26.10.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஸ்ரீமத்
மூலமாக பாரதத்தை சொர்க்கமாக்கும் சேவை செய்ய வேண்டும், முதலில்
சுயம் விகாரமற்றவராக ஆக வேண்டும், பிறகு மற்றவர்களுக்குக் கூற
வேண்டும்.
கேள்வி:
மகாவீர் குழந்தைகளாகிய நீங்கள்
எந்த விசயத்தை பொருட்படுத்தக் கூடாது? அதே நேரத்தில் எந்த சோதனை
செய்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?
பதில்:
ஒருவேளை யாராவது தூய்மை ஆகும்
முயற்சியில் தடை ஏற்படுத்துகின்றனர் எனில் நீங்கள் அதை
பொருட்படுத்தக் கூடாது.. நான் மகாவீராக இருக்கிறேனா? நான் என்னை
ஏமாற்றிக் கொள்ளவில்லை தானே? எல்லையற்ற வைராக்கியத்துடன்
இருக்கிறேனா? நான் என்னை தந்தைக்குச் சமமாக ஆக்குகிறேனா?
என்னிடத்தில் கோபம் இல்லை தானே? மற்றவர்களுக்கு என்ன கூறுகிறேனோ
அதை தானும் செய்கிறேனா? என்று சோதனை செய்து கொள்ள வேண்டும்.
பாட்டு:
உன்னை அடைந்ததால் நான் ........
ஓம்சாந்தி.
இதில் பேசுவதற்கு ஒன்றும்
கிடையாது. இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். நாம்
மீண்டும் தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம், சம்பூர்ண
நிர்விகாரி களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை இனிமையிலும்
இனிய, ஆன்மீகக் குழந்தைகள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தந்தை
வந்து கூறுகின்றார் - குழந்தைகளே! காமத்தை வெல்லுங் கள், அதாவது
தூய்மையாக ஆகுங்கள். குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். இப்பொழுது
குழந்தைகளுக்கு மீண்டும் நினைவிற்கு வந்திருக்கிறது - நாம்
எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி அடைகிறோம். அதை
யாரும் அபகரிக்க முடியாது, அங்கு (சத்யுகத்தில்) அபகரிக்கக்
கூடியவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதைத் தான்
பிரிவினையில்லாத (அத்துவைத) இராஜ்யம் என்று கூறப்படுகிறது.
பிறகு இராவண இராஜ்யத்தில் மற்றவர்களது இராஜ்யம் ஏற்படுகிறது.
இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறு தான்
பிறருக்கும் புரிய வைக்கவும் வேண்டும். நாம் மீண்டும் பாரதத்தை
ஸ்ரீமத் மூலம் விகாரமற்றதாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் என்று அனைவரும் கூறுகின்றனர்
அல்லவா! அவர் தான் தந்தை என்று கூறப்படுகின்றார். ஆக இதையும்
புரிய வைக்க வேண்டும். பாரதம் சம்பூர்ண நிர்விகாரியாக,
சொர்க்கமாக இருந்தது, அது இப்பொழுது விகாரி நரகமாக ஆகிவிட்டது
என்று எழுதவும் வேண்டும். மீண்டும் நாம் பாரதத்தை ஸ்ரீமத் மூலம்
சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். தந்தை என்ன கூறுகின்றாரோ
அதனை குறிப்பெடுத்து, பிறகு அதைப் பற்றி சிந்தனை செய்து
எழுதுவதில் உதவி செய்ய வேண்டும். உண்மையில் பாரதம் சொர்க்கமாக
இருந்தது, இராவண இராஜ்யம் கிடையாது என்பதை மனிதர்களுக்குப்
புரிய வைப்பதற்கு என்ன என்ன எழுத வேண்டும்? இப்பொழுது
பாரதவாசிகளாகிய நம்மை தந்தை விகாரமற்றவர்களாக ஆக்கிக்
கொண்டிருக்கின்றார் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது.
