இன்று பாப்தாதா தன்னுடைய அநேக முறை சந்திப்பு செய்திருக்கும், அநேக கல்பங்களிலாக சந்திப்பு செய்து வரக் கூடிய குழந்தைகளை மீண்டும் சந்திப்பதற்காக வந்திருக்கின்றார். இந்த அலௌகீக, அவ்யக்த சந்திப்பானது எதிர்கால பொன்னுலகிலும் இருக்க முடியாது. இது இந்த நேரத்தின், இந்த விசேஷ யுகத்திற்கான வரதானமாகும் லி தந்தை மற்றும் குழந்தைகளின் சந்திப்பு. ஆகையால் தான் இந்த யுகத்தின் பெயரே சங்கமயுகம், அதாவது சந்திப்பு கொண்டாடக் கூடிய யுகமாகும். இப்படிப்பட்ட யுகத்தில் இவ்வாறு விசேஷ சந்திப்பு கொண்டாடக் கூடிய விசேஷ நடிப்பு நடிக்கும் ஆத்மாக்கள் நீங்கள். பாப்தாதாவும் இவ்வாறு கோடியில் சில சிரேஷ்ட பாக்கியவான் ஆத்மாக்களைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றார், மேலும் நினைவுபடுத்துகின்றார். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எத்தனை விசயங்களை நினைவுபடுத்தியிருக்கின்றார்? நினைத்துப் பாருங்கள், மீக நீண்ட பட்டியல் ஆகிவிடும். அதிக விசயங்களை நினைவுபடுத்தியிருக்கின்றார், இதன் மூலம் நீங்கள் அனைவரும் நினைவு சொரூபமாக ஆகிவிட்டீர்கள். பக்தியில் நினைவு சொரூப ஆத்மாக்களாகிய உங்களது நினைவார்த் தமாக பக்தர்களும் ஒவ்வொரு நேரத்தில் கீர்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர். நினைவு சொரூப ஆத்மாக்களாகிய உங்களது ஒவ்வொரு காரியத்தின் விசேசதாவை கீர்த்தனை (மகிமை) செய் கின்றனர். பக்தியின் விசேசதாவே ஜெபித்தல் அதாவது கீர்த்தனை செய்வதாகும். கீர்த்தனை செய்து செய்து அதிலேயே எவ்வளவு மூழ்கி விடுகின்றனர். அல்ப காலத்திற்கு அவர்களுக்கும் வேறு எந்த நினைவும் இருப்பது கிடையாது. கீர்த்தனை செய்து செய்து அதில் மூழ்கி விடுகின்றனர் அதாவது அன்பில் இலயித்து விடுகின்றனர். இந்த அல்ப கால அனுபவம் அந்த ஆத்மாக்களுக்கு எவ்வளவு பிரிய மானதாக மற்றும் தனிப்பட்டதாக இருக்கிறது! இது ஏன் நடைபெறுகிறது? ஏனெனில் எந்த ஆத்மாவின் கீர்த்தனை செய்கிறார்களோ, அந்த ஆத்மாக்களே தந்தையின் அன்பில் சதா மூழ்கி யிருந்தனர், தந்தையின் அனைத்து பிராப்திகளில் சதா மூழ்கியிருந்தனர். ஆகையால் இப்படிப்பட்ட ஆத்மாக்களின் கீர்த்தனை செய்வதால் அந்த பக்தர்களுக்கு அல்ப காலத்திற்கு தங்களது வரதானி ஆத்மாக்களின் மூலம் அஞ்சலி ரூபத்தில் அனுபவம் பிராப்தியாக கிடைத்து விடுகிறது. ஆக சிந்தித்துப் பாருங்கள், கீர்த்தனை செய்யக் கூடிய பக்த ஆத்மாக்களுக்கே இவ்வளவு அலௌகீக அனுபவம் ஏற்படும் பொழுது நீங்கள் நினைவு சொரூபமாக, வரதாதாவாக, விதாதாவாக இருக்கும் ஆத்மாக் களுக்கு நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவு அனுபவங்கள் கிடைத்திருக்கும். இந்த அனுபவங் களின் மூலம் சதா முன்னேறிக் கொண்டே செல்லுங்கள்.
