08.04.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
உங்களுக்கு
கரண்ட்
(சக்தி)
கொடுப்பதற்காக
தந்தை
வந்திருக்கிறார்,
நீங்கள்
ஆத்ம
அபிமானியாக
இருந்து,
புத்தியின்
தொடர்பை
ஒரு
தந்தையிடம்
கொண்டு
சென்றால் உங்களுக்கு
கரண்ட்
கிடைத்துக்
கொண்டே
இருக்கும்.
கேள்வி:
உங்களிடம்
இருக்கக்
கூடாத
அனைத்தையும்
விட
மிகப்
பெரிய
அசுர
சுபாவம்
எது?
பதில்:
அசாந்தியைப்
பரப்புவதே
அனைத்தையும்
விட
மிகப்பெரிய
அசுர
சுபாவமாகும்.
அசாந்தியை பரப்புவோர்
மூலமாக
மனிதர்கள்
தொல்லையடைகின்றனர்,
அவர்கள்
எங்கு
சென்றாலும்
அசாந்தியை
பரப்புவார்கள்.
எனவே,
அனைவரும்
பகவானிடம்
அமைதியின்
வரத்தினை
வேண்டுகின்றனர்.
பாடல்:
தீபத்திற்கும்
புயற்கும் நடுவில்
நடக்கும்
யுத்தத்திற்கான
கதை
இது..
ஓம்
சாந்தி!
இனிமையிலும்
இனிமையான
செல்லமான
குழந்தைகள்
பாடலின் வரியைக்
கேட்டீர்கள்.
இந்தப்
பாடல்
பக்தி
மார்க்கத்திற்குரியது,
பிறகு
அதனை
ஞானத்திற்காக
மாற்றம்
செய்யப்பட்டிருக்கிறது,
வேறு யாரும்
இம்மாதிரி
மாற்ற
முடியாது.
தீபம்
என்பது
என்ன,
புயல்
என்பது
என்ன
என்பதை
உங்களில்
கூட வரிசைப்படி
முயற்சியின்
அனுசாரப்படி
அறிந்து
கொள்ள
முடியும்.
ஆத்மா
எனும்
தீபம்
மங்கி
விட்டது,
தீபத்தைப்
பிரகாசப்படுத்துவதற்காக
இப்போது
தந்தை
வந்திருக்கிறார்
எனக்
குழந்தைகள்
புரிந்துள்ளீர்கள்.
யாரேனும்
இறந்து
விட்டால்
அருகில்
தீபத்தை
ஏற்றுகின்றனர்,
அதனை
மிக
கவனமாகப்
பார்த்துக்
கொள்கின்றனர்,
ஒருவேளை
தீபம்
அணைந்து
விட்டால்
ஆத்மாவானது
இருளில்
செல்ல
வேண்டியதாகும்
என
தீபத்தை ஏற்றுகின்றனர்.
சத்யுகத்தில்
இம்மாதிரி
விசயங்கள்
கிடையாது,
அங்கு
வெளிச்சத்தில்
இருப்பார்கள்.
பசி
என்பதற்கான விசயமே
இருக்காது,
அங்கு
பொக்கிஷங்கள்
பெரிய
அளவில்
கிடைத்திருக்கும்.
இங்கு
ஆழ்ந்த
இருள்
இருக்கின்றது,
கெட்டுப்போன
உலகம்
அல்லவா!
அனைத்து
ஆத்மாக்களின்
தீபமானது
மங்கி
விட்டது.
அதிகமாக உங்களுடைய
தீபமானது
மிகவும்
மங்கி
விட்டது.
குறிப்பாக
தந்தை
உங்களுக்காக
வந்திருக்கிறார்.
உங்களுடைய தீபமானது
மங்கி
விட்டது,
இப்போது
கரண்ட்
எங்கிருந்து
கிடைக்கும்?
கரண்ட்
தந்தையிடமிருந்து
மட்டுமே கிடைக்குமென
குழந்தைகள்
அறிந்துள்ளீர்கள்.
கரண்ட்
அதிகமானால்
பல்பில்
வெளிச்சம்
அதிகமாக
வெளிப்படும்.
