22.11.2020 காலை முரளி ஓம் சாந்தி அவ்யக்த
பாப்தாதா
ரிவைஸ் 21.01.1987 மதுபன்
சுய இராஜ்ய அதிகாரியே விஷ்வ
இராஜ்ய அதிகாரி
இன்று பாக்கியவிதாதா தந்தை
தன்னுடைய சர்வ சிரேஷ்ட பாக்கியவான் குழந்தைகளை பார்த்துக்
கொண்டு இருக்கின்றார். பாப்தாதாவிற்கு முன்னர் இப்பொழுதும்
இந்தக் குழு மட்டும் இல்லை, ஆனால், நாலாபுறங்களிலும் உள்ள
பாக்கியவான் குழந்தைகள் உள்ளனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டின்
எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால்,
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை எல்லைக்கப்பாற்பட்ட குழந்தைகளை
பார்த்துக் கொண்டு இருக்கின்றார். இந்த சாகார வதனத்தில்
நிலத்தின் எல்லை என்பது உள்ளது. ஆனால், எல்லைக்கப்பாற்பட்ட
தந்தையின் திருஷ்டியின் சிருஷ்டியானது எல்லைக்கப்பாற்பட்டது
ஆகும். தந்தையின் திருஷ்டியில் அனைத்து பிராமண ஆத்மாக்களின்
சிருஷ்டி நிறைந்து உள்ளது. எனவே, திருஷ்டியின் சிருஷ்டியில்
அனைவரும் எதிரில் உள்ளனர். அனைத்து பாக்கியவான் குழந்தைகளை
பாக்கியவிதாதா பகவான் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்.
எவ்வாறு குழந்தைகள் தந்தையைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனரோ,
அது போன்று தந்தையும் அனைத்து குழந்தைகளையும் பார்த்து
மகிழ்ச்சி அடைகின்றார். எல்லைக்கப்பாற்பட்ட தந்தைக்கு,
குழந்தைகளைப் பார்த்து, ஒவ்வொரு குழந்தையும் இந்த விஷ்வத்திற்கு
முன் விசேச ஆத்மாக்களின் பட்டியலில் உள்ளனர் என்ற ஆன்மிக போதை
மற்றும் பெருமை உள்ளது. 16,000 மணி மாலையின் கடைசி மணியாக
இருக்கட்டும், ஆனாலும், தந்தைக்கு முன்னால் வருவதனால்,
தந்தையினுடையவராக ஆவதனால் விஷ்வத்திற்கு முன்பு விசேச ஆத்மாவே
ஆவார். ஆகையினால், வேறு எந்த ஞானத்தின் விஸ்தாரத்தை அறிந்து
கொள்ள முடியவில்லையானாலும் ஒரு பாபா என்ற வார்த்தையை
உள்ளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு இருக்கின்றார்கள் மற்றும்
உள்ளத்திலிருந்து பிறருக்கு சொல்லி இருக்கின்றார் கள் என்றால்
அவர்கள் விசேச ஆத்மா ஆகிவிட்டார்கள், உலகின் முன்னர் மகான்
ஆத்மா ஆகிவிட்டார்கள், உலகத்தின் முன் மகான் ஆத்மா என்ற
சொரூபத்தில் மகிமைக்கு உரியவர்கள் ஆகி விட்டார்கள். அந்தளவு
சிரேஷ்டமான மற்றும் சகஜமான பாக்கியம் ஆகும், புரிந்து
இருக்கிறீர்களா? ஏனெனில், பாபா என்ற வார்த்தையே சாவி ஆகும்.
எதனுடைய சாவி? அனைத்து பொக்கிசங்கள், சிரேஷ்ட பாக்கியத்தினுடைய
சாவி. சாவி கிடைத்துவிட்டது என்றால் பாக்கியம் மற்றும்
பொக்கிசம் அவசியம் கிடைத்தேயாகும். எனவே, அனைத்து தாய்மார்கள்
மற்றும் பாண்டவர்கள் சாவியைப் பெறுவதற்கான அதிகாரி
ஆகியிருக்கின்றீர்களா? சாவியைப் போடத் தெரிகிறதா அல்லது
அவ்வப்போது சாவியைப் போட முடியவில்லையா? சாவியைப்
பயன்படுத்துவதற்கான விதி என்னவென்றால் உள்ளத்தால்
அறிந்துகொள்வது மற்றும் ஏற்றுக் கொள்வது என்பதாகும். வாயினால்
மட்டும் சொன்னால் சாவி இருந்தும் திறக்க முடியாது. உள்ளத்தில்
இருந்து கூறினால் பொக்கிசம் சதா ஆஜராகி இருக்கும். அளவற்ற
பொக்கிசம் அல்லவா. அளவற்ற பொக்கி மாக இருக்கும் காரணத்தால்
எத்தனை குழந்தைகள் உள்ளனரோ, ‘ அவர்கள் அனைவரும் அதிகாரிகள்
ஆவார்கள். திறந்த பொக்கிஷம், நிறைந்த பொக்கிஷம் ஆகும். பின்னால்
வருபவர்களுக்கு பொக்கிசம் தீர்ந்துவிட்டது என்பது கிடையாது.
