16.09.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! அனைவருடைய
துக்கத்தையும் நீக்கி சுகத்தைக் கொடுப்பதற்காக தந்தை
வந்திருக்கின்றார், நீங்கள் துக்கத்தை நீக்கக்கூடிய தந்தையின்
குழந்தைகள், எனவே நீங்கள் ஹற யாருக்கும் துக்கம் தராதீர்கள்.
கேள்வி:
உயர்ந்த பதவியை அடையக்கூடிய
குழந்தைகளின் முக்கியமான அடையாளங்கள் என்ன?
பதில்:
1. அவர்கள் சதா ஸ்ரீமத்படி நடப்பார்கள். 2. ஒருபொழுதும்
பிடிவாதம் செய்ய மாட்டார்கள். 3. தனக்குத்தான் இராஜ்ய திலகம்
கொடுப்பதற்காக படித்து தீவிர பயிற்சி செய்வார்கள். தயார்
செய்வார்கள். 4. தனக்குத்தானே ஒருபொழுதும் நஷ்டத்தை ஏற்படுத்த
மாட்டார்கள். 5. அனைவர் மீதும் கருணை உள்ளம் உடையவராக மற்றும்
கல்யாணகாரியாக இருப்பார்கள், சேவையில் மிகவும் ஆர்வமாக
இருப்பார்கள். 6. எந்தவொரு இழிவான காரியமும் செய்ய மாட்டார்கள்,
சண்டை, மோதலில் ஈடுபடமாட்டார்கள்.
பாடல்:
நீங்கள் இரவெல்லாம் தூங்கி இழந்துவிட்டீர்கள்…
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகள் ஆன்மீக
தந்தையின் எதிரில் அமர்ந்துள்ளீர்கள். இப்பொழுது இந்த
வார்த்தையின் அர்த்தத்தை குழந்தைகள் நீங்கள் மட்டுமே
புரிந்துள்ளீர்கள், வேறு யாரும் இதனை புரிந்து கொள்ள முடியாது.
ஆன்மீக குழந்தைகளே ! என்று வேறு யாரும் அழைக்க முடியாது,
இம்மாதிரி வார்த்தைகளை யாராலும் கூறமுடியாது. நாம் ஆன்மீக
தந்தையின் எதிரில் அமர்ந்துள்ளோம் என நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
இந்த தந்தையைப்பற்றி வேறு யாருக்கும் சரியானபடி தெரியாது.
எதுவரை நேரில் வந்து புரிந்து கொள்ள வில்லையோ அதுவரை எப்படி
தெரிந்து கொள்ள முடியும்? நீங்கள் கூட நேரில் வந்த பிறகு தான்
புரிந்துள்ளீர்கள். நீங்கள் தான் பிராமண குழந்தைகள், உங்களுடைய
துணைப்பெயர் பிரம்மா வம்சத்தைச் சேர்ந்த பிரம்மாகுமார் -
குமாரிகள். அனைத்து ஆத்மாக்களும் சிவனுடைய குழந்தைகள்.
மனிதர்களின் குழந்தைகளாக ஆனதும் குமார் - குமாரிகளாக
அழைக்கப்படுகின்றனர். நிராகாரமான ஆத்மாக்கள் சிவனின்
குழந்தைகளாவர். மூல வதனத்தில் ஆத்மாக்கள் மட்டுமே இருக்கின்றனர்,
அவர்களை சாலிக்கிராமம் என கூறப்படுகின்றது. இங்கு வந்த உடன்
குமார் - குமாரிகளாக ஸ்தூலமான ரூபத்தில் ஆகின்றனர். நீங்கள்
அனைவரும் குமாரர்கள், சிவபாபாவின் குழந்தைகள். சரீரத்தில்
வரும்பொழுது குமார் மற்றும் குமாரிகளாக ஆகின்றீர்கள். நீங்கள்
பிரம்மாகுமார் - குமாரிகள் எனவே சகோதரன் - சகோதரிகளாக
அழைக்கப்படுகின்றீர்கள். இந்த நேரம் உங்களுக்கு ஞானம்
கிடைத்திருக்கின்றது. பாபா நம்மை பாவனமாக்கி (தூய்மைப்படுத்தி)
அழைத்துச்செல்வார். எந்தளவு தந்தையை நினைவு செய்கின்றனரோ
அந்தளவு ஆத்மா தூய்மையாகும். ஆத்மா பிரம்மாவின் வாய் மூலம்
இந்த ஞானத்தை கேட்கின்றது. சித்திரங்களிலும் பாபாவின் ஞானம்
தெளிவாக இருக்கின்றது. சிவபாபாதான் நமக்கு படிப்பிக்கின்றார்.
