10-03-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
கேள்வி:
எந்த குழந்தைகளை மாயை மிகவும் முஷ்டியால் குத்து விடுகிறது? உயர்ந்த லட்சியம் எது?
பதில்:
தேக அபிமானத்தில் இருக்கும் குழந்தைகளை மாயை மிகவும் பலமாக முஷ்டி (கை முட்டியால் குத்து விடுகிறது. பிறகு பெயர் ரூபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். தேக அபிமானத்தில் வந்து அடி விழுந்தால் அதனால் பதவி கீழான தாகி விடும். தேக அபிமானத்தை விலக்குவது மிகவும் உயந்த இலட்சியமாகும். பாபா சொல்கிறார் - குழந்தைகளே, ஆத்ம அபிமானி ஆகுங்கள். எப்படி தந்தை கீழ்ப்படிந்த சேவகனாக இருக்கிறாரோ, எவ்வளவு அகங்காரமற்றவராக இருக் கிறாரோ, அது போல் அகங்கார மற்றவராக ஆகுங்கள், எந்த ஒரு அகங்காரமும் இருக்கக் கூடாது.
பாடல்:
அவர் எங்களை விட்டுப் பிரிவதில்லை. . .
ஓம் சாந்தி. குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். மூல வதனத்தில் இருக்கும் போது நாம் பாபா வுடையவர்களாக இருந்தோம், பாபா நம்மவராக இருந்தார் என குழந்தைகள் சொல்கின்றனர். குழந்தைகளாகிய உங்களுக்கு நல்ல விதமாக சரியான ஞானம் கிடைத்துள்ளது. நாம் சக்கரத்தை சுற்றி வந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது மீண்டும் நாம் அவருடையவராக ஆகி யுள்ளோம். அவர் இராஜயோகத்தைக் கற்றுக் கொடுத்து சொர்க்கத்தின் எஜமானாக ஆக்குவதற்காக வந்துள்ளார். கல்பத்திற்கு முன்பு போல மீண்டும் வந்துள்ளார். இப்போது தந்தை ஓ குழந்தைகளே என சொல்கிறார், அதற்காக குழந்தைகளாகி இங்கே மதுபனிலேயே உட்கார்ந்து விடக் கூடாது. நீங்கள் உங்கள் இல்லற விசயங்களில் இருந்தபடியே தாமரை மலர் போல் தூய்மையாக இருங்கள். தாமரை மலர் நீரில் இருந்தாலும் நீருக்கு மேலே இருக்கிறது. அதன் மீது நீர் ஒட்டு வதில்லை. நீங்கள் வீட்டில்தான் இருக்க வேண்டும், தூய்மையாக ஆவது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியதாகும். இது உங்களின் பல பிறவிகளுக்கும் கடைசி பிறவியாகும். மனிதர்களாய் இருக்கும் அனைவரையும் தூய்மையாக்க நான் வந்துள்ளேன். தூய்மையற்றோரை தூய்மை யாக்குபவர், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒரு தந்தைதான் ஆவார். அவரைத் தவிர வேறு யாரும் தூய்மையாக்க முடியாது. அரைக் கல்ப காலமாக நாம் ஏணியில் இறங்கி வந்தோம் என நீங்கள் அறிவீர்கள். 84 பிறவிகளை நீங்கள் கண்டிப்பாக முடிக்க வேண்டும், மேலும் 84 பிறவி களின் சக்கரத்தை முடித்து மிகவும் சோர்ந்த நிலையை அடையும்போது நான் வர வேண்டி யுள்ளது.