10.10.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள்
யாருக்காவது ஒரு விசயத்தைப் புரிய வைக்கிறீர்கள் அல்லது
சொற்பொழிவு செய்கிறீர்கள் என்றால் பாபா-பாபா என்று சொல்லிப்
புரிய வையுங்கள். பாபாவை மகிமை செய்யுங்கள். அப்போது புத்தியில்
அம்பு போல் பதியும்.
கேள்வி :
பாபா,
பாரதவாசிக்
குழந்தைகளிடம்
விசேஷமாக
எந்த
ஒரு
கேள்வியைக்
கேட்கிறார்?
பதில்:
பாரதவாசிக் குழந்தைகளாகிய
நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர்களாக இருந்தவர்கள், சர்வகுண
சம்பன்னம், 16 கலை சம்பூர்ண தேவதைகளாக இருந்தவர்கள்,
பவித்திரமாக இருந்தவர்கள், காமக் கோடாரி செலுத்தாதவர்கள்,
மிகுந்த செல்வந்தர்களாக இருந்தவர்கள். பிறகு நீங்கள் இந்த
அளவுக்கு திவாலாகி விட்டதற்கான காரணம் என்ன, தெரியுமா?
குழந்தைகளே, நீங்கள் அடிமைகளாக எப்படி ஆனீர்கள்? இவ்வளவு
செல்வங் கள் அனைத்தையும் எங்கே தொலைத்தீர்கள்? சிந்தனை செய்து
பாருங்கள், நீங்கள் தூய்மையாக இருந்து தூய்மை இழந்தவர்களாக
எப்படி ஆனீர்கள்? குழந்தைகளாகிய நீங்களும் கூட இப்படி-இப்படி
விசயங்களை பாபா-பாபா எனச் சொல்லியவாறு மற்றவர்களுக்குப் புரிய
வையுங்கள். அப்போது சகஜமாகப் புரிந்து கொள்வார்கள்.
ஓம் சாந்தி.
ஓம் சாந்தி எனச் சொல்வதன் மூலம்
கூட பாபா கண்டிப்பாக நினைவு வர வேண்டும். பாபாவின் முதன்மையான
சொல் மன்மனாபவ. நிச்சயமாக இதற்கு முன்பும் சொல்லியிருக்கிறார்.
அதனால் தான் இப்போதும் சொல்கிறார் இல்லையா? குழந்தைகள் நீங்கள்
பாபாவை அறிவீர்கள். எப்போது ஏதாவது சபையில் சொற்பொழிவாற்றச்
செல்கிறீர்களோ, அந்த மனிதர்களுக்கோ தந்தையைப் பற்றித் தெரியாது.
ஆக, அவர் களுக்கும் இவ்வாறு சொல்ல வேண்டும்- அதாவது சிவபாபா
சொல்கிறார், அவர் தான் தூய்மை ஆக்குபவர். நிச்சயமாக
தூய்மையாக்குவதற்காக இங்கே வந்து புரிய வைக்கிறார். எப்படி பாபா
இங்கே உங்களுக்குச் சொல்கிறார் - ஹே குழந்தைகளே, உங்களை
சொர்க்கத் தின் எஜமானர்களாக ஆக்கியிருந்தேன். நீங்கள் ஆதி
சனாதன தேவி-தேவதா தர்மத்தினராக உலகின் எஜமானர்களாக இருந்தீர்கள்.
அதுபோல் நீங்களும் சொல்ல வேண்டும், அதாவது பாபா இவ்வாறு
சொல்கிறார் என்று. இதுபோல் யாருடைய சொற்பொழிவு பற்றிய தகவலும்
வரவில்லை. சிவபாபா சொல்கிறார், என்னை நீங்கள் உயர்ந்தவரிலும்
உயர்ந்தவர் என ஏற்றுக் கொள்கிறீர்கள், தூய்மையாக்குவர் (பதீத-பாவனர்)
என்றும் ஏற்றுக் கொண்டிருக் கிறீர்கள். நான் வரவும் செய்கிறேன்,
பாரதத்தில். மேலும் இராஜயோகம் கற்றுத் தருவதற்காக வருகிறேன்
எனவே தான். நான் சொல்கிறேன், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்,
உயர்ந்த தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். ஏனென்றால் அவர்
கொடுக்கக் கூடிய வள்ளல். நிச்சயமாக பாரதத்தில் நீங்கள்
உலகத்தின் எஜமானர்களாக இருந்தீர்கள் இல்லையா? வேறு எந்த ஒரு
தர்மமும் அப்போது இல்லை. தந்தை குழந்தைகளாகிய நமக்குப் புரிய
வைக்கிறார். நாங்கள் பிறகு உங்களுக்குச் சொல்கிறோம். பாபா
சொல்கிறார், பாரதவாசிகளாகிய நீங்கள் எவ்வளவு பெரிய
செல்வந்தர்களாக இருந்தீர்கள்! சர்வகுண சம்பன்னம், 16 கலை
சம்பூர்ண தேவதா தர்மம் இருந்தது. நீங்கள் தூய்மையானவர்களாக
இருந்தீர்கள். காமக் கோடாரி செலுத்தியதில்லை. பெரும்
செல்வந்தர்களாக இருந்தீர்கள். பிறகு பாபா கேட்கிறார், நீங்கள்
இந்த அளவு திவாலாக எப்படி ஆனீர்கள்? காரணம் தெரியுமா? நீங்கள்
உலகத்தின் எஜமானர்களாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் உலகத்தின்
அடிமையாக ஏன் ஆனீர்கள்? அனைவரிடமும் கடன் பெற்றுக் கொண்டே
இருக்கிறீர்கள். அவ்வளவு பணமும் எங்கே சென்றது? எப்படி பாபா
சொற்பொழிவு செய்து கொண்டிருக் கிறாரோ, அதுபோல் நீங்களும்
சொற்பொழிவு செய்வீர்களானால் அநேகருக்குக் கவர்ச்சி ஏற்படும்.
நீங்கள் பாபாவை நினைவு செய்வதில்லை என்றால் யாருக்கும் நீங்கள்
சொல்வது புத்தியில் பதியாது. அந்த சக்தி கிடைப்பதில்லை.
இல்லையென்றால் உங்களுடைய ஒரு சொற்பொழிவை இதுபோல்
கேட்பார்களானால் அற்புதம் நிகழும். சிவபாபா புரிய வைக்கிறார்,
பகவானோ ஒருவர் தான். அவர் துக்கத்தைப் போக்கி சுகமளிப்பவர்,
புது உலகை ஸ்தாபனை செய்பவர். இதே பாரதத்தில் சொர்க்கம் இருந்தது.
வைரம்-வைடூரியங்களின் மாளிகைகள் இருந்தன. ஒரே இராஜ்யம் இருந்தது.
அனைவரும் இனிமையானவர்களாக இருந்தனர். எப்படி பாபாவின் மகிமை
அளவற்றதோ, அதுபோல் பாரதத்தின் மகிமையும் அளவற்றது. பாரதத்தின்
மகிமையைக் கேட்டு மகிழ்ச்சி அடைவார்கள். பாபா குழந்தை களிடம்
கேட்கிறார் - இவ்வளவு செல்வங்கள் அனைத்தையும் எங்கே
தொலைத்தீர்கள்? பக்தி மார்க்கத்தில் நீங்கள் எவ்வளவு செலவு
செய்து வந்திருக்கிறீர்கள்! எவ்வளவு கோவில் களைக் கட்டினீர்கள்!
பாபா சொல்கிறார், சிந்தனை செய்யுங்கள் - நீங்கள்
தூய்மையிலிருந்து தூய்மையற்றவர்களாக எப்படி ஆனீர்கள்? சொல்லவும்
செய்கிறீர்கள், பாபா, துக்கத்தில் உங்களை நினைக்கிறோம்,
சுகத்தில் நினைப்பதில்லை. ஆனால் உங்களை துக்கம் நிறைந்தவர்களாக
ஆக்குபவர் யார்? அடிக்கடி பாபாவின் பெயரைச் சொல்கிறீர்கள்.
நீங்கள் பாபாவின் செய்தியைக் கொடுக்கிறீர்கள். பாபா சொல்கிறார்
- நானோ சிவாலயமாகிய சொர்க்கத்தை ஸ்தாபனை செய்தேன்.
சொர்க்கத்தில் இந்த லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது
இல்லையா? நீங்கள் இதையும் மறந்து விட்டீர்கள். உங்களுக்கு
இதுவும் தெரியாது, அதாவது ராதை-கிருஷ்ணர் தான்
சுயம்வரத்திற்குப் பின் லட்சுமி-நாராயணராக ஆகின்றனர். உலகின்
அதிபதியாக இருந்த கிருஷ்ணர் மீது களங்கம் சுமத்துகிறீர்கள்.
நான் உங்களுக்கு சத்கதி அளிக்கும் வள்ளல். நீங்கள் என்னை நாய்,
பூனை மற்றும் அணு-அணுவிலும் இருப்பதாகச் சொல்கிறீர்கள். பாபா
சொல்கிறார், அனைவருக்கும் சத்கதி அளிப்பவர், பதித-பாவனர் நான்.
நீங்கள் பிறகு பதீத-பாவனி கங்கை எனச் சொல்லி விடுகிறீர்கள்.
என்னிடம் யோகம் (தொடர்பு) வைக்காத காரணத்தால் மேலும் பதித் ஆகி
விட்டிருக்கிறீர்கள். என்னை நினைவு செய்வீர்களானால் உங்கள்
விகர்மங்கள் விநாசமாகும். அடிக்கடி பாபாவின் பெயரைச் சொல்லிப்
புரிய வைப்பீர்களானால் சிவபாபாவின் நினைவு இருக்கும்.
சொல்லுங்கள், நாங்கள் பாபாவுக்கு மகிமை செய்கிறோம், பாபாவே
சொல்கிறார், எப்படி சாதாரண, தூய்மையற்ற (பதீத்) சரீரத்தில்
அநேகப் பிறவிகளின் கடைசியில் வருகிறேன். இவருக்குத் தான் அதிகப்
பிறவிகள். இவர் இப்போது என்னுடையவராக ஆகி இருக்கிறார் என்றால்
இந்த ரதத்தின் மூலம் உங்களுக்குப் புரிய வைக்கிறேன். இவர்
தம்முடைய பிறவிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. பாக்கியசாலிரதம்
இவர் தான். இவருடைய வானப்ரஸ்த நிலையில் தான் நான் வருகிறேன்.
சிவபாபா இதுபோல் புரிய வைக்கிறார். இது போன்ற சொற்பொழிவை யாரும்
பேசிக் கேட்கவில்லை. பாபாவின் பெயரையே சொல்வதில்லை. நாள்
முழுவதும் பாபாவை நினைவு செய்வதே இல்லை. மற்றவர்களைப் பற்றிய
வேண்டாத விஷயங்களைப் பேசுவதிலேயே ஈடுபட்டுள்ளனர். மேலும்
எழுதுகின்றனர், நாங்கள் இதுபோல் சொற்பொழிவு செய்தோம், நாங்கள்
இதைப் புரிய வைத்தோம் என்று. பாபா புரிந்து கொள்கிறார், இப்போதோ
நீங்கள் எறும்புகளாகவே இருக்கிறீர்கள். சிறு பூச்சியாகக் கூட
ஆகவில்லை. ஆனால் அகங்காரம் மட்டும் எவ்வளவு இருக்கிறது! சிவபாபா
பிரம்மா மூலம் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.
சிவபாபாவை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். பிரம்மா மீது
கோபப்பட்டு விடுகின்றனர். பாபா சொல்கிறார் - நீங்கள் என்னையே
நினைவு செய்யுங்கள். உங்களுடைய வேலை என்னோடு தான். என்னை நினைவு
செய்கிறீர்கள் இல்லையா? ஆனால் உங்களுக்கும் கூட தெரியவில்லை -
தந்தை என்ன பொருளாக இருக்கிறார், எப்போது வருகிறார்? என்று
குருமார் உங்களுக்குச் சொல் கின்றனர், கல்பம் லட்சக் கணக்கான
வருடங்களினுடையது என்று. ஆனால் பாபா சொல் கிறார், கல்பம் 5000
வருடங்களினுடையது தான் என்று. பழைய உலகமாக இருப்பது தான் பிறகு
புதியதாக ஆகும். இப்போது புது டில்லி எங்கே உள்ளது? டில்லியோ
எப்போது தேவதைகளின் வசிப்பிடமாக இருக்குமோ, அப்போது புது டில்லி
எனச் சொல்வார்கள். புது உலகத்தில் புது டில்லி யமுனையின்
கரையில் இருந்தது. அதன் மீது லட்சுமி- நாராயணரின் மாளிகை
இருந்தது. அது தேவதைகளின் உலகமாக இருந்தது. இப்போது சுடுகாடாக
ஆகப் போகிறது. அனைவரும் புதைக்கப்பட வேண்டிய பிணங்களாக ஆகப்
போகின்றனர். அதனால் பாபா சொல்கிறார் - உயர்ந்தவரிலும் உயர்ந்த
தந்தையாகிய என்னை நினைவு செய்வீர்களானால் தூய்மையானவர்களாக
ஆவீர்கள். எப்போதும் இதுபோல் பாபா-பாபா எனச் சொல்லிப் புரிய
வையுங்கள். பாபாவின் பெயர் சொல்வதில்லை, அதனால் நீங்கள் சொல்வதை
யாரும் கேட்பதில்லை. பாபாவின் நினைவு இல்லாததால் உங்களுக்குள்
அந்தக் கூர்மை நிரம்பு வதில்லை. தேக அபிமானத்தில் நீங்கள் வந்து
விடுகிறீர்கள். பந்தனத்தில் உள்ள மாதாக்கள் அடி வாங்குகிறார்கள்
என்றால் அவர்கள் உங்களைக் காட்டிலும் அதிகமாக நினைவில்
இருக்கிறார்கள். பாபாவை எவ்வளவு அழைக்கிறார்கள்! பாபா
சொல்கிறார், நீங்கள் அனைவரும் திரௌபதிகள் இல்லையா? இப்போது
உங்களை மானபங்கம் அடைவதில் இருந்து பாதுகாக்கிறார்.
மாதர்களிலும் அதுபோல் யாராவது இருக்கிறார்கள். அவர்களுக்குக்
கல்பத்திற்கு முன்பும் கூட பூத்னா போன்ற பெயர்களைக்
கொடுத்துள்ளனர். நீங்கள் மறந்து விட்டீர்கள்.
பாபா சொல்கிறார், பாரதம் சிவாலயமாக இருந்த போது அது சொர்க்கம்
எனச் சொல்லப் பட்டது. இங்கே பிறகு யாரிடம் மாளிகை, விமானம்
முதலியன உள்ளனவோ, அவர்கள் தாங்கள் சொர்க்கத்தில் இருப்பதாக
நினைக்கின்றனர். எவ்வளவு மூடமதியினராக உள்ளனர்! ஒவ்வொரு
விசயத்திலும் பாபா சொல்கிறார் எனச் சொல்லுங்கள். இந்த
ஹடயோகிகள் உங்களுக்கு முக்தி தர இயலாது. அனைவருக்கும் சத்கதி
அளிக்கும் வள்ளல் ஒருவர் எனும்போது பிறகு ஏன் குரு வைத்துக்
கொள்கிறீர்கள்? நீங்கள் சந்நியாசி ஆக வேண்டுமா, அல்லது
ஹடயோகத்தைக் கற்றுக் கொண்டு பிரம்மத்தில் ஐக்கியமாக வேண்டுமா?
ஐக்கியமாக யாராலும் இயலாது. அனைவரும் பார்ட்டை நடித்தாக
வேண்டும். நடிகர்கள் அனைவரும் அழியாதவர்கள். இது அநாதி அவிநாசி
டிராமா. மோட்சம் என்பது யாருக்குமே கிடைக்க முடியாது. பாபா
சொல்கிறார், நான் இந்த சாதுக்களையும் கூட விடுவிப்பதற்காக
வருகிறேன். பிறகு பதித-பாவனியாக கங்கை எப்படி இருக்க முடியும்?
பதித-பாவனர் என்று நீங்கள் என்னைச் சொல்கிறீர்கள் இல்லையா?
உங்களுக்கு என் மீது வைத்த யோகம் (நினைவு) துண்டிக்கப்பட்டதால்
இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது மீண்டும் என் மீது யோகம்
வைப்பீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். முக்திதாமத்தில்
புனிதமான ஆத்மாக்கள் உள்ளனர். இப்போதோ முழு உலகமுமே
தூய்மையற்று உள்ளது. தூய்மையான உலகம் பற்றி உங்களுக்குத்
தெரியவே தெரியாது. நீங்கள் அனைவரும் பூஜாரிகள், பூஜைக்
குரியவர் ஒருவர் கூடக் கிடையாது. நீங்கள் பாபாவின் பெயரைச்
சொல்லி அனைவரையும் விழிப்படையச் செய்ய முடியும். உலகின்
அதிபதியாக ஆக்குகின்ற பாபாவை நீங்கள் நிந்தனை செய்கிறீர்கள்.
ஸ்ரீகிருஷ்ணர் சிறிய குழந்தை, சர்வகுண சம்பன்னமானவர். அவர்
எப்படி இதுபோன்ற வேலையைச் செய்வார்? மேலும் கிருஷ்ணர்
அனைவருக்கும் தந்தையாக எப்படி ஆக முடியும்? பகவானோ ஒருவர் தான்
இல்லையா? எது வரை எனது ஸ்ரீமத் படி நடக்கவில்லையோ, அப்போது
ஆத்மாவின் கறை எப்படி நீங்கும்? நீங்கள் அனைவருக்கும் பூஜை
செய்து கொண்டே இருக்கிறீர்கள் என்ற போதிலும் என்ன நிலைமை ஆகி
விட்டிருக்கிறது! அதனால் மீண்டும் நான் வர வேண்டியுள்ளது.
நீங்கள் எந்த அளவுக்கு தர்மத்திலும் கர்மத்திலும் தாழ்ந்த
வர்களாக ஆகி விட்டிருக்கிறீர்கள்! ஹிந்து தர்மத்தை யார்
எப்போது ஸ்தாபனை செய்தார், சொல்லுங்கள். இதுபோல் நல்ல சவால்
விட்டு சொற்பொழிவு செய்யுங்கள். உங்களுக்கு அடிக்கடி தந்தையின்
நினைவே வருவதில்லை. எங்களுக்குள் பாபாவே வந்து சொற்பொழிவு
செய்தது போல் இருந்தது என்று அவ்வப்போது யாராவது
எழுதுகின்றனர். பாபா மிகவும் உதவி செய்து கொண்டே இருக்கிறார்.
நீங்கள் நினைவு யாத்திரையில் இருப்பதில்லை. அதனால் எறும்பு போல
மெதுவாக சேவை செய்கிறீர்கள். பாபாவின் பெயரைச் சொல்லுங்கள்.
அப்போது தான் நீங்கள் சொல்வது யாருக்காவது புத்தியில் பதியும்.
பாபா புரிய வைக்கிறார் - குழந்தைகளே, நீங்கள் தான் ஆல்ரவுண்ட்
84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றியிருக்கிறீர்கள் என்பதால்
நீங்கள் தான் வந்து புரிய வைக்க வேண்டும். நான் பாரதத்தில்
தான் வருகிறேன். யார் பூஜைக்குரியவர்களாக இருந்தார்களோ,
அவர்கள் பூஜாரி ஆகிறார்கள். நானோ பூஜைக்குரிய மற்றும்
பூஜாரியாக ஆவதில்லை.
