07-03-2021 காலை முரளி ஓம் சாந்தி "அவ்யக்த பாப்தாதா" ரிவைஸ் 14.11.1987


பூஜைக்குரிய தேவ அத்மா ஆவதற்கான சாதனம் - பவித்திரதாவின் சக்தி

இன்று ஆன்மிக ஜோதி தம்முடைய ஆன்மிக விட்டில் பூச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வோர் ஆன்மிக விட்டில் பூச்சியும் தன்னுடைய ஊக்கம்-உற்சாகத்தின் இறக்கைகள் மூலம் பறந்து இந்த ஆன்மிகக் குழுவில் வந்து சேர்ந்துள்ளது. இந்த ஆன்மிகக் கூட்டம் விசித்திரமான அலௌகிகக் கூட்டமாகும். இதை ஆன்மிகத் தந்தை அறிவார் மற்றும் ஆன்மிகக் குழந்தைகள் அறிவார்கள். இந்த ஆன்மிகக் கவர்ச்சியின் முன் மாயாவின் அநேக விதமான கவர்ச்சிகள் துச்சமாகத் தோன்றுகின்றன. சாரமற்றதாக அனுபவம் ஆகின்றது. இந்த ஆன்மிகக் கவர்ச்சி சதா காலத்திற்கும், நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தின் அநேகப் பிறவிகளுக்கு மகிழ்ச்சி நிறைந்தவர் களாக ஆக்குவதாகும். அநேக விதமான துக்கம்-அசாந்தியின் அலைகளிலிருந்து விடுவிப்ப தாகும். ஆகவே அனைத்து ஆன்மிக விட்டில் பூச்சிகளும் இந்தக் கூட்டத்தில் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

பாப்தாதா விட்டில் பூச்சிகள் அனைவரையும் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். அனைவரின் நெற்றி யின் மீது பவித்திர அன்பு, பவித்திர அன்பின் சம்மந்தம், பவித்திர வாழ்க்கையின் பவித்திர திருஷ்டி-விருத்தியின் அடை யாளங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. அனைவர் மீதும் இந்த அனைத்துப் பவித்திர அடையாளங்களின் சின்னமாகிய ஒளிக்கிரீடம் ஜொலித்துக் கொண்டிருக் கிறது. சங்கமயுக பிராமண வாழ்க்கையின் விசேஷம் -- பவித்திரதாவின் அடையாளம், ஒவ்வொரு பிராமண ஆத்மாவுக்கும் பாபா மூலமாகக் கிடைக்கின்றது. மகான் ஆத்மா, பரமாத்ம-பாக்கியவான் ஆத்மா, உயர்ந்தவரிலும் உயர்ந்த ஆத்மாவுக்கு இந்தக் கிரீடம் அடையாளமாகும். ஆக, நீங்கள் அனைவரும் அந்த மாதிரிக் கிரீடதாரி ஆகியிருக்கிறீர்களா? பாப்தாதா அல்லது தாய்-தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் பிறவியிலிருந்தே பவித்திர பவ என்ற வரதானம் கொடுக்கின்றனர். பவித்திரதா இல்லை என்றால் பிராமண வாழ்க்கை இல்லை. ஸ்தாபனையின் ஆரம்பத்திலிருந்து இது வரை பவித்திரதாவின் மீது விக்னங்கள் அநேகம் வந்துள்ளன. ஏனென்றால் பவித்திரதாவின் அஸ்திவாரம் 21 பிறவிகளுக்கான அஸ்தி வாரமாகும். பவித்திரதாவின் பிராப்தி பிராமண ஆத்மாக்களாகிய உங்களைப் பறக்கும் கலையின் பக்கம் சுலபமாகக் கொண்டு செல்வதற்கான ஆதாரமாகும்.

