26.01.2020           காலை முரளி               ஓம் சாந்தி        அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           13.11.1985           மதுபன்


  

சங்கல்பம், சம்ஸ்காரம், சம்பந்தம், பேச்சு மற்றும் கர்மத்தில் புதுமையைக் கொண்டு வாருங்கள்.

 

இன்று புது உலகத்தின் புதிய படைப்பின் படைப்பாளர் தந்தை தன்னுடைய புதிய உலகத்தின் அதிகாரி குழந்தைகளை அதாவது புதிய படைப்பைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். புதிய படைப்பு சதா அன்பிற்குரியதாக இருக்கும். உலகத்தின் கணக்குப்படி பழைய உலகத்தில் புதிய வருடத்தைக் கொண்டாடுகின்றனர். ஆனால், நீங்கள் புதிய படைப்பினுடைய, புதிய யுகத்தினுடைய, புதிய வாழ்க்கையினுடைய அனுபவத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள். அனைத்தும் புதியதாகிவிட்டது. பழையது முடிந்து புதிய பிறப்பு, புதிய வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. பிறப்பு புதியதாக உள்ளது எனில், பிறப்பின் மூலம் வாழ்க்கை தானாகவே மாறிவிடுகிறது. வாழ்க்கை மாறுவது என்றால் சங்கல்பம், சம்ஸ்காரம், சம்பந்தம் ஆகிய அனைத்தும் மாறிவிட்டது அதாவது புதியதாக ஆகிவிட்டது. தர்மமும் புதியது, கர்மமும் புதியது. அவர்கள் வருடத்தை மட்டும் புதியது என்று கூறுகின்றனர். ஆனால், உங்கள் அனைவருக்கும் அனைத்துமே புதியதாகிவிட்டது. இன்றைய தினம் அமிர்தவேளையில் இருந்து புதிய வருடத்திற்கான வாழ்த்துக்கள் கொடுத்தீர்கள், ஆனால், வாயிலிருந்து மட்டும் வாழ்த்துக்கள் கூறினீர்களா அல்லது மனதிலிருந்து கூறினீர்களா? புதுமையான எண்ணம் கொண்டு வந்தீர்களா? இந்த மூன்று விசேஷமான விசயங்களினுடைய புதுமைக்கான சங்கல்பம் செய்தீர்களா? சங்கல்பம், சம்ஸ்காரம், சம்பந்தம். சம்ஸ்காரம் மற்றும் சங்கல்பம் புதியதாக அதாவது சிரேஷ்டமானதாக ஆகிவிட்டது. புதிய பிறப்பு, புதிய வாழ்க்கை கிடைத்துவிட்ட போதிலும் இப்பொழுதும் கூட பழைய பிறவி மற்றும் வாழ்க்கையின் சங்கல்பம், சம்ஸ்காரம், சம்பந்தம் இல்லை தானே? ஒருவேளை, இந்த மூன்று விசயங்களில் ஏதாவது ஒரு விசயத்தில் அம்சமாத்திரத்தில் பழையது தங்கி இருக்கிறது எனில், இந்த அம்சம் புது வாழ்க்கையினுடைய, புதிய யுகத்தினுடைய, புதிய சம்பந்தத்தினுடைய, புதிய சம்ஸ்காரத்தினுடைய சுகம் மற்றும் சர்வ பிராப்திகளிலிருந்து வஞ்சிக்கச் செய்துவிடும். சில குழந்தைகள் பாப்தாதாவிற்கு முன்னால் தன்னுடைய மனதின் விசயங்களை உரையாடலாகக் கூறுகின்றனர். வெளியில் சொல்வதில்லை. எவ்வாறு இருக்கிறீர்கள்? என்று வெளியில் எவராவது கேட்டால், அனைவரும், மிகவும் நன்றாக இருக்கிறோம் என்றே கூறுகிறார்கள். ஏனெனில், வெளியில் உள்ள மனிதர்கள் உள்ளத்தில் உள்ளதை என்ன அறிவார்கள் என்று நினைக்கின்றனர். ஆனால், தந்தையிடம் செய்யும் உரையாடலில் மறைக்க முடியாது. பிராமணர் ஆகிவிட்டோம்,

