சகல எல்லைக்குட்பட்ட ஆசைகளுக்கும் அப்பால் செல்பவரே, காமத்தை வென்றவர் ஆவார்.
பாப்தாதா தனது சிறிய, மேன்மையான, சந்தோஷ உலகைப் பார்க்கிறார். ஒருபுறம், மிகப்பெரிய உருசியற்ற உலகம் உள்ளது. மறுபுறம், ஒரு சிறிய, சந்தோஷமான உலகம் உள்ளது. இந்தச் சந்தோஷ உலகில், சந்தோஷமும் அமைதியும் நிறைந்த பிராமண ஆத்மாக்கள் இருக்கிறார்கள். ஏனெனில், தூய்மையும் சுத்தமும் மிக்க இந்த வாழ்க்கையே சந்தோஷமான, அமைதிநிறைந்த வாழ்க்கையின் அடிப்படை ஆகும். எங்கு தூய்மையும் சுத்தமும் உள்ளதோ, அங்கு துன்பத்தின் அல்லது அமைதியின்மையின் எந்தவொரு பெயரோ அல்லது சுவடோ இருக்க முடியாது. இந்தச் சிறிய, சந்தோஷமான உலகம் தூய்மையின் கோட்டைக்குள் உள்ளது. உங்களின் எண்ணங்களிலேனும் நீங்கள் இந்தத் தூய்மை என்ற கோட்டைக்கு வெளியே காலடி எடுத்துவைத்தால், நீங்கள் துன்பத்தினதும் அமைதியின்மையினதும் ஆதிக்கத்திற்கு உள்ளாகுவீர்கள். உங்களின் புத்தியின் பாதம் இந்தக் கோட்டைக்குள்ளே இருந்தால், உங்களின் எண்ணங்களில் மட்டுமன்றி, உங்களின் கனவுகளிலேனும் துன்பம் அல்லது அமைதியின்மையின் எந்தவொரு அலையும் இருக்க முடியாது. துன்பம் அல்லது அமைதியின்மையின் சிறிதளவு அனுபவம் இருந்தாலும், ஏதோவொரு வகையான துய்மையின்மையின் ஆதிக்கம் நிச்சயமாக உள்ளது. தூய்மை என்றால் காமத்தை வென்று அதனால் உலகை வெல்வது மட்டுமல்ல. ஏனெனில், எல்லைக்குட்பட்ட ஆசைகளும் காம விகாரத்தின் படைப்புக்களே. காமத்தை வெல்லுதல் என்றால், சகல ஆசைகளையும் வெற்றி கொள்பவர் என்று அர்த்தம். ஏனெனில், ஒவ்வொரு ஆசைக்கும் பெரியதொரு சந்ததி உள்ளது. ஒன்று, பௌதீக உடமைகளின் மீதான ஆசை. இரண்டாவது ஆசை, மனிதர்களிடமிருந்து எல்லைக்குட்பட்ட எதையும் பெறுகின்ற ஆசை. மூன்றாவது, உறவுமுறைகளை நிறைவேற்றவதில் பல வகையான எல்லைக்குட்பட்ட ஆசைகள் தோன்றுகின்றன. நான்காவதாக, சேவை செய்யும் நோக்கில், எல்லைக்குட்பட்ட ஆசைகளும் தோன்றுகின்றன. இந்த நான்கு வகையான ஆசைகளையும் முடிப்பதெனில், எல்லா வேளைக்கும் துன்பத்தையும் அமைதியின்மையையும் வெற்றிகொள்ளுதல் என்று அர்த்தம். இப்போது உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் இந்த நான்கு வகையான ஆசைகளையும் முடித்துவிட்டேனா? ஏதாவது அழிகின்ற விடயங்கள் என்னைக் கவர்ந்தால், அது நிச்சயமாக ஆசையெனும் வடிவில் உள்ள பற்றே ஆகும். நீங்கள் வார்த்தைகளை மாற்றி, இராஜரீகமான முறையில், ‘எனக்கு இது தேவையில்லை, ஆனால் எனக்கு இது விருப்பம்’ என்று சொல்கிறீர்கள். ஏதாவதொரு பொருளில் அல்லது ஒரு மனிதரில் உங்களுக்கு விசேடமான கவர்ச்சி ஏற்பட்டால், அந்தக் குறிப்பிட்ட பொருள் அல்லது அந்த நபர் உங்களுக்குப் பிடித்திருந்தால், அது ஓர் ஆசை என்றே அர்த்தம். அது ஓர் ஆசை. உங்களுக்கு அனைத்தையும் அனைவரையும் பிடிக்கும் என்று சொல்வது சரியானது. ஆனால், குறிப்பிட்ட பொருளை அல்லது நபரைப் பிடிக்கும் என்று சொல்வது தவறானது. அது இராஜரீகமான ஆசையின் வடிவம் ஆகும்.
