18.10.2020 காலை முரளி ஓம் சாந்தி அவ்யக்த
பாப்தாதா,
ரிவைஸ் 07.04.1986 மதுபன்
தபஸ்வி மூர்த்தி, தியாக மூர்த்தி
மற்றும் விதாதாவாக (உலகத்தை உருவாக்குபவர்) இருப்பவரே விஷ்வ
இராஜ்ய அதிகாரி
இன்று ஆன்மிக விளக்கு, தன்னுடைய
ஆன்மிக விட்டில் பூச்சிகளை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்.
அனைத்து ஆன்மிக விட்டில் பூச்சிகள், விளக்குடன் சந்திப்பை
கொண்டாடு வதற்காக நாலாபுறங்களி-ருந்தும் வந்தடைந்து விட்டீர்கள்.
ஆன்மிக விட்டில் பூச்சிகளின் அன்பை ஆன்மிக விளக்கு அறியும்
மற்றும் ஆன்மிக விட்டில் பூச்சிகள் அறிவார்கள். அனைத்து
குழந்தைகளுடைய உள்ளத்தின் அன்பானது கவர்ச்சி செய்து இந்த
அலௌகீக சந்திப்பிற்கு அனைவரையும் அழைத்து வந்துவிட்டது என்று
பாப்தாதா அறிந்து இருக்கின்றார் கள். இந்த அலௌகீக சந்திப்பை
அலௌகீக குழந்தைகள் அறிவார்கள் மற்றும் தந்தை அறிவார்.
உலகத்தினர் இந்த சந்திப்பை அறியாத வண்ணம் குப்தமாக நடைபெறுகிறது.
ஆன்மிக சந்திப்பிற்காக சென்று கொண்டு இருக்கின்றோம் என்று
ஒருவேளை யாரிடமாவது கூறினீர்கள் என்றால் அவர்கள் என்ன புரிந்து
கொள்வார்கள்? இந்த சந்திப்பானது எப்பொழுதும் செல்வந்தர்
ஆக்கக்கூடிய சந்திப்பு ஆகும். இந்த பரமாத்ம சந்திப்பானது சர்வ
பிராப்தி சொரூப மானவராக ஆக்கக்கூடியது. பாப்தாதா அனைத்து
குழந்தைகளுடைய உள்ளத்தின் ஊக்கம், உற்சாகத்தைப் பார்த்துக்
கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொருவருடைய மனமும் அன்புக் கட-ன்
அலைகளில் ஆடிக்கொண்டு இருக்கிறது. அன்பானது தடைகளை
அழிக்கக்கூடியவராக ஆக்கி மதுபன் நிவாசியாக ஆக்கிவிட்டது என்பதை
பாப்தாதா பார்த்துக் கொண்டும் இருக்கின்றார்கள் மற்றும்
அறிந்தும் இருக்கின்றார்கள். அனைவருடைய அனைத்து விசயங்களும்
அன்பில் முடிவடைந்துவிட்டது. எவர் ரெடியினுடைய (எப்பொழுதும்
தயார் நிலையில் இருக்கின்ற) ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.
எவர்ரெடி ஆகிவிட்டீர்கள் அல்லவா! இந்த இனிமையான நாடகத்தில்
இனிமையான நடிப்பைப் பார்த்து பாப்தாதா மற்றும் பிராமண
குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றார்கள். அன்பு
இருக்கிறது என்றால் அனைத்து விசயங்களும் சுலபமான தாகவும்
தோன்றும் மற்றும் அன்பானதாகவும் தோன்றும். என்ன நாடகம் உருவாகி
யுள்ளதோ, அது, ஆஹா டிராமா ஆஹா! எத்தனை முறை இவ்வாறு ஓடி ஓடி
வந்திருக் கின்றீர்கள். இரயி-ல் வந்திருக்கின்றீர்களா அல்லது
சிறகுகளால் பறந்து வந்திருக்கின்றீர்களா? எங்கு உள்ளம் உள்ளதோ,
அங்கு சாத்தியமாக முடியாதது கூட சாத்தியம் ஆகிவிடுகிறது என்று
இதையே சொல்லப்படுகிறது. அன்பு சொரூபம் காண்பிக்கப்பட்டது,
இப்பொழுது அடுத்து என்ன செய்ய வேண்டும், இதுவரை என்ன நடந்ததோ,
அது சிரேஷ்டமானதாக இருக்கிறது மற்றும் சிரேஷ்டமானதாக இருக்கும்.
