30.07.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நீங்கள்
ஆன்மீக வழிகாட்டிகளாக ஆகி அனைத்து தர்மத்தைச்
சேர்ந்தவர்களுக்கும் சாந்திதாமம் மற்றும் சுகதாமத்திற்கான
வழியைச் சொல்ல வேண்டும், நீங்கள் தான் உண்மையான வழி
காட்டிகளாவீர்கள்.
கேள்வி:
பாபாவின் நினைவினால் எந்த
குழந்தைகளுக்கு முழுமையான பலம் கிடைக்கிறது?
பதில்:-
யார் நினைவின் கூடவே பாபாவிடம்
எப்பொழுதுமே முழுமையாக நேர்மையுடன் இருக்கிறார்களோ, எதையும்
மறைப்பதில்லையோ, உண்மையான தந்தையிடம் உண்மையாக இருக்கிறார்களோ,
எந்த பாவமும் செய்வதில்லையோ, அவர்களுக்குத் தான் நினைவினால்
பலம் கிடைக்கிறது. நிறைய குழந்தைகள் தவறுகள் செய்து கொண்டே
இருக்கிறார்கள், பிறகு மன்னித்துவிடுங்கள் என்று சொல்கிறார்கள்,
மன்னிக்கப்படுவதில்லை என்று பாபா கூறுகின்றார். ஒவ்வொரு
கர்மத்திற்கும் கணக்கு-வழக்கு இருக்கிறது.
பாட்டு:-
நம்முடைய தீர்த்த யாத்திரை தனிப்பட்டது…
ஓம் சாந்தி.
குழந்தைகள் இந்த பாட்டைக்
கேட்டீர்கள், குழந்தைகளுடைய ஞானத்தின் பாயிண்டுகளை பார்ப்பதற்கு
அதாவது எப்படி அர்த்தம் சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்கு
இப்படிப்பட்ட பாடல்களை எடுத்து ஒவ்வொன்றிற்கும் அர்த்தம்
சொல்லச் செய்ய வேண்டும் ஏனென்றால் இந்த பாடல்களை கூட சரி செய்ய
வேண்டியிருக்கிறது அல்லவா. இப்படி நிறைய பாடல்கள் இருக்கின்றன,
இதை எப்போதாவது யாராவது கவலையோடு அமர்ந்திருக்கிறார்கள் என்றால்
இந்த பாட்டு மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சியைச் தருவதற்கு அதிகம்
உதவுகிறது என்று பாபா புரியவைத்திருக்கின்றார். இது மிகவும்
பயன்படக் கூடிய பொருளாகும். பாட்டை கேட்டவுடன் (தந்தை) நினைவு
வந்து விடும். உண்மையில் நாம் இந்த பூமியின் அதிர்ஷ்ட
நட்சத்திரங்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
நம்முடைய இந்த தீர்த்த யாத்திரை பக்தி மார்க்கத்தவர்
களிடமிருந்து முற்றிலும் தனிப்பட்டதாகும். நீங்கள் பாண்டவ
சேனையாவீர்கள். அந்த தீர்த்த யாத்திரைகளில் வழிகாட்டிகளின்
சேனையாகும். ஒவ்வொரு குழுவையும் தனித்தனியான வழிகாட்டிகள்
அழைத்துச் செல்கிறார்கள். எவ்வளவு வழிகாட்டிகள் அழைத்துச்
செல்கிறார்கள். நீங்களும் கூட ஆன்மீக வழிகாட்டிகளாவீர்கள்.
உங்களுடைய பெயரே பாண்டவ சேனையாகும். பாண்டவர்களின் இராஜ்யம்
இல்லை. பாண்டவர்கள் என்று ஆன்மீக வழிகாட்டிகளை சொல்லப்படுகிறது.
பாபாவும் கூட எல்லையற்ற வழிகாட்டியாவார். வழிகாட்டிகளை பண்டா
என்று சொல்வார்கள். வழிகாட்டிகள் தீர்த்தங்களுக்கு அழைத்துச்
செல்கிறார்கள். இந்த வழிகாட்டிகள் யாத்திரிகர்களை அழைத்து
வந்துள்ளார்கள் என்பதை பூஜாரிகள் தெரிந்துள்ளார்கள். நீங்கள்
ஞான மார்க்கத்தில் வழிகாட்டிகளாகின்றீர்கள். இதில் எங்கேயும்
அழைத்துச் செல்வதற்கான விசயம் இல்லை. வீட்டில் அமர்ந்து கொண்டே
நீங்கள் யாருக்காவது வழி சொல்கிறீர்கள் பிறகு யாருக்கு
சொல்கிறீர்களோ அவர்களும் வழிகாட்டிகளாக ஆகி விடுகிறார்கள்.
