09.01.2021 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! எல்லையற்ற
தந்தையை நினைவு செய்ய வேண்டும் - இது (குப்தமான) மறைமுகமான
விசயமாகும், நினைவின் மூலம் நினைவு கிடைக்கிறது, யார் நினைவு
செய்வதில்லையோ, அவர்களை பாபாவும் எப்படி நினைவு செய்வார்.
கேள்வி:-
சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய
நீங்கள் எந்த படிப்பை படிக்கின்றீர்கள் அது முழு கல்பத்திலும்
படிப்பிக்கப்படுவதில்லை?
பதில்:-
வாழ்ந்து கொண்டே
சரீரத்திலிருந்து விடுபடுவது அதாவது (வாழ்ந்து கொண்டே)
இறப்பதற்கான படிப்பை இப்போது படிக்கின்றீர்கள் ஏனென்றால்
நீங்கள் கர்ம பந்தனங்களில் இருந்து விடுபட்டவராக (கர்மாதீத்)
ஆக வேண்டும். மற்றபடி எதுவரை சரீரத்தில் இருக்கிறீர்களோ, அதுவரை
கர்மம் செய்யத் தான் வேண்டும். சரீரம் இல்லை என்றால் தான் மனம்
கூட செயல்படாமல் இருக்கும் ஆகையினால் மனதை வென்றவர்கள் உலத்தை
வென்றவர்கள் அல்ல, ஆனால் மாயையை வென்றவர்கள் உலகத்தை
வென்றவர்களாவர்.
ஓம் சாந்தி.
பாபா வந்து குழந்தைகளுக்குப்
புரிய வைக்கின்றார், ஏனென்றால் எதுவும் தெரியாதவர்களுக்குத்
தான் கல்வி கற்பிக்கப்படுகிறது என்பதை குழந்தைகள்
தெரிந்துள்ளார்கள். எல்லையற்ற தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்த
பகவான் வருகின்றார் என்றால் யாருக்கு கற்பிப்பார்? கண்டிப்பாக
யார் உயர்ந்ததிலும் உயர்ந்த முற்றிலும் எதுவும் புரியாதவர்களாக
இருப்பார்களோ அவர்களுக்கே ஆகும், ஆகையினால் தான் வினாச
காலத்தில் அன்பற்ற புத்தி என்று சொல்லப்படுகிறது. எப்படி
அன்பற்ற புத்தியுடையவர்களாக ஆகி விட்டார்கள்? 84 லட்சம்
பிறவிகள் என்று எழுதப்பட்டிருக்கிறது அல்லவா! எனவே பாபாவையும்
கூட 84 லட்சம் பிறவிகளுக்கு கொண்டு சென்று விட்டார்கள்.
பரமாத்மா நாய், பூனை, ஜீவ-ஜந்துக்களில் இருக்கின்றார் என்று
சொல்லி விட்டார்கள். இதை இரண்டாவது பாயிண்டாக புரிய வைக்க
வேண்டும் என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்படுகிறது. யாரவது
புதியவர்கள் வந்தால் அவர்களுக்கு முதல்-முதலில்
எல்லைக்குட்பட்ட மற்றும் எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தையின்
அறிமுகத்தை அளிக்க வேண்டும் என்று பாபா புரிய வைக்கின்றார்.
அவர் எல்லைக்கு அப்பாற்பட்ட பெரிய பாபா மற்றும் இவர் (பிரம்மா)
எல்லைக்குட்பட்ட சிறிய அப்பா ஆவார். எல்லையற்ற தந்தை என்றால்
எல்லையற்ற ஆத்மாக்களின் தந்தையாவார். பிரம்மா பாபா
எல்லைக்குட்பட்ட தந்தை ஜீவாத்மாக்களின் தந்தையாகி விட்டார்.
அவர் சிவபாபா அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாவார். இந்த
ஞானத்தைக் கூட அனைவரும் ஒரே மாதிரி தாரணை செய்ய முடியாது. சிலர்
1 சதவீதம் தாரணை செய்கிறார்கள் என்றால் சிலர் 95 சதவீதம் தாரணை
செய்கிறார்கள். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும்.
