ஓம் சாந்தி. இந்த பாட்டில் உங்களை மகிமை செய்து கொள்வதைப் போல் இருக்கிறது. உண்மை யில் தங்களை மகிமை பாடிக் கொள்ளப்படுவதில்லை. இவை அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும், பாரதவாசிகள் மிகவும் புத்திசாலிகளாக இருந்தனர், இப்போது எதுவும் புரியாதவர்களாக ஆகிவிட்டார்கள். இப்போது புத்திசாலி யார்? என்ற கேள்வி வருகிறது. இது எங்கேயும் எழுதப்பட்டிருக்கவில்லையே. நீங்கள் மறைமுகமாக இருக்கிறீர்கள். எவ்வளவு அதிசயமன விசயங்களாக இருக்கிறது. என் மூலம் தான் குழந்தைகள் என்னை தெரிந்து கொள்ள முடியும் என்று பாபா கூறுகின்றார். பிறகு என் மூலமாக அனைத்தையும் தெரிந்து கொள்கிறார் கள். சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் விளையாட்டை புரிந்து கொள்கிறார்கள். வேறு யாரும் தெரிந்திருக்கவில்லை மேலும் ஒரு முக்கியமான தவறு செய்திருக்கிறார்கள், நிராகார பரமபிதா பரமாத்மா சிவனுக்கு பதிலாக கிருஷ்ணருடைய பெயரை போட்டு விட்டார்கள். முதல் நம்பர் சாஸ்திரம் என்று சொல்லப்படுகிற ஸ்ரீமத் பகவத் கீதையே தவறாகி விட்டது ஆகையினால் முதல்-முதலில் பகவான் ஒருவரே என்பதை நிரூபிக்க வேண்டும். பிறகு கீதையின் பகவான் யார்? என்று கேட்க வேண்டும். பாரதத்தினுடைய தர்மம் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மமாகும். ஒரு வேளை புதிய தர்மம் என்று சொல்ல வேண்டும் என்றால் பிராமண தர்மத்தையே சொல்ல வேண்டும். முதலில் குடுமி (உச்சி, உயர்வான) பிராமணர்கள் பிறகு தேவதைகள். உயர்ந்ததிலும் உயர்ந்தது பிராமண தர்மமாகும். இந்த பிராமணர்களை பிரம்மாவின் மூலம் பரமபிதா பரமாத்மா படைக்கின்றார், அதே பிராமணர்கள் தான் பிறகு தேவதைகளாக ஆகிறார்கள். முக்கியமான விசயம் பகவான் அனைவருக்கும் தந்தையாக இருக்கிறார், புதிய உலகத்தைப் படைப்பவராவார். கண்டிப்பாக புதிய உலகத்தைத் தான் படைப்பார் அல்லவா. புதிய உலகத்தில் புதிய பாரதம் இருக்கிறது. அவர் பிறவி எடுப்பதும் பாரதத்திலே ஆகும். பாரதத்தைத் தான் பிரம்மாவின் மூலம் சொர்க்கமாக்குகின்றார். உங்களை தன்னுடையவர்களாக்கி பிறகு மனிதனிலிருந்து தேவதையாக்கு வதற்கு படிப்பிக்கின்றார். முதலில் நீங்கள் சூத்திர வர்ணத்தவர்களாக இருந்தீர்கள் பிறகு பிராமண வர்ணத்தில் வந்துள்ளீர்கள், பிறகு தேவதா வர்ணத்தில் செல்வீர்கள். பின்னால் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு தர்மத்திலிருந்து அனேக தர்மங்களாகி விடுகிறது. எல்லா தர்மங்களுக்கும் கிளைகள் உருவாகி விடுகின்றன, ஒவ்வொரு தர்மத்திலிருந்து கிளைகள் வருகின்றன. மூன்று கிளைகள் இருக்கின்றன அல்லவா. இது தான் முக்கியமானதாகும். ஒவ்வொன்றிலிருந்தும் அதனதனுடைய கிளைகள் வருகின்றன. முக்கியமானது அடித்தளமாகும், பிறகு மூன்று கிளைகள் முக்கியமானதாகும். தண்டு ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினுடையதாகும். அவர்கள் அனைவரும் தான் இப்போது இராஜயோகத்தை