07.11.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே!
அனைவருக்கும் இந்த மகிழ்ச்சி தரும் செய்தியைச் சொல்லுங்கள் -
இப்போது தெய்வீக ராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது.
எப்போது நிர்விகாரி உலகம் இருக்குமோ, அப்போது மற்ற விகாரிகள்
அனைவரும் விநாசமாகி விடுவர்.
கேள்வி :
இராவணனின்
சாபம்
எப்போது
கிடைக்கிறது?
சாபமிடப்
பட்டதன்
அடையாளம்
என்ன?
பதில்:
எப்போது நீங்கள் தேக அபிமானி
ஆகிறீர்களோ, அப்போது இராவணனின் சாபம் கிடைக்கிறது.
சாபமிடப்பட்ட ஆத்மாக்கள் ஏழை, விகாரியாக ஆகி விடுகின்றனர். கீழே
இறங்கிக் கொண்டே செல்கின்றனர். இப்போது தந்தையிடமிருந்து ஆஸ்தி
பெறுவதற்காக ஆத்ம அபிமானி ஆக வேண்டும். தனது திருஷ்டி- நடத்தை
முதலானவற்றை தூய்மையாக ஆக்க வேண்டும்.
ஓம் சாந்தி.
ஆன்மிகத் தந்தை வந்து ஆன்மிகக்
குழந்தைகளுக்கு 84 பிறவிகளின் கதையைச் சொல்கிறார். அனைவருமே 84
பிறவிகளை எடுக்க மாட்டார்கள் என்பதை புரிந்து
கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தான் முதல்-முதலில் சத்யுகத்தின்
ஆரம்பத்தில் பூஜைக்குரிய தேவி-தேவதைகளாக இருந்தீர்கள்.
பாரதத்தில் முதலில் தேவி-தேவதா தர்மத்தின் இராஜ்யம் தான்
இருந்தது. லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது என்றால்
நிச்சயமாக அரச பரம்பரை என்பது இருந்திருக்கும். இராஜ குலத்தின்
உற்றார் உறவினரும் கூட இருப்பார்கள். பிரஜைகளும் இருப்பார்கள்.
இது ஒரு கதை போல் உள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட
இவர்களின் இராஜ்யம் இருந்தது - இதை நினைவில் கொண்டு வருகின்றனர்.
பாரதத்தில் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தின் இராஜ்யம் இருந்தது.
இதை எல்லையற்ற தந்தை வந்து புரிய வைக்கிறார். அவர் தான் ஞானம்
நிறைந்தவர் எனச் சொல்லப்படுகிறார். எதைப் பற்றிய ஞானம்?
மனிதர்கள் நினைக் கின்றனர், அவர் அனைவரின் மனதிற்குள் இருப்பதை,
அவர்கள் செய்யும் கர்ம- விகர்மத்தை எல்லாம் அறிந்திருப்பவர்
என்று. ஆனால் இப்போது பாபா புரிய வைக்கிறார் - ஒவ்வோர்
ஆத்மாவுக்கும் அவரவர் பார்ட் கிடைத்துள்ளது. அனைத்து
ஆத்மாக்களும் தங்களின் பரந்தாம வீட்டில் வசிக்கின்றனர்.
அவர்களுக்குள் பார்ட் முழுவதும் அடங்கி யுள்ளது.
கர்மசேத்திரத்தில் போய்த் தங்களின் பார்ட்டை நடிப்பதற் காகத்
தயாராக அமர்ந்துள்ளனர். இதையும் நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள், நாம் ஆத்மாக்கள் அனைத்தையும் செய்கிறோம்.