ஒவ்வொரு அடியிலும் வித விதமாக நினைவு சொரூபத்தின் அனுபவம் செய்து கொண்டே செல்லுங்கள். நேரம் எப்படியோ, காரியங்கள் எப்படியோ அவ்வாறு சொரூபத்தின் நினைவு வெளிப் படையான ரூபத்தில் அனுபவம் செய்யுங்கள். எவ்வாறு அமிர்தவேளை நாளின் ஆரம்பமாகும் அவ்வமயம் தந்தையுடன் சந்திப்பு செய்து லி மாஸ்டர் வரதாதா ஆகி வரதாதாவிடமிருந்து வரதானம் அடையக் கூடிய சிரேஷ்ட ஆத்மா நான், பாக்கியவிதாதாவிடமிருந்து நேரடியாக பாக்கியத்தை பிராப்தியாக அடையக் கூடிய பத்மாபதம் பாக்கியசாலி ஆத்மாவாக இருக்கிறேன் லி இந்த சிரேஷ்ட சொரூபத்தை நினைவில் கொண்டு வாருங்கள். வரதானி நேரமாகும், வரதாதா, விதாதா கூடவே இருக்கின்றார். மாஸ்டர் வரதானி ஆகி சுயம் சம்பன்னமாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் மற்ற ஆத்மாக்களுக்கும் வரதானம் கொடுக்கக் கூடிய வரதானி ஆத்மாக்களாக இருக்கிறீர்கள் லி இந்த நினைவு சொரூபத்தை வெளிப்படுத்துங்கள். இது இருக்கவே செய்கிறது என்று நினைக்காதீர்கள். ஆனால் வித விதமான நினைவு சொரூபத்தை நேரத்திற்கு தகுந்தாற் போன்று அனுபவம் செய்யும் பொழுது மிகவும் விசித்திரமான குஷி, விசித்திரமான பிராப்திகளின் பொக்கிஷங்களாக ஆகிவிடு வீர்கள். மேலும் சதா உள்ளப்பூர்வமாக பிராப்திக்கான பாட்டு வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு தானாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் லி எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டேன். இதே போன்று நேரம் மற்றும் காரியத்திற்கு தகுந்தாற் போன்று நினைவு சொரூபத்தின் அனுபவம் செய்து கொண்டே செல்லுங்கள். முரளி கேட்கின்றீர்கள் எனில் நான் இறை மாணவ வாழ்க்கை அதாவது பகவானின் மாணவன், பகவானே எனக்காக பரந்தாமத்திலிருந்து படிப்பு கற்பிக்க வந்திருக்கின்றார் என்ற நினைவு இருக்க வேண்டும். சுயம் பகவான் வருவதே விசேஷ பிராப்தியாகும். இந்த நினைவு சொரூபத்தின் மூலம் முரளி கேட்கும் போது எவ்வளவு போதை ஏற்படும்! சாதாரண முறையில், நியமப்படி கூறுபவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள், கேட்பவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனில் அந்த அளவிற்கு போதையின் அனுபவம் இருக்காது. ஆனால் நான் பகவானின் மாணவன் லி இந்த நினைவை நினைவில் கொண்டு வந்து கேளுங்கள், அப்பொழுது அலௌகீக போதையின் அனுபவம் ஏற்படும். புரிந்ததா?
