22-03-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

கல்யாணகாரி (நன்மைபயக்கும்) யுகத்தில் தந்தை அனைத்து குழந்தைகளுக்கும் என்ன நினைவூட்டுகிறார்?

பதில்:

குழந்தைகளே! நீங்கள் உங்களுடைய வீட்டை விட்டு ஐந்தாயிரம் வருடங்கள் ஆகிவிட்டது. நீங்கள் ஐந்தாயிரம் வருடங்களில் 84 பிறவிகள் எடுத்தீர்கள். இப்பொழுது இது கடைசிப் பிறவி. வானப்பிரஸ்த நிலை ஆகும். எனவே இப்பொழுது வீடு செல்வதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள். பிறகு சுக தாமத்தில் வருவீர்கள். இல்லற விவகாரங்களில் தாராளமாக இருங்கள். ஆனால் இந்த கடைசிப் பிறவியில் தூய்மையாக ஆகி தந்தையை நினைவு செய்யுங்கள்.

பாடல்:

சபையில் ஒளி எரிந்து வந்தது.. .. ..

ஓம் சாந்தி. பகவான் ஒருவரே, காட் இஸ் ஒன் என்பதை குழந்தைகள் புரிந்துள்ளீர்கள். அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒருவரே ஆவார். அவருக்கு பரமபிதா பரமாத்மா என்றுக் கூறப்படுகிறது. சிருஷ்டியின் படைப்பு கர்த்தா அவர் ஒருவரே ஆவார். அநேகராக இருக்கவே முடியாது. இந்த கருத்தின்படி மனிதர்கள் தங்களை பகவான் என்று கூறிக் கொள்ள முடியாது. இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய சேவைக்கு கருவியாக ஆகி உள்ளீர்கள். இறைவன் புது உலகத்தின் ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறார். அதற்கு சத்யுகம் என்று கூறப் படுகிறது. அதற்கு நீங்கள் தகுதி யுடைவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சத்யுகத்தில் யாருமே பதீதமானவர் களாக இருப்ப தில்லை. இப்பொழுது நீங்கள் பாவனமாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பதீத பாவனன் நான் தான் என்று தந்தைக் கூறுகிறார். மேலும் உங்களுடைய நிராகார தந்தையாகிய என்னை நினைவு செய்வதால் நீங்கள் பதீத தமோபிரதான நிலையிலிருந்து பாவன சதோபிரதானமாக ஆகிவிடு வீர்கள் என்ற சிறந்த வழியை குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கிறேன். நினைவு என்ற யோக அக்னியால் உங்களுடைய பாவங்கள் அழிந்துப் போய்விடும். சாதுக்கள் ஆகியோரோ இறைவன் சர்வவியாபி என்றுக் கூறிவிடுகிறார்கள். ஒரு புறம் பகவான் ஒருவர் என்று கூறுகிறார் கள். பிறகு இங்கோ நிறைய பேர் தங்களை பகவான் என்றுக் கூறிக் கொள் கிறார்கள். ஸ்ரீ ஸ்ரீ 108 ஜகத்குரு என்று அழைத்துக் கொள்கிறார்கள். இப்பொழுது ஜகத்தினை பாவனமாக ஆக்கக்கூடிய ஒரு பரமாத்மா முழு உலகத்தைத் துக்கத்திலிருந்து விடுவிக்கிறார். அவரே துக்கத்தை நீக்குபவர் சுகத்தை கொசுப்பவர் ஆவார். மனிதர்களை இவ்வாறுக் கூற முடியாது. இதுவும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். இது இருப்பதே பதீத உலகமாக. எல்லோரும் பதீதமாக உள்ளார் கள். பாவன உலகத்தில் மகாராஜா மகாராணி எவ்வாறோ அவ்வாறே பிரஜைகள். சத்யுகத்தில் பூஜைக்குரிய மகாராஜா மகாராணி இருப்பார்கள். பிறகு பக்தி மார்க்கத்தில் பூசாரி ஆகிவிடு கிறார்கள். சத்யுகத்தில் இருந்த மகாராஜா மகாராணிகளுக்கு இரண்டு கலைகள் குறைந்துவிடும் பொழுது இராஜா இராணி என்றுக் கூறப்படுகிறது. இவை அனைத்து விஷயங்களும் விளக்க மானவை ஆகும். இல்லையென்றால் ஒரு நொடியில் ஜீவன் முக்தி. இல்லற விவகாரங்களில் தாராளமாக