இடையில் யாரும் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆக்க முடியாது. யாருக்கும் தந்தையையோ, படைப்பையோ பற்றி தெரியாது. நாடகத்தின்படி அனைவருமே கலியுகத்தில் தூய்மையற்றவராக தமோபிரதானமாக ஆகத்தான் வேண்டும். தந்தை வந்து அனை வரையும் தூய்மையாக்கி சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். மேலும் நீங்கள் தந்தையிட மிருந்து சுகதாமத்தின் ஆஸ்தியை அடைகிறீர்கள். சத்யுகத்தில் எந்த துக்கமும் இருப்பதில்லை. இப்போது நீங்கள் வாழ்ந்தபடியே தந்தையுடையவராக ஆகியுள்ளீர்கள். நீங்கள் இல்லற விசயத்தில் இருக்கத்தான் வேண்டும் என தந்தை சொல்கிறார். நீங்கள் வீடு வாசலை விட்டு விடுங்கள் என தந்தை ஒரு போதும் யாருக்கும் சொல்வதில்லை. இல்லற விசயத்தில் இருந்தபடி இந்த கடைசி பிறவியில் தூய்மை அடைய வேண்டும். நீங்கள் வீடு வாசலை விடுங்கள் என தந்தை எப்போதாவது சொல்லியிருக்கிறாரா என்ன? இல்லை.நீங்கள் ஈஸ்வரிய சேவைக்காக நீங்களாகவே விட்டீர்கள். வீடு இல்லறத்தில் இருந்து கொண்டே கூட ஈஸ்வரிய சேவை செய்யும் பல குழந்தைகள் இருக்கின்றனர். இல்லறத்தை விட வைப்பதில்லை. பாபா யாரையும் விட வைப்பதில்லை. நீங்கள் தாமாகவே சேவைக்காக வெளியேறினீர்கள். பாபா யாரையும் விட வைக்கவில்லை. உங்களுடைய லௌகிக தந்தை திருமணம் செய்து கொள்ளச் சொன்னார், நீங்கள் மறுத்தீர்கள் ஏனென்றால் இப்போது மரண லோகத்தின் முடிவுக்காலம் என நீங்கள் அறிவீர்கள். திருமணம் செய்வது வீணேயாகும், பிறகு எப்படி தூய்மையடைவீர்கள்? நாம் ஏன் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கும் சேவையில் ஈடுபடக்கூடாது? ராம இராஜ்யம் வேண்டும் என குழந்தைகள் விரும்புகின்றனர். ஓ பதித பாவன சீதாராம்! என கூப்பிடுகின்றனர் அல்லவா. ஓ ராமா ! வந்து பாரதத்தை சொர்க்கமாக ஆக்குங்கள். சொல்லவும் செய்கின்றனர், ஆனால் எதுவும் புரிந்து கொள்வதில்லை. இந்த சமயத்தில் கிடைக்கும் சுகம் காகத்தின் எச்சத்திற்குச் சமமானது என சன்னியாசிகள் சொல்கின்றனர். அப்படித்தான் இருக்கிறது. இங்கே சுகம் இல்லவே இல்லை. சொல்-க் கொண்டே இருக்கின்றனர், ஆனால் யாருடைய புத்தியிலும் இல்லை. தந்தை துக்கத்திற் காக இந்த சிருஷ்டியை படைக்கவில்லை. சொர்க்கத்தில் துக்கத்தின் பெயர் அடையாளம் இருக்காது என்பதை மறந்து விட்டீர்களா என தந்தை கேட்கிறார். அங்கே கம்சன் முதலானவர்கள் எங்கிருந்து வந்தனர்?
