15.06.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! நாம் 84
பிறவிகளின் சக்கரத்தை முடித்து விட்டோம் என்பது உங்களின்
நினைவிற்கு வந்திருக்கிறாது. இப்போது தங்களுடைய வீடு
சாந்திதாமத்திற்குச் செல்ல சிறிது நேரம் தான் இருக்கிறது.
கேள்வி:
எந்த குழந்தைகளுக்கு வீட்டிற்கு
போக வேண்டும் என்ற நினைவிருக்கிறதோ அவர்களின் அடையாளம் என்ன?
பதில்:
அவர்கள் பழைய உலகத்தை பார்த்துக்
கொண்டிருந்தாலும் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு எல்லையற்ற
வைராக்கியம் இருக்கும். வேலை தொழில் செய்து கொண்டிருந்தாலும்
இலேசாக இருப்பார்கள். இங்கு அங்கு என்று வீணான வெளி விஷயங்களில்
தனது நேரத்தை வீணாக்க மாட்டார்கள். தன்னை இந்த உலகத்தின்
விருந்தினர் என நினைப்பார்கள்.
ஓம் சாந்தி.
சங்கமயுக பிராமண குழந்தைகளாகிய
நீங்கள் மட்டும் தான் நாம் சிறிது நேரத்திற்கு இந்த பழைய
உலகத்தின் விருந்தினர் எனப் புரிந்து கொள்கிறீர்கள். உங்களுடைய
உண்மையான வீடு சாந்திதாமம் ஆகும். மனிதர்கள் மனதிற்கு அமைதி
வேண்டும் என்று அதைத் தான் மிகவும் நினைக்கிறார்கள். ஆனால் மனம்
என்றால் என்ன, அமைதி என்றால் என்ன, நமக்கு எங்கிருந்து
கிடைக்கும் என்று எதையும் புரிந்துக் கொள்ள வில்லை. இப்போது
நம்முடைய வீட்டிற்குச் செல்வதற்கு சிறிது காலம் தான் இருக்கிறது
எனப் புரிந்து கொள்கிறீர்கள். முழு உலகத்தில் இருக்கும்
மனிதர்கள் வரிசைக்கிரமத்தில் அங்கே செல்வார்கள். அதுவே
சாந்திதாமம் ஆகும். இது துக்க தாமம் ஆகும். இதை நினைவு செய்வது
எளிதல்லவா? வயதானவர்களாக இருந்தாலும், இளைஞர்களாக இருந்தாலும்,
யாராக இருந்தாலும் இதை நினைக்க முடியும் அல்லவா? இதில் முழு
சிருஷ்டியின் ஞானமும் வருகிறது. அனைத்து விவரமும் புத்தியில்
வருகிறது. இப்போது நீங்கள் சங்கம யுகத்தில்
அமர்ந்திருக்கிறீர்கள். நாம் நாடகத்தின் படி சாந்திதாமத்திற்கு
சென்று கொண்டிருக்கிறோம் என்பது புத்தியில் இருக்கிறது. இது
புத்தியில் இருப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது
நினைவும் இருக்கும். நமக்கு 84 பிறவிகளின் நினைவு வந்து விட்டது.
அந்த பக்திமார்க்கம் தனிப்பட்டதாகும். இது ஞான மார்க்கத்தின்
விஷயம் ஆகும். இனிமையான குழந்தைகளே, இப்போது உங்களுடைய வீடு
நினைவிற்கு வருகிறதா? எவ்வளவு கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.
இவ்வளவு விஷயங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் எனப் புரிய
வைக்கின்றார். இப்போது நாம் சாந்திதாமத்திற்குச் செல்வோம்.