ஆத்மா தான் சொல்கிறது, இது கசப்பாக உள்ளது, இது உவர்ப்பாக
உள்ளது என்று. ஆத்மா தான் புரிந்து கொண்டுள்ளது - நாம் இப்போது
விகாரி, பாவ ஆத்மாக்கள். அசுர சுபாவம் உள்ளது. ஆத்மா தான் இங்கே
கர்ம சேத்திரத்தில் சரீரத்தை எடுத்து பார்ட் முழுவதையும்
நடிக்கின்றது. ஆக, இதை நிச்சயம் செய்ய வேண்டும் இல்லையா? நாம்
ஆத்மா தான் அனைத்தையும் செய்கிறோம். இப்போது தந்தையோடு
சந்தித்துள்ளோம். மீண்டும் 5000 ஆண்டுகளுக்குப் பிறகு
சந்திப்போம். இதையும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்,
பூஜைக்குரியவராகவும் பூஜாரியாகவும், தூய்மை யானவர்களாகவும்
தூய்மை இழந்தவர்களாகவும் ஆகியே வந்துள்ளோம். எப்போது
பூஜைக்குரியவராக உள்ளோமோ, அப்போது தூய்மையற்றவர் யாரும் இருக்க
முடியாது.. எப்போது பூஜாரியாக உள்ளோமோ, அப்போது தூய்மையானவர்
யாரும் இருக்க முடியாது. சத்யுகத்தில் இருப்பவர்களே தூய்மையான,
பூஜைக்குரியவர்கள். எப்போது துவாபர யுகத்திலிருந்து இராவண
இராஜ்யம் ஆரம்பமாகின்றதோ, அப்போது அனைவரும் தூய்மையற்று,
பூஜாரியாக ஆகின்றனர். சிவபாபா சொல்கிறார், பாருங்கள், சங்கராச்
சாரியாரும் கூட என்னுடைய பூஜாரி தான். என்னைப் பூஜிக்கிறார்
இல்லையா? சிவனுடைய உருவம் சிலரிடம் வைரத்தில் உள்ளது, சிலரிடம்
தங்கத்தில் உள்ளது, சிலரிடம் வெள்ளியில் உள்ளது. இப்போது பூஜை
செய்கின்ற பூஜாரியை பூஜைக்குரியவர் எனச் சொல்ல முடியாது. முழு
உலகத்திலும் இச்சமயம் பூஜைக்குரியவர் ஒருவர் கூட இருக்க
முடியாது. பூஜைக்குரியவர்கள் தூய்மையாக உள்ளனர். பிறகு
தூய்மையற்றவர்களா கின்றனர். புது உலகில் தூய்மையாக இருப்பார்கள்.
தூய்மையானவர்கள் தான் பூஜிக்கப் படுகின்றனர். எப்படி குமாரி
தூய்மையாக இருக்கும் போது பூஜிக்கத் தகுதியுள்ளவராக உள்ளார்.
தூய்மை இழந்தவராகிவிட்டால் பிறகு அனைவரின் முன் தலைவணங்க வேண்டி
உள்ளது. பூஜைக்கு எவ்வளவு சாதனங்கள்! எங்காவது கண்காட்சி,
அருங்காட்சி யகம் முதலியவற்றைத் திறக்கிறீர்கள் என்றால் மேலே
திரிமூர்த்தி சிவன் கண்டிப்பாக வேண்டும். கீழே இந்த
லட்சுமி-நாராயணர் நோக்கம்-குறிக்கோள் எழுதப்பட வேண்டும். நாம்
இந்தப் பூஜைக்குரிய தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்து
கொண்டிருக் கிறோம். அங்கே பிறகு வேறு எந்த ஒரு தர்மமும்
இருக்காது. நீங்கள் புரிய வைக்க முடியும், கண்காட்சியிலோ
சொற்பொழிவு முதலியன செய்ய முடியாது. புரிய வைப்பதற் காகப் பிறகு
தனியாக ஏற்பாடு இருக்க வேண்டும். முக்கியமான விசயமே இது தான் -
நாங்கள் பாரதவாசிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி சொல்கிறோம்.
நாங்கள் இந்த ராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். இந்த
தெய்விக அரச பரம்பரை இருந்தது. இப்போது இல்லை. மீண்டும்
இதனுடைய ஸ்தாபனை நடைபெறுகின்றது. மற்ற அனைத்தும் விநாசமாகி
விடும். சத்யுகத்தில் இந்த ஒரு தர்மம் இருந்த போது அங்கே அநேக
தர்மங்கள் கிடையாது. இப்போது இந்த அநேக தர்மங்கள் சேர்ந்து
ஒன்றாக ஆவதென்பது நடக்க இயலாத காரியம். அவர்கள் வருவதே
ஒருவருக்குப் பின் ஒருவராக. வந்த பின் விருத்தியடைந்து கொண்டே
செல்கின்றனர். முதலில் வந்த ஆதி சநாதன தேவி-தேவதாதர்மம் மறைந்து
விட்டுள்ளது. தங்களை தேவி-தேவதா தர்மத்தினர் எனச் சொல்லிக்
கொள்வதற்கு யாருமே கிடையாது. இது விகாரி உலகம் என்றே
சொல்லப்படுகின்றது. நீங்கள் சொல்ல முடியும், நாங்கள் உங்களுக்கு
மகிழ்ச்சி தரும் செய்தி சொல்கிறோம் - சிவபாபா நிர்விகாரி
உலகத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார் என்று. பிரஜாபிதா
பிரம்மாவின் குழந்தைகள் நாம் பிரம்மாகுமார்- குமாரிகள் அல்லவா?