சூத்திரத் தன்மையிலிருந்து ஒதுங்கிவிட்டோம், ஆனால், பிராமண வாழ்க்கையின் மகான் தன்மையான, விசேஷத் தன்மையான சர்வ சிரேஷ்ட பிராப்திகளுடைய மற்றும் அதீந்திரிய சுகத்தினுடைய, ஃபரிஷ்தா நிலையின் டபுள் லைட் வாழ்க்கையினுடைய, விசேஷ அனுபவம் எவ்வளவு இருக்க வேண்டுமோ அவ்வளவு இருப்பதில்லை என்பதை தன்னுடைய மனதின் விசயங்களில் அவசியம் கூறுகின்றனர். எந்த வர்ணனை இந்த சிரேஷ்ட யுகத்தின் சிரேஷ்ட வாழ்க்கையினுடையதோ, அத்தகைய அனுபவம், அத்தகைய ஸ்திதி மிகவும் குறைவான சமயமே உள்ளது. இதற்கான காரணம் என்ன? பிராமணர் ஆன பிறகும் கூட பிராமண வாழ்வின் அதிகாரத்தினுடைய அனுபவம் ஏற்படுவதில்லை, ஏன்? இருப்பதோ இராஜாவின் குழந்தையாக, ஆனால், யாசிக்கும் சம்ஸ்காரம் இன்னும் இருக்கிறது என்றால் அவர்களை என்னவென்று கூறுவது? இராஜகுமாரர் என்று கூற முடியுமா? இங்கும் கூட புதிய பிறவி, புதிய பிராமண வாழ்க்கை, ஆனாலும் கூட பழைய சங்கல்பம் அல்லது சம்ஸ்காரம் வெளிப்படுகிறது அல்லது கர்மத்தில் வெளிப்படுகிறது எனில், அவர்களை பிரம்மாகுமாரர் என்று கூற முடியுமா? அல்லது அரை சூத்திரக் குமாரர் மற்றும் அரை பிரம்மா குமாரரா? பாதி வெள்ளை பாதி கருப்பு என்று நாடகத்தில் ஒரு விளையாட்டைக் காண்பிக்கிறீர்கள் அல்லவா? சங்கமயுகம் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. சங்கமயுகம் என்றால் புதிய யுகம். புதிய யுகம் எனில் அனைத்தும் புதியது ஆகும்.

 

