28.10.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! நீங்கள் இந்த பாடசாலையில் சொர்க்கத்திற்குச் செல்ல பாஸ்போர்ட் எடுப்பதற்காக வந்துள்ளீர்கள். ஆத்ம அபிமானி ஆகுங்கள், மேலும் தனது பெயரை பதிவேட்டில் குறித்து விட்டால் சொர்க்கத்திற்கு வந்து விடுவீர்கள்.

 

கேள்வி :

எந்த நினைவு இல்லாத காரணத்தால் குழந்தைகள் பாபாவின் மீது மதிப்பு வைப்ப தில்லை?

 

பதில்:

யாரை முழு உலகமும் அழைத்துக் கொண்டிருக்கிறதோ, நினைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை குழந்தைகளாகிய நம் சேவையில் ஈடுபட்டிருக்கிறார் என்ற நினைவு பல குழந்தைகளுக்கு இல்லை. இந்த நிச்சயம் வரிசைக் கிரமத்தில் இருக்கிறது. எந்தளவு நம்பிக்கை இருக்கிறதோ, அந்தளவு மரியாதை அளிக்கிறார்கள்.

 

பாடல் : யார் தந்தையுடன் இருக்கின்றனரோ.....

 

ஓம் சாந்தி.

அனைத்து குழந்தைகளும் ஞானக் கடலுடன் இருக்கிறார்கள். இவ்வளவு குழந்தைகள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. யார் உடன் இருக்கிறார்களோ அவர்கள் அருகில் நேரடியாக ஞானத்தை கேட்கிறார்கள். யார் தொலைவில் இருக்கிறார்களோ அவர்களுக்கு தாமதமாகக் கிடைக்கிறது. ஆனால் அருகில் இருப்பவர்கள் அதிகமாக முன்னேற்றம் அடைவார்கள் மற்றும் தொலைவில் இருப்பவர்கள் குறைவாக முன்னேறு வார்கள் என்பது கிடையாது. நடைமுறையில் பார்த்தால் தொலைவில் இருப்பவர்கள் அதிகமாக படித்து முன்னேற்றம் அடைகிறார்கள். எல்லையற்ற தந்தை இங்கே இருக்கிறார் என்பது நிச்சயம். பிராமண குழந்தைகளிலும் கூட வரிசைக்கிரமம் இருக்கிறது. குழந்தைகள் தெய்வீக குணங்களை கடைபிடிக்க வேண்டும். சில குழந்தைகள் மூலமாக பெரிய தவறுகள் நடக்கிறது. எல்லையற்ற தந்தை யாரை முழு உலகமும் நினைவு செய்கிறதோ அவர் நம்முடைய சேவை யில் ஈடுபட்டிருக்கிறார், நம்மை உயர்ந்ததிலும் உயர்ந்தவர்களாக மாற்றக் கூடிய வழியைத் தெரிவிக்கின்றார் என புரிந்துக் கொள்கிறார்கள். மிகவும் அன்போடு புரிய வைக்கின்றார். இருந்தாலும் இவ்வளவு மதிப்பு கொடுப்பதில்லை. பந்தனத்தில் இருப்பவர்கள் எவ்வளவு அடி வாங்குகிறார்கள், துடிக்கிறார்கள். இருப்பினும் நன்கு நினைவு செய்து நன்மை அடை கிறார்கள். பதவியும் உயர்ந்ததாகி விடுகிறது. பாபா அனைவருக்கும் சொல்லவில்லை. வரிசைக் கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப தான் இருக்கிறார்கள். பாபா குழந்தைகளுக்கு எச்சரிக்கை செய்கிறார். அனைவரும் ஒன்று போல இருக்க முடியாது. பந்தனத்தில் (கட்டுப்பாட்டின் கீழ்) இருப்பவர் கள் வெளியில் இருந்தாலும் நிறைய வருமானத்தை அடைகிறார்கள். இந்த பாடல் பக்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் உங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. அவர்களுக்கு என்ன தெரியும். தந்தை யார்? யாருடைய தந்தை? ஆத்மா தன்னையே அறியவில்லை என்றால் தந்தையை எப்படி அறியும்? ஆத்மா இருக்கிறது அல்லவா ! நான் யார் எங்கிருந்து வந்திருக்கிறேன். இது கூட தெரியாது. அனைவரும் தேக உணர்வில் இருக்கிறார்கள். யாரும் ஆத்ம அபிமானியாக இல்லை. ஒரு வேளை ஆத்ம உணர்வுடையவராக இருந்தால் ஆத்மாவிற்கு தன்னுடைய தந்தையைப் பற்றிக் கூட தெரியும். தேக உணர்வுடைய காரணத்தால் ஆத்மாவைப் பற்றியும், பரம்பிதா பரமாத்மாவைப் பற்றியும் அறியவில்லை. இங்கே குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா நேரடியாக புரிய வைக்கிறார். இது எல்லையற்ற பள்ளிக் கூடம் ஆகும். சொர்க்கத்தின் இராஜ்ய பதவியை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கிறது. சொர்க்கத்தில் நிறைய பதவிகள் இருக்கின்றது. சிலர் ராஜா, ராணி, சிலர் பிரஜை. உங்களை மீண்டும் டபுள் கிரீடம் உடையவராக மாற்ற நான் வந்திருக்கிறேன் என பாபா கூறுகின்றார். அனைவரும் டபுள் கிரீடம் உடையவராக மாற முடியாது. யார் நன்கு படிக்கிறார்களோ அவர்கள், நாம் இவ்வாறு மாற முடியும் என உள்ளுக்குள் புரிந்துக் கொள்கிறார் கள். அர்ப்பணமும் ஆகியிருக்கிறார்கள். நிச்சயமும் இருக்கிறது. இவர்கள் மூலமாக இப்படிப்பட்ட சீ,சீ வேலை நடக்காது என அனைவரும் புரிந்துக் கொள்கிறார்கள். சிலருக்குள் நிறைய அவகுணங்கள் இருக்கின்றன. நாம் இவ்வளவு உயர்ந்த பதவி அடைவோம் என்று அவர்கள் புரிந்துக் கொள்வதில்லை. ஆகவே முயற்சியும் செய்வதில்லை. நான் இப்படி மாற முடியுமா என பாபாவிடம் கேட்டால் உடனே பாபா தெரிவிப்பார். தன்னைத்தானே பார்த்துக் கொண்டால் நிச்சயம் நான் உயர்ந்த பதவி அடைய முடியாது என புரிந்துக் கொள்வார்கள். லட்சணம் கூட வேண்டும் அல்லவா? சத்யுகம் திரேதாவில் இப்படிப்பட்ட விஷயங்கள் கிடையாது. அங்கே