நீங்கள் யாராவது ஒருவரின் சேவையை, ஒருவரின் பராமரிப்பை, நற்குணங்களை, முயற்சியை, துறவறத்தை அல்லது சுபாவத்தை விரும்பினால், அந்த நல்லதின் நறுமணத்தை அல்லது அந்த நல்லதை உங்களுக்குள் கிரகிப்பது வேறு விடயம். ஆனால், அவரின் நல்ல விடயங்களால் குறிப்பாக அவரை மட்டும் பிடிக்கும் என நினைப்பது வேறு விடயம். ஏனெனில், அந்த நல்ல விடயங்கள் பின்னர் ஆசையாக மாறிவிடும். அது ஓர் ஆசை. அதன்பின்னர், உங்களால் துக்கத்திற்கு அல்லது அமைதியின்மைக்கு முகங்கொடுக்க முடியாதிருக்கும். ஒன்று, அவரின் நல்ல விடயங்களால் நீங்கள் நல்லவர் ஆகுவதை நீங்களே தடுப்பீர்கள். மற்றையது, பகை உணர்வும் உங்களைக் கீழே கொண்டுவந்துவிடும். இவையும் உங்களின் சந்தோஷத்தையும் அமைதியையும் முடித்துவிடும். அதன்பின்னர், உங்களின் மனம் சதா குழப்பத்திலேயே இருக்கும். மற்றவர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுவதன் அடையாளங்கள், பற்றும் அடிமைத்தனமும் ஆகும். அதேபோன்று, பொறாமை அல்லது பகை உணர்வுகளைக் கொண்டிருப்பதன் அடையாளம், உங்களை நிரூபிப்பதற்கு முயற்சி செய்வதும் பிடிவாதமாக இருத்தலும் ஆகும். இந்த இரண்டு வகையான உணர்வுகளாலும் எவ்வளவு நேரமும் சக்தியும் வீணாக்கப்படுகிறது என்பதை உணர மாட்டீர்கள். இரண்டும் அதிகளவு இழப்பை ஏற்படுத்தும். அவை உங்களுக்கும் துக்கத்தைக் கொடுப்பதுடன், மற்றவர்களுக்கும் துக்கத்தைக் கொடுக்கும். இத்தகைய வேளையில், இத்தகைய ஆத்மாவிடமிருந்து வரும் உச்சாடனம்: நான் துன்பத்தை எடுத்து, துன்பத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே ஆகும். என்ன நிகழ்ந்தாலும், நான் இதையே செய்ய வேண்டும். அந்த வேளையில் அவர்களின் ஆசைகளே பேசுகின்றன. அந்த வேளையில் பிராமண ஆத்மா பேசுவதில்லை. ஆகவே, இந்த இராஜரீகமான ஆசைகளை வெற்றி கொள்ளுங்கள். இந்த ஆசைகளுக்கு அப்பால் சென்று, ஆசைகளின் அறிவே இல்லாத ஸ்திதியில் இருங்கள்.
