20-03-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

ஏழைக் குழந்தைகள் தங்களின் எந்த சிறப்பம்சத்தின் ஆதாரத்தில் செல்வந்தர்களை விட முன்னேறிச் செல்கிறார்கள்?

பதில்:

ஏழைகளுக்கு தானம் புண்ணிய காரியங்கள் செய்வதின் மீது மிகவும் சிரத்தை (நம்பிக்கை) இருக் கிறது. ஏழைகள் பக்தியையும் ஈடுபாட்டோடு செய்கிறார்கள். ஏழைகளுக்கு தான் காட்சிகள் கூட கிடைக்கிறது. செல்வந்தர்களுக்கு தனது செல்வத்தின் போதை இருக்கிறது. பாவம் நிறைய செய்கிறார்கள். ஆகவே ஏழைக் குழந்தைகள் அவர்களை விட முன்னேறிச் செல்கிறார்கள்.

பாடல்:

ஓம் நமசிவாய.....

ஓம் சாந்தி. தாயும் நீயே, தந்தையும் நீயே, நாங்கள் உங்களுடைய குழந்தைகள்...... இவ்வாறு நிச்சயம் பரம்பிதா பரமாத்மாவின் மகிமை பாடப்பட்டிருக்கிறது. இது தெளிவான மகிமையாகும். ஏனென்றால் அவர் படைக்கக்கூடியவர் ஆவார். லௌகீக தாய் தந்தை கூட குழந்தைகளை படைக்கக் கூடியவர் ஆவர். பரலௌகீக தந்தையைக் கூட படைப்பவர் என்று கூறப்படுகிறது. நண்பன், உதவியாளர்..... என நிறைய மகிமைகள் பாடு கிறார்கள். லௌகீக தந்தைக்கு இந்த அளவிற்கு மகிமைகள் கிடையாது. பரம்பிதா பரமாத்மாவின் மகிமைகளே தனிப்பட்டவையாகும். ஞானக்கடல், நாலெட்ஜ்ஃபுல் என்று குழந்தைகள் கூட மகிமை செய்கிறார்கள். அதில் அனைத்து ஞானமும் வந்துவிடுகிறது. ஞானம் சரீர நிர்வாகத்திற்கான படிப்பு கிடையாது. அவருக்கு ஞானக் கடல், நாலெட்ஜ்ஃபுல் என்று கூறப்படுகிறது என்றால் நிச்சயம் அவரிடம் ஞானம் இருக்கும். ஆனால் எதைப் பற்றிய ஞானம்? இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுழல்கிறது என்பதை பற்றிய ஞானம் ஆகும். எனவே அவரே ஞானக் கடல், பதீதபாவனர் ஆவார். கிருஷ்ணரை ஒருபோதும் பதீதபாவனர் அல்லது ஞானக்கடல் என்று கூற முடியாது. அவரது மகிமைகள் முற்றிலும் தனிப் பட்டது. இருவரும் பாரதத்தின் நிவாசிகள் ஆவார். பாரதத்தில் சிவபாபாவிற்கும் மகிமை இருக் கிறது. சிவஜெயந்தி கூட இங்கே கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணரின் ஜெயந்தியும் கூட கொண்டாடுகிறார்கள். கீதையின் ஜெயந்தியும் கொண்டாடுகிறார்கள். மூன்று ஜெயந்திகள் முக்கிய மானவைகள் ஆகும். இப்போது முதலில் யாருடைய ஜெயந்தி என்ற கேள்வி எழுகிறது. சிவனுடையதா அல்லது கிருஷ்ணனுடையதா? மனிதர்கள் முற்றிலும் தந்தையை மறந்து விட்டனர். கிருஷ்ணரின் ஜெயந்தியை மிகவும் கோலாகலமாக அன்புடன் கொண்டாடுகிறார்கள். சிவஜெயந்தியைப் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை. புகழ் பாடவும் இல்லை. சிவன் வந்து என்ன செய்தார்? அவருடைய வாழ்க்கை வரலாறுப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. கிருஷ்ணர் கோபிகைகளை விரட்டினார், இதைச் செய்தார் என அவரைப் பற்றிய தவறான விஷயங்கள் நிறைய எழுதி இருக்கிறார்கள். கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி முக்கிய மாக ஒரு பத்திரிகையிலாவது கூட வெளிவருகிறது. சிவனின் சரித்திரத்தைப் பற்றி எதுவு மில்லை. கிருஷ்ணரின் ஜெயந்தி எப்போது? பிறகு கீதையின் ஜெயந்தி எப்போது? கிருஷ்ணர் பெரியவர் ஆகும்போது தானே ஞானம் கூற முடியும். கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தை காண்பிக்கிறார்கள் - கூடையில் வைத்து, ஆற்றை கடந்து, எடுத்து சென்றனர் என்று. இளவயதில் இருக்கும்போது இரதத்தில் நிற்பதாக காண்பிக்கிறார்கள். சக்கரத்தைச் சுழற்றுகிறார்கள். 