26.07.2020 காலை முரளி ஓம் சாந்தி அவ்யக்தபாப்தாதா
ரிவைஸ் 27.02.1986 மதுபன்
கல்ப - கல்பம் வெற்றியடைந்த
ஆன்மிக சேனை
அனைத்து ஆன்மிக சக்தி சேனை,
பாண்டவ சேனை, ஆன்மிக சேனை சதா வெற்றியினுடைய நம்பிக்கை மற்றும்
போதையில் இருக்கின்றீர்கள் அல்லவா. வேறு எந்த ஒரு சேனையும்
யுத்தம் செய்யும்பொழுது வெற்றியானது உத்திரவாதம் கிடையாது.
வெற்றி உறுதியானது என்று நம்ப முடியாது. ஆனால், ஆன்மிக சேனை,
சக்தி சேனையாகிய நீங்கள், இப்போதைய வெற்றியாளர்கள் மட்டும்
அல்ல, கல்ப கல்பத்தின் வெற்றியாளர்கள் ஆவோம் என்ற இந்த
நம்பிக்கையின் போதையில் சதா இருக்கின்றீர்கள். தங்களுடைய
கல்பத்திற்கு முந்தைய வெற்றியினுடைய கதைகளைக் கூட பக்தி
மார்க்கத்தில் கேட்டுள்ளீர்கள். பாண்டவர்களின் வெற்றியின்
நினைவுச்சின்னமான கதையை இப்பொழுது கூட கேட்கின்றீர்கள்.
தங்களுடைய வெற்றியின் சித்திரத்தை இப்பொழுது கூட பார்த்துக்
கொண்டு இருக்கின்றீர்கள். பக்தியில் அஹிம்சாவாதிக்குப் பதிலாக
ஹிம்சை செய்பவராகக் காண்பித்துள்ளார்கள். ஆன்மிக சேனையை உலகாய
சாதாரண சேனையாகக் காண்பித் துள்ளார்கள். தங்களுடைய வெற்றியின்
மகிமையை இப்பொழுது கூட பக்தர்கள் மூலமாகக் கேட்டு மகிழ்ச்சி
யடைகின்றீர்கள். பிரபுவின் மீது அன்பான புத்தியுடையவர்கள்
வெற்றியடைவார்கள், அன்பற்ற புத்தியுடையவர்கள் விநாசமடைவார்கள்
என்று கூட கூறப்பட்டுள்ளது. ஆகவே, கல்பத்திற்கு முந்தைய
உங்களுடைய மகிமை எவ்வளவு பிரசித்தமாக இருக்கிறது! வெற்றி
நிச்சயிக்கப்பட்டு இருக்கும் காரணத்தினால் நிச்சயபுத்தியுடைய
வெற்றியாளர்கள் ஆவீர்கள். எனவே, மாலையைக் கூட வெற்றி மாலை என்று
கூறப்படுகிறது. ஆகவே, நம்பிக்கை மற்றும் போதை ஆகிய இரண்டும்
இருக்கிறதல்லவா. ஒருவேளை, யாராவது கேட்கின்றார்கள் என்றால்
வெற்றியானது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று நம்பிக்கையோடு
கூறுவீர்கள். வெற்றி கிடைக்குமா அல்லது கிடைக்காதா தெரியவில்லை
என்று கனவில் கூட சங்கல்பம் எழ முடியாது,
தீர்மானிக்கப்பட்டுள்ளது. போன கல்பம் மற்றும் எதிர்காலத்தையும்
கூட தெரிந்துள்ளீர்கள். திரிகாலதரிசி ஆகி அதே போதையோடு
கூறுகின்றீர்கள். அனைவரும் பக்காவாக இருக்கின்றீர்கள் அல்லவா!
ஒருவேளை யாராவது சிந்தியுங்கள், பாருங்கள் என்று சொன்னாலும்
கூட நீங்கள் என்ன கூறுவீர்கள்? அனேக முறை பார்த்திருக்கின்றோம்.
புதிய விசயமாக இருந்தால் யோசிக்கலாம், பார்க்கலாம். அனேக முறை
நடந்த விசயமானது இப்பொழுது மீண்டும் நடந்து கொண்டு இருக்கின்றது.
