுடைய மற்றும் பிறருடைய நன்மை செய்யக் கூடிய வெற்றி
சொரூபமாகுங்கள்.
ஸ்திதியின் ஆதாரம். நினைவு.
இந்த சக்தி சாலியான நினைவு இருக்கட்டும். என்னவென்றால் "நான்
பாபாவுடையவன் பாபா என்னுடையவர் இந்த நினைவின் மூலமாக
தன்னுடைய ஸ்திதி யும் சக்தி சாலியாக இருக்கும். மேலும்
பிறரையும் சக்திசாலியாக ஆக்கலாம். எப்படி சுவிட்ச் போட்டால்
எப்படி பிரகாகசமாக வந்து விடுகிறதோ அதை போல் இந்த நினைவும்
ஒரு சுவிட்ச். சதா நினைவு ரூப சுவிட்ச் மீது கவனம்
வைத்தால் தனக்கும் மேலும் பிறருக்கும் நன்மை செய்து கொண்டே
இருக்கலாம். புதிய ஜென்மம் என்றால் புதிய நினைவுகள். பழைய
அனைத்து நினைவுகளும் முடிந்தது. இதுவே விதியின் மூலமாக
வெற்றி சொரூபத்தின் வரதானம் பிராப்தி ஆகி விடும்.
சுலோகன் :
அதீந்திரிய சுகத்தின்
அனுபவத்திற்காக தன்னுடைய அமைதி சொரூப நிலையில்
நிலைத்திருங்கள்.
ஓம்சாந்தி