சூரியவம்ச இராஜ்யம் இருக்கும் அல்லவா. ராஜா-ராணி எப்படியோ
அப்படியே பிரஜைகளும் இருப்பர். இது புத்தியில் வருகிறது அல்லவா.
பிரஜைகளில் அனைத்து விதமான மனிதர்களும் இருக்கிறார்கள்.
பிரஜைகள் என்றால் பிரஜைகளே. இதுவும் ஒரு கல்வி என்று பாபா
புரிய வைக்கின்றார். தங்களுடைய புத்தியின் படி ஒவ்வொருவரும்
படிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவருடைய நடிப்பு
கிடைத்திருக்கிறது. கல்பத்திற்கு முன்பு யார் எவ்வளவு தாரணை
செய்திருந்தார்களோ அந்தளவிற்கு இப்போதும் தாரணை செய்கிறார்கள்.
படிப்பு ஒருபோதும் மறைந்திருக்க முடியாது. படிப்பின்படி தான்
பதவி கிடைக்கிறது. இன்னும் கொஞ்சம் போனால் தேர்வு நடந்தே ஆகும்,
என்று பாபா புரிய வைக்கின்றார். தேர்வு நடக்காமல் தேர்ச்சி
என்பது நடக்க முடியாது. கடைசியில் அனைத்தும் தெரியும். ஆனால்
இப்போது கூட நாம் எந்த பதவியை அடைவதற்கு தகுதியானவர்கள் என்று
புரிந்து கொள்ள முடியும். வெட்கப்பட்டுக் கொண்டு அனைவரோடும்
சேர்ந்து கையை உயர்த்தி விடுகிறார்கள். நாம் எப்படி லஷ்மி -
நாராயணனாக ஆக முடியும் என்று மனதில் புரிந்து கொள்ளவும்
செய்கிறார்கள்! இருந்தாலும் கையை உயர்த்தி விடுகிறார்கள்.
புரிந்து கொண்டே கையை உயர்த்தி விடுவதை கூட அஞ்ஞானம் என்றே
சொல்லலாம். எவ்வளவு அஞ்ஞானமாக இருக்கிறது, என்பதை பாபா உடனே
புரிந்து கொள்கிறார். இதைவிட அந்த மாணவர்களுக்கு புத்தி
இருக்கிறது. நாம் பட்டம் பெறுவதற்கு தகுதியானவர்கள் இல்லை,
தேர்ச்சி பெற மாட்டேன் என்று புரிந்து கொள்கிறார்கள். இதைவிட
அந்த அஞ்ஞானிகள் நல்லவர்கள், அவர்கள் டீச்சர் என்ன
படிப்பிக்கின்றாரோ அதில் நாம் எவ்வளவு மதிப்பெண்கள் எடுப்போம்
என்று புரிந்து கொள்கிறார்கள். நாங்கள் மதிப்புடன் தேர்ச்சி
பெறுவோம் என்றால் சொல்வார்கள். எனவே இங்கு அந்தளவிற்கு கூட
புத்தி இல்லை என்று நிரூபணமாகிறது. அதிக தேக-அபிமானம்
இருக்கிறது. நீங்கள் லஷ்மி - நாராயணனாக ஆக வந்துள்ளீர்கள்
என்றால் நடத்தையும் மிக நன்றாக இருக்க வேண்டும் அல்லவா. சிலர்
வினாச காலத்தில் அன்பற்ற புத்தியுடையவர்களாக இருக்கிறார்கள்
ஏனென்றால் விதிப்படி அன்பு இல்லை, எனும்போது அவர்களுடைய நிலை
என்னவாகும். உயர்ந்த பதவியை அடைய முடியாது.
வினாச காலத்தில் அன்பற்ற புத்தி
என்பதின் அர்த்தம் என்ன என்பதை பாபா அமர்ந்து குழந்தைகளாகிய
உங்களுக்கு புரிய வைக்கின்றார் - குழந்தைகளே முழுமையாக புரிந்து
கொள்ளவில்லை என்றால் மற்றவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள்.
