21-01-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

சிவனுடைய ஊர்வலம் ஏன் பாடப்பட்டுள்ளது?

பதில்:

ஏனென்றால் சிவபாபா திரும்பி செல்லும்போது அனைத்து ஆத்மாக்களின் கூட்டமும் அவருக்கு பின்னால் ஓடிச் செல்கின்றன. மூலவதனத்தில் கூட ஆத்மாக்களின் கூட்டம் சேர்ந்து (தங்கி) விடுகிறது. தூய்மையாக ஆகக் கூடிய குழந்தைகளாகிய நீங்கள் பாபாவோடு செல்கிறீர்கள். சிவன் கூடவே செல்வதின் காரணத்தினால் தான் ஊர்வலம் என்று சொல்லப்படுகிறது.

ஓம் சாந்தி. குழந்தைகள் முதல்-முதலில் ஒரு கருத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும், நாம் அனைவரும் சகோதர-சகோதரர்கள் மற்றும் அவர் அனைவருக்கும் தந்தையாவார். அவரை சர்வசக்தி வான் என்று சொல்லப்படுகிறது. உங்களிடத்தில் சர்வசக்திகளும் இருந்தன. நீங்கள் உலகத்தின் மீது இராஜ்யம் செய்தீர்கள். பாரதத்தில் தான் இந்த தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. சொல்லப் போனால் குழந்தைகளாகிய உங்களுடைய இராஜ்யம் இருந்தது. நீங்கள் தூய்மையான தேவி-தேவதைகளாக இருந்தீர்கள், உங்களுடைய குலம் அல்லது இராஜ வம்சம் அதாவது பரம்பரையைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் நிர்விகாரிகளாக இருந்தார்கள். யார் நிர்விகாரிகளாக இருந்தது? ஆத்மாக்கள். இப்போது நீங்கள் நிர்விகாரிகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சர்வசக்திவான் தந்தையை நினைவு செய்து அவரிடமிருந்து சக்தியை அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆத்மா தான் 84 பிறவிகளின் நடிப்பை நடிக்கிறது என்று பாபா புரிய வைத்துள்ளார். ஆத்மாவில் இருந்த சதோபிரதான சக்தி பிறகு நாளுக்கு - நாள் குறைந்துக் கொண்டே செல்கிறது. சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானமாக (நாடகப்படி) ஆக வேண்டும். எப்படி பேட்டரியின் சக்தி குறைந்துக் கொண்டே செல்கிறது என்றால் மோட்டார் நின்றுவிடுகிறது. பேட்டரியில் சக்தி இறங்கிவிடுகிறது. ஆத்மாவின் பேட்டரி முழுவதுமாக காலியாகி விடுவதில்லை, ஏதோ ஓரளவு கொஞ்சம் சக்தி இருக்கிறது. யாராவது இறக்கிறார்கள் என்றால் தீபம் ஏற்றுகிறார்கள், தீபம் அணைந்து விடக்கூடாது என்பதற்காக எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள். பேட்டரியின் சக்தி குறைந்துவிடுகிறது என்றால் பிறகு சார்ஜ் செய்வதற்கு வைக்கிறார்கள். உங்களுடைய ஆத்மா சர்வசக்திவானாக இருந்தது, என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்துக் கொள்கிறீர்கள், இப்போது மீண்டும் நீங்கள் சர்வசக்திவான் பாபாவிடம் தங்களுடைய புத்தியோகத்தை ஈடுபடுத்துகிறீர்கள். பாபாவிடமுள்ள சக்தி நம்மிடத்தில் வந்துவிடட்டும் என்று நினைவு செய்கிறீர்கள் ஏனென்றால் சக்தி குறைந்துவிட்டது. கண்டிப்பாக கொஞ்சம் இருக்கிறது. ஒரேயடியாக காலியாகிவிட்டால் பிறகு சரீரமே இருக்காது. ஆத்மா தந்தையை நினைவு செய்து-செய்து முற்றிலும் தூய்மையாக ஆகிவிடுகிறது. சத்யுகத்தில் உங்களுடைய பேட்டரி முழுமையாக சக்தி நிறைந்திருக்கிறது, பிறகு