புதிய வருடத்தில் புதுமைக்காக வாழ்த்துக்கள்.
இன்று, அமிர்தவேளையில் இருந்து, சகல அன்பான, ஒத்துழைக்கும், சக்திசாலிக் குந்தைகளின் மனதின் இனிய, மேன்மையான எண்ணங்களும் அன்பான சத்தியங்களும் மாற்றத்திற்கான சத்தியங்களும் தந்தைக்குச் சமமாக வேண்டும் என்ற திடசங்கற்பம் மிக்க ஊக்கமும் உற்சாகமும், அதாவது, ஆன்மீக சங்கீதம் நிறைந்த மனதின் பாடல்கள் அனைத்தும் எங்கும் இருந்து மனதின் நண்பரை வந்தடைந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொருவரின் மனதிலிருந்தும் வெளிப்படுகின்ற இனிமையான பாடல்களைக் கேட்கும்போது, அவர்களின் மேன்மையான பாடல்களால் மனதின் நண்பர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். மனதின் நண்பர், தனது ஆன்மீக நண்பர்களின், தனது இறைநண்பர்களின் பாடல்களுக்குப் பதில் அளிக்கிறார். உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு வார்த்தையிலும் எப்போதும் புனிதமானவர்களாகவும் சந்தோஷமானவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பதற்கு வாழ்த்துக்கள். உங்களின் ஒத்துழைப்புக் கரம் எப்போதும் மனதின் நண்பரின் பணியில் ஒத்துழைக்கும் எண்ணத்துடன் கையோடு கைசேர்ந்தவண்ணம் இருக்க வேண்டும். குழந்தைகளின் எண்ணங்கள், கடிதங்கள், வாழ்த்துமடல்கள், அத்துடன் நினைவின் அடையாளங்களான அன்புப்பரிசுகளும் எங்கும் இருந்து பாப்தாதாவை வந்தடைந்துள்ளன. பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் புத்தியின் நெற்றியில் தனது ஆசீர்வாதக் கரங்களை எப்போதும் வைக்கிறார். அவர் அத்துடன் வெற்றிக்கான நல்லாசிகளின் கரத்தையும் சதா வைத்திருக்கிறார். புது வருடத்தில், அவர் குழந்தைகளான உங்களுக்கு, உங்களின் சத்தியங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திலகத்தை இடுகிறார். அதாவது, சற்குரு தனது கீழ்ப்படிவான குழந்தைகளுக்கு நினைவின் சொரூபமாக இருக்கும் அதாவது, ஒவ்வோர் அடியிலும் தந்தையைப் பின்பற்றுவதற்கான திலகத்தை இடுகிறார். இந்தத் தினத்தில், இளையவர்களோ அல்லது வயதானவர்களோ, நாள் முழுவதும் நிச்சயமாக அனைவரின் வாயில் இருந்தும் வாழ்த்துக்கள் வெளிப்படுகின்றன. அதேபோன்று, சதா புதிய சங்கீதம், புதிய விநாடிகளும், சதா புதிய எண்ணங்களும் உள்ளன. இதனாலேயே, நீங்கள் ஒவ்வொரு விநாடியும் பாராட்டப்படுகிறீர்கள். புதுமைக்காக உங்களுக்கு சதா வாழ்த்துக்கள் வழங்கப்படுகின்றன. எப்போதும் புதியதாக ஏதாவது நிகழும்போது அல்லது புதிய பணி நிறைவேற்றப்படும்போது, நிச்சயமாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அந்தப் புதுமைக்காக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. எனவே, உங்கள் அனைவருக்கும், அனைத்தும் சதா புதியதே. இதுவே சங்கமயுகத்தின் சிறப்பியல்பு ஆகும். சங்கமயுகத்தின் ஒவ்வொரு செயலும் உங்களைப் பறக்கும் ஸ்திதிக்கு அழைத்துச் செல்லும். இதனாலேயே, அது அனைத்திலும் சதா புதியதாக உள்ளது. சென்ற வினாடியில் உங்களின் ஸ்திதியும் வேகமும் எவ்வாறு இருந்தனவோ, அடுத்த விநாடி உங்களின் ஸ்திதி