29.11.2020 ஓம் சாந்தி அவ்யக்த முரளி மதுபன்
ரிவைஸ் 23.01.1987
வெற்றி நட்சத்திரத்தின்
விசேஷத்தன்மைகள்
இன்று ஞான சூரியன் (சிவபாபா),
ஞான சந்திரன் (பிரம்மா பாபா) தனது ஜொலித்துக் கொண்டிருக்கும்
விண்மீன்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். அது ஆகாயத்தின்
நட்சத்திரங் களாக இருக்கிறது, மேலும் நீங்கள் பூமியின்
நட்சத்திரங்களாக இருக்கிறீர்கள். அது இயற்கையின் சக்தியாகும்.
நீங்கள் பரமாத்மாவின் நட்சத்திரங் களாகவும், ஆன்மீக
நட்சத்திரங்களாகவும் இருக்கிறீர்கள். அந்த நட்சத்திரங்கள் கூட
இரவில் தான் தோன்றுகிறது, ஆன்மீக நட்சத்திரங்களாகவும், ஞான
நட்சத்திரங்களாகவும், ஜொலித்துக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களாகிய நீங்களும் கூட பிரம்மாவின் இரவில் தான்
தோன்றுகிறீர்கள். அந்த நட்சத்திரங்கள் இரவை பகலாக மாற்றாது.
சூரியன் மட்டும் தான் இரவை பகலாக மாற்றுகிறது. ஆனால்
நட்சத்திரங்களாகிய நீங்கள் ஞான சூரியன், ஞான சந்திரனுடனோடு
இணைந்து இரவை பகலாக மாற்றுகிறீர்கள். எப்படி இயற்கையின்
விண்மீன்களில் பலவிதமான நட்சத்திரங்கள் ஜொலித்துக்
கொண்டிருக்கின்றன. அதுபோல பரமாத்மாவின் விண்மீன் கூட்டத்தில்
கூட வித-விதமான நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
சிலர் அருகிலுள்ள நட்சத்திரங்களாகவும், மேலும் சிலர்
வெகுதூரத்திலுள்ள நட்சத்திரங்களாகவும் கூட இருக்கின்றன. சிலர்
வெற்றி நட்சத்திரங்களாகவும், சிலர் நம்பிக்கை நட்சத்திரங்
களாகவும் இருக்கிறார்கள். ஒரு சிலர் ஒரே மனநிலையில்
இருக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள், மேலும் சிலர்
மனநிலையை மாற்றிக் கொண்டேயிருக்கக் கூடியவர்களாகவும்
இருக்கிறார்கள். அங்கு (இயற்கை) இடம் மாறுகிறது, இங்கு (சங்கமயுகத்தில்)
மனநிலை மாறுகிறது. எப்படி இயற்கையின் விண்மீன் கூட்டத்தில் வால்
நட்சத்திரம் கூட இருக்கிறது. அதாவது ஒவ்வொரு விசயத்திலும்,
ஒவ்வொரு காரியத்திலும் இது ஏன், இது என்ன - இப்படி கேள்வி
கேட்கக் கூடிய வால் உடையவர்கள் அதாவது கேள்வியை எழுப்பக் கூடிய
வால் நட்சத்திரங்கள் இருக்கக் கூடியவர்கள். எப்படி இயற்கையின்
