09.08.2020 காலை முரளி ஓம் சாந்தி அவ்யக்த
பாப்தாதா,
ரிவைஸ் 04.03.1986 மதுபன்
சர்வ சிரேஷ்ட படைப்பின்
அஸ்திவாரம் அன்பு
இன்று பாப்தாதா தனது சிரேஷ்ட
ஆத்மாக்களின் படைப்புகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து
கொண்டிருக் கின்றார். இந்த சிரேஷ்ட அல்லது புது படைப்பு முழு
உலகிலேயே சர்வ சிரேஷ்டமானது மற்றும் மிகவும் பிரிய மானதாகும்.
ஏனெனில் தூய்மையான ஆத்மாக்களின் படைப்பாகும். தூய்மையான
ஆத்மாக்களாக இருக்கின்ற காரணத்தினால் இப்போது பாப்தாதாவிற்கு
பிரியமானவர்களாக இருக்கிறீர்கள், மேலும் தனது இராஜ்யத்தில்
அனைவருக்கும் பிரியமானவர்களாக இருப்பீர்கள். துவாபரத்தில்
பக்தர்களுக்கு பிரிய தேவாத்மாக்களாக இருப்பீர்கள். இந்த
நேரத்தில் பரமாத்மாவிற்கு பிரிய பிராமண ஆத்மாக்களாக
இருக்கிறீர்கள். மேலும் சத்யுகம், திரேதாவில் இராஜ்ய அதிகாரி
பரம சிரேஷ்ட தேவ ஆத்மாக்களாக இருப்பீர்கள். பிறகு துவாபரம்
மற்றும் கலியுகம் வரை பூஜ்ய ஆத்மாக்களாக இருப்பீர்கள்.
மூன்றிலும் சிரேஷ்டமானது இந்த நேரத்தில் பரமாத்மாவிற்கு பிரிய
பிராமணன் மற்றும் பரிஸ்தா ஆத்மாக்கள். இந்த நேரத்தின்
சிரேஷ்டதாவின் ஆதாரத்தில் முழு கல்பத்திலும் சிரேஷ்டமானவர்களாக
ஆகிறீர்கள். இந்த கடைசி நேரம் வரையிலும் கூட சிரேஷ்ட
ஆத்மாக்களாகிய உங்களை பக்த ஆத்மாக்கள் எவ்வளவு வரவேற்பு
செய்கிறார்கள்! எவ்வளவு அன்பாக அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்!
என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஜடச் சித்திரம் (சிலை)
என்பதை அறிந்திருந்தும் சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களை எவ்வளவு
பாவனையுடன் பூஜை செய்கின்றனர்! பிரசாதம் படைக்கின்றனர்! ஆரத்தி
எடுக்கின்றனர்! நமது சிலைக்குத் தான் பூஜை நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது என்பதை இரட்டை அயல்நாட்டினர் நினைக்கிறீர்களா?
பாரதத்தில் தந்தையின் காரியம் நடைபெற்றது, ஆகையால் தந்தையின்
கூடவே உங்கள் அனைவரின் சிலைகளும் பாரதத்தில் மட்டுமே இருக்கிறது.
அதிக கோயில்கள் பாரதத்தில் உருவாக்குகின்றனர். நாம் தான்
பூஜைக்குரிய ஆத்மாக்கள் என்ற போதை இருக்கிறது தானே? சேவைக்காகத்
தான் உலகின் நாலாபுறமும் பரவி சென்றிருந்தீர்கள். சிலர்
அமெரிக்காவிற்கு, சிலர் ஆப்பிரிக்காவிற்கு சென்றிருக்கிறீர்கள்.
ஆனால் எதற்காக சென்றீர்கள்? இந்த நேரத்தில் சேவைக்கான
சன்ஸ்காரம், அன்பிற்கான சன்ஸ்காரம் இருக்கிறது. சேவையின்
விசேஷதாவே அன்பு ஆகும். எதுவரை ஞான சேவையின் கூடவே ஆன்மீக
அன்பின் அனுபவம் ஏற்பட வில்லையோ, அதுவரை யாரும் ஞானம் கேட்க
மாட்டார்கள்.