இதுவரை எத்தனை பேர் வந்திருக்கின்றீர்களோ அதாவது
தந்தையினுடையவர் ஆகியிருக்கின்றார்களோ மற்றும் வருங்காலத்தில்
கூட எத்தனை பேர் தந்தை யினுடையவர் ஆகப்போகின்றவர்களோ, அவர்கள்
அனைவருக்கும் கூட பொக்கிசமானது பல மடங்கு அதிகமாக உள்ளது.
ஆகையினால், பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும், யார் எந்தளவு
பொக்கிசத்தை அடைய விரும்புகின்றீர்களோ, அதை திறந்த உள்ளத்தோடு
பெற்றுக் கொள்ளுங்கள் என்ற பொன்னான வாய்ப்பைக்
கொடுக்கின்றார்கள். வள்ளலிடம் குறை இல்லை, பெறக்கூடியவர்களின்
தைரியம் மற்றும் முயற்சியுமே ஆதாரம் ஆகும். முழு கல்பத்திலும்
இத்தனை குழந்தைகளைக் கொண்டவரும் மற்றும் ஒவ்வொரு குழந்தையும்
பாக்கியவான் குழந்தையாக இருக்கும்படியான எந்தத் தந்தையும்
கிடையாது. ஆகை யினாலேயே ஆன்மிக பாப்தாதாவிற்கு ஆன்மிக போதை
உள்ளது என்று கூறப்பட்டது.
அனைவருடைய மதுபன் வருவதற்கான, சந்திப்பதற்கான ஆசை
பூர்த்தியாகிவிட்டது. பக்தி மார்க்கத்தின் யாத்திரையை விட
மதுபனில் ஓய்வாக அமர்வதற்கும், தங்குவதற்கும் இடம்
கிடைத்துள்ளது அல்லவா. கோவில் களிலோ நின்று கொண்டே தரிசனம்
மட்டும் செய்கின்றார்கள். இங்கு ஓய்வாக அமர்ந்துள்ளீர்கள்
அல்லவா. அங்கேயோ ஓடுங்கள் ஓடுங்கள், செல்லுங்கள், செல்லுங்கள்
என்று கூறுவார்கள். மேலும், இங்கே ஓய்வாக அமர்ந்து
கொள்ளுங்கள், ஓய்வாக, நினைவின் மகிழ்ச்சியோடு ஆனந்தத்தைக்
கொண்டாடுங்கள். மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காகவே
சங்கமயுகத்திற்கு வந்திருக்கின்றீர்கள். எனவே, ஒவ்வொரு நேரமும்
நடக்கும் போதும், சுற்றும்போதும், சாப்பிடும்போதும்,
அருந்தும்போதும் மகிழ்ச்சி என்ற பொக்கிஷத்தை சேமிப்பு
செய்தீர்களா? எவ்வளவு சேமித்து இருக்கிறீர்கள்? 21
பிறவிகளுக்கு ஓய்வாக உண்ணும் அளவிற்கு சேமித்து
இருக்கின்றீர்களா? மதுபன், விசேஷமாக அனைத்து பொக்கிஷங்களையும்
சேமிப்பு செய்வதற்கான இடமாகும். ஏனெனில், இங்கே ஒரு பாபாவைத்
தவிர வேறு எவருமில்லை என்பதை சாகார ரூபத்திலும் அனுபவம்
செய்கின்றீர்கள். அங்கே புத்தி மூலம் அனுபவம் செய்கின்றீர்கள்.
ஆனால், இங்கே பிரத்யட்ச சாகார வாழ்வில் கூட தந்தை மற்றும்
பிராமண பரிவாரத்தைத் தவிர வேறு எவராவது கண்களுக்குத்
தெரிகிறார்களா என்ன? ஒரே ஈடுபாடு, ஒரே விசயம், ஒரே பரிவாரம்
மற்றும் ஏக்ரஸ் ஸ்திதி, வேறு எந்த இரசனையும் இல்லை. படிப்பது
மற்றும் படிப்பின் மூலம் சக்திசாலி ஆகுவது, மதுபனில் இந்த வேலை
மட்டுமே உள்ளது அல்லவா. எத்தனை வகுப்புகள் கேட்கின்றீர்கள்?
