04.09.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நீங்கள்
எப்பொழுது மலராக ஆவீர்களோ அப்பொழுது இந்த பாரதம் முட்களின்
காடுகளிலிருந்து முழுமையான மலர்களின் தோட்டமாக மாறிவிடும். பாபா
உங்களை மலராக ஆக்க வந்துள்ளார்.
கேள்வி:
கோவிலில் வைத்து பூஜிக்கத்தக்க
தகுதி உடையவர்களாக ஆக வேண்டும் என்றால் எந்த விஷயங்கள் மீது
விசேஷ கவனம் செலுத்த வேண்டும்?
பதில்:
கோவிலில் வைத்து பூஜிக்க தகுதி
உடையவராக ஆக வேண்டும் என்றால் நடத்தையின் மீது விசேஷ கவனம்
கொடுங்கள் - நடத்தை மிகவும் இனிமையானதாகவும், ராயலாகவும்
இருக்க வேண்டும். மற்றவர்கள் அனுபவம் செய்யக்கூடிய அளவிற்கு
இனிமை தன்மை இருக்க வேண்டும். அனேகருக்கு தந்தையின் அறிமுகம்
கொடுங்கள். தங்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்றால் நல்ல
முறையில் (புருஷார்த்தம்) முயற்சி செய்து சேவையில்
ஈடுபட்டிருங்கள்.
பாடல்:
உலகமே மாறினாலும் நாங்கள் மாற மாட்டோம் ...
ஓம் சாந்தி.
தந்தை பிரம்மா மூலமாக புரிய
வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஆன்மீகக் குழந்தைகள்
அறிந்துள்ளார்கள். பிரம்மாவின் ரதத்தின் மூலமாகத் தான் புரிய
வைத்துக் கொண்டே இருக்கிறார். ஸ்ரீமத் படி இந்த பாரத பூமியை
பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக (தூய்மையாக)
ஆக்குவோம் என்று நாங்கள் இந்த உறுதி மேற்கொள்கிறோம். குறிப்பாக
பாரதம் மற்றும் பொதுவாக உலகத்திலிருக்கும் அனைவருக்கும் நாம்
பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆவதற்கான வழியைக் கூறுகிறோம்.
இவ்வாறான சிந்தனைகளை ஒவ்வொருவரும் தங்கள் புத்தியில் வைக்க
வேண்டும். நாடகப்படி நீங்கள் மலராக ஆகி விடும் பொழுது மற்றும்
தக்க நேரம் வந்து விடும்பொழுது முழுமையான மலர் தோட்டமாக ஆகி
விடும் என்று தந்தை கூறுகிறார். தோட்டத்திற்கு எஜமானர் என்றும்
நிராகாரமானவருக்குக் கூறப்படுகிறது. சாகாரத்திற்கு அல்ல.
தோட்டக்காரர் கூட ஆத்மா ஆவாரேயன்றி சரீரம் அல்ல. தோட்டத்திற்கு
எஜமானர் கூட ஆத்மா ஆவார். தந்தை அவசியம் சரீரத்தின் மூலமாகத்
தான் புரிய வைப்பார் அல்லவா? சரீரத்துடன் கூடத் தான் அவர்
தோட்டக்காரன், தோட்டத்திற்கு எஜமானர் என்று கூறப்படுகிறார்.
அவர் இந்த உலகத்தை மலர்களின் தோட்டமாக ஆக்குகிறார். மலர்களின்
தோட்டமாக இருக்கும் பொழுது இந்த தேவதைகள் இருந்தார்கள். அங்கு
எந்த துக்கமும் இருக்கவில்லை. இங்கு இந்த முட்களின் காட்டிலோ
துக்கம் உள்ளது. இராவணனினுடைய இராஜ்யம் ஆகும். முட்களின் காடு
ஆகும். சட்டென்று யாரும் மலராவதில்லை. தேவதைகளுக்கு முன்னால்
சென்று நாங்கள் பல பிறவிகளாக பாவிகள் ஆகியுள்ளோம், அஜாமில்
போலாகி விட்டோம் என்று பாடவும் செய்கிறார்கள். இப்பொழுது வந்து
எங்களை புண்ணிய ஆத்மாவாக ஆக்குங்கள். இது போல பிரார்த்தனையும்
செய்கிறார்கள்.. நாம் இப்பொழுது பாவ ஆத்மாவாக உள்ளோம் என்று
நினைக்கிறார்கள். ஏதோ ஒரு காலத்தில் புண்ணிய ஆத்மாவாக
இருந்தீர்கள். இப்பொழுது இந்த உலகத்தில் புண்ணிய ஆத்மாக்களின்
படங்கள் மட்டுமே உள்ளன. ராஜதானியின் தலைவர்களின் படங்கள் உள்ளன.