இரண்டு வகையான உணர்வுகளினாலும், நீங்கள் நிச்சயமாக இதைச் செய்து காட்டுவேன் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டால், யாருக்கு நீங்கள் செய்து காட்டப்போகிறீர்கள்? தந்தைக்கா அல்லது பிராமணக் குடும்பத்திற்கா? நீங்கள் யாருக்கு அதைக் காட்டுவீர்கள்? அவ்வாறாயின், அதைச் செய்து காட்டுவதாக மட்டும் நினைக்காமல், வீழ்வதைக் காட்டுவதாக நினையுங்கள். இந்த அற்புதத்தையா நீங்கள் செய்து காட்டப் போகிறீர்கள்? வீழ்வதையா நீங்கள் மற்றவர்களுக்குப் பெருமையாகக் காட்டப் போகிறீர்கள்? இந்த சேவையைச் செய்வதன் மூலம் நான் செய்து காட்டுவேன், பெயரைப் பெருமைப்படுத்துவதன் மூலம் நான் செய்து காட்டுவேன் என்ற எல்லைக்குட்பட்ட பேறுகளின் போதை இருக்கும்போது, இந்த வார்த்தைகள் இராஜரீகமானவையா எனச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் சிங்கங்களின் மொழியைப் பேசுகிறீர்கள். ஆனால் செம்மறியாடுகள் போல் ஆகிவிடுகிறீர்கள். தற்காலத்தில், புலி, யானை, இராவணன் அல்லது இராமர் போன்ற முகமூடிகளை மனிதர்கள் அணிகிறார்கள். எனவே, இங்கும் மாயை புலியின் முகமூடியை அணிந்து கொள்கிறாள். ‘நான் நிச்சயம் இதைச் செய்து காட்டுவேன். நான் இதைச் செய்வேன்.’ எவ்வாறாயினும், மாயை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, ஒரு செம்மறியாடு போல் ஆக்கிவிடுகிறாள். ‘எனது’ என்ற உணர்வைக் கொண்டிருத்தல் என்றால், ஏதாவதொரு வகையான எல்லைக்குட்பட்ட ஆசையின் ஆதிக்கத்திற்கு உட்படுதல் என்று அர்த்தம். யுக்தியுக்த மொழியைப் பேசுங்கள். யுக்தியுக்த உணர்வுகளைக் கொண்டிருங்கள். இது புத்திசாலித்தனம் இல்லை. ஆனால், ஒவ்வொரு கல்பத்திலும் தோல்வியை அனுபவம் செய்வதுடன், சூரிய வம்சத்திற்குப் பதிலாக, சந்திர வம்சத்திற்குரியவர் ஆகுதல் என்று அர்த்தம். அதன்பின்னர் நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் சந்திர வம்சத்திற்குரிய பாகத்தையே கொண்டிருப்பீர்கள். எனவே, இது தோல்வியா அல்லது புத்திசாலித்தனமா? இத்தகைய புத்திசாலித்தனத்தைக் காட்டாதீர்கள். அகங்காரம் அடையாதீர்கள். எவரையும் அவமதிக்காதீர்கள். இந்த இரண்டு உணர்வுகளும் நீங்கள் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருப்பதில் இருந்து தொலைவில் கொண்டு சென்றுவிடும். எனவே, சோதித்துப் பாருங்கள்: சிறிதளவேனும் அகங்காரமோ அல்லது அவமதிப்பிற்கு உள்ளான உணர்வும் இல்லையல்லவா? எங்கு அகங்காரம் அல்லது அவமதிக்கப்பட்ட உணர்வு உள்ளதோ, அந்த நபரால் சுயமரியாதை ஸ்திதியில் ஸ்திரமாக இருக்க முடியாது. சுயமரியாதை உங்களை சகல ஆசைகளில் இருந்தும் அப்பால் நகரச் செய்கிறது. அப்போது உங்களால் சதா சந்தோஷ உலகில் சந்தோஷ ஊஞ்சலிலும் அமைதி ஊஞ்சலிலும் ஆட முடியும். இதுவே சகல ஆசைகளையும் வென்றவராக இருப்பதுடன் உலகை வென்றவராகவும் இருத்தல் எனப்படுகிறது. எனவே, பாப்தாதா சிறிய, சந்தோஷ உலகைப் பார்த்தார். நீங்கள் ஏன் சந்தோஷ உலகை விட்டு, உங்களின் புத்தியெனும் பாதங்களால் வெளிநாடாக இருக்கும் உங்களின் சொந்த உலகிற்குள் செல்கிறீர்கள்? உங்களுடையது இல்லாத தர்மமும் உங்களுடையது இல்லாத தேசமும் எப்போதும் உங்களுக்குத் துன்பத்தையே விளைவிக்கும். உங்களின் ஆதி தர்மமும் உங்களின் ஆதி தேசமும் உங்களுக்கு சந்தோஷத்தையே கொடுக்கும். எனவே, நீங்கள் சந்தோஷக் கடலான தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் சந்தோஷ உலகை அனுபவம் செய்த ஆத்மாக்கள். நீங்கள் உரிமையுள்ள ஆத்மாக்கள். எனவே, நீங்கள் எப்போதும் சந்தோஷமாகவும் அமைதிநிறைந்தவராகவும் இருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா?
