14.08.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களை
ஞான ரத்தினங்களால் அலங்கரித்து வீட்டுக்குத் திரும்ப அழைத்துச்
செல்வதற்காக பாபா வந்துள்ளார். பிறகு இராஜ்யத்தில் அனுப்பி
வைப்பார். அதனால் அளவற்ற குஷியில் இருங்கள். ஒரு பாபாவிடம்
மட்டும் அன்பு வையுங்கள்.
கேள்வி :
தனது தாரணையை வலிமையுள்ளதாக (உறுதியாக)
ஆக்குவதற்கான ஆதாரம் எது?
பதில் :
தனது தாரணையை வலிமையுள்ளதாக
ஆக்குவதற்கு சதா இதை உறுதி செய்து கொள்ளுங்கள் - இன்றைய நாள்
என்ன நடந்ததோ, அது நல்லதாகவே நடந்தது. அது பிறகு கல்பத்திற்குப்
பின் நடக்கும். என்னென்ன நடந்ததோ, அதெல்லாம் கல்பத்திற்கு
முன்பும் கூட இவ்வாறே நடந்தது. எதுவும் புதிதல்ல. இந்த
யுத்தமும் 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. மீண்டும் அவசியம்
நடைபெறும். இந்த வைக்கோல் குவியல் (பழைய உலகம் மற்றும் உடல்)
அழியத் தான் போகின்றது......... இதுபோல் ஒவ்வொரு விநாடியும்
டிராமாவின் நினைவில் இருப்பீர்களானால் தாரணை வலிமையுள்ளதாக
ஆகிக் கொண்டே செல்லும்.
பாடல் :
தூரதேசத்தில் வசிப்பவர்....
ஓம் சாந்தி.
குழந்தைகள் இதற்கு முன்பும்
தூரதேசத்திலிருந்து வேறொரு தேசத்திற்கு வந்துள்ளனர். இப்போது
இந்த அன்னிய தேசத்தில் துக்கமடைந்துள்ளனர். அதனால்
அழைக்கின்றனர், தங்களுடைய தேசமாகிய வீட்டுக்கு அழைத்துச்
செல்லுங்கள் என்று. இது உங்களுடைய அழைப்பு தான் இல்லையா? நீண்ட
காலமாக நினைவு செய்தே வந்திருக்கிறீர்கள். அதனால் பாபாவும்
குஷியோடு வருகிறார். நாம் குழந்தைகளிடம் செல்கிறோம் என்பதை
அறிந்துள்ளார். எந்தக் குழந்தைகள் காம சிதையில் அமர்ந்து
எரிந்து விட்டுள்ளனரோ, அவர்களை வீட்டுக்கும் அழைத்துச் செல்வேன்.
பிறகு இராஜ்யத்தில் அனுப்பி வைப்பேன். அதற்காக ஞானத்தால்
அலங்கரிக் கவும் செய்வேன்(என்று கூறுகிறார்). குழந்தைகளும்
தந்தையைக் காட்டிலும் அதிகம் குஷியடைய வேண்டும். பாபா
வந்துள்ளார் என்றால் அவருடையவர்களாக ஆக வேண்டும். அவர் மீது
மிகுந்த அன்பு செலுத்த வேண்டும். பாபா தினந்தோறும் புரிய
வைக்கிறார். ஆத்மா பேசுகிறது இல்லையா? பாபா 5000 ஆண்டுகளுக்குப்
பிறகு டிராமாவின் அனுசாரம் நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
எங்களுக்கு மிகுந்த குஷியின் கஜானா கிடைத்துக் கொண்டிருக்கிறது.
பாபா, நீங்கள் எங்களுடைய பையை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
எங்களைத் தங்களின் வீடு, சாந்திதாமத்திற்கு அழைத்துச்
செல்கிறீர்கள். பிறகு இராஜதானிக்கு அனுப்பி வைப்பீர்கள்.
எவ்வளவு அளவற்ற குஷி இருக்க வேண்டும்! பாபா சொல்கிறார், நான்
இந்த வேறொரு இராஜதானியில் தான் வர வேண்டும் என்று இருக்கிறது.
பாபாவுக்கு மிக இனிமையான மற்றும் அற்புதமான பார்ட் உள்ளது.
