28.08.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நேரம்
கிடைக்கும் பொழுதெல்லாம் தனிமையில் சென்று நினைவு யாத்திரை
மேற்கொள்ளுங்கள். நீங்கள் இலக்கை அடைந்து விடும் பொழுது இந்த
யாத்திரை முடிவடைந்துவிடும்.
கேள்வி :
சங்கமத்தில் தந்தை தனது
குழந்தைகளுக்குள் நிரப்பும் எந்த ஒரு குணம் அரைக்கல்பம் வரையும்
நடைமுறையில் இருக்கும்?
பதில் :
தந்தை கூறுகிறார், எப்படி நான்
மிகவும் இனிமையாக இருக்கிறேனோ அதே போல குழந்தைகளையும் இனிமையாக
ஆக்கி விடுகிறேன். தேவதைகள் மிகவும் இனிமையானவர்கள்.
குழந்தைகளாகிய நீங்களும் இப்பொழுது இனிமையாக ஆவதற்கான
புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். யார் அநேகருக்கு
நன்மை செய்கிறார்களோ, யாரிடம் சாத்தானைப் போன்ற எந்த ஒரு
எண்ணமும் இல்லையோ அவர்களே இனிமையானவர்கள். அவர்களுக்குத் தான்
உயர்ந்த பதவி கிடைக்கிறது. அவர்களுக்குத்தான் பிற்காலத்தில்
பூஜை ஆகிறது.
ஓம் சாந்தி !
இந்த சரீரத்தின் எஜமானன் ஆத்மா
என்பதை தந்தை வந்து புரிய வைக்கின்றார். இதை முதலில் புரிந்து
கொள்ள வேண்டும். ஏனெனில் இப்பொழுது குழந்தைகளுக்கு ஞானம்
கிடைத்துள்ளது. முதன் முதலில் நாம் ஆத்மா என்பதைப் புரிந்து
கொள்ள வேண்டும். சரீரத்தின் மூலம் ஆத்மா காரியம் செய்கிறது.
பாகம் நடிக்கிறது இது போன்ற சிந்தனைகள் வேறு எந்த
மனிதர்களுக்கும் வருவது இல்லை. ஏனென்றால் தேக அபிமானத்தில்
இருக்கிறார்கள். இங்கு நான் ஆத்மா என்ற இந்த சிந்தனையில் அமர
வைக்கப்படுகிறது. இது என்னுடைய சரீரம் ஆகும். நான் ஆத்மா
பரமபிதா பரமாத்மாவின் குழந்தை. இந்த நினைவு தான் அடிக்கடி
மறந்து விடுகிறது. இதை முதலில் முழுமையாக நினைவு செய்ய வேண்டும்.
யாத்திரையில் போகும் பொழுது சென்று கொண்டே இருங்கள் என்பார்கள்.
நீங்கள் கூட நினைவு யாத்திரையில் சென்று கொண்டே இருக்க வேண்டும்,
அதாவது நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். நினைவு
செய்வதில்லை என்றால் யாத்திரை செல்வதில்லை என்பது பொருள். தேக
அபிமானம் வந்து விடுகிறது. தேக அபிமானத்தின் காரணமாக ஏதாவது
விகர்மம் ஏற்பட்டு விடுகிறது. மனிதர்கள் எப்பொழுதும் விகர்மம்
செய்கிறார்கள் என்பதும் அல்ல. இருப்பினும் வருமானம் முடிந்து
போய் விடுகிறது அல்லவா! எனவே கூடுமான வரையும் நினைவு
யாத்திரையில் மந்தமானவராக ஆகக் கூடாது. தனிமையில் அமர்ந்து
தங்களுக்குத் தாங்களே சிந்தனைக் கடலை கடைந்து குறிப்புக்கள்
எடுக்க வேண்டி இருக்கும். எவ்வளவு நேரம் பாபாவின் நினைவில்
இருக்கிறோம், இனிமையான விசயங்களின் நினைவு வரும்அல்லவா?
இச்சமயம் எல்லா மனிதர்களும் ஒருவருக்கொருவர் நஷ்டத்தையே
ஏற்படுத்துகிறார்கள் என்று குழந்தை களுக்குப் புரிய
வைத்துள்ளார். ஆசிரியர்களுக்கு மட்டும் பாபா மகிமை செய்கிறார்.