கொஞ்சம்-கொஞ்சமாக குறைந்துக் கொண்டே செல்கிறது. திரேதாயுகம் வரை மீட்டர் (அளவு) குறைகிறது, இதனை கலை என்று சொல்லப்படுகிறது. சதோபிரதானமாக இருந்த ஆத்மா சதோ நிலையை அடைந்தது, சக்தி குறைந்துவிடுகிறது என்று சொல்லலாம். நாம் சத்யுகத்தில் மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகிவிடுகிறோம் என்று நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகிவிடுவீர்கள் என்று இப்போது பாபா கூறுகின்றார். இப்போது நீங்கள் தமோபிரதானமாக ஆகிவிட்டீர்கள், எனவே சக்தி திவாலாகி (இழந்து) விட்டது. பிறகு பாபாவை நினைவு செய்வதின் மூலம் முழு சக்தியும் வரும், ஏனென்றால் தேகம் உட்பட தேகத்தின் சம்மந்தங்கள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவை அனைத்தும் அழியப் போகிறது பிறகு உங்களுக்கு எல்லையற்ற இராஜ்யம் கிடைக்கிறது, என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர் கள். பாபாவும் எல்லையற்றவர் என்றால் ஆஸ்தியையும் எல்லையற்றதாக கொடுக்கின்றார். நீங்கள் இப்போது தூய்மையற்றவர்களாக இருக்கிறீர்கள், உங்களுடைய சக்தி முற்றிலும் குறைந்துவிட்டது. ஹே குழந்தைகளே - இப்போது நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள், நான் சர்வசக்திவானாக இருக்கின்றேன், என் மூலம் சர்வ வல்லமையுடைய இராஜ்யம் கிடைக்கிறது. சத்யுகத்தில் தேவி-தேவதைகள் முழு உலகத்திற்கும் எஜமானர்களாக இருந்தார்கள், தூய்மையாக இருந்தார்கள், தெய்வீக குணமுடையவர்களாக இருந்தார்கள். இப்போது அந்த தெய்வீக குணம் இல்லை. அனைவருடைய பேட்டரியும் முழுமையாக இறங்க ஆரம்பித்துவிட்டது. இப்போது மீண்டும் பேட்டரி நிரம்புகிறது. பரமபிதா பரமாத்மாவோடு யோகம் ஈடுபடுத்தாமல் பேட்டரி முழுமையாக நிரம்ப முடியாது. அந்த தந்தை எப்போதும் தூய்மையானவராக இருக்கின்றார். இங்கே அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள். தூய்மையாக இருந்தபோது பேட்டரி நிரம்பி இருக்கிறது. எனவே பாபா இப்போது புரிய வைக்கின்றார், ஒருவரை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார். மற்ற அனைத்தும் படைப்புகளாகும். படைப்பிடமிருந்து படைப்புக்கு ஒருபோதும் ஆஸ்தி கிடைப்பதில்லை. படைப்பவர் ஒருவரே ஆவார். அவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையாவார். மற்றவர்கள் அனைவரும் எல்லைக்குட்பட்டவர்களாவர். எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதின் மூலம் எல்லையற்ற இராஜ்யம் கிடைக்கிறது. எனவே நமக்காக பாபா புதிய உலகம், சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார் என்பதை உள்ளுக்குள் புரிந்துக் கொள்ள வேண்டும். நாடகத்தின் திட்டப்படி சொர்க்கத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. சத்யுகம் வரப்போகிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் எப்போதும் சுகமே இருக்கிறது. அது எப்படி கிடைக்கிறது? என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று பாபா அமர்ந்துப் புரிய வைக்கின்றார். நான் எப்போதும் தூய்மையாக