நான்கு விஷயங்களிலிருந்து விடுபட்டு இருங்கள்
இன்று பாப்தாதா தனது அனைத்து தாமரை மலரில் அமர்ந்திருக்கும் (கமல ஆசனம்) சிரேஷ்ட மான குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். தாமரை மலரில் ஆசனம் தான் பிராமண ஆத்மாக்களின் சிரேஷ்ட மனநிலையின் அடையாளமாக இருக்கிறது. ஆசனம் நிலையாக இருப் பதற்கான (அமருவதற்கான) சாதனமாகும். பிராமண ஆத்மாக்கள் பற்றற்ற மனநிலையில் நிலைத் திருக்கிறார்கள், ஆகையால் தாமரை மலரில் வீற்றிருப்பவர் என்று கூறப் படுகிறது. பிராமண நிலையிலிருந்து தேவதை ஆகிறார்களோ, அதேபோன்று ஆசனதாரியாக இருக்கும் (பற்றற்ற) நிலையிலிருந்து சிம்மாசனதாரியாக ஆகிறார்கள். அந்தளவு தான் வெகுகாலமாக அல்லது குறுகிய காலத்திற்கு இராஜய சிம்மாசனதாரி ஆகிறார்கள். தாமரை மலரின் ஆசனம் விசேˆமாக பிரம்மா பாபாவிற்கு சமமாக மிகவும் விடுபட்ட மற்றும் மிகவும் அன்பான மனநிலையின் சின்னமாக (அடையாளமாக) இருக்கிறது பிராமண குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை பின்பற்றக் கூடியவர் களாக இருக்கிறீர்கள், ஆகையால் பாபாவிற்கு சமமாக தாமரை மலரில் விற்றிருக்கக் கூடியவர் களாக இருக்கிறீர்கள். மிகவும் தனித்துவமானவர்களின் (விடுபட்டவர்கள்) அடையாளம் - அவர்கள் பாபா மற்றும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள். தனித்துவமானவர்களின் அடையாளம் நாலாப்புறத்திலிருந்தும் விடுபட்டவர்கள்.
1. தனது தேக உணர்விலிருந்து விடுபடுதல் - சாதாரண உலகிய ஆத்மாக்களுக்கு நடந்தாலும், சுற்றினாலும், எந்த காரியம் செய்துக் கொண்டிருந்தாலும் இயல்பாகவே மற்றும் எப்பொழுதுமே தேக உணர்வு இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. நான் உடல் என்பது முயற்சி செய்யாமலே வந்து விடுகிறது, விரும்பவில்லை யென்றாலும் கூட எளிதாகவே தேகத்தின் நினைவில் இருக்கிறோம். அஞ்ஞானி ஆத்மாக்கள் ஆத்ம அபிமானத் திலிருந்து விடுப்பட்டு இருப்பதை போன்று, தாமரை மலரின் ஆசனதாரியான பிராமண ஆத்மாக்கள் கூட இந்த தேக உணர்விலி ருந்து இயல்பாகவே விடுபட்டிருங்கள். ஆத்ம அபிமானியாகவே இருங்கள், சரீரத்தின் உணர்வு தனது பக்கம் ஈர்க்கவே கூடாது. பிரம்மா பாபாவை பாருங்கள், எந்த காரியம் செய்துக் கொண்டி ருந்தாலும் ஃபரிஸ்தா சொரூபத்தில் மற்றும் தேவதை சொரூபத்தில் இயல்பாகவே நினைவில் இருக்கிறது. இயற்கையாகவே ஆத்ம அபிமான நிலையில் சதா நிலைத்திருங்கள்., இதற்கு தான் தேக அபிமானத்திலிருந்து விடுபட்ட நிலை. என்று சொல்லப் படுகிறது. தேக உணர்விலிருந்து விடுபட்டிருப்பது தான் பரமாத்மாவிற்கு அன்பானவர் ஆவது.