கிருஷ்ணர் படிப்பிக்கவில்லை, அவர் மூலமாக தந்தை படிப்பிக்கவும்
இல்லை. கிருஷ்ணர் வைகுண்டத்தின் இளவரசர் என்பதையும் குழந்தைகள்
புரியவைக்கவேண்டும். கிருஷ்ணர் சொர்க்கத்தில் தன்னுடைய தாய்,
தந்தையின் குழந்தையாக இருப்பார், சொர்க்கவாசி தந்தையின்
குழந்தையாக, வைகுண்டத்தின் இளவரசராக இருப்பார். அவரைப்பற்றியும்
யாரும் தெரிந்துகொள்ளவில்லை. கிருஷ்ணஜெயந்தி அன்று அனைவரும்
அவரவர் வீட்டிலும், கோவில்களிலும் ஊஞ்சல்கட்டி கிருஷ்ணரை
தாலாட்டுகின்றனர், மாதாக்கள் சென்று உண்டிய-ல் பைசா போட்டு
வணங்குகின்றனர். இன்றைய காலங்களில் கிறிஸ்துவையும் கிருஷ்ணர்
போன்று உருவாக்குகின்றனர், கிரீடத்தை அணிவித்து தாயின் மடியில்
அமர்த்தி கிருஷ்ணரை காட்டுவதை போன்று உருவாக்குகின்றனர்.
கிருஷ்ணர் மற்றும் கிறிஸ்து இருவருடைய ராசியும் ஒன்றே அவர்கள்
காப்பி செய்கின்றனர். கிறிஸ்துவுடைய பிறப்பு சின்ன குழந்தை
ரூபத்தில் ஏற்படுவதில்லை, வித்தியாசம் இருக்கின்றது.
கிறிஸ்துவுடைய ஆத்மாவானது இன்னொருவருடைய சரீரத்தில் பிரவேசம்
செய்கின்றது, விகாரத்தின் மூலம் பிறப்பதில்லை. முன்பு
கிறிஸ்துவை சிறிய குழந்தை ரூபத்தில் காட்டப்படவில்லை,
சிலுவையில் அறையப்பட்ட நிலையில் இப்போது காட்டுகிறார்கள்.
தர்மஸ்தாபகர்கள் யாரும் துன்பத்தை அனுபவிக்க முடியாது என்பதை
குழந்தைகள் அறிவார்கள். அப்படியானால் யாரை அவ்வாறு கொன்றார்கள்.
ஆக யாருடைய சரீரத்தில் பிரவேசம் செய்தாரோ அவருக்குத்தான்
துன்பம் ஏற்பட்டது. ஆக சதோபிரதானமான ஆத்மா துக்கத்தை எப்படி
அடைய முடியும்? அவர்கள் துக்கத்தை அடையும் அளவிற்கு என்ன கர்மம்
செய்தார்கள். ஆத்மா சதோபிரதானமான நிலையை அடையும்பொழுது எல்லா
கணக்கு, வழக்குகளும் முடிந்து விடுகின்றது. இந்த நேரம்
அனைவரையும் தந்தை பாவனமாக்குகின்றார். சதோபிரதானமான ஆத்மா இந்த
உலகில் வந்தவுடன் துக்கத்தை அனுபவிப்பது இல்லை. ஆத்மா
சரீரத்தில் இருக்கும்பொழுது துக்கத்தை அடைகின்றது. எனக்கு
வலிக்கின்றது எனக் கூறுவது யார்? ஆக இந்த சரீரத்தில் இன்னொரு
சக்தி இருக்கின்றது, அவர்கள் பரமாத்மா சரீரத்தில் இருப்பதாக
கூறுகின்றனர், அப்படியானால் எனக்கு துக்கமாக இருக்கின்றது என
பரமாத்மா சொல்லமுடியுமா? அனைவருக்குள்ளும் பரமாத்மா இருந்தால்
பரமாத்மாவிற்கு எப்படி துக்கம் ஏற்படும், ஆகவே ஆத்மாதான்
அவ்வாறு கூறுகின்றது. ஹே பரம்பிதா பரமாத்மா எங்களுடைய துக்கத்தை
போக்குங்கள் என பரலோக தந்தையை ஆத்மா அழைக்கின்றது.
