27.06.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்பொழுது
நீங்கள் புது சம்மந்தத்திற்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்,
ஆகையால் இங்கிருக்கும் கர்ம பந்தனத்திற்கான சம்மந்தங்களை மறந்து,
கர்மாதீத் நிலையடைவதற்கான முயற்சி செய்யுங்கள்.
கேள்வி:
தந்தை குழந்தைகளுக்கு ஆஹா ஆஹா (சபாஷ்)
என்று கூறுகின்றார்? அனைவரையும் விட அதிகமான அன்பு யாருக்கு
கொடுக்கின்றார்?
பதில்:
பாபா ஏழை குழந்தைகளுக்கு ஆஹா ஆஹா!
என்று (பாராட்டு) கூறுகின்றார், ஆஹா ஏழைகளே ஆஹா! ஓய்வாக இரண்டு
ரொட்டி சாப்பிட வேண்டும், பேராசை இருக்கக் கூடாது. ஏழைக்
குழந்தைகள் தந்தையை அன்பாக நினைவு செய்கின்றனர். படிக்காத
குழந்தைகளைப் பார்த்து பாபா குஷியடைகின்றார். ஏனெனில் அவர்கள்
படித்ததை மறப்பதற்கான முயற்சி செய்ய வேண்டியிருக்காது.
ஓம்சாந்தி.
தன்னை ஆத்மா எனப் புரிந்து
கொள்ளுங்கள் என்று தந்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கூற வேண்டிய
அவசியமில்லை. ஆத்ம அபிமானி ஆகுங்கள் அதாவது தேஹி அபிமானி
ஆகுங்கள் . பொருள் ஒன்று தான் அல்லவா! தன்னை ஆத்மா என்று
புரிந்து கொள்ளுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆத்மாவில் தான்
84 பிறவிகளின் பாகம் பதிவாகியிருக்கிறது. ஒரு சரீரம் எடுக்கிறது,
நடிப்பு நடிக்கிறது பிறகு சரீரம் அழிந்து விடுகிறது. ஆத்மா
அழிவற்றது ஆகும். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம்
இப்பொழுது தான் கிடைக்கிறது, வேறு யாருக்கும் இந்த விசயங்கள்
தெரியாது. இப்பொழுது தந்தை கூறுகின்றார் - முயற்சி செய்து
எவ்வளவு முடியுமோ தந்தையை நினைவு செய்யுங்கள். தொழில்
விவகாரங்களில் செல்கின்ற பொழுது அந்த அளவிற்கு நினைவு
நிலைத்திருப்பது கிடையாது. இல்லறத்தில் இருந்து கொண்டு தாமரை
மலர் போன்று தூய்மையாக இருக்க வேண்டும். பிறகு எவ்வளவு முடியுமோ
என்னை நினைவு செய்யுங்கள். நான் நிஷ்டையில் அமர வேண்டும் என்று
இருக்கக் கூடாது. நிஷ்டை என்ற வார்த்தையும் தவறானது ஆகும்.
உண்மையான வார்த்தை நினைவு ஆகும். எங்கு வேண்டுமென்றாலும்
அமருங்கள், தந்தையை நினைவு செய்யுங்கள். மாயை யின் புயல்கள்
அதிகம் வரும். சிலருக்கு ஏதோதோ நினைவிற்கு வருகிறது, அவசியம்
புயல்கள் வரும், வரக் கூடாது என்று பிறகு அதை அழிக்க
வேண்டியிருக்கிறது. இங்கு அமர்ந்திருந்தாலும் மாயை அதிகம்
தொந்தரவு செய்கிறது. இது தான் யுத்தமாகும். எந்த அளவிற்கு
இலேசாக (பற்றுதலின்றி) இருப்போமோ அந்த அளவு பந்தனம் குறைந்து
விடும். முதலில் ஆத்மா பந்தனமின்றி இருந்தது, எப்பொழுது பிறப்பு
எடுக்கிறதோ, அப்பொழுது தாய், தந்தையிடம் புத்தி செல்கிறது.
மனைவியை திருமணம் செய்த பின்பு, எந்த பொருள் எதிரில் இல்லையோ
அது எதிரில் வந்து விடுகிறது. குழந்தை பிறந்த பின்பு அதன்
நினைவு அதிகரிக்கிறது. இப்பொழுது நீங்கள் இந்த அனைத்தையும்
மறக்க வேண்டும். ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும்.
