ஓம் சாந்தி. பாடலில் உத்திரவாதம் யாருடையதாக இருந்தது? தாய்லிதந்தையிடம் குழந்தைகளின் உறுதிமொழிலி பாபா, எங்களுக்கு நீங்கள் ஒருவர் தான், வேறு யாரும் இல்லை. எவ்வளவு உயர்ந்த குறிக்கோள்! அத்தகையசிரேஷ்டமான தந்தையின் ஸ்ரீமத்படி யாராவது நடந்து கொள்வார் களானால் நிச்சயமாக உயர்ந்த பதவி பெறுவார்கள் என்பது உறுதி. ஆனால் புத்தி சொல்கின்றது, மிக உயர்ந்த குறிக்கோளைப் பார்க்க முடிகின்றது என்று. கோடியில் சிலர், அந்தச் சிலரிலும் ஒரு சிலர் மட்டுமே மாலையில் மணி ஆகிறார்கள். தாயும் தந்தையும் நீயே எனச் சொல்லவும் செய் கிறார்கள். ஆனால் மாயா அவ்வளவு கொடியது, அதனால் உறுதிமொழியின் படி நடப்பது கஷ்ட மாகின்றது, நான் உண்மையிலேயே தாய்-தந்தையினுடையவனாக ஆகியிருக்கிறேனா? என்று பாபா சொல்கிறார், இல்லை என்று. ஒவ்வொருவரும் தன்னைத் தான் கேட்டுக் கொள்ள முடியும் மிகவும் சிலர் தான் அவ்வாறு உள்ளனர். அதனால் தான் பாருங்கள், மாலை எத்தனை பேருக்கு உருவாகின்றது! இத்தனை கோடியில் 8 மணிகள் உடையதாக மட்டுமே வைஜயந்தி (வெற்றி) மாலை உருவாகின்றது! அநேகர், சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக இருக்கின்றனர். அதனால் பாபாவும் சொல்கிறார் - பாருங்கள் எப்படி அதிசயமாக உள்ளது! பாபா எவ்வளவு அன்போடு சொல்லிப் புரிய வைக்கிறார்! ஆனால் நல்ல குழந்தைகள் மிகக் கொஞ்சமாகவே வெளிப் படுகின்றனர், (மாலையின் மணிகள்). குழந்தைகளிடம் அந்த அளவு சக்தி இல்லை, ஸ்ரீமத்படி நடப்பதற்கு. ஆகவே நிச்சயமாக இராவணனின் வழிப்படி தான் நடக்கின்றனர். அதனால் இவ்வளவு உயர்ந்த பதவி பெற முடிவதில்லை. அபூர்வமாக வெகு சிலரே மாலையின் மணிகளாக ஆகிறார் கள். அவர்களும் அன்பான நல்ல குழந்தைகள், மறைந்திருப்பதில்லை. அவர்கள் மனதில் இடம் பிடித்து அமர்கின்றனர். இரவும் பகலும் சேவை பற்றிய அக்கறை மட்டுமே உள்ளது. ஈஸ்வரிய சம்மந்தத்தினால் அன்பு உள்ளது. வெளியில் அவர்களுடைய புத்தி எங்கும் செல்வ தில்லை. அத்தகைய அன்பை தெய்வீகக் குடும்பத்திடம் வைக்க வேண்டும். அஞ்ஞான காலத் திலும் கூட குழந்தைகளுக்கு தந்தையிடமும், சகோதரலி சகோதரிகளுக்கிடையேயும் தங்களுக் குள் மிகுந்த அன்பு உள்ளது. இங்கோ ஒரு சிலருக்கு ஒரு சிறிதும் கூட பாபாவிடம் யோகா இல்லை. உறுதியோ அநேகர் எடுக்கின்றனர். பக்தி மார்க்கத்தில் பாடுகின்றனர். இப்போதோ குழந்தைகள் முன்னிலையில் உள்ளனர். எண்ணிப் பார்க்கப்படுகின்றதுலி பக்தி மார்க்கத்தில் பாடியே வந்துள்ளனர், எவ்வளவு அன்போடு நினைவு செய்கின்றனர்! ஆனால் இங்கோ நினைவே செய்வதில்லை. பாபாவுடையவர்களாக