இப்பொழுது சமயத்தின் அனுசாரம்
சர்வ சினேகி, சர்வ சிரேஷ்ட குழந்தைகளிடமிருந்து பாப்தாதா
விசேசமாக வேறு என்ன விரும்புகின்றார்? முழு சீசனிலும்
அவ்வப்போது சமிக்ஞை கொடுக்கின்றார்கள். இப்பொழுது அந்த
சமிக்ஞைகளை பிரத்யட்ச ரூபத்தில் பார்ப்பதற்கான சமயம் வந்து
கொண்டிருக்கிறது. நீங்கள் அன்பான ஆத்மாக்கள் ஆவீர்கள், சகயோகி
ஆத்மாக் கள் ஆவீர்கள், சேவாதாரி ஆத்மாக்களும் ஆவீர்கள்.
இப்பொழுது மகா தபஸ்வி ஆத்மாக்கள் ஆகுங்கள். தங்களுடைய குழு
சொரூபத்தின் தபஸ்யாவின் ஆன்மிக ஜூவாலையினால் அனைத்து
ஆத்மாக்களையும் துக்கம் அசாந்தியிலிருந்து விடுவிக்கும் மகான்
காரியத்தை செய்யும் சமயம் இதுவாகும். ஒருபுறம் இரத்த ஆறு ஓடும்
விளையாட்டின் அலை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அனைத்து
ஆத்மாக்களும் தங்களை ஆதரவற்றவர்களாக அனுபவம் செய்து கொண்டு
இருக்கின்றனர், இத்தகைய சமயத்தில் ஆதரவின் அனுபவத்தை செய்விக்க
நிமித்தமானவர்கள் மகா தபஸ்வி ஆத்மாக்களாகிய நீங்கள் ஆவீர்கள்.
நாலாபுறங்களிலும் இந்த தபஸ்வி சொரூபம் மூலம் ஆத்மாக்களுக்கு
ஆன்மிக அமைதியின் அனுபவத்தை செய்விக்க வேண்டும். முழு
விஷ்வத்தின் ஆத்மாக்கள் இயற்கையினால், வாயு மண்டலத்தால், மனித
ஆத்மாக்களால், தங்களது மனதின் பலவீனங்களால், உடலால்
நிம்மதியற்று உள்ளனர். அத்தகைய ஆத்மாக்களுக்கு சுகமான அமைதியான
ஸ்திதியை ஒரு வினாடி அனுபவம் செய்வித்தீர்களானால் கூட
உங்களுக்கு உள்ளத்தி-ருந்து அடிக்கடி நன்றி சொல்வார்கள்.
நிகழ்கால சமயத்தில் குழுவாக ஒருமித்த ரூபத்தில் ஜூவாலா
சொரூபத்தின் அவசியம் உள்ளது. இப்பொழுது விதாதாவின் குழந்தைகள்
விதாதா சொரூபத்தில் நிலைத்திருந்து, ஒவ்வொரு நேரமும் கொடுத்துக்
கொண்டே செல்லுங்கள். துண்டிக்கப்படாத மகான் நங்கூரம் போடுங்கள்.
ஏனெனில், இராயல் பிச்சைக்காரர்கள் அனேகர் உள்ளனர். பணம் கேட்டு
யாசிப்பவர்கள் மட்டும் யாசகர்கள் அல்ல. ஆனால், மனதால்
யாசிப்பவர்கள் அனேக விதமாக உள்ளனர். அபிராப்தியான ஆத்மாக்கள்,
ஒரு துளி பிராப்தியின் தாகத்துடன் அனேகர் உள்ளனர். ஆகையால்,
இப்பொழுது குழுவாக ஒருமித்த ரூபத்தில் விதாதா நிலையின் அலையைப்
பரப்புங்கள். எந்த பொக்கிசத்தை சேமிப்பு செய்து
இருக்கின்றீர்களோ, அதை மாஸ்டர் விதாதாவாகி எந்தளவு கொடுத்து
கொண்டே செல்வீர்களோ, அந்தளவு நிறைந்து கொண்டே போகும். எவ்வளவு
கேட்டு இருக்கின்றீர்கள்! இப்பொழுது செய்வதற்கான சமயம் ஆகும்.
