ஓம்சாந்தி. இனிமையிலும் இனிய ஆன்மீகக் குழந்தைகள் பாடல் கேட்டீர்கள். இனிமையிலும் இனிய, ஆன்மீகக் குழந்தைகளே என்று கூறியது யார்? அவசியம் ஆன்மீகத் தந்தை தான் கூற முடியும். இனிமையிலும் இனிய ஆன்மீகக் குழந்தைகள் இப்பொழுது எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள், மேலும் தந்தை மிக இனிமையாக புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். அனைவருக்கும் சுகம், சாந்தி கொடுப்பவர் அல்லது அனைவரையும் இந்த துக்கத்தி-ருந்து விடுவிக்கக் கூடியவர் ஆன்மீகத் தந்தையைத் தவிர உலகில் வேறு எந்த மனிதனும் இருக்க முடியாது என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். அதனால் துக்கத்தில் இருக்கும்பொழுது தந்தையை நினைவு செய்து கொண்டிருக் கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். பாபா நம்மை சுகதாமத்திற்கு தகுதி யுடையவராக ஆக்கிக் கொண்டிருக்கின்றார் என்பதை அறிவீர்கள். சதா சுகதாமத்திற்கு எஜமானர் களாக ஆக்கக் கூடிய தந்தையின் எதிரில் வந்திருக்கிறீர்கள். எதிரில் கேட்பதற்கும் தூரத்தி-ருந்து கேட்பதற்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கிறது என்பதை இப்பொழுது புரிந்திருக்கிறீர்கள். மதுவனத் தில் எதிரில் வருகிறீர்கள். மதுவனம் மிகவும் பிரபலமானது. மதுவனத்தில் அவர்கள் கிருஷ்ணரின் சித்திரத்தை காண்பித்துவிட்டனர். ஆனால் கிருஷ்ணர் கிடையவே கிடையாது. இதற்கு உழைப்பு தேவை என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தன்னை அடிக்கடி ஆத்மா என்று நிச்சயம் செய்ய வேண்டும். நான் ஆத்மா, தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்துக் கொண்டிருக்கிறேன். முழு சக்கரத்தில் தந்தை ஒரே ஒரு முறை தான் வருகின்றார். இது கல்பத்தின் உத்தமமான, மகிழ்ச்சி கரமான சங்கமயுகமாகும். இதற்கு புருஷோத்தமம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சங்கமயுகத்தில் தான் அனைத்து மனிதர்களும் உத்தமர்களாக ஆகின்றனர். இப்பொழுது அனைத்து மனித ஆத்மாக்களும் தமோபிரதானமாக இருக்கின்றனர், பிறகு சதோபிரதானமாக ஆவர். சதோ பிரதானமாக இருக்கின்றனர் எனில் உத்தமமானவர்கள். தமோபிரதானம் ஆன காரணத்தினால் கீழானவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆக இப்பொழுது தந்தை ஆத்மாக்களுக்கு எதிரில் அமர்ந்து புரிய வைக்கின்றார். முழு நடிப்பும் ஆத்மா தான் நடிக்கிறதே தவிர சரீரம் அல்ல. நான் ஆத்மா, உண்மையில் நிராகார உலகில் அல்லது சாந்திதாமத்தில் இருக்கக் கூடியவன் என்பது உங்களது புத்தியில் வந்து விட்டது. இது யாருக்கும் தெரியாது. யாருக்கும் புரிய வைக்கவும் முடியாது. இப்பொழுது உங்களது புத்தியின் பூட்டு திறக்கப்பட்டுவிட்டது. உண்மையில் ஆத்மாக்கள் பரந்தாமத்தில் இருக்கக் கூடியவை என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அது நிராகார உலகமாகும். இது பௌதீக உலகமாகும். இங்கு ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் நடிகர்களாக இருக்கிறோம். முதன் முத-ல் நாம் நடிக்க வந்தோம். அதற்குப் பிறகு தான் வரிசைக்கிரமமாக வந்துக் கொண்டே இருக்கின்றனர். அனைத்து நடிகர்களும் ஒன்றாக சேர்ந்து வந்துவிடமாட்டார்கள். வித விதமான நடிகர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். எப்பொழுது நாடகம் முடிவடைகிறதோ அப்பொழுது அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவர். இப்பொழுது உங்களுக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது, ஆத்மாக்களாகிய நாம் உண்மையில் சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். இங்கு நடிப்பதற்கு வருகிறோம். தந்தை முழு நேரமும் நடிப்பு நடிக்க வருவது கிடையாது. நாம் தான் நடிப்பு நடித்து நடித்து சதோபிரதானத்தி-ருந்து தமோ பிரதானமாக ஆகிவிடு கிறோம். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் எதிரில் கேட்கும்பொழுது மிகுந்த போதை ஏற்படு கிறது. இந்த அளவு போதை முரளி படிக்கும் பொழுது ஏற்படுவது கிடையாது. இங்கு எதிரில் இருக்கிறீர்கள் அல்லவா!