இப்போது
நீங்கள்
மிகப்
பெரிய
மிஷின்
மூலமாக
கரண்ட்
அடைகின்றீர்கள்.
பம்பாய்
போன்ற
பெரிய
நகரங்களில் பெரிய
மனிதர்கள்
இருக்கின்றார்கள்,
ஆகவே,
அதிகமாக
கரண்ட்
தேவைப்படும்.
எனவே,
அவசியம்
பெரிய மிஷின்
வேண்டும்.
இது
எல்லையற்ற
விசயமாகும்.
முழு
உலகத்தைச்
சேர்ந்த
ஆத்மாக்களின்
தீபம்
மிகவும் மங்கி
விட்டது,
அவர்களுக்கு
கரண்ட்
கொடுக்க
வேண்டும்.
புத்தியின்
தொடர்பை
தந்தையிடம்
ஈடுபடுத்துங்கள்,
இதுவே
முக்கியமான
விசயமென
தந்தை
புரிய
வைக்கின்றார்.
தேகி
அபிமானி
ஆகுங்கள்.
முழு
உலகத்தைச் சேர்ந்த
பதீத
மனிதர்களைப்
பாவனமாக்க,
அனைவருடைய
தீபத்தையும்
பிரகாசப்படுத்துவதற்காக,
தந்தை வந்திருக்கிறார்,
ஆக
எவ்வளவு
பெரிய
தந்தையாக
இருக்கின்றார்.
முழு
உலகத்தைச்
சேர்ந்த
மனிதர்களின் ஆத்ம
தீபத்தை
ஏற்றுகின்றார்.
தந்தை
யார்?
எப்படி
தீபத்தை
ஏற்றுகின்றார்?
என
யாருக்கும்
தெரியாது.
அவரை
ஜோதி
சொரூபம்
என்றும்
கூறுகின்றனர்,
பிறகு
சர்வ
வியாபி
என்றும்
கூறுகின்றனர்.
ஜோதி
சொரூபமான தந்தையை
அழைக்கின்றனர்,
ஏனென்றால்
ஆத்ம
தீபமானது
மங்கி
விட்டது.
அகண்டஜோதியின்
காட்சியும் கிடைக்கின்றது.
மிகப்பிரகாசமான
ஒளியின்
காட்சி
அர்ஜுனருக்குக்
கிடைத்ததாகவும்
அவரால்
பொறுத்துக் கொள்ள
முடியவில்லை
எனவும்
காட்டப்பட்டிருக்கிறது,
அதிக
கரண்ட்
இருந்தது.
இப்போது
இந்த
விசயங்களை குழந்தைகள்
நீங்கள்
மட்டுமே
அறிந்துள்ளீர்கள்.
அனைவருக்கும்
நீங்கள்
ஆத்மா
எனப்
புரிய
வைக்க
வேண்டும்.
ஆத்மாக்கள்
மேலே
இருந்து
இங்கு
வருகின்றது.
முதலில் ஆத்மா
தூய்மையாக
இருந்த
போது,
அதில் கரண்ட்
இருந்தது,
சதோபிரதானமாக
இருக்கிறது.
பொற்கால
உலகத்தில்
ஆத்மாக்கள்
தூய்மையாக
இருந்தன,
பிறகு
தூய்மையற்றதாக
ஆகி
விடுகின்றது.
தூய்மையற்ற
நிலை
அடைந்தவுடன்
இறைதந்தையை
அழைக்கின்றனர்,
எங்களை
விடுதலை
செய்யுங்கள்,
துக்கத்திலிருந்து காப்பாற்றுங்கள்
என
வேண்டுகின்றனர்.
விடுதலை செய்வதும்,
பாவனமாக்குவதும்
இரண்டும்
வெவ்வேறு
விசயங்களாகும்.
யார்
மூலமாகவோ
பதீத
நிலை அடைந்தனர்,
எனவே,
பாபா
வாருங்கள்,
விடுதலையும்
செய்யுங்கள்,
பாவனமாகவும்
ஆக்குங்கள்,
இங்கிருந்து சாந்திதாமம்
அழைத்துச்
செல்லுங்கள்,
அமைதிக்கான
வரம்
கொடுங்கள்
எனக்
கேட்கின்றனர்.
