08-03-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
கேள்வி:
எந்த விதமான தவறும் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்ன?
பதில்:
தேக அபிமானம். தேக அபிமானத்தின் காரணமாகத்தான் குழந்தைகளால் நிறைய தவறுகள் ஏற்படுகின்றன. அவர்கள் சேவை கூட செய்ய முடியாது. அவர்கள் மூலமாக அனைவரும் வெறுக்கும் வகையில் அப்பேர்ப்பட்ட கர்மங்கள் நடக்கின்றன. குழந்தைகளே ஆத்ம உணர்வுடை வர் ஆகுங்கள். எந்த ஒரு முறையற்ற செயலும் செய்யாதீர்கள் என்று பாபா கூறுகிறார். பால் பாயசம் போல ஆகி, சேவையின் நல்ல நல்ல திட்டங்களை அமையுங்கள். முரளியைக் கேட்டு தாரணை செய்யுங்கள். இதில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
பாடல்:
ஆகாய சிம்மாசனத்தை விட்டாவது .. .. ..
ஓம் சாந்தி. ஆன்மீகக் குழந்தைகளுக்காக ஆன்மீகத் தந்தையின் ஸ்ரீமத். .இப்பொழுது நான் எல்லா சென்டர்களின் குழந்தைகளிடம் உரையாடிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது திரிமூர்த்தி, காலச் சக்கரம், கல்ப விருட்சம், ஏணிப்படி, லட்சுமி நாராயணரின் படம் மற்றும் கிருஷ்ணரின் படம் - இந்த ஆறு படங்கள் முக்கிய மானவை. முழு கண்காட்சியே இதில் அடங்கி விடுகிறது. இதில் அனைத்து சாரமும் வந்து விடுகிறது. எப்படி நாடகத்தில் விளம்பரத்திற்காக திரைச்சீலைகள் அமைக்கப்படுகின்றன. அவை ஒரு பொழுதும் மழையில் கெட்டுப் போவதில்லை. அது போல இந்த முக்கியமான படங்களை அமைக்க வேண்டும். ஆன்மீக சேவையை அதிகரிப் பதற்காக, பாரதவாசி மனிதர்களுக்கு நன்மை செய்வதற்காக குழந்தைகளுக்கு ஸ்ரீமத் கிடைக்கிறது. கல்யாண காரி (நன்மை செய்பவர்) எல்லையில்லாத தந்தை ஆவார் என்றும் பாடப்படுகிறது. எனவே அவசியம் தீமை செய்பவரும் யாரோ இருப்பார். அதன் காரணமாக தந்தை வந்து மீண்டும் நன்மை செய்ய வேண்டி உள்ளது. எந்த ஆன்மீகக் குழந்தைகளுக்கு நன்மை ஆகிக் கொண்டிருக்கிறதோ அவர்கள் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும். எப்படி நமக்கு நன்மை ஆகி உள்ளதோ, பிறகு நாம் மற்றவர்களுக்கும் நன்மை செய்வோம். எப்படி தந்தைக்குக் கூட எவ்வாறு நன்மை செய்யலாம் என்ற சிந்தனை எழுகிறது. வழி முறைகளைக் கூறிக் கொண்டிருக்கிறார். ஆறடிக்கு ஒன்பது அடி அளவு ஷீட்டில் இந்தப் படங்களை அமைக்க வேண்டும். டில்லி போன்ற நகரங்களில் பெரும்பாலும் நிறைய மனிதர்கள் வருகிறார்கள். அங்கு