01.04.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே! சுகம் மற்றும் துக்கத்தின் விளையாட்டை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அரைக்கல்பம் சுகம் மற்றும் அரைக்கல்பம் துக்கம் ஆகும். பாபா துக்கத்தை நீக்கி சுகம் கொடுக்க வருகிறார்.

 

கேள்வி :

பல குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தில் தன்னை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டு எல்லாம் தெரிந்தவர்களாக நினைத்துக் கொள்கின்றனர்?

 

பதில்:

நாம் சம்பூரணமாகி விட்டோம், நாம் முழுமையாக தயாராகி விட்டோம் என பலர் நினைக்கிறார்கள். இப்படி நினைத்துக் கொண்டு தன்னை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்கிறார்கள். இதுவே எல்லாம் அறிந்தவர் ஆதல் ஆகும். இனிமையான குழந்தைகளே, இப்போது நிறைய முயற்சி செய்ய வேண்டும் என பாபா கூறுகின்றார். நீங்கள் தூய்மையாகி விட்டால், தூய்மையான உலகமும் வேண்டும். இராஜ்யம் ஸ்தாபனை ஆக வேண்டும். ஒருவர் மட்டும் போக முடியாது.

 

பாட்டு :

தாயும் நீயே தந்தையும் நீயே...

 

ஓம் சாந்தி.

