30.11.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! உடல், மனம்,
பொருள் மற்றும் எண்ணம், சொல், செயல் மூலமாக 21 பிறவிகளுக்கு
பாபாவிடமிருந்து பலன் பெரும் அளவிற்கு சேவை செய்யுங்கள். ஆனால்
சேவையில் ஒரு போதும் தங்களுக்குள் ஒத்துப் போகாமல் இருக்கக்
கூடாது.
கேள்வி :
நாடகத்தின்
படி
பாபா
என்ன
சேவை
செய்விக்கிறாரோ
அதில்
தீவிர
தன்மையைக்
கொண்டு
வருவதற்கான
வழி
என்ன?
பதில்:
தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க
வேண்டும் ஒரு போதும் எந்த சண்டை சச்சரவும் இருக்கக் கூடாது. ஒரு
வேளை சண்டை சச்சரவு இருந்தால் என்ன சேவை செய்வீர்கள். ஆகவே,
தங்களுக்குள் ஒன்று சேர்ந்து ஆலோசனை செய்யுங்கள். ஒருவருக்
கொருவர் உதவியாளர் ஆகுங்கள். பாபா உதவியாளராகத்தான் இருக்கிறார்.
ஆனால் குழந்தை கள் தைரியம் வைத்தால் பாபாவின் உதவி கிடைக்கும்.
இதனுடைய பொருளை உண்மையாகப் புரிந்துக் கொண்டு பெரிய காரியத்தில்
உதவியாளர் ஆகுங்கள்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள்
ஆன்மீகத் தந்தையிடம் புத்துணர்வு அடைவதற்காக இங்கே
வந்திருக்கிறீர்கள். புத்துணர்வு அடைந்து வெளியே செல்கிறீர்கள்
என்றால் நிச்சயம் சென்று ஏதாவது காண்பிக்க வேண்டும். ஒவ்வொரு
குழந்தைக்கும் சேவையில் நிரூபணம் கொடுக்க வேண்டும். ஒரு சில
குழந்தைகள் நாங்கள் சென்டர் திறக்க விரும்புகிறோம் என
கூறுகிறார்கள் அல்லவா? கிராமங்களில் கூட சேவை செய்கிறார்கள்
அல்லவா? எனவே குழந்தைகளுக்கு எப்போதும் எண்ணம், சொல், செயல்,
உடல், மனம், பொருளால் 21 பிறவிகளுக்கு பாபாவிடமிருந்து பலன்
அடையும் வகையில் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்க
வேண்டும். இதுவே விருப்பம் ஆகும். நாம் ஏதாவது செய்கிறோமா?
யாருக்காவது ஞானம் அளிக்கிறோமோ? முழு நாளும் இந்த எண்ணம் வர
வேண்டும். ஒரு வேளை சென்டர் திறக்கலாம். ஆனால் வீட்டில் கணவன்
மனைவிக்குள் கருத்து வேற்றுமை இருக்கக் கூடாது. எந்த ஒரு
குழப்பமும் இருக்கக் கூடாது. சன்னியாசிகள் வீட்டின்
சச்சரவுகளில் இருந்து வெளியே சென்று விடுகிறார்கள்.
கவலைப்படாமல் சென்று விடுகிறார்கள். பிறகு அரசாங்கம் அவர்களைத்
தடுக்கிறதா என்ன? அங்கேயே ஆண்கள் மட்டும் தான்
வெளியேறுகிறார்கள். இப்போது ஒரு சில தாய்மார்களும் வெளியில்
வருகிறார்கள். யாரிடம் எந்த செல்வமும் இல்லையோ அல்லது
வைராக்கியம் வந்து விடுகிறதோ அவர்களுக்கு ஆண் சன்னியாசிகள்
கற்பிக்கிறார்கள். அவர் மூலமாக தங்களின் வேலையை செய்கிறார்கள்.
பணம் போன்ற அனைத்தும் அவர்களிடம் இருக்கிறது. உண்மையில் வீடு
வாசலைத் துறந்து விட்டால் பணத்தை வைப்பதற்கு அவசியம் இல்லை.
