28.06.2020    காலை முரளி      ஓம் சாந்தி   அவ்யக்த பாப்தாதா,

ரிவைஸ்    18.02.1986    மதுபன்


 

நிரந்தர சேவாதாரி மற்றும் நிரந்தர யோகி ஆகுங்கள்

 

இன்று ஞானக் கடலான தந்தை தனது ஞான கங்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஞானக் கடலிருந்து உருவான ஞான கங்கைகள் எப்படி மற்றும் எங்கெல்லாம் சென்று பாவனமாக்கி (தூய்மை) தற்பொழுது கடல் மற்றும் கங்கையின் சந்திப்பு செய்து கொண்டிருக்கிறீர்கள். இது கங்கை, கடலின் சந்திப்பாகும். இந்த மேளாவில் நாலாபுறங்களிலும் உள்ள கங்கைகள் வந்து சேர்ந்து விட்டீர்கள். பாப்தாதாவும் ஞான கங்கைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார். ஒவ்வொரு கங்கையிடத்திலும் பதீத உலகை, பதீத மனிதர்களை பாவனமாக ஆக்கியே தீருவோம் என்ற திட நிச்சயம் மற்றும் போதை இருக்கிறது. இந்த நிச்சயம் மற்றும் போதையினால் ஒவ்வொருவரும் சேவைக் களத்தில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். விரைவாக மாற்றத்திற்கான காரியம் முடிவடைந்து விட வேண்டும் என்ற ஆர்வம் மனதில் இருக்கிறது. ஞான கங்கைகள் அனைவரும் ஞானக் கடலுக்குச் சமமாக விஷ்வ கல்யாணகாரி, வரதானி மற்றும் மகாதானி, கருணையுள்ளமுடைய ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். ஆகையால் ஆத்மாக்களின் துக்கம், அசாந்தியின் ஓசைகளை அனுபவம் செய்து, அவர்களது துக்கம், அசாந்தியை மாற்றக் கூடிய சேவையை தீவிர வேகத்தில் செய்யக் கூடிய ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. துக்க ஆத்மாக்களின் மனக் குமுறல் கேட்டு கருணை வருகிறது அல்லவா! அனைவரும் சுகமானவர்களாக ஆகி விட வேண்டும் என்ற அன்பு ஏற்படுகிறது. சுகத்தின் கிரணங்கள், அமைதியின் கிரணங்கள், சக்தியின் கிரணங்கள் உலகிற்குக் கொடுப்பதற்கு நிமித்தமாக ஆகியிருக்கிறீர்கள். ஆரம்பத்திலிருந்து இன்று வரை ஞான கங்கைகளின் சேவையானது எந்த அளவிற்கு மாற்றம் ஏற்படுத்துவதற்கு நிமித்தமாக இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுதும் குறுகிய காலத்தில் அநேக ஆத்மாக்களுக்கு சேவை செய்ய வேண்டும். 50 ஆண்டுகளுக்குள் உள்நாடு, அயல்நாட்டில் சேவைக்கான அஸ்திவாரம் மிக நன்றாகப் போட்டிருக்கிறீர்கள். நாலா புறங்களிலும் சேவை நிலையங்களை உருவாக்கியிருக்கிறீர்கள். ஓசை பரப்பக் கூடிய சாதனங்களை வித விதமான ரூபத்தில் பயன்படுத்துகின்றீர்கள். இதுவும் சரியாகவே செய்திருக் கிறீர்கள். உள்நாடு, அயல்நாடுகளில் காணாமல் போன குழந்தைகளின் குழு உருவாகியிருக்கிறது மற்றும் உருவாகிக் கொண்டிருக்கும். இப்போது வேறு என்ன செய்ய வேண்டும்? ஏனெனில் இப்போது விதியையும் அறிந்து கொண்டீர்கள். அநேக சாதனங்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் மற்றும் சேர்த்திருக்கிறீர்கள். சுய ஸ்திதி, சுய முன்னேற்றம் இதன் மீதும் கவனம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் மற்றும் ஏற்படுத்துகிறீர்கள். இப்போது பாக்கி என்ன இருக்கிறது? ஆரம்பத்தில் ஆதி இரத்தினங்கள் ஆர்வம், உற்சாகத்துடன் உடல், மனம், பொருள், நேரம், சம்பந்தம், இரவு-பகல் அனைத்தையும் தந்தைக்கு சமர்பணம் செய்தனர், அந்த