குழந்தைகளுக்கு தனது அறிமுகம் கிடைத்திருக்கிறது. நாம் அனைவரும் ஆத்மாக்கள், அனைவரும் மனிதர்கள், பாபாவும் இவ்வாறே கூறுகின்றார். பெரியவர் அல்லது சிறியவர், குடியரசு தலைவர், ராஜா, ராணி அனைவரும் மனிதர்களே. அனைவரும் ஆத்மாக்கள். நான் அனைத்து ஆத்மாக்களின் தந்தை. எனவே என்னை பரம்பிதா பரமாத்மா அதாவது சுப்ரீம் என கூறுகிறார்கள் என்று இப்போது தந்தை கூறுகின்றார். ஆத்மாக்களாகிய நமக்கு அவர் தந்தை. நாம் அனைவரும் சகோதரர்கள் என குழந்தைகள் அறிகிறீர்கள். பிறகு பிரம்மா மூலமாக சகோதர சகோதரிகளின் உயர்ந்த தாழ்ந்த குலம் தோன்றுகிறது. ஆத்மாக்கள் அனைவரும் ஆத்மாக்களே. இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மனிதர்கள் எதையும் புரிந்து கொள்ளவில்லை. தந்தையை யாரும் தெரிந்து கொள்ளவில்லை என உங்களுக்கு தந்தையே வந்து புரிய வைக்கின்றார். ! பகவான், ! தாய் தந்தையே என மனிதர்கள் பாடுகிறார்கள். ஏனென்றால் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒருவர் வேண்டும் அல்லவா? அவர் அனைவருக்கும் தந்தை, அனைவருக்கும் சுகம் கொடுப்பவர். சுகம் மற்றும் துக்கத்தின் விளையாட்டைக் கூட நீங்கள் அறிகிறீர்கள். அவ்வபொழுது சுகம் இருக்கிறது. அவ்வபொழுது துக்கமும் இருக்கிறது என மனிதர்கள் புரிந்து கொள்கிறார்கள். அரைக்கல்பம் சுகம், அரைக்கல்பம் துக்கம் என்பதை புரிந்து கொள்ளவில்லை. சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ உள்ளதல்லவா! சாந்தி தாமத்தில் ஆத்மாக்களாகிய நாம் இருக்கும் பொழுது அனைவரும் உண்மையான தங்கமாக இருக்கின்றனர். ஆத்மாவில் கலப்படம் இருக்க முடியாது. அவரவருக்குரிய பாகம் பதிவாகி இருக்கிறது. ஆனால் ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையாக இருக்கின்றனர். அசுத்தமான ஆத்மா இருக்க முடியாது. இச்சமயம் எந்த ஒரு தூய்மையான ஆத்மாவும் இங்கே இருக்க முடியாது. நீங்கள் பிராமண குல பூஷணர்கள் கூட தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் தன்னை தேவதை என கூறிக் கொள்ள முடியாது. அவர்கள் சம்பூரண நிர்விகாரி. உங்களை சம்பூரண நிர்விகாரி என கூற முடியாது. சங்கராச்சாரியாராக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, தேவதைகளைத் தவிர யாரையும் கூற முடியாது. இந்த விசயங்களைக் கூட ஞானக்கடலின் வாயிலிருந்து நீங்கள் தான் கேட்கிறீர்கள். ஞானக்கடல் ஒரு முறை தான் வருகிறார் என அறிகிறீர்கள். மனிதர்கள் மறுபிறவி எடுத்து வருகிறார்கள். ஒரு சிலர் ஞானத்தைக் கேட்டுவிட்டு சென்றிருக்கின்றனர். அந்த சம்ஸ்காரத்தை எடுத்துச் சென்றுள்ளனர், என்றால் பிறகு மீண்டும் வருகிறார்கள். வந்து கேட்கிறார்கள். பாருங்கள் ஒரு சிலர் 6-8 வருடங்களாக இருப்பவர்கள் என்றால், அவர்கள் நன்கு புரிந்து கொள்கின்றனர். ஆத்மா அதே தான் அல்லவா? கேட்கும் பொழுது அவர்களுக்கு நன்றாக இருக்கின்றது. நமக்கு மீண்டும் பாபாவினுடைய ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என ஆத்மா புரிந்து கொள்கிறது. உள்ளுக்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மற்றவர்களுக்கும் புரிய வைக்கின்றனர். ஆர்வம் ஏற்படுகிறது. போரில் கலந்து கொள்பவர்கள் அந்த சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கின்றார்கள் என்றால், சிறு வயதிலேயே அந்த வேலையில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுகின்றனர். இப்பொழுது நீங்கள் முயற்சி செய்து புது உலகத்திற்கு அதிபதியாக வேண்டும். நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்கலாம் அல்லது புது உலகத்திற்கு அதிபதியாகலாம் அல்லது சாந்தி தாமத்திற்கு அதிபதியாகலாம். சாந்திதாமம் உங்களுடைய வீடு ஆகும். அங்கிருந்து நீங்கள் நடிப்பதற்காக இங்கே வந்திருக் கிறீர்கள். இது யாருக்கும் தெரியாது. ஏனென்றால் ஆத்மாவைப் பற்றியே தெரியவில்லை. நாம் நிராகார உலகத்தில் இருந்து இங்கே வந்திருக்கிறோம் என்பது உங்களுக்கும் முதலில் தெரியாது. நாம் பிந்துவாக இருக்கின்றோம். சந்நியாசிகள் புருவ மத்தியில் ஆத்மா நட்சத்திரம் போன்று இருக்கிறது என கூறுகிறார்கள். இருப்பினும் புத்தியில் பெரிய ரூபம் தான் வருகிறது. சாலிகிராமம் என்றதுமே பெரிய ரூபம் என நினைக்கின்றனர். ஆத்மா சாலிக்கிராமம் ஆகும். யாகம் வளர்க்கும் பொழுது பெரிய பெரிய சாலிக்கிராமங்களை உருவாக்குகின்றார்கள். பூஜை செய்யும் பொழுது சாலிகிராமத்தின் பெரிய வடிவம் தான் புத்தியில் தோன்றுகிறது. இது அனைத்தும் அறியாமை என பாபா கூறுகின்றார். ஞானத்தை நான் தான் கூறுகின்றேன். வேறு யாரும் உலகத்தில் கூற முடியாது. ஆத்மாவும் பிந்து, பரமாத்மாவும் பிந்து என யாரும் புரிய வைக்கவில்லை. அவர்களோ அகண்ட ஜோதி சொரூபமான பிரம்மம் என கூறி விடுகின்றனர். பிரம்மத்தை பகவான் என நினைக்கிறார்கள். பிறகு தன்னையும் பகவான் என கூறிக்கொள்கிறார்கள். நாம் நடிப்பதற்காக சிறிய ஆத்மாவின் ரூபத்தை எடுத்திருக்கின்றோம். பிறகு பெரிய ஜோதியில் கலந்து விடுவோம் என கூறுகிறார்கள். கலந்து விட்டால் என்ன ஆகும்? நடிப்பும் கலந்து போகும். எவ்வளவு தவறாக இருக்கிறது.