இப்பொழுது தந்தை வந்திருக்கின்றார், துக்கத்தை நீக்குவதற்கான
வழிமுறைகளை தருகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மா
சரீரத்தில் வந்து ஆரோக்கியமானதாக, செல்வந்தராகவும் ஆகின்றது.
பரந்தாமத்தில் இந்த விசயம் இல்லை, அங்கு எந்த சிருஷ்டியும்
இல்லை. அங்கு அமைதி மட்டுமே நிறைந்திருக்கும். அமைதி என்ற
சுயதர்மத்தில் ஆத்மா நிலைத்திருக்கும். அனைவருடைய
துக்கத்தையும் நீக்கி சுகத்தை கொடுப்பதற்கு தந்தை இப்பொழுது
வந்திருக்கின்றார். நீங்கள் என்னுடையவராக ஆகிவிட்டீர்கள், எனவே
யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள் என குழந்தைகளுக்கு
கூறுகின்றார். இது யுத்தகளமாக இருக்கின்றது ஆனால்
மறைமுகமானதாகும், அந்த யுத்தகளம் வெளிப்படையாக இருக்கின்றது.
யுத்த களத்தில் இறப்பவர்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என
கூறப்படுகின்றது, இதற்கான அர்த்தத்தைப் புரிய வைக்கவேண்டும்.
இந்த யுத்தத்திற்கான மகத்துவம் எவ்வளவு என
நினைத்துப்பாருங்கள். அந்த யுத்தகளத்தில் இறப்பவர்கள்
சொர்க்கத்திற்கு செல்ல முடியாது. கீதையில் பகவான் வாக்கியம் என
இருக்கின்றது, ஆகவே ஏற்றுக்கொள்ள வேண்டுமல்லவா! பகவான்
யாருக்காக கூறினார்? அந்த யுத்தம் செய்பவர்களுக்காகவா அல்லது
உங்களுக்காக சொல்லப்படுகின்றதா? இருவருக்கும்
சொல்லப்பட்டதாகும். அவர்களுக்கும் தன்னைத்தான் ஆத்மா என
புரிந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என கூறப்பட்டது. இந்த
சேவையும் செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் சொர்க்கத்திற்கு
செல்ல விரும்பினால் முயற்சி செய்யுங்கள், யுத்த களத்தில் எல்லா
தர்மத்தினரும் உள்ளனர், சீக்கியர்களும் உள்ளனர், அவர்கள்
மீண்டும் சீக்கிய தர்மத்தில் செல்வார்கள். சொர்க்கத்தில்
வரவேண்டுமானால் பிராமண குழந்தைகள் ஆகிய உங்களிடம் ஞானம் கேட்க
வேண்டும். பாபாவிடம் குழந்தைகள் வந்தபொழுது பாபா புரியவைத்தார்
- நீங்கள் யுத்தம் செய்து கொண்டே சிவபாபாவின் நினைவில்
இருந்தால் சொர்க்கத்தில் வந்து சேர்வீர்கள், மற்றபடி
சொர்க்கத்தில் இராஜாவாக ஆவீர்கள் எனக் கூறமுடியாது, ஆக அதிகமாக
அவர்களுக்கு புரியவைக்க முடியாது. அவர்களுக்கு ஞானம் குறைவாகவே
புரியவைக்கப்படுகின்றது. யுத்த களத்தில் தனது இஷ்ட தேவதைகளை
அவசியம் நினைவு செய்கின்றனர். சீக்கியர்கள் குரு கோவிந்தருக்கு
ஜெய்! என கூறி நினைவு செய்கின்றனர். ஆனால் யாரும் தன்னை ஆத்மா
என புரிந்து பரமாத்மாவை நினைவு செய்வதில்லை. மற்றபடி யார்
