05.11.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! பாபா
குழந்தைகளாகிய உங்களுக்கு அமைதி மற்றும் சுகத்தின் ஆஸ்தியை
தருவதற்காக வந்திருக்கின்றார், உங்களுடைய சுய தர்மமே
அமைதியாகும், ஆகையினால் நீங்கள் அமைதிக்காக அலைவதில்லை.
கேள்வி:
இப்போது குழந்தைகளாகிய நீங்கள்
21 பிறவிகளுக்கு குறைவற்ற பொக்கிஷங்களினால் எடைபோட
தகுதியானவர்களாக ஆகின்றீர்கள் - ஏன்?
பதில்:
ஏனென்றால் பாபா புதிய உலகம்
படைக்கும்போது குழந்தைகளாகிய நீங்கள் அவருக்கு உதவியாளர்களாக
ஆகின்றீர்கள். தங்களுடைய அனைத்தையும் அவருடைய காரியத்தில்
பயன்படுத்துகிறீர்கள் ஆகையினால் பாபா அதற்கு பதிலாக 21
பிறவிகளுக்கு உங்களுக்கு குறைவற்ற பொக்கிஷங்களினால் (நிரப்பி)
அப்படி எடை போடுகிறார், செல்வம் ஒருபோதும் குறைவதில்லை,
துக்கமும் வருவதில்லை, அகால மரணம் கூட நடப்பதில்லை.
பாட்டு:-
எனக்கு உதவி அளிப்பவரே...
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான
குழந்தைகளுக்கு ஓம் என்பதின் அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது.
சிலர் ஓம் என்று மட்டும் சொல்கிறார்கள், ஆனால் ஓம் சாந்தி என்று
சொல்ல வேண்டும். வெறும் ஓம் என்பதற்கு, ஓம் பகவான் என்ற
அர்த்தம் வருகிறது. ஓம் சாந்தி என்றால் நான் ஆத்மா அமைதி
சொரூபமானவன் என்பதாகும். நான் ஆத்மா, இது என்னுடைய சரீரமாகும்.
முதலில் ஆத்மா, பிறகு சரீரமாகும். ஆத்மா அமைதி சொரூபமாக
இருக்கிறது. அதனுடைய இருப்பிடம் சாந்தி தாமமாகும். மற்றபடி
காட்டுக்குச் (வனம்) செல்வதின் மூலம் உண்மையான அமைதி
கிடைப்பதில்லை. உண்மையான அமைதி வீட்டிற்குச் செல்லும் போது தான்
கிடைக்கிறது. மற்றபடி எங்கே அமைதியற்று இருக்கிறதோ அங்கே
அமைதியை வேண்டுகிறார்கள். இந்த அமைதியற்ற துக்கதாமம் அழிந்து
விடும் பிறகு அமைதி ஏற்பட்டு விடும். குழந்தைகளாகிய உங்களுக்கு
அமைதியின் ஆஸ்தி கிடைத்து விடும். அங்கே வீட்டிலோ அல்லது வெளியே
இராஜ்யத்திலோ அசாந்தி இருக்காது. அதனை அமைதியான இராஜ்யம் என்று
சொல்லப்படுகிறது, இங்கே அமைதியற்ற இராஜ்யமாகும் ஏனென்றால்
இராவண இராஜ்யமாக உள்ளது. அது ஈஸ்வரனால் ஸ்தாபனை செய்யப்பட்ட
இராஜ்யமாகும். பிறகு துவாபர யுகத்திற்குப் பிறகு அசுர இராஜ்யம்
ஏற்படுகிறது, அசுரர்களுக்கு ஒருபோதும் அமைதி ஏற்படுவதில்லை.
வீட்டில், கடையில் எங்கேயும் அசாந்தியே அசாந்தி தான் இருக்கும்.
5 விகாரம் எனும் இராவணன் அசாந்தியை பரப்புகின்றான். இராவணன்
என்ன பொருள், என்பதை எந்த வித்வானோ பண்டிதர்கள் போன்றோரோ
தெரிந்திருக்கவில்லை. நாம் வருடா- வருடம் ஏன் இராவணனை
வதைக்கிறோம் (எரிக்கிறோம்) என்பதை புரிந்து கொள்வதே இல்லை.
