13.09.2020 காலை முரளி ஓம் சாந்தி அவ்யக்தபாப்தாதா
ரிவைஸ் 22.03.1986 மதுபன்
சுகம், சாந்தி மற்றும்
குஷிக்கான ஆதாரம் தூய்மை
இன்று பாப்தாதா தன்னுடைய
நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து புனிதமான மற்றும் மகிழ்ச்சியான
குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பெரிய
குழுவின் ரூபத்தில் அந்த மாதிரி தூய்மை மற்றும் மகிழ்ச்சி
இரண்டு விசேசங்களையும் உடையவர்கள் இந்த முழு நாடகத்திலும்
இவ்வளவு பெரிய சபை அல்லது இவ்வளவு பெரிய கூட்டம் வேறு எங்கும்
இருக்க முடியாது. இன்றைய காலத்தில் சிலருக்கு உயர்ந்தவர்கள் (ஹைனெஸ்)
மற்றும் புனிதமானவர்கள் என்ற டைட்டில் கொடுக்கிறார்கள். ஆனால்
நடைமுறை ரூபத்தில் பார்க்கும்போது அவர்களிடம் தூய்மை, மகான்
தன்மை தென்படுவதில்லை. இந்தளவு மகான் தூய்மையான ஆத்மாக்களின்
குழு எங்கு இருக்க முடியும்? என்று பாப்தாதா
பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு குழந்தைகளிடமும் கர்மத்தில்
மட்டுமல்லாமல் மனம், சொல், செயல் மூன்றிலும் தூய்மை ஆகியே தீர
வேண்டும் என்ற திட சங்கல்பம் இருக்கிறது. எனவே, இவ்வாறு
தூய்மையாக வேண்டும் என்ற உயர்ந்த திட சங்கல்பம் வேறு எங்கும்
இருக்க முடியாது. அழியாததாகவும் இருக்க முடியாது, சகஜமானதாகவும்
இருக்க முடியாது. நீங்கள் அனைவரும் தூய்மையை தாரணை செய்வதை
எவ்வளவு சகஜமாக புரிந்திருக்கிறீர்கள். ஏனென்றால் பாப்தாதா
மூலமாக ஞானம் கிடைத்திருக்கிறது மற்றும் ஞான சக்தியின் மூலமாக
ஆத்மா-தன்னுடைய அனாதி மற்றும் ஆதி சொரூபமே தூய்மை என்று
தெரிந்து கொண்டீர்கள். எப்பொழுது ஆதி, அனாதி சொரூபத் தின்
நினைவு வந்துவிட்டதோ, அப்பொழுது இந்த நினைவே சக்திசாலியாக்கி
சகஜமாக அனுபவம் செய்ய வைக்கிறது. நம்முடைய உண்மையான சொரூபமே
தூய்மை என்று தெரிந்து கொண்டீர்கள். சங்கதோசத்தின் சொரூபம்
அபவித்ரமாகும். எனவே உண்மையானதை தன்னுடையதாக்கிக் கொள்வது
சகஜமாகி விட்டதல்லவா!
சுய தர்மம், சுய தேசம்,
சுயத்தின் தந்தை மற்றும் சுய சொரூபம், சுய கர்மம் அனைத்தின்
ஞானமும் கிடைத்திருக்கிறது. எனவே ஞான சக்தியின் மூலம் கடினமானது
மிகவும் சகஜமாகிவிட்டது. எந்த விசயத்தை இந்தக்கால மகான் ஆத்மா
என அழைக்கப்படுபவர்களும் முடியாதது, இயற்கைக்கு மாறானது என
புரிந்திருக்கிறார்களோ அதை தூய்மையான ஆத்மாக்கள் நீங்கள்
முடியும் என எவ்வளவு சகஜமாக அனுபவம் செய்து விட்டீர்கள்.
