24.11.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள்
துக்கத்தை சகித்துக் கொள்வதிலேயே நிறைய நேரத்தை வீணடித்தீர்கள்.
இப்பொழுது உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் தந்தையை
நினைவு செய்யுங்கள். சதோபிரதானமாக ஆகுங்கள். அப்பொழுது நேரம்
பயனுடையதாக ஆகி விடும்.
கேள்வி:
21
பிறவிகளுக்கான
லாட்டரி
பெறுவதற்கான
புருஷார்த்தம்
(முயற்சி)
யாது?
பதில்:
21 பிறவிகளுக்கான லாட்டரியைப் பெற வேண்டுமென்றால் மோகத்தை
வென்றவர் ஆகுங்கள். ஒரு தந்தை மீது முழுமையாக சமர்ப்பணம் (பலி)
ஆகி விடுங்கள். இப்பொழுது இந்த பழைய உலகம் மாறிக்
கொண்டிருக்கிறது. நாம் புது உலகத்திற்குச் சென்று
கொண்டிருக்கிறோம் என்பது எப்பொழுதும் நினைவில் இருக்கட்டும்.
இந்த பழைய உலகத்தைப் பார்த்தும் பார்க்கக் கூடாது. குசேலரை போல
ஒரு பிடி அரிசியை பயனுள்ளதாக ஆக்கி சத்யுக அரசாட்சியை பெற
வேண்டும்.
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்காக
ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கிறார். இதையோ குழந்தைகள்
புரிந்துள்ளார்கள். ஆன்மீகக் குழந்தைகள் என்றால் ஆத்மாக்கள்.
ஆன்மீகத் தந்தை என்றால் ஆத்மாக்களின் தந்தை. இதற்கு ஆத்மாக்கள்
மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு என்று கூறப்படுகிறது. இந்த
சந்திப்பு ஒரே ஒரு முறை நிகழ்கிறது. இந்த அனைத்து விஷயங்களையும்
குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர் கள். இது விசித்திரமான
விஷயமாகும். விசித்திரமான (சரீரமற்ற) தந்தை விசித்திர
ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். உண்மையில் ஆத்மா
விசித்திரமானது (சரீரமற்றது). இங்கு வந்து (சித்திரதாரி)
சரீரத்தை தரித்தவராக ஆகிறது. சித்திரத்தின் மூலம் பாகத்தை
நடிக்கிறது. ஆத்மாவோ எல்லோருக்குள்ளும் இருக்கிறது அல்லவா?
மிருகங்களிலும் ஆத்மா இருக்கிறது. 84 லட்சம் என்று
கூறுகிறார்கள். அதிலோ எல்லா மிருகங்களும் வந்து விடுகின்றன
அல்லவா? ஏராளமான விலங்குகள் உள்ளன அல்லவா? இந்த விஷயங்களில்
நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று தந்தை புரிய வைக்கிறார். இந்த
ஞானத்தைத் தவிர பிற விஷயங்களில் மனிதர்களின் நேரம் வீணாகிக்
கொண்டே இருக்கிறது. இச்சமயத்தில் தந்தை குழந்தை களாகிய
உங்களுக்கு வந்து கற்பிக்கிறார். பிறகு அரைக் கல்பம் நீங்கள்
பாக்கியத்தை அனுபவிக்கிறீர்கள். அங்கு உங்களுக்கு எந்த ஒரு
கஷ்டமும் இருப்பதில்லை. உங்களுடைய நேரம் வீணாவதே துக்கத்தை
சகித்துக் கொள்வதில் தான்! இங்கோ துக்கமே துக்கம் உள்ளது. எனவே
எங்களுடைய துக்கத்தில் நேரம் வீணாகி விடுகிறது. இதிலிருந்து
வெளி யேற்றுங்கள் என்று எல்லோரும் தந்தையை நினைவு செய்கிறார்கள்.
சுகத்தில் ஒரு பொழுதும் நேரம் வீணாகிறது என்று கூறமாட்டார்கள்.
