30.08.2020 காலை முரளி ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா,
ரிவைஸ் 13.03.1986 மதுபன்
சுலபமான மாற்றத்திற்கு ஆதாரம் -
அனுபவத்தின் அதிகாரம்
பாப்தாதா தன்னுடைய அனைத்து
ஆதாரமூர்த்தி மற்றும் உத்தாரமூர்த்தி (அனைவரையும்
முன்னேற்றுபவர்) குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
ஒவ்வொரு குழந்தையும் இன்றைய உலகத்தை உயர்வானதாக, நிறைந்ததாக
ஆக்குவதற்கு ஆதாரமூர்த்தி ஆவார்கள். இன்று உலகத்தினர்
தங்களுடைய ஆதாரமூர்த்தியான, உயர்வான ஆத்மாக்களை விதவிதமான
ரூபத்தில், விதவிதமான விதிமுறைகளால் அழைத்துக் கொண்டு இருக்
கின்றார்கள், நினைவு செய்து கொண்டு இருக்கின்றார்கள். எனவே,
அப்படிப்பட்ட அனைத்து துக்கத்திலிருக்கும், அசாந்தியாக
இருக்கும் ஆத்மாக்களுக்கு ஆதரவு கொடுக்கக்கூடிய, ஒரு துளி
கொடுக்கக்கூடிய, சுகம், சாந்திக்கான வழி கூறக்கூடிய, ஞானம்
என்ற கண் இழந்தவர்களுக்கு தெய்வீகக் கண் கொடுக்கக்கூடிய,
அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு புகலிடம்
கொடுக்கக்கூடிய, அபிராப்தியான ஆத்மாக்களுக்கு பிராப்தியின்
அனுபவம் செய்விக்கக்கூடிய, முன்னேற்றக்கூடிய நீங்கள் சிரேஷ்ட
ஆத்மாக்கள் ஆவீர்கள். உலகத்தில் நாலாபுறமும் ஏதாவது ஏதாவது
விதமான குழப்பம் இருக்கின்றது. சில இடங்களில் செல்வத்தின்
காரணத்தினால் குழப்பம் இருக்கின்றது, சில இடங்களில் மனதினுடைய
அனேக டென்னுடைய (மன இறுக்கம்) குழப்பம் இருக்கின்றது, சில
இடங்களில் தன்னுடைய வாழ்க்கையினால் அதிருப்தியாக இருக்கும்
காரணத்தினால் குழப்பம் இருக்கின்றது, சில இடங்களில் இயற்கையின்
தமோபிரதான வாயுமண்டலத்தின் காரணமாக குழப்பம் இருக்கின்றது,
நாலாபுறமும் குழப்பமான உலகமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட
நேரத்தில் உலகத்தின் மூலையில் நீங்கள் ஆடாத, அசையாத ஆத்மாக்கள்
இருக்கின்றீர்கள். உலகத்தில் பயத்திற்கு வசமாகி
இருக்கின்றார்கள், மேலும், நீங்கள் பயமற்றவராகி சதா குஷியில்
ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கின்றீர்கள். உலகத்தில்
அல்பகாலத்திற்காக குஷிக்கான சாதனமான ஆட்டம், பாட்டு மற்றும்
அனேக சாதனங்களைத் தன்னுடையதாக ஆக்குகின்றார்கள். எனவே, அந்த
அல்பகால சாதனம் மேலும், கவலையின் சிதைக்கு அழைத்துச் சென்று
கொண்டிருக்கின்றது. அப்பேற்பட்ட விஷ்வத்தின் ஆத்மாக்களுக்கு
இப்பொழுது உயர்வான, அழிவற்ற பிராப்திகளின் அனுபவத்திற்கான
ஆதாரம் தேவை. அனைத்து ஆதாரங்களையும் பார்த்தாகிவிட்டது,
அனைத்தையும் அனுபவம் செய்தாகிவிட்டது, மேலும், இதைவிட வேறு
ஏதேனும் வேண்டும் என்று அனைவரின் மனதிலும் இந்த சப்தமானது
விரும்பாமலேயே வெளிப்படுகின்றது. இந்த சாதனம், இந்த விதிகள்
வெற்றியை அனுபவம் செய்விக்கக்கூடியது கிடையாது. கொஞ்சம் புதுமை
வேண்டும், வேறு ஏதேனும் வேண்டும். இது அனைவரின் மனதின் சப்தமாக
இருக்கின்றது. என்னவெல்லாம் அல்பகால ஆதரவாக ஆகி இருக்கின்றதோ,
அவை அனைத்தும் துரும்புக்கு சமமான ஆதரவாகும். உண்மையான ஆதரவைத்
தேடிக்கொண்டு இருக்கின்றார்கள், அல்பகால ஆதாரத்தினால், அல்பகால
பிராப்திகளினால், விதிமுறைகளினால் இப்பொழுது களைத்துப்
போய்விட்டார்கள். இப்பொழுது அப்படிப்பட்ட ஆத்மாக்களுக்கு
யதார்த்தமான ஆதரவு, உண்மையான ஆதரவு, அழிவற்ற ஆதரவைக்
கூறக்கூடியவர்கள் யார்? நீங்கள் அனைவரும் தானே!
