08.07.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுடைய படிப்பின் ஃபவுண்டேஷன்
(அஸ்திவாரம்) ப்யூரிட்டி (தூய்மை) ஆகும். தூய்மை இருந்தது
என்றால் யோகத்தின் கூர்மையை நிரப்ப முடியும். யோகத்தின் கூர்மை
இருந்தால் பேச்சில் சக்தி இருக்கும்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எந்த ஒரு முயற்சியை
முழுமையாகச் செய்ய வேண்டும்?
பதில்:
தலை மீது இருக்கும் விகர்மங்களின் சுமையை இறக்குவதற்கான
முழுமையான முயற்சி செய்ய வேண்டும். தந்தையினுடையவராக ஆகி
ஏதாவதொரு விகர்மம் (தீய செயல்) செய்தீர்கள் என்றால், மிகவும்
வேகத்துடன் விழுந்து விடுவீர்கள். பி.கே. வித்யாலயத்தை ஒரு
வேளை நிந்தனை செய்தீர்கள், ஏதாவது கஷ்டம் கொடுத்தீர்கள்
என்றால் மிகவுமே பாவம் ஆகி விடும். பிறகு ஞானத்தைக் கேட்பதாலோ
கூறுவதாலோ எந்த நன்மையும் இல்லை.
ஓம்
சாந்தி.
நீங்கள் பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக ஆகி பாவனமான
உலகிற்கு எப்படி அதிபதி ஆக முடியும் என்பதை ஆன்மீகத் தந்தை
குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். பாவனமான
உலகத்திற்கு சொர்க்கம் அல்லது விஷ்ணுபுரி, லட்சுமி நாராயணரின்
ராஜ்யம் என்று கூறப்படுகிறது. விஷ்ணு அதாவது லட்சுமி
நாராயணருடைய (கம்பைண்டு) இணைந்த படத்தை இது போல
அமைத்துள்ளார்கள். எனவே புரிய வைக்கப்படுகிறது. மற்றபடி
விஷ்ணுவை பூஜை செய்யும் பொழுது இவர்கள் யார் என்பதைப் புரிந்து
கொள்ள முடியாமல் உள்ளார்கள். மகாலட்சுமிக்கு பூஜை
செய்கிறார்கள். ஆனால் இவர்கள் யார் என்பதை புரியாமல்
உள்ளார்கள். பாபா இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு பல்வேறு
வழிகளில் புரிய வைக்கிறார். நல்ல முறையில் தாரணை செய்யுங்கள்.
பரமாத்மாவோ எல்லாமே அறிந்திருக்கிறார் என்று ஒரு சிலருடைய
புத்தியில் இருக்கிறது. நாம் எதெல்லாம் நல்லதோ, கெட்டதோ
செய்கிறோமோ அவை எல்லாமே அவர் அறிந்துள்ளார். இப்பொழுது இதற்கு
குருட்டு நம்பிக்கையின் பாவனை என்று கூறப்படுகிறது. பகவான்
இந்த விஷயங்களை அறிந்து இருப்பதே இல்லை. பகவானோ பதீதர்களை
பாவனமாக ஆக்குபவர் ஆவார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். பாவனமாக ஆக்கி சொர்க்கத்தின் அதிபதியாக
ஆக்குகிறார். பின் யார் நல்ல முறையில் படிப்பார்களோ அவர்கள்
உயர்ந்த பதவியை அடைவார்கள். மற்றபடி தந்தை அனைவரின் உள்ளங்களை
அறிவார் என்று நினைக்கக் கூடாது. இது பிறகு அறிவீனம் என்று
கூறப்படும். மனிதர்கள் என்ன கர்மம் செய்கிறார்களோ அதற்கு பலன்
நல்லதோ கெட்டதோ நாடகப்படி அவர்களுக்குக் கிடைத்தே விடுகிறது.