இங்கு விசேஷமாக சேமிப்பு செய்வதற்கான சாதனம் கிடைக்கிறது,
ஆகையினாலேயே அனைவரும் ஓடோடி வந்திருக்கின்றீர்கள். பாப்தாதா
அனைத்து குழந்தை களுக்கும், சதா சுயராஜ்ய அதிகாரி ஸ்திதியில்
முன்னேறிக் கொண்டே செல்லுங்கள் என்ற நினைவை
ஏற்படுத்துகின்றார். சுயராஜ்ய அதிகாரி - விஷ்வ இராஜ்ய அதிகாரி
ஆவதற்கான அடையாளம் இதுவே ஆகும்.
சில குழந்தைகள் பாபாவிடம் உரையாடல் செய்யும்போது நான்
எதிர்காலத்தில் என்ன ஆவேன், இராஜா ஆவேனா அல்லது பிரஜை ஆவேனா?
என்று கேட்கின்றனர். நான் இராஜா ஆகப்போகிறேனா அல்லது
செல்வந்தர் ஆகப்போகிறேனா அல்லது பிரஜை ஆகப் போகிறேனா என்று
தன்னைத் தான் ஒரு நாள் சோதித்தீர்கள் என்றால் கூட
தெரிந்துவிடும் என்று பாப்தாதா குழந்தைகளுக்கு
பதிலளிக்கின்றார்கள். முதலில் அமிர்தவேளையில் இருந்து தன்னுடைய
முக்கியமான மூன்று பணிகளின் அதிகாரிகளை, தன்னுடைய சகயோகி,
நண்பர் களை சோதனை செய்யுங்கள். அவர்கள் யார்? 1. மனம் அதாவது
சங்கல்ப சக்தி. 2. புத்தி அதாவது நிர்ணய சக்தி. 3. கடந்த
அல்லது நிகழ்கால சிரேஷ்ட சம்ஸ்காரம். இந்த மூன்றும் விசேஷ
அதிகாரிகள் ஆகும். எவ்வாறு தற்காலத்தில் இராஜாவுடன் மகாமந்திரி
அல்லது முக்கிய மந்திரி இருப்பார்கள், அவர்களின் சகயோகத்தால்
இராஜ்ய காரியம் நடைபெறும். சத்யுகத்தில் மந்திரி
இருக்கமாட்டார்கள். ஆனால், நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள்
இருப்பார்கள். எந்த ரூபத்திலாவது, அது நண்பன் என்றோ அல்லது
மந்திரி என்றோ புரிந்து கொள்ளுங்கள். ஆனால், இந்த மூன்றும்
சுயத்தின் அதிகாரத்தின்படி செயல்படுகின்றனவா? என்பதை சோதனை
செய்யுங்கள். இந்த மூன்றின் மீது சுயத்தின் இராஜ்யம் நடக்கிறதா
அல்லது இவற்றின் அதிகாரத்தில் நீங்கள் நடக்கின்றீர்களா? மனம்
உங்களை இயக்குகிறதா அல்லது நீங்கள் மனதை இயக்குகின்றீர்களா?
என்ன விரும்புகின்றீர்களோ, எப்பொழுது விரும்புகின்றீர்களோ,
அவ்வாறே சங்கல்பம் செய்ய முடிகிறதா? எங்கு புத்தியை ஈடுபடுத்த
விரும்புகின்றீர்களோ, அங்கு ஈடுபடுத்த முடிகிறதா? அல்லது
புத்தி இராஜாவாகிய உங்களை அலைக்கழிக்கிறதா? சமஸ்காரம் உங்களது
கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது நீங்கள் சமஸ்காரங்களுக்கு
வசமாகி இருக்கின்றீர்களா? இராஜ்யம் என்றால் அதிகாரம் என்று
அர்த்தம். இராஜ்ய அதிகாரி எந்த சக்திக்கு, எந்த சமயம், என்ன
கட்டளை கொடுத்தாலும், அவை சொன்ன விதிப்படி காரியம்
செய்கின்றனவா அல்லது நீங்கள் சொல்வது ஒன்று, அவை செய்வது
இன்னொன்று என்ற நிலையில் இருக்கின்றனவா? ஏனெனில், நிரந்தர யோகி
அதாவது சுயராஜ்ய அதிகாரி ஆகுவதற்கான விசேஷ சாதனமே மனம் மற்றும்
புத்தி ஆகும். மந்திரமே மன்மனாபவ என்பதாகும். யோகத்தை
புத்தியோகம் என்று கூறுகின்றனர். ஒருவேளை, இந்த விசேஷ ஆதார
ஸ்தம்பம் (தூண்) தன்னுடைய அதிகாரத்தில் இல்லை அல்லது
அவ்வப்போது உள்ளது, அவ்வப்போது இல்லை; இப்பொழுது இருக்கிறது,
அடுத்த வினாடி இல்லை; மூன்றில் ஒன்று மட்டும் அதிகாரத்திற்கு
உட்பட்டு இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், இதை வைத்து நான்
இராஜா ஆகுவேனா அல்லது பிரஜை ஆவேனா என்று சோதனை செய்யுங்கள்.
