18-01-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


ஓம் சாந்தி. எல்லையற்ற தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குப் புரியவைக்கின்றார் - இனிமையான குழந்தைகளே! தன்னை ஆத்மா எனப் புரிந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் தன்னுடைய வீட்டை நினைவு செய்யுங்கள். அதை அமைதிக் கோபுரம், சுகத்தின் கோபுரம் என்று கூறப்படுகிறது. கோபுரம் என்பது மிகவும் உயரமாக இருக்கும். நீங்கள் அங்கு செல்வதற்கு முயற்சி செய்துகொண்டு இருக்கின்றீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த அமைதிக் கோபுரத்திற்கு நீங்கள் எவ்வாறு செல்ல முடியும்? இதைக் கூட கோபுரத்தில் இருக்கக்கூடிய தந்தை கற்பிக்கின்றார், குழந்தைகளே, தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள். நாம் ஆத்மாக்கள் சாந்திதாம நிவாசிகள் ஆவோம். அது தந்தையின் வீடாகும். இங்கும் அங்கும் போகும் போதும் வரும்போதும் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள் மற்றும் சாந்திதாமம், சுகதாமத்தை நினைவு செய்யுங்கள். இதில் தான் அதிக முயற்சி உள்ளது என்பதை தந்தை அறிந்திருக்கின்றார். யார் ஆத்ம அபிமானியாகி இருக்கின்றார்களோ, அவர்கள் மகாவீரர் என்று அழைக்கப்படுகின்றார்கள். நினைவின் மூலமே நீங்கள் மகாவீரர்களாக, மிகவும் உயர்ந்தவர்களாக ஆகின்றீர்கள். மிக உயர்ந்த நிலை என்றால் சக்திவான் என்று அர்த்தம். சொர்க்கத்திற்கு எஜமானன் ஆக்கக்கூடிய பாபா, விஷ்வத்திற்கு எஜமானன் ஆக்கக்கூடிய பாபா நமக்குக் கற்பித்துக் கொண்டு இருக்கின்றார் என்ற குஷி குழந்தை களுக்கு இருக்க வேண்டும். தந்தையின் பக்கம் ஆத்மாவின் புத்தி சென்றுவிடுகிறது. இதுவே ஒரு தந்தையுடன் ஆத்மா கொண்டிருக்கும் அன்பு ஆகும். அதிகாலை எழுந்து பாபாவுடன் இனிமையிலும் இனிமையான உரையாடல் செய்யுங்கள் - பாபா நீங்கள் அதிசயம் செய்து இருக்கின்றீர்கள். நீங்கள் எங்களை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குவீர்கள் என்பது கனவில் கூட வந்ததில்லை. பாபா நாங்கள் உங்களுடைய அறிவுரைகளின்படி அவசியம் நடப்போம். எந்த பாவ காரியமும் செய்ய மாட்டோம். பாபா எவ்வாறு முயற்சி செய்கின்றாரோ, அதை குழந்தைகளுக்கும் சொல்கின்றார். சிவபாபாவிற்கு இத்தனை அதிக குழந்தைகள் உள்ளனர், சிந்தனை இருக்கும் அல்லவா. குழந்தைகள் எவ்வளவு பாதுகாக்கப்படுகின்றனர். இங்கே நீங்கள் ஈஸ்வரிய பரிவாரத்தில் அமர்ந்து இருக் கின்றீர்கள். தந்தை எதிரில் இருக்கின்றார். உங்களுடன் நான் சாப்பிடுவேன், உங்களுடன் நான் அமர்வேன் இனிமையான குழந்தைகளே! என் ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள். தேக சகிதம் தேகத்தின் அனைத்து சம்பந்தங்களை மறந்துவிடுங்கள் என்று சிவபாபா இவருக்குள் வந்து கூறுகின்றார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது இறுதிப் பிறவியாகும். இந்தப் பழைய உலகம், பழைய தேகம் முடிந்து போக வேண்டும். நீங்கள் இறந்துவிட்டால் உலகமும் இறந்துவிட்டது என்ற பழமொழியும் உள்ளது. முயற்சி செய்வதற்கு சங்கமயுக சமயம் குறைவாகவே உள்ளது. பாபா இந்தப் படிப்பு