23.08.2020 காலை முரளி ஓம் சாந்தி
அவ்யக்த
முரளி
ரிவைஸ்
10.03.1986
மதுபன்
கவலையற்ற மகாராஜா ஆவதற்கான
யுக்தி (வழிமுறை)
இன்று பாப்தாதா கவலையற்ற
மகாராஜாக்களின் சபையை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த
இராஜ்ய சபை முழு கல்பத்திலும் விசித்திர(வித்தியாசமான) சபையாக
இருக்கிறது. இராஜாக்கள் என்றாலே பலர் இருக்கிறார்கள். ஆனால்
கவலையற்ற இராஜாக்கள், இந்த விசித்திரமான சபை (சட்ட சபை) இந்த
சங்கமயுகத்தில் மட்டும் தான் நடைபெறும். இந்த கவலையற்ற
இராஜாக்களின் சபையானது, சத்யுகத்தின் இராஜ்ய சபையை விடவும்
உயர்வானது. ஏனெனில் அங்கு ஏழ்மை (கவலை) மற்றும் செல்வந்தன் (குஷி)
- இந்த இரண்டிற்குமுள்ள வேறுபடுத்தும் ஞானம் வெளிபடாது. ஏழ்மை
(கவலை) என்ற தெரியவே தெரியாது. ஆனால் இப்பொழுது முழு உலகமும்
ஏதாவதொரு கவலையில் (ஏழ்மையில்) இருக்கிறார்கள் - காலை
எழுவதிலிருந்து தன்னைப்பற்றி, குடும்பத்தைப் பற்றி,
காரியங்களைப் பற்றி, உற்றார் உறவினர்களைப் பற்றி ஏதாவதொரு கவலை
ஏற்படுகிறது, ஆனால் நீங்கள் அனைவரும் அமிர்தவேளையிலிருந்து
கவலையற்ற மகாராஜாவாக இருந்து, அன்றைய நாளை ஆரம்பிக்கிறீர்கள்,
மற்றும் கவலையற்றவர் ஆகி ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறீர்கள்.
கவலையற்ற இராஜாவாகி ஒய்வாக உறக்கத்தை உறங்குகிறீர்கள்.
சுகத்தின் உறக்கத்தில் அமைதியான உறக்கத்தில் உறங்குகிறீர்கள்.
அப்படிப் பட்ட கவலையற்ற மகாராஜாவாக ஆகிவிட்டீர்கள். அப்படி
ஆகிவிட்டீர்களா அல்லது ஏதாவது கவலை இருக்கிறதா? பாபாவின் மீது
பொறுப்பை (சுமை) கொடுத்து விட்டால், கவலையற்றவர் ஆகிவிடலாம்.
தன் மீது தான் பொறுப்பு இருக்கிறது என்று புரிந்துக் கொண்டால்
கவலை ஏற்படுகிறது. பொறுப்பு பாபாவினுடையது மேலும் நான்
நிமித்தமான சேவாதாரியாக இருக்கிறேன். நான் நிமித்தமான கர்மயோகி.
செய்யவைக்கக் கூடியவர் பாபா, நான் நிமித்தமாக இருந்து
செய்கிறேன். ஒருவேளை, ஒவ்வொரு நேரமும் இந்த நினைவு தானாகவே
இருக்கிற தென்றால் எப்பொழுதுமே கவலையற்ற மகாராஜாவாக இருக்கலாம்.
ஒருவேளை தவறுதலாக (மறந்தும்) கூட ஏதாவது தேவையற்ற உணர்ச்சிகளை
தனது மீது சுமையை எடுத்துக் கொண்டால் கீரிடத்திற்கு பதிலாக கவலை
யின் பலவிதமான கூடைகள் தலை மீது வந்துவிடுகிறது. இல்லையென்றால்
சதா லயிட்டின் (லேசான, ஒளியான) கீரிடத்தை அணிந்து கவலையற்ற
இராஜாவாக இருக்கிறீர்கள். நான் மற்றும் பாபா அவ்வளவு தான்,
மூன்றாவதாக வேறுயாரும் இல்லை. இந்த அனுபவம் தான் எளிதாகவே
கவலையற்ற மகாராஜாவாக மாற்றுகிறது. எனவே கீரிடதாரியா அல்லது
கூடையை சுமக்க கூடியவரா? கூடையை சுமப்பது மேலும் கீரிடத்தை
அணிந்துக் கொள்வது - இதில் எந்தளவு வித்தியாசம் இருக்கிறது.
