31.07.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இது
அதிசயமான பாட சாலை யாகும். இதில் படிக்கக் கூடிய ஆத்மாக்களாகிய
நீங்களும் இந்த கண்களுக்குத் தெரிவதில்லை, படிக்க வைப்பவரும்
தெரிவதில்லை. இது புதிய விசயம் ஆகும்.
கேள்வி:
இந்த பாட சாலையில் உங்களுக்கு
முக்கியமாக என்ன மாதிரியான கல்வி கிடைக்கிறது. அது வேறு எந்த
பாட சாலையிலும் அளிக்கப்படுவதில்லை?
பதில்:
இங்கே பாபா தன்னுடைய
குழந்தைகளுக்கு - குழந்தைகளே, உங்களுடைய கர்மேந்திரியங்களை
கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளுங்கள் என அறிவினை அளிக்கிறார்.
ஒரு போதும் எந்த சகோதரி மீதும் தீய பார்வை இருக்கக் கூடாது.
நீங்கள் ஆத்ம ரூபத்தில் சகோதரர்கள், மேலும் பிரஜா பிரதா
பிரம்மாவின் குழந்தைகள் சகோதரன் சகோதரிகள். உங்களுக்கு தீய
எண்ணங்கள் ஒரு போதும் வரக் கூடாது. இது போன்ற படிப்பினைகள்
இந்த பல்கலை கழகத்தைத் தவிர வேறு எங்கும் அளிக்கப்படுவதில்லை.
பாடல்:
தூர தேசத்தில் வசிக்கக் கூடியவரே...
ஓம் சாந்தி.
தூர தேசத்தில் வசிக்கக் கூடிய
ஆத்மாவும் கண்ணுக்கு தெரிவதில்லை. தூர தேசத்தில் வசிக்கக்
கூடிய பரமாத்மாவும் தெரிவதில்லை. ஒரேயொரு பரமாத்மா மற்றும்
ஆத்மாவை இந்த கண்களால் பார்க்க முடியாது. மற்ற அனைத்து
பொருள்களும் தெரிகிறது. நாம் ஆத்மா என்பது புரிந்துக் கொள்ள
முடிகிறது. மனிதர்கள் ஆத்மா தனி, உடல் தனி என நினைக்கிறார்கள்.
ஆத்மா தூர தேசத்திலிருந்து வந்து சரீரத்தில் பிரவேசமாகிறது.
நீங்கள் ஒவ்வொரு விசயத்தையும் நன்கு புரிந்துக் கொள்கிறீர்கள்.
ஆத்மாக்களாகிய நாம் எப்படி தூர தேசத்திலிருந்து வருகிறோம்,
ஆத்மாவும் பார்ப்பதற்குத் தெரியவில்லை, படிக்கக் வைக்கக் கூடிய
பரமாத்மா பாபாவும் தெரிவதில்லை. இது போன்று ஒரு போதும் எந்த
சத்சங்கம் மற்றும் சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. ஒரு போதும்
கேட்டதும் இல்லை, ஒரு போதும் பார்த்ததும் இல்லை. இப்போது
ஆத்மாக் களாகிய நாம் பார்ப்பதற்குத் தெரிவதில்லை என புரிந்துக்
கொள்கிறீர்கள். ஆத்மா தான் படிக்க வேண்டும். ஆத்மா தான்
அனைத்தையும் செய்கிறது அல்லவா. இது புது விசயம் அல்லவா. வேறு
யாரும் புரிந்துக் கொள்ள முடியாது. பரம்பிதா பரமாத்மா ஞானக்கடல்,
அவரும் பார்ப்பதற்குத் தெரிவதில்லை. நிராகார் எப்படி படிக்க
வைப்பார்? ஆத்மா சரீரத்தில் வருகிறது அல்லவா. அவ்வாறே பரம்பிதா
பரமாத்மா பாபாவும் பாக்கியசாலி ரதம் அதாவது பாக்கியரதத்தில்
வருகிறார். இந்த ரதத்திற்குக் கூட அதனுடைய ஆத்மா இருக்கிறது.
அவரும் தன்னுடைய ஆத்மாவைப் பார்க்க முடியாது. பாபா இந்த
ரதத்தின் ஆதாரத்தில் வந்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்.
