12.10.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை
குழந்தைகளாகிய உங்களுக்கு நீச்சல் கற்றுத் தர வந்துள்ளார், அதன்
மூலம் நீங்கள் இந்த உலகிலிருந்து கடந்து சென்று விடுகிறீர்கள்,
உங்களுக்காக உலகமே மாறி விடுகிறது.
கேள்வி:
தந்தைக்கு
உதவியாளர்
ஆகக்
கூடியவர்களுக்கு
அந்த
உதவியின்
பிரதிபலனாக
என்ன
பிராப்தி
என்ன
கிடைக்கிறது?
பதில்:
எந்த குழந்தைகள் தந்தைக்கு
இப்போது உதவியாளர்களாக ஆகின்றனரோ அவர்களை தந்தை அரைக் கல்ப
காலத்திற்கு யாருடைய உதவியோ, வழியோ பெற வேண்டிய அவசியம்
இல்லாதவர்களாக ஆக்கி விடுகிறார். எவ்வளவு உயர்வான தந்தை, அவர்
சொல்கிறார் - குழந்தைகளே! நீங்கள் எனது உதவியாளர் களாக
ஆகாவிட்டால் நான் எப்படி சொர்க்கத்தை ஸ்தாபிக்க முடியும்?
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான
வரிசைக்கிரமமான மிக இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தை புரிய வைக்கிறார், ஏனென்றால் குழந்தைகள் மிகவும்
புரியாதவர்களாக ஆகி விட்டனர். இராவணன் மிகவும் புரியாதவர்களாக
ஆக்கி விட்டார். இப்போது நம்மை தந்தை எவ்வளவு புத்திசாலிகளாக
ஆக்குகிறார். யாராவது ஐ.ஏ.எஸ் பரீட்சையில் தேர்ச்சி அடைந்து
விட்டால் மிகப் பெரிய பரீட்சையில் தேர்ச்சி அடைந்ததாக
நினைத்துக் கொள்கின்றனர். இப்போது நீங்கள் எவ்வளவு பெரிய
பரீட்சையில் தேர்ச்சி அடைகிறீர்கள். கற்பிப்பவர் யார்,
படிப்பவர் யார் என சற்றே சிந்தித்துப் பார்த்தால் சரி. இதுவும்
கூட நிச்சயம் - நாம் ஒவ்வொரு கல்பத்திலும் 5 ஆயிரம் வருடங்
களுக்குப் பிறகு தந்தை, ஆசிரியர், சத்குருவை மீண்டும் சந்தித்த
படிதான் இருக்கிறோம். நாம் எவ்வளவு உயர்வான தந்தையிடமிருந்து
எவ்வளவு உயர்வான ஆஸ்தியை அடைகிறோம் என குழந்தைகளாகிய நீங்கள்
மட்டும்தான் அறிவீர்கள். ஆசிரியரும் கூட படிக்க வைத்து ஆஸ்தி
கொடுக்கிறார் அல்லவா? உங்களையும் படிக்க வைத்து, புதிய உலகில்
இராஜ்யம் செய்வதற்காக உங்களுக்காக உலகையே மாற்றி விடுகிறார்.
பக்தி மார்க்கத்தில் எவ்வளவு மகிமைகளைப் பாடுகின்றனர். நீங்கள்
அவர் மூலமாக தனது ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். பழைய
உலகம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் கூட குழந்தைகளாகிய
நீங்கள் அறிவீர்கள். நாங்கள் அனைவரும் சிவ பாபா வின் குழந்தைகள்
என நீங்கள் கூறுகிறீர்கள். பழைய உலகை புதிதாய் ஆக்குவதற்காக
தந்தையும் கூட வர வேண்டியுள்ளது. பிரம்மாவின் மூலம் புதிய
உலகின் ஸ்தாபனை என திரிமூர்த்தி படத்திலும் காட்டுகின்றனர். ஆக,
கண்டிப்பாக பிரம்மாவின் வாய் வழி வம்சாவளி பிராமண-பிராமணியர்
தேவைப்படுகின்றனர். பிரம்மா புது உலகை ஸ்தாபனை செய்வ தில்லை.
படைப்பவர் தந்தையே ஆவார். நான் வந்து யுக்தியுடன் பழைய உலகை
வினாசம் செய்து புதிய உலகை உருவாக்குகிறேன் என்று கூறுகிறார்.
புது உலகில் வசிப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே இருப்பார்கள்.