ஒருவர் மற்றவருக்கு மன்மனாபவ என்று வழி சொல்ல வேண்டும்.
உங்களில் கூட நிறைய பேர் தீர்த்த யாத்திரை சென்றிருப்பீர்கள்.
பத்ரிநாத், அமர்நாத் போன்ற இடங்களுக்கு எப்படி செல்ல வேண்டும்
என்பது புத்தியில் வரும். வழிகாட்டிகளும் தெரிந்துள்ளார்கள்,
நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாவீர்கள். நாம் புருஷோத்தம
சங்கமயுகத்தவர்கள் என்பதை மறக்காதீர்கள். நாம் முக்தி-
ஜீவன்முக்தியின் வழிகாட்டிகள் என்ற ஒரே விசயம் தான்
குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இருக்கிறது.
சொர்க்கத்திற்கு தனி வழிகாட்டி, முக்திக்கு தனி வழிகாட்டி
என்பது கிடையாது. நாம் முக்திதாமத்திற்குச் சென்று பிறகு புதிய
உலகத்திற்கு வருவோம் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்கிறது.
நீங்கள் வரிசைகிரமமான முயற்சியின் படி வழிகாட்டிகளாக
இருக்கிறீர்கள். அனேக விதமான வழிகாட்டிகள் இருக்கிறார்கள்.
நீங்கள் முதல்தரமான வழிகாட்டிகளாக இருக்கின்றீர்கள்,
அனைவருக்கும் தூய்மைக்கான வழியைத் தான் கூறுகின்றீர்கள்.
அனைவரும் தூய்மையாக இருக்க வேண்டும். பார்வை மாறி விடுகிறது.
நாங்கள் ஒரு பாபாவைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்ய மாட்டோம்.
பாபா நாங்கள் தங்களைத் தான் நினைவு செய்வோம். தங்களுடையவர்களாக
ஆகும்போது துக்கம் தூரம் விலகிப் போய்விடுகிறது. எதிர்காலத்தில்
சுகமே சுகம் தான். பாபா நம்மை சுகத்தின் சம்மந்தத்திற்கு
அழைத்துச் செல்கின்றார். இங்கு துக்கமே துக்கம் தான் ஆகும்.
சுகம் இருந்தாலும் கூட காக்கையின் எச்சத்திற்கு சமமானதாகும்.
நீங்கள் புதிய உலகத்திற்காகவே படிக்கின்றீர்கள். முக்திதாமம்
சென்று பிறகு இங்கே வருவோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
கண்டிப்பாக வீட்டிற்குச் செல்வோம். இது நினைவு பலத்தின்
யாத்திரையாகும். சாந்திதாமத்தையும் கூட நினைவு செய்ய
வேண்டும்.பாபாவையும் நினைவு செய்ய வேண்டும். பாபாவிடம்
நேர்மையாகவும் இருக்க வேண்டும். நான் உங்களுக்குள் இருப்பதை
தெரிந்திருக் கின்றேன் என்பதல்ல என்று பாபா கூறுகின்றார்.
நீங்கள் என்ன நடிப்பின் காரியம் செய்கிறீர்களோ அதைப் பற்றி பாபா
புரிய வைக்கின்றார். முயற்சி செய்ய வைக்கின்றார். மற்றபடி
நீங்கள் ஏதாவது அவமரியாதை செய்கிறீர்கள் அல்லது பாவம்
செய்கிறீர்கள் என்றால் எந்த பாவமும் செய்ய வில்லை தானே? என்று
கேட்கப் படுகிறது. கண்கள் அதிகம் ஏமாற்றக் கூடியது என்று பாபா
புரிய வைத்துள்ளார். பாபா இன்று கண்கள் அதிகம் தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாக ஆகி
ஏமாற்றி விட்டது என்பதையும் சொல்ல வேண்டும். இங்கே பயம்
இருக்கிறது, வீட்டிற்குச் செல்கின்றேன் என்றால் என்னுடைய புத்தி
சஞ்சலமடைகிறது. பாபா இது என்னுடைய மிகப்பெரிய தவறாகும்,
மன்னித்து விடுங்கள். இதில் மன்னிப்பினுடைய விசயம் இல்லை,
மன்னிப்பதை உலகத்தில் மனிதர்கள் தான் செய்கிறார்கள் என்று பாபா
கூறுகின்றார். யாராவது அறைந்து விடுகிறார்கள், மன்னிப்பு கேட்டு
விடுகிறார்கள் என்றால் வேலை முடிந்தது. இங்கே அனைத்தும்
கணக்கில் சேர்ந்து கொண்டே செல்கிறது. ஏதாவது தலை கீழான
கர்மங்கள் செய்கிறீர்கள் என்றால் அது கணக்கில் சேர்ந்து
விடுகிறது, அதனுடைய நல்ல அல்லது கெட்ட பலனானது அடுத்த பிறவியில்
கண்டிப்பாக கிடைக்கிறது. மன்னிப்பினுடைய விசயம் இல்லை. யார்
எப்படிப்பட்ட கர்மம் செய்கிறார்களோ அப்படி அடைகிறார்கள்.
