02.01.2021 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! பாபாவின்
ஸ்ரீமத்திற்கு மதிப்பளிப்பது என்றால் முரளியை ஒருபோதும்
தவறவிடக் கூடாது, ஒவ்வொரு கட்டளையையும் கடைபிடிக்க (பின்பற்ற)
வேண்டும்.
கேள்வி:-
குழந்தைகளாகிய உங்களிடத்தில்
யாராவது நீங்கள் திருப்தியாக-குஷியாக இருக்கிறீர்களா என்று
கேட்கிறார்கள் என்றால் நீங்கள் என்ன பதிலை உடனடியாக கொடுக்க
வேண்டும்?
பதில்:-
சொல்லுங்கள் - தூரத்தில்
பிரம்மத்தில் இருக்கக் கூடியவரைப் பற்றி (இறைவன்) கவலை இருந்தது,
அவர் கிடைத்து விட்டார், வேறு என்ன வேண்டும். எதை அடைய
வேண்டியிருந்ததோ, அதை அடைந்தாகி விட்டது... ஈஸ்வரிய
குழந்தைகளாகிய உங்களுக்கு எந்த விசயத்தைப் பற்றியும் கவலை இல்லை.
பாபா உங்களை தன்னுடையவர்களாக்கி விட்டார், உங்களுக்கு கிரீடம்
சூட்டியுள்ளார் பிறகு எந்த விசயத்தைப் பற்றிய கவலை?.
ஓம் சாந்தி.
குழந்தைகளுடைய புத்தியில்
கண்டிப்பாக இருக்கும் - பாபா தந்தையாகவும் இருக்கின்றார்,
டீச்சராகவும் இருக்கின்றார், பரம குருவாகவும் இருக்கின்றார்
என்ற நினைவில் கண்டிப்பாக இருப்பார்கள் என்று பாபா புரிய
வைக்கின்றார். இந்த நினைவை ஒருபோதும் யாரும் கற்றுக்
கொடுக்கவும் முடியாது. பாபா தான் கல்பம்-கல்பமாக வந்து கற்றுக்
கொடுக்கின்றார் . அவர்தான் ஞானக்கடல் , தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவராகவும் இருக்கின்றார். அவர் தந்தையாகவும்
இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார், குருவாகவும்
இருக்கின்றார். இது இப்போது ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்த
பிறகு புரிந்து கொள்ளப்படுகிறது. குழந்தைகள்
புரிந்திருப்பார்கள் ஆனால் தந்தையையே மறந்து விடுகிறார்கள்
என்றால் பிறகு ஆசிரியர் குரு போன்றவர்கள் எப்படி நினைவிற்கு
வருவார்கள். மாயை மிகவும் பலம் வாய்ந்தது அது மூன்று ரூபங்களில்
மகிமை இருந்தும் கூட மூவரையுமே மறக்கச் செய்து விடுகிறது,
குழந்தைகளும் எழுதி தெரிவிக்கின்றனர், பாபா நாங்கள் மறந்து
விடுகிறோம். அந்தளவிற்கு சர்வசக்திவானாக இருக்கிறது.
நாடகத்தின்படி இப்படி அதிகமாக நடக்கக் கூடியதுதான். ஒருபோதும்
இப்படி யாரும் இருக்க முடியாது என்று குழந்தைகள் புரிந்து
கொள்கிறார்கள். அதே தந்தை தான் ஆசிரியர், சத்குருவாக
இருக்கிறார் - இது உண்மையிலும் உண்மையாகும், இது கட்டுக் கதை
போன்ற விசயம் எதுவும் இல்லை. உள்ளுக்குள் புரிந்து கொள்ள
வேண்டும் அல்லவா. ஆனால் மாயை மறக்கச் செய்து விடுகிறது. நாங்கள்
தோல்வி அடைந்து விடுகிறோம் என்று சொல்கிறார்கள், பிறகு ஒவ்வொரு
அடியிலும் பலமடங்கு பாக்கியம் எப்படி இருக்கும். தேவதைகளுக்குத்
தான் தாமரையின் அடையாளத்தைக் காட்டுகிறார்கள். அனைவருக்கும்
கொடுக்க முடியாது. இது ஈஸ்வரனுடைய படிப்பாகும், மனிதர்களுடையது
அல்ல. இந்த படிப்பு மனிதர்களுடையதாக ஒருபோதும் இருக்க முடியாது.