இருங்கள். ஆனால் இந்தக் கடைசி பிறவியில் தூய்மையாக இருங்கள் என்று தந்தைப் புரிய வைக்கிறார். இப்பொழுது வானப் பிரஸ்த நிலை ஆகும். வானப்பிரஸ்தம் அல்லது சாந்திதாமம் செல்வது என்பது ஒரே விஷயம் ஆகும். இங்கு ஆத்மாக்கள் பிரம்ம தத்துவத்தில் இருப்பார்கள். அதற்கு பிரம்மாண்டம் என்று கூறுவார்கள். உண்மையில் ஆத்மாக்கள் ஒன்றும் (அண்டா) முட்டைப் போல கிடையாது. ஆத்மாவோ நட்சத்திரம் போன்றதாகும். யாரெல்லாம் ஆத்மாக்களாக இருக்கிறார்களோ அவர்கள் இந்த நாடகத்தில் நடிகர்கள் ஆவார்கள் என்று பாபா புரிய வைத்துள்ளார். எப்படி நடிகர்கள் நாடகத்தில் ஆடையை மாற்றுகிறார்கள். பல்வேறு பாகங் களை நடிக்கிறார்கள். இதுவும் எல்லையில்லாத நாடகம் ஆகும். ஆத்மாக்கள் இந்த சிருஷ்டியில் 5 தத்துவங்களால் உருவாக்கப்பட்ட சரீரத்தில் இறங்கி ஆரம்ப முதற்கொண்டு அவர்களுடைய பாகத்தை நடிக் கிறார்கள். பரமாத்மா மற்றும் பிரம்மா, விஷ்ணு, சங்கர் அனைவரும் நடிகர்களே ஆவார்கள். நாடகத்தில் பாகம் ஏற்று நடிப்பதற்காக பல்வேறு விதமான ஆடை கிடைக்கிறது. வீட்டில் ஆத்மாக்கள் எல்லோருமே சரீரமின்றி இருப்பார்கள். பிறகு 5 தத்துவங்களாலான சரீரம் தயாராகிவிடும் பொழுது அதில் ஆத்மா பிரவேசம் செய்கிறது. 84 சரீரங்கள் கிடைக்கிறது என்றால் பெயர்கள் கூட மாறுகிறது. ஆத்மாவின் பெயர் ஒன்று தான். இப்பொழுது சிவபாபா இருப்பதே பதீத பாவனராக! அவருக்கு தனக்கென்று உடல் கிடையாது. சரீரத்தின் ஆதாரம் எடுக்க வேண்டி வருகிறது. என்னுடைய பெயர் சிவன் தான் என்று கூறுகிறார். பழைய உடலில் தான் வருகிறேன் என்றாலும் கூட அவருடைய உடலின் பெயர் அவருடையது. அவருக்கு உடலுக்கான பெயர் இருக்கிறது. பிறகு அவ்யக்த பெயர் கொடுக்கப்பட்டது. ஒரு தர்மத்தினர் இன்னொரு தர்மத்தில் செல்லும்பொழுது பெயர் மாறுகிறது. நீங்கள் கூட சூத்திர தர்மத்திலிருந்து மாறி பிராமண தர்மத்தில் வந்துள்ளீர்கள். எனவே பெயர் மாறி உள்ளது. நீங்கள் சிவபாபா பிரம்மா மூலமாக என்று எழுதுகிறீர்கள். சிவபாபா பரமபிதா பரமாத்மா ஆவார். அவருடைய பெயர் மாறுவதில்லை. சிவபாபா பிரம்மா மூலமாக ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்வித்துக் கொண்டிருக்கிறார். அது இப்பொழுது மறைந்துவிட்டுள்ளது. பாவனமாக பூஜைக்குரியவர் களாக இருந்தவர்கள் பதீதமான பூசாரி ஆகிறார்கள். 84 பிறவிகள் முடித்துவிட்டுள்ளார்கள். இப்பொழுது மீண்டும் தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிறது. பரமபிதா பரமாத்மா வந்து பிரம்மா மூலமாக மீண்டும் ஸ்தாபனை செய்விக்கிறார் என்று பாடப்பட்டுள்ளது. எனவே பிராமணர்கள் அவசியம் வேண்டும். பிரம்மா மற்றும் பிராமணர்கள் எங்கிருந்து வந்தார்கள்? சிவபாபா வந்து பிரம்மா மூலமாக தத்து எடுக்கிறார். நீங்கள் என்னுடையவர் ஆவீர்கள் என்று கூறுகிறார். சிவபாபாவின் குழந்தைகளாக இருக்கவே இருக்கிறீர்கள். பிறகு பிரம்மா மூலமாக பேரன்கள் ஆகிவிடுகிறீர்கள். பிதாவோ முழு பிரஜைகளுக்கும் ஒருவர் ஆவார். இத்தனை அனைத்துக் குழந்தைகளும் குமாரர் கள் குமாரிகள் ஆவார்கள். அவர்களை சிவபாபா பிரம்மா மூலமாக தத்தெடுக்கிறார். மனிதர் களுக்குத் தெரியுமா என்ன? தந்தை வந்து ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனைச் செய்கிறார். எனவே