எதுவரை நடக்கும்? என்று குழந்கைள் கேட்கின்றனர். எதுவரை தெய்வீக இராஜ்யம் ஸ்தாபனை ஆகுமோ, அதுவரை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பிறகு, புது உலகிற்கு மாறிவிடு வீர்கள். இது பழைய சரீரம் ஆகும். ஏதாவது கர்மவினைப் பயன் இருந்து கொண்டே இருக்கிறது. இதில் பாபா உதவி செய்வார் என்ற நம்பிக்கை வைக்க வேண்டாம் திவால் ஆகிவிட்டது, நோய் வந்துவிட்டது என்றால் இது உங்களுடைய கணக்கு வழக்காகும் என்று தந்தை கூறுவார். ஆம், பிறகும் கூட யோகத்தின் மூலம் ஆயுள் அதிகரிக்கும். தனக்கான முயற்சி அதிகமாகச் செய்யுங்கள். கருணை காண்பிக்கச் சொல்லி கேட்காதீர்கள். தந்தையை எந்தளவு நினைவு செய்வீர்களோ, அதில் தான் நன்மை உள்ளது. எவ்வளவு முடியுமோ யோகபலத்தை பயன்படுத்துங்கள். என்னை இமைகளுக்குள் மறைத்துக் கொள்ளுங்கள் என்ற பாடலும் உள்ளது அல்லவா. அன்பிற்குரிய பொருளை கண்மணி, உயிரினும் அன்பானது என்று கூறுகின்றனர். இந்தத் தந்தையோ மிகவும் பிரியமானவர், ஆனால், குப்தமானவர் ஆவார். அவர் மீது அன்பு அப்படி இருக்க வேண்டும். அதைப்பற்றி கேட்கவே வேண்டாம். குழந்தைகள் தந்தையை இமைகளுக்குள் மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இமைகள் என்றால் இந்தக் கண்களின் இமைகள் அல்ல. இது புத்தியில் நினைவு வைப்பது என்பதாகும். மிகவும் அன்பான நிராகார தந்தை நமக்குக் கற்பித்துக்கொண்டு இருக்கின்றார். அவர் ஞானக் கடல், சுகக் கடல், அன்புக் கடல் ஆவார். அத்தகைய மிகவும் அன்பான தந்தையிடம் எவ்வளவு அன்பு இருக்க வேண்டும்! குழந்தைகளுக்கு எவ்வளவு சுயநலமற்ற சேவை செய்கின்றார்! பதீத சரீரத்தில் வந்து குழந்தை களாகிய உங்களை வைரம் போல் ஆக்குகின்றார். பாபா எவ்வளவு இனிமையானவர்! எனவே, குழந்தைகளும் கூட தந்தையைப் போல் இனிமையானவர் ஆகவேண்டும். எவ்வளவு அகங்காரம் அற்றவராகி பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்கின்றார்! எனவே, குழந்தைகளாகிய நீங்களும் கூட அந்தளவு சேவை செய்ய வேண்டும். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். தன்னுடைய அபிப்பிராயத்தை எப்பொழுதாவது காண்பித்தால் அதிர்ஷ்டம் துண்டிக்கப்பட்டுவிடும். பிராமணர் களாகிய நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகள் ஆவீர்கள். பிரம்மாவின் குழந்தைகள் சகோதரன் சகோதரி ஆவீர்கள். ஈஸ்வரிய பேரன் பேத்திகள் ஆவீர்கள். அவரிடமிருந்து ஆஸ்தி அடைந்துகொண்டு இருக்கின்றீர்கள். எந்தளவு முயற்சி செய்வீர்களோ, அந்தளவு பதவி அடைவீர்கள். இதில் சாட்சியாக இருப்பதற்கான பயிற்சியும் அதிகம் தேவை. இனிமையான குழந்தைகளே, ஹே ஆத்மாக்களே! என் ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள். மறந்தும் கூட தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யக்கூடாது. பாபா எனக்கென்று நீங்கள் ஒருவர் மட்டுமே இருக்கின்றீர்கள் என்பது உங்களுடைய உறுதிமொழி ஆகும். நாங்கள் ஆத்மாக்கள், நீங்கள் பரமாத்மா. உங்களிடம் இருந்து தான் ஆஸ்தி பெற வேண்டும். உங்களிடம் தான் இராஜயோகம் கற்றுக்கொண்டு இருக்கின்றோம், அதன் மூலம் இராஜ்ய பாக்கியத்தை அடைகின்றோம்.

