11-03-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
கேள்வி:
தந்தை குழந்தைகளுக்கு சங்கமத்தில் தான் சிருஷ்டியின் படைப்பைப் பற்றிய (செய்தியைக்) கூறுகிறார், சத்யுகத்தில் அல்ல ஏன்?
பதில்:
ஏனெனில் சத்யுகம் என்பது ஆதியின் (ஆரம்ப) நேரம். அந்த சமயத்தில் முழு படைப் பினுடைய சமாச்சாரம் அதாவது படைப்பினுடைய முதல் இடை கடை பற்றிய ஞானத்தை எப்படிக் கூற முடியும்? சக்கரம் திரும்ப நிகழாமல் இருக்கும் வரை செய்தியை எவ்வாறு கூற முடியும்? சங்கமத்தில் தான் குழந்தை களாகிய நீங்கள் தந்தை மூலமாக முழுமையான செய்தி யைக் கேட்கிறீர்கள். உங்களுக்குத் தான் ஞானத்தின் மூன்றாவது கண் கிடைக்கிறது.
ஓம் சாந்தி. இன்று திரிமூர்த்தி சிவஜெயந்தி மற்றும் பிராமண ஜெயந்தி மற்றும் சங்கமயுக ஜெயந்தியின் சுப நாள் ஆகும். நிறைய பேருக்கு ஈசுவரிய பிறப்புரிமைக்கான வாழ்த்துகளைக் கூட தெரிவிக்க முடிவதில்லை. நிறைய பேருக்கு சிவபாபா யார்? அவரிடமிருந்து என்ன கிடைக்க வேண்டி உள்ளது என்பது தெரியாது. அவர்கள் வாழ்த்துகள் பற்றி எப்படி புரிந்துக் கொள்ள முடியும்? புதிய குழந்தைகளால் முற்றிலும் புரிந்துக் கொள்ள முடியாது. இது ஞானத்தின் நடனம் ஆகும். ஸ்ரீகிருஷ்ணர் நடனம் புரிந்துக் கொண்டிருந்தார் என்று கூறுகிறார்கள் அல்லவா? இங்கு பெண் குழந்தைகள் இராதை கிருஷ்ணர் ஆகி நடனம் புரிகிறார்கள். ஆனால் நடனத்தின் விஷயமே கிடையாது. அங்கு சத்யுகத்தில் குழந்தைப் பருவத்தில் இளவரசர் இளவரசியுடன் நடனம் புரிவார்கள். இவர்கள் பாப்தாதா ஆவார்கள் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். தாதாவிற்கு கிராண்ட் ஃபாதர் என்று கூறப்படுகிறது. இந்த தாதாவோ சரீரத்தின் தந்தை ஆவார். இங்கு அதிசயமான விஷயம் உள்ளது. அந்த தாதா ஆன்மீக தாதா மற்றும் இவர் ஸ்தூலமானவர். இவர்களை பாப்தாதா என்று கூறுகிறோம். தந்தையிடமிருந்து தாதா மூலமாக ஆஸ்தி கிடைக் கிறது. ஆஸ்தி பாட்டனாருடையது. அனைத்து ஆத்மாக்களும் சகோதரர்கள் ஆவார்கள். ஆக ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கிறது. ஆத்மாக்களாகிய உங்களுக்கு தங்களுக்கென்று உடல் மற்றும் கர்ம இந்திரியங்கள் உள்ளன என்று தந்தை கூறுகிறார். என்னை நிராகாரமானவர் என்று கூறுகிறார்கள் - அவசியம் எனக்கு உடல் வேண்டும். அப்பொழுது தானே குழந்தைகளுக்கு ராஜயோகம் கற்பிப்பேன் அல்லது மனிதனிலிருந்து தேவதை, பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆவதற்கான வழியைக் கூறுவேன் அல்லது அசுத்தமான துணிகளைத் துவைப்பேன் .. .. .. அவசியம் பெரிய சலவை தொழிலாளியாக இருப்பார். முழு உலகத்தின் ஆத்மாக்கள் மற்றும் சரீரங்களைத் துவைக்கிறார். ஞானம் மற்றும் யோகத்தினால் உங்களுடைய ஆத்மாக்கள் துவைக்கப் (தூய்மைப்படுத்த) படுகின்றன.
