27-03-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
கேள்வி:
பிராமண வாழ்க்கையில் அதீந்திரிய சுகத்தின் அனுபவம் இல்லை என்றால் என்ன புரிந்துக் கொள்ள வேண்டும்?
பதில்:
நிச்சயமாக சூட்சுமத்தில் ஏதாவது ஒரு பாவம் நடக்கிறது. தேக அபிமானத்தில் இருப்பதால் பாவம் நடக்கிறது. இதன் காரணமாக அந்த சுகத்தின் அனுபவம் ஏற்படுவதில்லை. தன்னை கோப-கோபிகைகள் என புரிந்துக் கொண்டாலும் அதீந்திரிய சுகத்தின் உணர்வு ஏற்படுவதில்லை என்றால் நிச்சயமாக ஏதோ ஒரு தவறு நடக்கிறது. ஆகவே தந்தைக்கு உண்மையைக் கூறி ஸ்ரீமத் பெறுங்கள்.
ஓம் சாந்தி. நிராகார் பகவான் வாக்கு. இப்போது நிராகார் பகவான் என்று சிவனுக்கு கூறப்படுகிறது. அவருடைய பெயர்கள் என பக்தி மார்க்கத்தில் நிறைய வைத்திருக்கிறார்கள். நிறைய பெயர்கள் இருப்பதால் தான் விஸ்தாரமாக இருக்கிறது. தந்தையே வந்து குழந்தைகளே, உங்களுடைய தந்தை சிவனாகிய என்னை ஏ, பதீத பாவனா என நீங்கள் நினைவு செய்து வந்துள்ளீர்கள். நிச்சயம் பெயர் ஒன்று தான் இருக்கும். பல பெயர்கள் இருக்க முடியாது. சிவாய நமஹ என்று கூறு கிறார்கள் என்றால், ஒரேயொரு சிவன் பெயர் தான் இருக்கிறது. படைப்பவரும் ஒருவரே, பல பெயர்கள் இருப்பதால் குழம்பிப் போகிறார்கள். உங்களுடைய பெயர் புஷ்பா என வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு பதிலாக உங்களை ஷீலா என அழைத்தால் பதில் அளிப்பீர்களா? இல்லை. யாரையோ அழைக்கிறார்கள் என நினைப்பார்கள். இதுவும் அப்படிப்பட்ட விஷயம் தான். அவருடைய பெயரும் ஒன்று தான். ஆனால் பக்தி மார்க்கமாக இருப்பதால் பல கோவில்களைக் கட்டியதன் காரணமாக வித விதமாக பெயர்களை வைத்துவிட்டார்கள். இல்லையென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். கங்கை நதியை யமுனை நதி எனக் கூற மாட்டார்கள். எந்தவொரு பொருளுக்கும் ஒரு பெயர் பிரசித்தமாக இருக்கிறது. இந்த சிவன் என்ற பெயர் கூட பிரசித்தமாக இருக்கிறது. சிவாய நமஹ எனப் பாடப்பட்டிருக்கிறது. பிரம்மா தேவதாய நமஹ, விஷ்ணு தேவதாய நமஹ, பிறகு சிவபரமாத்மாய நமஹ என்கிறார்கள். ஏனென்றால் அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர். மனிதர்களின் புத்தியில் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்று நிராகாரருக்கு கூறுகிறார்கள். அவருடைய பெயர் ஒன்று தான். பிரம்மாவிற்கு பிரம்மா என்றும் விஷ்ணுவிற்கு விஷ்ணு என்றும் கூறுவார்கள். பல பெயர்கள் வைப்பதால் குழம்பிப் போவார்கள். பதிலும் கிடைப்பதில்லை. அவருடைய ரூபத்தையும் அறியவில்லை. பாபா குழந்தைகளிடம் வந்து பேசுகின்றார். சிவாய நமஹ என்கிறார்கள் என்றால் ஒரு பெயர் சரியாக இருக்கிறது. சிவ சங்கர் என்று கூறுவதுக் கூட தவறாகும். சிவன் சங்கர் என்ற பெயர்கள் தனித் தனியாகும். இலஷ்மி நாராயணனின் பெயர் போல தனித்தனியாகும். அங்கே நாராயணனை இலஷ்மி நாராயணன் என்று கூறமாட்டார்கள். இன்றோ தங்களுக்கு இரண்டு இரண்டு பெயர்களை வைக்கிறார்கள். தேவதை களுக்கு இரட்டை பெயர்கள் கிடையாது. ராதைக்குத் தனி, கிருஷ்ணருக்குத் தனி. இங்கேயோ ஒருவருக்கே இராதாகிருஷ்ணன், இலஷ்மி நாராயணன் என பெயர் வைக்கிறார்கள். படைப்பவர் ஒருவரே என பாபா புரிய வைக்கிறார். அவருடைய பெயரும் ஒன்றே ஆகும். அவரை அறிய வேண்டும். ஆத்மா ஒரு நட்சத்திரம் போன்று இருக்கிறது என்று சொல்கிறார்கள். புருவ மத்தியில் நட்சத்திரம் போன்று மின்னுகிறது. ஆத்மாவிலிருந்து பரமாத்மா என கூறுகிறார்கள். எனவே பரமாத்மாவும் நட்சத்திரம் போன்று இருக்கிறார் அல்லவா? ஆத்மா சிறியதாகவோ பெரியதாகவோ ஆகிறது என்பது கிடையாது. விஷயங்கள் மிகவும் எளிதாகும்.
