10.01.2021 காலை முரளி
ஓம் சாந்தி
அவ்யக்த பாப்தாதா,
(09.10.1987)
மதுபன்
அலௌகீக இராஜ்யசபையின் செய்திகள்
இன்றைக்கு பாப்தாதா தனது
சுயராஜ்ய அதிகாரி குழந்தைகளின் இராஜ்ய சபையை பார்த்துக்
கொண்டிருக்கிறார். இந்த சங்கமயுகத்தின் விசித்திரமான, சிறந்த
பெருமையுடைய அலௌகீக இராஜ்ய சபை முழு கல்பத்திலும்
தனிப்பட்டதாகவும் மிகவுமே பிரியமானதாகவும் இருக்கிறது. இந்த
இராஜ்ய சபையின் ஆன்மீக பொலிவு, ஆன்மீக கமல ஆசனம், ஆன்மீக
கிரீடம் மற்றும் திலகம், முகத்தின் பிரகாசம், மனநிலையின் (ஸ்திதி)
சிறந்த (ஸ்மிருதி) நினைவின் வாயு மண்டலத்தின் அலௌகீகமான நறுமணம்
மிகவுமே ரமணிகரமான, மிகவுமே கவரக் கூடியதாக இருக்கிறது.
அப்பேர்ப்பட்ட சபையை பார்த்து, பாப்தாதா ஒவ்வொரு இராஜ்ய அதிகாரி
ஆத்மாவையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்.
எவ்வளவு பெரிய இராஜ்ய சபை ஆகும். ஒவ்வொரு பிராமண குழந்தையும்
சுயராஜ்ய அதிகாரி ஆவார்கள். ஆக எத்தனை பிராமண குழந்தைகள்
இருக்கிறார்கள். அனைத்து பிராமண குழந்தைகளின் இராஜ்ய சபையையும்
ஒன்று சேர்த்தீர்கள் என்றால் எவ்வளவு பெரிய இராஜ்ய சபை ஆகி
விடும். இவ்வளவு பெரிய இராஜ்ய சபை எந்தவொரு யுகத்திலும்
இருக்காது. இது போல உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் அனைத்து
குழந்தைகளும் சுயராஜ்ய அதிகாரி ஆகிறார்கள் என்பதே இந்த
சங்கமயுகத்தின் விசேஷத் தன்மை ஆகும். அப்படியும் லௌகீக
குடும்பத்தில் ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைகளுக்கு இந்த
என்னுடைய குழந்தை ராஜா மகன் ஆவார் என்று கூறுவார் மேலும் எனது
ஒவ்வொரு குழந்தையும் இராஜா ஆக வேண்டும் என்ற விருப்பம்
கொண்டிருப்பார். ஆனால் எல்லா குழந்தைகளும் இராஜாவாக ஆகவே
முடியாது. இந்த பழமொழி பரமாத்மா தந்தையினுடையதை காப்பி
செய்துள்ளார்கள். இச்சமயத்தில் பாப்தாதாவின் அனைத்து
குழந்தைகளும் இராஜயோகி அதாவது சுயத்தின் மீது இராஜாவாக
வரிசைக்கிரமமாக அவசியம் இருக்கிறார்கள். ஆனால் இருப்பது
அனைவருமே இராஜயோகியாக. பிரஜையோகிகள் என்று யாருமே இல்லை. எனவே
பாப்தாதா எல்லையில்லாத இராஜ்ஜிய சபையை பார்த்துக்
கொண்டிருந்தார். எல்லோரும் தங்களை சுயராஜ்ய அதிகாரி என்று
நினைக்கிறீர்கள் அல்லவா? புதிது புதிதாக வந்திருக்கும்
குழந்தைகள் இராஜ்ய அதிகாரி ஆவீர்களா? இல்லை இனிமேல் தான் ஆக
வேண்டி இருக்கிறதா? புதிது புதிதாக இருக்கிறார்கள். எனவே
சந்திக்க, பழக கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அவ்யக்த
தந்தையின் அவ்யக்த விஷயங்களை புரிந்து கொள்வதற்கான பழக்கமும்
ஏற்பட்டு கொண்டே போயிருக்கும். இருப்பினும் ஆத்மாக்களாகிய நாம்
அனைவரும் எவ்வளவு பாக்கியவான் ஆவோம் என்று இந்த பாக்கியத்தை
சமயம் வரும் பொழுது இப்பொழுதைய பாக்கியத்தை விட அதிகமானதாக
நினைத்துக் கொள்வார்கள்.