இப்போது எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சொல்லும் வழிப்படி நடக்க வேண்டும். தனது மனதின் வழி நடப்பதால் வீணாக்கிக் கொள்கின்றனர். ஆச்சரியப்படும்படி கேட்டு, பிறருக்கும் சொல்லி, பின் ஓடி விடுகின்றனர், அல்லது துரோகிகள் ஆகி விடுகின்றனர். எவ்வளவு பேர் சென்று ஸ்ரீமத்திற்கு எதிராக சேவை செய்கின்றனர். அவர்களது நிலை பிறகு என்னாகும்? வாழ்க்கையை வைரத்திற்குச் சமமாக ஆக்குவதற்குப் பதிலாக சோழிக்குச் சமமாக ஆக்கிக் கொண்டு விடு கின்றனர். கடைசியில் உங்களுக்கே உங்கள் நிலை பற்றிய காட்சி தெரியும். இப்படிப்பட்ட நடத்தையினால் இந்த பதவியை அடைந்தீர்கள். இங்கே நீங்கள் எந்தப் பாவமும் செய்யக்கூடாது. ஏனென்றால் நீங்கள் புண்ணிய ஆத்மா ஆகிறீர்கள். பிறகு பாவத்திற்கு நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். சொர்க்கத்தில் என்னவோ வருவார்கள்தான், ஆனால் மிகவும் குறைவான பதவி கிடைக்கும். இங்கே நீங்கள் இராஜயோகம் கற்க வருகிறீர்கள், பிறகு பிரஜைகள் ஆகி விடுகிறீர்கள். பதவியில் மிகவும் வித்தியாசம் உள்ள தல்லவா. யக்ஞத்தில் ஏதாவது கொடுக்கிறார்கள், பிறகு திரும்ப எடுத்துச் சென்று விடுகின்றார்கள் எனும்போது சண்டாள பதவி தான் கிடைக்கும் என்பதும் புரிய வைத்திருக்கிறேன். பல குழந்தைகளின் நடத்தையும் அது போல் இருக்கிறது, அவர்களின் பதவி குறைந்து விடும்.
ராஜா ராணிக்குப் பதில் பிரஜையிலும் கூட குறைந்த பதவி அடைந்து விடும்படியான எந்த கர்மமும் செய்யாதீர்கள் என பாபா புரிய வைக்கிறார். யக்ஞத்தில் அர்ப்பணம் ஆகி பின் ஓடிப் போய்விட்டால் சென்று என்னவாக ஆவார்கள். இதையும் கூட தந்தை புரிய வைக்கிறார் – குழந்தைகளே, எந்த பாவ காரியமும் செய்யாதீர்கள், இல்லாவிட்டால் நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். பிறகு ஏன் நஷ்டப்பட வேண்டும். இங்கிருப்பவர்களை விடவும் வீடு, இல்லறத்தில் இருப்பவர்கள், சேவையில் இருப்பவர்கள் மிகவும் உயர்ந்த பதவியை அடைகின்றனர். 8 அணா அல்லது ஒரு ரூபாய் அனுப்பி வைக்கும் மிகவும் ஏழ்மையில் இருப்பவர்களும் இருக்கின்றனர், இங்கே வருபவர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் கூட ஏழைகளின் பதவி உயர்வானதாகி விடுகிறது, ஏனென்றால் அவர்கள் பாவ கர்மங்கள் எதுவும் செய்வதில்லை. பாவம் செய்தால் நூறு மடங்காகி விடும். நீங்கள் புண்ணிய ஆத்மா ஆகி அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். துக்கம் கொடுத்தால் பிறகு விசாரணைக் குழு அமரும். நீ இதை இதை செய்தாய், இப்போது தண்டனையை அனுபவி என காட்சிகள் தெரியும். பதவியும் கீழானதாக ஆகிவிடும். கேட்டுக் கொண்டும் இருக்கின்றனர், ஆனாலும் கூட பல குழந்தைகள் தலைகீழான நடத்தையில் நடந்தபடி இருக்கின்றனர். எப்போதும் பால் பாயசமாகி