ஆவதால் மாயா விரோதி ஆக்கிவிடுகின்றது. புத்தி வெளியில் சென்றுவிடுகிறது என்றால், மாயா நன்றாகவே கீழே விழச்செய்து விடுகின்றது., நாம் செய்வது அனைத்தும் கீழே விழுவதற்காகவே செய்கிறோம் என்று அவர்கள் தாமே புரிந்து கொள்வதில்லை. தங்களுடைய வழிப்படி சென்று கீழே விழுந்து கொண்டே இருக்கின்றனர். நாம் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை. கொஞ்சம் குறைகளோ குழந்தை களிடம் இருக்கின்றன தானே? சொல்வது ஒன்று, ஆனால் அவர்கள் செய்வது வேறொன்று. இல்லை யென்றால் பாபாவிட மிருந்து எவ்வளவு உயர்ந்த ஆஸ்தி கிடைக்கின்றது! உண்மை யோடு பாபாவின் சேவையில் எவ்வளவு ஈடுபட்டிருக்க வேண்டும்! ஆனால் மாயா எவ்வளவு துஷ்டத் தனமானது! கோடியில் சிலர் பாபாவை முழுமையாக அறிந்து கொள்கின்றனர். பாபா சொல்கிறார், கல்பலிகல்பமாக இப்படித்தான் நடைபெறுகின்றது. முழுமையான உண்மை யுள்ளவராக சொல்படி நடப்பவராக இல்லாத காரணத்தால் பாவம், அவர்களின் பதவி அதுபோல் ஆகிவிடுகின்றது. சொல்லவும் செய்கிறார்கள், பாபா நாங்கள் இராஜயோகம் கற்றுக்கொண்டு நரனிலிருந்து நாராயண னாக, நாரியிலிருந்து லட்சுமியாக ஆவோம். ராம்லிசீதா ஆகமாட்டோம். கை உயர்த்தவும் செய்கிறார் கள். ஆனால் நடத்தையும் அதுபோல் இருக்க வேண்டும் இல்லையா? எல்லையற்ற தந்தை ஆஸ்தி தருவதற்காக வந்திருக்கிறார். அவருடைய ஸ்ரீமத் படி எவ்வளவு நடக்க வேண்டும்! ஆனால் அநேகர் உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், நாங்கள் ஸ்ரீமத் படி நடக்க மாட்டோம் என்று. அவர்கள் மறைந்திருப்பதில்லை. யாருடைய அதிர்ஷ்டத்திலாவது இல்லை என்றால் தேக அபிமானம் முதலில் அடி கொடுக்கிறது, பிறகு காமம். காமம்இல்லை என்றால் கோபம், பேராசை உள்ளது. இவை அனைத்துமே விரோதிகள்தான். மோகமும் அத்தகைய ஒரு பொருள், முற்றிலும் அழிவை ஏற்படுத்தி விடுகின்றது. பேராசையும் கூடக் குறைவானதல்ல. மிகக் கடுமையான விரோதியாகும். ஒன்றுக்கும் உதவாத பொருளைத் திருடுவார்கள். அதுவும் பேராசை தானே? திருடுகின்ற மிக அசுத்தமான பழக்கம் உள்ளது. உள்ளுக்குள் மனம் அரித்துக் கொண்டே இருக்க வேண்டும், நாம் பாவம் செய்து கொண்டே இருக்கிறோம் என்றால் என்ன பதவி பெறுவோம் என்று. சிவபாபாவின் யக்ஞத்தில் வந்து பாபாவிடம் இத்தகைய காரியத்தை எப்படிச் செய்ய முடியும்? மாயா மிகவும் தலைகீழான காரியத்தைச் செய்விக்கிறது. எவ்வளவு தான் சொல்லிப் புரிய வைத்தாலும் பழக்கம் விட்டுப்போவதில்லை. சிலர் பெயர்லி ரூபங்களில் (தனி நபர் மீது) சிக்கிக் கொள்கின்றனர். தேக அபிமானத்தின் காரணத்தால் பெயர்லிரூபங்களிலும் வந்து