05-03-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

உயர்ந்த பதவியை அடைவதற்காக எந்த விதத்தில் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்?

பதில்:

(1) உயர்ந்த பதவி அடைய வேண்டுமென்றால் மனதளவில் கூட யாருக்குமே என் மூலமாக துக்கம் ஏற்படக் கூடாது என்று எச்சரிக்கையாக இருங்கள். (2) எந்தவொரு சூழ்நிலையிலும் கோபம் வரக் கூடாது. (3) தந்தையினுடையவராக ஆகி தந்தையின் காரியத்தில், இந்த ருத்ர ஞான யக்ஞத் தில் தடையாக இருக்கக் கூடாது. எவரேனும் வாயால் பாபா, பாபா என்று கூறிக் கொண்டு, நடத்தை இராயலாக இல்லையென்றால் உயர்ந்த பதவி கிடைக்க முடியாது.

ஓம் சாந்தி. குழந்தைகள் தந்தையிடமிருந்து அவசியம் ஆஸ்தி பெற வேண்டியுள்ளது என்பதை குழந்தைகள் நல்ல முறையில் அறிந்துள்ளார்கள். எப்படி? ஸ்ரீமத் படி. ஒரே ஒரு கீதை சாஸ்திரத் தில் தான் ஸ்ரீமத் பகவான் வாக்கியம் என்றுள்ளது என்று தந்தைப் புரிய வைத்துள்ளார். பகவான் அனைவருக்கும் தந்தை ஆவார். ஸ்ரீமத் பகவான் வாக்கியம். ஆக அவசியம் பகவான் வந்து சிறந்தவர்களாக ஆக்கி இருக்கக்கூடும். அதனால் தான் அவருக்கு மகிமை உள்ளது. ஸ்ரீமத் பகவத் கீதை என்றால் ஸ்ரீமத் பகவான் வாக்கியம்: பகவான் அவசியம் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். ஸ்ரீமத் கூட அதே ஒரு சாஸ்திரத்தில் பாடப்பட்டுள்ளது. வேறு எந்த சாஸ்திரத்திலும் ஸ்ரீமத் பகவான் வாக்கியம் என்று இல்லை. ஸ்ரீமத் யாருடையதாக இருக்க வேண்டும் என்பதை அதை எழுதியவர்கள் கூட புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதில் தவறு ஏன் ஏற்பட்டது? அதையும் தந்தை வந்துப் புரிய வைக்கிறார். இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆன உடனேயே இராவணனின் வழிப்படி நடக்க முற்படுகிறார்கள். முதலில் கடுமையிலும் கடுமையான தவறை இந்த இராவண வழியினர் தான் செய்துள்ளார்கள். இராவணனினுடைய அடி விழுகிறது. எப்படி சங்கரனை தூண்டுபவர், அணுகுண்டுகள் ஆகியவற்றை செய்விக்கிறார் என்று கூறப்படுகிறது. அதே போல 5 விகாரங்கள் என்ற மனிதர்களை பதீதமாக ஆக்குவதற்காக தூண்டுபவன் ஆவான். அதனால் தான் பதீத பாவனரே! வாருங்கள், என்று அழைக்கிறார்கள். ஆக பதீதபாவனர் ஒரே ஒருவர் ஆகிறார் அல்லவா? இதிலிருந்து பதீதமாக ஆக்குபவர் வேறு ஒருவர் மற்றும் பாவனமாக ஆக்குபவர் மற்றொருவர் என்பது நிரூபணமாகிறது. இருவருமே ஒன்றாக இருக்க முடியாது. இந்த விஷயங் களை நீங்கள் தான் வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப புரிந்து கொள்கிறீர்கள். எல்லோருக்குமே நிச்சயம் இருக்கிறது என்று நினைத்து கொள்ளாதீர்கள். வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். எவ்வளவு நிச்சயம் இருக்குமோ அவ்வளவு குஷி அதிகரிக்கிறது. தந்தையின் வழிப்படி நடக்க வேண்டியுள்ளது. ஸ்ரீமத்படி நாம் இந்த சுய இராஜ்ய பதவியை அடைய வேண்டும். மனிதனி லிருந்து தேவதை ஆவதில் தாமதம் ஏற்படுவதில்லை. நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். மம்மா பாபாவைப் பின்பற்றுகிறீர்கள். எப்படி அவர்கள் தங்களுக்குச் சமமாக ஆக்குவதற்காக சேவை செய்துக் கொண்டு இருக்கிறார்களோ அதே போல நாம் என்ன சேவை செய்து கொண்டிருக் கிறோம். மேலும் மம்மா பாபா