எல்லையற்ற வைராக்கியம் உடையவர்களே உண்மையான இராஜரிஷி
இன்று பாப்தாதா அனைத்து இராஜரிஷிகளின் தர்பாரைப் பார்த்துக் கொண்டு இருக்கி ன்றார்கள். முழு கல்பத்தில் இராஜாக்களுடைய தர்பார் அநேக முறை கூடுகிறது. ஆனால், இந்த இராஜரிஷிகளின் தர்பார் இந்த சங்கம யுகத்தில் மட்டுமே கூடுகிறது. நீங்கள் இராஜாவும் ஆவீர்கள், ரிஷியும் ஆவீர்கள். இந்த சமயத்தின் இந்த தர்பாரினுடைய இந்த சிறப்புத்தன்மை மகிமை பாடப் பட்டுள்ளது. ஒருபுறம் இராஜ்யம் அதாவது அனைத்து பிராப்திகளின் அதிகாரி மற்றும் இன்னொரு புறம் ரிஷி அதாவது எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கிய விருத்தி உடையவர்கள். ஒருபுறம் அனைத்து பிராப்திகளின் அதிகாரத்தினுடைய போதை மற்றும் மறுபுறம் எல்லையற்ற வைராக் கியத்தின் அலௌகீக போதை. எந்தளவு சிரேஷ்ட பாக்கியமோ, அந்தளவே சிரேஷ்ட தியாகம் இருக்க வேண்டும். இரண்டினுடைய சமநிலை இருக்க வேண்டும். இத்தகையவர்களையே இராஜரிஷி என்று கூறப்படு கிறது. அத்தகைய இராஜரிஷி குழந்தைகளுடைய சமநிலையைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவ்வப்போது அதிகாரி நிலையின் போதை மற்றும் அவ்வப் போது வைராக்கிய விருத்தியின் போதை - இந்தப் பயிற்சியில் எந்தளவு நிலைத்திருக்க முடிகிறது அதாவது இரண்டு ஸ்திதிகளையும் எந்தளவு சமமாகப் பயிற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள்? இதை சோதனை செய்துகொண்டு இருந்தார்கள். அனைத்து குழந்தைகளும் வரிசைக்கிரமமான பயிற்சியாளர்களே. ஆனால், சமயத்தின் அனுசாரம் இந்த இரண்டு பயிற்சிகளையும் இன்னும் அதிகத் திலும் அதிகமாக அதிகரித்துக்கொண்டே செல்லுங்கள். எல்லையற்ற வைராக்கிய விருத்தி என்பதன் அர்த்தமே - வைராக்கியம் என்றால் ஒதுக்குவது கிடையாது, ஆனால், அனைத்து பிராப்திகள் இருந்தபோதிலும் எல்லைக்குட் பட்ட கவர்ச்சியானது மனம் மற்றும் புத்தியை கவர்ச்சிக்காத நிலையாகும். எல்லயைற்ற நிலை என்றால் நான் சம்பூரண சம்பன்ன ஆத்மா தந்தைக்கு சமமாக சதா அனைத்து கர்மேந்திரியங்களின் இராஜ்ய அதிகாரி, இந்த சூட்சும சக்திகளான மனம், புத்தி, சம்ஸ்காரத்திற்கும் கூட அதிகாரி, எண்ணத்தளவில் கூட அடிமைத்தனம் இல்லாத நிலை என்பதாகும். இதையே இராஜரிஷி அதாவது எல்லையற்ற வைராக்கிய விருத்தி என்று கூறப் படுகிறது. இந்தப் பழைய தேகம் மற்றும் தேகத்தின் பழைய உலகம் மற்றும் வியக்த உணர்வு, வைபவங்களின் உணர்வு - இந்த அனைத்து கவர்ச்சிகளில் இருந்தும் சதா மற்றும் சகஜமாக விலகி இருப்பவர்களே இராஜரிஷிகள்.
