21-03-2021 காலை முரளி ஓம் சாந்தி "அவ்யக்த பாப்தாதா" ரிவைஸ் 22.11.1987


உதவி செய்யும் கடலிடமிருந்து பலமடங்கு உதவியை பெறுவதற்கான விதி

இன்று பாப்தாதா தனது நாலா பக்கமுள்ள தைரியசாலியான குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக் கிறார். தொடக்கத்திலிருந்து இதுவரை ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் தைரியத்தின் ஆதாரத் தினால் பாப்தாதாவின் உதவிக்கு தகுதியுடையவராக இருக்கிறார்கள், மேலும் தைரியமான குழந்தைகளுக்கு பாபாவின் உதவி என்ற ஆசீர்வாதத்தின் ஆதாரத்தில் முயற்சியில் நம்பர்வார் முன்னேறிக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகளின் தைரியம் என்ற ஒரு அடி மற்றும் பாபாவின் பலமடங்கு உதவி ஒவ்வொரு குழந்தைகளும் அடைகிறார்கள். ஏனெனில் இதை பாப்தாதாவின் உறுதிமொழி என்றும் சொல்லாம், ஆஸ்தி என்றும் சொல்லாம், அனைத்துமே குழந்தைகளுக்காக இருக்கிறது, மேலும் இந்த சிரேஷ்ட ஆஸ்தியை எளிதாக அடையும் காரணத் தினால் தான் 63 ஜென்மங்களின் பலமிழந்த ஆத்மாக்களை சக்திசாலியாக ஆக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறது. பிராமண பிறவி எடுத்துடனே முதலாவது தைரியம் என்ன தாரணை செய்கிறோம்? முதலாவது தைரியம் - எதை அசம்பவத்தை (முடியாத விஷயத்தை) சம்பவமாக (முடியும் என்று) செய்து காட்டியது, தூய்மையின் விசேஷ தாரணையை செய்தது. தைரியத்தோடு நாங்கள் தூய்மையாக இருப்போம் என்று உறுதியான எண்ணத்தை கொண்டு வந்தீர்கள், மேலும் பாபா பலமடங்கு உதவி செய்தார். ஆத்மாக்களாகிய நீங்கள் அனாதி-ஆதி (பரந்தாமம், சத்யுகம்) தூய்மையாக இருந்தீர்கள், பலமுறை தூய்மையாக வாழ்ந்துள்ளீர்கள், மேலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். புது விஷயம் கிடையாது. பலமுறை செய்த சிரேஷ்டமான மனநிலையை திரும்பவும் மீண்டும் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது,ம் கூட தூய்மையான ஆத்மாக் களாகிய உங்களுடைய பக்தர்கள், உங்களின் ஜடசித்திரத்திற்கு முன்பாக தூய்மையின் சக்தியை கொடுங்கள் என்று யாசித்துக் கொண்டி ருக்கிறார்கள். உங்களுடைய தூய்மையின் தன்மைக்கு புகழ் பாடிக்கொண்டிருக்கிறார்கள். கூடவே உங்களுடைய தூய்மையின் அடையாளமாக ஒவ்வொரு பூஜைக்குரிய ஆத்மாக்களின் தலையில் ஒளியின் கீரிடம் இருக்கிறது. அவ்வாறு நினைவின் மூலம் சக்திசாலி ஆனீர்கள், அதாவது பாபாவின் உதவியின் மூலம் பலமிழந்த ஆத்மாக்களுக்கு சக்திசாலியாக மாற்றினீர்கள். நாங்கள் உலகத்தை தூய்மையாக மாற்றி காட்டு வோம் என்று உலகத்திற்கு சவாலுக்கு நிமித்தம் ஆகுங்கள், அந்தளவிற்கு சக்திசாலியாகுங்கள். யாரெல்லாம் துவாபர் யுகத்தில் புகழ்பெற்ற ரிஷிகள், முனிவர்கள், மகான் ஆத்மாக்கள் இல்லறத்தில் இருந்துக் கொண்டே தூய்மையாக இருப்பது என்பது அசம்பவமானது என்று எந்த விஷயத்திற்கு மறுப்பு தெரிவித்திருத்தார்களோ, மேலும் இன்றைய காலகட்டத்திலும் கூட தனக்காக (சன்னியாசி) கடினமானது என்று புரிந்திருக்கிறார்களோ, பலமிழந்த நிலையிலிருந்து பலசாலி ஆகுங்கள், மேலும் அவர்களுக்கு முன்னால் இது ஆத்மாவின் அனாதி, ஆதி உண்மை யான சொரூபமாக இருக்கிறது என்று இயல்பாகவே வர்ணணை செய்கிறீர்கள். இதில் கடினத் தன்மை இருக்கிறதா என்ன? இதற்கு தான் சொல்லபடுகிறது - தைரியமான குழந்தைகளுக்கு பாபாவின் உதவி கிடைக்கிறது. அசம்பவமானது (முடியாதது) அது எளிதாக அனுபவம் ஆகிறது, மேலும் ஆகிக் கொண்டேயிருக்கிறது. எந்தளவு அவர்கள் அசம்பவம் என்று சொன்னார்களோ, அந்தளவு நீங்களும் மிகவும் மிகவும் எளிது என்று சொல்கிறீர்கள். எனவே பாபாவின் ஞானத்தின் சக்தியின் உதவி மற்றும் நினைவு மூலம் ஆத்மாவின் தூய்மையான மனநிலையின் அனுபவத் தினுடைய சக்தியின் உதவியினால் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இது தான் முதலாவது அடியின் தைரியத்திற்கு பாபாவின் பலமடங்கு உதவியாகும்.

