19.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

'' ஒவ்வொரு காரியத்திலும் வெற்றிக்கான சுலபமான வழி அன்பு ''

 

இன்று தனது ஆதரவில், பரிபாலனையில் இருக்கும் குழந்தைகளுக்கு அன்பிற்கான பிரதிபலனைக் கொடுப்பதற்காக தந்தை வந்திருக்கிறார். மதுபன்னில் இருப்பவர்களுக்கு களைப்பற்ற சேவைக்கான விசேஷ பலன் கொடுப்பதற்காக சந்திப்பதற்காக மட்டும் வந்திருக்கிறோம். இது தான் அன்பிற்கான பிரத்யக்ஷ எடுத்துக்காட்டான சொரூபம். பிராமண குடும்பத்தின் விசேஷமான அஸ்திவாரமே இந்த விசேஷ அன்பு தான்! தற்சமயம் ஒவ்வொரு சேவைக் காரியத்திலும் அன்பு வெற்றி அடைவதற்கான சகஜ சாதனம். யோகி வாழ்க்கைக்கான அஸ்திவாரம் நிச்சயம். ஆனால் குடும்பத்தின் அஸ்திவாரம் அன்பு. இந்த அன்பு தான் யாரையும் இதயத்தின் அருகில் கொண்டு வருகிறது. தற்சமயம் நினைவு மற்றும் சேவையின் சமநிலையின் கூடவே அன்பு மற்றும் சேவைக்கான சமநிலை இருப்பது வெற்றி அடைவதற்கான சாதனம். பாரதத்தின் சேவையாக இருந்தாலும் அல்லது வெளிநாட்டின் சேவையாக இருந்தாலும், இரண்டிலும் வெற்றி அடைவதற்கான சாதனம் ஆன்மீக அன்பு. ஞானம் மற்றும் யோகா என்ற வார்த்தையையோ அனேகர்களிடமிருந்து கேட்டிருக்கிறீர்கள். ஆனால் திருஷ்டியினால் மற்றும் சிரேஷ்ட எண்ணத்தினால் ஆத்மாக்களுக்கு அன்பின் அனுபவம் ஆவது என்பது விசேஷம் மற்றும் புதுமை. மேலும் இன்றைய உலகிற்கு அன்பு மிக அவசியமாக உள்ளது. எவ்வளவு தான் அபிமானம் உள்ள ஆத்மாவையும் அன்பு அருகில் கொண்டு வர முடியும். அனைவரும் அன்பின் யாசகர்களாக, அமைதியின் யாசகர்களாக இருக்கிறார்கள். ஆனால் அமைதியின் அனுபவத்தையும் அன்பு நிறைந்த திருஷ்டி மூலம் தான் செய்விக்க முடியும். அம்மாதிரி அன்பு அமைதியின் அனுபவத்தை இயல்பாகவே செய்விக்கிறது. ஏனென்றால், அன்பில் தன்னையே மறந்து விடுகிறார்கள். எனவே சிறிது நேரத்திற்காக அசரீரியாக இயல்பாகவே ஆகிவிடுகிறார்கள். அப்படி அசரீரி ஆவதின் காரணமாக அமைதியின் அனுபவம் சுலபமாக ஆகிறது. தந்தையும் அன்பிற்கான பிரதிபலன் தான் கொடுக்கிறார். தான் வரும் ரதம் இயங்கினாலும் அல்லது