22.10.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே!
அனைத்திலும் இனிமையான வார்த்தை பாபா என்பதாகும், உங்களுடைய
வாயிலிருந்து பாபா, பாபா என்பது வெளி வந்தபடியே இருக்க வேண்டும்,
அனைவருக்கும் சிவபாபாவின் அறிமுகத்தைக் கொடுத்தபடி இருங்கள்.
கேள்வி:
சத்யுகத்தில்
மனிதர்கள்
மட்டுமல்ல,
எந்த
விலங்குகளும்
கூட
நோய்வாய்ப்படுவதில்லை,
ஏன்?
பதில்:
ஏனென்றால் சங்கமயுகத்தில் பாபா
அனைத்து ஆத்மாக்களின் மற்றும் எல்லைக்கப் பாற்பட்ட சிருஷ்டிக்கு
நோயின் பெயர் அடையாளம் கூட இல்லாத அளவு ஆப்பரேஷன் (அறுவைச்
சிகிச்சை) செய்து விடுகிறார். தந்தை அழிவற்ற சர்ஜன் (அறுவைச்
சிகிச்சையாளர்) ஆவார். இப்போதுள்ள நோய்வாய்ப்பட்டுள்ள
சிருஷ்டியில் சிகிச்சைக்குப் பிறகு துக்கத்தின் பெயர்
அடையாளமும் கூட இருக்காது. இங்குள்ள துக்கங்களிலிருந்து
தப்பிப்பதற்காக மிக மிக தைரியசாலிகளாக ஆக வேண்டும்.
பாடல்:
உங்களை அடைந்து நாங்கள் உலகத்தை அடைந்தோம் . . .
ஓம் சாந்தி.
இரண்டு தடவை சொல்ல முடியும்.
இரட்டை ஓம் சாந்தி. ஆத்மா தனது அறிமுகத்தைக் கொடுத்துக்
கொண்டிருக்கிறது. ஆத்மாவாகிய நான் அமைதி சொரூபமானவன். நம்முடைய
இருப்பிடம் சாந்தி தாமத்தில் இருக்கிறது, மேலும் நாம் அனைவரும்
பாபாவின் குழந்தைகள். அனைத்து ஆத்மாக்களும் ஓம் என சொல்கின்றனர்,
அங்கே நாம் அனைவரும் சகோதர-சகோதரர்கள், பிறகு இங்கே
சகோதர-சகோதரிகள் ஆகிறோம். இப்போது சகோதர-சகோதரி என்ற உறவு
தொடங்குகிறது. அனைவரும் என்னுடைய குழந்தைகள், நீங்கள்
பிரம்மாவுக்கும் குழந்தைகளாக இருக்கிறீர்கள், ஆகையால்
சகோதர-சகோதரிகளாக இருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு எந்த
சம்மந்தமும் கிடையாது. பிரஜாபிதாவின் குழந்தைகள்
பிரம்மாகுமார்-குமாரிகளாக உள்ளனர். பழைய உலகை மாற்றுவதற்காக
இந்த சமயத்தில்தான் பாபா வருகிறார். தந்தை பிரம்மாவின்
மூலம்தான் மீண்டும் புதிய சிருஷ்டியைப் படைக்கிறார்.
பிரம்மாவுடனும் சம்மந்தம் உள்ளதல்லவா. யுக்தியும் எவ்வளவு
நன்றாக உள்ளது. அனைவரும் பிரம்மா குமார்-குமாரிகள். தன்னை ஆத்மா
என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும்
தம்மை சகோதரன்-சகோதரி என புரிந்து கொள்ள வேண்டும். குற்றப்
பார்வை இருக்கக் கூடாது, இங்கே குமார்-குமாரிகள் பெரியவர்களாக
ஆகும்போது கண்கள் குற்றம் நிறைந்தவையாக ஆகின்றன, பிறகு குற்றம்
செய்து விடுகின்றனர். குற்றச் செயல் நடப்பது இராவண இராஜ்யத்தில்.
