07.06.2020      அவ்யக்த பாப்தாதா        ரிவைஸ்    20.01.1986    மதுபன்


 

முயற்சி மற்றும் மாற்றத்தின் பொன்னான வாய்ப்பிற்கான ஆண்டு

 

இன்று சக்திசாலி பாபா தனது சக்திசாலியான குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த சக்திசாலியான ஆத்மாக்கள் அனைத்திலும் பெரியதிலும் பெரிய சக்திசாலியான காரியமான உலகைப் புதியதாக, சிரேஷ்ட உலகமாக ஆக்குவதற்காக திடசங்கல்பம் செய்துள்ளனர். ஒவ்வொரு ஆத்மாவையும் அமைதி மற்றும் சுகமானவர் ஆக்குவதற்கான சக்திசாலியான காரியத்தை செய்வதற்கான சங்கல்பம் செய்துள்ளனர், மேலும் இதே சிரேஷ்ட சங்கல்பத்தை எடுத்து கொண்டு, உறுதியான நம்பிக்கை புத்தியுடைவராகி காரியத்தை வெளிப்படையான ரூபத்தில் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். அனைத்து சக்திசாலியான குழந்தைகளுக்கு இந்த சிரேஷ்ட காரியம் ஆகியே தீர வேண்டுமென்ற ஒரே ஒரு சிரேஷ்ட எண்ணம் தான் இருக்கிறது, இதையும் விட இந்த காரியம் ஏற்கனவே நடந்தேறியிருக்கிறது என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. கர்மம் மற்றும் பலனின், முயற்சி மற்றும் பலனின், நிமித்தம் மற்றும் பணிவின், கர்ம தத்துவத்தின் அனுசாரம் நிமித்தமாகி மட்டும் காரியம் செய்து கொண்டிருக்கின்றனர். விதி அசைக்க முடியாதது. ஆனால் சிரேஷ்டமான உங்களது பாவனையின் மூலமாக மட்டுமே, பாவனைக்கான பலன் அழிவற்றதாக பிராப்தி செய்வதற்கு நிமித்தமாகியிருக்கின்றன. உலகிலுள்ள அஞ்ஞான ஆத்மாக்கள் அமைதி ஏற்படுமா? என்ன ஆகுமோ? எப்படி ஆகுமோ? என்று யோசிக்கின்றனர். எந்த ஒரு நம்பிக்கையும் தென்படவில்லை, உண்மையிலேயே ஆகுமா! மேலும் நீங்கள் சொல்கிறீர்கள் - ஆகுமா என்பது என்ன! ஏற்கனவே ஆகியே இருக்கிறது, ஏனெனில் புதிய விஷயமில்லை, அநேக முறை ஆகியிருக்கிறது, மேலும் இப்பொழுதும் ஆகியே தீரும். நம்பிக்கை புத்தி கவலையற்றது என்ற விதியைத் தெரிந்திருக்கிறீர்கள். இவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கை ஏன்? ஏனெனில் சுயமாற்றத்தின் வெளிப்படையான சான்றின் மூலம் தெரிந்திருக்கிறீர்கள், அதாவது வெளிப்படையான சான்றின் முன்பு வேறு எந்தவொரு சான்றும் அவசியமில்லை என்று. கூடவே பரமாத்மாவின் காரியம் வெற்றியடைந்தே தீரும். இந்தக் காரியம் ஆத்மாகளுடையதோ, மகான் ஆத்மாகளுடையதோ அல்லது தர்ம ஆத்மாக்களுடையதோ அல்ல. பரமாத்மாவின் காரியம் வெற்றியடைந்தே இருக்கிறது, அப்படிப்பட்ட நம்பிக்கை புத்தியுள்ள, கவலையற்ற எதிர்காலத்தைத் தெரிந்திருக்கக் கூடிய கவலையற்ற ஆத்மாக்கள் நீங்கள். உலகத்தினர் விநாசம் ஆகுமென்று சொல்கின்றனர், அல்லது பயப்படுகின்றனர். மேலும் நீங்கள், புதிய உலகம் ஸ்தாபனை ஆகுமென்று கவலையின்றி இருக்கின்றீர்கள்.. நடக்காதது மற்றும் நடக்கிறது என்ற இந்த இரண்டிற்கும் எவ்வளவு வித்தியாசம்! உங்களுக்கு முன்னால் எப்பொழுதும் பொன்னுலகத்தின், பொன்னான சூரியன் உதயமாகியே விட்டது. மேலும் அவர்களுக்கு முன்னால் விநாசத்தின் கார்மேகங்கள்! இப்பொழுது நீங்கள் அனைவரும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதன் காரணத்தால், குஷி என்ற சிலம்பை, ஒலித்து நடனமாடிக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது இன்று பழைய உலகம், நாளை புதிய உலகம் என்று. இன்று மற்றும் நாளை இவ்வளவு நெருக்கத்தில் சென்றுவிட்டீர்கள்.