அப்படியின்றி புதியதாக வந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதல்ல. எப்படி பிரளயம் ஆகியது. பிறகு ஆலிலையில் கடலில் வந்தார் .. .. .. என்று காண்பிக்கிறார்கள். இப்படி எல்லாம் கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த உலகத்தின் சரித்திரம், பூகோளம் மீண்டும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. ஆத்மா அமரமானது (அழியாதது). அதில் இருக்கும் (நடிப்பின்) பாகம் கூட அழியாதது. பாகம் (பதிவு) ஒருபொழுதும் தேய்வது இல்லை. சத்யுகத்தில் அதே இலட்சுமி-நாராயணரினுடைய சூரியவம்ச இராஜதானி நடந்துக் கொண்டே வருகிறது. ஒருபொழுதும் மாறுவது இல்லை. உலகம் புதியதிலிருந்து பழையதாக, பழையதிலிருந்து புதியதாக ஆகிக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அழிவற்ற நடிப்பு (பாகம்) கிடைத்துள்ளது. பக்தி மார்க்கத்தில் எந்த பாவனையுடன் பக்தி செய்கிறார்களோ அவ்வாறே சாட்சாத்காரம் செய்விக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். ஒருவருக்கு ஹனுமான், கணேசர் ஆகியோரின் சாட்சத்காரம் செய்விக்கிறேன். இதுவும் நாடகத்தில் பொருந்தியுள்ளது. மனிதர்கள் பின் பகவான் எல்லோருக்குள்ளும் இருக்கிறார் என்று நினைக்கிறார்கள். எனவே சர்வ வியாபி என்றுக் கூறிவிடு கிறார்கள். பக்தர்களின் மாலையும் உள்ளது. ஆண்களில் நாரதர் சிரோமணி என்றுப் பாடப்படுகிறார். பெண்களில் மீரா. பக்தர்களின் மாலை தனி, ருத்ர மாலை தனி. ஞானத்தின் மாலை தனி. பக்தர்களின் மாலையை ஒரு பொழுதும் பூஜிப்பதில்லை. ருத்ர மாலை பூஜிக்கப்படுகிறது. மேலே இருப்பது மலர் பிறகு மேரு .. .. .. பிறகு இருப்பது குழந்தைகள். அவர்கள் இராஜ சிம்மாசனத்தில் அமருகிறார்கள். ருத்ர மாலையே விஷ்ணுவின் மாலை ஆகும். பக்தர் களின் மாலைக்கு பாடல் மட்டுமே ஆகிறது. இந்த ருத்ர மாலையை எல்லோரும் உருட்டு கிறார்கள். நீங்கள் பக்தர்கள் அல்ல. ஞானி ஆவீர்கள். எனக்கு ஞானமுடைய ஆத்மாக்கள் பிரிய மானவராகப் படுகிறார்கள் என்று தந்தை கூறுகிறார். தந்தை தான் ஞானக்கடல் ஆவார். குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் அளித்துக் கொண்டிருக்கிறார். மாலை கூட உங்களுடையது பூஜிக்கப்படுகிறது. 8 இரத்தினங்களுக்கும் கூட பூஜை ஆகிறது. ஏனெனில் ஞானமுடைய ஆத்மாக் கள் ஆவார்கள். எனவே அவர்களுக்கு பூஜை ஆகிறது. மோதிரம் அமைத்து அதை அணிந்துக் கொள்கிறார்கள். ஏனெனில் இவர்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறார்கள். பாஸ் வித் ஆனர் ஆகிறார்கள். எனவே அவர்களுக்கு பாடல் உள்ளது. 9வது மணியாக நடுவில் சிவபாபாவை வைக்கிறார்கள். அதற்கு நவரத்தினம் என்று கூறுவார்கள். இவை விரிவான விளக்கவுரை ஆகும். தந்தையோ, தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய பாவங்கள் நீங்கி விடும் என்பதை மட்டுமே கூறுகிறார். பிறகு நீங்கள் சென்றுவிடுவீர்கள். பதீத ஆத்மாக்கள் பாவன உலகத்திற்குப் போக முடியாது. இங்கு எல்லோருமே பதீதமாக உள்ளார்கள். தேவதை களின் சரீரம் பவித்திரமாக நிர்விகாரியாக உள்ளது. அவர்கள் பூஜைக்குரியவர்கள். இராஜா இராணி மற்றும் பிரஜைகள் பூஜைக்குரியவர்கள் ஆவார்கள். இங்கு எல்லோருமே பூசாரி ஆவார்கள். அங்கு துக்கத்தின் விஷயம் இல்லை. அதற்கு சொர்க்கம், சுகதாமம் என்று கூறப்படு கிறது. அங்கு சுகம், செல்வம் அமைதி எல்லாமே நிறைந்திருந்தது. இப்பொழுதோ எதுவும் இல்லை. எனவே இதற்கு நரகம் என்றும் அதற்கு சொர்க்கம் என்றும் கூறப்படுகிறது. ஆத்மாவாகிய நாம் சாந்தி தாமத்தில் இருப்பவர்கள் ஆவோம். அங்கிருந்து பாகம் ஏற்று நடிக்க வருகிறார்கள். 