17.06.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! நினைவில்
இருப்பீர்களானால் தூரத்தில் இருந்தாலும் தந்தையின் அருகாமையில்
இருக்கின்றீர்கள். நினைவினால் கூடவே இருப்பதன் அனுபவமும்
ஏற்படுகின்றது. மேலும் விகர்மங்களும் விநாசமாகின்றன.
கேள்வி :
வெகு தொலைவிலிருந்து வந்துள்ள (எல்லைக்கப்பாற்பட்ட)
தந்தை குழந்தைகளை (தூராந்தேசி) தொலைநோக்கு
பார்வையுடையவர்களாக்குவதற்காக எந்த ஒரு ஞானத்தைத் தருகிறார்?
பதில்:
ஆத்மா எப்படி சக்கரத்தில் பலவித
வர்ணங்களில் வருகிறது என்ற ஞானத்தை தூராந்தேசி பாபா தான்
தருகிறார். நீங்கள் அறிவீர்கள், இப்போது நாம் பிராமண
வர்ணத்தவராக இருக்கிறோம். இதற்கு முன் ஞானம் இல்லாமல் இருந்த
போது சூத்திர வர்ணத்தினராக இருந்தோம். அதற்கு முன் வைசிய
வர்ணத்தினராக இருந்தோம். தூரதேசத்தில் வசிப்பவராகிய பாபா வந்து
இந்த தூராந்தேசி ஆவதற்கான ஞானத்தைக் குழந்தை களுக்குக்
கொடுக்கிறார்.
பாடல் :
யார் தலைவனோடு கூட
இருக்கிறார்களோ ………
ஓம் சாந்தி. யார் ஞானக்கடலோடு
கூடவே இருக்கின்றனரோ, அவர்களுக்காக ஞான மழை. நீங்கள் தந்தையோடு
கூட இருக்கிறீர்கள் இல்லையா? வெளிநாட்டில் இருந்தாலும் சரி,
எங்கே இருந்தாலும் சரி, கூடவே இருக்கிறீர்கள். நினைவோ
வைக்கிறீர்கள் தானே? எந்தக் குழந்தைகளெல்லாம் நினைவில்
இருக்கின்றனரோ, அவர்கள் சதா கூடவே இருக்கின்றனர். நினைவில்
இருப்பதால் கூடவே இருக்கின்றனர். மேலும் விகர்மங்கள்
விநாசமாகின்றன. பிறகு விகர்மாஜீத் சகாப்தம் ஆரம்பமாகின்றது.
பிறகு எப்போது இராவண இராஜ்யம் இருக்கிறதோ, அப்போது சொல்கின்றனர்,
இராஜா விக்ரமாதித்தரின் சகாப்தம் என்று. அது விகர்மாஜீத், இது
விகர்மம் செய்யக் கூடியது. இப்போது நீங்கள் விகர்மாஜீத் ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். பிறகு நீங்கள் விகாரமற்றவர்களாக ஆகி
விடுவீர்கள். இச்சமயம் அனைவரும் அதிவிகாரிகளாக உள்ளனர்.
யாருக்குமே தங்களின் தர்மத்தைப் பற்றித் தெரியாது. இன்று பாபா
ஒரு சின்னக் கேள்வி கேட்கிறார் - சத்யுகத்தில் தேவதைகள், நாம்
ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என
அறிந்திருந்தார்களா? எப்படி நீங்கள் நினைக்கிறீர்களோ, நாம்
இந்து தர்மத்தினர் என்று, சிலர் சொல்வார்கள், நாங்கள் கிறிஸ்தவ
தர்மத்தினர் என்று. அதுபோல் அங்கே தேவதைகள் தங்களை தேவி-தேவதா
தர்மத்தினர் என உணர்ந்திருக்கிறார்களா? சிந்தனைக்கான விஷயம்
இல்லையா? அங்கே வேறு எந்த ஒரு தர்மமும் கிடையாது, நாம் இன்ன
தர்மத்தினர் என உணர்வதற்கு. இங்கே அநேக தர்மங்கள் உள்ளன.