கீரிடம் அணிந்த ஒருவரையும், மேலும் சுமையை சுமக்கக் கூடியவரை,
கூடையை சுமக்கக்கூடியவரையும் முன்னால் நிறுத்தினீர்கள் என்றால்
யாரை நீங்கள் விரும்புவீர்கள் ! கீரிடத்தையா அல்லது பொதி
சுமப்பவரையா? பல பிறவிகளின் பலவிதமான சுமைகள் என்ற கூடைகளை பாபா
வந்து கீழே இறக்கி வைத்து இலேசாக ஆக்குகிறார். ஆகையால்
கவலையற்ற இராஜா என்றாலே சதா டபுள் லயிட்டாக இருக்கக் கூடியரை,
எதுவரை இராஜ்வ்ய அதிகாரி ஆகவில்லையோ, அதுவரை இந்த
கர்மேந்திரியங்கள் கூட தனது கட்டுபாட்டில் இருக்க முடியாது.
இராஜ்ய அதிகாரியாக மாறினால் தான் மாயாஜீத், கர்மேந்திரியங்கள்
மீது வெற்றி பெற்றவர், இயற்கையை வென்றவராக ஆகிறீர்கள். எனவே
இராஜ்ய சபையில் அமர்ந்திருக்கிறீர்கள் அல்லவா ! நல்லது.
இன்று யூரோப்பின் (ஐரோப்பியர்கள்) டர்ன் (முறை). ஐரோப்பா நல்ல
முறையில் விரிவடைந்துள்ளது. ஐரோப்பியர்கள் தனது அண்டை
நாட்டிற்கு நன்மை செய்வதற்கான திட்டத்தை நன்றாக
உருவாக்கியிருக்கிறீர்கள். எவ்வாறு பாபா சதா நன்மை செய்பவராக
இருக்கிறார், அவ்வாறே குழந்தைகள் நீங்களும் கூட பாபாவிற்குச்
சமமாக நன்மை செய்வதற்கான பாவணை (உணர்வு) வைக்க வேண்டும்.
இப்பொழுது எவரை பார்த்தாலும், இவர் கூட பாபாவின் குழந்தை
ஆகவேண்டும் என்ற கருணை (இரக்கம்) வருகிறதல்லவா! பாப்தாதா
ஸ்தாபனை யின் சமயத்திலிருந்தே அயல் நாட்டிலுள்ள அனைத்து
குழந்தைகளையும் ஏதாவதொரு முறையில் நினைவு செய்துக்
கொண்டிருக்கிறார், பாருங்கள் (சிந்தியுங்கள்) ! மேலும்
பாப்தாதாவின் நினைவினால் நேரம் வரும்பொழுது நாலா பக்கத்திலுள்ள
குழந்தைகள் வந்து சேர்ந்து விட்டனர். ஆனால் பாப்தாதா
வெகுகாலமாகவே அழைத்து கொண்டிருக்கிறார். அழைப்பின்
காரணத்தினால் தான் நீங்கள் கூட காந்தத்தை போன்று
கவர்ந்திழுக்கப்பட்டு வந்து சேர்ந்து விட்டீர்கள். நாம் எப்படி
பாபாவினுடையவராக ஆனோம் என்பதே தெரியவில்லையே என்று
தோன்றுகிறதல்லவா ! பாபாவினுடையவராக ஆனது நன்றாக தான்
இருக்கிறது அல்லவா ! ஆனால் என்ன ஆனோம், எப்படி மாறினோம், இதை
அமர்ந்து யோசித்து பார்த்தீர்கள் என்றால், எங்கிருந்து, எங்கு
வந்து சேர்ந்துவிட்டோம் என்று யோசிக்கும் பொழுது விசித்திரமாக
தோன்றுகிறதல்லவா ! நாடகத்தில் ஏற்கனவே
நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயிக்கப்பட்ட நாடகத்தில்
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மூலையிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரே
குடும்பமாக வந்து சேர்ந்துவிட்டோம். இப்பொழுது இந்த குடும்பம்
தனது குடும்பமாக தோன்றும் காரணத்தினால் மிகவும் அன்பானதாக
தோன்றுகிறது. தந்தை அன்பிலும் அன்பானவராக இருப்பதால் நீங்கள்
அனைவரும் கூட அன்பானவர் ஆகிவிட்டீர்கள். நீங்களும் கூட
குறைந்தவர்கள் அல்ல. நீங்கள் அனைவரும் கூட பாப்தாதாவின்
தொடர்பின் வண்ணத்தில் (சங் கா ரங்) மிகவும் அன்பானவராக
ஆகிவிட்டீர்கள். யாரை வேண்டுமானாலும் பாருங்கள், எனவே
ஒவ்வொருவரும், ஒருவர் மற்றவரையும் நேசிக்கிறீர்கள். ஒவ்வொரு
வரின் முகத்திலும் ஆன்மீகத் தன்மையின் தாக்கம் தென்படுகிறது.
