13.11.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! இது
கண்ணாமூச்சி விளையாட்டாகும், அடிக்கடி தந்தையை மறந்து
விடுகிறீர்கள், நிச்சய புத்தியுள்ளவராகினீர்கள் என்றால் இந்த
விளையாட்டில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள்.
கேள்வி:
இறுதிக்
காலத்தைப்
பார்த்துக்
கொண்டிருந்தாலும்
குழந்தைகளாகிய
உங்களின்
கடமை
என்ன?
பதில்:
உங்களின் கடமை தனது படிப்பில்
நல்ல விதமாக ஈடுபட வேண்டும், வேறு விஷயங்களில் போகக் கூடாது.
தந்தை உங்களை கண்ணுக்குள் அமர வைத்து கழுத்தின் மாலையாக ஆக்கி
உடன் அழைத்துச் செல்வார். மற்றவர்கள் தம் கணக்கு வழக்குகளை
முடித்துக் கொண்டு செல்லத்தான் வேண்டும். தந்தை தன்னுடன்
வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார்.
பாடல்:
தூர தேசத்தில் வசிப்பவர். . .
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக்
குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கிறார் - குறிப்பாக பாரதமும்,
பொதுவாக முழு உலகமும் அமைதி ஏற்பட வேண்டும் என விரும்பு
கின்றனர். இப்போது இதைப் புரிந்து கொள்ள வேண்டும் - கண்டிப்பாக
உலகத்தின் எஜமான் தான் உலகில் அமைதியை ஸ்தாபனை செய்கிறார்.
வந்து உலகில் அமைதியை பரவச் செய்யுங்கள் என இறைத் தந்தையைத்தான்
அழைக்க வேண்டும். யாரை அழைப்பது என்பதும் கூட பாவம்
அவர்களுக்குத் தெரியாது. முழு உலகின் விஷயம் அல்லவா? முழு
உலகிலும் அமைதி வேண்டும் என விரும்புகின்றனர். இப்போது
அமைதியின் இடம் தனிப் பட்டது, அங்கே தந்தையும், ஆத்மாக்களாகிய
நீங்களும் வசிக்கிறீர்கள். இதுவும் கூட எல்லைக் கப்பாற்பட்ட
தந்தைதான் புரிய வைக்கிறார். இப்போது இந்த உலகில் அளவற்ற
மனிதர்கள் இருக்கின்றனர், பல தர்மங்கள் இருக்கின்றன. ஒரு தர்மம்
(வழி) என ஏற்பட்டுவிட்டால் அமைதி உண்டாகும் எனக் கூறுகின்றனர்.
அனைத்து தர்மங்களும் இணைந்து ஒன்றாக முடியாது. திரிமூர்த்தியின்
மகிமையும் உள்ளது. திரிமூர்த்தியின் படத்தை நிறைய வைக்கின்றனர்.
பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை எனவும் தெரிந்துள்ளனர், எதனுடைய
ஸ்தாபனை? அமைதி யினுடையது மட்டுமல்ல. அமைதி மற்றும் சுகத்தின்
ஸ்தாபனை ஆகிறது. இந்த பாரதத்தில் தான் 5 ஆயிரம் வருடங்களுக்கு
முன்பு இவர்களுடைய இராஜ்யம் இருந்தபோது கண்டிப்பாக மற்ற
ஜீவாத்மாக்கள் ஜீவனை விடுத்து தமது வீட்டிற்குச்
சென்றிருப்பார்கள். இப்போது ஒரு தர்மம், ஒரு இராஜ்யம், ஒரு மொழி
வேண்டும் என விரும்புகின்றனர். தந்தை அமைதி, சுகம், செல்வம்
இவைகளை ஸ்தாபனை செய்து கொண்டிருக் கிறார் என இப்போது குழந்தை
களாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். ஒரு இராஜ்யமும் கூட
கண்டிப்பாக இங்கேதான் இருக்கும் அல்லவா? ஒரு இராஜ்யத்தின்
ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது என்பது புதிய விஷயம் ஏதும் இல்லை.