ஆர்வம், உற்சாகம் நிறைந்த சமர்பணத்தின் பலனாக சேவையில் சக்திசாலி ஸ்திதியை கண் கூடாகப் பார்த்தீர்கள். சேவை ஆரம்பமான போது, சேவையின் ஆரம்பம் மற்றும் ஸ்தாபனையின் ஆரம்பம் இரண்டு கால கட்டத்திலும் இந்த விசேஷத்தைப் பார்த்தீர்கள். ஆதியில் பிரம்மா பாபாவை நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் சாதாரண ரூபத்தில் பார்த்தீர்களா அல்லது கிருஷ்ணர் ரூபத்தில் பார்த்தீர்களா? சாதாரண ரூபத்தில் பார்த்தாலும் தென்படவில்லை, இந்த அனுபவம் இருக்கிறது அல்லவா! இவர் தாதா என்று நினைத்திருப்பீர்களா? நடந்தாலும், காரியங்கள் செய்யும் போதும் கிருஷ்ணராக அனுபவம் செய்தீர்கள். இவ்வாறு செய்தீர்கள் அல்லவா! ஆரம்பத்தில் பிரம்மா பாபாவிடம் இந்த விசேஷத்ûப் பார்த்தீர்கள், அனுபவம் செய்தீர்கள். மேலும் சேவையின் ஆரம்பத்தில் எங்கு சென்றாலும் அனைவரும் தேவிகளாகத் தான் அனுபவம் செய்தனர். தேவிகள் வந்திருக்கின்றனர் என்ற வார்த்தை தான் அனைவரும் கூறினர். இவர்கள் ஆன்மீகமானவர்கள் என்ற வார்த்தை தான் அனைவரின் வாயிலிருந்தும் வெளிப்பட்டது. இவ்வாறு தான் அனுபவம் செய்தனர் அல்லவா? தேவிகள் என்ற இந்த பாவனை தான் அனைவரையும் ஈர்ப்பு செய்து சேவையை அதிகப்படுத்துவதற்கு நிமித்தமானது. ஆக ஆரம்பத்திலும் விடுபட்ட நிலையின் (நியாரா) விசேஷம் இருந்தது. சேவையின் ஆரம்பத்திலும் விடுபட்ட நிலை, தேவிகள் என்ற விசேஷம் இருந்தது. இப்போது கடைசியிலும் அதே ஒளி மற்றும் ஜொலிப்பின் ரூபத்தை அனுபவம் செய்வார்கள். அப்போது தான் பிரத்டசயதா என்ற முரசு ஒலிக்கும். இப்போது பாக்கி இருக்கும் சிறிது காலத்தில் நிரந்தர யோகி, நிரந்தர சேவாதாரி, நிரந்தர சாட்சாத்கார சொரூபம், நிரந்தர சாட்சாத் பாபா என்ற விதியின் மூலம் வெற்றியைப் பலனாக அடைவார்கள். பொன்விழா கொண்டாடியிருக்கிறீர்கள் எனில், கோல்டன் உலகின் சாட்சாத்கார சொரூபம் வரை சென்றடைந்திருக்கிறீர்கள். பொன்விழா கொண்டாடி யதில் அனைவரும் சாட்சாத் தேவியின் அனுபவம் செய்தனர், தேவியாக அமர்ந்தவர்களும், பார்ப்பவர்களும் அனுபவம் செய்தனர். நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் இப்போது இதே அனுபவத்தை சேவையில் செய்வித்துக் கொண்டிருக்க வேண்டும். இது தான் கோல்டன் ஜுபிளி கொண்டாடுவதாகும். அனைவரும் கோல்டன் ஜுபிளி கொண்டாடினீர்களா? அல்லது பார்த்தீர்களா? என்ன கூறுவீர்கள்? உங்கள் அனைவருக்கும் கோல்டன் ஜுபிளி அல்லவா! அல்லது சிலருக்கு வெள்ளி விழா, சிலருக்கு தாமிர விழாவாக இருக்கிறதா? அனைவருக்கும் கோல்டன் ஜுப்ளி ஆகும். கோல்டன் ஜுபிளி கொண்டாடுவது என்றால் நிரந்தரமாக கோல்டன் ஸ்திதியுடையவர் களாக ஆவதாகும். இப்போது நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் நான் பரிஸ்தா மற்றும் தேவதை என்ற அனுபவத்தில் செய்யுங்கள். உங்களது இந்த சக்திசாலியான நினைவின் மூலம் மற்றவர்களுக்கும் உங்களது பரிஸ்தா ரூபம் அல்லது தேவி தேவதா ரூபம் மட்டுமே தென்படும். கோல்டன் ஜுபிளி கொண்டாடி இருக்கிறீர்கள் எனில், இப்போது நேரம் மற்றும் சங்கல்பத்தை சேவையில் அர்ப்பணம் செய்யுங்கள். இப்போது இந்த சமர்ப்பண விழா கொண்டாடுங்கள். சுயத்தின் சிறிய சிறிய விசயங்களுக்காக அதாவது