26.11.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! தனது
நடத்தையை சீர் திருத்திக் கொள்வதற்காக நினைவின் யாத்திரையில்
இருக்க வேண்டும், தந்தையின் நினைவுதான் உங்களை சதா
சௌபாக்கியசாலி ஆக்கும்.
கேள்வி:
மன
நிலையில்
வித்தியாசம்
எப்போது
ஏற்படும்?
யாருடையது
நல்ல
நிலை
என்று
சொல்ல
முடியும்?
பதில்:
மன நிலையில் வித்தியாசம் நோய்
இருக்கும்போது ஏற்படுகிறது. நோய் வாய்ப் பட்டிருக்கும்போதும்
கூட குஷியான நிலையில் இருந்து குஷி நிறைந்த முகத்தின் மூலம்
அனைவருக்கும் தந்தையின் நினைவை கொடுத்துக் கொண்டிருந்தால் அதுவே
நல்ல மன நிலை ஆகும். ஒருவேளை தானே அழுத படி, மனச்சோர்வில்
இருந்தால் பிறரை எப்படி குஷி மிக்கவராக ஆக்குவீர்கள்? என்ன
நடந்தாலும் அழக் கூடாது.
ஓம் சாந்தி.
இரண்டு வார்த்தைகள்
பாடப்படுகின்றன - துர்ப்பாக்கியசாலி மற்றும் சௌபாக்கிய சாலி.
சௌபாக்கியம் சென்றுவிட்டது என்றால் துர்கதி என சொல்லப்படுகிறது.
மனைவியின் கணவன் இறந்துவிட்டார் என்றால் அதுவும் துர்பாக்கியம்
என சொல்லப்படு கிறது. தனியானவராக ஆகி விடுகிறார். நாம்
எப்போதும் சௌபாக்கியசாலி ஆகிறோம் என நீங்கள் அறிவீர்கள். அங்கே
துக்கத்தின் விசயம் கிடையாது. மரணத்தின் பெயர் இருக்காது. விதவை
என்ற பெயரே இருக்காது. விதவைக்கு துக்கம் ஏற்படு கிறது, அழுதபடி
இருப்பார். சாது சன்னியாசிகளாக இருக்கலாம், அவர்களுக்கு துக்கமே
ஏற்படாது என சொல்ல முடியாது. சிலர் பைத்தியமாகி விடுகின்றனர்,
நோய் வாய்பட்டவராகவும் ஆகின்றனர். இது நோயாளிகளின் உலகமாகும்.
சத்யுகம் நோயற்றவர்களின் உலகமாகும். நாம் பாரதத்தை மீண்டும்
ஸ்ரீமத்படி நோயற்றதாக ஆக்குகிறோம் என குழந்தைகளாகிய நீங்கள்
புரிந்து கொள்கிறீர்கள். இந்த சமயத்தில் மனிதர்களின் நடத்தை
மிகவும் கெட்டுள்ளது. இப்போது நடத்தையை சீர்
திருத்துவதற்காகவும் கண்டிப்பாக டிபார்ட்மெண்ட் (துறை)
இருக்கும். பள்ளிகளிலும் கூட மாணவர்களின் பதிவேடு
வைக்கப்படுகிறது. அவர்களின் நடத்தை பற்றி தெரிந்து விடும்,
ஆகையால்தான் பாபாவும் கூட பதிவேடு (ரெஜிஸ்டர்) வைக்கச் செய்தார்.
ஒவ்வொருவரும் தனது பதிவேட்டை வையுங்கள். நாம் ஏதும் தப்பு
செய்வ தில்லை தானே என தனது நடத்தையைப் பார்க்க வேண்டும். முதல்
விசயம் தந்தையை நினைவு செய்ய வேண்டும். அவரால்தான் உங்களுடைய
நடத்தை முன்னேற்றம் அடை கிறது. அந்த ஒருவரின் நினைவின் மூலம்
ஆயுளும் கூட அதிகரிக்கிறது. இது ஞான ரத்தினம் ஆகும். நினைவை
ரத்தினம் என சொல்லப்படுவதில்லை. நினைவின் மூலம் தான் உங்கள்
நடத்தை சீர்திருந்துகிறது. இந்த 84 பிறவிகளின் சக்கரத்தைப்
பற்றி உங்களைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. விஷ்ணு
மற்றும் பிரம்மா - இதன் மீதுதான் புரிய வைக்க வேண்டும்.
