21.06.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

21.06.2020    காலை முரளி      ஓம் சாந்தி   அவ்யக்த பாப்தாதா,

ரிவைஸ் 16.02.1986 மதுபன்

________________________________________________________________________________________________

 

பொன்விழாவுக்கான பொன்னான எண்ணங்கள்

 

இன்று பாக்கியத்தை வழங்கும் வள்ளல் தந்தை தம்முடைய நாலாபுறமும் உள்ள பத்மாபதம் பாக்கியவான் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். முழுக் கல்பத்திலும் இத்தகைய ஒரு தந்தை இருக்க முடியாது - அவருடைய அத்தனைக் குழந்தைகளும் பாக்கியவான்! நம்பர்வார் பாக்கியவான்கள் இருந்தாலும் உலகத்தின் இன்றைய உயர்ந்த பாக்கியத்திற்கு முன்னால் கடைசி நம்பர் பாக்கியவான் குழந்தை கூட மிகவும் சிரேஷ்டமானவர். எனவே எல்லையற்ற பாப்தாதாவுக்கு அனைத்துக் குழந்தைகளின் பாக்கியத்தைப் பற்றிய பெருமிதம் உள்ளது. பாப்தாதாவும் கூட சதா ஆஹா! என் பாக்கியவான் குழந்தைகளே, ஆஹா! ஒரே ஈடுபாட்டில் மூழ்கியிருக்கக் கூடிய குழந்தைகளே! என்ற பாடலைப் பாடிக் கொண்டே இருக்கிறார். பாப்தாதா இன்று விசேஷமாக அனைத்துக் குழந்தைகளின் அன்பு மற்றும் துணிச்சல், இரண்டு விசேஷங்களுக்காகவும் வாழ்த்துச் சொல்வதற்காக வந்துள்ளார்.

 

ஒவ்வொருவரும் தகுதிக்கேற்றவாறு அன்பிற்கான பிரதிபலனை சேவையில் காண்பித்தீர்கள். ஒரே ஈடுபாட்டில் ஒரு தந்தையைப் பிரத்தியட்சம் செய்வதற்கான தைரியத்தைப் பிரத்தியட்ச ரூபத்தில் காட்டினீர்கள். அவரவர் காரியத்தை ஊக்கம்-உற்சாகத்துடன் நிறைவு செய்தீர்கள். இந்தக் காரியத்தின் குஷியினுடைய வாழ்த்துக்களை பாப்தாதா கொடுத்துக் கொண்டிருக்கிறார். உள்நாடு-வெளிநாடுகளில் இருந்து முன்னால் வந்துள்ள மற்றும் தூரத்தில் இருந்தாலும் தங்களின் மனதின் சிரேஷ்ட சங்கல்பங்கள் மூலம் மற்றும் சேவையின் மூலம் சகயோகி ஆகியுள்ளனர் என்பதால் அனைத்துக் குழந்தைகளுக்கும் பாப்தாதா சதா வெற்றியாளர் ஆகுக!, சதா ஒவ்வொரு காரியத்திலும் சம்பன்னமாகுக! சதா பிரத்தியட்ச பிரமாணம்! ஆகுக என்ற வரதானங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அனைவரின் சுயமாற்றத்தின், சேவையில் மேலும் முன்னேறுவதற்கான, சுப ஊக்கம்- உற்சாகத்திற்கான உறுதிமொழிகளை பாப்தாதா கேட்டார். கேட்டீர்கள் இல்லையா பாப்தாதாவிடம் உங்களுடைய சாகார உலகை விடவும் சக்திசாலி டி.வி. உள்ளது. நீங்கள் வெறுமனே சரீரத்தின் செயலை (நடிப்பை)த் தான் பார்க்க முடியும். ஒவ்வொருவரும் என்ன பார்ட் நடித்தார்களோ, அவை அனைத்தும் சங்கல்பங்களுடன் கூடவே, மனதின் நிலைகள் மற்றும் உடலின் நிலைகள் இரண்டையுமே பார்த்தார், கேட்டார். என்ன பார்த்தார்? இன்றோ வாழ்த்துக்களை வழங்குவதற்காக வந்துள்ளோம். அதனால் மற்ற விஷயங்களை இன்று சொல்ல மாட்டோம். பாப்தாதா மற்றும் சேவையில் துணையாக இருக்கும் குழந்தைகள் அனைவரும் மிகவும் குஷியின் கைதட்டலைச் செய்தார்கள். கைகளின் தட்டல் இல்லை, குஷியின் கைதட்டல் செய்தார்கள் - குழு முழுவதிலும் சேவையின் மூலம் இப்போதே பாபாவைப் பிரத்தியட்சம் (வெளிப்படுத்த) செய்துவிட வேண்டும், இப்போதே உலகத்தில் சப்தம் பரவிவிட வேண்டும் என்பதற்காக. இந்த ஓரு ஊக்கம்-உற்சாகத்தின் சங்கல்பம் அனைவரிடமும் ஒன்றாக இருந்தது. சொற்பொழிவு செய்பவராக இருந்தாலும் சரி, கேட்பவராக இருந்தாலும் சரி, ஏதாவது ஸ்தூல காரியம் செய்பவராக இருந்தாலும் சரி, அனைவரிடமும் இந்த சங்கல்பம் குஷியின் ரூபத்தில் நன்றாக இருந்தது. அதனால் நாலாபுறமும் குஷியின் ஜொலிப்பு, பிரத்தியட்சம் செய்வதற்கான ஊக்கம், சூழ்நிலையைக் குஷியின் அலைகளில் கொண்டு வருவதாக இருந்தது. பெரும்பாலானவர்கள் குஷி மற்றும் சுயநலமற்ற அன்பு என்ற அனுபவத்தின் பிரசாதத்தை எடுத்துச் சென்றனர். எனவே பாப்தாதாவும் கூட குழந்தைகளின் குஷியில் மகிழ்ந்திருந்தனர். புரிந்ததா?