இங்கு
அமைதியாக இருக்க
முடியாது,
அமைதியானது
சாந்திதாமத்தில்
மட்டுமே
இருக்கும்,
என
தந்தை
புரிய
வைக்கின்றார்.
சத்யுகத்தில்
ஒரு
தர்மம்,
ஒரு
அரசாங்கம்
இருந்தபோது
அமைதி
இருக்கும்,
எந்த
குழப்பமும்
இல்லை.
இங்கு மனிதர்கள்
அசாந்தியின்
காரணமாக
தொல்லை
அடைகின்றனர்.
ஒரே
வீட்டிற்குள்
எத்தனை
சண்டைகள் ஏற்படுகிறது.
கணவன்
-
மனைவிக்கு
இடையே
சண்டை
ஏற்பட்டால்
தாய்,
தந்தை,
குழந்தைகள்,
சகோதரன்,
சகோதரி
அனைவரும்
தொல்லை
அடைகின்றனர்.
அசாந்தியான
மனிதர்கள்
எங்கு
சென்றாலும்
அசாந்தியைப் பரப்புவார்கள்,
ஏனென்றால்
அசுர
சுபாவம்
அல்லவா!
சத்யுகம்
சுகமான
உலகம்
என
உங்களுக்குத்
தெரியும்.
அங்கு
சுகம்,
சாந்தி
இரண்டும்
இருக்கும்.
பரந்தாமத்தில்
அமைதி
மட்டுமே
இருக்கும்,
எனவே
இனிமையான,
அமைதியான
வீடு
என
அழைக்கப்படுகிறது.
உங்களுக்கு
முக்தி
வேண்டுமெனில்
தந்தையை
நினைவு
செய்யுங்கள்
என
முக்திதாமம்
வேண்டுபவர்களுக்கு
இதனை
மட்டும்
புரிய
வையுங்கள்.
முக்திக்குப்
பிறகு
ஜீவன்முக்தி
அவசியம்
ஏற்படும்.
முதலில் ஜீவன்
முக்தியில்
இருந்து
பிறகு
ஜீவன் பந்தனத்தில்
வருகின்றனர்.
பாதிப்பாதி
கால
அளவாகும்.
சதோபிரதானத்திலிருந்து சதோ,
இரஜோ,
தமோ நிலைக்கு
அவசியம்
வர
வேண்டும்.
கடைசியில்
ஓரிரு
பிறவிகள்
எடுப்பவர்களால்
அப்படியென்ன
சுகம்,
துக்கத்தை
அனுபவிக்க
முடியும்?
நீங்கள்
தான்
முழுமையாக
அனுபவம்
செய்கிறீர்கள்.
இத்தனை
பிறவிகள் சுகத்தையும்,
இத்தனை
பிறவிகள்
துக்கத்தையும்
அடைகின்றோம்
என்பதை
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
மற்ற தர்மங்கள்
புது
உலகில்
வர
முடியாது,
அவர்களுடைய
பங்கு
பிற்காலத்தில்தான்
ஏற்படுகிறது,
புதிய
கண்டமாக இருக்கும்போது
அவர்களுக்கு
அது
புதிய
உலகம்
போன்று
இருக்கும்.
புத்த
கண்டம்,
கிறிஸ்துவ
கண்டம் புதியது
போல்
இருந்ததல்லவா!
அவர்களும்
சதோ,
இரஜோ,
தமோ
அடைந்தாக
வேண்டும்.
மரத்திலும் அவ்வாறு
ஏற்படுமல்லவா!
கொஞ்சம்
கொஞ்சமாக
வளர்ச்சியடையும்.
முதலில் உருவாகி
பிறகு
கீழே
வந்து விடும்.
மரத்தில்
புதுப்புது
இலைகள்
எவ்வாறு
உருவாகும்
எனப்
பார்த்திருப்பீர்கள்
அல்லவா!
சின்னஞ்சிறிய பசுமையான
இலைகள்
முளைத்து
பிறகு
மலர்கள்
உருவாகும்.
