17-03-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
கேள்வி:
உலகின் ஆன்மீகச் சேவை குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது, ஏன்?
பதில்:
ஏனென்றால் உங்களுக்குத்தான் பரமாத்மாவின் (சிவபாபாவின்) சக்தி கிடைக்கிறது. முதலா வதாக ஆத்மாக்களாகிய உங்களுக்கு பரமாத்மாவின் மூலமாக ஞானத்தின் ஊசி (இஞ்செக்ஷன்) செலுத்தப்படுகிறது. அதன் மூலம் நீங்கள் 5 விகாரங்களின் மீது தானும் வெற்றி அடைகிறீர்கள் மற்றும் பிறரையும் அடைய வைக் கிறீர்கள். இப்படிப்பட்ட சேவை வேறு யாரும் செய்ய முடியாது. ஒவ்வொரு கல்பமும் குழந்தைகளாகிய நீங்கள் தான் இந்த ஆன்மீகச் சேவை செய்கிறீர்கள்.
ஓம் சாந்தி. தந்தையின் நினைவில் அமர வேண்டும். வேறு எந்த தேகதாரியின் நினைவிலும் அமரக் கூடாது. புதிது புதிதாக வரக்கூடியவர்கள் தந்தையைத் தெரிந்து கொள்வதே இல்லை. அவரது பெயர் மிகவும் சுலபமானது - சிவபாபா. குழந்தைகளுக்கு தந்தையைத் தெரியாது என்பது எவ்வளவு அதிசயமாக உள்ளது. சிவபாபா உயர்ந்தவரிலும் உயர்ந்த, அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஆவார். அனைத்து தூய்மையற்றவர்களையும் தூய்மையாக்குபவர், அனைவரின் துக்கத்தையும் நீக்குபவர் எனவும் சொல்கின்றனர், ஆனால் அவர் யார் என்பது பி.கு.க்களாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நீங்கள் அவருடைய பேரன் பேத்தி களாவீர்கள். ஆக, கண்டிப்பாக தனது தந்தை மற்றும் அவரின் படைப்பின் முதல் இடை கடைசியை அறிந்திருப்பீர்கள். தந்தையின் மூலம் குழந்தைகள்தான் அனைத்தையும் அறிந்து கொள் கின்றனர். இது தூய்மை யற்ற உலகமேயாகும். அனைத்து கலியுகத்தின் தூய்மை யற்றவர்களை சத்யுகத்தின் தூய்மையானவர்களாக எப்படி ஆக்குகிறார் என்பது பி.கு.க்களைத் தவிர உலகில் யாருக்கும் தெரியாது. கலியுகத்தின் துர்கதியிலிருந்து வெளியில் கொண்டு வரக்கூடியவர் சத்யுகத்தின் சத்கதி வழங்கும் வள்ளலாகிய தந்தையே ஆவார். சிவ ஜெயந்தியும் கூட பாரதத்தில்தான் ஏற்படுகிறது. கண்டிப்பாக அவர் வருகிறார், ஆனால் வந்து பாரதத்திற்கு என்ன தருகிறார் என்பது பாரதவாசிகளுக்குத் தெரியாது. ஒவ்வொரு வருடமும் சிவ ஜெயந்தி யைக் கொண்டாடு கின்றனர், ஆனால் ஞானத்தின் மூன்றாம் கண் இல்லை, ஆகையால் தந்தை யைத் தெரிந்துக் கொள்ளவில்லை.
பாடல்: கண்ணிழந்தவர்களுக்கு வழி காட்டுங்கள். . . .
