05.07.2020 காலை முரளி
ஓம் சாந்தி அவ்யக்த
பாப்தாதா,
ரிவைஸ்
20.02.1986
மதுபன்
பறக்கும் கலை மூலம் அனைவருக்கும்
நன்மை
இன்று விசேசமாக இரட்டை
வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்வதற்காக வந்துள்ளோம்.
ஒன்று... தூர தேசத்தின் பலவித மதங்களில் சென்ற போதும் அருகில்
பாரதத்தில் வசிக்கும் அநேக ஆத்மாக்களை விடவும் விரைவாகத்
தந்தையை அறிந்து கொண்டு விட்டீர்கள். தந்தையை அறிந்து கொள்வது
என்றால் தனது பாக்கியத்தை அடைந்ததற்கான வாழ்த்து மற்றும்
இரண்டாவது எப்படி தீவிர வேகத்தில் அறிந்து கொண்டீர்களோ, அதே
போல் தீவிர வேகத்தில் சேவையில் தங்களை ஈடுபடுத்தினீர்கள். ஆகவே
சேவையில் தீவிர வேகத்தில் முன்னேறுவதற்கான இரண்டாவது வாழ்த்து.
சேவையின் விருத்தியின் வேகம் தீவிரமாக இருந்து கொண்டுள்ளது.
மேலும் இனி வருங்காலத்திலும் இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள்
விசேசமான காரியத்திற்காக நிமித்தமாக ஆவார்கள். பாரதத்தின்
நிமித்த ஆதிரத்தின ஆத்மாக்கள் ஸ்தாபனையின் காரியத்தில் மிகவும்
பலமான அஸ்திவாரத்தை அமைத்து, காரியத்தின் ஸ்தாபனை செய்தனர்
மற்றும் இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் நாலாபுறமும் செய்தியைப்
பரப்புவதில் தீவிர வேகமான சேவை செய்துள்ளனர் மற்றும் செய்து
கொண்டே இருப்பார்கள். ஆகவே பாப்தாதா அனைத்துக் குழந்தைகளுக்கும்
வந்தவுடனே, ஜென்மம் எடுத்த உடனே மிக விரைவாக சேவையில்
முன்னேறிச் செல்வதற்கான விசேச வாழ்த்தினைக் கொடுத்துக் கொண்டி
ருக்கிறார். குறைந்த காலத்தில் வெவ்வேறு தேசங்களில் சேவை
விஸ்தரிக்கப் பட்டுள்ளது. எனவே செய்தியைப் பரப்புவதற்கான
காரியம் சகஜமாக விருத்தியடைந்து கொண்டிருக்கிறது. மேலும் சதா
டபுள் லைட் ஆகி, இரட்டைக்கிரீடதாரி ஆவதற்கான முழுமையான
அதிகாரத்தை அடைவதற்கான தீவிர புருசார்த்தத்தை அவசியம்
செய்வார்கள். இன்று விசேஷமாக சந்திப்பதற்காக வந்துள்ளோம்.
பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கிறார், அனைவரின் மனதிலும்
குஷியின் இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகளின் குஷியின்
இசை, குஷியின் பாடல் பாப்தாதாவுக்குக் கேட்கிறது. நினைவு
மற்றும் சேவையில் ஈடுபாட்டுடன் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.
நினைவும் உள்ளது, சேவையும் உள்ளது. ஆனால் இப்போது அதிகப்படியாக
எது வரப்போகிறது? இரண்டுமே உள்ளது என்றாலும் சதா இரண்டினுடைய
சமநிலை இருக்க வேண்டும். இந்த சமநிலை தன்னையும் மற்றும்
சேவையில் பாபாவின் ஆசீர்வாதங்களை அனுபவம் செய்தவராக ஆக்குகிறது.