 

பொன்விழாவும் கொண்டாடி விட்டீர்கள் இல்லையா? இப்போது அடுத்து என்ன கொண்டாடுவீர்கள்? வைரவிழாவை இங்கேயே கொண்டாடுவீர்களா? அல்லது உங்களது இராஜ்யத்தில் கொண்டாடுவீர்களா? பொன்விழாவை எதற்காகக் கொண்டாடினீர்கள்? பொன்னான உலகைக் கொண்டு வருவதற்காகக் கொண்டாடினீர்கள் இல்லையா? இந்தப் பொன்விழாவின் மூலம் என்ன சிரேஷ்டமான பொன்னான சங்கல்பம் செய்தீர்கள்? மற்றவர்களுக்கோ பொன்னான எண்ணங்களை நிறைய சொன்னீர்கள். மிக நல்ல எண்ணங்கள் சொன்னீர்கள். தனக்காக முழு வருடமும் ஒவ்வொரு சங்கல்பமும் ஒவ்வொரு கணமும் பொன்மயமாக இருக்கும் வகையில் என்ன பொன்னான சங்கல்பம் செய்தீர்கள்? மக்களோ வெறுமனே பொன்னான காலைப் பொழுது அல்லது பொன்னான இரவு எனச் சொல்கின்றனர் அல்லது பொன்னான மாலைப் பொழுது எனச் சொல்கின்றனர். ஆனால் அனைவரைவிடவும் உயர்ந்த ஆத்மாக்களாகிய உங்களுக்கோ ஒவ்வொரு விநாடியும் பொன்னானதாக இருக்க வேண்டும். பொன்னான விநாடியாக இருக்க வேண்டும். வெறுமனே பொன்னான காலை அல்லது பொன்னான இரவு என்பதில்லை. ஒவ்வொரு சமயமும் உங்களின் இரண்டு கண்களிலும் பொன்னான உலகம் மற்றும் பொன்னொளியின் இனிய வீடு இருக்க வேண்டும். ஒன்று பொன்னிற ஒளி, மற்றது பொன்னுலகம். இந்த மாதிரி அனுபவம் ஆக வேண்டும். நினைவுள்ளது இல்லையா! ஆரம்பத்தில் ஒரு சித்திரம் உருவாக்கப் பட்டது ஒரு கண்ணில் முக்தி, இன்னொரு கண்ணில் ஜீவன் முக்தி. இந்த அனுபவம் செய்விக்க வேண்டும். இது தான் பொன்விழாவின் பொன்னான சங்கல்பம். அத்தகைய சங்கல்பத்தை அனுபவம் செய்தீர்களா அல்லது காட்சியை மட்டும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டே இருந்தீர்களா? பொன்விழா இந்த சிரேஷ்ட காரியத்திற் கானது. காரியத்தின் நிமித்தமாக இருக்கும் நீங்கள் அனைவரும் கூட காரியத்திற்குத் துணையாக இருக்கிறீர்கள். விஷ்வ வித்யாலயத்தின் பொன்விழா. ஒரு நாள் மாணவராக இருந்தாலும் சரி. அவருக்கும் கூட பொன்விழா. மேலும் உருவாக்கப்பட்ட பொன்விழாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். உருவாக்குவதற்கான முயற்சியை அவர்கள் செய்தார்கள். மேலும் கொண்டாடும் நேரத்தில் நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். ஆக, அனைவருக்கும் பாப்தாதாவும் பொன்விழா வாழ்த்துகளைக் கூறுகிறார். அனைவரும் இது போல் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? வெறுமனே பார்ப்பவர்களாகவோ இல்லை தானே? ஆகிறவர்களா? அல்லது பார்ப்பவர்களா? உலகத்தில் அனைத்தையுமே பார்த்து விட்டீர்கள். ஆனால் இங்கே பார்ப்பது என்றால் ஆவது. ஆக, என்ன சங்கல்பம் செய்தீர்கள்? ஒவ்வொரு விநாடியும் பொன்னாக இருக்க வேண்டும். ஒவ்வொரு சங்கல்பமும் பொன்னாக இருக்க வேண்டும். சதா ஒவ்வொரு ஆத்மாவுக்காகவும் அன்பின் குஷியின் பொன்மலர்களைப் பொழியச் செய்து கொண்டே இருங்கள். விரோதியாக இருந்தாலும் சரி, அன்பின் மழை விரோதியைக் கூட நண்பனாக்கி விடும். யாரேனும் உங்களுக்கு மதிப்பளித்தாலும் சரி, அளிக்கா விட்டாலும் சரி, ஆனால் நீங்கள் எப்போதும் சுவமானில் இருந்து மற்றவர்களுக்கு அன்பின் திருஷ்டியால், அன்பின் விருத்தியால் ஆத்மிக மதிப்பளித்துக் கொண்டே செல்லுங்கள். அவர் உங்களுக்கு மதிப்பளித்தாலும் சரி, அளிக்கவில்லை என்றாலும் சரி, நீங்கள் அவரை இனிமையான சகோதரர், இனிமையான சகோதரி என மதிப்பளித்துக் கொண்டே செல்லுங்கள். அவர் மதிப்பளிக்காமல் இருக்கலாம், நீங்களோ மதிப்பளிக்க முடியும் இல்லையா? அவர் கல்லை வீசினாலும் நீங்கள் இரத்தினத்தைக் கொடுங்கள். நீங்களும் கல்லை வீசாதீர்கள். ஏனென்றால் நீங்கள் இரத்தின வியாபாரி தந்தையின் குழந்தைகள். இரத்தினங்களின் சுரங்கத்திற்கு மாலிக் (எஜமானர்) நீங்கள். பல கோடிக்கு அதிபதி நீங்கள். பிச்சைக்காரர் இல்லை அவர் கொடுத்தால் நான் கொடுப்பேன் என்று யோசிப்பதற்கு. இது பிச்சைக்கார சம்ஸ்காரமாகும். வள்ளலின் குழந்தைகள் ஒரு போதும் பெற்றுக் கொள்வதற்காக அல்லது யாசிப்பதற்காகக் கையேந்துவதில்லை. புத்தியாலும் கூட இந்த சங்கல்பம் செய்வது அதாவது இவர் செய்தால் நான் செய்வேன், இவர் அன்பு செலுத்தினால் நானும் செலுத்துவேன். இவர் எனக்கு மதிப்பளித்தால் நானும் இவருக்கு மதிப்பளிப்பேன். இதுவும் கூட கையேந்துவதாகும். இதுவும் ராயல் பிச்சைக்காரத்தனம் ஆகும். இதில் பலனை எதிர்பார்க்காத யோகி ஆகுங்கள். அப்போது தான் பொன்மய உலகின் குஷியின் அலைகள் உலகம் முழுவதும் சென்றடையும். எப்படி விஞ்ஞானத்தின் சக்தி முழு உலகையும் முடித்துவிடுவதற்கான மிகவும் சக்திசாலி சாதனங்களை உருவாக்கியுள்ளது கொஞ்ச நேரத்திலேயே முடித்து விடுவதற்காக. விஞ்ஞானத்தின் சக்தி அது போல் முன்பை விட சிறந்த பொருட்களை உருவாக்கிக் கொண்டுள்ளது. ஞான சக்தி உள்ள நீங்கள் அந்த மாதிரி சக்திசாலி உள்ளுணர்வு மற்றும் வாயுமண்டலத்தை உருவாக்க வேண்டும் கொஞ்ச நேரத்தில் நாலாபுறமும் குஷியின் அலைகள், சிருஷ்டியின் சிரேஷ்ட வருங்காலத்தின் அலைகள், மிகவும் விரைவிலும் விரைவாகப் பரவி விட வேண்டும். பாதி உலகம் இப்போது பாதி இறந்ததாக ஆகிவிட்டுள்ளது. பயத்தின் சாவினுடைய படுக்கையில் தூங்கி விட்டுள்ளது. அதற்கு குஷியின் அலைகளினுடைய பிராணவாயு கொடுங்கள். இதே பொன் விழாவின் பொன்னான சங்கல்பங்கள் சதா வெளிப்படையான ரூபத்தில் இருக்கட்டும். புரிந்ததா என்ன செய்ய வேண்டும் என்று? இப்போது இன்னும் வேகததைத் தீவிரப் படுத்த வேண்டும். இது வரை என்ன செய்திருக்கிறீர்களோ, அதை நன்றாகவே செய்திருக்கிறீர்கள். இன்னும் வரப்போகிற காலத்திலும் நன்றாகச் செய்து கொண்டே செல்லுங்கள். நல்லது.