இந்தத் தேசத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த அன்பான குழந்தைகள் அனைவரும் தமது வீட்டிற்கு, தந்தையின் வீட்டிற்குத் தமது உரிமையைக் கோருவதற்காக வந்துள்ளார்கள். உரிமை உள்ள குழந்தைகளைப் பார்க்கும்போது, பாப்தாதாவும் களிப்படைகிறார். நீங்கள் சந்தோஷமாக இங்கு வந்திருப்பதைப் போல், சதா சந்தோஷமாக இருப்பதற்கான வழிமுறை, அந்த இரண்டு விடயங்களையும் உங்களின் எண்ணங்களிலேனும் துறந்து, எல்லா வேளைக்கும் பாக்கியசாலியாக ஆகுவதே ஆகும். நீங்கள் உங்களின் பாக்கியத்தைக் கோருவதற்காக வந்துள்ளீர்கள். ஆனால், உங்களின் பாக்கியத்தைக் கோருவதுடன், உங்களின் பறக்கும் ஸ்திதிக்குத் தடையாக உங்களின் மனதில் இருக்கும் எந்தவொரு பலவீனத்தையும் நீங்கள் கைவிட வேண்டும். இதைத் துறத்தல் என்றால் எதையாவது கோருதல் என்று அர்த்தம். அச்சா.
எப்போதும் சந்தோஷ உலகில் வாழ்வதுடன், சகல ஆசைகளையும் வென்றவர்களுக்கும், சகல ஆத்மாக்களுக்கும் சதா நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், சதா சுயமரியாதை என்ற ஆசனத்தில் ஸ்திரமாக இருக்கும் விசேடமான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
12/04/20 - மதுவனம் - அவ்யக்த பாப்தாதா - ஓம் சாந்தி - 25/12/85
இனிமையால் கசப்பான இடத்தையும் இனிமையானது ஆக்குங்கள்.
இன்று, அனைவரிலும் மகத்தான தந்தையான, பாட்டனார், தனது அன்பான பேரக்குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். பிரம்மா கொள்ளுப் பாட்டனார் என நினைவுகூரப்படுகிறார். அசரீரியான தந்தை பிரம்மாவைப் பௌதீக உலகிற்குக் கருவி ஆக்கியுள்ளார். மனித உலகின் படைப்பாளராக இருப்பதனால், மனித உலகின் ஞாபகார்த்தம் ஒரு விருட்சத்தின் வடிவில் காட்டப்பட்டுள்ளது. விதையானவர் மறைமுகமாக இருக்கிறார். முதலில் இரண்டு இலைகள் வெளிவருகின்றன. பின்னர் அதில் இருந்து அடிமரம் வெளிப்படுகிறது. பிரம்மா ஆதிதேவனின் ரூபத்தில் தந்தையாகவும் ஆதிதேவியின் ரூபத்தில் தாயாகவும் மரத்தின் அத்திவாரத்திற்கான கருவி ஆகுகிறார். அதில் இருந்து பிராமண அடிமரம் வெளிப்படுகிறது. பிராமண அடிமரத்தில் இருந்து பல கிளைகள் வெளிப்படுகின்றன. இதனாலேயே, பிரம்மா கொள்ளுப்பாட்டனார் என நினைவுகூரப்படுகிறார். பிரம்மாவின் அவதாரம் இடம்பெறுகிறது என்றால், தீங்கான நாட்கள் முடிந்து, நல்ல நாட்கள் ஆரம்பம் ஆகுகிறது என்று அர்த்தம். இரவு முடிகிறது. பிரம்மாவின் விடியல் (பிரம்மமுகூர்த்தம்) ஆரம்பம் ஆகுகிறது. உண்மையில், இது பிரம்மமுகூர்த்தமே. ஆனால், அவர்கள் பிரம் முகூர்த்தம் என்று சொல்கிறார்கள். எனவே, அவர்கள் பிரம்மாவை ஒரு வயதான ரூபத்தில் காட்டுகிறார்கள். பாட்டனாரான, அசரீரியான