என்ன சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்களும் புரிந்துள்ளீர்கள். சிவபாபா மற்றும் பிரம்மா தாதா இருவரும் சேர்ந்துள்ளார்கள் என்பதை பாபா புரிய வைத்திருந்தார். எனவே, எல்லோரையும் விட அருகில் இருக்கிறார் என்று புரிந்திருக்க வேண்டும். இவருடைய சம்பூர்ண சொரூபம் சூட்சும வதனத்தில் பார்க்கிறார்கள். எனவே, அவசியம் இவர் கூர்மையாக இருப்பார். ஆனால் எப்படி தந்தை நிரகங்காரியாக இருக்கிறாரோ, தேஹீ அபிமானியாக இருக்கிறாரோ அதே போல இந்த தாதா கூட நிரகங்காரி ஆவார். சிவபாபா தான் புரிய வைத்துக் கொண்டு இருக்கிறார் என்று கூறுகிறார். முரளி நடத்தும் பொழுது சிவபாபா இவர் மூலமாக கூறிக் கொண்டிருக்கிறார் என்று நினையுங்கள் என்று சுயம் பாபா கூறுகிறார். இந்த பிரம்மா கூட அவசியம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடும். இவர் கேட்கவில்லை மற்றும் கூற வில்லை என்றால் உயர்ந்த பதவியை எப்படி அடைய முடியும்? ஆனால் தனது தேக அபிமானத்தை விடுத்து சிவபாபா தான் கூறுகிறார் என்று நினையுங்கள் என்று கூறுகிறார். நான் முயற்சி செய்துக் கொண்டே இருக்கிறேன். சிவபாபா தான் புரிய வைக்கிறார். இவரோ பதீத நிலையை கடந்து வந்திருக்கிறார். மம்மாவோ குமாரியாக இருந்தார். எனவே, மம்மா உயர்ந்து சென்றுவிட்டார். குமாரிகளாகிய நீங்கள் கூட மம்மாவைப் பின்பற்றுங்கள். இல்லறவாசிகள் பாபாவைப் பின்பற்ற வேண்டும். நான் பதீதமாக உள்ளேன். நான் பாவனமாக ஆக வேண்டும் என்று ஒவ்வொருவரும் புரிந்திருக்க வேண்டும். முக்கியமான விஷயம் தந்தை நினைவு யாத்திரையைக் கற்பித்துள்ளார். இதில் தேக அபிமானம் இருக்கக் கூடாது. நல்லது! முரளி கூற முடியவில்லை என்றால் நினைவு யாத்திரையில் இருங்கள். யாத்திரையில் இருந்தபடி முரளி நடத்தலாம். ஆனால் யாத்திரை மறந்துவிடு கிறார்கள் என்றாலும் ஒன்றும் பரவாயில்லை. முரளி நடத்திவிட்டு பிறகு யாத்திரையில் ஈடுபட்டுவிடுங்கள். ஏனெனில் அது சப்தத்திற்கு அப்பாற்பட்ட வானப்பிரஸ்த நிலை ஆகும். முக்கியமான விஷயம் தேஹீ அபிமானி ஆகி தந்தையை நினைவு செய்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் சக்கரத்தை நினைவு செய்துக் கொண்டே இருக்க வேண்டும். யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது. தந்தையை நினைவு செய்யுங்கள் என்பதையே புரிய வைத்துக் கொண்டு இருக்க வேண்டும். இது யாத்திரை ஆகும். மனிதர்கள் இறக்கும்பொழுது சொர்க்கம் சென்றுவிட்டார் என்று கூறுகிறார்கள். அஞ்ஞான காலத்தில் யாரும் சொர்க்கத்தை நினைவு செய்வதில்லை. சொர்க்கத்தை நினைவு செய்வது என்றால் இங்கிருந்து இறப்பது. இது போல யாருமே நினைவு செய்வதில்லை. நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். எந்த அளவு நினைவு செய்வீர்களோ அந்த அளவு குஷியின் யாத்திரை அதிகரிக்கும் என்று தந்தை கூறுகிறார். ஆஸ்தி நினைவில் இருக்கும். எந்த அளவு தந்தையை நினைவு செய்வீர்களோ அந்த அளவு மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். தந்தையை நினைவு செய்யாமல் இருப்பதால் குழம்புகிறார்கள். மூச்சு திணறிக் கொண்டே இருக் கிறார்கள். உங்களால் இவ்வளவு நேரம் நினைவு செய்ய முடியாது. பாபா பிரியதரிஷினி பிரியதரிஷன் உதாரணத்தைக் கூறி