எவ்வாறு அறிவியல் சக்தி பூமியின் ஈர்ப்பில் இருந்து கடந்து செல்ல வைக்கிறதோ, அவ்வாறு அமைதியின் சக்தி இந்த எல்லைக்குட்பட்ட அனைத்து கவர்ச்சிகளில் இருந்தும் விலக்குகிறது. இதையே சம்பூரண சம்பன்ன தந்தைக்கு சமமான ஸ்திதி என்று கூறப்படுகிறது. எனவே, அத்தகைய ஸ்திதியின் பயிற்சியாளராக ஆகியிருக் கின்றீர்களா? ஸ்தூல கர்மேந்திரியங்கள் என்பது மிகப் பெரிய விசயமாகும். கர்மேந்திரியத்தை வென்றவராகுவது என்பது கூட சகஜ மானது. ஆனால், மனம், புத்தி, சம்ஸ்காரம் ஆகிய இந்த சூட்சும சக்திகள் மீது வெற்றியாளர் ஆவது என்பது சூட்சும பயிற்சியாகும். எந்த சமயத்தில் எந்த சங்கல்பம், எந்த சம்ஸ்காரத்தை வெளிக்கொண்டு வர விரும்புகின்றீர்களோ, அதே சங்கல்பம், அதே சம்ஸ்காரத்தை சகஜமாக தன்னுடையதாக ஆக்க முடிய வேண்டும், இதையே சூட்சும சக்திகள் மீது வெற்றியடைதல் அதாவது இராஜரிஷி ஸ்திதி என்று கூறப்படுகிறது. எவ்வாறு ஸ்தூல கர்மேந்திரியங்களுக்கு இதைச் செய், இதைச் செய்யாதே என்று கட்டளை பிறப்பிக்கின்றீர்கள். கையைக் கீழே போடுங்கள், மேலே உயர்த்துங்கள் என்றால் மேலே உயர்ந்துவிடுகிறது அல்லவா. அவ்வாறே சங்கல்பம் மற்றும் சம்ஸ்காரம் மற்றும் நிர்ணய சக்தியான புத்தி இதேபோன்று கட்டளைப்படி நடக்க வேண்டும். ஆத்மா அதாவது இராஜா மனதிற்கு அதாவது சங்கல்ப சக்திக்கு, இப்பொழுதே ஒருமுகப்பட்டுவிடு, ஒரு சங்கல்பத்தில் நிலைத்துவிடு என்ற கட்டளை பிறப்பித்தால் இராஜாவின் கட்டளையை அந்த விநாடியே கட்டளையின்படி ஏற்றுக் கொள்ள வேண்டும், இதுவே இராஜ அதிகாரியின் அடையாளமாகும். மூன்று, நான்கு நிமிட பயிற்சிக்குப் பிறகு மனம் ஏற்றுக்கொள் கிறது என்பது கூடாது. ஒருமுகப்படுவதற்குப் பதிலாக தடுமாற்றத் திற்குப் பிறகு ஒருமுகப் படுகிறது என்றால் இதை என்னவென்று சொல்லலாம்? அதிகாரி என்று கூறமுடியுமா? எனவே, இவ்வாறு சோதனை செய்யுங்கள். ஏனெனில், இறுதி நேரத்தின் இறுதி ரிசல்ட்டிற்கான சமயம் ஒரு விநாடிக்கான கேள்வி ஒன்று தான் இருக்கும் என்று முன்னரே சொல்லப்பட்டுள்ளது. இந்த சூட்சும சக்திகளின் அதிகாரி ஆவதற்கான பயிற்சி ஒருவேளை இல்லை என்றால் அதாவது உங்களுடைய மனம் இராஜாவாகிய உங்களுடைய கட்டளையை ஒரு விநாடிக்குப் பதிலாக மூன்று விநாடிகள் கழித்து கேட்கிறது என்றால் உங்களை இராஜ்ய அதிகாரி என்று அழைக்க முடியுமா? மற்றும் ஒரு விநாடிக்கான இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவீர்களா? எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும்?
