25.06.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! எல்லையற்ற
சுகத்திற்காக உங்களுக்கு எல்லையற்ற ஞானம் கிடைக்கின்றது,
நீங்கள் மீண்டும் இராஜயோகப் படிப்பின் மூலம் இராஜ்யத்தை
அடைகின்றீர்கள்.
கேள்வி:
உங்களுடைய ஈஸ்வரிய பரிவாரமானது
எந்த விசயத்தில் மிகவும் தனிப்பட்டதாக இருக்கின்றது?
பதில்:
இந்த ஈஸ்வரிய குடும்பத்தில்
சிலர் ஒரு நாள் குழந்தையாக, சிலர் 8 நாட்கள் குழந்தையாக
இருந்தாலும் அனைவரும் படிக்கின்றனர். தந்தையே ஆசிரியராக வந்து
தனது குழந்தைகளுக்குப் படிப்பிக்கின்றார், இது மிகவும்
தனிப்பட்ட விசயமாக இருக்கிறது. ஆத்மா படிக்கின்றது, பாபா என
ஆத்மா சொல்கின்றது. பிறகு பாபா குழந்தைகளுக்கு 84 பிறவிகளின்
கதையைக் கூறுகின்றார்.
பாட்டு:
தூர தேசத்தில் வசிப்பவரே.
ஓம்சாந்தி
விருட்சபதி நாளை பிரகஸ்பதி
நாளாக (குருவாரம்/வியாழக்கிழமை) பெயரிடப்பட்டுள்ளது. இந்த
விழாக்கள் அனைத்தும் ஆண்டாண்டு காலமாக கொண்டாடி வருகின்றனர்.
நீங்கள் ஒவ்வொரு வாரமும் பிரகஸ்பதி (குருவார்) நாளைக்
கொண்டாடுகின்றீர்கள். விருட்சபதி, (சிவபாபா) இந்த மனித உலக
மரத்தின் விதை ரூபமாக, சைத்தன்யமாக இருக்கின்றார், அவரே இந்த
மரத்தின் மூன்று கால ஞானத்தை அறிந்தவராக இருக்கின்றார், மேலும்
மற்ற அனைத்தும் ஜட மரங்களாகும். இது சைத்தன்ய மரமாக
இருக்கின்றது, இதனை கல்ப விருட்சம் எனக் கூறப்படுகிறது.
இதனுடைய ஆயுள் காலம் 5 ஆயிரம் ஆண்டுகளாகும், மேலும் இந்த மரம்
4 பாகங்களாக இருக்கிறது. ஓவ்வொரு பொருளும் 4 பாகங்கள்
அடங்கியதாக இருக்கி;றது. இந்த உலகமும் 4 பாகங்களாக (யுகங்களாக)
இருக்கிறது. இப்பொழுது இந்தப் பழைய உலகத்தின் கடைசி நிலையாகும்,
உலகம் மிகப் பெரியதாக இருக்கிறது, இந்த ஞானம் வேறு எந்த
மனிதர்களின் புத்தியிலும் இல்லை. இது தான் புதிய உலகிற்கான
புதிய கல்வியாகும். மேலும் மீண்டும் புதிய உலகிற்கு இராஜாவாக
ஆவதற்கும், ஆதிசனாதன தேவி-தேவதை ஆவதற்கும் இது புதிய
கல்வியாகும். ஹிந்தி பாஷையில் தான் கூறப்படுகிறது. மற்றவர்கள்
இராஜ்யம் ஏற்படும் போது அவர்களுடைய மொழி வேறுபடுகின்றது.
சத்யுகத்தில் என்ன மொழி இருக்கும்? என்பது குழந்தைகளுக்கு
சிறிதளவு தெரியும். ஆரம்பகாலத்தில் குழந்தைகள் தியானத்தில்
சென்று அதைப்பற்றி கூறினார்கள், அங்கு சமஸ்கிருதம் இருக்காது.
இங்கு தான் சமஸ்கிருதமும் இருக்கிறது. எது இங்கிருக்கிறதோ அது
அங்கு இருக்க முடியாது. இவர் தான் விருட்சபதியாக இருக்கின்றார்
என குழந்தைகள் அறிந்துள்ளனர், இவரை படைப்பவர், அதாவது தந்தை
எனவும் கூறப்படுகிறது. இவர் சைத்தன்யமான விதை ரூபமாக
இருக்கின்றார், மற்ற அனைத்து விதைகளும் ஜடமாக இருக்கின்றன.
