ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலின் இரண்டு வரிகள் கேட்டீர்கள். எல்லையற்ற தந்தை எல்லையற்ற சுகத்தை அளித்துக் கொண்டிருக்கிறார் என்பதை இப்போது நிச்சயப்படுத்திக் கொள்கிறீர்கள். நாம் இப்படிப்பட்ட தந்தையின் குழந்தைகளாகி இருக்கிறோம் என்றால் பாபாவின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். இல்லையென்றால் என்னவாகும்? இப்போது சிரிக்கிறீர்கள், நாங்கள் மகாராஜா மகாராணி ஆவோம் என்கிறீர்கள். பிறகு கையை விட்டு விட்டாலும் அங்கே சென்று சாதாரண மக்களாவீர்கள். நிச்சயம் சொர்க்கத்தில் வருவீர்கள். அனைவரும் சொர்க்கத்திற்கு வருவார்கள் என்பதும் கிடையாது. யார் சத்யுகம் திரேதாவில் வருகிறார்களோ அவர்களே வருவார்கள். சத்யுகம் மற்றும் திரேதா இரண்டையும் சேர்த்து சொர்க்கம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் யார் முதன்முதலில் புது உலகில் வருகிறார்களோ அவர்கள் நல்ல சுகத்தைப் பெறுகிறார்கள். மற்றவர்கள் பிற்காலத்தில் வருபவர்கள். அவர்கள் எவரும் வந்து ஞானத்தை எடுக்கமாட்டார்கள். ஞானத்தைப் பெறுபவர்கள் சத்யுகம் திரேதாவில் வருவார்கள். மற்றவர்கள் இராவண இராஜ்யத்தில் வருவார்கள். அவர்கள் சிறிதளவு சுகத்தை தான் பெற முடியும். சத்யுகம் திரேதாவில் நிறைய சுகம் இருக்கிறது அல்லவா? ஆகவே முயற்சி செய்து எல்லையற்ற சுகத்தின் சொத்தைப் பெற வேண்டும். மேலும் கார்டு போன்றவைகளை அச்சடிக்கும் போது உயர்ந்ததிலும் உயர்ந்த எல்லையற்ற தந்தையின் மகிழ்ச்சி நிறைந்த செய்தி என எழுத வேண்டும். இந்த மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை எழுதுங்கள். படக் கண்காட்சிகளில் நீங்கள் புது உலகம் எப்படி ஸ்தாபனையாகிறது என காண்பிக்கிறீர்கள். எனவே, இதை தெளிவாக மிகப் பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும். எல்லையற்ற தந்தை ஞானக் கடல், பதீத பாவனர், சத்கதி வழங்கும் வள்ளல், கீதையின் பகவான் சிவன் எப்படி பிரம்மா குமார் குமாரிகள் மூலமாக மீண்டும் கலியுக சம்பூரண விகாரி, கீழான பதீத உலகத்தை சத்யுக சம்பூரண நிர்விகார தூய்மையான சிரேஷ்டமான உலகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த மகிழ்ச்சி நிறைந்த செய்தியை வந்து கேளுங்கள் அல்லது புரிந்துக் கொள்ளுங்கள். அரசாங்கத்திடம் கூட உங்களுடைய இந்த உறுதி மொழி இருக்கிறது. நாங்கள் பாரதத்தில் மீண்டும் சத்யுக, உயர்ந்த 100 சதவீதம் தூய்மை, சுகம், சாந்தியின் தெய்வீக சுய இராஜ்யத்தை எப்படி ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறோம். மேலும் இந்த விகார உலகத்தின் அழிவு எப்படி நடக்கும் என்பதை வந்துப் புரிந்துக் கொள்ளுங்கள். இவ்வாறு தெளிவாக எழுத வேண்டும். கார்டில் இப்படி எழுதினால் மனிதர்கள் நன்றாகப் புரிந்துக் கொள்ள முடியும். இந்த பிரஜாபிதா பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள் போன