மக்கள் தொகை குறையட்டும் என அரசாங்கம் முயற்சி செய்தபடி
இருக்கிறது. இப்போது குறையப் போவதில்லை. சண்டையில் கோடிக்
கணக்கான மனிதர்கள் இறக்கின்றனர், அப்போதும் கூட மனிதர்கள்
குறைவதில்லை, மக்கள் தொகை இன்னும் அதிகரித்தபடிதான் இருக்கிறது.
இதையும் கூட நீங்கள் அறிவீர் கள். உங்கள் புத்தியில் உலகின்
முதல் இடை கடைசியின் ஞானம் உள்ளது. நீங்கள் உங்களை மாணவர்கள்
என புரிந்துள்ளீர்கள். நீந்தவும் கற்றுக் கொள்கிறீர்கள். எனது
படகை கரை சேர்த்திடுங்கள் என சொல்கின்றனர் அல்லவா? நீந்தக்
கற்றுக் கொள்பவர்கள் மிகவும் பெயர் புகழ் வாய்ந்தவர்களாக
ஆகின்றனர். இப்போது உங்களுடைய நீச்சல் எப்படி இருக்கிறது என
பாருங்கள், ஒரேடியாக மேலே சென்று விடுகிறீர்கள், பிறகு இங்கே
வருகிறீர்கள். அவர்கள் இவ்வளவு மைல்கள் சென்றோம் என
காட்டுகின்றனர். ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வளவு மைல்கள் மேலே
செல்கிறீர்கள். அது ஸ்தூலமான பொருள், அவர்கள் கடக்கும்
தூரத்தைக் கணக்கிடுகின்றனர். உங்களுடையது கணக்கிட முடியாததாகும்.
ஆத்மாக்களாகிய நாம் நம்முடைய வீட்டுக்குச் சென்று விடுவோம்.
அங்கே சூரியன் சந்திரன் முதலானவை இருப்பதில்லை என்று நீங்கள்
அறிவீர்கள். அது நம்முடைய வீடு, நாம் அங்கே வசிப்பவர்கள் என
உங்களுக்கு குஷியாக உள்ளது. மனிதர்கள் முக்தி தாமத் திற்குச்
செல்வதற்காக பக்தி செய்கின்றனர், முயற்சி செய்கின்றனர். ஆனால்
யாரும் செல்ல முடியாது. முக்தி தாமத்தில் பகவானைச்
சந்திப்பதற்காக முயற்சி செய்கின்றனர். பலவிதமான முயற்சிகள்
செய்கின்றனர். நாம் ஜோதியுடன் ஜோதியாக ஐக்கியமாகி விடுவோம் என
சிலர் சொல்கின்றனர். முக்திதாமத்திற்குச் செல்வோம் என சிலர்
சொல் கின்றனர். முக்திதாமம் குறித்து யாருக்கும் தெரியாது. பாபா
வந்து விட்டார், தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இனிமையிலும் இனிமையான தந்தை வந்து விட்டார்,
நம்மை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக
ஆக்குகின்றார். அதற்காக அரைக் கல்பமாக முயற்சி செய்தும் கூட ஆக
முடியவில்லை. யாரும் ஜோதியில் ஐக்கியமாவதில்லை, முக்தி
தாமத்திற்குச் செல்லவும் முடியாது, மோட்சத்தை அடையவும் முடியாது.
செய்த முயற்சி எல்லாம் வீண் ஆகும். இப்போது பிராமண குல
பூஷ்ணர்களாகிய உங்களுடைய முயற்சி உண்மை என நிரூபணமாகிறது. இந்த
விளையாட்டு எப்படி உருவாகியுள்ளது. நீங்கள் இப்போது ஆஸ்திகர்கள்
எனப்படு கிறீர்கள். தந்தையை நல்ல விதமாக நீங்கள் அறிகிறீர்கள்,
மேலும் தந்தை மூலமாக சிருஷ்டி சக்கரத்தையும் கூட
தெரிந்திருக்கிறீர்கள். முக்தி-ஜீவன் முக்தியின் ஞானம்
யாருக்குள்ளும் இல்லை என்று தந்தை சொல்கிறார்.
தேவதைகளுக்குள்ளும் இல்லை. தந்தையை யாரும் தெரிந்து கொள்ளவில்லை
என்றால் அவர்கள் பிறரை எப்படி அழைத்துச் செல்ல முடியும்.