சத்யுகத்தில் குற்றச்செயல் நடப்பதில்லை. குற்றம் (விகாரம்)
என்ற வார்த்தையே இருக்காது. இங்கேயோ குற்றச்செயல் அதிகமாக
நடக்கிறது. அதற்காக நீதி மன்றம் முதலானவை உள்ளன. அங்கே நீதி
மன்றம் முதலானவை இருப்ப தில்லை. ஆச்சரியமாக உள்ளதல்லவா.
சிறைச்சாலையோ, போலீஸ், திருடர்கள் முதலானவர் களோ இருக்க
மாட்டார்கள். இவையனைத்தும் துக்கத்தின் விசயங்கள், அவை இங்கே
நடந்து கொண்டிருக்கின்றன. ஆகையால் இது சுகம் மற்றும் துக்கம்,
வெற்றி மற்றும் தோல்வியின் விளையாட்டு என குழந்தைகளுக்குப்
புரிய வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கூட நீங்கள்தான் புரிந்து
கொள்கிறீர்கள். மாயையினால் தோல்வியே தோல்வி என பாடப்பட்டுள்ளது,
தந்தை வந்து மாயையின் மீது அரைக் கல்ப காலத்திற்கு வெற்றியை
அடைய வைக்கிறார். பிறகு அரைக் கல்பத்திற்கு தோல்வி அடைய
வேண்டும். இது புதிய விசயம் ஏதுமில்லை. இதுவோ சாதாரண ஒரு பைசா
அளவே மதிப்புள்ள நாடகமாகும், பிறகு நீங்கள் என்னை நினைவு
செய்யும்போது தம்முடைய இராஜ்ய பாக்கியத்தை அரைக் கல்ப
காலத்திற்கு எடுக்கிறீர்கள். இராவண இராஜ்யத்தில் என்னை மறந்து
விடுகிறீர்கள். இராவணன் எதிரியாக உள்ளார், அவரை ஒவ்வொரு
வருடமும் பாரதவாசிகள்தான் எரிக்கின்றனர். பாரதவாசிகள் அதிகமாக
உள்ள பிற தேசத்திலும் எரிப்பார்கள். இது பாரதவாசிகளின் தார்மீக
பண்டிகை என்று சொல்வார்கள். தசரா கொண்டாடும்போது குழந்தைகள்
புரிய வைக்க வேண்டும் - அது எல்லைக்குட்பட்ட விசயமாகும். இராவண
இராஜ்யம் இப்போது முழு உலகின் மீது நடக்கிறது. இலங்கையில்
மட்டும் அல்ல. உலகம் மிகப் பெரியது அல்லவா. இந்த சிருஷ்டி
முழுவதும் கடல் மீது நின்றுள்ளது. மனிதர்கள் சொல்கின்றனர் -
கீழே ஒரு காளையும் பசுவும் உள்ளன, அதன் கொம்பின் மீது சிருஷ்டி
நின்றுள்ளது, பிறகு களைத்துப் போய் விட்டால் மாற்றிக்
கொள்கின்றன. இப்போது இந்த விஷயம் இல்லை. பூமி நீரின் மீது
நின்றுள்ளது, நாலா புறங்களிலும் நீரே நீர் நிறைந்துள்ளது. ஆக,
இப்போது முழு உலகிலும் இராவண இராஜ்யம் உள்ளது, பிறகு ராம அல்லது
ஈஸ்வரிய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்காக தந்தை வர வேண்டியுள்ளது.
ஈஸ்வரன் என்று சொன்னால் மட்டும் போதும், ஈஸ்வரன் சர்வசக்திவான்,
அனைத்தும் செய்ய வல்லவர் என்று சொல்லி விடுகின்றனர். பொய்யான
மகிமை ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அந்த அளவு அன்பு இருப்பதில்லை.
