20.09.2020 காலை முரளி ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா,
ரிவைஸ் 25.03.1986 மதுபன்
சங்கமயுகம்
ஹோலி வாழ்க்கைக்கான யுகமாகும்
இன்று பாப்தாதா சுயராஜ்ய அதிகாரி அலௌகீக இராஜ்ய சபையை
பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு சிரேஷ்ட ஆத்மாவின்
மீதும் ஒளிக் கிரீடம் ஜொலிப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
ஒவ்வொரு பரம பாவன பூஜ்ய ஆத்மாக்கள் இந்த ஒரு பிறவிக்கு மட்டும்
பாவனம் அதாவது ஹோலி (தூய்மை) ஆகவில்லை. ஆனால் பாவனம் என்றால்
ஹோலி ஆவதற்கான ரேகை பல பிறவிகளுக்கான நீளமாக ரேகையாக இருக்கிறது.
முழு கல்பத்தில் மற்ற ஆத்மாக்களும் பாவன ஹோலியாக ஆகின்றனர்.
பாவன ஆத்மாக்கள் தர்மபிதா ரூபத்தில் தர்ம ஸ்தாபனை செய்வதற்கு
நிமித்தமாக ஆகின்றனர். மேலும் மகான் ஆத்மாக்கள் என்று கூறப்படக்
கூடிய சிலரும் பாவனம் ஆகின்றனர். ஆனால் அவர்கள் பாவனம்
ஆவதற்கும், பாவன ஆத்மாக்களாகிய உங்களுக்கும் வித்தியாசம்
இருக்கிறது. நீங்கள் பாவனம் ஆவதற்கான சாதனம் மிகவும் எளிதாகும்.
எந்த கடின உழைப்பும் கிடையாது. ஏனெனில் தந்தையிடமிருந்து
ஆத்மாக்களாகிய உங்களுக்கு சுகம், சாந்தி, தூய்மையின் ஆஸ்தி
எளிதாக கிடைக்கிறது. இந்த நினைவின் மூலம் எளிதாக மற்றும்
தானாகவே அழிவற்றதாக ஆகிவிடுகிறது. உலகத்தினர் பாவனம் ஆகின்றனர்,
ஆனால் கடின உழைப்பினால். மேலும் அவர்களுக்கு 21 பிறவிகளுக்கு
ஆஸ்தியின் ரூபத்தில் தூய்மை பிராப்தியாக கிடைப்பது கிடையாது.
இன்று உலகாய கணக்கில் ஹோலி நாள் என்று கூறுகின்றனர். அவர்கள்
ஹோலி கொண்டாடுகின்றனர், ஆனால் சுயம் நீங்களே பரமாத்மாவின்
வர்ணத்தில் கலந்து ஹோலி ஆத்மாக்களாக ஆகிவிடுகிறீர்கள்.
கொண்டாடுவது சிறிது நேரத்திற்கு மட்டுமே, ஆவது வாழ்க்கைக்காக
ஆகும். அவர்கள் நாளை கொண்டாடுகின்றனர், ஆனால் நீங்கள்
வாழ்க்கையை ஹோலி ஆக்குகிறீர்கள். இந்த சங்கமயுகம் ஹோலி
வாழ்க்கையின் யுகமாகும். ஆக வர்ணங்களில் கலந்து விட்டீர்கள்
என்றால் அழிவற்ற வர்ணம் பூசப்பட்டு விட்டது. அதை அழிக்க
வேண்டிய அவசியமில்லை. சதா காலத்திற்கு பாப்சமான் ஆகிவிட்டீர்கள்.
சங்கமயுகத்தில் நிராகார தந்தைக்குச் சமமாக கர்மாதீத ஸ்திதி,
நிராகார ஸ்திதியின் அனுபவம் செய்கிறீர்கள், மேலும் 21
பிறவிகளுக்கு பிரம்மா பாபாவிற்கு சமமாக சர்வ குணங்கள்
நிறைந்தவர்களாக, சம்பூர்ண நிர்விகாரி சிரேஷ்ட வாழ்க்கையின்
அனுபவம் செய்கிறீர்கள். ஆக உங்களது ஹோலி என்றால் தந்தையின்
சகவாசம் என்ற வர்ணத்தினால் தந்தைக்கு சமம் ஆவதாகும். அந்த
அளவிற்கு உறுதியான வர்ணமாக இருக்க வேண்டும், அதாவது சமமாக ஆக்கி
விடுங்கள். இவ்வாறு ஹோலி உலகில் யாராவது விளையாடுகிறார்களா?