மேலும் அவர்களை இது போல ஆக்குபவர் நிராகாரமான சிவன் ஆவார்.
அவருடைய படம் (சித்திரம்) இருக்கிறது. அவ்வளவே. வேறு எந்த
படமும் கிடையாது. இதில் கூட சிவனுக்கோ பெரிய லிங்கம் அமைத்து
விடுகிறார்கள். ஆத்மா நட்சத்திரம் போல உள்ளது என்று கூறவும்
செய்கிறார்கள். எனவே அவசியம் தந்தை கூட அது போல இருப்பார்
அல்லவா? ஆனால் அவருடைய முழு அறிமுகம் இல்லை. முழு உலகத்தில்
இந்த இலட்சுமி நாராயணரின் ஆட்சி இருந்தது. இவர்களைப் பற்றி
எங்குமே எந்த ஒரு நிந்தனைக்குரிய விஷயங்களும் எழுதுவதில்லை.
மற்றபடி கிருஷ்ணரை சில சமயம் துவாபரத்திலும், வேறு சில சமயம்
வேறெங்கோ எடுத்துச் சென்று விடுகிறார்கள். லட்சுமி நாராயணருக்கோ
சொர்க்கத்தின் அதிபதியாக இருந்தார்கள் என்று எல்லோருமே
கூறுவார்கள். இது உங்களுடைய லட்சியம் நோக்கம் ஆகும். ராதை
கிருஷ்ணர் யார் என்பது பற்றிய விஷயத்தில் மனிதர்கள் பாவம்
முற்றிலுமே குழம்பி உள்ளார்கள். ஒன்றுமே புரியாமல் உள்ளார்கள்.
யார் தந்தை மூலமாகப் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் புரிய
வைப்பதற்கு தகுதி உடையவர்களாகவும் ஆகிறார்கள். இல்லையென்றால்
தகுதியுடையவர்களாக ஆக முடியாது. எவ்வளவு தான் புரிய வைத்தாலும்
தெய்வீக குணங்களை தாரணை செய்ய முடியாமால் இருப்பார்கள். ஆனால்
நாடகப்படி இவ்வாறு ஆகவே வேண்டி உள்ளது. குழந்தைகளாகிய நாம்
அனைவரும் நம்முடைய உடல், மனம் மற்றும் பொருளால் தந்தையினுடைய
ஸ்ரீமத் படி பாரதத்திற்கு ஆன்மீக சேவை செய்கிறோம் என்பதை சுயம்
நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். கண்காட்சி அல்லது
பொருட்காட்சி ஆகியவற்றில் நீங்கள் பாரதத்திற்கு என்ன சேவை
செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நாம் பாரதத்திற்கு மிகவும்
நல்ல சேவை செய்கிறோம், மூட்களின் காட்டை மலர் தோட்டமாக ஆக்கிக்
கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர் கள். சத்யுகம்
என்பது மலர் தோட்டமாகும். இது முட்களின் காடு ஆகும்.
ஒருவருக்கொருவர் துக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதை
நீங்கள் நல்ல முறையில் புரிய வைக்க முடியும். இலட்சுமி
நாராயணரின் படம் கூட மிகவும் நன்றாக அமைக்க வேண்டும்.