இங்கே ஈஸ்வரன் தந்தை என சொல்லப்படுகிறார். பாபா என்று சொல்வதன்
மூலம் ஆஸ்தி கிடைக்கக் கூடிய விஷயம் உண்டாகிறது. எப்போதும் பாபா
என்று சொல்ல வேண்டும் என சிவபாபா சொல்கிறார். ஈஸ்வரன், பிரபு
ஆகிய வார்த்தைகளை மறந்து விட வேண்டும். என்னை மட்டும் நினைவு
செய்யுங்கள் என பாபா சொல்கின்றார். கண்காட்சி முதலான வைகளில்
கூட புரிய வைக்கும்போது அடிக்கடி சிவபாபாவின் அறிமுகத்தைக்
கொடுங்கள். சிவபாபா ஒருவர்தான் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர், அவர்
இறைத் தந்தை எனப்படுகிறார். முஸ்லிம்கள் அல்லாஹ் என்று
சொல்கின்றனர், காலை நேரத்தில் 10 நிமிடங்கள் அமர்ந்து குரானின்
அர்த்தத்தைச் சொல்கின்றனர் - அன்புக்குரிய அல்லாஹ் யாருக்கும்
துக்கம் கொடுக்கக் கூடாது, இதை செய்யக் கூடாது என்றெல்லாம்
சொல்லி யிருக்கிறார். பாபா சொன்னார் என புரிந்து கொள்வதில்லை.
பாபா என்னும் வார்த்தை மிகவும் இனிமையானது. சிவபாபா, சிவபாபா
என வாயிலிருந்து வெளிப்படுகிறது. வாய் மனிதருடையதாகத்தான்
இருக்கும். பசுவின் வாயாக இருக்க முடியாது. நீங்கள்
சிவசக்திகளாக இருக்கிறீர்கள். உங்கள் கமல வாயிலிருந்து ஞான
அமிர்தம் வெளிப்படுகிறது. உங்களுடைய பெயரை புகழடையச்
செய்வதற்காக கௌமுக் (பசுவின் வாய்) என சொல்லி விட்டனர். கங்கையை
இப்படி சொல்ல முடியாது. கமல வாயிலிருந்து அமிர்தம் இப்போது
வெளிப்படுகிறது. ஞான அமிர்தம் குடித்தால் பிறகு விஷத்தைக்
குடிக்க முடியாது. அமிர்தம் குடிப்பதன் மூலம் நீங்கள் தேவதை
களாக ஆகிறீர்கள். அசுரர்களை தேவர்களாக ஆக்குவதற்காக இப்போது
தந்தை வந்திருக்கிறார். நீங்கள் இப்போது தெய்வீக சம்பிரதாயமாக
ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சங்கம யுகம் எப்போது, எப்படி
ஏற்படுகிறது என்பது கூட யாருக்கும் தெரியாது. பிரம்மா
குமார்-குமாரி களாகிய நாம் புருஷோத்தம சங்கம யுகத்தவர்கள் என
நீங்கள் அறிவீர்கள். மீதி இருக்கும் அனைவரும் கலியுகத்தினர்
ஆவர். நீங்கள் எவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறீர் கள்.
மரத்தின் ஞானமும் கூட உங்களிடம் உள்ளது. மரம் முதலில் சிறியதாக
இருக்கும், பிறகு வளர்ச்சி அடையும். குழந்தை பிறப்பை கட்டுப்
படுத்துவதற்காக எவ்வளவு கண்டுபிடிப்பு களை
வெளிப்படுத்துகின்றனர். ஆனால் மனிதர் விரும்புவது ஒன்று,
நடப்பது வேறு ஒன்றாக உள்ளது. அனைவருக்கும் மரணம் ஏற்படத்தான்
வேண்டும். இப்போது பயிர் நன்றாக விளைந்திருக்கும், மழை வந்தால்
எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. இயற்கையின் சீற்றங்களை
யாரும் புரிந்து கொள்ள முடியாது. எந்த விஷயமும் நிலையாக இருப்ப
தில்லை. எங்காவது பயிர் இருந்து பனிமழை பொழிந்தது என்றால்
எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. மழை வரவில்லை என்றாலும்
நஷ்டம், இதைத்தான் இயற்கையின் ஆபத்துக்கள் என்று
சொல்லப்படுகிறது. இது போல் ஏராளமாக நடக்கவுள்ளது. இதிலிருந்து
தப்பிப்பதற்காக மிகவும் தைரியசாலிகளாக இருக்க வேண்டும்.