அதுவும் குறிப்பாக இந்த வேறொரு (மாற்றான்) தேசத்தில்
வந்துள்ளார் எனும் போது. இவ்விஷயங்களை நீங்கள் இப்போது தான்
புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பிறகு இந்த ஞானம் மறைந்து போகும்.
அங்கே இதற்கான அவசியமே இருக்காது. பாபா சொல்கிறார், நீங்கள்
எவ்வளவு புத்தியற்றவர்களாக ஆகியிருக்கிறீர்கள்! டிராமாவின்
நடிகர்களாக இருந்த போதிலும் தந்தையைப் பற்றி அறியாதிருந்தீர்கள்.
எந்த தந்தையானவர் செய்பவர்- செய்விப்பவராக இருக்கிறாரோ, அவர்
எதைச் செய்கிறார், எதைச் செய்விக்கிறார் என்பதை மறந்து
விட்டிருக்கிறீர்கள். பழைய உலகம் முழுவதையும் சொர்க்கமாக
ஆக்குவதற்காக வருகிறார், ஞானம் தருகிறார். அவர் ஞானக்கடலாக
உள்ளார் என்றால் அவசியம் ஞானம் தருகின்ற காரியத்தைச் செய்வார்
இல்லையா? பிறகு உங்கள் மூலமாகச் செய்விக்கவும்
செய்கிறார்-மற்றவர்களுக்கும் செய்தி கொடுங்கள், தந்தை
அனைவருக்குமே சொல்கிறார், இப்போது தேக உணர்வை விட்டு என்னை
நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகி விடும். நான்
ஸ்ரீமத் தருகிறேன். அனைவருமே பாவாத்மாக்கள் தான். இச்சமயம் மரம்
முழுவதும் தமோபிரதான், இற்றுப்போன நிலையை அடைந்துள்ளது. எப்படி
மூங்கில் காட்டை நெருப்பு பற்றிக் கொண்டால் முற்றிலும்
முழுவதுமாக எரிந்து அழிந்து விடுகிறது. காட்டில் தண்ணீர்
எங்கிருந்து வரும், நெருப்பை அணைப்பதற்கு? இந்தப் பழைய உலகம்
முழுவதையும் தீப்பற்றிக் கொள்ளும். பாபா சொல்கிறார் - எதுவும்
புதிதல்ல. பாபா நல்ல-நல்ல பாயின்ட்டு களைக் கொடுத்துக் கொண்டே
இருக்கிறார். அவற்றைக் குறித்து வைக்க வேண்டும். பாபா புரிய
வைத்துள்ளார், மற்ற தர்ம ஸ்தாபகர்கள் அவர்களின் தர்மங்களை
மட்டும் ஸ்தாபனை செய்வதற்காக வருகின்றனர். அவர்களைப் பைகம்பர்,
மெசஞ்சர் (தூதுவர்) என்றெல்லாம் எதுவும் சொல்ல முடியாது.
இதையும் மிகவும் யுக்தியுடன் எழுத வேண்டும். சிவபாபா
குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் - குழந்தைகளோ
அனைவரும் தான், அனைவரும் சகோதரர்கள். ஆக, ஒவ்வொரு
சித்திரத்திலும் ஒவ்வொரு வாசகத்திலும் அவசியம் எழுத வேண்டும் -
சிவபாபா இதுபோல் புரிய வைக்கிறார் என்று. பாபா சொல்கிறார்,
குழந்தைகளே, நான் வந்து சத்யுக ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தை
ஸ்தாபனை செய்கிறேன். அதில் நூறு சதவிகிதம்
சுகம்-சாந்தி-பவித்திரதா அனைத்தும் இருக்கும். அதனால் அது
சொர்க்கம் எனச் சொல்லப்படுகின்றது. அங்கே துக்கத்தின் பெயரே
இருக்காது. மற்ற தர்மங்கள் அனைத்தையும் விநாசம் செய்விப்பதற்கு
நிமித்தமாக ஆகிறேன். சத்யுகத்தில் இருப்பதே ஒரு தர்மம் . அது
புது உலகம். பழைய உலகத்தை அழிக்கச் செய்கிறேன். இதுபோன்ற வேலையோ
வேறு யாரும் செய்வதில்லை. சங்கர் மூலம் விநாசம் எனச்
சொல்லப்படுகின்றது. விஷ்ணுவும் லட்சுமி-நாராயணர் தான்.