இருக்கின்றேன். நான் ஒருபோதும் மனித உடலை எடுப்பதில்லை. தேவதை உடலையோ, மனித உடலையோ எடுப்ப தில்லை அதாவது நான் பிறப்பு-இறப்பில் வருவதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு சொர்க்கத் தின் இராஜ்யத்தை கொடுப்பதற்காகவே, எப்போது இந்த பிரம்மாவிற்கு 60 வருட வானப்பிரஸ்த நிலையில் இருக்கிறாரோ அப்போது இவருடைய உடலில் நான் வருகின்றேன். இவர் தான் முழுமையாக சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானமாக ஆகியுள்ளார். நம்பர் ஒன் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் பிறகு சூட்சுமவதனவாசிகளான பிரம்மா- விஷ்ணு-சங்கர், அதனுடைய காட்சி ஏற்படுகிறது. சூட்சுமவதனம் இடையில் (நடுவில்) இருக்கிறது அல்லவா. அங்கே சரீரம் இருக்க முடியாது. சூட்சும சரீரத்தை திவ்ய திருஷ்டியின் மூலம் மட்டுமே காண முடியும். மனித உலகம் இங்கே இருக்கிறது. மற்றபடி சாட்சாத்காரத்திற்காக மட்டும் ஃபரிஸ்தாக்கள் இருக்கிறார்கள். கடைசியில் குழந்தைகளாகிய நீங்கள் முற்றிலும் தூய்மையாக ஆகிவிடுகிறீர்கள் எனும்போது உங்களுடைய காட்சி கூட ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஃபரிஸ்தாக்களாக ஆகி பிறகு சத்யுகத்தில் இங்கே தான் வந்து சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள். இந்த பிரம்மா ஒன்றும் விஷ்ணுவை நினைவு செய்வதில்லை. இவரும் சிவபாபாவை நினைவு செய்கிறார் பிறகு இவர் விஷ்ணுவாக ஆகின்றார். இவர் இராஜ்யத்தை எப்படி அடைந்தார் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா. சண்டை போன்ற எதுவும் நடப்பதில்லை. தேவதைகள் எப்படி ஹிம்சை செய்வார்கள்!

குழந்தைகளாகிய நீங்கள் இப்போது பாபாவை நினைவு செய்து இராஜ்யத்தை அடைகிறீர்கள். யார் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் சரி. ஹே குழந்தைகளே, தேகம் உட்பட தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விட்டு விட்டு என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், என்று கீதையில் கூட இருக்கிறது. பற்று வைக்க அவருக்கு தேகம் இல்லை. நான் கொஞ்ச காலத்திற்கு இவருடைய சரீரத்தை கடனாகப் பெறுகின்றேன் என்று கூறுகின்றார். இல்லையென்றால் நான் எப்படி ஞானத்தை வழங்க முடியும். நான் விதையாக இருக்கின்றேன் அல்லவா. இந்த முழு மரத்தின் ஞானமும் என்னிடத்தில் இருக்கிறது. சிருஷ்டியின் ஆயுள் எவ்வளவு என்பது வேறு யாருக்கும் தெரியாது? இந்த சிருஷ்டியின் ஸ்தாபனை, வளர்ப்பு, மற்றும் வினாசம் எப்படி நடக்கிறது? மனிதர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். மனிதர்கள் தான் படிக்கிறார்கள். விலங்குகள் படிக்காது அல்லவா. அவர்கள் எல்லைக்குட்பட்ட படிப்பை படிக்கிறார்கள். பாபா உங்களுக்கு எல்லைக்கப் பாற்பட்ட படிப்பை படிப்பிக்கின்றார் அதன்மூலம் உங்களை எல்லையற்ற எஜமானர்களாக ஆக்குகின்றார். எனவே பகவான் என்று எந்த மனிதனையோ அல்லது தேகதாரியையோ சொல்லப்படு வதில்லை என்றுப் புரிய வைக்க வேண்டும். பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கு கூட சூட்சும