இருக்கிறார். அவர் தொழில் செய்து கொண்டிருப்பார் மற்றும் இவர் கைராட்டினம் சுற்றிக் கொண்டிருப்பார். அப்பொழுது கூட அவர் முன்னால் பிரியதரிஷன் வந்து நின்று விடுவார். பிரியதரிஷினி பிரிய தரிஷனனை நினைவு செய்வார். பிரியதரிஷன் பின் பிரியதரிஷினியை நினைவு செய்வார். இங்கோ நீங்கள் ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். தந்தை ஒன்றும் உங்களை நினைவு செய்ய வேண்டிய தில்லை. தந்தை அனைவரின் பிரியதர்ஷன் ஆவார். பாபா நீங்கள் எங்களை நினைவு செய்கிறீர்களா என்று குழந்தைகளாகிய நீங்கள் எழுதுகிறீர்கள். அட, யார் அனைவரின் பிரியதரிஷனரோ அவர் பின் பிரிய தரிஷினி களாகிய உங்களை எப்படி நினைவு செய்ய முடியும்? அவ்வாறு ஆகாது. அவர் இருப்பதே பிரிய தரிஷனராக. பிரியதரிஷினி ஆக முடியாது. நீங்கள் தான் நினைவு செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அந்த ஒரு பிரியதரிஷனரின் பிரியதரிஷினி ஆக வேண்டும். அவர் பிரியதரிஷினி என்றால், எத்தனை பேரை நினைவு செய்வது? அது முடியாது. நான் ஒருவரை நினைவு செய்யும் வகையில் என் மீது பாவங்களின் சுமை இருக்கிறதா என்ன! என்று கூறுகிறார். உங்கள் மீது சுமை உள்ளது. தந்தையை நினைவு செய்யவில்லை என்றால் பாவங்களின் சுமை இறங்காது. மற்றபடி நான் ஏன் எவரையும் நினைவு செய்ய வேண்டும்? ஆத்மாக் களாகிய நீங்கள் நினைவு செய்ய வேண்டும். எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ, அந்த அளவிற்கு புண்ணிய ஆத்மா ஆகிவிடுவீர்கள். பாவங்கள் நீங்கிக் கொண்டே போகும். பெரிய குறிக்கோள் ஆகும். ஆத்ம அபிமானி ஆவதில் தான் உழைப்பு உள்ளது. இந்த முழு ஞானம் உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப திரிகாலதரிசி ஆகியுள்ளீர்கள். முழு சக்கரம் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் லைட் ஹவுஸ் - கலங்கரை விளக்கம் ஆவீர்கள் அல்லவா என்று தந்தை புரிய வைக்கிறார். ஒவ்வொருவருக்கும் சாந்திதாமம் மற்றும் சுகதாமத்திற்கான வழியைக் கூறுபவர்கள் ஆவீர்கள். இந்த எல்லா புதிய விஷயங்களையும் நீங்கள் கேட்கிறீர்கள். உண்மையில் ஆத்மாக்களாகிய நாம் சாந்திதாமத்தில் வசிப்பவர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். இங்கு பாகத்தை ஏற்று நடிக்க வருகிறோம். நாம் நடிகர்கள் ஆவோம். இதே சிந்தனை புத்தியில் இருந்துக் கொண்டே இருந்தால் போதை ஏறிவிடும். ஆரம்ப முதல் கடைசிவரை உங்களுக்கு பாகம் உள்ளது என்று தந்தைப் புரிய வைத்துள்ளார். இப்பொழுது கர்மாதீத நிலையில் அவசியம் செல்ல வேண்டும். பிறகு தங்க யுகத்தில் வர வேண்டும். இந்த ஈடுபாட்டில் இருந்து தங்களுக்குத் தாங்களே நன்மை செய்ய வேண்டும். பண்டிதர் மட்டும் ஆவதல்ல. மற்றவர்களுக்குக் கற்பித்துக் கொண்டே இருப்பார்கள். சுயம் அந்த நிலையில் இருப்பதில்லை என்றால் தாக்கம் ஏற்படாது. தனக்காகவும் முயற்சி செய்ய வேண்டும். நான் கூட நினைவு செய்வதற்கான முயற்சி செய்கிறேன் என்று தந்தையும் கூறுகிறார். சில சமயங்களில் மாயையின் புயல்கள் எப்படி வருகின்றன என்றால் புத்தியோகத்தைத் துண்டித்துவிடுகிறது. நிறைய குழந்தைகள் சார்ட் அனுப்பிவிடுகிறார்கள். இவர்கள் என்னை விட வேகமாகச் செல்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறேன். ஒருவேளை