வால் நட்சத்திரங் களின் தாக்கம் பூமியின் மீது பாரமாக
கருதப்படுகிறது. அப்படி அடிக்கடி கேள்வி கேட்கக் கூடியவர்கள்
இந்த பிராமண குடும்பத்தில் சுற்றுப்புற சூழ்நிலையில் பாரமானத்
தன்மையை (கடுமை) ஏற்படுத்தி விடுகிறது. அனைவரும் அனுபவசாலிகளாக
தான் இருக்கிறீர்கள். தனக்காக கூட எண்ணங்களில் ஏன் மற்றும்
என்ன? என்ற வால் வந்து விடுவதால், மன நிலை மற்றும் புத்தியில்
தனக்கே சுமை ஆகி விடுகிறது. கூட கூடவே ஒருவேளை ஏதாவது
கூட்டத்திற்கு நடுவில் அல்லது சேவையின் காரியத்திற்காக ஏன்,
என்ன?... அப்படி, எப்படி ?... இந்த கேள்விக்குறியின் வரிசை
என்ற வால் முளைத்து விடுகிறது, அதனால் குழுவின் சூழ்நிலை
மற்றும் சேவை செய்யும் இடத்தின் சூழ்நிலையை உடனே சுமையாகி
விடுகிறது. எனவே தனக்காகவும், குழுவில் மற்றும் சேவையில்
பாதிப்பு ஏற்படு கிறது. கூட கூடவே பல இயற்கையின் நட்சத்திரங்கள்
மேலிருந்து கீழே விழுந்து விடவும் செய்கிறது, அதனால் என்ன
ஆகிறது? கற்களாக. அதேபோல பரமாத்மாவின் நட்சத்திரங்களில் கூட
நம்பிக்கை, தொடர்பு மற்றும் சுய-தாரணையின் உயர்ந்த மன
நிலையிலிருந்து கீழே வந்து விடுகிறது என்றால், கல் புத்தி
ஆகிவிடும். எப்படி கல் புத்தி ஆகிறது? கல்லில் எவ்வளவு தான்
தண்ணீர் ஊற்றினாலும் கல் உருகாது, நிறம் மாறிவிடும், ஆனால்
உருகாது. கல்லுக்கு (கல் புத்தி) எதுவும் தாரணை ஆகாது.
அதேபோன்று புத்தி கல்லாகி விடும்பொழுது அந்த சமயத்தில் எவ்வளவு
தான், யாராவது நல்ல விஷயங்கள் உணர வைத்தாலும் அனுபவம் செய்ய
முடியாது. எவ்வளவு தான் ஞானத்தின் தண்ணீரை ஊற்றினாலும் மாற்றம்
ஏற்படாது. விஷயங்கள் (காட்சிகள்) மாறிவிடும், ஆனால் தனக்குள்
மாற்றம் ஏற்படாது. இதைத் தான் கல்புத்தி என்று சொல்ல படுகிறது.
எனவே தனக்கு தானே கேளுங்கள் -இந்த பரமாத்மாவின் விண்மீன்களுக்கு
மத்தியில், நான் எப்படிப்பட்ட நட்சத்திரமாக இருக்கிறேன்?
அனைத்தையும் விட உயர்ந்த நட்சத்திரமாக இருப்பது வெற்றி
நட்சத்திரமாகும். வெற்றி நட்சத்திரம் என்றால், அவர்கள்
எப்பொழுதுமே தனது முன்னேற்றத்தில் வெற்றியை அனுபவம் செய்துக்
கொண்டே யிருப்பவர்கள், அதாவது தனது முயற்சியின் விதியில் சதா
எளிதாகவே வெற்றியின் அனுபவம் செய்துக் கொண்டேயிருப்பவர்கள்.
