23.06.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! தந்தை
உங்களை ஞானத்தின் மூலமாக தூய்மையான நறுமணமுள்ள மலராக மாற்ற
வந்துள்ளார். நீங்கள் முள்ளாக ஆகக் கூடாது. முட்களை இந்த
சபையில் கூட்டி வரக் கூடாது.
கேள்வி:
நினைவு யாத்திரையில் நன்கு
முயற்சி செய்யும் குழந்தைகளின் அடையாளம் என்னவாக இருக்கும்?
பதில்:
நினைவின் முயற்சி செய்யும்
குழந்தைகள் மிகவும் குஷியாக இருப்பார்கள். இப்பொழுது நாம்
திரும்பச் சென்று கொண்டிருக்கிறோம் என்பது புத்தியில் இருக்கும்.
பிறகு நாம் நறுமணமுள்ள மலர்களின் தோட்டத்திற்குச் செல்ல
வேண்டும். நீங்கள் நினைவு யாத்திரையினால் நறுமணமுடையவர்களாக
ஆகிறீர்கள் மற்றும் மற்றவர்களையும் ஆக்குகிறீர்கள்.
ஓம் சாந்தி.
தோட்ட முதலாளி அமர்ந்துள்ளார்.
தோட்டக்காரனும் இருக்கிறார். மலர்களும் இருக்கின்றன. இது புதிய
விஷயமல்லவா? யாராவது புதியவர் கேட்டார்கள் என்றால், இவர்கள்
என்ன கூறுகிறார்கள் என்பார்கள். தோட்டத்தின் எஜமானர்,
தோட்டக்காரன், மலர்கள் ஆகிய இவை எல்லாம் என்ன? இப்பேர்ப்பட்ட
விஷயங்களை ஒரு பொழுதும் சாஸ்திரங்களில் கேட்கவே இல்லையே!
குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள், தோட்ட முதலாளியையும்,
படகோட்டியையும் நினைவும் செய்கிறார்கள். இப்பொழுது இங்கிருந்து
கடந்து செல்ல இங்கு வந்துள்ளார். நினைவு யாத்திரையில் இருக்க
வேண்டும் என்று தந்தை கூறுகிறார். நான் எவ்வளவு தூரம் சென்று
கொண்டிருக்கிறேன் என்று உங்களை நீங்களே பாருங்கள். எந்த
அளவிற்கு தங்களது சதோபிரதான நிலை வரை வந்து சேர்ந்துள்ளோம்?
எந்த அளவு சதோபிரதான நிலை அமைந்து கொண்டே போகுமோ நாம் இப்பொழுது
திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்று உணருவீர்கள். எது வரை நாம்
சேர்ந்துள்ளோம், எல்லாமே நினைவு யாத்திரையைப் பொருத்தது.
குஷியும் ஏறி இருக்கும். யார் எந்த அளவிற்கு முயற்சி செய்கிறாரோ
அந்த அளவிற்கு அவருக்குள் குஷி வரும். எப்படி தேர்வினுடைய
நாட்கள் வரும் பொழுது நாம் எந்த அளவிற்கு தேர்ச்சி அடைவோம்
என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு விடுகிறார்கள் அல்லவா?
இங்கும் அதே போலத்தான் நான் எந்த அளவு நறுமணமுள்ள மலராக ஆகி
உள்ளேன் என்பதை ஒவ்வொரு குழந்தையும் தன்னைத்தானே
அறிந்திருப்பார். அது மலர்களின் தோட்டம் ஆகும். முகம்மதியர்கள்
கூட கார்டன் ஆஃப் அல்லா (அல்லாவின் தோட்டம்) என்கிறார்கள்.
அங்கு ஒரு தோட்டம் இருக்கிறது. யார் அங்கு செல்கிறார்களோ
அவர்களுக்கு குதா (கடவுள்) மலரைத் தருகிறார் என்று
நினைக்கிறார்கள். மனதில் என்ன விருப்பம் இருக்கிறதோ அதை
பூர்த்தி செய்கிறார். மற்றபடி ஏதோ மலரை எடுத்து அளிக்கிறார்
என்பதல்ல. எப்படி யாருடைய புத்தியில் இருக்கிறதோ அது
சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்) ஆகி விடுகிறது. இங்கு
சாட்சாத்காரத்தில் எதுவும் இல்லை. பக்தி மார்க்கத்திலோ
சாட்சத்காரத்திற்காக கழுத்தை கூட வெட்டி விடுகிறார்கள்.
