28.04.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
இப்பொழுது
இந்த
நாடகம்
முடிவடைகிறது,
நீங்கள்
திரும்பி வீட்டிற்குச்
செல்ல
வேண்டும்,
ஆகையால்
இந்த
உலகின்
மீதுள்ள
பற்றுதலை
நீக்கி
விடுங்கள்,
வீட்டை
மற்றும்
புது
இராஜ்யத்தை
நினைவு
செய்யுங்கள்.
கேள்வி:
தானத்தின்
மகத்துவம்
எப்பொழுது
ஏற்படுகிறது?
அதற்கு
கைமாறு
எந்த
குழந்தைகளுக்கு பலனாகக்
கிடைக்கிறது?
பதில்:
தானம்
கொடுத்த
பொருளின்
மீது
பற்றுதல்
இல்லாமல்
இருக்கும்
பொழுது
தான்
அதற்கு
மதிப்பு ஏற்படுகிறது.
ஒருவேளை
தானம்
செய்து
பின்பு
அதன்
நினைவு
வந்தால்
அதன்
பலன்
கைமாறாக
கிடைக்காமல் போய்விடும்.
தானம்
செய்வதே
அடுத்த
பிறவிக்காகத்
தான்.
ஆகையால்
இந்தப்
பிறவியில்
உங்களிடத்தில் என்னவெல்லாம்
இருக்கிறதோ
அதன்
மீதிருக்கும்
பற்றுதலை
நீக்கி
விடுங்கள்.
டிரஸ்டியாக
இருந்து
பாதுகாக்கவும்.
இங்கு
நீங்கள்
எதை
ஈஸ்வரிய
சேவைக்காக
பயன்படுத்துகிறீர்களோ,
மருத்துவமனை
அல்லது
கல்லூரி திறக்கிறீர்களோ
அதன்
மூலம்
பலருக்கு
நன்மை
ஏற்படுகிறது.
அதற்கு
கைமாறாக
21
பிறவிகளுக்கு
பலன் கிடைத்து
விடுகிறது.
ஓம்
சாந்தி.
குழந்தைகளுக்கு
தங்களது
வீடு
மற்றும்
இராஜ்யத்தின்
நினைவு
இருக்கிறதா?
இங்கு அமர்ந்திருக்கும்
பொழுது
லௌகீக
வீடு,
தொழில்
போன்றவைகளின்
நினைவு
வரக்
கூடாது.
தனது
வீட்டின் நினைவு
மட்டுமே
வர
வேண்டும்.
இப்பொழுது
இந்த
பழைய
உலகிலிருந்து
புது
உலகிற்கு
திரும்பிச்
செல்ல வேண்டும்,
இந்தப்
பழைய
உலகம்
அழிந்து
போய்
விடும்.
அனைத்தும்
நெருப்பில்
அர்ப்பணம்
ஆகிவிடும்.
எதையெல்லாம்
இந்தக்
கண்களில்
பார்க்கிறீர்களோ,
உற்றார்
உறவினர்
போன்ற
அனைத்தும்
அழிந்து
போய்விடும்.
இந்த
ஞானத்தை
தந்தை
தான்
ஆத்மாக்களுக்குப்
புரிய
வைக்கின்றார்.
குழந்தைகளே!
இப்பொழுது
திரும்பி தனது
வீட்டிற்குச்
செல்ல
வேண்டும்.
நாடகம்
முடிவடைகிறது.
இது
5
ஆயிரம்
ஆண்டிற்கான
சக்கரமாகும்.
உலகம்
இருக்கத்
தான்
செய்கிறது,
ஆனால்
இது
சுற்றுவதற்கு
5
ஆயிரம்
ஆண்டுகள்
ஏற்படுகிறது.
எத்தனை ஆத்மாக்கள்
இருக்கிறார்களோ
அனைவரும்
திரும்பிச்
சென்று
விடுவர்.
இந்தப்
பழைய
உலகமே
அழிந்து போய்விடும்.
பாபா
ஒவ்வொரு
விசயத்தையும்
மிக
நன்றாகப்
புரிய
வைக்கின்றார்.
சிலர்
மிகக்
கருமிகளாக இருப்பர்,
தனது
சொத்துக்களை
வீணாக்கி
அமர்ந்திருப்பர்.
