02.04.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே
!
தந்தை
ஆத்மாக்களாகிய
உங்களிடம்
ஆன்மீக
உரையாடல் செய்கிறார்.
நீங்கள்
உங்களது
வாழ்க்கையை
21
பிறவிகளுக்கு
காப்பீடு
செய்துக்
கொள்ள
(லைஃப்
இன்ஷ்யூர்)
தந்தையிடம்
வந்துள்ளீர்கள்.
உங்களது
(வாழ்க்கை)
என்றால்
நீங்கள் அமரராக
ஆகி
விடக்
கூடிய
அளவிற்கு
காப்பீடு
செய்யப்பட்டு
விடுகிறது.
கேள்வி:
மனிதர்கள்
கூட
தங்களது
"லைஃப்
இன்ஷ்யூர்"
(ஆயுள்
காப்பீடு)
செய்து
கொள்கிறார்கள் மற்றும்
குழந்தைகளாகிய
நீங்களும்
செய்து
கொள்கிறீர்கள்.
இரண்டிற்குமிடையே
உள்ள
வித்தியாசம்
என்ன?
பதில்:
மனிதர்கள்
தங்களது
ஆயூள்
காப்பீடு
(லைஃப்
இன்ஷ்யூர்)
எதற்காக
செய்விக்கிறார்கள்
என்றால் இறந்து
விட்ட
பிறகு
குடும்பத்தாருக்கு
பைசா
கிடைக்கட்டும்
என்று.
குழந்தைகளாகிய
நீங்கள்
எதற்காக
(இன்ஷ்யூர்)
காப்பீடு
செய்கிறீர்கள்
என்றால்
நாம்
21
பிறவிகளுக்கு
இறக்கவே
கூடாது,
அமரர்
ஆகி
விட வேண்டும்
என்பதற்காக.
சத்யுகத்தில்
ஒன்றும்
இன்ஷ்யூரன்ஸ்
கம்பெனிகள்
இருக்காது.
இப்பொழுது
நீங்கள் உங்கள்
(லைஃப்
இன்ஷ்யூர்)
ஆயுள்
காப்பீடு
செய்து
விடுகிறீர்கள்.
பிறகு
ஒரு
பொழுதும்
இறக்க
மாட்டீர்கள்.
இந்த
குஷி
இருக்க
வேண்டும்.
பாடல்:
இவர்
யார்
இன்று
அதிகாலையில்
வந்தார்
.. .. ..
ஓம்
சாந்தி
!
ஆன்மீகத்
தந்தை
வந்து
ஆன்மீகக்
குழந்தைகளிடம்
ஆன்மீக
உரையாடல்
நிகழ்த்துகிறார்.
தந்தை
நம்மை
இப்பொழுது
21
பிறவிகளுக்கு
மட்டுமென்ன,
40-50
பிறவிகளுக்காக
(இன்ஷ்யூர்)
காப்பீடு
செய்து கொண்டிருக்கிறார்
என்பதை
குழந்தைகளாகிய
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
அந்த
ஜனங்கள்
தாங்கள்
இறந்து
விட்டால் அவர்களது
குடும்பத்தினருக்கு
பணம்
கிடைத்து
விடும்
என்பதற்காக
இன்ஷ்யூர்
செய்கிறார்கள்.
நீங்கள்
21
பிறவிகளுக்கு
இறக்கவே
கூடாது
என்பதற்காக
இன்ஷ்யூர்
செய்கிறீர்கள்.
அமரராக
ஆக்குகிறார்
அல்லவா?
நீங்கள் அமரர்களாக
இருந்தீர்கள்.
மூலவதனம்
கூட
அமரலோகம்
ஆகும்.
அங்கு
மரணமடைவது
மற்றும்
உயிருடன் இருப்பது
என்ற
விஷயம்
இருப்பதில்லை.
அது
ஆத்மாக்கள்
வசிக்கக்
கூடிய
இடம்
ஆகும்.
இப்பொழுது
இந்த ஆன்மீக
உரையாடலை
தந்தை
தனது
குழந்தைகளிடம்
செய்கிறார்.
வேறு
யாரிடமும்
செய்வதில்லை.
எந்த ஆத்மா
தன்னை
அறிந்திருக்கிறாரோ
அவர்களிடம்
தான்
உரையாடுகிறார்.
மற்ற
வேறு
யாரும்
தந்தையின் மொழியைப்
புரிந்து
கொள்ளவும்
மாட்டார்கள்.
கண்காட்சியில்
இத்தனை
பேர்
வருகிறார்கள்.
உங்களது
மொழியைப் புரிந்து
கொள்கிறார்களா
என்ன?
யாரோ
ஒருவர்
சிறிதளவு
புரிந்து
கொள்வது
கூட
அரிது.