கல்பத்தை போன்று நாடகத்தின் படி பரம்பிதா பரமாத்மா சிவனின் ஸ்ரீமத் படி சகஜ இராஜயோகம் மற்றும் தூய்மை யின் பலத்தால் தங்களுடைய உடல், மனம், பொருளால் பாரதத்தை உயர்ந்த பாவனமாக எப்படி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வந்துப் புரிந்துக் கொள்ளுங்கள். தெளிவுப்படுத்தி கார்டில் அச்சடிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் புரிந்துக் கொள்ளலாம். இந்த பி.கே. சிவபாபாவின் வழிப்படி இராம இராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவே காந்தியடிகளின் விருப்பமாக இருந்தது. செய்தித்தாள்களில் இவ்வாறு முழு அழைப்பும் இருக்கட்டும். பிரஜாபிதா பிரம்மா குமார், குமாரிகள் தங்களுடைய உடல், மனம் பொருளால் இதை செய்துக் கொண்டிருக் கிறார்கள் என்பதை நிச்சயமாகப் புரிய வைக்க வேண்டும். மனிதர்கள் ஒருபோதும் இவர்கள் ஏதோ பிச்சை அல்லது நன்கொடை போன்றவை களைக் கேட்கிறார்கள் என நினைக்கக் கூடாது. உலகத்தில் அனைத்தும் நன்கொடையில் தான் நடக்கிறது. இங்கே நாங்கள் பி.கே உடல், மனம் பொருளால் இவ்வாறு செய்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அவர்கள் சுய இராஜ்யத்தை எடுக்கிறார்கள் என்றால் நிச்சயம் அவர்களுடையதைத் தான் செலவு செய்வார்கள். யார் உழைக்கிறார்களோ அவர்களுக்கு 21 பிறவிகளுக்கு சொத்து கிடைக்கிறது. பாரதவாசிகள் தான் 21 பிறவிகளுக்கு மிக உயர்ந்த டபுள் கிரீடம் உடையவர்கள் ஆகிறார்கள். இந்த இலஷ்மி-நாராயணன் இரட்டை கிரீடம் உடையவர்கள் அல்லவா? இப்போது எந்த கிரீடமும் இல்லை. எனவே இதை நன்குப் புரிய வைக்க வேண்டும். இவ்வாறெல்லாம் எழுதினால் பி.கே என்ன செய்துக் கொண்டிருக் கிறார்கள் என்று பாவம் அவர்களுக்கு தெரிய வரும் என பாபா புரிய வைக்கிறார். பெரியவர்களின் ஓசை வர ஆரம்பித்துவிட்டால் ஏழைகளுடையதையும் கேட்பார்கள். இல்லை யென்றால் ஏழைகள் சொல்வதை யாரும் கேட்கமாட்டார்கள். பணக்காரர்களின் ஓசை உடனே கேட்கப்படுகிறது. நீங்கள் தெளிவுப்படுத்திச் சொல்கிறீர்கள். நாங்கள் முக்கியமாக பாரதத்தை சொர்க்கமாக மாற்றுகிறோம். மற்ற அனைவரையும் சாந்திதாமத்திற்கு அனுப்பிவிடுவார்கள். இவ்வாறு தான் புரிய வைக்க வேண்டும். பாரதம் 5000 வருடங்களுக்கு முன்பு சொர்க்கமாக இருந்தது. இப்போதோ கலியுகம். அது சத்யுகமாக இருந்தது. சத்யுகத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் எனக் கூறுங்கள். இப்போது கலியுகத்தின் முடிவாகும். இது அதே மகாபாரத மிகப்பெரிய சண்டையாகும். வேறு எந்த சமயத்திலும் இவ்வாறு சண்டை நடக்கவில்லை. இதுவும் மூன்றாவது உலகப்போர் கடைசியில் நடந்தது. முயற்சி செய்து பார்க்கிறார்கள் அல்லவா? இப்போதோ அணுகுண்டுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். யார் கூறுவதையும் கேட்பதில்லை. என்னென்ன அணுகுண்டுகளை தயார் செய்திருக்கிறார்களோ அது