உடல், மனம், சாதனங்கள், சம்பந்தங்கள் போன்றவைகளுக்காக தனது நேரம் மற்றும் சங்கல்பத்தை பயன்படுத்தாதீர்கள். சேவையில் பயன்படுத்துவது என்றால் சுய முன்னேற்றத்திற்கான பரிசு தானாகவே பலனாக கிடைக்கும். இப்போது தனக்காக நேரத்தைப் பயன்படுத்துவதை மாற்றம் செய்யுங்கள். பக்தர்கள் சுவாசத்திற்கு சுவாசம் நாமம் ஜெபிப்பதற்கு முயற்சி செய்வது போல் சுவாசத்திற்கு சுவாசம் சேவையில் ஆர்வம் இருக்க வேண்டும். சேவையில் மூழ்கியிருக்க வேண்டும். விதாதா ஆகுங்கள், வரதாதா ஆகுங்கள். நிரந்தர மகாதானி ஆகுங்கள். 4 மணி நேரம், 6 மணி நேர சேவாதாரி அல்ல. இப்போது விஷ்வ கல்யாணகாரி என்ற மேடையில் இருக்கிறீர்கள். ஒவ்வொரு நேரமும் உலக நன்மைக்காக சமர்ப்பணம் செய்யுங்கள். உலக நன்மையில் சுய நன்மையும் தானாகவே அடங்கியிருக்கும். சங்கல்பம் மற்றும் விநாடி சேவையில் பிஸியாக வைத்துக் கொள்வீர்களோ, நேரம் இல்லையோ, பிறகு மாயைக்கும் உங்களிடம் வருவதற்கு நேரம் இருக்காது. பிரச்சனைகள் சமாதான சொரூபமாக மாறிவிடும். சமாதான சொரூபமுடைய சிரேஷ்ட ஆத்மாக்களிடம் பிரச்சனைகள் வருவதற்கான தைரியம் இருக்காது. சேவையின் ஆரம்பத்தில் தேவியின் ரூபம், சக்தியின் ரூபத்தின் காரணத்தினால் பதீத திருஷ்டியுடன் வந்தவர்களும் மாறி பாவனம் ஆகக் கூடிய மனிதர்களாக ஆகிவிட்டனர். எவ்வாறு பதீதமானவர்கள் உங்கள் முன் வந்து மாறி விட்டார்களோ, அவ்வாறு பிரச்சனைகளும் உங்கள் முன் வந்து சமாதான ரூபமாக மாறி விடும். இப்போது தனது சம்ஸ்கார மாற்றத்தில் நேரத்தைப் பயன்படுத்தாதீர்கள். உலக நன்மைக்கான சிரேஷ்ட பாவனையின் மூலம் சிரேஷ்ட விருப்பத்திற்கான சம்ஸ்காரத்தை வெளிப்படுத்துங்கள். இந்த சம்ஸ்கார மாற்றத்திற்கு சிரேஷ்ட நேரத்தை வீணாக்காதீர்கள். இந்த சிரேஷ்ட சம்ஸ்காரத்திற்கு முன் எல்லைக்குட்பட்ட சன்ஸ்காரம் தானாகவே அழிந்து விடும். இப்போது சண்டையிடுவதில் நேரத்தை வீணாக்காதீர்கள். வெற்றியாளருக்கான சம்ஸ்காரத்தை வெளிப்படுத்துங்கள். வெற்றி சம்ஸ்காரமுடையவர்கள் முன் எதிரி தானாகவே அழிந்து விடும், ஆகையால் உடல், மனம், பொருள் நிரந்தரமாக சேவையில் சமர்ப்பணம் செய்யுங்கள் என்று கூறப்படுகிறது. மனதினால் செய்தாலும், வார்த்தைகளினால் செய்தாலும், கர்மனா சேவை செய்தாலும் சரியே, ஆனால் சேவையின்றி வேறு எந்த பிரச்சனைகளிலும் செல்லாதீர்கள். தானம், வரதானம் கொடுத்தால் தனது கிரஹச்சாரம் தானாகவே அழிந்து விடும். அழிவற்ற நங்கூரம் போடுங்கள், ஏனெனில் நேரம் குறைவாக இருக்கிறது, மேலும் ஆத்மாக்களின் சேவை, வாயுமண்டலம், இயற்கை, பூத ஆத்மாக்களின் போன்ற அனைத்திற்கும் சேவை செய்ய வேண்டும். அலையக் கூடிய அந்த ஆத்மாக்களுக்கும் அடைக்கலம் கொடுக்க வேண்டும். முக்திதாமத்திற்கு அனுப்பி வைப்பீர்கள் அல்லவா! அவர்களுக்கு வீடு கொடுப்பீர்கள் அல்லவா! ஆக இப்போது எவ்வளவு சேவை செய்ய வேண்டியிருக்கிறது! ஆத்மாக்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது! ஒவ்வொரு ஆத்மாவிற்கும் முக்தி அல்லது ஜீவன்முக்தி கொடுத்தே ஆக வேண்டும். அனைத்தையும் சேவையில் பயன்படுத்தி சிரேஷ்ட பலனை அடையுங்கள். கடின உழைப்பின் பலனை அடைய வேண்டாம். சேவையின் பலன் கடின உழைப்பைப் போக்கி விடும்.