ஆத்மாவும் ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுக்கிறது. ஆத்மாவின்
அறிமுகம் இருக்கிறது, ஆனால் பார்க்க முடியாது. அந்த தந்தையைப்
பார்க்க முடிவதில்லை. அவர் உங்களைப் படிக்க வைத்துக்
கொண்டிருக்கிறார். இது முற்றிலும் புதிய விசயம் ஆகும். நானும்
நாடகத்தின் படி தனது நேரத்தில் வந்து இந்த உடலை எடுக்கிறேன் என
பாபா புரிய வைக்கிறார். இல்லையெனில் இனிமையிலும் இனிமையான
குழந்தைகள் உங்களை துக்கத்திலிருந்து எவ்வாறு விடுவிப்பேன்.
இப்போது நீங்கள் விழித்துக் கொண்டீர்கள். உலகிலுள்ள மற்ற
மனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். உங்களிடம் நேரில்
வந்து புரிய வைக்கும் போது பிராமணன் ஆகிறீர்கள். மற்ற
சத்சங்கங்களில் யார் வேண்டுமானாலும் சென்று அமரலாம். இங்கே
அவ்வாறு யாரும் வர முடியாது. ஏனென்றால் இது ஆன்மீகப் பாட சாலை
அல்லவா!. வக்கீல் படிப்பில் நீங்கள் சென்று தேர்வில் அமர்ந்தால்
எதுவும் தெரியாது. இது முற்றிலும் புதிய விசயம் ஆகும். படிக்க
வைப்பவரும் பார்ப்பதற்கு தெரிவதில்லை, படிப்பவர்களும்
பார்ப்பதற்குத் தெரிவதில்லை. ஆத்மா உள்ளுக்குள் கேட்கிறது,
கடைபிடிக்கிறது. உள்ளுக்குள் நிச்சயமும் ஏற்பட்டுக் கொண்டே
செல்கிறது. இந்த விசயம் முற்றிலும் சரியாகும். பரமாத்மா மற்றும்
ஆத்மா இரண்டுமே பார்ப்பதற்குத் தெரிவதில்லை. நான் ஆத்மா என்பது
புத்தியினால் புரிந்துக் கொள்ளப் படுகிறது. சிலரோ இதையும்
ஏற்றுக் கொள்வதில்லை. இது இயற்கை என்கிறார்கள். பிறகு அதை
வர்ணனையும் செய்கிறார்கள். பல வழிகள் இருக்கிறது அல்லவா.
குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தில் பிஸியாக இருக்க வேண்டும்.
கர்மேந்திரியங்கள் எது ஏமாற்றுகிறதோ அதை வசப்படுத்த வேண்டும்.
முக்கியமானது கண்கள், அதுவே அனைத்தையும் பார்க்கிறது. கண்கள்
குழந்தையை பார்க்கிறது என்றால் இது நம்முடைய குழந்தை என
கூறுகிறது. இல்லாவிடில் எப்படி புரிந்துக் கொள்வது. பிறவியிலேயே
பார்வை யற்றவர்களுக்கு இவர் உனது சகோதரர் என புரிய
வைக்கப்படுகிறது. புத்தி மூலம் புரிந்து கொள்வார்கள். உண்மையில்
யாராவது சூரதாஸ் போன்று குருடர்களாக இருந்தால் ஞானத்தை நன்கு
புரிந்துக் கொள்ள முடியும். காரணம் காண்பதற்கு கண்கள் இல்லை.
வேலை எதுவும் செய்ய முடியாது ஆனாலும் ஞானத்தை நன்றாக அறிந்து
கொள்வார்கள். மனைவியைக் கூட பார்க்க மாட்டார்கள். மற்றவர்களை
பார்த்தால் தான் அவர்களைத் தொடலாம் என புத்தி போகும்.
பார்க்கவேயில்லை என்றால் எப்படி தொட முடியும்.
கர்மேந்திரியங்களை தன் வசத்தில் உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்
என பாபா புரிய வைக்கிறார். கிரிமினல் என்றால் தீய பார்வையோடு
எந்த சகோதரியையும் பார்க்க கூடாது. நீங்களும் சகோதரன் சகோதரி
அல்லவா. சிறிது கூட தீய பார்வையோடு சிந்திக்கக் கூடாது. இன்று
கலியுகமாக இருக்கிறது. சகோதரன் சகோதரிகள் கூட கெட்டுப்
போகிறார்கள். ஆனால் சட்டபடி சகோதரன் சகோதரிகளுக்கு இடையே தீய
சிந்தனைகள் இருக்காது.
