11-04-2021 காலை முரளி ஓம் சாந்தி "அவ்யக்த பாப்தாதா" ரிவைஸ் 10.12.1987


உடல், மனம், பொருள் மற்றும் சம்பந்தத்தின் சிரேஷ்ட வியாபாரம்

இன்று அனைத்து பொக்கிஷங்களின் கடலான, ரத்தின வியாபாரியான தந்தை தனது குழந்தைகளைப் பார்த்து புன்முறுவல் செய்து கொண்டிருக்கின்றார் - அனைத்து பொக்கிஷங்களின் சுரங்கமான தந்தை யின் வியாபாரிக் குழந்தைகள் அதாவது வியாபாரம் செய்பவர் யார்? மேலும் யாரிடம் வியாபாரம் செய்கிறீர்கள்? பரமாத்மா பொருட்களை கொடுக்கக் கூடியவர், மேலும் பரமாத்மாவிடம் வியாபாரம் செய்யக் கூடியவர்கள் எவ்வளவு கள்ளங் கபடமற்றவர்களாக இருக்கின்றனர்! மேலும் எவ்வளவு உயர்ந்த வியாபாரம் செய்கின்றனர்! இவர்கள் இந்த அளவிற்கு பெரிய வியாபாரம் செய்யக் கூடிய வியபாரி ஆத்மாக்கள் என்பதை உலகத்தினர்களால் புரிந்து கொள்ள முடியாது. உலகத்தினர் எந்த ஆத்மாக்களை நம்பிக்கையற்றவர்கள், மிகவும் ஏழைகள் என்று புரிந்திருக்கிறார்களோ, இந்த கன்னிகைகள், தாய்மார்கள் பரமாத்ம பிராப்திகளுக்கு எப்படி அதிகாரிகளாக ஆக முடியும்? அசம்பவம் என்று நினைத்து தூரமாக்கி விட்டார்கள். ஆனால் தந்தை முதலில் தாய்மார்களை, கன்னிகைகளைத் தான் இவ்வளவு பெரியதிலும் பெரிய வியாபாரம் செய்யக் கூடிய சிரேஷ்ட ஆசாமிகளாக ஆக்கி விட்டார். ஞானக் கலசத்தை முதலில் தாய்மார்கள், கன்னிகைகளின் மீது வைத்து விட்டார். ஏழைக் கன்னிகையான ஜெகதம்பாவை யக்ஞ மாதாவாக ஆக்கினார். தாய்மார்களிடத்திலும் மறைத்து வைக்கப்பட்ட சொத்துக்கள் ஏதாவது இருக்கும். ஆனால் கன்னிகைகள் தாய்மார்களை விட ஏழை களாக இருக்கின்றனர். ஆக தந்தை ஏழையிலும் ஏழையாக இருப்பவர்களை முதலில் வியாபாரிகளாக ஆக்கினார், மேலும் எவ்வளவு பெரிய வியாபாரம் செய்தார்! ஏழைக் குமாரியிலிருந்து ஜெகதம்பாவாக, பிறகு செல்வத்தின் தேவி லெட்சுமியாக மாற்றி விட்டார். இன்றைய நாள் வரையிலும் எவ்வளவு தான் கோடிஸ்வரர்களாக இருந்தாலும் லெட்சுமயிடம் அவசியம் செல்வம் கேட்பர், அவசியம் பூஜை செய்வர். இரத்தின வியாபாரியான தந்தை தனது வியாபாரி குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றார். ஒரு பிறப்பில் வியாபாரம் செய்வதனால் அநேக பிறவிகளுக்கு சதா செல்வம் நிறைந்தவர்களாக ஆகிவிடுகிறீர்கள். மற்ற வியாபாரம் செய்பவர்கள் மிகப் பெரிய வியாபாரியாக இருக்கலாம், ஆனால் அவர்கள் செல்வம் மட்டுமே கொடுப்பவர்களாக, பொருட்களை கொடுக்கும் வியாபாரம் செய்வார்கள். ஒரே ஒரு எல்லையற்ற தந்தை மட்டும் தான் செல்வம் கொடுக்கும் வியாபாரமும் செய்கின்றார், மனதிற்கான வியாபாரமும் செய்கின்றார். உடலுக்கான மற்றும் சதா சிரேஷ்ட சம்பந்தத்திற்கான வியாபாரமும் செய்கின்றார். இப்படிப்பட்ட வள்ளலை யாராவது பார்த்திருக்கிறீர்களா? நான்கு வகையான வியாபாரமும் செய்திருக்கின்றார் அல்லவா! உடல் சதா ஆரோக்கியமாக இருக்கும், மனம் சதா குஷியாக இருக்கும், செல்வம் நிறைந்திருக்கும் மற்றும் சம்பந்தத்தில் சுய நலமற்ற அன்பு இருக்கும். மேலும் உத்திரவாதமும் இருக்கிறது. இன்றைய நாட்களில் மதிப்பான பொருட்களுக்கு உத்திரவாதம் கொடுக்கின்றனர். 5 ஆண்டுகள், 10 ஆண்டு களுக்கான உத்திரவாதம் கொடுக்கின்றனர், வேறு என்ன செய்வார்கள்? ஆனால் ரத்தின வியாபாரி தந்தை எவ்வளவு காலத்திற்கு உத்திரவாதம் கொடுக்கின்றார்? பல பிறவிகளுக்கான உத்திரவாதம் கொடுக்கின்றார். நான்கில் ஒன்று கூட குறை இருக்க முடியாது. பிரஜைக்கும் பிரஜையாக ஆகக் கூடியவராக இருக்கலாம், ஆனால் அவருக்கும் கடைசிப் பிறவி வரை அதாவது திரேதாவின் கடைசி வரையிலும் இந்த நான்கு விசயங்களும் பிராப்தியாக கிடைக்கும். இப்படிப்பட்ட வியாபாரம் எப்பொழுதாவது செய்திருக்கிறீர்களா? இப்பொழுது வியாபாரம் செய்கிறீர்கள் அல்லவா? பக்கா வியாபாரம் செய்கிறீர்களா? அல்லது அரை குறையாக செய்கிறீர்களா? பரமாத்மாவிடம் எவ்வளவு எளிய வியாபாரம் செய்கிறீர்கள்! எதை கொடுத்தீர்கள்? உபயோகமான பொருட்கள் எதையாவது கொடுத்தீர்களா?

