10.08.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! தன்னுடைய சுய தர்மத்தை மறப்பது தான் அனைத்தையும் விட பெரிய தவறாகும்.இப்போது நீங்கள் மறக்காதவர்கள் ஆக வேண்டும். தன்னுடைய வீடு மற்றும் இராஜ்யத்தை நினைவு செய்ய வேண்டும்.

 

கேள்வி:

உங்களின் எந்த அவஸ்தாவின் போது (மன நிலையின்) நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதின் அடையாளமாகத் தென்படுகிறது?

 

பதில்:

குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் சதா மூழ்கியிருக்கும் போதும் புத்தி அலைவது நிற்கும் போதும், வார்த்தைகளில் நினைவின் கூர்மை வரும் போதும், அளவற்ற குஷியில் இருக்கும் போதும், அடிக்கடி தன்னுடைய சத்யுக உலகத்தின் காட்சிகள் எதிரில் வருகின்ற போதும் நேரம் நெருங்குகிறது என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். வினாசத்திற்கு நேரம் ஆகாது. அதற்காக நினைவின் சார்ட்டை அதிகரியுங்கள்.

 

பாட்டு:

உங்களை அடைந்து நாங்கள் உலகை அடைந்தோம்......

 

ஓம் சாந்தி.

ஆன்மீகக் குழந்தைகள் இந்த பாடலின் பொருளை புரிந்திருப்பீர்கள். இப்போது எல்லையற்ற தந்தையை அடைந்து விட்டீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. அந்த ஆஸ்தியை யாரும் பறிக்க முடியாது. இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆகும் போது ஆஸ்திக்கான போதை போய் விடுகிறது. இவ்வாறு நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிருஷ்டி நாடகத்தின் ஞானம் கூட குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது. இந்த சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? இதை நாடகம் எனலாம், டிராமா என்று கூட கூறலாம். உண்மையில் தந்தை வந்து சிருஷ்டி சக்கரத்தைக் கூட புரிய வைக்கிறார். யார் பிராமண குலத்தினரோ அவர்களுக்குத்தான் புரிய வைக்கிறார் இதை குழந்தைகள் புரிந்துக் கொள்கிறார்கள். குழந்தைகளே! நீங்கள் உங்களுடைய பிறவிகளைப் பற்றி அறியவில்லை .நான் உங்களுக்குப் புரிய வைக்கிறேன். முன்பு 84 இலட்சம் ஜென்மங்கள் எடுத்து பிறகு ஒரு ஜென்மம் மனிதனாக பிறக்கிறோம் என நீங்கள் கேள்வி பட்டிருந்தீர்கள். இவ்வாறு கிடையாது. இப்போது நீங்கள் அனைத்து ஆத்மாக்களும் வரிசைக்கிரமத்தில் வந்து போகிறீர்கள். முதன் முதலில் நாம் ஆதிசனாதனதேவி தேவதா தர்மத்தின் பூஜைக்குரியவர்களாக இருந்தோம். பிறகு பூஜாரி ஆகிவிட்டோம் என புத்தியில் வருகிறது. தாங்களே பூஜைக்குரியவர், தாங்களே பூஜாரி என்று பாடப்பட்டிருக்கிறது. மனிதர்கள் பகவான் தான் பூஜைக்குரியவராகவும் பூஜாரியாகவும் ஆகின்றார் என நினைக்கிறார்கள். அனைத்தும் தங்களின் ரூபமே ஆகும். பல்வேறு விதமான வழிகள் இருக்கிறது அல்லவா! இப்போது நீங்கள் ஸ்ரீமத்படி நடக்கிறீர்கள். நாம் மாணவர்கள் முதலில் எதுவும் அறிந்திருக்கவில்லை. பிறகு படித்து உயர்ந்த தேர்வில் தேர்ச்சி அடைவதற்காகச் செல்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். அந்த மாணவர்கள் கூட ஆரம்பத்தில் எதுவும் அறியவில்லை. பிறகு தேர்வில் தேர்ச்சி பெற்று நாம் வக்கீல் படிப்பில் தேர்ச்சி அடைந்து விட்டோம் என நினைக்கிறார்கள். இப்போது நாம் படித்து மனிதனிலிருந்து தேவதையாகிக்கொண்டிருக்கிறோம், உலகத்திற்கு அதிபதியாகிக் கொண்டிருக்கிறோம், என நீங்கள் அறிவீர்கள். அங்கே ஒரே தர்மம் ஒரே இராஜ்யம் ஆகும். உங்களின் இராஜ்யத்தை யாரும் பறிக்க முடியாது. அங்கே உங்களுக்கு தூய்மை, அமைதி, சுகம், செல்வம் அனைத்தும் இருக்கிறது. பாடலில் கூட கேட்டிருக்கிறீர்கள் அல்லவா!. இப்போது இந்த பாடலை நீங்கள் உருவாக்கவில்லை. எளிதாக நாடகப்படி இந்த நேரத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட பாடல்களின் பொருளை பாபா அமர்ந்து புரியவைக்கிறார். இங்கே நீங்கள் அமைதியில் அமர்ந்து பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைந்துக்கொண்டிருக்கிறீர்கள். அதை யாரும் பறிக்க முடியாது அரைக் கல்பம் சுகத்தின் ஆஸ்தி இருக்கிறது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, அரைக் கல்பத்தை விட அதிகமாக நீங்கள் சுகத்தை அனுபவிக்கிறீர்கள். என பாபா புரிய வைக்கின்றார். பிறகு இராவணனின் இராஜ்யம் ஆரம்பம் ஆகின்றது. சில கோவில்களில் கூட தேவதைகள் எப்படி எதிர்மாறாக (வாமமார்க்கத்தில்) செல்கிறார்கள் என சித்திரங்கள் காட்டப்பட்டிருக்கிறது. உடை அதே தான், உடை பிறகு மாறுகிறது. ஒவ்வொரு ராஜாவிற்கும் தனக்கென உடை, கிரீடம், போன்ற அனைத்தும் தனித்தனியாக இருக்கிறது.

