29-03-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

தனது மனநிலையை ஒரு நிலைப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான சாதனம் என்ன?

பதில்:

தொடர்பு வைத்துக் கொள்வதில் (நட்பு) கவனம் வையுங்கள். அப்போது மனநிலை ஒரு நிலைப்பாட்டில் (பாபா நினைவில்) இருக்கும். எப்போதுமே நல்ல சேவாதாரி மாணவர்களின் நட்பில் இருங்கள். யாராவது ஞானம் மற்றும் யோகத்தைத் தவிர வேறு தலைகீழான விஷயங் களைப் பேசுகிறார்கள், வாயிலிருந்து (ஞான) ரத்தினங்களுக்குப் பதில் கல் போன்ற தீய சொற்கள் வெளிவருகிறது என்றால் அவர்களின் தொடர்பிலிருந்து எப்போதுமே விலகி கவனமாக இருக்க வேண்டும்.

பாடல்:

இரவு நேரப் பயணி களைத்துப் போகக் கூடாது.........

ஓம் சாந்தி. ஞானம் மற்றும் விஞ்ஞானம் (யோகம்). இதை அலஃப் (அப்பா) மற்றும் பே (ஆஸ்தி) எனச் சொல்வார்கள். தந்தை, அலஃப் மற்றும் பே (தந்தை மற்றும் ஆஸ்தி) பற்றிய ஞானத்தைத் தருகிறார். டில்லியில் விஞ்ஞான பவன் உள்ளது. ஆனால் அதன் அர்த்தம் யாருக்கும் தெரியாது. குழந்தைகள் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் - ஞானம் மற்றும் யோகம். யோகத்தின் மூலம் நாம் பவித்திரமாகிறோம். ஞானத்தின் மூலம் நமது ஆடை (சரீரம்) அழகு பெறுகின்றது. இந்தச் சக்கரம் முழுவதையும் அறிந்துக் கொள்கிறோம். யோகத்தின் யாத்திரைக்காகவும் கூட இந்த ஞானம் கிடைக்கிறது. அவர்கள் (உலகத்தார்) ஒன்றும் யோகத்திற்காக ஞானம் தருவதில்லை. அவர்களோ, ஸ்தூலத்தில் டிரில் முதலியவற்றைக் கற்றுத் தருகின்றனர். இது சூட்சுமமான, முக்கியமான விஷயம். பாடலும் அதனுடன் தொடர்புள்ளதாக உள்ளது. பாபா சொல்கிறார், குழந்தைகளே, ஹே மூலவதனத்தின் பயணிகளே, பதீத-பாவனர் தந்தை தான் அனைவருக்கும் சத்கதி அளிப்பவர். அவர் தான் அனைவருக்கும் வீட்டுக்குச் செல்வதற்கான வழி சொல்வார். உங்களிடம் புரிந்துக் கொள்வதற்காக மனிதர்கள் வருகின்றனர். யாரிடம் வருகின்றனர்? பிரஜாபிதா பிரம்மா குமார்-குமாரிகளிடம் வருகின்றனர் என்றால் நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும் - நீங்கள் யாரிடம் வந்திருக்கிறீர்கள்? மனிதர்கள் சாது-சந்நியாசி மகாத்மாக்களிடம் செல்கின்றனர். அவர்களுடைய பெயரே இந்த மகாத்மாஜி என்று இருக்கும். இங்கே பெயரே பிரஜாபிதா பிரம்மா குமார் மற்றும் குமாரிகள். பி.கே.க்களோ ஏராளமான பேர் உள்ளனர். நீங்கள் கேட்க வேண்டும் - யாரிடம் வந்திருக்கிறீர்கள்? பிரஜாபிதா பிரம்மா உங்களுக்கு என்ன உறவின் முறை வேண்டும்? சிலர் சொல் கிறார்கள் - உங்களுடைய குருஜி, மகாத்மாஜியை தரிசனம் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் பதிலளியுங்கள் அவரை குரு எப்படி கூறுவது? பெயரே பிரஜாபிதா பிரம்மாகுமாரி என்றுள்ளது. அவரோ அனைவருக்கும் தந்தை ஆகிறார் இல்லையா? குரு அல்ல. பிரஜாபிதா பிரம்மா குமார்-குமாரி என்றாலே இவர்களுக்கு யாரோ ஒரு தந்தை இருக்கிறார். அவரே உங்களுக் கும் கூடத் தந்தையாக இருக்கிறார். சொல்லுங்கள், நாங்கள் பி.கே.