2. இந்த தேகத்தின் என்னவெல்லாம் சம்மந்தங்கள் இருக்கிறதோ, பார்வை மூலம், உள்ளுணர்வு மூலம், செயல் மூலம் - அந்த அனைத்திலிருந்தும் விடுபடுவது. தேகத்தின் உறவுகளை பார்த்தாலும் கூட தானாகவே ஆன்மா மற்றும் ஆத்மீக சம்மந்தம் நினைவில் இருக்க வேண்டும். ஆகையால் தீபாவளிக்கு பிறகு சகோதரத்துவ நாளாக கொண்டாட படுகிறது அல்லவா. ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம் மற்றும் வண்ணயமான அழிவற்ற ஓளியாகி (தீபம்) விடுகிறீர்கள். எனவே சகோதரன்-சகோதரன் என்ற சம்மந்தம் ஆகிவிடுகிறது. ஆத்மா என்ற முறையில் சகோதரன் - சகோதரனாகவும், சாகார பிரம்மா வம்சத்தை சேர்ந்த பிராமணன் என்ற முறையில் சகோதரன் - சகோதரி என்ற சம்மந்ததிலும், உயர்ந்த சுத்த சம்மந்தமாக தானாகவே நினைவில் இருக்கிறது. எனவே விடுபட்ட நிலை என்றால் தேகம் மற்றும் தேகத்தின் சம்மந்தத் திலிருந்து விடுபடுவது.
3. தேகத்தின் அழியக்கூடிய பொருட்களிலிருந்தும் கூட விடுபட்டிருப்பது - ஒருவேளை ஏதாவதொரு பொருள் ஏதாவது கர்மேந்திரியத்தை ஈர்க்கிறது (திசை திருப்புகிறது) என்றால், அதாவது பற்றுதல் ஏற்படுகிறது என்றால் அது விடுபட்ட நிலை அல்ல. சம்மந்தத்தில் இருந்து விடுபட்டிருந்தாலும் கூட ஆறுதலாக (அன்பாக) இருக்கிறார்கள், ஆனால் அனைத்து பொருட்களின் பற்றிலிருந்து விடுபட்டிருப்பது - பற்றற்றவர் ஆவதில் இராயலான முறையில் பற்றுதல் இருந்து விடுகிறது. பற்றுதலின் தெளிவான உருவம் ஆசையாகும் என்று சொல்லபட்டிருக்கிறது அல்லவா. இந்த ஆசைகளின் சூட்சமமான, நுட்பமான ரூபம் - நன்றாக இருக்கிறது என்ற உணர்வு. ஆசை என்பது இல்லை, ஆனால் நன்றாக இருக்கிறது - இந்த நுட்பமான ரூபம் நன்றாக என்பதற்கு பதிலாக ஆசையின் ரூபமாக மாறிவிடுகிறது. எனவே இந்த பொருட்கள் குறுகிய கால சுகத்தின் சாதனங்கள் ஈர்க்கவில்லை தானே? என்பதை நல்ல முறையில் சோதனை செய்யுங்கள். ஏதாவதொரு சாதனம் சமயத்தில் கிடைக்கவில்லை என்றால் எளிதாக அதாவது சகஜயோகியின் மனநிலை நிலை தடுமாறவில்லை தானே? எந்தவொரு சாதனத்திற்கும் கட்டுபட்டு, பழக்கத்தினால் அடிமையாகவில்லை தானே? ஏனெனில் இந்த அனைத்து பொருட்களும் அதாவது சாதனங்கள், இயற்கையின் சாதனங்களாக இருக்கிறது. எனவே இயற்கையை வென்றவராகிய நீங்கள், அதாவது இயற்கையின் ஆதாரத்திலிருந்து விடுபட்டு தாமரை மலரின் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பிராமணர்களாக இருக்கிறீர்கள். மாயாவை வென்றவர் ஆவதன் கூடவே இயற்கையை கூட வென்றவர் ஆகிறீர்கள். மாயாவை வென்றவர் ஆகிறீர்கள் என்றால் மாயா அடிக்கடி விதவிதமான ரூபத்தில் சோதனை செய்கிறது. எனவே இயற்கையின் சோதனை தாள் - சாதனங்களின் மூலம் உங்கள் அனைவரையும் குழப்பத்தில் கொண்டு வரவேண்டும் என்று விதவிதமான சோதனை தாள்களை