நீண்டகால இராஜ்ய அதிகாரியாக இருக்கும் சமஸ்காரம் நீண்டகால
எதிர்கால இராஜ்ய அதிகாரி ஆக்கும். ஒருவேளை, அவ்வப்போது
அதிகாரி, அவ்வப்போது அடிமை ஆகிவிடுகின்றீர்கள் என்றால் அரைக்
கல்பம் அதாவது முழுமையான இராஜ்ய பாக்கியத்தின் அதிகாரத்தை அடைய
முடியாது. பாதி காலத்திற்குப் பின் திரேதாயுக இராஜா
ஆகமுடியும், காலம் முழுவதும் இராஜ்ய அதிகாரி அதாவது இராஜ்யம்
செய்யக்கூடிய இராயல் குடும்பத்தின் நெருக்கமான சம்பந்தத்தில்
இருக்க முடியாது. ஒருவேளை, அடிக்கடி அடிமையானால், அதிகாரி
ஆகுவதற்கான சமஸ்காரம் இல்லை ஆனால், இராஜ்ய அதிகாரிகளின்
இராஜ்யத்தில் இருப்பவர்கள் ஆவார்கள். அவர்கள்
என்னவாகிவிட்டார்கள்? பிரஜை. இப்பொழுது இராஜா யார் ஆகுவார்கள்,
பிரஜை யார் ஆவார்கள் என்பது புரிந்ததா? தன்னுடைய கண்ணாடியில்
தன்னுடைய அதிர்ஷ்டத்தின் முகத்தைப் பாருங்கள். இந்த ஞானம்
கண்ணாடியாகும். அனைவரிடமும் கண்ணாடி உள்ளது அல்லவா. எனவே,
தன்னுடைய முகத்தைப் பார்க்க முடிகிறது அல்லவா. இப்பொழுது
நீண்டகால அதிகாரி ஆவதற்கான பயிற்சி செய்யுங்கள். இறுதியில்
ஆகிவிடுவோம் என்று எண்ணாதீர்கள். ஒரு வேளை, இறுதியில் ஆனீர்கள்
என்றால் கடைசி ஒரு பிறவி கொஞ்சம் இராஜ்யம் செய்வீர்கள். ஆனால்,
ஒருவேளை நீண்டகால பயிற்சி இப்பொழுதிலிருந்து இல்லை அல்லது
ஆதியிலிருந்து பயிற்சியாளர் ஆகவில்லை, ஆதியிலிருந்து இப்பொழுது
வரை இந்த விசேஷ ஊழியர்கள் உங்களை தங்களுடைய அதிகாரத்தில்
நடத்தினால் அல்லது தடுமாற வைத்துக்கொண்டே இருக்கின்றன அதாவது
ஏமாற்றத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன துக்க அலையின்
அனுபவம் செய்வித்துக் கொண்டே இருக்கின்றன என்றால் இறுதியில்
கூட ஏமாற்றம் கிடைத்துவிடும். ஏமாற்றம் என்றால் துக்கத்தின்
அலை அவசியம் வரும். இறுதியிலும் கூட பச்சாதாபத்தின் துக்க அலை
வரும். ஆகையால், பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும்
நினைவூட்டுகிறார், இராஜா ஆகுங்கள் மற்றும் தன்னுடைய விசேஷ
சகயோகி ஊழியர்கள் அல்லது இராஜ்ய அதிகார நண்பர்களை தன்னுடைய
அதிகாரத்தினால் கீழ் நடத்துங்கள். புரிந்ததா?
யார் யார் எந்தளவு சுயராஜ்ய அதிகாரி ஆகி இருக்கின்றார்கள்?
என்பதை பாப்தாதா பார்க்கின்றார்கள். நல்லது. அனைவரும் என்னவாக
விரும்புகின்றீர்கள்? இராஜா ஆக விரும்பு கின்றீர்களா?