புதிய வருடத்திற்கான வாழ்த்துக்கள் என்ற அனைவரின் வார்த்தைகளையும் பாப்தாதா இன்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். வாழ்த்து அட்டைகளையும் அனுப்புகின்றனர், கடிதமும் எழுதுகின்றனர் ஆனால், சொல்லும் செயலும் ஒன்றாக உள்ளதா? வாழ்த்துக்கள் கொடுத்தீர்கள், மிகவும் நல்லது. பாப்தாதாவும் வாழ்த்துக்கள் கொடுக்கின்றார்கள். வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளில், அழிவற்ற வார்த்தைகளில் அவினாசி பவ (அழிவற்றதாக ஆகட்டும்) என்ற வரதானம் உள்ளது என்று பாப்தாதா கூறுகின்றார்கள். உங்கள் வாயில் குலாப் (சர்க்கரை) போட வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள் அல்லவா? வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளில் அழிவற்ற வரதானம் இருக்க வேண்டும் என்று பாப்தாதா கூறுகின்றார்கள். இன்றிலிருந்து புதியது என்ற இந்த ஒரு வார்த்தையை மட்டும் நினைவு வைக்க வேண்டும். என்னவெல்லாம் சங்கல்பம் செய்கிறீர்களோ, வார்த்தை பேசுகிறீர்களோ, கர்மம் செய்கிறீர்களோ, அப்பொழுது அது புதியதாக உள்ளதா என்பதை சோதனை செய்யுங்கள். நினைவில் வைத்திடுங்கள். இந்தக் கணக்கு நோட்டு, பதிவேட்டை இன்றிலிருந்து ஆரம்பம் செய்யுங்கள். தீபாவளியன்று கணக்கு நோட்டில் என்ன செய்கின்றனர்? சுவஸ்திக் வரைகின்றனர் அல்லவா? கணேசர், பிள்ளையார் சுழி போடுவார்கள். மேலும், நான்கு யுகங்களிலும் அவசியம் புள்ளி வைக்கின்றனர். ஏன் வைக்கின்றனர்? எந்தவொரு காரியத்தைத் துவங்கும்பொழுதும் சுவஸ்திக் அல்லது கணேசாய நமஹ என்று அவசியம் கூறுகின்றனர். இது யாருடைய ஞாபகார்த்தம்? சுவஸ்திக்கையும் கணேசர் என்று ஏன் கூறுகின்றனர்? சுவஸ்திக் என்பது சுய ஸ்திதியில் நிலைத்திருப்பது மற்றும் முழு படைப்பினுடைய ஞானத்தைப் பற்றி அறிவிப்பது ஆகும். கணேசர் என்றால் ஞானம் நிறைந்தவர் என்று அர்த்தம். சுவஸ்திக்கின் ஒரு படத்தில் முழுமையான ஞானம் அடங்கியுள்ளது. ஞானம் நிறைந்த நினைவின் ஞாபகார்த்தமாக கணேசர் மற்றும் சுவஸ்திக் சின்னத்தைக் காண்பிக்கின்றனர். இதன் அர்த்தம் என்ன? எந்தவொரு காரியத்தின் வெற்றிக்கான ஆதாரம் ஞானம் நிறைந்த நிலை அதாவது புத்திசாலியாக, ஞான சொரூபமாக ஆவதாகும். ஞான சொரூபமானவராக புத்திசாலியாக ஆகிவிட்டீர்கள் எனில், ஒவ்வொரு கர்மமும் சிரேஷ்டமானதாக மற்றும் வெற்றிகரமானதாக இருக்கும் அல்லவா? அவர்கள் நோட்டுத் தாளில் மட்டும் ஞாபகார்த்தத்தின் அடையாளம் போடுகின்றார்கள். ஆனால், பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் சுயம் ஞானம் நிறைந்தவர் ஆகி, ஒவ்வொரு சங்கல்பத்தையும் செய்தீர்கள் என்றால், சங்கல்பம் மற்றும் வெற்றி ஆகிய இரண்டையும் இணைந்தே அனுபவம் செய்வீர்கள். எனவே, இன்றிலிருந்து இந்த திட சங்கல்பத்தின் வண்ணம் மூலம் தனது வாழ்க்கையின் நோட்டில் ஒவ்வொரு சங்கல்பம், சம்ஸ்காரத்தைப் புதியதாக எழுத வேண்டும். புதியதாக இருக்கும், என்பது கூட கூடாது. இருந்துதான் ஆக வேண்டும். சுய ஸ்திதியில் நிலைத்திருந்து இந்த பிள்ளையார் சுழி போடுங்கள் அதாவது ஆரம்பம் செய்யுங்கள். சுயம் ஸ்ரீ கணேசர் ஆகி, ஆரம்பம் செய்யுங்கள். இது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். அனேக முறை சங்கல்பம் செய்கிறீர்கள், ஆனால், சங்கல்பம் உறுதி யானதாக இருக்க வேண்டும். எவ்வாறு அஸ்திவாரத்தில் உறுதியான