11.11.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள்
இப்போது உலக சேவகர். உங்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் தேக
அபிமானம் வரக் கூடாது.
கேள்வி :
எந்த
ஒரு
பழக்கம்
ஈஸ்வரிய
விதிமுறைக்குப்
புறம்பானது,
அதன்
மூலம்
அதிக
இழப்பு
ஏற்படுகின்றது?
பதில்:
எந்த ஒரு திரைப்படக் கதையைக்
கேட்பது அல்லது படிப்பது, நாவல்கள் படிப்பது - இந்தப்
பழக்கங்கள் முற்றிலும் விதிமுறைக்குப் புறம்பானவை. இதனால்
மிகுந்த இழப்பு ஏற்படுகின்றது. பாபா தடை செய்கிறார் -
குழந்தைகளே, நீங்கள் அந்த மாதிரி எந்த ஒரு புத்தகத்தையும்
படிக்கக் கூடாது. யாராவது பி.கே. இதுபோன்ற புத்தகங்களைப்
படிக்கிறார் என்றால் நீங்கள் ஒருவர் மற்றவரை எச்சரிக்கை
செய்யுங்கள்.
பாடல் :
முகத்தைப் பார்த்துக் கொள் மனிதா.....
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மிகக்
குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தை சொல்கிறார் - தன்னை சோதித்துப்
பாருங்கள், நினைவு யாத்திரை மூலம் நாம் தமோபிரதானத் திலிருந்து
சதோபிரதானத்தின் பக்கமாக எவ்வளவு முன்னேறி யிருக்கிறோம்?
ஏனென்றால் எவ்வளவுக் கெவ்வளவு நினைவு செய்கிறோமோ, அவ்வளவு
பாவங்கள் நீங்கிக் கொண்டே போகும். இது போன்ற வார்த்தைகள்
எங்காவது எந்த ஒரு சாஸ்திரத்திலாவது எழுதப் பட்டுள்ளதா?
ஏனென்றால் யாரெல்லாம் தர்ம ஸ்தாபனை செய்தார்களோ, அவர்கள் என்ன
புரிய வைத்தார்களோ, அவற்றைப் பற்றிய சாஸ்திரங்கள்
உருவாகியுள்ளன. பிறகு அவற்றை படிக்கின்றனர். புத்தகங்களுக்குப்
பூஜை செய்கின்றனர். இப்போது இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய
விசயம். தேகத்துடன் கூட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும்
தவிர்த்து தன்னை ஆத்மா என உணருங்கள். பாபா நினைவு படுத்துகிறார்
- குழந்தைகளாகிய நீங்கள் முதல்-முதலில் அசரீரியாக வந்தீர்கள்.
அங்கே பவித்திரமாகவே இருப்பீர்கள். முக்தி-ஜீவன் முக்தியில்
எந்த ஒரு பதீத ஆத்மாவும் செல்ல முடியாது. அது நிராகாரி,
நிர்விகாரி உலகம். இது சாகாரி விகாரி உலகம் எனச் சொல்லப்
படுகின்றது. பிறகு சத்யுகத்தில் இதே தான் நிர்விகாரி உலகமாக
ஆகின்றது. சத்யுகத்தில் வசிக்கக் கூடிய தேவதைகளுக்கோ அதிக மகிமை
உள்ளது. இப்போது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்படுகின்றது. -
நல்லபடியாக தாரணை செய்து மற்றவர்களுக்குப் புரிய வையுங்கள்.
