16.08.2020 காலை முரளி ஓம் சாந்தி
அவ்யக்த பாப்தாதா,
ரிவைஸ் 07.03.1986
மதுபன்
படிப்பின் நான்கு பாடங்களின்
யதார்த்த நினைவுச்சின்னம் - மகா சிவராத்திரி
இன்று ஞானம் கொடுக்கும் வள்ளல்,
பாக்கியவிதாதா, (பாக்கியத்தை உருவாக்குபவர்) சர்வசக்திகளின்
வரதாதா, (வரங்களை அளிப்பவர்) அனைத்து பொக்கிஷங்களையும் நிரப்பக்
கூடிய போலாநாத் (கள்ளம் கபடமற்றவர்) தந்தை தனது மிக அன்பான,
சகயோகி, நெருங்கிய குழந்தைகளை சந்திப்பதற்கு வந்திருக்கின்றார்.
இந்த சந்திப்பானது சதா கால உற்சவம் கொண்டாடுவதற்கான நினைவுச்
சின்னமாக ஆகிவிடுகிறது. வித விதமான பெயர்களுடன் காலத்திற்கு
ஏற்றாற் போல் கொண்டாடப்படும் உற்சவங்கள் அனைத்தும் இந்த
நேரத்தில் தந்தை மற்றும் குழந்தைகளின் இனிய சந்திப்பு, உற்சாகம்
நிறைந்த சந்திப்பு, எதிர்காலத்தில் உற்சவ ரூபமாக ஆகிவிடுகிறது.
இந்த நேரத்தில் சர்வ சிரேஷ்ட குழந்தைகளின் ஒவ்வொரு நாள்,
ஒவ்வொரு நேரம் சதா குஷியுடன் இருக்கக் கூடிய நாட்களாகும் அல்லது
நேரமாகும். எனவே இந்த சிறிய சங்கமயுகத்தின் அலௌகீக வாழ்க்கை,
அலௌகீக பிராப்திகள், அலௌகீக அனுபவங்களை துவாபர யுகத்திலிருந்து
பக்தர்கள் வித விதமான பெயரில் நினைவுச் சின்னங்களாக
ஆக்கிவிட்டார்கள். உங்களது இந்த ஒரு பிறவியின் வாழ்க்கை
பக்தியின் 63 பிறவிகளுக்கு நினைவிற்கான சாதனமாக ஆகிவிடுகிறது.
அந்த அளவிற்கு மகான் ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். இந்த
நேரத்தில் மிகவும் ஆச்சரியமான விசயம் ஒன்றை பார்த்துக்
கொண்டிருக்கின்றார், அதாவது நடைமுறையில் கொண்டாடிக்
கொண்டிருக்கிறீர்கள் மற்றும் அந்த நினைவுச் சின்னத்தையும்
கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். சைத்தன்யமாகவும்
இருக்கிறீர்கள் மற்றும் அந்த சிலையும் கூடவே இருக்கிறது.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரும் என்ன என்ன
பிராப்திகளை அடைந்திருந்தீர்கள்? என்ன ஆகியிருந்தீர்கள்? எப்படி
ஆனீர்கள்? என்ற இந்த 5 ஆயிரம் ஆண்டிற்கான தனது முழு நினைவுச்
சின்னம் மற்றும் ஜாதகத்தை அனைவரும் தெளிவான ரூபத்தில் அறிந்து
கொண்டீர்கள். கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் மற்றும் பார்த்து
பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறீர்கள் - இது நமக்கான
மகிமை, பூஜையாகும், நமது வாழ்க்கைக் கதையை வர்ணித்துக்
கொண்டிருக்கின்றனர். நமது ஒரிஜினல் சிலையை வடிவமைக்க முடியாது.
எனவே பாவனையின் ஆதாரத்தில் எது டச் ஆகிறதோ அதை சிலையாக
வடிவமைத்து விட்டனர். ஆக நடைமுறையில் தினமும் சிவஜெயந்தி
கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஏனெனில் சங்கமயுகம் என்றாலே
அவதார யுகமாகும், சிரேஷ்ட காரியம், சிரேஷ்ட சரித்திரத்திற்கான
யுகமாகும். ஆனால் எல்லையற்ற யுகங்களின் இடையில் இந்த நினைவுச்
சின்னத்தின் நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள்
அனைவரும் கொண்டாடுவது என்பது சந்திப்பு செய்வதாகும், அவர்கள்
கொண்டாடுவது என்பது கடவுளை அழைப்பதாகும். அவர்களுடையது
அழைப்பதாகும், உங்களுடையது அடைவதாகும். வாருங்கள் என்று அவர்கள்
கூறுவார்கள் மற்றும் நீங்கள் வந்து விட்டார், அடைந்து விட்டோம்
என்று கூறுவீர்கள். நினைவுச் சின்னத்திற்கும் நடை முறைக்கும்
இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. உண்மையில் இந்த நாள்
போலாநாத் (கள்ளங் கபடமற்ற) தந்தையின் நாளாகும். போலாநாத்
என்றால் கணக்கின்றி, அளவின்றி கொடுக்கக் கூடியவர். பொதுவாக்
எவ்வளவு அவ்வளவு என்ற கணக்கு இருக்கும், யார் செய்வார்களோ
அவர்கள் அடைவார்கள், அவ்வளவு தான் அடைவார்கள். இந்த கணக்கு
இருக்கிறது. ஆனால் போலாநாத் என்ன கூறுகின்றார்? ஏனெனில் இந்த
நேரத்தில் கொடுப்பதில் எவ்வளவு, அவ்வளவு என்ற கணக்கு வைப்பது
கிடையாது. ஒன்றுக்கு பல மடங்கு கணக்கு இருக்கிறது. ஆக
அளவற்றதாக ஆகிவிடுகிறது அல்லவா! ஒன்று எங்கு இருக்கிறது, பல
மடங்கு எங்கு இருக்கிறது! பல மடங்கு என்பது கடைசி
வார்த்தையாகும். அதனால் தான் பல மடங்கு என்று கூறுகின்றார்.
அளவிட முடியாத அளவிற்கு கொடுப்பவர் போலநாத்தின் நாளை நினைவுச்
சின்னமாக கொண்டாடுகின்றனர். உங்களுக்கு அந்த அளவிற்கு
கிடைக்கிறது, அதாவது இப்போதும் நிறைந்திருக்கிறீர்கள், மேலும்
21 பிறவிகள், 21 வம்சத்தினர்களும் நிறைந்து இருப்பீர்கள்.
இவ்வளவு பிறவிகளுக்கு வேறு யாரும் உத்திரவாதம் கொடுக்க
முடியாது. ஒருவர் எவ்வளவு தான் மிகப் பெரிய வள்ளலாக
இருந்தாலும் பல பிறவிகளுக்கு நிறைந்த களஞ்சியத்திற்கான
உத்திரவாதம் யாரும் கொடுக்க முடியாது. ஆக போலாநாத்
ஆகிவிடுகின்றார் அல்லவா! ஞானம் நிறைந்தவராக இருந்தாலும் கூட
போலாநாத் ஆகின்றார் .. அதனால் தான் போலாநாத் என்று
கூறப்படுகின்றார். கணக்கு பார்க்க வேண்டுமெனில் ஒவ்வொரு
சங்கல்பத்திற்கான கணக்கையும் அறிந்து கொள்ள முடியும். ஆனால்
அறிந்திருந்தாலும் கொடுப்பதில் போலாநாத் ஆகிவிடுகின்றார். ஆக
நீங்கள் அனைவரும் போலாநாத் தந்தையின் போலாநாத் குழந்தைகள்
அல்லவா! ஒருபுறம் போலாநாத் என்றும் கூறுகின்றோம், மற்றொருபுறம்
நிறைந்த களஞ்சியம் உடையவர்கள் என்று கூறுகின்றோம். நினைவுச்
சின்னத்தையும் பாருங்கள் எவ்வளவு நன்றாக கொண்டாடுகின்றனர்.
கொண்டாடுபவர்களுக்கு தெரியாது, ஆனால் நீங்கள் அறிவீர்கள். இந்த
சங்கமயுக படிப்பின் முக்கிய பாடங்கள் நான்கு, இந்த நான்கு
பாடங்களும் நினைவுச் சின்னத்திற்கான நாளில் கொண்டாடி
வருகின்றனர். எப்படி? முன்பும் கூறியிருந்தேன் - இந்த உற்சவ
தினத்தில் பிந்து மற்றும் பூந்த் (துளி) மகத்துவம் இருக்கும்.