எப்படி கர்மங்களின் விளைவு மிக ஆழமானதாக உள்ளது எனப் பாடப் பட்டுள்ளதோ, அப்போது பவித்திரதாவின் உட்பொருளும் கூட மிக ஆழமானதாகும். பவித்திரதா மாயாவின் அநேக விக்னங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான குடைநிழலாகும். பவித்திரதா தான் சுகம்-சாந்தியின் தாய் எனச் சொல்லப் படுகின்றது. எந்த விதமான அபவித்திரதாவும் (தூய்மையின்மை) துக்கம் அசாந்தியின் அனுபவம் செய்விக்கிறது. ஆகவே நாள் முழுவதும் சோதித்துப் பாருங்கள் -- எந்தச் சமயத்திலாவது துக்கம் அசாந்தியின் அலை அனுபவமாகிறதா? அதன் விதை அபவித்திர தாவாகும். அது முக்கியமாக விகாரங்களின் காரணத்தால் இருக்கலாம். அல்லது விகாரங்களின் சூட்சும ரூபத்தின் காரணமாக இருக்கலாம். பவித்திர வாழ்க்கை என்றால் துக்கம் அசாந்தியின் பெயர் அடையாளம் இருக்காது. எந்த ஒரு காரணத்தாலும் கொஞ்சமாவது துக்கத்தின் அனுபவம் இருக்குமானால் சம்பூர்ண பவித்திரதாவின் குறை உள்ளது. பவித்திர வாழ்க்கை என்றால் பாப்தாதா மூலம் கிடைத்துள்ள வரதானி வாழ்க்கை. பிராமணர்களின் சங்கல்பத்தில் அல்லது வாயில் இந்த வார்த்தை ஒரு போதும் இருக்கக் கூடாது -- இந்த விஷயத்தின் காரணத்தால் அல்லது இந்த மனிதரின் காரணத்தால் எனக்கு துக்கம் ஏற்படுகிறது.” சில நேரம் சாதாரண ரீதியில் இத்தகைய வார்த்தையைப் பேசவும் செய்கின்றனர். அல்லது அனுபவமும் செய் கின்றனர். இது பவித்திர பிராமண வாழ்க்கையின் பேச்சாகாது. பிராமண வாழ்க்கை என்றால் ஒவ்வொரு நொடியும் சுகமய வாழ்க்கை. துக்கத்தின் காட்சியும் கூட இருக்கலாம். ஆனால் எங்கே பவித்திர தாவின் சக்தி உள்ளதோ, அவர்கள் ஒரு போதும் துக்கத்தின் காட்சியில் துக்கத்தை அனுபவம் செய்ய மாட்டார்கள். ஆனால் துக்கத்தைப் போக்கி சுகம் கொடுக்கும் தந்தைக்கு சமமாக துக்கத்தின் வாயுமண்டலத்தில் துக்கமய மனிதர்களுக்கு சுகம் சாந்தியின் வரதானி ஆகி, சுகம் சாந்தியின் அஞ்சலி (துளி) கொடுப்பார்கள். மாஸ்டர் சுகம் கொடுப்பவர் ஆகி, துக்கத்தை ஆன்மிக சுகத்தின் வாயுமண்டலமாக மாற்றியமைப்பார்கள். அவர்கள் தாம் துக்கத்தைப் போக்கி சுகம் கொடுப்பவர் எனச் சொல்லப் படுவார்கள்.

விஞ்ஞானத்தின் சக்தி அல்ப காலத்திற்கு யாராவது ஒருவரின் துக்கம்-வேதனையை முடித்து விடுகிறது என்றால், பவித்திரதாவின் சக்தி -- அதாவது அமைதியின் சக்தி துக்கம்-வேதனையை முடித்துவிட முடியாதா? விஞ்ஞானத்தின் மருந்தினால் அல்ப காலத்தின் சக்தி உள்ளதென்றால், பவித்திரதாவின் ஆசிர்வாதத்தில் எவ்வளவு பெரிய சக்தி இருக்கும்? சமயத்தின் பிரமாணம் இன்றைய மனிதர்கள் மருந்துகளால் காரணத்துடனோ காரணமில்லாமலோ, துன்பமடைவார்கள், நோய்கள் அதிக பட்சத்தில் செல்கிறதென்றால் சமயத்தில் பவித்திர தேவ-தேவிகளாகிய உங்களிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக வருவார்கள் -- எங்களை துக்கம் அசாந்தியிலிருந்து சதா காலத்திற்கும் விடுவியுங்கள்.