எடுத்து வருகிறதா? எப்படி தண்ணீரின் மூலம். இப்பொழுது இது ஒன்றும் பெரிய சோதனை தாள் கொண்டு வரவில்லை, ஆனால் தண்ணீரின் மூலம் உருவாகியுள்ள பொருட் களினால், அகினியின் மூலம் உருவாகியுள்ள பொருட்களினால், அவ்வாறு ஒவ்வொரு இயற்கையின் தத்துவங்களினால் உருவாக்கப்பட்ட பொருட்களினால் மனித ஆத்மாக்களின் வாழ்க்கையின் குறுகிய காலத்தின் சுகம் ஆதாரமாக இருக்கிறது. எனவே இந்த அனைத்து தத்துவங்களும் சோதனை தாள்களை கொண்டு வரும். இப்பொழுது தண்ணீரின் பற்றாக்குறை மட்டும் ஏற்பட்டிருக்கிறது, ஆனால் தண்ணீரினால் உருவாக்கப்பட்ட பொருட்கள் கிடைக்காத பொழுது தான் உண்மையான சோதனை தாள் அந்த சமயம் வரும். இந்த இயற்கையினால் சோதனை தாள் கூட அவசியம் தக்க சமயத்தில் வந்தே தீரும். ஆகையால் தேகத்தின் பொருட்கள் பற்றுதல் மற்றும் ஆதாரத்திலிருந்து கூட நிராதார் (எந்த ஆதாரமும் இல்லாத) பற்றற்றவராக இருக்க வேண்டும். இப்பொழுதோ அனைத்து சாதனங்களும் நல்ல முறையில் கிடைத்துக் கொண்டிருக்கிறது, எந்தவித குறைபாடும் இல்லை. ஆனால் சாதனங்கள் (பொருட்கள்) இருந்தாலும் கூட, சாதனங்களை பயன்படுத்தினாலும், யோகத்தின் மனநிலை நிலைகுலையாது. யோகி ஆகி பயன்படுத்த வேண்டும் - இதற்கு தான் விடுபட்டவர் என்று சொல்லப் படுகிறது. எதுவும் இல்லாமல் இருப்பதை, விடுபட்டவர் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் கூட நிமித்தமாக (கருவியாக) இருந்து, பற்றற்றவர் ரூபத்தில் இருந்து உபயோகப் படுத்துவது, ஆசை மற்றும் நன்றாக இருக்கிறது என்ற உணர்வின் காரணமாக பயன்படுத்தக் கூடாது, இதை சோதனை செய்யுங்கள். எங்கு ஆசை இருக்கிறதோ, எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் நன்மை ஏற்படாது, ஆசை, நல்லவராக மாற விடாது. சோதனை தாள்கள் (பிரச்சனைகள்) வரும் சமயத்தில் முயற்சி செய்வதிலேயே நேரம் சென்றுவிடுகிறது. நீங்கள் சாதனங்கள் (யோகத்தில்) இருப்பதற்கான முயற்சி செய்வீர்களா அல்லது சாதனங்கள் (பொருட்கள்) அதன் பக்கம் கவர்ந்து இழுத்து விடுகிறதா. நீங்கள் போராடி, முயற்சி செய்து சாதனங்களின் ஈர்ப்பை அழிப்பதற்கான முயற்சி செய்கிறீர்கள் என்றால் யுத்தம் புரிவதில் தான் பிரச்சனைகளின் நேரம் சென்று விடுகிறது. ரிசல்ட் (முடிவு) என்னவாகிறது? சாதனங்களை பயன்படுத்தக் கூடியவர்கள் சகஜயோகியாக மனநிலையில் தடுமாற்றம் ஏற்படவில்லை தானே. இயற்கையின் சோதனை தாள் இப்பொழுது மேலும் அதிகமாக வரக்கூடியதாக இருக்கிறது. ஆகையால், ஆரம்பத்திலிருந்தே பொருட்களின் விசேˆமான ஆதாரத்தினால் - உண்பது, குடிப்பது, உடுத்துவது, நடப்பது, இருப்பது மற்றும் தொடர்பில் வருவது - இதில் ஏதாவது விˆயம் நுட்பமான முறையில் கூட தடை ஏற்படுத்துவதில்லையே என்று சோதனை செய்யுங்கள்? இதை இப்பொழுதே