அதனால் தான் தந்தைக்கு மகிமை இருக்கிறது. உங்களது தாய், தந்தை
மற்றும் அனைத்துமாக இருப்பவர் அவர் ஒருவர் தான். அவர் ஒருவரையே
நினைவு செய்யுங்கள். அவர் எதிர்காலத்திற்கு உங்களுக்கு
அனைத்தையும் புதிதாகக் கொடுக்கின்றார். புது சம்மந்தத்தில்
அழைத்து வருகின்றார். அங்கும் சம்மந்தங்கள் இருக்கும் அல்லவா!
ஏதாவது பிரளயம் ஏற்பட்டு விடும் என்பது கிடையாது. நீங்கள் ஒரு
சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறீர்கள். யார் மிக மிக
நல்லவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் அவசியம் உயர்ந்த குலத்தில்
பிறப்பு எடுப்பார்கள். எதிர்கால 21 பிறவிகளுக்காகத் தான்
நீங்கள் படிக்கிறீர்கள். படிப்பு முடிவடைந்ததும் பிராப்தி (பலன்
கிடைக்க) ஆரம்பமாகி விடும். பள்ளியில் படித்து முடித்த பின்பு
மாற்றல் ஆகிவிடுவார்கள் அல்லவா! நீங்களும் மாற்றல் ஆகப்
போகிறீர்கள் - சாந்திதாமம் மற்றும் சுகதாமத்திற்கு! இந்த சீ சீ
உலகிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். இதன் பெயரே நரகம் ஆகும்.
சத்யுகம் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. இந்த மனிதர்கள்
எவ்வளவு ஆழ்ந்த இருளில் இருக்கின்றனர்! செல்வந்தர்களாக
இருப்பவர்கள் நமக்கு இதுவே சொர்க்கம் என்று நினைக்கின்றனர்.
புது உலகம் தான் சொர்க்கமாக இருக்கும். இந்தப் பழைய உலகம்
விநாசம் ஆகிவிடும். யார் கர்மாதீத் நியைடையக் கூடியவர்களோ
அவர்கள் தர்மராஜபுரியில் தண்டனை அடையமாட்டார்கள். சொர்க்கத்தில்
தண்டனை இருக்கவே இருக்காது. அங்கு கர்பமும் மாளிகையாக இருக்கும்.
துக்கத்திற்கான விசயம் எதுவும் கிடையாது. இங்கு கர்பச்
சிறையாகும். இங்கு (சிசு) தண்டனை அனுபவித்துக் கொண்டே
இருக்கிறது. நீங்கள் எவ்வளவு முறை சொர்க்கவாசியாக
ஆகியிருக்கிறீர்கள் என்பதை நினைவு செய்தாலே சக்கரத்தின் நினைவு
வந்து விடும். தந்தையினுடைய ஒவ்வொரு விசயமும் இலட்சம்
ரூபாய்க்கு சமமாகும். இதை மறக்கின்ற காரணத்தினால், தேக
அபிமானத்தில் வருவதால் மாயை நஷ்டப்படுத்துகிறது. இது தான்
முயற்சியாகும். முயற்சியின்றி உயர்ந்த பதவி அடைய முடியாது. பாபா,
நாங்கள் படிக்காதவர்களாக இருக்கிறோம், எதையும் அறியாதவர்களாக
இருக்கிறோம் என்று பாபாவிடம் கூறுகின்றனர். பாபா
குஷியடைகின்றார், ஏனெனில் இங்கு படித்த அனைத்தையும் மறக்க
வேண்டும். அது சிறிது காலத்திற்காக சரீர நிர்வாகத்திற்காக
படிக்கவேண்டியிருக்கிறது. இவை அனைத்தும் அழிந்து போய்விடும்
என்பதை அறிந்திருக்கிறீர்கள். எவ்வளவு முடியுமோ தந்தையை நினைவு
செய்ய வேண்டும், மேலும் ரொட்டித் துண்டை குஷியாக சாப்பிட
வேண்டும். ஆஹா! இது ஏழ்மையான நேரம் ஓய்வாக ரொட்டித் துண்டை
சாப்பிட வேண்டும். பேராசை கூடாது. இன்றைய நாட்களில்
தானியங்களும் எங்கு கிடைக்கிறது? சீனியும் சிறிது சிறிதாக
கிடைக்காமல் போய்விடும். நீங்கள் ஈஸ்வரிய சேவை செய்வதால்
உங்களுக்கு அரசாங்கம் கொடுத்து விடும் என்பது கிடையாது. அவர்கள்
எதையும் அறியாமல் இருக்கின்றனர். ஆனால் அரசாங்கத்திற்குப்
புரிய வையுங்கள் - நாம் அனைவரும் சேர்ந்து தாய், தந்தையிடம்
செல்கிறோம், குழந்தைகளுக்காக அவர்கள் டோ- அனுப்ப
வேண்டியிருக்கிறது. இல்லவே இல்லை என்று இங்கு தெளிவாகக்
கூறிவிடுகின்றனர். வேறு வழியின்றி சிறிது கொடுக்கின்றனர்.
