25-03-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

குழந்தைகளின் எந்த ஒரு விசேஷ குணத்தைப் பார்த்து பாப்தாதா மிகவும் குஷி அடைகின்றார்?

பதில்:

ஏழைக் குழந்தைகள் பாபாவின் யக்ஞத்திற்கு 8 அணா, ஒரு ரூபாய் அனுப்புகின்றனர். பாபா, இதற்கு கைமாறாக எமக்கு மாளிகை கொடுங்கள் என்று கூறுகின்றனர். பாபா கூறுகின்றார் – குழந்தைகளே! இந்த ஒரு ரூபாயும் கூட சிவபாபாவின் யக்ஞத்தில் சேமிப்பாகிவிட்டது. உங்களுக்கு 21 பிறவிகளுக்கு மாளிகை கிடைத்துவிடும். சுதாமாவினுடைய உதாரணம் இருக் கிறது அல்லவா! எந்த செலவுமின்றி குழந்தைகளாகிய உங்களுக்கு உலக இராஜ்யம் கிடைத்து விடுகிறது. ஏழைக் குழந்தைகளின் இந்த சிறப்பான குணத்தைப் பார்த்து பாபா மிகவும் மகிழ்ச்சி அடைகின்றார்.

பாடல்:

உன்னை அடைந்ததால் நாங்கள் ........

