04.06.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
இப்பொழுது
நீங்கள்
எல்லையற்ற
தூய்மையைக்
கடைபிடிக்க வேண்டும்,
எல்லையற்ற
தூய்மை
அதாவது
ஒரு
தந்தையைத்
தவிர
வேறு
யாருடைய
நினைவும் வரக்
கூடாது.
கேள்வி:
தந்தையிடமிருந்து
ஆஸ்தி
அடைவதற்கு
முந்தைய
முயற்சிக்கும்,
அதன்
பிறகு
உள்ள மனநிலைக்கும்
உள்ள
வித்தியாசம்
என்ன?
பதில்:
எப்பொழுது
நீங்கள்
தந்தையிடமிருந்து
ஆஸ்தி
அடைகிறீர்களோ
அப்பொழுது
தேகத்தின்
அனைத்து சம்மந்தங்களையும்
விட்டு
விட்டு
ஒரு
தந்தையை
நினைவு
செய்யும்
முயற்சி
செய்கிறீர்கள்.
ஆஸ்தி
கிடைத்ததும் தந்தையை
மறந்து
விடுகிறீர்கள்.
இப்பொழுது
ஆஸ்தி
அடைய
வேண்டும்,
ஆகையால்
யாரிடத்திலும்
புதிய சம்மந்தத்தை
உருவாக்கிக்
கொள்ளக்
கூடாது.
இல்லையெனில்
மறப்பதற்கு
கடினமாகி
விடும்.
அனைத்தையும் மறந்து
ஒருவரை
நினைவு
செய்தால்
ஆஸ்தி
கிடைத்து
விடும்.
பாட்டு:
இந்த
நேரம்
கடந்து
கொண்டே
செல்கிறது
......
ஓம்சாந்தி.
இனிமையிலும்
இனிய
குழந்தைகளுக்காக
தந்தை
புரிய
வைக்கின்றார்
-
ஞானி
மற்றும் அஞ்ஞானி
என்று
யாரைக்
கூறுகிறோம்?
என்பதை
பிராமணர்களாகிய
நீங்கள்
மட்டுமே
அறிவீர்கள்.
ஞானம் என்றால்
படிப்பு,
இதன்
மூலம்
நான்
ஆத்மா,
அவர்
பரம்பிதா
பரமாத்மா
என்பதை
நீங்கள்
அறிந்து
கொண்டீர்கள்.
நீங்கள்
அங்கிருந்து
மதுவனத்திற்கு
வருகின்ற
பொழுது
முத-ல்
தன்னை
ஆத்மா
என்று
புரிந்து
கொள்கிறீர்கள்.
நாம்
நமது
தந்தையிடம்
செல்கிறோம்.
பாபா
என்று
சிவபாபாவைக்
கூறுகிறோம்.
சிவபாபா
பிரஜாபிதா
பிரம்மாவின் உடypல்
இருக்கின்றார்.
அவரும்
பாபா
ஆகிவிடுகின்றார்.
நீங்கள்
வீட்டிypருந்து
வரும்
பொழுது
நாம்
பாப்தாதாவிடம் செல்கிறோம்
என்பதைப்
புரிந்து
கொள்கிறீர்கள்.
நீங்கள்
கடிதத்திலும்
பாப்தாதா
என்று
எழுதுகிறீர்கள்.
சிவபாபா,
பிரம்மா
தாதா.
நாம்
பாபாவிடத்தில்
செல்கிறோம்.
பாபா
ஒவ்வொரு
கல்பத்திலும்
நம்மை
சந்திக்கின்றார்.
பாபா நம்மை
எல்லையற்ற
தூய்மையானவர்களாக்கி
நமக்கு
எல்லையற்ற
ஆஸ்தி
கொடுக்கின்றார்.
தூய்மையில் எல்லைக்குட்பட்டது
மற்றும்
எல்லையற்றது
இருக்கிறது.
எல்லையற்ற
தூய்மை,
சதோ
பிரதானம்
ஆவதற்காக நீங்கள்
முயற்சி
செய்து
கொண்டிருக்கிறீர்கள்.