விடுகின்றனர். ஒவ்வொரு சென்டர் பற்றியும் பாபாவுக்குத் தெரியும் இல்லையா? பாபாவும் என்ன செய்வார்? சொல்லிப் புரிய வைக்க வேண்டியுள்ளது. எவ்வளவு சென்டர்கள்! பாபாவிடம் எவ்வளவு செய்திகள் வருகின்றன! கவலை இருக்கத் தான் செய்கிறது இல்லையா? பிறகு சொல்லிப் புரிய வைக்க வேண்டியுள்ளது. மாயாவும் குறைந்ததல்ல. மிகவும் தொந்தரவு செய்கின்றது. நல்ல-நல்ல குழந்தைகளுக்குச் சொல்லப்படுகின்றது - அதிகம் பேசுவோர் அதிக துக்கம் பெறுவார்கள். இங்கோ துக்கத்தின் விஷயம் கிடையாது. கல்பத்திற்கு முன்பும் கூட இதுபோல் நடந்துள்ளது. ஈஸ்வர னுடையவராக ஆகிய பிறகும் கூட மாயாவின் வசமாக ஆகிவிடுகின்றனர். ஏதேனும் விகர்மம் செய்து விடுகின்றனர். அதனால் பாபா சொல்கிறார், உறுதிமொழியோ அநேகக் குழந்தைகள் செய்கின்றனர். பாபா, நான் உங்கள் ஸ்ரீமத்படி நிச்சயமாக நடப்பேன் என்று. ஆனால் நடப்பதில்லை. அதனால் மாலை பாருங்கள், எவ்வளவு சிறியதாக உருவாகின்றது! மற்றதெல்லாம் பிரஜைகள். எவ்வளவு பெரிய குறிக்கோள்! இதில் மனதின் தூய்மை அதிகம் வேண்டும். பழமொழியும் உள்ளது. உண்மை இருந்தால் மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியில் நடனமாடும். பாபாவுடன் உண்மை யுள்ளவர்களாக நடந்து கொள்வார் களானால் சத்யுகத்தில் கிருஷ்ணருடன் கூட நாட்டிய மாடுவார்கள். சத்யுகத்தில் கிருஷ்ணரின் நாட்டியம் புகழ் பெற்றது. ராசலீலா என்பது ராதை-கிருஷ்ணருக்குத் தான் காட்டுகின்றனர். பின்னால் ராமலீலா காட்டுகின்றனர். ஆனால் நம்பர் ஒன்னில் ராதைலிகிருஷ்ணரின் ராசலீலா உள்ளது. ஏனென்றால் இச்சமயம் அவர்கள் பாபாவிடம் மிகவும் உண்மை யுள்ளவர்களாக ஆகிறார்கள். ஆகவே எவ்வளவு உயர்ந்த பதவி பெறுகிறார்கள்! கையையோ அதிகம் உயர்த்துகிறார்கள். ஆனால் மாயா எப்படிப்பட்டது! உறுதிமொழி எடுக் கிறார்கள் என்றால் அதன்படி நடக்க வேண்டும் இல்லையா? மாயாவின் பூதங்களை விரட்ட வேண்டும். தேக அபிமானத்தின் பின்னால் அனைத்து பூதங்களும் வந்து ஒட்டிக் கொள்கின்றன. பாபா சொல்கிறார், ஆத்ம அபிமானி ஆகி பாபாவை நினைவு செய்யுங்கள். அதிலும் கூட அதிகாலையில் அமர்ந்து ஆன்மீக உரையாடல் செய்யுங்கள். பாபாவுக்கு மகிமை செய்யுங்கள். பக்தி மார்க்கத்தில் நினைவு செய்கின்றனர், ஆனால் மகிமையோ யாருக்கும் இல்லை. கிருஷ்ணரை நினைவு செய்வார்கள். மகிமை செய்வார்கள்லிவெண்ணெய் திருடினார், அவர்களை விரட்டினார், அகாசுரன் பகாசுரனைக் கொன்றார், இதைச் செய்தார் என்றெல்லாம். அவ்வளவு தான், வேறு என்ன சொல்வார்கள்? இவை அனைத்தும் பொய்கள். சிறிதளவு கூட