இயங்காவிட்டாலும், தந்தை அன்பிற்கான நிரூபணத்தை (குழந்தைகளுக்கு) கொடுக்கத் தான் வேண்டியதாக இருக்கிறது. குழந்தைகளிலும் இதே அன்பின் பிரத்யக்ஷ பலனை பாப்தாதா பார்க்க விரும்புகிறார். சிலர் (குல்சார் சகோதரி, ஜகதீஷ் சகோதரர், நிர்வேர் சகோதரர்) வெளிநாட்டில் சேவை செய்து திரும்பி வந்திருக்கிறார்கள். மேலும் சிலர் (தாதி அவர்கள் மற்றும் மோகினி சகோதரி) சென்று கொண்டிருக்கிறார்கள். இதுவும் அந்த ஆத்மாக்களுக்கு அன்பின் பலன் அவர்களுக்கு கிடைக்கிறது. நாடகத்தின் அனுசாரம் நினைப்பது ஒன்று, ஆனால் நடப்பது வேறொன்று. இருந்தாலும் பலன் கிடைத்தே விடுகிறது. எனவே நிகழ்ச்சி நிரலும் உருவாகியே விடுகிறது. அனைவரும் அவரவர்களுடைய நல்ல பாகத்தைத் தான் செய்து விட்டு வந்திருக்கிறார்கள். ஏற்கனவே உருவாக்கப்பட்டு, அதே போல் நடந்து கொண்டிருக்கும் நாடகத்தில் இவை அடங்கியிருக்கிறது. எனவே சுலபமாகவே பலன் கிடைத்து விடுகிறது. வெளிநாடும் மிகுந்த ஈடுபாடுடன் சேவையில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். நாலாபுறங்களிலும் அவர்களுடைய தைரியம் மற்றும் ஊக்கம் நன்றாக இருக்கிறது. அனைவரின் உள்ளப்பூர்வமான நன்றி உணர்வு நிறைந்த எண்ணம் பாப்தாதாவிடம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால், பாரதத்திலும் எவ்வளவு அவசியமாக இருக்கிறது. இருந்தும் பாரதத்தின் அன்பு தான் தங்களுக்கு சகயோகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று அவர்களும் புரிந்து கொள்கிறார்கள். இதே பாரதத்தில் சேவை செய்யும் சகயோகி பரிவாரத்திற்கு உள்ளப்பூர்வமாக நன்றி கூறுகிறார்கள். எவ்வளவு தான் தேசம் தூரமாக இருந்தாலும் அந்த அளவே உள்ளப்பூர்வமான பாலனைக்கு பாத்திரம் ஆவதில் அருகில் இருக்கிறார்கள். எனவே நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு அவர்களுடைய நன்றிக்கு பிரதிபலன் கொடுப்பதற்காக பாப்தாதா அன்பு நினைவுகளையும் மற்றும் நன்றியையும் கூறுகிறார். தந்தையும் பாடல் பாடுகிறார் இல்லையா?

