24.06.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையானவர்களாக ஆகின்ற போது இந்த உலகம் சுகம் நிறைந்ததாக ஆகவிடும், துக்கத்திற்கான காரணம் - 5 விகாரங்களுக்கு வசமாகி செய்த செயல்களாகும். (மாதேஸ்வரியின் விலை மதிக்க முடியாத மகாவாக்கியம்)

 

பாட்டு:

பார்வை செல்லாவிட்டாலும், உன் அன்பை அறிவேன்......

 

தனது எல்லையற்ற தந்தையின் மகிமையை கேட்டீர்கள். பொது மக்களுக்கு இப்படிப்பட்ட மகிமை இருக்க முடியாது. இது அந்த ஒருவரின் மகிமையாகும், அவரே இந்த மகிமைக்கு அதிகாரி ஆவார். ஏனெனில் அவரது மகிமை அவரது செயலைப் பொருத்து பாடப்படுகிறது. அவரது செயல்கள் அனைத்து மனித ஆத்மாக்களின் செயல்களை விட உயர்ந்ததாகும். ஏனெனில் அவரது செயல்களே அனைத்து மனித ஆத்மாக்களுக்கானது ஆகும். ஆக அனைவரையும் விட உயர்ந்தவராக ஆகிவிடுகிறார் அல்லவா! ஏனெனில் அனைவருக்கும் கதி, சத்கதி கொடுக்கும் வள்ளல் அவர் ஒருவரே. சிலருக்கு மட்டும் கதி, சத்கதி கொடுக்கின்றார் என்பது கிடையாது. அவர் அனைவருக்கும் கதி, சத்கதி கொடுக்கும் வள்ளல் ஆவார். எனவே அனைவருக்கும் அத்தாரிடி உடையவராக ஆகிவிடுகிறார் அல்லவா! பொதுவான முறையில் பார்க்கின்ற பொழுது ஏதாவது அரிய செயலைச் செய்யும் போது தான் மகிமை ஏற்படுகிறது. யார் உயர்ந்த காரியம் செய்கிறார்களோ அவர்களுக்கு எவ்வளவு மகிமை இருக்கிறது பாருங்கள்! ஆக தந்தைக்கும் அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்ற மகிமை இருக்கிறது எனில், அவர் கண்டிப்பாக இங்கு வந்து உயர்ந்த காரியம் செய்திருக்கின்றார், அதுவும் நமக்காக, மனித சிருஷ்டிக்காக உயர்ந்த காரியம் செய்திருக்கின்றார். ஏனெனில் இந்த சிருஷ்டியின் துக்கத்தை நீக்கக் கூடியவர் என்று அவர் கூறப்படுகின்றார். ஆக அவர் வந்து மனித சிருஷ்டியை உயர்ந்ததாக ஆக்கியிருக்கின்றார். இயற்கை சகிதமாக அனைத்தையும் மாற்றியிருக்கின்றார். ஆனால் எந்த யுக்தியின் அடிப்படையில் மாற்றம் ஏற்படுத்தினார்? என்பதை வந்து புரிய வைக்கின்றார். முதலில் மனித ஆத்மா, ஆத்மாவிற்குள் மாற்றம் கொண்டு வருவதன் மூலம், ஆத்மாவிற்குள் பலம் வருவதன் மூலம், தனது கர்மத்தின் பலத்தின் மூலம், பிறகு இந்த இயற்கை, தத்துவங்கள் அனைத்தின் மீதும் அந்த பலம் வேலை செய்கிறது. ஆனால் ஆக்கக் கூடியவர் அவர் அல்லவா! ஆக்கக் கூடியவர் அவராக இருந்தாலும், எப்படி ஆக்குகின்றார்? எதுவரை மனித ஆத்மா உயர்ந்ததாக ஆகவில்லையோ அது வரை ஆத்மாவின் ஆதாரத்தில் சரீரம், இயற்கை, தத்துவம் அனைத்தும் அதன் சக்தியில் வரிசைக்கிரமமாக வருகிறது. இதன் ஆதாரத்தில் முழு உலகமும் செழிப்பானதாக ஆகின்றது.