நிறைய பேர் விகாரத்தில் செல்கிறார்கள். பாவங்கள் செய்து கொண்டே
இருக்கிறார்கள் மற்றும் இங்கு (அபு) அல்லது சென்டர்களுக்கு
வந்து விடுகிறார்கள். பாபா அறிவார் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் இந்தத் தொழிலையெல்லாம் நான் செய்வதில்லை என்று பாபா
கூறுகிறார். அனைத்தும் அறிந்தவர் (ஜானி ஜானன ஹார்) என்ற
வார்த்தை கூட தவறானது ஆகும். வந்து பதீதர்களை பாவனமாக
ஆக்குங்கள், சொர்க்கத்திற்கு அதிபதி ஆக்குங்கள் என்று நீங்கள்
தந்தையை அழைக்கிறீர்கள். ஏனெனில் ஜன்ம ஜன்மாந்திரத்தின்
பாவங்கள் தலை மீது நிறைய உள்ளது. இந்த ஜன்மத்தினுடையதும்
இருக்கிறது. இந்த பிறவியினுடைய பாவங்களைக் கூறவும்
செய்கிறார்கள். நிறைய பேர் எப்பேர்ப்பட்ட பாவங்களை
செய்துள்ளார்கள் என்றால், அவர்கள் தூய்மையாக ஆவது மிகவும்
கடினமாக தோன்றுகிறது. பாவனமாக ஆவது தான் முக்கியமான விஷயம்
ஆகும். படிப்போ மிகவும் சுலபமானதாகும். ஆனால் விகர்மங்களின்
சுமையை எப்படி இறக்குவது - இதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
நிறைய பாவம் செய்பவர்கள், நிறைய டிஸ்சர்வீஸ் செய்பவர்கள் கூட
நிறைய பேர் இருக்கிறார்கள். இதனுடைய பாவம் நிறைய ஏறுகிறது.
அந்த பாவம் ஆகியவை ஒன்றும் ஞானம் கொடுப்பதால் நீங்கி விட
முடியாது. பாவங்கள் பிறகும் யோகத்தினால் தான் நீங்கும்.
முதலிலோ யோகத்தினுடைய முழுமையான முயற்சி (புருஷார்த்தம்) செய்ய
வேண்டும். அப்பொழுது தான் எவரது உள்ளத்திலும் அம்பு போல
தைக்கவும் முடியும். முதலில் பவித்திரமாக ஆகி, யோகம் இருந்தால்
அப்பொழுது தான் பேச்சில் கூட கூர்மை நிரம்பும். இல்லை என்றால்,
ஒருவர் எவ்வளவு தான் புரிய வைத்தாலும் யாருடைய புத்தியிலும்
பதியவே பதியாது. அம்பு போல பாயவும் பாயாது. ஜன்ம
ஜன்மாந்திரத்தின் பாவங்கள் உள்ளன அல்லவா? இப்பொழுது செய்யக்
கூடிய பாவங்களோ ஜன்ம ஜன்மாந்திரத்தை விடவும் அதிகமாக ஆகி
விடுகிறது. எனவே சத்குருவை நிந்திப்பவர். என்று
பாடப்பட்டுள்ளது. இவர் சத்தியமான தந்தை சத்தியமான ஆசிரியர்,
சத்குரு ஆவார். பி.கே.க்கு நிந்தை செய்விப்பவர்களுடைய பாவமும்
மிகவும் பாரமானது என்று தந்தை கூறுகிறார். முதலில் சுயம்
தாங்கள் பாவனம் (தூய்மை) ஆகட்டுமே. யாருக்காவது புரிய
வைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். யோகமோ ஒரு பைசா
அளவிற்குக் கூட இல்லை. இதனால் நன்மை என்ன? முக்கியமான விஷயமே
நினைவினால் பாவனமாக ஆவதற்கானது என்று தந்தை கூறுகிறார்.
கூப்பிடுவதும் பாவனமாக ஆவதற்காக தான். பக்தி மார்க்கத்தில் அடி
வாங்கும், வீணாக சத்தம் போடும் ஒரு பழக்கம்
ஏற்பட்டுவிட்டுள்ளது. பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால்
பகவானுக்கு காதுகள் எங்கே? காதுகள் இல்லாமல் வாய் இல்லாமல்
கேட்பது எப்படி பேசுவது எப்படி? அவரோ அவ்யக்தமானவர்
(கண்களுக்குப் புலப்படாதவர்) இவை எல்லாமே குருட்டு நம்பிக்கை
ஆகும்.
