02.09.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நீங்கள்
ஆன்மீக வழிகாட்டிகள், நீங்கள் அனைவருக்கும் சாந்திதாமம் அதாவது
அமரபுரிக்கான வழியைச் சொல்ல வேண்டும்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்கு
எந்தவொரு போதை இருக்கிறது, அந்த போதையின் ஆதாரத்தில் எந்தவொரு
நம்பிக்கையான வார்த்தையைப் பேசுகிறீர்கள்?
பதில்:-
நாம் பாபாவை நினைவு செய்து
பல-பிறவிகளுக்கு தூய்மையாக ஆகின்றோம் என்ற மகிழ்ச்சி இருக்கிறது.
எவ்வளவு தான் தடைகள் ஏற்பட்டாலும் சொர்க்கத்தின் ஸ்தாபனை
கண்டிப்பாக நடக்கத் தான் வேண்டும் என்று நீங்கள் நம்பிக்கையோடு
கூறுகிறீர்கள். புதிய உலகத்தின் ஸ்தாபனை மற்றும் பழைய உலகத்
தின் வினாசம் நடக்கத் தான் வேண்டும். இது உருவாக்கப்பட்ட
நாடகமாகும், இதில் சந்தேகத்திற்கான விசயமே இல்லை.
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்காக
ஆன்மீகத் தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். நாம்
ஆத்மாக்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இந்த சமயத்தில்
நாம் ஆன்மீக வழிகாட்டிகளாக ஆகியுள்ளோம். நாமும் ஆகின்றோம்
மற்றவர்களையும் ஆக்குகின்றோம். இந்த விசயங்களை நல்ல விதத்தில்
தாரணை செய்யுங்கள். மாயையின் புயல் மறக்கச் செய்து விடுகிறது.
இந்த மதிப்புமிக்க இரத்தினங்கள் மதிப்பு வாய்ந்த வாழ்க்கைக்காக
ஆன்மீக தந்தையிடமிருந்து கிடைக்கின்றன என்பதை தினமும்
காலையும்-மாலையும் சிந்தனை செய்ய வேண்டும். எனவே ஆன்மீக தந்தை
புரிய வைக்கின்றார் - குழந்தைகளே, நீங்கள் இப்போது
முக்திதாமத்திற்கான வழியைச் சொல்லும் ஆன்மீக வழிகாட்டிகள். இது
உண்மையிலும் உண்மையான அமரபுரிக்குச் செல்வதற்கான அமர கதையாகும்.
அமரபுரிக்குச் செல்வதற்காக தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள்.
தூய்மையற்ற கீழான ஆத்மா அமரபுரிக்கு எப்படிச் செல்லும்?
மனிதர்கள் அமர்நாத் யாத்திரை செல்கிறார்கள், சொர்க்கத்தையும்
அமர்நாத்புரி என்று சொல்லலாம். அமர்நாத் தனியாகவா இருக்கிறார்.
ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் அமரபுரிக்குச் செல்கிறீர்கள்.
அது ஆத்மாக்களின் அமரபுரி பரந்தாமம் பிறகு அமரபுரிக்கு
சரீரத்தோடு வருகிறீர்கள். அங்கே அழைத்துச் செல்வது யார்?