அரசாங்கத்தின் சபைகள் நடக்கின்றன. அரசு அலுவலகங்கள் பக்கம் நிறைய மக்கள் வருகிறார்கள். அங்கு இந்த படங்களை வைக்க வேண்டும். அநேகருக்கு நன்மை செய்யும் பொருட்டு தந்தை ஆலோசனை அளிக்கிறார். இது போல தகரத்தில் நிறைய படங்களை அமைக்கலாம். ஆத்ம உணர்வுடையவராக ஆகி தந்தையின் சேவையில் ஈடுபட வேண்டும். இந்த படங்களை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் அமைக்க வேண்டும் என்று தந்தை ஆலோசனை அளிக்கிறார். இந்த ஆறு படங்கள் முக்கியமான இடங் களில் வைக்க வேண்டும். இது போல முக்கியமான இடங்களில் இந்தப் படங்கள் வைக்கப்பட்டு விட்டன என்றால், உங்களிடம் அதைத் தெரிந்து கொள்வதற்காக ஆயிரக் கணக்கானோர் வருவார் கள். ஆனால் குழந்தைகளிடம் தேக அபிமானம் இருக்கும் காரணத்தால் நிறைய தவறுகள் ஏற்படு கின்றன. நான் பக்குவமான ஆத்ம அபிமானியாக இருக்கிறேன் என்று யாரும் நினைத்துக் கொள்ளாதீர்கள். தவறுகள் நிறைய ஆகின்றன. உண்மையைக் கூறுவதில்லை. இவர்களிடம் தேக அபிமானம் இருக்கிறது என்று யாருக்காவது மோசமான வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அப்பேர்ப்பட்ட எந்த செயலையும் செய்யாதீர்கள். நீங்கள் எப்பொழுதுமே போர்க்களத்தில் இருக் கிறீர்கள். வேறு இடங்களில் 10-20 வருடங்கள் வரை யுத்தங்கள் நடக்கும். உங்களுடைய மாயை யுடனான யுத்தம் கடைசி வரை நடக்க வேண்டி உள்ளது. ஆனால் அது மறைமுகமாக உள்ளது. அதை யாரும் தெரிந்து கொள்ள முடியாது. கீதையில் மகாபாரதப் போரை ஸ்தூலமானதாக காண்பித்துள்ளார்கள்.ஆனால் இது ஆன்மீக யுத்தம்.ஆன்மீக யுத்தம் பாண்டவர் களினுடையது. அந்த ஸ்தூல யுத்தமானது பரமபிதா பரமாத்மாவிடம் அன்பில்லாத புத்தி உடையவர் களினு டையது. பிராமண குல பூஷணர்களாகிய உங்களுடையது அன்பான புத்தி. நீங்கள் மற்ற தொடர்பு களை விடுத்து ஒரு தந்தையுடன் சம்மந்தம் வைத்துள்ளீர்கள். அநேக முறை தேக அபிமானம் வந்து விடும் காரணத்தால் மறந்து விடுகிறார்கள். பிறகு தங்களுடைய பதவியை தாழ்ந்ததாக ஆக்கிக் கொண்டு விடுகிறார்கள். பிறகு கடைசியில் மிகவுமே பச்சாதாபப்பட வேண்டி வரும். ஒன்றுமே செய்ய முடியாது. இது கல்ப கல்பத்தின் பந்தயம் ஆகும். இந்த நேரத்தில் யார் சரியில்லாத காரியம் செய்கிறார்களோ அவர்களுக்கு கல்ப கல்பாந்திரத்திற்கு பதவி தாழ்ந்து போய் விடுகிறது. மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது.
