17.11.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! விகாரமற்ற
உலகை உருவாக்குவதற்காகவும், உங்களது நடத்தைகளை
சீராக்குவதற்காகவும் தந்தை வந்திருக்கின்றார், நீங்கள் சகோதர
சகோதரர்களாக இருக்கிறீர்கள், ஆகையால் உங்களது பார்வை மிகவும்
சுத்தமானதாக இருக்க வேண்டும்.
கேள்வி:
குழந்தைகளாகிய
நீங்கள்
கவலையற்ற
சக்கரவர்த்திகளாக
இருக்கிறீர்கள்,
இருப்பினும்
உங்களிடம்
ஒரு
முக்கிய
கவலை
அவசியம்
இருக்க
வேண்டும்,
அது
என்ன?
பதில்:
நான் தூய்மையற்ற நிலையிலிருந்து
தூய்மையாக எப்படி ஆவது? இது முக்கிய கவலையாகும்.
தந்தையினுடையவராக ஆகி பிறகு தந்தையின் முன் தண்டனை
அடையுமளவிற்கு இருக்கக் கூடாது. தண்டனையிலிருந்து விடுபட
வேண்டும் என்ற கவலை இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த
நேரத்தில் மிகுந்த வெட்கம் ஏற்படும். மற்றபடி நீங்கள் கவலையற்ற
சக்கரவர்த்திகள், அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை வழங்க
வேண்டும். யாராவது புரிந்து கொள்கின்றனர் எனில் எல்லையற்ற
எஜமானர்களாக ஆவார்கள், புரிந்து கொள்ளவில்லையெனில் அது அவர்களது
அதிர்ஷ்டம் ! உங்களுக்கு கவலையில்லை.
ஓம்சாந்தி.
ஆன்மீகத் தந்தையாகிய சிவன் வந்து
தனது குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். அனைவருக்கும்
ஆன்மீகத் தந்தையானவர் ஒரே ஒருவர் ஆவார். முதன் முதலில் இந்த
விசயத்தைப் புரிய வைக்க வேண்டும். அப்பொழுது தான் மற்ற
விசயங்களை புரிந்து கொள்வதும் எளிதாக இருக்கும். ஒருவேளை
தந்தையின் அறிமுகமே கொடுக்க வில்லையெனில் கேள்விகளைக் கேட்டுக்
கொண்டே இருப்பார்கள். முதன் முதலில் இந்த நிச்சயம் ஏற்படுத்த
வேண்டும். கீதையின் பகவான் யார்? என்பது முழு உலகத் தினருக்கும்
தெரியாது. அவர்கள் கிருஷ்ணர் என்று கூறிவிடுவர். பரம்பிதா
பரமாத்மா சிவன் தான் கீதையின் பகவான் என்று நாம் கூறுகிறோம்.
அவர் தான் ஞானக் கடலானவர். முக்கியமானது அனைத்து சாஸ்திரங்களின்
சிரோன்மணி யானது கீதையாகும். ஹே பிரபு, உங்களது வழியானது
அப்பாற்பட்டது என்று பகவானுக்குத் தான் கூறுகிறோம். கிருஷ்ணரை
இவ்வாறு கூறுவது கிடையாது. தந்தை சத்தியமானவர், அவர் அவசியம்
சத்தியமானதைத் தான் கூறுவார். உலகம் முதலில் புதிதாக சதோ
பிரதானமாக இருந்தது. இப்பொழுது உலகம் பழையதாக, தமோ பிரதானமாக
இருக்கிறது. உலகை மாற்றக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். தந்தை
எவ்வாறு மாற்றுகின்றார்? என்பதையும் புரிய வைக்க வேண்டும்.
ஆத்மா எப்பொழுது சதோ பிரதானமாக ஆகிறதோ அப்பொழுது தான் சதோ
பிரதான உலகம் ஸ்தாபனை ஆகும். முதன் முதலில் குழந்தைகளாகிய
நீங்கள் உள்நோக்கு முகமுடையவர் களாக ஆக வேண்டும். அதிகமாகப்
பேசக் கூடாது. உள்ளுக்குள் நுழைந்ததும் பல சித்திரங்களைப்
பார்த்து கேட்டுக் கொண்டே இருப்பர். முதலில் ஒரே ஒரு விசயத்தைத்
தான் புரிய வைக்க வேண்டும். அதிகம் கேட்பதற்கு வாய்ப்பு
கொடுக்கக் கூடாது. முதலில் ஒரு விசயத்தின் மீது நிச்சயம்
செய்யுங்கள், பிறகு மற்ற விசயங்களைப் புரிய வைக்கின்றோம். அதன்
பிறகு நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தில் கொண்டு வரலாம். நான் பல
பிறவிகளின் கடைசியில் பிரவேசிக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார்.