தேகம் இருக்கிறது அல்லவா. இவர்களுடைய பெயரே தனியாகும். இவர்களை பகவான் என்று சொல்லப் படுவதில்லை. இந்த சரீரம் இந்த தாதாவின் ஆத்மாவின் சிம்மாசனமாக இருந்தது. அழிவற்ற சிம்மாசனமல்லவா. இப்போது இது அழிவற்ற மூர்த்தியான பாபாவின் சிம்மாசனமாக இருக்கிறது. அமிர்தசரசில் கூட ஒரு அழிவற்ற சிம்மாசனம் (அகால் தக்த்) இருக்கிறது அல்லவா. பெரிய-பெரியவர்கள் சென்று அந்த அழிவற்ற சிம்மாசனத்தில் சென்று அமருகிறார்கள். இப்போது பாபா புரிய வைக்கின்றார், இவையனைத்தும் அழிவற்ற ஆத்மாக்களின் சிம்மாசனமாகும். ஆத்மா அழிவற்றது, அதை ஒருபோதும் காலன் அழிக்க முடியாது. மற்றபடி சிம்மாசனம் மாறிக் கொண்டேயிருக்கிறது. அழிவற்ற மூர்த்தி ஆத்மா இந்த சிம்மாசனத்தில் அமருகிறது. முதலில் சிறிய சிம்மாசனமாக இருக்கிறது பிறகு பெரியதாக்கிக் கொண்டே செல்கிறது. ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு விட்டு வேறொன்றை எடுக்கிறது. ஆத்மா அழிவற்றதாகும். மற்றபடி அதில் நல்ல அல்லது கெட்ட சம்ஸ்காரங்கள் இருக்கின்றது, ஆகையினால் தான் இது கர்மங்களின் பலன் என்று சொல்லப்படுகிறது. ஆத்மா ஒருபோதும் அழிவதில்லை. ஆத்மாவின் தந்தை ஒருவரே. இதை புரிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா. இந்த பாபா ஏதாவது சாஸ்திரங்களின் விஷயத்தை சொல்கிறாரா என்ன! சாஸ்திரங்கள் போன்றவற்றை படிப்பதின் மூலம் யாரும் திரும்பிச் செல்ல முடியாது. கடைசியில் அனைவரும் திரும்பிச் செல்வார்கள். எப்படி தேனீக்கள் அல்லது வெட்டுக்கிளி கூட்டம் செல்கின்றன அல்லவா. தேனீக்களின் ராணி கூட இருக்கிறது. அதற்கு பின்னால் அனைத்தும் செல்கின்றன. பாபாவும் செல்கிறார் என்றால் அவருக்குப் பின்னால் அனைத்து ஆத்மாக்களும் செல்லும். அங்கே மூல வதனத்தில் அனைத்து ஆத்மாக்களின் கூட்டம் இருக்கிறது. இங்கே மனிதர்களின் கூட்டம் இருக்கிறது. ஆக இந்த கூட்டம் கூட ஒரு நாள் ஓட வேண்டும். பாபா வந்து ஆத்மாக்கள் அனைத்தையும் அழைத்துச் செல்கின்றார். சிவனின் ஊர்வலம் என்று சொல்லப்படுகிறது அல்லவா. குழந்தைகள் என்றும் சொல்லலாம் அல்லது காதலிகள் என்றும் சொல்லலாம். பாபா வந்து குழந்தைகளுக்கு ஞானம் கற்பித்து நினைவு யாத்திரையை கற்றுக் கொடுக்கின்றார். தூய்மையாக ஆகாமல் ஆத்மா செல்ல முடியாது. தூய்மையாகிவிட்டது என்றால் முதன்முதலில் சாந்திதாமம் செல்லும். அனைத்து ஆத்மாக்களும் அங்குச் சென்று இருக்கின்றன. அங்கிருந்து மெது-மெதுவாக வந்துக் கொண்டே இருக்கின்றன, வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கிறது. நீங்கள் தான் முதல்-முதலில் பாபாவிற்கு பின்னால் ஓடுவீர்கள். உங்களுக்கு பாபாவோடு அல்லது காதலிகளுக்கு காதலனோடு தொடர்பு இருக்கிறது. இராஜ்யம் உருவாகிறது அல்லவா. அனைவரும் ஒன்றாக வருவதில்லை. அங்கே ஆத்மாக்கள் அனைத்தினுடைய உலகம் இருக்கிறது. அங்கிருந்து வரிசைக்கிரமமாக வருகின்றன. மரம் கொஞ்சம்- கொஞ்சமாக வளர்கிறது. முதல்-முதலில் ஆதிசனாதன தேவி-தேவதா தர்மம், இதை பாபா ஸ்தாபனை செய்கின்றார். முதன்முதலில் நம்மை பிராமணர்களாக