24.10.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உண்மையிலும் உண்மையான விட்டில் பூச்சிகளான நீங்கள் இப்போது ஜோதியில் பலியாகின்றீர்கள், இந்த பலியாவதன் நினைவுச் சின்னமே தீபாவளியாகும்.

 

கேள்வி:

பாபா தன் குழந்தைகளுக்கு என்ன செய்தியைச் சொல்லியிருக்கிறார்?

 

பதில்:

ஆத்மாக்களாகிய நீங்கள் நிர்வாண தாமத்திலிருந்து எப்படி வருகிறீர்கள் மற்றும் நான் எப்படி வருகிறேன் என்பதை பாபா சொல்லியிருக்கிறார். நான் யார், என்ன செய்கிறேன், எப்படி ராமராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறேன், எப்படி குழந்தைகளாகிய உங்களை இராவணன் மீது வெற்றி கொள்ள வைக்கிறேன் என்ற அனைத்தையும் குறித்து இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உங்களுடைய ஜோதி இப்போது ஏற்றப்பட்டுள்ளது.

 

பாடல்: நீயே தாயும், தந்தையும். . . .

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். ஆத்மாக்கள் இந்த ஸ்தூலமான கர்மேந்திரியங்களின் மூலம் பாடலைக் கேட்டீர்கள். பாடலில் முதலில் சரியாக இருந்தது. பிறகு பக்தியின் வார்த்தைகள் இருந்தன. உங்களின் பாதத்தில் தூசியாக உள்ளோம் (என பாடுகின்றனர்). இப்போது குழந்தைகள் பாதத்தின் தூசியாக இருக்க முடியாது. இது தவறாகும். தந்தை குழந்தைகளுக்கு சரியான வார்த்தைகளைப் புரிய வைக்கிறார். குழந்தைகள் எங்கிருந்து வருகின்றனரோ, தந்தை வருவதும் அங்கிருந்துதான், அது நிர்வாண தாமமாகும். (அங்கிருந்து) அனைவரும் வருவது பற்றிய செய்தியை குழந்தைகளுக்குச் சொன்னேன். நான் வருவது எவ்வாறு, வந்து என்ன செய்கிறேன் என்பது குறித்தும் சொன்னேன். இராமராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்காக இராவணன் மீது வெற்றி பெறச் செய்கிறார். குழந்தைகள் அறிவார்கள் -இராமராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம் இந்த பூமியில்தான் வரும் என சொல்வோம். நீங்கள் உலகின் எஜமான் ஆகின்றீர்கள். பூமி, ஆகாயம், சூரியன் முதலான அனைத்தும் உங்கள் கைகளில் வந்து விடுகின்றன. ஆக, இராவண இராஜ்யம் முழு உலகின் மீது, இராம ராஜ்யம் கூட முழு உலகின் மீது உள்ளது என சொல்கிறோம். இராவண இராஜ்யத்தில் எவ்வளவு கோடிக் கணக்கில் உள்ளனர், இராம இராஜ்யத்தில் குறைவாகவே இருப்பார்கள், பிறகு மெல்ல மெல்ல வளர்ச்சியடையும். இராவண இராஜ்யத்தில் வளர்ச்சி அதிகம் அடைகின்றனர், ஏனெனில் மனிதர்கள் விகாரிகள் ஆகி விடுகின்றனர். இராம இராஜ்யத்தில் நிர்விகாரிகளாக இருக்கின்றனர். மனிதர்களின் கதைதான் ஆகும். ஆக, இராமனும் எல்லைக்கப் பாற்பட்ட எஜமான், இராவணனும் எல்லைக்கப்பாற்பட்ட எஜமான். இப்போது எவ்வளவு நிறைய தர்மங்கள் இருக்கின்றன. பல தர்மங்களின் வினாசம் என பாடவும் பட்டுள்ளது. பாபா மரத்தைக் குறித்தும் கூட புரிய வைத்துள்ளார்.

