03.11.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே!
நீங்கள்தான் உண்மையான அலௌகிக மந்திரவாதிகள், நீங்கள் மனிதர்களை
தேவதைகளாக ஆக்கக்கூடிய மந்திரஜாலத்தைக் காட்ட வேண்டும்.
கேள்வி:
நல்ல முயற்சியாளராக இருக்கும்
மாணவர்களின் அடையாளங்கள் என்ன?
பதில்:
அவர்கள் மதிப்புடன் தேர்ச்சி
அடையக் கூடிய அதாவது விஜய மாலையில் வரக்கூடிய இலட்சியம்
வைப்பார்கள். அவர்களின் புத்தியில் ஒரு தந்தையின் நினைவுதான்
இருக்கும். தேகத்துடன் சேர்த்து தேகத்தின் அனைத்து
சம்மந்தங்களின் மீதும் உள்ள புத்தியின் தொடர்பை நீக்கி
ஒருவரிடம் அன்பு வைப்பார்கள். இப்படிப்பட்ட முயற்சியாளர்கள்
தான் மாலையின் மணி ஆகின்றனர்.
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கிறார். இப்போது ஆன்மீகக்
குழந்தைகளாகிய நீங்கள் மந்திரவாதிகளாக மந்திரஜாலம் செய்பவர் ஆகி
விட்டீர்கள். ஆகையால் தந்தையையும் மந்திரவாதி என்று
சொல்கின்றனர். மனிதர்களை தேவதைகளாக ஆக்கி விடக் கூடிய
மந்திரவாதிகள் வேறு யாரும் இருக்க முடியாது. இது மாயா ஜாலம்
அல்லவா. எவ்வளவு உயர்ந்த வருமானத்தை ஏற்படுத்தக்கூடிய வழியை
நீங்கள் கூறுகிறீர்கள். பள்ளியில் ஆசிரியரும் கூட வருமானத்தை
ஈட்டுவதற்கு கற்றுத் தருகிறார். படிப்பு என்பது வருமானம் அல்லவா.
பக்தி மார்க்கத்தின் கதைகள், சாஸ்திரம் முதலானவை களை கேட்பது -
இதனை படிப்பு என்று சொல்வதில்லை. அதில் வருமானம் ஏதும் இல்லை,
வெறுமனே செலவுதான் ஆகிறது. தந்தையும் புரிய வைக்கிறார் - பக்தி
மார்க்கத்தில் படங்களை உருவாக்கி, கோவில் முதலானவைகளை கட்டி,
பக்தி செய்து செய்து நீங்கள் எவ்வளவு பணத்தை செலவு செய்து
விட்டீர்கள். ஆசிரியர் வருமானத்தை ஈட்ட வைக்கிறார். வாழ்க்கை
நடக்கிறது. குழந்தைகளாகிய உங்களின் படிப்பு எவ்வளவு உயர்வானது.
அனைவரும் படிக்கத் தான் வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள்
மனிதரிலிருந்து தேவதைகளாக்கக் கூடியவர்கள். அந்த படிப்பில்
வக்கீல் முதலானவர்களாக ஆகின்றனர், அதுவும் ஒரு பிறவிக்காக.
எவ்வளவு இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது, ஆகையால்
ஆத்மாக்களாகிய உங்களுக்கு சுத்தமான போதை இருக்க வேண்டும். இது
குப்தமான போதை. எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் அதிசயம்.
எப்படிப்பட்ட ஆன்மீக மாயா ஜாலம். ஆத்மா நினைவு செய்து செய்து
சதோபிரதானம் ஆகி விட வேண்டும். சன்னியாசிகள் சொல்கின்றனர்
அல்லவா - நான் எருமை என உன்னை புரிந்து கொள் என்றால் அவ்வாறே
சொல்லியபடி முற்றத்தில் சென்று அமர்ந்து, பின் வெளியே வரச்
சொன்னால், நான் எருமை, எப்படி வருவது? என சொன்னது போல. இப்போது
தந்தை சொல்கிறார், நீங்கள் தூய்மையான தேவதைகளாக இருந்தீர்கள்,
இப்போது தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளீர்கள், மீண்டும் தந்தையை
நினைவு செய்து செய்து நீங்கள் தூய்மையடைந்து விடுவீர்கள். இந்த
ஞானத்தைக் கேட்டு நரனிலிருந்து நாராயணனாக அல்லது மனிதரிலிருந்து
தேவதைகளாக ஆகி விடுகிறீர்கள். தேவதைகளின் இராஜ்யமும் உள்ளது
அல்லவா. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது ஸ்ரீமத்படி பாரதத்தில்
தெய்வீக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். தந்தை
கேட்கிறார் - இப்போது நான் உங்களுக்குக் கொடுக்கும் ஸ்ரீமத்
சரியா அல்லது சாஸ்திரங்களின் வழி சரியா? தீர்மானம் செய்யுங்கள்.