இதுபோன்று புத்தி அதாவது நிர்ணய சக்தி மீதும் கூட அதிகாரம் இருக்க வேண்டும் அதாவது எந்த சமயம் என்ன சூழ்நிலை உள்ளதோ, அதன் அனுசாரம் அந்த விநாடி நிர்ணயம் செய்ய வேண்டும். இதையே புத்தியின் மீது அதிகாரம் கொண்டிருப்பது என்று கூறலாம். சூழ்நிலை அல்லது சமயம் கடந்துவிட்டது, பிறகு இவ்வாறு நடந்திருக்கக் கூடாது, ஒருவேளை இந்த நிர்ணயம் செய்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்று சிந்திப்பது கூடாது. எனவே, தக்கசமயத்தில் சரியான நிர்ணயம் செய்வது - இது இராஜ்ய அதிகாரி ஆத்மாவின் அடையாளம் ஆகும். முழு நாளில் இராஜ்ய அதிகாரி அதாவது இந்த சூட்சும சக்திகளைக் கூட எந்தளவு கட்டளைப்படி நடத்துபவராக இருக்கின்றேன்? என்று சோதனை செய்யுங்கள். தினமும் தன்னுடைய பணியாளர்களின் தர்பார் கூட்டுங்கள். ஸ்தூல கர்மேந்திரியங்கள் மற்றும் சூட்சும கர்மேந்திரியங்கள் ஆகிய இந்த பணியாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்தார்களா அல்லது இல்லையா? என்று சோதனை செய்யுங்கள். இப்பொழுதிலிருந்தே இராஜ்ய அதிகாரி ஆவதற்கான சம்ஸ்காரம் அநேக ஜென்மங்களுக்கு இராஜ்ய அதிகாரியாக ஆக்கும். புரிந்ததா? இவ்விதமாக, சம்ஸ்காரம் ஏமாற்றம் கொடுப்பதில்லை தானே? ஆதி, அனாதி சம்ஸ்காரம் அதாவது அனாதி சம்ஸ்காரமானது சுத்தமான, சிரேஷ்டமான பாவனமான சம்ஸ்காரம், சர்வகுண சொரூப சம்ஸ் காரம் ஆகும் மற்றும் ஆதி சம்ஸ்காரமானது தேவ ஆத்மாவின் இராஜ்ய அதிகாரி நிலையின் சம்ஸ்காரம், சர்வ பிராப்தி சொரூபத்தின் சம்ஸ்காரம், சம்பன்ன, சம்பூரண நிலையின் இயற்கை யான சம்ஸ்காரம் ஆகும். எனவே, சம்ஸ்கார சக்தியின் மீது இராஜ்ய அதிகாரி சம்ஸ்காரம் அதாவது சதா அனாதி, ஆதி சம்ஸ்காரம் எமர்ஜாகி (வெளிப்பட்டு) இருக்க வேண்டும். இயற்கை யான சம்ஸ்காரமாக இருக்க வேண்டும். மத்திம சம்ஸ்காரம் அதாவது துவாபர யுகத்தில் இருந்து பிரவேசமாகி இருக்கும் சம்ஸ்காரம் தன்பக்கம் கவர்ச்சிக்கக் கூடாது. சம்ஸ்காரங்களுக்கு வசமாகி வேறுவழியற்றவராக ஆகக்கூடாது. என்னுடைய பழைய சம்ஸ்காரம் என்று கூறுகின்றீர்கள் அல்லவா. உண்மையில் அனாதி மற்றும் ஆதி சம்ஸ்காரமே பழைய சம்ஸ்காரம் ஆகும். இதுவோ மத்திமம், துவாபர யுகத்தில் இருந்து