இதற்கு முன்பு நீங்கள் 100 சதவிகிதம் நஷ்டத்தில் இருந்தீர்கள் என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது தந்தை 100 சதவிகிதம் நன்மை ஏற்படுத்த அழைத்துச் செல்கிறார். எனவே ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் கல்யாணகாரியாக (நன்மை செய்பவர்) ஆக வேண்டும். அனைவருக்கும் சுகத்தின் வழியைக் கூற வேண்டும். சுகம் இருப்பதே சொர்க்கத்தில் தான். நரகத்தில் இருப்பது துக்கம். ஏன்? இது விகாரி உலகமாகும். அது நிர்விகாரியாக இருந்தது. இப்பொழுது விகாரி உலகமாக ஆகி உள்ளது. மீண்டும் தந்தை நிர்விகாரி உலகமாக ஆக்குகிறார். இந்த விஷயங்களை உலகத்தில் யாருமே அறியாமல் உள்ளார்கள். எனவே முக்கியமான இந்த படங்கள் நிரந்தரமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். முதல் நம்பரில் டில்லி முக்கிய மானது. இரண்டாவது, மும்பை, கல்கத்தா, யாரிடமாவது ஆர்டர் கொடுத்தோம் என்றால் படத்தை தகர ஷீட்டில் தயாரிக்க முடியும். ஆக்ராவில் கூட சுற்றிப் பார்ப்பதற்கு நிறையபேர் போகிறார்கள். குழந்தைகள் சேவை மிகவும் நன்றாக செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஏதாவது காரியம் செய்து காண்பிக்க வேண்டும். இந்த படங்களைத் தயாரிப்பதில் எந்தக் கஷ்டமும் இல்லை. அனுபவம் வேண்டும். அவ்வளவே! எவரொருவரும் தூரத்திலிருந்து கூட படிக்கக் கூடிய வகையில் நல்ல பெரிய படங்கள் இருக்க வேண்டும். காலச் சக்கர படம் கூட பெரியதாகத் தயாரிக்க முடியும். யாருமே கெடுத்து விடாத வகையில், இந்த படங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டி இருக்கும். யக்ஞத்தில் அசுரர்களின் தடைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் இவை புதிய விஷயங்கள் ஆகும். இந்த கடை திறந்து அமர்ந்துள்ளோம். கடைசியில் நாம் இறங்கிக் கொண்டே வந்துள்ளோம். அவசியம் கொஞ்சம் குறைகள் உள்ளன என்பதை கடைசியில் எல்லோரும் புரிந்து கொண்டு விடுவார்கள். தந்தை இருப்பதே கல்யாணகாரியாக (மங்களகரமானவர்). பாரதத்திற்கு எப்படி மற்றும் எப்பொழுது நன்மை ஆகி உள்ளது என்பதை அவரால் கூற முடியும். பாரதத்தை யார் தமோ பிரதானமாக ஆக்குகிறார்? பிறகு சதோபிரதானமாக யார் ஆக்குகிறார்? இந்த சக்கரம் எப்படிச் சுற்றுகிறது? என்பது யாருக்குமே தெரியாது. சங்கமயுகத்தைக் கூட அறியாமல் உள்ளார்கள். பகவான் ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் வருகிறார் என்று நினைக்கிறார்கள். சில நேரங்களில் பகவான் பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று கூறுகிறார்கள். பாரதம் பழமையான சொர்க்கமாக இருந்தது. கிறிஸ்து வருவதற்கு மூன்று ஆயிரம் ஆண்டுகள் முன்ன தாக தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என்றும் கூறுகிறார்கள். பிறகு கல்பத்திற்கு நீண்ட ஆயுள் கொடுத்து விட்டார்கள். எனவே குழந்தைகள் ஆத்ம உணர்வுடைய வராக இருப்பதற்கான மிகுந்த உழைப்பு செய்ய வேண்டும். அரைக் கல்பம் சத்யுகம் மற்றும் திரேதாவில் நீங்கள் ஆத்ம அபிமானியாக (ஆத்ம உணர்வுடையவராக) இருந்தீர்கள். ஆனால் பரமாத்மா அபிமானியாக (பரமாத்மாவின் நினைவு உடையவர்களாக) இருக்கவில்லை. இங்கே மீண்டும் நீங்கள் தேக உணர்வுடையவராக ஆகி விட்டீர்கள். மீண்டும் ஆத்ம உணர்வுடையவராக ஆக வேண்டும். யாத்திரை என்ற வார்த்தை கூட இருக்கிறது. ஆனால் பொருள் புரியாமல் இருக்கிறார்கள். மன்மனாபவ என்பதன் பொருளாவது ஆன்மீக யாத்திரையில் இருங்கள்.