அதுபோன்றே மாயாஜீத் ஆவதற்காக எவ்வளவு தான் வித விதமான ரூபத்தில் மாயா யுத்தம் செய்வதற்காக ஆரம்பத்திலிருந்து இதுவரை வந்து கொண்டிருக்கிறது. அவ்வபொழுது இராயல் ரூபத்தில் வருகிறது, அவ்வப் பொழுது தெரிந்த ரூபத்தில் வருகிறது, அவ்பொழுது மறைமுகமான ரூபத்தில் வருகிறது, மேலும் சில சமயம் செயற்கையான முறையில் ஈஸ்வரிய ரூபத்தில் வருகிறது. 63 ஜென்மாக மாயாவிற்கு துணையாக இருந்து வந்தீர்கள். உறுதியான நண்பர்களை விடுவது கூட கடினமாக தான் இருக்கிறது. ஆகையால் வித விதமான ரூபத்தினால் அது (மாயாவும்) கூட யுத்தம் செய்வதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறது, மேலும் நீங்களும் கூட இங்கே சக்திசாலியாக இருக்கிறீர்கள். இத்தனை தாக்குதல் நடந்தாலும் கூட யார் தைரியசாலியான குழந்தைகளாக இருக்கிறார்களோ, மற்றும் பாபாவின் பலமடங்கு உதவிக்கு தகுதியுடையவர் களாக இருக்கிறார்களோ, உதவி கிடைப்பதினால் மாயாவிடம் சவால் விடுகிறீர்கள் - உங்களுடைய (மாயாவின்) வேலை வருவது, மேலும் எங்களுடைய (தைரியசாலி குழந்தைகள்) வேலை வெற்றியடையவது. மாயாவின் தாக்குதலை விளையாட்டாக புரிந்திருக்கிறீர்கள், மாயா என்ற சிங்கத்தை எறும்பு என்று புரிந்திருக்கிறீர்கள். ஏனெனில் இந்த மாயாவின் இராஜ்யம் இப்பொழுது முடிவடைய போகிறது என்று தெரிந்திருக்கிறீர்கள். மேலும் நாமும் பலமுறை வெற்றி யடைந்த ஆத்மாக்களின் வெற்றியும் கூட 100% உறுதியானது. ஆகையால் இந்த உறுதி செய்யப்பட்டது என்ற நஷா (குஷி), பாபாவின் பலமடங்கு உதவியின் அதிகாரத்தை அடைய வைக்கிறது. எனவே எங்கு தைரியசாலி குழந்தைகளுக்கு சர்வசக்திவான் பாபா உதவி செய்கிறார். அங்கு அசம்பவத்தை சம்பவமாக செய்வது மற்றும் மாயாவிற்கு, உலகத்திற்கு சவால் விடுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவ்வாறு புரிந்திருக்கிறீர்கள் அல்லவா?