தந்தைக்கு சமமாக ஆக்குவதற்கான ஹோலி விளையாட வந்திருக்கின்றார்.
எத்தனை விதமாக வர்ணங்கள் தந்தையின் மூலம் ஒவ்வொரு ஆத்மாவிற்கும்
அழிவற்றதாக பூசப்பட்டு விடுகிறது. ஞானத்தின் வர்ணம், நினைவின்
வர்ணம், பல சக்திகளின் வர்ணம், குணங்களின் வர்ணம், சிரேஷ்ட
திருஷ்டி, சிரேஷ்ட விருத்தி, சிரேஷ்ட பாவனை, சிரேஷ்ட
விருப்பங்கள் தானாக சதா காலத்திற்கும் ஆகிவிட வேண்டும். இந்த
ஆன்மீக வர்ணம் எவ்வளவு எளிதாக பூசப்பட்டு விடுகிறது! தூய்மை
ஆகிவிட்டீர்கள் என்றால் ஹோலி ஆகிவிட்டீர்கள். அவர்கள் ஹோலி
கொண்டாடுகிறார்கள், குணம் எப்படியோ அவ்வாறு ரூபமாக
ஆகிவிடுகிறார்கள். அந்த நேரத்தில் யாராவது அவர்களை போட்டோ
எடுத்தால் எப்படி இருக்கும்? அவர்கள் ஹோலி கொண்டாடி என்ன
ஆகிவிடுகின்றனர்? மேலும் நீங்கள் ஹோலி கெண்டாடி
பரிஸ்தாவிலிருந்து தேவதைகளாக ஆகிவிடுகிறீர்கள். அனைத்தும்
உங்களது நினைவுச் சின்னங்கள் தான். ஆனால் ஆன்மீக சக்தியில்லாத
காரணத்தினால் ஆன்மீக ரூபத்தில் கொண்டாட முடியாது. வெளிநோக்கு
முகத்துடன் இருக்கின்ற காரணத்தினால் வெளி முகமாக கொண்டாடிக்
கொண்டிருக்கின்றனர். உங்களுடையது யதார்த்த ரூபத்தில் மங்கள
சந்திப்பு கொண்டாடுவதாகும்.
ஹோலியின் விசேசதா எரிப்பது, பிறகு கொண்டாடுவது மேலும்
மங்களகரமான சந்திப்பு செய்வதாகும். இந்த மூன்று விசேசதாவின்
மூலம் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில்
நீங்கள் அனைவரும் ஹோலி ஆவதற்காக முதலில் பழைய சம்ஸ்காரங்கள்,
பழைய நினைவுகள் அனைத்தையும் யோக அக்னியில் எரித்து
விட்டீர்கள், அதனால் தான் சகவாசம் என்ற வர்ணங்களின் ஹோலி
கொண்டாடி யிருக்கிறீர்கள். அதாவது பாப்சமான் சகவாசத்தின்
வர்ணம் பூசப்பட்டிருக்கிறது. எப்போது தந்தையின் சகவாசம் என்ற
வர்ணம் பூசப்பட்டு விடுகிறதோ, அப்போது உலகிலுள்ள அனைத்து
ஆத்மாக்களும் பரமாத்மாவின் குடும்பமாக ஆகிவிடுகிறது.