அயல்நாட்டினர் பாப்தாதாவிற்கு எப்பொழுதும் உள்ளம் வரைந்து அனுப்புகின்றனர். கடிதமும் உள்ளத்தின் சித்திரத்திற்குள் எழுதுகின்றனர், உள்ளம் பரிசாக அனுப்புகின்றனர். ஆக உள்ளம் கொடுத்து விட்டீர்கள் தானே! ஆனால் எப்படிப்பட்ட உள்ளத்தை கொடுத்திருக்கிறீர்கள்? ஒரு உள்ளம் எத்தனை துண்டுகளாக துண்டிக்கப்பட்டு இருந்தது? தாய், தந்தை, மாமா, சித்தப்பா என்று மிக நீண்ட பட்டியல் இருக்கிறது? ஒருவேளை சம்பந்தத்தின் பட்டியல் எடுத்துக் கொண்டால் கலியுகத்தில் எவ்வளவு நீண்ட பட்டியல் இருக்கும்! ஒன்று சம்பந்தத்தில் உள்ளத்தை கொடுத்தீர்கள், இரண்டாவது பொருட்களிடத்திலும் உள்ளத்தை கொடுத்தீர்கள் . ஆக உள்ளத்தை கொடுத்த பொருட்கள் எத்தனை? மனிதர்கள் எத்தனை பேர்? அனைத்திலும் உள்ளம் ஈடுபடுத்தி உள்ளம் துண்டு துண்டாக ஆக்கி விட்டீர்கள். தந்தை அநேக துண்டுகளான உள்ளத்தை ஒன்றாக இணைத்து விட்டார். ஆக கொடுத்தது என்ன? மற்றும் அடைந்தது என்ன? மேலும் வியாபாரம் செய்வதற்கான விதியும் எவ்வளவு எளிதாக இருக்கிறது! விநாடிக்கான வியாபாரம் அல்லவா! பாபா என்ற சப்தம் தான் விதியாகும். ஒரு சப்தம் தான் விதியாகும். இதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகிறது? உள்ளப்பூர்வமாக பாபா என்று கூறினால் போதும். ஆக விநாடியில் வியாபாரம் ஆகிவிட்டது. எவ்வளவு எளிய விதியாகும்! இவ்வளவு எளிய வியாபாரம் இந்த சங்கமயுகம் தவிர வேறு எந்த யுகத்திலும் செய்ய முடியாது. ஆக வியாபாரிகளின் முகம், தோற்றத்தை பார்த்துக் கொண்டிருந்தார். உலகாய கணக்கில் எவ்வளவு கள்ளங் கபடமற்றவர்களாக இருக்கிறீர்கள்! ஆனால் இந்த கள்ளங் கபடமற்றவர்கள் தான் அதிசயம் செய்திருக்கின்றனர். வியாபாரம் செய்வதில் புத்திசாலிகளாக ஆகிவிட்டீர்கள் அல்லவா! இன்றைய நாட்களில் பெரிய பெரிய புகழ் பெற்ற செல்வந்தர்கள் செல்வம் சம்பாதிப்பதற்குப் பதிலாக செல்வத்தை பாதுகாக்கும் குழப்பத்தில் இருக்கின்றனர். அந்த குழப்பத்தில் தந்தையை அறிந்து கொள்வதற்கு நேரமே கிடைப்பதில்லை. தன்னை காப்பாற்றிக் கொள்ள, செல்வத்தை பாதுகாத்துக் கொள்ளவதற்கே நேரம் சென்று விடுகிறது. ஒருவேளை சக்ரவர்த்தியாக இருந்தாலும், கவலையான சக்ரவர்த்திகளாக இருக்கின்றனர். ஏனெனில் கருப்புப் பணம் அல்லவா! ஆகையால் கவலையான சக்ரவர்த்திகளாக இருக்கின்றனர். ஆனால் நீங்கள் வெளியில் ஒன்றும் இல்லாதவர்களாக இருக்கிறீர் கள், உள்ளுக்குள் கவலையற்ற சக்ரவர்த்திகளாக இருக்கிறீர்கள். யாசிப்பவர்களாக (பிச்சைக்காரர் போன்று) இருந்தாலும் சக்ரவர்த்திகள். ஆரம்ப காலத்தில் கையெழுத்து எப்படி போடுவீர்கள்? யாசிப்பதிலிருந்து இளவரசர். இப்பொழுதும் சக்ரவர்த்திகளாக இருக்கிறீர்கள் மற்றும் எதிர்காலத் திலும் சக்ரவர்த்திகளாக இருப்பீர்கள். இன்றைய நாட்களில் நம்பர் ஒன் செல்வந்தராக இருப்பவரின் எதிரில் உங்களுடைய திரேதாவின் கடைசிப் பிரஜையும் அதிக செல்வந்தராக