ஓம் சாந்தி. பாபா இங்கே அமர்ந்து கொண்டு முதன்-முத-ல் அனைத்து குழந்தைகளையும் லட்சியத் தில் நிலை நிறுத்துவதற்காக திருஷ்டி கொடுக்கின்றார், நான் எப்படி சிவபாபாவின் நினைவில் அமர்ந்திருக்கின்றேனோ, அதுபோல் நீங்களும் கூட சிவபாபாவின் நினைவில் அமருங்கள். எனவே யார் முன்னால் யோகம் செய்விக்க அமர்ந்திருக்கிறார்களோ, அவர்கள் முழு நேரமும் சிவபாபாவின் நினைவில் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. அது மற்றவர்களையும் கவர்ந்திழுக்க வேண்டும். நினைவில் இருப்பதின் மூலம் மிகுந்த அமைதியில் இருப்பீர்கள். அசரீரியாக இருந்து சிவபாபாவின் நினைவில் இருந்தீர்கள் என்றால் மற்றவர்களையும் அமைதி யில் கொண்டு செல்வீர்கள். ஏனென்றால் டீச்சராக ஆகி அமருகிறீர்கள் அல்லவா? ஒருவேளை டீச்சரே சரியாக நினைவில் இருக்கவில்லை என்றால் மற்றவர்கள் இருக்க முடியாது. அந்த பிரியதர்ஷனுக்கு பிரியதர்ஷினியாக இருக்கும் நான் அவருடைய நினைவில் இருக்கின்றேனா? என்று முதலில் சிந்தனை செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தங்களிடம் அப்படிக் கேட்க வேண்டும். புத்தி மற்ற பக்கம் சென்று விடுகிறது, தேக-அபிமானத்தில் வந்து விடுகிறீர்கள் என்றால் அது சேவையல்ல, சேவைக்கு புறம்பாக பாதகம் விளைவிப்பதாக அர்த்தமாகும். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா? எந்த சேவையும் செய்யவில்லை, அப்படியே அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் நஷ்டத்தைத்தான் ஏற்படுத்துவீர்கள். டீச்சருடைய புத்தியின் தொடர்பே இங்கே-அங்கே அலைபாய்கிறது எனும்போது அவர்கள் என்ன உதவி செய்ய முடியும். எந்த டீச்சர் அமர்ந்து கொண்டிருக்கிறாரோ, அவர் தன்னிடத்தில் கேட்க வேண்டும், நான் புண்ணிய காரியம் செய்து கொண்டிருக்கிறேனா? என்று ஒருவேளை பாவ காரியம் செய்தால் துர்கதியைத்தான் அடைவீர்கள். பதவி கீழானதாக ஆகி விடும். ஒருவேளை அப்படிப் பட்டவர்களை கதியில் அமரவைத்தீர்கள் என்றால் அதற்கு நீங்களும் பொறுப்பாவீர்கள். சிவபாபா அனைவரையும் தெரிந்துள்ளார். இந்த பாபாவும் கூட அனைவருடைய நிலையையும் தெரிந்துள்ளார். இவர் டீச்சராக ஆகி அமர்ந்திருக்கின்றார். ஆனால் இவருடைய புத்தியோகமே அலைபாய்ந்து கொண்டி ருக்கிறது, என்று சொல்வார். இவர் மற்றவர்களுக்கு என்ன உதவி செய்வார்? பிராமண குழந்தை களாகிய நீங்கள் சிவபாபா வினுடையவர்களாக ஆகி அவரிடமிருந்து ஆஸ்தியை எடுப்பதற்கு நிமித்தமானவர்களாவீர்கள். பாபா கூறுகின்றார், ஹே, ஆத்மாக்களே! என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். டீச்சராக ஆகி அமருகிறீர்கள் என்றால் இன்னும் நன்றாக அந்த நிலையில் அமருங்கள். சொல்லப் போனால் ஒவ்வொருவரும் பாபாவை நினைவு செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களுடைய நிலையைப் புரிந்து கொள்ள முடியும். நாம் தேர்ச்சி பெறுவோமா மாட்டோமா, என்பதை தெரிந்துள்ளார்கள். டீச்சரும் தெரிந்திருக்கிறார். ஒருவேளை தனியாக டீச்சர் வைக்கிறார்கள் என்றால் அவர்களும் தெரிந்து கொள்கிறார்கள். அந்த கல்வியில் குறிப்பிட்ட