க்களின் தந்தையோடு சந்திக்க விரும்புகிறோம் என்று. பிரஜாபிதா என்ற பெயரை எப்போதாவது கேட்டிருக் கிறீர்களா? இவ்வளவு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். தந்தைப் பற்றி தெரிய வேண்டும். அப்போது அவர் எல்லையற்ற தந்தை எனப் புரிந்து கொள்வார்கள். பிரஜாபிதா பிரம்மாவுக்கும் கூடத் தந்தை யாரோ ஒருவர் இருப்பார். ஆக, யாராவது வந்தால் அவர்களிடம் கேளுங்கள் - யாரிடம் வந்திருக்கிறீர்கள்? போர்டு மீது என்ன எழுதப்பட்டுள்ளது? ஏனெனில் இவ்வளவு ஏராளமான சென்டர்கள் உள்ளன. பிரம்மா குமார்-குமாரிகள் இவ்வளவு பேர் உள்ளனர் என்றால் நிச்சயமாக அவர்களுக்குத் தந்தை என்று ஒருவர் இருப்பார். அவர் குருவாக இருக்க முடியாது. முதலில் இது தான் புத்தியிலிருந்து வெளிப்பட வேண்டும். இது வீடு என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். ஏதோ ஒரு குடும்பத்தில் வந்திருக்கிறோம். நாங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என்றால் நிச்சயமாக நீங்களும் தான். நல்லது, அந்த பிரம்மா பிறகு யாருடைய குழந்தை? பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் படைப்பவரோ பரமபிதா பரமாத்மா சிவன் தான். அவர் பிந்துவாக (புள்ளி) உள்ளார். அவருடைய பெயர் சிவன். அவர் நம்முடைய தாத்தா. ஆத்மாவாகிய நீங்களும் கூட அவருடைய குழந்தை தான். பிரம்மாவுக்கு நீங்களும் குழந்தை தான். ஆக, நீங்கள் இதுபோல் சொல்லுங்கள் - நாங்கள் பாப்தாதாவோடு சந்திக்க விரும்புகிறோம். அவர்களுடைய புத்தி பாப்தாதாவிடம் சென்றுவிட வேண்டும். அந்த மாதிரி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும், நாம் யாரிடம் வந்திருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். பிரஜாபிதா பிரம்மா நம்முடைய தந்தை. அவர் (சிவபாபா) ஆத்மாக்களாகிய நம் அனைவரின் தந்தை. ஆக, நாம் யாரிடம் வந்திருக்கிறோம் என்பதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். அப்படி யுக்தி யுடன் புரிய வைக்க வேண்டும் - தான் சிவபாபாவின் குழந்தை என்பதைப் புரிந்துக் கொள்கிற மாதிரி. இது ஒரு குடும்பம். அவருக்கு தந்தை மற்றும் தாதா (பிரம்மா) பற்றிய அறிமுகம் ஆகிவிட வேண்டும். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் நிராகார் தந்தை என்று. நீங்கள் புரிய வைக்க முடியும் அவர் பிரஜாபிதா பிரம்மா மூலம் அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். அவரை அனைவருமே அழைக்கின்றனர். பார்க்கிறீர்கள் அல்லவா - எவ்வளவு குழந்தைகள் வந்து பாபாவிடம் ஆஸ்தி பெறுகின்றனர்! முதலில் அவர்களுக்கு தந்தையின் அறிமுகம் கிடைக்க வேண்டும். அப்போது நாம் பாப்தாதாவுடன் சந்திக்க வந்துள்ளோம் எனப் புரிந்து கொள்வார்கள். சொல்லுங்கள், நாங்கள் அவர்களை பாப்தாதா என அழைக்கிறோம். ஞானம் நிறைந்தவர், பதீத-பாவனர் அந்த சிவபாபா தான் இல்லையா? பிறகுப் புரிய வைக்க வேண்டும் - பகவான் அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் நிராகார், அவர் ஞானக்கடலாக இருக்கிறார் என்பதை பிரம்மா மூலம் எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். அப்போது அவர்கள் புரிந்துக் கொள்வார்கள், இந்த பிரம்மாகுமாரிகள் சிவபாபாவின் குழந்தைகள். அவரே அனைவருக் கும் தந்தை ஆவார். பகவான் ஒருவரே! அவர் தான் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார். அவர் சொர்க்கத்தைப் படைப்பவர், அனைவருக்கும் தந்தையாகவும் ஆசிரியராகவும்குருவாகவும் இருக்கிறார். சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய இரகசியத்தைப் புரிய வைக்கிறார். அதாவது திரிகாலதரிசி ஆக்குகிறார். நீங்கள் யாரைப் பார்த்தாலும் புரிந்து கொள்வதற்குத் தகுதியுள்ளவர் என்றால் அவர்களுக்கு இதை புரிய வைக்க வேண்டும். முதலில் இதைக் கேளுங்கள் - உங்களுக்கு எத்தனை தந்தையர் உள்ளனர்? லௌகிக் மற்றும் பரலௌகிக். தந்தையோ சர்வ வியாபியாக இருக்க முடியாது. லௌகிகத் தந்தையிடமிருந்து இந்த ஆஸ்தி கிடைக்கிறது, பரலௌகிகத் தந்தையிடமிருந்து இந்த ஆஸ்தி கிடைக்கிறது. பிறகு அவரை சர்வ வியாபி என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்த வார்த்தையைக் குறித்து வைத்து தாரணை செய்யுங்கள். இதை அவசியம் புரிய வைக்க வேண்டியுள்ளது. புரிய வைப்பவராக நீங்கள் ஆகிறீர்கள். இது வீடு, எங்களுக்கு குரு கிடையாது. பார்க்கிறீர்கள், இவர்கள் அனைவரும் பிரம்மா குமாரிகள். ஆஸ்தியை நமக்கு நிராகார் சிவபாபா தான் தருகிறார். அவரே அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல். பிரம்மாவை அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல், பதித-பாவனர், லிபரேட்டர் எனச் சொல்ல முடியாது. இது சிவபாபாவுக்கே உரிய மகிமையாகும். யார் வந்தாலும் அவர்களுக்கு இதையேப் புரிய வையுங்கள் - இவர் அனைவருக்கும் பாப்தாதா. அதே தந்தை தான் சொர்க்கத்தைப் படைப்பவர். பிரம்மாவின் மூலம் விஷ்ணுபுரியின் ஸ்தாபனை செய்கிறார். இதுபோல் நீங்கள் யாருக்குப் புரிய வைத்தாலும் பிறகு தந்தையிடம் வருவதற்கு அவசியமே இருக்காது. அதுவோ பழக்கமாகவே ஆகிவிட்டுள்ளது. குருஜியை தரிசனம் செய்ய வேண்டும் எனச் சொல்வார்கள். பக்தி மார்க்கத்தில் குருவுக்கு அதிக மகிமை செய்கின்றனர். வேத சாஸ்திரங்கள், யாத்திரை முதலிய அனைத்தும் உலகாயத குரு தான் கற்பிக்கிறார். நீங்கள் புரிய வைக்க வேண்டும் - மனித குரு என்று ஒருவர் இருக்க முடியாது. நாங்கள் பிரம்மாவைக் கூட குரு எனச் சொல்வதில்லை. சத்குரு ஒருவர் தான். எந்த ஒரு மனிதரும் ஞானக்கடலாக இருக்க முடியாது. அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களைப் படிப்பவர்கள். அது சாஸ்திரங்களின் ஞானம் எனச் சொல்லப்படும். அதை தத்துவ ஞானம் எனச் சொல்கின்றனர். இங்கே உங்களுக்கு ஞானக்கடல் பாபா படிப்பு சொல்லித் தருகிறார். இது ஆன்மிக ஞான மாகும். ஞானக்கடல் என்று பிரம்மா விஷ்ணு சங்கரைக் கூட சொல்ல முடியாது. அப்படி இருக்கும் போது மனிதரை எப்படிச் சொல்ல முடியும்? ஞானத்தின் அத்தாரிட்டியாக மனிதர்கள் இருக்க முடியாது. சாஸ்திரங்களின் அத்தாரிட்டி என்றும் கூட பரமபிதா பரமாத்மா சொல்லப்படுகிறார். இதைக் காட்டுகின்றனர் - பரமபிதா பரமாத்மா பிரம்மாவின் மூலம் அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தை இவர் மூலமாகப் புரிய வைக்கிறார். தந்தை சொல்கிறார், என்னை யாரும் அறிந்துக் கொள்ளவே இல்லை எனும் போது ஆஸ்தி எங்கிருந்து கிடைக்கும்? எல்லையற்ற ஆஸ்தி எல்லையற்ற தந்தையிடமிருந்து தான் கிடைக்கின்றது. இப்போது இந்த பாபா என்ன செய்து கொண்டிருக்கிறார்? இது ஹோலி மற்றும் துரியா இல்லையா? ஞானம் மற்றும் விஞ்ஞானம். இரண்டு சொற்கள் மட்டுமே! மன்மனாபவ என்ற ஞானத்தையும் தருகிறார். என்னை நினைவு செய்வீர்களானால் உங்கள் விகர்மங்கள் விநாசமாகிவிடும். ஆக, இந்த ஞானம் மற்றும் விஞ்ஞானம் - ஹோலி மற்றும் துரியா. மனிதர்களிடம் ஞானம் இல்லாத காரணத்தால் அவர்களே ஒருவர் மற்றவரின் முகத்தின் மீது தூசியைப் போடு கின்றனர் (கிண்டல் செய்கின்றனர்). அப்படியே இருக்கின்றனர். கதி சத்கதி என்பது யாருக்கும் கிடைப்பதில்லை. தூசியைத் தான் முகத்தில் போடுகின்றனர். ஞானத்தின் மூன்றாவது கண் யாருக்குமே கிடையாது. கட்டுக் கதைகளைக் கேட்டுக் கேட்டே வந்துள்ளனர். அது குருட்டு நம்பிக்கை என்று சொல்லப்படுகின்றது.

