27.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் மிக இனிமையானதாகவும் முதல் தரமானதாகவும் இருக்க வேண்டும். எப்படி தந்தை துக்கத்தைப் போக்கி சுகம் தருபவராக இருக்கிறாரோ, அதுபோல் தந்தைக்குச் சமமாக அனைவருக்கும் சுகம் கொடுங்கள்.

 

கேள்வி :

லௌகிக உற்றார் உறவினருக்கு ஞானம் கொடுப்பதற்கான யுக்தி என்ன?

 

பதில்:

யாரேனும் உற்றார் உறவினர் உள்ளனர் என்றால் அவர்களிடம் மிகவும் பணிவாகவும், அன்பின் பாவனையோடும் புன்சிரிப்புடன் சொல்ல வேண்டும். இது அதே மகாபாரத யுத்தம் என்பதைப் புரிய வைக்க வேண்டும். தந்தை ருத்ர ஞான யக்ஞத்தைப் படைத்துள்ளார். நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்கிறேன் - பக்தி முதலியவற்றையோ பல பிறவிகளாக செய்திருக்கிறோம். இப்போது ஞானம் ஆரம்பமாகி விட்டது. எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது மிகுந்த யுக்தியுடன் பேசுங்கள். குடும்பத்தில் மிகவும் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். ஒரு போதும் யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள்.

 

ஓம் சாந்தி.

ஏதாவது பாடல் ஒலிக்கும் போது குழந்தைகள் தங்களுக்குள் அதன் அர்த்தத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒரு விநாடியில் வெளிப்படுத்த முடியும். இது எல்லையற்ற டிராமாவின் மிகப் பெரிய கடிகாரம் இல்லையா? பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் அழைக்கவும் செய்கின்றனர். எப்படி கோர்ட்டில் கேஸ் நடக்கிறது என்றால் எப்போது வாய்தா வரும் எனக்கேட்கின்றனர். அழைக்கும் போது நமது கேஸ் முடிவடையும். ஆக, குழந்தைகளுக்கும் கேஸ் உள்ளது. என்ன கேஸ்? இராவணன் உங்களை துக்கம் மிகுந்தவர்களாக ஆக்கியிருக் கிறான். உங்கள் கேஸ் பெரிய கோர்ட்டில் தாக்கலாகின்றது. மனிதர்கள் அழைத்துக் கொண்டே இருக்கின்றனர், பாபா வாருங்கள், வந்து எங்களை துக்கங்களிலிருந்து விடுவியுங்கள். ஒரு நாள் உங்கள் வழக்கு விசாரிக்கப்படும். பாபா கேட்கவும் செய்கிறார், டிராமாவின்படி வரவும் செய்கிறார், முற்றிலும் சரியான நேரம் வரும் போது. அதில் ஒரு விநாடி கூட வித்தியாசம் இருக்க முடியாது. எல்லையற்ற கடிகாரம் எவ்வளவு மிகச் சரியாகச் செல்கின்றது? இங்கே உங்களிடம் இந்தச் சின்னக் கடிகாரங்கள் கூட சரியாகச் செல்வதில்லை.. யக்ஞத்தின் ஒவ்வொரு காரியமும் மிகச் சரியாக நடைபெற வேண்டும். கடிகாரமும் மிகச் சரியாக இருக்க வேண்டும். பாபாவோ மிகவும் சரியாக உள்ளார். கல்ப-கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் மிகச் சரியான நேரத்தில் வருகிறார். ஆக, குழந்தைகளின் வழக்கு இப்போது விசாரிக்கப்பட்டது. பாபா வந்து விட்டார். இப்போது நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்கிறீர்கள். இதற்கு முன்பு துக்கம் கொடுப்பது யார் என்று. நீங்களும் கூடப் புரிந்து கொள்ளாமல் இருந்தீர்கள் - இப்போது பாபா புரிய வைத்துள்ளார், இராவண ராஜ்யம் துவாபர யுகத்திலிருந்து ஆரம்பமாகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரிந்து விட்டது - பாபா கல்ப-கல்பமாக சங்கமயுகத்தில் வருகிறார். இது எல்லையற்ற விஷயம். சிவபாபா எல்லையற்ற இரவில் வருகிறார். கிருஷ்ணருடைய விஷயம் கிடையாது. எப்போது பயங்கர இருளில் அஞ்ஞான உறக்கத்தில் உறங்கிப் போயுள்ளனரோ, அப்போது ஞான சூரியனாகிய பாபா வருகிறார். குழந்தைகளைப் பகலை நோக்கி அழைத்துச் செல்கிறார். பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள் என்று, ஏனென்றால் பதீத்தத்திலிருந்து பாவனமாக ஆக வேண்டும். பாபா தாம் பதீத பாவனர். அவர் எப்போது வருகிறாரோ, அப்போது தான் உங்கள் வழக்கு பற்றிக் கேட்பது-விசாரணை (ஹியரிங்) நடக்கும். இப்போது உங்கள் வழக்கு கேட்கப் பட்டு விட்டது. பாபா சொல்கிறார், நான் பதீதர்களைப் பாவனமாக்குவதற்காக வருகிறேன். பாவனமாவதற்கான எவ்வளவு சகஜமான உபாயம் உங்களுக்குச் சொல்கிறேன்! இன்று பாருங்கள், விஞ்ஞானத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது! அணு ஆயுதங்கள் பற்றிய குரல் எவ்வளவு வேகமாக ஒலிக்கிறது! குழந்தைகள் நீங்கள் அமைதியின் பலத்தால் விஞ்ஞானத்தை வெற்றி கொள்கிறீர்கள். அமைதி (சைலென்ஸ்) என்பது யோகம் என்று சொல்லப்படுகின்றது. ஆத்மா தந்தையை நினைவு செய்கிறது - பாபா, நீங்கள் வருவீர்களானால் நாங்கள் சாந்திதாம் சென்று வாசம் செய்வோம். ஆக, குழந்தைகள் நீங்கள் இந்த யோகபலத்தின் மூலம் சைலன்ஸ் பலத்தினால் சையின்ஸ் மீது வெற்றி கொள்கிறீர்கள். சாந்தியின் பலத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். அறிவியலின் மூலம் தான் இந்த அழிவு முழுவதும் நடைபெற வேண்டியுள்ளது. அமைதி சக்தி மூலம் குழந்தைகள் நீங்கள் வெற்றி அடைகிறீர்கள். ஸ்தூல பலம் உள்ளவர்கள் ஒரு போதும் உலகின் மீது வெற்றி பெற முடியாது. இந்தப் பாயின்ட்டுகளையும் கூட நீங்கள் கண்காட்சியில் எழுத வேண்டும்.