ஆகையால் அறிமுகம் கொடுப்பதற்காகத் தனித்தனிப் பெயர்கள்
வைத்துள்ளனர். அங்கே இருப்பதோ ஒரே தர்மம். அதனால் சொல்வதற்கான
தேவை இல்லை-நாம் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்வதற்கு.
ஏதோ ஒரு தர்மம் உள்ளது, அதனுடைய இராஜ்யம் தான் இது என்று
அவர்களுக்குத் தெரியவே செய்யாது. இப்போது நீங்கள் அறிவீர்கள்,
நாம் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தினர். தேவி-தேவதா என வேறு
யாரையும் சொல்ல முடியாது. பதீத்தாக இருப்பதால் தங்களை தேவதா
எனச் சொல்லிக் கொள்ள முடிவதில்லை. அங்கே இது போன்ற எந்த ஒரு
விஷயமும் இருப்பதில்லை. யாரோடும் ஒப்பிட முடியாது. இப்போது
நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள்,
ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் மீண்டும் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. அங்கோ தர்மத்தின் விஷயமே கிடையாது. அங்கே
இருப்பதே ஒரு தர்மம் தான். இதுவும் குழந்தைகளுக்குப் புரிய
வைக்கப் பட்டுள்ளது - மகாபிரளயம் நடைபெறும், அதாவது எதுவுமே
இல்லாமல் போய்விடும் என்பதும் கூட தவறாகி விடுகின்றது. பாபா
அமர்ந்து புரிய வைக்கிறார்-சரி எது என்று. சாஸ்திரங்களிலோ
நீர்மயமாகி விடும் எனக் காட்டப் பட்டுள்ளது. பாபா புரிய
வைக்கிறார், பாரதத்தைத் தவிர மற்றதெல்லாம் நீர்மயமாகி விடும்.
இவ்வளவு பெரிய சிருஷ்டி என்ன செய்யும்? ஒரு பாரதத்திலேயே
பாருங்கள்! எவ்வளவு கிராமங்கள்! முதலில் காடாக உள்ளது. பிறகு
விருத்தியாகிக் கொண்டே போகிறது. அங்கோ ஆதி சநாதன தேவி-தேவதா
தர்மத்தைச் சேர்ந்த நீங்கள் மட்டுமே இருப்பீர்கள். இதை பிராமணக்
குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் தாரணை செய்ய வைக்கிறார்.
இப்போது நீங்கள் அறிவீர்கள், உயர்ந்தவரிலும் உயர்ந்தவரான
சிவபாபா யார்? அவருக்கு ஏன் பூஜை செய்யப் படுகின்றது.
எருக்கம்பூ (அரளி) முதலியவற்றால் ஏன் அர்ச்சிக்கிறார்கள்? அவரோ
நிராகார் இல்லையா? அவர் பெயர் வடிவத்திற்கு அப்பாற் பட்டவர்
எனச் சொல்கின்றனர். ஆனால் பெயர் வடிவத்திற்கு அப்பாற்பட்ட
பொருள் என்பது எதுவும் கிடையாது. அப்படியானால் ஏன் அவருக்கு பூ
முதலியவற்றைப் போடுகிறார்கள்? முதல்-முதலில் பூஜை அவருக்கு
நடைபெறுகின்றது. கோவில்களும் அவருக்காக உருவாகின்றன. ஏனென்றால்
பாரதத்தின் மற்றும் முழு உலகத்தின் குழந்தைகளுக்கு சேவை
செய்கின்றார். மனிதர்களுக்குத் தான் சேவை செய்யப்படுகின்றது
இல்லையா? இச்சமயம் நீங்கள் உங்களை தேவி-தேவதா தர்மத்தினர்
எனச்சொல்லிக் கொள்ள முடியாது. உங்களுக்குத் தெரியவே செய்யாது,
நாம் தேவி-தேவதா தர்மத்தினராக இருந்தோம், இப்போது மீண்டும்
ஆகிக் கொண்டிருக்கிறோம். இப்போது பாபா புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார் என்றால் மற்றவர்களுக்குப் புரிய வைக்க
வேண்டும் - இந்த ஞானத்தை பாபாவைத் தவிர வேறு யாரும் தர முடியாது.