 

இப்போது நாம் சிவபாபாவிடமிருந்து பிரம்மா மூலமாக ஆஸ்தி அடைந்துக் கொண்டிருக்கிறோம் என குழந்தைகள் அறிகிறீர்கள். தந்தை, குழந்தைகளே! குழந்தைகளே! என கூறுகின்றார். குழந்தைகள் தங்களுடைய ஜென்மங்களைப் பற்றி அறியவில்லை. கேட்பது ஆத்மா தான் அல்லவா!. நாம் ஆத்மாக்கள் சரீரம் அல்ல. மற்றபடி மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கென உடலின் பெயருடைய போதை இருக்கிறது. ஏனென்றால் தேக அபிமானியாக இருக்கிறார்கள். நாம் ஆத்மாக்களாக இருக்கிறோம். அவர்கள் ஆத்மாவிலிருந்து பரமாத்மா, பரமாத்மாவிலிருந்து ஆத்மா எனக் கூறுகிறார்கள். நீங்கள் ஆத்மாவிலிருந்து உலகத்திற்கே அதிபதியாக தேவி தேவதைகளாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள் என உங்களுக்கு இப்போது பாபா புரியவைத்து இருக்கிறார். நாம் தேவதையாவோம் பிறகு சத்ரிய வம்சத்தில் வருவோம் என்ற ஞானம் இப்போது இருக்கிறது. 84 பிறவிகளின் கணக்கு கூட இருக்கிறது அல்லவா! அனைவரும் 84 பிறவிகள் எடுக்க மாட்டார்கள். அனைவரும் ஒன்றாக வரமுடியாது. எந்த தர்மம் எப்படி வந்துகொண்டிருக்கிறது என உங்களுக்குத் தெரியும். வரலாறு பழையதாகிறது. பிறகு புதுமை அடைகிறது. இப்போது இது தூய்மையற்ற உலகம் ஆகும். அது தூய்மையான உலகம் ஆகும். பிறகு மற்ற மற்ற தர்மங்கள் வருகின்றன. இங்கே கர்மசேத்திரத்தில் ஒரே நாடகம்தான் நடக்கிறது. 4 தர்மங்கள் முக்கியமானவை ஆகும். இந்த சங்கமத்தில் தந்தை வந்து பிராமண சம்பிரதாயத்தை ஸ்தாபனை செய்கிறார். விராட ரூபத்தின் சித்திரங்களை உருவாக்குகிறார்கள். ஆனால் இதில் தவறு இருக்கிறது. பாபா வந்து அனைத்து விஷயங்களையும் புரியவைத்து தவறுகளை நீக்கி மாற்றுகிறார். பாபா ஒரு போதும் சரீரத்தில் வருவதில்லை. தவறு செய்வதில்லை. அவர் சிறிது நேரத்திற்காக குழந்தைகளுக்கு சுக தாமம் மற்றும் தன்னுடைய வீட்டிற்கான வழியை காண்பிப்பதற்காக இந்த ரதத்தில் வருகிறார். வழியை மட்டும் தெரிவிக்கவில்லை சிறந்த வாழ்க்கையை உருவாக்குகிறார். கல்ப கல்பமாக நீங்கள் வீட்டிற்குப் போகிறீர்கள். பிறகு சுகத்தின் பாகத்தை நடிக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நமது சுய தர்மமே அமைதி என்பதை குழந்தைகள் மறந்து விட்டார்கள். இந்த துக்க உலகத்தில் எவ்வாறு சாந்தி ஏற்படும். போன்ற விஷயங்களை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். மற்ற அனைவருக்கும் புரியவும் வைக்கிறீர்கள். மெல்ல மெல்ல அனைவரும் வருவார்கள். இந்த சிருஷ்டி சக்கரம் எவ்வாறு சுழல்கிறது. இதனுடைய ஆயுள் எவ்வளவு என வெளிநாட்டவருக்குத் தெரியும். வெளிநாட்டவர்கள் கூட உங்களிடம் வருவார்கள். அல்லது குழந்தைகள் அங்கே சென்று சிருஷ்டி சக்கரத்தின் ரகசியத்தைப் புரிய வைப்பார்கள். கிறிஸ்து கடவுளிடம் சென்றடைந்து