கீதை என்பது அனைத்து சாஸ்திரங்களிலும் உயர்ந்தது பகவத்
கீதையாகும். இது குறிப்பாக எழுதப்பட்டுள்ளது. இப்போது பகவான்
என சொல்லப்படுபவர் யார்? கண்டிப்பாக அனைவரும் நிராகாரமான சிவன்
என்றே சொல்வார்கள். ஆத்மாக்களாகிய நாம் அவருடைய குழந்தைகள்,
சகோதரர்கள். அவர் ஒரு தந்தை ஆவார். நீங்கள் அனைவரும்
மணமகள்களாக உள்ளீர்கள், மணமகனாகிய என்னை நினைவு செய்கிறீர்கள்
ஏனென்றால் நான்தான் இராஜயோகம் கற்றுக் கொடுத்திருந்தேன், அதன்
மூலம் நீங்கள் நடைமுறையில் நரனிலிருந்து நாராயணன் ஆகின்றீர்கள்.
நாங்கள் சத்ய நாராயணரின் கதையைக் கேட்கிறோம் என அவர்கள்
சொல்கின்றனர். இதிலிருந்து நாம் நரனிலிருந்து நாராயணர் ஆவோம்
என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தந்தை ஆத்மாக்களாகிய
உங்களுக்கு ஞானத்தின் மூன்றாம் கண் கொடுக்கிறார், அதன் மூலம்
ஆத்மா தெரிந்து கொண்டு விடுகிறது. சரீரம் இல்லாமல் ஆத்மா பேச
முடியாது. ஆத்மாக்கள் இருக்கும் இடம் நிர்வாண தாமம்
எனப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது சாந்தி தாமம்
மற்றும் சுகதாமத்தைத்தான் நினைவு செய்ய வேண்டும். இந்த
துக்கதாமத்தை புத்தியிலிருந்து மறந்து விட வேண்டும்.
ஆத்மாவுக்கு இப்போது எது சரி, எது தவறு என்று புரிந்துள்ளது.
கர்மம், அகர்மம், விகர்மத்தின் இரகசியத்தை யும் கூட புரிய
வைத்துள்ளார். தந்தை குழந்தைகளுக்குத்தான் புரிய வைக்கிறார்,
மேலும் குழந்தைகள் தான் தெரிந்து கொள்கின்றனர். மற்ற மனிதர்கள்
தந்தையையே தெரிந்து கொள்ள வில்லை. இதுவும் கூட நாடகமாக
உருவாகியுள்ளது. இராவண இராஜ்யத்தில் அனைவரின் கர்மமும் பாவ
கர்மங்களாகத்தான் ஆகின்றன. சத்யுகத்தில் கர்மம் அகர்மமாக ஆகிறது.
அங்கே குழந்தைகள் இருப்பதில்லையா என சிலர் கேட்கின்றனர். அது
நிர்விகாரி உலகம் என்றுதான் சொல்லப்படுகிறது. எனவே அங்கே இந்த
5 விகாரங்கள் எங்கிருந்து வரும்? இது மிகவும் எளிதாக புரிந்துக்
கொள்ளக் கூடிய விஷயமாகும். சரியாகப் புரிந்து கொள்பவர்கள் உடன்
எழுந்து நிற்கின்றனர். புரிந்து கொள்ளாதவர்களும் முன்னே போக
போகப் புரிந்து கொள்வார்கள். ஜோதியைக் கண்டு விட்டில்கள்
வருகின்றன, சென்று விடுகின்றன, பிறகு மீண்டும் வருகின்றன.
இவரும் ஜோதிஆவார், அனைவரும் எரிந்து போக பலி ஆக வேண்டி யுள்ளது.