 

இப்பொழுது தந்தை வந்து ஒரு நொடியில் ஜீவன் முக்தியைக் கொடுக்கிறார். பிறகு அரைக்கல்பம் ஏணிப்படியில் இறங்கி வாழ்க்கை பந்தனத்தில் வருகிறார்கள். பிறகு தந்தை வந்து வாழ்க்கை பந்தனத்தில் இருந்து விடுவிக்கிறார். எனவே அவருக்கு சத்கதியளிக்கும் வள்ளல் என கூறப்படுகிறது. எனவே பதீத பாவனர் தந்தையைத் தான் நினைக்க வேண்டும். அவருடைய நினைவினால் தான் நீங்கள் தூய்மையாக மாறுவீர்கள். இல்லையென்றால் மாற முடியாது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரு தந்தை தான். நிறைய குழந்தைகள் நாம் சம்பூரணமாகி விட்டோம் என நினைக்கிறார்கள். நாம் முழுமையாக தயாராகிவிட்டோம், இப்படி நினைத்துக் கொண்டு தன்னை மகிழ்வித்துக் கொள்கின்றனர். இதுவே எல்லாம் அறிந்தவர் ஆகுதல் ஆகும். இனிமையான குழந்தைகளே! இப்போது நிறைய முயற்சி செய்ய வேண்டும், என பாபா கூறுகின்றார். நீங்கள் தூய்மையாகி விட்டால் தூய்மையான உலகமும் வேண்டும். ஒருவர் மட்டும் போக முடியாது. யார் எவ்வளவு தான் சீக்கிரமாக கர்மாதீத் நிலையை அடைய முயற்சி செய்தாலும் அது நடப்பது இல்லை. இராஜ்யம் உருவாக வேண்டும். சில மாணவர்கள் படிப்பில் புத்திசாலி ஆகி விடலாம். ஆனால் குறித்த நேரத்தில் தான் தேர்வு நடக்கும் அல்லவா? சீக்கிரமாக தேர்வு வைக்க முடியாது. இதுவும் அவ்வாறே! நேரம் வரும் பொழுது உங்கள் படிப்பின் ரிசல்ட் வெளிப்படும். எவ்வளவு தான் நல்ல முயற்சியாளராக இருந்தாலும் நாங்கள் முழுமையாக தயாராகி விட்டோம் என்று கூற முடியாது. 16 கலை நிறைந்தவராக எந்த ஆத்மாவும் இது வரை மாறவில்லை. மிகவும் முயற்சி செய்ய வேண்டும். நாம் சம்பூரணமாகி விட்டோம் என்று நமது மனதை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ள கூடாது. கடைசியில் தான் சம்பூரணமாக முடியும். எல்லாம் அறிந்தவன் என்று நினைக்கக் கூடாது. முழு இராஜ்யமும் உருவாக வேண்டும். ஆம், இன்னும் சிறிது நேரம் இருக்கிறது என புரிந்து கொள்கிறார்கள். ஏவுகணைகள் கூட உருவாகி விட்டது. முன்பு இவைகளை உருவாக்குவதற்குக் கூட நேரம் எடுத்தது. இப்போதோ பயிற்சியாகி விட்டது. எனவே உடனே உருவாக்குகிறார்கள். இதுவும் நாடகத்தில் உருவாக்கப் பட்டிருக்கிறது. அழிவிற்காக அணுகுண்டுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். கீதையில் கூட இருக்கிறது. சாஸ்திரங்களில் வயிற்றிலிருந்து இரும்பு உலக்கை வெளி வந்தது என எழுதுகின்றனர். இது அனைத்தும் பொய்யான விஷயம் அல்லவா? அவற்றிற்குத் தான் ஏவுகணைகள் என்று பெயர் என பாபா வந்து புரிய வைக்கின்றார். இப்போது இந்த வினாசத்திற்கு முன்பாக நாம் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக மாறவேண்டும். நாம் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தினர் என குழந்தைகளுக்குத் தெரியும். உண்மையான தங்கமாக இருந்தோம். பாரதத்திற்கு உண்மையான கண்டம் என்கிறார்கள். இப்போது பொய்யான கண்டமாக ஆகிவிட்டது. தங்கம் கூட உண்மை யானதாகவும் பொய்யானதாகவும் இருக்கிறதல்லவா? பாபாவின் மகிமை என்ன என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் மனித சிருஷ்டியின் விதையாக இருக்கின்றார், சத்தியமானவர், சைத்தன்யமானவர். என்று உச்சரிப்பு நிலையில் மட்டும் புகழ் பாடுகின்றனர்.. இப்பொழுது பாபா அனைத்து குணங்களையும் நமக்குள் நிரப்பிக் கொண்டு இருக்கின்றார் என புரிந்து கொண்டு இருக்கின்றீர்கள். முதலில் நினைவு யாத்திரை செய்யுங்கள். உங்கள் விகர்மம் அழிந்து போகும் என பாபா கூறுகின்றார். என்னுடைய பெயரே பதீத பாவனவர். பதீத பாவனா வாருங்கள் என பாடுகிறார்கள். ஆனால் அவர் வந்து என்ன செய்வார் என தெரியவில்லை. ஒரு சீதை மட்டும் கிடையாது. நீங்கள் அனைவருமே சீதைகளாக இருக்கிறீர்கள்.

