27.09.2020    காலை முரளி      ஓம் சாந்தி   அவ்யக்த-பாப்தாதா

ரிவைஸ்    27.03.1986    மதுபன்


 

சதா அன்பானவராக ஆகுங்கள்

இன்று அன்புக்கடல் தந்தை தன்னுடைய அன்பான குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்கின்றார். இந்த ஆன்மிக அன்பு ஒவ்வொரு குழந்தையையும் சகஜயோகியாக ஆக்குகின்றது. இந்த அன்பு முழு பழைய உலகத் தையும் எளிதாக மறப்பதற்கான சாதனமாக இருக்கின்றது. இந்த அன்பு ஒவ்வொரு ஆத்மாவையும் தந்தை யினுடையவராக ஆக்குவதில் ஒரே ஒரு சக்திசாலியான சாதனமாக இருக்கின்றது.. அன்பானது பிராமண வாழ்க்கை யினுடைய அஸ்திவாரம் ஆகும். அன்பானது சக்திசாலியான வாழ்க்கையை உருவாக்குவதற்கான மற்றும் பாலனைக்கான ஆதாரம் ஆகும். அனைத்து சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தைக்கு முன் வந்து சேர்ந்துவிட்டீர்கள். அனைவரும் வந்து சேர்வதற்குக் கூட ஆதாரம் அன்பு ஆகும். அன்பினுடைய இறக்கைகளால் பறந்து வந்து மதுபன் நிவாசியாக ஆகிவிட்டீர்கள். பாப்தாதா அனைத்து அன்பான குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அனைவரும் அன்பான குழந்தைகள் தான், ஆனால், வித்தியாசம் என்ன உள்ளது என்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். வரிசைக்கிரமம் ஏன் உருவாகின்றது? காரணம் என்ன? அனைவருமே அன்பானவர் கள் தான், ஆனால், சிலர் சதா அன்பானவர்களாகவும், சிலர் அன்பானவர்களாகவும் இருக்கின்றார்கள். மேலும், நேரத்தின் அனுசாரமாக அன்பு செலுத்தக்கூடிய மூன்றாமவர்களும் இருக்கின்றார்கள். பாப்தாதா மூன்று விதமான அன்பான குழந்தைகளை பார்த்தார்கள்.

 

யார் சதா அன்பானவராக இருக்கின்றார்களோ, அவர்கள் அன்பில் மூழ்கி இருக்கக்கூடிய காரணத்தினால் முயற்சி மற்றும் கடினத்தில் இருந்து சதா மேலே இருக்கின்றார்கள். அவர்கள் முயற்சியும் செய்ய வேண்டியதில்லை, கடினத்தினுடைய அனுபவமும் செய்வது இல்லை. ஏனெனில், சதா அன்பானவராக இருக்கக்கூடிய காரணத்தினால் அவர்களுக்கு முன்பாக இயற்கை மற்றும் மாயை ஆகிய இரண்டுமே இப்பொழுதிலிருந்து தாசியாக (வேலைக்காரனாக) ஆகிவிடுகின்றது. அதாவது, சதா அன்பான ஆத்மா மாலிக்காக (எஜமானாக) இருப்பதினால் இயற்கை, மாயை தானாகவே வேலைக்காரன் ரூபமாகிவிடுகின்றது. சதா அன்பானவர்களுடைய நேரம் மற்றும் எண்ணத்தினை தன் பக்கம் ஈடுபடுத்துவதற்கு இயற்கை மற்றும் மாயைக்கு தைரியம் கிடையாது. சதா அன்பான ஆத்மாக்களுடைய ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு எண்ணமும் தந்தையினுடைய நினைவு மற்றும் சேவைக்காகத்தான் இருக்கும். எனவே, இயற்கை மற்றும் மாயை கூட சதா அன்பான குழந்தைகளாகிய இவர்கள் எண்ணத்திலும் கூட ஒருபொழுதும் நம்மிடம் அடிமையாக முடியாது என்பதை தெரிந்து இருக்கின்றது. சர்வ சக்திகளுடைய அதிகாரி ஆத்மாக்களாக இருக்கின்றார்கள். சதா சிநேகி ஆத்மாக்களுடைய ஸ்திதிக்கு தான் புகழ் இருக்கின்றது. ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் கிடையாது. தந்தை தான் உலகமாக இருக்கின்றார்.