அவரைத் தான் சொல்கின்றனர், ஞானக்கடல், ஞானம் நிறைந்தவர் என்று.
படைப்பவர் மற்றும் படைப்பு பற்றி ரிஷி-முனி முதலான யாருக்கும்
தெரியாது எனப் பாடப்பட்டுள்ளது. தெரியாது-தெரியாது என்றே
சொல்லிச் சென்றுள்ளனர். எப்படி சிறு குழந்தைகளுக்கு ஞானம்
உள்ளதா என்ன? எப்படி பெரியவர்களாக ஆகிக் கொண்டே செல்கின்றனரோ,
புத்தி திறந்து (முதிர்ச்சி) அடைந்து கொண்டே செல்லும்.
புத்தியில் வந்து கொண்டே இருக்கும், வெளிநாடு எங்கே உள்ளது? இது
எங்கே? என்பதெல்லாம். குழந்தைகளாகிய நீங்களும் முதலில் இந்த
எல்லையற்ற ஞானத்தைப் பற்றி எதுவும் அறியாமல் தான் இருந்தீர்கள்.
இதையும் சொல்கின்றனர்- நாங்கள் சாஸ்திரங்கள் முதலியவற்றைப்
படித்திருந்த போதிலும் எதுவும் புரியாமல் இருந்தோம். மனிதர்கள்
தான் இந்த டிராமாவில் நடிகர்கள் அல்லவா!
முழு விளையாட்டும் இரண்டு விசயங்களை வைத்து
உருவாக்கப்பட்டுள்ளது. பாரதத்தின் தோல்வி மற்றும் பாரதத்தின்
வெற்றி. பாரதத்தில் சத்யுக ஆரம்பத்தில் பவித்திர தர்மம்
இருந்தது. இச்சமயம் உள்ளது அபவித்திர தர்மம். அபவித்திரதாவின்
காரணத்தால் தங்களை தேவதா எனச் சொல்லிக் கொள்ள முடிவதில்லை.
பிறகும் கூட ஸ்ரீஸ்ரீ எனப் பெயர் வைத்துக் கொள்கின்றனர். ஆனால்
ஸ்ரீ என்றால் சிரேஷ்டமானவர். பவித்திர தேவதைகள் தான்
சிரேஷ்டமானவர்கள். ஸ்ரீமத் பகவான் வாக்கு எனச்
சொல்லப்படுகின்றது இல்லையா? இப்போது ஸ்ரீயாக இருப்பவர் யார்?
யார் பாபா சொல்வதை முன்னிலையில் கேட்டு ஸ்ரீ ஆகிறார்களோ,
அவர்களா, அல்லது யார் தங்களை ஸ்ரீஸ்ரீ எனச் சொல்லிக்
கொள்கின்றனரோ, அவர்களா? பாபாவின் நற்காரியங் களுக்காக மகிமையாக
என்ன பெயர்கள் இடப்பட்டுள்ளனவோ, அவற்றையும் தங்களுக்கு
வைத்துக் கொள்கின்றனர். இவையனைத்தும் சில்லறை விசயங்கள்.
பிறகும் கூட பாபா சொல்கிறார்- குழந்தைகளே, ஒரு தந்தையை நினைவு
செய்து கொண்டே இருங்கள். இது தான் வசீகர மந்திரம். நீங்கள்
இராவணன் மீது வெற்றி கொண்டு உலகை வென்றவர்களாக ஆகிறீர்கள்.
அடிக்கடி தன்னை ஆத்மா என உணருங்கள். இந்த சரீரமோ இங்கே ஐந்து
தத்துவங்களால் ஆனது. உருவாகின்றது, விடுபடுகின்றது, மீண்டும்
உருவாகின்றது. இப்போது ஆத்மாவோ அவிநாசி. அவிநாசி
ஆத்மாக்களுக்கு இப்போது சங்கமயுகத்தில் அவிநாசி பாபா
கற்பித்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவு தான் விக்னங்கள்
முதலியன ஏற்பட்டாலும், மாயாவின் புயல்கள் வந்தாலும் நீங்கள்
பாபாவின் நினைவில் இருங்கள். நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள், நாம் தான் சதோபிரதானமாக இருந்தோம், பிறகு
தமோபிரதானம் ஆகியிருக்கிறோம். உங்களிலும் கூட நம்பர்வார்
அறிந்திருக்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில்
உள்ளது, நாம் தான் முதல்-முதலில் பக்தி செய்துள்ளோம்.