இரட்டை அயல்நாட்டினர்களாகிய
நீங்கள் அனைவரும் பாபாவின் குழந்தைகளாக ஆகியிருக்கிறீர்கள்
எனில் அதற்கு அஸ்திவாரம் எது? தந்தையின் அன்பு, பரிவாரத்தின்
அன்பு., உள்ளப்பூர்வமான அன்பு, சுய நலமற்ற அன்பாகும். இது தான்
சிரேஷ்ட ஆத்மாக்களாக ஆக்கியிருக்கிறது. ஆக சேவையின் முதல்
வெற்றி சொரூபம் அன்பாகும். எப்போது அன்பினால்
தந்தையினுடையவர்களாக ஆகிவிடுவீர்களோ பிறகு ஞானத்தின் கருத்து
எதுவானாலும் எளிதாக தெளிவாகிக் கொண்டே செல்லும். யார் அன்பில்
வரவில்லையோ அவர்கள் நேரத்தை ஒதுக்கி ஞான தாரணை செய்து
முன்னேறுவர், கடின உழைப்பும் செய்வர். ஏனெனில் அவர்களது மனதின்
என்ண ஓட்டம் (உள்ளுணர்வில்) ஏன், எதற்கு, எப்படி, அப்படி
என்பதில் அதிகம் சென்று விடுகிறது. மேலும் அன்பில் மூழ்கி
விடும் பொழுது அன்பின் காரணத்தினால் தந்தையின் ஒவ்வொரு
வார்த்தையும் பிரியமானதாக இருக்கும். கேள்விகள் சமாப்தி
ஆகிவிடும். தந்தையின் அன்பு ஈர்க்கக் கூடிய காரணத்தினால்
கேள்விகள் கேட்டாலும் புரிந்து கொள்வதற்காக கேட்பார்கள்.
அனுபவிகளாக இருக்கிறீர்கள் அல்லவா! யார் அன்பில் மூழ்கி
விடுகிறார்களோ, அந்த அன்பானவர்கள் என்ன பேசினாலும் அவர்களுக்கு
அதில் அன்பு தான் தென்படும். ஆக சேவைக்கு மூல ஆதாரம் அன்பு
ஆகும். தந்தையும் குழந்தைகளை சதா அன்பாக நினைவு செய்கின்றார்.
அன்பாக அழைக்கின்றார், அன்பின் மூலமாகவே அனைத்து
பிரச்சனைகளையும் கடக்க வைக்கின்றார். ஆக ஈஸ்வரிய பிறப்பின்,
பிராமண பிறப்பின் அஸ்திவாரமே அன்பாகும். அன்பு என்ற அஸ்திவாரம்
உடையவர்களுக்கு எந்த ஒரு விசயமும் கடினமானதாக இருக்காது.
அன்பின் காரணத்தினால் ஆர்வம், உற்சாகம் இருக்கும். தந்தையின்
ஸ்ரீமத் எதுவோ அதை நாம் செய்தே ஆக வேண்டும். பார்க்கலாம்,
செய்யலாம் இது அன்பின் இலட்சணம் கிடையாது. தந்தை எனக்காக
கூறியிருக்கின்றார், ஆகவே நான் செய்தே ஆக வேண்டும். இது அன்பான
நாயகி ஆத்மாவின் கடமையாகும்.. அன்பானவர்கள் குழப்பமுடையவர்களாக
இருக்கமாட்டார்கள். சதா பாபா மற்றும் நான், மூன்றாம் நபர்
யாருமில்லை. தந்தை எவ்வாறு உயர்ந்ததிலும் உயர்ந்தவராக
இருக்கின்றாரோ, அதே போன்று அன்பான ஆத்மாக்களும் சதா பரந்த
உள்ளத்துடன் இருப்பார்கள். குறுகிய உள்ளமுடையவர்கள் சிறிய
சிறிய விசயங்களில் குழப்பமடைவார்கள். சிறிய விசயமும் பெரியதாக
ஆகிவிடும். பரந்த உள்ளமுடையவர்களுக்கு பெரிய விசயமும் சிறியதாக
ஆகிவிடும். இரட்டை அயல்நாட்டினர் அனைவரும் பரந்த
உள்ளமுடையவர்கள் தானே! பாப்தாதா அனைத்து இரட்டை அயல்நாட்டு
குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றார். விட்டில்
பூச்சிகளாகி விளக்கில் பலியாவதற்கு எவ்வளவு தூரத்திலிருந்து
வந்து விடுகின்றனர்! பக்கா விட்டில் பூச்சிகளாக இருக்கின்றனர்!
இன்று அமெரிக்கர்களின் முறை
ஆகும். அமெரிக்கர்களுக்கு தந்தை கூறுகின்றார் ஆஹா என்னுடையவர்
களே. அமெரிக்கர்களும் ஆஹா என்னுடையவர் என்று கூறுகின்றனர்.
