ஓம் சாந்தி. குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். யார் இந்தப் பாடலை இயற்றினார்களோ, அவர் களுக்கோ பாவம், மாதா பற்றி எதுவும் தெரியாது. ஜெகதம்பா என்ற பெயரைக் கேட்டிருக்கிறார் கள். ஆனால் அவர் யாராக இருந்தார், என்ன செய்துவிட்டுச் சென்றார் என்பது குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஜெகதம்பா (தாய்) இருக்கிறார் என்றால் நிச்சயமாக தந்தையும் இருக்கிறார். பெண் குழந்தைகளும் உள்ளனர், ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஜெகதம்பாவிடம் யார் செல்கிறார்களோ, அவர்களுடைய புத்தியில் இந்தப் புரிதல் கிடையாது. வெறுமனே உருவத்துக்குப் பூஜை செய்யும் பூஜாரியாக மட்டும் உள்ளனர். தேவிக்கு முன்னால் வந்து பிச்சை கேட்கின்றனர். இப்போது இது ராஜஸ்வ அஸ்வமேத அவிநாசி ருத்ர ஞான யக்ஞம். இதனைப் படைப்பவர் தாய்-தந்தை, தத் த்வம் (அதுவே நீங்களும் தான்). நீங்களும் கூட யக்ஞத்தைப் படைப் பவர்கள் தான். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் இந்த யக்ஞத்தை நன்கு வளர்க்க வேண்டும். யக்ஞத்திற்கு மிகுந்த மரியாதை வைக்க வேண்டும். யக்ஞம் முழுமையாகப் பராமரிக்கப் படுகின்றது. இது தலைமையகம். இன்னும் கிளைகளும் உள்ளன. மம்மா, பாபா மற்றும் குழந்தைகள் நீங்கள், இந்த யக்ஞத்தின் மூலமாகத் தங்களின் வருங்காலத்தை வைரம் போன்றதாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆக, அப்படிப்பட்ட யக்ஞத்தை எவ்வளவு பாதுகாப்பாக வும் கௌரவமாகவும் வைத்திருக்க வேண்டும்! அதன் மீது எவ்வளவு அன்பு இருக்க வேண்டும்! இது நம்முடைய மம்மா, ஜெகதம்பாவின் யக்ஞம். மம்மா பாபாவின் யக்ஞம் என்றால் நம்முடைய யக்ஞம். யக்ஞத்தை மேலும் வளர்க்க வேண்டும் - யக்ஞத்தில் வந்து அநேகக் குழந்தைகள் பாபா விடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். தாங்கள் பெற முடியவில்லை என்றாலும் கூட, தங்களுக்கு நேரமில்லை என்றாலும் கூட நல்லது, மற்றவர்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும். இதனுடைய பெயரே இராஜஸ்வ அஸ்வமேத ஞான யக்ஞம். இதன் மூலம் சுயராஜ்யம் கிடைக் கின்றது. இந்த யக்ஞத்தில் பழைய சரீரத்தையும் கூட சுவாஹா செய்ய வேண்டி உள்ளது. பாபா வுடையவர்களாக ஆகி விட வேண்டும். யக்ஞம் ஒன்றும் கட்டடம் அல்ல. இது எல்லையற்ற விஷயமாகும். இந்த யக்ஞத்தில் முழு உலகமும் ஸ்வாஹா ஆக வேண்டும். இன்னும் போனால் நீங்கள் பார்ப்பீர்கள், இந்த யக்ஞத்திற்கு எவ்வளவு மதிப்பு வைக்கிறார்கள் என்று. இங்கே அநேகருக்கு அந்த அளவு மதிப்பு