பலன் கிடைக்கிறது. பிற்காலத்தில் வரக் கூடிய ராஜாக்கள் கூட பிரஜைகளிடம் மிகவும் அன்பாக இருக்கிறார்கள். இவரோ தாய் தந்தை யாவார். இதையும் குழந்தைகளாகிய நீங்களே அறிவீர்கள். இவர் எல்லையற்ற தந்தையாவார். இந்த முழு உலகையும் பதிவு செய்யக் கூடியவர். நீங்கள் கூட பதிவு செய்கிறீர்கள் அல்லவா? பாஸ்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். சொர்க்கத்திற்கு அதிபதியாவதற்காக இங்கிருந்தே உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கிறது. யார் வைகுண்டம் செல்வதற்கு தகுதி அடைகிறார்களோ அவர்கள் அனைவரின் போட்டோவும் வேண்டும் என பாபா கூறியிருந்தார். ஏனென்றால் நீங்கள் மனிதனிலிருந்து தேவதையாகிறீர்கள். பக்கத்தில் கிரீடம் மற்றும் சிம்மாசனத்தில் உள்ளது போன்ற போட்டோ வேண்டும். நாம் இவ்வாறு மாறிக் கொண்டிருக்கின்றோம். படக்கண்காட்சிகளில் கூட இந்த மாதிரியை வைக்க வேண்டும். இதுவே இராஜயோகம் ஆகும். ஒருவர் வழக்கறிஞராகிறார் என்றால் ஒரு புறம் சாதாரண உடையிலும் இன்னொரு புறம் வக்கீல் உடையிலும் இருப்பது போன்று, ஒரு புறம் நீங்கள் சாதாரண நிலையிலும், இன்னொரு புறம் டபுள் கிரீடம் உடைய வராகவும் இருக்க வேண்டும். உங்களுடைய ஒரு படம் இருக்கிறது அல்லவா. அதில் நீங்கள் என்னவாக மாறுகிறீர்கள் என கேட்கிறீர்கள். இந்த வக்கீல் போன்று மாற வேண்டுமா அல்லது ராஜாக்களுக்கு ராஜா ஆக வேண்டுமா? இப்படிப்பட்ட படங்கள் இருக்க வேண்டும்., வக்கீல், நீதிபதி போன்றோர் இங்கே தான் இருக்கிறார்கள். நீங்கள் ராஜாக்களுக்கு ராஜாவாக புது உலகத்தில் மாற வேண்டும். குறிக்கோள் எதிரிலேயே இருக்கிறது. நாம் இவ்வாறு மாறிக் கொண்டிருக்கின்றோம். எவ்வளவு நன்கு விளக்கம் கிடைக்கிறது. படங்கள் கூட மிகப் பெரியதாக முழு அளவில் இருக்க வேண்டும். அவர்கள் வக்கீலுக்கு படிக்கிறார்கள் என்றால் தொடர்பு வக்கீலுடன் இருக்கின்றது. வக்கீலாகிறார்கள். இவருடைய தொடர்பு பரம்பிதா பரமாத்மாவுடன் இருப்பதால் டபுள் கிரீடம் உடைவராகிறார். குழந்தைகள் செயலில் வர வேண்டும் என்று பாபா புரிய வைக்கின்றார். லஷ்மி நாராயணனின் படத்தின் மூலம் புரிய வைப்பது மிகவும் எளிதாகும். நாம் இவ்வாறு மாறிக் கொண்டிருக்கிறோம் என்றால் உங்களுக்காக நிச்சயம் புது உலகம் வேண்டும். நரகத்திற்குப் பிறகு சொர்க்கம்.