பிரஜாபிதா பிரம்மாவோ இங்கேயே இருக்கிறார். இவரே தூய்மையான ஃபரிஸ்தா
ஆகிறார். அதனால் பிறகு பிரம்ம தேவதா எனச் சொல்லப் படுகிறார்.
அவர் மூலம் தேவி-தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகின்றது. இந்த (பிரம்மா)
பாபாவும் தேவி-தேவதா தர்மத்தின் முதல் இளவரசராக ஆகிறார். ஆக,
பிரம்மா மூலம் ஸ்தாபனை, சங்கர் மூலம் விநாசம். சித்திரமோ
கொடுக்க வேண்டும் இல்லையா? புரிய வைப்பதற்காக இந்தச்
சித்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் அர்த்தம்
யாருக்கும் தெரியாது. சுயதரிசனச் சக்கரதாரி பற்றியும் புரிய
வைக்கப்பட்டுள்ளது - பரமபிதா பரமாத்மா சிருஷ்டியின்
முதல்-இடை-கடை பற்றி அறிந்துள்ளார். அவரிடம் முழு ஞானம் உள்ளது
என்றால் சுயதரிசனச் சக்கரதாரி ஆகிறார் இல்லையா? நாம் தான் இந்த
ஞானத்தைச் சொல்கிறோம் என்று அறிந்துள்ளார். பாபாவோ, தாமரை மலர்
போல் நான் ஆக வேண்டும் எனச் சொல்ல மாட்டார். சத்யுகத்தில்
நீங்கள் தாமரை மலர் போலத்தான் இருக்கிறீர்கள். சந்நியாசிகளுக்கு
இதைச் சொல்ல மாட்டார்கள். அவர்களோ, காட்டுக்குச் சென்று
விடுகின்றனர். பாபாவும் சொல்கிறார், அவர்கள் முதலில் பவித்திர
சதோபிரதானமாக உள்ளனர். பாரதத்தைப் பவித்திரதாவின் பலத்தினால் (முற்றிலும்
வீழ்ந்து விடாதவாறு) நிறுத்தி வைக்கின்றனர். பாரதத்தைப் போன்ற
பவித்திர தேசம் வேறு கிடையாது. எப்படி பாபாவுக்கு மகிமை உள்ளதோ,
அதுபோல் பாரதத்திற்கும் மகிமை உள்ளது. பாரதம் சொர்க்கமாக
இருந்தது. இந்த லட்சுமி-நாராயணர் இராஜ்யம் செய்தனர். பிறகு
எங்கே சென்றனர்? இதை இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
இந்த தேவதைகள் தான் 84 பிறவிகளை எடுத்துப் பிறகு பூஜாரி
ஆகின்றனர் என்பது வேறு யாருடைய புத்தியிலும் இருக்காது. இப்போது
உங்களுக்கு முழுமையான ஞானம் உள்ளது. நாம் இப்போது பூஜைக்குரிய
தேவி-தேவதா ஆகிறோம், பிறகு பூஜாரி மனிதர்களாக ஆவோம். மனிதர்களோ
மனிதர்களாகத் தான் இருப்பார்கள். இப்படி விதவிதமாக
உருவாக்கப்பட்டுள்ள சித்திரங்கள் போல் எந்த ஒரு மனிதரும்
இருப்பதில்லை. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் ஏராளமான
சித்திரங்கள். உங்களுடைய ஞானமோ குப்தமாக உள்ளது. இந்த ஞானத்தை
அனைவரும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். யார் இந்த தேவி-தேவதா
தர்மத்தின் இலைகளாக (சார்ந்தவர்களாக) இருப்பார்களோ, அவர்கள்
பெற்றுக் கொள்வார்கள். மற்றப்படி மற்றவர்களை ஏற்றுக்
கொள்பவர்கள் கேட்க மாட்டார்கள். யார் சிவனுக்கும்
தேவதைகளுக்கும் பக்தி செய்கிறார்களோ, அவர்கள் தான் வருவார்கள்.