84 பிறவிகள் முழுமையாக அனுபவிக்க வேண்டி வருகிறது. இப்பொழுது துக்கதாமம் ஆகும். பிறகு நாம் சாந்திதாமம் செல்கிறோம். பின்னர் சுக தாமத்தில் வருவோம். தந்தை சுகதாமத்திற்கு அதிபதியாக ஆக்குவதற்கு, மனிதனை தேவதையாக ஆக்குவதற்காக முயற்சி செய்வித்துக் கொண்டிருக்கிறார். உங்களுடையது இது சங்கமயுகம் ஆகும். நான் கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன். யுகே யுகே அல்ல என்று தந்தை கூறுகிறார். நான் சங்கம யுகத்தில் ஒரே ஒரு முறை சிருஷ்டியை மாற்றுவதற்காக வருகிறேன். சத்யுகமாக இருந்தது. இப்பொழுது கலியுகம் ஆகும். மீண்டும் சத்யுகம் வர வேண்டியுள்ளது. இது கல்யாணகாரி சங்கமயுகம் ஆகும். அனைவருக்கும் நன்மை ஆக வேண்டியுள்ளது. அனைவரையும் இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்கிறார். அவருக்கு துக்க ஹர்த்தா, சுக கர்த்தா என்று கூறப்படுகிறது. இங்கு எல்லோருமே துக்கமுடைய வர்களாக இருக்கிறார்கள். நீங்கள் சுகதாமம் செல்வதற்காக முயற்சி செய்கிறீர்கள். சுகதாமம் செல்ல வேண்டும் என்றால் முதலில் சாந்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் பாகம் நடித்து நடித்து ஐந்தாயிரம் வருடங்கள் ஆகிவிட்டது.. நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வந்து ஐந்தாயிரம் வருடங்கள் ஆகிவிட்டுள்ளன என்று தந்தைப் புரிய வைக்கிறார். அதில் பாரதவாசி களாகிய நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். இப்பொழுது உங்களுடையது கடைசிப் பிறவி ஆகும். எல்லோருக்குமே வானபிரஸ்த நிலை ஆகும். எல்லோரும் போக வேண்டும். ஞானக்கடல் அல்லது ருத்ரன் என்றும் பாடல் உள்ளது. இது சிவஞான யக்ஞம் ஆகும். பதீத பாவனர் சிவன் ஆவார். பரமாத்மா கூட சிவன் ஆவார். ருத்ரன் என்ற பெயர் பக்தர்கள் வைத்துவிட்டுள்ளார்கள். அவருடைய உண்மையான பெயர் ஒரே ஒரு சிவன் என்பதாகும். சிவபாபா பிரஜாபிதா பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்விக்கிறார். பிரம்மா ஒரே ஒருவர் ஆவார். இவர் பதீதமானவர். பிறகு அதே பிரம்மா பாவனமாகிறார். பிறகு ஃபரிஷ்தா ஆகிவிடுகிறார். அதை சூட்சுமவதனத்தில் காண்பிக்கிறார்கள். அது வேறு ஒரு பிரம்மா கிடையாது. பிரம்மா ஒருவரே தான். இவர் வ்யக்த (ஸ்தூலத்தில் பௌதீக உட-ல் இருப்பவர்) அவர் அவ்யக்த் (சூட்சும சரீரத்தில் இருப்பவர்). இவர் சம்பூர்ண பாவனமாக ஆகிவிடும் பொழுது சூட்சும வதனத்தில் பார்ப்பீர்கள். அங்கு எலும்புகள் ஆகியவை இருக்காது. எப்படி பாபா புரிய வைத்திருந்தார் - எந்த ஆத்மாவிற்கு உடல் கிடைப்பதில்லையோ அது அலைந்துக் கொண்டேயிருக்கும். அதற்கு பூதம் என்று கூறுவார்கள். சரீரம் கிடைக்காதவரை அது அலைகிறது. ஒரு சிலரது நல்லதாக இருக்கும். ஒரு சிலரது தீயதாக இருக்கும். எனவே தந்தை ஒவ்வொரு விஷயம் பற்றிய விளக்கவுரை அளிக்கிறார். அவர் ஞானக் கடலாக இருப்பதால் அவசியம் புரிய வைப்பார் அல்லவா? ஒரு