எனவே அலௌகீக இராஜ்ஜிய சபையின் சமாச்சாரத்தை பாப்தாதா கூறிக்
கொண்டிருந்தார். விசேஷமாக அனைத்து குழந்தைகளின் கிரீடம்
மற்றும் முகத்தின் பிரகாசத்தின் மீது விரும்பாவிடினும் கவனம்
சென்று கொண்டிருந்தது. கிரீடம் பிராமண வாழ்க்கையின் விசேஷத்
தன்மையான தூய்மையினுடைய அறிகுறி ஆகும். முகத்தின் பிரகாசம்
ஆத்மீக நிலையில் நிலைத்திருப்பதற்கான ஆத்மீகத்தின் பிரகாசம்
ஆகும். சாதாரண முறையில் கூட எந்தவொரு நபரை பார்க்கும் பொழுதும்
எல்லாவற்றிற்கும் முதலாக பார்வை முகத்தின் பக்கம் தான் போகும்.
இந்த முகம் தான் (விருத்தி) உள்ளுணர்வு மற்றும் (ஸ்திதி)
மனநிலையின் கண்ணாடி ஆகும். எனவே பாப்தாதா பார்த்துக்
கொண்டிருந்தார் - பிரகாசமோ எல்லோரிடமுமே இருந்தது. ஆனால்
ஒருவர் எப்பொழுதும் ஆன்மீகத்தின் நிலையில்
நிலைத்திருப்பவர்கள், இயல்பான மற்றும் எளிதான நிலை உடையவர்கள்
மேலும் இரண்டாமவர் எப்பொழுதும் ஆன்மீக நிலையின் பயிற்சி மூலமாக
நிலைத்திருப்பவர்கள். ஒருவர் எளிதான நிலையில்
நிலைத்திருப்பவர்கள் மற்றவர் பிரயத்தனம் செய்து
நிலைத்திருப்பவர்கள் அதாவது ஒருவர் சகஜயோகியாக இருப்பார்
மற்றவர் (புருஷார்த்தம்) முயற்சி மூலமாக யோகியாக இருப்பார்.
இருவரினுடைய பிரகாசத்திலும் வித்தியாசம் இருந்தது.
முதலாமவரினுடையது இயற்கையான அழகாக இருந்தது மேலும்
இரண்டாமவரினுடையது புருஷார்த்தம் மூலமாக அழகு இருந்தது. எப்படி
தற்காலத்தில் கூட மேக் அப் - அலங்காரம் செய்து அழகாக
ஆகிறார்கள் அல்லவா? இயற்கையான அழகினுடைய பிரகாசம் எப்பொழுதும்
ஒரே ரசனையுடம் கூடியதாக இருக்கும் மேலும் இரண்டாவது அழகு சில
நேரங்களில் மிகவும் நன்றாகவும் மற்றும் சில நேரங்களில்
சதவிகிதத்திலும் இருக்கும். ஒன்று போல ஒரே சீராக இருப்பதில்லை.
எனவே சதா சகஜயோகி இயல்பான யோகி நிலை முதல் நம்பர் சுயராஜ்ஜிய
அதிகாரியாக ஆக்குகிறது. அனைத்து குழந்தைகளினுடைய வாக்குறுதியே
பிராமண வாழ்க்கை என்றால் ஒரு தந்தை தான் உலகம் அல்லது ஒரு
தந்தை இரண்டாமவர் என்று யாருமே இல்லை, உலகமே தந்தை தான்,
மற்றவர் யாருமே இல்லை என்றிருக்கும் பொழுது இயல்பாகவும்
எளிதாகவும் சகஜயோகி நிலை எப்பொழுதும் இருக்கும் அல்லவா? இல்லை
உழைப்பு செய்ய வேண்டி இருக்குமா? ஒரு வேளை வேறு யாராவது
இருக்கிறார்கள் என்றால் இங்கு புத்தி போகக் கூடாது, அங்கு
போகக் கூடாது என்று உழைப்பு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் ஒரு
தந்தை தான் அனைத்துமாக இருக்கிறார் என்றால் புத்தி எங்கே
போகும்? போகவே முடியாது என்றிருக்கும் பொழுது அப்பியாசம் என்ன
செய்வீர்கள்? அப்பியாசத்தில் கூட வித்தியாசம் ஏற்பட்டு
விடுகிறது. ஒன்று இயல்பான பயிற்சி இருக்கவே இருக்கிறது என்பது
மேலும் இரண்டாவதாக இருப்பது உழைப்பினுடன் கூடிய அப்பியாசம்.