எவ்வளவு குருமார்கள் இருக்கின்றனர், எவ்வளவு பேர் அவர்களின்
சீடர்கள் ஆகின்றனர். உண்மையிலும் உண்மையான சத்குரு சிவபாபாவே
ஆவார். அவருக்கு பாதங்கள் கிடையாது. எனக்கு பாதங்கள் கிடையாது,
நான் எப்படி எனக்கு பாத பூஜை செய்விப்பேன் என அவர் சொல்கிறார்.
குழந்தைகள் உலகின் எஜமான் ஆகின்றனர், அவர்களை பூஜை செய்ய வைக்க
மாட்டேன். பக்தி மார்க்கத்தில் குழந்தைகள் தந்தையின் பாதத்தில்
விழு கின்றனர். உண்மையில் தந்தையின் ஆஸ்திக்கு குழந்தைகள்
அதிகாரிகள். ஆனால் பணிவுத் தன்மையைக் காட்டுகின்றனர். சிறு
குழந்தைகள் முதலானவர்கள் சென்று பாதங்களில் விழுகின்றனர். இங்கே
தந்தை கூறுகிறார் - பாதத்தில் விழுவதிலிருந்தும் உங்களை
விடுவித்து விடுகிறேன். எவ்வளவு உயர்வான தந்தை! குழந்தைகளாகிய
நீங்கள் என்னுடைய உதவியாளர்கள் என கூறுகிறார். நீங்கள்
உதவியாளர்கள் ஆகா விட்டால் சொர்க்கத்தின் ஸ்தாபனையை நான் எப்படி
செய்வேன்? குழந்தைகளே, இப்போது நீங்கள் உதவியாளராக ஆகுங்கள்,
பிறகு நீங்கள் யாருடைய உதவியையும் பெறத் தேவையில்லாத அளவு
உங்களை உயர்த்துகிறேன் என தந்தை புரிய வைக்கிறார். நீங்கள்
யாரிடமிருந்தும் வழி கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. இங்கே
தந்தை குழந்தைகளின் உதவியைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். அவர்
சொல்கிறார்: குழந்தைகளே இப்போது சீச்சீ (கீழானவர்களாக)
ஆகாதீர்கள். மாயையிடம் தோல்வி அடையாதீர்கள். இல்லாவிட்டால்
பெயரைக் கெடுத்து விடுவீர்கள். குத்துச்சண்டை நடக்கும் போது
யாராவது வெற்றியடைந்தால் ஆஹா, ஆஹா என்கின்றனர், தோற்றுப்
போகிறவரின் முகம் வெளிறிப் போகிறது. இங்கும் கூட தோல்வி
அடைகின்றனர். இங்கே தோல்வி அடைபவர்களை முகத்தைக் கருப்பாக்கிக்
கொண்டார்கள் என்று கூறப்படுகிறது. வருவதே அழகாக ஆவதற்கு, ஆனால்
என்ன செய்து விடுகிறார்கள். அடைந்த வருமானம் அனைத்தும் மறைந்து
விடுகிறது. பிறகு புதிதாக தொடங்க வேண்டி யிருக்கிறது. தந்தையின்
உதவியாளர்களாகி பிறகு தோல்வி அடைந்து பெயரைக் கெடுத்து
விடுகின்றனர். இரண்டு கட்சிகள் உள்ளன. ஒன்றில் மாயையின்
அடிமைகள், மற்றொன்றில் ஈஸ்வரனுடையவர்கள். நீங்கள் தந்தையின்
மீது அன்பு செலுத்துகிறீர்கள். வினாச காலத்தில் விபரீத (எதிரான)
புத்தி என பாடப்பட்டுள்ளது. உங்களுடையது அன்பான புத்தியாகும்.
ஆக நீங்கள் பெயரைக் கெடுக்கக் கூடாது. அன்பான புத்தியுள்ள
நீங்கள் பிறகு மாயையிடம் ஏன் தோற்றுப் போகிறீர்கள்?
தோற்பவர்களுக்கு துக்கம் ஏற்படுகிறது. வெற்றி பெற்றவருக்கு கை
தட்டுகின்றனர், ஆஹா, ஆஹா! என போற்றுகின்றனர். நாம் பயில்வான்
என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இப்போது
மாயையின் மீது கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். தேகத்துடன்
சேர்த்து கண்களால் பார்க்கும் அனைத்தையும் மறந்து விடுங்கள்,
என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என தந்தை கூறுகிறார். மாயை
உங்களை சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானம் ஆக்கிவிட்டது.
