14.06.2020    காலை முரளி      ஓம் சாந்தி   அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ் 22.01.86 மதுபன்


  

பாப்தாதாவின் ஆசை - சம்பூரணம் மற்றும் சம்பன்னம் ஆகுங்கள்.

 

இன்று விசேஷமாக துரதேசத்தில் இருப்பவர்கள் துரதேச நிவாசி குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்திருக்கின்றார்கள். இவ்வளவு தூரத்திலிருந்து சந்திப்பதற்காக வந்திருக்கின்றார்கள். நீங்கள் இவ்வளவு தூரத்தில் இருந்து எந்த ஈடுபாட்டுடன் வந்திருக்கின்றீர்கள்? பாப்தாதா குழந்தைகளுடைய ஆர்வத்தை அறிந்திருக்கின்றார்கள். ஒருபுறம் உள்ளத்தினுடைய சந்திப்பிற்கான ஈடுபாடு உள்ளது. மறுபுறம் தந்தையுடன் சந்திப்பதற்காக பொறுமையையும் கடைபிடித்திருக்கிறீர்கள். ஆகையினால், பொறுமையின் பலனை விசேஷமான ரூபத்தில் கொடுப்பதற்காக வந்திருக்கின்றார்கள். விசேஷமாக சந்திப்பதற்காக வந்திருக்கின்றார்கள். அனைத்து இரட்டை அயல்நாட்டு குழந்தைகளுடைய அன்பான எண்ணம், உள்ளத்தில் சந்திப்பின் ஊக்கத்தை ஒவ்வொரு நேரமும் பாப்தாதா பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கின்றார்கள். தூரத்தில் இருந்தாலும் அன்பின் காரணத்தினால் அருகாமையில் இருக்கின்றீர்கள். எவ்வாறு இரவெல்லாம் கண் விழித்து குழந்தைகள் திருஷ்டி மற்றும் வைப்ரேஷன் (அதிர்வலைகள்) மூலம் அன்பு மற்றும் சக்தியை கேட்ச் (கிரஹித்தல்) செய்கின்றனர் என்பதை பாப்தாதா ஒவ்வொரு நேரமும் பார்க்கின்றார்கள். இன்று விசேஷமாக முரளி சொல்வதற்காக வரவில்லை. முரளிகள் நிறைய கேட்டுவிட்டீர்கள்.  இந்த வருடத்தில் விசேஷமாக பிரத்யட்ச சொரூபம், பாப்தாதாவினுடைய சிநேகத்தின் அத்தாட்சி சொரூபம், சம்பூரணம் மற்றும் சம்பன்ன நிலைக்கு சமீபமான சொரூபம், சிரேஷ்டமான சங்கல்பம், சிரேஷ்டமான பேச்சு, சிரேஷ்டமான கர்மம், சிரேஷ்டமான சம்பந்தம் மற்றும் தொடர்பு ஆகிய இத்தகைய சிரேஷ்டமான சொரூபத்தை இப்பொழுது பாப்தாதா பார்க்க விரும்புகின்றார்கள். என்ன கேட்டீர்களோ, அதை கேட்பது மற்றும் சொரூபம் ஆகுவது என்பதில் சமநிலையைப் பார்க்க விரும்புகின்றார்கள். நடைமுறையில் மாற்றத்தினுடைய சிரேஷ்டமான விழாவைப் பார்க்க விரும்புகின்றார்கள். இந்த வருடத்தில் வெள்ளி, பொன் விழாவைக் கொண்டாடிவிட்டீர்கள் மற்றும் கொண்டாடப் போகிறீர்கள். ஆனால், பாப்தாதா உண்மையான, கரையற்ற, விலைமதிப்பற்ற வைரங்களின் மாலையை உருவாக்க விரும்புகின்றார்கள். ஒவ்வொரு வைரமும் அத்தகைய விலைமதிப்பற்றதாக ஜொலிக்கக்கூடியதாக ஆக வேண்டும், அதன் ஒளி மற்றும் சக்தியின் ஜொலிப்பானது எல்லைக்குட்பட்டதாக அல்லாமல் எல்லைக்கப்பாற்பட்டு செல்ல வேண்டும். பாப்தாதா குழந்தைகளுடைய எல்லைக்குட்பட்ட சங்கல்பம், எல்லைக்குட்பட்ட பேச்சு, எல்லைக்குட்பட்ட சேவைகள், எல்லைக்குட்பட்ட சம்பந்தங்களை அதிக காலம் பார்த்துவிட்டார்கள். ஆனால், இப்பொழுது தந்தை எல்லைக்கப் பாற்பட்டவர் ஆதலால் எல்லையற்ற சேவையின் அவசியம் உள்ளது.  அதற்கு முன்னால் இந்த தீபங்களின் வெளிச்சம் எத்தகையதாக இருக்கும்? இப்பொழுது லைட் ஹவுஸ் மற்றும் மைட் ஹவுஸ் ஆக வேண்டும். எல்லையற்றதின் பக்கம் பார்வையை கொண்டு செல்லுங்கள். எல்லையற்ற பார்வை இருந்தாலே சிருஷ்டி மாற்றம் அடையும். சிருஷ்டியின் மாற்றம் என்ற இவ்வளவு பெரிய காரியம் குறைவான சமயத்தில் நிறைவடைய வேண்டும். எனவே, கதி மற்றும் விதி கூட எல்லைக்கப்பாற்பட்ட வேகத்துடன் இருக்க வேண்டும்.