உயர வேண்டும். அதாவது, அது பறக்கும் ஸ்திதியை நோக்கிச் செல்கிறது. இதனாலேயே, ஒவ்வொரு விநாடியின் ஸ்திதியும் வேகமும் உயர்வானதாக உள்ளன. அதாவது, அவை புதியதாக உள்ளன. எனவே, உங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு விநாடியிலும் உங்களின் எண்ணங்களின் புதுமைக்காகப் பாராட்டுக்கள். சங்கமயுகம் பாராட்டுக்களுக்குரிய யுகம் ஆகும். இது உங்களின் வாயை சதா இனிமையாக்குவதற்கும், ஒரு இனிமையான வாழ்க்கை வாழ்வதற்கும், உறவுமுறைகளில் இனிமையை அனுபவம் செய்வதற்கும் உரிய யுகம் ஆகும். பாப்தாதா புது வருடத்திற்கு மட்டும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவில்லை. ஆனால், சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடிக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் மேன்மையான வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கிறார். இன்றைய தினத்திற்காக மனிதர்கள் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பார்கள். ஆனால், நாளை அனைத்தும் முடிந்துவிடும். பாப்தாதா சதா உங்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார். புதிய யுகத்திற்கு நெருக்கமாக வருவதற்காக அவர் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். உங்களின் எண்ணங்களைப் பற்றிய மிக நல்ல பாடல்களை பாபா செவிமடுத்தார். இவற்றைச் செவிமடுக்கும்போது, பாப்தாதா இந்தப் பாடல்களின் இசையிலும் அர்த்தத்திலும் மூழ்கினார்.
இன்று, அமிர்தவேளையில் சூட்சும வதனத்தில் கீதமாலையின் (பாடல்களின் மாலை) நிகழ்ச்சியைச் செவிமடுத்தார். ஒவ்வொரு நாட்டிலும், இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும், அமிர்தவேளை அவர்களின் சொந்த நேரத்தில் இருக்கும். ஒவ்வொரு குழந்தையும் அமிர்தவேளையில் தான் பாபாவுடன் பேசுவதாகவே நம்புகிறார். எனவே, பாப்தாதா சதா நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் பாடும் பாடல்கள் மிகவும் அழகானவை. உங்களின் இசையும் உங்களுக்கே உரியவை. ஆனால், பாப்தாதா அனைவரின் பாடல்களையும் நேசிக்கிறார். அவர் உங்களுக்கு ஏற்கனவே வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டார். அவர் அவற்றை வார்த்தைகளினூடாக அல்லது மனதினூடாக, அவர் அவற்றை நடைமுறைக்கேற்ப அல்லது அன்பின் பொறுப்பை நிறைவேற்றும் மேன்மையான எண்ணத்துடன் வழங்கியுள்ளார். எனவே, நீங்கள் எதிர்காலத்தில் என்ன செய்வீர்கள்? நீங்கள் சேவையில் 50 வருடங்களைப் (1986) பூர்த்தி செய்ததைப் போல், நீங்கள் மேன்மையான எண்ணங்களையும் சத்தியங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்களா? அல்லது, அவை எண்ணங்களின் வடிவிலேயே இருக்குமா? நீங்கள் ஒவ்வொரு வருடமும் மிக நல்ல சத்தியங்களைச் செய்கிறீர்கள். இன்றைய உலகில், நாளுக்கு நாள், அவர்கள் அழகான வாழ்த்து மடல்களை அதிகளவில் செய்கிறார்கள். அதேபோன்று, உங்களின் எண்ணங்களும் ஒவ்வொரு வருடமும் மென்மேலும் மேன்மையானவை ஆகுகின்றன. ஆனால், உங்களின் எண்ணங்களும் ரூபமும் இரண்டும் சமமாக இருக்க