 

டில்லியில் அதிக சேவை நடைபெற முடியும். ஏனென்றால் டில்லி அனைவருக்கும் தலைநகரமாக உள்ளது. உங்களுக்கும் கூட டில்லி தான் தலைநகரமாக இருக்கும். டில்லி தான் பரிஸ்தான் எனச் சொல்லப் படுகிறது. பாண்டவர்களுக்குக் கோட்டை கிடையாது. விரோதிகள் படையெடுக்கும் போது தான் கோட்டை கட்ட வேண்டிய அவசியம் உள்ளது. உங்களுக்கோ கோட்டை முதலியவற்றின் தேவையே இருக்காது. நீங்கள் அறிவீர்கள், நாம் அமைதியின் பலத்தினால் நமது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். அவர்களுடையது செயற்கையான அமைதி. உங்களுடையது உண்மையான அமைதி. ஞானத்தின் பலம்,

 

சாந்தியின் பலம் எனச் சொல்லப்படுகின்றது. ஞானம் என்பது படிப்பாகும். படிப்பினால் தான் பலம் கிடைக்கின்றது. போலீஸ் சூப்பரிண்டென்ட் ஆகின்றனர். எவ்வளவு பலம் (அதிகாரம்) உள்ளது! அவை அனைத்தும் உலகீய விஷயங்கள், துக்கம் தருபவை. உங்களுடைய ஒவ்வொரு விஷயமும் ஆன்மிகமானது. உங்கள் வாயிலிருந்து என்னென்ன வார்த்தைகள் வெளிவருகின்றனவோ, அந்த ஒவ்வொரு வார்த்தையும் அப்படி முதல் தரமான இனிமையானதாக இருக்க வேண்டும், அதைக் கேட்பவர்கள் குஷியடைய வேண்டும். எப்படி பாபா துக்கத்தைப் போக்கி சுகம் தருபவராக இருக்கிறாரோ, அதுபோல் குழந்தைகளாகிய நீங்களும் கூட அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். குடும்பப்பரிவாரம் முதலானவருகளுக்கும் கூட துக்கம் முதலியன ஏற்படக்கூடாது. விதிமுறைப்படி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். பெரியவர்களிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். வாயிலிருந்து அத்தகைய இனிமையான, முதல் தரமான வார்த்தைகள் வெளிவர வேண்டும், அதைக்கேட்டு அனைவரும் குஷியடைய வேண்டும். சொல்லுங்கள் - சிவபாபா சொல்கிறார், மன்மனாபவ. உயர்ந்தவரிலும் உயர்ந்தவன் நான். என்னை நினைவு செய்வதன் மூலம் தான் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகும். மிகவும் அன்போடு உரையாட வேண்டும். யாராவது பெரிய சகோதரர் என்றால் சொல்லுங்கள், தாதாஜி, சிவபாபா சொல்கிறார் - என்னை நினைவு செய்யுங்கள் என்று. சிவபாபா ருத்ரன் என்றும் சொல்லப்படுகிறார், அவர் தான் ஞான யக்ஞத்தைப் படைக்கின்றார். கிருஷ்ண ஞான யக்ஞம் என்ற வார்த்தையைக் கேட்டிருக்க மாட்டீர்கள். ருத்ர ஞான யக்ஞம் எனச் சொல்கின்றனர் என்றால் ருத்ரன் சிவபாபா இந்த யக்ஞத்தைப் படைத்துள்ளார். இராஜ்யத்தை அடைவதற்காக ஞானம் யோகம் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். பாபா சொல்கிறார், பகவான் வாக்கு - என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள், ஏனென்றால் இப்போது அனைவருக்கும் கடைசி நேரம், வானப்ரஸ்த அவஸ்தா. அனைவரும் திரும்பிச் சென்றாக வேண்டும். இறக்கும் நேரத்தில் மனிதர்களுக்குச் சொல்கின்றனர் இல்லையா, ஈஸ்வரனை நினைவு செய்யுங்கள் என்று? இங்கே ஈஸ்வரன் தாமே சொல்கிறார், இறப்பு முன்னாலேயே உள்ளது என்று. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. கடைசியில் தான் தந்தை வந்து சொல்கிறார், குழந்தைகளே, என்னை நினைவு செய்வீர்களானால் உங்களுடைய பாவங்கள் பஸ்மமாகி விடும். இது நினைவின் அக்னி எனச் சொல்லப்படும். தந்தை உறுதித் தருகிறார், இதில் உங்கள் பாவங்கள் பஸ்மமாகி விடும். விகர்மங்கள் விநாசமாவதற்கு, பாவனமாவதற்கு வேறு உபாயம் எதுவும் கிடையாது. பாவங்களின் சுமை தலையில் ஏறி-ஏறி கறை படிந்து-படிந்து தங்கம் 9 கேரட்டாக ஆகி விட்டது. 9 கேரட்டுக்குப் பிறகு முலாம் பூசப்பட்டது எனச் சொல்லப்படுகின்றது. இப்போது மீண்டும் 24 கேரட்டாக எப்படி ஆவது? தூய்மையான ஆத்மாவுக்கு நகை (சரீரம்) கூடப்புதியதாகக் கிடைக்கும். யாரேனும் உற்றார் உறவினர் முதலானவர்கள் உள்ளனர் என்றால், அவாகளிடம் மிகவும் பணிவுடன் அன்பு பாவனையோடு புன்சிரித்துக் கொண்டே பேச வேண்டும். அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும், இதுவோ அதே மகாபாரத யுத்தம். இது ருத்ர ஞான யக்ஞமும் கூட. பாபாவின் மூலம் நமக்கு சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. வேறு எங்குமே இந்த ஞானம் கிடைக்காது. நான் உங்களுக்கு சத்தியம் சொல்கிறேன், இந்த பக்தி முதலியவற்றை யோ பல பிறவிகளாகச் செய்திருக்கிறீர்கள். இப்போது ஞானம் ஆரம்பமாகின்றது. பக்தி என்பது இரவு, ஞானம் என்பது பகல். சத்யுகத்தில் பக்தி இருப்பதில்லை. இப்படி-இப்படி யுக்தியுடன் உரையாட வேண்டும். எப்போது வாய்ப்புக் கிடைக்கிறதோ, எப்போது அம்பு எய்ய வேண்டியுள்ளதோ, அப்போது சமயம் மற்றும் சந்தர்ப்பம் பார்க்கப்படுகின்றது. ஞானத்தைக் கொடுப்பதற்கும் மிகுந்த யுக்தி வேண்டும். பாபா யுக்திகளையோ அனைவருக்காகவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். பவித்திரதாவோ மிகவும் நல்லது. இந்த லட்சுமி-நாராயணர் நம்முடைய பூஜைக்குரியவர்கள் இல்லையா? பூஜைக்குரிய, பாவனமானவர்கள் பிறகு பூஜாரி, பதித்தாக ஆகி விட்டனர். பாவனமானவர்களுக்குப் பதீதர்கள் வந்து பூஜை செய்வது என்பதோ அழகாக இல்லை. அநேகரோ பதிதர்களிடம் இருந்து விலகி ஓடுகின்றனர். வல்லபாச்சாரி ஒருபோதும் கால்களைத் தொடவிடுவதில்லை. அவர் புரிந்து கொண்டுள்ளார், இவர்கள் மோசமான-அசுத்தமான மனிதர்கள் என்று. கோவில்களிலும் கூட எப்போதுமே பிராமணர்களுக்குத் தான் மூர்த்தியைத் தொட அனுமதி உள்ளது. சூத்திர மனிதர்கள் உள்ளே சென்று தொட முடியாது. அங்கே பிராமணர்கள் தாம் அதற்கு ஸ்நானம் முதலியன செய்விக்கின்றனர். வேறு யாரையும் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. வித்தியாசமோ உள்ளது இல்லையா? இப்போது அவர்களோ குகவம்சாவளி (விகாரி) பிராமணர்கள். நீங்கள் முகவம்சாவளி (தூய