இச்சமயம் மனிதனுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை என்பதையும்
நீங்கள் புரிந்துள்ளீர்கள். மனிதர்களைப் பாருங்கள் திடீரென்று
இறந்து விடுகிறார்கள். ஒரே ஒரு புயலில் எவ்வளவு பேர் இறந்து
விடு கிறார்கள். இராவண இராஜ்யத்தில் மனிதர்களுக்கு எந்த ஒரு
மதிப்பும் இல்லை. இப்பொழுது தந்தை உங்களை எவ்வளவு
மதிப்புடையவராக ஆக்குகிறார். ஒரு பைசா கூட மதிப்பில்லாமல்
இருந்த நம்மை மிகவும் மதிப்புடையவர்களாக ஆக்குகிறார். வைரம்
போன்ற விலை மதிப்பிட முடியாத பிறவி என்று கூட பாடப்படுகிறது.
இச்சமயம் மனிதர்கள் சோழிகளுக்குப் பின்னால் ஈடுபட்டுள்ளார்கள்.
அப்படியே ஆனாலும் லட்சாதிபதி, கோடீசுவரர் ஆகிறார்கள்.
அவர்களுடைய முழு புத்தி அதிலேயே இருக்கிறது. அவர்களிடம் இவை
அனைத்தையும் மறந்து ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள் என்று
கூறினால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். யாருடைய புத்தியில்
முந்தைய கல்பத்திலும் பதிந்திருக்குமோ அவர்களுடைய புத்தியில்
தான் பதியும். இல்லையென்றால் எவ்வளவு தான் புரிய வைத்தாலும் ஒரு
பொழுதும் புத்தியில் ஏறாது. இந்த உலகம் மாறிக் கொண்டிருக்கிறது
என்பதை நீங்களும் வரிசைக்கிரமமாக அறிந்துள்ளீர்கள். உலகம்
மாறிக் கொண்டிருக்கிறது என்பதை வெளியில் வேண்டுமானாலும் நீங்கள்
எழுதுங்கள். அப்பொழுது கூட நீங்கள் ஒவ்வொருவருக்கும் புரிய
வைக்காதவரை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். நல்லது.
யாராவது புரிந்து கொண்டு விட்டார்கள் என்றால் அவர்களுக்கு பிறகு
தந்தையை நினைவு செய்யுங்கள், சதோபிரதானமாக ஆகுங்கள் என்று
புரிய வைக்க வேண்டி உள்ளது. ஞானமோ மிகவும் சுலபமாகும். இவர்கள்
சூரிய வம்சத்தினர்.. ..சந்திர வம்சத்தினர்.. இப்பொழுது இந்த
உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றுபவர் ஒரே ஒரு தந்தை ஆவார்.
இது கூட நீங்கள் சரியான முறையில் புரிந்துள்ளீர்கள். அதுவும்
வரிசைக்கிரமமாக, முயற்சிக்கேற்ப. மாயை முயற்சி செய்ய
விடுவதில்லை. பிறகு இது கூட நாடகப்படி அந்த அளவு முயற்சி நடப்ப
தில்லை என்று நினைக்கிறார். ஸ்ரீமத் மூலமாக நாம் நமக்காக இந்த
உலகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஸ்ரீமத் இருப்பதே ஒரே
ஒரு சிவபாபாவினுடையதாக. சிவபாபா சிவபாபா என்று கூறுவதோ மிகவும்
சுலபமாகும். வேறு யாருமே சிவபாபாவையோ, ஆஸ்தியையோ
அறியாதிருக்கிறார்கள். பாபா என்றாலே ஆஸ்தி. சிவபாபா கூட
உண்மையானவர் வேண்டும் அல்லவா? தற்காலத் திலோ (நகர தந்தை)
மேயரைக் கூட தந்தை என்று கூறி விடுகிறார்கள். காந்தியையும்
தந்தை என்கிறார்கள். ஒரு சிலரை பிறகு ஜகத் குரு என்று கூறி
விடுகிறார்கள். இப்பொழுது ஜகத் என்றால் முழு சிருஷ்டியினுடைய
குரு. அவர் எப்படி மனிதராக ஆக முடியும். பதீத பாவனர்
அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை மட்டுமே.
தந்தையோ நிராகாரமானவர் ஆவார். பிறகு எப்படி (லிபரேட்)
விடுவிக்கிறார். உலகம் மாறுகிறது என்றால் அவசியம் அவர்
செயல்படும் பொழுது தானே தெரிய வரும். அப்படியின்றி பிரளயம் ஆகி
விடுகிறது, பிறகு தந்தை புதிய சிருஷ்டியைப் படைக்கிறார்
என்பதல்ல. மிகப் பெரிய பிரளயம் ஆகிறது. பிறகு ஆலிலையின் மீது
கிருஷ்ணர் வருகிறார் என்று சாஸ்திரங்களில் காண்பித்துள்ளார்கள்.