ஆத்மாக்கள் நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்களோ,
பவித்திரமாகவே வந்தீர்கள். பிறகு இங்கே வந்து அபவித்திரமாகவும்
ஆகியே தீர வேண்டும். சத்யுகம் நிர்விகாரி உலகம் என்றும்
கலியுகம் விகாரி உலகம் என்றும் சொல்லப் படுகின்றது. இப்போது
நீங்கள் பதித-பாவனர் தந்தையை நினைவு செய்கிறீர்கள் - எங்களைப்
பாவன நிர்விகாரி ஆக்குவதற்காகத் தாங்கள் விகாரி உலகத்தில்
விகாரி சரீரத்தில் வாருங்கள். பாபா தாமே வந்து புரிய வைக்கிறார்
- பிரம்மாவின் சித்திரத்தில் தான் குழம்பிப் போகின்றனர் -
தாதாவை ஏன் அமர்த்தி வைத்துள்ளனர் என்று. இவரோ பாகீரதம்
என்பதைப் புரிய வைக்க வேண்டும். சிவபகவான் சொல்கிறார் - இந்த
ரதத்தை நான் எடுத்துக் கொண்டுள்ளேன். ஏனென்றால் எனக்கு
இயற்கையின் ஆதாரம் அவசியம் வேண்டும். இல்லையென்றால் நான்
உங்களைப் பதீத்ததிலிருந்து பாவனமாக எப்படி ஆக்குவேன்?
தினந்தோறும் கற்பிக்க வேண்டியதும் அவசியம். இப்போது தந்தை
குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்கிறார், தன்னை ஆத்மா என
உணர்ந்து என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். ஆத்மாக்கள்
அனைவருமே தங்களின் தந்தையை நினைவு செய்ய வேண்டும். கிருஷ்ணரை
அனைத்து ஆத்மாக்களின் தந்தை என்று சொல்ல மாட்டார்கள். அவருக்கோ
தம்முடைய சரீரம் என்பது உள்ளது. ஆக, இந்தத் தந்தை மிகவும்
சுலபமாகப் புரிய வைக்கிறார் - யாருக்காவது புரிய வைக்கும் போது
சொல்லுங்கள் - பாபா சொல்கிறார், நீங்கள் அசரீரியாக வந்தீர்கள்,
இப்போது அசரீரி ஆகிச் செல்ல வேண்டும். அங்கிருந்து பவித்திர
ஆத்மாவாக வருகின்றது. நாளை யாராவது வந்தாலும் பவித்திரமாகவே
வருவார்கள். ஆக, அவர்களுக்கு நிச்சயமாக மகிமை இருக்கும்.
சந்நியாசி, இல்லறவாசி இவர்களுக்குப் பெயர் (புகழ்) உள்ளதென்றால்
நிச்சயமாக அவர்களுக்கு இது முதல் பிறவியாக இருக்கும். அவர்கள்
தர்ம ஸ்தாபனை செய்வதற்காகவே வர வேண்டியுள்ளது. எப்படி பாபா
குருநானக் பற்றிப் புரிய வைக்கிறார். இப்போது குரு என்ற
வார்த்தையையும் சேர்த்து சொல்ல வேண்டியுள்ளது. ஏனென்றால் நானக்
என்ற பெயரோ அநேகருக்கு உள்ளது இல்லையா? யாருக்காவது மகிமை
செய்யும் போது அந்த அர்த்தத்தோடு சொல்லப்படுகின்றது.
சொல்லவில்லை என்றால் நன்றாக இருக்காது. உண்மை யில்
குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது - ஒரே ஒரு பாபாவைத்
தவிர குரு என்று இங்கே யாரும் கிடையாது. அவருடைய பெயரால் தான்
சொல்கின்றனர், சத்குரு அகால்.... அவர் அகால மூரத் (அழியாத
மூர்த்தி). அதாவது அவரைக் காலனால் அழிக்க முடியாது (அவருக்கு
மரணம் என்பது கிடையாது). அது ஆத்மா. அதனால் இந்தக் கதைகளை
அமர்ந்து உருவாக்கியுள்ளனர். திரைக்கதைகளை, புத்தகங்கள்,
நாவல்கள் முதலியவற்றையும் கூட அநேகர் படிக்கின்றனர். பாபா
குழந்தைகளுக்கு எச்சரிக்கை செய்கிறார். ஒருபோதும் எந்த ஒரு
நாவல் முதலிய எதையும் படிக்கக் கூடாது. ஒரு சிலருக்குப் பழக்கம்
உள்ளது. இங்கோ நீங்கள் சௌபாக்கியசாலி ஆகிறீர்கள். சில
பி.கே.க்களும் கூட நாவல்கள் படிக்கின்றனர். அதனால் பாபா
குழந்தைகள் அனைவருக்குமே சொல்கிறார் - எப்போதாவது யாரேனும்
நாவல் படிப்பதைப் பார்த்தால் உடனே எடுத்துக் கிழித்து விடுங்கள்.