நீங்கள் தந்தையை எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்த அளவு
பாவங்கள் நீங்கும். அப்படியின்றி இவர் நிறைய நினைவு
செய்கிறார். இவர் குறைவாக நினைவு செய்கிறார் என்பதை தந்தை
அறிந்துள்ளார் என்பதல்ல. தங்களுடைய சார்ட்டை சுயம் தாங்களே
பார்க்க வேண்டும். நினைவினால் தான் உங்களுடைய விகர்மம் விநாசம்
ஆகும் என்று தந்தை கூறியுள்ளார். எவ்வளவு நினைவு செய்கிறீர்கள்
என்று பாபா கூட உங்களிடம் தான் கேட்கிறார். நடத்தை மூலமாகக்
கூட தெரிய வருகிறது. நினைவு இல்லை என்றால் பாவங்கள் நீங்கி விட
முடியாது. அப்படியின்றி யாருக்காவது ஞானம் கூறினீர்கள் என்றால்
உங்களுடையதோ அவர்களுடையதோ பாவங்கள் அழிந்து போய் விடும்
என்பதல்ல. இல்லை. சுயம் தாங்கள் நினைவு செய்தால் தான் பாவங்கள்
நீங்கும். அடிப்படை விஷயமே பாவனமாக ஆவதற்கானது. என்னுடையவராக
ஆகி உள்ளீர்கள் என்றால் எந்த ஒரு பாவமும் செய்யாதீர்கள் என்று
தந்தை கூறுகிறார். இல்லை என்றால் மிகவும் வேகமாக விழுந்து
விடுவீர்கள். பின் நாம் நல்ல பதவி அடைய முடியும் என்ற
நம்பிக்கை கூட வைக்கக் கூடாது. கண்காட்சியில் நிறைய பேருக்குப்
புரிய வைக்கிறார்கள். அவ்வளவு தான், நாங்கள் நிறைய சேவை
செய்தோம் என்று குஷி ஆகி விடுகிறார்கள். ஆனால் முதலில் நீங்கள்
பாவனம் ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். தந்தையை நினைவு
செய்யுங்கள். நினைவில் நிறைய பேர் ஃபெயில் ஆகி விடுகிறார்கள்.
ஞானமோ மிகவும் சுலபமானது ஆகும். 84 பிறவியின் சக்கரத்தை
அறிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே! அந்த படிப்பில் எவ்வளவு
கணக்கு, புத்தகங்கள் படிக்கிறார்கள், உழைக்கிறார்கள், என்ன
சம்பாதிப்பார்கள்? படித்துக் கொண்டிருக்கும் போதே இறந்து
விட்டால் படிப்பு முடிந்து போய் விடும். குழந்தைகளாகிய நீங்களோ
எவ்வளவு நினைவில் இருப்பீர்களோ அந்த அளவு தாரணை ஆகும்.
பவித்திரமாக ஆகவில்லை என்றால், பாவங்களை அழிக்கவில்லை என்றால்,
மிகவுமே தண்டனை வாங்க வேண்டி வரும். அப்படி இன்றி எங்களுடைய
நினைவோ பாபாவிற்கு சேர்ந்தே விடுகிறது என்பதல்ல. பாபா என்ன
செய்வார்? நீங்கள் நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் பாவனமாக
ஆவீர்கள். பாபா அதில் என்ன செய்வார்? என்ன பாராட்டு அளிப்பார்?