எனவே, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார். நாம் பாபாவின் அறிமுகத்தை அளிக்க வேண்டும்
என்று ஒவ்வொருவரின் புத்தியிலும் வர வேண்டும். மனிதர்கள்
எதையும் அறியவில்லை முட்டாளாக இருக்கிறார்கள். குழந்தை களாகிய
உங்களுக்கு பாபாவின் கட்டளை- இனிமையிலும் இனிமையான குழந்தைகளே!
நீங்கள் உங்களை ஆத்மா என உணருங்கள். வெறும் பண்டிதர்களாக
இருக்காதீர்கள். தனக்கும் நன்மை செய்துக் கொள்ள வேண்டும்
நினைவினால் சதோபிரதானம் ஆக வேண்டும். மிகவும் முயற்சி செய்ய
வேண்டும். இல்லை என்றால் மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
பாபா நாங்கள் அடிக்கடி மறந்து விடுகிறோம் என கூறுகிறார்கள்.
எண்ணங்கள் வருகிறது. அது வரும் தான் என பாபா கூறுகின்றார்.
நீங்கள் தந்தையின் நினைவிலிருந்து தூய்மையாக வேண்டும். ஆத்மா
தூய்மையிழந்து (அபவித்திரமாக) இருக்கிறது. இப்போது பரம்பிதா
பரமாத்மாவை நினைவு செய்து தூய்மையாக வேண்டும். கட்டளைக்குக்
கீழ்ப் படிந்த குழந்தைகளே, உங்களுக்கு கட்டளை இடுகிறேன், என்னை
நினைவு செய்தால் உங்களின் பாவம் விலகும் என்று தந்தை தான்
குழந்தைகளுக்கு டைரக்ஷன் அளிக்கிறார். என்னை நினையுங்கள் நான்
தான் பதீத பாவனர் என்று நிராகார் சிவபாபா கூறுகிறார் என முதலில்
கூறுங்கள். வேறு யாரும் சொல்ல முடியாது. நிறைய பேர்
சன்னியாசிகள் இருக்கிறார்கள். யோகா மாநாட்டில் வந்து கலந்துக்
கொள்ளுங்கள் என்று அழைப்பிதழ் அளிக்கிறார்கள். இப்போது
அவர்களின் ஹடயோகத்தால் யாருக்கும் நன்மை ஏற்படுவதில்லை. நிறைய
யோக ஆஸ்ரமங்கள் இருக்கின்றன. யாருக்கும் இந்த இராஜயோகத்தைப்
பற்றி முற்றிலும் தெரியாது. பாபாவை அறியவில்லை. எல்லையற்ற தந்தை
தான் வந்து உண்மையிலும் உண்மையான யோகத்தைக் கற்பிக்கிறார். பாபா
குழந்தைகளாகிய உங்களை தனக்குச் சமமாக மாற்றுகிறார். நான்
நிராகாரராக இருக்கிறேன். தற்காலிகமாக இந்த உடலில் வருகிறேன்.
பாக்கியசாலி ரதம் என்பது நிச்சயம் மனித உடலாக இருக்கும். காளை
மாட்டைக் கூற முடியாது. மற்றபடி குதிரை வண்டியின் விஷயம்
கிடையாது. சண்டை போன்ற எந்த விஷயமும் இல்லை. நாம் மாயாவுடன்
தான் போரிட வேண்டும் என உங்களுக்குத் தெரியும். மாயாவிடம்
தோற்றால் தோல்வி... என பாடப் படுகிறது. நீங்கள் மிகவும் நன்றாக
புரிய வைக்கலாம். ஆனால் இப்போது கற்றுக் கொண்டி ருக்கிறீர்கள்.
