அந்தர்முகி மற்றும் ஏகாந்தவாசி ஸ்திதி
இன்று சர்வசக்திவான் பாப்தாதா தனது சக்தி சேனையை பார்த்துக் கொண்டிருக்கின்றார். இந்த ஆன்மீக சக்தி சேனையானது விசித்திரமான சேனையாகும். பெயர் ஆன்மீக சேவையாகும். ஆனால் விசேடமாக அமைதிச் சக்திக்கானது, அமைதி கொடுக்கக் கூடிய அகிம்சை சேனையாகும். எனவே இன்று பாப்தாதா அமைதி கொடுக்கும் ஒவ்வொரு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார் - ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு அமைதிச் சக்தியை சேமித்திருக்கிறீர்கள்? இந்த அமைதிச் சக்தியானது இந்த ஆன்மீக சேனைவின் விசேட ஆயுதமாகும். அனைவரும் ஆயுதத்துடன் தான் இருக்கிறீர்கள், ஆனால் வரிசைக் கிரமமாக இருக்கிறீர்கள். அமைதிச் சக்தி யானது முழு உலகையும் அசாந்தியிலிருந்து அமைதியாக ஆக்கக் கூடியது. மனித ஆத்மாக்களை மட்டுமின்றி இயற்கையையும் மாற்றக் கூடியதாகும். அமைதிச் சக்தியைப் பற்றி மேலும் ஆழமான ரூபத்தில் அறிந்து கொள்ள வேண்டம் மற்றும் அனுபவம் செய்ய வேண்டும். இந்த சக்தியில் எந்த அளவிற்கு சக்திசாலியாக ஆவீர்களோ, அந்த அளவிற்குத் தான் அமைதிச் சக்தியின் மதிப்பை, மகான் நிலையை அதிகமாக அனுபவம் செய்து கொண்டே செல்வீர்கள். இப்போது வார்த்தைகளின் சக்தியின் மூலம் சேவைக்கான சாதனங்களின் சக்தியை அனுபவம் செய்து கொண்டிருக்கிறீர்கள். மேலும் இந்த அனுபவத்தின் மூலம் வெற்றியையும் பலனாக அடைந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வார்த்தைகளின் சக்தி அல்லது ஸ்தூல சேவைக்கான சாதனங்களை விட அமைதிச் சக்தி மிகவும் சிரேஷ்டமானது. அமைதிச் சக்திக்கான சாதனங்களும் சிரேஷ்டமானது. எவ்வாறு சேவைக்கான சாதனங்களாக சித்திரங்கள், புரஜெக்டர் அல்லது வீடியோ போன்றவைகளை உருவாக்குகிறீர்கள், அவ்வாறு அமைதிச் சக்திக்கான சாதனம் - சுப சங்கல்பம், சுப பாவனை மற்றும் பார்வையின் மொழியாகும். எவ்வாறு வார்த்தைகளின் மூலம் தந்தையின் அல்லது படைப்பின் அறிமுகம் கொடுக்கிறீர்களோ, அவ்வாறு அமைதிச் சக்தியின் ஆதாரத்தில் பார்வையின் மூலம் தந்தையின் அனுபவத்தை செய்விக்க முடியும். எவ்வாறு புரஜெக்டர் மூலம் சித்திரங்களை காண்பிக்கிறீர்களோ, அவ்வாறு உங்களது நெற்றியின் நடுவில் ஜொலிக்கும் உங்களது அல்லது தந்தையின் சித்திரத்தை தெளிவாக காண்பிக்க முடியும். எவ்வாறு நிகழ்காலத் தில் வார்த்தைகளின் மூலம் நினைவு யாத்திரையின் அனுபவத்தை செய்விக்கிறீர்களோ, அவ்வாறு அமைதிச் சக்தியின் மூலம் உங்களது முகம் நினைவிற்கான வித விதமான நிலைகளை அனுபவம் செய்விக்கும். அனுபவம் செய்பவர்களுக்கு இது எளிதாக உணர முடியும் - இந்த நேரத்தில் விதை ரூப நிலையின் அனுபவம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அல்லது பரிஸ்தா ரூபத்தின் அனுபவம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அல்லது வித விதமான குணங்களின் அனுபவம் உங்களது இந்த சக்திசாலியான முகத்தின் மூலம் தானாகவே ஏற்பட்டுக் கொண்டி ருக்கும்.
