06.07.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நமக்கு
யார் படிப்பிக்கின்றார் என்ற குஷியில் எப்போதும் இருந்தீர்கள்
என்றால் அது கூட மன்மனாபவ ஆகும், நேற்று நாம் கல்
புத்தியுடையவர்களாக இருந்தோம், இன்று தங்கபுத்தியுடையவர்களாக
ஆகியுள்ளோம் என்ற குஷி உங்களுக்கு இருக்கிறது.
கேள்வி:-
அதிர்ஷ்டம் உருவாவதற்கான ஆதாரம்
என்ன?
பதில்:
நிச்சயம் தான் ஆதாரம் ஆகும்.
ஒருவேளை அதிர்ஷ்டம் உருவாவதில் தாமதமாகிறது என்றால் ஆட்டம்
கண்டு கொண்டே இருப்பார்கள். நிச்சயபுத்தி உடையவர்கள் நல்ல
விதத்தில் படித்து வேகமாக முன்னேறிக் கொண்டே இருப்பார்கள்.
ஏதாவதொரு விசயத்தில் சந்தேகம் இருந்தது என்றால் பின்னாலேயே
இருந்து விடுவார்கள். யார் நிச்சயபுத்தியுடையவர்களாக ஆகி,
தங்களுடைய புத்தியை பாபாவிடம் கொண்டு சென்று கொண்டே
இருப்பார்களோ அவர்கள் சதோபிரதானமாக ஆகி விடுகிறார்கள்.
ஓம் சாந்தி.
மாணவர்கள் அனைவரும் பள்ளியில்
படிக்கிறார்கள் என்றால், நாம் படித்து என்னவாக ஆக வேண்டும்
என்பது அவர்களுக்குத் தெரியும். இனிமையிலும் இனிமையான
குழந்தைகளுக்கு நாம் சத்யுக பாரஸ்புரியின் (சொர்க்கத்தின்)
எஜமானர்களாக ஆகின்றோம் என்பது புத்தியில் வர வேண்டும். இந்த
தேகத்தின் சம்மந்தம் போன்ற அனைத்தையும் விட வேண்டும். இப்போது
நாம் பாரஸ்புரியின்(சத்யுகம்) எஜமானர்கள் பாரஸ்நாத்தாக (அதிபதி)
ஆக வேண்டும், முழு நாளும் இந்த குஷி இருக்க வேண்டும். பாரஸ்புரி
(வைரயுகம்) என்று எது அழைக்கப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். அங்கே கட்டிடங்கள் அனைத்தும்
தங்கம்-வெள்ளியினால் கட்டப்பட்டதாக இருக்கிறது. இங்கே
கற்களினால் ஆன கட்டிடங்களாக இருக்கின்றன. இப்போது நீங்கள்
கல்புத்தியிலிருந்து தங்கபுத்தியுடையவர்களாக ஆகின்றீர்கள். கல்
புத்தியிலிருந்து தங்கபுத்தியாக பாரஸ்நாத்தாக ஆக்கக்கூடிய பாபா
வந்தால் தானே மாற்ற முடியும். நீங்கள் இங்கே அமர்ந்துள்ளீர்கள்,
நம்முடைய பள்ளி (ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்) உயர்ந்ததிலும்
உயர்ந்தது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இதைவிட பெரிய
பள்ளி வேறு எதுவும் இல்லை. இந்த பள்ளியில் நீங்கள் கோடானு கோடி
பாக்கியசாலிகளாக உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள், எனவே
குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். இது
இந்த கலியுகத்திலிருந்து சத்யுகத்திற்கு செல்வதற்கான
புருஷோத்தம சங்கமயுகமாகும். நேற்று கல்புத்தி யுடையவர்களாக
இருந்தீர்கள், இன்று தங்கபுத்தியுடையவர்களாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். இந்த விசயம் எப்போதும் புத்தியில்
இருந்தது என்றால் கூட மன்மனாபவ என்பதே ஆகும். பள்ளியில்
ஆசிரியர் படிப்பிப்பதற் காகவே வருகின்றார். இப்போது ஆசிரியர்
வந்து விட்டார் என்பது மாணவர்களின் புத்தியில் இருக்கிறது.