ஒப்பனை (மேக்கப்) செய்ய வெளிநாட்டினர் விரும்புகின்றனர். எனவே
ஃபரிஸ்தாக்களை உருவாக்குவதற்கான இடம் இது தான். அந்தமாதிரி
இந்த ஒப்பனை தேவதையாக மாற்றிவிடுகிறது. எப்படி ஒப்பனை
(மேக்கப்) செய்த பிறகு யார் எப்படியிருந்தாலும் கூட (அழகாக)
மாறிவிடுகிறார்கள். மேக்கப் மூலம் மிகவும் அழகாக தோன்றுகிறது.
அதனால் இங்கும் கூட அனைவரும் ஜொலித்துக் கொண்டிருக்கும்
ஃபரிஸ்தாவாக தோன்றுகிறது. ஏனெனில் ஆன்மீக மேகப்
செய்துள்ளீர்கள். அந்த (உலகிய) ஒப்பனையிலோ நஷ்டம் ஏற்படுகிறது.
ஆனால் இதில் எந்த நஷ்டமும் இல்லை. எனவே அனைவரும் ஜொலித்துக்
கொண்டிருக்கக் கூடிய அனைவருக்கும் அன்பான ஆத்மாக்களாக
இருக்கிறீர்கள் அல்லவா! அதனால் இங்கு அன்பை தவிர வேறு
ஒன்றுமில்லை. எழுந்திருக்கிறீர்கள் என்றால் கூட அன்போடு காலை
வணக்கம் செய்கிறீர்கள். உண்ணும் பொழுது கூட அன்போடு பிரம்மா
போஜன் உண்ணுகிறீர்கள். நடக்கிறீர்கள் என்றால் கூட அன்போடு
பாபாவுடன், கையோடு கை கோர்த்துக் கொண்டு நடக்கிறீர்கள்.
வெளிநாட்டினர் கைகோர்த்துக் கொண்டு நடக்க விரும்புகிறார்கள்,
அல்லவா ! அதனால் பாப்தாதா கூட சதா பாபாவுடன் கைகோர்த்து கொண்டு
நடங்கள் என்று சொல்கிறார். தனியாக செல்லாதீர்கள். தனியாகவே
இருந்தீர்கள் என்றால் சில நேரம் சலித்துக் (சலிப்பு)
கொள்வீர்கள் சில நேரங்களில் மற்றவர்களின் (மாயாவின்)
பார்வையிலும் வருவீர்கள். பாபாவுடன் சென்றீர்கள் என்றால்,
ஒன்று - ஒருபொழுதும் மாயாவின் பார்வை படாது. மேலும் கூடவே
இருக்கும் காரணத் தினால் எப்பொழுதுமே குஷி - குஷியாக
ஆனந்தத்துடன் சாப்பிட்டு கொண்டும், காரியங்கள் செய்துக்
கொண்டும் மகிழ்ந்திருப்பீர்கள். ஆகையால் அனைவருக்கும் துணையை
(பாபாவை) பிடித்திருக்கிறது அல்லவா ! அல்லது வேறு யாராவது
வேண்டுமா ! வேறு எந்த நண்பர்களுடைய அவசியமில்லை அல்லவா !
அவ்வப்பொழுது உங்களை மகிழ்விக்க வேறு யாராவது வேண்டுமா?