கோவில்களில் மிகவும் அழகான சித்திரங்களை அமைக்கிறார்கள். ஒரு
சில இடங்களில் வெண்மையாகவும் ஒரு சில இடங்களில் கருநீலமாகவும்
சித்திரங்களை அமைக்கிறார்கள். அவற்றினுடைய இரகசியம் என்ன
என்பதையும் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு
இப்பொழுது முழு ஞானம் உள்ளது. நான் வந்து அனைவரையும்
கோவிலுக்குத் தகுதியுடையவர்களாக ஆக்குகிறேன் என்று தந்தை
கூறுகிறார். ஆனால் எல்லோருமே கோவிலுக்குத் தகுதியுடையவர்களாக
ஆவதில்லை. குடிமக்களை (பிரஜைகளை) கோவிலுக்கு தகுதியுடையவர்கள்
என்று கூறமாட்டார்கள் அல்லவா? யார் புருஷார்த்தம் (முயற்சி)
செய்து நிறைய சேவை செய்கிறார்களோ அவர்களுக்கு குடிமக்கள்
இருப்பார்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீக சமூக சேவை கூட செய்ய வேண்டும்.
இந்த சேவையில் தங்களுடைய வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்க
வேண்டும். நடத்தை கூட மிகவும் இனிமையானதாக மற்றும் அழகானதாக
இருக்க வேண்டும். அப்பொழுது மற்றவர்களுக்கு இனிமையான
தன்மையுடன் புரிய வைக்க முடியும். சுயம் தாங்களே முள்ளாக
இருந்தார்கள் என்றால் மற்றவர்களை மலராக எப்படி ஆக்க முடியும்?
அவர்களுடைய அம்பு போல முழுமையாக பதியாது. தந்தையை நினைவு
செய்யாமல் இருந்தார்கள் என்றால் அம்பு எப்படி பதியும். தனது
நன்மைக்காக நல்லமுறையில் சேவையில் ஈடுபட்டு இருங்கள். தந்தை
கூட சேவையில் இருக்கிறார் அல்லவா? குழந்தைகளாகிய நீங்கள் கூட
இரவு பகலாக சேவையில் இருங்கள்.
இரண்டாவது விஷயம் புரிய வைக்கிறார் - சிவ ஜெயந்தியின் பொழுது
நிறைய குழந்தைகள் தந்தி (செய்தி) அனுப்புகிறார்கள். அதில் கூட
அந்த தந்தியை யாருக்காவது காண்பித்தீர்கள் என்றால், அவர்கள்
புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அப்பேர்ப்பட்ட வாசகங்களை எழுத
வேண்டும். அதற்கான புருஷார்த்தம் செய்விக்கப் படுகிறது.
அநேகருக்கு தந்தையின் அறிமுகம் கிடைப்பதற்காக என்னென்ன சேவை
செய்யலாம் என்பதற்காக கருத்தரங்கு கூட நடத்தப்படுகிறது.
தந்திகள் (வாசகங்கள்) ஏராளமாக உள்ளன. இவற்றினால் நிறைய
காரியங்களை சாதிக்க முடியும். சிவபாபா, ஈ/ர் (மேற்பார்வை)
பிரம்மா என்று விலாசம் எழுதுகிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவும்
இருக்கிறார். அவர் ஆன்மீகத் தந்தை. இவர் சரீர தந்தை. அவர்
மூலமாக சரீரத்தின் படைப்பு படைக்கப்படுகிறது. தந்தை மனித
சிருஷ்டியின் படைப்புக்கர்த்தா ஆகிறார். எப்படி படைப்பை
படைக்கிறார் என்பது முழு உலகத்தில் யாருக்குமே தெரியாது. தந்தை
பிரம்மா மூலமாக இப்பொழுது புதிய படைப்பைப் படைத்துக்
கொண்டிருக்கிறார். பிராமணர்கள் உச்சியில் இருப்பவர்கள்
(குடுமி). முதன் முதலில் பிராமணர்கள் அவசியம் வேண்டும். விராட
ரூபத்தில் இவர்கள் குடுமி ஆவார்கள். பிராமணர், தேவதை,
க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர். முதலில்
சூத்திரர்களோ இருக்க முடியாது. தந்தை பிரம்மா மூலமாக
பிராமணர்களைப் படைக்கிறார். சூத்திரர்கள் எப்படி மற்றும் யார்
மூலமாகப் படைப்பார்கள்?