டீச்சரை வைத்துக் கொள்ள வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை இங்கே யாராவது எங்களை யோகத்தில் அமர வையுங்கள் என்று சொன்னால் பாபாவின் நினைவில் அமர வேண்டும். பாபாவின் கட்டளையே என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்பதாகும். நீங்கள் பிரியதர்ஷினிகளாவீர்கள், நடக்கும்போதும்-போகும்போதும், வரும்போதும் தங்களுடைய பிரியதர்ஷனை நினைவு செய்யுங்கள். சன்னியாசிகள் பிரம்மத்தை நினைவு செய்கிறார்கள். நாம் சென்று பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். யார் அதிகமாக நினைவு செய்வார்களோ, அவர்களுடைய நிலை (ஸ்திதி) நன்றாக இருக்கும். ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு விசேடம் இருக்கிறது அல்லவா? நினைவு யாத்திரையில் இருங்கள் என்று சொல்லப் படுகிறது. தாங்களும் நினைவில் இருக்க வேண்டும். பாபாவினிடத்தில் சிலர் உண்மையாகவும் இருக்கிறார்கள், சிலர் பொய்யானவர்களும் இருக்கிறார்கள். சுயம் நிரந்தரமாக நினைவில் இருப்பது, மிகவும் கடினமாகும். சிலர் பாபாவினிடத்தில் முற்றிலும் உண்மையாக இருக்கிறார்கள். இந்த பாபா (பிரம்மா) கூட தன்னுடைய அனுபவத்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறு கின்றார். கொஞ்ச நேரம் நினைவில் இருக்கின்றேன், பிறகு மறந்து விடுகின்றேன், ஏனென்றால் இவர் மீது நிறைய சுமை (பொறுப்பு) இருக்கிறது. எவ்வளவு அதிகமான குழந்தைகள் இருக் கிறார்கள். குழந்தைகளாக உங்களுக்கு இந்த முரளியை சிவபாபா சொல்கிறாரா? அல்லது பிரம்மா சொல்கிறாரா? என்பது கூட தெரிவதில்லை. ஏனென்றால் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள் அல்லவா? நானும் சிவபாபாவை நினைவு செய்கிறேன் என்று இவரும் கூறுகின்றார். இந்த பிரம்மா பாபாவும் கூட குழந்தைகளை (ஆழ் தியானம்) யோகத்தில் அமரச் செய்கின்றார். இவர் அமரு கின்றார் என்றால் நன்றாக அசைவற்று அமர்ந்து விடுவதைப் பார்க்கின்றீர்கள். நிறைய பேரை கவர்ந்திழுக்கின்றார் அல்லவா? தந்தை அல்லவா? குழந்தைகளே நினைவு யாத்திரையில் இருங்கள் என்று கூறுகின்றார். தாங்களும் இருக்க வேண்டும், பண்டிதர்களாக மட்டும் ஆகக் கூடாது. நினைவில் இல்லையென்றால் கடைசியில் தேர்ச்சி பெறாமல் போய் விடுவீர்கள். பாபா மம்மாவிற்கு உயர்ந்த பதவி இருக்கிறது, மற்றபடி மாலை இன்னும் உருவாகவில்லை. ஒரு மணி கூட முழுமையாக ஆக வில்லை. முன்பு குழந்தைகளுக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற் காக மாலை உருவாக்கப்பட்டது. ஆனால் மாயை நிறைய பேரை முடித்து விட்டதை பார்த்தோம். அனைத்தும் சேவையில் தான் ஆதாரப்பட்டிருக் கிறது. எனவே யார் முன்னால் யோகம் செய்விக்க அமருகிறார்களோ அவர்கள், நான் உண்மையான டீச்சராக ஆகி அமர வேண்டும் என்று உணர வேண்டும். இல்லையென்றால் என்னுடைய புத்தி இங்கே-அங்கே செல்கிறது என்று சொல்- விட வேண்டும். நான் இங்கே அமருவதற்கு தகுதி இல்லை என்று. தாங்களாகவே சொல்- விட வேண்டும். தாங்களாகவே யாராவது வந்து அமர்ந்து கொள்ளலாம் என்பது கிடையாது. சிலர் முரளி