தேவதைகளுக்கு மகிமை பாடப் படுகிறது ஆனால் உயர்ந்ததிலும்
உயர்ந்தவர் ஒரு பாபா ஆவார். மற்றபடி தேவதைகளின் பெருமை என்ன,
இன்று பிச்சைக்கார வாழ்க்கை நாளை இராஜ்யமாகும். இப்போது நீங்கள்
லஷ்மி - நாராயணனைப் போல் ஆவதற்கு முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள். இந்த முயற்சியில் நிறைய பேர் தோற்று
விடுகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இருந்தாலும்
கல்பத்திற்கு முன்பு எவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்தார்களோ,
அந்தளவிற்கு படிக்கிறார்கள். உண்மையில் ஞானமும் மிகவும்
சகஜமானதாகும், ஆனால் மாயை மறக்கச் செய்து விடுகிறது. தங்களுடைய
சார்ட் எழுதுங்கள் என்று பாபா கூறுகின்றார் ஆனால் எழுத
முடிவதில்லை. எதுவரை அமர்ந்து எழுதுவது. ஒருவேளை எழுதினாலும்,
இரண்டு மணி நேரம் நினைவில் இருந்தேனா? என்று சோதனை
செய்கிறார்கள். அதுவும் கூட யாருக்கு தெரிகிறது என்றால், யார்
பாபாவின் ஸ்ரீமத்தை நடைமுறையில் கொண்டு வருகிறார்களோ
அவர்களுக்குத் தெரியும். பாவம் இவர்களுக்கு வெட்கமாக இருக்கும்
என்று பாபா புரிந்து கொள்வார். இல்லையென்றால் ஸ்ரீமத்தை
நடைமுறையில் கொண்டு வர வேண்டும் அல்லவா. ஆனால் கஷ்டப்பட்டு
இரண்டு சதவீதத்தினர் சார்ட் எழுதுகிறார்கள். குழந்தைகளுக்கு
ஸ்ரீமத்தின் மீது அந்தளவுக்கு மதிப்பு இல்லை. முரளி
கிடைத்தாலும் படிப்பதில்லை. பாபா உண்மையைத் தான் கூறுகின்றார்,
நாமே முரளி படிக்க வில்லையென்றால் மற்றவர்களுக்கு என்ன புரிய
வைக்க முடியும் என்று கண்டிப்பாக மனதில் தோன்றும்.
(நினைவு யாத்திரை) ஓம் சாந்தி. ஆன்மீகத் தந்தை ஆன்மீகக்
குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார், உண்மையில் நாம்
ஆத்மாக்கள், நமக்கு பரமபிதா பரமாத்மா கற்பித்துக்
கொண்டிருக்கிறார் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள்.
வேறு என்ன கூறுகின்றார்? என்னை நினைவு செய்தீர்கள் என்றால்
நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள். இதில்
தந்தையும் வந்து விட்டார், படிப்பு மற்றும் படிப்பிப்பவரும்
வந்து விட்டார். சத்கதியை வழங்கும் வள்ளலும் வந்து விட்டார்.
சில வார்த்தைகளில் முழு ஞானமும் வந்து விடுகிறது. நீங்கள்
இங்கு வருவதே இதை மீண்டும் நினைவு செய்வதற்காக ஆகும். சிலர்
இங்கேயே இருக்கிறார்கள் இருந்தாலும் மறுபடியும் நினைத்துப்
பார்ப்பதில்லை. அதிர்ஷ்டத்தில் இல்லை. பாபா முயற்சி செய்ய
வைக்கவே செய்கின்றார். முயற்சி செய்ய வைப்பவர் ஒரு பாபாவே
ஆவார். இதில் குறிப்பாக யாரிடமும் கவனம் என்பதும் இருக்க
முடியாது. விசேஷமாக கற்பித்தல் என்பதும் இல்லை. அந்த படிப்பில்
தனியாக படிப்பதற்கு டீச்சரை அழைக்கிறார்கள். இங்கே
அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்காக அனைவருக்கும் பாபா
கற்பிக்கின்றார். ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக எதுவரை
கற்பிக்க முடியும். எவ்வளவு அதிகமான குழந்தைகள்
இருக்கிறார்கள். அந்த படிப்பில் யாராவது பெரிய மனிதர்களின்
குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு தனியாக கற்பிக்கிறார்கள்.
