06.09.2020 காலை முரளி ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா,
ரிவைஸ் 16.03.1986 மதுபன்
ஆன்மிக டிரில்
பாப்தாதா அனைத்து குழந்தைகளின்
இனிமையான அமைதி நிலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு
விநாடியில் அமைதி நிலையில் உறுதியாக நிற்கும் பயிற்சி எது வரை
வந்திருக்கிறது? இந்த நிலையில் எப்போது இருக்க
விரும்புகிறீர்களோ, அப்போது அதில் உறுதியாக இருக்க முடிகிறதா?
அல்லது நேரம் பிடிக்கிறதா? ஏனென்றால் இனிமையான அமைதி நிலை
உங்கள் அநாதி சொரூபமாக உள்ளது. ஆதி சொரூபம் சப்தத்தில் வருவது.
ஆனால் அமைதியே அனாதி அவிநாசி சமஸ்காரமாக உள்ளது. ஆக, தன்னுடைய
அநாதி சமஸ்கார, அநாதி சொரூபத்தை, அனாதி சுபாவத்தை அறிந்து
கொண்டு எப்போது விரும்புகிறீர்களோ, அப்போது அந்த சொரூபத்தில்
நிலைத்துவிட முடிகிறதா? 84 பிறவிகள் சப்தத்தில் வரவேண்டி உள்ளது,
அதனால் சதா சப்தத்தில் வரும் பழக்கம் உள்ளது. ஆனால் அநாதி
சொரூபம் அமைதியாக இருப்பதாலும், இச்சமயம் சக்கரம்
முடிவடைவதாலும் அமைதியான வீட்டுக்குத் திரும்பிச் செல்ல
வேண்டும். இப்போது வீட்டுக்குச் செல்லும் நேரம் அருகில் உள்ளது.
இப்போது முதல்-இடை-கடையின் மூன்று கால பாகத்தை முடித்து விட்டு
தனது அனாதி சொரூபத்திலும் அநாதி நிலையிலும் நிலைத்து இருக்கும்
நேரமாக இருக்கிறது. அதனால் இந்தச் சமயம் இந்தப் பயிற்சி அதிக
அவசியமாக உள்ளது. நான் கர்மேந்திரியங்களை வென்றுவிட்டேனா? என
தன்னைத்தான் சோதித்துப் பாருங்கள். சப்தத்தில் வர விரும்பாதபோது
இந்த வாயின் சப்தம் தன் பக்கம் இழுப்பதில்லையே? இதைத்தான்
ஆன்மீக டிரில் என்று சொல்லப்படுகிறது.
தற்காலத்தில் நேரத்திற்குத்
தக்கபடி சரீரத்தின் அனைத்து வியாதிகளையும் போக்க எக்ஸர்சைஸ்
கற்பிக் கின்றனர். அதேபோல இச்சமயம் ஆத்மாவை சக்திசாலியாக மாற்ற
இந்த ஆன்மிக எக்ஸ்ர்சைஸ் செய்யும் பயிற்சி வேண்டும்.
நாலாபுறமும் எத்தகைய சூழ்நிலை இருந்தாலும், குழப்பமாக
இருந்தாலும் சப்தத்தின் நடுவே இருந்த போதும் சப்தத்தில் இருந்து
விலகி இருக்கும் நீண்டகால பயிற்சி இப்போது தேவைப்படுகிறது.