நடத்துவதில்லை, ஆனால் நினைவில் இருக்கிறார்கள். ஆனால் இங்கே இரண்டிலுமே கூர்மையாக இருக்க வேண்டும். பிரியதர்ஷன் மிகவும் அன்பானவராக இருக்கின்றார், அவரை அதிகமாக நினைவு செய்ய வேண்டும். இதில் தான் உழைப்பு இருக்கிறது. மற்றபடி பிரஜையாக ஆவது சுலப மாகும். தாச-தாசியாக (வேலைக் காரர்கள்) ஆவது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. ஞானத்தை எடுக்க முடியாது. பாருங்கள் யக்ஞத்தில் பண்டாராவைப் பார்த்துக் கொள்பவர் இருக்கின்றார், அனைவரையும் குஷிப்படுத்துகின்றார், யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை, அனைவரும் மகிமை பாடுகிறார்கள். ஆஹா, சிவபாபாவின் பண்டாராவை பார்த்துக் கொள்பவர் நம்பர் ஒன் ஆவார். நிறைய பேருடைய மனதை குஷிப்படுத்துகின்றார். பாபாவும் கூட நிறைய பேருடைய மனதை குஷியாக்கி வந்துள்ளார். பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் இந்த சக்கரத்தை புத்தியில் வையுங்கள். இப்போது ஒவ்வொருவரும் தங்களுக்கு நன்மை செய்ய வேண்டும். எலும்பு தேய சேவை செய்ய வேண்டும். நீங்கள் மிகவும் இரக்கமன முடையவர்களாக ஆக வேண்டும். மனிதர்கள் முக்தி-ஜீவன் முக்திக்காக நிறைய முட்டி-மோது கிறார்கள். யாருக்குமே சத்கதியைப் பற்றி தெரியவே இல்லை. எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பிச் செல்ல வேண்டும் என்று புரிந்து கொள்கிறார்கள். நாடகம் என்றும் புரிந்து கொள் கிறார்கள். ஆனால் அதன்படி நடப்பதில்லை. பாருங்கள் ஆங்காங்கே முஸ்லீம்களும் வகுப்பிற்கு வருகிறார்கள். நாங்கள் உண்மையில் தேவி-தேவதா தர்மத்தவர்கள், பிறகு சென்று நாங்கள் முஸ்லீம் தர்மத்திற்கு மாறி விட்டோம். நாங்கள் 84 பிறவிகள் எடுத்திருக்கிறோம். சிந்துவில் கூட 5-6 முஸ்லீம்கள் வந்தார்கள். இப்போதும் கூட வருகிறார்கள், மேலும் முன்னேறுவார்களா இல்லையா, என்பதை பார்க்கலாம், ஏனென்றால் மாயையும் சோதிக்கிறது. சிலர் உறுதியாக நின்று விடுகிறார்கள், சிலர் நிலையாக நீடித்திருக்க முடிவதில்லை. யார் உண்மையாக பிராமண தர்மத்தவர்களாக இருப்பார்களோ, யார் 84 பிறவிகள் எடுத்திருப்பார்களோ, அவர்கள் ஒருபோதும் ஆட மாட்டார்கள். மற்றபடி ஏதாவது காரணத்தால் சென்று விடுவார்கள். நிறைய தேக-அபிமான மும் வந்து விடுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் நிறைய பேருக்கு நன்மை செய்ய வேண்டும். இல்லையென்றால் என்ன பதவி அடைவீர்கள். தங்களுடைய நன்மைக்காக வீடு-வாசலை விட்டிருக்கிறீர்கள். பாபாவிற்கு ஒன்றும் நன்மை செய்யப்போவதில்லை. பாபாவினுடையவர்களாக ஆகியிருக்கின்றீர்கள் என்றால் அப்படி சேவையும் செய்ய வேண்டும். உங்களுக்கு இராஜ்யத்தின் பதக்கம் கிடைக்கிறது, 21 பிறவிகளுக்கு எப்போதும் சுகத்தின் இராஜ்யம் கிடைக்கிறது. மாயையின் மீது வெற்றி மட்டும் அடைய வேண்டும், மேலும் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். நிறைய பேர் தேர்ச்சி பெறாமலும் போய் விடுகிறார்கள். இராஜ்யம் அடைவது கடினம் என்று புரிந்து கொள்கிறார்கள். அப்படி புரிந்து கொள்வது பலவீனமாகும். பாபா மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வது மிகவும் சகஜமாகும். குழந்தைகளுக்கு இராஜ்யம் அடைவதற்கான தைரியம் வருவதில்லை, கோழையாகி அமர்ந்து விடுகிறார்கள். அவர்களும் அடைவதில்லை, மற்றவர்களை யும் அடைய விடுவதில்லை. விளைவு என்னாகிறது? இரவும் பகலும் சேவை செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். காங்கிரஸ்காரர்களும் முயற்சி செய்தார்கள். எவ்வளவு கொடுமைகளை சகித்துக் கொண்டார்கள். ஆகையினால் தான் வெளி நாட்டவரிடமிருந்து இராஜ்யத்தை அடைந்தார் கள். நீங்கள் இராவணனிடமிருந்து இராஜ்யத்தை அடைய வேண்டும். அவன் அனைவருக்கும் எதிரியாவான். நாம் இராவணனுடைய வழிப்படி சென்று கொண்டிருக்கிறோம் ஆகையினால் தான் துக்கமுடையவர்களாக இருக்கிறோம் என்பது உலகத்திற்குத் தெரியாது. உள்ளுக்குள் நிலையான உண்மையான சுகம் என்பது யாருக்காவது இருக்கிறதா என்ன? நான் குழந்தைகளாகிய உங்களை எப்போதும் சுகமுடையவர்களாக மாற்ற வந்திருக்கின்றேன், என்று சிவபாபா கூறுகின்றார். இப்போது ஸ்ரீமத்படி நடந்து உயர்ந்தவர்களாக ஆக வேண்டும். பாரதவாசிகள் அனைவரும் தங்களுடைய தர்மத்தை மறந்து விட்டார்கள். இராஜா-இராணி எப்படியோ அப்படி பிரஜைகளாவர். சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்ற ஞானம் இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். புத்தியில் நிற்பதே இல்லை. நிறைய பேர் பிராமணர்களாக ஆகிறார்கள். ஆனால் நிறைய பேர் அரைகுறையாக இருக்கின்ற காரணத்தினால் விகாரத்திலும் சென்று கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பி.கு. என்று சொல்லிக் கொள்கிறார்கள், ஆனால் அப்படி கிடையாது. மற்றபடி யார் முழுமையான விதத்தில் டைரக்ஷன் படி நடக்கிறார்களோ, தங்களுக்குச் சமமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் தான் உயர்ந்த பதவி அடைய முடியும். தடை ஏற்படும். அமிர்தம் (ஞானம் கேட்டல்) குடித்து-குடித்து பிறகு வெளியில் சென்று தடை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் என்ன பதவி அடைவார்கள், என்பதும் பாடப்பட்டுள்ளது. நிறைய பெண் குழந்தைகள் விகாரத்தினால் அடி கூட வாங்கு கிறார்கள், பாபா இந்த கொஞ்ச துக்கத்தை பொறுத்துக் கொள்வோம், என்று சொல்கிறார்கள். எங்களுடைய பிரியதர்ஷன் பாபா அல்லவா? அடி வாங்கினால் கூட நான் சிவபாபாவை நினைவு செய்கிறேன். அவர்கள் மிகுந்த குஷியில் இருக்கிறார்கள். இந்த அளவு கடந்த குஷியில் இருக்க வேண்டும். நாம் பாபாவிடமிருந்து ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் மற்றவர் களையும் நாம் நமக்குச் சமமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