சிமெண்ட் போன்றவற்றைப் போட்டு உறுதியாக்கப்படுகிறது அல்லவா? ஒருவேளை, மணலால் அஸ்திவாரம் போட்டால் எவ்வளவு சமயம் தாங்கும்? எந்த சமயம் சங்கல்பம் செய்கிறீர்களோ, அந்த சமயம், செய்து பார்க்கலாம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யலாம், பிறகும் இவ்வாறே செய்கின்றனர் என்று கூறுகிறீர்கள். இந்த மணலைக் கலந்துவிடுகிறீர்கள், ஆகையினால், அஸ்திவாரம் உறுதியாக ஆவதில்லை. பிறரைப் பார்ப்பது சுலபமாக உள்ளது. தன்னை பார்ப்பதற்கு உழைக்க வேண்டியுள்ளது. ஒருவேளை, பிறரைப் பார்க்க விரும்புகிறீர்கள், பழக்கத்தினால் நிர்பந்திக்கப்படுகிறீர்கள், எனில் பிரம்மா பாபாவைப் பாருங்கள். அவரும் கூட அடுத்தவர் தானே!. ஆகையினால், பாப்தாதா தீபாவளியின் கணக்கைப் பார்த்தார்கள். கணக்கில் பிராமணர் ஆனபிறகும் பிராமண வாழ்க்கையின் அனுபவம் ஏற்படாமல் இருப்பது, எவ்வளவு இருக்க வேண்டுமோ அவ்வளவு இல்லாமல் இருப்பது என்பதற்கான விசேஷ காரணத்தைப் பார்த்தார்கள். இதன் விசேஷ காரணம் என்னவென்றால் பரதிருஷ்டி, பரசிந்தனை, பிறவழி (தீயவற்றில் செல்வது) ஆகும். பரஸ்திதிகளைப் (சூழ்நிலைகளை) பற்றிய வர்ணனை மற்றும் சிந்தனையில் அதிகமாக இருக்கிறீர்கள். ஆகவே, சுயதரிசன சக்கரதாரி ஆகுங்கள். சுயத்தின் மூலம் பிற எல்லாம் அழிந்து போய்விடும். எவ்வாறு இன்று புது வருடத்தின் வாழ்த்துக்களை அனைவரும் ஒன்றிணைந்து கொடுத்தீர்கள், அவ்வாறே ஒவ்வொரு தினமும் புதிய தினம், புதிய வாழ்க்கை, புதிய சங்கல்பம், புதிய சம்ஸ்காரம், இவற்றை தானாகவே அனுபவம் செய்வீர்கள். மேலும், மனதிலிருந்து ஒவ்வொரு நொடியும் தந்தைக்கும், பிராமண குடும்பத்திற்கும் வாழ்த்துக்களின் சுபமான ஊக்கம் தாமாகவே உருவாகிக் கொண்டே இருக்கும். அனைவரது பார்வையில் வாழ்த்துக்கள், பாராட்டுக்களின் அலை வெளிப்படும். எனவே, இவ்வாறு இன்றைய வாழ்த்துக்கள் என்ற வார்த்தையை அழிவற்றதாக ஆக்குங்கள். புரிந்ததா? உலகத்தினர் வரவு செலவு கணக்கு எழுதுகின்றனர். தந்தை கணக்கு பார்த்தார். அனைத்தும் கிடைத்த பிறகும் ஏன் அரை குறையாகத் பெறுகிறார்கள் என்று பாப்தாதாவிற்குக் குழந்தைகள் மீது கருணை வருகிறது. பெயர் புதிய பிரம்மாகுமார் அல்லது குமாரி மற்றும் காரியத்தில் ஏன் கலப்படம் உள்ளது? வள்ளலின் குழந்தைகள், விதாதாவின் (விதியை உருவாக்குபவர்) குழந்தைகள், வரதாதாவின் குழந்தைகள் ஆவீர்கள். எனவே, புது வருடத்தில் எதை நினைவில் வைப்பீர்கள்? அனைத்தும் புதியதாகச் செய்ய வேண்டும் அதாவது பிராமண வாழ்க்கையினுடைய நியமங்கள் அனைத்தையும் புதியதாகச் செய்ய வேண்டும். புதியது என்றால் கலப்படம் செய்யாதது என்று அர்த்தம். மிகவும் சாமர்த்தியம் ஆனவர்களாகவும் ஆகிவிட்டீர்கள் அல்லவா? தந்தைக்கும் படிப்பிக்கின்றனர். பாபா புதியதைச் செய்ய வேண்டும் என்று கூறினார் அல்லவா, எனவே, நாங்கள் இந்தப் புதியதைச் செய்து கொண்டு இருக்கிறோம் என்று சில குழந்தைகள் கூறுகின்றனர். ஆனால், பிராமண வாழ்க்கையின் நியமத்தின் அனுசாரமாக அந்தப் புதியது இருக்க வேண்டும். நியமம் என்ற கோட்டினை பிராமண வாழ்வு, பிராமண பிறப்பிலிருந்தே பாப்தாதா கொடுத்திருக்கின்றார்கள். புதிய வருடத்தை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது புரிந்ததா. 18 அத்தியாயம் ஆரம்பம் ஆகிக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்பட்டது அல்லவா.

