25.10.2020    காலை முரளி      ஓம் சாந்தி   அவ்யக்த பாப்தாதா,     

ரிவைஸ் 09.04.1985 மதுபன்


  

உண்மையான சேவாதாரியின் அடையாளம்

 

இன்று ஞான சூரியன், ஞான சந்திரன் தனது பூமியின் நட்சத்திர மண்டலத்தில் அனைத்து நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். அனைத்து நட்சத்திரங்களும் ஜொலித்துக் கொண்டே தன்னுடைய ஜொலிப்பு மற்றும் பிரகாசத்தை கொடுத்துக் கொண்டி ருக்கிறது. வித விதமான நட்சத்திரங்கள் இருக்கிறது. சிலர் விசேசமான ஞான நட்சத்திரங்கள், சிலர் சகஜயோகியின் நட்சத்திரம், சிலர் குணத்தை தானம் செய்யும் மூர்த்தியின் நட்சத்திரம். சிலர் நிரந்தர சேவாதாரி என்ற நட்சத்திரம். சிலர் எப்பொழுதுமே சம்பன்ன (முழுமையான) நட்சத்திரமாக இருக்கிறார்கள். அனைத்தையும் விட உயர்ந்தது - ஒவ்வொரு நொடியும் வெற்றியின் நட்சத்திரமாக இருப்பது. கூட கூடவே சிலர் எதிர்பார்ப்பின் (விருப்பத்தின்) நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். எதிர்ப்பார்ப்பின் நட்சத்திரத்தையும் பாருங்கள், வெற்றியின் நட்சத்திரங்களையும் பாருங்கள். இரண்டிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆனால் இரண்டு விதமான நட்சத்திரங்கள் இருக்கிறது, மேலும் ஒவ்வொரு விதவிதமான நட்சத்திரங் களும் உலகத்தின் ஆத்மாக்கள் மீது, இயற்கையின் மீது, அதனதன் தாக்கத்தை ஏற்படுகிறது. வெற்றியின் நட்சத்திரம் நாலாபக்கமும் தனது ஊக்க உற்சாகத்தின் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எதிர்ப்பார்ப்பின் நட்சத்திரங்கள் தானும் கூட அவ்வபொழுது அன்பாகவும், அவ்வப்பொழுது கடினத்தன்மை என்ற முயற்சி இரண்டின் தாக்கம் ஏற்படுவதற்கான காரணத்தினால் மற்றவர்களிடத்திலும் கூட அவ்வபொழுது அன்பாகவும், அவ்வப்பொழுது கடினத்தன்மையின் தாக்கம் ஏற்படுகிறது, முன்னேறுவதற்கான விருப்பம் வைத்து முன்னேறிக் கொண்டே செல்கிறார்கள். எனவே ஒவ்வொருவரும் தன்னை தானே கேளுங்கள் - நான் எப்படிப்பட்ட நட்சத்திரம்? அனைவரிடத்திலும் ஞானம், யோகம், குணங்களின் தாரணை மற்றும் சேவையின் உணர்வு இருந்தாலும் கூட, சிலரிடத்தில் ஞானத்தின் தீப்பொறி இருக்கிறது, சிலரிடத்தில் விசேச நினைவின் - யோகத்தினுடையதாக இருக்கிறது. மேலும் ஒரு சிலர் தனது குணமூர்த்தியின் ஜொலிப்பின் மூலம் விசேசமாக ஈர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான்கு விதமான தாரணை இருந்தாலும் கூட சதவிகிதத்தில் (%) வேறுபாடு இருக்கிறது. ஆகையால் விதவிதமான நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டே தென்படுகிறது. இது ஆன்மீக விசித்திர நட்சத்திர கூட்டங்கள். ஆன்மீக நட்சத்திரங்களாகிய உங்களின் தாக்கம் உலகத்தின் மீது ஏற்படுகிறது. எனவே உலகத்தினுடைய ஸ்தூல நட்சத்திரங்களின் தாக்கம் கூட உலகத்தின் மீது