முதல்-முதலில் நாம் சகோதர-சகோதரர்கள். பிறகு படைப்பு நடை
பெறுகிறது என்றால் நிச்சயமாக சகோதர- சகோதரிகளாக இருப்போம்.
அனைவருமே சொல்கின்றனர், பாபா, நாங்கள் உங்கள் குழந்தைகள்
எனும்போது சகோதர-சகோதரி களுக்குள் குற்றமான பார்வை செல்ல
முடியாது. இந்தக் கடைசிப் பிறவியில் தூய்மையாக வேண்டும்.
அப்போது தான் தூய்மையான உலகின் எஜமானர் ஆக முடியும். நீங்கள்
அறிவீர்கள், கதி-சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரு தந்தை மட்டுமே!
பழைய உலகம் மாறி நிச்சயமாகப் புதிய உலகம் ஸ்தாபனை ஆகும். அதை
பகவான் தான் செய்வார். இப்போது அவர் புது உலகத்தை எப்படிப்
படைக்கிறார்? இதைக் குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிவீர்கள்.
இப்போது பழைய உலகமும் உள்ளது. இது இன்னும் அழிந்து விடவில்லை.
பிரம்மா மூலம் ஸ்தாபனை என்பது சித்திரங்களிலும் உள்ளது.
இவருக்கு (பிரம்மாவிற்கு) இது அநேகப் பிறவிகளின் கடைசிப் பிறவி.
பிரம்மாவுக்கு யுகல் கிடையாது. பிரம்மா வினுடையது
தத்தெடுத்தலாகும். இதைப் புரிய வைப்பதற்கு மிகவும் யுக்தி
வேண்டும். சிவபாபா பிரம்மாவுக்குள் பிரவேசமாகி நம் அனைவரையும்
தம்முடையவர்களாக ஆக்கிக் கொள்கிறார். சரீரத்தில் எப்போது
பிரவேசமாகிறாரோ, அப்போது தான் ஹே ஆத்மாக் களே, நீங்கள்
என்னுடைய குழந்தைகள் எனச் சொல்ல முடியும். ஆத்மாக்களோ இருக்கவே
செய்கின்றனர். பிறகு பிரம்மா மூலம் சிருஷ்டி படைக்கப்படும்
என்றால் நிச்சயமாக பிரம்மாகுமார்-குமாரிகள் இருப்பார்கள்
இல்லையா? ஆக, சகோதர-சகோதரிகள் ஆகின்றனர். வேறு விதமான திருஷ்டி
நீங்கி விடுகின்றது. நாம் சிவபாபாவிடமிருந்து தூய்மையாவதற்கான
ஆஸ்தி பெற்றுக் கொள்கிறோம். இராவணனிடமிருந்து நமக்கு சாபம்
கிடைக்கின்றது. இப்போது நாம் ஆத்ம அபிமானி ஆகிறோம் என்றால்
பாபாவிட மிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. தேக அபிமானி ஆவதால்
இராவணனின் சாபம் கிடைக் கின்றது. சாபம் கிடைப்பதால் கீழே
இறங்கிக் கொண்டே செல்கின்றனர். இப்போது பாரதம் சாபமிடப்
பட்டதாக இருக்கிறது இல்லையா? பாரதத்தை இவ்வளவு ஏழையாக,
விகாரியாக யார் ஆக்கினார்? யாரோ ஒருவருடைய சாபம் உள்ளது இல்லையா?
இது இராவணன் உருவத்தில் மாயாவின் சாபமாகும். ஒவ்வொரு வருடமும்
இராவணனை எரிக்கின்றனர் என்றால் நிச்சயமாக விரோதி தானே?
