05.01.2021 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! உங்களின்
வாயிலிருந்து ஒரு போதும் ஹே ஈஸ்வரா, ஹே பாபா (அட கடவுளே!) என்ற
வார்த்தைகள் வெளிவரக் கூடாது. இது பக்தி மார்க்கத்தின் பயிற்சி
ஆகும்.
கேள்வி :
குழந்தைகளாகிய நீங்கள் வெண்ணிற
ஆடையை ஏன் விரும்புகிறீர்கள்? இது எந்த விஷயத்தின் சின்னம் (அடையாளம்)
ஆகும்?
பதில்:
இப்போது நீங்கள் இந்த பழைய
உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும் இறந்து விட்டீர்கள்.
ஆகவே, உங்களுக்கு வெண்ணிற ஆடை பிடிக்கிறது. இந்த வெண்ணிற ஆடை
மரணத்தைத் நிரூபிக்கிறது யாராவது இறந்து போனால் அவர்கள் மீது
கூட வெண்ணிற ஆடையை போடுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் கூட
இப்போது இறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை வந்து
குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். ஆன்மீகம் என்ற வார்த்தையைக்
கூறாமல் தந்தை என்று மட்டும் என்று கூறினாலும் சரியாகும். தந்தை
குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். அனைவரும் தன்னை சகோதரன்
சகோதரன் என்கிறார்கள். எனவே பாபா குழந்தைகளுக்குப் புரிய
வைக்கின்றார். அனைவருக்கும் புரிய வைக்க மாட்டார். அனைவரும்
தங்களை சகோதரன்-சகோதரன் என்கிறார்கள். பகவான் வாக்கு என்று
கீதையில் கூட எழுதப்பட்டிருக்கிறது. இப்போது யாருக்காக பகவான்
வாக்கு. அனைவரும் பகவானின் குழந்தைகள் ஆவார்கள். அவர் தந்தை
எனில் பகவானின் குழந்தைகள் அனைவரும் சகோதரர்கள் ஆவர். பகவான்
தான் புரிய வைத்திருப்பார். இராஜயோகத்தைக் கற்பித்திருப்பார்.
இப்போது உங்களின் புத்தியின் பூட்டு திறந்திருக்கிறது.
உலகத்தில், வேறு யாருக்கும் இது போன்ற எண்ணங்கள் ஏற்படாது.
யாருக்கெல்லாம் செய்தி கிடைத்துக் கொண்டிருக்கிறதோ அவர்கள்
பள்ளிக்கு வருவார்கள். படித்துக் கொண்டிருப்பார்கள். படக்
கண்காட்சி பார்த்தாகி விட்டது. இப்போது சென்று சற்று அதிகமாக
கேட்போம் என நினைப்பார்கள். முதன் முதல் முக்கியமான விஷயம்
ஞானக் கடல், பதீத பாவனர் கீதா ஞான தாதா சிவபகவான் வாக்கு: முதன்
முதலில் இவர்களுக்குப் புரிய வைக்கக் கூடியவர் மற்றும்
கற்ப்பிப்பவர் யார் என்று அவர்களுக்குத் தெரியட்டும். அவர்
சுப்ரீம் சோல், ஞானக்கடல், நிராகாரர் ஆவார் ! அவரே உண்மையானவர்.
அவர் சத்தியத்தைத்தான் கூறுவார். பிறகு வேறு எந்த கேள்வியும்
எழ முடியாது. முதன் முதலில் பரம்பிதா பரமாத்மா பிரம்மா மூலமாக
நமக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்பதைப் பற்றி புரிய
வைக்க வேண்டும். இது இராஜ்ய பதவி ஆகும். யாருக்கு நிச்சயம்
இருக்கின்றதோ அவர் அனைவருக்கும் தந்தை, அந்த பாரலௌகீக தந்தை
புரிய வைக்கின்றார். அவரே அனைவரையும் விட சர்வ சக்திவான்
என்றால் வேறு எந்த கேள்வியும் எழாது. அவரே பதீத பாவனர் என்றால்
அவருடைய நேரத்தில் நிச்சயமாக இங்கே வருவார். இது அதே மகா பாரதப்
போர் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அழிவிற்குப் பின்பு
விகாரமற்ற உலகம் உருவாக வேண்டும். இது விகார உலகம் ஆகும்.