 

பாரதத்திலும் நல்ல ஊக்கம் உற்சாகத்துடன் பாதயாத்திரையின் சேவையை மிக நன்றாக செய்து கொண்டிருக்கிறார்கள். நாலாபுறங்களிலும் சேவையின் மிகச் சிறப்பான சேவை நடவடிக்கைகள் நன்றாக இருக்கிறது. ஊக்கம் உற்சாகம் களைப்பை மறக்க வைத்து வெற்றியை பிராப்தி செய்வித்துக் கொண்டிருக்கிறது. நாலாபுறங்களின் சேவையின் வெற்றி நன்றாக இருக்கிறது. பாப்தாதாவும் அனைத்து குழந்தைகளின் சேவையின் ஊக்கம் உற்சாகத்தின் சொரூபத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்.

 

(நைரோபியில் ஜகதீஷ் சகோதரர் போப் ஆண்டவரை சந்தித்து விட்டு வந்திருக்கிறார்). போப்பிற்கும் திருஷ்டி கொடுத்தீர்கள் இல்லையா? இதுவும் உங்களுக்காக விசேஷமாக வி..பி- யின் சேவையில் வெற்றி சுலபமாக கிடைப்பதற்கான சாதனம். எப்படி பாரதத்தில் விசேஷமாக ஜனாதிபதி வந்தார். எனவே பாரதத்திலும் முக்கியமானவர்கள் வந்திருக்கிறார்கள் என்று இப்பொழுது கூற முடியும். அதே போலவே விசேஷமாக வெளிநாட்டின் முக்கிய தர்மத்தின் பிரபாவத்தின் காரணமாக நெருக்கமான தொடர்பில் வந்தார் என்றால் மற்றவர்களுக்கும் நாமும் தொடர்பில் வர வேண்டும் என்று சுலபமாக தைரியம் வர முடியும். அம்மாதிரி பாரதத்திற்கும் நல்ல சேவைக்கான சாதனமாக ஆனது மற்றும் வெளிநாட்டு சேவைக்கும் விசேஷ சாதனமாக ஆனது. எனவே நேரத்திற்கு ஏற்றபடி சேவையில் அருகில் வருவதில் எந்தவொரு தடை வந்தாலும் அவையும் சுலபமாக முடிவடைந்து விடும். பிரதம மந்திரியை சந்திப்பதும் ஆனது இல்லையா? எனவே உலகத்தினருக்கு இந்த உதாரணமும் உதவி செய்கிறது. வேறு யார் வந்திருக்கிறார்கள் என்பது தான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது. இப்பொழுது இந்தக் கேள்வி முடிவடைந்து விடும். இதுவும் நாடகத்தின் அனுசாரம் இதே வருடத்தில் சேவையில் சகஜ பிரத்யக்ஷத்தின் சாதனமாக ஆனது. இப்பொழுது அருகில் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கோ அவர்களுடைய பெயரே காரியம் செய்யும். அப்படி பெயர் மூலம் என்ன காரியம் நடக்க வேண்டுமோ அதற்கான நிலம் தயாராகி விட்டது. இவர்கள் செய்தியைப் பரப்ப மாட்டார்கள். செய்தியை பரப்பும் மைக் வேறு நபர்கள். இவர்கள் மைக்கிற்கு லைட் (கரண்ட்) கொடுப்பவர்கள். ஆனால் இருந்தும் நிலம் நன்றாக தயாராகிவிட்டது. வெளிநாட்டில் இதற்கு முன்பு வி..பி-களுக்கு சேவை செய்வது கடினம் என்று அனுபவம் செய்தார்கள். இப்பொழுது நாலாபுறங்களிலும் சுலபம் என்று அனுபவம் செய்கிறார்கள். இப்பொழுது இந்த ரிசல்ட் நன்றாக இருக்கிறது. இவர்களுக்கு பெயரால் காரியம் செய்பவர்கள் தயாராகி விடுவார்கள். யார் பொறுப்பாளர் ஆகிறார் என்று இப்பொழுது பாருங்கள். நிலத்தை தயார் செய்வதற்காக நாலாபுறங்களிலும் அனைவரும் சென்றார்கள். பற் பல வழிகளில் நிலத்தில் கால் பதித்து தயார் செய்து விட்டீர்கள். இப்பொழுது பலன் என்ற பழம் பிரத்யக்ஷ ரூபத்தில் யார் மூலமாக கிடைக்கும் என்பதின் ஏற்பாடுகள் இப்பொழுது ஆகிக் கொண்டிருக்கிறது. அனைவரின் ரிசல்ட் நன்றாக இருக்கிறது.

 