உண்மை என்பது இல்லை. பிறகு வழி என்ன சொல்வார்கள்? முக்தி பற்றியே தெரியாது. இச்சமயம் முழு உலகத் திலும் இராவண ராஜ்யம் உள்ளது. அனைவரும் இச்சமயம் பதீத்தமாக உள்ளனர். மனிதர்கள் பிரஷ்டாச்சாரம் (தீய ஒழுக்க்கம்) என்பதின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளவில்லை. சத்யுகத்தில் நிர்விகாரி தேவதைகள் இருந்தனர் என்பதைக் கூட அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. சர்வகுண சம்பன்ன, 16 கலை சம்பூர்ண........ என்று பாடவும் செய்கிறார்கள். ஆனால் பிறகும் சொல்லி விடுகிறார்கள் - அங்கும் இராவணன், கம்சன், ஜராசந்த் முதலானோர் இருந்தார்கள் என்று. பவித்திரமாகுங்கள் என்று சொல்லப்படுகின்றது. அப்போது சொல்கிறார்கள் தேவதைகளுக்குக் கூடக் குழந்தைகளெல்லாம் இருந்தார்கள் இல்லையா என்று. அட, நீங்கள் தானே பாடுகிறீர்கள் சர்வகுண சம்பன்ன, சம்பூர்ண நிர்விகாரி என்று, பிறகு விகாரத்தின் விஷயம் எப்படி இருக்க முடியும்? நீங்களும் நிர்விகாரி ஆகுங்கள் என்றால், சிருஷ்டி எப்படி விருத்தியாகும், குழந்தைகள் எப்படிப் பிறப்பார்கள் என்று கேட்கிறார்கள். கோவில்களில் போய் மகிமை பாடுகிறார்கள். வீட்டுக்கு வந்ததும் அந்த மகிமையும் மறந்து போகிறது. நீங்கள் சோதித்துப் பாருங்கள். வீட்டில் போய் சொல்லிப் புரிய வைப்பீர்களானால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அங்குள்ள விஷயம் அங்கேயே இருந்து விடுகிறது. பவித்திர மாகுமாறு சொன்னால் சொல்வார்கள், ஐயய்யோ! இது இல்லாமல் உலகம் எப்படி நடைபெறும்? விகாரமற்ற உலகம் எப்படி நடைபெறுகிறது என்பதைப் பற்றி அவர்களுக்குத் தெரியவே தெரியாது.
குழந்தைகள் பாடலையும் கேட்டீர்கள். உறுதிமொழி செய்கிறார்கள் உங்களுடைய வழிப்படி நடப்போம். ஏனென்றால் ஸ்ரீமத் படி நடப்பதால் நன்மை. பாபாவோ சொல்லிக் கொண்டே இருக்கிறார் - ஸ்ரீமத்படி நடந்து செல்லுங்கள், இல்லையென்றால் பின்னால் மரணம் ஏற்படும். பிறகு தீர்ப்பாயத்தில் அனைத்தையும் சொல்ல வேண்டியது வரும். தனது வழிப்படி நடந்து நீ தான் இந்தப் பாவத்தைச் செய்திருக்கிறாய். பிறகு கல்பலிகல்பமாகக் கறை படிந்து விடும். ஒருமுறை ஃபெயிலாகி விட்டால் இரண்டாவது மூன்றாவது வருடம் படிப்பார்கள் என்பது இல்லை. இப்போது ஃபெயிலாகி விட்டால் கல்பலிகல்பமாக அப்படியே ஆகிக்கொண்டிருக்கும். அதனால் மிகுந்த முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்படி நடந்து செல்ல வேண்டும். உள்ளுக் குள் எந்த ஒரு அழுக்கும் இருக்கக் கூடாது. இதயத்தை