எனவே, அப்படிப்பட்ட நிச்சயபுத்தி ஞானம் நிறைந்த ஆத்மாக்கள்,
யோகம் நிறைந்த ஆத்மாக்கள் ஆவீர்கள் அல்லவா.
இன்று ஆப்பிரிக்கா குரூப்பிற்கான முறை. அனைவரும் இப்பொழுது
மதுபன் நிவாசி ஆவீர்கள். நிரந்தர முகவரி மதுபன் ஆகும் அல்லவா.
அது சேவை ஸ்தானம் ஆகும். சேவை ஸ்தானம் அலுவலகம் ஆகும், ஆனால்,
வீடு மதுபன் ஆக இருக்கின்றது அல்லவா. சேவைக்காக ஆப்பிரிக்கா,
இங்கிலாந்து ஆகிய நாலா புறங்களுக்கும் சென்றுள்ளீர்கள். தர்மம்
மாறி இருக்கலாம், தேசம் மாறியிருக்கலாம், ஆனால், சேவைக்காகவே
சென்றுள்ளீர்கள். எந்த வீடு நினைவிற்கு வருகின்றது? மதுபனா
அல்லது பரந்தாமமா? சேவை ஸ்தானத்தில் இருந்து சேவை செய்து
கொண்டு இருந்தாலும் கூட சதா மதுபன் மற்றும் முரளி ஆகிய இவை
இரண்டும் நினைவு இருக்கின்றது அல்லவா? ஆப்பிரிக்காவிற்கு
சேவைக்காக சென்றுள்ளீர்கள் அல்லவா. சேவை ஞான கங்கையாக
ஆக்கியுள்ளது. ஞான கங்கைகளிடம் ஞான ஸ்நானம் செய்து இன்று
எத்தனை பேர் பாவனம் ஆகி இருக்கின்றார்கள்! குழந்தைகள் வெவ்வேறு
இடங்களில் சேவை செய்வதைப் பார்த்து, குழந்தைகள், எத்தகைய
இடங்களில் சேவைக்காக பயமற்றவராகி மிகுந்த ஆர்வத்தோடு
இருக்கின்றார்கள் என்பதை பாப்தாதா நினைக் கின்றார்கள்.
ஆப்பிரிக்கா மக்களின் வாயுமண்டலம், அவர்களுடைய உணவுப் பழக்கம்,
நடத்தை எப்படி இருந்தாலும் கூட சேவையின் காரணத்தினால் அங்கு
இருந்துகொண்டு இருக்கின்றீர்கள். சேவைக்கான பலம் கிடைத்து
கொண்டு இருக்கின்றது. சேவைக்கான உடனடி பலன் கிடைக்கின்றது,
அந்த பலம் பயமற்றவராக ஆக்கிவிடுகின்றது. ஒருபோதும்
பயப்படுவதில்லை அல்லவா! மேலும், அதிகாரப்பூர்வமான அழைப்பு
முதலில் இங்கிருந்து கிடைத்தது. வெளிநாட்டு சேவைக்கான அழைப்பு
கிடைத்ததால் அத்தகைய தேசங்களுக்கு சென்றீர்கள். அழைப்பினுடைய
சேவையின் அஸ்திவாரம் இங்கிருந்து தான் ஆரம்பமானது. சேவையினுடைய
ஊக்கம், உற்சாகத்தின் உடனடி பலன் இங்குள்ள குழந்தைகள்
காண்பித்தார்கள். அந்த நிமித்தமான ஒருவருக்கே புகழ், அவர்
மூலம் எத்தனை நல்ல நல்ல மறைந்திருந்த இரத்தினங்கள் வெளிப்பட்டு
வந்துள்ளனர். இப்பொழுது நிறைய விருத்தி ஆகிவிட்டது. அவர்கள்
மறைந்துவிட்டார்கள் மற்றும் நீங்கள் வெளிப்பட்டுவிட்டீர்கள்.
அழைப்பின் காரணத்தினால் நம்பர் முன்னால் வந்துவிட்டது. எனவே,
ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் பரிசை அடையக்கூடியவர்கள் என்று
பாப்தாதா கூறுகின்றார். பரிசு பெறக்கூடிய இடம் ஆகும்,
ஏனென்றால், சூழ்நிலை அசுத்தமாக இருக்கின்றது. அசுத்தமான
சூழ்நிலைக்கு மத்தியில் விருத்தி ஆகிக்கொண்டிக்கின்றது.
இதற்காகவே பரிசு என்று சொல்கின்றார்.
சக்தி சேனை மற்றும் பாண்டவ சேனை ஆகிய இரண்டும் சக்திசாலியாக
இருக்கின்றது, பெரும்பான்மை யானோர் இந்தியர்கள். ஆனால்,
இந்தியாவிலிருந்து தூரமாக ஆகிவிட்டீர்கள், தூரமாக இருந்தாலும்
தனது உரிமையை விடமுடியாது. அங்கேயும் பாபாவின் அறிமுகம்
கிடைத்துவிட்டது. பாபாவினுடையவராக ஆகிவிட்டீர்கள்.
நெய்ரோபியில் உழைப்பு ஏற்படவில்லை. பிரிந்தவர்கள் சகஜமாக
வந்தடைந்துவிட்டார்கள். மேலும், இது குஜராத்திகளுடைய விசேச
சம்ஸ்காரமாக இருக்கின்றது. அவர்களிடம் இந்த பழக்கம்
இருக்கின்றது - அனைவரும் ஒன்று சேர்ந்து கர்பா நடனம்
ஆடுவார்கள், தனியாக ஆடுவதில்லை. சிறியவர்களோ, பெரியவர்களோ
அனைவரும் ஒன்று சேர்ந்து அவசியம் கர்பா நடனம் ஆடுவார்கள். இது
குழுவின் அடையாளம் ஆகும். சேவையில் பார்த்தாலும் குஜராத்திகள்
குழுவாக இருக்கின்றார்கள். ஒருவர் வருகின்றார் என்றால் 10 பேரை
அவசியம் அழைத்து வருகின்றார். இந்தக் குழுவின் பழக்கம்
அவர்களிடம் நன்றாக உள்ளது. எனவே, விரைவாக வளர்ச்சி
ஏற்படுகின்றது. சேவையினுடைய விருத்தி மற்றும் விஸ்தாரம் ஆகிக்
கொண்டு இருக்கிறது. அப்பேர்பட்ட இடங்களில் சாந்தியினுடைய
சக்தியைக் கொடுப்பது, பயத்திற்கு பதிலாக குஷியை ஏற்படுத்துவது
என்பது சிரேஷ்ட சேவை ஆகும். அத்தகைய இடங்களில் அவசியமானதாக
இருக்கின்றது. விஷ்வ கல்யாணகாரி ஆவீர்கள், எனவே, உலகத்தின்
நாலாபுறங்களிலும் சேவையை அதிகப்படுத்த வேண்டும். மேலும்,
நிமித்தமாக ஆக வேண்டும். எந்தவொரு மூலையும், ஒருவேளை
விடுபட்டுவிட்டால் புகார் செய்வார்கள். நல்லது, தைரியம்
குழந்தைகளுடையது உதவி தந்தையினுடையது. புஜங்கள் கூட
அங்கிருந்துதான் வெளிப்பட்டு சேவை செய்து கொண்டு
இருக்கின்றார்கள். இது கூட சகயோகம் ஆகிவிட்டதல்லவா. தான்
விழிப்படைந்து இருக்கின்றீர்கள், இது மிகவும் நல்லது. ஆனால்,
விழிப்படைந்து பிறகு விழிப்படைய வைக்க நிமித்தம் ஆகி
உள்ளீர்கள், இதில் இரட்டிப்பு இலாபம் உள்ளது. அதிகப்படியான
புஜங்கள் அங்கே உள்ளவர்களே. இந்த விசேசத்தன்மை நன்றாக
இருக்கின்றது. வெளிநாட்டு சேவையில் பெரும்பான்மையானோர்
அங்கிருந்து வெளிப்பட்டு அங்கேயே சேவைக்கு நிமித்தம்
ஆகிவிடுகின்றார்கள். வெளிநாடு பாரதத்திற்கு புஜங்கள்
கொடுக்கவில்லை. பாரதம்தான் வெளிநாட்டிற்கு கொடுத்துள்ளது.
பாரதம் கூட மிக பெரியது ஆகும். தனித்தனி மண்டலமாக
இருக்கின்றது. சொர்க்கமாக பாரதத்தைத் தான் ஆக்க வேண்டும்.