நேரத்திற்கு தகுந்தாற் போன்று வித விதமான நினைவு சொரூபத்தை அனுபவம் செய்வதில் எவ்வளவு அனுபவம் ஏற்படும்! இவ்வாறு முழு நாளும் ஒவ்வொரு காரியமும் செய்யும் போது தந்தையின் துணையின் நினைவு சொரூபம் ஆகிக் கொண்டே செல்லுங்கள் லி சில நேரங்களில் பகவானின் நண்பன் மற்றும் துணைவன் ரூபத்தில், சில நேரங்களில் வாழ்க்கை துணை ரூபத்தில், சில நேரங்களில் பகவான் என்னுடைய செல்லக் குழந்தை அதாவது முதல் உரிமையாளர், வாரிசு குழந்தை என்ற ரூபத்தில். சில குழந்தைகள் மிக அழகாக மற்றும் மிகவும் தகுதியானவர்களாக இருக்கின்றார்கள் எனில் அந்த தாய், தந்தைக்கு என்னுடைய குழந்தை குல தீபமாக அல்லது குலத்தின் பெயரை வெளிப்படுத்தக் கூடியவர் என்ற போதை இருக்கும். பகவானே குழந்தையாக ஆகிவிட்டால், அவரது பெயர் எவ்வளவு பிரபலமாகி விடும்! அவரது குலத்திற்கு எவ்வளவு நன்மைகள் ஏற்படும்! ஆக எப்பொழுது உலக சூழ்நிலைகள் அல்லது வித விதமான பிரச்சனைகளினால் நீங்கள் உங்களை தனிமையாக அல்லது உதாசீனமாக அனுபவம் செய்வீர்களோ, அப்பொழுது அழகான குழந்தையின் ரூபத்தில் விளையாடுங்கள், நண்பன் ரூபத்தில் விளையாடுங்கள். களைப்படைந்து விடுகிறீர்கள் எனில் தாய் ரூபத்தில் மடியில் உறங்கி விடுங்கள். மனம் உடைந்து விடுகிறீர்கள் எனில் சர்வ சக்திவான் சொரூபத்தின் மூலம் மாஸ்டர் சர்வசக்திவான் என்ற நினைவு சொரூபத்தின் அனுபவம் செய்யும் பொழுது மனம் உடைந்த நிலை மாறி மனம் மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். வித விதமான நேரத்தில் வித விதமான சம்மந்தத்தின் மூலம், வித விதமான தனது சொரூபத்தின் நினைவை வெளிப்படையான ரூபத்தில் அனுபவம் செய்யம் போது தந்தையின் துணை சதா அனுபவம் செய்வீர்கள் மற்றும் இந்த சங்கமயுக பிராமண வாழ்க்கை சதா விலை மதிக்க முடியாதது என்ற அனுபவம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். மேலும் இந்த அளவிற்கு சர்வ சம்மந்தம் வைப்பதில் பிசியாக இருந்தீர்கள் எனில் மாயை வருவதற்கான நேரமும் இருக்காது. ஒரு பெரிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நாம் குடும்பத்தை கவனிப்பதில் அந்த அளவிற்கு பிசியாக இருப்பதால் மற்ற விசயங்கள் நினைவில் இருப்பது கிடையாது என்று கூறுவர். ஏனெனில் குடும்பம் மிகவும் பெரியது. பிரபுவின் மீது அன்பு செலுத்தக் கூடிய பிராமண ஆத்மாக்களாகிய உங்களது குடும்பம் எவ்வளவு பெரியது! பிரபுவின் அன்பான உங்களது குடும்பம் தூங்கும் போதும் இருக்கின்றது. யோக நித்திரையாக இருந்தது எனில் உங்களது தூக்கம், தூக்கம் இல்லை. ஆனால் யோக நித்திரையாகும். தூக்கத்திலும் பிரபு சந்திப்பு செய்து கொண்டிருக்க முடியும். யோகா என்பதன் பொருள் சந்திப்பாகும். யோக நித்திரை என்றால் அசரீரி ஸ்திதிக்கான அனுபவமாகும். இதுவும் பிரபுவின் அன்பு