இப்போது மீண்டும் சதோபிரதானம் ஆக வேண்டும். மாயாவை வென்று உலகை
வென்றவர் ஆக வேண்டும். இது வெற்றி தோல்விக்கான விளையாட்டு,
சுகம் துக்கத்திற்கான விளையாட்டு. இராவண இராஜ்யத்தில் தோல்வி
அடைகின்றனர். இப்போது பாபா மீண்டும் மதிப்பு மிக்கவர்களாக
ஆக்குகிறார். பாபா புரிய வைத்திருக்கிறார் - ஒரு சிவபாபாவின்
ஜெயந்தியே மதிப்பு வாய்ந்தது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள்
இதுபோல லட்சுமி நாராயணர் ஆகவேண்டும். அங்கே (சத்யுகத்தில்)
ஒவ்வொரு வீட்டிலும் தீபம் ஏற்றப்பட்டிருக்கும். அனைவருடைய
ஜோதியும் ஏற்றப்பட்டுவிடுகிறது. மனிதர்களால் ஜோதி
ஏற்றப்படுகிறது. பாபா எவ்வளவு சகஜமாகப் புரிய வைக்கிறார்.
தந்தையைத் தவிர வேறு யாரும் நம்மை இனிமையிலும் இனிமையான, செல்ல
மான, தேடிக்கண்டெடுக்கப்பட்ட குழந்தையே! என்று அழைக்க முடியாது.
ஆன்மீகத் தந்தை தான் கூறுகிறார் - ஹே என்னுடைய இனிமையான
செல்லமான குழந்தைகளே! நீங்கள் அரைக்கல்பமாக பக்தி செய்து
வந்தீர்கள். ஒருவர் கூட திரும்பிச் செல்ல முடிய வில்லை. தந்தை
தான் வந்து அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்லுகிறார்.
நீங்கள் சங்கமயுகத்தைப் பற்றி நன்றாகப் புரிய வைக்க முடியும்.
பாபா எப்படி வந்து அனைத்து ஆத்மாக் களையும் அழைத்துச்
செல்கிறார். உலகத்தில் இந்த எல்லைக்கப் பாற்பட்ட நாடகத்தைப்
பற்றி யாருக்கும் தெரியாது. இது எல்லைக்கப்பாற்பட்ட
நாடகமாகும். இதைக்கூட நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள்.
வேறு யாரும் இப்படி கூற முடியாது. அப்படி எல்லைக்கப்பாற்பட்ட
நாடகம் என்று ஒருவர் சொன்னால், பிறகு நாடகத்தை எப்படி
விளக்குவார்கள்? இங்கே நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தை தெரிந்து
கொள்கிறீகள். குழந்தைகளாகிய நீங்கள் தான் தெரிந்து
கொள்கிறீர்கள், நீங்கள் தான் நினைவு செய்ய வேண்டும். பாபா
எவ்வளவு சகஜமாகக் கூறுகிறார். பக்தி மார்க்கத்தில் நீங்கள்
எவ்வளவு முட்டி மோதுகிறீர்கள். ஸ்நானம் செய்ய எவ்வளவு தூரமாக
செல்கிறீர்கள்! ஒரு ஏரி உள்ளது, அதில் மூழ்கி எழுவதன் மூலம்
தேவதை ஆகிவிடுவதாகக் கூறுகிறார்கள். இப்போது நீங்கள்
ஞானக்கடலில் மூழ்கி எழுவதன் மூலம் தேவதை ஆகிவிடுகிறீர்கள்.
யாரேனும் நன்றாக பேசன் செய்துகொண்டால், இவர்கள் தேவதை போல
ஆகிவிட்டார் என்று சொல்வார்கள். இப்போது நீங்கள் கூட ரத்தினமாக
ஆகின்றீர்கள். மற்றபடி மனிதர்களுக்கு பறப்பதற்கான சிறகுகள்
போன்றவை இருக்க முடியாது. அப்படி பறக்க முடியாது. ஆத்மா தான்
பறக்கிறது. ஆத்மாவைத் தான் ராக்கெட் என்று கூட சொல்கிறார்கள்.