ஏற்படுகிறது. எந்தளவு நீங்கள் சக்திசாலியான நட்சத்திரங்களாக ஆகின்றீர்களோ, அந்தளவு உலகத்தின் ஆத்மாக்கள் மீது தாக்கம் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும், மேலும் முன்னேறி கொண்டேயிருப்பீர்கள். எப்படி காரிருள் (கும் இருட்டு) இருக்கிறதென்றால், நட்சத்திரங்களின் பிரகாசம் மிகுதியாக தெளிவாக தென்படும். அப்படி அபிராப்தியின் (கிடைக்காத நிலை) இருள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது, மேலும் எந்தளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறதோ, அதிகரித்துக் கொண்டேயிருக்குமளவிற்கு தான் ஆன்மீக நட்சத்திரங்களாகிய உங்களின் விசேசமான தாக்கம் (பிரபாவம்) அனுபவம் செய்துக் கொண்டேயிருப்பீர்கள். அனைவருக்கும் பூமியில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் ஜோதி பிந்துவின் (ஒளி புள்ளி) வடிவத்தில் பிரகாசமான உடல் ஃபரிஸ்தாவின் ரூபத்தில் தென்படும். எப்படி ஆகாய நட்சத்திரங்களுக்கு பின்னால், தனது சமயம், ஆற்றல் மற்றும் செல்வத்தை பயன்படுத்துகிறார்களோ, அப்படி ஆன்மீக நட்சத்திரங்களை பார்த்து அதிசயம் அடைவார்கள். எப்படி இப்பொழுது ஆகாயத்தில் நட்சத்திரகளை பார்க்கிறார்களோ, அப்படி இந்த பூமியின் மேடையில் நாலாபக்கத்திலும் ஃபரிஸ்தாக்களின் ஜொலிப்பு மற்றும் ஒளி ரூபமான நட்சத்திரங்களின் ஜொலிப்பை பார்ப்பார்கள், அனுபவம் செய்வார்கள் - இவர் யார்? எங்கிருந்து இந்த பூமியின் மீது தனது அதிசயத்தை காட்ட வந்திருக்கிறார்கள்! எப்படி ஸ்தாபனையின் ஆரம்ப காலகட்டத்தில் நாலாபக்கத்திலும் பிரம்மா மற்றும் கிருஷ்ணரின் சாட்சாத்காரம் (காட்சியின்) அலை பரவியது, இவர்கள் யார்? இங்கு என்ன செய்து காட்டு கிறார்கள்? இதை புரிந்துக் கொள்வதற்காக பலரின் கவனம் (பார்வை) சென்றதோ, அதே போன்று இப்பொழுது கடைசியில் நாலாபக்கத்திலும் இந்த இரண்டு விதமான ஒளி புள்ளி மற்றும் ஃபரிஸ்தா அதில் பாப்தாதா மற்றும் குழந்தைகளாகிய உங்கள் அனைவரின் ஜொலிப்பு தென்படும். மேலும் அனைவருக்கும் ஒருவரிடமிருந்து அநேகரின் இந்த பக்கம் தானாகவே கவனம் ஈர்க்கப்படும். இப்பொழுது நீங்கள் அனைவரும் முழுமை (சம்பன்னம்) ஆகும் வரை இந்த தெய்வீக காட்சி தொடர்ந்துக் கொண்டேயிருக்கும். ஃபரிஸ்தாவின் நிலையை சகஜமாகவும் இயல்பாகவும் அனுபவம் செய்யும் பொழுது தான் அவர்களுக்கு சாட்சாத் ஃபரிஸ்தாவின் சாட்சாத்காரம் தென்படும். இந்த ஆண்டு ஃபரிஸ்தா தன்மையின் மனநிலைக்காக விசேசமாக கொடுக்கப்படுகிறது. நினைவு மட்டும் தான் செய்ய வேண்டுமா அல்லது சேவைக்கூட செய்ய வேண்டுமா அல்லது சேவையிலிருந்து விடுபட்டு தபஸ்யாவில் மட்டுமே இருக்க வேண்டுமா என்று பல குழந்தைகள் நினைக்கிறார்கள். பாப்தாதா சேவையின் உண்மையாண அர்த்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். –