 

இரட்டை வெளிநாட்டினர்க்கு மிகுந்த ஊக்கம் உள்ளது. இப்போதோ இரட்டை வெளிநாட்டினருக்கான வாய்ப்பாக உள்ளது. அநேகர் வந்து சேர்ந்திருக்கவும் செய்கிறீர்கள். புரிந்ததா? இப்போது அனைவருக்கும் குஷியின் டோலி கொடுங்கள். மனதை மகிழ்விக்கும் மிட்டாய் உள்ளது இல்லையா? ஆக, நன்றாக மனதை மகிழ்விக்கும் மிட்டாயைப் பகிர்ந்தளியுங்கள். நல்லது சேவாதாரிகளும் குஷியில் நடனமாடிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? நடனமாடுவதால் களைப்பு நீங்கி விடுகிறது. ஆக, சேவையின் அல்லது குஷியின் நடனத்தை அனைவருக்கும் காண்பித்தீர்களா? என்ன செய்தீர்கள்? நடனத்தைக் காட்டினீர்கள் இல்லையா? நல்லது.

 

சர்வ சிரேஷ்ட பாக்கியவான், விசேஷ ஆத்மாக்களுக்கு, ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு சங்கல்பத்தையும் பொன்மயமாக ஆக்கக் கூடிய அனைத்து கீழ்ப்படிதலான குழந்தைகளுக்கு, சதா வள்ளலின் குழந்தைகளாகி, அனைவரின் பைகளை நிரப்பக் கூடிய, அனைத்தும் நிறைந்த குழந்தைகளுக்கு, சதா விதிகளை உருவாக்குபவர் மற்றும் வரங்களை வழங்கும் வள்ளலாகி, அனைவருக்கும் முக்தி, ஜீவன் முக்தியின் பிராப்தி செய்விக்கக் கூடிய, சதா நிறைவான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் பொன்னான அன்பின் பொன்னான குஷியின் மலர்களுடன் கூடிய அன்பு நினைவு, வாழ்த்துகள் மற்றும் நமஸ்தே.

 