இருங்கள் என தந்தை சொல்கிறார். உப்பு நீர் ஆகி இருந்தால் விதிக்கு புறம்பான சேவை அதிகம் செய்கின்றனர். யாருடைய பெயர் உருவத்திலாவது மாட்டிக் கொண்டால் மிகவும் பாவம் ஏற்பட்டு விடும். மாயை ஒரு எலியைப் போன்றது. எலி ஊதியும் விட்டு, கடித்தபடியும் இருக்கும், ரத்தமும் வரும், தெரிவதே இல்லை. மாயையும் ரத்தம் வர வைத்துவிடுகிறது. தெரியவே தெரியாத அளவு கர்மத்தை செய்ய வைத்து விடுகிறது. 5 விகாரங்கள் ஒரேயடியாக முகத்தைத் திருப்பி விடுகிறது. பாபா எச்சரிக்கை கொடுப்பார் அல்லவா. எனக்கு எச்சரிக்கையே கொடுக்கவில்லை என விசாரணைக் குழுவிடம் சொல்லும்படியாக ஆகக் கூடாது. ஈஸ்வரன் கற்பிக்கிறார் என நீங்கள் அறிவீர்கள். தாமும் எவ்வளவு அகங்காரமற்றவராக இருக்கிறார். நான் கீழ்ப்படிந்த சேவகன் என சொல்கிறார். சிற்சில குழந்தைகளுக்குள் எவ்வளவு அகங்காரம் இருக்கிறது. பாபாவுடையவராகி பின் இப்படி இப்படியான (தவறான) கர்மங்கள் எல்லாம் செய்கின்றனர், கேட்கவே வேண்டாம். இவர்களை விடவும் வெளியே இல்லறத்தில் இருப்பவர் கள் உயர்வாக ஆகி விடுகின்றனர். தேக அபிமானம் வரும்போதே மாயை நன்றாக பலத்த அடி கொடுத்து விடுகிறது. தேக அபிமானத்தை விடுவது என்பது உயர்ந்த இலட்சியமாகும். தேக அபிமானம் வந்தது, அடி விழுந்ததோ. அப்படி இருக்க ஏன் தேக அபிமானத்தில் வரவேண்டும், அதனால் பதவி கீழானதாகி விடும். அங்கே சென்று குப்பையைப் பெருக்க வேண்டிய நிலைக்கு வந்து விடக்கூடாது. இப்போது பாபாவிடம் யாராவது கேட்டால் பாபா சொல்வார். நான் எவ்வளவு சேவை செய்கிறேன் என தானும் புரிந்து கொள்ள முடியும். நாம் எவ்வளவு பேருக்கு சுகம் கொடுத்தோம். பாபாவும் மம்மாவும் அனைவருக்கும் சுகம் கொடுக் கின்றனர். எவ்வளவு குஷியடைகின்றனர். பாபா பம்பாயில் எவ்வளவு ஞானத்தின் நடனம் ஆடினார், திறமைசா-கள் அநேகர் இருந்தனர் அல்லவா. நிறைய திறமைசா-களின் முன்னால் ஞானத்தின் நடனம் ஆடுகிறேன் என்றால் நல்ல நல்ல கருத்துகள் வெளிப்படுகின்றன. திறமை மிக்கவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். நீங்களும் அப்படி ஆக வேண்டும். அப்போதுதான் பிறர் பின் பற்றுவார்கள். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். தன் வழிப் படி நடந்து பெயரைக் கெடுத்து விடும்போது நிறைய நஷ்டம் ஏற்படுகிறது. இப்போது தந்தை உங்களை உதவி யாளராக ஆக்குகிறார். பாரதம் சொர்க்கமாக இருந்தது அல்லவா. இப்போது அப்படி யாரும் புரிந்து கொள்வதில்லை. பாரதத்தைப் போன்ற தூய்மையான தேசம் வேறெதுவுமில்லை. சொல்கின்றனர், ஆனால் பாரதவாசிகளாகிய நாம் சொர்க்கவாசிகளாக இருந்தோம், அங்கே அளவற்ற சுகம் இருந்தது என புரிந்து கொள்வ தில்லை. அவர் வந்து அழுக்குத் துணியை வெளுப்பார் என குரு