சுத்தமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நாரதருக்கும் சொன்னார்கள் இல்லையாலிஉன்னுடைய முகத்தைக் கண்ணாடியில் போய்ப்பார் என்று? அப்போது பார்த்தார், நானோ குரங்கு போல் இருக்கிறேன் என்று. இது ஓர் உதாரணம். தன்னைத் தான் கேட்டுக் கொள்ள வேண்டும் - நான் எதுவரை ஸ்ரீமத் படி நடந்து கொண்டிருக் கிறேன்? புத்தியோகம் வெளியில் எங்காவது அலையாமலிருக்கிறதா? தேக அபிமானத்தில் இல்லா திருக்கிறேனா? என்று ஆத்ம அபிமானி என்றால் சேவையில் ஈடுபட்டிருப்பார்கள். எல்லாமே யோகாவின் ஆதாரத்தில் தான் உள்ளது. பாரதத்தின் யோகம் புகழ் பெற்றது. அதையோ நிராகார் தந்தை தான் நிராகார் குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வைக்கிறார். இது சகஜ இராஜயோகம் எனப்படுகின்றது. நிராகார் தந்தை சகஜ இராஜயோகம் கற்பித்தார் என்று எழுதப் பட்டும் உள்ளது. கிருஷ்ணரின் பெயரைப் போட்டுவிட்டனர், அவ்வளவு தான். நீங்கள் அறிவீர்கள், நாம் இதுபோல் லட்சுமி-நாராயணர் ஆகவேண்டும். புண்ணிய ஆத்மா ஆகவேண்டும் பாவத்தின் விஷயம் எதுவும் இல்லை. பாபாவின் நினைவிலேயே இருந்து அவருடைய சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். இவ்வளவு உயர்ந்த பதவி பெறவேண்டுமானால் ஏதேனும் முயற்சி செய்வார்கள் இல்லையா? சந்நியாசிகள் முதலானோர்களோ சொல்லி விடுகிறார்கள், இல்லறத்தில் இருந்து கொண்டே தாமரை மலர் போல் இருப்பதென்பது முடியாத காரியம் என்று. சம்பூர்ணமாவதில் அநேகர் ஃபெயிலாகி விடுகின்றனர். ஏனென்றால் நினைவு செய்ய முடிவதில்லை. இப்போது புராதன யோகத்தை பாபா கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். பாபா சொல்கிறார், யோகமோ நான் சுயம் வந்து கற்றுத் தருகிறேன். இப்போது என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் என்னிடம் வந்தாக வேண்டும். இது நினைவு யாத்திரையாகும். உங்களுடைய இனிய அமைதியான வீடு அது. இதையும் அறிவீர்கள், நாம் பாரதவாசிகள் தான் பாரதத்தில் வந்து முழு ஆஸ்தி பெறுவோம். ஆக, பாபா அடிக்கடி சொல்லிப் புரிய வைக்கிறார், உறுதிமொழியை முழுமையாகப் பின்பற்றுங்கள். தவறு நடந்து விட்டால் பாபாவிடம் மன்னிப்புப் பெறவேண்டும்.
பாருங்கள், இந்தக் குழந்தை மன்னிப்புக் கேட்பதற்காகவே குறிப்பாக பாபாவிடம் வந்திருக்கிறது. கொஞ்சம் தவறு நடந்து விட்டது என்றவுடன் ஓடி வந்துள்ளது. ஏனென்றால் மனம் உறுத்துகிறாது. அதனால் பாபாவின் முன்னிலையில் போய்ச் சொல்ல வேண்டும் என உணர்ந்துள்ளது. பாபா மீது எவ்வளவு மரியாதை! அநேகக் குழந்தைகள் இதைவிட அதிகமாகத்தவறு செய்துகொண்டே இருக் கின்றனர், தெரிவதே