பல முறை ஒரு இராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகியுள்ளது. பிறகு பல
தர்மங்களின் வளர்ச்சி ஆகி ஆகி மரம் பெரிதாக ஆகி விடுகிறது,
பின்னர் தந்தை வர வேண்டியிருக்கிறது. ஆத்மா தான் கேட்கிறது,
படிக்கிறது, ஆத்மாவில் தான் சம்ஸ்காரங்கள் உள்ளன. ஆத்மாக்
களாகிய நாம் வித விதமான சரீரங்களை எடுக்கிறோம். குழந்தைகளுக்கு
இந்த நிச்சய புத்தி ஏற்படுவதிலும் மிகவும் உழைக்க வேண்டியுள்ளது.
பாபாவை அடிக்கடி மறந்து விடுகிறோம் என சொல்கின்றனர். இது
கண்ணாமூச்சி விளையாட்டாகும் என தந்தை புரிய வைக்கிறார். இதில்
நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நாம் நம்முடைய வீடு
அல்லது இராஜ்யத்திற்கு எப்படி செல்லப் போகிறோம் என்பது தெரியாது.
இப்போது தந்தை புரிய வைத்துள்ளார், முன்னர் எதுவும்
தெரிந்திருக்கவில்லை. ஆத்மா எந்த அளவு கல் புத்தியாகி விடுகிறது.
கல் புத்தி மற்றும் தங்க புத்தி பாரதத்தில்தான் பாடப்படுகிறது.
கல் புத்தி ராஜாக்களும் தங்க புத்தி ராஜாக்களும் இங்கேதான்
இருக்கின்றனர். பாரஸ்நாதரின் கோவிலும் உள்ளது. ஆத்மாக் களாகிய
நாம் எங்கிருந்து நடிப்பதற்காக வந்தோம் என்பதை நீங்கள் இப்போது
அறிவீர்கள். முன்னர் எதுவுமே தெரிந்திருக்கவில்லை. இது
முட்களின் காடு எனப்படுகிறது. இந்த முழு உலகமும் முள் நிறைந்த
காடாக உள்ளது. மலர்த் தோட்டத்தில் தீப்பிடித்தது என ஒருபோதும்
கேட்டிருக்க மாட்டோம். எப்போதும் காட்டில்தான் தீப்பிடிக்கிறது.
இதுவும் (பழைய உலகம்) கூட காடுதான், இதில் கண்டிப்பாக தீ பற்றப்
போகிறது. வைக்கோலில் தீ பற்றவுள்ளது. இந்த முழு உலகமுமே
வைக்கோல் போர் எனப்படுகிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள்
தந்தையைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். முன்னால்
அமர்ந்திருக்கிறீர்கள். உங்களிடம் தான் அமர்வேன். . .
என்றெல்லாம் பாடியுள்ளது அனைத்தும் இப்போது நடந்து
கொண்டிருக்கிறது. பகவானின் மகா வாக்கியம் எனில் கண்டிப்பாக
படிப்பார்கள் அல்லவா? பகவானுடைய மகா வாக்கியம் என்பது
குழந்தைகளுக்காகத்தான் இருக்கும் அல்லவா? பகவான்
படிப்பிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பகவான் யார்?
நிராகாரராகிய (உடலற்ற வராகிய) சிவனைத்தான் சொல்வோம். பகவான்
சிவனின் பூஜையும் இங்கே நடக்கிறது. சத்யுகத்தில் பூஜை முதலானவை
நடப்பதில்லை. நினைவும் செய்வதில்லை. பக்தர்களுக்கு சத்யுக
இராஜ்யத்தின் பலன் கிடைக்கிறது. நாம் அனைவரை விடவும் அதிகமாக
பக்தி செய்துள்ளோம், ஆகையால் நாம்தான் முதன் முதலாக தந்தையிடம்
வந்திருக்கிறோம் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பிறகு
நாம்தான் இராஜ்யத்தில் வரப் போகிறோம். ஆக, குழந்தைகள் புதிய
உலகத்தில் உயர் பதவி அடைவதற்காக முழுமையானமுயற்சி செய்ய
வேண்டும். இப்போது நாம் விரைவாக புதிய வீட்டிற்குச் செல்வோம்
என குழந்தைகளின் மனம் விரும்புகிறது. ஆரம்பத்தில்தான் புதிய
வீடாக இருக்கும், பிறகு பழையதாக ஆகியபடி செல்லும். வீட்டில்
குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக ஆகியபடி இருக்கும்.