முதலில் தன்னை சோதித்துக் கொள்ள வேண்டும் - நான் விகாரமற்றவனாக
ஆகியிருக்கிறேனா? ஈஸ்வரனை நான் ஏமாற்றவில்லை தானே? ஈஸ்வரன்
என்னை பார்ப்பது கிடையாது என்று நினைக்காதீர்கள். உங்களது
வாயில் இந்த வார்த்தை வெளிப்படக் கூடாது. தூய்மையாக்கக்
கூடியவர் பதீத பாவனர் ஒரே ஒரு தந்தை தான் என்பதை நீங்கள்
அறிவீர்கள். பாரதம் விகாரமற்றதாக இருந்த பொழுது சொர்க்கமாக
இருந்தது. இவர்கள் முழுமையாக விகாரமற்றவர்களாக இருந்தனர் அல்லவா!
அரசர் எவ்வழியோ மக்கள் அவ்வழி. அப்பொழுது தான் முழு பாரதமும்
சொர்க்கம் என்று கூறப்பட்டது அல்லவா! இப்பொழுது நரகமாக
இருக்கிறது. இந்த 84 பிறவிகளின் ஏணிப்படி மிகவும் நல்ல
சித்திரமாகும். யாராவது நல்லவர்களாக இருக்கின்றனர் எனில்
அவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்க முடியும். பெரிய பெரிய
நபர்களுக்கு பெரிய பரிசுகள் கிடைக்கும் அல்லவா! ஆக நீங்களும்
யார் வந்தாலும் அவர்களுக்கு புரிய வைத்து இப்படிப்பட்ட பரிசுகளை
கொடுக்க வேண்டும். கொடுப்பதற்கான பொருட்கள் எப்பொழுதும் தயாராக
இருக்கும். உங்களிடத்திலும் ஞானம் எப்பொழுதும் தயாராக இருக்க
வேண்டும். ஏணிப்படியில் முழு ஞானமும் இருக்கிறது. நாம் 84
பிறவிகள் எப்படி எடுத்தோம்? என்பதை நினைவில் வைத்துக் கொள்ள
வேண்டும். இது புரிந்துக் கொள்ள வேண்டிய விசயம் அல்லவா! யார்
முதலில் வருகிறார்களோ அவர்கள் தான் அவசியம் 84 பிறவிகள்
எடுத்திருப்பர்! 84 பிறவிகளைப் பற்றி கூறிய தந்தை இவரது கடைசிப்
பிறவியிலும் கடைசி நேரத்தில் சாதாரண உடலில் பிரவேசமாகிறேன்
என்று கூறுகின்றார். பிறகு இவருக்கு பிரம்மா என்று பெயர்
வைக்கிறேன். இவர் மூலமாக பிராமணர் களை படைக்கிறேன். இல்லையெனில்
பிராமணர்கள் எங்கிருந்து வருவார்கள்? பிரம்மாவிற்கும் தந்தை
இருக்கிறார் என்று எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நிச்சயமாக பகவான் என்று தான் கூறுவீர்கள். பிரம்மா மற்றும்
விஷ்ணுவை சூட்சுமவதனத்தில் காண்பிக்கிறீர்கள். நான் இவரது 84
பிறவியின் கடைசியில் பிரவேசம் செய்கிறேன் என்று தந்தை
கூறுகின்றார். தத்தெடுக்கப்படும் பொழுது பெயர் மாற்றப்பட்டு
விடுகிறது. சந்நியாசமும் செய்யப்படுகிறது. சந்நியாசிகளும்
சந்நியாசம் செய்தவுடனேயே மறந்து விடுவது கிடையாது. கண்டிப்பாக
நினைவில் இருக்கும். உங்களுக்கும் நினைவு இருக்கும். ஆனால்
உங்களுக்கு அவர்கள் மீது வைராக்கியம் ஏற்படுகிறது. ஏனெனில்
இவையனைத்தும் சுடுகாடாக ஆகிவிடும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆகையால் நாம் ஏன் அதை நினைவு செய்ய வேண்டும்? ஞானத்தின் மூலம்
அனைத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களும்
ஞானத்தின் மூலம் தான் வீட்டை துறக்கின்றனர். வீட்டை எப்படி
துறவறம் செய்தீர்கள்? என்று அவர் களிடம் கேட்டால்
கூறமாட்டார்கள். பிறகு அவர்களிடம் யுக்தியாக கேட்க
வேண்டியிருக்கிறது - உங்களுக்கு எப்படி வைராக்கியம் ஏற்பட்டது?