அமைதியான சூழ்நிலையில் அமைதியை உருவாக்குவது ஒன்றும் பெரிய
விசயமில்லை. அமைதியற்ற சூழ் நிலைக்கு நடுவில் நீங்கள் அமைதியாக
இருக்க வேண்டும். இந்தப் பயிற்சியே தேவைப்படுகிறது. அந்த மாதிரி
யான பயிற்சியை அறிந்திருக்கிறீர்களா? தன்னுடைய பலவீனங்களின்
குழப்பமாக இருந்தாலும், சமஸ்காரங்களின் காரணத்தால் எழும் வீண்
எண்ணங்களுடைய குழப்பமாக இருந்தாலும் அத்தகைய குழப்பம் நிறைந்த
சமயத்தில் தன்னை அசையாதவராக மாற்ற முடிகிறதா அல்லது நேரம்
பிடிக்கிறதா? ஏனென்றால் நேரம் பிடிக்கும் பழக்கம் எப்போது
வேண்டுமானாலும் ஏமாற்றக் கூடும். கடைசி நேரத்தில் அதிக நேரம்
கிடைக்காது. கடைசி முடிவைத் தீர்மானிக்கும் பரீட்சைப் பேப்பர்
சில விநாடிகள் அல்லது நிமிடங்களே இருக்கும். ஆனால் நாலாபுறமும்
குழப்பம் நிறைந்திருக்கும் சூழ்நிலையில் அசையாதவராக இருப்பதில்
தான் நம்பர் கிடைக்கும். ஒருவேளை நீண்ட காலமாக குழப்ப நிலையை
அசையாத நிலையாக மாற்ற நேரம் பிடிக்கும் பழக்கம் இருந்தால்;
கடைசி சமயத்தில் என்ன முடிவு வரும்? அதனால் இந்த ஆன்மிக
எக்ஸர்சைஸை பயிற்சி செய்யுங்கள். மனதை எங்கே எவ்வளவு நேரம்
நிற்க வைக்க விரும்புகிறீர்களோ, அவ்வளவு நேரம் அங்கே நிற்க
வைக்க முடிய வேண்டும். கடைசிப் பேப்பர் மிகவும் சுலபமானது.
இந்தப் பேப்பர் தான் வரப்போகிறது என முன்கூட்டியே
சொல்லப்படுகிறது. ஆனால் மிகக் குறைந்த நேரத்தில் நம்பர்
கிடைக்கும். அப்போது மனநிலையும் சக்திசாலியாக இருக்க வேண்டும்.
தேகம், தேக-சம்மந்தம்,
தேக-சமஸ்காரம், மனிதர்கள் மற்றும் உடைமைகள், வைப்ரேசன் (உணர்வலைகள்)
வாயுமண்டலம் அனைத்தும் இருந்தாலும் அவை உங்களைக் கவர்ச்சி
செய்யக் கூடாது. இதைத்தான் மோகமற்ற சக்திசாலி சொரூபம் என்று
சொல்லப்படுகிறது. ஆக, அந்த மாதிரி பயிற்சி உள்ளதா? மக்கள்
கதறிக்கொண்டு இருக்கும்போது நீங்கள் அசையாதவராக இருக்கவேண்டும்.
இயற்கையும், மாயாவும் அனைத்தும் தங்கள் கடைசி வாய்ப்பை
பயன்படுத்திக்கொள்ள எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் நீங்கள்
விலகியும் பாபாவுக்கு அன்பாகவும் இருக்கும் நிலையில் மூழ்கி
இருக்க வேண்டும். இதைத்தான் பார்த்தும் பாராதிருப்பது, கேட்டும்
கேளாதிருப்பது எனச் சொல்லப்படுகிறது. அந்த மாதிரி பயிற்சி
இருக்க வேண்டும். இதைத்தான் இனிமையான அமைதி சொரூப நிலை எனச்
சொல்லப்படுகிறது. இருப்பினும் பாப்தாதா நேரத்தைக் கொடுக்கிறார்
ஒருவேளை ஏதேனும் குறையிருந்தால் இப்போதுகூட நிரப்ப முடியும்.
ஏனென்றால் நீண்ட காலக் கணக்கைப் பற்றி சொல்லப் பட்டது. எனவே,
இப்போது கொஞ்சம் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தப் பயிற்சியின்மீது
முழு கவனம் வையுங்கள். இந்தப் பயிற்சியின் ஆதாரத்தில்தான் பாஸ்
வித் ஆனர் ஆவதோ அல்லது வெறுமனே பாஸ் ஆவதோ உள்ளது. அப்படிப்பட்ட
பயிற்சி இருக்கிறதா? சமயத்தின் மணி அடிக்கும்போது தயாராக
இருப்பீர்களா அல்லது இப்போது தயாராக வேண்டும் என யோசிப்பீர்களா?