ஓம்சாந்தி. பாபாவிடமிருந்து இப்பொழுது எல்லையற்ற ஆஸ்தி அடைந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை இனிமையிலும் இனிய குழந்தைகள் புரிந்திருக்கிறீர்கள். பாபா! உங்களது ஸ்ரீமத்படி நடந்து நாங்கள் உங்களிட மிருந்து மீண்டும் எல்லையற்ற ஆஸ்தி அடைந்துக் கொண்டிருக் கிறோம் என்று குழந்தைகள் கூறுகிறீர்கள். இது ஒன்றும் புது விஷயம் கிடையாது. குழந்தை களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது. சுகதாமத்திற்கான ஆஸ்தி நாம் கல்ப கல்பமாக அடைந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் 84 பிறவிகள் எடுக்க வேண்டி யிருக்கிறது. உண்மையில் நாம் எல்லையற்ற தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தி அடைகிறோம், பிறகு சிறுக சிறுக இழக்கிறோம். இது அழிவற்ற, ஏற்கெனவே உருவாக்கப் பட்ட விளையாட்டு என்று தந்தைப் புரிய வைத்திருக்கின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு பாலனை கிடைத்துக் கொண்டே இருக்கிறது. நாடகத்தில் அதிக சுகம் இருக்கிறது என்பதையும் அறிவீர்கள். கடைசி நாட்களில் இராவணனின் மூலம் அதிக துக்கம் அடைகிறீர்கள். இப்பொழுது நீங்கள் மிகக் குறைவானவர்களாக இருக்கிறீர்கள், நாட்கள் செல்ல செல்ல மிக அதிக எண்ணிக்கை ஏற்பட்டுவிடும். மனிதனிலிருந்து தேவதைகளாக ஆவார்கள். நாம் கல்ப கல்பத்திற்கு தந்தையிட மிருந்து ஆஸ்தி அடைகிறோம் என்பதை அவசியம் உள்ளத்தில் புரிந்துக் கொள்வார் கள். யாரெல்லாம் வந்து ஞானம் பெறுகிறார்களோ அவர்கள் ஞானக் கடல் தந்தையின் மூலம் சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் பெறுகிறோம் என்பதை புரிந்து கொள்வார்கள். தந்தை தான் ஞானக் கடல், பதீதமானவர்களை பாவனம் ஆக்கக் கூடியவர், அதாவது முக்தி, ஜீவன்முக்திக்கு அழைத்துச் செல்லக் கூடியவர். இதையும் இப்பொழுது தான் நீங்கள் அறிகின்றீர்கள். பலர் குருக்களிடம் செல்கின்றனர் அல்லவா! கடைசியில் குருக்களையும் விட்டு விட்டு வந்து ஞானம் பெறுவார்கள். உங்களுக்கும் இப்பொழுது இந்த ஞானம் கிடைத் திருக்கிறது. இதற்கு முன்பு அஞ்ஞானிகளாக இருந்தோம் என்பதை அறிவீர்கள். சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது? சிவபாபா, பிரம்மா, விஷ்ணு, சங்கர் யார்? போன்ற எதுவும் அறியாமல் இருந்தோம். இப்பொழுது நாம் உலகிற்கு எஜமானர்களாக இருந்தோம் என்பதை அறிந்து கொண்டதால் உங்களது புத்தியில் நன்றாக, அதிக போதை ஏற்பட வேண்டும். தந்தையை மற்றும் சிருஷ்டிச் சக்கரத்தை நினைவு செய்துக் கொண்டே இருக்க வேண்டும். தந்தை மற்றும் ஆஸ்தி. இதற்கு முன்பு நீங்கள் எதையும் அறியாதவர்களாக இருந்தீர்கள் அல்லவா? என்று தந்தைப் புரிய வைக்கின்றார். தந்தையையும், அவரது படைப்புகளையும் அறியாமல் இருந்தீர்கள். முழு சிருஷ்டியில் உள்ள மனிதர்கள் தந்தையையும், படைப்பின் முதல், இடை, கடையை அறியவில்லை. இப்பொழுது நீங்கள் சூத்திரனிலிருந்து பிராமணர்களாக ஆகியிருக்கிறீர்கள். தந்தை அனைத்து குழந்தைகளிடமும் உரையாடிக் கொண்டிருக்கின்றார். எவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனர்! எவ்வளவு சென்டர்கள் உள்ளன! மேலும் சென்டர்கள் திறப்பீர்கள். ஆக முன்பு நீங்கள் எதையும் அறியாமல் இருந்தீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கின்றார். இப்பொழுது வரிசைக் கிரமமான முயற்சியின் மூலம் புரிந்துக் கொண்டீர்கள். இப்பொழுது நாம் தந்தையின் மூலம் பதீதத்திலிருந்து பாவனமாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அறிவீர்கள். மற்றவர் கள் அழைத்துக் கொண்டே இருக்கின்றனர், நீங்கள் குப்தமாக இருக்கிறீர்கள். பிரம்மா குமார், குமாரிகள் என்று கூறுகின்றனர், ஆனால் இவர்களுக்கு படிப்பு கற்பிப்பவர் யார்? என்பதைப் புரிந்து கொள்வது கிடையாது. எந்த சாஸ்திரங்களிலும் எழுதப்படவும் இல்லை. அதே கீதையின் பகவான் வந்து குழந்தைகளுக்கு இராஜ யோகத்தை கற்பிக்கின்றார். இது உங்களது புத்தியில் வருகிறது அல்லவா! நீங்கள் கீதையையும் படித்திருப்பீர்கள். ஞான மார்க்கம் முற்றிலும் தனிப்பட்டது என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டீர்கள். விதுத் மண்டலியில் சாஸ்திரங்களைப் படித்து பட்டம் பெறுவது போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்கள் ஆகும். இந்த ஞானம் அவர்களிடத்தில் கிடையாது. தந்தை வந்து தான் படைப்பின் முதல், இடை, கடையின் ஞானம் கொடுக்கின்றார். தந்தை வந்து உங்களது புத்தியின் பூட்டை திறந்திருக்கின்றார்.