பரமபிதா பரமாத்மா அனைத்து ஆத்மாக்களையும் அழைத்துச்
செல்கின்றார். அதை அமரபுரி என்றும் சொல்ல முடியும். ஆனால்
சரியான பெயர் சாந்திதாமம் ஆகும். அங்கே அனைவரும் செல்லத் தான்
வேண்டும். நாடகத்தின் விதி ஒருபோதும் மாறாது. இதை நல்ல
விதத்தில் புத்தியில் தாரணை செய்யுங்கள். முதல்-முதலில் ஆத்மா
என்று புரிந்து கொள்ளுங்கள். பரமபிதா பரமாத்மாவும் ஆத்மாவே
ஆவார். அவர் பரமபிதா பரமாத்மா என்று மட்டுமே சொல்லப்படுகிறார்,
அவர் நமக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் தான்
ஞானக்கடல், தூய்மையின் கடல் ஆவார். இப்போது குழந்தைகளை
தூய்மையாக்குவதற்காக என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால்
உங்களுடைய பிறவி-பிறவிகளுக்குமான பாவம் அழிந்து விடும் என்று
ஸ்ரீமத் அளிக்கின்றார். நினைவைத் தான் யோகம் என்று
சொல்லப்படுகிறது. நீங்கள் குழந்தைகள் அல்லவா. தந்தையை நினைவு
செய்ய வேண்டும். நினைவின் மூலம் தான் படகு கரை சேரும். இந்த
விஷ நகரத்திலிருந்து நீங்கள் சிவ நகரத்திற்குச் செல்வீர்கள்
பிறகு விஷ்ணுபுரிக்கு வருவீர்கள். நாம் அங்கு செல்வதற் காகவே
படிக்கின்றோம், இந்த உலகத்திற்காக அல்ல. இங்கே யார் ராஜாக்களாக
ஆகின்றார்களோ அவர்கள் செல்வத்தை தானம் செய்வதின் மூலம் அவ்வாறு
ஆகின்றார்கள். நிறைய பேர் ஏழைகளை பராமரிக்கிறார்கள், சிலர்
மருத்துவமனைகள், சிலர் தர்மசாலைகள் போன்றவற்றை கட்டுகிறார்கள்,
சிலர் செல்வத்தை தானம் செய்கிறார்கள். சிந்து மாகாணத்தில்
மூல்சந்த் இருந்தார், ஏழைகளைத் தேடிப்போய் தானம் செய்தார்.
ஏழைகளை அதிகம் பாதுகாத்தார். இப்படி நிறைய தானம் செய்பவர்கள்
இருக்கிறார்கள். அதிகாலையில் எழுந்து உணவை ஏழைகளுக்கு தானம்
செய்கிறார்கள். இன்றைக்கு நிறைய ஏமாற்றுகிறார்கள். பாத்திரம்
அறிந்து தானம் செய்ய வேண்டும். அந்த புத்தி இல்லை. வெளியில்
யார் பிச்சை எடுக்க அமர்ந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு
கொடுப்பது ஒன்றும் தானம் அல்ல. அவர்களுக்கு இது தான் தொழிலாகும்.
ஏழைகளுக்கு தானம் அளிப்பவர்கள் நல்ல பதவியை அடைகிறார்கள்.
நீங்கள் அனைவருக்கும் ஆன்மீக வழிகாட்டிகளாவீர்கள். நீங்கள்
கண்காட்சி அல்லது அருங்காட்சியகம் (மியூசியம்)
திறக்கின்றீர்கள் என்றால் சொர்க்கத்திற்கு வழிகாட்டிகள் அல்லது
புதிய உலக இராஜ்யத்தின் வழிகாட்டிகள் என்று பெயர் எழுதுங்கள்.
ஆனால் மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. இது முட்கள்
நிறைந்த காடாகும். சொர்க்கம் மலர்கள் நிறைந்த தோட்டமாகும்,
அங்கே தேவதைகள் இருக்கிறார்கள். நாம் பாபாவை நினைவு செய்து
பிறவி-பிறவிகளுக்கும் தூய்மையாக ஆகின்றோம் என்ற போதை
குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். எவ்வளவு தான்
தடைகள் வந்தாலும் கண்டிப்பாக சொர்க்கம் ஸ்தாபனை ஆகத்தான்
போகிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். புதிய உலகத்தின்
ஸ்தாபனை மற்றும் பழைய உலகத்தின் வினாசம் நடக்கத்தான் வேண்டும்.