பிந்து என்றால் இந்த நேரத்திற்கான நினைவு அதானது யோகா
பாடத்தின் அடையாளமாகும். நினைவின் பொழுத பிந்து ஸ்திதியில்
தான் நிலைத்திருக்கிறீர்கள் அல்லவா! ஆக பிந்து என்பது நினைவின்
அடையாளமாகும். மேலும் பூந்த் (துளி) என்றால் ஞானத்தின் வித
விதமான துளிகளாகும். இது ஞான பாடத்தின் அடையாளமாக பூந்த்
காண்பித்திருக்கின்றனர். தாரணையின் அடையாளமாக இதே நாளில் விசேஷ
விரதம் இருப்பர். ஆக விரதத்தை தாரணை செய்கின்றனர். தாரணையிலும்
நீங்கள் திட சங்கல்பம் செய்கிறீர்கள். பொறுமையாக அல்லது
அந்தர்முகியாக அவசியம் இருந்து காண்பிப்பேன் என்று விரதம்
கடைபிடிக்கிறீர்கள். ஆக இவ்வாறு விரதம் கடைபிடிக்கிறீர்கள்
அல்லவா! இந்த விரதம் தாரணையின் அடையாளமாகும். மேலும் சேவையின்
அடையாளம் விழித்திருப்பதாகும். சேவை செய்வதே யாரையாவது
விழிப்படையச் செய்வதற்காக! அஞ்ஞான நித்திரையிலிருந்து
விழிப்படையச் செய்வது, முழிப்படைய வைப்பது - இது உங்களது
சேவையாகும். ஆக இவ்வாறு விழித்திருப்பது சேவையின்
அடையாளமாகும். ஆக நான்கு பாடங்களும் வந்து விட்டது அல்லவா!
ஆனால் அவர்கள் ரூபத்தை ஸ்தூல ரூபமாக மாற்றி விட்டனர்.
இருப்பினும் பக்தர்கள் பாவனையுடையவர்களாக இருப்பார்கள். மேலும்
சத்திய பக்தனின் அடையாளம் இதுவாகத் தான் இருக்கும் அதாவது என்ன
சங்கல்பம் செய்வார்களோ அதில் திடமாக இருப்பார்கள். அதனால் தான்
பக்தர்களின் மீதும் தந்தைக்கு அன்பு இருக்கிறது. இருப்பினும்
உங்களது நினைவுச் சின்னம் துவாபர யுகத்திலிருந்து பரம்பரையாக
நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த நாளை விசேஷமாக
எப்படி நீங்கள் இந்த சங்கமயுகத்தில் அடிக்கடி சமர்பண விழா
கொண்டாடுகிறீர்களோ, தனித்தனியாகவும் கொண்டாடுகிறீர்கள். அதே
போன்று உங்களது இந்த நிகழ்ச்சி யையும் நினைவுச் சின்னமாக
அவர்கள் தன்னை அர்ப்பணிப்பது கிடையாது, ஆனால் ஆடு பலி
கொடுக்கின்றனர். பாப்தாதாவும் சிரிப்பாக கூறுகின்றார் - இந்த
நான் நான் (மே மே) என்பதை பலி கொடுத்து சம்பூர்னம் அதாவது
சமர்பணம் ஆகுங்கள். பிரம்மா பாபா முதல் அடியாக எது எடுத்து
வைத்தார்? நான் மற்றும் எனது என்ற சமர்பண விழா என்றால் எந்த
ஒரு விசயத்திற்கும் நான் என்பதற்குப் பதிலாக சதா இயற்கையாக,
சாதாரணமாக பேசும் போதும் பாபா என்ற வார்த்தை தான்
கேட்டிருக்கிறோம். நான் என்ற வார்த்தை அல்ல.
பாபா செய்வித்துக் கொண்டிருக்கின்றார், நான் செய்து
கொண்டிருக்கின்றேன், அல்ல. பாபா நடத்திக் கொண்டிருக்கின்றார்,
நான் கூறுகின்றேன் என்று கூறவில்லை. பாபா கூறுகின்றார்.
எல்லைக்குட்பட்ட எந்த மனிதன் அல்லது பொருளின் மீது பற்றுதல் -
இது தான் எனது என்பதாகும். ஆக எனது மற்றும் நான் என்பதை
சம்பர்ணம் செய்வது - இதைத் தான் பலி கொடுப்பது என்று
கூறப்படுகிறது. பலி கொடுப்பது என்றால் மகாபலி ஆவதாகும். ஆக இது
சம்பர்ணம் ஆவதன் அடையாளமாகும்.
