24.02.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே ! நீங்கள் மிகப் பெரிய இரத்தின வியாபாரி, நீங்கள் அழியாத ஞானரத்தினங்கள் என்ற விலை உயர்ந்த கற்களைக் கொடுத்து அனைவரையும் செல்வந்தராக மாற்ற வேண்டும்.

 

கேள்வி:

தனது வாழ்க்கையை வைரம் போல மாற்றுவதற்கு எந்த விஷயத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்?

 

பதில்:

சங்கம். (சகவாசம்) யார் நன்கு (ஞான மழை) பொழிகிறார்களோ அவர்களின் சங்கத்தில் (தொடர்பு) குழந்தைகள் இருக்க வேண்டும். யார் பொழிவதில்லையோ அவர்களின் சங்கத்தில் இருப்பதால் என்ன நன்மை? சங்க தோஷம் நிறைய ஏற்படுகிறது. சிலரின் சங்கத்தால் வைரம் போன்று மாறுகிறார்கள். சிலரின் சங்கத்தால் கல் போன்று மாறுகிறார்கள். யார் ஞானியாக இருக்கிறார்களோ அவர்கள் (பிறரை) தனக்கு சமமாக நிச்சயம் மாற்றுவார்கள். தீய சங்கத்திலிருந்து தன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்வார்கள்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு முழு சிருஷ்டி, முழு நாடகமும் நன்கு புத்தியில் நினைவிருக்கிறது. வேறுபாடும் புத்தியில் இருக்கிறது. சத்யுகத்தில் அனைவரும் உயர்ந்தவர்களாக, நிர்விகாரியாக, தூய்மையாக, பணக்காரர்களாக இருந்தோம் என்பது அனைத்தும் புத்தியில் உறுதியாக இருக்க வேண்டும். இப்போதோ உலகம் கீழானதாக, விகாரியாக, அழுக்காக, ஏழையாக மாறியிருக்கிறது. இப்போது குழந்தை களாகிய நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் அந்த பக்கம் சென்று கொண்டிருக்கிறீர்கள். நதியும், கடலும் இணையும் இடத்தை சங்கமம் என்கிறார்கள். ஒரு பக்கம் இனிமையான தண்ணீர், ஒரு பக்கம் உவர்ப்பு தண்ணீரும் இருக்கிறது. இப்போது இதுவும் சங்கமம் ஆகும். சத்யுகத்தில் இலஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. பிறகு இவ்வாறே சக்கரம் சுழல்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். இப்போது சங்கமம் ஆகும். கலியுகத்தின் கடைசியில் அனைவரும் துக்கம் நிறைந்திருக்கிறார்கள். இதற்கு காடு என்று கூறப்படுகிறது. சத்யுகத்திற்கு தோட்டம் என்று பெயர். இப்போது நீங்கள் முள்ளிலிருந்து மலராகிக் கொண்டிருக்கிறீர்கள். இது குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். நாம் எல்லையற்ற தந்தையிடமிருந்து சொத்தை அடைந்து கொண்டிருக்கிறோம், இது புத்தியில் நினைவிருக்க வேண்டும். 84 பிறவிகளின் கதை முற்றிலும் பொதுவானது. இப்போது 84 பிறவிகள் முடிவடையப் போகிறது என்பதை புரிந்து கொள்கிறீர்கள். இப்போது நாம் சத்யுக தோட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பது உங்களது புத்தியில் பசுமையாக இருக்கிறது. இப்போது நம்முடைய பிறப்பு இந்த மரண உலகத்தில் இருக்கக் கூடாது. நம்முடைய பிறப்பு அமர உலகத்தில் தான் இருக்க வேண்டும். சிவபாபாவிற்கு அமர்நாத் என்று கூறுகிறார்கள். அவர் நமக்கு அமர கதையைக் கூறிக் கொண்டிருக்கிறார். அங்கே