18.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

பிதாஸ்ரீ அவர்களின் புண்ணிய நினைவு தினத்தன்று காலை வகுப்பில் படிப்பதற்காக பாப்தாதாவின் இனிமையான விலைமதிக்க முடியாத மகாவாக்கியங்கள்

 

இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய நடத்தை மிகவும் உயர்ந்ததாக இருக்க வேண்டும், நீங்கள் தேவதை ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இலட்சியம் மற்றும் இலட்சணத்தை, சொல்வது மற்றும் செய்வதை சமமாக ஆக்குங்கள்

 

பாடல்:

உன்னை அடைந்ததால் நாங்கள் இந்த உலகத்தையே அடைந்து விட்டோம் . .

 

ஓம் சாந்தி !

இனிமையிலும் இனிமையான குழந்தைகள் பாடலைக் கேட்டீர்களா? இப்பொழுதோ மிகக் குறைந்த குழந்தைகள் தான் இருக்கிறீர்கள். பிறகு அநேகக் குழந்தைகள் ஆகிவிடுவீர்கள். பிரஜாபிதா பிரம்மாவை அனைவருமே தெரிந்து கொள்ளத்தான் வேண்டும் இல்லையா? அனைத்து மதத்தைச் சேர்ந்தவர் களும் ஏற்றுக் கொள்வார்கள். அந்த குடும்பத்திருக்கும் தந்தையும் எல்லைக்குட்பட்ட பிரம்மா தான் என்று பாபா புரிய வைத்திருக்கிறார். அவர்களுடைய குடும்பப் பெயர் மூலமாக அவர்களுடைய வம்சம் உருவாகிறது. இது பிறகு எல்லைக்கப்பாற்பட்டது. பெயரே பிரஜாபிதா பிரம்மா. அந்த எல்லைக்குட்பட்ட பிரம்மா குறைந்த எண்ணிக்கையில் பிரஜைகளைப் (குழந்தைகளை) படைக்கிறார்கள். சிலர் நான்கு குழந்தைகளை படைப்பார்கள், சிலர் படைக்காமலும் இருப்பார்கள். இவரைப் பொறுத்தவரையில் இவருக்கு குழந்தையே இல்லை என்று சொல்ல முடியாது. முழு உலகத்தினரோ இவருடைய குழந்தை தான். எல்லைக்கப்பாற்பட்ட பாப்தாதா இருவருக்கும் இனிமையிலும் இனிமையான குழந்தைகள் மேல் மிகுந்த ஆன்மீக அன்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு எவ்வளவு அன்போடு கற்பிக்கிறார்! மேலும் என்னவாக இருப்பவரை என்னவாக ஆக்கிவிடுகிறார். அப்படியானால் குழந்தைகளுக்கு குஷியின் அளவு எவ்வளவு உயர்ந்திருக்க வேண்டும்!. எப்பொழுது தந்தையை நிரந்தரமாக நினைவு செய்து கொண்டே இருப்பீர்களோ அப்பொழுது தான் குஷியின் அளவு அதிகரிக்கும். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் மிகவும் அன்போடு குழந்தைகளைத் தூய்மையாக்கும் சேவை செய்கிறார். 5 தத்துவங்களையும் சேர்த்து அனைத்தையும் தூய்மையாக்குகிறார். ஒன்றும் மதிப்பில்லாத கல்லிருந்து மிகவும் மதிப்புள்ள வைரம் மாதிரி ஆக்குகிறார். எவ்வளவு பெரிய அளவற்ற சேவை!

 