இந்தப் பயிற்சியின் காரணத்தால் எட்டு ரத்தினங்களின் மாலை
மிகச்சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளது. (தேர்வு) மிகக் குறைந்த
நேரத்திற்கானது. விநாடியில் முக்தி அல்லது ஜீவன் முக்தியின்
ஆஸ்தி பெற அனைவருக்கும் அதிகாரம் இருக்கிறது என நீங்கள்
சொல்கிறீர்கள் இல்லையா? அதேபோல கடைசி நேரத்திலும் நம்பர்
கிடைப்பது கொஞ்ச நேரத்தின் விசயமாக இருக்கிறது. ஆனால்
கொஞ்சம்கூட குழப்பம் இருக்கக் கூடாது. புள்ளி என்று சொன்னவுடன்
புள்ளியில் நின்றுவிட வேண்டும், அவ்வளவுதான். புள்ளி ஆடக்
கூடாது. அதற்காக அந்த நேரம் நான் ஆத்மா, நான் ஆத்மா என்ற
பயிற்சியை ஆரம்பிக்கக்கூடாது. அது செல்லாது. ஏனென்றால் யுத்தம்
நாலா பக்கமும் நடக்கும் என்று சொல்லப் பட்டுள்ளது. அனைத்தும்
கடைசி முயற்சி செய்து பார்க்கும். இயற்கையிடம் எவ்வளவு சக்தி
இருக்கிறது, மாயாவிடம் எவ்வளவு சக்தி இருக்கிறது அவை அனைத்தும்
முயற்சி செய்யும். அவை கடைசி முயற்சி செய்யும் மற்றும்
உங்களுக்கு கடைசி கர்மாதீத், கர்மபந்தனங்களில் இருந்து
விடுபட்ட நிலை வரும். இரண்டு பக்கங்களின் மிக சக்தி வாய்ந்த
காட்சியாக இருக்கும். அதுவும் முழு வேகத்தில் இருக்கும்,
இதுவும் முழு வேகத்தில் இருக்கும். ஆனால் ஒரு விநாடியின் வெற்றி,
வெற்றிமுரசை ஒலிக்கச் செய்யும். கடைசிப் பேப்பரை என்னவென்று
புரிந்து கொண்டீர்களா? நம்பர் ஒன்னில் வந்தேயாக வேண்டும் என
அனைவரும் சுப எண்ணம் வைக்கிறீர்கள் மேலும் வைக்கவும் வேண்டும்.
எனவே எப்போது நாலாபுறமும் உள்ள விசயங்களில் வெற்றி
பெறுகிறீர்களோ, அப்போது ஒன்றில் வருவீர்கள். ஒருவேளை ஒரு
விசயத்தில் கொஞ்சம் வீண் எண்ணங்கள் வந்தாலோ அல்லது நேரம்
வீணாகப் போனாலோ நம்பர் பின்னால் சென்று விடும். அதனால்
அனைத்தையும் சோதனை செய்யுங்கள். நாலா பக்கமும் சோதனை
செய்யுங்கள். இரட்டை வெளிநாட்டினர் அனைத்திலும் தீவிரமாகச்
செல்ல விரும்புகிறீர்கள் இல்லையா? அதனால் தீவிர முயற்சி அல்லது
முழுக் கவனத்தை இந்தப் பயிற்சியில் இப்போதிருந்தே கொடுத்துச்
செல்லுங்கள். புரிந்ததா? கேள்வியையும் அறிந்திருக்கிறீர்கள்
மற்றும் நேரத்தைப் பற்றியும் அறிந்திருக்கிறீர்கள். அப்போது
அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும். ஒருவேளை முன்பாகவே கேள்வி
தெரிந்து விட்டால் அதற்குத் தயார் செய்து விடுகிறார்கள். பிறகு
தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். நீங்கள் அனைவரும் தேர்ச்சி
பெறுபவர்கள் தானே! நல்லது.