இதில் பயப்படக்கூடாது. நமக்கு யாரேனும் சாபமிட்டு விடக் கூடாதே,
கோபப் பட்டுவிடக் கூடாதே என்று அந்த மாதிரி விசயம் கிடையாது.
உங்களுடைய கடமை ஒருவர் மற்றவருக்கு எச்சரிக்கை செய்வது.
திரைக்கதைகளைக் கேட்பது அல்லது படிப்பது வீணானவையாகும்.
விதிமுறைக்குப் புறம்பான செயல் இருந்தால் உடனே தெரியப் படுத்த
வேண்டும். இல்லையெனில் எப்படிச் சீர்திருந்து வார்கள்? தனக்கு
நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். தனக்கே யோகபலம்
இல்லை என்று சொன்னால் இங்கே வந்து என்ன கற்பிப்பார்கள்? பாபா
இதைத் தடை செய்கிறார். பிறகு இத்தகைய காரியத்தை செய்வார்களானால்
மனதை அரித்துக் கொண்டே இருக்கும். தனக்கு நஷ்டம் ஏற்படும்.
அதனால் யாரிடமாவது ஏதேனும் அவகுணத்தைப் பார்ப்பீர்களானால் எழுத
வேண்டும். எந்த ஒரு விதிமுறைக்குப் புறம்பான நடத்தையும்
இல்லாதிருக்கிறதா? ஏனென்றால் பிராமணர்கள் இச்சமயம் சேவகர்கள்
இல்லையா? பாபாவும் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
அர்த்தத்தோடு புரிய வைக்கிறார். கற்றுத் தரும் பெண்
குழந்தைகளுக்கு தேக அபிமானம் வரக் கூடாது. ஆசிரியரும்
மாணவர்களின் சேவகராக உள்ளார் இல்லையா? கவர்னர் முதலானவர்களும்
கடிதம் எழுதுகின்றனர், கீழே - நான் கீழ்ப்படிதலான சேவகன் என்று.
முற்றிலும் அதற்கு நேராக பெயரை எழுதுவார்கள். மற்றதை எழுத்தர்
தம் கையால் எழுதுவார். ஒருபோதும் தன்னைப் பற்றிப் பெருமையாக
எழுத மாட்டார்கள். தற்போது குருமார் தங்களைத் தாங்களே ஸ்ரீ-ஸ்ரீ
என எழுதிக் கொள்கின்றனர். இங்கேயும் சிலர் அதுபோல் உள்ளனர் -
ஸ்ரீ இன்னார் என எழுதுகின்றனர். உண்மையில் அப்படியும் எழுதக்
கூடாது. பெண்களும் ஸ்ரீமதி என எழுதக் கூடாது. எப்போது ஸ்ரீஸ்ரீ
தாமே வந்து வழிமுறை தருகிறாரோ, அப்போது தான் ஸ்ரீமத் கிடைக்கும்.
நீங்கள் புரிய வைக்க முடியும், நிச்சயமாக ஒருவரின் வழிமுறைப்படி
தான் இவர்கள் (தேவதைகள்) உருவாகி இருக்கிறார்கள் இல்லையா?
பாரதத்தில் யாருக்குமே தெரியாது - இவர்கள் இவ்வளவு உயர்ந்த
உலகின் எஜமானர்களாக எப்படி ஆனார்கள் என்று. உங்களுக்கோ இதே நஷா
அதிகரிக்க வேண்டும். இந்த லட்சியம்-குறிக்கோளின் சித்திரம் சதா
மார்பில் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். யாருக்கு
வேண்டுமானாலும் சொல்லுங்கள் - எங்களுக்கு பகவான் படிப்பு
சொல்லித் தருகிறார். இதன் மூலம் நாங்கள் உலகின் மகாராஜா ஆகிறோம்.
