19.04.2020 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த-பாப்தாதா''

ரிவைஸ் 30.12.1985 மதுபன்


  

'' விசால புத்தியின் அடையாளம் ''

 

இன்று அனைத்து அன்பான, சகயோகி, சகஜயோகி குழந்தைகளுடன், அன்புக்கடல், அனைத்து பொக்கிஷங்களை வழங்குபவர், வரம் அளிக்கும் வள்ளல் தந்தை ஆன்மீக சந்திப்பை செய்வதற்காக வந்திருக்கிறார். இந்த ஆன்மீக அன்பின் சந்திப்பு அதாவது ஆத்மாக்களின் சந்திப்பு விசித்திரமான சந்திப்பு. முழுக்கல்பத்திலும் இம்மாதிரியான ஆன்மீக சந்திப்பு இருக்க முடியாது. இந்த சங்கமயுகத்திற்கு இந்த ஆன்மீக சந்திப்பின் வரதானம் கிடைத்திருக்கிறது. இந்த வரம் பெற்ற நேரத்தில் வரமளிக்கும் வள்ளல் தந்தை மூலமாக வரம் பெற்ற குழந்தைகள் இந்த அழியாத வரதானத்தை பிராப்தி செய்கிறார்கள். தந்தையினுடைய பாக்கியத்தை வழங்கும் மற்றும் வரமளிக்கும் வள்ளலின் அழியாத பாத்திரமும் இந்த நேரம் தான் இருக்கிறது. அம்மாதிரியான நேரத்தில் வரதானங்களுக்கு உரிய ஆத்மாக்கள் நீங்கள் தங்களுடைய சதா காலத்திற்கான அதிகாரத்தை (உரிமை) பிராப்தியாக அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மாதிரியான ஆன்மீக சந்திப்பைப் பார்த்து பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். அம்மாதிரியான சிரேஷ்ட பிராப்தி செய்பவர்கள் உலகின் எதிரில் எப்படி கள்ளம் கபடமற்ற சாதாரண ஆத்மாக்களாக இருக்கிறார்கள் என்று பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார். ஏனென்றால் அனைவரும் அரசியல் திறமை, அறிவியலின் திறமை, அற்பகாலத்து இராஜ அதிகாரம் மற்றும் மதத் தலைவர்களின் அதிகாரம் உள்ளவர்களைத் தான் இன்றைய உலகத்தில் விசேஷ ஆத்மாக்கள் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பாப்தாதா எந்த விசேஷத்தைப் பார்க்கிறார்? அனைத்தையும் விட முதலில் தன்னைத் தானே மற்றும் தந்தையைத் தெரிந்து கொள்வதின் விசேஷம் பிராமணக் குழந்தைகள் உங்களிடம் இருக்கிறது. அது வேறு எந்த பெயர் பெற்ற ஆத்மாக்களில் இல்லை. எனவே கள்ளம் கபடமற்ற, சாதாரணமானவர்களாக இருந்த போதிலும் வரமளிக்கும் வள்ளலிடமிருந்து வரதானத்தைப் பெற்று பல பிறவிகளுக்காக விசேஷ பூஜைக்குரிய ஆத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். அம்மாதிரியான ஆன்மீக போதையை அனுபவம் செய்கிறீர்களா? நம்பிக்கை இழந்த ஆத்மாக்களை நம்பிக்கை உள்ளவர்களாக ஆக்குவது தான் தந்தையின் விசேஷம். பாப்தாதா சூட்சும வதனத்திலும் குழந்தைகளைப் பார்த்து புன்முறுவல் செய்து கொண்டிருந்தார். ஒருவேளை இந்த முழு சபையும் உலக இராஜ ஆத்மாக்களின் சபை என்று கூறினால் ஒன்றும் அறியாத ஆத்மா நம்புவாரா? ஆச்சரியம் அடைந்து விடுவார்கள். ஆனால் தந்தைக்கு உள்ளப்பூர்வமான அன்பு உள்ள, உள்ளத்தின் சிரேஷ்ட