 

பொன்விழாவிற்கு முன்பே விஷ்வ வித்யாலயத்தின் பொன்விழா கொண்டாடுகிறீர்கள். 50 வருடங்கள் ஆனவர்களுக்கு மட்டுமான பொன்விழா என்று நினைக்க வேண்டாம். ஆனால், இது ஈஸ்வரிய காரியத்தின் பொன்விழா ஆகும். ஸ்தாபனை காரியத்தில் யாரெல்லாம் சகயோகிகளாக இருக்கிறீர்களோ, அது இரண்டு வருடமானாலும் சரி, 50 வருடமானாலும் சரி, ஆனால், இரண்டு வருடமானவர்கள் கூட தன்னை பிரம்மா குமாரர் என்று கூறுகின்றனர் அல்லவா. இல்லை வேறு ஏதாவது பெயர் கூறுகின்றனரா? இது பிரம்மா மூலம் பிராமணர்களின் படைப்பினுடைய பொன்விழா ஆகும். இதில் அனைத்து பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும் உள்ளனர். பொன்விழா வரை தனக்குள் பொன்னுலகம் அதாவது சதோபிரதான சங்கல்பம், சம்ஸ்காரத்தை வெளிப்படுத்த வேண்டும். அத்தகைய பொன்விழாவைக் கொண்டாட வேண்டும். இதுவோ நிமித்தமாத்திரமாக பழக்க வழக்கம் என்ற முறையில் கொண்டாடுகிறீர்கள். ஆனால், உண்மையில் பொன்விழாவானது பொன்னுலகத்தினர் ஆவதற்கான விழாவாகும். காரியம் வெற்றி அடைந்தது எனில், காரியத்திற்காக நிமித்தமான ஆத்மாக்கள் வெற்றி சொரூபம் ஆகியுள்ளனர் என்று அர்த்தம். இப்பொழுதும் சமயம் உள்ளது. இந்த 3 மாதங்களுக்குள் உலகத்தின் மேடைக்கு முன்னர் தனிப்பட்ட பொன்விழாவைக் கொண்டாடிக் காண்பியுங்கள். உலகத்தினர் மரியாதை கொடுப்பார்கள். மேலும், இங்கு சமான் நிலையின் பிரத்யட்சம் செய்ய வேண்டும். மரியாதை கொடுப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறீர்கள், இதுவோ நிமித்தமாத்திரம் ஆகும். உண்மையை உலகத்தினருக்கு முன்பு காண்பிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றே, ஒருவருடையவர்களே, ஏக்ரஸ் ஸ்திதி உடையவர்களே. ஒருவருடைய அன்பில் மூழ்கியிருந்து ஒருவருடைய பெயரை பிரத்யட்சம் செய்பவர்கள். இந்த தனிப்பட்ட மற்றும் அன்பான பொன்னான ஸ்திதியின் கொடியைப் பறக்கவிடுங்கள். பொன்னுலகத்தின் காட்சி உங்களுடைய கண்கள் மூலம், பேச்சு மற்றும் கர்மத்தின் மூலம் தெளிவாகத் தெரிய வேண்டும் அத்தகைய பொன்விழாவைக் கொண்டாட வேண்டும். நல்லது.

 

அத்தகைய சதா அழிவற்ற வாழ்த்துக்களுக்குப் பாத்திரமான சிரேஷ்டமான குழந்தைகளுக்குத் தன்னுடைய ஒவ்வொரு எண்ணம் மற்றும் கர்மத்தின் மூலம் புதிய உலகத்தினுடைய காட்சியைக் காண்பிக்கக்கூடிய குழந்தைகளுக்கு, தன்னுடைய பொன்னுலக ஸ்திதி மூலம் பொன்னுலகம் வந்தே வந்துவிட்டது என்ற சுபமான ஆசை தீபத்தை விஷ்வத்தின் ஆத்மாக்களுக்குள் ஏற்றக்கூடிய, சதா ஒளிவீசும் நட்சத்திரங்களுக்கு, வெற்றியின் தீபங்களுக்கு, திடசங்கல்பத்தின் மூலம் புதிய வாழ்க்கையின் காட்சியைக் காண்பிக்கக்கூடிய, தரிசன மூர்த்தி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள்! அழிவற்ற வாழ்த்துக்கள்! அழிவற்ற வரதானங்களுடன் கூடிய நமஸ்காரம்.