எந்த குழந்தைகள் நாம் சிவபாபாவின் குழந்தைகள் என்று புரிந்து
கொள்கிறார்களோ அவர்களே முழுமையானஅர்த்தத்தைப் புரிந்து
கொள்வதில்லை. பாபாவை நினைவு செய்ய வேண்டும் என்பது மறைமுகமான
விசயமாகும். படிப்பு மறைமுகமானது இல்லை அல்லவா. படிப்பில்
வரிசைக்கிரமம் இருக்கிறது. அனைவரும் ஒரே மாதிரி படிப்பார்களா
என்ன. இவர்கள் இன்னும் குழந்தைகள் என்று பாபா புரிந்து
கொள்கிறார். இப்படிப்பட்ட பாபாவை மூன்று, நான்கு மாதங்கள் கூட
நினைவே செய்வதில்லை. அவர்களுடைய கடிதம் வரும் வரை நினைவு
செய்கிறார்களா இல்லையா என்பது எப்படி தெரியும்? பிறகு அந்த
கடிதத்தில் இந்த-இந்த ஆன்மீக சேவை செய்கின்றேன் என்று சேவை
செய்திகளும் வர வேண்டும். நிரூபணம் வேண்டும் அல்லவா. அப்படி
தேக-அபிமானம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள், ஒருபோதும்
நினைவும் செய்வதில்லை, சேவையின் நிரூபணத்தையும் காட்டுவதில்லை.
இன்னார் வந்தார் அவருக்கு புரிய வைத்தேன் என்று சிலர் செய்தி
எழுது கிறார்கள் எனும்போது பாபாவும் குழந்தை உயிருடன்
இருக்கிறது என்று புரிந்து கொள்கிறார். சேவையின் செய்திகளை
சரியாக கொடுக்கின்றனர். சிலர் 3-4 மாதங்கள் வரை கடிதம் எழுதுவதே
இல்லை. செய்தி எதுவும் இல்லை என்றால் இறந்து விட்டார் அல்லது
நோயுற்றிருக்கிறார் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. நோயுற்ற
மனிதர்கள் கடிதம் எழுத முடியாது. என்னுடைய உடல்நிலை
சரியில்லாமல் இருந்தது ஆகையினால் தான் கடிதம் எழுதவில்லை
என்றும் சிலர் எழுதுகிறார்கள். சிலர் நோயுறுவதும் இல்லை,
செய்தியும் சொல்வதில்லை. தேக-அபிமானம் இருக்கிறது. பிறகு
பாபாவும் யாரை நினைவு செய்வார். நினைவின் மூலம் தான் தந்தையின்
நினைவுடன் தொடர்பு கிடைக்கிறது, ஆனால் தேக- அபிமானம் இருக்கிறது.
என்னை சர்வவியாபி என்று சொல்லி 84 இலட்சத்தை விடவும் அதிக
பிறவிகளில் கொண்டு போய் விட்டார்கள் என்று பாபா வந்து புரிய
வைக்கின்றார். மனிதர்களுடைய புத்தியை கல்லுபுத்தி என்று
சொல்லப்படுகிறது. பகவானை கல்லிலும்-முள்ளிலும் இருக்கின்றார்
என்று சொல்லி விட்டார்கள். எனவே இது எல்லையற்ற நிந்தனையாகி
விட்டது அல்லவா. ஆகையினால் பாபா கூறுகின்றார், என்னை எவ்வளவு
நிந்தனை செய்கிறார்கள். நீங்கள் இப்போது வரிசைக்கிரமமாக
புரிந்து கொண்டீர்கள். நீங்கள் வந்தீர்கள் என்றால் நாங்கள்
பலியாவோம், தங்களை வாரிசாக்குவோம் என்று பக்தி மார்க்கத்தில்
பாடுகிறார்கள். கல்லிலும்-முள்ளிலும் இருக்கின்றார் என்று
சொல்வது வாரிசாக்குவதாகுமா. எவ்வளவு நிந்தனை செய்கிறார்கள்,
அதனால் தான் பாபா கூறுகின்றார் யதா யதாஹி... குழந்தைகளாகிய
நீங்கள் இப்போது பாபாவை தெரிந்துள்ளீர்கள் எனும்போது பாபாவை
எவ்வளவு மகிமை பாடுகிறீர்கள். சிலர் மகிமை என்ன, நினைவு செய்து
இரண்டு வார்த்தைகள் கூட ஒருபோதும் எழுதுவதில்லை. தேக-அபிமான
முடையவர்களாக ஆகியுள்ளார்கள். நமக்கு தந்தை கிடைத்திருக்கிறார்,