16-17 வருடங்கள் ஆகியிருக்கும். மற்றபடி குழந்தைப் பருவத்தின் சித்திரத்தைக் காண்பிக்கிறார்கள். அப்படியானால் கீதை எப்போது கூறப்பட்டது. இன்னாரை விரட்டினார், இதைச் செய்தார் என்கின்ற போது அந்த சமயத்தில் ஞானத்தைக் கூறியிருக்க முடியாது. அச்சமயம் ஞானம் கூறுவது அழகாக இருக்காது. வயோதிகத்தை அடையும்போது தான் ஞானத்தைக் கூறலாம். கீதையைக் கூட சிறிது காலத்திற்குப் பிறகு தான் சொல்லியிருக்கலாம். இப்போது சிவன் என்ன செய்தார், எதுவும் தெரியவில்லை. அறியாமை என்ற தூக்கத்தில் தூங்குகிறார்கள். என்னுடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை என பாபா கூறுகிறார். நான் என்ன செய்வேன்? என்னை தான் பதீத பாவனர் என்கிறார்கள். நான் வருகிறேன் என்றால் கூடவே கீதை இருக்கிறது. நான் சாதாரண வயோதிக, அனுபவம் நிறைந்த உடலில் வருகிறேன். நீங்கள் பாரதத்தில் தான் சிவஜெயந்தி கொண்டாடுகிறீர்கள். கிருஷ்ண ஜெயந்தி, கீதா ஜெயந்தி இவை மூன்றும் முக்கிய மானவைகள் ஆகும். பிறகு தான் இராமரின் ஜெயந்தி ஏற்படுகிறது. இச்சமயம் என்னென்ன நடக்கிறதோ அது பிற்காலத்தில் கொண்டாடப்படுகிறது. சத்யுகம் திரேதாவில் ஜெயந்தி போன்றவை கிடையாது. சூரிய வம்சத்திலிருந்து சந்திர வம்சத்தின் (சொத்து) இராஜ்யத்தை அடைகிறார்கள். அப்போது வேறு யாருக்கும் மகிமை கிடையாது. இராஜாக்களின் முடிசூட்டு விழா மட்டும் கொண்டாடுவார்கள். இப்போதோ அனைவரும் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். அது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. கிருஷ்ணர் பிறவி எடுத்தார், பெரியவராகி இராஜ்யத்தை ஆண்டார். இதில் மகிமைக்குரிய விஷயம் எதுவுமில்லை. சத்யுகம் திரேதாவில் சுகமான இராஜ்யம் நடந்தது. அந்த இராஜ்யம் எப்பொழுது, எப்படி ஸ்தாபனை ஆகியது என்பது குழந்தை களாகிய உங்களின் புத்தியில் இருக்கிறது. குழந்தைகளே நான் கல்ப கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன் என பாபா கூறுகிறார். கலியுகத்தின் முடிவு பதீத உலகம் ஆகும். சத்யுகத்தின் ஆரம்பம் பாவனமான உலகம் ஆகும். நான் தந்தையாக இருக்கிறேன். குழந்தை களாகிய உங்களுக்கு சொத்தும் (இராஜ்யத்தையும்) கொடுப்பேன். போன கல்பத்தில் கூட சொத்து கொடுத்தேன். ஆகவே நீங்கள் கொண்டாடி வந்தீர்கள். ஆனால் பெயரை மறந்ததால் கிருஷ்ணரின் பெயரை போட்டு விட்டீர்கள். உயர்ந்ததிலும் உயர்வானவர் சிவன் அல்லவா. முதலில் அவருடைய ஜெயந்தி ஏற்பட்ட பிறகு தான் சாகார மனிதர்களின் ஜெயந்தி உண்டாகும். ஆத்மாக்கள் அனைத்தும் உண்மையில் மேலிருந்து இறங்குகின்றது. என்னுடையதும் கூட