நாம் ஒரு தந்தையின் குழந்தைகள், பிரம்மா குமார் குமாரிகள்
என்றால் நாம் சகோதரன் சகோதரி என்ற ஞானத்தில் உறுதியாக இருக்க
வேண்டும் என பாபா டைரக்ஷன் கொடுக்கிறார். ஆத்மாக்களாகிய நாம்
பகவானின் குழந்தைகள் சகோதரர்கள். பிறகு உடலில் பிரஜாபிதா
பிரம்மா மூலமாக சகோதரன் சகோதரி ஆகிறோம். ஏனென்றால்
தத்தெடுக்கிறார் அல்லவா. தீய பார்வை ஏற்படாது. நாம் ஆத்மா
என்பதை தெளிவாக உறுதியாகப் புரிந்துக் கொள்ளுங்கள். பாபா நம்மை
படிக்க வைக்கின்றார். ஆத்மாக்களாகிய நாம் இந்த உடல் மூலமாக
படிக்க முடியும். இது உறுப்புகளாகும். ஆத்மாக்களாகிய நாம்
இதிலிருந்து தனிப்பட்டவர், இந்த கர்மேந்திரியங்களால் நாம்
கர்மத்தை செய்கிறோம். நான் இந்த உடல் கிடையாது. நான்
இதிலிருந்து விடுபட்ட ஆத்மா. இந்த உடலை எடுத்து நடிக்கிறேன்.
இருப்பினும் அலௌகீகமான நடிப்பு. வேறு எந்த மனிதர்களும் இந்த
பார்ட்டை நடிப்பதில்லை. நீங்கள் நடிக்கிறீர்கள் அடிக்கடி தன்னை
ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைக்க வேண்டும். பிறகு அவரே
நம்முடைய ஆசிரியராகவும், குருவாகும் இருக்கிறார். அந்த சாகார
தந்தை, டீச்சர், குரு தனித்தனியாக உள்ளனர். இந்த நிராகாரர்
ஒருவரே அப்பா, டீச்சர், குரு ஆவார். இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு புதிய கல்வி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அப்பா,
டீச்சர், குரு மூவரும் நிராகாரி ஆவார். நாமும் நிராகாரி ஆத்மா
படிக்கின்றோம், அப்போது தான் ஆத்மா பரமாத்மா பிரிந்து நீண்ட
காலமாகி விட்டது என புரிந்துக் கொள்கின்றோம். பாபா வந்து
தூய்மையாக்கும் போது இங்கே தான் சந்திப்பு ஏற்படுகிறது. மூல
வதனத்தில் ஆத்மாக்கள் சென்று சந்திக்கும். அங்கே எந்த
விளையாட்டும் கிடையாது. அதுவும் நமது வீடாகும். அங்கே அனைத்து
ஆத்மாக்களும் இருக்கின்றது. கடைசியில் அனைத்து ஆத்மாக்களும்
அங்கே சென்று விடுகின்றது. ஆத்மாக்கள் நடித்துக் கொண்டே
வருகின்றது. அது இடையில் திரும்ப போக முடியாது. கடைசி வரை
நடிக்க வேண்டும். மறு பிறவி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அதாவது அனைவரும் வந்து விடுவர். சதோபிரதானத்திலிருந்து சதோ,
இரஜோ தமோவில் வர வேண்டும். கடைசியில் நாடகம் முடிவடைகிறது
என்றால் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆக வேண்டும். பாபா
அனைத்து விசயங்களையும் சரியாகப் புரிய வைக்கிறார் அல்லவா? ஞான
மார்க்கமே சத்தியமானதாகும். சத்தியம் சிவம் சுந்தரம் என
கூறப்படுகிறது அல்லவா. சத்தியத்தை கூறக் கூடியவர் ஒரு தந்தை
தான். இந்த சங்கமத்தில் முயற்சியாளர் ஆவதற்காக இந்த ஒரேயொரு
சத்தியமானவரின் சங்கமே இருக்கிறது. பாபா வரும் போது
குழந்தைகளைச் சந்திக்கிறார். அப்போது அதற்கு தான் சத்சங்கம்
என்று கூறப்படுகிறது. மற்ற அனைத்தும் தீய சங்கம் ஆகும்.