ஜென்மம் எடுத்த) உண்மையான பிராமணர்கள். நீங்கள் அந்த பிராமணர்களுக்கு நன்றாகப் புரிய வைக்க முடியும், பிராமணர்கள் இரண்டு வகை - ஒன்று பிரஜாபிதா பிரம்மாவின் முகவம்சாவளி, இரண்டாவது குக வம்சாவளி. பிரம்மா வின் முகவம்சாவளி பிராமணர் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்கள். யக்ஞத்தைப் படைக்கின்றனர் என்றாலும், பிராமணர்கள் நியமிக்கப் படுகிறார்கள். இது பிறகு ஞான யக்ஞமாகும். பிராமணர்களுக்கு ஞானம் கிடைக்கிறது என்றால், பிறகு தேவதை ஆகின்றனர். வர்ணங்களும் புரிய வைக்கப்பட்டுள்ளது. யார் சேவாதாரிக் குழந்தைகள் உள்ளனரோ, அவர்களுக்கு சதா சேவையின் ஆர்வம் இருக்கும். எங்காவது கண்காட்சி இருக்குமானால் உடனே சேவைக்காக ஓடுவார்கள் நாம் போய் இப்படி-இப்படிப் பாயின்ட்டுகளைப் புரிய வைக்க வேண்டும் என்று. கண்காட்சியிலோ பிரஜைகள் உருவாவதற்கான வேகமான வழி உள்ளது. தாமாகவே ஏராளமானவர்கள் வருகின்றனர். ஆக, புரிய வைப்பவர்களும் திறமைசாகளாக இருக்க வேண்டும். யாராவது முழுமையாகப் புரிய வைக்கவில்லை என்றால் சொல்வார்கள், பி.கே.க்களிடம் இந்த (குறைவான) ஞானம் தான் உள்ளது என்று. சேவையில் குந்தகம் ஏற்பட்டு விடும். கண்காட்சியில் அப்படி ஒரு சுறுசுறுப்பானவர் இருக்க வேண்டும், அவர் கைடுகளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். யாராவது பெரிய மனிதர் வந்தால் அவருக்குப் புரிய வைப்பவரும் அப்படி திறமையாக இருக்க வேண்டும். குறைவாகப் புரிய வைப்பவர்களை நிறுத்திவிட வேண்டும். மேற்பார்வை செய்வதற்குத் திறமை மிக்க ஒருவர் இருக்க வேண்டும். நீங்களோ மகாத்மாக்களையும் கூட அழைக்க வேண்டும். நீங்கள் இதை மட்டும் சொல்கிறீர்கள் - பாபா இதுபோல் சொல்கிறார், அவர் உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான். அவர் தாம் படைக்கின்ற தந்தை ஆவார், மற்ற அனைவரும் அவருடைய படைப்புகள். ஆஸ்தி தந்தையிடம் கிடைக்கும். சகோதரன், சகோதரனுக்கு என்ன ஆஸ்தி கொடுப்பார்? யாராலும் சுகதாமத்தின் ஆஸ்தி தர முடியாது. ஆஸ்தி கொடுப்பவர் தந்தை மட்டுமே! அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் ஒரு தந்தை தாம். அவரை நினைவு செய்ய வேண்டும். தந்தை தாமே வந்து பொன்யுகத்தினைப் படைக்கிறார். சிவஜெயந்தி கொண்டாடவும் செய்கின்றனர். ஆனால் அவர் என்ன செய்கிறார்? இதையெல்லாம் மனிதர்கள் மறந்து விட்டனர். சிவபாபா தாம் வந்து இராஜயோகத்தைக் கற்பித்து ஆஸ்தி தருகிறார். 