எப்படி புதிய படைப்பை படைக்கிறார் என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது தந்தையின் மூலமாக தத்து
எடுக்கப்படுதல் ஆகும். கல்ப கல்பமாக தந்தை வந்து
சூத்திரரிலிருந்து பிராமணராக ஆக்குகிறார். பிறகு
பிராமணரிலிருந்து தேவதையாக ஆக்குகிறார். பிராமணர்கள் சுயம்
அவர்களே தூய்மையாக இல்லை என்றால் மற்றவர்களை எப்படி தூய்மையாக
ஆக்குவார்கள். எந்த ஒரு பிராமணரும் சந்நியாசிக்கு ஒரு பொழுதும்
ராக்கி கட்ட மாட்டார்கள். அவர்கள் நாங்களோ தூய்மையாக இருக்கவே
இருக்கிறோம் என்று கூறுவார்கள். நீங்கள் உங்கள் முகத்தைப்
பாருங்கள். குழந்தைகளாகிய நீங்கள் கூட யார் மூலமாகவும் ராக்கி
கட்டுவித்து கொள்ள முடியாது. உலகத்திலோ எல்லோரும்
ஒருவருக்கொருவர் கட்டுகிறார்கள். சகோதரி சகோதரனுக்கு
கட்டுகிறார். இந்த வழக்கம் இப்பொழுது தான் வெளிப்பட்டுள்ளது.
இப்பொழுது நீங்கள் சூத்திரரிலிருந்து பிராமணர் ஆவதற்கான
புருஷார்த்தம் செய்கிறீர்கள். புரிய வைக்க வேண்டியுள்ளது. ஆண்
பெண் இருவருமே தூய்மையின் உறுதி எடுக்கிறார்கள். நாங்கள்
எப்படி தந்தையின் ஸ்ரீமத் மூலம் தூய்மையாக இருக்கிறோம் என்பதை
இருவரும் கூற முடியும். கடைசிவரையும் இந்த காம விகாரத்தின்
மீது வெற்றி அடைந்தவராக இருந்தீர்கள் என்றால், தூய்மையான
உலகத்தின் அதிபதி ஆவீர்கள். தூய்மையான உலகம் என்று
சத்யுகத்திற்கு கூறப்படுகிறது. அது இப்பொழுது ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் தூய்மையாக இருக்கிறீர்கள்.
விகாரத்தில் விழுபவர்களுக்கு நீங்கள் ராக்கி கட்டலாம். உறுதி
எடுத்த பிறகு பின்னால் பதீதமாக ஆனீர்கள் என்றால் நீங்கள்
ராக்கி கட்டுவிப்பதற்காக வந்திருந்தீர்கள். பிறகு என்ன ஆயிற்று
என்று கேட்பார்கள். மாயையிடம் தோற்று விட்டோம் என்று பதில்
கூறுவார்கள். இது யுத்த மைதானம் ஆகும். விகாரம் பெரிய எதிரி
ஆகும். இதன் மீது வெற்றி அடைந்து உலகத்தை வென்றவராக அதாவது
ராஜா ராணி ஆக வேண்டும். குடிமக்களை உலகத்தை வென்றவர்கள் என்று
கூற மாட்டார்கள். உழைப்போ ராஜா ராணி செய்கிறார்கள் அல்லவா?
நாங்களே லட்சுமி நாராயணர் ஆகிவிடுவோம் என்று கூறவும்
செய்கிறார்கள். அவர்கள் பிறகு ராமர் சீதை ஆகவும் ஆவார்கள்.
லட்சுமி நாராயணருக்குப் பிறகு அவர்களுடைய குழந்தை களுக்குத்
தான் அவர்களது சிம்மாசனத்தின் மீது வெற்றி கிடைக்கிறது. அந்த
லட்சுமி நாராயணர் பிறகு அடுத்த பிறவியில் கீழே சென்று
விடுவார்கள். வெவ்வேறு பெயர் ரூபங்களில் குழந்தைகளுக்கு
சிம்மாசனம் கிடைக்கும் பொழுது உயர்ந்த நம்பர் என்று
கணக்கிடப்படும். மறு பிறவியோ எடுப்பார்கள் அல்லவா? மகன்
சிம்மாசனத்தில் அமரும் பொழுது அவர்கள் இரண்டாவது நிலையினர் ஆகி
விடுவார்கள். மேலிருப்பவர் கீழே, கீழே இருப்பவர் மேலே வந்து
விடுவார்கள். எனவே குழந்தைகள் இப்பொழுது இது போல உயர்ந்தவர் ஆக
வேண்டும் என்றால் சேவையில் ஈடுபட வேண்டும். தூய்மையாக ஆவதும்
கூட மிகவும் அவசியம் ஆகும். நான் தூய்மையான உலகத்தை
உருவாக்குகிறேன் என்று தந்தை கூறுகிறார். நண்றாக புருஷார்த்தம்
குறைவானவர் களே செய்கிறார்கள். தூய்மையாகவோ முழு உலகம் ஆகி
விடுகிறது. உங்களுக்காக சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்கிறார். இது
நாடகப்படி ஆக வேண்டி உள்ளது. இந்த நாடகம் அமைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தூய்மையாக ஆகி விடும் பொழுது பின்னர் விநாசம்
ஆரம்பமாகி விடுகிறது. சத்யுகத்தின் ஸ்தாபனை ஆகி விடுகிறது.