நாங்கள் அனைவரும் கண்ணிழந்தவர்கள் என்ற இந்தப் பாடல் மனிதர்களால் உருவாக்கப் பட்டதேயாகும். இந்த ஸ்தூலமான கண்கள் அனைவருக்கும் உள்ளது, எனினும் தன்னை கண்ணற்றவர்கள் என ஏன் சொல் கின்றனர்? அதனை தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார் - ஞானத்தின் மூன்றாம் கண் யாருக்கும் இல்லை. தந்தையை அறியாமல் இருப்பது என்பது அஞ்ஞானமாகும். தந்தையை தந்தையின் மூலம் அறிவது என்பது ஞானமாகும். தந்தை ஞானத் தின் மூன்றாம் கண்ணைக் கொடுக்கிறார், அதன் மூலம் நீங்கள் முழு படைப்பின் முதல், இடை, கடைசியை அறிகிறீர்கள். ஞானக்கடலின் குழந்தைகளாகிய நீங்கள் மாஸ்டர் ஞானக்கடல் ஆகி விடுகிறீர்கள். மூன்றாம் கண் என்றாலே திரிநேத்ரி (மூன்று கண் உடையவர்), திரிகாலதரிசி (முக் காலங்களும் அறிந்தவர்), திரிலோகநாத் (மூன்று உலகங்களுக்கும் அதிபதி) ஆக ஆகி விடுகிறீர்கள். சத்யுகத்தின் எஜமானர்களாக இருக்கும் இந்த லட்சுமி நாராயணருக்கு இந்த ஆஸ்தி எப்படி கிடைத்தது என்பது பாரதவாசிகளுக்குத் தெரியாது. அவர்கள் எப்போது வந்தனர்? பிறகு எங்கே சென்றனர்? பிறகு எப்படி இராஜ்யத்தை அடைந்தனர்? எதுவும் தெரியாது. இந்த தேவதைகள் தூய்மையானவர்கள் அல்லவா. கண்டிப்பாக தந்தைதான் தூய்மையானவர் களாக ஆக்குவார். பாரதவாசிகளாகிய உங்களுக்கு தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். நீங்கள் தேவதைகளை, சிவனை ஏற்றுக் கொள்கிறீர்கள். சிவனின் ஜென்மமும் கூட பாரதத்தில் ஏற்பட்டது. உயர்ந்த வரிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார். சிவ ஜெயந்தியும் கூட இங்கே கொண்டாடுகின்றனர். ஜெகதம்பா, ஜெகத்பிதா பிரம்மா மற்றும் சரஸ்வதியின் ஜென்மமும் கூட இங்குதான் ஆகிறது. பாரதத்தில் தான் கொண்டாடுகின்றனர். நல்லது, லட்சுமி நாராயணரின் ஜென்மமும் கூட இங்குதான் ஆகிறது, அவர்கள்தான் ராதா கிருஷ்ணர் ஆவர். இதுவும் கூட பாரதவாசிகளுக்குத் தெரியாது. தூய்மை ஆக்குபவரே வாருங்கள் என சொல்கின்றனர், ஆக அனைவரும் தூய்மை யற்றவர்களே ஆவர். சாது சன்னியாசிகள், ரிஷி முனிவர்கள் முதலான அனைவருமே எங்களை தூய்மையாக்க வாருங்கள் என கூப்பிடுகின்றனர். இன்னொரு பக்கம் பாவத்தை நீக்கிக் கொள்ள கும்பமேளா முதலானவற்றிற்குச் செல்கின்றனர். கங்கை பதீத பாவனி (தூய்மை படுத்தக் கூடியது) என சொல்கின்றனர். தூய்மையற்றவரை தூய்மையாக்குபவரே என கூப்பிடுகின்றனர் எனும்போது மனிதர்கள் எப்படி யாரை தூய்மையாக்க முடியும்? நீங்கள் முதலில் தேவி தேவதா தர்மத்தவராக இருந்த போது அனைவரும் தூய்மை யானவர்களாக இருந்தீர்கள், இப்போது தூய்மையற்றவர் களாக இருக்கிறீர்கள் என தந்தை புரிய வைக்கிறார். வழி காட்டுங்கள் பிரபு என சொல்கின்றனர். எங்கு செல்வதற்கான வழி? பாபா ஜீவன் முக்திக்கான வழி கூறுங்கள் என சொல்கின்றனர். எங்களுக்குள் 5 விகாரங்கள் உள்ளன. பாபா நாங்கள் அனைவரும் சொர்க்கத்தில் இருந்த போது விகாரமற்றவர்களாக இருந்தோம். இப்போது விகாரிகளாக, தூய்மையற்றவர்களாக ஆகி விட்டோம். இதன் இரகசியத்தைப் புரிய வையுங்களேன். இவை ஏதும் கட்டுக் கதைகள் அல்ல. ஸ்ரீமத் பகவத் கீதை அல்லது பரமாத்மாவால் சொல்லப்பட்ட கீதையாகும் என தந்தை புரிய வைக்கிறார். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் நிராகார பகவான் ஆவார். மனிதர்களை பகவான் என சொல்ல முடியாது. இவ்வளவு பெரிய பெரிய குருமார்கள் இருந்த போதும் பாரதம் இவ்வளவு தூய்மையற்று சோழிக்குச் சமமாக ஏன் ஆகி யுள்ளது என தந்தை கேட்கிறார். பாரதம் சொர்க்கமாக இருந்தது என்பது நேற்றைய விஷயமாகும். பாபா பாரதத்திற்கு சொர்க்கத்தின் பரிசை வழங்கியிருந்தார். தூய்மையற்ற பாரதவாசிகளை வந்து இராஜயோகம் கற்றுக் கொடுத்து தூய்மையாக்கி இருந்தார். இப்போது மீண்டும் சேவாதாரியாகி குழந்தைகளிடம் வந்துள்ளார். தந்தை ஆன்மீக சேவாதாரியாக உள்ளார். மற்றபடி உள்ள மனிதர்கள் அனைவரும் ஸ்தூலமான சேவாதாரிகள் ஆவர். சன்னியாசிகளும் கூட ஸ்தூலமான சேவாதாரிகளே. அவர்கள் அமர்ந்து புத்தகம் முதலானவற்றைப் படித்துச் சொல்கின்றனர். நிராகாரமாகிய நான் சாகாரமான சாதாரண முதியவரின் உடலில் பிரவேசம் செய்து வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறேன் என தந்தை சொல்கிறார். ஓ பாரதவாசி குழந்தைகளே ! பாருங்கள், ஆன்மீகத் தந்தை வந்து ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். இந்த பிரம்மா சொல்வதில்லை, ஆனால் அந்த நிராகார தந்தை இந்த உடலை ஆதாரமாக எடுக்கிறார். சிவனுக்கோ தன்னுடையதென சரீரம் கிடையாது. சாலிக் கிராம ஆத்மாக்களுக்கு தத்தமது உடல்கள் இருக்கின்றன. மறுபிறவிகளில் வந்து வந்து தூய்மை யற்றவராக ஆகி விடுகின்றனர். இப்போது முழு உலகமும் தூய்மை யற்றிருக்கிறது. ஒருவரும் கூட தூய்மையானவர் இல்லை. நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள், பிறகு துருப் பிடித்ததால் சதோவிலிருந்து ரஜோ, தமோவில் வந்தீர்கள். பாரதவாசிகளான உங்களிடம் சிவபாபா வந்து சரீரத்தை (தாரணை) தரித்துக் கொள்கிறார், அவரை (பாகீரதி) பாக்கியரதம் என்றும் சொல்கின்றனர். கோவில்களில் சங்கரரின் உருவத்தைக் காட்டுகின்றனர், ஏனென்றால் அவர்கள் சிவனையும் சங்கரனையும் ஒன்று என புரிந்து கொள்கின்றனர். சிவன் நிராகாரி என்றோ சங்கரன் ஆகாரி (ஒளி உடல் உடையவர்) என்றோ புரிந்து கொள்வதில்லை. சிவனையும் சங்கரனையும் எப்படி ஒன்று என சொல்கின்றனர். நல்லது, பிறகு காளை மாட்டின் மீது சவாரி செய்பவர் யார்? சிவனா அல்லது சங்கரனா? சூட்சும வதனத்தில் காளை எங்கிருந்து வந்தது? சிவன் மூல வதனத்தில் இருக்கிறார், சங்காரன் சூட்சும வதனத்தில் இருக்கிறார். மூல வதனத்தில் அனைத்து ஆத்மாக்களும் உள்ளனர். சூட்சும வதனத்தில் பிரம்மா, விஷ்ணு, சங்கரன் மட்டும்தான் இருக்கின்றனர். அங்கே விலங்குகள் இருப்பதில்லை. நான் சாதாரண முதியவரின் உடலில் பிரவேசமாகி புரிய வைக்கிறேன் என தந்தை சொல்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களுடைய பிறவிகள் பற்றி தெரியாது. சத்யுகத்திலிருந்து தொடங்கி நீங்கள் எத்தனை பிறவிகள் எடுத்தீர்கள்? 84 பிறவிகள் எடுத்தீர்கள். இப்போது இது கடைசி பிறவியாகும். அமர லோகமாக தூய்மையாக இருந்த பாரதம் இப்போது மரணலோகமாக தூய்மையற்றதாக உள்ளது. அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒருவர் அல்லவா. ருத்ர மாலை தான் பரமபிதா பரமாத்மா நிராகார சிவனுடையதாகும். 