5000 ஆண்டுகளுக்கு முன் பாரதம் சொர்க்கமாக இருந்தது. இலட்சம் ஆண்டுகளின் விஷயமோ கிடையாது. தேதி-நாள் அனைத்தும் உள்ளன. இதை யாராலும் மாற்ற முடியாது. புது உலகம் மற்றும் பழைய உலகம் பாதி-பாதி இருக்க வேண்டும். அவர்கள் சத்யுகத்தின் ஆயுள் லட்சக்கணக்கான ஆண்டுகள் எனச் சொல்லிவிடுகின்றனர் என்றால், எந்த ஒரு கணக்கும் இருக்க முடியாது. ஸ்வாஸ்திகாவிலும் நான்கு பாகங்கள் முழுமையாக உள்ளன. ஒவ்வொரு யுகமும் 1250 ஆண்டுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. கணக்கிடப்படுகின்றது இல்லையா? அந்த மனிதர்கள் கணக்கையோ எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை. அதனால் சோழி போன்றவர்கள் எனச் சொல்லப்படுகின்றனர். இப்போது பாபா வைரம் போல் ஆக்குகிறார். அனைவரும் பதீத்தமாக உள்ளனர் பகவானை நினைவு செய்கின்றனர். அவர்களை பகவான் வந்து ஞானத்தின் மூலம் மெல்லிய மலர்களாக ஆக்குகிறார். குழந்தைகளாகிய உங்களை ஞான ரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டே இருக்கிறார். பிறகு பாருங்கள், நீங்கள் என்னவாக ஆகிறீர்கள்! உங்களுடைய நோக்கம்-குறிக்கோள் என்ன? பாரதம் எந்த அளவு தலைக்கிரீடமாக இருந்தது! அனைத்தையும் மறந்து விட்டீர்கள். முஸ்லீம்கள் முதலானோரும் சோமநாதர் ஆலயத்திலிருந்து எவ்வளவு கொள்ளையடித்து அவர்களின் மசூதிகள் முதலியவற்றில் வைரங்கள் முதலியவற்றைக் கொண்டு போய்ப் பதித்து வைத்துள்ளனர்! இப்போது அவற்றை மதிபபிடவும் முடியாது. அவ்வளவு பெரிய-பெரிய மணிகள் இராஜாக்களின் கிரீடத்தில் இருந்தன. அவற்றில் சில ஒரு கோடி மதிப்பு, சில 5 கோடி மதிப்புள்ளவையும் இருந்தன. இப்போதோ அனைத்தும் போலியாக வெளிவந்துள்ளன. இவ்வுலகில் உள்ள அனைத்தும் செயற்கையான, ஒன்றுக்கும் உதவாத சுகம். மற்ற அனைத்தும் துக்கம். அதனால் சந்நியாசிகளும் சொல்கின்றனர், காக்கையின் எச்சத்துக்கு சமமான சுகம் என்று. அதனால் அவர்கள் வீடு-வாசலை விட்டு விடுகின்றனர். ஆனால் இப்போதோ அவர்களும் தமோபிரதான் ஆகி விட்டுள்ளனர். நகரத்துக்குள் நுழைந்து விட்டுள்ளனர். ஆனால் இப்போது யாருக்குச் சொல்வது? இராஜா-ராணியோ கிடையாது. யாரும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். அனைவர்க்கும் அவரவர் வழிமுறை உள்ளது, என்ன விரும்புகிறார்களோ, செய்யட்டும் எனச் சொல்வார்கள்.  சங்கல்பத்தின் சிருஷ்டி. இப்போது குழந்தைகளாகிய உங்களை குப்த ரீதியில் பாபா புருஷார்த்தம் செய்ய வைக்கிறார். நீங்கள் எவ்வளவு சுகம் அனுபவிக்கிறீர்கள்! மற்ற தர்மங்களும் பின்னால் விருத்தியடையும் போது சண்டை-சச்சரவு முதலியன வருகின்றன. முக்கால்வாசி சமயம் சுகத்தில் இருக்கிறீர்கள். அதனால் பாபா சொல்கிறார், உங்களுடைய தேவி-தேவதா தர்மம் மிகுந்த சுகம் தருவதாகும். நான் உங்களை உலகத்தின் மாலிக் ஆக்குகிறேன். மற்ற தர்ம ஸ்தாபகர்கள் யாரும் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில்லை. அவர்கள் சத்கதி அளிப்பதில்லை. தங்களின் தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக மட்டுமே வருகின்றனர். அதுவும் கடைசியில் எப்போது தமோபிரதானமாக ஆகி விடுகிறார்களோ, அப்போது பிறகு பாபா சதோபிரதானம் ஆக்குவதற்காக வரவேண்டி உள்ளது.