பார்ட்டிகளுடன் - சதா தந்தை மற்றும் ஆஸ்தி நினைவிருக்கிறதா? தந்தையின் நினைவு தானாகவே ஆஸ்தியையும் நினைவு படுத்தும். மேலும் ஆஸ்தி நினைவிருக்கிறது என்றால் தந்தையின் நினைவு தானாகவே இருக்கும். தந்தை மற்றும் ஆஸ்தி இரண்டும் சேர்ந்தே உள்ளது. ஆஸ்திக்காகத் தான் தந்தையை நினைக்கின்றனர். ஆஸ்தியின் பிராப்தி இல்லை என்றால் தந்தையையும் கூட ஏன் நினைக்க வேண்டும்? ஆக, தந்தை மற்றும் ஆஸ்தி இந்த நினைவு தான் சதா நிறைவானவர்களாக ஆக்குகிறது. கஜானாக்களால் நிரம்பிய நிலை மற்றும் துக்கம் வேதனைகளிருந்து விலகிய நிலை. இரண்டு நன்மைகளும் உள்ளன. துக்கத்திலிருந்து விலகி விடு கின்றனர் மற்றும் கஜானாக்களால் நிரம்பி விடுகின்றனர். அத்தகைய சதா காலத்திற்கான பிராப்தியை பாபாவைத் தவிர வேறு யாராலும் செய்விக்க முடியாது. இந்த நினைவு தான் சதா திருப்தியானவராக, அனைத்தும் நிறைந்தவராக ஆக்கிவிடும். எப்படி பாபா கடலாக, அனைத்தும் நிறைந்தவராக இருக்கிறார். எவ்வளவு தான் கடலை வற்றச் செய்தாலும் கடல் முடிந்து போகாது. கடல் நிரம்பியதாக உள்ளது. ஆக, நீங்கள் அனைவரும் சதா நிரம்பிய ஆத்மாக்கள் தாம் இல்லையா? காலியாகி விட்டால் எங்காவது கையேந்த நேரிடும். ஆனால் நிரம்பிய ஆத்மா சதா குஷியின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருப்பார். சுகத்தின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருப்பார். ஆக, அத்தகைய சிரேஷ்ட ஆத்மாக்களாக ஆகிவிட்டீர்கள். சதா நிறைவானவர்களாகவே இருக்கத் தான் வேண்டும். சோதித்துப் பாருங்கள் கிடைத்துள்ள கஜானாக்களை எது வரை காரியத்தில் ஈடுபடுத்தி யிருக்கிறீர்கள்?

 

சதா தைரியம் மற்றும் ஊக்கத்தின் இறக்கைகள் மூலம் பறந்து கொண்டே இருங்கள் மற்றும் மற்றவர் களையும் பறக்க வைத்துக் கொண்டே இருங்கள். தைரியம் உள்ளது, ஊக்கம்-உற்சாகம் இல்லை என்றால் கூட வெற்றி இல்லை. ஊக்கம் உள்ளது, தைரியம் இல்லை என்றாலும் வெற்றி இல்லை. இரண்டும் சேர்ந்திருந்தால் பறக்கும் கலை உள்ளது. அதனால் சதா தைரியம் மற்றும் ஊக்கத்தின் இறக்கைகளால் பறந்து கொண்டே இருங்கள். நல்லது.

 

அவ்யக்த முரளியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விலைமதிக்க முடியாத மகாவாக்கியங்கள்

 108 ரத்தினங்களின் வைஜயந்தி மாலையில் வருவதற்காக

சம்ஸ்கார நல்லிணக்கத்தின் நடனம் செய்யுங்கள்

 

1) எந்த ஒரு மாலையை உருவாக்கும் போதும் ஒரு மணி இன்னொன்றோடு சேர்ந்ததாக இருக்கும். வைஜயந்தி மாலையில் கூட 108-வது நம்பராக இருந்தாலும் சரி, அந்த மணி இன்னொரு மணியுடன் சேர்ந் திருக்கும். ஆக, அனைவருக்கும் இந்த உணர்வு வர வேண்டும், அதாவது இவர்களோ மாலைக்குச் சமமாக சுற்றியிருக்கும் மணிகள். பலவித சம்ஸ்காரங்கள் இருந்த போதும் சமீபமாகக் காணப்பட வேண்டும்.

2) ஒருவர் மற்றவரின் சம்ஸ்காரங்களை அறிந்து கொண்டு, ஒருவர் மற்றவரின் அன்பில் ஒருவர் மற்றவரோடு ஒன்று கலந்து இணக்கமாக இருப்பது என்பது மாலையின் மணிகளினுடைய சிறப்பாகும். ஆனால் எப்போது சம்ஸ்காரங்கள் மற்றும் சங்கல்பங்களை ஒருவர் மற்றவருடன் இணங்கிப் போகுமாறு செய்கிறீர்களோ, அப்போது தான் ஒருவர் மற்றவரின் சிநேகி ஆவீர்கள். இதற்காக எளிமையின் (சரளத்தன்மை) குணத்தை தாரணை செய்யுங்கள்.