வரிசைக்கிரமம்
ஏற்படவே
செய்கிறது.
எல்லையற்ற
தூய்மை என்றால்
ஒரு
எல்லையற்ற
தந்தையைத்
தவிர
வேறு
யாருடைய
நினைவும்
வரக்
கூடாது.
அந்த
பாபா
மிகவும் இனிமையானவராக
இருக்கின்றார்.
உயர்ந்ததிலும்
உயர்ந்தவர்
பகவான்,
மேலும்
எல்லையற்ற
தந்தையாகவும் இருக்கின்றார்.
அனைவரின்
தந்தையாவார்.
குழந்தைளாகிய
நீங்கள்
தான்
அறிந்திருக்கிறீர்கள்.
எல்லையற்ற தந்தை
சதா
பாரதத்தில்
தான்
வருகின்றார்.
வந்து
எல்லையற்ற
சந்நியாசம்
செய்விக்கின்றார்.
சந்நியாசமும் முக்கியமானது
அல்லவா!
இது
தான்
வைராக்கியம்
என்று
கூறப்படுகிறது.
முழு
பழைய
சீ
சீ
உலகின்
மீது தந்தை
வைராக்கியம்
ஏற்படுத்துகின்றார்.
குழந்தைகளே!
இதிypருந்து
புத்தியோகத்தை
நீக்கி
விடுங்கள்.
இதன் பெயரே
நரகம்,
துக்கதாமம்
ஆகும்.
யாராவது
இறந்து
விட்டால்
சொர்க்கவாசி
ஆகிவிட்டார்
என்று
கூறுகின்றனர் எனில்
நரகத்தில்
இருந்தார்
அல்லவா!
இவர்கள்
என்ன
கூறுகிறார்களோ
அதுவும்
தவறானது
ஆகும்.
தந்தை சொர்க்கவாசி
ஆவதற்காக
சரியான
விசயத்தைக்
கூறுகின்றார்.
சொர்க்கவாசி
ஆவதற்காகவும்
கூட
தந்தையைத் தவிர
வேறு
யாரும்
முயற்சி
செய்விக்க
முடியாது.
21
பிறவிகளுக்கு
சொர்க்கவாசி
ஆவதற்காக
நீங்கள் இப்பொழுது
முயற்சி
செய்து
கொண்டிருக்கிறீர்கள்.
ஆக்கக்
கூடியவர்
தந்தை
ஆவார்.
அவர்
ஹெவன்-
காட் பாதர்
என்று
கூறப்படுகின்றார்.
சுயம்
வந்து
கூறுகின்றார்
-
குழந்தைகளே!
நான்
உங்களை
முதypல்
சாந்தி தாமத்திற்கு
அழைத்துச்
செல்வேன்,
எஜமான்
அல்லவா!
சாந்திதாமத்திற்குச்
சென்று,
பிறகு
சுகதாமத்திற்கு நடிப்பு
நடிக்க
வருவீர்கள்.
நாம்
சாந்திதாமம்
செல்லும்
பொழுது
அனைத்து
தர்மத்தைச்
சார்ந்தவர்களும் சாந்திதாமத்திற்கு
வருவார்கள்.
புத்தியில்
இந்த
முழு
நாடகச்
சக்கரத்தை
நினைவில்
வைத்துக்
கொள்ள வேண்டும்.
நாம்
அனைவரும்
சாந்திதாமத்திற்கு
செல்வோம்,
பிறகு
நாம்
தான்
முத-ல்
வந்து
தந்தையிடமிருந்து ஆஸ்தி
அடைகிறோம்.
யாரிடமிருந்து
ஆஸ்தி
அடைவோமோ
அவரை
அவசியம்
நினைவு
செய்ய
வேண்டும்.
ஆஸ்தியடைந்து
விட்டால்
பிறகு
தந்தையின்
நினைவை
மறந்து
விடுவோம்
என்பதை
குழந்தைகள்
அறிந்திருக் கிறீர்கள்.
மிக
எளிய
முறையில்
ஆஸ்தி
கிடைக்கிறது.
தந்தை
நேரில்
கூறுகின்றார்
-
இனிய
குழந்தைகளே!