கற்றுக் கொண்டிருக் கிறார்கள். தில்வாலா கோயில் மிகவும் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது, அதில் அனைத்து ஞானமும் இருக்கிறது. குழந்தைகள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள், கல்பத்திற்கு முன்பு கூட நீங்கள் இராஜயோக தவம் செய்திருந்தீர்கள். எப்படி கிறிஸ்துவின் நினைவுச்சின்னம் கிறிஸ்துவர்களின் தேசத்தில் இருக் கிறதோ, அதுபோலாகும். அதுபோல் குழந்தைகளாகிய நீங்கள் இங்கே தவம் செய்திருக்கிறீர்கள் ஆகையினால் உங்களுடைய நினைவுச் சின்னமும் இங்கே இருக்கிறது. மிகவும் சுலபமானதாகும். ஆனால் யாரும் தெரிந்திருக்கவில்லை. இவையனைத்தும் கற்பனை என்று சன்னியாசிகள் சொல்லி விடுகிறார்கள், யார் எப்படி கற்பனை செய்கிறார்களோ, அப்படியாகும். இந்த சித்திரம் போன்றவைகளும் கற்பனையினால் உருவாக்கியுள்ளார்கள், என்று உங்களைப் பற்றியும் சொல்கிறார்கள். பாபாவை தெரிந்து கொள்ளாதவரை, கற்பனை என்று தான் நினைக்கிறார்கள். ஞானக்கடல் ஒரு தந்தை தான் அல்லவா. எனவே முக்கியமாக தந்தையின் அறிமுகத்தை அளிக்க வேண்டும். அந்த தந்தை சொர்க்கத்தின் ஆஸ்தியை கொடுக்கின்றார், கல்பத்திற்கு முன்னால் கூட கொடுத்திருந்தார். பிறகு 84 பிறவிகள் எடுக்க வேண்டி யிருக்கிறது. பாரதவாசிகளுக்குத் தான் 84 பிறவிகள் இருக்கிறது. பிறகு சங்கமயுகத்தில் பாபா வந்து இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் பாபாவின் மூலம் புரிந்துள்ளீர்கள். எப்போது நல்ல விதத்தில் புரிந்து கொள்வீர்களோ, புத்தியில் நிற்குமோ அப்போது தான் குஷியும் இருக்கும்.
இந்த படிப்பு தான் வருமானத்திற்கான முக்கிய ஆதாரமாகும். படிப்பின் மூலம் தான் மனிதர்கள் வக்கீல் போன்றவர்களாக ஆகிறார்கள். ஆனால் இந்த படிப்பு மனிதனிலிருந்து தேவதை ஆவதற்காகும். எவ்வளவு பெரிய பலன். இதைப்போன்ற பலனை யாரும் அடைய வைக்க முடியாது. மனிதனிலிருந்து தேவதையாக்கினீர்கள் என்று கிரந்தத்தில் பாடப்பட்டுள்ளது.. ஆனால் மனிதர்களுடைய புத்தி வேலை செய்வதில்லை. கண்டிப்பாக அந்த தேவி-தேவதா தர்மம் மறைந்து விட்டது, ஆகையினால் தான் மனிதனிலிருந்து தேவதையாக ஆனோம் என்று எழுதுகிறார்கள். தேவதைகள் சத்யுகத்தில் இருந்தார்கள். கண்டிப்பாக பகவான் அவர்களை சங்கமயுகத்தில் படைத்திருப்பார். எப்படி படைத்தார்? அதை தெரிந்திருக்கவில்லை. குருநானக் கூட பரமாத்மா வின் புகழ் பாடியுள்ளார். அவரைப் போல் யாரும் புகழ் பாடவில்லை ஆகையினால் தான் பாரதத்தில் கிரந்தம் படிக்கிறார்கள். குருநானக்கின் அவதரிப்பு கலியுகத்தில் நிகழ்கிறது. அவர் தர்மத்தை ஸ்தாபனை செய்பவர் ஆவார். இராஜ்யம் பின்னால் நடந்தது. பாபா இந்த தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்திருக்கிறார். புதிய உலகம் பிராமணர் களுடையது என்றே சொல்லலாம். குடுமி பிராமணர்களுடையதாக இருக்கலாம் ஆனால் இராஜ்யம் தேவி-தேவதை களிலிருந்து ஆரம்பமாகிறது. பிராமணர்களாகிய நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுடைய இராஜ்யம் இல்லை. நீங்கள் உங்களுக்காக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறீர்கள். மிகவும் அதிசயமான விசயங்களாக இருக்கின்றன. மனதர்கள் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. முதல்-முதலில் உங்களுக்கு தெரிந்திருந்தால் உங்களின் மூலம் மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கும். நீங்கள் சூத்திரனிலிருந்து பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள். பிரம்மாவிற்கு கூட இப்போது பாபாவின் மூலம் தெரிய வருகிறது. ஒருவருக்கு சொன்னால் குழந்தைகளுக்கும் சொல்ல வேண்டி யிருக்கிறது. பிரம்மாவின் உடலின் மூலம் குழந்தைகளுக்கு அமர்ந்து புரிய வைக்கின்றார். இது அனுபவத்தின் விசயங்களாகும். சாஸ்திரங்களின் மூலம் யாரும் எதையும் புரிந்து கொள்ள முடியாது. முழு கல்பத்திலும் ஒரே ஒரு முறை இதேபோல் வந்து நான் புரிய வைக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். மற்றும் அனேக தர்மங்களின் வினாசம் மற்றும் ஒரு தர்மத்தை ஸ்தாபனை செய்ய வைக்கின்றேன். இது 5 ஆயிரம் ஆண்டுகளின் விளையாட்டாகும். நாம் 84 பிறவிகள் எடுத்திருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வந்ததாக காட்டுகிறார்கள். பிரம்மா மற்றும் விஷ்ணு யாருடைய குழந்தை கள்? இருவருமே சிவனுடைய குழந்தைகளே ஆவர். அவர் படைப்பவர், அவர்கள் படைப்புகளாவர். இந்த விசயங்களை யாரும் புரிந்து கொள்ள முடியாது. முற்றிலும் புதிய விசயமாகும். பாபாவும் இவை புதிய விசயங்கள் என்று கூறுகின்றார். எந்த சாஸ்திரங்களிலும் இந்த விசயங்கள் இருக்க முடியாது. ஞானக்கடல் தந்தை ஆவார், அவர் தான் கீதையின் பகவான். பக்தி மார்க்கத்தில் சிவஜெயந்தி கூட கொண்டாடு கிறார்கள். சத்யுகம் திரேதாவில் கொண்டாடுவதில்லை. எனவே கண்டிப்பாக சங்கமயுகத்தில் தான் வந்திருப்பார். இந்த விசயங்களை நீங்கள் புரிந்துக் கொண்டே இருக்கிறீர்கள் மற்றும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். புரிய வைக்கக் கூடிய தந்தை யின் மகிமை என்னவோ, அது குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும். நீங்களும் கூட மாஸ்டர் ஞானக்கடலாக ஆக வேண்டும். அன்புக்கடலாகவும், சுகக்கடலாகவும் இங்கேயே ஆக வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. மிகவும் இனிமையானவர்களாக ஆக வேண்டும். முற்றிலும் கசப்பானவர் களாக விஷம் போல் இருந்த நீங்கள் இப்போது நீங்கள் நிர்விகாரி பிராமணர்களாக ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். ஈஸ்வரனுடைய குழந்தைகளாக ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். விகாரியிலிருந்து நிர்விகாரி தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். அரைக்கல்பம் நீங்கள் தூய்மையற்றவர்களாக ஆகி-ஆகி இப்போது முற்றிலும் உளுத்துப் போன நிலையை அடைந்துள்ளீர்கள். மக்கிப்போன துணியை அடித்து துவைத்தால் கிழிந்து