இந்த விசேஷதா இருக்கிறது அல்லவா! கல்ப மரம் சித்திரத்தில்
விசேஷ சக்தியின் ரூபத்தில் அமெரிக்கா காண்பிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்தாபனை ஆனதிலிருந்து தந்தை அமெரிக்காவை நினைவு செய்தார்.
விசேஷ பாகம் இருக்கிறது அல்லவா! ஒன்று விநாசத்தின் சக்தி
சிரேஷ்டமானது, மற்றொரு விசேஷதா எது? இடமே விசேஷமானதாகும்.
ஆனாலும் அமெரிக்காவின் விசேஷதா ஒருபுறம் விநாசத்திற்கான
ஏற்பாடுகளும் அதிகமாக இருக்கிறது, மற்றொரு புறம் விநாசத்தை
சமாப்தி செய்யக் கூடிய ஐக்கிய நாடுகள் சபையும் அங்கு தான்
இருக்கிறது. ஒருபுறம் விநாச சக்தி, மற்றொரு புறம் அனைவரையும்
இணைக்கும் சக்தி. ஆக இரட்டை சக்தி ஆகிவிட்டது அல்லவா! அங்கு
அனைவரையும் இணைப்பதற்கு முயற்சி செய்கின்றனர். பிறகு
அங்கிருந்து தான் இந்த ஆன்மீக இணைப்பின் ஓசையும் வெளிப்படும்.
அவர்கள் தங்களது முறையில் அனைவரையும் இணைத்து அமைதிக்கான
முயற்சி செய்கின்றனர். ஆனால் யதார்த்த முறையில் இணைப்பது
உங்களது கடமை அல்லவா! அவர்கள் இணைப்பதற்கான முயற்சியும்
செய்கின்றனர், ஆனால் செய்ய முடிவது கிடையாது. அனைத்து தர்ம
ஆத்மாக்களையும் ஒரே குடும்பத்தில் கொண்டு வருவது உண்மையில்
பிராமண ஆத்மாக்களாகிய உங்களது உண்மையான கடமையாகும். விசேஷமாக
இதை செய்ய வேண்டும். எவ்வாறு விநாசத்திற்கான சக்தி அங்கு
சிரேஷ்டமானதாக இருக்கிறதோ அதே போன்று ஸ்தாபனைக்கான சக்தியின்
ஓசையும் வெளிப்பட வேண்டும். விநாசம் மற்றும் ஸ்தாபனை இரண்டின்
கொடியும் சேர்ந்து பறக்க வேண்டும். ஒன்று விஞ்ஞானத்தின் கொடி
மற்றொன்று அமைதியின் கொடி. விஞ்ஞான சக்தியின் பிரபாவம் மற்றும்
அமைதி சக்தியின் பிரபாவம் இரண்டும் வெளிப்படும் போது தான்
பிரதட்சதா என்ற கொடியை பறக்க வைத்திருக்கிறார்கள் என்று கூற
முடியும். ஒரு வி.ஐ.பி ஏதாவது ஒரு நாட்டிற்கு செல்கிறார் எனில்
அவரை வரவேற்பதற்காக கொடி பறக்க வைக்கிறார்கள் அல்லவா! தனது
நாட்டின் கொடியையும் பறக்க வைப்பார்கள், மேலும் யார்
வருகிறார்களோ அவரது தேசக் கொடியையும் பறக்க வைப்பார்கள். ஆக
பரமாத்ம அவதாரத்திற்கான கொடியையும் பறக்க வைக்க வேண்டும்.
பரமாத்ம காரியத்தையும் வரவேற்க வேண்டும். தந்தையின் கொடி
ஒவ்வொரு மூலையிலும் பறக்க வேண்டும், அப்போது தான் விசேஷ
சக்திகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்று கூற முடியும். இது
கோல்டன் ஜுப்ளி ஆண்டு அல்லவா! எனவே அனைவருக்கும் தங்க
நட்சத்திரம் தென்பட வேண்டும். ஏதாவது விசேஷ நட்சத்திரம்
ஆகாயத்தில் தென்படுகிறது எனில் அனைவரின் கவனம் அதன் பக்கம்
செல்லும் அல்லவா! இந்த ஜொலிக்கக் கூடிய தங்க நட்சத்திரம்
அனைவரின் கண்களில், புத்தியில் தென்பட வேண்டும். இது தான்
கோல்டன் ஜுப்ளி கொண்டாடுவதாகும். இந்த நட்சத்திரங்கள் முதலில்
எங்கு ஜொலிக்கும்?