பாரதம் தான் விகாரமற்றதாக இருந்தது என்பது மனிதர்களுக்குத்
தெரியவில்லை. புத்தி எதைப் பற்றியும் சிந்திப்பதில்லை. காட்ரெஜ்
பூட்டு போடப்பட்டிருக்கிறது. அதனுடைய சாவி ஒரு தந்தையிடம் தான்
இருக்கிறது. ஆகவே தான் அவருக்கு ஞானக்கடல், தெய்வீகக் கண்
விதாதா (படைப்பவர்) என்று கூறப்படுகிறது. ஞானத்தின் மூன்றாவது
கண்ணை அளிக்கின்றார். உங்களைப் படிக்க வைப்பவர். யார் என்பது
யாருக்கும் தெரியவில்லை. எப்போது வெற்றித்திலகம் இடுகிறார்களோ
அப்போது தாதா புரிந்துக் கொள்கிறார். ஏதாவது ஒன்றைப்
பேசுகிறார்கள். எனவே முதன் முதல் விஷயம் இதைப் புரிய வையுங்கள்.
சிவ பகவான் வாக்கு என்று இதில் எழுதப்பட்டிருக்கிறது. அவரே
சத்தியமானவர்.
நான் பதீத பாவனர் சிவன், நான் பரந்தாமத்தில் இருந்து இந்த
சாலிகிராமங்களை படிக்க வைப்பதற்காக வந்திருக்கிறேன் என்று
தந்தை புரிய வைக்கிறார். தந்தை தான் நாலெட்ஜ்ஃபுல்
சிருஷ்டியின் முதல், இடை, கடை ரகசியத்தைப் புரிய வைக்கிறார்.
இந்த படிப்பு இப்போது தான் உங்களுக்கு எல்லையற்ற
தந்தையிடமிருந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவரே
சிருஷ்டியைப் படைப்பவர் ஆவார். தூய்மை இழந்த சிருஷ்டியை
மீண்டும் தூய்மையாக மாற்றக் கூடியவர். பதீத பாவனா வாருங்கள்
என்று அழைக்கிறார்கள் என்றால் முதன் முதலில் அவருடைய
அறிமுத்தைக் கொடுக்க வேண்டும். அந்த பரம்பிதா பரமாத்மாவுடன்
தங்களுக்கு என்ன உறவு இருக்கிறது. அவரே சத்தியமானவர்.
நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான சத்தியமான ஞானத்தைக்
கொடுக்கின்றார். குழந்தைகள் பாபா சத்தியமானவர், பாபா தான்
உண்மையான கண்டத்தை உருவாக்குகின்றார் என புரிந்துக்
கொள்கின்றனர். நீங்கள் நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக இங்கே
வருகிறீர்கள். வக்கீலிடம் படிக்க சென்றீர்கள் என்றால் நாம்
வக்கீலாவதற்காக படிக்க வந்திருக்கிறோம் என புரிந்துக்
கொள்வார்கள். இப்போது நம்மை பகவான் கற்க வைக்கின்றார் என்ற
நிச்சயம் உங்களுக்கு இருக்கின்றது. சிலர் நிச்சயம்
வைக்கிறார்கள். பிறகு சந்தேக புத்தி ஆகி விட்டது என்றால்
அவர்களிடம் அனைத்து மனிதர்களும், பகவான் படிக்க வைக்கின்றார்
என்று சொன்னீர்கள். பிறகு பகவானை விட்டு விட்டு ஏன் வந்தீர்கள்
என கேட்பார்கள். சந்தேகம் வந்த உடன் தான் ஓடிப் போய்
விடுகிறார்கள். ஏதாவது ஒரு விகர்மம் செய்கிறர்கள். பகவான்
வாக்கு : காமம் மிகப் பெரிய எதிரியாகும். இதை வெற்றி அடைந்தால்
தான் உலகத்தை வென்றவராக முடியும். யார் தூய்மையானவர்களாக
மாறுகிறார்களோ அவர்களே தூய்மையான உலகத்திற்குச் செல்கிறார்கள்.