வந்திருக்கும் சம்ஸ்காரம் ஆகும். எனவே, பழைய சம்ஸ்காரம் என்பது ஆதியில் வந்த சம்ஸ்காரமா அல்லது மத்திமத்தில் வந்த சம்ஸ்காரமா? எந்தவொரு எல்லைக்குட்பட்ட கவர்ச்சியில் கவர்ச்சிக்கப்படும் சம்ஸ்காரமானது ஒருவேளை தன்பக்கம் ஈர்க்கிறது என்றால் சம்ஸ்காரங்கள் மீது இராஜ்யம் செய்யும் அதிகாரி என்று கூற முடியுமா? இராஜ்யத்திற்குள் ஒரு சக்தி அதாவது ஒரு கர்மேந்திரியம் என்ற பணியாள் கூட ஒருவேளை கட்டளைப்படி நடக்கவில்லை எனில், அந்த அதிகாரியை சம்பூரண இராஜ்ய அதிகாரி என்று கூறமுடியுமா? குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும், நாங்கள் ஒரு இராஜ்யம், ஒரு தர்மம், ஒரு வழியை ஸ்தாபனை செய்பவர்கள் என்று சவால் விடுகின்றீர்கள். அனைத்து பிரம்மா குமார் மற்றும் பிரம்மாகுமாரிகள் இந்த சவால் விடுகின்றீர்கள் அல்லவா; அது எப்பொழுது ஸ்தாபனை ஆகும்? எதிர்காலத்தில் ஸ்தாபனை ஆகுமா? ஸ்தாபனைக்கு நிமித்தமானவர் யார்? பிரம்மாவா அல்லது விஷ்ணுவா? பிரம்மா மூலம் ஸ்தாபனை ஆகிறது அல்லவா. எங்கு பிரம்மா இருக்கின்றாரோ, அங்கு பிராமணர்களும் உடன் இருக்கின்றார்கள். பிரம்மா மூலம் அதாவது பிராமணர்கள் மூலம் ஸ்தாபனை - இது எப்பொழுது ஏற்படும்? சங்கமயுகத்திலா அல்லது சத்யுகத்திலா? அங்கேயோ பாலனை நடைபெறும் அல்லவா. பிரம்மா அல்லது பிராமணர்கள் மூலம் ஸ்தாபனை - இது இப்பொழுது நடைபெற வேண்டும். எனவே, முதலில் சுயத்தின் இராஜ்யத்தில், ஒரு இராஜ்யம், ஒரு தர்மம் (தாரணை), ஒரு வழி உள்ளதா? என்று பாருங்கள். ஒருவேளை, ஒரு கர்மேந்திரியம் கூட மாயையின் வழிப்படி நடக்கிறது என்றால் ஒரு இராஜ்யம், ஒரு வழி என்று கூறமுடியாது. எனவே, ஒரு இராஜ்யம், ஒரு தர்மத்தை சுயத்தின் இராஜ்யத்தில் ஸ்தாபனை செய்துவிட்டேனா அல்லது அவ்வப்போது மாயை சிம்மாசனத்தில் அமர்ந்துவிடுகிறது, அவ்வப்போது நீங்கள் அமருகின்றீர்கள் என்ற நிலை உள்ளதா? என்பதை முதலில் சோதனை செய்யுங்கள். சவாலை நடைமுறையில் கொண்டு வந்திருக்கின்றேனா அல்லது இல்லையா? என்பதை சோதனை செய்யுங்கள். நீங்கள் அனாதி சம்ஸ்காரத்தை வெளிப்படுத்த விரும்பு கின்றீர்கள் ஆனால், வெளிப்பட்டதோ மத்திம சம்ஸ்காரம் எனில், இது அதிகாரி நிலை இல்லை அல்லவா.