இந்த இராஜ்யத்தின் ஸ்தாபனை செய்வதற்காக பாபா வந்துள்ளார்.
இந்தப் பழைய உலகத்தின் விநாசம் முன்னால் நின்று கொண்டுள்ளது.
சின்னச் சின்னப் பெண் குழந்தைகள் நீங்கள் மழலை மொழியில்
யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்க முடியும். பெரிய-பெரிய
சம்மேளனம் முதலியன நடைபெறுகின்றன. அதில் உங்களை அழைக்கின்றனர்.
இந்தச் சித்திரங்களை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள், அமர்ந்து
புரிய வையுங்கள். பாரதத்தில் மீண்டும் இவர்களின் இராஜ்யம்
ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. எங்கே வேண்டுமானாலும் நிறைந்த
சபையில் நீங்கள் புரிய வைக்க முடியும். நாள் முழுவதும் சேவையின்
நஷா தான் இருந்து கொண்டிருக்க வேண்டும். பாரதத்தில் அவர்களின்
இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. பாபா நமக்கு இராஜயோகம்
கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். சிவபகவான் சொல்கிறார் - ஹே
குழந்தைகளே, நீங்கள் உங்களை ஆத்மா என உணர்ந்து என்னை நினைவு
செய்யுங்கள். அப்போது நீங்கள் 21 பிறவிகளுக்கு இதுபோல் ஆகி
விடுவீர்கள். தெய்விக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும்.
இப்போதோ அனைவருக்கும் அசுர குணங்களே உள்ளன. சிரேஷ்டமாக
ஆக்குபவரோ ஸ்ரீஸ்ரீ சிவபாபா ஆவார். இந்த உயர்ந்தவரிலும்
உயர்ந்த தந்தை தான் நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார்.
சிவபகவான் வாக்கு-மன்மனாபவ. பாகீரதமோ புகழ் வாய்ந்தது. பாகீரதம்
தான் பிரம்மா எனச் சொல்லப்படுகிறார். அவரை மகாவீர் என்றும்
சொல்கின்றனர். இங்கே தில்வாடா கோவிலில் அமர்ந்துள்ளார் இல்லையா?
கோவிலைக் கட்டிய ஜைனர் முதலானவர்களுக்கு இது பற்றித் தெரியாது.
சின்னச் சின்னப் பெண் குழந்தைகள் நீங்கள் யாரை வேண்டுமானாலும்
சென்று பார்க்க வைக்க இயலும். இப்போது நீங்கள் மிகவும்
சிரேஷ்டமானவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இது பாரதத்தின்
லட்சியம்- குறிக்கோள் இல்லையா? எவ்வளவு நஷா அதிகரிக்க வேண்டும்!
அனைவரும் சொல்கின்றனர், நாங்களோ லட்சுமி-நாராயணராகவே ஆவோம்
என்று. இராமர் -சீதை ஆவதற்கு யாருமே கை உயர்த்துவதில்லை.
இப்போதோ நீங்கள் அகிம்சையாளர்கள், சத்திரியர்கள். அகிம்சை
யாளர்கள், சத்திரியர்களாகிய உங்களை யாரும் அறிந்திருக்கவில்லை.
இதை நீங்கள் இப்போது தான் புரிந்து கொள்கிறீர்கள். கீதையிலும்
மன்மனாபவ என்ற வார்த்தை உள்ளது. தன்னை ஆத்மா என உணருங்கள்.
இதுவோ புரிந்து கொள்வதற்கான விசயம் இல்லையா? வேறு யாரும்
புரிந்து கொள்ள முடியாது. பாபா வந்து குழந்தைகளுக்குக் கற்றுத்
தருகிறார் - குழந்தைகளே, ஆத்ம அபிமானி ஆகுங்கள். இந்தப் பழக்கம்
பிறகு உங்களுக்கு 21 பிறவி களுக்கு இருக்கும். உங்களுக்கு 21
பிறவிகளுக்கான கல்வி கிடைக்கின்றது.