இங்கே தான் ராஜ யோகத்தின் விசயம் ஆகும். நீங்கள் அங்கே சென்று
இராஜ்யம் செய்வீர்கள். மீதம் உள்ள ஆத்மாக்கள் தங்களுடைய கணக்கு
வழக்குகளை முடித்து தன்னுடைய வீட்டிற்குப் போய்விடும். இது
அழிவுக்கான தருணம் ஆகும். இப்போது சத்யுகத்தின் ஸ்தாபனை
நிச்சயம் நடக்கும் என்று புத்தி கூறுகிறது. சத்யுகத்திற்கு
தூய்மையான உலகம் என்று கூறப்படுகிறது. மற்ற அனைவரும் முக்தி
தாமத்திற்குச் சென்று விடுவார்கள். பிறகு அவர்கள் தங்களின்
பாகத்தை ரிபீட் செய்ய வேண்டும். நீங்களும் உங்களின் முயற்சியை
செய்து கொண்டிருக்கிறீர்கள். தூய்மையாகி தூய்மையான உலகத்திற்கு
அதிபதியாவதற்காக. அனைவரும் தங்களை அதிபதி என நினைப்பார்கள்
அல்லவா? பிரஜையும் அதிபதி தான். இப்போது பிரஜைகள் கூட எங்கள்
பாரதம் என்று கூறுகிறார்கள் அல்லவா? மிகப் பெரிய மனிதர்கள்
சன்னியாசி கூட எங்கள் பாரதம் என்கிறார்கள். இச்சமயம்
பாரதத்தில் அனைவரும் நரகவாசிகளாக இருக்கிறார்கள் என புரிந்துக்
கொள்கிறீர்கள். இப்போது நாம் சொர்க்கவாசி ஆவதற்காக இந்த
இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். அனைவரும் சொர்க்கவாசி
ஆகமாட்டார்கள். இப்போது இந்த ஞானம் வந்திருக்கிறது. அவர்கள்
என்ன கூறுகிறார்கள். சாஸ்திரங்களைக் கூறுகிறார்கள். அது
சாஸ்திரங்களின் அதிகாரம் ஆகும். இந்த பக்தி மார்க்கத்தின் வேத
சாஸ்திரங்கள் போன்றவைகளைப் படித்து படியில் கீழே இறங்கிக்
கொண்டே போகிறார்கள் என பாபா கூறுகிறார். இது அனைத்தும் பக்தி
மார்க்கம் ஆகும். பக்தி மார்க்கம் முடியும் போது தான் நான்
வருவேன் என பாபா கூறுகிறார். நான் தான் வந்து அனைத்து
பக்தர்களுக்கும் பக்தியின் பலனைக் கொடுக்க வேண்டும்.
பெரும்பாலானவர்களோ பக்தர்களே ஓ, கடவுளே என அனைவரும் அழைத்துக்
கொண்டிருக்கிறார்கள் அல்லவா? பக்தர்களின் வாயிலிருந்து ஓ,
கடவுளே, ஓ, பகவான் என நிச்சயம் வரும். இப்போது பக்தி மற்றும்
ஞானத்தில் வித்தியாசம் இருக்கிறது. உங்களின் வாயிலிருந்து ஒரு
போதும் ஓ, ஈஸ்வரா, ஓ, பகவானே என்ற வார்த்தைகள் வராது.