வெற்றி நட்சத்திரமாக இருப்பவர்களின் எண்ணத்தில் கூட தனது
முயற்சியில் ஒருபொழுதும் நடக்குமா அல்லது நடக்காதா? செய்ய
முடியுமா அல்லது முடியாதா? என்று தெரியவில்லையே - இந்த
வெற்றியற்ற தன்மையின் அம்சம் கூட இருக்காது. வெற்றி என்பது
நமது பிறப்புரிமை என்ற சுலோகன் இருக்கிறது, அப்படி அவர்கள்
தன்னை சதா வெற்றியின் அதிகாரி சொரூபத்தில் அனுபவம்
செய்வார்கள். அதிகாரத்தின் அர்த்தமே முயற்சி இல்லாமல்,
கேட்காமலே அடைந்து விடுவது. எளிதாகவும் இயல்பாகவும் அடைவது
தான் அதிகாரி என்று சொல்ல படுகிறது. அப்படி முதலாவது -
சுயத்தின் மீது வெற்றி, இரண்ராவது - தனது உற்றார், உறவுகளில்
வந்தாலும், பிராமண ஆத்மாக்களாக இருந்தாலும், லௌகீக குடும்பம்
மற்றும் லௌகீக வேலையில் வெற்றியின் தொடர்பில், அனைத்து
உறவுகளிடத்தில், தொடர்பில் வந்தாலும், தொடர்பில் எவ்வளவு தான்
கடினமான விசயத்தையும் கூட வெற்றியின் அதிகாரத்தின் ஆதாரத்தின்
மூலம் சகஜமாக அனுபவம் செய்வார்கள், அதாவது வெற்றியின்
முன்னேற்றத்தில் முன்னேறிக் கொண்டேயிருப்பார்கள். ஆமாம்,
இதற்கு நேரம் ஆகலாம், ஆனால் வெற்றியின் அதிகாரம் அடைந்து
கொண்டேயிருபார்கள். அவ்வாறு, ஸ்தூல காரியத்திலும், அலௌகீக
சேவையின் காரியத்திலும், அதாவது இரண்டு இடத்திலும்
காரியத்திலும் வெற்றி, நம்பிக்கை புத்தி வெற்றியை கொடுக்கும்.
எங்காவாது பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, ஒரு சில
மனிதர்களையும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, ஆனால்
அப்படி சகித்துக் கொள்வது முன்னேற்றத் திற்கான வழி
ஆகிவிடுகிறது. பிரச்சனைகளை எதிர்க்கொள்வது, பிரச்சனைகள் - தனது
மனநிலையை முன்னேற்றும் கலையின் சாதனமாகி விடுகிறது, அதாவது
ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி தானாகவே சகஜமாக மேலும் அவசியம்
கிடைத்து விடுகிறது.
வெற்றி நட்சத்திரத்தின் விசேசமான அடையாளம்- ஒருபொழுதும் தனது
வெற்றியின் அபிமானம் (பெருமை) இருக்காது, வர்ணனை (விளக்கம்)
செய்ய மாட்டார்கள், தனது புகழை பாடமாட்டார்கள். ஆனால் எந்தளவு
வெற்றி அடைகிறார்களோ, அந்தளவு தாழ்மையான, பணிவான, அமைதியான
சுபாவம் இருக்கும். மேலும் மற்றவர்கள் அவர்களின் புகழை
பாடுவார்கள், ஆனால் அவர்கள் (வெற்றி நட்சத்திரம்) சதா பாபாவின்
குணங்களை பாடிக்கொண்டேயிருப்பார்கள். வெற்றியின் நட்சத்திரம்
ஒருபொழுதும் கேள்வி (சந்தேகம்) எழுப்ப மாட்டார்கள்.
எப்பொழுதும் பிந்தி (புள்ளி) சொரூபத்தில் நிலைத்திருந்து
ஒவ்வொரு காரியத்திலும் மற்றவர்களையும் கூட நாடகத்தின்
புள்ளியின் நினைவை கொடுப்பார்கள், தடைகளை வென்றவர்களாக
இருப்பார்கள், சக்திசாலியாக மாற்றி வெற்றியின் குறிக்கோளை
அருகாமையில் கொண்டு வருவார்கள். வெற்றியின் நட்சத்திரம்
ஒருபொழுதும் எல்லைக்குட்பட்ட வெற்றியை பார்த்து பிராப்தியின்
ஸ்திதியில் மிகவும் மகிழ்ச்சியடைவது மேலும் பிரச்சனை
வந்துவிட்டது அல்லது பிராப்தி குறைவாக கிடைத்துவிட்டது என்றால்
குஷி கூட குறைந்து விட்டது - அப்படி மனநிலையில் மாற்றத்தை
கொண்டு வரக்கூடியவர்களாக இருக்க மாட்டார்கள்.. எப்பொழுதுமே
எல்லைக்கு அப்பாற்பட்ட வெற்றியடைந்த மூர்த்தியாக இருப்பார்கள்.