 

மனித சிருஷ்டியை சுகம் நிறைந்ததாக எப்படி ஆக்குவது? என்பதை மனித சிருஷ்டியை சுகமானதாக ஆக்கக் கூடிய தந்தையை அறிவார். எதுவரை ஆத்மாக்கள் தூய்மையானதாக ஆகவில்லையோ அதுவரை உலகம் சுகம் நிறைந்ததாக ஆக முடியாது. ஆகையால் அவர் வந்து முதன் முதலில் ஆத்மாக்களை தான் தூய்மையானவர்களாக ஆக்குகின்றார். இப்போது ஆத்மாக்கள் அசுத்தமாக உள்ளன. முதலில் அந்த அசுத்தத்தை நீக்க வேண்டும். பிறகு ஆத்மாவின் பலத்தின் மூலம் ஒவ்வொரு பொருளும் தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆகும். அவை அனைத்தும் தங்க யுகத்திற்கு வந்து விடும், ஆக இந்த தத்துவங்கள் போன்ற அனைத்தும் தங்கயுகத்தின் நிலைக்கு வந்து விடும். ஆனால் முதலில் ஆத்மாவின் நிலை மாறுகிறது. ஆத்மாக்களை மாற்றக் கூடியவர் அதாவது ஆத்மாக்களை தூய்மையாக்கக் கூடிய அவர் அத்தாரிட்டி ஆகிவிடுகின்றார். இப்போது உலகம் மாறிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும், எப்போது நாம் தன்னை மாற்றிக் கொள்கிறோமோ அப்போது அதன் ஆதாரத்தில் உலகம் மாறும். ஒருவேளை இன்று வரை நமக்குள் எந்த வித்தியாசமும் ஏற்படவில்லையோ, தன்னை மாற்றிக் கொள்ளவில்லையோ, பிறகு உலகம் எப்படி மாறும்? ஆகையால் தினமும் தன்னை பரிசோதியுங்கள். கணக்கு எழுதுபவர்கள், வியாபாரிகள் இன்று எவ்வளவு இலாபம் ஏற்பட்டது? எவ்வளவு நஷ்டம் ஆனது? என்று பார்ப்பார்கள் அல்லவா! அதிக நஷ்டம் ஏற்பட்டிருந்தால் அடுத்த நாள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இதே போன்று தன் மீது கவனம் செலுத்துவதன் மூலம் நமக்கு இலாபம் கிடைக்கும், நாம் நமது பதவியை (போசீசன்) உறுதியாகப் பற்றிக் கொண்டு செல்வோம். எனவே இவ்வாறு பரிசோதனை செய்து சுய மாற்றத்தினை உணர வேண்டும். நான் தேவதையாக ஆகப் போகிறேன், பின் நாட்களில் அவ்வாறு ஆவேன், இப்போது எப்படி இருக்கிறேனோ, நன்றாகத் தான் இருக்கிறேன் என்று இருக்கக் கூடாது. இப்போதிலிருந்தே அந்த தேவதா சம்ஸ்காரத்தை உருவாக்க வேண்டும். இன்று வரையிலும் 5 விகாரங்களுக்கு வசமாகக் கூடிய சம்ஸ்காரம் தான் நம்மிடம் இருந்தது, இப்போது அந்த விகாரங்களிலிருந்து நான் விடுபட்டுக் கொண்டிருக்கிறேனா? என்று தன்னை பார்க்க வேண்டும். எனக்குள் இருந்த கோபம் நீங்கிக் கொண்டிருக்கிறதா? பேராசை அல்லது பற்று போன்ற அனைத்து விகார சம்ஸ்காரங்கள் மாறிக் கொண்டிருக்கின்றனவா? அவைகள் மாறிக் கொண்டிருக்கிறது, விடுபட்டுக் கொண்டிருக்கிறோம் எனில், நாம் மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், அதிலிருந்து விடுபடவில்லையெனில் புரிந்து கொள்ளுங்கள் நான் இன்னும் மாறவில்லை. ஆக மாற்றத்தின் வேறுபாட்டை உணர வேண்டும். தனக்குள் மாற்றம் வர வேண்டும். முழு நாளும் விகாரியாகவே இருப்பது, ஆனால் நான் தானம், புண்ணியம் செய்ததாக பெருமை பட்டுக்கொள்வது - இவ்வாறு கூடாது. நமது கர்ம கணக்கின் மீது கவனமாக இருக்க வேண்டும். நாம் எது செய்தாலும் அதில் விகாரத்திற்கு வசமாகி தனது விகர்மத்தின் கணக்கு உருவாக்கவில்லை அல்லவா? இதில் தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற அனைத்து கணக்குகளையும் பரிசோதிக்க வேண்டும். மேலும் தூங்குவதற்கு முன் 10-15 நிமிடங்கள் எனது முழு நாளும் எப்படி கடந்தது? என்று தன்னைப் பார்க்க வேண்டும். சிலர் குறிப்பெடுக்கவும் செய்கின்றனர், ஏனெனில் பழைய பாவங்களின் சுமைகள் தலை மீது இருக்கிறது, அதையும் அழிக்க வேண்டும். அதற்கு தந்தையின் கட்டளை என்னை நினைவு செய்யுங்கள் என்பதாகும். ஆக நினைவிற்கு நான் எவ்வளவு நேரம் கொடுத்தேன்? என்பதையும் பார்க்க வேண்டும். ஏனெனில் இவ்வாறு சார்ட் வைப்பதன் மூலம் அடுத்த நாளுக்கான எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். இவ்வாறு எச்சரிக்கையுடன் இருந்து இருந்து பிறகு நமது செயல்கள் நல்லதாகவே ஆகிவிடும், பிறகு எந்த பாவங்களும் ஏற்படாது. ஆக பாவங்களிலிருந்து தப்பிக்க வேண்டும் அல்லவா!