பாபா அடிக்கடி புரிய வைக்கின்றார், முதலாவது காமம் மிகப்பெரிய
எதிரி, இது உங்களுக்கு முதல்-இடை-கடைசி வரையிலும் துக்கம்
கொடுக்கிறது. பாபாவை தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் என்று
தான் சொல்கிறார்கள். விகாரத்தில் செல்பவர்களைத் தான்
தூய்மையற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. இங்கே பாபா
புரியவைக்கின்றார், பிறகு இங்கிருந்து வெளியில் செல்கிறீர்கள்
என்றால் அப்போது இந்தளவிற்கு பத்தியத்தில் இருக்க முடியாது
என்றால் உயர்ந்த பதவியும் அடைய முடியாது. பாபா செய்தியை
கேட்கின்றார். நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் பிறகு
வெளியில் சென்ற பிறகு தாரணை ஏற்படுவதில்லை. சத்யுகத்தில்
விகாரத்தின் விசயமே இருப்பதில்லை. இப்போது பாரதத்தினுடைய நிலை
இதுவே ஆகும். அங்கே பெரிய- பெரிய மாளிகைகளில்
இருக்கின்றீர்கள், அளவற்ற சுகம் இருக்கிறது. பாபா
குழந்தைகளிடத்தில் கூட அனைத்தையும் விசாரிக்கின்றார்,
பாபாவிற்கு உண்மையான சமாச்சாரங்களைச் சொல்ல வேண்டும் அல்லவா.
சிலர் பொய் கூட சொல்கிறார்கள். நாம் எவ்வளவு பொய் சொல்கிறோம்
என்று சிந்தனை செய்ய வேண்டும். இவரிடம் முற்றிலும் பொய்யே
சொல்லக் கூடாது. பாபா சத்தியமானவர்களாக மாற்றக் கூடியவராவார்.
அங்கே பொய்யே இருப்பதில்லை. பெயர்-அடையாளம் கூட இருப்பதில்லை.
இங்கே உண்மையின் பெயர்-அடையாளம் இருப்பதில்லை. வித்தியாசம்
இருக்கிறது அல்லவா. இது முட்களின் காடு என்று பாபா
கூறுகின்றார். ஆனால் தங்களை முள் என்று கொஞ்சமும் புரிந்து
கொள்வதில்லை. காமக் கோடாரி (வாள்) வீசுவது என்பது அனைத்திலும்
பெரிய முள்ளாகும், இதனால் தான் நீங்கள் துக்கமுடையவர்களாக
ஆனீர்கள். பாபா இப்போது உங்களுக்கு அதிக சுகத்தை கொடுக்க
வந்துள்ளார். அங்கே அதிகமான சுகம் இருந்தது என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். சத்யுகத்தை சுகதாமம் என்றே
சொல்லப்படுகிறது. அங்கே நோய் போன்றவைகள் இருப்பதில்லை.