தபஸ்வி மூர்த்தி என்றால் தபஸ்யா மூலம் சாந்தி, சக்தியின்
கிரணங்களை நாலாபுறங்களிலும் பரவி கொண்டிருப்பதாக அனுபவம்
செய்வது என்று அர்த்தம். சுயம் தான் மட்டும் நினைவு சொரூபமாகி
சக்தி சேணையுடன் சந்திப்பு செய்வது என்பது வேறு. ஆனால், தபஸ்வி
சொரூபமானது பிறருக்குக் கொடுக்க கூடிய சொரூபமாகும். எவ்வாறு
சூரியன் உலகிற்கு வெளிச்சத்தினுடைய மற்றும் அநேக அழியக்கூடிய
பிராப்திகளின் அனுபவத்தை செய்விக் கின்றதோ, அதுபோன்று மகான்
தபஸ்வி ரூபத்தின் மூலம் பிராப்தியின் கிரணங்களுடைய அனுபவத்தை
செய்வித்திடுங்கள். இதற்காக முத-ல் சேமிப்பு கணக்கை
அதிகரித்திடுங்கள். நினைவின் மூலம் மற்றும் ஞான சிந்தனை மூலம்
தன்னை சிரேஷ்டமாக ஆக்கிவிட்டேன், மாயையை வென்றவராக,
வெற்றியாளராக தன்னை ஆக்கிவிட்டேன் என்று நினைக்காதீர்கள். இதில்
குஷி அடைந்துவிட வேண்டாம். ஆனால், அனைத்து பொக்கிசங்களையும்
முழு நாளும் எத்தனை பேருக்கு விதாதாவாகி அளித்தீர்கள்? அனைத்து
பொக்கிசங்களையும் ஒவ்வொரு நாளும் காரியத்தில் ஈடுபடுத்தினீர்களா?
அல்லது சேமிப்பை மட்டும் பார்த்து குஷி அடைந்து கொண்டு
இருக்கின்றீர்களா? குஷி என்ற பொக்கிசம், சாந்தி என்ற பொக்கிசம்,
சக்திகள் என்ற பொக்கிசம், ஞானம் என்ற பொக்கிசம், குணங்கள் என்ற
பொக்கிசம், சகயோகம் கொடுக்கும் பொக்கிசம் ஆகியவற்றை எவ்வளவு
பிறருக்குக் கொடுத்து இருக்கின்றேன் அதாவது எவ்வளவு அதிகரித்து
இருக்கின்றேன் என்ற சார்ட் இப்பொழுது வைத்திடுங்கள். இதன் மூலம்
தினமும் எழுதும் பொதுவான சார்ட் தானாகவே சிரேஷ்டமானதாக
ஆகிவிடும். இப்பொழுது என்ன சார்ட் வைக்க வேண்டும் என்பது
புரிந்ததா? விஷ்வ கல்யாணகாரி ஆகுவது தபஸ்வி சொரூபத்தின் சார்ட்
ஆகும். எனவே, எத்தனை பேருக்கு நன்மை செய்தீர்கள்? சுயத்திற்கு
நன்மை செய்வதிலேயே சமயம் கடந்து கொண்டு இருக்கிறதா? சுயத்திற்கு
நன்மை செய்வதற்கான சமயம் அதிகம் கடந்து விட்டது. இப்பொழுது
விதாதா ஆகுவதற்கான சமயம் வந்துவிட்டது. ஆகையினால், பாப்தாதா
மீண்டும் சமயத்தின் சமிக்ஞை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருவேளை, இப்பொழுதுவரை கூட விதாதா நிலையின் அனுபவம் செய்யவில்லை
என்றால் அநேக பிறவிகள் விஷ்வ இராஜ்ய அதிகாரி ஆகுவதற்கான
பத்மாபதம் பாக்கியத்தை அடைய முடியாது, ஏனென்றால், விஷ்வ இராஜன்
விஷ்வத்தின் தாய், தந்தை விதாதாவாக இருப்பார்கள். இப்போதைய
விதாதா நிலையின் சமஸ்காரம் அநேக பிறவிகளுக்குப் பிராப்தியை
அடைய வைத்து கொண்டே இருக்கும். ஒருவேளை, இப்போது வரை பெறக்
கூடிய சமஸ்காரம் ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்தால் கூட அதாவது
பெயர் பெற வேண்டும், மதிப்பு அடைய வேண்டும் அல்லது ஏதாவதொரு
விதமான பெறக்கூடிய சமஸ்காரம் இருந்தால் கூட அது விதாதா ஆகவிடாது.