வேண்டும். இதுவே மகத்துவம் ஆகும். இந்த மகத்துவத்தில் ஆரம்ப அடியை எடுத்து வைப்பவர்களே அர்ஜூனர்கள். யார் அவ்வாறு ஆகுவீர்கள்? ஒவ்வொருவரும் தான் அவ்வாறு ஆகுவார் என நம்புகிறார். மற்றவர்கள் அர்ஜூனர் அல்லது பீமன் ஆகுவாரா என்று பார்க்காதீர்கள். நான் முதலாம் இலக்கத்தவர் ஆகவேண்டும். அதாவது, நான் அர்ஜூனன் ஆகவேண்டும். ‘ஓ அர்ஜூனா’ என்பதே நினைவுகூரப்படுகிறது. ‘ஓ பீமா’ என்பது நினைவு செய்யப்படுவதில்லை. அர்ஜூனனின் சிறப்பியல்பானது எப்போதும் நினைவின் சொரூபமாக இருப்பதாகும். புள்ளி என்ற ரூபத்தில் ஸ்திரமாக இருந்து வெற்றியாளர் ஆகவேண்டும். இந்த முறையில் பற்றை வென்றவர்களாகவும் நினைவின் சொரூபங்களாகவும் ஆகுபவர்களே அர்ஜூனர்கள். சதா கீதை ஞானத்தைச் செவிமடுத்துக் கடைபவர்களே அர்ஜூனன் ஆவார்கள். யார் சரீரமற்ற அர்ஜூனன் ஆகுவார்கள்;? அதாவது, அனைவரும் மரணித்து வாழ்கிறார்கள் என்ற உணர்வுடன் எல்லையற்ற விருப்பமின்மைக்கான மனோபாவத்தைக் கொண்டவராக இருக்கிறார்? யார் சரீரமற்றவராகி, அனைவரும் ஏற்கனவே இறந்துவிட்டார்கள் என்ற உணர்வுடன் மரணித்து வாழ்கிறார்கள்? அதாவது, எல்லையற்ற விருப்பமின்மையின் மனோபாவத்துடன் யார் அர்ஜூனன் ஆகுவார்கள்? நீங்கள் அவ்வாறு ஆகப்போகிறீர்களா அல்லது வெறுமனே அதைப் பற்றிப் பேசப்போகிறீர்களா? நீங்கள் புது வருடத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள். எனவே, ஒவ்வொரு விநாடியிலும் புதுமை இருக்க வேண்டும். உங்களின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் உறவுமுறைகளிலும் புதுமையை ஏற்படுத்துங்கள். எப்போதும் புது வருடத்திற்கான இந்த வாழ்த்துக்களை உங்களுடன் வைத்திருங்கள். ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு கணத்திலும், உங்களின் ஸ்திதியின் சதவீதம் உயர்வானதாக இருக்க வேண்டும். உதாரணமாக, தனது இலக்கை அடைவதற்கு ஒருவர் எத்தனை அடிகளை எடுத்து வைக்கிறாரோ, ஒவ்வோர் அடியிலும் அவர் தொடர்ந்து அந்த இலக்கிற்கு அண்மையில் செல்வார். அவர் நின்றுவிடுவதில்லை. இந்த முறையில், ஒவ்வொரு விநாடியும் ஒவ்வோர் அடியிலும் நெருக்கமாக வருகின்ற உங்களின் தகைமைகளையும் முழுமைக்கு நெருக்கமாக வருவதை நீங்களும் அனுபவம் செய்யுங்கள். மற்றவர்களும் அதை அனுபவம் செய்ய வேண்டும். இதுவே சதவீதத்தை அதிகரித்தல், அதாவது, முன்னேறிச் செல்லுதல் எனப்படும். இது சதவீதத்தின் புதுமை என்றும் வேகத்தில் புதுமை என்றும் அழைக்கப்படுகிறது. எனவே, எல்லா வேளையும் தொடர்ந்து புதுமையை ஏற்படுத்துங்கள். அனைவரும் கேட்கிறார்கள்: நாம் என்ன புதிய விடயங்களைச் செய்யலாம்? அனைத்திற்கும் முதலில், உங்களில் புதுமையை ஏற்படுத்துங்கள். அப்போது சேவையில் இயல்பாகவே புதுமை ஏற்படும். இன்று மக்கள் நிகழ்ச்சிகளில் புதுமையை விரும்பவில்லை. ஆனால், நீங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தில் புதுமையை விரும்புகிறார்கள். எனவே, உங்களில் புதுமையை ஏற்படுத்துவதன் மூலம், இயல்பாகவே நீங்கள் ஏற்படுத்தும் தாக்கத்திலும் புதுமை ஏற்படும்.