பவித்திரதாவின் திருஷ்டி-விருத்தி என்பது சாதாரண சக்தி கிடையாது. இந்தக் கொஞ்ச நேரத்தின் சக்திசாலி திருஷ்டி மற்றும் விருத்தி சதா காலத்தின் பிராப்தி செய்விப்பதாகும். எப்படி இப்போது உலகாயத டாக்டர்கள் மற்றும் சரீரத்திற்கான மருத்துவமனைகள் அவ்வப்போது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பிறகும் கூட டாக்டர்களுக்கு நேரம் இருப்பதில்லை, மருத்துவமனை களில் இடம் இல்லை. நோயாளிகளின் வரிசை சதா இருந்து கொண்டுள்ளது. அது போல் இனி போகப்போக மருத்துவமனைகளுக்கு அல்லது டாக்டர்களிடம் செல்வதற்கு, மருந்து எடுத்துக் கொள்வதற்கு விரும்பினாலும் கூடப் போக முடியாது. பெரும்பான்மையோர் நம்பிக்கை இழந்து விடுவார்கள், அப்போது என்ன செய்வார்கள்? மருந்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டால் பிறகு எங்கே செல்வார்கள்? உங்களுக்கு முன்னாலும் வரிசை நிற்கும். எப்படி இப்போது உங்களுடைய அல்லது தந்தையின் ஜட சித்திரங்களின் முன்னால் ஓ! தயாளு, தயை செய்யுங்கள்” எனச் சொல்லி தயா மற்றும் ஆசிர்வாதம் வேண்டுகிறார்கள், அது போல் சைதன்ய, பவித்திர, பூஜைக் குரிய ஆத்மாக்களாகிய உங்களிடம் ஓ பவித்திர தேவிகளே அல்லது தேவர்களே! எங்கள் மீது கருணை காட்டுங்கள்-- இவ்வாறு வேண்டுவதற்காக வருவார்கள். இன்று அல்பகால சித்தி உள்ளவர்களிடம் உடல்நலம் வேண்டுவதற்கு அல்லது சுகம்-சாந்தியின் கருணை பெறுவதற்கு எவ்வளவு அலைந்து கொண்டே இருக்கிறார்கள்! தூரத்திலிருந்தே திருஷ்டி பட்டால் போதும் என நினைக்கின்றனர். ஆக, நீங்கள் பரமாத்ம விதி மூலம் சித்தி சொரூபம் ஆகி யிருக்கிறீர்களா? அல்பகாலத்தின் உதவி முடிந்து போகுமானால் எங்கே செல்வார்கள்?

அல்பகால சித்தி உள்ளவர்கள் அனைவரும் அல்பகாலத்திற்கு ஏதாவது பவித்திரதாவின் விதிகள் மூலம் அல்பகால சித்தியை அடைகிறார்கள். இது சதா காலத்திற்கும் செல்லுபடியாகாது. இதுவும் கூட பொற்கால ஆத்மாக்களின், அதாவது கடைசி நேரத்தில் மேலிருந்து வந்துள்ள ஆத்மாக் களுக்கு, பவித்திர முக்திதாமத்திலிருந்து வந்திருக்கும் காரணத்தினால் மற்றும் டிராமாவின் நிச்சயத்தின் பிரமாணம், சதோப்ரதான ஸ்டேஜ் பிரமாணம் பவித்திரதாவின் பலன் சொரூபமாக அல்பகாலத்தின் சித்திகள் பிராப்தியாகின்றன. ஆனால் கொஞ்ச சமயத்திலேயே சதோ, ரஜோ, தமோ -- மூன்று நிலைகளையும் கடந்து செல்லும் ஆத்மாக்கள் ஆகையால் சதா காலத்தின் சித்தி இருப்பதில்லை. பரமாத்ம விதி மூலம் அந்த சித்தி இல்லை. அதனால் எங்காவது சுயநலம் அல்லது அபிமானம் சித்தியை முடித்து விடும். ஆனால் பவித்திர ஆத்மாக்கள் நீங்கள் சதா சித்தி சொரூபமானவர்கள். சதா காலத் திற்கான பிராப்தி அடைபவர்கள். வெறுமனே விந்தையைக் காட்டுபவர் இல்லை. ஆனால் ஜொலிக்கும் ஜோதி சொரூபமாக ஆக்குபவர்கள் நீங்கள். அவிநாசி பாக்கியத்தின் ஜொலிக்கின்ற நட்சத்திரத்தை உருவாக்குபவர்கள். அதனால் இந்த அனைத்து உதவிகளும் இப்போது கொஞ்ச சமயத்திற்காக மற்றும் கடைசியில் பவித்திர ஆத்மாக்களாகிய உங்களிடம் தான் அஞ்சலி (துளி) பெறுவதற்காக வருவார்கள். ஆக, அந்த அளவு சுகம்-சாந்தியின் ஜனனி (பிறப்பிப்பவர்கள்) பவித்திர ஆத்மா ஆகியிருக்கிறீர்களா? அந்த அளவுக்கு ஆசிர்வாதங் களின் ஸ்டாக் சேமித்திருக்கிறீர்களா? அல்லது தனக்காகவும் இது வரை ஆசிர்வாதத்தை வேண்டிக் கொண்டே இருக்கிறீர்களா?