எனவே சுயராஜ்ய அதிகாரி குழந்தைகள் எளிய பயிற்சியாளர் ஆவது –
இது தான் சகஜயோகி - இயல்பான யோகியின் அடையாளம் ஆகும்.
அவர்களுடைய முகத்தின் பிரகாசம் அலௌகீகமாக இருக்கும்.
அவர்களுடைய முகத்தை பார்த்த உடனேயே மற்ற ஆத்மாக்கள் இவர்
சிறந்த பிராப்தி சொரூபமான சகஜயோகி ஆவார் என்பதை அனுபவம்
செய்வார்கள். எப்படி ஸ்தூல செல்வம் அல்லது ஸ்தூல பதவியின்
பிராப்தியின் பிரகாசம் இவர் செல்வந்தரினுடைய குலத்தினர் அல்லது
உயர்ந்த பதவியின் அதிகாரி ஆவார் என்று முகத்தின் மூலமாகவே
தெரிய வருகிறது. அதேபோல இந்த சிறந்த பிராப்தி, சிறந்த இராஜ்ஜிய
அதிகாரம் அதாவது சிறந்த பதவியின் பிராப்தியின் போதை அல்லது
பிரகாசம் முகத்தின் மூலம் தென்படுகிறது. இவர்கள் ஏதோ
அடைந்துள்ளார்கள். பிராப்தி சொரூபமான ஆத்மாக்கள் ஆவார்கள்
என்பதை தூரத்திலிருந்தே அனுபவம் செய்வார்கள். அதேபோல அனைத்து
இராஜ்ய அதிகாரி குழந்தைகளின் முகங்கள் பிரகாசித்துக்
கொண்டிருப்பதாக தென்பட வேண்டும். உழைப்பினுடைய அறிகுறி
தென்படக் கூடாது. பிராப்தியின் அறிகுறி தென்பட வேண்டும்
இப்பொழுது கூட பாருங்கள் ஒரு சில குழந்தைகளின் முகங்களை
பார்த்து இவர்கள் ஏதோ அடைந்துள்ளார்கள் என்றே கூறுகிறார்கள்
மேலும் ஒரு சில குழந்தைகளின் முகங்களை பார்த்து உயர்ந்த
குறிக்கோள் ஆகும். ஆனால் தியாகம் கூட மிக உயர்ந்ததாக
செய்துள்ளார்கள் என்றும் கூறுகிறார்கள். தியாகம் தென்படுகிறது.
பாக்கியம் முகத்தின் மூலமாக தென்படுவது இல்லை. அல்லது மிகவும்
நல்ல உழைப்பு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இப்படி
கூறுவார்கள்.
ஒவ்வொரு குழந்தையினுடைய முகத்தின் மூலம் சகஜயோகியின் பிரகாசம்
தென்பட வேண்டும், சிறந்த பிராப்தியின் போதையின் பிரகாசம்
தென்பட வேண்டும் என்பதையே பாப்தாதா பார்க்க விரும்புகிறார்.
ஏனெனில் பிராப்திகளின் களஞ்சியமான தந்தையின் குழந்தைகள்
ஆவீர்கள். சங்கமயுகத்தின் பிராப்திகளின் வரதானி நேரத்தின்
அதிகாரி ஆவீர்கள். நிரந்தர யோகம் எப்படி செய்வது அல்லது
நிரந்தர அனுபவம் செய்து களஞ்சியத்தின் அனுபவம் எப்படி செய்வது
- என்று இதுவரையும் கூட இதே உழைப்பிலேயே நேரத்தை
இழக்காதீர்கள். ஆனால் பிராப்தி சொரூபத்தின் பாக்கியத்தை எளிதாக
அனுபவம் செய்யுங்கள். முடிவிற்கான நேரம் நெருங்கி
கொண்டிருக்கிறது. இதுவரையும் ஏதாவதொரு விஷயத்தின் உழைப்பிலேயே
ஈடுபட்டு கொண்டிருந்தீர்கள் என்றால் பிராப்திக்கான நேரமோ
முடிந்து போய் விடும். பிறகு பிராப்தி சொரூபத்தின் அனுபவம்
எப்பொழுது செய்வீர்கள்? சங்கமயுகத்திற்கு பிராமண
ஆத்மாக்களுக்கு சர்வ பிராப்தி பவ என்ற வரதானம் உள்ளது சதா
புருஷார்த்திபவ என்ற வரதானம் கிடையாது. பிராப்தி பவ என்ற
வரதானம் உள்ளது. பிராப்தி பவ என்ற வரதானம் எடைய ஆத்மா ஒரு
பொழுதும் அலட்சியத் தன்மையில் வர முடியாது. எனவே அவர்களுக்கு
உழைப்பு செய்ய வேண்டி இருக்காது. எனவே புரிந்ததா, என்ன ஆக
வேண்டும் என்று.