ஆரம்பத்திலிருந்து இதுவரை ஒவ்வொரு குழந்தைகளின் தைரியத்தின் ஆதாரத்தில் உதவிக்கு தகுதியுடைவர் ஆகியிருக்கிறார்கள் சகஜ முயற்சியாளர்களாக எந்தளவு ஆகியிருக்கிறீர்கள் எந்தளவு வந்து சேர்ந்துள்ளீர்கள் என்ற ரிசல்டை பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார். எனவே எதை பார்த்தார்? பாபாவின் உதவி என்றாலே வள்ளலின் கொடுத்தல், ஆசீர்வாதம் அளிக்கக்கூடிய ஆசீர்வாதம் என்பது கடலை போன்றதாகும். ஆனால் கடலிடமிருந்து பெற்ற சில குழந்தைகள் கடலுக்கு சமமாக நிரம்பியவராகி மற்றவர்களையும் கூட உருவாக்குகிறீர்கள், மேலும் சில குழந்தைகள் உதவியின் விதியை தெரிந்துக் கொள்ளாத காரணத்தினால் உதவி பெறுவதற்கு பதிலாக தனது கடின உழைப்பில் அவ்வப்பொழுது தீவிரமாகவும், அவ்வப்பொழுது மன முடைந்து போகும் விளையாட்டில் கீழும்-மேலுமாக இருக்கிறார்கள். மேலும் சில குழந்தைகள் அவ்வப்பொழுது உதவியை பெறுகிறார்கள், அவ்வப்பொழுது கடின உழைப்பு செய்கிறார்கள். பலநேரம் உதவி கூட பெறுகிறார்கள், ஆனால் ஒரு சில இடத்தில் பொறுப்பற்ற தன்மையின் காரணத்தினால் உதவியை பெறுவதற்கான விதியை தகுந்த நேரத்தில் மறந்து விடுகிறார்கள். மேலும் தைரியம் வைப்பதற்கு பதிலாக பொறுப்பற்ற தன்மையின் காரணத்தினால் நாங்கள் எப்பொழுதும் தகுதியானவர்களாக தான் இருக்கிறோம், பாபா எங்களுக்கு உதவி செய்யவில்லை யென்றால் வேறு யாருக்கு செய்வார், பாபா கட்டுபட்டுள்ளார் என்று அபிமானத்தில் வந்துவிடு கிறார்கள். இந்த அபிமானத்தின் காரணத்தினால் தைரியத்தின் மூலம் உதவியின் விதியை மறந்து விடுகிறார்கள். முரண்பாடான பெருமையும், தன்னை கவனித்துக்கொள்வதற்கான பெருமையும் தான் உதவியை இழப்பதற்கான காரணமாகிவிடுகிறது. இப்பொழுது அதிகளவில் நினைவு செய்து விட்டோம், ஞானம் நிறைந்த ஆத்மாவாகி விட்டோம், யோகியாகவும் ஆகிவிட்டோம், சேவையில் கூட பெயர் பிரபலமாகிவிட்டது, சென்டர் பொறுப்பாளராகவும் ஆகிவிட்டோம், சேவையின் இராஜ்யமும் கிடைத்துவிட்டது, இயற்கையும் கூட சேவைக்கு தகுதியுடையதாக விட்டது, ஒய்வாக வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்துக்கொள்கிறார்கள். இதில் தான் கவனம் வைப்பதற்கு பதிலாக அலட்சியம் (பொறுப்பற்ற நிலை) வந்துவிடுகிறது. எனவே எதுவரை வாழ்கிறோமோ, அதுவரை படிப்பு மற்றும் சம்பூரணம் ஆவதற்கான கவனம், எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கிய உள்ளுணர்வு உருவாக்குவதற்கான கவனம் தர வேண்டும். இதை மறந்து விடுகிறார்கள். பிரம்மா பாபாவை பார்த்தீர்களா, கடைசி முழுமையான கர்மாதீத் நிலையை அடையும் வரை தன்மீது, சேவையில், எல்லைக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வு மீது, மாணவ வாழ்க்கை என்ற முறையில் கவனம் கொடுத்து நிமித்தமாக இருந்துக் காட்டினார். ஆகையால் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை தைரியமாக இருந்து, தைரியம் கொடுப்பதற்கான நிமித்தமாக இருந்தார். எனவே பாபாவின் நம்பர் ஒன் உதவிக்கு தகுதியுடையவராகி நம்பர் ஒன் பிராப்தியை (பிரம்மா பாபா) அடைந்தார். எதிர்காலம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் கூட அலட்சியமாக இருக்கக் கூடாது. சதா தனது தீவிர முயற்சியின் அனுபவம் குழந்தைகளுக்கு முன்னால் இறுதி வரை கற்றுக் கொடுத்தார். உதவி அளிக்கும் கடலிடம் முழ்கிவிடுங்கள், அவர் (பிரம்மா) இப்பொழுது கூட பாபாவிற்கு சமமாக ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவ்யக்த ரூபத்தில் இருந்துக் கொண்டு உதவி செய்கிறார். இதற்கு தான் ஒரு அடி தைரிய மாக வையுங்கள், மேலும் பலமடங்கு உதவிக்கு தகுதியுடைவர் ஆகிவிடுவீர்கள் என்று சொல்லப்படுகிறது.