பரமாத்மாவின் குடும்பமாக இருக்கின்ற காரணத்தினால் ஒவ்வொரு
ஆத்மாவின் மீதும் சுபமான விருப்பம் இயற்கையான சன்ஸ்காரமாக
தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஆகையால் ஒருவரையொருவர் மங்களகரமான
சந்திப்பு செய்து கொண்டிருக்கிறீர்கள். சிலர் எதிரியாகவும்
இருக்கலாம், அசுர சன்ஸ்காரம் உடையவராகவும் இருக்கலாம், ஆனால்
இந்த ஆன்மீக மங்களகரமாக சந்திப்பின் மூலம் அவர்களுக்கும்
பரமாத்மாவின் வர்ணப் பொடியை அவசியம் பூசுகிறீர்கள். உங்களிடம்
யாராவது வந்தால் என்ன செய்வீர்கள்? அனைவரையும் ஆ-ங்கணம்
செய்வது அதாவது சிரேஷ்ட ஆத்மா என்று புரிந்து கொண்டு ஆ-ங்கணம்
செய்ய வேண்டும். இவர் தந்தையின் குழந்தை ஆவார். இந்த அன்பான
சந்திப்பு, சுப பாவணையின் சந்திப்பு அந்த ஆத்மாக்களையும் பழைய
விசயங்களை மறக்க வைத்து விடும். அவர்களும் உற்சாகத்தில் வந்து
விடுவார்கள். ஆகையால் உற்சவத்தின் ரூபத்தில் நினைவுச் சின்னமாக
ஆக்கி விட்டனர். ஆக தந்தையிடம் ஹோலி கொண்டாடுவது என்றால்
அழிவற்ற ஆன்மீக வர்ணங்களினால் தந்தைக்கு சமம் ஆவதாகும்.
அவர்கள் கவலையாக இருக்கின்றனர், ஆகையால் குஷியாக இருக்க
வேண்டுமென்பதற்காக இந்த நாளை வைத்திருக்கின்றனர். ஆனால்
நீங்கள் சதா குஷியில் ஆடிக் கொண்டு, பாடிக் கொண்டு,
மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். என்ன நடந்தது?
ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்று யார் அதிகம் குழப்பம்
அடைகிறார்களோ அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நீங்கள்
திரிகாலதர்சிகளாக ஆகிவிட்டீர்கள், ஆகையால் ஏன், எதற்கு, எப்படி
என்ற சங்கல்பம் வரவே முடியாது. ஏனெனில் மூன்று காலங்களையும்
அறிவீர்கள். ஏன் நடந்தது? முன்னேறுவதற்கான பேப்பர் என்பதை
அறிவீர்கள். ஏன் நடந்தது? எதுவும் புதிதல்ல. ஆக ஏன் நடந்தது?
என்ற கேள்வியே கிடையாது. எப்படி நடந்தது? மாயை மேலும்
உறுதியானவர்களாக ஆக்குவதற்காக வந்தது பிறகு சென்று விட்டது. ஆக
திரிகாலதர்சி ஸ்திதியுடையவர்கள் இதில் குழப்ப மடையமாட்டார்கள்.
கேள்விக்கு முன்பே பதில் வந்து விடுகிறது. ஏனெனில்
திரிகாலதர்சிகளாக இருக்கிறீர்கள். பெயர் திரிகாலதர்சி, ஆனால்
நிகழ்காலத்தை கூட அறிந்து கொள்ள முடியவில்லை, ஏன்? எப்படி
நடந்தது? என்றால் அவர்களை திரிகாலதர்சி என்று கூற முடியுமா? பல
முறை வெற்றியடைந்திருக்கிறீர்கள், மேலும் ஆகக்
கூடியவர்களாகவும் இருக்கிறீர்கள். கடந்த காலம் மற்றும்
எதிர்காலத்தையும் அறிவீர்கள் - பிராமணர்களாகிய நாம்
பரிஸ்தாக்கள், பரிஸ்தாவி-ருந்து பிறகு தேவதைகளாக ஆகக்
கூடியவர்கள். இன்று மற்றும் நாளைய விசயமாகும். கேள்விகள்
அழிந்து முற்றுப்புள்ளி வந்து விடுகிறது.
ஹோலி என்றால் ஹோ -, கடந்தது கடந்து விட்டது. இவ்வாறு புள்ளி
வைப்பதற்கு வருகிறதா! அல்லவா! இதுவும் ஹோலியின் பொருளாகும்.