இது உருவாக்கப்பட்ட நாடகம், இதில் சந்தேகத்திற்கான விசயமே
இல்லை. கொஞ்சம் கூட சந்தேகம் வரக்கூடாது. அனைவரும் பதீத பாவனன்
என்று சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் கூட, வந்து
துக்கத்திலிருந்து விடுவியுங்கள் என்று சொல்கிறார்கள். துக்கமே
5 விகாரங்களினால் தான் ஏற்படுகிறது. அந்த உலகமே நிர்விகார
உலகம், சுகதாமமாகும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள்
சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். மனிதர்கள் சொர்க்கம் மேலே
இருக்கிறது என்று நினைக்கிறார்கள், மேலே முக்திதாமம்
இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஜீவன்முக்திக்கு
இங்கே தான் வரவேண்டும். இதை பாபா உங்களுக்குப் புரிய
வைக்கின்றார், இதை நல்ல விதத்தில் தாரணை செய்து ஞானத்தையே
சிந்தனை செய்ய வேண்டும். மாணவர்களும் வீட்டில் இந்த சிந்தனையே
செய்கிறார்கள், இந்தக் கேள்வி தாளை பூர்த்தி செய்து
(பதிலளித்து) தர வேண்டும், இன்று இதை செய்ய வேண்டும். எனவே
குழந்தைகளாகிய நீங்கள் தங்களுடைய நன்மைக்காக ஆத்மாவை
சதோபிரதானமாக மாற்ற வேண்டும். தூய்மையாக ஆகி
முக்திதாமத்திற்குச் செல்ல வேண்டும் மற்றும் ஞானத்தின் மூலம்
தேவதையாக ஆகின்றீர்கள். நான் மனிதனிலிருந்து வக்கீலாக
ஆகின்றேன் என்று ஆத்மா சொல்கிறது அல்லவா. நான் ஆத்மா
மனிதனிலிருந்து கவர்னராக ஆகின்றேன். ஆத்மா சரீரத்தோடு உள்ளது.
சரீரம் அழிந்து விட்டால் பிறகு புதிதாக படிக்க
வேண்டியிருக்கிறது. ஆத்மா தான் உலகத்திற்கு எஜமானனாக ஆவதற்கு
முயற்சி செய்கிறது. பாபா கூறுகின்றார், நான் ஆத்மா என்பதை
உறுதியாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள், தேவதைகளுக்கு இப்படிச்
சொல்ல வேண்டியதில்லை, நினைவு செய்ய வேண்டிய தில்லை, ஏனென்றால்
அவர்கள் தூய்மையானவர்கள். பலனை அனுபவித்துக்
கொண்டிருக்கிறார்கள், தூய்மை யற்றவர்களா என்ன தந்தையை நினைவு
செய்வதற்கு. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையற்றவர்களாக
இருக்கின்றீர்கள் ஆகையினால் தந்தையை நினைவு செய வேண்டும்.
தேவதைகள் நினைவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது நாடகம்
அல்லவா. ஒரு நாள் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை. முழு நாளின்
நடிப்பு வினாடிக்கு வினாடி மாறிக் கொண்டே இருக்கிறது. படம்
பிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எனவே தந்தை
குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார்,
எந்தவொரு விசயத்திலும் மனமுடைந்து போகாதீர்கள். இவை ஞானத்தின்
விசயங்களாகும். தங்களுடைய தொழில் போன்றவற்றையும் செய்யுங்கள்,
ஆனால் எதிர்கால உயர்ந்த பதவியை அடைவதற்கு முழுமையாக முயற்சி
செய்யுங்கள். குடும்ப விவகாரங்களிலும் இருக்க வேண்டும்.
