25-01-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

சத்யுகத்தில் உள்ள அனைத்து பொருட்களுமே மிக மிக நல்லதாக இருக்கும் - ஏன்?

பதில்:

ஏனெனில் அங்கே மனிதர்கள் சதோபிரதானமாக இருப்பார்கள். மனிதர்கள் நல்லவர்களாக இருக்கும் போது பொருட்களும் நல்லதாக இருக்கும், மற்றும் மனிதர்கள் கெட்டவர்களாக இருக்கும்போது பொருட்களும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். சதோபிரதான சிருஷ்டி யில் கிடைக்காத பொருளெதுவும் இருக்காது, எதையும் எங்கேயும் தேடி வாங்க வேண்டி யிருக்காது.

ஓம் சாந்தி. பாபா இந்த (பிரம்மாவின்) சரீரத்தின் மூலம் புரிய வைக்கிறார். இதற்கு ஜீவன் (சாகார்) என கூறப்படுகிறது, இதில் ஆத்மாவும் உள்ளது, மேலும் இவருக்குள் பரமபிதா பரமாத்மாவும் இருக்கிறார் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதனை முதன் முதலில் உறுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும், ஆகையால் இவரை தாதா (மூத்த சகோதரர்) எனவும் சொல்கிறோம். குழந்தைகளுக்கு இந்த நிச்சயம் இருக்கிறது. இந்த நிச்சயத்துடனே நினைவு செய்ய வேண்டும். பாபா யாருக்குள் வந்திருக்கிறாரோ அல்லது அவதரித்திருக் கிறாரோ அவர் குறித்து தந்தை சொல்கிறார் - நான் இவருடைய பல பிறவிகளிலும் கடைசி பிறவியிலும் கடைசி காலத்தில் வருகிறேன். இது அனைத்து சாஸ்திரங்களிலும் உயர்வான கீதையின் ஞானம் என குழந்தை களுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் அதாவது உயர்ந்த வழி. உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவானின் உயர்ந்ததிலும் உயர்ந்த வழியாகும். அவருடைய ஸ்ரீமத் படி நீங்கள் மனிதரிலிருந்து தேவதை ஆகிறீர்கள். நீங்கள் கீழான மனிதரிலிருந்து உயர்வான தேவதை ஆகிறீர்கள். இதனால் தான் நீங்கள் வருகிறீர்கள். நான் உங்களை சிரேஷ்டாச்சாரி (உயர்ந்த), நிர்விகாரி (விகாரமற்ற) வழியில் நடக்கும் தேவி-தேவதைகளாக ஆக்குவதற்காக வருகிறேன் என தந்தையும் கூட சொல்கிறார். மனிதரிலிருந்து தேவதை ஆவதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். விகாரம் மிக்க மனிதரிலிருந்து விகாரமற்ற தேவதைகளாக ஆக்குவதற்காக வருகிறார். சத்யுகத் தில் கூட மனிதர்கள் இருக்கின்றனர் ஆனால் தெய்வீக குணமிக்கவர்கள். இப்போது கலியுகத்தில் இருப்பவர்கள் அசுர குணமிக்கவர்கள். முழுவதுமே மனித சிருஷ்டிதான், ஆனால் அது ஈஸ்வரிய புத்தி, இது அசுர புத்தியாகும். அங்கே ஞானம், இங்கே பக்தி. ஞானம் மற்றும் பக்தி வேறு வேறு அல்லவா. பக்தியின் புத்தகங்கள் எத்தனை மற்றும் ஞானத்தின் புத்தகங்கள் எத்தனை? தந்தை ஞானக்கடல் ஆவார். அவரின் புத்தகமும் கூட ஒன்றுதான் இருக்க வேண்டும். தர்மத்தை ஸ்தாபனை செய்பவர்களின் புத்தகமும் ஒன்றுதான் இருக்க முடியும். அவை