பிறகு சுகதாமத்திற்கு வருவோம். தந்தை வந்திருப்பதே, புதிய
உலகத்திறக்கு அழைத்துச் செல்வதற்காக. சுகதாமத்தில் ஆத்மாக்கள்
சுகம் மற்றும் அமைதியில் இருக்கிறது. சாந்தி தாமத்தில் சாந்தி
மட்டும் தான் இருக்கிறது. இங்கேயோ நிறைய குழப்பங்கள் நடக்கிறது
அல்லவா! இங்கே மதுபனிலிருந்து நீங்கள் உங்களுடைய வீட்டிற்குச்
செல்கிறீர்கள் என்றால், புத்தி வீண் விஷயங்களில், உங்களுடைய
தொழில் போன்றவைகளில் செல்லும். இங்கேயோ அந்தத் தொல்லை இல்லை.
ஆத்மாக்களாகிய நாம் சாந்தி தாமத்தைச் சார்ந்தவர்கள். இங்கே
நடிகர்களாக இருக்கின்றோம். நாம் நடிகர்கள் என்பது எப்படி என
வேறு யாருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கும் தந்தை
தான் வந்து படிக்க வைக்கின்றார். கோடியில் ஒரு சிலர் தான்
படிக்கிறார்கள். அனைவரும் படிக்க மாட்டார்கள். நீங்கள் இப்போது
எவ்வளவு புத்திசாலியாகியிருக்கிறீர்கள்! முதலில் முட்டாளாக
இருந்தீர்கள். இப்போது பாருங்கள் எவ்வளவு சண்டை சச்சரவு
நடந்துக் கொண்டிருக்கிறது! இதற்கு என்ன கூறலாம். அனைவரும்
தங்களுக்குள் சகோதரர்கள் என்கின்றனர். அதை மறந்து விட்டனர்.
சகோதரன் சகோதரனை கொலை செய்வார்களா? ஆம், சொத்திற்காக கொலையும்
செய்கிறார்கள். நாம் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள்
சகோதரர்கள் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
ஆத்மாக்களாகிய நமக்கு தந்தை வந்து புரிய வைக்கிறார் என நடை
முறையில் இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். 5000
வருடத்திற்கு முன்பு போலவே நம்மைப் படிக்க வைக்கின்றார்.
ஏனென்றால் அவரே ஞானக் கடல் ஆவார். இந்த படிப்பை வேறு யாரும்
அறியவில்லை. பாபா தான் சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர் என்பது
கூட குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். சிருஷ்டியை படைக்கக்
கூடியவர் என்று கூற மாட்டார்கள், சிருஷ்டி அனாதியாக இருக்கிறது.
சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர் எனலாம். அங்கே வேறு எந்த
கண்டமும் இல்லை. இங்கே நிறைய கண்டங்கள் இருக்கிறது. ஒரு
காலத்தில் ஒரே தர்மம் தான் இருந்தது. ஒரே கண்டம் தான் இருந்தது.
பிறகு பல்வேறு தர்மங்கள் வந்திருக்கிறது.
பல்வேறான தர்மங்கள் எப்படி வருகிறது என்பது இப்போது புத்தியில்
இருக்கிறது. முதன் முதலில் ஆதிசனதன தேவி தேவதா தர்மம்
இருந்தது. சநாதன தர்மம் என்று கூட இங்கே தான் சொல்கிறார்கள்.