மனிதர்களுக்கு அரைக் கல்பமாக இந்த பயிற்சி ஏற்பட்டிருக்கிறது.
அவர் நம்முடைய தந்தை என உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஓ,
தந்தையே என்று கூற வேண்டியதில்லை. தந்தையிடமிருந்து நீங்கள்
சொத்து அடைய வேண்டும். நாம் தந்தையிடமிருந்து சொத்தை அடைகிறோம்
என்ற நிச்சயம் முதலில் இருக்க வேண்டும். பாபா குழந்தைகளுக்கு
சொத்து அடைவதற்கான அதிகாரி ஆக்குகிறார். உண்மையான தந்தை
அல்லவா? இவர்கள் என்னுடைய குழந்தைகள், இவர்களுக்கு நான் ஞான
அமிர்தத்தை அருந்த வைத்து, ஞானச் சிதையில் அமர வைத்து ஆழ்ந்த
தூக்கத்திலிருந்து எழுப்பி சொர்க்கத்திற்கு அழைத்துச்
செல்கிறேன் என பாபா அறிகிறார். ஆத்மாக்கள் அங்கே சாந்தி தாமம்
மற்றும் சுகதாமத்தில் வசிக்கிறார்கள் என புரிய
வைத்திருக்கிறார். சுகதாமத்திற்கு விகாரமற்ற உலகம் என்று
பெயர். சம்பூரண நிர்விகாரி தேவதைகள் அல்லவா? மேலும் அது
ஸ்வீட்ஹோம் ஆகும். அது நம்முடைய வீடு, நடிகர்களாகிய நாம் அந்த
சாந்திதாமத் திலிருந்து இங்கே நடிப்பதற்காக வருகிறோம் என
நீங்கள் தெரிந்துக் கொண்டீர்கள். ஆத்மாக்களாகிய நாம் இங்கே
வசிக்கக் கூடியவர்கள் கிடையாது. அந்த நடிகர்கள் இங்கே வசிக்கக்
கூடியவர்கள். வீட்டிலிருந்து வந்து உடையை மாற்றிக் கொண்டு
நடிப்பை நடிக்கிறார்கள். நம்முடைய வீடு சாந்திதாமம், அங்கே
நாம் மீண்டும் திரும்பப் போகிறோம் என நீங்கள் புரிந்துக்
கொள்கிறீர்கள். அனைத்து நடிகர்களும் மேடைக்கு வந்த பிறகு
மீண்டும் தந்தை வந்து அனைவரையும் அழைத்துச் செல்வார். ஆகவே,
அவருக்கு விடுவிக்கக் கூடியவர், வழிகாட்டி என்று
கூறப்படுகிறது. துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவர் என்றால்,
இத்தனை மனிதர்களும் எங்கே செல்வார்கள். பதீத பாவனரை
அழைக்கிறார்கள். எதற்காக என சிந்தியுங்கள். தனது மரணத்திற்காக.
துக்க உலகத்தில் வசிக்க விரும்பவில்லை. ஆகவே, வீட்டிற்கு
அழைத்துச் செல்லுங்கள் என்கிறார்கள். இவர்கள் அனைவரும்
முக்தியைத் தான் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள். பாரதத்தின்
பழமையான இராஜயோகம் கூட எவ்வளவு பிரசித்தமானது. பழமையான
இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காக வெளி நாடுகளுக்கு கூட
செல்கிறார்கள் உண்மையில் ஹடயோகிகள் இராஜயோகத்தைப் பற்றி அறியவே
இல்லை. அவர்களின் யோகமே தவறாகும். ஆகவே நீங்கள் சென்று
உண்மையான இராஜயோகத்தைக் கற்பிக்க வேண்டும். மனிதர்கள்
சன்னியாசிகளின் காவி உடையைப் பார்த்து அவர்களுக்கு எவ்வளவு
மதிப்பளிக்கிறார்கள். பௌத்த தர்மத்தில் கூட சன்னியாசிகள் காவி
உடையை அணிந்திருப்பதைப் பார்த்து அவர்களுக்கு
மதிப்பளிக்கிறார்கள். சன்னியாசிகளாக பிறகு தான் ஆகிறார்கள்.