பாபா சொல்கிறார், பாபா
சொல்கிறார் என்று அழுத்தம் தர வேண்டும். நீங்கள் எப்போது
இவ்வாறு சொற்பொழிவு செய்வீர்களோ, எப்போது நான் அதைக் கேட்கிறேனோ,
அப்போது புரிந்து கொள்வேன், நீங்கள் எறும்பிலிருந்து (பறக்கும்)
பூச்சியாக ஆகியிருக்கிறீர்கள் என்று. பாபா சொல்கிறார், நான்
உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறேன். நீங்கள் என்னை
மட்டும் நினைவு செய்யுங்கள். இரதத்தை (பிரம்மா) நினைவு செய்ய
வேண்டாம். பாபா இதுபோல் சொல்கிறார், பாபா இதைப் புரிய
வைக்கிறார் - இப்படி-இப்படி நீங்கள் சொல்லுங்கள். பிறகு
பாருங்கள், உங்களுடைய பிரபாவம் (செல்வாக்கு) எப்படி
வெளிப்படுகின்றது என்று. பாபா சொல்கிறார், தேகத்துடன் கூட
அனைத்து சம்மந்தங்களில் இருந்தும் புத்தியோகத்தை விடுவியுங்கள்.
தனது தேகத்தையும் விடுவித்து விட்டால் மிச்சம் இருப்பது ஆத்மா
மட்டுமே. தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு
செய்யுங்கள். அகம் பிரம்மாஸ்மி (நானே பிரம்மம்) மாயாவுக்கு நாம்
அதிகாரி. பாபா சொல்கிறார், நீங்கள் இதையும் அறிந்து
கொள்ளவில்லை-அதாவது மாயா எனச் சொல்லப் படுவது எது, செல்வம் எனச்
சொல்லப் படுவது எது? நீங்கள் செல்வத்தை மாயா எனச் சொல்லி
விடுகிறீர்கள். இப்படி-இப்படி நீங்கள் புரிய வைக்க முடியும்.
மிக நல்ல-நல்ல குழந்தைகள் முரளியும் படிப்பதில்லை. பாபாவை
நினைவு செய்வதில்லை என்பதால் அவர்கள் சொல்வது மற்றவர்களின்
புத்தியில் பதிவதில்லை. ஏனென்றால் நினைவின் சக்தி கிடைப்பதில்லை.
நினைவினால் சக்தி கிடைக்கின்றது. அந்த யோக பலத்தினால் நீங்கள்
உலகத்தின் எஜமானர்களாக ஆகிறீர்கள். குழந்தைகளே, ஒவ்வொரு
விசயத்திலும் பாபாவின் பெயரைச் சொல்லிக் கொண்டே இருங்கள்.
அப்போது ஒருபோதும் யாரும் எதுவும் செய்ய முடியாது. அனைவருக்கும்
பகவான், தந்தையோ ஒருவரா, அல்லது அனைவரும் பகவானா? நாங்கள் இன்ன
சந்நியாசியின் சீடர்கள் எனச் சொல்கின்றனர். இப்போது அவர்
சந்நியாசி, நீங்கள் இல்லறவாசிகள் என்றால் நீங்கள் எப்படி சீடர்
ஆகிறீர்கள்? பொய்யான மாயா, பொய்யான உடல், முழு உலகமுமே பொய்
யானது எனப் பாடவும் செய்கின்றனர். உண்மையானவரோ, ஒரே ஒரு தந்தை
தான். அவர் எதுவரை வரவில்லையோ, அது வரை நாம் உண்மையானவர்களாக
ஆக முடியாது. முக்தி- ஜீவன்முக்தி அளிக்கும் வள்ளல் ஒருவர் தான்.
மற்றப்படி யாரும் முக்தி தருவதில்லை, நாம் அவர்களுடையவர்களாக
ஆவதற்கு. பாபா சொல்கிறார், இதுவும் டிராமாவில் இருந்தது.
இப்போது எச்சரிக்கையாகி கண்களைத் திறந்து கொள்ளுங்கள். பாபா
இதுபோல் சொல்கிறார் எனச் சொல்வதன் மூலம் நீங்கள் விடுபட்டு
விடுவீர்கள். உங்கள் மீது யாரும் வீண் பழி சொல்ல மாட்டார்கள்.
திரிமூர்த்தி சிவபாபா எனச் சொல்ல வேண்டும். வெறுமனே சிவன் எனச்
சொல்லக் கூடாது. திரிமூர்த்தியை யார் படைத்தார்? பிரம்மா மூலம்
ஸ்தாபனையை யார் செய்விக்கிறார்? பிரம்மா என்ன படைப்பவரா?