சத்யுகம்-திரேதாவில் இந்த இராவணன் இருப்பதே இல்லை. அது தெய்வீக
இராஜ்ய மாகும். ஈஸ்வரன் பாபா உங்கள் மூலமாக தெய்வீக இராஜ்யத்தை
ஸ்தாபனை செய்கின்றார். தனியாக ஸ்தாபனை செய்வதில்லை. இனிமையிலும்
இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் ஈஸ்வரனுடைய உதவியாளர்களாவீர்கள்.
முன்னால் இராவணனுக்கு உதவியாளர்களாக இருந்தீர்கள். இப்போது
ஈஸ்வரன் வந்து அனைவருக்கும் சத்கதியை ஏற்படுத்துகின்றார்.
தூய்மை, சுகம், அமைதியை ஸ்தாபனை செய்கின்றார். குழந்தைகளாகிய
உங்களுக்கு இப்போது ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது.
சத்யுகம்-திரேதாவில் துக்கத்தின் விசயமே இல்லை. யாரும்
திட்டுவதில்லை, மோசமானவற்றை சாப்பிடுவதில்லை. இங்கே பாருங்கள்
எவ்வளவு மோசமான உணவுகளை உண்ணுகிறார்கள்.
கிருஷ்ணருக்கு பசுக்கள் மிகவும் பிடிக்கும் என்று
காட்டுகிறார்கள். கிருஷ்ணர் ஒன்றும் மாட்டுக்காரன் இல்லை,
மாடுகளை பராமரித்தார் என்பது அல்ல. சொர்க்கம் மற்றும்
நரகத்திற்கு இடையே இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது.
இரவில் இருள் இருக்கிறது, பகலில் வெளிச்சம் இருக்கிறது.
பிரம்மாவிற்கு பகல் என்றால் பிரம்மா வம்சத்தவர்களுக்கும் பகல்
என்றாகி விடுகிறது. முதலில் நீங்களும் கூட காரிருள் இரவில்
இருந்தீர்கள். இந்த சமயத்தில் பக்திக்கு எவ்வளவு வேகம்
இருக்கிறது, மகாத்மா போன்றோரை தங்கத்தால் எடை போடு கிறார்கள்
ஏனென்றால் சாஸ்திரங்களின் வித்வான்களாக இருக்கிறார்கள்.
அவர்களுடைய தாக்கம் ஏன் இவ்வளவு இருக்கிறது, என்பதையும் பாபா
புரிய வைத்துள்ளார். மரத்தில் புதிய-புதிய இலைகள் வருகிறது
என்றால் சதோபிரதானமாக இருக்கிறது. மேலிருந்து புதிய ஆத்மா
வருகிறது என்றால் கண்டிப்பாக கொஞ்ச காலத்திற்கு அதனுடைய
தாக்கம் இருக்கும் அல்லவா. தங்கம் அல்லது வைரத்தால் அவர்களை
எடை போடுகிறார்கள், ஆனால் இவை அனைத்தும் அழிந்து போகப்போகிறது.
மனிதர்களிடத்தில் எவ்வளவு லட்சங்களின் மதிப்புள்ள வீடு
இருக்கிறது. நாம் மிகுந்த செல்வந்தர்கள் என்று புரிந்து
கொள்கிறார்கள். இந்த பணக்காரத் தன்மை இன்னும் கொஞ்ச
நேரத்திற்கு என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
இவையனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும். சிலருடையது மண்ணில்
புதையும்… பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார், யார் இந்த
காரியத்தில் ஈடுபடுத்துகிறார்களோ அவர்களுக்கு 21 பிறவிகளுக்கு
வைர-வைடூரியங்களினால் ஆன மாளிகை கிடைக்கும். இங்கே ஒரு
பிறவிக்குத் தான் கிடைக்கிறது. அங்கே உங்களுடைய 21 பிறவிகள்
வரை வரும். இந்த கண்களின் மூலம் எதையெல்லாம்
பார்க்கின்றீர்களோ, சரீரம் உட்பட அனைத்தும் சாம்பலாகி விடும்.