ஏமாற்றம் தரும் உறவுகளிலிருந்தும் விடுபட்டு விட்டீர்கள்.
அதில் ஏமாற்றமும் இருக்கிறது, துக்கமும் கூட இருக்கிறது.
இப்பொழுது ஏமாற்றமும் துக்கமும் இல்லாத தொடர்பில்
வந்துவிட்டீர்கள். தப்பித்து கொண்டீர்கள். சதா காலத்திற்கு
பாதுகாப்பாக இருக்கிறீர்கள். அப்படி உறுதியாக இருக்கிறீர்களா -
சில குழந்தைகள் உறுதியற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அங்கு
(நம்முடைய இருப்பிடம்) சென்று என்ன செய்வது, எப்படி செய்வது,
மாயை வந்துவிட்டது என்று கடிதம் எழுதுகிறார்கள், அவ்வாறு அல்ல.
ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் விசேஷமாக என்ன அதிசயம் செய்கிறீர்கள்?
ஒவ்வொரு வருடமும் தந்தையின் முன் ஒரு மலர்கொத்தைக் கொண்டு
வருவதன் மூலம், பாபாவின் வார்த்தைகளை நடைமுறையில் கொண்டு
வருவதில் அனைவரும் நல்ல கவனம் வைக்கிறீர்கள் என்பதை பாப்தாதா
பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் புதியதாக
காணாமல் போய் கண்டுடெடுக்கப்பட்ட பாபாவின் குழந்தைகள் தனது
வீட்டிற்கு (மதுபன்), தனது குடும்பத்தில் வந்தடைகிறார்கள் என்ற
ஊக்கம் எப்பொழுதுமே இருந்து கொண்டி ருக்கிறது, மேலும்
இப்பொழுது கூட இருக்கிறது. ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் இந்த
இலட்சியத்தை வைத்து நன்றாக வளர்ச்சியடைய செய்கிறார்கள் என்பதை
பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே பாபவின் மகா
வாக்கியங்களை, கட்டளையை பின்பற்றக் கூடியவர்களை கட்டளைக்கு
கீழ்படிந்தவர் என்று கூறபடுகிறது. மேலும் யார் கட்டளைக்கு
கீழ்படிந்த குழந்தைகளாக இருக்கிறார்களோ, அவர்கள் மீது விசேஷமாக
பாபாவின் ஆசீர்வாதம் எப்பொழுதுமே இருக்கிறது. கட்டளைக்கு
கீழ்படிந்த குழந்தைகள் தானாகவே ஆசிர்வாதத்திற்கு தகுதியுடைய
ஆத்மாகளுக்கு ஆகிறார்கள். புரிந்ததா ! சில வருடங்களுக்கு
முன்பு எவ்வளவு குறைவாக (சென்டர்) இருந்தது, ஆனால் ஒவ்வொரு
வருடமும் வளர்ச்சியடையச் செய்து, பெரியதிலும் பெரிய குடும்பமாக
ஆகிவிட்டது. அதனால் ஒன்றிலிருந்து இரண்டு, இரண்டிலிருந்து
மூன்று, இப்பொழுது எத்தனை சென்டர்கள் ஆகிவிட்டது. ஐக்கிய நாடோ
(யூ.கே) வேறுவிதத்தில் பெரியதாகத் தான் இருக்கிறது. தொடர்போ
அனைவருக்கும் ஐக்கிய நாடுடன் தான். ஏனெனில் அயல்நாட்டின்
அஸ்திவாரமே அது (இலண்டன்) தான். பல கிளை நிலையங்கள்
உருவாகுகின்றன, மரமும் வளர்ச்சியை அடைந்துக் கொண்டே
இருக்கிறது. ஆனால் தொடர்போ அஸ்திவாரத்தில் தான் இருக்கிறது.