பாதயாத்திரை செய்பவர்களும் ஒரு பலம், ஒருவர் மேல் நம்பிக்கை வைத்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். முன்பு கடினமாக இருந்தது. ஆனால் இப்பொழுது நடைமுறையில் வருகிறார்கள் என்றால் சுலபமாகி விடுகிறது. அனைத்து பாரதம் மற்றும் வெளிநாட்டில் யாரெல்லாம் சேவைக்கு பொறுப்பாளர் ஆகி சேவை செய்து அனேகர்களை பாப்தாதாவின் அன்பானவர்களாக சகயோகிகளாக ஆக்கி வந்திருக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் விசேஷமாக அன்பு நினைவுகள் கொடுக்கிறோம். ஒவ்வொரு குழந்தையின் வரதானம் அவரவர்களுடையது. விசேஷமாக பாரதத்தைச் சேர்ந்த அனைத்து பாதயாத்திரையில் செல்லும் குழந்தைகளுக்கு மேலும் வெளிநாட்டில் சேவைக்காக நாலாபுறங்களிலும் பொறுப்பாளர் ஆகியிருக்கும் குழந்தைகளுக்கு மேலும் மதுபன்னைச் சேர்ந்த சிரேஷ்ட சேவைக்கு பொறுப்பாளர் ஆகியிருக்கும் குழந்தைகளுக்கு, கூடவே அனைத்து பாரதவாசி குழந்தைகள் யார் யாத்திரையில் செல்பவர்களுக்கு ஊக்கம், உற்சாகம் கொடுப்பதற்கு பொறுப்பாளர் ஆகியிருக்கிறார்களோ அந்த அனைத்து நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு, விசேஷமாக அன்பு நினைவுகள் மற்றும் சேவையின் வெற்றிக்கான வாழ்த்துக்களைக் கூறுகிறோம். ஒவ்வொரு ஸ்தானத்திலும் நல்ல உழைப்போ செய்திருக்கிறீர்கள், ஆனால் இவர்கள் விசேஷ காரியத்திற்காக பொறுப்பாளர் ஆகியிருக்கிறார்கள். எனவே விசேஷமாக சேமிப்பாகிவிட்டது. ஒவ்வொரு தேசமும் மொரிஷீயஸ், நைரொபி, அமெரிக்கா இவர்கள் அனைவரும் உதாரணமாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த உதாரணமானவர்கள் வரும் நாட்களில் பிரத்யக்ஷத்தில் சகயோகி ஆவார்கள். அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் கூட ஒன்றும் குறைந்ததாக செய்யவில்லை. ஒவ்வொரு சிறிய ஸ்தானங்கள் கூட எந்த அளவு ஊக்கம் உற்சாகத்துடன் தங்களுடைய சக்தியின் கணக்கை விட அதிகம் செய்திருக்கிறார்கள். வெளிநாட்டிலோ, பெரும்பான்மை கிறிஸ்தவர்களின் இராஜ்யமே இருக்கிறது தான் இல்லையா? இப்பொழுது அவர்களுடைய சக்தி குறைந்து விட்டிருந்தாலும் தர்மத்தையோ விடவில்லை. சர்ச்சையை விட்டு விட்டார்கள். ஆனால் தர்மத்தை விடவில்லை. எனவே அங்கு போப்பும் இராஜாவுக்கு சமமானவர். நீங்கள் இராஜா வரை சென்றடைந்திருக்கிறீர்கள் என்றால், பிரஜைகளிடம் இயல்பாகவே மரியாதை உருவாகும். யார் தீவிரமான கிறிஸ்தவரோ அவர்களுக்காகவும் இது ஒரு நல்ல உதாரணம். இந்த உதாரணம் கிறிஸ்தவர்களுக்காக ஒரு காரணமாக அமையும். கிருஷ்ணன் மற்றும் கிறிஸ்து இடையே தொடர்பு இருக்கிறது இல்லையா? பாரதத்தின் சூழ்நிலையோ இருந்தும் வேறானதாக இருக்கும். பாதுகாப்பு விஷயங்கள் ஆகியவை அதிகமாக இருக்கும். ஆனால் இவர் அன்புடன் சந்தித்திருக்கிறார் என்றால், அது மிகவும் நல்லது. இராயல் தன்மையுடன் நேரம் கொடுப்பது, விதிப்பூர்வமாக சந்திப்பது என்பதின் பிரபாவம் ஏற்படும். இது இப்பொழுது நேரம் அருகில் வந்து கொண்டிருக்கிறது என்பதை காண்பிக்கிறது.