 

இப்பொழுது இந்த வருடம் சம்பூர்ணத்தன்மை மற்றும் மகான் தன்மையின் அருகாமையை அனுபவம் செய்ய வேண்டும். சம்பூர்ணத்தன்மையானது ஃபரிஸ்தாக்கள் உங்கள் அனைவரையும் வெற்றி மாலையை வைத்துக் கொண்டு வரவேற்கிறது. வெற்றி மாலையின் அதிகாரியாகவும் ஆக வேண்டுமல்லவா! சம்பூர்ணமான தந்தை மற்றும் சம்பூர்ண நிலை இரண்டுமே குழந்தைகளாகிய உங்களை வாருங்கள், சிரேஷ்ட ஆத்மாக்களே! வாருங்கள், சமமான குழந்தைகளே வாருங்கள், சக்திசாலி குழந்தைகளே வாருங்கள், சமமாகி தனது இனிய வீட்டில் ஓய்வு எடுப்பவர் ஆகுங்கள்! என்று அழைத்துக் கொண்டிருக்கின்றனர். விதியை உருவாக்கக் கூடியவராக, வரத்தை வழங்கும் வள்ளலாக இருக்கிறாரோ, அவ்வாறே நீங்களும் இந்த ஆண்டு விசேஷமாக பிராமண ஆத்மாக்களாகவும் மற்றும் அனைத்து ஆத்மாக்களாகவும் உருவாக்கக் கூடியவர் ஆகுங்கள், வரமளிப்பவர் ஆகுங்கள். நாளை தேவதை ஆகக்கூடியவர்கள், எனவே இப்பொழுது கடைசி ஃபரிஸ்தா சொரூபம் ஆகுங்கள். ஃபரிஸ்தா என்ன செய்கிறது? வரமளிப்பவராகி, வரதானத்தைக் கொடுக்கிறது. தேவதை எப்பொழுதும் கொடுக்கிறது, பெறுவதில்லை. பெறக்கூடியவர் என்று சொல்லவதில்லை, எனவே வரமளிப்பவர் மற்றும் விதியை உருவாக்குபவர், ஃபரிஸ்தாவிலிருந்து தேவதை ....  என்ற இந்த மகா மந்திரத்தை இப்பொழுது நாம் விசேஷ நினைவு சொரூபமாக்குங்கள். மன்மனாபவ என்றோ ஆகி விட்டீர்கள், இது முதல் மந்திரமாக இருந்தது. இப்பொழுது இந்த சக்திசாலியான மந்திரத்தை அனுபவத்தில் கொண்டுவாருங்கள். இது ஆகவேண்டும், இது கிடைக்க வேண்டும் என்ற இரண்டு விசயங்கள் தான் பெறுபவர் ஆக்குகிறது. இந்த பெறக்கூடியத் தன்மையின் சம்ஸ்காரம் தேவதை ஆகுவதில் நேரத்தை அதிகப்படுத்துகிறது. எனவே இந்த சம்ஸ்காரங்களை முடித்துவிடுங்கள். முதல் பிறவியில் பிரம்மாவின் வீட்டிலிருந்து தேவதையாகி புதிய வாழ்க்கை, புதிய யுகத்தின் முதல் நம்பரில் வாருங்கள். சகாப்தம் கூட 1-1-1 என்று இருக்க வேண்டும். இயற்கை கூட சதோபிரதான நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும். இராஜ்யம் கூட நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும். உங்களது கோல்டன் ஸ்டேஜ் கூடநம்பர் ஒன்னாக இருக்க வேண்டும். ஒரு நாளின் வித்தியாசம் கூட 1-1-1 லிருந்து மாறிவிடும். இப்பொழுதிலிருந்தே ஃபரிஸ்தாவிலிருந்து தேவதை ஆவதற்காக நீண்ட கால சம்ஸ்காரத்தை நடைமுறை கர்மத்தில் வெளிப்படுத்துங்கள். ஏனெனில் நீண்ட காலத்தின் புகழ் என்ன இருக்கிறதோ, அது நீண்ட காலத்தின் எல்லை இப்பொழுது முடிந்து கொண்டிருக்கிறது. அதற்கான தேதியை எண்ணிக் கொண்டிருக்காதீர்கள்.