நம்முடைய தந்தை நமக்கு கற்கின்றார் என்று குழந்தைகளாகிய நீங்கள்
புரிந்து கொள்கிறீர்கள். பகவானுடைய மகாவாக்கியம் அல்லவா. நான்
உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றேன். உலக இராஜ்யம்
எப்படி கிடைக்கும் என்று உங்களுக்கு இராஜயோகம் கற்றுக்
கொடுக்கின்றேன். நாம் உலக இராஜ்யத்தை பெறுவதற்காக எல்லையற்ற
தந்தையிடம் கல்வி கற்க்கின்றோம் என்ற போதை இருந்தது என்றால்
குஷி வந்து விடும். கீதையையும் படிக்கிறார்கள் ஆனால் சாதாரண
புத்தகத்தைப் படிப்பதைப் போல் படிக்கிறார்கள். கிருஷ்ண
பகவானுடைய மகாவாக்கியம் - இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றேன்,
அவ்வளவு தான். அந்தளவிற்கு புத்தியோகமோ அல்லது குஷியோ
இருப்பதில்லை. கீதை படிக்கக்கூடியவர்களிடத்திலோ அல்லது
சொல்பவர்களிடத்திலோ அந்தளவிற்கு குஷி இருப்பதில்லை. கீதையை
படித்து முடித்துவிட்டு தொழிலுக்குச் சென்று விடுகின்றனர்
அவ்வளவு தான். எல்லையற்ற தந்தை நமக்கு கற்பிக்கின்றார் என்பது
இப்போது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. வேறு யாருடைய
புத்தியிலும் நமக்கு பகவான் கற்பிக்கின்றார் என்பது வராது. எனவே
முதல்-முதலில் யாராவது வந்தார்கள் என்றால் அவர்களுக்கு இரண்டு
தந்தையின் தத்துவத்தைப் புரிய வைக்க வேண்டும். சொர்க்கமாக
இருந்த பாரதம் இப்போது நரகமாக இருக்கிறது என்று சொல்லுங்கள்.
நாங்கள் சத்யுகத்திலும் இருக்கிறோம், கலியுகத்திலும்
இருக்கிறோம் என்று யாரும் சொல்ல முடியாது. யாருக்கு துக்கம்
கிடைக்கிறதோ அவர்கள் நரகத்தில் இருக்கிறார்கள், யாருக்கும்
சுகம் கிடைக்கிறது என்றால் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்.
இப்படி நிறைய பேர் சொல்கிறார்கள் - துக்கமான மனிதர்கள்
நரகத்தில் இருக்கிறார்கள், நாங்கள் அதிக சுகத்தில் இருக்கிறோம்,
மாட-மாளிகைகள் போன்ற அனைத்தும் இருக்கிறது. வெளியில் பகட்டான
நிறைய சுகத்தை பார்க்கிறார்கள் அல்லவா. சத்யுக சுகம் இங்கே
இருக்க முடியாது என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள்.
சத்யுகத்தை கலியுகம் என்று சொன்னாலும் கலியுகத்தை சத்யுகம்
என்று சொன்னாலும் இரண்டும் ஒன்று தான் என்பது கிடையாது. அப்படி
புரிந்து கொள்பவர்களை அஞ்ஞானிகள் என்றே சொல்ல முடியும். எனவே
முதல்- முதலில் தந்தையின் தத்துவத்தை சொல்ல வேண்டும். பாபா தான்
தன்னுடைய அறிமுகத்தை அளிக்கின்றார். வேறு யாரும்
தெரிந்திருக்கவில்லை. பரமாத்மா சர்வவியாபி என்று சொல்லி
விடுகின்றனர். ஆத்மாவும் பரமாத்மாவும் ரூபத்தில் ஒன்று தான்
என்று நீங்கள் இப்போது சித்திரங்களில் காட்டுகிறீர்கள். அவரும்
ஆத்மா தான் ஆனால் அவரை பரம் ஆத்மா என்று சொல்லப்படுகிறது. அவர்
எப்படி வருகின்றார் என்பதை பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார்.
அனைத்து ஆத்மாக்களும் பரந்தாமத்தில் இருக்கின்றன. இந்த
விசயங்களை வெளியில் உள்ளவர்கள் யாரும் புரிந்து கொள்ள முடியாது.