 

இரண்டாம் நம்பர் - அன்பான ஆத்மாக்கள் அவசியம் அன்பானவராக இருப்பார்கள். ஆனால், சதா இல்லாத காரணத்தினால் அவ்வப்பொழுது மனதினுடைய எண்ணத்தின் மூலமாகக் கூட வேறு எங்காவது அன்பு சென்று விடுகின்றது. இடை இடையில் தன்னை கொஞ்சம் மாற்றம் செய்யக்கூடிய காரணத்தினால் அவ்வப்பொழுது முயற்சி, அவ்வப்பொழுது கடினத்தினுடைய அனுபவம் செய்கின்றனர். ஆனால், மிகவும் குறைவாக உள்ளது. எப்பொழுது ஏதாவது இயற்கை அல்லது மாயையினுடைய சூட்சும யுத்தம் நடைபெறுகின்றதோ, அந்த நேரம் அன்பினுடைய காரணத்தினால் நினைவானது சீக்கிரம் வந்துவிடுகின்றது. மேலும், நினைவினுடைய சக்தியினால் தன்னை மிகவும் சீக்கிரமாக மாற்றம் செய்துவிடுகின்றனர். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் சங்கல்பம் கடினமானதாக மற்றும் உழைக்க வேண்டியதாக ஆகிவிடுகிறது. அவ்வப்பொழுது அன்பு சாதாரணமாக ஆகிவிடுகிறது. அவ்வப்பொழுது அன்பில் கலந்து இருக்கின்றனர். மனோநிலையில் வித்தியாசம் ஏற்பட்டுவிடுகின்றது. ஆனாலும், அதிகமான நேரம் மற்றும் எண்ணங்களை விரயம் ஆக்கவில்லை. எனவே, அன்பானவராக இருக்கின்றார்கள். ஆனால், சதா அன்பானவராக இல்லாத காரணத்தினால் இரண்டாம் நம்பருக்கு சென்று  விடுகின்றனர்.

 