தர்மத்தில் தான் சக்தி உள்ளது. இப்போது நாம் தேவதா
தர்மத்தினராக ஆகிறோம். பாபா புதிய தர்மத்தின் ஸ்தாபனைக்கு
நிமித்தமாக (பொறுப்பாக) உள்ளார். எவ்வளவு சக்தி வாய்ந்த
தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்! நாம் பாபாவிடமிருந்து சக்தி
பெறுகிறோம். முழு உலகத்தின் மீதும் வெற்றி பெறுகிறோம். நினைவு
யாத்திரை மூலம் தான் சக்தி கிடைக்கின்றது, விகர்மங்கள் விநாச
மாகின்றன. ஆக, இதையும் கூட எழுதி வைக்க வேண்டும். நாங்கள்
மகிழ்ச்சி தரும் செய்தி சொல்கிறோம். இப்போது இந்த தர்மத்தின்
ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, அதைத் தான் ஹெவன், சொர்க்கம்
என்று சொல்கின்றனர். இதுபோல் பெரிய-பெரிய எழுத்துகளில் எழுதி
வையுங்கள். பாபா அறிவுரை தருகிறார் - இது அனைத்திலும்
முக்கியமானது. இப்போது ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது. பிரஜாபிதா பிரம்மாவும் அமர்ந்துள்ளார்.
நாம் பிரஜாபிதா பிரம்மா குமார்-குமாரிகள் ஸ்ரீமத்படி இந்தக்
காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். பிரம்மாவின் வழி அல்ல.
ஸ்ரீமத் பரமபிதா பரமாத்மா அனைவருக்கும் தந்தையான சிவபாபாவினு
டையது. பாபா தான் ஒரு தர்மத்தின் ஸ்தாபனை, அநேக தர்மங்களின்
விநாசம் செய்கிறார். இராஜயோகம் கற்றுக் கொண்டு (பிரம்மா பாபா)
அவ்வாறு ஆகிறார். நாமும் அதுபோல் ஆகிக் கொண்டிருக்கிறோம். நாம்
எல்லையற்ற சந்நியாசம் மேற் கொண்டுள்ளோம். ஏனெனில் நாம்
அறிந்துள்ளோம் - இந்தப் பழைய உலகம் எரிந்து சாம்பலாகப் போகிறது.
எப்படி எல்லைக்குட்பட்ட தந்தை வீடு கட்டுகிறார் என்றால் பழைய
வீட்டிலிருந்து மோகம் விடுபட்டு விடுகிறது. பாபா சொல்கிறார்,
இந்தப் பழைய உலகம் முடிந்துவிடப் போகிறது. இப்போது உங்களுக்காக
புது உலகை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் படிப்பதே
புது உலகத்திற்காக. அநேக தர்மங்களின் விநாசம், ஒரு தர்மத்தின்
ஸ்தாபனை சங்கமயுகத்தில் தான் நடைபெறுகின்றது. யுத்தம் நடைபெறும்,
இயற்கைச் சேதங்கள் கூட வரும். சத்யுகத்தில் லட்சுமி-நாராயணன்
இராஜ்யம் இருந்த போது வேறு எந்த ஒரு தர்மமும் இருந்ததில்லை.
மற்ற அனைவரும் எங்கே இருந்தனர்? இந்த ஞானத்தை புத்தியில் வைக்க
வேண்டும். இந்த ஞானத்தை புத்தியில் வைத்து வேறு எந்த ஒரு
வேலையும் செய்வதில்லை என்பது கிடையாது. எவ்வளவு சிந்தனைகள்
வைக்கின்றனர்! கடிதங்கள் எழுதுவது, படிப்பது, வீட்டைப் பற்றிச்
சிந்திப்பது எல்லாம் இருந்தாலும் கூட பாபாவை நினைவு செய்து
கொண்டே இருக்கிறேன். பாபாவை நினைவு செய்வதில்லை என்றால்
விகர்மங்கள் எப்படி விநாசமாகும்?
இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கிடைத்துள்ளது.