நம்முடைய ஆசிரியர் சுயம் பகவான் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
புரிந்து கொள்கிறீர்கள். அவர் நம்மை சொர்க்கத்திற்கு
எஜமானர்களாக ஆக்குகின்றார் என்றால், கண்டிப்பாக சங்கமயுகத்தில்
தான் வருவார். மனிதர்கள் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்,
ஆனால் அவர் இங்கே வந்து விட்டார் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். கல்பத்திற்கு முன் கூட இப்படி நடந்தது.
ஆகையினால் தான் வினாசகாலத்தில் அன்பற்ற வீபரீத புத்தி!
ஏனென்றால், அவர்கள் கல்புத்தியுடையவர்களாக இருக்கிறார்கள் என்று
எழுதப்பட்டுள்ளது. உங்களுக்கு வினாச காலத்தில் அன்பான
புத்தியாகும். நீங்கள் தங்கபுத்தியுடையவர்களாக ஆகிக் கொண்டி
ருக்கிறீர்கள். எனவே மனிதர்கள் விரைவாகப் புரிந்து கொள்ளும்படி
ஏதாவது யுக்தியை உருவாக்க வேண்டும். இங்கேயும் கூட நிறைய பேரை
அழைத்து வருகிறார்கள், இருந்தாலும் சிவபாபா பிரம்மா உடலில்
வந்து எப்படி படிப்பித்திருப்பார் என்று கேட்கிறார்கள்! எப்படி
வந்திருப்பார்! எதையும் புரிந்து கொள்வதில்லை. இவ்வளவு பேர்
செண்டர்களுக்கு வருகிறார்கள். நிச்சயபுத்தி இருக்கிறது அல்லவா?
சிவபகவானுடைய மகாவாக்கியம் என்று அனைவரும் சொல்கிறார்கள், சிவன்
தான் அனைவருக்கும் தந்தையாவார். கிருஷ்ணரை அனைவருக்கும் தந்தை
என்று சொல்ல முடியுமா? இதில் குழப்பமடைவதற்கான விசயமே இல்லை.
ஆனால் அதிர்ஷ்டம் காலம் கடந்து உருவாக வேண்டும் என்பது
இருந்தால் ஆட்டம் கண்டு (தடுமாறிக்) கொண்டே இருப்பார்கள்.
குறைவாக படிக்கக் கூடியவர்களை இவர்கள் தடுமாறுகிறார்கள் என்று
சொல்லப்படுகிறது. சந்தேக புத்தி யுடையவர்கள் பின்னால் இருந்து
விடுகிறார்கள். நிச்சயபுத்தியுடையவர்கள் நல்ல விதத்தில்
படிக்கக் கூடியவர்கள் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். எவ்வளவு
சுலபமாகப் புரிய வைக்கப்படுகிறது. எப்படி குழந்தைகள் வேகமாக ஓடி
எல்லையைத் தொட்டு விட்டு பிறகு திரும்பி வருகிறார்களோ அப்படி
ஆகும். புத்தியை விரைவாக சிவபாபாவிடம் ஓடவிட்டீர்கள் என்றால்
சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள் என்று பாபாவும் கூறுகின்றார்.
இங்கே நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள். அம்பு தைக்கிறது,
இருந்தாலும் வெளியில் சென்றவுடன் மறந்து விடுகிறது. பாபா ஞான
ஊசி போடுகிறார் என்றால், அதனுடைய போதை ஏற வேண்டும் அல்லவா!.
ஆனால் ஏறுவதே இல்லை. இங்கே ஒரு டம்ளர் ஞான அமிர்தம்
குடிக்கிறார்கள் என்றால், தாக்கம் ஏற்படுகிறது. வெளியில்
சென்றவுடன் மறந்து விடுகிறார்கள். ஞானக்கடல், தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவர் சத்கதியை வழங்கும் வள்ளல், விடுவிப்பவர் ஒரு
பாபா தான் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். அவர்
தான்ஒவ்வொரு விசயத்தின் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். குழந்தைகளே
நீங்களும் முழுமையான கடலாக ஆகுங்கள் என்று கூறுகின்றார்.