 

லண்டனிலும் கூட வெளிநாட்டின் கணக்குப்படி மாணவர்களின் எண்ணிக்கை மிக நன்றாக இருக்கிறது. மேலும் இவர்களுக்கு விசேஷமாக முரளி மீது அன்பு, படிப்பின் மீது அன்பு இருக்கிறது, இது அஸ்திவாரம். இந்த விஷயத்தில் லண்டன் நம்பர் ஒன் ஆக இருக்கிறது. என்ன ஆனாலும் சரி, ஒருபொழுதும் வகுப்பை தவற விடுவதில்லை. நான்கு மணியின் யோகா மற்றும் வகுப்பிற்கான மகத்துவம் லண்டனில் அனைவரையும் விட அதிகமாக இருக்கிறது. இதற்கான காரணமும் அன்பு தான். அன்பின் காரணமாக இழுக்கப்பட்டு வருகிறார்கள். சூழ்நிலையை சக்திசாலியாக ஆக்குவதில் நல்ல கவனம் இருக்கிறது. பொதுவாக தூர தேசத்தில் இருப்பவர்கள் வாயுமண்டலத்தைத் தான் ஆதாரம் என்று நினைக்கிறார்கள். அது சேவா நிலையமாக இருந்தாலும் அல்லது தன்னுடைய இடமாக இருந்தாலும் சிறிதளவு ஒருவேளை ஏதாவது விஷயம் வருகிறது என்றால், உடனே தன்னை சோதனை செய்து சூழ்நிலையை சக்திசாலியாக ஆக்குவதற்கான முயற்சியை நன்றாகச் செய்கிறார்கள். அங்கு சூழ்நிலையை சக்திசாலியாக ஆக்குவதற்கான லட்சியம் நன்றாக இருக்கிறது. சிறு சிறு விஷயங்களில் சூழ்நிலையைக் கெடுப்பதில்லை. சூழ்நிலை சக்திசாலியாக இருக்கவில்லை என்றால், சேவையில் வெற்றி கிடைக்காது என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே தன்னுடைய முயற்சி செய்வதிலும் மேலும் நிலையத்தின் சூழ்நிலை மீதும் நல்ல கவனம் வைக்கிறார்கள். தைரியம் மற்றும் ஊக்கத்தில் ஒன்றும் குறைவு இல்லை.

 

எங்கெல்லாம் காலடி எடுத்து வைப்பீர்களோ அங்கு அவசியம் விசேஷமாக பிராப்தி பிராமணர்களுக்கும் ஏற்படுகிறது மற்றும் தேசத்திற்கும் ஏற்படுகிறது. செய்தியும் கிடைக்கிறது மேலும் பிராமணர்களிலும் விசேஷமாக சக்தி அதிகரிக்கிறது, பாலனையும் கிடைக்கிறது. சாகார (நேரெதிரில் இருக்கும்) ரூபத்தில் விசேஷ பாலனை பெற்று அனைவரும் குஷி அடைகிறார்கள். மேலும் அதே குஷியில் சேவையில் முன்னேறிச் சென்று வெற்றியை அடைகிறார்கள். தூர தேசத்தில் இருப்பவர்களுக்கோ பாலனையோ அவசியமானது. பாலனையைப் பெற்று மேலே பறக்கத் தொடங்குகிறார்கள். யார் மதுபன்னிற்கு வர முடிவதில்லையோ அவர்கள் அங்கு அமர்ந்து கொண்டே மதுபன்னின் அனுபவம் செய்கிறார்கள். எப்படி இங்கு (மதுபன்னில்) சொர்க்கத்தின் மற்றும் சங்கமயுகத்தின் ஆனந்தம் இரண்டையும் அனுபவம் செய்கிறார்கள். எனவே நாடகத்தின் அனுசாரம் வெளிநாடு செல்வதற்கான பாகமும் என்ன உருவாகியிருக்கிறதோ அதுவும் அவசியம் தான். மேலும் வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு வெளிநாட்டின் குழந்தையும் அவரவர்களின் பெயரைச் சேர்த்து விசேஷமாக சேவைக்கான வாழ்த்துக்கள் மற்றும் விசேஷமாக சேவையின் வெற்றிக்கான பலனாக அன்பு நினைவுகளை ஏற்றுக் கொள்வீர்களாக!. தந்தையின் எதிரில் ஒவ்வொரு குழந்தையும் இருக்கிறார். ஒவ்வொரு தேசத்தின் ஒவ்வொரு குழந்தையும் கண்களின் எதிரில் வந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் பாப்தாதா அன்பு நினைவுகளை கொடுக்கிறார். யார் துடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளோ அவர்களின் அதிசயத்தைப் பார்த்து பாப்தாதா எப்பொழுதும் குழந்தைகளின் மீது அன்பின் மலர்களின் மழையைப் பொழிகிறார். அவர்களுடைய புத்தி பலம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது. மற்ற விமானம் இல்லை, ஆனால் புத்தி என்ற விமானம் தீவிரமானது. அவர்களுடைய புத்தி பலத்தைக் கண்டு பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் அதனதனுடைய மகத்துவம் இருக்கிறது. சிந்தி மக்களும் இப்பொழுது நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள். எது தொடக்கத்தில் நடந்ததோ அது இறுதியிலும் கண்டிப்பாக நடக்கும்.