 

குழந்தைகளாகிய உங்களை எல்லையற்றதில் அழைத்துச் செல்வதற்காக தந்தை எல்லையற்ற விசயங்களைக் கூறுகின்றார். ஆண்கள் பெண்கள் அனைவரும் சீதைகள் என்பதை நீங்கள் எல்லையற்ற புத்தியினால் அறிந்து கொள்கிறீர்கள். அனைவரும் இராவணனின் சிறையில் இருக்கிறார்கள். பாபா (ராம்) வந்து அனைவரையும் இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்கின்றார். இராவணன் மனிதன் கிடையாது. ஒவ்வொரு வருக்குள்ளும் 5 விகாரங்கள் இருக்கிறது என்பது புரிய வைக்கப்பட்டு இருக்கிறது. எனவே இராவண இராஜ்யம் எனப்படுகிறது. இதன் பெயரே விகார (விஷயம் நிறைந்த) உலகம் ஆகும். அது நிர்விகார உலகம் ஆகும். இரண்டும் வெவ்வேறு பெயர் ஆகும். அது வேசியாலயம் மற்றும் இது சிவாலயம் ஆகும். நிர்விகார உலகத்திற்கு அதிபதியாக இந்த லட்சுமி நாராயணன் இருந்தனர். இவர்களுக்கு முன்பு சென்று விகாரி (தூய்மையற்ற) மனிதர்கள் தலை வணங்குகிறார்கள். விகாரி இராஜாக்கள் அந்த நிர்விகாரி ராஜாக்கள் முன்பு தலை வணங்குகிறார்கள். இதுவும் உங்களுக்குத் தெரியும். மனிதர்களுக்கு கல்பத்தின் ஆயுள் பற்றியே தெரியவில்லை என்றால் இராவண இராஜ்யம் எப்போது உருவாகியது என எப்படி தெரிந்து கொள்ள முடியும். பாதி பாதி இருக்க வேண்டும் அல்லவா?. இராம இராஜ்யம், இராவண இராஜ்யம் எப்போதிருந்து ஆரம்பமாகும். குழப்பம் அடைந்து இருக்கின்றனர்.