என்னிடத்தில் எவ்வளவு ஞானம் இருக்கிறதோ அவ்வளவையும் நீங்கள்
தாரணை செய்யுங்கள்.
சிவபாபாவிற்கு தேகத்தின் போதை கிடையாது. குழந்தைகளே நான்
எப்போதும் அமைதியாக இருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார்.
உங்களுக்கும் கூட தேகம் இல்லாத போது போதை இருக்கவில்லை. இது
என்னுடைய பொருள் என்று சிவபாபா சொல்கிறாரா என்ன? இந்த உடலை
கடனாக எடுத்திருக்கின்றேன், கடனாகப் பெற்ற பொருள் என்னுடையதா
என்ன.! கொஞ்ச நேரம் சேவை செய்வதற்காக நான் இவருக்குள்
பிரவேசித்திருக்கின்றேன். இப்போது குழந்தைகளாகிய நீங்கள்
வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும், பகவானை
சந்திப்பதற்காக ஓடி வர வேண்டும். இவ்வளவு யக்ஞம்-தவம்
போன்றவைகளை செய்து கொண்டிருக்கிறார்கள், அவர் எப்படி
கிடைப்பார் என்பதை தெரிந்திருக்கிறார்களா என்ன? ஏதாவதொரு
ரூபத்தில் பகவான் வருவார் என்று புரிந்துள்ளார் கள். மிகவும்
சகஜம் என்று பாபா புரிய வைக்கின்றார், கண்காட்சியில் கூட
நீங்கள் புரிய வையுங்கள் என்று பாபா கூறுகின்றார்.
சத்யுகம்-திரேதாயுகத்தின் ஆயுள் கூட எழுதப்பட்டுள்ளது. அதில்
2500 ஆண்டுகள் என்பது கூட துல்லியமாக எழுதப்பட்டுள்ளது.
சூரியவம்சத்தினருக்குப் பிறகு சந்திரவம்சத்தினர்ர்கள் பிறகு
இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறது பாரதம் தூய்மையற்றுப் போக
ஆரம்பமானது என்பதை காட்டுங்கள். துவாபர- கலியுகத்தில் இராவண
இராஜ்யம் நடந்தது, நாள்-தேதி எழுதப்பட்டுள்ளது. இடையில்
சங்கமயுகத்தை வையுங்கள். வண்டியோட்டுபவரும் வேண்டும் அல்லவா!
இந்த ரதத்தில் பிரவேசித்து பாபா இராஜயோகத்தைக் கற்றுக்
கொடுக்கின்றார், அதன் மூலம் இந்த லஷ்மி - நாராயணன்
உருவாகிறார்கள். யாருக்கும் புரியவைப்பது மிகவும் சகஜமாகும்.
லஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம் எவ்வளவு காலம் நடக்கிறது. மற்ற
அனைத்து வம்சங்களும் எல்லைக்குட்பட்டதாகும், இது
எல்லையற்றதாகும். இந்த எல்லையற்ற வரலாறு-புவியியலைத் தெரிந்து
கொள்ள வேண்டும் அல்லவா. இப்போது சங்கமயுகமாகும். தெய்வீக
இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த கலியுக, பழைய
உலகம் வினாசம் ஆக வேண்டும். வினாசம் ஆகவில்லை என்றால் புதிய
உலகம் எப்படி உருவாகும்! புது தில்லி என்று சொல்கிறார்கள்.
புது தில்லி எப்போது ஏற்படும் என்பதை இப்போது நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். புதிய உலகத்தில் புது தில்லி இருக்கிறது.
யமுனை நதிக்கரையில் மாளிகை இருக்கிறது என்றும் பாடுகிறார்கள்.
இந்த லஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம் எப்போது நடக்கிறதோ அப்போது
தான் புது தில்லி பாரஸ்புரி என்று சொல்ல முடியும்.