குழந்தைகளாகிய நீங்கள் இன்று வந்துள்ளீர்கள். நாம் சிவபாபாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவிக்க வந்துள்ளோம் என்பதை அறிந்துள்ளீர்கள். யாருக்கு நீங்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறீர்களோ அந்த தந்தை கூட குழந்தைகளாகிய உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார் என்று தந்தை, பின்னர் கூறுகிறார். ஏனெனில், நீங்கள் மிகவுமே சர்வோத்தம சௌபாக்கியசாலி பிராமண குல பூஷணர்கள். நீங்கள் எந்த அளவிற்கு உத்தமமாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு தேவதைகள் உத்தமமானவர்கள். இல்லை ! பிராமணர்கள் தேவதைகளை விட உயர்ந்தவர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை ஆவார். பிறகு அவர் பிரம்மாவின் உடலில் வருகிறார். அவருக்கு நீங்கள் குழந்தைகளாக மிகவும் உயர்ந்ததிலும் உயர்ந்த பிராமணர்களாக ஆகிறீர்கள். பிராமணர் களினு டையது உச்சி (குடுமி) ஆகும். அவருக்குக் கீழே இருப்பவர்கள் தேவதைகள். எல்லோரை யும் விட மேலே இருப்பவர் பாபா. பாபா குழந்தைகளாகிய உங்களை பிராமணர்கள் பிராமணிகளாக ஆக்கி உள்ளார் - சொர்க்கத்தின் ஆஸ்தி அளிப்பதற்காக! இந்த இலட்சுமி நாராயணரைப் பாருங்கள், எவ்வளவு கோவில்கள் கட்டியுள்ளார்கள். தலை வணங்குகிறார்கள். இவர்களும் மனிதர்கள் தான் என்பது பாரதவாசிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும். இலட்சுமி நாராயணர் இருவருமே தனித் தனியானவர்கள் ஆவார்கள். இங்கு ஒரு மனிதருக்கு இரண்டு பெயர்கள் வைக் கிறார்கள். ஒருவருடைய பெயர் இலட்சுமி நாராயணன் அதாவது தங்களை விஷ்ணு சதுர்புஜ் என்கிறார்கள். இலட்சுமி நாராயணன் அல்லது ராதா கிருஷ்ணன் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள் என்றால் சதுர்புஜ் ஆகி விட்டார்கள் அல்லவா? இந்த விஷ்ணு சூட்சுமவதனத்தின் லட்சியம் குறிக்கோள் ஆகும். நீங்கள் இந்த விஷ்ணுபுரிக்கு அதிபதி ஆவீர்கள். இந்த இலட்சுமி நாராயணர் விஷ்ணுபுரிக்கு அதிபதி ஆவார்கள். விஷ்ணுவிற்கு 4 புஜங்கள் உள்ளன. இரண்டு இலட்சுமியினுடையது, இரண்டு நாராயணனுடையது. நாங்கள் விஷ்ணுபுரிக்கு அதிபதி ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள்.