செல்வந்தர்கள் கேட்டு வந்தால் பை நிறைத்து கொடுத்து
விடுகின்றனர், ஏழைகள் வந்தால் சிறிது கொடுக்கின்றனர். சீனி
வந்து விடும், ஆனால் குழந்தைகளின் யோகா குறைந்து விடுகிறது.
நினைவு இல்லாத காரணத்தினால், தேக அபிமானத்தில் வருகின்ற
காரணத்தினால் எந்தக் காரியமும் நடைபெறுவது கிடையாது. யோகத்தின்
மூலம் செய்யும் அளவிற்கு படிப்பின் மூலமாக காரியம் நடைபெறாது,
அது மிகவும் குறைவாக இருக்கும். மாயை நினைவை துண்டித்து
விடுகிறது. தைரியமான போர் வீரனை மேலும் அதிகமாக, நன்றாக
பிடித்துக் கொள்கிறது. நல்ல நல்ல முதல் தரமாக
குழந்தைகளிடத்திலும் கிரஹச்சாரம் அமர்ந்து விடுகிறது.
கிரஹச்சாரம் அமர்வதற்கான முக்கிய காரணம் யோகாவில்
குறையிருக்கிறது. கிரஹச்சாரத்தின் காரணத்தினால் பெயர்,
உருவத்தில் மாட்டிக் கொள்கின்றனர். நாம் அடைய வேண்டியது
உயர்ந்த இலட்சியமாகும். ஒருவேளை உண்மையான இலட்சியத்தை அடைய
வேண்டுமெனில் நினைவில் இருக்க வேண்டும்.
தந்தை கூறுகின்றார் - தியானத்தில் காட்சிகளைப் (டிரான்ஸ்)
பார்ப்பதை விட ஞானம் நல்லதாகும். ஞானத்தை விட நினைவு
நல்லதாகும். தியானத்தில் காட்சிகளைப் பார்ப்பதாலும் கூட மாயை
பூதங்கள் பிரவேசமாகி விடுகிறது. இவ்வாறு பலர் தியானத்தில்
வீணாக செல்கின்றனர். என்ன என்ன பேசுகின்றனர்? அதன் மீது
நம்பிக்கை வைக்கக் கூடாது. ஞானம் பாபாவின் முரளிகளில்
கிடைத்துக் கொண்டே இருக்கிறது. தந்தை எச்சரிக்கை கொடுத்துக்
கொண்டே இருக்கின்றார். தியானத்தில் காட்சி பார்ப்பது எதற்கும்
பயன்படாதது. மாயை அதிகம் பிரவேசமாகி விடுகிறது. அகங்காரம்
வந்து விடுகிறது. ஞானம் அனைவருக்கும் கிடைத்துக் கொண்டே
இருக்கிறது. ஞானம் கொடுக்கக் கூடியவர் சிவபாபா ஆவார்.
மம்மாவிற்கும் இங்கிருந்து தான் ஞானம் கிடைத்தது அல்லவா!
அவருக்கும் மன்மனாபவ என்று தான் கூறப்படுகிறது. தந்தையை நினைவு
செய்யுங்கள், தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள். நான்
தெய்வீக குணங்களை தாரணை செய்கிறேனா? என்று தன்னைப் பார்க்க
வேண்டும். இங்கேயே தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும்.