நாம் சரீரத்திலிருந்தாலும் அமரர்களாக இருப்போம். நாம் மகிழ்ச்சியாக சரியான நேரத்திற்கு உடலை விடுவோம். அதை மரண உலகம் என்று கூற மாட்டார்கள். உண்மையில் இவருக்குள் முழுமையான ஞானம் இருக்கிறது என்பதை நீங்கள் யாருக்குப் புரிய வைத்தாலும் புரிந்து கொள்வார்கள். சிருஷ்டியின் ஆரம்பம் மற்றும் முடிவு இருக்கிறது அல்லவா? சிறிய குழந்தைகள் கூட இளைஞர் களாகி, வயதானவர்களாகிறார்கள். பிறகு முடிவு வருகிறது. மீண்டும் குழந்தையாகிறார்கள். சிருஷ்டி கூட புதியதாகிறது, பிறகு கால்பங்கு பழையதாகிறது, அரை பங்கு பழையதாகி, பிறகு முழுவதும் பழையதாகிறது. மீண்டும் புதியதாகும். இந்த விஷயங்கள் அனைத்தையும் வேறு யாரும் கூற முடியாது. பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த ஆன்மீக ஞானம் கிடைக்காது. பிராமண வர்ணத்தில் வந்தால் கேட்கலாம். பிராமணர்கள் மட்டும் தான் அறிவீர்கள். பிராமணர்களில் கூட வரிசைக் கிரமம் இருக்கின்றது. சிலர் யதார்த்தமாகக் கூறலாம். சிலரால் கூற முடியாது என்றால், அவர்களுக்கும் எதுவும் கிடைக்கவில்லை. இரத்தின வியாபாரிகளில் கூட பாருங்கள், சிலரிடம் கோடிக்கணக்கான அளவிற்கு சரக்கு இருக்கிறது. சிலரிடமோ 10,000-க்கு கூட சரக்கு இருக்காது. உங்களிலும் கூட இவ்வாறே இருக்கிறார்கள். ஜனக்கை (ஜானகி தாதிஜி) பாருங்கள். இவர் நல்ல இரத்தின வியாபாரி, இவரிடம் விலைமதிப்பற்ற இரத்தினங்கள் இருக்கின்றது. யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து நன்கு செல்வந்தர் ஆக்கலாம். சிலர் சிறிய இரத்தின வியாபாரி. அதிகமாக கொடுக்க முடியவில்லை என்றால் குறைந்த பதவி தான் அவர்கள் பெறுவார்கள். நீங்கள் அனைவரும் இரத்தின வியாபாரிகள். இது அழியாத ஞான இரத்தினங்களின் வியாபாரம் ஆகும். யாரிடம் நிறைய நல்ல இரத்தினங்கள் இருக்கின்றதோ அவர்கள் பணக்காரர்கள் ஆகின்றார்கள். மற்றவர்களையும் அதுபோல மாற்றுவார்கள். அனைவரையும் நல்ல வியாபாரிகள் என்று சொல்ல முடியாது. நல்ல நல்ல வியாபாரிகளை பெரிய பெரிய சென்டர்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். பெரிய ஆட்களுக்கு நல்ல இரத்தினங்கள் கொடுக்கப்படுகிறது. பெரிய பெரிய கடைகளில் (எக்ஸ்பர்ட்) திறமைசாலியாக இருக்கிறார்கள். பாபாவிற்குக் கூட வியாபாரி, இரத்தின வியாபாரி என்று கூறபடுகிறது. இரத்தினங்களின் வியாபாரம் செய்கிறார். பிறகு மந்திரவாதியாகவும் இருக்கிறார். பிறகு அவரிடம் திவ்ய திருஷ்டி என்கின்ற சாவி இருக்கிறது. ஏதாவது தீவரமாக பக்தி செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு சாட்சாத்காரம் கிடைக்கிறது. இங்கே அந்த விஷயங்கள் இல்லை. இங்கே எந்த ஒரு சிரமமும் இல்லாமல் வீட்டிலிருந்தபடியே காட்சிகள் கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் எளிதாகிக் கொண்டே போகிறது. பலருக்கு பிரம்மா மற்றும் கிருஷ்ணருடைய காட்சிகள் கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு பிரம்மாவிடம் செல்லுங்கள், அவரிடம் சென்று இளவரசன் ஆவதற்கான படிப்பை படியுங்கள் எனவும் கேட்டிருக்கிறது. இந்த பவித்திரமான இளவரசன் இளவரசிகள் இருந்திருக்கிறார்கள் அல்லவா?. இளவரசனை பவித்திரமானவர் என்றும் கூறலாம். பவித்திரதாவினால் தான் பிறவி எடுக்கிறார்கள் அல்லவா? பதீதமானவர்களை பிரஷ்டாச்சாரி என்று கூற முடியாது. பதீதத்திலிருந்து பாவனமாக வேண்டும். இதை புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது யாருக்கு வேண்டுமனாலும் புரிய வைக்கலாம். இவர் மிகவும் புத்திசாலி என மனிதர்கள் நினைக்கிறார்கள். எங்களிடம் எந்த சாஸ்திரங்களைப் பற்றிய ஞானமும் இல்லை. இது ஆன்மீக ஞானம். ஆன்மீக தந்தை தான் புரிய வைக்கிறார் என கூறுங்கள். இந்த திரிமூர்த்தி பிரம்மா, விஷ்ணு, சங்கர் கூட படைப்பு தான். படைக்கக் கூடியவர் ஒரு தந்தையே, அவர் எல்லைக்குட்பட்ட படைப்பவர். இவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, எல்லைக்கப்பாற்பட்ட படைப்பவர் தந்தை வந்து படிக்க வைக்கிறார். கடினமாக உழைக்க வேண்டும். பாபா மலராக மாற்றுகிறார். நீங்கள் ஈஸ்வரிய குலத்தினர். உங்களை பாபா பவித்திரமாக மாற்றுகிறார். பிறகு அபவித்ரமாக மாறுகிறீர்கள் என்றால் குலத்தை களங்கப்படுத்துபவர் ஆகிறீர்கள். தந்தைக்கு தெரியும் அல்லவா? பிறகு தர்மராஜ் மூலமாக நிறைய தண்டனைகள் கொடுப்பார். பாபாவுடன் தர்மராஜும் இருக்கிறார். தர்மராஜின் கடமை கூட இப்போது நிறைவடைகிறது. சத்யுகத்தில் இருக்க மாட்டார். பிறகு துவாபரயுகத்திலிருந்து ஆரம்பமாகிறது. தந்தை வந்து கர்மம், அகர்மம், விகர்மத்தின் விளைவுகளைப் புரிய வைக்கிறார். இவர் போன பிறவியில் இந்த கர்மத்தை செய்திருக்கிறார். ஆகையால் இதை அனுபவிக்க வேண்டியிருக்கிறது எனக் கூறுகிறார்கள் அல்லவா? சத்யுகத்தில் இவ்வாறு கூற மாட்டார்கள். கெட்ட கர்மங்களின் பெயரே அங்கு இருக்காது. இங்கே நல்லது கெட்டது இரண்டும் இருக்கிறது. சுக துக்கம் இரண்டும் இருக்கின்றது. ஆனால் சுகம் மிகவும் குறைவாக இருக்கின்றது. அங்கே துக்கத்தின் பெயர் கிடையாது. சத்யுகத்தில் துக்கத்தின் பெயர் எங்கிருந்து வந்தது ! நீங்கள் பாபாவிடமிருந்து புது உலகின் சொத்தை அடைகிறீர்கள். தந்தை தான் துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர். துக்கம் எப்போது ஆரம்பம் ஆகிறது என்பதைக் கூட நீங்கள் அறிகிறீர்கள். சாஸ்திரங்களில் கல்பத்தின் ஆயுள் மிக நீண்டதாக எழுதியுள்ளனர். அரைக் கல்பத்திற்கு நமது துக்கங்கள் நீங்கி விடும். நாம் சுகம் அடைவோம் என உங்களுக்குத் தெரியும். இந்த சிருஷ்டி சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? இதைப் பற்றி புரிய வைப்பது மிகவும் எளிதாகும். இந்த விஷயங்கள் அனைத்தும் உங்களைத் தவிர வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. இலட்சக்கணக்கான வருடங்கள் என கூறியதால் அனைத்து விஷயங்களும் புத்தியிலிருந்து விலகி விட்டது.