எவ்வாறு வார்த்தைகளின் மூலம் ஆத்மாக்களுக்கு அன்பான சகயோகத்தின் பாவனைகளை உருவாக்குகிறீர்களோ, அவ்வாறு நீங்கள் சுப பாவனை, அன்பான பாவனைக்கான ஸ்திதியில் நிலைத்திருக்கும் போது உங்களது பாவனையைப் போன்று அவர்களுக்குள்ளும் உருவாகி விடும். உங்களது சுப பாவனை அவர்களது பாவனையை பிரகாசமாக்கி விடும். எவ்வாறு ஒரு தீபம் மற்றொரு தீபத்தை ஏற்றி விடுகிறதோ, அதே போன்று உங்களது சக்திசாலியான சுப பாவனை மற்றவர்களுக்குள்ளும் சர்வ சிரேஷ்ட பாவனையை எளிதாக உருவாக்கி விடும். எவ்வாறு வார்த்தைகளின் மூலம் இப்போது ஸ்தூல காரியங்கள் அனைத்தும் செய்கிறீர்களோ, அவ்வாறு அமைதிச் சக்திக்கான சிரேஷ்ட சாதனம் - சுப சங்கல்பத்தின் சக்தியின் மூலம் ஸ்தூல காரியங் களையும் எளிதாக்கி விட முடியும் அல்லது செய்விக்க முடியும். எவ்வாறு விஞ்ஞானத்தின் சாதனம் டெலிபோன், வயர்லெஸ் இருக்கிறதோ, அதே போன்று இந்த சுப சங்கல்பமானது எதிரில் பேசுவது போன்ற அல்லது டெலிபோன், வயர்லெஸ் மூலமாக காரியம் செய்விக்கும் அனுபவம் செய்விக்கும். இவ்வாறு அமைதிச் சக்தியில் விசேˆதா இருக்கிறது. அமைதிச் சக்தி குறைந்தது கிடையாது. ஆனால் இப்பொழுது வார்த்தைகளின் சக்தியை, ஸ்தூல சாதனங்களை அதிகமாக காரியத்தில் பயன்படுத்துகிறீர்கள், ஆகையால் இது எளிதாக தோன்றுகிறது. அமைதிச் சக்திக்கான சாதனங்களை உபயோகப்படுத்தவில்லை. ஆகையால் இதன் அனுபவம் இல்லை. அது எளிதாக தோன்றுகிறது, இது கடினமாக தோன்றுகிறது. ஆனால் கால மாற்றத்தின் படி இந்த அமைதிச் சக்தியின் சாதனங்களை உபயோகப்படுத்தியே ஆக வேண்டும். ஆகையால் ஹே சாந்தி தேவர்களே, சிரேஷ்ட ஆத்மாக்களே! இந்த அமைதிச் சக்தியை அனுபவத்தில் கொண்டு வாருங்கள். எவ்வாறு வார்த்தைகளுக்கான பயிற்சி செய்து செய்து வார்த்தைகள் சக்திசாலியாக ஆகி விட்டதோ, அவ்வாறு அமைதிச் சக்தியிலும் பயிற்சியாளர்களாக ஆகிக் கொண்டே செல்லுங்கள். நாளடைவில் வார்த்தைகள் அல்லது ஸ்தூல சாதனங்கள் மூலம் சேவைக்கான நேரம் கிடைக்காது. அப்படிப்பட்ட நேரத்தில் அமைதிச் சக்தியின் சாதனங்கள் அவசியமானதாக இருக்கும். ஏனெனில் எந்த அளவிற்கு யார் மகான் சக்திசாலியாக ஆகிறார்களோ, அவர்கள் மிகவும் சூட்சும மாக இருப்பார்கள். ஆக வார்த்தைகளை விட சுத்த சங்கல்பங்கள் சூட்சுமமானது. ஆகையால் சூட்சுமத்தின் தாக்கம் சக்திசாலியாக இருக்கும். இப்பொழுதும் அனுபவிகளாக இருக்கிறீர்கள் லி வார்த்தைகளின் மூலம் ஏதாவது