ஆக்குகின்றார். பிரஜாபிதா பிரம்மா இருக்கிறார் அல்லவா. பிரஜைகளில் சகோதர-சகோதரிகளாகி விடுகிறார்கள். பிரம்மாகுமார குமாரிகள் அதிகம் இருக்கிறார்கள். கண்டிப்பாக நிச்சயப்புத்தியுடையவர்களாக இருப்பார்கள் ஆகையினால் தான் இவ்வளவு அதிகமானோர் ஆகியுள்ளார்கள். பிராமணர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்? அரைகுறையா அல்லது முழுமையானவர்களா? சிலர் 99 மதிப்பெண்கள் எடுக்கிறார் கள், சிலர் 10 மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் என்றால் அரைகுறை தான் அல்லவா. உங்களில் கூட யார் முழுமையானவர்களோ, அவர்கள் கண்டிப்பாக முதலில் வருவார்கள். அரைகுறையானவர்கள் கடைசியில் வருவார்கள். இது நடிகர்களின் உலகமாகும், இது சுற்றிக் கொண்டே இருக்கிறது. சத்யுகம், திரேதா........... இது புருஷோத்தம சங்கமயுகமாகும். இதை இப்போது பாபா கூறியுள்ளார். முதலில் கல்பத்தின் ஆயுள் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என்று நாம் தவறாகவே புரிந்து வந்தோம். இது முழுமையாக 5 ஆயிரம் ஆண்டுகளின் சக்கரம் என்று பாபா கூறியுள்ளார். அரைக்கல்பம் இராம இராஜ்யம், அரைக்கல்பம் இராவண இராஜ்யமாகும். கல்பம் இலட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்தால் பாதி-பாதியாக கூட இருக்க முடியாது. இந்த உலகம் துக்கம் மற்றும் சுகத்தினுடையதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எல்லையற்ற ஞானம் எல்லையற்ற தந்தையிடமிருந்து கிடைக்கிறது. சிவபாபாவிற்கு சரீரத்தின் பெயர் எதுவும் இல்லை. இந்த சரீரம் இந்த தாதாவினுடையதாகும். பாபா எங்கே இருக்கிறார்? பாபா கொஞ்ச காலத்திற்காக கடனாக பெற்றிருக்கிறார். எனக்கு பேசுவதற்கு வாய் வேண்டும் அல்லவா, என்று பாபா கேட்கின்றார். இங்கேயும் கூட கவ் முக் (பசுவின் முகம் போல) உருவாக்கப்பட்டுள்ளது. மலையிலிருந்து தண்ணீர் ஆங்காங்கே வருகிறது. இங்கே பசுவின் வாயை உருவாக்கிவிட்டார்கள், அதிலிருந்து தண்ணீர் வருகிறது, அதை கங்கை நீர் என்று புரிந்துக் கொள்கிறார்கள். கங்கை எங்கிருந்து வந்தது? இவையனைத்தும் பொய்யாகும். பொய்யான சரீரம், மாயை பொய்யானது, உலகம் முழுவதும் பொய்யானதாகும். பாரதம் சொர்க்கமாக இருந்தபோது உண்மையான கண்டம் என்றழைக்கப்பட்டது, பிறகு பாரதம் பழையதாக ஆகிறது எனும்போது பொய்யான கண்டம் என்று சொல்லப்படுகிறது. இந்த பொய்யான கண்டத்தில் அனைவரும் தூய்மையற்றவர்களாக ஆகிவிடும்போது தான், பாபா எங்களை தூய்மையாக்கி இந்த பழைய உலகத்திலிருந்து அழைத்துச் செல்லுங்கள் என்று அழைக்கிறார்கள். என்னுடைய குழந்தைகள் அனைவரும் காமசிதையில் அமர்ந்து கருப்பாகிவிட்டார்கள் என்று பாபா கூறுகின்றார். பாபா அமர்ந்து குழந்தைகளுக்கு கூறுகின்றார், நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இருந்தீர்கள் அல்லவா. நினைவு வருகிறது அல்லவா. குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார், முழு உலகத்திற்கும் புரிய வைக்க வில்லை. நம்முடைய தந்தை யார் என்பது தெரியட்டும் என்று உங்களுக்குத் தான் புரிய வைக்கின்றார்.