நானக் பகவானின் மகிமையைப் பாடியுள்ளார். அவருடைய மகிமை தான் ஒரு ஓம்காரமாக இருப்பவர். . . என்பது. சிவ லிங்கத்திற்குப் பதிலாக அகால் தக்த் (அழிவற்ற சிம்மாசனம்) என்ற பெயரை வைத்து விட்டனர். இப்போது தந்தை முழு சிருஷ்டியின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார். குழந்தைகளே, ஒரு பாவமும் செய்யக் கூடாது. இல்லையென்றால் நூறு மடங்கு தண்டனை ஆகி விடும். என்னை நிந்தனை செய்ய வைத்தால் பதவி கீழானதாகிவிடும். மிகவும் கவனம் வைக்க வேண்டும். தனது வாழ்க்கையை வைரத்திற்குச் சமமாக ஆக்குங்கள். இல்லாவிட்டால் மிகவும் வருந்துவீர்கள். தலை கீழாக செய்த கர்மங்கள் உள்ளுக்குள் அரித்துக் கொண்டிருக்கும். நாம் கீழான பதவி அடைந்து விடும்படி ஒவ்வொரு கல்பமும் செய்வோமா என்ன? தாய் தந்தையரை பின்பற்ற விரும்பினால் நேர்மையாக சேவை செய்யுங்கள். மாயை எங்கிருந்தாவது நுழைந்து வந்து விடும். செண்டரின் பொறுப்பாளர்கள் முற்றிலும் அகங்கார மற்றவராக இருக்க வேண்டும். தந்தையைப் பாருங்கள், எவ்வளவு அகங்காரமற்றவராக இருக்கிறார். பல குழந்தைகள் பிறரிடம் சேவை வாங்குகின்றனர். தந்தை எவ்வளவு அகங்காரமற்றவர். ஒருபோதும் யார் மீதும் கோபம் கொள்வ தில்லை. குழந்தைகள் கட்டளைக்கு கீழ்ப்படியாவிட்டால் தந்தை அவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை எல்லைக்கப்பாற்பட்ட தந்தைதான் அறிவார். அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரி நல்ல குழந்தைகளாக இருப்பதில்லை, கெட்ட குழந்தை களும் (தந்தை சொற்படி நடக்காதவர்கள்) இருக்கின்றனர். பாபா புரிய வைக்கிறார். அளவற்ற குழந்தைகள் உள்ளனர். அதிகரித்தபடி இருந்து ஆயிரக்கணக்கில் ஆகி விடுவார்கள். ஆக தந்தை குழந்தைகளுக்கு எந்த தவறும் செய்யாதீர்கள் என எச்சரிக்கையும் கொடுக்கிறார். இங்கே தூய்மை யற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆக வந்துள்ளீர்கள் என்றால் எந்த தூய்மையற்ற காரியமும் செய்யாதீர்கள். பெயர் ரூபத்திலும் வரக்கூடாது, தேக அபிமானத்திலும் வரக்கூடாது. ஆத்ம அபிமானியாகி தந்தையை நினைவு செய்யுங்கள். ஸ்ரீமத்படி நடந்தபடி இருங்கள். மாயை மிகவும் பலம் வாய்ந்தது. பாபா அனைத்தையும் புரிய வைக்கிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தை போல் அகங்காரமற்றவர் ஆக வேண்டும். யாரிடமும் தன் சேவையை வாங்கக் கூடாது. யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. தண்டனை அடையும்படியான எந்த காரியமும் செய்து விடக் கூடாது. தங்களுக்குள் பால் பாயசமாகி இருக்க வேண்டும்.
2. ஒரு தந்தையின் உயர்ந்த வழிப்படி நடக்க வேண்டும், தன் வழிப்படி அல்ல.
வரதானம்:
தெய்வீக புத்தி என்ற விமானத்தின் மூலம் உலகத்தைச் சுற்றி வந்து
கவனித்துக் கொள்ளக்கூடிய மாஸ்டர் படைப்பவர் ஆகுக.