ஒரே இரசனை, ஒரே உயர்ந்த மனநிலையில் நிலைத் திருப்பார்கள்.
வெளிப்புற சூழ்நிலையாக இருந்தாலும், காரியத்தில் வெளி
தோற்றத்தில் மற்றவர்களுக்கு தோல்வியின் அனுபவம் ஆனாலும்,
வெற்றியின் நட்சத்திரம், தோல்வி அடையும் சூழ் நிலையின்
தாக்கத்தில் வரமாட்டார்கள், வெற்றியின் மனப்பான்மை மூலம்
தோல்வியை கூட மாற்றி விடுவார்கள். இது தான் வெற்றி
நட்சத்திரத்தின் விசேஷத் தன்மையாகும். இப்பொழுது தன்னை தானே
கேளுங்கள் - நான் யார்? நம்பிக்கை நட்சத்திரமாக மட்டும் அல்ல,
வெற்றி சொரூபமாக இருக்கிறேனா? நம்பிக்கையாளர் ஆவது கூட நல்லது
தான், ஆனால் நம்பிக்கையுடைவராகி மட்டும் செல்வது, வெளிப்படையான
வெற்றியை அனுபவம் செய்யாமல் இருப்பது, இதில் அவ்வப்பொழுது
சக்திசாலியாகவும், அவ்வப்பொழுது மனமுடைந்தவராக இருப்பது
இவ்வாறு மேலும் கீழும் ஆவதற்கான அதிகமாக அனுபவம்
செய்கிறார்கள். ஒருவேளை ஏதாவது ஒரு விசயத்தில் அதிகமாக மேலும்
கீழும் ஏற்படு வதினால் களைப்பு ஏற்பட்டு விடுகிறது அல்லவா!
எனவே இதில் கூட போக போக களைப்பின் அனுபவத்தினால் மனமுடைந்து
போய் விடுகிறது. எனவே நம்பிக்கையற்ற நிலையிலிருந்து நம்பிக்கை
யுடைவர் ஆவது நல்லது தான், ஆனால் வெற்றி சொரூபத்தை அனுபவம்
செய்யக் கூடியவர்கள் சதா உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
நல்லது. விண் மீன்களின் கதையை கேட்டீர்களா? மதுபனின் ஹால்
(ஒம்சாந்தி பவன்) மட்டும் விண் மீன்களின் கூட்டம் அல்ல,
எல்லைக்கு அப்பாற்பட்ட பிராமண உலகமே விண்மீன்களின் கூட்டமாகத்
தான் இருக்கிறது. நல்லது.
வரக்கூடிய அனைத்து புதிய குழந்தைகளுக்கும், புதியவர்களாகவும்
இருக்கிறார்கள், பழையவர்களும் கூட பலர் இருக்கிறார்கள்.
ஏனெனில் அநேக கல்பத்தை சேர்ந்தவர் களாகவும் இருக்கிறார்கள்,
அதனால் மிகவும் பழைமையானவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே புது
குழந்தைகளின் புதுமையாக ஊக்க - உற்சாகத்தின் சந்திப்பை
கொண்டாடு வதற்கான நாடத்தில் நிச்சயிக்கப்பட்ட படி
முழுமையடையும். மிகவும் உற்சாகம் இருக்கிறது அல்லவா. போக-போக.
நிபந்தனையின்றி கூட அந்தளவு உற்சாகமாக இருப்பார்கள்.