எரிக்கும் ஹோலியும் செய்கிறீர்கள், வர்ணங்களினால் பூசப்படும்
ஹோலியும் செய்கிறீர்கள் மற்றும் புள்ளி வைக்கும் ஹோலியும்
செய்கிறீர்கள். மங்களகரமான சந்திப்பிற்கான ஹோலியும்
செய்கிறீர்கள். நான்கு வகையான ஹோலியும் செய்கிறீர்கள் அல்லவா!
ஒருவேளை இதில் ஒன்று குறைந்தாலும் ஒளிக் கிரீடம்
நிலைத்திருக்காது. கீழே விழுந்து கொண்டே இருக்கும். கிரீடம்
இறுக்கமாக இல்லையெனில் கிழே விழுந்து கொண்டே இருக்கும் அல்லவா!
நான்கு வகையான ஹோலியும் கொண்டாடுவதில் பாஸ்
ஆகியிருக்கிறீர்களா? பாப்சமான் ஆக வேண்டுமென்றால் பாபாவிற்கு
சமமாகவும் ஆக வேண்டும், மேலும் சம்பூர்னமாகவும் ஆக வேண்டும்.
இன்னும் எவ்வளவு காலம் சதவிகிதம் இருக்கும்? யார் மீது அன்பு
இருக்கிறதோ, அந்த அன்பானவர்களைப் போன்று (சமமாக) ஆவதற்கு
கடினமாக இருக்காது. பாபாவின் மீது சதா அன்பானவர்களாக
இருக்கிறீர்கள், ஆக சதா ஏன் சமம் ஆகக் கூடாது? எளிது தானே!
நல்லது.
சதா ஹோலி மற்றும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய தூய
அன்னப்பறவைகள் அனைவருக்கும் உயர்ந்ததிலும் உயர்ந்த பாப்சமான்
ஹோலி ஆவதற்கான அழிவற்ற வாழ்த்துக்களை கொடுத்துக்
கொண்டிருக்கின்றார். சதா பாப்சமான் ஆவதற்கான, சதா ஹோலி
யுகத்தில் மகிழ்ச்சி கொண்டாடுவதற்கான வாழ்த்துக்கள் கொடுத்துக்
கொண்டிருக்கின்றார். சதா தூய அன்னப்பறவையாகி ஞான
இரத்தினங்களினால் நிறைந்தவர்களாக ஆவதற்கான வாழ்த்துக்களை
கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அனைத்து வர்ணங்களினால்
பூசப்பட்டு பூஜைக்குரிய ஆத்மா ஆவதற்கான வாழ்த்துக்கள்
கொடுத்துக் கொண்டிருக்கின்றார். வாழ்த்துக்களும்
கொடுக்கின்றார், அன்பு சதா நினைவுகளும் கொடுக்கின்றார். மேலும்
சேவாதாரியான தந்தை எஜமானர்களாகிய குழந்தைகளுக்கு சதா
நமஸ்தேயும் கூறுகின்றார். ஆக அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
இன்று மலேசியாக குழு இருக்கிறது. தென் கிழக்கு. நாம்
எங்கெங்கேயோ காணாமல் போயிருந்தவர்கள் என்பதை அனைவரும்
புரிந்திருக்கிறீர்களா? பரமாத்ம படகிலிருந்து இறங்கி
எங்கெங்கேயோ சென்று விட்டோம். உலகம் என்ற கடலில் மூழ்கி
விட்டோம். ஏனெனில் துவாபர யுகத்தில் ஆன்மீக அணுகுண்டிற்குப்
பதிலாக சரீர உணர்வு என்ற அணுகுண்டு போடப்பட்டது. இராவணன்
அணுகுண்டு போட்டு விட்டான் படகு உடைந்து விட்டது. பரமாத்ம
குடும்பம் என்ற படகு உடைந்து விட்டது மற்றும் எங்கெங்கேயோ
சென்று விட்டீர்கள், எங்கெல்லாம் உதவி கிடைத்ததோ சென்று
விட்டீர்கள். மூழ்குபவருக்கு என்ன உதவி கிடைத்தாலும் பற்றிக்
கொள்வார் அல்லவா! உங்கள் அனைவருக்கும் எந்த தர்மம், எந்த தேசம்
என்ற சிறிது உதவி கிடைத்ததும் அங்கு சென்றடைந்து விட்டீர்கள்.