தூய்மையை தன்னுடையதாக்கிக் கொள்வது சகஜமா? அல்லது கடினமா? முழு
உலகத்திற்கு முன்னால் தூய்மை எங்களுடைய சுய சொரூபம் என்று சவால்
விட்டு கூற முடியும். தூய்மை சக்தியின் காரணத்தினால் எங்கு
தூய்மை இருக்கிறதோ அங்கு சுகம் மற்றும் சாந்தி தானாகவே
இருக்கிறது. தூய்மை அடித்தளமாக இருக்கிறது. தூய்மையை தாய் என்று
சொல்கிறார்கள் சுகம், சாந்தி அதன் குழந்தைகள். எனவே எங்கு
தூய்மை இருக்கிறதோ அங்கு சுகம், சாந்தி தானாகவே இருக்கிறது,
அதனால் குஷியும் இருக்கிறது. அப்படிப்பட்டவர் ஒருபொழுதும்
சோர்வடைய முடியாது. சதா குஷியாக இருப்பார்கள். எங்கு புனிதம்
இருக்கிறதோ அங்கு மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும். தூய்மையான
ஆத்மக்களின் அடையாளம் சதா குஷியாக இருப்பது. எனவே எவ்வளவு
நிச்சயபுத்தியுடைய தூய்மையான ஆத்மக்கள் அமர்ந்திருக்கிறார்கள்
என்று பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கிறார். உலகத்தில்
இருப்பவர்கள் சுகம் சாந்திக்கு பின்னால் ஓடிக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால் சுகம் சாந்திக்கு அடித்தளமே
தூய்மையாகும். அந்த அடித்தளத்தை தெரிந்திருக்கவில்லை. அதனால்
தூய்மையின் அடித்தளம் உறுதியாக இல்லாத காரணத்தினால்
அல்பகாலத்திற்கு சுகம் சாந்தி பிராப்தி ஆகின்றது. ஆனால்
ஒருநேரம் இருக்கிறது. அடுத்த நேரம் இருப்பதில்லை. தூய்மை
இல்லாமல் சதா கால சுகம்-சாந்தி பெறுவது சாத்தியமில்லாதது.
நீங்கள் அடித்தளத்தை தன்னுடையதாக்கி விட்டீர்கள். அதனால் சுகம்
சாந்திக்காக ஓட வேண்டிய அவசியமில்லை. தூய்மையுள்ள ஆத்மாக்களிடம்
சுகம், சாந்தி தானாகவே வருகிறது. குழந்தைகள் அம்மாவிடம் தானாகவே
செல்கிறார்கள் அல்லவா! எவ்வளவு தான் பிரித்து வைத்தாலும்
அம்மாவிடம் கண்டிப்பாக செல்வார்கள். எனவே, தூய்மையானது சுகம்,
சாந்தியின் தாயாக இருக்கிறது. எங்கு தூய்மை இருக்கிறதோ அங்கு
சுகம், சாந்தி, குஷி தானாகவே வருகிறது. எனவே என்னவாகி
விட்டீர்கள்? கவலையற்ற நாட்டின் மகாராஜா. இந்த பழைய உலகத்தின்
மகாராஜா அல்ல, ஆனால் கவலையற்ற நாட்டின் மகாராஜா. இந்த பிராமண
குடும்பம் கவலையற்ற நாடாக அதாவது சுகமான உலகமாக இருக்கிறது.
ஆகவே இந்த சுகமான உலகின், கவலையற்ற நாட்டின் மகாராஜா
ஆகிவிடீர்கள். புனித ராஜாவாகவும் ஆகிவிட்டீர்கள். கிரீடமும்
இருக்கிறது. சிம்மாசனமும் இருக்கிறது. வேறு என்ன
குறையிருக்கிறது! எவ்வளவு பெரிய கிரீடமாக இருக்கிறது! ஒளியின்
கிரீடம் தூய்மையின் அடையாளம். மற்றும் பாப்தாதாவின் இதய
சிம்மாசனதாரியாகவும் இருக்கிறீர்கள். எனவே கவலையற்ற நாட்டின்
மகாராஜா கிரீடமும் தனிப்பட்டது, சிம்மாசனமும் தனிப்பட்டது.
இராஜ்யமும் தனித்தன்மையுடன் இருப்பதால் மகாராஜாவும் தனித்
தன்மையுள்ளவராக இருக்கிறார்.
