23.10.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! சிறந்ததிலும் சிறந்தவர்களாக ஆவதற்காக சுயம் பகவான் உங்களுக்கு சிறந்த வழியை அளித்து கொண்டிருக்கிறார். அதன் மூலம் நீங்கள் நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக ஆகி விடுவீர்கள்.

 

கேள்வி:

தேவதையாக ஆகக் கூடிய குழந்தைகள் விசேஷமாக எந்த விஷயங்களில் கவனம் வைக்க வேண்டும்?

 

பதில்:

ஒரு பொழுதும் எந்த விஷயத்திலும் கோபப்படக் கூடாது. முகத்தை பிணம் போல ஆக்கக் கூடாது. யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது. தேவதையாக ஆக வேண்டுமென்றால் வாயிலிருந்து எப்பொழுதும் மலர்கள் வெளிப்பட வேண்டும். முள் அல்லது கற்களை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் கல்லாகவே இருந்து விடுவார்கள். மிகவும் நல்ல குணங்களை தாரணை செய்ய வேண்டும். இங்கேயே சர்வகுண சம்பன்னராக ஆக வேண்டும். தண்டனை வாங்கினீர்கள் என்றால் பிறகு நல்ல பதவி கிடைக்காது.

 

ஓம் சாந்தி.