ஆனால் சன்ஸ்காரம் அதுவாகத் தான் இருக்கிறது அல்லவா! ஆகையால்
வேறு தர்மத்தில் சென்றிருந்தாலும் தனது உண்மையான தர்மத்தின்
அறிமுகம் கிடைத்ததும் வந்து விட்டீர்கள். முழு உலகிலும்
சிதறியிருந்தீர்கள். இவ்வாறு காணாமல் போனதும் நன்மையானதாக
இருக்கிறது. பல ஆத்மாக் களை ஒருவர் விடுவிக்கும் காரியம்
செய்திருக்கின்றார். உலகில் பரமாத்ம குடும்பத்தின் அறிமுகம்
கொடுப்பதற்காக கல்யாணகாரிகளாக ஆகிவிட்டீர்கள். ஒருவேளை
அனைவரும் பாரதத்திலேயே இருந்தீர்கள் எனில் உலக சேவை எப்படி
நடைபெறும்? அதனால் தான் வெவ்வேறு நாடுகளுக்கு
சென்றிருக்கிறீர்கள். அனைத்து முக்கிய தர்மங்களிலும் யாராவது
ஒருவர் சென்றடைந்திருக்கிறீர்கள். ஒருவர் வெளிப்பட்டாலும்
அருகில் இருப்பவர்களையும் அவசியம் விழிப்படையச் செய்கின்றார்.
பாப்தாதாவிற்கும் 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு காணாமல் போன
குழந்தைகளைப் பார்க்கின்ற போது குஷி ஏற்படுகிறது. உங்கள்
அனைவருக்கும் குஷி ஏற்படுகிறது அல்லவா! வந்து சேர்ந்து
விட்டீர்கள், அடைந்து விட்டீர்கள்.
மலேசியாவிலிருந்து எந்த வி.ஐ.பி யும் இதுவரை வரவில்லை.
சேவையின் இலட்சியத்திற்காக அவர்களை நிமித்தமாக ஆக்க
வேண்டியிருக்கிறது. சேவையின் தீவிர வேகத்திற்கு நிமித்தமாக
ஆகிவிடுகிறார்கள். ஆகையால் அவர்களை முன் நிறுத்த
வேண்டியிருக்கிறது. தந்தைக்கு நீங்கள் தான் சிரேஷ்ட ஆத்மாக்கள்
ஆவீர்கள். ஆன்மீக போதையில் சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்கள்
இருக்கிறீர்கள் தானே! பூஜைக்குரிய ஆத்மாக்களாகிய நீங்கள்
எங்கே! மாயாவிடம் மாட்டியிருக்கும் அவர்கள் எங்கே! அறியாத
ஆத்மாக்களுக்கும் அறிமுகம் கொடுக்க வேண்டும் அல்லவா!
சிங்கபூரிலும் இப்போது விருத்தியாகிக் கொண்டிருக்கிறது. எங்கு
தந்தையின் ஒப்பற்ற குழந்தைகள் சென்றடைகிறார்களோ, இரத்தினம்
இரத்தினத்தை தான் உருவாக்குவார்கள். தைரியம் வைத்து சேவையில்
ஆர்வத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். ஆக முயற்சியின்
பலன் உயர்ந்ததாகத் தான் இருக்கும். தனது குடும்பத்தை
ஒன்றிணைக்க வேண்டும். குடும்பத்தை விட்டு காணாமல் போனவர்கள்
குடும்பத்தில் வந்து சேர்ந்து விட்டார்கள் எனில் எவ்வளவு குஷி
அடைவார்கள்! மேலும் மனதில் நன்றி கூறுவார்கள். ஆக இவர்களும்
குடும்பத்தில் வந்து எவ்வளவு நன்றி கூறிக் கொண்டு
இருப்பார்கள். நிமித்தமாகி தந்தையினுடையவர்களாக ஆக்கி
விட்டார்கள். சங்கமத்தில் நன்றிக்கான மாலை மிகவும்
பெரியதாகும். நல்லது.