ஓ, பதீத பாவனா! வருங்கள் என நீங்கள் அழைத்தீர்கள் என பாபா கூறுகிறார். ஆனால் அவர் நம்மை எப்படி தூய்மையாக்குகிறார் என்பதை யாரும் அறியவில்லை. கங்கையை பதீதபாவனி என நினைக்கிறார்கள். பதீதபாவனர் ஒரு தந்தை தான். மன்மனாபவ, என்னை மட்டும் நினையுங் கள் என நான் முன்பே கூறினேன் என பாபா கூறுகிறார். பெயர் மட்டும் மாறிவிட்டது. அப்பாவை நினைத்தால் சொத்து கிடைக்கும் என்பது புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் என குழந்தைகள் நினைக்கிறார்கள். மன்மனாபவ என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முற்றிலும் அப்பாவையும் சொத்தையும் மறந்துவிட்டார்கள். ஆகவே தான் தந்தையாகிய என்னையும் சொத்தையும் நினையுங்கள் என கூறுகிறேன். தந்தை சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர் என்றால் நிச்சயமாக அவரை நினைவு செய்தால் நமக்கு சொர்க்கத்தின் இராஜ்ய பதவி கிடைக்கும். ஆண் குழந்தை பிறந்ததும் வாரிசு வந்துவிட்டது என தந்தை கூறுவார். பெண் குழந்தைகளுக்கு இவ்வாறு கூறுவதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் குழந்தைகள். ஆத்மா ஒரு நட்சத்திரம் போன்று இருக்கிறது என்கிறார்கள். பிறகு கட்டை விரல் போன்று இருக்கும் என்று எப்படி கூறுகிறார்கள்! ஆத்மா இவ்வளவு சூட்சுமமான பொருளாக இருக்கிறது. இந்த கண்களினால் பார்க்க முடிவதில்லை. ஆம், அதை தெய்வீக திருஷ்டியால் பார்க்கலாம். ஏனென்றால் அவ்யக்த (தெளிவாக காணமுடியாத) பொருளாகும். தெய்வீகப் பார்வையால் பார்ப்பதற்கு சைத்தன்யமாகத் தெரிகிறது. பிறகு மறைந்துவிடுகிறது எதுவும் கிடைப்பதில்லை. மகிழ்ச்சி மட்டும் அடைகிறார்கள். இதற்கு பக்தியின் அல்ப கால சுகம் என்பார்கள். இது பக்தியின் பலனாகும். யார் நிறைய பக்தி செய்திருக்கிறார்களோ அவர்களுக்கு தானாகவே சட்டப்படி இந்த ஞானத்தின் பலன் கிடைத்து விடுகிறது. பிரம்மா மற்றும் விஷ்ணுவை ஒன்றாகக் காண்பிக்கிறார்கள். பிரம்மாவிலிருந்து விஷ்ணு, பக்தியின் பலன் விஷ்ணுவின் ரூபத்தில் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இராஜ்ய பதவியாகும். விஷ்ணு அல்லது கிருஷ்ணரின் சாட்சாத்காரம் நிறைய கிடைத்திருக்கிறது. விதவித மான பெயர் ரூபத்தில் பக்தி செய்திருக்கிறார்கள் என புரிந்துக் கொள்ளப்படுகிறது. சாட்சாத் காரத்திற்கு யோகம் அல்லது ஞானம் என்று கூற முடியாது. தீவிரமான பக்தி செய்வதால் காட்சி கள் கிடைக்கிறது. இப்போது காட்சி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. மனிதனிலிருந்து தேவதையாவது தான் குறிக்கோளாகும். நீங்கள் தேவி தேவதா தர்மத்தினர் ஆகிறீர்கள். மற்றபடி முயற்சி செய்வதற்காக மற்ற சங்கங்களிலிருந்து (தொடர்பு) புத்தியை விலக்குங்கள், தேகத்திலிருந்து விலக்கி தந்தையை நினையுங்கள் என பாபா கூறுகிறார். எப்படி பிரியதர்ஷன் பிரியதர்ஷினி