உண்மையான சங்கத்தில் இருந்தால் பிரகாசிக்கலாம், தீய சங்கத்தில்
மூழ்கிவிடுவோம் என பாடப்பட்டிருக்கிறது. தீய சங்கம்
இராவணனுடையதாகும். நான் உங்களை மீட்டு திரும்ப அழைத்துச்
செல்கிறேன் என பாபா கூறுகிறார். பிறகு உங்களை மூழ்கடிப்பவர்
யார்? எப்படி தமோபிரதானமாகிறீர்கள் அதையும் தெரிவிக்க
வேண்டியதாக இருக்கிறது. எதிரில் எதிரி மாயை இருக்கிறது.
சிவபாபா நண்பராவார். அவருக்கு பதீகளுக்கெல்லாம் பதி என்று
பெயர். இந்த மகிமைகள் இராவணனுடையது கிடையாது. இராவணன் என்று
கூறுகிறார்கள். அவ்வளவு தான் வேறு ஒன்றும் இல்லை. இராவணனை ஏன்
எரிக்கிறார்கள்?. அங்கே கூட நீங்கள் நிறைய சேவை செய்யலாம்.
இராவணன் யார் என்று எந்த மனிதருக்கும் தெரியாது. எப்போது
வருகிறார், ஏன் எரிக்கிறார்கள், மூட நம்பிக்கை அல்லவா.
குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைப்பதற்கான சக்தி வேண்டும்.
அவர்கள் சாஸ்திரங் களின் சக்தியினால் கூறுகிறார்கள் அல்லவா.
கேட்பவர்களும் மிகவும் போதையோடு இருக்கிறார்கள். பணம்
கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். சமஸ்கிருதத்தை
கற்பியுங்கள், கீதையை கற்பியுங்கள், இதற்காக நிறைய பணத்தை
கொடுக்கிறார்கள். குழந்தைகளே நீங்கள் எவ்வளவு நேரத்தை, எவ்வளவு
பணத்தை வீணாக்கிக் கொண்டே வந்துள்ளீர் என பாபா புரிய
வைக்கின்றார்.
உங்களிடம் இந்த பிராமண குலத்தை
சார்ந்தவர்கள் வந்துக் கொண்டே இருப்பார்கள். ஆகவே நீங்கள் பட
கண்காட்சியை ஏற்பாடு செய்துக் கொண்டே இருங்கள். இவ்விடத்தைச்
சேர்ந்த மலர் என்றால் நிச்சயம் வருவார்கள், இந்த மரம்
வளர்ந்துக் கொண்டே போகிறது. பாபா ஒரு பிரம்மா என்ற ஒரு விதையை
விதைத்தார். அவரிலிருந்து பிராமண குலம் தோன்றுகிறது.
ஒன்றிலிருந்து பெருகிக் கொண்டே வந்தது. முதலில் வீட்டில்
இருப்பவர்கள், பிறகு நண்பர்கள், உறவினர்கள், அக்கம்
பக்கத்திலிருந்து வந்தனர். பிறகு கேள்விப்பட்டு எவ்வளவு பேர்
வருகிறார்கள். இதுவும் சத் சங்கம் என நினைக்கிறார்கள். ஆனால்
இதில் தூய்மையாக இருப்பதற்கு கடின உழைப்பு இருக்கிறது. இதில்
தான் சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது. இப்போதும் நடந்துக் கொண்டே
இருக்கிறது. ஆகவே நிந்திக்கிறார்கள். விரட்டினார், பட்டத்து
ராணி ஆக்கினார் என்று கூறுகிறார்கள். சொர்க்கத்தில் பட்டத்து
ராணி ஆவார்கள் அல்லவா. நிச்சயம் இங்கேயே தூய்மையாக ஆகி
இருப்பார்கள். நீங்கள் அனைவரும் மகாராஜா மகாராணி ஆவதற்கான ஞானம்
இது என கூறுகிறீர்கள். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான
உண்மையிலும் உண்மையான கதையை நீங்கள் உண்மையான பகவானிடம்
கேட்கிறீர்கள். இந்த லஷ்மி நாராயணனை யாரும் பகவான் பகவதி என்று
கூற முடியாது. ஆனால் பூஜாரிகள் கிருஷ்ணரின் மூர்த்தியை ஏற்றுக்
கொள்ளும் அளவு நாராயணனின் படத்தை ஏற்றுக் கொள்வதில்லை.