உங்களுக்குக்
கூட
புரிய வைத்து
புரிய
வைத்து
எத்தனை
வருடங்கள்
ஆகி
விட்டன.
இருந்தாலும்
எவ்வளவு
குறைவானோர்
புரிந்துள்ளார்கள்.
இறப்பதும்
ஒரு
நொடியில்.
புரிந்து
கொள்ள
வேண்டிய
விஷயமாகும்.
தூய்மையாக
இருந்த
ஆத்மாக்களாகிய
நாம் தான்
பதீதமாக
(தூய்மையற்றவராக)
ஆகி
உள்ளோம்.
மீண்டும்
நாம்
தூய்மையானவராக
வேண்டி
உள்ளது.
அதற்காக
(ஸ்வீட்
ஃபாதர்)
இனிமையான
தந்தையை
நினைவு
செய்ய
வேண்டும்.
அவரை
விட
(ஸ்வீட்)
இனிமையான எந்த
பொருளும்
கிடையாது.
இந்த
நினைவு
செய்வதில்
தான்
மாயையின்
தடைகள்
ஏற்படுகின்றன.
பாபா
நம்மை அமரராக
ஆக்க
வந்துள்ளார்
என்பதையும்
அறிந்துள்ளீர்கள்.
புருஷார்த்தம்
(முயற்சி)
செய்து
அமரராக
ஆகி
அமர புரிக்கு
அதிபதி
ஆக
வேண்டும்.
அமரராகவோ
எல்லோரும்
ஆகி
விடுவார்கள்.
சத்யுகத்திற்கு
அமரலோகம் என்றே
கூறப்படுகிறது.
இது
மரண
உலகம்
ஆகும்.
இது
அமர
கதை
ஆகும்.
அப்படி
இன்றி
சங்கரன்
மட்டும் பார்வதிக்கு
அமர
கதை
கூறினார்
என்பதல்ல.
அவையோ
எல்லாமே
பக்தி
மார்க்கத்தின்
விஷயங்கள்
ஆகும்.
குழந்தைகளாகிய
நீங்கள்
என்
ஒருவனிடம்
மட்டுமே
கேளுங்கள்.
என்
ஒருவனை
நினைவு
செய்யுங்கள்.
ஞானத்தை
நான்
தான்
அளிக்க
முடியும்.
நாடகத்
திட்டபடி
முழு
உலகம்
தமோபிரதானமாக
ஆகி
உள்ளது.
அமரபுரியில்
ஆட்சி
புரிவது
-
அதற்குத்
தான்
அமர
பதவி
என்று
கூறப்படுகிறது.
அங்கு
இன்ஷுரன்ஸ்
கம்பெனி கள்
ஆகியவை
இருக்காது.
இப்பொழுது
உங்கள்
(லைஃப்
இன்ஷ்யூர்)
ஆயுளை
காப்பீடு
செய்யபடுகிறது.
நீங்கள் ஒரு
பொழுதும்
இறக்க
மாட்டீர்கள்.
இது
புத்தியில்
குஷி
இருக்க
வேண்டும்.
நாங்கள்
அமரபுரிக்கு
அதிபதி ஆகிறோம்.
எனவே
அமரபுரியை
நினைவு
செய்ய
வேண்டி
உள்ளது.
மூலவதனம்
வழியாகத்
தான்
செல்ல வேண்டி
உள்ளது.
இது
கூட
மன்மனாபவ
ஆகி
விடுகிறது.
மூலவதனம்
என்பது
மன்மனாபவ.
அமரபுரி
என்பது மத்யாஜீபவ.
ஒவ்வொரு
விஷயத்திலும்
இரண்டு
எழுத்துக்கள்
தான்
வருகின்றன.
உங்களுக்கு
புத்தியில்
பதியும் வகையில்
எவ்வளவு
விதமாகப்
புரிய
வைக்கிறார்.
எல்லாவற்றையும்
விட
அதிகமான
உழைப்பு
இதில்
தான் உள்ளது.
தன்னை
ஆத்மா
என்று
நிச்சயம்
செய்ய
வேண்டும்.
ஆத்மாவாகிய
நான்
இந்த
பிறவி
எடுத்துள்ளேன்.
84
பிறவிகளின்
வெவ்வேறு
பெயர்,
ரூபம்,
தேசம்,
காலத்தில்
சுற்றியபடியே
வந்துள்ளேன்.
சத்யுகத்தில்
இத்தனை பிறவி,
திரேதாவில்
இத்தனை..
இது
கூட
நிறைய
குழந்தைகள்
மறந்து
விடுகிறார்கள்.
முக்கியமான
விஷயமே தன்னை
ஆத்மா
என்று
உணர்ந்து
ஸ்வீட்
இனிமையான
தந்தையை
நினைவு
செய்வது.
எழுந்தாலும்
அமர்ந்தாலும் புத்தியில்
இருக்கும்
பொழுது
குஷி
இருக்கும்.