பாபாவினுடைய புத்தியில் இந்த ஏணிப்படியின் சித்திரம் நிறைய இருக்கிறது. இதற்கு அதிக மகத்துவம் கொடுக்கின்றார். குழந்தைகள் ஞான சிந்தனை செய்து இப்படி-இப்படியெல்லாம் சித்திரங்களை உருவாக்குகிறார்கள் என்றால் பாபா கூட அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றார் அல்லது பாபா அந்த குழந்தைக்கு உணர்வு ஏற்படுத்தினார், என்று சொல்லலாம். ஏணிப்படி மிக நன்றாக உருவாக்கபட்டுள்ளது. 84 பிறவிகளைத் தெரிந்து கொள்வதின் மூலம் முழு சிருஷ்டி யினுடைய முதல்-இடை-கடைசியை தெரிந்து கொண்டீர்கள். இது முதல்தரமான சித்திரமாகும். திருமூர்த்தி, சக்கரம் போன்ற சித்திரங்களை விடவும் இதில் ஞானம் நன்றாக இருக்கிறது. இப்போது நாம் உயரமாய் ஏறிக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு சகஜமாக இருக்கிறது. பாபா வந்து உயர்த்துகின்றார். அமைதியாக பாபாவிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏணிப்படியின் ஞானம் மிக நன்றாக இருக்கிறது. நீங்கள் ஹிந்துக்கள் அல்ல, நீங்கள் தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்று புரிய வைக்க வேண்டும். ஒருவேளை நாங்கள் 84 பிறவிகளா எடுத்தோம் என்று கேட்டால், அட நாம் 84 பிறவிகள் எடுத்திருக்கிறோம், என்பதை ஏன் புரிந்து கொள்வதில்லை. மீண்டும் நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் முதல் நம்பரில் வந்து விடுவீர்கள். தங்களுடைய குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அனைவருமா 84 பிறவிகள் எடுப்பார்கள் என்று கேள்வி கேட்க மாட்டார்கள். அட நீங்கள் ஏன் நாம் நேரம் கழித்து வந்திருக் கிறோம் என்று நினைக்கிறீர்கள். பாரதவாசிகளாகிய நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள் என்று பாபா குழந்தைகள் அனைவருக்கும் கூறுகின்றார். இப்போது மீண்டும் தங்களுடைய ஆஸ்தியை அடையுங்கள், சொர்க்கத்திற்குச் செல்லுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் யோகத்தில் அமருகிறீர் கள். ஏணிப்படியை நினைவு செய்தீர்கள் என்றால் மிகவும் ஆனந்தத்தில் இருப்பீர்கள். நாம் 84 பிறவிகளை முடித்திருக்கிறோம். இப்போது நாம் திரும்பிச் செல்கிறோம். எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது. சேவை செய்வதற்கும் உற்சாகம் இருக்க வேண்டும். புரிய வைப்பதற்கான முறை களும் நிறைய கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஏணிப்படியைப் பற்றி புரிய வையுங்கள். அனைத்து சித்திரங்களும் வேண்டும் அல்லவா? திருமூர்த்தியும் வேண்டும். நீங்கள் என்னுடைய பக்தர்களிடம் செல்லுங்கள், அவர்களுக்கு இந்த ஞானத்தை சொல்லுங்கள், என்று பாபாவும் கூறுகின்றார். அவர்கள் கோவில்களில் தான் கிடைப்பார்கள். கோவில்களிலும் கூட இந்த ஏணிப் படி சித்திரத்தைப் பற்றி புரிய வைக்கலாம். முழு நாளும் நாம் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும், யாருக்காவது நன்மை செய்ய வேண்டும் என்பதே புத்தியில் இருக்க வேண்டும். நாளுக்கு - நாள் புத்தியின் பூட்டு திறந்து கொண்டே செல்லும். யார் ஆஸ்தி அடைய வேண்டுமோ, அவர்கள் வருவார்கள். நாளுக்கு - நாள் கற்றுக் கொண்டே வருகிறார்கள். நிறைய பேருக்கு கிரகச் சாரம் பிடித்துக் கொள்கிறது எனும் போது அவர்களுக்கு பாபா புரிய வைக்க வேண்டியுள்ளது. நம்மீது கிரகச்சாரம் பிடித்திருக்கிறது, ஆகையினால் தான் நம் மூலம் சேவை நடப்பதில்லை, என்பது அவர் களுக்குத் தெரிவதில்லை. அனைத்து