பாவனை உள்ள ஆத்மாக்கள் பிரியமானவர்கள் என்று பாப்தாதா தெரிந்திருக்கிறார். உள்ளத்தின் அன்பு தான் சிரேஷ்ட பிராப்தியைப் பெறுவதற்கான மூல ஆதாரம். உள்ளத்தின் அன்பு தொலைதூரத்தில் இருப்பவர்களையும் மதுபன் நிவாசியாக ஆக்கிவிடுகிறது. உள்ளத்தின் அன்பு தான் திலாராம் தந்தைக்கு விருப்பமானது, எனவே நீ எப்படி இருந்தாலும். என்னவாக இருந்தாலும் பரமாத்மாவிற்குப் பிடித்தமானவர், எனவே தன்னுடைய குழந்தையாக ஆக்கிவிட்டார். உலகத்தினரோ தந்தை வருவார், அந்த நேரம் அப்படி நடக்கும், இப்படி நடக்கும் என்று இப்பொழுது காத்திருப்பதிலேயே இருக்கிறார்கள். ஆனால் உங்கள் அனைவரின் வாயிலிருந்து, உள்ளத்திலிருந்து என்ன வார்த்தை வெளியாகிறது? 'அடைந்து விட்டோம்'. நீங்கள் சம்பன்னம் ஆகிவிட்டீர்கள், மேலும் அந்த புத்திவான்கள் இதுவரையிலும் பகுத்தறிவதில் நேரத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தான் தந்தையை போலாநாத் (கள்ளம் கபடமற்றவர்) என்று வர்ணித்திருக்கிறார்கள். தெரிந்து கொள்ளும் விசேஷம் உங்களை விசேஷ ஆத்மா ஆக்கிவிட்டது. தெரிந்து கொண்டீர்கள், பிராப்தி செய்து விட்டீர்கள். இப்பொழுது மேலே என்ன செய்ய வேண்டும்? அனைத்து ஆத்மாக்களின் மீதும் இரக்கம் வருகிறதா? அனைவருமே ஒரே எல்லைக்கப்பாற்பட்ட பரிவாரத்தின் ஆத்மாக்கள் தன்னுடைய குடும்பத்தின் எந்தவொரு ஆத்மாவும் வரதானத்திலிருந்து வஞ்சிக்கப்பட்டவராக இருந்து விட வேண்டாம். அம்மாதிரியான ஊக்கம் மற்றும் உற்சாகம் உள்ளத்தில் இருக்கிறதா? அல்லது தன்னுடைய குடும்பத்திலேயே பிஸியானவராக ஆகிவிட்டீர்களா? எல்லைக்கப்பாற்பட்ட நிலையில் நிலைத்திருந்து, எல்லைக்கப்பாற்பட்ட ஆத்மாக்களின் சேவையின் சிரேஷ்ட எண்ணம் தான் வெற்றி அடைவதற்கான சுலபமான வழி. இப்பொழுது சேவையின் பொன்விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? அதற்காக விசாலமான நிகழ்ச்சியைத் தயாரித்திருக்கிறீர்கள் இல்லையா. எந்தளவு விசாலமான நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறீர்களோ அந்தளவே விசால உள்ளம், விசால ஊக்கம் மற்றும் விசால ரூபத்தில் ஏற்பாடுகள் செய்திருக்கிறீர்களா? அல்லது பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் பேசிவிடுவோம் என்று இதையே யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அழைப்பிதழ் விநியோகம் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் செய்து விடுவோம் என்ற இந்த ஏற்பாடுகள் தான் செய்திருக்கிறீர்களா? இதைத் தான் விசால ஏற்பாடுகள் என்று சொல்ல முடியுமா? என்ன சேவை கிடைக்கிறதோ அதை செய்து விடுவது தான் விசால ஊக்கம் என்று கூறப்படுவதில்லை. சொன்ன சேவையை செய்வது கட்டளைப்படி நடப்பவரின் அடையாளம், ஆனால் எல்லைக்கப்பாற்பட்ட விசால