இப்படி-இப்படி நஷாவுடன் பேசுங்கள். அப்போது நீங்கள் காரியம்
செய்ய முடியும். இல்லையென்றால் தேக அபிமானத்தில் வந்து
சொற்பொழிவாற்றுகின்றனர்.
பாபா புரிய வைக்கிறார், இது அநேக தர்மங்களின் கல்ப விருட்சம்.
முதல்-முதலில் உள்ளது தேவி-தேவதா தர்மம். இப்போது அந்த தேவதா
தர்மம் எங்கே சென்றது? இலட்சம் வருடங்கள் எனச் சொல்லி
விடுகின்றனர். இதுவோ 5000 வருடங்களின் விசயம். நீங்கள்
கோவில்களும் அவர்களுக்காகக் கட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்.
பாண்டவர் களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் யுத்தம்
நடந்ததாகக் காட்டுகின்றனர். பாண்டவர்கள் மலை மீது போய் உருகி
இறந்து போனார்கள், பிறகு என்னவாயிற்று? நான் எப்படி இம்சை
செய்வேன்? நானோ உங்களை அகிம்சையாளர்களாக, வைஷ்ணவர்களாக ஆக்கு
கிறேன். காமக் கோடாரி செலுத்தாதவர்கள் தான் வைஷ்ணவர் எனச்
சொல்லப்படுகின்றனர். அவர்கள் விஷ்ணுவின் வம்சாவளி. நல்லது.
இனிமையிலும் இனிமையான
தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) சேவையில் வெற்றி பெறுவதற்கு அகங்காரத்தை விட்டு ஒவ்வொரு
விசயத்திலும் பாபாவின் பெயரைச் சொல்ல வேண்டும். நினைவில்
இருந்து சேவை செய்ய வேண்டும். வேண்டாத வீண் பேச்சுகளில் தனது
நேரத்தை வீணடிக்கக் கூடாது.
2) உண்மையிலும் உண்மையான வைஷ்ணவர் ஆக வேண்டும். எந்த ஓர்
இம்சையும் செய்யக் கூடாது. தேகத்துடன் கூட அனைத்து
சம்மந்தங்களில் இருந்தும் புத்தியோகத்தை விடுவித்து விட
வேண்டும்.
வரதானம்:
விஷ்வ நன்மைக்கான காரியத்தில்
எப்பொழுதும் பிஸியாக இருக்கக்கூடிய விஷ்வத்தின் ஆதாரமூர்த்தி
ஆகுக.
விஷ்வ கல்யாணகாரி குழந்தைகள்
கனவிலும் கூட ஃப்ரீயாக (ஒன்றும் செய்யாமல்) இருக்க முடியாது.
யார் இரவு பகலாக சேவையில் மும்முரமாக இருக்கின்றார்களோ,
அவர்களுக்கு கனவிலும் கூட புதுப்புது விசயங்கள், சேவைக்கான
திட்டங்கள், வழிகள் தென்படும். அவர்கள் சேவையில் மும்முரமாக
இருக்கும் காரணத்தால் தன்னுடைய புருஷார்த்தத்தில்
வீணானவற்றிலிருந்தும் மற்றும் பிறருடைய வீணான
விசயங்களிலிருந்தும் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு
எதிரில் எல்லையற்ற விஷ்வத்தின் ஆத்மாக்கள் சதா எமர்ஜ்
ஆகியிருப்பார்கள். அவர்களுக்கு சிறிது கூட சோம்பேறித்தனம்
வரமுடியாது. இத்தகைய சேவாதாரி குழந்தைகளுக்கு ஆதாரமூர்த்தி
ஆகுவதற்கான வரதானம் கிடைத்துவிடுகிறது.
சுலோகன்:
சங்கமயுகத்தின் ஒவ்வொரு
வினாடியும் பல ஆண்டுகளுக்கு சமமானது ஆகும். ஆகையினால்,
கவனக்குறைவில் சமயத்தை இழக்காதீர்கள்.
ஓம்சாந்தி