உங்களது
தேக
சம்மந்தங்கள்
அனைத்தையும்
மறந்து
விடுங்கள்.
இப்பொழுது
எந்த
புது
சம்மந்தங்களையும் உருவாக்கிக்
கொள்ளக்
கூடாது.
ஒருவேளை
ஏதாவது
புது
சம்பந்தங்களை
உருவாக்கிக்
கொண்டால்
பிறகு அதை
மறக்க
வேண்டியிருக்கும்.
ஒருவேளை
ஆண்
அல்லது
பெண்
குழந்தை
பிறந்து
விட்டால்
அதுவும் கடினமாகி
விடும்.
அதிக
நினைவு
வரும்
அல்லவா!
அனைத்தையும்
மறந்து
ஒருவரை
மட்டுமே
நினைவு செய்யுங்கள்
என்று
தந்தை
கூறுகின்றார்.
அவர்
தான்
நமது
தாய்,
தந்தை,
ஆசிரியர்,
குரு
போன்ற
அனைத்துமாக இருக்கின்றார், ஒரு தந்தையின் குழந்தைகளாகிய நாம்
சகோதர, சகோதரிகளாக இருக்கின்றோம். சித்தப்பா, மாமா போன்ற எந்த
சம்மந்தமும் கிடையாது. இந்த ஒரே ஒரு சமயத்தில் தான் சகோதர,
சகோதரி என்ற சம்மந்தம் ஏற்படுகிறது. பிரம்மாவின் குழந்தையாக,
சிவபாபாவின் குழந்தையாகவும் இருக்கிறோம், பேரன் பேத்திகளாகவும்
இருக்கிறோம். இது பக்காவாக(உறுதியாக) புத்தியில் நினைவிற்கு
வருகிறது அல்லவா! வரிசைக்கிரமமான முயற்சியின் படி! நடந்தாலும்,
காரியங்கள் செய்தாலும் குழந்தைகளாகிய நீங்கள் சுயதரிசன
சக்கரதாரிகளாக ஆகிறீர்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் இந்த நேரத்தில் சைத்தன்ய லைட் ஹவுஸாக
(கலங்கரை விளக்காக) இருக்கிறீர்கள். உங்களது ஒரு கண்ணில்
முக்திதாமம், மற்றொரு கண்ணில் ஜீவன்முக்திதாமம் இருக்கிறது.
அந்த கலங்கரை விளக்கு ஜடமானது, நீங்கள் சைத்தன்யமானவர்கள்.
உங்களுக்கு ஞானக் கண் கிடைத்திருக்கிறது. நீங்கள்
ஞானமுடையவர்களாகி அனைவருக்கும் வழி காட்டுகிறீர்கள். தந்தையும்
உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார். இது துக்கதாமம்,
நாம் இப்பொழுது சங்கமத்தில் இருக்கிறோம், மற்றபடி முழு உலகமும்
கypயுகத்தில்
இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். சங்கமத்தில் தந்தை
குழந்தைகளுடன் சேர்ந்து அமர்ந்து உரையாடல் செய்கின்றார்,
மேலும் குழந்தைகள் தான் இங்கு வருகின்றனர். பாபா, இன்னாரை
அழைத்து வரலாமா? என்று சில குழந்தைகள் கேட்கின்றனர்.