எனவே பல குழந்தைகள் உதவி பெறுவதற்கு தகுதியுடைவராக இருந்தலும் கூட உதவி பெறுவதை இழந்துவிடுகிறார்கள்? எனபதை பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கான காரணம் - தைரியத்தின் விதியை மறந்துவிடும் காரணத்தினால், அபிமானம் என்றாலே அலட்சியம் மற்றும் தன்மீது கவனக்குறைவு தான் காரணமாக இருக்கிறது. விதிமுறை இல்லை யென்றால் ஆசீர்வாதம் பெறுவதை இழந்துவிடுகிறீர்கள். கடலின் குழந்தையாக இருந்தாலும் கூட சின்னஞ்சிறு குளமாக மாறிவிடுகிறீர்கள். எப்படி குளத்தின் தண்ணீர் இடையில் நின்றுவிடு வதை போன்று, முயற்சியில் அது (அபிமானம்) இடையில் நின்று விடுகிறது. அதனால் தான் அவ்வப்பொழுது கடின உழைப்பிலும், அவ்வப்பொழுது குஷியில் இருக்கிறார்கள். இன்றைக்கு பார்த்தால் அதீத மகிழ்ச்சியில் இருக்கிறார்கள், அடுத்தநாள் சிறிய உலோகம் (கல்) இடையில் வந்துவிடும் காரணத்தினால் அதை நீக்குவதற்கான உழைப்பில் ஈடுபடுகிறார்கள். மலை கூட அல்ல, சின்னஞ்சிறு கல் தான் இருக்கிறது. மகாவீர் பாண்டவ சேனைகளாக இருக்கிறார்கள், ஆனால் சின்னஞ்சிறு கூழாங்கல் போன்ற கற்கள் கூட மலை போன்று ஆகிவிடுகிறது. அதை நீக்குவதற்கான முயற்சியில் இருந்துவிடுகிறார்கள். பிறகு மிகவும் நகைக்கிறார்கள் (சிரிக் கிறார்கள்). ஒருவேளை அவர்களிடம் யாராவது இது மிகவும் சிறிய கூழாங்கல்லாக இருக்கிறது, இதில் நகைப்பதற்கான விஷயம் என்ன இருக்கிறது? என்று கேட்டால், உங்களுக்கு என்ன தெரியும், உங்கள் முன்னால் வந்தால் தான் தெரிய வரும். பாபாவிற்கு கூட சொல்கிறார்கள் - நீங்கள் நிராகாராக இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தெரியும் ! பிரம்மா பாபாவிற்கும் கூட சொல் கிறார்கள் - உங்களுக்கு பாபாவின் லிப்ட் (உதவி) கிடைத்திருக்கிறது, உங்களுக்கு தான் என்ன தெரியும்? மிகவும் நல்ல நல்ல விஷயங்களை பேசுகிறார்கள். ஆனால் இதற்கு சின்னஞ்சிறு தவறு தான் காரணமாக இருக்கிறது. தைரியமான குழந்தைகளுக்கு கடவுளின் உதவி கிடைக்கிறது - இந்த இரகசியத்தை மறந்து விடுகிறார்கள். இது நாடகத்தின் ஒரு ஆழமான கர்மத்தின் இரகசிய மாக இருக்கிறது. தைரியமான குழந்தைகளுக்கு கடவுளின் உதவி கிடைக்கும், ஒருவேளை இந்த சட்டம் இல்லையென்றால் அனைவரும் உலகத்தின் முதலாவது இராஜாவாகி விடுவார்கள். ஒரே நேரத்தில் அனைவரும் சிம்மாசனத்தில் அமருவார்களா என்ன? நம்பர்வார் ஆவதற்கான சட்டம் இந்த விதியின் காரணத்தினால் தான் உருவாகிறது. இல்லையென்றால், பிரம்மாவை ஏன் முதல் நம்பரில் உருவாக்கினீர்கள்? நாங்களும் கூட ஆக முடியுமல்லவா? என்று அனைவரும் பாபாவிடம் புகார் கூறுவார்கள். ஆகையால் இந்த ஈஸ்வரிய சட்டம் நாடகப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு அடி தைரியத்தினுடையது மேலும் பலமடங்கு உதவி கிடைக்கும் என்ற சட்டம் இதன் பொருட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. உதவி அளிக்கும் கடல் இருந் தாலும் கூட இந்த சட்டத்தின் விதி நாடகத் திட்டப்படி உருவாகியிருக்கிறது. எனவே எந்தளவு தைரியம் வைக்கிறீர்களோ, அந்தளவு உதவி பெறுவீர்கள். இதில் யாருக்கும் குறை வைப்பதில்லை. ஒரு வருட குழந்தையாக இருந்தாலும் சரி, 50 வருட குழந்தையாக இருந்தாலும் சரி, சரண்டராக இருந்தாலும் சரி, இல்லற மார்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி - அதிகாரத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் விதியின் மூலம் தான் பிராப்தி அடைய முடியும். எனவே ஈஸ்வரிய சட்டத்தை புரிந்துக் கொண்டீர்கள் அல்லவா!