உத்வேகம் ஏற்படுகிறது. எனவே சார்ட் எழுத முற்பட்டுவிடுகிறார்கள். ஆனால் ஒருவேளை அந்த மாதிரி வேகமாக சென்றார்கள் என்றால் முதல் நம்பரில் சென்றுவிடலாமே. ஆனால் இல்லை. அது சார்ட் எழுதுவது வரைக்கும் மட்டுமே உள்ளது. பாபா இத்தனை பேரை தனக்குச் சமமாக ஆக்கினேன் என்று எழுதுவதில்லை. மேலும் பாபா எங்களுக்கு இவர் வழி கூறினார் என்று அவரும் எழுத வேண்டும். பின் பாபா என்ன நினைப்பார்? சார்ட் அனுப்புவதால் மட்டும் வேலை நடக்காது. தனக்குச் சமமாகவும் ஆக்க வேண்டும். ரூப் மற்றும் பஸந்த் - ஞானயோகம் இரண்டுமே உடையவர் ஆக வேண்டும். இல்லை யென்றால் தந்தைக்குச் சமமானவர் ஆகவில்லை. ரூப் கூட பஸந்த் கூட மிகச் சரியாக (ஏக்யூரேட்) ஆக வேண்டும். இதில் தான் உழைப்பு உள்ளது. தேக அபிமானம் கொன்றுவிடுகிறது. இராவணன் தேக அபிமானியாக ஆக்கி உள்ளான். இப்பொழுது நீங்கள் தேஹீ அபிமானி ஆகிறீர்கள். அரை கல்பத்திற்குப் பிறகு மாயை இராவணன் தேக அபிமானியாக ஆக்குகிறது. தேஹீ அபிமானியாக இருப்பவர்களோ மிகவும் இனிமையானவர்களாக ஆகி விடுகிறார்கள். சம்பூர்ணமாகவோ இப்பொழுது யாருமே ஆகவில்லை. எனவே யாருடைய இதயத்தையும் புண்படுத்தக் கூடாது. துக்கம் கொடுக்கக் கூடாது என்று பாபா எப்பொழுதும் கூறுகிறார். அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுங்கள். பேசுவது, செய்வதிலும் கூட மிகுந்த இராயல்ட்டி (கம்பீரத் தன்மை) வேண்டும். ஈஸ்வரிய குழந்தைகளின் வாயிலிருந்து எப்பொழுதும் இரத்தினங்கள் மட்டுமே வெளிப்பட வேண்டும். நீங்கள் மனிதர்களுக்கு மறுவாழ்வு அளிக்கிறீர்கள். வழிக் கூற வேண்டும். மேலும் புரிய வைக்க வேண்டும். நீங்கள் பரமாத்மாவின் குழந்தைகள் ஆவீர்கள் அல்லவா? அவரிடமிருந்து உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்க வேண்டியுள்ளது. பின் இப்பொழுது அது ஏன் இல்லை நினைத்துப் பாருங்கள் உண்மையில் தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத் திருந்தது அல்லவா? பாரதவாசி களாகிய நீங்கள் தேவி தேவதைகளாக இருந்தீர்கள். நீங்கள் தான் 84 பிறவிகள் எடுத்தீர்கள். நாம் தான் இலட்சுமி நாராயணரின் குலத்தினராக இருந்தோம் என்று நீங்கள் புரிந்து இருங்கள். தங்களை ஏன் குறைவாக நினைத்துக் கொள்கிறீர்கள். எல்லோரும் (முழுமை) ஆகிவிடுவார்களா என்ன? என்று கேட்கிறார்கள் என்றால், அவர்கள் இந்த குலத்தினர் அல்ல என்று பாபா புரிந்துக் கொண்டு விடுகிறார். இப்பொழுதிலிருந்தே தள்ளாட ஆரம்பித்து விட்டார். நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். தந்தை 21 பிறவிகளுக்கான பாக்கியத்தை சேமிப்பு செய்வித்தார். அதை சாப்பிட்டீர்கள். பிறகு அது முடிய ஆரம்பித்துவிட்டது. துரு ஏறி ஏறி தமோபிர தானமாக சோழி போல் ஆகிவிட்டுள்ளீர்கள். பாரதம் தான் 100 சதவிகிதம் செழிப்புடன் இருந்தது. இவர்களுக்கு இந்த ஆஸ்தி எங்கிருந்து கிடைத்தது. நடிப்பவர்கள் தானே கூற முடியும்? மனிதர்கள் தான் நடிகர்கள் ஆவார்கள். இந்த இலட்சுமி நாராயணருக்கு அரசாட்சி எங்கிருந்து கிடைத்தது என்பது அவர்களுக்குத் தெரிய வர வேண்டும். எவ்வளவு நல்ல நல்ல பாயிண்ட்டுகள்! நிச்சயமாக முந்தைய ஜன்மத்தில் தான் இந்த இராஜ்ய பாக்கியத்தை பெற்றிருக்கக் கூடும்.