அனைத்தையும் கடலில் போட்டு விட்டால் நாங்கள் உருவாக்க மாட்டோம் என்கிறார்கள். நீங்கள் வைத்துக் கொண்டே இருப்பீர்கள். நாங்கள் மட்டும் செய்யக் கூடாது என்றால் எப்படி? ஆனால் குழந்தைகளாகிய உங்களுக்கு இவ்வாறு (விநாசம்) நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும். எவ்வளவு வழிகளை அவர்களுக்கு கூறினாலும் அவர்கள் ஏற்றுக் கொள்வதிலை. வினாசம் நடக்கவில்லை என்றால் இராஜ்யத்தை எப்படி அடைவீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயம் இருக்கிறது அல்லவா? சந்தேக புத்தியுடையவர்கள் ஓடிப் போய்விடுகிறார்கள். துரோகி ஆகிவிடுகிறார்கள். பாபாவினுடைய வராகிய பிறகு துரோகி ஆகக் கூடாது. நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். மற்ற விஷயங்களில் நன்மை என்ன இருக்கிறது. உண்மையான தந்தையுடன் உண்மையாக இருக்க வேண்டும். உள்ளொன்று வைத்து, புறமொன்று வைத்திருந்தால் தங்களுடைய பதவி குறைந்துப் போகும். தனக்குத் தானே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கல்ப கல்பத்திற்கு ஒருபோதும் உயர்ந்த பதவி அடைய முடியாது. எனவே, இச்சமயம் மிகவும் துல்லியமாக மாற வேண்டும். எந்தத் தவறும் செய்யக் கூடாது. எவ்வளவு முடியுமோ ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். நிரந்தரமான நினைவு கடைசியில் இருக்கும். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரையும் நினைக்கக் கூடாது. கடைசி காலத்தில் யார் பெண்ணை நினைத்தாரோ.... என பாடப்பட்டிருக்கிறது. யார் மீது மோகம் வைக்கிறார்களோ அவர்களின் நினைவு ஏற்படும். இன்னும் போகப் போக நீங்கள் எவ்வளவு நெருக்கத்தில் வருகிறீர்களோ அவ்வளவு காட்சிகள் கிடைக்கும். பாபா ஒவ்வொருவருக்கும் நீங்கள் இப்படி இப்படி வேலைகளைச் செய்தீர்கள் என காண்பிப்பார். ஆரம்பத்தில் நீங்கள் சாட்சாத்காரம் செய்திருக்கிறீர்கள். தண்டனைகள் யார் அடைந்தனரோ அவர்கள் மிகவும் கத்தினர். உங்களுக்கு காண்பிப்பதற்காக இவரின் 100 மடங்கு தண்டனையை துண்டித்தார் என பாபா கூறுகின்றார். பாபாவின் சேவையில் தடை வரும் படி வேலைகளைச் செய்யக் கூடாது. கடைசியில் கூட அனைத்தும் உங்களுக்கு சாட்சாத்காரம் கிடைக்கும். இப்படி இப்படி எல்லாம் நீங்கள் பாபாவின் சேவையில் தடைகளை ஏற்படுத்துகிறீர்கள், அசுர சம்பிரதாயம் அல்லவா? யார் தடைகளை ஏற்படுத்தினரோ அவர்களுக்கு நிறைய தண்டனை கிடைக்கும். சிவ பாபாவினுடைய மிகப்பெரிய சபையாகும். வலதுகரமாக தர்மராஜ் இருக்கிறார். அது எல்லைக்குட்பட்ட தண்டனையாகும். இங்கேயோ 21 பிறவிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது. பதவி குறைந்துப் போய்விடுகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் பாபா புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். எங்களுக்குத் தெரியாது என யாரும் கூறக் கூடாது. ஆகையால் பாபா அனைத்து