இந்த வருடம், மனதில் படியக்கூடியதாக இருக்கும் சிறப்பியல்பை வெளிப்படுத்துங்கள். பிராமண ஆத்மாக்கள் ஒன்று சேரும்போதெல்லாம், உங்களின் மனதில் ஒவ்வொருவருக்காகவும் எப்போதும் அன்பு, ஒத்துழைப்பு, நன்மை செய்தல் என்ற உணர்வுகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் யாராவது ஒருவருக்குத் தைரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும்படியாக இருக்க வேண்டும். அது வீணானதாக இருக்கக்கூடாது. சிலவேளைகளில், நீங்கள் அரைமணிநேரத்தை சாதாரணமான அரட்டையில் கழிக்கிறீர்கள். பின்னர், அதன் பெறுபேறு என்னவாக இருக்கும் என எண்ணுகிறீர்கள். நல்லதோ கெட்டதோ இல்லாமல் சாதாரணமான வார்த்தைகளைப் பேசும்போது, அவற்றை மனதில் படியக்கூடிய வார்த்தைகள் என்று சொல்ல முடியாது. அதேபோன்று, ஒவ்வொரு செயலும், அது உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ பலனுள்ளதாக இருக்க வேண்டும். எனவே, உங்களுக்கு இடையேயும் ஒவ்வொரு வடிவிலும் ஒருவருக்கொருவர் ஆன்மீகத் தாக்கத்தை ஏற்படுத்துங்கள். சேவையிலும் ஒரு ஆன்மீகத் தாக்கத்தை ஏற்படுத்துபவர் ஆகுங்கள். நீங்கள் நல்ல முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் அனைத்தையும் உங்களின் இதயபூர்வமாகச் செய்கிறீர்கள். அனைவரும் இவ்வாறு சொல்கிறார்கள். ஆனால் இப்போது, ‘இவர்கள் இராஜயோகி தேவதைகள். எங்கேயாவது ஆன்மீகம் என்றிருந்தால், இது அதுவே. இது மட்டுமே இறைபணி’ என மக்கள் கூறும் வகையில் இறைவனை வெளிப்படுத்த வேண்டும். இது நல்ல வாழ்க்கை, இது நல்ல பணி என அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், ‘இது இறைபணி, இவர்கள் கடவுளின் குழந்தைகள், இதுவே சம்பூரணமான, முழுமையான வாழ்க்கை’ என அவர்கள் உணரும் வகையில் இதன் ஆதிக்கம் இருக்க வேண்டும். நீங்கள் சேவையினால் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தாமும் நல்லவர்கள் ஆகவேண்டும் என அவர்கள் கூறும் வகையில் ஓர் அலையைப் பரப்புங்கள். நீங்கள் மிகவும் நல்லவர்கள் என அவர்கள் சொல்லும்போது, பக்தர்களின் மாலை உருவாகுகிறது. எவ்வாறாயினும், இப்போது, அனைத்திற்கும் முதலில், வெற்றி மாலையை உருவாக்குங்கள். அதாவது, சுவர்க்கத்திற்கு உரிமை உடையவர்களின் மாலையை உருவாக்குங்கள். முதல் பிறப்பில் 900இ000 பேர் தேவைப்படுகிறார்கள். பக்தர்களின் மாலை மிகவும் நீளமானது. இது இராச்சியத்திற்கு உரிமை உடையவர்களின் மாலை. இராச்சியத்தை ஆள்பவர்களின் மாலை அல்ல. இப்போது இராச்சியத்திற்குள் வருகின்ற உரிமையைக் கொண்டவர்களும் தேவைப்படுகிறார்கள். ஆகவே, இது நல்லது எனக் கூறி, நல்லவர்கள் ஆகுபவர்கள், குறைந்தபட்சம் பிரஜைகள் ஆகும் வகையில் அலையைப் பரப்புங்கள். அவர்கள் குறைந்தபட்சம் உங்களுடன் தொடர்பில் வருவார்கள். எனவே, நீங்கள் அவர்களுக்கு சுவர்க்கத்திற்கு வருவதற்கான உரிமையைக் கொடுப்பீர்கள், அல்லவா? சேவையில் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் ஆகுங்கள். குறிப்பாக இந்த வருடத்தை ஆதிக்கம் செலுத்தும் ஆண்டாகக் கொண்டாடுங்கள். இந்த ஆதிக்கத்தினால், தந்தையை வெளிப்படுத்தும் சிறப்பியல்பை விருத்தி செய்யுங்கள். நீங்களே ஆதிக்கத்திற்கு