பக்தி
மார்க்கத்தில்
தானம்,
புண்ணியம்
செய்வர் அல்லவா!
சிலர்
தர்மசாலை
உருவாக்குவர்,
சிலர்
மருத்துவமனை
உருவாக்குவர்,
இதன்
பலன்
அடுத்த பிறவியில்
கிடைக்கும்
என்று
நினைக்கின்றனர்.
எந்த
ஆசையுமின்றி,
விடுபட்ட
நிலையிலிருந்து
யாரும் செய்வது
கிடையாது.
பலனை
நாம்
எதிர்பார்ப்பது
கிடையாது
என்று
பலர்
கூறுகின்றனர்.
ஆனால்
கிடையாது,
அவசியம்
பலன்
கிடைக்கும்.
யாரிடத்திலாவது
செல்வம்
இருப்பதாக
வைத்துக்
கொள்ளுங்கள்,
அதை
தர்மமாக கொடுத்து
விட்டார்
எனில்
தனக்கு
அடுத்த
பிறவியில்
கிடைக்கும்
என்று
அவரது
புத்தியில்
இருக்கும்.
ஒருவேளை
இது
என்னுடையது
என்று
பற்றுதலுடன்
நினைத்து
விட்டால்
பிறகு
அங்கு
கிடைக்காமல்
போய்விடும்.
தானம்
செய்வதே
அடுத்த
பிறவிக்காகத்
தான்.
அடுத்த
பிறவியில்
கிடைக்கும்
எனும்
பொழுது
பிறகு ஏன்
இந்த
பிறவியில்
பற்றுதல்
வைக்கிறீர்கள்?
பற்றுதலை
நீக்குவதற்காகவே
டிரஸ்டியாக
ஆக்குகின்றார்.
யாராவது
செல்வந்தர்
வீட்டில்
பிறக்கின்றனர்
எனில்
அவர்
நல்ல
காரியம்
செய்திருக்க
வேண்டும்
என்று கூறுகின்றனர்.
சிலர்
இராஜா,
இராணியிடத்தில்
பிறப்பு
எடுக்கின்றனர்,
ஏனெனில்
தான்,
புண்ணியம்
செய்திருப்பார்.
ஆனால்
அது
அல்ப
கால
ஒரு
பிறப்பிற்கான
விசயமாகும்.
இப்பொழுது
நீங்கள்
இந்தப்
படிப்பு
படிக்கிறீர்கள்.
இந்தப்
படிப்பின்
மூலம்
நாம்
இவ்வாறு
ஆக
வேண்டும்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
ஆக
தெய்வீக
குணங்களையும்
தாரணை
செய்ய
வேண்டும்.
இங்கு
யார்
தானம்
செய்கிறார்களோ
அவர்
மூலமாக
ஆன்மீக
பல்கலைக் கழகம்,
மருத்துவமனை
திறக்கிறீர்கள்.
தானம்
செய்கிறீர்கள்
எனில்
பிறகு
அதன்
மீதிருக்கும்
பற்றுதலை
நீக்கி விட
வேண்டும்.
ஏனெனில்
நாம்
எதிர்கால
21
பிறவிகளுக்காக
தந்தையிடமிருந்து
அடைவோம்
என்பதை நீங்கள்
அறிவீர்கள்.
இந்த
தந்தை
கட்டிடம்
போன்றவைகளை
உருவாக்குகின்றார்.
இவைகள்
நிரந்தரமானவைகள் அல்ல.
இல்லையெனில்
இவ்வளவு
குழந்தைகள்
எங்கு
இருப்பார்கள்?
அனைவருமே
சிவபாபாவிற்கு
கொடுக்கின்றனர்,
செல்வந்தர்
அவர்
தான்.
அவர்
இவர்
மூலமாக
இதனை
செய்விக்கின்றார்.
சிவபாபா
இராஜ்யம் செய்வது
கிடையாது.
சுயம்
வள்ளலாக
இருக்கின்றார்.
அவருக்கு
எதன்
மீது
பற்றுதல்
இருக்கும்!