மொழி கூட மிகவும் சகஜமானதாகும். கீதையில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை
போட்டு விட்டார்கள். கிருஷ்ணர் ஒன்றும் கீதை சொல்வதில்லை. அவர்
என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று அனைவருக்கும் சொல்ல
முடியாது. தேகதாரியின் நினைவினால் பாவங்கள் அழிவதில்லை.
கிருஷ்ண பகவானுடைய மகாவாக்கியம்- தேகத்தின் அனைத்து
சம்மந்தங்களையும் விட்டு விட்டு என்னை மட்டும் நினைவு
செய்யுங்கள் ஆனால் தேகத்தின் சம்மந்தம் கிருஷ்ணருக்கும்
இருக்கிறது மேலும் அவர் சிறிய குழந்தையாக இருக்கிறார் அல்லவா.
இது கூட எவ்வளவு பெரிய தவறாக இருக்கிறது. ஒரு தவறினால் எவ்வளவு
வித்தியாசம் வந்து விடுகிறது. பரமாத்மா சர்வவியாபியாக இருக்க
முடியாது. அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் என்று அவரை
சொல்லப்படுகிறது, பிறகு என்ன அவரும் துர்கதியை அடைகிறாரா?
இவையனைத்தும் சிந்தனை செய்ய வேண்டிய விசயங்களாகும். நேரத்தை
வீணாக்கும் விசயங்கள் அல்ல. எங்களுக்கு நேரம் இல்லை என்று
மனிதர்கள் சொல்கிறார்கள். வந்து கோர்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்
என்று நீங்கள் அழைக்கிறீர்கள், அவர்கள் நேரம் இல்லை என்று
சொல்கிறார்கள். இரண்டு நாட்கள் வருவார்கள் பிறகு நான்கு நாட்கள்
வர மாட்டார்கள்... படிக்கவில்லை என்றால் எப்படி லஷ்மி -
நாராயணனாக ஆக முடியும்? மாயையின் வேகம் எவ்வளவு அதிகமாக
இருக்கிறது. எந்த வினாடி, எந்த நிமிடம் கடந்து செல்கிறதோ அது
அப்படியே திரும்பவும் நடக்கிறது என்று பாபா புரிய வைக்கின்றார்.
எண்ணிலடங்கா முறை திரும்ப நடந்து கொண்டே இருக்கும். இப்போது
பாபாவின் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பாபா பிறப்பு -
இறப்பில் வருவது கிடையாது. முழுமையாக பிறப்பு - இறப்பில் யார்
வருகிறார், யார் வருவதில்லை என்பதின் வேறுபாட்டை
தெளிவுபடுத்தப்படுகிறது. ஒரே ஒரு தந்தையானவர் மட்டுமே பிறப்பு-
இறப்பில் வருவதில்லை. மற்றவர்கள் அனைவரும் வருகிறார்கள்
ஆகையினால் தான் சித்திரங்களும் காட்டப்பட்டிருக்கிறது. பிரம்மா
மற்றும் விஷ்ணு இருவரும் பிறப்பு-இறப்பில் வருகிறார்கள்.
பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மாவாக
நடிப்பில் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவு
என்பதே கிடையாது. இந்த சித்திரங்களை அனைவரும் வந்து
பார்ப்பார்கள் மற்றும் புரிந்து கொள்வார்கள். மிகவும் சகஜமாக
புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். நாம் தான் பிராமணர்களாக
இருக்கிறோம் பிறகு நாம் சத்திரியர்களாக ஆவோம், வைசியர்களாகவும்
பிறகு சூத்திரர்களாக ஆவோம் என்பது புத்தியில் வர வேண்டும்.
பிறகு பாபா வருவார் பிறகு நாம் பிராமணர்களாக ஆகி விடுவோம். இதை
நினைவு செய்தால் கூட சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகிவிடுவீர்கள். .
நிறைய பேருக்கு நினைவு நிற்பதே இல்லை. பிராமணர்களாகிய நீங்கள்
தான் சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகின்றீர்கள். தேவதைகள் அப்படி
ஆவதில்லை. இந்த சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பது ஞானமாகும்,
இந்த ஞானத்தை பெற்றதின் மூலம் அவர்கள் தேவதைகளாகியுள்ளார்கள்.