இப்போது ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது. குழந்தை கள் நீங்கள் பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைவதற்கான அறிவுரை (வழிமுறை) தர வேண்டும். அப்போது அவர்களுக்குத் தெரிய வரும் - பிரம்மாவின் மூலம் தான் இந்த ஆஸ்தியை அவர்கள் பெற முடியும் என்பது. வேறு யார் மூலமாகவும் கிடைக்காது. அனைத்து சென்டர்களிலும் இந்தப் பெயர் எழுதப் பட்டுள்ளது - பிரஜாபிதா பிரமமா குமார்-குமாரிகள். கீதா பாடசாலை என எழுதினால் பொதுவான விஷயமாக ஆகி விடும். இப்போது நீங்களும் பி.கே. என்று எழுதுங்கள். அப்போது தந்தையின் அறிமுகம் கொடுக்க முடியும். மனிதர்கள் பி.கே. பெயரைக் கேட்டாலே பயந்து விடுகின்றனர். அதனால் கீதா பாடசாலை என்ற பெயரை எழுதுகின்றனர். ஆனால் இதில் பயப்படு வதற்கான எந்த ஒரு விஷயமும் கிடையாது. இது வீடு என்று சொல்லுங்கள். நீங்கள் அறிவீர்கள், யாருடைய வீட்டுக்கு வந்திருக்கிறோம் என்று. இவர்கள் அனைவருக்கும் தந்தை பிரஜாபிதா பிரம்மா. பாரதவாசிகள் பிரஜாபிதா பிரம்மாவை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆதி தேவன் வாழ்ந் திருந்து சென்றுள்ளார். அவருடைய மனித வம்சாவளி இது என்று கிறிஸ்தவர்கள் கூடப் புரிந்துக் கொள்கின்றனர். மற்றப்படி அவர்கள் தங்களுடைய கிறிஸ்துவைத் தான் ஏற்றுக் கொள்வார்கள். கிறிஸ்துவை, புத்தரை தந்தை எனப் புரிந்து கொண்டுள்ளனர். வம்சாவளி இல்லையா? உண்மை யில் பாபா பிரம்மா மூலம் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்துள்ளார். அவரோ கிரேட்-கிரேட் கிராண்ட் ஃபாதர் ஆகிறார். முதலில் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். உங்கள் தந்தையைச் சந்திக்க விரும்புகிறோம் என்று அவர்கள் சொல்லலாம். ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து கிடைக்கிறது, பிரம்மாவிடம் இருந்து அல்ல என்று சொல்லுங்கள். உங்களுடைய தந்தை யார்? கீதையின் பகவான் யார்? ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்தவர் யார்? தந்தை என்ற பெயர் சொல்வதால், இந்த பிரம்மா குமார்-குமாரிகள் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள் எனப் புரிந்துக் கொள்வார்கள். கதி அல்லது சத்கதியின் ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து பிரம்மாவின் மூலமாகக் கிடைக்கிறது. அவர் இச்சயம் நமக்கு ஜீவன்முக்தி தந்துக் கொண்டிருக்கிறார். மற்ற அனைவரும் முக்தியில் சென்று விடுவார்கள். இந்த ஞானம் குழந்தைகள் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். யாராவது வந்தால் அவர்களுக்குப் புரிய வையுங்கள் - யாரைச் சந்திக்க விரும்புகிறீர்கள்? அவரோ எங்களுக்கும் உங்களுக்கும் தந்தை ஆவார். குரு-கோஸாயி கிடையாது. இதையோ நீங்கள் புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். இது நீங்கள் ஹோலி, துரியா செய்விப்பது போல் ஆகிறது. இல்லையென்றால் ஹோலி-துரியாவுக்கு எந்த