சத்யுகத்தில் லஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம் தான் புதிய இராஜ்யமாக
இருக்கிறது. நாடகம் எவ்வாறு ஆரம்பமாகிறது என்பதைக் கூட
மனிதர்கள் மறந்து விட்டார்கள். யார்-யார் முக்கிய நடிகர்கள்
என்பதை கூட தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? நடிகர்கள் கூட
நிறைய பேர் இருக்கிறார்கள். ஆகையினால் முக்கியமான நடிகர்களை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நீங்களும் கூட நடிகர்களாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். அனைத்திலும் முக்கிய நடிப்பை நீங்கள்
நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆன்மீக சமூக
சேவகர்களாக இருக்கின்றீர்கள். மற்ற அனைவரும் உலகீய சமூக
சேவகர்களாக இருக்கிறார்கள். நீங்கள் ஆத்மாக்களுக்குப் புரிய
வைக்கின்றீர்கள், படிப்பது ஆத்மாவாகும். நான் ஆத்மா வக்கீல்
போன்றவர்களாக ஆகின்றேன். பாபா நமக்கு கற்பிக்கின்றார்.
சம்ஸ்காரங்கள் கூட ஆத்மாவில் இருக்கிறது. சம்ஸ்காரத்தை
எடுத்துக் கொண்டு சென்று புதிய உலகத்தில் இராஜ்யம் செய்வோம்.
சத்யுகத்தில் எப்படி இராஜ்யம் நடந்ததோ அப்படியே ஆரம்பமாகி
விடும். இதில் கேட்பதற்கான அவசியமே இருப்பதில்லை. முக்கியமான
விசயம் ஒருபோதும் தேக-அபிமானத்தில் வராதீர்கள். தங்களை ஆத்மா
என்று புரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு விகர்மமும்
செய்யாதீர்கள். நினைவில் இருங்கள், இல்லையென்றால் ஒரு
விகர்மத்தின் சுமை நூறு மடங்காகி விடும். எலும்புகள் அனைத்தும்
ஒரேயடியாக உடைந்து விடுகிறது. அதிலும் கூட முக்கியமான விகாரம்
காமமாகும். குழந்தைகள் தொந்தரவு செய்கிறார்கள் பிறகு அடிக்க
வேண்டியிருக்கிறது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். இதை
ஒன்றும் கேட்க வேண்டியதே இல்லை. இது ஒரு பைசாவிற்கு ஒப்பான
சிறிய பாவம் என்று சொல்லலாம். உங்களுடைய தலையில் இருப்பது பல
பிறவிகளுக்குமான பாவமாகும், முதலில் அதை அழியுங்கள். பாபா
தூய்மையாவதற்கான சகஜமான வழியை கூறுகின்றார். நீங்கள் ஒரு
தந்தையின் நினைவின் மூலம் தூய்மையாகி விடுவீர்கள். பகவானுடைய
மகாவாக்கியம் குழந்தைகளுக்காக, நான் ஆத்மாக்களாகிய
உங்களுக்குப் புரிய வைக்கின்றேன். ஆத்மாக்கள் மற்றும்
பரமாத்மாவின் சந்திப்பு நடக்கிறது, என்று பாடப்படுகிறது, இதில்
சத்தம் போன்றவைகள் போடத்தேவையில்லை. இது படிப்பாகும்.
பாபாவிடம் வெகு, தூரத்திலிருந்து வருகிறார்கள். இன்னும்
போகப்போக யார் நிச்சய புத்தியுடையவர்களாக இருப்பார்களோ
அவர்களுக்கு அதிகம் கவர்ச்சி ஏற்படும். இப்போது அந்தளவிற்கு
யாருக்கும் கவர்ச்சி ஏற்படுவதில்லை, ஏனென்றால் நினைவே
செய்வதில்லை. பயணம் செய்து விட்டு திரும்புகிறார்கள்,
வீட்டிற்கு அருகில் வருகிறார்கள் என்றால் கட்டிடம் நினைவுக்கு
வரும், குழந்தைகள் நினைவிற்கு வருவார்கள், வீட்டை அடைந்தவுடன்
மகிழ்ச்சியோடு வந்து சந்திப்பார்கள். மகிழ்ச்சி அதிகரித்துக்
கொண்டே செல்லும். முதன்-முதலில் மனைவி நினைவுக்கு வருவார்
குழந்தைகள் போன்றோர் நினைவுக்கு வருவார்கள். நாம் வீட்டிற்குச்
செல்கிறோம், அங்கே தந்தை மற்றும் குழந்தைகள்தான்
இருக்கிறார்கள் என்பது நினைவு வரும். அதே போல சாந்திதாம்
வீட்டிற்கு செல்வோம் பிறகு இராஜ்யத்திற்கு வருவோம் என்ற இரட்டை
மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவ்வளவு தான் நினைவு மட்டும் தான்
செய்ய வேண்டும், பாபா கூறுகின்றார், மன்மனாபவ. தங்களை ஆத்மா
என்று புரிந்து தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள்.