சிலர் கற்றுக் கொண்டே கூட ஒரேயடியாக தரையில் விழுந்து
விடுகிறார்கள். சிலர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இரண்டு
சகோதரிகள் கூட தங்களுக்குள் ஒற்றுமை யாக இருப்பதில்லை. உப்பு
தண்ணீராக ஆகிவிடுகிறார்கள். உங்களுக்குள் எந்த ஒரு சண்டை
சச்சரவும் இருக்கக் கூடாது. சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால்,
இவர்கள் என்ன சேவை செய்வார்கள் என பாபா கூறுவார். மிகவும்
நல்லவர்களுக்குக் கூட இந்த நிலைமை ஏற்படுகிறது. இப்போது மாலையை
உருவாக்கினால் குறை உள்ள மாலை என கூறுவார்கள். இவர்களுக்குள்
இன்னும் இந்தந்த அவகுணங்கள் உள்ளன. நாடகத்தின் படி பாபா சேவையை
செய்வித்துக் கொண்டிருக்கிறார். டைரக்ஷன் கொடுத்துக்
கொண்டிருக்கிறார். டில்லியில் முற்றுகை இடுங்கள். ஒருவர்
மட்டும் செய்ய முடியாது. தங்களுக்குள் இணைந்து ஆலோசிக்க
வேண்டும். அனைவரும் ஒரு வழிப்படி நடக்க வேண்டும். பாபா ஒருவர்
தான். ஆனால் உதவியாளராகிய குழந்தைகள் இல்லாமல் வேலை செய்ய
முடியாது. நீங்கள் சென்டர்களைத் திறக்கிறீர்கள், வழி
கேட்கிறீர்கள். உதவி செய்யக் கூடியவர்களா என்று பாபா கேட்கிறார்.
ஆம் பாபா உதவி செய்யக் கூடியவர், இல்லை என்றால் எதுவும் செய்ய
முடியாது என கூறுகிறார்கள். வீட்டில் கூட நண்பர்கள், உறவினர்கள்
போன்றோர் வருகிறார் கள் அல்லவா? ஒரு வேளை திட்டலாம். அவர்கள்
உங்களை கடிந்து கொண்டே இருக்கலாம். நீங்கள் அதை பொருட்படுத்தக்
கூடாது.
குழந்தைகள் தங்களுக்குள்
அமர்ந்து ஆலோசிக்க வேண்டும். சென்டர்கள் திறக்கும் போது
அனைவரும் சேர்ந்து பாபா நாங்கள் டீச்சரின் ஆலோசனை படி இந்த வேலை
செய்கிறோம் என எழுதுகிறார்கள். சிந்தி மொழியில் ஒருவருடன்,
இருவர் சேர்ந்தால் பன்னிரெண்டு என்று கூறுவார்கள். பன்னிரெண்டு
பேர் சேர்ந்தால் இன்னும் நல்ல வழி கிடைக்கும். ஒரு சில
இடங்களில் ஒருவக்கொருவர் ஆலோசனை கேட்பதில்லை. இப்போது
இப்படிப்பட்ட வேலை நடக்குமா? எது வரை உங்களுக்குள் ஒன்று சேர
வில்லையோ அது வரை இவ்வளவு பெரிய காரியங்கள் எப்படி செய்ய
முடியும்? என்று பாபா கூறுகிறார். சிறிய கடை, பெரிய கடை கூட
இருக்கிறது அல்லவா? தங்களுக்குள் இணைந்து ஒன்று சேருகிறார்கள்.
பாபா தாங்கள் உதவி செய்யுங்கள் என்று யாரும் கூறுவதில்லை.
முதலில் உதவியாளரை உருவாக்க வேண்டும். குழந்தைகள் தைரியத்துடன்
இருந்தால் பாபா உதவி செய்வார் என்று பாபா கூறுகிறார். முதலில்
தாங்கள் உதவியாளர் ஆகுங்கள். பாபா நாங்கள் இவ்வளவு செய்கிறோம்.
பிறகு தாங்கள் உதவி செய்யுங்கள். முதலில் தாங்கள் உதவி
செய்யுங்கள் என்பது கூடாது. தைரியம்... இதனுடைய பொருள் கூட
புரிந்துக் கொள்ளுங் கள். முதலில் குழந்தைகளுக்கு தைரியம்
வேண்டும். யார் யார் என்ன உதவி செய்கிறார்கள். இன்னார் இந்த
உதவி செய்தார்கள் என்று கணக்கு முழுவதும் எழுதுங்கள். முறைப்படி
எழுதிக் கொடுங்கள். நாங்கள் சென்டர் திறக்கிறோம், உதவுங்கள்
என்று ஒவ்வொருவரும் கூற முடியாது. இப்படி பாபா திறக்க முடியுமா?