புத்தி, விசால ஊக்க உற்சாகம் என்று இதை மட்டும் கூறுவதில்லை. விசாலத்தன்மையின் அடையாளம் - ஒவ்வொரு நேரமும் தனக்கு கிடைத்திருக்கும் வேலையில், சேவையில் புதுமையைக் கொண்டு வருவது என்பது தான். உணவு பரிமாறும் சேவையாக இருந்தாலும், சொற்பொழிவு நிகழ்த்தும் சேவையாக இருந்தாலும், ஒவ்வொரு சேவையிலும் ஒவ்வொரு நேரமும் புதுமையை நிரப்புவது என்பதைத் தான் விசாலத் தன்மை என்று கூறுவது. ஒரு வருடத்திற்கு முன்பு என்ன செய்திருந்தீர்களோ அதில் ஏதாவது ஆன்மீகத் தன்மையை சேர்ப்பது ஏதாவது புதியதாக அவசியம் இருக்கட்டும். அந்த மாதிரி உள்ளத்தில் ஊக்கம் உற்சாகம் வருகிறதா? அல்லது எப்படி நடக்கிறதோ அப்படித் தான் இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? ஒவ்வொரு நேரமும் விதி மற்றும் வளர்ச்சி மாறிக் கொண்டே இருக்கிறது. எப்படி நேரம் அருகில் வந்து கொண்டிருக்கிறது, அதே போல் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தந்தையின், பரிவாரத்தின் நெருக்கத்தை விசேஷமாக அனுபவம் செய்வியுங்கள். என்ன புதுமை கொண்டு வருவது என்று சிந்தியுங்கள். இப்பொழுது மாநாட்டிற்கான விசால காரியம் செய்கிறீர்கள் இல்லையா? அனைவருமே செய்து கொண்டிருக்கிறீர்களா அல்லது பெரியவர்கள் யாரோ அவர்கள் தான் செய்கிறார்களா? இது அனைவரின் காரியம் தான் இல்லையா? ஒவ்வொருவரும் புதுமைக்காக நான் சேவையில் முன்னேற வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அனைவரின் எதிரில் பொறுப்பாளர்களாக குறைவானவர்களைத் தான் வைக்க வேண்டியதாக இருக்கிறது - எப்படி சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள் கொஞ்ச பேர்கள் தான் இருப்பார்கள், இந்த முழு சபையும் செய்யுமா என்ன? ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கென்று வேலையை பகிர்ந்து கொடுத்துத் தான் காரியம் நிறைவேறும். ஆனால் அனைவரும் பொறுப்பாளர் ஆக வேண்டும். எந்த விஷயத்தில்? உலகில் நாலாபுறங்களிலும் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த வேலைக்குப் பொறுப்பாளராக இருந்தாலும், எந்த நேரம் ஏதாவது விசால காரியம் எங்கே நடந்தாலும் அந்த நேரம் தூரத்தில் அமர்ந்திருந்த போதிலும் அந்த நாட்கள் வரை எப்பொழுதும் ஒவ்வொருவரின் மனதில் உலக நன்மையின் சிரேஷ்ட பாவனை மற்றும் சிரேஷ்ட விருப்பங்கள் அவசியம் இருக்க வேண்டும். எப்படி இன்றைய நாட்களில் உள்ள வி..பி (மிகவும் முக்கியமானவர்கள்), ஒருவேளை அவரே நிகழ்ச்சிக்கு வந்து சேர முடியவில்லை என்றால் நிகழ்ச்சிக்கான நல்வாழ்த்துக்களை அனுப்புகிறார்கள் இல்லையா? நீங்கள் அவர்களை விட குறைந்தவர்களா என்ன? அனைத்து விசேஷ ஆத்மாக்களாகிய உங்களின் சுபபாவனை, சுபவிருப்பங்கள் அந்தக் காரியத்தை அவசியம் வெற்றி அடைவதாக ஆக்கும்.