 

இவர்கள் சமூக சேவை செய்வதில்லை என்ற தவறான அபிப்ராயம் என்ன இருந்ததோ அதுவும் இந்த பாதயாத்திரையைப் பார்த்து அகன்று விட்டது. இப்பொழுது புரட்சிக்கான ஏற்பாடுகள் அதிவேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

 

டில்லியில் இருப்பவர்களும் பாதயாத்திரிகர்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை பிராமணர்கள் வீட்டிற்கு வருவார்கள். அந்த மாதிரியான பிராமண விருந்தினரோ பாக்கியம் நிறைந்தவரிடம் தான் வருகிறார்கள். டில்லி மீது அனைவருக்கும் அதிகார உரிமை உள்ளது. அதிகாரத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் இல்லையா. டில்லியிருந்து தான் உலகிற்கு பெயர் பரவும். அவரவர்களின் பகுதிகளிலோ செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பாரதம் மற்றும் வெளிநாட்டிலோ டில்லியின் தொலைக்காட்சி மற்றும் வானொலி தான் கருவி ஆகும்.

 

தாதி நிர்மல் சாந்தா அவர்களுடன் சந்திப்பு -

இவர் ஆதி இரத்தினங்களின் அடையாளம். சரிங்க! என்ற பாடத்தை எப்பொழுதும் நினைவில் வைத்து உடலுக்கும் சக்தி கொடுத்து வந்து சேர்ந்து விட்டார்கள். ஆதி இரத்தினங்களில் இது இயற்கையான சம்ஸ்காரமாக இருக்கிறது. ஒருபொழுதும் இல்லை, முடியாது என்று கூற மாட்டார்கள். எப்பொழுதுமே சரிங்க, செய்கிறேன் என்று தான் கூறுவார்கள். மேலும் அந்த சரிங்க! என்பது தான் பெரிய தலைவனாக ஆக்கியது. எனவே பாப்தாதாவும் குஷி அடைகிறார். தைரியம் உள்ள குழந்தைகளுக்கு உதவி கொடுத்து தந்தையும் அன்பான சந்திப்பின் பலனைக் கொடுத்தார். (தாதி அவர்களிடம்) அனைவருக்கும் சேவையின் ஊக்கம் உற்சாகத்திற்காக வாழ்த்துக்கள் கூறுங்கள். மேலும் எப்பொழுதும் குஷியின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே, குஷியோடு சேவையில் பிரத்யக்ஷத்தின் ஈடுபாட்டுடன் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறார்கள். எனவே சுத்தமான சிரேஷ்ட எண்ணத்திற்காக அனைவருக்கும் வாழ்த்துக்கள்.! சார்,கேன் ஆகியோர் முதல் பழமாக வெளிப்பட்டிருக்கிறார்கள், இந்த குரூப் நல்ல பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பணிவுடன் படைப்புக் காரியத்தை சுலபமாகச் செய்கிறார்கள். எதுவரை பணிவானவராக ஆகவில்லையோ அதுவரை படைப்புக் காரியம் செய்ய முடியாது. இது மிக நல்ல பரிவர்த்தனை (மாற்றம்). அனைவர் கூறுவதையும் கேட்பது மேலும் உள்ளடக்கிக் கொள்வது. மேலும் அனைவருக்கும் அன்பு கொடுப்பது வெற்றிக்கான ஆதாரம். நல்ல முன்னேற்றம் இருக்கிறது. புதுப்புது பாண்டவர்களும் நல்ல உழைப்பு செய்திருக்கிறார்கள். தனக்குள் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அனைத்து பக்கங்களிலும் நல்ல வளர்ச்சி ஆகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது இன்னும் புதுமை செய்வதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். இந்த அளவிலோ அனைவரின் உழைப்பிற்கான பலனாக, முன்பு கூறுவதைக் கேட்கவே மாட்டார்கள். அவர்கள் இப்பொழுது அருகில் வந்து பிராமண ஆத்மாக்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது பிரத்யக்ஷம் செய்வதற்காக இன்னும் வேறு ஏதாவது சேவைக்கான புது சாதனம் உருவாகும். பிராமணர்களின் குழுவும் நன்றாக இருக்கிறது. இப்பொழுது சேவை வளர்ச்சியின் பக்கம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஒரு தடவை வளர்ச்சி தொடங்கிவிட்டது என்றால், அந்த அலை தொடர்ந்து இருக்கும். நல்லது.