இவ்வாறு நடக்காது கூட்டாக தங்களுக்குள் சந்திக்க வேண்டும்.
உங்களிலும் வரிசைக் கிரமம் இருக்கிறது அல்லவா? ஒரு சிலர்
முற்றிலும் எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. ஒரு சிலர் மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த ஞானத்தில் (குழந்தைகள்)
மிகவும் குஷியாக இருக்க வேண்டும் என பாபா நினைக்கிறார். ஒரேயொரு
தந்தை, டீச்சர், குரு கிடைத்திருக்கிறார் என்றால் மகிழ்ச்சி
இருக்க வேண்டும் அல்லவா? உலகத்தில் யாருக்கும் இந்த விசயங்கள்
தெரியவில்லை. சிவபாபா தான் ஞானக் கடல், பதீத பாவனர்,
அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல், அனைவருக்கும் தந்தை
ஒருவர் தான் இது வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. அவரே (நாலேட்ஜ்ஃபுல்)
ஞானம் நிறைந்தவர் விடுவிக்கக் கூடியவர், வழிகாட்டி என்று
குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். எனவே தந்தையின் வழிப்படி
நடக்க வேண்டும். தங்களுக்குள் ஒன்று கூடி, ஆலோசிக்க வேண்டும்.
செலவு செய்ய வேண்டும். ஒருவரின் வழிப்படி செல்ல முடியாது.
உதவியாளர்கள் அனைவரும் வேண்டும். புத்தி வேண்டும் அல்லவா?
குழந்தை களாகிய நீங்கள் ஒவ்வொரு வீட்டிலும் செய்தியை அளிக்க
வேண்டும். திருமணத்திற்கு வர அழைத்திருக்கிறார்கள், போகட்டுமா
என கேட்கிறார்கள்? ஏன் போகக் கூடாது. செல்லுங் கள், சென்று
தங்களின் சேவையை செய்யுங்கள் என்று பாபா கூறுகிறார். பலருக்கு
நன்மை செய்யுங்கள். சொற்பொழிவு கூட ஆற்றலாம். மரணம் எதிரில்
நிற்கிறது. என்னை மட்டும் நினையுங்கள் என்று பாபா கூறுகிறார்.
இங்கே அனைவரும் பாவ ஆத்மாக்கள் பாபாவையே திட்டிக்
கொண்டிருக்கிறார்கள். பாபாவிடமிருந்து உங்களை பாராமுகமாக்கி
விட்டார்கள். வினாசக் காலத்தில் விபரீதபுத்தி என்று
பாடப்பட்டிருக்கிறது. இதை யார் கூறியது? என்னுடன் அன்பு புத்தி
வைப்பதில்லை என்று பாபாவே கூறுகிறார். வினாசக் காலத்தில்
விபரீத புத்தி என்கிறார். என்னைப் பற்றி அறியவில்லை. யார் அன்பு
புத்தி உடையவராக இருக்கிறார்களோ, என்னை நினைக்கிறார்களோ அவர்களே
வெற்றி பெறுவார்கள். அன்பு இருக்கிறது. ஆனால் நினைக்கவில்லை
என்றால் குறைந்த பதவி பெறுவார்கள். பாபா குழந்தைகளுக்கு
டைரக்ஷன் கொடுக்கிறார். முக்கியமான விஷயம் அனைவருக்கும் செய்தி
அளியுங்கள். பாபாவை நினைத்தால் தூய்மையாகி தூய்மையான
உலகத்திற்கு அதிபதி யாகலாம். நாடகத்தின் படி பாபா வயதான உடலைத்
தான் எடுக்க வேண்டியிருக்கிறது. வயோதிக நிலையில் நுழைகிறார்.