அவதாரமாகும். கிருஷ்ணர் தாயின் கர்பத்திலிருந்து பிறவி எடுத்தார். பாலனை அடைந்தார். அனைவரும் மறுபிறவியில் வர வேண்டும். சிவபாபா மறுபிறவி எடுப்பதில்லை. வருகிறார் அல்லவா. இவை அனைத்தையும் சிவபாபா வந்துப் புரிய வைக்கிறார். பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் திரிமூர்த்தி காண்பிக்கிறார்கள் அல்லவா. பிரம்மா மூலமாக ஸ்தாபனை, ஏனென்றால் சிவனுக்கு தனக்கென்று உடல் இல்லை. நான் இவருடைய வயதான உடலில் வருகிறேன் என அவரே தெரிவிக்கிறார். இவர் (பிரம்மா) தன்னுடைய பிறவிகளைப் பற்றி அறியவில்லை. இவருடைய பல பிறவிகளின் கடைசி பிறவி இதுவாகும். எனவே முதன் முதலில் புரிய வைக்க வேண்டும். சிவஜெயந்தி பெரியதா அல்லது கிருஷ்ண ஜெயந்தி பெரியதா? ஒருவேளை கிருஷ்ணர் கீதையைக் கூறியிருந்தால் கீதா ஜெயந்தி ஸ்ரீ கிருஷ்ணரின் பல வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கும். அதாவது கிருஷ்ணர் இளவயது ஆன பிறகு. இது அனைத்தும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா. ஆனால் உண்மையில் சிவஜெயந்திக்கு பிறகு உடனே கீதா ஜெயந்தி வருகிறது. இந்த கருத்துகளை புத்தியில் வைக்க வேண்டும். நிறைய கருத்துகள் இருக்கிறது. குறித்துக் கொள்ளாமல் நினைவில் வைத்திருக்க முடியாது. பாபா இவ்வளவு அருகாமையில் இருக்கிறார், அவருடைய இரதமாக இருக்கிறார். அவரும் அனைத்து கருத்துகளும் சரியான நேரத்தில் நினைவிற்கு வருவது கடினம் என்கிறார். அனைவருக்கும் இரண்டு தந்தைகள் பற்றிய இரகசியத்தைப் புரிய வையுங்கள் என பாபா கூறுகின்றார். சிவபாபாவின் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள் என்றால் நிச்சயம் வந்திருப்பார். கிறிஸ்து, புத்தர் போன்றோர் வந்து தங்களின் தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்கள். அந்த ஆத்மாவும் (பரமாத்மா) வந்து பிரவேசமாகி தர்மத்தை ஸ்தாபனைச் செய்கிறது. அவரோ சொர்க்கத்தின் இறை தந்தை, சிருஷ்டியைப் படைக்கக் கூடியவர். நிச்சயம் புது சிருஷ்டியைப் படைப்பார். பழையதை படைக்க மாட்டார். புது சிருஷ்டி சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இப்போது நரகமாக இருக்கிறது. நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமத்தில் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தை அளிக்கிறேன். இது பாரதத்தின் பழமையான யோகம் ஆகும். யார் கற்பித்தது? சிவபாபாவின் பெயரை மறைத்துவிட்டார்கள். ஒரு புறம் கீதையின் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்று கூறுகிறார்கள். மேலும் விஷ்ணு போன்றோரின் பெயரையும் கொடுத் திருக்கிறார்கள். சிவபாபா இராஜயோகத்தைக் கற்பித்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. சிவஜெயந்தி நிராகாரரின் ஜெயந்தி என காண்பிக் கிறார்கள். அவர் எப்போது வந்தார்? வந்து என்ன செய்தார்? அவர் அனைவருக்கும் சத்கதியை அளிக்கும் வள்ளல், விடுவிக்க கூடியவர், வழிகாட்டி ஆவார். இப்போது அனைத்து ஆத்மாக் களுக்கும் பரமாத்மா