யாரை
நாம்
"வாருங்கள்,
வந்து
தூய்மையாக
ஆக்குங்கள்"
என்று அரைக்கல்பமாக
நினைவு
செய்து
கொண்டிருந்தோமோ
அந்த
பாபா
மீண்டும்
வந்துள்ளார்.
மூலவதனம்
மற்றும் அமரபுரி
சத்யுகத்தில்
தூய்மையானவராக
இருப்போம்.
பக்தியில்
மனிதர்கள்
முக்தி
அல்லது
கிருஷ்ணபுரிக்கு செல்வதற்காக
புருஷார்த்தம்
(முயற்சி)
செய்கிறார்கள்.
முக்தி
என்று
கூறினாலும்
சரி
அல்லது
நிர்வாண
தாமம் என்றும்
கூறலாம்.
வானப்பிரஸ்தம்
என்ற
வார்த்தை
சரியானது.
வானபிரஸ்திகளோ
நகரத்திலேயே
இருப்பார்கள்.
சந்நியாசிகளோ
வீடு
வாசலை
விட்டு
விட்டு
காட்டிற்குச்
சென்று
விடுகிறார்கள்.
தற்காலத்தைய
வானப்பிரஸ்திகளிடம் எந்த
ஒரு
வலிமையும் இல்லை.
சந்நியாசிகளோ
பிரம்மத்தை
பகவான்
என்று
கூறி
விடுகிறார்கள்.
பிரம்ம
லோகம் என்பதில்லை.
மறு
பிறவியோ
யாருடையதுமே
நின்று
போய்
விடாது
என்பதை
இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
அவரவர்
பாகங்களை
அனைவரும்
நடிக்கிறார்கள்.
வருவது
போவது
என்ற
சக்கரத்திலிருந்து விடுபட
முடியாது.
இச்சமயம்
கோடிக்கணக்கான
மனிதர்கள்
உள்ளார்கள்.
இன்னும்
வந்து
கொண்டே
இருப்பார்கள்.
புனர்ஜென்மம்
எடுத்துக்
கொண்டே
இருப்பார்கள்.
பிறகு
முதல்
தளம்
(ஃபர்ஸ்ட்
ஃப்ளோர்)
காலி ஆகி விடும்.
மூலவதனம்
என்பது
முதல்
தளம்,
சூட்சம
வதனம்
என்பது
இரண்டாவது
தளம்.
இது
மூன்றாவது
தளம்
அல்லது இதற்கு
"கிரவுண்டு
ஃப்ளோர்"
தரைத்தளம்
என்றும்
கூறலாம்.வேறு
எந்த
தளம்
கூட
கிடையாது.
அவர்கள் நட்சத்திர
மண்டலங்களில்
கூட
உலகம்
உள்ளது
என்று
நினைக்கிறார்கள்.
அப்படி
அல்ல.
முதல்
தளத்தில் ஆத்மாக்கள்
இருக்கிறார்கள்.
மற்றபடி
மனிதர்களுக்காகவே
இந்த
உலகம்
உள்ளது.
நீங்கள்
எல்லையில்லாத
வைராக்கியம்
உடைய
குழந்தைகள்
ஆவீர்கள்.
நீங்கள்
இந்த
பழைய
உலகத்தில் இருக்கையிலும்
கூட
இந்த
கண்களால்
அனைத்தையும்
பார்த்தும்
கூட
பார்க்கக்
கூடாது.
இது
தான்
முக்கியமான புருஷார்த்தம்
(முயற்சி)
ஆகும்.
ஏனெனில்
இவை
எல்லாமே
முடிந்து
போய்
விடும்.
அப்படி
இன்றி
உலகம் அமைக்கப்படவே
இல்லை
என்பதல்ல.
அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால்
அதன்
மீது
வைராக்கியம்
ஏற்பட்டு விடுகிறது
என்றால்
முழு
பழைய
உலகத்தின்
மீது
வைராக்கியம்.
பக்தி,
ஞானம்
மற்றும்
வைராக்கியம்.
பக்திக்குப் பின்னால்
இருப்பது
ஞானம்.
பிறகு
பக்தியின்
மீது
வைராக்கியம்
ஆகி
விடுகிறது.
இது
பழைய
உலகம்
ஆகும் என்பதை
புத்தியினால்
புரிந்துள்ளீர்கள்.
இது
நமது
கடைசி
பிறவி
ஆகும்.
இப்பொழுது
எல்லோரும்
திரும்பிச் செல்ல
வேண்டும்.
சிறிய
குழந்தைகளுக்குக்
கூட
சிவபாபாவின்
நினைவூட்ட
வேண்டும்.
தப்பும்
தவறுமான உணவு
பழக்கங்கள்
போன்ற
எந்த
ஒரு
பழக்கத்தையும்
ஏற்படுத்தக்
கூடாது.