 

இந்த விசேஷ தினத்தில் எந்தவொரு எல்லைக்குட்பட்ட விஷயங்களில் எண்ணத்தின் சக்தி மற்றும் நேரத்தின் சக்தியை வீணாக இழக்காமல் ஒவ்வொரு எண்ணம் மூலம், ஒவ்வொரு நேரமும் விசால சேவைக்கு பொறுப்பாளர் ஆகி, மனசக்தி மூலமாகவும் சகயோகி ஆக வேண்டும் என்ற விசேஷ கங்கணத்தைக் கட்ட வேண்டும். அபு மலையில் மகாநாடு நடந்து கொண்டிருக்கிறது, நானோ இந்த தேசத்தில் இருக்கிறேன் என்று நினைக்கக்கூடாது. விசால காரியத்தில் நீங்கள் அனைவரும் சகயோகிகள். சூழ்நிலை மற்றும் வாயுமண்டலத்தை உருவாக்குங்கள். அறிவியல் சக்தி மூலம் ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்திற்கு ராக்கெட்டை அனுப்பு முடியும் என்றால், அமைதியின் சக்தி மூலம் சுபபாவனை, நன்மை பயக்கும் பாவனை மூலமாக இங்கு அபு மலையில் நீங்கள் மனசக்தி மூலமாக சகயோகியாக ஆக முடியாதா? சிலர் நடைமுறையில் பேச்சு மூலம், காரியங்கள் மூலம் பொறுப்பாளர் ஆவார்கள். சிலர் மனசேவைக்கு பொறுப்பாளர் ஆவார்கள். ஆனால் எத்தனை நாட்கள் நிகழ்ச்சி இருக்குமோ, அது 5 நாட்கள் அல்லது 6 நாட்கள் இருக்கிறது என்றால் அந்த முழு நாட்களும் ஒவ்வொரு பிராமண ஆத்மாவிற்கும் நான் ஆத்மா பொறுப்பாளர் ஆகி வெற்றியைக் கொண்டு வர வேண்டும் என்ற சேவையின் கங்கணம் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தன்னை பொறுப்பாளர் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக அனைவருமே பொறுப்பாளர் என்றால் எனக்கும் சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் அல்லது விசேஷ ஏதாவது சேவை கிடைக்க வேண்டும் அப்பொழுது தான் நான் பொறுப்பாளர் என்று அப்படி நினைக்கூடாது. இதை பொறுப்பாளர் என்று சொல்ல மாட்டோம். எங்கே இருந்தாலும் என்ன சேவை கிடைத்தாலும் தூரமான இடத்தில் அமர்ந்திருந்தாலும் அல்லது மேடையில் அமர்ந்திருந்தாலும் நான் சகயோகியாக கண்டிப்பாக ஆக வேண்டும். இதைத் தான் முழு உலகத்தில் சேவையின் ஆன்மீகத் தன்மையின் அலையை பரப்புவது என்று கூறுவோம். குஷியின், ஊக்கம் உற்சாகத்தின் அலை பரவிவிட வேண்டும். நீங்கள் அம்மாதிரியான சகயோகியா? இந்த மாநாட்டில் புதுமையை காண்பிப்பீர்கள் இல்லையா? பொன்விழா கொண்டாடுகிறீர்கள் என்றால் பொன்னுலகம் வரப்போகிறது என்ற குஷியின் அலைகள் நாலாபுறங்களிலும் பரவி விட வேண்டும். பய பீதியில் இருக்கும் ஆத்மாக்கள், நம்பிக்கை இழந்த ஆத்மாக்களில் உயர்ந்த எதிர்காலத்தின் நம்பிக்கையை உருவாக்குங்கள். பய பீதியில் இருக்கும் ஆத்மாக்களில் குஷியின் அலை உருவாகிவிடட்டும். இது தான் பொன்விழாவின் பொன்னான சேவை. இதே லட்சியத்தை வையுங்கள். நீங்களும் ஒவ்வொரு காரியத்தில் வளைந்து கொடுக்கும் உண்மையான தங்கமாகி பொன்விழாவைக் கொண்டாட வேண்டும். புரிந்ததா? யார் இதுவரை செய்யவில்லையோ அவர்கள் செய்து காண்பிக்க வேண்டும். அம்மாதிரியான ஆத்மாக்களை பொறுப்பாளர் ஆக்குங்கள். அவர் ஒருவர் அனேக ஆத்மாக்களின் சேவைக்கு பொறுப்பாளர் ஆகிவிடட்டும். யோசித்துக் கொண்டே இருக்கிறீர்கள் ஆனால் செய்வோம், செய்வோம் என்று கூறி நேரம் கடந்து சென்று விடுகிறது. மேலும் கடைசியில் என்ன கிடைக்கிறதோ அதை மட்டும் பெற்று வருகிறீர்கள். எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. ஆனால் விசால நிகழ்ச்சி வைப்பதற்கான காரணமே ஒருவர் அனேகர்களுக்கு பொறுப்பாளர் ஆகிவிட வேண்டும். அம்மாதிரியான ஆத்மாக்கள் வர வேண்டும். நாலாபுறங்களிலும் சேவை நடந்து கொண்டிருக்கிறது தான் இல்லையா? அவரவர்கள் ஸ்தானத்தில் அம்மாதிரியான ஆத்மாக்களின் காரியத்தை செய்வித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே இப்பொழுதிலிருந்தே பொன்விழாவின், சுயசேவையின் மற்றும் தன்னுடன் சேர்த்து மற்ற விசேஷ ஆத்மாக்களின் சேவையின் அலையைப் பரப்புங்கள். என்ன செய்ய வேண்டும் என்று புரிந்ததா?