இந்த சீசனில் பாப்தாதா ஒவ்வொருவரும் சந்திக்க (பூட்டப்படாத)
திறந்த கஜானாவைத் திறந்து வைத்துள்ளார் இனிமேல் என்ன
நடக்கப்போகிறது என்பதைப் பிறகு சொல்வோம். இப்போது திறந்த
கஜானாவிலிருந்து எடுத்துக் கொள்ள யாரெல்லாம்
வந்திருக்கிறீர்களோ, அவர்கள் எடுத்துக் கொள்ளவே செய்வீர்கள்.
டிராமாவின் காட்சி சதா மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த
சீசனில் பாரதவாசிகளாக இருந்தாலும் சரி, வெளி நாட்டினராக
இருந்தாலும் சரி அனைவருக்கும் விசேஷ வரதானம் கிடைத்து
இருக்கிறது. பாப்தாதா என்ன உறதிமொழி கொடுத்திருக்கிறாரோ, அதை
நிறைவேற்றுவார். இந்த சீசனின் பழத்தைச் சாப்பிடுங்கள். பழம்
என்பது சந்திப்பு மற்றும் வரதானம். அனைவரும் சீசனின் பழத்தைச்
சாப்பிட வந்திருக்கிறீர்கள் தானே? பாப்தாதாவுக்கும்
குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி ஏற்படுகிறது. இருந்தும் சாகார
உலகில் அனைத்தையும் பார்க்க வேண்டி உள்ளது. இப்போது
மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள். மற்றதை சீசனின் கடைசியில்
சொல்வோம்.
சேவை செய்யும் இடங்கள் தனித்தனியாக இருக்கின்றன, ஆனால்
சேவையின் லட்சியம் ஒன்றுதான். ஊக்கம்-உற்சாகம் ஒன்று தான்.
ஆகவே பாப்தாதா அனைத்து இடங்களுக்கும் விசேச மகத்துவம்
கொடுக்கிறார். ஒரு இடம் மகத்துவமானது மற்றது குறைந்தது என்பது
கிடையாது. எந்த இடத்திற்கு குழந்தைகள் சென்றாலும் அங்கிருந்து
ஏதாவது நல்ல பலன் அவசியம் வெளிப்படும். சிலருக்கு விரைவாக
வெளிப்படுகிறது, சிலருக்கு நேரம் வரும்போது வெளிப்படுகிறது.
ஆனால் எல்லாப் பக்கமும் விசேசம் இருக்கிறது. எவ்வளவு நல்ல-நல்ல
ரத்தினங்கள் வெளிப்பட்டிருக்கிறார்கள்! நாம் சாதாரணமானவர்கள்
எனப் புரிந்து கொள்ள வேண்டாம். அனைவரும் விசேசமானவர்களே.
ஒருவர் விசேசமானவர் இல்லை என்றால் பாபாவிடம் வந்திருக்க
மாட்டார். விசேசம் உள்ளது, ஆனால் சிலர் விசேசத்தைச் சேவையில்
ஈடுபடுத்துகின்றனர். சிலர் சேவையில் ஈடுபடுத்த இப்போது
தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி அனைவரும் விசேச
ஆத்மாக்களே. அனைவரும் மகாரதிகளாக மகாவீரர்களாக இருக்கிறீர்கள்.
ஒவ்வொருவரின் மகிமையைச் சொல்லத் தொடங்கினால் மிகப் பெரிய மாலை
ஆகிவிடும். சக்திகளைப் பார்த்தால் ஒவ்வொரு சக்தியும் மகான்
ஆத்மாவாக, விஷ்வ கல்யாணகாரி ஆத்மாவாகத் தெரிகிறார்.