வெளிநாடு சுற்றுலா ஸ்தலமாக ஆகிவிடும். எனவே, அனைவரும்
எவரெடியாக இருக்கின்றீர்கள் அல்லவா. இன்று யாரை, எங்கு
அனுப்பினாலும் எவரெடியாக (சதா தயார் நிலையில்)
இருக்கின்றீர்கள் அல்லவா. எப்பொழுது தைரியம் வைக்கின்றீர்களோ,
அப்பொழுது உதவி கூட கிடைக்கின்றது. எவரெடியாக அவசியம் இருக்க
வேண்டும். மேலும், எப்பொழுது அப்படிப்பட்ட நேரம் வருமோ,
அப்பொழுது கட்டளை கொடுக்க வேண்டியிருக்கும். பாபா மூலமாக
கட்டளை பிறப்பிக்கப்பட்டே ஆகும். எப்பொழுது கட்டளை
கொடுப்பார்கள் என்ற அந்த தேதியைக் கூறமாட்டார்கள். எந்த நாள்
என்பதைக் கூறினால் பிறகு அனைவரும் நம்பர்-1 பாஸ்
ஆகிவிடுவீர்கள். இங்கு தேதியும் வினாத்தாளும் ஓரே நேரத்தில்
திடீரென வரும். எவரெடியாக இருக்கின்றீர்கள் அல்லவா. இங்கேயே
இருந்துவிடுங்கள் என்று கூறினால், குழந்தைகள், வீடு நினைவிற்கு
வருமா? சுகத்தின் சாதனங்கள் அங்கு இருக்கின்றன, ஆனால்,
சொர்க்கமோ இங்கே உருவாக்க வேண்டும். எனவே, சதா எவரெடியாக
இருப்பது பிராமண வாழ்க்கையினுடைய விசேசத் தன்மை ஆகும். தனது
புத்தியின் லைன் தெளிவாக இருக்க வேண்டும். சேவைக்காக
நிமித்தமாத்திரம் அந்த இடத்தை தந்தை கொடுத்திருக்கின்றார்.
நிமித்தமாகி சேவைக்கு ஆஜராகியுள்ளீர்கள். பிறகு
தந்தையிடமிருந்து சமிக்ஞை கிடைக்கும், அப்பொழுது எதையும்
யோசிக்க வேண்டிய அவசியமே இருக்காது. கட்டளை அனுசாரம் சேவை
நன்றாக செய்துகொண்டு இருக்கின்றீர்கள். எனவே, பற்றற்றவர்
மற்றும் தந்தைக்கு அன்பானவராக இருக்கின்றீர்கள்.
ஆப்பிரிக்காவின் விருத்தி நன்றாக இருக்கின்றது.
வி.ஐ.பி.களுக்கான சேவை நன்றாக நடந்து கொண்டிருக்கின்றது.
அரசாங்கத்துடன் சம்பந்தம் நன்றாக இருக்கிறது. அனைத்து விதமான
வர்க்கத்தைச் சேர்ந்த ஆத்மாக்களை தொடர்பு கொண்டு ஏதாவது ஏதாவது
நேரத்தில் சமீபத்தில் அழைத்து வந்துவிடும் இந்த விசேசத்தன்மை
இருக்கின்றது. இன்று தொடர்பில் வரக்கூடியவர்கள் நாளை
சம்பந்தத்தில் வரக்கூடியவர் களாக ஆகிவிடுவார்கள். அவர்களை
விழிப்படையச் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால்,
கொஞ்சம் கண்களைத் திறந்துவிட்டு பிறகு தூங்கிவிடுகின்றார்கள்.
கும்பகர்ணனாக இருக்கின்றார்கள். தூக்கத்தின் போதை இருக்கின்றது
என்றால் ஏதாவது சாப்பிட்டதையும், குடித்ததையும் கூட
மறந்துவிடுகின்றனர். கும்பகர்ணனும் அப்படித்தான். சரி, பிறகு
வருகின்றேன், இதை செய்கின்றேன் என்று கூறுவார்கள். ஆனால்,
பிறகு கேட்டால் நினைவு இல்லை என்று சொல்வார்கள். எனவே,
அடிக்கடி விழிப்படைய வைக்க வேண்டி உள்ளது. குஜராத்காரர்கள்
தந்தையினுடையவர்கள் ஆவதில், உடல், மனம், பணத்தினால் தன்னை
சேவையில் ஈடுபடுத்துவதில் நம்பர் நன்றாக எடுத்துள்ளார்கள்.