மற்றபடி ஜோதி எதுவுமில்லை. அதுவோ பொதுவான விஷயமாகும். ஜோதியில்
விட்டில்கள் நிறைய எரிந்து போகின்றன. தீபாவளியில் எவ்வளவு
சின்னச் சின்ன கொசுக்கள் வெளிப்படுகின்றன மற்றும் அழிந்து
போகின்றன. வாழ்வது மற்றும் இறப்பது. தந்தையும் புரிய வைக்கிறார்
- இறுதியில் வந்து பிறவி எடுத்து பின் இறந்து விடுவது என்பது
கொசுக்கள் போன்ற வாழ்க்கை என ஆகிவிடுகிறது. தந்தை ஆஸ்தி
கொடுக்க வந்துள்ளார் எனும்போது முயற்சி செய்து மதிப்புடன்
தேர்ச்சி அடைய வேண்டும். நல்ல மாணவர்கள் நிறைய முயற்சி
செய்கின்றனர். இந்த மாலையும் கூட மதிப்புடன்
தேர்ச்சியடைபவர்களுடையதுதான் ஆகும். முடிந்த வரை முயற்சி
செய்தபடி இருங்கள். வினாச காலத்தில் விபரீத புத்தி என்று சொல்
கின்றனர். இது குறித்தும் கூட நீங்கள் புரிய வைக்க முடியும்.
எங்களுடையது தந்தையின் மீது அன்பான புத்தி. ஒரு தந்தையைத் தவிர
நாங்கள் வேறு யாரையும் நினைவு செய்வதில்லை. தேகத்துடன் சேர்த்து
தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விடுத்து என்னை மட்டும்
நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். பக்தி மார்க்கத்தில்
ஓ! துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவரே . . . என நிறைய
நினைவு செய்தபடி வந்தீர்கள். ஆக கண்டிப்பாக தந்தை சுகத்தைக்
கொடுப்பவர் அல்லவா. சொர்க்கம் சுகதாமம் என்றே சொல்லப்படுகிறது.
தூய்மையாக்குவதற்காகவே நான் வந்தேன் என தந்தை புரிய வைக்கிறார்.
காமச் சிதையில் அமர்ந்து கருப்பாகி விட்ட குழந்தைகளின் மீது
நான் வந்து ஞானத்தின் மழையைப் பொழிகிறேன். குழந்தைகளாகிய
உங்களுக்கு யோகம் (நினைவு பயிற்சி) கற்றுத் தருகிறேன் - தந்தையை
நினைவு செய்தீர்கள் என்றால் பாவ கர்மங்கள் அழியும், மேலும்
நீங்கள் பரிஸ்தானத்தின் (தேவதைகள் வாழும் சொர்க்கத்தின்) எஜமான்
ஆகி விடுவீர்கள். நீங்களும் மந்திரவாதிகளாக உள்ளீர்கள் அல்லவா.
இது நம்முடைய உண்மையிலும் உண்மையான மந்திரஜாலம் என
குழந்தைகளுக்குப் போதை இருக்க வேண்டும். ஒரு சிலர் மிகவும்
நல்ல புத்திசாலியான மந்திரவாதிகளாக உள்ளனர். என்னென்ன
பொருட்களையெல்லாம் வெளிக் கொண்டு வருகின்றனர். இது அலௌகிக
மாயாஜாலமாகும் அதாவது ஒருவரைத் தவிர வேறு யாரும் கற்பிக்க
முடியாது. நாம் மனிதரிலிருந்து தேவதையாகிக் கொண்டிருக்கிறோம்
என நீங்கள் அறிவீர்கள். இந்தக் கல்வி புதிய உலகத்திற்கானதாகும்.
அது சத்யுகம், புதிய உலகம் என சொல்லப்படுகிறது. இப்போது நீங்கள்
சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இந்த புருஷோத்தம சங்கமயுகத்தைப்
பற்றி யாருக்கும் தெரியாது. நீங்கள் எவ்வளவு உத்தம புருஷர்
களாக ஆகிறீர்கள். தந்தை ஆத்மாக்களுக்குத்தான் புரிய வைக்கிறார்.
பிராமணிகளாகிய நீங்கள் வகுப்பில் அமரும்போதும் கூட முதன்
முதலாக விழிப்புணர்வூட்ட வேண்டியது உங்கள் வேலையாகும்.
சகோதரர்களே, சகோதரிகளே, தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு
அமருங்கள். ஆத்மாக்களாகிய நாம் இந்த உறுப்புகளின் மூலம்
கேட்கிறோம். 84 பிறவிகளின் ரகசியத்தையும் கூட தந்தை புரிய
வைத்துள்ளார். எந்த மனிதர்கள் 84 பிறவிகள் எடுக் கின்றனர்?
அனைவரும் எடுக்க மாட்டார்கள். இது குறித்தும் கூட யாருக்கும்
சிந்தனை செல்வதில்லை. கேட்டதையெல்லாம் உண்மை என சொல்லி
விடுகின்றனர். அனுமான் வாயுவிலிருந்து வெளிப்பட்டார் - உண்மை.