சிலரைப் பார்க்கின்ற பொழுது சில நேரம் முதல்தரமான மனநிலையுடன்
இருக்கின்றனர், குஷியாக காரியம் செய்கின்றனர், ஒரு மணி
நேரத்திற்குப் பிறகு கோபம் என்ற பூதம் வந்து விட்டால், அவ்வளவு
தான்! இதை நான் மறந்து விட்டேன் என்று பிறகு தான் நினைவிற்கு
வருகிறது. பிறகு விழிப்படைந்து விடுகின்றனர். அடிக்கடி
அடிக்கக் கூடிய மிகப் பெரிய (எச்சரிக்கை) மணி பாபாவிடம்
இருக்கிறது, சில நேரங்களில் மிக இனிமையாக பாபா என்று
கூறுகின்றனர், இப்படிப்பட்ட குழந்தைகளிடம் பலியாகி விட
வேண்டும் என்று பாபா கூறுவார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு
ஏதாவது ஒரு விசயத்தில் தடுமாறி விடுகின்றனர். கோபம் வந்ததும்
செய்த அனைத்து வருமானமும் அழிந்து விடுகிறது. இப்பொழுதே
வருமானம் செய்கின்றனர், இப்பொழுதே நஷ்டப்படுத்திக்
கொள்கின்றனர். அனைத்திற்கும் ஆதாரம் நினைவில் தான் இருக்கிறது.
ஞானம் மிகவும் எளிது. சிறிய குழந்தையும் புரிந்து கொள்ள
முடியும். ஆனால் நான் யார்? எப்படிப்பட்டவன்? என்பதை யதார்த்த
முறையில் அறிந்து கொள்ள வேண்டும். தன்னை ஆத்மா என்று புரிந்து
கொள்ள வேண்டும், இவ்வாறு சிறிய குழந்தை நினைவு செய்ய முடியாது.
இறக்கின்ற தருவாயில் பகவானை நினைவு செய்யுங்கள் என்று
மனிதர்களுக்குக் கூறப்படுகிறது. ஆனால் நினைவு செய்ய முடியாது,
ஏனெனில் யதார்த்தமாக யாரும் அறியவில்லை. யாரும் திரும்பிச்
செல்ல முடியாது. விகர்மும் விநாசம் ஆவது கிடையாது. கால காலமாக
படைப்பவர் மற்றும் படைப்புகளைப் பற்றி நாம் அறியவில்லை என்று
ரிஷி, முனிவர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் சதோ குண
முடையவர்களாக இருந்தனர். இன்றைய தமோ பிரதான புத்தியுடையவர்கள்
எப்படி புரிந்து கொள்ள முடியும்? இந்த இலட்சுமி நாராயணன் கூட
அறியவில்லை என்று தந்தை கூறுகின்றார். இராஜா, இராணியே
அறியவில்லை எனும் பொழுது பிறகு பிரஜைகள் எப்படி அறிந்து கொள்ள
முடியும்? யாரும் அறியவில்லை. இப்பொழுது குழந்தை களாகிய
நீங்கள் மட்டுமே அறிந்திருக்கிறீர்கள். உங்களிலும் சிலர்
மட்டுமே யதார்த்த முறையில் அறிந்திருக்கிறீர்கள், பாபா
அடிக்கடி மறந்து விடுகிறோம் என்று கூறுகிறீர்கள். தந்தை
கூறுகின்றார் - எங்கு வேண்டுமென்றாலும் செல்லுங்கள், தந்தையை
மட்டும் நினைவு செய்யுங்கள். மிக உயர்ந்த வருமானம் ஆகும்.
நீங்கள் 21 பிறவிகளுக்கு நோயற்றவர்களாக ஆகிறீர்கள்.
இப்படிப்பட்ட தந்தையை உள்நோக்கு முக முடையவர் களாகி நினைவு
செய்ய வேண்டும் அல்லவா! ஆனால் மாயை மறக்க வைத்து புயல்களில்
கொண்டு வந்து விடுகிறது. இதற்கு உள்நோக்கு முகமுடையவர்களாகி
ஞான சிந்தனை செய்ய வேண்டும். ஞான சிந்தனை செய்யக் கூடிய விசயம்
இந்த நேரத்திற்கானது ஆகும். இது புருஷோத்தம் ஆகக் கூடிய
சங்கமயுகமாகும். இந்த அதிசயத்தையும் குழந்தைகளாகிய நீங்கள்
பார்த்திருக்கிறீர்கள் - ஒரு வீட்டிலேயே நீங்கள்
சங்கமயுகத்தைச் சார்ந்தவர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள்,
ஆனால் கணவன் அல்லது குழந்தை போன்றவர்கள் கலியுகத்தைச்
சார்ந்தவர்களாக இருக்கின்றனர். எவ்வளவு வித்தியாசம்
இருக்கிறது! மிக ஆழமான விசயத்தை தந்தை புரிய வைக்கின்றார்.