குழந்தைகளாகிய உங்களுக்கு திவ்ய திருஷ்டியின் மூலம்
காட்சிகளும் கிடைக்கிறது. வினாசம் ஆன பிறகு இந்த
லஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம் நடக்கும். நாம் நம்முடைய
இராஜ்ய-பாக்கியத்தை மீண்டும் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம்
என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். 21 தலைமுறைகள் இராஜ்யம்
செய்த பிறகு இராவண இராஜ்யம் நடந்தது. இப்போது பாபா
வந்துள்ளார். பக்தி மார்க்கத்தில் அனைவரும் பாபாவைத் தான்
நினைவு செய்கிறார்கள். துக்கத்தில் அனைவரும் நினைவு
செய்கிறார்கள்... என்று பாடப்பட்டுள்ளது. பாபா சுகத்தின்
ஆஸ்தியை கொடுக்கின்றார், பிறகு நினைவு செய்வதற்கு அவசியம்
இருப்பதில்லை. நீங்கள் தாயும்-தந்தையும்... இந்த
லஷ்மி-நாராயணன் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்-தந்தையாக
இருப்பர். இது பரலௌகீக தாய்-தந்தையின் விசயமாகும். நீங்கள்
இப்போது இந்த லஷ்மி - நாராயணனாக ஆவதற்காக படிக்கின்றீர்கள்.
பள்ளியில் குழந்தைகள் நன்றாக தேர்ச்சி பெறுகிறார்கள் என்றால்
ஆசிரியருக்குப் பரிசு கொடுக்கிறார்கள். இப்போது நீங்கள்
அவருக்கு (சிவ பாபாவிற்கு) என்ன பரிசு கொடுப்பீர்கள். நீங்கள்
அவரை மந்திரத்தின் மூலம் தங்களுடைய குழந்தையாக்கிக்
கொள்கிறீர்கள். கிருஷ்ணருடைய வாயில் அவருடைய தாய் வெண்ணெய்
உருண்டையை பார்த்தார் என்று காட்டுகிறார்கள். கிருஷ்ணர்
சத்யுகத்தில் பிறவி எடுத்தார். அவர் வெண்ணெய் போன்றவற்றை
சாப்பிடமாட்டார். அவர் உலகத்திற்கு எஜமானர் ஆவார். ஆக இது எந்த
சமயத்தின் விசயம்? இது சங்கமயுகத்தின் விசயமாகும். நாம் இந்த
சரீரத்தை விட்டு விட்டு சென்று குழந்தையாக ஆவோம் என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உலகத்திற்கு எஜமானர்களாக ஆவோம்.
கிறிஸ்துவர்கள் (அமெரிக்கா மற்றும் ரஷ்யா) இருவரும்
தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் மற்றும் வெண்ணெய்
குழந்தைகளுக்கு கிடைக்கிறது. இராஜ்யம் கிடைக்கிறது அல்லவா.
அவர்கள் (ஆங்கிலேயர்) எப்படி பாரதத்தின் மீது சண்டையிட்டு
வெண்ணெய்யை தாங்கள் சாப்பிட்டு விட்டார்கள். கிறிஸ்துவர்களின்
இராஜ்யம் முக்கால் பாகம் இருந்தது. பின்னால் மெது-மெதுவாக
விடுபட்டுக் கொண்டே சென்றது. முழு உலகத்தின் மீது உங்களைத்
தவிர வேறு யாரும் இராஜ்யம் செய்ய முடியாது. நீங்கள் இப்போது
ஈஸ்வரிய குழந்தைகளாக ஆகியுள்ளீர்கள். நீங்கள் இப்போது
பிரம்மாண்டத்திற்கு எஜமானர்களாகவும், உலகத்திற்கு
எஜமானர்களாகவும் ஆகின்றீர்கள். உலகத்தில் பிரம்மாண்டம் என்பது
வருவதில்லை. சூட்சுமவதனத்தில் கூட இராஜ்யம் இல்லை.