இராஜ்ய சபையின் இராஜ்ஜிய அதிகாரி ஆவதற்கான விசேஷதன்மை என்ன
என்பது தெளிவாகியது அல்லவா? இராஜ்ய அதிகாரி ஆவீர்கள் அல்லவா?
இல்லை அதிகாரி ஆக இருக்கிறோமோ இல்லையா என்று இப்பொழுது
யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? விதாதாவின் (விதியை
அமைப்பவரின்) குழந்தைகள் (வரதாதா) வரமளிக்கும் வள்ளலின்
குழந்தைகள் ஆகி விட்டீர்கள், இராஜா என்றால் விதாதா -
அளிப்பவர். அப்ராப்தி என்று எதுவுமே கிடையாது, பின் எதை
பெறுவீர்கள்? எனவே புரிந்ததா? புது புது குழந்தைகள் இந்த
அனுபவத்தில் இருக்க வேண்டும். போராட்டத்திலேயே நேரத்தை இழக்கக்
கூடாது. ஒரு வேளை போரட்டத்திலேயே நேரத்தை இழந்தீர்கள் என்றால்
கடைசி நேரத்திலும் (அந்த் மதி) யுத்தத்திலேயே இருப்பீர்கள்.
பிறகு என்ன ஆக வேண்டி இருக்கும்? சந்திர வம்சத்தில்
செல்வீர்களா இல்லை சூரிய வம்சத்தில் செல்வீர்காள?
போராடுபவர்களோ சந்திரவம்சத்தில் செல்வார்கள். நடந்து
கொண்டிருக்கிறோம், செய்து கொண்டிருக்கிறோம், ஆகியே விடுவோம்,
போய் சேர்ந்து விடுவோம் .. .. .. இதுவரையும் இப்பேர்ப்பட்ட
இலட்சியம் கொண்டிருக்காதீர்கள். இப்பொழுது இல்லை என்றால்
எப்பொழுதும் இல்லை. ஆக வேண்டும் என்றால் இப்பொழுதே ஆக
வேண்டும், பெற வேண்டும் என்றால் இப்பொழுதே பெற வேண்டும் -
இப்பேர்ப்பட்ட ஊக்கம் உற்சாகம் உடையவர்களே குறித்த சமயத்தில்
தங்களது சம்பூர்ண குறிக்கோளை அடையக் கூடியவர்களாக
இருப்பார்கள். திரேதாவில் இராமர் சீதையாக ஆவதற்கு யாருமே
தயாராக இல்லை. சத்யுக சூரிய வம்சத்தில் வர வேண்டும்என்றால் -
சூரியவம்சம் என்பதன் பொருள் சதா மாஸ்டர் விதாதா மற்றும் வரதாதா
- பெறக் கூடிய விருப்பம் கொண்டவர்கள் அல்ல. உதவி கிடைத்து விட
வேண்டும், இப்படி ஆகி விட்டால் மிகவும் நன்றாக இருக்கும்,
புருஷார்த்தத்தில் நல்ல நம்பர் எடுப்போம் என்பதில்லை. உதவி
கிடைத்துக் கொண்டிருக்கிறது, எல்லாமே ஆகி கொண்டிருக்கிறது -
இதற்கு தான் சுயராஜ்ய அதிகாரி குழந்தைகள் என்று கூறுவார்கள்.
முன்னேறி செல்ல வேண்டுமா? இல்லை பின்னால் வந்துள்ளோம்
என்பதற்காக பின்னாலேயே இருக்க வேண்டுமா? முன்னேறி செல்வதற்கான
எளிய வழியாவது - சகஜயோகி (ஸ்வதஹ) இயல்பான யோகி ஆகுங்கள்.
மிகவும் சகஜமானது. இருப்பதே ஒரே ஒரு தந்தை இரண்டாவது என்று
யாருமே இல்லை என்றிருக்கும் பொழுது எங்கே போவீர்கள்?
பிராப்தியே பிராப்தி ஆகும். பிறகு ஏன் உழைப்பு பிடிக்கும்?
எனவே பிராப்திக்கான நேரத்தின் இலாபத்தை எடுங்கள். சர்வ
பிராப்தி சொரூபம் ஆகுங்கள். புரிந்ததா? ஒவ்வொரு குழந்தை கூட -
கடைசியில் வருபவராக இருந்தாலும் சரி, ஸ்தாபனையின் ஆரம்பத்தில்
வருபவராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குழந்தையும் முதல் நம்பர்
ஆக வேண்டும் என்றே தான் பாப்தாதா விரும்புகிறார். இராஜா
ஆகுங்கள், பிரஜை அல்ல. நல்லது.