உள்ளாகக்கூடாது. ஆனால், அவர்கள் தந்தையின் ஆதிக்கத்திற்கு உள்ளாக வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? பக்தி மார்க்கத்தில், அனைத்தும் கடவுளின் வடிவங்களே என அவர்கள் சொல்கிறார்கள். அதைத் தவறான உணர்வுடனேயே அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், ஞானத்தின் ஆதிக்கத்தினால், அவர்கள் தந்தையை உங்கள் அனைவரின் ரூபங்களிலும் அனுபவம் செய்ய வேண்டும். அவர்கள் உங்களில் யாரைப் பார்த்தாலும், கடவுளின் ரூபத்தை அனுபவம் செய்யும்போது, புதிய யுகம் வரும். இன்னமும், நீங்கள் முதல் பிறவிக்கான பிரஜைகளையே உருவாக்கவில்லை. இறுதிப் பகுதிக்கான பிரஜைகள் இலகுவாக உருவாக்கப்படுவார்கள். ஆனால், முதலில் முதல் பிறவிக்கான பிரஜைகள் இருக்க வேண்டும். அரசன் சக்திசாலியாக இருந்தால், முதல் பிரஜைகளும் சக்திசாலியாக இருப்பார்கள். எனவே, சதா எண்ணம் என்ற விதையை நடைமுறை ரூபம் என்ற பழமாக மாற்றுங்கள். சதா சத்தியத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்துகை என்ற நடைமுறை ரூபத்தில் கொண்டு வாருங்கள். இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அனைத்திலும் இரட்டைப் பலனைப் பெறுவீர்கள், அல்லவா? ஒவ்வொரு விநாடியிலும் புதுமையை ஏற்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு விநாடியும் தந்தையிடமிருந்து தொடர்ந்து வாழ்த்துக்களைப் பெறுங்கள். அச்சா.
சதா ஒவ்வொரு விநாடியும் புதுமையின் மகத்துவத்தைக் காட்டுபவர்களுக்கும், ஒவ்வொரு கணமும் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்பவர்களுக்கும், மனதில் பதியச் செய்பவர்களாகி, தந்தையின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துபவர்களுக்கும், ஆத்மாக்கள் புதியதொரு வாழ்க்கையை உருவாக்குவதற்கான புதிய தூண்டுதலைக் கொடுப்பவர்களுக்கும், ஆத்மாக்கள் புதிய யுகத்திற்கான உரிமையைக் கோருவதற்கான மேன்மையான அலையைப் பரவச் செய்பவர்களுக்கும், இந்த முறையில் சதா ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதுடன், மகாதானிகளாக இருப்பவர்களுக்கும், புதுமைக்கான எண்ணங்களுடன் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா தாதிகளைச் சந்திக்கிறார்: சக்திவாய்ந்த எண்ணங்களின் ஒத்துழைப்பே இன்று விசேடமான தேவையாக உள்ளது. சுயத்தின் முயற்சிகள் வேறு விடயம். ஆனால், மேன்மையான எண்ணங்களின் ஒத்துழைப்பிற்கான விசேட தேவை உள்ளது. இந்த சேவையே விசேட ஆத்மாக்களான நீங்கள் செய்ய வேண்டும். இப்போது, உங்களின் எண்ணங்களால் ஒத்துழைப்பை வழங்கும் சேவையை அதிகரியுங்கள். வார்த்தைகளால் கற்பித்தல்களைக் கொடுக்கும் காலம் இப்போது கடந்துவிட்டது. இப்போது, மேன்மையான எண்ணங்களால் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். மேன்மையான உணர்வுகளால் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சேவைக்கான தேவையே இப்போது உள்ளது. அனைவருக்கும் இந்தச் சக்தி தேவைப்படுகிறது. அனைவருக்கும் எண்ணங்கள் உள்ளன. ஆனால், இப்போது அந்த எண்ணங்களைச் சக்தியால் நிரப்ப வேண்டும். நீங்கள் எந்தளவிற்குச் சக்திசாலிகளோ, அந்தளவிற்கு உங்களால் மற்றவர்களின் எண்ணங்களைச் சக்தியால் நிரப்ப