அவ்யக்த மகாவாக்கியம் - அகண்ட மகாதானி ஆகுங்கள்.
மகாதானி என்றால் அடைந்த பொக்கிசங்களை சுய நலமின்றி அனைத்து
ஆத்மாக்களுக்கும் கொடுக்கக் கூடியவர்கள் - சுய நலமற்றவர்கள்.
தனது சுய நலத்திலிருந்து விடுபட்ட ஆத்மாக்கள் தான் மகாதானி ஆக
முடியும். மற்றவர்களது குஷியில் தனது குஷியின் அனுபவம்
செய்வதும் மகாதானி ஆவதாகும். எவ்வாறு தந்தை சம்பன்னமாக
இருக்கிறாரோ, அளவற்றவராக இருக்கின்றாரோ, நிரந்தரமாக
இருக்கின்றாரோ அதே போன்று குழந்தைகளாகிய நீங்களும் மாஸ்டர்,
நிரந்தரமானவர், அளவற்ற பொக்கிசங்களுக்கு எஜமானர்கள் ஆவீர்கள்.
ஆக அனைத்து பொக்கிசங்களும் கிடைத்திருக்கிறது, அதை மகாதானியாகி
மற்றவர்களுக்காக காரியத்தில் பயன்படுத்திக் கொண்டே இருங்கள்.
சம்பந்தத்தில் எந்த ஆத்மா வந்தாலும், பக்தன் அல்லது சாதாரண
ஆத்மா, இவருக்கு பக்தியின் பலன் கிடைத்து விட வேண்டும் என்ற
ஈடுபாடு சதா இருக்க வேண்டும். எந்த அளவிற்கு கருணையுள்ளம்
உடையவர்களாக இருப்பீர்களோ அந்த அளவிற்கு அலையக் கூடிய
ஆத்மாக்களுக்கு எளிய வழி கூறுவீர்கள்.
உங்களிடத்தில் அனைத்தையும் விட மிகப் பெரிய பொக்கிசம் குஷி
இருக்கிறது. நீங்கள் இந்த குஷி என்ற பொக்கிசத்தை தானம் செய்து
கொண்டே இருங்கள். யாருக்கு குஷி கொடுப்பீர்களோ அவர் அடிக்கடி
உங்களுக்கு நன்றி கூறுவார். துக்க ஆத்மாக்களுக்கு குஷி தானமாக
கொடுத்து விட்டால் உங்களது குணங்களை பாடுவர். இதில் மகாதானி
ஆகுங்கள். குஷியின் பொக்கிசத்தை பகிர்ந்து கொடுங்கள். தனது
அருகிலுள்ளவர்களை விழிப்படையச் செய்யுங்கள். வழி காட்டுங்கள்.
இப்போதைய நேரத்தின் படி தனது ஒவ்வொரு கர்மேந்திரியத்தின் மூலம்
மகாதானி அல்லது வரதானி ஆகுங்கள். நெற்றியின் மூலம்
அனைவருக்கும் சுய சொரூபத்தின் நினைவு ஏற்படுத்துங்கள்.