என்று எங்களுக்கு கூறினால் நாமும் அதை கடைபிடிப்போம்.
தூய்மையாக இருங்கள் என்று நீங்கள் தூண்டுதல் கொடுக்கிறீர்கள்.
மற்றபடி உங்களுக்கு அனைவரின் நினைவும் இருக்கிறது. குழந்தைப்
பருவத்திலிருந்தே அனைத்தையும் கூற முடியும். புத்தியில் முழு
ஞானமும் இருக்கிறது. எவ்வாறு இவர்கள் அனைவரும் நடிகர்களாக
இருந்து நடித்துக் கொண்டு வருகின்றனர்! இப்பொழுது அனைவரின்
கலியுக கர்ம பந்தனங்கள் துண்டிக்கப்பட இருக்கிறது. பிறகு
சாந்திதாமம் செல்வார்கள். பிறகு அங்கிருந்து அனைவருக்கும்
புதிய சம்மந்தம் ஏற்படும். புரிய வைப்பதற்கான நல்ல நல்ல
கருத்துகளையும் பாபா கொடுத்துக் கொண்டே இருக்கின்றார். இதே
பாரதவாசிகள் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களாக
இருந்த பொழுது அமைதி இருந்தது, பிறகு 84 பிறவி களுக்குப் பின்
விகாரிகளாக ஆகிவிட்டனர். இப்பொழுது மீண்டும் விகாரமற்றவர்களாக
ஆக வேண்டும். ஆனால் முயற்சி செய்விக்கக் கூடியவர் தேவை.
இப்பொழுது தந்தை உங்களுக்கு கூறியிருக்கின்றார். நீங்கள்
அவர்களே அல்லவா என்று தந்தை கூறுகின்றார். பாபா, நீங்களும் அவரே
அல்லவா என்று குழந்தைகளும் கூறுகிறீர்கள். கல்பத்திற்கு
முன்பும் உங்களுக்கு கற்பித்து இராஜ்ய பாக்கியத்தை
கொடுத்திருந்தேன், கல்ப கல்பத்திற்கும் இவ்வாறு செய்து கொண்டே
இருப்பேன் என்று தந்தை கூறுகின்றார். நாடகத்தில் என்னவெல்லாம்
நடந்ததோ, தடைகள் ஏற்பட்டதோ, மீண்டும் ஏற்படும். வாழ்க்கையில்
என்ன என்ன நடைபெற்றது? என்று நினைவு இருக்கும் அல்லவா! இவரை
பிரம்மா பாபா அனைவருக்கும் நினைவு இருக்கும். கிராமத்து பையன்
சிறுவன் என்று அழைக்கப்பட்டவர் பிறகு வைகுண்டத்திற்கு எஜமானராக
ஆகிவிட்டார். வைகுண்டத்தில் குக்கிராமங்கள் எப்படி இருக்க
முடியும்? என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். இந்த நேரத்தில்
உங்களைப் பொருத்த மட்டில் இந்த முழு பழைய உலகமும் கிராமம் ஆகும்.
வைகுண்டம் எங்கு இருக்கிறது! இந்த நரகம் எங்கு இருக்கிறது!
பெரிய பெரிய மாளிகை, கட்டிடங்களைப் பார்க்கின்ற பொழுது இதுவே
சொர்க்கம் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். இவை அனைத்தும் மண்,
கற்கள் ஆகும், இதற்கு எந்த மதிப்பும் கிடையாது என்று தந்தை
கூறுகின்றார். அனைத்தையும் விட அதிக மதிப்பானது வைரமாகும்.