நாடகம் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள முடியும். சத்யுகத்தில்
தேவதைகளின் ராஜ்யம் இருந்தது. இப்பொழுது இல்லை. மீண்டும்
ஏற்படும்.
நீங்கள் ஆன்மீக இராணுவ சேனை ஆகி நீங்கள் 5 விகாரங்கள் மீது
வெற்றி அடைவதால் உலகத்தை வென்றவராக ஆகக் கூடியவர்கள். பல
பிறவிகளின் பாவங்களை நீக்குவதற்காக பாபா யுக்திகள் பல
கூறுகிறார். தந்தை ஒரே ஒரு முறை வந்து வழி (யுக்தி)
கூறுகிறார். இராஜாங்கம் ஸ்தாபனை ஆகாதவரை விநாசம் ஏற்படாது.
நீங்கள் மிகவுமே மறைமுகமான படைவீரர்கள் ஆவீர்கள்.
கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் ஆகவே வேண்டியுள்ளது. பிறகு
சத்யுகத்தில் ஒரு பொழுதும் சண்டை ஏற்படுவதில்லை. அனைத்து
ஆத்மாக்களும் என்னவெல்லாம் பாகம் நடிக்கிறார்களோ அவை அனைத்துமே
நாடகத்தில் பொருந்தியுள்ளது என்பதை குழந்தை களாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். எப்படி பொம்மலாட்டத்தில் பொம்மைகள்
நடனமாடுகின்றன அல்லவா? இதுவும் நாடகம் ஆகும். ஒவ்வொருவருக்கும்
இந்த டிராமாவில் பாகம் உள்ளது. பாகத்தை நடித்து நடித்து
நீங்கள் தமோபிரதானமாக ஆகியுள்ளீர்கள். பிறகு இப்பொழுது மேலே
செல்கிறீர்கள். சதோபிரதானமாக ஆகிறீர்கள். ஞானமோ ஒரு
நொடியினுடையதாகும். சதோபிரதானமாக ஆகிறீர்கள், பிறகு இறங்கி
இறங்கி தமோபிரதானமாக ஆகிறீர்கள். பிறகு மீண்டும் தந்தை மேலே
அழைத்துச் செல்கிறார். உண்மையில் அந்த மீன்கள் கம்பியில்
தொங்குகின்றன. இந்த கம்பியில் மனிதர்களைப் போட வேண்டும். இது
போல இறங்கும் கலை மற்றும் ஏறும் கலை ஆகிறது. நீங்கள் கூட இது
போல ஏறுகிறீர்கள். பிறகு இறங்கி இறங்கி கீழே வந்து
விடுகிறீர்கள். மேலே சென்று பிறகு இறங்குவதற்கு 5 ஆயிரம்
வருடங்கள் ஆகின்றன. இந்த 84 பிறவியின் சக்கரம் உங்கள்
புத்தியில் இருக்கிறது. இறங்கும் கலை மற்றும் ஏறும் கலையின்
ரகசியத்தைப் பற்றி தந்தை தான் கூறி உள்ளார்.