குமாரிகள் குடும்பத்தில் செல்லவே இல்லை. யாருக்கு குழந்தை
குட்டிகள் இருக்கின்றனவோ அவர்களைத் தான் குடும்பஸ்தர்கள் என்று
சொல்லப்படுகிறது. பாபா அதர்குமாரி மற்றும் குமாரி அனைவருக்கும்
படிப்பிக்கின்றார். அதர்குமாரியின் அர்த்தத்தைக் கூட புரிந்து
கொள்வதில்லை. பாதி சரீரம் இருக்கிறதா என்ன? குமாரி தூய்மையாக
இருக்கின்றார் மற்றும் அதர்குமாரி அபவித்திரமாகி பிறகு
தூய்மையாக ஆகின்றார் என்று சொல்லப்படுகிறது. உங்களுடைய
நினைவுச் சின்னம் கூட இருக்கின்றது. தந்தை தான் குழந்தைகளாகிய
உங்களுக்குப் புரிய வைக்கின்றார். பாபா உங்களுக்கு
படிப்பித்துக் கொண்டிருக்கின்றார். ஆத்மாக்களாகிய நாம்
மூலவதனத்தையும் தெரிந்துள்ளோம், பிறகு சூரியவம்சிகள், பிறகு
சந்திரவம்சிகள் எப்படி இராஜ்யம் செய்கிறார்கள்,
சத்திரியர்களின் அடையாளமாக ஏன் வில்-அம்பை
கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
சண்டை போன்றவற்றின் விசயம் இல்லை. அசுரர்களின் விசயமும் இல்லை,
திருட்டின் விசயமும் நிரூபணம் ஆவதில்லை. சீதையை கடத்திச்
செல்லும் இராவணன் யாரும் இருப்பதில்லை. எனவே பாபா புரிய
வைக்கின்றார், இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நாம்
சொர்க்கத்தின், முக்தி-ஜீவன்முக்தியின் வழிகாட்டிகள் என்பதை
நீங்கள் புரிந்து கொள்கிறீகள். அவர்கள் உலகாயத வழிகாட்டிகள்.
நாம் ஆன்மீக வழிகாட்டிகளாவோம். அவர்கள் கலியுக பிராமணர்களாவர்.
புருஷோத்தமர்களாக ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
பாபா அனேக விதமாக புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார்.
இருந்தாலும் தேக-அபிமானத்தில் வருவதினால் மறந்து
விடுகிறீர்கள். நான் ஆத்மா, பாபாவின் குழந்தை என்ற போதை
இருப்பதில்லை. எந்தளவிற்கு நினைவு செய்து கொண்டே இருப்பீர்களோ,
அந்தளவிற்கு தேக-அபிமானம் விடுபட்டுக் கொண்டே செல்லும். தங்களை
பாதுகாத்துக் கொண்டே இருங்கள்.நம்முடைய தேக-அபிமானம்
விடுபட்டதா என்று பாருங்கள்? நாம் முன்னேறிச் சென்று
கொண்டிருக் கிறோம் பிறகு நாம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆவோம்.
நம்முடையது ஹீரோ-ஹீரோயின் நடிப்பாகும். ஹீரோ-ஹீரோயின் என்ற
பெயர் ஒருவர் வெற்றியடையும் போது தான் ஏற்படுகிறது. நீங்கள்
வெற்றி அடைகிறீர்கள் அப்போது தான் உங்களுக்கு ஹீரோ-ஹீரோயின்
என்ற பெயர் இந்த சமயத்தில் வருகிறது, இதற்கு முன்னால்
கிடையாது. தோல்வி அடையக் கூடியவர்களை ஹீரோ-ஹீரோயின் என்று
சொல்ல மாட்டார்கள். நாம் இப்போது ஹீரோ-ஹீரோயினாக ஆகின்றோம்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உங்களுடைய
நடிப்பு உயர்ந்ததிலும் உயர்ந்ததாகும். சோழிக்கும்
வைரத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. யார் எவ்வளவு
தான் லட்சாதிபதி அல்லது கோடீஸ்வரராக இருந்தாலும் இவை அனைத்தும்
வினாசமாகிவிடும் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
ஆத்மாக்களாகிய நீங்கள் செல்வந்தர்களாக ஆகிக் கொண்டே
செல்கிறீர்கள். இந்த விசயங்களை தாரணை செய்ய வேண்டும்.