முதல்-முதலில் எனக்கும் பூஜை செய்கின்றனர், பிறகு பூஜாரி ஆகி,
தனக்கே கூடப் பூஜை செய்கின்றனர். ஆக, இப்போது குஷி ஏற்படுகிறது,
நாம் பூஜைக்குரிய நிலையில் இருந்து பூஜாரி ஆனோம், இப்போது
மீண்டும் பூஜைக்குரியவர்களாக ஆகின்றோம். எவ்வளவு குஷி
கொண்டாடுகின்றனர்! இங்கோ அல்ப காலத்திற்கு மகிழ்ச்சி
கொண்டாடுகின்றனர். அங்கோ உங்களுக்கு சதா காலமும் மகிழ்ச்சி
நிறைந்திருக்கும். அங்கே (தீபமாலா) தீபாவளி முதலியவை லட்சுமியை
அழைப்பதற்காக இல்லை. முடிசூட்டு விழாவுக்காக தீபமாலா இருக்கும்.
மற்றப்படி இச்சமயம் என்ன பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றனவோ, அவை
அங்கே இருக்காது. அங்கோ சுகத்தின் மேல் சுகம் இருக்கும். இந்த
ஒரு சமயத்தில் தான் நீங்கள் முதல்-இடை-கடை பற்றி
அறிந்திருக்கிறீர்கள். இந்தப் பாயின்ட்டுகள் அனைத்தையும்
எழுதுங்கள். சந்நியாசிகளினுடையது ஹடயோகம். இது இராஜயோகம். பாபா
சொல்கிறார், ஒவ்வொரு பக்கத்திலும் அங்கங்கே சிவபாபாவின் பெயர்
அவசியம் இருக்க வேண்டும். சிவபாபா குழந்தைகளாகிய நமக்குப்
புரிய வைக்கிறார். நிராகார் ஆத்மாக்கள் இப்போது சாகாரில் (சரீரத்தில்)
அமர்ந்துள்ளனர். ஆகவே பாபாவும் சாகாரில் பிரவேசித்து புரிய
வைப்பார் இல்லையா? அவர் சொல்கிறார், தன்னை ஆத்மா என உணர்ந்து
என்னை நினைவு செய்யுங்கள். சிவபகவான் குழந்தைகளுக்குச்
சொல்கிறார். அவர் தாமே இங்கே முன்பாக வந்திருக்கிறார் இல்லையா?
மிக முக்கியமான பாயின்ட்டுகள் புத்தகத்தில் அப்படித் தெளிவாக
எழுதப்பட்டிருக்க வேண்டும். அதைப் படிப்பதன் மூலம் தானாகவே
ஞானம் வந்துவிட வேண்டும். சிவபகவான் வாக்கு எனும்போது அதைப்
படிப்பதன் மூலம் மஜா வந்து விடும். இது புத்தியின் வேலை இல்லையா?
பாபாவும் சரீரத்தைக் கடனாகப் பெற்றுப் பிறகு அதன் மூலம்
சொல்கிறார் இல்லையா? இவருடைய (பிரம்மா) ஆத்மாவும் கூட
கேட்கின்றது குழந்தைகளுக்கு நஷா அதிகம் இருக்க வேண்டும். பாபா
மீது மிகுந்த அன்பு இருக்க வேண்டும். இதுவோ அவருடைய ரதம். இது
அநேகப் பிறிவிகளின் கடைசிப் பிறவி. இவருக்குள்
பிரவேசமாகியுள்ளார். பிரம்மா மூலம் இவர்கள் பிராமணர் ஆகிறார்கள்.
பிறகு மனிதரில் இருந்து தேவதை ஆகின்றனர். சித்திரம் எவ்வளவு
தெளிவாக உள்ளது! தனது சித்திரத்தையும் கொடுங்கள், மேலே அல்லது
பக்கத்தில், இரட்டைக் கிரீடம் அணிந்தவராக. யோக பலத்தித்தினால்
நாம் இதுபோல் ஆகிறோம். மேலே சிவபாபா இருக்க வேண்டும். அவரை
நினைவு செய்து-செய்தே மனிதரில் இருந்து தேவதை ஆகி விடுகின்றனர்.