இவர்கள் மந்தமாக இருக்கிறார்கள் ஆகையினால் அவர்களை தேர்ந்த
தகுதிவாய்ந்தவர்களாக மாற்ற வேண்டும் என்று டீச்சர்
தெரிந்திருக்கிறார். இந்த பாபா அப்படி செய்வதில்லை. இவர் ஒரே
மாதிரி அனைவருக்கும் கற்பிக்கின்றார். அது டீச்சரின் கூடுதலான
முயற்சி செய்ய வைப்பதாகும். இவர் யாருக்கும் தனியாக கூடுதலான
முயற்சி செய்ய வைப்பதில்லை. கூடுதலான முயற்சி என்றாலே ஆசிரியர்
கொஞ்சம் கருணை காட்டுவதாகும். அதற்கு பணம் என்னவோ
வாங்குகிறார்கள், குறிப்பாக நேரம் ஒதுக்கி கற்பிக்கிறார்கள்,
அதன்மூலம் அவர்கள் அதிகம் படித்து புத்திசாலிகளாகிறார்கள்.
இங்கே அதிகம் எதுவும் கற்பதற்கான விசயமே இல்லை. இவருடைய விசயமே
புதியதாகும். ஒரேயொரு மகாமந்திரம் தான் கொடுக்கின்றார் -
மன்மனாபவ. நினைவின் மூலம் என்ன நடக்கிறது, பாபா தான்
தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் என்பதை புரிந்துள்ளீர்கள்.
இவரை நினைவு செய்வதின் மூலம் தான் தூய்மையாக முடியும் என்பதை
தெரிந்துள்ளீர்கள்.
இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் இருக்கிறது,
எந்தளவிர்கு நினைவு செய்வீர்களோ அந்தளவிற்கு தூய்மையாவீர்கள்.
குறைவாக நினைவு செய்தீர்கள் என்றால் குறைவாக தூய்மையாவீர்கள்.
இது குழந்தைகளாகிய உங்களுடைய முயற்சியில்
ஆதாரப்பட்டிருக்கிறது. எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதின்
மூலம் நாம் லஷ்மி-நாராயணனாக ஆக வேண்டும். அவர்களுடைய மகிமையை
ஒவ்வொருவரும் தெரிந்துள்ளார் கள். தாங்கள் புண்ணிய ஆத்மாக்கள்,
நாங்கள் பாவ ஆத்மாக்களாக இருக்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.
நிறைய கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கே அனைவரும் என்ன
செய்ய செல்கிறார்கள்? தரிசனத்தின் மூலம் எந்த பலனும் இல்லை.
இன்னார் யாத்திரை செல்கிறார், நாமும் செல்லலாம்,
ஒருவர்-மற்றவரைப் பார்த்து சென்று விடுகிறார்கள். இதனால் என்ன
நடக்கும்? எதுவுமில்லை. குழந்தைகளாகிய நீங்களும் யாத்திரை
செய்துள்ளீர்கள். எப்படி மற்ற பண்டிகைகள் கொண்டாடுகிறார்களோ,
அதுபோல் யாத்திரையையும் ஒரு பண்டிகை என்று புரிந்து
கொள்கிறார்கள். இப்போது நீங்கள் நினைவு யாத்திரையை கூட ஒரு
பண்டிகை (விழா) என்று புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் நினைவு
யாத்திரையில் இருக்கிறீர்கள். ஒரு வார்த்தைதான், மன்மனாபவ.
உங்களுடைய இந்த யாத்திரை துவக்கம் முடிவு இல்லாதது. இந்த
யாத்திரையை நாங்கள் பலகாலமாக செய்து வருகிறோம், என்று
அவர்களும் கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் இப்போது ஞான சகிதமாக
கூறுகிறீர்கள், நாங்கள் கல்பம்-கல்பமாக இந்த யாத்திரை
செய்கிறோம். பாபா தான் வந்து இந்த யாத்திரையை கற்றுக்
கொடுக்கின்றார். அவர்கள் நான்கு ஸ்தலங்களுக்கு பிறவி-பிறவிகளாக
யாத்திரை செல்கிறார்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால்
நீங்கள் தூய்மையாகி விடுவீர்கள் என்பதை எல்லையற்ற தந்தை
கூறுகின்றார். இப்படி மற்றவர்கள் யாரும் ஒருபோதும்
யாத்திரையின் மூலம் நீங்கள் தூய்மையாவீர்கள் என்று
சொல்லமாட்டார்கள். மனிதர்கள் யாத்திரை செல்கிறார்கள் என்றால்
அந்த சமயத்தில் தூய்மையாக இருக்கிறார்கள், இன்றைக்கு அங்கேயும்
கூட அசுத்தம் இருக்கிறது, தூய்மையாக இருப்பதில்லை. இந்த ஆன்மீக
யாத்திரையைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்கு
இப்போது பாபா கூறியுள்ளார் - இந்த நினைவு யாத்திரை உண்மையான
தாகும். அந்த யாத்திரையில் சுற்ற செல்கிறார்கள் பிறகு அப்படியே
தான் இருக்கிறார்கள். வாஸ்கோடகாமா உலகத்தைச் சுற்றியதைப் போல்
சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். நாலாபுறமும் சுற்றினோம்...