தந்தை குழந்தைகளுக்கு மிகவும் அன்போடு அறிவுரையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஏனென்றால் குழந்தைகளைத் திருத்துவது தந்தை மற்றும் ஆசிரியரின் வேலை தான். தன்தையின் ஸ்ரீமத் மூலமாகத் தான் நீங்கள் சிரேஷ்டமாக ஆகிறீர்கள். எனவே நான் ஸ்ரீமத் படி நடந்து கொண்டிருக்கிறேனா அல்லது என்னுடைய மனம் சொல்லும் வழிப்படி நடந்து கொண்டிருக்கிறேனா என்று இதையும் குழந்தைகள் தங்களுடைய சார்ட்டில் பார்க்க வேண்டும. ஸ்ரீமத் மூலமாகத் தான் மிகவும் குறையற்றவர்களாக ஆவீர்கள். எந்த அளவு தந்தை மீது அன்பான புத்தி இருக்குமோ அந்த அளவே வெளியில் தெரியாத குஷியினால் நிரம்பியிருப்பீர்கள். எனக்கு அந்த அளவு தலைக்கு மேலே குஷி இருக்கிறதா என்று தன் இதயத்தைத் தொட்டு கேட்க வேண்டும். அவிபச்சார (வேறு யாருடைய நினைவும் இல்லாத) நினைவு இருக்கிறதா? ஏதாவது எதிர்பார்ப்போ இல்லையே? ஒரு தந்தையின் நினைவு இருக்கிறதா? சுயதரிசன சக்கரம் சுற்றிக் கொண்டே இருந்து அப்பொழுது ஆத்மா உடலிலிருந்து வெளியாக வேண்டும். ஒரு சிவ பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை. இது தான் இறுதி மந்திரம் ஆகும்.

 