முற்றிலும் தெளிவாக உள்ளது. வண்ணச் சித்திரங்களின் புத்தகம்
அதுபோல் இருக்க வேண்டும் - மனிதர்கள் பார்த்ததும் குஷியடைய
வேண்டும். அதில் பிறகு கொஞ்சம் (சாதாரணமா) அச்சிட முடியும்,
ஏழைகளுக்காக. பெரியதிலிருந்து சிறியதாக, சிறியதிலிருந்து
இன்னும் சிறியதாகச் செய்ய முடியும். இரகசியம் அதில் வந்துவிட
வேண்டும். கீதாவின் பகவான் பற்றிய சித்திரம் முக்கியமானதாகும்.
அந்த கீதையில் கிருஷ்ணரின் சித்திரம், இந்த கீதையில்
திரிமூர்த்தியின் சித்திரம் இருந்தால் மனிதர்களுக்குப் புரிய
வைப்பதற்கு சுலபமாக இருக்கும். பிரஜாபிதா பிரம்மாவின்
குழந்தைகள் இங்கே உள்ளனர். பிரஜாபிதா பிரம்மாவோ
சூட்சுமவதனத்தில் இருக்க முடியாது. பிரம்ம தேவதாய நமஹ, விஷ்ணு
தேவதாய நமஹ எனச்சொல்கின்றனர். இப்போது தேவதைகளாக யார்
இருக்கின்றனர்? தேவதைகளோ இங்கே இராஜ்யம் செய்தனர். தேவதா தர்மமோ
உள்ளது இல்லையா? ஆக, இவையனைத்தையும் நன்கு புரிய வைக்க
வேண்டியுள்ளது. பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து
பிரம்மா, இருவரும் இங்கே உள்ளனர். சித்திரங்கள் உள்ளன என்பதால்
புரிய வைக்கப்படுகின்றது. முதல்-முதலில் தந்தை பற்றித்
தெளிவுபடுத்தினால் அனைத்து விஷயங்களும் தெளிவாகி விடும்.
பாயின்ட்டுகளோ அநேகம் உள்ளன. மற்ற அனைவரும் தர்ம ஸ்தாபனை
செய்வதற்காக வருகின்றனர். பாபாவோ ஸ்தாபனை, விநாசம் இரண்டையுமே
செய்விக்கிறார். அனைத்துமே டிராமாவின் அனுசாரம் தான்
நடைபெறுகின்றன. பிரம்மா பேச முடியுமா, விஷ்ணு பேச முடியுமா?
சூட்சுமவதனத்தில் என்ன பேசுவார்கள்? இவையனைத்தும் புரிந்து
கொள்வதற்கான விஷயங்கள். இங்கே நீங்கள் புரிந்து கொண்டு பிறகு
மேல் வகுப்பிற்கு டிரான்ஸ்ஃபர்(மாற்றல்) ஆகிறீர்கள். அடுத்த
வகுப்பறை கிடைக்கிறது. மூலவதனத்தில் யாரும் (நிரந்தரமாக)
அமர்ந்திருக்கவோ முடியாது. பிறகு அங்கிருந்து நம்பர்வார் வர
வேண்டியுள்ளது. முதல்-முதல் முக்கிய விஷயம் ஒன்று தான். அதற்கு
முக்கியத்துவம் கொடுத்து எடுத்துச் சொல்ல வேண்டும்.
கல்பத்திற்கு முன்பும் கூட இதுபோல் நடைபெற்றது. இந்தக்
கருத்தரங்கம் முதலானவை கூட கல்பத்திற்கு முன் நடைபெற்றன.
இதுபோல் பாயின்ட்டுகள் வெளிப்பட்டன. கடந்து போன இன்றைய தினம்
நல்லதாகவே நடந்தது. மீண்டும் கல்பத்திற்குப் பிறகு இவ்வாறே
நடைபெறும். இப்படி-இப்படி தனது தாரணையைச் செய்து கொண்டு
பக்குவமடைந்து கொண்டே செல்லுங்கள். பாபா சொல்லி யுள்ளார்,
புத்தக வடிவிலும் கூடப்போடுங்கள்-இந்த யுத்தம் நடைபெற்றிருந்தது,
எதுவும் புதிதல்ல. 5000 ஆண்டு களுக்கு முன்பும் கூட இதுபோல்
நடைபெற்றது. இவ்விசயங்களை நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள்.
வெளி யிலுள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியாது. (நீங்கள் சொல்கிற)
விசயங்களோ அற்புதமானவை என்று மட்டும் சொல்லி விடுவார்கள்.