நிச்சயமாக யார் முதல்-முதலில் பக்தி செய்துள்ளனரோ, அவர்கள்
தான் சிவனுக்கு ஆலயம் கட்டினர். செல்வந்தர்களாகவும் அவர்கள்
இருந்தனர் இல்லையா? பெரிய ராஜாவைப் பார்த்து மற்ற ராஜாக்களும்
மற்றும் பிரஜைகளும் செய்வார்கள். இவையனைத்தும் விவரமான
விˆயங்கள். ஒரு விநாடியில் ஜீவன் முக்தி எனச் சொல்லப்
படுகின்றது. பிறகு புரிய வைப்பதில் எத்தனை வருடங்கள் ஆகின்றன!
ஞானமோ சுலபமானது. இதில் நினைவு யாத்திரையில் எவ்வளவு
நேரமாகிறதோ, அவ்வளவு நேரம் பிடிப்பதில்லை. அழைக்கவும்
செய்கின்றனர், பாபா வாருங்கள், வந்து எங்களை பதீத்திலிருந்து
பாவனமாக்குங்கள் (தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக). பாவன
உலகம் எனச் சொல்லப்படுவது சத்யுகம். இதைப் பதீத்த உலகம் எனச்
சொல்வார்கள். பதீத்த உலகம் என்று சொன்னாலும் கூட தங்களைப்
புரிந்து கொள்வதில்லை. தன் மீது வெறுப்பு கொள்வதில்லை. நீங்கள்
யாருடைய கையினாலும் சமைக்கப்பட்டதைச் சாப்பிடுவதில்லை. அதனால்
கேட்கின்றனர், நாங்கள் என்ன தீண்டத் தகாதவர்களா என்று. அட,
உங்களை நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள் இல்லையா? பதீதமானவர்களோ
அனைவரும் தான் இல்லையா? நீங்கள் சொல்லவும் செய்கிறீர்கள்,
நாங்கள் பதீத்தமானவர்கள், இந்த தேவதைகள் பாவனமானவர்கள். ஆக,
பதீதமானவர்களை என்னவென்று சொல்வார்கள்? பாடல் உள்ளது இல்லையா -
அமிர்தத்தை விட்டு விஷத்தை எதற்காக உண்ண வேண்டும்? விஷமோ தீயது
இல்லையா? பாபா சொல்கிறார், இந்த விஷம் உங்களுக்கு
முதல்-இடை-கடை முழுவதும் துக்கம் தருகின்றது. ஆனால் இதை விஷம்
என உணர்வதே இல்லை. எப்படி போதைப் பழக்கம் உள்ளவர் போதை
இல்லாமல் இருக்க முடியாது, மதுபானப் பழக்கம் உள்ளவர்கள் மது
இல்லாமல் இருக்க முடியாது. யுத்தத்தின் நேரத்தில் அவர்களை மது
அருந்த வைத்து போதை ஏற்படுத்தி யுத்தம் செய்ய அனுப்பி
வைக்கின்றனர். போதை ஏறினால் போதும், நாம் இது போல் செய்ய
வேண்டும் எனப் புரிந்து கொள்கின்றனர். அவர்களுக்கு மரணத்தின்
பயம் இருப்பதில்லை. எங்கே வேண்டுமானாலும் வெடிகுண்டுகளுடன்
போய் வெடிகுண்டுகளோடு விழுகின்றனர். பாடலும் உள்ளது,
ஏவுகணைகளின் யுத்தம் நடைபெற்றது என்று. சரியான விஷயத்தை
இப்போது நடைமுறையில் நீங்கள் பார்த்துக் கொண்டு
இருக்கிறீர்கள். இதற்கு முன்பு படிக்க மட்டும் செய்தீர்கள்,
அதாவது வயிற்றிலிருந்து ஏவுகணைகள் வெளிப்பட்டன, பிறகு இதுபோல்
செய்தார்கள் என்று. இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள்,
பாண்டவர் யார், கௌரவர் யார் என்று. சொர்க்கவாசி ஆவதற்காகப்
பாண்டவர்கள், உயிருடன் இருந்து கொண்டே தேக அபிமானத்தில்
இருந்து உருகி விடுவதற்கான முயற்சி செய்தனர். நீங்கள் இப்போது
இந்தப் பழைய செருப்பை (உடலை) விட்டுவிடுவதற்கான முயற்சி
செய்கிறீர்கள். சொல்கிறீர்கள் இல்லையா, பழைய செருப்பை விட்டுப்
புதியதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று? பாபா
குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கிறார். பாபா சொல்கிறார்,
நான் கல்ப-கல்பமாக வருகிறேன். எனது பெயர் சிவன்.