 

சேவை உணர்வு என்றாலே சதா ஒவ்வொரு ஆத்மாவிற்காக சுப பாவணை (நல்ல உணர்வு). உயர்ந்த விருப்பத்தின் உணர்வு. சேவை உணர்வு என்றாலே ஒவ்வொரு ஆத்மாவின் உணர்விற்கு தகுந்த மாதிரி பலனை தருவது. உணர்வு எல்லைக்குட்பட்டதாக இருப்பது அல்ல, சிரேஷ்ட உணர்வாகும். ஒருவேளை சேவாதாரிகளாகிய நீங்கள் யார் மீதாவது அன்பின் உணர்வு வைத்தல், சக்திகளினுடைய உதவியின் உணர்வு வைத்தல், குஷியின் உணர்வு வைத்தல், சக்திகளை அடைவதற்கான உணர்வு வைத்தல், ஊக்க-உற்சாகத்தின் உணர்வு வைத்தல், அப்படி விதவிதமான உணர்வுகளின் பலன் அதாவது சகயோகத்தின் மூலம் அனுபவம் செய்ய வைப்பது, எனவே இதற்குத்தான் சேவையின் உணர்வு என சொல்லப் படுகிறது. சொற்பொழிவு செய்துவிட்டு வந்து விட்டேன், ஒரு குரூப்பிற்கு (கூட்டத்திற்கு) புரிய வைத்துவிட்டு வந்துவிட்டேன், கோர்ஸ் (7 நாள் பாடமுறை) முடித்துவிட்டு வந்து விட்டேன், அல்லது சென்டர் திறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன், இதற்கு சேவை உணர்வு என்று சொல்லப்படாது. சேவை என்றாலே எந்தவிதமான ஆத்மாவிற்காகவும் பிராப்தியின் (அனைத்து அடைந்த நிலை) அற்புதத்தை அனுபவம் செய்ய வைப்பது. அவ்வாறு சேவையுடன் தபஸ்யா (நினைவு) எப்பொழுதுமே இணைந்து இருப்பது.

 

தபஸ்யாவின் அர்த்தை விளக்குகிறார் - திட எண்ணத்துடன் எந்தவொரு காரியத்தையும் செய்வது. உண்மையான சேவையின் உணர்வு இருக்குமிடத்தில் தபஸ்யா தனித்து இருக்காது. தியாகம் - தபஸ்யா - சேவை - இந்த மூன்றின் இணைந்த வடிவம் தான் உண்மையான சேவை, மேலும் பெயருக்காக செய்யும் சேவையின் பலன் குறுகிய காலத்திற்கு கிடைக்கிறது. எங்கு சேவை செய்தீர்களோ, அங்கேயே குறுகிய காலத்தின் விளைவின் பலனை அடைந்து, மேலும் முடிந்தும் போய்விடும். குறுகிய காலத்தின் விளைவின் பலன் - குறுகிய காலத்தின் மகிமையாகும். மிக நன்றாக சொற்பொழிவு செய்தீர்கள், மிக நன்றாக கோர்ஸ் (7 நாள் பாடம்) எடுத்தீர்கள், மிக நன்றாக சேவை செய்தீர்கள். எனவே நன்றாக செய்தீர்கள், நன்றாக செய்தீர்கள் என்று சொல்வதின் அல்பகாலத்தின் பலன் கிடைக்கிறது, மேலும் அவர்களும் மகிமை கேட்பதின் குறுகிய காலத்தின் பலன் தான் கிடைக்கிறது. ஆனால் அனுபவம் செய்ய வைப்பது என்றாலே பாபாவுடன் தொடர்பை இணைப்பது, சக்திசாலியாக ஆக்குவது - இது தான் உண்மையான சேவையாகும். உண்மையான சேவையில் தியாகம் - சேவை இல்லையென்றால், இந்த 50-50% சேவை இல்லை, ஆனால் 25% தான் சேவை இருக்கிறது.