ஆனால் அர்த்தத்தைப் புரிந்துக் கொள்ளவில்லை. நீங்கள் ஆதிசநாதன
தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள். பதீதமாக மட்டும்
மாறியிருக்கிறீர்கள். சதோபிரதானத்திலிருந்து சதோ, இரஜோ தமோ
ஆகியிருக்கிறீர்கள். நாம் ஆதி சநாதனா தேவி தேவதா தர்மத்தினர்,
மிகவும் பாவனமாக இருந்தோம். இப்போது பதீதமாகிவிட்டோம் என
புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் பாபாவிடமிருந்து பரிசுத்தமான
உலகத்தின் அதிபதியாவதற்கான சொத்தை அடைந்தீர்கள். நாம் முதன்
முதலில் தூய்மையான இல்லற தர்மத்தினராக இருந்தோம் எனப் புரிந்து
கொள்கிறீர்கள். இப்போது நாடகத்தின் படி இராவண இராஜ்யத்தில்
பதீத இல்லற மார்க்கத்தினர் ஆகிவிட்டோம். ஓ, பதீத பாவனா எங்களை
சுகதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என நீங்கள் தான்
அழைத்தீர்கள். இது நேற்றைய விஷயம் ஆகும். நேற்று நீங்கள்
தூய்மையாக இருந்தீர்கள். இன்று பதீதமாகி விட்டீர்கள். ஆத்மா,
பாபா எங்களை வந்து தூய்மையாக்குங்கள் என அழைக்கிறது. இப்போது
இது கடைசி பிறவி, தூய்மையாகுங்கள், பிறகு 21 பிறவிகளுக்கு
மிகவும் சுகமாகி விடுவீர்கள் என பாபா கூறுகிறார். பாபா மிகவும்
நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறார். கெட்ட
விஷயங்களிலிருந்து விடுவிக்கிறார். நீங்கள் தேவதையாக
இருந்தீர்கள் அல்லவா? இப்போது மீண்டும் மாற வேண்டும்,
பவித்ரமாகுங்கள். எவ்வளவு எளிதாக இருக்கிறது! மிகவும் உயர்ந்த
வருமானம் ஆகும். சிவபாபா வந்திருக்கின்றார். ஒவ்வொரு 5000
வருடத்திற்குப் பிறகு வருகின்றார் என்பது குழந்தைகளின்
புத்தியில் இருக்கிறது. பழைய உலகம் நிச்சயம் புதியதாகிறது. இதை
வேறு யாரும் சொல்ல முடியாது. சாஸ்திரங்களில் கலியுகத்தின்
ஆயுளை மிகவும் நீண்டதாக மாற்றி விட்டார்கள். இது அனைத்தும்
நாடகத்தின் விதியாகும்.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் பாவத்திலிருந்து விடுபடுவதற்காக
முயற்சி செய்கிறீர்கள். வேறு எந்த பாவமும் செய்யக் கூடாது
என்பதில் கவனம் இருக்கட்டும். தேக உணர்வில் வருவதால் தான் மற்ற
விகாரங்கள் வருகின்றது. இதன் மூலமாக பாவங்கள் நடக்கிறது. ஆகவே,
பூதங்களை விரட்ட வேண்டியிருக்கிறது. இந்த உலகத்தில் எந்தப்
பொருளின் மீதும் பற்று இருக்கக் கூடாது. இந்தப் பழைய உலகத்தின்
மீது வைராக்கியம் வர வேண்டும். பார்க்கிறீர்கள் பழைய வீட்டில்
இருக்கிறீர்கள். ஆனால் புத்தி புது உலகத்தில் இருக்கிறது.
புதிய வீட்டிற்குச் செல்லும் போது புதியதைத் தான்
பார்க்கிறீர்கள். பழைய வீடு அழியும் வரை பழையதை இந்தக்
கண்களில் பார்த்துக் கொண்டிருந்தாலும் புதியதை நினைக்க
வேண்டும். பின்னால் வருத்தப்படக் கூடிய அளவிற்கு எந்தக்
காரியமும் செய்யக் கூடாது. இன்று இன்னாருக்கு துக்கம்
கொடுத்தேன், இந்த பாவம் செய்தேன். பாபா, இது பாவமா என
பாபாவிடம் கேட்கலாம். ஏன் குழப்பம் அடைய வேண்டும்? கேட்கவில்லை
என்றால் குழம்பிக் கொண்டே இருக்க வேண்டியது தான். பாபாவிடம்
கேட்டு விட்டால் பாபா உடனே இலேசாக்கி விடுவார். நீங்கள்
மிகவும் சுமையோடு இருக்கிறீர்கள். பாவங்களின் சுமை நிறைய
இருக்கிறது. பிறகு 21 பிறவி களுக்கு பாவங்களில் இருந்து
இலேசாகி விடுவீர்கள். பல பிறவிகளின் சுமை தலை மீது இருக்கிறது.