புத்தி ஒருவருக்கு எவ்வளவு தெய்விகமாக உள்ளதோ, அந்த தெய்விகத்தின் ஆதாரத்தில் அவ்வளவு வேகம் இருக்கும். அதனால் புத்தி என்ற விமானத்தின் மூலம் ஒரு நொடியில் தெளிவான ரூபத்தில் உலகத்தைச் சுற்றி வந்து, அனைத்து ஆத்மாக்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களைத் திருப்திப் படுத்துங்கள். எந்த அளவுக்கு நீங்கள் சக்கரவர்த்தி ஆகி, சுற்றி வருகிறீர்களோ, அந்த அளவுக்கு நாலாபுறமும் சப்தம் நாங்கள் ஜோதியைப் பார்த்தோம், ஃபரிஸ்தாவைப் பார்த்தோம். என்ற ஒலி வெளிப்படும் இதற்காக சுயம் நன்மை செய்பவராக ஆவதோடு, மாஸ்டர் படைப்பவர் ஆகுங்கள்.
சுலோகன்:
மாஸ்டர் வள்ளல் ஆகி அநேக ஆத்மாக்களுக்குப் பிராப்திகளின்
அனுபவம் செய்விப்பது தான் பிரம்மா பாபாவுக்கு சமமாக ஆவதாகும்.
மாதேஷ்வரி அவர்களின் விலைமதிப்பிட முடியாத மகாவாக்கியங்கள்
1. ஈஸ்வர் சர்வவியாபி அல்ல: அதற்கான ஆதாரம் என்ன?: சிரோன்மணி (அனைத்து மதநூல் களின் தாய்) கீதையில் பகவான் மகாவாக்கியம் என்ன இருக்கிறது என்றால் குழந்தைகளே, எங்கு வெற்றி இருக்கிறதோ, அங்கு நான் இருப்பேன், இது கூட பரமாத்மாவின் மகாவாக்கியமாகும். மலைகளில் உயர்ந்ததாக கருதப்படுவது இமயமலையாகும், அதில் நான் இருக்கிறேன், மேலும் நாகத்தில் கருப்பு என்பது நானாக இருக்கிறேன், ஆகையால் மலையில் உயர்ந்த மலை கைலாச மலையை காட்டப்படுகிறது. மேலும் நாகத்தில் கருநாகம், எனவே இதிலிருந்து ஒருவேளை பரமாத்மா அனைத்து நாகங்களில் கருநாகமாக மட்டும் இருக்கிறேன் என்றால் அனைத்து பாவங் களில் அந்தளவு விˆம் இல்லை. ஒருவேளை பரமாத்மா உயர்ந்ததிலும் உயர்ந்தது மலையாக இருக்கிறது, அதுபோல சிறிய மலைகளில் கிடையாது, மேலும் எங்கு வெற்றி இருக்கிறதோ, அங்கு நான் இருக்கிறேன் என்று சொல்லப்படுகிறது, அதாவது தோல்வியில் இல்லை. இப்பொழுது இந்த விˆயங்களிலிருந்து பரமாத்மா சர்வவியாபி அல்ல என்று நிரூபணம் ஆகிறது. ஒருபக்கம் இவ்வாறும் சொல்கிறார்கள், மற்றொரு பக்கம் பரமாத்மா பல ரூபங்களில் வருகிறார் என்றும் சொல்கிறார்கள். அதாவது பரமாத்மாவை 24 அவதாரங்களில் காட்டப்படுகிறது. மீன் மற்றும் ஆமை போன்ற பல ரூபங்களில் காட்டப்படுகிறது. இப்பொழுது இவை அனைத்தும் பொய்யான ஞானமாக இருக்கிறது. அப்படியே பரமாத்மாவை அனைத்து இடங்களிலும் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இந்த சமயம் கலியுகத்தில் அனைத்திலும் மாயா தான் இருக்கிறது, பரமாத்மா எப்படி இருக்க முடியும்? கீதையில் நான் மாயாவில் இல்லை என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதிலிருந்து பரமாத்மா அனைத்து இடத்திலும் என்பது நிரூபணமாகிறது.