புதிய விஷ்வம் அதாவது புது உலகத்திற்கு அதிபதியாக ஆகக் கூடிய ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கிறார். தந்தை எல்லை யில்லாத ஆஸ்தியை அளிக்க வந்துள்ளார் என்பதை தந்தை புரிந்துள்ளார்கள். நாம் தகுதி யுடையவர்களாக இருக்கவில்லை. பிரபுவே நான் லாயக்கில்லை என்னை லாயக்காக ஆக்குங்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் மனிதர்களாக உள்ளீர்கள். இந்த தேவதைகள் கூட மனிதர்கள் ஆவார்கள். ஆனால் இவர்களுக்குள் தெய்வீக குணங்கள் இருக்கின்றன என்று தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இவர்களுக்கு உண்மையிலும் உண்மையான மனிதர்கள் என்று கூறுவார்கள். மனிதர்களுக்குள் அசுர குணங்கள் இருக்கும் பொழுது அவர்களுக்கு (இன்ஹ்யூமன்) மனித அபிமானமற்றவர் என்று கூறப்படுகிறது. நடத்தை மிருகங்களைப் போல ஆகி விடுகிறது. தெய்வீக குணங்கள் இல்லை. எனவே அதற்கு அசுர குணம் என்று கூறப்படுகிறது. இப்பொழுது மீண்டும் தந்தை வந்து உங்களை சிறந்த தேவதையாக ஆக்குகிறார். உண்மையான கண்டத்தில் வசிக்கக் கூடிய உண்மையிலும் உண்மையான மனிதர்கள் இந்த இலட்சுமி நாராயணர் ஆவார்கள். இவர்களுக்கு பிறகு தேவதை என்று கூறப்படுகிறது.இவர்களிடம் தெய்வீக குணங்கள் இருக்கின்றன. ஹே பதீத பாவனரே! வாருங்கள் என்று பாடவும் செய்கிறார்கள். ஆனால் பாவன ராஜாக்கள் எப்படி இருப்பார்கள். பிறகு பதீத ராஜாக்களாக எப்படி ஆகிறார்கள் என்ற இந்த ரகசியத்தை யாருமே அறியாமல் உள்ளார்கள். அது பக்தி மார்க்கம் ஆகும். ஞானத்தையோ வேறு யாரும் அறியாமலே இருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை புரிய வைக்கிறார். மேலும் அது போல ஆக்குகிறார். காரியங்கள் இந்த தேவதைகள் சத்யுகத்தில் கூட செய்கிறார்கள். ஆனால் (பதீதமான) தூய்மையற்ற செயல்கள் செய்வது இல்லை. அவர்களிடம் தெய்வீக குணங்கள் உள்ளன. சீ - சீ செயல்களை செய்யாதவர்கள் தான் சொர்க்கவாசி ஆகிறார்கள். நரகவாசிகள் மூலமாக மாயை சீ - சீ இழிந்த செயல்களை செய்விக்கிறது. இப்பொழுது பகவான் வந்து சிறந்த செயல்களைச் செய்விக்கிறார். மேலும் இது போன்ற இழிந்த செயல்களைச் செய்யா தீர்கள் என்று சிறந்த வழியை அளிக்கிறார். சிறந்ததிலும் சிறந்தவர்களாக ஆவதற்காக மிகச் சிறந்த வழியை அளிக்கிறார். தேவதைகள் சிறந்தவர்கள் ஆவார்கள் அல்லவா? அவர்கள் இருப்பதும் புது உலகமான சொர்க்கத்தில். இதுவும் உங்களில் வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப அறிந்துள்ளீர்கள். எனவே மாலை கூட 8 மணிகளினுடையது, அல்லது 108 மணிகளி னுடையது, பின் 16108 மணிகளினுடையது என்று கூட கூறினாலும் அதுவும் எவ்வளவு ஆகிறது. இத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 16 ஆயிரம் வெளிப்படு கிறார்கள் என்றால் என்ன ஆகியது? கால் சதவிகிதம் கூட இல்லை. தந்தை குழந்தைகளை எவ்வளவு உயர்ந்தவர்களாக உருவாக்குகிறார்! எந்த ஒரு விகர்மமும் செய்யாதீர்கள் என்று தினமும் குழந்தைகளுக்கு புரிய வைக்கிறார். உங்களுக்கு அப்பேர்ப்பட்ட தந்தை கிடைத்துள்ளார் என்றால் மிகுந்த குஷி இருக்க வேண்டும். நம்மை எல்லையில்லாத தந்தை தத்து எடுத்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். நாம் அவருக்குச் சொந்தமானவர் களாக ஆகியுள்ளோம். தந்தை சொர்க்கத்தின் படைப்புக்கர்த்தா ஆவார். எனவே அப்பேர்ப் பட்ட சொர்க்கத்திற்கு அதிபதி