 

உண்மையான சேவாதாரியின் அடையாளம் - தியாகம் என்றாலே பணிவு, மேலும் தபஸ்யா என்றாலே ஒரு பாபாவிடம் நம்பிக்கை, நிலையான குஷி. இதைத் தான் உண்மையான சேவை என்று சொல்லப்படுகிறது. பாப்தாதா நிரந்தரமாக உண்மையான சேவாதாரி ஆவதற்காக சொல்கிறார். பெயருக்காக சேவை செய்வது, மேலும் தன்னை தொந்தரவுக்கு உள்ளாக்குவது, மற்றவர்களையும் கூட தொந்தரவு செய்வது, இந்த சேவையிலிருந்து விடுபடுவதற்காக பாப்தாதா சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட சேவை செய்யாமல் இருப்பது நல்லது. ஏனெனில் சேவையின் விசே‘ குணம் திருப்தியின் தன்மையாகும். எங்கு திருப்தி இல்லாமல் தனக்காகவோ, மற்றவர்களுக்காகவோ சேவை செய்தால், அந்த சேவை தனக்கும் பிராப்தியை அனுபவம் செய்ய வைக்காது, மற்றவர்களுக்கும் செய்ய வைக்காது. ஆகையால் முதலில் தன்னை திருப்தியுடைவராக மாற்றிக் கொண்ட பிறகு சேவையில் வருவது நல்லது. இல்லை யென்றால் சூட்சமமான சுமை அவசியம் இருக்கும். அந்த பலவிதமான சுமைகள் பறக்கும் கலையில் தடை ரூபமாகி விடுகிறது. சுமையை சுமக்க வேண்டாம், சுமையை இறக்க வேண்டும். எப்பொழுது அவ்வாறு புரிந்துக் கொள்கிறீர்கள் என்றால், இதைவிட ஏகாந்தவாசி ஆவது நல்லது. ஏனெனில் ஏகாந்தவாசி ஆவதின் மூலம் சுய மாற்றத்தின் மீது கவனம் வரும். எனவே பாப்தாதா தபஸ்யாவை பற்றி என்ன சொல்கிறார் என்றால் - அது பகலும் இரவும் அமர்ந்துக் கொண்டு தபஸ்யா செய்வது என்று சொல்ல வில்லை. தபஸ்யாவில் அமர்வது கூட சேவை தான். லயிட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஆகி அமைதியின், சக்திகளின் கதிர்கள் மூலம் வாயுமண்டலத்தை (சூழ்நிலையை) உருவாக்குவது. தபஸ்யாவுடன் மனதின் சேவை இணைக்கப்பட்டிருக்கிறது. தனித்து இருக்காது. இல்லையென்றால் தபஸ்யா என்ன செய்கிறது! சிரேஷ்ட ஆத்மா - பிராமண ஆத்மா ஆகிவிட்டீர்கள். இப்பொழுது தபஸ்யா என்றால் தன்மீது அனைத்து சக்திகளினால் முழுமையாக ஆவது, உறுதியான மனநிலை, உறுதியான எண்ணத்தின் மூலம் உலகத்திற்கு சேவை செய்வது. வார்த்தையின் சேவை மட்டுமே சேவை அல்ல. எப்படி சுகம் - சாந்தி - தூய்மை மூன்றுமே தங்களுக்குள் இணைக்கப் பட்டிருக்கிறது, அப்படி தியாகம் - தபஸ்யா - சேவையும் இணைக்கப்பட்டிருக்கிறது. தபஸ்யா ரூபம் என்றாலே சக்திசாலியான சேவாதாரியாக உருவாக்குவது என்று பாப்தாதா சொல்கிறார். தபஸ்யா ரூபத்தின் பார்வை கூட சேவை செய்கிறது. அவர்களுடைய அமைதி சொரூபமான முகம் கூட சேவை செய்கிறது, தபஸ்வி மூர்த்தியின் வெறும் பார்வை கூட பிராப்தியின் அனுபவத்தை செய்கிறது. ஆகையால் இன்றைய காலத்தில் பாருங்கள் ஹடயோகத்தின் (விடாபிடியாக) தபஸ்யா செய்கிறார்கள், அவர்களின் தரிசனத்திற்காக எவ்வளவு கூட்டம் கூடுகிறது. உங்களின் இந்த தபஸ்யா சொரூபத்தின் தாக்கம் நினைவு சின்னத்தின் ரூபம் கடைசிவரை வந்து கொண்டேயிருக்கும். எனவே புரிந்ததா - சேவையின் உணர்வு எதை சொல்லப்படுகிறது. சேவை உணர்வு என்றாலே அனைத்து பலவீனங்களையும் எதிர்நோக்கக் கூடிய உணர்வு. பலவீனமானவர்களை எதிர்நோக்கும் உணர்வு அல்ல, பலவீனங்களை எதிர்க்கும் உணர்வு. தனக்குள் சகித்துக்கொண்டு மற்றவர்களுக்கு சக்தியை கொடுக்கும் உணர்வு. ஆகையால் சகித்துக்கொள்ளும் சக்தி என்று சொல்லப்படுகிறது. சகித்துக்கொள்வது என்றாலே சக்திகளை நிரப்புவது மற்றும் சக்தியை கொடுப்பது. சகித்துக்கொள்ளவேண்டுமே தவிர இறந்துபோகக் கூடாது. நாம் பொறுத்துக் கொண்டால் இறந்துவிடுவோம் என்று பலர் நினைக்கிறார்கள். நாம் இறந்து விடுவோமா என்ன? ஆனால் இது மரணம் அல்ல. இது அனைவருடைய மனதிலும் அன்பாசு வாழ்வது. எப்படிபட்ட விரோதியாக இருந்தாலும், இராவணணை விடவும் மோசமாக இருந்தாலும் கூட, ஒருமுறை அல்ல, 10 முறை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும் கூட சகித்துக்கொள்ளும் தன்மையின் பலன் அழிவற்றதாகவும் இனிமையாகவும் இருக்கும். அவர்கள் கூட அவசியம் மாறிவிடுவார்கள். நான் இவ்வளவு சகித்துக்கொண்டேன், இவர்களும் கூட சகித்துக்கொள்ளட்டுமே என்ற உணர்வு இருக்கக் கூடாது. குறுகிய காலத்தின் பலனை அடைவதற் கான உணர்வு வைக்காதீர்கள். கருணை உணர்வு வையுங்கள் - இதற்கு தான் சேவை உணர்வு என்று சொல்ல படுகிறது. எனவே இந்த ஆண்டு, இதுபோன்ற உண்மையான சேவையின் ஆதாரம், நிரூபணத்தின் பட்டியலில் வருவதற்கான பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வருடம் சேவை நிகழ்ச்சிகள் மற்றும் பெரும் விழாக்கள் மிக நன்றாக நடந்ததா என்று பார்க்க மாட்டார். ஆனால் திருப்தி யுடையவர் ஆகி திருப்தியான சேவையில் நம்பர் முன்னால் வரவேண்டும். விக்ன வினாசக் (தடைகளை வென்றவர்) என்ற பட்டமளிப்பு விழாவில் பரிசு பெற வேண்டும். புரிந்ததா! இதற்கு தான் சொல்லப்படுகிறது - நஷ்ட மோஹா ஸ்மிருதி லப்தா (பற்ற்றற நிலையில் இருந்து நினைவு செய்பவர்). எனவே 18 வருட முடிவின் இந்த விசேஷ முழுமை ஆவதற்கான அத்தியாத்தின் சொரூபத்தை வெளிப்படுத்துங்கள். இதற்கு தான் சொல்லப்படுகிறது - பாப்சமான் ஆவது, நல்லது.