சிறிய
வயதில்
என்ன
பழக்கம் ஏற்படுத்துகிறீர்களோ
அதே
போல
பழக்கம்
ஏற்பட்டு
விடுகிறது.
தற்காலத்தில்
சகவாச
தோஷம்
மிகவுமே
அசுத்தமானது.
நல்ல
தொடர்பு
உயர்த்தும்,
தீய
தொடர்பு
வீழ்த்தும்.
இது
விகார
கடல்.
வேசியாலயம்
ஆகும்.
ஒரேஒரு
பரமபிதா பரமாத்மா
தான்
சத்தியமானவர்
ஆவார்.
"காட்
இஸ்
ஒன்"
-
கடவுள்
ஒருவரே
என்று
கூறப்படுகிறது.
அவர்
வந்து சத்தியமான
விஷயங்களைப்
புரிய
வைக்கிறார்.
ஹே
ஆன்மீக
குழந்தைகளே!
உங்களது
தந்தையாகிய
நான் உங்களிடம்
ஆன்மீகம
உரையாடல்
செய்கிறேன்
என்று
தந்தை
கூறுகிறார்.
என்னை
நீங்கள்
அழைக்கிறீர்கள் அல்லவா?
அவரே
ஞானக்
கடல்
பதீத
பாவனர்
ஆவார்.
புதிய
சிருஷ்டியின்
படைப்பு
கர்த்தா
ஆவார்.
பழைய சிருஷ்டியை
விநாசம்
செய்விக்கிறார்.
இந்த
திரிமூர்த்தியோ
பிரசித்தமாக
உள்ளது.
உயர்ந்ததிலும்
உயர்ந்தவர்
சிவன் ஆவார்.
நல்லது.
பிறகு
சூட்சும
வதனத்தில்
இருப்பவர்கள்
பிரம்மா,
விஷ்ணு
மற்றும்
சங்கரன்.
அவர்களுடைய சாட்சாத்காரம்
கூட
ஆகிறது.
ஏனெனில்
தூய்மையானவர்கள்
அல்லவா?அவர்களை
உயிரூட்டமுடையவர்களாக
(சைதன்யமாக)
இந்த
கண்களால்
பார்க்க
முடியாது.
தீவிரமாக
பக்தி
செய்தால்
பார்க்க
முடியும்.
உதாரணமாக யாராவது
அனுமாருடைய
(ஆஞ்சநேயர்)
பக்தராக
இருக்கிறார்
என்றால்,
அவருடைய
சாட்சாத்காரம்
(காட்சி)
ஆகும்.
சிவனுடைய
பக்தர்களுக்கோ
பரமாத்மா
அகண்ட
ஜோதி
சொரூபமானவர்
ஆவார்
என்று
பொய்யாக
கூறப்பட்டுள்ளது.
நானோ
இவ்வளவு
சிறிய
பிந்து
(புள்ளி)
ஆவேன்
என்று
தந்தை
கூறுகிறார்.
அவர்கள்
அகண்ட
ஜோதி
சொரூபத்தை அர்ஜுனனுக்குக்
காண்பித்தார்
என்கிறார்கள்.
அவர்
(அர்ஜுனன்)
கூறினார்,
"போதும்
என்னால்
சகித்துக்
கொள்ள முடியவில்லை".
அவருக்கு
தரிசனம்
ஆகியது.
எனவே
இது
போல
கீதையில்
எழுதப்பட்டுள்ளது.
மனிதர்கள் அகண்ட
ஜோதியின்
சாட்சாத்காரம்
ஆகியது
என்று
நினைக்கிறார்கள்.
இவை
எல்லாமே
பக்தி
மார்க்கத்தில் மகிழ்விப்பதற்கான
விஷயங்கள்
ஆகும்
என்று
இப்பொழுது
தந்தை
கூறுகிறார்.
நான்
அகண்ட
ஜோதி
சொரூபம் ஆவேன்
என்று
நானோ
கூறுவதே
இல்லை.
எப்படி
உங்களது
ஆத்மா
புள்ளி
(பிந்து)
போல
உள்ளதோ
நானும் அவ்வாறே
உள்ளேன்.
எப்படி
நீங்கள்
நாடகத்தின்
பந்தனத்தில்
உள்ளீர்களோ
அதே
போல
நானும்
நாடகத்தின் பந்தனத்தில்
கட்டுபட்டு
உள்ளேன்.
அனைத்து
ஆத்மாக்களுக்கும்
அவரவர்
பாகம்
நடிப்பதற்குக்
கிடைத்துள்ளது.
மறுபிறவியோ
அனைவரும்
எடுத்தே
ஆக
வேண்டி
உள்ளது.
வரிசைக்கிரமமாக
அனைவரும்
வந்தே
ஆக வேண்டி
உள்ளது.