பௌத்த தர்மத்தில் கூட ஆரம்பத்தில் யாரும் சன்னியாசி ஆவதில்லை.
பாவம் அதிகரிக்கும் போது தான் பௌத்த தர்மத்தில் சன்னியாச
தர்மம் ஸ்தாபனை ஆகிறது. ஆரம்பத்திலோ அந்த ஆத்மாக்கள்
மேலிருந்து வருகின்றது. அவர்களின் எண்ணிக்கை வளர்கிறது.
ஆரம்பத்தில் சன்னியாசத்தைக் கற்பித்து என்ன செய்வார்கள். பிறகு
தான் சன்னியாசம் தோன்றுகிறது. இது கூட இங்கிருந்து தான் காப்பி
அடிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் கூட பலர் சன்னியாசிகளுக்கு
மதிப்பளிக்கிறார்கள். காவி உடையில் கிடைக்கும் வருமானம்
ஹடயோகிகளுடையதாகும். நீங்கள் வீடு வாசலை விட வேண்டியதில்லை.
வெண்ணிற ஆடையின் கட்டுபாடும் இல்லை. ஆனால் வெண்ணிறம் நல்லது.
நீங்கள் பட்டியில் இருந்ததால் உடையும் இது போன்று ஆகிவிட்டது.
தற்காலத்தில் வெண்மையை மிகவும் விரும்புகிறார்கள். மனிதர்கள்
இறந்து விட்டால் கூட வெண்மையான போர்வையை போர்த்துகிறார்கள்.
நீங்கள் கூட இப்போது இறந்து வாழ்வதால் வெண்ணிற ஆடை நல்லது.
எனவே, முதலில் யாராக இருந்தாலும் பாபாவின் அறிமுகத்தைக்
கொடுக்க வேண்டும். இரண்டு தந்தைகள் இருக்கிறார்கள். இந்த
விஷயங்களைப் புரிந்துக் கொள்வதில் நேரமாகிறது. பட
விளக்கங்களில் இவ்வளவு புரிய வைக்க முடியாது. சத்யுகத்தில் ஒரு
தந்தை இருக்கிறார். இச்சமயம் உங்களுக்கு மூன்று தந்தைகள்
இருக்கிறார்கள். ஏனென்றால் பகவான் பிரஜா பிதா பிரம்மாவின்
உடலில் வருகின்றார். அவரும் அனைவருக்கும் தந்தையாக
இருக்கின்றார். லௌகீக தந்தையாகவும் இருக்கிறார். சரி, இப்போது
மூன்று தந்தைகளிலும் உயர்ந்த சொத்து யாருடையது? நிராகார தந்தை
எப்படி சொத்தை அளிப்பார். அவர் பிரம்மா மூலமாக வழங்குகிறார்.
இந்த படத்தை வைத்து நீங்கள் மிகவும் நன்றாகப் புரிய வைக்கலாம்.
சிவபாபா நிராகாரராக இருக்கிறார். மேலும் இவர் பிரஜா பிதா
பிரம்மா ஆதிதேவ், கிரேட் கிரேட் கிராண்ட் பாதர் ஆவார். நீங்கள்
அனைவரும் சகோதரன் சகோதரி ஆகிவிட்டீர்கள். ஆண் பெண் என்றாலும்
புத்தியில் நான் சகோதரன் சகோதரிகள் என புரிந்துக்
கொள்கிறீர்கள். பாபாவிடமிருந்து சொத்து அடைகிறீர்கள். சகோதரன்
சகோதரி எனில் தங்களுக்குள் குற்றப் பார்வை இருக்கக் கூடாது.