பாபா குழந்தைகளாகிய உங்களை மலர்களாக்கி, கண்களில் வைத்து
அழைத்துச் செல்கின்றார். கொஞ்சம் கூட கஷ்டம் இல்லை. எப்படி
தேனீக்களின் கூட்டம் செல்கிறதோ, அதுபோல் ஆத்மாக்களாகிய
நீங்களும் கூட பாபாவுடன் செல்வீர்கள். தூய்மையாவதற்காக நீங்கள்
பாபாவை நினைவு செய்கிறீர்கள், வீட்டை அல்ல.
பாபாவினுடைய பார்வை முதலில் ஏழை குழந்தைகளின் மீது விழுகிறது.
பாபா ஏழைப்பங்காளன் அல்லவா?. நீங்களும் கூட கிராமங்களுக்கு
சேவை செய்யச் செல்கிறீர்கள். நானும் கூட வந்து உங்களுடைய
கிராமத்தை சொர்க்கமாக ஆக்குகின்றேன் என்று பாபா கூறுகின்றார்.
இப்போது இது நரகம் பழைய உலகமாகும். இதை கண்டிப்பாக உடைக்க
வேண்டும். புதிய உலகத்தில் புது தில்லி, அது சத்யுகத்தில் தான்
இருக்கும். அங்கே இராஜ்யமும் உங்களுடையதாக இருக்கும்.
கல்பத்திற்கு முன்னால் இருந்ததைப் போல் நாம் மீண்டும் நம்முடைய
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வோம் என்ற போதை ஏறுகிறது. நாங்கள்
இப்படி-இப்படியெல்லாம் கட்டிடம் கட்டுவோம் என்று சொல்வார்களா
என்ன? நீங்கள் அங்கே சென்று தானாகவே அப்படி உருவாக்க
ஆரம்பித்து விடுவீர்கள், ஏனென்றால் ஆத்மாவில் அந்த நடிப்பு
நிரம்பியுள்ளது. இங்கே படிப்பதற்கான நடிப்பு மட்டுமே ஆகும்.
நாம் இப்படி-இப்படியெல்லாம் கட்டிடம் கட்ட வேண்டும் என்று
உங்களுடைய புத்தியில் தானாகவே வரும். கல்பத்திற்கு முன்னால்
எப்படி கட்டியிருந்தீர்களோ, அப்படி கட்ட ஆரம்பித்து
விடுவீர்கள். ஆத்மாவில் கூட முதலிலேயே பதிவாகியிருக்கிறது.
கல்பம்-கல்பமாக எந்த கட்டிடத்தில் இருந்தீர்களோ அதே மாளிகையைத்
தான் நீங்கள் உருவாக்குவீர்கள். இந்த விசயங்களை புதியவர்கள்
யாரும் புரிந்து கொள்ள முடியாது. நாம் வருகின்றோம்,
புதிய-புதிய பாயிண்டுகளை கேட்டு புத்துணர்வு பெற்றுச்
செல்கின்றோம் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். புதிய-
புதிய பாயிண்டுகள் வருகின்றது, அதுவும் கூட நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது.
பாபா கூறுகின்றார், குழந்தைகளே - நான் இந்த ரதத்தில் எப்போதும்
சவாரி செய்வதற்கு எனக்கு சுகமாக இல்லை. நான் குழந்தைகளாகிய
உங்களுக்கு கற்பிக்க வருகின்றேன். எருதின் மீது சவாரி செய்து
கொண்டே இருக்கின்றேன் என்பது கிடையாது. இரவும்-பகலும் எருதின்
மீது சவாரி செய்யப்படுகிறதா என்ன? அவர் ஒரு வினாடியில்
வருவதும்- செல்வதும் நடக்கிறது. எப்போதும் இருப்பதற்கான விதியே
இல்லை. பாபா எவ்வளவு தூரத்திலிருந்து படிப்பிக்க வருகின்றார்,
அவருடைய வீடு அது(சாந்தி தாமம்) அல்லவா? முழு நாளும்
சரீரத்தில் இருப்பாரா என்ன, அவருக்கு அதில் சுகமே இருக்காது.