தந்தை, பேரக்குழந்தைகளான உங்களுக்குப் பல பரிசுகளைக் கொடுக்கிறார். நீங்கள் தொடர்ந்து 21 பிறவிகளுக்கு அந்தப் பரிசுகளுடன் வாழ்கிறீர்கள். அவரே அருள்பவர். அத்துடன் அவர் பாக்கியத்தை அருள்பவரும் ஆவார். அவர் உங்களுக்குத் தட்டுகளில் ஞான இரத்தினங்களைக் கொடுக்கிறார். அவர் உங்களுக்குப் பல சக்திகளின் வடிவங்களை ஒரு பொன்னான பரிசாக வழங்குகிறார். அவர் உங்களுக்கு நற்குணங்களின் அணிகலன்கள் நிறைந்த பெட்டிகளைக் கொடுக்கிறார். உங்களிடம் எத்தனை நகைப் பெட்டிகள் உள்ளன? தினமும் நீங்கள் புதிய ஆபரணங்களை அணிந்தாலும், எண்ணற்றவை உங்களிடம் இருக்கும். இந்தப் பரிசுகள் உங்களுடன் எல்லா வேளையும் இருக்கும். பௌதீகப் பரிசுகள் இங்கேயே தங்கிவிடும். ஆனால் இவையோ உங்களுடன் செல்லும். அங்கு நீங்கள் எதையும் சம்பாதிக்கத் தேவையற்ற முறையில், நீங்கள் இறை பரிசுகளால் நிரம்பி இருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து உங்களின் பரிசுகளுடன் வாழ்வீர்கள். நீங்கள் கடின உழைப்பில் இருந்து விடுபடுவீர்கள்.
நீங்கள் அனைவரும் குறிப்பாகக் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்காக வந்துள்ளீர்கள். பாப்தாதா இதைக் கிஸ்மிஸ் நாள் (உலர்ந்த திராட்சை) என்று அழைக்கிறார். கிஸ்மிஸ் நாள் என்றால் இனிமையான நாள் என்று அர்த்தம். இது சதா இனிமை ஆகுவதற்கான நாள் ஆகும். இந்தத் தினத்தில், அவர்கள் அதிகளவு இனிப்புகளை உண்பதுடன், மற்றவர்களுக்கும் இனிப்புகளைப் பகிர்ந்தளிப்பார்கள். அவர்களின் வாய்கள் குறுகிய காலத்திற்கே இனிமையாக இருக்கும். ஏனெனில், அவர்கள் இனிமையானவர்கள் ஆகினால், அவர்களின் வாயில் இருந்து எல்லா வேளையும் இனிய வார்த்தைகளே வெளிப்படும். நீங்கள் இனிப்பான எதையும் உண்ணும்போது அல்லது மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது சந்தோஷம் அடைகிறீர்கள். அதேபோன்று, இனிமையான வார்த்தைகள் உங்களைச் சந்தோஷப்படுத்துகின்றன. மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துகின்றன. எனவே, இவ்வாறு செய்து, சதா அனைவரின் வாய்களையும் இனிமையாக்குங்கள். எப்போதும் இனிமையான திருஷ்டியும் இனிமையான வார்த்தைகளும் இனிமையான செயல்களுமே இருக்க வேண்டும். இதுவே கிஸ்மிஸ் தினத்தைக் கொண்டாடுதல் என்று அர்த்தம். கொண்டாடுதல் என்றால் மற்றவர்களை இனிமையாக்குதல் என்று அர்த்தம். எவருக்கும் சில கணங்களுக்கு இனிமையான திருஷ்டியைக் கொடுங்கள். சில இனிமையான வார்த்தைகளைப் பேசுங்கள். நீங்கள் எல்லா வேளையும் அந்த ஆத்மாவை நிரம்பியவராக உணரச் செய்வீர்கள். இந்த இரண்டு விநாடிகள் இனிய திருஷ்டியும் இனிய