ஆனால் அப்படி ஒன்றும் இல்லை என்று தந்தை புரிய வைக்கிறார். உலக
சரித்திரம் பூகோளம் திரும்பவும் நடைபெறுகிறது என்று
பாடப்படுகிறது. எனவே பிரளயம் ஏற்பட முடியாது. இப்பொழுது இந்த
பழைய உலகம் மாறிக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் மனதில் உள்ளது.
இந்த எல்லா விஷயங்களையும் தந்தை தான் வந்து புரிய
வைக்கிறார்.இந்த லட்சுமி நாராயணர் புது உலகத்தின் அதிபதி
ஆவார்கள். பழைய உலகத்தின் அதிபதி இராவணன் ஆவான் என்பதை நீங்கள்
படங்களிலும் காண்பிக்கிறீர்கள். இராம இராஜ்யம் மற்றும் இராவண
இராஜ்யம் என்று பாடப்படுகிறது அல்லவா? பாபா பழைய அசுர உலகத்தை
அழித்து புதிய தெய்வீக உலகத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார்
என்ற இந்த விஷயங்கள் உங்கள் புத்தியில் உள்ளது. நான் யாராக
இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்பதை யாரோ ஒருவர் தான்
புரிந்துள்ளார்கள் என்று தந்தை கூறுகிறார். அது கூட நீங்கள்
வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப அறிந்துள்ளீர்கள். நல்ல
முயற்சியாளர்களாக இருப்பவர்களுக்கு மிகவும் நல்ல போதை இருக்கும்.
நினைவின் யாத்திரையிலுள்ள முயற்சியாளர்களுக்கு உண்மையான போதை
ஏறும். நினைவு யாத்திரையில் போதை ஏறும் அளவிற்கு 84ன்
சக்கரத்தின் ஞானம் புரிய வைப்பதில் போதை ஏறுவதில்லை.
முக்கியமான விஷயமே பாவனமாக ஆவதற்கான தாகும். வந்து பாவனமாக
ஆக்குங்கள் என்று கூப்பிடவும் செய்கிறார்கள். வந்து உலக
அரசாட்சி கொடுங்கள் என்று கூப்பிடுவதில்லை. பக்தி மார்க்கத்தில்
கதைகள் கூட எவ்வளவு கேட்கிறார்கள். உண்மையிலும் உண்மையான
சத்திய நாராயணரின் கதையோ இதுவாகும். அந்த கதைகள்:யோ ஜன்ம
ஜன்மாந்திர மாக கேட்டுக் கேட்டு கீழேயே இறங்கி வந்துள்ளீர்கள்.
பாரதத்தில் தான் இந்த கதைகளை கேட்கும் வழக்கம் உள்ளது. வேறு
எந்த கண்டங்களிலும் கதைகள் ஆகியவை இருப்பதில்லை. பாரதத்தைத்
தான் பக்தி நிறைந்த தேசம் என்று கருதுகிறார்கள். ஏராளமான
கோவில்கள் பாரதத்தில் உள்ளன. கிறிஸ்துவர்களுக்கோ ஒரே ஒரு சர்ச்
மட்டும் இருக்கும். இங்கோ பல்வேறுவிதமான ஏராளமான கோவில்கள்
உள்ளன. உண்மையில் ஒரே ஒரு சிவபாபாவின் கோவில் இருக்க வேண்டும்.
பெயர் கூட ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். இங்கோ ஏராளமான
பெயர்கள் உள்ளன. வெளிநாட்டினர் கூட இங்கு கோயில்களைப் பார்க்க
வருகிறார்கள். பழமையான பாரதம் எப்படி இருந்தது என்பது பாவம்
அவர்களுக்குத் தெரியாது. 5 ஆயிரம் வருடங் களுக்கு மேல் எந்தவொரு
பழைய பொருளும் இல்லை. அவர்களோ லட்சக்கணக்கான வருடங்களின் பழைய
பொருள் கிடைத்தது என்று நினைக்கிறார்கள். இந்த கோவில்களில்
படங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு 2500 வருடங்கள் தான் ஆகி உள்ளன.