பாரதம் தேவி தேவதைகளின் இருப்பிடமாக இருந்தது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இப்பொழுது கிடையாது. சிலைகளைப் பார்க்கிறீர்கள், நிச்சயமாக இருந்தனர். நாம் அங்கு வசிக்கக் கூடியவர்களாக இருந்தோம், முதன்முத-ல் நாம் தேவதைகளாக இருந்தோம், தனது பாகத்தை நினைவு செய்வீர்களா அல்லது மறந்துவிடுவீர்களா? நீங்கள் இங்கு இந்த நடிப்பு நடித்திருக் கிறீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இது நாடகமாகும். புது உலகம் பிறகு அவசியம் பழைய உலகமாக ஆகிறது. முதன்முத-ல் மே-ருந்து எந்த ஆத்மாக்கள் வந்தாலும் அவர்கள் தங்கயுகத்திற்கு வரு கின்றனர். இந்த அனைத்து விஷயங்களும் இப்பொழுது உங்களது புத்தியில் இருக்கிறது. நீங்கள் உலகிற்கு மகாராஜா, மகாராணியாக இருந்தீர்கள். உங்களது இராஜ்யம் இருந்தது. இப்பொழுது இராஜ்யம் கிடையாது. நாம் எப்படி இராஜ்யம் செய்வது? என்பதை இப்பொழுது நீங்கள் கற்றுக் கொண்டி ருக்கிறீர்கள். அங்கு அமைச்சர்கள் இருக்கமாட்டார்கள். ஆலோசனை கூற வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் ஸ்ரீமத் மூலம் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவர்களாக ஆகிவிடுகின்றனர். பிறகு இவர்கள் யாரிடத்திலும் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் கிடையாது. ஒருவேளை யாரிடத்திலாவது ஆலோசனை பெறுகின்றீர்கள் எனில் உங்களது புத்தி பலவீனமாக இருக்கிறது என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். இப்பொழுது என்ன ஸ்ரீமத் கிடைக்கிறதோ, அது சத்யுகத்திலும் நிலைத்திருக்கும். முதன்முத-ல், அரைக்கல்பம் இந்த தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள். இப்பொழுது உங்களது ஆத்மா புத்துணர்வு அடைந்து கொண்டிருக்கிறது. இந்த ஞானம் பரமாத்மாவைத் தவிர வேறு எந்த ஆத்மாவும் கொடுக்க முடியாது.