வார்த்தைகளும் அந்த ஆத்மாவின் உலகையே மாற்றிவிடும். இந்த வெகுசில இனிமையான வார்த்தைகள் அவர்களை எல்லா வேளைக்கும் மாற்றுவதற்குக் கருவி ஆகிவிடும். கசப்பான நிலத்தையும் இனிமையாக்கக்கூடியது இனிமை என்ற நற்குணம். உங்கள் அனைவரினதும் மாற்றத்திற்கான அடிப்படையாக இருந்தது பாபாவிடமிருந்து வந்த சில இனிமையான வார்த்தைகளே. அப்படியல்லவா? இனிமையான குழந்தைகளே, நீங்கள் தூய்மையான, இனிய ஆத்மாக்கள். இந்த இனிமையான வார்த்தைகள் உங்களை மாற்றின. பாபாவின் இனிமையான திருஷ்டி உங்களை மாற்றியது. அதேபோன்று, இனிமையால் மற்றவர்களையும் இனிமையானவர்கள் ஆக்குங்கள். இந்த முறையில் உங்களின் வாய்களை இனிமை ஆக்குங்கள். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடினீர்கள், அல்லவா? இந்தப் பரிசுகளால் எல்லா வேளைக்கும் உங்களின் மடிகளை நிரப்பிக் கொண்டீர்களா? எப்போதும் இனிமை என்ற பரிசை உங்களுடன் வைத்திருங்கள். சதா இதனால் இனிமையாக இருப்பதுடன் மற்றவர்களையும் இனிமை ஆக்குங்கள். அச்சா.
எப்போதும் தமது புத்திகளை ஞான இரத்தினங்களால் நிரப்பிக் கொள்பவர்களுக்கும், சக்திகளால் சக்திசாலி ஆத்மாக்களாகி, சகல சக்திகளாலும் நிரம்பியவர்கள் ஆகுபவர்களுக்கும், எப்போதும் சகல நற்குணங்கள் என்ற அணிகலன்களால் அலங்கரிக்கப்படும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், இனிமையால் தமது வாய்களை எப்போதும் இனிப்பாக்கிக் கொள்ளும் இனிமையான குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
அவ்யக்த பாப்தாதா குமார்களைச் சந்திக்கிறார்:
1. குமார்கள் என்றால் துரித கதியில் முன்னேறுபவர்கள் என்று அர்த்தம். நீங்கள் முன்னேறும்போது, இடையில் நின்று, பின் மீண்டும் முன்னேறுவதாக இருக்கக்கூடாது. எந்தவொரு சூழ்நிலை வந்தாலும், எப்போதும் உங்களைச் சக்திசாலி ஆத்மாக்களாகக் கருதி, தொடர்ந்து முன்னேறுங்கள். சூழ்நிலைகளின் அல்லது சூழலின் ஆதிக்கத்திற்கு உட்படுபவர் ஆகாதீர்கள். ஆனால், மற்றவர்களின் மீது மேன்மையான ஆதிக்கம் செலுத்துபவர் ஆகுங்கள். மேன்மையான ஆதிக்கம் என்றால் ஆன்மீக ஆதிக்கம் என்று அர்த்தம். வேறு எந்த ஆதிக்கமும் இல்லை. நீங்கள் இத்தகைய குமார்களா? ஒரு பரீட்சையை எழுத வேண்டிய நேரத்தில் நீங்கள் ஆட்டங்காணுபவர்கள் இல்லையல்லவா? நீங்கள் உங்களின் பரீட்சையில் சித்தி எய்துவீர்கள், அல்லவா? நீங்கள் எப்போதும் தைரியசாலிகள், அல்லவா? எங்கு தைரியம் உள்ளதோ, அங்கு நிச்சயமாகத் தந்தையின் உதவி இருக்கும். குழந்தைகளுக்குத் தைரியம் இருக்கும்போது தந்தை உதவி செய்வார். ஒவ்வொரு பணியிலும் உங்களை முன்னால் வைத்திருப்பதுடன், மற்றவர்களையும் சக்திசாலிகள் ஆக்குங்கள்.