தைரியம் நன்றாக வைத்துள்ளீர்கள். இதுவரை தைரியம் வைத்ததால் தான் வந்து சேர்ந்துள்ளீர்கள் அல்லவா. பாபாவினுடையவர் ஆவதற்காக தைரியம் வைத்ததால் தான் ஆனீர்கள் அல்லவா. எப்பொழுதும் தைரியத்தின் விதி மூலம் உதவிக்கு தகுதியுடையவராகி ஆவது, மற்றும் அவ்வப் பொழுது விதியின் மூலம் வெற்றி அடைவது - இதில் வேறுபாடு இருக்கிறது அல்லவா! சதா ஒவ்வொரு அடியிலும் தைரியத்தோடு உதவிக்கு தகுதியுடையவர் ஆகி நம்பர் ஒன் ஆவதற்கான இலட்சியத்தை அடையுங்கள். நம்பர் ஒன் ஒரு பிரம்மா ஆகிவிட்டார், ஆனால் முதல் டிவிசினில் (பிரிவில்) எண்ணிக்கை (இடம்) இருக்கிறது. ஆகையால் நம்பர் ஒன் என்று சொல்கிறார்கள். புரிந்ததா? முதல் டிவிசனில் வர முடியுமல்லவா? இதை தான் நம்பர் ஒன்னில் வருவது என்று சொல்லப்படுகிறது. அவ்வப்பொழுது அலட்சியத்தன்மையின் லீலை (விளையாட்டை) குழந்தைகள் கேட்கிறார்கள். மிகவும் நன்றாக லீலை செய்கிறீர்கள். பாப்தாதா எப்பொழுதும் குழந்தைகளின் லீலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவ்வப்பொழுது தீவிர முயற்சியின் லீலையை கூட பார்க்கிறார், அவ்வப் பொழுது அலட்சியத்தன்மையின் லீலையை பார்க்கிறார். நல்லது.