ஆவதற்குத் தகுதியுடையவார்களாக, சர்வகுண சம்பன்னராக ஆக வேண்டியுள்ளது. இந்த இலட்சுமி நாராயணர் சர்வகுண சம்பன்னராக இருந்தார்கள். இவர்களுடைய தகுதியுடைமைக்கு மகிமை செய்யப்படுகிறது. பிறகு 84 பிறவிகளுக்கு பின்னர் லாயக்கில்லாதவர்களாக ஆகி விடுகிறார்கள். ஒரு பிறவி கூட கீழே இறங்கினார்கள் என்றால் சிறிதளவு கலை குறைந்து விட்டது. இது போல மெல்ல மெல்ல குறைந்துக் கொண்டே போகிறது. பிறகு இராவண இராஜ்யத்தில் மிக வேகமாக கலை குறைந்து போய்விடுகிறது. கிரகணம் பிடித்து விடுகிறது. எப்படி சூரியன், சந்திரனுக்குக் கூட கிரகணம் பிடிக்கிறது அல்லவா? அப்படியின்றி சந்திரன் மற்றும் நட்சத்திரங்களுக்கு கிரகணம் பிடிப்பதில்லை என்பதல்ல. எல்லோருக்கும் முழுமையாக கிரகணம் பிடித்துள்ளது. நினைவின் மூலமாகத் தான் கிரகணம் இறங்கும் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். எந்த ஒரு பாவமும் செய்யாதீர்கள். தேக அபிமானத்தில் வருவது முதல் நம்பர் பாவம் ஆகும். இதுவோ கொடிய பாவமாகும். குழந்தைகளுக்கு இந்த ஒரு பிறவிக்காக மட்டுமே அறிவுரை கிடைக்கிறது. ஏனெனில் இப்பொழுது உலகம் மாறப்போகிறது. பிறகு இப்பேர்ப்பட்ட அறிவுரை ஒரு பொழுதும் கிடைப்பதில்லை. சட்டவியல் ஆகியவற்றின் கல்வியோ நீங்கள் ஜன்ம ஜன்மாந்திரமாக பெற்றுக் கொண்டே வந்துள்ளீர்கள். கல்விக்கூடங்கள் ஆகியவை எப்பொழுதும் இருக்கவே இருக்கின்றன. இந்த ஞானம் ஒரு முறை கிடைத்து விட்டது என்றால் அவ்வளவு தான். ஞானக் கடலான தந்தை ஒரே ஒரு முறை தான் வருகிறார். அவர் தன்னைப் பற்றியும் தனது படைப்பின் முதல் இடை கடை பற்றியும் முழு ஞானம் அளிக்கிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் பாகம் ஏற்று நடிப்பவர்கள் ஆவீர்கள் என்று தந்தை எவ்வளவு எளிதாகப் புரிய வைக்கிறார். ஆத்மாக்கள் தங்களுடைய வீட்டிலிருந்து வந்து இங்கு தத்தம் பாகத்தை ஏற்று நடிக்கிறார்கள். அதற்கு முக்தி தாமம் என்று கூறப்படுகிறது. சொர்க்கம் என்பது ஜீவன் முக்தி ஆகும். இங்கு வாழ்க்கை பந்தனம் ஆகும். இந்த வார்த்தைகளைக் கூட சரியான முறையில் நினைவு செய்ய வேண்டும். மோட்சம் ஒரு பொழுதும் ஏற்படுவது இல்லை. மனிதர்கள் மோட்சம் கிடைக்க வேண்டும் அல்லது வருவது போவதிலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் பாகம் ஏற்று நடிப்பதிலிருந்தோ வெளிவர முடியாது. இது அனாதி ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டுள்ள நாடகமாகும். உலக சரித்திரம் மற்றும் பூகோளம் மிகச் சரியாக திரும்ப நடை பெறுகிறது. சத்யுகத்தில் அதே தேவதைகள் வருவார்கள். பிறகு இஸ்லாமியர்கள், பௌத்தியர்கள் எல்லோரும் வருவார்கள். இந்த மனித விருட்சம் அமைந்து விடும். இதனுடைய விதை மேலே உள்ளது. தந்தை மனித சிருஷ்டியின் விதை ரூபம் ஆவார். மனித சிருஷ்டி இருக்கவே இருக்கிறது. ஆனால் சத்யுகத்தில் மிகவும் சிறியதாக இருக்கும்.பிறகு மெல்ல மெல்ல நிறைய விருத்தி ஆகி விடுகிறது. நல்லது, பிறகு சிறியதாக எப்படி ஆகும்! தந்தை வந்து (பதீத) தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக ஆக்குகிறார். மிகக் குறைவானவர்களே பாவனமாக ஆகிறார்கள். கோடியில் ஒருவர் வெளிப்படுகிறார்கள். அரைகல்பம் மிகவும் குறைவாக இருப்பார்கள். அரைகல்பத்தில் எவ்வளவு விருத்தி ஆகிறது. எனவே எல்லாவற்றையும் விட அதிகமான சம்பிரதாயம் தேவதைகளினுடையதாக இருக்க வேண்டும்.