அப்படித்தானே இருக்கிறீர்கள்? அல்லது அவரவர் இடத்திற்கு
கல்யாணகாரியா? நல்லது.
06.09.2020 காலை முரளி ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா ரிவைஸ்
19.03.1986 மதுபன்
அமிர்தவேளை - சிரேஷ்ட பிராப்திகளின் வேளை
இன்று ஆன்மிகத் தோட்டத்துக்குச் சொந்தக்காரர் தம்முடைய ஆன்மிக
ரோஜா மலர்களின் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அத்தகைய ஆன்மிக ரோஜா மலர்களின் தோட்டம் இப்போது இந்த சங்கம
யுகத்தில் மட்டுமே பாப்தாதா மூலமாக உருவாகிறது. பாப்தாதா
ஒவ்வொரு ஆன்மீக ரோஜா மலரின் ஆன்மிக நறுமணத்தையும் ஆன்மீகத்தால்
மலர்ந்துள்ள மலர்களின் வனப்பையும் பார்த்துக்
கொண்டிருக்கிறார். அனைவரும் மணமுள்ள மலர்களாக இருக்கிறீர்கள்.
ஆனால் ஒருவருடைய நறுமணம் சதா காலத்திற்கும், ஒருவருடைய நறுமணம்
கொஞ்ச நேரத்திற்கும் இருக்கிறது. சில ரோஜா மலர்கள் சதா மலர்ந்த
நிலையில் உள்ளன. மற்ற சில மலர்கள் சில நேரம்
மலர்ந்திருக்கின்றன, சிலநேரம் கொஞ்சம் வெயில் அல்லது பருவ
நிலையின் காரணத்தல் வாடிப்போகவும் செய்கின்றன. ஆனால் அனைவரும்
ஆன்மிகத் தோட்டக்காரருடைய தோட்டத்தின் ஆன்மீக ரோஜா மலர்களாகவே
இருக்கின்றனர். சில ஆன்மிக ரோஜாக்களிடம் ஞானத்தின் நறுமணம்
விசேசமாக உள்ளது. சிலரிடம் நினைவின் நறுமணம் விசேசமாக உள்ளது.
இன்னும் சிலரிடம் தாரணையின் நறுமணம், சிலரிடம் சேவையின்
நறுமணம் விசேசமாக உள்ளது. சிலர் அனைத்து நறுமணங்களும்
நிறைந்தவர்களாக உள்ளனர். ஆக, தோட்டத்தில் முதல்-முதலில் யார்
மீது பார்வை செல்லும்? யாரைத் தூரத்திலிருந்தே நறுமணம்
கவர்ந்து இழுக்குமோ, அவர்மீது அனைவரின் பார்வையும் முதலில்
செல்லும். எனவே, ஆன்மிகத் தோட்டக்காரர்; எப்போதும் அனைத்து
ஆன்மிக ரோஜா மலர்களைப் பார்க்கிறார். ஆனால் நம்பர்வார்
இருக்கிறீர்கள். அன்பும் அனைவர் மீதும் உள்ளது. ஏனென்றால்
ஒவ்வொரு ரோஜா மலருக்குள்ளும் தோட்டக்காரர் மீது மிகுந்த அன்பு
உள்ளது. எஜமானர் மீது மலர்களுக்கு அன்பு உள்ளது. மேலும்
எஜமானருக்கு மலர்கள் மீது அன்பு உள்ளது. எனினும் யார் சதா
அனைத்து நறுமணங்களாலும் நிரம்பி இருக்கிறாரோ, மற்றும் சதா
மலர்ந்திருக்கிறாரோ, ஒருபோதும் வாடிப்போவதில்லையோ அவரே
சோகேஸில் சதா வைக்கக் கூடிய ஆன்மிக ரோஜாவாக இருக்கிறார்.
தினமும் அமிர்தவேளையில் பாப்தாதா அன்பு மற்றும் சக்தியின்
விசேச பாலனை மூலம் அனைத்து ஆன்மிக ரோஜா மலர்களோடு சந்திப்பைக்
கொண்டாடுகிறார்.