 

உங்களிடம் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் வருகின்றனர், ஆனால் எதையும் புரிந்து கொள்வதில்லை. பாபாவுக்கு எழுதுகின்றனர், இன்னார் மிக நன்றாகப் புரிந்து கொள்கிறார், மிக நன்றாக உள்ளது என்று. பாபா சொல்கிறார், எதையும் புரிந்து கொள்ளவில்லை என்று. பாபா வந்திருக்கிறார், உலகத்தின் எஜமான் ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்களானால் அந்த நேரமே நஷா ஏறிவிடும். உடனே டிக்கெட் எடுத்து இங்கே (மதுபனுக்கு) ஓடி வந்து விடுவார்கள். ஆனால் டீச்சரின் கடிதம் அவசியம் கொண்டுவர வேண்டும், பாபாவுடன் சந்திப்பதற்கு. பாபாவை அறிந்து கொண்டு விட்டால் சந்திக்காமல் அவர்களால் இருக்க முடியாது. முற்றிலும் நஷா ஏறிவிடும். யாருக்கு நஷா ஏறியிருக்கிறதோ, அவர்களுக்கு உள்ளுக்குள் மிகுந்த குஷி இருக்கும். அவர்களின் புத்தி உற்றார் உறவினர்களிடம் அலையாது. ஆனால் அநேகருக்கு அலைந்து கொண்டே இருக்கின்றது. இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாகப் பவித்திரமாக ஆக வேண்டும். மேலும் பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். இது மிகவும் சுலபமானது. எவ்வளவு முடியுமோ, பாபாவை நினைவு செய்து கொண்டு இருங்கள். எப்படி ஆபீசிலிருந்து லீவு பெற்றுக் கொள்கிறீர்களோ, அதுபோல் வேலையிலிருந்து விடுப்பு பெற்றுக் கொண்டு ஓரிரு நாள் நினைவு யாத்திரையில் அமர்ந்து விடுங்கள். அடிக்கடி நினைவில் அமர்வதற்காக நன்றாக முழு நாளிலும் விரதம் மேற்கொள்கிறேன் - பாபாவை நினைவு செய்வதற்கு. எவ்வளவு சேமிப்பாகி விடும்! விகர்மங்களும் விநாசமாகும். பாபாவின் நினைவின் மூலம் தான் சதோபிரதானமாக ஆக வேண்டும். நாள் முழுவதும் முழுமையாக யோகமோ யாருக்கும் முடியாது. மாயா அவசியம் தடைகளை ஏற்படுத்தும். பிறகும் முயற்சி செய்து செய்தே வெற்றி பெற்று விடுவீர்கள். அவ்வளவு தான், இன்றைய நாள் முழுவதும் தோட்டத்தில் அமர்ந்து பாபாவை நினைவு செய்கிறேன். உணவு உண்ணும் போதும் பாபாவின் நினைவில் அமர்ந்திருக்கிறேன். இது தான் முயற்சி. நாம் அவசியம் பாவனமாக வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் கூட வழி சொல்ல வேண்டும். பேட்ஜோ மிக நல்ல ஒரு பொருளாகும். சாலையில் தங்களுக்குள்ளும் உரையாடிக் கொண்டே இருப்பீர்களானால் அநேகர் வந்து கேட்பார்கள். பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள். செய்தி கிடைத்து விட்டால் அவ்வளவு தான், நாம் பொறுப்பிலிருந்து விடுபட்டு விடுகிறோம். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) தொழில் முதலியவற்றிருந்து விடுப்பு கிடைக்குமானால் நினைவில் இருப்பதற்கான விரதம் மேற்கொள்ள வேண்டும். மாயா மீது வெற்றி கொள்வதற்காக நினைவின் முயற்சி செய்ய வேண்டும்.