 

இப்போது இந்த சக்கரம் 5000 வருடத்தினுடையது என உங்களுக்குத் தெரியும். இந்த சூரிய வம்சம், சந்திர வம்சத்தினரின் இராஜ்யம் இருந்தது நேற்றைய விஷயம் ஆகும். பிராமணர்களின் பகல் என்று கூட கூறுகிறார்கள். சிவபாபாவின் பகல் என்று கூற முடியாது. பிராமணர்களின் பகல் மற்றும் பிராமணர்களின் இரவு. பிராமணர்கள் பக்தி மார்க்கத்தில் கூட செல்கிறார்கள். இது சங்கமம் ஆகும். பகலும் இல்லை, இரவும் இல்லை. பிராமணர்களாகிய நாம் தான் தேவதையாவோம், பிறகு திரேதாவில் சத்திரியர்கள் ஆவோம் என அறிகிறீர்கள். இதை நன்கு புத்தியில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த விஷயங்கள் வேறு யாருக்கும் தெரியவில்லை. சாஸ்திரங்களில் இவ்வளவு ஆயுள் என்று எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்தக் கணக்கை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் எனக் கேட்பார்கள். இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம் என்பது யாருக்கும் தெரியாது. அரைக் கல்பம் சத்யுகம் திரேதாயுகம், பிறகு பாதியிலிருந்து பக்தி ஆரம்பமாகிறது என குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது. அது திரேதா மற்றும் துவாபரயுகத்தின் சங்கமம் ஆகும். துவாபரயுகத்திலிருந்து தான் மெல்ல மெல்ல இந்த சாஸ்திரங்களை உருவாக்குகிறார்கள். எப்படி மரம் உயர்ந்து விரிந்திருக்கிறதோ அவ்வாறு பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் நீளமானதாகும். இதனுடைய விதை பாபா ஆவார். இது தலைகீழான மரமாகும். முதன் முதலில் ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருக்கிறது. இந்த விஷயங்களை பாபா தான் புரிய வைக்கிறார். இது முற்றிலும் புதியதாகும். இந்த தேவி தேவதா தர்மத்தைப் படைப்பவரை யாரும் அறியவில்லை. கிருஷ்ணரோ சிறிய குழந்தை. ஞானத்தைக் கூறுபவர் தந்தையே ! ஆனால் தந்தையை விட்டு விட்டு குழந்தையின் பெயரை போட்டு விட்டனர். கிருஷ்ணரின் சரித்திரத்தைக் கூட காண்பிக்கிறார்கள். லீலை எதுவும் இல்லை என்று பாபா கூறுகிறார். , பிரபுவே ! உங்களின் லீலை அளவற்றது எனப்பாடுகிறார்கள். லீலைகள் ஒருவருடையது தான். சிவபாபாவின் மகிமைகள் மிகவும் வித்தியாசமானது. அவர் எப்போதும் பாவனமாக இருக்கக் கூடியவர். ஆனால் அவர் தூய்மையான உடலில் வர முடியாது. அழுக்கான உலகத்தைத் தூய்மையாக்க வாருங்கள் என அவரை அழைக்கிறார்கள். நானும் பதீத உலகத்தில் தான் வர வேண்டியிருக்கிறது என பாபா கூறுகிறார். இவருடைய பல பிறவிகளின் கடைசியில் வந்து பிரவேசம் ஆகிறேன். முக்கியமான விஷயம்- தந்தையை நினையுங்கள் என பாபா கூறுகிறார். மற்ற அனைத்தும் சிறியதாகும். அதை அனைத்தையும் தாரணை செய்ய முடியாது. எதை தாரணை செய்ய முடியுமோ அதைப் புரிய வைக்கிறேன். மற்றபடி மன்மனாபவ என்பதை கொடுக்கிறேன். புத்தி வரிசைக் கிரமத்தில் இருக்கிறது அல்லவா! சில மேகங்கள் நன்கு பொழிகிறது. சில சிறிது பொழிந்து விட்டு சென்று விடுகிறது. நீங்கள் கூட மேகங்கள் அல்லவா? சிலரோ முற்றிலும் பொழிவதில்லை. ஞானத்தை எடுத்துக் கொள்ளும் சக்தி இல்லை. மம்மா பாபா நல்ல மேகங்கள் அல்லவா? குழந்தைகள் யார் நன்கு பொழிகிறார்களோ அவர்களின் சங்கததில் இருக்க