நல்லது. தந்தையின் மகிமையின் பாடலைக் கூறுங்கள். முழு உலகத்தில் ஆரம்பம் முதற் கொண்டு இதுவரையும் ஒருவரைத் தவிர வேறு யாருக்குமே இவ்வளவு மகிமை இல்லை. வரிசைக்கிரமமாகவோ இருக்கவே இருக்கிறார்கள். எல்லோரையும் விட அதிகமான சர்வோத்ம மகிமை உயர்ந்ததிலும் உயர்ந்த பரம பிதா பரமாத்மாவினுடையது. அவருக்கு நீங்கள் அனைவரும் குழந்தைகள். நாம் ஈசுவரிய குழந்தைகள் என்று கூறுகிறீர்கள். இறைவன் சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். பிறகு நீங்கள் நரகத்தில் ஏன் இருக்கிறீர்கள். இறைவனுடைய ஜன்மம் இங்கு ஏற்படுகிறது. கிறிஸ்தவர்கள் நாங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்பார்கள். நாம் பரமபிதா பரமாத்மா சிவனின் நேரிடை குழந்தைகள் என்பதையே பாரதவாசிகள் மறந்து விட்டுள்ளார்கள். குழந்தைகளை தன்னுடையவராக ஆக்கி மீண்டும் இராஜ்ய பாக்கியத்தை அளிப்பதற்காக தந்தை இங்கு வருகிறார். இன்று பாபா நல்ல முறையில் புரிய வைக்கிறார். ஏனெனில் புதியவர்களும் நிறைய பேர் உள்ளார்கள். இவர்கள் புரிந்து கொள்வது கடினம். ஆம். மீண்டும் சொர்க்கவாசி ஆகிறார்கள். சொர்க்கத்தில் சூரியவம்ச ராஜா ராணியும் இருக்கிறார்கள். வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் இருப்பார்கள். பிரஜைகளும் இருப்பார்கள். அவர்களில் ஒரு சிலர் ஏழையாக, ஒரு சிலர் பணக்காரர்களாக இருப்பார்கள். அவர்களுக்கும் கூட வேலைக்காரர்கள் இருப்பார்கள். முழு ராஜதானி இங்கு ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இது வேறு யாருக்குமே தெரியாது. அனைவருடைய ஆத்மாக்களும் தமோபிரதானமாக இருக்கின்றது. ஞானத்தில் மூன்றாவது கண் வேறு யாருக்குமே இல்லை. (பாடல்) இப்பொழுது தந்தையின் மகிமை கேட்டீர்கள். அவர் அனைவரின் தந்தை. பகவானை தந்தை என்று கூறுகிறார்கள். எல்லையில்லாத சுகம் அளிக்கும் தந்தை. இதே பாரதத்தில் எல்லையில்லாத சுகம் இருந்தது. இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. இந்த இலட்சுமி நாராயணர் சிறு வயதில் இராதை கிருஷ்ணர். சுயம்வரத்திற்குப் பிறகு இலட்சுமி நாராயணர் என்ற பெயர் ஏற்படுகிறது. இந்த பாரதத்தில் ஐந்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இலட்சுமி நாராயணரைத் தவிர வேறு யாருடைய இராஜ்யமும் இருக்கவில்லை. வேறு எந்த கண்டமும் இருக்கவில்லை. எனவே இலட்சுமி நாராயணர் முந்தைய பிறவியில் என்ன செயல்கள் செய்திருந்தார்கள் என்பது பாரதவாசிகளுக்குக் கூட அவசியம் தெரிய வேண்டி உள்ளது. எப்படி பிர்லா என்ன கர்மம் செய்ததால் இவ்வளவு செல்வந்தர் ஆனார் என்று கூறுவார்கள். அவசியம் முந்தைய பிறவியில் தான புண்ணியம் செய்திருக்கக் கூடும் என்று கூறுவார்கள். ஒரு சிலரிடம் நிறைய செல்வம் இருக்கிறது. ஒரு சிலருக்கு உண்பதற்குக் கூட கிடைப்பதில்லை. ஏனெனில், அப்பேர்ப்பட்ட கர்மங்கள் செய்திருக் கிறார்கள். கர்மங்களை ஏற்றுக் கொள்கிறீர்கள். கர்மம் அகர்மம் விகர்மத்தின் விளைவு பற்றி கீதையின் பகவான் கூறி இருந்தார். அவருடைய மகிமையைக் கேட்டீர்கள். சிவபகவான் ஒருவர் .