மூன்றாமவர்கள் - நேரத்தின் அனுசாரம் அன்பு செலுத்தக்கூடியவர்கள். உண்மையான அன்பு தந்தையைத் தவிர வேறு யாரிடமும் இருந்து கிடைக்க முடியாது மற்றும் இந்த ஆன்மிக அன்பானது சதா காலத்திற்கும் சிரேஷ்டமாக ஆக்கக்கூடியது என்று அந்த ஆத்மாக்கள் புரிந்து இருப்பார்கள். ஞானம் அதாவது அறிவு முழுமையாக உள்ளது. இந்த அன்பான வாழ்க்கை பிரியமானதாகவும் இருக்கிறது. ஆனால், சிலர் தனது தேகத்தினுடைய பற்றின் சம்ஸ்காரம் அல்லது ஏதாவது விசேஷமான பழைய சம்ஸ்காரம் அல்லது மனிதன் மற்றும் பொருளினுடைய சம்ஸ்காரம் மற்றும் வீணான எண்ணங்களுடைய சமஸ்காரத்திற்கு அடிமையாகி, கட்டுப்படுத்தும் சக்தி இல்லாத காரணத்தினால் வீணான எண்ணங்களின் சுமையானது இருக்கின்றது. குழுவின் சக்தியினுடைய குறை இருக்கும் காரணத்தினால் குழுவில் வெற்றி பெற முடிவதில்லை. குழுவினுடைய சூழ்நிலை, அன்பினை அழித்துவிட்டு தன் பக்கம் இழுத்துவிடுகின்றது. இன்னும் சிலரோ எப்பொழுதுமே சீக்கிரத்தில் உள்ளச்சோர்வு அடைந்துவிடுகின்றார்கள். அவ்வப்பொழுது மிகவும் நன்றாக பறந்து கொண்டு இருப்பார்கள் மற்றும் சில நேரம் பார்த்தால் தனக்குத் தானே உள்ளம் சோர்வடைந்து இருப்பார்கள். தனக்குத் தானே உள்ளம் சோர்வடையக் கூடிய சமஸ்காரம் கூட சதா அன்பானவராக ஆக விடுவதில்லை. ஏதாவது சமஸ்காரம் சூழ்நிலையின் பக்கம், இயற்கையின் பக்கம் கவர்ச்சித்து விடுகின்றது. மேலும், எப்பொழுது குழப்பத்தில் வருகின்றார்களோ, அப்பொழுது அன்பினுடைய அனுபவம் இருக்கக் கூடிய காரணத்தினால், அன்பான வாழ்க்கை பிரியமானதாக இருக்கக்கூடிய காரணத்தினால் பிறகு தந்தையினுடைய நினைவு வருகின்றது. இப்பொழுது மறுபடியும் தந்தையினுடைய அன்பில் மூழ்க வேண்டும் என்று முயற்சி செய்கின்றார்கள். ஆகையினால், நேரத்தின் அனுசாரம், சூழ்நிலையின் அனுசாரம் குழப்பத்தில் வரக்கூடிய காரணத்தினால் சில நேரம் நினைவு செய்கின்றனர், சில நேரம் யுத்தம் செய்கின்றனர். யுத்தத்தின் வாழ்க்கை அதிகமாக இருக்கின்றது மற்றும் அன்பில் கலந்திருக்கக் கூடிய வாழ்க்கை அதனுடன் ஒப்பிடும்பொழுது குறைவாக இருக்கின்றது. எனவே, மூன்றாம் நம்பரில் வந்துவிடுகின்றனர். ஆனாலும் கூட உலத்தினுடைய அனைத்து ஆத்மாக்களை விட மூன்றாம் நம்பரில் உள்ளவர்கள் கூட மிகவும் உயர்ந்தவர்கள் என்று தான் சொல்லப்படுகின்றது. ஏனெனில், தந்தையை தெரிந்து கொண்டனர், தந்தையினுடையவராக ஆகிவிட்டனர், பிராமண பரிவாரத்தினுடையவராக ஆகிவிட்டனர். உயர்ந்ததிலும் உயர்ந்த பிராமண ஆத்மாக்கள் பிரம்மா குமார், பிரம்மா குமாரி என்று அழைக்கப்படுகின்றார்கள். எனவே, உலகத்தோடு ஒப்பிடும்பொழுது அவர்களும் கூட சிரேஷ்ட ஆத்மாக்களே ஆவார்கள். ஆனால், சம்பூரணத்தன்மையின் கணக்குப்படி மூன்றாம் நம்பரில் இருக்கின்றனர். அனைவரும் அன்பானவர்கள் தான். ஆனால், வரிசைக்கிரமமாக உள்ளனர். முதல் நம்பர் சதா சிநேகி ஆத்மாக்கள், சதா தாமரை மலருக்கு சமமாக