இருப்பர். இன்றைய நாளின் எண்ணிக்கையின் கணக்கு சிந்தித்துப் பாருங்கள் லி அதே செல்வம் தான் இருக்கும், மேலும் உள்ளே மறைந்திருக்கும் செல்வங்களும் வெளிப்படும். ஆக எவ்வளவு பெரிய எண்ணிக்கையோ, அந்த அளவிற்கு செல்வம் பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அங்கு எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? இந்த கணக்கில் பார்க்கின்ற போது எவ்வளவு செல்வம் இருக்கும்! பிரஜையிடத்திலும் எந்த பொருளின் குறையும் இருக்காது. ஆக சக்ரவர்த்தி ஆகிவிடுகிறார் அல்லவா! சக்ரவர்த்தி என்றால் அரியனையில் அமருவது என்று பொருள் அல்ல. சக்ரவர்த்தி என்றால் நிறைந்திருப்பது, எந்த குறையுமின்றி இருப்ப தாகும். ஆக அப்படிப்பட்ட வியாபாரம் செய்து விட்டீர்களா? அல்லது செய்து கொண்டு இருக்கிறீர்களா? அல்லது இப்பொழுது தான் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஏதாவது ஒரு பெரிய பொருள் மலிவான விலைக்குக் கிடைத்து விட்டால் இது சரியானதா? இல்லையா? என்ற குழப்பத்தில் வந்து விடுவர். இவ்வாறு குழப்பத்தில் இல்லை தானே? ஏனெனில் பக்தி மார்கத்தினர் எளிதானதை அந்த அளவிற்கு கடினமாக ஆக்கியதுடன் குழப்பத்தில் விழ வைத்து விட்டனர். இன்றைய நாள் வரை தந்தையை அதே ரூபத்தில் தேடிக் கொண்டே இருக்கின்றனர். சிறிய விசயத்தை பெரிய விசயமாக ஆக்கி விட்டனர். ஆகையால் குழப்பத்தில் வந்து விடுகின்றனர். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானை சந்திக்கும் விதியையும் மிகப் பெரியதாக கூறிவிட்டனர். அதே சக்கரத்தில் பக்த ஆத்மாக்களும் சிந்தனையில் மூழ்கியிருக்கின்றனர். பகவான் பக்தியின் பலன் கொடுப்பதற்காகவும் வந்து விட்டார். ஆனால் பக்த ஆத்மாக்கள் குழப்பத்தின் காரணத்தினால் ஒவ்வொரு இலைக்கும் தண்ணீர் கொடுப் பதில் பிசியாக இருக்கின்றனர். நீங்கள் எவ்வளவு தான் செய்தி கொடுத்தாலும் என்ன கூறுகின்றனர்? இவ்வளவு உயர்ந்த பகவான், இவ்வாறு எளிதாக வருவது லி இது முடியாத விசயமாகும். ஆகையால் தந்தை புன்முறுவல் செய்கின்றார் லி இன்றைய நாட்களில் புகழ் வாய்ந்த பக்தர்கள், புகழ் வாய்ந்த செல்வந்தர்கள், எந்த ஒரு தொழில் செய்வதில் பிரபலமானவராக இருப்பவர் லி அவரவர்களது காரியத்தில் பிசியாக இருக்கின்றனர். ஆனால் சாதாரண ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையிடம் வியாபாரம் செய்து விட்டீர்கள். பாண்டவர்கள் பக்காவாக வியாபாரம் செய்து வீட்டீர்கள் தானே? இரட்டை அயல்நாட்டினர் வியாபாரம் செய்வதில் புத்திசாலிகளாக இருக்கின்றனர். அனைவரும் வியாபாரம் செய்திருக்கிறீர்கள். ஆனால் அனைத்து விசயங்களிலும் வரிûச்கிரமம் இருக்கிறது. தந்தை அனைவருக்கும் ஒன்று போல அனைத்து பொக்கிஷங்களும் கொடுத்திருக்கின்றார், ஏனெனில் அளவற்ற கடலாக இருக்கின்றார். கொடுப்பதில் தந்தைக்கு வரிசைக்கிரமமாக கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