முடியும். உதாரணமாக, தற்காலத்தில், மக்கள் சூரிய சக்தியைச் சேமித்து, அதன் மூலம் அதிகளவு பணிகளைச் செய்கிறார்கள். இங்கும், நீங்கள் எண்ணங்களின் சக்தியைச் சேமித்தால், உங்களால் மற்றவர்களையும் சக்தியால் நிரப்ப முடியும். உங்களால் ஒரு பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். அவர்கள் தெளிவாகத் தம்மிடம் தைரியம் இல்லை என உங்களிடம் கூறுகிறார்கள். ஆகவே, நீங்கள் அவர்களுக்குத் தைரியத்தைக் கொடுக்க வேண்டும். தைரியத்தை வார்த்தைகளாலும் பெற முடியும். ஆனால் எல்லா வேளையும் பெற முடியாது. வார்த்தைகளுடன் கூடவே, மேன்மையான எண்ணங்களின் சூட்சுமமான சக்தியால் அதிகளவு பணியைச் செய்ய முடியும். ஏதாவதொன்று எந்தளவிற்கு அதிகமாக சூட்சுமமானதாக இருக்கிறதோ, அந்தளவிற்கு அது அதிகளவு வெற்றியை ஏற்படுத்தும். எண்ணங்கள் வார்த்தைகளை விட அதிகம் சூட்சுமமானவை. எனவே, இன்று இதற்கே தேவை உள்ளது. எண்ணத்தின் சக்தி சூட்சுமமானது. அவற்றால் உங்களுக்கு உங்களின் இரத்தில் ஊசிமருந்தைப் போல் சக்தியை வழங்க முடியும். எனவே, எண்ணங்களும் ஊசிமருந்தைப் போல் செயற்படுகின்றன. உங்களின் எண்ணங்களின் சக்தியால் அவர்களின் மனோபாவங்கள் நிரம்புகின்றன. இந்தச் சேவை இப்போது அத்தியாவசியமானதாகும். அச்சா.
பாப்தாதா ஆசிரியர்களைச் சந்திக்கிறார்: கருவி சேவையாளர்களாக இருப்பதன் மூலம் பாக்கியத்தைப் பெறுவதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? சேவைக்கான கருவி ஆகுவதெனில், பொன்னான வாய்ப்பைப் பெறுதல் என்று அர்த்தம். ஏனெனில், ஒரு சேவையாளர் இயல்பாகவே நினைவையும் சேவையையும் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டியதில்லை. நீங்கள் உண்மையான சேவையாளர் எனில், இரவு பகலாகச் சேவையில் மும்முரமாக இருப்பதன் மூலம், நீங்கள் இலகுவாக முன்னேற்றத்தை அனுபவம் செய்வீர்கள். இது மாயையை வென்றவர் ஆகுவதற்கான மேலதிக உயர்த்தி ஆகும். எனவே, கருவி சேவையாளர்களான நீங்கள் எந்தளவிற்கு முன்னேற விரும்புகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களால் இலகுவாக முன்னேற முடியும். இது ஓர் விசேடமான ஆசீர்வாதம் ஆகும். எனவே, நீங்கள் பெற்ற மேலதிக உயர்த்தியினதும் பொன்னான வாய்ப்பினதும் நன்மையைப் பெற்றுள்ளீர்கள். சேவையாளர்கள் இயல்பாகவே சேவைக்கான போஷாக்கான பழத்தை உண்ணுகிறார்கள். ஏனெனில், நீங்கள் சேவையின் உடனடியான, நடைமுறைப் பலனைப் பெறுகிறீர்கள். நீங்கள் தைரியத்தையும் பேணியுள்ளீர்கள். தைரியம் உடையவர்களின் மீது பாப்தாதாவின் உதவிக்கரம் எப்போதும் இருக்கும். நீங்கள் சதா இந்த உதவியால் முன்னேறுகிறீர்கள். தொடர்ந்தும் முன்னேறுவீர்கள். தந்தையின் உதவிக்கரம் எல்லா வேளைக்கும் ஓர் ஆசீர்வாதம் ஆகுகிறது. பாப்தாதா குறிப்பாகச் சேவையாளர்களைப் பார்க்கையில் களிப்படைகிறார். ஏனெனில், நீங்கள் தந்தையைப் போல் ஒரு பணிக்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். சதா உங்களைப் போன்ற ஆசிரியர்களை ஏற்படுத்துவதை விரிவாக்குங்கள். எப்போதும் உங்களுக்குள் புதிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கிரகித்து, அதை மற்றவர்களுக்கும் காட்டுங்கள். உங்களின் உற்சாகத்தை