மனிதர் பகவான் என்று கூறப்படுவதில்லை. இப்பொழுது தந்தை எங்கு வந்துள்ளார்? முன்னால் மகாபாரத போர் நின்றுள்ளது என்று புரிய வைக்கிறார். எனவே இனிமையிலும் இனிமையான பாபா புரிய வைக்கிறார். இவரை துக்கத்தில் எல்லோரும் நினைவு செய்கிறார்கள். துக்கத்தில் அனைவரும் நினைவு செய்கிறார்கள் ... .. .. (பாடல்) ... .. .. சிவபாபாவை துக்கத்தில் எல்லோரும் நினைவு செய்கிறார்கள். சுகத்தில் யாரும் செய்வது இல்லை. சொர்க்கத்தில் துக்கம் இருக்க வில்லை. அங்கு தந்தை மூலமாகப் பெற்றிருந்த ஆஸ்தி இருந்தது. ஐந்து ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சிவபாபா வந்திருக்கும் பொழுது பாரதத்தை சொர்க்கமாக ஆக்கினார். இப்பொழுது நரகம் ஆகும். தந்தை சொர்க்கத்தை ஸ்தாபிக்க வந்துள்ளார். உலகத்திற்கோ இது தெரியவும் தெரியாது. நாங்கள் எல்லோரும் குருடர்கள் என்று கூறுகிறார்கள். குருடர்களின் கைத்தடியான பிரபுவே நீங்கள் வாருங்கள், வந்து கண்களைக் கொடுங்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது. நாமாகிய ஆத்மாக்கள் இருக்கும் இடம் சாந்திதாமம். தந்தையும் அங்கு தான் இருக்கிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் மற்றும் யாமும் இருக்கிறோம். நான் அனைத்து ஆத்மாக்களாகிய உங்களுடைய தந்தை அங்கு இருக்கிறேன் என்று இவருடைய ஆத்மாவிடம் கூறுகிறார். நீங்கள் மறு பிறவியின் பாகம் ஏற்று நடிக்கிறீர்கள். நான் நடிப்பது இல்லை. நீங்கள் உலகிற்கு அதிபதி ஆகிறீர்கள். நான் ஆவது இல்லை. நீங்கள் 84 பிறவிகள் எடுக்க வேண்டி வருகிறது. ஹே குழந்தைகளே, நீங்கள் உங்கள் பிறவிகளை அறியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குப் புரிய வைத்திருந்தேன். 84 இலட்சம் பிறவிகள் என்று கூறுகிறார்கள். இது பொய்யான விஷயங்கள். நான் ஞானக்கடல் பதீத பாவனர். எல்லோருமே பதீதமாக ஆகும் பொழுது நான் வருகிறேன். அப்பொழுது தான் வந்து படைப்பினுடைய முதல் இடை கடை பற்றிய ரகசியத்தைப் புரிய வைத்து திரிகாலதரிசியாக ஆக்குகிறேன். முதன் முதலில் மனிதர்கள் எப்படி படைக்கப்பட்டார்கள் என்று அநேகர் கேட்கிறார்கள். பகவான் படைப்பை எப்படி படைத்தார்? ஒரு சாஸ்திரத்தில் கூட காண்பிக்கிறார்கள் - பிரளயம் ஏற்பட்டது. பிறகு கடலில் ஆலிலையில் குழந்தை கிருஷ்ணர் வந்தார். அது போல எந்த விஷயமும் கிடையாது. இது எல்லையில்லாத நாடகம் என்று தந்தை கூறுகிறார். பகல் என்பது சத்யுகம், திரேதா, இரவு என்பது துவாபரம் கலியுகம்.