வேலையும் செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனம் பிரியதர்ஷனை நினைத்துக் கொண்டிருக்கிறது. என்னை மட்டும் நினையுங்கள் என்று பாபாவும் கூறுகிறார். இருப்பினும் புத்தி இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் இறங்குவதற்கு ஒரு கல்பம் ஆகிறது என நீங்கள் அறிகிறீர்கள். சத்யுகத்திலிருந்து ஏணிப்படியில் இறங்கிக் கொண்டே வருகிறீர் கள். சிறிது சிறிதாக துரு பிடிக்கிறது. சதோவிலிருந்து தமோவாகிவிடுகிறார்கள். பிறகு தமோ விலிருந்து சதோ ஆவதற்காக பாபா வேகமாக தாண்ட வைக்கிறார். நொடியில் தாமோபிர தானத்திலிருந்து சதோபிரதானம் ஆகலாம்.
எனவே இனிமையிலும் இனிமையான குழந்தைகள் முயற்சி செய்ய வேண்டும். பாபா அறிவுரை கள் வழங்கிக் கொண்டிருக்கிறார். நல்ல நல்ல புத்திசாலி குழந்தைகள் உண்மையில் மிகவும் கடினம் என தானும் அனுபவம் செய்கிறார்கள். சிலர் தெரிவிக்கிறார்கள், சிலர் முற்றிலும் தெரிவிப் பதில்லை. தன்னுடைய நிலையைப் பற்றி தெரிவிக்க வேண்டும். தந்தையை நினைக்கவில்லை என்றால் சொத்து எப்படி கிடைக்கும். நான் சிவபாபா வினுடையவன் என நினைக்கிறார்கள், ஆனால் முறைப்படி நினைவு செய்வதில்லை. நினைவு செய்யாததால் விழுந்து விடுகிறார்கள். பாபாவை நிரந்தரமாக நினைத்தால் துரு நீங்கிவிடும். கவனம் வைக்க வேண்டும். சரீரம் உள்ள வரை முயற்சி நடந்துக் கொண்டே இருக்கும். நினைவு அடிக்கடி மறந்து போகிறது என புத்தி கூறுகிறது. இந்த யோக பலத்தால் நீங்கள் இராஜ்ய பதவியை அடைகிறீர்கள். எல்லோரும் ஒன்று போல் ஓட முடியாது. சட்டம் அவ்வாறு இல்லை. ஓட்டப் பந்தயத்தில் கூட சிறிது வித்தியாசப் படுகிறது. நம்பர் ஒன், பிறகு பிளஸ் என வருகிறார்கள். இங்கேயும் குழந்தைகளின் ஓட்டப்பந்தயம் தான் நடக்கிறது. நினைவு செய்தலே முக்கியமான விஷயம் ஆகும். நாம் பாவ ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மா ஆகிறோம் என புரிந்துக் கொள்கிறீர்கள். இப்போது பாவம் செய்வதால் அது 100 மடங்கு ஆகிவிடும் என பாபா எச்சரிக்கை செய்கிறார். பலர் பாவம் செய்கிறார்கள். ஆனால் அதைத் தெரிவிப்பதில்லை. பிறகு அது வளர்ந்துக் கொண்டே போகிறது. பிறகு கடைசியில் தோல்வி அடைகிறார்கள். சொல்வதற்கு வெட்கப்படுகிறார்கள். உண்மையைக் கூறாமையால் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார்கள். சிலருக்கு பயம் ஏற்படுகிறது பாபா நம்முடைய இந்த விஷயத்தைக் கேட்டால் என்ன கூறுவார். சிலர் சிறிய தவறைக் கூட சொல்வதற்காக வருகிறார்கள். ஆனால் பாபா அவர்களிடம் பெரிய பெரிய தவறுகளை மிகவும் நல்ல நல்ல குழந்தைகள் கூட செய்வார்கள் என கூறுவார். நல்ல நல்ல மகாரதிகளைக் கூட மாயை விடுவதில்லை. மாயை பலசாலிகளைத் தான் குழப்பத்தில் கொண்டு வருகிறது. இதில் தைரியசாலியாக இருக்க வேண்டும். பொய் நிலைக் காது. உண்மையைக் கூறுவதால் லேசாகிவிடலாம். பாபா எவ்வளவு தான் புரிய வைத்தாலும் ஏதாவது ஒன்று நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. பல்வேறு விதமான விஷயங்கள் நடக்கிறது. பாபாவிடமிருந்து இராஜ்யம் அடைய வேண்டும் என்றால் புத்தியை வேறு பக்கங்களில் இருந்து விலக்குங்கள் என்று பாபா கூறுகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு 5000 வருடத்திற்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது என்ற ஞானம் கிடைத்திருக்கிறது. நீங்கள் உங்களுடைய பிறவிகள் பற்றி கூட புரிந்துக் கொண்டீர்கள். சிலருடையது தலைகீழான பிறப்பு கூட ஏற்படுகிறது. அதற்கு குறை (ஊனம்) என்று கூறப்படுகிறது. தங்களின் கர்மத்திற்கு ஏற்ப இவ்வாறு நடக்கிறது. மனிதர்கள் மனிதர்களாக தான் இருக்கிறார்கள். எனவே ஒன்று பவித்ரமாக இருக்க வேண்டும். இரண்டாவது பொய் பாவம் இருக்கக் கூடாது என பாபா கூறுகிறார். இல்லையென்றால் நிறைய நஷ்டம் ஏற்படும். ஒருவர் மூலமாக ஒரு சிறிய தவறு நடந்து விட்டது. பாபாவிடம் வந்தார். பாபா மன்னித்துவிடுங்கள். இது போன்ற காரியம் இனி ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றார். அதற்கு பாபா இது போன்று தவறுகளை பலர் செய்கிறார்கள். நீ உண்மையைக் கூறுகிறாய். பலர் கூறுவதில்லை. மும்மையில் நிர்மலா டாக்டர் நம்பர் ஒன்னாக இருக்கிறார். அது போன்று சிலர் நல்ல முதன்மையான பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒருபோதும் புத்தி எங்கும் செல்வதில்லை. முற்றிலும் மனம் தூய்மையாக இருக்கிறது. ஒருபோதும் தவறான எண்ணங்கள் மனதில் வருவதில்லை. இதனால் இதயத்தில் இடம் பிடித்திருக்கின்றனர். இது போன்று இன்னும் குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே உண்மையான மனதோடு பாபாவை நினையுங்கள் என பாபா புரிய வைக்கிறார். கர்மம் செய்து தான் ஆக வேண்டும். புத்தியோகத்தை பாபாவோடு இணையுங் கள். கைகள் வேலையிலும் மனம் தந்தையிடமும் இருக்கட்டும். அந்த நிலை கடைசியில் வந்துவிடும். அதீந்திரிய சுகம் வேண்டும் என்றால் கோப கோபியரிடம் கேளுங்கள் எனப் பாடுகிறார்கள். அவர்களே இந்த நிலையைப் பெறுகிறார்கள். யார் பாவ கர்மம் செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த நிலை வருவதில்லை. பாபாவிற்கு நன்கு தெரியும். அதனால் தான் பக்தி மார்க்கத்தில் கூட நல்லது அல்லது தீய கர்மங்களின் பலன் கிடைக்கிறது. இங்கேயோ பாபாவே வந்திருக்கிறார், புரிய வைத்துக் கொண்டி ருக்கிறார். இருப்பினும் அரசாங்கம் இருக்கிறது. தர்மராஜ் என்னுடன் இருக்கிறார் அல்லவா? இச்சமயம் என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். பாபாவிற்குத் தெரியும், நாம் சிவபாபாவிடம் மனதிற்குள் மன்னிப்புக் கேட்கிறோம் என்பது கிடையாது. எதுவும் மன்னிக்கப்படாது. யாருடைய பாவத்தையும் மறைக்க முடியாது. பாவம் செய்வதால் ஒவ்வொரு நாளும் பாவ ஆத்மா ஆகிக் கொண்டே போகிறார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் இவ்வாறு