குழந்தைகள் முழு உலகத்தின் மூன்று காலத்தையும் அறிய
வேண்டுமல்லவா! இந்த நேரம் ஞானம் இல்லாததால் மனிதர்களிடம் சுகம்
இல்லை. இது தான் எல்லையற்ற ஞானம், இதன் மூலம் எல்லையற்ற சுகம்
கிடைக்கிறது. எல்லைக்குட்பட்ட ஞானத்தின் மூலம் அல்பகால சுகம்
கிடைக்கிறது. நாம் எல்லையற்ற சுகத்தை அடைய மீண்டும் இப்பொழுது
முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
இந்த மீண்டும் என்ற வார்த்தையை நீங்கள் மட்டுமே கேட்கின்றீர்கள்.
நீங்கள் தான் மீண்டும் மனிதனிலிருந்து தேவதை ஆவதற்கு இந்த
இராஜயோகப் படிப்பை படிக்கின்றீர்கள். தந்தை நிராகாரமாக,
ஞானக்கடலாக இருக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
குழந்தைகளும் நிராகாரமான ஆத்மாக்களாக இருக்கின்றனர், ஆனால்
அனைவருக்கும் தனித்தனியான சரீரம் இருக்கிறது, இதனை அலௌகீகப்
பிறவி எனக் கூறப்படுகிறது. வேறு எந்த மனிதரும் இவ்வாறு பிறவி
எடுக்க முடியாது. எவ்வாறு இவர் (பிரம்மா) பிறவி எடுத்தார்,
இவருடைய வானப்பிரஸ்த நிலையில் பிரவேசம் செய்கிறேன்.
குழந்தைகளுக்கு (ஆத்மாக்கள்) நேரில் வந்து புரிய வைக்கின்றார்,
வேறு யாரும் குழந்தைகளே எனக் கூறுவதில்லை. எந்த தர்மத்தை
சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிவபாபா, நம் ஆத்மாக்களின் தந்தை
எனப் புரிந்துள்ளனர், அவர்களும் குழந்தைகளே எனக் கூறுவார்கள்.
வேறு எந்த மனித ஆத்மாக்களையும் ஈஸ்வரா மற்றும் பாபா எனக் கூற
முடியாது. இங்கு காந்தியைக் கூட பாபுஜி எனக் கூறுகின்றனர்.
முனிசிபாலிட்டி மேயரைக் கூட தந்தை எனக் கூறுகின்றனர். ஆனால்
அந்தத் தந்தை அனைவரும் தேகதாரி மனிதர்கள். ஆத்மாக்களின்
தந்தையானவர் நமக்குப் படிப்பிக்கின்றார் என நீங்கள்
அறிந்துள்ளீர்கள். தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள் என
தந்தை அடிக்கடி கூறுகின்றார், அந்த தந்தை ஆத்மாக்களுக்கு
மட்டுமே படிப்பிக்கின்றார். இது தான் ஈஸ்வரிய பரிவாரமாகும்.
தந்தைக்கு நிறைய குழந்தைகள் இருக்கின்றனர். பாபா நான்
உங்களுடையவன் என நீங்களும் கூறுகின்றீர்கள், நீங்கள்
குழந்தைகளாக ஆகி விட்டீர்கள். நாங்கள் உங்களுடைய ஒரு நாள்
குழந்தையாக, 8 நாட்கள் குழந்தையாக, ஒரு மாத குழந்தையாக,
இருக்கிறோம் எனக் கூறுகின்றனர். முதலில் சிறிய குழந்தைகளாகத்
தான் இருப்பார்கள். 2,4 நாட்கள் குழந்தைகளாக இருந்தாலும்உடல்
பெரியதாகத் தான் இருக்குமல்லவா! எனவே, அனைத்து குழந்தைகளுக்கும்
படிப்பு வேண்டும். யார் வந்தாலும், அனைவருக்கும் தந்தை
படிப்பிக்கின்றார். நீங்களும் படிப்பிக்கின்றீர்கள். தந்தையின்
குழந்தைகளாக ஆன பிறகு, நீங்கள் 84 பிறவிகள் எப்படி எடுத்தீர்கள்?