அதில் கூட ஒரு சில ஆசிரியர்கள் மோசமானவர்களாக இருப்பார்கள்.
இல்லாவிட்டால் ஆசிரியர் என்றால் கல்வி கற்பிப்பவர், நல்ல
நடத்தையைக் கற்பிப்பவர். பக்தி பாவனை உடையவர்கள், நல்ல சுபாவம்
உடையவர்களின் நடத்தையும் நன்றாக இருக்கும். தந்தை சாராயம்
ஆகியவை குடிக்கிறார் என்றால் குழந்தைகளுக்கும் அந்த பழக்கம்
ஏற்பட்டு விடுகிறது. இதற்கு தீய தொடர்பு என்று கூறுவார்கள்.
ஏனெனில் இராவண இராஜ்யம் அல்லவா? இராமராஜ்யம் அவசியம் இருந்தது.
ஆனால் அது எப்படி இருந்தது? எப்படி ஸ்தாபனை ஆகியது? என்ற இந்த
அதிசயமான இனிமையான விசயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான்
அறிந்துள்ளீர்கள். ஸ்வீட் ஸ்வீட்டர் ஸ்வீட்டஸ்ட் என்று
கூறப்படுகிறது அல்லவா? தந்தையின் நினைவில் இருந்து தான்
நீங்கள் பவித்திரமாக ஆகி மற்றவர்களை பவித்திரமாக
ஆக்குகிறீர்கள். தந்தை புதிய சிருஷ்டியில் வருவதில்லை.
சிருஷ்டியில் மனிதர்கள், மிருகங்கள், வயல்கள், தோட்டங்கள் ஆகிய
எல்லாமே இருக்கும். மனிதர்களுக்காக எல்லாம் வேண்டும் அல்லவா?
சாஸ்திரங்களில் பிரளயத்தின் வர்ணனை கூட தவறாகும். பிரளயம் ஆவதே
இல்லை. இந்த சிருஷ்டி சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
குழந்தைகள் ஆரம்ப முதல் கடைசி வரை சிந்தனையில் வைத்திருக்க
வேண்டும். மனிதர்களுக்கோ அநேக விதமான படங்கள் நினைவிற்கு
வருகின்றன. திருவிழா, உற்சவங்கள் ஆகியவை நினைவிற்கு
வருகின்றது. அவை எல்லாமே எல்லைக்குட்பட்டது. உங்களுடையது
எல்லையில்லாத நினைவு எல்லையில்லாத குஷி எல்லையில்லாத செல்வம்.
எல்லையில்லாத தந்தை அல்லவா? எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து
எல்லாமே எல்லைக்குட்பட்டது கிடைக்கிறது. எல்லையில்லாத
தந்தையிடமிருந்து எல்லையில்லாத சுகம் கிடைக்கிறது. செல்வம்
இருந்தால் தான் சுகம் இருக்கும். செல்வமோ அங்கு அளவற்று
இருக்கும். அங்கு எல்லாமே சதோபிரதானமாக இருக்கும். நாம்
சதோபிரதானமாக இருந்தோம். மீண்டும் ஆக வேண்டும் என்பது உங்கள்
புத்தியில் உள்ளது. இதுவும் நீங்கள் இப்பொழுது
அறிந்துள்ளீர்கள். உங்களிடையேயும் நம்பர் பிரகாரம் ஆவீர்கள் -
ஸ்வீட், ஸ்வீடர், ஸ்வீடஸ்ட் ஆவீர்கள் அல்லவா! பாபாவை விடவும்
ஸ்வீட் ஆகக் கூடியவர்கள் இருப்பார்கள். அவர்களே உயர்ந்த பதவி
அடைவார்கள். யார் அநேகருக்கு நன்மை செய்கிறார்களோ அவர்களே
ஸ்வீட்டஸ்ட் ஆவார்கள். தந்தையும் ஸ்வீட்டஸ்ட் ஆவார் அல்லவா?
அதனால் தான் எல்லோரும் அவரை நினைவு செய்கிறார்கள். தேனையோ,
சர்க்கரையையோ மட்டும் ஸ்வீட்டஸ்ட் என்று கூறுவதில்லை. இது
மனிதனுடைய நடத்தைக்குக் கூறப்படுகிறது. இவர் ஸ்வீட் சைல்டு
இனிமையான குழந்தை என்று கூறுகிறார்கள் அல்லவா? சத்யுகத்தில்
எந்த ஒரு சாத்தானைப் போன்ற விஷயங்கள் இருப்பதில்லை. இவ்வளவு
உயர்ந்த பதவியை அடைகிறார்கள் என்றால் அவசியம் இங்கு
புருஷார்த்தம் செய்துள்ளார்கள்.