சகஜமாக சகயோகி ஆகிவிடுகின்றார்கள். இது கூட பாக்கியம் ஆகும்.
குஜராத்காரர்களுடைய எண்ணிக்கை நன்றாக உள்ளது. தந்தையினுடையவராக
ஆகின்ற லாட்டரி குறைந்தது கிடையாது. ஒவ்வொரு இடத்திலும்
தந்தையைப் பிரிந்த இரத்தினம் யாராவது இருக்கின்றார்கள். எங்கு
பாதம் பதித்தாலும் யாராவது வெளிப்பட்டு வருகின்றார்கள்.
கவலையற்றவராகி, பயமற்றவராகி சேவையில் ஆர்வத்தோடு முன்னேற்றத்தை
அடைகின்றார்கள், ஆகையால், பல கோடி மடங்கு உதவியும்
கிடைக்கிறது. அதிகாரப்பூர்வமான அழைப்போ இங்கிருந்துதான்
ஆரம்பம் ஆனது. ஆனாலும் கூட சேவையினுடைய சேமிப்பு ஆனதல்லவா.
அந்த சேமிப்புக் கணக்கு நேரப்படி அவசியம் ஈர்க்கும். எனவே,
அனைவரும் நம்பர் ஒன் தீவிர முயற்சியாளர், பரிசு
பெறக்கூடியவர்கள் ஆவீர்கள். சம்பந்தம் வைப்பதில் நம்பர்ஒன்,
சேவையில் நிரூபணம் காட்டுவதில் நம்பர்ஒன், அனைத்திலும்
நம்பர்ஒன் ஆகியே தீர வேண்டும், அப்பொழுதே பரிசு பெறுவீர்கள்
அல்லவா. பரிசே பரிசாக பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
அனைவருடைய தைரியத்தைப் பார்த்து பாப்தாதா குஷி அடைகின்றார்கள்.
அனேக ஆத்மாக்களுக்கு தந்தையை ஆதாரமாக ஆக்குவதற்கு நிமித்தம்
ஆகியுள்ளீர்கள். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
குடும்பத்தை தந்தை மலர்ச்செண்டு என்று கூறுகின்றார். இந்த
விசேசத்தன்மை கூட நன்றாக உள்ளது. அனைத்து பிராமணர்களுக்கும்
ஸ்தானம் இருக்கின்றது. ஒருவேளை யாராவது நெய்ரோபி சென்றாலும்
அல்லது எங்கே சென்றாலும், இது நம்முடைய சென்டர், பாபா வினுடைய
சென்டர், நம்முடைய குடும்பம் என்று கூறுவார்கள். எனில்,
எவ்வளவு அதிர்ஷ்டசாலி ஆகிவிட்டீர்கள்! பாப்தாதா ஒவ்வொரு
இரத்தினத்தையும் பார்த்து குஷி அடைகின்றார்கள். எந்த இடத்தைச்
சேர்ந்தவர்களாக இருந்தாலும் தந்தையினுடையவர்கள் மற்றும் தந்தை
குழந்தைகளுடையவர். எனவே, பிராமண ஆத்மாக்கள் அதிக
பிரியமானவர்கள், விசேசமானவர்கள். ஒருவரை விட ஒருவர் அதிக
அன்பிற்குரியவர்கள் ஆவார்கள். நல்லது.