விடுபட்டவர்களாகவும் மற்றும் தந்தைக்கு மிகவும் பிரியமானவர்களாகவும் இருக்கின்றார்கள். அன்பான ஆத்மாக்கள் விடுபட்டவர்களாகவும் இருக்கின்றனர், அன்பானவர்களாகவும் கூட இருக்கின்றனர். ஆனால், தந்தைக்கு சமமாக, சக்திசாலியாக, வெற்றியாளராக இல்லை. அன்பில் மூழ்கிய நிலை இல்லை. ஆனால், அன்பானவராக இருக்கின்றனர். அவர்களுடைய விசேசமான ஸ்லோகன் - உங்களுடையவராக இருக்கின்றோம், உங்களுடைய வராகவே இருப்போம். சதா இந்தப் பாடலை பாடிக் கொண்டே இருப்பார்கள். ஆனாலும் கூட அன்பு உள்ளது. எனவே, 80 சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கின்றார்கள். ஆனாலும் அவ்வப்பொழுது என்ற வார்த்தை வந்துவிடுகின்றது. சதா என்ற வார்த்தை வருவது இல்லை. மேலும், மூன்றாம் நம்பர் ஆத்மாக் கள் அடிக்கடி அன்பினுடைய காரணத்தினால் உறுதிமொழிகளும் கூட அன்புடன் செய்கின்றனர். இப்பொழுதிலிருந்து அவ்வாறு ஆக வேண்டும், இப்பொழுதிலிருந்து இதைச் செய்வேன் என்று உறுதிமொழி செய்கின்றனர். வித்தியாசத்தை தெரிந்து இருக்கின்றீர்கள் அல்லவா. உறுதிமொழியும் கூட செய்கின்றார்கள், முயற்சியும் கூட செய்கின்றார்கள், ஆனால், ஏதாவது விசேசமான பழைய சமஸ்காரம் அன்பில் மூழ்கியிருக்க விடுவதில்லை. தடைகளானது அன்பில் மூழ்கிய நிலையிலிருந்து கீழே கொண்டு வந்துவிடுகிறது. எனவே, சதா என்ற வார்த்தை வர முடியாது. ஆனால், சில நேரம் ஒரு நிலை, சில நேரம் வேறொரு நிலையில் இருக்கும் காரணத்தினால் ஏதாவது பலவீனமானது விசேசமாக தங்கிவிடுகின்றது. அத்தகைய ஆத்மாக்கள் பாப்தாதாவிற்கு முன்பு ஆன்மிக உரையாடல் கூட மிகவும் இனிமையாக செய்கின்றனர். வாதம், விவாதம் கூட நிறைய செய்கின்றனர். கட்டளையோ உங்களுடையது, ஆனால், எங்களுக்காக நீங்களே செய்யுங்கள், பலன் மட்டும் நாங்கள் அடைய வேண்டும் என்று சொல்கின்றனர். நீங்கள் தன்னுடையவராக ஆக்கியிருக்கிறீர்கள் எனில், நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று விவாதத்தின் கூடவே அன்பாக சொல்கின்றனர். தந்தை பார்த்துக் கொள்வார், ஆனால், குழந்தைகள் ஏற்றுக்கொண்டால் தானே நல்லது என்று தந்தை கூறுகின்றார். ஆனால், நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோமோ, இல்லையோ ஆனால், நீங்கள் பார்த்துக் கொள்ளத் தான் வேண்டும் என்று குழந்தைகள் வாதம் செய்கின்றனர். ஆனாலும் பிராமண குழந்தைகள் ஆயிற்றே என்று தந்தைக்குக் குழந்தைகள் மீது கருணை வருகின்றது. ஆகையினால், சுயம் தந்தையும் கூட நிமித்தம் ஆகியிருக்கும் ஆத்மாக்கள் மூலமாக சக்தியும் கொடுக்கின்றார். ஆனால், ஏதாவது சக்தியைப் பெற்று மாற்றம் கூட செய்துவிடுகின்றனர். மேலும், ஏதாவது சக்தி கிடைக்கும்போதிலும் தன்னுடைய சமஸ்காரங்களின் போதையில் இருக்கக்கூடிய காரணத்தினால் சக்தியை தாரணை செய்ய முடிவது இல்லை. எவ்வாறு ஏதாவது சக்தி நிறைந்த பொருள் பரிமாறப்படுகின்றது, ஆனால், அதனை சாப்பிடவில்லை என்றால் என்ன செய்வது!