புத்திரர்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரன்கள் - இவர்கள்
பழைய வீட்டில் வருவார்கள் அல்லவா? எங்களுடைய தாத்தா, கொள்ளுத்
தாத்தாக்களின் வீடு இது என சொல்வார்கள். பின்னால் வருபவர்களும்
நிறைய இருப்பார்கள் அல்லவா? எந்த அளவு விரைவாக முயற்சி
செய்வீர்களோ அந்த அளவு முதலில் புதிய வீட்டில் வருவீர்கள்.
முயற்சிக்கான யுக்தியை தந்தை மிகவும் எளிமையாகப் புரிய
வைக்கிறார். பக்தியிலும் முயற்சி செய்கின்றனர் அல்லவா? மிகவும்
பக்தி செலுத்துபவர்களின் பெயர் பிரபலமாகிறது. பல பக்தர்களின்
தபால் தலையைக் கூட வெளியிடுகின்றனர். ஞான மாலையைப் பற்றி
யாருக்கும் தெரியாது. முதலில் ஞானம், பிறகு பக்தி. இது
குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்கிறது. பாதி சமயம்
சத்யுகம் மற்றும் திரேதா யுகமாக உள்ளது. இப்போது குழந்தைகளாகிய
நீங்கள் ஞானம் நிறைந்தவராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆசிரியர்
எப்போதும் முழு ஞானமும் உள்ளவர்களாக இருப்பார்கள். மாணவர்களில்
வரிசைக்கிரமமாக மதிப்பெண்கள் எடுக்கின்றனர். இவர்
எல்லைக்கப்பாற்பட்ட ஆசிரியர். நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட
மாணவர்கள், மாணவர்கள் வரிசைக்கிரமமாகத்தான் தேர்ச்சி அடைவார்கள்
- கல்பத்திற்கு முன்பு நடந்தது போல. நீங்கள்தான் 84 பிறவிகள்
எடுத்தீர்கள். 84 பிறவிகளில் 84 ஆசிரியர்கள் இருப்பார்கள்.
மறுபிறவி கண்டிப்பாக எடுக்கத்தான் வேண்டும். முதலில்
கண்டிப்பாக சதோபிரதானமான உலகம் இருக்கும், பிறகு பழைய
தமோபிரதானமான உலகமாக ஆகும். மனிதர்களும் கூட தமோபிரதானமாக
இருப்பார்கள் அல்லவா? மரமும் கூட முதலில் புதியதாக
சதோபிரதானமாக இருக்கும். புதிய இலைகள் மிகவும் நல்ல நல்லதாக
இருக்கும். இதுவோ எல்லைக்கப்பாற்பட்ட மரமாகும். அளவற்ற
தர்மங்கள் உள்ளன. உங்களின் புத்தி இப்போது எல்லைக்கப்பாற்பட்ட
இடத்திற்குச் செல்கிறது. எவ்வளவு பெரிய மரம். முதன் முதலாக ஆதி
சனாதன தேவி தேவதா தர்மம்தான் இருக்கும். பிறகு பல விதமான
தர்மங்கள் வரும். நீங்கள்தான் 84 விதமான பிறவிகள் எடுத்தீர்கள்.