தபஸ்யா சொரூபம் என்றால்
பெறக்கூடிய சமஸ்காரத்தின் தியாக மூர்த்தி நிலையாகும். இந்த
எல்லைக்குப்பட்ட பெறக்கூடிய நிலையினாது தியாக மூர்த்தி, தபஸ்வி
மூர்த்தி ஆக விடாது. ஆகையினால், தபஸ்வி மூர்த்தி என்றால்
எல்லைக்குப்பட்ட ஆசை என்றால் என்ன வென்று அறியாத ரூபம் ஆகும்.
யார் பெறுவதற்கான சங்கல்பம் செய்கின்றார்களோ, அவர்கள்
அல்பகாலத்திற்காக பெறுகின்றார்கள், ஆனால், சதா காலத்திற்காக
இழக்கின்றார்கள். ஆகையினால், பாப்தாதா அடிக்கடி இந்த
விஷயத்திற்கான சமிக்ஞை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். தபஸ்வி
ரூபத்தில், இந்த அல்பகால ஆசையே விசேஷமான தடை ரூபமாக உள்ளது.
ஆகையினால், இப்பொழுது விசேஷமாக தபஸ்யாவின் பயிற்சி செய்ய
வேண்டும். சமம் ஆவதற்கான இந்த சான்று அளிக்க வேண்டும்.
அன்பிற்கான சான்று அளித்துவிட்டீர்கள், இது மகிழ்ச்சியான விஷயம்.
இப்பொழுது தபஸ்வி மூர்த்தி ஆவதற்கான சான்று அளித் திடுங்கள்.
புரிந்ததா? பலவகையான சமஸ்காரங்கள் இருக்கும்போதிலும் விதாதா
நிலையின் சமஸ்காரம் பிற சமஸ்காரங்களை அமிழ்த்தி விடும். எனவே,
இப்பொழுது இந்த சமஸ்காரத்தை வெளிக்கொணருங்கள். எவ்வாறு
மதுவனத்திற்கு ஓடோடி வந்து சேர்ந்துவிட்டீர்களோ, அதுபோன்று
தபஸ்வி ஸ்திதியின் இலக்கை நோக்கி ஓடுங்கள். நல்லது, உங்களுக்கு
நல்வரவு. இப்பொழுது விநாசம் ஆகிவிடபோவது போல் அனைவரும்
ஓடிவிட்டனர். என்ன செய்தார்களோ, என்ன நடந்ததோ அது
பாப்தாதாவிற்கு பிடித்தமானதாகவே உள்ளது. ஏனெனில், குழந்தைகள்
அன்பிற்குரியவர்களாக இருக்கிறார்கள்.. ஒவ்வொருவரும் நாம் சென்று
கொண்டு இருக்கின்றோம் என்று நினைக்கிறார்கள். ஆனால்,
மற்றவர்களும் கூட வந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதை
யோசிக்கவில்லை. உண்மையான கும்பமேளா இங்கு நடந்தது. அனைவரும்
இறுதியான சந்திப்பு செய்வதற்காக, இறுதியான முழுக்கு போடு
வதற்காக வந்திருக்கின்றீர்கள். அனைவரும் சென்று கொண்டு
இருக்கின்றார்கள் ஆதலால், சந்திப்பின் விதி எவ்வாறு இருக்கும்
என்று யோசித்தீர்களா! இந்த தன்னுணர்வில் இருந்தும்
கடந்துவிட்டீர்களா! இடத்தை பார்க்க வில்லை, முன்பதிவை