ஹே ஆத்மாக்களே! தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். கிருஷ்ணர் இவ்வாறு கூற முடியாது. அவர் கீதையின் பகவானாக எப்படி ஆக முடியும்? அவர் மீது யாருமே களங்கம் ஏற்படுத்த முடியாது. படி இறங்கி வரும் பொழுது அரைக்கல்பம் காமச் சிதையில் அமர்ந்து கருப்பாக ஆகி விடுகிறார்கள் என்பதையும் தந்தை புரிய வைத்துள்ளார். இப்பொழுது இருப்பதே இரும்பு யுகமாக. அந்த யுகத்தின் வழக்கப்படி கருப்பாகத் தான் இருக்கும். ஆனால் எல்லோருடைய படங்களையும் எப்படி கருப்பாக அமைப்பது? என்னவெல்லாம் சித்திரங்கள் அமைத்திருக்கிறார்களோ அவை எல்லாமே புத்தியில்லாமல் அமைந்தவை. அவரையே ஷியாம் (கருமையானவர்) மற்றும் சுந்தர் (அழகானவர்).. .. .. என்று கூறுவது .. .. .. இது எவ்வாறு ஆக முடியும். அதற்கு குருட்டு நம்பிக்கை யுடன் பொம்மைகளின் பூஜை செய்பவர்கள் என்று கூறப்படுகிறது. பொம்மைகளுக்குப் பெயர், ரூபம் மற்றும் தொழில் எதுவுமே இருக்க முடியாது. நீங்கள் கூட முதலில் பொம்மைகளின் பூஜை செய்து கொண்டிருந்தீர்கள் அல்லவா? பொருள் எதுவும் புரியாமல் இருந்தீர்கள். எனவே கண்காட்சியின் முக்கியமான படங்கள் தயாரிக்கப்பட்டு விட வேண்டும் என்று பாபா புரிய வைத்துள்ளார். கண்காட்சிக்குப் பின்னால் கண்காட்சி தொடர்ந்து சேவை செய்து கொண்டிருக்கும் வகையில் குழு (கமிட்டி) அமைக்கப்பட வேண்டும். பந்தனத்திலிருந்து விடுபட்டவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். கன்னியர்கள் பந்தனத்திலிருந்து விடுபட்டவர்கள் ஆவார்கள். வானபிரஸ்திகள் கூட பந்தனத்திலிருந்து விடுபட்டவர்கள் ஆவார்கள். எனவே குழந்தைகள் உத்தரவுகளை அமலுக்குக் கொண்டு வர வேண்டும். இவர்கள் மறைமுகமான பாண்டவர்கள் ஆவார்கள். யாருமே அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை. தந்தையும் மறைமுகமாக உள்ளார். ஞானமும் மறைமுகமாக உள்ளது. அங்கு மனிதர்கள் மனிதர்களுக்கு ஞானம் கொடுக்கிறார்கள். இங்கு பரமாத்மா தந்தை ஆத்மாக்களுக்கு ஞானம் அளிக்கிறார். ஆனால் ஆத்மா தான் ஞானம் எடுக்கிறது என்பதை புரியாமல் உள்ளார்கள். ஏனெனில் அவர்கள் ஆத்மாவில் (நிர்லேப்) எதுவும் பதிவதில்லை என்று கூறி விடுகிறார்கள். உண்மையில் ஆத்மா தான் எல்லாமே செய்கிறது. ஆத்மா கர்மங் களுக்கேற்ப மறு பிறவி எடுக்கிறது. தந்தை இந்த எல்லா பாயிண்ட்டுகளையும் நல்ல முறையில் புத்தியில் பதிய வைக்கிறார். எல்லா சென்டர்களிலும் வரிசைக்கிரமமாக ஆத்ம உணர்வுடையவர் களாக இருக் கிறார்கள். அவர்கள் நல்ல முறையில் புரிந்து கொண்டு பின்னர் மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். தேக உணர்வில் இருப்பவர்கள் எதையும் புரிந்து கொள்வதும் இல்லை. புரிய வைக்கவும் முடியாமல் இருப்பார்கள். நான் ஒன்றுமே புரிந்து கொள்வதில்லை. இது கூட தேக அபிமானம் ஆகும். அட, நீங்கள் ஆத்மா. தந்தை ஆத்மாக்களுக்கு வந்து புரிய வைக்கிறார். புத்தியை திறந்து வைக்க வேண்டும். அதிர்ஷ்ட்டத்தில் இல்லை என்றால் திறப்பதே இல்லை. எனவே தந்தை முயற்சி செய்விக்கிறார். ஆனால் அதிர்ஷ்ட்டத்தில் இல்லை என்றால் முயற்சி கூட செய்வதில்லை. இருப்பதோ மிகவும் சுலபமான விஷயம். அ மற்றும் ஆ-வை (அப்பா மற்றும் ஆஸ்தி) புரிந்து கொள்ள வேண்டும். எல்லையில்லாத தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. பாரத வாசிகளாகிய நீங்கள் எல்லோரும் தேவி தேவதைகளாக இருந்தீர்கள். பிரஜைகளும் அவ்வாறே இருந்தார்கள். இச்சமயம் பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகி விட்டுள்ளார்கள். எவ்வளவு புரிய வைக்கப்படுகிறது. தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். குழந்தைகளே நான் உங்களை தேவி தேவதையாக ஆக்கினேன் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் இப்பொழுது என்னவாக ஆகி விட்டுள்ளீர்கள். இது பயங்கரமான நரகம் ஆகும். விகார கடலில் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் எல்லாவற்றையும் ஒன்று போல காண்பிக் கிறார்கள். இங்கு மனிதர்கள் இன்னுமே கெட்டுப் போயுள்ளார்கள். மனிதர்களிடம் கோபம் கூட எவ்வளவு உள்ளது. இலட்சக்கணக்கானோரைக் கொன்று விடுகிறார்கள். வேசியாலயமாக ஆகி யுள்ளது. பாரதத்தை மீண்டும் சிவாலயமாக சிவபாபா தான் ஆக்குகிறார். தந்தை எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கிறார். இப்படி இப்படி செய்யுங் கள் என்று உத்தரவு கொடுக்கிறார். படங்களைத் தயாரியுங்கள். பிறகு யாரெல்லாம் பெரிய பெரிய மனிதர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்குப் புரிய வையுங்கள். இந்த பழமையான யோகம் பழமையான ஞானத்தை எல்லோரும் கேட்க வேண்டும். ஹால் எடுத்து கண்காட்சியை வைக்க வேண்டும். அவர்கள் உண்மையில் நம்மிடமிருந்து பைசா ஆகியவை எதுவும் வாங்கக் கூடாது. பிறகும் உங்களுக்கு சரி என்று தோன்றினால் வாடகை வாங்கி கொள்ளுங்கள். படங்களை நீங்கள் பாருங்கள். படங்களை பார்த்தார்கள் என்றால் உடனே பைசாவை திருப்பிக் கொடுத்து விடுவார்கள். யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும். அவ்வளவே! அதிகாரம் கையில் இருக்கிறது அல்லவா? நினைத்தார்கள் என்றால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும். விநாச காலத்தில் அன்பில்லாத புத்தி. எனவே விநாசத்தை அடைந்து விட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.. பாண்டவர்கள் வருங்காலத்திற்கான பதவியை அடைந்தார்கள். அதேபோல இராஜ்யமும் பின் வரும் காலத்தில் இருக்கும். இப்பொழுது ஆகுமா என்ன? இந்த வீடுகள் ஆகியவை எல்லாமே இடிந்து போய் விடும். கண்காட்சி கூட வைக்க வேண்டும் என்று இப்பொழுது தந்தை புரிய வைத்துள்ளார். மிகவும் நல்ல முறையில் கார்டில் அச்சடித்து அழைப்பு கொடுக்க வேண்டும். நீங்கள் முதலில் பெரியவர்களுக்கு புரிய வைத்தீர்கள் என்றால், உதவியும் செய்வார்கள். மற்றபடி தூங்கிக் கொண்டு இருக்கக் கூடாது. ஒரு சில குழந்தைகள் தேக அபிமானத்தில் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆலோசனை குழு அமைத்து ஒருவருக் கொருவர் பால்பாயசமாக இருந்து, திட்டம் தீட்ட வேண்டும். மற்றபடி முரளி படிக்கவில்லை என்றால் தாரணை எப்படி ஆகும்? இது போல நிறைய பேர் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஆத்ம உணர்வுடையவராக ஆகி சேவைக்கான பல்வேறு வழிமுறைகளை சிந்திக்க வேண்டும் தங்களுக்குள் பால்பாயசம் போல இனிமையாக இருந்து சேவை செய்ய வேண்டும். எப்படி தந்தை கல்யாணகாரியாக இருக்கிறாரோ அவ்வாறே கல்யாணகாரி ஆக வேண்டும்.