அதுவும் அழிவற்றதாகும். ஒவ்வொரு கல்பமும் நாம் 84 பிறவிகளின்
சக்கரத்தில் சுற்றியபடி இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
84 பிறவிகளின் சக்கரத்தில் நாம்தான் வருவோம். 84 லட்சம்
பிறவிகள் எந்த மனிதரின் ஆத்மாவும் எடுக்காது. வித விதமான
விலங்குகள் நிறைய உள்ளன. அவைகளை எண்ணவும் முடியாது. மனிதர்களின்
ஆத்மா 84 பிறவிகள் எடுத்துள்ளன. ஆக இந்த நடிப்பை நடித்து
நடித்து ஒரேயடியாக களைத்து விட்டனர். துக்கம் மிக்கவர்களாக ஆகி
விட்டனர். ஏணியில் இறங்கியபடி சதோபிரதானத்தில் இருந்து
தமோபிரதானம் ஆகி விட்டனர். தந்தை பிறகு தமோபிரதானத்திலிருந்து
சதோபிரதானமாக ஆக்குகிறார். தந்தை சொல்கிறார் - நான் தமோபிரதான
சரீரத்தில் தமோபிரதான உலகில் வந்துள்ளேன். இப்போது முழு உலகமும்
தமோபிரதானமாக உள்ளது. மனிதர்கள் முழு உலகிலும் அமைதி எப்படி
ஏற்படும் என்று கேட்கின்றனர். உலகில் அமைதி எப்போது இருந்தது
என புரிந்து கொள்வதில்லை. உங்கள் வீட்டில் படங்கள்
வைத்துள்ளீர்கள் அல்லவா என தந்தை கேட்கிறார். இவர்களின்
இராஜ்யம் இருந்தபோது உலகில் அமைதி இருந்தது, அது சொர்க்கம் என
அழைக்கப்படுகிறது. புதிய உலகம்தான் சொர்க்கம், தங்க யுகம் என
அழைக்கப்படுகிறது. இப்போது இந்த பழைய உலகம் மாற வேண்டும். அந்த
இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. உலகில் இவர்களின்
இராஜ்யம் தான் இருந்தது. லட்சுமி நாராயணரின் கோவிலுக்கு நிறைய
மனிதர்கள் செல்கின்றனர். இவர்கள் தான் உலகின் எஜமானாக இருந்தனர்,
இவர்களுடைய இராஜ்யத்தில் கண்டிப்பாக சுகமும், அமைதியும்
இருந்தது என்பது யாருடைய புத்தியிலும் இல்லை. இவர்களுடைய
இராஜ்யம் இருந்தது 5 ஆயிரம் வருடத்தின் விசயமாகும். அரைக்
கல்பத்திற்குப் பிறகு பழைய உலகம் எனப்படுகிறது, ஆகையால்
வியாபாரிகள் அறையில் ஸ்வஸ்திக் சின்னத்தை எழுதி வைக்கின்றனர்.
அதற்கும் அர்த்தம் உள்ளதல்லவா? அதனை கணேசன் (வினாயகர்) என கூறி
விடுகின்றனர். கணேசரை பிறகு விக்னங்களை அழிப்பவர், தேவதை என
நினைகின்றனர். ஸ்வஸ்திக் சின்னத்தில் 4 பாகங்கள் முழுமையாக
இருக்கும். இவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். இப்போது தீபாவளி
கொண்டாடுகின்றனர், உண்மையில் சத்யமான தீபாவளி என்பது நினைவின்
யாத்திரைதான் ஆகும், அதன் மூலம் ஆத்மாவின் ஜோதி 21 பிறவிகளுக்கு
ஏற்றப்பட்டு விடுகிறது. மிகவும் அதிக வருமானம் ஏற்படுகிறது.
குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் குஷி ஏற்பட வேண்டும். இப்போது
புதிய உலகிற்கான உங்களுடைய புதிய கணக்கு தொடங்குகிறது. 21
பிறவிக்கான கணக்கை இப்போது நிரப்பிக் கொள்ள வேண்டும். தன்னை
ஆத்மா என புரிந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என
தந்தை குழந்தைகளுக்கு இப்போது புரிய வைக்கிறார். ஆத்மா என
புரிந்து கொண்டு கேட்டீர்கள் என்றால் குஷியும் இருக்கும். தந்தை
நமக்கு கற்பிக்கிறார். பகவானுடைய மகா வாக்கியமும் கூட அல்லவா!