 

பாப்தாதா ரிசல்ட் பார்த்த பொழுது பலர் தனது சம்ஸ்காரங்களை மாற்றிக் கொள்வதிலேயே நேரம் கொடுக்கின்றனர். 50 ஆண்டு காலம் ஆகியிருந்தாலும், ஒரு மாதம் ஆகியிருந்தாலும் ஆரம்பத்திலிருந்து இன்று வரை பரிவர்த்தனை செய்யும் சம்ஸ்காரம் மூல ரூபமாக இருக்கிறது, மேலும் அதே மூல சம்ஸ்காரம் வித விதமான ரூபத்தில் பிரச்சனையாக வருகிறது. உதாரணத்திற்கு சிலருக்கு புத்திக்கான அபிமானத்தின் சம்ஸ்காரம் இருக்கும், சிலருக்கு வெறுப்பிற்கான சம்ஸ்காரம் இருக்கிறது அல்லது சிலருக்கு மனம் உடைந்து போகக் கூடிய சம்ஸ்காரம் இருக்கும். சம்ஸ்காரம் அது தான், ஆனால் ஆரம்பத்திலிருந்து இன்று வரை வித விதமான நேரத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், ஒரு மாதம் ஆகியிருந் தாலும்! இவ்வாறு வித விதமான ரூபத்தில் பிரச்சனையாக வரக் கூடிய அந்த மூல சம்ஸ்காரத்தில் அதிக நேரம் பயன்படுத்தியிருக்கிறீர்கள், சக்திகளையும் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறீர்கள். இப்போது தாதா, விதாதா, வரதாதா என்ற சக்திசாலியான சம்ஸ்காரத்தை வெளிப்படுத்துங்கள். ஆக இந்த உயர்ந்த சம்ஸ்காரம் பலவீன சம்ஸ்காரத்தை தானாகவே அழித்து விடும். இப்போது சம்ஸ்காரத்தை அழிப்பதில் நேரத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஆனால் சேவையின் பலன் மூலம், பலனின் சக்தியின் மூலம் தானாகவே அழிந்து விடும். நல்ல ஸ்திதியுடன் சேவையில் பிசியாக இருக்கும் போது சேவையின் குஷியினால் அந்த நேரத்தில் பிரச்சனைகள் தானாகவே மறைந்து விடுகிறது என்ற அனுபவமும் இருக்கிறது. ஏனெனில் பிரச்சனைகளைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமே இல்லை. ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு சங்கல்பத்திலும் சேவையில் பிசியாக இருந்தால் பிரச்சனைகளின் நங்கூரம் துண்டிக்கப்பட்டு விடும், தூரமாகி விடும். நீங்கள் மற்றவர்களுக்கு வழி காட்டுவதில், தந்தையின் பொக்கிஷங்களைப் கொடுப்பதற்கு நிமித்த உதவியாளர் ஆகின்றபோது பலவீனங்கள் தானாகவே தூரமாகி விடும். இப்போது என்ன செய்ய வேண்டும்? என்பதைப் புரிந்து கொண்டீர்களா? இப்போது எல்லையற்று சிந்தியுங்கள், எல்லையற்ற காரியத்தைப் பற்றி சிந்தியுங்கள். திருஷ்டி மூலம் கொடுங்கள், விருத்தியின் மூலம் கொடுங்கள், வார்த்தைகளினால் கொடுங்கள், சகவாசத்தின் மூலம் கொடுங்கள், வைப்ரேஷன் மூலம் கொடுங்கள், ஆனால் கொடுத்தே ஆக வேண்டும். பக்தியிலும் இந்த நியமம் இருக்கிறது - எந்த ஒரு பொருளில் குறை யிருக்கிறதோ அதை தானம் செய்யுங்கள் என்று கூறுவார்கள். தானம் செய்வதன் மூலம் கொடுப்பது, அடைவது ஏற்பட்டு விடுகிறது. கோல்டன் ஜுப்ளி என்றால் என்ன என்று புரிந்து கொண்டீர்களா? கொண்டாடி விட்டோம் என்று நினைக்காதீர்கள். 50 ஆண்டு கால சேவை முடிவடைந்து விட்டது, இப்போது புதிதாக செய்யுங்கள். சிறியவர்கள்-பெரியவர்கள், ஒரு நாள் வந்தவர்கள் அல்லது 50 ஆண்டு காலமாக இருப்பவர்கள் அனைவரும் சமாதான சொரூபம் ஆகுங்கள். என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டீர்களா? பொதுவாக 50 ஆண்டுகள் கழித்து வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். கோல்டன் ஜுப்ளி என்றால், மாற்றத்திற்கான ஜுப்ளி, சம்பன்னம் (முழுமை) ஆகக் கூடிய ஜுப்ளி ஆகும்.