எனவே, இராஜரிஷி என்றால் அனைத்தினுடைய இராஜ்ய அதிகாரி என்பதாகும். எப்பொழுது ரிஷி அதாவது எல்லையற்ற வைராக்கிய விருத்தியின் பயிற்சியாளராக இருப்பீர்களோ, அப்பொழுதே இராஜ்ய அதிகாரி நிலையானது சதா மற்றும் சகஜமாக இருக்கும். வைராக்கியம் என்றால் பற்றற்ற நிலையாகும். சதா தந்தையின் அன்பிற்குரிய நிலையாகும். இந்த அன்பான நிலையே பற்றற்ற வராக ஆக்குகிறது. தந்தையின் அன்பானவராகி, பற்றற்றவராக ஆகி காரியம் செய்ய வேண்டும் - இந்த நிலையையே எல்லையற்ற வைராக்கியம் உடைய நிலை என்று கூறுகின்றார்கள். தந்தையின் அன்பானவர் ஆகவில்லை எனில் பற்றற்றவராகவும் ஆக முடியாது, பற்றில் வந்துவிடுவார்கள். தந்தையின் மீது அன்பு கொண்டவரோ, வேறு எந்த மனிதன் அல்லது பொருள் மீது அன்பு செலுத்துபவராக ஆகமுடியாது. அவர்கள் சதா கவர்ச்சியில் இருந்து கடந்திருப்பார்கள் அதாவது பற்றற்றவராக இருப்பார்கள். இதையே நிர்லேப் (எதுவும் ஒட்டாத) ஸ்திதி என்று கூறுகின்றார்கள். அவர்கள் எந்தவொரு எல்லைக்குட்பட்ட கவர்ச்சியின் பக்கம் வருபவர்கள் அல்ல. படைப்பு மற்றும் சாதனங்களை பற்றற்றவராகி காரியத்தில் பயன்படுத்த வேண்டும். இத்தகைய எல்லையற்ற வைராக்கியம் உடையவராக, உண்மையான இராஜரிஷியாக ஆகியிருக் கின்றீர்களா? ஒன்று அல்லது இரண்டு பலவீனங்கள் மட்டும் தங்கி விட்டன, ஒரு சூட்சும சக்தி அல்லது கர்மேந்திரியம் மட்டும் கட்டுப்படுவதில்லை, மற்ற அனைத்தும் சரியாக உள்ளது என்று நினைக்கக்கூடாது. ஆனால், எங்கு ஒரே ஒரு பலவீனம் இருக்கிறதோ, அங்கு அதுவே மாயையின் வாசலாக ஆகிவிடுகிறது. சிறிய கதவோ, பெரிய கதவோ ஆனால், அது கதவு தான் அல்லவா. ஒருவேளை, கதவு திறந்திருந்தால் மாயையை வென்றவர்களாக, உலகை வென்றவர்களாக எவ்வாறு ஆகமுடியும்?
ஒருபுறம் ஒரு இராஜ்யம், ஒரு தர்மத்தினுடைய பொன்னுலகை வரவேற்பு செய்து கொண்டு இருக்கின்றீர்கள் மற்றும் அதன் கூடவே பலவீனம் அதாவது மாயையை வரவழைக்கின்றீர்கள் எனில், ரிசல்ட் என்னவாகும்? குழப்பத்தில் வந்துவிடுவீர்கள். ஆகையினால், இதை சின்ன விசயமாக நினைக்காதீர்கள். சமயம் உள்ளது, செய்து விடலாம், பிறரிடமோ அநேகம் உள்ளது, என்னிடமோ ஒரு விசயம் மட்டுமே உள்ளது. இவ்வாறு பிறரைப் பார்த்து பார்த்து சுயம் பின்தங்கிவிடாதீர்கள். தந்தை பிரம்மாவைப் பாருங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது, தந்தையைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அனைவருடைய சகயோகியாக, சினேகியாக அவசியம் ஆகுங்கள், குணத்தை கிரஹிப்பவராக அவசியம் ஆகுங்கள், ஆனால், தந்தையைப் பின்பற்றுங்கள். தந்தை பிரம்மாவினுடைய இறுதி நிலையாக இராஜரிஷி நிலையைப் பார்த்தீர்கள். குழந்தைகள் மீது மிகவும் அன்பானவராக இருந்தபோதிலும், எதிரில் பார்த்துக் கொண்டிருந்த போதிலும் பற்றற்ற நிலையில் இருந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா. எல்லையற்ற வைராக்கிய ஸ்திதியை நடைமுறையில் பார்த்தீர்கள். கர்ம வினைப்பயன் இருந்தபோதிலும் கர்மேந்திரியங் கள் மீது அதிகாரி ஆகி அதாவது இராஜரிஷி ஆகி சம்பூரண ஸ்திதியின் அனுபவத்தை செய்வித்தார். ஆகையினாலேயே, தந்தையைப் பின்பற்றுங்கள் என்று சொல்கின்றார்கள். எனவே, தன்னுடைய இராஜ்ய அதிகாரிகள், இராஜ்ய காரியஸ்தர்களை சதா பார்க்க வேண்டும். எந்தவொரு இராஜ்ய காரியஸ்தரும் ஏமாற்றத்தை கொடுத்துவிடக்கூடாது. புரிந்ததா? நல்லது.
