05.04.2020 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த-பாப்தாதா''

ரிவைஸ் 19.12.1985 மதுபன்


  

'' தந்தையைப் பின்பற்றி நடப்பது ''

 

இன்று அனைத்து அன்பான குழந்தைகளின் அன்பிற்கான பிரதிபலன் கொடுப்பதற்காக தந்தை அவர்களை சந்திப்பதற்காக வந்திருக்கிறார். உடலற்ற பாப்தாதாவிற்கு உடலின் ஆதாரத்தை எடுக்க வேண்டியதாக இருக்கிறது. எதற்காக? குழந்தைகளையும் உடலற்றவர்களாக ஆக்குவதற்காக. எப்படி தந்தை உடலற்றவர், உடலில் வந்த போதிலும் உடலற்ற சொரூபத்தில், உடலற்ற தன்மையின் அனுபவத்தை செய்விக்கிறார். அதே போல் நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் இருந்து கொண்டே, உடலில் இருந்து கொண்டே உடலற்ற ஆத்ம நிலையில் நிலைத்திருந்து செய்விப்பவர் ஆகி, இந்த உடல் மூலமாக காரியங்களை செய்வியுங்கள். இந்த உடல் செய்வது. உடலற்ற நீங்கள் செய்விப்பவர். இந்த நிலையைத் தான் 'தேகமற்ற நிலை' என்று கூறுவது. இதையே தான் தந்தையைப் பின்பற்றி நடப்பது என்று கூறுவது. எப்பொழுதும் தந்தையைப் பின்பற்றி நடப்பதற்காக தன்னுடைய புத்தியை இரண்டு நிலைகளில் நிலைத்து வையுங்கள். தந்தையைப் பின்பற்றி நடப்பதற்கான நிலை எப்பொழுதும் அசரீரி ஆகுக, தேகமற்றவர் ஆகுக, நிராகாரி ஆகுக. தாதா அதாவது பிரம்மா தந்தையைப் பின்பற்றி நடப்பதற்காக எப்பொழுதும் அவ்யக்த நிலை உள்ளவர் ஆகுக, பரிஷ்தா சொரூபமாக ஆகுக, ஒளி வடிவ உடல் உள்ளவர் ஆகுக. இந்த மூன்று நிலைகளில் நிலைத்திருப்பது என்பது தந்தையைப் பின்பற்றி நடப்பது. இதில் கீழே பௌதீக உணர்வு, தேக உணர்வு, நபர்களின் பாவனை என்பதில் கீழே வராதீர்கள். பௌதீக உணர்வு மற்றும் மனித உணர்வு கீழே கொண்டு வருவதற்கான ஆதாரம். எனவே அனைத்தையும் விட்டு விலகி இந்த இரண்டு நிலைகளில் எப்பொழுதும் நிலைத்திருங்கள். மூன்றாவதாக பிராமண ஜென்மம் கிடைத்தவுடனேயே பாப்தாதாவிடமிருந்து கீழே இறங்கும் நிலையில் எண்ணத்தினாலும் அல்லது கனவில் கூட வராதீர்கள், இது மாற்றான் நிலை என்ற அறிவுரை கிடைத்திருக்கிறது. ஒருவேளை அறிவுரையை மீறி நடக்கிறார்கள் என்றால் தொந்தரவும் அடைகிறார்கள். வேதனையும் அடைகிறார்கள். எனவே எப்பொழுதும் மதிப்புடன் இருப்பதற்காக, எப்பொழுதும் பிராப்தி சொரூப நிலையில் நிலைத்திருப்பதற்கான சகஜ சாதனம் 'தந்தையைப் பின்பற்றி நடப்பது'. பின்பற்றுவதோ சுலபமாக இருக்கும் இல்லையா? வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திலிருந்து பின்பற்றுவதில் நீங்கள் அனுபவிகள். குழந்தைப் பருவத்திலும் நடப்பதற்கும், எழுவதற்கும், அமர்வதற்கும் தந்தை குழந்தைகளின் விரல்களைப் பிடித்து பின்பற்றி செய்ய வைக்கிறார். பிறகு எப்பொழுது குடும்பஸ்தன் ஆவது என்றாலும் கணவன் மனைவிக்கு ஒருவர் இன்னொருவர் பின்னால் பின்பற்றி நடப்பதற்கு கற்றுக் கொடுக்கிறார்கள். பிறகு வயதான காலத்தில் குரு வைக்கிறார்கள் என்றாலும் குருவைப் பின்பற்றி நடப்பவர்களாக ஆகிறார்கள். உலகியல் வாழ்க்கையிலும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை பின்பற்றி நடப்பதாக இருக்க வேண்டியது இருக்கிறது. ஆன்மீக, பரலோகத்து தந்தையும் ஒரே ஒரு சுலபமான விஷயத்தின் வழியை கூறுகிறார் - என்ன செய்வது, எப்படி செய்வது, இப்படிச் செய்யலாமா அல்லது அப்படிச் செய்யலாமா என்ற விஸ்தாரத்திலிருந்து விடுவித்து விடுகிறார். அனைத்து கேள்விகளுக்கான ஒரே ஒரு பதில் தான் 'தந்தையை பின்பற்றி நடப்பது'.