முதல்
நம்பரில்
இருப்பவர்
பிறகு
கீழே
வருகிறார்.
எத்தனை
விஷயங்களை
தந்தை
புரிய வைக்கிறார்.
சிருஷ்டி
என்ற
சக்கரம்
சுற்றி
கொண்டே
இருக்கிறது
என்பது
புரிய
வைக்கப்பட்டுள்ளது.
எப்படி பகலுக்குப்
பின்
இரவு
வருகிறதோ
அதே
போல
கலியுகத்திற்குப்
பின்
சத்யுகம்,
பிறகு
திரேதா....
பிறகு
சங்கம
யுகம் வருகிறது.
சங்கம
யுகத்தில்
தான்
தந்தை
மாற்றத்தை
ஏற்படுத்துகிறார்.
யாரெல்லாம்
சதோபிரதானமானவர்களாக இருந்தார்களோ
அவர்களே
தமோபிரதானமாக
ஆகி
விட்டுள்ளார்கள்.
அவர்களே
மீண்டும்
சதோபிரதானமாக
ஆகி விடுவார்கள்.
ஹே
பதீத
பாவனரே
!
வாருங்கள்
என்று
அழைக்கவும்
செய்கிறார்கள்.
எனவே
இப்பொழுது மன்மனாபவ
என்று
தந்தை
கூறுகிறார்.
நான்
ஆத்மா
ஆவேன்.
நான்
தந்தையை
நினைவு
செய்ய
வேண்டும்.
இதை
சரியான
முறையில்
ஒருவர்
புரிந்து
கொள்வது
அரிதாக
உள்ளது.
ஆத்மாக்களாகிய
நமது
தந்தை எவ்வளவு
இனிமையானவராக
இருக்கிறார்.
ஆத்மா
தான்
இனிமையாக
இருக்கிறது
அல்லவா?
சரீரமோ
அழிந்து போய்
விடுகிறது.
பிறகு
அவரது
ஆத்மாவை
அழைக்கிறார்கள்.
அன்போ
ஆத்மாவிடம்
தான்
ஆகிறது
அல்லவா?
சம்ஸ்காரம்
ஆத்மாவில்
இருக்கிறது.
ஆத்மா
தான்
படிக்கிறது,
கேட்கிறது.
தேகமோ
முடிந்து
போய்
விடுகிறது.
நான்
ஆத்மா
அமரன்
ஆவேன்.
பிறகு
நீங்கள்
எனக்காக
ஏன்
அழுகிறீர்கள்?
இது
தேக
அபிமானம்
ஆகும் அல்லவா?
உங்களுக்கு
தேகத்தின்
மீது
அன்பு
உள்ளது.
உண்மையில்
இருக்க
வேண்டியது
ஆத்மா
மீது
அன்பு.
அழியாத
(அவினாஷி)
பொருள்
மீது
அன்பு
இருக்க
வேண்டும்.
அழியக்
கூடிய
பொருள்
மீது
அன்பு
ஏற்படுவதால் தான்
சண்டையிட்டுக்
கொள்கிறார்கள்.
சத்யுகத்தில்
இருப்பவர்கள்
(தேஹீ
அபிமானி)
ஆத்ம
உணர்வுடையவர்களாக இருப்பார்கள்.
எனவே
குஷியுடன்
ஒரு
சரீரத்தை
விட்டு
மற்றொன்றை
எடுக்கிறார்கள்.
அழுவது
புலம்புவது எதுவும்
இருக்காது.
குழந்தைகளாகிய
நீங்கள்
தங்களது
ஆத்ம
அபிமானி
ஸ்திதியில்
இருப்பதற்காக
(ஆத்ம
உணர்வுடன்
இருப்பதற்காக)
மிகவுமே
பயிற்சி
செய்ய
வேண்டும்
-
நான்
ஆத்மா
ஆவேன்,
எனது
சகோதரனுக்கு
(ஆத்மா)
தந்தையின் செய்தியைக்
கூறுகிறேன்.
எனது
சகோதரன்
இந்த
உறுப்புக்கள்
மூலமாக
கேட்கிறார்.
இப்பேர்ப்பட்ட
நிலையை அமைத்து
கொள்ளுங்கள்.
தந்தையை
நினைவு
செய்து
கொண்டே
இருந்தீர்கள்
என்றால்
விகர்மங்கள்
விநாசம் ஆகிக்
கொண்டே
இருக்கும்.
சுயம்
தன்னையும்
ஆத்மா
என்று
உணருங்கள்.
அவரையும்
ஆத்மா
என்று உணருங்கள்.
அப்பொழுது
பக்குவமான
பழக்கம்
ஏற்பட்டு
விடும்.
இது
தான்
ரகசியமான
உழைப்பு
ஆகும்.
உள் முகமாக
ஆகி
இந்த
நிலையைப்
பக்குவப்படுத்த
வேண்டும்.