 

தந்தை விசேசமாக சக்தியும் கொடுக்கின்றார். மேலும், சிலர் கொஞ்சம் கொஞ்சமாக சக்திசாலியாகி ஆகி மூன்றாம் நம்பரிலிருந்து இரண்டாம் நம்பரில் வந்துவிடுகின்றனர். ஆனால், சிலர் மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கக்கூடிய காரணத்தினால் எவ்வளவு எடுக்க வேண்டுமோ அவ்வளவு எடுக்க முடிவதில்லை. மூன்று விதமான அன்பான குழந்தைகள் இருக்கின்றனர். அன்பான குழந்தைகள் என்ற பட்டம் (டைட்டில்) அனைவருக்கும் கிடைத்து இருக்கின்றது. ஆனால், வரிசைக்கிரமமாக உள்ளனர்.

 

இன்று ஜெர்மனியை சேர்ந்தவர்களுக்கான முறை ஆகும். முழு குழுவுமே நம்பர் ஒன் ஆவீர்கள் அல்லவா. நம்பர் ஒன் சமீப இரத்தினமாக இருக்கின்றீர்கள். ஏனெனில், யார் சமமாக இருக்கின்றார்களோ, அவர்கள் தான் சமீபமாக இருக்கின்றார்கள். சரீரத்தினால் எவ்வளவு தான் தூரமாக இருந்தாலும் உள்ளத்தால் அந்தளவு அருகாமையில் இருக்கின்றீர்கள், அதாவது, இருப்பதே உள்ளத்தில் தான். சுயம் தந்தையினுடைய இதய சிம்மாசனத்தில் இருக்கின்றீர்கள். அவர்களுடைய உள்ளத்தில் தானாகவே தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை. ஏனெனில் பிராமண வாழ்க்கையில் தந்தை உள்ளத்தினுடைய வியாபாரமே செய்திருக்கின்றார். உள்ளத்தினை பெறுவதும் தருவதுமாக உள்ளத்தினுடைய வியாபாரம் செய்யப்பட்டுவிட்டது அல்லவா. உள்ளத்தினால் தந்தையுடன் சேர்ந்து இருக்கின்றீர்கள். சரீரத்தால் சிலர் எங்கேயோ, சிலர் எங்கேயோ இருக்கின்றீர்கள். அனைவரையும் இங்கே வைத்துக் கொண்டால், இங்கே இருந்துகொண்டு என்ன செய்வீர்கள்! சேவைக்காக மதுபனில், உடனிருப்பவர்களையும் கூட வெளியே அனுப்ப வேண்டியதாக இருந்தது. இல்லையெனில், உலகத்தினுடைய சேவை எவ்வாறு நடக்கும்? தந்தையிடமும் அன்பு இருக்கின்றது, எனவே, சேவையின் மீதும் கூட அன்பு இருக்கின்றது. எனவே, நாடக அனுசாரமாக வெவ்வேறு இடங்களுக்கு சென்று இருக்கின்றீர்கள், மேலும், அங்குள்ள சேவைக்கு நிமித்தமாகி விட்டீர்கள். இதுவும் கூட நாடகத்தினுடைய நடிப்பில் அடங்கியிருக்கின்றது. தனக்கு சமமானவர்களுக்கு சேவை செய்வதற்கு நிமித்தமாகிவிட்டீர்கள். ஜெர்மனியை சேர்ந்தவர்கள் சதா மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர்கள் அல்லவா. தந்தையிடமிருந்து சதா என்பதற்கான ஆஸ்தி இந்தளவு சகஜமாக கிடைத்து கொண்டு இருக்கின்றது, எனில், சதா என்பதை விட்டுவிட்டு சிறிது அல்லது அவ்வப்பொழுது என்று ஏன் பெற வேண்டும். வள்ளல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார். எடுக்கக்கூடியவர்கள் ஏன் குறைவாக எடுக்கின்றீர்கள்? எனவே, சதா மகிழ்ச்சியினுடைய ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருங்கள். சதா மாயையை வென்றவராகி, இயற்கையின் மீது வெற்றி அடைந்தவராகி வெற்றியினுடைய முரசொலியை உலகத்திற்கு முன்பு உரக்க ஒலிக்கச் செய்யுங்கள்.

 

