20.10.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் ஆன்மீகமான, குப்தமான (மறைமுகமான) ஆன்மீக மீட்பு படை வீரர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் முழு உலகையும் விடுவிக்க வேண்டும், மூழ்கிய படகை அக்கரைக்கு கொண்டுச் செல்லவும் வேண்டும்.

 

கேள்வி:

முழு கல்பத்திலும் இல்லாத எந்த ஒரு பல்கலைக்கழகத்தை தந்தை சங்கமத்தில் திறக்கின்றார்?

 

பதில்:

இராஜ்யத்தை பலனாக அடையச் செய்யும் படிப்பிற்கான இறை தந்தைப் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியை சங்கமத்தில் தந்தை திறக்கின்றார். இப்படிப்பட்ட பல்கலைக்கழகம் முழு கல்பத்திலும் கிடையாது. இ,ந்த பல்கலைக்கழகத்தில் கல்வியைக் கற்று நீங்கள் இரட்டை கிரீடமுள்ள இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக ஆகிறீர்கள்.

 

ஓம்சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளை முதன் முதலில் பாபா கேட்கின்றார் இங்கு வந்து அமர்கின்ற பொழுது தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்கிறீர்களா? ஏனெனில் இங்கு உங்களுக்கு எந்தவொரு தொழிலோ, உற்றார் உறவினர்களோ கிடையாது. நாம் எல்லையற்ற தந்தையை சந்திப்பதற்குச் செல்கிறோம் என்ற எண்ணத்துடன் நீங்கள் வருகிறீர்கள். இவ்வாறு கூறுவது யார்? ஆத்மா சரீரத்தின் மூலம் கூறுகிறது. பரலௌகீகத் தந்தை இந்த சரீரத்தை கடனாக (இரவலாக) எடுத்திருக்கின்றார், இவர் (பிரம்மா பாபா) மூலம் புரிய வைக்கின்றார். எல்லையற்ற தந்தை வந்து கற்றுக் கொடுப்பது கல்பத்தில் ஒரே ஒரு முறை தான் நிகழ்கிறது. தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்களது படகு கரை சேர்ந்து விடும். ஒவ்வொருவரின் படகும் மூழ்கியிருக்கிறது. யார் எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ அந்த அளவிற்கு படகு கரை சேரும். ஓ படகோட்டியே! எனது படகை கரை சேர்த்து விடு என்று பாடுகிறீர்கள் அல்லவா! உண்மையில் ஒவ்வொருவரும் அவரவர்களது முயற்சியின் மூலம் தான் அக்கரைக்குச் செல்ல வேண்டும். எவ்வாறு நீந்த கற்றுக் கொடுக்கின்றனர், கற்றுக் கொண்ட பின்பு தானாகவே நீந்துகின்றனர். அவையனைத்தும் உலகாயத விசயமாகும். இது ஆன்மீக விசயமாகும். ஆத்மாவானது இப்பொழுது அசுத்தம் நிறைந்த புதை மணலில் (சேற்றில்) மாட்டிக் கொண்டு விட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதைப் பற்றி ஹிரன்யனைப் பற்றிய உதாரணமும் கொடுக்கின்றனர். தண்ணீர் என்று நினைத்து செல்கிறார், ஆனால் அது அசுத்தமான சேறாகும், அதில் மாட்டிக் கொள்கிறார். சில நேரங்களில் கப்பல், படகு போன்றவைகளும் சுழலில் மாட்டிக் கொள்கின்றன. பிறகு அதை விடுவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் விடுவிக்கும் போர் வீரர்கள் ஆவர். நீங்கள் ஆன்மீகமானவர்கள். அனைவரும் மாயை என்ற சேற்றில் (புதை மணலில்) அதிகம் மாட்டியிருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது மாயையின் சுழல் என்று கூறப்படுகிறது. இதிலிருந்து நீங்கள் எப்படி விடுபடுவது? என்பதை தந்தை வந்து புரிய வைக்கின்றார். அவர்கள் விடுவிக்கின்றார் கள் எனில் அதற்கு மனிதர்களின் உதவி தேவைப்படுகிறது, இங்கு ஆத்மாவானது சுழலில் மாட்டியிருக்கிறது, இதிலிருந்து நீங்கள் எப்படி விடுபட முடியும்? என்ற வழியை தந்தை கூறுகின்றார். பிறகு நீங்கள் மற்றவர்களுக்கும் வழியைக் கூற முடியும். உங்களது படகு இந்த விஷக் கடலிலிருந்து பாற்கடலுக்குச் செல்வது எப்படி? என்ற வழியை தனக்கும், மற்றவர் களுக்கும் கூற வேண்டும். சத்யுகம் தான் பாற்கடல், சுகம் நிறைந்த உலகம் என்று கூறப்படு கிறது. இது துக்கம் நிறைந்த கடல் ஆகும். இராவணன் துக்கம் நிறைந்த கடலில் தான் மூழ்க வைக்கிறது. தந்தை வந்து சுகம் நிறைந்த உலகிற்கு அழைத்துச் செல்கின்றார். விடுதலை செய்யும் ஆன்மீக வீரர்கள் என்று நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் ஸ்ரீமத் மூலம் அனைவருக்கும் வழி கூறுகிறீர்கள். இரண்டு தந்தைகள் உள்ளனர், ஒருவர் எல்லைக்குட் பட்டவர், மற்றொருவர் எல்லையற்றவர் என்று ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கிறீர்கள். லௌகீகத் தந்தை இருந்தாலும் அனைவரும் பரலௌகீகத் தந்தையை நினைவு செய்கின்றனர். ஆனால் அவரை முற்றிலும் அறியாமல் இருக்கின்றனர். பாபா எந்த நிந்தனையும் செய்வது கிடையாது. ஆனால் நாடகத்தின் ரகசியத்தைப் புரிய வைக்கின்றார். இந்த நேரத்தில் அனைத்து மனிதர்களும் 5 விகாரங்கள் என்ற புதைகுழியில் மாட்டி அசுர வம்சத்தினர்களாக இருக் கின்றனர் என்பதை புரிந்து கொள்வதற்காகக் கூறுகின்றார். தெய்வீக வம்சத்தினர்களை அசுர வம்சத்தினர்கள் சென்று வணங்குகின்றனர், ஏனெனில் அவர்கள் சம்பூர்ண நிர்விகாரிகளாக இருக்கின்றனர். சந்நியாசிகளை வணங்குகின்றனர், அவர்களும் வீடு வாசல் விட்டு விட்டு சென்று விடுகின்றனர். தூய்மையாக இருக்கின்றனர். இந்த சந்நியாசிகளுக்கும், தேவதை களுக்கும் இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. தேவதைகளின் பிறப்பு யோக பலத்தின் மூலம் ஏற்படுகிறது. இந்த விசயங்களையும் யாரும் அறியவில்லை. ஈஸ்வரனின் திருவிளையாடல்கள் தனிப்பட்டது, ஈஸ்வரனின் முடிவை அடைய முடியாது என்று அனைவரும் கூறுகின்றனர். ஈஸ்வரன் என்றோ அல்லது பகவான் என்றோ கூறுவதனால் அந்த அளவிற்கு அன்பு ஏற்படுவது கிடையாது. அனைத்தையும் விட நல்ல வார்த்தை தந்தை. மனிதர்கள் எல்லையற்ற தந்தையை அறியாததால் அனாதைகள் போல இருக்கின்றனர்.