இன்றைய நாட்களில் விநாசம் செய்யக் கூடிய ஆத்மாக்கள் கூறும் பொழுது பல உலகங்களை அழிக்கக் கூடிய அளவிற்கு பொருட்கள் தயாரித்து வைத்திருக்கின்றோம். தந்தையும் கூறுகின்றார் லி தந்தையிடத்திலும் அந்த அளவிற்கு பொக்கிஷங்கள் உள்ளன, முழு உலக ஆத்மாக்களும் உங்களைப் போன்று புத்திசாலிகளாக ஆகி வியாபாரம் செய்தாலும் குறைவற்றதாக இருக்கும். பிராமணர்களாகிய உங்களது எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறதோ, இதை விட பல மடங்கு வந்து விட்டாலும் எடுத்துக் கொள்ள முடியும். அந்த அளவிற்கு அளவற்ற பொக்கிஷம் இருக்கிறது. ஆனால் அடைபவர்களில் வரிசைக்கிரமம் ஆகிவிடுகிறது. திறந்த மனதுடன் வியாபாரம் செய்யும் தைரியசாலிகள் மிகவும் குறைவாக வெளிப்படுகின்றனர். ஆகையால் இரண்டு வகையான மாலைகள் பூஜிக்கப்படுகின்றன. அஷ்ட இரத்தினங்கள் எங்கு இருக்கின்றன! 16 ஆயிரம் எங்கு இருக்கின்றன! எவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டு விட்டது! வியாபாரம் செய்வது ஒரே மாதியாகத் தான். கடைசி நம்பரும் பாபா என்று கூறுகின்றார், முதல் நம்பரும் பாபா என்று கூறுகின்றார். சப்தத்தில் எந்த வேறுபாடும் இல்லை. வியாபாரம் செய்வதற்கான விதி ஒன்று மாதிரியாகத் தான் இருக்கிறது. மேலும் கொடுக்கக் கூடிய வள்ளலும் ஒரே மாதிரியாகத் தான் கொடுக்கின்றார். ஞானப் பொக்கிஷம் அல்லது சக்திகளின் பொக்கிஷம், சங்கமயுகத்தின் பொக்கி‘ங்கள் என்று எதையெல்லாம் அறிவீர்களோ, அனைவரிடத் திலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. சிலருக்கு சர்வசக்திகள் கொடுத்திருக்கின்றார், சிலருக்கு ஒரு சக்தி கொடுத்திருக்கின்றார், சிலருக்கு ஒரு குணம் கொடுத்திருக்கின்றார் அல்லது சிலருக்கு சர்வ குணங்களைக் கொடுத்திருக்கின்றார் லி இந்த வேறுபாடு கிடையாது. அனைவருக்கும் ஒரே பட்டம் தான் லி முதல், இடை, கடையின் ஞானத்தை அறிந்த திரிகாலதர்சி, மாஸ்டர் சர்வசக்திவான் ஆகும். சிலர் சர்வசக்திவான், சிலர் சக்திவான் என்று கிடையாது. இல்லை. அனைவரையும் சர்வ குண சம்பன்னம் ஆகக் கூடிய தேவ ஆத்மாக்கள் என்று கூறுகின்றார், குண மூர்த்தி என்று கூறுகின்றார். அனைவரிடத்திலும் பொக்கிஷங்கள் இருக்கின்றன. ஒரு மாதமாக ஞானப் படிப்பு படிப்பவர் கூட ஞான வர்ணனை செய்து 50 ஆண்டுகள் உடையவரைப் போன்று வர்ணனை செய்கின்றார். ஒருவேளை ஒவ்வொரு குணம், சக்தியைப் பற்றி சொற்பொழிவு செய்யுமாறு கூறினால் மிகவும் நன்றாக சொற்பொழிவு செய்ய முடியும். புத்தியில் இருப்பதனால் தான் செய்ய முடியும் அல்லவா! ஆக பொக்கிஷம் அனைவரிடத்திலும் இருக்கிறது. பிறகு ஏன் வேறுபாடு ஏற்படுகிறது? நம்பர் ஒன் வியாபாரி பொக்கிஷத்தை சிந்தனை செய்து தனது காரியத்தில் பயன்படுத்துவர். அந்த அனுபவ அதாரிட்டியினால் அனுபவியாக ஆகி மற்றவர்களுக்கு கொடுப்பர். காரியத்தில் பயன்படுத்துவது என்றால் பொக்கிஷங்களை அதிகப்படுத்துவதாகும். ஒன்று வர்ணனை மட்டும் செய்யக் கூடியவர்கள், மற்றொருவர் சிந்தனை செய்யக் கூடியவர். சிந்தனை செய்பவர் யாருக்கு கொடுத்தாலும் அவர் சுயம் அனுபவியாக இருக்கின்ற காரணத்தினால் மற்றவர்களையும் அனுபவிகளாக ஆக்கி விட முடியும். வர்ணனை செய்பவர்கள் மற்றவர்களையும் வர்ணனை செய்பவர்களாக ஆக்கி விடுகின்றனர். மகிமை செய்து கொண்டிருப்பர், ஆனால் அனுபவியாக ஆகமாட்டார்கள். சுயம் மகான் ஆகமாட்டார்கள், ஆனால் மகிமை செய்பவர்களாக ஆவார்கள்.