முன்பு நாம் எப்படியிருந்தோம்? இப்பொழுது என்ன ஆகியிருக்கிறோம்? என்பதை நீங்கள் அறிவீர்கள். புத்தியில் முழு சக்கரமும் வந்து விட்டது. ஆரம்பத்தில் எதுவும் புரிந்துக் கொள்ளாமல் இருந்தீர்கள். நாளுக்கு நாள் ஞானம் என்ற மூன்றாவது கண் நன்றாக திறந்துக் கொண்டே செல்கிறது. பகவான் எப்பொழுது வந்தார்? அவர் யார்? எப்பொழுது வந்து கீதை ஞானம் கொடுத்தார்? என்பது யாருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்து கொண்டீர்கள். புத்தியில் முழு சக்கரத்தின் ஞானம் இருக்கிறது. எப்பொழுதிலிருந்து நாம் தோல்வி அடைகின்றோம்? மேலும் எப்படி விகார மார்க்கத்தில் செல்கிறோம்? எப்படி ஏணியில் இறங்கு கின்றோம்? இந்த சித்திரத்தில் எவ்வளவு எளிதாகப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது! 84 பிறவி களுக்கான ஏணி ஆகும். எவ்வாறு இறங்குகிறோம்? பிறகு எவ்வாறு ஏறுகிறோம்? பதீத பாவன் யார்? பதீதமாக ஆக்கியது யார்? இதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். பதீத பாவன் என்று அவர்கள் வெறுமனே பாடிக் கொண்டிருக் கின்றனர். இராவண இராஜ்யம் எப்பொழுது ஆரம்பமானது? எப்பொழுதிலிருந்து பதீதமாக ஆனோம்? என்பதைப் புரிந்துக் கொள்வது கிடையாது. இந்த ஞானமே ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களுக்காகத் தான். நான் தான் ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை செய்திருந்தேன் என்று தந்தை கூறுகின்றார். இந்த உலகின் சரித்திர, பூகோளத்தை தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. உங்களுக்கு இது கதைப் போன்று இருக்கிறது. எவ்வாறு இராஜ்யத்தை அடைகிறோம்? எவ்வாறு இழக்கிறோம்? அந்த சரித்திர பூகோளத்தை நாம் படிக்கிறோம். இது எல்லையற்ற விஷயமாகும். நாம் 84 பிறவிச் சக்கரத்தில் எவ்வாறு வருகிறோம்? நாம் உலகிற்கு எஜமானர்களாக இருந்தோம், பிறகு இராவணன் இராஜ்யத்தை அபகரித்து விட்டான். இந்த ஞானத்தை தந்தை தான் கொடுத் திருக்கின்றார். மனிதர்கள் தசரா போன்ற விழாக்கள் கொண்டாடு கின்றனர், ஆனால் எந்த ஞானமும் கிடையாது. உங்களிடத்தில் இந்த ஞானமே இல்லாமல் இருந்தது போலத்தான். இப்பொழுது ஞானம் அடைந்துக் கொண்டிருப்பதால் குஷியாக இருக்கிறீர்கள். ஞானம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. எல்லையற்ற ஞானம் புத்தியில் இருக்கிறது. தந்தை உங்களது புத்தி என்ற பையை நிரப்பிக் கொண்டிருக்கின்றார். பை நிறைத்துவிடுங்கள் என்று கூறுகின்றனர் அல்லவா! யாரிடத்தில் கூறுகின்றனர்? சாது, சந்நியாசிகளிடத்தில் கூறுவது கிடையாது. போலாநாத் (கள்ளங் கபடமற்ற) சிவனிடம் கூறுகின்றனர். அவரிடம் தான் யாசிக்கின்றனர். உங்களிடத்தில் இப்பொழுது மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. உங்களிடத்தில் மிகுந்த குஷியிருக்க வேண்டும். புத்தியில் எவ்வளவு ஞானம் வந்துவிட்டது! எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லை யற்ற ஆஸ்தி கிடைக்கிறது. ஆக இப்பொழுது தனக்கும், மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். முன்பு ஒருவருக்கொருவர் தீமை