கண்களின் மூலம் சுய தேசம் மற்றும் சுய இராஜ்யத்தின் வழி
காட்டுங்கள். வாயின் மூலம் படைப்பு மற்றும் படைப்பவரின்
விளக்கத்தை தெளிவுபடுத்தி பிராமணனிலிருந்து தேவதை ஆக்கக் கூடிய
வரதானம் கொடுங்கள். கைகளின் மூலம் சதா சகஜயோகி, கர்மயோகி
ஆவதற்கான வரதானம் கொடுங்கள். கமல பாதங்களின் மூலம் ஒவ்வொரு
அடியிலும் தந்தையை பின்பற்றி ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு
வருமானம் சேமிக்கக் கூடிய வரதானி ஆகுங்கள். இவ்வாறு ஒவ்வொரு
கர்மேந்திரியங்களின் மூலம் மகாதானம், வரதானம் கொடுத்துக்
கொண்டே செல்லுங்கள். மாஸ்டர் வள்ளல் ஆகி பிரச்சனைகளை
மாற்றுபவர்களாக, பலவீனமானவர்களை சக்திசாலிகளாக ஆக்கக்
கூடியவர்களாக, வாயுமண்டலத்தை அல்லது விருத்தியை தனது
சக்திகளின் மூலம் மாற்றக் கூடியவர்களாக, நன்மை செய்வதற்கு நான்
பொறுப்பாளி ஆத்மா என்று புரிந்து கொண்டு ஒவ்வொரு விசயத்திலும்
சகயோகம் அல்லது சக்தி என்ற மகாதானம் அல்லது வரதானம் கொடுக்கும்
சங்கல்பம் செய்யுங்கள். நான் கொடுக்க வேண்டும், நான் செய்ய
வேண்டும், நான் மாற வேண்டும், நான் பணிவுடையவனாக ஆக வேண்டும்.
இவ்வாறு உண்மையான அர்ஜுனனாக அதாவது வள்ளலுக்கான விசேஷதாவை
தாரணை செய்யுங்கள்.
இப்போது ஒவ்வொரு ஆத்மாவும் விசேச அனுபவி மூர்த்தி ஆகி,
விசேஷமாக அனுபவங்களின் பொக்கிசங்களாகி அனுபவி மூர்த்திகளாக
ஆக்கக் கூடிய மகாதானம் செய்யுங்கள். இந்த அனுபவத்தின்
ஆதாரத்தில் ஒவ்வொரு ஆத்மாவும் அங்கதனைப் போன்று ஆகிவிட
வேண்டும். நடந்து கொண்டிருக்கின்றோம், செய்து
கொண்டிருக்கின்றோம், கேட்டுக் கொண்டிருக்கின்றோம், கூறிக்
கொண்டிருக்கின்றோம் என்ற இருக்கக் கூடாது. ஆனால் அனுபவங்களின்
பொக்கிசங்களை அடைந்து விட்டோம் என்ற பாட்டு பாடி குஷியின்
ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தைகளாகிய
உங்களுக்கு தந்தையின் மூலம் என்ன பொக்கிசங்கள்
கிடைத்திருக்கிறதோ, அதை பகிர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்
அதாவது மகாதானி ஆகுங்கள். யார் வந்தாலும் வெறும் கைகளுடன்
சென்று விடக் கூடாது. நீங்கள் அனைவரும் நீண்ட கால துணைவர்களாக
இருக்கிறீர்கள் மேலும் நீண்ட கால இராஜ்ய அதிகாரிகளாக
இருக்கிறீர்கள். ஆக கடைசியில் பலவீன ஆத்மாக்களுக்கு மகாதானி,
வரதானி ஆகி அனுபவங்களின் தானம் மற்றும் புண்ணியம் செய்யுங்கள்.
இந்த புண்ணியம் அரை கல்பத்திற்கு உங்களை பூஜைக்குரியவர்களாக
மற்றும் புகழுக்கு தகதியானவர்களாக ஆக்கி விடும். நீங்கள்
அனைவரும் ஞான பொக்கிசங்கள் நிறைந்த செல்வத்தின் தேவிகளாக
இருக்கிறீர்கள். எப்போது பிராமணர்களாக ஆனீர்களோ
அப்போதிலிருந்தே பிறப்புரிமையாக ஞானம், சக்திகளின்
பொக்கிசங்கள் கிடைத்து விட்டது. இந்த பொக்கிசங்களை தனக்காக
மற்றும் மற்றவர்களுக்காக பயன்படுத்தும் போது குஷி
அதிகரிக்கும், இதில் மகாதானி ஆகுங்கள். மகாதானி என்றால் சதா
அழிவற்ற பண்டாரா நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
ஈஸ்வரிய சேவையில் மிகப் பெரிய புண்ணியம் - தூய்மை தானம்
செய்வதாகும். தூய்மை ஆவது மற்றும் ஆக்குவது தான் புண்ணிய ஆத்மா
ஆவதாகும். ஏனெனில் எந்த ஒரு ஆத்மாவையும் ஆத்ம கொலை என்ற மகா
பாவத்திலிருந்து விடுவிக்கிறீர்கள். அசுத்தம் ஆவது தான் ஆத்மக்
கொலையாகும். தூய்மை உயிர் தானமாகும். தூய்மை ஆகுங்கள் மற்றும்
ஆக்குங்கள் - இந்த மகாதானம் செய்து புண்ணிய ஆத்மா ஆகுங்கள்.