ஆக நம்பர் ஒன் என்றால் சிந்தனை சக்தியின் மூலம் பொக்கிஷங்களின் அனுபவியாக ஆகி அனுபவி களாக ஆக்கக் கூடியவர்கள், அதாவது மற்றவர்களையும் செல்வந்தர்களாக ஆக்கக் கூடியவர்கள். ஆகையால் அவர்களது பொக்கிஷங்கள் சதா அதிகரித்துக் கொண்டே செல்லும். மேலும் தகுந்த நேரத்தில் தனக்காகவும், மற்றவர்களுக்காகவும் காரியத்தில் பயன்படுத்துவதன் மூலம் சதா வெற்றி சொரூபமாக இருப்பார்கள். வர்ணனை மட்டுமே செய்பவர்கள் மற்றவர்களையும் செல்வந்தர்களாக ஆக்க முடியாது, மேலும் தனக்காகவும் தகுந்த நேரத்தில் எந்த சக்தி, குணம், ஞானத்தின் விசயங்களை பயன்படுத்த வேண்டுமோ அதை அந்த நேரத்தில் பயன்படுத்த முடியாது. ஆகையால் பொக்கிஷங்கள் நிறைந்த சொரூபத்தின் சுகம் மற்றும் வள்ளலாகி கொடுக்கும் அனுபவம் செய்ய முடியாது. செல்வம் இருந்தும் செல்வத்தின் சுகம் அடைய முடியாது. சக்தி இருந்தாலும் தகுந்த நேரத்தில் சக்தியின் மூலம் வெற்றி அடைய முடியாது. குணம் இருந்தாலும் தகுந்த நேரத்தில் அந்த குணத்தை பயன்படுத்த முடியாது. வர்ணனை மட்டுமே செய்ய முடியும். செல்வம் அனைவரிடத்திலும் இருக்கிறது, ஆனால் செல்வத்தின் சுகம் தகுந்த நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம் அனுபவம் ஆகும். இன்றைய நாட்களில் அழியக் கூடிய செல்வந்தர்களின் செல்வமும் வங்கியில் இருக்கும், அலமாரியில் இருக்கும் அல்லது மெத்தையின் அடியில் இருக்கும். தானும் காரியத்தில் பயன்படுத்தமாட்டார்கள், மற்றவர்களையும் பயன்படுத்த விடமாட்டார்கள். சுயம் இலாபம் அடையமாட்டார்கள், மற்றவர்களை இலாபம் அடைய விடமாட்டார்கள். ஆக செல்வம் இருந்தும் சுகம் அடையவில்லை அல்லவா! மெத்தையின் அடியிலேயே இருந்து விடும், தானாகவே சென்று விடும். ஆக வர்ணனை செய்வது என்றால் பயன்படுத்தவில்லை, சதா ஏழையாகவே தென்படுவர். இந்த செல்வமும் தனக்கா மற்றும் பிறருக்காக தகுந்த நேரத்தில் பயன்படுத்தவில்லை, வெறும் புத்தியில் மட்டுமே வைத்திருந்தால் தானும் அழிவற்ற செல்வத்தின் போதை, குஷியில் இருக்கமாட்டார்கள், மற்றவர்களுக்கும் கொடுக்க முடியாது. சதா என்ன செய்வது? எப்படி செய்வது? . இந்த விதியிலேயே நடந்து கொண்டிருப்பார்கள். ஆகையால் இரண்டு மாலைகள் உருவாகி விடுகிறது. அவர்கள் சிந்தனை