ஒரு வேளை இருவருக்குள்ளும் விகார பார்வை இழுத்தால் விழுந்து
விடுகின்றனர். பாபாவை மறந்து விடுகின்றனர். நீங்கள் என்னுடைய
குழந்தையாகி முகத்தில் கரியைப் பூசிவிட்டீர்கள் என பாபா
கூறுகிறார். எல்லையற்ற தந்தை குழந்தைளுக்குப் புரிய
வைக்கிறார். உங்களுக்கு இந்த போதை ஏறுகின்றது. இல்லறத்திலும்
இருக்க வேண்டும் என அறிகிறீர்கள். லௌகீக உறவினர்களிடம் பழகவும்
வேண்டும் விடுபட்டும் இருக்க வேண்டும். லௌகீக தந்தையை நீங்கள்
தந்தை என்கிறீர்கள் தானே, அவரை நீங்கள் சகோதரன் என்று கூற
முடியாது. சாதாரணமாகப் பார்த்தால் தந்தையை தந்தை என்று தான்
கூறுவார்கள். இவர் நம்முடைய லௌகீக தந்தை என்று தெரிகிறது.
ஞானம் இருக்கிறது அல்லவா? இந்த ஞானம் மிகவும் விசித்திரமாக
இருக்கிறது. தற்காலத்தில் பெயர் கூட சொல்கிறார்கள். ஆனால்
யாராவது பார்வையாளர்கள் வெளியில் இருப்பவர் களுக்கு முன்பு
சகோதரன் என்று கூறினால் அவர்கள் இவர்களுக்கு ஏதோ ஆகி விட்டது
என நினைப்பார்கள். இதில் மிகவும் யுக்தி வேண்டும். உங்களுடையது
மிகவும் குப்தமான (மறைவான) ஞானம் ஆகும். குப்தமான உறவாகும்.
இதில் மிகவும் யுக்தியோடு நடக்க வேண்டும். ஆனால்
ஒருவருக்கொருவர் மரியாதை அளிப்பது நன்று. லௌகீகத்திலும்
விடுபட்டும் மற்றும் பராமரிக்கவும் வேண்டும். புத்தி மேலே
செல்ல வேண்டும். நாம் தந்தையிடமிருந்து சொத்தை அடைந்துக்
கொண்டிருக்கிறோம். மற்றபடி சித்தப்பாவை சித்தப்பா, தந்தையை
தந்தை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. பி.கே ஆகாதாவர்கள்.
சகோதரன் சகோதரி என்பதைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். யார்
பிரம்மா குமார் குமாரி ஆகியிருக்கிறார்களோ அவர்களே இந்த
விஷயத்தை புரிந்துக் கொள்வார்கள். வெளியில் இருப்பவார்கள்
முதலில் கேட்டு அதிசயப்படுவர்கள். இதில் புரிந்துக் கொள்வதற்கு
மிகவும் நல்ல புத்தி வேண்டும். பாபா குழந்தைகளாகிய உங்களை
விசால புத்தி உடையவராக மாற்றுகிறார். முதலில் நீங்கள்
எல்லைக்குட்பட்ட புத்தி உடையவராக இருந்தீர்கள். இப்போது புத்தி
எல்லையற்றதில் சென்று விடுகிறது. அவர் நமக்கு எல்லையற்ற
தந்தையாவார். இவர் அனைவரும் நம்முடைய சகோதரன் சகோதரி ஆவார்.
மற்றபடி உறவினர்களில் மருமகளை மருமகள் என்றும் மாமியாரை
மாமியார் என்று தான் அழைப்பார்கள். சகோதரி என்று கூற முடியாது.