சேவையின் ஊக்கம்-உற்சாகம் இருக்கிறது. இப்போது இன்னும் கூட
சேவையில் நினைவு மற்றும் சேவையின் சமநிலை வைப்பதன் மூலம் அதிக
சப்தம் உலகத்தில் கேட்கும். நன்கு விஸ்தாரம்
செய்திருக்கிறீர்கள். விஸ்தாரத்திற்குப் பிறகு என்ன
செய்யப்படுகிறது? விஸ்தாரத்தோடு கூடவே இப்போது இன்னும் கூட
சேவையின் சாரம், அந்த மாதிரி ஆத்மாக்களை நிமித்தமாக ஆக்க
வேண்டும் -- அந்த விசேச ஆத்மாக்கள் பாரதத்தின் விசேச ஆத்மாக்களை
எழுப்ப வேண்டும். இப்போது பாரதத்திலும் சேவையின் வடிவமைப்பு
சமயத்தின் பிரமாணம் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறது.
அரசியல் தலைவர்கள், தர்மத் தலைவர்கள் மற்றும் அதோடு கூடவே
நடிகர்கள் கூட தொடர்பில் வந்து கொண்டிருக்கிறார்கள். மீதி யார்
இருக்கிறார்கள்? தொடர்பிலோ வந்து கொண்டிருக்கிறார்கள்.
தலைவர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் விசேசமாக அரசியல்
தலைவர்கள் வரை கூட சமீப-தொடர்பில் வருவதற்கான சங்கல்பம்
உருவாகத்தான் வேண்டும்.
இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் அனைவரும் பறக்கும் கலையில்
சென்று கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? ஏறும் கலையினரோ இல்லை
தானே? பறக்கும் கலை உள்ளதா? பறக்கும் கலை உள்ளது என்றால்
அனைவருக்கும் நன்மை ஏற்படுவதாகும். எப்போது அனைத்துக்
குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி பறக்கும் கலை வந்து விடுகிறதோ,
அப்போது அனைவருக்கும் நன்மை, அதாவது மாற்றத்தின் காரியம்
முடிவடைந்து விடும். இப்போது பறக்கும் கலை உள்ளது. ஆனால்
பறப்பதோடு கூடவே பல நிலைகள் (ஸ்டேஜஸ்) உள்ளன. சில நேரம் மிக
நல்ல ஸ்டேஜ் உள்ளது, இன்னும் சில நேரம் ஸ்டேஜுக்காகப்
புருசார்த்தம் செய்கிற ஸ்டேஜ் உள்ளது. சதா மற்றும்
பெரும்பான்மையினருக்குப் பறக்கும் கலை ஏற்படுகிறது என்றால்
முடிவு வந்து விட்டது என்று அர்த்தம். இப்போது குழந்தைகள்
அனைவரும் அறிவார்கள், பறக்கும் கலை தான் சிரேஷ்ட ஸ்திதி ஆகும்.
பறக்கும் கலை தான் கர்மாதீத் ஸ்திதியை அடைவதற்கான
ஸ்திதியாகும். பறக்கும் கலை தான் தேகத்தில் இருந்தவாறே
தேகத்திலிருந்து விலகியும், சதா பாபா மற்றும் சேவை மீது அன்பு
கொண்ட ஸ்திதி யாகும். பறக்கும் கலை தான் பாக்கியத்தைத் தரும்
வள்ளல் மற்றும் வரதானங்களை வழங்கும் வள்ளலின் ஸ்டேஜினுடைய
ஸ்திதியாகும். பறக்கும் கலை தான் நடமாடும் போதும் சுற்றிவரும்
போதும் ஃபரிஸ்தா மற்றும் தேவதை இரண்டு ரூபங்களின்
சாட்சாத்காரம் செய்விப்பதற்கான ஸ்திதியாகும்.
பறக்கும் கலை சர்வ ஆத்மாக்களையும் பிச்சைக்கார நிலையில்
இருந்து விடுவித்து, பாபாவின் ஆஸ்திக்கு அதிகாரி ஆக்குவதாகும்.