108 ருத்ரமாலை என சொல்லப்படுகிறது. அனைவரும் சிவனின் கழுத்து மாலை ஆவர். தந்தை பதித பாவனர், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல், அனைவருக்கும் ஆஸ்தி கொடுப்பவர் ஆவார். எல்லைக்குட்பட்ட தந்தை எல்லைக்குட்பட்ட ஆஸ்தியை கொடுக்கிறார், அதனை காகத்தின் எச்சத்தைப் போன்ற சுகம் என சன்னியாசிகள் புரிந்து கொள்கின்றனர். உங்களுடைய இந்த சுகம் காகத்தின் எச்சத்திற்கு ஒப்பானது என்பது மிகச் சரியே என தந்தை சொல்கிறார். தந்தைதான் வந்து ஞானத்தின் மூலம் தூய்மையற்றவர்களை தூய்மையானவர்களாக அல்லது முட்களை மலர்களாக ஆக்குகிறார். இது கீதையின் ஞானமாகும். இந்த ஞானத்தை எந்த மனிதரும் புரிய வைக்க முடியாது. ஞானக்கடலான பதித பாவன தந்தைதான் புரிய வைக்க முடியும். தந்தையிடமிருந்துதான் ஆஸ்தி கிடக்கிறது, அதனை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மட்டும்தான் சத்கதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள். இப்போது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள், அவர்கள் கலியுகத்தில் இருக்கின்றனர். இப்போது கலியுகத்தின் கடைசி சமயமாக உள்ளது. மகாபாரதச் சண்டையும் கூட முன்னால் உள்ளது. 5 ஆயிரம் வருடங் களுக்கு முன்பு கூட நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கும்போது வைக்கோல் போரில் தீ மூண்டது. இப்போது நீங்கள் இந்த லட்சுமி நாராயணனாக ஆவதற்காக இராஜயோகம் கற்றுக் கொண்டிருக் கிறீர்கள். மற்றது எல்லாம் பக்தி மார்க்கமாகும். தந்தை வரும்போது சொர்க்கத்தின் வாசலைத் திறக்கிறார். இந்த சிவ சக்தி பாரதமாதாக்கள் பாரதத்தை ஸ்ரீமத்படி சொர்க்கமாக ஆக்குகின்றனர் என தந்தை சொல்கிறார். சிவ சக்தி பாரத மாதாக்களாகிய நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறீர்கள். நீங்கள் ஈஸ்வரனின் வாரிசுகள், அவரை மட்டுமே நினைவு செய்கிறீர்கள். சிவனிட மிருந்து சக்தி எடுத்து 5 விகாரங்கள் எனும் எதிரிகளை வெற்றி கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் கூட பாரதத்தின் ஆன்மீக சேவை செய்திருக்கிறீர்கள். அந்த சமூக சேவகர்கள் ஸ்தூலமான சேவை செய்கின்றனர். இது ஆன்மீக சேவை. பரம ஆத்மா வந்து ஆத்மாவுக்கு இஞ்செக்ஷன் (ஊசி) போடுகிறார், படிப்பிக்கிறார். ஆத்மாதான் கேட்கிறது. நீங்கள் ஆத்மாக்கள் ஆவீர்கள். நீங்கள்தான் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறீர்கள். 84 பிறவிகள் எடுத்து 84 தாய் தந்தையரை அடைந்தீர்கள். சத்யுகம், திரேதாவில் நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட சுகத்தை அடைந்தீர்கள், இப்போது மீண்டும் எலைக்கப் பாற்பட்ட தந்தை மூலம் சுகத்தின் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். பாரதத்திற்கு இந்த ஆஸ்தி கிடைத்திருந்தது. பாரதத்தில் இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. அங்கே அசுரர்கள் முதலான யாரும் இருக்கவில்லை. இப்போது இந்த பழைய உலகத்திற்கு தீ பற்றப் போகிறது என நீங்கள் அறிவீர்கள். நான் வந்து ஞான யக்ஞத்தை படைக்கிறேன். நீங்கள் அனைவரும் தூய்மையான தேவதைகள் ஆகிறீர்கள். ஆயிரக்கணக்கானவர்கள் தேவதை களாவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளுக்கு சத்கதி வழங்குவதற்காக தந்தை வந்துள்ளார். குழந்தைகளாகிய உங்களை முள்ளிலிருந்து மலர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு ஞானத்தின் மூன்றாம் கண்ணைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், அதன் மூலம் நீங்கள் முழு