குணங்களைக் கற்றுக் கொள்ள முடியும், அம்பு பதிந்து விடும்,
நல்லது தானே! ஆக பாபாவிற்கு கருணை வருகிறது, அவர்களுக்கும்
நன்மை ஏற்பட வேண்டும். இது புருஷோத்தம சங்கமயுகம் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்த நேரத்தில் தான்
நீங்கள் புருஷோத்தமர்களாக ஆகிறீர்கள். கypயுகத்தில்
அனைவரும் அசுத்தமானவர்களாக இருக்கின்றனர், உத்தம புருஷர்களாகிய
இலட்சுமி நாராயணனை வணங்குகின்றனர். சத்யுகத்தில் யாரும்
யாரையும் வணங்குவது கிடையாது. இங்கிருக்கும் அனைத்து
விசயங்களும் அங்கு இருக்காது. நல்ல முறையில் தந்தையின்
நினைவில் இருந்து சேவை செய்தீர்கள் எனில் நாளடைவில் உங்களுக்கு
சாட்சாத்காரமும் ஏற்படும் என்பதையும் தந்தை புரிய
வைத்திருக்கின்றார். நீங்கள் யாருக்கும் பக்தி செய்வது
கிடையாது. உங்களுக்கு தந்தை படிப்பு கற்பிக்கின்றார். வீட்டில்
அமர்ந்து கொண்டே தானாகவே சாட்சாத்காரம் போன்றவைகள் ஏற்பட்டுக்
கொண்டே இருக்கின்றன. பலருக்கு பிரம்மாவின் சாட்சாத்காரம்
ஏற்படுகிறது, அவரது சாட்சாத்காரத்திற்காக எந்த முயற்சியும்
செய்வது கிடையாது. எல்லையற்ற தந்தை இவர் மூலமாக சாட்சாத்காரம்
செய்விக்கின்றார். பக்தி மார்க்கத்தில் யார் யார் மீது என்ன
பாவனை வைக்கிறார்களோ அவர்களது சாட்சாத்காரம் ஏற்படுகிறது.
இப்பொழுது உங்களது பாவனை அனைவரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்த
தந்தையின் மீது இருக்கிறது. ஆக எந்த உழைப்புமின்றி தந்தை
சாட்சாத்காரம் செய்வித்துக் கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில்
எத்தனையோ பேர் தியானத்தில் சென்றனர்! தானாகவே எதிரில் வந்து
அமர்ந்து தியானத்தில் சென்று விடுவர். எந்த பக்தியும்
செய்யவில்லை. குழந்தைகள் எப்பொழுதாவது பக்தி செய்கிறார்களா
என்ன? ஒரு விளையாட்டு போன்றே ஆகிவிட்டது - வைகுண்டத்திற்கு
செல்லலாம். ஒருவரையொருவர் பார்த்து சென்றனர். எதுவெல்லாம்
கடந்து போயிற்றோ அதை திரும்பவும் செய்வீர்கள். நாம் தான் இந்த
தர்மத்தைச் சார்ந்தவர்களாக இருந்தோம் என்பதை நீங்கள்
அறிவீர்கள். சத்யுகத்தில் முதன் முத-ல் இந்த தர்மம் இருந்தது.
இதில் அதிக சுகம் இருக்கிறது. பிறகு சிறிது சிறிதாக கலைகள்
குறைந்து கொண்டே வருகின்றன. எந்த சுகம் புது கட்டிடத்தில்
இருக்குமோ அது பழையதில் இருக்காது. சிறிது காலத்திற்குப் பிறகு
பகட்டு குறைந்து விடும். சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும்
அதிக வித்தியாசம் இருக்கிறது அல்லவா! எங்கு இந்த சொர்க்கம்
இருக்கிறது, எங்கு அந்த நரகம் இருக்கிறது! நீங்கள் குஷியாக
இருக்கிறீர்கள், தந்தையின் நினைவும் உறுதியானதாக ஆகிவிடும்
என்பதையும் அறிவீர்கள். நான் ஆத்மா என்பதை மறந்து
விடுகிறீர்கள், பிறகு தேக அபிமானத்தில் வந்து விடுகிறீர்கள்.
இங்கு அமர்ந்திருந்தாலும் முயற்சி செய்து தன்னை ஆத்மா என்று
நிச்சயம் செய்யுங்கள். ஆக தந்தையின் நினைவும் இருக்கும்.