பகவான் ஒருவர் தான்! கண்டிப்பாக அவர் வந்து சரீரத்தை எடுப்பார்
அப்போது பகவானுடைய மகா வாக்கியம் என்று சொல்லப்படும். இதுவும்
கூட யாருக்கும் தெரியாது, ஆகையினால்தான் எங்களுக்குத் தெரியாது,
தெரியாது என கூறி வந்தனர். அவர் பரமபிதா பரமாத்மா என சொல்லவும்
செய் கின்றனர். பிறகு எங்களுக்குத் தெரியாது என கூறி
விடுகின்றனர். சிவபாபா எனவும் சொல் கின்றனர், பிரம்மாவையும்
கூட பாபா என்று சொல்கின்றனர். விஷ்ணுவை ஒருபோதும் தந்தை என
சொல்வதில்லை. பிரஜாபிதா எனும்போது பாபா (அப்பா) ஆகிறார் அல்லவா?
நீங்கள் பி.கு. (பிரம்மா குமார்/குமாரிகள்) ஆகின்றீர்கள்.
பிரஜாபிதா என்ற பெயர் இல்லாததால் புரிந்து கொள்வதில்லை. இவ்வளவு
அளவற்ற பி.கு.க்கள் இருக்கின்றனர் எனும்போது கண்டிப்பாக
பிரஜாபிதாவாகத்தான் இருப்பார், ஆகையால் பிரஜாபிதா என்ற
வார்த்தையை கண்டிப்பாகப் போடுங்கள். அப்போது பிரஜாபிதா எனில்
நம்முடைய தந்தைதான் என்று புரிந்து கொள்வார்கள். புதிய சிருஷ்டி
கண்டிப்பாக பிரஜாபிதாவின் மூலம்தான் படைக்கப் படுகிறது.
ஆத்மாக்களாகிய நாம் சகோதர-சகோதரர்களாக இருக்கிறோம், பின்னர்
சரீரத்தை எடுத்துக் கொண்டு சகோதர-சகோதரி ஆகி விடுகிறோம்.
தந்தையின் குழந்தைகளோ அழிவற்றவர்கள், பிறகு சாகாரத்தில் சகோதர
சகோதரிகள் தேவை. ஆக பிரஜாபிதா பிரம்மா என்பது பெயராகும். ஆனால்
பிரம்மாவை நாம் நினைவு செய்வதில்லை. துக்கத்தில் தந்தையை
நினைக்கின்றனர், பிரம்மாவை அல்ல. ஓ, பகவானே என அழைப்பார்கள். ஓ
பிரம்மா என கூப்பிடுவதில்லை. சுகத்தில் இருக்கும்போது யாருடைய
நினைவும் செய்வதில்லை. அங்கே சுகமே சுகமாக இருக்கும். இதுவும்
கூட யாருக்கும் தெரியாது. இந்த சமயத்தில் 3 தந்தையர் உள்ளனர்
என நீங்கள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்தில் லௌகிக மற்றும்
பரலௌகிக தந்தையை நினைவு செய்கின்றனர். சத்யுகத்தில் லௌகிக
தந்தையை மட்டும் நினைவு செய்கின்றனர். சங்கம யுகத்தில்
மூவரையும் நினைக்கிறோம். லௌகிக தந்தையும் இருக்கிறார், ஆனால்
அவர் எல்லைக்குட்பட்டவர் என தெரிந்துள்ளனர். அவரிடமிருந்து
எல்லைக்குட்பட்ட ஆஸ்தி கிடைக்கிறது. இப்போது நமக்கு
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை கிடைத்திருக்கிறார், அவரிட மிருந்து
எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி கிடைக்கிறது. இது புரிந்து கொள்ளும்
விஷயமாகும். இப்போது எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, பிரம்மாவின்
உடலில் வந்திருக்கிறார் - குழந்தை களாகிய நமக்கு
எல்லைக்கப்பாற்பட்ட சுகத்தைக் கொடுப்பதற்கு. அவருடையவர்களாக
ஆகும்போது நாம் எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை அடைகிறோம். இது
பிரம்மாவின் மூலம் தாத்தாவின் ஆஸ்தி கிடைப்பது போலாகும், அவர்
சொல்கிறார் - ஆஸ்தி உங்களுக்கு நான் தருகிறேன். நான்
கற்பிக்கிறேன். ஞானம் என்னிடம் உள்ளது. மற்றபடி எந்த மனிதர்
களிடமும் ஞானம் இல்லை, தேவதைகளிடமும் ஞானம் இல்லை. ஞானம்
எனக்குள் உள்ளது. அதை நான் குழந்தைகளாகிய உங்களுக்குத்
தருகிறேன். இது ஆன்மீக ஞானமாகும்.