மகாராஷ்டிரம் மற்றும் மத்திய பிரதேசத்தின் குரூப்
வந்துள்ளார்கள். பாருங்கள், மகா என்ற வார்த்தை எவ்வளவு நன்றாக
இருக்கிறது. மகாராஷ்டிரம் என்ற இடம் கூட மகா என்ற வார்த்தையை
கொண்டதாக இருக்கிறது. மேலும் ஆக வேண்டியதும் கூட மகான் ஆக.
மகான் ஆகவே ஆகி விட்டீர்கள் அல்லவா? ஏனெனில் தந்தையினுடையவர்
ஆவது என்றாலே மகான் ஆகி விட்டீர்கள். மகான் ஆத்மாக்கள்
ஆவீர்கள். பிராமணர் என்றாலே மகான். ஒவ்வொரு செயலும் மகான்.
ஒவ்வொரு வார்த்தையும் மகான். ஒவ்வொரு சங்கல்பம் கூட மகான்
ஆகும். அலௌகீகமானவர்களாக ஆகி விட்டீர்கள் அல்லவா? எனவே
மகாராஷ்டிரத்தினர் எப்பொழுதுமே மகான் ஆவோம் என்ற (ஸ்மிருதி)
நினைவு சொரூபம் ஆகுங்கள். பிராமணர் என்றால் மகான் குடுமி
ஆவார்கள் அல்லவா?
மத்திய பிரதேசம் - சதா மத்யாஜீ பவ என்ற போதையில் இருப்பவர்கள்.
மன் மனா பவ என்பதுடன் கூடவே மத்யாஜீ பவ என்ற வரதானம் கூட
இருக்கிறது. எனவே தங்களுடைய சொர்க்கத்தின் சொரூபம் - இதற்கு
மத்யாஜீ பவ என்று கூறுவார்கள். எனவே தங்களது சிறந்த
பிராப்தியின் போதையில் இருப்பவர்கள் - அதாவது மத்யாஜீ பவ என்ற
மந்திரத்தின் சொரூபத்தில் நிலைத்திருப்பவர்கள். அவர்களும்
மகான் ஆகி விட்டார்கள். மத்யாஜீ பவ ஆக இருக்கிறார்கள் என்றால்
மன் மனா பவ ஆகக் கூட அவசியம் இருப்பார்கள். எனவே மத்திய
பிரதேசம் என்றால் மகா மந்திரத்தின் சொரூபம் ஆகக் கூடியவர்கள்.
எனவே இருவருமே அவரவரினுடைய விசேஷ தன்மை காரணமாக மகான்
ஆவீர்கள். புரிந்ததா? நீங்கள் யார் என்று?
எப்பொழுதிலிருந்து முதல் பாடம் ஆரம்பித்தீர்களோ அது கூட நான்
யார் என்ற பாடத்தை தானே ஆரம்பித்தீர்கள். தந்தை கூட அதே
விஷயத்தை நினைவூட்டுகிறார். இது பற்றியே மனனம் செய்யுங்கள்.
வார்த்தை நான் யார் என்ற ஒன்றே ஆகும். ஆனால் இதற்கான விடைகள்
எவ்வளவு இருக்கின்றன. நான் யார் என்பதற்கான (லிஸ்ட்) பட்டியல்
எடுத்து வாருங்கள். நல்லது.
நாலா புறங்களின் சர்வ பிராப்தி சொரூப சிறந்த ஆத்மாக்களுக்கு,
அனைத்து அலௌகீக இராஜ்ய சபை அதிகாரி மகான் ஆத்மாக்களுக்கு, சதா
ஆத்மீக தன்மையின் பிரகாசத்தை தாரணை செய்யக் கூடிய விசேஷ
ஆத்மாக்களுக்கு சதா (ஸ்வதஹ) இயல்பான யோகி, சகஜ யோகி,
உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மாக்களுக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த
பாப்தாதாவின் சிநேகம் நிறைந்த அன்பு நினைவுகள் உரித்தாகுக.
அவ்யக்த பாப்தாதாவுடன் (டபிள் விதேசி) வெளிநாட்டு சகோதர
சகோதரிகள் சந்திப்பு. (டபிள் விதேசி) இரட்டை வெளி நாட்டினர்
என்றால் எப்பொழுதும் தங்களது சுய சொரூபம், சுய தேசம் மற்றும்
சுய இராஜ்ஜியத்தின் நினைவில் இருப்பவர்கள். இரட்டை
வெளிநாட்டினர்கள் விசேஷமாக என்ன சேவை செய்ய வேண்டும்?
