11.09.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த
நாடகத்தின் விளையாட்டு மிகச் சரியாக நடந்து கொண்டிருக்கிறது.
யாருடைய எந்த பாகம், எந்த கணம் (சமயம்) நடக்க வேண்டுமோ அதுவே
மீண்டும் திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை
சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுடைய
பிரபாவம் (தாக்கம்) எப்பொழுது வெளிப்படும்? இதுவரை எந்த ஒரு
சக்தியின் குறைவு உள்ளது?
பதில்:
யோகத்தில் வலுவான நிலை
ஏற்பட்டுவிடும் பொழுது உங்களுடைய செல்வாக்கு வெளிப்படும்.
இப்பொழுது அந்த கூர்மை இல்லை. நினைவின் மூலமே தான் சக்தி
கிடைக்கிறது. ஞானம் என்ற வாளிலே நினைவின் கூர்மை வேண்டும். அது
இதுவரையும் குறைவாக உள்ளது. தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை
நினைவு செய்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் படகு
கரையேறிவிடும். இது ஒரு நொடியினுடைய விஷயமாகும்.
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கிறார். ஆன்மீகத் தந்தை என்று
ஒருவருக்குத் தான் கூறப்படுகிறது. மற்ற எல்லோருமே ஆத்மாக்கள்!
அவரே பரமாத்மா என அழைக்கப் படுகிறார், நான் கூட ஆத்மா தான்
என்று தந்தை கூறுகிறார். ஆனால் நான் பரம (சுப்ரீம்) ஆத்மா ஆவேன்.
நான் தான் பதீத பாவனர் ஞானக்கடல். நான் குழந்தைகளை உலகத்திற்கு
அதிபதியாக ஆக்குவதற்காகத் தான் பாரதத்தில் வருகிறேன் என்று
தந்தை கூறுகிறார். நீங்கள் தான் அதிபதியாக இருந்தீர்கள் அல்லவா?
இப்பொழுது நினைவிற்கு வந்துள்ளது. குழந்தைகளுக்கு
நினைவூட்டுகிறார் - நீங்கள் முதன் முதலில் சத்யுகத்தில்
வந்தீர்கள். பிறகு பாகத்தை நடித்து, 84 பிறவிகளை அனுபவித்து
இப்பொழுது கடைசியில் வந்து விட்டுள்ளீர்கள். நீங்கள் உங்களை
ஆத்மா என்று உணருங்கள். ஆத்மா அழிவற்றது. சரீரம் அழியக்
கூடியதாகும். ஆத்மா தான் தேகத்தில் இருந்து ஆத்மாக்களுடன்
பேசுகிறது. ஆத்ம உணர்வுடையவராக இருப்பதில்லை என்றால், நிச்சயம்
தேக அபிமானம் உள்ளது. நான் ஆத்மா என்பதை எல்லோரும் மறந்து
விட்டுள்ளார்கள். பாவாத்மா, புண்ணியாத்மா, மகானாத்மா என்று
கூறவும் செய்கிறார்கள். அவர்கள் பரமாத்மாவாக ஆக முடியாது.
யாருமே தங்களை சிவன் என்று கூற முடியாது. சரீரங்களுக்கு சிவன்
என்ற பெயர் நிறைய பேருக்கு உள்ளது. ஆத்மா சரீரத்தில்
பிரவேசிக்கும் பொழுது பெயர் இடப்படுகிறது. ஏனெனில் சரீரத்தினால்
தான் பாகம் ஏற்று நடிக்க வேண்டி உள்ளது. எனவே மனிதர்கள் பிறகு
சரீர உணர்வில் வந்து விடுகிறார்கள். நான் இன்னார்! இப்பொழுது,
ஆம், நான் ஆத்மா, 84 பிறவிகளின் பாகம் நடித்தேன் என்று
புரிந்துள்ளார்கள். இப்பொழுது நான் ஆத்மா என்று தெரிந்துக்
கொண்டேன். ஆத்மா நானாகிய சதோபிரதானமாக இருந்தேன். பிறகு
இப்பொழுது தமோபிரதானமாக ஆகியுள்ளேன். அனைத்து ஆத்மாக்கள் மீதும்
துரு ஏறி விடும் பொழுது தான் தந்தை வருகிறார். எப்படி
தங்கத்தில் கலப்படம் ஆகிறது அல்லவா? அதுபோல நீங்கள் முதலில்
உண்மையான தங்கமாக இருந்தீர்கள். பிறகு வெள்ளி, செம்பு மற்றும்
இரும்பு ஆகியவை படிந்து இப்பொழுது முற்றிலும் கருப்பாக ஆகி
விட்டீர்கள். இந்த விஷயத்தை வேறு யாருமே புரிய வைக்க முடியாது.