ஓர் அர்த்தமும் வெளிப்படுவதில்லை. ஞானத்தினால் உடல் என்ற ஆடையை அழகானதாக்குகிறீர்கள். ஆத்மா இந்த உடல் என்ற ஆடைக்குள் உள்ளது. அது தூய்மையாவதால் சரீரமும் தூய்மை யானதாகக் கிடைக்கும். இதுவோ தூய்மையான சரீரம் அல்ல. இது அழிந்துவிடப் போகிறது. கங்கா ஸ்நானம் சரீரத்திற்குத் தான் செய்விக்கின்றனர். ஆனால் பதித-பாவனர் தந்தை தவிர வேறு யாரும் கிடையாது. ஆத்மா தான் தூய்மை இழக்கின்றது என்பதால் ஆத்மா தண்ணீரின் ஸ்நானத் தினால் தூய்மையாக முடியாது. இது யாருக்குமே தெரியாது. அவர்களோ ஆத்மாவே பரமாத்மா எனச் சொல்லிவிடுகின்றனர். ஆத்மா நிர்லேப் (அதில் பாவ-புண்ணியம் ஒட்டாது) எனச் சொல்கின்றனர். இப்போது யார் புத்திசாலியாக ஆகியிருக்கிறார்களோ, அவர்கள் தான் தாரணை செய்து, மற்றவர் களையும் செய்விக்க முடியும். எந்தக் குழந்தைகளின் வாயிலிருந்து சதா இரத்தினங்களே வெளிப்படுகின்றனவோ, அவர்கள் ரூப்-பஸந்த் (யோகி மற்றும் ஞானி) எனச் சொல்லப்படுகின்றனர். ஞானம்-விஞ்ஞானம் அல்லாமல் மற்றப்படி தங்களுக்குள் எந்த ஒரு கொடுக்கல்-வாங்கல் செய்தாலும் கல்லெடுத்து எறிவதாகவே ஆகும். சேவை செய்வதற்குப் பதில் சேவைக்குக் குந்தகம் விளைவிக்கின்றனர். 63 பிறவிகளாக ஒருவர் மற்றவரைக் கல்லால் அடித்தே வந்துள்ளனர். இப்போது பாபா சொல்கிறார், நீங்கள் ஞான-விஞ்ஞான விஷயங்களைச் சொல்லிக் குஷிப்படுத்த வேண்டும். பரசிந்தனை (மற்றவர் குறைகளை நினைப்பதும் சொல்வதும்) பற்றிய வார்த்தைகளைக் கேட்கக் கூடாது. இது ஞானம் இல்லையா? கல்லால் அடிப்பதையோ முழு உலகத்திலுமே ஒருவர் மற்றவருக்குச் செய்துக் கொண்டு தான் உள்ளனர். குழந்தைகள் நீங்களோ ரூப்-பஸந்த்தாக இருக்கிறீர்கள். நீங்கள் ஞான- விஞ்ஞானம் தவிர வேறு எதையும் கேட்பதோ சொல்வதோ கூடாது. யார் தலைகீழான விஷயங்களைப் பேசு கிறார்களோ, அவர்களுடைய சேர்க்கையே தீயதாகும். அதிக சேவை செய்பவர்கள் யாரோ, அவர்களின் சேர்க்கை அக்கரைக் கொண்டு சேர்க்கும்......... பிராமணர்கள் சிலர் ரூப்-பஸந்த்தாக உள்ளனர். பிராமணர் ஆகிப் பிறகு தேவையற்ற தலைகீழான விஷயங்களைப் பேசுகின்றனர். அப்படிப்பட்டவர்களின் சேர்க்கை கூடாது. மேலும் அவர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுவார்கள். பாபா அடிக்கடி எச்சரிக்கை செய்கிறார், ஒருவர் மற்றவரிடம் தலைகீழான விஷயங்களைப் பேசாதீர்கள். இல்லையென்றால் தங்களுக்கும் அழிவு, மற்றவர்களுக்கும் அழிவை ஏற்படுத்திவிடுவீர்கள். அப்போது பதவியும் மிகக் கீழானதாக ஆகிவிடும். பாபா எவ்வளவு சகஜமாகப் புரியும்படி சொல்கிறார்! ஆர்வம் இருக்க வேண்டும். பாபா, நாங்கள் போய் அநேகருக்கு இந்த ஞானத்தைக் கொடுப்போம். அப்படிப் பட்டவர் கள் தான் பாபாவின் உண்மையான குழந்தைகள் ஆவார்கள். சேவாதாரிக் குழந்தைகளுக்கு பாபாவும் கூட மகிமை செய்கிறார். அப்படிப் பட்டவர்களோடு நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். யார் நல்ல மாணவர்களின் சேர்க்கை வைக்கின்றனரோ, அவர்களுடன் நட்பாக