நடக்கிறது. பதிவேடு (ரெஜிஸ்டர்) கெட்டுப் போகிறது. ஒரு முறை பொய் சொல்கிறார்கள். உண்மையை கூறுவதில்லை. இது போன்ற வேலைகளை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒருபோதும் பொய்யை மறைக்க முடியாது. எனவே, பாபா புரிய வைக்கிறார் - ஒரு ரூபாய் திருடினாலும் திருடன் தான் லட்ச ரூபாய் திருடினாலும் திருடன் தான் என கூறப்படுகிறது. ஆகவே, என் மூலமாக இந்த தவறு நடந்துவிட்டது என கூற வேண்டும் அல்லவா? பாபா கேட்கின்ற போது தவறு நடந்துவிட்டது என கூறுகிறார்கள். தாங்களாகவே ஏன் கூறவில்லை. நிறைய குழந்தைகள் மறைக்கிறார்கள் என பாபாவிற்குத் தெரியும். பாபாவிற்குக் கூறுவதால் ஸ்ரீமத் கிடைக்கும். எங்கிருந்தெல்லாமோ கடிதம் வருகிறது, என்ன பதில் கூற வேண்டும் என கேளுங்கள். கேட்பதால் ஸ்ரீமத் கிடைக்கும். பலருக்கு சில கெட்ட பழக்கங்கள் இருக்கிறது அதையும் மறைக்கிறார்கள். சிலருக்கு லௌகீக வீட்டிலிருந்து கிடைக்கிறது. பரவாயில்லை அணிந்து கொள் என பாபா கூறினால் பொறுப்பு பாபாவினுடையதாகி விடுகிறது. சிலரது மன நிலையைப் பார்த்து, யக்ஞத்தில் கொடுத்துவிடுங்கள் என கூறுவேன். அதை உங்களுக்கு மாற்றிக் கொடுத்தால் சரி, இல்லையென்றால், அதன் நினைவு இருக்கும். பாபா மிகவும் எச்சரிக்கை கொடுக்கிறார். இது மிகவும் உயர்ந்த வழியாகும். ஒவ்வொரு அடியிலும் சர்ஜனிடம் கேட்க வேண்டும். இப்படி இப்படி கடிதம் எழுதினால் அம்பு பாயும் என பாபா ஆலோசனை கொடுப்பார். ஆனால் பலருக்கு தேக உணர்வு இருக்கிறது. ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால், தங்களின் கணக்கைக் கெடுத்துக் கொள்கிறார்கள். ஸ்ரீமத் படி நடப்பதால் ஒவ்வொரு நிலைமையிலும் நன்மை நடக்கும். வழி எவ்வளவு எளிதாக இருக்கிறது. நினைவினால் மட்டுமே நீங்கள் உலகத்திற்கு அதிபதியாகலாம். தந்தை மற்றும் ஆஸ்தியை நினையுங்கள் என வயதானவர் களுக்குக் கூறுகிறார்கள். பிரஜைகளை உருவாக்கவில்லை என்றால் இராஜா இராணியாகவும் ஆக முடியாது. இருப்பினும் யார் மறைக்கிறார்களோ அவர்கள் உயர்ந்த பதவியை அடைய முடியாது. பாபாவின் கடமை புரிய வைப்பதாகும். எங்களுக்குத் தெரியவில்லை என்று யாரும் கூறக் கூடாது. பாபா அனைத்து டைரக்ஷனும் கொடுக்கிறார். தவறை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். பரவாயில்லை. பிறகு செய்யக் கூடாது. இதில் பயப்படும் விஷயம் எதுவும் இல்லை. அன்புடன் புரிய வைக்கப்படுகிறது. பாபாவிற்குத் தெரிவிப்பதில் நன்மை இருக்கிறது. பாபா செல்லமாக கொஞ்சலுடன் அன்போடு புரிய வைப்பார். இல்லையென்றால் மனதில் இருந்து ஒரேயடியாக விழுந்துவிடுவார்கள். இவருடைய மனதில் இருந்து விழுந்து விட்டால் சிவபாபாவின் மன திலிருந்தும் விழுந்தது போலவே ஆகும். நாங்கள் நேரடியாக அடைவோம் என்பது கிடையாது. எதுவும் நடக்காது. பாபாவை நினையுங்கள் என்று எவ்வளவு புரிய வைக்கப்படுகிறது. அவ்வளவு புத்தி