உலகத்திற்கு மத்தியில் நீங்கள் அனைவரும் சொர்ப்பமானவர்கள்,
மிகவும் குறைவானவர்கள், ஆனால், கல்பத்திற்கு முந்தைய
நினைவுச்சின்னத்தில் கூட அக்ஷௌணி சேனைக்கு எதிரில் 5
பாண்டவர்களைத்தான் காண்பித்திருக்கின்றார்கள்.
அனைத்தைக்காட்டிலும் பெரியதிலும் பெரிய அதிகாரம் உங்களிடம்
உள்ளது. அறிவியலின் அதிகாரம், சாஸ்திரங்களின் அதிகாரம்,
ராஜ்யசக்தியின் அதிகாரம், தர்மசக்தியின் அதிகாரம், அனேக
அதிகாரம் உடையவர்கள் அவரவருடைய அதிகாரத்தின் அனுசாரமாக உலகத்தை
மாற்றம் செய்வதற்கு முயற்சி செய்துவிட்டனர். எத்தனை முயற்சி
செய்திருக்கின்றார்கள், ஆனால், உங்கள் அனைவரிடம் எப்படிப்பட்ட
அதிகாரம் உள்ளது? அனைத்தைக்காட்டிலும் பெரிய பரமாத்ம
அனுபவத்தின் அதிகாரம் இருக்கின்றது. அனுபவத்தின்
அதிகாரத்தினால் சிரேஷ்டமாக மற்றும் சகஜமாக யாரை வேண்டுமானாலும்
மாற்ற முடியும். எனவே, உங்கள் அனைவரிடமும் விசேமாக அனுபவத்தின்
அதிகாரம் உள்ளது. ஆகையினால், எளிமையான வழி, யதார்த்தமான வழி
ஒன்று தான் உள்ளது என்று பெருமையோடு, நம்பிக்கையோடு, போதையோடு,
உறுதியான பாவனையோடு கூறுகின்றீர்கள் மற்றும் கூறுவீர்கள்.
ஒன்றின் மூலமாகத்தான் பிராப்தி கிடைக்கின்றது. மேலும்,
அனைவரையும் ஒன்றாக ஆக்குகின்றது. இந்த செய்தியை அனைவருக்கும்
கூறுகின்றீர்கள் அல்லவா. எனவே, பாப்தாதா இன்று ஆதாரமூர்த்தி,
விஷ்வ உத்தாரமூர்த்தி குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு இருக்
கின்றார்கள். பாருங்கள், பாப்தாதா கூடவே நிமித்தமாக யார்
ஆகியிருக்கின்றார்கள்? உலகத்திற்கே ஆதாரமாக இருக்கின்றீர்கள்,
ஆனால், ஆகியிருப்பது யார்? சாதாரணமானவர்கள். யார் உலக மக்களின்
பார்வையில் இருக்கின்றார்களோ, அவர்கள் பாபாவின் பார்வையில்
இல்லை மேலும், யார் பாபாவின் பார்வையில் இருக்கின்றார் களோ,
அவர்கள் உலகத்திலுள்ளவர்களின் பார்வையில் கிடையாது. உங்களைப்
பார்த்து முதலில் இவர்களா என்று புன்னகைப்பார்கள். ஆனால்,
உலகத்திலுள்ளவர்கள் செய்வதை பாபா செய்வதில்லை. அவர்களுக்கு
பெயர், புகழ் வேண்டும், ஆனால் தந்தையோ, யாருடைய பெயர் அடையாளம்
அழிந்துவிட்டதோ, அவர்களுடைய பெயரை புகழடையச் செய்கின்றார்.