 

நடைமுறை ரூபத்திலும் பொறுப்பாளர் ஆகி கர்மம் அதாவது காரியம் செய்வதைக் கற்றுக் கொடுப்பதற்காக முழுமையாக 84 ஜென்மங்கள் எடுக்கும் பிரம்மாவின் ஆத்மா அதற்கு பொறுப்பாக ஆனது. செய்யும் காரியத்தில், கர்ம பந்தனங்களிலிருந்து விடுபடுவதில், கர்ம சம்மந்தத்தை வைத்து நடந்து கொள்வதில், தேகத்தில் இருந்து கொண்டே தேகமற்ற நிலையில் நிலைத்திருப்பதில், உடலின் பந்தனங்களை விடுவிப்பதில், மனதின் முழு ஈடுபாட்டில் மூழ்கியிருக்கும் நிலையில், பணத்தின் ஒவ்வொரு பைசாவையும் பயனுள்ளதாக ஆக்குவதில் சாகார பிரம்மா சாகார வாழ்க்கையில் பொறுப்பாளர் ஆனார். கர்ம பந்தனத்தில் இருக்கும் ஆத்மா கர்மாதீத் ஆவதின் உதாரணமாக ஆனார். அப்படி நடைமுறை வாழ்க்கையைப் பின்பற்றி நடப்பது சுலபம் தான் இல்லையா? இது தான் தந்தையைப் பின்பற்றி நடப்பது என்ற பாடம். கேள்விகள் கூட உடல் சம்மந்தமான, உறவுகள் சம்மந்தமான, பணம் சம்மந்தமான கேள்விகளைத் தான் கேட்கிறார்கள். அனைத்து கேள்விகளுக்கான பதில் பிரம்மா தந்தையின் வாழ்க்கை. எப்படி இன்றைய நாட்களில் அறிவியலைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கேள்விக்கான பதிலை கம்ப்யூட்டரிடம் கேட்கிறார்கள். ஏனென்றால் மனிதனின் புத்தியை விட இந்த கம்ப்யூட்டர் மிகவும் சரியானது என்று நினைக்கிறார்கள். உருவாக்குபவரையும் விட உருவாக்கப்பட்ட பொருளை மிகச் சரியானது என்று நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் அமைதியானவர்களை பொருத்தளவில் பிரம்மாவின் வாழ்க்கை தான் மிகச் சரியான கம்ப்யூட்டர். எனவே என்ன, எப்படி என்று கேட்பதற்குப் பதிலாக வாழ்க்கையின் கம்ப்யூட்டரைப் பாருங்கள். எப்படி மற்றும் என்ன என்ற கேள்வி இப்படி என்பதில் மாறிவிடும். கேள்விகள் நிறைந்தவருக்குப் பதிலாக மகிழ்ச்சி நிறைந்தவர் ஆகிவிடுவீர்கள். கேள்விகள் நிறைந்தது குழப்பமான புத்தி. எனவே கேள்விக் குறியும் வளைந்து நெளிந்து இருக்கும். கேள்விக்குறி எழுதினீர்கள் என்றால் வளைந்த கோடாகத் தான் இருக்கும் இல்லையா? மேலும் மகிழ்ச்சி நிறைந்த நிலை புள்ளி. புள்ளியில் ஏதாவது வளைந்து நெளிந்திருக்குமா? நான்கு புறங்களிலிருந்தும் ஒரே மாதிரி