05.10.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! தனிமையில்
அமர்ந்து நான் சரீரத்திலிருந்து தனிப்பட்ட ஆத்மா ஆவேன் என்ற
அனுபவமாகும் வகையில் பயிற்சி செய்யுங்கள். இதற்கு தான் உயிருடன்
இருந்துக் கொண்டே இறப்பது என்று கூறப்படுகிறது.
கேள்வி:
ஏகாந்தம்
என்பதன்
பொருள்
என்ன?
ஏகாந்தமாக
(தனிமையில்)
அமர்ந்து
எந்த
ஒரு
அனுபவம்
செய்ய
வேண்டும்?
பதில்:
ஏகாந்தம் என்பதன் பொருள்
ஒருவருடைய நினைவில் இந்த சரீரத்திற்கு (அந்தம்) முடிவாக
வேண்டும். அதாவது ஏகாந்தத்தில் அமர்ந்து நான் ஆத்மா, இந்த
சரீரம் என்ற தோலை விடுத்து தந்தையிடம் செல்கிறேன் என்ற அனுபவம்
செய்ய வேண்டும். யாருமே நினைவில் இருக்கக் கூடாது. அமர்ந்தபடியே
அசரீரியாகி விடுங்கள். அதாவது நாம் இந்த சரீரத்திலிருந்து
இறந்து விட்டது போல. நாம் ஆத்மாக்கள் ! சிவபாபா வின் குழந்தைகள்
அவ்வளவே ! இந்த அப்பியாசத்தின் மூலம் தேக உணர்வு அறுபட்டுக்
கொண்டே போகும்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான
குழந்தைகளாகிய நீங்கள் இங்கு அமரும் பொழுது தன்னை ஆத்மா என்று
புரிந்து தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள் மற்றும் வேறு
எங்குமே புத்தி செல்லக் கூடாது என்று குழந்தைகளுக்கு தந்தை
முதன் முதலாகப் புரிய வைக்கிறார். நாம் ஆத்மாக்கள் ஆவோம் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நாம்
இந்த சரீரத்தின் மூலமாக பாகத்தை ஏற்று நடிக்கிறோம். ஆத்மா
அழியாதது. சரீரம் அழியக் கூடியதாகும். எனவே குழந்தைகளாகிய
நீங்கள் ஆத்ம உணர்வுடையவராகி தந்தையின் நினைவில் இருக்க
வேண்டும். நாம் ஆத்மாக்கள்! விருப்பப்பட்டால் இந்த உறுப்புக்கள்
மூலம் காரியம் செய்வோம். இல்லை யென்றால் செய்ய மாட்டோம். தன்னை
சரீரத்திலிருந்து தனிப்பட்டதாக உணர வேண்டும். தன்னை ஆத்மா என்று
உணருங்கள் என்று தந்தை கூறுகிறார். தேகத்தை மறந்துக் கொண்டே
செல்லுங்கள். நாம் சுதந்திரமானஆத்மாக்கள் ஆவோம். நாம் ஒரு
தந்தையைத் தவிர வேறு யாரையுமே நினைவு செய்யக் கூடாது. உயிருடன்
இருக்கும் பொழுதே மரணத்தின் நிலையில் இருக்க வேண்டும்.
இப்பொழுது ஆத்மாவாகிய நம்முடைய யோகம் தந்தையிடம் இருக்க
வேண்டும். மற்றபடி உலகத் திலிருந்து, இந்த உலகிய வீட்டிலிருந்து
இறந்து விட்டோம். நீங்கள் இறந்தால் உலகமே இறந்து விட்டது போல
என்று கூறுகிறார்கள் அல்லவா? இப்பொழுது உயிருடனிருந்து
இருந்துக் கொண்டே நீங்கள் இறக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாம்
சிவபாபாவின் குழந்தைகளாவோம். சரீர உணர்வை நீக்கிக் கொண்டே
இருக்க வேண்டும். தன்னை ஆத்மா என்று உணருங்கள் மற்றும் என்னை
நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். சரீர உணரவை மறந்து
விடுங்கள், இது பழைய சரீரம். பழைய பொருட்களை தவிர்த்து
விடுகிறோம் அல்லவா, தன்னை அசரிரீ என புரிந்துக் கொள்ளவும்.