இந்த உலகத்தை முட்கள் நிறைந்த காடு என்று சொல்லப்படுகிறது. அனைத்திலும் பெரியது காமம் எனும் முள்ளால் குத்துகிறார்கள். இங்கே பக்தர்களும் அதிகமானோர் இருக்கிறார்கள், வெஜிட்டேரி யனாக (சைவம்) இருக்கிறார்கள், ஆனால் விகாரத்தில் செல்வதில்லை என்பது கிடையாது. பால பிரம்மச்சாரிகளாகவும் நிறைய பேர் இருக்கிறார்கள். சிறுவயதிலிருந்தே மோசமான உணவு போன்றவைகளை சாப்பிடுவதில்லை. சன்னியாசிகள் கூட நிர்விகாரிகளாக ஆகுங்கள் என்று சொல்கிறார்கள். அந்த எல்லைக்குட்பட்ட சன்னியாசத்தை மனிதர்கள் செய்ய வைக்கிறார்கள். அடுத்தப் பிறவி சென்று குடும்பத்திலுள்ளவர்களிடம் பிறக்கிறார்கள். சத்யுகத்தில் இந்த கிருஷ்ணர் போன்ற தேவதைகள் வீடு-வாசலை விடுகிறார்களா என்ன? இல்லை. எனவே அவர்களுடையது எல்லைக்குட்பட்ட சன்னியாசமாகும். இப்போது உங்களுடையது எல்லையற்ற சன்னியாசமாகும். முழு உலகம், உறவுகள் போன்றவற்றையும் சன்னியாசம் செய்கிறீர்கள். உங்களுக்காக இப்போது சொர்க்கம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. உங்களுடைய புத்தி சொர்க்கத்தின் பக்கம் தான் செல்லும். எனவே சிவபாபாவையே நினைவு செய்ய வேண்டும். எல்லையற்ற தந்தை கூறுகின்றார், என்னை நினைவு செய்யுங்கள். மன்மனாபவ, மத்தியாஜிபவ. அப்போது நீங்கள் தேவதைகளாக ஆகிவிடுவீர்கள். இது அதே கீதையின் கதையாகும். சங்கமயுகமாகவும் இருக்கிறது. நான் சங்கமயுகத்தில் தான் கீதை சொல்கின்றேன். கண்டிப்பாக இராஜயோகத்தை முற்பிறவியில் சங்கமயுகத்தில் தான் கற்றிருப்பீர்கள். இந்த உலகம் மாறுகிறது அல்லவா, நீங்கள் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக ஆகிவிடுகிறீர்கள். இப்போது இது புருஷோத்தம சங்கமயுகமாகும், இப்போது நாம் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகின்றோம். ஒவ்வொரு விஷயத்தையும் நல்ல விதத்தில் புரிந்துக் கொண்டு நம்பிக்கை கொள்ள வேண்டும். இதை மனிதர்கள் யாராவது சொல்கிறார்களா என்ன. இது ஸ்ரீமத் அதாவது உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானுடைய வழியாகும். மற்றவை அனைத்தும் மனிதர்களுடைய வழியாகும். மனிதர்களுடைய வழிப்படி இறங்கி வந்துள்ளீர்கள். இப்போது ஸ்ரீமத்தின் மூலம் உயருகிறீர்கள். பாபா மனிதனிலிருந்து தேவதை களாக்கிவிடுகின்றார். சொர்க்கவாசிகளுடையது தெய்வீக வழியாகும் மற்றும் அது நரகவாசி மனிதர் களுடைய வழியாகும்., அதை