 

இந்த 5000 வருடங்களின் சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது என பாபா இப்போது புரிய வைத்திருக்கிறார். நாம் 84 பிறவிகளின் நடிப்பை நடிக்கின்றோம் என இப்போது உங்களுக்குத் தெரிந்து விட்டது. பிறகு நாம் வீட்டிற்குப் போகிறோம். சத்யுகம் மற்றும் திரோதாவில் மறுபிறவி எடுக்கின்றோம். அது இராம இராஜ்யம், பிறகு இராவண இராஜ்யத்தில் வரவேண்டும். வெற்றி தோல்வியின் விளையாட்டாகும். நீங்கள் வெற்றி அடைகிறீர்கள் என்றால், சொர்க்கத்திற்கு அதிபதியாகின்றீர்கள். தோல்வி அடைந்துவிட்டால் நரகத்திற்கு அதிபதியாகி விடுவீர்கள். சொர்க்கம் தனியாகும். யாராவது இறந்துவிட்டால் வைகுண்ட பதவி அடைந்து விட்டார் என்கிறார்கள். இப்போது நீங்கள் கூறமாட்டீர்கள். சொர்க்கம் எப்போது தோன்றும் என உங்களுக்குத் தெரியும். அவர்களோ ஜோதியோடு ஜோதியாக கலந்து விட்டனர், நிர்வாண தாமத்திற்குச் சென்றுவிட்டனர் என்று கூறுகின்றனர். ஜோதியோடு ஜோதியாகக் கலக்க முடியாது என நீங்கள் கூறுகிறீர்கள். அனைவருக்கும் சத்கதியளிக்கும் வள்ளல் ஒருவரே என பாடப்பட்டு இருக்கிறது. சொர்க்கத்திற்கு சத்யுகம் என்று பெயர். இது நரகம் ஆகும். பாரதத்தின் விசயம் ஆகும். மற்றபடி மேலே ஒன்றும் இல்லை. தில்வாடா கோவில் மேலே சொர்க்கத்தைக் காண்பித்துள்ளனர். உண்மையில் சொர்க்கம் மேலே இருக்கிறது என நினைக்கின்றார்கள். அட, மேலே கூரையில் மனிதர்கள் எப்படி இருப்பார்கள்? முட்டாள்கள் அல்லவா ! இப்போது நீங்கள் தெளிவுபடுத்திக் கூறுகிறீர்கள். இங்கேதான் செர்க்கவாசிகளாக இருந்தனர் என உங்களுக்குத் தெரியும். இங்கே தான் பிறகு நரகவாசிகளாக மாறுகின்றனர். இப்போது மீண்டும் சொர்க்கவாசியாக வேண்டும். இந்த ஞானமே நரனிலிருந்து நாராயணனன் ஆவதற்காகும். சத்யநாராயணன் ஆவதற்கான கதைகள் கூட செல்கிறார்கள். இராமர் சீதாவின் கதையைக் கூறுவது இல்லை. இது நரனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான கதையாகும். உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி லட்சுமி நாராயணனுடையது. அவர்களுடையதோ இரண்டு கலைகள் குறைந்து விடுகிறது. உயர்ந்த பதவி அடைவதற்கு முயற்சி செய்யப்படுகிறது. ஒருவேளை முயற்சி செய்யவில்லை என்றால் சந்திரவம்சியாகிறார்கள். பாரதவாசிகள் தூய்மையிழக்கும் பொழுது தனது தர்மத்தை மறந்துவிடுகிறார்கள். கிறிஸ்துவர்கள் சதோவிலிருந்து தமோ பிரதானமாகிறார்கள். இருப்பினும் கிறிஸ்துவ சம்பிரதாயத்தினர் தான் அல்லவா? ஆதிசனாதன தேவி தேவதா சம்பிரதாயத்தினர் தான் தன்னை இந்து என கூறிக்கொள்கிறார்கள். நாம் உண்மையில் தேவி தேவதா தர்மத்தினர் என்பது கூட புரிந்து கொள்ளவில்லை. அதிசயம் அல்லவா? இந்து தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தனர் என நீங்கள் கேட்டால். குழப்பம் அடைகின்றனர். தேவதைகளை பூஜை செய்கின்றனர் என்றால், தேவதா தர்மத்தினர் அல்லவா? ஆனால் புரிந்து கொள்ளவில்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் புத்தியில் அனைத்து ஞானமும் இருக்கிறது. நாம் முதலில் சூரிய வம்சத்தினராக இருந்தோம். பிறகு மற்ற தர்மத்தினர் வருகின்றனர். நாம் மறுபிறவி எடுத்துக் கொண்டே வருகின்றோம் என