என தந்தை புரிய வைக்கின்றார், நானும் கூட பல பிறவிகளின் கடைசி
நேரத்தில் இவருக்குள் பிரவேசமாகி பிறகு படிப்பிக்கின்றேன். நாம்
இங்கு மிகப் பெரிய டீச்சரிடம் வந்திருக்கிறோம் எனக் குழந்தைகள்
புரிந்துள்ளீர்கள். பிறகு இவர் மூலம் மற்ற டீச்சர்கள்
உருவாகின்றனர் அவர்களை வழிகாட்டி எனக் கூறப்படுகிறது. அவர்களும்
அனைவருக்கும் படிப்பிக்கின்றனர். யாரெல்லாம் புரிந்துள்ளனரோ
அவர்களும் படிப்பிக்கின்றனர்.
இரண்டு தந்தையைப் பற்றி முதன் முதலில் புரிய வைக்க வேன்டும்.
ஓன்று லௌகீகத் தந்தை மற்றொன்று பரலௌகீக தந்தை ஆவர், மிகவும்
பெரியவர் பரலௌகீகத் தந்தையாவார் அவரை பகவான் எனக்
கூறப்படுகிறது. இப்போது நமக்கு பரலௌகீகத் தந்தை கிடைத்துள்ளார்
வேறு யாருக்கும் இந்த விசயம் தெரியாது. நாளடைவில் தெரிந்து
கொள்வார்கள் ஆத்மாக்களுக்கு பாபா படிப்பிக்கின்றார் எனக்
குழந்தைகள் நீங்கள் அறிந்துள்ளீர்கள் ஆத்மாக்கள் நாம் ஒரு
சரீரத்தை விட்டு பிறகு மற்றொரு சரீரம் எடுக்கின்றோம்;
உயர்ந்ததிலும் உயர்ந்தவராக ஆவதற்கு வந்திருக்கிறோம். சில
குழந்தைகள் நாளடைவில் மிக உயர்ந்த இந்தப் படிப்பை விட்டு
விடுகின்றனர் ஏதாவது விசயத்தில் சந்தேகத்தில் வருகின்றனர்
அல்லது மாயாவின் ஏதாவது புயலை பொறுத்துக் கொள்ள முடியாமல் போய்
விடுகின்றனர். காமம் என்ற மகா எதிரியிடம் தோல்வி அடைந்து இதன்
காரணமாக படிப்பை விடுகின்றனர். காமம் என்ற மகா எதிரியிடம்
தோல்வி காரணமாகவே குழந்தைகள் மிகவும் சகித்துக் கொள்ள
வேண்டியதாகிறது. பாபா எங்களை அழுக்காக விடாமல் காப்பாற்றுங்கள்
என கல்ப கல்பமாக அப்பாவிப் பெண்கள் நீங்கள் தான் அழைத்து
வந்தீர்கள். நினைவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என தந்தை
கூறுகின்றார் நினைவின் மூலமாகவே சக்தி வந்து சேரும், பலசாலி
மாயாவின் சக்தியும் குறைந்து விடும், பிறகு நீங்கள்
விடுபடுவீர்கள், அவ்வாறு நிறையபேர் பந்தனங்களிலிருந்து விடுதலை
அடைந்து வருகின்றனர். பிறகு கொடுமைகள் முடிந்து விடுகிறது,
சிவபாபாவிடம் பிரம்மா மூலமாக உரையாடுகின்றனர் இந்தப்
பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். நாம் சிவபாபாவிடம்
செல்கின்றோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும். அவர் இந்த
பிரம்மாவின் உடலில் வருகின்றார், நாம் சிவபாபாவின் எதிரில்
அமர்ந்துள்ளோம், நினைவின் மூலமாகவே பாவங்கள் அழியும். தன்னை
ஆத்மா எனப் புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்ய வேண்டும்
என்பதே கல்வியாகும். தந்தையை சந்திக்க வந்தாலும் தன்னைத் தான்
ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள். ஆத்ம அபிமானி பவ. இந்த
ஞானமும் உங்களுக்கு இப்போது தான் கிடைக்கிறது, இதில் தான்
உழைப்பு இருக்கிறது. அங்கு பக்தி மார்க்கத்தில் எவ்வளவு வேதம்,
சாஸ்திரங்கள் படிக்கின்றனர். இங்கு நினைவு செய்வதில் மட்டுமே
உழைப்பு இருக்கிறது. இது மிகவும் சகஜமானதாகவும் இருக்கிறது.
