02-03-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

யார் பரமாத்மா பெயர், ரூபத்திலிருந்து விடுபட்டவர் என்று சொல்கிறார்களோ, அவர்களிடத்தில் நீங்கள் எந்த கேள்வியை கேட்கலாம்?

பதில்:

கீதையில் அர்ஜூனனுக்கு அகண்ட ஜோதி சொரூபமாக காட்சி ஏற்பட்டதே, அர்ஜூனன் போதும் நிறுத்துங்கள், தாங்க முடியவில்லை என்று சொன்னாரே பிறகு எப்படி பெயர், ரூபத்தி லிருந்து விடுபட்டவர் என்று சொல்கிறீர்கள். நான் உங்களுடைய தந்தையாக இருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். தந்தையின் உருவத்தைப் பார்த்து குழந்தை மகிழ்ச்சி அடையும், என்னால் பிரகாசத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்று எப்படி சொல்வார்.

பாடல்:

உங்கள் வாசலில் நின்றேன்.....................

ஓம் சாந்தி. நாங்கள் மிகவும் ஏழைகளாகி விட்டோம் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். ஹே பாபா! எங்கள் அனைவருடைய பையையும் நிரப்புங்கள். பிறவி- பிறவிகளாக பக்தர்கள் பாடிக் கொண்டி ருக்கிறார்கள். சத்யுகத்தில் பக்தி நடப்பதில்லை. அங்கே தூய்மையான தேவி-தேவதைகள் இருக்கிறார்கள். பக்தர்களை ஒருபோதும் தேவதைகள் என்று சொல்லப்படுவதில்லை. யார் சொர்க்கவாசிகளாக, தேவி-தேவதைகளாக இருக்கிறார்களோ, அவர்கள் பிறகு மறுபிறவி எடுத்து- எடுத்து நரகவாசிகளாக, பூஜாரிகளாக, ஏழைகளாக ஆகிறார்கள். தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். தந்தையை ஒரு மனிதன் கூட தெரிந்திருக்கவில்லை. தந்தை எப்போது வருகிறாரோ அப்போது தான் வந்து அறிமுகம் கொடுப்பார். பகவானைத்தான் பாபா என்று சொல்லப்படுகிறது. பக்தர்கள் அனைவருக்கும் ஒரு பகவானே ஆவார். மற்றவர்கள் அனைவரும் பக்தர்களாவர். சர்ச் போன்ற இடங்களுக்குச் செல்கிறார்கள் என்றால் கண்டிப்பாக பக்தர்கள் தான் அல்லவா. இந்த சமயத்தில் அனைவரும் தூய்மையற்றவர்கள் தமோபிரதானமானவர்களாக இருக் கிறார்கள், ஆகையினால் அனைவரும் ஹே தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே வாருங்கள் என்று அழைக்கிறார்கள். ஹே பாபா! பக்தர்களான எங்களுடைய பையை நிரப்புங்கள். பக்தர்கள் பகவானிடம் செல்வம் கேட்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் என்ன கேட்கிறீர்கள்? பாபா எங்களை சொர்க்கத்தின் எஜமானர்களாக்குங்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அங்கே அளவற்ற செல்வம் இருக்கிறது. வைர வைடூரியங்களினால் ஆன மாளிகைகள் இருக்கின்றன. நாம் பகவானின் மூலம் இராஜ்யத்தின் ஆஸ்தியை பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இது உண்மையான கீதையாகும். அது கீதை அல்ல. அந்த புத்தகங்கள் போன்றவை பக்தி மார்க்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பகவான் ஞானம் கொடுத்திருக்கவில்லை. பகவான் இந்த சமயத்தில் நரனிலிருந்து நாராயணனாக்க இராஜ யோகத்தைக் கற்றுக் கொடுக்கின்றார். இராஜாவோடு கண்டிப்பாக பிரஜைகளும் இருப்பார்கள். லஷ்மி-நாராயணன் மட்டும் உருவாக மாட்டார்கள். முழு இராஜ்யமும் உருவாகிறது. இப்போது பகவான் யார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள், வேறு எந்த மனிதர்களும் தெரிந்திருக்கவில்லை. நீங்கள் ஓ இறை தந்தையே! என்று அழைக்கிறீர்கள், அப்படியென்றால் உங்களுடைய இறை தந்தையின் பெயர், ரூபம், தேசம், காலம் என்னவென்று சொல்லுங்கள், என்று பாபா கேட்கிறார்? பகவானையும் தெரிந்திருக்கவில்லை, அவருடைய படைப்பையும் தெரிந்திருக்கவில்லை. கல்பம்- கல்பத்திலும் சங்கமயுகத்தில் வருகின்றேன் என்று பாபா வந்து கூறுகின்றார். முழு படைப்பினுடைய முதல்-இடை- கடைசியின் இரகசியத்தையும் படைப்ப வராகிய நான் தான் வந்து புரிய வைக்கின்றேன். அவர் பெயர் ரூபத்தி லிருந்து விடுபட்டவர், அவர் வர முடியாது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். பாபா வந்திருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சிவஜெயந்தி கூட நிராகாரமானவருடையது என்றே பாடப்பட்டுள்ளது. கிருஷ்ணருடைய ஜெயந்தியும் பாடப்பட்டுள்ளது. சிவஜெயந்தி எப்போது நடக்கிறது, என்பது தெரிந்திருக்க வேண்டும். எப்படி கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவின் பிறப்பு எப்போது நடந்தது, கிறிஸ்துவ தர்மம் எப்போது ஸ்தாபனை ஆனது என்பது தெரிந்திருக்கிறது. அதுபோல் இது