ஒருவேளை அஸ்திவாரத்தோடு தொடர்பு இல்லையென்றால், பிறகு எப்படி
வளர்ச்சியோ, விரிவாக்கமோ ஏற்படும்? லண்டனில் விசேஷமான
தனித்துவம் நிறைந்த இரத்தினத்தை நிமித்தமாக நியமிக்கப்பட்டு
இருக்கிறார், ஏனெனில் அஸ்திவாரம் அல்லவா ! எனவே அனைவரின்
தொடர், வழிகாட்டுதல் எளிதாகவே கிடைப்பதின் மூலம் முயற்சி
மற்றும் சேவை இரண்டுமே எளிதாகிவிடுகிறது. பாப்தாதா கூடவே
இருக்கிறார். பாப்தாதா இல்லாமல் ஒரு நொடி கூட இருக்கக் கூடாது,
அந்தளவு இணைந்து இருங்கள். ஆனாலும் கூட சாகார (ஸ்தூல)
ரூபத்தில், சேவையின் சாதனங்களில், சேவையின் செயல் திட்டத்தில்
மேலும் சுயமுன்னேற்றத்திற்காகவும் ஏதாவது வழி தேவைப்படுகிறது
என்றால் தொடர்பு வைக்கப்பட்டிருக்கிறது. இது கூட நிமித்தமாக
ஆவதற்கான சாதனம். இதன் மூலம் எளிதாகவே தீர்வு கிடைத்து
விடுகிறது. சிலசமயம் புத்தியை தெளிவாக வைக்காத காரணத்தினால்
பாப்தாதாவின் வழிமுறையை, சக்தியை உணர முடியவதில்லை. எனில்
அவ்வமயம் மாயாவின் புயல் வருகிறது. அப்படிபட்ட நேரத்திற்காக
சாகார நிமித்தத்தின் அவசியம் தேவைபடுகிறது. இவர்களை தாதிகள்,
தீதிகள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இவர்கள் தான்
நிமித்தமானவர்கள். இவர்கள் நேரம் வீணாகாது. மற்றபடி
தைரியமானவர் என்று பாப்தாதாவிற்கு தெரியும். அங்கிருந்தே
உருவாகி மேலும் அங்கேயே சேவைக்கு நிமித்தமாகியிருக்கிறார்கள்
என்றால் அறம் (தொண்டு) என்பது வீட்டில் இருந்து தொடங்குகள்
என்ற பாடத்தை நல்ல முறையில் உறுதி செய்துள்ளீர்கள், அங்கே
இருக்கும் நிமித்தமானவரை வளர்ச்சியடைய செய்வது இது மிகவும்
நல்லது. நன்மை செய்யும் உணர்வின் மூலம் முன்னேறிக் கொண்டே
இருந்தீர்கள் என்றால், எங்கே திடமான எண்ணங்கள் இருக்கிறதோ,
அங்கே வெற்றி தான். எது நடந்தாலும் சேவையில் வெற்றியடைய
வேண்டும் - இந்த சிரேஷ்ட எண்ணத்தின் மூலம் இன்று வரை
வெளிப்படையான பலம் கிடைக்கிறது. இப்பொழுது சிரேஷ்ட குடும்பத்தை
பார்த்து விசேஷமாக குஷி ஏற்படுகிறது, மேலும் விசேசமாக
பாண்டவர்கள் (சகோதர்கள்) தான் டீச்சர் ஆகிறார்கள். சக்திகளும்
சதா உதவியாளர்களாக இருக்கவே இருக்கிறார்கள். பாண்டவர்கள் மூலம்
விசேஷமாக எப்பொழுதுமே விசேஷமான வளர்ச்சியின் வெளிப்படையான பலன்
கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. மேலும் சேவையின் மூலம் கூட
அதிகபடியான சேவை நிலையங்களின் வளர்ச்சி, சேவை நிலையத்தின் அழகு
சக்திகளின் மூலம் ஏற்படுகிறது. சக்திகளுக்கென்று (மாதர்கள்
மற்றும் குமாரிகள்) தனித்துவமான நடிப்பு இருக்கிறது
பாண்டவர்களுகென்று (சகோதரர்கள்) தனித்துவமான நடிப்பு
இருக்கிறது. எனவே இருவருமே அவசியமானவர்கள் தான். எந்த
சென்டரில் சக்திகள் இல்லை, அல்லது பாண்டவர்கள் இல்லையென்றாலும்
சக்திசாலியாக இருக்காது. ஆகையால் இருவருமே அவசியமானவர்கள்.
இப்பொழுது நீங்கள் அனைவரும் விழித்துக்கொண்டீர்கள் என்றால்,
ஒருவர் மற்றவர்களோடு எளிதாகவே அநேகர் விழித்துக் கொள்வார்கள்.