பொறுப்புகளும் குழந்தைகளாகிய உங்கள் மீது தான் இருக்கிறது. தங்களுக்குச் சமமாக பிராமணர்களை உருவாக்கிக் கொண்டே இருங்கள். சேவையில் இருப்பதின் மூலம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. நிறைய பேருக்கு நன்மை ஏற்படு கிறது. பாபாவிற்கு பம்பாயில் சேவை செய்வதற்கு மிகுந்த குஷி வந்தது. நிறைய புதிய-புதியவர்கள் வந்தார்கள். பாபாவிற்கு நிறைய சேவை செய்வேண்டும் என்று மனம் இருந்தது. குழந்தைகளும் அப்படி இரக்கமனமுடையவர்களாக ஆக வேண்டும். சேவையில் ஈடுபட்டு விட வேண்டும். எதுவரை நாம் நமக்குச் சமமாக யாரையும் மாற்றவில்லையோ, அதுவரை உணவு உண்ணக் கூடாது, என்று மனதில் இருக்க வேண்டும். முத-ல் புண்ணியம் செய்ய வேண்டும் என்பது இருக்க வேண்டும். பாவ ஆத்மாக்களை புண்ணிய ஆத்மாக்களாக மாற்றிவிட்டு பிறகு உணவு சாப்பிடுவோம் என்று இருக்க வேண்டும். எனவே சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். யாருடைய வாழ்க்கையையாவது பயனுள்ளதாக செய்துவிட்டு பிறகு உண்ண வேண்டும். தங்களுக்குச் சமமாக பிராமணர்களாக மாற்றுவதற்கான முயற்சி செய்ய வேண்டும். குழந்தை களுக்காக நிறை ஆன்மீக பத்திரிக்கைகள் வருகின்றன, ஆனால் பிரம்மா குமார்-குமாரிகள் அவ்வளவாக படிப்பதில்லை. இது நாம் படிப்பதற்காகவா, இது வெளியில் இருப்பவர்களுக்காக என்று நினைத்துக் கொள்கிறார்கள். வெளியில் இருப்பவர்கள் டீச்சர் இல்லாமல் எதையும் புரிந்து கொள்வதில்லை, என்று பாபா கூறுகின்றார். இது பிரம்மா குமார-குமாரிகளுக்காக ஆகும், இதைப் படித்து புத்துணர்வு அடையுங்கள். ஆனால் அவர்கள் படிப்பதில்லை. அனைத்து சென்டரிலுள்ள டீச்சர்களிடம் கேட்கிறேன், எல்லா பத்திரிக்கைகளையும் யார் படிக்கிறார்கள்? பத்திரிக்கையி-ருந்து என்ன புரிந்து கொள்கிறீர்கள்? எதுவரை சரியாக உள்ளது? பத்திரிக்கை வெளியிடுபவர்களுக்கும் கூட நீங்கள் நல்ல பத்திரிக்கை எழுதினீர்கள், தங்களுக்கு நன்றி என்று வாழ்த்துக்களைக் கூற வேண்டும். உழைக்க வேண்டும், பத்திரிக்கை படிக்க வேண்டும். இது குழந்தைகள் புத்துணர்வு பெறுவதற்காக ஆகும். ஆனால் குழந்தைகள் படிப்பதே இல்லை. யார் (பேசுவதில்) புகழ்பெற்றவர் களாக இருக்கிறார்களோ, அவர்களை, பாபா சொற்பொழிவாற்ற இன்னாரை எங்களிடம் அனுப்பி வையுங்கள் என்று அனைவரும் அழைக்கிறார்கள். அவர்களுக்கு சொற்பொழிவாற்றத் தெரிய வில்லை, ஆகையினால் தான் கேட்கிறார்கள், என்று பாபா புரிந்து கொள்கிறார். எனவே சேவாதாரி களுக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இராஜ்யத்தின் பதக்கத்தை அடைவதற்கு அனைவருடைய மனதையும் குஷிப்படுத்த வேண்டும் மிக-மிக இரக்க மனமுடையவர்களாக ஆகி தங்களுக்கும் மற்றவர் களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். எலும்பு தேய சேவை செய்ய வேண்டும்.
2) தேக-அபிமானத்தில் வந்து சேவைக்கு பாதகம் செய்யக் கூடாது. எப்போதும் புண்ணிய காரிய செய்ய வேண்டும். தங்களுக்குச் சமமாக பிராமணர்களாக மாற்றும் சேவை செய்ய வேண்டும். சேவாதாரிகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.