ஆத்மா எவ்வளவு சிறியது. அனைத்து ஆத்மாக்களும் செல்லும்போது
குழந்தைகளாகிய உங்களுக்கு சாட்சாத் காரம் கூட ஏற்படும். இதை
புத்தியால் புரிந்துகொண்டு வர்ணனை செய்யலாம். எப்படி
வினாசத்தின் காட்சியைப் பார்க்கிறீர்களோ, அப்படியே
ஆத்மாக்களின் கூட்டத்தைக் கூட எப்படிச் செல்கிறார்கள் என்று
பார்க்க முடியும். ஹனுமான் கணேஷ் போன்றவர்கள் கிடையாது. ஆனால்
அவர்களின் பாவனைக்கு ஏற்ப சாட்சாத்காரம் ஆகிறது. பாபாவோ
புள்ளியாக இருக்கிறார், அவரை எப்படி வர்ணிக்க முடியும்.
கண்களால் காண முடியாத சிறிய நட்சத்திரம் என்று சொல்கிறார்கள்.
சரீரம் எவ்வளவு பெரியது, அதன் மூலம் தான் காரியங்கள்
செய்யப்படுகின்றன. எவ்வளவு சிறிய ஆத்மாவில் 84 பிறவிகளின்
சக்கரம் பதிவாகி உள்ளது. நாம் எப்படி 84 பிறவிகளை எடுக்கிறோம்
என்பது பற்றி தெரிந்த ஒரு மனிதர் கூட கிடையாது. ஆத்மாவில்
எப்படி பாகம் பதிவாகியுள்ளது என்பது கூட அதிசய மானது. ஆத்மா
சரீரத்தை எடுத்து பாகத்தை நடிக்கிறது. அது எல்லைக்குட்பட்ட
நாடகம், இது எல்லைக்கப்பாற்பட்ட நாடகம். எல்லைக்கப்பாற்பட்ட
தந்தை அவரே வந்து தன்னுடைய அறிமுகத்தைக் கொடுக்கிறார். யார்
நல்ல சேவாதாரி குழந்தைகளோ, அவர்கள் யாருக்கு எப்படி புரிய
வைப்பது என்று சிந்தனைக்கடலை கடைந்து கொண்டே இருக்கிறார்கள்.
நீங்கள் ஒவ்வொருவருடனும் எப்படி தலையை உடைத்துக்
கொள்கிறீர்கள். பிறகும் கூட பாபா, எங்களுக்குப் புரியவே இல்லை
என்று கூறுகிறார்கள். யாராவது படிக்கவில்லை என்றால் அவர்களை
கல்புத்தி என்று சொல்கிறார்கள். நீங்கள் பார்க்கிறீர்கள்,
இங்கே கூட சிலர் 7 நாட்களில் மிகுந்த குஷியுடன், நாங்கள்
பாபாவை சந்திக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். சிலரோ எதையும்
புரிந்து கொள்வதில்லை. மனிதர்கள் வெறுமனே கல்புத்தி,
தங்கபுத்தி என்று சொல்கிறார்கள், ஆனால் அர்த்தத்தைப் புரிந்து
கொள்வதில்லை. ஆத்மா தூய்மையாகும்போது பாரஸ்நாத் ஆகிவிடுகிறது.
பாரஸ்நாத் கோயில் கூட உள்ளது. முழுமையாக தங்கத்தால்
செய்யப்பட்ட கோயில் என்பதல்ல. மேலே கொஞ்சம் தங்கத்தைப்
பூசிவிடு கிறார்கள். நமக்கு தோட்டக்காரர் கிடைத்துவிட்டார்
என்று குழந்தைகள் தெரிந்து கொண்டீர்கள். முள்ளிலிருந்து
மலராவதற்கான யுக்தி (வழி) சொல்கிறார். அல்லாவின் தோட்டம் என்ற
மகிமை கூட உள்ளது. உங்களிடம் ஆரம்பத்தில் ஒரு இஸ்லாமியர்
தியானத்தில் (டிரான்சில்) சென்று கொண்டிருந்தார். கடவுள்
எனக்கு பூ கொடுத்தார் என்று அவர் சொல்வார். நின்று
கொண்டிருக்கும் போது விழுந்து விட்டார். கடவுளின் தோட்டத்தைப்
பார்த்தார். கடவுளின் தோட்டத்தைக் காண்பிக்கக் கூடியவர்
கடவுளாகத் தான் இருக்க முடியும். மற்றவர்கள் எப்படி காட்ட
முடியும்? உங்களுக்கு வைகுண்டத்தின் காட்சி காட்டுகிறேன்.