எச்சரிக்கைகைளையும் கொடுத்துக் கொண்டி ருக்கிறார். ஒவ்வொரு சென்டரிலும் எத்தனை பேர் ஓடிப் போய்விடுகிறார்கள், பாருங்கள், துன்புறுத்துகிறார்கள், விகாரிகள் ஆகிவிடுகிறார்கள். பள்ளியில் முழுமையாகப் படிக்க வேண்டும். இல்லையென்றால் என்ன பதவி அடைவீர்கள்? பதவியில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எப்படி இங்கே துக்கதாமத்தில் சிலர் ஜனாதிபதியாக, சிலர் பணக்காரராக, சிலர் ஏழையாக இருக்கிறார் களோ அவ்வாறே சுகதாமத்திலும் கூட பதவியில் வரிசைக்கிரமம் இருக்கும். யார் இராயல், புத்திசாலி குழந்தைகளாக இருப்பார்களோ அவர்கள் பாபாவிடமிருந்து முழு சொத்தும் அடைய முயற்சி செய்வார்கள். மாயாவுடன் குத்து சண்டை ஏற்படுகிறது அல்லவா? மாயா மிகவும் பிரபலமானது. வெற்றி தோல்வி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. எவ்வளவு பேர் வருகிறார்கள். பிறகு துரோகி ஆகிப் போகிறார்கள். போகப் போக தோல்வி அடைந்துவிடுகிறார்கள். குடும்பத்தில் இருந்து தூய்மையாக இருக்கலாம் என ஒருபோதும் கேட்டதில்லையே? இது எப்படி முடியும் என பலர் கூறுகிறார்கள். காமம் மிகப்பெரிய எதிரி என்பது பகவான் வாக்கு அல்லவா? கீதையில் கூட இருக்கிறது அல்லவா? பகவானுக்குப் பதிலாக கிருஷ்ணரின் பெயரைப் போட்டுவிட்டார்கள். கிருஷ்ணரை தேவதை என்றுக் கூறமாட்டார்கள். அவர் தேவதா தர்மம் அல்லவா? மற்ற தேவதைகள் சூட்சும வதனவாசிகள் ஆவர். மற்றவர்கள் தெய்வீக குணத்தைச் சார்ந்த மனிதர்கள் ஆவர். சத்யுகத்தில் தெய்வீக குணத்தை உடையவர், கலியுகத்தில் அசுர குணங்களை உடையவர் களாக இருக்கின்றனர். அசுர குணங்களை உடையவர்கள் தெய்வீக குணங்கள் உடையவர்களின் புகழ் பாடுகிறார்கள். எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது? இப்போது நாம் எப்படி இருந்தோம், எப்படி மாறிக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். இங்கே நீங்கள் அனைத்து குணங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். சதோகுணமான உணவு வகைகளையே சாப்பிட வேண்டும். தேவதைகளுக்கு என்னப் படைக்கிறார்கள் என பார்க்க வேண்டும். ஸ்ரீ நாத் துவாராவில் சென்று பாருங்கள். எவ்வளவு செழிப்பான சுத்தமான உணவைப் படைக்கிறார்கள். அங்கே இருப்பவர்கள் வைஷ்ணவர்கள். மேலும் ஜகந்நாத் புரியில் சென்று என்ன கிடைக்கிறது என பாருங்கள். சாதம். அங்கே வாம மார்க்கத்தின் மிகவும் மோசமான உருவங்கள் உள்ளன. அரசாட்சி இருந்தபோது 36 வகையான உணவுகள் கிடைத்தது. எனவே, ஸ்ரீநாத் துவாராவில் மிகவும் உயர்ந்த வகையில் செய்கிறார்கள். பூரி, ஸ்ரீநாத் தனித்தனியாகும். பூரி கோவிலில் தேவதைகளின் உடையில் மிகவும் மோசமான சித்திரங்கள் உள்ளன. எனவே, பிரசாதம் கூட அவ்வளவு நன்றாக இருப்பதில்லை. வெறும் சாதத்தை மண்பானையில் படைக்கிறார்கள். நெய் கூட ஊற்றுவதில்லை. இந்த வித்தியாசத்தைக் காண்பிக்கிறார்கள். பாரதம் எப்படி