வினாடியில் ஜீவன் முக்தி இருக்கிறது. அ மற்றும் ஆ-வை நினைவு செய்தீர்கள் (அ - அப்பா, ஆ - ஆஸ்தி) என்றால் ஒரு நொடியில் ஜீவன் முக்தியின் ஆஸ்தி கிடைக்கும். எவ்வளவு சுலபமானது. யோகம் என்றால் நினைவு. அவர்களுடையது ஹடயோகம் ஆகும். இது சுலபமானது. என்னை இந்த விதமாக நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். எந்த ஒரு லாக்கெட் (டாலர், பதக்கம்) ஆகியவை அணிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்களோ தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். தந்தையை மட்டும் நினைவுச் செய்யுங்கள். நீங்கள் இங்கு பாகத்தை நடிக்க வந்துள்ளீர்கள். இப்பொழுது எல்லோரும் திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும். பிறகு அதே பாகத்தை நடிக்க வேண்டும். பாரதவாசிகள் தான் சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினர், வைசிய வம்சத்தினர் மற்றும் சூத்திர வம்சத்தினராக ஆகிறார்கள். இதற்கிடையில் மற்ற தர்மத்தினரும் வருகிறார்கள். 84 பிறவிகளை நீங்கள் எடுக்கிறீர்கள். பிறகு நீங்கள் தான் முதல் நம்பரில் செல்ல வேண்டியுள்ளது. பிறகு நீங்கள் சத்யுகத்தில் வரும்பொழுது மற்ற அனைவரும் சாந்தி தாமத்தில் இருப்பார்கள். மற்ற தர்மத்தினருக்கு வர்ணங்கள் கிடையாது. வர்ணங்கள் பாரதத்தினுடையது மட்டுமே ஆகும். நீங்கள் தான் சூரிய வம்சத்தினராக, சந்திர வம்சத்தினராக ஆகி இருந்தீர்கள். இப்பொழுது பிராமண வர்ணத்தில் உள்ளீர்கள். பிரம்மா வம்சத்தின் பிராமணன் ஆகி உள்ளீர்கள். இந்த எல்லா விஷயங் களையும் தந்தை வந்துப் புரிய வைக்கிறார். யாருடைய புத்தியில் தாரணை ஆவதில்லையோ அவர்களுக்குத் தந்தையை மட்டுமே நினைவுச் செய்யுங்கள் என்று கூறுகிறார். எப்படி தந்தையை அறிந்துக் கொண்டு விடும்பொழுது ஆண் குழந்தைகளுக்கு இது சொத்து என்பது தெரிய வந்துவிடுகிறது. பெண் குழந்தைக்கோ ஆஸ்தி கிடைப்பதில்லை. இங்கு நீங்கள் எல்லோருமே சிவபாபாவின் ஆண் குழந்தைகள் ஆவீர்கள். அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. சிவபாபாவை நினைவுச் செய்யுங்கள் என்று அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். எந்தளவு நினைவுச் செய்வீர்களோ அந்தளவு விகர்மங் கள் விநாசமாகும். பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆவீர்கள். ஆத்மாவில் படிந்திருக்கும் துரு எப்படி நீங்கும்? யோகத்தினால் தான் உங்களுடைய துரு நீங்கிவிடும் என்று தந்தைக் கூறுகிறார். இந்த பதீதமான சரீரத்தையோ இங்கேயே விட வேண்டும். ஆத்மா பவித்திரமாக ஆகிவிடும். எல்லோரும் கொசுக்கூட்டம் போல செல்வார்கள். சத்யுகத்தில் மிகவும் குறைவானோர் மட்டுமே இருப்பார்கள் என்று புத்தியும் கூறுகிறது. இந்த விநாசத்தில் எத்தனை மனிதர்கள் இறப்பார்கள். மற்றபடி கொஞ்சம் பேர் போய் இருப்பார்கள். இராஜாக்களோ குறைவாக இருப்பார்கள். மற்றபடி 9 லட்சம் பிரஜைகள் சத்யுகத்தில் இருப்பார்கள். இது பற்றி 9 லட்ச நட்சத்திரங்கள் என்று பாடுகிறார்கள். அதாவது பிரஜைகள் செடி முதலில் சிறியதாக இருக்கும். பிறகு வளர்ச்சி அடைகிறது. இப்போது நிறைய ஆத்மாக்கள் இருக்கிறார்கள். தந்தை வருகிறார், அனைவருக்கும் வழிகாட்டியாகி கூட்டிச் செல்கிறார். நல்லது