கர்நாடகாவை சேர்ந்தவர்களின் விசேஷத்தன்மை என்ன? ஒவ்வொரு மண்டலத்தை சேர்ந்தவர் களுக்கும் அவரவர்களின் சிறப்பு தன்னை இருக்கிறது. கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு தனது மொழி நன்றாக இருக்கிறது - உணர்வு பூர்வமான மொழியில் புத்திசாலியாக இருக்கிறார்கள். இவர்கள் இந்தியை குறைவாக புரிந்திருக்கிறீர்கள், ஆனால் கர்நாடகாவை சேர்ந்தவர்களின் விசேஷத்தன்மை உணர்வுகளின் மொழியில் நம்பர் ஒன்னாக இருக்கிறார்கள். ஆகையால் உணர்வுகளின் பலன் எப்பொழுதுமே கிடைக்கிறது. வேறு எதுவும் பேசுவதில்லை, ஆனால் சதா பாபா-பாபா என்று தான் சொல்கிறார்கள். இந்த பாவணையின் உயர்ந்த மொழியை தெரிந்திருக்கி றீர்கள். பாவணையின் பூமி அல்லவா! நல்லது.

நாலாபக்கமுள்ள தைரியமான குழந்தைகளுக்கு, சதா பாபாவின் உதவிக்கு தகுதியானவராக ஆகக்கூடிய ஆத்மாக்களுக்கு, சதா சட்டத்தை தெரிந்துக்கொண்டு விதிப்படி வெற்றியை அடையக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக் களுக்கு, சதா பிரம்மா பாபாவிற்கு சமமாக இறுதிவரை படிப்பு மற்றும் முயற்சியின் முறைபடி செல்லக் கூடிய உயர்ந்த, மகான் தன்மையுடைய பாபாவிற்கு சமமான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

பார்ட்டியில் உள்ளவர்களுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:

தனது டபுள் லைட் ஃபரிஸ்தா நிலையை அனுபவம் செய்கிறீர்களா? டபுள் லைட் மனநிலை தான், ஃபரிஸ்தாவின் மனநிலையாகும். ஃபரிஸ்தா என்றாலே லைட் (ஓளி). பாபாவினுடையவர் ஆகி விட்டீர்கள் என்றால் அனைத்து சுமைகளையும் பாபாவிற்கு கொடுத்துவிட்டீர்களா? சுமை இலேசாகிவிட்டது என்றால் ஃபரிஸ்தாவாகவும் ஆகிவிட்டீர்கள். பாபா வருவதே சுமைகளை சமாப்தி செய்வதற்காக, அதனால் பாபா சுமையை சமாப்தி செய்யக் கூடியவராக இருக்கிறார், அதனால் நீங்கள் அனைவரும் சுமையை சமாப்தி செய்து விட்டீர்களா? எந்தவித சின்னஞ்சிறிய மூட்டையையும் மறைத்து வைத்துக் கொள்ளவில்லையே? அனைத்தும் கொடுத்து விட்டீர்களா அல்லது சிறிது நேரத்திற்காக வைத்திருக்கிறீர்களா? கொஞ்சமாவது பழைய சம்ஸ்காரம் இருக்கிறதா அல்லது அது கூட முடித்துவிட்டீர்களா? பழைய சம்ஸ்காரம் மற்றும் பழைய சுபாவம், இவை கூட பொக்கிஷம் அல்லவா? இதை கூட கொடுத்து விட்டீர்களா? ஒருவேளை கொஞ்சம் மிச்சம் இருந்துவிட்டால், மேலிருந்து கீழே வந்து விடுவீர்கள், ஃபரிஸ்தா ஆகி பறக்கும் கலையை செய்யவிடாது. அவ்வப்பொழுது மேலே, அவ்வப் பொழுது கீழே வந்துவிடுகிறீர்கள். ஆகையால் அனைத்தையும் கொடுத்து விடுங்கள் என்று பாப்தாதா சொல்கிறார். இது இராவணனின் சொத்தாக இருக்கிறதா அல்லவா. இராவணனின் சொத்தை தன்னிடம் வைத்துக் கொள்வதால் துக்கம் தான் அடைகிறார்கள். ஃபரிஸ்தா என்றாலே கொஞ்சம் கூட இராவணனின் சொத்து இருக்கக் கூடாது. பழைய சுபாவம் மற்றும் சம்ஸ்காரம் வருகிறது அல்லவா? (பழைய சம்ஸ்காரத்தை கொண்டு வர) விருப்பம் இல்லை தான் ஆனால் வந்து விடுகிறது, செய்து விடுகிறோம் அல்லது ஆகிவிடுகிறது என்று சொல்கிறீர்கள் அல்லவா. எனவே இதன் மூலம் சின்னஞ்சிறிய பழைய மூட்டையை வைத்துள்ளீர்கள் என்பது நிரூபணம் ஆகிறது அல்லவா? மணல் துகளின் மூட்டையை வைத்திருக்கிறீர்கள் அதனால் சதா காலத்திற்காக ஃபரிஸ்தா ஆவதாகும் - இது தான் பிராமண வாழ்க்கையாகும். நடந்தது முடிந்துவிட்டது. பழைய கணக்கு சாம்பலாகி விடுகிறது. இப்பொழுது புது விஷயம், புது கணக்கு. ஒருவேளை கொஞ்சமாவது பழைய கடன் இருக்கிறது என்றால் சதா காலத்திற்கு மாயாவின் நோய் ஏற்படுகிறது, ஏனெனில் கடனை நோய் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் அனைத்து கணக்கும் முடிந்து போகும். புது வாழ்க்கை கிடைத்து விட்டது என்றால் பழையது அனைத்தும் முடிந்துவிடும்.