இருந்தது! பிறகு எப்படி ஆகிவிட்டது? இப்போது பாருங்கள் நிலைமை எப்படி ஆகிவிட்டது? முழுமையாக உணவும் கிடைப்பதில்லை. அவர்களின் திட்டம் மற்றும் சிவபாபாவின் திட்டத்தில் இரவு பகல் வித்தியாசம் உள்ளது. அவர் களின் திட்டங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப் போகும். இயற்கை சீற்றங்கள் நடக்கும். தானியம் போன்ற எதுவும் கிடைக்காது. மழையைப் பாருங்கள். சில இடங்களில் மிகவும் பொழிகிறது. சில இடங்களில் முற்றிலும் பொழிவதில்லை. எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இச்சமயம் தத்துவங்கள் கூட தமோபிரதானமாகி இருப்பதால் மழை கூட முறையற்ற நேரத்தில் பொழிகிறது. புயலும் தமோபிரதானமாக இருக்கிறது. சூரியனின் வெப்பமும் எப்படி தாக்கும் என்று கேட்காதீர்கள். இந்த இயற்கை சீற்றங்கள் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடையது வினாசக் காலத்தில விபரீத புத்தியாகும். உங்களுடையது பாபாவுடன் அன்பான புத்தியாகும். அறியாமை காலத்தில் கூட நல்ல குழந்தைகளிடம் தாய் தந்தை அன்புடன் இருப்பார்கள். ஆகவே பாபாவும் கூறுகின்றார். வரிசைக் கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப அன்பு நினைவுகள்..... எவ்வளவுக் கெவ்வளவு சேவை செய்கிறீர்களோ..... தொண்டும் செய்ய வேண்டும் அல்லவா? முக்கியமாக பாரதம் மொத்தத்தில் உலகம் ஆகும். பாரதத்தை சொர்க்கமாக மாற்ற வேண்டும். மற்ற அனைவரையும் சாந்திதாமத்திற்கு அனுப்பி விட வேண்டும். பாரதத்திற்கு சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. மற்ற அனைவருக்கும் முக்தியின் சொத்து கிடைக்கிறது. அனைவரும் சென்றுவிடு வார்கள். அய்யோ, அய்யோ என்பதற்குப் பிறகு வெற்றியின் முழக்கம் ஏற்படும். எவ்வளவு அய்யோ, அய்யோ என வருவார்கள். இதுவே, இரத்தக்களறியின் விளையாட்டாகும். இயற்கை சீற்றங்களும் வரும். அனைவரும் இறக்கத்தான் வேண்டும்.
முழுமையாக முயற்சி செய்யுங்கள் என பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். பாபாவிடம் எப்போதும் கட்டளைக்குக் கீழ் படிந்தவராக, உண்மை உள்ளவராக மாற வேண்டும். சேவை செய்பவராக மாற வேண்டும். யார் போன கல்பத்தில் எப்படி சேவை செய்தார்களோ அதனுடைய காட்சிகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டிருப் பீர்கள். நீங்கள் இப்போது சுயதரிசன சக்கரதாரி ஆகி உள்ளீர்கள். எப்போதும் புத்தியில் சுயதரிசன சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்க வேண்டும். 