 

இப்போது தசரா கொண்டாடுகின்றனர், இராவணனை எரிக்கின்றனர். இது எல்லைக்குட்பட்ட எரித்தல் ஆகும். உங்களுடையது எல்லைக்கப்பாற்பட்டது. இராவணனையும் கூட பாரதவாசிகள்தான் எரிக்கின்றனர், வெளி நாடுகளிலும் கூட எங்கெங்கு பாரதவாசிகள் அதிகமாக இருக்கின்றனரோ அங்கெல்லாம் கூட எரிப்பார்கள். அது எல்லைக்குட்பட்ட தசரா ஆகும். இலங்கையில் இராவணன் இராஜ்யம் செய்து கொண்டிருந்தான், சீதையைக் கடத்திக் இலங்கைக்குச் சென்று விட்டான் என்று காட்டுகின்றனர். இவை எல்லைக்குட்பட்ட விசயங்களாகும். இப்போது முழு உலகின் மீதும் இராவண இராஜ்யம் உள்ளது என தந்தை சொல்கிறார். ராம இராஜ்யம் இப்போது இல்லை. இராம இராஜ்யம் என்பது ஈஸ்வரனால் உருவாக்கப்பட்டது என்று அர்த்தம். சத்யுகம் இராம இராஜ்யம் எனப்படுகிறது. மாலையை உருட்டுகின்றனர், ரகுபதி ராகவ இராஜாராம் என சொல்கின்றனர், ஆனால் ராஜா ராமனை நினைக்கவில்லை, யார் முழு உலகின் சேவை செய்கின்றாரோ, அவரது மாலையை உருட்டி நினைக்கின்றனர்.

 