காரியத்தில் பலன் கிடைக்கவில்லையெனில், இவர்கள் வார்த்தைகளினால் புரிந்து கொள்ளமாட்டார்கள், சுப பாவனையின் மூலம் மாறி விடுவார்கள் என்று கூறுகிறீர்கள். எங்கு வார்த்தைகள் காரியத்தில் வெற்றியாக்கவில்லையோ, அங்கு அமைதிச் சக்தியின் சாதனங்களான சுப சங்கல்பம், சுப பாவனை, பார்வையின் மொழியின் மூலம் கருணை மற்றும் அன்பின் அனுபவம் காரியத்தில் வெற்றியாக்கி விடும். எவ்வாறு இப்பொழுதும் வாதம்-விவாதம் செய்யும் ஒருவர் வருகிறார் எனில் வார்த்தைகளினால் மேலும் அதிகமாக வாதம்-விவாதத்தில் வந்து விடுகின்றார். அவரை நினைவில் அமர வைத்து அமைதிச் சக்தியின் அனுபவத்தை ஏற்படுத்துகிறீர்கள் அல்லவா! ஒருவேளை ஒரு விநாடி நினைவின் மூலம் அமைதியின் அனுபவம் செய்து விட்டால் தானாகவே தனது வாதம்லிவிவாத புத்தியை அமைதியின் அனுபவத்தின் முன் சரண்டர் ஆக்கிவிடுவர். எனவே இந்த அமைதிச் சக்தியின் அனுபவத்தை அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள். இப்போது இந்த அமைதிச் சக்தியின் அனுபவம் மிகவும் குறைவாக இருக்கிறது. அமைதிச் சக்தியின் ரசனையை இப்போது வரை அதிக பட்சம் பேர் துளியளவு தான் அனுபவம் செய்திருக்கின்றனர். ஹே சாந்தி தேவர்களே! உங்களது பக்தர்கள் உங்களது ஜடச் சித்திரத்திடம் அமைதியைத் தான் அதிகமாக கேட்கின்றனர். ஏனெனில் அமைதியில் தான் சுகம் நிறைந்திருக்கிறது. அதை அல்ப காலத்திற்கும் அனுபவம் செய்கின்றனர். ஆக அமைதிச் சக்தியின் அனுபவி ஆத்மாக்கள் எத்தனைப் பேர் இருக்கின்றனர்? வர்ணனை செய்யக் கூடியவர்கள் எத்தனைப் பேர் இருக்கின்றனர்? என்பதை பாப்தாதா பார்த்துக் கொண்டிருந் தார். இதற்கு அகநோக்குப் பார்வை (அந்தர்முக்தா) மற்றும் தனிமையில் (ஏகாந்தவாசி) இருப்பது அவசியமாகும். வெளிநோக்கில் வருவது மிகவும் எளிது, ஆனால் அகநோக்கின் பயிற்சி இப்போது நேரத்தின் அநுசாரமாக அதிகம் தேவைப்படுகிறது. ஏகாந்தவாசி ஆவதற்கு நேரம் கிடைப்பதில்லை, அகநோக்குடன் இருப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை என்று சில குழந்தைகள் கூறுகின்றனர். ஏனெனில் சேவையின் இல்லறம், வார்த்தைகளின் சக்திக்கான இல்லறம் அதிகரித்து விட்டது. ஆனால் இதற்கு ஒரே நேரத்தில் அரை மணி நேரம் அல்லது ஒரு நேரம் ஒதுக்க வேண்டிய அவசிய மில்லை. சேவைக்கான இல்லறத்தில் இருந்து கொண்டே இடையிடையில் நேரம் ஒதுக்கி ஏகாந்தவாசி ஆவதற்கான அனுபவம் செய்யுங்கள்.