 

நம்மை இந்த விகாரங்கள் தான் கெட்டவர்களாக ஆக்கியிருக்கிறது. விகாரங்களின் காரணத்தினால் தான் நாம் துக்கமானவர்களாக ஆகியிருக்கிறோம். இப்போது நாம் துக்கத்திலிருந்து விடுபட வேண்டுமெனில், இதுவே முக்கிய விசயமாகும். பக்தியிலும் நாம் பரமாத்மாவை அழைத்தோம், நினைவு செய்து வந்தோம், எந்த முயற்சிகள் செய்தோமோ அவை எதற்காகச் செய்தோம்? சுகம் மற்றும் அமைதிக்காகத் தான் செய்தோம் அல்லவா! எனவே அதற்கான நடைமுறைப் பயிற்சி இப்போது செய்விக்கப்படுகிறது. இது நடைமுறைப்படுத்து வதற்கான கல்லூரியாகும். இதை பயிற்சி செய்வதன் மூலம் நாம் தூய்மையானவர்களாக ஆகிக் கொண்டே செல்வோம். பிறகு நமது இலட்சியமாகிய ஆதி சநாதன தூய இல்லறத்தை நாம் அடைவோம். சிலர் மருத்துவர் ஆவதற்காக மருத்துவக் கல்லூரிக்கு செல்வர், மருத்துவப் பயிற்சியின் மூலம் மருத்துவராக ஆகிவிடுவர். அதே போன்று நாமும் இந்த கல்லூரியில் இந்த படிப்பின் மூலம் அதாவது இந்த பயிற்சியின் மூலம் இந்த விகாரங்கள் அதாவது பாவ காரியங்கள் செய்வதிலிருந்து விடுபட்டு தூய்மையானவர்களாக ஆகி விடுவோம். பிறகு தூய்மையானவர்களுக்கான டிகிரி என்ன? தேவதை.