எவ்வளவு
நேரம்
ஒதுக்க
முடியுமோ
அவ்வளவு இதில்
ஈடுபடுத்துங்கள்.
8
மணி
நேரம்
தொழில்
ஆகியவை
தாராளமாகச்
செய்யுங்கள்.
உறங்கவும்
செய்யுங்கள்.
மீதி
நேரம்
இதில்
ஈடுபடுத்துங்கள்.
8
மணி
நேரம்
சேர்ந்து
விட
வேண்டும்.
அப்பொழுது
உங்களுக்கு
மிகுந்த குஷி
இருக்கும்.
என்னை
நினைவு
செய்தீர்கள்
என்றால்
உங்களது
விகர்மங்கள்
விநாசம்
ஆகும்
(பாவங்கள்
அழியும்)
என்று
பதித
பாவன
தந்தை
கூறுகிறார்.
ஞானம்
உங்களுக்கு
இப்பொழுது
தான்
சங்கமத்தில்
கிடைக்கிறது.
மகிமை
முழுவதுமே
இந்த
சங்கமயுகத்தினுடையது
ஆகும்.
இப்பொழுது
தான்
தந்தை
வந்து
உங்களுக்கு ஞானத்தை
புரிய
வைக்கிறார்.
இதில்
ஸ்தூல
விஷயங்கள்
எதுவும்
கிடையாது.
நீங்கள்
இப்பொழுது
எழுதுவது அனைத்துமே
அழிந்து
போய்
விடும்.
நோட்
-
குறிப்புக்கள்
கூட
எதற்காக
எழுதுகிறீர்கள்
என்றால்,
பாயிண்ட்ஸ் குறிக்கப்பட்டு
இருக்கும்
பொழுது
நினைவில்
இருக்கும்.
வரிசைக்கிரமமாக
இருக்கிறார்கள்
அல்லவா?
முக்கியமான விஷயம்
தந்தையை
நினைவு
செய்ய
வேண்டும்
மற்றும்
சிருஷ்டி
சக்கரத்தை
நினைவு
செய்ய
வேண்டும்.
எந்த ஒரு
விகர்மமும்
(பாவம்)
செய்யக்
கூடாது.
இல்லற
விவகாரங்களில்
இருக்க
வேண்டும்.
ஆனால்
அவசியம் தூய்மையாக
ஆக
வேண்டும்.
அசுத்தமான
எண்ணங்கள்
கொண்ட
ஒரு
சில
குழந்தைகள்
இவ்வாறு
நினைக்கிறார்கள்
-
எனக்கு
இன்னாரை
மிகவும்
பிடித்துள்ளது.
இவளுடன்
நான்
கந்தர்வ
விவாகம்
செய்து
கொண்டு
விடுவேன்.
ஆனால்
கந்தர்வ
விவாகம்
எப்பொழுது
செய்விக்கப்படுகிறது
என்றால்
நண்பர்கள்
உறவினர்கள்
ஆகியோர்
மிகவும் தொல்லைப்படுத்தும்
பொழுது
அதிலிருந்து காப்பாற்றுவதற்காக
செய்விக்கப்படுகிறது.
அதற்காக
எல்லோரும்
நாங்கள் கந்தர்வ
விவாகம்
செய்வோம்
என்று
கூற
வேண்டுமா
என்ன?
அவர்கள்
ஒரு
பொழுதும்
இருக்க
முடியாது.
முதல்
நாளே
போய்
சாக்கடையில்
விழுந்து
விடுவார்கள்.
பெயர்
ரூபத்தில்
மனம்
ஈடுபட்டு
விடுகிறது.
இதுவோ மிகவுமே
மோசமான
விஷயம்
ஆகும்.
கந்தர்வ
விவாகம்
செய்வது
என்பது
ஒன்றும்
சித்தி
வீடு
அல்ல.
ஒருவர் மீது
மற்றவருக்கு
மனம்
ஈடுபட்டு
விட்டால்
கந்தர்வ
விவாகம்
செய்வோம்
என்று
கூறி
விடுகிறார்கள்.
இதில் உறவினர்கள்
மிகவுமே
எச்சரிக்கையுடன்
இருக்க
வேண்டும்.
இந்த
குழந்தை
எதற்கும்
பயனில்லை
என்று
புரிந்து கொள்ள
வேண்டும்.
யார்
மீது
மனம்
ஈடுபட்டுள்ளதோ
அவரிடமிருந்து
அகற்றி
விட
வேண்டும்.
இல்லையென்றால் பேசிக்
கொண்டே
இருப்பார்கள்.
இந்த
சபையில்
மிகவுமே
எச்சரிக்கை
கொள்ள
வேண்டி
உள்ளது.
இனி
முன்னால் போகப்
போக
மிகவுமே
சட்டப்படி
சபை
கூடும்.