இப்பொழுது சுயராஜ்ய அதிகாரி ஆகியிருக்கின்றீர்களா அல்லது
ஆகிக்கொண்டிருக்கின்றோம், ஆகிவிடுவோம் என்று கூறுகின்றீர்களா?
வோம், வோம் என்று கூறக்கூடாது. ஆகிவிடுவோம் என்று கூறினால்,
நல்லது, இராஜ்ய பாக்கியத்தைக் கொடுப்பதற்கும், யோசிப் போம்
என்று தந்தையும் கூறுவார். நீண்ட காலத்திற்கான சமஸ்காரம்
இப்பொழுதிலிருந்தே இருக்கக் வேண்டும் என்று சொல்லப்பட்டது
அல்லவா. உண்மையில், நீண்ட காலமே இல்லை, கொஞ்ச காலமே உள்ளது.
ஆனாலும் கூட இவ்வளவு கொஞ்ச காலத்தின் பயிற்சியும் இல்லாமல்
போனால் பிறகு, இறுதி நேரத்தில், இறுதியில் நான் ஆகிவிடுவேன்
என்று நினைத்தேன் என்று புகார் சொல்லக்கூடாது. ஆகையினாலேயே,
எப்பொழுது என்பதற்குப் பதிலாக இப்பொழுது என்று கூறப்பட்டது.
பின்னால் எப்பொழுதாவது ஆகிவிடுவேன் என்பது கூடாது, இப்பொழுது
நடந்தே ஆக வேண்டும். ஆகியே தீரவேண்டும். தன் மீது இராஜ்யம்
செய்யுங்கள், தன்னுடன் இருக்கும் சக ஆத்மாக்கள் மீது இராஜ்யம்
செய்ய ஆரம்பித்துவிடக்கூடாது. யார் சுயத்தின் மீது இராஜ்யம்
செய்கின்றார்களோ, அவர்களுக்கு முன் இப்பொழுதும் அன்பின்
காரணத்தால் உடனிருக்கும் அனைத்து சக ஆத்மாக்களும், அவர்கள்
லௌகீக உறவினரோ, அல்லது அலௌகீக பரிவாரத்தினரோ, அனைவரும் உத்தரவு
கொடுங்கள், சரி செய்கின்றேன், என்று கூறிக் கொண்டு துணைவர்
ஆகியிருக்கின்றனர். சினேகியாகி, துணைவன் ஆகி சரி என்ற பாடத்தை
நடைமுறையில் செய்து காண்பிக்கின்றனர். எவ்வாறு பிரஜைகள்
இராஜாவின் சகயோகியாக இருப்பார்களோ, சினேகி யாக இருப்பார்களோ,
அவ்வாறு உங்களுடைய இந்த அனைத்து கர்மேந்திரியங்கள், விசேஷ
சக்திகள் சதா உங்களுடைய சினேகியாக, சகயோகியாக இருக்கும்.
மேலும், இதனுடைய பிரபாவமானது சாகாரத்தில் உங்களுடன் சேவைக்குத்
துணையாக இருப்பவர்கள் மற்றும் லௌகீக உறவினர்கள்,
நண்பர்களிடத்தில் ஏற்படும். தெய்வீக பரிவாரத்தில் அதிகாரி ஆகி
கட்டளை யிடுவது என்பது முடியாது. சுயம் தனது கர்மேந்திரியங்களை
கட்டளைப்படி நடத்தினீர்கள் என்றால் தானாகவே நீங்கள்
கட்டளையிடுவதற்கு முன்பே அனைத்து உடனிருக்கும் சக ஆத்மாக்கள்
உங்களுடைய காரியத்தில் சகயோகி ஆவார்கள். சுயம் சகயோகி
ஆகுவார்கள், கட்டளையிடுவதற்கான அவசியமே இருக்காது. சுயம்
தன்னுடைய சகயோகத்தைக் கொடுப் பார்கள். ஏனெனில், நீங்கள்
சுயராஜ்ய அதிகாரியாக இருக்கின்றீர்கள். இராஜா என்றால் வள்ளல்
என்று அர்த்தம். வள்ளல் சொல்ல வேண்டியது இருக்காது. அதாவது
கேட்க வேண்டியது இருக்காது. ஆகவே, அத்தகைய சுயராஜ்ய அதிகாரி
ஆகுங்கள். நல்லது. இந்த சந்திப்பு கூட நாடகத்தில் பதிவாகி
இருந்தது. ஆஹா நாடகம் என்று சொல்கின்றீர்கள் அல்லவா.