 

தேவதைகளின் மகிமை - சர்வகுண சம்பன்ன, 16 கலைகள் நிறைந்தவர்கள், சம்பூர்ண நிர்விகாரி என்று பாடப்பட்டிருக்கிறது அல்லவா! இவ்வாறு எப்படி ஆக முடியும்? நாம் அவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பது கிடையாது, ஆக வேண்டும். ஏனெனில் நாம் தான் சீர்கெட்டிருக்கிறோம். நாம் தான் ஆக வேண்டும். தேவதைகளுக்கென்று மற்றொரு உலகம் இருக்கிறது என்பதும் கிடையாது. மனிதர்களாகிய நாம் தான் தேவதைகளாக ஆக வேண்டும். அந்த தேவதைகள் தான் வீழ்ச்சியடைந்திருக்கின்றனர், இப்போது மீண்டும் எழுச்சி பெற வேண்டும். ஆனால் எழுச்சியடைவதற்கான வழியை தந்தை கற்றுக் கொடுக்கின்றார். இப்போது நாம் அவருடன் நமது தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது தந்தை வந்து ஒளி கொடுத்திருக்கின்றார் - உண்மையில் நீங்கள் என்னுடையவர்கள், இப்போது என்னுடையவர்களாக ஆகி எப்படி இருக்க வேண்டும்! லௌகீகத்திலும் தந்தை குழந்தையிடம், குழந்தை தந்தையிடம் எப்படி இருப்பர்! அதே போன்று நீங்களும் உங்களது உடல், மனம், பொருள் மூலம் என்னுடையவராகி நடந்து கொள்ளுங்கள். எப்படி நடப்பது? அதற்கு உதாரணம் இந்த பாபா ஆவார். அவருடைய சரீரத்தில் பாபா வருகின்றார், அவர் தனது உடல், மனம், பொருள் அனைத்தையும் அர்ப்பணம் செய்து அவருடையவராகி நடந்து கொண்டிருக்கின்றார். இவ்வாறு தந்தையைப் பின்பற்ற வேண்டும். இதில் வேறு விசயங்கள் கேட்பதற்கோ அல்லது குழப்பமடைவதற்கான விசயம் எதுவும் கிடையாது. தெளிவான, வெளிப்படையான விசயமாகும். ஆக இப்போது முன்னேறிக் கொண்டே இருங்கள். அதிகம் கேட்டு விட்டு குறைவாக தாரணை செய்யக் கூடாது. குறைவாக கேட்க வேண்டும், அதிகம் தாரணை செய்ய வேண்டும். எது கேட்கின்றோமோ அதை நடைமுறையில் எப்படி கொண்டு வருவது என்பதில் முழு கவனம் செலுத்துங்கள். தனது பயிற்சியை முன்னேற்றத்தில் கொண்டு செல்லுங்கள். கேட்டுக் கொண்டே இருப்பது, கேட்டுக் கொண்டே இருப்பது என்று இருந்து விடக் கூடாது. இன்று என்ன கேட்டோமோ அதில் ஏதாவது ஒன்றை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். நான் இன்றிலிருந்து அந்த நிலையிலேயே இருப்பேன். விகாரங்களுக்கு வசமாகி எந்த காரியமும் செய்யமாட்டேன். மேலும் நான் அந்த மாதிரி எனது தினசரியை உருவாக்குவேன். நான் எனது சார்ட் வைப்பேன். இது போன்று நடைமுறையில் பயிற்சி செய்து வந்தால் எப்படிப்பட்டவர்களாக ஆகிவிடுவீர்கள் என்பதைப் பார்ப்பீர்கள். ஆக இப்போது என்ன கூறினேனோ அதைப் பயிற்சி செய்ய வேண்டும். எதைக் கூறுகிறீர்களோ, எதைக் கேட்கிறீர்களோ அதைச் செய்யுங்கள். போதும். வேறு எந்த விசயமும் கிடையாது. செய்வதில் மட்டுமே முக்கியத்தும் கொடுத்தால் போதும். புரிந்ததா? தந்தை மற்றும் தாதாவை நல்ல முறையில் அறிவீர்கள் அல்லவா! அதே போன்று இப்போது அவர்களைப் பின்பற்றுங்கள். இவ்வாறு பின்பற்றக் கூடிய நல்ல குழந்தைகள் அதாவது இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.