எவ்வளவு நினைவில் இருக்கிறீர்களோ இலேசாகிக் கொண்டே போவீர்கள்.
அழுக்கு நீங்கிக் கொண்டே போகும். குஷி அதிகரித்துக் கொண்டே
இருக்கும். சத்யுகத்தில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியில்
இருந்தீர்கள். பிறகு குறைந்துக் கொண்டே வந்து உங்களுடைய
அனைத்து குஷியும் மறைந்து விட்டது. சத்யுகத்தில் இருந்து
கலியுகம் வரை இந்தப் பயணத்தில் 5000 வருடங்கள் ஆகிறது.
சொர்க்கத்தில் இருந்து நரகத்தில் வருவதற்கான யாத்திரை பற்றி
இப்போது தெரிகிறது. நாம் சொர்க்கத்திலிருந்து நரகத்திற்கு
எப்படி வந்தோம் என்பது தெரிகிறது. இப்போது மீண்டும் நீங்கள்
நரகத்திலிருந்து சொர்க்கத்திற்குச் செல்கிறீர்கள். ஒரு
நொடியில் ஜீவன் முக்தி!, பாபாவை அறிந்துக் கொள்ள வேண்டும்.
பாபா வந்திருக்கிறார் என்றால் நிச்சயமாக நம்மை சொர்க்கத்திற்கு
அழைத்துச் செல்வார். குழந்தை பிறந்தது, சொர்க்கத்திற்கு
அதிபதியாகி விட்டது. பாபாவினுடையவராகி விட்டால் பிறகு போதை ஏற
வேண்டும் அல்லவா? ஏன் இறங்க வேண்டும்? நீங்கள் பெரியவர்கள்
அல்லவா? எல்லையற்ற தந்தையின் குழந்தைகளாகி விட்டீர்கள் என்றால்
எல்லையற்ற இராஜ்யத்தின் மீது உங்களுக்கு உரிமை இருக்கிறது.
ஆகவே தான் அதீந்திரிய சுகத்தைப் பற்றி கேட்க வேண்டும் என்றால்
கோபி வல்லபரின் கோப, கோபிகைகளிடம் கேளுங்கள் என்று
பாடப்பட்டிருக்கிறது. வல்லபர் பாபா அல்லவா? அவரிடம் கேளுங்கள்.
வரிசைக்கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப குஷியின் அளவு
அதிகரிக்கும். சிலரோ உடனே தனக்குச் சமமாக மாற்றுவார்கள்.
குழந்தையின் வேலையே இது தான். அனைத்தையும் மறந்து தன்னுடைய
இராஜ்யத்தின் நினைவு ஏற்படுத்த வேண்டும். நீங்கள் உலகத்திற்கே
அதிபதியாக இருந்தீர்கள். இப்போது கலியுகம் பழைய உலகம் ஆகும்
புதிய உலகமாக மாறும். இப்பொழுது ஒவ்வொரு 5000 வருடங்களுக்குப்
பிறகும் தந்தை பாரதத்தில் தான் வருகிறார் என்பது குழந்தைகளின்
புத்தியில் உள்ளது. அவருடைய ஜெயந்தியும் கொண்டாடுகிறார்கள்.