நீங்கள் அறிகிறீர்கள். உங்களிலும் ஒரு சிலர் யதார்த்தமாகத் தெரிந்து கொள்கிறார்கள். பள்ளிக் கூடத்திலும் சில மாணவர்களின் புத்தியில் நன்கு பதிகிறது. சிலருடைய புத்தியில் குறைவாகப் பதிகிறது. இங்கே தேர்ச்சி பெறாதவர்களை சத்திரியர் என கூறப்படுகிறது. சந்திர வம்சத்திற்குச் செல்கிறார்கள். இரண்டு கலைகள் குறைந்து விட்டது அல்லவா? சம்பூரணம் ஆக முடியாது. இப்போது உங்களுடைய புத்தியில் எல்லையற்ற வரலாறு புவியியல் இருக்கிறது. அவர்கள் பள்ளிக் கூடத்தில் எல்லைக்குட்பட்ட வரலாறு புவியியலை படிக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் மூலவதனம் சூட்சும வதனம் தெரியாது. சாது சந்நியாசிகள் போன்ற யாருடைய புத்தியிலும் இல்லை. மூலவதனத்தில் ஆத்மாக்கள் இருக்கின்றார்கள் என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. இது ஸ்தூல வதனம் ஆகும். உங்களுடைய புத்தியில் அனைத்து ஞானமும் இருக்கிறது. இந்த சுயதரிசன சக்ரதாரி சேனை அமர்ந்திருக்கிறது. இந்த சேனை பாபாவையும் சக்கரத்தையும் நினைக்கிறது. உங்களுடைய புத்தியில் ஞானம் இருக்கிறது. மற்றபடி ஆயுதம் எதுவும் இல்லை. ஞானத்தினால் சுயத்தின் தரிசனம் ஏற்படுகிறது. பாபா, படைக்கக்கூடியவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடை ஞானத்தைக் கொடுக்கின்றார். இப்போது படைக்கக் கூடியவரை நினைத்தால் விகர்மம் அழியும் என்பது பாபாவின் கட்டளையாகும். யார் எவ்வளவு சுயதர்ஷன சக்கரதாரி ஆகின்றார்களோ, மற்றவர்களை ஆக்குகிறீர்களோ, அதிகமாக சேவை செய்கிறார்களோ அந்தளவு உயர்ந்த பதவி கிடைக்கும். இது பொதுவான விசயம் ஆகும். பாபாவை மறந்ததினால் தான் கீதையில் கிருஷ்ணரின் பெயரை போட்டு இருக்கின்றனர். கிருஷ்ணரை பகவான் என்று கூறமுடியாது. அவரை தந்தை என்றும் கூறமுடியாது. சொத்து தந்தையிடமிருந்து கிடைக்கிறது. பதீத பாவனர் என்று பாபாவிற்குக் கூறப்படுகிறது. அவர் திரும்ப வரும் பொழுது தான் நாம் வீட்டிற்கு சாந்திதாமத்திற்குத் திரும்புகிறோம். மனிதர்கள் முக்திக்காக எவ்வளவு தலையை உடைத்துக் கொள்கிறார்கள். நீங்கள் எவ்வளவு எளிதாக புரிய வைக்கிறீர்கள். பதீத பாவனர் பரமாத்மா என்றால், கங்கையில் நீராட ஏன் செல்கிறீர்கள் என கேளுங்கள். கங்கையின் கரையில் சென்று அங்கேயே இறக்க வேண்டும் என அமர்ந்து கொள்கிறார்கள். முன்பு வங்காளத்தில் யாராவது இறக்கும் தருவாயில் இருந்தால் கங்கைக்கு கொண்டு சென்று ஹரி நாமத்தை சொல்ல செய்தனர். அவர்கள் முக்தி அடைந்து விட்டனர் என நினைத்தனர். இப்போது ஆத்மா சென்று விட்டது, அது தூய்மையாக வில்லை. ஆத்மாவை தூய்மையாக மாற்றக்கூடியவர் தந்தை தான். அவரைத்தான் அழைத்தார்கள். இப்போது என்னை நினைத்தால் விகர்மம் அழியும் என பாபா கூறுகிறார். பாபா வந்து பழைய உலகத்தைப் புதியதாக மாற்றுகின்றார். மற்றபடி புதியதை படைக்கவில்லை. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. பாபாவிற்குள் என்ன குணங்கள் இருக்கிறதோ அதை தனக்குள் நிரப்பிக் கொள்ள வேண்டும். தேர்வுக்கு முன்பாகவே முயற்சி செய்து தன்னை முழுமையாக தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். இதில், எல்லாம் நான் அறிந்தவன் என்றிருக்கக்கூடாது.