புதிய
மரம்
மிகவும்
சிறியதாக
இருக்கும்.
புதிய விதைகள்
தூவப்பட்டு
பிறகு
நன்றாக
பராமரிக்க
வில்லையெனில்
பட்டுப்
போய்
விடும்.
நீங்களும்
நன்றாகப் பராமரிக்கவில்லையென்றால்
இந்த
(தர்மத்தின்)
மரம்
வாடிப்
போய்
விடும்.
தந்தை
வந்து
மனிதனிருந்து தேவதையாக
ஆக்குகின்றார்
பிறகு
இதிலும்
வரிசைப்படி
ஆகின்றனர்.
இராஜ்யம்
உருவாகின்றது
அல்லவா!
நிறைய
பேர்
தோல்வியடைகின்றனர்.
குழந்தைகளின்
நிலையைப்
பொருத்து
தந்தையின்
அன்பு
கிடைக்கின்றது.
சில
குழந்தைகளுக்கு
வெளிப்படையாக
அன்பு
செலுத்த
வேண்டியுள்ளது.
பாபா
நாங்கள்
தோல்வி
அடைந்து,
பதீதமாகி
விட்டோம்
என
சிலர்
எழுதுகின்றனர்.
அவர்களை
யார்
கை
தூக்கி
விட
முடியும்,
அவர்கள்
தந்தையின்
உள்ளத்தில்
அமர
முடியாது.
தூய்மையானவர்களுக்கே
பாபா
ஆஸ்தி
கொடுக்க
முடியும்.
ஆரம்பத்தில் ஒவ்வொருவரிடமும்
முழு
விபரத்தைக்
கேட்டு
கணக்குகள்
வாங்கப்பட்டது.
எப்படி
மனநிலையோ
அதற்கேற்ற அன்பு
கிடைத்தது.
மேலோட்டமாக
அன்பு
செலுத்தப்பட்டது,
ஆனால்
முற்றிலும்
புத்தியற்றவராக,
சேவை செய்யாதவராக
இருக்கிறனர்
என
உள்ளுக்குள்
தெரியும்.
சிந்தனை
வரத்தான்
செய்யுமல்லவா!
அஞ்ஞான உலகில்
கூட
மகன்
நன்றாக
சம்பாதித்தால்
தந்தை
மிகவும்
அன்பான
சந்திப்பார்.
அந்தளவு
சம்பாதிக்கவில்லை யெனில்
தந்தையின்
அன்பு
அந்தளவு
ஏற்படாது,
இங்கும்
அப்படித்தான்
உள்ளது.
குழந்தைகள்
வெளியே சென்று
சேவை
செய்கின்றார்கள்
அல்லவா!
எந்த
தர்மத்தைச்
சேர்ந்தவராக
இருந்தாலும்
அவர்களுக்குப்
புரிய வைக்க
வேண்டும்.
தந்தையை
விடுவிப்பவர்
எனக்
கூறப்படுகிறதல்லவா!
விடுவிப்பவர்
மற்றும்
வழிகாட்டி யார்,
அவருடைய
அறிமுகத்தைக்
கொடுக்க
வேண்டும்.
அனைவருக்கும்
மேலான
(சுப்ரீம்)
இறை
தந்தை வந்து
அனைவரையும்
விடுவிக்கின்றார்.
நீங்கள்
தூய்மையின்றி
எவ்வளவு
பதீதமாகிவிட்டீர்கள்
என
தந்தை கூறுகின்றார்.
இப்போது
என்னை
நினைவு
செய்யுங்கள்,
தந்தை
சதாகாலமும்
சுத்தமாக
இருக்கின்றார்.
மற்ற அனைவரும்
தூய்மையாக
இருந்து
பிறகு
தூய்மையற்றவராக
ஆகின்றனர்.
மறுபிறவிகள்
எடுத்து
கீழே இறங்குகின்றனர்.
இந்த
நேரம்
அனைவரும்
பதீதமாக
இருப்பதினால்
தந்தை
அறிவுரை
தருகின்றார்,
குழந்தைகளே
!
நீங்கள்
என்னை
நினைவு
செய்தால்
பாவனமாவீர்கள்.