 

மனிதர்கள் என்ன கூறுகின்றனர்? பகவான் என்ன கூறுகின்றார்? என்று பத்திரிகை களிலும் எழுதப் பட்டிருக்கிறது. தந்தை யாரையும் நிந்திப்பது கிடையாது. குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். ஏனெனில் தந்தை அனைவரையும் அறிவார் அல்லவா! இவரிடம் அசுர குணங்கள் உள்ளன, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர் என்பதை புரிய வைப்பதற்காக கூறுகின்றார். இங்கு சண்டையிடுவதற்கான அவசியம் கிடையாது. அவர்கள் கௌரவர்கள் அதாவது அசுர வம்சத்தினர்கள். இது தெய்வீக வம்சமாகும். மனிதர்கள் மனிதர்களுக்கு முக்தி, ஜீவன் முக்திக்கான இராஜயோக கல்வியை கற்பிப்பது என்பது நடக்காத காரியமாகும் என்பதை தந்தை புரிய வைக்கின்றார். இந்த நேரத்தில் தந்தை தான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார். தேக அபிமானத்தில் உள்ளவர்களுக்கும், ஆத்ம அபிமானிகளாக உள்ளவர்களுக்கும் உள்ள வேறுபாடு பாருங்கள் எவ்வளவு இருக்கின்றன! தேக அபிமானத்தினால் நீங்கள் வீழ்ச்சியடைந்து கொண்டே வந்தீர்கள். தந்தை ஒரே ஒரு முறை வந்து உங்களை ஆத்ம அபிமானிகளாக ஆக்குகின்றார். தேகத்தின் சம்மந்தங்களில் சத்யுகத்தில் நீங்கள் வரமாட்டீர்கள் என்பது கிடையாது. நான் ஆத்மா, பரம்பிதா பரமாத்மாவின் குழந்தை என்ற ஞானம் அங்கு இருக்காது. இந்த ஞானம் இப்பொழுது தான் உங்களுக்கு கிடைக்கிறது, பிறகு மறைந்து விடும். நீங்கள் தான் ஸ்ரீமத் படி நடந்து பிராப்தியை அடைகிறீர்கள். இராஜயோகம் கற்பிப்பதற்காகவே தந்தை வருகின்றார். இப்படிப்பட்ட படிப்பு வேறு எங்கும் கிடையாது. இரட்டை கிரீடமுள்ள இராஜாக்கள் சத்யுகத்தில் இருப்பர். பிறகு ஒற்றை கிரீடமுள்ள இராஜாக்களும் இருந்தனர், இப்பொழுது அந்த இராஜ்யமும் கிடையாது. பிரஜைகள் பிரஜைகளின் மீது இ,ராஜ்யம் செய்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இராஜ்யத்திற்காக படிக்கிறீர்கள், இது இறை தந்தையின் பல்கலைக்கழகம் என்று கூறப்படு கிறது. உங்களது பெயரும் எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் கீதா பாடசாலை என்று பெயர் வைக்கின்றனர். யார் கற்பிக்கின்றார்? ஸ்ரீகிருஷ்ண பகவானின் மகாவாக்கியம் என்று கூறிவிடுவர். கிருஷ்ணர் கற்பிக்க முடியாது. கிருஷ்ணர் சுயம் பாடசாலைக்குப் படிக்கச் செல்கின்றார். இளவரசர், இளவரசியாக இருப்பவர்கள் படிப்பதற்கு எம்மாதிரியான பள்ளிக்குச் செல்வார்கள்? அங்கிருக்கும் மொழி தனிப்பட்டது. சமஸ்கிருதத்தில் கீதை கூறப்பட்டது என்றும் கிடையாது. இங்கு பல மொழிகள் உள்ளன. அரசர்கள் அவரவரது மொழிகளை பயன்படுத்தி வந்தனர். சமஸ்கிருத மொழியானது எந்த அரசர்களுக்குடையதும் கிடையாது. பாபா சமஸ்கிருதம் கற்றுக் கொடுப்பது கிடையாது. தந்தை சத்யுகத்திற்காக இராஜயோகம் கற்பிக்கின்றார்.

 