 

உங்களுடைய விருத்தி மூலம் உள்நாடு மற்றும் அயல்நாட்டினுடைய வாயுமண்டலத்தில், எல்லையற்ற எஜமானர்கள், விஷ்வத்தின் எஜமானர்கள், எல்லையற்ற இராஜ்ய அதிகாரிகள், எல்லையற்ற உண்மையான சேவாதாரிகள், நம்முடைய தேவ ஆத்மாக்கள் வந்துவிட்டனர் என்ற இந்த ஒரு சப்தம் ஒலிக்க வேண்டும். இப்பொழுது இந்த எல்லையற்ற ஒரு சப்தம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஒலிக்க வேண்டும். அப்பொழுதே சம்பூரண நிலை மற்றும் சமாப்தி அருகாமையில் இருப்பதாக அனுபவம் ஆகும். புரிந்ததா? நல்லது.

 

நாலா புறங்களிலும் உள்ள சிரேஷ்ட பாவனை, சிரேஷ்ட விருப்பத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய, ஃபரிஷ்தாவாகி தேவதையாகும் ஆத்மாக்களுக்கு, சதா உயர்ந்த ஸ்திதியில் நிலைத்திருக்கக் கூடிய லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஆன விசேஷ ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் சூட்சும சமிக்ஞைகளை புரிந்து கொள்ளக்கூடிய விசாலபுத்தி உடைய குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

உள்நாடு மற்றும் வெளிநாட்டினுடைய அனைத்து குழந்தைகளுக்காகவும் பாப்தாதா சந்தேஷ் (செய்தி) ரூபத்தில் அன்பு நினைவு கொடுத்தார்கள்.

 