பாப்தாதா பக்தர்களுக்கு ஒரு விசயத்தில் பெருமைப்படுகின்றார் -
ஏதாவது ரூபத்தில் பாரதத்தில் அல்லது ஒவ்வொரு நாட்டில்
உற்சாகத்தின் அலைகளை பரப்புவதற்காக உற்சவம் கொண்டாடுவது நல்லது
அல்லவா! இரண்டு நாட்களாக இருந்தாலும் அல்லது ஒரு நாளாக
இருந்தாலும் உற்சாகத்தின் அலை பரவி விடுகிறது அல்லவா! அதனால்
தான் உற்சவம் என்று கூறப்படுகிறது. அல்ப காலத்திற்கு விசேஷ
ருபத்தில் தந்தையின் பக்கம் அதிகபட்சம் கவனம் செல்கிறது
அல்லவா! ஆக இந்த விசேஷ நாளில் விசேஷமாக என்ன செய்வீர்கள்?
பக்தியில் சிலர் சதா காலத்திற்கு விரதம் இருக்கின்றனர், ஒரு
மாதம் இருப்பதற்கு சிலர் தைரியமற்று இருப்பர், ஒரு நாள் அல்லது
சில மணி நேரத்திற்கு விரதம் இருக்கின்றனர். பிறகு அந்த
விரதத்தை நிறுத்தி விடுகின்றனர். நீங்கள் இவ்வாறு செய்வது
கிடையாது தானே! மதுவனத்தில் பூமியின் மீது கால்கள் கிடையாது,
பிறகு அயல்நாட்டிற்கு சென்ற பிறகு பூமிக்கு வந்து விடுவீர்களா
அல்லது மேலேயே இருப்பீர்களா? சதா மேலிருந்து கீழே வந்து
காரியங்கள் செய்வீர்களா? அல்லது கீழேயே இருந்து கொண்டு காரியம்
செய்வீர்களா? மேலே இருப்பது என்றால் மேலான (உயர்ந்த)
ஸ்திதியில் இருப்பதாகும். மேலே என்றால் மாடிக்கு செல்ல
வேண்டும் என்பது கிடையாது. உயர்ந்த ஸ்திதியில் நிலைத்திருந்து
எந்த சாதாரண காரியம் செய்வது என்றால் கீழே வருவதாகும். ஆனால்
சாதாரண காரியம் செய்தாலும் ஸ்திதி மேலே அதாவது உயர்ந்ததாக
இருக்க வேண்டும். தந்தையும் சாதாரண சரீரத்தை எடுக்கின்றார்
அல்லவா! காரியங்கள் சாதாரணமாகத் தான் செய்வீர்கள் அல்லவா!
நீங்கள் எப்படி பேசுகிறீர்களோ அப்படித் தான் பேசுவார்.
அப்படித் தான் நடப்பார். ஆக காரியங்கள் சாதாரணமாக இருக்கிறது,
உடலும் சாதாரணமாக இருக்கிறது, ஆனால் சாதாரண காரியங்கள்
செய்தாலும் ஸ்திதி உயர்ந்ததாக இருக்கிறது. இவ்வாறு உங்களது
ஸ்திதி சதா உயர்வாக இருக்க வேண்டும். இந்த நாளை அவதார நாள்
என்று கூறுவது போன்று அமிர்தவேளையில் தூக்கத்திலிருந்து அல்ல,
சாந்திதாமத்திலிருந்து காரியம் செய்வதற்காக அவதாரம்
எடுத்திருக்கின்றேன் என்று நினையுங்கள். மேலும் இரவு
காரியங்கள் செய்து முடித்து விட்டு சாந்திதாமத்திற்கு சென்று
விடுங்கள். ஆக சிரேஷ்ட காரியங்கள் செய்வதற்காகத் தான்
அவதாரங்கள் அவதாரம் எடுப்பர். அதை பிறப்பு என்று கூறுவது
கிடையாது, அவதாரம் என்று கூறுவர். உயர்ந்த ஸ்திதியிலிருந்து
கொண்டு கீழே வருவர் - இது தான் அவதாரம் ஆகும். ஆக இப்படிப்பட்ட
ஸ்திதியில் இருந்து காரியங்கள் செய்வதன் மூலம் சாதாரண
காரியங்களும் அலௌகீக காரியமாக மாறிவிடும். மற்றவர்களும் உணவு
சாப்பிடுகின்றனர், பிரம்மா போஜனம் சாப்பிடுகின்றோம் என்று
நீங்கள் கூறுகின்றீர்கள். வித்தியாசம் இருக்கிறது அல்லவா!