தான் இருக்கும். புள்ளியை எந்தப் பக்கமாகப் பார்த்தாலும், நேராக பார்த்தாலும் சரி அல்லது தலைகீழாகப் பார்த்தாலும் சரி, நேராகத் தான் தென்படும். மேலும் ஒரே மாதிரி தான் தென்படும். மகிழ்ச்சி நிறைந்த நிலை என்றால் ஒரே சீரான நிலையில் தந்தையை பின்பற்றி நடப்பவர். இருந்தும் சாரமாக என்ன கிடைத்தது? ஸ்தூலமான ரூபத்தில் உடலிலிருக்கும் பிரம்மா தந்தையை மற்றும் ஒளிவடிவமான உடலில் இருக்கும் பிரம்மாவைப் பின்பற்றி நடங்கள். பிரம்மா தந்தையை பின்பற்றினாலும் சரி, சிவதந்தையைப் பின்பற்றினாலும் சரி, ஆனால் வார்த்தை அதே தான் 'ஃபாலோ பாதர்' எனவே பிரம்மாவின் மகிமையாக 'பிரம்மா வந்தே ஜகத்குரு' என்று கூறுகிறார்கள். ஏனென்றால் பின்பற்றி நடப்பதற்காக நடைமுறை ரூபத்தில் பிரம்மா தான் பௌதீக உலகத்தில் பொறுப்பாளர் ஆனார். நீங்கள் அனைவரும் கூட தன்னை சிவ குமார், சிவ குமாரி என்று கூறுவதில்லை. பிரம்மா குமார், பிரம்மா குமாரி என்று தான் கூறுகிறீர்கள். சாகார படைப்பின் சாகார சிரேஷ்ட வாழ்க்கையின் உதாரணமாக பிரம்மா தான் ஆகிறார். எனவே சத்குரு என்று சிவ தந்தையைக் கூறுகிறார்கள், கற்றுக் கொடுப்பவர்களையும் குரு என்று கூறுவார்கள். உலகின் எதிரில் கற்றுக் கொடுப்பதற்காக பிரம்மா தான் பொறுப்பாளர் ஆகிறார். எனவே ஒவ்வொரு காரியத்திலும் பின்பற்றி நடக்க வேண்டும். இந்தக் கணக்கு படி பிரம்மாவை ஜகத்குரு என்று கூறுகிறார்கள், எனவே உலகம் (ஜகம்) பிரம்மாவை வந்தனம் செய்கிறது. ஜகத்பிதா என்ற பட்டமும் பிரம்மாவினுடையது. விஷ்ணுவை மற்றும் சங்கரை பிரஜாபிதா என்று கூறமாட்டோம். அவர்கள் எஜமானன் என்ற காரணத்தினால் பதி அதாவது அதிபர் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் (பிரம்மா) பிதா. எந்த அளவு ஜகத்திற்கு பிரியமானவரோ அந்த அளவே ஜகத்திலிருந்து விலகியவராகி இப்பொழுது அவ்யக்த ரூபத்தில் அவ்யக்த நிலையைப் பின்பற்றுபவர்கள் ஆகுக என்ற பாடத்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார். புரிந்ததா? எந்தவொரு ஆத்மாவிற்கும் இப்படி இந்த அளவு விலகியிருக்கும் தன்மை இருப்பதில்லை. இந்த பிரம்மாவின் விலகியிருக்கும் தன்மையின் கதையை பின்பு கூறுவோம்.