வயோதிக நிலையில் தான் மனிதர்கள் பகவானை அடைவதற்காக கடினமாக
உழைக்கிறார்கள். தவம், ஜபம் போன்றவைகளைச் செய்வது பகவானை
சந்திப்பதற்கான வழி என்று பக்தியில் நினைக்கிறார்கள். எப்போது
கிடைக்கும். அது எதுவும் தெரியவில்லை. பல பிறவிகளாக பக்தி
செய்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். பகவான் யாருக்கும்
கிடைக்கவில்லை. பழைய உலகத்தைப் புதிய உலகமாக மாற்றும் போது தான்
பாபா வருவார் என்பதை புரிந்துக் கொள்ளவில்லை. படைக்கக் கூடியவர்
பாபா, சித்திரங்கள் உள்ளன. ஆனால் திரி மூர்த்தியில் சிவனைக்
காண்பிக்கவில்லை. சிவபாபா இல்லாமல் பிரம்மா விஷ்ணு சங்கரரை
காண்பிப்பது கழுத்தை வெட்டியது போன்றதாகும். தந்தை இல்லாமல்
ஏழைகளாகி விட்டனர். நான் வந்து உங்களை பணக்காரனாக மாற்றுகிறேன்
என பாபா கூறுகிறார். 21 பிறவிகளுக்கு நீங்கள் பணக்காரர் களாகி
விடுகிறார்கள். எந்த துன்பமும் இல்லை. எது வரை பாபாவை
சந்திக்கவில்லையோ அது வரை நாம் ஏழையாக கீழான புத்தி உடையவராக
இருந்தோம் என நீங்கள் கூறுகிறீர்கள். பதீத பாவனர் என்கிறார்கள்.
ஆனால் அவர் எப்போது வருவார் என்பது தெரியவில்லை. பாவனமான உலகம்
தான் புது உலகம் ஆகும். பாபா எவ்வளவு எளிதாக புரிய வைக்கிறார்.
நாம் பாபாவினுடையவராகி விட்டோம், சொர்க்கத்திற்கு அதிபதியாக
நிச்சயம் மாறுவோம் என்பது உங்களுக்கும் புரிய வருகிறது. சிவபாபா
எல்லையற்ற அதிபதி. சிவபாபா தான் வந்து சுகம் சாந்தியின் சொத்து
கொடுத்தார். சத்யுகத்தில் சுகம் இருந்தது. மற்ற ஆத்மாக்கள்
அனைவரும் சாந்தி தாமத்தில் இருந்தனர். இப்போது இந்த விஷயங்களை
நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். சிவபாபா ஏன் வந்திருப்பார்.
நிச்சயம் புது உலகைப் படைப்பதற்கு ! அழுக் கானவர்களை தூய்மையாக
மாற்ற வந்திருப்பார். உயர்ந்த காரியம் செய்திருப்பார்.
மனிதர்கள் முற்றிலும் காரிருளில் இருக்கிறார்கள். இதுவும்
நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று பாபா கூறுகின்றார்.
குழந்தைகளாகிய உங்களை பாபா எழுப்புகிறார். இப்போது உங்களுக்கு
புது உலகம் எப்படி பழையதாகிறது என இந்த நாடகம் பற்றி முழுவதும்
தெரியும். மற்ற அனைத்தையும் விட்டு விட்டு ஒரு தந்தையை மட்டும்
நினையுங்கள் என பாபா கூறுகின்றார். நமக்கு வேறு யாரிடமும்
வெறுப்பு வரக் கூடாது. இதைப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது.
நாடகத்தின் படி மாயாவின் ராஜ்ஜியமும் நடக்க வேண்டும்.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே இந்த சக்கரம் இப்போது
முடிவடைகிறது என மீண்டும் பாபா கூறுகின்றார். இப்போது
உங்களுக்கு ஈஸ்வரிய வழி கிடைத்திருக்கிறது. அதன் படி நடக்க
வேண்டும். இப்போது 5 விகாரங்களின் வழிப்படி நடக்கக் கூடாது. அரை
கல்பமாக நீங்கள் மாயையின் வழிப்படி நடந்து தமோபிரதானம்
ஆகிவிட்டீர்கள். இப்போது நான் உங்களை சதோபிர தானமாக மாற்ற
வந்திருக்கிறேன். இது தூய்மையாகுதல், அழுக்கடைதலின் விளை
யாட்டாகும். நிந்தனையின் விசயம் எதுவும் இல்லை. பகவான் ஏன்
இந்த வருதல், போதலின் நாடகத்தைப் படைத்தார் என்கிறார்கள். ஏன்
என்ற கேள்வியே எழுக் கூடாது. இது நாடகத்தின் சக்கரம் ஆகும். இது
அப்படியே திரும்பத் திரும்ப சுழல்கிறது. நாடகம் அனாதியாகும்.