இருந்தாலும் எப்போதும் விலகியே இருக்கிறோம், என்று பாடல் கூட
இருக்கிறது அல்லவா. பக்திமார்க்கத்தில் யாரும் சந்திக்க வைக்க
முடியாது. யாருக்கும் பகவான் கிடைக்க வில்லை.
பகவானிடத்திலிருந்து விலகியே இருக்கிறார்கள். சுற்றி விட்டு
வந்து மீண்டும் வீட்டிற்கு வந்து 5 விகாரங்களில் சிக்கிக்
கொள்கிறார்கள். அந்த யாத்திரைகள் அனைத்தும் பொய்யானதாகும். இது
புருஷோத்தம சங்கமயுகம் இப்போது தான் பாபா வந்துள்ளார் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஒரு நாள் பாபா
வந்துள்ளார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்வார்கள். கடைசியாக
பகவான் கிடைப்பார், ஆனால் எப்படி? இதை யாரும் தெரிந்திருக்க
வில்லை. நாம் ஸ்ரீமத்படி இந்த பாரதத்தை மீண்டும்
சொர்க்கமாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை இனிமையிலும் இனிமையான
குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். நீங்கள் பாரதத்தின் பெயரைத்
தான் எடுப்பீர்கள். ஏனெனில் அந்த சமயத்தில் வேறு எந்த தர்மமும்
இல்லை. முழு உலகமும் தூய்மையாகி விடுகிறது. இப்போது நிறைய
தர்மங்கள் இருக்கின்றன. பாபா வந்து உங்களுக்கு முழு மரத்தின்
ஞானத்தைக் கூறுகின்றார். உங்களுக்கு நினைவூட்டுகின்றார்.
நீங்கள் தேவதைகளாக இருந்தீர்கள், பிறகு சத்திரியர்களாக, பிறகு
வைசியர்களாக, பிறகு சூத்திரர்களாகவும் ஆனீர்கள். இப்போது
நீங்கள் சூத்திரனிலிருந்து பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள். இந்த
ஹம் சோஹம் என்பதன் அர்த்தத்தை பாபா எவ்வளவு சகஜமாக புரிய
வைக்கின்றார். ஓம் என்றால் நான் ஆத்மா பிறகு ஆத்மாக்களாகிய
நாம் இப்படி சக்கரத்தைச் சுற்றுகிறோம். அவர்கள் ஆத்மாக்களாகிய
நாங்கள் பரமாத்மாவாகிறோம், பரமாத்மாவிலிருந்து ஆத்மாக்களாகிய
நாங்கள் வருகிறோம் என்று சொல்லி விடுகிறார்கள். நாம் தான்
அது(ஹம் சோ) என்பதின் யதார்த்தமான அர்த்தத்தை தெரிந்தவர்
யாரும் இல்லை. எனவே பாபா கூறுகின்றார், இந்த மந்திரம்
இருக்கிறதே(மன்மனாபவ) இதை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்.
சக்கரம் புத்தியில் இல்லையென்றால் எப்படி சக்கரவர்த்தி ராஜாவாக
ஆக முடியும்? ஆத்மாக்களாகிய நாம் இப்போது பிராமணர்களாக
இருக்கிறோம், பிறகு நாம் பிராமணனிலிருந்து தேவதைகளாக ஆவோம்.