யாருக்காவது அறுவைச் சிகிச்சை நடந்தது என்றால் சிலருக்கு
பார்க்கவே முடிவதில்லை, பார்க்கும் போதே மயங்கி விழுந்து
விடுகின்றனர். இப்போது இந்த முழு அசுத்தமான சிருஷ்டிக்கும்
ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை) நடக்கவுள்ளது. நான் வந்து
அனைவருக்கும் ஆபரேஷன் செய்கிறேன் என்று பாபா சொல்கிறார். முழு
சிருஷ்டியும் நோயாளியாக உள்ளது. அழிவற்ற சர்ஜன் என்பதும்
தந்தையின் பெயராகும். அவர் முழு உலகிற்கும் அறுவைச் சிகிச்சை
செய்து விடுகிறார், பிறகு உலகில் இருப்பவர்களுக்கு ஒருபோதும்
துக்கம் ஏற்படாது. எவ்வளவு பெரிய சர்ஜன். ஆத்மாக்களுக்கும்
ஆபரேஷன், எல்லைக்கப்பாற்பட்ட சிருஷ்டிக்கும் ஆபரேஷன் செய்கிறவர்.
அங்கே மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் கூட நோய்வாய்ப்படாது.
தன்னுடைய மற்றும் குழந்தைகளுடைய நடிப்பு என்ன என தந்தை புரிய
வைக்கிறார். இது படைப்பின் முதல், இடை, கடைசியின் ஞானம் என
சொல்கிறோம், இதனை நீங்கள்தான் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
குழந்தைகளுக்கு முதலில் இந்த குஷி இருக்க வேண்டும்.
இன்று சத்குருவாரம், எப்போதும் சத்தியத்தை உரைக்க வேண்டும்.
வியாபாரத்திலும் சொல்கின்றனர் அல்லவா - சத்தியத்தைப்
பேசுங்கள். ஏமாற்று வேலை செய்யாதீர்கள். ஆனாலும் பேராசை கொண்டு
கொஞ்சம் அதிக விலை சொல்லி வியாபாரம் செய்து விடுவார் கள்.
உண்மையை யாரும் ஒருபோதும் பேசுவதில்லை. மிக அதிகமாக பொய் தான்
பேசு கின்றார்கள், ஆகையால் சத்தியத்தை நினைவு செய்கின்றனர்.
சத்யமானவரின் தொடர்பு உள்ளது என சொல்கின்றனர் அல்லவா.
சத்தியமானவராக உள்ள பாபாதான் ஆத்மாக்களாகிய நம்முடன் வருவார்.
இப்போது சத்தியமானவருடன் ஆத்மாக்களாகிய உங்கள் தொடர்பு உள்ளது
எனும் போது நீங்கள்தான் உடன் செல்வீர்கள். சிவபாபா வந்துள்ளார்
என்பதை குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும், அவர்
சத்தியமானவர் என சொல்லப்படுகிறார். அவர் ஆத்மாக்களாகிய நம்மை
ஒரே ஒரு முறை தூய்மையாக்கி உடன் அழைத்துச் செல்வார். ராம்
கூடவே இருக்கிறார் அல்லது சத்தியமான பெயர் கூடவே இருக்கிறது
என்று சத்யுகத்தில் இப்படி சொல்ல மாட்டார்கள். நான்
குழந்தைகளாகிய உங்களிடம் வந்துள்ளேன், கண்களில் அமர்த்தி
அழைத்துச் செல்வேன். இந்த கண் அல்ல, மூன்றாம் கண். இந்த சமயம்
தந்தை வந்துள்ளார் நம்மை உடன் அழைத்துச் செல்வார் என நீங்கள்
அறிவீர்கள். சங்கரனின் ஊர்வலம் அல்ல, இது சிவனின் குழந்தைகளின்
ஊர்வலம். அவர் பதிகளுக்கெல்லாம் பதி ஆவார். நீங்கள் அனைவரும்
மணமகள்கள் என சொல்கிறார். நான் மணமகனாக இருக்கிறேன். நீங்கள்
அனைவரும் பிரியதர்ஷினிகள், நான் பிரியதர்ஷனாக உள்ளேன்.