அசம்பவத்தை சம்பவம் ஆக்குவது, சாதாரணமானவர்களை மஹான் ஆக்குவது,
பலமற்றவர்களை மஹான் பலவான் ஆக்குவது, உலகத்தின் கணக்குப்படி
யார் படிக்காதவர்களோ, அவர்களை ஞானம் நிறைந்தவர் ஆக்குவது - இது
தான் தந்தையினுடைய நடிப்பாகும். எனவே, பாப்தாதா குழந்தைகளின்
சபையைப் பார்த்து, அனைவரைக் காட்டிலும் உயர்வான பாக்கியத்தை
பிராப்தியாக அடையக்கூடிய இந்த தேடிக்கண்டெடுக்கப்பட்ட
குழந்தைகள் நிமித்தம் ஆகி இருக்கின்றார்கள் என்று
புன்முறுவலும் கூட செய்கின்றார். இப்பொழுது
உலகத்திலுள்ளவர்களின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக எல்லாப்
பக்கங்களிலிருந்தும் விடுபட்டு ஒன்றின் பக்கம் வந்து
கொண்டிருக்கின்றது. எதை நாம் செய்ய முடியவில்லையோ, அதை தந்தை
மறைமுகமான ரூபத்தில் செய்வித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை
இப்பொழுது புரிந்திருக்கின்றீர்கள். இப்பொழுது கும்ப மேளாவில்
என்ன பார்த்தீர்கள்? இதையே பார்த்தீர்கள் அல்லவா. எப்படி
அனைவரும் அன்பான பார்வையோடு பார்க்கின்றார்கள். இது கொஞ்சம்
கொஞ்சமாக பிரத்யட்சமாகியே தீர வேண்டும். தர்மத் தலைவர்,
இராஜ்யத் தலைவர், மற்றும் விஞ்ஞானி ஆகிய இந்த மூன்று விசேஷ
அதிகாரிகள் உள்ளனர். இப்பொழுது மூன்று பேருமே சாதாரண ரூபத்தில்
பரமாத்ம பொலிவைப் பார்ப்பதற்கான சிரேஷ்ட ஆசையோடு சமீபத்தில்
வந்து கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது கூட திரைக்குள்
இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், திரையை
விலக்கவில்லை. திரைக்குள் இருந்து பார்ப்பதற்கு காரணம்
இப்பொழுது மனக் குழப்பத்தில் இருக்கின்றனர். மனக் குழப்பம்
திரையாக இருக்கின்றது. இது தானா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா
என்ற குழப்பம் உள்ளது. ஆனாலும், பார்வையானது செல்கிறது.
இப்பொழுது திரை கூட விலகிவிடும். அனேகவிதமான திரைகள்
இருக்கின்றன. தலைமைப் பதவி, சிம்மாசனம் அல்லது நாற்காலியின்
திரை கூட மிகப் பெரியதாக இருக்கின்றது. இந்தத் திரையை
விலக்குவதற்கு சிறிது காலம் ஆகும். ஆனால், கண்கள்
திறந்துவிட்டன அல்லவா. கும்பகர்ணர்கள் இப்பொழுது கொஞ்சம்
விழித்திருக்கின்றார்கள்.