இன்றைய காலத்தில் மனித ஆத்மாக்கள் இவ்வளவு அலைவதைப் பார;த்து
பாப்தாதாவிற்கு குழந்தைகள் மீது கருணை ஏற்படுகிறது. எவ்வளவு
முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார்கள். முயற்சி என்றால்
அலைவது, உழைப்பும் அதிகமாக செய்கிறார்கள் ஆனால் என்ன
கிடைக்கிறது? சுகம் கிடைக்கிறது, ஆனால் சுகத்தின் கூட கூடவே
ஏதாவது துக்கமும் கிடைத்து விடுகிறது. மற்ற எதுவும்
இல்லையென்றாலும் அல்பகால சுகத்தின் கூடவே கவலை மற்றும் பயம்
இரண்டும் இருக்கவே செய்கிறது. எனவே எங்கு கவலை இருக்கிறதோ
அங்கு நிம்மதி இருக்க முடியாது. எங்கு பயம் இருக்கிறதோ அங்கு
சாந்தி இருக்க முடியாது. ஆகவே சுகத்தின் கூடவே இந்த துக்க
அசாந்திக்கான காரணமும் இருக்கிறது. ஆனால் உங்கள் அனைவருக்கும்
துக்கத்தின் காரணம் மற்றும் நிவாரணம் கிடைத்துவிட்டது.
இப்பொழுது நீங்கள் பிரச்சனைகளுக்கு சமாதானம் கொடுக்ககூடிய
சமாதான சொரூபம் ஆகிவிட்டீர்கள் அல்லவா? பிரச்சனைகள் உங்களிடம்
விளையாடுவதற்கு பொம்மைகளாக வருகிறது. விளையாடுவதற்காக வருகிறது
பயமுறுத்த வருவதில்லை. பயப்படுபவர்கள் இல்லைதானே? எங்கு சர்வ
சக்திகளின் கஜானா பிறப்புரிமையாகிவிட்டதோ அங்கு வேறு என்ன குறை
இருக்க முடியும், நிறைவாக இருக்கிறீர்கள் தானே? மாஸ்டர்
சர்வசக்திவானுக்கு முன்னால் பிரச்சனைகள் ஒன்றுமே இல்லை.
ஒருவேளை யானையின் பாதங்களுக்கு கீழே எறும்பு வந்தால்
கண்களுக்குத் தென்படுமா? எனவே இந்த பிரச்சனைகளும் மகராதிகள்
உங்களுக்கு முன்னால் எறும்புக்கு சமமானது. விளையாட்டு என
புரிந்து கொள்வதின் மூலம் குஷியிருக்கும். எவ்வளவு பெரிய
விசயமும் சிறியதாகி விடுகிறது. இன்றைய காலத்தில்
குழந்தைகளுக்கு புத்தியின் எந்த விளையாட்டு; விளையாட
வைக்கிறார்கள்? குழந்தைகளை கணக்கு போடச் சொன்னால்
கஷ்டப்படுகிறார்கள். ஆனால் விளையாட்டு வடிவில் சந்தோசமாக
கணக்கு செய்வார்கள். எனவே உங்கள் அனைவருக்கும் பிரச்சனைகள்
எறும்புக்கு சமம் தானே? எங்கு தூய்மை, சுகம், சாந்தியின்
சக்தியிருக்கிறதோ அங்கு கனவிலும் கூட துக்கம், அசாந்தியின்
அலைகள் வரமுடியாது. சக்திசாலி ஆத்மாக்களுக்கு முன்னால்
வருவதற்கு இந்த துக்கம், அசாந்திக்கு தைரியம் இருக்க முடியாது.
தூய்மையான ஆத்மாக்கள் சதா மலர்ந்த முகமுடைய ஆத்மாக்கள். இதை
சதா நினைவில் வையுங்கள். அனேக விதமான குழப்பங்கள், அலைச்சல்,
துக்கம் அசாந்தியின் வலையில் இருந்து விடுபட்டு
வந்திருக்கிறீர்கள். ஏனென்றால் ஒரு துக்கம் மட்டும் வருவ
தில்லை. ஆனால் ஒரு துக்கம் அதன் வம்சாவளியுடன் வருகிறது. எனவே
அந்த வலையிலிருந்து விடுபட்டு விட்டீர்கள். அந்த மாதிரி தன்னை
பாக்கியவான் என்று புரிந்திருக்கிறீர்கள் தானே?