தற்காலத்தில் ஆத்மாக்கள் அழியக்கூடிய சாதனங்கள் அல்லது அதிக போதையில் மூழ்கி இருக்கின்றனர் மற்றும் துக்கம், அசாந்தியினால் களைப்படைந்து, சின்ன சப்தம் கூட கேட்காத அளவிற்கு ஆழ்ந்த நித்திரையில் தூங்கிக்கொண்டு இருக்கின்றனர். போதையில் யார் மூழ்கி இருக்கின்றார்களோ, அவர்களை அசைக்க வேண்டியதாக இருக்கின்றது. ஆழமான தூக்கத்தில் இருப்பவர்களையும் கூட அசைத்து எழுப்ப வேண்டியதாக இருக்கின்றது. ஆகையால், ஹம்பர்க் என்ற நகரத்தில் இருப்பவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள்? இது நல்ல சக்தி சாலியான குழு. அனைவருக்கும் தந்தை மற்றும் படிப்பின் மீது அன்பு நன்றாக இருக்கின்றது. யாருக்கு படிப்பின் மீது அன்பு இருக்கின்றதோ, அவர்கள் சதா சக்திசாலியாக இருக்கின்றார்கள். தந்தை அதாவது முரளிதரன் மீது அன்பு இருப்பது என்றால் முரளி மீது அன்பு உள்ளது என்று அர்த்தம். முரளி மீது அன்பு இல்லையெனில் முரளிதரர் மீதும் அன்பு இல்லை என்பதாகும். எனக்கு தந்தை மீது அன்பு இருக்கின்றது, ஆனால், படிப்பதற்கு நேரம் இல்லை என்று எவ்வளவு தான் ஒருவர் சொன்னாலும் தந்தை அதை ஏற்றுக்கொள்வதில்லை. எங்கே ஈடுபாடு இருக்கின்றதோ, அங்கே எந்தவிதமான தடையும் நிற்க முடியாது. தானாகவே தடைகள் அழிந்துவிடும். படிப்பின் மீது அன்பு, முரளி மீது அன்பு கொண்டவர்கள் தடைகளை சகஜமாகக் கடந்து சென்றுவிடுவார்கள். பறக்கும் கலை மூலமாக சுயம் உயர்ந்தவராக ஆகிவிடுவார்கள். தடைகளானது கீழே தங்கிவிடும். பறக்கும் கலை உடையவர்களுக்கு மலையும் கூட ஒரு கல்லுக்கு சமமாக இருக்கின்றது. படிப்பின் மீது அன்பு இருக்கக்கூடியவர்கள் எந்த சாக்குபோக்கும் சொல்லமாட்டார்கள். அன்பானது கடினத்தை எளிதானதாக ஆக்கிவிடுகிறது. ஒன்று முரளியின் மீது அன்பு, படிப்பின் மீது அன்பு மற்றும் பரிவாரத்தினுடைய அன்பானது கோட்டை போல் ஆகிவிடுகின்றது. கோட்டையில் இருக்கக்கூடியவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இந்தக் குழு இந்த இரண்டு விசேஷத்தன்மைகளால் முன்னேறிக் கொண்டே இருக்கின்றது. படிப்பு மற்றும் பரிவாரத்தினுடைய அன்பின் காரணத்தினால் ஒருவர் மற்றவர்களை அன்பினுடைய பிரபாவத்தினால் நெருக்கமானவர்களாக ஆக்கிவிடுகின்றீர்கள். மேலும், நிமித்த ஆத்மாவும் (புஷ்பாள்) அன்பானவராகக் கிடைத்து இருக்கின்றார். அன்பானது மொழியைக் கூட பார்ப்பது இல்லை. அன்பினுடைய மொழியானது அனைத்து மொழிகளையும் விட உயர்ந்தது. அனைவரும் அவரை நினைவு செய்து கொண்டு இருக்கின்றார்கள். பாப்தாதாவிற்கும் கூட நினைவு உள்ளது. சான்றை நல்லவிதமாக (பாப்தாதா) பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். சேவையினுடைய வளர்ச்சியும் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. எந்தளவு வளர்ச்சி செய்து கொண்டு இருக்கின்றீர்களோ, அந்தளவு மகான் புண்ணிய ஆத்மா ஆகியிருப்பதற்கான பலனாக அனைவருடைய ஆசிர்வாதமும் கிடைத்துக் கொண்டே இருக்கும். புண்ணிய ஆத்மா தான் பூஜைக்குரிய ஆத்மாவாக ஆகின்றார்கள். இப்பொழுது புண்ணிய ஆத்மாவாக இல்லையெனில் எதிர்காலத்தில் பூஜைக்குரிய ஆத்மாவாக ஆக முடியாது. புண்ணிய ஆத்மா ஆகுவது கூட அவசியமானது ஆகும். நல்லது.

 

அவ்யக்த முரளியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி - பதில்

 

கேள்வி:

பிராமண வாழ்க்கையினுடைய விசேசமான குணம், அலங்காரம் மற்றும் பொக்கிஷம் எது?

 

பதில்:

திருப்தி. ஏதாவது ஒரு அன்பான பொருள் இருக்கின்றது எனில், அந்த அன்பான பொருளை ஒரு பொழுதும் விடுவது கிடையாது. திருப்தி - விசேசத்தன்மையாக இருக்கின்றது. பிராமண வாழ்க்கையினுடைய பரிவர்த்தனையைக் காட்டும் விசேச கண்ணாடியாக இருக்கின்றது. எங்கே திருப்தி இருக்கின்றதோ, அங்கே அவசியம் மகிழ்ச்சியும் இருக்கும். ஒருவேளை பிராமண வாழ்க்கையில் திருப்தி இல்லையெனில், அது சாதாரண வாழ்க்கையே.