இல்லை. இவ்வளவு பேரும் யக்ஞத்தின் குழந்தைகள். குழந்தை கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றனர் என்றால் இந்த யக்ஞத்தின் மீது எவ்வளவு மதிப்பு வைக்க வேண்டும்! ஆனால் அநேகர் மதிப்பு வைப்பதில்லை. இது அவ்வளவு பெரிய யக்ஞம், இதன் மூலம் மனிதர்கள் சோழியிலிருந்து வைரம் போல், தாழ்வானவரி-ருந்து இருந்து உயர்வனா வராக ஆகின்றனர். அதனால் பாபா சொல்கிறார், யக்ஞத்தைப் படைத்துக் கொண்டே இருங்கள். ஒருவர் உயர்வானவராக ஆனாலும் கூட மிகப்பெரிய சௌபாக்கியம். இவ்வளவு இலட்சக் கணக்கான கோவில்கள் முதலியன உள்ளன-அங்கே யாரும் உயர்வானவராக ஆவதில்லை. இங்கோ மூன்றடி நிலம் மட்டும் வேண்டும். யாராவது வந்தால் முற்றிலும் அவருடைய வாழ்க்கை சீர்திருந்தி விட வேண்டும். யக்ஞத்திற்கு எவ்வளவு மதிப்பு வைக்க வேண்டும்! பாபாவுக்கு அநேகர் எழுதுகின்றனர், பாபா, நாங்கள் எங்கள் வீட்டில் கீதா பாடசாலை திறக்கட்டுமா என்று. நல்லது குழந்தைகளே, யக்ஞ பூமியை உருவாக்குங் கள். யாராவது ஒருவருக்கு நன்மை ஏற்படும். இந்த யக்ஞத்திற்கு மிக அதிகமான மகிமை உள்ளது. யக்ஞத்தின் பூமி, இதில் பெண்குழந்தைகள் மற்றவர்களுக்கு நன்மை செய்து கொண்டே இருக்கின்றனர். இது போல் யக்ஞத் தின் மீது மிகுந்த மதிப்பு வேண்டும். ஆனால் ஞானம் முழுமையாக இல்லாத காரணத்தால் அவ்வளவு மதிப்பு வைப்பதில்லை. யக்ஞத்தில் தடைகளை ஏற்படுத்துபவர்கள் அநேகம் பேர் உள்ளனர். இது சிவபாபாவின் யக்ஞ மாகும். ஆக, தாய்-தந்தையர் ஒன்றாக இருக்கின்றனர். இந்த மம்மா-பாபாவிடமோ எதுவும் கிடைக்காது. எல்û லயற்ற தந்தையிடம் தான் அனைத்தும் கிடைக்கும். அவர் ஒருவர் தான். மம்மா பாபா எனச் சொல்லப் படுபவர்கள் சரீரதாரிகள். நிராகாருக்கோ சரீரம் கிடையாது. ஆகவே பாபா சொல்கிறார், சாகாருக்கும் (பிரம்மா பாபா) கூட சீடராக ஆகாதீர்கள். என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். இந்த பாபாவும் கூட என்னை நினைவு செய்கிறார். இராமர், கிருஷ்ணர், பிரம்மா முதலிய அனைவருமே அவரை நினைவு செய்வதாகக் காட்டு கின்றனர். அப்படி எல்லாம் கிடையாது. அங்கே (சத்யுகத்தில்) யாரும் நினைவு செய்வதில்லை. அவர்களுக்குப் பலன் கிடைத்து விட்டது. அவர்கள் நினைவு செய்வதற்கான அவசியம் என்ன இருக்கிறது? நாம் தூய்மை ஆகிவிட்டோம். நாம் தான் தூய்மையாவதற்காக நினைவு செய்ய வேண்டும். மகிமை ஒருவருக்கு மட்டுமே! அவரை வைத்து இவருக்கு மதிப்பு உள்ளது. நீங்கள் தேகதாரி யாரையும் நினைவு செய்யக் கூடாது. தேகதாரி மூலம் அவரது அறிமுகம் கிடைக் கின்றது. ஆனால் அவரையே நினைவு செய்ய வேண்டும். பிரம்மா பாபாவும் தேகதாரி, அனைத்து அறிமுகமும் கொடுக்கிறார். ஆனால் அநேக புத்தியற்ற குழந்தைகள் உள்ளனர், அவர்கள் சொல்கின்றனர், நாங்களோ நேரடியாக சிவபாபாவின் பிரேரணை மூலம் ஞானத்தைப் பெற முடியும் என்று. அப்படி நடக்குமானால் பிறகு இந்த ரதத்தில் அவர் வருவதற்கான அவசியமே இருக்காது. இந்த சாகாரோடு நமக்கு என்ன வேலை என்று அப்படியும் சிலர் நினைக்கின்றனர். பாபா சொல்கிறார், மன்மனாபவ. அவரை நினைவு செய்யுங்கள். ஆனால் இவர் மூலமாகச் சொல்கிறார் இல்லையா? பிறகு நம்பர்வார் மதிப்பு வைக்க வேண்டி உள்ளது. நம்பர்வார் சிம்மாசனத்தில் அமரக் கூடியவர்கள் யாரோ அவர்கள் தான் மதிப்பு வைப்பார்கள். இராஜ சிம்மாசனத்தில் மம்மா பாபா முதலில் அமர்வார்கள். பிறகு அவர்களைப் பின்பற்ற வேண்டும். அநேகம் பிரஜைகளை உருவாக்க வேண்டும். பதவியும் மிகவும் உயர்ந்தது. பயப்படுவதற்கான எந்த ஒரு விசயமும் இல்லை. ஏரோப்ளேனில் யாராவது புதிதாக ஏறுகின்றனர் என்றால் பயப்படு கின்றனர். சிலரோ பாருங்கள் சந்திரனுக்கு மேல் சென்று கொண்டே இருக்கின்றனர். பயிற்சியின் விஷயம் இல்லையா? ஆனால் அதனால் எந்த ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. இதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் சந்திரனுக்கு மேலேயும் கூட இராஜ்யத்தை அமைப்போம் என நினைக்கின்றனர். ஆனால் இதில் எதுவுமே நடக்கப் போவதில்லை. வீழ்ச்சி தான் இல்லையா? வீழ்ச்சி மற்றும் எழுச்சியையும் குழந்தைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சித்திரங்களும் உள்ளன. இந்த லட்சுமி-நாராயணர் இராஜ்யம் செய்தனர்.
இன்றைய நிலையப் பாருங்கள், பாரதம் எவ்வளவு ஏழையாக உள்ளது! இதுவோ உண்மையான விஷயமாகும். இவர்களோ தாங்களே (பி.கே) எழுதியுள்ளார்கள் என்றால் ஏணிப்படியில் காட்ட வேண்டும். அங்கே வைரங்களின் மாளிகைகள் ஜொலிக்கின்றன. இங்கே பிறகு சோழிகளைக் காட்ட வேண்டும். முன்பு சோழிகள் புழக்கத்தில் இருந்தன. குருத்வாராக்களில் சோழிகளை வைத்திருந்தனர். இப்போதோ எந்த ஒரு பைசாவும் கூட வைத்திருக்க மாட்டார்கள். ஏணிப்படியோ மிக நன்றாக உள்ளது. இதில் நீங்கள் நிறைய எழுத முடியும். மம்மா பாபாவுடன் கூடவே குழந்தைகளின் சித்திரமும் இருக்க வேண்டும். மேலும் மேலே ஆத்மாக் களின் மரமும் இருக்க வேண்டும். புதுப்புது சித்திரங்கள் தயாராகிக் கொண்டே இருக்கும். புரிய வைப்பதற்கும் சுலபமாக இருக்கும். வீழ்ச்சி எப்படி ஏற்படுகின்றது, பிறகு எழுச்சி எப்படி ஏற்படுகின்றது? நாம் நிராகாரி உலகத்திற்குச் சென்று விட்டுப் பிறகு சாகாரி உலகத்திற்கு வருகிறோம். புரிய வைப்பதற்கு மிகவும் சுலபம். புரிந்து கொள்ளவில்லை என்றால் அதிர்ஷ்டத்தில் இல்லை எனப் புரிந்து கொள்ள வேண்டும். டிராமாவை சாட்சியாக இருந்து பார்க்கப் படுகின்றது. குழந்தைகளுக்கு யக்ஞத்தின் மீது மிகுந்த மரியாதை இருக்க வேண்டும். யக்ஞத்தின் ஒரு பைசாவைக் கூட கேட்காமல் எடுப்பது அல்லது தாய்-தந்தையின் அனுமதி இன்றி யாருக்காவது கொடுப்பது மகா பாவமாகும். நீங்களோ குழந்தைகள். எந்த ஒரு சமயத்திலும் எந்த ஒரு பொருளும் உங்களுக்குக் கிடைக்கும். அதிகம் எடுத்து ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? கிடைக்குமோ என்னவோ என யோசிக்கின்றனர். ஆக, அதை மறைத்து உள்ளே வைப்பதால் மனம் அரித்துக் கொண்டே இருக்கும். ஏனென்றால் விதி முறைக்குப் புறம்பான காரியம் இல்லையா? பொருளோ உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். பாபா சொல்லியிருக்கிறார், கடைசி காலத்தில் திடீரென்று யாராவது இறந்து போகலாம். ஆக, அந்த சமயத்தில் என்னென்ன பாவங்கள் செய்திருக்கிறீர்களோ, அந்தக் குப்பைகள் எல்லாம் முன்னால் வந்து நிற்கும். அதனால் பாபா எப்போதுமே புரிய வைக்கிறார், உள்ளுக்குள் எந்த ஒரு மனக்குழப்பமும் இருக்கக் கூடாது. மனம் தூய்மையாக இருக்குமானால் கடைசி நேரத்தில் எதுவும் முன்னால் வராது. யக்ஞத்தில் இருந்தோ எல்லாமே கிடைத்துக் கொண்டிருக் கின்றன. ஏராளமான குழந்தைகளிடம் ஏராளமான பணம் உள்ளது. தேவைப்படும் போது கேட்பதாக அவர்களிடம் சொல்லப் படுகின்றது. குழந்தைகள் சொல்கின்றனர், பாபா, எப்போது தேவை என்றாலும் நாங்கள் இருக்கிறோம். தூய்மையாக இல்லாமல் இருக்கலாம். உணவு-பானத்தின் பத்தியம் வைப்ப தில்லை. ஆனால் உறுதிமொழி கொடுக்கின்றனர் - பாபா, எங்களிடம் நிறைய பணம் உள்ளது, அப்படியே மறைந்து போகும் இடையில் யாராவது சாப்பிட்டு விடலாம். அதனால் எப்போது வேண்டுமோ, கேட்டு வாங்கிக் கொள்ளவும் என்று. பாபா சொல்கிறார், நானும் என்ன செய்வேன்? கட்டடம் கட்ட வேண்டும் என்றால் தானாகவே வந்து விடும். ஆக, ஏராளமான குழந்தைகள் தங்கள் வீட்டில் அமர்ந்துள்ளனர். ஆகவே அப்படிப்பட்ட குழந்தைகளும் உயர்ந்த பதவி பெறுகின்றனர். பிரஜைகளிலும் கூட குறைந்த பதவி கிடையாது. இராஜாக்களிலும் கூட மிகுந்த செல்வந்தர்கள் உள்ளனர். அதனால் உள்ளுக்குள் அப்படி எந்த ஒரு சிந்தனையும் செய்யக் கூடாது. உங்களுடைய வாக்குறுதி - பாபா, தாங்கள் எதை உண்ணக் கொடுப்பீர்களோ........ பிறகும் அதன் படி நடக்கவில்லை என்றால் துர்கதி ஏற்பட்டு விடுகின்றது. சத்கதி அளிப்பதற்காக பாபா வந்துள்ளார். உயர்ந்த பதவிபெறவில்லை என்றால் துர்கதி எனச் சொல்வார்கள் இல்லையா? அங்கேயும் பெரிய பணக்காரர்கள், சிலர் குறைந்த பதவி, சிலர் உயர்ந்த பதவி உள்ளவர்கள் உள்ளனர் இல்லையா? குழந்தைகள் ஸ்ரீமத் படி புருஷார்த்தம் செய்ய வேண்டும். தனது வழிப்படி நடப்பதால் தன்னையே ஏமாற்றிக் கொள்கின்றனர். இது சிவபாபாவினால் படைக்கப்பட்ட ஞான யக்ஞமாகும். இதனுடைய பெயரே ராஜஸ்வ அஸ்வமேத அவிநாசி ருத்ர ஞான யக்ஞம். சிவபாபா வந்து சுயராஜ்யம் தருகிறார். யாருடைய அதிர்ஷ்டத்தில் இல்லையோ, பெயர் புகழ் பெற வேண்டியதில்லையோ, அப்போது வாயிலிருந்து நல்ல-நல்ல பாயின்ட்டுகள் வெளிவராது. யாருக்கும் புரிய வைப்பதில்லை என்றால் சொல்வார்கள் - பெயர் வெளிப்படுவதற்கு நேரம் பிடிக்கின்றது. அந்தக் காரணத்தால் புரிய வைக்கும் போது மிக முக்கியமான பாயின்ட்டுகள் மறந்து போகிறது. இதையும் புரிய வைக்க வேண்டும் - இது ராஜஸ்வ அஸ்வமேத அவிநாசி ருத்ர ஞான யக்ஞம், சுயராஜ்யம் பெறுவதற்கானது. போர்டிலும் எழுதிப் போட முடியும். இந்த யக்ஞத்தில் பழைய உலகம் முழுவதும் அழிந்து போகும். அதற்காகவே இந்த மகாபாரத யுத்தம் தயார் நிலையில் உள்ளது. விநாசத்திற்கு முன்பாகவே இந்த சுயராஜ்ய பதவியைப் பெற வேண்டுமானால் வந்து பெற்றுக் கொள்ளுங்கள். போர்டின் மீதோ நிறைய எழுதிப் போட முடியும். நோக்கம் குறிக்கோளும் அதில் வந்துவிட வேண்டும். கீழே எழுத வேண்டும் - சுயராஜ்ய பதவி கிடைக்கின்றது. எவ்வளவு முடியுமோ தெளி வாக எழுதி வைக்க வேண்டும், யார் வேண்டு மானாலும் படித்துப் புரிந்து கொள்கிற மாதிரி. இது போல போர்டு தயார் செய்யுங்கள் என்று பாபா டைரக்ஷன் தருகிறார். இந்த வார்த்தையை அவசியம் எழுதுங்கள். இன்னும் போகப்போக இந்த யக்ஞத்தின் பிரபாவம் அதிகம் வெளிப்படும். புயல்களோ அதிகம் வரும். உண்மையின் படகு ஆடலாம், அசையலாம், ஆனால் மூழ்கிப் போகாது எனச் சொல்கின்றனர். பாற்கடலின் பக்கம் போக வேண்டுமானால் விஷக்கடலின் மீது மனம் இருக்கக் கூடாது. யார் ஞானத்தைப் பெற்றுக் கொள்வதில்லையோ, அவர்களின் பின்னால் போய்த் தனது நேரத்தை வீணாக்கக் கூடாது. ஞானமோ புரிந்து கொள்வதற்கு மிக-மிக சுலபமானது.
நீங்கள் தான் பூஜைக்குரிய தேவி-தேவதைகளாக இருந்தீர்கள். இப்போது பூஜாரி ஆகி இருக் கிறீர்கள். பிறகு பாபா சொல்கிறார், என்னை மட்டுமே நினைவு செய்வீர்களானால் கறை நீங்கி விடும். உங்கள் பாவங்கள் பஸ்மமாகி விடும். வேறு எந்த உபாயமும் (பரிகாரமும்) கிடையாது. இது உண்மையிலும் உண்மையான உபாய மாகும். ஆனால் யோகத்தில் இருப்பதில்லை. தேக அபிமானம் அதிகம் உள்ளது. தேக அபிமானம் எப்போது விடுபடுகிறதோ, அப்போது யோகத்தில் இருக்க முடியும். பிறகு கர்மாதீத் நிலை ஏற்படும். கடைசி நேரத்தில் எந்த ஒரு பொருளும் நினைவு வரக் கூடாது. ஒரு சில குழந்தைகளுக்கு சில பொருட்கள் மீது அப்படி ஒரு மோகம் ஏற்பட்டு விடுகிறது, கேட்கவே வேண்டாம். சிவபாபாவை ஒரு போதும் நினைவு செய்வதில்லை. அப்படிப்பட்ட தந்தையைக் முக்கியமாக நினைவு செய்ய வேண்டும். கைகள் காரியம் செய்து கொண்டிருந்தாலும் மனம் பகவானிடம் ஈடுபட்டிருக்க வேண்டும் எனச் சொல்லப் படுகின்றது (சீக்கியர்களின் கிரந்தம்). அப்படிப் பட்ட நினைவு அபூர்வமாக யாருக்கோ தான் இருக்கிறது. யக்ஞத்தின் மீது மதிப்பு வைப்பதில்லை. இந்த யக்ஞத்தை மிகவும் அக்கறையோடு பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரித்தால் பாபாவைக் குஷிப் படுத்திய தாகும். ஒவ்வொரு விஷயத் திலும் பராமரிப்பு வேண்டும். ஏழைகளின் சிறிய தொகை இந்த யக்ஞத்திற்கு வருகிறது. அதன் மூலம் அவர்கள் பல கோடிக்கு அதிபதி ஆகின்றனர். மாதாக்களிடம் எதுவுமே இல்லை என்றாலும் ஒன்றிரண்டு ரூபாய், எட்டணா யக்ஞத்திற்காகக் கொடுக்கின்றனர் என்றால் அவர்கள் பல கோடிக்கு அதிபதி ஆகி விடுகின்றனர். ஏனென்றால் மிகுந்த பாவனையுடன் குஷியோடு எடுத்து வருகின்றனர். பாபா சொல்கிறார், நானே ஏழைப் பங்காளன். குழந்தைகளாகிய உங்களுக்காகவே வந்திருக்கிறேன். சிலர் எட்டணா எடுத்து வருகின்றனர். பாபா, கட்டடத்தில் ஒரு செங்கல் வைத்து விடுங்கள் எனச் சொல்கின்றனர். சில நேரம் இரண்டு கைப்பிடி தானியம் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கோ அது பல மடங்காக ஆகி விடுகின்றது. சிறு (அரிசி) குருணையும் தங்கத்துக்கு சமமாக ஆகி விடுகின்றது. ஏழைகளுக்கு நீங்கள் போய் அமர்ந்து தானம் செய்ய வேண்டும் என்ப தில்லை. ஏழைகளுக்கோ அந்த மனிதர்கள் தானம் செய்கின்றனர். அப்படிப்பட்ட ஏழைகளோ உலகத்தில் ஏராளமாக உள்ளனர். அனைவரும் வந்து இங்கே அமர்வார்களானால் புத்தியையே கெடுத்து விடுவார்கள். நாங்கள் யக்ஞத்தில் சமர்ப்பணமாவோம் என்றோ அநேகர் சொல்கின்றனர். ஆனால் பராமரிக்க வேண்டி உள்ளது. யக்ஞத்திற்கு வந்து விட்டு உபத்திரவத்தை உண்டாக்கு வதாக ஆகிவிடக் கூடாது. யக்ஞத்திலோ மிகவும் புண்ணிய ஆத்மா ஆக வேண்டும். மிகவும் கவனமாகப் பராமரிக்க வேண்டும். யக்ஞத்தின் மீது மதிப்பு இருக்க வேண்டும். இந்த யக்ஞத்தில் இருந்து தான் நாம் நமது சரீர நிர்வாகம் செய்கிறோம். யக்ஞத்தின் பணத்தை யாருக்காவது கொடுப்பது பெரிய பாவமாகும். இந்தப் பணம், யார் சோழியிலிருந்து வைரம் போல் ஆகிறார்களோ, ஈஸ்வரிய சேவையில் இருக்கிறார்களோ,, அவர்களுக்காக உள்ளது. மற்றப்படி ஏழைகள் முதலானவர்களுக்கு இந்த தான-புண்ணியமோ பல பிறவிகளாக செய்து வந்திருக்கிறீர்கள். கீழே இறங்கி-இறங்கியே பாவாத்மாவாகத் தான் ஆகியிருக்கிறீர்கள்.