மீராவிற்கு சாட்சாத்காரம் ஆகியது. அவருக்கு எவ்வளவு மதிப்பு
உள்ளது! அது பக்தி மார்க்கம் ஆகும். பக்தியோ அரைக்கல்பம் நடக்க
வேண்டியே உள்ளது. ஞானம் அப்போது இல்லை. வேதங்கள் ஆகியவற்றிற்கு
மிகுந்த மதிப்பு உள்ளது. வேதங்களோ எங்களுடைய உயிர் நாடி
என்பார்கள். இந்த வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகிய அனைத்துமே பக்தி
மார்க்கத்திற்கானது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
பக்தியினுடையது எவ்வளவு பெரிய விஸ்தாரம் ஆகும். பெரிய விருட்சம்
ஆகும். ஞானம் என்பது விதை. இப்பொழுது ஞானத் தினால் நீங்கள்
எவ்வளவு தூய்மையாக ஆகிறீர்கள். நறுமணமுடையவராக ஆகிறீர்கள். இது
உங்களுடைய தோட்டம் ஆகும். இங்கு யாரையுமே முள் என்று கூற
மாட்டோம். ஏனெனில் இங்கு யாரும் விகாரத்தில் செல்வது இல்லை.
எனவே இந்த தோட்டத்தில் ஒரு முள் கூட இல்லை என்போம். முட்கள்
இருப்பது கலியுகத்தில். இப்பொழுது இருப்பது புருஷோத்தம சங்கம
யுகம். இங்கு முள் எங்கிருந்து வந்தது? ஒரு வேளை யாராவது முள்
அமர்ந்திருந்தார் என்றால் தங்களுக்கு தாங்களே நஷ்டம்
ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஏனெனில் இது இந்திர பிரஸ்தம் ஆகும்
அல்லவா? இங்கு ஞான (பரிகள்) தேவதைகள் அமர்ந்துள்ளார்கள். ஞான
நடனம் புரியும் (பரிகள்) தேவதைகள் ஆவார்கள். முக்கியமானவர்களின்
பெயர்கள் புகராஜ் பரி, நீலம்பரி போன்றவை இடப்பட்டுள்ளன. அவர்களே
பிறகு 9 இரத்தினங்கள் என்று பாடப்படுகிறார்கள். ஆனால் இவர்கள்
முன்பு யாராக இருந்தார்கள். இது யாருக்குமே தெரியாது. என்னை
நினைவு செய்யுங்கள் என்று மட்டுமே தந்தை கூறுகிறார்.
குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இப்பொழுது அறிவு உள்ளது.
84னுடைய சக்கரம்கூட இப்பொழுது புத்தியில் உள்ளது.
சாஸ்திரங்களிலோ 84 இலட்சங்கள் என்று கூறி விட்டுள்ளார்கள்.
நீங்கள் 84 பிறவிகள் எடுத்தீர்கள் என்பதை இனிமையிலும் இனிமையான
அருமையான குழந்தைகளுக்குத் தந்தை புரிய வைத்துள்ளார். இப்பொழுது
தமோபிரதான நிலையிலிருந்து சதோ பிரதானமாக ஆக வேண்டும். எவ்வளவு
எளிதானது! என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று குழந்தைகளுக்கு
பகவான் கூறுகிறார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
நறுமணமுள்ள மலர் ஆக வேண்டும் என்றால், தன்னை ஆத்மா என்று
உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். முள்ளாக ஆகாதீர்கள்.
இங்கு எல்லோருமே இனிமையிலும் இனிமையான மலர்கள் ஆவார்கள்.