பாபா அடிக்கடி முக்கியமான விசயம்
சொல்லிப் புரிய வைக்கிறார் - தன்னை ஆத்மா என உணர்ந்து கொண்டு
அமர்ந்திருங்கள். பரமாத்மா தந்தை ஆத்மாக்களாகிய நமக்கு அமர்ந்து
புரிய வைக்கிறார் - நீங்கள் அடிக்கடி தேக அபிமானத்தில் வந்து
விடுகிறீர்கள், பிறகு வீடு-வாசல் முதலியவை நினைவு வந்து
விடுகிறது. இது நடைபெறத் தான் செய்கிறது. பக்தி மார்க்கத்திலும்
கூட பக்தி செய்து கொண்டிருக்கும் போதே புத்தி வேறு பக்கம்
சென்று விடுகிறது. ஒரே நிலையில் (நௌதா) தீவிர பக்தி செய்பவர்கள்
தான் அமர முடியும். அது தீவிர பக்திஎனச் சொல்லப்படுகின்றது.
முற்றிலும் (பக்தியில்) மூழ்கிப்போய் விடுகின்றனர். நீங்கள்
நினைவில் அமர்கிறீர்கள் என்றால் சில நேரம் முற்றிலும் அசரீரி
ஆகி விடுகிறீர்கள். நல்ல குழந்தைகளாக உள்ளவர்கள் தான் அந்த
மாதிரி நிலையில் அமர்வார்கள். தேகத்தின் உணர்வு அகன்று விடும்.
அசரீரி ஆகி அந்த போதையில் அமர்ந்திருப்பார்கள். இது பழக்கமாக
ஆகி விடும். சந்நியாசிகள் தத்துவஞானிகள் அல்லது பிரம்மஞானிகள்.
நாங்கள் ஒன்று கலந்து விடுவோம், இந்தப் பழைய சரீரத்தை விட்டு
பிரம்ம தத்துவத்தோடு ஐக்கியமாகி விடுவோம் என்று சொல்கின்றனர்.
அனைவருக்கும் அவரவர் தர்மம் என்பது உள்ளது இல்லையா? யாருமே வேறு
தர்மங்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஆதி சநாதன தேவி-தேவதா
தர்மத்தைச் சேர்ந்தவர்களும் கூட தமோபிரதானம் ஆகி விட்டார்கள்.
கீதையின் பகவான் எப்போது வந்திருந்தார்? கீதையின் யுகம் எப்போது
இருந்தது? யாருக்குமே தெரியாது. நீங்கள் அறிவீர்கள்,
சங்கமயுகத்தில் தான் பாபா வந்து இராஜயோகத்தைக் கற்பிக்கிறார்.
தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக்குகிறார். இது பாரதத்தின்
விசயம் தான். அநேக தர்மங்களும் நிச்சயமாக இருந்தன. பாடல் உள்ளது
- ஒரு தர்மத்தின் ஸ்தாபனை, அநேக தர்மங்களின் விநாசம்.
சத்யுகத்தில் இருந்தது ஒரு தர்மம். இப்போது கலியுகத்தில்
இருப்பது அநேக தர்மங்கள். பிறகு ஒரு தர்மத்தின் ஸ்தாபனை
நடைபெறுகின்றது. ஒரு தர்மம் இருந்தது, இப்போது இல்லை. மற்ற
அனைத்தும் நிலைத்துவிட்டன. ஆலமரத்தின் உதாரணமும் கூட முற்றிலும்
சரியானது தான். அஸ்திவாரம் இல்லை. மீதி மரம் முழுவதும் நின்று
கொண்டிருக்கிறது. அதுபோல் இதிலும் தேவி-தேவதா தர்மம் இல்லை.