செய்யக் கூடியவர்கள், இவர்கள் வெறும் வர்ணனை செய்யக் கூடியவர்கள். ஆக எப்படிப்பட்ட வியாபாரிகளாக இருக்கிறீர் கள்? நம்பர் ஒன்னாக இருக்கிறீர்களா? அல்லது இரண்டாம் நம்பரா? இந்த பொக்கிஷங்களுக்கான நியமம் இது தான் - எந்த அளவிற்கு மற்றவர்களுக்குக் கொடுப்பீர்களோ, எந்த அளவிற்க காரியத்தில் பயன்படுத்துவீர்களோ, அந்த அளவிற்கு அதிகரிக்கும். விருத்தி அடைவதற்கான விதி இது தான். இதில் விதியை நடைமுறைபடுத்தாத காரணத்தினால் தனக்குள்ளும் விருத்தி ஏற்படுவது கிடையாது, மற்றவர்களுக்கு சேவை செய்வதிலும் விருத்தி ஏற்படுவது கிடையாது. எண்ணிக்கை அதிகமாவது கிடையாது, சம்பன்னம் ஆக்கக் கூடிய விருத்தி. சில மாணவர்களின் எண்ணிக்கை எண்ணிவிட முடிகிறது, ஆனால் யோகா என்றால் என்ன? என்று புரியவில்லை, தந்தையை எப்படி நினைவு செய்வது? என்று இன்று வரையும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது சக்தி கிடையாது. ஆக மாணவர்கள் வரிசையில் இருக்கின்றனர், பதிவேட்டில் பெயர் இருக்கிறது. ஆனால் செல்வந்தர்களாக ஆகவில்லை அல்லவா! யாசித்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் சில நேரங்களில் டீச்சரிடம் சென்ற உதவி செய்யுங்கள் என்றும், சில நேரங்களில் தந்தையிடம் உதவி செய்யுங்கள் என்று உரையாடல் செய்வார்கள். ஆக நிறைந்து இருக்கவில்லை அல்லவா! யார் சிந்தனைச் சக்தியின் மூலம் தனக்குள் செல்வத்தை நிறைத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் மற்றவர்களையும் செல்வத்தில் முன்னேற்றி விட முடியும். சிந்தனை சக்தி என்றால் செல்வத்தை அதிகப்படுத்துவது. ஆக செல்வந்தருக்கான குஷி, செல்வந்தருக்கான சுகம் அனுபவம் செய்ய வேண்டும். புரிந்ததா? சிந்தனைச் சக்திக்கான மகத்துவம் அதிகமாக இருக்கிறது. முன்பும் சிறிது கூறியிருந்தேன். சிந்தனை சக்தியின் மகத்துவத்தை பிறகு கூறுகின்றேன். சோதனை செய்வதற்கான காரியம் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். ரிசல்ட் வெளிப்பட்டப் பிறகு எங்களுக்குத் தெரியாது, இந்த விசயத்தை பாப்தாதா கூறவில்லை என்று நீங்கள் கூறுவீர்கள். ஆகையால் தினமும் கூறிக் கொண்டிருக்கின்றேன். சோதித்துக் கொள்வது என்றால் மாறுவதாகும். நல்லது.