முயற்சி மற்றும் நேரமோ தேவைப்படுகிறது, ஆனால் இப்பொழுது நல்ல
முறையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. திட எண்ணத்தின்
மூலம் வெற்றி கிடைக்கவில்லை என்பதே இல்லை. இந்த நடைமுறையில்
நிரூபணத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை இங்கே இருக்க
வேண்டிய அவசியமில்லை என்று சிறிதளவு மனமுடைந்து போனால், தனது
சின்னஞ்சிறிய பலவீனமான எண்ணத்தால் சேவையில் கூட வித்தியாசத்தை
கொண்டு வந்துவிடுகிறது. திடத்தன்மை என்ற நீரினால் விரைவாகவே
பலன் ஏற்படுகிறது. திடத்தன்மையின் மூலம் தான் வெற்றியைக்
கொண்டு வருகிறது.
பரமாத்மாவின் ஆசிர்வாதங்களை பெற வேண்டுமென்றால்
கட்டளைக்கு கீழ்படிந்தவர் ஆகுங்கள் (அவ்யக்த் முரளியிலிருந்து)
என்ன பாபா சொல்கிறாரோ, அப்படியே செய்வது, பாபா சொல்கிறார்
மேலும் குழந்தைகள் கடைபிடிப்பது - இதற்கு தான் நம்பர் ஒன்
கட்டளைக்கு கீழ்படிந்தவர் என்று சொல்வது. பாபாவின் ஒவ்வொரு
வழியையும், ஸ்ரீமத்தையும் யதார்த்தமாக புரிந்துக் கொண்டு
கடைபிடிப்பது - இதை கட்டளைக்கு கீழ்படிந்தவர் என்று
சொல்கிறார்கள். ஸ்ரீமத்தில் மன்மத் (மனதின் வழியையோ) அல்லது
பரமத் (மற்றவர்களின் வழியையோ) எண்ணத்தின் அளவு கூட கலக்கக்
கூடாது. பாபாவின் கட்டளை - என்னை நினைவு செய்யுங்கள். ஒருவேளை
இந்த கட்டளையை கடைபிடித்தீர்கள் என்றால், கட்டளைக்கு
கீழ்படிந்து நடக்கக் கூடிய குழந்தைக்கு பாபாவின் ஆசீர்வாதங்கள்
கிடைக்கிறது, மேலும் அனைத்தும் சகஜமாகிவிடும்.
பாப்தாதா அமிர்தவேளையிலிருந்து இரவு தூக்கும் வரை மனம், சொல்,
செயல் மற்றும் சம்மந்தம் - தொடர்பில் எப்படி நடக்க வேண்டும்
மற்றும் இருக்க வேண்டும் - அனைவருக்கும் ஸ்ரீமத் அதாவது கட்டளை
கொடுக்கபட்டிருக்கிறது. ஒவ்வொரு காரியத்திலும் மனதில் நிலை
எப்படியிருக்கிறது, அதற்கு கூட வழிமுறை அல்லது கட்டளை
கிடைத்திருக்கிறது. அந்த கட்டளைப்படி நடந்துக்
கொண்டேயிருங்கள். இது தான் பரமாத்மாவின் ஆசீர்வாதக்களை
அடைவதற்கான ஆதாரம். இது போன்ற ஆசீர்வாதங்களின் காரணத்தினால்
கட்டளைக்கு கீழ்படிந்துள்ள குழந்தைகள் சதா டபுள் லயிட் (இரட்டை
ஒளி) பறக்கும் கலையின் அனுபவம் செய்கிறார்கள். பாப்தாதாவின்
கட்டளை - எந்த ஆத்மாவிற்கும் துக்கத்தையும் தரக்கூடாது,
துக்கத்தையும் எடுக்கக் கூடாது. ஆனால் பல குழந்தைகள் துக்கத்தை
தருவதில்லை, எடுக்கிறார்கள். இது கூட வீணான எண்ணங்கள்
வருவதற்கான காரணமாகி விடுகிறது. ஏதாவது வீணான விஷயத்தைக்
கேட்டு துக்கம் அடைகிறார்கள், சின்ன சின்ன கட்டளைகளை
புறக்கணிப்பதால் கூட மனம் சுமையாகி விடுகிறது, மேலும் சுமை
இருக்கும் காரணத்தினால் உயர்ந்த நிலையை அடைய பறக்க
முடிவதில்லை.