பார்க்கவில்லை. இனிமேல் ஒருபோதும் முன்பதிவு செய்ய முடியவில்லை
என்ற சாக்குபோக்கு சொல்லமுடியாது. நாடகத் தில் இது கூட ஒரு
ஒத்திகையாக ஆகிவிட்டது. சங்கமயுகத்தில் நம்முடைய இராஜ்யம்
கிடையாது. சுயஇராஜ்யம் உள்ளது, ஆனால், நிலத்தின் மீது இராஜ்யம்
கிடையாது, பாப்தாதா விற்கு அவர்களுக்கென்ற இரதம் கிடையாது. இது
அந்நிய உடல் ஆகும். ஆகையினால், சமயம் அனுசாரம் இந்த சீசன் புது
விதியை ஆரம்பம் செய்வதற்கான சீசன் ஆகிவிட்டது. இங்கேயோ,
தண்ணீருக்காகவும் யோசித்துக்கொண்டு இருக்கிறீர்கள், அங்கேயோ
அருவிகளில் குளிப்பீர்கள், யாரெல்லாம் வந்துள்ளீர்களோ, எத்தனை
பேர் வந்து இருக்கின்றீர்களோ, பாப்தாதா அன்பின் மறுமொழியாக
அன்போடு வரவேற்கின்றார்கள்.
இறுதித் தேர்விற்கு முன்னதாக
தயார் ஆகுவதற்காக இப்பொழுது விசேசமாக சமயம் கொடுக்கப்பட்டுள்ளது.
இறுதித் தேர்விற்கு முன்பு சமயம் கொடுப்பார்கள், விடுமுறை
கொடுப்பார்கள் அல்லவா. பாப்தாதா அநேக இரகசியங்களோடு இந்த
விசேசமான சமயம் கொடுத்து கொண்டு இருக்கின்றார்கள். சில
இரகசியங்கள் மறைமுகமானவை, சில இரகசியங்கள் வெளிப்படையானவை.
ஆனால், விசேசமாக ஒவ்வொருவரும் சதா புள்ளி வைக்க வேண்டும் அதாவது
முடிந்தபோன விசயங்களை முடித்துவிடுவதற்கான புள்ளி வைக்க
வேண்டும் என்ற கவனம் கொண்டு இருக்க வேண்டும். மேலும், பிந்து (புள்ளி
ரூபம்) ஸ்திதியில் நிலைத்திருந்து இராஜ்ய அதிகாரியாகி காரியம்
செய்ய வேண்டும். அனைத்து பொக்கிசங்களின் பிந்து நீங்கள்
அனைவருக்காகவும் விதாதாவாகி சிந்து (கடல்) ஆகி அனைவரையும்
நிறைந்த வராக ஆக்க வேண்டும். எனவே, பிந்து மற்றும் சிந்து ஆகிய
இந்த இரண்டு விசயங்களை விசேசமாக நினைவில் வைத்து சிரேஷ்டமான
சான்றிதழ் பெற ’ வேண்டும். எப்பொழுதும் சிரேஷ்ட சங்கல்பத்தின்
வெற்றியினால் முன்னேறிக் கொண்டேயிருக்க வேண்டும். பிந்து ஆக
வேண்டும், சிந்து ஆக வேண்டும் என்பதுவே அனைத்து
குழந்தைகளுக்காவும் வரதாதா அளிக்கும் வரதானமாகும். வரதானத்தைப்
பெறுவதற்காகவே ஓடோடி வந்துள்ளீர்கள் அல்லவா! இந்த வரதாதாவின்
வரதானத்தை நினைவில் வைக்க வேண்டும் நல்லது.
நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து
சிநேகி, சகயோகி குழந்தைகளுக்கு, சதா தந்தையின் கட்டளைப்படி
நடக்கும் ஆக்ஞாகாரி குழந்தைகளுக்கு, சதா பரந்த உள்ளம், பெரிய
உள்ளம் கொண்டிருக்கக்கூடிய, அனைவருக்கும் அனைத்து
பொக்கிசங்களையும் வழங்க கூடிய, மகான் புண்ணிய ஆத்ம
குழந்தைகளுக்கு, சதா தந்தைக்கு சமம் ஆகுவதற்கான ஊக்க
உற்சாகத்துடன் பறக்கும் கலையில் பறக்கக்கூடிய குழந்தைகளுக்கு
விதாதா, வரதாதா, அனைத்து பொக்கிசங்களின் கடலான பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
அவ்யக்த பாப்தாதா பார்ட்டிகளுடன்
சந்திப்பு
1. தங்களை பத்மாபதம் பாக்கியவான் என அனுபவம் செய்கின்றீர்களா!
ஏனெனில், கொடுக்கக்கூடிய தந்தை அந்தளவு கொடுக்கின்றார், அதனால்
ஒரு பிறவிக்கு பாக்கியவான் ஆகவே செய்கின்றீர்கள், ஆனால், அநேக
பிறவிகள் வரை இந்த அழிவற்ற பாக்கியம் தொடர்ந்து இருந்து கொண்டே
இருக்கும். இப்பேற்பட்ட அழிவற்ற பாக்கியத்தை எப்பொழுதாவது
கனவிலாவது நினைத்தது உண்டா! சாத்தியமாகாது என்று தோன்றியது
அல்லவா? ஆனால், இன்று சாத்தியம் ஆகிவிட்டது. எனவே, அத்தகைய
சிரேஷ்ட ஆத்மாக் கள் நாம் என்ற இந்த குஷி இருக்கின்றதா?
எப்பொழுதாவது ஏதாவது ஒரு சூழ்நிலையில் குஷி மறைந்துவிடவில்லை
தானே! ஏனெனில், தந்தை மூலம் குஷி என்ற பொக்கிசம் தினமும்
கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு பொருள் தினமும் கிடைக்கிறது
எனில் அது அதிகரிக்கும் அல்லவா. ஒருபொழுதும் குஷி குறைய
முடியாது. ஏனெனில், குஷிகளின் கடல் மூலம் கிடைத்துக் கொண்டே
இருக்கிறது, குறையாதது. ஒருபொழுதும் எந்த விசயத் தினுடைய
கவலையிலும் இருப்பவர்கள் அல்ல. சொத்து என்னவாகும்? பரிவாரம்
என்னவாகும்? இந்தக் கவலை கூட கிடையாது, கவலையற்றவர்கள் ஆவீர்கள்.
பழைய உலகம் என்ன வாகும்? பரிவர்த்தனை ஆகும் அல்லவா. பழைய
உலகத்தில் எவ்வளவு தான் சிரேஷ்டமானதாக இருந்தாலும் அனைத்தும்
பழையவையே, ஆகையினால், கவலையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். இன்று
இருக்கின்றோம், நாளை இருப்போமா, இருக்கமாட்டோமா தெரியவில்லை
என்ற இந்தக் கவலையும் இல்லை. என்ன நடக்குமோ, நல்லதே நடக்கும்.
பிராமணர்களுக்கு அனைத்தும் நல்லதே. கெட்டது எதுவும் இல்லை.
நீங்களோ ஏற்கெனவே இராஜாவாக இருக்கின்றீர்கள், இப்பொழுதும் இராஜா,
எதிர்காலத்திலும் கூட இராஜா. எப்பொழுதும் இராஜாவாக
இருக்கின்றீர்கள் என்றால் கவலை அற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள்
என்பதாகும். உங்களுடைய இராஜ்யம் அப்பேற்பட்டது, யாரும் அதை
பறிக்க முடியாது. எந்தத் துப்பாக்கியைக் கொண்டும் இராஜ்யத்தை
பறிக்க முடியாது. இந்தக் குஷி சதா இருக்க வேண்டும் மற்றும்
பிறருக்கும் கூட கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். பிறரையும் கூட
கவலையற்ற இராஜா ஆக்குங்கள் நல்லது.
2. சதா தங்களை தந்தையினுடைய நினைவின் குடைநிழலுக்குள்
இருக்கக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களாக அனுபவம் செய்கின்றீர்களா?