தேகத்தில் வருவதன் மூலம் தேகத்தின் அனைத்து சம்மந்தங்களும்
நினைவிற்கு வந்து விடும். இது ஒரு சட்டம் ஆகும். எனக்கு
ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை என்று நீங்கள் பாடவும்
செய்கிறீர்கள். பாபா, நாம் பypயாகி
விடுவோம். அது இப்போதைய நேரமாகும். ஒருவரை மட்டுமே நினைவு
செய்ய வேண்டும். கண்களினால் யாரை வேண்டுமென்றாலும் பாருங்கள்,
எங்கு வேண்டுமென்றாலும் செல்லுங்கள், ஆத்மாவானது தந்தையை
நினைவு செய்தால் போதும். சரீர நிர்வாகத்திற்காக காரியங்களும்
செய்ய வேண்டும். கைகள் வேலை செய்து கொண்டிருந்தாலும் மனம்
தந்தையின் நினைவில் இருக்கட்டும். ஆத்மா தனது அன்பானவரைத்தான்
நினைவு செய்ய வேண்டும். யாருக்காவது தனது தோழி மீது அன்பு
ஏற்பட்டு விட்டால் அவரது நினைவு நிலைத்து விடுகிறது. பிறகு
அந்த பற்றுதலை (நினைவை) போக்குவது மிகவும் கடினமாகி விடுகிறது.
பாபா, இவ்வாறு ஏன் நடக்கிறது? என்று கேட்கின்றனர். அரே,
நீங்கள் ஏன் பெயர், உருவத்தில் மாட்டிக் கொள்கிறீர்கள்? ஒன்று
நீங்கள் தேக அபிமானியாக ஆகிறீர்கள், மற்றொன்று உங்களது கடந்த
கால கணக்கு வழக்கு இருக்கிறது, அது ஏமாற்றி விடுகிறது. இந்த
கண்களால் எதையெல்லாம் பார்கிறீர்களோ அதில் புத்தி செல்லக்
கூடாது என்று தந்தை கூறுகின்றார். நமக்கு சிவபாபா
கற்பிக்கின்றார் என்பது உங்களது புத்தியில் இருக்க வேண்டும்.
இங்கு அமர்ந்திருந்தாலும் தந்தையை துளியும் நினைக்காத
குழந்தைகள் பலர் இருக்கின்றனர். ஆக தன்னைப் பார்க்க வேண்டும் -
நான் எவ்வளவு நேரம் சிவபாபாவை நினைவு செய்தேன்? இல்லையெனில்
குறிப்பு (சார்ட்) தவறானதாக ஆகிவிடும்.
பகவான் கூறுகின்றார் - இனிய
குழந்தைகளே! என்னை நினைவு செய்யுங்கள். தன்னிடத்தில் குறித்துக்
கொள்ளுங்கள். எப்பொழுது விரும்புகிறீர்களோ நினைவில் அமர்ந்து
விடுங்கள். உணவு சாப்பிட்டு முடித்தும் 10-15 நிமிடம் உலாவி
விட்டு வந்து நினைவில் அமர்ந்து விடுங்கள். ஏனெனில் இங்கு வேறு
எந்த வேலையும் கிடையாது. இருப்பினும் எந்தத் தொழிலை விட்டு
விட்டு வந்திருக்கிறீர்களோ அதன் நினைவு சிலரது புத்தியில் வந்து
கொண்டே இருக்கிறது. மிகவும் உயர்ந்த இலட்சியமாகும். அதனால் தான்
பாபா கூறுகின்றார் – தன்னை சோதித்துக் கொள்ளுங்கள். இது உங்களது
மிகவும் விலை மதிக்க முடியாத நேரமாகும். பக்தி மார்க்கத்தில்
நீங்கள் எவ்வளவு நேரத்தை வீணாக்கினீர்கள். நாளுக்கு நாள்
வீழ்ச்சியடைந்து கொண்டே இருந்தீர்கள். கிருஷ்ணரின் காட்சி
கிடைத்ததும் மிகுந்த குஷி ஏற்பட்டு விடுகிறது. அடைவது எதுவும்
கிடையாது. தந்தையின் ஆஸ்தி ஒரே ஒரு முறை தான் கிடைக்கிறது. என்
நினைவில் இருந்தால் உங்களது பல பிறவிகளின் பாவங்கள் அழிந்து
விடும் என்று தந்தை கூறுகின்றார். எந்தக் குழந்தைகள் நினைவில்
இருந்து தனது விகர்மங்களை அழித்து கர்மாதீத நிலை அடைகிறார்களோ
அவர்களுக்குத் தான் சொர்க்கத்தின் பாஸ்போர்ட் கிடைக்கும்.