பிரியதர்ஷன் ஒருவர்தான் இருக்கிறார் அல்லவா. நீங்கள் அரைக்
கல்ப காலமாக பிரியதர்ஷனாகிய என்னுடைய பிரியதர்ஷினிகள். இப்போது
நான் வந்துள்ளேன், அனைவரும் பக்தைகள் ஆவீர்கள். பக்தர் களைக்
காப்பாற்றுபவர் பகவான் ஆவார். ஆத்மா சரீரத்துடன் பக்தி
செய்கிறது. சத்யுக, திரேதா யுகங்களில் பக்தி இருப்பதில்லை.
பக்தியின் பலனை சத்யுகத்தில் அனுபவம் செய் கிறீர்கள், அதை
இப்போது குழந்தைளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர்
உங்களுடைய பிரியதர்ஷன், அவர் உங்களை உடன் அழைத்துச் செல்வார்,
பிறகு நீங்கள் உங்களுடைய முயற்சிக்குத் தகுந்தாற்போல சென்று
இராஜ்ய பாக்கியத்தை எடுப்பீர்கள். இது எங்கும் எழுதப்
படவில்லை. சங்கரன் பார்வதிக்கு அமரக்கதை கூறினார் என்று
சொல்கின்றனர். நீங்கள் அனைவரும் பார்வதிகள். நான் கதை
சொல்லக்கூடிய அமரநாத். அமர்நாத் என ஒருவர்தான்
சொல்லப்படுகிறார். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் தந்தை ஆவார்,
அவருக்கு தன்னுடைய தேகம் கிடையாது, அமரநாத் ஆகிய நான்
குழந்தைகளாகிய உங்களுக்கு அமரக்கதை சொல்கிறேன்.
சங்கரர்-பார்வதி இங்கே எங்கிருந்து வந்தனர்? அவர்கள் இருப்பதே
சூட்சும வதனத்தில், அங்கே சூரிய சந்திரரின் வெளிச்சம் கூட
இருப்பதில்லை.
சத்யமான தந்தை உங்களுக்கு சத்யமான கதை சொல்கிறார். தந்தையைத்
தவிர சத்யமான கதையை யாரும் சொல்ல முடியாது. வினாசம் ஆவதற்கு
நேரம் எடுக்கும் என்பதை புரிந்துள்ளீர்கள். எவ்வளவு பெரிய
உலகம், எத்தனை எண்ணற்ற வீடுகள் முதலானவை விழுந்து அழியப்
போகின்றன. நில நடுக்கத்தில் எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது.
எவ்வளவு பேர் இறக்கின்றனர். மற்றபடி உங்களுடைய சின்னஞ்சிறு
மரம் இருக்கப்போகிறது. டெல்லி பரிஸ்தானம் (தேவதைகள் வாழும்
இடம்) ஆகப்போகிறது. ஒரு பரிஸ்தானத்தில் மட்டுமே லட்சுமி
நாராயணரின் இராஜ்யம் நடக்கும். எத்தனை பெரிய பெரிய மாளிகைகள்
உருவாகப் போகின்றன. எல்லைக்கப்பாற் பட்ட இலவச நிலம்
கிடைக்கிறது. நீங்கள் செலவு எதுவும் செய்யப் போவதில்லை.
இவருடைய (பிரம்மாவின்) வாழ்க்கையிலேயே எவ்வளவு மலிவாக
தானியங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது என்று பாபா சொல்கிறார்.
அப்போது சத்யுகத்தில் எவ்வளவு மலிவாக இருக்கும். டெல்லி
அளவுக்கு ஒவ்வொரு வீடும் நிலமும் அமையப் போகிறது. இனிமையான
நதிகளின் மீது உங்களின் இராஜ்யம் நடக்கப் போகிறது. ஒவ்வொரு
வரிடமும் என்னதான் இல்லாமலிருக்கும். எப்போதும் உணவு
கிடைத்துக் கொண்டிருக்கும். அங்குள்ள பழங்கள், பூக்களையும்
(காட்சியில்) பார்க்கிறீர்கள், எவ்வளவு பெரிதாக இருக்கின்றன.