இந்த நினைவு என்ற குடைநிழல் அனைத்துத் தடைகளி-ருந்தும்
பாதுகாக்கிறது. எந்த விதமான தடையும் குடைநிழலுக்குள்
இருப்பவர்களிடம் வரமுடியாது. குடைநிழலுக்குள் இருப்பவர்கள்
நிச்சயிக்கப்பட்ட வெற்றி யாளர்கள் ஆவார்கள். இத்தகையவர்களாக
ஆகியிருக்கின்றீர்களா? குடைநிழ-ல் இருந்து ஒருவேளை சங்கல்பம்
என்ற கால் கூட வெளியே வைத்தாலும் மாயை சண்டை போடும். எந்த
விதமான சூழ்நிலை வந்தாலும் குடைநிழலுக்குள் இருப்பவர்களுக்கு
கடினத்திலும் கடினமான விசயம் கூட சுலபமானதாக ஆகிவிடும். மலை
போன்ற விசயங்கள் பஞ்சு போல் அனுபவம் ஆகும். இது குடை நிழ-ன்
அற்புதம் ஆகும். அத்தகைய குடைநிழல் கிடைக்கும்பொழுது என்ன
செய்ய வேண்டும்? அல்பகாலத்திற்கான எந்தக் கவர்ச்சியாகட்டும்,
ஆனால், (குடை நிழலுக்கு) வெளியில் வந்தால் முடிந்துவிட்டது
என்று அர்த்தம். ஆகை யினால், அல்பகால கவர்ச்சியையும் அறிந்து
இருக்கின்றீர்கள். இந்தக் கவர்ச்சியில் இருந்தும் எப்பொழுதும்
விலகி இருக்க வேண்டும். எல்லைக்குப்பட்ட பிராப்தி இந்த ஒரு
பிறவியில் முடிந்துவிடும். எல்லையற்ற பிராப்தி சதா கூடவே
இருக்கும். எனவே, எல்லையற்ற பிராப்தியை அடையக்கூடியவர்கள்
அதாவது குடை நிழ-ல் இருக்கக்கூடியவர்கள் விசேச ஆத்மாக்கள்
ஆவார்கள், சாதாரணமானவர்கள் அல்ல. இந்த நினைவு சதா காலத்திற்கும்
சக்திசா- ஆக்கிவிடும். யார் தேடிக் கண்டெடுக்கப்பட்டவர்களோ,
அவர்கள் எப்பொழுதும் குடை நிழலுக்கு உள்ளே இருப்பார்கள். நினைவு
தான் குடைநிழல் ஆகும். இந்தக் குடைநிழ-ல் இருந்து சங்கல்பம்
என்ற கால் மட்டும் வெளியில் வந்தால் கூட மாயை வந்துவிடும்.
இந்தக் குடை நிழல் மாயையை எதிரில் வரவிடாது. குடை நிழலுக்குள்
வருவதற்கான சக்தி மாயையிடம் கிடையாது. குழந்தை ஆவது என்றால்
குடைநிழ-ல் இருப்பது என்று அர்த்தம். சதா குழந்தை களை குடை
நிழலுக்குள் வைப்பது கூட தந்தையின் அன்பு ஆகும். செல்லக்
குழந்தைகள் ஆகிவிட்டீர்கள், குடைநிழல் கிடைத்துவிட்டது என்ற
இந்த விசேசமான வரதானத்தை நினைவில் வைக்க வேண்டும். இந்த வரதானம்
சதா முன்னேற்றிக் கொண்டே இருக்கும்.