ஆன்மீகத் தந்தையிடமிருந்து நமக்கு இந்தப் பதவி கிடைக்கிறது
என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்படியாக சிந்தனைக் கடலைக் கடைய
வேண்டும். மனதின் வெற்றியே வெற்றி, மனதினால் தோல்வியே தோல்வி
என பாடல் உள்ளது. உண்மையில் மாயையின் மீது வெற்றி என சொல்ல
வேண்டும், ஏனென்றால் மனம் வெல்லப்பட முடியாதது. மனதிற்கு அமைதி
எப்படி ஏற்படும் என கேட்கின்றனர். மனதிற்கு அமைதி தேவை என
ஆத்மா எப்படி சொல்லும் என தந்தை கேட்கிறார். ஆத்மா சாந்தி
தாமத்தில்தான் வசிக்கிறது. சரீரத்தில் வரும்போது செயல்களைச்
செய்யத் தொடங்குகிறது. நீங்கள் இப்போது சுய தர்மத்தில் நிலையாக
இருங்கள், தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள் என தந்தை
கூறுகிறார். ஆத்மாவின் சுய தர்மம் அமைதியாகும். மற்றபடி
அமைதியை எங்கிருந்து தேடுவார்கள். இது குறித்து ஒரு ராணியின்
மாலை பற்றிய உதாரணக் கதை கூட உள்ளது. சன்னியாசிகள் உதாரணத்தைக்
கொடுக்கிறார்கள், பிறகு தாமே காட்டில் சென்று அமைதியைத்
தேடுகின்றனர். ஆத்மாக்களாகிய உங்களின் தர்மமே அமைதியாகும் என
தந்தை கூறுகிறார். சாந்தி தாமம் உங்களுடைய வீடு. அங்கிருந்து
நடிப்பை நடிப்பதற்காக நீங்கள் வருகிறீர்கள். சரீரத்தின் மூலம்
பிறகு கர்மம் செய்ய வேண்டியிருக்கிறது. சரீரத்திலிருந்து
தனிப்பட்டு விடும்போது அமைதி ஏற்பட்டு விடுகிறது. ஆத்மா சென்று
வேறொரு சரீரத்தை எடுத்து விட்டது, பிறகு ஏன் கவலைப்பட
வேண்டும். திரும்பி வரப்போவதில்லை. ஆனால் மோகப் பற்றுதல் அலைக்
கழிக்கிறது. அங்கே உங்களை மோகம் அலைக்கழிக்காது. அங்கே 5
விகாரங்கள் இருப்ப தில்லை. இராவண இராஜ்யமே இல்லை. அது இராம
இராஜ்யமாகும். எப்போதும் இராவண இராஜ்யமே இருந்தது என்றால்,
பிறகு மனிதர்கள் களைத்து விடுவார்கள். ஒருபோதும் சுகத்தைப்
பார்க்க முடியாது. இப்போது நீங்கள் ஆஸ்திகராக ஆகியுள்ளீர்கள்,
மேலும் திரிகால தரிசியாகவும் ஆகியிருக்கிறீர்கள். மனிதர்கள்
தந்தையை அறிவதில்லை, ஆகையால் நாஸ்திகர் கள் எனப்படுகின்றனர்.