இப்போது
மரணம்
எதிரிலேயே
உள்ளது.
பழைய உலகத்தின்
இது
கடைசி
நேரமாகும்.
மாயாவின்
ஆடம்பரம்
எவ்வளவு
இருக்கிறது,
எனவே
மனிதர்கள் இதனை
சொர்க்கம்
என
நினைக்கின்றனர்.
விமானம்,
மின்சாரம்
போன்றவகைகள்
எவ்வளவு
இருக்கிறது,
இவை
அனைத்தும்
மாயாவின்
ஆடம்பரங்கள்,
இவை
முடிந்து
விடும்.
பிறகு
சொர்க்கத்தின்
ஸ்தாபனை ஏற்படும்.
இந்த
மின்சாரம்
போன்றவைகள்
அனைத்தும்
சொர்க்கத்தில்
வரும்.
இதைப்
பற்றி
நன்கு
தெரிந்தவர்கள் அங்கு
தேவைப்படுவார்கள்
அல்லவா!
இல்லையெனில்
சொர்க்கத்தில்
இவை
எப்படி
வரமுடியும்?
உங்களிடத்தில் மிகவும்
நல்ல
கலை
நுட்பம்
தெரிந்தவர்கள்
வருவார்கள்.
உங்களுடைய
பிரஜைகளாக
வருவார்கள்,
அவர்கள் இராஜ்யத்தில்
வரமாட்டார்கள்.
இன்ஜினியரிங்
படித்த
நல்ல
திறமையானவர்கள்
உங்களிடம்
வருவார்கள்.
இந்த நவீனக்
கலைகள்
வெளிநாட்டிலிருந்து இங்கு
வருகின்றது.
ஆக
நீங்கள்
அவர்களுக்கும்
சிவபாபாவின் அறிமுகத்தைக்
கொடுக்க
வேண்டும்.
தந்தையை
நினைவு
செய்யுங்கள்.
நீங்களும்
யோகத்தில்
இருப்பதற்கு மிகவும்
முயற்சி
செய்ய
வேண்டும்,
இதில்
தான்
மாயாவின்
புயலும்
அதிகமாக
வருகிறது.
மனதால்
என்னை மட்டுமே
நினைவு
செய்யுங்கள்
என்று
மட்டுமே
தந்தை
கூறுகின்றார்,
இது
நல்ல
விசயம்
அல்லவா!
கிறிஸ்துவும் அவருடைய
படைப்புதான்,
பரமாத்மா
மட்டுமே
படைப்பவர்
ஆவார்,
மற்ற
அனைவரும்
படைப்புக்கள்.
ஆஸ்தியானது
படைப்பவர்
மூலமாகவே
கிடைக்கிறது.
இம்மாதிரியான
நல்ல
விசயங்களை
எழுதிக்
கொள்ள வேண்டும்.
அனைவரையும்
துக்கத்திலிருந்து விடுவிப்பதே
தந்தையின்
முக்கிய
கடமையாகும்,
அவர்தான்
சுகதாமம் மற்றும்
சாந்திதாமத்தின்
கதவுகளைத்
திறக்கின்றார்.
ஹே!
விடுவிப்பவரே,
துக்கத்திலிருந்து
விடுவித்து
எங்களை சாந்திதாமம்,
சுகதாமத்திற்கு
அழைத்துச்
செல்லுங்கள்
என
அவரை
அழைக்கின்றனர்.
இங்கு
சுகதாமம் இருந்தபொழுது
மற்ற
ஆத்மாக்கள்
சாந்திதாமத்தில்
இருப்பார்கள்.
தந்தையே
சொர்க்கத்தின்
கதவுகளைத் திறக்கின்றார்.
ஒன்று
புதிய
உலகிற்கான
கதவு,
இரண்டாவது
சாந்திதாமத்தின்
கதவு
இவ்விரண்டையும்
திறக்கின்றார்.
எந்த
ஆத்மாக்கள்
தூய்மையற்றதாகி
விட்டனவோ
அவர்களுக்கு
தந்தை
ஸ்ரீமத்
தருகின்றார்,
தன்னை ஆத்மா
எனப்
புரிந்து
என்னை
நினைவு
செய்தால்
உங்களுடைய
பாவங்கள்
நீங்கி
விடும்.