மருத்துவமனை, ஜெயில் போன்றவைகள் கிடையாது. சத்யுகத்தில்
துக்கம் என்ற வார்த்தையே இல்லை. திரேதாயுகத்தில் இரண்டு கலைகள்
குறைந்து விடுகிறது என்றாலும் கொஞ்சம் சுகம் இருக்கிறது,
இருந்தாலும் சொர்க்கம் என்றே சொல்லப்படுகிறது. குழந்தைகளாகிய
நீங்கள் அளவற்ற அதீந்திரிய சுகத்தில் இருக்க வேண்டும் என்று
பாபா கூறுகின்றார். படிப்பிக்கக் கூடியவரையும் நினைவு செய்ய
வேண்டும், பகவான் நம்முடைய ஆசிரியராக இருக்கின்றார், ஆசிரியரை
அனைவரும் நினைவு செய்கிறார்கள். இங்கே இருக்கக் கூடிய
குழந்தைகளுக்கு மிகவும் சகஜமாகும். இங்கே எந்த பந்தனமும்
(உறவு, தொடர்பு) இல்லை. முற்றிலும் பந்தனத்திலிருந்து
விடுபட்டவர்களாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் பட்டி உருவான
போதே பந்தனங்களிலிருந்து விடுபட்டு விட்டார்கள். சேவையை எப்படி
அதிகரிப்பது என்று சேவைக்கான கவலை மட்டுமே இருக்கிறது. பாபா
நிறைய புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். பாபாவிடம்
வருகிறார்கள், ஒரு மாதம், ஒன்றரை மாதம் அதிக உற்சாகம்
இருக்கிறது பிறகு பார்த்தால் சோர்வடைந்து விடுகிறார்கள். சேவை
நிலையங்களுக்கு வருவதே இல்லை. நல்லது, பிறகு என்ன செய்ய
வேண்டும்? ஏன் வருவதில்லை? என்று எழுதி கேட்கலாம். ஒருவேளை
மாயை உங்களுடன் சண்டையிட்டிருக்கும் என்று நினைக்கிறோம் அல்லது
யாருடைய சகவாசத்திலாவது மாட்டியிருப்பீர்கள் அல்லது ஏதாவது பாவ
கர்மம் செய்து விழுந்து விட்டீர்கள் என்று நினைக்கிறோம்.
இருந்தாலும் கை தூக்கி விட வேண்டும் தானே. முயற்சி செய்ய
வேண்டும். நம்பிக்கையூட்டி மனதை பாபா பக்கம் திருப்ப வேண்டும்.
நீங்கள் கடிதம் எழுதலாம். நிறைய பேருக்கு வெட்கம் வருகிறது
என்றால் விரக்தி அடைந்து விடுகிறார்கள். இங்கே வந்து விட்டு
செல்கிறார்கள், பிறகு வீட்டிலேயே இருந்து விட்டார்கள் என்று
செய்தி வருகிறது. என்னுடைய மனம் விலகி விட்டது என்று
சொல்கிறார்கள். தங்களுடைய ஞானம் மிகவும் நன்றாக இருக்கிறது
ஆனால் என்னால் தூய்மையாக இருக்க முடியவில்லை, என்னிடத்தில்
அந்தளவிற்கு சக்தி இல்லை ஆகையினால் விட்டு விட்டேன் என்று
சிலர் கடிதம் கூட எழுதுகிறார்கள். பாருங்கள் விகாரம் எப்படி
விழ வைத்து விடுகிறது. இங்கே வரும்போது சூரியவம்சத்து லஷ்மி -
நாராயணனாக ஆவோம் என்று கையை கூட உயர்த்துகிறார்கள். இந்த ஞானமே
நரனிலிருந்து நாராயணனாகவும் நாரியிலிருந்து லஷ்மியாக
ஆகுவதற்கானதாகும். பாபா கூறுகின்றார், வெல்லத்தின் இனிப்பு
வெல்லத்திற்கும் வெல்லம் இருக்கும் பையிற்கும் தெரியும். இவர்
(பிரம்மா) பாபாவினுடைய பை அல்லவா. இவர் நல்ல விதமாக
விசாரிக்கின்றார், இவரிடம் செய்திகளும் வருகின்றன, சிவபாபா
கூறுகின்றார், நான் படிப்பிக்க வருகின்றேன், யார்
படிப்பார்களோ, எழுதுவார்களோ அவர்கள் ராஜாவாக ஆவார்கள்.
பார்வையை மிகவும் மாற்ற வேண்டியுள்ளது என்று பாபா
கூறுகின்றார். ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கை வேண்டும்.
நினைவினால் தான் ஒவ்வொரு அடியிலும் பலகோடி வருமானம் ஆகும்.