மரணம் எதிரில்
இருக்கிறது
என்று
தந்தை
ஸ்ரீமத்
கொடுக்கின்றார்.
முன்பு
நீங்கள்
யாருக்காவது
கொடுத்தீர்கள்
எனில் அங்கு
மரணத்திற்கான
விசயம்
கிடையாது.
இப்பொழுது
பாபா
வந்திருக்கின்றார்,
உங்களது
பழைய
உலகமே அழிந்து
போய்
விடும்.
இந்தப்
பதீத
உலகை
அழிப்பதற்காகவே
நான்
வந்திருக்கிறேன்
என்று
தந்தை கூறுகின்றார்.
இந்த
ருத்ர
யக்ஞத்தில்
முழு
பழைய
உலகமும்
சுவாஹா
ஆகிவிடும்.
யாரெல்லாம்
தனது எதிர்காலத்தை
உருவாக்கிக்
கொள்கிறார்களோ
அது
எதிர்காலத்தில்
கிடைக்கும்.
இல்லையெனில்
இங்கேயே அனைத்தும்
அழிந்து
போய்விடும்.
அல்லது
யாராவது
எடுத்துக்
கொள்வார்கள்.
இன்றைய
காலத்தில்
கடனும் கொடுக்கிறார்கள்,
வினாசம்
ஆகும்
பொழுது,
யாருக்கும்
எதுவும்
கொடுக்க
முடியாமல்
போய்விடும்.
எல்லாம் அப்படியே
இருந்து
விடும்,
இன்று
நன்றாக
இருக்கின்றனர்,
நாளை
திவால்
ஆகிவிடு
கின்றனர்.
யாருக்கும் எந்த
செல்வமும்
கிடைக்கப்
போவது
கிடையாது.
யாருக்காவது
கடன்
கொடுக்கின்றனர்
அவர்
இறந்து
விட்டால் பிறகு
யார்
திரும்பி
கொடுப்பார்!
ஆக
என்ன
செய்ய
வேண்டும்?
21
பிறவிகளுக்கு
பாரதத்திற்கு
நன்மை செய்வதற்காக
மற்றும்
தனது
21
பிறவிகளின்
நன்மைக்காக
ஈடுபடுத்தி
விட
வேண்டும்.
நீங்கள்
தனக்காகவே செய்கிறீர்கள்.
ஸ்ரீமத்
மூலம்
நாம்
உயர்ந்த
பதவி
அடைகிறோம்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
இதன்
மூலம்
21
பிறவிகளுக்கு
சுகம்,
சாந்தி
கிடைக்கும்.
இது
அழிவற்ற
பாபாவின்
ஆன்மீக
மருத்துவமனை
மற்றும் பல்கலைக்கழகம்
என்று
கூறப்படுகிறது.
இதன்
மூலம்
ஆரோக்கியம்,
செல்வம்
மற்றும்
மகிழ்ச்சி
கிடைக்கிறது.
சிலருக்கு
ஆரோக்கியம்
இருக்கிறது,
செல்வம்
இல்லையெனில்
மகிழ்ச்சியாக
இருக்க
முடியாது.
இரண்டும் இருக்கும்
பொழுது
மகிழ்ச்சியும்
இருக்கும்.
தந்தை
உங்களுக்கு
21
பிறவிகளுக்கு
இரண்டையும்
கொடுக்கின்றார்.
அதை
21
பிறவிகளுக்கு
சேமிக்க
வேண்டும்.
குழந்தைகளின்
வேலை
யுக்தி
உருவாக்க
வேண்டும்.
தந்தை வருவதன்
மூலம்
ஏழைக்
குழந்தைகளின்
அதிர்ஷ்டம்
திறக்கப்பட்டு
விடுகிறது.
தந்தை
ஏழைப்
பங்காளனாக இருக்கின்றார்.
செல்வந்தர்களின்
அதிர்ஷ்டத்தில்
இந்த
விசயங்களே
கிடையாது.
இந்த
நேரத்தில்
பாரதம் அனைத்தையும்
விட
ஏழையாக
இருக்கிறது.
எது
செல்வமிக்கதாக
இருந்ததோ
அதுவே
ஏழையாக
ஆகிவிட்டது.