இப்பொழுது நீங்கள் தந்தையை நினைவு செய்து - செய்து தந்தையிடம்
செல்ல வேண்டும்.இவ்வாறு செய்து கொண்டே இருப்பதால், பிறகு
உங்களுக்கு பழக்கம் ஏற்பட்டு விடும். இப்பொழுது நீங்கள் வீடு
செல்ல வேண்டும். பிறகு இந்த பழைய உலகத்தை ஏன் நினைவு செய்ய
வேண்டும்? தனிமையில் அமர்ந்து இது போல தங்களிடம் முயற்சி செய்ய
வேண்டும். பக்தி மார்க்கத்தில் கூட ஒரு சிறு அறையில் அமர்ந்து
மாலை உருட்டுகிறார்கள். பூஜை செய்கிறார்கள். நீங்கள் கூட
தனிமையில் அமர்ந்து இந்த முயற்சி செய்தீர்கள் என்றால், பழக்கம்
ஏற்பட்டு விடும். நீங்கள் வாயால் எதுவும் கூற வேண்டியதில்லை.
இதில் புத்தி சம்மந்தப்பட்ட விஷயம் இருக்கிறது. சிவபாபாவோ
கற்பிப்பவர்,. அவருக்கோ முயற்சி செய்ய வேண்டியதில்லை. இந்த பாபா
புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறார். அவர் பிறகு குழந்தைகளாகிய
உங்களுக்கும் புரிய வைக்கிறார். முடிந்தவரை இது போல அமர்ந்து
சிந்தனை செய்யுங்கள். இப்பொழுது நாம் நமது வீட்டிற்குச் செல்ல
வேண்டும். இந்த சரீரத்தை இங்கேயே விட வேண்டும். தந்தையை நினைவு
செய்வதன் மூலம் தான் பாவங்கள் அழியும் மற்றும் ஆயுள் அதிகரித்து
விடும், உங்களுக்குள் இந்த சிந்தனை இருக்க வேண்டும். வெளியில்
எதுவுமே பேச வேண்டிய தில்லை. பக்தி மார்க்கத்தில் கூட பிரம்ம
தத்துவத்தை அல்லது சிலர் சிவனைக் கூட நினைவு செய்கிறார்கள்.
ஆனால் அந்த நினைவு ஒன்றும் சரியானது இல்லை. தந்தையின் அறிமுகமே
இல்லையென்றால் நினைவு எப்படி செய்வது? உங்களுக்கு இப்பொழுது
தந்தையின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதிகாலை எழுந்து தனிமையில்
இது போல தங்களிடம் உரையாடிக் கொண்டே இருங்கள். சிந்தனைக் கடலைக்
கடையுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். பாபா நாங்கள்
இப்பொழுது உங்களுடைய உண்மையான மடியில் வந்து விட்டது போலவேதான்.
அது ஆன்மீக மடியாகும். எனவே இது போன்று தங்களிடம் தாங்களே
பேசிக் கொள்ள வேண்டும். பாபா வந்து விட்டார். பாபா கல்ப
கல்பமாக வந்து நமக்கு இராஜயோகம் கற்பிக்கிறார். என்னை நினைவு
செய்யுங்கள் மற்றும் சக்கரத்தை நினைவு செய்யுங்கள் என்று தந்தை
கூறுகிறார். சுயதரிசன சக்கரதாரியாக வேண்டும். தந்தையிடம் தான்
சக்கரத்தின் முழு ஞானம் இருக்கிறது அல்லவா?அவர் பிறகு
உங்களுக்கு கொடுக்கிறார். உங்களை திரிகாலதரிசியாக
ஆக்கிக்கொண்டிருக்கிறார். மூன்று காலங்கள் அதாவது முதல் இடை
கடையை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தை இருப்பதும் பரம
ஆத்மாவாக. அவருக்கு சரீரமோ கிடையாது. இப்பொழுது இந்த சரீரத்தில்
அமர்ந்து உங்களுக்குப் புரிய வைக்கிறார். இது அதிசயமான
விஷயமாகும். பாக்கியம் செய்த இரதத்தில் வீற்றிருக்கிறார்
என்றால் அவசியம் அதுவும் மற்றொரு ஆத்மாவாகும். இவருடையது அநேக
பிறவிகளின் கடைசி பிறவி ஆகும். முதல் நம்பர் தூய்மையானவர். அவரே
பிறகு முதல் நம்பர் பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகிறார். அவர்
தன்னை பகவான் விஷ்ணு என்றெல்லாம் கூறுவதில்லை. இங்கு ஒரு ஆத்மா
கூட தூய்மையாக இல்லை. எல்லோருமே பதீதமாக இருக்கிறார்கள். எனவே
பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இது போல ஞான மனனம்
செய்தீர்கள் என்றால் இதனால் உங்களுக்கு குஷியும் இருக்கும்.