நார் - நாராகி விடுகிறது. இங்கேயும் கூட ஞானத்தை கண்டிப்புடன் (அடித்து) சொன்னால் மனமுடைந்து விடுகிறார்கள். ஏதாவது துணி அப்படி அழுக்காகி விட்டால் அதை சுத்தப்படுத்துவதில் நேரம் பிடிக்கிறது. பிறகு அங்கேயும் கூட குறைந்த பதவி கிடைத்து விடுகிறது. பாபா அழுக்கு ஆடையை துவைப்பவர் ஆவார். நீங்களும் அவரோடு உதவியாளர்களாவீர்கள். சலவை தொழிலாளியாக வரிசைகிரமமாக இருக்கிறார்கள். இங்கேயும் கூட வரிசைகிரமம் இருக்கிறது. சலவை தொழிலாளி சரியாக துணியை வெளுக்கவில்லை என்றால் இவன் ஒரு நாவிதன் என்று சொல்வார்கள். இன்றைக்கு துணியை வெளுக்க கற்றுக் கொண்டு விட்டார்கள். முன்பு கிராமங்களில் மிகவும் அழுக்கான துணியை துவைத்தார்கள். இந்த கலை கூட வெளியிலிருந்து வந்ததாகும். வெளியில் உள்ளவர்கள் கொஞ்சம் மரியாதை கொடுக்கிறார்கள். பணம் போன்ற உதவிகளை செய்கிறார்கள். இவர்கள் மிகப்பெரிய குடும்பத்தை (இனம்) சேர்ந்தவர்கள். இப்போது கீழே வீழ்ந்து விட்டார்கள். விழுபவர்கள் மீது இரக்கம் வருகிறது அல்லவா. உங்களை எவ்வளவு செல்வந்தர்களாக ஆக்கியிருந்தேன். மாயை உங்களுடைய நிலையை என்னவாக்கி விட்டது. நாம் வெற்றி மாலையை சேர்ந்தவர் களாக இருந்தோம் பிறகு 84 பிறவிகள் எடுத்து என்னவாகி விட்டோம் என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். அதிசயமாக இருக்கிறது அல்லவா. பாரதவாசிகளாகிய நீங்கள் சொர்க்க வாசியாக இருந்தீர்கள் என்று நீங்கள் புரிய வைக்கலாம். மன்மனாபவ. சிவபகவானுடைய மகா வாக்கியம், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். நினைவு யாத்திரையின் மூலம் உங்களுடைய பாவங்கள் அனைத்தும் அழிந்து விடும். கிருஷ்ணர் கோபியர்களை விரட்டினார், பட்டத்து ராணி யாக்கினார் என்று சாஸ்திரங்களில் எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் படித்துக் கொண்டி ருக்கிறீர்கள், பட்டத்து ராணியாகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இந்த விசயங்களை வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. இப்போது பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைத்துள்ளார். பாபா கூறுகின்றார், நான் கல்பம்-கல்பமாக உங்களுக்குப் புரிய வைக்க வருகின்றேன், முதலில் பகவான் ஒருவர், என்பதை நிரூபித்து பிறகு கீதையின் பகவான் யார் என்பதை சொல்லுங்கள். இராஜயோகத்தை கற்றுக் கொடுத்தது யார்? பகவான் தான் பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை செய்ய வைக்கின்றார் மற்றும் வினாசம் பிறகு பாலனையும் செய்ய வைக்கின்றார். யார் பிராமணர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தான் பிறகு தேவதைகளாக ஆகின்றார்கள். இந்த விசயங்கள் கூட யார் கல்பத்திற்கு முன்பு புரிந்திருந்தார்களோ, அவர்கள் தான் புரிந்துக் கொள்வார்கள். வினாடிக்கு வினாடி இந்த சமயம் வரை என்ன நடந்ததோ அதை புரிந்துக் கொள்வார்கள். நாடகம் என்பதில் நீங்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டும். இப்போது