விட்டார் என அவர்கள் நினைக்கிறார்கள். கிறிஸ்துவை கடவுளின் குழந்தை என நினைக்கிறார்கள். சிலர் கிறிஸ்து கூட மறுபிறவி எடுத்து இப்போது பிச்சைக்காரன் ஆகிவிட்டார் எனவும் நினைக்கிறார்கள். நீங்கள் கூட பிச்சைக்காரனாக இருக்கிறீர்கள் அல்லவா! பிச்சசைக்காரன் என்றால் தமோபிரதான நிலை. கிறிஸ்து கூட இங்கே இருக்கிறார் என நினைக்கிறார்கள், அவர் எப்போது வருவார் எனத் தெரியவில்லை. உங்களுடைய தர்ம ஸ்தாபகர் மீண்டும் தன்னுடைய நேரத்தில் தர்மத்தை ஸ்தாபிப்பதற்காக வருவார் என நீங்கள் புரிய வைக்க முடியும். அவர்களை குரு என்று கூற முடியாது. அவர் தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக வருகிறார் சத்கதி கொடுக்கக் கூடிய வள்ளல் ஒருவரே, யாரெல்லாம் தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக வருகிறார்களோ அவர்கள் மறுபிறவி எடுத்து எடுத்து இங்கே வந்து தமோபிரதானம் ஆகியிருக்கிறார்கள். கடைசியில் முழு மரமும் இற்றுப்போன நிலையை அடைந்திருக்கிறது. முழு மரமும் இருக்கிறது. ஆனால் தேவி தேவதா தர்மத்தின் அடி மரம் இல்லை என்பதை நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள் (ஆலமரம் போல்) இந்த விஷயங்களை பாபா தான் குழந்தைகளுக்கு வந்து புரியவைக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் குஷியிருக்க வேண்டும் நாம் தான் தேவி தேவதைகளாக இருந்தோம் மீண்டும் இப்போது மாறுகிறோம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. இங்கே நீங்கள் சத்ய நாராயணனின் கதையைக் கேட்பதற்காக வருகிறீர்கள். இதனால் நரனிலிருந்து நாராயணனன் ஆவீர்கள். நாராயணனாக ஆகிவிட்டால், நிச்சயமாக லஷ்மியும் கூட இருப்பார். லஷ்மி நாராயணன் இருந்தால் நிச்சயமாக அவர்களின் இராஜ்யம் கூட இருக்கும் அல்லவா!. லஷ்மி நாராயணன் மட்டும் தனியாக ஆக மாட்டார்கள். லஷ்மி ஆவதற்கான தனி கதை கிடையாது நாராயணன் உடன் லஷ்மியும் உருவாகிறார். லஷ்மி கூட சில நேரம் நாராயணன் ஆகலாம், நாராயணன் சில நேரம் லஷ்மி ஆகிறார். ஒரு சில பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. மாயாவின் தாக்கம் வரும் போது பாடலைக் கேட்டால் மகிழ்ச்சி வந்து விடும். எப்படி நீச்சல் கற்றுக் கொள்ளும் போது முதலில் மூழ்குவார்கள், மூச்சு திணறல் வரும் பிறகு அவர்களை பிடித்துக் கொள்கிறார்கள். இங்கே கூட மாயா நிறைய மூச்சு திணற வைக்கிறது. நீந்தக் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய பந்தயம் கூட இருக்கிறது என்றால் உங்களுடையது அந்த கரையை சேரக்கூடிய (நீச்சல்) பந்தயம் ஆகும். என்னை மட்டும் நினைவு செய்ய வேண்டும். நினைக்கவில்லை என்றால் மூழ்கி விடுவீர்கள். நினைவு யாத்திரையால் தான் கரை சேர முடியும் என பாபா கூறுகின்றார். நீங்கள் அந்த கரையை அடைந்து