நாடகத்தையும், சிவபாபாவின் நடிப்பு என்ன நடக்கிறது போன்ற அனைத்தையும் அறிவீர்கள். பிரம்மா மற்றும் விஷ்ணுவிற் கிடையில் என்ன தொடர்பு என்பதை யும் நீங்கள் அறிவீர்கள். விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வந்தார் என அவர்கள் காட்டு கின்றனர். பிரம்மா தான் சென்று விஷ்ணு ஆகிறார். பிராமணரே பின்னர் தேவதையாக ஆகின்றனர். விஷ்ணுவிலிருந்து பிரம்மா ஆவதற்கு 5 ஆயிரம் வருடங்கள் ஆகின்றன. இந்த ஞானம் உங்களுக்கு உள்ளது. பிராமணர்களாகிய உங்களின் நாபியிலிருந்து விஷ்ணுபுரி வெளிப் பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வந்தார், பிறகு அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தை உரைத்தார் என படத்தை உருவாக்கியுள்ளனர். இப்போது நீங்கள் பிரம்மாவின் மூலம் அனைத்து சாரத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். முக்கிய மான தர்ம சாஸ்திரங்கள் 4 என தந்தை சொல்கிறார். முதல் சாஸ்திரம் தெய்வீக தர்மத்தின் கீதையாகும். கீதையை யார் உரைத்தது? சிவபாபா. ஞானக்கடல், பதித பாவனர், சுகக் கடல் சிவபாபா ஆவார். அவர் வந்து பாரதத்தை சொர்க்கமாக ஆக்கினார். கிருஷ்ணர் அல்ல. கிருஷ்ணரோ என்னிடமிருந்து ஞானத்தைக் கேட்டு பிறகு கிருஷ்ணராக ஆகினார். ஆக இது குப்தமான (மறைமுகமான) விஷயமல்லவா. புதிய புதிய குழந்தைகள் இந்த விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது. இது நரகம் என சொல்லப்படுகிறது. அது சொர்க்கம் என சொல்லப் படுகிறது. சிவபாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்திருந்தார், அதில் இந்த லட்சுமி நாராயணர் இராஜ்யம் செய்து கொண்டிருந் தனர். இப்போது நீங்கள் மனிதரிலிருந்து தேவதை ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மரண லோகம், துக்க தாமத்தில் இது உங்களுடைய கடைசிப் பிறவியாகும். பாரதம் அமரலோகமாக இருந்தது. அங்கே துக்கத்தின் பெயரும் இருக்கவில்லை. பாரதம் பரிஸ்தானமாக (தேவதைகள் வாழும் இடமாக) இருந்தது. இப்போது சுடுகாடாக உள்ளது, மீண்டும் பரிஸ்தானமாக ஆகப் போகிறது. இவையனைத்தும் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங் களாகும். இது மனிதரிலிருந்து தேவதை ஆவதற்கான பாடசாலையாகும். இது ஏதோ சன்னியாசி களினுடைய சத்சங்கம் அல்ல. அங்கே அமர்ந்து சாஸ்திரங்களை படித்து சொல்கின்றனர். 7 நாட்களின் பாடமுறையைக் கேளாத வரை புதியவர்கள் யாரும் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. இந்த சமயத்தில் மனிதர்களாக உள்ள அனைவருமே பக்தர்களாக உள்ளனர். அவர்களுடைய ஆத்மாவும் கூட நினைவு செய்கிறது. அனைவரும் ஒரு பிரியதர்ஷனாகிய பரமாத்மாவின் பிரியதர்ஷினிகளாவார்கள். தந்தை வந்து உண்மையான கண்டத்தை உருவாக்கு கிறார். அரைக் கல்பத்திற்குப் பிறகு இராவணன் வந்து பொய்யான கண்டத்தை உருவாக்குகிறார். இப்போது சங்கமயுகமாக உள்ளது. இவையனைத்தும் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களாகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தையின் ஸ்ரீமத்படி பாரதத்திற்கு உண்மையிலும் உண்மையான சேவை செய்ய வேண்டும். சர்வசக்திவான் தந்தையிடமிருந்து சக்தி அடைந்து 5 விகாரங்கள் எனும் எதிரிகள் மீது வெற்றி அடைய வேண்டும்.