பாப்தாதா விஷ்வத்திலுள்ள அனைத்து ஆத்மாக்களை அதாவது குழந்தைகளை
தந்தையினுடைய ஆஸ்தியைப் பிராப்தம் செய்விக்கும் அதிகாரியாக
அவசியம் ஆக்குவார். எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி
ஆனால், அவர்கள் குழந்தைகளே. குழந்தைகளுக்கு முக்தி மற்றும்
ஜீவன்முக்தி ஆகிய இரண்டு ஆஸ்திகள் உள்ளன. ஆஸ்தி
கொடுப்பதற்காகத்தான் தந்தை வந்திருக்கின்றார். அறியாமல்
இருக்கின்றார்கள் அல்லவா. அவர்களுடைய குற்றமில்லை, ஆகவே,
உங்கள் அனைவருக்கும் இரக்கம் வருகின்றது அல்லவா! இரக்கமும்
வருகின்றது, எப்படியாவது ஆஸ்தியின் அதிகாரத்தை அனைத்து
ஆத்மாக்களும் அடைந்து விட வேண்டும் என்ற ஊக்கமும் வருகின்றது.
நல்லது. இன்று, கரீபியன் நாட்டினுடைய முறையாகும். அனைவரும்
பாப்தாதாவிற்கு மிகவும் செல்லமானவர்கள். ஒவ்வொரு இடத்தினுடைய
விசேஷத்தன்மை பாப்தாதாவிற்கு முன்னால் சதா பிரத்யட்சமாக
இருக்கின்றது. பாப்தாதாவிடம் ஒவ்வொரு குழந்தையின் முழுமையான
கணக்கு வழக்கு இருக்கின்றது. ஆனால், பாப்தாதாவிற்கு அனைத்து
குழந்தைகளைப் பார்த்து குஷி இருக்கின்றது. எந்த விசயத்தில்?
அனைத்துக் குழந்தைகளும் அவரவர் சக்தியின் அனுசாரம் சேவையின்
ஊக்கத்தோடு சதா இருக்கின்றார்கள். சேவை, பிராமண வாழ்க்கையின்
விசேஷ தொழில் ஆகிவிட்டது. சேவை இல்லையென்றால் இந்த பிராமண
வாழ்க்கை காலியாக (வெற்றிடமாக) தோன்றும். சேவை இல்லையென்றால்
ஃப்ரியாக (ஓய்வாக) இருப்பதாகும். சேவையில் சுறுசுறுப்பாக
இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து பாப்தாதா விசேஷமாக குஷி
அடைகின்றார்கள். கரீபியன் குழந்தைகளுடைய விசேஷத்தன்மை என்ன?
சதா அருகாமையில் இருக்கக்கூடியவர்கள். பாப்தாதா ஸ்தூலத்தைப்
பார்க்கவில்லை, சரீரத்தினால் எவ்வளவு தூரமாக இருந்தாலும்
மனதினால் அருகாமையில் இருக்கின்றீர்கள் அல்லவா. எந்தளவு
சரீரத்தினால் தூரமாக இருக்கின்றார்களோ, அந்தளவு விசேஷமாக
தந்தையின் துணையின் அனுபவம் செய்வதற்கான லிப்ட் கிடைக்கின்றது.
ஏனென்றால், நாலாபுறமும் இருக்கும் குழந்தைகள் பக்கம் தந்தையின்
பார்வை இருக்கின்றது. கண்களில் கலந்து இருக்கின்றார்கள்.
கண்களில் கலந்து இருப்பவர்கள் என்னவாக இருப்பார்கள்? தூரத்தில்
இருப்பார்களா? அல்லது அருகாமையில் இருப்பார்களா? அனைவரும்
நெருக்கமான இரத்தினங்கள் ஆவீர்கள். யாரும் தூரமாக இல்லை.
அருகாமையிலும் மேலும், அன்பானவராகவும் இருக்கின்றீர்கள்.
ஒருவேளை, அருகாமையில் இல்லையென்றால் ஊக்கம், உற்சாகத்தில் வர
முடியாது. சதா தந்தையின் துணையானது சக்திசாலி ஆக்கி
முன்னேற்றிக் கொண்டே இருக்கின்றது.