இப்போது அயல்நாடுகளில் நல்ல
முறையில் விருத்தி(வளர்ச்சி) ஆகிக் கொண்டிருக்கிறது, மேலும்
ஆகியே தீர வேண்டும். காணாமல் போன தந்தையின் குழந்தைகள் ஒவ்வொரு
மூலையிலும் மறைந்திருக்கின்றனர். அவர்கள் நேரத்தின் அநுசாரமாக
நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கின்றனர். அனைவரும்
ஒருவருக்கொருவர் சேவையில் ஆர்வம், உற்சாகத்துடன் முன்னேறிக்
கொண்டிருக்கின்றனர். தைரியத்தின் காரணத்தினால் தந்தையின்
உதவியும் கிடைத்து விடுகிறது. நம்பிக்கையற்றவர்களிடத்திலும்
நம்பிக்கை என்ற தீபம் ஏற்றப்பட்டு விடுகிறது. இவ்வாறு நடப்பது
முடியாத காரியமாகும், மிகவும் கடினம் என்று உலகத்தினர்
நினைக்கின்றனர். ஆனால் ஆர்வமானது தடைகளற்றவர்களாக ஆக்கி
பறக்கும் பறவை போன்று பறக்க வைத்து அந்த நிலை அடையச் செய்து
விடுகிறது. இரண்டு விமானத்தின் மூலம் சென்றடைந்து விடுகிறீர்கள்
அல்லவா! ஒன்று ஃபளான்திட்டம்) மற்றொன்று புத்தி என்ற விமானம்.
தைரியம் என்ற இறக்கை வந்து விடும் போது எங்கு பறக்க
விரும்புகிறீர்களோ பறக்க முடியும். குழந்தைகளின் தைரியத்தைப்
பற்றி பாப்தாதா சதா மகிமை செய்கின்றார். தைரியம் வைப்பதன் மூலம்
ஒருவரின் மூலம் மற்றொருவரின் தீபம் ஏற்றப்பட்டு மாலை
ஆகிவிடுகிறது அல்லவா! அன்பாக முயற்சி செய்யும் போது அதற்கான
பலன் மிகவும் நல்லதாக வெளிப்படுகிறது. இது அனைவரின் சகயோகத்தின்
விசேஷதா ஆகும். எந்த விசயமாக இருந்தாலும் முதலில் உறுதியான நிலை,
அன்பான குழு தேவை. அதன் மூலம் வெற்றியானது வெளிப்படையான
ரூபத்தில் தென்படும். உறுதியான நிலை காய்ந்த நிலைத்திலும்
பழங்களை உருவாக்கி விட முடியும். இன்றைய நாட்களில் விஞ்ஞானிகள்
மணல் வெளிகளிலும் பழங்களை உருவாக்குவதற்கான முயற்சி செய்து
கொண்டிருக்கின்றனர். ஆக அமைதி சக்தியினால் என்ன செய்ய முடியாது!
எந்த நிலைத்திற்கு அன்பு என்ற நீர் கிடைக்கிறதோ அங்கு பழம்
மிகவும் பெரியதாகவும் இருக்கும், மேலும் சுவையானதாகவும்
இருக்கும். எவ்வாறு சொர்க்கத்தில் பெரிய பெரிய பழங்களாக
இருக்கும், சுவையானதாகவும் இருப்பது போன்று! அயல் நாட்டில்
பெரிய பழங்கள் கிடைக்கும், ஆனால் சுவையானதாக இருக்காது. பழம்
பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும், ஆனால் சுவை இருக்காது.
பாரதத்தில் பழம் சிறியதாக இருக்கும், ஆனால் சுவை நன்றாக
இருக்கும். அஸ்திவாரம் அனைத்தும் இங்கேயே போடப்படுகிறது. எந்த
சென்டரில் அன்பு என்ற தண்ணீர் கிடைக்கிறதோ அந்த சென்டர் சதா
வளமானதாக இருக்கும். சேவையிலும், கூட இருப்பவர்களும்.
சொர்க்கத்தில் சுத்தமான தண்ணீர், சுத்தமான நிலம் இருக்கும்.
அதனால் தான் அம்மாதிரியான பழம் கிடைக்கிறது. எங்கு அன்பு
இருக்கிறதோ அங்கு வாயுமண்டலம் அதாவது நிலம் சிரேஷ்டமானதாக
இருக்கும். யாராவது பாதிப்படைகிறார்கள் எனில் என்ன கூறுவார்கள்?