அநேகக் குழந்தைகள் இப்போதும் கூட அடிக்கடி பாபாவிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் -- இந்த விஷயத்தில் கொஞ்சம் ஆசிர்வதியுங்கள், ஆசி வழங்கி விடுங்கள். ஆக, வேண்டிக் கொண்டிருப்பவர்கள் எப்படி வள்ளல் ஆவார்கள்? ஆகவே பவித்திரதா சக்தியின் மகான் தன்மையை அறிந்து கொண்டு, பவித்திரமான, அதாவது பூஜைக்குரிய தேவாத்மாக்களாக இப்போதிருந்து ஆகுங்கள். கடைசியில் ஆகி விடுவோம் என்று அப்படியல்ல. இந்த நீண்ட காலம் சேமிக்கப் பட்டுள்ள சக்தி கடைசியில் பயன்படும். ஆக, பவித்திரதாவின் ஆழமான விளைவு என்னவென்று புரிந்ததா? சதா சுகம்-சாந்தியைப் பிறப்பிக்கும் ஜனனி ஆத்மா -- இது தான் பவித்திர தாவின் ஆழமான தன்மையாகும். சாதாரண விஷயம் இல்லை. பிரம்மச்சாரிகளாக இருக்கிறீர்கள். பவித்திரமாக ஆகிவிட்டீர்கள். ஆனால் பவித்திரதா என்பது ஜனனி ஆகும். சங்கல்பத்தாலோ, விருத்தி மூல மாகவோ, வாயுமண்டலத்தின் மூலமாகவோ, தொடர்பின் மூலமாகவோ, சுகம்-சாந்தியின் ஜனனி ஆவது -- இதைத் தான் பவித்திர ஆத்மா எனச் சொல்வது. ஆக, எது வரை ஆகியிருக்கிறீர்கள் -- இதைத் தனக்குத் தானே சோதித்துப் பாருங்கள். நல்லது.

இன்று அநேகர் வந்திருக்கிறீர்கள். எப்படி தண்ணீரின் அணை உடைபடுகிறது, அது போல் இது விதிமுறை என்ற அணை உடைபட்டு வந்திருக்கிறீர்கள். பிறகும் விதிமுறைகளில் பயனோ இருக்கவே செய்கிறது. யார் விதிமுறைகளோடு வருகிறார்களோ, அவர்களுக்கு அதிகம் கிடைக் கிறது மற்றும் யார் அலையில் ஆடியவாறு வருகிறார்களோ, அப்போது சமயப் பிரமாணம் பிறகு இவ்வளவு தான் கிடைக்கும் இல்லையா? பிறகும் கூடப் பாருங்கள், பந்தனமற்ற பாப்தாதாவும் கூட பந்தனத்தில் வருகின்றனர். சிநேகத்தின் பந்தனம். அன்போடு கூடவே சமயத்தின் பந்தனமும் உள்ளது. சரீரத்தின் பந்தனமும் உள்ளது. ஆனால் இது அன்பான பந்தனம். அதனால் பந்தனத்தில் இருந்தாலும் சுதந்திரம். பாப்தாதாவோ சொல்வார் -- நல்லது, வந்திருக்கிறீர்கள். தங்களின் வீடு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். நல்லது.