ஏகாந்தவாசி என்றால் ஏதாவது ஒரு சக்திசாலியான ஸ்திதியில் நிலைத்து இருப்பதாகும். விதை ரூப ஸ்திதியில் நிலைத்து விடுங்கள், லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஸ்திதியில் நிலைத்து விடுங்கள், அதாவது உலகிற்கு ஒளிலிசக்தி கொடுக்கக் கூடியவர் லி இந்த அனுபவத்தில் நிலைத்து விடுங்கள். பரிஸ்தா ஸ்திதியின் மூலம் மற்றவர்களுக்கும் அவ்யக்த ஸ்திதியின் அனுபவத்தை செய்வியுங்கள். ஒருவேளை ஒரு விநாடி அல்லது ஒரு நிமிடம் இந்த ஸ்திதியில் ஒருநிலைப்பாட்டுடன் நிலைத்து விட்டால் இந்த ஒரு நிமிட ஸ்திதி தனக்கும் மற்றவர்களுக்கும் அதிக இலாபத்தைக் கொடுக்கும். இதற்கான பயிற்சி இருந்தால் போதும். ஒரு நிமிட நேரத்திற்கும் நேரமில்லை என்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா? முன்பு டிராபிக் கண்ட்ரோலுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட போது இது எப்படி சாத்தியமாகும்? என்று சிலர் நினைத்தனர். சேவையின் இல்லறம் மிகவும் பெரியது, பிசியாக இருக்கிறீர்கள். ஆனால் இலட்சியம் வைத்தீர்கள், நடந்து கொண்டி ருக்கிறது அல்லவா! சென்டரில் இந்த டிராபிக் கண்டரோல் நடந்து கொண்டிருக்கிறதா? அல்லது சில நேரம் தவற விட்டுவது, சில நேரம் செய்வது என்று இருக்கிறீர்களா? இது பிராமண குலத்தின் நியமம், முறையாகும். எவ்வாறு மற்ற நியமங்கள் அவசியம் என்று புரிந்திருக்கிறீர்களோ, அவ்வாறு இதுவும் சுய முன்னேற்றத்திற்கு அல்லது சேவையில் வெற்றி பெறுவதற்கு, சேவை நிலையத்தின் சூழ்நிலைகளுக்கு அவசியமாகும். இவ்வாறு அகநோக்குடன் இருப்பது, ஏகாந்தவாசி ஆவதற்கான பயிற்சிக்கான இலட்சியம் பெற்று தனது உள்ளப்பூர்வமான ஈடுபாட்டுடன் இடை யிடையில் நேரத்தை ஒதுக்குங்கள். மதிப்பு அறிந்தவர்களுக்கு நேரமும் தானாகவே கிடைத்து விடும். மதிப்பில்லை எனில் நேரமும் கிடைக்காது. ஒரு சக்திசாலியான ஸ்திதியில் தனது மனம், புத்தியை நிலைத்திருக்கச் செய்வது தான் ஏகாந்தவாசி ஆவதாகும். சாகார பிரம்மா பாபாவைப் பார்த்திருக்கிறீர்கள், சம்பூர்ன நிலையின் நெருக்கத்தின் அடையாளம் லி சேவை செய்து கொண்டி ருந்தாலும், செய்திகளை கேட்டுக் கேட்டு ஏகாந்தவாசியாக ஆகிவிடுவார். இந்த அனுபவம் செய்திருக்கிறீர்கள் அல்லவா! ஒரு மணி நேரத்திற்கான செய்தியையும் 5 நிமிடத்தில் சாரமாக புரிந்து கொண்டு குழந்தைகளையும் குஷிபடுத்தினார், மேலும் தனது அகநோக்கு, ஏகாந்தவாசி ஸ்திதியையும் அனுபவம் செய்வித்தார். சம்பூர்ன