குழந்தைகள் நீங்கள் அனைவருக்கும் பாபாவின் அறிமுகம் கொடுப்பதற்காகச் சின்னச் சின்ன கிராமங்களில் கூட கண்காட்சிகளை நடத்திக் கொண்டே இருங்கள். ஒரே ஓர் ஏழை வெளிப்பட்டா லும் கூட நல்லது தான். இதில் எந்த ஒரு செலவும் கிடையாது. லட்சுமி-நாராயணர் இந்த இராஜ்யத்தை அடைந்தனர் என்றால் என்ன செலவு செய்தனர்? ஒன்றும் இல்லை. உலகத்தின் ராஜபதவி அடைவதற்காக எந்த ஒரு செலவும் செய்யவில்லை. அந்த மனிதர்கள் தங்களுக்குள் எவ்வளவு சண்டையிட்டுக் கொள்கின்றனர்! வெடி மருந்துகள் முதலியவற்றிற்காக எவ்வளவு செலவு செய்கின்றனர்! இங்கோ செலவின் விஷயம் எதுவும் கிடையாது. ஒரு சோழி கூடச் செல வில்லாமல் ஒரு விநாடியில் உலகத்தின் ராஜபதவியைப் பெறுங்கள். அலஃப் - தந்தையை நினைவு செய்யுங்கள். பே (ஆஸ்தி) என்ற ராஜபதவி உங்களுக்காக இருக்கவே செய்கிறது. பாபா சொல்கிறார், எவ்வளவு முடியுமோ, உண்மையான மனதுடன் உண்மையான பிரபுவைத் திருப்திப் படுத்துங்கள். அப்போது உண்மையான கண்டத்தின் எஜமானர் ஆவீர்கள். பொய் இங்கே செல்லாது. நினைவு செய்ய வேண்டும். நாமோ குழந்தைகளாகத் தானே இருக்கிறோம் என்பதில்லை. நினைவு செய்வதற்கு மிகுந்த முயற்சி வேண்டும். யாராவது விகர்மம் செய்தால் மிகுந்த குழப்பத்தில் வந்து விடுவார்கள். புத்தி ஒரு நிலையில் நிற்காது. (பிரம்மா) பாபாவோ இதில் அனுபவி இல்லையா? பாபா சொல்லிக் கொண்டே இருக்கிறார். அநேகக் குழந்தைகள் தங்களை அனைத்தும் தெரிந்தவர் என நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் பாபா சொல்கிறார், மிகுந்த முயற்சி செய்ய வேண்டும். மாயா அதிக தடைகளை ஏற்படுத்துகிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தங்களின் இந்த ருத்ர ஞான யகஞத்தின் மீது அதிக மதிப்பு வைக்க வேண்டும். யக்ஞத்தின் சூழ்நிலையை மிகவும் சுத்தமாக, சக்திமிகுந்ததாக ஆக்குவதில் சகயோகி ஆக வேண்டும். இதனை அன்போடு பராமரிக்க வேண்டும்.
2) தன்னிடம் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளக் கூடாது. மனம் தூய்மையாக இருந்தால் விருப்பங்கள் நிறைவேறும். இந்த யக்ஞத்தின் ஒவ்வொரு சோழியும் கூட மதிப்பு வாய்ந்தது. அதனால் ஒரு சோழியைக் கூட வீணாக்கிவிடக் கூடாது.. இதை அதிகரிக்கச் செய்வதில் சகயோகம் அளிக்க வேண்டும்.