நீ உனது பிறப்புகளைப் பற்றி அறியவில்லை என்று இவருக்கும் தந்தை
கூறுகின்றார். தந்தை நமக்கு பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் புரிய
வைக்கின்றார். முதன் முதலில் அல்லா (இறைவன்) பற்றி தான் புரிய
வைக்க வேண்டும். இறைவனை ப்புரிந்து கொண்டால் பிறகு எந்த
சந்தேகமும் ஏற்படாது. தந்தை சத்தியமானவர், அவர் ஒருபொழுதும்
பொய் யுரைக்க மாட்டார் என்று கூறுங்கள். எல்லையற்ற தந்தை தான்
இராஜயோகம் கற்பிக்கின்றார். சிவராத்திரி கொண்டாடப்படுகிறது
எனில், அவசியம் சிவன் இங்கு வந்திருக்க வேண்டும் அல்லவா!
கிருஷ்ண ஜெயந்தியும் இங்கு தான் கொண்டாடப்படுகிறது. நான்
பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை செய்கிறேன் என்று கூறுகின்றார்.
அந்த ஒரே ஒரு நிராகார தந்தையின் குழந்தைகளாக அனைவரும்
இருக்கிறீர்கள். நீங்களும் அவரது குழந்தைகளாக இருக்கிறீர்கள்
மற்றும் பிரஜாபிதா பிரம்மாவிற்கும் குழந்தைகளாக இருக்கிறீர்கள்.
பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை செய்கிறார் எனில், அவசியம்
பிராமண பிராமணிகள் இருப்பார்கள். சகோதரன், சகோதரிகளாக
ஆகிவிடுகிறீர்கள், தூய்மையாக இருக்கிறீர்கள். இல்லறத்தில்
இருந்தாலும் தூய்மையாக இருப்பதற்கான நியமம் இதுவாகும். சகோதர
சகோதரிகள் எனில், ஒருபொழுதும் குற்றப் பார்வை இருக்கக் கூடாது.
21 பிறவிகளுக்கு பார்வை தூய்மையாகி விடுகிறது. தந்தை தான்
குழந்தைகளுக்கு போதனைகள் கொடுப்பார் அல்லவா! நடத்தை களை
சீராக்குகின்றார். இப்பொழுது முழு உலகின் நடத்தை மாற வேண்டும்.
இந்த பழைய பதீத உலகில் யாரிடத்திலும் நல்ல நடத்தை கிடையாது.
அனைவரிடத்திலும் விகாரம் இருக்கிறது. இது பதீதமான விகார
உலகமாகும். பிறகு விகாரமற்ற உலகமாக எப்படி மாறும்? தந்தையைத்
தவிர யாரும் உருவாக்கி விட முடியாது. இப்பொழுது தந்தை தூய்மை
யாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார். இவை அனைத்தும் குப்தமான (மறைவான)
விசயமாகும். நாம் ஆத்மாக்கள், ஆத்மாவானது பரமாத்மாவை சந்திக்க
வேண்டும். பகவானை சந்திப்பதற்காகவே அனைவரும் முயற்சி செய்து
கொண்டிருக்கின்றனர். பகவான் நிராகாரமானவர் ஆவார். முக்தி
கொடுப்பவர் (லிபரேட்டர்), வழிகாட்டி என்று பரமாத்மா தான்
கூறப்படு கின்றார். மற்ற தர்மத்தைச் சார்ந்த யாரையும் முக்தி
கொடுப்பவர், வழிகாட்டி என்று கூறுவது கிடையாது. பரம்பிதா
பரமாத்மா வந்து தான் முக்தி கொடுக்கின்றார், அதாவது தமோ
பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆக்குகின்றார். வழிகாட்டவும்
செய்கின்றார். ஆக முதன் முதலில் இந்த ஒரே ஒரு விசயத்தை
புத்தியில் அமரச் செய்யுங்கள். ஒருவேளை புரிந்து
கொள்ளவில்லையெனில் விட்டு விடுங்கள். இறைவனைப் புரிந்து
கொள்ளவில்லை யெனில் ஆஸ்தி எப்படி அடைய முடியும், சென்று
விடுவார்கள். நீங்கள் குழப்பமடையாதீர்கள். நீங்கள் கவலையற்ற
சக்கரவர்த்திகள் ஆவீர்கள். அசுரர்களின் தடைகள் ஏற்படத்தான்
செய்யும். இது ருத்ர ஞான யக்ஞமாகும். ஆக முதலில் தந்தையின்
அறிமுகம் கொடுக்க வேண்டும். தந்தை கூறுகின்றார் - மன்மனாபவ.