நல்லது, எப்போதாவது போய்ப் புரிந்து கொள்வார்கள். சிவபகவான்
குழந்தைகளுக்குச் சொல்கிறார். இப்படி-இப்படி வார்த்தைகள்
இருக்குமானால் வந்து புரிந்து கொள்ளவும் செய்வார்கள். பிரஜாபிதா
பிரம்மாகுமார் குமாரிகள் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது.
பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் தான் பிராமணர்களைப் படைக்கிறார்.
பிராமண் தேவி-தேவதாய நமஹ எனச் சொல்கின்றனர் இல்லையா? எந்த
பிராமணர்கள்? நீங்கள் (கலியுக) பிராமணர்களுக்கும் கூடப் புரிய
வைக்க முடியும், பிரம்மாவின் குழந்தைகள் யார் என்று. பிரஜாபிதா
பிரம்மாவுக்கு இவ்வளவு குழந்தைகள் என்றால் நிச்சயமாக இங்கே
தத்தெடுக்கப் பட்டவர்களாக இருப்பார்கள். யார் தங்களுடைய
குலத்தைச் சேர்ந்தவர்களோ, அவர்கள் நல்லபடியாகப் புரிந்து
கொள்வார்கள். நீங்களோ, தந்தையின் குழந்தைகளாக ஆகி விட்டீர்கள்.
தந்தை பிரம்மாவையும் தத்தெடுக்கிறார். இல்லையென்றால் சரீரம்
உள்ள பொருள் எங்கிருந்து வந்தது? பிராமணர்கள் இந்த விசயங்களைப்
புரிந்து கொள்வார்கள். சந்நியாசிகள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
அஜ்மீரில் பிராமணர்கள் உள்ளனர். ஹரித்வாரில் ஒரே சந்நியாசிகள்
மயம் தான். வழிகாட்டிகளாக பிராமணர்கள் உள்ளனர். ஆனால் அவர்களோ
பட்டினியில் உள்ளனர். அவர்களுக்குச் சொல்லுங்கள், நீங்களோ
இப்போது சரீர சம்மந்தமான வழிகாட்டிகள், இப்போது ஆன்மிக
வழிகாட்டி ஆகுங்கள். உங்களுக்கும் வழிகாட்டி என்று தான் பெயர்.
பாண்டவ சேனையையும் கூடப் புரிந்து கொள்வதில்லை. பாபா,
பாண்டவர்களின் தலைவர். பாபா சொல்கிறார், ஹே குழந்தைகளே, என்னை
மட்டுமே நினைவு செய்யுங்கள். அப்போது விகர்மங்கள் விநாசமாகும்.
மேலும் உங்கள் வீட்டுக்குச் சென்று விடுவீர்கள். பிறகு
அமரபுரிக்கான பெரிய யாத்திரை நடைபெறும். மூலவதனத்திற்கு எவ்வளவு
பெரிய யாத்திரை இருக்கும்! முழுவதுமாக அனைத்து ஆத்மாக்களும்
சென்று விடும். எப்படி தேனீக்களின் கூட்டம் செல்கிறது இல்லையா?
தேனீக்களின் ராணி ஓடினால் அதன் பின்னால் அனைத்தும் ஓடுகின்றன.
அதிசயம் இல்லையா? ஆத்மாக்கள் அனைவரும் கூட கொசுக்கூட்டம் போல்
செல்வார்கள். சிவனுடைய ஊர்வலம் இல்லையா? நீங்கள் அனைவரும்
மணமகள்கள். மணமகன் நான் வந்துள்ளேன், அனைவரையும் அழைத்துச்
செல்வதற்காக. நீங்கள் அசுத்தமாக ஆகி விட்டிருக்கிறீர்கள்.