நாலாபுறங்களிலும் உள்ள சிநேகி, சகயோகி மற்றும் சக்திசாலி குழந்தைகளுடைய விதவிதமான அலைகளின் கடிதத்தைப் பார்த்து பாப்தாதா அன்புக் கடலில் மூழ்கிவிட்டார்கள். அனைவருடைய விதவிதமான அலைகளானது அவரவர் ஊக்க உற்சாகத்தின் அனுசாரம் சிரேஷ்டமானவையே! பாப்தாதா அந்த அலைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்கள்.  ஊக்கமும் மிகவும் நன்றாக உள்ளது, திட்டமும் உயர்ந்ததாக, நன்றாக உள்ளது. இப்பொழுது பிராக்டிகலின் (செய்முறையின்) மதிப்பெண்களை பாப்தாதாவிடம் இருந்து பெற வேண்டும் மற்றும் எதிர்கால கணக்கை சேமிக்க வேண்டும். தற்சமயம் பாப்தாதா ஒவ்வொரு குழந்தையினுடைய செய்முறை பாடத்தின் மதிப்பெண்களை குறித்துக்கொண்டு இருக்கின்றார்கள். மேலும், இந்த வருடமானது விசேஷமாக செய்முறை பாடம் (பிராக்டிகல் கோர்ஸ்) மற்றும் செய்முறை வேகத்திற்கான (பிராக்டிகல் ஃபோர்ஸ்) அதிகப்படியான மதிப்பெண்கள் பெறுவதற்கான வருடம் ஆகும். ஆகையினால், அவ்வப்போது என்ன சமிக்ஞைகள் கிடைக்கின்றனவோ, அந்த சமிக்ஞைகளை ஒவ்வொருவரும் அது தனக்கானது எனப் புரிந்துகொண்டு நடைமுறையில் கொண்டு வரவேண்டும், அப்பொழுதே முதல் எண்ணைப் பெற முடியும். .வெளிநாடு மற்றும் உள்நாட்டுக் குழந்தைகளுக்கு தொலைவில் இருந்தாலும் நெருக்கமான அன்பின் அனுபவம் சதா ஏற்படுகின்றது மற்றும் ஏதாவது செய்து காண்பிக்க வேண்டும், இதைச் செய்ய வேண்டும், அவ்வாறு செய்யவேண்டும் என்ற ஊக்கம் சதா உள்ளது. எனவே, இப்பொழுது எல்லையற்ற சேவையின் நிரூபணம் ஆகி ஊக்கத்தை நடைமுறையில் கொண்டு வருவதற்கான விசேஷமான வாய்ப்பு உள்ளது. ஆகையினால், பறக்கும் கலையின் ரேஸ் (பந்தயம்) செய்யுங்கள். நினைவில், சேவையில், தெய்வீக குண மூர்த்தி ஆகுவதில் மற்றும் கூடவே ஞான சொரூபம் ஆகி ஞானத்தின் உரையாடல் செய்வதில், நான்கு பாடங்களிலும் பறக்கும் கலையின் பந்தயத்தில் விசேஷமான நம்பர் பெறுவதற்கு இந்த வருடம் வாய்ப்பாக உள்ளது. இந்த விசேஷ வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய அனுபவம் செய்திடுங்கள். புதுமையை விரும்புகின்றீர்கள் அல்லவா? எனவே, இந்தப் புதுமையைச் செய்து நீங்கள் நம்பர் பெற முடியும். இப்பொழுது இந்த வருடத்தில் அதிகப்படியான (எக்ஸ்ட்ரா) ரேஸிற்கு அதிகப்படியான மதிப்பெண்கள் கிடைக்கும். சமயமும் அதிகப்படியாகக் கிடைத்துள்ளது. எப்பொழுதுமே முயற்சிக்கேற்ப பலன் உண்டு. ஆனால், இந்த வருடம் விசேஷமாக அதிகப்படியான மதிப்பெண்கள் பெறுவதற்கான வருடம் ஆகும். ஆகையினால், நல்ல முறையில் பறக்கும் கலையின் அனுபவியாகி முன்னேறிச் சென்று பிறரையும் முன்னேற்றுங்கள். தந்தை அனைத்து குழந்தைகளின் கழுத்தில் கைகளின் மாலை அணிவிக்கின்றார்கள். உள்ளத்தைப் பெரிதாக்கினால் சாகாரத்தில் வந்தடைவது கூட சகஜமாகிவிடும். எங்கு உள்ளம் உள்ளதோ, அங்கு செல்வம் வந்துவிடுகிறது. உள்ளமானது செல்வத்தை எங்கெங்கிருந்தோ கொண்டு வருகிறது. ஆகையினால், உள்ளம் இருக்கிறது. ஆனால், செல்வம் இல்லை என்ற இந்தக் கூற்றை பாப்தாதா ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உள்ளம் உடையவர்களுக்கு ஏதாவதொரு விதத்தில் டச்சிங் ஏற்படுகின்றது மற்றும் வந்தடைந்துவிடுகின்றனர். அதிக முயற்சி என்ற பணம் இருக்கவேண்டும். அதிக முயற்சி என்ற செல்வம் பல கோடி மடங்கு இலாபம் கொடுக்கிறது. நினைவு செய்து செய்து சம்பாதிக்கின்றார்கள் அல்லவா? எனவே, நினைவின் கணக்கில் சேமிப்பாகிவிடுகிறது மற்றும் வந்து சேர்ந்துவிடுகின்றனர். நல்லது. அனைவரும் அவரவர் பெயர் மற்றும் விசேஷத்தன்மையுடன் கரங்களில் மாலை சகிதமாக அன்பு நினைவுகள் சுவீகாரம் செய்து கொள்ளுங்கள்.