நாலாபுறம் உள்ள அனைத்து பரம பவித்திர ஆத்மாக்களுக்கு, சதா சுகம்-சாந்தியின் ஜனனி பாவன ஆத்மாக்களுக்கு, சதா பவித்திரதாவின் சக்தி மூலம் அநேக ஆத்மாக்களுக்கு, துக்கம்-வேதனை யிலிருந்து விடுவிக்கக்கூடிய தேவாத்மாக்களுக்கு பாப்தாதாவின் சிநேகம் நிறைந்த அன்பு நினைவுகள்.

ஹாஸ்டல் குமாரிகளுடன் (இந்தூர் குரூப்) -- அனைவரும் பவித்திர மகான் ஆத்மாக்கள் தாம் இல்லையா? இப்போது மகாத்மா எனச் சொல்லிக் கொள்பவர்களை விடவும் அநேக தடவை சிரேஷ்டமானவர்கள் நீங்கள். பவித்திர குமாரிகளுக்கு எப்போதும் பூஜை நடைபெறுகிறது. ஆக, நீங்கள் அனைவரும் பாவன, பூஜைக்குரிய, சதா சுத்த ஆத்மாக்கள் தாம் இல்லையா? எந்த ஓர் அசுத்தமும் இல்லை தானே? சதா உங்களுக்குள் ஒரே வழி, சிநேகி, சகயோகியாக இருக்கக்கூடிய ஆத்மாக்கள் தாம் இல்லையா? சம்ஸ்காரங்களில் இணங்கிச் செல்ல வருகிறது இல்லையா? ஏனென்றால் சம்ஸ்காரங்களில் இணக்கமாக இருப்பது தான் மகான் தன்மையாகும். சம்ஸ்கார மோதல் இருக்கக் கூடாது. ஆனால் சதா சம்ஸ்கார நல்லிணக்கத்தின் ராஸ் (நடனம்) ஆடிக் கொண்டே இருங்கள். மிக நல்ல பாக்கியம் கிடைத்துள்ளது -- சிறு வயதில் மகான் ஆகியிருக் கிறீர்கள். சதா குஷியாக இருக்கிறீர்கள் இல்லையா? ஒரு போதும் யாரும் மனதால் அழுவதில்லை தானே? மோகமற்றவராக இருக்கிறீர்களா? எப்போதாவது லௌகிகப் பரிவாரம் நினைவு வருகிறதா? இரண்டு படிப்புகளிலும் சாமர்த்தியசாலிகளாக இருக் கிறீர்களா? இரண்டு படிப்புகளிலும் சதா நம்பர்வார் உள்ளனர் இல்லையா? எப்படி தந்தை முதல் நம்பராக இருக்கிறார். அது போல் குழந்தைகளும் நம்பர் ஒன்னில், அனைவரிலும் நம்பர் ஒன் -- அந்த மாதிரிக் குழந்தை கள் சதா பாபாவுக்குப் பிரியமானவர்கள். புரிந்ததா? நல்லது.

பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு -- சதா தன்னை சிரேஷ்ட பாக்கியவான் எனப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் அமர்ந்தவாறு பாக்கியவிதாதா மூலம் சிரேஷ்ட பாக்கியம் கிடைத்து விட்டது. வீட்டில் அமர்ந்தவாறு பாக்கியம் கிடைப்பது -- இது எவ்வளவு குஷியின் விஷயம்! அவிநாசி தந்தை, அவிநாசி பிராப்தி செய்விக்கிறார். ஆக, அவிநாசி என்றால் சதா, அவ்வப்போது இல்லை. ஆக, பாக்கியத்தைப் பார்த்து சதா குஷியாக இருக்கிறீர்கள் இல்லையா? ஒவ்வொரு சமயமும் பாக்கியம் மற்றும் பாக்கியவிதாதா -- இரண்டுமே தானாக நினைவிருக்க வேண்டும். சதா ஆஹா எனது சிரேஷ்ட பாக்கியம்-- இதே பாடலைப் பாடிக் கொண்டே இருங்கள். இது மனதின் பாடல். எவ்வளவு இந்தப் பாடலைப் பாடுகிறீர்களோ, அவ்வளவு சதா பறக்கும் கலையின் அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்கள். முழுக் கல்பத்திலும் இந்த மாதிரி பாக்கியத்தை அடைவதற்கான சமயம் இது ஒன்று தான். அதனால் ஸ்லோகனும் உள்ளது -- இப்போது இல்லையேல் இனி எப்போதும் இல்லை. சிரேஷ்ட காரியம் என்னென்ன செய்ய வேண்டுமோ, அதை இப்போதே செய்ய வேண்டும். ஒவ்வொரு காரியத்திலும் ஒவ்வொரு சமயமும் இதை நினைவு வையுங்கள் -- இப்போது இல்லையென்றால் இனி எப்போதுமே இல்லை. யாருக்கு இது நினைவில் இருக்கிறதோ, அவர்கள் ஒரு போதும் சமயம், சங்கல்பம் அல்லது கர்மத்தை வீணாக விட மாட்டார்கள். சதா சேமித்துக் கொண்டே இருப்பார்கள். விகர்மத்தின் விஷயமோ இல்லை. ஆனால் வீண் கர்மமும் கூட ஏமாற்றி விடுகிறது. ஆக, ஒவ்வொரு நொடியின் ஒவ்வொரு சங்கல்பத்தின் மகத்துவத்தை அறிவீர்கள் இல்லையா? சேமிப்புக் கணக்கு சதா நிரம்பிக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு விநாடி. ஒவ்வொரு சங்கல்பத்தையும் சிரேஷ்டமாக சேமிக்கிறீர்கள், வீணாக்குவதில்லை என்றால் 21 பிறவிகளுக்குத் தனது கணக்கை சிரேஷ்டமாக ஆக்கி விடுகிறீர்கள். ஆக, எவ்வளவு சேமிக்க விரும்புகிறீர்களோ, அவ்வளவு சேமித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த விஷயத்தின் மீது இன்னும் அடிக்கோடிடுங்கள் -- ஒரு விநாடி கூட, சங்கல்பம் கூட வீணாகக் கூடாது. வீணானவை முடிந்து போகு மானால் சதா சமர்த் (சக்திசாலி) ஆகி விடுவீர்கள். நல்லது. ஆந்திரப் பிரதேசத்தில் ஏழ்மை அதிகம் உள்ளது இல்லையா? நீங்கள் பிறகு இவ்வளவு செல்வந்தராக இருக்கிறீர்கள். நாலாபுறமும் ஏழ்மைத் தன்மை அதிகரித்துக் கொண்டே போகிறது. உங்களுக்கு இங்கே செல்வம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏனென்றால் ஞான செல்வம் வருவதால் இந்த ஸ்தூலமான பருப்பு-ரொட்டியும் கூட தானாகவே கிடைத்து விடுகிறது. பிராமணர் யாராவது பட்டினியாக இருக்கிறார்களா? ஆக, ஸ்தூல செல்வத்தின் ஏழ்மையும் கூட முடிந்து போகிறது. ஏனென்றால் புத்திசாலி ஆகி விடுகின்றனர். வேலை செய்து தனக்குத் தானே உணவளித்துக் கொள்வதற்காக அல்லது பரிவாரத்திற்கு உணவளிப்பதற்காகவும் புரிதல் வந்து விடுகிறது. அதனால் இரட்டை செல்வம் வந்து விடுகிறது. சரீரத்திற்கும் நல்லது, மனதுக்கும் கூட நல்லது. பருப்பு-ரொட்டி எளிதாகக் கிடைத்துக் கொண்டி ருக்கிறது இல்லையா? பிரம்மாகுமார்-குமாரி ஆனதால் ராயலாகவும் ஆகி விட்டீர்கள், செல்வந்த ராகவும் ஆகி விட்டீர்கள். இன்னும் அநேக ஜென்மங்களுக்கு மிகப்பெரும் செல்வந்தர்களாக இருக்கப் போகிறீர்கள். எப்படி முதலில் நடந்தீர்கள், இருந்தீர்கள், அணிந்தீர்கள் அதிலிருந்து இப்போது எவ்வளவு இராயலாக ஆகி விட்டீர்கள்! இப்போது சதா தூய்ûமாக இருக்கிறீர்கள். முதலில் துணிமணி கூட அழுக்காக அணிவீர்கள். இப்போது உள்ளும் புறமும் சுத்தமாகி விட்டீர்கள். ஆக, பிரம்மாகுமார் ஆனதால் நன்மையாகி விட்டது இல்லையா? அனைத்தும் மாறி விடுகிறது. பரிவர்த்தன் ஆகி விடுகிறது. முதலில் இருந்த முகத்தோற்றம், புத்தி -- பாருங்கள் மற்றும் இப்போதும் பாருங்கள், அப்போது வித்தியாசம் தெரிந்து விடும். இப்போது ஆன்மீகத்தின் பொலிவு வந்து விட்டது. அதனால் முகத் தோற்றமே மாறி விட்டது. ஆகவே சதா இது போல் குஷியில் ஆடிக்கொண்டே இருங்கள்.