தார்மீகப் புத்தகம் (மத நூல்) என சொல்லப்படுகின்றன. தார்மீகப் புத்தகம் கீதை ஆகும். ஸ்ரீமத் பகவத் கீதை. முதல் தர்மம் ஆதிசனாதன தேவி தேவதா தர்மம், இந்து தர்மம் அல்ல என்பதையும் குழந்தைகள் அறிவார்கள். கீதையிலிருந்து இந்து தர்மம் தோன்றியது மற்றும் கீதையை உரைத்தவர் கிருஷ்ணர் என மனிதர்கள் புரிந்து கொள்கின்றனர். யாரிடமாவது கேட்டால் பரம்பரை பரம்பரையாக கிருஷ்ணர் இதனை உரைத்தார் என சொல்வார்கள். எந்த சாஸ்திரத்திலும் சிவ பகவானுடைய மகா வாக்கியம் என்று இல்லை. ஸ்ரீமத் கிருஷ்ண பகவானுடைய மகா வாக்கியம் என்று எழுதி விட்டனர், கீதையைப் படித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு இது சகஜமாக புரியும். இந்த கீதையின் ஞானத்தின் மூலம்தான் மனிதரிலிருந்து தேவதை ஆனார்கள் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அதனை தந்தை இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார். இராஜ யோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். தூய்மையையும் கற்பித்துக் கொண்டிருக்கிறார். காமம் மிகப் பெரிய எதிரியாகும், இதனால்தான் நீங்கள் தோல்வி அடைந்தீர்கள். இப்போது மீண்டும் இதன் மீது வெற்றி பெறுவதன் மூலம் நீங்கள் உலகை வென்றவர்களாக அதாவது உலகின் எஜமானராக ஆகிவிடுகிறீர்கள். இது மிகவும் சகஜமானதுதான். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை அமர்ந்து இவர் மூலமாக உங்களை படிப்பிக்கிறார். அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார். பின் இவர் (பிரம்மா) எல்லைக்கப்பாற்பட்ட மனிதர்களின் தந்தை ஆவார். பெயரே பிரஜா பிதா பிரம்மா என்பதாகும். பிரம்மாவின் தந்தை யார் என சொல்லுங்கள் என நீங்கள் யாரிடமாவது கேட்டீர்கள் என்றால் குழம்புவார்கள். பிரம்மா-விஷ்ணு-சங்கர் படைப்புகள் ஆவர். இவர்கள் மூவரின் தந்தை ஒருவர் இருப்பார் அல்லவா. இந்த மூவரின் தந்தை நிராகாரமான சிவன் என நீங்கள் காட்டுகிறீர்கள். பிரம்மா-விஷ்ணு-சங்கர் இவர்களை சூட்சும வதனத்தின் தேவதைகளாக காட்டுகின்றோம். அவர்களுக்கு மேல் இருப்பவர் சிவன். சிவபாபாவின் குழந்தைகளாகிய ஆத்மாக்களுக்கு தம்முடைய சரீரம் இருக்கும் என குழந்தைகள் அறிவார்கள். அவரோ எப்போதும் நிராகாரமான (சரீரமற்ற) பரமபிதா பரமாத்மா ஆவார். நிராகாரமான பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள் நாம் என குழந்தைகளுக்கு தெரிந்துள்ளது. ஆத்மா சரீரத்தின் மூலம் சொல்கிறது - பரமபிதா பரமாத்மா. எவ்வளவு சகஜமான விஷயங்கள். அல்லா மற்றும் ஆஸ்தி என சொல்லப் படுகிறார். கற்பிப்பவர் யார்? கீதையின் ஞானத்தை யார் சொன்னது? நிராகார தந்தை. அவர் மீது கிரீடம் முதலான எதுவும் இல்லை. அவர் ஞானக்கடல், விதை ரூபம், சைதன்யமானவர் (உயிரோட்டமிக்கவர்). நீங்களும் கூட உயிரோட்டமிக்க ஆத்மாக்கள் அல்லவா. முழு மரத்தின் முதல்-இடை- கடைசியை நீங்கள் அறிவீர்கள். தோட்டக்காரர்களாக இல்லை, ஆயினும் எப்படி விதை போடுகிறோம், அதிலிருந்து மரம் வளர்கிறது என புரிந்து கொள்ள முடிகிறது. அது ஜடமான மரமாகும், இது சைதன்யமான உயிரோட்டமுள்ள மரமாகும். உங்களுடைய ஆத்மாவில் ஞானம் இருக்கிறது, வேறு யாருடைய ஆத்மாவிலும் ஞானம் கிடையாது. தந்தை சைதன்யமான மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கிறார். ஆக, மரமும் கூட மனிதர்களுடையதாக இருக்கும். இது சைதன்யமான படைப்பாகும். விதை மற்றும் படைப்பிற்கிடையில் வித்தியாசம் இருக்கும் அல்லவா. மாங்கொட்டையை விதைப்பதன் மூலம் மாமரம் வளர்கிறது, பிறகு எவ்வளவு பெரிதாக ஆகிறது. அதுபோல மனிதரின் விதையிலிருந்து மனிதர்கள் எவ்வளவு அதிகரிக்கின்றனர். ஜடமான விதையில் எந்த ஞானமும் கிடையாது. இவர் சைதன்யமான விதை ரூபமாவார். அவருக்குள் முழு சிருஷ்டி ரூபத்தின் மரத்தின் ஞானம் இருக்கிறது - எப்படி உற்பத்தியாகி, வளர்ந்து பின் வினாசமடைகிறது. தந்தையும் குப்தமாக (மறைமுகமாக) வந்துள்ளார். இந்த மிகப் பெரிய மரம் அழிந்து பின் அடுத்த புதிய மரம் எப்படி வளர்ந்து நிற்கிறது! இது குப்தமானதாகும். உங்களுக்கு ஞானமும் குப்தமானதாக கிடைக்கிறது. தந்தையும் கூட குப்தமாக வந்துள்ளார். இந்த படைப்பின் கன்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது என நீங்கள் அறிவீர்கள். இப்போது இது தூய்மையற்றதாக ஆகிவிட்டது. நல்லது, விதையிலிருந்து முதன் முதலாக முளைத்து வந்த இலைகள் யார்? சத்யுகத்தின் முதல் இலை என கிருஷ்ணரைத்தான் சொல்வோம், லட்சுமி நாராயணரை அல்ல. புதிய இலை சிறியதாக இருக்கும். பிறகு பெரியதாகும். ஆக இந்த விதைக்கு எவ்வளவு மகிமை இருக்கிறது. இது சைதன்யமானது அல்லவா. பிறகு இலைகளும் வெளிப்படு கின்றன. அவைகளின் மகிமை ஏற்படுகிறது. இப்போது நீங்கள் தேவி தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். தெய்வீக குணங்களை தாரணை செய்து கொண்டிருக்கிறீர்கள். நாம் தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும், இவர்களைப் போல் ஆக வேண்டும் என்பதே முக்கியமான விஷயமாகும். சித்திரங்களும் உள்ளன. இந்த படங்கள் இல்லாவிட்டால் புத்தியில் ஞானமே வராது. இந்தப் படங்கள் மிகவும் பயனுள்ளதாகும். பக்தி மார்க்கத்தில் இந்தப் படங்களுக்குப் பூஜை நடக்கிறது, ஞான மார்க்கத்தில் இந்தப் படங்களின் மூலம் நாம் இப்படி ஆக வேண்டும் என ஞானம் கிடைக்கிறது. நாம் இப்படி ஆக வேண்டும் என்று பக்தி மார்க்கத்தில் புரிந்து கொள்வதில்லை. பக்தி மார்க்கத்தில் கோவில்கள் எத்தனை உருவாகின்றன. அனைவரை யும் விட அதிகமான கோவில்கள் யாருடையதாக இருக்கும்? கண்டிப்பாக விதை ரூபமாக இருக்கும் சிவபாபாவுடையதாக இருக்கும். அவருக்குப் பிறகு முதல் படைப்பின் கோவில்கள் இருக்கும். முதல் படைப்பு இந்த லட்சுமி நாராயணர் ஆவர். சிவனுக்குப் பிறகு இவர்களுடைய பூஜை அனைவரையும் விட அதிகமாக நடக்கும். தாய்மார்கள் ஞானம் கொடுக்கின்றனர், அவர் களின் பூஜை நடப்பதில்லை. அவர்கள் கற்பிக்கின்றனர் அல்லவா. தந்தை உங்களுக்கு கற்பிக் கின்றார். நீங்கள் யாருடைய பூஜையும் செய்வதில்லை. கற்பிக்கக் கூடியவரின் பூஜை இப்போது செய்ய முடியாது. நீங்கள் படித்து பின்னர் படிக்காதவராக ஞானமற்றவராக ஆகும்போது பூஜை நடக்கும். நீங்களே தேவி-தேவதைகளாக ஆகிறீர்கள். நம்மை இப்படி ஆக்கக் கூடியவரின் பூஜை முதலில் நடக்கும், பின்னர் வரிசைக்கிரமமாக நமக்கு பூஜை நடக்கும் என நீங்கள்தான் அறிவீர்கள். பிறகு கீழே விழுந்து விழுந்து ஐந்து தத்துவங்களுக்கும் பூஜை செய்யத் தொடங்குகின்றனர். சரீரம் 5 தத்துவங்களால் ஆனது அல்லவா. 5 தத்துவங்களின் பூஜை செய்யுங்கள் அல்லது சரீரத்துக்குச் செய்யுங்கள், எல்லாம் ஒன்றேயாகும். இந்த ஞானம் புத்தியில் உள்ளது. இந்த லக்ஷ்மி நாராயணர் முழு உலகின் எஜமானாக இருந்தனர். இந்த தேவி தேவதைகளின் இராஜ்யம் புதிய சிருஷ்டியில் இருந்தது. ஆனால் அது எப்போது இருந்தது? இது தெரியாது, இலட்சக்கணக்கான வருடங்கள் என சொல்லி விடுகின்றனர். இப்போது லட்சக்கணக்கான வருடங்களின் விஷயம் ஒருபோதும் யாருடைய புத்தியிலும் இருக்க முடியாது. நாம் இன்றிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தவர்களாக இருந்தோம் என்ற நினைவு இப்போது உங்களுக்கு உள்ளது. தேவி தேவதா தர்மத்தவர்கள் பிறகு மற்ற தர்மங்களில் மாறிச் சென்று விட்டனர். இந்து தர்மம் என சொல்ல முடியாது. ஆனால் தூய்மையற்றவர்களாக ஆன காரணத்தால் தம்மை தேவி தேவதைகள் என சொல்வது நன்றாகவே இல்லை. தூய்மையற்றவரை தேவி தேவதைகள் என சொல்ல முடியாது. மனிதர்கள் தூய்மையான தேவதைகளுக்கு பூஜை செய்கின்றனர் எனும்போது கண்டிப்பாக அவர்கள் தூய்மையற்றவர்களாக இருக்கின்றனர், ஆகையால் தூய்மை யானவர்களின் முன்பாக தலை வணங்க வேண்டி இருக்கிறது. பாரதத்தில் குறிப்பாக கன்யாக்களை நமஸ்கரிக்கின்றனர். குமாரர்களை நமஸ்கரிப்பதில்லை. பெண்களை நமஸ்கரிக்கின்றனர். ஆண்களை ஏன் வணங்குவதில்லை? ஏனெனில் இந்த சமயத்தில் ஞானமும் முதலில் மாதர் களுக்கு கிடைக்கிறது. தந்தை இவருக்குள் பிரவேசம் செய்கிறார். இவர் ஞானத்தின் பெரிய நதியாக இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள். ஞான நதியுமாக இருக்கிறார், ஆணாகவும் இருக்கிறார். இவர் அனைத்திலும் பெரிய நதியாக இருக்கிறார். பிரம்மபுத்ரா நதி அனைத்திலும் பெரிய நதியாகும், அது கல்கத்தாவின் பக்கம் கடலில் சென்று கலக்கிறது. அங்கே விழாவும் நடக்கிறது. ஆனால் இது ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு என்பது அவர்களுக்குத் தெரியாது. அது நீர் ஓடும் நதியாகும், அதற்கு பிரம்மபுத்ரா என பெயரிட்டுள்ளனர். அவர்கள் பிரம்மா என ஈஸ்வரனைக் குறிப்பிடுகின்றனர், ஆகையால் பிரம்மபுத்ராவை மிகவும் தூய்மையான நதியாக புரிந்து கொள்கின்றனர். பெரிய நதி எனும்போது அது தூய்மையாகவும் இருக்கும். பதித-பாவன் என கங்கையை அல்ல, உணமையில் பிரம்மபுத்ராவைச் சொல்ல வேண்டும். விழாவும் இதற்குத்தான் கொண்டாடப் படுகிறது. இதுவும் கடல் மற்றும் பிரம்மபுத்ரா நதியின் சங்கமம் ஆகும். பிரம்மாவின் மூலம் எப்படி தத்தெடுப்பது நடக்கிறது என்ற ஆழமான விஷயங்கள் புரிந்து கொள்ள வேண்டியவையாகும். அவை மறைந்து போய் விடுகின்றன. இது முற்றிலும் சகஜமான விஷயமல்லவா.

பகவானுடைய மகா வாக்கியம் - நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுத் தருகிறேன். பிறகு இந்த உலகமே முடிந்து போய் விடும். சாஸ்திரம் முதலான எதுவுமே இருக்காது. பிறகு பக்தி மார்க்கத்தில் இந்த சாஸ்திரங்கள் இருக்கும். ஞான மார்க்கத்தில் சாஸ்திரங்கள் இருப்பதில்லை. இந்த சாஸ்திரங்கள் பரம்பரை பரம்பரையாக நடந்து வருகின்றன என மனிதர்கள் புரிந்து கொள்கின்றனர். ஞானம் கொஞ்சமும் கிடையாது. கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான வருடங்கள் என சொல்லி விட்டனர், ஆகையால் பரம்பரையாக என சொல்லி விடுகின்றனர். இது அஞ்ஞானத்தின் காரிருள் என சொல்லப் படுகிறது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லைக்கப்பாற்பட்ட ஞானம் கிடைக்கிறது. அதன் மூலம் நீங்கள் முதல்-இடை-கடைசியின் இரகசியத்தைப் புரிய வைக்க முடியும். உங்களுக்கு இந்த தேவி தேவதைகளின் வரலாறு புவியியல் முழுவதும் தெரியும். இவர்கள் தூய்மையான இல்லற மார்க்கத்தவர்களாக, பூஜைக்குரியவர்களாக இருந்தனர். இப்போது பூஜாரிகளாக தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளனர். சத்யுகத்தில் தூய்மையான இல்லற மார்க்கம், இங்கே கலியுகத்தில் தூய்மையற்ற இல்லற மார்க்கம் உள்ளது. பிறகு சன்னியாச மார்க்கம் ஏற்படுகிறது. அதுவும் கூட நாடகத்தில் உள்ளது. அது சன்னியாச தர்மம் என சொல்லப்படுகிறது. வீடுவாசலை சன்னியாசம் செய்து விட்டு காட்டிற்குச் சென்று விடுகின்றனர். அது எல்லைக்குட்பட்ட சன்னியாசம். இதே பழைய உலகத்தில்தான் இருக்கின்றனர் அல்லவா. நாம் சங்கமயுகத்தில் இருக்கிறோம், பிறகு புதிய உலகத்திற்குச் செல்வோம் என இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். உங்களுக்கு நாள், கிழமை, வினாடி முதற்கொண்டு அனைத்தும் தெரியும். அந்த மனிதர்கள் கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான வருடங்கள் என சொல்லி விடுகின்றனர், இதனுடைய கணக்கு முழுவதையும் எடுக்க முடியும். இலட்சக்கணக்கான வருடங்களின் விஷயம் என்றால் யாரும் நினைவும் செய்ய முடியாது. தந்தையைப் பற்றி என்ன, எப்படி வருகிறார், என்ன காரியம் செய்கிறார் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் அனைவரின் தொழில், ஜாதகம் என அனைத்தும் அறிவீர்கள். மற்றபடி மரத்தின் இலைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை எண்ண முடியாது. இந்த எல்லைக்கப்பாற்பட்ட சிருஷ்டி ரூபத்தின் மரத்தில் எத்தனை இலைகள் உள்ளன? 5000 வருடங்களில் இவ்வளவு கோடிக்கணக்கில் உள்ளனர். இலட்சக்கணக்கான வருடங்களில் மனிதர்கள் எவ்வளவு கணக்கற்றவர்களாக ஆகி விடுவார்கள். சத்யுகம் இவ்வளவு வருடங்கள், திரேதா இவ்வளவு வருடங்கள், துவாபரம் இவ்வளவு வருடங்கள் என எழுதப்பட்டுள்ளது என பக்தி மார்க்கத்தில் காட்டுகின்றனர். தந்தை அமர்ந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த அனைத்து இரகசியங்களையும் புரிய வைக்கிறார். மாங்கொட்டையைப் பார்க்கும்போது மாமரம் முன்னால் வரும் அல்லவா. இப்போது மனித சிருஷ்டியின் விதை ரூபம் உங்கள் முன்னால் உள்ளது. உங்களுக்கு மரத்தின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார், ஏனென்றால் சைதன்யத்தில் இருக்கிறார் அல்லவா. நம்முடைய இந்த மரம் தலைகீழானது என சொல்கிறார். இவ்வுலகில் இருக்கும் ஜடப் பொருளாகட்டும், சைதன்யமாகட்டும் (அசையும், அசையா) அவையனைத்தின் நடிப்பு மீண்டும் மீண்டும் நடக்கும் என நீங்கள் புரிய வைக்க முடியும். இப்போது எவ்வளவு வளர்ச்சியை அடைந்தபடி உள்ளன. சத்யுகத்தில் இவ்வளவு இருக்க வாய்ப்பில்லை. இன்ன பொருள் ஆஸ்திரேலியாவிலிருந்து, ஜப்பானிலிருந்து வந்தது என சொல்கின்றனர். சத்யுகத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான் முதலானவை இருக்கவில்லை. நாடகத்தின்படி அங்குள்ள பொருட்கள் இங்கே வருகின்றன. முன்னர் அமெரிக்காவிலிருந்து கோதுமை முதலானவை வந்து கொண்டி ருந்தன. சத்யுகத்தில் எங்கிருந்தும் வராது. அங்கே ஒரு தர்மம்தான் இருக்கும், அனைத்து பொருட் களும் நிறைந்திருக்கும். இங்கே தர்மங்கள் அதிகரித்தபடி இருக்கின்றன, ஆக அவைகளுடன் அனைத்து பொருட்களும் குறைந்தபடி இருக்கின்றன. சத்யுகத்தில் எங்கிருந்தும் வாங்குவதில்லை. இப்போது பாருங்கள் எங்கெங்கிருந்தெல்லாம் வாங்குகின்றனர். மனிதர்கள் பிற்காலத்தில் அதிகரித்தபடி இருந்தனர், சத்யுகத்தில் எந்த பொருளுக்கும் பற்றாக்குறை இருப்பதில்லை. அங்குள்ள பொருட்கள் அனைத்தும் சதோபிரதானமாக மிகவும் நன்றாக இருக்கும். மனிதர்களே சதோபிரதானமாக இருப்பர். மனிதர்கள் நல்லவர்களாக இருந்தால் பொருட்களும் நன்றாக இருக்கும். மனிதர்கள் கெட்டவர்களாக இருந்தால் பொருட்களும் நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய வையாய் இருக்கும்.

அறிவியலின் முக்கியமான பொருள் அணுகுண்டுகளாகும். அதன் மூலம் எந்த அளவு வினாசம் ஏற்படும். எப்படி உருவாக்குவபவர்களாக இருப்பர்? உருவாக்கக் கூடிய ஆத்மாவுக்குள் முதலிலிருந்தே நாடகத்தின்படி ஞானம் இருக்கும். சமயம் வரும்போது அவர்களுக்குள் அந்த ஞானம் வரும். யாருக்குள் புத்தி இருக்குமோ அவர்கள்தான் காரியம் செய்வார்கள், மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பார்கள். கல்பம் தோறும் என்ன நடிப்பு நடந்ததோ அதுவே நடந்தபடி இருக்கும். இப்போது நீங்கள் எவ்வளவு ஞானம் நிறைந்தவர்களாக ஆகிறீர்கள், இதனை விட சிறந்த ஞானம் கிடையாது. நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் தேவதைகளாக ஆகி விடுகிறீர்கள். இதனை விடவும் உயர்ந்த ஞானம் எதுவும் கிடையாது. அது மாயையின் ஞானம், அதன் மூலம் வினாசம் ஆகிறது. அவர்கள் (அறிவியலறிஞர்கள்) சந்திரனுக்குச் செல்கின்றனர், ஆராய்ச்சி செய்கின்றனர். உங்களைப் பொறுத்தவரை எதுவும் புதிய விஷயம் அல்ல. இவை யனைத்தும் மாயையின் பகட்டாகும். மிகவும் பகட்டைக் காட்டுகின்றனர். மிகவும் ஆழத்தில் செல்கின்றனர். மிகவும் புத்தியை குழப்பிக் கொள்கின்றனர். கொஞ்சம் அதிசயம் செய்தும் காட்டுகின்றனர். மிகவும் அதிசயம் செய்து காட்டினால் பிறகு நஷ்டம் ஏற்படும். என்னென்ன வெல்லாம் உருவாக்கியபடி இருக்கின்றனர். இதன் மூலம் இது வினாசமாகும் என உருவாக்கு பவர்களுக்குத் தெரியும். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. குப்தமான ஞானத்தை சிந்தனை செய்து மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். தேவதைகளின் படங்களை முன் வைத்தபடி அவற்றை நமஸ்காரம், வந்தனம் செய்வதற்குப் பதிலாக அவர்களைப் போல் தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும்.

2. சிருஷ்டியின் விதைரூபம் மற்றும் அவருடைய சைதன்யமான படைப்பைப் பற்றி புரிந்து கொண்டு ஞானம் நிறைந்தவர் ஆக வேண்டும், இந்த ஞானத்தை விடவும் உயர்வானது எதுவும் இல்லை என்ற போதையில் இருக்க வேண்டும்.

வரதானம்:

பொறுப்புகளை கவனித்துக் கொண்டே ஆகாரி மற்றும் நிராக்காரி நிலையின் பயிற்சியின் மூலம் சாட்சாத்கார மூர்த்தி ஆகுக.

சாகார உலகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்புகளை கவனித்துக் கொண்டிருந்தாலும் கூட ஆகாரி மற்றும் நிராக்காரி மனநிலையை அனுபவம் செய்யவைத்துக் கொண்டே பாபாவை பின்பற்றுங்கள். சாகார ரூபத்தில் (தேகத்தில் இருந்தாலும்) ஃபரிஸ்தாவின் தன்மையை அனுபவம் செய்ய வையுங்கள். யாராவது மிகவும் அசாந்தியாக, மகிழ்ச்சியற்ற பயத்துடன் உங்கள் முன்னால் வந்தாலும் கூட உங்கள் ஒரு பார்வை, உள்ளுணர்வு மற்றும் நினைவின் சக்தி அவர்களை முற்றிலும் அமைதி ஆக்கிவிடும். உடல் உணர்வில் இருப்பார்கள், மேலும் அவ்யக்த மனநிலையை அனுபவம் செய்யும் பொழுது சாட்சாத்கார மூர்த்தி என்று சொல்வார்கள்.

சுலோகன்:

யார் உண்மையான கருணை மனமுடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்களை தேகம் மற்றும் தேக அபிமானம் கவர்ச்சிக்க முடியாது.