வேண்டும். யார் பொழிவதில்லையோ அவர்களின் சங்கத்தில் இருப்பதால் என்னவாகும்? சங்கதோஷம் (கூடா தொடர்பு) நிறைய ஏற்படுகிறது. சிலரோ சிலரின் சங்கத்தினால் வைரம் போன்று மாறுகிறார்கள். சிலரோ சங்கத்தினால் கல்லாகவும் ஆகிவிடுகிறார்கள். நல்லவர்களை நன்கு பிடித்துக் கொள்ள வேண்டும். யார் ஞானம் நிறைந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தனக்குச் சமமான மலர்களாக மாற்றுவார்கள். சத்தியமான தந்தையுடன் யார் ஞானியாக யோகியாக ஆகியிருக் கிறார்களோ அவர்களின் சங்கத்தில் இருக்க வேண்டும். நாங்கள் இன்னாருடைய வாலைப் பிடித்துக் கொண்டு கடந்து போய் விடுவோம் என நினைக்கக் கூடாது. இவ்வாறு நிறைய பேர் கூறுகிறார்கள். ஆனால் இங்கேயோ இந்த விஷயங்கள் இல்லை. மாணவர்கள் யாருடைய வாலையாவது பிடித்துக் கொண்டு தேர்ச்சி அடைவார்களா?. படிக்க வேண்டும் அல்லவா!. இச்சமயம் நமக்கு ஞானம் கொடுக்க வேண்டும் என அவர் அறிகிறார். பக்தி மார்க்கத்தில் நாம் சென்று ஞானம் கொடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய புத்தியில் இருப்பதில்லை. இது அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. பாபா எதுவும் செய்வதில்லை. நாடகத்தில் தெய்வீக திருஷ்டி கிடைக்கக் கூடிய பார்ட் இருக்கிறது என்றால் காட்சிகள் கிடைக்கிறது. நான் உட்கார்ந்து காட்சிகள் கொடுப்பதில்லை என பாபா கூறுகிறார். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை யாராவது தேவியின் காட்சியைப் பார்க்க விரும்புகிறார்கள் என்றால் தேவி காட்சி கொடுக்க மாட்டார் அல்லவா?. ஓ பகவான் எங்களுக்கு காட்சி கொடுங்கள் எனக் கூறுகிறார்கள். நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்தால் நடக்கும் என பாபா கூறுகிறார். நானும் நாடகத்தில் கட்டப்பட்டிருக்கிறேன். நான் இந்த சிருஷ்டியில் வந்திருக்கிறேன் என பாபா கூறுகிறார். இவர் வாய் மூலமாக பேசிக் கொண்டிருக்கிறேன். இவரின் கண்களினால் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், ஒரு வேளை இந்த சரீரம் இல்லை என்றால் எப்படி பார்க்க முடியும்?. பதீத உலகத்தில் தான் நான் வர வேண்டியிருக்கிறது. சொர்க்கத்திலோ என்னை அழைப்பதில்லை. என்னை சங்கமத்தில் தான்  அழைக்கிறீர்கள். சங்கமயுகத்தில் வந்து சரீரத்தை எடுக்கும் போது தான் பார்க்கிறேன். நிராகார ரூபத்தில் எதையும் பார்ப்பதில்லை. உடல் இல்லாமல் ஆத்மா எதையும் செய்ய முடியாது. சரீரம் இல்லாமல் நான் எப்படிப் பார்க்க முடியும்? அசைய முடியும் என பாபா கூறுகிறார். ஈஸ்வர் அனைத்தையும் பார்க்கிறார். அனைத்தையும் செய்கிறார் என்பது குருட்டு நம்பிக்கையாகும். பிறகு எப்படி பார்ப்பார்? உடல் கிடைக்கும் போது பார்ப்பார் அல்லவா?. நல்லது அல்லது கெட்ட வேலை நாடகப்படி ஒவ்வொருவரும் செய்கின்றனர் என பாபா கூறுகின்றனர். நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. நான் இவ்வளவு கோடி கணக்கான மனிதர்களின் கணக்கை வைத்துக் கொள்ள முடியாது. எனக்கு சரீரம் இருக்கும் போது அனைத்தையும் செய்கிறேன். செய்பவர் செய்விப்பவர் என்று அதனால் தான் கூறுகிறார்கள். இல்லையென்றால் கூற முடியாது. நான் இவருக்குள் வரும் போது