விடுவீர்கள். சிலர் நன்றாக நீந்துபவர்கள் இருக்கிறார்கள். சிலர் குறைவாக நீந்துகிறார்கள். அவ்வாறே இங்கேயும் இருக்கிறார்கள். பாபாவிடம் சார்ட் அனுப்புகிறார்கள். நினைவினுடைய சார்ட்டை இவர்கள் சரியாக புரிந்துக் கொள்கிறார்களா அல்லது தவறாகப் புரிந்துக்கொள்கிறார்களா என பாபா சோதிக்கின்றார். ஒரு சிலர் நாங்கள் முழு நாளில் 5 மணி நேரம் நினைவில்இருந்தோம் எனக்காட்டுகிறார்கள். நிச்சயமாக தவறு நடந்து இருக்கிறது நான் நம்புவதில்லை. நாம் எவ்வளவு நேரம் இங்கே படிக்கிறோமோ அவ்வளவு நேரம் சார்ட் சரியாக இருக்கிறது என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இல்லை. பலருக்கு இங்கே அமர்ந்தபடியே கூட கேட்டுக் கொண்டிருந்தாலும்கூட புத்தி வெளியில் இங்கும் அங்கும் செல்கிறது. முழுவதுமாக கேட்பதில்லை. பக்தி மார்க்கத்தில் இவ்வாறு நடக்கிறது. சன்னியாசிகள் கதையை சொல்கின்றபோது இடையிடையே நான் என்ன சொன்னேன் என கேட்பார்கள். இவர்கள் தவா (தோசைக்கல்) போன்று அமர்ந்திருக்கிறார்கள் என்றால் கேட்டால் சொல்ல முடியாது. புத்தி எங்காவது சென்று விடுகிறது. ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டார்கள் இங்கேகூட அவ்வாறு இருக்கிறார்கள். பாபா பார்த்துக் கொண்டே இருக்கிறார். இவர்களுடைய புத்தி வெளியே எங்கேயோ அலைந்துக் கொண்டிருக்கிறது. என புரிந்துக் கொள்கிறார். இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இப்படி கூட ஒரு சிலர் புதியதாக வருகிறார்கள். முழுமையாகப் புரிந்துக் கொள்ளவில்லை என பாபா புரிந்துக் கொள்கிறார். ஆகையால் புதியவர்களை சீக்கிரமாக வகுப்பில் வருவதற்கு அனுமதி அளிக்காதீர்கள் என பாபா கூறுகிறார். இல்லையென்றால் வாயுமண்டலத்தை கெடுத்து விடுகிறார்கள். யார் நல்ல நல்ல குழந்தைகளாக இருக்கிறார்களோ இங்கே அமர்ந்து கொண்டிருக்கும் போதே வைகுண்டத்தில் சென்றுவிடுவார்கள். இன்னும் போகப்போக நீங்கள் பார்க்கலாம் மிகவும் குஷி ஏற்பட்டுக் கொண்டிருக்கும். இப்போது நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது அடிக்கடி சென்று விடுவார்கள். வரிசைக்கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப உங்களின் நிலையும் இவ்வாறு அமையும். அடிக்கடி சொர்க்கத்தில் தன்னுடைய மாளிகையைப் பாôத்துக் கொண்டிருப்பார்கள். எதை பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டுமோ அந்த காட்சிகள் கிடைத்துக் கொண்டிருக்கும். நேரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் எவ்வாறெல்லாம் ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. பாபா கூறுகிறார் பாருங்கள், ஒரு நொடியில் முழு உலகத்தில் இருக்கும் மனிதர்களும் சாம்பலாகி விடுவார்கள். வெடிகுண்டு போட்டதும் இது அழிந்து விடும்.