இதை நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சென்று கேளுங்கள், யாரும்
சொல்ல மாட்டார்கள். அவர்கள் 84-பிறவியின் அர்த்தத்தைக் கூட
புரிந்து கொள்வதில்லை. பாரதத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி
பாடப்பட்டுள்ளது. இது சரியே ஆகும். சதோபிரதானம், சதோ, ரஜோ,
தமோ, சூரியவம்சத்தவர், சந்திரவம்சத்தவர், வைசிய வம்சத்தவர்...
இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும்
தெரிந்திருக்கிறது. விதையான பாபாவைத் தான் ஞானக்கடல் என்று
சொல்லப்படுகிறது. அவர் இந்த சக்கரத்தில் வருவதில்லை. நாம்
ஜீவாத்மாவிலிருந்து பரமாத்மா ஆகி விடுகின்றோம் என்பது
கிடையாது. பாபா அவருக்குச் சமமாக ஞானம் நிறைந்தவர்களாக
மாற்றுகின்றார். அவருக்குச் சமமாக கடவுளாக மாற்றுவதில்லை. இந்த
விசயங்களை மிகவும் நல்ல விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும்,
அப்போது தான் புத்தியில் சக்கரம் சுற்ற முடியும், அதனுடைய
பெயர் சுயதரிசன சக்கரம் என்று வைக்கப்பட்டுள்ளது. நாம் எவ்வாறு
84 பிறவிகளின் சக்கரத்தில் வருகிறோம் என்பதை புத்தியின் மூலம்
நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இதில் அனைத்தும் வந்து
விடுகிறது. நேரமும் வருகிறது, வர்ணங்களும் வருகிறது,
வம்சாவழியும் தலை முறை என்பதும் வந்து விடுகிறது.
இப்போது குழந்தைகளாகிய
உங்களுடைய புத்தியில் இந்த ஞானம் முழுவதும் இருக்க வேண்டும்.
ஞானத்தின் மூலம் தான் உயர்ந்த பதவி கிடைக்கிறது. ஞானம்
இருந்தால் மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள். உங்களின் மூலம்
படிவங்கள் எதுவும் நிரப்பப் படுவதில்லை. அந்த பள்ளிகளில் தேர்வு
இருக்கிறது எனும்போது கேள்வித் தாள்கள் வெளி நாடுகளிலிருந்து
வருகிறது. யார் வெளி நாடுகளில் படிப்பார்களோ, அவர்களுக்கு
அங்கேயே தேர்வு முடிவுகள் வந்து விடும். அதிலும் கூட சில
உயர்ந்த கல்வி அதிகாரி அந்த தேர்வு தாள்களை சோதிப்பார்.
உங்களுடைய தேர்வு தாள்களை யார் சோதிப்பார்? நீங்கள் தாங்களே
செய்வீர்கள். உங்களுக்கு என்னவாக ஆக வேண்டுமோ, அப்படி ஆக்கிக்
கொள்ளுங்கள். முயற்சியின் மூலம் எப்படி ஆக வேண்டுமோ அந்த பதவியை
பாபாவிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். கண்காட்சி போன்றவற்றில்
குழந்தைகள் கேட்கிறார்கள் அல்லவா, நீங்கள் என்னவாக ஆவீர்கள்?
தேவதைகளாக ஆவீர்களா, வக்கீலாக ஆவீர்களா... என்னவாக ஆவீர்கள்?
எந்தளவிற்கு தந்தையை நினைவு செய்வீர்களோ, சேவை செய்வீர்களோ
அந்தளவிற்கு பலன் கிடைக்கும். யார் நல்ல விதத்தில் பாபாவை
நினைவு செய்கிறார்களோ அவர்கள், நாம் சேவையும் செய்ய வேண்டும்
என்று புரிந்து கொள்கிறார்கள். பிரஜைகளை உருவாக்க வேண்டும்
அல்லவா! இது இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. எனவே
அதில் அனைவரும் வேண்டும். அங்கே மந்திரிகள் இருப்பதில்லை.