இந்த
நேரத்தில்
அனைவரும்
பாவ
ஆத்மாக்களாக
இருக்கின்றனர்.
எங்கு
புண்ணிய
ஆத்மாக்கள்
இருக்கிறார்களோ அங்கு
பாவ
ஆத்மாக்கள்
ஒருவர்
கூட
கிடையாது.
அது
சத்யுகம்,
சதோ
பிரதானமாகும்,
இது
கலியுகம்,
தமோ பிரதானமாகும்.
சதோ
பிரதானம்
ஆவதற்காக
நீங்கள்
இப்பொழுது
முயற்சி
செய்து
கொண்டிருக்கிறீர்கள்.
தந்தை உங்களுக்கு
நினைவு
படுத்தும்
பொழுது
உண்மையில்
நாம்
தான்
சொர்க்கவாசிகளாக
இருந்தோம்
என்பதை நீங்கள்
புரிந்து
கொள்கிறீர்கள்.
பிறகு
நாம்
84
பிறவிகள்
எடுக்கிறோம்.
மற்றபடி
84
இலட்சம்
பிறவிகள்
என்பது கட்டுக்
கதையாகும்.
இவ்வளவு
பிறவிகளில்
மிருகங்களாக
இருந்தோமா?
இது
கடைசி
மனிதப்
பிறவியா?
இப்பொழுது
திரும்பிச்
செல்ல
வேண்டுமா
என்ன?
இப்பொழுது
தந்தை
புரிய
வைக்கின்றார்
-
மரணம்
எதிரிலேயே
இருக்கிறது.
40-50
ஆயிரம்
ஆண்டுகள் கிடையாது.
மனிதர்கள்
முற்றிலுமாக
காரிருளில்
இருக்கின்றனர்.
அதனால்
தான்
கல்புத்தி
என்று
கூறப்படுகிறது.
இப்பொழுது
நீங்கள்
கல்புத்தியிலிருந்து
தங்கபுத்தியுடையவர்களாக
ஆகிறீர்கள்.
இந்த
விசயங்களை
சந்நியாசி போன்றவர்கள்
கூற
முடியாது.
திரும்பிச்
செல்ல
வேண்டும்
என்று
இப்பொழுது
தந்தை
உங்களுக்கு
நினைவு படுத்துகின்றார்.
எவ்வளவு
முடியுமோ
தனது
பெட்டி
படுக்கைகளை
மாற்றம்
செய்து
விடுங்கள்.
பாபா,
இவை யனைத்தையும்
எடுத்துக்
கொள்ளுங்கள்.
நாங்கள்
சத்யுகத்தில்
21
பிறவிகளுக்கு
எடுத்துக்
கொள்வோம்.
இந்த பாபாவும்
தானம்,
புண்ணியம்
செய்து
வந்தார்.
மிகுந்த
ஆர்வம்
இருந்தது.
வியாபாரிகள்
இரண்டு
பைசா தானத்திற்காக
என்று
எடுத்து
வைத்திருப்பர்.
பாபா
ஒரு
அணா
எடுத்து
வைப்பார்.
யார்
வந்தாலும்
வெறும் கையுடன்
சென்று
விடக்
கூடாது.
இப்பொழுது
பகவான்
எதிரில்
வந்திருக்கின்றார்,
இது
யாருக்கும்
தெரியாது.
மனிதர்கள்
தானம்,
புண்ணியம்
செய்து
செய்து
இறந்து
விட்டார்கள்
எனில்
பிறகு
எங்கு
கிடைக்கும்?
தூய்மையாக ஆவது
கிடையாது.
தந்தையிடத்தில்
அன்பு
செலுத்துவது
கிடையாது.
யாதவர்கள்
மற்றும்
கௌரவர்கள்
விநாச கால
விபரீத
புத்தியுடைவர்கள்
என்று
தந்தை
புரிய
வைத்திருக்கின்றார்.
பாண்டவர்கள்
விநாச
காலத்தில் அன்பான
புத்தியுடையவர்கள்.
ஐரோப்பியர்கள்
அனைவரும்
யாதவர்கள்
ஆவர்.
அவர்கள்
அணுகுண்டு
போன்ற வைகளை
தயார்
செய்து
கொண்டிருக்கின்றனர்.
