ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு குட் மார்னிங்! குழந்தைகள் இதையோ அறிந்துள்ளனர், சத்யுகத்தில் சதா குட் மார்னிங், குட் டே, குட் எவ்ரித்திங், குட் நைட். அனைத்தும் நல்லதிலும் நல்லதாகவே இருக்கும். இங்கோ குட் மார்னிங் கும் கிடையாது, குட் நைட்டும் கிடையாது. இரவு நேரம் அனைத்திலும் தீயதாகும். ஆக, அனைத் திலும் நல்லது எது? காலைப் பொழுது. அது அமிர்தவேளை எனச் சொல்லப்படுகின்றது. உங்களின் ஒவ்வொரு வேளையும் நல்லதிலும் நல்லதாகவே உள்ளது. குழந்தைகள் அறிவார்கள், இச்சமயம் நாம் யோக-யோகேஷ்வர் மற்றும் யோக யோகேஷ்வரிகள். உங்கள் தந்தையாகிய ஈஸ்வரன் வந்து யோகம் கற்பிக்கிறார். அதாவது குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரே ஓர் ஈஸ்வரனோடு யோகம் உள்ளது. குழந்தைகள் உங்களுக்கு யோகேஷ்வருக்குப் பிறகு ஞான-ஞானேஷ்வர் பற்றித் தெரிந்துள்ளது. யோகா (புத்தியின் தொடர்பு) ஏற்பட்டுவிட்டது, பிறகு தந்தை உங்களுக்கு முழுச் சக்கரத்தைப் பற்றிய ஞானத்தைப் புரிய வைக்கிறார். இதன் மூலம் நீங்களும் கூட ஞான-ஞானேஷ்வர் ஆகிறீர்கள். ஈஸ்வரனாகிய தந்தை, குழந்தைகளுக்கு வந்து ஞானம் மற்றும் யோகத்தைக் கற்றுத் தருகிறார். எந்த ஈஸ்வரன்? நிராகார் தந்தை. இப்போது புத்தியைப் பயன் படுத்துங்கள். குருமார்களுக்கோ அநேக வழிமுறைகள் உள்ளன. சிலர் சொல்வார்கள், கிருஷ்ண ரோடு யோகா வையுங்கள் என்று. பிறகு அவருடைய சித்திரத்தையும் தருவார்கள். சிலர் சாய் பாபா, சிலர் மகரிஷி பாபா, சிலர் முஸ்லிம்களினுடைய, சிலர் பார்ஸிகளினுடையதைத் தருவார்கள். அனைவரையும் பாபா-பாபா எனச் சொல்லிக் கொண்டே உள்ளனர். அனைவரும் பகவானே-பகவான் தான் எனச் சொல்வார்கள். இப்போது நீங்கள் அறிவீர்கள், மனிதர் பகவானாக ஆக முடியாது. இந்த லட்சுமி- நாராயணரையும் கூட பகவான்-பகவதி எனச் சொல்ல முடியாது. பகவானோ ஒரு நிராகார் ஆவார். அவர் ஆத்மாக்களாகிய உங்கள் அனைவருக்கும் தந்தை ஆவார். அவர் சிவபாபா என அழைக்கப்படுகிறார். நீங்கள் தான் ஜென்ம-ஜென்மாந்தரமாக சத்சங்கம் கேட்டே வந்திருக்கிறீர்கள். யாராவது சாது-சந்நியாசி, பண்டிதர் முதலான வர்கள் நிச்சயமாக இருப்பார்கள். இவர்கள் நம்முடைய குரு என மக்கள் அறிந்துள்ளார்கள். நமக்கு அவர்கள் கதை சொல்லிக் கொண்டுள்ளனர். சத்யுகத்தில் கதைகள் முதலியன கிடையாது. பாபா வந்துப் புரிய வைக்கிறார், வெறுமனே பகவான் அல்லது ஈஸ்வரன் எனச் சொல்வதால் ரசனை (அன்பு) வராது. அவர் தந்தை என்பதால் பாபா எனச் சொல்வதன் மூலம் சம்மந்தம் சிநேகபூர்வமானதாக ஆகிவிடு கின்றது. நீங்கள் அறிவீர்கள், பாபா- மம்மாவின் குழந்தைகளாக ஆகியிருக்கிறோம். இதன் மூலம் நமக்கு சொர்க்கத்தின் சுகங்கள் கிடைக்கின்றன. நாம் மனிதரி-ருந்து தேவதையாக, நரகவாசியில் இருந்து சொர்க்கவாசியாக ஆகிறோம் என்று வேறு எந்த ஒரு சத்சங்கத்திலும் புரிந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இப்போது உங்களுக்கு சத்தியமான தந்தையோடு சங்கம் (சேர்க்கை) உள்ளது. மற்ற அனைவருக்கும் அசத்தியத்தோடு (பொய்யான) சங்கம் எனச் சொல்லப்படுகின்றது. பாடப்படவும் செய்கிறது - சத்தியமான சங்கம் அக்கரைக் கொண்டு சேர்க்கும்........... தேக சம்மந்த மான சங்கம் மூழ்கடித்து விடும்........ பாபா சொல்கிறார், ஆத்ம அபிமானி (தேகி அபிமானி) ஆகுங்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு, ஆத்மாக்களுக்குக் கற்றுத் தருகிறேன். இந்த ஆன்மிக ஞானத்தை சுப்ரீம் ஆத்மா வந்து ஆத்மாக் களுக்குக் கற்றுத் தருகிறார். மற்ற அனைத்தும் பக்தி மார்க்கம். அது ஒன்றும் ஞான மார்க்கம் கிடையாது. பாபா சொல்கிறார், நான் அனைத்து வேத சாஸ்திரங்கள், சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி அறிந்துள்ளேன். நான் அனைத்திற்கும் அத்தாரிட்டி. அவர்கள் பக்தி மார்க்கத்தின் அத்தாரிட்டி. அநேக சாஸ்திரங்கள் முதலியவற்றைப் படிக்கின்றனர் என்பதால் அவர்களை சாஸ்திரங்களின் அத்தாரிட்டி எனச் சொல்கின்றனர். உங்களுக்கு பாபா உண்மையைச் சொல்கிறார். இப்போது நீங்கள் அறிந்துக் கொண்டீர்கள், சத்தியத் தின் சங்கம் அக்கரை சேர்க்கும்......... பொய்யின் சங்கம் மூழ்கடிக்கும். இப்போது பாபா குழந்தை களாகிய உங்கள் மூலமாக பாரதத்தை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் ஆன்மிக சேல்வேஷன் ஆர்மி. துன்பத்தில் இருந்து அனைவரையும் மீட்கிறீர்கள். பாபா சொல்கிறார், சொர்க்கமாக இருந்த பாரதம் இப்போது நரகமாக ஆகிவிட்டுள்ளது. மூழ்கிவிட்டுள்ளது. மற்றப்படி அப்படியே கடலின் அடி தளத்தில் இல்லை. நீங்கள் சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானமாக ஆகியிருக்கிறீர்கள். சத்யுகம் திரேதாயுகம் சதோபிரதானம். இது பெரிய கப்பல். நீங்கள் கப்பல் மீது அமர்ந்திருக் கிறீர்கள். இது பாவங்களின் நகரம். ஏனென்றால் அனைவரும் பாவாத்மாக்கள். உண்மையில் குரு என்பவர் ஒருவரே! அவரை யாரும் அறிந்து கொள்ளவில்லை. ஓ காட் ஃபாதர் என்று எப்போதுமே அழைக்கின்றனர். காட் ஃபாதர் -கம்- ப்ரிசெப்டார் (இறைத் தந்தை மற்றும் குரு-ஆசான்) என அழைப்பதில்லை. ஃபாதர் என்று மட்டுமே அழைக்கின்றனர். அவர் பதீத பாவனர். ஆகவே குருவாகவும் ஆகிறார். அனைவரின் பதீத-பாவனர், சத்கதி அளிக்கும் வள்ளல் ஒருவர் தான். இந்தப் பதீத உலகில் எந்த ஒரு மனிதரும் சத்கதி அளிக்கும் வள்ளல் அல்லது பதீத-பாவனராக இருக்க முடியாது. பாபா சொல்கிறார், எவ்வளவு கலப்படம், லஞ்சம், ஊழல்கள் உள்ளன! இப்போது நான் கன்யாக்கள், மாதாக்கள் மூலம் அனைவரையும் காப்பாற்ற வேண்டியுள்ளது.
நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார்-குமாரிகள். சகோதர-சகோதரிகள் ஆகிறீர்கள். இல்லை யென்றால் தாத்தாவின் ஆஸ்தி எப்படிக் கிடைக்கும்? தாத்தாவிடமிருந்து 21 பிறவிகளுக்கு ஆஸ்தி, அதாவது சொர்க்கத்தின் இராஜ பதவி கிடைக்கின்றது. வருமானம் எவ்வளவு பெரியது! இது உண்மையான வருமானம் - உண்மையான தந்தை மூலம் கிடைப்பது. தந்தை, தந்தையாகவும் உள்ளார், ஆசிரியராகவும் உள்ளார், சத்குருவாகவும் உள்ளார். நடைமுறையில் செய்துக் காட்டு பவர். குரு இறந்துப் போனால் சீடருக்கு அவருடைய ஆசனம் கிடைத்துவிடும் என்பது கிடையாது. அவர் தேக சம்மந்தமான குரு. இவர் ஆன்மிக குரு. நல்லபடியாக இவ்விஷயத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும். இவை முற்றிலும் புது விஷயங்கள். நீங்கள் அறிவீர்கள், நமக்கு எந்தவொரு மனிதரும் படிப்பு சொல்லித் தரவில்லை. நமக்கு சிவபாபா, ஞானக்கடல், பதீத-பாவனர் இந்த சரீரத்தின் மூலம் கற்றுத் தருகிறார். உங்கள் புத்தி சிவபாபாவின் பக்கம் உள்ளது. அந்த சத்சங்கங்களில் மனிதர்களின் பக்கம் புத்தி போகும். அவை அனைத்தும் பக்தி மார்க்கம். இப்போது நீங்கள் பாடுகிறீர்கள் - நீங்கள் தான் தாயும் தந்தையும்....... நாங்கள் உங்கள் குழந்தைகள்........ இவரோ ஒருவர் இல்லையா? ஆனால் பாபா சொல்கிறார், நான் எப்படி வந்து உங்களை என்னுடையவர்களாக ஆக்குவேன்? நான் உங்களுடைய தந்தை. ஆக, நான் இவருடைய சரீரத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்கிறேன். ஆகவே இவர் (பிரம்மா) என் துணைவியும் ஆகிறார். குழந்தையும் ஆகிறார். இவர் மூலம் சிவபாபா குழந்தைகளைத் தத்தெடுக்கிறார் எனும் போது இவர் பெரிய அம்மா ஆகிறார். இவருக்கு அம்மா யாரும் கிடையாது. சரஸ்வதி, ஜெகதம்பா என அழைக்கப்படுகிறார். அவர் உங்களைப் பராமரிப்பதற்காக அமர்த்தப்பட்டுள்ளார். சரஸ்வதி ஞான-ஞானேஸ்வரி - இவர் சிறிய தாய் ஆவார். இவை மிகவும் ஆழமான விஷயங்களாகும். நீங்கள் இப்போது இந்த ஆழமான படிப்பைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மதிப்புடன் தேர்ச்சிப் பெற வேண்டும். இந்த லட்சுமி-நாராயணர் மதிப்புடன் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு அனைவரைக் காட்டிலும் பெரிய ஸ்காலர்ஷிப் (உதவி) கிடைத்துள்ளது. எந்த ஒரு தண்டனையும் அடைய வேண்டியதாக இல்லை,. பாபா சொல்கிறார், எவ்வளவு முடியுமோ, நினைவு செய்யுங்கள். இது பாரதத்தின் புராதன யோகம் எனச் சொல்லப்படுகின்றது. பாபா சொல்கிறார், உங்களுக்கு அனைத்து வேத- சாஸ்திரங்களின் சாரத்தைச் சொல்கிறேன். நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பித்தேன். அதன் மூலம் நீங்கள் பிராலப்தத்தை (பலனை) அடைந்தீர்கள். பிறகு ஞானம் முடிந்துப் போனது. பிறகு எப்படி பரம்பரையாக நடக்க முடியும்? அங்கே சாஸ்திரங்கள் முதலியன கிடையாது. மற்ற தர்மங்களைச் சேர்ந்தவர்கள் - இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் முதலானவர் களின் ஞானம் மறைந்துப் போவதில்லை. அவர்களுடையது பரம்பரையாக நடைபெறு