2. அன்பான புத்தி உடையவராக ஆகி மற்ற தொடர்புகளை விடுத்து, அந்த ஒருவரிடம் தொடர்பை இணைக்க வேண்டும். கல்ப கல்பாந்திரத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு விடும் வகையில் அப்பேர்ப்பட்ட எந்த ஒரு முறையற்ற செயலையும் செய்யக் கூடாது.
வரதானம்:
சதா ஊக்கம் மற்றும் உற்சாகத்தில் இருந்து முன்னேறும்
கலையின் அனுபவம் செய்யக் கூடிய மகாவீர் ஆகுக.
மகாவீர் குழந்தைகள் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு எண்ணத்திலும் முன்னேறும் கலையை அனுபவம் செய்கிறார்கள். அவர்களுடைய முன்னேறும் கலை அனைவருக்கும் நன்மை ஏற்படு கிறது அதாவது நன்மை செய்வதற்கான நிமித்தம் ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்கு நிறுத்துவது மற்றும் களைப்பு பற்றியோ அனுபவம் இருக்காது, அவர்கள் சதா களைப்பற்றவர்களாக, சதா ஊக்கம் உற்சாகத்தில் இருக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நின்று கொள்கிறார்கள் என்றால் குதிரை படையாகவும் களைப்படைந்தவர்களை காலாட் படையாகவும் மேலும் யார் சதா நடக்கக் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்களை மகாவீர் என்று சொல்லப் படுகிறது. அவர்களை மாயாவின் எந்த விதத்திலும் கண்களை மறைக்காது.
சுலோகன்:
யார் சதா சாதனா (பயிற்சி) மூலம் விரும்பும் பொழுது சீதள தன்மையுடனும் விரும்பும் பொழுது ஜூவாலா ரூபத்திலும் தாரணை செய்கிறார்களோ அவர்கள் தான் சக்திசாலியானவர்கள்.
மாதேஷ்வரி அவர்களின் விலைமதிக்கத் தக்க மகாவாக்கியங்கள்
ஆத்மா ஒருபொழுதும் பரமாத்மாவின் அம்சம் ஆக முடியாது.: பல மனிதர்கள் நினைத்துக் கொள்கிறார்கள், ஆத்மாக்களாகிய நாம் பரமாத்மாவின் அம்சம் என்று புரிந்துக் கொள்கிறார்கள். அம்சம் என்றாலே ஒரு துண்டு என்று தான் சொல்லப்படுகிறது. பரமாத்மா அனாதி மற்றும் அழிவற்றவர் என்றும் ஒரு பக்கம் சொல்கிறார்கள் என்றால் அப்படிபட்ட அழிவற்ற பரமாத்மாவை துண்டு துண்டாக எப்படி கொண்டு வந்தார்கள். பரமாத்மாவை இப்பொழுது எப்படி வெட்ட (பிரிக்க) முடியும். ஆத்மா தான் அழிவில்லாதது. எனவே ஆத்மாவை உருவாக்கக் கூடியவர் அழிவில்லாத வராக இருக்கிறார். அப்படிபட்ட அழிவில்லாத பரமாத்மாவை ஒரு துண்டாக கொண்டு வருவது என்பது பரமாத்மாவைக் கூட அழியக் கூடியது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ஆத்மாக்களாகிய நாம் அனைவருமே பரமாத்மாவின் குழந்தைகள் என்பதை தெரிந்திருக்கிறீர்கள். நாம் அவருடைய வம்சாவளி அதாவது குழந்தைகளாக இருக்கிறோம், அது எப்படி