இனிமையான குழந்தைகளே! இது அனாதியான நாடகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் வெற்றி தோல்விக்கான விளையாட்டு நடைபெறுகிறது. என்ன நடக்கிறதோ, அது சரியே ஆகும். படைப்பாளருக்கு நாடகம் அவசியம் பிடிக்கும் அல்லவா. எனவே, படைப்பாளரின் குழந்தைகளுக்கும் கூட பிடிக்கும். இந்த நாடகத்தில் தந்தை ஒரே ஒரு முறை தான் குழந்தைகளுக்கு உள்ளப்பூர்வமாக, அன்போடு சேவை செய்வதற்காக குழந்தைகளிடம் வருகின்றார். தந்தைக்கு அனைத்து குழந்தை களும் அன்பிற்குரியவர்களே ஆவார்கள். சத்யுகத்தில் கூட அனைவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு செலுத்துவார்கள் என்பதை நீங்கள் அறிந்து இருக்கின்றீர்கள். விலங்குகளிடத்திலும் அன்பு இருக்கும். அன்பில்லாத எந்தவொரு விலங்கும் இருக்காது. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் இங்கே மாஸ்டர் அன்புக் கடல் ஆக வேண்டும். இங்கே ஆனீர்கள் என்றால் அந்த சமஸ்காரம் அழிவற்றதாக ஆகிவிடும். கல்பத்திற்கு முன்பு போல் அப்படியே மீண்டும் அன்பானவர்களாக ஆக்குவதற்காக வந்திருக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். எப்பொழுதாவது ஏதாவதொரு குழந்தையின் கோப மான சப்தத்தைக் கேட்டால், குழந்தைகளே, கோபப்படுவது சரியல்ல, இதனால் நீங்களும் துக்கமான வர்கள் ஆகிவிடுவீர்கள், பிறரையும் துக்கமானவர்களாக ஆக்கிவிடுவீர்கள்; தந்தை சதா காலத் திற்கும் சுகம் கொடுக்கக்கூடியவர் என்றால் குழந்தைகளும் கூட தந்தைக்கு சமம் ஆக வேண்டும்; ஒருவருக்கொருவர் ஒருபோதும் துக்கம் கொடுக்கக் கூடாது என்று அறிவுரை கொடுக்கின்றார்.

சிவபாபா காலைப்பொழுதின் சாயி இரவை பகலாக்கக்கூடியவர் அதாவது காலைப்பொழு தாக்கக் கூடியவர் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தையை சாயி என்று சொல்லப்படுகிறது. அவர் ஒருவரே சாயி பாபா, கள்ளம் கபடமற்ற சிவபாபா ஆவார். பெயரே கள்ளம் கபடமற்றவர் என்பதாகும். கள்ளம் கபடமற்ற கன்னிகைகள், தாய்மார்கள் மீது ஞானக் கலசம் வைக்கின்றார். அவர்களைத் தான் விஷ்வத்தின் எஜமானர் ஆக்குகின்றார். எவ்வளவு சுலபமான உபாயத்தை சொல்கின்றார்! எவ்வளவு அன்போடு உங்களுக்கு ஞானப் பாலனை செய் கின்றார்! ஆத்மாவை பாவனம் ஆக்குவதற்காக நினைவு யாத்திரையில் இருங்கள். யோகத்தின் ஸ்நானம் செய்ய வேண்டும். ஞானம் என்பது படிப்பு ஆகும். யோகத்தின் ஸ்நானத்தினால் பாவம் எரிந்து சாம்பலாகின்றது. தன்னை ஆத்மா என புரிந்துகொள்வதற்கான பயிற்சி செய்து கொண்டே இருங்கள், இந்த தேகத்தின் அகங்காரம் முற்றிலும் உடைந்துவிட வேண்டும். யோகத்தின் மூலம் தான் பவித்திரமாக சதோபிரதானமாக ஆகி பாபாவிடம் செல்ல வேண்டும். சில குழந்தைகள் இந்த விசயங்களை நல்ல முறையில் புரிந்து கொள்வதில்லை. தன்னுடைய உண்மையிலும் உண்மை யான சார்ட்டை சொல்வதில்லை. அரை கல்பம் பொய்யான உலகத்தில் இருந்ததால் பொய் உள்ளே உறைந்திருப்பது போல் இருக்கின்றது. சத்தியத்தோடு தன்னுடைய