வழிகாட்டி வேண்டும். அவரும் ஆத்மா. மனிதர்களுக்கு வழிகாட்டி யாக மனிதர்கள் இருப்பது போன்று ஆத்மாக்களுக்கு வழிகாட்டியாக ஆத்மா வேண்டும். அவரை சுப்ரீம் ஆத்மா என்று தான் கூற வேண்டும். மனிதர்கள் அனைவரும் மறுபிறவி எடுத்து பதீதமாகி இருக்கிறார்கள். பிறகு தூய்மையாக்கி வீட்டிற்கு அழைத்துச் செல்வது யார்? நான் தான் வந்து தூய்மையாவதற்கான வழியைத் தெரிவிக்கிறேன் என பாபா கூறுகிறார். நீங்கள் என்னை நினையுங்கள். தேகத்தின் உறவுகளை விட்டு விடுங்கள் என கிருஷ்ணருக்கு கூற முடியாது. 84 பிறவிகளை எடுக்கிறார். அனைத்து உறவுகளிலும் வருகிறார். பாபாவிற்கு தனக்கென்று உடல் இல்லை. உங்களுக்கு இந்த ஆன்மீக யாத்திரையை தந்தை தான் கற்பிக்கிறார். இது ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகளுக்கான ஆன்மீக ஞானம் ஆகும். கிருஷ்ணர் யாருக்கும் ஆன்மீகத் தந்தை கிடையாது. அனைவருக்கும் ஆன்மீகத் தந்தை நான். நான் தான் வழிகாட்டியாக முடியும். விடுவிக்கக் கூடியவர், வழிகாட்டி, ஆனந்த கடல், அமைதி கடல், சதா தூய்மையானவர் போன்ற அனைத்தும் என்னையே கூறுகிறார்கள். இப்போது நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஞானத்தை அளிக்கிறேன். இந்த உடல் மூலமாக உங்களுக்கு நான் கொடுக்கிறேன் என்று பாபா கூறுகிறார். நீங்களும் உடல் மூலமாக ஞானத்தை அடைகிறீர்கள். அவரே இறை தந்தை ஆவார். அவருடைய ரூபமும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆத்மா எப்படி பிந்துவாக இருக்கிறதோ அதே போன்று பரமாத்மாவும் பிந்துவாக இருக்கிறார். இது உண்மை அல்லவா. உண்மையில் மிகப் பெரிய உண்மை இதுவே. இவ்வளவு சிறிய நட்சத்திரத்தில் 84 பிறவிகளின் பாகம் அழிவற்றதாக இருக்கிறது. இதற்கு தெய்வீகச் செயல் அல்லது இறையாற்றல் என்று கூறப்படுகிறது. இதை எப்படி வர்ணனை செய்வது. இவ்வளவு சிறிய ஆத்மா, இது போன்ற விஷயங்களைக் கேட்டு அதிசயப்படுகிறார்கள். ஆத்மாவும் நட்சத்திரம் போன்று இருக்கிறது. 84 பிறவிகளை துல்லியமாக அனுபவிக்கிறது. அது சுகத்தையும் மிகச் சரியாக அனுபவிக்கும். இதுவே இயற்கையாகும். பாபாவும் ஆத்மா, ஆத்மாவாக இருக்கிறார், அவர் பரம் ஆத்மா. அவருக்குள் அனைத்து ஞானமும் நிரம்பியிருக்கிறது. அதைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இது புதிய விஷயங்கள் ஆகும். புதிய மனிதர்கள் கேட்டு இவர்களுடைய ஞானம் எந்த சாஸ்திரத்திலும் இல்லை என்று கூறுவார் கள். இருப்பினும் போன கல்பத்தில் யார் கேட்டார்களோ, (சொத்து) சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைந்தனரோ அவர்களே வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கிறார்கள். காலம் கடக்கிறது. நிறைய பிரஜைகள் உருவாகிறார்கள். அது எளிதாகும். இராஜா ஆவதில் தான் கடின உழைப்பு இருக்கிறது. மனிதர்கள் நிறைய செல்வத்தை தானம் செய்கிறார்கள் என்றால் இராஜாக்களின் வீட்டில் பிறப்பெடுக்கிறார்கள். ஏழைகள் கூட தங்களின் (தைரியத்திற்கு ஏற்ப) மன