தந்தை ஆன்மீகக் குழந்தைகளிடம் கேட்கிறார். இனிமையான குழந்தைகளே! எப்பொழுது நீங்கள் பாப்தாதாவை நேரெதிரில் பார்க்கிறீர்கள் என்றால், என்னுடைய பாபா தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார், சத்குருவாகவும் இருக்கிறார் என்று புத்தியில் வருகிறதா? தந்தை என்னை இந்த பழைய உலகத்திலிருந்து புது உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். இந்த பழைய உலகம் இப்பொழுது அழிந்தே விடும். இதுவோ இப்பொழுது ஒரு பிரயோஜனம் இல்லாததாக ஆகிவிட்டது. தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் புது உலகைப் படைக்கிறார். நாம் ஒவ்வொரு கல்பத்திலும் நரனிலிருந்து நாராயணன் ஆகிறோம். குழந்தைகள் இதை சிந்தனை செய்து எவ்வளவு உற்சாகத்தில் இருக்க வேண்டும்! குழந்தைகளே நேரம் மிகக்குறைவாக இருக்கிறது? இன்று என்னவாக இருக்கிறது? நாளை என்னவாக இருக்கும்? இன்று மற்றும் நாளைக்கான விளையாட்டு ஆகும். எனவே குழந்தைகள் நியமத்திற்குப் புறம்பான காரியம் எதுவும் செய்யக்கூடாது. குழந்தைகள் உங்களுடைய நடத்தை மிகவும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். தேவதைகள் மாதிரி என்னுடைய நடத்தை இருக்கிறதா என்று தன்னைத் தானே பார்க்க வேண்டும். தேவதைகள் மாதிரியான புத்தி எனக்கு இருக்கிறதா? என்ன இலட்சியமாக இருக்கிறதோ அந்த மாதிரி ஆகிக் கொண்டிருக்கிறேனா அல்லது வெறும் வார்த்தை அளவில் மட்டும் தான் இருக்கிறதா? என்ன ஞானம் கிடைத்திருக்கிறதோ அதிலேயே மூழ்கியிருக்க வேண்டும். அளவு உள்நோக்கு முகமுடையவராகி இந்த விஷயங்களின் மீது சிந்தனை செய்து கொண்டே இருப்பீர்களோ அந்த (கலி) அளவு மிகுந்த குஷி இருக்கும். இந்த உலகிலிருந்து அந்த உலகிற்கு செல்வதற்கு இன்னும் கொஞ்ச காலம் தான் இருக்கிறது என்று குழந்தைகள் நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். எப்பொழுது அந்த உலகத்தை விட்டு விட்டோம் என்றால், திரும்பி பின்னால் ஏன் பார்க்க வேண்டும்?. புத்தியின் நினைவு அந்த பக்கம் ஏன் செல்கிறது? இதையும் புத்தியால் யோசிக்க வேண்டும். எப்பொழுது கடந்து வந்து விட்டோம் என்றால் பின்பு ஏன் புத்தி செல்கிறது. கடந்த காலத்து விஷயங்களை சிந்தனை செய்யாதீர்கள். இந்த பழைய உலகத்தில் எந்தவொரு ஆசையும் இருக்க வேண்டாம். இப்பொழுதோ நான் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்ற உயர்ந்த ஆசை தான் வைக்க வேண்டும். எங்கேயும் நின்று விடக் கூடாது. பார்க்கக் கூடாது. முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும் பார்த்துக் கொண்டே இருங்கள். அப்பொழுது தான் ஆடாத அசையாத ஸ்திரமான நிலை இருக்கும். நேரம் மிகவும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பழைய உலகத்தின் நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கிறது. உங்களுக்கு இதனுடன் எந்தத் தொடர்பும் இல்லை. உங்களுக்கு புது உலகத்துடன் தான் தொடர்பு ! அது இப்பொழுது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது 84 பிறவிச் சக்கரம் முடிவடைந்து விட்டது என்று தந்தை புரிய வைத்திருக்கிறார். இப்பொழுது இந்த உலகம் கண்டிப்பாக அழிந்தே தான் தீரும், இதற்கு மிகவும் மோசமான நிலை ஆகும். இந்த நேரம் மிகவும் அதிகமான கோபம் இயற்கைக்கு வருகிறது. எனவே அனைத்தையும் அழித்து விடுகிறது. இந்த இயற்கை தன்னுடைய கோபத்தை மிகவும் வேகமாகக் காண்பிக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். பழைய உலகத்தை மூழ்கடித்து விடும். வெள்ளம் ஏற்படும். நெருப்புப் பிடித்து எரியும். மனிதர்கள் பட்டினியால் இறப்பார்கள். பூகம்பத்தில் வீடுகள் ஆகியவை விழுந்து நொறுங்கி விடும். இந்த அனைத்து நிலைமைகளும் முழு உலகத்திலும் வரும். அனேக விதமாக மரணம் ஏற்படும். விஷவாயு நிரம்பிய குண்டுகளைப் போடுவார்கள். அதனுடைய துர்நாற்றத்தினாலேயே மனிதர்கள் இறந்து விடுவார்கள். இவை அனைத்தும் நாடகத் திட்டத்தில் பதிவாகியுள்ளன. இதில் யார் மீதும் எந்தப் பழியும் சொல்ல முடியாது. விநாசமோ கண்டிப்பாக ஏற்படும். எனவே இந்த பழைய உலகிலிருந்து புத்தியின் நினைவை அகற்றி விட வேண்டும். இப்பொழுது நீங்கள் ஆஹா சத்குருவே..... அவர் எங்களுக்கு இந்த வழியைக் கூறினார் என்று கூறுவீர்கள். எங்களுடைய உண்மையிலும் உண்மையான குரு பாபா ஒருவர் தான். அவருடைய பெயர் தான் பக்தியிலும் இருந்து வந்திருக்கிறது. அவருக்காகத் தான் ஆஹா! ஆஹா! என்று மகிமைப் பாடப்படுகிறது. நீங்கள் குழந்தைகள் ஆஹா! சத்குருவே ஆஹா!! என்று கூறுவீர்கள். ஆஹா அதிர்ஷ்டமே ஆஹா!. ஆஹா! நாடகமே ஆஹா!. தந்தையின் ஞானத்தின் மூலம் எங்களுக்கு சத்கதி கிடைத்துக் கொண்டிருக்கிறது.

 