2. மனிதரிலிருந்து தேவதைகளாவதற்காக கண்டிப்பாக தூய்மை அடைய வேண்டும். ஞானத்தை தாரணை செய்து முள்ளிலிருந்து மலராக ஆக வேண்டும் மற்றும் மற்றவர் களையும் ஆக்க வேண்டும்.
வரதானம்:
ஸ்ரீமத் மூலம் சதா குஷி மற்றும் இலேசான தன்மையை அனுபவம் செய்யக்கூடிய மனதின் வழி மற்றும் மற்றவர்களின் வழியிலிருந்து விடுபட்டவர் ஆகுக.
எந்தக் குழந்தைகளின் ஒவ்வோரு அடியும் ஸ்ரீமத் பிரமாணம் உள்ளதோ, அவர்களது மனம் சதா திருப்தியாக இருக்கும். மனதில் எந்த விதமான குழப்பமும் இருக்காது. ஸ்ரீமத் படி நடப்பதால் இயற்கையான குஷி இருக்கும். இலேசான தன்மையின் அனுபவம் இருக்கும். எனவே எப்போதெல்லாம் மனதில் குழப்பம் வருகிறதோ, சிறிதளவு கூட குஷியின் சதவிகிதம் குறைந்து விடுகிறதோ, அப்போது சோதித்துப் பாருங்கள் -- நிச்சயமாக ஸ்ரீமத்துக்கு அவமரியாதை இருக்கும். அதனால் சூட்சுமமாக சோதனை செய்து மனதின் வழி, மற்றவர்களின் வழியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளுங்கள்.
சுலோகன்:
புத்தி என்ற விமானத்தின் மூலம் வதனம் சென்றடைந்து ஞான சூரியனின்
கிரணங்களை அனுபவம் செய்வது தான் சக்திசாலி யோகமாகும்.
மாதேஷ்வரி அவர்களின் விலைமதிப்பிட முடியாத மகாவாக்கியங்கள்
1. ஆத்மாவிற்கு பரமத்மாவிற்குமுள்ள வித்தியாசம் : ஆத்மா பரமாத்மா வெகுகாலம் பிரிந்திருந்து மீண்டும் அழகான சந்திப்பை சத்குரு தரகர் (பிரம்மா பாபா) மூலம் சந்திக்கிறார்.... நாம் இந்த வார்த்தைகளை சொல்கிறோம், இதனுடைய சரியான பொருள் ஆத்மா பரமாத்மாவிடமிருந்து வெகுகாலம் பிரிந்திருந்தது. பலகாலம் என்பதன் பொருள் - வெகுகாலமாக ஆத்மாவும் பரமாத்மாவும் சந்திக்காமல் இருந்தார்கள், எனவே இந்த வார்த்தைகளின் மூலம் ஆத்மாவும் பரமாத்மாவும் தனித்தனிப்பட்டவர்கள் என்பது நிரூபணமாகிறது. இருவருக்குள்ளும் வித்தியாசம் இருக்கிறது, ஆனால் உலகிய மனிதர்களுக்கு தன்னை பற்றிய தெரியாத காரணத்தினால் இந்த வார்த்தையின் பொருளை ஆத்மாவாகிய நான் தான் பரமாத்மா என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ஆத்மாவின் மீது மாயா வின் உறை (கறை) சுற்றியுள்ள காரணத்தினால் தனது உண்மை யான சொரூபத்தை மறந்து விட்டனர், மாயாவின் கறை நீங்கும் பொழுது ஆத்மா அதே பரமாத்மா என்று சொல்கின்றனர். எனவே ஆத்மாவை தனிப்பட்டது என்று இவ்வாறு சொல்கின்றனர், மேலும் மற்றொரு தரப்பினர் ஆத்மாவாகிய