உலகத்தினர் சிலநேரம் ஐயோ நாடகம் என்று கூறுவார்கள், சில நேரம்
ஆஹா நாடகம் என்று கூறுவார்கள். நீங்கள் சதா என்ன
கூறுகின்றீர்கள்? ஆஹா நாடகம்! ஆஹா! எப்பொழுது பிராப்தி
கிடைக்கிறதோ, அப்பொழுது பிராப்திக்கு முன் எதுவும் கடினமாகத்
தோன்றாது. அதுபோன்று எப்பொழுது இவ்வளவு சிரேஷ்டமான
பரிவாரத்துடன் சந்திக்கும் பிராப்தி கிடைத்துக் கொண்டு
இருக்கிறதோ, அப்பொழுது எந்தக் கடினமானதும், கடினமாகத்
தோன்றாது. கடினமாகத் தோன்றுகிறதா? உணவருந்தும் அறையில் நிற்க
வேண்டியதாக உள்ளது. உண்ணும்போதும் பிரபுவின் மகிமை பாடுங்கள்
மற்றும் வரிசையில் நிற்கும்போதும் கூட பிரபுவின் மகிமையைப்
பாடுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டும் அல்லவா. இதன்
ஒத்திகையும் நடந்து கொண்டு இருக்கிறது. இப்பொழுதோ ஒன்றுமே
இல்லை. இப்பொழுது மேலும் வளர்ச்சி அடையும் இல்லையா. இவ்வாறு
தன்னை வளைத்துக் கொள்வதற்கான பழக்கத்தை ஏற்படுத்துங்கள், சமயம்
எப்படி உள்ளதோ, அப்படி தன்னைத் தான் வளைத்துக் கொள்ள முடிய
வேண்டும். தரையில் தூங்குவதற்கான பழக்கம் ஏற்பட்டுவிட்டது
அல்லவா. கட்டில் கிடைக்கவில்லை ஆதலால் தூக்கம் வரவில்லை -
இப்படி இல்லை தானே? டென்ட்டில் கூட தங்குவதற்கான பழக்கம்
ஏற்பட்டுவிட்டது அல்லவா. நன்றாக இருந்ததா? குளிரவில்லையா?
இப்பொழுது முழு அபுவிலும் டென்ட் போட்டுவிடலாமா? டென்ட்டில்
தூங்குவது நன்றாக இருந்ததா அல்லது அறை வேண்டுமா? முதன்முதலில்
எப்பொழுது பாகிஸ்தானில் இருந்தீர்களோ, அப்பொழுது மகாரதிகளையே
தரையில் தூங்க வைக்கப்பட்டது நினைவு இருக்கிறதா? புகழ்வாய்ந்த
மகாரதிகள் யார் இருந்தார்களோ, அவர்களை ஹாலில் தரையில் மூன்று
அடி இடம் கொடுத்து தூங்க வைக்கப்பட்டது. மேலும், எப்பொழுது
பிராமண பரிவாரம் விருத்தி ஆனதோ, அப்பொழுதும் எங்கிருந்து
ஆரம்பம் செய்யப்பட்டது? டென்ட்டில் இருந்து தான் ஆரம்பிக்கப்
பட்டது அல்லவா. முதன்முதலில் யார் வந்தார்களோ, அவர்களும்
டென்ட்டிலேயே தங்கினார்கள், டென்ட்டில் இருந்தவர்கள் மகாத்மா
ஆகிவிட்டார்கள். சாகார பாபாவின் பாகம் இருந்த போதிலும் கூட
டென்ட்டிலேயே தங்கினார்கள். எனவே, நீங்களும் அனுபவம்
செய்வீர்கள் அல்லவா. ஆகையால், அனைவரும் ஒவ்வொரு விதத்திலும்
குஷியாக இருக்கின்றீர்களா? நல்லது, பிறகு, மேலும் 10000
டென்ட்டை வரவழைத்து கொடுப்போம், ஏற்பாடு செய்வோம். அனைவரும்
குளிப்பதற்கான ஏற்பாட்டைப் பற்றி யோசிக்கின்றீர்கள், அதுவும்
நடந்தேறிவிடும். எப்பொழுது இந்த ஹால் உருவானதோ, அப்பொழுது
அனைவரும் என்ன சொன்னார்கள் என்பது நினைவு இருக்கிறதா? இத்தனை
பேர் குளிப்பதற்கான இடத்திற்கு என்ன செய்வது? இந்த இலட்சியத்
துடன் இது கட்டப்பட்டது, இப்பொழுது பற்றாகுறை ஆகிவிட்டது
அல்லது எவ்வளவு கட்டுகின்றீர்களோ, அவ்வளவு பற்றாமல் போகத்தான்
வேண்டும், ஏனெனில், இறுதியில் எல்லையற்ற நிலைக்குத் தான் செல்ல
வேண்டும். நல்லது.