இப்பொழுது (சைலன்ஸ்) அமைதி சக்தியின் அனுபவத்தை விசேஷமான
ரூபத்தில் ஆத்மாக்களுக்கு செய்வியுங்கள். இது கூட விசேஷ சேவை
ஆகும். எப்படி (சையன்ஸ் பவர்) அறிவியலின் சக்தி பிரசித்தி
பெற்றதாக இருக்கிறது அல்லவா? அறிவியல் என்பது என்ன என்று
ஒவ்வொரு குழந்தைக்குக் கூட தெரியும். அதே போல (சைலன்ஸ் பவர்)
அமைதியின் சக்தி (சைன்ஸ்) அறிவியலை விடவும் உயர்ந்தது ஆகும்.
அந்த நாளும் வரப் போகிறது. சைலன்ஸ் பவர்-ன் வெளிப்பாடு
(பிரத்யட்சதா) என்றால் தந்தையின் வெளிப்பாடு ஆகும். எப்படி
அறிவியல் கண்கூடான நிரூபணம் காண்பித்து கொண்டிருக்கிறது, அதே
போல சைலன்ஸ் பவர் - அமைதியின் சக்தியினுடைய (பிராக்டிகல்
ப்ரூஃப்) நடைமுறை நிரூபணம் உங்கள் அனைவரது வாழ்க்கை ஆகும்.
இவ்வளவு பேர்கள் - அனைவரினுடைய கண்கூடான நிரூபணம் தென்படும்
பொழுது விரும்பா விடினும் கூட அனைவரின் பார்வையில் எளிதாக
வந்து விடுவார்கள். எப்படி முந்தைய வருடம் இந்த அமைதியின்
நிகழ்ச்சியினுடைய சேவை செய்தீர்கள் அல்லவா? இதை மேடையில்
நடைமுறையில் காண்பித்தீர்கள். அதே போல நடந்தாலும் சென்றாலும்
அமைதியின் மாடல் - வடிவமாக தென்பட வேண்டும். அப்பொழுது
விஞ்ஞானிகளின் பார்வை கூட அமைதியின் சக்தி கொண்டவர்கள் மீது
அவசியம் செல்லும். புரிந்ததா? அறிவியலின் கண்டுபிடிப்புக்கள்
வெளி நாட்டில் அதிகமாக ஏற்படுகின்றது. எனவே சைலன்ஸ் பவர் -
அமைதியின் சக்தியின் சப்தம் கூட அங்கிருந்து எளிதாக பரவும்.
சேவையின் இலட்சியமோ இருக்கவே இருக்கிறது. அனைவருக்கும் ஊக்கம்
உற்சாகம் கூட இருக்கிறது. சேவையின்றி இருக்க முடியாது. எப்படி
உணவு இல்லாமல் இருக்க முடியாதோ, அதே போல சேவை இல்லாமலும்
இவர்களால் இருக்க முடிவதில்லை. எனவே பாப்தாதா மகிழ்ச்சியாக
இருக்கிறார். நல்லது. பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின்
சந்திப்பு.
சுயதரிசன சக்கரதாரி (சிரேஷ்ட)
சிறந்த ஆத்மாக்களாக ஆகி விட்டுள்ளீர்கள். இது போல அனுபவம்
செய்கிறீர்களா? சுயத்தின் தரிசனம் ஆகி விட்டுள்ளது அல்லவா?
தன்னைத் தானே அறிந்து கொள்வது என்றால் சுயத்தின் தரிசனம் ஆவது.