பிறகு மற்றவர்களுக்கும் கூட இப்படிப்பட்ட விஷயங்களை சொல்லியபடி
இருக்கின்றனர், மேலும் உண்மை, உண்மை என்றபடி இருக் கின்றனர்.
இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு சரி மற்றும் தவறை புரிந்து கொள்ளக் கூடிய ஞானக் கண்
கிடைத்துள்ளது எனும்போது சரியான நல்ல கர்மத்தையே செய்ய வேண்டும்.
நாங்கள் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து இந்த ஆஸ்தியை
எடுத்துக் கொண்டி ருக்கிறோம் என நீங்கள் புரிய வைக்கவும்
செய்கிறீர்கள். நீங்கள் அனைவரும் முயற்சி செய்யுங்கள். அந்த
தந்தை அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார். இப்போது என்னை நினைவு
செய்யுங்கள் என ஆத்மாக்களாகிய உங்களுக்கு தந்தை சொல்கிறார்.
தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள். ஆத்மாவில் தான்
சம்ஸ்காரங்கள் உள்ளன. சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கின்றனர்,
யாருடைய பெயராவது சிறு வயதிலேயே புகழ் பெற்றதாக ஆகி விட்டது
என்றால் இவர் முந்தைய பிறவியில் இப்படிப்பட்ட கர்மம்
செய்துள்ளார் என சொல்கின்றனர், யாராவது கல்லூரி முதலானவைகளைக்
கட்டினால் அடுத்த பிறவியில் நன்றாகப் படிப்பார்கள். கர்மங்களின்
கணக்கு வழக்கு உள்ளதல்லவா. சத்யுகத்தில் விகர்மத் தின் விஷயமே
கிடையாது. கர்மம் கண்டிப்பாக செய்வார்கள். இராஜ்யம் செய்வார்கள்,
(உண்பார்கள்) சௌகரியம் அனுபவிப்பார்கள் ஆனால் தலைகீழ்
காரியங்கள் செய்ய மாட்டார் கள். அதுவே இராம ராஜ்யம் என்று
சொல்லப்படுகிறது. இங்கே உள்ளது இராவண இராஜ்யம். இப்போது நீங்கள்
ஸ்ரீமத்படி ராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அது புதிய உலகமாகும். பழைய உலகில் தேவதைகளின் நிழல் கூட
படுவதில்லை. இலட்சுமி யின் ஜடசித்திரத்தை எடுத்து வைத்தீர்கள்
என்றால் அதன் நிழல் படலாம், சைதன்ய இலட்சுமி யின் நிழல் பட
முடியாது. அனைவரும் மறுபிறவிகள் எடுக்கவே வேண்டும் என குழந்தை
களாகிய நீங்கள் அறிவீர்கள். கிணற்றில் நீர் இறைக்கும் ராட்டினம்
சுற்றியபடி இருக்கிறது அல்லவா, அதுபோல உங்களுடைய இந்த சக்கரமும்
கூட சுற்றியபடி இருக்கும். இது குறித்து தான் உதாரணங்கள்
விளக்கப்படுகின்றன. தூய்மை அனைத்தினும் விட நல்லது. குமாரி
தூய்மையாய் இருப்பதால் அனைவரும் அவர் காலில் விழுகின்றனர்.
நீங்கள் பிரஜாபிதா பிரம்மா குமார்-குமாரிகள். பெரும்பாலானவர்கள்
குமாரிகளாக இருக்கின்றீர்கள். ஆகையால் குமாரிகளின் மூலம்
பாணங்களை (அம்புகளை) எறிய வைத்தனர் என குமாரிகள் குறித்த பாடல்
உள்ளது. இது ஞான பாணம். நீங்கள் அன்புடன் அமர்ந்து
புரியவைக்கிறீர்கள். சத்குருவான தந்தை ஒருவரே ஆவார். அவர்
அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஆவார். பகவானின்
மகாவாக்கியம் - மன்மனாபவ. இதுவும் கூட மந்திரமல்லவா, இதில்தான்
முயற்சி உள்ளது. தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு
செய்யுங்கள். இது குப்தமான முயற்சி. ஆத்மாதான்
தமோபிரதானமாகியுள்ளது, மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும்.
ஆத்மாக்களும் பரமாத்மாவும் வெகு காலம் பிரிந்திருந்தனர், யார்
முதன் முதலாக பிரிந்தனரோ அவர்களுக்கே மீண்டும் கிடைப்பார்.