இருவருமே வருகிறார்கள். வீட்டில் இருந்தாலும் மிகவும்
யுக்தியோடு நடக்க வேண்டும். உலகியல் வழக்கத்தையும் கடைபிடிக்க
வேண்டியிருக்கிறது. இல்லை என்றால் அவர்கள் கணவரை சகோதரன்
என்றும் மாமியாரை சகோதரி என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் என்ன கற்றுக் கொடுக்கிறார்கள் என்பார்கள். இந்த
ஞானத்தின விஷயங்களை நீங்களும் புரிந்துக் கொள்கிறீர்கள். வேறு
பலரும் புரிந்துக் கொள்கிறார்கள். உங்களின் வழியையும்,
முறையையும் நீங்கள் தான் அறிகிறீர்கள் என்று கூறுகிறார்கள்
அல்லவா? இப்போது நீங்கள் அவருடைய குழந்தைகள் ஆகிவிட்டீர்கள்
என்றால், அவருடைய வழியை நீங்கள் தான் அறிகிறீர்கள். மிகவும்
கவனமாக நடக்க வேண்டியிருக்கிறது. எங்கும் எந்த குழப்பமும்
கூடாது. எனவே படக் கண்காட்சிகளில் குழந்தைகளாகிய நீங்கள்
நம்மைக் கற்க வைப்பவர் பகவான் என்பதை முதன் முதலில் புரிய
வைக்க வேண்டும். அவர் யார் என்று இப்போது கூறுங்கள். நிராகார்
சிவனா ஸ்ரீகிருஷ்ணனா? சிவ ஜெயந்திக்குப் பிறகு தான் கிருஷ்ண
ஜெயந்தி வருகிறது. ஏனென்றால் பாபா இராஜயோகம் கற்பிக்கின்றார்.
குழந்தைகளின் புத்தியில் தோன்றுகிறது அல்லவா? சிவபாபா வராத வரை
சிவஜெயந்தி கொண்டாட முடியாது. சிவன் வந்து விஷ்ணு புரியை
ஸ்தாபனை செய்யாத வரை எப்படி கிருஷ்ண ஜெயந்தியை எப்படி கொண்டாட
முடியும்? கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். ஆனால்
புரிந்துக் கொள்ளவில்லை. கிருஷ்ணன் இளவரசனாக இருந்தார் என்றால்
நிச்சயம் சத்யுகத்தில் தான் இளவரசனாக இருந்திருப்பார் அல்லவா?
தேவி தேவதைகளின் ராஜ்யம் இருக்கும். ஒரு கிருஷ்ணருக்கு மட்டும்
அரசாட்சி கிடைத்திருக்காது. நிச்சயம் கிருஷ்ணபுரி இருக்கும்
அல்லவா? கிருஷ்ணபுரி மற்றும் இது கம்சபுரி என்று
கூறுகிறார்கள். கம்சபுரி அழிந்து பிறகு கிருஷ்ணபுரி ஸ்தாபனை
ஆகியது அல்லவா? பாரதத்தில் தான் தோன்றுகிறது. புது உலகத்தில்
இந்த கம்சன் போன்றவர் யாரும் இருக்க முடியாது. கலியுகத்திற்கு
கம்சபுரி என்று கூறப்படுகிறது. இங்கே பாருங்கள். எவ்வளவு
மனிதர்கள் இருக்கிறார்கள். சத்யுகத்தில் மிகச் சிலரே
இருக்கிறார்கள். தேவதைகள் எந்த போரும் செய்யவில்லை.
கிருஷ்ணபுரி என்றாலும் சரி, விஷ்ணுபுரி என்றாலும் சரி, தெய்வீக
சம்பிரதாயம் என்று கூட கூறலாம். இங்கே அசுர சம்பிரதாயம்
இருக்கிறது. மற்றபடி தேவதைகளுக்கும் அசுரர்களுக்கும் இடையில்
போர் நடைபெறவில்லை. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும்
இடையிலும் நடைபெறவில்லை. நீங்கள் இராவணனை வெற்றி அடைகிறீர்கள்.
இந்த 5 விகாரங்களை வெற்றி அடைந்து விட்டால் நீங்கள் உலகத்தை
வென்றவர் ஆகலாம். இதில் எந்த சண்டையும் இல்லை என பாபா
கூறுகிறார். சண்டை என்ற பெயரை எடுத்தாலே இம்சை ஆகிவிடும்.