ஆத்மாக்கள் அனைவரும் அனுபவம் செய்வார்கள், ஆத்மாக்களாகிய நம்
அனைவரின் இஷ்டதேவ் மற்றும் இஷ்டதேவிகள் மற்றும் நிமித்தமாக
ஆகியுள்ள அநேக தேவதைகள் அனைவரும் இந்த பூமியில்
அவதரித்துள்ளனர். சத்யுகத்திலோ அனைவரும் சத்கதியில்
இருப்பார்கள். ஆனால் இச்சமயம் உள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும்
நீங்கள் சத்கதி அளிப்பவர்கள். எப்படி எந்த ஒரு டிராமாவும்
முடிவடைகிறது என்றால் கடைசியில் நடிகர்கள் அனைவரும் முன்னால்
மேடையில் வந்து விடுவார்கள். ஆக, இப்போது கல்பத்தின் டிராமா
முடிவடையும் சமயம் வந்து கொண்டிருக்கிறது. முழு உலகத்தின்
ஆத்மாக்களுக்கும், கனவில் அல்லது ஒரு விநாடியின் ஜொலிப்பில்
அல்லது பிரத்தியட்சதாவிற்கான நாலாபுறமும் எழும் சப்தத்தின்
மூலமாக இந்த சாட்சாத்காரம் அவசியம் நடைபெறும், அதாவது இந்த
டிராமாவின் ஹீரோ பார்ட்தாரிகள் மேடையில் பிரத்யட்சம் ஆகி
விட்டனர். பூமியின் நட்சத்திரங்கள், பூமியின் மீது
பிரத்யட்சமாகி விட்டனர். அனைவரும் அவரவர் இஷ்டதேவர்களை அடைந்து
மிகுந்த குஷியடைவார்கள். அவர்களிடமிருந்து உதவி கிடைக்கும்.
இரட்டை வெளிநாட்டினரும் கூட இஷ்டதேவ்-இஷ்டதேவிகளில் உள்ளனர்
இல்லையா? அல்லது பொன் விழாக்காரர்களாக இருக்கிறீர்களா?
நீங்களும் கூட அதில் இருக்கிறீர்களா அல்லது பார்ப்பவர்களாக
இருக்கிறீர்களா? எப்படி இப்போது பொன்விழாவின் காட்சியைப்
பார்த்தீர்கள். இதுவோ ஒரு ரமணீகரமான பாகத்தை நீங்கள்
நடித்தீர்கள். ஆனால் எப்போது கடைசிக் காட்சி நடைபெறுமோ, அதிலோ
நீங்கள் சாட்சாத்காரம் செய்விப்பவராக இருப்பீர்களா அல்லது
பார்ப்பவர்களாக இருப்பீர்களா? என்னவாக இருப்பீர்கள்? ஹீரோ
நடிகர் இல்லையா நீங்கள்? அந்தக் காட்சி எப்படி இருக்கும் என்று
இப்போது வெளிப்படுத்துங்கள். இந்தக் கடைசிக் காட்சிக்காக
இப்போதிருந்தே திரிகாலதரிசி ஆகிப் பாருங்கள், எத்தகைய அழகிய
காட்சியாக இருக்கும் மற்றும் நாம் எவ்வளவு அழகாக இருப்போம்!
அலங்கரிக்கப்பட்ட திவ்யகுண மூர்த்தி ஃபரிஸ்தாவிலிருந்து தேவதை.
இதற்காக இப்போதிருந்தே தன்னை சதா ஃபரிஸ்தா சொரூப ஸ்திதியின்
அப்பியாசத்தினால் முன்னேற்றத்தில் கொண்டு செல்லுங்கள். நான்கு
விசேசப் பாடங்களான ஞானமூர்த்தி, நிரந்தர நினைவு மூர்த்தி, சர்வ
திவ்யகுண மூர்த்தி - ஒரு திவ்யகுணம் குறைவாக இருந்தாலும் 16
கலைகள் நிரம்பியவர் எனச் சொல்ல மாட்டார்கள். 16 கலைகள், சர்வம்
மற்றும் சம்பூர்ணம் இந்த மூன்றுக்கும் மகிமை உள்ளது. சர்வகுண
சம்பன்னம் எனச் சொல் கிறீர்கள். சம்பூர்ண நிர்விகாரி எனச்
சொல்கிறீர்கள். மேலும் 16 கலை சம்பன்னம் எனச் சொல்கிறீர்கள்.