நடக்கிறீர்கள், ஆனால் நீங்கள் பரிஸ்தாக்களைப் போன்று
நடக்கிறீர்கள், டபுள லைட் ஸ்திதியில் இருந்து நடக்கிறீர்கள்.
ஆக அலௌகீக நடத்தை, அலௌகீக காரியமாக ஆகிவிடுகிறது. எனவே இன்றைய
நாள் மட்டும் அவதார நாள் கிடையாது, சங்கமயுகமே அவதார நாளாகும்.
இன்றைய நாள் நீங்கள்
பாப்தாதாவிற்கு வாழ்த்துக்கள் கொடுக்கிறீர்கள். ஆனால் பாப்தாதா
கூறுகின்றார் முதலில் நீங்கள். ஒருவேளை குழந்தைகள் இல்லையெனில்
தந்தை என்று யார் கூறுவர்? குழந்தைகள் கேட்டால் ஆம் இறந்து
கொண்டிருக்கின்றாய் என்ற ஒருபோதும் கூறமாட்டார். ஏனெனில் அந்த
நேரத்தில் தைரியம் இருக்காது. ஒருவரது உள்ளம் பலவீனாக
இருக்கிறது எனில் நீங்கள் அவரிடம் ஏதாவது விசயம் கூறிவிட்டால்
அவரது இருதயம் நின்று விடும், அதாவது முயற்சியில் மாற்றம்
கொண்டு வருவதற்கான சக்தி வராது. ஆக சங்கமயுகம் என்றால்
வாழ்த்துக்களின் மூலம் விருக்தியடையக் கூடிய யுகமாகும். இந்த
வாழ்த்துக்கள் தான் சிரேஷ்ட பாலனையாகும். ஆகையால் உங்களது இந்த
வாழ்த்துக்களின் பாலனையின் நினைவுச் சின்னம் எப்போதெல்லாம்
ஏதாவது தேவி தேவதையின் நாள் கொண்டாடுகிறார்களோ அதை பெரிய (உயர்ந்த)
நாள் என்று கூறிவிடுகின்றனர். தீபாவளியாக இருக்கட்டும்,
சிவராத்திரியாக இருக்கட்டும், இன்ற பெரிய (உயர்ந்த) நாள் என்று
கூறுவர். எந்த உற்சவமாக இருந்தாலும், பெரிய நாள் என்று கூறுவர்.
ஏனெனில் உங்களது உள்ளம் பரந்த உள்ளமாக இருக்கிறது, ஆகையால்
அவர்கள் பெரிய நாள் என்று கூறிவிட்டனர். ஆக ஒருவருக்கொருவர்
வாழ்த்துக்கள் கொடுப்பது - இது பெரிய உள்ளமாகும். புரிந்ததா,
தவறானவர்களுக்கு தவறு புரிய வைக்கக் கூடாது என்று கிடையாது.
ஆனால் சிறிது தைரியம் வையுங்கள், சைகை காண்பிக்க வேண்டும்.
ஆனால் நேரம் காலம் பார்க்க வேண்டும் அல்லவா! ஒருவர் இறந்து
கொண்டிருக்கின்றார், நீங்கள் கூறுகிறீர்கள் - இறந்து விடு,
இறந்து விடு.. ஆக நேரம் காலம் பார்க்க வேண்டும், அவரது
தைரியத்தை பாருங்கள். மிகவும் நன்று, மிகவும் நன்று என்று
கூறுவதன் மூலம் அவரிடத்தில் தைரியம் வந்து விடுகிறது. ஆனால்
மனதார கூற வேண்டும், உதட்டளவில் கூறக் கூடாது, இல்லையெனில்
வாயளவில் கூறுவதாக அவரும் புரிந்து கொள்வார். இது பாவனைக்கான
விசயமாகும். உள்ளத்தின் உணர்வுகளில் கருணையிருக்கும் போது அவரது
உள்ளத்தில் கருணை உணர்வு ஏற்படும். ஆகையால் சதா வாழ்த்துக்களை
கொடுத்துக் கொண்டே இருங்கள். வாழ்த்துக்கள் அடைந்து கொண்டே
இருங்கள். இந்த வாழ்த்துக்கள் வரதானமாகும். இன்றைய நாளை -
சிவனின் களஞ்சியம் நிறைந்திருக்கிறது என்று மகிமை பாடுகின்றனர்.