இப்பொழுது நீங்கள் புது உலகத்தை அறிந்துள்ளீர்கள். உங்களைப்
பொறுத்தவரை நாளைக்கே புது உலகம் சுகதாமம் வந்து விட்டது
போலாகும். அமைதி எப்பொழுது இருந்தது என்பது மனிதர்களுக்குத்
தெரியவே தெரியாது. உலகில் அமைதி வேண்டும் என்று கூறுகிறார்கள்.
உலகில் அமைதி இருந்தது. இப்பொழுது மீண்டும் ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறீர்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இப்பொழுது இதை எல்லோருக்கும் எப்படிப் புரிய
வைப்பது? இது போன்ற பாயிண்ட்ஸ் தயார் செய்ய வரவேண்டும்.
மனிதர்களுக்கு இதற்கான மிகுந்த விருப்பம் உள்ளது. உலகில் அமைதி
வேண்டும் என்பதற்காக அடித்துக் கொள்கிறார்கள். ஏனெனில் மிகுந்த
அசாந்தி உள்ளது. இந்த லட்சுமி நாராயணரின் படம் முன்னால்
கொடுக்க வேண்டும். இவர்களுடைய ஆட்சி இருக்கும் பொழுது உலகில்
அமைதி இருந்தது. அதற்குத் தான் சொர்க்கம், தேவதைகளின் உலகம்
என்பார்கள். அங்கு உலகில் அமைதி இருந்தது. இன்றிலிருந்து 5
ஆயிரம் வருடங் களுக்கு முந்தைய விஷயங்கள் வேறு யாருக்கும்
தெரியாது. இது தான் முக்கிய விஷயம் ஆகும். எல்லா ஆத்மாக்களும்
ஒன்று சேர்ந்து உலகில் எப்படி அமைதி நிலவும் என்கிறார்கள்.
எல்லா ஆத்மாக்களும் அழைக்கிறார்கள். நீங்கள் இங்கு உலகத்தில்
அமைதியை நிலை நாட்டுவதற்கான புருஷார்த்தம் செய்து கொண்டு
இருக்கிறீர்கள். யார் உலகத்தில் அமைதியை விரும்புகிறார்களோ
அவர்களிடம் பாரதத்தில் தான் சாந்தி இருந்தது என்று கூறுங்கள்.
பாரதம் சொர்க்கமாக இருக்கும் பொழுது சாந்தி இருந்தது.
இப்பொழுது நரகமாக உள்ளது. நரகத்தில் (கலியுகத்தில்) அசாந்தி
உள்ளது. ஏனெனில் தர்மங்கள் அநேகம் உள்ளன. மாயையின் இராஜ்யம்
உள்ளது. பக்தியினுடைய பகட்டும் உள்ளது. நாளுக்கு நாள் விருத்தி
ஆகிக் கொண்டே போகிறது. மனிதர்கள் கூட திருவிழா, உற்சவங்கள்
ஆகியவற்றிற்கு செல்கிறார்கள். அவசியம் ஏதாவது உண்மை இருக்கும்
என்று நினைக்கிறார்கள். அவற்றால் யாரும் பாவனமாக ஆக முடியாது
என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். பாவனமாவதற்கான
வழியை மனிதர்கள் யாரும் கூறமுடியாது. பதீத பாவனர் ஒரே ஒரு
தந்தை ஆவார். உலகம் ஒன்றே தான் புதியது மற்றும் பழையது என்று
அழைக்கப்படுகிறது அவ்வளவே. புது உலகத்தில் நவ பாரதம் புதிய
டில்லி என்று கூறுகிறார்கள். புதியதாக ஆகப்போகிறது அதில் புது
இராஜ்யம் இருக்கும். இங்கு பழைய உலகத்தில் பழைய இராஜ்யம்
இருக்கும். பழைய உலகம் மற்றும் புதிய உலகம் என்று எதற்கு கூறப்
படுகிறது என்பதையும் நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். பக்தி
எவ்வளவு விரிவடைந்து உள்ளது. இது அஞ்ஞானம் அறியாமை என்று
கூறப்படுகிறது. ஞானக்கடல் ஒரு தந்தை ஆவார். நீங்கள் ராம் ராம்
என்று கூறுங்கள் அல்லது ஏதாவது செய்யுங்கள் என்றெல்லாம்
உங்களுக்கு தந்தை கூறுவதில்லை. உலக சரித்திரம் பூகோளம் எப்படி
திரும்ப நடைபெறுகிறது என்பது குழந்தைகளுக்குப்
புரியவைக்கப்படுகிறது. இந்த கல்வியை நீங்கள் படித்துக்
கொண்டிருக்கிறீர்கள். இதன் பெயரே ஆன்மீகக் கல்வி ஆகும்.