 

விநாசத்தை கடைசி நேரம் என்று சொல்லப்படும், அந்த நேரத்தில் நீண்ட காலத்தின் வாய்ப்பு முடிந்தே விடுகிறது, ஆனால் சிறிது நேரத்திற்கான வாய்ப்பு கூட முடிந்துவிடும். எனவே பாப்தாதா நீண்ட காலத்தின் முடிவுக்கான சமிக்ஞை கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிறகு நீண்ட காலத்தின் வாய்ப்பு முடிவடைந்து, சிறிது காலத்திற்கான முயற்சி, சிறிது காலத்திற்கான பலன் என்றே சொல்லப்படும். கர்மகணக்கில் இப்பொழுது நீண்ட காலம் என்பது முடிந்து, சிறிது காலம் மற்றும் அல்பகாலம் என்பது ஆரம்பமாகிக் கொண்டிருக்கிறது, எனவே இந்த ஆண்டு பரிவர்த்தனை காலத்தின் ஆண்டாகும். நீண்ட காலத்திலிருந்து சிறிது காலத்திலேயே பரிவர்த்தனை ஆக வேண்டும். எனவே இந்த ஆண்டிற்கான முயற்சியில் நீண்ட காலம் என்ற கணக்கை எவ்வளவு சேமிக்க விரும்புகிறீர்களோ, அவ்வளவு சேமித்துக் கொள்ளுங்கள். பிறகு நாங்களோ அலட்சியமாக இருந்து விட்டோம் என்று சொல்லக் கூடாது. இன்று இல்லையென்றால், நாளை மாறியே தீருவோம். எனவே கர்மத்தின் ஆழத்தை தெரிந்துக் கொண்டவர் ஆகுங்கள். ஞானம் நிறைந்தவர் ஆகி அதிவேகமாக முன்னேறிச் செல்லுங்கள். 2000-மாவது ஆண்டில் முடிந்துவிடும் என்று கணக்கிடாதீர்கள். முயற்சியின் கணக்கு தனிப்பட்டது. உலக மாற்றத்திற்கான கணக்கு தனிப்பட்டது. இன்னும் 15 ஆண்டுகள் இருக்கின்றன, இன்னும் 18 ஆண்டுகள் இருக்கின்றன என்றெல்லாம் யோசிக்காதீர்கள். 1999-ம் ஆண்டில் ஆகும்........ இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்க கூடாது. கணக்கைப் புரிந்து கொள்ளுங்கள். தனது முயற்சி மற்றும் பலனை தெரிந்து கொண்டு அதன் வேகத்தை அதிகரியுங்கள், இல்லையென்றால் நீண்ட காலத்தின் பழைய சம்ஸ்காரம் அப்படியே இருந்துவிட்டால், நீண்ட காலத்தின் கணக்கு தர்மராஜின் கணக்கில் சேர்ந்துவிடும். சிலருக்கு நீண்ட காலமாக வீணானது, முறையற்ற கர்மம், விகர்மத்தின் கணக்கு இப்பொழுதும் கூட இருக்கிறது. பாப்தாதா தெரிந்திருக்கிறார், ஆனால் அவுட் (ரிசல்ட்) மட்டும் செய்யவில்லை. சிறிது திரை போட்டிருக்கிறார். ஆனால் வீணானது மற்றும் முறையற்றது என்ற இந்தக் கணக்கு இப்பொழுதும் கூட நிறைய இருக்கிறது, எனவே இந்த ஆண்டு அதிகப்படியான பொன்னான வாய்ப்பிற்கான ஆண்டாகும். எவ்வாறு முயற்சிக்கான யுகமாக இருக்கிறதோ, அவ்வாறே இது முயற்சி மற்றும் மாற்றத்திற்கான பொன்னான வாய்ப்பிற்கான ஆண்டாகும். எனவே விசேசமாக துணிவு மற்றும் உதவிக்கான இந்த விசேசமான வரதானத்தின் ஆண்டை சாதரணமான 50-ம் ஆண்டு போல எண்ணி இழந்துவிடக்கூடாது. இதுவரை பாபா அன்பின் கடலாகி