சத்யுகம்-திரேதா… இந்த சக்கரம் இங்கே ஸ்தூல வதனத்தில்
நடக்கிறது. தியானத்தில் ஆத்மா எங்கேயும் செல்வதில்லை. ஆத்மா
சென்று விட்டது என்றால் சரீரம் அழிந்து விடும். இவையனைத்தும்
காட்சிகளாகும், சித்து விளையாட்டுகளின் மூலம் கூட இப்படிப்பட்ட
காட்சிகள் ஏற்படுகின்றன, இங்கே இருந்து கொண்டே வெளிநாட்டு
நாடாளு மன்றம் போன்றவைகளை பார்க்க முடியும். பாபாவின் கைகளில்
இருப்பதோ திவ்ய திருஷ்டியின் சாவியாகும். நீங்கள் இங்கு
இருந்து கொண்டே லண்டனை பார்க்க முடியும். இதற்கு கருவிகள்
போன்ற எதையும் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாடகத்தின்
படி அந்த சமயத்தில் அந்த காட்சி ஏற்படுகிறது, அது நாடகத்தில்
முதலிலேயே பதிவாகி யிருக்கிறது. பகவான் அர்ஜூனனுக்கு
காட்சியைக் காண்பித்தார் என்று காட்டுகிறார்கள் அல்லவா.
நாடகத்தின்படி அவருக்கு காட்சி ஏற்பட வேண்டியிருந்தது. இது கூட
பதிவாகி யிருக்கிறது. இதில் யாருடைய பெருமையும் இல்லை.
இவையனைத்தும் நாடகத்தின்படி நடக்கிறது. கிருஷ்ணர் உலகத்தின்
இளவரசராக ஆகின்றார், என்றால் அவருக்கு வெண்ணெய் கிடைக்கிறது.
உலகம் என்று எதை சொல்லப்படுகிறது, பிரம்மாண்டம் என்று எதை
சொல்லப் படுகிறது என்பதை கூட யாரும் தெரிந்திருக்கவில்லை.
பிரம்மாண்டத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கின்றீர்கள்.
சூட்சுமவதனத்தில் வருவது-செல்வது காட்சிகள் காண்பது போன்றவை
இந்த சமயத்தில் நடக்கிறது. பிறகு 5 ஆயிரம் ஆண்டுகள்
சூட்சுமவதனம் என்ற வார்த்தை இருக்காது. பிரம்மா தேவதாய நமஹ !
என்று சொல்கிறார்கள், பிறகு சிவ பரமாத்மாய நமஹ : என்று
சொல்கிறார்கள் என்றால் அவர் அனைவரிலும் உயர்ந்தவராகி விட்டார்
அல்லவா. அவரை பகவான் என்று சொல்லப்படுகிறது. அந்த தேவதைகள்
மனிதர் களாவர், ஆனால் தெய்வீக குணமுடைய மனிதர்களாவர். மற்றபடி
4-8 கைகளையுடைய மனிதர்கள் யாரும் இருப்பதில்லை. அங்கேயும் 2
கைகளையுடைய மனிதர்கள் தான் இருக்கிறார் கள், ஆனால் முழுமையான
தூய்மை இருக்கிறது, தூய்மையின்மை என்ற விசயமே இல்லை. அகால
மரணம் ஒருபோதும் நடப்பதில்லை. எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு
மிகுந்த குஷி இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் இந்த
சரீரத்தின் மூலமாக பாபாவை பார்ப்போம், பார்ப்பது எனும்போது
சரீரம் என்றாகிறது, பரமாத்மா அல்லது ஆத்மாவை பார்க்க முடியாது.
ஆத்மா மற்றும் பரமாத்மாவை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
பார்ப்பதற்கு திவ்ய பார்வை கிடைக்கிறது. மற்ற அனைத்து
பொருட்களையும் திவ்ய திருஷ்டியின் மூலம் பெரியதாக பார்க்கலாம்.
இராஜ்யம் பார்ப்பதற்கு பெரியதாக தெரியும். ஆத்மா இருப்பதே
புள்ளியாக. புள்ளியை பார்ப்பதின் மூலம் நீங்கள் எதையும்
புரிந்து கொள்ள மாட்டீர்கள். ஆத்மா மிகவும் சூட்சுமமானதாகும்.
ஆத்மாவை பார்ப்பதற்கு நிறைய மருத்துவர்கள் முயற்சி
செய்திருக்கிறார்கள், ஆனால் யாருக்கும் தெரிவதில்லை. உலகத்தில்
தங்கம்-வைரத்தினால் எடை போடுகிறார்கள். நீங்கள்
பிறவி-பிறவிகளுக்கும் பலமடங்கு ஆஸ்திக்கு
அதிகாரியாகின்றீர்கள். உங்களுடையது வெளிப்படையான பகட்டு
எதுவும் இல்லை. சாதாரண விதத்தில் இந்த ரதத்தில் (பிரம்மாவின்
சரீரத்தில்) அமர்ந்து கற்பிக்கின்றார். அவருடைய பெயர் பாக்கிய
ரதமாகும். இது தூய்மையற்ற பழைய ரதமாகும், இதில் சிவபாபா
வந்துஉயர்ந்ததிலும் உயர்ந்த சேவை செய்கின்றார். எனக் கென்று
என்னுடைய சரீரம் இல்லை என்று பாபா கூறுகின்றார். நான்
ஞானக்கடலாக இருக்கின்றேன், அன்புக்கடலாக இருக்கின்றேன்...
எனும்போது உங்களுக்கு எப்படி சரீரமின்றி ஆஸ்தியைக் கொடுப்பேன்!
மேலிருந்து கொடுக்க மாட்டேன். புத்தியை தூண்டுவதின் மூலம்
கல்வி கற்க முடியுமா என்ன? கண்டிப்பாக இங்கே வர வேண்டும்.
பக்தி மார்க்கத்தில் என்னை பூஜிக்கிறார்கள், அனைவருக்கும்
பிடித்தமானவனாக இருக்கின்றேன். காந்தி, நேருவின் சித்திரங்கள்
பிடித்தமானதாக இருக்கிறது, அவர்களுடைய சரீரத்தை நினைவு
செய்கிறார்கள். அழிவற்ற ஆத்மாவானது சென்று வேறொரு பிறவி
எடுத்திருக்கிறது. மற்றபடி அழியக்கூடிய சரீரத்தை நினைவு
செய்கிறார்கள். அது பூத பூஜையாகிவிட்டது அல்லவா. சமாதியை
உருவாக்கி அதன்மீது பூ போன்றவற்றை போடுகிறார்கள். இது நினைவுச்
சின்ன மாகும். சிவனுக்கு எத்தனை கோயில்கள் இருக்கின்றன,
அனைத்திலும் பெரிய நினைவுச் சின்னம் சிவனுடையதாகும். சோமநாத்
கோயில் புகழ்பெற்றதாக இருக்கிறது. முகமது கஜினி வந்து
கொள்ளையடித்துக் கொண்டு சென்றார். உங்களிடம் அவ்வளவு செல்வம்
இருந்தது. பாபா குழந்தைகளாகிய உங்களை ரத்தினங்களினால் எடை
போடுகின்றார். என்னை நான் எடைபோட்டுக் கொள்வதில்லை. நான்
அந்தளவிற்கு செல்வந்தனாக ஆவதில்லை, உங்களை செல்வந்தர்களாக
ஆக்குகின்றேன். அவர்களை இன்று எடை போட்டார்கள் என்றால் நாளை
இறந்து விடுவார்கள். செல்வம் ஒன்றிற்கும் பயன்படாது. பாபா
உங்களை 21 பிறவிகளுக்கு உங்களுடன் இருக்கும்படியாக குறைவற்ற
பொக்கிஷத்தினால் எடை போடுகின்றார். ஸ்ரீமத்படி நடந்தீர்கள்
என்றால் அங்கே துக்கம் என்ற வார்த்தையே இல்லை, ஒருபோதும் அகால
மரணம் நிகழ்வதில்லை. மரணத்தை பார்த்து பயப்பட மாட்டீர்கள்.
இங்கே எவ்வளவு பயப்படு கிறார்கள், அழுகிறார்கள். அங்கே, நாம்
சென்று இளவரசர்களாக ஆவோம் என்ற குஷி ஏற்படுகிறது. மந்திரவாதி,
வியாபாரி, வைர வியாபாரி என்று சிவ பரமாத்மாவை சொல்லப்படுகிறது.