நிலையின் அடையாளம் லி அகநோக்கு, ஏகாந்தவாசி ஸ்திதியை நடந்தாலும், சுற்றினாலும், கேட்டாலும், செய்தாலும் அனுபவம் செய்தீர்கள். ஆக தந்தையை பின்பற்ற முடியாதா? பிரம்மா பாபாவை விட அதிக பொறுப்பு யாருக் காவது இருக்கிறதா என்ன? நான் மிகவும் பிசியாக இருக்கின்றேன் என்று ஒருபோதும் பிரம்மா பாபா கூறியதில்லை. ஆனால் குழந்தைகளின் முன் உதாரணமானவராக ஆனார். இவ்வாறு இப்போது நேரத்தின் அநுசாரமாக இந்த பயிற்சி அவசியமாகும். சேவைக்கான சாதனங்கள் அனைத்தும் இருந்தாலும் கூட அமைதிச் சக்தியின் சேவை அவசியமானதாக இருக்கும். ஏனெனில் அமைதிச் சக்தியானது அனுபவம் செய்விக்கும் சக்தியாகும். வார்த்தை சக்தியின் அம்பு புத்தி வரை சென்றடைகிறது. ஆனால் அனுபவத்தின் அம்பு உள்ளம் வரை சென்றடைகிறது. எனவே நேரத்தின் அநுசாரமாக ஒரு விநாடியில் அனுபவம் செய்வியுங்கள் லி இந்த கூக்குரல் இருக்கும். கேட்டு கூறி களைப்படைந்தவர்கள் வருவார்கள். அமைதிச் சக்தியின் சாதனங்களின் மூலம் பார்வையின் மூலம் பலியாக்கி விட முடியும். சுப சங்கல்பத்தின் மூலம் ஆத்மாக்களின் வீண் சங்கல்பங்களை அழித்து விடுவீர்கள். சுப பாவனையின் மூலம் தந்தையின் மீது அன்பான பாவனையை உருவாக்கி விடுவீர்கள். இவ்வாறு அந்த ஆத்மாக்களுக்கு அமைதிச் சக்தியின் மூலம் திருப்திப்படுத்துவீர்கள். அப்போது தான் சாந்தி தேவ ஆத்மாக்களின் முன் சாந்தி தேவர்களே, சாந்தி தேவர்களே என்று கூறி மகிமை செய்வார்கள். மேலும் இதையே கடைசி சன்ஸ்காரமாக கொண்டு செல்லும் காரணத்தினால் துவாபரத்தில் பக்த ஆத்மாவாக ஆகி உங்களது ஜடச் சிலைகளிடம் இந்த மகிமை செய்வார்கள். இந்த டிராபிக் கண்ட்ரோல் மகிமையும் எவ்வளவு உயர்வாக இருக்கிறது! மேலும் எவ்வளவு அவசியமானதாகவும் இருக்கிறது என்பதை பிறகு கூறுகின்றேன். ஆனால் அமைதிச் சக்தியின் மதிப்பை சுயம் அறிந்து கொள்ள வேண்டும் மற்றும் சேவையில் ஈடுபடுத்த வேண்டும். புரிந்ததா?
இன்று பஞ்சாப் வந்திருக்கிறது அல்லவா! பஞ்சாபில் சேவையின் மகத்துவம் அமைதியில் இருக்கிறது. அமைதிச் சக்தியின் மூலம் இம்சை விருத்தியுடையவர்களை அகிம்சையானவர்களாக ஆக்கி விட முடியும். ஸ்தாபனைக்கான ஆரம்பத்தில் பார்த்தீர்கள் லி இம்சையான விருத்தியுடைய வர்கள் ஆன்மீகச் சக்தியின் முன் பரிவர்த்தனை ஆகிவிட்டார்கள் அல்லவா! ஆக இம்சை விருத்தியுடையவர்களை அமைதியானவர்களாக ஆக்கக் கூடியது அமைதிச் சக்தியாகும். முரளி