சார்ட்டை தந்தையிடம் சொல்ல வேண்டும். நான் முக்கால் மணி நேரம் அமர்ந்தேன், அதில் எவ்வளவு நேரம் தன்னை ஆத்மா என புரிந்து தந்தையை நினைவு செய்தேன் என்று சோதனை செய்ய வேண்டும். சிலருக்கு உண்மையை சொல்வதற்கு வெட்கம் வருகிறது. இவ்வளவு சேவை செய்தேன், இத்தனை பேருக்கு புரியவைத்தேன் என்பதை உடனே சொல்வார்கள், ஆனால், நினைவினுடைய சார்ட் எவ்வளவு இருந்தது என்ற உண்மையைச் சொல்லமாட்டார்கள். நினைவில் இல்லாத காரணத்தால் தான் உங்களுடைய அம்பு பிறரை தைப்பதில்லை. ஞானம் என்ற வாளில் கூர்மை இருப்பதில்லை. நாங்கள் நிரந்தரமாக நினைவில் இருக்கின்றோம் என்று சிலர் கூறுகின்றனர். அந்த நிலை ஏற்படவே இல்லை என்று பாபா கூறுகின்றார். நிரந்தரமான நினைவு இருந்தால் கர்மாதீத நிலை வந்துவிடும். ஞானத்தினுடைய தெளிவு இருப்பது தெரிய வேண்டும், இதில் அதிக உழைப்பு இருக்கிறது. ஒன்றுமே செய்யாமல் விஷ்வத்திற்கு எஜமானன் ஆகிவிட முடியாது. ஒரு பாபாவைத் தவிர வேறு யாருடைய நினைவும் இருக்கக்கூடாது. இந்த தேகம் கூட நினைவு வரக்கூடாது. இறுதியில் தான் இந்த நிலை உங்களுக்கு ஏற்படும். நினைவு யாத்திரை மூலமே உங்களுக்கு வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஒருவேளை, சரீரம் விட்டுவிட்டால் பிறகு, வருமானம் செய்ய முடியாது. ஆத்மா சமஸ்காரத்தை எடுத்துச் செல்லும், ஆனாலும், நினைவை ஏற்படுத்துவதற்கு ஆசிரியர் வேண்டும் அல்லவா. தந்தை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றார். இல்லறத்தில் இருந்து கொண்டே, வேலை முதலியன செய்து கொண்டே, உயர்ந்த பதவியை அடைவதற்காக ஸ்ரீமத்படி நடந்து தன்னுடைய எதிர்காலத்தையும் உருவாக்கிக் கொண்டே இருக்கும் குழந்தைகள் நிறைய பேர் உள்ளனர். பாபாவிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டே இருக்கின்றனர். பணம் இருக்கிறது, அதை எவ்வாறு வெற்றிகர மானதாக ஆக்குவது என்று கேட்கின்றனர். அநேகருக்கு நன்மை ஏற்படும்படியாக சென்டர் திறங்கள் என்று பாபா கூறுகின்றார். மனிதர்கள் தானம், புண்ணியம் போன்றவை செய்கின்றார்கள், அடுத்த பிறவியில், அதற்கான பலன் கிடைக்கிறது. உங்களுக்கும் கூட எதிர்கால 21 பிறவிகளுக்காக இராஜ்ய பாக்கியம் கிடைக்கிறது. இது உங்களுடைய நம்பர் ஒன் வங்கி ஆகும். இதில் 4 அணா போட்டீர்கள் என்றால் எதிர்காலத்தில் ஆயிரம் ஆகிவிடும். கல்லிலிருந்து தங்கம் ஆகிவிடும். உங்களுடைய ஒவ்வொரு பொருளும் தங்கம் ஆகிவிடும். இனிமையான குழந்தைகளே! உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்றால் தாய் தந்தையை முழுமையாகப் பின்பற்றுங்கள் மற்றும் தன்னுடைய கர்மேந்திரியங்கள் மீது கட்டுப்பாடு கொண்டிருங்கள். ஒருவேளை, கர்மேந்திரியங்கள் கட்டுக்குள் இல்லை, நடத்தை சரியாக இல்லை எனில், உயர்ந்த பதவியிலிருந்து வஞ்சிக்கப் பட்டவர்கள் ஆகிவிடுவீர்கள் என்று பாபா கூறுகின்றார். தன்னுடைய நடத்தையை சீர்திருத்த வேண்டும். அதிக ஆசைகள் கொண்டிருக்கக் கூடாது.