முதன் முதலில் சிவனுக்குத் தான் பூஜை நடக்கிறது. அது ஒருவரை
மட்டுமே வணங்கும் கலப் படமற்ற பூஜை ஆகும். அதே போல கலப்பட ஞானம்
என்றும் கூறப்படுகிறது. முதலில் ஒரே ஒருவருக்கு பூஜை. பிறகு
ஆவது பலருக்கு பூஜை. இப்பொழுதோ பாருங்கள், தண்ணீர், மண்
ஆகியவற்றிற்கும் பூஜை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
நீங்கள் எவ்வளவு செல்வத்தை பக்தி
மார்க்கத்தில் இழந்துள்ளீர்கள் என்று இப்பொழுது எல்லையில்லாத
தந்தை கூறுகிறார். எவ்வளவு ஏராளமான சாஸ்திரங்கள், ஏராளமான
படங்கள் உள்ளன. கீதைகள் எவ்வளவு ஏராளமாக உள்ளன. இவை அனைத்தின்
மீதும் செலவு செய்து செய்து நீங்கள் எப்படி ஆகி விட்டீர்கள்
என்று பாருங்கள். நேற்றைக்கு உங்களை இரட்டை கிரீடம்
அணிந்தவர்களாக உயர்த்தி இருந்தேன். பிறகு நீங்கள் எவ்வளவு
ஏழையாக ஆகி விட்டுள்ளீர்கள். நேற்றைய விஷயம் ஆகும் அல்லவா?
உண்மையில் நாம் 84ன் சக்கரம் சுற்றி வந்துள்ளோம் என்பதை
நீங்களும் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது நாம் மீண்டும் இது போல
ஆகிக் கொண்டிருக்கிறோம். பாபாவிடமிருந்து ஆஸ்தி பெற்று
கொண்டிருக்கிறோம். பாபா அடிக்கடி அறிவுறுத்தி முயற்சி
செய்விக்கிறார். கீதையில் கூட மன்மனாபவ என்ற வார்த்தை உள்ளது.
ஒரு சில வார்த்தைகள் சரியாக உள்ளது. பெரும்பாலும் மறைந்து
விட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது தேவி தேவதா தர்மம்
இல்லை. மற்றபடி சித்திரங்கள் (கற்சிலைகள்) உள்ளன. உங்களது
நினைவார்த் தத்தைப் பாருங்கள் எவ்வளவு நன்றாக
அமைக்கப்பட்டுள்ளது ! இப்பொழுது நாம் மீண்டும் ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். பிறகு
பக்தி மார்க்கத்தில் நம்முடையதே மிகச் சரியான நினைவார்த்தமாக
அமையும். பூகம்பம் ஆகியவை ஏற்படும் பொழுது அதில் எல்லாமே
அழிந்து போய் விடுகிறது. பிறகு அங்கு நீங்கள் எல்லாமே புதியதாக
அமைப்பீர்கள். கலைகளோ அங்கு இருக்கும் அல்லவா? வைரங்களை
வெட்டுவது (பட்டை தீட்டுவது) கூட ஒரு கலை ஆகும். இங்கு கூட
வைரங்களை வெட்டுகிறார்கள். பின்னர் தயாரிக்கிறார்கள். வைரங்களை
வெட்டுபவர்கள் கூட மிகவும் நிபுணர்களாக இருப்பார்கள். அவர்கள்
பிறகு அங்கு செல்வார்கள். அங்கு இந்த எல்லா கலைகளுமே போகும்.
அங்கு எவ்வளவு சுகம் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
இந்த இலட்சுமி நாராயணருடைய இராஜ்யம் இருந்தது அல்லவா? பெயரே
சொர்க்கம் என்பதாகும். நூறு சதவிகிதம் செழிப்பு இருக்கும்.
இப்பொழுதோ திவாலாகி உள்ளீர்கள். பாரதத்தில் நகைகளினுடைய
நாகரிகம் மிகவுமே உள்ளது. அது பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது.
எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும்.
இந்த உலகம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இப்பொழுது சொர்க்கம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. அதற்காக நாம் அவசியம் தூய்மையாக ஆக வேண்டும்.
தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். எனவே சார்ட்
அவசியம் எழுதுங்கள் என்று பாபா கூறுகிறார். ஆத்மாவாகிய நான்
எந்த ஒரு அசுர செயலும் செய்யவில்லையே? தன்னை ஆத்மா என்று
உறுதியாக உணருங்கள். இந்த சரீரத்தினால் எந்த ஒரு விகர்மமும் (தீய
செயலும்) செய்யவில்லையே. அவ்வாறு செய்திருந்தால் உங்களது
பதிவேடு (ரிஜிஸ்டர்) கெட்டுப் போய் விடும். இது 21
பிறவிகளுக்கான லாட்டரி ஆகும். இது கூட பந்தயமாகும்.