தான் செய்தீர்கள், ஏனெனில் அசுர வழியில் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத் படி நடந்து தனக்கும் நன்மை செய்துக் கொள்ள வேண்டும். இந்த எல்லையற்ற படிப்பை அனைவரும் படிக்க வேண்டும், கிளைகள் திறக்கப்பட வேண்டும் என்று உங்களது உள்ளம் விரும்புகிறது. பாபா, கண்காட்சிக்கான படங்களை கொடுங்கள், புரொஜக்டர் கொடுங்கள், நாங்கள் கிளைகள் திறக்கிறோம் என்று கூறுகிறீர்கள். எந்த ஞானத்தின் மூலம் எங்களுக்கு எல்லையற்ற குஷி ஏற்பட்டதோ அதை மற்றவர்களுக்கும் அனுபவம் செய்விக்க வேண்டும். நாடகப்படி இந்த முயற்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாரதத்தை மீண்டும் சொர்க்கமாக ஆக்குவதற்காக தந்தை வந்திருக்கின்றார். முன்பு நாம் நரகவாசிகளாக இருந்தோம், இப்பொழுது சொர்க்கவாசிகளாக ஆகிக் கொண்டிருக் கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த சக்கரம் உங்களது புத்தியில் சதா சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் குஷியாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்ற போதையும் இருக்க வேண்டும். நாம் தந்தையிட மிருந்து ஞானம் அடைந்துக் கொண்டிருக்கிறோம். இதை அறியாத உங்களது மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் வழி கூறுவது உங்களது கடமையாகும். தந்தையின் பாகம் அனைவருக்கும் நன்மை செய்வதாகும், அதே போன்று நமது பாகமும் அனைவருக்கும் நன்மை செய்வதாக இருக்க வேண்டும். பாபா கல்யாணகாரியாக ஆக்கியிருக்கின்றார் எனில் தனக்கும் நன்மை செய்துக் கொள்ள வேண்டும், மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். நீங்கள் இந்த கிளைக்குச் சென்று சேவை செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஒரே இடத்தில் அமர்ந்துக் கொண்டு சேவை செய்யக் கூடாது. யார், எந்தளவிற்கு புத்திசாலிகளாக இருப்பார்களோ அந்த அளவிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்குள் இருக்கும். இந்த இடத்தில் புதிய கிளையை திறக்க வேண்டும். யார் யார் சேவாதாரியாக இருக்கின்றனர்? யார் யார் கட்டளைப்படி நடக்கின்றனர்? நேர்மையானவர்களாக இருக்கின்றனர்? என்பதை அறிவார். அஞ்ஞான காலத்திலும் ஒழுக்கமற்ற குழந்தையின் மீது தந்தைக்கு கோபம் ஏற்படும். நான் முற்றிலும் சாதாரண முறையில் புரிய வைக்கிறேன், இதில் பயப்படுவதற்கு எந்த விஷயமும் கிடையாது என்று எல்லையற்ற தந்தை கூறுகின்றார். யார் செய்கிறார்களோ அவர்கள் (பலனை) அடைவார்கள். சாபம் அல்லது கோபத் திற்கான விஷயம் கிடையாது. ஏன் நன்றாக சேவை செய்த தனக்கும், மற்றவர்களுக்கும் நன்மை செய்து கொள்ளக் கூடாது என்று தந்தை கேட்கின்றார். யார் எந்தளவிற்கு பலருக்கு நன்மை செய்கிறார்களோ அந்த அளவிற்கு பாபாவும் குஷியடைவார். மலர் தோட்டத்தில் இந்த மலர் எவ்வளவு நன்றாக இருக்கிறது? என்பதை பாபா பார்ப்பார். இது அனைத்தும் மலர் தோட்டமாகும். தோட்டத்தை பார்ப்பதற்காக பாபா, நாங்கள் சென்டர்களை வலம் சென்று பார்க்கலாமா? என்று கேட்கின்றனர். எப்படிப்பட்ட மலர்கள் உள்ளன? எப்படி சேவை செய்து