வீட்டிலிருந்தாலும் நாம் மலர் ஆவதற்காக முயற்சி செய்து
கொண்டிருக்கிறோம் என்பது புத்தியில் இருக்கிறது. இது அனுபவ
விசயமாகும். நடைமுறையில் முயற்சி செய்ய வேண்டும். நினைவில்
தான் முயற்சி இருக்கிறது. ஒரே வீட்டில் ஒருவர் அன்னப்பறவை
எனில் மற்றொருவர் கொக்காக இருக்கின்றனர். இதில் சிலர் மிகவும்
முதல் தரமானவர்களாக இருக்கின்றனர். ஒருபொழுதும் விகாரத்திற்கான
எண்ணம் கூட வருவது கிடையாது. கூடவே இருந்தாலும் தூய்மையாக
இருக்கின்றனர், தைரியம் காண்பிக்கின்ற பொழுது அவர்களுக்கு
எவ்வளவு உயர்ந்த பதவி கிடைக்கும்! இவ்வாறும் குழந்தைகள்
இருக்கின்றனர் அல்லவா! சிலர் விகாரத்திற்காக எவ்வளவு அடி,
சண்டையிடுகின்றனர், எண்ணத்திலும் அசுத்தம் ஆக வேண்டும் என்று
நினைக்கவே கூடாது, அப்படிப்பட்ட மனநிலையுடன் இருக்க வேண்டும்.
தந்தை பல விதத்தில் அறிவுரை கூறிக் கொண்டே இருக்கின்றார். ஸ்ரீ
ஸ்ரீ - யின் வழிப்படி நாம் ஸ்ரீலட்சுமி ஸ்ரீநாராயணன் ஆவோம்
என்பதை நீங்கள் அறிவீர்கள். ஸ்ரீ என்றாலே சிரேஷ்டம். சத்யுகம்
என்றால் நம்பர்ஒன் சிரேஷ்டம் ஆகும். திரேதாவில் இரண்டு டிகிரி
குறைந்து விடுகிறது. இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்கு
இப்பொழுது கிடைக்கிறது.
இந்த ஈஸ்வரிய சபைக்கென்று நியமம்
இருக்கிறது - யார் ஞான இரத்தினங்களின் மீது மதிப்பு
வைத்திருக்கிறார்களோ, யாருக்கு கொட்டாவி வராதோ அவர்கள் தான்
முன்னால் வந்து அமர வேண்டும். சில குழந்தைகள் தந்தையின் எதிரில்
அமர்ந்திருந்தாலும் தூங்கி விடுகின்றனர், கொட்டாவி விட்டுக்
கொண்டே இருக்கின்றனர். அவர்கள் கடைசி வரிசையில் அமர வேண்டும்.
இது குழந்தைகளின் ஈஸ்வரிய சபையாகும். ஆனால் சில பிராமணிகள்
அப்படிப்பட்டவர்களையும் அழைத்து வருகின்றனர், தந்தையிடமிருந்து
செல்வமும் கிடைக்கிறது, ஒவ்வொரு வார்த்தையும் இலட்சம்
ரூபாய்க்கு சமமாகும். ஞானம் அடைவதே சங்கமத்தில் தான் என்பதை
நீங்கள் அறிவீர்கள். எல்லையற்ற ஆஸ்தியடைவதற்காக நாம் மீண்டும்
வந்திருக்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இனிமையிலும்
இனிய குழந்தைகளுக்கு பாபா அடிக்கடி புரிய வைக்கின்றார், இது சீ
சீ உலகமாகும், உங்களுடையது எல்லையற்ற வைராக்கியமாகும். இந்த
உலகில் நீங்கள் எதையெல்லாம் பார்க்கிறீர்களோ அவைகள் இருக்காது
என்று தந்தை கூறுகின்றார். கோயில் போன்றவைகளின் பெயர்,
அடையாளங்களே இருக்காது. அங்கு சொர்க்கத்தில் அவர்கள் பழைய
பொருட்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இங்கு பழைய
பொருட்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது! உண்மையில் ஒரு
தந்தையைத் தவிர வேறு எந்த பொருளுக்கும் மதிப்பே கிடையாது. நான்
வரவில்லையெனில் நீங்கள் எப்படி இராஜ்யம் அடைவீர்கள்? என்று
தந்தை கேட்கின்றார். யார் அறிவார்களோ அவர்கள் தந்தையிடம் வந்து
ஆஸ்தி அடைவார்கள். அதனால் தான் கோடியில் சிலர் என்று
கூறப்படுகிறது. எந்த விசயத்திலும் சந்தேகம் வரக் கூடாது. போக்
வைப்பதும் வழக்கமாக இருக்கிறது. இதற்கும் ஞானம் மற்றும்
யோகத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வேறு எந்த
விசயத்திற்கும் உங்களுக்கும் தொடர்பு கிடையாது. இரண்டே இரண்டு
விசயம் தான் - அல்லா (பாபா) மற்றும் ஆஸ்தி. பகவான் தான் அல்லா
(அல்ஃப்) என்று கூறப்படுகின்றார். விரல்களினால் இவ்வாறு சைகை
காண்பிக்கின்றனர் அல்லவா! ஆத்மாவானது சைகை காண்பிக்கிறது அல்லவா!