சாஸ்திரங்களில்
என்ன
என்ன
விசயங்களை
எழுதி
வைத்து விட்டனர்!
நாடகப்படி
பல
சாஸ்திரங்கள்
உருவாக்கப்பட்டிருக்கின்றன!
இதில்
தூண்டுதலுக்கான
(பிரேரணை)
விசயம்
ஏதும்
கிடையாது.
தூண்டுதல்
என்றால்
சிந்தனை.
ஆக
தந்தை
தூண்டுதலின்
மூலம்
படிப்பு
கற்பிப்பது கிடையாது.
இவரும்
ஒரு
வியாபாரியாக
இருந்தார்,
நல்ல
பெயர்
பெற்றவராக
இருந்தார்
என்பதை
தந்தை
புரிய வைக்கின்றார்.
அனைவரும்
மரியாதை
செலுத்தினர்.
தந்தை
பிரவேசமானார்,
பிறகு
இவர்
திட்டு
வாங்க ஆரம்பித்து
விட்டார்.
சிவபாபாவை
அறியவேயில்லை.
அவரை
திட்டவும்
முடியாது.
திட்டு
இவர்
தான் அடைந்தார்.
நான்
வெண்ணெய்
சாப்பிடவில்லை
என்று
கிருஷ்ணர்
கூறினார்
அல்லவா!
இவரும்
கூறுகின்றார்
-
அனைத்து
காரியமும்
சிவபாபாவினுடையது,
நான்
எதுவும்
செய்யவில்லை.
மந்திரவாதி
அவர்
தான்,
நான் கிடையாது.
ஆனால்
தெரியாமல்
இவரை
திட்டி
விட்டனர்.
இவர்
மீது
களங்கம்
ஏற்படுத்தி
விட்டனர்.
எவ்வளவு நிந்தனைகள்
அடைந்தார்!
என்ன
என்ன
விசயங்கள்
சாஸ்திரங்களில்
எழுதி
வைத்து
விட்டனர்!
இது
மீண்டும் நடைபெறும்
என்று
தந்தை
புரிய
வைக்கின்றார்.
இவை
அனைத்தும்
ஞான
விசயங்களாகும்.
எந்த
மனிதனும் இதை
செய்ய
முடியாது.
பிரிட்டிஷ்
அரசாங்கத்தின்
இராஜ்யத்தின்
பொழுது
யாரிடத்திலாவது
இவ்வளவு
கன்னி கைகள்,
தாய்மார்கள்
அமர்ந்து
விட்டால்
யார்
என்ன
செய்ய
முடியும்?
யாரும்
எதுவும்
செய்ய
முடியாது.
சிலரது
உறவினர்கள்
வந்தார்கள்
எனில்
திருப்பி
அனுப்பி
விட்டனர்.
அவர்களுக்கு
புரிய
வைத்து
அனுப்புங்கள் என்று
பாபா
கூறினார்.
நான்
வேண்டாம்
என்று
கூறுவது
கிடையாது,
ஆனால்
யாரும்
தைரியமற்றவர்களாக இருந்தனர்.
தந்தையின்
சக்தி
இருந்தது
அல்லவா!
எதுவும்
புதிதல்லல.
இவையனைத்தும்
மீண்டும்
நடக்கும்.
திட்டும்
வாங்க
வேண்டியிருக்கும்.
திரௌபதிக்கான
விசயமாகும்.
இவர்கள்
அனைவரும்
திரௌபதி
மற்றும் துச்சாதனர்கள்
ஆவர்.
ஒருவருக்கான
விசயம்
கிடையாது.
சாஸ்திரங்களில்
இந்தக்
கட்டுக்கதையை
எழுதியது யார்?
இதுவும்
நாடகத்தின்
பாகமாகும்
என்று
தந்தை
கூறுகின்றார்.
ஆத்மாவின்
ஞானம்
யாரிடத்திலும் கிடையாது.
முற்றிலும்
தேக
அபிமானத்தில்
இருக்கிறார்கள்.
ஆத்ம
அபிமானி
ஆவதில்
முயற்சி
இருக்கிறது.
இராவணன்
முழுமையாக
தலைகீழாக
ஆக்கிவிட்டது.