ஸ்பிருச்சுவல் நாலேஜ் - இதன் பொருள் கூட யாருக்கும் தெரியாது.
ஞானக்கடல் என்று ஒரே ஒரு தந்தைக்குத் தான் கூறப்படுகிறது. அவர்
ஸ்பிருச்சுவல் நாலேஜ் ஃபுல் ஃபாதர் ஆவார். தந்தை ஆத்மாக்களிடம்
உரையாடுகிறார். ஆன்மீகத் தந்தை படிப்பிக்கிறார் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். இது ஸ்பிரிச்சுவல்
நாலேஜ் ஆகும். ஆன்மீக ஞானத்திற்கு தான் ஸ்பிரிச்சுவல் நாலேஜ்
என்று கூறப்படுகிறது.
பரமபிதா பரமாத்மா பிந்து ஆவார், அவர் நமக்கு படிப்பிக்கிறார்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆத்மாக்களாகிய
நாம் படித்து கொண்டிருக்கிறோம். இதை மறக்கக்கூடாது.
ஆத்மாக்களாகிய நமக்கு கிடைக்கும் ஞானத்தை பிறகு நாம் மற்ற
ஆத்மாக்களுக்கு அளிக்கிறோம். தங்களை ஆத்மா என்று உணர்ந்து
தந்தையின் நினைவில் இருக்கும் பொழுது இந்த நினைவு நிலைக்கும்.
நினைவில் மிகவும் பக்குவப்படாமல் நிறைய பேர் இருக்கிறார்கள்.
சட்டென்று தேக அபிமானம் வந்துவிடுகிறது தேஹீ (ஆத்ம) அபிமானியாக
இருக்கும் அப்பியாசம் செய்ய வேண்டும். நான் ஆத்மா இவருக்கு ஞான
இரத்தினத்தை விற்கிறேன். நான் ஆத்மா வியாபாரம் செய்கிறேன்.
தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்வதில் தான்
நன்மை உள்ளது. நாம் யாத்திரையில் இருக்கிறோம் என்ற ஞானம்
ஆத்மாவிற்கு உள்ளது. கர்மங்களையோ செய்யவே வேண்டும். குழந்தைகள்
ஆகியோரையும் பராமரிக்க வேண்டும். தொழில் வியாபாரம் ஆகியவையும்
செய்ய வேண்டும். தொழில் ஆகியவை செய்யும் பொழுது நாம் ஆத்மா
என்ற நினைவிலிருப்பது மிகவும் கடினம் ஆகும். எந்த ஒரு தவறான
செயலும் ஒருபொழுதும் செய்யாதீர்கள் என்று தந்தை கூறுகிறார்.
விகாரத்தினுடையது எல்லாவற்றையும் விட பெரிய பாவம் ஆகும். அதுவே
மிகவும் துன்பம் தரக்கூடியது ஆகும். இப்பொழுது குழந்தைகளாகிய
நீங்கள் பாவனமாக ஆவதற்கான உறுதி எடுக்கிறீர்கள். அதனுடையதே
நினைவின் அடையாளம் தான். இந்த இரக்ஷா பந்தனம் ஆகும்.
முன்பெல்லாம் ஒரு பைசாவின் ராக்கி கிடைத்து கொண்டிருந்தது.
பிராமணர்கள் சென்று ராக்கி கட்டுவார்கள். இப்பொழுதெல்லாம்
ராக்கி கூட எவ்வளவு நாகரீகமானதாக (ஃபேஷன்) தயாரிக்கிறார்கள்.