அனைத்து சிரேஷ்ட வியாபாரி ஆத்மாக்களுக்கு, சதா அனைத்துப் பொக்கிஷங்களை தகுந்த நேரத்தில் காரியத்தில் பயன்படுத்தக் கூடிய மகான் விசால புத்தியுடைய குழந்தைகளுக்கு, சதா தன்னை மற்றும் அனைவரையும் சம்பன்ன அனுபவம் செய்து, செய்விக்கக் கூடிய அனுபவத்தின் அதாரிட்டியுடைய குழந்தைகளுக்கு அல்மைட்டி அதாரிட்டி பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

ஈஸ்டர்ன் மண்டலத்தின் சகோதர, சகோதரிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு

ஈஸ்டனிலிருந்து சூரியன் உதயம் ஆகிறது அல்லவா! ஆக ஈஸ்டர்ன் மண்டலம் என்றால் சதா ஞான சூரியன் உதயம் ஆகியே இருக்கிறது. ஈஸ்டனில் இருப்பவர்கள் என்றால் சதா ஞான சூரியனின் வெளிச்சத்தின் மூலம் ஒவ்வொரு ஆத்மாவையும் வெளிச்சத்தில் கொண்டு வரக் கூடியவர்கள், இருளைப் போக்கக் கூடியவர்கள். சூரியனின் காரியம் இருளை போக்குவதாகும். ஆக நீங்கள் அனைவரும் மாஸ்டர் ஞான சூரியன் அதாவது நாலா புறங்களிலும் உள்ள அஞ்ஞானத்தை அழிக்கக் கூடியவர்கள் தானே! அனைவரும் இதே சேவையில் பிசியாக இருக்கிறீர்களா அல்லது தனது மற்றம் குடும்பப் பிரச்சனைகளின் சண்டையில் மாட்டிக் கொண்டிருக்கிறீர்களா? சூரியனின் காரியம் வெளிச்சம் கொடுக்கும் காரியத்தில் பிசியாக இருப்பதாகும். இல்லறத்தில் இருந்தாலும், எந்த காரியம் செய்தாலும், எந்த பிரச்சனை எதிரில் வந்தாலும் சூரியன் வெளிச்சம் கொடுக்கும் காரியம் செய்யாமல் இருக்க முடியாது. ஆக மாஸ்டர் ஞான சூரியனாக இருக்கிறீர்களா? அல்லது சில நேரங்களில் குழப்பத்தில் வந்து விடுகிறீர்களா? முதல் கடமை - ஞானம் வெளிச்சம் கொடுக்க வேண்டும். பரமாத்மச் சக்தியின் மூலம் காரிய விவகாரம் மற்றும் குடும்பம் இரண்டையும் சிரேஷ்டமாக ஆக்க வேண்டும் என்ற நினைவு இருக்கும் போது இந்த சேவை தானாகவே நடைபெறும். எங்கு பரமாத்மச் சக்தி இருக்கிறதோ, அங்கு காரியத்தில் வெற்றி மற்றும் எளிதாகி விடும். மேலும் பரமாத்மச் சக்தியின் பாவணையின் மூலம் குடும்பத்திலும் உண்மையான அன்பு, ஒற்றுமை தானாகவே வந்து விடுகிறது. ஆக குடும்பமும் சிரேஷ்டம் மற்றும் காரியமும் சிரேஷ்டமாகி விடுகிறது. பரமாத்மச் சக்தியானது காரியத்திலிருந்து தூர விலக்குவது கிடையாது. பரமாத்மக் காரியத்தில் பிசியாக இருப்பதன் மூலம் குடும்பம் மற்றும் காரியத்தில் உதவி கிடைத்து விடுகிறது. ஆக பரமாத்மச் சக்தியினால் சதா முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். நேபாளத்தினர்களின் அடையாளத்திலும் சூரியன் காண்பிக் கின்றனர் அல்லவா! இராஜாக்களிலும் சூரியவம்சி இராஜாக்கள் பிரசித்தமானவர்கள், சிரேஷ்ட மானவர்கள் என்று நினைக்கின்றனர். ஆக நீங்களும் மாஸ்டர் ஞான சூரியன் அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கக் கூடியவர்கள். நல்லது.