நீங்கள் சோமபானம் அருந்தி வருகிறீர்கள். அங்கே தோட்டக்காரர்
இருக்கிறார் என்று சொன்னார்கள். இப்போது தோட்டக்காரர்
வைகுண்டத்தில் அல்லது நதிக்கரையில் இருப்பார். அங்கே எவ்வளவு
குறைந்த பேர் இருப்பார்கள். இப்போது இருக்கும் கோடிக்
கணக்கானவர்கள் எங்கே, அங்கே இருக்கும் 9 லட்சம் பேர் எங்கே,
மேலும் அனைத்தும் உங்களுடையதாக இருக்கும். யாரும்
நம்மிடமிருந்து பறிக்க முடியாத இராஜ்யத்தை தந்தை தருகிறார்.
வானம், பூமி என அனைத்தின் எஜமானாக நீங்கள் இருக்கப்
போகிறீர்கள். பாடலையும் குழந்தைகள் கேட்டீர்கள். இப்படிப்பட்ட
பாடல்கள் 6-8 இருக்கின்றன, அவைகளை கேட்கும் போதே குஷி எல்லை
மீறுகிறது. பாருங்கள், மன நிலையில் ஏதாவது குழப்பம்
ஏற்படுகிறதா, பாடலைப் போட்டுக் கேளுங்கள். இவை குஷியின்
பாடல்கள். நீங்கள் அர்த்தத்தை அறிவீர்கள். தம்மை மகிழ்ச்சி
நிறைந்தவராக ஆக்கிக் கொள்வதற்காக பாபா பல யுக்திகளைக்
கூறுகிறார். பாபா அந்த அளவு குஷி இருப்பதில்லை என தந்தைக்கு
எழுதுகின்றனர். அட, மாயையின் புயல் வந்ததா - நீங்கள்
வாத்தியத்தை வாசியுங்கள். குஷிக்காக பெரிய பெரிய கோவில்களில்
கூட வாயில்களில் வாத்தியங்கள் வாசிக்கின்றனர். மும்பையில்
மாதவ்பாக் - இடத்தில் உள்ள லட்சுமி நாராயணரின் கோவிலில் கூட
வாத்தியங்கள் இசைத்துக் கொண்டிருக்கும். இந்த சினிமா
ரிகார்டுகளை ஏன் போடுகிறீர்கள் என உங்களைக் கேட்கிறார்கள்.
இவையும் கூட நாடகத்தின்படி பயனுள்ள பொருட்கள் என அவர்களுக்கு
என்ன தெரியும். இதன் அர்த்தம் கூட குழந்தைகளாகிய உங்களுக்குப்
புரியும். இதை கேட்பதன் மூலமும் குஷியில் வந்து விடுவீர்கள்.
ஆனால் குழந்தைகள் மறந்து விடுகிறீர்கள். வீட்டில் யாருக்காவது
கவலையாக இருந்தது என்றால் பாட்டு கேட்டு குஷியடைகின்றனர். இவை
மதிப்பு மிக்க பொருட்களாகும். யாருடைய வீட்டிலாவது சண்டை
நடந்தால் சொல்லுங்கள் - காமம் மிகப் பெரிய எதிரி, இதன் மீது
வெற்றி பெறும்போது நாம் உலகின் எஜமான் ஆகி விடுவோம், பிறகு
மலர் மாரி பொழியும், வெற்றியின் கோஷம் எழும்பும், தங்க
மலர்களின் மழை பொழியும். நீங்கள் இப்போது முள்ளிலிருந்து தங்க
மலர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. பிறகு உங்களின்
அவதாரம் ஏற்படும். மலர்கள் தூவப்படுவ தில்லை, ஆனால் நீங்கள்
மலர்கள் ஆகி வருகிறீர்கள். மனிதர்கள் தங்க மலர்களின் மழை
பொழிகிறது என புரிந்து கொள்கின்றனர். ஒரு ராஜகுமாரன் வெளிநாடு
சென்றார், அங்கே பார்ட்டி கொடுக்கப்பட்டது, அவருக்காக
தங்கத்தாலான மலர்கள் உருவாக்கப்பட்டன. அனைவரின் மீதும் மலர்
மாரி பொழிந்தனர். குஷிப்படுத்துவதற்காக இவ்வளவு உபசரிப்பு
நடந்தது. சொக்கத் தங்கத்தில் உருவாக்கினர். பாபா அவரின்
மாநிலம் எது என்பது முதலானவையும் கூட நல்ல விதமாக அறிவார்.