எந்த அளவிற்கு முயற்சி செய்வீர்களோ அந்த அளவிற்கு பதவி
அடைவீர்கள். ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. அது லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் ஆகும்.
மற்ற தர்மத்தைச் சார்ந்த யாரும் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வது
கிடையாது. தந்தை வந்து அனைவருக்கும் முக்தி கொடுக்கின்றார்.
பிற மத ஸ்தாபகர்கள் அவரவர்களது நேரத்தில் வந்து அவர்களது
மதங்களை ஸ்தாபனை செய்கின்றனர். விருத்தியும் அடையும்.
பதீதமாகவும் ஆகியே தீர வேண்டும். பதீதத்திலிருந்து பாவனம்
ஆக்குவது ஒரே ஒரு தந்தையின் காரியமாகும். அவர்கள் வந்து
தர்மத்தை மட்டுமே ஸ்தாபனை செய்வார்கள். இதில் மகிமைக்கான விசயம்
ஏதுமில்லை. மகிமை ஒரே ஒருவருக்கு மட்டுமே. அவர்கள்
கிறிஸ்துவிற்கு எவ்வளவு மகிமை செய்கின்றனர்! முக்தி கொடுப்பவர்,
வழி காட்டியாக இருப்பவர் ஒரே ஒரு தந்தை மட்டுமே என்று
அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். மற்றபடி கிறிஸ்து வந்து
என்ன செய்தார்? அவருக்குப் பின்னால் கிறிஸ்தவ தர்மத்தைச்
சார்ந்த ஆத்மாக்கள் வந்து கொண்டே இருப்பர், கீழே இறங்கிக்
கொண்டே இருப்பர். துக்கத்திலிருந்து விடுவிப்பவர் ஒரே ஒரு தந்தை
ஆவார். இது போன்ற அனைத்து கருத்துகளையும் நல்ல முறையில்
புத்தியில் தாரணை செய்ய வேண்டும். ஒரே ஒரு இறைவன் தான்
கருணையுடையவர் என்று கூறப்படுகின்றார். கிறிஸ்து எந்த கருணையும்
காண்பிப்பது கிடையாது. எந்தவொரு மனிதனும் யார் மீதும் கருணை
காண்பிப்பது கிடையாது. கருணை என்றால் எல்லையற்றது ஆகும். ஒரே
ஒரு தந்தை மட்டுமே அனைவர் மீதும் கருணை காட்டுகின்றார்.
சத்யுகத்தில் அனைவரும் சுகம், சாந்தியுடன் இருப்பர்.
துக்கத்திற்கான விசயமே கிடையாது. குழந்தைகள் யாரையும் இறைவனின்
மீது நம்பிக்கை ஏற்படுத்துவது கிடையாது, மற்ற விசயங்களில்
சென்று விடுகிறீர்கள், பிறகு (அவர்களது கேள்வி களினால்) தொண்டை
வரண்டு விட்டது என்று கூறுகிறீர்கள். முதலில் தந்தையின்
அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் மற்ற விசயங்களில்
செல்லவே வேண்டாம். தந்தை சத்தியத்தை மட்டுமே கூறுவார் அல்லவா
என்று கூறுங்கள். பிரம்மா குமார், குமாரிகளாகிய நமக்கு தந்தை
தான் கூறுவார் அல்லவா! இந்த சித்திரங்கள் அனைத்தும் அவர்
உருவாக்கியது ஆகும், இதில் சந்தேகம் வரக்கூடாது. சந்தேக புத்தி
அழிவைத் தரும். முதலில் நீங்கள் தன்னை ஆத்மா என்று புரிந்து
கொண்டு தந்தையை நினைவு செய்தால் விகர்மங்கள் அழிந்து விடும்.