இராவணனை வெற்றி அடைய வேண்டும். ஆனால் அகிம்சை மூலமாக. தந்தையை
மட்டும் நினைவு செய்வதால் நம்முடைய விகர்மங்கள் அழியும். சண்டை
போன்ற எந்த விஷயமும் இல்லை. நீங்கள் தமோபிரதானம்
ஆகிவிட்டீர்கள் என்று பாபா கூறுகிறார். இப்போது மீண்டும்
சதோபிரதானம் ஆக வேண்டும். பாரதத்தின் பழமையான ராஜயோகம் பெருமை
வாய்ந்தது. என்னுடன் புத்தியோகத்தை இணைத்தால் உங்களுடைய பாவம்
விலகி போகும் என பாபா கூறுகிறார். பாபா பதீத பாவனர் என்பதால்
அவருடன் புத்தியோகம் இணைக்க வேண்டும். அப்போது நீங்கள்
அழுக்கிலிருந்து தூய்மையாகி விடுவீர்கள். இப்போது நடைமுறையில்
நீங்கள் அவருடன் தொடர்பு கொள்ளுங்கள். இதில் சண்டை போன்ற எந்த
விஷயமும் இல்லை. யார் நன்கு படிக்கிறார்களோ பாபாவுடன் தொடர்பு
கொள்கிறார்களோ அவர்களுக்கே பாபாவிடமிருந்து சொத்து
கிடைக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்குத் தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. சகோதரன் சகோதரி என்ற பார்வையின் பயிற்சி செய்துக் கொண்டே
லௌகீக பந்தனங்களிலிருந்து விடுபட்டு பராமரிக்க வேண்டும்.
மிகவும் யுக்தியோடு நடக்க வேண்டும். விகாரப் பார்வை முற்றிலும்
இருக்கக் கூடாது. இறுதி காலத்தில் முழுமையானத் தூய்மை ஆக
வேண்டும்.
2. பாபாவிடமிருந்து முழு சொத்தை (ஆஸ்தி) அடைவதற்கு நன்கு
படிக்க வேண்டும். பதீத பாவனர் பாபாவுடன் நினைவை இணைத்து
தூய்மையாக வேண்டும்.
வரதானம்:
பலவீனங்களுக்கு முற்றுப்புள்ளி
வைத்து விட்டு தனது முழுமையான சொரூபத்தை அறிவிக்கக்கூடிய (பிரசித்தி)
சாட்சாத்கார மூர்த்தி ஆகுக.
உலகம் உங்களுடைய முந்தைய
கல்பத்தின் முழுமையான (சம்பன்ன) சொரூபத்தை, பூஜைக்குரிய
சொரூபத்தை நினைவு செய்து கொண்டிருக்கிறது. எனவே இப்பொழுது
தங்களது சம்பன்ன சொரூபத்தை (பிராக்டிகல்) நடைமுறையில் அறிவிப்பு
(பிரசித்தி) செய்யுங்கள். நடந்து முடிந்து விட்ட பலவீனங்களக்கு
முற்றுப்புள்ளி வையுங்கள். உறுதியான சங்கல்பத்தின் மூலமாக பழைய
சம்ஸ்கார சுபாவங்களை அழித்து விடுங்கள். மற்றவர்களுடைய
பலவீனங்களை நகல் (காப்பி) செய்யாதீர்கள். அவகுணங்களை தாரணை
செய்யும் புத்தியை அழித்து விடுங்கள். தெய்வீக குணங்களை தாரணை
செய்யக் கூடிய சதோபிரதான புத்தியை தாரணை செய்யுங்கள். அப்பொழுது
சாட்சாத்கார மூர்த்தி ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
தங்களது அனாதி மற்றும் ஆதி
குணங்களை நினைவில் கொண்டு அவற்றை சொரூபத்தில் எடுத்து வாருங்கள்.
ஓம்சாந்தி