இப்போது கலியுகம். சத்யுகம் முடிந்து விட்டது. இப்போது மீண்டும்
பாபா வந்து விட்டார். பாபா பாபா என்று கூறிக் கொண்டே இருந்தால்
நன்மை நடக்கும். இது மிகவும் ஆழமான ரமணிகரமான விசயமாகும் என்று
பாபா கூறுகின்றார். சிங்கத்தின் பாலை எடுக்க தங்க பாத்திரம்
வேண்டும் என்று கூறுகிறார்கள். தங்க புத்தி எப்படி இருக்கும்?
ஆத்மாவில் தான் புத்தி இருக்கிறது அல்லவா? என்னுடைய புத்தி
இப்போது பாபாவின் பக்கம் இருக்கிறது என்று பாபா கூறுகின்றார்.
நான் மிகவும் பாபாவை நினைக்கிறேன் என பாபா கூறுகின்றார்.
அமர்ந்துக் கொண்டே புத்தி வேறு எங்கேயாவது சென்று விடுகிறது
அல்லவா? புத்தியில் தொழில் வேலை போன்றவை நினைவில் வந்துக்
கொண்டே இருக்கும். உங்களுடைய விசயத்தைக் கேட்காதீர். கடின
உழைப்பு வேண்டும். மரணம் எவ்வளவு அருகில் வருகிறதோ அவ்வளவு
நீங்கள் நிறைய நினைவில் இருப்பீர்கள். இறக்கும் தருவாயில்
அனைவரும் பகவானை நினையுங்கள் என்று கூறுகிறார்கள். என்னை
நினையுங் கள் என்று இப்போது பாபாவே கூறுகின்றார். நீங்கள்
அனைவரும் வயோதிக நிலையில் இருக்கிறீர்கள். திரும்பப் போக
வேண்டும். ஆகவே, இப்போது என்னை நினையுங்கள். வேறு எந்த
விசயத்தையும் கேட்காதீர்கள். பல ஜன்மங்களின் பாவ சுமை உங்கள்
தலைமீது இருக்கிறது. இச்சமயம் அனைவரும் அஜாமில் (மிகவும் பாவம்
செய்தவன்) போன்று இருக்கிறார்கள் என சிவபாபா கூறுகிறார்.
முக்கிய மான விசயம் நினைவு யாத்திரையாகும். இதன் மூலம் நீங்கள்
தூய்மையாகிறீர்கள். பிறகு தங்களுக்குள் அன்பும் இருக்க வேண்டும்.
ஒருவருக்கொருவருடன் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்பா
அன்புக் கடல் அல்லவா. எனவே நீங்களும் தங்களுக்குள் மிகவும்
அன்பாக இருக்க வேண்டும். ஆத்மா உணர்வுடையவராகி தந்தையை நினைக்க
வேண்டும். சகோதரன் சகோதரி என்ற உறவையும் முறிக்க வேண்டும்.