பாரதத்தின் விசயமாகும். பகவான் பாரதத்தின் பையை எப்போது நிரப்புகின்றார்? ஹே பகவானே! பையை நிரப்புங்கள் என்று பக்தர்கள் அழைகிறார்கள். சத்கதிக்கு அழைத்துச் செல்லுங்கள் ஏனென்றால் நாங்கள் துர்கதியில் இருக்கிறோம், தமோபிரதானமாக இருக்கிறோம். ஆத்மா தான் சரீரத்தோடு அனுபவிக்கிறது. நிறைய மனிதர்கள், சாது-சன்னியாசிகள் ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்று சொல்கிறார்கள். நல்ல மற்றும் கெட்ட சம்ஸ்காரங்கள் ஆத்மாவில் தான் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். அதன்படி ஆத்மா பிறவி எடுக்கிறது. பிறகு ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்று சொல்கிறார்கள். புரிய வைப்பதற்கு புத்தியுள்ள மனிதர்கள் யாரும் இல்லை. இதிலும் கூட அனேக வழிகள் இருக்கிறன. யார் வீட்டில் கோபித்துக் கொள்கிறார்களோ அவர்கள் சாஸ்திரங்களை உருவாக்கி விடுகிறார்கள். ஸ்ரீமத் பகவத் கீதை என்பது ஒன்றே ஆகும். வியாசர் எந்த சுலோகம் போன்றவைகளை உருவாக்கினாரோ, அது ஒன்றும் பகவான் பாடியது அல்ல. நிராகார பகவான் யார் ஞானக்கடலாக இருக்கிறாரோ, அவர் அமர்ந்து பகவான் ஒருவரே என்று குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார். பாரதவாசிகளுக்கு இது தெரியவில்லை. ஈஸ்வரனுடைய சொல்லும் செயலும் (வழியும்) தனிப்பட்டது என்று பாடவும் செய்கிறார்கள். எந்த சொல்லும் வழியும் தனிப்பட்டது? ஈஸ்வரனுடைய சொல்லும் வழியும் தனிப்பட்டது என்று சொன்னது யார்? ஆத்மா சொல்கிறது, ஆத்மாவின் சத்கதிக்கான வழி எதுவோ, அதை ஸ்ரீமத் என்று சொல்லப்படுகிறது. கல்பம்-கல்பமாக வந்து உங்களுக்குப் புரிய வைக்கின்றேன் - மன்மனாபவ. தேகத்தின் அனைத்து தர்மங்களையும் தியாகம் செய்து ஆத்ம-அபிமானியாகுக. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். நீங்கள் இப்போது மனிதனிலிருந்து தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த இராஜயோகத்தின் குறிக்கோளே லஷ்மி-நாராயணன் ஆவதாகும். படிப்பின் மூலம் யாரும் இராஜாவாக ஆவதில்லை. அப்படிப்பட்ட பள்ளி எதுவும் இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றேன் என்று கீதையில் தான் இருக்கிறது. எப்போது எந்த இராஜாவின் இராஜ்யமும் இல்லையோ அப்போது தான் நான் வருகின்றேன். என்னை ஒரு மனிதனும் முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இவ்வளவு பெரிய லிங்கம் உருவாக்கியுள்ளீர்களே, அது ஒன்றும் என்னுடைய ரூபம் இல்லை என்று பாபா கூறுகின்றார். அகண்ட ஜோதி ரூப பரமாத்மா, பிரகாச மயமானவர் என்று மனிதர்கள் சொல்லி விடுகிறார்கள். அர்ஜூனன் பார்த்துவிட்டு நிறுத்துங்கள் என்னால் ஒளியின் பிரகாசத்தைக் காண பொருத்துக் கொள்ள முடியவில்லை என்று சொன்னார் என்று சொல்கிறார்கள். அட குழந்தை தந்தையின் ரூபத்தைப் பார்த்து பொருத்துக் கொள்ள முடிய வில்லை என்பது எப்படி நடக்கும். குழந்தை தந்தையைப் பார்த்து மகிழ்ச்சி அடையும் அல்லவா. என்னுடைய ரூபம் அப்படியா இருக்கிறது என்று பாபா கேட்கிறார். நான் பரமபிதாவாக இருக்கின்றேன் அதாவது வெகு தொலைவில் இருக்கக் கூடியவன், பரம் ஆத்மா என்றால் பரமாத்மா ஆகும். பிறகு பரமாத்மா மனித சிருஷ்டியின் விதைரூபம் என்று பாடுகிறார்கள். அவருடைய பக்தர்கள் மகிமை செய்கிறார்கள். சத்யுகம்-திரேதாவில் யாரும் மகிமை செய்வ தில்லை ஏனென்றால் அங்கே சுகம் இருக்கிறது. துக்கத்தில் அனைவரும் நினைவு செய்வார்கள், சுகத்தில் யாரும் நினைவு செய்ய மாட்டார்கள் என்றும் பாடுகிறார்கள். இதனுடைய அர்த்தத்தையு ம் யாரும் புரிந்து கொள்ள வில்லை. கிளிப் பிள்ளையைப் போல் அனைத்தையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சுகம் எப்போது ஏற்படுகிறது, துக்கம் எப்போது ஏற்படுகிறது. பாரதத்தின் விசயம் தான் அல்லவா. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சொர்க்கம் இருந்தது பிறகு திரேதா யுகத்தில் இரண்டு கலைகள் குறைந்தது. சத்யுகம் திரேதாவில் துக்கம் என்ற வார்த்தையே இருப்பதில்லை. அது சுகதாமம் ஆகும். சொர்க்கம் என்று சொன்னவுடனேயே வாய் இனிமை யாகிறது. பிறகு சொர்க்கத்தில் துக்கம் எங்கிருந்து வந்தது. அங்கேயும் கம்சன், ஜராசந்தன் போன்றவர்கள் இருந்தார்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் அப்படி இருக்க முடியாது.

நாம் தீவிர பக்தி செய்வதனால் காட்சி கிடைக்கிறது என்று பக்தர்கள் நினைக்கிறார்கள். காட்சி கிடைத்து விட்டது என்றால் நமக்கு பகவான் கிடைத்து விட்டார் என்று நினைக்கிறார்கள். லஷ்மியின் பூஜை செய்கிறார்கள், அவருடைய தரிசனம் கிடைத்தது, அவ்வளவு தான் நாம் கடைத்தேறி விட்டோம் என்பதிலேயே குஷியாகி விடுகிறார்கள், ஆனால் எதுவும் நடப்பதில்லை. அல்பகாலத்திற்கு சுகம் கிடைக்கிறது. தரிசனம் கிடைத்தது, முடிந்தது. முக்தி ஜீவன்முக்தியை அடைந்தார் என்பது கிடையாது, எதுவும் இல்லை. பாபா ஏணிப்படியைப் பற்றியும் புரிய வைத்திருக்கிறார் - பாரதம் உயர்ந்ததிலும் உயர்ந்ததாக இருந்தது. பகவான் கூட உயர்ந்ததிலும் உயர்ந்தவராக இருக்கிறார். பாரதத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்த ஆஸ்தி இந்த லஷ்மி– நாராயணனு டையதாகும். சொர்க்கமாக இருந்தபோது, சதோபிரதானமாக இருந்தார்கள், பிறகு கலியுக கடைசியில் அனைவரும் தமோபிர தானமாக இருக்கிறார்கள். நாங்கள் முற்றிலும் தூய்மை யற்றவர்களாக ஆகி விட்டோம் என்று அழைக்கிறார்கள். நான் கல்பத்தின் சங்கமயுகத்தில் உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்க வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். நான் என்னவாக இருக்கின்றேனோ, எப்படி இருக்கின்றேனோ அப்படி என்னை யதார்த்தமான முறையில் யாரும் தெரிந்திருக்கவில்லை. உங்களில் கூட வரிசைக்கிரமமான முயற்சியின்படி தெரிந்துள்ளீர் கள். ஏணிப்படி படத்தை காண்பிக்க வேண்டும். இது பாரதத்தின் ஏணிப்படியாகும். சத்யுகத்தில் தேவி-தேவதைகள் இருந்தனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பாரதம் இப்படி இருந்தது. சாஸ்திரங்களில் கல்பம் லட்சக் கணக்கான ஆண்டுகள் என்று எழுதி விட்டார்கள். பாபா கூறுகின்றார், லட்சக்கணக்கான ஆண்டுகள் இல்லை, கல்பம் 5 ஆயிரம் ஆண்டுகளுடையதாகும். சத்யுகம், திரேதா புதிய உலகம். துவாபர, கலியுகம் பழைய உலகமாகும். பாதி-பாதியாக இருக்கிறது அல்லவா. புதிய உலகத்தில் பாரதவாசிகளாகிய நீங்கள் இருந்தீர்கள். பாபா புரிய வைக்கின்றார், இனிமையான குழந்தைகளே! இப்போது நீங்கள் உங்களுடைய பிறவிகளை தெரிந்திருக்கவில்லை மற்றபடி எந்த ஒரு ரதம் போன்றவற்றின் விசயம் இல்லை. கிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசர் ஆவார். கிருஷ்ணருடைய அந்த ரூபத்தை திவ்ய திருஷ்டி இல்லாமல் பார்க்க முடியாது. கிருஷ்ணர் உணர்வுள்ள சரீரத்தோடு சத்யுகத்தில் இருந்தார் பிறகு ஒருபோதும் அதே போன்ற ரூபம் கிடைக்காது. பிறகு பெயர், ரூபம், தேசம், காலம் மாறி விடுகிறது. 84 பிறவிகள் எடுக்கிறார். 