ஆத்மாவில் (நிர்லேப்) ஒட்டாது (பதிவாகது) என்று எல்லோருமே கூறி
விடுகிறார்கள். துரு எப்படி படுகிறது என்பதையும் தந்தை
குழந்தைகளுக்குப் புரிய வைத்துள்ளார். நான் வருவதே பாரதத்தில்
தான் என்று தந்தை கூறுகிறார். முற்றிலுமே தமோபிரதானமாக
ஆகிவிடும் பொழுது வருகிறேன். மிகவுமே சரியான நேரத்தில்
வருகிறார். எப்படி டிராமாவில் மிகச் சரியாக விளையாட்டு
நடக்கிறது அல்லவா? எந்த பாகம் எந்த கணம் (சமயம்) நடிக்க
வேண்டியிருக்கிறதோ அதே நேரத்தில் மீண்டும் நடைபெறும். அதில்
சிறிதளவு கூட வித்தியாசம் ஏற்பட முடியாது. அது எல்லைக்குட்பட்ட
நாடகம் ஆகும். இது எல்லையில்லாத நாடகம் ஆகும். இவை அனைத்தும்
மிகவுமே நுணுக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
நீங்கள் எந்த பாகத்தை நடித்தீர்களோ, அது நாடகப்படி என்று தந்தை
கூறுகிறார். எந்த ஒரு மனிதரும் படைப்பவர் மற்றும் படைப்பினுடைய
முதல், இடை, கடையைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். ரிஷி
முனிவர்கள் கூட எங்களுக்கு எதுவும் தெரியாது என்றே கூறிச்
சென்றார்கள். இப்பொழுது யாராவது உங்களிடம் படைப்பவர் மற்றும்
படைப்பின் முதல், இடை, கடையை அறிந்துள்ளீர்களா என்று கேட்டால்,
நீங்கள் உடனே ஆம் என்று கூறுவீர்கள். அதைக் கூட நீங்கள்
இப்பொழுது மட்டும் தான் அறிந்திருக்க முடியும். பிறகு
எப்பொழுதும் கிடையாது. நீங்கள் தான் படைப்பவராகிய என்னையும்,
படைப்பினுடைய முதல், இடை, கடையையும் அறிந்துள்ளீர்கள். நல்லது,
இந்த லட்சுமி நாராயணரின் ராஜ்யம் எப்பொழுது வரும் என்பதை
அவர்கள் அறிந்திருப்பார்களா? இல்லை. இவர்களிடம் எந்த ஞானமும்
இல்லை. இதுவோ அதிசயம் ஆகும். எங்களிடம் ஞானம் உள்ளது என்று
நீங்கள் கூறுகிறீர்கள். இதுவும் நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
தந்தையினுடைய பாகமே ஒரே ஒரு முறை தான். உங்களுடைய லட்சியம்
நோக்கமே இந்த லட்சுமி நாராயணர் ஆக வேண்டும் என்பதாகும். அது
போல் ஆகி விட்டீர்கள் என்றால் பிறகு படிப்பின் அவசியம்
இருக்காது. வழக்கறிஞர் ஆகி விட்டார் என்றால் ஆகி விட்டார்.