யாருக்கு புத்தி குறைவாக இருக்கிறதோ, அவர்களுக்குத் தான்
மந்திரிகள் அவசியமாகும். அங்கே உங்களுக்கு வழி சொல்வதற்கான
அவசியம் இருப்பதில்லை. பாபாவிடம் ஸ்தூல விசயங்களுக்கு வழி
கேட்கிறார்கள், பணத்தை என்ன செய்வது? எப்படி தொழில் செய்வது
என்று கேட்கிறார்கள்? இந்த உலகாய விசயங்களை பாபாவிடம் கொண்டு
வராதீர்கள் என்று பாபா கூறுகின்றார். மனவெறுப்படைந்து
விடக்கூடாது என்று அறிவுரை வழங்கி விடுகிறார். இது ஒன்றும்
என்னுடைய வேலை இல்லை. நீங்கள் எவ்வாறு உலகத்திற்கு எஜமானர்களாக
ஆவது, என்று உங்களுக்கு வழி சொல்வது என்னுடைய ஈஸ்வரிய
தொழிலாகும். உங்களுக்கு ஸ்ரீமத் கிடைத்திருக்கிறது. மற்றவை
அனைத்தும் அசுர வழியாகும். சத்யுகத்தில் ஸ்ரீமத் என்று
சொல்லலாம். கலியுகத்தில் அசுர வழியாகும். அந்த இடமே
சுகதாமமாகும். அங்கு நீங்கள் திருப்தியாக-குஷியாக
இருக்கிறீர்களா? உடம்பு சரியாக இருக்கிறதா? என்றெல்லாம்
கேட்கமாட்டார்கள். இந்த வார்த்தைகள் அங்கே இருக்காது. இவை இங்கே
கேட்கப்படுகின்றன. எந்த கஷ்டமும் இல்லையே? மகிழ்ச்சியாக
இருக்கிறீர்களா? இதில் கூட நிறைய விசயங்கள் வந்து விடுகின்றன.
அங்கு துக்கமே இல்லை, விசாரிப்பதற்கு. இந்த உலகமே துக்கம்
நிறைந்ததாகும். உண்மையில் உங்களிடம் யாரும் கேட்க முடியாது.
மாயை விழ வைக்கக் கூடியது தான் இருந்தாலும் கூட பாபா
கிடைத்திருக்கிறார் அல்லவா. என்ன நீங்கள் குசலம்
விசாரிக்கிறீர்கள்? என்று நீங்கள் கேட்பீர்கள்! நாங்கள்
ஈஸ்வரனின் குழந்தைகள், எங்களை என்ன குசலம் விசாரிக்கிறீர்கள்.
தூரத்தில் பிரம்மத்தில் இருப்பவரைப் பற்றி கவலை இருந்தது, அவர்
கிடைத்து விட்டார், பிறகு எதைப்பற்றி கவலை! நாம் யாருடைய
குழந்தைகள்! என்பதை எப்போதும் நினைவு செய்ய வேண்டும். இந்த
ஞானம் கூட புத்தியில் இருக்க வேண்டும் - நாம் தூய்மையாக ஆகி
விட்டோம் என்றால் பிறகு சண்டை ஆரம்பமாகி விடும். எனவே எப்போதும்
யார் உங்களிடம் நலமாக இருக்கிறீர்களா என்று கேட்டாலும்,
சொர்க்கத்தின் இராஜ்யத்தையே கொடுக்கக் கூடிய தந்தை
கிடைத்திருக்கிறார், அவர் எங்களை அந்தளவிற்கு தகுதியானவர்களாக
ஆக்குகின்றார் எனும்போது எங்களுக்கு என்ன கவலை இருக்கிறது என்று
சொல்லுங்கள். ஈஸ்வரனுடைய குழந்தைகளுக்கு என்ன கவலை இருக்கிறது!
அங்கே தேவதைகளுக்கும் கூட கவலை இல்லை. தேவதைகளுக்கு மேலே
ஈஸ்வரன் இருக்கிறார். எனவே ஈஸ்வரனுடைய குழந்தைகளுக்கு என்ன கவலை
இருக்க முடியும். பாபா நமக்கு படிப்பிக்கின்றார். பாபா
நம்முடைய ஆசிரியராக இருக்கின்றார், சத்குருவாக இருக்கின்றார்.