2. நிராக்காரி உலகம்: ஆத்மா மற்றும் பரமாத்மா வசிக்கும் இடம்: நிராகாரி உலகம் என்று சொல்கிறோம் என்றால் அதற்கு ஆகாரி (உருவம்) என்று பொருள் அல்ல, என்பதை நாம் தெரிந்திருக்கிறோம். நிராக்காரி உலகம் என்று சொகிறோம் என்றால் அவசியம் ஒரு உலகம் இருக்கிறது என்று தான் பொருள். ஆனால் அதற்கு ஸ்துலமான (5 தத்துவங்களால் ஆன) உலகத்தை போன்று இல்லை. அதுபோல பரமாத்மா நிராக்கார், ஆனால் அவருக்கு சூட்சமமான ரூபம் இருக்கிறது. எனவே ஆத்மாக்களாகிய நமக்கும் பரமாத்மா வசிக்கும் இடம் நிராக்காரி உலகம். நாம் உலகம் என்ற வார்த்தையை சொல்லும் பொழுது உலகம் இருப்பது என்பது நிரூபணம் ஆகிறது. இப்பொழுது உலகத்தை சேர்ந்தவர்கள் புரிந்திருக்கிறார்கள், பரமாத்மா அகண்ட ஜோதியாக ரூபமாக இருக்கிறார். அவர்கள் பரமாத்மா வசிக்கும் இடமாக இருக்கிறது. இதற்கு ஒய்வான வீடு என்று சொல்லப்படுகிறது. எனவே நாம் பரமாத்மா வசிக்கும் இடத்தை பரமாத்மா என்று சொல்ல முடியாது. இப்பொழுது மற்றொரு உலகம் ஆகாரி உலகம், அங்கு பிரம்மா விஷ்ணு சங்கர் தேவதைகள் ஆகாரி ரூபத்தில் இருக்கிறார்கள், மேலும் இது சாகார உலகம். இதற்கு இரண்டு பாகங்கள் இருக்கிறது, ஒன்று நிர்விகாரி சொர்க்கத்தின் உலகம், அங்கு அரைக்கல்பம் முழுமையான சுகம் சாந்தி, தூய்மை இருக்கிறது. மற்றொன்று விகாரி கலியுகம் துக்கம் மற்றும் அசாந்தியான உலகம். இப்பொழுது அந்த இரண்டு உலகங்கள் ஏன் சொல்லப் படுகின்றன? ஏனெனில் மனிதர்கள் நரகம் மற்றும் சொர்க்கம் என்று இரண்டையும் பரமாத்மா தான் உருவாக்கினார் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி பரமாத்மா மகாவாக்கியம் குழந்தைகளே, நான் எந்தவித துக்கமான உலகத்தையும் உருவாக்கவில்லை, நான் சுகம் நிறைந்த உலகத்தை மட்டும் தான் உருவாக்குகிறேன். இந்த துக்கம் மற்றும் அசாந்தி நிறைந்த உலகம் மனித ஆத்மாக்கள் தன்னை தான் மறந்த காரணத்தினால் மற்றும் பரமாத்மாவாகிய என்னை மறந்த காரணத்தினால், இந்த கணக்கு வழக்கை அனுபவம் செய்கிறார்கள். மற்றபடி எந்த சமயம் சுகம் மற்றும் புண்ணியத்தின் உலகம் இருந்ததோ, அந்த உலகத்தில் வேறு உலகம் இல்லை என்பது கிடையாது. ஆமாம், அங்கு தேவதைகள் வசித்தார்கள், அங்கு இல்லறம் நடந்தது, ஆனால் அங்கு விகாரமான சொர்க்கம் என்பது இல்லை, இந்த காரணத்தினால் கர்மபந்தனம் என்பதும் இல்லை. அந்த உலகத்தை கர்மபந்தனம் இல்லாத காரணத்தினால் சொர்க்கம் என்று சொல்லப்பட்டது. அதனால் ஒன்று நிராகாரி உலகம், மற்றொன்று ஆகாரி உலகம், மூன்றாவது இந்த சாகார உலகம். நல்லது.