அனைத்து உறவுகளின் சிநேகத்தில், அலட்சியம், சாதாரண முயற்சி போன்றவற்றைப் பார்த்தும் கேட்டும் கூட, பார்க்காததுப் போல, கேட்காதது போல குழந்தைகளுக்கு அன்பின் அதிகப்படியான உதவி மூலம் அதிகமான மதிப்பெண் கொடுத்து முன்னேற்றிக் கொண்டிருக்கிறார். உயர்த்திக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்பொழுது நேரம் மாறிக் கொண்டிருக்கிறது, அதனால் இப்பொழுது கர்மத்தின் ஆழத்தை நல்ல முறையில் புரிந்துக் கொண்டு நேரத்தின் இலாபத்தை எடுங்கள். 18 வது அத்தியாயம் ஆரம்பமாகிவிட்டது என்பதைக் கேட்டீர்கள் தானே! 18வது அத்தியாத்தின் விசேசம் - இப்பொழுது நினைவு சொரூபம் ஆகுங்கள். அவ்வப்பொழுது நினைவு, அவ்வப்பொழுது மறதி என்று இருக்கக் கூடாது. நினைவு சொரூபம் என்றாலே நீண்ட கால நினைவு தானாகவும் எளிதாகவும் இருக்க  வேண்டும். இப்போதைய போரிடும் (மாயாவுடன்) சம்ஸ்காரம், கடும் முயற்சியின் சம்ஸ்காரம், மனதைக் குழப்பிக் கொள்வதற்கான சம்ஸ்காரத்தை முடித்து விடுங்கள். இல்லையென்றால் இதுவே நீண்ட காலத்தின் சம்ஸ்காரமாகி அந்த் மதி சோ கதியின் (கடைசியில் என்ன நினைவோ, அந்த நிலை) பிராப்தி அடைவதற்கு நிமித்தமாகிவிடுவீர்கள். கேட்டீர்கள் தானே! - இப்பொழுது நீண்ட காலத்திற்கான முயற்சியின் நேரம் முடிவடைந்து கொண்டிருக்கிறது. மற்றும் நீண்ட கால பலஹீனத்தின் கணக்கு ஆரம்பமாகிக் கொண்டிருக்கிறது. புரிந்துகொள்ள முடிந்ததா! எனவே இது விசேச மாற்றத்திற்கான சமயமாகும். நினைவு சொரூபம் ஆகுங்கள். நினைவு சொரூபம் தானாகவே பற்றற்றவர் ஆக்கிவிடும். இப்பொழுதோ பற்றுதலின் பட்டியல் மிகவும் நீண்டுவிட்டது. ஒன்று தனது இல்லறம் (உடல் சம்மந்தப்பட்டது), ஒன்று தெய்வீக பரிவாரத்தின் இல்லறம், சேவையின் இல்லறம், எல்லைக்குட்பட்ட பிராப்திகளின் இல்லறம். - இவை அனைத்திலுமிருந்தும் பற்றற்றவர் அதாவது விடுப்பட்டு அன்பானவர் ஆகுங்கள். எனது என்றாலே பற்றுதல், இதிலிருந்து பற்றற்றவர் ஆகுங்கள், அப்பொழுது நீண்டகால முயற்சியினால் நீண்டகால பதவியின் பிராப்திக்கு அதிகாரி ஆவீர்கள்.  நீண்ட காலம் அதாவது முதலில் இருந்து கடைசி வரை பிராலப்தத்தின் பலனை அடைய வேண்டும். அவ்வாறே ஒவ்வொரு இல்லறத்தில் இருந்து துறவறம் (விடுபடுவதற்கான) இரகசியத்தையும் தெரிந்துள்ளீர்கள். மேலும் சொற்பொழிவும் நன்றாக ஆற்றலாம். ஆனால் துறவு செய்வது அதாவது பற்றற்றவர் ஆவது! பாயிண்ட்ஸோ (ஞானக்கருத்துக்களோ) பாப்தாதாவை விட உங்களிடம் அதிகம் இருக்கின்றன. அதனால் என்ன பாயிண்ட் சொல்வது? பாயிண்ட்ஸோ இருக்கின்றன, இப்பொழுது பாயிண்ட் (புள்ளி) ஆகுங்கள். நல்லது.