 

தங்களுடைய இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இப்போது நினைவு யாத்திரையில் மூழ்கி இருங்கள். யாருக்கு வேண்டுமானாலும் திருஷ்டியினால் அம்புபாயும் அளவிற்கு சக்தியை நிரப்பிக் கொள்ளுங்கள். கடைசியில் பீஷ்ம பிதா போன்றவர்களுக்கும் நீங்கள் தான் ஞான அம்பு போட்டிருக்கிறீர்கள். உடனடியாக இது தான் உண்மை என புரிந்துக்கொள்வார்கள். ஞானக் கடல், பதீதபாவனர் நிராக்கார பகவான் ஆவார். கிருஷ்ணர் கிடையாது, அவருடைய பிறவி காண்பிக்கிறார்கள். கிருஷ்ணருடைய அதே தோற்றம் பிறகு ஒரு போதும் இருக்காது. மீண்டும் சத்யுகத்தில் தான் அதே தோற்றம் கிடைக்கும். ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொருவருடைய தோற்றமும் தனித்தனியாக இருக்கும். இந்த நாடகத்தின் பாகம் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இயற்கையான அழகின் தோற்றம் இருக்கிறது. இப்போது ஒவ்வொரு நாளும் உடல் கூட தமோபிரதானம் அடைகிறது. முதன் முதலில் சதோபிரதானமாகவும் பிறகு சதோ-ரஜோ-தமோவாகிறது. இங்கே எப்படிப்பட்ட குழந்தைகள் பிறவி எடுக்கிறார்கள் பாருங்கள். சிலருக்கு கால் நடக்க முடிவதில்லை. என்னென்ன நடக்கிறது. சத்யுகத்தில் இவ்வாறு நடக்காது. அங்கே தேவதைகளுக்கு தாடி போன்றவை இருக்காது. கிளீன் ஷேவ் ஆக இருக்கும். கண்கள் மூலமாகவே இவர் ஆண், இவர் பெண் எனத் தெரிகிறது. இன்னும் போகப்போக உங்களுக்கு பல காட்சிகள் கிடைத்துக் கொண்டேயிருக்கும் குழந்தைகாளகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும் பாபா கல்ப கல்பமாக உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து மனிதனிலிருந்து தேவதையாக்குகிறார். மற்ற தர்மத்தைச் சார்ந்தவர்கள் அவரவருடைய பிரிவில் செல்வார்கள் என்பது கூட குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரிகிறது. ஆத்மாக்களின் மரம் கூட காண்பிக்கிறார்கள் அல்லவா!. படங்களில் பல திருத்தங்கள் செய்து மாற்றிக் கொண்டே இருப்போம். பாபா சூட்சும வதனத்தைப் பற்றி புரியவைக்கும் போது சந்தேக புத்தி உடையவர் கள் இது என்ன என்று கூறுவார்கள். முன்பு இதை கூறினார்கள், இப்போது இதை கூறுகிறார்கள். லஷ்மி நாராயணனில் இரட்டை ரூபத்தைச் சேர்த்து விஷ்ணு என்கிறார்கள் மற்றபடி நான்கு புஜங்களை உடைய மனிதர்கள் இருக்க முடியாது, இராவணனுக்கு 10 தலைகள் காண்பிக்கிறார்கள் இவ்வாறு மனிதர்கள் இருக்க முடியாது, ஒவ்வொரு வருடமும் எரிக்கிறார்கள். பொம்மை விளையாட்டு போல இருக்கிறது.

 