குழந்தைகள் தந்தைக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள். உங்களுக்கும் அதே போல (தத்த்-த்வம்) என்று தந்தை கூறுகிறார். நீங்கள் கூட 100 சதவிகிதம் துர்பாக்கியசாலியிலிருந்து 100 சதவிகிதம் சௌபாக்கியசாலி ஆகிறீர்கள். அந்த பாரதவாசிகளாகிய நீங்கள் இருந்தீர்கள். ஆனால் உங்களுக்குத் தெரியாது. தந்தை வந்து கூறுகிறார். நீங்கள் உங்கள் பிறவிகள் பற்றி அறியாமல் உள்ளீர்கள். நான் வந்து கூறுகிறேன் - நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். தந்தை உங்களுக்கு சங்கமத்தில் முழு படைப்பினுடைய விஷயங்களைக் கூறுகிறார். சத்யுகத்தில் கூறுவார்களா என்ன? எந்த நேரத்தில் படைப்பினுடைய முதல் இடை கடை முடியவே இல்லையோ அப்பொழுது அது பற்றிய செய்தியை எப்படிப் புரிய வைக்க முடியும்? நான் கடைசியில் வருகிறேன். கல்பத்தின் சங்கம யுகத்தில், சாஸ்திரங்களில் யுகே - யுகே என்று எழுதி உள்ளார்கள். கிருஷ்ண பகவானுவாச என்று கீதை யில் எழுதியுள்ளார்கள். எல்லா தர்மத்தினரும் கிருஷ்ணரை பகவான் என்று ஏற்று கொள்வார்களா என்ன? பகவான் நிராகாரமானவர் ஆவார் அல்லவா? அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை. தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதர சகோதரர்கள். பரமாத்மாவை சர்வவியாபி என்று கூறுவதால் அனைவரும் தந்தையரே என்று ஆகி விடுகிறது. இதை தந்தைக்கு எப்பொழுதாவது ஆஸ்தி கிடைக்கிறதா என்ன? ஆஸ்தி குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் குழந்தைகள். தந்தையின் ஆஸ்தி அவசியம் வேண்டும். எல்லைக்குட்பட்ட ஆஸ்தியால் நீங்கள் திருப்தி அடைவது இல்லை. எனவே உனது கிருபையினால் அளவற்ற சுகம் கிடைத்திருந்தது என்று அழைக்கின்றீர்கள். இப்பொழுது மீண்டும் இராவணனின் மூலமாக துக்கம் கிடைப்பதால் முறையிடுவதற்கு முற்பட்டுள்ளீர்கள். அனைத்து ஆத்மாக்களும் முறையிடு கிறார்கள். ஏனெனில் இவர்களுக்கு துக்கம் இருக்கிறது. எனவே பாபா வந்து சுகம் கொடுங்கள் என்று நினைவு செய்கிறார்கள். இப்பொழுது இந்த ஞானத்தினால் சொர்க்கத்தின் அதிபதி ஆகிறீர்கள். உங்களுக்கு சத்கதி ஆகிறது. எனவே அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரு தந்தை என்று பாடப்படுகிறது. இப்பொழுது எல்லோரும் துர்க்கதியில் இருக்கிறார் கள். பிறகு அனைவருக்கும் சத்கதி ஏற்படுகிறது. இலட்சுமி நாராயணருடைய இராஜ்யம் இருக்கும் பொழுது நீங்கள் சொர்க்கத்தில் இருந்தீர்கள். மற்றவர்கள் எல்லோரும் முக்தி தாமத்தில் இருந்தார்கள். இப்பொழுது நாம் தந்தை மூலமாக இராஜயோகம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். கல்பத்தின் சங்கமத்தில் நான் உங்களுக்கு படிப்பிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். மனிதனிலிருந்து தேவதையாக ஆக்குகிறேன். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு முழுமை யான ரகசியத்தைப் புரிய வைக்கிறேன். சிவராத்திரி எப்பொழுது நடந்தது என்பது தெரிந்திருக்க வேண்டும். அச்சமயம் என்ன நடந்தது? சிவபாபா எப்பொழுது வந்தார்? எதுவுமே தெரியாது. எனவே கல்புத்தி ஆகிறார்கள் அல்லவா? இப்பொழுது நீங்கள் தங்க புத்தியினராக ஆகிறீர்கள். பாரதம் தங்கபுரியாக, தங்க யுகமாக இருந்தது. இலட்சுமி நாராயணருக்குக் கூட பகவான் பகவதி என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு ஆஸ்தியை பகவான் கொடுத்திருந்தார். மீண்டும் அளித்துக் கொண்டிருக்கிறார். உங்களை மீண்டும் பகவான் பகவதியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது இது உங்களுடைய அநேக பிறவிகளின் கடைசி பிறவி ஆகும். விநாசம் எதிரிலேயே உள்ளது என்று தந்தை கூறுகிறார். இதற்கு ருத்ர ஞான யக்ஞம் என்று கூறப்படுகிறது. அவை எல்லாமே ஸ்தூல பொருட்களின் யக்ஞம். இது ஞானத்தின் விஷயங்கள் ஆகும். இதில் தந்தை வந்து மனிதனை தேவதையாக ஆக்குகிறார். நீங்கள் சிவபாபா வருவதற்கான வாழ்த்துகளை அளிக்கிறீர்கள். தந்தை பிறகு கூறுகிறார், நான் தனியாக வருகிறேனா என்ன? எனக்குக் கூட உடல் வேண்டும். பிரம்மாவின் உடலில் வர வேண்டி உள்ளது. முதன் முதலில் சூட்சும வதனத்தைப் படைக்க வேண்டி உள்ளது. எனவே இவருக்குள் பிரவேசம் செய்துள்ளேன். இவரோ (பிரம்மா) பதீதமானவராக இருந்தார். 84 பிறவிகள் எடுத்து பதீதமாக ஆகி உள்ளார். எல்லோரும் என்னை அழைத்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார் - நான் மீண்டும் குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தியை அளிக்க வந்துள்ளேன். தந்தை தான் வந்து பாரதத்திற்கு சொர்க்கத்தின் ஆஸ்தியை அளிக்கிறார். சொர்க்கத்தின் படைப்புகர்த்தா தந்தை ஆவார். அவசியம் சொர்க்கத்தின் பரிசை தானே அளிப்பார் ! இப்பொழுது நீங்கள் சொர்க்கத்தின் அதிபதியாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இது பாடசாலை ஆகும் - வருங்காலத்தில் மனிதனிலிருந்து 21 பிறவிகளுக்கு தேவதை ஆவதற்கான பாடசாலை. நீங்கள் சொர்க்கத்தின் அதிபதியாக ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். 21 தலை முறைக்கு நீங்கள் சுகம் பெறுகிறீர்கள். அங்கு அகால மரணம் ஏற்படுவது இல்லை. சரீரத்தின் ஆயுள் முடிவடையும் பொழுது சாட்சாத்காரம் ஆகி விடுகிறது. ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுப்பார்கள். பாம்பினுடைய உதாரணம் .. .. .. ஆக குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்கு வாழ்த்துகளை கூறுகிறீர்கள். தந்தை பிறகு உங்களுக்கு வாழ்த்துகள் கூறுகிறார். நீங்கள் இப்பொழுது துர்பாக்கியசாலியிலிருந்து சௌபாக்கியசாலியாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பதீத மனிதனிலிருந்து பாவன தேவதை ஆகிறீர்கள். சக்கரமோ சுற்றுகிறது. இதை குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்க வேண்டி உள்ளது. பிறகு இந்த ஞானம் மறைந்து போய் விடுகிறது. சத்யுகத்தில் ஞானத்தின் அவசியம் இருப்பதில்லை. இப்பொழுது நீங்கள் துர்க்கதியில் உள்ளீர்கள். அப்பொழுது இந்த ஞானத்தினால் சத்கதி கிடைக்கிறது. தந்தை தான் வந்து சொர்க்க ஸ்தாபனை செய்கிறார். அனைவரின் சத்குரு ஒரே ஒருவர். மற்றபடி பக்தி மார்க்கத்தின் மத சடங்குகளால் யாருக்குமே சத்கதி ஆவதில்லை. அனைவரும் படி இறங்கியே ஆக வேண்டும். பாரதம் சதோபிரதானமாக இருந்தது. பிறகு 84 பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கும். மீண்டும் இப்பொழுது நீங்கள் ஏற வேண்டும். முக்தி தாமமாகிய தங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்பொழுது நாடகம் முடிவடைகிறது. இந்த பழைய உலகம் முடிந்து போய் விடும். பாரதத்திற்கு அழிவில்லாத கண்டம் என்று கூறப்படுகிறது. தந்தையினுடைய பிறந்த இடம். ஒரு பொழுதும் அழிந்து போவதில்லை. நீங்கள் சாந்தி தாமத்திற்குச் சென்று பிறகு வருவீர்கள். வந்து ஆட்சி புரிவீர்கள். பாவனம் மற்றும் பதீதமானவர்கள் பாரதத்தில் தான் இருக்கிறார்கள். 