நிறைய குழந்தை கள் கூறுகிறார்கள், நாங்களோ எப்பொழுதும் தந்தையை
நினைவு செய்து கொண்டே இருக்கிறோம். அவர் இல்லாமல் எங்களுக்கு
யார் தான் இருக்கிறார்கள்? இதுவும் பொய் கூறிக்கொண்டே
இருக்கிறார்கள். நினைவிலோ மிகுந்த உழைப்பு உள்ளது. நாம் நினைவு
செய்கிறோமா இல்லையா - இது கூட புரிந்து கொள்ள முடியாமல்
இருக்கிறார்கள். நாங்களோ நினைவு செய்து கொண்டே இருக்கிறோம்
என்று அறியாமையில் கூறி விடுகிறார்கள். உழைப்பு இன்றி யாராவது
உலகிற்கு அதிபதி ஆகி விட முடியுமா என்ன? உயர்ந்த பதவியை அடைய
முடியாது. நினைவினுடைய கூர்மை நிரம்பினால் தான் சேவை செய்ய
முடியும். பிறகு எவ்வளவு சேவை செய்து பிரஜைகளை
உருவாக்கினார்கள் என்பது பார்க்கப்படுகிறது. கணக்கு வேண்டும்
அல்லவா? நாம் எத்தனை பேரை தனக்குச்சமாக ஆக்கினோம்? பிரஜைகளை
அமைக்க வேண்டி உள்ளது அல்லவா? அப்பொழுது தான் ராஜ்ய பதவியை
அடைய முடியும். அதுவோ இப்பொழுது ஒன்றும் இல்லை. யோகத்தில்
இருக்க வேண்டும். கூர்மை நிரம்ப வேண்டும். அப்பொழுது தான்
எவருக்கும் முழுமையாக அம்பு போல பதிய (தைக்க) முடியும்.
சாஸ்திரங்களில் கூட இருக்கிறது அல்லவா - கடைசியில் பீஷ்ம
பிதாமகர், துரோணச்சாரியர் ஆகியோருக்கு ஞானம் அளித்தார் என்று.
உங்களுடைய பதீத நிலை (தூய்மையற்ற நிலை) நீங்கி ஆத்மா சதோபிராதன
நிலை வரை வந்து விடும் பொழுது கூர்மை நிரம்புகிறது. பின்
சட்டென்று அம்பு போல பதிந்து விடுகிறது.பாபாவோ எல்லாமே அறிவார்
என்று ஒரு பொழுதும் நினைக்காதீர்கள். பாபாவிற்கு தெரிய வேண்டிய
அவசியம் என்ன? செய்பவர்கள் அடைவார்கள். பாபா சாட்சியாக
(பார்வையாளராக) ஆகி பார்த்து கொண்டே இருக்கிறார். நாங்கள்
குறிப்பிட்ட இந்த இடத்திற்கு சென்று சேவை செய்தோம் என்று
பாபாவிற்கு எழுதுகிறார்கள். முதலில் நீங்கள் நினைவு
யாத்திரையில் மூழ்கி இருக்கிறீர்களா என்று பாபா கேட்பார்.
முதல் விஷயமே இது தான் - மற்ற தொடர்பை விடுத்து ஒரு தந்தையிடம்
தொடர்பை இணையுங்கள். (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக ஆக
வேண்டி வரும். வீட்டில் இருக்கும் பொழுது கூட இதுவோ பழைய
உலகம், பழைய தேகம் ஆகும் என்பதைப் புரிந்திருக்க வேண்டும். இவை
எல்லாமே முடியப் போகிறது. தந்தை மற்றும் ஆஸ்தியிடம் தான்
நமக்கு வேலை. இல்லறத்தில் இருக்க வேண்டாம். யாரிடமும் பேச
வேண்டாம் என்றெல்லாம் பாபா கூறுவதில்லை. திருமணத்திற்குச்
செல்லலாமா என்று பாபாவிடம் கேட்கிறார்கள். தாராளமாகச்
செல்லுங்கள் என்று பாபா கூறுவார். அங்கு கூட போய் சேவை
செய்யுங்கள். புத்தியின் யோகம் சிவபாபாவிடம் இருக்கட்டும்.