உறுதியுடன் தானம் செய்கிறார்கள் என்றால் அவர்களும் இராஜா ஆகிறார்கள். யார் முழுமையான பக்தர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தானம் புண்ணியம் செய்கிறார்கள். பணக்காரர்களின் மூலமாக நிறைய பாவங்கள் நடக்கும். ஏழைகளுக்குள் நிறைய சிரத்தை (பக்தி, நம்பிக்கை) இருக்கிறது. அவர்கள் மிகவும் அன்போடு சிறிது தானம் செய்தாலும் நிறைய கிடைக்கிறது. ஏழைகள் நிறைய பக்தியும் செய்கிறார்கள். தரிசனம் கொடுங்கள் இல்லையென்றால் நாங்கள் கழுத்தை வெட்டிக் கொள்வோம் என்கிறார்கள். செல்வந்தர்கள் இவ்வாறு கூறமாட்டார்கள். ஏழைகளுக்கு தான் காட்சிகள் கிடைக் கிறது. அவர்களே தானம் புண்ணியம் செய்கிறார்கள். அவர்களே இராஜாக்கள் ஆகிறார்கள். பணம் இருப்பவர்களுக்கு அகங்காரம் இருக்கிறது. இங்கே கூட ஏழைகளுக்கு 21 பிறவிகளுக்கு சுகம் கிடைக்கிறது. ஏழைகள் நிறைய இருக்கிறார்கள். செல்வந்தர்கள் பின்னால் வருவார்கள். பாரதம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தது. பிறகு இவ்வளவு ஏழையாக எப்படி மாறியது என்று நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். பூகம்பம் போன்றவைகளில் அனைத்து மாளிகைகளும் உள்ளே போய் விடும் என்றால் ஏழைகளாகிவிடுவார்கள். இராவண இராஜ்யம் ஆகியதால் அய்யோ அய்யோ என்று குரல் எழுகிறது. பிறகு, இது போன்ற விஷயங்கள் இருக்க முடியாது. ஒவ்வொரு பொருளுக் கும் ஆயுள் இருக்கிறது அல்லவா. அங்கே மனிதர்களின் ஆயுள் அதிகமாக இருப்பது போன்றுக் கட்டடங்களின் ஆயுளும் நீண்டதாக இருக்கும். தங்கம், மார்பல் போன்றவைகளால் பெரிய பெரிய கட்டிடங்கள் உருவாகிக் கொண்டே போகும். தங்கத்தினால் செய்வது இன்னும் வலிமையாக இருக்கும். சண்டை நடக்கிறது, கட்டடங்கள் இடிந்து விழுவது போன்று நாடகங்கள் காண்பிக் கிறார்கள் அல்லவா. மீண்டும் உருவாகிறது. அவர்கள் அவ்வாறு உருவாக்கி இருக்கிறார்கள். யார் சொர்க்கத்தில் மாளிகைகள் போன்றவைகளை உருவாக்குகிறார்களோ, அதை மேஸ்திரி போன்றோர் கட்டடங்கள் கட்டுவது போன்று காண்பிக்க மாட்டார்கள். ஆம். அதே கட்டடம் இருக்கும் எனப் புரிந்துக் கொள்வார்கள். இன்னும் போகப்போக உங்களுக்கு காட்சிகள் கிடைக்கும். இவ்வாறு விவேகம் கூறுகிறது. இந்த விஷயங்களோடு குழந்தைகளுக்கு சம்மந்தம் இல்லை. குழந்தைகள் படிப்பை படிக்க வேண்டும். சொர்க்கத்திற்கு அதிபதியாக வேண்டும். சொர்க்கம் மற்றும் நரகம் பலமுறை கடந்துப் போயிருக்கிறது. இப்போது இரண்டுமே கடந்துவிட்டது. இப்போது சங்கமம் ஆகும். சத்யுகத்தில் இந்த ஞானம் கிடையாது. இச்சமயம் குழந்தைகளாகிய உங்களுக்கு முழு ஞானம் இருக்கிறது. லஷ்மி நாராயணனுக்கு இந்த இராஜ்யத்தை யார் அளித்தது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இவர்கள் இந்த சொர்க்க இராஜ்யத்தை எப்படி அடைந்தார்கள். இங்கே படிப்பை படித்து சொர்க்கத்திற்கு அதிபதியாகிறார்கள். பிறகு அங்கே சென்று மாளிகை போன்றவைகளைக் கட்டுகிறார்கள். மருத்துவர்கள் கூட பெரிய பெரிய மருத்துவமனைகள் கட்டுகிறார்கள். அல்லவா.

பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு ஒவ்வொரு நாளும் நல்ல நல்ல கருத்துகளை கூறிக் கொண்டிருக்கிறார். பாபா எவ்வளவு அன்போடு புரிய வைக்கிறாரோ அதுபோல மனிதர்களை விழித்தெழ செய்தல், வழிகாட்டுதல் இவை உங்களுடைய வேலையாகும். தேக அபிமானம் அவசியம் இல்லை. பாபாவிற்கு ஒருபோதும் தேக உணர்வு ஏற்படாது. உங்களுக்கு ஆத்ம உணர்வு அடைவதற்கு முழுமையான உழைப்பும் தேவைப்படுகிறது. ஆத்ம உணர்வுடையவராகி பாபாவின் அறிமுத்தை யார் கொடுக்கிறார்களோ அவர்கள் பலருக்கு நன்மை செய்வது போன்றாகும். முதலில் தேக உணர்வு வருவதால் அனைத்து விகாரங்கள் பின்னால் வருகிறது. சண்டையிடுதல், நவாப் போன்று நடத்தல், தேக அபிமானம் ஆகும். நம்முடையது இராஜயோகம், என்றாலும் கூட மிகவும் சாதாரணமாக இருக்க வேண்டும். சிறிய விஷயத்திலேயே அகங்காரம் வருகிறது. நவீன மான (ஃபேஷன்) கடிகாரம் பார்த்தால் அதை அணிய வேண்டும் என்று மனதிற்கு தோன்றும். எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கும். இதற்கு தேக உணர்வு என்று பெயர். நல்ல உயர்ந்த பொருள் என்றால் அதை பாதுகாக்க வேண்டியிருக்கும். மறைந்துப் போனால் எண்ணங்கள் வரும். கடைசி நேரத்தில் சிறிது நினைவு வந்தாலும் பதவிக் குறைந்துப் போகும். இது தேக உணர்வின் பழக்கம் ஆகும். பிறகு சேவைக்குப் பதிலாக டிஸ்சர்வீஸ் நிறைய செய்வார்கள். இராவணன் உங்களை தேக உணர்வுடையவராக மாற்றிவிட்டான். பாபா எவ்வளவு சாதாரணமாக நடக்கிறார் என்பதை பார்க்கிறீர்கள். ஒவ்வொருவருடைய சேவையும் பார்க்கப்படுகிறது. மகாரதி குழந்தைகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். மகாரதி குழந்தைகளுக்கு தான் நீங்கள் இங்கே சென்று சொற்பொழிவாற்றுங்கள் என்று எழுதப்படுகிறது. ஒருசிலரை அழைக்கிறார்கள். ஆனால் குழந்தை களுக்குள் நிறைய தேக உணர்வு இருக்கிறது. சொற்பொழிவாற்றுவதில் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் தங்களுக்குள் ஆன்மீக அன்பு இல்லை. தேக உணர்வு உப்பு தண்ணீர் போன்று ஆக்கிவிடுகிறது. ஏதாவது ஒரு விஷயத்தில் உடனடியாக கோபம் கொள்வதுக் கூட கூடாது. யாராவது ஏதாவது கேட்க வேண்டும் என்றால் பாபாவிடம் வந்து கேளுங்கள் என்று பாபா கூறுகின்றார். பாபா உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று யாரோ கேட்டார் கள். எண்ண முடியாத அளவிற்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என கூறுவேன். ஆனால் ஒரு சிலர் கெட்ட குழந்தைகள், ஒரு சிலர் மிக மிக நல்ல குழந்தைகள். இப்படிப்பட்ட தந்தைக்கு கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவராக, உண்மையானவராக மாற வேண்டும் அல்லவா. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தேக உணர்வில் வந்து எந்த விதமான ஃபேஷனும் (நவீன அலங்காரம்) செய்யக் கூடாது. அதிக ஆடம்பரம் கூடாது. மிக மிக சாதாரணமாக நடக்க வேண்டும்.