சிவஜெயந்தியும் கொண்டாடுகின்றனர். பக்தி மார்க்கத்திற்காக
எத்தனைக் கோவில்கள் முதலியவற்றைக் கட்டுகின்றனர்! பெயர்களும்
அநேகம் வைத்துள்ளனர். தேவிகளுக்கும் இதுபோல் வைத்துள்ளனர்.
இச்சமயம் உங்களுக்குப் பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதையும் குழந்தைகள் நீங்கள் தான் அறிவீர்கள், யாருக்கு நாம்
பூஜை செய்து வந்தோமோ, அவர் நமக்குப் படிப்பு சொல்லித் தந்து
கொண்டிருக்கிறார். எந்த லட்சுமி-நாராயணருக்கு நாம் பூஜாரியாக
இருந்தோமோ, அவர்களைப் போல் இப்போது நாமே ஆகிக்
கொண்டிருக்கிறோம். இந்த ஞானம் புத்தியில் உள்ளது. சிந்தனை
செய்து கொண்டே இருங்கள். பிறகு மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
அநேகரால் தாரணை செய்ய முடிவதில்லை. பாபா சொல்கிறார், அதிகம்
தாரணை செய்ய முடியவில்லை என்றால் தடை இல்லை. நினைவின் தாரணையோ
உள்ளது இல்லையா? பாபாவையே நினைவு செய்து கொண்டே இருங்கள்.
யாருக்கு முரளி நடைபெறுவதில்லையோ, இங்கே அமர்ந்து நினைவு
செய்யுங்கள். இங்கே எந்த ஒரு பந்தனம் அல்லது தொந்தரவு முதலியவை
கிடையாது. வீட்டில் குழந்தை-குட்டிகள் முதலியவற்றின்
சூழ்நிலையைப் பார்த்து அந்த நஷா (போதை) மறைந்து போய்
விடுகின்றது. இங்கே சித்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன.
யாருக்கும் புரிய வைப்பது சுலபம். அவர்களோ (பக்தியில்) கீதை
முதலியவற்றை முழுவதுமாக மனப்பாடம் செய்து விடுகின்றனர்.
நீங்கள் எதை மனப்பாடம் செய்ய வேண்டும்? பாபாவை. நீங்கள்
சொல்லவும் செய்கிறீர்கள், பாபா, இது முற்றிலும் புதிய விஷயம்.
இந்த ஒரு சமயம் தான் நீங்கள் தங்களை ஆத்மா என உணர்ந்து ஒரு
பாபாவை நினைவு செய்ய வேண்டும். 5000 ஆண்டுகளுக்கு முன்னாலும்
கூட படிப்பு சொல்லித் தந்திருந்தார். இதுபோல் புரிய வைப்பதற்கு
வேறு யாருக்கும் சக்தி கிடையாது. ஞானக்கடலாக இருப்பவர் ஒரு
பாபா தான், வேறு யாரும் இருக்க முடியாது. ஞானக்கடலான பாபா தான்
உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். தற்சமயம்
அப்படிப் பட்டவர்களும் அநேகர் வெளிப்பட்டுள்ளனர்-நாங்கள்
அவதாரம் எடுத்துள்ளோம் என்று சொல்கின்றனர். அதனால் உண்மையை
நிறுவுவதில் எவ்வளவு விக்னங்கள் ஏற்படுகின்றன! ஆனால் பாடப்
பட்டுள்ளது, உண்மை என்ற படகு ஆடலாம், அசையலாம், ஆனால் மூழ்கிப்
போகாது.