நிறைய குழந்தைகள் தோல்வி அடைந்து விடுகிறார்கள். சேவாதாரியாக
வழிகாட்டிகளாக இருக்கக் கூடியவர்களே தோற்றுப் போய்
விடுகிறார்கள். நீங்கள் எதுவரை யாத்திரையில் இருக்கிறீர்களோ,
அதுவரை தூய்மையாக இருக்கின்றீர்கள். சிலர் யாத்திரை செல்லும்
போது கூட தங்களுடன் சாராயம் போன்றவற்றை எடுத்துச்
செல்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் மறைத்து எடுத்துச்
செல்கிறார்கள். பெரிய-பெரிய மனிதர்கள் கூட இவை இல்லாமல் இருக்க
முடிவதில்லை. இப்படிப்பட்ட தீர்த்த யாத்திரை செய்து என்ன பயன்.
சிப்பாய்கள் கூட அதிக சாராயம் குடிக்கிறார்கள். குடித்து
விட்டு, சென்று விமானத்தோடு கப்பல் மீது விழுகிறார்கள்.
கப்பலும் அழியும், அவர்களும் அழிந்து விடுவார்கள்.
இப்போது உங்களுக்கு ஞான அமிர்தம் கிடைக்கிறது. மற்றபடி
நினைவினுடைய விசயம் தான் முக்கியமானதாகும். நினைவினால் தான்
நீங்கள் 21 பிறவிகளுக்கு எப்போதும் ஆரோக்கியம் - எப்போதும்
செல்வ செழிப்பானவர் ஆவீர்கள். 21 பிறவிகளுக்கு எப்போதும்
ஆரோக்கியம், செல்வ செழிப்புமிக்கவராக எவ்வாறு ஆவதென்பதை வந்து
புரிந்து கொள்ளுங்கள் என்று பாபா எழுதச் சொன்னார். பாரதத்தில்
நீண்ட ஆயுளோடு வாழ்ந்தார்கள் என்பது பாரதவாசிகளுக்குத்
தெரியும். சொர்க்கத்தில் யாரும் ஒருபோதும் நோய்வாய்ப்
படுவதில்லை. சொர்க்கத்தில் தேவி-தேவதைகளின் ஆயுள் 150
ஆண்டுகளாக இருந்தது. 16 கலைகளிலும் முழுமையானவர்களாக
இருந்தனர். இது எப்படி முடியும் என்று கேட்கிறார்கள். அங்கே 5
விகாரங்கள் இருக்காது, அங்கேயும் இந்த விகாரங்கள் இருந்தால்
அது எப்படி இராம இராஜ்யமாகும், என்று கூறுங்கள். தேவதைகள்
விகார மார்க்கத்தில் சென்றதினுடைய சித்திரங்களையும் நீங்கள்
பார்த்திருக்கிறீர்கள். மிகவும் மோசமான சித்திரங் களாக
இருக்கின்றன. நான் என்ன பார்த்தேனோ அதை கூறுகின்றேன் என்று
இந்த பாபா (பிரம்மா பாபா) கூறுகின்றார். நான் ஞானத்தை மட்டும்
தான் கொடுக்கின்றேன் என்று சிவபாபா கூறுகின்றார். சிவபாபா
ஞானத்தின் விசயங்களை கூறுகின்றார், இவர் தன்னுடைய அனுபவத்தை
சொல்லிக் கொண்டிருக்கிறார். இருவர் இருக்கிறார்கள் அல்லவா.
இவரும் கூட தன்னுடைய அனுபவத்தை சொல்லிக்கொண்டே இருக்கின்றார்.
ஒவ்வொருவருக்கும் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி தெரியும்.
அரைக்கல்பமாக பாவம் செய்து கொண்டே வருகிறோம், என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் எந்த பாவமும் செய்ய மாட்டோம்.
இங்கே தூய்மையானவர்கள் யாரும் இல்லை.
இப்போது உண்மையான பாகவதம் நடந்து
கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள். பகவான்
அமர்ந்து குழந்தைகளுக்கு ஞானத்தை கூறுகின்றார். உண்மையில் ஒரு
கீதை தான் இருக்க வேண்டும். மற்றபடி சிவபாபாவின் வாழ்க்கை
சரித்திரத்தை என்ன எழுதுவது. எந்தவொரு புத்தகம் போன்ற எதுவும்
இருக்காது ஏனென்றால் வினாசம் எதிரில் இருக்கிறது, பிறகு இந்த
முயற்சி பற்றிய ஞானம் கூட அழிந்து விடும் என்பதும் கூட
உங்களுக்குத் தெரியும். பிறகு பலன்(சத்யுகம்) ஆரம்பமாகி விடும்.