 

சதா சிரேஷ்ட கர்மங்களின் பிராப்தியின் நிலையைத் தெரிந்து கொள்ளக்கூடிய, சதா நீண்ட காலத்தின் தீவிர முயற்சியின், சிரேஷ்ட முயற்சியின் சிரேஷ்ட சம்ஸ்காரம் உடைய, சதா தங்கயுகத்தின் ஆதி இரத்தினம், சங்கயுகத்திலும் ஆதி இரத்தினம் அப்படிப்பட்ட ஆதிதேவனுக்கு (பிரம்மா) சமமான குழந்தைகளுக்கு, ஆதி தந்தை, அனாதி தந்தையின் சதா அருகில் வருவதற்கான சிரேஷ்ட வரதானி அன்பு நினைவுகள் மற்றும் கூடவே சேவாதாரி தந்தையின் நமஸ்தே.

 

தாதிகளுடன் –

வீட்டின் வாசலை (கேட்) யார் திறப்பார்? கோல்டன் ஜுப்ளி கொண்டாடுபவர்களோ அல்லது சில்வர் ஜுப்ளி கொண்டாடுபவர்களோ, பிரம்பாவுடன் கேட்-ஐ திறப்பீர்கள் அல்லவா! அல்லது பின்னால் வருவீர்களா? கூடவே சென்றீர்கள் என்றால் மணப்பெண்னாகி செல்வீர்கள், மேலும் பின்னால் சென்றீர்கள் என்றால் ஊர்வலத்தில் ஒருவராகச் செல்வீர்கள். உறவினர்களைக் கூட ஊர்வலத்தில் செல்பவர்கள் என்று தானே சொல்வோம், அருகிலோ இருக்கின்றார்கள், ஆனால் ஊர்வலம் வந்திருக்கிறது என்று தான் சொல்லப்படும். அதனால் யார் கேட்-ஐ திறப்பார்கள். கோல்டன் ஜுப்ளி கொண்டாடுபவர்களா? அல்லது சில்வர் ஜுப்ளி கொண்டாடுபவர்களா? யார் வீட்டின் கேட்-ஐத் திறப்பார்களோ, அவர்களே சொர்க்கத்தின் கேட்-ஐ திறப்பார்கள். இப்பொழுது வதனத்தில் வருவதற்கு யாருக்கும் தடையில்லை. என்னதான் இருந்தாலும் நேரத்தின், சூழ்நிலையின் பந்தனம் இருக்கிறது. வதனத்தில் வருவதற்கோ எந்த பந்தனமும் இல்லை.. யாரும் தடுக்க மாட்டார்கள், டர்ன் செய்ய வேண்டிய அவசியமில்லை. இங்கு சரீரத்தில் இருந்து கொண்டு ஒரு வினாடியில் சுற்றி வந்துவிட்டது போல் பயிற்சியினால் அனுபவம் செய்வீர்கள். சம்பூரண ஃபரிஸ்தா (அன்த்வாஹக்) சரீரத்துடன் சுற்றி வருவதற்கான மகிமை இருக்கிறது. உள்ளே இருக்கும் ஆத்மா வாகனம் ஆகிவிடுகிறது. எனவே அவ்வாறு அனுபவம் செய்வீர்கள் அதாவது எவ்வாறு முற்றிலும் பட்டன் அழுத்தப்பட்டது, விமானம் பறந்தது, சுற்றி வந்துவிட்டோம். மேலும் மற்றவர்களும் அனுபவம் செய்வார்கள் அதாவது இவர்கள் இங்கு இருந்தாலும் இல்லாதது போல் மற்றவர்கள் அனுபவம் செய்வார்கள். எவ்வாறு சாகாரத்தில் (பிரம்மா) பார்த்தீர்கள் தானே - பேசிக் கொண்டேயிருந்தாலும் வினாடியில் இருக்கிறார், மேலும் இப்பொழுது இல்லை. அவ்வப்பொழுது