 

பொன்விழாவிற்கு வந்திருக்கும் டீச்சர் சகோதரிகளுக்காக அவ்யக்த மகாவாக்கியம்

அனைவரும் வெள்ளிவிழா கொண்டாடிவிட்டீர்களா? ஆகவேண்டியதோ தங்கம், வெள்ளி ஆகக்கூடாது அல்லவா! தங்கம் போல் ஆகுவதற்காக இந்த வருடம் என்ன திட்டம் தீட்டியுள்ளீர்கள்? சேவைக்கான திட்டம் தீட்டுகின்றீர்கள், ஆனால், சுய மாற்றம் மற்றும் எல்லையற்ற மாற்றம் - இதற்காக என்ன திட்டம் தீட்டியிருக்கின்றீர்கள்? இதைச் செய்யலாம் என்று அவரவர் இடத்திற்கான திட்டம் தீட்டுகின்றீர்கள். ஆனால், நீங்கள் ஆதி நிமித்தமானவர்கள் ஆவீர்கள், ஆதலால், எல்லையற்ற திட்டம் உடையவர்கள் ஆவீர்கள். நாம் முழு விஷ்வத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்பது புத்தியில் தோன்றுகிறது. இது தோன்றுகிறதா? அல்லது இது யாருடைய காரியமோ, அவர்களே அறிவார்கள் என்று நினைக்கின்றீர்களா? எப்பொழுதாவது எல்லையற்ற சிந்தனை வருகிறதா அல்லது தங்களுடைய இடங்களின் சிந்தனை மட்டும் உள்ளதா? உங்களது பெயரோ விஷ்வ கல்யாணகாரி என்பதாகும், இன்ன இடத்தின் கல்யாணகாரி என்று கூறுவதில்லை. ஆனால், எல்லையற்ற சேவைக்கான சங்கல்பம் என்ன வருகின்றது? எல்லையற்ற எஜமானர் ஆகவேண்டும் அல்லவா! மாநிலத்தின் எஜமானர் ஆகக்கூடாது. சேவாதாரிகளான நிமித்த ஆத்மாக்களிடம் எப்பொழுது இந்த அலை உருவாகிறதோ, அப்பொழுது அந்த அலை பிறருக்குள்ளும் உருவாகும். ஒருவேளை, உங்களுக்குள் இந்த அலை உருவாகவில்லை என்றால் பிறருக்குள்ளும் உருவாகாது. எனவே, சதா எல்லையற்ற அதிகாரி எனப் புரிந்து எல்லையற்ற திட்டத்தை உருவாக்குங்கள். முதல் முக்கியமான விசயம் - எந்த விதமான எல்லைகுட்பட்ட பந்தனத்தில் மாட்டியிருக்கவில்லை தானே! பந்தனத்திலிருந்து விடுபட்டவர்களே எல்லையற்ற சேவையில் வெற்றி அடைவார்கள். இங்கேயே இது பிரத்யட்சம் ஆகிக் கொண்டு இருக்கிறது மற்றும் ஆகிக் கொண்டே இருக்கும். எனவே, இந்த வருடத்தில் என்ன விசேஷத் தன்மையைக் காண்பிக்கப் போகின்றீர்கள்? திட சங்கல்பமோ ஒவ்வொரு வருடமும் செய்கின்றீர்கள். எப்பொழுது அத்தகையதொரு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்பொழுது கூட திட சங்கல்பம் செய்கின்றீர்கள், பிறரை