வேறு எந்த உபாயமும் கிடை யாது. பதீத பாவன் ஒரே ஒருவர் அல்லவா!
தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விடுத்து என் ஒருவனை நினைவு
செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தந்தை எந்த உடலில்
பிரவேசம் செய்கிறாரோ அவரும் முயற்சி செய்து சதோ பிரதானமாக ஆக
வேண்டும். முயற்சியின் மூலம் தான் அடைய முடியும், பிறகு பிரம்மா
மற்றும் விஷ்ணுவிற்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் கூறுகின்றார்.
தந்தை பிராமணர்களாகிய உங்களுக்கு இராஜ யோகம் கற்பிக்கின்றார்
எனில், நீங்கள் விஷ்ணுபுரிக்கு எஜமானர்களாக ஆகிறீர்கள். பிறகு
நீங்கள் தான் 84 பிறவிகள் எடுத்து கடைசியில் சூத்திரர்களாக
ஆகிறீர்கள். பிறகு தந்தை வந்து சூத்திரனிலிருந்து பிராமணர்களாக
ஆக்குகின்றார். இவ்வாறு வேறு யாரும் கூற முடியாது. முதல் விசயம்
தந்தையின் அறிமுகம் கொடுப்பதாகும். பதீதமானவர்களை பாவனம்
ஆக்குவதற்கு நான் தான் இங்கு வர வேண்டியிருக்கிறது என்று தந்தை
கூறுகின்றார். மேலிருந்து தூண்டுதல் கொடுக்கிறேன் என்பது
கிடையாது. இவரது பெயர் தான் பகீரதன் (பாக்கிய ரதம்) ஆகும். ஆக
அவசியம் இவரிடத்தில் தான் பிரவேசம் செய்வேன். இது இவரது பல
பிறவிகளின் கடைசிப் பிறவியாகும். மீண்டும் சதோ பிரதான மாக
ஆகின்றார். அதற்கு தந்தை யுக்தி கூறுகின்றார் - தன்னை ஆத்மா
என்று புரிந்து கொண்டு என்னை நினைவு செய்யுங்கள். நான் தான்
சர்வசக்திவான். என்னை நினைவு செய்தால் தான் உங்களுக்கு சக்தி
கிடைக்கும். நீங்கள் உலகிற்கு எஜமானர்களாக ஆவீர்கள். இந்த
லெட்சுமி நாராயணனுக்கான ஆஸ்தி இவர்களுக்கு தந்தையிடமிருந்து
கிடைத்திருக் கிறது. எப்படி அடைந்தனர்? என்பதை புரிய
வைக்கின்றார். கண்காட்சி, மியூசியம் போன்றவைகளிலும் முதலில் ஒரு
விசயத்தைப் புரிந்து கொள்ளுங்கள், பிறகு மற்ற சித்திரங்களைப்
பார்க்கச் செல்லாம் என்று நீங்கள் கூறி விடுங்கள். இது புரிந்து
கொள்வது மிகவும் அவசியமானது ஆகும். இல்லையெனில் நீங்கள்
துக்கத்திலிருந்து விடுபட முடியாது. முதலில் உங்களுக்கு
நிச்சயம் ஏற்படாத வரை உங்களால் எதுவும் புரிந்து கொள்ள முடியாது.
இந்த நேரத்தில் உலகம் மிகவும் மோசமானதாக இருக்கிறது. தேவி
தேவதைகளின் உலகம் சிரேஷ்டமானதாக இருந்தது. இவ்வாறு புரிய வைக்க
வேண்டும். மனிதர்களின் நாடியும் பார்க்க வேண்டும் - சிறிதாவது
புரிந்து கொள்கிறாரா? அல்லது தோசைக் கல் போன்று இருக்கிறாரா?
ஒருவேளை தோசைக் கல் போன்று இருக்கிறார் எனில் விட்டு விட
வேண்டும். நேரத்தை வீணாக்கக் கூடாது. சாதகப் பறவை மற்றும்
தகுதியானவரை பகுத்தறிவதற்கு புத்தி தேவை. யார் புரிந்து
கொள்கிறார்களே அவர்களது முகமே மாறி விடும். முதலில் குஷிக்கான
விசயத்தைக் கூற வேண்டும். எல்லையற்ற தந்தையிடமிருந்து
எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கிறது அல்லவா! நினைவு யாத்திரையில்
குழந்தைகள் மிகவும் மந்தமாக இருக்கின்றனர் என்பதை பாபா அறிவார்.