இருக்கிறார், அவ்வப்பொழுது இல்லை. இந்த அனுபவம் செய்தீர்கள் தானே? அனுபவம் செய்தீர்கள் தானே? இதில் ஸ்தூலமான விஸ்தாரத்தை உள்ளடக்குவது அவசியமாகும். இவ்வளவு விஸ்தாரத்தில் இருந்தும் கூட கடைசி நிலை என்னவாக இருந்தது என்பதை சாகாரத்தில் பார்த்தீர்கள் அல்லவா? விஸ்தாரத்தை உள்ளடக்கும், விடுபட்ட உயர்ந்த (உப்ராம்) நிலையில் இருப்பதைப் பார்த்தீர்கள், அவ்வப்பொழுது ஸ்தூலத்தின் டைரக்சன் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவ்வப்பொழுது அசரீரி நிலையின் அனுபவத்தை செய்வித்துக் கொண்டிருக்கிறார். அதனால் இந்த உள்ளடக்கும் சக்தியின் வெளிப்பாட்டைப் பார்த்தீர்கள். பாபா இங்கு இருக்கிறாரா அல்லது இல்லையா? என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள். கேட்டுக் கொண்டிருக்கிறாரா அல்லது கேட்க வில்லையா? ஆனால் எந்த காரியத்தையும் தவறவிடாதளவிற்கு அவருடைய அதிவேகம் அவ்வாறு இருக்கிறது. நீங்கள் சொல்லிக் கொண்டியிருக்கிறீர்கள். என்றாலும் விசயத்தை தவறவிடமாட்டார். ஆனால் இரண்டு காரியத்தையும் ஒரு நிமிடத்தில் செய்து முடிக்குமளவிற்கு வேகம் அதிகமாக இருக்கிறது. சாரத்தை கேட்ச் (பிடித்தல்) செய்துவிடுவார், மேலும் சுற்றி வந்து விடுவார். யாரோ பேசிக் கொண்டிருக்கிறார், நீங்கள் சொல்வீர்கள் கேட்கவே இல்லை என்பது போலவும் அசரீரியாக இருக்கமாட்டார். வேகம் அதிகமாக ஆகிவிடுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு காரியமும் செய்து விடுமளவிற்கு புத்தி விசாலம் ஆகி விடுகிறது. இது எப்பொழுது ஆகிறது என்றால், உள்ளடக்கும் சக்தியை பயன்படுத்தும் பொழுது தான். இப்பொழுது இல்லறத்தின் விஸ்தாரம் ஆகிவிட்டது. அதிலிருந்து கொண்டே இந்த பயிற்சி தான் ஃபரிஸ்தா தன்மையின் சாட்சாத்காரத்தை செய்விக்கும். இப்பொழுது ஒவ்வொரு சின்னஞ்சிறு விஷயங்களில் பின்னால் எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறதோ, அது தானாகவே உயரே செல்வதினால் இந்த சிறிய விஷயங்கள் தெளிவான வழியின் அனுபவம் செய்விக்கும். உயரே செல்வதினால் கீழான தன்மை தானாகவே விடுபட்டுவிடும். கடும் முயற்சியிலிருந்து தப்பித்து விடுவீர்கள். சமயமும் சேமிப்பாகும். மற்றும் சேவை வேகமாக நடக்கும். இல்லையெனில் எவ்வளவு நேரம் கொடுக்க வேண்டியிருக்கிறது! நல்லது.