இல்லை. நான் சொல்கிறேன், ஆஹா குழந்தை! மிக நல்லது என்று. சிறிய தவறுக்காக மன்னிப்புக் கேட்க வந்துள்ளது. பாபா எப்போதுமே சொல்வது என்னவென்றால், பிழையைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அந்தப் பாவம் விருத்தியடைந்து கொண்டே போகும். பிறகு கீழே விழுந்து விடக்கூடும். முக்கியமாக யோகத் தினால் தான் காப்பாற்றப்படுவார்கள். அந்த யோகத்தில் தான் மிகவும் குறைவு உள்ளது. ஞானமோ மிகவும் சுலபமானது. இதுவோ ஒரு கதை போன்றதாகும். இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன் யாருடைய ராஜ்யம் இருந்தது, எப்படி ராஜ்யம் செய்தார்கள்? எவ்வளவு காலம் ராஜ்யம் செய்தார்கள், பிறகு ராஜ்யம் செய்துலிசெய்து எப்படி விகாரங்களில் சிக்கினார்கள்? யாருமே எதிர்த்துப் போர் தொடுக்கவில்லை. போர் தொடுப்பதோ பின்னால் வைசியரான போது (துவாபர யுகத்தில்). அவர்களிடமிருந்து இராவணன் இராஜ்யத்தைப் பறித்துக் கொண்டான். நீங்கள் பிறகு இராவணனை வெற்றி கொண்டு ராஜ்யத்தை அடைகிறீர்கள். இதுவும் யாருடைய புத்தியிலும் பதிவது கஷ்டமாக உள்ளது. பாபாவிடம் முழு உணமையுள்ள வராக, சொல்படி நடப்பவராக இருப்பவர்களுக்கு மட்டும் தான் அதுபோல் பதிகிறது. அஞ்ஞான காலத்திலும் கூட யாராவது உண்மையுள்ளவர்களாக கட்டளைப்படி நடப்பவராக உள்ளனர். சில வேலைக்காரர்கள் கூட மிகவும் நேர்மையானவர்களாக உள்ளனர். லட்சம் ரூபாய் கீழே கிடந்தாலும் எடுக்க மாட்டார்கள். சொல் கிறார்கள் சேட்ஜி (முதலாளி) சாவிகளை விட்டுச் சென்று விட்டார். நான் பாதுகாப்பதற்காக அமர்ந்துள்ளேன் என்று. இப்படியும் இருக்கிறார்கள். பாபாவோ மிக நன்றாக சொல்லிப் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். விவேகம் சொல்கிறது, இந்த தவறின் காரணத்தால் மாலையின் மணியாக ஆகமாட்டோம் என்று. பிறகு அங்கே போய் தாச தாசிகளாக (வேலைக்காரர்கள்) ஆவார்கள். படிக்காத காரணத்தால் இந்த நிலைமை ஏற்படும். ஸ்ரீமத்படி நடப்பதில்லை. பாபா சொல்லிப் புரிய வைக்கிறார், உங்களுடைய குறிக்கோள் எல்லாமே யோகத்தினுடயது. மாயா முற்றிலும் மூக்கைப் பிடித்து யோகா செய்யவிடாதவாறு ஆக்கிவிடுகிறது. யோகா இருக்கு மானால் சேவை மிக நன்றாக இருக்கும். பாவங்கள் பற்றிய பயம் இருக்க வேண்டும். எப்படி இந்தக் குழந்தையோ மிக நல்ல குழந்தை. உண்மை என்றால் இதுபோல் இருக்க வேண்டும். நல்ல நல்ல குழந்தைகளைவிட இதன் பதவி நன்றாக இருக்கும். மேலும் யார் சேவை செய்து கொண்டி ருக்கிறார்களோ, அவர்கள் எங்காவது சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். எதையும் சொல்வது