தந்தையின் அறிமுகத்தை அறிகின்றனரோ அவர்கள் சொர்க்கத்தில் வந்து
சேர்கின்றனர். பதீத பாவனர் தந்தை ஒருவர் மட்டுமே. அவர் என்னை
நினைவு செய்வதனால் உங்களுடைய பாவங்கள் நீங்கும் மேலும் நான்
உருவாக்கக்கூடிய சுகதாமத்தில் நீங்கள் வருவீர்கள் என
பதீதமானவர்களுக்குக் கூறுகின்றார். யுத்தம் செய்யும் பொழுதும்
சிவபாபாவை நினைவு செய்தால் சொர்க்கத்தில் வருவீர்கள். அந்த
யுத்தகளத்தின், விசயம் வேறு இந்த யுத்தகளம் என்பது வேறு,
இரண்டும் வேறுபட்டதாகும். இந்த ஞானம் அழிவதில்லை என தந்தை
கூறுகின்றார். அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள் ஆவர். மனதால்
என்னை மட்டும் நினைவு செய்வதால் நீங்கள் என்னிடத்தில் வந்து
சேர்வீர்கள் என சிவபாபா கூறுகின்றார். மேலும் எந்த ஞானம்
கற்றுத்தரப்படுகின்றதோ அதனை கற்றுக்கொள்வதால் சொர்க்கத்தின்
இராஜ்யம் கிடைத்துவிடும். சொர்க்கத்திற்குச் செல்லக்கூடிய பாதை
ஒரு விநாடியில் கிடைக்கின்றது, ஆக எவ்வளவு சகஜமான விசயமாகும்.
நாம் ஆத்மாக்கள் தந்தையை நினைவு செய்கின்றோம், யுத்தகளத்திற்கு
மகிழ்ச்சியோடு செல்ல வேண்டும், கர்மங்களும் செய்ய வேண்டும்.
தேசத்தை காப்பாற்றுவதற்கு அனைத்தும் செய்தாக வேண்டும். புது
உலகத்தில் ஒரு தர்மம் மட்டுமே இருக்கும், எந்தவிதமான கருத்து
வேறுபாடுகளும் இருக்காது, இங்கு எவ்வளவு வேறுபாடுகள்
இருக்கின்றன! தண்ணீருக்காக, நிலத்திற்காக சண்டைகள் நடக்கின்றன.
தண்ணீர், தானியங்கள் கொடுப்பதை நிறுத்தினால் கல் எறிகின்றனர்,
சண்டை போடுகின்றனர்.
நாம் தன்னுடைய சுய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கின்றோம் என்பதை குழந்தைகள் புரிந்துள்ளீர்கள்,
படிப்பின் மூலம் இராஜ்யத்தை அடைகின்றோம். புதிய உலகம்
நிச்சயமாக ஸ்தாபனையாகும், இது நாடகத்தில் உறுதி
செய்யப்பட்டுள்ளது. எனவே எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும்.
ஆகவே எந்த பொருளுக்கும் சண்டை போடுவதற்கு அவசியமில்லை,
சாதாரணமாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது மாமியார்
வீட்டிற்குச் செல்ல வேண்டும், எனவே இப்பொழுது வனவாசத்தில்
இருக்கின்றீர்கள் என பாபா புரியவைக்கின்றார். எல்லா
ஆத்மாக்களும் வீட்டிற்குச் செல்ல வேண்டும், சரீரம் செல்ல
முடியாது, எனவே சரீரத்தின் அபிமானத்தை விடவேண்டும். நாம்
ஆத்மாக்கள் நம்முடைய 84 பிறவிகள் முடிகின்றது. பாரதம்
சொர்க்கமாக இருந்தது, இப்பொழுது கலியுகமாக இருக்கின்றது,
கலியுகத்தில் அனேக தர்மங்கள் இருக்கின்றன, சத்யுகத்தில் ஒரு
தர்மம் மட்டுமே இருக்கும் என பாரதவாசிகளுக்குச் சொல்லுங்கள்.