இருக்க வேண்டும் பாபாவிடம் கேட்டால் சொல்வார், யாருடன் சேர்க்கை வைக்க வேண்டும் என்று. யார் பாபாவின் மனதில் இடம் பிடித்துள்ளனரோ, அவர்கள் சொல்வார்கள், சேவை செய்பவர்கள் மீது பாபாவுக்கும் கூட மதிப்பு உள்ளது. சிலரோ சேவை கூடச் செய்ய முடிவதில்லை. இதுபோல் அநேகருக்குத் தீய நட்பு கிடைப்பதால் மனநிலை மேலே- கீழே ஆகிவிடுகின்றது. ஆம், சிலர் ஸ்தூல சேவையில் சிறந்தவர்கள். அவர்களும் நல்ல ஆஸ்தியை அடைகின்றனர். அலஃப் மற்றும் பே - புரிந்து கொள்வதோ மிகவும் சுலபம். யாருக்கும் இதை மட்டும் சொல்லுங்கள் - தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள், போதும். வார்த்தைகள் இரண்டு தான் - அலஃப் மற்றும் பே. இதுவோ முற்றிலும் சுலபம். யாருக்கு வேண்டுமானாலும் இதை மட்டும் சொல்லுங்கள் – பாபாவின் கட்டளையாவது, என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், போதும். அனைத்திலும் பெரிய உபசரிப்பு இது தான். பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் உங்களுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைத்துவிடும். ஒவ்வொரு சென்டரிலும் இதுபோல் வரிசைக்கிரமமாக உள்ளனர். சிலரோ விவரமாகப் புரிய வைக்க முடியும். புரிய வைக்க முடியவில்லை என்றால் இதை மட்டும் சொல்லுங்கள், கல்பத்திற்கு முன்பும் கூட பாபா சொல்லியிருந்தார் - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். மேலும் எந்த ஒரு தேகதாரி, தேவதை முதலானவர்களையும் கூட நினைவு செய்யாதீர்கள். மற்றப்படி வீணான புறம் பேசுதல், இன்னார் இப்படிச் செய்கிறார், இதைச் செய்கிறார் என்று எதையும் சொல்லாதீர்கள். இந்த பாபா உங்களை ஹோலி-துரியா கற்றுத் தருகிறார். மற்றப்படி வண்ணங்களைப் பூசுவது முதலியனவோ அசுர மனிதர்களின் வேலை. யாரேனும் எவரையாவது நிந்தனை செய்கிறார்கள் என்றால் அதைக் கேட்கக் கூடாது. பாபா எவ்வளவு நல்ல விஷயங்களைச் சொல்கிறார்! - மன்மனாபவ, மத்யாஜீபவ. யாராவது வந்தால் அவர்களுக்குப் புரிய வையுங்கள் - சிவபாபா அனைவருக்கும் தந்தை. அவரோ சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள், அப்போது சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கும். கீதையின் பகவானும் அவர் தான். மரணம் முன்னால் தயாராக உள்ளது. ஆக, குழந்தை களாகிய உங்கள் கடமை சேவை செய்ய வேண்டியது. பாபாவை நினைவு படுத்த வேண்டும். இது மகான் மந்திரம். இதன் மூலம் இராஜதானியின் திலகம் கிடைத்துவிடும். எவ்வளவு சகஜமான விஷயம் - பாபாவை நினைவு செய்யுங்கள் மற்றும் செய்வியுங்கள்! அப்போது துன்பமெல்லாம் நீங்கிவிடும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) புத்திசாலி ஆகி அனைவருக்கும் பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும். வாயிலிருந்து ஒருபோதும் கல்லை (கடு சொற்களை) வெளிப்படுத்தி சேவைக்குக் குந்தகம் ஏற்படுத்தக் கூடாது. ஞான-யோகம் தவிர வேறு எந்த ஒரு சர்ச்சையும் செய்யக் கூடாது.