உண்மையில் நீங்கள் மலர்களாக ஆகி (இந்த சிருஷ்டிக்கு)
வருகிறீர்கள். தங்க மலர்களாக நீங்கள் மேலிருந்து
இறங்குகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு உலக இராஜ்யத்தின்
எவ்வளவு பெரிய லாட்டரி கிடைத்துக் கொண்டி ருக்கிறது. லௌகீக
தந்தை குழந்தைகளிடம் சொல்வது போல - இதை உனக்காக கொண்டு வந்தேன்
என்றால் எவ்வளவு குஷி அடைகின்றனர். உங்களுக்காக
மலர்த்தோட்டத்தை (சொர்க்கத்தை) கொண்டு வந்தேன் என பாபாவும்
சொல்கிறார். நீங்கள் அங்கே இராஜ்யம் செய்வீர்கள் என்றால்
எவ்வளவு குஷி அடைய வேண்டும். யாருக்கேனும் சிறிய அன்பளிப்பு
கொடுத்தால் சொல்கின்றனர் - இந்த அன்பளிப்பு என்ன, பாபா நீங்கள்
எங்களுக்கு உலகின் இராஜ்யத்தைக் கொடுக்கிறீர்கள், அட,
சிவபாபாவின் நினைவுச்சின்னம் கூட இருந்தால் சிவபாபாவின் நினைவு
இருக்கும் மற்றும் உங்களுக்கு கோடிகள் கிடைக்கும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்
1. சத்யமானவருடன் திரும்பிச் செல்ல வேண்டும், ஆகையால்
சத்தியமானவராக இருக்க வேண்டும். ஒருபோதும் பொய் சொல்லக் கூடாது.
2. நாம் பிரம்மா பாபாவின் குழந்தைகள் ஒருவருக்கொருவர்
சகோதர-சகோதரிகள், ஆகையால் எந்த குற்றச் செயலும் செய்யக் கூடாது
(விகாரத்தில் செல்லக் கூடாது). சகோதரன் - சகோதரர், சகோதரன் -
சகோதரி என்ற சம்மந்தங்களைத் தவிர வேறு எந்த சம்மந்தத்தின்
உணர்வும் இருக்கக் கூடாது.
வரதானம்:
உலகத்திற்குப் பிடித்தவர்
சபையின் நுழைவுச் சீட்டை (டிக்கெட்) பதிவு செய்யக் கூடிய
இராஜ்ய சிம்மாசன அதிகாரி ஆகுக.
எந்த ஒரு எண்ணம் அல்லது சிந்தனை
செய்கிறீர்கள் என்றால் முதலில் இந்த சிந்தனை அல்லது எண்ணம்
தந்தைக்குப் பிடித்தமானதா என சோதனை செய்யுங்கள். யார்
தந்தைக்குப் பிடித்தமானவரோ அவர் தாமாகவே உலகிற்குப்
பிடித்தமானவராக ஆகி விடுகிறார். ஒருவேளை ஏதாவது எண்ணத்தில்
சுயநலம் இருந்தது என்றால் மனம் விரும்புபவர் என்று சொல்வோம்,
மேலும் உலக நன்மைக்கானதாக இருந்தது என்றால் உலகிற்குப்
பிடித்தவர் அல்லது பிரபுவுக்குப் பிடித்தவர் என்று சொல்வோம்.
உலகத்திற்குப் பிடித்தவரின் சபையில் உறுப்பினர் ஆவது என்றால்
சட்டம் மற்றும் ஒழுங்கு மிக்க இராஜ்ய அதிகாரம் அல்லது இராஜ்ய
சிம்மாசனத்தை அடைவதாகும்.
சுலோகன்:
பரமாத்மாவின் துணையை அனுபவம்
செய்தீர்கள் என்றால் அனைத்தையும் சகஜமாக அனுபவம் செய்தபடி
பாதுகாப்பாக இருப்பீர்கள்.
ஓம்சாந்தி