இன்று ஆஸ்திரேலியர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியர்களை
பாப்தாதா எப்போதும் தபஸ்யாவின், மகாதானியின் விசேசம்
நிறைந்தவர்கள் என்று வர்ணனை செய்கிறார். சதா சேவை செய்ய
வேண்டும் என்ற ஈடுபாட்டின் தபஸ்யா, அனேக ஆத்மாக்களுக்கும்
தபஸ்வி ஆத்மாக்களாகிய உங்களுக்கும் பலனை கொடுத்துக்
கொண்டிருக்கிறது. பூமிக்கு தகுந்தாற்போல் விதி மற்றும்
வளர்ச்சி இரண்டையும் பார்த்து பாப்தாதா அதிக மகிழ்ச்சி
அடைகின்றார் ஆஸ்திரேலியா என்றாலே மிகுந்த சிறப்புத் தன்மை
உடையது. சேவைக்காக அனைவரிடத் திலும் தியாக பாவனை உடனடியாக
வருகின்றது. அதனால் தான் இத்தனை சென்டர்களைத்
திறந்துள்ளீர்கள். நமக்கு எப்படி பாக்கியம் கிடைத்துள்ளதோ
அதேபோல மற்றவர்களுக்கும் பாக்கியத்தை உருவாக்க வேண்டும். திட
சங்கல்பம் செய்வது தான் தபஸ்யா ஆகும். எனவே தியாகம் மற்றும்
தபஸ்யாவின் விதி மூலமாக வளர்ச்சியை பெறுகிறீர்கள். சேவையின்
பாவனை அனேக எல்லைக்குட்பட்ட பாவனைகளை முடித்து விடுகிறது. இந்த
தியாகம் மற்றும் தபஸ்யாவே வெற்றிக்கு ஆதாரமாக இருக்கிறது.
புரிந்ததா? குழுவிற்கு சக்தி இருக்கின்றது. ஒருவர் சொன்னார்;
மற்றவர் செய்தார்; ஒருவர் சொன்னார் மற்றவர் இது நடக்க முடியாது
எனச் சொன்னார் என்று இருக்கக்கூடாது. இதில் குழு உடைகிறது.
ஒருவர் சொல்ல மற்றவர் உற்சாகத்தோடு ஒத்துழைப்பவராகி
நடைமுறையில் கொண்டு வருவதுதான் குழுவின் சக்தியாகும்.
பாண்டவர்களுக்கும் குழு இருக்கின்றது. ஒரு போதும் நீ நான்
என்பது கூடாது. பாபா! பாபா! என்று கூறினால் அனைத்து
விசயங்களும் முடிந்து விடும் அவ்வளவு தான். நீ! நான்,
என்னுடையது, உன்னுடையது என்பதில் தான் மோதல் ஏற்படுகிறது.
தந்தையை முன்னால் வைத்தால் எந்த ஒரு பிரச்சினையும் வரமுடியாது.
மேலும் சதா தடையற்ற ஆத்மாக்கள் தீவிர முயற்சியின் மூலம்
பறக்கும் கலையை அனுபவம் செய்கின்றார்கள். நீண்டகால தடையில்லாத
நிலை, உறுதியான நிலையாக மாறிவிடுகிறது. அடிக்கடி யார்
தடைகளுக்கு வசமாகிறார்களோ அவர்களுடைய அடித்தளம் பலவீனமாகி
விடுகிறது. நீண்டகால தடையற்ற ஆத்மாக்களின் அடித்தளம்
சக்திசாலியாக இருக்கும் காரணத்தினால் தாமும் சக்திசாலியாகி
மற்றவர்களையும் சக்திசாலியாக மாற்றுகிறார்கள். ஏதாவதொரு பொருள்
உடைந்துவிட்டால் பிறகு ஒட்ட வைத்தாலும் அது பலகீனமாவே
இருக்கிறது. நீண்டகால சக்திசாலி ஆத்மா, தடையற்ற ஆத்மா கடைசி
நேரத்திலும் தடையற்றவராகி பாஸ்வித் ஹானர் ஆகிவிடுகிறார்கள்,
அல்லது பர்ஸ்ட் டிவிசனில் வந்து விடுகிறார்கள். எனவே
நீண்டகாலம் தடையற்ற நிலையை அவசியம் அனுபவம் செய்ய வேண்டும்
என்று சதா லட்சியம் வையுங்கள். தடை வந்தது, சென்று விட்டது
என்று நினைக்காதீர்கள். அதனால் பரவாயில்லை. ஆனால் அடிக்கடி தடை
வந்து அதை அழித்துக்கொண்டு இருந்தால் நேரம் வீணாகிறது.