84 பிறவிகள் எடுத்து எடுத்து பதீதமாக ஆகி விட்டுள்ளீர்கள். யோகியிலிருந்து போகியாக ஆகி உள்ளீர்கள். இது பயங்கரமான நரகமாகும். மிகுந்த துக்கத்தினுடைய நேரம் ஆகும். இப்பொழுது நிறைய துக்கம் வரப் போகிறது. வீணாக ரத்தக் களறியின் விளையாட்டு நடக்கும். அமர்ந்தபடியே குண்டுகள் விழும். நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்? வீணாக எல்லோருடைய அழிவும் ஏற்பட்டு விடும். விநாசத்தினுடைய (சாட்சாத்காரம்) காட்சிகளைக் குழந்தைகள் பார்த்திருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தை அறிந்து விட்டுள்ளீர் கள். உங்களிடம் ஞான வாள், ஞான கேடயம் உள்ளது. நீங்கள் பிரம்மா முக வம்சாவளி பிராமணர்கள். பிரஜாபிதா கூட பாபா ஆவார். முந்தைய கல்பத்திலும் இவர் முகவம்சாவளியை உருவாக்கி இருந்தார். நான் கல்ப கல்பமாக வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். இவருக்குள் பிரவேசம் செய்து உங்களை முக வம்சாவளியாக ஆக்குகிறேன். பிரம்மாவின் மூலமாக சொர்க்கத்தை ஸ்தாபனை செய்விக்கிறேன். சொர்க்கத்திற்கு வருங்காலத்தில் தான் செல்வீர்கள். சீசீ உலகமோ முடிந்து போய் விட வேண்டும். எல்லையில்லாத தந்தை வருவதே புது உலகத்தைப் படைக்க. நான் குழந்தைகளாகிய உங்களுக்காக உள்ளங்கையில் சொர்க்கத்தை ஏந்தி வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். உங்களுக்கு எந்த கஷ்டமும் கொடுப்பதில்லை. நீங்கள் அனைவரும் திரௌபதிகள் ! நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தேவதைகளை விடவும் சர்வோத்தம பிராமணர்களாகிய நாம் உயர்ந்தவர்கள் என்ற இந்த ஆன்மீக போதையில் இருக்க வேண்டும். ஞானம் மற்றும் யோகத்தினால் ஆத்மாவைத் தூய்மைப் படுத்த வேண்டும்
2. அனைவருக்கும் சிவபாபாவின் அவதாரத்தின் வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும். தந்தையின் அறிமுகம் அளித்து பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்க வேண்டும். இராவணன் என்ற எதிரியிடமிருந்து விடுவிக்க வேண்டும்.
வரதானம்:
ஒவ்வொரு எண்ணத்தையும் பாபாவிற்கு முன்னால் அர்ப்பணம் செய்து
பலவீனங்களை போக்கக்கக் கூடிய சதா சுதந்திரமானவர் ஆகுக.
பலவீனங்களை போக்குவதற்கான சகஜமான சாதனம் - என்னவெல்லாம் எண்ணங்கள் உருவா கிறதோ அதை பாபாவிற்கு அர்ப்பணம் செய்யுங்கள். அனைத்து பொறுப்புகளையும் பாபாவிற்கு கொடுத்து விடுவதால், சுதந்திரமானவராக ஆகிவிடலாம். நான் பாபாவுடையவன், பாபா என்னுடையவர் என்ற திடமான எண்ணம் வையுங்கள். இந்த அதிகாரி சொரூபத்தில் நிலைத் திருந்தால் அடிமைத் தன்மை தானாகவே விலகிவிடும். நான் பாபாவிற்குச் சமமாக அனைத்து சக்திகளின் அதிகாரி மாஸ்டர் சர்வசக்திவானாக இருக்கிறேனா என்று ஒவ்வொரு நொடியும் சோதனை செய்யுங்கள்.
சுலோகன்:
ஸ்ரீமத் என்ற சைகையின் மூலம் நொடியில் விலகியவராகவும்,
அன்பானவராகவும் இருப்பது தான் தபஸ்வி ஆத்மாவின் அடையாளமாகும்.