அடிமரமாக இருந்த ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் இப்போது மறைந்து
விட்டுள்ளது. மீண்டும் பாபா ஸ்தாபனை செய்கிறார். மற்றப்படி
இத்தனை தர்மங்கள் அனைத்தும் பின்னால் வருகின்றன. பிறகு சக்கரம்
அவசியம் திரும்பச் சுற்றியாக வேண்டும். அதாவது பழைய
உலகத்திலிருந்து மீண்டும் புதிய உலகம் வந்தாக வேண்டும். புது
உலகத்தில் இவர்களின் இராஜ்யம் இருந்தது. உங்களிடம் பெரிய
சித்திரமும் உள்ளது, சிறிய சித்திரமும் உள்ளது. பெரிய பொருளாக
இருக்குமானால் பார்த்து விட்டுக் கேட்பார்கள் - இதை எதற்காக
வைத்திருக்கிறீர்கள் என்று. நாங்கள் இந்தப் பொருளை எடுத்து
வைத்துள்ளோம், இதன் மூலம் மனிதர்கள் ஏழையாக (ஏழ்மை நிலை)
இருந்து இளவரசன், இளவரசி ஆக வேண்டும் என்பதற்காக. மனதில் பெரிய
ஊக்கம், பெரிய குஷி இருக்க வேண்டும். நாம் ஆத்மாக்கள் பகவானின்
குழந்தைகள். ஆத்மாக்களுக்கு பகவான் படிப்பு சொல்லித் தருகிறார்.
பாபா நம்மைக் கண்களில் அமர்த்தி வைத்துக் கொண்டு செல்வார்.
இந்த மோசமான உலகத்திலோ நாம் இனியும் இருக்க வேண்டியதில்லை.
இன்னும் போகப் போக ஐயோ-ஐயோ எனக் கூக்குரல் இடுவார்கள். கேட்கவே
வேண்டாம். கோடிக் கணக்கில் மனிதர்கள் இறக்கின்றனர். இதுவோ
குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. நாம் இந்தக் கண்களால்
என்ன பார்க்கிறோமோ, அவை கொஞ்சம் கூட மிஞ்சப் போவதில்லை. இங்கோ
மனிதர்கள் முள்ளைப் போல் உள்ளனர். சத்யுகம் என்பது மலர்களின்
தோட்டம். பிறகு நம்முடைய கண்களே குளிர்ந்து விடும்.
தோட்டத்திற்குள் போவதால் கண்கள் குளிர்ந்து (குற்றப் பார்வை
இல்லாமல்) போய் விடும் இல்லையா? ஆக, நீங்கள் இப்போது பத்மாபதம்
பாக்கியசாலி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பிராமணர்களாக யார்
ஆகிறார்களோ, அவர்களின் பாதங்களில் தாமரை உள்ளது. குழந்தைகள்
நீங்கள் புரிய வைக்க வேண்டும்- நாங்கள் இந்த இராஜ்யத்தை ஸ்தாபனை
செய்து கொண்டிருக்கிறோம். அதனால் பாபா பேட்ஜ் உருவாக்கி
யுள்ளார். இதன் மூலம் தானாகவே சேவை நடைபெற்றுக் கொண்டே
இருக்கும். மனிதர்கள் பாடுகின்றனர் - ஆத்மா -பரமாத்மா அதிக
காலம் பிரிந்து இருந்து விட்டனர்... ஆனால் அதிக காலம் என்பதன்
அர்த்தம் யாருக்குமே புரியவில்லை. உங்களுக்கு பாபா
சொல்லியிருக்கிறார் - அதிக காலம் என்றால் 5000 ஆண்டுகளுக்குப்
பிறகு குழந்தைகள் நீங்கள் பாபாவோடு சந்திக்கிறீர்கள். நீங்கள்
இதையும் அறிவீர்கள், இந்த சிருஷ்டியில் அனைவரைக் காட்டிலும்
புகழ் பெற்றவர்கள் இந்த ராதை, கிருஷ்ணர். இவர்கள் சத்யுகத்தின்
முதல் இளவரசர்-இளவரசி. இவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பது ஒரு
போதும் யாருடைய சிந்தனையில் கூட வராது. சத்யுகத்திற்கு முன்
நிச்சயமாகக் கலியுகம் இருந்திருக்கும். அவர்கள் உலகத்தின்
எஜமானர் ஆகிற அளவிற்கு என்ன கர்மம் செய்தார்கள்? பாரதவாசிகள்