2) யார் ரூப்-பஸந்த் ஆக (யோகமும்-ஞானமும் நிறைந்தவர்), சேவாதாரியாக உள்ளனரோ, அவர்களின் சேர்க்கையில் தான் இருக்க வேண்டும். யார் தலைகீழான விஷயங்களைச் சொல்கிறார்களோ, அவர்களின் சேர்க்கை கூடாது

வரதானம்:

அடிமைத்தனத்தின் பந்தனத்தை சமாப்தி செய்துவிட்டு உண்மையான சுதந்திரத்தன்மையை அனுபவம் செய்யக்கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.

உலகத்திற்கு அனைத்து சக்திகளையும் தானம் கொடுப்பதற்காக சுதந்திரமான ஆத்மா ஆகுங்கள். அனைத்தையும் விட முதன்மையான சுதந்திரம் தேகத்தின் சம்மந்தத்திலிருந்து விடுபடுவது, ஏனெனில் தேகத்தின் அடிமைத்தனத்தில் பலவித பந்தனத்தில் விரும்பவில்லை என்றாலும் கூட கட்டப்பட்டிருக்கிறோம். அடிமைத்தனம் எப்பொழுதுமே அடிமட்டத்திற்கு இழுத்துச் செல்கிறது. குழப்பம் மற்றும் சலிப்பான மனநிலையை அனுபவம் செய்ய வைக்கிறது. அவர்களுக்கு எந்தவொரு ஆதரவும் தெளிவாக தென்படாது. நஷ்டமும் அனுபவம் ஏற்படாது, குஷியும் அனுபவமும் ஏற்படாது. இடைபட்ட நிலையில் சூறாவளியாக (நீர் சுழலில்) சிக்கிக் கொண்டது போல இருக்கிறது. ஆகையால் மாஸ்டர் சர்வசக்திவான் ஆகி அனைத்து பந்தனத்திலிருந்து விடு பட்டவர் ஆகுங்கள். தனது உண்மையான சுதந்திரத்தினத்தை கொண்டாடுங்கள்.

சுலோகன்:

பரமாத்ம சந்திப்பில் அனைத்து பிராப்திகளையும் அடைந்து

 

குஷியை அனுபவம் செய்யக் கூடிய திருப்தி ஆத்மா ஆகுக.