 

இப்போது இது புருஷோத்தம சங்கம யுகம் ஆகும். இந்த படிப்பு எவ்வளவு உயர்ந்ததாக மாற்றக் கூடியது. இதில் பணத்தின் அவசியம் இல்லை. படிப்பதில் ஆர்வம் இருக்க வேண்டும். ஒருவர் மிகவும் ஏழையாக இருந்தார், படிப்பதற்கு பணம் இல்லை, பிறகு படித்து படித்து உழைத்து விக்டோரியா மகாராணியின் அமைச்சராகி பணக்காரர் ஆகிவிட்டார். இப்போது நீங்கள் கூட எவ்வளவு ஏழையாகி இருக்கிறீர்கள். பாபா எவ்வளவு உயர்ந்த கல்வியை கற்க வைக்கிறார். இதில் புத்தியினால் பாபாவை மட்டும் நினைக்க வேண்டும். விளக்கு போன்ற வைகளை ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. எங்கு வேண்டு மானாலும் அமர்ந்து நினையுங்கள். ஆனால் மாயை பாபாவின் நினைவை மறக்க வைக்கக் கூடியதாக இருக்கிறது. நினைவில் தடைகள் ஏற்படுகின்றது. இது யுத்தம் அல்லவா? ஆத்மா பாபாவை நினைவு செய்வதால் தான் தூய்மையாகிறது. படிப்பில் மாயை எதுவும் செய்வதில்லை. படிப்பை விட நினைவின் போதை உயர்ந்தது. ஆகையால் பழமையான யோகம் என பாடப் பட்டிருக்கிறது. யோகம் மற்றும் ஞானம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நினைவு செய்யுங்கள் என்று யோகத்திற்காக ஞானம் கிடைக்கிறது. பிறகு மேலும் சிருஷ்டிச் சக்கரத்தைப் பற்றிய ஞானம் கூட இருக்கிறது. படைக்கக் கூடியவர் மற்றும் படைப்பின் முதல்-இடை-கடை பற்றி வேறு யாருக்கும் தெரியாது. பாரதத்தின் பழமையான யோகத்தைக் கற்பிக்கின்றார். புது உலகத்திற்கு பழமையானது என்று சொல்லப்படுகிறது. அதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகளை கொடுத்திருக்கின்றனர். கல்பத்தின் ஆயுளைக் கூட பல்வேறு விதமாகத் தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாகக் கூறுகிறார்கள். இங்கே உங்களை ஒரே ஒரு தந்தை தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் வெளியில் செல்வீர்கள். உங்களுக்கு படங்கள் கிடைக்கும். இவர் வியாபாரி அல்லவா? பாபா துணியில் கூட அச்சடிக்கலாம் என கூறுகிறார். ஒருவேளை பெரிய ஸ்கிரீன் பிரஸ் இல்லை என்றால் பாதிபாதியாகக் கூட செய்யலாம். பிறகு இணைத்து இவ்வாறு பெரியதாக செய்து விடலாம். தெரியவே தெரியாது. யாராவது அச்சடித்து காண்பித்தால் நான் அவர்களுடைய பெயரை பெருமைப் படுத்துவேன் என எல்லையற்ற தந்தை, பெரிய சர்க்கார் (முதலாளி) கூறுகின்றார். இந்த படங்களை துணியில் அச்சடித்து யாராவது வெளிநாட்டிற்குக் கொண்டு சென்றால் உங்களுக்கு ஒவ்வொரு படத்திற்கும் 5000, 10000 ரூபாய் என கொடுப்பார்கள். அங்கே நிறைய பணம் இருக்கிறது. செய்யலாம் எவ்வளவு பெரிய பெரிய அச்சகம் இருக்கிறது. நகரங்களின் இயற்கை காட்சிகளை எல்லாம் இவ்வாறு அச்சடிக்கிறார்கள். அதைப் பற்றி கேட்காதீர்கள். இதையும் அச்சடிக்கலாம். இது எவ்ளவு முதல் தரமான பொருள். உண்மையான ஞானம் இதில் இருக்கிறது. வேறு யாரிடமும் இல்லை என கூறுவார்கள். யாருக்கும் தெரியாது. பிறகு புரிய வைப்பவர்கள் கூட ஆங்கிலத்தில் புத்தி சாலியாக இருக்க வேண்டும். அனைவரும் ஆங்கிலம் தெரிந்துள்ளார்கள். அவர்களுக்கும் செய்தி அளிக்க வேண்டும் அல்லவா? அவர்களே நாடகத்தின் படி அழிவிற்கு நிமித்தமாக இருக்கிறார்கள். அவர்களிடமும் அந்தளவிற்கு அணுகுண்டுகள் இருக்கின்றது. ஒரு வேளை இருவரும் இணைந்து விட்டால் முழு உலகத்திற்கும் அதிபதியாகி விட முடியும் என பாபா கூறியுள்ளார். ஆனால் இந்த நாடகமே இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் தான் யோக பலத்தினால் உலகத்தின் இராஜ்ய பதவியைப் பெற முடியும். ஆயுதங்களினால் உலகத்திற்கு அதிபதியாக முடியாது. அது அறிவியலாகும், உங்களுடையது அமைதி (சைலன்ஸ்) ஆகும். அப்பா, மற்றும் சக்கரத்தை மட்டும் நினையுங்கள். தனக்குச் சமமாக மாற்றுங்கள்.