அல்லவா! ஆக உங்களைப் போன்ற பெரியதிலும் பெரிய குடும்பம் வேறு யாருக்கும் கிடையாது. ஒரு விநாடி கூட உங்களுக்கு ஓய்வு கிடையாது. ஏனெனில் பக்தியில் பக்தர்களின் ரூபத்திலும் பாட்டு பாடி வந்தீர்கள் லி பிரபு, வெகு நாட்களுக்குப் பிறகு நீங்கள் கிடைத்திருக்கின்றீர்கள், எனவே ஒவ்வொரு விநாடிக்கான கணக்கையும் முழுமையாக எடுத்துக் கொள்வேன். ஒவ்வொரு விநாடியும் கணக்கு பார்க்கக் கூடியவர்கள். முழு கல்பத்திலும் சந்திப்பதற்கான கணக்கை இந்த சிறிய ஒரு பிறவியில் முழுமையாக்குகிறீர்கள். ஐயாயிரம் ஆண்டுகள் என்ற கணக்கில் இந்த சிறிய பிறவி என்பது சிறிது நாட்களுக்கான கணக்கு ஆகி விடுகிறது அல்லவா! எனவே குறுகிய நாட்களில் இந்த அளவிற்கு நீண்ட காலத்திற்கான கணக்கை முடித்துவிட வேண்டும். அதனால் தான் சுவாசத்திற்கு சுவாசம் நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். பக்தர்கள் கீர்த்தனை செய்கின்றனர், நீங்கள் நினைவு சொரூபமாக ஆகின்றீர்கள். ஆக உங்களுக்கு ஒரு விநாடியாவது ஓய்வு இருக்கிறதா? எவ்வளவு பெரிய குடும்பம் ஆகும். இந்த குடும்பத்திற்கு முன் அந்த சிறிய குடும்பம் ஈர்க்க முடியாது, மேலும் எளிதாக, தானாகவே தேக சகிதமாக தேக சம்மந்தங்கள் மற்றும் தேக பொருட்கள் அல்லது பிராப்திகளிலிருந்து நஷ்டமோகா, நினைவு சொரூபமாக ஆகிவிடுவீர்கள். இந்த கடைசி பேப்பர் தான் மாலையில் வரிசைக்கிரமம் மணிகளாக ஆக்குகிறது.
அமிர்தவேளையிலிருந்து யோக நித்திரை வரை வித விதமான நினைவு சொரூபத்தின் அனுபவி களாக ஆகிவிடும் போது, வெகு கால நினைவு சொரூபத்தின் அனுபவம் கடைசியில் நினைவு சொரூபத்திற்கான கேள்வியில் நேர்மையுடன் தேர்ச்சியாளர்களாக ஆக்கி விடும். மிகவும் மகிழ்ச்சி கரமான வாழ்க்கையாக அனுபவம் செய்வீர்கள். ஏனெனில் வாழ்க்கையில் ஒவ்வொரு மனித ஆத்மாவும் விரும்புவது லி வெரைட்டி (பல விதங்கள்). ஆக முழு நாளும் இந்த வித விதமான சம்மந்தம், வித விதமான சொரூபத்தின் விதங்களை அனுபவம் செய்யுங்கள். உலகத்தினர்களும் கூறுகின்றனர் அல்லவா - தந்தை அவசியம் தான், ஆனால் தந்தையின் கூடவே வாழ்க்கை துணையின் அனுபவம் இல்லையெனில் வாழ்க்கை அரைகுறை என்று நினைக்கின்றனர். குழந்தை இல்லையென்றாலும் அரை குறை வாழ்க்கை என்று நினைக்கின்றனர். ஒவ்வொரு சம்மந்தமும் தான் முழுமையான வாழ்க்கை என்று நினைக்கின்றனர். ஆக இந்த பிராமண வாழ்க்கை பகவானுடன் சர்வ சம்மந்தத்தின் அனுபவம் செய்யக் கூடிய சம்பன்ன வாழ்க்கையாகும். ஒரு சம்மந்தத்திலும் குறை வைக்கக் கூடாது. பகவானிடத்தில் ஒரு சம்மந்தம் குறைந்தாலும், ஏதாவது ஒரு ஆத்மா அந்த சம்மந்தத்தில் தன் பக்கம் ஈர்த்து விடும். ஒரு சில குழந்தைகள் சில சமயம் சொல்கின்றனர். தந்தையின் ரூபத்தில் இருக்கின்றார், ஆனால் நண்பன் அல்லது தோழி லி இது சிறிய