இல்லையெனில் அதிக தண்டனைகள் அடைய வேண்டியிருக்கும். தனது
கிரீடம் மற்றும் சிம்மாசனத்தின் போட்டோவை பையில் வைத்துக்
கொண்டால் நினைவு இருக்கும் என்று பாபா வழி கூறுகின்றார். இதன்
முலம் நாம் இவ்வாறு ஆகிறோம். எவ்வளவு பார்ப்பீர்களோ அவ்வளவு
நினைவு செய்வீர்கள். பிறகு அதன் மீது பற்றுதலும் வந்து விடும்.
நான் இவ்வாறு ஆகிக் கொண்டிருக்கிறேன் - நரனிypருந்து நாராயணன்,
சித்திரத்தைப் பார்த்து குஷி ஏற்படும். சிவபாபாவின் நினைவு
வரும். இவை அனைத்தும் முயற்சிக்கான யுக்திகளாகும். சத்திய
நாராயணன் கதை கேட்பதால் என்ன இலாபம்? என்று நீங்கள் யாரிடத்தில்
வேண்டுமென்றாலும் கேளுங்கள். நமது பாபா நமக்கு சத்திய நாராயணன்
கதை கூறிக் கொண்டிருக்கின்றார். 84 பிறவிகளை எப்படி
எடுத்திருந்தோம்? அதுவும் கணக்கு வேண்டும் அல்லவா! அனைவரும் 84
பிறவிகள் எடுக்கமாட்டார்கள். உலகத்தினருக்கு எதுவும் தெரியாது.
வாயில் வருவதைக் கூறிவிடுகின்றனர், இது தான் தத்துவ அறிவு (நடைமுறையின்றி
பட்ட விளக்கம்) என்று கூறப்படுகிறது, உங்களுடையது நடைமுறை
அனுபவம் ஆகும். இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ பிறகு
அதை பக்தி மார்கத்தில் புத்தகமாக உருவாகும். நீங்கள் சுயதரிசன
சக்கரதாரியாகி விஷ்ணுபுரிக்கு வருவீர்கள். இது புது விசயமாகும்.
இராவண இராஜ்யம் பொய்யான கண்டமாகும், பிறகு சத்திய கண்டம் இராம
இராஜ்யம் உருவாகும். சித்திரங்களில் மிகத் தெளிவாக இருக்கிறது.
இப்பொழுது இது பழைய உலகின் இறுதியாகும். 5 ஆயிரம் ஆண்டிற்கு
முன்பும் விநாசம் ஆகியிருந்தது. நமக்கு யாரோ துண்டுதல்
கொடுக்கின்றனர், அதன் படி நாம் இவையனைத்தும் செய்து
கொண்டிருக்கிறோம் என்று விஞ்ஞானிகள் நினைக்கின்றனர். நாம் இதை
செய்தால் இதன் மூலம் அனைவரும் அழிந்து விடுவர் என்றும் புரிந்து
கொள்கின்றனர். ஆனால் அடிமையாகியிருக்கின்றனர், பயத்தில்
இருக்கின்றனர். வீட்டில் அமர்ந்த படியே ஒரு அணுகுண்டு
பயன்படுத்தினால் அழித்து விடுவோம் என்று புரிந்திருக்கின்றனர்.
விமானம், பெட்ரோல் போன்றவை களின் அவசியமும் இருக்காது. விநாசம்
அவசியம் ஏற்படும். புது உலகம் சத்யுகம் இருந்தது,
கிறிஸ்துவிற்கு 3 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு சொர்க்கமாக இருந்தது,
இப்பொழுது மீண்டும் சொர்க்கம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது.
ஸ்தாபனை அவசியம் ஆக வேண்டும் என்பதை நாளடைவில் புரிந்து
கொள்வார்கள். இதில் துளியளவும் சந்தேகம் கிடையாது.