தான் தூய்மையாக மாற்றுவேன். மேலே ஆத்மா என்ன செய்யும்? சரீரத்தின் மூலமாகத் தான் நடிக்கும் அல்லவா?. நான் கூட இங்கே வந்து தான் நடிக்கிறேன். சத்யுகத்தில் என்னுடைய பார்ட் இல்லை. பார்ட் இல்லாமல் யாரும் எதுவும் செய்ய முடியாது. சரீரம் இல்லாமல் ஆத்மா எதுவும் செய்ய முடியாது. ஆத்மாவைத் தான் அழைக்கிறார்கள். அது சரீரத்தில் வந்து பேசுகிறது அல்லவா? உடலில் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இது விரிவான விளக்கம் ஆகும். முக்கியமான விஷயம் தந்தை மற்றும் சொத்தை நினையுங்கள் என்று கூறப்படுகிறது. எல்லையற்ற தந்தை இவ்வளவு பெரியவர், அவரிடம் இருந்து சொத்து எப்பொழுது கிடைக்கும் என தெரியவில்லை. எங்களின் துக்கத்தை நீக்குங்கள். சுகம் அளியுங்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால் எப்போது? இது யாருக்கும் தெரியவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புது விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நாம் அமரர்களாகிக் கொண்டிருக்கிறோம். அமர லோகத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள் அமர உலகத்தில் எத்தனை முறை சென்றுள்ளீர்கள். பல முறை. இதற்கு ஒரு போதும் முடிவு கிடையாது. மோட்சம் கிடைக்காதா என பலர் கேட்கிறார்கள். இல்லை, இது அனாதி அழிவற்ற நாடகம். இது ஒரு போதும் அழியாது என கூறுங்கள். இது முதலும் முடிவுமற்ற சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இச்சமயம் உண்மையான தலைவனை தெரிந்துக் கொண்டீர்கள். நீங்கள் சன்னியாசி அல்லவா? அந்த பிச்சைக்காரர்களைப் போன்று கிடையாது. சன்னியாசிகளுக்கு பிச்சைக்காரன் என்றும் கூறப்படுகிறது. நீங்கள் இராஜ ரிஷி. ரிஷிகளுக்கு சன்னியாசி என்றும் பெயர். இப்போது மீண்டும் நீங்கள் செல்வந்தர் ஆகிறீர்கள். பாரதம் இவ்வளவு பணக்கார நாடாக இருந்தது! இப்போது எப்படி பிச்சைக்கார நாடாகி விட்டது? எல்லையற்ற தந்தை வந்து எல்லையற்ற சொத்தைக் கொடுக்கிறார். பாபா நீங்கள் கொடுப்பதை வேறு யாரும் கொடுக்க முடியாது என்ற பாடலும் இருக்கிறது. தாங்கள் எங்களை உலகத்திற்கே அதிபதியாக்குகிறீர்கள். அதை யாரும் கொள்ளை அடிக்க முடியாது. இவ்வாறெல்லாம் பாடல்களை எழுதக் கூடியவர்கள் கூட பொருளை யோசிப்பதில்லை. அங்கே எந்த ஒரு பிரிவும் இருக்காது என உங்களுக்குத் தெரியும். இங்கே எத்தனை பிரிவுகள் பாருங்கள்! அங்கே ஆகாயம் பூமி அனைத்தும் உங்களுடையது. எனவே குழந்தைகளுக்கு இவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும் அல்லவா! எப்போதும் சிவபாபா கூறுகின்றார் எனப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அவர் ஒரு போதும் விடுமுறை எடுப்பதில்லை. ஒரு போதும் நோய்வாய்ப்படுவதில்லை. சிவபாபாவின் நினைவிருக்க வேண்டும். இவருக்கு நிர்அகங்காரி என்று பெயர். நான் இதைச் செய்கிறேன், நான் அதைச் செய்கிறேன் என்ற அகங்காரம் வரக் கூடாது. சேவை செய்வது கடமையாகும். இதில் அகங்காரம் வரக் கூடாது. அகங்காரம் வந்தது என்றால் விழுந்தனர். சேவை செய்து கொண்டே இருங்கள். இது ஆன்மீக சேவையாகும். மற்ற அனைத்தும் உடலுக்கானது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்