தந்தையை நினைவு செய்வதில் தான் முயற்சி இருக்கிறது. அதில் தான்
மாயை அதிக தடைகளை உருவாக்குகிறது. இந்த விளையாட்டும்
உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த விளையாட்டு எப்படியெல்லாம்
உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தந்தை வந்து புரிய
வைக்கின்றார். உலக மனிதர்கள் துளியளவும் அறியாமல் இருக்கின்றனர்.
தந்தையின் நினைவில் இருந்து நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய
வைக்கும் பொழுது ஏக்ரஸாக (ஒரே மன நிலையுடன்) இருப்பீர்கள்,
இல்லையெனில் ஏதாவது குறைகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
நீங்கள் எந்த கஷ்டத்தையும் எடுத்துக் கொள்ளாதீர் கள். அவசியம்
ஸ்தாபனை ஆகியே தீரும். யாராலும் தடுக்க முடியாது.
மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். தந்தையிடமிருந்து நாம்
எல்லையற்ற ஆஸ்தியடைந்து கொண்டிருக் கிறோம். என் ஒருவனை நினைவு
செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். மிக அன்பாக அமர்ந்து
புரிய வைக்க வேண்டும். தந்தையை நினைவு செய்து ஆனந்தக் கண்ணீர்
வந்து விட வேண்டும். மற்ற அனைத்து சம்மந்தங்களும்
கலியுகத்தினுடையது. இது ஆன்மீகத் தந்தையின் சம்மந்தமாகும்.
உங்களது இந்த ஆனந்தக் கண்ணீரும் வெற்றி மாலையில் மணியாக
ஆகிவிடும். இவ்வாறு மிக அன்பாக நினைவு செய்பவர்கள் மிகவும்
குறைவாக இருக்கின்றனர். முயற்சி செய்து எவ்வளவு முடியுமோ தனது
நேரத்தை ஒதுக்கி தனது எதிர்காலத்தை உயர்வானதாக ஆக்கிக் கொள்ள
வேணடும். கண்காட்சிகளில் இவ்வாறு அதிகமான குழந்தைகள் இருக்கக்
கூடாது. அதிகபடியான சித்திரங்களின் அவசியமும் இல்லை. முதல்
நம்பர் சித்திரம் - கீதையின் பகவான் யார்? அதன் அருகில்
லெட்சுமி நாராயணன், ஏணிப்படி படம் வைக்க வேண்டும். அவ்வளவு
தான் ! மற்றபடி இவ்வளவு சித்திரங்கள் பயனற்றதாகும்.
குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு முடியுமோ நினைவு யாத்திரையை
அதிகப்படுத்த வேண்டும். பதீதத்திலிருந்து பாவனமாக எப்படி ஆவது?
என்ற முக்கிய கவலை மட்டுமே இருக்க வேண்டும். பாபாவின்
குழந்தையாகி பிறகு பாபா வின் முன் சென்று தண்டனை அடைவது என்பது
மிகவும் துர்கதிக்கான விசயமாகும். இப்பொழுது நினைவு
யாத்திரையில் இல்லையெனில் பிறகு தந்தையின் முன் தண்டனை
அடைகின்ற பொழுது மிகவும் வெட்கப்பட வேண்டியிருக்கும்.. தண்டனை
அடையக் கூடாது என்ற கவலை அதிகம் இருக்க வேண்டும். நீங்கள் ஞான
மழை பொழியும் (ரூப்) ஞானம் நிறைந்தவராகவும் இருக்கிறீர்கள்,
(பசந்த்) யோகியாகவும் இருக்கிறீர்கள். நானும் ஞான மழை பொழியும்
ரூப் மற்றும் பசந்த் ஆக இருக்கிறேன் என்று பாபாவும்
கூறுகின்றார். மிகச் சிறிய புள்ளியாக இருக்கிறேன், ஆனால் ஞானக்
கடலாகவும் இருக்கிறேன். உங்களது ஆத்மாவில் முழு ஞானத்தையும்