பக்தி மார்க்கத்தில் நீங்கள் என்னை நினைவு செய்கிறீர்கள் என்று
தந்தை கூறுகின்றார். நீங்கள் அனைவரும் என்னுடைய நாயகிகள். பாபா
கல்ப கல்பத்திற்கும் வந்து அனைத்து மனிதர்களையும்
துக்கத்திலிருந்து விடுவித்து அமைதி மற்றும் சுகம்
கொடுக்கின்றார் என்பதையும் அறிவீர்கள். எல்லையற்ற தந்தை உலகில்
அமைதியை எப்படி ஸ்தாபனை செய்கின்றார்? என்பதை வந்து புரிந்து
கொள்ளுங்கள் என்று விளம்பரப் பலகையில் எழுதுங்கள் என்று பாபா
கூறியிருக்கின்றார். ஒரு விநாடியில் உலகிற்கு எஜமானர்களாக 21
பிறவிகளுக்கு ஆக வேண்டுமென்றால் வந்து புரிந்து கொள்ளுங்கள்
என்று வீட்டில் விளம்பரப் பலகை வையுங்கள். மூன்றடி இடத்தில்
நீங்கள் மிகப் பெரிய மருத்துவமனை, பல்கலைக்கழகம் திறக்க
முடியும். நினைவின் மூலம் 21 பிறவிகளுக்கு நோயற்றவர்களாகவும்,
படிப்பின் மூலம் சொர்க்க இராஜ்யம் கிடைத்து விடுகிறது. நாம்
சொர்க்கத்திற்கு எஜமானர்கள் என்று பிரஜைகளும் கூறுவர். இன்று
மனிதர்கள் வெட்கப்படுகின்றனர், ஏனெனில் நரகவாசிகளாக
இருக்கின்றனர். எனது தந்தை சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்று தானே
கூறுகின்றனர் எனில் நரகவாசிகள் அல்லவா! இறக்கும் பொழுது தான்
சொர்க்கத்திற்கு செல்வார்கள். எவ்வளவு எளிதான விசயம்!
குறிப்பாக நல்ல காரியம் செய்தவருக்கு இவர் மகாதானியாக இருந்தார்
என்று கூறுகின்றனர். சொர்க்கத்திற்கு சென்று விட்டார். ஆனால்
யாரும் செல்வது கிடையாது. நாடகம் முடிவடைகின்ற பொழுது அனைவரும்
மேடைக்கு வந்து நின்று விடுவர். எப்பொழுது அனைத்து நடிகர்களும்
வந்து விடுவார்களோ அப்பொழுது தான் இந்த யுத்தமும் ஏற்படும்,
பிறகு திரும்பிச் செல்வர். சிவனின் (மாப்பிள்ளை) ஊர்வலம் என்று
கூறுகின்றனர் அல்லவா! சிவபாபாவின் கூடவே அனைத்து ஆத்மாக்களும்
செல்வர். மூல விசயம் இப்பொழுது 84 பிறவிகள்
முடிவடைந்திருக்கிறது. இப்பொழுது இந்தப் பழைய உடலை விட வேண்டும்.
எவ்வாறு பாம்பு பழைய தோலை நீக்கி புதிது எடுக்கிறதோ அது போல!