சத்யுகத்தில் உங்களது தங்க மாளிகை எப்படி இருந்தது? என்று சற்று
சிந்தித்துப் பாருங்கள். அங்கு அனைத்து களஞ்சியங்களும்
நிறைந்திருக்கும். அளவற்ற தங்கம் இருக்கும். ஆக
குழந்தைகளுக்குள் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! யாராவது வாடிய
முகத்துடன் வந்தால் உங்களை உடனேயே குஷிப்படுத்தும் பாட்டுக்கள்
உள்ளன என்று பாபா புரிய வைப்பார். முழு ஞானமும் புத்தியில்
வந்து விடும். பாபா, நம்மை உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார்
என்பதை புரிந்து கொள்வர். அதை ஒருபொழுதும் யாரும் அபகரிக்க
முடியாது. அரைக் கல்பத்திற்கு நாம் சுகதாமத்திற்கு எஜமானர்களாக
ஆகின்றோம். நான் இந்த எல்லைக்குட்பட்ட இராஜ்யத்தின் வாரிசு
என்பதை அரசரின் குழந்தை புரிந்து கொள்வார். நான் எல்லையற்ற
தந்தையின் வாரிசு என்ற போதை உங்களுக்குள் எவ்வளவு இருக்க
வேண்டும்! தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார், நாம் 21
பிறவிகளுக்கு வாரிசாக ஆகின்றோம். எவ்வளவு குஷி இருக்க வேண்டும்!
யாருக்கு வாரிசாக ஆகின்றோமோ அவரை அவசியம் நினைவு செய்ய வேண்டும்.
நினைவு செய்யாமல் வாரிசாக ஆகிவிட முடியாது. நினைவு செய்து
தூய்மையாக ஆகின்ற பொழுது தான் வாரிசாக ஆக முடியும். ஸ்ரீமத்
மூலம் நாம் உலகிற்கு எஜமானர்களாக, இரட்டை கிரீடதாரிகளாக
ஆகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிறவி பிறவிகளாக நாம்
இராஜ்யம் செய்வோம். மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் அழியக்
கூடிய தானம், புண்ணியம் செய்கின்றனர். உங்களுடையது அழிவற்ற
ஞானச் செல்வமாகும். உங்களுக்கு எவ்வளவு உயர்ந்த லாட்டரி
கிடைக்கிறது! கர்மத்தின் படி பலன் கிடைக்கிறது அல்லவா! யாராவது
பெரிய அரசரின் குழந்தையாக பிறந்து விட்டால் எல்லைக்குட்பட்ட
பெரிய லாட்டரி கிடைத்து விட்டது என்று கூறுவர். ஒற்றை
கிரீடமுள்ள அரசர்கள் முழு உலகிற்கும் எஜமானர்களாக ஆகி விட
முடியாது. இரட்டை கிரீடமுள்ள நீங்களே முழு உலகிற்கும்
எஜமானர்களாக ஆகிறீர்கள். அந்த நேரத்தில் வேறு எந்த இராஜ்யமும்
இருக்காது. மற்ற தர்மத்தினர் பிறகு தான் வருகின்றனர். அவர்கள்
எண்ணிக்கை அதிகமாகாத வரை முதலில் வந்த அரசர்கள் விகாரிகளாக ஆன
காரணத்தினாலும் கருத்து வேறுபாட்டிலும் துண்டு துண்டாக பிரிந்து
விடுகின்றனர். முதலில் முழு உலகிலும் ஒரே ஒரு இராஜ்யம் தான்
இருந்தது. இது முந்தைய பிறப்பின் பலன் என்று அங்கு
கூறமாட்டார்கள். இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு
சிரேஷ்ட காரியம் செய்வதற்கு கற்றுக் கொடுத்துக்
கொண்டிருக்கின்றார். யார் எப்படிப்பட்ட காரியங்களை
செய்கிறார்களோ, சேவை செய்வார்களோ அதற்கான பலன் அவசியம்
கிடைக்கும். நல்ல செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். எந்த
காரியம் செய்தாலும், ஏதாவது புரியவில்லையெனில் அதற்கு ஸ்ரீமத்
பெற்றுக் கொள்ள வேண்டும். கடிதத்தின் மூலம் அடிக்கடி கேட்க
வேண்டும். பிரதம மந்திரியாக இருப்பவருக்கு எவ்வளவு கடிதங்கள்
வந்து கொண்டிருக்கும்! ஆனால் அவர் எதையும் தனியாக படிப்பது
கிடையாது. அவருக்கு பல உதவியாளர்கள் (செகரட்ரி) இருப்பர்.