உண்மையில் எந்த மனிதனும் சுயதரிசன சக்கரதாரி என்று சொல்லிக்
கொள்ள தகுதியானவர்கள் இல்லை. மனிதர்களுடைய உலகம் மரணலோகம்
தனியாக இருக்கிறது. எப்படி பாரதவாசிகளின் பழக்க-வழக்கங்கள்
தனியாக இருக்கிறது, அதுபோல் அனைவருடையதும் தனித்தனியாக
இருக்கிறது. தேவதைகளுடைய பழக்க-வழக்கங்கள் தனிப்பட்டது.
மரணலோகத்தின் மனிதர் களுடைய பழக்க-வழக்கங்கள் தனிப்பட்டது.
இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது, ஆகையினால் தான்
நாங்கள் தூய்மையற்றவர்களாக இருக்கிறோம் என்று அனைவரும்
சொல்கிறார்கள். ஹே பகவான், தூய்மையற்ற உலகத்தில் இருக்கும்
எங்கள் அனைவரையும் தூய்மையாக்குங்கள் என்று சொல்கிறார்கள்.
இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தூய்மையான உலகம்
இருந்தது என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது, அதை சத்யுகம்
என்று சொல்லப்படுகிறது. திரேதாயுகத்தை அப்படி சொல்ல முடியாது.
சத்யுகம் முதல்தரமானது, திரேதாயுகம் இரண்டாம் தரம் என்று பாபா
புரிய வைத்திருக்கிறார். எனவே ஒவ்வொரு விசயத்தையும் நல்ல
விதத்தில் தாரணை செய்ய வேண்டும். யாராவது வந்து கேட்டால்
அதிசயப்பட வேண்டும். சிலர் அதிசயப்படுகிறார்கள். ஆனால் அவர்கள்
முயற்சி செய்வதற்கு நேரம் இருப்பதில்லை. கண்டிப்பாக தூய்மையாக
இருக்க வேண்டும் என்பதை கேட்கிறார்கள். இந்த காம விகாரம் தான்
மனிதர்களை தூய்மையற்றவர்களாக ஆக்குகிறது. இதை வெல்வதின் மூலம்
தான் நீங்கள் உலகத்தை வென்றவர்களாக ஆக முடியும். காம விகாரத்தை
வென்று உலகத்தை வென்றவர்களாக ஆகுங்கள் என்று பாபாவும்
கூறியுள்ளார். மனிதர்கள் மனதை வென்றவர்கள் உலகத்தை வென்றவர்கள்
என்று சொல்லி விட்டார்கள். மனதை வசப்படுத்துங்கள். சரீரத்தில்
இல்லாமல் இருந்தால் தான் மனம் செயல்படாமல் இருக்கும். மற்றபடி
மனம் ஒருபோதும் செயல்படாமல் இருக்காது. கர்மம் செய்வதற்காகவே
தேகம் கிடைத்திருக்கிறது எனும்போது எவ்வாறு கர்மாதீத் நிலையில்
எப்படி இருப்பீர்கள்? பிணம் போன்ற நிலையைத் தான் கர்மாதீத்
என்று சொல்லப்படுகிறது. வாழ்ந்து கொண்டிருக்கும் போதே இறப்பது
என்றால் சரீரத்திலிருந்து விடுபட்ட நிலையாகும். உங்களுக்கும்
கூட சரீரத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை கற்பிக்கின்றார்.
ஆத்மா சரீரத்திலிருந்து தனிப்பட்டதாகும். ஆத்மா பரந்தாமத்தில்
இருக்கக் கூடியதாகும். ஆத்மா சரீரத்தில் பிரவேசிக்கிறது என்றால்
அதை மனிதன் என்று சொல்லப்படுகிறது. கர்மம் செய்வதற்காகவே சரீரம்
கிடைக்கிறது. ஒரு சரீரத்தை விட்டு விட்டால் கர்மம் செய்வதற்கு
ஆத்மா வேறொரு சரீரத்தை எடுக்க வேண்டும். கர்மம் செய்ய
வேண்டியதில்லை எனும்போது தான் சாந்தியாக இருப்பார்கள்.