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும். சாந்திதாமத்தி-ருந்து இங்கு வந்து பேசக் கூடியவர்களாக ஆகிவிட்டீர்கள். பேசாமல் காரியம் செய்ய முடியாது. இது மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும். எவ்வாறு தந்தையிடம் முழு ஞானமும் இருக்கிறதோ அதே போன்று உங்களது ஆத்மாவிலும் ஞானம் இருக்கிறது. நாம் ஒரு சரீரத்தை விடுத்து வினைப்படி மற்றொரு சரீரத்தை எடுத்துக் கொள்கிறோம் என்று ஆத்மா கூறுகிறது. அவசியம் மறுபிறப்பும் இருக்கிறது. ஆத்மாவிற்கு என்ன பாகம் கிடைத்திருக்கிறதோ அதை நடித்துக் கொண்டேயிருக்கிறது. வினையின் பலனைப் பொருத்து மறுபிறப்பு எடுத்துக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் ஆத்மாவின் தூய்மைக்கான அளவு குறைந்துக் கொண்டே செல்கிறது. தூய்மையின்மை என்ற வார்த்தை துவாபர யுகத்தி-ருந்து தான் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சிறிதளவாவது வித்தியாசம் அவசியம் இருக்கவே செய்யும். நீங்கள் புது கட்டடம் கட்டுகிறீர்கள், ஒரு மாதத்திற்குப் பிறகு அவசியம் வித்தியாசம் இருக்கவே செய்யும். பாபா நமக்கு ஆஸ்தி கொடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தி கொடுப்பதற்காகவே நான் வந்திருக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். யார், எந்த அளவிற்கு முயற்சி செய்கிறீர்களோ அந்த அளவிற்குப் பதவி அடைவீர்கள். தந்தையிடத்தில் எந்த வேறுபாடும் கிடையாது. நான் ஆத்மாக்களுக்கு கற்பிக்கிறேன் என்பதை தந்தை அறிவார். தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைவதற்கு ஆத்மாவிற்கு உரிமை இருக்கிறது. இதற்கு ஆண், பெண் என்ற பார்வை இங்கு இருப்பது கிடையாது. நீங்கள் அனைவரும் குழந்தைகள். தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்து ஆத்மாக்களும் சகோதரர்களாக இருக்கிறீர்கள், உங்களுக்குத் தான் தந்தை கற்பிக்கின்றார், ஆஸ்தி கொடுக்கின்றார். தந்தை தான் ஆன்மீகக் குழந்தைகளிடம் உரையாடல் செய்கின்றார் - ஹே, செல்லமான, இனிய, அன்பான குழந்தைகளே! நீங்கள் அதிக காலம் நடிப்பு நடித்து நடித்து இப்பொழுது மீண்டும் தங்களது ஆஸ்தியை பெறுவதற்காக வந்து சந்தித்து இருக்கிறீர்கள். இதுவும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. சரீரம் மாறிக் கொண்டேயிருக்கிறது. மற்றபடி ஆத்மா வானது தூய்மையி-ருந்து அசுத்தமாக ஆகிறது. தூய்மை இன்றி ஆகிறது, சத்யுகத்தில் தூய்மையாக இருக்கிறது. இது தூய்மை இல்லாத உலகம் என்று கூறப்படுகிறது. தேவதைகளின் இராஜ்யம் இருந்தபொழுது விகாரமற்ற உலகமாக இருந்தது. இப்பொழுது கிடையாது. இது விளையாட்டு அல்லவா! புது உலகம் பழையதாகவும், பழையது மீண்டும் புதிய உலகமாகவும் ஆகிறது. இப்பொழுது சுகதாமம் ஸ்தாபனை ஆகிறது. மற்ற அனைத்து ஆத்மாக்களும் முக்திதாமத்தில் இருப்பர். இப்பொழுது இந்த எல்லையற்ற நாடகம் முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது. அனைத்து ஆத்மாக்களும் கொசுக் கூட்டம் போன்று செல்வார்கள். இந்த நேரத்தில் எந்த ஆத்மா வந்தாலும் தூய்மை இல்லாத உலகில் தான் பிறவி எடுக்கிறது, அதற்கு என்ன மதிப்பு