இரட்டை வெளிநாட்டினர் சகோதர-சகோதரிகளுடன் -- இரட்டை வெளிநாட்டினராக இருக்கிறீர்களா? அப்படிப் பார்த்தால் பிராமண ஆத்மாக்கள் இதே பாரத தேசத்தைச் சேர்ந்தவர்கள். அநேக ஜென்மங்கள் பாரதவாசிகளாக இருந்திருக்கிறீர்கள். இதுவோ சேவைக்காக அநேக இடங் களுக்குச் சென்றிருக்கிறீர்கள். அதனால் இந்த அடையாளம் -- எப்போது பாரதத்திற்கு வருகிறீர் களோ, அதாவது மதுபன் பூமியில் அல்லது பிராமணப் பரிவாரத்தில் வருகிறீர் களோ, அப்போது நம்முடையவர் என்ற அனுபவம் செய்கிறீர்கள். அது போல் வெளிநாட்டின் வெளிநாட்டு ஆத்மாக்கள் எவ்வளவு தான் சமீபமான தொடர்புள்ள ஆத்மாக்களாக இருந்தாலும் அவ்வளவு நம்முடையவர் என்ற உணர்வு அதிகமாக இருக்கும். யோசிக்க வேண்டியது இருக்காது -- நான் இருந்தேனா அல்லது என்னால் ஆக முடியுமா என்று. ஒவ்வொரு ஸ்தூல பொருளும் மிகப் பிரியமானதாகத் தோன்றும். எப்படி ஏதாவது தன்னுடைய பொருளாக இருக்கிறது இல்லையா, அது போல. தன்னுடைய பொருள் என்றால் எப்போதுமே பிரியமானதாக இருக்கும். ஆக, இவை யெல்லாம் அடையாளங்கள். பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கிறார் -- தூரத்தில் இருந்தாலும் மனதால் சதா அருகில் இருப்பவர்கள். முழுப் பரிவாரமும் உங்களை இந்த சிரேஷ்ட பாக்கியவான் பார்வையில் பார்க்கிறார்கள்.

வரதானம்:

யுத்தத்தில் பயப்படுவதற்கு அல்லது பின்வாங்குவதற்கு

பதிலாக பாபாவின் துணை மூலமாக சதா வெற்றியாளர் ஆகுக.
சேனையில் யுத்தம் செய்யக்கூடிய போர்வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஸ்லோகனாக இருக்கும் -- தோல்வியடைவது அல்லது பின்வாங்குவது பலவீனத்தின் காரியம் போர்வீரர் என்றால் சாவது மற்றும் சாகடிப்பது. நீங்களும் ஆன்மிகப் போர்வீரர்கள். நீங்கள் பயப்படுவதோ பின்வாங்குவதோ இல்லை. சதா முன்னேறிச் சென்று வெற்றியாளர் ஆகிறவர்கள். எது வரை யுத்தம் செய்வது என யோசிக்க வேண்டாம். இதுவோ முழு வாழ்க்கையின் விஷயம். ஆனால் 5000 ஆண்டுகளின் கணக்குப்படி இது ஒரு விநாடியின் விஷயம். விசால புத்தி உள்ளவராக மட்டும் ஆகி எல்லையற்ற கணக்கின் படி பாருங்கள். மேலும் பாபாவின் நினைவு மற்றும் துணையின் அநுபூதி மூலம் வெற்றியாளர் ஆகுங்கள்.

சுலோகன்:

சதா நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆதாரத்தில் வெற்றியாளர் ஆகுங்கள்.