உங்களிலும் கூட வரிசைக்கிரமமாக புரிந்துள்ளீர்கள். மற்றும்
புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறீர்கள். யார் தந்தையை நினைவு
செய்கிறார்களோ அவர்கள் சீக்கிரம் மேலே செல்கிறார்கள். இது
இல்லற மார்க்கமாகும். எப்படி ஜோடியை (இருவர் சேர்த்து) ஓட
வைக்கும் பொழுது ஜோடியினுடைய ஒவ்வொரு காலையும் ஒன்றாக கட்டி
விடுகிறார்கள். பிறகு ஓடுகிறார்கள். இதுவும் உங்களுடைய ஓட்டம்
தான் அல்லவா? ஒரு சிலருக்கு பயிற்சி இல்லை என்றால் விழுந்து
விடுகிறார்கள். இதிலும் கூட அவ்வாறே ஆகிறது. ஒருவர்
முன்னேறுகிறார் என்றால் மற்றவர் தடுத்து விடுகிறார். சில
இடங்களில் இருவருமே விழுந்து விடுகிறார்கள். பாபா ஆச்சரியப்
படுகிறார் - முதியவர்களுக்கும் காமத்தீ பிடித்து விடும் பொழுது
அவர்களும் விழுந்து விடுகிறார்கள். அப்படியின்றி அவர் வீழ்த்தி
விட்டார் என்பதல்ல.விழுவதும் விழாமல் இருப்பதும் நம் கையில்
தான் இருக்கிறது. யாராவது தள்ளி விடுகிறார்களா என்ன? நாம் ஏன்
விழ வேண்டும்? என்னவானாலும் சரி நாங்கள் விழ மாட்டோம்.
விழுந்தார்கள் என்றால் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. பலத்த அடி
விழுகிறது. பிறகு பச்சாதாபப்படவும் செய்கிறார்கள். எலும்பு
நொறுங்கி விடுகிறது. மிகுந்த காயம் ஏற்படுகிறது. பாபா பல்வேறு
வழிகளில் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்.
சிவஜெயந்தியின் பொழுது
எப்பேர்ப்பட்ட தந்தி செய்திகள் வர வேண்டுமென்றால், மனிதர்கள்
படித்தவுடனேயே புரிந்து கொண்டு விட வேண்டும் என்றும் புரிய
வைத்துள்ளார். சிந்தனைக் கடலைக் கடைவதற்காக பாபா நேரம்
கொடுக்கிறார். யாராவது பார்த்தார்கள் என்றால் ஆச்சரியப்பட
வேண்டும். எத்தனை கடிதங்கள் வருகின்றன. எல்லோரும் பாப்தாதா
என்று எழுதுகிறார்கள். சிவபாபாவை தந்தை என்றும், பிரம்மாவை தாதா
(அண்ணன்) என்றும் கூறுகிறார்கள் என்பதையும் நீங்கள் புரிய
வைக்கலாம். வேறு யாரையாவது எப்பொழுதாவது பாப்தாதா என்று
கூறுகிறார்களா என்ன? இதுவோ அதிசயமான விஷயமாகும். இதில்
உண்மையிலும் உண்மையான ஞானம் இருக்கிறது. ஆனால் நினைவில்
இருந்தீர்கள் என்றால் தான் பிறருக்கு அம்பு போல பதியும்.
அடிக்கடி தேக அபிமானத்தில் வந்து விடுகிறீர்கள். ஆத்ம அபிமானி
(ஆத்ம உணர்வு டையவராக) ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஆத்மா
தான் சரீரத்தை ஏற்று பாகத்தை நடிக்கிறது. யாராவது இறந்து
விடுகிறார் என்றாலும் கூட ஒரு சிந்தனையும் இல்லை. ஆத்மாவில்
பொருந்தி இருக்கும் பாகத்தை நாம் சாட்சியாக (பார்வையாளராக)
இருந்து பார்க்கிறோம். அவர் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொரு
சரீரம் எடுத்து பாகத்தை நடிக்க வேண்டி உள்ளது. இதில் நாம் என்ன
தான் செய்ய முடியும். இந்த ஞானம் கூட உங்கள் புத்தியில் உள்ளது.
அதுவும் வரிசைக்கிரமமாக உள்ளது. ஒரு சிலருடைய புத்தியிலோ பதிவதே
இல்லை. அதனால் பிறருக்கும் புரிய வைக்க முடியாமல் உள்ளார்கள்.