 

அன்போடு கடும் முயற்சி, உழைப்பு செய்யுங்கள். அன்பு அந்த மாதிரியானது அது இல்லை, முடியாது என்று கூறுபவர்களையும் அன்பின் வசமாக்கி ஆம், சரி என்று சொல்பவராக ஆக்கிவிடுகிறது. நேரம் இல்லா விட்டால் கூட நேரத்தை அதற்காக எடுத்துக் கொள்வார்கள். இதுவோ ஆன்மீக அன்பு. அதற்காக நிலத்தை தயார் செய்யுங்கள். நிலமே அப்படித் தான், மனிதர்களே அப்படித் தான் என்று நினைக்காதீர்கள். நீங்கள் எப்படி இருந்தீர்கள்? மாறிவிட்டீர்கள் இல்லையா? சுபபாவனைக்கு எப்பொழுதும் சிரேஷ்ட பலன் இருக்கும். நல்லது.

 

உங்களுடைய வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள், இதுவோ தந்தைக்கும் குஷி தான், ஆனால் நேரமோ எல்லைக்குட்பட்டது இல்லையா? எத்தனை எண்ணிக்கையோ அந்த அளவே பிரிக்கப்படுகிறது இல்லையா.? ஒரு பொருள் நான்கு பேர்களுக்காக இருக்கிறது, பெறுபவர்கள் எட்டு பேர்கள் ஆகிவிட்டார்கள் என்றால் என்ன செய்வீர்கள்? அதே விதியோடு செய்வீர்கள் இல்லையா? பாப்தாதாவிற்கும் விதிப்பிரகாரம் செல்ல வேண்டியதாகத் தான் இருக்கிறது.. இவ்வளவு பேர் ஏன் வந்தீர்கள் என்று பாப்தாதாவோ கூறமுடியாது. நன்றாக வாருங்கள், வரவேற்கிறோம் ஆனால் நேரத்திற்குத் தகுந்தாற்போல் விதியை உருவாக்க வேண்டியதாக இருக்கிறது. ஆம், சூட்சும வதனத்தில் நேரத்தின் எல்லை கிடையாது.

 

மகாராஷ்டிராவும் அதிசயம் செய்து காண்பிக்கும். அந்த மாதிரி ஏதாவது மகான் ஆத்மாவை பொறுப்பாளர் ஆக்கி காண்பியுங்கள். அப்பொழுது தான் மகாராஷ்டிரா என்று கூறுவோம். டெல்லியோ ஏற்கனவே பொறுப்பில் இருக்கவே இருக்கிறது. மகாநாடுகளோ அதிகம் செய்து விட்டோம். இப்பொழுது என்ன முடியுமோ அந்த அளவு தான் செய்வோம் என்று அம்மாதிரி இருக்க வேண்டாம். ஒவ்வொரு வருடமும் முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும். இப்பொழுதோ அனேக ஆத்மாக்கள் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் பொறுப்பாளர்களாக ஆக்க முடியும். டெல்லியைச் சேர்ந்தவர்களுக்கும் விசேஷமாக பொறுப்பாளர் ஆக வேண்டும். இராஜஸ்தான் என்ன செய்யும்? இராஜஸ்தான் எப்பொழுதுமே ஒவ்வொரு காரியத்திலும் நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும். ஏனென்றால் இராஜஸ்தானில் நம்பர் ஒன் தலைமையகம் இருக்கிறது. தரத்திலோ, எண்ணிக்கையிலோ இரண்டிலுமே நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும். இரட்டை வெளிநாட்டினரும் புதுமையை காண்பிப்பீர்கள் இல்லையா? ஒவ்வொரு தேசத்திலும் இந்த குஷியான செய்தி பரவி விட்டது என்றால் அனைவரும் உள்ளப்பூர்வமாக உங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதங்கள் கொடுப்பார்கள். மனிதர்கள் மிகவும் பயபீதியில் இருக்கிறார்கள் இல்லையா? அம்மாதிரியான ஆத்மாக்களுக்கு ஆன்மீக குஷியின் அலை வந்து விடட்டும் அதனால் இவர் ஃபரிஷ்தாவாகி நற்செய்தியைக் கொடுப்பதற்கான பொறுப்பாளர் ஆகியிருக்கும் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். புரிந்ததா. இப்பொழுது எந்த எந்த மண்டலம் புதுமை செய்கிறார்கள் என்று பார்ப்போம். எண்ணிக்கையை கொண்டு வருவார்களா அல்லது தரத்தை கொண்டு வருவார்களா? என்று பார்ப்போம். பிறகு பாப்தாதா ரிசல்ட்டை தெரிவிப்பார். புதுமையையும் கொண்டு வர வேண்டும். புதுமைக்கும் மதிப்பெண்கள் கிடைக்கும். நல்லது.