சோதனை செய்யுங்கள். பிரச்சனைகள் வரும் சமயத்தில் சோதனை செய்ய வேண்டாம், இல்லையென்றால், தோல்வியின் விளிம்பில் இருப்பீர்கள். யோகத்தின் மனநிலை என்றாலே பயன்படுத்தினாலும் விடுபட்ட மனநிலையில் இருப்பது. சகஜயோகத்தின் பயிற்சி சாதனங்கள் மீது அதாவது இயற்கையின் மேல் வெற்றியடைவது. அவை (சாதனங்கள்) இல்லாமல் வாழலாம், ஆனால் இவை இல்லாமல் இருக்க முடியாது, ஆகையால் மனநிலை தடுமாறிவிடுகிறது. இதை விடுபட்ட மனநிலை என்று முடியாது. உங்களுடைய வெற்றியின் மூலம் கிடைக்காத பொருளை கூட கிடைத்தாக அனுபவம் செய்வார்கள், அப்படிப்பட்ட வெற்றியை அடையுங்கள். ஸ்தாபனையின் ஆரம்பத்தில் பற்றுதல் இருந்ததா, இல்லையா. அதற்காக இடை இடையில் தெரிந்தே சோதனை செய்வதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள். எப்படியென்றால், 15 நாட்களுக்கு மோர் மற்றும் வெண்ணெய் மட்டும் சாப்பிட கொடுக்கப்பட்டது. கோதுமை இருந்தும் கூட இந்த சோதனை நடந்தது. எப்படிப் பட்ட உடல் நிலை குறைபாடு இருந்தாலும் கூட 15 நாட்களுக்கு இந்த உணவு தான் கொடுக்கப் பட்டது. யாருக்கும் உடல் நிலை குறைபாடு ஏற்படவில்லை. ஆஸ்துமாவால் நோயுற்றவர்கள் கூட குணமடைந்துவிட்டார்கள் அல்லவா. பாப்தாதா இப்படிப்பட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு மகிழ்ச்சி அடைந்தார்கள் அல்லவா. பக்தியில் கூட விˆம் கூட அமிர்தமாகிவிட்டது என்று சொல்கிறார்கள் அல்லவா, இதுவோ மோர் தான். நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி ஒவ்வொரு சூழ்நிலையிலும் வெற்றியாளர் ஆக்கி விடுகிறது. எனவே அப்படிப்பட்ட சோதனை தாள்களும் கூட வரும் - காய்ந்த ரொட்டி துண்டு கூட சாப்பிட வேண்டியிருக்கும். இப்பொழுதோ சாதனங்கள் (வசதிகள்) இருக்கிறது. பற்கள் இல்லை, ஜீரணம் ஆவதில்லை என்று சொல்வார்கள். அந்த சமயத்தில் என்ன செய்வீர்கள்? நம்பிக்கை, மகிழ்ச்சி, யோகத்தின் பயிற்சியின் சக்தி இருக்கும், அதனால் காய்ந்த ரொட்டி துண்டு கூட மிருதுவான (மென்மையான) ரொட்டி துண்டாக இருக்கும். வருத்தம் ஏற்படுத்தாது. நீங்கள் வெற்றி சொரூபத்தின் கௌரவத்தில் நிலைத்திருந்தால் எந்தவித வருத்தமும் ஏற்படாது. ஹத யோகிகளுக்கு முன்னால் சிங்கம் கூட பூனை ஆகிவிடுகிறது, பாம்பு கூட பொம்மை ஆகி விடுகிறது என்றால், சகஜ இராஜயோகியாகிய, வெற்றி சொரூபமான ஆத்மாக் களாகிய உங்களுக்கு இவை அனைத்தும் பெரிய விˆயமே இல்லை. தாராளமாக பயன்படுத்துங்கள், ஆனால் சமயத்தில் ஏமாற்றிவிடக்கூடாது என்பதில் சோதனை செய்யுங்கள். பிரச்சனைகள், தனது மனநிலையை கீழே தள்ளிவிடக் கூடாது. தேகத்தின் தொடர்பிலிருந்து கூட விடுபடுவது எளிதாக இருக்கிறது, ஆனால் தேகத்தின் பொருட்களிலிருந்து விடுபடுவது - இதில் மிகவும் நன்றாக கவனம் தேவை.