எவ்வளவு தைரியம் வைத்து சேவையில் விருத்தியைப் பிராப்தமாக
அடைந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று உங்கள் அனைவரையும்
பார்த்து அனைவரும் குஷி அடைந்து கொண்டிருக்கின்றார்கள்.
அனைத்தைக் காட்டிலும் பெரியதிலும் பெரிய மாலையை நாம் தயார்
செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் ஒரே சங்கல்பம் உள்ளதை
பாப்தாதா தெரிந்திருக்கின்றார்கள். மேலும், மாலையின் மணிகள்,
யாரெல்லாம், எங்கெல்லாம் சிதறிக் கிடக்கின்றார்களோ, அந்த
மணிகளை ஒன்று சேர்த்து மாலையாக்கி தந்தைக்கு எதிரில் அழைத்து
வருகின்றீர்கள். இப்பொழுது இந்த மலர்ச்செண்டு அல்லது மாலையை
தந்தைக்கு முன்னால் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற இந்த ஆர்வம்
முழு ஆண்டும் இருக்கின்றது. ஒரு வருடம் முழுவதும் தயார் செய்து
கொண்டே இருக்கின்றீர்கள். இந்த வருடம் பாப்தாதா அனைத்து
வெளிநாட்டு சேவைக் கேந்திரங்களினுடைய வளர்ச்சியின் ரிசல்ட்
(பலன்) நன்றாக இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒவ்வொருவரும் ஏதாவது ஏதாவது, அது சிறிய மலர்ச்செண்டோ அல்லது
பெரிய மலர்ச்செண்டோ, ஆனால், பிரத்யட்ச பலன் ரூபத்தில் கொண்டு
வந்திருக்கின்றார்கள். எனவே, பாப்தாதாவும் தங்களுடைய
கல்பத்திற்கு முந்தைய சிநேகி குழந்தைகளைப் பார்த்து குஷி
அடைகின்றார்கள். அன்பாக உழைத்தீர்கள். அன்பான உழைப்பு,
உழைப்பாக தெரியாது. ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் நல்ல குழு
வந்துள்ளது. சதா சேவையில் களைப்பற்றவராகி முன்னேறிக்
கொண்டிருக்கின்றீர்கள் என்பதுவே பாப்தாதாவிற்கு அனைத்தைக்
காட்டிலும் நல்ல விசயமாகத் தெரிகின்றது. ஒருபொழுதும்
மனச்சோர்வு அடையாமல் இருப்பதுவே சேவையில் வெற்றி அடைவதற்கான
விசேஷத்தன்மை ஆகும். இன்று குறைவாக இருக்கின்றோம், நாளை
அதிகமாகிவிடுவோம் என்ற இந்த நம்பிக்கை இருக்கின்றது. எனவே,
எங்கெல்லாம் தந்தையின் அறிமுகம் கிடைத்திருக்கின்றதோ,
தந்தையினுடைய குழந்தைகள் நிமித்தமாகி இருக்கின்றார்களோ,
அங்கெல்லாம் அவசியம் தந்தையினுடைய குழந்தைகள் மறைந்து
இருக்கின்றார்கள். அவர்கள் நேரத்தின் அனுசாரம் தன்னுடைய
உரிமையை அடைவதற்காக வந்தடைந்து கொண்டிருக்கின்றார்கள், மேலும்,
வந்தடைந்து கொண்டேயிருப்பார்கள். ஆகவே, அனைவரும் குஷியில்
நடனம் ஆடக்கூடியவர்கள். சதா குஷியாக இருக்கக்கூடியவர்கள்.
தந்தை அழிவற்றவர், குழந்தைகள் அழிவற்றவர்கள், எனில்,
பிராப்தியும் கூட அழிவற்றதாக இருக்கும். குஷி கூட அழிவற்றதாக
இருக்கின்றது. எனவே, நீங்கள் சதா குஷியாக இருப்பவர்கள்,
எப்பொழுதும் மிக நல்லதிலும் நல்லவர்களாக இருப்பவர்கள்
ஆவீர்கள். வீணானது அழிந்துவிட்டதென்றால் மீதம் நல்லதிலும்
நல்லது தான் மீதம் இருக்கும். பாபாவினுடையவர் ஆகுவது என்றால்
சதா காலத்திற்காக அழிவற்ற பொக்கிஷத்திற்கு அதிகாரி ஆகுவது
என்று அர்த்தம். ஆகையினால், அதிகாரி வாழ்க்கை சிறப்பான
வாழ்க்கையாக இருக்கின்றதல்லவா.