கொண்டிருக்கின்றனர்? செல்வதன் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும். எப்படி குஷியில் நடனமாடிக் கொண்டிருக் கின்றனர்? பாபா, இன்னாருக்கு நான் இவ்வாறு புரிய வைத்தேன் என்று பாபாவிடம் வந்துக் கூறுகின்றனர். இன்று எனது கணவரை, சகோதரரை அழைத்து வந்தேன். பாபா வந்திருக்கின்றார், அவர் வாழ்க்கையை வைரம் போன்று எப்படி ஆக்குகின்றார்? என்பதைப் புரிய வைத்தேன். கேட்கின்றனர், பார்க்கவும் விரும்புகின்றனர் எனும்பொழுது குழந்தைகளுக்குள் ஆர்வம் ஏற்படுகிறது, அழைத்து வருகின்றனர். உலக சரித்திர, பூகோளத்தை அறிய வேண்டும் அல்லவா! பாரதம் முழு உலகிற்கும் எஜமானாக இருந்தது, இப்போது எந்த நிலையில் இருக்கிறது? என்பதை நீங்களே முடிவெடுங்கள். சத்யுகம், திரேதாவில் எவ்வளவு சுகம் இருந்தது! இப்பொழுது பாபா மீண்டும் உலகிற்கு எஜமானர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார். கடைசியில் உலகில் அதிக குழப்பங்கள் ஏற்படும் என்பதையும் அறிவீர்கள். யுத்தம் ஒருபொழுதும் முடிவடைந்துவிடாது. எங்காவது ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சண்டை தான் நடை பெறுகிறது! எவ்வளவு குழப்பங்கள் இருக்கின்றன! அயல் நாட்டில் என்ன என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? நான் என்ன செய்துக் கொண்டிருக்கிறேன்? என்றும் புரிந்து கொள்வது கிடையாது. எவ்வளவு புயல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன! மனிதர்களும் இறந்துக் கொண்டே இருக்கின்றனர். எவ்வளவு துக்கமான உலகமாக இருக்கிறது! இந்த துக்கமான உலகிலிருந்து சென்றே விட்டோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாபா பொறுமையை (சகிப்புத்தன்மையை) அறிவுறுத்துகின்றார். இது சீ சீயான உலகமாகும். இன்னும் சிறிது காலத்தில் நாம் அமைதியான உலகை இராஜ்யம் செய்வோம். இதில் குஷியடைய வேண்டும் அல்லவா! கிளைகள் திறக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சென்டர்கள் திறக்கப்படுகின்றன, நல்ல நல்ல குழந்தைகள் செல்லுங்கள், யார் உள்ளத்தில் இடம் பிடித்திருக்கிறார்களோ அவர்களது பெயரையும் பாபா எழுதி விடுகின்றார். பலருக்கு நன்மை ஏற்படுகிறது. பாபா, நான் பந்தனம் உள்ளவனாக இருக்கிறேன் என்று பலர் எழுதுகின்றனர். நல்லது, கிளை திறக்கப்பட்டு விட்டால் பலர் வந்து ஆஸ்தி அடைவார்கள். இவை அனைத்தும் விநாசம் ஆகி விடும் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள் எனும் பொழுது பிறகு ஏன் பலருக்கு நன்மை செய்யும் பொருட்டு காரியத்தில் பயன்படுத்தக் கூடாது? நாடகத்தில் அவர்களுக்கும் இப்படிப்பட்ட பாகம் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் களது பாகத்தை நடித்துக் கொண்டிருக்கின்றனர். இறக்கம் ஏற்படுகிறது. மற்றவர்களையும் பந்தன மற்றவர் களாக ஆக்குவதற்கு சிறிதாவது உதவி செய்ய வேண்டும். அவர்களும் ஆஸ்தி அடைய வேண்டும். தந்தைக்கு எவ்வளவு கவலைகள் இருக்கின்றன! அனைவரும் காமச் சிதையில் எரிந்து கொண்டிருக்கின்றனர். அனைத்தும் சுடுகாடாக இருக்கிறது. அல்லா வந்து சுடுகாட்டிலிருந்து எழுப்பி அனைவரையும் அழைத்துச் செல்வார் என்றும் கூறுகின்றனர்.

இராவணன் எப்படி தோல்வியடையச் செய்தான்? என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். முன்பு புரிந்து கொள்ளாமல் இருந்தோம். நான் நகை வியாபாரி, இலட்சாதிபதி, இவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனர் என்ற போதை இருந்தது அல்லவா! ஆனால் முழுமையாக பதீதமாக இருக்கிறோம் என்பதை இப்பொழுது புரிந்து கொண்டோம். பழைய உலகில் எவ்வளவு தான் இலட்சாதிபதியாக, கோடீஸ்வரனாக இருக்கலாம், ஆனால் இவை அனைத்தும் சோழி போன்றது மதிப்பற்றது. இல்லாமல் போய் விட்டதாகவே நினையுங்கள். மாயையும் எவ்வளவு பிரபலமாக இருக்கிறது! குழந்தைகளே! கிளைகள் திறங்கள், பலருக்கு நன்மை ஏற்படும் என்று தந்தை கூறுகின்றார். ஏழைகள் விரைவாக விழித்துக் கொள்கின்றனர். செல்வந்தர்கள் முழுமையாக விழிப்படைவது சிறிது கடினமாக இருக்கிறது. தங்களது (செல்வத்தின்) குஷியின் போதையில் இருக்கின்றனர். மாயை முற்றிலும் தனது வசத்தில் கொண்டு வந்து விட்டது. புரிய வைக்கும் பொழுது புரிந்து கொள்ளவும் செய்கின்றனர், ஆனால் எப்படி விடுவது? இவர்களைப் போன்று அனைத்தையும் விட்டு விட வேண்டும் என்ற பயமும் ஏற்படுகிறது. அதிர்ஷ்டத்தில் இல்லையெனில் முன்னேற முடியாது. விடுதலை அடைவது கடினமாக இருக்கிறது. உண்மையில் சீ சீ ஆன உலகம் என்று அந்த நேரத்தில் வைராக்கியம் வந்து விடுகிறது. பிறகு அதை அங்கேயே விட்டு விடுகின்றனர். கோடியில் சிலர் தான் வெளிப்படுகின்றனர். மும்பையில் நூற்றுக்கணக்கில் வருகின்றனர், சிலருக்கு மட்டுமே தாக்கம் ஏற்படுகிறது. எதிர்காலத்தை சிறிதாவது உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். சோழிக்கு பதில் நமக்கு வைரம் கிடைத்துவிடும். பெட்டி படுக்கைகள் அனைத்தையும் சொர்க்கத்திற்கு மாற்றல் செய்யுங்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். அங்கு 21 பிறவிகளுக்கு உங்களுக்கு இராஜ்ய பாக்கியம் கிடைக்கும். சிலர் ஒரு ரூபாய், எட்டு அணா அனுப்பி வைத்து விடுகின்றனர். உங்களது ஒரு ரூபாயும் சிவபாபாவின் பொக்கிஷத்தில் சேமிப்பாகிவிடுகிறது என்று தந்தை கூறுகின்றார். உங்களுக்கு 21 பிறவிகளுக்கு மாளிகை கிடைத்துவிடும். சுதாமாவிற்கான உதாரணம் இருக்கிறது அல்லவா! இப்படிப் பட்டவர்களைப் பார்த்து பாபா மிகவும் மகிழ்ச்சி அடைகின்றார். எந்த செலவுமின்றி குழந்தை களாகிய உங்களுக்கு உலக இராஜ்யம் கிடைக்கிறது. யுத்தம் போன்ற எதுவும் கிடையாது. அவர்கள் சிறிது நிலத்திற்காகவும் எவ்வளவு சண்டையிட்டுக் கொள்கின்றனர்! ஆனால் மன்மனாபவ என்று மட்டுமே உங்களுக்கு கூறுகின்றார். அவ்வளவு தான், இங்கேயே இருந்து விட வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். குஷியாக இருங்கள். உணவு முறைகளும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் இளவரசன் ஆகுமளவிற்கு தனது ஆத்மா எந்தளவிற்கு தூய்மையாக ஆகி யிருக்கிறது? என்பதை நீங்கள் அறிவீர்கள். நாட்கள் செல்ல செல்ல உலகின் நிலை மிகவும் மோசமாக ஆகியே தீர வேண்டும். சாப்பிடுவதற்கு உணவு கிடைக்கவில்லை எனும் பொழுது புல்லை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். பிறகு வெண்ணையின்றி என்னால் இருக்க முடியாது என்றெல்லாம் கூறமாட்டார்கள். எதுவும் கிடைக்காது. இப்பொழுது எவ்வளவு இடத்தில் மனிதர்கள் புல்லை சாப்பிட்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர்! நீங்கள் மிகுந்த குஷியுடன் பாபாவின் வீட்டில் அமர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். வீட்டில் தந்தை தான் முதலில் குழந்தைகளுக்கு ஊட்டி விடுவார் அல்லவா! உலகம் முற்றிலும் கெட்டுவிட்டது. இங்கு நீங்கள் மிகவும் சுகமாக அமர்ந்திருக்கிறீர்கள். தந்தை மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்துக் கொண்டிருங்கள். தனக்கும், மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். நாட்கள் செல்ல செல்ல தானாகவே வருவார்கள், அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்வார்கள். உருவாக்கிக் கொள்ள வேண்டும் அல்லவா! எல்லையற்ற இராஜ்யம் ஸ்தாபனை ஆக வேண்டும். ஒவ்வொருவரும் முந்தைய கல்பத்தைப் போன்று முயற்சி செய்கிறீர்கள். குழந்தைகள் மிகுந்த குஷியுடன் இருக்க வேண்டும். பாப்தாதாவின் சித்திரத்தைப் பார்த்ததும் குஷியில் மெய் சிலிர்த்து விட வேண்டும். அந்த குஷியானது நிலைத்து இருக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) சதா அளவற்ற குஷியுடன் இருப்பதற்காக எல்லையற்ற ஞானத்தை புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். ஞான ரத்தினங்களினால் தனது புத்தி என்ற பையை நிறைத்து தனக்கும், மற்ற அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். ஞானத்தில் மிக மிக புத்திசாலி களாக ஆக வேண்டும்.