சக்தியும் வீணாகிறது. அந்த நேரம் மற்றும் சக்தியை சேவையில்
ஈடுபடுத்தினால் ஒன்றிற்கு கோடி மடங்கு சேமிப்பாகும். அதனால்
நீண்டகால தடையற்ற ஆத்மாக்கள் விக்னவிநாசகர் ரூபத்தில்
பூஜிக்கப் படுகிறார்கள். விக்னவிநாசக் பட்டம் பூஜைக்குரிய
ஆத்மாக்களுடையது. நான் விக்ன விநாசக் பூஜ்ஜிய ஆத்மாவாக
இருக்கிறேன். இந்த நினைவின் மூலம் சதா தடையற்றவராகி பறக்கும்
கலையின் மூலம் முன்னால் பறந்து செல்லுங்கள், மற்றவரையும் பறக்க
வையுங்கள், புரிந்ததா? தன்னுடைய தடைகளை அழித்தீர்கள். ஆனால்,
மற்றவர்களுடைய தடைகளையும் அழிப்பவர் ஆக வேண்டும். பாருங்கள்,
உங்களுக்கு நிமித்த ஆத்மாவாக (டாக்டர் நிர்மலா அவர்கள்) அந்த
மாதிரி கிடைத்திருக்கின்றார். அவர் ஆரம்பத்திலிருந்து எந்த ஒரு
தடைக்கும் ஆளாகவில்லை. சதா விடுபட்டவராகவும் அன்பானவராகவும்
இருக்கிறார். கொஞ்சம் கண்டிப்புடன் இருக்கிறார். இதுவும்
அவசியம் தான். ஒருவேளை அந்தமாதிரி கண்டிப்பான ஆசிரியர்
கிடைக்கவில்லை என்றால், இவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டி ருக்காது.
இது அவசியமுமாகும். எப்படி நோய்தீர கசப்பான மருந்து
இருக்கிறதுதானே? எனவே நாடகப்படி நிமித்த ஆத்மாக்களுடைய
சகவாசத்தின் தாக்கமும் ஏற்படுகிறது. மேலும் தான் வந்தவுடனேயே
சேவைக்கு நிமித்தமாகி விட்டார். எனவே ஆஸ்திரேலியாவிலும்
ஆத்மாக்கள் வந்தவுடனேயே சென்டர் திறக்கும் சேவையில்
இறங்கிவிடுகிறார்கள். இந்த தியாக பாவனையின் வைப்ரேசன் முழு
ஆஸ்திரேலியாவிலும் அதோடு தொடர்புள்ள மற்ற இடங்களிலும் அதே
ரூபத்தில் வளர்ச்சி ஆகிக் கொண்டிருக்கிறது. யாரிடம் தபஸ்யா
மற்றும் தியாகம் இருக்கின்றதோ அவர்களே சிரேஷ்ட ஆத்மா. அனைத்து
ஆத்மாக்களும் தீவிர முயற்சி செய்பவர் தாம் ஆனால், முயற்சியின்
கூடவே தனது விசேசங்கள் தமது பிரபாவத்தை கண்டிப்பாக
ஏற்படுத்துகிறது. இப்பொழுது அனைவரும் நிறைந்தவராகிக்கொண்டு
இருக்கிறீர்கள்தானே? நிறைந்து விட்டீர்கள் என்ற சான்றிதழ்
யாருக்கும் கிடைக்கவில்லை. ஆனால், நிறைவு நிலைக்கு அருகில்
வந்துவிட்டீர்கள். இதில் வரிசைக்கிரமமாக உள்ளீர்கள். சிலர்
மிகவும் அருகில் வந்து விட்டீர்கள், சிலர் வரிசைக்கிரமமாக
முன்-பின்னாக உள்ளீர்கள். ஆஸ்திரேலியர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
தியாகத்தின் விதை பாக்கியத்தை பெற வைக்கிறது. சக்தி சேனையும்
பாப்தாதாவிற்கு மிகவும் பிரியமானவர்கள். ஏனென்றால், தைரியம்
உடையவர்கள். எங்கு தைரியம் உள்ளதோ அங்கு பாப்தாதாவின் உதவி சதா
கூடவே இருக்கிறது. சதா திருப்தியாக இருப்பவர்கள்தானே? திருப்தி
வெற்றிக்கு ஆதாரமாகும். நீங்கள் அனைவரும் திருப்தியான
ஆத்மாக்கள், எனவே வெற்றி உங்களது பிறப்புரிமையாக இருக்கிறது.