நம்பிக்கையில் இருக்க வேண்டும். இங்கே போதை ஏறுகிறது, வெளியில்
சென்றவுடன் போதை இறங்கி விடுகிறது. இங்குள்ள விசயங்கள் இங்கேயே
இருந்து விடுகிறது. பாபா நமக்கு (ஞானக் கல்வி) படிப்பித்துக்
கொண்டிருக்கின்றார் என்பது புத்தியில் இருக்க வேண்டும் என்று
பாபா கூறுகின்றார். இந்த படிப்பின் மூலம் நாம் மனிதனிலிருந்து
தேவதைகளாக ஆகி விடுவோம். இதில் கஷ்டப்படுவதற்கான விசயம்
எதுவும் இல்லை. தொழில் போன்றவற்றிலிருந்து நேரத்தை ஒதுக்கி
நினைவு செய்ய முடியும். இது கூட தங்களுக்கான தொழிலாகும்.
விடுமுறை எடுத்துக் கொண்டு சென்று பாபாவை நினைவு செய்யுங்கள்.
இவர் ஒன்றும் பொய் சொல்ல வில்லை. முழு நாளையும் இப்படியே இழக்க
வேண்டுமா என்ன?. நாம் எதிர்காலத்தைப் பற்றியும் கொஞ்சம்
சிந்தனை செய்ய வேண்டும் அல்லவா ! நிறைய யுக்திகள் இருக்கின்றன,
எவ்வளவு முடியுமோ நேரத்தை ஒதுக்கி பாபாவை நினைவு செய்யுங்கள்.
சரீர நிர்வாகத்திற்காக தொழில் போன்றவைகளை செய்யுங்கள். நான்
உங்களுக்கு உலகத்திற்கு எஜமானர்களாக ஆவதற்கான மிக நல்ல வழி
சொல்கின்றேன். குழந்தைகளாகிய நீங்களும் கூட அனைவருக்கும் வழி
சொல்லக் கூடியவர்களே. மந்திரிகள் வழி சொல்வதற்காக
இருக்கிறார்கள் அல்லவா. நீங்கள் வழி சொல்லக் கூடியவர்கள்
ஆவீர்கள். அனைவருக்கும் முக்தி - ஜீவன்முக்தி எப்படி
கிடைக்கும் என்பதை இந்த பிறவியில் வழி சொல்கிறீர்கள்.
மனிதர்கள் சுலோகன் போன்றவைகளை உருவாக்குகிறார்கள் என்றால்
சுவற்றில் எழுதி விடுகிறார்கள். எப்படி நீங்கள் தூய்மையாய் இரு
யோகியாய் இரு என்று எழுதுகிறீர்கள். ஆனால் இப்படி எழுதுவதினால்
புரிந்து கொள்ள மாட்டார்கள். நமக்கு பாபாவிடமிருந்து ஆஸ்தி
கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறீர்கள்,
முக்திதாமம் கூட ஆஸ்தியே ஆகும். நீங்கள் என்னை
தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவன் என்று சொல்கின்றீர்கள்
எனும்போது நான் வந்து தூய்மையாவதற்கான வழி சொல்கின்றேன்.
நீங்களும் வழி சொல்பவர்களே. எதுவரை பாபா வழி சொல்ல வில்லையோ,
ஸ்ரீமத் கொடுக்க வில்லையோ அதுவரை யாரும் முக்திதாமத்திற்குச்
செல்ல முடியாது. ஸ்ரீ என்றால் உயர்ந்த வழி, சிவபாபாவினுடையதே
ஆகும். ஆத்மாக்களுக்கு சிவபாபாவினுடைய உயர்ந்த வழி
கிடைக்கிறது. பாவ ஆத்மா, புண்ணிய ஆத்மா என்று சொல்லப்படுகிறது.
பாவ சரீரம் என்று சொல்ல மாட்டார்கள். ஆத்மா சரீரத்தின் மூலம்
பாவம் செய்கிறது ஆகையினால் பாவ ஆத்மா என்று சொல்லப்படுகிறது.
சரீரம் இல்லாமல் ஆத்மா பாவமோ அல்லது புண்ணியமோ செய்ய முடியாது.