இருக்கும்? யார் முதன்முத-ல் புது உலகில் வருகிறார்களோ அவர்கள் தான் மதிப்பு வாய்ந்தவர்கள். எது புது உலகமாக இருந்ததோ அது பழையதாக ஆகிவிட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். புது உலகில் நாம் தேவி தேவதைகள் இருந்தோம். அங்கு துக்கத்தின் பெயர் கிடையாது. இங்கு அளவற்ற துக்கம் இருக்கிறது. தந்தை வந்து துக்கமான உலகிருந்து விடுவிக்கின்றார். இந்த பழைய உலகம் அவசியம் மாற வேண்டும். உண்மையில் நாம் சத்யுகத்திற்கு எஜமானர்களாக இருந்தோம், பிறகு 84 பிறவிகளுக்குப் பிறகு இவ்வாறு ஆகிவிட்டோம் என்பதை நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள். இப்பொழுது மீண்டும் தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு செய்தால் நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள். அப்படி யானால் நாம் ஏன் ஆத்மா என்று நிச்சயம் செய்து தந்தையை நினைவு செய்யக் கூடாது? சிறிதளவாவது முயற்சி செய்ய வேண்டும் அல்லவா! இராஜ்யம் அடைவது எளிது கிடையாது. தந்தையை நினைவு செய்ய வேண்டும். அடிக்கடி உங்களை மறக்க வைப்பது மாயையின் அதிசயமாகும். மீள்வதற்கு உபாயம் உருவாக்க வேண்டும். என்னுடையவராக ஆகிவிட்டதால் நினைவு நிலைத்து விடும் என்று நினைக்காதீர்கள். இப்படி நினைப்பவர்கள் என்ன முயற்சி செய்வர்? எதுவரை வாழ்வீர்களோ அதுவரை முயற்சி செய்ய வேண்டும். ஞான அமிர்தம் பருகிக் கொண்டே இருக்க வேண்டும். இது நமது கடைசிப் பிறவி என்பதையும் புரிந்து கொண்டீர்கள். இந்த சரீர உணர்வை விடுத்து ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். குடும்ப விவகாரத்திலும் இருக்க வேண்டும். அவசியம் முயற்சி செய்ய வேண்டும். தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்து தந்தையை நினைவு செய்தால் போதும். நீங்கள் தான் தாயாக, தந்தையாக ...... இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தில் செய்யும் மகிமை யாகும். நீங்கள் ஒரே ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். ஒருவர் மட்டுமே இனிமை யானவர் (சாக்ரீன்) தந்தை ஆவார். மற்ற அனைத்து விஷயங்களையும் விட்டு விட்டு ஒரு இனிமை யானவரை நினைவு செய்யுங்கள். இப்பொழுது உங்களது ஆத்மாவானது தமோபிரதானமாக ஆகிவிட்டது, அதை சதோபிரதானமாக ஆக்குவதற்கு நினைவு யாத்திரையில் இருங்கள். தந்தையிட மிருந்து சுகத்தின் ஆஸ்தியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அனைவருக்கும் கூறுங்கள். சுகம் சத்யுகத்தில் தான் இருக்கும். சுகதாமத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் பாபா ஆவார். தந்தையை நினைவு செய்வது மிகவும் எளிதாகும். ஆனால் மாயையின் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகையால் முயற்சி செய்து தந்தையை நினைவு செய்தால் கறை நீங்கிவிடும். விநாடியில் ஜீவன்முக்தி என்று பாடப்பட்டிருக்கிறது. ஆத்மாவாகிய நாம் ஆன்மீகத் தந்தையின் குழந்தைகள். அங்கு வசிக்கக் கூடியவர்கள். பிறகு நாம் நமது பாகத்தை மீண்டும் நடிக்க வேண்டும். இந்த நாடகத்தில் அனைவரையும் விட அதிகமான பாகம் நம்முடையது ஆகும். அதிக சுகமும் நமக்குத் தான் கிடைக்கும். உங்களது