முட்கள் அல்ல. ஆம். மாயையின் புயல்களோ வரும். மாயை எவ்வளவு
கடுமையானது என்றால் சட்டென்று சிக்க வைத்து விடும். பிறகு நான்
இப்படி செய்து விட்டேனே என்று பச்சாதாபப்படுவார்கள். நான்
செய்த சம்பாத்தியம் முழுமையாக இல்லாமல் போய் விட்டது.
இது தோட்டமாகும். தோட்டத்தில் நல்ல நல்ல மலர்கள் கூட
இருக்கும். இந்தத் தோட்டத்தில் கூட ஒரு சிலரோ முதல் தரமான
(ஃபர்ஸ்ட் கிளாஸ்) மலராக ஆகிக் கொண்டே போகிறார்கள். எப்படி
முகலாய தோட்டத்தில் நல்ல நல்ல மலர்கள் இருக்கின்றன. எல்லோரும்
கண்டு களிக்கப் போகிறார்கள். இங்கு உங்களிடம் யாரும்
பார்ப்பதற்கோ வரமாட்டார்கள். நீங்கள் முட்களுக்கு என்ன
முகத்தைக் காண்பிப்பீர்கள்? அழுக்குத் துணிகளை துவைப்பவர் என்ற
பாடலும் உள்ளது. பாபாவிற்கு ஜப சாஹேப், சுகமணி ஆகிய எல்லாமே
நினைவிருந்தது. அகண்ட பாராயணம் (தொடர்ந்து மனனம்) கூட
செய்வார். 8 வயதாக இருக்கும் பொழுதே இடுப்புப் பட்டை
அணிந்திருப்பார். கோவிலில் தான் இருப்பார். கோவிலினுடைய முழு
பொறுப்பு (சார்ஜ்) என் மீது இருந்தது. அழுக்குத் துணிகளை
துவைப்பது என்பதன் பொருள் என்ன என்பதை இப்பொழுது
புரிந்துள்ளார். மகிமை முழுவதும் பாபாவினுடையதே ஆகும்.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை வந்து புரிய
வைக்கிறார். நல்ல நல்ல மலர்களை எடுத்து வாருங்கள் என்று
குழந்தைகளுக்குக் கூறவும் செய்கிறார். யார் நல்ல நல்ல மலர்களை
எடுத்து வருகிறார்களோ அவர்கள் நல்ல மலர் என்று கருதப்படுவார்.
எல்லோருமே நாங்கள் ஸ்ரீலட்சுமி நாராயணர் ஆகி விடுவோம் என்று
கூறுகிறார்கள். அப்படியானால் ரோஜா மலர் ஆகி விட்டார்கள்.
நல்லது உங்கள் வாயில் இனிப்பு என்று தந்தை கூறுகிறார்.
இப்பொழுது முயற்சி செய்து சதா ரோஜா ஆகுங்கள். ஏராளமான
குழந்தைகள் இருக்கிறார்கள். பிரஜைகளோ நிறைய பேர் உருவாகிக்
கொண்டிருக்கிறார்கள். அங்கு இருப்பவர்களே இராஜா, இராணி மற்றும்
பிரஜைகள். சத்யுகத்தில் மந்திரி இருப்பதே இல்லை. ஏனெனில்
இராஜாவிடம் தான் (பவர்) அதிகாரம் இருக்கும். மந்திரி
ஆகியோரிடம் ஆலோசனை பெறுவதற்கான அவசியம் இருப்பதில்லை. இல்லை
என்றால் ஆலோசனை அளிப்பவர் பெரியவர் ஆகி விடுவார். அங்கு பகவான்
- பகவதிக்கு ஆலோசனையின் அவசியம் இல்லை. பதீதமாக ஆகும் பொழுது
தான் மந்திரி ஆகியோர் இருப்பார்கள். பாரதத்தினுடையதே விஷயம்
ஆகும். இராஜாக்களுக்கு இராஜாக்கள் தலை வணங்குவது வேறு எந்த
கண்டத்திலும் கிடையாது. இங்கு தான் ஞான மார்க்கத்தில்
பூஜிக்கத்தக்கவர்கள் அஞ்ஞான மார்க்கத்தில் பூசாரி என்று
காண்பிக்கப்படுகிறது. அவர்கள் இரட்டை கிரீடதாரிகள். மற்றவர்கள்
ஒற்றை கிரீடதாரிகள். பாரதம் போன்ற தூய்மையான கண்டம் எதுவும்
கிடையாது. பேரடைஸ், பஹிஷ்த், சுவர்க்கமாக இருந்தது. நீங்கள்
அதற்காகத் தான் படிக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் மலர் ஆக
வேண்டும். தோட்டத்தின் எஜமானர் வந்துள்ளார். தோட்டக்
காரர்களும் உள்ளார்கள். தோட்டக்காரர்கள் வரிசைக்கிரமமாக
உள்ளார்கள். இது தோட்டமாகும் என்பதை குழந்தைகளும்
புரிந்துள்ளார்கள். இதில் முட்கள் இல்லை. முட்கள் துக்கம்
கொடுப்பவை. தந்தையோ யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. அவர்
இருப்பதே துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவராக (துக்க ஹர்த்தா,
சுககர்த்தா). எவ்வளவு இனிமையான பாபா ஆவார்!
குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை மீது அன்பு உள்ளது. தந்தை கூட
குழந்தைகளுக்கு அன்பு காட்டு கிறார் அல்லவா? இது படிப்பு
ஆகும். நான் உங்களுக்கு (பிராக்டிகலில்) நடைமுறையில்
கற்ப்பிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இவரும் படிக்கிறார்.
கற்று பின் கற்பியுங்கள். அப்பொழுது மற்றவர்களும்
முள்ளிலிருந்து மலர் ஆவார்கள். பாரதம் மகாதானி என்று
பாடப்பட்டுள்ளது. ஏனெனில் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
மகாதானி ஆகிறீர்கள். அழியாத ஞான இரத்தினங்களை நீங்கள் தானம்
செய்கிறீர்கள். ஆத்மா தான் ரூப் பஸந்த், ஞான யோகமுடையது என்று
பாபா புரிய வைத்துள்ளார். பாபா கூட ரூப் பஸந்த் ஆவார். அவரிடம்
முழு ஞானம் உள்ளது. ஞானக் கடல் பரமபிதா பரமாத்மா ஆவார். அவர்
(அத்தாரிட்டி) அதிகாரம் உடையவர் ஆவார் அல்லவா? ஞானக் கடல் ஒரு
தந்தை ஆவார். எனவே முழு கடலையும் மையாக ஆக்கினாலும் குறையக்
கூடியது இல்லை என்று பாடப்படுகிறது. மேலும் பிறகு ஒரு
வினாடியில் ஜீவன் முக்தி என்ற பாடலும் உள்ளது. உங்களிடம் எந்த
ஒரு சாஸ்திரம் ஆகியவை இல்லை. அங்கு யாராவது பண்டிதர்
ஆகியோரிடம் சென்றார்கள் என்றால், இந்த பண்டிதர் நிறைய
படித்திருக்கும் அத்தாரிட்டி ஆவார் என்று நினைப்பார்கள். இவர்
எல்லா வேத சாஸ்திரங்களை மனப்பாடம் செய்துள்ளார். பிறகு
சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கிறார்கள். பின் சிறு வயதிலேயே
அதைப் பயின்று விடுகிறார்கள். நீங்கள் சம்ஸ்காரத்தை எடுத்துச்
செல்வது இல்லை. நீங்கள் படிப்பின் ரிஸல்டை எடுத்துக் கொண்டு
செல்கிறீர்கள். உங்களது படிப்பு முடிந்த பின் ரிஸல்ட்
வெளிப்படும் மற்றும் அந்தப் பதவியை அடைந்து விடுவீர்கள். அங்கு
யாருக்காவது ஞானத்தைக் கூறும் வகையில் ஞானத்தை எடுத்துக்
கொண்டு செல்வார்களா என்ன? இங்கோ உங்களது படிப்பு ஆகும்.