நான் தான் பரமத்மா ஆவேன் என்றும் சொல்கின்றனர். ஆனால் ஆத்மா தன்னை தானே மறந்த காரணத்தினால் துக்கம் அடைய வேண்டியிருக் கிறது. ஆத்மா தன்னை தானே தெர்ந்துக்கொள்ள தொடங்கும் பொழுது ஆத்மா பரமாத்மாவை சந்திப்பது என்பது ஒன்றாகி விடுகிறது. எனவே அவர்கள் ஆத்மாவை தனிப்பட்டது என்பதை இவ்வாறு புரிந்துக் கொள்கின்றனர். ஆனால் நாம் ஆத்மா வேறு, பரமாத்மா வேறு என்பதை தெரிந்திருக் கிறோம். ஆத்மா பரமாத்மா ஆக முடியாது, மற்றும் ஆத்மா பரமாத்மாவோடு கலக்க முடியாது. மேலும் பரமாத்மா மீதும் கூட மாயாவின் கறை சுற்றப்பட்டுள்ளது என்பதும் கிடையாது.
2. மனதின் அசாந்திக்கான காரணம் - கர்மபந்தனம் மேலும் அமைதிக்கான ஆதாரம் கர்மாதீத் - உண்மையின் ஒவ்வொரு மனிதனும் நமக்கு மனதின் அமைதி அடைந்துவிடவேன்றும் என்று அவசியம் விரும்புகின்றனர். ஆகையால் பலவித முயற்சிகள் செய்துக் கொண்டே வருகின்றனர், ஆனாலும் மனதிற்கு இதுவரை அமைதி கிடைக்கவில்லை, இதற்கான சரியான காரணம் என்ன? மனதின் அசாந்திக்கு முதன்மையான கறை என்னவாக இருக்கும் என்று யோசிப்பது அவசியமாகும். அசாந்திக்கான முக்கிய காரணம் - கர்மபந்தனத்தில் சிக்கிக் கொள்வது. எதுவரை மனிதர்கள் இந்த 5 விகாரங்களின் கர்மபந்தனத்திலிருந்து விடுபடவில்லையோ, அதுவரை அசாந்தியிலிருந்தும் விடுபட முடியாது. கர்மபந்தனத்திலிருந்து விடுபட்டு விட்டால், மனதின் அமைதி அதாவது ஜீவன் முக்தியை அடைய முடியும். இப்பொழுது சிந்தனை செய்ய வேண்டும் - இந்த கர்மபந்தனத்திலிருந்து எப்படி விடுபடுவது? மேலும் அதிலிருந்து விடுப்பவர் யார்? யாரும் எந்தவொரு மனித ஆத்மாவையும் விடுவிக்க முடியாது எனபதை நாம் தெரிந்திருக்கிறோம். இந்த கர்மபந்தனத்தின் கணக்கு-வழக்கிலிருந்து விடுப்பவர் ஒரே ஒரு பரமாத்மா தான் ஆவார். அவர் தான் வந்து இந்த ஞான யோக பலத்தின் மூலம் கர்ம பந்தனத்திலிருந்து விடுவிக்கிறார். அதனால் தான் பரமாத்மாவை சுகத்தின் வள்ளல் என்று சொல்லப்படுகிறது. நான் யார் உண்மையில் நான் யாருடைய குழந்தையாக இருக்கிறேன், எனது உண்மையான குணம் என்ன? என்ற இந்த முதன்மையான ஞானம் இல்லை. எப்பொழுது இது புத்தியில் வரும்பொழுது கர்மபந்தனத் திலிருந்து விடுபட்டு விடலாம். இப்பொழுது இந்த ஞானம் பரமாத்மாவின் மூலம் நாம் அடைகிறோம். அதாவது பரமாத்மா மூலம் தான் கர்மபந்தனம் விடுபடுகிறது. நல்லது- ஒம்சாந்தி