2) எதிர்கால 21 பிறவிகளுக்கு இராஜ்ய பாக்கியத்தின் அதிகாரம் அடைவதற்கு தனது பெட்டி படுக்கை அனைத்தையும் மாற்றல் (டிரான்ஸ்பர்) செய்து விட வேண்டும். இந்த சீ சீ உலகிலிருந்து விடுபடுவதற்கான யுக்தி உருவாக்க வேண்டும்.

வரதானம்:

ஒவ்வொரு கர்மம் (செயல்) என்ற விதையையும் பயனளிக்க கூடியதாக்கக் கூடிய

தகுதி பெற்ற ஆசிரியர் ஆகுக.
யார் சுயம் அறிவுரையின் சொரூபமாக இருக்கிறார்களோ, ஏனெனில் மற்றவருக்கு அறிவுரை கூறுவதற்கான அனைத்தையும் விட எளிய வழிமுறை தனது சொரூபத்தின் மூலம் அறிவுரை வழங்குவதாகும். இவர்களை தான் தகுதி வாய்ந்த ஆசிரியர் என்று கூறப்படுகிறது. அவர்கள் தனது ஒவ்வொரு அடியின் (செயலின்) மூலம் அறிவுரை கொடுப்பது, அவர்களுடைய ஒவ்வொரு சொல்லும் வார்த்தையாக இருக்காது, ஆனால் மகாவாக்கியமாக இருக்கும். அவர்களுடைய ஒவ்வொரு கர்மம் என்ற விதையும் பலனளிக்கக் கூடியதாக இருக்கும். பலனற்றதாக இருக்காது. அவ்வாறு தகுதி வாய்ந்த ஆசிரியரின் எண்ணம் ஆத்மாக்களை புது உலகத்தின் அதிகாரியாக மாற்றி விடுகிறது.

சுலோகன்:

மன்மனாபவ என்ற மனநிலையில் இருந்தீர்கள் என்றால் அலௌகீக சுகம்

 

மற்றும் மனதின் மகிழ்ச்சியான மனநிலையை அனுபவம் செய்வார்கள்.