சங்கரரின் நடத்தை என சொல்ல மாட்டோம். பிரம்மா மற்றும்
விஷ்ணுவின் இடையே இவ்விருவருக்கிடையே என்ன தொடர்பு என
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். விஷ்ணுவின் இரண்டு ரூபங்கள்
இந்த லட்சுமி நாராயணர். அவர்கள் தான் பிறகு 84 பிறவிகள்
எடுக்கின்றனர். 84 பிறவிகளில் அவர்களே பூஜைக்குரியவர் களாகவும்
மற்றும் அவர்களே பூஜாரிகளாகவும் ஆகின்றனர். பிரஜாபிதா பிரம்மா
கண்டிப்பாக இங்கு தான் தேவை. சாதாரண சரீரம் தேவை. பலரும் இதில்
தான் குழப்பமடைகின்றனர். பிரம்மா தான் பதித பாவன தந்தையின்
ரதமாவார். தூரதேசத்தில் வசிப்பவர் பிற தேசத்தில் வந்தார் என
சொல்லவும் செய்கின்றனர். தூய்மையான உலகை உருவாக்கக் கூடிய பதித
பாவன தந்தை தூய்மையற்ற உலகில் வந்தார். பதித உலகில் ஒருவர் கூட
தூய்மையானவர் இருக்க முடியாது. 84 பிறவிகள் நாம் எப்படி
எடுத்தோம் என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள். ஒரு சிலராவது எடுக்கக்கூடும் அல்லவா!
முதன் முதலாக யார் வருவார்களோ அவர்களுக்குத்தான் 84 பிறவிகள்
இருக்கும். சத்யுகத்தில் தேவி தேவதைகள்தான் வருவார்கள். 84
பிறவிகள் எவ்வாறு எடுப்பார்கள் என மனிதர்களுக்கு சிறிதும்
சிந்தனை செல்வதில்லை. புரிந்து கொள்ளக் கூடிய விசயமாகும்.
மறுபிறவிகளை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். 84 பிறவிகள்
ஏற்பட்டது என்பதை மிகவும் யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும்.
84 பிறவிகள் அனைவரும் எடுக்க மாட்டார்கள் அல்லவா. ஒன்றாக
அனைவருமே வரமாட்டார்கள், சரீரமும் விட மாட்டார்கள். உங்களுக்கு
உங்களுடைய பிறவிகளைப் பற்றி தெரியாது, பகவான்தான் வந்து புரிய
வைக்கிறார் என பகவானுடைய மகா வாக்கியமும் உள்ளது.
ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். இந்த 84
பிறவிகளின் கதையை தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்கிறார்.
இதுவும் கூட ஒர் படிப்பேயாகும். 84 பிறவிகளின் சக்கரத்தை அறிவது
மிகவும் சுலபமாகும். பிற தர்மத்தவர்கள் இந்த விசயங்களை
புரிந்துக் கொள்ள மாட்டார்கள். உங்களுக்குள்ளும் அனைவருமே 84
பிறவிகள் எடுக்க மாட்டார்கள். அனைவருக்கும் 84 பிறவிகள் என்றால்
அனைவருமே ஒன்றாக வந்து விடுவார்கள். இதுவும் நடக்காது.
அனைத்திற்கும் ஆதாரம் படிப்பு மற்றும் நினைவு செய்வதில் உள்ளது.
அதிலும் முதன்மையானது நினைவு ஆகும். கடினமான பாடத்தில்
மதிப்பெண்கள் அதிகமாக கிடைக்கும். அதன் தாக்கமும் ஏற்படுகிறது.
முதல்தரம், நடுத்தரம், கடைசிதரம் என பாடங் களில் முக்கியத்துவம்
இருக்கின்றன அல்லவா. இவற்றில் இரண்டு முக்கியமானவை. என்னை
நினைவு செய்தீர்கள் என்றால் முழுமையான விகாரமற்றவர் ஆகி
விடுவீர்கள், மேலும் வெற்றி மாலையில் உருட்டப்படுவீர்கள் (இடம்
பெறுவீர்கள்). இது ஓட்டப் பந்தயமாகும். முதலில் நான் எதுவரை
தாரணை செய்கிறேன், எவ்வளவு நினைவு செய்கிறேன், என்னுடைய நடத்தை
எப்படி உள்ளது? என தன்னைப் பார்க்க வேண்டும். எனக்குள்ளேயே
அழக்கூடிய பழக்கம் இருந்தது என்றால் மற்றவர்களை எப்படி குஷி
மிக்கவராக ஆக்க முடியும்? அழுகின்றனர் என்றால் இழக்கின்றனர் என
அர்த்தம். என்ன ஆனாலும் சரி, அழ வேண்டிய அவசியம் இல்லை.
நோயுற்றிருக்கும்போதும் கூட குஷியுடன், தன்னை ஆத்மா என புரிந்து
கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள் என மட்டுமாவது (பிறருக்கு)
சொல்ல முடியும். நோயுற்றிருக்கும்போது தான் மன நிலையின்
வித்தியாசம் தெரியும். வேதனையின்போது சற்றே முனகல் ஓசை
வெளிப்படலாம், ஆனாலும் தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை
நினைவு செய்ய வேண்டும். தந்தை (நற்) செய்தியைக் கொடுத்தார்
அப்படிப்பட்ட செய்தியாளர் ஒரு சிவபாபாவே ஆவார், வேறு யாரும்
இல்லை. மற்றவர்கள் சொல்லக் கூடிய அனைத்தும் பக்தி மார்க்கத்தின்
விசயங்கள் ஆகும். இந்த உலகில் உள்ள அனைத்து பொருட்களுமே
அழியக்கூடியவை யாகும், இப்போது உங்களை எந்த சேதமும் ஏற்படாத
இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கே அழியக் (கெடக்) கூடிய
தன்மையே இல்லாத அவ்வளவு நல்ல பொருட்கள் தான் உருவாகும். இங்கே
அறிவியலில் எவ்வளவு பொருட்கள் உருவாகின்றன, அங்கும் கூட
அறிவியல் கண்டிப்பாக இருக்கும், ஏனென்றால் உங்களுக்கு மிகவும்
சுகம் தேவை. குழந்தைகளாகிய உங்களுக்கு எதுவும் தெரியாமல்
இருந்தது என தந்தை சொல்கிறார். பக்தி மார்க்கம் எப்போது
தொடங்கியது, எவ்வளவு துக்கத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்ற
இந்த அனைத்து விசயங்களும் இப்போது உங்கள் புத்தியில் உள்ளது.
தேவதைகள் அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்கள். . . என
சொல்லப்படுகிறது. பிறகு அந்தக் கலைகள் எப்படி குறைந்தன? இப்போது
எந்தக் கலையும் இல்லை. நிலவின் கலைகளும் (பிறைகள்) கூட மெல்ல
மெல்ல குறைந்தபடி செல்கிறதல்லவா.
இந்த உலகமும் கூட புதிதாக இருக்கும்போது அங்கே அனைத்து
பொருட்களுமே சதோபிரதானமாக முதல் தரமானதாக இருக்கும் என நீங்கள்
அறிவீர்கள். பிறகு பழையதாக ஆகி கலைகள் குறைந்தபடி செல்கின்றன.
இந்த லட்சுமி நாராயணர் அனைத்து குணங் களிலும் நிரம்பியவர்கள்
அல்லவா. இப்போது தந்தை உங்களுக்கு உண்மையிலும் உண்மை யான சத்ய
நாராயணரின் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போது இரவாக
உள்ளது, பிறகு பகல் ஆகிறது. நீங்கள் சம்பூரணமாக ஆகிறீர்கள்
என்றால் உங்களுக்காக பிறகு சிருஷ்டியும் அப்படிப்பட்டதாக
இருக்க வேண்டும். 5 தத்துவங்களும் கூட சதோபிர தானமாக (16
கலைகளிலும் நிரம்பியதாக) ஆகிவிடுகின்றன, ஆகையால் உங்களுடைய
சரீரமும் கூட இயற்கையிலேயே அழகாக இருக்கும். சதோபிரதானமாக
இருக்கும். இந்த முழு உலகமும் 16 கலைகள் நிரம்பியதாக
ஆகிவிடும். இப்போது எந்தக் கலையும் இல்லை. பெரியவர்களிலும்
பெரிய மனிதர்கள் அல்லது மகாத்மாக்கள் இருந்தாலும் தந்தையின்
இந்த ஞானம் கிடைக்க அவர்கள் அதிர்ஷ்டத்திலேயே இல்லை.
அவர்களுக்கு தமது சுபாவத்திலேயே கர்வம் இருக்கும்.
முயற்சியாளர்தான் ஏழைகளுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது. இவ்வளவு
உயர்ந்த தந்தை யாராவது பெரிய ராஜாவோ அல்லது தூய்மையான ரிஷி
முதலானவர்களின் சரீரத்தின் வர வேண்டும் என சிலர் சொல்கின்றனர்.
சன்னியாசிகள் தூய்மையானவர்களாகத்தான் இருக்கின்றனர். தூய்மையான
கன்யாக்களின் உடலில் வரலாம். நான் யாருக்குள் வருகிறேன் என
தந்தை வந்து புரிய வைக்கிறார். 84 பிறவிகளை யார் எடுத்துள்ளாரோ
அவரின் உடலில் வருகிறேன். (நான் வருவதில்) ஒரு நாள் கூட
குறையாது. கிருஷ்ணர் பிறந்தார் என்றால் அந்த சமயத்திலிருந்து
16 கலைகளில் நிறைந்த வராக ஆகின்றனர். பிறகு சதோ, ரஜோ, தமோவில்
வருகின்றனர். அனைத்து பொருட்களும் முதலில் சதோபிர தானமாக,
பிறகு சதோ, ரஜோ, தமோவில் வருகின்றன. சத்யுகத்திலும் கூட இப்படி
ஏற்படுகிறது. குழந்தை சதோபிரதானமாக இருக்கிறது, வளர்ந்த பிறகு
இந்த சரீரத்தை விடுத்து சதோபிரதானமான குழந்தையாக ஆகிறேன் என
சொல்லும். குழந்தை களாகிய உங்களுக்கு அவ்வளவு போதை இல்லை.
குஷியின் எல்லை அதிகமாவதில்லை. நல்ல முயற்சி செய்பவர்களுக்கு
குஷியின் எல்லை அதிகரித்தபடி செல்கிறது. முகம் கூட குஷி
நிறைந்ததாக இருக்கிறது. முன்னே போகப்போக உங்களுக்கு காட்சிகள்
தெரியும். எப்படி வீடு நெருங்க நெருங்க வீடு வாசல் முதலானவை
நினைவுக்கு வருகின்றன அல்லவா. இதுவும் அப்படித்தான். முயற்சி
செய்யச் செய்ய உங்களின் பலன் அருகாமையில் வரும்போது மேலும்
அதிக காட்சிகள் தெரிந்தபடி இருக்கும். குஷியில் இருப்பீர்கள்.