அவர்கள் அனைத்து கடிதங்களையும் பார்ப்பார்கள். எது மிக
முக்கியமானதோ, அதை பிரதம மந்திரியின் மேசையில் வைப்பார்கள்.
இங்கும் அவ்வாறு இருக்கிறது. முக்கியமான கடிதங்களுக்கு உடனேயே
பதில் கொடுத்து விடுகின்றார். மற்றவைகளுக்கு அன்பு நினைவுகள்
என்று எழுதி அனுப்பி விடுகின்றார். ஒவ்வொன்றிற்கும்
தனித்தனியாக அமர்ந்து கடிதம் எழுதுவது என்பது முடியாத
காரியமாகும். மிகவும் கடினமாகும். ஆஹா! இன்று எல்லையற்ற
தந்தையிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது எனும் பொழுது
குழந்தைகளுக்கு எவ்வளவு குஷி ஏற்படுகிறது! சிவபாபா பிரம்மாவின்
மூலம் பதில் கடிதம் எழுதுகின்றார். குழந்தைகளுக்கு அதிக குஷி
ஏற்படுகிறது. மிக அதிகம் உருகக் கூடியவர்கள் பந்தனமுள்ள
தாய்மார்கள் ஆவர். ஆஹா! நாம் பந்தனத்தில் இருக்கிறோம்,
எல்லையற்ற தந்தை நமக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். கண்களில்
வைத்துக் கொள்கின்றனர். அஞ்ஞான காலத்திலும் கணவனை பரமாத்மா
என்று புரிந்து கொள்பவர் களுக்கு கணவரிடமிருந்து கடிதம் வந்து
விட்டால் முத்தம் கொடுப்பர். உங்களிலும் பாப்தாதா வின் கடிதம்
கிடைத்தவுடனேயே சில குழந்தைகள் புலகாங்கிதம் அடைந்து
விடுகின்றனர். ஆனந்தக் கண்ணீர் வந்து விடுகிறது. முத்தம்
கொடுப்பர், கண்களில் வைத்துக் கொள்கின்றனர். மிக அன்பாக கடிதம்
படிக்கின்றனர். பந்தனமுள்ளவர்கள் குறைந்தவர்களா என்ன! சில
குழந்தைகளை மாயை வென்று விடுகிறது. சிலர் நாம் அவசியம்
தூய்மையாக வேண்டும் என்று நினைக்கின்றனர். பாரதம் விகாரமின்றி
இருந்தது அல்லவா! இப்பொழுது விகாரமானதாக இருக்கிறது. யார்
விகாரமற்றவர்களாக ஆக வேண்டுமோ அவர்கள் தான் முந்தைய கல்பத்தைப்
போன்று முயற்சியும் செய்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் புரிய
வைப்பது மிகவும் எளிதாகும். உங்களுக்கும் இந்த திட்டம்
இருக்கிறது அல்லவா! கீதையின் யுகம் நடைபெற்றுக் கொண்டி
ருக்கிறது. கீதையின் யுகம் தான் புருஷோத்தம யுகம் என்று
கூறப்படுகிறது. கீதையின் புருஷோத்தம யுகம் என்று நீங்கள்
எழுதுகிறீர்கள். இந்த நேரத்தில் தான் பழைய உலகம் மாறி புதிதாக
ஆகிறது. எல்லையற்ற தந்தை நமக்கு ஆசிரியராகவும் இருக்கின்றார்,
அவர் மூலம் நாம் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது
உங்களது புத்தியில் இருக்கிறது. நல்ல முறையில் படித்தால் இரட்டை
கிரீடதாரிகளாக ஆவீர்கள். எவ்வளவு உயர்ந்த பள்ளிக் கூடமாகும்!
இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது. பல வகையான பிரஜைகளும் அவசியம்
இருப்பர். இராஜ்யம் வளர்ச்சி யடைந்து கொண்டே இருக்கும்.