மூலவதனத்தில் கர்மம் இருப்பதில்லை. சிருஷ்டி சக்கரம் இங்கே தான்
சுற்றுகிறது. பாபாவையும் சிருஷ்டி சக்கரத்தையும் தெரிந்து
கொள்ள வேண்டும், இதைத் தான் ஞானம் என்று சொல்லப்படுகிறது. இந்த
கண்கள் எதுவரை தூய்மையற்றதாக குற்றமுடையதாக இருக்கிறதோ, அதுவரை
இந்த கண்களின் மூலம் தூய்மையான பொருட்கள் தெரிய வரமுடியாது
ஆகையினால் ஞானத்தின் மூன்றாவது கண் வேண்டும். எப்போது நீங்கள்
கர்மாதீத் நிலையை அடைவீர்களோ அதாவது தேவதைகளாக ஆவீர்களோ
அதன்பிறகு இந்த கண்களின் மூலம் தேவதைகளை பார்த்துக் கொண்டே
இருப்பீர்கள். மற்றபடி இந்த சரீரத்தில் இந்த கண்களின் மூலம்
கிருஷ்ணரை பார்க்க முடியாது. மற்றபடி காட்சியை காண்பதின் மூலம்
ஏதும் கிடைக்கிறதா என்ன? அல்பகாலத்திற்கு குஷி இருக்கிறது, ஆசை
பூர்த்தியாகி விடுகிறது. நாடகத்தில் சாட்சாத்காரத்தின்
நடிப்பும் பதிவாகியிருக்கிறது, இதனால் எந்த பலனும்
ஏற்படுவதில்லை. நல்லது!
இனிமையிலும் இனிமையான
காணாமல்போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சரீரத்திலிருந்து தனிப்பட்ட ஆத்மா நான், வாழ்ந்து கொண்டே
இந்த சரீரத்தில் இருக்கின்றேன் சவத்தைப் போல் - இந்த நிலையின்
பயிற்சியின் மூலம் கர்மாத்தீத் நிலையை உருவாக்க வேண்டும்.
2) சேவையின் நிரூபணத்தை அளிக்க வேண்டும். தேக உணர்வை விட்டு
விட்டு தங்களுடைய உண்மையிலும் உண்மையான செய்தியை கொடுக்க
வேண்டும். மதிப்புடன் தேர்ச்சி பெறுவதற்கு முயற்சி செய்ய
வேண்டும்.
வரதானம்:-
அனைத்து கணக்குகள் மற்றும்
உறவுகளை ஒரு தந்தையுடன் வைக்கக்கூடிய டபுள் லைட் ஃபரிஷ்தா ஆகுக.
டபுள் லைட் ஃபரிஷ்தா ஆகுவதற்காக
தேகத்தினுடைய உணர்வில் இருந்தும் கடந்து இருங்கள். ஏனெனில்,
தேக உணர்வு என்பது மண் போன்றதாகும். ஒருவேளை, இதனுடைய சுமை
இருக்கிறது என்றால் அது கூட பாரமான நிலையாகும். பரிஷ்தா என்றால்
தன்னுடைய தேகத்துடன் கூட தொடர்பு இல்லாத நிலையாகும். தந்தையால்
கொடுக்கப்பட்ட இந்த உடல் கூட தந்தைக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது.
தன்னுடைய பொருளை இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டால் அதனுடன்
தன்னுடைய உறவு முடிந்துவிட்டது என்பதாகும். அனைத்து கணக்கு
வழக்குகள், அனைத்து கொடுக்கல் வாங்கல் தந்தையுடன் மட்டும்
இருக்க வேண்டும். மற்ற அனைத்து பழைய கணக்குகள் மற்றும் உறவுகள்
முடிந்துவிட வேண்டும். இத்தகைய முழுமையான பிச்சைக்காரர்களோ (பெக்கர்)
டபுள் லைட் பரிஷ்தாக்கள் ஆவார்கள்.
சுலோகன்:
தன்னுடைய விசேஷத்தன்மைகளை
பயன்பாட்டில் கொண்டு வாருங்கள், அப்பொழுது ஒவ்வொரு அடியிலும்
முன்னேற்றத்தின் அனுபவம் செய்வீர்கள்.
ஓம்சாந்தி