மூன்று சிறப்புகளும் வேண்டும். 16 கலை என்றால் சம்பன்னமாகவும்
வேண்டும், சம்பூர்ணமாகவும் வேண்டும் மற்றும் அனைத்தும் இருக்க
வேண்டும். ஆக, இதை சோதித்துப் பாருங்கள். கேட்டீர்கள் இல்லையா,
இவ்வருடம் நீண்டகாலக் கணக்கின்படி சேமிப்பாவதற்கானது. பிறகு
நீண்டகாலக் கணக்கு முடிவடைந்து விடும். பிறகு கொஞ்ச காலம்
என்று சொல்ல வேண்டி வரும், நீண்ட காலம் இல்லை. நீண்டகாலப்
புருசார்த்தத்தின் லைனில் வந்து விடுங்கள். அப்போது தான்
நீண்டகால ராஜ்ய பாக்கியத்தை அடைவதற்கு அதிகாரி ஆவீர்கள்.
இரண்டு- நான்கு பிறவிகள் கூடக் குறைந்து விடுமானால்
நீண்டகாலத்தின் எண்ணிக்கையில் வராது. (சத்யுக ஆரம்பத்தில்)
முதல் பிறவி இருக்க வேண்டும் மற்றும் முதல் இயற்கையின் சிரேஷ்ட
சுகம் இருக்க வேண்டும். 1-1-1 ஆக இருக்க வேண்டும் அனைத்திலும்
ஒன்று என இருக்க வேண்டும். அதற்காக என்ன செய்ய வேண்டும்?
சேவையும் நம்பர் ஒன், ஸ்திதியும் நம்பர் ஒன் -- அப்போது தான்
1-1 இல் வருவீர்கள் இல்லையா? ஆக, சத்யுக ஆரம்பத்தில் வரக்கூடிய
நம்பர் ஒன் ஆத்மாவுடன் கூட பார்ட் நடிப்பவர். ஆகவே
சகாப்தத்தையும் நீங்கள் தாம் ஆரம்பித்து வைப்பீர்கள்.
முதல்-முதலில் பிறவி எடுத்தவர் தான் முதல் தேதி, முதல் மாதம்,
முதல் ஆண்டை ஆரம்பித்து வைப்பார். ஆக, இரட்டை வெளிநாட்டினர்
நம்பர் ஒன்னில் வருவீர்கள் இல்லையா? நல்லது - ஃபரிஸ்தா ஆடையை
அணிந்து கொள்வதற்காக வருகிறீர்கள் இல்லையா? இது ஜொலிக்கின்ற
ஆடையாகும். இந்த ஸ்மிருதி மற்றும் சொரூபமாக ஆவது என்றால்
ஃபரிஸ்தா ஆடையை அணிந்து கொள்வதாகும். ஜொலிக்கின்ற பொருள்
தூரத்திலிருந்தே கவர்ந்திழுக்கும். ஆக, இந்த ஃபரிஸ்தா ஆடை
என்றால் ஃபரிஸ்தா சொரூபம் தூர-தூரம் வரைக்கும் கூட
ஆத்மாக்களைக் கவர்ந்திழுக்கும்.
இன்று யூ.கே.இன் வாய்ப்பு. யூ.கே.காரர்களின் சிறப்பு என்ன?