அதனுடைய பிராலப்தம் (பலன்) புதிய உலகத்தில் கிடைக்கும். மாயை
கூட ஒன்றும் குறைந்த சக்திவான் அல்ல என்று குழந்தைகளாகிய
உங்களுக்குத் தந்தை புரிய வைத்துள்ளார். மாயைக்கு
துர்க்கதியில் எடுத்து செல்வதற்கான சக்தி உள்ளது. ஆனால் அதற்கு
மகிமை செய்வார்களா என்ன? அதுவோ துக்கம் கொடுப்பதில் சக்திவான்
ஆகும் அல்லவா? தந்தை சுகம் அளிப்பதில் சக்திவான் ஆவார். எனவே
அவருக்குப் பாடல் உள்ளது. இது கூட நாடகத்தில்
அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் சுகம் எடுக்கிறீர்கள். பின்
துக்கமும் எடுக்கிறீர்கள். தோல்வி மற்றும் வெற்றி யாருடையது -
இது பற்றிக் கூட தெரிய வேண்டும் அல்லவா? தந்தை கூட பாரதத்தில்
வருகிறார். ஜெயந்தி கூட பாரதத்தில் கொண்டாடப்படுகிறது. சிவபாபா
எப்பொழுது வந்தார்? வந்து என்ன செய்திருந்தார்? என்பது
யாருக்குமே தெரியாது. பெயர் அடையாளத்தையே இல்லாமல் செய்து
விட்டுள்ளார்கள். குழந்தையான கிருஷ்ணர் பெயரைக் கொடுத்து
விட்டுள்ளார்கள். உண்மையில் அன்பிற்குரிய தந்தையின் மகிமை தனி.
கிருஷ்ணரின் மகிமை தனி ஆகும். அவர் நிராகாரமானவர், அவர்
சாகாரமானவர். கிருஷ்ணரின் மகிமையே தனியாகும். தந்தையை அகால
மூர்த்தி என்று கூறுகிறார்கள் அல்லவா? நாம் கூட அகால மூர்த்தி
ஆவோம். ஆத்மாவை காலன் சாப்பிட முடியாது. (எமன் உயிரை குடிக்க
முடியாது) அகால மூர்த்தியான ஆத்மாவின் பீடம் இதுவாகும். நமது
பாபா கூட அகால மூர்த்தி ஆவார். காலன் சரீரத்தை தான்
சாப்பிடுகிறான். இங்கு அகால மூர்த்தியை அழைக்கிறார்கள்.
சத்யுகத்தில் அழைப்பதில்லை. ஏனெனில் அங்கோ சுகமே சுகமாக
இருக்கும். எனவே துக்கத்தில் அனைவரும் நினைவு செய்வார்கள்.
சுகத்தில் யாரும் நினைவு செய்யமாட்டார்கள் என்று பாடவும்
செய்கிறார்கள். இப்பொழுது இராவண இராஜ்யத்தில் எவ்வளவு துக்கம்
உள்ளது! தந்தையோ சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்குகிறார். பிறகு
அங்கு அரைக் கல்பம் யாரும் அழைப்பதே இல்லை. எப்படி லௌகீக தந்தை
குழந்தைகளுக்கு சிருங்காரம் செய்து ஆஸ்தி அளித்து சுயம்
வானப்பிரஸ்த நிலை எடுத்துக் கொள்கிறார். எல்லாமே
குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு இப்பொழுது நாங்கள்
சத்சங்கத்தில் செல்கிறோம் என்பார்கள். கொஞ்சம் சாப்பாட்டிற்காக
அனுப்பிக் கொண்டே இருங்கள். இந்த பாபாவோ அவ்வாறு கூறமாட்டார்
அல்லவா? அவரோ கூறுகிறார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே,
நான் உங்களுக்கு அரசாட்சியைக் கொடுத்து விட்டு
வானப்பிரஸ்தத்தில் சென்று விடுவேன். சாப்பாட்டிற்கு
அனுப்புங்கள் என்று நான் கூறுவேனா என்ன? லௌகீக குழந்தைகளுக்கோ
தந்தையை பராமரிக்கும் கடமை இருக்கும். இல்லாவிட்டால் எப்படி
சாப்பிடுவார்? இந்த தந்தையோ கூறுகிறார், நான் பலன் எதிர்பாரத
சேவாதாரி ஆவேன். மனிதர்கள் யாருமே பலன் எதிர்பாராத வர்களாக
இருக்க முடியாது. பசியால் இறந்து போய் விடுவார். நான் பசியால்
இறந்து விடுவேனா என்ன? நானோ அபோக்தா (எதையும் அனுபவிக்காதவன்)
ஆவேன். குழந்தைகளாகிய உங்களுக்கு உலக அரசாட்சியைக் கொடுத்து
விட்டு நான் ஓய்வெடுக்கிறேன். பிறகு என்னுடைய பாகம் முடிந்து
போய் விடும். பிறகு பக்தி மார்க்கத்தில் ஆரம்பமாகிறது. இது
அனாதி நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தினமும் தந்தை வந்து
புரிய வைக்கிறார். உண்மையில் உங்களுடைய பாகம் எல்லோரையும் விட
அதிகமாக உள்ளது. எனவே வெகுமதியும் உங்களுக்குக் கிடைக்க
வேண்டும். நான் ஓய்வெடுக்கிறேன். பின் நீங்கள்
பிரம்மாண்டத்திற்கும் அதிபதி உலகிற்கும் அதிபதி, ஆகிறீர்கள்.