இந்த சாஸ்திரங்கள் முதலானவைகள், இவை நடந்து முடிந்தவை,
இவையனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவையாகும் என இப்போது
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்போது நீங்கள் ஞான
மார்க்கத்தில் இருக்கிறீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை
எவ்வளவு அன்போடு கண்களில் வைத்து அழைத்துச் செல்கிறார்.
கழுத்தின் மாலையாக்கி அனைவரையும் அழைத்துச் செல்கிறேன்.
அனைவரையும் அழைக்கவும் செய்கின்றனர். காமச் சிதையில் அமர்ந்து
கருப்பாகி விட்டவர்களை ஞானச் சிதையில் அமர வைத்து கணக்கு
வழக்குகளை முடிக்க வைத்து திரும்ப அழைத்துச் செல்கிறேன்.
இப்போது உங்கள் வேலையே படிப்பாகும், மற்ற விஷயங்களில் ஏன்
செல்ல வேண்டும். எப்படி இறப்போம், என்ன நடக்கும். இந்த
விஷயங்களில் நாம் ஏன் செல்ல வேண்டும் ! இது இறுதிக்காலமாகும்,
அனைவரும் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு திரும்பிச்
சென்று விடுவார்கள். இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தின்
ரகசியம் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது, வேறு
யாருக்கும் தெரியாது. நாம் எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை
எடுப்பதற்காக தந்தை யிடம் ஒவ்வொரு கல்பத்திலும் வருகிறோம் என
குழந்தைகள் அறிவார்கள். நாம் ஜீவாத்மாக்கள் ஆவோம். பாபாவும்
தேகத்தில் வந்து பிரவேசமாகியிருக்கிறார். குழந்தைகளே, ஆத்ம
அபிமானி ஆகுங்கள், தந்தையை நினைவு செய்யுங்கள் என வேறு யாரும்
சொல்ல முடியாது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. நினைவின் யாத்திரையில் இருந்து உண்மையிலும் உண்மையான
தீபாவளியை தினம் தோறும் கொண்டாட வேண்டும். 21 பிறவிகளுக்காக
தமது புதிய கணக்கை சேமிக்க வேண்டும்.
2. நாடகத்தின் ரகசியத்தைப் புத்தியில் வைத்து படிப்பைத் தவிர
வேறு எந்த விஷயத்திலும் போகக் கூடாது. அனைத்து கணக்கு
வழக்குகளையும் முடிக்க வேண்டும்.
வரதானம்:
ஈடுபாடு என்ற அக்னியின் மூலம்
ஒரு தீபத்தினால் பல தீபங்களை ஏற்றக் கூடிய உண்மையான சேவாதாரி
ஆகுக.
தீபாவளியன்று ஒரு தீபத்தை வைத்து
பல தீபங்களை ஏற்றுவார்கள், தீபாவளி கொண்டாடுவார்கள். தீபத்தில்
நெருப்பு இருக்கும். அதே போன்று தீபங்களாகிய உங்களிடத்தில்
ஈடுபாடு என்ற தீபம் இருக்கிறது. ஒவ்வொரு தீபமும் ஒரே ஒரு
தீபத்திடம் ஈடுபாடு வைத்து விட்டால் இது தான் உண்மையான தீபமாலை
ஆகும். ஆக தீபமாகிய நான் ஈடுபாட்டுடன் இருந்து நெருப்பாக ஆகி
தனது வெளிச்சத்தின் மூலம் அஞ்ஞானத்தின் இருளை போக்கக் கூடிய
உண்மையான சேவாதாரியாக இருக்கிறேனா? என்று பார்க்க வேண்டும்.
சுலோகன்:
ஒரே பலம், ஒரே நம்பிக்கை - இந்த
பாடத்தை சதா பக்காவாக வைத்துக் கொண்டால் பாபாவிடமிருந்து
எளிதாக சக்திகள் வெளிப்படும்.
ஓம்சாந்தி