கின்றது. அனைவருக்கும் தெரியும். ஆனால் பாபா சொல்கிறார், நான் உங்களுக்குச் சொல்லும் ஞானம் வேறு யாருக்கும் தெரியாது. பாரதம் துக்கம் நிறைந்ததாக ஆகிவிடுகின்றது. அவர்களை நான் வந்து சுகவாசி ஆக்குகிறேன். பாபா சொல்கிறார் - நான் சாதாரண உடலில் அமர்ந்துள்ளேன். உங்கள் புத்தியோகம் பாபாவிடம் இருக்க வேண்டும். ஆத்மாக்களின் தந்தை பரமபிதா பரமாத்மா. குழந்தைகள் அனைவருக்கும் அவர் தந்தை. அவருக்கு அனைவரும் குழந்தைகள் ஆகின்றனர் இல்லையா? ஆத்மாக்கள் அனைவரும் இப்போது பதீத்தாக உள்ளனர். பாபா சொல்கிறார், நான் இப்போது நடைமுறையில் (நேரிடையாக) வந்துள்ளேன். விநாசம் முன்னால் நின்று கொண்டுள்ளது. நெருப்பு பற்றிக் கொள்ளும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். அனைவரின் சரீரங்களும் அழிந்துப் போகும். ஆத்மாக்கள் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவார்கள் அல்லது ஜோதியோடு ஜோதியாகி விடுவார்கள் என்ப தெல்லாம் கிடையாது. அதை பிரம்மக் கோவில் எனச் சொல்லிவிடுகின்றனர். உண்மையில் பிரம்ம மகாதத்துவம் ஆத்மாக்களின் வசிப்பிடம் ஆகும். நம்முடைய முதல் கோவில் இது தான். பவித்திர ஆத்மாக்கள் அங்கே வசிக்கின்றனர். இவ்விஷயங்களை எந்த ஒரு மனிதரும் புரிந்திருக்க வில்லை. ஞானக்கடலாகிய பாபா வந்து குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறார் -இப்போது நீங்கள் ஞான-ஞனேஸ்வர், பிறகு ராஜ-ராஜேஸ்வர் ஆகிறீர்கள். உங்கள் புத்தியில் உள்ளது-பதீத-பாவனர், மிகமிக அன்பானவர் வந்து நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியைத் தந்துக் கொண்டிருக்கிறார். அநேகரின் புத்தியில் இது கூடப்பதிவதில்லை. இத்தனைப் பேர் அமர்ந்துள்ளனர். இதில் யாரும் 100 சதவிகிதம் நிச்சய பத்தி உள்ளவர்கள் கிடையாது. சிலர் 80 சதவிகிதம், சிலர் 50 சதவிகிதம், இன்னும் சிலர் அது கூட இல்லை. அவர்கள் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டனர். நிச்சயமாக நம்பர்வாராக உள்ளனர்.
அநேகருக்கு நிச்சயம் இல்லை. நிச்சயம் ஏற்பட வேண்டும் என முயற்சிச் செய்கின்றனர். நல்லது, நிச்சயம் ஏற்படவும் செய்யலாம். ஆனால் மாயா நின்றுக் கொண்டுள்ளது. பாபாவை மறந்துவிடுகின்றனர். இந்த பிரம்மா தாமே சொல்கிறார் - நான் முழு பக்தனாக இருந்தேன். 63 பிறவிகள் பக்தி செய்தேன். தத் (அது) த்வம் (நீ தான்). நீங்களும் கூட 63 பிறவிகளாக பக்தி செய்திருக்கிறீர்கள். 21 பிறவிகள் சுகம் பெற்றிருக்கிறீர்கள். பிறகு பக்தராகி இருக்கிறீர்கள். பக்திக்குப் பிறகு வைராக்கியம். அவர்களுக்கு வீடு-வாசல் மீது வைராக்கியம் வருகின்றது. அது எல்லைக்குட்பட்ட வைராக்கியம் எனச் சொல்லப்படுகின்றது. உங்களுடையது எல்லையற்ற வைராக்கியம். சந்நியாசிகள் வீடு-வாசலை விட்டு காடுகளுக்குச் சென்றுவிட்டிருந்தனர். இப்போதோ யாரும் காட்டில் இல்லை. காட்டில் அனைத்துக் குடில்களும் காலியாகிவிட்டன. ஏனெனில் முதலில் சதோபிரதானமாக இருந்தனர். இப்போது அவர்கள் தமோபிரதானமாக ஆகி விட்டனர். இப்போது அவர்களிடம் எந்த ஒரு சக்தியும் இல்லை. லட்சுமி-நாராயணரின் இராஜதானியில் இருந்த சக்தி, அவர்கள் புனர்ஜென்மம் எடுத்து-எடுத்தே இப்போது பாருங்கள், அவர்கள் எங்கே வந்து சேர்ந்துள்ளனர்! இப்போது எந்த ஒரு சக்தியும் இல்லை. இங்குள்ள அரசாங்கமும் கூட சொல்கிறது - நாங்கள் தர்மத்தை ஏற்றுக் கொள்வதில்லை. தர்மங்களில் தான் அதிக நஷ்டம் ஏற்படுகின்றது. சண்டையிட்டுக் கொண்டு மாநாடுகள் நடத்திக் கொண்டுயுள்ளனர் - அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களும் ஒரே வழிப்படி நடப்பவராக ஆகிவிட வேண்டும். ஆனால் கேளுங்கள் - ஒன்றாக எப்படி ஆகிவிட முடியும்? இப்போதோ அனைவரும் திரும்பிச் செல்லப் போகின்றனர். பாபா வந்துள்ளார். இந்த உலகம் இப்போது சுடுகாடாக ஆகப் போகின்றது. மற்றப்படி இதுவோ வெரைட்டி மரம். ஆகவே ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி எதுவும் புரிந்துக் கொள்வதில்லை. பாரதத்தில் ஒரே தர்மம் இருந்தது. அவர்கள் அத்வைத (ஒருமை யின்) பிளவுபடாத தர்மத்தைச் சேர்ந்த தேவதைகள் எனச் சொல்லப் படுகின்றனர். த்வைத் (பன்முகத் தன்மை) என்றால் அசுரர். உங்கள் தர்மம் மிகவும் சுகம் தரக்கூடியது. நீங்கள் அறிவீர்கள், புனர்ஜென்மம் எடுத்து நாம் மீண்டும் 84 பிறவிகளை அனுபவிக்கிறோம். நாம் தான் 84 பிறவிகளை எடுத்துள்ளோம் என்பதில் நிச்சயம் இருக்க வேண்டும். நாம் தான் போக வேண்டும். திரும்பவும் வர வேண்டும். பாரதவாசிகளுக்குத் தான் புரிய வைக்கிறார் - நீங்கள் 84 பிறவிகளை எடுத்துவிட்டீர்கள். இப்போது இது உங்களுக்கு அநேகப் பிறவிகளின் கடைசிப் பிறவி. ஒருவருக்கு மட்டும் சொல்வதில்லை. பாண்டவ சேனைக்குப் புரிய வைக்கிறார் - நீங்கள் பண்டாக்கள் (வழிகாட்டிகள்). நீங்கள் ஆன்மிக யாத்திரை கற்றுத் தருகிறீர்கள். அதனால் பாண்டவ சேனை என அழைக்கப்படுகிறீர்கள். இராஜ்யம் இப்போது கௌரவர்களுக்கும் இல்லை, பாண்டவர்களுக்கும் இல்லை. அவர்களும் பிரஜைகள், நீங்களும் பிரஜைகள். கௌரவ-பாண்டவர் சகோதர- சகோதரர் கள். பாண்டவர்களின் பக்கம் பரமபிதா பரமாத்மா இருக்கிறார் எனச் சொல்லப்படுகின்றது. பாபா தான் வந்து மாயா மீது வெற்றி பெறுவதற்குக் கற்றுத் தருகிறார். நீங்கள் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்த அஹிம்சையாளர்கள். அஹிம்சா பரமோதர்மம் (மிக மேலான தர்மம்). முக்கிய விஷயம் காமக் கட்டாரி செலுத்தக் கூடாது. பாரதவாசிகள், பசுவதை கூடாது - இதுவே அஹிம்சை என்பதாகப் புரிந்துக் கொண்டுள்ளனர். ஆனால் பாபா சொல்கிறார், காமக் கட்டாரி செலுத்தாதீர்கள் (விகாரத்தில் ஈடுபடாதீர்கள்). இது தான் பெரியதிலும் பெரிய ஹிம்சை எனச் சொல்லப்படுகின்றது. சத்யுகத்தில் காமக் கட்டாரியும் கிடையாது, அடிதடி சண்டையும் கிடையாது. இங்கே இரண்டுமே உள்ளன. காமக் கட்டாரி தான் முதல்-இடை-கடை முழுவதும் துக்கம் தருவது. நீங்கள் ஏணிப்படியில் இறங்கி வருகிறீர்கள். 