இதுவே மிகவும் கடினமானதாகவும் இருக்கிறது தந்தையை நினைவு
செய்வது போன்று மிகவும் சகஜமான விசயம் வேறு ஒன்றுமில்லை.
குழந்தை பிறந்தவுடன் பாபா பாபா என கூறத் தொடங்கி விடும். பெண்
குழந்தைகள் வாயிலிருந்து அம்மா என்ற வார்த்தை வரும்.
ஆத்மாவானது பெண் சரீரத்தை எடுக்கிறது. பெண் அம்மாவிடம் தான்
செல்லும். ஆண் குழந்தை குறிப்பாக தந்தையை நினைவு செய்யும்
ஏனென்றால், பிராப்தி கிடைக்கிறது. இப்பொழுது நீங்கள்
ஆத்மாக்கள் அனைவரும் குழந்தைகள். தந்தையிடமிருந்து உங்களுக்கு
பிராப்தி கிடைக்கின்றது. நினைவு செய்வதன் மூலம் ஆத்மாவிற்கு
தந்தையிடமிருந்து பிராப்தி கிடைக்கிறது. தேக அபிமானியாக
இருந்தால் பிராப்தி அடைவதில் கஷ்டம் ஏற்படும். நான்
குழந்தைகளுக்கு மட்டுமே படிப்பிக்கின்றேன் என தந்தை
கூறுகின்றார். குழந்தைகளாகிய நமக்கு தந்தை படிப்பிக்கின்றார்
என குழந்தைகளும் புரிந்துள்ளனர். இந்த விசயங்களை தந்தையைத்
தவிர வேறு யாரும் கூற முடியாது. பக்தி மார்க்கத்தில் அவர் மீது
தான் உங்களுடைய அன்பு இருந்தது. நீங்கள் அனைவரும் அந்த அன்பான
நாயகனுக்கு அன்பான நாயகிகளாக இருந்தீர்கள். முழு உலகத்தைச்
சேர்ந்த அனைவரும் ஒரு நாயகனின் அன்பானவர்கள். பரமாத்மாவை
அனைவரும் பரமபிதா என அழைக்கின்றனர். தந்தையை நாயகி எனக்
கூறமுடியாது. நீங்கள் பக்தி மார்க்கத்தில் அன்பான நாயகிகளாக
இருந்தீர்கள் என தந்தை புரிய வைக்கின்றார். இப்பொழுதும் நிறைய
பேர் அவ்வாறு இருந்தாலும், யாரை பரமாத்மா எனக் கூறுவது
என்பதில் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். கணேஷ், ஹனுமான்
போன்றவர்களை பரமாத்மா எனக் கூறி முற்றிலும் குழப்பமடைந்து
விட்டனர். ஒரு பாபாவைத் தவிர வேறு யாருக்கும் இதனை சரி
செய்வதற்கான சக்தி இல்லை. தந்தையே வந்து குழந்தைகளுக்குப்
புரிய வைக்கின்றார். குழந்தைகள் வரிசைப்படியாக புரிந்து கொண்டு
மேலும் புரிய வைப்பதற்கு தகுதியாகின்றனர். இராஜ்யம் உருவாகிக்
கொண்டிருக்கிறது. கல்பத்திற்கு முன்பாக படித்தது போல் நீங்கள்
இங்கு படிக்கின்றீர்கள், பிறகு இதற்கான பிராப்தியை புதிய
உலகத்தில் அடைவீர்கள், அதனை அமரலோகம் எனக் கூறப்படுகிறது.
நீங்கள் காலன் மீது வெற்றியடைகின்றீர்கள். அங்கு ஒரு போதும்
அகாலமரணம் ஏற்படாது. அந்த உலகத்திற்கு பெயரே சொர்க்கமாகும்.