குறைவாக ஞானம் அடைபவர்கள் தாமதமாக வருவார்கள். யார் எப்படி
முயற்சி செய்வார்களோ அவர்கள் முதலில் வந்து கொண்டே இருப்பார்கள்.
இவை அனைத்தும் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட விளையாட் டாகும். இந்த
நாடகச் சக்கரம் திரும்பவும் சுற்றிக் கொண்டே இருக்கும் அல்லவா!
இப்பொழுது நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்து
கொண்டிருக்கிறீர்கள். தூய்மையாக ஆகுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். இதற்கு யாராவது தடையிடுகின்றனர் எனில்
பொருட்படுத்தக் கூடாது. ரொட்டித் துண்டு கிடைத்து விடும் அல்லவா!
குழந்தைகள் நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். பாபா
பக்தி மார்க்கத்தின் உதாரணம் கூறுகின்றார் - பூஜைக்கான
நேரத்தில் புத்தியானது வெளியில் செல்கிறது எனில் தனது காதை
திருகிக் கொள்வார், தன்னை தண்டித்துக் கொள்வார். இப்பொழுது இது
ஞானமாகும். இதிலும் முக்கியமானது நினைவாகும். நினைவு
இல்லையெனில் தன்னை தண்டித்துக் கொள்ள வேண்டும். மாயை என் மீது
எப்படி வெற்றியடைய முடியும்? நான் என்ன அந்த அளவிற்கு
பக்குவமற்றவனாக இருக்கிறேனா? நான் தான் இதை வெல்ல வேண்டும்.
தன்னைத் தான் நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நான்
அந்த அளவிற்கு மகாவீர் ஆக இருக்கிறேனா? மற்றவர்களையும் மகாவீர்
ஆக்கக் கூடிய முயற்சி செய்கிறேனா? என்று தனக்குள் கேளுங்கள்.
எந்த அளவிற்கு பலரை தனக்குச் சமமாக ஆக்குகிறீர்களோ அந்த
அளவிற்கு உயர்ந்த நிலை (பதவி) கிடைக்கும். தனது இராஜ்ய
பாக்கியம் அடைவதற்கான போட்டி போட வேண்டும். ஒருவேளை
எனக்குள்ளேயே கோபம் இருந்தால் கோபப்படாதீர்கள் என்று
மற்றவர்களுக்கு எப்படி கூற முடியும்? சத்தியம் இல்லை அல்லவா!
வெட்கம் ஏற்பட வேண்டும். மற்றவர்களுக்குப் புரிய வைத்து அவர்கள்
உயர்ந்த நிலை அடைந்து விடுவர், சுயம் கீழான நிலை அடைந்து
விடுவது, இது ஒரு முயற்சியா என்ன? (பண்டிதரின் கதை போன்று)
தந்தையை நினைவு செய்து நீங்கள் இந்த விஷக்கடலிருந்து
பாற்கடலுக்குச் சென்று விடுவீர்கள். மற்றபடி இந்த அனைத்து
உதாரணங்களையும் தந்தை வந்து புரிய வைக்கின்றார். இதையே பிறகு
பக்தி மார்க்கத்தில் திரும்பவும் கூறுகின்றனர். குளவிக்கான
உதாரணம் இருக்கிறது. நீங்கள் பிராமணிகள் அல்லவா - பி.கு.,
நீங்கள் தான் உண்மையிலும் உண்மையான பிராமணர்கள். பிரஜாபிதா
பிரம்மா எங்கிருக்கின்றார்? அவசியம் இங்கு தான் இருப்பார்
அல்லவா! அங்கு இருக்கமாட்டார். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும்
புத்திசாலிகளாக ஆக வேண்டும். பாபாவின் திட்டம் மனிதனை
தேவதையாக்குவதாகும். புரிய வைப்பதற்காக இந்த சித்திரங்களும்
உள்ளன. இதில் எழுதக் கூடிய விசயங்களும் அவ்வாறே இருக்க வேண்டும்.