 

இன்றோ (வந்திருக்கும்) உடலையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. எப்பொழுது கடனாக எடுக்கிறோம் என்றாலும் எஜமானனாகவோ அவர் தான் இருக்கிறார், எனவே உடலை, ஸ்தானத்தை சக்திக்கு ஏற்றபடி காரியத்தில் ஈடுபடுத்த வேண்டியதாக இருக்கிறது. இருந்தும் பாப்தாதா இருவர்களின் சக்திசாலியான பாகம் ரதத்தை இயக்குவதற்குப் பொறுப்பாக ஆகியிருக்கிறது. இதுவும் நாடகத்தில் விசேஷ வரதானத்தில் ஆதாரமாக இருக்கிறது. சில குழந்தைகளுக்கு இதே உடல் ஏன் இரதமாக ஆவதற்கு பொறுப்பாக ஆனது என்ற கேள்வியும் எழுகிறது. மற்றவர்களுக்கு என்ன, இவருக்கும் (குல்சார் தாதிக்கும்) கேள்வி எழுகிறது. ஆனால் எப்படி பிரம்மாவும் தன்னுடைய ஜென்மங்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை தான் இல்லையா? இவரும் தன்னுடைய வரதானத்தை மறந்து விட்டார். விசேஷமாக சாகார பிரம்மாவின் தொடக்க காலத்தில் சாட்சாத்காரத்தின் பாகத்தின் காலத்தில் இந்தக் குழந்தைக்கு வரதானம் கிடைத்திருக்கிறது. பிரம்மா தந்தையுடன் சேர்ந்து தொடக்க காலத்தில் ஏகாந்தத்தின் தபஸ்வி ஸ்தானத்தில் இந்த ஆத்மாவின் விசேஷ சாட்சாத்காரத்தின் பாகத்தைப் பார்த்து பிரம்மா தந்தை இந்தக் குழந்தையின் சரள சுபாவம், வெகுளியான வாழ்க்கையின் விசேஷத்தைப் பார்த்து எப்படி இந்தப் பாகத்தில் தொடக்கத்தில் பிரம்மா தந்தையின் துணையாகவும் ஆனார். மேலும் கூடவே இருந்தார். அதே போல் இன்னும் வரும் நாட்களில் தந்தையின் துணைவியாக ஆகும், சமமாக ஆகும் காரியத்தையும் கவனித்துக் கொள்வார். பிரம்மா தந்தைக்குச் சமமாக சேவையில் தனது பங்கைச் செய்வார். அப்படி அதுவே வரதானத்தின் அதிர்ஷ்டத்தின் ரேகையாக ஆகிவிட்டது. மேலும் பிரம்மா தந்தைக்குச் சமமாக ரதம் ஆகும் பங்கை செய்வதும் நாடகத்தில் அடங்கியிருக்கிறது. இருந்தும் இந்தப் பங்கைச் செய்வதற்காக பாப்தாதா குழந்தைக்கு வாழ்த்துக்களை வழங்குகிறார். இவ்வளவு காலம் இந்த அளவு சக்தியை அனுசரித்து நடந்து கொள்வது, இந்த அனுசரித்து போகும் விசேஷத்தின் லிஃப்ட் காரணமாக அதிகப்படியான கிஃப்ட்டும் கிடைத்திருக்கிறது. இருந்தும் பாப்தாதாவிற்கு உடலின் அனைத்தையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. வாத்தியம் பழையது மற்றும் இயக்குபவர் சக்திசாலியானவர் இருந்தும். சரிங்க, சரிங்க ஐயா என்ற பாகத்தில் காரணமாக நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பாப்தாதாவும் விதி மற்றும் யுக்திபூர்வமாக காரியத்தை நடத்தி கொண்டிருக்கிறார். சந்திப்போம் என்ற உறுதிமொழியோ இருக்கிறது. ஆனால் சந்திக்கும் விதி காலத்திற்கு ஏற்றபடி மாறிக் கொண்டே இருக்கும். இப்பொழுதோ 18வது வருடத்தில் அனைத்தையும் கூறுவோம். 17வதை முடிக்கத் தான் வேண்டும். நல்லது.

 

அனைத்து தந்தையை பின்பற்றி நடக்கும் சகஜ முயற்சி செய்யும் குழந்தைகளுக்கு, எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் விசேஷ ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் செய்விப்பவர் ஆகி உடல் மூலம் காரியத்தை செய்விக்கும் மாஸ்டர் படைப்பவர் குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பிற்கு தன் வாழ்க்கை மூலமாக நன்றிக் கடன் செலுத்தும் குழந்தைகளுக்கு அன்பு நிரம்பிய அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