இதில் தனிமை கூட அவசியம் வேண்டும். ஒருவரின் நினைவில்
சரீரத்திற்கு முடிவு ஆகிறது. அதற்கு ஏகாந்தம் என்று
கூறப்படுகிறது. இந்த தோல் விடுபட்டு விடும். சந்நியாசிகள் கூட
பிரம்மத்தின் நினைவில் அல்லது தத்துவத்தின் நினைவில்
இருக்கிறார்கள். அந்த நினைவில் இருந்து இருந்து சரீர உணர்வு
விடுபட்டு விடும். நாம் பிரம்மத்தில் இரண்டற கலந்து விட
வேண்டும் அவ்வளவே! அது போல அமர்ந்து விடுகிறார்கள். தவத்தில்
அமர்ந்தபடியே சரீரத்தை விட்டு விடு கிறார்கள். பக்தியிலோ
மனிதர்கள் நிறைய அடி வாங்குகிறார்கள். இதில் அடி வாங்கும்
விஷயம் இல்லை. நினைவிலேயே இருக்க வேண்டும். கடைசியில் வேறு
யாரும் நினைவிற்கு வரக் கூடாது. இல்லற விவகாரங்களில் இருக்க
வேண்டியுள்ளது. மற்றபடி நேரத்தை ஒதுக்க வேண்டும். மாணவர்களுக்கு
படிப்பில் ஆர்வம் இருக்கும் அல்லவா? இது படிப்பாகும். தன்னை
ஆத்மா என்று உணராத காரணத்தால் தந்தை ஆசிரியர், குரு எல்லோரையும்
மறந்து விடுகிறார்கள். தனிமையில் அமர்ந்து இது போல சிந்தனை
செய்யுங்கள். கிருஹஸ்தி வீட்டிலோ வைப்ரேஷன் (சூழ்நிலை) சரியாக
இருப்பதில்லை. தனியான ஏற்பாடு இருந்தால் ஒரு சிறு அறையில்
தனிமையில் அமர்ந்து விடுங்கள். தாய்மார்களுக்கோ பகலில் கூடநேரம்
கிடைக்கிறது. குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று
விடுகிறார்கள். நேரம் கிடைக்கும் பொழு தெல்லாம் இதே முயற்சி
செய்து கொண்டே இருங்கள். உங்களுக்கு ஒரு வீடு தான் இருக்கிறது.
தந்தைக்கு எவ்வளவு ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் கூட
அதிகரித்துக் கொண்டே போகும். மனிதர்களுக்குத் தொழில் ஆகியவைப்
பற்றிய கவலை இருக்கும் பொழுது தூக்கமே கெட்டு விடுகிறது.
இதுவும் கூட வியாபாரம் ஆகும் அல்லவா? எவ்வளவு பெரிய வியாபாரி
ஆவார். எவ்வளவு பெரிய கொடுக்கல் வாங்கல் செய்கிறார். பழைய உடலை
பெற்று புதியது கொடுக்கிறார். அனைவருக்கும் வழி கூறுகிறார்.
இந்த தொழிலும் அவர் கொடுக்கிறார். அனைவருக்கும் வழி கூறுகிறார்.
இந்த தொழிலும் அவர் செய்ய வேண்டியுள்ளது. இந்த வியாபாரமோ
மிகவும் பெரியதாகும். வியாபாரிக்கு வியாபாரம் பற்றிய சிந்தனை
தான் இருக்கும். பிரம்மா பாபா இது போன்ற பயிற்சி செய்கிறார்.