அது கூண்டுக்குள் கிளி மாட்டிக் கொள்வதைப் போலாகும். நான்
உங்களுக்குப் புரிய வைப்பதற்காக இந்த சரீரத்தைக் கடனாக
பெறுகின்றேன். ஞானக்கடல் தந்தை நமக்கு கற்பிக்க வருகின்றார்
என்று நீங்கள் சொல்வீர்கள். மகிழ்ச்சியில் மெய் சிலிர்த்துப்
போக வேண்டும். பிறகு அந்த குஷி குறையலாமா! இந்த தந்தை நிலையாக
அமர்ந்திருக்கின்றார். ஒரு எருதின் மீது இருவர் எப்போதும்
சவாரி செய்ய முடியுமா என்ன?
சிவபாபா அவருடைய இடத்தில்
இருக்கின்றார். இங்கே வருகின்றார், வருவதற்கு நேரமாகிறதா என்ன?.
ராக்கெட் எவ்வளவு வேகமாக செல்கிறது பாருங்கள். சப்தமும்
அதிகமாக இருக்கிறது. ஆத்மாவும் கூட சிறிய ராக்கெட்டாகும். ஆத்மா
எப்படி செல்கிறது, இங்கிருந்து உடனே லண்டனுக்கு சென்று
விடுகிறது. ஒரு வினாடியில் ஜீவன்முக்தி என்று பாடப்பட்டுள்ளது.
பாபா அவரும் கூட ஒரு ராக்கெட் ஆவார். நான் உங்களுக்குக்
கற்பிக்க வருகின்றேன் என்று கூறுகின்றார். பிறகு தம்முடைய
வீட்டிற்குச் செல்கின்றேன். இந்த சமயத்தில் அதிகம் பிசியாக
இருக்கின்றேன். திவ்ய திருஷ்டி (காட்சி காட்டக் கூடிய) வள்ளலாக
இருக்கின்றேன், எனவே பக்தர்களை திருப்தி செய்ய வேண்டியுள்ளது.
உங்களுக்கு படிப்பிக்கின்றேன். பக்தர்கள் காட்சி கிடைக்க
வேண்டும் என்று விரும்புகிறார்கள், அல்லது ஏதாவது கேட்கிறார்கள்.
அனைத்திலும் அதிகமாக ஜகதம்பாவிடம் கேட்கிறார்கள். நீங்கள்
ஜகதம்பாக்கள் அல்லவா!. நீங்கள் விஷ்வ இராஜ்யம் என்ற பிச்சை
இடுகிறீர்கள். ஏழைகளுக்குப் பிச்சை கிடைக்கிறது அல்லவா! நாமும்
ஏழைகள் எனும்போது சிவபாபா சொர்க்கத்தின் இராஜ்யத்தைப்
பிச்சையாக தருகின்றார். பிச்சை வேறு எதுவும் இல்லை, பாபாவை
நினைவு செய்தீர்கள் என்றால், விகர்மங்கள் வினாசம் ஆகும் என்று
மட்டும் தான் கூறுகின்றார். சாந்திதாமத்திற்குச் சென்று
விடுவீர்கள். நான் உத்திரவாதம் அளிக்கின்றேன், என்னை நினைவு
செய்தீர்கள் என்றால், உங்களுடைய ஆயுளும் அதிகரித்து விடும்.
சத்யுகத்தில் மரணம் என்ற வார்த்தையே இல்லை. அது அமரலோகமாகும்,
அங்கே மரணம் என்ற வார்த்தையே இல்லை. ஒரு சரீரத்தை விட்டு விட்டு
வேறொன்றை மட்டும் எடுக்கிறார்கள், இதை மரணம் என்று சொல்வார்களா
என்ன! அது அமரபுரியாகும். நாம் சென்று குழந்தைகளாக ஆக வேண்டும்
என்று காட்சி கிடைக்கிறது. மகிழ்ச்சியான விசயம் அல்லவா!.