கரீபிய நாட்டில் சேவைக்கு அஸ்திவாரமாக விசேஷ விசேஷமான
ஆத்மாக்கள் இருந்தார்கள். அரசாங்க சேவைக்கான அஸ்திவாரம்
கயானாவில் தான் போடப்பட்டது அல்லவா. மேலும், அரசாங்கம்
வரைக்கும் இராஜயோகத்தின் விசேஷத்தன்மையின் சப்தத்தைப்
பரப்புவது என்பது கூட விசேஷத்தன்மை ஆகும். அரசாங்கம் கூட
மூன்று நிமிடங்கள் அமைதியாக இருப்பதற்கான முயற்சி செய்து
கொண்டிருந்தது அல்லவா. அரசாங்கத்தை சமீபத்தில் கொண்டு
வருவதற்கான வாய்ப்பு இங்கிருந்து தான் ஆரம்பம் ஆனது, மேலும்,
ரிசல்ட் கூட நன்றாக வெளிப்பட்டிருக்கின்றது மற்றும் இப்பொழுது
கூட வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கரீபியன் குழந்தைகள்
சேவையில் விசேஷமாக வி.ஐ.பி.-க்களையும் (முக்கியஸ்தர்கள்) தயார்
செய்திருக்கின்றீர்கள். அந்த ஒருவர் மூலம் அநேகருடைய சேவை
நடந்துக் கொண்டிருக்கின்றது. இது கூட விசேஷத்தன்மை ஆகும்
அல்லவா. அழைப்பு கூட விதிப்பூர்வமாக வி.ஐ.பி. ரூபத்தில்
கிடைத்திருக்கின்றது, இதற்கு முதலில் நிமித்தமாக கரீபியன் தான்
ஆகியுள்ளது. இன்று நாலாபுறமும் முன்னுதாரணம் ஆகி அனேகருக்கு
ஊக்கத்தின் தூண்டுதல் கொடுக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளீர்கள்.
இதன் பலன் கூட அனைவருக்கும் கிடைக்கும் அல்லவா. இப்பொழுது கூட
அரசாங்கத்தின் தொடர்பில் இருக்கின்றார்கள். இது கூட சமீபமான
தொடர்பில் வருவதற்கான ஒரு விதியாகும். இன்னும் கொஞ்சம்
ஞானயுக்த்தாகி தொடர்பில் வந்து கொண்டியிருந்தாலும் விடுபட்டு
இருக்கும் தன்மையினுடைய சேவையை அனுபவம் செய்விக்க முடியும்.
எந்த ஒரு கூட்டத்திலும் எந்த நேரத்திலும் சேவைக்கு நிமித்தம்
ஆகலாம், அது லௌகீக விசயங்களானாலும் சரி, ஆனால், லௌகீக
விசயங்களில் கூட அப்படிப்பட்ட தன்மையுடன் வார்த்தைகளைப் பேச
வேண்டும், அதன்மூலம் விடுபட்ட நிலையின் அனுபவமும் ஏற்பட
வேண்டும் மற்றும் அன்பான நிலையின் அனுபவமும் ஏற்பட வேண்டும்.
எனவே, அனைவரின் கூடவே இருந்தாலும் தனது விடுபட்ட மற்றும்
அன்பான தன்மையை காண்பிக்க முடிவதற்கான ஒரு வாய்ப்பாக இது
இருக்கின்றது. எனவே, இந்த விதியை இன்னும் கொஞ்சம் கவனம்
கொடுத்து சேவை யினுடைய சாதனத்தை சிரேஷ்டமானதாக ஆக்க முடியும்.