இன்று வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரு இடத்திற்கு வந்திருக்கின்றீர்கள். இதையே நதி மற்றும் கடலினுடைய சந்திப்பு திருவிழா என்று சொல்லப்படுகிறது. திருவிழாவில் சந்திப்பும் நடைபெறுகிறது மற்றும் பொருளும் கிடைக்கிறது, ஆகையினால், அனைவரும் திருவிழாவிற்கு வந்திருக்கின்றீர்கள். இது புதிய குழந்தை களுடைய சீசனின் கடைசி குழுவாகும். பழையவர் களுக்கும் கூட புதியவர்களுடன் சேர்த்து வாய்ப்பு கிடைத்து விட்டது. இயற்கை கூட இப்பொழுது வரை அன்போடு சகயோகம் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், இதை அனுகூலமாக எடுத்துகொள்ளக் கூடாது. இல்லையெனில், இயற்கை கூட புத்திசாலியாக உள்ளது. நல்லது.
நாலாபுறங்களிலும் இருக்கக்கூடிய சதா இராஜரிஷி குழந்தைகளுக்கு, சதா சுயத்தின் மீது இராஜ்யம் செய்யக்கூடிய சதா வெற்றியாளர் ஆகி தடையற்ற இராஜ்ய காரியத்தை நடத்தக்கூடிய இராஜ்ய அதிகாரி குழந்தைகளுக்கு, சதா எல்லையற்ற வைராக்கிய விருத்தியில் இருக்கக்கூடிய, சதா ரிஷிகுமாரர், குமாரிகளுக்கு, சதா தந்தையின் அன்பானவராகி பற்றற்று காரியம் செய்யக் கூடிய பற்றற்ற மற்றும் அன்பான குழந்தைகளுக்கு, சதா தந்தை பிரம்மாவை பின்பற்றக்கூடிய நம்பிக்கைக்குரிய குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
பார்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:
1. அனேக முறை வெற்றியடைந்த ஆத்மாக்கள் என்ற அனுபவம் செய்கின்றீர்களா? வெற்றியாளராக ஆவது கடினமாகத் தோன்றுகிறதா அல்லது சுலபமாக உள்ளதா? ஏனெனில், எந்த விசயம் சுலபமானதாக இருக்குமோ, அது எப்பொழுதும் நிலைத்திருக்க முடியும், கடினமான விசயம் சதா (எப்பொழுதும்) இருக்க முடியாது. அனேக முறை எந்த காரியம் செய்யப்பட்டு இருக்கிறதோ, அது தானாகவே சுலபமானதாக ஆகிவிடுகிறது. எப்பொழுதாவது ஏதாவது புதிய காரியம் செய்யப்படுகிறது என்றால் முதலில் கடினமாகத் தோன்றுகிறது, ஆனால், எப்பொழுது செய்யப்பட்டுவிடுகிறதோ, அப்பொழுது அதே கடினமான காரியம் சுலபமாகத் தோன்றுகிறது. எனவே, நீங்கள் அனைவரும் இந்த ஒரு முறை வெற்றியடைந்த வெற்றி யாளர்கள் அல்ல, அனேக முறை வெற்றி பெற்றவர்கள் ஆவீர்கள். அனேக முறை வெற்றி பெற்றவர்கள் என்றால் சதா சுலபமாக வெற்றியின் அனுபவத்தை செய்பவர்கள் என்று அர்த்தம். யார் சுலபமான வெற்றி யாளர்களோ, அவர்களுக்கு ஒவ்வொரு அடியிலும் இந்த அனைத்து காரியங்களும் நடந்தேறி இருக்கின்றன, ஒவ்வொரு அடியிலும் வெற்றி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது என்ற அனுபவம் ஏற்படும். நடக்குமா அல்லது நடக்காதா என்ற இந்த சங்கல்பம் கூட எழமுடியாது. அனேக முறை வெற்றி பெற்றவர் என்ற இந்த நம்பிக்கை எப்பொழுது இருக்குமோ, அப்பொழுது நடக்குமா அல்லது நடக்காதா என்ற கேள்விக்கே இடம் இல்லை. நம்பிக்கையின் அடையாளம் போதை மற்றும் போதையின் அடையாளம் குஷி ஆகும். யாருக்கு போதை இருக்குமோ அவர்கள் சதா குஷியாக இருப்பார்கள். எல்லைக்குட்பட்ட வெற்றியாளரிடம் கூட எவ்வளவு குஷி இருக்கிறது! எப்பொழுதாவது வெற்றியை