 

சதா விஷ்வ கல்யாணகாரியாகி சக்திசாலியாக இருக்கக் கூடியவர்களுக்கு, சதா வரதானி, மகாதானி ஸ்திதியில் நிலைத்திருக்கக் கூடியவர்களுக்கு, மற்றவர்களுக்கு சமாதான சொரூபமாகி தனது பிரச்சனைகளை எளிதாக அழிக்கக் கூடியவர்களுக்கு, ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு சங்கல்பத்தையும் சேவையில் சமர்பணம் செய்யக் கூடியவர்களுக்கு, இவ்வாறு உண்மையான கோல்ட் விசேஷ ஆத்மாக்களுக்கு, பாப்சமான் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

 

கோல்டன் ஜுப்ளி கொண்டாடும் ஆதி இரத்தினங்களுடன் பாப்தாதாவின் சந்திப்பு

 

ஆரம்பத்திலிருந்து ஆத்மாக்களாகிய நாம் கூடவே இருக்கக் கூடிய மற்றும் துணையாக இருக்கக் கூடிய இரண்டு விசேஷ பாகமும் நமக்குத் கிடைத்திருக்கிறது என்ற விசேஷ குஷி சதா இருக்கிறது. கூடவே இருக்கிறீர்கள் மற்றும் உயிருடன் இருக்கும் வரை பாப்சமான் ஸ்திதியிலும் சதா துணையாக இருக்க வேண்டும். ஆக கூடவே இருக்க வேண்டும் மற்றும் துணையாக இருக்க வேண்டும் - இந்த விசேஷ வரதானம் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கிடைத்திருக்கிறது. அன்பின் மூலம் பிறப்பு ஏற்பட்டது, முன்பு ஞானம் இல்லையல்லவா! அன்பினால் தான் உருவாகியிருக்கிறீர்கள், எந்த அன்பினால் உருவானீர்களோ அதே அன்பு அனைவருக்கும் கொடுப்பதற்கு நிமித்தமாக இருக்கிறீர்கள். எதிரில் யார் வந்தாலும் அனைவரின் மூலம் விசேஷமாக உங்கள் தந்தையின் அன்பின் அனுபவம் செய்ய வேண்டும். உங்கள் மூலம் தந்தையின் சித்திரம் மற்றும் உங்களது நடத்தையின் மூலம் தந்தையின் சரித்திரம் தென்பட வேண்டும். ஒருவேளை யாராவது தந்தையின் சரித்திரம் என்ன? என்று கேட்டால் உங்களது நடத்தைகள் சரித்திரமாக காண்பிக்க வேண்டும், ஏனெனில் சுயம் தந்தையின் சரித்திரத்தைப் பார்த்திருக்கிறீர்கள், கூடவே இருந்த ஆத்மாக்கள் நீங்கள். அது ஒரு தந்தையின் சரித்திரம் மட்டுமல்ல, கோபிகளின் நாயகன் மற்றும் கோபியர்களின் சரித்திரமாகும். தந்தை குழந்தைகளின் துணையுடன் தான் ஒவ்வொரு காரியமும் செய்திருக்கின்றார், தனியாக செய்யவில்லை. குழந்தைகளை சதா முன்னிறுத்தினார். ஆக முன்னிறுத்துவது இதுவும் சரித்திரம் அல்லவா! இப்படிப்பட்ட சரித்திரம் விசேஷ ஆத்மாக்களாகிய உங்கள் மூலம் தென்பட வேண்டும். ஒருபோதும் நான் முன்னால் இருக்க வேண்டும் என்ற சங்கல்பம் ஒருபோதும் தந்தை செய்தது