அமிர்தவேளை விசேச பிரபு பாலனையின் வேளையாகும். அமிர்தவேளை
விசேச பரமாத்ம சந்திப்பின் வேளையாகும். ஆன்மிக உரையாடல்
செய்யும் வேளையாகும். அமிர்தவேளை போலா பண்டாரியின் வரதானங்
களுடைய கஜானாவிலிருந்து சகஜமாக வரதானங்களைப் பெறும்
வேளையாகும். மனம் விரும்பிய பலனைப் பெறுவது என்ற பாடல் இச்சமய
அமிர்தவேளை நேரத்தின் பாடலாகும். கடின உழைப்பில்லாமல் திறந்த
கஜானாக்களைப் பெறும் வேளையாகும். அத்தகைய இனிய சமயத்தை
அனுபவத்தால் அறிந்திருக்கிறீர்கள் இல்லையா? இந்த சிரேஷ்ட
சுகத்தை, சிரேஷ்ட பிராப்திகளை அனுபவசாலிகளே அறிவார்கள்.
பாப்தாதா ஆன்மீக ரோஜா மலர்களைப் பார்த்துப் பார்த்து
மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார். ஆஹா என்னுடைய ஆன்மிக ரோஜா
மலர்களே! எனப் பாப்தாதாவும் சொல்கிறார். நீங்கள் ஆஹா ஆஹா என்ற
பாடலைப் பாடும்போது பாப்தாதாவும் அதே பாடலைப் பாடுகிறார்.
புரிந்ததா?
முரளிகளை நிறையக் கேட்டு விட்டீர்கள். கேட்டுக் கேட்டு
நிறைந்து விட்டீர்கள். இப்போது மகாதானியாகி
பகிர்ந்தளிப்பதற்கான திட்டத்தை உருவாக்கிக்
கொண்டிருக்கிறீர்கள். இந்த ஊக்கம் மிக நன்றாக உள்ளது. இன்று.
யூ.கே. அதாவது ஓ.கே.யாக இருப்பவர்கள் சந்திக்கும் முறையாகும்.
இரட்டை வெளிநாட்டினரின் ஒரு வார்த்தையைக் கேட்டு பாப்தாதா சதா
புன்சிரித்துக் கொண்டே இருக்கிறார். என்ன வார்த்தை? தேங்க் யூ
தேங்க் யூ என்று சொல்லிக் கொண்டே பாபாவையும் நினைத்துக் கொண்டே
இருக்கின்றனர். ஏனென்றால் எல்லோரையும்விட முதலில்
பாபாவுக்குத்தான் மனதார நன்றி சொல்கின்றனர். ஆக, யாருக்காவது
நன்றி சொல்லும் போது, முதலில் பாபாதான் நினைவிற்கு வருவார்
இல்லையா? பிராமண வாழ்க்கையில் முதல் நன்றி தானாகவே பாபாவுக்காக
வெளிப்படுகின்றது. அமரும் போதும் எழுந்திருக்கும் போதும் அநேக
தடவை தேங்க் யூ சொல்கிறீர்கள். இதுவும் பாபாவை நினைவு
செய்வதற்கான ஒரு விதியாக இருக்கிறது. யூ.கே.காரர்கள் அனைத்து
விதவிதமான எல்லைக்குட்பட்ட சக்திகள் உள்ளவர்களை ஒன்று
சேர்ப்பதற்கு நிமித்தமாக ஆகியிருக் கிறீர்கள் இல்லையா? அநேக
விதமான ஞானத்தின் சக்திகள் உள்ளன. பலவித சக்தி உடையவர்கள்,
பலவித வர்க்கத்தினர், பலவித தர்மத்தினர், பலவித மொழி
பேசுபவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே பிராமண வர்க்கத்தில்
கொண்டுவர வேண்டும். பிராமண தர்மத்தில், பிராமண மொழியில்
அனைவரும் வர வேண்டும். பிராமணர்களின் மொழியும் தனிப்பட்டது.
இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் புதியவர்கள் புரிந்து
கொள்ளவும் முடியாது. ஆக, பிராமணர்களின் மொழியும்,
பிராமணர்களின் டிக்ஸனரியும் தனிப்பட்டது. ஆக, யூ.கே.காரர்கள்
அனைவரையும் ஒன்று சேர்ப்பதில் பிஸியாக இருக்கிறீர்கள் இல்லையா?
எண்ணிக்கையும் நன்றாக உள்ளது மற்றும் அன்பும் நன்றாக உள்ளது.
ஒவ்வோர் இடத்திற்கும் அதனதனுடைய விசேசதா உள்ளது. ஆனால் இன்று
யூகே.வைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். யக்ஞ சிநேகி,
யக்ஞ சகயோகி என்ற இந்த விசேசதா நன்கு காணப்படுகிறது. ஒவ்வோர்
அடியிலும் முதலில் யக்ஞம், அதாவது மதுபனின் பங்கை எடுத்து
வைப்பதில் நல்ல நம்பரில் சென்று கொண்டிருக்கிறீர்கள். நேரடி
மதுபனின் நினைவு என்பது ஒரு சிறந்த லிஃப்ட் ஆகி விடுகிறது.
ஒவ்வொரு காரியத்திலும், ஒவ்வோர் அடியிலும் மதுபன் என்றால்
பாபாவின் நினைவு உள்ளது, பாபாவின் படிப்பு உள்ளது அல்லது
பாபாவின் பிரம்மா போஜன் உள்ளது அல்லது பாபாவுடன் சந்திப்பு
உள்ளது. மதுபன் தானாகவே பாபாவை நினைவு படுத்துகிறது. எங்கே
இருந்தாலும் மதுவனத்தின் நினைவு வருவது என்றால் விசேச அன்பு,
லிஃப்ட் ஆகி விடுகின்றது. ஏறுகின்ற முயற்சியிலிருந்து
விடுபட்டு விடுகின்றனர். ஒரு விநாடியில் ஸ்விட்ச் ஆன் செய்த
உடனேயே சென்று சேர்ந்து விடுகிறீர்கள்.
பாப்தாதாவுக்கு வேறு எந்த வைரமோ
முத்தோ தேவையில்லை. தந்தைக்கு, அன்பான சிறிய பொருள் கூட வைரமாக,
ரத்தினமாக இருக்கிறது. எனவே, சுதாமாவின் குறைந்த அளவு அவல்
பாடப்பட்டுள்ளது. அதாவது அன்பான சிறிய ஊசியில் கூட மதுவனத்தின்
நினைவு வருகிறது என்பது இதன் அர்த்தமாக இருக்கிறது. ஆக, அதுவும்
மிகப்பெரிய விலைமதிக்க முடியாத ரத்தினமாக இருக்கிறது, ஏனென்றால்
அன்பின் விலையாக உள்ளது. மதிப்பு அன்புக்குத் தான். பொருளுக்கு
இல்லை. அப்படியே யாராவது எவ்வளவு தான் கொடுத்தாலும் அன்பு இல்லை
என்றால் அவருடையது சேமிப்பாகாது. அன்பினால் கொஞ்சம்
கொடுத்தாலும் அது பல கோடி மடங்கு சேமிப்பாகிவிடுகிறது. ஆகவே
பாபாவுக்கு அன்பு பிடித்திருக்கிறது. ஆக, யூ.கே.காரர்களின்
விசேசதா, யக்ஞ சிநேகி, யக்ஞ சகயோகியாக இருப்பது ஆரம்பத்தில்
இருந்தே உள்ளது. இது சகஜயோகமாகவும் உள்ளது. ஒத்துழைப்பு,
சகஜயோகமாக உள்ளது. ஒத்துழைப்பின் எண்ணம் எழும்போதே தந்தையின்
நினைவு தானே இருக்கிறது. ஆக, ஒத்துழைப்பவராக, சகஜயோகியாக
தானாகவே ஆகி விடுகிறார். யோகம் பாபாவுடன் ஏற்படுகிறது, மதுபன்
என்றால் பாப்தாதாவுடன் ஏற்படுகிறது. ஆகவே ஒத்துழைப்பவர்களும்
சகஜயோகப் பாடத்தில் நல்ல நம்பர் பெற்று விடுகிறார்கள். மனதார
செய்யப்படும் ஒத்துழைப்பு பாபாவுக்குப் பிடித்திருக்கிறது.