காமம் மிகப் பெரிய எதிரி, இதன் மீது வெற்றியடையுங்கள் என்று தந்தை கூறுகின்றார். உறுதிமொழி செய்விக்கின்றார், இங்கு யார் வந்தாலும் அவர்களிடத்தில் உறுதிமொழி செய்விக்கப் படுகிறது. காமத்தின் மீது வெற்றியடையும் பொழுது நீங்கள் உலகை வென்றவர்களாக ஆவீர்கள். இது முக்கியமான விகாரமாகும். இந்த இம்சையானது துவாபாரத்திலிருந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விகார மார்க்கம் ஆரம்பமானது. தேவதைகள் விகார மார்க்கத்திற்கு எப்படி சென்றனர்? என்பதற்கும் கோயில் இருக்கிறது. அங்கு மிகவும் சீ சீ ஆன சித்திரங்களை உருவாக்கியிருக்கின்றனர். மற்றபடி விகார மார்க்கத்தில் எப்பொழுது சென்றனர்? என்பதற்கான தேதி, நாள் குறிக்கப்படவில்லை. காமச் சிதையில் அமருவதன் மூலம் கருப்பாகி விடுகின்றனர் என்பது நிரூபணம் ஆகிறது. ஆனால் பெயர், உருவம் மாறி விடுகிறது அல்லவா! காமச் சிதையில் அமருவதன் மூலம் இரும்பு யுகத்தினர்களாக ஆகிவிடுகின்றனர். இப்பொழுது 5 தத்துவங்களும் தமோ பிரதானம் அல்லவா! அதனால் தான் சரீரமும் இவ்வாறு தமோ பிரதானமாக கிடைக்கிறது. பிறப்பு எடுக்கும் பொழுதே எப்படியெல்லாம் பிறக்கின்றனர்! அங்கு முற்றிலும் அழகான சரீரம் கிடைக்கும். இப்பொழுது தமோ பிரதானத்தின் காரணத்தினால் சரீரமும் அவ்வாறு கிடைக்கிறது. மனிதர்கள் ஈஸ்வரன், பிரபு போன்ற வித விதமான பெயர் களில் நினைவு செய்கின்றனர். ஆனால் பாவம் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆத்மா தனது தந்தையை நினைவு செய்கிறது ஹே பாபா, வந்து அமைதி கொடுங்கள். இங்கு கர்மேந்திரியங்களின் மூலம் நடிப்பு நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அமைதி எப்படி கிடைக்கும்? எப்பொழுது இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்ததோ அப்பொழுது உலகில் அமைதி இருந்தது. ஆனால் கல்பத்தின் ஆயுள் இலட்சம் ஆண்டுகள் என்று கூறியபடியால் பாவம் மனிதர்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும்? எப்பொழுது இவர்களது (தேவதைகளின்) இராஜ்யம் இருந்ததோ அப்பொழுது ஒரே இராஜ்யம், ஒரே தர்மம் இருந்தது. வேறு எந்த கண்டத்திலும் இவ்வாறு ஒரே தர்மம், ஒரே இராஜ்யம் ஏற்பட வேண்டும் என்று சொல்வதில்லை. ஒரே இராஜ்யம் ஏற்பட வேண்டும் என்று இங்கு ஆத்மா கேட்கிறது. நாம் இப்பொழுது ஒரே இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உங்களது ஆத்மா அறிந்திருக்கிறது. அங்கு முழு உலகிற்கும் எஜமானர்களாக நாம் இருப்போம். தந்தை நமக்கு அனைத்தையும் கொடுத்து விடுகின்றார். யாரும் நம்மிடமிருந்து இராஜ்யத்தை அபகரிக்க முடியாது. நாம் முழு உலகிற்கும் எஜமானர்களாக ஆகிவிடுகிறோம். உலகம் எனும் பொழுது அதில் சூட்சுமவதனம், மூலவதனம் என்பது இருக்காது. இந்த சிருஷ்டிச் சக்கரம் இங்கு தான் சுற்றிக் கொண்டே இருக்கிறது. படைப்பவராகிய தந்தை மட்டுமே இதனை அறிவார். படைப்புகளை படைக்கின்றார் என்பது கிடையாது. தந்தை வருவதே சங்கமத்தில், பழைய உலகை புது உலகமாக மாற்றுவதற்காக! தூர தேசத்திலிருந்து பாபா வந்திருக்கின்றார். புது உலகம் நமக்காகத் தான் உருவாகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா, நமது ஆத்மாக்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார். இதன் கூடவே உங்களது சரீரமும் அலங்கரிக்கப்பட்டு விடும். ஆத்மா தூய்மையாவதன் மூலம் சரீரமும் சதோ பிரதானமானதாகக் கிடைக்கும். சதோபிரதான தத்துவத்தின் மூலம் சரீரம் உருவாகும். இவர்களது (லட்சுமி, நாராயணன்) சரீரம் சதோபிரதானமானது அல்லவா! அதனால் தான் இயற்கையான அழகுடன் இருக்கின்றனர். தர்மத்தில் தான் சக்தி இருக்கிறது என்றும் பாடப்படுகிறது. சக்தி எங்கிருந்து கிடைக்கும்? ஒரே ஒரு தேவி தேவதா தர்மத்தில் தான் சக்தி இருக்கிறது. இந்த தேவதைகள் தான் முழு உலகிற்கும் எஜமானர்களாக ஆகின்றனர், வேறு யாரும் உலகிற்கு எஜமானர்களாக ஆவது கிடையாது. உங்களுக்கு எவ்வளவு சக்தி கிடைக்கிறது! ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தை சிவபாபா பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை செய்கின்றார் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த விசயங்களை உலகத்தினர் யாரும் அறியவில்லை. நான் பிராமண குலத்தை ஸ்தாபனை செய்கிறேன், பிறகு அவர்களை சூரியவம்ச இராஜ்யத்திற்கு அழைத்து வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். யார் நல்ல முறையில் படிக்கிறார் களோ அவர்கள் தேர்ச்சிப் பெற்று சூரிய வம்சத்திற்கு வருகின்றனர். அனைத்தும் ஞானத்திற்கான விசயமாகும். அவர்கள் ஸ்தூல அம்பு, ஆயுதங்களை காண்பித்து விட்டனர். அம்பு எய்வதற்கும் கற்றுக் கொள்கின்றனர். சிறு குழந்தைக்கும் துப்பாக்கியை உபயோகப்படுத்தும் முறையைக் கற்றுக் கொடுக்கின்றனர். உங்களுடையது யோக அம்பு ஆகும். என் ஒருவனை நினைவு செய்தால் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும் என்று தந்தை கூறுகின்றார். இம்சைக்கான விசயம் எதுவும் கிடையாது. உங்களது படிப்பும் குப்தமானது ஆகும். நீங்கள் ஆன்மீகமான, ஆன்மீக மீட்பு படை வீரர்கள். ஆன்மீக வீரர்கள் எப்படி இருப்பர்? என்பது யாருக்கும் தெரியாது. நீங்கள் குப்தமான, ஆன்மீக மீட்பு படை வீரர்கள். முழு உலகையும் நீங்கள் விடுவிக்கிறீர்கள். அனைவரின் படகும் மூழ்கி யிருக்கிறது. மற்றபடி தங்க இலங்கை என்று எதுவும் கிடையாது. தங்க துவாரகை கடலுக்கு அடியில் சென்று விட்டது, அது திரும்பவும் வெளிப்படும் என்பதும் கிடையாது. துவாரகையில் இவரது இராஜ்யம் இருந்தது, ஆனால் சத்யுகத்தில் இருந்தது. சத்யுக இராஜாக்களின் ஆடை தனிப்பட்டதாக இருக்கும், திரேதாவினுடையது தனிப்பட்டதாக இருக்கும். வித விதமான ஆடைகள், வித விதமான பழக்க வழக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு அரசரின் பழக்க வழக்கங்களும் தனித்தனியாக இருக்கும். சத்யுகத்தின் பெயர் கூறியதும் மனம் மகிழ்ச்சி யடைந்து விடுகிறது. சொர்க்கம் என்றும் பாரடைஸ் என்றும் கூறுகின்றனர். ஆனால் மனிதர்கள் எதையும் அறியாமல் இருக்கின்றனர். முக்கியமானது இந்த தில்வாடா கோயில் ஆகும். உங்களது நினைவுச் சின்னமாக இருக்கிறது. உதாரணமாகக் காட்டுவதற்கு எப்பொழுதும் சிறியதாக உருவாக்குவர் அல்லவா! இது முற்றிலும் மிகச் சரியான உதாரணம் ஆகும். சிவபாபாவும் இருக்கின்றார், ஆதிதேவனும் இருக்கிறார், மேலே வைகுண்டமும் காண்பித்திருக்கின்றனர். சிவபாபா இருக்கின்றார் எனில் அவசியம் ரதமும் இருக்கும். ஆதிதேவன் அமர்ந்திருக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியாது. இவர் (பிரம்மா பாபா) சிவபாபாவின் ரதம் ஆகும். மகாவீர் தான் இராஜ்யத்தை பலனாக அடைகின்றார். ஆத்மாவிற்குள் சக்தி எப்படி வருகிறது? என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அடிக்கடி தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். ஆத்மாக்களாகிய நாம் சதோ பிரதானமாக இருந்த பொழுது தூய்மையாக இருந்தோம். சாந்திதாமம், சுகதாமத்தில் அவசியம் தூய்மையானவர்கள் தான் இருப்பர். இவை யனைத்தும் இப்பொழுது புத்தியில் வருகிறது, எவ்வளவு எளிதான விசயம் ஆகும்! பாரதம் சத்யுகத்தில் தூய்மையாக இருந்தது. அங்கு அசுத்த ஆத்மாக்கள் இருக்க முடியாது. இவ்வளவு பதீத ஆத்மாக்கள் மேலே எப்படி செல்ல முடியும்? அவசியம் தூய்மையாகித் தான் செல்வார் கள். உலகம் நெருப்பு பற்றி எரிந்த பின்பு அனைத்து ஆத்மாக்களும் சென்று விடும். மற்றபடி சரீரம் இருந்து விடும். இந்த அனைத்து அடையாளங்களும் இருக்கின்றன. ஹோலி என்பதன் பொருளையும் யாரும் புரிந்து கொள்வது கிடையாது. முழு உலகமும் இதில் சுவாஹா ஆகிவிடும். இது ஞான யக்ஞமாகும். ஞானம் என்ற வார்த்தையை நீக்கி ருத்ர யக்ஞம் என்று கூறி விட்டனர். உண்மையில் இது ருத்ர ஞான யக்ஞமாகும். இது பிராமணர்களின் மூலம் தான் படைக்கப்படுகிறது. உண்மையிலும் உண்மையான பிராமணர்கள் நீங்கள். நீங்கள் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் அல்லவா! பிரம்மாவின் மூலம் தான் மனித உலகம் படைக்கப்படுகிறது. பிரம்மா தான் கிரேட் கிரேட் கிரான்ட் ஃபாதர் என்று அழைக்கப்படுகின்றார். இவருக்கும் வம்சம் இருக்கிறது அல்லவா! ஒவ்வொரு இனத்திற்கும் வம்சம் உருவாக்குகின்றனர். விதிமுறைப்படி மூலவதனத்தில் ஆத்மாக்களின் வம்சம் என்பது உங்களது புத்தியில் இருக்கிறது. சிவபாபா, பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கர், பிறகு லெட்சுமி நாராயணன் போன்ற அனைவரும் மனித வம்சத்தினர்கள் ஆவர். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்காண முக்கிய சாரம்:

1) ஆன்மீக மீட்பு படை வீரர்களாகி தனக்கும் மற்றும் அனைவருக்கும் சரியான வழியைக் கூற வேண்டும். முழு உலகையும் விஷக் கடலிருந்து விடுவிப்பதற்கு தந்தைக்கு முழுமையிலும் முழுமையான உதவியாளர்களாக ஆக வேணடும்.

 

2) ஞான யோகத்தின் மூலம் தூய்மையாகி ஆத்மாவை அலங்கரிக்க வேண்டும், சரீரத்தை அல்ல. ஆத்மா தூய்மையாவதன் மூலம் சரீர அலங்காரம் தானாகவே ஏற்பட்டு விடும்.

 

வரதானம்:

மனம் புத்தியை மன வழியிலிருந்து (ஃப்ரீ ) விடுபட்டவராகி சூட்சும வதனத்தின் அனுபவம் செய்யக் கூடிய டபிள் லைட் ஆவீர்களாக.

 

சங்கல்ப சக்தி அதாவது மனம் மற்றும் புத்தியை மனவழியிலிருந்து மட்டும் காலியாக வைத்திருங்கள். அப்பொழுது இங்கு இருந்தபடியே வதனத்தின் அனைத்து காட்சிகளும், உலகத்தின் எந்தவொரு காட்சியும் தெளிவாக தென்படுகிறதோ, அவ்வாறே அவற்றை தெளிவாக அனுபவம் செய்வீர்கள். இந்த அனுபவம் செய்வதற்காக, எந்தவொரு சுமையையும் உங்கள் மீது வைக்காதீர்கள். அனைத்து சுமைகளையும் தந்தைக்கு கொடுத்து விட்டு டபிள் லைட் (லேசாகவும் ஒளியாகவும்) ஆகுங்கள். மனம் புத்தி மூலமாக எப்பொழுதும் தூய எண்ணங்கள் என்ற உணவை உட்கொள்ளுங்கள். ஒரு பொழுதும் வீண் சங்கல்பங்கள் அல்லது விகல்பங்களின் அசுத்தமான உணவை உட்கொள்ளாதீர்கள். அப்பொழுது சுமையிலிருந்து லேசானவராக ஆகி உயர்ந்த நிலையின் அனுபவம் செய்ய முடிந்தவர்களாக ஆவீர்கள்.

 

சுலோகன்:

வீணானவற்றிற்கு (ஃபுல் ஸ்டாப்) முற்றுபுள்ளி இடுங்கள் மற்றும் சுபபாவனையின் (ஸ்டாக்) இருப்பினை ஃபுல் நிரப்பி விடுங்கள்.

ஓம்சாந்தி