சந்திப்பின் குஷியில் நிலைத்திருக்க வேண்டுமல்லவா. குறைவாக
வாருங்கள், குறைவாக வாருங்கள் என்று எவ்வளவு தான் சொன்னாலும்,
யாராவது கேட்கிறார்களா என்ன? இவ்வளவு குழந்தைகள் வந்து தான் ஆக
வேண்டும், ஆகையால் வந்து விடுகிறார்கள் என்பதை பார்த்து,
பாப்தாதா நாடகப்படி ஒவ்வொரு காட்சியையும் பார்த்து புன்முறுவல்
செய்கிறார் அனைவரும் எளிதாகவே சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்
அல்லவா? கடினமாக இல்லை தானே? இது கூட நாடகப்படி, சமயத்திற்கு
தகுந்தாற்போல், ஒத்திகை நடை பெறுகிறது. அனைவரும் குஷியாக
இருக்கிறீர்கள் அல்லவா? கடினமானவற்றை எளிதாக
மாற்றக்கூடியவர்கள் அல்லவா? ஒவ்வொரு காரியத்திலும் ஒத்துழைப்பு
அளியுங்கள். என்ன கட்டளை கிடைக்கிறதோ, அதற்கேற்றார் போல்
ஒத்துழைப்பு கொடுப்பது என்றாலே எளிதாகிவிடும். ஒருவேளை
ஒத்துழைப்பு அளித்தீர்கள் என்றால், 5000 நபர்கள் கூட ஒன்றாக
இருக்கலாம், (ஒம்சாந்தி பவனின் பரப்பளவு 5000 நபர்கள் வரை
அமரலாம்) ஒத்துழைப்பு அளிக்கவில்லையென்றால், அதாவது
கட்டளைப்படி நடக்கவில்லை யென்றால், 500 நபர்கள் கூட ஒன்றாக
இருப்பது கடினமாகிவிடும். ஆகையால், 5000 நபர்கள் இல்லை, 500
நபர்கள் தான் இருந்த மாதிரி உள்ளது என்று அனைவரின் இதயத்திலும்
கூறும்படி தாதிஜி அவர்களுக்கு தனது பதிவேட்டை (நடந்து)
காட்டுங்கள். இதைத் தான் கடினமானதை எளிதாக்குவது என்று சொல்லப்
படுகிறது. எனவே தனது பதிவேடு நன்றாக இருக்கிறதல்லவா?
சர்ட்டிபிகேட் (நற் சான்றிதழ்) நன்றாக கிடைத்துக்
கொண்டிருக்கிறதா? அவ்வாறு எப்பொழுதும் குஷியாக இருங்கள்,
மற்றவர்களையும் கூட குஷியடைய செய்தீர்கள் என்றால், எப்பொழுதுமே
கைத்தட்டல் ஒலித்துக் கொண்டே யிருக்கும். நல்ல பதிவேடு
இருக்கிறது, ஆகையால் நாடகத் திட்டத்தின் படி இரண்டு முறை
சந்திப்பு நடந்திருக்கிறது. இது புதியவர்களின் நலனுக்காக
நாடகப்படி நடந்துள்ளது. நல்லது.
சதா ஆன்மீக வெற்றியடைந்த உயர்ந்த நட்சத்திரங்களுக்கு, சதா ஒரே
இரசனை என்ற மனநிலையின் மூலம் உலகத்திற்கு வெளிச்சம் தரக்கூடிய,
ஞான சூரியன், ஞான சந்திரனோடு சதா கூடவே இருக்கக் கூடிய, சதா
உரிமையின் நம்பிக்கை மூலம் குஷி மற்றும் பணிவான மனநிலையில்
இருக்கக் கூடிய, அப்படிப்பட்ட பரமாத்மாவின் விண்மீன்
கூட்டங்களின் அனைத்து ஜொலித்துக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களுக்கு ஞான சூரியன், ஞான சந்திரனாகிய பாப்தாதாவின்
ஆன்மீக அன்பு நிறைந்த, அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
பார்ட்டிகளுடன் சந்திப்பு:
1. தன்னை சதா தடைகளற்றவர், வெற்றி இரத்தினம் என்று
புரிந்திருக்கிறீர்களா? தடைகள் வருவது என்பது நல்ல விஷயம்
தான், ஆனால் தடைகளிடம் தோல்வியடைய கூடாது. தடைகள் வருவது
என்றாலே என்றென்றும் பலசாலியாக ஆகுங்கள். தடைகளை கூட ஒரு
மனோரஞ்சன் (பொழுதுபோக்கு விளையாட்டு) என புரிந்துக் கொண்டு
கடந்துச் செல்வது. இதைத் தான் தடையற்ற வெற்றியாளர் என்று
சொல்லப் படுகிறது. எனவே தடைகளை கண்டு பயப்படுவதில்லை தானே?