தந்தை வந்து உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுத்து விட்டுச்
செல்கிறார். பிறகு நினைக்க வேண்டியது இல்லை என்பது
உங்களுக்குத் தெரியும். பிறகு பக்தி ஆரம்பமாகும் போது
நினைக்கிறீர்கள். ஆத்மா அனுபவித்திருக்கிறது, எனவே பாபா,
மீண்டும் வந்து சாந்திதாமம், சுகதாமத்திற்கு அழைத்துச்
செல்லுங்கள் என அழைக்கிறது. அவர் நம்முடைய தந்தையாகவும்,
ஆசிரியராகவும், குருவாகவும் இருக்கிறார் என இப்பொழுது நீங்கள்
அறிகிறீர்கள். சிருஷ்டியின் முதல் இடை கடையின் சக்கரம், 84
பிறவிகளின் ஞானம் இப்பொழுது புத்தியில் இருக்கிறது. பல முறை 84
பிறவிகளை எடுத்திருக்கிறீர்கள், எடுத்துக் கொண்டே
இருப்பீர்கள். இதற்கு முடிவு என்பதே இல்லை. உங்களுடைய
புத்தியில் அடிக்கடி இந்த சுயதரிசன சக்கரம் நினைவில்
வரவேண்டும். இதுவே மன்மனாபவ. எவ்வளவு தந்தையை நினைக்கிறீர்களோ
அவ்வளவு பாவங்கள் அழியும்.
நீங்கள் கர்மாதீத நிலையை நெருங்கும் பொழுது உங்கள் மூலமாக
எந்தத் தவறும் நடக்காது. இப்பொழுது சிறிய சிறிய விகர்மங்கள்
நடக்கிறது. சம்பூர்ண கர்மாதீத நிலையை இது வரை அடையவில்லை. இந்த
பாபாவும் உங்களுடன் மாணவராக இருக்கிறார். படிக்க வைப்பவர்
சிவபாபா. இவருக்குள் பிரவேசமாகியிருக்கிறார். இவரும் மாணவர்
தான். இது புத்தம் புது விஷயம். இப்பொழுது நீங்கள் தந்தை
மற்றும் சிருஷ்டிச் சக்கரத்தை மட்டும் நினையுங்கள். அது பக்தி
மார்க்கம், இது ஞான மார்க்கம் ஆகும். இரவு பகல் வித்தியாசம்
இருக்கிறது. அங்கே எவ்வளவு ஜால்ரா, மணி போன்றவைகளை
அடிக்கிறார்கள். இங்கே நினைவில் மட்டும் இருக்க வேண்டும்.
ஆத்மா அழிவற்றது, அழிவற்ற சிம்மாசனம் கூட இருக்கிறது. அகால
மூர்த்தி பாபா மட்டும் கிடையாது. நீங்களும் அகால மூர்த்தி
தான். அகால மூர்த்தி ஆத்மா, இந்த புருவ மத்தி சிம்மாசனமாகும்.
நிச்சயமாக புருவமத்தியில் தான் அமர்வார். வயிற்றில்
அமரமாட்டார். அமிர்தசரசில் அழிவற்ற சிம்மாசனம் இருக்கிறதல்லவா?
பொருள் எதுவும் புரிந்து கொள்ளவில்லை. அகால மூர்த்தி என்று
மகிமை மட்டும் பாடுகிறார்கள். அவருடைய அழிவற்ற சிம்மாசனத்தைப்
பற்றி யாருக்கும் தெரியவில்லை. இது தான் சிம்மாசனம் என்பது
உங்களுக்குத் தெரியும். இதில் அமர்ந்து கூறுகின்றார். ஆத்மா
அழிவற்றது. சரீரம் அழியக்கூடியது. இது ஆத்மாவின் அழிவற்ற
சிம்மாசனம் ஆகும். எப்போதும் இது அழிவற்ற சிம்மாசனமாக
இருக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பிறகு
அவர்கள் அந்த சிம்மாசனத்தை உருவாக்கி பெயர்கள் வைத்து
விட்டார்கள். உண்மையில் அழிவற்ற ஆத்மா இங்கே தான்
அமர்ந்திருக்கிறது. குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில்
அர்த்தம் உள்ளது, ஓங்காரமானவர் என்பதன் அர்த்தம் கூட நீங்கள்
புரிந்து கொள்கிறீர்கள். மனிதர்கள் கோவில்களில் சென்று
அச்சுதம் கேசவம்...... என்று சொல்கின்றனர். ஆனால் பொருள்
புரிவதில்லை. இவ்வாறு புகழ் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அச்சுதம் கேசவம் இராம நாராயணா...... இப்பொழுது இராமர் எங்கே?