எனக்கு வேறு எதுவும் வேண்டாம், அன்பு இருந்தால் போதும். ஆக
பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்கான சாதனமும் அன்பு தான்.
பாப்தாதாவிற்கு அனைத்தையும் விட மிகவும் குஷியான விசயம் காணாமல்
போன குழந்தைகள் மீண்டும் வந்து விட்டனர். நீங்கள் அங்கு
செல்லவேயில்லை எனில் சேவை எப்படி ஏற்பட்டிருக்கும்? ஆகையால்
பிரிந்து போவதும் நன்மை ஆகிவிட்டது. மேலும் கல்யாணகாரியாக
இருப்பதால் சந்தித்தே ஆக வேண்டும். அவரவர்களது இடத்தில்
அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்.
மேலும் அனைவரின் உள்ளத்திலும் ஒரே ஒரு இலட்சியம் இருக்கிறது,
அதாவது பாப்தாதாவின் ஆசையாகிய அனைத்து ஆத்மாக் களையும்
அநாதைகளிலிருந்து குழந்தைகளாக ஆக்க வேண்டும் என்ற ஆசையை நாம்
நிறைவேற்றுவோம். அனைவரும் சேர்ந்து அமைதிக்கான செய்த விசேஷ
நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது. அனைவரையும் சிறிது நேரம்
அமைதியாக இருப்பதற்கான பயிற்சி செய்விப்பதில்
நிமித்தமானவர்களாக ஆகிவிடுவீர்கள். யாராவது சரியான முறையில் ஒரு
நிமிடம் அமைதியின் அனுபவம் செய்து விட்டால் அந்த ஒரு நிமிட
அமைதியின் அனுபவம் அடிக்கடி அவரை ஈர்த்துக் கொண்டேயிருக்கும்.
ஏனெனில் அனைவருக்கும் அமைதி தேவை. ஆனால் அதற்கான விதி
தெரியவில்லை. சகவாசம் கிடைப்பதில்லை. அனைத்து ஆத்மாக்களும்
அமைதிப் பிரியர்களாக இருக்கின்றனர், அப்படிப்பட்ட
ஆத்மாக்களுக்கு அமைதியின் அனுபவம் எற்படுவதன் மூலம் தானாகவே
ஈர்க்கப்பட்டுவார்கள். ஒவ்வொரு நிலையத்திலும் நல்ல விசேஷமான
காரியம் செய்யக் கூடிய நிமித்தமான சிரேஷ்ட ஆத்மாக்கள்
இருக்கின்றனர். எனவே அதிசயம் செய்வது ஒன்றும் பெரிய விசயமில்லை.
ஓசை பரப்புவதற்கான விசேஷ சாதனம் இன்றைய நாட்களின் விசேஷ
ஆத்மாக்கள் ஆவர். எந்த அளவிற்கு விசேஷ ஆத்மாக்கள் யாராவது
சம்மந்தத்தில் வருகிறார்களோ அவர்களது சம்பந்தத்தின் மூலம் பல
ஆத்மாக்களுக்கு நன்மை ஏற்படுகிறது. ஒரு வி.ஐ.பி மூலம் பல
சாதாரண ஆத்மாக்களுக்கு நன்மை ஏற்பட்டு விடுகிறது. மற்றபடி
நெருங்கிய தொடர்பில் வரமாட்டார்கள். அவர்களது தர்மத்தில்,
அவர்களது பாகத்தில் அவர்களுக்கு விசேஷதாவிற்கான பலன் ஏதாவது
கிடைத்து விடுகிறது. தந்தைக்கு பிடித்தமானவர்கள்
சாதாரணமானவர்கள் தான். அவர்களால் நேரமும் கொடுக்க முடியும்.
அவர்களுக்கு நேரமே கிடையாது. ஆனால் அவர்கள் நிமித்தமாக ஆகின்ற
போது பலருக்கு நன்மை ஏற்பட்டு விடுகிறது. நல்லது.