பிறகு இப்படி இப்படி செய்யுங்கள் என்று கூறுகிறார். எந்த அளவு
நீங்கள் தந்தையின் நினைவில் இருப்பீர்களோ இயல்பாகவே தூக்கம்
கலைந்து விடும். சம்பாத்தியத்தில் ஆத்மாவிற்கு மிகவுமே ஆனந்தம்
ஏற்படும். சம்பாத்தியத்திற்காக மனிதர்கள் இரவில் கூட
விழிக்கிறார்கள். சீசனில் இரவு முழுவதும் கூட கடைகள் திறந்த
படியே இருக்கும். உங்களுடைய வருமானம் இரவிலும் காலையிலும்
மிகவும் நன்றாக இருக்கும். சுயதரிசன சக்கரதாரியாக ஆவீர்கள்.
திரிகால தரிசியாக ஆவீர்கள். 21 பிறவிகளுக்கு செல்வத்தை
சேமிக்கிறீர்கள். மனிதர்கள் செல்வந்தர்களாக ஆவதற்கான
புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறார்கள். நீங்கள் கூட தந்தையை
நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் (பாவங்கள்) விநாசமாகும்.
பலம் கிடைக்கும். நினைவு யாத்திரையில் இருக்கவில்லை என்றால்
நிறைய நஷ்டம் ஏற்பட்டு விடும். ஏனெனில் தலை மீது பாவங்களின்
சுமை நிறைய உள்ளது. இப்பொழுது சேமிப்பு செய்ய வேண்டும். ஒருவரை
நினைவு செய்ய வேண்டும் மற்றும் திரிகாலதரிசியாக வேண்டும். இந்த
அழியாத செல்வத்தை அரைக் கல்பத்திற்காக சேமிக்க வேண்டும். இது
மிகவும் விலைமதிப்பு வாய்ந்ததாகும். சிந்தனை கடலை கடைந்து
ரத்தினங்களை எடுக்க வேண்டும். சுயம் பாபா எப்படி செய்கிறாரோ,
குழந்தைகளுக்கும் யுக்தி கூறுகிறார். பாபா! மாயையின் புயல்கள்
நிறைய வருகின்றன என்று கூறுகிறார்கள்.
எவ்வளவு முடியுமோ, அந்தளவு
தனக்காக சம்பாதிக்க வேண்டும் என்று பாபா கூறுகிறார். இது தான்
வேலைக்கு உதவும். தனிமையில் (ஏகாந்தம்) அமர்ந்து தந்தையை நினைவு
செய்ய வேண்டும். ஓய்வு நேரம் இருக்கிறது என்றால் சேவை கூட
கோவில் களுக்குச் சென்று நிறைய செய்ய முடியும். பேட்ஜ் அவசியம்
அணிந்திருக்க வேண்டும். இவர்கள் ஆன்மீக (மிலிட்டரி) இராணுவம்
என்று எல்லோரும் புரிந்து கொண்டு விடுவார்கள். நாம்
சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள்
எழுதவும் செய்கிறீர்கள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது.
இப்பொழுது இல்லை. அது மீண்டும் ஸ்தாபனை ஆகிறது, இந்த இலட்சுமி
நாராயணன் ஆவது என்பது லட்சியம், நோக்கமாகும். ஒரு நாள் இந்த
டிரான்ஸ் லைட்டின் சித்திரத்தை பேட்டரியுடன் கூட சேர்த்து
ஊர்வலம் வருவார்கள் மற்றும் இந்த இராஜ்யத்தை நாங்கள் ஸ்தாபனை
செய்து கொண்டிருக்கிறோம் என்று எல்லோருக்கும் கூறுவீர்கள்.
இந்த படம் எல்லாவற்றையும் விட முதல் தரமானதாகும். இந்த படம்
மிகவும் பிரசித்தமானதாகி விடும். இலட்சுமி நாராயணர் ஒருவர்
மட்டும் இருக்கவில்லை. அவர்களுடைய ராஜாங்கம் இருந்தது அல்லவா?
இவர்கள் சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது தந்தை மன்மனாபவ என்று கூறுகிறார். தந்தையை நினைவு
செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் விநாசமாகும். நாங்கள் கீதையின்
வாரம் கொண்டாடுகிறோம் என்கிறார்கள். இவை எல்லா திட்டமும்
முந்தைய கல்பத்தைப் போல செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஊர்வலத்தில் இந்த படத்தை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.
இதைப் பார்த்து எல்லோரும் மகிழ்ச்சி அடைவார் கள். தந்தை மற்றும்
ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். மன்மனாபவ என்று நீங்கள் கூறுவீர்
கள். இது கீதையின் வார்த்தைகள் அல்லவா? பகவான் சிவபாபா ஆவார்.
அவர் கூறு கிறார், என்னை நினைவு செய்தீர்கள் என்றால்,
விகர்மங்கள் விநாசமாகும். 84ன் சக்கரத்தை நினைவு செய்தீர்கள்
என்றால் இது போலாகி விடுவீர்கள். லிட்டரேச்சர் (புத்தகங்கள்)
கூட நீங்கள் பரிசாகக் கொடுத்துக் கொண்டே இருங்கள். சிவபாபாவின்
(பண்டாரா) பொக்கிஷ பெட்டகம் எப்பொழுதுமே நிரம்பி இருக்கிறது.
இனி போகப் போக நிறைய சேவையாகும். லட்சியம், நோக்கம் எவ்வளவு
தெளிவாக உள்ளது. ஒரே ராஜ்யம், ஒரே தர்மம் இருந்தது. மிகவும்
செல்வந்தராக இருந்தார்கள். மனிதர்கள் ஒரு ராஜ்யம் ஒரு தர்மம்
வேண்டும் என்று விரும்புகிறார்கள். மனிதர்கள் விரும்புவதற்கான
அறிகுறிகள் இப்பொழுது தென்படு கிறது. பிறகு இவர்களே சரியாகக்
கூறுகிறார்கள் என்று புரிந்துக் கொண்டுவிடுவார்கள். 100
சதவிகிதம் தூய்மை, சுகம், சாந்தியின் இராஜ்யம் மீண்டும் ஸ்தாபனை
ஆகி கொண்டிருக்கிறது. பிறகு உங்களுக்கு குஷியும் இருக்கும்.
நினைவில் இருந்தால் தான் அம்பு போல தைக்கும். அமைதியாக இருந்து
குறைவான வார்த்தைகளையே பேச வேண்டும். அதிகமான சப்தத்துடன் அல்ல.
பாடல்கள் கவிதைகள் ஆகிய எதையுமே பாபா விரும்புவதில்லை.
வெளியிலிருக்கும் மனிதர்களுடன் போட்டி போடக் கூடாது. உங்களுடைய
விஷயமே வேறாகும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு
செய்ய வேண்டும். அவ்வளவே! மனிதர்கள் படித்து விழிப்புணர்வு
பெறும் வகையில் சுலோகம் கூட நல்லதாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறார்கள். கஜானாவோ
நிரம்பி இருக்கிறது. குழந்தைகளால் கொடுக்கப்பட்டது. பிறகு
குழந்தைகளுடைய காரியத்திற்கே பயன்படுகிறது. தந்தை பணம்
எடுத்துக் கொண்டு வருவதில்லை. உங்களுடைய பொருட்கள் உங்களுடைய
வேலைக்கு உதவுகிறது. நாங்கள் நிறைய சீர்திருத்தம் செய்து
கொண்டிருக்கிறோம் என்று பாரதவாசிகள் அறிந்துள்ளார்கள். 5
வருடங்களுக்குள் எவ்வளவு விளைச்சல் ஏற்படும் என்றால் பிறகு
தானியங்களுக்கு ஒரு பொழுதும் கஷ்டம் ஏற்படாது. மேலும் நீங்கள்
அறிந்திருக்கிறீர்கள் - எப்பேர்ப்பட்ட நிலைமையாகும் என்றால்
சாப்பிடுவதற்குக் கூட உணவு கிடைக்காமல் போய் விடும்.
அப்படியின்றி தானியங்கள் ஏதோ மலிவாக கிடைக்கும் என்பதல்ல.
நாம் 21 பிறவிகளுக்கு நம்முடைய
ராஜ்ய பாக்கியத்தை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த தற்போதைய சிறிது
கஷ்டங் களை சகித்துக் கொள்ள வேண்டும். குஷி போன்ற சத்துணவு
இல்லை என்று கூறப்படு கிறது. அதீந்திரிய சுகம் என்று கோப
கோபியர்களினுடையது பாடப்பட்டுள்ளது. ஏராளமான குழந்தைகளாகி
விடுவார்கள். யாரெல்லாம் இந்த நாற்றை (தர்மத்தை) சேர்ந்தவர்களோ
அவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். மரமோ இங்கேயே தான் வளர
வேண்டியுள்ளது அல்லவா? ஸ்தாபனை யாகிக் கொண்டிருக்கிறது. மற்ற
தர்மங்களில் இவ்வாறாவதில்லை. அவர்கள் மேலிருந்து வருகிறார்கள்.