ரூபம் அல்லவா, அதற்கு ஆத்மாக்கள் தேவை. ஏனெனில் தந்தை உயர்ந்தவர் அல்லவா! ஆனால் பரமாத்மவின் சம்மந்தத்தின் நடுவில் எந்த ஒரு சிறிய அல்லது இலேசான ஆத்மாவின் சம்மந்தம் கலப்படமாகும் போது சர்வ என்ற சப்தம் சமாப்தி ஆகிவிடுகிறது. மேலும் முடிந்த அளவு (யதா சக்தி) சக்திக் கேற்ப என்ற வரிசையில் வந்து விடுவர். பிராமணர்களின் மொழியில் ஒவ்வொரு விசயத்திலும் சர்வ என்ற வார்த்தை வருகின்றது. எங்கு சர்வ இருக்கின்றதோ, அங்கு தான் சம்பன்னமும் இருக்கும். ஒருவேளை இரண்டு கலைகள் குறைந்து விட்டாலும், இரண்டாவது மாலையின் மணிகளாக ஆகிவிடுவீர்கள். ஆகையால் சர்வ சம்மந்தத்தின் சர்வ நினைவு சொரூபமாக ஆகுங்கள். புரிந்ததா? பகவான் சர்வ சம்பந்தத்தின் அனுபவம் செய்விப்பதற்கு முன்வரும் போது, வாய்ப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லவா! இப்படிப்பட்ட தங்கமான வாய்ப்பு பகவானைத் தவிர மற்றும் இந்த நேரம் தவிர வேறு ஒருபோதும், வேறு யாரும் செய்ய முடியாது. யாராவது தந்தையாக ஆகி, குழந்தையாகவும் ஆக முடியுமா? இது ஒரே ஒருவரின் மகிமையாகும். ஒரே ஒருவரின் மகான் நிலையாகும். ஆகையால் சர்வ சம்மந்தத்தின் மூலம் நினைவு சொரூபமாக ஆக வேண்டும். இதில் மஜா இருக்கிறது தானே? பிராமண பிறவி எதற்காக எடுத்திருக்கிறீர்கள்? மஜாவுடன் இருப்பதற்கு மற்றும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக. ஆக இந்த அலௌகீக மகிழ்ச்சியை கொண்டாடுங்கள். மஜாவிற்கான வாழ்க்கையை அனுபவம் செய்யுங்கள். நல்லது.
இன்று டெல்லி சபையினர் (தர்பார்) இருக்கின்றனர். இராஜ்ய சபையினர்களாக இருக்கிறீர்களா? அல்லது சபையை பார்க்கக் கூடியவர்களாக இருக்கிறீர்களா? சபையில் இராஜ்யம் செய்பவர்கள் மற்றும் பார்க்கக் கூடியவர்கள் லி இருவரும் அமர்ந்திருப்பர். நீங்கள் அனைவரும் யார்? டெல்லியில் இரண்டு விசேஷதாக இருக்கிறது. ஒன்று லி டெல்லி திலாராமின் உள்ளம் ஆகும், மற்றொன்று இராஜ்ய சிம்மாசன இடமாகும். உள்ளம் எனில் உள்ளத்தில் யார் இருப்பார்கள்? திலாராம். ஆக டெல்லியில் வசிப்பவர்கள் என்றால் உள்ளத்தில் சதா திலாராமை வைத்திருப்பவர்கள். இவ்வாறு அனுபவி ஆத்மாக்கள் மற்றும் இப்பொழுதே சுய இராஜ்ய அதிகாரி மற்றும் எதிர்காலத்தில் விஸ்வ இராஜ்ய அதிகாரிகளாக இருக்கின்றனர். உள்ளத்தில் திலாராம் இருக்கின்றார் எனில் இராஜ்ய அதிகாரிகளாக இப்பொழுது இருக்கிறீர்கள் மற்றும் சதா இருப்பீர்கள். எனவே என் வாழ்க்கையில் இந்த இரண்டு விசேஷதா இருக்கின்றதா? என்று பாருங்கள். உள்ளத்தில் திலாராம், பிறகு அதிகாரி களாகவும் இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட தங்கமான வாய்ப்பு, தங்கத்தை விட வைர வாய்ப்பு எடுத்துக் கொள்பவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் ஆவர்! நல்லது.