நீங்கள் அரைக் கல்பத்திற்கு பூஜைக்குரியவராக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். அரைக்கல்பம் பூஜாரி, தமோபிரதான், பிறகு
அரைக்கல்பம் பூஜைக்குரிய, சதோபிரதானமாக இருக்கிறீர்கள். ஆத்மா
பரமபிதா பரமாத்மாவோடு நினைவு (தொடர்பு) வைப்பதால் தான் தங்கம்
ஆகிறது. நினைவு செய்து-செய்தே இரும்பு யுகத்திலிருந்து பொன்
யுகத்திற்குச் சென்று விடும். பதீத-பாவனர் என்று ஒருவர்
மட்டுமே சொல்லப் படுகிறார். இனி வரும் காலத்தில் உங்கள் குரல்
வெளிப்படும். நிகழ்காலம் அனைத்து தர்மங்களுக்குமானது. நீங்கள்
சொல்லவும் செய்கிறீர்கள், பாபா சொல்கிறார் - பதித-பாவனர் நான்
தான் என்னை நினைவு செய்வீர்களானால் தூய்மையாகி விடுவீர்கள்
என்று. மற்ற அனைவரும் கணக்கு-வழக்கை முடித்து விட்டுச் சென்று
விடுவார்கள். எங்காவது குழம்பிப் போகிறீர்கள் என்றால்
கேட்கலாம். சத்யுகத்தில் இருப்பதே கொஞ்சம் பேர் தான். இப்போதோ
அநேக தர்மங்கள் உள்ளன. நிச்சயமாகக் கணக்கு-வழக்கை முடித்து
விட்டுப் பிறகு எப்படி இருந்தார்களோ, அப்படியே ஆவார்கள். அதிக
விவரமாக ஏன் செல்ல வேண்டும்? ஒவ்வொருவரும் அவரவர் பார்ட்டை
வந்து நடிப்பார்கள் என்று தெரிந்துள்ளீர் கள். இப்போது
அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். ஏனென்றால் இவர்கள்
அனைவரும் சத்யுகத்தில் இருந்ததில்லை. பாபா வருவதே ஒரு
தர்மத்தின் ஸ்தாபனை, அநேக தர்மங்களின் விநாசம் செய்வதற்காக.
இப்போது புது உலகத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது.
மீண்டும் சத்யுகம் நிச்சயமாக வரும். சக்கரம் நிச்சயமாகச்
சுற்றும். அதிகப்படியான சிந்தனைகளில் செல்ல வேண்டியதில்லை.
முக்கியமான விசயம், நாம் சதோபிரதானமாக ஆவோமானால் உயர்ந்த பதவி
பெறுவோம். குமாரிகளோ, இதில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
குமாரிகளின் வருமானத்தை வைத்து தாய்-தந்தையர் சாப்பிட
மாட்டார்கள். ஆனால் தற்சமயம் பட்டினியாக ஆகி விட்டனர் என்றால்
குமாரிகளும் கூட சம்பாதிக்க வேண்டி உள்ளது. நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள், இப்போது தூய்மையாகி தூய்மையான உலகிற்கு
எஜமானர் ஆக வேண்டும். நாம் இராஜயோகிகள். பாபாவிடமிருந்து
அவசியம் ஆஸ்தியைப் பெற வேண்டும்.
இப்போது நீங்கள் பாண்டவ சேனையைச்
சேர்ந்தவர்களாக ஆகியிருக்கிறீர்கள். தன்னுடைய சேவையைச்
செய்தாலும் இந்த சிந்தனை வைக்க வேண்டும் - நாம் போய்
அனைவருக்கும் வழி சொல்ல வேண்டும். எவ்வளவு செய்வீர்களோ, அவ்வளவு
உயர்ந்த பதவி பெறுவீர்கள். பாபாவிடம் கேட்க முடியும் -
இப்போதுள்ள நிலையில் இறந்து போனால் எனக்கு என்ன பதவி கிடைக்கும்?
என்று. பாபா உடனே சொல்லி விடுவார். நீங்கள் சேவை செய்வதில்லை.
அதனால் சாதாரண வீட்டில் போய் ஜென்மம் எடுப்பீர்கள். பிறகு வந்து
ஞானத்தைப் பெறுவீர்கள் என்றாலும் கஷ்டம். ஏனென்றால் சின்னக்
குழந்தை இந்த அளவு ஞானத்தையோ எடுத்துக் கொள்ள முடியாது. இன்னும்
2-3 வருடங்கள் தான் இருக்கின்றன என்றால் என்ன படிக்க முடியும்?
பாபா சொல்லி விடுவார், நீங்கள் போய் சத்திரிய குலத்தில் (திரேதாயுகத்தில்)
ஜென்மம் எடுப்பீர்கள். கடைசியில் ஒருவேளை இரட்டைக் கிரீடம்
கிடைக்கலாம். எனவே சொர்க்கத்தின் முழு சுகத்தைப் பெற இயலாது
போகும். யார் முழு சேவை செய்கிறார்களோ, படிக்கிறார்களோ, அவர்கள்
தான் முழு சுகம் பெறுவார்கள், நம்பர்வார் புருஷார்த்தத்தின்
அனுசாரம். இதே அக்கறை வைக்க வேண்டும் - இப்போது நாம் ஆகவில்லை
என்றால் கல்ப-கல்பமாக ஆக மாட்டோம். ஒவ்வொருவரும் தங்களைத்
தாங்களே அறிந்து கொள்ள முடியும், நாம் எத்தனை மார்க்குகள்
பெற்றுப் பாஸ் ஆவோம் என்று. அனைத்தையும் அறிந்து கொள்கின்றனர்.
பிறகு விதி எனச் சொல்லப்படுகிறது. உள்ளுக்குள் துக்கம்
இருக்கும் இல்லையா? அமர்ந்திருந்தவாறே நமக்கு என்னாயிற்று?
அமர்ந்தவாறே மனிதர்கள் இறந்தும் போகின்றனர். அதனால் பாபா
சொல்கிறார், சோம்பல் கொள்ளாதீர்கள். புருஷார்த்தம் செய்து
தூய்மையற்றதிலிருந்து தூய்மையாகிக் கொண்டே இருங்கள்.
மற்றவர்களுக்கு வழி சொல்லிக் கொண்டே இருங்கள். யாராவது உற்றார்
உறவினர் உள்ளனர் என்றால் அவர்கள் மீது இரக்கப்பட வேண்டும்.
பார்க்கிறீர்கள், இவர்கள் விகாரமின்றி, அசுத்த உணவைச்
சாப்பிடாமல் இருக்க முடிவதில்லை என்று. பிறகும் கூட
அவர்களுக்குப் புரிய வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏற்றுக்
கொள்ள வில்லை என்றால் அவர்கள் நமது குலத்தைச் சேர்ந்தவர்கள்
இல்லை எனப் புரிந்து கொள்ளுங்கள். முயற்சி செய்து தந்தை வீடு
மற்றும் மாமனார் வீட்டில் உள்ளவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.
இவர்கள் நம்மிடம் பேசுவது கூட இல்லை, முகத்தைத் திருப்பிக்
கொள்கின்றனர் என்று அவர்கள் சொல்வது போல் நடந்து கொள்ளக் கூடாது.
அனைவருடனும் இணக்கமாக இருக்க வேண்டும். நாம் அவர்களுக்கும்
நன்மை செய்ய வேண்டும். மிகவும் இரக்க மனம் உள்ளவராக ஆக வேண்டும்.
நாம் சுகத்தின் பக்கம் செல்கிறோம் என்றால் மற்றவர்களுக்கும் வழி
சொல்ல வேண்டும். பார்வையற்றவர் களுக்கு நீங்கள் தான் ஊன்றுகோல்
இல்லையா? பார்வையற்றவர்க்கு நீ தான் ஊன்று கோல் எனப்
பாடுகின்றனர். கண்களோ அனைவருக்குமே உள்ளது. பிறகும் அழைக்
கின்றனர். ஏனென்றால் ஞானத்தின் மூன்றாவது கண் இல்லை.
சாந்தி-சுகத்திற்கான வழி சொல்பவர் ஒரு தந்தை மட்டுமே! இது
குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இப்போது உள்ளது. முன்பு
இதுபோல் புரிந்து கொண்டதில்லை. பக்தி மார்க்கத்தில் எவ்வளவு
மந்திரங்கள் ஜெபிக்கின்றனர். ராம்-ராம் என்று சொல்லி மீனுக்கு
உணவு கொடுக்கின்றனர், எறும்புக்கு உணவு கொடுக்கின்றனர். இப்போது
ஞான மார்க்கத்திலோ எதையும் செய்வதற்குத் தேவையில்லை. பறவைகளோ
ஏராளமாக இறந்து போகின்றன. ஒரே ஒரு புயல் அடிக்கிறது, எவ்வளவு
பேர் இறந்து போகின்றனர்! இயற்கை சேதங்களோ இப்போது அதிவேகமாக
வரப்போகின்றன. இந்த ஒத்திகை நடந்து கொண்டே இருக்கும்.
இவையனைத்தும் விநாசமாகத் தான் போகின்றது. மனதில் தோன்றுகிறது.