கிடையாது. இதிலும் சதா தியாகியாக இருந்தார், மேலும் இந்த தியாகத்தின் பலனாக அவர் முன்னால் வந்தார். ஒவ்வொரு விசயத்திலும் பிரம்மா பாபா நம்பர் ஒன்னாக ஆனார். ஏன்? முன் வைப்பது என்றால் முன்னால் செல்வதாகும், இந்த தியாக உணர்வின் மூலம். சம்பந்தங்களின் தியாகம், பொருட்களின் தியாகம் - இது ஒன்றும் பெரிய விசயமில்லை. ஆனால் ஒவ்வொரு காரியத்திலும், சங்கல்பத்திலும் மற்றவர்களை முன்னால் வைப்பதற்கான பாவனை. இந்த தியாகம் சிரேஷ்ட தியாகமாக இருந்தது. இதைத் தான் சுய உணர்வை அழித்து விடுவது என்று கூறப்படுகிறது. நான் என்பதை அழித்து விடுவது. ஆக நேரடியாக பாலனை அடைந்தவர்களிடத்தில் விசேஷ சக்திகள் இருக்கிறது. நேரடிப் பாலனையின் சக்தி குறைந்தது கிடையாது. அதே பாலனையை இப்போது மற்றவர்களது பாலனையாக வெளிப் படுத்திக் கொண்டே செல்லுங்கள். விசேஷமானவர்களாகத் தான் இருக்கிறீர்கள். அநேக விசயங்களில் விசேஷ மானவர்களாக இருக்கிறீர்கள். ஆரம்பத்திலிருந்து தந்தையின் கூடவே நடிப்பு நடித்திருக்கிறீர்கள், இது ஒன்றும் குறைந்த விசேஷங்கள் கிடையாது. விசேஷங்கள் பல இருக்கின்றன, ஆனால் விசேஷ ஆத்மாக்களாகிய நீங்கள் தானமும் விசேஷமாக செய்ய வேண்டும். ஞான தானம் அனைவரும் செய்கின்றனர், ஆனால் நீங்கள் தங்களது விசேஷங்களை தானம் செய்ய வேண்டும். தந்தையின் விசேஷங்கள் தான் உங்களது விசேஷங்கள் ஆகும். எனவே அந்த விசேஷங்களைத் தானம் செய்யுங்கள். யார் விசேஷங்களை தானம் செய்வதில் மகாதானியாக இருக்கிறார்களோ அவர்கள் சதா காலத்திற்கும் மகானாக இருப்பார்கள். பூஜ்ய நிலையிலும் சரி, பூஜாரி நிலையிலும் சரி, முழு கல்பத்திலும் மகான்களாக இருப்பர். பிரம்மா பாபாவை பார்த்திருக்கின்றீர்கள் - கடைசியிலும் கலியுகத்தின் கணக்கிலும் மகானாக இருந்தார் அல்லவா! ஆக ஆரம்பத்திலிருந்து கடைசி வரை இப்படிப்பட்ட மகாதானிகள் மகான்களாக இருப்பார்கள். நல்லது, உங்களைப் பார்த்து அனைவரும் குஷியடைந்தனர் எனில் குஷி கொடுத்திருக்கிறீர்கள் அல்லவா! மிகவும் நன்றாகக் கொண்டாடினீர்கள். அனவைரையும் மகிழ்வித்தீர்கள். பாப்தாதா விசேஷ ஆத்மாக்களின் விசேஷ காரித்தைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றார். அன்பு மாலை தயாராக இருக்கிறது அல்லவா! முயற்சியாளர்களின் மாலை, சம்பூர்ணமானவர்களின் மாலை - இது சரியான நேரத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 