ஒன்றும் இவர்களை உலகத்தின் எஜமானர்கள் எனப் புரிந்து
கொள்ளவில்லை. இவர்களின் இராஜ்யம் இருந்த போது பாரதத்தில் வேறு
எந்த ஒரு தர்மமும் இல்லாதிருந்தது. இப்போது குழந்தைகள் நீங்கள்
அறிவீர்கள், பாபா நமக்கு இராஜயோகம் கற்றுத் தந்து
கொண்டிருக்கிறார். நமது நோக்கம்-குறிக்கோள் இது. கோவில்களில்
இவர்களின் உருவங்கள் முதலியன இருக்கத் தான் செய்கின்றன. ஆனாலும்
இச்சமயம் இந்த ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள்
புரிந்து கொள்ள வில்லை. உங்களிலும் கூட நம்பர்வார் புரிந்து
கொள்கிறீர்கள். சிலரோ முற்றிலும் மறந்து போகின்றனர். முதலில்
எப்படி நடத்தை இருந்ததோ, அப்படியே இருந்து விடுகிறது. இங்கே
மிக நன்றாக உள்ளது எனப் புரிந்து கொள்கிறீர்கள். இங்கிருந்து
வெளியில் சென்று விட்டால் அவ்வளவு தான், முடிந்தது. சேவைக்கான
ஆர்வம் இருக்க வேண்டும். அனைவருக்கும் செய்தி கொடுப்பதற்கான
யுக்திகளை உருவாக்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். நஷாவுடன்
சொல்ல வேண்டும் - சிவபாபா சொல்கிறார், என்னை நினைவு
செய்வீர்களானால் உங்கள் பாவங்கள் அழிந்து விடும். நாங்கள் ஒரு
சிவபாபாவைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்வதில்லை. நல்லது.
இனிமையிலும் இனிமையான
தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) நோக்கம் குறிக்கோளின் சித்திரத்தை (லட்சுமி-நாராயணர்) சதா
உடன் வைத்திருக்க வேண்டும். இப்போது நாம் ஸ்ரீமத் படி உலகத்தின்
எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்ற நஷா இருக்க வேண்டும்.
நாம் அத்தகைய மலர்களின் தோட்டத்திற்குச் செல்கிறோம், அங்கே
நம்முடைய கண்களே குளிர்ந்து போகும்.
2) சேவைக்கான மிகுந்த ஆர்வம் வைக்க வேண்டும். பரந்த மனம்
மற்றும் ஊக்கத்தோடு பெரிய-பெரிய சித்திரங்களை வைத்து சேவை
செய்ய வேண்டும். பிச்சைக்காரரில் இருந்து இளவரசராக ஆக வேண்டும்.
வரதானம்:
யக்ஞ சேவையின் மூலம் சர்வ
பிராப்திகளின் பிரசாதத்தைப் பெறக்கூடிய ஆல்ரவுண்ட் சேவாதாரி
ஆகுக.
சங்கமயுகத்தில் ஆல்ரவுண்ட்
சேவையின் வாய்ப்புக் கிடைப்பதும் கூட டிராமாவில் ஒரு லிஃப்ட்
ஆகும். யார் அன்போடு யக்ஞத்திற்கான ஆல்ரவுண்ட் சேவை
செய்கிறார்களோ, அவர்களுக்கு அனைத்துப் பிராப்திகளின் பிரசாதம்
தானாகவே கிடைத்து விடுகிறது. அவர்கள் நிர்விக்னமாக இருப்பார்கள்.
ஒரு தடவை சேவை செய்தார்கள் என்றால் ஆயிரம் தடவை சேவைக்கான பலன்
கிடைத்து விடுகிறது. சதா ஸ்தூல மற்றும் சூட்சும நங்கூரம்
இடப்பட்டிருக்க வேண்டும். யாரையும் திருப்திப் படுத்துவது
என்பது அனைத்திலும் பெரிய சேவையாகும். விருந்தோம்பல் செய்வது
அனைத்திலும் பெரிய பாக்கியமாகும்.
சுலோகன்:
சுவமானத்தில்
நிலைத்திருப்பீர்களானால் அநேக விதமான அபிமானங்கள் தாமாகவே
முடிந்து போகும்.
ஓம்சாந்தி