பாரதவாசிகள் தசராவுக்குப் பிறகு தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். தீபாவளியை ஏன் கொண்டாடுகின்றனர்? ஏனெனில் தேவதைகளின் முடி சூட்டும் விழா நடக்கிறது. முடிசூட்சும் விழா நடக்கும் நேரத்தில் நிறைய தீபங்கள் ஏற்றி வைக்கின்றனர். ஒன்று முடி சூட்சும் விழா, மற்றொன்று வீடுகள் தோறும் தீபாவளி (தீபங்களின் வரிசை) என சொல்லப் படுகிறது. அனைத்து ஆத்மாக்களின் (ஆத்ம) ஜோதி பிரகாசித்துக் கொண்டிருக்கும். இப்போது அனைத்து ஆத்மாக்களின் ஜோதி அணைந்து விட்டுள்ளது. இரும்பு யுகம் என்றாலே காரிருள். காரிருள் என்றால் பக்தி மார்க்கம். பக்தி செய்ய செய்ய ஜோதி குறைந்து விடுகிறது. மற்றபடி அந்த தீபாவளி என்பது செயற்கையானது. பட்டாபிஷேகம் நடக்கிறது என்பதற்காக பட்டாசு கள் வெடிக்கிறார்கள் என்பதல்ல. தீபாவளியன்று லட்சுமியை அழைக்கிறார்கள். பூஜை செய்கின்றனர். இது பக்தி மார்க்கத்தின் பண்டிகையாகும். ராஜாக்கள் யாராயினும் சிம்மாசனத் தில் அமருகின்றனர் என்றால் அதற்கான முடி சூட்டும் விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இவையனைத்தும் எல்லைக்குட்பட்டவையாகும். இப்போது எல்லைக்கப்பாற்பட்ட வினாசம், உண்மையிலும் உண்மையான தசரா நடக்க வேண்டியுள்ளது. தந்தை அனைவரின் ஜோதியை ஏற்றுவதற்காக வந்துள்ளார். மனிதர்கள் தம் ஜோதி பெரிய ஜோதியுடன் கலந்து விடும் என புரிந்து கொள்கின்றனர். பிரம்ம சமாஜத்தவரின் கோவிலில் எப்போதும் ஜோதி எரிந்து கொண்டிருக்கும். விட்டில் பூச்சியானது ஜோதியைச் சுற்றி வந்து அதில் விழுந்து பலியாகி விடுவது போல நம்முடைய ஆத்மாவும் இப்போது பெரிய ஜோதியில் ஐக்கியமாகி விடும் என்று புரிந்து கொள்கின்றனர். இப்படி ஓர் உதாரணம் உருவாக்கப் பட்டுள்ளது. நீங்கள் அரைக் கல்ப காலத்து பிரியதர்ஷினிகள். நீங்கள் வந்து ஒரு பிரியதர்ஷ னிடம் பலியாகியுள்ளீர்கள். எரிந்து போகும் விசயம் அல்ல. உலகில் காதலன்-காதலியாக இருக்கின்றனர் என்றால் ஒரு காதலன் ஒரு காதலி ஆகி விடுகின்றனர். ஆனால் இங்கே அவர் ஒருவர் தான் (பாபா) மணமகன், மற்ற அனைவரும் மணமகள்கள் ஆவர். மணமகள்கள் அந்த மணமகனை பக்தி மார்க்கத்தில் நினைவு செய்து கொண்டே இருக்கின்றனர். பிரியதர்ஷனே, நீங்கள் வந்தீர்கள் என்றால் நாங்கள் உங்கள் மீது பலியாகி விடுவோம். உங்களைத் தவிர நாங்கள் யாரையும் நினைவு செய்யப் போவதில்லை. இது உங்களுடைய சரீர சம்மந்தப்பட்ட அன்பு அல்ல. அந்த மணமகன் - மணமகளுடைய அன்பு சரீர சம்மந்தப் பட்டதாக இருக்கும். ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொண்டு மட்டும் இருப்பார்கள், பார்ப்ப தனாலேயே திருப்தி அடைந்தவர்களாக ஆகிவிடுகின்றனர். இங்கேயோ ஒருவர் மணமகன், மற்றவர்கள் அனைவரும் மணமகள்கள். அனைவரும் தந்தையை நினைவு செய்கின்றனர். சிலர் இயற்கை முதலானவைகளை நம்புகின்றனர். என்றாலும் கூட ஓ இறைவா, ஓ பகவானே என வாயிலிருந்து கண்டிப்பாக வெளிப்படுகிறது. எங்களுடைய துக்கத்தை நீக்குங்கள் என அனைவரும் அவரை அழைக்கின்றனர். பக்தி மார்க்கத்தில் பல காதலன் - காதலியர் இருக்கின்றனர், ஒருவர் யாரோ ஒருவருக்கு மணமகளாக இருக்கின்றனர், இன்னொருவர் இன்னொருவருக்கு மணமகளாக ஆகின்றனர். அனுமானுக்கு எத்தனை பிரியதர்ஷினிகள் இருக்கக் கூடும்? அனைவரும் தம் தம்முடைய மணமகனின் உருவத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு பிறகு தமக்குள் ஒன்று கூடி அவருக்கு பூஜைகள் செய்கின்றனர். பூஜை செய்து விட்டு பிறகு பிரியதர்ஷனை நீரில் மூழ்கடித்து விடுகின்றனர். ஒரு அர்த்தமும் புரிவதில்லை. அந்த விசயங்கள் இங்கே இல்லை. இந்த உங்களுடைய மணமகன் எப்போதும் அழகானவர் (வெள்ளையாக இருப்பவர்), ஒரு போதும் கருப்பாக ஆவதில்லை. பிரயாணியாகிய தந்தை வந்து அனைவரையும் வெள்ளையாக (தூய்மையாக) ஆக்குகிறார். நீங்களும் பிரயாணிகள்தானே. தூர