விடைபெறும் சமயம்
அனைவரும் விழித்துக் கொண்டு
இருக்கின்றீர்கள். உங்களுடைய பக்தர்கள் கண் விழிக்கின்றார்கள்
என்றால் பக்தர்களுக்குக் கற்றுக் கொடுப்பவர்கள் இஷ்ட தேவதைகள்
தானே. இங்கே இஷ்ட தேவதைகள் கண் விழிக்கின்றீர்கள் ஆதலால்,
பக்தர்கள் பின்பற்றுகின்றார்கள். அனைவரும் கண் விழித்து
இருக்கின்றீர்கள் என்றால் தங்களது கணக்கில் வருமானத்தை சேமித்து
இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். எனவே, இன்றைய இரவு வருமானம்
செய்யும் சீசனுடைய இரவு ஆகிவிட்டது. எவ்வாறு வருமானம்
செய்வதற்கான சீசன் என்றால் அந்த சீசனில் கண் விழித்து
இருப்பார்கள். இது வருமானத்திற்கான சீசன் ஆகும், ஆகையால், கண்
விழித்தல் என்றால் சம்பாதித்தல் என்று அர்த்தம். ஒவ்வொருவரும்
அவரவர் சக்திக்கேற்ப சேமித்து இருக்கின்றீர்கள். மேலும்,
சேமித்தவற்றை மகாதானி ஆகி பிறருக்கும் கொடுத்துக் கொண்டே
இருங்கள். மேலும், தானும் அனேக பிறவிகளுக்கு சாப்பிட்டுக்
கொண்டே (அனுபவித்துக்கொண்டே) இருங்கள். இப்பொழுது அனைத்து
குழந்தைக்கும் பரமாத்ம சந்திப்பினுடைய பொன்னான வாய்ப்பின் (கோல்டன்
சான்ஸ்) பொன்னான காலை வணக்கம் (கோல்டன் மார்னிங்)
சொல்கின்றார்கள். உண்மையில் பொன்னானது என்பதைவிட வைரமான காலை
வணக்கம். சுயம் நீங்களும் வைரம் ஆவீர்கள் மற்றும் காலையும்
வைரம் போன்றது மற்றும் சேமிப்பும் வைரத்தையே செய்கின்றீர்கள்,
எனவே அனைத்தும் வைரமே வைரமாக உள்ளது. ஆகையினால், வைரமான காலை
வணக்கம் சொல்கின்றார்கள்.
வரதானம்:
எண்ணங்களை கூட சோதனை செய்து
வீணானவற்றின் கணக்கை முடிக்கக்கூடிய சிரேஷ்டமான சேவாதாரி ஆகுக.
யாருடைய ஒவ்வொரு சங்கல்பமும்
சக்திசாலியாக இருக்கிறதோ அவர்களே சிரேஷ்டமான சேவாதாரி ஆவார்கள்.
ஒரு எண்ணம் கூட எதிலும் வீணாக ஆகக்கூடாது. ஏனென்றால், சேவாதாரி
என்றாலே விஷ்வத்தின் மேடையில் நடிக்கக்கூடியவர்கள் என்று
அர்த்தம். முழு விஷ்வமும் உங்களை பின்பற்றுகிறது. ஒருவேளை
நீங்கள் ஒரு சங்கல்பத்தை வீணாக்கினாலும், தனக்காக மட்டும்
வீணாக்கவில்லை, ஆனால், அனேகருக்கு நிமித்தமாக ஆகிவிட்டீர்கள்.
ஆகையினால், இப்பொழுது வீணானவற்றின் கணக்கை முடித்து சிரேஷ்டமான
சேவாதாரி ஆகுங்கள்.
சுலோகன்:
சேவையின் வாயுமண்டலத்தின் கூடவே
எல்லையற்ற வைராக்கிய விருத்தியின் வாயுமண்டலத்தை உருவாக்குங்கள்.
குறிப்பு:
இன்று மாதத்தின் மூன்றாவது
ஞாயிற்றுக்கிழமை, அனைத்து இராஜயோகி, தபஸ்வி சகோதர, சகோதரிகள்
மாலை 06.30 முதல் 07.30 மணி வரை விசேச யோகம் செய்வதற்கான
சமயத்தில் மாஸ்டர் சர்வசக்திவான் என்ற சக்திசாலி சொரூபத்தில்
நிலைத்திருந்து இயற்கை சகிதமாக அனைத்து ஆத்மாக்களுக்கும்
தூய்மையின் கிரணங்களைக் கொடுத்து சதோபிரதானம் ஆக்கக்கூடிய சேவை
செய்ய வேண்டும்.
ஓம்சாந்தி