 

அனைத்து சுயராஜ்ய, உலக இராஜ்ய அதிகாரி ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் எல்லைக்கப்பாற்பட்ட சேவையில் எல்லைக்கப்பாற்பட்ட உள்உணர்வில் இருக்கும் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் விசால உள்ளம், விசால புத்தி விசால ஊக்கம் உற்சாகத்தில் இருக்கும் விசேஷ ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் தன்னை ஒவ்வொரு சேவைக்கும் பொறுப்பாளர் என்று தெரிந்து கொண்டு எப்பொழுதும் சிரேஷ்ட மற்றும் தந்தைக்குச் சமமாக சேவையில் வெற்றி அடையக்கூடிய ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆத்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

குமாரிகளுடன் சந்திப்பு -

குமாரிகளின் வாழ்க்கை எப்பொழுதும் குறையற்ற வாழ்க்கை என்று கூறப்படுகிறது. குமாரி வாழ்க்கை எப்பொழுதும் சிரேஷ்டமானது என்று வர்ணிக்கப்படுகிறது மற்றும் பூஜிக்கப்படுகிறது. நீங்கள் உங்களை அம்மாதிரியான சிரேஷ்ட மற்றும் பூஜைக்குரிய ஆத்மா என்று நினைக்கிறீர்களா? அனைத்து குமாரிகளும் விசேஷமாக ஏதாவது ஒரு அதிசயம் செய்து காண்பிப்பவர்கள் தான் இல்லையா அல்லது படிப்பை படிப்பவர்களாக மட்டும் இருக்கிறீர்களா? விஷ்வ சேவாதாரி ஆவீர்களா அல்லது குஜராத்தின் சேவை செய்ய வேண்டும் அல்லது மத்திய பிரதேசத்தின் அல்லது இந்த மண்டலத்தின் சேவை செய்ய வேண்டும் என்று அப்படி இல்லையே.! எவரெடி ஆத்மாக்கள் மற்றவர்களையும் எவரெடியாக ஆக்கிவிடுவார்கள். குமாரிகள் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதைச் செய்ய முடியும். இன்றைய அரசாங்கம் என்ன கூறுகிறதோ அதைச் செய்ய முடியாதா? அம்மாதிரியான இராஜ்ஜியத்தில் இருந்து கொண்டே சேவை செய்ய வேண்டும் என்றால் அந்த அளவு சக்திசாலியான சேவை நடந்தால் தான் வெற்றி கிடைக்கும். இந்த ஞானத்தின் படிப்பில் வரிசை எண் பெற்றிருக்கிறீர்களா? நம்பர் ஒன் பெற வேண்டும் என்ற இந்த லட்சியத்தைத் தான் வைக்க வேண்டும். குறைவாகப் பேசுங்கள், ஆனால் யார் எதிரில் சென்றாலும் அவர்கள் உங்களுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற இந்த விசேஷத்தைக் காண்பியுங்கள். வாயினால் சொல்லும் பாடத்தை சொல்பவர்களோ அனேகர்கள் இருக்கிறார்கள்.கேட்பவர்களும் இருக்கிறார்கள் ஆனால் வாழ்க்கை மூலம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும் என்ற இது விசேஷமாகும். உங்களுடைய வாழ்க்கையே ஆசிரியர் ஆகிவிட வேண்டும். வாயினால் பேசும் ஆசிரியர் இல்லை, வாயினால் கூற வேண்டியதாக இருக்கிறது. ஆனால் வாயினால் கூறிய பிறகும் ஒருவேளை வாழ்க்கையில் இல்லை என்றால், அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சொல்பவர்களும் அதிகம் இருக்கிறார்கள் என்று கூறுவார்கள். எனவே தன்னுடைய வாழ்க்கை மூலம் யாரையாவது தந்தையின் குழந்தையாக ஆக்க வேண்டும். இன்றைய நாட்களில் கேட்பதற்கான ஆர்வமும் வைப்பதில்லை, பார்க்க விரும்புகிறார்கள். ரேடியோ (வானொலிபெட்டி) கேட்பதற்கான பொருள், டி.வி (தொலைக்காட்சி பெட்டி) பார்ப்பதற்கான பொருள் என்றால், நீங்கள் எதை விரும்புவீர்கள். கேட்பதை விட பார்க்கத்தான் விரும்புவார்கள் எனவே உங்களுடைய வாழ்க்கையிலும் இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், எப்படி எழுகிறார்கள், எப்படி அமர்கிறார்கள், எப்படி ஆன்மீக பார்வையை வைக்கிறார்கள் என்று பார்க்க விரும்புகிறார்கள். நீங்கள் அந்த மாதிரியான லட்சியத்தை வையுங்கள். புரிந்ததா? சங்கமயுகத்தில் குமாரிகளின் மகத்துவம் என்ன? என்பதையோ தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? சங்கமயுகத்தில் அனைவரையும் விட மகான் குமாரிகள். எனவே தன்னை மகான் என்று புரிந்து கொண்டு சேவையில் சகயோகியாக ஆகியிருக்கிறீர்களா அல்லது இனி தான் ஆக வேண்டுமா? என்ன லட்சியம் இருக்கிறது? இரண்டு பாகத்தையும் செய்வதற்கான லட்சியம் இருக்கிறதா? என்ன கூடையைத் (லௌகீக வேலை) தூக்குவீர்களா? நல்லது.