நீங்கள் புது ஆடை சத்யுகத்தில் அடைவீர்கள். ஸ்ரீகிருஷ்ணர்
எவ்வளவு அழகாக இருக்கின்றார்! அவரிடத்தில் எவ்வளவு கவர்ச்சி
இருக்கிறது! முதல் தரமான சரீரம் ஆகும். இவ்வாறு நாம் எடுப்போம்.
நாம் நாராயணன் ஆவோம் என்று கூறுகிறீர்கள் அல்லவா! இது இற்றுப்
போன சீ சீ சரீரம் ஆகும். இதை நாம் விட்டு விட்டு புது
உலகிற்குச் செல்வோம். இதை நினைவு செய்தால் எப்படி குஷி
ஏற்படாமல் இருக்கும்! நாம் நரனிலிருந்து நாராயணன் ஆவோம் என்று
கூறுகிறீர்கள்! இந்த சத்திய நாராயணன் கதையை நல்ல முறையில்
புரிந்து கொள்ளுங்கள். என்ன கூறுகின்றீர்களோ அதை செய்து
காண்பியுங்கள். சொல்வது, செய்வது சமமாக இருக்க வேண்டும். தொழில்
போன்றவைகளும் செய்யுங்கள். கைகளினால் காரியங்கள் செய்தாலும்
உள்ளம் தந்தையின் நினைவில் இருக்க வேண்டும் என்று தந்தை
கூறுகின்றார். எந்த அளவிற்கு தாரணை செய்கிறோமோ அந்த அளவிற்கு
உங்களிடமுள்ள ஞானத்திற்கு மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும்,
ஞான தாரணையின் மூலம் நீங்கள் எவ்வளவு செல்வந்தர்களாக ஆகிறீர்கள்!
இது ஆன்மீக ஞானமாகும். நீங்கள் ஆத்மா, ஆத்மா தான் சரீரத்தின்
மூலம் பேசுகிறது. ஆத்மா தான் ஞானம் கொடுக்கிறது. ஆத்மா தான்
தாரணை செய்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக்
கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்காண முக்கிய சாரம்:
1) இந்தப் பழைய உலகின் பழைய பொருட்களைப் பார்த்தும் பார்க்காதது
போன்று இருக்க வேண்டும். நரனிலிருந்து நாரயணன் ஆவதற்காக சொல்வது,
செய்வது இரண்டும் சமமாக இருக்க வேண்டும்.
2) அழிவற்ற ஞான இரத்தினங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இது
மிக உயர்ந்த வருமானமாகும். இதில் கொட்டாவி மற்றும் தூக்கம் வரக்
கூடாது. பெயர், புகழ் என்ற கிரஹச்சாரத்திலிருந்து பாதுகாப்பாக
இருப்பதற்காக நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
வரதானம்:
துணைவன் மற்றும் சாட்சி நிலையின்
அனுபவத்தின் மூலம் சதா வெற்றி மூர்த்தி ஆகுக.
எந்தக் குழந்தைகள் சதா
தந்தையுடன் இருக்கின்றார்களோ, அவர்கள் சாட்சியான
பார்வையாளர்களாக தானாகவே ஆகிவிடுகின்றார்கள். ஏனெனில், தந்தை
சுயம் சாட்சியாகி நடிப்பு நடிக்கின்றார், ஆகையினால், அவருடன்
இருப்பவர்களும் கூட சாட்சியாகி நடிப்பு நடிப்பார்கள். மேலும்,
யாருடைய துணைவனாக சுயம் சர்வ சக்திவான் தந்தை இருக்கின்றாரோ,
அவர்கள் வெற்றி மூர்த்தியாகவும் தானாகவே ஆகிவிடுகின்றார்கள்.
பக்தி மார்க்கத்தில், சிறிது நேரத்திற்கேனும் துணையின்
அனுபவத்தைக் கொடுங்கள், ஜொலிப்பைக் காட்டுங்கள் என்று
அழைக்கின்றனர். ஆனால், நீங்கள் சர்வ சம்பந்தங்களிலும் துணையாக
ஆகிவிட்டீர்கள். எனவே, எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டேன்
என்ற இந்தக் குஷி மற்றும் போதையில் இருங்கள்.
சுலோகன்:
மனம் துயரப்படுவது மற்றும் குஷி
மறைந்து போவது - இவையே வீண் எண்ணங்களின் அடையாளமாகும்.
ஓம்சாந்தி