இப்பொழுது
தந்தை
நேராக்குகின்றார்.
ஆத்ம
அபிமானி
ஆவதன்
மூலம்
இயற்கையாகவே
இந்த
நினைவு
இருக்கும்,
அதாவது
நான்
ஆத்மா,
இந்த
தேகம்
நடிப்பதற்கான
வாத்திய
கருவியாகும்.
இந்த
நினைவு
இருந்தால்
தெய்வீக
குணங்களும்
வந்து கொண்டே
இருக்கும்.
நீங்கள்
யாருக்கும்
துக்கமும்
கொடுக்க
முடியாது.
பாரதத்தில்
தான்
இந்த
இலட்சுமி நாராயணனின்
இராஜ்யம்
இருந்தது.
5
ஆயிரம்
ஆண்டிற்கான
விசயமாகும்.
ஒருவேளை
யாராவது
இலட்சம் ஆண்டுகள்
என்று
கூறுகிறார்களெனில்
காரிருளில்
இருக்கின்றனர்
என்று
அர்த்தம்.
நாடகப்படி
எப்பொழுது நேரம்
முடிவடைகிறதோ
அப்பொழுது
தந்தை
மீண்டும்
வருகின்றார்.
எனது
ஸ்ரீமத்
படி
நடங்கள்
என்று இப்பொழுது
தந்தை
கூறுகின்றார்.
மரணம்
எதிரில்
இருக்கிறது.
உள்ளுக்குள்
என்ன
ஆசைகள்
இருக்கின்றனவோ,
அவைகள்
நிறைவேறாமல்
இருந்து
விடும்.
அவசியம்
இறந்தே
ஆக
வேண்டும்.
இது
அதே
மகா
பாரத யுத்தமாகும்.
எந்த
அளவிற்கு
தனக்கு
நன்மை
செய்து
கொள்ள
முடியுமோ
அவ்வளவு
நல்லதாகும்.
இல்லை யெனில்
நீங்கள்
வெறும்
கைகளுடன்
செல்வீர்கள்.
முழு
உலகமும்
வெறும்
கைகளுடன்
செல்லும்.
குழந்தை களாகிய
நீங்கள்
மட்டுமே
நிறைந்த
கைகள்
அதாவது
செல்வந்தர்களாகிச்
செல்வீர்கள்.
இதைப்
புரிந்து
கொள்வதற்கு விசால
புத்தி
தேவை.
எத்தனை
தர்மத்தின்
மனிதர்கள்
இருக்கின்றனர்!
ஒருவரின்
செயல்
போன்று
மற்றவருடையது இருப்பது
கிடையாது.
அனைவரின்
தோற்றமும்
தனித்
தனியானது.
எவ்வளவு
தோற்றங்கள்
உள்ளன!
இவை அனைத்தும்
நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது.
ஆச்சரியமான
விசயங்கள்
அல்லவா!
இப்பொழுது
தந்தை
கூறுகின்றார்
-
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
கொள்ளுங்கள்.
நாம்
ஆத்மாக்கள்,
84
பிறவிச்
சக்கரத்தில்
வருகிறோம்,
நாம் ஆத்மாக்கள்,
இந்த
நாடகத்தில்
நடிகர்களாக
இருக்கிறோம்.
இதிலிருந்து
நாம்
விடுபட
முடியாது,
மோட்சம் அடைய
முடியாது.
பிறகு
முயற்சிப்பதும்
வீணாகும்.
தந்தை
கூறுகின்றார்
-
நாடகத்திலிருந்து
யாராவது
வெளியேறி விடுவது
அல்லது
யாராவது
கூடுதலாக
சேர்வது
என்பது
முடியாத
காரியமாகும்.இவ்வளவு
ஞானமும்
முழுமையாக அனைவருடைய
புத்தியிலும்
இருக்க
முடியாது.
முழு
நாளும்
இந்த
ஞானத்தை
சிந்தித்துக்
கொண்டே
இருக்க வேண்டும்.
ஒரு
மணிநேரம்,
அரை
மணி
நேரம்
......
இதை
நினைவு
செய்யுங்கள்,
பிறகு
அதை
அதிகப்படுத்திக் கொண்டே
செல்லுங்கள்.