புரிந்ததா? எனவே, ஆஸ்திரேலியர்கள் அருகிலும் அன்பாகவும்
இருப்பதால் அவர்களுக்கு கூடுதல் உரிமை இருக்கிறது. நல்லது.
அவ்யக்த முரளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மகா வாக்கியங்கள்
(கேள்வி பதில்)
கேள்வி:
சக்தி சேனையின் பெயர் உலகம் முழுவதும் எப்பொழுது புகழடையும்?
பதில்:
எப்பொழுது குழுவின் ரூபத்தில் ஏக்ரஸ் ஸ்திதி அல்லது ஒரு சுத்த
எண்ணத்தில் நிலைத்திருக்கும் பயிற்சி இருக்குமோ, குழுவில்
ஒருவருக்கு கூட வேறு எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் இருக்குமோ,
அனைவரும் ஒரே ஈடுபாட்டில், ஒரே அசரீரியாகும் சுத்த எணணத்தில்
நிலைத்திருக்கும் பயிற்சி பெற்றிருக்கும் போது உலகம் முழுவதும்
சக்தி சேனையின் பெயர் புகழடையும்.
கேள்வி:
ஸ்தூல சேனையின் வெற்றி யுத்த மைதானத்தில் எதன் ஆதாரத்தில்
ஏற்படுகிறது? உங்களுடைய வெற்றி முரசு எப்பொழுது ஒலிக்கும்?
பதில்:
ஸ்தூல போர;வீரர்கள் யுத்த மைதானத்திற்கு செல்லும் பொழுது ஒரே
கட்டளையில், நாலாபுறமும் துப்பாக்கியால் சுட
ஆரம்பிக்கிறார்கள். ஓரே சமயத்தில், ஒரே கட்டளையில் நாலாபுறமும்
முற்றுகையிடுகின்றனர், அப்போது வெற்றி பெறுகிறார்கள். அந்த
மாதிரி ஆன்மீக சேனை, குழுவின் ரூபத்தில், ஒருவரின் சைகைப்படி
ஒரே விநாடியில், அனைவரும் ஏக்ரஸ் ஸ்திதியில் நிலைத்து விட
வேண்டும். அப்போதுதான் வெற்றி முரசு ஒலிக்கும்.
கேள்வி:
தந்தையின் எந்த கட்டளையை நடைமுறையில் கொண்டு வருவதற்கு
எவரெடியாக மாறினால் இந்த கலியுக மலையை தூக்கி விடலாம்?
பதில்:
ஒரு விநாடியில் அனைவரும் ஏக்ரஸ் ஸ்திதியில் நிலைத்து விடுங்கள்
என்று தந்தை கட்டளை இடுவார். எப்போது அனைவரது எண்ணமும் ஒரு
எண்ணத்தில் கலந்து விடுகிறதோ அப்போது இந்த கலியுக மலை
தூக்கப்படும். அந்த ஒரு நொடி சதா காலத்திற்கான நொடியாக
இருக்கும். அதற்காக ஒரு நொடி நிலையாக இருந்த பிறகு கீழே
வரவேண்டும் என்பது கூடாது.
கேள்வி:
ஒவ்வொரு பிராமண குழந்தையின் பொறுப்பு எது?
பதில்:
முழு குழுவையும் ஒரே ரசனை நிலையில் நிலையாக இருக்கவைக்க
ஒத்துழைப்பு கொடுப்பது ஒவ்வொரு பிராமணனின் பொறுப்பாகும்.
எவ்வாறு அஞ்ஞானி ஆத்மாக்களுக்கு ஞானத்தின் வெளிச்சத்தை
கொடுப்பதற்கு, சதா சுபபாவனை மற்றும் நன்மையின் பாவனை வைத்து
முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களோ, அதேபோல தன்னுடைய இந்த
தெய்வீக குழுவையும் ஏக்ரஸ் ஸ்திதியில் நிலையாக இருக்கவைக்கவும்
குழுவின் சக்தியை அதிகரிக்க ஒருவர் பிறர்மீது விதவிதமான
ரூபத்தில் முயற்சி செய்யுங்கள். இதற்கு திட்டங்களை
உருவாக்குங்கள். அதற்காக நான் என்னுடைய ரூபத்தில் சரியாக
இருக்கிறேன் என மகிழ்;ச்சி அடைய வேண்டாம்.