தேவி தேவதா தர்மம் மிகுந்த சுகம் கொடுக்கக் கூடியது என்று தந்தை கூறுகின்றார். மற்ற அனைவரும் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு தானாகவே சாந்தி தாமத்திற்கு சென்றுவிடுவர். அதிகப்படியான சிந்தனை நாம் ஏன் செல்ல வேண்டும்? அனைவரையும் திரும்பி அழைத்துச் செல்ல தந்தை வந்திருக்கின்றார். கொசுக்களைப் போன்று அனைவரையும் அழைத்துச் செல்வார். சத்யுகத்தில் மிகக் குறைவானவர்கள் இருப்பர். இவை அனைத்தும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. சரீரம் அழிந்துப் போய்விடும். அழிவற்ற ஆத்மாவானது கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு சென்றுவிடும். நெருப்பில் இடுவதன் மூலம் ஆத்மா தூய்மையாகிவிடும் என்பது கிடையாது. நினைவு என்ற யோக அக்னியின் மூலம் தான் ஆத்மா தூய்மை ஆகும். இது யோக அக்னியாகும். சீதை நெருப்பின் சிதையில் ஏறினாள் என்று இதையே அவர்கள் நாடகமாக உருவாக்கிவிட்டனர். நெருப்பின் மூலம் யாரும் தூய்மை ஆகிவிட முடியாது. சீதைகளாகிய நீங்கள் அனைவரும் இந்த நேரத்தில் தூய்மையின்றி இருக்கிறீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். இராவண இராஜ்யத்தில் இருக்கிறீர்கள். இப்பொழுது ஒரு தந்தையின் நினைவின் மூலம் நீங்கள் தூய்மை ஆக வேண்டும். இராமர் ஒரே ஒருவர் ஆவார். அக்னி என்ற வார்த்தை கேட்டதும் அக்னியி-ருந்து வெளியேறியதாக நினைக்கின்றனர். யோக அக்னி எங்கு இருக்கிறது! இந்த அக்னி எங்கு இருக்கிறது! ஆத்மா பரம்பிதா பரமாத்மாவிடம் (யோகா) நினைவின் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் தூய்மை இல்லாததி-ருந்து தூய்மையாக ஆகிறது. இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. நரகத்தில் அனைத்து சீதைகளும் இராவணனின் சிறையில் சோக வனத்தில் இருக்கின்றனர். இங்கிருக்கும் சுகம் காக்கை எச்சத்திற்கு சமம் ஆகும். வித்தியாசம் காண்பிக்கப் படுகிறது. சொர்க்கத்தின் சுகம் அளவற்றது ஆகும்.
ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்பொழுது நாயகனாகிய சிவனுடன் நிச்சயதார்த்தம் எற்பட்டிருக் கிறது. ஆக ஆத்மா பெண் ஆகிவிடுகிறது அல்லவா! என் ஒருவனை நினைவு செய்தால் நீங்கள் தூய்மை ஆகிவிடுவீர்கள் என்ற சிவபாபா கூறுகின்றார். சாந்திதாமத்திற்கு சென்று பிறகு சுகதாமத் திற்கு வந்துவிடுவீர்கள். ஆக குழந்தைகள் ஞான இரத்தினங்களினால் பையை (புத்தியை) நிறைத்துக் கொள்ள வேண்டும். எந்த வகையான சந்தேகமும் கொண்டு வரக் கூடாது. தேக அபிமானத்தில் வருவதன் மூலம் பல வகையான கேள்விகள் எழுகின்றன. பிறகு தந்தை என்ன தொழில் கூறியிருக்கிறாரோ அதை செய்வது கிடையாது. மூல விஷயம் நாம் தூய்மை இல்லாததி-ருந்து தூய்மை ஆக வேண்டும். மற்ற விஷயங்களை விட்டு விட வேண்டும். இராஜ்யத்திற்கான பழக்க வழக்கங்கள் என்னவோ அது (இயல்பாகவே) நடைபெறும். எவ்வாறு மாளிகை கட்ட வேண்டுமோ அவ்வாறு கட்டுவீர்கள்! தூய்மை ஆவது தான் மூல விசயமாகும். ஹே பதீத பாவனனே ...... என்று தான் அழைக்கிறீர்கள். தூய்மை ஆவதன் மூலம் சுகமானவர்களாக ஆகிவிடுகிறீர்கள். அனைவரையும் விட தூய்மையானவர்கள் தேவி தேவதைகள் ஆவர்.