 

வரதானம் :

குழு என்ற கோட்டையை உறுதியாக ஆக்கக்கூடிய அனைவரின் அன்பான, திருப்தியான ஆத்மா ஆகுக.

 

குழுவின் சக்தி விசேஷமான சக்தியாகும். ஒரு வழியில் நடக்கும் குழுவை யாரும் அசைக்க முடியாது. ஆனால் இதற்கான ஆதாரம் ஒவ்வொருவரின் அன்பிற்குரியவராகி அனைவருக்கும் மரியாதை கொடுப்பது மற்றும் அவரே திருப்தியாக இருந்து அனைவரையும் திருப்திப் படுத்துவது. யாரும் தொந்தரவு அடையாதீர்கள் மற்றவரையும் தொந்தரவு செய்யாதீர்கள். அனைவரும் ஒவ்வொருவருக்கும் சுபபாவனை மற்றும் சுபவிருப்பங்களின் சகயோகம் கொடுத்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால், குழுவின் கோட்டை உறுதியாகி விடும். குழுவின் சக்தி தான் வெற்றிக்கான விசேஷ ஆதார சொரூபம். சுலோகன்: எப்பொழுது ஒவ்வொரு காரியமும் யதார்த்தமாக மற்றும் யுக்தி நிறைந்ததாக நடக்கிறதோ அப்பொழுது தான் தூய்மையான ஆத்மா என்று கூறுவோம்.

 

அவ்யக்த நிலையின் அனுபவம் செய்வதற்காக விசேஷ ஹோம் ஒர்க் (வீட்டுப் பாடம்) -

எப்படி பிரம்மா தந்தை நிச்சயத்தின் ஆதாரத்தில், ஆன்மீக போதையின் ஆதாரத்தில், நிச்சயம் நடக்கும் என்று தெரிந்தவராகி, ஒரு நொடியில் தன்னுடைய அனைத்தையும் பயனுள்ளதாக ஆக்கினார். தனக்காக எதையும் வைத்துக் கொள்ளவில்லை. அம்மாதிரி அனைத்தையும் பயனுள்ளதாக ஆக்குவது தான் அன்பின் அடையாளம். பயனுள்ளதாக ஆக்குவது என்பதின் அர்த்தம் சிரேஷ்ட காரியத்தில் ஈடுபடுத்துவது.

 

ஓம்சாந்தி