பிறகு நாடகத்தில் என்ன நடிப்பு நடந்ததோ, நாடகச்சுருள் சுற்றிக்
கொண்டே செல்கிறது பிறகு புதிதாக பலன் ஆரம்பமாகிறது. இத்தனை
ஆத்மாக்களுக்குள்ளும் அவரவரது நாடகத்தின் நடிப்பு
பதிவாகியுள்ளது. இதையெல்லாம் புரிந்து கொள்பவர்கள் புரிந்து
கொள்ளட்டும். இது எல்லையற்ற நாடகமாகும். நாங்கள் உங்களுக்கு
எல்லையற்ற நாடகத்தின் முதல்-இடை-கடைசியின் இரகசியம் கூறுகிறோம்,
என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது நிராகார உலகம், இது பௌதீக
உலகம். இந்த ரகசியங்கள் அனைத்தையும் உங்களுக்குப் புரிய
வைக்கின்றோம். இந்த சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது என்று நீங்கள்
யாருக்கு புரிய வைப்பீர்களோ, அவர்களுக்கு அதிக ஆனந்தம் ஏற்படும்.
யாரும் கேட்பதில்லையே என்று நினைக்க வேண்டாம். நிறைய பிரஜைகள்
உருவாக வேண்டியிருக்கிறது. சேவையில் மனமுடைந்து போகக் கூடாது.
வியாபாரிகளிடம் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருகிறார்கள்,
வாருங்கள் எல்லையற்ற வியாபாரம் செய்யலாம் என்று நீங்கள் புரிய
வைத்துக் கொண்டே இருங்கள். பாரதத்தில் இந்த தேவதைகளின் இராஜ்யம்
இருந்தது, பிறகு எங்கே சென்றார்கள்? எப்படி 84 பிறவிகள்
எடுத்தார்கள், என்பதை நாங்கள் உங்களுக்குப் புரிய வைக்கிறோம்.
பகவானுடைய மகாவாக்கியம், நீங்கள் தங்களுடைய பிறவிகளைப் பற்றி
தெரிந்திருக்க வில்லை. நீங்கள் நிறைய சேவை செய்யலாம். நேரம்
கிடைக்கும்போது, நாங்கள் உங்களுக்கு உலகத்தின் வரலாறு-புவியியலை
புரிய வைக்கின்றோம் என்று சொல்லுங்கள். பாபாவைத் தவிர வேறு
யாரும் புரிய வைக்க முடியாது. இங்கே வந்தீர்கள் என்றால்
படைப்பவர் மற்றும் படைப்பினுடைய இரகசியத்தைப் புரிய வைப்போம்.
இப்போது இது உங்களுடைய கடைசி பிறவியாகும். எதிர்காலத்திற்காக
இப்போது சம்பாதியுங்கள். குழந்தைகளே இப்படி-இப்படியெல்லாம் சேவை
செய்யுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார் அல்லவா. உங்களுடைய
வாடிக்கையாளர்கள் இந்த விசயங்களை கேட்டால் மகிழ்ச்சி அடைவார்கள்.
உங்களுக்கு கூட தலை வணங்குவார்கள். நன்றி சொல்வார்கள்.
வியாபாரிகள் இன்னும் அதிகமாக சேவை செய்ய முடியும். வியாபாரிகள்
தான - தர்மம் கூட செய்கிறார்கள். நீங்கள் பெரிய
தர்மாத்மாக்களாக ஆகின்றீர்கள். பாபா வந்து உங்களுடைய புத்தி
எனும் பையை அழிவற்ற ஞான ரத்தினங்களினால் நிரப்பி விடுகின்றார்.
இப்படி-இப்படியெல்லாம் செய்யுங்கள், அறிமுகத்தை கொடுத்துக்
கொண்டே இருங்கள், களைப்படையாதீர்கள், என்று பாபா அனேக விதமான
வழிகளை கூறுகின்றார். நிறைய பேருக்கு நன்மை செய்வதற்கு
ஈடுபடுங்கள். தளர்ந்து விடாதீர்கள். தங்களுடைய பார்வையைக் கூட
சரியாக வையுங்கள். கோபம் கூட படக்கூடாது. யுக்தியோடு நடந்து
கொள்ள வேண்டும். பாபா அனேக விதமான யுக்திகளைப் புரிய வைத்துக்
கொண்டே இருக்கின்றார். கடைக்காரர்களுக்கு மிகவும் சுலபமாகும்.