 

பாத யாத்திரீகர்கள் மற்றும் சைக்கிள் யாத்திரீகர்களுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு

யாத்திரை மூலம் அனைவரும் சேவை செய்து விட்டீர்கள். என்ன சேவை செய்தீர்களோ, அந்த சேவையின் பிரத்யட்ச பலனையும் அனுபவம் செய்துவிட்டீர்கள். சேவையினுடைய விசேஷமான குஷியை அனுபவம் செய்தீர்கள் அல்லவா? பாதயாத்திரை செய்தீர்கள், அனைவரும் உங்களை பாதயாத்திரீகர்களாகப் பார்த்தார்கள். இப்பொழுது ஆன்மிக யாத்திரீகராகப் பார்க்க வேண்டும். சேவையின் ரூபத்தில் பார்த்தார்கள், ஆனால், இப்பொழுது தனிப்பட்ட யாத்திரை செய்விக்கக்கூடிய அலௌகீக யாத்திரீகர்கள், இந்த அனுபவம் ஏற்பட வேண்டும். எவ்வாறு இந்த சேவையில் ஈடுபாட்டினால் வெற்றியை அடைந்தீர்கள் அல்லவா. அவ்வாறே இப்பொழுது ஆன்மிக யாத்திரையில் வெற்றி அடைய வேண்டும். உழைக்கின்றீர்கள், மிகவும் நன்றாக சேவை செய்கிறீர்கள், இவர்களது வாழ்க்கை நன்றாக உள்ளது என்று மிகவும் நன்றாகக் கூறுகின்றனர். இது நடந்துவிட்டது. ஆனால், இப்பொழுது வாழ்க்கையை உருவாக்க வேண்டும். இந்த வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கையே இல்லை என்ற அனுபவம் செய்ய வேண்டும். எனவே, ஆன்மிக யாத்திரையின் இலட்சியம் வைத்து ஆன்மிக யாத்திரையின் அனுபவம் செய்ய வைத்திடுங்கள். என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்ததா? நீங்கள் நடக்கும்பொழுதும், போகும் பொழுதும், வரும்பொழுதும் இவர்கள் சாதாரண மானவர்கள் அல்ல, இவர்கள் ஆன்மிக யாத்திரீகர்கள் என்று அனைவரும் உங்களைப் பார்க்க வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்? தானும் யாத்திரையில் இருங்கள் மற்றும் பிறருக்கும் யாத்திரையின் அனுபவத்தை செய்வியுங்கள். பாதயாத்திரையின் அனுபவத்தை செய்வித்துவிட்டீர்கள், இப்பொழுது ஃபரிஷ்தா நிலையின் அனுபவத்தை செய்வியுங்கள். இவர்கள் இப்பூமியைச் சேர்ந்தவர்கள் அல்ல, இவர்கள் ஃபரிஷ்தாக்கள், இவர்களுடைய கால்கள் இந்த பூமியில் இருப்பதில்லை என்ற அனுபவம் செய்ய வேண்டும். பறக்கும் கலை மூலமாக பிறரையும் பறக்க வைக்க வேண்டும். இப்பொழுது பறக்க வைப்பதற்கான சமயம் ஆகும். நடக்க வைப்பதற்கான சமயம் அல்ல. நடப்பதற்கு சமயம் ஆகிறது மற்றும் பறப்பதற்கு சமயம் ஆவதில்லை. தனது பறக்கும் கலை மூலம் பிறரையும் பறக்க வைத்திடுங்கள். புரிந்ததா? இவ்வாறு திருஷ்டி மூலம் நினைவின் மூலம் அனைவரையும் சம்பன்னம் ஆக்கிக்கொண்டே செல்லுங்கள். எங்களுக்குக் கொஞ்சம் கிடைத்துள்ளது, நிறைந்துவிட்டோம், காலியாக இருந்தோம் ஆனால், நிறைந்து விட்டோம் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எங்கு பிராப்தி உள்ளதோ, அங்கு ஒரு விநாடியில் பலியாகி விடுகின்றனர். உங்களுக்கு பிராப்தி கிடைத்ததனாலேயே அனைத்தையும் விட்டுவிட்டீர்கள் இல்லையா? நன்றாக இருந்தது, அனுபவம் செய்தீர்கள், ஆகையினால், விட்டுவிட்டீர்கள் அல்லவா. காரணம் இல்லாமல் விடவில்லை. இவ்வாறு பிறருக்கும் பிராப்தியின் அனுபவத்தை செய்வித்திடுங்கள். புரிந்ததா? மற்றபடி நன்றாக உள்ளது. எந்த சேவையில் நாட்களைக் கழித்தீர்களோ, அதை தனக்காகவும், பிறருக்காகவும் சிரேஷ்டமானதாக ஆக்கிவிட்டீர்கள். ஊக்கம் உற்சாகம் நன்றாக இருந்தது. ரிசல்ட் சரியாக இருந்தது அல்லவா. ஆன்மிக யாத்திரை சதா இருந்தது என்றால், வெற்றியும் சதா இருக்கும். பாதயாத்திரை முடிந்துவிட்டது, சேவையும் முடிந்துவிட்டது என்பது கிடையாது. பிறகு, எப்படி இருந்தீர்களோ, அப்படியே ஆகிவிடுகிறீர்கள் என்பது கூடாது. சதா சேவையின் ஷேத்திரத்தில் சேவை இல்லாமல் பிராமணரால் இருக்க முடியாது. சேவையினுடைய பாகம் மட்டும் மாறியுள்ளது. சேவையோ இறுதி வரை செய்ய வேண்டும். அத்தகைய சேவாதாரி ஆவீர்கள் அல்லவா? இல்லை, மூன்று மாதங்கள், இரண்டு மாதங்கள் சேவை செய்யக்கூடிய சேவாதாரிகளா? சதா கால சேவாதாரியாக இருக்க வேண்டும், சதா ஊக்கம் உற்சாகம் இருக்க வேண்டும். நல்லது. நாடகத்தில் சேவையின் நடிப்பு என்ன கிடைத்துள்ளதோ, அதில் விசேஷத்தன்மை நிறைந்துள்ளது. தைரியத்தினால் உதவியின் அனுபவம் செய்தீர்கள். நல்லது. தன் மூலம் தந்தையைப் பிரத்யட்சம் செய்வதற்கான சிரேஷ்ட சங்கல்பம் இருந்தது. ஏனெனில், எப்பொழுது தந்தையைப் பிரத்யட்சம் செய்வீர்களோ, அப்பொழுது இந்தப் பழைய உலகத்தின் சமாப்தி ஏற்படும், தனது இராஜ்யம் வரும். தந்தையைப் பிரத்யட்சம் செய்வது என்றால் தனது இராஜ்யத்தைக் கொண்டு வருவது என்று அர்த்தம். தனது இராஜ்யத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற ஊக்க உற்சாகம் சதா உள்ளது அல்லவா? எவ்வாறு விசேஷமான நிகழ்ச்சிகளில் ஊக்க உற்சாகம் இருந்ததோ, அவ்வாறே சதா இந்த சங்கல்பத்தினுடைய ஊக்க உற்சாகம் இருக்க வேண்டும். புரிந்ததா?