 

கேள்வி:

திருப்திமணிகளுடைய விசேசத்தன்மை என்னவாக இருக்கும்?

 

பதில்:

திருப்திமணிகளாக இருப்பவர்கள் ஒருபொழுதும் எந்த காரணத்தினாலும் தன்னால், மற்ற ஆத்மாக்களால், தன்னுடைய சமஸ்காரங்களால், வாயுமண்டலத்தின் பிரபாவத்தினால் அதிருப்தி ஆக முடியாது. நாங்கள் திருப்தியாக இருக்கின்றோம், ஆனால், மற்றவர்கள் அதிருப்தி செய்கின்றார்கள் என்று அவர்கள் ஒருபொழுதும் சொல்லமாட்டார்கள். என்னவானாலும் திருப்திமணிகள் தன்னுடைய திருப்தியினுடைய விசேஷத்தன்மையை விடவே முடியாது.

 

கேள்வி:

யார் சதா திருப்தியாக இருக்கின்றார்களோ, அவர்களின் அடையாளங்கள் என்னவாக இருக்கும்?

 

பதில்:

1. யார் சதா திருப்தியாக இருக்கின்றார்களோ, அவர்கள் மீது தானாகவே அனைவருக்கும் அன்பு ஏற்படும். ஏனென்றால், திருப்தியானது பிராமண பரிவாரத்தினுடைய அன்பானவராக ஆக்கிவிடுகின்றது.

 

2. திருப்தியான ஆத்மாவை, அனைவரும் தானாகவே அருகாமையில் கொண்டு வருவதற்கான மற்றும் ஒவ்வொரு சிரேஷ்டமான காரியத்தில் சகயோகி ஆக்குவதற்கான முயற்சி செய்வார்கள்.

 

3. திருப்தியினுடைய விசேசத்தன்மை தானாகவே ஒவ்வொரு காரியத்திலும் கோல்டன் சான்ஸ்லராக (பொன்னான வாய்ப்பைப் பெறுபவராக) ஆக்கிவிடுகின்றது. அவர்கள் சொல்வதற்கோ அல்லது யோசிப்பதற்கோ அவசியமில்லை.

 

4. திருப்தியானது சதா அனைவருடைய சுபாவ, சமஸ்காரத்தையும் இணைக்கக்கூடியதாக இருக்கின்றது. அவர்கள் ஒருபொழுதும் யாருடைய சுபாவ, சமஸ்காரத்தினால் பயப்படுபவர்களாக இருக்கமாட்டார்கள்.

 

5. அவர்களிடம் அனைவருக்கும் தானாகவே உள்ளத்தினுடைய அன்பு ஏற்படுகின்றது. அவர்கள் அன்பினை பெறுவதற்கு உரியவர்களாக இருக்கின்றனர். திருப்தி தான் அந்த ஆத்மாவினுடைய அறிமுகத்தைக் கொடுக்கும். இவர்களுடன் பேச வேண்டும், இவர்களுடன் அமர வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் உள்ளத்தில் விருப்பம் இருக்கும்.

 

6. திருப்தியான ஆத்மாக்கள் சதா மாயையை வென்றவராக இருக்கின்றார்கள். ஏனென்றால், கட்டளைபடி நடக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். சதா மரியாதை (நியமங்கள்) என்ற கோட்டிற்குள் இருக்கின்றார்கள். மாயையை தூரத்திலிருந்தே அறிந்து கொண்டுவிடுவார்கள்.

 

கேள்வி:

தக்க சமயத்தில் மாயையைக் கண்டறிய முடியவில்லை, அடிக்கடி தோல்வி அடைகின்றார்கள் எனில் அதற்கான காரணம் என்ன?