ஜன்ம ஜன்மாந்திரத்தின் விகர்மங்கள் நினைவின் பலத்தால் தான்
சாம்பலாகும். இங்கு கூட விகர்மங்கள் (தீய செயல்கள்)
செய்தார்கள் என்றால், மிகவுமே தண்டனையை அனுபவிக்க வேண்டி
வரும். பாவனம் ஆகிக் கொண்டே இருக்க இருக்க, விகாரத்தில்
சென்றார்கள் என்றால், இறந்தே விடுவார்கள். ஒரேயடியாக தூள்
தூளாக ஆகி விடுகிறார்கள். ஸ்ரீமத்படி நடக்காமல் மிகுந்த நஷ்டம்
ஏற்படுத்துகிறார்கள். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் வேண்டும்.
யோகமே வர முடியாத அளவிற்கு அப்பேர்ப்பட்ட பாவங்கள்
செய்கிறார்கள். நினைவு செய்ய முடியாமல் இருப்பார்கள்.
யாரிடமாவது சென்று பகவான் வந்து விட்டுள்ளார், அவரிடமிருந்து
ஆஸ்தி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள்
ஏற்று கொள்ள மாட்டார்கள். அம்பு போல பதியவே பதியாது.
பக்தர்களுக்கு ஞானம் கூறுங்கள் என்று பாபா கூறி உள்ளார். வீணாக
யாருக்குமே கொடுக்காதீர்கள். இல்லையென்றால், இன்னுமே நிந்தை
செய்விப்பார்கள். பாபா எங்களுக்கு தானம் கொடுக்கும் பழக்கம்
உள்ளது. இப்பொழுதோ ஞானத்தில் வந்து விட்டுள்ளோம். இப்பொழுது
என்ன செய்வது என்று ஒரு சில குழந்தைகள் பாபாவிடம்
கேட்கிறார்கள். பாபா ஆலோசனை தருகிறார் - குழந்தைகளே!
ஏழைகளுக்கு தானம் அளிப்பவர்களோ நிறைய பேர் உள்ளார்கள். ஏழைகள்
ஒன்றும் பசியால் இறப்பதில்லை. துறவிகளிடம் நிறைய பைசா
இருக்கிறது. எனவே இந்த எல்லா விஷயங்களிலிருந்தும் உங்களுடைய
புத்தி அகன்று விட வேண்டும். தானம் ஆகியவற்றில் கூட மிகுந்த
எச்சரிக்கை வேண்டும். நிறைய பேர் இது போன்ற காரியம்
செய்கிறார்கள். கேட்கவே வேண்டாம். மேலும் நமது தலை மீது
சுமைகள் மிகவும் பாரமாக ஆகிக் கொண்டே போகிறது என்பதையும் சுயம்
தாங்கள் புரியாமல் இருக்கிறார்கள். ஞான மார்க்கம் என்பது ஏதோ
கேலி கூத்திற்கான மார்க்கம் அல்ல. தந்தையுடன் கூடவே
தர்மராஜரும் இருக்கிறார். தர்மராஜரிடம் பெரிய பெரிய அடிகள்
வாங்க வேண்டி இருக்கும். கடைசியில் தர்மராஜர் கணக்கு
பார்க்கும் பொழுது அப்பொழுது தெரிய வரும் என்று. கூறுகிறார்கள்
அல்லவா - பல பிறவிகளின் தண்டனைகளை வாங்குவதற்கு நேரம் ஒன்றும்
பிடிப்பதில்லை. பாபா காசி கல்வட் பற்றிய உதாரணம் கூட புரிய
வைத்துள்ளார். (கிணற்றில் கத்தியின் கீழ் தலையை வெட்டிக்
கொள்வது). அது பக்தி மார்க்கம் ஆகும். இது ஞான மார்க்கமாகும்.
மனிதர்களைக் கூட பலி ஏற்றுகிறார்கள். இதுவும் நாடகத்தில்
பொருந்தி உள்ளது. இந்த எல்லா விஷயங்களையும் புரிந்து கொள்ள
வேண்டும். அப்படியின்றி இந்த நாடகம் ஏன் தான் அமைக்கப்பட்டது
என்பதல்ல. சக்கரத்தில் எதற்காகத் தான் அழைத்து வந்தீர்கள்?