இப்போது சென்று குழந்தையாக ஆக வேண்டும் என்று
பாபாவிற்கு(பிரம்மா பாபாவிற்கு) மனதில் எண்ணம் வருகிறது. வாயில்
தங்கக் கரண்டியோடு பிறப்பது என்று தெரியும். பாபாவினுடையஒரே
செல்லக் குழந்தையாக இருக்கின்றேன். தந்தை
தத்தெடுத்திருக்கின்றார். நான் செல்லக் குழந்தையாக
இருக்கின்றேன் என்றால் பாபா எவ்வளவு அன்பு செலுத்துகின்றார்.
ஒரேயடியாக பிரவேசித்து விடுகின்றார். இது கூட விளையாட்டு அல்லவா?
விளையாட்டில் எப்போதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. கண்டிப்பாக
அதிக பாக்கியசாலி ரதம் என்பதையும் தெரிந்துள்ளார். ஞானக்கடல்,
இவருக்குள் பிரவேசமாகி உங்களுக்கு ஞானம் கொடுக்கின்றார் என்று
இதைத் தான் பாடப்பட்டுள்ளது. பகவான் வந்து கற்பிக்கின்றார்
என்ற மகிழ்ச்சியே குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கிறது. பகவான்
சொர்க்கத்தின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார். நாம் அவருடைய
குழந்தைகள் எனும்போது ஏன் நாம் நரகத்தில் இருக்க வேண்டும்,
என்பது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. நீங்கள்
பாக்கியசாலிகள், நீங்கள் உலகத்திற்கு எஜமானர்களாக ஆவதற்காக
படிக்கின்றீர்கள். அப்படிப்பட்ட படிப்பின் மீது எவ்வளவு கவனம்
கொடுக்க வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இப்போது பயணம் முடிந்து விட்டது, முதலில் நாம் நம்முடைய
வீடான சாந்திதாமம் செல்வோம், பிறகு இராஜ்யத்திற்கு வருவோம்
என்ற இரட்டை மகிழ்ச்சியில் இருக்க வேண்டும்.
2) தலையில் இருக்கும் பல பிறவிகளின் பாவங்களின் சுமையை அழிக்க
வேண்டும், தேக-அபிமானத்தில் வந்து எந்தவொரு விகர்மமும்
செய்யக்கூடாது.
வரதானம்:
மனதினுடைய சுதந்திரத்தின் மூலம்
அனைத்து ஆத்மாக்களுக்கும் அமைதியை தானம் கொடுக்கக் கூடிய மனதின்
மகாதானி ஆகுக!
பெண்கள் உடல் ரீதியாக
பந்தனத்தில் இருக்கலாம், ஆனால் ஒருவேளை மனதினால் சுதந்திரமாக
இருந்தால் தனது உள்ளுணர்வு மூலம் சுத்தமான எண்ணங்களின் மூலம்
உலகத்தின் வாயுமண்டலத்தை மாற்றுவதற்கான சேவை செய்ய முடியும்.
தற்சமயத்தில் மனதினுடைய அமைதி தான் உலகத்திற்கு மிகவும்
அவசியமாக இருக்கிறது. ஆகையால் மனதின் மூலம் சுதந்திரமான
ஆத்மாவால் மனதின் மூலம் அமைதியின் வைப்ரேஷன் பரப்ப முடியும்.
அமைதிக் கடலான தந்தையின் நினைவில் இருப்பதன் மூலம் தானாகவே
அமைதியின் அலைகள் (கிரணங்கள்) பரவும். அப்படிபட்ட அமைதியின்
தானம் தரக்கூடியவர் தான் மனதின் மகாதானி (மிக பெரிய வள்ளல்)
ஆவார்.
சுலோகன்:
அன்பு சொரூபதின் அனுபவத்தையோ
சொல்கிறீர்கள், ஆனால் இப்பொழுது சக்தி சொரூபத்தின் அனுபவத்தை
சொல்லுங்கள்.
ஓம்சாந்தி