அவ்வளவு தான்! கற்பிக்கக் கூடிய தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
உங்களுக்கு எல்லாமே சுலபமாக புரிய வைத்துள்ளார். முதலில் உங்களை
ஆத்மா என்று உணருங்கள் என்று பாபா திரும்பத் திரும்ப
உங்களுக்குக் கூறுகிறார். நான் பாபாவினுடையவன் ஆவேன். முதலில்
நீங்கள் நாஸ்திகராக இருந்தீர்கள். இப்பொழுது ஆஸ்திகராக ஆகி
உள்ளீர்கள். இந்த லட்சுமி நாராயணர் கூட ஆஸ்திகராக ஆகித் தான்
நீங்கள் இப்பொழுது எடுத்து கொண்டிருப்பது போல இந்த ஆஸ்தியை
எடுத்திருந்தார்கள். இப்பொழுது நீங்கள் ஆஸ்திகராக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். ஆஸ்திகர் - நாஸ்திகர் இந்த வார்த்தை
இச்சமயத் தினுடையதாகும். அங்கு இந்த வார்த்தைகளே இல்லை. கேட்க
வேண்டிய விஷயமே இருக்காது. இங்கு கேள்வி எழுகிறது. அதனால் தான்
படைப்பவர் மற்றும் படைப்பினை அறிந்துள்ளீர்களா என்று கேட்கிறோம்.
அப்பொழுது இல்லை என்று கூறி விடுகிறார்கள். தந்தை தான் வந்து
தனது அறிமுகத்தை அளிக்கிறார். மேலும் படைப்பினுடைய முதல், இடை,
கடை பற்றிய இரகசியத்தைப் புரிய வைக்கிறார். தந்தை எல்லையில்லாத
எஜமானர். படைப்பவர் ஆவார். மற்ற தர்ம ஸ்தாபகர்கள் கூட இங்கு
அவசியம் வருகிறார்கள் என்பது குழந்தைகளுக்குப் புரிய
வைக்கப்பட்டுள்ளது. இப்ராஹிம், கிறிஸ்து ஆகியோர் எப்படி
வருகிறார்கள் என்பது உங்களுக்கு சாட்சத்காரம்
செய்விக்கப்பட்டிருந்தது. அவர்களோ பின்னால் நிறைய (பாபாவின்
செய்தி) வார்த்தைகள் மூலம் ஒலி வெளி வரும் பொழுது தான்
வருவார்கள். குழந்தைகளே தேகத்துடன் சேர்த்து தேகத்தின் அனைத்து
தர்மங்களையும் தியாகம் செய்து என்னை நினைவு செய்யுங்கள் என்று
தந்தை கூறுகிறார். இப்பொழுது நீங்கள் எதிரே அமர்ந்துள்ளீர்கள்.
தன்னை தேகம் என்று நினைக்கக் கூடாது. நான் ஆத்மா ஆவேன். தன்னை
ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்துக் கொண்டே
இருந்தீர்கள் என்றால், படகு கரையேறி விடும். ஒரு நொடியின்
விஷயம் ஆகும். முக்தியில் செல்வதற்காக அரைக் கல்பம் பக்தி
செய்கிறார்கள். ஆனால் எந்த ஒரு ஆத்மாவும் திரும்பிச் செல்ல
முடியாது.
ஐயாயிரம் வருடங்களுக்கு
முன்பேயும் தந்தை இதைப் புரிய வைத்திருந்தார். இப்பொழுதும்
புரிய வைக்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் இந்த விஷயங்களைப் புரிய வைக்க
முடியாது. அவரை தந்தை என்றும் கூறமாட்டார்கள். தந்தை
லௌகீகமானவர், அலௌகீகமானவர் மற்றும் பரலௌகீகமானவர்.
எல்லைக்குட்பட்ட தந்தை லௌகீக மானவர். எல்லையில்லாத தந்தை
பரலௌகீக தந்தை, ஆத்மாக்களின் தந்தை ஆவார். மேலும் இவர் ஒருவர்
(பிரம்மா) சங்கமயுகத்தின் அதிசயமான தந்தை ஆவார். இவருக்கு
அலௌகீக மானவர் என்று கூறப்படுகிறது. பிரஜாபிதா பிரம்மாவை யாரும்
நினைவே செய்வதில்லை. அவர் நம்முடைய கிரேட் கிரேட் கிராண்டு ஃபாதர்
(பாட்டனார்) ஆவார். இது புத்தியில் வருவதில்லை. ஆதி தேவன்,
ஆதாம் என்று கூறவும் செய்கிறார்கள். ஆனால் பெயரளவில் மட்டுமே.