கிருஷ்ணரின் படத்தை நிறைய வாங்குகிறார்கள். கிருஷ்ணருக்கு
இவ்வளவு மரியாதை ஏன்? ஏனென்றால் சிறிய குழந்தை அல்லவா. மகான்களை
விட குழந்தைகள் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால்
மகான்கள் வீடு வாசல் அனைத்தையும் உருவாக்கி பிறகு விட்டு
விடுகிறார்கள். சிலர் பால பிரம்மச்சாரியாகவும் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு காமம், கோபம் என்றால் என்ன என தெரியும்.
சிறிய குழந்தைகளுக்குத் தெரியாது. ஆகவே மகான்களை விட
உயர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. ஆகவே கிருஷ்ணருக்கு அதிகமான
மாரியதை கொடுக்கிறார்கள். கிருஷ்ணரை பார்த்து மிகவும் மகிழ்ச்சி
அடைகிறார்கள். பாரதத்தின் கடவுள் கிருஷ்ணர். பெண் குழந்தைகள்
கூட கிருஷ்ணரிடம் மிகவும் அன்பாக இருக்கிறார்கள். இவரைப் போன்று
கணவர் கிடைக்க வேண்டும், இவரைப் போன்று குழந்தை பிறக்க வேண்டும்
என நினைக்கிறார்கள். கிருஷ்ணரிடம் அந்த கவர்ச்சித் தன்மை
மிகவும் இருக்கிறது. சதோபிரதானமாக இருக்கிறார் அல்லவா. எவ்வளவு
நினைவில் இருப்பீர்களோ அவ்வளவு தமோபிர தானத்திலிருந்து தமோ,
இரஜோவில் வருவீர்கள், குஷியும் ஏற்படும் என பாபா கூறிக் கொண்டே
இருக்கிறார். முதலில் நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள்.
மிகவும் மகிழ்ச்சியிலிருந்தீர்கள், பிறகு கலை குறைந்துக் கொண்டே
போகிறது. நீங்கள் எவ்வளவு தந்தையை நினைத்துக் கொண்டே
இருக்கிறீர்களோ அவ்வளவு சுகத்தையும் உணர முடியும். மேலும்
நீங்கள் மாற்றமடைந்து கொண்டே போவீர்கள். தமோவிலிருந்து ரஜோ,
சதோவில் வருகின்ற போது சக்தி, மகிழ்ச்சி, தாரணை அதிகரித்துக்
கொண்டே போகும். இச்சமயம் உங்களுடையது ஏறும் கலையாகும்.
சீக்கியர்கள் கூட நீங்கள் ஏறுவதால் அனைவருக்கும் நன்மை என
பாடியிருக்கிறார்கள். இப்போது நினைவினால் நம்முடையது ஏறும்
கலையாகிறது என புரிந்துக் கொள்கிறீர்கள். எவ்வளவு
நினைக்கிறீர்களோ அவ்வளவு உயர்ந்த ஏறும் கலை ஏற்படும்.
சம்பூரணமாக வேண்டும் அல்லவா. சந்திரனின் கோடு இருக்கிறது. பிறகு
கலைகள் அதிகரிக்க அதிகரிக்க சம்பூரணம் ஆகிவிடுகிறது.