 

வரதானம்:

குழந்தை மற்றும் எஜமானத் தன்மையின் சமநிலை மூலம் அனைத்து பொக்கிஷங்களாலும் நிரம்பியவர் ஆகுக.

 

எப்படி அனைவரிலும் குழந்தைத்தன்மையின் போதை இருக்கிறது. அதே போல் குழந்தையாக இருப்பவரிலிருந்து எஜமானன் அதாவது தந்தைக்குச் சமமான சம்பன்ன நிலையின் அனுபவம் செய்யுங்கள். எஜமானத் தன்மையின் விசேஷம் - எந்த அளவு எஜமானனோ அந்த அளவே விஷ்வ சேவாதாரியின் சம்ஸ்காரம் எப்பொழுதும் வெளிப்படும் ரூபத்தில் இருக்க வேண்டும். எஜமானத்தன்மையின் போதை மற்றும் விஷ்வ சேவாதாரியின் போதை சமமான ரூபத்தில் இருந்தால் தான் தந்தைக்குச் சமமானவர் என்று கூறுவோம். குழந்தை மற்றும் எஜமானன் என்ற இரண்டு சொரூபங்களும் எப்பொழுதுமே பிரத்யக்ஷமாக காரியத்தில் வந்து விட வேண்டும். அப்பொழுது தான் தந்தைக்குச் சமமாக அனைத்து பொக்கிஷங்களினாலும் நிரம்பிய நிலையின் அனுபவம் செய்ய முடியும்.

 

சுலோகன்:

ஞானத்தின் குறைவில்லா பொக்கிஷங்களின் அதிகாரி ஆனீர்கள் என்றால், அடிமைத் தனம் அகன்று விடும்.

 

அறிவுப்பு

இன்று சர்வதேச யோகா தினம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அனைத்து சகோதர / சகோதரிகளும் மாலை 6.30 முதல் 07.30 ஒன்றாகக் கூடிய ரூபத்தில் ஒருமித்த நிலையில் நான் ஆத்மா விதை ரூபம் பாபாவுடன் இணைந்திருக்கிறேன். நான் அனைத்து சக்திகளால் நிரம்பிய மாஸ்டர் ஞான சூரியன். என்னிடமிருந்து அனைத்து சக்திகளின் கிரணங்கள் வெளிப்பட்டு நாலாபுறங்களிலும் பரவிக் கொண்டிருக்கிறது என்று யோகா பயிற்சியில் அனுபவம் செய்யுங்கள்

 

ஓம்சாந்தி