சதா ஆஹா ஆஹா என்ற பாடலை பாடக்கூடியவர்களா இருக்கிறீர்களா? ஹய்யோ ஹய்யோ என்ற பாடல் முடித்துவிட்டீர்கள் மற்றும் ஆஹா ஆஹா என்ற பாடல் எப்பொழுதும் மனதால் பாடிக்கொண்டே இருங்கள். யாரெல்லாம் உயர்ந்த காரியம் செய்கிறீர்கள் என்றால் மனதிலிருந்து என்ன வருகிறது? ஆஹா என்னுடைய சிரேஷ்ட காரியம். மற்றும் ஆஹா சிரேஷ்ட காரியம் கற்பிக்கக் கூடிய பாபா! மற்றும் ஆஹா சிரேஷ்ட நேரம் (சங்கமயுகம்), சிரேஷ்ட காரியம் செய்விக்கக் கூடியவர், எனவே எப்பொழுதுமே ஆஹா, ஆஹா! என்ற பாடலை பாடக்கூடிய ஆத்மாக்களாக இருக்கிறீர்களா? ஒருபொழுதும் தவறுதலாக கூட ஐயோ என்று வராமல் இருக்கிறதா? ஐயோ, இது என்ன நடந்தது - அல்ல. ஏதாவது துக்கத்தின் காட்சியை பார்த்தாலும் கூட ஐயோ என்ற வார்த்தை வரக்கூடாது. நேற்று (கலியுகம்) ஐயோ-ஐயோ என்ற பாடலை பாடினீர்கள், மேலும் இன்று (சங்கமயுகம்) ஆஹா ஆஹா என்ற பாடலை பாடுகிறீர்கள். இந்தளவு வித்தியாசம் ஆகிவிட்டது! இது யாருடைய சக்தி? பாபாவினுடையதா அல்லது நாடகத் தினுடையதா? (பாபாவின்) பாபாவும் கூட நாடகத்தின் காரணத்தினால் தான் வருகிறார் அல்லவா. அதனால் நாடகம் கூட சக்திசாலி ஆகிவிட்டது. ஒருவேளை நாடகத்தில் நடிப்பே இல்லை யென்றால் பாபாவும் கூட என்ன செய்வார்? பாபாவும் கூட சக்திசாலியாக இருக்கிறார் மற்றும் நாடகமும் கூட சக்திசாலியாக இருக்கிறது. எனவே இரண்டின் பாடலை பாடிக் கொண்டே இருங்கள் - ஆஹா டிராமா ஆஹா. எதை கனவில் கூட நினைக்கவில்லை, அது சாகாரத்தில் வந்துவிட்டது. வீட்டில் இருந்தபடியே அனைத்தும் கிடைத்துவிடுகிறது. வீட்டில் அமர்ந்தபடியே பாக்கியம் கிடைத்துவிட்டது - இதற்கு டைமண்ட் லாட்டரி என்று சொல்லப்படுகிறது.