பாரதம் மீண்டும் சொர்க்கமாக ஆக வேண்டும். பகவான் வருவார் என
புரிந்துள்ளனர், நாளடைவில் எதிர்காலத்தில் நடப்பதை அறிவார்கள்,
சூழ்நிலைகளையும் பார்க்கின்றார்கள் அல்லவா! ஆக தந்தை
குழந்தைகளுக்குப் புரியவைக்கின்றார். அனைவருக்கும் தந்தை
ஒருவர் தான் அல்லவா! அனைவருக்கும் உரிமையிருக்கின்றது. மனதால்
என்னை மட்டும் நினைவு செய்தால் உங்களுடைய பாவங்கள்
அழிந்துவிடும் என தந்தை அனைவருக்கும் கூறுகின்றார். எப்பொழுது
வேண்டுமானாலும் யுத்தம் ஏற்படலாம் என மனிதர்கள்
புரிந்துள்ளனர், நாளை கூட யுத்தம் ஏற்படலாம், யுத்தம்
தீவிரமடைய நேரமாகாது. ஆனால் நம்முடைய இராஜ்யம் இன்னும்
தயாராகவில்லை. ஆகவே வினாசம் எவ்வாறு ஏற்படும் என குழந்தைகள்
புரிந்துள்ளீர்கள். இன்னும் பாபாவின் செய்தியை எல்லா
இடத்திற்கும் எவ்வளவு கூறியிருக்கின்றீர்கள்! என்னை நினைவு
செய்தால் பாவங்கள் அழியும் என பதீதபாவனர் தந்தை கூறுகின்றார்,
இந்த செய்தி அனைவருடைய காதிலும் சென்றடையவேண்டும். ஆகவே
யுத்தம் நடந்தாலும், அணுகுண்டுகள் வீசினாலும் நம்முடைய
இரரஜ்யம் நிச்சயமாக உருவாகியே தீரும், அதுவரை வினாசம்
ஏற்படாது. உலகத்தில் அமைதி வேண்டும் என கூறுகின்றனர், உலக
யுத்தம் ஏற்பட்டால் உலகமே முடிந்துவிடும்.
இது விஷ்வ வித்யாலயமாகும், முழு உலகிற்கும் நீங்கள் ஞானத்தை
கொடுக்கின்றீர்கள். ஒரு தந்தை மட்டுமே வந்து முழு உலகத்தையும்
மாற்றம் செய்கின்றார். மனிதர்கள் கல்பத்தின் ஆயுட்காலத்தை
இலட்சக்கணக்கான ஆண்டுகளாக கூறிவிட்டனர். முழு கால அளவு 5000
ஆண்டுகள் என நீங்கள் அறிந்துள்ளீர்கள். கிறிஸ்து வருவதற்கு
3000 ஆண்டுகளுக்கு முன்பாக சொர்க்கம் இருந்ததாக கூறுகின்றனர்,
இஸ்லாம், புத்த தர்மத்தை பற்றிய கணக்குகளையும் கூறுகின்றனர்.
இதற்கு முன்பாக வேறு யாருடைய பெயருமே இருக்கவில்லை. நீங்கள்
தெளிவான வார்த்தைகளால் புரியவைக்கமுடியும், எனவே உங்களுக்கு
எவ்வளவு போதை இருக்க வேண்டும். நீங்கள் யாரிடத்திலும் சண்டையிட
அவசியமில்லை, அநாதைகள் தான் சண்டை போடுவார்கள். இங்கு நீங்கள்
முயற்சி செய்து 21 பிறவிகளுக்கான பிராப்தியை அடைகின்றீர்கள்.