 

2. சுயதர்ஷன சக்கரதாரியாக வேண்டும், ஆக்க வேண்டும். அப்பா மற்றும் சக்கரத்தை நினைக்க வேண்டும். எல்லையற்ற தந்தை மூலமாக எல்லையற்ற விசயங்களைக் கேட்டு தனது புத்தியை எல்லையற்றதில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லைக்குட்பட்டதில் வரக்கூடாது.

 

வரதானம் :

இனிய அமைதியில் மூழ்கிய ஸ்திதி (மனநிலை) மூலம் நஷ்டோமோகா (மோகத்திலிருந்து விடுபட்ட) சக்திசாலி சொரூபம் ஆகுக.

 

தேகம், தேகத்தின் சம்மந்தம், தேகத்தின் சம்ஸ்காரம், மனிதர் அல்லது வைபவம், வாயுமண்டலம், வைப்ரேஷன் (அதிர்வலைகள்) அனைத்தும் இருந்தாலும் கூட இதில் எதுவுமே உங்களைத் தன் பக்கமாகக் கவர்ந்திழுக்கக் கூடாது. மக்கள் கூக்குரலிட்டுக் கொண்டே இருந்தாலும் நீங்கள் அசையாதவராக இருங்கள். இயற்கை, மாயா அனைத்தும் கடைசி வாய்ப்பைப் பிரயோகிப்பதற்காகத் தங்களின் பக்கம் எவ்வளவு தான் கவர்ந்திழுத்தாலும், நீங்கள் விலகியவராக மற்றும் பாபாவுக்குப் பிரியமானவராக ஆவதற்கான ஸ்திதியில் மூழ்கி இருங்கள் -- இதைத் தான் பார்த்தாலும் பார்க்காதிருங்கள், கேட்டாலும் கேளாதிருங்கள் எனச் சொல்கின்றனர். இது தான் இனிய அமைதி சொரூபத்தில் மூழ்கிய நிலையாகும். எப்போது இத்தகைய ஸ்திதி அமைகின்றதோ, அப்போது நஷ்டோமோகா சக்திசாசொரூபத்தின் வரதானி ஆத்மா எனச் சொல்வார்கள்.

 

சுலோகன் :

புனித அன்னப்பறவை ஆகி, அவகுணம் என்ற கல்லை எடுப்பதை விடுத்து, நற்குணம் என்ற முத்துகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டே செல்லுங்கள்.

 

ஓம்சாந்தி