பாபா குழந்தைகளாகிய உங்களை எந்தளவு ஞானத்தால் அலங்காரம் செய்து சத்யுக மகாராஜா மகாராணி ஆக்குகின்றார். இதில் பொறுமை குணம் மிகவும் நன்றாக இருக்க வேண்டும். தேகத்தின் மீது அளவுக்கு அதிகமான மோகம் இருக்கக் கூடாது. யோகபலத்தின் மூலமாகவும் பணியாற்ற வேண்டும். பாபாவிற்கு எவ்வளவு இருமல் இருக்கும், ஆனாலும், எப்பொழுதும் சேவைக்குத் தயாராக இருக்கின்றார். ஞான யோகத்தால் அலங்காரம் செய்து குழந்தைகளைத் தகுதியாக ஆக்குகின்றார். நீங்கள் இப்பொழுது ஈஸ்வரிய மடியில், தாய் தந்தையின் மடியில் அமர்ந்து இருக்கின்றீர்கள். தந்தை பிரம்மா வாய் மூலம் குழந்தைகளாகிய உங்களுக்கு பிறப்பு கொடுத்திருக்கின்றார் எனில், அவர் தாயாகிவிட்டார். ஆனாலும் பிறகு, உங்களுடைய புத்தி சிவபாபாவின் பக்கம் செல்கிறது. நீங்கள் எங்களுடைய தாய் தந்தை, நாங்கள் உங்களுடைய குழந்தைகள் நீங்கள் சர்வகுண சம்பன்னமாக இங்கு ஆக வேண்டும். அடிக்கடி மாயையிடம் தோல்வி அடையக்கூடாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

அவ்யக்த – மகாவாக்கியம்

அனைவரும் யோகயுக்த் மற்று யுக்தியுக்த் ஸ்திதியில் நிலைத்து இருந்து தன்னுடைய காரியத்தை செய்து கொண்டு இருக்கின்றீர்களா? ஏனெனில், நிகழ்கால சமய அனுசாரம் எண்ணம், பேச்சு மற்றும் கர்மம் ஆகிய இந்த மூன்றுமே யுக்தியுக்தாக இருக்க வேண்டும், அப்பொழுதே சம்பன்னம் மற்றும் சம்பூரணம் ஆக முடியும். நாலாபுறங்களின் சூழ்நிலை யோகயுக்த் மற்றும் யுக்தியுக்தாக இருக்க வேண்டும். எவ்வாறு யுத்த மைதானத்தில் எப்பொழுது போர் வீரன் போர் புரிவதற்காக எதிரிக்கு எதிரில் நிற்கின்றாரோ, அப்பொழுது அவருக்கு தன் மீதும் மற்றும் தனது ஆயுதங்கள் மீதும் அதாவது தனது சக்திகள் மீதும் எவ்வளவு கவனம் இருக்கிறது! இப்பொழுதோ சமயம் அருகாமையில் வந்து கொண்டு இருக்கிறது, யுத்த மைதானத்தில் முன்னால் வருவதற்கான சமயம் இது என்று புரிந்து கொள்ளுங்கள். அத்தகைய சமயத்தில், நாலாபுறங்களிலும் சர்வசக்தி களுக்கு தன்மீது கவனம் இருக்க வேண்டும். ஒருவேளை, கொஞ்சம் கவனம் குறைவாக இருந்தாலும், எவ்வாறு சமய அனுசாரம் நாலாபுறங்களிலும் பதற்றம் (டென்சன்) அதிகரித்துக் கொண்டே இருக்கிறதோ, அவ்வாறே நாலாபுறங்களினுடைய டென்சனான