சண்டை போடுவது, மோதல் செய்வது இதனால் உயர்ந்த பதவியை
பெறமுடியாது, தண்டனை அடையவேண்டியிருக்கும். எந்த
விசயமாகயிருந்தாலும், எது வேண்டுமானாலும் தந்தையிடம்
வாருங்கள். நீங்களாக எந்தவொரு சட்டத்தையும் கையில்
எடுக்கக்கூடாது என அரசாங்கமும் கூறுகின்றதல்லவா! சிலர்
பாபாவிடம் எனக்கு வெளிநாட்டு பூட்ஸ் வேண்டுமென கேட்கின்றனர்,
குழந்தைகளே நீங்கள் இப்பொழுது வனவாசத்தில் இருக்கின்றீர்கள் என
பாபா கூறுவார். புது உலகத்தில் உங்களுக்கு எல்லா பொருட்களும்
அதிகமாக கிடைக்கும். பாபா எல்லா விசயத்தையும் சரியாகத்தான்
புரியவைப்பார் அல்லவா! இங்கு நீங்கள் ஏன் ஆசைப்பட வேண்டும்,
மிகவும் எளிமையாக இருக்க வேண்டும், இல்லையெனில் தேகஅபிமானம்
வந்துவிடும். நீங்கள் தனது மனவழியில் நடக்கக்கூடாது. உடல்நிலை
சரியில்லையெனில் டாக்டரை அழைப்பது, மருந்து கொடுத்து
குணப்படுத்துவது, கவனிப்பது இவையணைத்தை பற்றியும் பாபா சொல்வதை
பொறுத்துதான் செய்ய வேண்டும், ஆனாலும் ஒவ்வொரு விசயத்திற்கும்
பாபா இருக்கின்றார் அல்லவா! ஸ்ரீமத் என்றால் ஸ்ரீமத் தான்.
நம்பிக்கையில் தான் வெற்றி இருக்கின்றது. பாபா அனைத்தையும்
அறிந்திருக்கின்றார் அல்லவா! தந்தையின் வழிப்படி நடப்பதில்தான்
நன்மை இருக்கின்றது, தனக்காகவும் நன்மை செய்ய வேண்டும். பிறரை
தகுதி வாய்ந்தவராக ஆக்கவில்லையெனில் நீங்கள் தகுதியாக இல்லையென
அர்த்தமாகும். இங்கு தகுதி உடையவராக இல்லையெனில் அங்கும்
மதிப்பு ஏற்படாது. நன்கு சேவை செய்பவர்களுக்கு சேவையில்
எவ்வளவு ஆர்வம் இருக்கின்றது, சேவைக்காக சுற்றிக் கொண்டே
இருக்கின்றார்கள். சேவை செய்யவில்லையெனில் அவர்களை
கருணையுள்ளம் உடையவர்கள், கல்யாணகாரி என கூறமுடியாது. தந்தையை
நினைவு செய்யவில்லையெனில் இழிவான காரியங்களைச் செய்து கொண்டே
இருப்பார்கள், ஆகவே தாழ்ந்த பதவி அடைவார்கள். நான் சிவபாபாவை
நினைவு செய்து கொண்டுதானே இருக்கின்றேன், நான்தான் பி.கே.வாக
இருக்கின்றேனே என கூறிக்கொண்டு இருக்க முடியாது. சிவபாபா
பிரம்மா மூலமாகத்தான் ஞானம் கொடுக்க முடியும். சிவபாபாவை
மட்டும் நினைவு செய்கின்றேன் என்றால் முரளி எப்படி கேட்க
முடியும், பிறகு விளைவு என்னவாகும்? படிக்கவில்லையெனில் என்ன
பதவி கிடைக்கும். அனைவருடைய அதிர்ஷ்டமும் உயர்ந்ததாக ஆவதில்லை,
அங்கும் வரிசைப்படித்தான் பதவி அடைவார்கள் என்பதையும் நீங்கள்
அறிந்துள்ளீர்கள். தூய்மையாக அனைவரும் ஆகவேண்டும். ஆத்மா
தூய்மையாகாமல் சாந்திதாமம் செல்லமுடியாது.