உள்நாட்டில், அயல்நாட்டில் இப்போது எல்லையற்ற சேவைக்கான மிக நல்ல சாதனம் கிடைத்திருக் கிறது. பெயருக்கு ஏற்றாற் போன்று காரியமும் அழகாக இருக்கிறது. பெயர் கேட்டதும் அனைவருக் கும் ஆர்வம் ஏற்படுகின்றது லி அனைவரின் அன்பு மற்றும் சகயோகத்தின் மூலம் சுகமான உலகம். இது மிக நீண்ட காரியமாகும். ஒரு ஆண்டை விட அதிகம் இருக்கிறது. பெயர் கேட்டதும் எவ்வாறு அனைவருக்கும் ஆர்வம் ஏற்படுகிறதோ, அதே போன்று காரியமும் ஆர்வத்துடன் செய்யுங்கள். அழகான பெயரைக் கேட்டதும் மகிழ்ச்சியடைவது போன்று காரியங்கள் நிறைவடையும் போதும் மகிழ்ச்சி அடைவர். பிரத்யட்சதா என்ற திரை அசைவதற்கு அதாவது திரை விலக்க ஆதாரம் உருவாகியிருக்கிறது, மேலும் உருவாகிக் கொண்டிருக்கும் என்பதையும் கூறியிருக்கின்றார் அல்லவா! அனைவருக்கும் உதவி செய்பவர்கள் லி காரியத்தின் பெயர் எப்படியோ, அப்படியே சொரூபமாக ஆகி எளிதாக காரியங்கள் செய்து கொண்டிருந்தால் பெயரளவிற்கு உழைப்பு இருக்கும், ஆனால் வெற்றி பல மடங்கு அனுபவம் செய்வீர்கள். செய்விப்பவர் நிமித்தமாக்கி செய்வித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை அனுபவம் செய்வீர்கள். நான் செய்து கொண்டிருக்கின்றேன் லி இல்லை. இவ்வாறு இருப்பவர்கள் சகயோகிகளாக ஆக முடியாது. செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கின்றார், நடத்துபவர் காரியங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார். உங்கள் அனைவருக் கும் ஜெகதம்பாவின் சுலோகன் நினைவில் இருக்கும் லி நடத்துபவர் நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்த சுலோகனை சதா நினைவு சொரூபத்தில் கொண்டு வரும் போது வெற்றி பிராப்தியாக கிடைத்துக் கொண்டிருக்கும். மற்றபடி நாலாபுறமும் ஆர்வம், உற்சாகம் நன்றாக இருக்கிறது. எங்கு ஆர்வம், உற்சாகம் இருக்கிறதோ, அங்கு சுயம் வெற்றி நெருக்கத்தில் வந்து கழுத்து மாலையாக ஆகிவிடும். இந்த விசால காரியம் பல ஆத்மாக்களை சகயோகிகளாக ஆக்கி நெருக்கத்தில் கொண்டு வரும். ஏனெனில் பிரதட்சதா என்ற திரை விலகிய பின் இந்த விசால மேடையில் ஒவ்வொரு வர்கத்தைச் சார்ந்த நடிகர்கள் மேடையில் பிரத்யட்சம் ஆக வேண்டும். ஒவ்வொரு வர்க்கம் என்றால் உலகின் அனைத்து ஆத்மாக்கள் என்ற வெரைட்டி மரம் லி குழு ரூபத்தில் இருப்பது. நமக்கு செய்தி கிடைக்கவில்லை என்று எந்த ஒரு வர்க்கத்தினரும் புகார் கூறக் கூடாது. ஆகையால் தலைவர் களிலிருந்து குடிசையில் உள்ளவர்கள் வரை வர்க்கம் இருக்கிறது. அனைவரையும் விட நன்றாக படித்த மிக உயர்ந்த விஞ்ஞானிகள், பிறகு படிக்காதவர்கள் லி அவர்களுக்கும் இந்த ஞானம் கொடுக்க