நிரப்புகிறேன். 84 பிறவிகளின் முழு ரகசியமும் உங்களது
புத்தியில் இருக்கிறது. நீங்கள் ஞான சொரூபமாகி ஞான மழை
பொழிகிறீர்கள். ஞானத்தின் ஒவ்வொரு ரத்தினமும் எவ்வளவு விலை
மதிக்க முடியாததாக இருக்கிறது! இதை யாராலும் விலை நிர்ணயிக்க
முடியாது. அதனால் தான் பத்மாபதம் பாக்கியசாலிகள் என்று பாபா
கூறுகின்றார். உங்களது பாதங்களில் தாமரை மலரின் அடையாளமும்
காண்பிக்கின்றனர். இதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
மனிதர்கள் பதம்பதி (செல்வந்தர்) என்று பெயர் வைத்துக்
கொள்கின்றனர். இவர்களிடத்தில் அதிக செல்வம் உள்ளதாக நினைக்
கின்றனர். செல்வந்தர் என்ற பட்டப் பெயரும் வைத்துக்
கொள்கின்றனர். தந்தை அனைத்து விசயங்களையும் புரிய வைக்
கின்றார். இருப்பினும் மூல விசயமாகிய தந்தையை மற்றும் 84
பிறவிச் சக்கரத்தை நினைவு செய்யுங்கள். இந்த ஞானம்
பாரதவாசிகளுக்காக மட்டுமே. நீங்கள் தான் 84 பிறவிகள்
எடுக்கிறீர்கள். இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயம்
அல்லவா! வேறு எந்த சந்நியாசி போன்றவர்களை சுயதரிசன சக்கரதாரி
என்று கூறுவது கிடையாது. தேவதைகளையும் கூற முடியாது.
தேவதைகளிடத்திலும் ஞானம் கிடையாது. நம்மிடம் முழு ஞானமும்
இருக்கிறது, இந்த லெட்சுமி நாராயணனிடத்தில் கிடையாது என்று
நீங்கள் கூறுகிறீர்கள். தந்தை யதார்த்த விசயங்களை புரிய
வைக்கின்றார் அல்லவா!
இந்த ஞானம் மிகவும்
அதிசயமானதாகும். நீங்கள் எவ்வளவு மறைவான மாணவர்களாக
இருக்கிறீர்கள்! நாம் பாடசாலைக்குச் செல்கிறோம், பகவான் நமக்கு
படிப்பு கற்பிக்கின்றார் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
இலட்சியம், குறிக்கோள் என்ன? நாம் இவ்வாறு (லெட்சுமி, நாராயணன்)
ஆவோம். மனிதர்கள் இதை கேட்கும் பொழுது ஆச்சரியப்படுவார்கள்.
நாம் நமது தலைமை நிலையத்திற்குச் செல்கிறோம். என்ன
படிக்கிறீர்கள்? மனிதனிலிருந்து தேவதை, பிச்சைக்காரனிலிருந்து
இளவரசர் ஆவதற்கான கல்வியைக் கற்றுக் கொண்டிருக் கிறோம். உங்களது
சித்திரங்களும் முதல் தரமானதாக இருக்கிறது. பாத்திரம் அறிந்து
தான் தானம் செய்யப்படும். பாத்திர மானவர்கள் உங்களுக்கு எங்கு
கிடைப்பார்கள்? சிவன், லெட்சுமி-நாராயணன், ராமர்-சீதை
கோயில்களில். அங்கு சென்று நீங்கள் அவர்களுக்கு சேவை
செய்யுங்கள். தனது நேரத்தை வீணாக்காதீர்கள். கங்கை
நதிக்கரைக்குச் சென்றும் நீங்கள் புரிய வையுங்கள் - பதீத பாவனி
கங்கையா? அல்லது பரம்பிதா பரமாத்மாவா? இந்த தண்ணீர்
அனைவருக்கும் சத்கதி கொடுக்குமா? அல்லது எல்லையற்ற தந்தை
கொடுப்பாரா? நீங்கள் இதைப் பற்றி நல்ல முறையில் புரிய வைக்க
முடியும். உலகிற்கு எஜமானர் ஆவதற்கான வழி கூறுகிறீர்கள். தானம்
செய்கிறீர்கள், சோழி போன்ற மனிதர்களை உலகிற்கு எஜமானர்களாக
ஆக்குகிறீர்கள். பாரதம் உலகிற்கு எஜமானாக இருந்தது அல்லவா!