லண்டனை சத்யுகத்திலும் கூட இராஜதானி ஆக்குவீர்களா அல்லது
வெறுமனே சுற்றுலா இடமாக ஆக்குவீர்களா? யுனைட்டெட் கிங்டம்
இல்லையா? அங்கேயும் இராஜ்யத்தை (கிங்டம்) உருவாக்குவீர்களா
அல்லது இராஜாக்கள் சென்று சுற்றி வருவீர்களா? பிறகும் பெயர்
கிங்டம் என்று தான் சொல்கிறார்கள். ஆக, இச்சமயம் சேவையின்
இராஜ்யமோ இருக்கவே செய்கிறது. வெளிநாடுகள் அனைத்தினுடைய
சேவைக்கும் இராஜதானியோ நிமித்தமாக உள்ளது. கிங்டம் என்ற பெயரோ
சரி தான் இல்லையா? அனைவரையும் யுனைட் செய்கிற (ஒற்றுமைப்
படுத்துகிற) கிங்டம். ஆத்மாக்கள் அனைவரையும் பாபாவோடு சந்திக்க
வைக்கிற இராஜதானி. யூ.கே.காரர்களுக்கு பாபா சொல்கிறார் --
ஓ.கே.யாக இருப்பவர்கள். யூ.கே. என்றால் ஓ.கே. யாக
இருப்பவர்கள். எப்போதாவது யாரிடமாவது கேட்பீர் களானால் ஓ.கே.
அப்படித்தானே? ஆம், இருந்தால் சரி தான் என்று நீண்ட
பெருமூச்சுடன் அந்த மாதிரி சொல்ல மாட்டீர்கள். ஆம். மேலும்
எப்போது சரியாக இருக்கிறீர்களோ, அப்போது சொல்கிறீர்கள் - ஆம்,
ஓ.கே. ஓ.கே. சொல்வதில் வித்தியாசம் உள்ளது. ஆக, சங்கமயுக
ராஜதானியில் இராஜ்ய அதிகாரிகள், அதாவது அரசகுடும்பத்தின்
ஆத்மாக்கள் தயாராவதற்கான பிரேரணை நாலாபுறமும் பரவ வேண்டும்.
ஆக, இராஜதானியில் இராஜ்ய அதிகாரிகளை உருவாக்குவதற்கான
இராஜ்ய-ஸ்தானாகவோ ஆகிறது இல்லையா? பாப்தாதா ஒவ்வொரு தேசத்தின்
சிறப்பை விசேசரூபத்தில் நினைவு செய்கிறார். மேலும் சிறப்புகள்
மூலம் சதா முன்னேறச் செய்கிறார். பாப்தாதா பலவீனங்களைப்
பார்ப்பதில்லை. வெறுமனே சமிக்ஞை செய்கிறார். மிக நன்று எனச்
சொல்லிச் சொல்லியே மிக நன்றாக ஆகி விடுகிறீர்கள். பலவீனமாக
இருக்கிறீர்கள் -- பலவீனமாக இருக்கிறீர்கள் என்று சொன்னால்
பலவீனமாகி விடுவீர்கள். ஒன்று, முதலில் பலவீனமாக
இருக்கின்றனர். வேறு யராவது ஏதாவது சொல்லி விட்டார்கள் என்றால்
மூர்ச்சையாகி விடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சிரேஷ்ட
ஸ்மிருதியின், சிறப்புகளின் ஸ்மிருதி என்ற சஞ்சீவி மூலிகை
கொடுங்கள். அப்போது மூர்ச்சையிலிருந்து தெளிந்து சுய உணர்வு
பெற்று விடுவார்கள். சஞ்சீவி மூலிகை அனைவரிடமும் உள்ளது
இல்லையா? ஆக, சிறப்புகளின் சொரூபத்தின் கண்ணாடியை அவர்களுக்கு
முன்னால் வையுங்கள். ஏனென்றால் ஒவ்வொரு பிராமண ஆத்மாவும்
விசேஷமானவர். கோடியில் ஒருவர் இல்லையா? ஆகவே விசேசமானவர்
இல்லையா? அந்தச் சமயத்தில் மட்டும் தங்களின் சிறப்பை மறந்து
விடுகின்றனர். அவர்களுக்கு நினைவு படுத்துவதால் விசேச ஆத்மா
ஆகி விடுவார்கள். மேலும் எவ்வளவு விசேசத் தன்மையின் வர்ணனை
செய்வீர்களோ, அவர்களுக்குத் தங்களின் பலவீனங்கள் தாமாகவே மிகத்
தெளிவாக அனுபவமாகும். நீங்கள் சொல்ல வேண்டிய தேவை இருக்காது.