யாரெல்லாம் முயற்சி
செய்கின்றார்களோ
அவர்கள்
தனது
தர்மத்தில்
உயர்ந்த
பதவி
அடைவார்கள்.
முயற்சி
செய்யவில்லையெனில்
குறைவான
பதவி
அடைவார்கள்.
நல்ல,
நல்ல
விசயங்களை
எழுதி வைத்துக்
கொண்டால்
சரியான
நேரத்தில்
பயன்படும்.
சிவபாபாவின்
காரியத்தை
நாங்கள்
உங்களுக்கு
சொல்கிறோம் என
கூறுங்கள்,
இறைதந்தையான
சிவனின்
செயல்களைப்
பற்றிக்
கூறுவதற்கு
இவர்கள்
யார்?
என
கேட்பார்கள்.
நீங்கள்
அனைவரும்
ஆத்ம
ரூபத்தில்
சகோதரர்கள்
என
சொல்லுங்கள்.
பிறகு
பிரஜாபிதா
பிரம்மாவின்
படைப்பாகும்
போது
சகோதரன்,
சகோதரி
ஆகின்றனர்.
இறை
தந்தையை
விடுவிப்பவர்,
வழிகாட்டி
எனக்
கூறப்படுகிறது,
அவருடைய
காரியத்தை
நாங்கள்
உங்களுக்குக்
கூறுகின்றோம்.
இறை
தந்தை
எங்களுக்கு
கூறியிருக்கிறார்,
அதையே
நாங்கள்
உங்களுக்குக்
கூறுகின்றோம்.
குழந்தைகள்
தந்தையை
வெளிப்படுத்துவர்,
இதனையும்
புரிய வைக்க
வேண்டும்.
ஆத்மா
சின்னஞ்சிறிய
நட்சத்திரமாக
இருக்கிறது,
இந்தக்
கண்களால்
பார்க்க
முடியாது.
திவ்யமான
பார்வையால்
காட்சி
ஏற்படும்,
புள்ளியாக
இருப்பதால்,
பார்ப்பதில்
என்ன
இலாபம்
இருக்கிறது.
தந்தையும்
அவ்வாறு
புள்ளியாக
இருக்கிறார்,
அவர்
பரமாத்மா
என
அழைக்கப்படுகிறார்.
ஆத்மா
ஒரே ரூபத்தில்
தான்
இருக்கிறது,
ஆனால்
அவர்
சுப்ரீம்
ஆக
இருக்கிறார்,
ஞானக்கடலாக,
ஆனந்தக்கடலாக,
விடுவிப்பவராக
மற்றும்
வழிகாட்டியாக
இருக்கிறார்.
அவருக்கு
அதிகமாக
மகிமை
செய்யப்பட
வேண்டும்.
தந்தை
வரும்
போதுதான்
அனைவரையும்
அழைத்துச்
செல்ல
முடியுமல்லவா!
அவர்
வந்து
ஞானம்
தருவார்.
ஆத்மா
எந்தளவு
சிறிய
புள்ளியாக
இருக்கிறதோ
அந்தளவே
நானும்
இருக்கின்றேன்.
ஞானத்தையும்
ஒரு சரீரத்தில்
பிரவேசமாகிக்
கொடுக்கின்றேன்.
ஆத்மாவின்
அருகில்
வந்து
அமர்கின்றேன்,
என்னிடத்தில்
சக்தி இருக்கிறது,
சரீரம்
கிடைத்தவுடன்
அதிகாரம்
வந்து
விடுகிறது.
இவருடைய
சரீரத்தின்
மூலம்
வந்து
புரிய வைக்கின்றேன்,
இவரைத்தான்
ஆதாம்
எனக்
கூறப்படுகிறது.
ஆதாம்
என்பவரே
முதல்
மனிதராவார்.
மனித வம்சம்
ஏற்படுகிறதல்லவா!