சாஸ்திரங்கள் இல்லாமல் நாம் வாழ முடியாது என மனிதர்கள் கூறுகிறார்கள். சாஸ்திரங்கள் நம்முடைய உயிர் ஆகும். கீதைக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது பாருங்கள். இங்கே உங்களிடம் நிறைய முரளிகள் சேர்ந்து விடுகிறது. நீங்கள் வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு நாளும் புதுப்புது கருத்துக்களை கேட்கிறீர்கள், ஆம் கருத்துக்களை குறிப்பெடுக்க வேண்டும். பேசுகின்றபோது ஒத்திகை பார்ப்பார்கள். இந்தந்த கருத்துகளை புரியவைக்கலாம் தலைப்புகளின் லிஸ்ட் இருக்க வேண்டும். இன்று இந்த தலைப்பு பற்றி புரிய வைக்கலாம். இராவணன் யார் இராமர் யார் உண்மை என்ன அவைகளை நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம் என கூறுகிறீர்கள். இந்த நேரத்தில் இராவண இராஜ்யம் முழு உலகத்திலும் உள்ளது. 5 விகாரங்கள் அனைவருக் குள்ளும் இருக்கிறது, தந்தை வந்து மீண்டும் இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார். இது வெற்றி தோல்வியின் விளையாட்டாகும். தோல்வி எப்படிஏற்படுகிறது. 5 விகாரங்கள் என்ற இராவணனால் ஏற்படுகிறது. முன்பு பவித்ரமான குடும்ப ஆசிரமம் இருந்தது இப்போது பதீதமாகிவிட்டார்கள். லஷ்மி நாராயணனிலிருந்து பிறகு பிரம்மா-சரஸ்வதி ஆகின்றார். பாபா கூட கூறுகின்றார் நான் இவருடைய பல பிறவிகளில் கடைசி பிறவியில் பிரவேசம் செய்கிறேன். நீங்கள் கூட நாங்கள் பல ஜென்மங்களின் முடிவில் பாபாவிடமிருந்து ஞானத்தை அடைந்து கொண்டிருக்கிறோம் என கூறுகிறீர்கள். இது அனைத்தும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். யாராவது மந்த புத்தி உடையவர்கள் எனில் அவர்கள் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். இங்கே இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது. பலர் வருகிறார்கள். பிறகு சென்று விடுவார்கள், பிறகு மீண்டும் வந்து விடுவார்கள். பிரஜைகளில் நயா பைசாவிற்கு அளவில் தான் (மதிப்பு குறைந்த) பதவி அடைவார்கள் அவர்கள்கூட வேண்டும் அல்லவா!. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும்தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்குஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. நாம் அனைவரும் இந்த படிப்பை முடித்து விட்டு மனிதனிலிருந்து தேவதையாகி உலகத்திற்கு அதிபதி ஆவோம் என்ற போதையில் சதா இருக்க வேண்டும். நம்முடைய இராஜ்யத்தில் தூய்மை, சுகம், சாந்தி அனைத்தும் இருக்கும் அதை யாரும் அபகரிக்க முடியாது.

 

2. இக்கரையிலிருந்து அக்கரைக்கு செல்வதற்காக நினைவு யாத்திரையில் நன்கு மூழ்கியிருக்கக் கூடியவராக (நீந்தக் கூடியவராக) வேண்டும். மாயாவின் தாக்குதல் ஏமாந்து விடக் கூடாது நினைவின் சார்ட்டை யதார்த்தமாக புரிந்துக் கொண்டு எழுதி தன்னை சோதித்துக் கொள்ள வேண்டும்.

 

வரதானம்:

சிரேஷ்ட சமயத்தின் (சங்கமயுகம் மற்றும் அமிர்தவேளையின்) ஆதாரத்தில் அனைத்து பிராப்திகளின் அதிகாரத்தில் அனுபவம் செய்யக் கூடிய பலமடங்கு பாக்கியசாலி ஆகுக.

 

யார் சிரேஷ்டமான நேரத்தில் பிறவி எடுப்பவர்கள் பாக்கியசாலி குழந்தைகளாக இருக்கிறார்களோ, அவர்கள் கல்பத்தின் முன்பு போலவே உணர்வின் ஆதாரத்தில் பிறக்கும் பொழுதே தன்னுடையவர் என்ற அனுபவம் ஆகிறது. அவர்கள் பிறந்ததுமே அனைத்து ஆஸ்திக்கான (சொத்து) அதிகாரி ஆகிறார்கள். எப்படி விதையில் முழு மரத்தின் சாரம்சமும் அடங்கியிருப்பது போன்று, நம்பர் ஓன் (முதல் தரமான) நேரத்தைச் சேர்ந்த ஆத்மாக்களுக்கு அனைத்து சொரூபத்தின் பிராப்தியின் பொக்கிஷம் வந்ததுமே அனுபவசாலி ஆகிவிடுகிறார்கள். அவர்கள் ஒருபொழுதும் சுகத்தின் அனுபவம் ஏற்படுகிறது, அமைதி அனுபவம் ஆவதில்லை, அமைதி அனுபவம் ஆகிறது, ஆனால் சுகத்தின் மற்றும் சக்தியின் அனுபவம் ஏற்படுவதில்லை என்று சொல்லமாட்டார்கள். அனைத்து அனுபவங்களினினால் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

 

சுலோகன்:

தனது மகிழ்ச்சியின் குடை நிழலின் மூலம் குளிர்ச்சித் தன்மையின் அனுபவம் செய்வதற்காக மென்மையாகவும் உருவாக்குபவராகவும் ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி