11.10.2020 காலை முரளி ஓம் சாந்தி
அவ்யக்த பாப்தாதா,
ரிவைஸ் மதுபன் 31.03.1986
சர்வ சக்திகளிலும் சம்பன்னமாக
வரதானம் பெறும் வருடம்
இன்று அனைத்து பொக்கிஷங்களின்
மாலிக் தனது மாஸ்டர் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
குழந்தைகள் எந்த அளவிற்கு பாலக் சோ மாலிக் ஆகி உள்ளார்கள்
என்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றார். இந்த சமயத்தில்
யாரொருவர் சிரேஷ்ட ஆத்மாக்கள் சர்வ சக்திகளின் சர்வ
பொக்கிஷங்களுக்கும் மாலிக் ஆகின்றார் றகளோ அவர்கள் அந்த
எஜமானருக்குரிய சம்ஸ்காரங்களால் நாளையும் விஷ்வத்திற்கே எஜமானா
கின்றார்கள் ஆக எதை பார்த்தார்? எல்லோரும் குழந்தைகள் தான்,
பாபாவும் நானும் என்ற ஈடுபாடு அனைவரிடமும் நன்றாகவே உள்ளது.
நான் குழந்தை என்ற எண்ணம் போதை எல்லோரிடமும் உள்ளது. ஆனால்
பாலக் சோமாலிக் அதாவது பாப்சமான் முழுமையாக வேண்டும். ஆக பாலகன்
என்ற மனோ நிலைக்கும் மாலிக் எஜமான் என்ற மனோ நிலைக்கும் இடையே
உள்ள வேறு பாட்டை பார்க்கின்றார். மாலிக் என்பது ஒவ்வொரு
அடியிலும் இயல்பாகவே முழுமைத் தன்மையில் தனக்காகவும்
பிறருக்காகவும் நிரம்பி யிருப்பார்கள். இதனையே மாஸ்டர் அதாவது
பாலக் சோ மாலிக் என சொல்லப்படுகிறது. மாலிக் என்ற உணர்வின்
விசேஷத் தன்மையே என்னவென்றால் எந்த அளவிற்கு நான் எஜமான் என்ற
பெருமிதம் உள்ளதோ அந்த அளவிற்கு விஷ்வ சேவாதாரி என்ற சம்ஸ்காரம்
சதா வெளிப்படும். எந்தளவிற்கு மாலிக் என்ற எண்ணமோ அந்தளவிற்கு
விஷ்வ சேவாதாரி என்ற பெருமிதமும் இருக்கும். இரண்டிலும் சமநிலை
இருக்கும். இதுவே பாப்சமான் மாலிக் ஆவதாகும். பாலக் மற்றும்
மாலிக் இரண்டு சொரூபமும் சதா நடை முறை செயலில் வருகிறதா அல்லது
புரிந்து கொண்டு ஞானம் மட்டும் உள்ளதா? ஆனால் ஞானத்திற்கும்
செயலுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. சில குழந்தைகள் இந்த சம
நிலையில் பாப்சமான் நடைமுறை செயலில் தென்படுகிறார்கள். சிலர்
அவ்வப்போது பாலகன் என்ற நிலையில் இருந்தாலும் மாலிக் என்ற
ஆன்மீக போதையில் பாப்சமான் ஆவதற்கான சக்திசாலி மனோநிலையில் சில
சமயம் இருக்கிறார்கள். சில சமயம் முயற்ச்சியிலேயே நேரம் சென்று
விடுகிறது.
லட்சியம் என்னவோ அனைவர் மனதிலும்
பாப்சமான் ஆகியே தீர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமே உள்ளது.
லட்சியம் சக்திசாலியாக உள்ளது. இப்போது லட்சியத்தை எண்ணம், சொல்,
செயல், சம்மந்தம், உறவுகளில் கொண்டு வர வேண்டும். இதில் தான்
வித்தியாசம் தென்படுகிறது. சிலர் எண்ணம் வரையிலும் சமான்
நிலையில் நிலைத் துள்ளார்கள். சிலர் எண்ணத்துடன் சொல்லளவில்
சில சில சமயமே செயல் வரையிலும் வருகின்றார்கள். ஆனால் சம்மந்தம்,
தொடர்பில், சேவையில், குடும்ப உறவுகளில் வரும் பொழுது சதவீதம்
குறைந்து விடுகிறது. பாப்சமான் ஆவதென்றால் ஒரே நேரத்தில் எண்ணம்,
சொல், செயல், உறவுகள் அனைத்திலும் பாப்சமான் நிலையில்
இருப்பதாகும். சிலர் இரண்டிலும் சிலர் மூன்றிலும் உள்ளார்கள்.
பாபா சொன்ன மாதிரி நான்கிலும் இருப்பது அவ்வப்போது நிலை
மாறுகிறது. பாப்தாதா அனைத்து குழந்தைகள் மீதும் சதா அதிக
சினேகத்துடனே இருக்கின்றார். சினேக சொரூபம் என்பது மானசீகமாகவோ,
மனித ரூபத்திலோ சந்திருப்பது மட்டுமல்ல. ஆனால் சினேக
சொரூபத்தில் சமநிலை பெறுவதாகும். சிலர் நினைக்கின்றார்கள்
பாப்தாதா நம்மை பற்றற்றவராக மாற்றுகின்றார் என்று,. ஆனால் இது
பற்றற்ற (நிர்மோஹி) நிலை அவ்ல. இ,துவே விசேஷமான அன்பின் சொரூபம்
ஆகும்.
பாப்தாதா முன்பே சொல்லிவிட்டார் வெகுகாலத்திற்கான பிராப்திகளை
அடைவ தற்கான நேரம் குறைவாகவே உள்ளது. ஆகவே பாப்தாதா
குழந்தைகளுக்கு சதா நீண்ட காலத்திற்காக உறுதித்தன்மையெனும்
தபஸ்யா மூலம் தன்னை உறுதிப்படுத்துவதற்காக
பரிபக்குவமாக்குவதற்காக விசேஷ நேரம் கொடுத்துள்ளார்.
கோல்டன்ஜீப்லி கொண்டாடும் பொழுதே அனைவரும் சமான நிலை பெறுவோம்,
விக்ன வினாசக் ஆவோம், சமாதான சொரூபம் ஆவோம் என்றெல்லாம்
சங்கல்பம் வைத்தீர்கள். இந்த அனைத்து வாக்குறுதிக் கும்
பாபாவிடம் சித்திரகுப்தன் வடிவத்தில் கணக்கு பதிவேட்டில்
பதிவாகியுள்ளது. இன்னும் கூட அனேக குழந்தைகள் திட சங்கல்பம்
செய்தார்கள். சமர்ப்பணம் ஆவது என்றாலே சர்வ பிராப்திகளும்
பரிபக்குவம் ஆவதாகும். சமர்ப்பணம் அர்த்தமே எண்ணம், சொல்,
செயல், சம்மந்தம் இந்த நான்கிலும் பாப்சமான் ஆவதாகும். நீங்கள்
எழுதிக் கொடுத்த கடிதம் எண்ணம் யாவும் சூட்சும வதனத்தில்
பாப்தாதாவிடம் பதிவேட்டில் உள்ளது. அனைவருடைய ஃபைலும்
(கோப்புகள்) அங்கு வதனத்தில் உள்ளது. ஒவ்வொருவருடைய எண்ணமும்
அவினாசியாகி விட்டது.
இந்த ஆண்டு குழந்தைகளின் உறுதியெனும் தபஸ்யா மூலம் ஒவ்வொரு
எண்ணத் தையும் அமரத்துவம் மற்றும் அவினாசியாக்குவதற்காக
தன்னிடமே மீண்டும் மீண்டும் உறுதித்தன்மையின் மூலம் ஆன்மீக
உரையாடல் செய்வதற்காக, உணரச் செய்வதற்காக அவதாரமாகி கர்மத்தில்
ஈடுபட சதா காலத்திற்காக உறுதியாக்க பாப்தாதா இன்னும் நேரம்
தருகின்றார். அதோடு மட்டுமல்லாமல் விசேஷமாக சுத்த
சங்கல்பங்களின் சக்தியை சேமிக்க வும் அதிகரிக்கவும் வேண்டும்.
சுத்த சங்கல்ப சக்தி மற்றும் அந்தர்முகி (அகநோக்கு) பயிற்சி
அனுபவம் செய்வது அவசியமாகும். சுத்த சங்கல்பங்களின் சக்தி
சுலபமாகவே வீண் எண்ணங்களை அழித்து பிறருக்காக சுபபாவனை சுப
காமனாவாக மாற்றம் செய்கிறது. இப்போது இந்த சுத்த சங்கல்ப
சக்தியின் அனுபவம் சுலப மாகவே வீண் எண்ணங்களை அழித்துவிடும்.
தனது வீண் எண்ணத்தை மட்டுமல்லாமல் பிறருக்கும் வீணானதை மாற்றி
விடும்.
இந்த சுத்த சங்கல்ப சக்தியை ஸ்டாக் வைப்பது அவசியமாகும்.
முரளியை மிக பிரியமாக கேட்பது நல்லது தான். முரளி என்றாலே
கஜானா, முரளியின் ஒவ்வொரு கருத்தையும் சக்தி ரூபமாக சேமிக்க
வேண்டும் இப்போது இதன் மீது மிக முக்கிய கவனம் தர வேண்டும்.
இதுவே சுத்த சங்கல்ப சக்தியை சேமிப்பதாகும். சக்தியின்
வடிவத்தில் ஒவ்வொரு நேரமும் காரியத்தில் பயன்படுத்தவும்.
இப்போது இதன் மீது விசேஷ கவனம் வையுங்கள். சுத்த சங்கல்ப
சக்தியின் மகத்துவத்தை இப்போது எந்தள விற்கு அனுபவம் செய்து
கொண்டே செல்வீர்களோ அந்தளவு மன சேவைக்கான அனுபவமும் சுலபமாக
ஆகும். முதலில் தனக்காக சுத்த சங்கல்ப சக்தி சேமிப்பாக
வேண்டும். பிறகு நீங்கள் அனைவரும் பாபாவுடன் விஷ்வ கல்யாணகாரி
உலக மாற்றத்திற்கு நிமித்த ஆத்மாக்கள் இப்போது உலகிற்காக சுத்த
சங்கல்பத்தால் மாற்றத்திற்க்கான செயல் மீதமுள்ளது. இப்போது
பிரம்மா பாபா அவ்யக்த ரூபத்தில் சுத்த சங்கல்பத்தினால் சக்தி
வாய்ந்ததாக பாலனை செய்து கொண்டிருக்கின்றார். பிரம்மா பாபாவைப்
போல குழந்தைகளும் விசேஷமாக தன்னை மேன்மை செய்வதில் பயிற்சி
செய்ய வேண்டும். தபஸ்யா என்பது உறுதியுடன் கலந்த முழுமைக்கும்
செய்யும் பயிற்சியாகும்.. சாதாரணத்தன்மையை தபஸ்யா என்று
சொல்வதில்லை. இப்போது தபஸ்யாவிற்காக நேரம் தரப்படுகிறது.
இப்போதே ஏன் தரப்படுகிறது? ஏனெனில் இப்போது செய்யும் முயற்சி
வெகு நீண்ட காலத்திற்காக சேமிப்பாகிவிடும் பாப்தாதா
அனைவருக்கும் நீண்ட காலத்திற்கான பிராப்தி தருவதில் நிமித்தமாக
உள்ளார். பாப்தாதா அனைத்து குழந்தைகளையும் நீண்ட கால இராஜ்ய
பாக்கியத்தின் அதிகாரியாக வேண்டும் என்று விரும்புகின்றார்.
நேரம் குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு பயிற்சியையும் தபஸ்யா
ரூபத்தில் செய்வதற்காக விசேஷமான நேரம் தரப்படுகிறது. ஏனெனில்
இனி வரும் காலத்தில் நீங்கள் அனைவரும் வரம் வழங்கும் வள்ளலாகி
குறைந்த நேரத்தில் அனேகருக்கு தர வேண்டும். ஆகவே அனைத்து
பொக்கிஷங்களில் சேமிப்பு கணக்காக முழுமையாக சேமிக்க நேரம்
தரப்படுகிறது.
இரண்டாவது - விக்ன வினாசக் மற்றும் சமாதான சொரூபமாவதற்காக
உறுதிமொழி செய்தீர்கள் தனக்கும் பிறருக்கும் விக்ன வினாசகர்
ஆவதில் திடமான சொரூபம் உள்ளதா? எண்ணத்தில் மட்டுமல்லாமல்
சொரூபத் திலும் வேண்டும். இந்த ஆண்டு பாப்தாதா அதிகப் படியாகவே
வாய்ப்பு தருகிறார். யாரெல்லாம் விக்ன வினாசக் என்ற பாக்யம்
பெற விரும்பு வீர்களோ அவர்களுக்கு இந்த ஆண்டு விசேஷ வரதானமாக
தரப்படுகிறது. யாருக்கு விக்ன வினாசக் ஆவதற்கு விசேஷ பாக்யம்
பெற வேண்டுமோ அவர்கள் இந்த ஆண்டு பெற முடியும். இந்த
ஆண்டிற்காக விசேஷ வரதானம் உள்ளது, வரதானம் பெற விசேஷமாக இரண்டு
விசயத்தில் கவனம் தர வேண்டும். சதா பாப்சமான் தருபவர்கள்,
பெறும் எண்ணம் இல்லாதவர்கள். மதிப்பு கிடைத்தால் அன்பு
கிடைத்தால் அன்பு கொடுப்போம் மரியாதை தருவோம் என்ற பாவனை
கூடாது. உயர்ந்த செயலின் பலன் உயர்வாகவே இருக்கும். இந்த ஞானம்
உங்களுக்குத் தெரியும் ஆனால் செய்யும்பொழுது இந்த பாவனை
கூடாது. வரதானம் பெற பாத்திரமாக சதா தாதா வள்ளல் ஆகி இருங்கள்,
விக்ன வினாசக் ஆகுங்கள். அதற்காக எதிர்கொள்ளும் சக்தியின் மீது
கவனம் தர வேண்டும். தனக்காகவும் எதிர் கொள்ளும் சக்தி தேவை.
கடலின் குழந்தைகள் கடலின் விசேஷ குணமே உள்ளடக்கிக்
கொள்வதாகும். யாரிடம் உள்ளடக்கும் சக்தியிருக்குமோ அவரே சுப
பாவனை, நன்மை செய்யும் விருப்பம் வைக்க முடியும். ஆகவே வள்ளல்
ஆகுக, உள்ளடக்கும் சக்தியின் சொரூபத்தில் கடல் ஆகுக! இவ்விரு
விசேஷ குணங்களையும் சதா செயல் வடிவத்தில் கொண்டுவாருங்கள்.
சிலர் சொல்வார்கள் நினைத்தேன் இப்படித்தான் செய்ய வேண்டும்
என்று ஆனால் செய்யும்பொழுது மாறிவிட்டது,. இந்த ஆண்டு நான்கு
விசயங்களிலும் ஒரே நேரத்தில் சமநிலைக்கான விசேஷ பயிற்சி
செய்யவும். புரிந்ததா? ஒன்று கஜானாக்கள் சேமிப்பதற்காக
வள்ளலாகி வழங்கும் சம்ஸ்காரத்தை இயல்பாக தாரணை செய்வதற்காக
நேரம் தரப்படுகிறது. விக்ன வினாசக் ஆவது, ஆக்குவது இதில் சதா
காலத்திற்கும் தனது நம்பரை நிச்சயம் செய்து கொள்ள வாய்ப்பு
தருகிறார். எது நடந்தாலும் தான் முதலில் தபஸ்யா செய்க
பிறருக்கும் தடையை நீக்க சகயோகி ஆகுக. அதற்காக எவ்வளவு தான்
குனிய நேரிட்டாலும் சரி, இந்த குனிவது என்பது சதா காலமும்
ஊஞ்சலில் ஆடுவதாகும். ஸ்ரீகிருஷ்ணரை எவ்வளவு அன்பாக ஊஞ்சலில்
ஆட்டுகிறார்கள். ஞான இரத்தினங்களால் ஆன ஊஞ்சல் ஆட்டுவீர்கள்
பிறகு பக்தியில் பூஜைக்குரியவராக உஞ்சலில் ஆட்டுவீர்கள்.
இப்படி தலைகுனிவது என்பது மகான் தன்மையாகும். நான் ஏன் வணங்க
வேண்டும், இவர் வணங்கட்டுமே, இதில் தன்னை குறைவாக
நினைக்காதீர்கள் இப்படி வணங்குவது மகான் தன்மையாகும். இப்படி
இறப்பது இறப்பதல்ல. அழிவற்ற பிராப்திகளில் வாழ்வதாகும். ஆகவே
விக்னவினாசக் ஆகுங்கள், ஆக்குங்கள். இதில் முதல்
வரவிரும்புபவர்கள் வாய்ப்பு களை பெறலாம். இது விசேஷமாக
வாய்ப்பு பெறும் நேரம் பாப்தாதா மகிமையை புரிய வைக்கின்றார்.
ஆகவே நேரத்தின் மதிப்பை புரிந்து கொண்டு தபஸ்யா செய்யுங்கள்.
மூன்றாவது - சமயத்திற்கேற்ப எந்த அளவு வாயு மண்டலம்
அமைதியிழந்து ஆரவாரத்துடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறதோ
அதற்கேற்ப புத்தி லைன் மிகத் தெளிவாக இருக்கவேண்டும். ஏனெனில்
நேரத்திற்கேற்ப டச்சிங், கேச்சிங் இந்த இரு சக்திகளும்
அவசியமாகும். ஒன்று பாப்தாதாவின் அறிவுரையை புத்தி மூலமாக
புரிந்து கொள்ள வேண்டும். மாறாக புத்தி லைன் தெளிவில்லாதபோது
பாபாவின் அறிவுரையுடன் தன் மன வழியில் கருத்துக்கள் கலந்து
விடுகிறது. அப்படி கலப்படம் ஏற்படும்போது தக்க சமயத்தில்
ஏமாற்றம் அடைய நேரிடும் புத்தி எந்த அளவிற்கு தெளிவாக
இருக்குமோ அந்தளவிற்கே பாபாவின் அறிவுரைகளை தெளிவாக புரிந்து
கொள்ள முடியும். மேலும் புத்தி எந்த அளவு தெளிவாக இருக்குமோ
அந்தளவு சுய முன்னேற்றம் சேவையில் முன்னேற்றம் மேலும் அனேக
ஆத்மாக்களுக்கு வள்ளலாகி வழங்கும் சக்தியும் சுலபமாகவே வளரும்.
இந்த சமயத்தில் இந்த ஆத்மாவிற்கு சகஜசேவைக்கான சாதனம் மற்றும்
சுய முன்னேற்றத்திற்கான சாதனம் இதுவே ஆகும்.
நிகழ்காலத்தில் இந்த இரு
சக்திகளும் அவசியமாகும். இதனை அதிகரிக்க ஏக்னாமி, எக்கனாமி
ஆகுக! ஒரு பாபா தவிர வேறு யாருமில்லை. ஈர்ப்பு என்பது மற்றொன்று,
அது தவறு தான் ஆனால் பிறரின் சுபாவம் நம்மை மனதளவில்
அலைகழிக்கச் செய்கிறது. புத்தியை தாக்குகிறது, அப்போது
புத்தியில் தாக்கம் ஏற்படுகிறது. அப்போது பாபாவா சம்ஸ்காரமா
என்ற நிலை? எந்த வகையில் புத்தி ஆக்கிரமிக்கப்பட்டாலும்
புத்தியின் லைன் சதா தெளிவாக இருக்க வேண்டும். இதுவே ஒரு பாபா
தவிர வேறுயாருமில்லை என்பதாகும். இதுவே ஏக்னாமி, எகானமி ஆகும்.
ஸ்தூலமான பணத்தை மட்டும் சிக்கனமாக செலவு செய்வது கிடையாது.
சமயம், சங்கல்பம், சக்திகள் எதுவுமே வீணாகாமல் சேமிக்க வேண்டும்.
சிக்கனம் என்பது சேமிப்பை அபிவிருத்தி செய்வதாகும். ஏக்னாமி,
எகானமி இருந்தால் தந்தையின் அறிவுரையை டச்சிங், கேச்சிங் செய்ய
முடியும். இதனை வினாச நேரத்தில் செய்ய முடியாது.
இப்போதிலிருந்தே நீண்ட கால பயிற்சி செய்தாக வேண்டும். அப்போது
தான் இறதி காலத்தில் நல்ல உயர் நிலை அடைய முடியும். வினாசத்
திற்கு இனி 10 ஆண்டுகள் இருப்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள் 10
ஆண்டுக் கழித்து இந்த முயற்சி செய்ய முடியாது. எவ்வளவு
முயன்றாலும் முடியாது. பலவீனம் அடைவீர்கள். முடிவு யுத்தத்தில்
தான் முடியும். வெற்றி பெற இயலாது. திரேதாயுகத்திலும் வர இயலாது.
முயற்சி என்பது கூரிய அம்பாகும். சதா அன்பாக, குஷியாக இருப்பது
முரளீதர் ஆவது, சூர்யவம்சி ஆவதாகும். முரளி ஆட வைக்கிறது கூரிய
அம்பு சேருமிடத்தை குறியட வைக்கிறது. ஆகவே அம்பெய்துபவர் அல்ல
குழல் இசைப்பவராகுக, பின்னால் வருபவர் கள் இன்னும் சிறிது நேரம்
இருந்தால் நன்றாக இருக்கும் என புகார் செய்ய கூடாது. வாய்ப்பு
வழங்குங்கள், தயவு காட்டுங்கள், எனவே தான் முன்பிருந்தே
சொல்லிக் கொண்டிருக்கின்றார். முன்னால் வந்தாலும் பின்னால்
வந்தாலும் இது எல்லோருக்கும் இறுதி நிலையை அடையும் நேரமாகும்.
ஆகவே அதற்கேற்ப வேகமாக செல்ல வேண்டும் புரிந்ததா ! நல்லது.
வரதானம் :
5 விகாரமெனும் எதிரிகளை மாற்றி சகயோகியாக்கி மாயாஜீத் ஜகத் ஜீத்
ஆகுக !
வெற்றி, எதிரியின் ரூபத்தை
மாற்றுகிறது. விகாரமெனும் எதிரியை மாற்றி சகயோகி ரூபமாக்கி
விடுஙகள் என்றும் உங்களுக்கு வணக்கம் செலுத்தி கொண்டேயிருக்கும்.
காம விகாரத்தை சுபகாமனாவாக, கோபத்தை ஆன்மீக மகிழ்ச்சியாக,
லோபத்தை ஆசைகளற்ற ரீதியில், மோகத்தை சினேகமாக தேகாபிமானத்தை
சுப அபிமானமாக (ஆத்மாபிமானம்) மாற்றி விட்டால் மாயையினையும்,
உலகையும் வென்றவர் ஆவீர்கள்.
சுலோகன் :
சுத்த தங்கத்தில் எனது என்பது
அழுக்கை சேர்க்கும், மதிப்பை குறைக்கும் எனவே எனது என்பதை
அழித்து விடுங்கள்.
ஓம்சாந்தி