நாராயணன் எங்கே? அது அனைத்துமே பக்தி மார்க்கம் என்று பாபா
கூறுகின்றார். ஞானம் மிகவும் எளிதானது. வேறு எதையும்
கேட்பதற்கு முன் தந்தை மற்றும் சொத்தை நினைக்க வேண்டும். இந்த
முயற்சியை வேறு யாரும் செய்வதில்லை. மறந்துபோகின்றனர். மாயை
இதுபோன்று செய்கின்றது, பகவான் இது போன்று செய்கின்றார்- என்ற
ஒரு நாடகமும் இருக்கிறது. நீங்கள் தந்தையை நினைவு
செய்கிறீர்கள். மாயா உங்களைப் புயலில் அழைத்துச் செல்கிறது.
மாயையின் கட்டளை பலசாலியுடன் பலசாலியாகி சண்டையிடு, நீங்கள்
அனைவரும் யுத்த மைதானத்தில் இருக்கிறீர்கள். இதில் எந்தெந்த
விதமான படைவீரர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியும். சிலர் மிக
மிக பலகீனமாக இருக்கிறார்கள். சிலர் இடைப்பட்ட பலகீனமானவர்களாக
இருக்கிறார்கள். சிலர் மிகவும் பலசாலியாகவும் இருக்கிறார்கள்.
அனைவரும் மாயையிடம் யுத்தம் செய்யக்கூடியவர்கள். மிக இரகசியமான
பூமிக்கடியிலுள்ளது போன்றதாகும். அவர்களும் கூட பூமிக்கடியில்
அணுகுண்டின் ஒத்திகை பார்க்கிறார்கள். தங்களுடைய மரணத்திற்காக
அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறார்கள், இதுவும்
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் முற்றிலும்
அமைதியில் அமர்ந்திருக்கிறீர்கள். அவர்ளுடையது விஞ்ஞான பலம்.
இயற்கை ஆபத்துகள் கூட மிகுதியாக இருக்கிறது. அவைகள் யாருடைய
வசத்திலும் வராது. இப்பொழுது செயற்கை மழைக்காக முயற்சி
செய்கின்றனர். செயற்கை மழை பொழிந்தால் தானியங்கள்
அதிகரிக்கும். குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும்- எவ்வளவு
தான் மழை பொழிந்தாலும் இயற்கை சீற்றங்கள் நிச்சயமாக ஏற்படும்.
ஏவுகணைகளின் மழை பொழிந்தால் பிறகு என்ன செய்ய முடியும்?
இதற்குத் தான் இயற்கை சீற்றங்கள் என்று கூறப்படுகிறது.
சத்யுகத்தில் இவைகள் ஏற்படாது. இங்கு எற்படுகின்றது. அவைகள்
பிறகு வினாசத்திற்கு உதவி செய்கின்றன.
எப்பொழுது சத்யுகத்தில்
இருப்போமோ அப்பொழுது யமுனை நதிக்கரையில் தங்க மாளிகையில்
இருப்போம் என உங்களுடைய புத்தியில் உள்ளது. நாம்
மிகக்குறைவானவர்களே அங்கே வசிக்கக் கூடியவர்களாக இருப்போம்.
கல்ப கல்பமாக இது போன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முதலில்
குறைவானவர்களாக இருப்பர். பிறகு மரம் வளர்ச்சி அடைகின்றது.
அங்கு எந்தவிதமான அசுத்தமான பொருளும் இருக்காது. இங்கு
பாருங்கள், குருவிகள் கூட அசுத்தம் செய்து கொண்டிருக்கின்றன.