 

சதா ஜொலித்துக் கொண்டிருக்கக் கூடிய ஆன்மீக நட்சத்திரங்களுக்கு, சதா திருப்தியின் அலைகளை பரப்பக்கூடிய திருப்திமணிகளுக்கு, எப்பொழுதும் ஒரே நேரத்தில் (ஆற் ற்ட்ங் ள்ஹம்ங் ற்ண்ம்ங்) தியாகம்-தபஸ்யா-சேவையின் தாக்கத்தை ஏற்படுத்தி, கவர்ந்திழுக்கும் ஆத்மாக்களுக்கு, சதா அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆன்மீக உணர்வின் ஆன்மீக பலனை தரக்கூடிய விதை சொரூபமான பாபாவிற்கு சமமாக இருக்கும் ஆன்மீக குழந்தைகளுக்கு பாப்தாதாவின் முழுமை ஆவதற்கான அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

பஞ்சாப் மற்று ஹரியானா மண்டலத்தை சேர்ந்த சகோதர-சகோதரிகளுக்கு அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு - சதா தன்னை ஆடாத-அசையாத ஆத்மா என அனுபவம் செய்கிறீர் களா? எப்படிபட்ட சூழ்நிலையிலும் (பிரச்சனையில்) உறுதியாக இருப்பது, இது தான் பிராமண ஆத்மாக்களின் அடையாளமாகும். உலகம் குழப்பத்தில் இருக்கிறது, ஆனால் சிரேஷ்ட ஆத்மாக் களாகிய நீங்கள் குழப்பத்தில் வரமுடியாது. ஏன்? நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் தெரிந்திருக்கிறீர்கள். ஞானம் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். யார் ஞானம் நிறைந்தவர்களாக இருக்கிறீர்களோ, அவர்கள் சக்திசாலிகளாகவும் இருப்பார்கள். எனவே ஞானம் நிறைந்த ஆத்மாக்கள், சக்திசாலியான ஆத்மாக்கள் சதா இயல்பாகவே உறுதியாக இருப்பார்கள். அதனால் சூழ்நிலையை கண்டு ஒருபொழுதும் பயப்படுவதில்லை அல்லவா! பயமற்றவர்களாக இருக்கிறீர்களா? சக்திகளே (மாதர்களே) பயமற்றவர்களாக இருக்கிறீர்களா? அல்லது சிறிது சிறிதாக பயம் வருகிறதா? ஏனெனில் உள்நாட்டு போர் ஏற்பட வேண்டுமென்று ஆரம்பத்திலிருந்தே - ஸ்தாபனையின் சமயத்திலிருந்தே இருக்கிறது. இது உங்களுக்கு ஆரம்ப கால வரைபடங்களில் காட்டப்பட்டிருக்கிறது. எனவே எது காட்டப்பட்டிருக்கிறதோ, அது நடை பெற வேண்டுமல்லவா. பாரதத்தின் நடிப்பே உள்நாட்டு போரினால் தான், ஆகையால் எதுவும் புதிதல்ல. அதனால் எதுவும் புதிதல்ல என்பதா அல்லது என்ன ஆகுமோ, எப்படி ஆகுமோ, இது நடந்தது என்று பயந்து விடுகிறீர்களா? செய்திகளை கேட்டாலும், பார்த்தாலும் கூட ஏற்கனவே உருவாக்கப்பட்ட நாடகத்தை புரிந்துக்கொண்டு, சக்திசாலி ஆகி பார்க்கவும், மற்றவர் களுக்கு கூட சக்தி கொடுக்க வேண்டும் - இது தான் உங்கள் அனைவரின் வேலை. உலகத்தினர் பயந்துக் கொண்டேயிருப்பார்கள், மேலும் நீங்கள் அந்த ஆத்மாக்களிடத்தில் சக்தியை நிரப்ப வேண்டும். யாரெல்லாம் தொடர்பில் வருகிறார்களோ, அவர்களுக்கு சக்திகளின் தானம் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். அமைதியின் தானம் அளியுங்கள். அமைதியில்லாத இந்த நேரத்தில் தான் அமைதியை தரு வேண்டும். எனவே அமைதியின் தூதுவராக இருக்கிறீர்கள். அமைதியின் தூதுவர் என்று பாடப்படுகிறது அல்லவா. அமைதியின் தூதுவர் நீங்களா அல்லது மற்றவர்களா? எனவே ஒருபொழுதும் எங்கிருந்தாலும், நடந்தாலும், சதா தன்னை