இந்த நாடகம் முந்தைய கல்பத்தைப்
போன்று சுற்றிக் கொண்டே இருக்கிறது. நாடகம் அவசியம் முயற்சி
செய்விக்கும். நாடகத்தில் என்ன இருக்கிறதோ அவ்வாறே நடக்கும்
..... என்று இருந்து விடவும் கூடாது. முயற்சி உயர்ந்ததா? அல்லது
பிராப்தி உயர்ந்ததா? என்று கேட்கின்றனர். முயற்சி தான்
உயர்ந்தது, ஏனெனில் முயற்சியின் மூலம் தான் பிராப்தி உருவாகிறது.
முயற்சியின்றி யாரும் ஒருபொழுதும் இருந்து விட முடியாது.
நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா!
எங்கெங்கிருந்தெல்லாம் குழந்தைகள் வருகின்றனர்! முயற்சி
செய்கின்றனர். பாபா, நாம் மறந்து விடுகிறோம் என்று கூறுகின்றனர்.
அரே, என்னை நினைவு செய்யுங்கள் என்று சிவபாபா உங்களுக்குக்
கூறுகின்றார், யாருக்கு கூறுகின்றார்? ஆத்மாவாகிய எனக்கு
கூறுகின்றார். தந்தை ஆத்மாக்களுடன் தான் உரையாடல் செய்கின்றார்.
சிவபாபா தான் பதீத பாவனாக இருக்கின்றார். இந்த ஆத்மாவும் அவர்
கூறுவதை கேட்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்குள் இந்த நம்பிக்கை
மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் - எல்லையற்ற தந்தை நம்மை
உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். அவர் உயர்ந்ததிலும்
உயர்ந்தவர், அன்பிலும் அன்பான தந்தையாவார். பக்தி மார்க்கத்தில்
அவரைத் தான் நினைவு செய்தோம், உங்களது வழிமுறைகள் தனிப்பட்டது
என்று பாடினோம். ஆக அவசியம் வழிகளைக் கொடுத்திருக்க வேண்டும்.
இவ்வளவு மனிதர்கள் வீட்டிற்கு திரும்பி எப்படிச் செல்வார்கள்?
என்பது இப்பொழுது உங்களது புத்தியில் இருக்கிறது. எவ்வளவு
ஆத்மாக்கள் இருக்கின்றனர்! அனைவருக்கும் சரீரம் இருக்கிறது.
அனைத்து ஆத்மாக் களும் வரிசைக்கிரமமாக சென்று அமர்வார்கள்.
வகுப்பு மாற்றம் ஏற்படுகிறது எனில் வரிசைக்கிரமமாக அமர்வார் கள்
அல்லவா! நீங்களும் வரிசைக்கிரமமாக செல்வீர்கள். சிறிய
புள்ளியானது வரிசைக்கிரமமாக சென்று அமரும், பிறகு
வரிசைக்கிரமமாக நடிப்பு நடிப்பதற்கு வரும். இது ருத்ர
மாலையாகும். இவ்வளவு கோடிக்கணக்கான ஆத்மாக்களின் மாலை
என்னுடையது என்று தந்தை கூறுகின்றார். மேலே மலராகிய நான்
இருக்கிறேன், பிறகு நடிப்பு நடிப்பதற்காக அனைவரும் இங்கு
வருகிறீர்கள். இந்த நாடகம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகம் என்றும் கூறப்படுகிறது. இந்த
நாடகம் எப்படி நடைபெறுகிறது? என்பதை நீங்கள் அறிவீர்கள். தன்னை
ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்தால் உங்களது
விகர்மங்கள் அழிந்து விடும், பிறகு நீங்கள் சென்று விடுவீர்கள்
என்று அனைவருக்கும் கூறுங்கள். இதில் முயற்சி இருக்கிறது.
அனைவருக்கும் வழி கூற வேண்டும், இது உங்களது கடமையாகும்.
நீங்கள் எந்த தேகதாரிகளிடத்திலும் மாட்ட வைப்பது கிடையாது.
என்னை நினைவு செய்தால் பாவங்கள் அழிந்து விடும் என்று தந்தை
கூறுகின்றார். தந்தை கட்டளையிடுகின்றார் எனில் அதை செய்ய
வேண்டும். கேட்பதற்கு என்ன இருக்கிறது! எப்படியாவது பாபாவை
நினைவு செய்யுங்கள், இதில் பாபா என்ன இரக்கம் காட்டுவார்?