குழந்தைகள் உங்களுக்கு இந்தப் படிப்பில் மிகவும் மகிழ்ச்சி
இருக்க வேண்டும். தந்தையை நினைவு செய்வதால் தந்தையின்
பொக்கிஷத்தின் நினைவும் வரும். ஒரு விநாடியில் முழு நாடகத்தின்
ஞானம் புத்தியில் வருகின்றது. மூலவதனம், சூட்சுமவதனம்,
ஸ்தூலவதனம், 84 பிறவிகளின் சக்கரம், இந்த நாடகம் முழுவதும்
பாரதத்தில் மட்டுமே உருவாகி இருக்கின்றது. மற்றவை எல்லாம்
மேலோட்ட மானதாகும். ஞானத்தை தந்தை உங்களுக்குத் தருகின்றார்,
நீங்கள்தான் மிகவும் உயர்ந்தவராகி பிறகு தாழ்ந்த நிலை
அடைகின்றீர்கள். இரட்டை கிரீடதாரி இராஜாவாகி பிறகு முற்றிலும்
ஏழை ஆகின்றீர்கள்.
இப்பொழுது பாரதம் முற்றிலும் ஏழ்மையாகி விட்டது. பிரஜைகளின்
இராஜ்யம் நடக்கிறது. சத்யுகத்தில் இரட்டை கிரீடதாரி மஹாராஜா
மஹாராணியின் இராஜ்யம் இருந்தது. ஆதி தேவன் பிரம்மாவிற்கு நிறைய
பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
பிரம்மாவையும், ஹனுமானையும் மஹாவீர் எனக் கூறுகின்றனர்.
நடைமுறையில் குழந்தைகள் நீங்களே மிகவும் உண்மையான மஹாவீரர்கள்,
ஏனென்றால் யோகத்தின் மூலம் சக்தி அடைகின்றீர்கள், மாயாவின்
புயல் எவ்வளவு வந்தாலும் உங்களை அசைக்க முடியாது. நீங்கள்
மஹாவீரரின் மஹாவீர் குழந்தைகள், ஏனென்றால் நீங்கள் மாயா மீது
வெற்றி பெறுகின்றீர்கள். 5 விகாரங்கள் எனும் இராவணன் மீது
ஒவ்வொருவரும் வெற்றி அடைகின்றீர்கள். ஒரு மனிதருக்கான
விசயமில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் வில்லை உடைத்து மாயா மீது
வெற்றி பெற வேண்டும். இதில் யுத்தத்திற்கான விசயமில்லை.
ஐரோப்பாவாசி எப்படி சண்டையிடுகின்றனர், பாரதத்தில் கௌரவர்கள்
மற்றும் பாண்டவர்களுக்கும் இடையில் யுத்தம் நடந்ததாகக்
கூறப்படுகிறது. இரத்தத்தின் ஆறு ஓடுவதாகக் கூறப்படுகிறது.
பிறகு பாலாறு ஓடும். விஷ்ணுவை பாற்கடலில் இருப்பதாக
காட்டப்பட்டிருக்கிறது, மிகப்பெரிய ஏரியை உருவாக்கி அதில்
விஷ்ணுவைக் காட்டுகின்றனர். ஆக, ஏரியில் பால் எப்படி வரும்?
முக்கிய நாட் களில் ஏரியில் பால் ஊற்றுகின்றனர். பிறகு
பாற்கடலில் விஷ்ணு சயனத்தில் இருப்பது போலக் காட்டுகின்றனர்,
அர்த்தம் ஒன்றுமில்லை. 4 புஜங்களோடு எந்த மனிதரும்
இருப்பதில்லை.