கேட்பதற்கு தயாராக இருப்பதே கிடையாது. இயற்கை சக்தியின் மூலம் வெப்பம் அல்லது குளிரின் அலைகளை நாலாபுறமும் பரப்ப முடிகிறது எனில் இயற்கைக்கு அதிபதியாக (பிரகிருத்திபதி) இருப்பவர்களின் அமைதியின் அலைகள் நாலாபுறமும் பரப்ப முடியாதா? விஞ்ஞான சாதனங்களே வெப்பத்தை குளிரான சூழ்நிலையாக மாற்ற முடிகிறது எனில், ஆன்மீக சக்தி ஆத்மாக்களை மாற்றி விட முடியாதா? ஆக பஞ்சாப் ஆத்மாக்கள் என்ன கேட்டீர்கள்? அனைவருக்கும் வைபிரேசன் வர வேண்டும் - யாரோ ஒருவர் அமைதியின் கிரணங்களை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். இவ்வாறு சேவை செய்வதற்கான நேரம் பஞ்சாப்பிற்கு கிடைத்திருக்கிறது. நிகழ்ச்சி, கண்காட்சி போன்றவைகளை செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். ஆனால் இந்த சக்தியின் அனுபவம் செய்யுங்கள் மற்றும் செய்வியுங்கள். அதற்கு தனது ஏகாக்ர விருத்தி, சக்தி சாலியான விருத்தி தேவை. கலங்கரை விளக்கு எந்த அளவிற்கு சக்திசாலியாக இருக்குமோ, அந்த அளவிற்கு வெகு தூரம் வரை லைட் கொடுக்க முடியும். ஆக பஞ்சாப் ஆத்மாக்களுக்கு இந்த சக்தியை பிரயோகப் படுத்துவதற்கான நேரம் இதுவாகும். புரிந்ததா? நல்லது.
ஆந்திர பிரதேசத்தின் குழுவும் இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? புயலை அமைதியாக்கு வீர்களா? ஆந்திராவில் புயல்கள் அதிகம் வருகின்றன. புயல்களை அமைதியாக்குவதற்கும் அமைதிச் சக்தி தேவை. புயலின் போது மனித ஆத்மாக்கள் அலைந்து கொண்டிருப்பர். ஆக அலையக் கூடிய ஆத்மாக்களுக்கு அமைதிக்கான அடைக்கலம் கொடுப்பது லி இது ஆந்திராவில் உள்ளவர்களின் விசேட சேவையாகும். ஒருவேளை சரீர ரூபத்தில் அலைந்து கொண்டிருந்தாலும், முதலில் மனம் அலைகிறது, பிறகு சரீரம் அலைகிறது. மனம் அடைக்கலம் அடையும் போது சரீரம் அடைக்கலம் அடைவதற்கு புத்தி வேலை செய்யும். ஒருவேளை மனம் அடைக்கலம் அடையவில்லையெனில், சரீர சாதனங்களுக்காகவும் புத்தி வேலை செய்யாது. ஆகையால் அனைவரின் மனதையும் அடைக்கலம் அடையச் செய்வதற்காக இந்த சக்தியை காரியத்தில் ஈடுபடுத்துங்கள். இரண்டையும் புயலிலிருந்து காப்பாற்ற வேண்டும். அங்கு இம்சைக்கான புயல் இருக்கிறது, அங்கு கடலின் புயல் இருக்கிறது, அங்கு மனிதர்களுக்கான புயல் இருக்கிறது, அங்கு இயற்கையின் புயல் இருக்கிறது. புயலில் மாட்டிக் கொண்டவர்களுக்கு அமைதி என்ற தென்றல் கொடுங்கள். தென்றல் புயலை மாற்றி விடும். நல்லது.