ஆகையால் தந்தை சொல்கிறார் - செல்லமான காணாமல் போய் கண்டெடுத்த
குழந்தைகளே என்று. பக்தி எப்போதிலிருந்து தொடங்கினர் என்பதை
தந்தை அறிவார். பாதிப் பாதியாகும். அரைக் கல்பம் ஞானம், அரைக்
கல்பம் பக்தி. பகல் மற்றும் இரவும் கூட 24 மணி நேரத்தில் 12 மணி
நேரம் பகல், 12 மணி நேரம் இரவாக உள்ளது. கல்பம் கூட
பாதி-பாதியாகும். பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு, பிறகு
கலியுகத்தின் ஆயுளை ஏன் இவ்வளவு நீளமாக ஆக்கி விட்டனர்? இப்போது
நீங்கள் சரி-தவறு பற்றி புரிய வைக்க முடியும். சாஸ்திரங்கள்
அனைத்தும் பக்தி மார்க்கத் தினுடையவை ஆகும். பிறகு பகவான் வந்து
பக்தியின் பலனைக் கொடுக்கிறார். பக்தர்களை இரட்சிப்பவர் என
சொல்லப்படுகிறார் அல்லவா. முன்னே செல்லச் செல்ல நீங்கள்
சன்னியாசி கள் முதலானவர்களுக்கு அன்புடன் அமர்ந்து புரிய
வைப்பீர்கள். நீங்கள் தரும் படிவத்தை (அறிமுக படிவம்) அவர்கள்
நிரப்ப மாட்டார்கள். தாய் தந்தையரின் பெயரை எழுத மாட்டார்கள்.
ஒரு சிலர் தெரியப்படுத்துவார்கள். (பிரம்மா) பாபா சென்று
கேட்டார் - ஏன் சன்னியாசம் செய்தீர்கள், காரணத்தைச் சொல்லுங்கள்.
விகாரங்களின் சன்னியாசம் செய்யும் போது வீட்டையும் சன்னியாசம்
செய்கின்றனர். இப்போது நீங்கள் முழு பழைய உலகை சன்னியாசம்
செய்கிறீர்கள். புதிய உலகின் சாட்சாத்காரம் (காட்சி) உங்களுக்கு
காட்டியுள்ளார். அது நிராகார உலகம். சொர்க்கத்தை ஸ்தாபனை
செய்பவர் சொர்க்கத்தின் இறைத் தந்தை ஆவார். மலர்த் தோட்டத்தை
உருவாக்குபவர். முட்களை மலராக்குகிறார். முதல் நம்பர் முள் -
காமக் கோடரி. காமத்தை கோடாரி என சொல்கிறோம், கோபத்தை பூதம்
என்போம். தேவி தேவதைகள் இரட்டை அஹிம்சையாளர்களாக இருந்தனர்.
விகாரமற்ற தேவதைகளின் முன்பாக விகாரி மனிதர்கள் அனைவரும் தலை
வணங்குகின்றனர். நாம் இங்கே படிப்பதற்காக வந்துள்ளோம் என
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மற்றபடி அந்த
சத்சங்கங்கள் முதலான வற்றிற்குச் செல்வது என்பது பொதுவான
விஷயமாகும். இறைவன் எங்கும் நிறைந்தவர் என சொல்லி விடுகின்றனர்.
தந்தை எப்போதாவது சர்வ வியாபி ஆக முடியுமா என்ன? தந்தை
யிடமிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தி கிடைக்கிறது. தந்தை
வந்து பழைய உலகை புதிய உலகமாக, சொர்க்கமாக ஆக்குகிறார். சிலரோ
நரகத்தை நரகம் என ஒப்புக் கொள்வதில்லை. செல்வந்தர்கள், பிறகு
சொர்க்கத்தில் என்னதான் உள்ளது என்று புரிந்து கொள்கின்றனர்.
எங்களிடம் செல்வம், மாளிகை, விமானம் முதலான அனைத்தும் உள்ளன,
எங்களுக்கு இதுவே சொர்க்கமாகும். குப்பையில் இருப்பவர்களுக்கு
நரகம், ஆகையால் பாரதம் எவ்வளவு ஏழையாக உள்ளது, பிறகு
வரலாறு-புவியியல் மீண்டும் நடக்கவுள்ளது. தந்தை நம்மை மீண்டும்
இரட்டை கிரீடதாரிகளாக ஆக்குகிறார் என்ற போதை இருக்க வேண்டும்.
கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என அனைத்தும் தெரிந்து
கொண்டி ருக்கிறீர்கள். சத்யுகம்- திரேதாவின் கதையை பாபா
சொல்லியிருக்கிறார், பிறகு இடையில் நாம் கீழே விழுகிறோம். வாம
மார்க்கம் என்பது விகாரி மார்க்கமாகும். இப்போது மீண்டும் தந்தை
வந்துள்ளார். நீங்கள் உங்களை சுயதரிசன சக்கரதாரி என புரிந்து
கொள்கிறீர்கள். சக்கரத்தை சுழற்றி, அதன் மூலம் கழுத்தை
துண்டிக்கிறீர்கள் என்பதல்ல. கிருஷ்ணருக்கு சக்கரத்தைக்
காட்டுகின்றனர், அசுர கணங்களை கொன்றபடி இருக்கிறார் என
காட்டுகின்றனர். இப்படிப்பட்ட விஷயம் நடக்க முடியாது.
பிராமணர்களாகிய நாம் சுயதரிசன சக்கரதாரிகள் என நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். நமக்கு சிருஷ்டியின் முதல், இடை, கடைசியின்
ஞானம் உள்ளது. அங்கே தேவதைகளுக்கு இந்த ஞானம் இருக்காது. அங்கே
இருப்பதே சத்கதி, ஆகையால் அது பகல் எனப்படுகிறது. இரவில் தான்
கஷ்டம் ஏற்படுகிறது. பக்தியில் தரிசனத்திற்காக எவ்வளவு ஹடயோகம்
முதலானவைகளை செய்கின்றனர். தீவிர பக்தி செய்பவர்கள் உயிரை
விடுவதற்கும் தயாராகி விடும்போது காட்சி தெரிகிறது.
நாடகத்தின்படி அல்ப காலத்திற்காக அவர்களின் விருப்பம்
நிறைவேறுகிறது. மற்றபடி ஈஸ்வரன் எதுவும் செய்வதில்லை. அரைக்
கல்பம் பக்தியின் நடிப்பு நடக்கிறது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்
1. பாபா நம்மை இரட்டை கிரீடதாரியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்
என்ற ஆன்மீக போதையிலேயே இருக்க வேண்டும். நாம் சுயதரிசன
சக்கரதாரி பிராமணர்கள். கடந்த காலம், நிகழ் காலம்,
எதிர்காலத்தின் ஞானத்தை புத்தியில் வைத்து நடக்க வேண்டும்.
2. மதிப்புடன் தேர்ச்சி அடைவதற்காக தந்தையிடம் உண்மையிலும்
உண்மையான அன்பு வைக்க வேண்டும். தந்தையை நினைவு செய்யும்
குப்தமான (மறைமுகமான) முயற்சி செய்ய வேண்டும்.
வரதானம்:
அனைத்து குணங்களின் அனுபவங்கள்
மூலமாக தந்தையை வெளிப்படுத்தக் கூடிய அனுபவங்களின் மூர்த்தி
ஆவீர்களாக.
தந்தைக்கு என்ன குணங்கள் மகிமை
பாடுகிறீர்களோ, அந்த அனைத்து குணங்களின் அனுபவம் உடையவர்கள்
ஆகவும். எப்படி தந்தை ஆனந்த கடலாக இருக்கிறாரோ, அதே ஆனந்தக்
கடலின் அலைகளில் மூழ்கியபடியே இருங்கள். யாரெல்லாம் தொடர்பில்
வருகிறார் களோ, அவர்களுக்கு ஆனந்தம், அன்பு, சுகம் .. போன்ற
அனைத்து குணங்களின் அனுபவம் செய்வியுங்கள். இது போல, அனைத்து
குணங்களின் அனுபவங்களின் மூர்த்தி ஆனீர்கள் என்றால், தங்கள்
மூலமாக தந்தையின் தோற்றம் வெளிப்படும். ஏனெனில் மகான் ஆத்மாக்
களாகிய நீங்கள் தான் பரம ஆத்மாவை தங்களது அனுபவங்களின் மூர்த்தி
மூலமாக வெளிப் படுத்தக் கூடியவர்களாக இருப்பீர்கள்.
சுலோகன்:
காரணத்தை நிவாரணமாக மாற்றம்
செய்து, அமங்களமான விசயத்தைக் கூட மங்களகரமாக ஆக்கி எடுத்துக்
கொள்ளுங்கள்.
ஓம்சாந்தி