நீங்கள் யாருக்காவது அவர்களது பலவீனத்தைச் சொல்வீர்களானால்
அவர்கள் மறைப்பார்கள். நான் அந்த மாதிரி இல்லை என்று
மறுப்பார்கள். நீங்கள் சிறப்புகளைச் சொல்லுங்கள். எது வரை
பலவீனங்களைத் தாங்களாகவே அனுபவம் செய்யவில்லையோ, அது வரை
மாற்றம் வராது. 50 ஆண்டுகளாக நீங்கள் முயற்சி செய்து கொண்டே
இருந்தாலும் சரி. எனவே இந்த சஞ்சீவி மூலிகை மூலம்
மூர்ச்சையடைந்தவர்களையும் உணர்வு பெற்றவர்களாக ஆக்கி, பறந்து
கொண்டே செல்லுங்கள் மற்றும் மற்றவர்களையும் பறக்க வையுங்கள்.
இதைத் தான் யூ.கே. செய்கிறது இல்லையா? நல்லது.
லண்டனிலிருந்து வேறு-வேறு இடங்களுக்கு எவ்வளவு பேர்
சென்றுள்ளனர்? பாரதத்திலிருந்தோ சென்றுள்ளனர். லண்டனிலிருந்து
எவ்வளவு பேர் சென்றுள்ளனர்? ஆஸ்திரேலியாவிலிருந்து எவ்வளவு
பேர் சென்றுள்ளனர்? ஆஸ்திரேலியாவும் கூட விருத்தியை
ஏற்படுத்தியுள்ளது. மேலும் எங்கெங்கே சென்றனர்? ஞான கங்கைகள்
எவ்வளவு தூரத்தில் பாய்ந்து செல்கின்றனரோ, அவ்வளவு நல்லது.
யூ.கே., ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பாவில் எவ்வளவு
சென்டர்கள் உள்ளன? (அனைவரும் அவரவர் எண்ணிக்கையைச்
சொன்னார்கள்)
அதாவது விருத்தியடைந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது ஏதாவது
விசேச இடம் மிச்சமுள்ளதா? (நிறைய உள்ளன). நல்லது, அதற்கான
திட்டமும் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா?
வெளிநாடுகளுக்கு இந்த லிஃப்ட் உள்ளது -- மிக சுலபமாக
சென்டர்களைத் திறக்க முடியும். லௌகிக் சேவையும் செய்ய முடியும்
மற்றும் அலௌகிக சேவைக்கும் நிமித்தமாக முடியும். பாரதத்தில்
பிறகும் அழைப்பிற்கிணங்க சென்டர் ஸ்தாபனை ஆவதற்கான சிறப்பு
உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் தாங்களே தங்களுக்கு அழைப்புக்
கொடுத்துக் கொள்கின்றனர். அழைப்புக் கொடுப்பவரும் பெற்றுக்
கொள்பவரும் தாங்களே. இதுவும் சேவையில் விருத்தி சுலபமாக
ஏற்படுவதற்கான ஒரு லிஃப்ட் கிடைத்துள்ளது. எங்கே நீங்கள்
சென்றாலும் இரண்டு-மூன்று பேர் சேர்ந்து அங்கே ஸ்தாபனைக்கு
நிமித்தமாக முடியும் மற்றும் ஆகிக் கொண்டே இருப்பீர்கள். இது
டிராமா அனுசாரம் கிஃப்ட் என்றாலும் சரி, லிஃப்ட் என்றாலும்
சரி, கிடைத்துள்ளது. ஏனென்றால் கொஞ்ச சமயத்தில் சேவையை முடிக்க
வேண்டும் என்றால், தீவிர வேகம் இருக்க வேண்டும். அப்போது தான்
சமயத்தில் முடிவடையும். பாரதத்தின் விதி மற்றும் வெளிநாட்டின்
விதிக்கிடையில் வேறுபாடு உள்ளது. எனவே வெளிநாட்டில் விரைவில்
விருத்தி ஆகிக் கொண்டிருக்கிறது மற்றும் ஆகிக் கொண்டே
இருக்கும். ஒரே நாளில் அநேக சென்டர்கள் திறக்கப் பட முடியும்.