கடவுள் தான் அங்கே அழைத்துச் செல்கிறார். கடவுள் அங்கே
வசிப்பதில்லை. அவர் சாந்திதாமத்தில் இருக்கிறார். உங்களை
வைகுண்டத்தின் எஜமானர் ஆக்குகிறார். எவ்வளவு நல்ல நல்ல
விசயங்களை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மகிழ்ச்சி
ஏற்படுகிறது. இப்போது நாம் சுகதாமம் சென்று கொண்டிருக்கிறோம்
என்று உள்ளுக்குள் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். அங்கே
துக்கத்தின் விசயங்கள் இருப்பதில்லை. பாபா கூறுகிறார் -
சுகதாமம் சாந்திதாமத்தை நினைவு செய்யுங்கள். வீட்டை ஏன் நினைவு
செய்வதில்லை? ஆத்மா வீட்டுக்குச் செல்ல எவ்வளவு தலையை
உடைத்துக் கொள்கிறது. ஜபம், தவம் என்று நிறைய உழைக்கின்றனர்,
ஆனால் யாரும் செல்ல முடியாது. மரத் திலிருந்து வரிசைக்கிரமமாக
ஆத்மாக்கள் வந்துகொண்டே இருக்கின்றனர், இடையில் எப்படி செல்ல
முடியும்! பாபாவே இங்கே வந்திருக்கிறார். குழந்தைகளாகிய
உங்களுக்கு தினமும் புரியவைத்துக் கொண்டே இருக்கிறார் -
சுகதாமம் சாந்திதாமத்தை நினைவு செய்யுங்கள். தந்தையை மறப்பதால்
தான் துக்கமடைகின்றனர். மாயையின் அடி விழுந்து விடுகிறது.
இப்போது கொஞ்சமும் அடி வாங்கக்கூடாது. அதற்கு மூலகாரணம் தேக
அபிமானம்.
நீங்கள் இப்போது வரை எந்த
தந்தையை ஏ பதீத பாவனரே வாருங்கள்! என்று நினைவு செய்து
கொண்டிருக்கிறீர்களோ, அந்த தந்தையிடம் நீங்கள் கற்றுக்
கொண்டிருக் கிறீர்கள். உங்களுடைய கீழ்ப்படிதலுள்ள
சேவாதாரியாகவும், ஆசிரியராகவும் இருக்கிறார். கீழ்ப்படிதலுள்ள
சேவாதாரி தந்தையாகவும் இருக்கிறார். பெரிய மனிதர்கள் எப்போதும்
கடிதத்தின் கீழே, கீழ்ப்படிதலுள்ள சேவாதாரி என்று எழுதுகின்றனர்.
பாபா கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு எப்படி வந்து
புரியவைக்கிறேன் என்று பாருங்கள். நல்ல குழந்தைகள் மேல் தான்
தந்தையின் அன்பு ஏற்படுகிறது. யார் கெட்ட குழந்தைகளாக
இருக்கிறார்களோ, அதாவது தந்தை யினுடையவராகி பிறகு துரோகிகளாகி
விடுகிறார்கள், விகாரத்தில் சென்று விடுகிறார்கள் என்றால் பாபா
சொல்வார் - இப்படிப்பட்ட குழந்தை பிறக்காமல் இருந்திருக்கலாம்.
ஒருவரின் காரணமாக எவ்வளவு பேர் பெயர் கெட்டுப்போய் விடுகிறது.
எவ்வளவு பேருக்கு கஷ்டம் ஏற்படுகிறது. இங்கே நீங்கள் எவ்வளவு
உயர்ந்த காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள். உலகின்
முன்னேற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள் மற்றும் உங்களுக்கு
மூன்றடி நிலம் கூட கிடைப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள்
யாரையும் வீடு வாசலை விட்டு விட வைப்ப தில்லை. நீங்கள்
ராஜாக்களுக்குக் கூட கூறுகிறீர்கள் - நீங்கள் பூஜைக்குரிய
இரட்டை கிரீடதாரிகளாக இருந்தீர்கள், இப்போது பூஜாரி ஆகிக் கிடக்
கிறீர்கள். இப்போது பாபா மீண்டும் பூஜைக்குரியவர் ஆக்குகிறார்
என்றால், அப்படி ஆக வேண்டும் அல்லவா! கொஞ்ச நேரம் இருக்கிறது,
நாம் இங்கே யாருடைய லட்சங்களை எடுத்துக்கொண்டு என்ன
செய்யப்போகிறோம்? ஏழைகளுக்கு இராஜ்யம் கிடைக்கிறது. பாபா
ஏழைப்பங்காளன் அல்லவா! பாபா ஏழைப்பங்காளன் என்று ஏன்
அழைக்கப்படுகிறார் என்று நீங்கள் அர்த்தத்துடன் புரிந்து
கொள்கிறீர்கள். பாரதம் எவ்வளவு ஏழ்மையாக இருக்கிறது. அதிலும்
கூட மாதர்கள் நீங்கள் அதிக ஏழைகளாக உள்ளீர்கள். யார் பணக்
காரர்களோ அவர்கள் இந்த ஞானத்தை எடுக்க (பின்பற்ற) முடியாது.