நம்முடைய நிலை அப்படி உருவாக வில்லை என்பதை குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். நேரம் பிடிக்கும். கர்மாதீத் நிலையை அடைந்து விட்டால் பிறகு அனைவரும் நம்பர் ஒன்னில் தேர்ச்சி பெற்று விடுவார்கள் பிறகு சண்டை ஏற்பட்டு விடுகிறது. அவர்களுக்குள் பிரச்சனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆங்காங்கே சண்டைக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக் கிறார்கள். எல்லா பக்கங்களிலும் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் காட்சிகளில் என்ன பார்த்தீர்களோ, அதை நடை முறையில் பார்க்க வேண்டும். வினாசத்தின் காட்சியை பார்த்தீர்கள் அதேபோல் நடைமுறையில் கண்களினால் பார்ப்பீர்கள். ஸ்தாபனையின் காட்சியைப் பார்த்தீர்கள் பிறகு நடைமுறையில் இராஜ்யத்தையும் பார்ப்பீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். இது பழைய உடலாகும். யோகத்தின் மூலம் ஆத்மா தூய்மையாகி விடும், பிறகு இந்த பழைய சரீரத்தையும் விட வேண்டும். 84 பிறவிகளின் சக்கரம் முடிகிறது பிறகு கண்டிப்பாக அனைவருக்கும் புதிய சரீரம் கிடைக்கும். இது புரிந்து கொள்வதற்கு மிகவும் சகஜமான விசயங்களாகும். கலியுகத்திற்குப் பிறகு கண்டிப்பாக சத்யுகம் இருக்கும் என்று புரிய வைக்கவும் முடியும். கண்டிப்பாக அனேக தர்மங்களின் வினாசம் நடக்கும். பிறகு ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனைக்காக பாபா வர வேண்டியிருக்கும். நீங்கள் தேவதைகளாவ தற்காக இப்போது பிராமணர்களாக ஆகி யுள்ளீர்கள். வேறு யாராகவும் இருக்க முடியாது. நாம் சிவபாபாவினுடையவர்களாக ஆகியிருக்கிறோம், சிவபாபா நமக்கு ஆஸ்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறார், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
சிவஜெயந்தி என்றால் பாரதத்திற்கு ஆஸ்தி கிடைத்தது என்பதாகும். சிவபாபா வந்தார், வந்து என்ன செய்தார். இஸ்லாமியர், பௌத்தர்கள் போன்றோர் வந்தார்கள் அவர்களுடைய தர்மத்தை ஸ்தாபனை செய்தார்கள். பாபா வந்து என்ன செய்தார்? கண்டிப்பாக சொர்க்கத்தை ஸ்தாபனை செய்திருப்பார். எப்படி ஸ்தாபனை செய்தார், எப்படி ஸ்தாபனை ஆகிறது என்பதை நீங்கள் இப்போது தெரிந்துள்ளீர்கள். பிறகு சத்யுகத்தில் இதை மறந்து விடுவீர்கள். 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை நாம் அடைந்து விடுகிறோம் என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள். இது நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. இவர் தந்தை, இவர் குழந்தை என்பதை அங்கே புரிந்து கொள்வார்கள். குழந்தைக்கு ஆஸ்தி கிடைக்கிறது. ஆனால் இது இப்போதைக்கான பலனாகும். உண்மையான வருமானத்தை ஈட்டி 21 பிறவிகளுக்கு ஆஸ்தியை இப்போது அடைந்து கொண்டிருக்கிறீர்கள். 