பிராமணர்களாகிய உங்களது குலம் தேவதைகளை விட உயர்ந்ததாகும். நான்
பாபாவின் ஒரே ஒரு செல்லமான குழந்தை, பாபா எனது இந்த சரீரத்தை
கடனாக எடுத்திருக்கின்றார் என்பதை இந்த பாபாவும்
புரிந்திருக்கின்றார். உங்களைத் தவிர வேறு யாரும் இந்த
விசயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. பாபா என் மீது சவாரி
செய்கின்றார். நான் பாபாவை எனது தலையில் அணியும் தொப்பி போல
அமர்த்தி யிருக்கிறேன். அதாவது சேவை செய்வதற்காக சரீரத்தைக்
கொடுத்திருக்கிறேன். அதற்குக் கைமாறாக அவர் எவ்வளவு
கொடுக்கின்றார்! அவர் நம் அனைவரையும் மிக உயர்ந்தவர்களாக அதாவது
தோள்பட்டையில் அமரச் செய்கின்றார். நம்பர் ஒன்னாக அழைத்துச்
செல்கின்றார். தந்தைக்கு குழந்தைகள் மிகவும் அன்பானவர்களாக
இருப்பர், ஆக அவர்களை தோள்பட்டையில் அமர்த்துவார் அல்லவா! தாய்
குழந்தையை மடி வரை மட்டுமே கொண்டு செல்வாள், ஆனால் தந்தை தோள்
பட்டையில் அமரச் செய்வார். பள்ளிக் கூடத்தை ஒருபொழுதும் கற்பனை
என்று கூறமாட்டார்கள். பள்ளியில் சரித்திர பூகோளம்
படிக்கின்றனர் எனில், அது கற்பனையா என்ன? இதுவும் உலக சரித்திர
பூகோளம் அல்லவா! நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்காண முக்கிய சாரம்:
1) மிகவும் அன்புடன் அமர்ந்து ஆன்மீகத் தந்தையை நினைவு செய்ய
வேண்டும். நினைவு செய்யும் பொழுது ஆனந்தக் கண்ணீர் வந்து விட
வேண்டும், அந்தக் கண்ணீர் வெற்றி மாலையில் மணியாக ஆகிவிடும்.
எதிர்கால பிராப்தியை உருவாக்குவதில் தனது நேரத்தை
வெற்றியுடையதாக ஆக்க வேண்டும்.
2) உள்நோக்கு முகமுடையவராகி அனைவருக்கும் இறைவனின் அறிமுகத்தைக்
கொடுக்க வேண்டும், அதிகமாக பேச வேண்டாம். தண்டனை அடையுமளவிற்கு
எந்த காரியமும் செய்யக் கூடாது என்ற ஒரு கவலை மட்டுமே இருக்க
வேண்டும்.
வரதானம்:
சுப பாவனை மூலமாக சேவை செய்யக்
கூடிய தந்தைக்கு சமானமாக அபகாரிகள் மீதும் உபகாரம் (தீமை
செய்பவர்களுக்கும் நன்மை செய்தல்) செய்பவர்கள் ஆவீர்களாக.
எப்படி தந்தை அபகாரிகள் மீதும்
உபகாரம் செய்கிறாரோ, அதே போல உங்கள் முன்னால் எப்பேர்ப்பட்ட
ஆத்மா இருந்தாலும் சரி, ஆனால் உங்களுடைய கருணையின் உள்ளுணர்வு
மூலமாக, சுபபாவனை மூலமாக அதை பரிவர்த்தனை செய்து விடுங்கள் -
இதுவே உண்மையான சேவை ஆகும். எப்படி (சையன்ஸ்) விஞ்ஞானிகள்
மணலில் கூட பயிர்களை உற்பத்தி செய்து விடுகிறார்கள். அதே போல (சைலன்ஸ்)
அமைதியின் சக்தி மூலமாக கருணையுள்ளம் உடையவராக ஆகி, அபகாரிகள்
மீதும் உபகாரம் செய்து பூமியை பரிவர்த்தனை செய்யுங்கள்.
சுயமாற்றம் மூலமாக, சுபபாவனை மூலமாக எப்பேர்ப்பட்ட ஆத்மா கூட
பரிவர்த்தனை ஆகி விடும். ஏனெனில் சுபபாவனை அவசியம் வெற்றியை
பிராப்தி செய்விக்கிறது.
சுலோகன்:
ஞானத்தை சிந்தனை செய்வது தான்,
எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஆதாரம் ஆகும்.
ஓம்சாந்தி