 

மற்றொரு முரளி - 1957

 

பாட்டு: எனது சிறிய இந்த உலகை பாருங்கள்..

 

இந்த பாட்டு எந்த காலத்தில் பாடப்பட்டிருக்கிறது, ஏனெனில் இந்த சங்கமத்தின் காலம் தான் பிராமண குலத்தினர்களாகிய நமக்கு சிறிய உலகமாகும். இது நமக்கு எப்படிப்பட்ட குடும்பமாக இருக்கிறது! என்பதை வரிசைக்கிரமமாகக் கூறுகின்றார். நாம் பரம்பிதா பரமாத்மா சிவனின் பேரன்களாக இருக்கிறோம். பிரம்மா, சரஸ்வதியின் வாய்வழிக் குழந்தைகள். மேலும் விஷ்ணு, சங்கர் நமது பெரியப்பா ஆவர். மேலும் நாம் நமக்குள் அனைவரும் சகோதர, சகோதரிகளாக இருக்கிறோம். இது நமது சிறிய உலகமாகும். இதைத் தவிர வேறு எந்த சம்பந்தங்களும் படைக்கப்படவில்லை. இந்த நேரத்தில் இது மட்டும் தான் சம்பந்தம் என்று கூறலாம். நமது சம்பந்தங்கள் எவ்வளவு அதிகாரப்பூர்வமானது பாருங்கள்! நமது பெரிய தாத்தா சிவன், அவரது பெயர் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது! அவர் முழு மனித சிருஷ்டியின் விதையாக இருக்கின்றார். அனைத்து ஆத்மாக்களுக்கும் நன்மை செய்கின்ற காரணத்தினால் அவர் போலாநாத் சிவ மகாதேவ் என்ற கூறப்படுகின்றார். அவர் முழு சிருஷ்டியின் துக்கத்தை நீக்கி சுகம் கொடுக்கக் கூடியவர் ஆவார். அவர் மூலம் நமக்கு சுகம், சாந்தி, தூய்மை என்ற மிகப் பெரிய ஆஸ்தி (அதிகாரம்) கிடைக்கிறது. அமைதியில் எந்த கர்மபந்தனத்தின் கணக்கு வழக்கு இருக்காது. ஆனால் இந்த இரண்டும் தூய்மையின் ஆதாரத்தில் தான் இருக்கிறது. தந்தையின் முழு வளர்ப்பு என்ற ஆஸ்தி அடையாத வரை, தந்தையிடமிருந்து சான்றிதழ் அடையாத வரை இந்த ஆஸ்தி அடைய முடியாது. பாருங்கள், பிரம்மாவிற்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது - 5 விகாரங்களினால் அசுத்தமான ஆத்மாக்களை மலர்களாக ஆக்குகின்றார். இந்த அலௌகீக காரியத்தின் வட்டியாக சத்யுகத்தில் முதல் நம்பர் ஸ்ரீகிருஷ்ணர் பதவி கிடைக்கிறது. அப்படிப்பட்ட தந்தையிடம் உங்களது சம்பந்தம் எப்படி இருக்கிறது பாருங்கள்! ஆக எவ்வளவு கவலையற்றவர்களாக மற்றும் குஷியுடன் இருக்க வேண்டும்! நான் அவருடையவராக முழுமையாக ஆகிவிட்டேனா? என்று ஒவ்வொருவரும் தனது உள்ளத்தைக் கேட்க வேண்டும்.