அதுவும் வியாபாரம், இது கூட வியாபாரமாகும். இதை இன்னும் நல்ல
வியாபாரம் என்று சொல்லலாம். வாடிக்கையாளர்கள் உடனே இணைந்து
விடுவார்கள். இப்படிப்பட்ட வியாபாரத்தை கொடுக்கக் கூடிய
மகாபுருஷருக்கு (உயர்ந்தவருக்கு) அதிகம் உதவி செய்ய வேண்டும்
என்று சொல்வார்கள். இது உங்களுடைய கடைசி பிறவி, நீங்கள்
மனிதனிலிருந்து தேவதையாக ஆகலாம் என்று சொல்லுங்கள். யார்
எவ்வளவு செய்வார்களோ, அவ்வளவு அடைவார்கள். என்னுடைய பார்வை
கெட்ட காரியத்தை செய்யவில்லை தானே? மனைவியின் மீது பற்று இல்லை
தானே? என்று தங்களை சோதனை செய்யுங்கள். வெட்கம் வந்தால் விட்டு
விடுவீர்கள். உலகத்திற்கு எஜமானர்களாக ஆவது என்ன குறைந்த விசயமா
என்ன! எந்தளவிற்கு பழைய பக்தர்களாக இருப்பார்களோ அவர்கள் அதிகம்
குஷி அடைவார்கள். கொஞ்சம் பக்தி செய்திருப்பார்கள் என்றால்
அவர்கள் குறைவாகவே குஷி அடைவார்கள். இது கூட புரிந்து
கொள்வதற்கான கணக்காகும். இப்போது நாம் வீட்டிற்குச் செல்வோம்
பிறகு புதிய உலகத்தில் புதிய ஆடை அணிந்து கொண்டு நடிப்பை
நடிப்போம் என்று புத்தி சொல்கிறது. இந்த சரீரத்தை விட்டு
விடுவோம் பிறகு வாயில் தங்கக் கரண்டியுடன் பிறப்போம். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பார்வையின் மூலம் எந்தவொரு கெட்ட செயலையும் செய்யக் கூடாது,
தங்களுடைய பார்வையைத் தான் முதலில் மாற்ற வேண்டும். ஒவ்வொரு
அடியிலும் எச்சரிக்கையாக இருந்து பல கோடி வருமானத்தை சேமிக்க
வேண்டும்.
2) எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது எல்லையற்ற
வியாபாரம் செய்ய வேண்டும், சேவையில் மனமுடைந்து போகக்கூடாது,
அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தை கொடுக்க வேண்டும்,
களைப்படையக் கூடாது.
வரதானம்:
சிநேகத்தின் (அன்பானவரின்)
மடியில் உள்ளார்ந்த சுகம் மற்றும் அனைத்து சக்திகளின் அனுபவம்
செய்யக் கூடிய சரியான (யதார்த்தமான) முயற்சியாளர் ஆகுக.
யார் சரியான முயற்சியாளர்களோ
அவர்கள் ஒருபோதும் கடின உழைப்பு மற்றும் களைப்பின் அனுபவம்
செய்ய மாட்டார்கள், எப்போதும் அன்பில் மூழ்கிய பெருமிதத்தில்
இருப்பார்கள். அவர்கள் எண்ணத்தாலும் கூட சமர்ப்பணமாகி இருப்பதன்
காரணத்தால் எங்களை பாப்தாதா வழி நடத்துகிறார், கடின உழைப்பின்
கால்களால் அல்ல, ஆனால் அன்பின் மடியில் இருந்தபடி நடந்து
கொண்டிருக்கிறார்கள், அன்பின் மடியில் அனைத்து பிராப்திகளின்
அனுபவம் ஏற்படுவதன் காரணமாக அவர்கள் நடக்கவில்லை, ஆனால்
எப்போதும் குஷியில், உள்ளார்ந்த சுகத்தில், அனைத்து சக்திகளின்
அனுபவத்தில் பறந்து கொண்டே இருக்கின்றனர்.
சுலோகன்:
நம்பிக்கை என்ற அடித்தளம் (அஸ்திவாரம்)
உறுதியாக இருந்தது என்றால், உயர்ந்த வாழ்வின் அனுபவம் தானாக
ஏற்படும்.
ஓம்சாந்தி