 

பதில்:

கண்டறிவதில் குறை ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் சதா தந்தையினுடைய சிரேஷ்ட வழிப்படி நடக்காததே ஆகும். சில நேரம் நடப்பார்கள், சில நேரம் நடப்பதில்லை. சில சமயம் நினைவு செய்வார்கள், சில சமயம் நினைவு செய்வதில்லை. சில சமயம் ஊக்கம், உற்சாகத்துடன் இருப்பார்கள், சில நேரம் அவ்வாறு இருப்பதில்லை. சதா கட்டளை என்ற கோட்டிற்குள் இருப்பது இல்லை. எனவே, மாயை தக்க சமயத்தில் ஏமாற்றி விடுகின்றது. மாயைக்கு கண்டறியக்கூடிய சக்தி அதிகமாக இருக்கின்றது. இந்த சமயம் இவர்கள் பலவீனமாக இருக்கின்றார்கள் என்று மாயை பார்க்கின்றது, உடனே, அந்த பலவீனத்தின் மூலம் தன்னுடையவராக ஆக்கிவிடுகிறது. மாயை வருவதற்கான வழியே பலவீனம் தான்.

 

கேள்வி:

மாயாஜீத் ஆகுவதற்கான சகஜமான சாதனம் என்ன?

 

பதில்:

சதா தந்தையின் கூடவே இருங்கள். கூடவே இருப்பது என்றால் தானாகவே மரியாதை என்ற கோட்டிற்குள் இருப்பது என்று அர்த்தம். பிறகு, ஒவ்வொரு விகாரத்தினை வெற்றியடையக் கூடிய உழைப்பிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள். கூடவே இருந்தீர்கள் என்றால் எப்படி தந்தை இருக்கின்றாரோ, அப்படி நீங்களும் இருப்பீர்கள். தொடர்பினுடைய நிறம் தானாகவே ஏற்படும். எனவே, விதையை விட்டுவிட்டு கிளைகளை மட்டும் வெட்டுவதற்கான உழைப்பு செய்யாதீர்கள். இன்று காமத்தை வென்றவர் ஆகிவிட்டேன், நேற்று கோபத்தை வென்றவர் ஆகிவிட்டேன் என்பது கிடையாது. சதா வெற்றியாளராக இருக்க வேண்டும். விதை ரூபத்தை கூடவே வைத்துக் கொண்டால் மாயையினுடைய விதை அப்படியே எரிந்து சாம்பல் ஆகிவிடும். பிறகு, ஒருபொழுதும் அந்த விதையிலிருந்து அம்சம் கூட வெளிப்பட முடியாது.

 

வரதானம்:

ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தைரியம், உற்சாகத்தினைக் கொடுக்கக்கூடிய கருணையுள்ளம் உடையவராக, உலகத்திற்கு நன்மை செய்யக்கூடியவராக ஆகுக.

 

ஒருபொழுதும் பிராமண பரிவாரத்தில் எந்தவொரு பலவீனமான ஆத்மாவையும் நீங்கள் பலவீனமானவர்கள் என்று சொல்லக்கூடாது. கருணையுள்ளம் கொண்ட விஷ்வ கல்யாணகாரி குழந்தைகளாகிய உங்களுடைய வாயிலிருந்து சதா ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சுபமான வார்த்தை வெளிப்பட வேண்டும், மனச்சோர்வு அடையச் செய்யக்கூடிய வார்த்தை வெளிப்படக்கூடாது. ஒருவர் எவ்வளவு தான் பலவீனமாக இருந்தாலும், அவர்களுக்கு சமிக்ஞை அல்லது படிப்பினைக் கொடுக்க வேண்டுமென்றால் முதலில் அவர்களை சக்திசாலியாக ஆக்கி, பிறகு படிப்பினை கொடுங்கள். முதலில் பூமியில் தைரியம் மற்றும் உற்சாகத்தினுடைய கலப்பையைக் கொண்டு உழ வேண்டும், பிறகு, விதை போடுங்கள். அப்பொழுது எளிதாகவே ஒவ்வொரு விதைக்கான பலன் வெளிப்படும். இதன் மூலமாக உலக நன்மைக்கான சேவை தீவிரமானதாகிவிடும்.

 

சுலோகன்:

தந்தையினுடைய ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டு சதா பரிபூரண தன்மையின் அனுபவம் செய்யுங்கள்.

ஓம்சாந்தி