நாலாபுறமும் வெளிநாடுகளில் நிமித்தமாக இருக்கும்
வெளிநாட்டினருக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு சுலபமாக உள்ளது.
பாரதவாசிகளுக்குப் பாருங்கள், விசா கிடைப்பதும் கூட கஷ்டமாக
உள்ளது. ஆகவே அங்கே இருப்பவர்களே அங்குள்ள சேவைக்கு
நிமித்தமாகிறார்கள். அதனால் இது சேவைக்கான வாய்ப்பு. எப்படி
கடைசியில் வந்தாலும் வேகமாகச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளதோ அது
போல் சேவைக்கான வாய்ப்பும் வேகமாகக் கிடைத்துள்ளது. அதனால்
புகார் இருக்காது -- நாங்கள் பின்னால் வந்தோம் என்று. பின்னால்
வருகிறவர்களுக்கு வேகமாகப் போவதற்கான வாய்ப்பும் கூட விசேசமாக
உள்ளது. எனவே ஒவ்வொருவரும் சேவாதாரி. அனைவரும் சேவாதாரிகளா
அல்லது சென்டரில் இருக்கக் கூடிய சேவாதாரிகளா? எங்கே
இருந்தாலும் சேவை இன்றி நிம்மதி இருக்காது. சேவை தான்
நிம்மதியான தூக்கம். நிம்மதியாகத் தூங்குவது தான் வாழ்க்கை
எனச் சொல்லப் படுகிறது. சேவை தான் நிம்மதியான நித்திரை
என்றாலும் சரி, உறக்கம் என்றாலும் சரி. சேவை இல்லை என்றால்
நிம்மதியான தூக்கம் இல்லை. கேட்டீர்கள் இல்லையா, சேவை என்பது
வாய்மொழியினால் செய்வது மட்டுமில்லை. ஒவ்வொரு விநாடியும் சேவை.
ஒவ்வொரு சங்கல்பத்திலும் சேவை. யாரும் இதைச் சொல்ல முடியாது --
பாரதவாசியாக இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருக்கும்
பிராமணராயினும் சரி, சேவைக்கு வாய்ப்பில்லை என்று சொல்ல
முடியாது. நோய்வாய்ப் பட்டிருந்தாலும் கூட மனதால் செய்யும்
சேவை, வாயுமண்டலத்தை உருவாக்கும் சேவை, வைப்ரேசன்களைப்
பரப்புகின்ற சேவையோ செய்ய முடியும். ஏதாவதொரு சேவை
செய்யுங்கள். ஆனால் சேவையில் தான் இருக்க வேண்டும். சேவை தான்
வாழ்க்கை. பிராமணர் என்பதன் அர்த்தமே சேவாதாரி என்பது தான்.
நல்லது.
சதா பறக்கும் கலை அனைவருக்குமான நன்மை என்ற ஸ்திதியில்
நிலைத்திருக்கக் கூடிய, சதா தன்னை ஃபரிஸ்தாவாக அனுபவம்
செய்யக்கூடிய, சதா உலகத்திற்கு முன்னால் இஷ்டதேவ் ரூபத்தில்
பிரத்தியட்சமாகக் கூடிய, தேவ ஆத்மாக்கள் சதா தன்னை விசே ஆத்மா
எனப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் கூட விசேஷத் தன்மையின்
அனுபவம் செய்விக்கக் கூடிய விசேச ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின்
அன்புநினைவு மற்றும் நமஸ்தே.