உங்களுடைய பெயர் உயர்ந்து விடுகிறது. இந்த நாடகத்தின்
இரகசியத்தைக் கூட நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் ஞானத்தின்
மலர் ஆவீர்கள். உலகத்தில் ஒருவர் கூட கிடையாது. இரவு பகலுக்கான
வித்தியாசம் உள்ளது. அவர்கள் இரவில் இருக்கிறார்கள். நீங்கள்
பகலுக்கு செல்கிறீர்கள். தற்காலத்தில் பாருங்கள் வன உற்சவம்
செய்து கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது பகவான் மனிதர்களின்
வனோற்சவம் செய்து கொண்டிருக்கிறார்.
தந்தை பாருங்கள் எப்படி அற்புதம்
செய்கிறார் - மனிதனை தேவதையாக, ஆண்டியை அரசனாக ஆக்கி விடுகிறார்.
இப்பொழுது எல்லையில்லாத தந்தையிடம் நீங்கள் வியாபாரப் பொருட்கள்
பெறுவதற்காக வந்துள்ளீர்கள். பாபா எங்களை ஆண்டியிலிருந்து
அரசனாக ஆக்குங்கள் என்று கூறுகிறீர்கள். நீங்கள் மிகவும் நல்ல
வாடிக்கையாளர் ஆவீர்கள். அவருக்கு துக்கத்தை நீக்கி சுகம்
அளிப்பவர் என்றும் கூறுகிறீர்கள். இது போன்ற தானம் எதுவும் ஆவதே
இல்லை. அவர் சுகம் அளிப்பவர் ஆவார். பக்தி மார்க்கத்தில் கூட
நான் உங்களுக்குக் கொடுக்கிறேன் என்று தந்தை கூறுகிறார்.
சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்) ஆகியவை நாடகத்தில் பொருந்தி
உள்ளது. நான் என்னென்ன செய்கிறேன் என்பதை தந்தை வந்து புரிய
வைக்கிறார். இனி முன்னால் போகப் போக புரிய வைத்து கொண்டே
இருப்பார். கடைசியில் முடிவாக நீங்கள் வரிசைக்கிரமமாக கர்மாதீத
நிலையை அடைவீர்கள். இவை எல்லாமே நாடகத்தில் பொருந்தி உள்ளது.
பிறகும் புருஷார்த்தம் (முயற்சி) செய்விக்கப்டுகிறது. தந்தையை
நினைவு செய்யுங்கள். உண்மையில் இது மகாபாரத போர் ஆகும். எல்லாமே
முடிந்து போய் விடும். மற்றது பாரதவாசிகள் மட்டும் இருப்பார்கள்.