84 பிறவிகள் இவ்வாறு எடுத்தோம். இப்போது நாம் வீட்டிற்குத் திரும்பப் போகிறோம். தந்தையும் நினைவில் இருக்கட்டும். வீடும் நினைவில் இருக்கட்டும். சத்யுகம் கூட நினைவில் இருக்கட்டும். முழு நாளும் புத்தியில் இதே சிந்தனை இருக்க வேண்டும். இப்போது நாம் உலகத்தின் மகாராஜ் குமார் ஆகப் போகிறோம். நாம் ஸ்ரீலஷ்மி அல்லது ஸ்ரீ நாராயணன் ஆவோம். போதை ஏற வேண்டும் அல்லவா? பாபாவிற்கு போதை இருக்கிறது. பாபா தினந் தோறும் இந்த (இலஷ்மி-நாராயணன்) படத்தைப் பார்க்கின்றார். உள்ளுக்குள் போதை இருக்கிறது அல்லவா? நாளை நாம் சென்று ஸ்ரீ கிருஷ்ணர் ஆவோம். பிறகு சுயம்வரத்திற்கு பின் ஸ்ரீநாராயணன் ஆவோம். அப்படியே ஆகட்டும். நீங்களும் மாறுவீர்கள் அல்லவா? இதுவே இராஜயோகம் ஆகும். பிரஜா யோகம் கிடையாது. ஆத்மாக்களுக்கு மீண்டும் தங்களுடைய இராஜ்ய பாக்கியம் கிடைக்கிறது. குழந்தைகள் இராஜ்யத்தை இழந்து விட்டீர்கள். இப்போது மீண்டும் இராஜ்யத்தை அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக இந்த படங்களை பாபா உருவாக்குகிறார். 21 பிறவிகளுக்கு நாம் சொர்க்கத்தின் இராஜ்ய பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு எளிதாக இருக்கிறது. இந்த சிவபாபா, இந்த பிரஜாபிதா பிரம்மா மூலமாக இராஜ யோகத்தைக் கற்பிக்கின்றார். பிறகு நாம் சென்று இவ்வாறு மாறுவோம். பார்ப்பதனால் தான் மகிழச்சியின் அளவு அதிகரிக்கிறது. நாம் பாபாவின் நினைவில் இருப்பதால் உலகத்தில் இராஜ குமார் ஆவோம். எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். நாமும் படித்துக் கொண்டிருக்கிறோம். நீங்களும் படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த படிப்பிற்கு பிறகு நாம் சென்று இவ்வாறு மாறுவோம். அனைத்திற்கும் ஆதாரம் படிப்பாகும். எவ்வளவு படிப்பீர்களோ அவ்வளவு வருமானம் இருக்கும் அல்லவா? சில மருத்துவர்கள் ஒரு நோயாளிக்கே லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் அளவிற்கு புத்திசாலியாக இருப்பார்கள் என பாபா தெரிவித்துள்ளார். வக்கீல்களிலும் அவ்வாறு இருக்கிறார்கள். சிலர் மிகவும் சம்பாதிக்கிறார்கள். சிலருக்கு பாருங்கள் அணிந்திருக்கும் கோட் கூட கிழிந்து போயிருக்கும். இதுவும் அப்படியே. ஆகவே தான் பாபா, குழந்தைகளே எந்த தவறும் செய்யாதீர்கள் என அடிக்கடி கூறுகிறார். எப்போதும் ஸ்ரீமத் படி செல்லுங்கள். ஸ்ரீஸ்ரீ சிவபாபா வினால் நீங்கள் சிரேஷ்டமாகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பல முறை பாபாவிடமிருந்து சொத்து அடைந்துள்ளீர். பிறகு இழந்துள்ளீர். 21 பிறவிகளுக்கான சொத்து அரைக் கல்பத்திற்குக் கிடைக்கிறது. அரைக் கல்பம் 2500 வருடங்கள் சுகத்தை அடைகிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உள்ளும் புறமும் உண்மையாக இருக்க வேண்டும். படிப்பில் ஒருபோதும் தவறு செய்யக் கூடாது. ஒருபோதும் சந்தேக புத்தியுடையவராகி படிப்பை விட்டு விடக் கூடாது. சேவையில் தடையாக இருக்கக் கூடாது.
2. நாம் தூய்மையின் பலத்தால் ஸ்ரீமத் படி தங்களின் உடல், மனம், பொருளின் சகயோத்தால் 21 பிறவிகளுக்கு பாரதத்தை உயர்ந்த டபுள் கிரீடம் உடையதாக மாற்றும் சேவை செய்துக் கொண்டிருக்கின்றோம் என்ற மகிழ்ச்சி நிறைந்த செய்தியை அனைவருக்கும் சொல்லுங்கள்.