கீதையின் பகவானின் திட்டம் இதுவல்லவா! பிராமணர்களாகிய நாம்
குடுமி போன்று இருக் கிறோம். ஒருவருக்கான விசயம் கிடையாது.
பிரஜாபிதா பிரம்மா என்றால் குடுமி போன்ற பிராமணர் களுக்கானவர்
ஆகிவிடுகிறார் அல்லவா! பிரம்மா பிராமணர்களின் தந்தை ஆவார்.
இந்த நேரத்தில் மிக உயர்ந்த குடும்பமாக இருக்கும் அல்லவா!
நீங்களே பிறகு தெய்வீக குடும்பத்திற்கு வருகிறீர்கள். இந்த
நேரத்தில் உங்களுக்கு அதிக குஷி ஏற்படுகிறது, ஏனெனில் லாட்டரி
கிடைக்கிறது. உங்களுக்கு பல பெயர்கள் உள்ளன. வந்தே மாதரம்,
சிவனின் சக்தி சேனைகள் நீங்கள் தான் அல்லவா! அவர்கள் அனைவரும்
பொய்யானவர்கள். அதிகமானவர்களான காரணத்தினால் குழப்பமடைகின்றனர்,
ஆகையால் தான் இராஜ்யம் ஸ்தாபனை செய்வதற்கு உழைப்பு ஏற்படுகிறது.
இந்த நாடகம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தந்தை
கூறுகின்றார். இதில் எனக்கும் பாகம் இருக்கிறது. நான்
சர்வசக்திவானாக இருக்கிறேன். என்னை நினைவு செய்வதன் மூலம்
நீங்கள் தூய்மையாக ஆகிவிடுகிறீர்கள். அனைவரையும் விட அதிகமாக
கவர்ந்திழுக்கும் காந்தமாக இருப்பவர் சிவபாபா, அவர் தான்
உயர்ந்ததிலும் உயர்ந்த இடத்தில் இருக்கின்றார். நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக்
கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்காண முக்கிய சாரம்:
1) நான் 21 பிறவிகளுக்கு எல்லையற்ற பாபாவின் வாரிசாக
ஆகியிருக்கிறேன் என்ற இதே குஷியில் அல்லது போதையில் சதா இருக்க
வேண்டும். யாருக்கு வாரிசாக ஆகியிருக்கிறீர்களோ அவரை
நினைக்கவும் வேண்டும் மற்றும் அவசியம் தூய்மையாகவும் வேண்டும்.
2) தந்தை எந்த சிரேஷ்ட காரியம் செய்ய கற்றுக் கொடுக்கிறாரோ
அதையே செய்ய வேண்டும். ஸ்ரீமத் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும.்
வரதானம்:
மனதின் மீது முழுமையாக கவனம்
தரக்கூடிய முன்னேறும் கலையின் அனுபபூர்வமாக உலகத்தை மாற்றம்
செய்பவர் ஆகுக.
இப்பொழுது கடைசி சமயத்தில்
மனதின் மூலம் தான் உலகத்தை மாற்றுவதற்கான பொறுப்பாளர் ஆக
வேண்டும், ஆகையால் இப்பொழுது மனதின் ஒரு எண்ணம் கூட
வீணாகிவிட்டது என்றால், அனைத்தையும் இழந்தோம், ஒரு எண்ணம் கூட
சாதாரண விசயமாக புரிந்துக்கொள்ளாதீர்கள். தற்சமயத்தில்
எண்ணங்களின் குழப்பங்கள் கூட பெரிய குழப்பமாகிறது, ஏனெனில்
இப்பொழுது சமயம் மாறிவிட்டது, முயற்சியின் வேகம் கூட
மாறிவிடுகிறது அதனால் எண்ணங்களில் தான் முற்றுப்புள்ளி வைக்க
வேண்டும். மனதின் இந்தளவு கவனம் வைக்கும் பொழுது முன்னேறும்
கலையின் மூலம் உலகத்தை மாற்ற செய்ய முடியும்.
சுலோகன்:
கர்மத்தில் யோகத்தின் அனுபவம்
ஆவது என்பது தான் கர்மயோகி ஆவது.
ஓம்சாந்தி