அதனால் இங்கே நினைவுச் சின்னமாக தில்வாலா கோயில் உருவாகியுள்ளது.
ஆகவே தில்வாலா பாபாவுக்கு இதய பூர்வமான சகயோகம் பிரியமாக உள்ளது.
சிறிய மனம் உள்ளவர்கள் சிறிய வியாபாரம் செய்து குஷியடைந்து
விடுகிறார்கள். பெரிய மனம் உள்ளவர்கள் எல்லையற்ற வியாபாரம்
செய்கின்றனர். அஸ்திவாரம் பெரிய மனமாக இருந்தால் வளர்ச்சியும்
அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. எப்படி பல இடங்களில் மரத்தைப்
பார்த்திருப்பீர்கள், அதில் மரத்தின் கிளைகளும் அடிமரமாக
மாறிவிடுகின்றன. ஆக, யூ.கே.யின் அஸ்திவாரத்திலிருந்து அடிமரம்
வெளிப்பட்டது, கிளைகளும் வெளிப்பட்டன. இப்போது இந்தக் கிளைகளும்
அடிமரமாகி விட்டன. அந்த அடிமரத்தில் இருந்தும் கிளைகள்
உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆஸ்திரேலியா வெளிப்பட்டது,
அமெரிக்கா, ஐரோப்பா, ஆஃப்ரிக்கா வெளிப்பட்டன. அனைத்தும்
அடிமரமாகி விட்டன. மேலும் ஒவ்வொரு அடிமரத்தில் இருந்தும்
கிளைகள் நல்லபடியாக விருத்தியடைந்து கொண்டிருக்கின்றன.
ஏனென்றால் அஸ்திவாரம் அன்பு மற்றும் ஒத்துழைப்பின் நீரினால்
வலிமையாக உள்ளது. அதனால் வளர்ச்சியும் நன்றாக உள்ளது. பழங்களும்
(பலன்) நன்றாக உள்ளன. நல்லது.
வரதானம் :
தேக உணர்வைத் தியாகம் செய்து
கோபமற்றவர் ஆகும் பணிவுள்ளவர் ஆகுக.
எந்தக் குழந்தைகள் தேக உணர்வைத்
தியாகம் செய்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு போதும் கோபம் வராது.
ஏனென்றால் கோபம் வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று --
ஒருவர் பொய்யான விசயத்தைச் சொல்வது, இரண்டாவது -- யாராவது
நிந்தனை செய்யும் போது. இந்த இரண்டு விசயங்களே கோபத்தை
உருவாக்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில் பணிவுள்ளவர் ஆகுக என்ற
வரதானத்தின் மூலம் அபகாரிக்கும் உபகாரம் செய்யுங்கள். நிந்தனை
செய்பவரைத் தழுவிக் கொள்ளுங்கள். குறை சொல்பவர்களை உண்மையான
நண்பராக ஏற்றுக் கொள்ளுங்கள் -- அப்போது அற்புதம் என்று
சொல்வார்கள். எப்போது அத்தகைய மாற்றத்தைச் செய்து காட்டுவீர்களோ,
அப்போது உலகின் முன்னால் புகழ் பெற்றவர் ஆவீர்கள்.
சுலோகன்:
மகிழ்ச்சியை அனுபவம் செய்வதற்கு
மாயாவின் அடிமைத்தனத்தை விடுத்து சுதந்திரமாகுங்கள்.
ஓம்சாந்தி