இது விருட்சம். ஸ்தாபனை ஆகி விட்டது போலவே உள்ளது. இதில் பிறகு
வரிசைக்கிரமமாக வந்துக் கொண்டே செல்வார்கள். வளர்ச்சி அடைந்து
கொண்டே செல்வார்கள். கஷ்டம் எதுவும் கிடையாது. அவர்கள்
மேலிருந்து வந்து பாகத்தை ஏற்று நடித்தேயாக வேண்டும். இதில்
மகிமையின் விஷயம் என்ன இருக்கிறது? தர்ம ஸ்தாபர் களுக்குப்
பின்னால் வந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் சத்கதிக்கான என்ன
அறிவுரை அளிப்பார்கள்? இங்கு தந்தை வருங்கால தேவி தேவதா
தர்மத்தின் ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறார். சங்கமயுகத்தில்
புதிய நாற்று நடுகிறார்கள் அல்லவா? முதலில் செடிகளை
பூந்தொட்டிகளில் நட்டுவிட்டு பிறகு பூமியில் நடுகிறார்கள்.
வளர்ந்துக் கொண்டே போகிறது. நீங்கள் கூட இப்பொழுது செடியை
நட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு சத்யுகத்தில் வளர்ச்சி
அடைந்து ராஜ்ய பாக்கியத்தை பெறுவீர்கள். நீங்கள் புது உலகத்தின்
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள் - மனிதர்கள் கலியுகத்திற்கு
இன்னும் அநேக வருடங்கள் உள்ளன என்று நினைக்கிறார்கள். ஏனெனில்,
சாஸ்திரங்களில் லட்சக் கணக்கான வருடங்கள் என்று
எழுதிவிட்டுள்ளார்கள். கலியுகத்தில் இன்னும் 40 ஆயிரம்
வருடங்கள் உள்ளன என்று நினைக்கிறார்கள். பிறகு தந்தை வந்து
புதிய உலகத்தை அமைப்பார். ஒரு சிலர் இது அதே மகாபாரத போர் என்று
நினைக்கிறார்கள். கீதையின் பகவான் கூட அவசியம் இருப்பார்.
நீங்கள் கிருஷ்ணர் இருக்கவில்லை என்று கூறுகிறீர்கள். கிருஷ்ணர்
84 பிறவிகள் எடுக்கிறார் என்று தந்தை புரிய வைத்துள்ளார். ஒரு
தோற்றம் போல மற்றொன்று இருக்காது. பின் இங்கு கிருஷ்ணர் எப்படி
வருவார். யாருமே இந்த விஷயங்கள் பற்றி சிந்திப்பதில்லை.
கிருஷ்ணர் சொர்க்கத்தின் இளவரசர் ஆவார். பிறகு துவாபரத்தில்
எங்கிருந்து வரமுடியும் என்று நீங்கள் புரிந்துள்ளீர்கள். இந்த
இலட்சுமி நாராயணரின் படத்தைப் பார்த்த உடனேயே சிவபாபா இந்த
ஆஸ்தியை அளித்துக் கொண்டிருக்கிறார் என்பது புரிய வருகிறது.
சத்யுகத்தினை ஸ்தாபனை செய்பவர் தந்தை மட்டுமே ஆவார். இந்த
காலச்சக்கரம் கல்ப விருட்சம் படங்கள் எல்லாம் குறைவானதா என்ன?
ஒரு நாள் உங்களிடம் இந்த எல்லா படங்களும் டிரான்ஸ்லைட்டில்
அமைக்கப் பட்டு விடும். பிறகு எல்லோரும் எங்களுக்கு இந்த மாதிரி
படங்களே வேண்டும் என்பார்கள். இந்த படங்களால் சேவை விரிவாகும்
பிறகு பலர் வருவார்கள் என்றால் உங்களுக்கு ஓய்வே இருக்காது.