அடைகின்றார்கள் என்றால் வாத்தியங்கள் இசைக்கின்றார்கள் அல்லவா. எனவே, யாருக்கு போதை உள்ளதோ, அவர்களிடம் அவசியம் குஷி இருக்கும். அவர்கள் சதா குஷியில் நடனமாடிக்கொண்டே இருப்பார்கள். சரீரத்தால் சிலர் ஆட முடியும், சிலரால் ஆட முடியாது, ஆனால், மனதில் குஷியின் நடனம் ஆடுவது - இது படுக்கையில் இருக்கும் நோயாளி கூட ஆட முடியும். யாராக இருந்தாலும் சரி, இந்த நடனம் அனைவருக்குமே சுலபமானதாகும். ஏனெனில், வெற்றியாளர் ஆவது என்றால் தானாகவே குஷியின் வாத்தியம் இசைப்பது என்பதாகும். எப்பொழுது வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றனவோ, அப்பொழுது கால் கள் தானாகவே நடனமாடுகின்றன. நடனமாடத் தெரியாதவர்களும் கூட அமர்ந்த வண்ணம் ஆடிக் கொண்டே இருப்பார்கள். கால் அசையும், தலை அசையும். எனவே, நீங்கள் அனைவரும் அனேக முறை வெற்றி பெற்றவர்கள் ஆவீர்கள் - இந்தக் குஷியில் சதா முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். உலகத்தில் அனைவருக்கும் அவசியமாக இருப்பதுவே குஷி தான். அனைத்து பிராப்திகள் இருந்தபோதிலும், குஷி என்ற பிராப்தி இல்லை. எனவே, எந்த அழிவற்ற குஷி உலகத்திற்கு அவசியமானதாக உள்ளதோ, அந்தக் குஷியை சதா பகிர்ந்துகொண்டே இருங்கள்.
2. தன்னை பாக்கியவான் எனப் புரிந்து ஒவ்வொரு அடியிலும் சிரேஷ்ட பாக்கியத்தை அனுபவம் செய்கின்றீர்களா? ஏனென்றால், இந்த சமயம் தந்தை பாக்கியவிதாதா ஆகி பாக்கியத்தை கொடுப்பதற்காக வந்திருக்கின்றார். பாக்கியவிதாதா பாக்கியத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றார். பாக்கியத்தை கொடுக்கும் சமயத்தில், யார் எவ்வளவு பெற விரும்பு கின்றார்களோ, அவ்வளவு பெற முடியும். அனைவருக்கும் அதிகாரம் உள்ளது. யார் வேண்டு மானாலும் பெற்றுக் கொள்ளலாம், எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். எனவே, இப்பேற்பட்ட சமயத்தில் எவ்வளவு பாக்கியத்தை உருவாக்கி இருக்கின்றீர்கள் என்பதை சோதனை செய்யுங்கள். ஏனெனில், இப்பொழுது இல்லையேல் பிறகு எப்பொழுதும் இல்லை. ஆகையால், ஒவ்வொரு அடியிலும் பாக்கியத்தின் ரேகையை வரைவதற்கான பேனாவை தந்தை, அனைத்து குழந்தைகளுக்கும் கொடுத் திருக்கின்றார். பேனா கையில் உள்ளது மற்றும் ரேகையை எவ்வளவு நீளமாக வரைய விரும்புகின்றீர்களோ, அவ்வளவு வரைவதற்கான அனுமதியும் உள்ளது. எவ்வளவு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது! எனவே, சதா இந்த பாக்கியவான் சமயத்தின் மகத்துவத்தை அறிந்து அந்தளவு சேமிப்பு செய்கின்றீர்கள் அல்லவா? மிகவும் விரும்பினேன், ஆனால், செய்யமுடியவில்லை; செய்ய வேண்டிதோ அதிகம் இருந்தது, ஆனால், இவ்வளவு தான் செய்தேன் என்பது கூடாது. தன்னைப் பற்றிய இந்தப் புகார் இருக்கக் கூடாது. புரிந்ததா? எனவே, பாக்கியத்தின் ரேகையை சிரேஷ்டமானதாக ஆக்கிக்கொண்டே செல்லுங்கள் மற்றும் பிறருக்கும் கூட இந்த சிரேஷ்ட பாக்கியத்தின் அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். ஆஹா, என்னுடைய சிரேஷ்டமான பாக்கியம்! இந்தக் குஷியின் பாடலை சதா பாடிக்ககொண்டே இருங்கள்.