மக்கள் பார்க்கும்போது இயல்பாகவே சேவை இடம்பெற வேண்டும். ஒவ்வொரு கணமும், தொடர்ந்து சேவையில் புதுமையை ஏற்படுத்துவதற்கான திட்டங்களைச் செய்யுங்கள். துரித சேவைக்கு விசேடமான வழிமுறை ஆகும் வண்ணம் அந்தத் திட்டம் இருக்க வேண்டும். இப்போது, இத்தகைய அற்புதங்களைச் செய்யுங்கள்! நீங்களே தடைகளில் இருந்து விடுபட்டவராகவும் அசைக்க முடியாதவராகவும் இருக்கும்போது, உங்களால் இலகுவாக சேவையில் புதுமையைக் காட்ட முடியும். எந்தளவிற்கு நீங்கள் அதிகமாக யோகியுக்தாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் புதுமையால் தொடப்படுவீர்கள். இதைச் செய்யுங்கள். நினைவின் சக்தியால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஆகவே, விசேடமான ஒரு பணியைச் செய்வதன் மூலம் இதைச் செய்து காட்டுங்கள்.
பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
1.நீங்கள் உங்களைச் சகல பொக்கிஷங்களும் நிறைந்த மேன்மையான ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் எத்தனை பொக்கிஷங்களைப் பெற்றிருக்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியுமா? உங்களால் அவற்றை எண்ண முடியுமா? அவை அழியாதவை. எண்ணற்றவை. எனவே, ஒவ்வொரு பொக்கிஷத்தையும் உங்களின் விழிப்புணர்வில் கொண்டுவாருங்கள். இந்தப் பொக்கிஷங்களை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருப்பதனால் நீங்கள் சந்தோஷம் அடைவீர்கள். எந்தளவிற்கு அதிகமாக இந்தப் பொக்கிஷங்களை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் சக்திசாலிகள் ஆகுவீர்கள். எங்கு சக்தி உள்ளதோ, அங்கு வீணானவை முடிவிற்கு வந்துவிடும். வீணான எண்ணங்களும் நேரத்தை வீணாக்குவதும் வீணான வார்த்தைகளும் மாறிவிடும். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்களா? மாற்றம் இடம்பெற்றுள்ளதல்லவா? நீங்கள் இப்போது புதிய வாழ்க்கை வாழ்கிறீர்கள். இது புதியதொரு வாழ்க்கை, புதிய ஊக்கம், புதிய உற்சாகம். ஒவ்வொரு கணமும் புதியது. ஒவ்வொரு விநாடியும் புதியது. ஒவ்வோர் எண்ணத்திலும் புதிய ஊக்கமும் புதிய உற்சாகமும் இருக்க வேண்டும். நீங்கள் நேற்று என்னவாக இருந்தீர்கள்? இன்று என்னவாகி விட்டீர்கள்? பழைய எண்ணங்களும் பழைய சம்ஸ்காரங்களும் இனியும் எஞ்சியிருக்கவில்லை, அல்லவா? சிறிதளவேனும் இல்லை. ஆகவே, எப்போதும் இந்த ஊக்கத்துடன் தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்கள் அனைத்தையும் பெற்றிருப்பதனால், நிரம்பியவர்கள் ஆகியுள்ளீர்கள். நிரம்பியிருக்கும் எதுவும் ஒருபோதும் அசையாது. நிரம்பியவர் ஆகுவதென்றால், அசைக்க முடியாதவர் என்று அர்த்தம். எனவே, இந்த ரூபத்தை உங்களின் முன்னால் வைத்திருங்கள்: நாம் சந்தோஷப் பொக்கிஷங்களால் நிரம்பி வழியும் பொக்கிஷக் களஞ்சியங்கள் ஆகியுள்ளோம். எங்கு சந்தோஷம் உள்ளதோ, அங்கு எல்லா வேளைக்கும் துன்பம் நீக்கப்பட்டுவிடும். நீங்கள் எந்தளவிற்கு சந்தோஷமாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களால் மற்றவர்களுக்கும் அதிகளவு நல்ல செய்திகளை வழங்க முடியும். எனவே, சந்தோஷமாக இருந்து, தொடர்ந்து அனைவருக்கும் நல்ல செய்திகளைக் கொடுங்கள்.