அனைத்து தரப்பு குழந்தைகள் வந்து
சேர்ந்துவிட்டீர்கள். இது கூட எல்லையற்ற ஹாலின் அலங்காரம்
ஆகிவிட்டது. கீழேயும் அமர்ந்திருக்கின்றார்கள் (வெவ்வேறு
இடங்களில் அமர்ந்து முரளி கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்).
இந்த விருத்தி ஏற்படுவது கூட அதிர்ஷ்டத்தின் அடையாளம் ஆகும்.
விருத்தி ஏற்பட்டு இருக்கிறது, ஆனால், விதிப்பூர்வமாக நடக்க
வேண்டும். இங்கு மதுபனிற்கு வந்துவிட்டோம், பாபாவையும்
பார்த்துவிட்டோம், மதுபனையும் பார்த்துவிட்டோம், இப்பொழுது
விரும்பியபடி நடக்கலாம் என்பது கூடாது. இவ்வாறு செய்யக்கூடாது.
ஏனெனில், சில குழந்தைகள் மதுபனிற்கு வராதவரை பக்காவாக
இருக்கின்றார்கள், பிறகு, மதுபனைப் பார்த்துவிட்ட பிறகு,
கொஞ்சம் கவனக்குறைவாக ஆகிவிடுகின்றார்கள். கவனக்குறைவு
உடையவராக ஆகக்கூடாது. பிராமணன் என்றால் பிராமண வாழ்க்கை
என்பதாகும், எனவே, வாழ்க்கை என்பது நாம் எதுவரை இருக்கின் றோமோ,
அதுவரை இருக்கும். வாழ்க்கையை உருவாக்கி இருக்கின்றீர்கள்
அல்லவா. வாழ்க்கையை உருவாக்கி இருக்கின்றீர்களா அல்லது கொஞ்ச
காலத்திற்காக பிராமணன் ஆகி யிருக்கின்றீர்களா? சதா தனது பிராமண
வாழ்க்கையின் விசேசத்தன்மைகளைத் தன்னுடன் வைத்துக்கொள்ள
வேண்டும். ஏனெனில், இந்த விசேஷத் தன்மைகளால் நிகழ்காலமும்
சிரேஷ்டமாக உள்ளது மற்றும் எதிர்காலமும் சிரேஷ்டமாக உள்ளது.
நல்லது. பாக்கி என்ன உள்ளது? டோலி (வரதானம்). வரதாதாவின்
குழந்தைகளாகவே ஆகிவிட்டீர்கள். யார் வரதாதாவின் குழந்தைகளாகவே
இருக்கின்றார்களோ, அவர்களுடைய ஒவ்வொரு அடியில்
வரதாதாவிடமிருந்து வரதானம் தானாகவே கிடைத்துக்கொண்டு இருக்கிறது.
வரதானமே உங்களுடைய பாலனை ஆகும். வரதானங்களின் பாலனையிலேயே
வளர்ந்து கொண்டு இருக்கின்றீர்கள். இல்லையென்றால் சிந்தித்துப்
பாருங்கள், இவ்வளவு சிரேஷ்ட பிராப்தி கிடைக்கிறது, ஆனால்,
உழைப்பு என்ன செய்தீர்கள்? உழைப்பே இல்லாமல் எது கிடைக் கிறதோ,
அதையே வரதானம் என்று கூறப்படுகிறது. எனவே, உழைப்பு என்ன
செய்தீர்கள் மற்றும் பிராப்தி எவ்வளவு சிரேஷ்டமாகக்
கிடைத்துள்ளது. பல பிறவிக்கு பிராப்தியின் அதிகாரி
ஆகிவிட்டீர்கள். எனவே, வரதாதாவின் வரதானம் ஒவ்வொரு அடியிலும்
கிடைத்துக்கொண்டு இருக்கிறது. மேலும், சதா கிடைத்துக்கொண்டே
இருக்கும். திருஷ்டி மூலம், பேச்சு மூலம், சம்பந்தத்தின் மூலம்
வரதானமே வரதானம் கிடைக்கிறது. நல்லது. இப்பொழுது பொன்விழா
கொண்டாடுவதற்கான ஏற்பாடு செய்து கொண்டு இருக்கின்றீர்கள்.