பாபாவுடன் இருக்கிறீர்கள் என்றாலே, பயப்படுவதற்கான எந்தவித
விஷயமே இல்லை. தனியாக யாராவது இருக்கிறார்கள் என்றால் தான்
பயம் ஏற்படுகிறது. ஆனால் ஒருவேளை யாராவது கூடவே இருந்தால் பயம்
ஏற்படாது, தைரியசாலி ஆகிவிடுவார்கள். எனவே எங்கு பாபாவின் துணை
இருக்கிறதோ, அங்கு தடைகளுக்கு பயம் ஏற்படுமா அல்லது நீங்கள்
பயப்படுவீர்களா ! சர்வசக்திவானுக்கு முன்னால் தடைகள் என்னவாக
இருக்கும்? ஒன்றுமே இல்லை. ஆகையால் தடைகள் விளையாட்டாக
தோன்றும், கடினமாக தோன்றாது. தடைகள் நம்மை அனுபவசாலியாகவும்
சக்திசாலியாகவும் மாற்றிவிடுகிறது. யார் சதா பாபாவின் நினைவு
மற்றும் சேவையில் ஈடுபட்டிருக்கிறார்களோ, பிஸியாக இருக்கிறார்
களோ, அவர்கள் தடை யற்றவர்களாக இருப்பார்கள். ஒருவேளை புத்தி
பிஸியாக இல்லையென்றால் தடைகள் அல்லது மாயா வந்து விடுகிறது.
ஒருவேளை பிஸியாக இருந்தால் மாயாவும் கூட ஒதுங்கி போய்விடும்.
வரவே வராது, போய்விடும். இவர்கள் என்னுடைய நண்பர்கள் கிடையாது,
இவர்கள் இப்பொழுது பரமாத்மாவின் நண்பர்களாக இருக்கிறார்கள்
என்பதை மாயா கூட தெரிந்துக் கொள்ளும். எனவே மாயா ஒதுங்கிக்
கொள்ளும். பலமுறை வெற்றி அடைந்துள்ளேன், ஆகையால் வெற்றியடைவது
பெரிய விஷயமில்லை. எந்தவொரு செயல் பலமுறை செய்யபட்டுள்ளதோ, அது
எளிதாகிவிடும். எனவே பலமுறை வெற்றியடைந்துள்ளோம். எப்பொழுதுமே
திருப்தியுடன் இருக்கிறேனா? மாதர்கள் எப்பொழுதும் குஷியுடன்
இருக்கிறீர்களா? ஒருபொழுதும் அழுவதில்லையே? எப்பொழுதாவது
ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் அழுகை வருகிறதா? தைரியசாலிகளாக
இருக்கிறீர்கள். பாண்டவர்கள் (சகோதரர்கள்) மனதில்
அழுவதில்லையே? இது ஏன் நடந்தது, என்ன நடந்தது? - அப்படிப்பட்ட
அழுகை வருவதில்லையே? பாபாவினுடைய வராக ஆன பிறகு கூட, ஒருவேளை
சதா குஷியாக இல்லை யென்றால், எப்பொழுது இருப்பீர்கள்?
பாபாவினுடையவராக ஆவது என்றாலே, சதா குஷியாக இருப்பது.