செய்யவும் வைக்கின்றீர்கள். எனவே, திட சங்கல்பம் செய்வது கூட சாதாரணம் ஆகிவிட்டது. சொல்லும் பொழுது திடசங்கல்பம் என்று சொல்கின்றீர்கள்,. ஆனால், செய்வதோ வெறும் சங்கல்பம் தான். ஒருவேளை, திடமானதாக இருக்கிறது என்றால் மறுமுறை சங்கல்பம் செய்யவேண்டியது இருக்காது. திட சங்கல்பம் என்ற இந்த வார்த்தை சாதாரணமானதாக ஆகிவிட்டது. இப்பொழுது எந்தக் காரியம் செய்யும் பொழுதும், சரி, நாங்கள் திடசங்கல்பம் செய்கின்றோம் என்று தான் கூறுகின்றீர்கள், ஆனால், அத்தகையதொரு புதிய சாதனத்தை உருவாக்குங்கள், அதன் மூலம் சிந்தித்தல் மற்றும் செயல் ஆகிய இரண்டும் சமமாக வேண்டும். திட்டம் (பிளான்) மற்றும் செய்முறை (பிராக்டிகல்) ஆகிய இரண்டும் இணைந்து இருக்கவேண்டும். திட்டங்களோ அதிகமாக உள்ளன,. ஆனால், நடைமுறையில் பிரச்சனைகளும் வருகின்றன,. அதிக முயற்சி செய்யவேண்டியதாக உள்ளது, எதிர்கொள்ள வேண்டியதாகவும் உள்ளது, இது இவ்வாறு தான் இருக்கிறது மற்றும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், எப்பொழுது இலட்சியம் உள்ளதோ, அப்பொழுது நடைமுறையில் சதா முன்னேறிக்கொண்டே இருப்பீர்கள். ஏதாவது புதுமை தென்படவேண்டும், இதற்கு இப்பொழுது திட்டம் போடுங்கள். இல்லையெனில், ஒவ்வொரு வருடமும் ஒன்று சேர்கின்றீர்கள், பிறகு, எப்படி இருந்ததோ அப்படியே உள்ளது என்று கூறுகின்றீர்கள். ஒருவரை ஒருவர் அப்படியே பார்க்கின்றீர்கள். மனதிற்கு பிடித்தமானதாக இல்லை. எவ்வளவு விரும்புகிறீர்களோ, அவ்வளவு ஏற்படுவதில்லை. அது எவ்வாறு ஏற்படும்? இதற்காகவே கூறப்படுகிறது - யார் முதலில் செய்பவர்களோ, அவர்கள் அர்ஜூனன் ஆவார்க.ள். ஒருவர் நிமித்தமாகிவிட்டால், பிறருக்குள் கூட ஊக்கம், உற்சாகம் வந்துவிடுகின்றது. எனவே, இத்தனை பேர் ஒன்று கூடியிருக்கின்றீர்கள், அத்தகையதொரு செய்முறைத் திட்டம் போடுங்கள். பாடத்திற்கான (தியரி) தேர்வுகளும் உள்ளன, செய்முயைத் தேர்வுகளும் (பிராக்டிக்கல்) உள்ளன. யார் ஆதியிலிருந்து நிமித்தமாகி இருக்கின்றார்களோ, அவர்களுடைய பாக்கியம் சிரேஷ்டமானதாகும். இப்பொழுது புதுமை என்ன செய்யப்போகின்றீர்கள்.?