அமைதியின் தூதுவர் என்று புரிந்துக் கொண்டு இருங்கள். அமைதியின் தூதுவராக இருக்கிறீர்கள், அமைதியின் செய்தியை தருபவர்களாக இருக்கிறீர்கள் என்றால், தானும் கூட அமைதி சொரூபமாகி சக்திசாலியாக இருக்கிறீர்கள் மற்றும் மற்றவர்களுக்கு கூட தருகிறீர்கள். அவர்கள் (உலகத்தினர்) அசாந்தியை பரப்புபவர்கள், நீங்கள் சாந்தியை பரப்பு பவர்கள். அவர்கள் நெருப்பு மூட்டுவார்கள், நீங்கள் தண்ணீரை ஊற்றுங்கள். இது தான் உங்களின் கடமையல்லவா. இதற்கு தான் உணமையான சேவாதாரி என்று சொல்லபடுகிறது. எனவே அப்படிப்பட்ட நேரத்தில் இந்த சேவைக்கான அவசியம் இருக்கிறது. சரீரம் அழியக் கூடியதாக இருக்கிறது, ஆனால் ஆத்மா சக்திசாலியாக இருக்கிறதென்றால் ஒரு சரீரத்திலிருந்து விடுபட்டு போனாலும் கூட மற்றொரு சரீரத்தில் நினைவின் பலனை அடைந்து கொண்டே யிருக்கும். ஆகையால் அழிவற்ற பிராப்தியை சேமித்து கொண்டே இருங்கள். எனவே நீங்கள் யார்? அமைதியின் தூதுவர்கள். அமைதியின் செய்தியை பரப்புபவர். மாஸ்டர் அமைதியின் வள்ளல். மாஸ்டர் சக்தியின் வள்ளல். இந்த நினைவு சதா இருக்கிறதல்லவா. சதா தன்னை இந்த நினைவின் மூலம் முன்னேற்றிக்கொண்டே செல்லுங்கள். மற்றவர்களையும் கூட முன்னேற்றுங்கள். இது தான் சேவை. அரசாங்கத்தின் ஏதேனும் நியமங்கள் இருந்தால், அதை பின்பற்றத் தான் வேண்டும். ஆனால் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, மனதின் சேவை மூலம், வார்த்தையின் மூலம் அவசியம் சேவை செய்துக் கொண்டே இருங்கள். இப்பொழுது மனதின் மிகவும் அவசியமாக இருக்கிறது. ஆனால் எப்பொழுது தன்னிடத்தில் சக்தி நிரம்பியிருக்குமோ, அப்பொழுது தான் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். அதனால் சதா அமைதியின் வள்ளலின் குழந்தைகளாகிய நீங்களும் அமைதியின் வள்ளல் ஆவீர்கள். வள்ளலாகவும் இருக்கிறீர்கள் என்றால் உருவாக்குபவர்களாகவும் இருக்கிறீர்கள். நான் மாஸ்டர் அமைதியின் வள்ளல், மாஸ்டர் சக்தியின் வள்ளல் என்ற நினைவு சதா எந்த காரியம் செய்துக்கொண்டிருந்தாலும் இருக்க வேண்டும். இந்த நினைவின் மூலம் அநேக ஆத்மாக்களுக்கு வைப்ரேஷன் கொடுத்துக் கொண்டேயிருங்கள். அப்பொழுது தான் இவர்களின் தொடர்பில் வருவதின் மூலம் அமைதியின் அனுபவம் கிடைப்பதை உணர்வார்கள்.. எனவே இந்த வரதானத்தை நினைவில் வைக்க வேண்டும் - பாபாவிற்கு சமமாக மாஸ்டர் அமைதியின் வள்ளல், சக்தியின் வள்ளல் ஆக வேண்டும். அனைவரும் தைரியசாலிகளாக இருக்கிறீர்கள் அல்லவா. குழப்பத்திலும் கூட வீணான எண்ணங்கள் வருவதில்லை. ஏனெனில் வீணான எண்ணங்கள் இருந்தால் சக்திசாலியாக ஆக விடாது. என்ன ஆகுமோ, இது நடந்து விடக் கூடாது,. இது வீணானதாகும். என்ன நடக்கிறதோ, அதை சக்திசாலியாக இருந்து பாருங்கள், மேலும் மற்றவர்களுக்கும் சக்தியை கொடுங்கள். இது கூட ஒரு சாலை யோர காட்சியாகும் இது ஒரு காட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. ஒரு படம் எனப் புரிந்துக் கொண்டு பார்த்தால் பயப்படமாட்டீர்கள். நல்லது.