3) இது வரை புகழ்ச்சியின் ஆதாரத்தில் ஸ்திதி உள்ளது. என்ன கர்மம் செய்கிறீர்களோ, அதற்கான பலன் மீது விருப்பம் உள்ளது. புகழ்ச்சி கிடைக்கவில்லை என்றால் ஸ்திதி இருப்பதில்லை. இகழ்ச்சி (நிந்தனை) இருக்குமானால் பிரபுவை மறந்து அநாதையாகி விடுகிறீர்கள். பிறகு சம்ஸ்காரங்களின் மோதல் உருவாகி விடுகிறது. இந்த இரண்டு விஷயங்கள் தாம் மாலையிலிருந்து வெளியில் கொண்டு சென்று விடுகின்றன. எனவே புகழ்ச்சி-இகழ்ச்சி இரண்டிலும் சமமான ஸ்திதியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

4) சம்ஸ்கார நல்லிணக்கத்திற்காக எங்கே மாலிக் ஆகி நடந்து கொள்ள வேண்டுமோ அங்கே குழந்தையாகி விடக் கூடாது. எங்கே குழந்தையாக வேண்டுமோ, அங்கே மாலிக் ஆகக் கூடாது. குழந்தைத் தன்மை என்றால் நிர்சங்கல்பம் (எதைப்பற்றியும் நினைக்காத நிலை). என்ன கட்டளை கிடைத்தாலும், என்ன வழிகாட்டுதல் கிடைத்தாலும் அதன்படி நடக்க வேண்டும். மாலிக் ஆகி, தனது அறிவுரையைக் கொடுங்கள். பிறகு குழந்தை ஆகி விடுங்கள். அப்போது மோதலிருந்து தப்பித்து விடுவீர்கள்.

5) சேவையில் வெற்றிக்கான ஆதாரம் பணிவு. எவ்வளவு பணிவோ அவ்வளவு வெற்றி. நிமித்தம் (கருவி) என உணர்வதன் மூலம் பணிவு வருகிறது. பணிவின் குணத்தால் அனைவரும் வணக்கம் செய்கின்றனர். யார் தானே வளைந்து கொடுக்கிறாரோ, அவருக்கு முன்னால் அனைவரும் தலைவணங்குவார்கள். எனவே சரீரத்தை நிமித்த மாத்திரம் என உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் மற்றும் சேவையில் தன்னை நிமித்தம் என உணர்ந்து நடந்து கொண்டால் பணிவு வந்து விடும். எங்கே பணிவு உள்ளதோ, அங்கே மோதல் இருக்க முடியாது. தானாகவே சம்ஸ்கார நல்லிணக்கம் ஏற்பட்டு விடும்.

6) மனதில் என்ன சங்கல்பங்கள் எழுந்தாலும் அதில் உண்மையும் தூய்மையும் இருக்க வேண்டும். உள்ளுக்குள் எந்த ஒரு விகர்மத்தின் குப்பையும் இருக்கக் கூடாது. எந்த ஒரு பாவ-சுபாவமோ பழைய சம்ஸ்காரங்களின் குப்பையோ இருக்கக் கூடாது. அந்த மாதிரி தூய்மையானவர்கள் தாம் உண்மையானவர்களாக இருப்பார்கள். மேலும் யார் உண்மையாக இருக்கிறார்களோ. அவர்கள் அனைவருக்கும் பிரியமானவர்களாக இருப்பார்கள். அனைவருக்கும் பிரியமானவராகி விடுவீர்களானால் சம்ஸ்கார நல்லிணக்கத்தின் நடனம் (ராஸ்) ஆகிவிடும். உண்மையானவர் மீது பிரபு திருப்தியாவார்.

7) சம்ஸ்கார நல்லிணக்கத்தின் ராஸ் செய்வதற்காக தனது இயல்பை எளியதாகவும் (ஈஸி) செயல்திறன் மிக்கதாகவும் (ஆக்டிவ்) ஆக்கிக் கொள்ளுங்கள். ஈஸி என்றால் தனது புருஷார்த்தத்தில், சம்ஸ்காரங்களில் பாரமான தன்மை இருக்கக் கூடாது. ஈஸியாக இருந்தால் செயல்திறனுடன் இருப்பீர்கள். ஈஸியாக இருப்பதால் அனைத்துக் காரியங்களும் ஈஸி, புருஷார்த்தமும் ஈஸி ஆகிவிடும். தான் ஈஸி ஆகவில்லை என்றால் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடும். பிறகு தன்னுடைய சம்ஸ்காரங்கள், தன்னுடைய பலவீனங்கள் கஷ்டத்தின் ரூபத்தில் தென்படும்.