டீச்சர் சகோதரிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு

1) டீச்சர்கள் எப்பொழுதும் சுயநிலை மூலம் அவர்களும் முன்னேறிச் செல்பவர்கள் மேலும் மற்றவர்களையும் முன்னேறச் செய்விப்பவர்கள், முன்னேற வேண்டும் மேலும் முன்னேற்ற வேண்டும். இது தான் டீச்சர்களின் விசேஷ லட்சியம் மற்றும் லட்சணமும் தான். எப்பொழுதும் தந்தைக்குச் சமமாக மாஸ்டர் சர்வ சக்திவான் ஆத்மாவாகி முன்னேறிச் சென்று கொண்டே மேலும் முன்னேற வைத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் தியாகம் மூலம் பாக்கியத்தை பிராப்தி செய்யும் சிரேஷ்ட ஆத்மாக்கள். எப்பொழுதும் தியாகம் தான் பாக்கியம். சிரேஷ்ட பாக்கியம், சிரேஷ்ட காரியம் அதாவது கர்மம் மேலும் சிரேஷ்ட பலன் . . . எப்பொழுதும் இந்த பிரத்யக்ஷ பலன் மூலம் தன்னையும் மேலும் மற்றவர்களையும் பறக்க வைத்துக் கொண்டே இருங்கள். தன்னை ஒவ்வொரு காரியத்திலும் கருவி என்று புரிந்து கொள்வது தான் சிரேஷ்டமாக ஆவதற்கான சகஜ சாதனம். சேவாதாரி ஆவது என்ற இதுவும் சங்கமயுகத்தில் விசேஷமான பாக்கியத்தின் அடையாளம். சேவை செய்வது என்றால் பல ஜென்மங்களுக்காக சம்பன்னம் ஆவது. ஏனென்றால் சேவை மூலம் சேமிப்பாகிறது. மேலும் சேமிப்பானதை பல ஜென்மங்கள் அருந்திக் கொண்டே அதாவது அனுபவித்துக் கொண்டே இருப்பீர்கள். சேவையில் சேமிப்பாகிக் கொண்டிருக்கிறது என்ற நினைவு இருக்கிறது என்றாலும் எப்பொழுதும் குஷியில் இருப்பீர்கள். மேலும் குஷியின் காரணமாக ஒருபொழுதும் களைப்படைய மாட்டீர்கள். சேவை களைப்பற்றவர் ஆக்கக்கூடியது, குஷியின் அனுபவம் செய்விக்கக்கூடியது.

 

சேவாதாரி என்றால் தந்தைக்குச் சமமானவர். அம்மாதிரி சமநிலையை சோதித்துக் கொண்டே தந்தைக்குச் சமமானவர் ஆகி மற்றவர்களையும் தந்தைக்குச் சமமானவர்களாக ஆக்கிக் கொண்டே இருங்கள். சேவை நிலையத்தின் வாயுமண்டலத்தை சக்திசாலியாக ஆக்குவதற்காக ஓரிரண்டு தடவை சுற்றி வருவதோடு சக்திசாலியான நினைவின் அனுபவங்களின் நிகழ்ச்சியைத் தயாரியுங்கள். சக்திசாலியான சூழ்நிலை இயல்பாகவே பல விஷயங்களிலிருந்து தூரமாக்கி விடுகிறது. இப்பொழுது நீங்களும் தரமுள்ளவர் ஆகி, தரமுள்ளவர்களை உருவாக்கிக் கொண்டே இருங்கள். நல்லது.

 