84 பிறவிகளில் 84 தாய்-தந்தையர் கிடைக்கிறார்கள். வெவ்வேறு பெயர், ரூபம், தொழிலாக இருக்கிறது. இது பாரதத்தின் ஏணிப்படியே ஆகும். நீங்கள் இப்போது பிராமண குலத்திலகங்களாவீர்கள். பாபா கல்பத்திற்கு முன்பு கூட வந்து உங்களை தேவி-தேவதைகளாக மாற்றியிருந்தார். அங்கே நீங்கள் சர்வோத்தம (உயர்வான) கர்மம் செய்தீர்கள். நீங்கள் எப்போதும் சுகமுடையவர்களாக 21 பிறவிகள் இருந்தீர்கள். பிறகு உங்களை இந்த துர்கதியை அடையச் செய்தது யார்? நான் கல்பத்திற்கு முன்னால் உங்களுக்கு சத்கதி கொடுத்திருந்தேன், பிறகு 84 பிறவிகள் எடுத்து கண்டிப்பாக இறங்க வேண்டும். சூரியவம்சத்தில் 8 பிறவி, சந்திரவம்சத்தில் 12 பிறவிகள் பிறகு இப்படியே இறங்கி வந்துள்ளீர்கள். நீங்கள் தான் பூஜிக்கத்தக்க தேவதைகளாக இருந்தீர்கள், நீங்கள் தான் தூய்மையற்ற பூஜாரிகளாக ஆகியுள்ளீர்கள். பாரதம் இப்போது ஏழ்மை யானதாக இருக்கிறது. பகவானுடைய மகாவாக்கியம், 100 சதவீதம் தூய்மை மற்றும் அனைத்தையும் உடைய, எப்போதும் ஆரோக்கியம், எப்போதும் செல்வந்தர்களாக இருந்தீர்கள். எந்த நோய் மற்றும் துக்கத்தின் விஷயமும் இருக்கவில்லை, சுகம் நிறைந்த இடமாக இருந்தது. அதை அல்லாவின் தோட்டம் என்று சொல்லப்படுகிறது. அல்லா தோட்டத்தை ஸ்தாபனை செய்தார். யார் தேவி-தேவதைகளாக இருந்தார்களோ, அவர்கள் முட்களாக ஆகிவிட்டார்கள். இப்போது காடாகி விட்டது. காட்டில் முட்கள் குத்தும். பாபா கூறுகின்றார், காமம் மிகப்பெரிய எதிரி, அதன்மீது வெற்றி அடையுங்கள். இது உங்களுக்கு முதல்-இடை-கடைசியில் துக்கம் கொடுத்தது. ஒருவர் மற்றவர் மீது காமக் கோடாரி வீசுவது என்பது மிகப்பெரிய பாவமாகும். பாபா வந்து அவருடைய அறிமுகத்தைக் கொடுக்கின்றார், நான் பரந்தாமத்தில் இருக்கக் கூடிய பரம் ஆத்மா ஆவேன். என்னை சிருஷ்டியின் விதை, பரம் ஆத்மா என்று கூறுகிறார்கள், நான் அனைவருக்கும் தந்தையாக இருக்கின்றேன். அனைத்து ஆத்மாக்களும் அழைக்கின்றன, ஹே பரமபிதா பரமாத்மாவே. எப்படி உங்களுடைய ஆத்மா நட்சத்திரம் போன்று இருக்கிறது, அதுபோல் பாபாவும் பரம் ஆத்மா நட்சத்திரம்போல் இருக்கின்றார். சிறியது பெரியது கிடையாது. நான் பெறுவிரல் போல் கூட இல்லை. நான் பரம் ஆத்மாவாக இருக்கின்றேன். உங்கள் அனைவருக் கும் தந்தையாக இருக்கின்றேன். அவரை பரம் ஆத்மா, ஞானக்கடல் என்று சொல்லப் படுகிறது. பாபா புரிய வைக்கின்றார், நான் ஞானக்கடல், மனித சிருஷ்டி மரத்தின் விதையாக இருக்கின்றேன் என்று பாபா புரிய வைக்கின்றார். என்னை பரமாத்மா சத்-சித்-ஆனந்த சொரூபம், அவர் ஞானக் கடலாக இருக்கிறார், சுகக்கடலாக இருக்கின்றார் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். எவ்வளவு மகிமைகள் இருக்கின்றன. ஒருவேளை பெயர், ரூபம், தேசம், காலம் இல்லையென்றால் யாரை அழைப்பீர்கள். சாது-சன்னியாசிகள் போன்ற அனைவரும் உங்களுக்கு பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களைச் சொல்கிறார்கள். நான் வந்து உங்களுக்கு இராஜயோகத்தை கற்றுக் கொடுக்கின்றேன்.

தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் என்று நீங்கள் ஞானக்கடல் தந்தையாகிய என்னைத் தான் கூறுகின்றீர்கள் என்று பாபா புரியவைக்கின்றார். நீங்களும் ஞானக்கடலின் குழந்தைகளாக ஆகின்றீர்கள். ஞானத்தின் மூலம் சத்கதி கிடைத்து விடுகிறது. பாரதத்திற்கு சத்கதியை பாபா தான் கொடுப்பார். அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் ஒருவரே ஆவார். அனைவருக்கும் துர்கதியை அடையச் செய்வது யார்? இராவணன் ஆவான். இப்போது இதை உங்களுக்குப் புரியவைத்துக் கொண்டிருப்பது யார்? இவர் பரம் ஆத்மா ஆவார். ஆத்மா ஒரு நட்சத்திரத்தைப் போல் மிகவும் சூட்சுமமாக இருக்கிறது. பரமாத்மாவும் நாடகத்தில் நடிப்பை நடிக்கின்றார். படைப்பவர், இயக்குபவர், முக்கிய நடிகராகவும் இருக்கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்த நடிகர் யார் என்பதை பாபா புரியவைக்கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார். அவருடன் ஆத்மாக்கள் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். அனைவரையும் (கதி, சத்கதிக்கு) அனுப்பக் கூடியவர் பரமாத்மா என்றும் சொல்கிறார்கள். இது கூட புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். நாடகம் அனாதியாக உருவாக்கப்பட்டுள்ளது. என்னை நீங்கள் ஞானக் கடல், முழு சிருஷ்டியின் முதல், இடை, கடைசியைத் தெரிந்தவன் என்று சொல்கிறீர்கள் என்று பாபா கூறுகின்றார். இந்த சாஸ்திரம் போன்றவைகளைப் படிக்கிறார்களே, இவற்றை பாபா தெரிந்திருக்கிறார். நான் வந்து பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தையும் கூறுகின்றேன் என்று பாபா கூறுகின்றார். விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வந்ததாக காட்டுகிறார்கள். அப்படி என்றால் எங்கே வந்தார்? மனிதர்கள் என்றால் கண்டிப்பாக இங்கே தான் இருப்பார்கள் அல்லவா. இவருடைய நாபியிலிருந்து பிரம்மா வந்தார் பிறகு பகவான் வந்து இவரின் மூலம் அனைத்து வேதங்களின் சாஸ்திரங்களின் சாரத்தை கூறினார். தன்னுடைய பெயர், ரூபம், தேசம், காலத்தையும் புரிய வைத்தார். மனித சிருஷ்டியின் விதை ரூபம் அல்லவா. இந்த மரத்தின் உருவாக்கம், வளர்ப்பு, மற்றும் வினாசம் எப்படி நடக்கிறது என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லை. இதனை வித-விதமான தர்மங்களின் மரம் என்று சொல்லப் படுகிறது. அனைவரும் வரிசைக்கிரமமாக அவரவருடைய வரவேண்டிய காலகட்டத் தில் வருகிறார்கள். முதலில் தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்விக்கின்றேன் அப்போது மற்ற தர்மங்கள் இல்லை. எவ்வளவு கீழான புத்தியுடையவர்களாக ஆகி விட்டார்கள் என்று பாபா கூறுகின்றார். தேவதைகளுடைய, லஷ்மி - நாராயணையும் பூஜை செய்கிறார்கள் ஆனால் அவர்களுடைய இராஜ்யம் பூமியில் எப்போது இருந்தது போன்ற எதையும் தெரிந்திருக்கவில்லை. இப்போது பாரதத்தில் அந்த தேவதா தர்மமே இல்லை, வெறும் சித்திரங்கள் மட்டுமே இருக்கின்றன. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஞானக்கடலின் குழந்தையாக (மாஸ்டர் ஞானக்கடல்) ஆகி தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்கும் சேவை செய்ய வேண்டும். பாபா கூறியுள்ள சாஸ்திரங்களின் சாரத்தை புத்தியில் வைத்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