இது கூட கயானாவைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு
கிடைத்திருக்கின்றது. ஆரம்பத்திலிருந்தே சேவையினுடைய
வாய்ப்பிற்கான லாட்டரி (பரிசுச் சீட்டு) கிடைத்து உள்ளது.
அனைத்து இடத்தினுடைய வளர்ச்சி நன்றாக இருக்கின்றது. இப்பொழுது
இன்னும் ஒரு விசேஷத்தன்மையை கொண்டு வாருங்கள் - அங்கு புகழ்
வாய்ந்த பண்டிதர்கள் யார் இருக்கின்றார்களோ, அவர்களிலிருந்து
சிலரைத் தயார் ஆக்குங்கள். ட்ரினிடாடு, கயானாவில் பண்டிதர்கள்
நிறைய இருக்கின்றார்கள். அவர்கள் பிறகு நெருக்கமானவர்கள்
ஆகிவிட்டனர். பாரதத்தின் தத்துவங்களை
ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கின்றார்கள் அல்லவா. எனவே,
இப்பொழுது பண்டிதர்களின் குழுவைத் தயார் செய்யுங்கள். எவ்வாறு
இப்பொழுது ஹரித்துவாரில் சாதுக்களின் குழு தயார் ஆகிக்கொண்டு
இருக்கின்றதோ, அவ்வாறு இங்கிருந்து பண்டிதர்களின் குழுவைத்
தயார் செய்யுங்கள். அன்பினால் அவர்களை தன்னுடையவராக ஆக்க
முடியும். முதலில் அன்பினால் அவர்களை சமீபத்தில் கொண்டு
வாருங்கள். ஹரித்துவாரில் கூட அன்பினுடைய பலன் தான்
கிடைத்துள்ளது. சினேகம் மதுபன் வரை வரவழைத்துவிட்டது. ஆகவே,
மதுபன் வரை வந்துவிட்டார்கள் என்றால் ஞானம் வரைக்கும்
வந்துவிடுவார்கள். எங்கே செல்வார்கள்? எனவே, இப்பொழுது இதை
செய்து காண்பியுங்கள். நல்லது.
ஐரோப்பியர்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? எண்ணிக்கையினால்
சிறியது என்று சொல்லிவிட முடியாது. எண்ணிக்கை என்னவாக
இருந்தாலும், தரம் நன்றாக இருக்கின்றது. எனவே, முதல் எண்ணில்
உள்ளீர்கள். யார் எதைக் கொண்டு வரவில்லையோ, அதை நீங்கள் கொண்டு
வர முடியும். ஒன்றும் பெரிய விசயம் அல்ல, தைரியம் உள்ள
குழந்தைகளுக்கு தந்தையின் உதவி கிடைக்கும். குழந்தைகளுக்கு
தைரியம் இருக்கிறது என்றால் முழு பரிவாரத்தினுடைய,
பாப்தாதாவினுடைய உதவி இருக்கின்றது, எனவே, ஒன்றும் பெரிய
விசயம் அல்ல. என்ன விரும்புகின்றீர்களோ, அதை செய்ய முடியும்.
இறுதியில் அனைவரும் வர வேண்டியதோ ஒரே ஒரு புகலிடத்திற்குத்
தான். சிலர் இப்பொழுது வருவார்கள், சிலர் கொஞ்சம் தாமதமாக
வருவார்கள். வரவே செய்வார்கள். எவ்வளவு தான் குஷியாக
இருந்தாலும் பிறகும் ஏதாவது ஏதாவது பிராப்தியின் இச்சை
இருக்கின்ற தல்லவா. சூழ்நிலை நன்றாக இருக்கின்றது, ஆகையால்,
குழப்பம் இல்லை. ஆனாலும் கூட எதுவரை ஞானம் இல்லையோ, அதுவரை
அழியக்கூடிய இச்சைகள் ஒருபோதும் பூர்த்தி ஆகாது. ஒரு ஆசைக்குப்
பின்னால் மற்றொரு ஆசை உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே,
ஆசையானது சதா திருப்தியை அனுபவம் செய்யவிடாது. ஆகவே, யாருக்கு
துக்கம் இல்லையோ, அவர்களுக்கு ஈஸ்வரிய சுயநலமற்ற அன்பு என்பது
என்ன, அன்பான வாழ்க்கை என்றால் என்ன? ஆத்ம சினேகம், பரமாத்ம
சினேகம் என்பதன் அனுபவம் இருக்காது. எவ்வளவு தான் அன்பு
இருந்தாலும் சரி, ஆனால், சுயநலமற்ற அன்பு எங்கேயும் இல்லை.