தந்தை தான் பதீத பாவனர் ஆவார். நான் உங்களுக்கு கர்மம், அகர்மம் மற்றும் விகர்மத்தின் கதியைப் புரிய வைக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இராவண இராஜ்யத்தில் மனிதர்களின் கர்மங்கள் விகர்மமாக ஆகிவிடுகிறது. அங்கு உங்களுடைய கர்மங்கள் அகர்மமாக ஆகிறது. அது தெய்வீக சிருஷ்டி ஆகும். நான் படைப்பு கர்த்தா ஆவேன். எனவே அவசியம் நான் சங்கமத்தில் வர வேண்டியுள்ளது. இது இராவண இராஜ்யம் ஆகும். அது ஈஸ்வரிய இராஜ்யம் ஆகும். இறைவன் இப்பொழுது ஸ்தாபனை செய்வித்துக் கொண்டி ருக்கிறார். நீங்கள் அனைவரும் இறைவனின் குழந்தைகள் ஆவீர்கள். உங்களுக்கு ஆஸ்தி கிடைத்து கொண்டி ருக்கிறது. பாரதவாசிகள் தான் செழிப்புடன் இருந்தார்கள். இப்பொழுது திவால் ஆகிவிட்டுள்ளார்கள். இது ஏற்கனவே அமைந்த, அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். இதில் வித்தியாசம் ஏற்பட முடியாது. எல்லோருடைய விருட்சமும் தனித் தனி தான். பல்வகையான விருட்சம் ஆகும் அல்லவா? தேவதா தர்மத்தினர் தான் பிறகு தேவதா தர்மத்தில் வருவார்கள். கிறித்துவ தர்மத்தினர் தங்களது தர்மத்தில் குஷியாக இருக்கிறார்கள். மற்றவர் களையும் தங்களது தர்மத்தில் இழுத்துவிட்டனர். பாரதவாசிகள் தங்கள் தர்மத்தை மறந்திருக்கும் காரணத்தால் அந்த தர்மத்தை நல்லது என்று நினைத்து, போய்விடுகிறார்கள். வெளி நாடுகளில் வேலைக்காக எவ்வளவு பேர் போகிறார்கள். ஏனெனில் அங்கு சம்பாத்தியம் நிறைய கிடைக்கிறது. நாடகம் மிகவும் அதிசயமாக அமைக்கப் பட்டுள்ளது. இதைப் புரிந்து கொள்வதற்கு நல்ல புத்தி வேண்டும். சிந்தனைக் கடலைக் கடையும்பொழுது எல்லாமே புரிய வந்துவிடும். இது அமைந்த அமைக்கப்பட்ட அனாதி நாடகமாகும். எனவே குழந்தைகளாகிய நீங்கள் பிறரை தங்களுக்குச் சமமாக சதா சுகமுடைய வராக ஆக்க வேண்டும். இது உங்களுடைய தொழில் ஆகும் - பதீதர்களை பாவனமாக ஆக்குவது. எப்படி தந்தையின் தொழிலோ அதே போல உங்களுடையது. உங்களது முகம் எப்பொழுதும் தேவதைகளைப் போல குஷியில் மலர்ந்திருக்க வேண்டும். நாம் உலகத்திற்கு அதிபதி ஆகப் போகிறேன் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் அன்பான குழந்தைகள் ஆவீர்கள். கோபத்தின் மீது மிகுந்த எச்சரிக்கை கொள்ள வேண்டும். தந்தை குழந்தைகளுக்கு சுகத்தின் ஆஸ்தி அளிக்க வந்துள்ளார். சொர்க்கத்திற்கான வழியை அனைவருக்கும் கூற வேண்டும். தந்தை சுகத்தை அளிப்பவர். துக்கத்தை நீக்குபவர் ஆவார். எனவே நீங்கள் கூட சுகத்தை அளிப்பவர் ஆக வேண்டும். யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது. துக்கம் கொடுத்தீர்கள் என்றால் 100 மடங்கு தண்டனை அதிகரித்துவிடும். யாருமே தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. குழந்தைகளுக் காகவே குறிப்பாக விசாரணைக் குழு அமரும். நீங்கள் தடை ஏற்படுத்தினீர்கள் என்றால், நிறைய தண்டனை வாங்குவீர்கள் என்று தந்தை கூறுகிறார். கல்ப கல்பாந்திரமாக நாங்கள் இதுபோல ஆகிவிடுவோம் என்ற சாட்சாத்காரம் செய்வீர்கள் (காட்சி பார்ப்பீர்கள்). இதற்கு முன்பு அவ்வாறு காட்சிகள் பார்க்கும்பொழுது பாபா கூற வேண்டாம் என்று தடை விதித்துக் கொண்டிருந்தார். கடைசி யில் மிகச்சரியாக தெரிய வரும். இனி போகப் போக தீவிரமாக சாட்சாத்காரம் ஆகும். விருத்தி ஆகிக் கொண்டே போகும். அபுமலையின் அடிவாரம் வரிசை நின்றுவிடுவார்கள். பாபாவை யாருமே சந்திக்க முடியாமல் இருப்பார்கள். ஆஹா! பிரபு உனது லீலையே என்பார்கள். இதுவும் பாடப்பட்டுள்ளது அல்லவா? வித்துவான்கள், பண்டிதர்கள் ஆகியோரும் பின்னால் வருவார்கள். அவர்களுடைய சிம்மாசனங்களும் ஆடிப் போய்விடும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் குஷியில் இருப்பீர்கள். நல்லது