பாபா நமக்கு கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிறார், நாம்
கிரீடதாரிகளாக ஆகிக் கொண்டிருகிறோம். நமக்கு உலக கிரீடம் எப்படி
கிடைக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா கிரீடம்
வைப்பதில்லை. சத்யுகத்தில் தந்தை தன்னுடைய கிரீடத்தை தன்னுடைய
குழந்தைகளுக்கு வைக்கின்றார் என்பதையும் நீங்கள்
தெரிந்துள்ளீர்கள், இதனை ஆங்கிலத்தில் கிரௌன் பிரின்ஸ்(பட்டத்து
இளவரசன்) என்று சொல்லப்படுகிறது. இங்கே தந்தையின் கிரீடம்
குழந்தைக்கு கிடைக்கும் வரை குழந்தைக்கு ஆர்வம் இருக்கும்,
தந்தை இறந்தால் கிரீடம் நமக்கு வரும். இளவரசனிலிருந்து மகாராஜா
ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அங்கே இப்படிப்பட்ட விசயம்
நடப்பதில்லை. நேரத்திற்கு விதிப்படி தந்தை குழந்தைகளுக்கு
கிரீடத்தை கொடுத்து விட்டு பிறகு ஒதுங்கிக் கொள்கிறார். அங்கே
வானப்பிரஸ்தத்தை பற்றிய விவாதம் நடப்பதில்லை. குழந்தைகளுக்கு
மாளிகை போன்றவற்றை உருவாக்கிக் கொடுக்கிறார்கள், அனைத்து
ஆசைகளும் பூர்த்தியாகி விடுகிறது. சத்யுகத்தில் சுகமோ சுகம்
என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். நடைமுறையின் அந்த
சுகத்தை அங்கு சென்றால் அடைய முடியும். சொர்க்கத்தில் என்ன
நடக்கும் என்பதை நீங்கள் தான் அறிவீர்கள்? ஒரு சரீரத்தை விட்டு
விட்டு பிறகு எங்கே செல்வீர்கள்? இப்போது பாபா உங்களுக்கு
நடைமுறையில் படிப்பித்துக் கொண்டிருக்கிறார். நாம் உண்மையிலும்
உண்மையான சொர்க்கத்திற்குச் செல்வோம் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். நாங்கள் சொர்க்கத்திற்குச் செல்கிறோம் என்று
அவர்கள் சொல்லி விடுகிறார்கள், சொர்க்கம் என்று எதை
சொல்லப்படுகிறது என்பது கூட தெரியாது. பிறவி-பிறவிகளாக இந்த
அஞ்ஞான விசயங்களைக் கேட்டு வருகிறார்கள், இப்போது பாபா
உங்களுக்கு சத்தியமான விசயங்களைக் கூறுகின்றார். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எப்போதும் திருப்தியாக, குஷியாக இருப்பதற்கு பாபாவின்
நினைவில் இருக்க வேண்டும். படிப்பின் மூலமாக தங்களுக்கு
இராஜ்யத்தின் கிரீடத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
2) ஸ்ரீமத்படி பாரதத்தை சொர்க்கமாக்கும் சேவை செய்ய வேண்டும்.
எப்போதும் ஸ்ரீமத்திற்கு மதிப்பு வைக்க வேண்டும்.
வரதானம்:-
சம்பந்தம் மற்றும் உறவு மூலம்
மனதினுடைய சக்தியின் பிரத்யட்சத்தாவின் சான்றைப்
பார்க்கக்கூடிய சூட்சும சேவாதாரி ஆகுக.
எவ்வாறு பேச்சின் சக்தி மற்றும்
கர்மத்தின் சக்தி ஆகிய இரண்டு சக்திகளுடைய பிரத்யட்ச சான்று
தெரிகிறதோ, அவ்வாறு அனைத்தையும் விட சக்தி வாய்ந்த அமைதி
சக்தியின் பிரத்யட்ச சான்றை பார்ப்பதற்காக பாப்தாதாவுடன்
நிரந்தரமான தெளிவான சம்பந்தம் மற்றும் உறவு இருக்க வேண்டும்,
இதையே யோகபலம் என்று கூறப்படுகிறது. அத்தகைய யோகபலம் உடைய
ஆத்மாக்கள், ஸ்தூலத்தில் தொலைவில் இருக்கும் ஆத்மாவிற்கு
எதிரில் இருப்பது போன்ற அனுபவம் செய்விக்க முடியும். ஆத்மாக்களை
அழைத்து அவர்களை மாற்றம் (பரிவர்த்தனை) செய்ய முடியும். இதுவே
சூட்சும சேவையாகும். இதற்காக ஒருநிலைப்படுத்தக்கூடிய (ஏகாக்ரதா)
சக்தியை அதிகரியுங்கள்.
சுலோகன்:-
தனது அனைத்து பொக்கிசங்களையும்
வெற்றிகரமானதாக ஆக்குபவர்களே மகாதானி ஆத்மா ஆவார்கள்.
ஓம்சாந்தி