சகோதரன் சகோதிரியிடம் கூட தொடர்பு இருக்கக் கூடாது. ஒரு
தந்தையுடன் தான் தொடர்பு வைக்க வேண்டும். என்னை நினைவு செய்தால்
உங்களுடைய விகார பார்வை அழிந்து போகும் என்று பாபா
ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார். கர்மேந்திரியங்கள்
மூலமாக எந்த பாவமும் செய்யக் கூடாது. மனதில் நிச்சயம் புயல்
வரும். இது மிகப் பெரிய குறிக்கோளாகும். கர்மேந்திரியங் கள்
ஏமாற்றுகிறது என்றால் எச்சரிக்கை யாக இருங்கள் என பாபா
கூறுகின்றார். ஒரு வேளை தவறான வேலைகளைச் செய்து விட்டால்
முடிந்தது. ஏறினால் வைகுண்டத்திற்கு அதிபதி... உழைப்பில்லாமல்
எதுவும் கிடைக்காது. மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். தேகம்
உட்பட தேகத்தின்... ஒரு சிலருக்கு பந்தனம் எதுவும் இல்லை
என்றாலும் கூட மாட்டிக் கொண்டே இருக்கிறார்கள். பாபாவின்
ஸ்ரீமத் படி நடப்பதில்லை. லட்சம் கொடுக்கலாம், பெரிய
குடும்பமாக இருந்தாலும் கூட அதிகமாக தொழில் போன்றவைகளில்
மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று பாபா கூறுகின்றார். வயோதிகர்
ஆகிவிடுங்கள். செலவைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏழை மக்கள்
எவ்வளவு சாதாரணமாக இருக்கிறார்கள். இப்போது என்னென்ன பொருட்கள்
வந்திருக்கின்றன. கேட்காதீர்கள். பணக்காராகளுக்குத் தான்
செலவிற்கு மேல் செலவாகிறது. இல்லை என்றால் வயிற்றுக்கு எவ்வளவு
வேண்டும். ஒரு ஆழாக்கு மாவு அவ்வளவு தான். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. தங்களுக்குள் மிக மிக அன்புடைவராக வேண்டும். ஆனால் சகோதரன்
சகோதரியிடம் தொடர்பு வைக்க வேண்டாம் கர்மேந்திரியங்களினால்
எந்த விகர்மமும் செய்யக் கூடாது.
2. ஒரு ஈஸ்வரிய வழிப்படி நடந்து சதோபிரதானமாக மாற வேண்டும்.
மாயையின் வழியை விட்டு விட வேண்டும். தங்களுக்குள் குழுவை
வலிமையாக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உதவியாளராக வேண்டும்.
வரதானம்:
அமிர்தவேளையின் மகத்துவத்தை
தெரிந்துக் கொண்டு திறந்த பொக்கிஷத்தினால் தனது பையை (புத்தி)
நிரப்பிக்கொள்ளக்கூடிய பாக்கியசாலி ஆகுக.
அமிர்தவேளையில் ஆசிர்வாதத்தின்
வள்ளல், பாக்கியத்தின் அளிக்கக்கூடிய வள்ளலி டமிருந்து, யார்
பாக்கியத்தின் ரேகையை வரைந்துக் (வளர்த்து) கொள்ள
விரும்புகிறீர்களோ, வளர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அந்த
சமயத்தில் கள்ளம் கபடமற்ற இறைவனின் ரூபம் அன்பிற்குரியதாக
இருக்கும், ஆகையால் எஜமானர் ஆகுங்கள், மேலும் அதிகாரத்தை
பெறுங்கள். பொக்கிஷத்திற்கு எந்தவித பூட்டு சாவி கிடையாது.
அந்த சமயத்தில் மாயாவின் சாக்குபோக்குகளை விட்டுவிட்டு, நான்
யாராக இருக்கிறேனோ, எப்படி இருக்கிறேனோ, நான் உங்களுடையவன்
என்ற எண்ணத்தை உருவாக்குங்கள். மனம் மற்றும் புத்தியை பாபாவிடம்
ஒப்படைத்து விட்டு, சிம்மானத்திற்கு உரியவர் ஆகிவிட்டீர்கள்
என்றால், பாபா வின் அனைத்து பொக்கிஷங்களும் தனது பொக்கிஷமாக
அனுபவம் ஆகும்.
சுலோகன்:
ஒருவேளை சேவையில் சுயநலம்
கலந்துவிட்டால், வெற்றி கூட கலப்படமாகத் தான் இருக்கும்,
ஆகையால் பலனை எதிர்பார்க்காத சேவாதாரி ஆகுங்கள்.
ஓம்சாந்தி