துக்கமும் இல்லை, துக்கத்தில் அழுவதுமில்லை. அனைத்து
துக்கங்களும் விலகிவிடுகிறது. எனவே தனது இந்த ஆசீர்வாதத்தை சதா
நினைவில் வைக்க வேண்டும். நல்லது.
2. தன்னை இந்த ஆன்மீக தோட்டத்தின் ஆன்மீக ரோஜா எனப்
புரிந்துள்ளீர்களா? அனைத்து மலர்களிலும் ரோஜா மலரின்
நறுமணத்தின் காரணத்தினால் அன்பு தோன்றுகிறது. எனவே அது ரோஜா
மலர், நீங்கள் அனைவரும் ஆன்மீக ரோஜாக்கள். ஆன்மீக ரோஜா என்றாலே
அதில் எப்பொழுதுமே ஆன்மீக நறுமணம் நிறைந்திருக்கும். ஆன்மீக
நறுமணத்தை பரப்பக் கூடியவர்கள் யாரை பார்த்தாலும், எங்கு
பார்த்தாலும் ஆத்மாவை தான் பார்ப்பார்கள், உடலை பார்க்க
மாட்டார்கள். தானும் சதா ஆத்மீக மனநிலையில்
நிலைத்திருப்பார்கள், மேலும் மற்றவர்களையும் கூட ஆத்மாவை தான்
பார்ப்பார்கள். இதைத் தான் ஆன்மீக ரோஜா என்று சொல்லப்
படுகிறது. இது பாபாவின் தோட்டமாக இருக்கிறது. பாபா
உயர்ந்ததிலும் உயர்ந்தவராக இருப்பதை போன்று அவரின் தோட்டமும்
கூட உயர்ந்ததிலும் உயர்ந்ததாக இருக்கும். ஆன்மீக ரோஜாக்களாகிய
நீங்கள் தான் இந்த தோட்டத்தின் விசேஷமான அலங்காரமாக
இருக்கிறீர்கள். மேலும் இந்த் ஆன்மீக நறுமணம் பல
ஆத்மாக்களுக்கு நன்மை செய்யக் கூடியதாக இருக்கிறது.
இன்று உலகத்தில் என்னவெல்லாம்
பிரச்சனைகள் இருப்பதற்கான காரணம் ஒருவர் மற்றவரை ஆத்மாவாக
பார்ப்பதில்லை. தேக அபிமானத்தின் காரணத்தினால் தான் அனைத்து
பிரச்சனைகளும் வருகிறது. ஆத்ம அபிமானியாகி விட்டால், அனைத்து
பிரச்சனை களும் முடிந்து போய்விடும். எனவே ஆத்மீக ரோஜாவாகிய
நீங்கள் உலகத்திற்கு ஆன்மீக நறுமணத்தை பரப்புவதற்கு நிமித்தமாக
இருக்கிறீர்கள். அவ்வாறு எப்பொழுதும் குஷி இருக்கிறதா?
அவ்வப்பொழுது ஒவ்வொரு மாதிரி கிடையாது. எப்பொழுதுமே ஒரே இரசனை
என்ற மனநிலையில் சக்தி நிறைந்திருக்கும். மனநிலை மாறுவதினால்
சக்தி குறைந்து விடு கிறது. சதா பாபாவின் நினைவில் இருந்து,
எங்கெல்லாம் சேவையின் சாதனம் இருக்கிறதோ, வாய்ப்பை எடுத்துக்
கொண்டு முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். பரமாத்மாவின்
தோட்டத்தின் ஆன்மீக ரோஜா எனப் புரிந்துக் கொண்டு ஆன்மீக
நறுமணத்தை பரப்பிக் கொண்டேயிருங்கள். எவ்வளவு இனிமையான ஆன்மீக
நறுமணமாக இருக்கிறது, இந்த நறுமணத்தை அனைவரும்
விரும்புகிறார்கள். இந்த் ஆன்மீக நறுமணம் அநேக ஆத்மாக் களுக்கு
நன்மை செய்வதன் கூடவே தனக்கும் நன்மை ஏற்படுகிறது. ஆன்மீக
நறுமணம் எவ்வளவு தூரம் வரை பரவுகிறது என்பதை பாப்தாதா
பார்க்கிறார். எங்காவது தேக அபிமானம் சிறிதளவு கலப்படம் ஆனாலும்
கூட ஆன்மீக நறுமணம் உண்மையான (ஓரிஜினல்) ஆக இருக்காது. சதா
இந்த ஆன்மீக நறுமணத்தின் மூலம் மற்றவர்களையும் கூட
நறுமணமுள்ளவர்களாக (குணம் நிறைந்தவர்கள்) மாற்றிக்கொண்டே
செல்லுங்கள். எப்பொழுதும் உறுதியானவராக இருக்கிறீர்களா?