எனவே எவ்வளவு முடியுமோ ஞானத்தை சிந்தனை செய்யுங்கள். நேரம்
அதிகமாக இருக்கிறது. ஆசிரியர் அல்லது பேராசிரியர்
இருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கும் கூட யுக்தியோடு இந்த
ஆன்மீக படிப்பை படிப்பிக்க வேண்டும், அதன்மூலம் நன்மை
ஏற்படும். மற்றபடி இந்த உலகாயத கல்வியின் மூலம் என்ன நடக்கும்.
நாங்கள் இதை (ஆன்மீக கல்வியை) படிப்பிக்கின்றோம். வினாசம்
முன்னால் இருக்கிறது, இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கின்றன.
மனிதர்களுக்கு எப்படி வழி சொல்வது என்ற சிந்தனை எழுந்து கொண்டே
இருக்க வேண்டும்.
ஒரு குழந்தைக்கு கேள்வித் தாளில் கீதையின் பகவான் யார் என்ற
கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் குழந்தை கீதையின் பகவான் சிவன்
என்று எழுதி விட்டார் அவரை தோல்வி அடையச் செய்து விட்டார்கள்.
கீதையின் பகவான் சிவன் என்று நான் பாபாவின் மகிமையை
எழுதுகிறேன் என்று புரிந்து கொண்டிருந்தார். அவர் ஞானக்கடல்,
அன்புக்கடல் ஆவார். கிருஷ்ணருடைய ஆத்மா கூட ஞானத்தை அடைந்து
கொண்டிருக்கிறது. இந்தக் குழந்தை இதை எழுதியதால் பெயில் ஆகி
விட்டது. நான் இதை படிக்க மாட்டேன் என்று தாய்- தந்தையருக்கு
சொன்னார். இந்த ஆன்மீக படிப்பில் ஈடுபடுவேன் என்று சொன்னார்.
மிகவும் முதல் தரமான குழந்தையாவார். முதலிலேயே நான் இப்படி
எழுதுவேன், தோற்றுப் போவேன் என்று சொல்லியிருந்தார். ஆனால்
உண்மையை எழுத வேண்டும் அல்லவா. இன்னும் போகப்போக இந்த குழந்தை
என்ன எழுதியதோ அது சத்தியமானது தான் என்று புரிந்து
கொள்வார்கள். நம்முடைய தாக்கம் வெளிப்படும்போது அல்லது
கண்காட்சி அல்லது மியூசியத்திற்கு அவர்களை அழைத்தீர்கள்
என்றால் தெரிய வரும், மேலும் இது சரிதான் என்பது புத்தியில்
வரும். அதிகமான மனிதர்கள் வருகிறார்கள் எனும்போது மனிதர்கள்
இது ஏதோ புதிய விசயம் என்று உடனே புரிந்துக் கொள்ளும்படி
சிந்தனை செய்து அதன்படி செய்ய வேண்டும். யாராவது ஒருவர் யார்
இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ, அவர்கள்
கண்டிப்பாகப் புரிந்துக் கொள்வார்கள். நீங்கள் அனைவருக்கும்
ஆன்மீக வழியை கூறுகின்றீர்கள். பாவம் எவ்வளவு
துக்கமுடையவர்களாக இருக்கிறார் கள், அவர்கள் அனைவருடைய
துக்கத்தையும் விலக்குவது எப்படி. நிறைய குழப்பங்கள்
இருக்கின்றன அல்லவா. ஒருவர் மற்றவர்களுக்கு எதிரியாக
ஆகிறார்கள் என்றால் எப்படி அழித்து விடுகிறார்கள்.! இப்போது
பாபா குழந்தைகளுக்கு நல்ல விதத்தில் புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார். தாய்மார்கள் பாவம் ஏதும் அறியாதவர் களாக