நீங்கள் குழந்தைகள் உலகில் அமைதியை ஸ்தாபனை செய்வதற்குப் பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்கள். அப்படி இப்பொழுது புதிய பாரதம், புதிய உலகம் எங்குல் இலட்சுமி நாராயணனின் இராஜ்ஜியம் இருந்ததோ அது மீண்டும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்ற இந்தக் குஷியான செய்தியை அனைவருக்கும் கூறுங்கள். இந்த துக்கமான உலகம் மாறி சுகமான உலகம் ஆக வேண்டும். நாம் சுகமான உலகத்தின் அதிபதியாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று மனதில் குஷி இருக்க வேண்டும். அங்கே சத்யுகத்தில் நீங்கள் மிகவும் திருப்தியாக குஷியாக இருக்கிறீர்களா? என்று யாரும் கேட்க மாட்டார்கள். உடல் நலம் நன்றாக இருக்கிறதா? இவ்வாறு இந்த உலகத்தில் கேட்கப்படும் தான் ஏனென்றால், இதுவோ துக்கமான உலகம்! குழந்தைகள் உங்களிடம் கூட இப்படி யாரும் கேட்க முடியாது. நாங்கள் இறைவனின் குழந்தைகள் எங்களிடம் வந்து என்ன நலம் விசாரிக்கிறீர்கள் என்று கூறுவீர்கள். நாங்களோ எப்பொழுதும் திருப்தியாக குஷியாக இருக்கிறோம். சொர்க்கத்தையும் விட இங்கே அதிகக் குஷி இருக்கிறது. ஏனென்றால் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யும் தந்தை கிடைத்து விட்டார் என்றால், அனைத்தும் கிடைத்தது. தொலை தூரம் பிரம்மத்தில் இருக்கும் தந்தையை அடைய வேண்டும் என்ற கவலை இருந்தது. அவரும் கிடைத்து விட்டார். பிறகு வேறு என்ன கவலை இருக்கிறது? இந்த போதை எப்பொழுதும் இருக்க வேண்டும் மிகவும் இராயலான (கௌரவமான) இனிமையானவர் ஆக வேண்டும். தன்னுடைய எதிர்காலத்தை உயர்ந்ததாக ஆக்குவதற்கும் இப்பொழுது தான் சரியான நேரம். பல கோடி மடங்கு செல்வந்தர்கள் ஆவதற்கான முக்கியமான வழி. ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையோடு நடந்து கொள்வது. உள்நோக்குப் பார்வை யுடையவராக ஆக வேண்டும். நான் எப்படி காரியம் செய்வேனோ என்னைப் பார்த்து மற்றவர்களும் செய்வார்கள் என்பது எப்பொழுதும் கவனத்தில் இருக்க வேண்டும். தேக அகங்காரம் ஆகிய விகாரங்களின் விதையோ அரைக்கல்பமாக விதைக்கப் பட்டிருக்கிறது. முழு உலகிலும் இந்த விதை இருக்கிறது. இப்பொழுது அதை உள்ளடக்க வேண்டும். தேக அபிமானம் என்ற விதையை விதைக்கக்கூடாது. இப்பொழுது ஆத்ம அபிமானிக்கான விதையை விதைக்க வேண்டும். இப்பொழுது உங்களுடையது வானப்பிரஸ்த நிலை ஆகும். மிகவும் அன்பிற்குரிய தந்தை கிடைத்திருக்கிறார், அவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். தந்தைக்குப் பதிலாக உடலை மற்றும் உடருக்கும் பிற மனிதர்களை நினைவு செய்வது-இதுவும் தவறு ஆகும். நீங்கள் ஆத்ம அபிமானி ஆவதற்கு சீதளம் ஆவதற்காக மிகவும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும்.

 

இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய இந்த வாழ்க்கையில் நீங்கள் ஒருபொழுதும் நொந்து போகக்கூடாது. இந்த வாழ்க்கையை விலைமதிக்க முடியாதது என்றும் வர்ணிக்கப்படுகிறது, இதை பாதுகாப்பாக வைத்திருக்கவும் வேண்டும். கூடவே வருமானமும் செய்ய வேண்டும். இங்கே (மதுபன்) எத்தனை நாட்கள் இருப்பீர்களோ தந்தையை நினைவு செய்து அளவில்லா வருமானத்தை சேமித்துக் கொண்டே இருங்கள். கணக்கு வழக்குகள் முடிவடைந்து கொண்டே இருக்கும். எனவே ஒருபொழுதும் நொந்து போகக்கூடாது. பாபா சத்யுகம் எப்பொழுது வரும் என்று குழந்தைகள் கேட்கிறார்கள். அதற்கு குழந்தைகளே முதலில் நீங்கள் கர்மாதீத் நிலையை அடையுங்கள் என்று பாபா கூறுகிறார். எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அந்த நேரம் கர்மாதீத் ஆவதற்கான முயற்சி செய்யுங்கள். பற்றுதலை வென்றவராக ஆவதற்கும் குழந்தைகளில் மிகுந்த தைரியம் வேண்டும். எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து முழு ஆஸ்தியை அடைய வேண்டும் என்றால் பற்றுதலை வென்றவர் ஆக வேண்டும். தன்னுடைய மனநிலையை மிக உயர்ந்ததாக ஆக்க வேண்டும். தந்தையின் குழந்தையாக ஆகியிருக்கிறீர்கள் என்றால் தந்தையின் ஆன்மீக சேவையிலேயே ஈடுபட்டு விட வேண்டும். சுபாவம் மிக இனிமையானதாக வேண்டும். மனிதர்களின் சுபாவம் கூட மிகவும் நோக வைக்கிறது. ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. அதன் மூலம் தன்னை சோதித்துக் கொண்டே இருங்கள். என்னென்ன குறைகள் இருக்கின்றனவோ அவற்றை அகற்றி சுத்தமான வைரம் ஆக வேண்டும். கொஞ்சம் குறைபாடு இருந்தால் கூட மதிப்பு குறைந்து விடும். எனவே கடுமையாக உழைத்து தன்னை மதிப்புள்ள வைரம் ஆக்க வேண்டும்.