ஆக தந்தையின் மகிமை மட்:டும் கிடையாது, உங்களது மகிமையும் ஆகும்.
சதா களஞ்சியம் நிறைந்திருக்க வேண்டும். வள்ளலின் குழந்தைகள்
வள்ளலாக ஆகிவிடுங்கள். பக்தர்கள் பெறுபவர்கள் நீங்கள் கொடுக்கக்
கூடிய தேவதைகள், ஆக வள்ளல் என்றால் கொடுக்கக் கூடியவர்கள்.
ஒருவருக்கு ஏதாவது கொடுத்து விட்டு பிறகு நீங்கள் அவரிடமிருந்து
ஏதாவது எடுத்துக் கொண்டால் அவருக்கு பீலிங்க் வராது. பிறகு அவரை
எப்படி வேண்டுமென்றாலும் ஆக்கி விட முடியும். ஆனால் முதலில்
அவருக்கு கொடுக்க வேண்டும். தைரியம் கொடுங்கள், ஆர்வம்
கொடுங்கள், குஷி கொடுங்கள், பிறகு அவரை எப்படி மாற்ற
விரும்புகிறீர்களோ மாற்றி விட முடியும். தினமும் உற்சவம்
கொண்டாடிக் கொண்டே இருங்கள். தினமுத் தந்தையுடன் சந்திப்பு
கொண்டாடுவது - இது தான் உற்சவம் கொண்டாடுவதாகும். ஆக தினமும்
உற்சவமாகும். நல்லது.
நாலாபுறங்களிலும் உள்ள
குழந்தைகளுக்கு, சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் அவதரித்துள்ள
நாளுக்கான அழிவற்ற வாழ்த்துக்கள் உரித்தாகுக. சதா பாப்சமான்
வள்ளல் மற்றும் வரதாதா ஆகி ஒவ்வொரு ஆத்மாவையும் நிறைக்கக்
கூடிய மாஸ்டர் போலாநாத் குழந்தைகளுக்கு சதா நினைவிலிருந்து
ஒவ்வொரு காரியத்தையும் நினைவுச் சின்னமாக ஆக்கக் கூடிய
குழந்தைகளுக்கு, சதா சுய முன்னேற்றம் மற்றும் சேவையில்
முன்னேற்றத்தில் ஆர்வம், உற்சாகத்துடன் முன்னேறக் கூடிய
சிரேஷ்ட குழந்தைகளுக்கு, விசேஷமாக இன்றைய நினைவுச் சின்ன
நாளாகிய சிவஜெயந்தி மற்றும் பிராமண ஜெயந்தி - வைரத்திற்கு
சமமான ஜெயந்தி, சதா அனைவரையும் சுகமானவர்களாக ஆக்கக் கூடிய,
சம்பன்னம் ஆக்கக் கூடிய ஜெயந்தியின் வாழ்த்துக்கள் மற்றும்
அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
வரதானம்:
ஒவ்வொரு சக்தியையும் கட்டளைப்படி
நடத்தக் கூடிய மாஸ்டர் படைப்பவர் ஆகுக.
காரியம் ஆரம்பிக்கும் முன்
காரியத்திற்குத் தகுந்தாற் போன்று சக்திகளை ஆவாஹனம் செய்யுங்கள்.
எஜமானர்களாகி கட்டளையிடுங்கள். ஏனெனில் இந்த சர்வசக்திகள்
உங்களது புஜங்கள் போன்றது. உங்களது புஜங்கள் உங்களது
கட்டளையின்றி ஒன்றும் செய்ய முடியாது. பொறுமை சக்தியே,
காரியத்தை வெற்றியாக்கு என்று கட்டளையிடுங்கள். பிறகு பாருங்கள்,
வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் கட்டளையிடுவதற்குப் பதிலாக
பயப்படுகிறீர்கள் - செய்ய முடியுமான? முடியாதா? இந்த மாதிரியான
பயம் இருந்தால் கட்டளையிட முடியாது. ஆகையால் மாஸ்டர்
படைப்பவராகி ஒவ்வொரு சக்தியையும் கட்டளைப்படி நடத்துவதற்கு
பயமற்றவர்களாக ஆகுங்கள்.
சுலோகன்:
உதவி செய்யும் வள்ளலாகிய தந்தையை
வெளிப்படுத்தி அனைவரையும் அக்கரைக்கு கொண்டு செல்லுங்கள்.
ஓம்சாந்தி