 

2) மிகவும் பணிவு மற்றும் அன்பின் பாவனையுடன் புன்சிரித்துக் கொண்டே உற்றார் உறவினர்க்கு சேவை செய்ய வேண்டும். அவர்களிடம் புத்தியை அலையவிடக் கூடாது. அன்போடு பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும்.

 

வரதானம்:

லௌகீகத்தை அலௌகீதத்தில் மாற்றம் செய்து அனைத்து பலவீனங்களிலிருந்து விடுபடக் கூடிய மாஸ்டர் சர்வ சக்திவான் ஆகுக.

 

யார் மாஸ்டர் சர்வசக்திவான் நாலேட்ஜ்ஃபுல் ஆத்மாக்களோ, அவர்கள், ஒருபொழுதும் எந்தவொரு பலவீனம் மற்றும் பிரச்சனைகளுக்கு வசமாக மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அமிர்தவேளையில் இருந்து எதையெல்லாம் பார்க்கிறார்களோ, கேட்கிறார்களோ, யோசிக்கிறார்களோ, அல்லது காரியம் செய்கிறார்களோ, அதனை லௌகீகத்திலிருந்து அலௌகீகத்தில் மாற்றம் செய்து விடுகின்றனர். எந்தவித லௌகீக செயல்களையும் நிமித்தமாக இருந்து செய்து கொண்டே அலௌகீக காரியம் சதா நினைவில் இருந்தால், எந்தவிதமான மாயாவி விகாரங்களுக்கு வசமாகியுள்ள மனிதர்களின் தொடர்பில் தன்னை வசமாக்கிக் கொள்ளமாட்டார்கள். தமோ குண வைப்ரேஷனிலும் கூட சதா தாமரை போன்று இருப்பார்கள். லௌகீக சேற்றில் இருந்தாலும் கூட அதிலிருந்து விலகியிருப்பார்கள்.

 

சுலோகன்:

அனைவரையும் திருப்திப் படுத்துங்கள், அப்பொழுது முயற்சியில் உயர்வு (ஹை ஜம்ப்) ஏற்பட்டு விடும்.

 

அவ்யக்த் ஸ்திதியை அனுபவம் செய்வதற்காக விசேஷ ஹோம் வொர்க்::

அமிர்தவேளை எழுந்ததிலிருந்து ஒவ்வொரு செயல், ஒவ்வொரு எண்ணம் மற்றும் ஒவ்வொரு பேச்சிலும் ரெகுலர் ஆகுங்கள். எந்தவொரு வார்த்தையும் வீணாகி விட கூடாது. எவ்வாறு பெரிய மனிதர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஃபிக்ஸ் ஆகி விடுகிறது. (என்றென்றும் நிலைத்து விடுகிறது). அவ்வாறே உங்களுடைய வார்த்தையும் ஃபிக்ஸ் ஆகிவிட வேண்டும். எக்ஸ்க்ட்ரா (அதிகமாக) பேசக் கூடாது.

 

ஓம்சாந்தி