சக்கரத்திலோ வந்து கொண்டு தானிருப்பீர்கள். இதுவோ அனாதி நாடகம்
ஆகும் அல்லவா? சக்கரத்தில் வரவில்லை என்றால் பின் உலகமே
இருக்காது. மோட்சமோ ஆவதில்லை. முக்கியமானவர்களுக்குக் கூட
மோட்சம் ஆக முடியாது. 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இப்படியே
சக்கரம் சுற்றுவீர்கள். இதுவோ நாடகம் ஆகும் அல்லவா?
ஒருவருக்குப் புரிய வைப்பதால், வாணி நடத்துவதால் மட்டுமே பதவி
கிடைக்காது. முதலில் பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனம்
ஆக வேண்டும். அப்படியின்றி பாபாவோ எல்லாமே அறிந்துள்ளார்
என்பதல்ல. பாபா அறிந்தும் கூட என்ன செய்வார்? முதலிலோ
ஸ்ரீமத்படி நான் என்ன செய்கிறேன், எந்த அளவு பாபாவை நினைவு
செய்கிறேன் என்பதை உங்களுடைய ஆத்மா அறிந்திருக்கிறது. மற்றபடி
பாபா இதை வந்து அறிந்து கொள்வதால் நன்மை தான் என்ன? நீங்கள்
என்ன செய்கிறீர்களோ, அதன் பலனை நீங்கள் தான் அடைகிறீர்கள்.
பாபா உங்களுடைய (ஏக்ட்) செயல் மற்றும் (சர்வீஸ்) சேவை மூலமாக
அறிந்திருக்கிறார். இந்த குழந்தை நன்றாக சேவை செய்கிறது,
குறிப்பிட்ட ஒருவர் பாபாவினுடைய வராக ஆன பிறகு நிறைய
விகர்மங்கள் செய்துள்ளார் என்றால், அவருடைய முரளியில்
(வகுப்பில்) கூர்மை நிரம்ப முடியாது. இது ஞான வாள் ஆகும்.
இதில் நினைவு பலத்தின் கூர்மை வேண்டும். யோக பலத்தினால்
நீங்கள் உலகத்தின் மீது வெற்றி அடைகிறீர்கள். மற்றபடி
ஞானத்தினால் புது உலகத்தில் உயர்ந்த பதவி அடைவீர்கள். முதலிலோ
பவித்திரமாக ஆக வேண்டும். தூய்மையாக ஆகாமல் உயர்ந்த பதவி
கிடைக்க முடியாது. இங்கு வருவதே நரனிலிருந்து நாராயணராக
ஆவதற்கு. பதீதமானவர்கள் நரனிலிருந்து நாராயணராக ஆவார்களா என்ன?
பாவனமாக ஆவதற்கான முழு யுக்தி வேண்டும். சென்டர்களைப்
பராமரிக்கும் நெருங்கிய குழந்தைகள் கூட மிகவுமே உழைக்க செய்ய
வேண்டி உள்ளது. அந்த அளவு உழைப்பு செய்வதில்லை. எனவே அந்த
கூர்மை நிரம்புவதில்லை. அம்பு போல பாய்வதில்லை. நினைவு
யாத்திரை எங்கே! கண்காட்சியில் நிறைய பேருக்குப் புரிய
வைக்கிறார்கள். அவ்வளவு தான்! முதலில் நினைவினால் தூய்மை ஆக
வேண்டும். பிறகு தான் ஞானம். பாவனமாக ஆனீர்கள் என்றால்,
ஞானத்தின் தாரணை கூட ஆகும். பதீதமானவர்களுக்கு தாரணை ஆகாது.