உங்களுக்கும், இப்படி இளவரசர்களாக ஆவீர்கள் என்று காட்சி
காட்டுகின்றார். இப்போது பாபா காட்சி காட்டும் நடிப்பை
நிறுத்தி விட்டார். நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. இப்போது பாபா
ஞானத்தின் மூலம் உங்களுடைய சத்கதியை ஏற்படுத்துகிறார். நீங்கள்
முதலில் சுகதாமத் திற்குச் செல்வீர்கள். இப்போது துக்கதாமமாக
இருக்கிறது. ஆத்மா தான் ஞானத்தை தாரணை செய்கிறது என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள், ஆகையினால் தங்களை ஆத்மா என்று
புரிந்து கொள்ளுங்கள் என்று பாபா கூறுகின்றார். ஆத்மாவில் தான்
நல்ல அல்லது கெட்ட சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. சரீரத்தில்
இருந்தால் சரீரத்தோடு சம்ஸ்காரங்களும் முடிந்து விடும்.
சிவபாபா, ஆத்மாக்களாகிய நாங்கள் இந்த சரீரத்தின் மூலம்
கற்கின்றோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இது புதிய விசயம்
அல்லவா. ஆத்மாக்களாகிய நமக்கு சிவபாபா கற்பிக்கின்றார். இதை
உறுதியாக நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களாகிய நம் அனைவருக்கும்
அவர் தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும்
இருக்கின்றார். பாபா அவரே கூறுகின்றார், எனக்கென்று என்னுடைய
சரீரம் இல்லை. நானும் ஆத்மா தான், ஆனால் என்னை பரமாத்மா என்று
சொல்லப்படுகிறது. ஆத்மா தான் அனைத்தையும் செய்கிறது. மற்றபடி
சரீரத்தின் பெயர் மாறுகிறது. ஆத்மா, ஆத்மாவாகத் தான்
இருக்கிறது. நான் பரம் ஆத்மா, உங்களைப் போல் மறுபிறவி
எடுப்பதில்லை. நாடகத்தில் என்னுடைய நடிப்பு இப்படித் தான்
இருக்கிறது, நான் இவருக்குள் பிரவேசித்து உங்களுக்கு சொல்லிக்
கொண்டிருக்கின்றேன், ஆகையினால் தான் இவரை பாக்கியசாலி ரதம்
என்று சொல்லப்படுகிறது. இவரை பழைய செருப்பு என்றும்
சொல்லப்படுகிறது. சிவதந்தை கூட பழைய நீளமான காலணியை
அணிந்திருக்கின்றார். பாபா கூறுகின்றார், நான் இவருக்குள்
நிறைய பிறவிகளின் கடைசியில் பிரவேசித்திருக் கின்றேன். முதலில்
இவர் தேவதையாக ஆகின்றார். பிரம்மா பாபா கூறுகின்றார், நீங்கள்
இளைஞர்களாக இருக்கின்றீர்கள். என்னை விட அதிகம் படித்து
உயர்ந்த பதவியை அடைய வேண்டும், ஆனால் என்னுடன் பாபா
இருக்கின்றார் எனும்போது எனக்கு அடிக்கடி அவருடைய நினைவு
வருகிறது. பாபா என்னோடு உறங்கவும் செய்கின்றார், ஆனால் சிவ
பாபா என்னை தழுவிக் கொள்ள முடியாது. உங்களை தழுவிக்
கொள்கின்றார். நீங்கள் பாக்கியசாலிகள் அல்லவா. சிவபாபா
சரீரத்தை கடனாக பெற்றிருக்கின்றார், நீங்கள் அவரை தழுவிக்
கொள்ள முடியும். நான் எப்படி தழுவிக் கொள்ள முடியும். எனக்கு
இந்த அதிர்ஷ்டம் கூட இல்லை, ஆகையினால் நீங்கள் அதிர்ஷ்ட
நட்சத்திரங்கள் என்று பாடப் பட்டுள்ளீர்கள். குழந்தைகள்
எப்போதும் அதிர்ஷ்டசாலிகளாகவே இருப்பார்கள். தந்தை
குழந்தைகளுக்கு செல்வத்தை கொடுத்து விடுகிறார்கள், எனவே
நீங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் அல்லவா. சிவபாபா கூட, நீங்கள்
என்னை விட அதிர்ஷ்டசாலிகள் என்று கூறுகின்றார், உங்களுக்கு
கற்பித்து உலகத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றேன், நான்
ஆகின்றேனா என்ன ! நீங்கள் பிரம்மாண்டத்திற்கு
(பரந்தாமத்திற்கும்) எஜமானர்களாக ஆகின்றீர்கள். அதிக பட்சமாக
என்னிடத்தில் திவ்ய திருஷ்டியின் சாவி இருக்கிறது. நான்
ஞானக்கடலாக இருக்கின்றேன். உங்களையும் மாஸ்டர் ஞானக்கடலாக
ஆக்குகின்றேன். நீங்கள் இந்த முழு சக்கரத்தையும்
தெரிந்துகொண்டு சக்கரவர்த்தி மகாராஜா-மகாராணிகளாக
ஆகின்றீர்கள். நான் ஆகின்றேனா என்ன? வயதாகிவிடுகிறது என்றால்
குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு அவர்கள்
வானப்பிரஸ்தம் சென்று விடுகிறார்கள். முன்பு அப்படி நடந்தது.