84 பிறவிகள் எடுக்கத்தான் வேண்டும். சதோபிரதானத்திலிருந்து பிறகு சதோ ரஜோ தமோவில் வருவீர்கள். இதை நல்ல விதத்தில் நினைவு செய்வதின் மூலம் குஷியும் இருக்கும். புரிய வைப்பதற்கு உழைப்பு (முயற்சி) தேவைப்படுகிறது. புரிந்து கொண்டார்கள் என்றால் அவர்களுக்கு அதிக குஷி ஏற்படுகிறது. எந்த குழந்தைகள் நன்றாகப் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் நிறைய பேருக்கு புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். முட்களை மலர்களாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இது எல்லையற்ற படிப்பாகும். ஆஸ்தியும் எல்லையற்றதாக கிடைக்கிறது. இதில் தியாகமும் எல்லையற்றதாக இருக்க வேண்டும். குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே முழு உலகத்தையும் தியாகம் செய்ய வேண்டும் ஏனென்றால் இந்த பழைய உலகம் அழியப் போகிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டும் ஆகையினால் எல்லையற்ற சன்னியாசம் செய்ய வைக்கின்றார். சன்னியாசிகளினுடையது எல்லைக்குட்பட்ட சன்னியாசமாகும் மற்றும் அவர்களுடையது ஹடயோகமாகும். இதில் சரீரத்தின் விசயம் இருப்பதில்லை. இது படிப்பாகும். மனிதனிலிருந்து தேவதையாவதற்காக பாடசாலையில் படிக்க வேண்டும். இது சிவபகவானுடைய மகாவாக்கியமாகும் – கிருஷ்ணருடைய தாக இருக்க முடியாது. கிருஷ்ணர் ஒருபோதும் புதிய உலகத்தை உருவாக்க முடியாது. அவரை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யும் இறை தந்தை என்று சொல்ல முடியாது. சொர்க்கத்தின் இளவரசன் என்று சொல்லலாம். எனவே புரிந்து கொள்வதற்கும் தாரணை செய்வதற்கும் எவ்வளவு இனிமையான விசயங்களாக இருக்கின்றன. தெய்வீக இலட்சணங்களும் வேண்டும். ஒருபோதும் கேள்விப்பட்ட விசயங்களில் ஈடுபடக்கூடாது. வியாசர் எழுதிய விசயங்களில் ஈடுபட்டு ஈடுபட்டு மோசமான நிலை ஏற்பட்டது அல்லவா. ஞானத்தைத் தவிர வேறு எந்த விசயத்தையும் கூறினார்கள் என்றால் இவர் நம்முடைய எதிரி என்று புரிந்து கொள்ளுங்கள். துர்கதிக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஒருபோதும் மற்றவர்களுடைய வழிப்படி நடக்கக் கூடாது. மனதின் வழி, மற்றவர்களுடைய வழிப்படி நடந்தார்கள் என்றால் இறந்தார்கள். பொய்யான விசயங்களைப் பேசக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் பாபாவிடமிருந்து மட்டுமே கேட்க வேண்டும். தீயதை கேட்காதீர்கள், தீயதை பார்க்காதீர்கள்....... பாப்தாதா வந்திருப் பதே மனிதனிலிருந்து தேவதையாக்குவதற்கு எனும்போது அவருடைய ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் அல்லவா. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இங்கே பாபாவிற்கு சமமாக சுகக்கடலாக, அன்புக்கடலாக ஆக வேண்டும். சர்வ குணங் களையும் தாரணை செய்ய வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது.
2) கேள்விப்பட்ட விசயங்களை ஒருபோதும் நம்பக்கூடாது. மற்றவர்களுடைய வழிப்படி நடக்கக் கூடாது. தீயதை கேட்காதீர்கள், தீயதை பார்க்காதீர்கள்...............