கோவில்களில் கூட ஆதிதேவனின் படம் உள்ளது அல்லவா? நீங்கள் அங்கு
சென்றீர்கள் என்றால் இதுவோ நம்முடைய நினைவார்த்தம் ஆகும் என்று
புரிந்திருப்பீர்கள். பாபாவும் வந்துள்ளார். நாமும் வந்துள்ளோம்.
இங்கு தந்தை சைதன்யமாக (உயிரோட்டமாக) வந்துள்ளார். அங்கு ஜட
சித்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலே சொர்க்கம் கூட சரியாக
உள்ளது. யாரெல்லாம் கோவிலைப் பார்த்திருக்கிறார்களோ அவர்கள்
பாபா நமக்கு இப்பொழுது சைதன்யமாக இராஜயோகம் கற்பித்துக்
கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துள்ளார்கள். பிறகு பின்னால்
கோவில் கட்டுகிறார்கள். இவை எல்லாமே நம்முடைய நினைவார்த்தங்கள்
ஆகும் என்பது நினைவிற்கு வர வேண்டும். இந்த லட்சுமி நாராயணராக
இப்பொழுது நாம் ஆகிக் கொண்டிருக் கிறோம். அவ்வாறு இருந்தோம்.
பிறகு கீழே இறங்கியபடியே வந்துள்ளோம். இப்பொழுது மீண்டும் நாம்
வீட்டிற்குச் சென்று இராம இராஜ்யத்தில் வருவோம். பின்னால்
இராவண ராஜ்யம் ஆகிறது. பிறகு நாம் வாம மார்க்கத்தில் சென்று
விடுகிறோம். தந்தை எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கிறார்.
இச்சமயத்தில் எல்லா மனிதர்களும் பதீதமாக (தூய்மையற்று)
இருக்கிறார்கள். எனவே ஹே பதீத பவனரே! வந்து எங்களை பாவனமாக
ஆக்குங்கள் என்று கூப்பிடுகிறார்கள். துக்கத்தை நீக்கி
சுகத்தின் வழியைக் கூறுங்கள். பகவான் அவசியம் ஏதோ ஒரு வேடத்தில்
வந்து விடுவார் என்று கூறவும் செய்கிறார்கள். இப்பொழுது நாய்,
பூனை, கல் மற்றும் மண் ஆகியவற்றிலோ வரமாட்டார். பாக்கியசாலி
ரதத்தில் வருகிறார் என்று பாடப்பட்டுள்ளது. நான் இந்த சாதாரண
ரதத்தில் பிரவேசிக்கிறேன் என்று சுயம் தந்தை கூறுகிறார். இவர்
தன்னுடைய பிறவிகளை அறியாமல் இருந்தார். நீங்கள் இப்பொழுது
அறிந்துள்ளீர்கள். இவருடைய அநேக பிறவிகளின் கடைசியில்
வானப்பிரஸ்த நிலை ஆகும் பொழுது நான் பிரவேசம் செய்கிறேன். பக்தி
மார்க்கத்தில் பாண்டவர்களின் மிகவும் பெரிய பெரிய சித்திரங்களை
அமைத்துள்ளார்கள். ரங்கூனில் புத்தருடையது கூட மிகப் பெரிய
சித்திரம் உள்ளது. இவ்வளவு பெரிய மனிதர் இருப்பாரா என்ன?
குழந்தைகளுக்கோ இப்பொழுது சிரிப்பு வரக் கூடும். இராவணனினுடைய
சித்திரம் எப்படி அமைத்துள்ளார்கள். நாளுக்கு நாள் பெரியதாக
ஆக்கிக் கொண்டே போகிறார்கள். இது என்ன பொருள் ஆகும்? ஒவ்வொரு
வருடமும் அதை எரிக்கிறார்கள். இது போல யாராவது எதிரி
இருப்பார்களா? எதிரியினுடைய உருவத்தை செய்து எரிப்பார்கள்.