 

குழந்தைகள் உங்களை தந்தை இப்பொழுது புது உலகத்தின் சம்மந்தத்தின் முயற்சி செய்விக்கிறார். இனிமையான குழந்தைகளே ! இப்பொழுது எல்லைக்கப்பாற்பட்ட தந்தை மற்றும் எல்லைக்கப்பாற்பட்ட சுகத்தின் ஆஸ்தியோடு சம்மந்தம் வையுங்கள். ஒரே ஒரு எல்லைக்கப்பாற்பட்ட தந்தை தான் உங்களை பந்தனத்திலிருந்து விடுவித்து ஆன்மீக சம்மந்தத்தில் அழைத்துச் செல்கிறார். நான் ஈஸ்வரிய சம்மந்தத்தைச் சேர்ந்தவன் என்ற நினைவு எப்பொழுதுமே இருக்கட்டும். இந்த ஈஸ்வரிய சம்மந்தம் தான் எப்பொழுதும் சுகம் கொடுப்பது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட, மிக அன்பிற்குரிய குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமான பாப்தாதாவின் உள்ளப்பூர்வமான மேலும் உயிருக்கு உயிரான அன்பு நிறைந்த அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம், ஆன்மீகத் தந்தையிடமிருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்காரம்.

 

அவ்யக்த பாப்தாதாவின் மதுரமான மகாவாக்கியம் (ரிவைஸ்)

வெற்றி மூர்த்தி ஆவதற்காக முக்கியமாக இரண்டே விஷயங்கள் வேண்டும் - ஒன்று தூய்மை (ப்யூரிட்டி) மற்றொனறு ஒற்றுமை (யூனிட்டி). ஒருவேளை தூய்மையில் குறை இருக்கிறதெனில் ஒற்றுமையிலும் குறை இருக்கிறது. தூய்மை என்று பிரம்மச்சரிய விரதத்திற்கு மட்டும் சொல்லப்படுவதில்லை. எண்ணம், சுபாவம், சம்ஸ்காரத்திலும் தூய்மை வேண்டும். ஒருவர் அடுத்தவர் மீது பொறாமை கொள்வது, அல்லது வெறுப்பான எண்ணங்களை எண்ணுவது கூட ப்யூரிட்டி இல்லை. இம்ப்யூரிட்டி (தூய்மையற்ற நிலை) என்று தான் சொல்வோம். தூய்மை என்பதன் பொருள் அனைத்து விகாரங்களின் துளி அளவு (அம்சம்) கூட இருக்கக்கூடாது. குழந்தைகள் நீங்கள் நிமித்தமாகியுள்ளீர்கள் - மிக உயர்ந்த காரியத்தை நிறைவேற்றுவதற்காக. நிமித்தமாகவோ மகாரதி ரூபத்தில் ஆகியிருக்கிறீர்கள் அல்லவா! ஒருவேளை லிஸ்ட் எடுத்தால் லிஸ்ட்டில் கூட சர்வீஸ்புல் அதாவது சேவைக்கு நிமித்தமாகியுள்ள பிரம்மாவின் குழந்தைகள் தான் மகாரதியின் லிஸ்ட்டில் கணக்கிடப்படுவார்கள். மகாரதியின் தனித்தன்மை எதுவரை வந்துள்ளது? அதையும் ஒவ்வொருவரும் தானே தெரிந்திருக்கின்றனர். மகாரதி என்ற லிஸ்ட்டில் யார் கணக்கிடப்படுகிறார்களோ அவர்கள் போகப் போக மகாரதியாக இருப்பார்கள் அல்லது தற்சமயத்தின் லிஸ்ட்டில் மகாரதிகளாக இருக்கின்றனர். எனவே இந்த இரண்டு விஷயங்களின் மீது கவனம் தேவை.

 

யூனிட்டி (ஒற்றுமை) என்றால் சம்ஸ்கார-சுபாவம் ஒத்துப்போவதில் யூனிட்டி. யாருடைய சம்ஸ்காரம் மற்றும் சபாவம் ஒத்துப்போகவில்லை என்றாலும் கூட முயற்சி செய்து ஒத்து:பபோகச் செய்யுங்கள். இதுவே யூனிட்டி குழுவாக இருப்பதை மட்டும் யூனிட்டி என்று சொல்ல மாட்டோம். சர்வீஸ்புள் நிமித்தமாகியுள்ள ஆத்மாக்கள் இந்த இரண்டு விசயங்கள் இன்றி எல்லையற்ற சேவைக்கு நிமித்தமாக முடியாது. எல்லைக்குட்பட்ட சேவை ஆகலாம், எல்லையற்ற சேவைக்காக இவ்விருவிஷயங்களும் அவசியம். கேட்டிருக்கிறோமல்லவா - நடனத்தில் தாளத்துடன் தாளம் சேர்ந்தால் தான் ஆஹா! ஆஹா! என்பார்கள். எனவே இங்கும் தாளத்தடன் சேர்வது என்றால் நடனமாடுவது. இவ்வளவு ஆத்மாக்கள் யாரெல்லாம் ஞானத்தை வர்ணிக்கின்றனரோ, அனைவரது வாயிலிருந்தும் இந்த வார்த்தைகள் வெளிவரவேண்டும் - இவர்கள் ஒரே விசயத்தைச் சொல்கின்றனர் - ஒரே வார்த்தை தான். இவ்வாறு கூறுகிறார்கள் தானே! இவ்விதமாகவே அனைவரது சுபாவம் மற்றும் சம்ஸ்காரம் ஒருவருக்கொருவர் ஒத்துப் போவதையே நடமாடுவது என்று சொல்வோம். இதற்காகவும் திட்டம் தீட்டுங்கள்

 

எந்த ஒரு பலவீனத்தையும் அழிப்பதற்காக விசேஷ மகாகாளி சொரூப சக்திகளின் குழு வேண்டும். அக்குழு தனது யோக அக்னியின் பிரபாவத்தால் பலவீனமான சூழ்நிலையை மாற்ற வேண்டும். இப்போதோ நாடகப்படி ஒவ்வொருவரது நடத்தை என்ற கண்ணாடியில் கடைசி ரிசல்ட் தெளிவாகத் தெரியப்போகிறது. போகப்போக மகாரதிக் குழந்தைகள் தனது குணத்தின் சக்தி மூலமாக ஒவ்வொருவரது முகத்தினால் அவர்களது கர்மத்தின் கதையை தெளிவாகப் பார்க்க முடியும். எவ்வாறு மோசமான உணவின் துர்நாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிகிறதோ, அவ்வாறே மோசமான எண்ணங்களின் ஆகாரத்தை உட்கொள்ளக்கூடிய ஆத்மாக்களின் வைப்ரேஷன் புத்தியில் தெளிவாக டச்சிங் ஆகும். இதற்கான எந்திரம் புத்தியில் லைன் க்ளியர் (தெளிவாக) ஆக இருப்பது. யாருக்கு இந்த எந்திரம் சக்திவாய்ந்ததாக இருக்குமோ அவர்கள் எளிதாகத் தெரிந்துக் கொள்ள முடியும். சக்திகள் மற்றும் தேவதைகளின ஜடச்சித்திரங்களில் கூட இந்த தனித்தன்மை இருக்கிறது, அதாவது எந்த ஒரு பாவாத்மாவும் தனது பாவங்களை (அச்சிலைகளின்) முன்னால் சென்று மறைக்க முடிவதில்லை. நாங்கள் (பலவீனத்தை) இப்படி என்று தானாகவே வர்ணனை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே ஜட நினைவுச் சின்னத்தில் கூட இப்போது கடைசி காலம் வரை இந்த தனித்தன்மை தென்படுகிறது. சைத்தன்ய ரூபத்தில் சக்திகளின் இந்த தனித்தன்மை பிரசித்தி பெற்றிருந்தனால் தான் நினைவு சின்னத்திலும் தெரிகிறது. இது மாஸ்டர் அனைத்தும் அறிந்தவர் என்ற ஸ்டேஜ் (நிலை) கூட நடைமுறையில் அனுபவம் ஆகும், ஆகிக் கொண்டிருக்கிறது. இனிமேலும் ஆகும். அப்படிப்பட்ட குழுவை உருவாக்கியிருக்கிறீர்களா? உருவாக்கத்தான் வேண்டும். அவ்வாறு ஒளி சொரூப குழு வேண்டும், அவர்களது ஒவ்வொரு அடியிலும் சொரூப குழு வேண்டும். அவர்களது ஒவ்வொரு அடியிலும் பாபாவின் பிரத்யட்சத்தா (வெளிப்பாடு) ஆகும். நல்லது.