உண்மையான அன்பு இல்லவே இல்லை. ஆகவே, உண்மையான உள்ளத்தின்,
அன்பான பரிவாரத்தின் அன்பு அனைவருக்கும் தேவைப்படுகிறது.
அப்படிப்பட்ட பரிவாரம் எங்கே கிடைக்க முடியும்? எந்த
விசயத்தினுடைய அபிராப்தியின் அனுபவம் இருக்கிறதோ, அந்த
பிராப்தியின் மீது கவர்ச்சி ஏற்படும்படி அவர்களுக்கு புரிய
வையுங்கள். நல்லது.
அனைவரும் விசேஷ ஆத்மாக்கள்
ஆவீர்கள். ஒருவேளை விசேஷத்தன்மை இல்லையென்றால் பிராமண ஆத்மா ஆகி
இருக்க முடியாது. விசேஷத்தன்மை தான் பிராமண வாழ்க்கையைக்
கொடுத்துள்ளது. எல்லாவற்றையும் விட பெரிய விசேஷத்தன்மை
என்னவென்றால் கோடியிலும் ஒரு சிலர் அந்த ஒரு சிலரிலும் ஒருவர்
நீங்கள் என்பதாகும். ஆகையினால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியான
விசேஷத்தன்மை உள்ளது. முழுநாளும் தந்தை மற்றும் சேவையின் மீது
ஈடுபாடு உள்ளது அல்லவா. லௌகீக காரியத்தை நிமித்த மாத்திரம்
செய்ய வேண்டி இருக்கின்றது. ஆனால், உள்ளத்தின் ஈடுபாடு நினைவு
மற்றும் சேவையில் இருக்க வேண்டும். நல்லது.
வரதானம்:
சதா உண்மையான வீடு மற்றும்
உண்மையான சொரூபத்தின் நினைவிலிருந்து உபராம் (கடந்து இருப்பவர்),
விடுபட்டவர், அன்பானவர் ஆகுக.
நிராகாரி உலகம் மற்றும் நிராகாரி
உருவத்தின் நினைவு தான் சதா நியாரா மற்றும் பியாரா (விடுபட்ட
மற்றும் அன்பானவர்) ஆக்குகின்றது. நாம் நிராகார உலகத்தின்
நிவாசிகள், இங்கு சேவைக்காக அவதாரம் செய்திருக்கின்றோம். நாம்
இந்த மரண உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆனால், அவதரித்து
இருப்பவர்கள் ஆவோம். இந்த சிறிய விசயம் மட்டும் நினைவு இருந்தது
என்றால் உபராம் ஆகிவிடுவீர்கள். யார் அவதாரம் என்று புரிந்து
கொள்ளாமல் கிரகஸ்தி - குடும்பஸ்தன் என புரிந்திருக்கிறார்களோ,
அவர்களுடைய குடும்பம் என்ற வண்டி சகதியில் மாட்டி இருக்கின்றது.
குடும்பஸ்தன் என்பது சுமையான நிலை மற்றும் அவதாரம் என்பது
முற்றிலும் லேசான நிலையாகும். அவதாரம் என்று புரிந்து கொள்வதால்
தன்னுடைய உண்மையான வீடு, உண்மையான சொரூபம் நினைவில் இருக்கும்,
மேலும், உபராம் ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
யார் சுத்தம் மற்றும்
விதிப்பூர்வமாக ஒவ்வொரு காரியமும் செய்கின்றார்களோ, அவர்களே
பிராமணன் ஆவார்கள்.
ஓம்சாந்தி