4. பழைய சுபாவம், சம்ஸ்காரத்திலிருந்து விடுபடுவது - பழைய தேகத்தின் சுபாவம் மற்றும் சம்ஸ்காரம் கூட மிகவும் கடுமையாக இருக்கிறது. மாயாவை வெற்றியடைவதில் இது கூட மிகப்பெரிய தடை ரூபமாக ஆகிவிடுகிறது. பழைய சுபாவம், சம்ஸ்காரம் என்ற பாம்பு முடிந்து (இறந்து) கூட விடுகிறது, ஆனால் அதனுடைய கோடு (ரேகை) இருந்து விடுகிறது என்பதை பாப்தாதா பலமுறை பார்க்கிறார். இது சமயத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. இது மிகவும் கடுமையான சுபாவம் மற்றும் சம்ஸ்காரம் பலமுறை மாயாவிற்கு அடிபணிய வைத்து விடுகிறது. அவர்கள் தவறை தவறாக புரிந்துக் கொள்வதில்லை. உணர்தலின் சக்தி முடிவடைந்து விடுகிறது. இதிலிருந்து விடுபடுவது - இதற்கும் கூட நல்ல முறையில் சோதனை செய்ய வேண்டும். உணரும் சக்தி முடிந்து போய்விடுவதால் மேலும் கூட ஒரு பொய்க்கு பின்னால் ஆயிரம் மடங்கு பொய்கள் தனது விˆயத்தை நிரூபணம் செய்வதில் பேச (விவாதம்) வேண்டியிருக்கிறது. அந்தளவு மன அழுத்தம் ஏற்படுகிறது. தன்னை உண்மை என நிரூபணம் செய்வது - இது கூட பழைய சம்ஸ்காரத்தின் அடிமையாவதின் அடையாளமாகும். ஒன்று யதார்த்தமாக (சரியாக) விˆயத்தை தெளிவுப்படுத்துவது, மற்றொன்று தன்னை வலுகட்டாயமாக நிரூபணம் செய்வது. எனவே வலுகட்டாயமாக நிரூபணம் செய்யக்கூடியவர்கள் ஒருபொழுதும் வெற்றி சொரூபம் ஆக முடியாது. ஏதாவது பழைய சுபாவம், சம்ஸ்காரம் சிறிதளவு கூட மறைமுகமான ரூபத்தில் இல்லை தானே என்பதை கூட சோதனை செய்யுங்கள். புரிந்ததா?
யார் இந்த நான்கு விˆயங்களிலிருந்து மட்டும் விடுபட்டவராக இருக்கிறார்களோ, அவர்களைத் தான் பாபாவிற்கு அன்பானவர்கள், குடும்பத்திற்கு அன்பானவர்கள் என்று சொல்வார்கள். அப்படி தாமரை மலரின் ஆசனத்தில் அமர்ந்திருப்பவர் ஆகிவிட்டீர்களா? இதைத் தான் தந்தையை பின்பற்றுபவர்கள் என்று சொல்லப்படுகிறது. பிரம்மா பாபா கூட தாமரை மலரின் ஆசனத்தில் அமர்ந்தவர் ஆன பிறகு தான் நம்பர் ஓன் தந்தைக்கு அன்பானவராகவும், பிராமணர்களுக்கு அன்பானவராகவும் ஆனார். சாகார ரூபத்திலும் சரி, அவ்யக்த ரூபத்தில் இருந்தாலும் சரி, இப்பொழுது கூட ஒவ்வொரு பிராமணர்களின் மனதிலிருந்து என்ன வெளிப்படுகிறது? நம்முடைய பிரம்மா பாபா. நாங்கள் சாகார ரூபத்தில் பார்க்கவே இல்லை என்ற அனுபவம் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களினால் பார்க்கவில்லை, மனதின் மூலம் பார்க்கிறோம், புத்தியின் தெய்வீக கண்கள் மூலம் பார்க்கிறோம், அனுபவம் செய்கிறீர்கள் தானே. ஆகையால், ஒவ்வொரு பிராமணர்களின் மனதிலிருந்து சொல்கிறார்கள் - என்னுடைய பாபா (மேரா பாபா). இது அன்பின் அடையாளமாகும். நாலா பக்கத்திலுமுள்ள விடுபட்டிருப்பவர்கள் தான், உலகத்திற்கு அன்பிற்குரியவர்களாக இருக்கிறார்கள். ஆகையால் அவ்வாறே நாலாபக்கதிலுமுள்ள விடுபட்டவர்களாகவும் அனைவருக்கும் அன்பானவர்கள் ஆகுங்கள். புரிந்ததா?
குஜராத்தை சேர்ந்தவர்கள் அருகில் இருக்கிறார்கள், எனவே பின்பற்றுவதிலும் கூட நெருக்கத்தில் இருக்கிறார்கள். இருப்பிடம் மற்றும் மனநிலை இரண்டிலும் அருகாமையில் இருப்பவர் ஆவது - இது தான் சிறப்பம்சமாக இருக்கிறது. பாப்தாதா எப்பொழுதுமே குழந்தைகளை பார்த்து புன் முறுவல் செய்கிறார். நல்லது.
நாலாபக்கத்திலுமுள்ள தாமரை மலரில் வீற்றிருக்கும், விடுபட்டவர் மற்றும் பாபாவிற்கு அன்பான குழந்தைகளுக்கு, சதா மாயாவை வென்ற, இயற்கையை வென்ற விசேˆ ஆத்மாக்களுக்கு, சதா தந்தையை பின்பற்றக்கூடிய விசுவாசமான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நிறைந்த, அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
மதுபனிற்கு வந்துள்ள சேவாதாரி சகோதர, சகோதரிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் அன்பு நினைவுகள்.
எந்தளவு மதுபனில் சேவை செய்கிறீர்களோ, அந்தளவு நிரந்தர யோகத்தின் அனுபவம் செய்கிறீர்களா? நினைவு துண்டிக்கப் படவில்லை தானே? மதுபனில் சேவாதாரி ஆவது என்றாலே நிரந்தர யோகி, சகஜயோகியின் அனுபவம் செய்வது. இந்த சிறிது காலத்தின் அனுபவம் கூட சதா நினைவில் இருக்கும் அல்லவா. சிறிதளவு பிரச்சனைகள் வரும் பொழுதெல்லாம் மனதினால் மதுபனை வந்தடைந்து விடுங்கள். ஆகையால் மதுபனை சேர்ந்தவர் ஆவதின் மூலம் சூழ் நிலைகள் மற்றும் பிரச்சனைகள் முடிந்துவிடுகிறது, மேலும் நீங்கள் சகஜயோகி ஆகி விடுகிறீர்கள். இந்த அனுபவத்தை எப்பொழுதும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். எனவே அனுபவத்தை நினைவு செய்வதினால் சக்தி வந்துவிடுகிறது. சேவையின் அனுபவம் அழியாதது. நல்லது. இந்த வாய்ப்பு கிடைப்பது கூட குறைந்தது அல்ல. மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சேவாதாரி என்றாலே சதா பாபாவிற்கு சமமாக நிமித்தமாக (கருவியாக) ஆகக்கூடிய, பணிவாக இருக்கக் கூடியவர்கள். பணிவு தான் அனைத்தையும் விட உயர்ந்த வெற்றியின் சாதனமாகும். எந்தவொரு சேவைக்கும் வெற்றிக்கான சாதனம் கருணை உணர்வு, நிமித்த உணர்வாகும். எனவே இந்த விசேஷத் தன்மைகளோடு சேவை செய்தீர்களா? அவ்வாறு சேவையில் சதா வெற்றியும் கிடைக்கிறது, மேலும் சதா மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சங்கமயுகமே மகிழ்ச்சியை கொண்டாடுவது, ஆகையால் சேவை, சேவையாக தோன்றாது. எப்படி யாராது மல்யுத்தம் (குத்து சண்டையில்) செய்கிறார்கள் என்றால், அவர்கள் அதை குதுகுலமாக (மகிழ்ச்சியாக) புரிந்துக்கொண்டு விளையாடுகிறார்கள். அதில் களைப்போ அல்லது வலியோ ஏற்படுவதில்லை, ஏனெனில் பொழுதுபோக்கு எனப் புரிந்துக் கொள்கிறார்கள். மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக செய்கிறார்கள். அவ்வாறு ஒருவேளை உண்மையான சேவாதாரியின் விசேˆத்தன்மை மூலம் சேவை செய்தால், ஒருபொழுதும் களைப்பு ஏற்படாது. புரிந்ததா? சேவையாக தோன்றாது, ஆனால் விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்று சதா தோன்றும். எனவே எந்த சேவை கிடைத்தாலும், இந்த இரண்டு விசேˆத்தன்மைகளோடு வெற்றியை அடைந்துக் கொண்டேயிருக்க வேண்டும். இதனால் சதா வெற்றி சொரூபமாகி விடலாம். நல்லது.
2. உண்மையாக தபஸ்யா செய்வதினால், சதா காலத்திற்கு உண்மையான தங்கமாகவே மாற்றிவிடுகிறது, இதில் சிறிது கூட கலப்படம் இருக்க கூடாது. தபஸ்யா எப்பொழுதும் ஒவ்வொரு வரையும் தகுதியுடைவராக மாற்றிவிடுகிறது, அது குடும்பத்திலும் மற்றும் பாக்கியத்தை அடைவதிலும் வெற்றி பெற செய்கிறது. அப்படிப்பட்ட தபஸ்வி ஆகிவிட்டீர்களா? தபஸ்யா செய்யக் கூடியவர்களை தான் இராஜயோகிகள் என்று சொல்லப் படுகிறது. எனவே நீங்கள் அனைவரும் இராஜயோகிகளாக இருக்கிறீர்கள். ஒருபொழுதும் எந்தவித சூழ்நிலையிலும் தடுமாற்றம் ஏற்படவில்லை தானே? அதனால் சதா தன்னை இந்த முறையில் சோதனை செய்யுங்கள், மற்றும் சோதனை செய்த பிறகு தன்னை மாற்றிக் கொள்ளுங்கள். சோதனை மட்டும் செய்வதினால் மனமுடைந்து போய்விடுகிறது, நம்மிடம் இந்த மாதிரியான குறைகள் இருக்கின்றன, இவை சரியாகுமா அல்லது சரியாகாதா என்றே தெரியவில்லையே என்று வருத்தம் ஏற்படும். எனவே சோதனை கூட செய்யுங்கள், மேலும் சோதனையின் கூட மாற்றத்தையும் கொண்டு வாருங்கள். பலவீனம் ஆகிவிட்டால், நேரம் கடந்துவிடும், ஆனால் சமயத்திற்கு தகுந்தபடி கடமையை செய்யக் கூடியவர்கள் சதா வெற்றியடைகிறார்கள். ஆகவே அனைவரும் சதா வெற்றியடைந்தவர்களாக, உயர்ந்த ஆத்மாக்களாக இருக்கிறீர்களா? அனைவரும் சிரேஷ்ட மானவர்களா அல்லது நம்பர்வாராக (வரிசைகிரமம்) இருக்கிறீர்களா? ஆனால் எந்த எண்ணில் இருக்கிறீர்கள்? எத்தனை நம்பர் இருக்கும் என்று கேட்டால் அனைவருமே நம்பர் ஒன் என்று சொல்வீர்கள்? ஆனால் அது ஒன்றா அல்லது அனேகமா? முதல் நம்பரில் அனைவரும் வர முடியாது, ஆனால் முதல் டிவிசனில் (தலைமுறையில்) வரமுடியும் அல்லவா? முதல் நம்பரில் ஒருவர் தான் இருக்க முடியும், ஆனால் முதல் டிவிசனில் பலர் வர முடியும். ஆகையால் முதல் நம்பரில் வரக்கூடியவர் ஆக முடியும். இராஜ்ய சிம்மாசனத்தில் ஒருவர் தான் அமர முடியும், ஆனால் (இராஜ்ய சபையில்) மற்றவர்கள் கூட துஇணையாக இருப்பார்கள் அல்லவா எனவே இராயல் குடும்பத்தில் வருவது கூட இராஜ்ய அதிகாரி ஆவதாகும். எனவே முதல் டிவிசன் அதாவது நம்பர் ஒன்னில் வருவதற்கான முயற்சி செய்யுங்கள். இதுவரை இரண்டு மூன்று சிம்மாசனங்களை தவிர வேறு எதுவும் தேர்வாகவில்லை. இப்பொழுது என்ன விரும்புகிறீர்களோ, எந்தளவு முயற்சி செய்ய விரும்புகிறீர்களோ, அந்தளவு செய்ய முடியும். இப்பொழுது தாமதம் ஆகிவிட்டது, ஆனால் வெகுநேரம் ஆகவில்லை. ஆகையால் அனைவரும் முன்னேறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. வெற்றியடைந்து நம்பர் ஒன்னில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே எப்பொழுதும் ஊக்க உற்சாகத்துடன் இருக்க வேண்டும். யாரோ நம்பர் ஒன் ஆகட்டும், நான் இரண்டாவது நம்பரில் வருவது கூட சரியே என்பது அல்ல. இதைத் தான் பலவீனமான முயற்சியாளர் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் அனைவரும் தீவிர முயற்சி செய்கிறீர்கள் தானே? நல்லது.