இன்றைக்கு குழந்தைகள் மீது பற்று வந்து விடுகிறது. பரலௌகீக
தந்தை கூறுகின்றார், நான் இவருக்குள் பிரவேசித்து
குழந்தைகளாகிய உங்களை முள்ளிலிருந்து மலராக, உலத்திற்கு
எஜமானர்களாக மாற்றி விட்டு, அரைக் கல்பத்திற்கு எப்போதும்
சுகமுடையவர்களாக்கி விட்டுநான் வானப்பிரஸ்தத்தில் அமர்ந்து
விடுகின்றேன். இந்த விசயங் களெல்லாம் சாஸ்திரங்களில்
இருக்கின்றதா என்ன. சன்னியாசிகள் சாஸ்திரங்களின் விசயங் களை
சொல்கிறார்கள். பாபா ஞானக்கடலாக இருக்கின்றார். இந்த
வேத-சாஸ்திரங்கள் போன்ற வைகள் எல்லாம் பக்தி மார்க்கத்தின்
பொருட்கள் என்று பாபா அவரே கூறுகின்றார். நான் தான் ஞானக்கடலாக
இருக்கின்றேன். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சரீரம் உட்பட இந்த கண்களுக்கு என்னவெல்லாம் தெரிகிறதோ
அவையனைத்தும் அழியக்கூடியதாகும், ஆகையினால் தங்களுடைய
அனைத்தையும் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்.
2) தந்தையிடமிருந்து முழுமையான ஆஸ்தியை அடைவதற்காக படிப்பை
படிக்க வேண்டும். எப்போதும் தங்களுடைய அதிர்ஷ்டத்தை நினைவில்
வைத்து பிரம்மாண்டம் அல்லது உலகத்திற்கும் எஜமானர்களாக ஆக
வேண்டும்.
வரதானம்:
மாயாவின் இராயல் ரூபமான
பந்தனங்களிலிருந்து விடுபட்ட முழு உலகத்தையும் வென்ற, உலகை
வென்றவர் ஆகுக.
என்னுடைய முயற்சி, என்னுடைய
கண்டுபிடிப்பு, என்னுடைய சேவை, என்னுடைய டச்சிங் (பாபாவின்
தொடுதல்), என்னுடைய குணங்கள் நன்றாக உள்ளது, என்னுடைய
தீர்மானிக்கும் சக்தி மிகவும் நன்றாக உள்ளது, இந்த என்னுடையது
என்பதுதான் இராயல் ரூபமான மாயை ஆகும். மாயை உன்னுடையது
என்பதையும் கூட என்னுடையது என ஆக்கி விடக்கூடிய அளவு மாய
மந்திரம் செய்து விடுகிறது. ஆகையால் இப்போது இப்படிப்பட்ட பல
பந்தனங்களிலிருந்து விடுபட்டு ஒரு தந்தையின் சம்மந்தத்தில்
வந்து விடுங்கள். அப்போது மாயையை வென்றவர் ஆகி விடுவீர்கள்.
மாயையை வென்றவர்கள்தான் இயற்கையை வென்றவர், விஸ்வத்தை வென்ற
அதாவது உலகை வென்றவராக ஆகின்றனர். அவர்கள் தான் ஒரு வினாடியில்
அசரீரி பவ என்ற வழியை சகஜமாகவும் தானாகவும் காரியத்தில்
ஈடுபடுத்த முடியும்.
சுலோகன்:
பிறருடைய எதிர்மறையை நேர்மறையாக
மாற்றுபவர்களே உலகை மாற்றுபவர்கள்.
ஓம்சாந்தி