இப்பொழுது குழந்தைகள் நீங்கள்
சமூக சேவகர்கள், ஆன்மீகத் தந்தையின் குழந்தைகள். தந்தை அனைத்து
விசயங்களையும் புரியவைக்கின்றார், இதில் எந்த சந்தேகமும் வரக்
கூடாது. சந்தேகம் வருவது எனில் மாயாவின் புயலாகும். பதீத -
பாவனரே வாருங்கள்! எங்களை பாவனமாக்குங்கள் என என்னை நீங்கள்
அழைத்தீர்கள். மனதால் என்னை மட்டுமே நினைவு செய்வதால் நீங்கள்
பாவனமாவீர்கள் என தந்தை கூறுகின்றார். 84 பிறவிகளின்
சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். பதீத பாவனர், ஞானக்கடல் என
ஒரு தந்தையை மட்டுமே கூறப்படுகிறது. பதீத ஆத்மாக்களை
பாவனமாக்குகின்றார் மேலும் 84 பிறவிச் சக்கரத்தின் ஞானத்தை
கூறுகின்றார். 84 பிறவிகளின் சக்கரம் சுழற்சி அடையும், இதற்கு
முடிவு இல்லை. தந்தை எவ்வளவு இனிமையானவராக, பதிகளுக்கெல்லாம்
பதியாக இருக்கின்றார் என்பதையும் நீங்கள் மட்டுமே முயற்சியின்
வரிசைப்படி புரிந்துள்ளீர்கள். என்னிடமிருந்து குழந்தைகள்
உங்களுக்கு மிகப் பெரிய பொக்கிஷம் கிடைக்கிறது என தந்தை
கூறுகின்றார். ஆனாலும், அப்படிப்பட்ட தந்தையாகிய என்னை கை
விடுகின்றனர், படிப்பையும் விடுகின்றனர், இதுவும் நாடகத்தில்
பதிவாகியுள்ளது. எவ்வளவு புரிந்து கொள்ளாதவராக ஆகி விடுகின்றனர்!
புத்திசாலிக் குழந்தைகள் சுலபமாக அனைத்து விசயங்களையும்
புரிந்து கொண்டு, பிறரையும் படிக்க வைப்பதில் ஈடுபடுவார்கள்.
அந்த உலகாய படிப்பில் என்ன கிடைக்கிறது, இங்கு இந்தப்
படிப்பினால் என்ன கிடைக்கிறது என புரிந்து கொண்டு என்ன படிக்க
வேண்டும் என்பதை உடனடியாக முடிவெடுக்கின்றனர். பாபா
குழந்தைகளிடம் கேட்கும் போது, குழந்தைகளும், இந்தப்படிப்பு
மிகவும் நல்லது எனப் புரிந்து கொள்கின்றனர். இருந்தாலும் என்ன
செய்வது? உலகாயப் படிப்பு படிக்கவில்லையெனில் உற்றார்,
உறவினர்கள் கோபித்துக் கொள்வார்கள். நாளுக்கு நாள் நேரம்
குறைந்து கொண்டே வருகிறது. இந்தளவு பிறகு படிக்க முடியாது.
மிகவும் வேகமாக ஏற்பாடுகள் நடக்கின்றது. எல்லா வகையிலும்
ஏற்பாடுகள் நடக்கின்றதல்லவா? நாளுக்கு நாள் ஒருவருக்கொருவர்
விரோதம் அதிகமாகின்றது. இருந்த இடத்தில் இருந்து கொண்டே
அனைவரையும் அழித்து விடுவோம், அப்படிப்பட்ட பொருட்களை உருவாக்கி
இருக்கிறோம், எனக் கூறுகின்றனர். நாடக அனுசாரப்படி இப்போது
சண்டை ஏற்படாது, இராஜ்யம் உருவாகும் வரை நாமும் தயாராவோம்,
அவர்களும் தயாராகின்றனர் என குழந்தைகள் புரிந்துள்ளீர்கள்.
உங்களுடைய செல்வாக்கு கடைசியில் ஏற்படும். ஆஹா பிரபுவே!
உங்களுடைய லீலை அபாரமானது எனக் கூறுவார்கள். இது
இந்நேரத்திற்கான மகிமையாகும். உங்களது வழி, செயல் அனைத்திலும்
தனிப்பட்டது எனக் கூறப்படுகிறது. அனைத்து ஆத்மாக்களின் பார்ட்
தனிப்பட்டதாகும். மனதால் என் ஒருவரை மட்டுமே நினைவு செய்வதனால்
பாவங்கள் அழியும் என தந்தை உங்களுக்கு ஸ்ரீமத் தருகின்றார்.
ஸ்ரீமத் எப்படியிருக்கிறது? மனிதர்களின் வழி எப்படியிருக்கிறது?