8
மணி
நேரம்
ஸ்தூல
சேவை
செய்யுங்கள்,
ஓய்வும்
எடுங்கள்,
இந்த
ஆன்மீக அரசாங்க
சேவைக்கும்
நேரம்
கொடுங்கள்.
நீங்கள்
உங்களுக்காகவே
சேவை
செய்கிறீர்கள்,
இது
முக்கிய விசயமாகும்.
நினைவு
யாத்திரையில்
இருங்கள்.
மற்றபடி
ஞானத்தின்
மூலம்
உயர்ந்த
பதவியடைய
வேண்டும்.
தனது
நினைவிற்கான
முழு
சார்ட்
வையுங்கள்.
ஞானம்
எளிதானது.
நான்
மனித
சிருஷ்டியின்
விதையானவன்,
இதன்
முதல்,
இடை,
கடையை
நான்
அறிவேன்
என்பது
தந்தையின்
புத்தியில்
இருக்கிறது.
நாமும்
பாபாவின் குழந்தைகளாக
இருக்கிறோம்.
இந்த
சக்கரம்
எவ்வாறு
சுற்றுகிறது?
என்பதை
பாபா
புரிய
வைத்திருக்கின்றார்.
அந்த
வருமானத்திற்கான
நீங்கள்
8-10
மணி
நேரம்
கொடுக்கிறீர்கள்
அல்லவா!
நல்ல
வாடிக்கையாளர்
கிடைத்து விட்டால்
இரவில்
கொட்டாவியும்
வருவது
கிடையாது.
கொட்டாவி
வருகிறது
எனில்
இவர்
களைப்பாக இருக்கிறார்
என்று
புரிந்து
கொள்ள
வேண்டும்.
புத்தி
எங்கேயாவது
வெளியில்
சுற்றிக்
கொண்டே
இருக்கிறது.
சென்டர்களிலும்
மிகுந்த
எச்சரிக்கையுடன்
இருக்க
வேண்டும்.
எந்த
குழந்தைகள்
மற்றவர்களைப்
பற்றி
சிந்திக்காமல் தனது
படிப்பிலேயே
மூழ்கியிருக்கிறார்களோ
அவர்களுக்கு
முன்னேற்றம்
சதா
ஏற்பட்டுக்
கொண்டே
இருக்கும்.
நீங்கள்
மற்றவர்களைப்
பற்றி
சிந்தித்து
தனது
பதவியை
குறைத்துக்
கொள்ளக்
கூடாது.
தீயவைகளைக்
கேட்காதீர்கள்,
தீயவைகளைப்
பார்க்காதீர்கள்
......
யாராவது
நல்ல
வார்த்தைகள்
பேசவில்லையெனில்
ஒரு
காதில்
கேட்டு மற்றொன்றில்
நீக்கி
விடுங்கள்.
எப்பொழுதும்
தன்னையே
பார்க்க
வேண்டும்,
மற்றவர்களை
அல்ல.
தனது படிப்பை
விட்டு
விடக்
கூடாது.
பலர்
இவ்வாறு
கோபித்துக்
கொள்கின்றனர்.
வருவதை
நிறுத்தி
விடுகின்றனர்,
பிறகு
மீண்டும்
வந்து
விடுகின்றனர்.
வரவில்லையெனில்
பிறகு
எங்கு
செல்வார்கள்?
பள்ளி
ஒன்றே
ஒன்று தான்.
தனது
கால்களில்
சம்மட்டியால்
அடித்துக்
கொள்ளக்
கூடாது.
நீங்கள்
தனது
படிப்பில்
மூழ்கியிருங்கள்.
மிகுந்த
குஷியுடன்
இருங்கள்.
பகவான்
கற்பிக்கின்றார்
எனில்
பிறகு
என்ன
வேண்டும்?
பகவான்
நமக்கு தந்தையாக,
ஆசிரியராக,
சத்குருவாக
இருக்கின்றார்,
அவரிடத்தில்
தான்
புத்தியோகம்
வைக்கப்படுகிறது.
அவர் தான்
முழு
உலகின்
நம்பர்
ஒன்
நாயகன்
ஆவார்,
அவர்
உங்களை
நம்பர்
ஒன்
உலகிற்கு
எஜமானர்களாக ஆக்குகின்றார்.