2) ஒரு தந்தையின் ஸ்ரீமத்தை ஒவ்வொரு நொடியும் கடைபிடிக்க வேண்டும். தேகத்தின் தர்மங்கள் அனைத்தையும் தியாகம் செய்து ஆத்ம-அபிமானியாக ஆவதற்கான முயற்சி (உழைக்க) வேண்டும்.

வரதானம்:

தனது தெய்வீகமான அலௌகீக பிறவியின் நினைவு மூலமாக நியமங்களின் (மரியாதா) எல்லைக் கோட்டுக்கு உள்ளே இருக்கும் மரியாதா புருஷோத்தமர் ஆவீர்களாக.

எப்படி ஒவ்வொரு குலமரியாதைக்கான வரையறை இருக்குமோ, அதேபோல பிராமண குலத்தின் மரியாதை களின் எல்லைக்கோடு இருக்கிறது. பிராமணர் என்றால் தெய்வீகமான மற்றும் அலௌகீக பிறவி உடைய மரியாதா புருஷோத்தமர் என்பதாகும். அவர்கள் எண்ணத்தின் அளவிலும் கூட எந்தவொரு கவர்ச்சிக்கும் வசப்பட்டு நியமங்களை மீற மாட்டார்கள். யார் நியமங்களின் எல்லைக்கோட்டை எண்ணத்தின் அளவில் கூட மீறுகிறார்களோ, அவர்களால் தந்தையின் ஆதரவை அனுபவம் செய்ய முடியாது. குழந்தையாக இருப்பதற்கு பதிலாக, வேண்டக் கூடிய பக்தர்களாக ஆகி விடுகிறார்கள். பிராமணர் என்றாலே முறையிடுவது, வேண்டுவது எல்லாமே நிறுத்தப்பட்ட நிலை. ஒரு பொழுதும் இயற்கை அல்லது மாயைக்கு (மோஹதாஜ்) வசப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் எப்பொழுதும் தந்தையின் (சிர்தாஜ்) தலையின் கிரீடமாக இருப்பார்கள்
.

சுலோகன்:

ஸ்லோகன்: அமைதி தூதுவராக ஆகி தனது தபஸ்யாவின் மூலமாக

 

உலகத்தில் அமைதியின் கிரணங்களை பரப்புங்கள்