முழு உலகிலும் அமைதியை உருவாக்க பரமபிதா பரமாத்மாவைத் தவிர வேறு
யாராலும் முடியாது. 100 சதவீதம் தூய்மை, அமைதி, சுகம் நிறைந்த
உலகத்தை 5000 ஆண்டுகளுக்கு முன்பு போல மீண்டும் நாடக
அனுசாரப்படி உருவாக்குகின்றார். எப்படி என்பதை வந்து புரிந்து
கொள்ளுங்கள். குழந்தைகள் நீங்களும் உதவியாளர் ஆகின்றீர்கள்.
யார் அதிகமாக உதவி செய்கின்றார்களோ அவர்களே வெற்றி மாலையில்
மணியாக ஆகின்றனர். குழந்தைகள் உங்களுடைய பெயர் கூட
சுவாரஸ்சியமாக வைக்கப் பட்டது. அந்தப் பெயர்களை ஆல்பமாக செய்து
வைக்க வேண்டும். நீங்கள் வீட்டை விட்டு வந்து தந்தையுடையவராகி
பட்டியில் இருந்தீர்கள். முற்றிலும் பட்டியில் இருந்தீர்கள்,
அப்படிப்பட்ட உறுதியான பட்டியாக இருந்தது, வேறு யாரும் உள்ளே
நுழைய முடியவில்லை. தந்தையுடையவராக ஆன பிறகு பெயர் அவசியம்
மாற்ற வேண்டும். அனைத்தையும் அர்ப்பணம் செய்து விட்டனர். எனவே,
பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தந்தை அனைவருக்கும் பெயர்
வைத்தார், அதிசயமாக இருக்கிறதல்லவா! நல்லது
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எந்த விசயத்திலும் சந்தேக புத்தி உடையவராகக் கூடாது,
மாயாவின் புயலை மகாவீர் ஆகி கடந்து செல்ல வேண்டும். மாயாவின்
புயல் உங்களை அசைக்க முடியாத அளவுக்கு யோகத்தில் ஈடுபட வேண்டும்.
2. புத்திசாலி ஆகி தனது வாழ்க்கையை ஈஸ்வரிய சேவையில் ஈடுபடுத்த
வேண்டும். மிகவும் உண்மையான ஆன்மீக சமூக சேவகர் ஆக வேண்டும்.
ஆன்மீகப் படிப்பை படிக்க வேண்டும், மேலும் படிப்பிக்க வேண்டும்.
வரதானம்:
சங்கல்பம் (எண்ணம்) என்ற விதையை
நன்மையின் சுப பாவனையால் நிரப்பி வைக்கக் கூடிய உலக நன்மையாளர்
ஆகுக.
எப்படி முழு மரத்தின் சாரம்
விதையில் இருக்குமோ அது போல சங்கல்பம் (எண்ணம்) என்ற விதை
அனைத்து ஆத்மாக்களைக் குறித்தும், இயற்கையைக் குறித்தும் சுப
பாவனை மிக்கதாக இருக்க வேண்டும். அனைவரையும் தந்தைக்குச் சமமாக
ஆக்கக் கூடிய பாவனை, பலமற்றவர்களை பலவானாக ஆக்கும், துக்கமும்
அசாந்தியும் நிறைந்த ஆத்மாக்களை எப்போதும் குஷியும் அமைதியும்
நிறைந்தவர்களாக ஆக்கும் பாவனையின் இரசனை அல்லது சாரம் அனைத்து
சங்கல்பங்களிலும் நிறைந்திருக்க வேண்டும், எந்த ஒரு சங்கல்பம்
என்ற விதையும் இந்த சாரம் இல்லாமல் காலியாக அதாவது வீணானதாக
இருக்கக் கூடாது. நன்மையின் பாவனையால் சக்தி வாய்ந்ததாக இருக்க
வேண்டும், அப்போது தந்தைக்குச் சமமான உலக நன்மையாளர் என்று
சொல்வோம்.
சுலோகன்:
மாயையின் குழப்பங்களால்
தொந்தரவிற்கு உள்ளாவதற்கு பதிலாக பரமாத்மாவின் சந்திப்பின்
மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டே இருங்கள்.
ஓம்சாந்தி