ஏராளமானோர் வருவார்கள். மிகுந்த குஷி ஏற்படும். நாளுக்கு நாள்
உங்களுடைய வலிமை அதிகரித்துக் கொண்டே போகும். நாடகப்படி யார்
மலராகக் கூடியவர்களாக இருப்பார்களோ அவர்களுக்கு (டச்)
உள்ளுணர்வு ஏற்படும். பாபா இவர் களுடைய புத்தியைத் தொடுங்கள் (டச்)
என்று நீங்கள் கூற வேண்டி இருக்கிறது. பாபா அவ்வாறு செய்வதில்லை,
தக்க நேரத்தில் தானகவே டச்சாகும். தந்தை வழியைக் கூறுவார்
அல்லவா? நிறைய பெண் குழந்தைகள் எங்களுடைய கணவரின் புத்தியை டச்
செய்யுங்கள் என்று எழுதுகிறார்கள். இது போல எல்லோருடைய
புத்தியையும் டச் செய்தார் என்றால் பிறகு எல்லோருமே
சொர்க்கத்தில் ஒன்று சேர்ந்து விடுவார்களே. படிப்பினுடையது தான்
உழைப்பாகும். நீங்கள் இறை சேவகர்கள் ஆகிறீர்கள் அல்லவா?
உண்மையிலும் உண்மை யான விஷயம் பாபா என்னென்ன செய்ய வேண்டும்
என்பதை முன் கூட்டியே கூறி விடுகிறார். இது போன்ற படங்களை
எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். ஏணிப்படி யினுடையதும்
எடுத்து செல்ல வேண்டியிருக்கும். நாடகப்படி ஸ்தாபனையாக வேண்டி
யுள்ளது. பாபா சேவைக்காக அளிக்கும் கட்டளை மீது கவனம் கொடுக்க
வேண்டும். பாபா கூறுகிறார் வித விதமான பேட்ஜ்கள் லட்சக்கணக்கில்
தயாரியுங்கள். டிரெயினில் டிக்கெட் வாங்கி 100 மைல் வரை சேவை
செய்து வாருங்கள். ஒரு பெட்டியிலிருந்து இரண்டாவதில் பிறகு
மூன்றாவதில் மிக சுலபம். குழந்தைகளுக்கு சேவையில் ஆர்வம்
இருக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய்
தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஞான சிந்தனை செய்து மிக நல்ல ரத்தினங்களை வெளிப்படுத்த
வேண்டும். வருமானம் சேமிக்க வேண்டும். உண்மையிலும் உண்மையான இறை
சேவகராகி சேவை செய்ய வேண்டும்.
2. படிப்பில் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும்
பொழுதெல்லாம் ஏகாந்தத்தில் (தனிமையில்) சென்று விட வேண்டும்.
உயிருடன் இருந்து கொண்டே இந்த சரீரத்திலிருந்து இறந்து
விட்டுள்ளோம் என்ற பயிற்சி இருக்கட்டும். இந்த நிலையின்
அனுபவமாகிக் கொண்டே இருக்கட்டும். தேக உணர்வும் மறந்து விட
வேண்டும்.
வரதானம்:
வேற்றுமைகளை நீக்கி ஓற்றுமையைக்
கொண்டு வரக்கூடிய உண்மையான சேவாதாரி ஆகுக.
பிராமண குடும்பத்தின் விசேசத்
தன்மை என்பதே வேற்றுமையிலும் ஒற்றுமை. உங்களுடைய ஒற்றுமை மூலம்
தான் முழு உலகத்திலும் ஒரே தர்மம், ஒரே இராஜ்யத்தின் ஸ்தாபனை
ஆகிறது, ஆகையால் விசேசமாக கவனம் கொடுத்து வேற்றுமையை நீக்கி
மற்றும் ஓற்றுமையை கொண்டு வரும் பொழுது தான் உண்மையான சேவாதாரி
என்று சொல்லாம். சேவாதாரி என்றாலே சுயத்திற்காக அல்ல,
சேவைக்காக. தன்னுடையது அனைத்தையும் சேவைக்காக அர்ப்பணம்
செய்கிறார், சாகார பாபா சேவையில் எலும்புகளை கூட அர்ப்பணம்
செய்வதை போன்று உங்களுடைய ஒவ்வொரு கர்மேந்திரியத்தின் மூலம்
சேவை நடைபெறுகிறது.
சுலோகன்:
பரமாத்மா அன்பில் மூழ்கி
விட்டீர்கள் என்றால், துக்கங்கள் நிறைந்த உலகம் மறந்துவிடும்.
ஓம்சாந்தி