இராவண வழி என்று சொல்லப்படுகிறது. இராவண இராஜ்யமும் ஒன்றும் குறைந்தது அல்ல. முழு உலகத்திலும் இராவண இராஜ்யம் நடக்கிறது. இது எல்லையற்ற இலங்கையாகும், இதில் இராவணனுடைய இராஜ்யம் நடக்கிறது பிறகு தேவதைகளுடைய தூய்மையான இராஜ்யம் நடக்கும். அங்கே அதிக சுகம் இருக்கிறது. சொர்க்கத்திற்கு எவ்வளவு மகிமை இருக்கிறது. சொர்க்கத்தை அடைந்தார் என்றும் சொல்கிறார்கள். அப்படியென்றால் நரகத்தில் இருந்தார் அல்லவா. நரகத்திலிருந்து சென்றார் என்றால் கண்டிப்பாக நரகத்தில் தான் வருவார் அல்லவா. சொர்க்கம் இப்போது எங்கே இருக்கிறது? இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரத்திலும் இல்லை. இப்போது பாபா உங்களுக்கு ஞானம் முழுவதையும் கொடுக்கின்றார். பேட்டரி நிரம்புகிறது. மாயை தொடர்பை துண்டித்துவிடுகிறது. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினை வுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) மனம்-சொல்-செயலில் தூய்மையாக ஆகி ஆத்மா எனும் பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும். முழுமையான பிராமணர்களாக ஆக வேண்டும்.

2) மனதின் வழி அல்லது மனிதர்களின் வழியை விட்டு விட்டு ஒரு பாபாவின் ஸ்ரீமத்படி நடந்து தங்களை உயர்ந்தவர்களாக்க வேண்டும். சதோபிரதானமாக ஆகி பாபாவோடு பறந்து செல்ல வேண்டும்.

வரதானம்:

ஸ்ரீமத் - இன் ஆதாரத்தில் குஷி, சக்தி மற்றும் வெற்றியின் அனுபவம் செய்யக் கூடிய அனைத்து பிராப்திகளிலும் நிறைந்தவர் ஆகுக.

விளக்கம்: எந்தக் குழந்தைகள் தன்னை டிரஸ்டி என புரிந்துக் கொண்டு ஸ்ரீமத்படி நடப்பார்களோ, ஸ்ரீமத் - இல் கொஞ்சம் கூட மனதின் வழி அல்லது பிறரின் வழியை கலக்காமல் இருப்பார்களோ. அவர் களுக்கு நிரந்தரமான குஷி, சக்தி மற்றும் வெற்றியின் அனுபவம் ஏற்படும். முயற்சியோ உழைப்போ குறைவாக இருந்த போதிலும் பிராப்தி அதிகமாக இருந்தது என்றால் சரியாக ஸ்ரீமத்படி நடப்பவர் என கூறலாம். ஆனால் மாயை ஈஸ்வரிய வழியில் மனதின் வழி அல்லது பிறரின் வழியை இராயல் ரூபத்தில் கலப்படம் செய்து விடுகிறது, ஆகையால் அனைத்து பிராப்திகளின் அனுபவம் ஏற்படுவ தில்லை. இதற்காக பகுத்தறியும் மற்றும் தீர்மானிக்கும் சக்தியை தாரணை செய்தீர்கள் என்றால் ஏமாற்றம் அடைய மாட்டீர்கள்.

சுலோகன்:

தவ வலிமையால் பாக்யமளிக்கும் வள்ளல் தந்தையை தன்னுடையவராக ஆக்குபவரே பாலகன் மற்றும் எஜமான் ஆவார்.