முக்கியமான (சப்ஜெக்ட்) பாடம் நினைவினுடையது ஆகும்.அந்த
படிப்பில் கூட சப்ஜெக்ட் பாடங்கள் இருக்கும் அல்லவா? உங்களிடம்
கூட பி.கே. ஆகிறார்கள். ஆனால் பிரம்மா குமார் குமாரி, சகோதர
சகோதரி ஆவது சித்தி வீடு அல்ல. கூறுவதற்காக மட்டுமே ஆவது
அல்ல.தேவதை ஆக வேண்டும் என்றால் முதலில் அவசியம் தூய்மை ஆக
வேண்டும். பிறகு தான் படிப்பு. படிப்பு மட்டும் தான்
இருக்கிறது. பவித்திரமாக ஆகவில்லை என்றால் உயர்ந்த பதவியை அடைய
முடியாது. ஆத்மா தூய்மையானதாக வேண்டும். பவித்திரமாக ஆனால்
தான் பவித்திரமான உலகத்தில் உயர்ந்த பதவியை அடைய முடியும்.
(பவித்திரதா) தூய்மையைத் தான் பாபா வலியுறுத்துகிறார். தூய்மை
இல்லாமல் யாருக்குமே ஞானம் கொடுக்க முடியாது. மற்றபடி பாபா
எதையுமே பார்ப்பது இல்லை. சுயம் அவரே அமர்ந்துள்ளார் அல்லவா?
எல்லா விஷயங்களையும் புரிய வைக்கிறார். பக்தி மார்க்கத்தில்
பாவனைக்கு பலன் கிடைத்து விடுகிறது. இதுவும் நாடகத்தில்
பொருந்தி உள்ளது. சரீரம் இல்லை என்றால் தந்தை எப்படி பேச
முடியும், எப்படி கேட்க முடியும்? ஆத்மாவிற்கு சரீரம்
இருக்கும் பொழுது தான் கேட்கிறார், பேசுகிறார். பாபா
கூறுகிறார் - எனக்கு உறுப்புக்களே இல்லை என்றால் எப்படி
கேட்பது, எப்படி தெரிந்து கொள்வது? நாம் விகாரத்தில்
செல்கிறோம் என்பதை பாபாவோ அறிந்திருக்கிறார் என்று
நினைக்கிறார்கள். அவ்வாறு அவர் அறிந்திருக்கவில்லை என்றால்,
அவரை பகவான் என்றே ஏற்க மாட்டார்கள். இப்படி கூட நிறைய பேர்
இருக்கிறார்கள். தந்தை கூறுகிறார் - நான் உங்களுக்கு பாவனமாக
ஆவதற்கான வழியைக் கூறுவதற்காகவே வந்துள்ளேன் என்று தந்தை
கூறுகிறார். சாட்சியாக (பார்வையாளர்) ஆகிப்பார்க்கிறேன்.
குழந்தைகளின் நடத்தை மூலமாக இவர்கள் மோசமான குழந்தைகளா இல்லை
நல்ல குழந்தைகளா என்று தெரிய வந்து விடுகிறது. சேவையினுடையது
கூட நிரூபணம் வேண்டும் அல்லவா? யார் செய்கிறார்களோ அவர்கள்
அடைகிறார்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள். ஸ்ரீமத்படி
நடந்தார்கள் என்றால், (சிரேஷ்டமானவர்களாக) சிறந்தவர்களாக
ஆகிறார்கள். நடக்கவில்லை என்றால் அவரே அசுத்தமாக ஆகி விழுந்து
விடுவார். எந்த ஒரு விஷயமானாலும் (கிளியர்) தெளிவாகக்
கேளுங்கள். குருட்டு நம்பிக்கையின் விஷயம் இலலை. பாபா இவ்வளவு
தான் கூறுகிறார், நினைவின் கூர்மை இல்லை என்றால் எப்படி
பாவனமாக ஆக முடியும்? இந்த பிறவியில் கூட எப்பேர்ப்பட்ட
பாவங்கள் செய்கிறார்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இது
இருப்பதே பாவ ஆத்மாக்களின் உலகமாக. சத்யுகம் என்பது புண்ணிய
ஆத்மாக்களின் உலகம். இது சங்கமம் ஆகும். ஒருவர் மந்த புத்தியாக
இருந்தால் தாரணை செய்ய முடியாது. பாபாவை நினைவு செய்ய
முடியாது. பிறகு டூலேட் மிகவும் தாமதமாக ஆகி விடும். மூங்கில்
காட்டிற்கு நெருப்பு பிடித்து விட்டது என்றால் பின் யோகத்தில்
கூட இருக்க முடியாது. அச்சமயத்திலோ பீதி பரவி விடுகிறது. நிறைய
துக்கங்களின் மலைகள் விழப்போகின்றன. நாம் நமது ராஜ்ய
பாக்கியத்தை தந்தையிடமிருந்து எடுத்து கொண்டு விட வேண்டும்
என்ற இதே கவலை இருக்க வேண்டும். தேக அபிமானத்தை விடுத்து
சேவையில் ஈடுபட்டு விட வேண்டும். கல்யாணகாரி (நன்மை செய்பவர்)
ஆக வேண்டும். பணத்தை வீணாக இழக்கக் கூடாது. யார் தகுதி
உடையவர்களாகவே இல்லையோ அப்பேர்ப்பட்ட (பதீதமான)
தூய்மையற்றவர்களுக்கு ஒரு பொழுதும் தானம் கொடுக்கக் கூடாது.