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள். இப்பேர்ப்பட்ட அன்பு நினைவுகள் ஒரு முறை தான் கிடைக்கிறது. எந்த அளவு நீங்கள் நினைவு செய்கிறீர்களோ அந்த அளவு நீங்கள் அன்பைப் பெறுகிறீர்கள். விகர்மங்கள் விநாசம் ஆகிறது. மேலும் தாரணையும் ஆகிறது. குழந்தை களுக்கு அளவு கடந்த குஷி இருக்க வேண்டும். யார் வந்தாலும் அவருக்கு வழி கூற வேண்டும். எல்லையில்லாத ஆஸ்தியை எல்லையில்லாத தந்தையிடமிருந்து பெற வேண்டும். சாதாரண விஷயமா என்ன? அப்பேர்ப்பட்ட முயற்சி செய்ய வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. பேசுவதில் மற்றும் நடப்பதில் முழுமையாக இராயலாக இருக்க வேண்டும். வாயிலிருந்து எப்பொழுதும் இரத்தினங்களையே வெளிப்படுத்த வேண்டும். தங்களுக்குச் சமமாக ஆக்கக் கூடிய சேவை செய்ய வேண்டும். யாருடைய இதயத்தையும் புண்படுத்தக் கூடாது.

2. கோபத்தின் மீது மிகுந்த கவனமாய் இருக்க வேண்டும். முகம் எப்பொழுதும் தேவதை களைப் போல மலர்ந்ததாக வைத்திருக்க வேண்டும். சுயம் தங்களை ஞான யோக பலத்தினால் தேவதையாக ஆக்க வேண்டும்.