 

வரதானம்:-

சேவை செய்துகொண்டே நினைவினுடைய அனுபவங்களின் பந்தயம் (ரேஸ்) செய்யக்கூடிய சதா லவ்லீன் ஆத்மா ஆகுக.

 

நினைவில் இருக்கிறீர்கள், ஆனால், நினைவின் மூலம் என்ன பிராப்திகள் கிடைக்கின்றனவோ, அந்த பிராப்திகளின் அனுபவத்தை அதிகரித்துக்கொண்டே செல்லுங்கள். அதற்காக இப்பொழுது விசேஷமாக சமயம் மற்றும் கவனம் கொடுங்கள். இதன் மூலம், இவர்கள் அனுபவங்களின் கடலில் மூழ்கி இருக்கும் லவ்லீன் (அன்பில் மூழ்கியிருக்கும்) ஆத்மா என்று தெரியவரும். எவ்வாறு தூய்மையான, சாந்தமான சூழ்நிலையின் உணர்வு ஏற்படுகிறதோ, அவ்வாறே இவர்கள் சிரேஷ்டமான யோகி, அன்பில் மூழ்கியிருப்பவர்கள் என்ற இந்த அனுபவம் ஏற்பட வேண்டும். ஞானத்தின் பிரபாவம் உள்ளது, ஆனால், யோகத்தின் வெற்றி சொரூபத்தினுடைய பிரபாவம் ஏற்பட வேண்டும். சேவை செய்துகொண்டே நினைவின் அனுபவங்களில் மூழ்கியிருங்கள், நினைவு யாத்திரையினுடைய அனுபவங்களினுடைய ரேஸ் செய்யுங்கள்.

 

சுலோகன்:-

வெற்றியை சுவீகாரம் செய்வது என்றால் எதிர்கால பிராப்தியை இங்கேயே முடித்துவிடுவது என்று அர்த்தம்.

 

அவ்யக்த ஸ்திதியின் அனுபவம் செய்வதற்காக விசேஷமான ஹோம்வொர்க் (வீட்டுப் பாடம்) எவ்வாறு பிரம்மா பாபா நம்பிக்கையின் ஆதாரத்தில், ஆன்மிக போதையின் ஆதாரத்தில், உறுதியான விதியைத் தெரிந்தவராகி, ஒரு விநாடியில் அனைத்தையும் வெற்றிகரமானதாகச் செய்தார். தனக்காக எதையும் வைத்துக் கொள்ளவில்லை. அன்பின் அடையாளமாவது அனைத்தையும் வெற்றிகரமானதாக ஆக்குவது. வெற்றிகரமானதாக ஆக்குவது என்றால், சிரேஷ்டமானவைகளின் பக்கம் ஈடுபடுத்துவது என்று அர்த்தம்.

 

ஓம்சாந்தி