2) அனைவரும் தங்களை எந்தவிதமான மணி என்று நினைக்கிறீர்கள்? (திருப்திமணி) இன்றைய காலத்தில் விசேஷமாக திருப்தியின் தேவை இருக்கிறது. பூஜையும் அதிகமாக எந்த தேவிக்கு நடக்கிறது? சந்தோஷி தேவிக்கு. மேலும் சந்தோஷியை திருப்தி படுத்துவதும் சகஜமாக இருக்கும். சந்தோஷி விரைவில் திருப்தியாகிவிடுவார். சந்தோஷிக்கு ஏன் பூஜை நடக்கிறது? ஏனென்றால் இன்றைய காலத்தில் டென்ஷன் (மன அழுத்தம்) அதிகமாக இருக்கிறது, பிரச்சனைகள் அதிகம். இந்தக் காரணத்தினால் திருப்தியின்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது, எனவே திருப்தியாக இருப்பதற்கான சாதனத்தையும் அனைவரும் யோசிக்கிறார்கள். ஆனால் செய்ய முடியாது. அம்மாதிரியான நேரத்தில் நீங்கள் அனைவரும் திருப்திமணிகளாக ஆகி, திருப்தியின் பிரகாசத்தைக் கொடுங்கள். தன்னுடைய திருப்தியின் பிரகாசம் மூலமாக மற்றவர்களையும் திருப்தியானவர்களாக ஆக்குங்கள். தன் மேல் தானே திருப்தியாக இருங்கள். பிறகு சேவையில் திருப்தியாக இருங்கள். பிறகு சம்மந்தத்தில் திருப்தியாக இருங்கள். அப்பொழுது தான் திருப்தி மணி என்று கூறுவோம். திருப்திக்கான மூன்று சான்றிதழ்கள் வேண்டும். தன் மீது, சேவையின் மீது பிறகு உடன் இருப்பவர்கள் மீது,. இந்த மூன்று சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறீர்கள் இல்லையா?. நல்லது, இருந்தும் உலகத்தின் குழப்பங்களிலிருந்து விடுபட்டு அச்சல்கர் வரை வந்து சேர்ந்து விட்டீர்கள். இது தந்தையின் இடம் தான் அச்சல்கர். அப்படி அச்சல்கர் வரை வந்து சேர்வது கூட பெரிய பாக்கியத்தின் அடையாளம். தியாகம் செய்திருக்கிறீர்கள், அதனால் அச்சல்கர் வரை வந்தடைந்து விட்டீர்கள். பாக்கியம் நிறைந்தவர்களாக ஆகி பாக்கியத்தின் ரேகையை இன்னும் எவ்வளவு நீளமாக போட விரும்புகிறீர்களோ அந்த அளவு போட முடியும். பாக்கியம் நிறைந்தவர் என்ற பட்டியலோ வந்து விட்டீர்கள். ஏனென்றால், பகவானின் குழந்தையாக ஆகிவிட்டீர்கள் என்பதால் பாக்கியம் நிறைந்தவர் ஆகிவிட்டீர்கள். மற்ற அனைவரிடமிருந்தும் விலகி ஒருவரை தன்னுடையவராக ஆக்கிவிட்டீர்கள் என்பதால் பாக்கியம் நிறைந்தவர் ஆகிவிட்டீர்கள். குழந்தைகளின் இந்த தைரியத்தைப் பார்த்து பாப்தாதா குஷி அடைகிறார். என்னவாக இருந்தாலும் சரி, இருந்தும் தியாகம் மற்றும் சேவையின் துணிச்சலில் சிரேஷ்டமானவராக இருக்கிறீர்கள். சிறியவர்களாக இருந்தாலும் அல்லது புதியவர்களாக இருந்தாலும் பாப்தாதா தியாகம் மற்றும் தைரியத்திற்கான வாழ்த்துக்களைக் கூறுகிறார். பாப்தாதாவும் அந்த மரியாதையோடு பார்க்கிறார். பொறுப்பாளர் ஆவதற்கும் மகத்துவம் இருக்கிறது. இதே மகத்துவத்தின் காரணமாக எப்பொழுதும் முன்னேறிக் கொண்டே உலகில் மகான் ஆத்மா ஆகி பிரசித்தி ஆகிவிடுவீர்கள். தன்னுடைய மகான் தன்மையையோ தெரிந்திருக்கிறீர்கள் இல்லையா? எவ்வளவு மகானோ அந்த அளவு பணிவானவர்கள். எப்படி பழுத்துக் குலுங்கும் மரத்தின் அடையாளம் வளைந்து கொடுப்பது. அதே போல் யார் பணிவாக இருக்கிறாரோ அவர் தான் பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்துபவர். சங்கமயுகத்தின் விசேஷமே இது தான். நல்லது.

 

வரதானம் :

பிரம்மா தந்தைக்குச் சமமாக சிரேஷ்டத்திலும் சிரேஷ்ட ஓவியத்தை உருவாக்கக்கூடிய பரோபகாரி ஆகுக.

 

சிரேஷ்ட நினைவு மற்றும் சிரேஷ்ட காரியம் மூலமாக அதிர்ஷ்டத்தின் ஓவியத்தை அனைத்து குழந்தைகளும் உருவாக்கியிருக்கிறீர்கள். இப்பொழுது இறுதியில் சம்பூர்ண நிலையின் மற்றும் பிரம்மா தந்தைக்குச் சமமாக சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவராக ஆவதற்காக இறுதி வரைதல் மட்டும் பாக்கி இருக்கிறது. இதற்காக பரோபகாரியாக ஆகுங்கள். அதாவது சுயநலத்திலிருந்து எப்பொழுதும் விடுபட்டிருங்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு காரியத்திலும் ஒவ்வொரு சகயோகி குழுவில் எந்த அளவு சுயநலமற்ற நிலை இருக்குமோ அந்த அளவு தான் பரோபகாரியாக ஆக முடியும். பரோபகாரி எப்பொழுதும் தன்னை நிரம்பியவராக அனுபவம் செய்வார். எப்பொழுதும் பிராப்தி சொரூபத்தின் நிலையில் நிலைத்திருப்பார். தனக்காக எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

 

சுலோகன்:

அனைத்தையும் தியாகம் செய்தவர் (சர்வம்ச தியாகி) ஆவதினால் தான் சரளத்தன்மை மற்றும் சகித்துக் கொள்ளும் தன்மையின் குணம் வரும்.

 

ஓம்சாந்தி