பாப்தாதாவின் கட்டளை கிடைத்திருக்கிறது - குழந்தைகளே
வீணானவற்றை யோசிக்காதீர்கள், வீணானவற்றை கேட்காதீர்கள்,
வீணானவற்றின் காரியத்தில் சமயத்தை வீணாக்காதீர்கள். நீங்கள்
தீயவற்றிலிருந்து விடுபட்டு விட்டீர்கள். இப்பொழுது அப்படிபட்ட
கட்டளைக்கு கீழ்படிந்த குணத்தை ஒவியமாக (சித்திரமாக)
மாற்றினீர்கள் என்றால் பரமாத்மாவின் ஆசீர்வாதங்களின் அதிகாரி
ஆகிவிடலாம். குழந்தைகள் அமிர்தவேளையிலிருந்து விதிப்படி
சக்திசாலி நினைவில் இருங்கள், ஒவ்வொரு காரியத்தையும் கர்மயோகி
ஆகி, நிமித்த உணர்வோடு, பணிவாக இருந்து செய்யுங்கள். அவ்வாறு
அனைவருக்கும் பார்வை - உள்ளுணர்விற்கான கட்டளை கிடைத்
திருக்கிறது. ஒருவேளை அந்த கட்டளைகளை விதிப்படி பின்பற்றினால்
எப்பொழுதுமே அதீந்திரிய சுகத்தின் மற்றும் குஷி நிறைந்தவர்
அமைதியான மனநிலையை அனுபவம் செய்துக் கொண்டேயிருப்பீர்கள்.
குழந்தைகள் உடல், மனம், பொருள் மற்றும் வாழ்க்கை - இவை
அனைத்தையும் பாபாவின் அடமான பொருள் என்று புரிந்துக்
கொள்ளுங்கள். பாஸிட்வ்வான (நேர்மறையாக) எண்ணங்களை எண்ணுங்கள்,
நேர்மறையாக யோசியுங்கள், நல்ல உணர்வின் எண்ணங்களை எண்ணுங்கள்.
உடல் உணர்வின் நான் மற்றும் எனது என்பதிலிருந்து
விலகியிருங்கள். இந்த இரண்டும் மாயாவின் நுழைவாயில். எண்ணம்,
சமயம் மற்றும் சுவாசம் தான் பிராமண வாழ்க்கையின்
விலைமதிப்புடைய பொக்கிஷமாகும், இதை வீணாக இழாக்காதீர்கள்.
சேமியுங்கள். சக்திசாலியாக இருப்பதற்கான ஆதாரம் - சதா மற்றும்
இயல்பாகவே கட்டளைக்கு கீழ்படிந்தவர் ஆகுங்கள். பாப்தாதாவின்
முக்கிய முதன்மையான கட்டளை - தூய்மையாகுங்கள், காமத்தை
வென்றவர் ஆகுங்கள். இந்த கட்டளையை பின்பற்றுவதில்
பெரும்பான்மையோர் பாஸ் (தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். ஆனால்
அதற்கான (காமம்) அடுத்த சகோதரன் கோபம் - அதில் அவ்வப்பொழுது
பாதிபேர் (50 சதவீதம்) தோல்வி அடைந்து விடுகிறார்கள். பலர்
சொல்கிறார்கள் கோபப்படவில்லை ஆனால் கொஞ்சம் வெறுப்பையோ காட்ட
வேண்டியிருக் கிறது. ஆனால் இது கூட கட்டளையை அவமதிப்பதாகும்,
இது குஷியின் அனுபவத்தை செய்யவிடுவதில்லை.