யார் எந்த அளவிற்கு சம்பூர்ண பரிஸ்தா என்று அனுபவம் செய்கிறார்களோ அவர்கள் மாலையில் மணியாக வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் தகுந்த நேரத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அன்பு என்ற மாலை உறுதியாக இருக்கிறது அல்லவா! அன்பு மாலையின் மணிகள் சதா அமரர்களாக இருக்கின்றனர், அழிவற்றவர்களாக இருக்கின்றனர். அன்பு என்ற விசயத்தில் அனைவரும் பாஸ் மார்க் அடையக் கூடியவர்கள். மற்றபடி சமாதான சொரூபத்தின் மாலை தயாராக வேண்டும். சம்பூர்ணம் என்றால் சமாதான சொரூபம். பிரம்மா பாபாவிடம் பிரச்சனையை கொண்டு செல்பவர்களும் பிரச்சனையை மறந்து விடுவதை பார்த்திருக்கிறீர்கள். எதைக் கொண்டு வந்தோம், எதைக் கொண்டு செல்கின்றோம்! இந்த அனுபவம் செய்திருந்தனர் அல்லவா! பிரச்சனைகளுக்கான விசயங்கள் பேசுவதற்கான தைரியமின்றி இருந்தனர், ஏனெனில் சம்பூர்ண நிலைக்கு முன் பிரச்சனைகள் என்பது குழந்தைகள் விளையாட்டாக அனுபவம் செய்தார்கள். அதனால் தான் அழிந்து விட்டது. இது தான் சமாதான சொரூபம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் சமாதான சொரூபம் ஆகிவிட்டால் பிறகு பிரச்சனைகள் எங்கு செல்லும்? அரை கல்பத்திற்கு விடை பெறும் விழா நடந்து விடும். இப்போது உலக பிரச்சனைகளுக்கு சமாதானம் தான் பரிவர்த்தனை ஆகும். ஆக எந்த கோல்டன் ஜுப்ளி கொண்டாடினீர்கள்? வளைந்து கொடுக்கும் ஜுப்ளி கொண்டாடினீர்கள். எது வளைந்து கொடுக்கிறார்களோ அதை எந்த ரூபத்தில் கொண்டு வர விரும்பினாலும் அந்த ரூபத்தில் கொண்டு வர முடியும். வளைந்து கொடுப்பது என்றால் அனைவருக்கும் பிரியமானவர்களாக ஆவதாகும். இருப்பினும் அனைவரின் பார்வை நிமித்தமாக இருப்பவர்களின் மீது இருக்கிறது. நல்லது.

 

வரதானம்:

சிரேஷ்டதாவின் ஆதாரத்தில் அருகாமையின் மூலம் சிரேஷ்ட பிராப்தியை உருவாக்கக் கூடிய விசேஷ நடிப்பு நடிப்பவர் ஆகுக.

 

இந்த மறுபிறவி வாழ்க்கையில் சிரேஷ்டதாவிற்கு ஆதாரம் இரண்டு விசயங்களாகும் - 1) சதா பரோபகாரியாக இருப்பது, 2) பால பிரம்மச்சாரியாக இருப்பது. எந்த குழந்தைகள் இந்த இரண்டு விசயங்களிலும் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை உறுதியாக இருக்கிறார்களோ, எந்த வகையிலும் தூய்மை அடிக்கடி துண்டிக்கப்படவில்லையோ அதாவது உலகத்திற்கு மற்றும் பிராமண குடும்பத்தினருக்கும் சதா உபகாரிகளாக இருக்கிறார்களோ இப்படிப்பட்ட விசேஷ நடிப்பு நடிப்பவர்கள் சதா பாப்தாதாவின் அருகாமையில் இருப்பர். மேலும் அவர்களது பிராப்தியானது முழு கல்பத்திற்கும் சிரேஷ்டமானதாக ஆகிவிடும்.

 

சுலோகன்:

எண்ணங்கள் வீணானதாக இருந்தால் மற்ற அனைத்து பொக்கிஷங்களும் விணாகி விடும்.

 

ஓம்சாந்தி