குதிரைகளுடைய ஓட்டப் பந்தயம் நடக்கிறது அல்லவா? இதற்கு ராஜசூய
அஷ்வமேத.. என்று கூறுகிறார்கள். சுயராஜ்யத்திற்காக. அதாவது
ஆத்மாக்களாகிய நீங்கள் ஓட்டப் பந்தயத்தில் ஓட வேண்டும்.
இப்பொழுது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அதற்கு
இனிமையான அமைதியான இல்லம் என்று கூறப்படுகிறது. இந்த வார்த்தையை
நீங்கள் இப்பொழுது கேட்கிறீர்கள். குழந்தைகளே நிறைய உழைப்பு
செய்யுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். அரசாட்சி
கிடைக்கிறது என்றால் குறைந்த விஷயமா என்ன? நான் ஆத்மா! நான்
இவ்வளவு பிறவிகள் எடுத்துள்ளேன். உங்களுடைய 84 பிறவிகள்
முடிந்து விட்டன என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். இப்பொழுது
மீண்டும் முதல் நம்பரிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். புதிய
அரண்மனைகளில் அவசியம் குழந்தைகள் தான் அமருவார்கள். பழையதிலோ
அமரமாட்டார் கள். அப்படியின்றி சுயம் தாங்கள் பழையதில்
அமருவார்கள் மற்றும் புதியதில் வாடகைக்கு இருப்பவர்களை
அமர்த்துவார்கள் என்பதல்ல. நீங்கள் எந்த அளவிற்கு உழைப்பீர்களோ,
பிறகு அதே அளவு புதிய உலகத்தின் அதிபதி ஆகிடுவீர்கள். புதிய
வீடு தயாராகிறது என்றால் பழையதை விட்டு விட்டு புதியதில்
வசிக்கலாம் என்று மனம் விரும்புகிறது. முதல் வீடு பழையதாக ஆகும்
பொழுது தான் தந்தை குழந்தை களுக்காக புதிய வீட்டை அமைக்கிறார்.
அங்கு வாடகைக்கு விடுவதற்கான விஷயமே கிடையாது. எப்படி அவர்கள்
சந்திர மண்டலத்தில் நிலம் வாங்குவதற்கான முயற்சி செய்கிறார் கள்.
நீங்கள் பிறகு சொர்க்கத்தில் நிலம் வாங்கி கொண்டிருக்கிறீர்கள்.
எந்த அளவு ஞானம் மற்றும் யோகத்தில் இருப்பீர்களோ அந்த அளவு
தூய்மையாக ஆவீர்கள். இது இராஜயோகம் ஆகும். எவ்வளவு பெரிய
அரசாட்சி கிடைக்கும். மற்றபடி இந்த சந்திரமண்டலம் ஆகியவற்றில்
நிலத்தை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். அவை அனைத்தும் வீண்
ஆகும். சுகம் கொடுக்கக் கூடிய இதே பொருட்கள் பிறகு விநாசம்
செய்யக் கூடியதாகவும், துக்கம் கொடுக்கக் கூடியதாகவும் ஆகி
விடும். இனி போகப் போக படைகள் ஆகியவை குறைந்து போய் விடும். அணு
குண்டுகள் மூலமாகவே உடனுக்குடனே வேலை ஆகிக் கொண்டே போய் விடும்.
இந்த நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. சமயத்தில் திடீரென்று விநாசம்
ஆகி விடும். பிறகு சிப்பாய்கள் ஆகியோரும் இறந்து விடுவார்கள்.
சாட்சியாகிப் பார்ப்பதில் தான் ஆனந்தம் உள்ளது. நீங்கள்
இப்பொழுது ஃபரிஷ்தா ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நமக்காகத் தான்
விநாசம் ஆகிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாடகத்தில்
பாகம் உள்ளது. பழைய உலகம் முடிந்து போய் விடுகிறது. யார் எப்படி
கர்மம் செய்கிறார்களோ அவ்வாறே அனுபவிக்க வேண்டி உள்ளது அல்லவா?
இப்பொழுது சந்நியாசிகள் நல்லவர்கள் என்று வைத்து கொள்ளலாம்.
பிறவியோ பிறகும் இல்லறத்தார்களிடம் தான் எடுப்பார்கள் அல்லவா?
சிறந்த பிறவியோ உங்களுக்குப் புது உலகில் கிடைக்க வேண்டி உள்ளது.
பிறகும் சம்ஸ்காரத்திற்கேற்ப சென்று அவ்வாறு ஆவீர்கள். நீங்கள்
இப்பொழுது புது உலகத்திற்காக சம்ஸ்காரத்தை எடுத்துச்
செல்கிறீர்கள். பிறவியும் அவசியம் பாரதத்தில் தான் எடுப்பீர்கள்.
யார் மிகவும் நல்ல பக்திமானாக இருப்பார்களோ அவர்களிடம் பிறவி
எடுப்பீர்கள். ஏனெனில் நீங்கள் அப்படிப்பட்ட கர்மங்களையே
செய்கிறீர்கள். எப்படி எப்படி சம்ஸ்காரமோ அதற்கேற்ப ஜன்மம்
ஆகிறது. நீங்கள் மிகவும் உயர்ந்த குலத்தில் சென்று பிறவி
எடுப்பீர்கள். உங்களைப் போல கர்மம் செய்பவர்கள் வேறு யாரும்
இருக்க மாட்டார்கள். எப்படி படிப்பு, எப்படி சேவையோ அப்படியே
பிறவி.. இறக்கக் கூடியவர் களோ நிறைய பேர் இருப்பார்கள். முதலில்
வரவேற்பவர்களும் செல்ல வேண்டி உள்ளது. இப்பொழுது இந்த உலகம்
மாறிக் கொண்டிருக்கிறது என்பதை தந்தை புரிய வைக்கிறார். தந்தையோ
சாட்சாத்காரம் (காட்சிகள் தெரிதல்) செய்வித்துள்ளார். பாபா
தன்னுடைய உதாரணத்தையும் கூறுகிறார். காட்சியைப் பார்த்தார், 21
பிறவிகளுக்கான அரசாட்சி கிடைக்கிறது. அதற்கு முன்னால் இந்த
10-20 லட்சம் என்பது என்ன? எனக்கு அரசாட்சி கிடைத்தது அவருக்கு
அற்பமானது தான். பங்குதாரருக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்
கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். எந்த கஷ்டமும் ஆகவில்லை.
குழந்தைகளுக்கும் கூட புரிய வைக்கப்படுகிறது - பாபாவிடமிருந்து
நீங்கள் என்னென்ன பெறுகிறீர்கள்? சொர்க்கத்தின் அரசாட்சி.
கூடுமானவரை சென்டர்கள் திறந்து கொண்டே செல்லுங்கள். அநேகருக்கு
நன்மை செய்யுங்கள். உங்களுக்கு 21 பிறவிகளுக்கான சம்பாத்தியம்
ஆகிக் கொண்டிருக்கிறது. இங்கோ லட்சாதிபதி கோடீசுவரர் நிறைய பேர்
இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஏழை ஆவார்கள். உங்களிடம்
நிறைய பேர் கூட வருவார்கள். கண் காட்சியில் எத்தனை பேர்
வருகிறார்கள். பிரஜைகள் தயாராவதில்லை என்று நினைக்காதீர்கள்.
பிரஜைகள் நிறைய பேர் உருவாகிறார்கள். நன்றாக உள்ளது என்று
நிறைய பேர் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு நேர மில்லை
என்பார்கள். சிறிதளவு கேட்டால் கூட பிரஜையில் வந்து விடுவார்கள்.
அவினாசி ஞானத்தின் விநாசம் ஆவதில்லை. பாபாவின் அறிமுகம்
அளிப்பது ஒன்றும் குறைந்த விஷயமா என்ன? ஒரு சிலருக்கு அப்படியே
புல்லரித்துப் போய் விடும். உயர்ந்த பதவி அடைய வேண்டி இருந்தது
என்றால் முயற்சி செய்ய முற்பட்டு விடுவார்கள். பாபா யாரிடமும்
பணம் ஆகியவை வாங்கமாட்டார். குழந்தைகளினுடைய ஒவ்வொரு துளி
துளியின் மூலம் குளம் ஆகிறது. ஒரு சிலர் ஒரு ரூபாய் கூட அனுப்பி
விடுகிறார்கள். பாபா ஒரு செங்கல்லை வைத்து விடுங்கள் என்பார்கள்.
குசேலரின் ஒரு பிடி அரிசிக்கான பாடல் உள்ளது அல்லவா?