 

ஏனெனில் முதன் முதலாக இவர்கள் வருகிறார்கள். ஆனால் வெவ்வேறு தர்மங்களில் சென்று விடுகிறார்கள். ஏனெனில் தந்தையையே மறந்து விட்டுள்ளார்கள். இது ஒரே ஒரு தவறினுடைய விளையாட்டு ஆகும். மறப்பதினால் ஏழையாகி விடுகிறார்கள். மறதி ஏற்பட்டு ஒரேயடியாக மறந்து விடுகிறார்கள். பத்தி கூட முதலில் ஒருவருக்கு செய்கிறார்கள். ஏனெனில் அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் ஒருவரே ஆவார். பிறகு இரண்டாவதாக மற்றவர் களுக்கும் ஏன் பக்தி செய்ய வேண்டும். இந்த இலட்சுமி நாராயணரைக் கூட உருவாக்குபவர் சிவன் ஆவார் அல்லவா? கிருஷ்ணர் எப்படி அமைப்பவராக இருக்க முடியும்? இது நடக்க முடியாதது இ.ராஜ யோகத்தைக் கற்பிப்பவர் எப்படி கிருஷ்ணராக இருக்க முடியும்? அவரோ சத்யுகத்தின் இளவரசர் ஆவார். எவ்வளவு தவறு செய்து விட்டுள்ளார்கள். புத்தியில் பதிவதே இல்லை. என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். ஏதாவது சொத்து பற்றிய சண்டைகள் இருந்தது என்றால் அவற்றை முடித்து விடுங்கள். சண்டை செய்து செய்து உயிர் கூட பிரிந்து போய் விடும். இவர் (பிரம்மா) வியாபாரத்தை விட்டு விட்டார். ஆனால் சண்டை செய்தாரா என்ன என்று தந்தை புரிய வைக்கிறார். தனது பங்கு குறைவாக கிடைத்தது என்றால் பரவாயில்லை விட்டு விடலாம் - அதற்குப் பதிலாக எவ்வளவு அரசாட்சி கிடைத்து விட்டது. எனக்கு விநாசம் மற்றும் ராஜ்யத்தின் சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்) கிடைத்ததினால் எவ்வளவு குஷி ஏற்பட்டது என்று பாபா கூறுகிறார். எனக்கு உலக அரசாட்சி கிடைக்கப் போகிறது. எனவே இவை எல்லாம் என்ன? யாராவது பசியால் இறப்பார்களா என்ன? பைசா இல்லாதவர்கள் கூட வயிற்றை நிரப்புகிறார்கள் அல்லவா? மம்மா ஏதாவது எடுத்து வந்தாரா என்ன? எவ்வளவு மம்மாவை நினைவு செய்கிறார்கள். நினைவு செய்கிறீர்கள் என்பது சரிதான். ஆனால் இப்பொழுது மம்மாவின் பெயர் ரூபத்தை நினைவு செய்யக் கூடாது என்று தந்தை கூறுகிறார். நான் கூட அவரைப் போல தாரணை செய்ய வேண்டும். நாம் கூட மம்மா போல நல்லவராக ஆகி சிம்மாசனத்திற்கு உரியவராக வேண்டும். மம்மாவிற்கு மகிமை செய்வதால் மட்டுமே அவ்வாறு ஆகி விடுவார்களா என்ன? தந்தையோ என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார்.

 

நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். மம்மாவைப் போல ஞானம் கூற வேண்டும். நீங்களும் அது போல மகிமைக்குத் தகுதியுடையவராக ஆகிக் காண்பித்தீர்கள் என்றால் தான் மம்மாவின் மகிமைக்கு நிரூபணமாகும். மம்மா மம்மா என்று கூறுவதால் மட்டுமே வயிறு நிரம்பாது. இன்னுமே வயிறு முதுகோடு ஒட்டிப் போய் விடும்.சிவபாபாவை நினைவு செய்வதால் வயிறு நிரம்பும்.இந்த தாதாவை நினைவு செய்வதால் கூட வயிறு நிரம்பாது. நினைவு ஒருவரை செய்ய வேண்டும். அந்த ஒருவருக்குத் தான் அர்ப்பணமாக வேண்டும். சேவை செய்வதற்கான வழிமுறைகளை இயற்ற வேண்டும். எப்பொழுதும் வாயிலிருந்து மலர்கள் வெளிப்பட வேண்டும். முட்கள் அல்லது கற்கள் வெளிப்படுகின்றன என்றால் கல்லாகவே இருந்து விடுவார்கள். மிகவும் நல்ல குணங்களை தாரணை செய்ய வேண்டும். இங்கேயே நீங்கள் சர்வகுண சம்பன்னராக ஆக வேண்டும். தண்டனை வாங்கினீர்கள் என்றால் பிறகு நல்ல பதவி கிடைக்காது. இங்கு குழந்தைகள் தந்தையிடம் நேரிடையாகக் கேட்பதற்கு வருகிறார்கள். இங்கு பாபா புதுப்புது போதை ஏற்றுகிறார். சென்டரில் போதை ஏறுகிறது. பிறகு வீட்டிற்குச் சென்றார்கள், உறவினர்களைப்பார்த்தார்கள் என்றால் முடிந்து விட்டது. இங்கு நாங்கள் பாபாவின் குடும்பத்தில் வந்துள்ளோம் என்று புரிந்துள்ளீர்கள். அங்கு அசுர குடும்பம் இருக்கும். எவ்வளவு சண்டைகள் இருக்கும். அங்கு சென்ற உடனேயே குப்பைக் கூளத்தில் போய் விழுகிறார்கள். இங்கோ நீங்கள் தந்தையை மறக்கக் கூடாது. உலகத்தில் யாருக்குமே உண்மையான அமைதி கிடைக்க முடியாது. தூய்மை, சுகம், சாந்தி மற்றும் செல்வத்தை தந்தையைத் தவிர வேறு யாருமே அளிக்க முடியாது. அப்படியின்றி தந்தை ஆயுஷ்வான் பவ, புத்திவான் பவ (நீண்ட ஆயுள் உடையவர் ஆவீராக, மக்கட் பேறு உடையவர் ஆவீராக) என்று ஆசீர்வாதம் புரிகிறார் என்பதல்ல. இல்லை. ஆசீர்வாதத்தினால் எதுவும் கிடைப்பதில்லை. இது மனிதர்களின் தவறாகும். சந்நியாசிகள் கூட ஆசீர்வாதம் அளிக்க முடியாது. இன்று ஆசீர்வாதம் கொடுப்பார்கள். நாளைக்கு அவர்களே இறந்து விடுவார்கள். போப் கூட பாருங்கள் எத்தனை பேர் வந்து சென்றுள்ளார்கள். குருக்களினுடைய பீடம் கூட நடக்கிறது. சிறிய வயதில் குரு இறந்து விட்டார் என்றால் மற்றொருவரை குருவாக ஆக்கி விடுவார்கள் அல்லது சிறிய சீடரை குருவாக ஆக்கி விடுவார்கள். இங்கு பாப்தாதா அளிப்பவர் ஆவார். இவர் வாங்கிக் கொண்டு என்ன செய்வார். தந்தை நிராகார மானவர் ஆவார் அல்லவா? பெறுபவர் சாகாரமானவர் ஆவார். இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். நாம் சிவபாபாவிற்குக் கொடுக் கிறோம் என்று ஒரு பொழுதும் கூறக் கூடாது. இல்லை .நாம் சிவபாபாவிடமிருந்து கோடி பெற்றோம். கொடுக்கவில்லை. பாபா உங்களுக்கு கணக்கற்றவைகளைக் கொடுக்கிறார். சிவபாபாவோ வள்ளல் ஆவார். அவருக்கு நீங்கள் எப்படி கொடுப்பீர்கள். நான் கொடுத்தேன் என்று நினைப்பதால் தேக அபிமானம் வந்து விடுகிறது. நாம் சிவபாபாவிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். பாபாவிடம் ஏராளமான குழந்தைகள் வருகிறார்கள். வந்து இருக்கிறார்கள் என்றால் பின் ஏற்பாடு தேவை அல்லவா? அதாவது நீங்கள் உங்களுக்காகவே கொடுக்கிறீர்கள். தனக்கென்று அவர் ஏதாவது செய்ய வேண்டுமா என்ன? ராஜதானி கூட உங்களுக்கு கொடுக்கிறார். எனவே செய்வதும் நீங்கள் தான். உங்களை என்னை விடவும் உயர்ந்தவராக ஆக்குகிறேன். அப்பேர்ப்பட்ட தந்தையை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். அரைகல்பம் பூஜைக்குரியவர்கள், அரை கல்பம் பூசாரி. பூஜைக்குரியவராகி விடும் பொழுது துக்கதாமத்திற்கு அதிபதியாகி விடுகிறீர்கள். தந்தை எப்பொழுது வந்து சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியாது. இந்த விஷயங்களை சங்கமயுக பிராமணர்களாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். பாபா எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கிறார். பிறகும் புத்தியில் பதிவதில்லை. எப்படி பாபா புரிய வைக்கிறாரோ அதே போல யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும். முயற்சி செய்து இது போல சிறந்தவர் ஆக