இப்பொழுது ஆன்மீக பர்சனாலிட்டி(தனித்தன்மை) மூலம் சேவை
செய்யுங்கள். (அவ்யக்த மகாவாக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டது)
பிராமணர்களாகிய உங்களைப் போன்ற ஆன்மீக பர்சனாலிட்டி உடையவர்கள்
முழு கல்பத்தில் வேறு எவரும் கிடையாது. ஏனென்றால், உங்கள்
அனைவருடைய பர்சனாலிட்டியை உருவாக்கியவர் உயர்ந்ததிலும் உயர்ந்த
சுயம் பரமாத்மா ஆவார். கனவு மற்றும் சங்கல்பத்தில் கூட
சம்பூர்ண தூய்மை - இதுவே உங்களுடைய அனைத்தைக் காட்டிலும்
பெரியதிலும் பெரிய பர்சனாலிட்டி ஆகும். இந்தத் தூய்மையின்
கூடவே முகம் மற்றும் நடத்தையில் ஆன்மிகத்தன்மையின்
பர்சனாலிட்டி இருக்கின்றது. தன்னுடைய இந்த தனித்தன்மையில் சதா
நிலைத்து இருங்கள். அப்பொழுது சேவை தானாக நடக்கும். யார்
எப்படிப்பட்ட குழப்பமுடைய, அசாந்தியான ஆத்மாவாக இருந்தாலும்
உங்களுடைய ஆன்மிக தனித்தன்மையின் ஜொலிப்பு, மகிழ்ச்சியான
பார்வை, அவர்களை மகிழ்ச்சியானவர் ஆக்கிவிடும். பார்வையினால்
விடுவிக்கக்கூடியவர் ஆகிவிடுவீர்கள். இப்பொழுது நேரத்தின்
சமீபத்தின் அனுசாரம் பார்வையினால் விடுவிக்கும் சேவை செய்யும்
நேரம் ஆகும். உங்களுடைய ஒரு பார்வையினால் அவர்கள் மனமகிழ்ச்சி
உடையவராகிவிடுவர், உள்ளத்தின் ஆசை பூர்த்தி ஆகிவிடும்.
எப்படி பிரம்மா பாபாவினுடைய முகம் மற்றும் தோற்றம் தனித்தன்மை
உடையதாக இருந்ததால் நீங்கள் அனைவரும் ஆகர்ஷிக்கப்பட்டீர்கள்,
அவ்வாறு தந்தையைப் பின்பற்றுங்கள். அனைத்து பிராப்திகளின்
பட்டியலை புத்தியில் எமர்ஜ் செய்தீர்கள் என்றால் முகம் மற்றும்
நடத்தையில் மகிழ்ச்சியின் தனித்தன்மை தென்படும், மேலும்,
இந்தத் தனித்தன்மை ஒவ்வொருவரையும் கவர்ச்சிக்கும். ஆன்மிக
தனித்தன்மை மூலம் சேவை செய்வதற்காக தன்னுடைய மனோநிலையை சதா
மகிழ்ச்சியானதாக மற்றும் கவனம் நிறைந்ததாக வைத்திடுங்கள்.
மனோநிலை மாறக்கூடாது. காரணம் எதுவாக இருந்தாலும் அந்த
காரணத்திற்கு நிவாரணம் செய்யுங்கள். சதா மகிழ்ச்சியினுடைய
தனித்தன்மையில் இருங்கள். மனமகிழ்ச்சியில் இருப்பதால் மிக நல்ல
அனுபவம் செய்வீர்கள். மகிழ்ச்சியான ஆத்மாவின் தொடர்பில்
இருப்பது, அவர்களிடம் பேசுவது, அமர்ந்திருப்பது அனைவருக்கும்
பிடிக்கிறது. எனவே, கேள்வி நிறைந்த உள்ளம் உடையவராக இல்லாமல்
மனமகிழ்ச்சி உடையவராக இருக்க வேண்டும் என்ற இலட்சியம்
வைத்திடுங்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் வெளிப்படையான ரூபத்தில் சாதாரண
தனித்தன்மை உடையவராக இருக்கின்றீர்கள். ஆனால், ஆன்மிக
தனித்தன்மையில் அனைவரைக்காட்டிலும் நம்பர்ஒன் ஆவீர்கள்.
உங்களுடைய முகம் மற்றும் நடத்தையில் தூய்மையின் தனித்தன்மை
இருக்கின்றது. எந்தளவு ஒருவரிடம் தூய்மை இருக்குமோ, அந்தளவு
அவர்களுடைய தனித்தன்மை வெளிப்படையாக தென்படுவது மட்டும்
அல்லாமல் அனுபவமும் ஏற்படும். மேலும், அந்த தனித்தன்மைதான்
சேவை செய்யும். யார் உயர்வான தனித்தன்மை உடையவரோ, அவருடைய
கண்கள் எதன் மீதும், யார் மீதும் போகாது. ஏனென்றால், அவர்கள்
அனைத்து பிராப்திகளிலும் நிறைந்து இருப்பர். அவர்கள் ஒருபோதும்
தன்னுடைய பிராப்திகளின் களஞ்சியத்தில் எந்தவொரு
அபிராப்தியையும் அனுபவம் செய்யமாட்டார்கள். அவர்கள் சதா மனதால்
நிறைந்து இருக்கும் காரணத்தினால் திருப்தியாக
இருக்கின்றார்கள். அப்பேர்பட்ட திருப்தியான ஆத்மாதான் பிறரை
திருப்திபடுத்த முடியும்.