இப்போது குழந்தைகள் நீங்கள் பாபாவிடம் வருகிறீர்கள் என்றால்
உங்கள் மனதில் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! முன்பு யாத்திரை
சென்றீர்கள் என்றால் மனதில் என்ன வந்தது? இப்போது வீடு-வாசலை
விட்டு இங்கே வருகிறீர்கள் என்றால் என்ன சிந்தனைகள் வருகின்றன?
நாம் பாப்தாதாவிடம் செல்கின்றோம் என்று. பாபா இதையும் புரிய
வைத்துள்ளார் - எனக்கு சிவபாபா சொல்கிறார், யாருக்குள்
பிரவேசமாகியிருக்கிறாரோ, அவர் பிரம்மா. வம்சாவளி உள்ளது
இல்லையா? முதல்-முதல் வம்சாவளி பிராமணர்களுடையது. அதன் பிறகு
தேவதைகளின் வம்சாவளி ஆகி விடுகிறது. இப்போது தூராந்தேசி பாபா
குழந்தைகளை தூராந்தேசி ஆக்குகிறார். நீங்கள் அறிவீர்கள், ஆத்மா
எப்படி முழுச் சக்கரத்திலும் பலவித வர்ணங்களில் வருகின்றது
என்று. இதன் ஞானத்தை தூராந்தேசி பாபா தான் தருகிறார். நீங்கள்
சிந்தனை செய்வீர்கள், இப்போது நாம் பிராமண வர்ணத்தினராக
உள்ளோம், இதற்கு முன்பு ஞானம் இல்லாத போது சூத்திர
வர்ணத்தினராக இருந்தோம். நம்முடையவர் கிரேட்-கிரேட் கிராண்ட்
ஃபாதர். கிரேட் சூத்திரர், கிரேட் வைசியர், கிரேட்
சத்திரியர்...... அதற்கு முன் கிரேட் பிராமணர்களாக இருந்தோம்.
இப்போது இந்த விஷயங்களை பாபாவைத் தவிர வேறு யாராலும் புரிய
வைக்க முடியாது. இது தூராந்தேசத்திற்கான ஞானம் எனச்
சொல்லப்படுகின்றது. தூர தேசத்தில் வசிப்பவராகிய பாபா வந்து தூர
தேசத்திற்கான முழு ஞானத்தையும் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்.
நீஙகள் அறிவீர்கள், நம்முடைய பாபா தூரதேசத்திலிருந்து
இவருக்குள் (பிரம்மா) வருகிறார். இது வேறொரு தேசம், வேறொரு
இராஜ்யம். சிவபாபாவுக்குத் தனக்கென்று சரீரம் எதுவும்
கிடையாது. மேலும் அவர் ஞானக்கடல், சொர்க்கத்தின்
இராஜ்யத்தையும் அவர் தான் தர வேண்டும். கிருஷ்ணர் தர மாட்டார்.
சிவபாபா தான் தருவார். கிருஷ்ணரை பாபா எனச் சொல்ல மாட்டார்கள்.
பாபா இராஜ்யத்தைத் தருகிறார், பாபாவிடமிருந்து தான் ஆஸ்தி
கிடைக்கிறது. இப்போது எல்லைக்குட்பட்ட ஆஸ்திகளெல்லாம்
முடிவடைகின்றன. நாம் சங்கமயுகத்தில் 21 பிறவிகளுக்கான ஆஸ்தி
பெற்றிருக்கிறோம் என்று சத்யுகத்தில் இருக்கும் போது
உங்களுக்குத் தெரியாது. இதை இப்போது தான் அறிந்து
கொண்டிருக்கிறீர்கள், நாம் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை
அரைக்கல்பத்திற்காகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். 21
தலைமுறைகள் அதாவது முழு ஆயுள். எப்போது சரீரம்
முதுமையடைகின்றதோ, அப்போது சமயத்தில் சரீரத்தை விடுவோம்.
எப்படி பாம்பு பழைய தோலை விட்டுப் புதியதை எடுப்பதைப் போல.