இவர்
தாய்
-
தந்தையாகவும்
ஆகின்றார்,
இவர்
மூலமாக
படைப்பு
உருவாகின்றது,
இவர்
பழைய
நிலையிலிருப்பதால் தத்தெடுக்கப்படுகிறது,
இல்லையெனில்
பிரம்மா
எங்கிருந்து
வர
முடியும்?
பிரம்மாவின்
தந்தை
பெயரை
யாரேனும்
கூறமுடியாதல்லவா!
பிரம்மா,
விஷ்ணு,
சங்கர்
இவர்கள்
அனைவரும் யார்
மூலமாகவோ
படைக்கப்பட்டவர்கள்
தானே!
ஆக
படைப்பவர்
ஒருவர்
மட்டுமே,
தந்தை
இவரை
தத்தெடுத்து இருக்கிறார்,
இதனை
சிறிய
குழந்தைகள்
கூறினால்,
இது
மிகப்
பெரிய
ஞானமாக
இருக்கிறது
எனக்
கூறுவார்கள்.
எந்தக்
குழந்தைகளுக்கு
நன்கு
தாரணை
ஏற்படுகிறதோ
அவர்களுக்கு
மிகவும்
மகிழ்ச்சி
இருக்கும்,
ஒருபோதும்
சோர்வு
ஏற்படாது.
யாரேனும்
புரிந்து
கொள்ளாமல்
இருந்தால்
சோம்பலை
முறித்துக்
கொள்வார்கள்.
இங்கு
உங்களுக்கு
ஒருபோதும்
சோம்பல்
வரக்கூடாது.
வருமானம்
ஏற்படும்
நேரத்தில்
ஒருபோதும்
சோம்பல் வராது.
வாடிக்கையாளர்
வரவில்லையெனில்,
வியாபாரம்
மந்தமாக
இருக்கும்,
சோம்பல்
ஏற்படும்.
இங்குகூட தாரணை
ஏற்படாமல்
போய்விடுகிறது.
சிலருக்கு
முற்றிலும்
புரியவில்லை,
ஏனென்றால்
தேக
அபிமானம் இருக்கிறது.
ஆத்ம
அபிமானியாக
அமர
முடியாமல்
வெளி
விசயங்கள்
ஏதாவது
நினைவில்
வருகின்றன.
அவர்களால்
முக்கிய
விசயங்களைக்கூட
குறித்துக்
கொள்ள
முடியவில்லை.
இந்த
விசயங்கள்
மிகவும்
நன்றாக இருக்கிறது
என
திறமையான
புத்தி
உடையவர்கள்
உடனே
குறித்துக்
கொள்கின்றனர்.
படிப்பவர்களின் நடைமுறைகளையும்
ஆசிரியர்
பார்ப்பார்கள்
அல்லவா!
திறமையான
ஆசிரியரின்
கவனம்
எல்லா
பக்கமும் செல்லும்,
அப்பொழுதுதானே
படிப்பிற்கான
சான்றிதழ்
வழங்க
முடியும்.
நல்ல
நன்னடத்தைக்கான
சான்றிதழும் கொடுக்கப்படுகிறது,
எவ்வளவு
ஆப்சென்ட்,
என்பது
பார்க்கப்படும்.
இங்கு
வந்து
அமர்ந்தாலும்
எதையும் புரியாமல்
சிலர்
இருக்கின்றனர்,
தாரணை
இல்லை.
புத்தி
மந்தமாக
இருக்கிறது,
தாரணை
ஆவதில்லை
என சிலர்
கூறுகின்றனர்,
ஆக
பாபா
என்ன
செய்ய
முடியும்?
இது
உங்களுடைய
கர்மத்தின்
கணக்கு,
வழக்குகளாகும்.
தந்தை
ஒரே
மாதிரியான
முயற்சியே
செய்ய
வைக்கின்றார்.
உங்களுக்கு
அதிர்ஷ்டம்
இல்லையெனில்
என்ன செய்ய
முடியும்!
பள்ளியில்
படிப்பவர்களில்
சிலர்
தேர்ச்சியும்,
சிலர்
தோல்வியும்
அடைகின்றனர்.
இங்கு எல்லையற்ற
படிப்பினை
எல்லையற்ற
தந்தை
கற்பிக்கின்றார்.