உண்மையில் அது இப்பொழுதைய காலத்தின் விஷயம் ஆகும். நாங்கள்
ஒருபொழுதும் விகாரத்தில் செல்ல மாட்டோம். உங்களிடமிருந்து
உலகத்தின் அதிபதி ஆவதற்கான ஆஸ்தி எடுப்போம் என்று. நீங்கள்
தந்தையிடம் உறுதி அளிக்கிறீர்கள். தந்தை கூறுவார், 63
பிறவிகளாக நீங்கள் விகார கடலில் மூழ்கி இருந்தீர்கள்.
இப்பொழுது உங்களை பாற்கடலுக்கு அழைத்துச் செல்கிறார். கடல்
என்று ஒன்றும் கிடையாது. ஒப்பிடும் பொழுது அவ்வாறு
கூறப்படுகிறது. உங்களை சிவாலயத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு அளவற்ற சுகம் உள்ளது. இப்பொழுது இது கடைசி பிறவி ஆகும்.
ஹே ! ஆத்மாக்களே! பவித்திரமாக ஆகுங்கள். என்ன, தந்தை கூறுவதை
ஏற்க மாட்டீர்களா? இறைவன், உங்களது தந்தை கூறுகிறார், இனிமையான
குழந்தைகளே, விகாரத்தில் செல்லாதீர்கள். ஜென்ம
ஜென்மாந்திரத்தின் பாவங்கள் தலை மீதுள்ளது. அது என்னை (சிவ
பாபாவை)நினைவு செய்தால் தான் சாம்பலாகும். முந்தைய
கல்பத்திலும் உங்களுக்கு அறிவுரை அளித்திருந்தார். பாபா
நாங்கள் உங்களை நினைவு செய்து கொண்டே இருப்போம் என்று.
எப்பொழுது நீங்கள் உத்திரவாதம் அளிக்கிறீர்களோ அப்பொழுது
தந்தையும் உத்தரவாதம் அளிக்கிறார். சரீரத்தின் உணர்வே இல்லாத
அளவிற்கு அந்த அளவு நினைவு செய்து கொண்டே இருங்கள்.
சந்நியாசிகளில் கூட ஒரு சிலர் மிகவும் பக்குவமான கூர்மையான
ஞானிகளாக இருப்பார்கள். அவர்கள் கூட இவ்வாறு உட்கார்ந்த படியே
சரீரத்தை விடுகிறார்கள். இங்கு உங்களுக்கோ தந்தை புரிய
வைக்கிறார், பாவனமாக ஆகிச் செல்ல வேண்டும். அவர்களோ தங்கள்
வழிப் படி நடக்கிறார்கள். அப்படி இன்றி அவர்கள் சரீரம் விட்ட
பிறகு முக்தி, ஜீவன் முக்தியில் செல்கிறார்கள் என்பதல்ல. இல்லை
மீண்டும் இங்கு தான் வருவார்கள். ஆனால் அவர்களது சிஷ்யர்கள்
அவர் நிர்வாணத்திற்குச் சென்று விட்டார்கள் என்று
நினைக்கிறார்கள். ஒருவரும் திரும்பிச் செல்ல முடியாது என்று
தந்தை புரிய வைக்கிறார். அது போல நியமமே இல்லை. விருட்சம்
அவசியம் வளர்ச்சி அடையும்.
இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் அமர்ந்துள்ளீர்கள் மற்றும்
எல்லா மனிதர்களும் கலியுகத்தில்இருக்கிறார்கள். நீங்கள்
தெய்வீக சம்பிரதாயத்தினராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். யார்
உங்களது தர்மத்தினராக இருப்பார்களோ அவர்கள் வந்து கொண்டே
இருப்பார்கள். தேவி தேவதைகளினுடையதும் அங்கு பரம்பரை உள்ளது
அல்லவா? இங்கு இடமாற்றம் ஆகி வேறு தர்மங்களில் மாறிச்
சென்றுள்ளார்கள். மீண்டும் வெளி வருவார்கள். இல்லாவிட்டால்
அந்த இடத்தை யார் நிரப்புவார்கள். அவசியம் தங்களது இடத்தை
நிரப்ப அவர்கள் மீண்டும் வந்து விடுவார்கள். இது மிகவும் ஆழமான
விஷயங்கள் ஆகும். மற்ற தர்மங்களில் மாறிச் சென்றிருக்கும்
மிகவும் நல்ல நல்ல குழந்தைகளும் வருவார்கள். அவர்கள் தங்களது
இடங்களில் வந்து விடுவார்கள். உங்களிடம் முகம்மதியர்கள்
ஆகியோர் கூட வருகிறார்கள் அல்லவா? மிகவும் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும். சட்டென்று சோதனை செய்வார்கள். இங்கு மற்ற
தர்மத்தினர் எப்படி வருகிறார்கள் என்று. எமர்ஜென்சியில்
அநேகரைப் பிடிக்கிறார்கள். பின் பைசா கிடைத்துவிடும் பொழுது
விட்டு விடவும் செய்கிறார்கள். எது முந்தைய கல்பத்தில் ஆகியதோ
அதையே நீங்கள் இப்பொழுது பார்த்து கொண்டிருக் கிறீர்கள்.