தேசத்திலிருந்து வந்து இங்கே நடிப்பை நடிக்கிறீர்கள். உங்களுக் குள்ளும் வரிசைக்கிரமமான முயற்சியின்படி புரிந்து கொள்கிறீர்கள். இப்போது நீங்கள் திரிகாலதரிசிகள் ஆகியுள்ளீர்கள். படைப்பவர் மற்றும் படைப்பின் முதல்-இடை-கடைசியை அறிந்திருக்கிறீர்கள் எனும்போது நீங்கள் திரிகாலதரிசி பிரம்மாகுமார்-குமாரிகள் ஆகிவிட்டீர்கள். (உலகத்தில்) ஜகத்குரு முதலான பட்டங்கள் கிடைக்கின்றன அல்லவா, உங்களுக்கு இந்த பட்டம் கிடைக்கிறது. உங்களுக்கு சுயதரிசன சக்கரதாரி என அனைத்தையும் விட நல்ல பட்டம் கிடைக்கிறது. பிராமணர்களாகிய நீங்கள் மட்டும் சுயதரிசன சக்கரதாரிகளா அல்லது சிவபாபாவுமா? (சிவபாபாவும் கூடத்தான்) ஆம், ஏனென்றால் ஆத்மா சரீரத்துடன் சுயதரிசன சக்ரதாரி ஆகிறது அல்லவா. தந்தையும் கூட இவருக்குள் (பிரம்மா) வந்து புரிய வைக்கிறார். சிவபாபா சுயதரிசன சக்ரதாரியாக இல்லாவிட்டால் எப்படி உங்களை அதுபோல ஆக்குவார்? அவர் அனைவரையும் விட உயர்வான, உயர்ந்தவரிலும் உயர்வான பரம ஆத்மா ஆவார். தேகத்திற்கு அப்படி சொல்லப்படுவதில்லை. அந்த பரம தந்தைதான் வந்து உங்களை உயர்ந்தவர்களாக ஆக்குகிறார். ஆத்மாக்களைத் தவிர வேறு யாரும் சுயதரிசன சக்ரதாரியாக ஆக முடியாது. எந்த ஆத்மாக்கள்? பிராமண தர்மத்தில் இருப்பவர்கள். சூத்திர தர்மத்தில் இருந்த போது தெரிந்திருக்கவில்லை. இப்போது தந்தை மூலமாக நீங்கள் தெரிந்து கொண்டுள்ளீர்கள். எவ்வளவு நல்ல நல்ல விசயங்கள். நீங்கள்தான் கேட்டு மகிழ்ச்சி யடைகிறீர்கள். வெளியில் உள்ளவர்கள் இந்த விசயங்களை கேட்டால் ஆச்சரியப் படுவார்கள் - ஓ! இது மிகவும் உயர்ந்த ஞானமாக உள்ளது. நல்லது, நீங்களும் கூட இது போல சுயதரிசன சக்ரதாரி ஆகிவிட்டீர்கள் என்றால் பிறகு சக்ரவர்த்தி ராஜாவாக உலகின் எஜமானாக ஆகி விடுவீர்கள். இங்கிருந்து வெளியில் சென்றால் அவ்வளவுதான். மாயை அந்த அளவு பலசாலியாக உள்ளது, இங்கு பேசும் பேச்சு இங்கேயே தங்கி விடுகின்றது - கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை வாக்குறுதி கொடுத்து விட்டு, வெளியில் வருகிறது, ஆனாலும் அங்குள்ள பேச்சு அங்கேயே நின்று விடுவது போல. நீங்கள் கண்காட்சிகள் முதலானவற்றில் புரிய வைக்கும்போது நன்றாக இருக்கிறது, நன்றாக இருக்கிறது என சொல்கின்றனர். ஞானம் மிகவும் நன்றாக உள்ளது, நான் இப்படியெல்லாம் முயற்சி செய்வேன், இதைச் செய்வேன். . . என்றெல்லாம் சொல்கின்றனர். அவ்வளவுதான். அங்கு சொன்ன பேச்சு அங்கேயே. . . என்றாலும் கூட கொஞ்சமாவது அந்த தாக்கம் இருக்கவே செய்யும். அவர்கள் பிறகு வரவே மாட்டார்கள் என்பதல்ல. மரம் வளர்ச்சி அடைந்தபடி இருக்கும். மரம் வளர்ச்சி அடைந்து விட்டது என்றால் பிறகு அனைவரையும் ஈர்க்கும். இப்போது இது கொடுமையான நரகமாக உள்ளது. கருட புராணத்திலும் இப்படிப்பட்ட சுவாரசியமான விசயங்கள் எழுதியுள்ளனர். கொஞ்சமாவது பயம் இருக்கட்டும் என்று அதை மனிதர்களுக்கு எடுத்துச் சொல்கின்றனர். மனிதர்கள் பாம்பு, தேள் முதலானவைகளாக ஆகின்றனர் என்பது போன்ற கருத்துகள் அதிலிருந்துதான் வெளிப்பட்டன. நான் உங்களை விஷம் நிறைந்த நதியிலிருந்து மீட்டு பாற்கடலுக்கு அனுப்பி வைக்கிறேன் என தந்தை சொல்கிறார். உண்மையில் நீங்கள் சாந்தி தாமத்தில் வசிப்பவர்களாக இருந்தீர்கள். பிறகு சுகதாமத்தில் நடிப்பை நடிப்பதற்காக வந்தீர்கள். இப்போது நாம் மீண்டும் சாந்தி தாமத்திற்கும் சுக தாமத்திற்கும் செல்கிறோம். இந்த தாமங்களை அதாவது நம் வீடு மற்றும் சொர்க்கத்தை நினைவு செய்வீர்கள்தானே! தாயும் நீயே தந்தையும் நீயே என பாடவும் செய்கின்றனர். அந்த அளவற்ற சுகம் சத்யுகத்தில் தான் இருக்கிறது. அதிக சுகம் மற்றும் அதிக துக்கம் என இந்த விளையாட்டு உருவாக்கப் பட்டுள்ளது. விஷ்ணு அவதாரத்தையும் காட்டுகின்றனர். லட்சுமி நாராயணரின் ஜோடி மேலேயிருந்து வருவது போல காட்டுகின்றனர். மேலேயிருந்து சரீரதாரிகள் யாரும் வருவதில்லை. மேலிருந்து வருபவர்கள் அனைவருமே ஆத்மாக்கள் ஆவார்கள். ஆனால் ஈஸ்வரனின் அவதாரம் மிகவும் விசித்திரமானது, அவரே வந்து பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறார். சிவ ஜெயந்தி என அவருடைய அவதாரத்தை பண்டிகையாகக் கொண்டாடு கின்றனர். ஒருவேளை பரமபிதா பரமாத்மா சிவன் தான் முக்தி ஜீவன்முக்தியின் ஆஸ்தி கொடுக்கிறார், என்று தெரிந்து கொண்டால் பிறகு உலகிலும் இறைத் தந்தையின் பண்டிகையை கொண்டாடுவார்கள். சிவபாபாவே விடுவிப்பவர், வழி காட்டி என புரிந்து கொள்ளும்போது எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் நினைவார்த்தமாக பண்டிகை கொண்டாடுவார்கள். அவருடைய ஜென்மமே பாரதத்தில் ஏற்படுகிறது. சிவ ஜெயந்தியும் பாரதத்தில் கொண்டாடுகின்றனர். ஆனால் முழுமையான அறிமுகம் இல்லாததால் விடுமுறையும் கொடுப்ப தில்லை. அனைவருக்கும் சத்கதியை வழங்கக் கூடியவர், அலௌகிக காரியம் வந்து செய்யக் கூடிய அவருடைய ஜென்ம பூமியில் அவருடைய பிறந்த நாளையும் தீர்த்த யாத்திரையும் மிகவும் அதிகளவில் கொண்டாட வேண்டும். உங்களுடைய நினைவார்த்த கோவில்களும் கூட இங்கேதான் உள்ளன. ஆனால் சிவபாபாதான் வந்து விடுவிப் பவராகவும், வழிகாட்டி யாகவும் ஆகிறார் என்பது யாருக்கும் தெரியாது. அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுவித்து சுகதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என அனைவரும் சொல்கின்றனர், ஆனால் உண்மையை புரிந்து கொள்வ தில்லை. பாரதம் மிகவும் உயந்ததிலும் உயர்ந்த கண்டமாகும். பாரதத்தின் மகிமை அபாரமானது என பாடப்பட்டுள்ளது. அங்கேதான் சிவபாபாவின் பிறவி ஏற்படுகிறது. அவரை யாரும் ஏற்பதில்லை. தபால் தலை (ஸ்டாம்ப்) வெளியிடுவதில்லை. பிறருடைய தபால் தலைகளை நிறைய வெளியிட்டபடி இருக்கின்றனர். அவருடைய மகத்துவம் அனைவருக்கும் தெரியும்படியாக எப்படி புரிய வைப்பது? வெளிநாட்டிலும் சன்னியாசி முதலானவர்கள் சென்று பாரதத்தின் பழமையான யோகத்தைக் கற்றுக் கொடுக்கின்றனர், நீங்கள் இந்த இராஜயோகம் குறித்து புரிய வைத்தால் உங்களுக்கு மிகவும் பெயர் கிடைக்கும். இராஜயோகத்தை யார் கற்பித்தது என்பது யாருக்கும் தெரியாது என்பதை சொல்லுங்கள். கிருஷ்ணரும் கூட ஹடயோகத்தைக் கற்பிக்கவில்லை. இந்த ஹடயோகம் சன்னியாசி களுடையதாகும். நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், தம்மை தத்துவ ஞானிகள் என சொல்லிக் கொள்பவர்கள், இந்த விசயங்களைப் புரிந்து கொண்டு முன்னேற வேண்டும், மேலும் நாங்களும் கூட சாஸ்திரங்களைப் படித்திருக் கிறோம், ஆனால் தந்தை சொல்வதே சரியாகும், மற்ற அனைத்தும் தவறாகும் என அவர்கள் சொல்ல வேண்டும். மேலும் அவர்கள் இதையும் புரிந்து கொள்ள வேண்டும் - இதுவே (மதுபன்) உயர்ந்ததிலும் உயர்ந்த தீர்த்த ஸ்தலமாகும், இங்கே தந்தை வருகிறார். இது தர்ம பூமி எனப்படுகிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். தந்தையை அறிந்து கொண்டு, உடல், மனம், பொருள் என அனைத்தும் இந்த சேவையில் ஈடுபடுத்தி விடுகிறீர்கள். தந்தைதான் அனைவரையும் விடுவிக்கிறார். அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிக்கிறார். மற்ற தர்ம ஸ்தாபகர்கள் துக்கத்திலிருந்து விடுவிப்பதில்லை. அவர்கள் வருவதே அவருக்குப் (தந்தைக்கு) பிறகு தான். அனைவரும் வரிசைக்கிரமமாக நடிப்பை நடிக்க வருகின்றனர். நடிப்பை நடித்து நடித்து தமோபிரதானம் ஆகி விடுகின்றனர். பிறகு தந்தை வந்து சதோபிரதானமாக ஆக்குகிறார். ஆக, இந்த பாரதம் எவ்வளவு உயர்ந்த தீர்த்தமாக உள்ளது. பாரதம் அனைத்தையும் விட முதல் நம்பர் உயர்வான பூமியாகும். இது என்னுடைய ஜென்ம பூமியாகும் என தந்தை சொல்கிறார். நான் வந்து அனைவருக்கும் சத்கதியை வழங்குகிறேன். பாரதத்தை சொர்க்கமாக ஆக்கி விடுகிறேன்.