வேறு
தர்மத்தை
சேர்ந்தவர்கள்
கீதையின் விசயங்களைப்
புரிந்து
கொள்ள
மாட்டார்கள்.
தேசத்தைப்
பொருத்து
புரிய
வைக்க
வேண்டும்.
முதலில் உயர்ந்ததிலும்
உயர்ந்த
தந்தையின்
அறிமுகத்தைக்
கொடுக்க
வேண்டும்.
அவர்
எப்படிப்பட்ட
விடுவிப்பவராக,
வழிகாட்டியாக
இருக்கின்றார்.
சொர்க்கத்தில்
இந்த
விகாரங்கள்
இருப்பதில்லை.
இந்த
நேரம்
சாத்தானின் இராஜ்யமாக
இருக்கிறது.
பழைய
உலகமாக
இருக்கிறது,
இதைப்
பொற்கால
உலகம்
எனக்
கூறமுடியாது.
புதிய உலகமாக
இருந்தது,
இப்போது
பழையதாகி
விட்டது.
எந்தக்
குழந்தைகளுக்கு
சேவையில்
ஆர்வம்
இருக்கிறதோ அவர்கள்
இந்த
விசயங்களைக்
குறித்துக்
கொள்ள
வேண்டும்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
தேடிக்கண்டெடுக்கப்பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு,
தாயும் தந்தையுமான
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகளும்,
காலை
வணக்கமும்
!
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
படிப்பில்
மிகவும்
வருமானம்
இருக்கிறது,
எனவே,
மிகுந்த
மகிழ்ச்சியோடு
வருமானம்
சம்பாதிக்க வேண்டும்.
படிக்கும்
நேரத்தில்
சோம்பல்
அடைவது,
புத்தியோகம்
அங்குமிங்கும்
அலைவது
கூடாது.
விசயங்களைக்
குறித்துக்
கொண்டு
தாரணை
செய்ய
வேண்டும்.
2.
தூய்மையாகி
தந்தையின்
உள்ளப்பூர்வமான
அன்பை
அடைவதற்கான
அதிகாரி
ஆக
வேண்டும்.
சேவையில்
திறமைசாலியாக வேண்டும்,
நல்ல
முறையில்
வருமானம்
செய்து,
செய்விக்க
வேண்டும்.
வரதானம்:
சுய
நன்மையோடு
கூடவே
பரோபகாரி
ஆகக்கூடிய
மாயாஜீத்,
வெற்றியாளர்
ஆகுக.
இது
வரையிலும்
சுய
நன்மையில்
அதிக
சமயம்
சென்று
கொண்டிருக்கிறது.
இப்போது
பரோபகாரி
(பிறர்க்கு
உதவி
செய்பவர்)
ஆகுங்கள்.
மாயாஜீத்,
வெற்றியாளராக
ஆவதோடு
கூடவே
சர்வ
கஜானாக்களையும் உருவாக்குபவர்
ஆகுங்கள்.
அதாவது
ஒவ்வொரு
கஜானாவையும்
காரியத்தில்
ஈடுபடுத்துங்கள்.
குஷியின் கஜானா,
சாந்தியின்
கஜானா,
சக்திகளின்
கஜானா,
ஞானத்தின்
கஜானா,
குணங்களின்
கஜானா,
சகயோகம் கொடுப்பதற்கான
கஜானாவைப்
பகிர்ந்தளியுங்கள்
மற்றும்
அதிகப்
படுத்துங்கள்.
இப்போதே
உருவாக்குபவர் என்ற
ஸ்திதியை
அனுபவம்
செய்வீர்களானால்,
அதாவது
பரோபகாரி
ஆவீர்களானால்,
அப்போது
அநேக ஜென்மங்களுக்கு
உலக
இராஜ்ய
அதிகாரி
ஆவீர்கள்.
சுலோகன்:
விஷ்வ
கல்யாணகாரி
ஆக
வேண்டுமானால்
அனைத்து
பலவீனங்களையும் சதா
காலத்துக்குமாக
விடை
கொடுத்து
விடுங்கள்.
ஓம்சாந்தி