மேலும் சக்கரத்தின் ஞானத்தை அறிந்து கொள்வது என்றால் சுயதரிசன
சக்கரதாரி ஆகி விடுவது. சுயதரிசன சக்கரதாரியாக ஆகி விடும்
பொழுது மற்ற எல்லா சக்கரங்களும் முடிந்து போய் விடுகின்றன. தேக
உணர்வினுடைய சக்கரம், சம்பந்தத்தினுடைய சக்கரம், பிரச்சினைகளின்
சக்கரம் - மாயையினுடைய எவ்வளவு சக்கரங்கள் இருக்கின்றன. ஆனால்
சுய தரிசன சக்கரதாரி ஆகி விடும் பொழுது இந்த எல்லா சக்கரங்களும்
முடிந்து போய் விடுகின்றன. எல்லா சக்கரங்களிலிருந்தும் வெளியேறி
விடுகிறீர்கள். இல்லையென்றால் வலையில் சிக்கிக் கொண்டு
விடுகிறீர்கள். ஆக முதலில் சிக்கி இருந்தீர்கள். இப்பொழுது
வெளியேறி வந்து விட்டீர்கள். 63 பிறவிகளோ அநேக சக்கரங்களில்
சிக்கிக் கொண்டு இருந்தீர்கள் மற்றும் இச்சமயத்தில் இந்த
சக்கரங்களிலிருந்து வெளியேறி வந்து விட்டீர்கள். எனவே மீண்டும்
சிக்கி கொள்ளக் கூடாது. அனுபவம் செய்து பார்த்து விட்டீர்கள்
அல்லவா? அநேக சக்கரங்களில் சிக்கிக் கொண்டு விடும் பொழுது
அனைத்தையும் இழந்து விட்டீர்கள் மேலும் சுயதரிசன சக்கரதாரி ஆகி
விடும் பொழுது தந்தை கிடைத்து விட்டார். ஆக எல்லாமே கிடைத்து
விட்டது. எனவே சுயதரிசன சக்கரதாரி ஆகி மாயையை வென்றவராக ஆகி
முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். இதனால் எப்பொழுதும் லேசாக
இருப்பீர்கள். எந்தவொருவிதமான சுமையும் அனுபவம் ஆகாது. சுமை
தான் கீழே இழுத்து வருகிறது. மேலும் லேசாக ஆகி விடும் பொழுது
உயர பறந்து கொண்டே இருப்பீர்கள். எனவே பறக்கக் கூடியவர்கள்
ஆவீர்கள் அல்லவா? பலவீனமானவர்கள் ஒன்றும் இல்லையே? ஒரு வேளை ஒரு
சிறகு கூட பலவீனமாக இருந்தது என்றால் அது கீழே இழுத்து வந்து
விடும். பறப்பதற்கு விடாது. எனவே இரண்டு சிறகுகளுமே வலுவாக
இருந்தது என்றால் இயல்பாகவே பறந்து கொண்டே இருப்பீர்கள்.
சுயதரிசன சக்கரதாரி ஆவது என்றால் பறக்கும் கலையில் செல்வது.
நல்லது.
இராஜயோகி சிறந்த யோகி ஆத்மாக்கள் ஆவீர்கள் அல்லவா? சாதாரண
வாழ்க்கையிலிருந்து சகஜயோகி இராஜயோகி ஆகி விட்டீர்கள்.
அப்பேர்ப்பட்ட சிறந்த யோகி ஆத்மாக்கள் எப்பொழுதுமே அதீந்திரிய
சுகத்தின் ஊஞ்சலில் ஊஞ்சலாடுவார்கள். ஹட யோகிகள் யோகத்தின்
மூலமாக சரீரத்தை உயர உயர்த்துகிறார்கள் மேலும் பறப்பதற்கான
அப்பியாசம் செய்கிறார்கள். உண்மையில் இராஜயோகிகளாக நீங்கள்
உயர்ந்த நிலையை அனுபவம் செய்கிறீர்கள். இதைத் தான் அவர்கள்
காப்பி செய்து சரீரத்தை உயர உயர்த்துகிறார்கள். ஆனால் நீங்கள்
எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள். எனவே
யோகிகள் உயர்ந்து இருப்பார்கள் என்று கூறுகிறார்கள். எனவே மன
நிலையின் இடம் உயர்ந்ததாக இருக்கிறது. ஏனெனில் டபிள் லைட் -
லேசாகவும் ஒளியானவராகவும் ஆகி விட்டுள்ளீர்கள். அப்படியும்
ஃபரிஷ்தாக்களைப் பற்றி கூறும் பொழுது ஃபரிஷ்தாக்களின் பாதங்கள்
பூமியில் இருப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஃபரிஷ்தா என்றால்
அவருடைய புத்தி என்ற பாதம் பூமி மீது இல்லாதிருக்க வேண்டும்.
அதாவது தேக உணர்வில் இல்லாமல் இருக்க வேண்டும். தேக
உணர்விலிருந்து சதா உயர்ந்து - அப்பேர்ப்பட்ட ஃபரிஷ்தா அதாவது
இராஜயோகி ஆகி விட்டீர்கள். இப்பொழுது இந்த பழைய உலகத்தின் மீது
எந்தவொரு பற்றுதலும் கிடையாது. சேவை செய்வது என்பது தனி
விஷயம். ஆனால் பற்றுதல் இல்லாமல் இருக்கட்டும். யோகி ஆவது
என்றால் தந்தை மற்றும் நான், மூன்றாமவர் என்று யாரும் இல்லை.