பின் நீங்கள் உலகத்தின் மீது ஆட்சி புரிகிறீர்கள். இப்பொழுது
தந்தை உங்களுக்குக் கற்பிக்க வந்துள்ளார். அவரே ஞானக் கடல்
ஆவார். இதுவும் நாடகம் ஆகும். இதில் குழம்ப வேண்டிய விஷயமே
கிடையாது. மாயை புயலைக் கொண்டு வரும். இதற்கு பயப்படாதீர்கள்
என்று தந்தை புரிய வைக்கிறார். மிகவும் அசுத்தமான மோசமான
எண்ணங்கள் வரும். அதுவும் பாபாவிடம் வந்த பிறகு தான் வரும்.
பாபாவிடம் வராதவரை (பாபாவின் மடி) மாயை அவ்வளவு சண்டை
இடுவதில்லை. தத்து எடுத்த பின்னால் தான் புயல்கள் வருகின்றன.
எனவே தந்தை கூறுகிறார் - தத்து எடுப்பது கூட ஜாக்கிரதையாக
எடுக்க வேண்டும். பலவீனமாக இருந்தார்கள் என்றால் பின் பிரஜையில்
வந்து விடுவார்கள். இராஜ்ய பதவியை அடைவதோ நல்லது. இல்லை என்றால்
தாச தாசிகள் ஆக வேண்டி வரும். இது சூரிய வம்ச, சந்திர வம்ச
இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய்
தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ரூப்-பஸந்த் (ஞான யோகம் உடையவராக) ஆகி அழியாத ஞான
இரத்தினங்களின் தானம் செய்து மகாதானி ஆக வேண்டும். என்ன படிப்பு
படிக்கிறீர்களோ அதை மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும்.
2. எந்த விஷயத்திலும் குழம்புவதோ பயப்படுவதோ கூடாது. தன்னை
கவனித்துக் (காத்து) கொள்ள வேண்டும். நான் எப்பேர்ப்பட்ட மலர்
ஆவேன் என்னிடம் எந்த ஒரு துர்நாற்றமும் இல்லையே? என்று தன்னைத்
தானே கேட்க வேண்டும்.
வரதானம்:
நம்பிக்கையின்மை என்ற சிதையில்
அமர்ந்திருக்கும் ஆத்மாக்களுக்கு புதிய வாழ்க்கையின் தானம்
அளிக்கக் கூடிய திரிமூர்த்தி பிராப்திகளில் நிறைந்தவர்
ஆவீர்களாக.
சங்கமயுகத்தில் தந்தை மூலமாக
அனைத்து குழந்தைகளுக்கும் (எவர் ஹெல்தி, வெல்தி, ஹேப்பி)
என்றும் ஆரோக்கியமாகவும், செல்வந்தராகவும், மகிழ்ச்சியாகவும்
இருப்பதற்கான திரிமூர்த்தி வரதானம் பிராப்தி ஆகிறது. எந்த
குழந்தைகள் இந்த மூன்று பிராப்திகளிலும் எப்பொழுதும் நிறைந்து
இருக்கிறார்களோ, அவர்களுடைய மகிழ்ச்சி நிறைந்த மலர்ந்த
முகத்தைப் பார்க்கும் பொழுது மனிதன் வாழ்க்கையில் வாழ்வதற்கான
ஊக்கம் உற்சாகம் வந்து விடுகிறது. ஏனெனில் இப்பொழுது மனிதர்கள்
உயிருடன் இருந்தால் கூட நம்பிக்கை யின்மை என்ற சிதையில்
அமர்ந்து உள்ளார்கள். இப்பொழுது அப்பேர்ப்பட்ட ஆத்மாக்களை
மறுவாழ்வு உடையவர்களாக ஆக்குங்கள். புதிய வாழ்க்கையின் தானம்
கொடுங்கள். இந்த மூன்று பிராப்திகளுமே நமது பிறப்புரிமை ஆகும்
என்பது எப்பொழுதும் நினைவில் இருக்கட்டும். மூன்று தாரணைகள்
மீதும் (டபிள் அன்டர்லைன்) இரட்டைக் கோடிட்டு கவனம் கொடுங்கள்.
ஸ்லோகன்:
விலகி இருந்தும், அதிகாரி
ஆகியும் கர்மத்தில் வருவதே (பந்தன் முக்த்) பந்தனத்திலிருந்து
விடுபட்ட நிலை ஆகும்.
ஓம்சாந்தி