இல்லை என்றால் தானம் கொடுப்பவர் மீதும் வந்து விடுகிறது.
அப்படியின்றி பகவான் வந்துள்ளார் என்று தண்டோரா அடிப்பது அல்ல.
அது போல பகவான் என்று அழைத்து கொள்பவர்கள் பாரதத்தில் நிறைய
பேர் உள்ளார்கள். யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள். இதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். உங்களுக்கு தெளிவு கிடைத்துள்ளது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.ஆன்மீகக்
குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
படிப்புடன் கூடவே அவசியம் பவித்திரமாக ஆக வேண்டும். இது போல
தகுதியுடையவர்களாக அல்லது நல்ல குழந்தையாக ஆகி, சேவைக்கான
நிரூபணம் அளிக்க வேண்டும். ஸ்ரீமத்படி சுயம் தங்களை
சிறந்தவர்களாக (சிரேஷ்டமானவர்களாக) ஆக்க வேண்டும்.
2.
ஸ்தூல செல்வத்தைக் கூட வீணாக இழக்க கூடாது. பதீதர்களுக்கு (தூய்மையற்றவர்
களுக்கு) தானம் செய்யக் கூடாது. ஞான செல்வத்தை கூட
பாத்திரத்தைப் பார்த்துக் கொடுக்க வேண்டும்.
வரதானம் –
சதா வளைந்து கொடுப்பதற்கான விசேசத் தன்மை மூலம் தொடர்பு மற்றும்
சேவையில் வெற்றி பெறக்கூடிய வெற்றி மூர்த்தி ஆகுக.
எந்தக் குழந்தைகளிடம் தன்னை மாற்றிக் கொள்வதற்கான (வளைந்து
கொடுப்பதற்கான) விசேசத் தன்மை உள்ளதோ, அவர்கள் சகஜமாகவே
பொன்யுகத்தின் ஸ்டேஜ் வரை சென்று சேர முடியும். எப்படி சமயமோ,
எப்படி சூழ்நிலை உள்ளதோ, அதன்படி தன்னுடைய தாரணைகளைப்
பிரத்தியட்சம் செய்வதற்காக, தன்னை மாற்றிக் கொள்ள வேண்டி உள்ளது.
வளைந்து கொடுப்பவர் தாம் உண்மையான தங்கம். எப்படி சாகார்
பாபாவின் விசேசத்தைப் பார்த்தீர்கள் -- எப்படி சமயமோ,
எப்படிப்பட்ட மனிதரோ, அதற்கேற்ற ரூபம் -- அது போல் தந்தையைப்
பின்பற்றுவீர்களானால் சேவை மற்றும் தொடர்பு அனைத்திலும்
சகஜமாகவே வெற்றி மூர்த்தி ஆகி விடுவீர்கள்.
சுலோகன் –
எங்கே
சர்வ சக்திகள் உள்ளனவோ, அங்கே நிர்விக்ன (தடையற்ற) வெற்றி கூடவே
இருக்கும்.
ஓம்சாந்தி