வேண்டும், இதுவும் சேவையாகும். ஆக அனைத்து வர்க்கம் என்றால் உலகின் ஒவ்வொரு ஆத்மா விற்கும் செய்தி கொண்டு போய் சேர்ப்பதாகும். எவ்வளவு பெரிய காரியமாகும்! எனக்கு சேவைக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று யாரும் கூற முடியாது. நோயாளியாக இருக்கிறீர்களா, நோயாளிகளுக்கு சேவை செய்யுங்கள். படிக்காதவர்கள் படிக்காதவர்களுக்கு சேவை செய்யுங்கள். எந்த சேவை செய்ய முடியுமோ வாய்ப்பு இருக்கிறது. நல்லது. வார்த்தைகளினால் கூற முடிய வில்லை எனில் மனதின் வாயுமண்டலத்தின் மூலம் சுகமான மனோ பாவம் (எண்ணம்) சுகமான ஸ்திதியின் மூலம் சுகமான உலகை உருவாக்குங்கள். என்னால் செய்ய முடியாது, நேரம் கிடையாது என்ற யாரும் சாக்கு போக்கு கூற முடியாது. எழுந்தாலும்லிஅமர்ந்தாலும் 10 லி 10 நிமிடங்கள் சேவை செய்யுங்கள். விரல் கொடுப்பீர்கள் தானே? எங்கும் செல்ல முடியவில்லை, உடல் நிலை சரியில்லை எனில் வீட்டில் அமர்ந்து கொண்டே செய்யுங்கள். ஆனால் அவசியம் சகயோகிகளாக ஆக வேண்டும், அப்போது தான் அனைவரின் சகயோகமும் கிடைக்கும். நல்லது.
ஆர்வம், உற்சாகத்தை பார்த்து பாப்தாதாவும் குஷியடைகின்றார். இப்பொது பிரதட்சதா என்ற திரையை விலக்கி காண்பிக்க வேண்டும் என்ற ஈடுபாடு அனைவரிடத்திலும் இருக்கிறது. ஆரம்பம் ஆகிவிட்டது அல்லவா! பிறகு எளிதாகிக் கொண்டே செல்லும். அயல்நாட்டுக் குழந்தைகளின் திட்டங்களும் பாப்தாதாவிடம் வந்து சேர்கிறது. தானம் ஆர்வத்துடன் இருக்கின்றனர், மேலும் அனைவரின் சகயோகமும் ஆர்வம், உற்சாகத்துடன் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆர்வமுடை யவர்களுக்கு ஆர்வம், உற்சாகமுடையவர்களுக்கு உற்சாகம் கிடைக்கிறது. இந்த சந்திப்பும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆக மிகவும் விமரிசையாக இந்த காரியத்தில் முன்னேறுங்கள். எதுவெல்லாம் உருவாக்கியிருக்கிறீர்களோ, தந்தை மற்றும் அனைத்து பிராமணர்களின் சகயோகம், சுப விருப்பம்லிசுப பாவணையின் மூலம் ஆர்வம், உற்சாகத்துடன் மேலும் முன்னேறிக் கொண்டே இருக்கும். நல்லது.
நாலாபுறமும் சதா நினைவு மற்றும் சேவையில் ஆர்வம், உற்சாகம் உடைய சிரேஷ்ட குழந்தைகளுக்கு, சதா ஒவ்வொரு காரியத்தில் நினைவு சொரூபத்தின் அனுபவம் செய்யக் கூடிய அனுபவி ஆத்மாக்களுக்கு, சதா ஒவ்வொரு காரியத்திலும் சர்வ சம்மந்தத்தின் அனுபவம் செய்யக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா பிராமண வாழ்க்கையை மஜா நிறைந்த வாழ்க்கையாக ஆக்கக் கூடிய மகான் ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் மிக அன்பு நிறைந்த அன்பு நினைவுகளை சுவிகாரம் செய்யுங்கள்.