இல்லை. சொல்வதால் விடுவதும் இல்லை. பாடலிலோ பாருங்கள், உறுதி எடுத்துக் கொள்கிறார்கள், எது நடந்தாலும் ஒருபோதும் இதுபோல் பிழை செய்ய மாட்டோம் என்று. முக்கியமான விஷயம் தேக அபிமானத்தினுடையது. தேக அபிமானத்தினால் தான் பிழைகள் நேர்கின்றன. அநேகர் தவறுகள் செய்கிறார்கள், அதனால் எச்சரிக்கை தரப்படுகின்றது. பாபாவின் வேலை சொல்லிப் புரிய வைப்பது. புரிய வைக்கவில்லை என்றால் சொல்வார்கள், எங்களுக்குச் சொல்லவில்லை என்று. இதைப்பற்றி ஒரு கதை கூட உள்ளது. பாபாவும் சொல்கிறார், குழந்தைகளே, எச்சரிக்கையாக இருங்கள்.
இல்லையென்றால் மிகுந்த தண்டனை அடைய நேரிடும். பிறகு எங்களுக்கு ஏன் சொல்லவில்லை என்று கேட்கக் கூடாது. பாபா தெளிவாகச் சொல்கிறார், கொஞ்சம் பாவம் செய்தாலும் அதுவே அதிக விருத்தி ஏற்பட்டு விடுகின்றது. பிறகு பாபாவுக்கு முன்பு தலையயைக்கூட நிமிர்த்த முடியாது. பொய் சொல்வதால் என்ன ஓர் அவமானம் என்று வெட்கப்பட வேண்டும். சிவபாபா நம்மை எங்கே பார்க்கப் போகிறார் என நினைக்கக் கூடாது. அஞ்ஞான காலத்திலும் கூட அவர் அனைத்தையும் அறிந்துள்ளார். அதனால் தான் பாவம் மற்றும் புண்ணியத்திற்கான பலனைத் தருகிறார். தெளிவாகக் கூறுகிறார், நீங்கள் பாவம் செய்வீர்களானால் உங்களுக்காக மிகக்கடுமை யான தண்டனை காத்திருக்கிறது. பாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்காக வந்திருக் கிறீர்கள் என்றால் அதற்குப் பதிலாக இரு காதுகளுமே வெட்டப்படுமாறு செய்யக் கூடாது இல்லையா? அவர்கள் சொல்வது ஒன்று, ஆனால் நினைவு செய்வது வேறொருவரை! பாபாவை நினைவு செய்யவில்லை என்றால் அவர்களது கதி என்னவாகும் சொல்லுங்கள். உண்மையானதை உண்பது, உண்மையைப் பேசுவது, உண்மையானதை உடுப்பது....... இதெல்லாம் இப்போதைய விஷயம் தான். இப்போது தான் பாபா வந்து கற்றுத் தருகிறார் எனும்போது அவரிடம் ஒவ்வொரு விஷயத் திலும் உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட உண்மையுள்ள, கட்டளைப்படி நடக்கின்ற குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உண்மையுடன் பாபாவின் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். முழு உண்மையுள்ளவர் களாக, கட்டளைப்படி நடப்பவர்களாக ஆகவேண்டும். ஈஸ்வரிய குடும்பத்திடம் உண்மை யான அன்பு வைக்க வேண்டும்.
2. ஸ்ரீமத்துடன் மன்மத்தை (மனதின் வழிமுறை) அல்லது இராவணனின் வழியைக் கலக்கக் கூடாது. ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை. இந்த மன உறுதியில் திடமாக இருக்க வேண்டும். இதயத்தை சுத்தமாக, பவித்திரமாக ஆக்க வேண்டும்.