எனவே நாம் இராஜயோகி, சதா ஃபரிஷ்தா ஆவோம் என்ற இதே நினைவில்
எப்பொழுதும் இருங்கள். இந்த நினைவின் மூலமாக எப்பொழுதும்
முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். இராஜயோகி எப்பொழுதும்
எல்லைக்கப்பாற்பட்ட அதிபதி ஆவார். எல்லைக்குட்பட்ட எஜமானர்
அல்ல. எல்லைக்குட்பட்டவைகளிலிருந்து வெளியேறி வந்து
விட்டீர்கள். எல்லையில்லாத அதிகாரம் கிடைத்து விட்டது - இதே
குஷியில் இருங்கள். எப்படி எல்லையில்லாத தந்தை இருக்கிறாரோ,
அதே போல எல்லையில்லாத குஷியில் இருங்கள், போதையில் இருங்கள்.
நல்லது.
விடை பெறும் பொழுது.
அனைத்து அமிருத வேளையின் வரதானம்
உடைய குழந்தைகளுக்கு வரதாதா - வரமளிக்கும் வள்ளலான தந்தையின்
பொன்னான அன்பு நினைவுகள் உரித்தாகுக. கூடவே பொன்னான உலகத்தை
அமைப்பதற்கான சேவையில் எப்பொழுதும் திட்டங்களை மனனம் செய்து
கொண்டிருக்கும் மேலும் எப்பொழுதும் சேவையில் உயிருக்குயிராக
ஆழ்ந்த அன்புடன் உடல், மனம், பொருளாலே சகயோகியாக இருக்கும்
ஆத்மாக்கள் அனைவருக்கும் பாப்தாதா குட் மார்னிங், டைமண்டு
மார்னிங் கூறிக் கொண்டிருக்கிறார். மேலும் எப்பொழுதும் டைமண்டு
(வைரம்) ஆகி இந்த டைமண்டு யுகத்தின் விசேஷத் தன்மையை வரதானம்
மற்றும் ஆஸ்தியாக பெற்று சுயம் தாங்களும் பொன்னான நிலையில்
நிலைத்திருங்கள். மேலும் மற்றவர்களுக்கும் அவ்வாறே அனுபவம்
செய்வித்துக் கொண்டு இருங்கள். எனவே நாலா புறங்களின் டபிள் ஹீரோ
குழந்தைகளுக்கு டைமண்டு மார்னிங். நல்லது.
வரதானம்:
கருணையுள்ளத்தின் பாவனை மூலமாக
அபகாரிகள் (தீங்கு செய்பவர்கள்) மீதும் உபகாரம் (உதவி) செய்யக்
கூடிய சுப சிந்தனையாளர் ஆவீர்களாக.
எப்பேர்ப்பட்ட எந்தவொரு ஆத்மா -
சதோகுணம் உடையவராகட்டும், தமோகுணம் உடையவராகட்டும் அவர்கள்
தொடர்பில் வருகிறார்கள் என்றாலும் சரி - ஆனால் எல்லாரிடத்தும்
சுபசிந்தனையாளர் அதாவது அபகாரி மீதும் உபகாரம் செய்பவர்கள் (தீங்கு
செய்பவருக்கும் உதவி செய்பவர்கள்) ஆவீர்கள். ஒரு பொழுதும்
எந்தவொரு ஆத்மா மீதும் வெறுப்பின் பார்வை இருக்கக்கூடாது..
ஏனெனில் இவர் அறியாமைக்கு வசப்பட்டுள்ளார். ஞானமில்லாதவராக
இருக்கிறார் என்பதை அறிந்துள்ளீர்கள். அவர்கள் மீது கருணை
அல்லது அன்பு வர வேண்டும். வெறுப்பு அல்ல. இவர் ஏன் இவ்வாறு
செய்தார் என்று இப்படி சுப சிந்தனையாளரான ஆத்மா யோசிக்க
மாட்டார். ஆனால் இந்த ஆத்மாவிற்கு எப்படி நன்மை செய்ய முடியும்
என்று யோசிப்பார் - இது தான் சுப சிந்தனையாளரின் நிலை ஆகும்,
சுலோகன்:
தபஸ்யாவின் பலத்தின் மூலமாக
நடக்க முடியாததையும் நடத்திக் காட்டக் கூடிய வெற்றியின்
மூர்த்தி ஆகுங்கள்.
ஓம்சாந்தி