1. பாபா என்ன படிக்க வைக்கின்றாரோ அதற்கு பிரதி பலனாக மலர்களாகிக் காட்ட வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். ஒரு போதும் ஈஸ்வரிய குலத்தின் பெயரை கெட்ட பெயராக்கக் கூடாது. ஞானி யோகியாக இருப்பவர்களின் சங்கத்தில் இருக்க வேண்டும்.

 

2. நான் என்பதை தியாகம் செய்து நிர்அகங்காரி ஆகி ஆன்மீக சேவை செய்ய வேண்டும். இதை தனது கடமை என புரிந்து கொள்ள வேண்டும். அகங்காரத்தில் வரக் கூடாது.

 

வரதானம்:

தனது ஃபரிஸ்தா சொரூபத்தின் மூலம் அனைவருக்கும் ஆஸ்தியின் அதிகாரம் அளிக்கக் கூடிய கவர்ந்திழுக்கும் மூர்த்தி ஆகுக.

 

ஃபரிஸ்தா சொரூபத்தின் அந்தளவு ஜொலிக்கக் கூடிய ஆடையை அணிந்து கொள்ளுங்கள், அது வெகு தொலைவிலுள்ள ஆத்மாக்களை தனது பக்கம் கவர்ந்திழுக்கும் மேலும் அனைவரையும் யாசிக்கும் நிலையிலிருந்து விடுவித்து ஆஸ்திகளின் ஆதிகாரி ஆக்கி விடுகிறது. இதற்காக ஞானத்தின் சொரூபம், நினைவின் சொரூபம் மற்றும் அனைத்து தெய்வீக குணங்கள் சொரூபம் ஆகி பறக்கும் கலையில் நிலைத்திருப்பதற்கான பயிற்சியை அதிகரியுங்கள். உங்களுடைய பறக்கும் கலை தான் அனைவருக்கும் நடமாடும் ஃபரிஸ்தாவிலிருந்து தேவதை சொரூபத்தின் சாட்சாத்காரம் செய்ய வைக்கும். இது தான் விதாதா (விதியை உருவாக்கக் கூடிய) வரதாதாவின் (வரங்களை அளிக்கக் கூடிய) நிலை (மனநிலை).

 

சுலோகன்:

மற்றவர்களின் மனதினுடைய உணர்வுகளை தெரிந்துக் கொள்வதற்காக சதா மன்மனாபவ என்ற மனநிலையில் நிலைத்து இருங்கள்.

 

ஓம்சாந்தி