 

குழந்தைகளாகிய நீங்கள் யோக பலத்தினால் உலகத்தின் இராஜ்ய பதவியை அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் நிச்சயம் தங்களுக்குள் சண்டையிடுவார்கள். இடையில் உங்களுக்கு வெண்ணெய் கிடைக்கும். கிருஷ்ணரின் வாயில் வெண்ணெய் உருண்டையைக் காண்பிக்கிறார்கள். இருவர் தங்களுக்கு இடையில் சண்டையிட்டுக் கொண்டனர். இடையில் மூன்றாவது ஆள் வெண்ணெயை திருடிவிட்டான் என்ற பழமொழி இருக்கிறது இதுவும் அவ்வாறே ! முழு உலகத்தின் இராஜ்ய பதவி என்ற வெண்ணெய் உங்களுக்குக் கிடைக்கிறது. எனவே நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆஹா ! பாபா தங்களுடைய காரியங்கள் அற்புதமாகும். ஞானமும் தங்களுடையதே. மிகவும் நல்ல விளக்கங்கள் இருக்கிறது. ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தினர் உலகத்தின் இராஜ்ய பதவியை எப்படிப் பெற முடியும்? இது யாருடைய எண்ணத்திலும் இல்லை. அச்சமயம் வேறு எந்த கண்டமும் இல்லை. நான் உலகத்திற்கு அதிபதியாவதில்லை, உங்களை அப்படி மாற்றுகின்றேன் என பாபா கூறுகின்றார். நீங்கள் கல்வியின் மூலம் உலகத்திற்கு அதிபதியாகிறீர்கள். நான் பரமாத்மா அசரிரீயாக இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் உடல் இருக்கிறது. உடலை உடையவர்கள் நீங்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கு கூட சூட்சும உடல் இருக்கிறது. நீங்கள் ஆத்மா எப்படி இருக்கிறீர்களோ அப்படியே நான் பரமாத்மாவும் இருக்கிறேன். என்னுடைய பிறவி தெய்வீகமானது, அலௌகீகமானது. வேறு யாரும் இவ்வாறு ஜென்மம் எடுப்பதில்லை. இது நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இது அனைத்தும் நாடகத்தில் பதிவாகி உள்ளது. யாராவது இறந்து விட்டார்கள் என்றால் இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தைப் பற்றி எவ்வளவு விளக்கங்கள் இருக்கிறது. ஆனால் வரிசைக் கிரமத்தில் புரிந்துக் கொள்வார்கள். சிலர் மந்த புத்தி உடையவராக இருக்கிறார்கள். மூன்றாம் தரமாக இருக்கிறார்கள் கடைசி பிறவியில் இருப்பவர்களுக்கு மந்தம் என்று கூறப்படுகிறது. இவர்கள் முதல் கிரேடில் இருக்கிறார்கள், இரண்டாவதில் இருக்கிறார்கள் என தானே புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் பிரஜைகளிலும் இவ்வாறு தான் இருக்கிறார்கள். படிப்பு ஒன்று தான். நாம் இதைக் கற்று டபுள் கிரீடம் உடையவர்களாக மாறுவோம் என குழந்தைகள் அறிகிறீர்கள். நாம் டபுள் கிரீடம் உடையவராக இருந்தோம். பிறகு ஒற்றை கிரீடம், அதன் பிறகு கிரீடம் இல்லாதவராகிவிட்டோம். எப்படி செயலோ அப்படி பலன் என்று கூறப்படுகிறது. சத்யுகத்தில் இவ்வாறு கூற மாட்டார்கள். இங்கே நல்ல செயல் செய்தால் ஒரு பிறவிக்கு நல்ல பலன் கிடைக்கும். சிலர் பிறக்கும் போதே நோயாளி ஆகின்ற அளவிற்கு காரியங்களைச் செய்கின்றார்கள். இதுவும் கர்ம போகம் அல்லவா. குழந்தைகளுக்கு கர்மம், அகர்மம், விகர்மத்தைப் பற்றி கூட புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இங்கே எப்படி செய்கிறீர்களோ அதற்கு ஏற்ப நல்ல - கெட்ட பலன் கிடைக்கிறது. சிலர் பணக்காரர் ஆகிறார்கள் என்றால் நிச்சயம் நல்ல கர்மம் செய்திருப்பார்கள். இப்போது நீங்கள் பல பிறவிகளுக்கு பலனை உருவாக்குகிறீர்கள். இப்போதைய முயற்சிக்கு ஏற்ப ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் அங்கே இருக்கிறது அல்லவா? அந்த பலன் 21 பிறவிகளுக்கு அழிவற்றதாகும். இங்கே அல்ப காலத்திற்கு பலன் கிடைக்கிறது. கர்மம் செய்கிறார்கள் அல்லவா ! இது கர்மஷேத்திரம் அல்லவா? சத்யுகம் என்பது சொர்க்கத்தின் கர்மஷேத்திரம் ஆகும். அங்கே விகர்மம் நடப்பதில்லை. இந்த விஷயங்கள் அனைத்தையும் புத்தியில் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சிலரே எப்போதும் பாயிண்ட்ஸ் எழுதிக் கொண்டி ருக்கிறார்கள். சார்ட் கூட எழுதி எழுதி பிறகு களைத்துப் போய்விடுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்களும் பாயிண்ட்ஸ் எழுத வேண்டும். மிகவும் ஆழமான கருத்துகள் இருக்கின்றது. நீங்கள் ஒரு போதும் அவைகளை நினைவில் வைக்க முடியாது. மறந்து போய் விடும். இந்த கருத்தை நாம் மறந்து விட்டோம் என்று பிறகு வருத்தப்படுவார்கள். அனைவருக்கும் இந்த நிலை ஏற்படுகிறது. பலர் மறக்கிறார்கள். பிறகு அடுத்த நாள் நினைவு வரும். குழந்தைகள் தன்னுடைய முன்னேற்றத்திற்காக சிந்திக்க (கவனம்) வேண்டும். ஒரு சிலர் தான் எழுதுகிறார்கள் என்பது பாபாவிற்குத் தெரியும். பாபா வியாபாரி அல்லவா? அது அழியக் கூடிய ரத்தினங்களின் வியாபாரம் ஆகும். இது ஞான ரத்தினங்களின் வியாபாரம் ஆகும். யோகத்தில் தான் பல குழந்தைகள் தோல்வி அடைகிறார்கள். துல்லியமாக நினைவில் ஒரு மணி நேரம் அரை மணி நேரம் கூட இருப்பது கடினமாக இருக்கிறது. 8 மணி நேரம் முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் சரீர நிர்வாகமும் செய்ய வேண்டும், பாபா பிரிய தர்ஷன் பிரிய தர்ஷினியின் எடுத்துக் காட்டுக் கூட கூறியிருக்கிறார். உட்கார்ந்த படியே நினைப்பர், உடனே எதிரில் வந்து விடுகின்றனர். இதுவும் ஒரு சாட்சாத்காரமே. அவர் இவரை நினைப்பார், இவர் அவரை நினைப்பார். இங்கேயோ ஒரே ஒரு பிரிய தர்ஷன் தான். நீங்கள் அனைவரும் பிரிய தர்ஷினிகள். அந்த பிரியதர்ஷன் எப்போதும் வெள்ளையாக இருக்கிறார். சதா துய்மையானவர். நான் பயணி, எப்போதும் மிக அழகாக இருக்கிறேன் என பாபா (தந்தை) கூறுகின்றார். உங்களையும் அழகாக மாற்றுகிறேன். இந்த தேவதைகளுக்கு இயற்கையான அழகு இருக்கிறது. இங்கே எப்படி எல்லாம் அழகு படுத்துகிறார்கள். விதவிதமான ஆடை அணிகிறார்கள். அங்கேயோ ஒரே நிலையான இயற்கையான அழகு இருக்கிறது. அப்படிப்பட்ட உலகத்திற்கு இப்போதிலிருந்து நீங்கள் போகிறீர்கள். நான் பழைய பதீத உலகில், அழுக்கான உடலில் வருகிறேன் என பாபா கூறுகிறார். இங்கே தூய்மையான உடல் இல்லை. நான் இவருடைய பல பிறவிகளின் கடைசியில் பிரவேசமாகி இல்லற மார்க்கத்தை ஸ்தாபனை செய்கிறேன் என பாபா கூறுகிறார். இன்னும் போகப் போக நீங்கள் சேவையாளராக மாறிக் கொண்டே போவீர்கள். முயற்சி செய்வீர்கள். பிறகு மாறுவீர்கள். முன்பு கூட இவ்வாறு தான் முயற்சி செய்தீர்கள். இபோது செய்துக் கொண்டிருக்கிறீர்கள். முயற்சி இல்லாமல் எதுவும் கிடைக்காது. நாம் நரனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றோம் என்பது உங்களுக்குத் தெரியும். புது உலகத்தின் இராஜ்யம் இருந்தது. இப்போது இல்லை. பிறகு வரும். கலியுகத்திற்கு பிறகு நிச்சயம் சத்யுகம் வரும். போன கல்பத்தை போன்று இராஜ்யம் ஸ்தாபனை ஆகத்தான் வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. அர்ப்பணம் ஆவதன் கூடவே நிச்சய புத்தி உடையவர் ஆக வேண்டும். எந்த ஒரு சீ, சீ வேலையும் செய்யக் கூடாது. உள்ளுக்குள் எந்த அவகுணமும் இருக்கக் கூடாது. அப்போது தான் நல்ல பதவி கிடைக்கும்.