வரதானம்:

சதா பச்சாதாபத்தி-ருந்து (வருத்தப்படுவதிலிருந்து) விலகி, பிராப்தி சொரூப

ஸ்திதியின் அனுபவம் செய்யக் கூடிய நல்ல புத்தியுடையவர்கள் ஆகுக.
எந்தக் குழந்தைகள் தனது வாழ்க்கை என்ற படகை தந்தையிடம் கொடுத்து விட்டு நான் என்பதை அழித்து விடுகிறார்களோ, ஸ்ரீமத்தில் மன வழியை கலப்படம் செய்யாமல் இருக்கிறார்களோ, அவர்கள் சதா பச்சாதாபத்தி-ருந்து விலகி பிராப்தி சொரூப ஸ்திதியின் அனுபவம் செய்வார்கள். அவர்கள் தான் நல்ல புத்தியுடையவர்கள் என்று கூறப்படுகின்றனர். இவ்வாறு நல்ல புத்தியுடைய வர்கள் புயல்களை தென்றலாக நினைத்து, சுபாவ-சம்ஸ்காரங்களின் மோதல்களை முன்னேறு வதற்கு ஆதாரமாக நினைத்து, சதா தந்தையை துணையாக ஆக்கிக் கொண்டு, ஒவ்வொரு நடிப்பையும் சாட்சியாக பார்த்து சதா மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

சுலோகன்:

சுகதாதா தந்தையின் சுகமான குழந்தைகளாக இருப்பவர்களிடம்

 

துக்கத்தின் அலைகள் வரவே முடியாது.