 

பரமாத்மா தந்தை வந்திருக்கின்றார் எனில், நான் அவரிடமிருந்து முழுமையான ஆஸ்தி அடைய வேண்டும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். முழு முயற்சி செய்து ஸ்காலர்சிப் அடைவது தான் மாணவர்களின் காரியமாகும். ஆக நாம் ஏன் முதல் நம்பர் லாட்டரியை ஜெயிக்கக் கூடாது? அது வெற்றி மாலையில் வருவதாகும். மற்றபடி சிலர் இரண்டு லட்டுக்களையும் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர் - இங்கிருக்கும் எல்லைக்குட்பட்ட சுகத்தையும் அடைவேன், அங்கு வைகுண்டத்தின் சுகத்தையும் சிறிது அடைவேன். இப்படி சிந்திப்பவர்களை நடுத்தரம் மற்றும் கீழான முயற்சியாளர் என்று கூறலாம், உத்தம முயற்சியாளர் என்று கூற முடியாது. கொடுப்பதில் பாபா பாகுபாடு பார்ப்பது கிடையாது எனும் போது அடைபவர்கள் ஏன் அவ்வாறு இருக்க வேண்டும்? அதனால் தான் குருநானக் கூறுகின்றார் - பரமாத்மா வள்ளலாக இருக்கின்றார், சக்தி வாய்ந்தவராக இருக்கின்றார், ஆனால் ஆத்மாக்களுக்கு அவரிடமிருந்து அடையக் கூடிய அளவிற்கு சக்தி கிடையாது. கொடுப்பவர் கொடுத்துக் கொண்டிருக்கின்றார், ஆனால் அடைபவர்கள் களைப்படைந்து விட்டனர் என்றும் கூறுப்படுகிறது. உங்களது உள்ளத்திலும் வந்து கொண்டிருக்கும் - நாமும் இந்த பதவியடைய வேண்டும் என்று நாம் ஏன் விரும்பக் கூடாது. ஆனால் பாருங்கள், பாபா எவ்வளவு முயற்சி செய்கின்றார், இருப்பினும் மாயை எவ்வளவு தடைகளை கொண்டு வருகிறது! ஏன்? இப்போது மாயையின் இராஜ்யம் அழியப் போகிறது. இப்போது மாயை முழு சாரத்தையும் இழந்து விட்டது. அப்போது தான் பரமாத்மா வருகின்றார். அவரிடத்தில் அனைத்து ரசனைகளும் நிறைந்திருக்கிறது. அவரிடத்தில் அனைத்து சம்பந்தங்களின் ரசனையும் கிடைக்கிறது. அதனால் தான் தாயும் நீயே, தந்தையும் நீயே. என்ற மகிமை அந்த பரமாத்மாவிற்கு பாடப்பட்டிருக்கிறது. ஆக மகிமைகள் அனைத்தும் இப்படிப்பட்ட சம்பந்தங்கள் கிடைத்திருக்கும் இந்த நேரத்திற்கானது.

 