2. தங்களுக்குள் மிக மிக ஆன்மீக அன்போடு நடந்துக் கொள்ள வேண்டும். ஒருபோதும் உப்பு தண்ணீர் போன்று இருக்கக் கூடாது. பாபாவிற்கு நல்ல குழந்தையாக வேண்டும். அகங்காரத்தில் ஒருபோதும் வரக் கூடாது.

வரதானம்:

சம்பூரணத்தன்மை மூலம் புத்தியை தூய்மை ஆக்கக்கூடிய

அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்தவர் ஆகுக.
ஞானத்தினுடைய, சிரேஷ்ட (மதிப்பு வாயந்த) சமயத்தினுடைய பொக்கிஷத்தை சேமிப்பு செய்வது மற்றும் ஸ்தூல பொக்கிஷங்களை ஒன்றில் இருந்து இலட்ச மடங்காக ஆக்குவது அதாவது சேமிப்பு செய்வது இந்த அனைத்து பொக்கிஷங்களிலும் சம்பன்னம் ஆகுவதற்கான ஆதாரம் தூய்மையான புத்தி மற்றும் சத்தியமான உள்ளம் ஆகும். ஆனால், எப்பொழுது புத்தி மூலம் தந்தையை அறிந்து, அதை (புத்தியை) தந்தைக்கு முன்னால் சமர்ப்பணம் செய்கின்றீர்களோ, அப்பொழுது புத்தி தூய்மை ஆகிறது. சூத்திர புத்தியை சமர்ப்பணம் செய்வது அதாவது கொடுப்பது தான் தெய்வீக புத்தியைப் பெறுவதாகும்.

சுலோகன்:

ஒரு தந்தையைத் தவிர வேறு எவரும் இல்லை என்ற இந்த விதி மூலம்

 

சதா வளர்ச்சி அடைந்துகொண்டே இருங்கள்.