முந்தைய கல்பத்திலும் இவ்வாறு ஆகியிருந்தது. நீங்கள் இப்பொழுது
மனிதனிலிருந்து தேவதையாக உத்தம புருஷராக ஆகிறீர்கள். இது
சர்வோத்தம பிராமணர்களின் குலம் ஆகும். இச்சமயம் தந்தை மற்றும்
குழந்தைகள் ஆன்மீக சேவையில் இருக்கிறீர்கள். எந்த ஒரு
ஏழையையும் செல்வந்தராக ஆக்குவது இது ஆன்மீக சேவை ஆகும். தந்தை
நன்மை செய்கிறார் என்றால் குழந்தைகளும் உதவி செய்ய வேண்டும்.
யார் அநேகருக்கு வழி கூறுகிறார்களோஅவர்கள் மிகவும் உயர்ந்தவராக
ஆக முடியும். குழந்தைகளாகிய நீங்கள் புருஷார்த்தம் செய்ய
வேண்டும். ஆனால் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றிய
பொறுப்பு தந்தை மீது உள்ளது.
தீவிர புருஷார்த்தம் செய்விக்கப்படுகிறது. பின் என்ன பலன்
வெளிப்படுகிறதோ முந்தைய கல்பத்தைப் போல என்று
புரிந்துக்கொள்ளப்படுகிறது. தந்தை குழந்தைகளுக்கு கூறுகிறார்:
குழந்தைகளே! கவலைப்படாதீர்கள், சேவையில் உழைப்பைத் தாருங்கள்.
செய்வதில்லை என்றால் என்ன செய்ய முடியும் ! இந்த
குலத்தினுடையவராக இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு தான் தலை
உடைத்துக் கொண்டாலும் முயற்சி செய்தாலும் சரி - ஒரு சிலர்
குறைவாக ஒரு சிலர் அதிகமாக உங்கள் மூளையை குழப்பி விடுவார்கள்.
துக்கம் நிறைய வந்து கொண்டே இருக்கும் பொழுது அவர்கள் தானே
மீண்டும் வருவார்கள் என்று பாபா கூறி இருக்கிறார். உங்களுடையது
எதுவுமே வீணாகிப் போகாது. உங்களது வேலை சரியானதை கூறுவது.
சிவபாபாகூறுகிறார், என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களது
விகர்மம் விநாசம் ஆகும். பகவான் அவசியம் இருக்கிறார் என்று
அநேகர் கூறுகிறார்கள். மகாபாரத போரின் பொழுது பகவான்
இருந்தார். ஆனால் எந்த பகவான் இருந்தார்? அதில் தான் குழப்பம்
அடைந்து விட்டார்கள். கிருஷ்ணரோ இருக்க முடியாது. கிருஷ்ணர்
அதே தோற்றத்தில் மீண்டும் சத்யுகத்தில் தான் இருப்பார்.
ஒவ்வொரு ஜென்மத்திலும் தோற்றங்கள் மாறிக் கொண்டே போகும்,
சிருஷ்டி இப்பொழுது மாறிக் கொண்டிருக்கிறது. பழையதை புதியதாக
இப்பொழுது பகவான் எப்படி ஆக்குகிறார் என்பது கூட யாருக்கும்
தெரியாது கடைசியில் உங்களது பெயர் வெளிப்படும். ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. பிறகு இவர்கள் ஆட்சி புரிவார்கள். விநாசம்
கூட ஆகும். ஒரு புறம் புது உலகம், ஒருபுறம் பழைய உலகம் - இந்த
படம் மிகவும் நன்றாக உள்ளது. பிரம்மா மூலமாக ஸ்தாபனை, சங்கரன்
மூலமாக விநாசம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் எதுவும் புரிந்து
கொள்வதில்லை. திரிமூர்த்தியினுடையது முக்கிய படமாகும்.