 

சில்வர் ஜூப்ளியில் வந்திருக்கக்கூடிய சகோதர சகோதரிகளுக்காக அவ்யக்த பாப்தாதாவின் இனிய செய்தி - ......பொன்விழாவின் மங்கலமான தருணத்தில் ஆன்மீகக் குழந்தைகளுக்காக சிநேகத்தின் பொன் மலர்கள்.

 

முழு உலகில் உயர்ந்ததிலும் உயர்ந்த மகா யுகத்தின் மகான் பார்ட்தாரி, யுகத்தை மாற்றக்கூடிய குழந்தைகளுக்கு சிரேஷ்டமான சுபம் நிறைந்த வாழ்க்கைக்கான வாழ்த்துகள்! சேவையின் வளர்ச்சிக்கு நிமித்தமாவதற்கான விசேஷ பாக்கியத்தின் வாழ்த்துகள்! முதலிலிருந்தே பரமாத்ம சிநேகி மற்றும் சகயோகி ஆவதற்கான, எடுத்துக்காட்டு ஆவதற்கான  வாழ்த்துகள்! சமயத்தின் பிரச்சனைகள் என்ற புயலை பரிசாகப் புரிந்து கொண்டு சதா தடைகளை அழிப்பவர் ஆவதற்கான வாழ்த்துகள்! பாப்தாதா சதா தன்னுடைய அப்பேர்ப்பட்ட அனுபவங்களின் கஜானாக்களால் நிறைந்த சேவைக்கான அடித்தளமாக இருந்த குழந்தைகளைப் பார்த்து, புன்முறுவல் பூக்கிறார், மேலும் குழந்தைகளின் துணிவு என்ற குணங்களின் மாலையை நினைவு செய்கிறார், அப்படிப்பட்ட அதிர்ஷ்டமான மற்றும் அன்பான தருணத்தில் விசேசமாக பொன்னான வரதானத்தைக் கொடுத்து, சதா ஒற்றுமை ஆகி, ஒருவரை வெளிப்படுத்துவதற்கான காரியத்தில் வெற்றியடைபவர் ஆகுக! ஆன்மீக வாழ்க்கையில் அமரர் ஆவீர்களாக! வெளிப்படையான பலன் மற்றும் அழிவற்ற பலனை அடைவதற்கு பல மடங்கு பாக்கியவான் ஆவீர்களாக!

 

வரதானம்:

ஆஹா! டிராமா ஆஹா! என்ற நினைவின் மூலம் அநேகருக்கு சேவை செய்யக் கூடிய சதா குஷி நிறைந்தவர் ஆகுக

 

இந்த நாடகத்தில் எந்தவொரு காட்சியைப் பார்த்தாலும் ஆஹா! டிராமா ஆஹா! என்ற நினைவில் இருந்தீர்கள் என்றால் ஒருபொழுதும் குழப்பமடையமாட்டீர்கள். ஏனெனில் தற்சமயம் நன்மை செய்யக்கூடிய யுகமாக இருக்கிறது என்ற நாடகத்தின் ஞானம் கிடைத்திருக்கிறது. இதில் எந்த விதமான காட்சி முன்னால் வந்தாலும் அதில் நன்மை நிறைந்திருக்கிறது. தற்சமயத்தில் நன்மை தென்படவில்லையென்றாலும் கூட, எதிர்காலத்தில் உள்ளடங்கியிருக்கும் நன்மை வெளிப்பட்டுவிடும் - அதனால் ஆஹா டிராமா! ஆஹா! என்ற நினைவின் மூலம் சதா குஷியாக இருப்பீர்கள்., முயற்சியில் ஒருபொழுதும் சோர்வு வராது. தானாகவே உங்கள் மூலம் பலருக்கு சேவை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.

 

சுலோகன்:

அமைதியின் சக்தி தான் மனதின் சேவைக்கான எளிய சாதனமாகும், அதனால்.  எங்கு அமைதியின் சக்தி இருக்கிறதோ, அங்கு திருப்தி இருக்கிறது.

 

ஓம்சாந்தி