நீங்கள் அனைவருக்கும் இந்த
ஞானத்தை கூறிக்கொண்டே செல்லுங்கள், சிலர் இப்பொழுது கேட்கா
விட்டாலும் எதிர்காலத்தில் அவசியம் கேட்பார்கள் என பாபா
புரியவைக்கின்றார். இப்பொழுது எவ்வளவு தடைகள், புயல் வேகமாக
வந்தாலும் அதைக்கண்டு பயப்பட வேண்டாம், ஏனென்றால் புதிய தர்மம்
ஸ்தாபனை ஆகின்றதல்லவா! நீங்கள் மறைமுகமாக இராஜ்யத்தை ஸ்தாபனை
செய்துக் கொண்டிருக்கின்றீர்கள். பாபா நன்கு சேவை செய்யும்
குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார். நீங்கள்
தனக்குத்தான் இராஜ்ய திலகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்,
ஸ்ரீமத்படி நடக்க வேண்டும், பிடிவாதம் செய்யக்கூடாது, வீணாக
தனக்குத்தான் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது. தந்தை கூறுகின்றார்
- குழந்தைகளே! நன்கு சேவை செய்யக்கூடிய, கல்யாணகாரி ஆகுங்கள்.
மாணவர்களைப் பார்த்து ஆசிரியர் நன்றாக படித்து தயாராகுங்கள் என
கூறுவார் அல்லவா! உங்களுக்கு 21 பிறவிகளுக்காக சொர்க்கத்தின்
ஸ்காலர்ஷிப் (உதவி) கிடைக்கின்றது, இராஜ்யத்தில் வருவதுதான்
மிகப்பெரிய ஸ்காலர்ஷிப் (உதவி) அடைவதாகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான
தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்,
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சங்கமயுகத்தில் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும்;,
ஏனென்றால் இது வனவாசத்திற்கான நேரமாகும். இங்கு எந்தவிதமான
ஆசையும் இருக்கக்கூடாது. ஒருபொழுதும் தனது கையில் சட்டத்தை
எடுக்கக்கூடாது. சண்டை, மோதலில் ஈடுபடக்கூடாது.
2. வினாசத்திற்கு முன்பாக புதிய இராஜ்யத்தை உருவாக்குவதற்காக
அனைவருக்கும் தந்தையினுடைய செய்தியைக் கொடுக்க வேண்டும். அதாவது
தந்தை கூறுகின்றார், என்னை நினைவு செய்து பாவங்களை அழியுங்கள்
மற்றும் நீங்கள் தூய்மை ஆகுங்கள்.
வரதானம் :
பாபா மூலம் வெற்றித் திலகம்
பெறக்கூடிய, சதா கட்டளைக்கு கீழ்ப்படிந்தவர், இதய சிம்மாசனதாரி
ஆகுக.
பாக்கிய விதாதா பாபா தினந்தோறும்
அமிர்தவேளையில் தம்முடைய கீழ்ப்படிதலான குழந்தைகளுக்கு வெற்றித்
திலகம் இடுகிறார். கீழ்ப்படிதலான பிராமணக் குழந்தைகள் ஒரு
போதும் முயற்சி அல்லது கடினம் என்ற சொல்லை வாயினால் மட்டுமன்றி
சங்கல்பத்திலும் கூட கொண்டுவர முடியாது. அவர்கள் சகஜயோகி ஆகி
விடுகிறார்கள். அதனால் ஒரு போதும் மனச்சோர்வடையாதீர்கள். ஆனால்
சதா மனசிம்மாசனதாரி ஆகுங்கள். இரக்க மனம் உள்ளவர் ஆகுங்கள்.
அகங்காரம் மற்றும் சந்தேக உணர்வை முடித்து விடுங்கள்.
சுலோகன்:
உலக மாற்றத்தின் தேதியை பற்றி
யோசிக்காதீர்கள். சுய மாற்றத்தின் நேரத்தை நிச்சயம் செய்யுங்கள்.
ஓம்சாந்தி