2. குமார்கள் பறக்கும் ஸ்திதியில் இருப்பவர்கள். எப்போதும் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருப்பவர்கள் மட்டுமே பறக்கும் ஸ்திதியில் இருப்பார்கள். எனவே, நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபட்டுள்ள குமார்கள். உங்களின் மனங்களின் பந்தனமும் உங்களுக்குக் கிடையாது. எனவே, குமார்களான நீங்கள் எப்போதும் சகல பந்தனங்களையுமு; முடித்து, பந்தனத்தில் இருந்து விடுபட்டவராகி, பறக்கும் ஸ்திதியில் இருக்கிறீர்களா? குமார்களான நீங்கள் உங்களின் பௌதீக சக்தியையும் உங்களின் புத்திகளின் சக்தியையும் பயனுள்ள முறையில் பயன்படுத்துகிறீர்களா? உலக வாழ்க்கையில், குமார்கள் தமது பௌதீக சக்தியையும் தமது புத்திகளின் சக்தியையும் அழிக்கும் பணிகளில் ஈடுபடுத்துகிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் இப்போது இந்தச் சக்திகளை மேன்மையான பணியில் பயன்படுத்துபவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் குழப்பத்தை விளைவிப்பவர்கள் அல்ல. ஆனால், அமைதியைத் தாபிப்பவர்கள். நீங்கள் இத்தகைய மேன்மையான குமார்களா? சிலவேளைகளில் உங்களின் உலக வாழ்க்கைக்குரிய சம்ஸ்காரங்கள் வெளிப்படுகின்றனவா? நீங்கள் அலௌகீக வாழ்க்கை வாழ்பவர்கள். அதாவது, நீங்கள் புதிய வாழ்க்கை வாழ்பவர்கள். எனவே, உங்களின் புதிய வாழ்க்கையில் பழைய விடயங்கள் இனியும் இருப்பதில்லை. நீங்கள் அனைவரும் புதிய பிறப்பு எடுத்திருக்கும் மேன்மையான ஆத்மாக்கள். உங்களை ஒருபோதும் சாதாரணமானவர்களாகக் கருதாதீர்கள். ஆனால், உங்களைச் சக்திசாலிகளாகக் கருதுங்கள். உங்களின் எண்ணங்களிலேனும் குழப்பத்திற்குள் உள்ளாகாதீர்கள். எனக்கு இன்னமும் வீணான எண்ணங்கள் இருப்பதனால், நான் என்ன செய்வது? என்ற கேள்வி உங்களுக்குள் இல்லையல்லவா? நீங்கள் பாக்கியசாலிக் குமார்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு உங்களின் பாக்கியத்தில் இருந்து தொடர்ந்து உண்பீர்கள். உங்களுக்கென பௌதீகமானதும் சூட்சுமமானதுமான வருமானம் இருப்பதனால் நீங்கள் கடினமாக உழைப்பதில் இருந்து விடுபட்டிருப்பீர்கள்.
பிரியாவிடை வேளையில் அன்பும் நினைவுகளும்:
இந்த விசேட தினத்திற்காக பாப்தாதா, இந்தத் தேசத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மடல்களையும் கடிதங்களையும் நினைவுகளையும் பெற்றுள்ளார். இந்த மகத்தான தினத்தில், இனிமையான குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் பாப்தாதா, ‘சதா இனிமையால் மேன்மையானவர்களாகி, மற்றவர்களையும் மேன்மையானவர்கள் ஆக்குங்கள்’ என்ற ஆசீர்வாதத்தை வழங்குகிறார். இந்த ஆசீர்வாதத்துடன் தொடர்ந்து முன்னேறுவதுடன் சேவையையும் முன்னேறுச் செய்வீர்களாக. சகல குழந்தைகளுக்கும், அனைவரிலும் மகத்தான தந்தையிடமிருந்து மகத்தான நினைவுகளும் அன்பான பாராட்டுக்களும் உரித்தாகட்டும். காலை வணக்கங்கள். சதா இனிமையாக இருப்பதற்குப் பாராட்டுக்கள்.