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா ஆவார். சிவபாபா பிரம்மா
மூலமாக நமக்கு நினைவு யாத்திரையை கற்பித்துக் கொண்டிருக்கிறார்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாபாவை நினைவு செய்யுங்கள்.
யோகம் என்ற வார்த்தை கஷ்டமானதாகத் தோன்றுகிறது. நினைவு என்ற
வார்த்தை மிகவும் எளிதானது. பாபா என்ற வார்த்தை மிகவும் அழகாக
உள்ளது. எந்த தந்தையிடமிருந்து உலக அரசாட்சி கிடைக்கிறதோ அந்த
தந்தையை ஆத்மாக்களாகிய நாம் நினைவு செய்ய முடியவில்லையா என்று
உங்களுக்கே வெட்கம் ஏற்படும். தானாகவே வெட்கம் ஏற்படும்.
தந்தையும் கூறுவார் : நீங்களோ அறிவற்றவர்களாக இருக்கிறீர்கள்.
தந்தையை நினைவு செய்ய முடியவில்லை என்றால் ஆஸ்தி எப்படி
அடைவீர்கள்? விகர்மங்கள் எப்படி விநாசம் ஆகும். நீங்கள் ஆத்மா
ஆவீர்கள். நான் உங்களது அழிவில்லாத பரமபிதா பரமாத்மா அல்லவா?
நான் பாவனமாகி சுகதாமம் செல்வேன். என்று நீங்கள்
விரும்புகிறீர்கள் என்றால் ஸ்ரீமத்படி நடங்கள். தந்தையாகிய
என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மம் விநாசம் ஆகும்.
நினைவு செய்யவில்லை என்றால் எப்படி விகர்மம் விநாசம் ஆகும்?
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்குஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. எல்லா விதமாகவும் புருஷார்த்தம் செய்ய வேண்டும் என்கின்ற
கவலை கிடையாது, ஏனெனில் நம்முடைய பொறுப்பை சுயம் தந்தை
ஏற்றுள்ளார். நம்முடையது எதுவும் வீணாகிப் போக முடியாது.
2. தந்தைக்குச் சமமாக மிக மிக இனிமையானவர் ஆக வேண்டும்.
அநேகருக்கு நன்மை செய்யவேண்டும். இந்த கடைசி பிறவியில் அவசியம்
தூய்மை ஆக வேண்டும். தொழில் ஆகியவை செய்யும் பொழுதும் கூட நான்
ஆத்மா என்று அப்பியாசம் செய்ய வேண்டும்.
வரதானம்:
ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு
வருமானம் சேமிக்கக் கூடிய அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்தவர்
மற்றும் திருப்தியான ஆத்மா ஆகுக.
எந்த குழந்தைகள் தந்தையின்
நினைவிலிருந்து ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கின்றார்களோ,
அவர்கள் ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு வருமானம் சேமிக்கின்றனர்.
இந்த சங்கமத்தில் தான் பல மடங்கு சேமிப்பதற்கான பொக்கிஷம்
கிடைக்கிறது. சங்கமயுகம் என்றாலே சேமிக்கக் கூடிய யுகமாகும்.
இப்போது எவ்வளவு சேமிக்க விரும்புகின்றீர்களோ அவ்வளவு சேமிக்க
முடியும். ஒரு அடி அதாவது ஒரு விநாடியும் சேமிப்பின்றி இருந்து
விடக் கூடாது. அதாவது வீண் ஆகிவிடக் கூடாது. பொக்கிஷம் சதா
நிறைந்திருக்க வேண்டும். குறை என்பது எதுவும் கிடையாது என்ற
எண்ணம் இருக்க வேண்டும். இப்போது அப்படிப்பட்ட திருப்தி ஆத்மா
மற்றும் சம்பன்ன ஆத்மா ஆகின்ற போது தான் எதிர்காலத்தில் அளவற்ற
பொக்கிஷங்களுக்கு எஜமானர்களாக ஆவீர்கள்.
சுலோகன்:
எந்த ஒரு விசயத்திற்கும் அப்செட்
(மனசோர்வு) ஆவதற்குப் பதிலாக ஞானம் நிறைந்தவர் என்ற சீட்டில்
செட் ஆகுங்கள்.
ஓம்சாந்தி