சங்கமயுகம் சுயராஜ்ய அதிகாரி ஆத்மாக்கள் ஆகிவிட்டீர்களா? ஒவ்வொரு கர்மேந்திரியங்களின் மீதும் நீங்கள் இராஜ்யம் செய்கிறீர்களா? எந்தவொரு கர்மேந்திரியமும் ஏமாற்றவில்லை தானே? ஒருபொழுதும் எண்ணத்திலும் கூட தோல்வி ஏற்படவில்லையே? எப்பொழுதாவது வீணான எண்ணங்கள் உருவாவதில்லையே? சுயராஜ்ய அதிகாரி ஆத்மாக்களாக இருக்கிறார்களா - இந்த மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் மூலம் சதா சக்தி சாலியாகி மாயாவை வென்றவராகி உலகத்தை வென்றவர் ஆகுங்கள். சுயராஜ்ய அதிகாரி ஆத்மாக்கள் சகஜயோகியாகவும், நிரந்தர யோகியாகவும் ஆக முடியும். சுயராஜ்ய அதிகாரியின் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையினால் முன்னேறிக்கொண்டே செல்லுங்கள். தாய்மார்கள் பற்றற்றவராக இருக்கிறீர்களா அல்லது பற்று இருக்கிறதா? பாண்டவர்களுக்கு எப்பொழுதாவது கோபத்தின் ஒரு பகுதியாக ஆவேசம் வருகிறதா? எப்பொழுதாவது ஏதாவது மேலும் கீழும் செய்துவிட்டால், கோபம் வருகிறதா? கொஞ்சம் சேவையின் வாய்ப்பு குறைவாக கிடைத்துவிட்டது, மற்றவருக்கு அதிகமாக கிடைத்து விட்டால், சகோதரிகள் மீது - இவர் என்ன செய்கிறார் என்று ஆவேசம் வருகிறதா? பாருங்கள், பேப்பர் (பிரச்சனை) வரும். ஏனெனில் சிறிதளவு தேக அபிமானம் வருகிறது என்றால் அதனால் ஆவேசம் மற்றும் கோபம் எளிதாக வந்துவிடுகிறது. ஆகையால் சதா சுயராஜ்ய அதிகாரி அதாவது எப்பொழுதும் நிர் அகங்காரி, எப்பொழுதும் பணிவுடையவராகி சேவாதாரி ஆகக் கூடியவர், மோகத்தின் பந்தனம் கூட முடிந்துவிடும். நல்லது,

வரதானம்:

பாபாவிற்கு சமமாக தனது ஒவ்வொரு வார்த்தை மற்றும் கர்மமும் நினைவு சின்னமாக ஆக்கக் கூடிய இதய சிம்மாசனதாரி மற்றும் இராஜ்ய அதிகாரி ஆகுக.

பாபாவிடமிருந்து என்னவெல்லாம் வார்த்தைகள் வருகிறதோ, அவை அனைத்தும் நினைவு சின்னம் ஆகிவிடுவதை போல, யார் பாபாவிற்கு சமமாக இருக்கிறார்களோ, அவர்கள் என்ன வார்த்தைகளை பேசுகிறார்களோ, அவை அனைவரின் மனதிலும் கலந்துவிடுகிறது, அதாவது நினைவுசின்னமாக இருந்துவிடுகிறது. யார் எந்த ஆத்மாவிற்காக எண்ணங்களை உருவாக்கு கிறார்களோ, அது அவர்களின் மனதில் பதிந்துவிடுகிறது. அவர் களுடைய இரண்டு வார்த்தைகள் கூட மனதின் துக்கத்தை நீக்கக் கூடியதாக இருக்கிறது. அவர்களிடம் நெருக்கத்தின் அனுபவம் ஏற்படுகிறது, ஆகையால் அனைவரையும் தன்னுடையவராக புரிந்துக் கொள்கிறார்கள். அப்படி சமமான குழந்தை தான் இதயசிம்மாசனதாரி மற்றும் இராஜ்ய அதிகாரியாகவும் ஆகிவிடு கிறார்கள்.

சுலோகன்:

தனது பறக்கும் கலை மூலம் ஒவ்வொரு பிரச்சனைகளையும்

 

எந்தவித தடைகளும் இல்லாமல் கடக்கக் கூடிய பறக்கும் பறவை ஆகுங்கள்.