எந்தவித குழப்பமும் நிலைக்குலைய செய்வதில்லையே? எது நடந்தாலும்,
கேட்டாலும், பார்த்தாலும் சிறிது கூட குழப்பத்தில் வருவதில்லையே?
எதுவும் புதியதல்ல, என்ற நிலையில் குழப்பத்தில் ஏன் வர வேண்டும்?
ஏதாவது புதிய விஷயம் என்றால் குழப்பத்தில் வரலாம். ஏன், என்ன,
இது அநேக கல்பம் நடந்துள்ளது - இதைத் தான் நாடகத்தின் மீது
நம்பிக்கை புத்தி என்று சொல்லப்படுகிறது. சர்வசக்திவான்
நம்முடைய துணைவராக இருக்கிறார், ஆகையால் கவலையற்ற மகாராஜாவாக
இருக்கிறார். அனைத்து கவலைகளையும் பாபாவிடம் ஒப்படைத்து
விட்டால், எப்பொழுதும் நாம் கவலையற்ற மகாராஜாவாக இருக்கலாம்.
சதா ஆன்மீக நறுமணம் பரப்பிக்கொண்டேயிருங்கள், அனைத்து தடைகளும்
முடிந்து போய்விடும்.
வரதானம்:
பிரத்யக்சத்தாவின் (பாபாவை
வெளிப்படுத்துதல்) சமயத்தை அருகாமையில் கொண்டு வரக்கூடிய சதா
சுப சிந்தனையாளர் மற்றும் சுய சிந்தனையாளர் ஆகுக.
சேவையில் வெற்றி பெறுவதற்கான
ஆதாரம் நல்ல எண்ணங்களின் உள்ளுணர்வு. ஏனெனில் உங்களின் இந்த
உள்ளுணர்வு ஆத்மாக்களின் கிரஹிக்கும் சக்தி மற்றும் ஆர்வத்தை
அதிகரிக்கிறது. இதன் மூலம் சப்தத்தின் (வார்த்தைகள் மூலம்
செய்யும்) சேவை எளிதாகவே வெற்றியடைகிறது. மேலும் தன்மீது தானே
நல்ல எண்ணங்களை வைக்கக் கூடிய சுயசிந்தனை செய்யும் ஆத்மா சதா
மாயா ஃப்ரூப், மற்றவர்களின் பலவீனங்களின் தாக்கத்திலிருந்து,
மனிதர்கள் மற்றும் பொருட்களின் ஈர்ப்பிலிருந்து பாதுகாப்பாக
இருக்கலாம். எனவே இந்த இரண்டு வரதானங்களை நடைமுறை வாழ்க்கையில்
கொண்டு வரும் பொழுது பிரத்யக்ஷதாவின் சமயம் அருகாமையில் வரும்.
சுலோகன்:
தனது எண்ணங்களை கூட சமர்ப்பணம்
செய்து விட்டால், அனைத்து பலவீனங்களும் தானாகவே விலகிவிடும்.
ஓம்சாந்தி