இது
போன்ற
சிந்தனை
உடையவர்களை
வருவதற்கு
அனுமதிக்க மாட்டார்கள்.
எந்த
குழந்தைகள்
ஆன்மீக
சேவையில்
மும்முரமாக
இருக்கிறார்களோ,
யார்
யோகத்தில்
இருந்து
சேவை செய்கிறார்களோ
அவர்களே
சத்யுக
ராஜதானி
ஸ்தாபனை
செய்வதில்
உதவி
செய்பவர்களாக
ஆகிறார்கள்.
சேவை புரியும்
குழந்தைகளுக்கு
தந்தையினுடைய
டைரக்ஷ்ன்
(உத்தரவு)
என்னவென்றால்
(ஆராம்
ஹராம்)
ஓய்வாக இருப்பது
தீங்கானது.
யார்
நிறைய
சேவை
செய்கிறார்களோ
அவர்கள்
அவசியம்
ராஜா
ராணி
ஆவார்கள்.
யார் யார்
உழைப்பு
செய்கிறார்களோ,
தங்களுக்குச்
சமானமாக
ஆக்குகிறார்களோ,
அவர்களுக்குள்
பலமும்
இருக்கும்.
ஸ்தாபனையோ
நாடகப்படி
ஆகவே
வேண்டி
உள்ளது.
நல்ல
முறையில்
அனைத்து
பாயிண்ட்ஸ்
–
குறிப்புக்களை தாரணை
செய்து
பிறகு
சேவையில்
ஈடுபட்டு
விட
வேண்டும்.
ஓய்வு
கூட
தீங்கானது
சர்வீஸ்
-
சேவையே
சேவை!
அப்பொழுது
தான்
உயர்ந்த
பதவி
அடைவீர்கள்.
மேகங்களாக
ஆகி
வர
வேண்டும்.
பின்
(ரிஃப்ரெஷ்)
புத்துணர்வு பெற்று
சேவைக்குச்
சென்று
விட
வேண்டும்.
உங்களுடைய
சேவை
நிறைய
வெளிப்படும்.
மனிதர்கள்
சட்டென்று புரிந்து
கொண்டு
விடும்
வகையில்
பல்வேறு
விதமான
படங்கள்
வெளிப்படும்.
இந்த
படங்கள்
ஆகியவை சீர்ப்படுத்தப்பட்டுக்
கொண்டே
போகும்.
இதில்
யார்
நமது
பிராமண
குலத்தினராக
இருப்பார்களோ
அவர்கள்
நல்ல முறையில்
புரிந்து
கொள்வார்கள்.
புரிய
வைப்பவர்கள்
கூட
நன்றாக
இருந்தார்கள்
என்றால்
கொஞ்சம்
புரிந்து கொள்வார்கள்.
யார்
நல்ல
முறையில்
தாரணை
செய்கிறார்களோ
தந்தையை
நினைவு
செய்கிறார்களோ
அவர்களுடைய முகத்தின்
மூலமாகவே
தெரிய
வந்து
விடுகிறது.
பாபா
நாங்களோ
உங்களிடமிருந்து
முழு
ஆஸ்தியைப்
பெறுவோம்.
ஆக
அவர்களுக்குள்
குஷியின்
கீதம்
ஒலித்துக் கொண்டே
இருக்கும்.
சேவையில்
மிகுந்த
ஆர்வம்
இருக்கும்.
(ரிஃப்ரெஷ்)
புத்துணர்வு
பெற்றார்களோ
இல்லையோ
பின்
சேவைக்காக
ஓடுவார்கள்.
சேவைக்காக
ஒவ்வொரு சென்டரிலிருந்தும் நிறைய
பேர்
தயாராக
ஆக
வேண்டும்.
உங்களுடைய
சேவை
நிறைய
பரவிக்
கொண்டே போகும்.
உங்களுடன்
சேர்ந்து
கொண்டே
போவார்கள்.
கடைசியில்
ஒரு
நாள்
சந்நியாசிகள்
கூட
வருவார்கள்.
இப்பொழுதோ
அவர்களுடைய
ராஜ்யம்
உள்ளது.
அவர்களுடைய
கால்களில்
விழுகிறார்கள்,
பூஜிக்கிறார்கள்.
இது பூத
பூஜை
ஆகும்
என்று
தந்தை
கூறுகிறார்.
எனக்கோ
கால்களே
இல்லை.
எனவே
பூஜை
செய்யக்
கூட
விட மாட்டார்.
நானோ
இந்த
உடலை
கடனாக
எடுத்துள்ளேன்.
எனவே
இவருக்கு
பாக்கியசாலி ரதம் என்று
கூறப்படுகிறது.
இச்சமயம்
குழந்தைகளாகிய
நீங்கள்
மிகவுமே
பாக்கியசாலி ஆவீர்கள்.