அதனால் அலங்கரித்து உடன் அழைத்துச் செல்வேன். யார் அலங்காரம்
செய்து கொள்ளவில்லையோ, அவர்கள் தண்டனை பெறுவார்கள். சென்று தான்
ஆக வேண்டும். காசி கல்வெட்டில் கூட மனிதர்கள் சாகின்றனர்
என்றால் ஒரு விநாடியில் எவ்வளவு தண்டனைகள் அனுபவித்து
விடுகின்றனர்! மனிதர்கள் கூக்குரலிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
இதுவும் அது போலத் தான். நாம் ஜென்ம-ஜென்மாந்தரத்தின் துக்க
தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதாகப் புரிந்து
கொண்டுள்ளனர். அந்த துக்கத்தின் ஃபீலிங் (உணர்வு) அதுபோல்
உள்ளது. ஜென்ம-ஜென்மாந்தரத்தின் பாவங்களுக்கான தண்டனை
கிடைக்கிறது. எவ்வளவு தண்டனை பெறுகிறார்களோ, அந்த அளவு பதவி
குறைந்து விடும். அதனால் பாபா சொல்கிறார், யோக பலத்தின் மூலம்
கணக்கு-வழக்கை முடித்து விடுங்கள். நினைவினால் சேமித்துக்
கொண்டே செல்லுங்கள். ஞானமோ மிகவும் சுலபமானது. இப்போது ஒவ்வொரு
கர்மத்தையும் ஞானத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும். தானமும்
தகுதியுள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டும். பாவாத்மாக்களுக்குக்
கொடுப்பதன் மூலம் பிறகு கொடுப்பவர் மீதும் அதன் பாதிப்பு
ஏற்படும். அவர்களும் பாவாத்மா ஆகி விடுகின்றனர். அப்படிப்
பட்டவர்களுக்கு ஒருபோதும் கொடுக்கக் கூடாது. அவர்கள் போய்ப்
பிறகு அந்தப் பணத்தின் மூலம் ஏதேனும் பாவ கர்மங்களைச் செய்து
விடலாம். பாவாத்மாக்களுக்குக் கொடுப்பவர்களோ உலகத்தில் அநேகர்
அமர்ந்துள்ளனர். இப்போது நீங்களோ இதுபோல் செய்யக் கூடாது.
நல்லது.
இனிமையிலும் இனிமையான
தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) இப்போது ஒவ்வொரு கர்மத்தையும் ஞானத்தின் அடிப்படையில் செய்ய
வேண்டும். தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும்.
பாவாத்மாக்களோடு இப்போது எந்த ஒரு பணம் முதலியவற்றின்
கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்ளக் கூடாது. யோகபலத்தின் மூலம்
பழைய கணக்கு-வழக்கு அனைத்தையும் முடித்துவிட வேண்டும்.
2) அளவற்ற குஷியில் இருப்பதற்காக தனக்குத் தான் பேசிக் கொள்ள
வேண்டும் - பாபா, எங்களுக்கு அளவற்ற குஷியின் கஜானாவைத்
தருவதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் எங்கள் பையை
நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களோடு கூடவே நாங்கள் முதலில்
சாந்திதாம் செல்வோம். பிறகு எங்களுடைய ராஜதானிக்கு வருவோம்.
வரதானம்:
கல்ப கல்பத்திலும் அடைந்த
வெற்றியின் நினைவின் ஆதாரத்தில் மாயை என்ற எதிரியை வரவேற்கக்
கூடிய மகாவீர் வெற்றியாளர் ஆகுக.
மகாவீர் வெற்றியாளர் குழந்தைகள்
சோதனைகளைப் பார்த்து பயப்படமாட்டார்கள். ஏனெனில்
திரிகாலதர்சியாக இருக்கின்ற காரணத்தினால் எனக்குத் தான் கல்ப
கல்பமாக வெற்றி கிடைத்திருக்கிறது என்பதை அறிவார்கள். மகாவீர்
குழந்தைகள் ஒருபோதும் பாபா, என்னிடத்தில் மாயாவை அனுப்பாதீர்கள்,
கருணை காட்டுங்கள், ஆசிர்வாதம் செய்யுங்கள், சக்தி கொடுங்கள்,
என்ன செய்வது, ஏதாவது வழி காட்டுங்கள் இப்படியெல்லாம்
வேண்டமாட்டார்கள். இதுவும் பலவீனமாகும். மகாவீரர்கள் எதிரியை
வரவேற்பார்கள், வா நான் வெற்றி அடைவேன்.
சுலோகன்:
காலத்தின் எச்சரிக்கை - சமம்
ஆகுங்கள், சம்பன்னம் ஆகுங்கள்.
ஓம்சாந்தி