.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. யோக அக்னி மூலமாக விகர்மங்களின் துருவை சாம்பலாக்கி தூய்மை ஆக வேண்டும். இப்பொழுது வானப்பிரஸ்த நிலை ஆகும். எனவே திரும்பி வீட்டிற்குச் செல்வதற்காக முழுமையாக சதோபிரதானமாக ஆக வேண்டும்.

2. இந்த கல்யாணகாரி யுகத்தில் தந்தைக்குச் சமமாக துக்க ஹர்த்தா சுக கர்த்தா - துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் ஆக வேண்டும்.

வரதானம்:

சாதரணமான தன்மையை முடித்து விட்டு மகான் தன்மையை

அனுபவம் செய்யக்கூடிய சிரேஷ்ட (முதன்மையான) முயற்சியாளர் ஆகுக.
யார் சிரேஷ்ட (மிக சிறந்த) முயற்சி செய்யும் குழந்தைகளாக இருக்கிறார்களோ அவர்களின் ஒவ்வொரு எண்ணம் மகானாக (சிறப்பானதாக) இருக்கும், ஏனெனில் அவர்களின் ஒவ்வொரு எண்ணத்திலும், சுவாசத்தில் தானாகவே பாபாவின் நினைவு இருக்கும். பக்தியில் எங்கிருந்தோ ஒலியின் நாதம் (ஓம்கார நாதம்) கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும், தொடர்ந்து ஜபித்துக் (மாலையை உருட்டி) கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறதோ, அவ்வாறு முயற்சி நிரந்தரமாக இருப்பதை தான் சிரேஷ்ட முயற்சி என்று சொல்லப்படுகிறது. நினைவு செய்வது அல்ல, தானாகவே நினைவு வந்துக்கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுது சாதாரண தன்மை முடிந்துவிடும். மேலும் மகான் தன்மை வந்துவிடுகிறது - இது தான் முன்னேற்றத் திற்கான அடையாளம்.

சுலோகன்:

சிந்தனை சக்தியின் மூலம் கடலுக்கு அடித்தளம் வரை

 

செல்லக் கூடியவர்களுக்கு தான் இரத்தினங்கள் அடைய அதிகாரி ஆவார்கள்.