சூழ்நிலையின் பிரபாவமானது, யுத்தத்தில் இருக்கும் ஆன்மிக பாண்டவ சேனையின் மீதும் ஏற்படக்கூடும். நாளுக்கு நாள் சம்பூரண நிலையடையும் சமயம் நெருக்கத்தில் வர வர உலகத்தில் டென்சன் மேலும் அதிகரிக்கும், குறையாது. நாலாபுறங்களிலும் இழுப்பது போன்ற இழுபறியான வாழ்க்கையினுடைய அனுபவம் ஏற்படும். ஒருபுறம் இயற்கையின் சின்னச் சின்ன ஆபத்துக்களினால் ஏற்படும் நஷ்டத்தின் டென்சன், மறுபுறம் இந்த உலகத்தினுடைய அரசாங்கத்தின் கடுமையான சட்டத்தின் டென்சன், மூன்றாவது பக்கம் தொழிலில் குறைபாடு இருப்பதன் காரணத்தால் டென்சன் மற்றும் நான்காவது பக்கம் லௌகீக உறவினர்களிடம் அன்பு மற்றும் சுதந்திரம் இருக்கும் காரணத்தினால் மகிழ்ச்சியான நிலை அல்ப காலத்திற்கே இருக்கிறது, அதுவும் முடிந்து பயத்தினுடைய அனுபவத்தின் டென்சனில் உள்ளனர். நாலாபுறங்களினுடைய டென்சன் மக்களிடம் அதிகரித்திட வேண்டும். நாலாபுறங்களின் டென்சனில் ஆத்மாக்கள் துடிப்பார்கள். எங்கு சென்றாலும் அங்கு டென்சன் இருக்கும். எவ்வாறு சரீரத்தில் கூட ஏதாவதொரு நரம்பு இழுத்தால் எவ்வளவு துன்பம் ஏற்படுகிறது, புத்தி அதன் பக்கம் இழுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோன்றே இந்த சூழ்நிலை அதிகரித்துக் கொண்டே செல்லும். என்ன செய்ய வேண்டும்? என்பது புரியாதவண்ணம் எந்தப் புகலிடமும் புலப்படாது. ஒருவேளை, சரி என்று சொன்னாலும் இழுபறி, முடியாது என்று சொன்னாலும் இழுபறி, வருமானம் செய்தாலும் கஷ்டம், வருமானம் செய்யவில்லை என்றாலும் கஷ்டம், சேர்த்து வைத்தாலும் கஷ்டம், சேர்த்து வைக்க வில்லை என்றாலும் கஷ்டம். இத்தகைய சூழ்நிலை உருவாகிக் கொண்டே செல்லும். அத்தகைய சமயத்தில் நாலாபுறங்களினுடைய டென்சனின் தாக்கம் ஆன்மிக பாண்டவ சேனை மீது ஏற்படக் கூடாது. சுயம் டென்சனில் வருவதற்கான பிரச்சனைகள் இல்லாதிருந்தாலும், சூழ்நிலையின் தாக்கம் பலவீனமான ஆத்மாக்கள் மீது சகஜமாகவே ஏற்பட்டுவிடும். என்னவாகும்? எப்படி நடக்கும்? என்ற பயமான சிந்தனை இருக்கும். இந்த விசயங்களின் பிரபாவம் இருக்கக் கூடாது. இதற்காக ஏதாவது இடையிடையில் ஈஸ்வரிய நினைவு யாத்திரைக்கான விசேˆ நிகழ்ச்சி மதுபன் மூலம் அதிகாரப் பூர்வமாக சென்று கொண்டே இருக்க வேண்டும். இதன் மூலம் ஆத்மாக்களின் கோட்டை வலுவடையும்.