மகாதானி என்றால் முற்றிலும் பலமற்றவர்கள், மனம் உடைந்தவர்கள்,
சக்தியற்ற ஆத்மாக்களுக்கு அதிகப்படியான பலம் கொடுத்து ஆன்மீக
கருணையுள்ளமுடையவர்களாக ஆவதாகும். மகாதானி என்றால் முற்றிலும்
நம்பிக்கையற்றவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதாகும். சதா
மாஸ்டர் படைப்பவராகி பிராப்தியாக அடைந்த ஞானம், குணம் மற்றும்
அனைத்து பொக்கிˆங்களை மற்றவர்களுக்கு மகாதானியாகி கொடுத்துக்
கொண்டே செல்லுங்கள். முற்றிலும் ஏழைகளுக்குத் தான் தானம்
கொடுக்கப்படும். ஆதரவற்றவர்களுக்குத் தான் ஆதரவு கொடுக்கப்படும்.
எனவே பிரஜைகளுக்கு மகாதானி மற்றும் கடைசியில் பக்த
ஆத்மாக்களுக்கு மகாதானியாக ஆகுங்கள். பிராமணர்கள் தங்களுக்குள்
ஒருவருக்கொருவர் மகாதானி கிடையாது. தங்களுக்குள் உதவி செய்யும்
துணைவர்களாக இருக்கிறீர்கள். பாயி பாயிகளாக இருக்கிறீர்கள்
அல்லது இணையான முயற்சியாளர்களாக இருக்கிறீர்கள். அவர்களுக்கு
உதவி செய்யுங்கள். நல்லது.
வரதானம்:
சக்திசாலியான விருத்தி மூலம் மன சேவை செய்யக் கூடிய விஷ்வ
கல்யாணகாரி ஆகுக.
உலகில் அலையக் கூடிய ஆத்மாக்களுக்கு வழி கூறுவதற்காக சாட்சாத்
பாப்சமான் லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஆகுங்கள். ஒவ்வொரு
ஆத்மாவிற்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற இலட்சியம்
வையுங்கள். முக்தி கொடுத்தாலும் சரி அல்லது ஜீவன்முக்தி.
அனைவருக்கும் மகாதானி மற்றும் வரதானி ஆகுங்கள். இப்போது
அவரவர்களது இடங்களில் சேவை செய்து வருகிறீர்கள். ஆனால் ஒரு
இடத்தில் இருந்து கொண்டு மன சக்தியின் மூலம் வாயுமண்டலம்,
வைபிரேசன் மூலம் உலக சேவை செய்யுங்கள். சக்திசாலியான விருத்தி
உருவாக்குங்கள், அதன் முலம் வாயுமண்டலம் உருவாக வேண்டும் -
அப்போது தான் விஷ்வ கல்யாணகாரி ஆத்மா என்று கூற முடியும்.
சுலோகன்:
அசரீரிக்கான பயிற்சி மற்றும் வீண் எண்ணங்கள் என்ற உணவில்
பத்தியத்தின் மூலம் தன்னை ஆரோக்கியமானவர்களாக ஆக்குங்கள்.
குறிப்பு:
இன்று மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை. அனைவரும் மாலை 6.30 மணி
முதல் 7.30 மணி வரை விசேஷமாக யோக நிலையில், பரிஸ்தா நிலையில்
பக்தர்களின் கூக்குரலுக்கு உபகாரம் செய்யுங்கள். கருணையுடன்
முக்தி ஜீவன் முக்திக்கான வரதானம் கொடுக்க வேண்டும்.
ஓம்சாந்தி