 

பிரியா விடைதரும் நேரத்தில் - (அமிர்தவேளை)

 

இந்த சங்கமயுகம் அமிர்தவேளையாக இருக்கிறது. முழு சங்கமயுகமே அமிர்தவேளையாக இருக்கும் காரணத்தினால் இந்த சமயத்திற்கு சதா காலத்திற்கு மகான் தன்மை நிறைந்ததாக பாடப்படுகிறது. எனவே முழு சங்கமயுகமே அதாவது அமிர்தவேளை அதாவது டைமண்ட் மார்னிங் (வைரமான காலை) சதா பாபா குழந்தைகளுடன் இருக்கிறார், மேலும் குழந்தைகள் கூட பாபாவுடன் இருக்கிறார்கள். ஆகையால் எல்லைக்கு அப்பாற்பட்ட டைமண்ட் மார்னிங். பாப்தாதா சதா கூடவே இருக்கிறார், ஆனாலும் கூட வியக்த ரூபத்தில் (சாகார சொருபத்தில்) வியக்த தேசத்தில் (ஸ்தூல உலகத்தில்) கால அளவு படி இன்று கூட அனைத்து குழந்தை களுக்கும் சதா கூடவே இருப்பதற்கான குட்மார்னிங் என்று சொல்லுங்கள், கோல்டன் மார்னிங் என்று சொல்லுங்கள், டைமண்ட் மார்னிங் என்று சொல்லுங்கள், எப்படிவேண்டு மென்றாலும் சொல்லுங்கள் பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் கொடுத்துக் கொண்டியிருக்கிறார். சுயம் கூட டைமண்டாக இருக்கிறோம், காலைபொழுது (சங்கமயுகம்) கூட டைமண்டாக இருக்கிறது, மேலும் கூட டைமண்ட் ஆக்குவதற்காக இருக்கிறது, ஆகையால் சதா துணையாக இருப்பதற்கான குட்மார்னிங். நல்லது.

 

வரதானம்:

ஐந்து தத்துவங்கள் மற்றும் ஐந்து விகாரங்களை தன்னுடைய சேவாதாரியாக மாற்றக்கூடிய மாயாவை வென்ற சுயராஜ்ய அதிகாரி ஆகுக.

 

சத்யுகத்தில் விஷ்வ மகாராஜா மற்றும் விஷ்வ மகாராணியின் இராஜ்ய ஆடைகளை பின் பக்கம் இருந்து தாச-தாஷிகள் (பணிபுரிபவர்கள்) தூக்கிக்கொண்டு செல்வதை போன்று, சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் மாயாஜீத் சுயராஜ்ய அதிகாரி ஆகி பட்டபெயர் என்ற ஆடையின் மூலம் அலங்காரம் செய்து கொள்ளும் பொழுது 5 தத்துவங்கள் மற்றும் 5 விகாரங்கள் உங்களுடைய ஆடையை பின்னால் இருந்து சுமக்கும், அதாவது அடிபணிந்து நடக்கும், இதற்காக திட எண்ணம் என்ற கயிற்றினால் பட்டபெயர் என்ற ஆடையை இறுக்கமாக கட்டிக்கொள்ளுங்கள். விதவிதமான ஆடைகள் மற்றும் அலங்காரத்தின் மூலம் அலங்கரித்துக் கொண்டு பாபாவுடன் இருந்தால், இந்த விகாரம் மற்றும் தத்துவம் மாறி, சகயோகி சேவாதாரியாக மாறிவிடும்.

 

சுலோகன்:

எந்த குணங்களை மற்றும் சக்திகளை வர்ணனை செய்கிறீர்களோ, அதனுடைய அனுபவத்தில் மூழ்கிவிடுங்கள். அனுபவம் தான் மிகப்பெரிய அதிகாரம்.

 

ஓம்சாந்தி