 

பார்ட்டிகளுடன்:

நிறைய கேட்டுவிட்டீர்கள். இப்பொழுது கேட்ட அந்த விசயங்களை தனக்குள் நிறைக்க வேண்டும். ஏனெனில், எவ்வளவு நிறைப்பீர்களோ, அவ்வளவு தந்தைக்குச் சமமாக சக்திசாஆவீர்கள். மாஸ்டர் ஆவீர்கள் அல்லவா. எவ்வாறு தந்தை சர்வசக்திவானாக இருக்கின்றாரோ, அவ்வாறே நீங்கள் அனைவரும் கூட மாஸ்டர் சர்வசக்திவான் அதாவது அனைத்து சக்திகளை நிறைத்திருப்பவர்கள், தந்தைக்குச் சமமாக ஆகக்கூடியவர்கள் அல்லவா. தந்தை மற்றும் குழந்தைகளுக்கு இடையே வாழ்க்கையின் ஆதாரத்தில் வித்தியாசம் தென்படக்கூடாது. எவ்வாறு பிரம்மா பாபாவின் வாழ்க்கையைப் பார்த்தீர்கள் அல்லவா. பிரம்மா பாபா மற்றும் குழந்தைகள் சமமாகத் தென்பட வேண்டும். சாகாரத்தில் பிரம்மா பாபா கர்மம் செய்து காண்பிப்பதற்கு நிமித்தமானார் அல்லவா. அவ்வாறே சமம் ஆக வேண்டும் அதாவது மாஸ்டர் சர்வசக்திவான் ஆக வேண்டும். சர்வசக்திகள் உள்ளனவா? தாரணை செய்திருக்கிறீர்கள், ஆனால், சதவிகிதம் உள்ளது. எவ்வளவு இருக்க வேண்டுமோ அவ்வளவு இல்லை. சம்பன்னமாக இல்லை. ஆக வேண்டியதோ சம்பன்னம் அல்லவா! எனவே, சதவிகிதத்தை அதிகரியுங்கள். சக்திகளை தக்க சமயத்தில் காரியத்தில் ஈடுபடுத்த வேண்டும். இதில் தான் நம்பர் கிடைக்கிறது. ஒருவேளை, தக்க சமயத்தில் காரியத்திற்குப் பயன்படவில்லை எனில், என்ன சொல்வது? இருந்தும் இல்லாதது போல் உள்ளது என்று தான் கூறலாம். ஏனெனில், தக்க சமயத்தில் காரியத்திற்கு வரவில்லை. எனவே, சமயத்தின் அனுசாரம் எந்த சக்தியின் அவசியம் உள்ளதோ, அதை காரியத்தில் ஈடுபடுத்த முடிகிறதா என்று சோதனை செய்யுங்கள். எனவே, தந்தைக்கு சமமான மாஸ்டர் சர்வசக்திவான் என்பதை பிரத்யட்ச ரூபத்தில் உலகத்திற்குக் காண்பிக்க வேண்டும். அப்பொழுதே, ஆம், சர்வசக்திவான் பிரத்யட்சம் ஆகிவிட்டார் என்று உலகம் ஏற்றுக்கொள்ளும். இலட்சியம் உள்ளது அல்லவா. பொன்விழா வரை யார் நம்பர் வாங்குகிறார்கள் என்று இப்பொழுது பார்க்கலாம். நல்லது.