வேண்டும். தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். குழந்தைகளிடம் மிகவும் நல்ல தெய்வீக குணங்கள் இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் கோபிக்கக் கூடாது. முகத்தை பிணம் போல ஆக்கக் கூடாது. அப்பேர்ப்பட்ட எந்த ஒரு காரியத்தையும் இப்பொழுது செய்யாதீர்கள் என்று தந்தை கூறுகிறார். சண்டிகாதேவிக்கு கூட திருவிழா நடக்கிறது. யார் தந்தையின் வழிப்படி நடப்பதில்லையோ அவருக்கு சண்டிகா என்று கூறுவார்கள். அவர்கள் துக்கம் கொடுக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட சண்டிகைகளுக்கும் கூட திருவிழா நடக்கிறது. மனிதர்கள் அஞ்ஞானியாவார்கள் அல்லவா? பொருள் புரிந்திருக் கிறார்களா என்ன? யாரிடமுமே பலம் இல்லை. அவர்களோ உள்ளுக்குள் காலியாக இருக்கிறார்கள். நீங்கள் பாபாவை நல்ல முறையில் நினைவு செய்கிறீர்கள். எனவே தந்தை மூலமாக உங்களுக்கு பலம் கிடைக்கிறது. ஆனால் இங்கு இருக்கும் பொழுது கூட அநேகருடைய புத்தி வெளியில் அலைந்து கொண்டு இருக்கிறது.எனவே பாபா கூறுகிறார் - இங்கு படங்களுக்கு முன்னால் அமர்ந்து விடுங்கள். அப்பொழுது உங்களுடைய புத்தி இதில் மும்முரமாக இருக்கும். காலச் சக்கரம் பற்றி, ஏணிப்படி பற்றி எவருக்கேணும் புரிய வைக்கும் பொழுது சத்யுகத்தில் மிகவும் குறைவான மனிதர்கள் இருப்பார்கள் என்று கூறுங்கள். இப்பொழுது ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள். நான் பிரம்மாவின் மூலமாக புதிய உலகத்தின் ஸ்தாபனை செய்விக்கிறேன் மற்றும் பழைய உலகத்தின் விநாசம் செய்விக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இது போல அமர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். நமது வாயை நாமாகவே திறக்க முடியும். உள்ளுக்குள் என்ன நடக்கிறதோ அது வெளியில் கூட வர வேண்டும். நீங்கள் ஊமை ஒன்றும் இல்லை தானே. வீட்டில் அடித்துக் கொள்வதற்கு வாய் திறக்கிறது.ஞானம் கூறுவதற்கு திறப்பதில்லையா என்ன? படங்கள் எல்லோருக்கும் கிடைக்கக் கூடும். நமது வீட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற தைரியம் கொள்ள வேண்டும். உங்களது அறையை படங்களால் அலங்கரித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் மும்முரமாக இருப்பீர்கள். இது உங்களுடைய நூலகம் போலாகி விடும். மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காக படங்கள் ஆகியவற்றை மாட்டி வைக்க வேண்டும். யார் வந்தாலும் அவர் களுக்குப் புரிய வையுங்கள். உங்களால் நிறைய சேவை செய்ய முடியும். சிறிதளவு கூட கேட்டாலும் பிரஜைகளாக ஆகி விடுவார்கள். பாபா இவ்வளவு முன்னேற்றத்திற்கான யுக்திகளைக் கூறுகிறார். தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய பாவங்கள் அழியும். மற்றபடி கங்கையில் போய் ஒரேயடியாக மூழ்கி விட்டால் கூட விகர்மங்கள் விநாசம் ஆகாது. இவை எல்லாம் குருட்டு நம்பிக்கை ஆகும். ஹரிதுவாரத்தின் மொத்த அசுத்தமும் போய் கங்கையில் விழுகிறது. கடலில் எவ்வளவு அசுத்தம் பாய்கிறது. நதிகளில் கூட குப்பைகள் விழுந்துக் கொண்டே இருக்கிறது. அதன் மூலமாக எப்படி பாவனமாக ஆக முடியும். மாயை அனைவரையும் முற்றிலுமே அறிவிலியாக ஆக்கி விட்டுள்ளது. என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை குழந்தைகளுக்குத் தான் கூறுகிறார். ஹே பதீத பாவனரே வாருங்கள் என்று உங்களுடைய ஆத்மா அழைக்கிறது அல்லவா? அவர் உங்களுடைய சரீரத்தின் லௌகீக தந்தையாக இருக்கிறார். பதீத பாவனர் ஒரே ஒரு தந்தை ஆவார். இப்பொழுது நாம் அந்த பாவனமாக ஆக்கும் தந்தையை நினைவு செய்கிறோம்.ஜீவன் முக்தி அளிக்கும் வள்ளல் ஒரே ஒருவர் ஆவார்.வேறு யாரும் கிடையாது. இவ்வளவு எளிதான விஷயத்தின் பொருளைக் கூட யாருமே புரிந்து கொள்வதில்லை. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. வாயிலிருந்து ஞான ரத்தினங்களை வெளிப்படுத்துவதற்கான பயிற்சி செய்ய வேண்டும். ஒரு பொழுதும் வாயிலிருந்து முள் அல்லது கற்களை வெளிப்டுத்தக் கூடாது. தனக்கு மற்றும் வீட்டிற்கு நன்மை செய்வதற்காக வீட்டில் படங்களால் அலங்கரிக்க வேண்டும். அதன் மீது ஞான சிந்தனை செய்து மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். மும்முரமாக இருக்க வேண்டும்.