 

இதற்காக விசேஷ கவனம் கொடுக்கவேண்டிய விசயம் என்னவென்றால், ஒவ்வொரு கர்மம் செய்வதற்கு முன்பும், நான் என்னை சம்பன்னமாக்கி சாம்பிள் (மாதிரி) ஆக்கவேண்டும் என்ற இலட்சியம் வைத்திடுங்கள். நடப்பது என்ன? குழுவாக இருப்பதன் இலாபமும் உள்ளது, நஷ்டமும் உள்ளது. குழுவில் ஒருவரை ஒருவர் பார்த்து சேம்பேறித்தனமும் வருகின்றது மற்றும் குழுவில் ஒருவரை ஒருவர் பார்த்து ஊக்க உற்சாகமும் வருகிறது, இவை இரண்டும் நடக்கிறது. எனவே, குழுவை, சோம்பேறித்தனத்துடன் கூடிய பார்வையில் பார்க்கக்கூடாது. இப்பொழுது இது ஒரு வழக்கமாகிவிட்டது - இவர்களும் செய்கின்றார்கள், அவர்களும் செய்கின்றார்கள், நானும் செய்தால் என்ன? இவ்வாறு இருக்கத்தான் செய்கின்றது. இது குழுவில் சேம்பேறித்தனத்தின் நஷ்டம் ஆகிவிடுகிறது. குழுவில் சிரேஷ்டம் ஆகுவதற்கான சகயோகம் பெறுவது என்பது வேறு. ஒருவேளை, நான் செய்யவேண்டும், நான் செய்து பிறரை செய்யவைக்க வேண்டும் என்ற இலட்சியம் இருந்தது என்றால், பிறகு, தான் செய்வதற்கும் மற்றும் பிறரை செய்ய வைப்பதற்கும் ஊக்கம் உற்சாகம் இருக்கும். மேலும், அடிக்கடி இந்த இலட்சியத்தை எமர்ஜ் (வெளிப்படுத்துதல்) செய்யவேண்டும். ஒருவேளை, இலட்சியம் மட்டும் வைத்திருந்தால் கூட அது மெர்ஜ் (அமிழ்ந்து) ஆகிவிடுகிறது. ஆகையினால், நடைமுறையில் வருவதில்லை. எனவே, இலட்சியத்தை அவ்வப்போது எமர்ஜ் செய்யுங்கள். இலட்சியம் மற்றும் இலட்சணத்தை அடிக்கடி இணைத்துக்கொண்டே செல்லுங்கள். பிறகு, சக்திசாலி ஆகிவிடுவீர்கள். இல்லையெனில், சாதாரண நிலை ஆகிவிடுகின்றது. நான் சிம்பிள் (எளிமை) மற்றும் சாம்பில் (மாதிரி) ஆகவேண்டும் என்று இந்த வருடத்தில் இப்பொழுது ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். இந்த சேவையின் பிரவிருத்தி குடும்ப (நடைமுறை) வளர்ச்சி அடைந்து கொண்டேயிருக்கின்றது. ஆனால், இந்த பிரவிருத்தி முன்னேற்றத்தில் தடை ரூபம் ஆகக்கூடாது. ஒருவேளை, முன்னேற்றத்தில் தடைரூபம் ஆகின்றது என்றால், அதை சேவை என்று கூறமுடியாது. நல்லது. இந்தக் கூட்டம் மிகப் பெரிய கூட்டம். ஒரு சிறிய அணுகுண்டு கூட அதிசயம் செய்து காண்பிக்கிறது என்றால் இத்தனை ஆன்மிக குண்டுகள் (பாம்ஸ்) என்ன செய்ய முடியாது! மேடைக்கு வரப்போகின்றவர்கள் நீங்கள் தானே! பொன்விழா கொண்டாடுபவர்களோ முதுகெலும்பு ஆவார்கள், ஆனால், நடைமுறையில் மேடைக்கு வரப்போகின்றவர்கள் நீங்களே. இப்பொழுது ஏதாவது செய்து காட்டுங்கள். எவ்வாறு பொன்விழா கண்ட நிமித்த ஆத்மாக்களினுடைய அன்பான குழு இருக்கிறது மற்றும் அந்த அன்பான குழுவானது சேவையில் விருத்தி, சேவையில் வெற்றியைப் பிரத்யட்ச பலனாகக் காண்பித்துள்ளதோ, அவ்வாறு