எந்த குழந்தை
அமிர்தவேளையிலிருந்து இரவு வரை முழு நாளின் தினசரி
நடவடிக்கைகளில் ஒவ்வொரு காரியத்திலும் கட்டளைப்படி
நடக்கிறார்களோ, அவர்கள் ஒருபொழுதும் உழைப்பில் கடினத்தன்மையை
அனுபவம் செய்வதில்லை. அவர்களுக்கு கட்டளைக்கு கீழ்படிந்து
நடப்பதன் விசேஷமான பலனாக பாபாவின் ஆசீர்வாதத்தின் அனுபவம்
ஆகிறது. அவர்களின் ஒவ்வொரு காரியமும் பலனளிக்கக் கூடியதாக
இருக்கிறது. யார் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும் குழந்தைகளாக
இருக்கிறார்களோ, அவர்கள் சதா திருப்தியை அனுபவம் செய்கிறார்கள்.
அவர்களுக்கு மூன்று விதமான திருப்தி இயல்பாகவே மேலும் சதா
அனுபவமாகிறது. 1. அவர்கள் தன்மீதே திருப்தியாக இருக்கிறார்கள்,
2. விதிப்படி காரியம் செய்யும் காரணத்தினால் வெற்றி என்ற பலனை
அடைவதில் கூட திருப்தியாக இருக்கிறார்கள். 3. சம்மந்தம் மற்றும்
தொடர்பில் கூட அவர்கள் மூலம் அனைவரும் திருப்தியாக
இருக்கிறார்கள். கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும் குழந்தைகளின்
ஒவ்வொரு காரியமும் கட்டளைப்படி இருக்கும் காரணத்தினால்
சிரேஷ்டமானதாக இருக்கிறது, ஆகையால் எந்தவொரு செயலும் புத்தி
அல்லது மனதின் தடுமாற்றத்தை, நிலையற்றதாக உணர்வதில்லை,, சரியா
அல்லது தவறா என்ற எண்ணம் கூட வருவதில்லை. அவர்கள் கட்டளைப்படி
நடக்கும் காரணத்தினால் சதா இலேசாக இருக்கிறார்கள். ஏனெனில்
அவர்கள் கர்மபந்தனத்திற்கு வசமாகி எந்த காரியமும் செய்வதில்லை.
ஒவ்வொரு காரியமும் கட்டளைபடி செய்யும் காரணத்தினால்
பரமாத்மாவின் ஆசீர்வாதத்தை அடைவதற்கான பலன் சொரூபம் அவர்கள்
எப்பொழுதுமே ஆத்மீக சக்தியின், அதீந்திரிய சுகத்தின் மேலும்
நிறைந்த தன்மையை அனுபவம் செய்கிறார்கள். நல்லது.
வரதானம்:
உண்மையான துணைவரின் துணையை
பெறக்கூடிய அனைவரிடமும் விடுபட்ட, அன்பான பற்றற்றவர் ஆகுக.
தினமும் அமிர்தவேளையில் அனைத்து
சம்மந்தங்களின் சுகத்தை பாப்தாதாவிடமிருந்து பெற்று
மற்றவர்களுக்கும் தானம் கொடுங்கள். அனைத்து சுகத்தின்
அதிகாரியாகி மற்றவர்களையும் ஆக்குங்கள். எப்படிப் பட்ட
காரியமாக இருந்தாலும் கூட, அதில் சாகார துணையின் நினைவு
வரக்கூடாது, முதலின் பாபாவின் நினைவு வரவேண்டும், ஏனெனில்
உண்மையான நண்பன் பாபா தான். உண்மையான துணையின் துணையை (அடைந்து)
பெற்றுக் கொண்டால் எளிதாகவே அனைத்திலிருந்தும் விடுபட்டவர்
மற்றும் அன்பானவர் ஆகிவிடுங்கள். யார் அனைத்து சம்மந்தத்தின்
மூலம் ஒவ்வொரு காரியத்திலும் ஒரு பாபாவை நினைவு செய்கிறார்களோ
அவர்கள் சகஜமாகவே பற்றற்றவர் ஆகிவிடுவார்கள். அவர்களுக்கு
எந்தவிதத்திலும் பற்றுதல் அதாவது தலைவணங்குவது இருக்காது.
ஆகையால் மாயாவிடமிருந்து தோல்வி அடைவதில்லை.
சுலோகன்:
மாயாவை பார்ப்பது மற்றும்
தெரிந்துக் கொள்வதற்காக திரிகாலதரிசி மற்றும் திரிநேத்திரி
ஆகுங்கள் அப்பொழுது தான் வெற்றியடைவீர்கள்.
ஓம்சாந்தி