 

வரதானம்:

உலக நன்மைக்கான பாவனை மூலம் ஒவ்வொரு ஆத்மாவின் பாதுகாப்பிற்கான திட்டம் போடக்கூடிய உண்மையான கருணை உள்ளம் உடையவர் ஆகுக.

 

நிகழ்கால சமயம் சில ஆத்மாக்கள் தனக்குத்தானே தீமை ஏற்படுவதற்கு நிமித்தம் ஆகிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்காக கருணை உள்ளம் உடையவராகி ஏதாவது திட்டம் தீட்டுங்கள். எந்தவொரு ஆத்மாவின் பாகத்தையும் பார்த்து சுயம் அலைக்கழிச்சலில் வராதீர்கள். ஆனால், அவர்களுடைய பாதுகாப்பிற்கான சாதனத்தை சிந்தியுங்கள். இது நடந்துகொண்டு தான் இருக்கிறது, மரம் இற்றுப்போய் தான் ஆக வேண்டும் என்பதல்ல. வந்திருக்கும் தடைகளை அழித்துவிடுங்கள். விஷ்வ கல்யாணகாரி மற்றும் விக்ன விநாஷக் (தடைகளை அழிப்பவர்) என்ற பட்டம் என்ன கிடைத்துள்ளதோ, அதன் அனுசாரம் எண்ணம், பேச்சு மற்றும் செயலில் கருணை உள்ளம் உடையவராகி வாயுமண்டலத்தை மாற்றம் செய்வதில் சகயோகி ஆகுங்கள்.

 

சுலோகன்:

யார் புத்தி மீது கவனம் என்ற காவல் போடுகிறார்களோ, அவர்களே கர்மயோகி ஆகமுடியும்.

 

அவ்யக்த ஸ்திதியின் அனுபவம் செய்வதற்காக விசேஷமான வீட்டுப்பாடம்

ஏதாவது ஒருவிதமான பாரம் அல்லது சுமை உள்ளது எனில், ஆன்மிக எக்சர்சைஸ் செய்யுங்கள். அவ்வப்போது கர்மயோகி அதாவது சாகார சொரூபமானவராகி சாகார சிருஷ்டியின் நடிப்பை நடித்திடுங்கள், அவ்வப்போது ஆகாரி ஃபரிஷ்தா ஆகி ஆகாரி வதனவாசி அவ்யக்த ரூபத்தின் அனுபவம் செய்யுங்கள், அவ்வப்போது நிராகாரி ஆகி மூலவதனவாசியின் அனுபவம் செய்யுங்கள். இந்த எக்சர்சைஸ் மூலம் இலேசாக ஆகிவிடுவீர்கள், சுமை அழிந்துவிடும்.

 

ஓம்சாந்தி