அத்தகைய குழுவை உருவாக்குங்கள், அது கோட்டை போல் இருக்கவேண்டும். எவ்வாறு பொன்விழா கண்ட நிமித்த தீதிகள், தாதிகள் எவரெல்லாம் உள்ளனரோ, அவர்கள் அன்பு மற்றும் குழுவினுடைய சக்தியின் பிரத்யட்ச பலனைக் காண்பித்திருக்கின்றார்கள், எனில், நீங்களும் பிரத்யட்ச பலனைக் காண்பியுங்கள். எனவே, ஒருவருக்கொருவர் அருகாமையில் வருவதற்காக சமமாக ஆக வேண்டும். சமஸ்காரம் வெவ்வேறாகவே உள்ளது .மற்றும் அவ்வாறே இருக்கும். இப்பொழுது ஜெகதம்பாவைப் பாருங்கள் மற்றும் பிரம்மாவைப் பாருங்கள். - வெவ்வேறு சமஸ்காரம் தான் இருந்தது. இப்பொழுது நிமித்தமாக தீதி, தாதிகள் எவரெல்லாம் உள்ளனரோ, அவர்களுடைய சமஸ்காரம் ஒரே மாதிரி இல்லை, ஆனால், சமஸ்காரங்களை இணக்கமாக ஆக்குவதே அன்பின் பிரமாணம் ஆகும். சமஸ்காரங்கள் இணக்கமானால் தான் குழு உருவாகும் என்று நினைக்காதீர்கள், அவ்வாறு அல்ல. சமஸ்காரங்கள் ஒத்துப்போவதாலேயே குழு உறுதியானதாக ஆகின்றது. நல்லது, இதுவும் நடந்தேறிவிடும். சேவை ஒன்று தான், ஆனால், நிமித்தம் ஆவது, நிமித்த உணர்வோடு நடப்பது - இதுவே விசேஷத்தன்மை ஆகும். இந்த எல்லையைப் போக்கவேண்டும் அல்லவா? இதற்காகவே அனைவரையும் மாற்ற வேண்டும் என்ற யோசனை செய்யப்பட்டது அல்லவா? ஒரு சென்டரில் உள்ளவர்கள் மற்ற சென்டர்களுக்குச் செல்ல வேண்டும். அனைவரும் தயாரா? கட்டளை கொடுக்கப்படும். உங்களுடையது ஹான்ஸ் அப் (உடனடியாக செய்யும் எவரெடி நிலை மற்றும் எதுவும் நமது கைகளில் இல்லை) நிலையல்லவா! மாறுவதில் இலாபமும் உள்ளது. இந்த வருடம் இந்தப் புதிய விசயத்தைச் செய்ய வேண்டும் அல்லவா! மோகத்தை வென்றவராக ஆகியே தீரவேண்டும். தியாகி, தபஸ்வியாக ஆகிவிட்ட உங்களுக்கு இது என்ன பெரிய விசயம்! தியாகமே பாக்கியமாகும். எனவே, பாக்கியத்திற்கு முன்னால் இது தியாகமா என்ன? தானே விரும்பிக் கொடுப்பவர்களுக்குப் பரிசு கிடைக்கின்றது. நீங்கள் அனைவரும் துணிச்சலானவர்கள். மாற்றம் என்றால் மாற்றம் தான். யார் வேண்டுமானாலும் செய்யமுடியும். துணிச்சல் உள்ளது என்றால் இது என்ன பெரிய விசயம். நல்லது, இந்த வருடம் இந்தப் புதுமையைச் செய்யப்போகின்றீர்கள், விருப்பம் தானே! யார் எவரெடி (எப்பொழுதும் தயார் நிலை) என்ற பாடத்தை ஆரம்பத்தி-ருந்து படித்துள்ளார்களோ, அவர்களிடம் இந்த பலம் உள்ளுக்குள் நிறைந்திருக்கும். எந்தவொரு கட்டளையையும் கடைப்பிடிப்பதற்கான பலம் தானாகவே கிடைக்கின்றது. எனவே, சதா ஆக்ஞாகாரி (கட்டளைப்படி நடப்பவர்கள்) ஆகியிருப்பதற்கான பலம் கிடைத்துள்ளது. நல்லது, சதா சிரேஷ்டமான பாக்கியம் உள்ளது மற்றும் பாக்கியத்தின் காரணமாக சகயோகம் கிடைத்துக்கொண்டேயிருக்கும். புரிந்ததா?