எந்தளவு தூய்மை இருக்கின்றதோ, அந்தளவு பிராமண வாழ்க்கையில்
தனித்தன்மை இருக்கின்றது. ஒருவேளை தூய்மை குறைவாக உள்ளதென்றால்
தனித்தன்மையும் குறைவாக இருக்கும். இந்தத் தூய்மையின்
தனித்தன்மைதான் சேவையில் கூட சகஜமான வெற்றியை
ஏற்படுத்துகின்றன. ஆனால், ஒருவேளை ஒருவிகாரம் கூட அம்சம் அளவு
இருந்ததென்றால் மற்ற துணைவர்களும் அதன் கூடவே அவசியம்
இருக்கும். எவ்வாறு தூய்மையுடன் சுகம், சாந்தியின் ஆழமான
சம்பந்தம் உள்ளதோ, அவ்வாறு தூய்மையற்ற நிலைக்கும் ஐந்து
விகாரங்களுக்கும் ஆழமான சம்பந்தம் இருக்கின்றது. எனவே, எந்த
விகாரமும் அம்சம் அளவுக்கூட இருக்க வேண்டாம். அப்பொழுதே
தூய்மையினுடைய தனித்தன்மையின் மூலம் சேவை செய்யக்கூடியவர்
என்று சொல்ல முடியும்.
இன்றைய காலத்தில் இரண்டு விதமான தனித்தன்மைகள் உள்ளன - ஒன்று
சரீரத்தின் பர்சனாலிட்டி, இரண்டாவது பதவியின் பர்சனாலிட்டி.
பிராமண வாழ்க்கையில் எந்த பிராமண ஆத்மாவிடம் திருப்தி என்ற
மகான்தன்மை இருக்கின்றதோ, அவர்களுடைய தோற்றத்தில், அவர்களுடைய
முகத்தில் கூட திருப்தி மற்றும் சிரேஷ்ட ஸ்திதி என்ற நிலையின்
தனித்தன்மை தென்படும். அவர்களுடைய பார்வையில், முகத்தில்,
நடத்தையில் திருப்தியினுடைய பர்சனாலிட்டி தென்படும். அவர்களே
தபஸ்வி ஆவார்கள். அவர்களுடைய உள்ளம் சதா மகிழ்ச்சியாக
இருக்கும், உள்ளம், புத்தி சதா ஓய்வில், சுகம், சாந்தி
ஸ்திதியில் இருக்கும். ஒருபோதும் அமைதியின்றி
இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு வார்த்தை மற்றும் கர்மத்தின்
மூலம், திருஷ்டி மற்றும் விருத்தியின் மூலம் ஆன்மிக
பர்சனாலிட்டி மற்றும் இராயல்டியின் அனுபவம் செய்விப்பார்கள்.
விசேச ஆத்மாக்களை மற்றும் மகான் ஆத்மாக்களை தேசத்தின் அல்லது
விஷ்வத்தின் பர்சனாலிட்டி என்று சொல்லப்படுகின்றது. தூய்மையின்
பர்சனாலிட்டி என்றால் ஒவ்வொரு கர்மத்தில் மகான்தன்மை மற்றும்
விசேசத்தன்மை இருப்பது என்று அர்த்தம். ஆன்மிக
பர்சனாலிட்டியுடைய ஆத்மாக்கள் தங்களுடைய சக்தி, நேரம் மற்றும்
சங்கல்பம் ஆகியவற்றை வீணாக இழக்கமாட்டார்கள், வெற்றியுடையதாக
ஆக்கிவிடுவார்கள். அப்பேர்பட்ட பர்சனாலிட்டி உடையவர்கள்
ஒருபோதும் சின்னச் சின்ன விசயங்களில் தங்களது மனம், புத்தியை
பிஸியாக வைக்கமாட்டார்கள். ஆன்மிக பர்சனாலிட்டி உடைய விசேச
ஆத்மாக்களின் திருஷ்டி, விருத்தி, வார்த்தை போன்ற அனைத்திலும்
அலௌகீகத்தன்மை இருக்கும், சாதாரணத்தன்மை இருக்காது. சாதாரண
காரியம் செய்தாலும் கூட சக்திசாலி, கர்மயோகி ஸ்திதியின்
அனுபவம் செய்விப்பார்கள். எவ்வாறு பிரம்மா பாபாவைப்
பார்த்தீர்கள் - குழந்தைகளுடன் சேர்ந்து காய்கறி வெட்டினாலும்,
விளையாடிக் கொண்டி ருந்தாலும் அவரது பர்சனாலிட்டி சதா கவர்ச்சி
செய்து கொண்டே இருந்தது. எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள்.