தற்சமயம் சேவையும் மிகவும் அதிகரிக்கும். ஆனால், அதிகரிப்பதன் கூடவே யுக்தியுக்த் நிலையும் (ஞானம் நிறைந்த நிலை) அதிகமாக இருக்க வேண்டும். தற்சமயம் சம்பந்தம் மற்றும் தொடர்பில் இருக்கக்கூடியவர்கள் அதிகமாக வருவார்கள். சொரூபம் ஆகக்கூடியவர்கள் குறைவாகவே வருவார்கள். அனைவரும் ஒன்று போல் உருவாகமாட்டார்கள். தரத்தில் கூட நாளுக்கு நாள் பலவீனமான ஆத்மாக்கள் அதாவது பிரஜைகள் எண்ணிக்கையில் அதிகமாக வருவார்கள். அவர்களுக்கு ஒரு விசயம் பிடிக்கும், இரண்டு விசயங்கள் பிடிக்காது. அனைத்து விசயங் களிலும் நம்பிக்கை இருக்காது. எனவே, தொடர்பில் உள்ளவர்களையும் கூட, அவர்களுக்கு என்ன தேவையோ, அதன் அனுசாரம் அவர்களை தொடர்பில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆபத்தான சமயம் வர வர, பிரச்கனையின் அனுசாரம் அவர்கள் ரெகுலர் (வழக்கமான) மாணவர் ஆகுவதென்பது கடினமாக இருக்கும். ஆனால், தொடர்பில் நிறைய பேர் வருவார்கள். ஏனெனில், இறுதி சமயம் அல்லவா. எனவே, கடைசி நிலை (போஸ்) எவ்வாறு இருக்கும்? எவ்வாறு முதலில் அதிக மகிழ்ச்சி, ஊக்கம், உற்சாகம் இருக்குமோ, அது யாரோ ஒருவருக்குத் தான் இருக்கும். பெரும்பான்மையாக சம்பந்தம் மற்றும் தொடர்பில் வரக்கூடியவர்களே வருவார்கள். எனவே, இந்த கவனம் தேவை. தொடர்பில் வரக்கூடிய ஆத்மாக்களை கண்டறியாமல் தொடர்பில் இருந்தும் அவர்களை வஞ்சிக்கப் பட்டவர்களாக ஆக்கிவிடாதீர்கள். எவரும் வெறும் கையுடன் செல்லக்கூடாது. நியமங்கள் படி நடக்க முடியவில்லை, ஆனால், அவர்கள் அன்பில் இருக்க விரும்புகின்றனர், எனில், அத்தகைய ஆத்மாக்கள் மீதும் அவசியம் கவனம் கொடுக்க வேண்டும். இந்தக் குழுவானது இதன் ஆதாரத்தில் மூன்றாவது நிலையில் உள்ளவர்கள் ஆவார்கள். அவர்களையும் கூட அதன் அனுசாரம் கையாள வேண்டும். நல்லது. ஓம்சாந்தி.

வரதானம்:

அன்பிற்காக அனைத்து பலவீனங்களையும் பலி செய்யக்கூடிய சக்தி சொரூபம் ஆகுக.

அன்பின் அடையாளம் பலியாகுவதாகும். அன்பிற்காக பலி செய்வதில், எந்தவொரு கடினமான அல்லது சாத்தியமற்ற விசயம் கூட சாத்தியமாக மற்றும் சகஜமாக அனுபவம் ஆகிறது. எனில், சக்தி சொரூபத்தின் வரதானம் மூலம் அனைத்து பலவீனங்களையும் வலுக்கட்டாயமாக அல்லாமல், உள்ளப்பூர்வமாக பலி செய்யுங்கள். ஏனெனில், சத்தியமான தந்தையிடம் சத்தியமானதே சுவீகாரம் ஆகும். எனவே, தந்தையினுடைய அன்பின் பாடலை மட்டும் பாடாதீர்கள், ஆனால், சுயம் தந்தைக்கு சமமாக அனைவரும் உங்களுடைய பாடலை பாடும்வண்ணம் அவ்யக்த ஸ்திதியின் சொரூபமாக ஆகுங்கள்.

சுலோகன்:

சங்கல்பம் மற்றும் கனவிலும் கூட ஒரு திலாராமினுடைய நினைவு இருக்க வேண்டும். அப்பொழுதே உண்மையான தபஸ்வி என்று கூற முடியும்.