இருக்கிறார்கள். நாங்கள் எழுத-படிக்கத் தெரிந்தவர்கள் இல்லை
என்று சொல்கிறார்கள். பாபா கூறுகின்றார், படிக்கவில்லை என்றால்
நல்லது. வேத- சாஸ்திரங்கள் எதையெல்லாம் படித்திருக்கிறீர்களோ,
அவற்றை இங்கே மறந்து விட வேண்டும். இப்போது நான் என்ன
கூறுகின்றேனோ, அதைக் கேளுங்கள். நிராகார பரமபிதா பரமாத்மாவை
தவிர வேறு யாரும் செய்விக்க முடியாது என்று புரிய வைக்க
வேண்டும். மனிதர்களுக்கு ஞானமே இல்லையெனும்போது பிறகு அவர்கள்
எப்படி சத்கதி அடைய வைக்க முடியும். சத்கதியை வழங்கும் வள்ளல்
ஞானக்கடல் ஒருவரே ஆவார். யார் இந்த இடத்தைச் (தர்மத்தை)
சேர்ந்தவர்களோ அவர்கள் தான் புரிந்து கொள்வதற்கு முயற்சி
செய்வார்கள் என்று மனிதர்கள் சொல்ல மாட்டார்கள். யாராவது ஒரு
பெரிய மனிதர் வந்தால் கூட குரல் ஓங்கி ஒலிக்கும். ஏழை
துளசிதாசருடைய விசயங்களை யாரும் கேட்க வில்லை என்று
பாடப்பட்டுள்ளது. சேவைக்கான யுக்திகளை பாபா நிறைய
கூறுகின்றார், குழந்தைகள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தொழில் போன்றவற்றை செய்து கொண்டே எதிர்கால உயர்ந்த பதவியை
அடைவதற்காக நினைவில் இருப்பதற்கான முழு முயற்சியை செய்ய
வேண்டும். இந்த நாடகம் வினாடிக்கு வினாடி மாறிக் கொண்டே
இருக்கிறது ஆகையினால் ஒருபோதும் எந்த ஒரு காட்சியைப் பார்த்தும்
மனமுடைந்து போகக்கூடாது.
2) இந்த ஆன்மீக படிப்பை படித்து மற்றவர்களையும் படிப்பிக்க
வேண்டும், அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். நாம் எப்படி
அனைவருக்கும் தூய்மையாவதற்கான வழியை கொடுப்பது, வீட்டிற்கான வழி
சொல்வது என்ற சிந்தனையே உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.
வரதானம் :
இரட்டை சேவை மூலம் அலௌகிக
சக்தியின் சாட்சாத்காரம் செய்விக்கக் கூடிய உலக சேவாதாரி ஆகுக.
எப்படி பாபாவின் சொரூபமே உலக
சேவாதாரி என்பதாக உள்ளதோ, அது போல் நீங்களும் கூட பாப்-சமான்
உலக சேவாதாரியாக இருக்கிறீர்கள். சரீரத்தின் மூலம் சேவை செய்து
கொண்டே மனதின் மூலமாகவும் உலக மாற்றத்தின் சேவையில் நிலையாக
ஈடுபட்டு இருங்கள். ஒரே சமயத்தில் உடலாலும் மனதாலும் சேவை
செய்யுங்கள். யார் மனதாலும் செயலாலும் ஒரே நேரத்தில் சேவை
செய்கிறார்களோ, அவர்கள் மூலம் பார்ப்பவர்களுக்கு இவர்களிடம் ஏதோ
அலௌகிக சக்தி உள்ளது என்ற அனுபவம் மற்றும் சாட்சாத்காரம் ஆக
வேண்டும் -- எனவே இந்த அப்பியாசத்தை நிரந்தரமானதாக,
இயற்கையானதாக ஆக்குங்கள். மனசா சேவைக்காக விசேஷமாக ஒருமுகத்
தன்மையின் அப்பியாசத்தை அதிகப் படுத்துங்கள்.
சுலோகன் :
அனைவரிடத்தும் உள்ள குணங்களை
கிரகிப்பவராக ஆகுங்கள். ஆனால் பிரம்மா பாபாவை மட்டும்
பின்பற்றுங்கள்.
ஓம்சாந்தி