நல்லது, இராவணன் யார்? ஒவ்வொரு வருடமும் எரித்துக் கொண்டு வரும்
வகையில் அவர் எப்பொழுது எதிரி ஆனார்? இந்த எதிரி பற்றி
யாருக்குமே தெரியாது. அதன் பொருளை யாருமே முற்றிலும் அறியாமல்
உள்ளார்கள். அவர்கள் இருப்பதே இராவண சம்பிரதாயமாக. நீங்கள்
இராம சம்பிரதாயத்தினர் ஆவீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கிறார்.
இல்லற விவகாரங்களில் இருந்தபடியே தாமரை மலரைப் போல ஆகுங்கள்.
மேலும், என்னை நினைவு செய்து கொண்டே இருங்கள் என்று தந்தை
இப்பொழுது கூறுகிறார். பாபா அன்னமும் நாரையும் எப்படி
சேர்ந்தாற் போல இருக்க முடியும் என்று கூறுகிறார்கள். பூசல் (சச்சரவு)
ஏற்படுகிறது. அதுவோ அவசியம் ஏற்படும். சகித்துக்கொள்ள வேண்டி
இருக்கும். இதில் மிகுந்த யுக்திகள் கூட உள்ளன. தந்தையை
யுக்திகளைக் கற்பிப்பவர் (ராஜ் சமஜ்பாஜ்) என்று கூறப்படுகிறது
அல்லவா? எல்லோரும் அவரை ஹே பகவான் துக்கத்தை நீக்குங்கள், கருணை
காட்டுங்கள், (லிபரேட்) விடுவியுங்கள் என்று நினைவு
செய்கிறார்கள் அல்லவா? அந்த லிபரேட்டர் தந்தை அனைவருக்கும்
ஒருவரே ஆவார். உங்களிடம் யார் வந்தாலும் கூட அவர்களுக்கு
தனித்தனியாக புரிய வையுங்கள். கராச்சியில் ஒவ்வொருவரையும்
தனித்தனியாக அமர வைத்து புரிய வைத்துக் கொண்டிருந் தார்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் யோகத்தில்
ஆற்றல் உடையவர்களாக ஆகி விடும் பொழுது உங்களுடைய தாக்கம்
வெளிப்படும். இப்பொழுது அந்தளவு கூர்மை இல்லை. நினைவின் மூலம்
சக்தி கிடைக்கிறது. படிப்பில் சக்தி கிடைப்பதில்லை. ஞானம்
என்பது வாள் ஆகும். அதில் நினைவு என்ற கூர்மையைத் தீட்ட
வேண்டும். அந்த சக்தி குறைவாக உள்ளது. குழந்தைகளே நினைவு
யாத்திரையில் இருப்பதால் உங்களுக்கு பலம் கிடைக்கும் என்று
தந்தை தினமும் கூறிக் கொண்டே இருக்கிறார். படிப்பில் அவ்வளவு
வலிமை இல்லை. நினைவின் மூலமாக நீங்கள் முழு உலகிற்கும் அதிபதி
ஆகி விடுகிறீர்கள். நீங்கள் உங்களுக்காகவே தான் எல்லாமே
செய்கிறீர்கள். நிறைய பேர் வந்தார்கள் மற்றும் சென்று
விட்டார்கள். மாயை கூட மிகவும் (துஷ்டன்) கொடுமையானது. நிறைய
பேர் வருவதில்லை. ஞானமோ மிகவும் நன்றாக உள்ளது என்று
கூறுகிறார்கள். குஷியும் ஆகிறது. வெளியில் சென்ற உடனேயே
முடிந்து போய் விடுகிறது. சிறிதளவு கூட நிலைக்க விடுவ தில்லை.