உங்களுடையதோ இது வைரம், வைடூரியம் என்று பாபா கூறுகிறார். வைரம்
போன்ற பிறவி எல்லோருக்கும் ஆகி விடுகிறது. நீங்கள்
வருங்காலத்திற்காக அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு இந்த
கண்களால் பார்ப்பது அனைத்தும் பழைய உலகத்தினுடையது ஆகும் என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த உலகம் மாறிக் கொண்டிருக்கிறது.
இப்பொழுது நீங்கள் அமரபுரிக்கு அதிபதி ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். மோகத்தை வென்றவராக அவசியம் ஆக வேண்டி
உள்ளது. பாபா நீங்கள் வந்தீர்கள் என்றால் நாங்கள் சமர்ப்பணம்
ஆகி விடுவோம் என்று நீங்கள் கூறிக் கொண்டே வந்துள்ளீர்கள்.
வியாபாரமோ நன்றாக நடக்கும் அல்லவா? மனிதர்களுக்கு தெரியுமா
என்ன வியாபாரி, ரத்தினங்கள் அளிப்பவர், மந்திரவாதி போன்ற
பெயர்கள் ஏன் உள்ளன என்று? ரத்தினங்களை வழங்குபவர் அல்லவா?
அழியாத ஞான ரத்தினங்கள் ஒவ்வொன்றும் விலை மதிப்பிட முடியாத
மகாவாக்கியங்கள் ஆகும். இது பற்றி ரூப்-பஸந்த் என்ற ஒரு கதையும்
உள்ளது அல்லவா? நீங்கள் ரூப்-பஸந்த் ஞான யோகம் உடையவர்கள்
ஆவீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இப்பொழுது இந்த சரீரத்தின் மூலம் எந்த ஒரு விகர்மமும்
செய்யக் கூடாது. ரிஜிஸ்தர் கெட்டு விடும் வகையில்
அப்பேர்ப்பட்ட எந்த ஒரு அசுர செயலும் செய்யக் கூடாது.
2. ஒரு தந்தையின் நினைவின் போதையில் இருக்க வேண்டும். பாவனமாக
ஆவதற்கான அடிப்படை முயற்சியை அவசியம் செய்ய வேண்டும்.
சோழிகளுக்குப் பின்னால் தங்கள் விலைமதிப்பிட முடியாத நேரத்தை
வீணாக்காமல் ஸ்ரீமத் மூலம் வாழ்க்கையை சிறந்ததாக ஆக்க வேண்டும்.
வரதானம்:
சுயம் தங்களை (மோல்டு) வளைந்து
கொடுத்து கொண்டு, (ரியல் கோல்டு) உண்மையான தங்கமாக ஆகி, ஒவ்வொரு
செயலிலும் வெற்றி அடையக் கூடிய சுய மாற்றம் செய்பவர் ஆவீர்களாக.
யார் ஒவ்வொரு நிலைமையிலும்
சுயத்தை பரிவர்த்தனை செய்து சுயமாற்றம் செய்பவராக ஆகிறார்களோ,
அவர்கள் எப்பொழுதும் வெற்றி அடைபவராக ஆகிறார்கள். எனவே சுயத்தை
மாற்றுவதற்கான இலட்சியம் கொள்ளுங்கள். மற்றவர்கள் மாறினால் நான்
மாறுவேன் - என்பதல்ல. மற்றவர்கள் மாறுகிறார்களோ இல்லையோ, நான்
மாற வேண்டும். ஹே அர்ஜுனா என்று அழைக்கப்படக் கூடியவராக நான்
ஆக வேண்டும். எப்பொழுதும் பரிவர்த்தனை செய்வதில் முதலில் நான்.
யார் இதில் முதலில் நான் என்கிறார்களோ, அவர்களே முதல் நம்பர்
ஆகி விடுகிறார்கள். ஏனெனில் சுயம் தங்களை (மோல்டு) வளைந்து
கொடுத்து கொள்பவர்கள் தான் (ரியல் கோல்டு) உண்மையான தங்கம்
ஆகிறார்கள். உண்மையான தங்கத்திற்கு தான் மதிப்பு இருக்கிறது.
சுலோகன்:
தங்களது சிறந்த வாழ்க்கையின்
கண்கூடான நிரூபணம் மூலமாக தந்தையை வெளிப்படுத்துங்கள்.
ஓம்சாந்தி