பிராமண வாழ்க்கையினுடைய
பர்சனாலிட்டி மகிழ்ச்சி ஆகும். இந்தப் பர்சனாலிட்டியை
அனுபவத்தில் கொண்டு வாருங்கள், மேலும், அனைவரையும் அனுபவி
ஆக்குங்கள். சதா சுபசிந்தனையினால் நிறைந்தவராக இருங்கள், சுப
சிந்தனையாளர் ஆகி அனைவரையும் சிநேகி, சகயோகி ஆக்குங்கள். சுப
சிந்தனையாளர் ஆத்மா தான் சதா மகிழ்ச்சியின் பர்சனாலிட்டியில்
இருந்து உலகத்திற்கு முன்பு விசேச பர்சனாலிட்டி உடையவர் கள் ஆக
முடியும். இன்றைய காலத்தில் பர்சனாலிட்டியுடைய ஆத்மாக்கள்
வெறும் புகழ் வாய்ந்தவர்களாக ஆகின்றார்கள் அதாவது பெயர் பிரபலம்
ஆகின்றது, ஆனால், நீங்கள் ஆன்மிக பர்சனாலிட்டி உடையவர்கள்
வெறும் புகழ் வாய்ந்தவர்கள் அதாவது மகிமைக்கு தகுதியானவர்கள்
மட்டும் அல்ல, ஆனால், மகிமைக்கு தகுதியானவரின் கூடவே பூஜைக்கு
தகுதியானவராகவும் ஆகுகின்றீர்கள். தர்ம ஷேத்திரத்தில், இராஜ்ய
ஷேத்திரத்தில், அறிவியல் ஷேத்திரத்தில் எவ்வளவு பெரிய
பர்சனாலிட்டியுடைய பிரபலமானவராக இருக்கலாம், ஆனால், ஆன்மிக
பர்சனாலிட்டி உடைய உங்களுக்கு சமமாக 63 ஜென்மங்கள்
பூஜைக்குரியவர் ஆவதில்லை.
வரதானம்:
இணைந்த சொரூபத்தின் நினைவு மூலம்
சிரேஷ்ட ஸ்திதி என்ற ஆசனத்தில் நிலைத்து இருக்கக்கூடிய சதா
சம்பன்னமானவர் ஆகுக.
சங்கமயுகத்தில் சிவசக்தி என்ற
இணைந்த சொரூபத்தின் நினைவில் இருப்பதனால் ஒவ்வொரு அசம்பவ
காரியமும் சம்பவம் ஆகிவிடும். இதுவே சர்வ சிரேஷ்ட சொரூபம் ஆகும்.
இந்த சொரூபத்தில் நிலைத்திருப்பதனால் சம்பன்ன பவ என்ற வரதானம்
கிடைத்துவிடுகின்றது. பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் சதா
சுகம் நிறைந்த ஸ்திதி என்ற ஆசனம் கொடுத்திருக்கின்றார். சதா
இந்த ஆசனத்தில் நிலைத்து இருங்கள், அப்பொழுது அதீந்திரிய சுகம்
என்ற ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருப்பீர்கள். மறதி என்ற
சம்ஸ்காரத்தை மட்டும் சமாப்தி செய்யுங்கள்.
சுலோகன்:
சக்திசாலியான உள்ளுணர்வு மூலமாக
ஆத்மாக்களை யோக்கியமானவராக (தகுதியானவராக) மற்றும் யோகியாக
ஆக்குங்கள்.
ஓம்சாந்தி