பார்ட்டிகளுடன் -- சதா தன்னை
கர்மயோகி என அனுபவம் செய்கிறீர்களா? கர்மயோகி என்றால் ஒவ்வொரு
கர்மம் செய்யும் போதும் நினைவு யாத்திரையில் சதா இருப்பதாகும்.
இந்த சிரேஷ்ட காரியத்தை சிரேஷ்ட தந்தையின் குழந்தைகள் தாம்
செய்கின்றனர் மற்றும் சதா வெற்றி கொள்கின்றனர். நீங்கள்
அனைவரும் கர்மயோகி ஆத்மாக்கள் இல்லையா? கர்மத்தில் இருந்து
கொண்டே விலகியும் அன்பானவராகவும் சதா இதே அப்பியாசத்தின் மூலம்
தன்னை முன்னேற்றத்தில் கொண்டு செல்ல வேண்டும். சுயத்துடன் கூடவே
உலகத்தின் பொறுப்பு அனைவர் மீதும் உள்ளது. ஆனால் இவையனைத்தும்
ஸ்தூல சாதனங்கள். கர்மயோகி வாழ்க்கை மூலம் முன்னேறிக் கொண்டே
மற்றவர்களையும் முன்னேற வைத்துக் கொண்டே செல்லுங்கள். இந்த
வாழ்க்கை தான் மிக அன்பான வாழ்க்கையாகும். சேவையும் இருக்க
வேண்டும், குஷியும் இருக்க வேண்டும். இரண்டும் கூடவே இருக்கிறது,
சரி தானே? பொன்விழாவோ அனைவருக்குமானது. பொன் என்றால் சதோப்ரதான
ஸ்திதியில் நிலைத்திருப்பவர்கள். ஆக, சதா தன்னை இந்த சிரேஷ்ட
ஸ்திதியின் மூலம் முன்னேற வைத்துக் கொண்டே செல்லுங்கள்.
அனைவரும் சேவையை நல்லபடியாகச் செய்திருக்கிறீர்கள் இல்லையா?
சேவைக்கான வாய்ப்பும் கூட இப்போது தான் கிடைக்கிறது. பிறகு
இந்த வாய்ப்பு முடிந்து போகும். ஆகவே சதா சேவையில் முன்னேறிக்
கொண்டே செல்லுங்கள். நல்லது.
வரதானம் :
தந்தையின் குடைநிழலின்
அனுபவத்தின் மூலம் விக்னவிநாசக் என்ற பட்டத்தைப் பெறக்கூடிய
அனுபவி மூர்த்தி ஆகுக.
எங்கே தந்தை உடன் இருக்கிறாரோ,
அங்கே யாராலும் எதுவும் செய்ய இயலாது. இந்தத் துணையின் அனுபவம்
தான் குடைநிழல் ஆகி விடுகிறது. பாப்தாதா எப்போதுமே குழந்தைகளைப்
பாதுகாக்கவே செய்கிறார். உங்களை அனுபவி ஆக்குவதற்காகவே
பேப்பர்கள் வருகின்றன. அதனால் புரிந்து கொள்ள வேண்டும் --
இந்தப் பேப்பர்கள் அடுத்த வகுப்புக்கு முன்னேறச் செய்வதற்காக
வந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் தான் சதா காலத்திற்கும்
விக்னவிநாசக் என்ற டிகிரி மற்றும் அனுபவி மூர்த்தி ஆவதற்கான
வரதானம் கிடைத்து விடும். இப்போது யாராவது கொஞ்சம் குழப்பம்
விளைவிக்கிறார்கள் அல்லது விக்னத்தை ஏற்படுத்துகிறார்கள்
என்றால் மெது-மெதுவாகக் குளிர்ந்து போவார்கள்.
சுலோகன்:
யார் சமயத்தில் சகயோகி
ஆகிறார்களோ, அவர்களுக்கு ஒன்றுக்குப் பல மடங்காக பலன் கிடைத்து
விடும்.
ஓம்சாந்தி