அஸ்தியை நீங்கள் தான் அடைய வேண்டும். தந்தை சொர்க்கத்தை
படைப்பவர் எனில் கண்டிப்பாக சொர்க்கம் என்ற ஆஸ்தி கிடைக்கும்.
இந்த மரம் பழையதாக ஆகிவிட்டது என்பதை இப்பொழுது நீங்கள்
அறிவீர்கள். ஆகையால் இந்த பழைய உலகின் மீது வைராக்கியம்
ஏற்படுகிறது. இது தான் எல்லையற்ற வைராக்கியம் என்று
கூறப்படுகிறது. அந்த ஹடயோகிகளுடையது எல்லைக்குட்பட்ட
வைராக்கியமாகும். அவர்களால் எல்லையற்ற வைராக்கியத்தை கற்றுக்
கொடுக்க முடியாது. எல்லையற்ற வைராக்கியமுடையவர்
எல்லைக்குட்பட்டதை எப்படி கற்றுக் கொடுப்பார்? இப்பொழுது தந்தை
கூறுகின்றார் - செல்லமான குழந்தைகளே! எவ்வளவு செல்லமான தந்தை
என்று நீங்களும் கூறுகிறீர்கள். 63 பிறவிகளாக தந்தையை நினைவு
செய்தீர்கள், எனக்கு ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமில்லை,
அவ்வளவு தான், நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக்
கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்காண முக்கிய சாரம்:
1) சொர்க்கம் செல்வதற்கான பாஸ்போர்ட் அடைவதற்கு தந்தையின்
நினைவின் மூலம் தனது விகர்மங்களை விநாசம் செய்து கர்மாதீத
நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தண்டனைகளிypருந்து
விடுபடுவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
2) ஞானமுடையவர்களாகி அனைவருக்கும் வழி கூற வேண்டும், சைத்தன்ய
கலங்கரை விளக்கு ஆக வேண்டும். ஒரு கண்ணில் சாந்திதாமம், மற்றொரு
கண்ணில் சுகதாமம் இருக்க வேண்டும். இந்த துக்கதாமத்தை மறந்து
விட வேண்டும்.
வரதானம்:
வரக் கூடிய தடைகளை தனது டபுள்
லைட் சொரூபத்தின் மூலம் கடந்து செல்லக் கூடிய தீவிர
முயற்சியாளர் ஆகுக.
விளக்கம்:
வரக் கூடிய தடைகளில் களைப்பும்,
மனச் சோர்வும் அடைவதற்குப் பதிலாக ஒரு வினாடியில் தனது ஆன்மீக
ஜோதி சொரூபம் மற்றும் நிமித்த பாவனையின் டபுள் லைட் சொரூபத்தின்
மூலம் ஒரு வினாடியில் ஹை ஜம்ப் (உயரத் தாண்டுதல்) செய்யுங்கள்.
தடைகள் என்ற கற்களை உடைப்பதில் நேரத்தை வீணாக்காதீர்கள்.
குதித்து ஒரு வினாடியில் கடந்து சென்று விடுங்கள். சிறு
மறதியின் காரணமாக சகஜமான வழியை கஷ்டமானதாக ஆக்கிக்
கொள்ளாதீர்கள். தனது வாழ்க்கையின் எதிர்கால உயர்வான குறிக்கோளை
தெளிவாகப் பார்த்தபடி தீவிர முயற்சியாளர் ஆகுங்கள். எந்தக்
கண்ணோட்டத்தில் பாப்தாதாவும் உலகமும் உங்களைப் பார்த்துக்
கொண்டிருக்கிறதோ, அதே உயர்வான சொரூபத்தில் எப்போதும்
நிலைத்திருங்கள்.
சுலோகன்:
எப்போதும் குஷியாய் இருப்பதும்,
குஷியைப் பகிர்வதும்தான் அனைத்திலும் உயர்வான பெருமையாகும்.
ஓம்சாந்தி