பொன்விழா என்றால் சதா பொன்னான ஸ்திதியில் நிலைத்து
இருப்பதற்கான விழா கொண்டாடிக் கொண்டு இருக்கின்றீர்கள். சதா
உண்மையான தங்கம், கொஞ்சம் கூட உலோகத்தின் கலப்படம் இல்லை. இதையே
பொன்விழா என்று கூறுகின்றார்கள். எனவே, உலகத்தின் முன் தங்கம்
போன்ற ஸ்திதியில் நிலைத்து இருக்கக்கூடிய உண்மையான தங்கம்
வெளிப்பட வேண்டும். இதற்காக இந்த சேவைக்கான சாதனங்கள்
அனைத்தையும் உருவாக்கிக் கொண்டு இருக் கின்றீர்கள், ஏனெனில்,
உங்களுடைய பொன்னான ஸ்திதி தங்கயுகத்தைக் கொண்டு வரும், பொன்னான
உலகைக் கொண்டு வரும். இப்பொழுது உலகம் கொஞ்சம் மாற வேண்டும்
என்ற இந்த விருப்பமே அனைவருக்கும் உள்ளது. எனவே, நீங்கள்
சுயமாற்றத்தின் மூலம் விஷ்வ மாற்றம் செய்யக்கூடிய விசேஷ
ஆத்மாக்கள் ஆவீர்கள். உங்கள் அனைவரையும் பார்த்து, உண்மையில்
பொன்னுலகம் வந்தே வந்துவிட்டது என்ற நிச்சயம், சுப நம்பிக்கை
வர வேண்டும். ஒரு பொருளின் மாதிரியைப் (சாம்பிள்) பார்த்து, ஆம்,
இது நல்ல பொருள் என்ற நம்பிக்கை வருகிறது அல்லவா. எனவே,
பொன்னுலகத்தின் மாதிரி (சாம்பிள்) நீங்கள். பொன்னான ஸ்திதி
உடையவர்கள். எனவே, சாம்பிளாகிய உங்களைப் பார்த்து, ஆம்,
சாம்பிள் தயாராகிவிட்டனர், எனவே, அவசியம் அத்தகைய உலகம் வந்தே
வந்துவிட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும். இத்தகைய சேவையை
பொன்விழாவில் செய்வீர்கள் அல்லவா. நம்பிக்கை அற்றவர்களுக்கு
நம்பிக்கை கொடுப்பவர் ஆக வேண்டும். நல்லது.
அனைத்து சுயராஜ்ய அதிகாரி,
அனைத்து நீண்டகால அதிகாரத்தை அடைவதற்கான பயிற்சி செய்யும்
ஆத்மாக்களுக்கு, அனைத்து விஷ்வத்தின் விசேஷ ஆத்மாக்களுக்கு,
அனைத்து வரதாதாவின் வரதானங்களால் வளரக்கூடிய சிரேஷ்ட
ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
வரதானம்:
அலைந்து கொண்டிருக்கும்
ஆத்மாக்களுக்கு சரியான இலக்கைக் காண்பிக்கக்கூடிய சைத்தன்ய லைட்,
மைட் ஹவுஸ் ஆகுக.
எந்த ஒரு அலைந்து கொண்டிருக்கும்
ஆத்மாவிற்கும் சரியான இலக்கைக் காண்பிப் பதற்காக சைத்தன்ய லைட்,
மைட் ஹவுஸ் ஆகுங்கள். இதற்காக இரண்டு விசயங்கள் கவனத்தில்
வைக்க வேண்டும்: 1.ஒவ்வொரு ஆத்மாவின் விருப்பத்தைக் கண்டறிய
வேண்டும். எவ்வாறு நாடி பார்க்கத் தெரிந்தவரை தகுதியான
மருத்துவர் என்று சொல்லப்படுகிறதோ, அவ்வாறு கண்டறியக்கூடிய
சக்தியை சதா பயன்படுத்த வேண்டும். 2. சதா தன்னிடம் அனைத்து
பொக்கிஷங்களின் அனுபவத்தை நிலையாக வைத்திருக்க வேண்டும்.
சொல்லக்கூடாது, ஆனால், அனைத்து சம்பந்தங்களின், சர்வ சக்திகளின்
அனுபவத்தை செய்விக்க வேண்டும் என்ற இந்த இலட்சியம் சதா இருக்க
வேண்டும்.
சுலோகன்:
பிறரைத் திருத்துவதற்கு (கரெக்ஷன்)
பதிலாக ஒரு தந்தையுடன் சரியான தொடர்பு (கனெக்ஷன்) வைத்திடுங்கள்.
ஓம்சாந்தி