ஏழைகள் அபலைகள் எவ்வளவு பேர் வருகின்றார்கள். அவர்கள் மீது
கொடுமைகள் நடக்கிறது. பாபா கூறுகிறார் -மாதர்களை முன்னால்
வைக்க வேண்டும். ஊர்வலத்திலும் கூட முன்னால் மாதர்கள் இருக்க
வேண்டும். உங்களுடைய பேட்ஜ் கூட முதல்தரமாக இருக்கிறது. இந்த
டிரான்ஸ் லைட் படம் உங்கள் முன்னால் இருக்க வேண்டும்.
அனைவருக்கும் எடுத்துக் கூறுங்கள் - உலகம்
மாறிக்கொண்டிருக்கிறது, கல்பத்திற்கு முன்பு போலவே
தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சேவையை
எப்படி நடைமுறைப்படுத்துவது என்று குழந்தைகள் சிந்தனைக் கடலைக்
கடைய வேண்டும். இதற்கு கால அவகாசம் தேவைப் படுகிறது அல்லவா.
நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்
1. தந்தையிடம் முழுமையிலும் முழுமையான அன்பு வைத்து உதவியாளர்
ஆக வேண்டும். மாயாவிடம் தோற்றுப்போய் ஒருபோதும் பெயரைக்
கெடுக்கக்கூடாது. முயற்சி செய்து தேகத்தின் கூடவே என்னவெல்லாம்
தெரிகிறதோ அனைத்தையும் மறந்துவிட வேண்டும்.
2. நாம் சாந்திதாமம், சுகதாமம் செல்கிறோம் என்று உள்ளுக்குள்
குஷி இருக்க வேண்டும். பாபா கீழ்படிதலுள்ள ஆசிரியராகி நம்மை
வீட்டுக்கு அழைத்துச் செல்ல, தகுதியுடையவர் ஆக்குகிறார்.
தகுதியுள்ள நல்ல குழந்தை ஆகவேண்டும், கெட்ட குழந்தை ஆகக்கூடாது.
வரதானம்:
திரிமூர்த்தி (மூன்று
நினைவுகளின்) சொரூபத்தின் திலகத்தை தாரணை செய்யக் கூடிய
சம்பூரண வெற்றியாளர் ஆகுக.
சுயத்தின் நினைவு, பாபாவின்
நினைவு மற்றும் நாடகத்தின் நினைவு - இந்த மூன்று நினைவுகளில்
முழுமையான ஞானத்தின் விஸ்தாரம் (முழுமை) அடங்கியிருக்கிறது.
ஞானம் என்ற மரத்தின் இந்த மூன்று நினைவுகள் இருக்கிறது. எப்படி
மரம் ஆகுவதற்கு முதலில் விதை போடப்படுகிறது, அந்த விதை மூலம்
இரண்டு இலை வெளிவருகிறது, அதன் பிறகு மரம் வளர்கிறது, அதுபோன்று
முக்கியமானது விதை பாபாவின் நினைவு, பிறகு இரண்டு இலைகள் அதாவது
ஆத்மா மற்றும் நாடகத்தின் முழுமையான ஞானம் அடங்கி யிருக்கிறது.
இந்த மூன்று நினைவுகளை தாரணை செய்யக்கூடிய நினைவு சொரூபம் ஆகுக
மற்றும் சம்பூரண வெற்றியாளர் ஆகுக என்ற ஆசிர்வாதம் அளிப்பவர்
ஆகிறார்கள்.
சுலோகன்:
பிராப்திகளை சதா முன்னால்
வைத்தீர்கள் என்றால், பலவீனங்கள் எளிதாகவே முடிந்துவிடும்.
ஓம்சாந்தி