தந்தை
கூறுகின்றார்
-
உங்களது
ஆத்மா
மிகவும்
பதீதமாக
இருக்கிறது,
பறக்க
முடியாமல்
இருக்கிறது.
சிறகு
துண்டிக்கப்பட்டு
இருக்கிறது.
இராவணன்
அனைத்து
ஆத்மாக்களின்
சிறகுகளையும்
துண்டித்து
விட்டது.
என்னைத்
தவிர
வேறு
யாரும்
பாவனம்
ஆக்க
முடியாது
என்று
சிவபாபா
கூறுகின்றார்.
அனைத்து
நடிகர்களும் இங்கு
இருக்கின்றனர்,
(மக்கள்)
அதிகரித்துக்
கொண்டே
இருக்கின்றனர்,
திரும்பி
யாரும்
செல்வது
கிடையாது.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான,
தேடிக்
கண்டெடுக்கப்பட்ட
செல்லமான
குழந்தைகளுக்கு,
தாய்
தந்தையாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீக குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
நமஸ்தே.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1)
சுய
சிந்தனை
மற்றும்
படிப்பில்
மூழ்கியிருக்க
வேண்டும்.
மற்றவர்களைப்
பார்க்கக்
கூடாது.
ஒருவேளை
யாராவது
நல்லதை
பேசவில்லையெனில்
ஒரு
காதில்
கேட்டு
மற்றொன்றில் வெளியேற்றி.
கோபித்துக்
கொண்டு
படிப்பை
விட்டு
விடக்
கூடாது.
2)
உயிருடன்
இருக்கும்
பொழுதே
அனைத்தையும்
தானம்
செய்து
தனது
பற்றுதலை
நீக்கி விட
வேண்டும்.
முழுமையாகக்
கொடுத்து
விட்டு
டிரஸ்டியாகி
இலேசாக
இருக்க
வேண்டும்.
ஆத்ம
அபிமானியாகி
அனைத்து
தெய்வீக
குணங்களையும்
தாரணை
செய்ய
வேண்டும்.
வரதானம்:
தனது
அடிப்படை
சம்ஸ்காரங்களின்
பரிவர்த்தனை
மூலமாக
உலக
மாற்றம்
செய்யக் கூடிய
உதாரண
சொரூபம்
ஆவீர்களாக.
ஒவ்வொருவரிடமும்
உள்ள
அடிப்படை
சம்ஸ்காரம்
அதாவது
எதை
நீங்கள்
சுபாவம்
என்று
கூறுகிறீர்களோ,
அது
அவ்வப்பொழுது
முன்னேறுவதில்
தடை
ஏற்படுத்துகிறது.
அந்த
அடிப்படை
சம்ஸ்காரத்தை
பரிவர்த்தனை செய்யக்
கூடிய
உதாரண
சொரூபம்
ஆனீர்கள்
என்றால்
அப்பொழுது
முழு
உலக
மாற்றம்
ஏற்படும்.
இப்பொழுது அப்பேர்ப்பட்ட
பரிவர்த்தனை
(மாற்றம்)
செய்யுங்கள்
-
மற்றவர்
யாருமே
இவர்களது
சம்ஸ்காரம்
இது
போல ஆரம்பத்திலேயே
உள்ளது
என்று
கூறக்கூடாது.
சதவிகிதத்தில்
கூட
அணு
அளவு
கூட
பழைய
சம்ஸ்காரம் தென்படாமல்
இருந்தால்,
வர்ணிக்காமல்
இருந்தால்
அப்பொழுது
தான்
முழுமையான
பரிவர்த்தனையின் உதாரண
சொரூபம்
ஆவீர்கள்.
சுலோகன்:
இப்பொழுது
(பிரயத்தனம்)
முயற்சியின்
நேரம்
முடிந்து
விட்டது.
எனவே
மனதார
(பிரதிக்ஞை)
-
வாக்குறுதி
சொடுத்து
வாழ்க்கையின்
பரிவர்த்தனை
(மாற்றம்)
செய்யுங்கள்.
ஓம்சாந்தி