 

(2) சேவையானது நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரண்டையும் சிரேஷ்டமாக ஆக்குகின்றது. சேவையின் பலம் குறைந்தது அல்ல. நினைவு மற்றும் சேவை ஆகிய இரண்டின் சமநிலை வேண்டும். அப்பொழுது சேவை முன்னேற்றத்தின் அனுபவம் செய்விக்கும். நினைவில் இருந்து கொண்டு சேவை செய்வது இயல்பாக வேண்டும். பிராமண வாழ்க்கையின் இயல்பு என்ன? நினைவில் இருப்பது. பிராமணப் பிறப்பு எடுப்பது என்றால் நினைவின் பந்தனத்தில் கட்டப்படுவது என்று அர்த்தம். எவ்வாறு அந்த பிரமாண வாழ்க்கையில் ஏதாவது அடையாளம் வைத்துக்கொள்கிறார்களோ, அதேபோல் இந்த பிராமண வாழ்க்கையின் அடையாளம் நினைவு ஆகும். நினைவில் இருப்பது என்பது இயற்கையானதாக ஆகவேண்டும். ஆகையால், நினைவு தனியாக செய்தேன், சேவை தனியாக செய்தேன் என்பது கூடாது. இரண்டும் இணைந்து இருக்கவேண்டும். நினைவு தனியாக செய்வதற்கும், சேவை தனியாக செய்வதற்கும் நேரம் எங்கு உள்ளது? ஆகையினால், நினைவு மற்று,ம் சேவை ஆகிய இரண்டும் இணைந்தே இருக்கவேண்டும். இதன் மூலமே அனுபவியாகவும் ஆகின்றீர்கள், வெற்றியும் பெறுகின்றீர்கள். நல்லது,

 

வரதானம்:-

கர்மங்களின் நிலையை அறிந்து கதி, சத்கதியின் தீர்ப்பு வழங்கக் கூடிய மாஸ்டர் துக்கத்தைப் போக்கி சுகம் அளிப்பவர் ஆகுக.

 

இப்பொழுது வரை தனது வாழ்க்கைக் கதையைப் பார்ப்பது மற்றும் சொல்வதில் பிஸியாக இருக்காதீர்கள். அதற்கு பதிலாக, ஒவ்வொருடைய கர்மத்தின் நிலையை அறிந்து கதி, சத்கதி கொடுப்பதற்கான தீர்ப்பு வழங்குங்கள். மாஸ்டர் துக்கத்தைப் போக்கி சுகம் அளிப்பவர் என்ற நடிப்பை நடித்திடுங்கள். தனது படைப்பினுடைய துக்கம், அசாந்திக்கான பிரச்சனையை முடிவடையச் செய்யுங்கள், அவர்களுக்கு மகாதானம் மற்றும் வரதானம் கொடுங்கள். சுயம் தான் வசதிகளைப் பெறாதீர்கள், இப்பொழுது வள்ளல் ஆகிக் கொடுங்கள். வசதிகளின் ஆதாரத்தில் தனது முன்னேற்றம் மற்றும் சேவையில் அல்பகாலத்திற்கு வெற்றி கிடைக்கிறது, ஆனாலும், இன்று மகானாக இருப்பீர்கள், நாளை மகான் தன்மையின் தாகம் கொண்ட ஆத்மாவாக ஆகிவிடுவீர்கள்.

 

சுலோகன்:-

அனுபவம் கிடைக்காமல் இருப்பது என்பது யுத்தத்தின் நிலையாகும். யோகியாகுங்கள், போர்வீரர் ஆகாதீர்கள்.

 

ஓம்சாந்தி