இப்பொழுது நீங்கள் 21 பிறவிகளுக்கு அனைத்திலும் (உத்தமமான) மேலான தூய்மையானவர்களாக ஆகிறீர்கள். அவர்கள் தான் சம்பூர்ண நிர்விகாரிகள், தூய்மையானவர்கள் என்று கூறப்படுகின்றனர். ஆக தந்தை என்ன ஸ்ரீமத் கொடுக்கிறாரோ அதன்படி நடக்க வேண்டும். எந்த சங்கல்பமும் எழுப்ப வேண்டிய அவசியமில்லை. முத-ல் நாம் தூய்மையற்றதி-ருந்து தூய்மை ஆக வேண்டும். ஹே பதீத பாவன் ..... என்று அழைக்கிறீர்கள். ஆனால் புரிந்துக் கொள்வது கிடையாது. பதீத பாவன் யார்? என்பதையும் அறியவில்லை. இது தூய்மையில்லாத உலகம், அது தூய்மையான உலகம். முக்கிய விஷயம் தூய்மை ஆவதாகும். தூய்மை ஆக்குவது யார்? என்று எதுவும் தெரியாது. பதீத பாவனன் என்று அழைக்கின்றனர், ஆனால் நீங்கள் தூய்மையில்லாதவர்கள் என்று கூறினால் கோபப்படு கின்றனர். தன்னை விகாரி என்று யாரும் புரிந்து கொள்வது கிடையாது. அனைவரும் இல்லறவாசி களாகத் தான் இருந்தனர் என்று கூறுகின்றனர். இராதை கிருஷ்ணர், இலட்சுமி நாராயணன் போன்றவர்களுக்கும் குழந்தைகள் இருந்தனர் அல்லவா! அங்கு யோக பலத்தின் மூலம் குழந்தைகள் பிறந்தனர் என்பதை மறந்துவிட்டனர். அது விகாரமற்ற உலகம், சொர்க்கம் என்று கூறப்படுகிறது. அது சிவாலயமாகும். தூய்மையற்ற உலகில் ஒருவர் கூட தூய்மையாக கிடையாது என்று தந்தை கூறுகின்றார். இந்த தந்தை தந்தையாக, ஆசிரியராக, சத்குருவாக இருந்து அனைவருக்கும் சத்கதி கொடுக்கின்றார். அங்கு அந்த (க-யுக) குரு சென்றுவிட்டால் பிறகு அவரது குழந்தைக்கு சிம்மாசனம் கொடுத்துவிடுகின்றனர். பிறகு அவர் எப்படி சத்கதிக்கு அழைத்துச் செல்வார்? அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒருவர் ஆவார். சத்யுகத்தில் தேவி தேவதைகள் மட்டுமே இருப்பர். மற்றபடி இவ்வளவு ஆத்மாக்களும் சாந்திதாமத்திற்கு சென்றுவிடுவர். இராவண இராஜ்யத்தி-ருந்து விடுபட்டுவிடுவர். தந்தை அனைவரையும் தூய்மையாக்கி அழைத்துச் செல்கிறார். பிறகு தூய்மையான நிலையி-ருந்து யாரும் உடனேயே தூய்மையை இழப்பது கிடையாது. வரிசைக் கிரமமாக இறங்குகின்றனர், சதோபிரதானத்தி-ருந்து சதோ, ரஜோ, தமோ ...... உங்களது புத்தியில் 84 பிறவிச் சக்கரம் இருக்கிறது. நீங்கள் இப்பொழுது கலங்கரை விளக்காக இருக்கிறீர்கள். இந்த சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது? என்பதை ஞானத்தின் மூலம் அறிந்துக் கொண்டீர்கள். இப்பொழுது குழந்தை களாகிய நீங்கள் மற்ற அனைவருக்கும் வழி கூற வேண்டும். அனைவரும் படகுகளாக இருக்கின்றனர், நீங்கள் மாலுமியாக இருந்து வழி கூறக் கூடியவர்கள். நீங்கள் சாந்திதாமம், சுகதாமத்தை நினைவு செய்யுங்கள் என்று அனைவருக்கும் கூறுங்கள். க-யுக துக்கதாமத்தை மறந்துவிடுங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எதுவரை வாழ்வீர்களோ அதுவரை ஞான அமிர்தம் பருகிக் கொண்டே இருக்க வேண்டும். தனது பையில் (புத்தியில்) ஞான இரத்தினங்களை நிறைத்துக் கொள்ள வேண்டும். சந்தேகத்தில் வந்து எந்த கேள்வியும் எழுப்பக் கூடாது.
2.
2. யோக அக்னியின் மூலம் ஆத்மா என்ற சீதையை தூய்மை ஆக்க வேண்டும். எந்த விஷயத்திலும் விரிவாகச் செல்லாமல் ஆத்ம அபிமானி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்ய வேண்டும்.