3. சதா தங்களை சுயதரிசன சக்கரதாரி சிரேஷ்ட ஆத்மாக்கள் என்று அனுபவம் செய்கின்றீர் களா? சுயதரிசன சக்கரம் என்றால் சதா மாயையின் அனேக சக்கரங்களில் இருந்து விடுவிக்கக் கூடியது என்று அர்த்தம். சுயதரிசன சக்கரமானது சதா காலத்திற்கும் இராஜ்ய பாக்கியத்தின் அதிகாரி ஆக்கிவிடுகிறது. இந்த சுயதரிசன சக்கரத்தைப் பற்றிய ஞானம் இந்த சங்கமயுகத்தில் தான் கிடைக்கிறது. நீங்கள் பிராமண ஆத்மாக்கள் ஆவீர்கள், ஆகையால், சுயதரிசன சக்கரதாரி ஆவீர்கள். பிராமணர்களை சதா உச்சிக் குடுமியில் காண்பிக்கின்றார்கள். குடுமி என்றால் உயர்ந்த நிலை. பிராமணன் என்றால் சதா சிரேஷ்ட கர்மம் செய்யக்கூடியவர்கள், பிராமணன் என்றால் சதா சிரேஷ்ட தர்மத்தைக் (தாரணைகளை) கடைபிடிப்பவர்கள் - நீங்கள் அப்பேற்பட்ட பிராமணர் கள் ஆவீர்கள் அல்லவா? பெயரளவில் பிராமணன் அல்ல, காரியம் (செயல்) செய்யக்கூடிய பிராமணன், ஏனெனில், பிராமணர்களுக்கு இப்பொழுது இறுதி சமயத்தில் கூட எத்தனை பெயர்கள் உள்ளன! உண்மையான பிராமணர் களாகிய உங்களுடைய இந்த நினைவுச்சின்னமானது இப்பொழுது வரை இருந்துவருகிறது. எந்தவொரு உயர்ந்த காரியம் ஆனாலும் பிராமணர்களைத் தான் அழைப்பார்கள், ஏனெனில், பிராமணர்களே அந்தளவு உயர்ந்தவர்கள் ஆவார்கள். எனவே, எந்த சமயத்தில் இவ்வளவு சிரேஷ்டமானவர்களாக ஆகியிருக்கின்றீர்கள்? இப்பொழுது ஆகியிருக் கின்றீர்கள், ஆகையினால், இப்பொழுது வரை சிரேஷ்ட காரியத்தின் நினைவுச்சின்னமானது இருந்து வருகிறது. ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு வார்த்தை, ஒவ்வொரு கர்மத்தை சிரேஷ்ட மாக ஆக்கக்கூடிய, அத்தகைய சுயதரிசன சக்கரதாரி சிரேஷ்ட பிராமணன் என்ற நினைவில் சதா இருங்கள். நல்லது.