உங்களுடையதும் அவ்வாறே ஆகும். சந்திரனை கூட கிரகணம் பிடிக்கும்
போது தானம் கொடுத்தால் கிரகணம் விலகும் என்கிறார்கள். நீங்கள்
உடனடியாக 5 விகாரங்களை தானம் கொடுக்க முடியாது. கண்கள் கூட
எவ்வளவு ஏமாற்றுகிறது. நம்முடைய பார்வை எவ்வளவு தீயதாக
இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளவில்லை. நாம் பிரம்மா குமார்
குமாரி ஆகி விட்டோம் என்றால் சகோதரன் சகோதரி ஆகிவிட்டோம். பிறகு
இவரை தொடலாம் என மனதில் தோன்றினால் அந்த சகோதரத்துவ அன்பு விலகி
பெண் என்ற தவறான அன்பு ஏற்படுகிறது. நாம் பாபாவினுடையவராகி
விட்டால் நம்மை யாரும் தீய பார்வையாடு தொடக் கூடாது என
சிலருக்கு உள்ளுக்குள் மனம் அரிக்கிறது. பிறகு பாபா எங்கள் மீது
இவர் கை வைக்கின்றார், எங்களுக்கு பிடிக்கவில்லை என
கூறுகின்றனர். பிறகு பாபா இதனால் உங்களின் நிலை சரியாக இருக்க
முடியாது என முரளியில் தெரிவிப்பார். முரளி மிகவும் நன்கு
கூறுகின்றனர், பலருக்கு புரிய வைக்கின்றனர், ஆனால் நிலை நன்றாக
இல்லை. தீய பார்வை ஏற்படுகிறது. இவ்வளவு அழுக்கான உலகம்.
குறிக்கோள் மிகவும் உயர்ந்தது என குழந்தைகள் புரிந்துக்
கொள்கின்றனர். பாபாவின் நினைவில் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
நாம் பிரம்மா குமார்-குமாரி நமக்குள் ஆன்மீகத் தொடர்பு
இருக்கிறது. இரத்த சம்மந்தமான தொடர்பு இல்லை. இங்கேயோ இரத்த
சம்மந்தத்தில் அனைவரும் பிறக்கின்றனர். சத்யுகத்தில் இரத்த
சம்மந்தம் இருக்கிறது. ஆனால் அங்கே உடல் யோக பலத்தால்
கிடைக்கிறது. விகாரம் இல்லாமல் குழந்தை எப்படி பிறக்கும்
என்பார்கள். அதுவே நிர்விகார உலகம், அங்கே விகாரம் கிடையாது என
பாபா கூறுகின்றார். அங்கே ஒரு வேளை விகாரத்தால்
அவமானப்படுகிறார்கள் என்றால் அதுவும் இராவண இராஜ்யம் ஆகிவிடும்.
பிறகு இங்கே இருப்பதற்கும் அங்கே இருப்பதற்கும் என்ன
வித்தியாசம் இருக்கிறது. புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம். தீய
பார்வை விலகுவது மிகவும் கடினமானதாகும். கல்லூரிகளில் ஆண்
குழந்தைகள், பெண் குழந்தைகள் ஒன்றாகப் படிக்கிறார் கள் என்றால்
பலருக்கும் குற்றப் பார்வை ஏற்படுகிறது. பிள்ளைகள் நாம் இறை
தந்தையின் குழந்தைகள் என்றால் நமக்குள் சகோதரன் சகோதரி
ஆகிவிட்டோம் என புரிந்துக் கொள்ள வேண்டும். பிறகு தீய பார்வை
ஏன் பார்க்கிறார்கள். அனைவரும் நாம் ஈஸ்வரனின் குழந்தைகள் என
கூறுகிறார்கள். ஆத்மாக்கள் நிராகாரரின் வாரிசாகி விட்டனர்.
பிறகு பாபா படைக்கிறார் என்றால் நிச்சயமாக சாகார பிராமணர்களைப்
படைப்பார். பிரஜா பிதா பிரம்மா கூட சாகாரத்தில் தான்
இருக்கிறார் அல்லவா. அவர் தத்தெடுக்கப் பட்டவராகி விட்டார்.
தத்தெடுக்கப்பட்டு மடியில் இருக்கும் குழந்தை பிரஜா பிரம்மாவின்
மூலம் இந்த சிருஷ்டி எப்படி உருவாகிறது என மனிதர்களின்
புத்தியில் முற்றிலும் இல்லை.
நீங்கள் பிரஜா பிதா பிரம்மாவின் குழந்தைகள் பிரம்மா குமார்
குமாரிகள் சகோதரன் சகோதரி ஆகி விட்டீர்கள். தீய பார்வையில்
மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இதில் பலர்
தவிக்கின்றனர். உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி அடைய வேண்டும்
என்றால் கடினமாக முயற்சிக்க வேண்டும் தூய்மையாகுங்கள் என பாபா
கூறுகின்றார். இவர் கூறுவதை ஒரு சிலர் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு சிலர் ஏற்றுக் கொள்வதில்லை. மிகவும் கடினமான முயற்சி தேவை.