வெளியில் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த விஷயங்கள் அனைத்தையும் பாபா வந்து நேரடியாகப் புரிய வைக்கிறார். பிற்காலத்தில் அது சாஸ்திரங்களாக மாறுகிறது. இதில் கீதை தான் பாரதத்தின் மிக உயர்ந்த சாஸ்திரமாகும். அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாய் கீதை அதை பகவான் கூறினார் என பாடப் பட்டிருக்கிறது. மற்ற அனைத்து தர்மத்தினரும் பிறகு தான் வருகிறார்கள். கீதை தாய் தந்தை ஆகிவிட்டது மற்ற அனைத்தும் குழந்தைகளாகிவிட்டது. கீதையில் தான் பகவான் வாக்கு என்று இருக்கிறது. கிருஷ்ணரை தெய்வீக சம்பிரதாயத்தினர் என கூறுவார்கள். பிரம்மா விஷ்ணு சங்கர் தேவதைகள் ஆவர். பகவான் தேவதைகளை விட உயர்ந்தவர். பிரம்மா விஷ்ணு சங்கர் மூவரையும் படைக்கக் கூடியவர் சிவன் ஆவார். மிகவும் தெளிவாக இருக்கிறது. பிரம்மா மூலமாக ஸ்தாபனை, கிருஷ்ணர் மூலமாக ஸ்தாபனை என ஒருபோதும் கூறுவது கிடையாது. பிரம்மாவின் ரூபம் காட்டப்பட்டிருக்கிறது. எதனுடைய ஸ்தாபனை? விஷ்ணுபுரி. இந்த சித்திரங்களை மனதில் பதிய வேண்டும். நாம் சிவ பாபாவிடமிருந்து இவைகளைப் பெறுகிறோம். தந்தை இல்லாமல் தாத்தாவிடமிருந்து சொத்து கிடைக்காது. யாராவது சந்தித்தால் என்னை மட்டும் நினையுங்கள் என தந்தை கூறுகிறார் என்று கூறுங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. குறிக்கோள் மிகவும் உயர்ந்தது, எனவே ஒவ்வொரு அடியிலும் சர்ஜனிடமிருந்து ஆலோசனை (தந்தையின் அறிவுரை) கேட்க வேண்டும். ஸ்ரீமத் படி நடப்பதில் தான் நன்மை இருக்கிறது. பாபாவிடம் எதையும் மறைக்கக் கூடாது.
2. தேகம் மற்றும் தேகதாரிகளிடமிருந்து புத்தியின் யோகத்தை விலக்கி ஒரு தந்தையிடம் இணைக்க வேண்டும். செயல்களைச் செய்து கொண்டிருந்தாலும் ஒரு தந்தையின் நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
வரதானம்:
சக்திகளின் கிரணங்கள் மூலம் குறை, பலவீனம் என்ற குப்பையை
எரித்து சாம்பலாக்கக்கூடிய மாஸ்டர் ஞான சூரியன் ஆகுக.
எந்தக் குழந்தைகள் ஞான சூரியனுக்கு சமமாக மாஸ்டர் ஞான சூரியன் ஆகின்றார்களோ, அவர்கள் தன்னுடைய சக்திகளின் கிரணங்கள் மூலம் எந்தவிதமான குப்பை அதாவது குறை மற்றும் பலவீனத்தைஒரு நொடியில் எரித்து சாம்பலாக்கிவிடுவார்கள். சூரியனுடைய வேலையே, குப்பையை அதன் பெயர், ரூபம், நிறம் ஆகிய அனைத்தும் சதா காலத்திற்கும் சமாப்தி ஆகும் படியாக எரித்து சாம்பலாக்குவதாகும். மாஸ்டர் ஞான சூரியனுடைய ஒவ்வொரு சக்தியும் மிகுந்த அதிசயம் செய்ய முடியும், ஆனால், தக்க சமயத்தில் பயன் படுத்தத் தெரிய வேண்டும். எந்த நேரம் எந்த சக்தியின் அவசியம் உள்ளதோ, அந்த சமயம் அந்த சக்தியை பயன்படுத்துங்கள் மற்றும் அனைவருடைய பலவீனங்களை எரித்துவிடுங்கள், அப்பொழுதே மாஸ்டர் ஞான சூரியன் என்று கூற முடியும்.
சுலோகன்:
குணமூர்த்தியாகி தன்னுடைய வாழ்க்கை என்ற மலர்ச்செண்டில்
தெய்வீகத்தன்மையின் நறுமணத்தைப் பரப்புங்கள்.