நமக்கும் கூட பாகத்தை நடித்து-நடித்து இந்த உடல் பழையதாக ஆகி
விட்டுள்ளது. நீங்கள் உண்மையிலும் உண்மையான பிராமணர்கள்.
நீங்கள் தான் குளவி எனச் சொல்லப்படுகிறீர்கள். நீஙகள்
புழுக்களை உங்களைப் போல் பிராமணராக ஆக்குகிறீர்கள்.
உங்களுக்குச் சொல்லப்படுகின்றது – புழுக்களைக் கொண்டு வந்து
அமர்ந்து பூம்-பூம் செய்யுங்கள். குளவியும் பூம்-பூம்
செய்கிறது. பிறகு சிலருக்கோ இறக்கை முளைத்து விடுகின்றது.
சிலர் இறந்து போகின்றனர். உதாரணங்கள் அனைத்தும் இப்போதைய
சமயத்தினுடையவை. நீங்கள் செல்லக் குழந்தைகள். குழந்தைகள்
கண்ணின் மணிகள் எனச் சொல்லப்படுகின்றனர். கண்ணின் மணிகளே என்று
பாபா சொல்கிறார். நீங்கள் என்னை உங்களுடையவர்களாக்கிக்
கொண்டதால் நீங்களும் என்னுடையவர்கள் ஆகிறீர்கள் இல்லையா?
அப்படிப் பட்ட தந்தையை எவ்வளவு நினைவு செய்கிறீர்களோ, பாவங்கள்
நீங்கும். வேறு யாரையும் நினைவு செய்வதால் பாவங்கள் நீங்காது.
நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) உயிருடன் இருந்து கொண்டே தேக-அபிமானத்தில் இருந்து (உருகி)
விடுபடுவதற்கான புருஷார்த்தம் செய்ய வேண்டும். இந்தப் பழைய
செருப்பின் (உடல்) மீது ஒரு சிறிதும் மோகம் இருக்கக் கூடாது.
2) உண்மையான பிராமணர் ஆகி புழுக்களின் மீது ஞானத்தின் பூம்-பூம்
செய்து அவர்களை உங்களைப் போன்ற பிராமணர்களாக ஆக்க வேண்டும்.
வரதானம் :
நம்பிக்கை இழந்தவர்களிடமும் கூட
நம்பிக்கையை உருவாக்கக் கூடிய உண்மையான பரோபகாரி, திருப்தியின்
மணி ஆகுக.
திரிகாலதரிசி ஆகி, ஒவ்வோர்
ஆத்மாவின் பலவீனத்தைக் கண்டறிந்து, அவர்களின் பலவீனத்தைத்
தனக்குள் தாரணை செய்வதற்கு அல்லது வர்ணனை செய்வதற்கு பதிலாக,
பலவீனம் என்ற முள்ளை, கல்யாண்காரி சொரூபத்தின் மூலம்
அழித்துவிட வேண்டும். முள்ளை மலராக்கி விட வேண்டும். தானும்
திருப்தியின் மணிக்கு சமமாகத் திருப்தியாக இருக்க வேண்டும்
மற்றும் அனைவரையும் திருப்திப் படுத்த வேண்டும். யாரிடம்
அனைவரும் நிராசை (அவநம்பிக்கை) கொண்டுள்ளனரோ, அத்தகைய மனிதர்
அல்லது அத்தகைய ஸ்திதியில் சதா காலத்திற்கும் நம்பிக்கை தீபத்தை
ஏற்ற வேண்டும். அதாவது மனச்சோர்வடைந்தவரை சக்திசாலி ஆக்கிவிட
வேண்டும். அத்தகைய சிரேஷ்ட காரியம் நடைபெற்றுக் கொண்டே
இருக்குமானால் பரோபகாரி, திருப்தி மணியின் வரதானம் கிடைத்து
விடும்.
சுலோகன் :
பரீட்சை சமயத்தில் உறுதிமொழி
நினைவுக்கு வர வேண்டும் - அப்போது பிரத்தியட்சதா (பாபாவை
வெளிப்படுத்துதல்) நடைபெறும்.
ஓம்சாந்தி