கேள்வி:
பரமாத்ம ஞானத்தின் விசேசம் என்ன?
பதில்:
குழுவின் சக்திதான் இந்த பரமாத்ம ஞானத்தின் விசேசசமாக
இருக்கிறது. இந்த பிராமண குழுவின் விசேசம், தேவர்கள் ரூபத்தில்
நடைமுறையில் ஒரு தர;மம், ஒரு இராஜ்யம், ஒரு வழியின் ரூபத்தில்
நடக்கிறது.
கேள்வி:
எந்த ஒரு விசயத்தின் சம்பூரண மாற்றமே சம்பூரண நிலையை அருகில்
கொண்டு வரும்?
பதில்:
ஒவ்வொருவரிடமும் தேக அபிமானத்தின் மூல சமஸ்காரமாக என்ன
இருக்கிறதோ, எதை நீங்கள் தனது சுபாவம் என்று கூறுகிறீர்களோ,
அந்த சமஸ்காரத்தின அம்சம்கூட இருக்க கூடாது. தன்னுடைய இந்த
சம்ஸ்காரத்தை மாற்றம் செய்து பாப்தாதாவின் சம்ஸ்காரங்களை தாரணை
செய்ய வேண்டும். இதுவே கடைசி முயற்சி.
கேள்வி:
பாப்தாதாவின் பிரத்யட்சம் எதன் ஆதாரத்தில் ஏற்படும்?
பதில்:
எப்பொழுது ஒவ்வொருவரிடமும்
பாப்தாதாவின் சமஸ்காரம் தென்படுகிறதோ அப்பொழுதுதான்.
பாப்தாதாவின் சமஸ்காரத்தை காப்பி செய்து அவருக்கு சமமாக
மாறினால் சமயமும் சக்திகளும் மிச்சமாகும், மேலும் முழு உலகிலும்
பாப்தாதாவை எளிதில் பிரத்தியட்சம் செய்ய முடியும்.
பக்திமார;க்கத்தில் எங்கு பார;த்தாலும் நீயே! நீதான் எனச்
சொல்ல மட்டும் செய்கிறார்கள். ஆனால் இங்கு நடைமுறையில் எங்கு
பார;த்தாலும் யாரை பார்த்தாலும் அங்கு பாப்தாதாவின் சமஸ்காரமே
தென்பட வேண்டும்.
வரதானம்:
கோபத்தின் அம்சத்தையும் தியாகம்
செய்யக்கூடிய சுயமரியாதையில் இருக்கும் புண்ணிய ஆத்மா ஆகுக.
சுயமரியாதையில் இருக்கும்
குழந்தைகள் அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் வள்ளலாக
இருப்பார்கள். வள்ளல் என்றால் இரக்கமனமுடையவர். அவர்களுக்கு ஒரு
பொழுதும் எந்த ஆத்மாவின் மீதும் எண்ணத்தில்கூட கோபம் இருக்காது.
இவர் ஏன் இப்படி இருக்கிறார்? அப்படிச் செய்யக்கூடாதே,
நடக்கக்கூடாதே, ஞானம் இதைச் சொல்கிறதா என்ன? என்பதெல்லாம்
சுட்சும கோபத்தின் அம்சமாகும். ஆனால் சுயமரியாதையில் இருக்கும்
புண்ணிய ஆத்மாக்கள் விழுந்தவர்களை தூக்கிவிடுவார்கள். சகயோகி
ஆக்குவார்கள். அவர்கள் ஒரு பொழுதும் இவர் அவருடைய கர்மத்தின்
பலனை அனுபவிக்கிறார், செய்தார் அதனால் கண்டிப்பாக அடைவார், இவர்
விழத்தானே வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க மாட்டார்கள். அந்த
மாதிரி எண்ணங்கள் குழந்தைகள் உங்களிடம் இருக்க முடியாது.
சுலோகன்:
திருப்தி மற்றும் மகிழ்ச்சியின்
விசேசமே பறக்கும் கலையின் அனுபவத்தை செய்ய வைக்கிறது.
ஓம்சாந்தி