இப்போது நாம் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறோம். அங்கே நமது
முதல் தரமான மாளிகையைக் கட்டுவோம். எப்படி கல்பத்திற்கு முன்
கட்டினோமோ அதுபோல. கல்பத்திற்கு முன் யார் கட்டினார்களோ,
அவர்கள் தான்கட்டுவார்கள். அந்தச் சமயம் அந்த புத்தி வந்து
விடும். அதைப் பற்றி இப்போது ஏன் சிந்திக்க வேண்டும்? இதைவிட
பாபாவின் நினைவில் இருப்பது நல்லது. நினைவு யாத்திரையை
மறக்காதீர்கள். மாளிகைகளோ கல்பத்திற்கு முன் போலவே கட்டத் தான்
செய்வோம். ஆனால் இப்போது நினைவு யாத்திரையை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மிகுந்த குஷியில் இருக்க வேண்டும் - நமக்கு தந்தை,
ஆசிரியர், சத்குரு கிடைத்துள்ளார். இந்தக் குஷியில்
மயிர்க்கூச்செரிய வேண்டும். நாம் வந்திருப்பதே அமரபுரியின்
எஜமானர் ஆவதற்காக என்பது உங்களுக்குத் தெரியும். இந்தக் குஷி
நிலையாக இருக்க வேண்டும். இங்கே இருந்தால் தான் பிறகு 21
பிறவிகளுக்கு அது நிலையாக இருக்கும். அநேகருக்கு நினைவு
படுத்திக் கொண்டே இருப்பீர்களானால் தன்னுடைய நினைவும் கூட
அதிகரிக்கும். பிறகு பழக்கமாகி விடும். இந்த தூய்மையற்ற உலகை
நெருப்புப் பற்றிக் கொள்ளப் போகிறது என்பது தெரியும்.
பிராமணர்களாகிய உங்களுக்குத் தான் இந்தச் சிந்தனை உள்ளது -
இந்த உலகம் முழுவதும் அழிந்து போகும். சத்யுகத்தில் இதைப் பற்றி
எதுவும் தெரியாது. இப்போது கடைசி நேரம். நீங்கள் புருஷார்த்தம்
செய்து கொண்டிருக்கிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான
தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) தூய்மையற்றதிலிருந்து தூய்மையாவதற்கான புருஷார்த்தத்தில்
சோம்பலாக இருக்கக் கூடாது. உற்றார் உறவினர் முதலிய யாராக
இருந்தாலும் அவர்கள் மீது இரக்கம் வைத்துப் புரிய வைக்க
வேண்டும். விட்டுவிடக் கூடாது.
2) இவர்களோ முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் என்று சொல்கிற
மாதிரி நமது நடத்தை இருக்கக் கூடாது. இரக்கமனம் உள்ளவராகி
அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். மற்ற அனைத்துச்
சிந்தனைகளையும் விட்டுவிட்டு ஒரு பாபாவின் நினைவில் இருக்க
வேண்டும்.
வரதானம்:
உள்ளடக்கும் சக்தி மூலம் தவறை
கூட சரியானதாக ஆக்கக்கூடிய விஷ்வ பரிவர்த்தனை செய்யக்
கூடியவராகுக!
பிறருடைய தவறைப் பார்த்து சுயம்
தான் தவறு செய்யாதீர்கள். ஒருவேளை ஒருவர் தவறு செய்கின்றார்
என்றால் நாம் சரியாக இருக்க வேண்டும். அவர்களுடைய தொடர்பின்
தாக்கத்தில் வரக்கூடாது. யார் அவ்வாறு பிறர்தாக்கத்தில்
வருகின்றார்களோ, அவர்கள் சோம் பேறி ஆகிவிடுகின்றார்கள். நான்
சரியான வழியில் தான் செல்வேன் என்று ஒவ்வொருவரும் பொறுப்பு
எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை பிறர் தவறு செய்கின்றார்கள்
என்றால் அந்த சமயம் உள்ளடக்கும் (பொறுமை) சக்தியை
பயன்படுத்துங்கள். பிறருடைய தவறை குறிப்பதற்கு பதிலாக
அவர்களுக்கு சகயோகம் கொடுங்கள் - அதாவது சகயோகத்தால்
நிறைத்துவிடுங்கள். அப்பொழுது விஷ்வ பரிவர்த்தனை காரியம்
சகஜமாக நடந்தேறிவிடும்.
சுலோகன்:
நிரந்தர யோகி ஆகவேண்டும் என்றால்
எல்லைக்குட்பட்ட நான் மற்றும் எனது என்பதை
எல்லைக்கப்பாற்பட்டதாக மாற்றுங்கள்.
ஓம்சாந்தி