2. இது சதா வளர்கின்ற ஆன்மீகத் தோட்டம், அல்லவா? நீங்கள் அனைவரும் ஆன்மீக ரோஜாக்கள், அல்லவா? மலர்களிலும் நறுமணமுள்ள ரோஜாக்கள் அதிமேன்மையானவை எனப்படுகின்றன. அந்த மலர்கள் குறுகிய காலத்திற்கு நறுமணத்தைக் கொடுக்கக்கூடியவை. நீங்கள் யார்? ஓர் ஆன்மீக ரோஜா என்றால் அநாதியாக நறுமணத்தைக் கொடுப்பவர் என்று அர்த்தம். சதா ஆன்மீக நறுமணத்தைக் கொண்டிருப்பவர் அத்துடன் அந்த ஆன்மீக நறுமணத்தைக் கொடுப்பவர் ஆவார். நீங்கள் அவ்வாறு ஆகிவிட்டீர்களா? நீங்கள் அனைவரும் ஆன்மீக ரோஜாக்களா அல்லது வேறு ஏதாவதா? வேறு பல வகையான மலர்கள் உள்ளன. ஆனால், ஏனைய பூக்களுக்கு ரோஜாக்களைப் போன்ற மதிப்பு இல்லை. நீங்கள் இறைவனின் தோட்டத்தில் சதா மலர்ந்துள்ள பூக்கள். நீங்கள் ஒருபோதும் வாடுவதில்லை. உங்களின் எண்ணங்களிலேனும் மாயையால் வாடாதீர்கள். மாயை வந்தால், நீங்கள் வாடுகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் மாயையை வென்றவர்கள் ஆகினால், சதா மலர்ந்தவர்களாக இருப்பீர்கள். தந்தை அநாதியானவராக இருப்பதைப் போல், குழந்தைகளான நீங்களும் அநாதியான ரோஜாக்களே. உங்களின் முயற்சிகள் அநாதியானவை. உங்களின் பேறுகளும் அநாதியானவை.
3. நீங்கள் சதா உங்களை ஒத்துழைப்பவராகக் கருதுகிறீர்களா? அது இலகுவாக உள்ளதா அல்லது சிரமமாக உள்ளதா? தந்தையின் ஆஸ்தி, குழந்தையின் உரிமை ஆகும். எனவே, நீங்கள் எப்போதும் இலகுவாக ஓர் உரிமையைப் பெறுகிறீர்கள். குழந்தைகள் இலகுவாகப் பௌதீகத் தந்தையின் உரிமையைப் பெறுவதைப் போல், நீங்களும் உரிமையுள்ளவர்கள். உரிமை இருப்பதனால், நீங்கள் இலகு யோகிகள். முயற்சி செய்வதற்கான தேவை இல்லை. தந்தையை நினைவு செய்வது ஒருபோதும் சிரமமாக இருப்பதில்லை. இவர் எல்லையற்ற தந்தை. அநாதியான தந்தை. இதனாலேயே, நீங்கள் எப்போதும் இலகுவான யோகி ஆத்மாக்கள் ஆவீர்கள். பக்தி என்றால் முயற்சி என்று அர்த்தம். ஆனால் ஞானம் என்றால் இலகுவாகப் பலனைப் பெறுதல் என்று அர்த்தம். அன்பின் உறவுமுறையுடன் எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தந்தையை நினைக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் இலகுவாக அதை அனுபவம் செய்வீர்கள். நான் ஓர் இலகுயோகி என்ற ஆசீர்வாதத்தை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். எனவே, உங்களின் விழிப்புணர்வில் என்ன உள்ளதோ, இயல்பாகவே உங்களின் ஸ்திதியும் அவ்வாறே ஆகும்.