அங்கு அசுத்தத்திற்கான விஷயம் கிடையாது, அதைத்தான் சொர்க்கம்
என்று அழைக்கின்றோம். நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டு
இருக்கிறீர்கள்- நாம் இது போன்று தேவதை ஆகின்றோம். ஆகையால்
உள்ளுக்குள் எந்த அளவு குஷியிருக்க வேண்டும்! மாயை வடிவிலான
ஜின்னிடம் இருந்து தப்பிப்பதற்காக குழந்தைகளாகிய நீங்கள் இந்த
ஆன்மீக வேலையில் ஈடுபடுங்கள் என்று பாபா கூறுகின்றார்.
மன்மனாபவ. போதும். இதிலேயே ஜின்னாகி விடுங்கள். ஜின்னுடைய
உதாரணம் கொடுக்கிறார்கள் அல்லவா? வேலை கொடு என்கிறது. ஆகையால்
பாபாவும் வேலை கொடுக்கின்றார். இல்லையெனில் மாயை (ஜின்-பூதம்)
சாப்பிட்டுவிடும். பாபாவின் முழுமையான உதவியாளர் ஆகவேண்டும்.
தனியாக பாபா செய்ய மாட்டார். தந்தை இராஜ்யமும் செய்யவில்லை.
நீங்கள் சேவை செய்கின்றீர்கள். இராஜ்யமும் உங்களுக்குத்தான்.
நானும் மகத தேசத்தில் வருகின்றேன் என்று உங்களுக்குக்
கூறுகின்றார். மாயாவும் கூட முதலை போன்றது. எத்தனை மகாரதிகளை
விழுங்கி விடுகிறது. இது அனைத்துமே எதிரி. தவளையின் எதிரியாக
பாம்பு இருக்கின்றதல்லவா? இவ்வாறு உங்களுடைய எதிரி மாயா என்பது
உங்களுக்குத் தெரியும் நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. தன்னை பாவங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள முயற்சி செய்ய
வேண்டும். தேக உணர்வில் ஒரு போதும் வரக் கூடாது. இந்த உலகத்தின்
எந்தப் பொருளின் மீதும் பற்று வைக்கக் கூடாது.
2. மாயை என்ற ஜின் பூதத்திடம் இருந்து தப்பித்துக் கொள்ள
ஆன்மீகத் தொழிலில் பிஸியாக இருக்க வேண்டும். பாபாவிற்கு
முழுமையான உதவியாளர் ஆக வேண்டும்.
வரதானம்:
நான் மற்றும் எனது என்பதை
முடித்துவிட்டு சமமானத் தன்மை மற்றும் சம்பூரணத்தன்மையின்
அனுபவம் செய்யக்கூடிய உண்மையான தியாகி ஆகுக.
ஒவ்வொரு நொடி, ஒவ்வொரு
எண்ணத்தில் பாபா-பாபா என்ற நினைவு இருந்தால், நான் என்பது
முடிந்துவிடும். நான் என்பது இல்லையென்றால் என்னுடையது என்பதும்
இல்லை. என்னுடைய சுபாவம், என்னுடைய சம்ஸ்காரம், என்னுடைய இயல்பு,
என்னுடைய காரியம் அல்லது வேலை, என்னுடைய பெயர், என்னுடைய கௌரவம்
.போன்ற இந்த நான் மற்றும் எனது என்பது முடிந்து போய்விடுவது
தான் சமமான நிலை மற்றும் சம்பூரணத்தன்மையாகும். இந்த நான்
மற்றும் எனது என்பதைத் தியாகம் செய்வது தான் பெரிய பெரியதிலும்
சூட்சம தியாகம் ஆகும். இந்த நான் என்ற குதிரைகளை (ஐம்புலன்கள்)
அஸ்வமேத யக்ஞத்தில் அர்ப்பணம் செய்யும் பொழுது தான் தனது கடைசி
கடமை நிறைவேறும், மேலும் வெற்றியின் முரசு கொட்டும்
சுலோகன்:
சரி ஐயா செய்கிறேன் என்ற
உதவியின் கைகளைக் கொடுப்பது என்றாலே ஆசிர்வாதங்களின் மாலைகளை
அணிவதாகும்.
ஓம்சாந்தி