அம்சம் ஆக முடிகிறது? ஆகையால் பரமாத்மாவின் மகாவாக்கியம் குழந்தைகளே, நானே சுயம் அழிவில்லாத வன், சுடர்விடும் ஜோதியானவன், நான் ஒளியானவன், நான் ஒருபொழுதும் அணைவதில்லை, மேலும் அனைத்து மனித ஆத்மாக்களின் தீபங்களும் சுடர்விடவும் செய்கிறது, அணையவும் செய்கிறது. அவர்கள் அனைவரையும் ஒளியேற்றக் கூடியவன் மேலும் நான் லைட் (ஒளி) மற்றும் மைட் (சக்தி) கொடுக்கக் கூடியவனாகவும் இருக்கிறேன். மற்றபடி பரமாத்மாவாகிய எனது பிரகாசத்திற்கும், ஆத்மாவின் பிரகாசத்திற்கு இடையே அவசியம் வேறுபாடு இருக்கும். பல்ப் இருக்கிறது என்றால் சில அதிகபடியான மின்சாரம் பாயக்கூடியதாகவும் இருக்கிறது, சில குறைந்த மின்சாரம் பாயக்கூடியதாகவும் இருக்கிறது. அதுபோல ஆத்மா கூட சில அதிகப்படியான சக்திசாலியானதாகவும், சில குறைந்த சக்தியுடையதாகவும் இருக்கிறது. மற்றபடி பரமாத்மாவின் சக்தி எவரையும் விட குறைந்தது அல்லது அதிகமானது என்று இருப்பதில்லை, அதனால் தான் பரமாத்மாவை பற்றி சொல்கிறார்கள் - பரமாத்மா சர்வசக்திவான் அதாவது அனைத்து ஆத்மாக் களையும் விட அவரிடத்தில் (பரமாத்மாவிடம்) அதீத சக்தி இருக்கிறது. அவர் தான் உலகத்தின் கடைசி கட்டத்தில் வருகிறார். ஒருவேளை யாராவது பரமாத்மா சிருஷ்டியின் இடையில் (துவாபர் யுகத்தில்) வருகிறார் அதாவது யுகம் யுகமாக வருகிறார் என்றால் பரமாத்மா இடை காலக் கட்டத்தில் வந்துவிட்டால், பிறகு அவரை அனைவரையும் விட உயர்ந்தவர் என்று எப்படி சொல்ல முடியும். ஒருவேளை யுகம் யுகமாக வரு கிறார் என்று யாராவது சொன்னால் பரமாத்மா என்ன அடிக்கடி தனது சக்தியை பயன்படுத்துகிறார் என்று புரிந்துக் கொள்கிறார்களா? ஒருவேளை இடையிலேயே தனது சக்தியின் மூலம் அனைவருக்கும் சக்தி அதாவது சத்கதி கொடுத்து விடுகிறார் என்றால் அந்த சக்தி நிலையாக இருக்க வேண்டும், பரமாத்மாவின் சக்தி அந்தளவு மகத்துவமானது. பிறகு ஏன் தூர்கதியை (கீழான நிலையை) ஏன் அடைகிறார்கள். எனவே இதன் மூலம் பரமாத்மா யுகம் யுகமாக வருவதில்லை என்பது நிரூபணம் ஆகிறது. அதாவது இடையில் வருவதில்லை. அவர் கல்பத்தின் கடைசி சமயத்தில் மற்றும் ஒரே ஒரு முறை தான் தனது சக்தியின் மூலம் அனைவருக்கும் சக்கதி தருகிறார். பரமாத்மா அந்தளவு மிகப் பெரிய சேவை செய்வதால் தான் அவருடைய நினைவு சின்னமாக மிகப்பெரிய சிவலிங்கம் உருவாக்கப் பட்டுள்ளது. மேலும் அந்தளவு பூஜை செய்கிறார்கள், எனவே பரமாத்மா தான் சத்யமானவர், சைதன்யமானவராகவும் ஆனந்த சொரூபமாகவும் இருக்கிறார், நல்லது - ஒம்சாந்தி,