ஒரு சிலருக்கோ மிகுந்த குஷி ஏற்படுகிறது. ஓகோ! இப்பொழுது பாபா
வந்துள்ளார். நமது சுகதாமம் நாம் சென்றிடுவோம். இப்பொழுது
முழுமையாக ராஜதானி எங்கே ஸ்தாபனை ஆகியுள்ளது என்று தந்தை
கூறுகிறார். நீங்கள் இச்சமயத்தில் ஈசுவரிய குழந்தைகள் ஆவீர்கள்.
பிறகு தேவதைகளாக ஆவீர்கள். தரம் குறைந்து விட்டது அல்லவா?
அளவைக் கருவியில் (மீட்டர்) புள்ளிகள் இருக்கும். இத்தனை
புள்ளிகள் குறைந்து விட்டது. நீங்கள் இப்பொழுது ஒரேயடியாக
உயர்ந்தவர் ஆகிறீர்கள். பிறகு குறைந்து குறைந்து கீழே வந்து
விடுகிறீர்கள். படியில் கீழே இறங்கவே வேண்டி உள்ளது. இப்பொழுது
உங்களுடைய புத்தியில் ஏணிப் படியின் ஞானம் உள்ளது. நமக்கு ஏறும்
கலை ஆகும் பொழுது, அனைவருக்கும் நன்மை ஏற்படுகிறது. பிறகு
மெல்ல மெல்ல இறங்கும் கலை உண்டாகிறது. ஆரம்ப முதற் கொண்டு இந்த
சக்கரத்தை நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த
நேரத்தில் உங்களுக்கு முன்னேறும் கலை ஏற்படுகிறது. ஏனெனில்
தந்தை கூடவே இருக்கிறார் அல்லவா? எந்த இறைவனை மனிதர்கள் (சர்வவியாபி)
எங்கும் நிறைந்தவர் என்று கூறுகிறார்களோ அந்த பாபா இனிமையிலும்
இனிமையான குழந்தைகளே என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் குழந்தைகள் பிறகு பாபா பாபா என்று கூறிக் கொண்டே
இருக்கிறார்கள். பாபா நமக்கு கற்பிக்க வந்துள்ளார். ஆத்மா
கற்றுக் கொள்கிறது. ஆத்மா தான் கர்மம் செய்கிறது. நான் ஆத்மா.
சாந்த சொரூபமானவன் ஆவேன். இந்த சரீரத்தின் மூலமாக கர்மம்
செய்கிறேன். துக்கம் ஏற்படும் பொழுது தான் அசாந்தி என்ற
வார்த்தை கூறப்படுகிறது. மற்றபடி அமைதியோ நமது சுயதர்மம் ஆகும்.
நிறைய பேர் மனஅமைதி வேண்டும் என்கிறார்கள். அட, ஆத்மாவோ சுயம்
அமைதி சொரூபம் ஆகும். அதனுடைய வீடே சாந்தி தாமம் ஆகும். நீங்கள்
உங்களை மறந்து விட்டுள்ளீர்கள். நீங்களோ சாந்தி தாமத்தில்
இருப்பவர்கள். சாந்தி அங்கு தான் கிடைக்கும். தற்காலத்தில் ஒரு
குலம், ஒரு தர்மம் மற்றும் ஒரு மொழி வேண்டும் என்கிறார்கள்.
இப்பொழுது அரசாங்கம் கூட ஒருவரே கடவுள் என்றும் எழுதுகிறது.
பிறகு ஏன் சர்வவியாபி என்று கூறுகிறார்கள். ஒருவரே கடவுள்
என்பதை யாரும் ஏற்பதே இல்லை. எனவே இப்பொழுது நீங்கள் மீண்டும்
எழுத வேண்டும். லட்சுமி நாராயணரின் சித்திரத்தை அமைக்கிறீர்கள்.
அதில் மேலே எழுதுங்கள் சத்யுகத்தில் இவர்களுடைய இராஜ்யம்
இருக்கும் பொழுது ஒரு கடவுள், ஒரு தேவதா தர்மம் இருந்தது. ஆனால்
மனிதர்கள் எதுவுமே புரிந்து கொள்வதில்லை. கவனம் கொடுப்பதில்லை.