84 பிறவிகள் பாரதவாசிகளாகிய நீங்கள் எடுத்திருக் கிறீர்கள். இந்த லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. பிறகு புனர்ஜென்மம் எடுக்கிறீர்கள். ஒவ்வொரு ஜென்மமும் ஒவ்வொரு படியாகும். இங்கிருந்து நீங்கள் ஒரேயடியாக மேலே உயரத்திற்கு ஜம்ப் பண்ணி விடுகிறீர்கள். 84 படிகள் இறங்குவதற்கு உங்களுக்கு 5000 ஆண்டுகள் பிடிக்கிறது. இப்போது பிறகு நீங்கள் ஒரு விநாடியில் மேலே ஏறி சென்றுவிடுகிறீர்கள். விநாடியில் ஜீவன் முக்தி யார் தருகிறார்? தந்தை. இப்போது அனைவரும் ஒரேயடியாகத் தரையில் விழுந்து விட்டனர். இப்போது பாபா சொல்கிறார், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், போதும். இதை புத்தியில் நினைவு வைக்க வேண்டும் - இப்போது நாடகம் முடிவடைந்தது. நாம் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். நாம் நம்முடைய தந்தை மற்றும் வீட்டை நினைவு செய்ய வேண்டும். முதலில் பாபாவை நினைவு செய்யுங்கள் - அவர் தான் உங்களுக்கு வீட்டுக்குச் செல்வதற்கான வழி சொல்கிறார். பாபாவின் நினைவு மூலம் விகர்மங்கள் விநாசமாகும். பிரம்மத்தை நினைவு செய்வதன் மூலம் ஒரு பாவம் கூட நீங்காது. பதீத-பாவனர் பரமாத்மா தான். அவர் எப்படிப் பாவனமாக்குகிறார்? இந்த உலகம் ஒன்றும் புரிந்துக் கொள்ள முடியாது. பாபா வந்து அவசியம் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய வேண்டியுள்ளது. பாபா வந்துள்ளார் என்றால் குழந்தைகள் நீங்கள் ஜெயந்தி கொண்டாடுகிறீர்கள். எப்போது வந்தார்? இதைச் சொல்ல முடியாது. இந்த நேரம், இந்தத் தேதி-கிழமை வந்தார் என்பதைச் சொல்ல முடியாது. சிவபாபா எப்போது வந்தார் என்று எப்படிச் சொல்ல முடியும்? அநேக சாட்சாத்காரங்கள் ஆகின்றன. முதலில் நாம் சர்வவியாபி என நினைத்திருந்தோம் அல்லது ஆத்மாவே தான் பரமாத்மா என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது சரியானது என்ன என்பது தெரிந்து விட்டது. பாபா தினந்தோறும் ஆழமான விஷயங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். நீங்கள் சாதாரணக் குழந்தைகள், எவ்வளவு பெரிய ஞானத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்! நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மதிப்புடன் தேர்ச்சி பெறுவதற்காக தண்டனையில் இருந்து விடுபடுவதற்கான முயற்சி செய்ய வேண்டும். நினைவில் இருப்பதால் மட்டுமே ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான அதிகாரி (உரிமையுள்ளவர்) ஆக முடியும்.
2) உண்மையிலும் உண்மையான பாண்டவர் ஆகி அனைவருக்கும் ஆன்மிக யாத்திரை செய்விக்க வேண்டும். எந்தவிதமான ஹிம்சையும் செய்யக் கூடாது.