ஏனெனில்
நீங்கள்
இங்கு
ஈசுவரிய சந்ததி
ஆவீர்கள்.
ஆத்மாக்களும்
பரமாத்மாவும்
வெகு
காலமாக
பிரிந்திருந்தனர்
என்ற
பாடலும்
உள்ளது.
எனவே யார்
வெகு
காலமாக
பிரிந்திருந்தார்களோ
அவர்களே
வருகிறார்கள்.
அவர்களுக்குத்
தான்
வந்து
கற்பிக்கிறேன்.
கிருஷ்ணருக்காக
இவ்வாறு
கூற
முடியுமா
என்ன?
அவரோ
முழுமையாக
84
பிறவிகள்
எடுக்கிறார்.
இது
அவருடைய கடைசி
பிறவி
ஆகும்.
எனவே
பெயர்
கூட
இந்த
ஒருவருக்கு
ஷியாம்
சுந்தர்
என்று
இடப்பட்டுள்ளது.
சிவன் பற்றியோ
அவர்
யாராக
இருக்கிறார்
என்பது
யாருக்குமே
தெரியாது.
இந்த
விஷயத்தை
தந்தை
தான்
வந்து
புரிய வைக்கிறார்.
நான்
பரம
ஆத்மா
ஆவேன்,
பரந்தாமத்தில்
இருப்பவன்
ஆவேன்.
நீங்கள்
கூட
அங்கு
இருப்பவர்கள் ஆவீர்கள்.
நான்
சுப்ரீம்,
பதீத
பாவனன்
ஆவேன்.
நீங்கள்
இப்பொழுது
ஈசுவரிய
புத்தி
உடையவர்களாக
ஆகி உள்ளீர்கள்.
இறைவனின்
புத்தியில்
என்ன
ஞானம்
உள்ளதோ
அதை
உங்களுக்குக்
கூறிக்
கொண்டிருக்கிறார்.
சத்யுகத்தில்
பக்தியின்
விஷயம்
இருப்பதில்லை.
இந்த
ஞானம்
உங்களுக்கு
இப்பொழுது
கிடைத்து
கொண்டிருக்கிறது.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
வெகுகாலம்
கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு,
தாய்
தந்தை
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீக
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
உள்நோக்கு
முகமானவராக
ஆகி
நமது
நிலையை
அமைத்து
கொள்ள
வேண்டும்.
"நான்
ஆத்மா
ஆவேன்,
எனது
சகோதர
ஆத்மாவிற்கு
தந்தையின்
செய்தியை
அளிக்கிறேன்""..
..இது
போல
(ஆத்ம
அபிமானி)
ஆத்ம
உணர்வுடையவராக
ஆவதற்கான
உள்ளூர
உழைப்பு செய்ய
வேண்டும்.
2.
ஆன்மீக
சேவையில்
ஆர்வம்
கொள்ள
வேண்டும்.
தனக்குச்
சமானமாக
ஆக்குவதற்கான முயற்சி
செய்ய
வேண்டும்.
சகவாச
தோஷம்
மிகவுமே
அசுத்தமானது.
அதிலிருந்து தங்களைக் பாதுகாத்து
கொள்ள
வேண்டும்.
தப்பும்
தவறுமான
(தூய்மையற்ற)
உணவு
பழக்கத்தை ஏற்படுத்தி
கொள்ளக்
கூடாது.
வரதானம்:
இறை
சேவகர்
என்ற
நினைவின்
மூலம்
சகஜமான
நினைவின் அனுபவம்
செய்யக்
கூடிய
சகஜயோகி
ஆகுக.
இறை
சேவகர்
என்றால்
இறைவன்
அதாவது
தந்தை
கொடுத்த
சேவையிலேயே
எப்போதும்
மும்முரமாக ஈடுபட்டிருப்பவர்.
நமக்கு
சுயம்
இறைவன்
சேவை
கொடுத்திருக்கிறார்
என்ற
போதை
எப்போதும்
இருக்க வேண்டும்.
காரியம்
செய்து
கொண்டிருக்கும்
போது
யார்
அந்தக்
காரியத்தை
செய்யச்
சொல்லியிருக்கிறாரோ அவரை
ஒரு
போதும்
மறந்து
போவதில்லை.
ஆக,
கர்மத்தின்
மூலமான
சேவையில்
கூட
தந்தையின் வழிப்படி
செய்து
கொண்டிருக்கிறேன்
என்ற
நினைவு
இருந்தது
என்றால்
சகஜமான
நினைவின்
அனுபவம் செய்தபடி
சகஜயோகி
ஆகி
விடுவீர்கள்.
சுலோகன்:
எப்போதும்
இறை
மாணவர்
என்ற
வாழ்க்கையின் நினைவு
இருந்தது
என்றால்
மாயை
அருகில்
நெருங்க
முடியாது.
ஓம்சாந்தி