ஆத்மா முற்றிலுமே சூடான தோசைக்கல் போல தமோபிரதானமாக பதீதமாக (தூய்மையற்றதாக)
உள்ளது. அதன் மீது ஞான அமிருதம் போடப்படும் பொழுது அது
நிலைப்பதில்லை. யார் அதிகமாக பக்தி செய்துள்ளார்களோ
அவர்களுக்குத் தான் அம்பு போல பதியும். சட்டென்று தாரணை ஆகும்.
கணக்கே அதிசயமாக உள்ளது - முதல் நம்பரில் பாவனமானவர் -அவரே
பிறகு பதீதமாக ஆகிறார். இது கூட எவ்வளவு புரிந்து கொள்ள
வேண்டிய விஷயங்களாக இருக்கிறது. ஒருவருடைய அதிர்ஷ்டத்தில்
இல்லையென்றால் படிப்பை விட்டு விடுகிறார்கள். ஒரு வேளை
சிறுவயதிலிருந்தே ஞானத்தில் ஈடுபட்டு விட்டார்கள் என்றால் தாரணை
ஆகிக் கொண்டே போகும். இவர் நிறைய பக்தி செய்துள்ளார் என்று
புரிந்து கொள்வோம். மிகவும் புத்திசாலியாக ஆகி விடுவார்.
ஏனென்றால் உடல் வளர்ச்சியடையும் பொழுது அறிவும் அதிகமாக வரும்.
ஸ்தூல படிப்பு ஆன்மீக படிப்பு இரண்டு பக்கமும் கவனம் கொடுக்கும்
பொழுது அதன் தாக்கம் வெளி வந்து விடுகிறது. இது ஈசுவரிய
படிப்பாகும். வித்தியாசம் உள்ளது அல்லவா? ஆனால் அந்த ஈடுபாடும்
ஏற்படும் பொழுது தானே ஆகும் அல்லவா? நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய்
தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஆன்மீக இராணுவ சேனையாகி, 5 விகாரங்கள் மீது வெற்றியடைய
வேண்டும். அவசியம் தூய்மை ஆக வேண்டும். ஸ்ரீமத் படி பாரதத்தை
தூய்மையாக்கும் சேவை செய்ய வேண்டும்.
2. இந்த எல்லையில்லாத நாடகத்தில் ஒவ்வொரு பாகத்தையும் ஆத்ம
உணர்வுடையவராகி நடிக்க வேண்டும். ஒரு பொழுதும் தேக உணர்வில்
வரக்கூடாது. (சாட்சி) பார்வையாளராக ஆகி ஒவ்வொரு வருடைய
பாகத்தையும் பார்க்க வேண்டும்.
வரதானம்:
சுவமானத்தின் (சுயமரியாதை) மூலம்
அபிமானத்தை (அகங்காரத்தை) சமாப்தி செய்யக் கூடிய சதா பணிவானவர்
ஆகுக.
எந்த குழந்தைகள் சுவமானத்தில் (சுயமரியாதையில்)
இருக்கிறார்களோ அவர்கள் ஒருபோதும் (தான் என்ற) அபிமானத்தில் வர
முடியாது, அவர்கள் சதா பணிவானவர்களாக இருப்பார்கள். எந்த
அளவிற்கு உயர்ந்த சுவமானமோ, அந்த அளவிற்குத் தான் சரி (ஹா ஜீ)
என்ற பணிவு இருக்கும். சிறியவர்கள்-பெரியவர்கள், ஞானி-அஞ்ஞானி,
மாயாவை வென்றவர்கள் அல்லது மாயைக்கு வசமானவர்கள், குணவான்கள்
அல்லது ஒரு சில அவகுணங்களுடையவர்கள் அதாவது குணவான்களாக ஆகக்
கூடிய முயற்சியாளர்களாக இருப்பார்கள், ஆனால் சுவமானத்தில்
உள்ளவர்கள் அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் வள்ளல்களாக
இருப்பார்கள், அதாவது சுயம் சம்பன்னமாக இருக்கின்ற காரணத்தினால்
சதா கருணையுள்ளத்துடன் இருப்பார்கள்.
சுலோகன்:
அன்பு தான் எளிய நினைவிற்கான
சாதனமாகும், ஆகையால் சதா அன்பானவர்களாக இருக்க வேண்டும் மற்றும்
பிறரையும் அன்பானவர்களாக ஆக்க வேண்டும்.
ஓம்சாந்தி