எனவே பரமாத்மாவிடம் முழுமையான சம்பந்தம் வைக்க வேண்டும் அதாவது அவரிடமிருந்து 21 பிறவிகளுக்கு சுகம் பிராப்தியாக அடைந்திட வேண்டும். இது தான் செய்யும் முயற்சியில் அடையக் கூடிய வெற்றியாகும். ஆனால் 21 பிறவிகள் என்ற வார்த்தை கேட்டதும் தளர்ந்து விடக் கூடாது. 21 பிறவிகளுக்காக எனும் போது இப்போது அதிக காலம் முயற்சி செய்ய வேண்டும், 21 பிறவிகளுக்குப் பிறகு மீண்டும் வீழ்ச்சியடைய வேண்டியிருக்கும் எனில், இதில் என்ன வெற்றியிருக்கிறது? என்றும் சிந்திக்க வேண்டாம். ஆனால் நாடகத்தில் ஆத்மாக்களுக்கு எவ்வளவு வெற்றி கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கும் அல்லவா! தந்தை வந்து நம்மை சம்பூர்ண நிலைக்கு கொண்டு செல்கின்றார், ஆனால் குழந்தைகள் நாம் தந்தையை மறந்து விடும் போது அவசியம் வீழ்ச்சியடைவோம், இதில் பாபாவிடம் எந்த குறையும் இல்லை. இதில் குழந்தைகளாகிய நம்மிடத்தில் தான் குறையிருக்கிறது, சத்யுகம், திரேதாவின் முழு சுகம் இந்த நேரத்தின் முயற்சியின் ஆதாரத்தில் இருக்கிறது எனில், ஏன் முழு முயற்சி செய்து தனது சர்வ உத்தமமான நடிப்பை நடிக்கக் கூடாது? ஏன் முயற்சி செய்து அந்த ஆஸ்தி அடையக் கூடாது? சதா சுகம் அடைவதற்காகத் தான் மனிதர்கள் முயற்சி செய்கின்றனர். சுகம், துக்கத்திலிருந்து விடுபடுவதற்காக யாரும் முயற்சி செய்வது கிடையாது. அது நாடகத்தின் கடைசியில் பரமாத்மா வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் தண்டனை கொடுத்து தூய்மையாக்கி நடிப்பிலிருந்து முக்தியாக்குவார். இது பரமாத்மாவின் காரியமாகும். அவர் தனது நேரத்தில் சரியாக சுயமாக வந்து கூறுகின்றார். மீண்டும் ஆத்மாக்கள் நடிப்பை நடிப்பதற்கு வந்தே ஆக வேண்டும். ஆக ஏன் உத்தம நடிப்பை நடிக்கக் கூடாது? நல்லது, இனிமையிலும் இனிய குழந்தைகளுக்கு தாயின் அன்பு நினைவுகள். ஓம்சாந்தி.

 

வரதானம்:

பாபா என்ற வார்த்தையின் நினைவின் மூலம் காரணத்தை நிவாரணமாக மாற்றக் கூடிய சதா ஆடாது, அசையாதவர்களாக ஆகுக.

 

குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் பாபா என்று கூறினால் உறுதியானவர் களாக ஆகிவிடுவீர்கள். எப்போது பிரச்சனைகளின் சிந்தனைகளில் சென்று விடுவீர்களோ அப்போது கடின உழைப்பின் அனுபவம் செய்கிறீர்கள். காரணத்திற்குப் பதிலாக நிவாரணத்தை சிந்தனை செய்தால் காரணம் நிவாரணம் ஆகிவிடும். ஏனெனில் மாஸ்டர் சர்வசக்திவான்களாகிய பிராமணர்களின் எதிரில் பிரச்சனைகள் குருவிக்குச் சமமானதும் அல்ல. ஏன் நடந்தது? ஏன் நடந்தது? என்று சிந்திப்பதற்குப் பதிலாக எது நடந்ததோ அதில் நன்மை அடங்கியிருக்கிறது, சேவை நிறைந்திருக்கிறது ரூபம் பிரச்சனையாக இருக்கலாம், ஆனால் சேவை அடங்கியிருக்கிறது என்ற ரூபத்தில் பார்த்தீர்கள் எனில் சதா ஆடாது, அசையாது இருப்பீர்கள்.

 

சுலோகன்:

ஒரு தந்தையின் பிரபாவத்தில் இருக்கக் கூடிய ஆத்மாக்கள் எந்த ஆத்மாவின் பிரபாவத்திலும் வர முடியாது.

 

ஓம்சாந்தி