வரதானம்:

சங்கமயுகத்தில் ஒவ்வொரு காரியத்தையும் கலையின்

ரூபத்தில் செய்யக் கூடிய 16 கலைகள் நிறைந்தவர் ஆகுக.
சங்கமயுகம் விசேஷமாக காரியங்கள் என்ற கலையை காண்பிக்கக் கூடிய யுகமாகும். யாருடைய ஒவ்வொரு காரியமும் கலையின் ரூபத்தில் இருக்குமோ, அவர்களது ஒவ்வொரு காரியம் மற்றும் குணத்திற்கு மகிமை ஏற்படும். 16 கலைகள் நிறைந்தவர் என்றால் ஒவ்வொரு நடத்தையும் சம்பூர்ன கலையின் ரூபத்தில் தென்பட வேண்டும் லி இதுவே சம்பூர்ன நிலையின் அடையாளமாகும். எவ்வாறு சாகாரத்தில் (பாபாவின்) பேசுவது, நடந்து கொள்வது .. அனைத்திலும் விசேஷதாவைப் பார்த்தீர்கள், ஆக இது கலை ஆகிவிடுகிறது. எழுந்திருக்கும்- அமரும் கலை, பார்க்கும் கலை, நடந்து கொள்ளும் கலை இருந்தது. அனைத்திலும் விடுபட்ட நிலை மற்றும் விசேஷதா இருந்தது. ஆக இவ்வாறு தந்தையைப் பின்பற்றி 16 கலைகள் நிறைந்தவர்களாக ஆகுங்கள்.

சுலோகன்:

யார் உடனுக்குடன் கண்டறிந்து முடிவெடுத்து விடுகிறார்களோ

 

அவர்கள் தான் சக்திசாலிகள் ஆவர்.

.