 

தந்தை சொர்க்கத்தின் எஜமானராக ஆக்குவதற்காக வந்துள்ளார் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்படிப்பட்ட தந்தையை அன்புடன் நினைவு செய்யுங்கள். உங்களைக் கண்டு பிறரும் இப்படிப்பட்ட கர்மம் செய்வார்கள். இதுவே அலௌகிகமான தெய்வீகமான கர்மம் என சொல்லப்படுகிறது. யாருக்கும் தெரியாது என புரிந்து கொள்ளாதீர்கள். உங்களுடைய இந்தப் படங்களை எடுத்துச் செல்லக்கூடியவர்களும் வெளிப்படுவார்கள். நல்ல நல்ல படங்கள் உருவாகினால், கப்பலை நிரப்பிக் கொண்டு எடுத்துச் செல்வார்கள். கப்பல் நிற்குமிடங்களில் எல்லாம் இந்தப் படங்களை மாட்டி வைப்பார்கள். உங்களுடைய சேவை நிறைய நடக்கவுள்ளது. மிகவும் உதவும் மனப்பான்மை மிக்கவர்கள், உண்டியலை நிரப்பக் கூடிய ராஜாதி ராஜாக்கள் கூட வருவார்கள், அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களை செய்யத் தொடங்குவார்கள். இந்த பழைய உலகத்தை மாற்றி புதிய உலகை ஸ்தாபனை செய்யக் கூடியவர் யார் என அனைவருக்கும் தெரிய வேண்டும். உங்களுடைய புத்தியும் கீழானதாக இருந்தது, இப்போது நீங்கள் எவ்வளவு சுத்தமான புத்தியுள்ளவர்களாக ஆகியுள்ளீர்கள். நாம் இந்த ஞானம் மற்றும் யோக பலத்தின் மூலம் உலகை சொர்க்கமாக ஆக்குகிறோம் என நீங்கள் அறிவீர்கள். மற்ற அனைவரும் முக்தி தாமத்திற்குச் சென்று விடுவார்கள். நீங்களும் அதிகாரம் மிக்கவர்களாக (அத்தாரிட்டி) ஆக வேண்டும். எல்லைக்கப் பாற்பட்ட தந்தையின் குழந்தைகள் அல்லவா. நினைவின் மூலம் சக்தி கிடைக்கிறது. தந்தை உலகின் ஆல்மைட்டி அத்தாரிட்டி (எல்லாம் வல்லவர்) என சொல்லப்படுகிறார். அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைச் சொல்கிறார். ஆக, குழந்தைகளுக்கு சேவை செய்யும் ஊக்கம் எவ்வளவு இருக்க வேண்டும். வாயிலிருந்து ஞான ரத்தினங்களைத் தவிர வேறு எதுவும் வெளி வரக் கூடாது. நீங்கள் அனைவரும் ஞான-யோகத்தில் சிறந்தவர்கள். உலகம் முழுவதும் பச்சைப் பசேல் என ஆகிவிடுவதை நீங்கள் பார்ப்பீர்கள். அனைத்தும் புதியவையாக, அங்கே துக்கத்தின் பெயர் கிடையாது. 5 தத்துவங்களும் கூட உங்களின் சேவையில் ஆஜராகி இருக்கும். இப்போது மற்றவர்கள் சேவைக்குப் புறம்பானதைச் (டிஸ்-சரிவீஸ்) செய்கின்றனர். ஏனெனில் மனிதர்கள் தகுதியற்றவர்களாக உள்ளனர். தந்தை இப்போது தகுதி மிக்கவர்களாக ஆக்குகிறார். நல்லது!