 

2. தந்தையிடம் ஆசீர்வாதம் வேண்டுவதற்குப் பதிலாக அவரது சிறந்த வழிப்படி நடக்க வேண்டும். சிவபாபா தான் நன்றிக்குரியவர். எனவே அவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். நான் பாபாவிற்கு இவ்வளவு கொடுத்தேன் என்ற அபிமானம் வரக் கூடாது.

 

வரதானம்:

உலகிற்கு நன்மை செய்பவர் என்ற உயர்ந்த நிலையில் நிலைத்திருந்து விநாச லீலைகளை பார்க்கக் கூடிய சாட்சி பார்வையாளர் ஆகுக.

 

கடைசி விநாச லீலைகளை பார்ப்பதற்கு உலகிற்கு நன்மை செய்பவர் என்ற உயர்ந்த நிலை தேவை. அந்த நிலையில் நிலைத்திருப்பதன் மூலம் தேகத்தின் அனைத்து ஈர்ப்புகளிலிருந்து அதாவது சம்பந்தம், பொருட்கள், சன்ஸ்காரம், இயற்கையின் குழப்பங்களின் ஈர்ப்புகள் அனைத்தும் சமாப்தி ஆகிவிடும். இப்படிப்பட்ட நிலை ஏற்படும் போது தான் சாட்சி பார்வையாளர் ஆகி உயர்ந்த நிலையில் நிலைத்திருந்து அமைதியின், சக்தியின் கிரணங்களை அனைத்து ஆத்மாக்களுக்கும் கொடுக்க முடியும்.

 

சுலோகன்:

ஈஸ்வரிய சக்திகளினால் பலசாலிகளாக ஆகும் போது மாயையின் வேகம் சமாப்தி ஆகிவிடும்.

 

ஓம்சாந்தி