பார்ட்டிகளுடன்:
சதா அமர்பவ என்ற வரதானத்தை
அடைந்த ஆத்மா என்ற அனுபவம் செய்கிறீர்களா? சதா வரதானங் களினால்
வளர்ந்து முன்னேறிக் கொண்டே செல்கிறீர்கள் அல்லவா! யாருக்கு
தந்தையின் மீது உறுதியான அன்பு இருக்கிறதோ அவர்கள் அமர்பவ என்ற
வரதானத்தை அடைகிறார்கள்., சதா கவலையற்ற சக்கரவர்த்திகளாக
இருப்பார்கள். எந்த ஒரு காரியத்திற்கு நிமித்தமாக இருந்தாலும்
கவலையற்று இருப்பதும் கூட விசேஷதா ஆகும். தந்தை நிமித்தமாக
இருக்கின்றார் அல்லவா! நிமித்தமாக இருந்தாலும் விடுபட்டு
இருக்கின்றார். ஆகையால் கவலையின்றி இருக்கின்றார். ஆக தந்தையை
பின்பற்ற வேண்டும். சதா அன்பு என்ற பாதுகாப்பின் மூலம்
முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். அன்பின் ஆதாரத்தில் தந்தை சதா
பாதுகாப்பு கொடுத்து முன்னேற்றத்தில் பறக்க வைத்து அழைத்துச்
செல்கின்றார். இந்த ஒரு நம்பிக்கையும் உறுதியாக இருக்கிறது
அல்லவா! அன்பான ஆன்மீக சம்பந்தம் ஏற்பட்டு விட்டது. இதே ஆன்மீக
சம்பந்தத்தின் மூலம் ஒருவருக் கொருவர் எவ்வளவு பிரியமானவர்களாக
ஆகிவிட்டீர்கள்! பாப்தாதா தாய்மார்களுக்கு ஒரு சப்தத்தில் மிக
எளிய விசயத்தை கூறியிருக்கின்றார், ஒரு சப்தத்தை நினைவு
செய்யுங்கள் என்னுடைய பாபா”. அவ்வளவு தான். என்னுடைய பாபா என்று
கூறுகிறீர்கள், அனைத்து பொக்கிஷங்களும் கிடைத்து விடுகிறது.
இந்த பாபா என்ற சப்தம் தான் பொக்கிஷங்களுக்கான சாவியாகும்.
தாய்மார்களுக்கு சாவி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நன்றாக
வருகிறது அல்லவா! ஆக பாப்தாதா சாவி கொடுத்திருக்கின்றார். எந்த
பொக்கிஷம் தேவையோ அதை அடைய முடியும். ஒரு பொக்கிஷத்திற்கான சாவி
கிடையாது. அனைத்து பொக்கிஷங்களின் சாவியாகும். பாபா, பாபா என்று
கூறிக் கொண்டே இருந்தால் இப்போதும் குழந்தை மற்றும் எஜமானாக
இருக்கின்றோம், எதிர்காலத்திலும் எஜமானர்களாக இருப்போம். சதா
இதே குஷியில் ஆடிக் கொண்டே இருங்கள். நல்லது.
வரதானம்:
நிச்சயம் என்ற அழியாத ரேகையின்
மூலம் நம்பர் ஒன் பாக்கியத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடிய
வெற்றித் திலகதாரி ஆகுக.
எந்த குழந்தைகள்
நிச்சயபுத்தியுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் ஒருபோதும்
எப்படி அல்லது அப்படி என்று விஸ்தாரத்தில் செல்லமாட்டார்கள்.
அவர்களது நிச்சயம் என்ற அழிவற்ற ரேகையானது மற்ற
ஆத்மாக்களுக்கும் மிகத் தெளிவாக தென்படும். அவர்களது
நிச்சயத்தின் ரேகை இடையிடையில் துண்டிக்கப்படாமல் இருக்கும்.
இப்படிப்பட்ட ரேகையுடையவர்களின் நெற்றியில் அதாவது நினைவில் சதா
வெற்றித் திலகம் காணபடும். அவர்கள் பிறப்பு எடுத்தவுடனேயே
சேவைக்கான பொறுப்பு கிரீடத்தை அணிந்து கொள்வார்கள். சதா ஞான
இரத்தினங்களுடன் விளையாடக் கூடியவர்களாக இருப்பார்கள். சதா
நினைவு மற்றும் குஷி என்ற ஊஞ்சலில் ஆடிக் கொண்டே வாழ்க்கையை
கழிப்பவர்களாக இருப்பார்கள். இது தான் நம்பர் ஒன் பாக்கியத்தின்
ரேகையாகும்.
சுலோகன்:
புத்தி என்ற கம்யூட்டரில்
முற்றுப் புள்ளியின் சின்னம் வருகிறது எனில் மகிழ்ச்சியாக
இருக்கிறீர்கள் என்பதாகும்.
ஓம்சாந்தி