முயற்சி இல்லாமல் எப்படி உயர்ந்த நிலை அடைய முடியும்.
குழந்தைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சகோதரன் சகோதரி
என்றால் ஒரு தந்தையின் குழந்தைகள் என பொருளாகும். பிறகு ஏன்
தீய பார்வை ஏற்பட வேண்டும். நமக்கு குற்றப் பார்வை
ஏற்படுகிறது. பாபா சரியாகச் சொல்கிறார் என குழந்தைகள்
புரிந்துக் கொள்கிறார்கள். பெண்களுக்கும் ஏற்படுகிறது.
ஆண்களுக்கும் ஏற்படுகிறது. குறிக்கோள் இருக்கிறது அல்லவா.
ஞானம் மிகவும் நன்றாக கூறுகிறார்கள். ஆனால் நடத்தை தூய்மையாக
இருக்க வேண்டும் அனைத்தையும் விட அதிகமாக ஏமாற்றக் கூடியது
இந்த கண்களே என பாபா கூறுகிறார். கண்களினால் பொருள்களை
பார்க்கும் போது இதை சாப்பிடலாமா என மனதிற்கு தோன்றுகிறது.
அப்போது வாய் கூட மியாவ் மியாவ் என்கிறது. ஆகவே
கர்மேந்திரியங்களை வெற்றி அடைய வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. தன்னுடைய நடத்தையை தூய்மையானதாக்கிக் கொள்ள வேண்டும். தீய
பார்வை, தீய எண்ணங்களை முடித்து விட்டு தன்னை இந்த
கர்மேந்திரியங்களிலிருந்து விடுவித்து ஆத்மா என உணர வேண்டும்.
2. தங்களுக்குள் ஆன்மீக தொடர்பு வைக்க வேண்டும். இரத்த
சம்மந்தம் கூடாது. உங்களுடைய விலைமதிப்பற்ற நேரம், பணத்தை
வீணாக்கக் கூடாது. சங்கதோஷத்திலிருந்து (தீய நட்பு) தன்னை
மிகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
வரதானம்:
பிரம்ம மூகூர்த்தத்தின் (அமிர்தவேளை)
நேரத்தில் வரதானம் அடைய மற்றும் கொடுக்கக் கூடிய பாப்சமான்
வரதானி, மகாதானி ஆகுக.
பிரம்ம மூகூர்த்த நேரத்தில்
பிரம்ம லோக நிவாசியாகிய பாபா ஞான சூரியனின் லைட் மற்றும் மைட்
கிரணங்களை குழந்தைகளுக்கு விசேஷமாக வரதானத்தின் ரூபத்தில்
கொடுக்கின்றார். கூடவே பிரம்மா பாபா பாக்கிய விதாதாவின்
ரூபத்தில் பாக்கியம் என்ற அமிர்தத்தை பகிர்ந்து கொடுக்கின்றார்.
அதற்கு புத்தி என்ற பாத்திரம் அமிர்தம் அடைவதற்கு (நிரப்பிக்
கொள்ள) தகுதியானதாக இருக்க வேண்டும். எந்த வகையான விக்னம்
அதாவது தடையும் இருக்கக் கூடாது. ஆக முழு நாளிற்காக சிரேஷ்ட
ஸ்திதி அல்லது செயலுக்கான ஆற்றலை) ரத்தை பயன்படுத்திக் கொள்ள
வேண்டும். ஏனெனில் அமிர்தவேளையின் சூழ்நிலை விருத்தியை (மனதின்
ஆ மாற்றக் கூடியதாகும். ஆகையால் அந்த நேரத்தில் வரதானங்களை
அடைந்து தானம் செய்யுங்கள் அதாவது வரதானி மற்றும் மகாதானி
ஆகுங்கள்.
சுலோகன்:
கோபப்படுபவர்களின் வேலை
கோபப்படுவதாகும், உங்களது வேலை அன்பு கொடுப்பதாகும்.
ஓம்சாந்தி