8) எப்போது ஒவ்வொருவரின் சிறப்பம்சங்களைப் பார்க்கிறீர்களோ, மற்றும் தன்னை விசேஷ ஆத்மா என உணர்ந்து விசேஷங்களால் நிரம்பியவராக ஆகிறீர்களோ, அப்போது சம்ஸ்கார நல்லிணக்கத்தின் ராஸ் நடைபெறும். இது எனது சம்ஸ்காரம், இந்த எனது சம்ஸ்காரம் என்ற வார்த்தையே அகன்றுவிட வேண்டும். தனது இயல்பே மாறிவிடுகிற அளவுக்கு அது முடிந்து போக வேண்டும். எப்போது ஒவ்வொருவரின் இயல்பும் மாறி விடுகிறதோ, அப்போது உங்களின் தோற்றம் அவ்யக்தமாகும்.

9) பாப்தாதா குழந்தைகளுக்கு உலக மகாராஜன் ஆக்குவதற்கான கல்வியைக் கற்பிக்கிறார். உலக மகாராஜன் ஆகிறவர்கள் அனைவருக்கும் அன்பானவராக இருப்பார்கள். எப்படி பாபா அனைவருக்கும் அன்பானவர் என்றால் அனைவரும் அவருக்கு அன்பானவர்களாக இருக்கிறார்களோ, அது போல் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து அவருக்காக அன்பின் பூமழை பொழியும். எப்போது பூமழை இங்கே பொழிகிறதோ, அப்போது ஜட சித்திரங்கள் மீது பூமழை பொழியும். ஆகவே லட்சியம் வையுங்கள், அனைவரின் அன்பின் மலர்களுக்குப் பாத்திரமாக ஆக வேண்டும். சகயோகம் கொடுப்பதால் அன்பு கிடைக்கும்.

10) சதா இதே லட்சியம் வையுங்கள் நமது நடத்தை மூலம் யாருக்கும் துக்கம் ஏற்படக் கூடாது. எனது நடத்தை, சங்கல்பம், பேச்சு மற்றும் ஒவ்வொரு கர்மமும் சுகம் தருவதாக இருக்க வேண்டும். இதுவே பிராமண குலத்தின் வழக்கம் (நியமம்). இந்த நியமத்தைத் தனதாக்கிக் கொள்வீர்களானால் சம்ஸ்கார நல்லிணக்கத்தின் ராஸ் ஆகிவிடும்.

 

வரதானம் :

ஈஸ்வரிய ராயல்டியின் சம்ஸ்காரத்தின் மூலம் ஒவ்வொருவரின் சிறப்புகளை வர்ணனை செய்யக்கூடிய புண்ணிய ஆத்மா ஆகுக.

 

சதா தன்னை விசேஷ ஆத்மா என உணர்ந்து ஒவ்வொரு சங்கல்பம் மற்றும் கர்மத்தைச் செய்வது மற்றும் ஒவ்வொருவரிடமும் விசேஷத்தையே பார்ப்பது, வர்ணனை செய்வது, அனைவரிடமும் விசேஷத்தை உருவாக்குவதற்கான சுப நன்மையின் விருப்பம் வைப்பது - இது தான் ஈஸ்வரிய ராயல்டி ஆகும். இராயல் ஆத்மாக்கள் மற்றவர்கள் விட்டுச் சென்ற பொருட்களைத் தனக்குள் தாரணை செய்ய மாட்டார்கள். எனவே சதா கவனம் வையுங்கள் எவருடைய பலவீனம் அல்லது அவகுணத்தையும் பார்க்கிற கண் சதா மூடி இருக்கட்டும். ஒருவர்-மற்றவரின் குணத்தைப் பாடுங்கள். அன்பு, சகயோகத்தின் மலர்களின் கொடுக்கல்-வாங்கல் செய்யுங்கள் - அப்போது புண்ணிய ஆத்மா ஆகி விடுவீர்கள்.

 

சுலோகன் :

வரதானத்தின் சக்தி பரிஸ்திதி என்ற நெருப்பையும் கூட நீராக மாற்றி விடும்.

 

ஓம்சாந்தி