 

2. ஞான ரத்தினங்களின் வியாபாரம் செய்வதற்காக பாபா நல்ல நல்ல கருத்துகளைக் கூறுகின்றார். அதைக் குறித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை நினைவில் வைத்து மற்றவர்களுக்கும் கூறுங்கள். எப்போதும் தன்னுடைய முன்னேற்றத்தைப் பற்றி கவனம் கொள்ள வேண்டும்.

 

வரதானம் :

வயர்லெஸ் செட் மூலம் விநாச காலத்தில் கடைசி வழிகாட்டுதலைக் கேச் பண்ணக்கூடிய நிர்விகாரி (வைஸ்லெஸ்) ஆகுக.

 

விநாச சமயத்தில் கடைசி வழிகாட்டுதலைக் (டைரக்ஷன்) கேச் பண்ணுவதற்காக விகாரமற்ற (வைஸ்லெஸ்) புத்தி வேண்டும். எப்படி அந்த மனிதர்கள் வயர்லெஸ் செட் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு சப்தத்தைக் கொண்டு சேர்க்கிறார்களோ, அது போல் இங்கே வைஸ்லெஸ்ஸின் வயர்லெஸ். இந்த வயர்லெஸ்ஸின் மூலம் உங்களுக்கு சப்தம் வரும் - இந்தப் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று சேர்ந்து விடுங்கள். எந்தக் குழந்தைகள் பாபாவின் நினைவில் இருக்கக்கூடிய, விகாரமற்றவராக இருக்கிறார்களோ, யாருக்கு அசரீரி ஆவதற்கான அப்பியாசம் உள்ளதோ, அவர்கள் விநாசத்தில் விநாசமாக மாட்டார்கள். ஆனால் தாங்களாகவே விரும்பி சரீரத்தை விட்டு விடுவார்கள்.

 

சுலோகன்:

யோகத்தை (நினைவு யாத்திரை) விலக்கி வைத்து விட்டு கர்மத்தில் பிஸியாகி விடுவது என்பது தான் கவனக்குறைவாகும்.

 

ஓம்சாந்தி