யார் நமது பிராமண குலத்தினராக இருப்பாரோ அவருடைய கவனம் செல்லும்.
வேறு யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே தனித் தனியாக
அமர்த்துங்கள் பின் புரிய வையுங்கள் என்று பாபா கூறுகிறார்.
படிவத்தை பூர்த்தி செய்வியுங்கள். அப்பொழுது தெரிய வரும்.
ஏனென்றால் ஒருவர் யாரோ ஒருவரைப் பின்பற்றுபவராக இருப்பார்,
இன்னொருவர் மற்றொருவரை ஏற்றுக் கொள்பவராக இருப்பார். பின்
எல்லோருக்கும் எப்படி ஒன்றாகப் புரிய வைப்பது? அவரவர்கள்
விஷயத்தைக் கூற முற்பட்டு விடுவார்கள். முதன் முதலில் எங்கு
வந்திருக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும். பி.கே. என்ற பெயரை
கேட்டிருக்கிறீர்களா? பிரஜாபிதா பிரம்மாவுடன் உங்களுக்கு என்ன
சம்மந்தம் இருக்கிறது? எப்பொழுதாவது பெயரை கேள்விப்பட்டு
இருக்கிறீர்களா? நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாக
இல்லை. நாங்களோ (பிராக்டிகலில்) நடைமுறையில் இருக்கிறோம்.
நீங்களும் கூட பிரஜா பிதா பிரம்மாவின் குழந்தைகள் தான். ஆனால்
புரியாமல் இருக்கிறீர்கள். புரிய வைப்பதற்கு மிகுந்த யுக்தி
வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய்
தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. கோவில்கள் ஆகியவற்றைப் பார்க்கும் பொழுது இவை அனைத்தும்
நம்முடையதே நினைவார்த்தமாகும் என்பது நினைவில் இருக்க வேண்டும்.
இப்பொழுது நாம் இது போல லட்சுமி நாராயணராக ஆகிக்
கொண்டிருக்கிறோம்.
2. இல்லற விவகாரங்களில் இருக்கும் பொழுதும் தாமரை மலர் போல
இருக்க வேண்டும். அன்னமும் கொக்கும் ஒன்றாக இருக்கிறீர்கள்
என்றால் மிகுந்த யுக்தியுடன் நடக்க வேண்டும். சகித்து கொள்ளவும்
வேண்டும்.
வரதானம்:
மாயையின் பந்தனங்களிலிருந்து சதா
பந்தனமற்று இருக்கக் கூடிய யோகம் நிறைந்தவர்களாக
பந்தனங்களிலிருந்து விடுபட்டவராக ஆகுக.
பந்தனமற்றவர்களின் அடையாளம் சதா
யோகயுக்த் ஆகும். யோகயுக்த் குழந்தைகள் பொறுப்புகளின் பந்தனம்
அல்லது மாயையின் பந்தனத்திலிருந்து விடுபட்டு இருப்பார்கள்.
மனதின் பந்தனமும் இருக்கக்கூடாது. லௌகீக பொறுப்புகள் என்பது
விளையாட்டாகும், ஆகையால் தந்தையின் ஆலோசனைப்படி விளையாட்டாக
நினைத்து மகிழ்வுடன் விளையாடினால் ஒருபோதும் சிறிய சிறிய
விசயங்களில் களைப்படைய மாட்டீர்கள். பந்தன் என்று நினைப்பதால்
களைப்படைகிறீர்கள். ஏன், எதற்கு என்ற கேள்வி எழுகிறது. ஆனால்
பொறுப்பாளி பாபா ஆவார், நீங்கள் நிமித்தமாக இருக்கிறீர்கள்.
இந்த நினைவின் மூலம் பந்தனமற்றவர்களாக ஆகுங்கள், அப்போது
யோகயுக்த் ஆக ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
செய்பவர் செய்விப்பவரின்
நினைவின் மூலம் தேக உணர்வு மற்றும் அபிமானத்தை அழித்து
விடுங்கள்.
ஓம்சாந்தி