நாலாபுறமும் சாந்தி தேவர்கள் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, நாலாபுறமும் உள்ள அகநோக்குப் பார்வையுடைய மகான் ஆத்மாக்களுக்கு, சதா ஏகாந்தவாசி ஆகி காரியங்கள் செய்யக் கூடிய கர்ம யோகி சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா அமைதிச் சக்தியை பிரயோகப்படுத்தக் கூடிய சிரேஷ்ட யோகி ஆத்மாக்களக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாதி ஜீ குஜராத் மேளாவிற்கு செல்ல ஒரு நாள் விடுப்பு கேட்டுக் கொண்டிருக்கின்றார்
விசேட ஆத்மாக்களின் ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு வருமானம் இருக்கிறது. பெரியவர்களின் உதவியும் குடை நிழலாக ஆகிவிடுகிறது. எங்கு சென்றாலும் அங்கு ஒவ்வொரு வருக்கும் பெயர் சகிதமாக அன்பு நினைவுகள் கொடுக்கவும். பெயர்களின் மாலையை குழந்தைகள் பக்தியில் அதிகம் ஜெபித்திருக்கிறீர்கள். இப்போது தந்தை இந்த மாலை ஆரம்பித்தால் மிகப் பெரிய மாலை ஆகிவிடும். ஆகையால் குழந்தைகள் (விசேட ஆத்மாக்கள்) எங்கு சென்றாலும் அங்கு விசேடமாக ஆர்வம், உற்சாகம் அதிகரித்து விடுகிறது. விசேட ஆத்மாக்கள் செல்கின்றனர் எனில் சேவையில் மேலும் விசேடதா ஏற்படும். இங்கிருந்து ஆரம்பமாகிறது பூமிச் சுற்றிச் சென்றால் போதும். இங்கு சேவைக்காக சுற்றுகிறீர்கள், அங்கு பக்தியில் அவர்கள் சரணம் பதித்ததற்கு மகத்துவம் உருவாக்கியிருக்கின்றனர். ஆனால் அனைத்தும் ஆரம்பம் இங்கிருந்து தான் ஏற்படுகிறது. அரை மணி நேரத்திற்கு சென்றாலும், ஒரு மணி நேரம் மட்டுமே சென்றாலும் அனைவரும் குஷியடைந்து விடுகின்றனர். ஆனால் இங்கு சேவை ஏற்படுகிறது. பக்தியில் சரணம் படுவதால் மட்டுமே குஷியின் அனுபவம் செய்கின்றனர். அனைத்து ஸ்தாபனையும் இங்கிருந்து தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. முழு பக்தி மார்கத்திற்கான அஸ்திவாரம் இங்கிருந்து தான் ஏற்படுகிறது, ரூபம் மட்டும் மாறி விடுகிறது. ஆக யாரெல்லாம் மேளா சேவைக்கு நிமித்தமாக ஆகி யிருக்கிறார்களோ அதாவது சந்திப்பு செய்யும் சேவைக்கு நிமித்தமாக ஆகியிருக் கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் பாப்தாதா, மேளாவிற்கு முன்பாகவே சந்திப்பு மேளா கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். இது தந்தை மற்றும் குழந்தைகளின் மேளா ஆகும், அது சேவைக்கான மேளா ஆகும். ஆக அனைவருக்கும் உள்ளப்பூர்வமான அன்பு நினைவுகள். நல்லது. உலகில் இரவு விடுதிகள் இருக்கும், இது அமிர்தவேளை விடுதியாகும். (தாதிகளிடம்) நீங்கள் அனைவரும் அமிர்தவேளை விடுதியின் அங்கத்தினர்களாக இருக்கிறீர்கள். அனைவரும் பார்த்து குஷியடை கின்றனர். விசேட ஆத்மாக்களைப் பார்த்து குஷியடைகின்றனர். நல்லது.
விடைபெறும் நேரத்தில் - சத்குரு நாளிற்கான அன்பு நினைவுகள் (காலை 6 மணி)
விருட்சபதி நாளன்று விருட்சத்தின் ஆதி, முதல் இலைக்கு விருட்சபதி தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே. அனைத்து சிரேஷ்ட ஆத்மாக்களுக்கும் குரு திசையானது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இராகு திசை, மேலும் மற்ற பல திசைகள் அழிந்து விட்டது. இப்போது ஒரே ஒரு விருட்சபதி, குரு திசை ஒவ்வொரு பிராமண ஆத்மாவிடத்திலும் சதா இருக்கிறது. ஆக குரு திசையும் நடைபெறுகிறது, மேலும் இன்றைய நாளும் குரு நாளாகும். விருட்சபதி தனது விருட்சத்தின் ஆதி இலைகளுடன் சந்திப்பு செய்து கொண்டிருக்கின்றார். ஆக சதா நினைவில் இருக்கிறீர்கள் மற்றும் சதா நினைவில் இருப்பீர்கள். சதா அன்பில் மூழ்கியிருக்கிறீர்கள் மற்றும் சதா அன்பாகவே இருப்பீர்கள். புரிந்ததா!