 

இனிமையிலும் இனிமயான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்

1. ஞானம், யோகம் மிக்கவர்களாகி வாயிலிருந்து ஞான ரத்தினங்கள்தான் வெளிப்படுத்த வேண்டும். சேவையில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். நினைவில் இருக்க வேண்டும் மற்றும் அனைவருக்கும் தந்தையின் நினைவைக் கொடுக்க வேண்டும் - இந்த அலௌகிக காரியத்தைச் செய்ய வேண்டும்.

 

2. உண்மையிலும் உண்மையான பிரியதர்ஷினி ஆகி ஒரு பிரியதர்ஷனின் மீது அர்ப்பணமாக வேண்டும், அதாவது பலியாக வேண்டும். அப்போதுதான் உண்மையான தீபாவளி என்பது நடந்தேறும்.

 

வரதானம்:

இல்லற காரியம் மற்றும் ஈஸ்வரிய காரியம் ஆகிய இரண்டின் சமநிலை மூலம் சதா இலகுவானவராக மற்றும் வெற்றி பெற்றவராக ஆகுக.

 

அனைத்து குழந்தைகளுக்கும் சரீர நிர்வாகம் மற்றும் ஆத்ம நிர்வாகத்தின் இரட்டை சேவை கிடைத்துள்ளது. ஆனால், இரண்டு சேவைகளிலும் சமயத்தின் மீதும், சக்திகள் மீதும் சமமான கவனம் தேவை. ஒருவேளை ஸ்ரீமத் என்ற முள் சரியாக இருக்கிறது என்றால் இரண்டு பக்கமும் சமமாக இருக்கும். ஆனால், இல்லறம் (கிரஹஸ்தம்) என்ற வார்த்தையைக் கூறியவுடனே இல்லறவாசி (கிரஹஸ்தி) ஆகிவிடுகின்றீர்கள், ஆதலால், சாக்குபோக்கு ஆரம்பம் ஆகிவிடுகிறது. எனவே, இல்லறவாசி அல்ல, டிரஸ்டி (தர்மகர்த்தா) ஆவீர்கள். இந்த நினைவினால் இல்லற காரியம் மற்றும் ஈஸ்வரிய காரியம் ஆகிய இரண்டிலும் சமநிலை கொண்டீர்களானால் எப்பொழுதும் இலகுவானவராக மற்றும் வெற்றியாளராக இருப்பீர்கள்.

 

சுலோகன்:

முதல் டிவிஷனில் வருவதற்காக கர்மேந்திரியங்களை வென்றவராக, மாயையை வென்றவராக ஆகுங்கள்.

ஓம்சாந்தி