தேர்ச்சி அடையாவிட்டால் அவர்கள் வெட்கப்பட்டுக் கொண்டு மூழ்கி
இறக்கின்றனர். நீங்களும் கூட பிற்காலத்தில் வருந்த
வேண்டியிருக்கும் என பாபா உங்களுக்கு (முன் கூட்டியே)
தெரியப்படுத்தி விடுகிறார். நாம் என்னவாக ஆகப்போகிறோம் என்ற
தன் எதிர்காலத்தின் காட்சியை காணப்போகிறீர்கள். இந்த இந்த பாவ
கர்மங்கள் செய்திருக்கிறாய் என பாபா காட்டுவார். முழுமையாகப்
படிக்கவில்லை, துரோகியாக ஆகினீர்கள், ஆகையால் இந்த தண்டனை
கிடைக்கிறது. அனைத்தும் காட்சியாகத் தெரியும். காட்சியைக்
காட்டாமல் எப்படி தண்டனை கொடுப்பது? நீ இதை இதை செய்தாய்,
அதற்கான தண்டனை இது என நீதி மன்றத்திலும் கூட சொல்கின்றனர்.
கர்மாதீத (முழுமை) நிலை அடையும் வரை ஏதாவது அடையாளம் இருந்து
கொண்டிருக்கும். ஆத்மா தூய்மையடைந்து விட்டால் பிறகு சரீரத்தை
விட வேண்டி இருக்கும். இங்கே இருக்க முடியாது. அந்த நிலையை
நீங்கள் தாரணை செய்ய வேண்டும். இப்போது நீங்கள் திரும்பிச்
சென்று பிறகு புதிய உலகத்தில் வருவதற்கான ஏற்பாடு
செய்கிறீர்கள். நாம் விரைவில் செல்வோம், விரைவில் வருவோம்
என்பதே உங்களின் முயற்சியாக உள்ளது. குழந்தைகளை விளையாட்டில்
ஓட வைக்கின்றனர் அல்லவா. இலக்கைச் சென்று தொட்டு விட்டு பிறகு
திரும்பி வர வேண்டும். நீங்களும் கூட விரைந்து செல்ல வேண்டும்,
பிறகு முதல் நம்பரில் புதிய உலகில் வர வேண்டும். ஆக இது
உங்களின் ஓட்டப் பந்தயமாகும். பள்ளியில் கூட ஓட்டப்பந்தயம்
நடத்துகின்றனர் அல்லவா. இது உங்களுடைய இல்லற மார்க்கம். முதன்
முதலில் உங்களுடையது தூய்மையான இல்லற தர்மமாக இருந்தது.
இப்போது விஷமாக உள்ளது, பிறகு நிர்விகார உலகமாக ஆகப் போகிறது.
இந்த விஷயங்களை நீங்கள் சிந்தித்தீர்கள் என்றாலும் கூட மிகவும்
குஷியாக இருக்கும். நாம்தான் இராஜ்யத்தை பெறுகிறோம், பிறகு
இழக்கிறோம். கதாநாயகன்-கதாநாயகி என சொல்கின்றனர் அல்லவா.
வைரத்தைப் போன்ற பிறவி எடுத்து பிறகு சோழி போன்ற பிறவியில்
வருகிறோம்.
இப்போது தந்தை சொல்கிறார் - நீங்கள் சோழிகளுக்குப் பின்னால்
நேரத்தை வீணாக் காதீர்கள். நானும் நேரத்தை வீணாக்கிக்
கொண்டிருந்தேன் என இவரும் (பிரம்மாவும்) கூறுகிறார். அப்போது
எனக்கும் கூட நீ இப்போது என்னுடையவனாக ஆகி இந்த ஆன்மீகத்
தொழிலைச் செய் என சொன்னார். எனவே அனைத்தும் விட்டு விட்டேன்.
பணத்தை வீசி எறிய மாட்டார்கள். பணம் பயன்படும். பணம் இல்லாமல்
வீடு முதலானவை எப்படி கிடைக்கும்? முன்னே செல்லச் செல்ல பெரிய
பெரிய செல்வந்தர்கள் வருவார்கள். உங்களுக்கு உதவி செய்தபடி
இருப்பார்கள். ஒரு நாள் நீங்கள் பெரிய பெரிய கல்லூரிகள்,
பல்கலைக் கழகங்களில் கூட சென்று இந்த சிருஷ்டியின் சக்கரம்
எப்படி சுழல்கிறது என சொற்பொழிவாற்ற வேண்டியிருக்கும். முதலில்
இருந்து கடைசி வரை சரித்திரம் மீண்டும் நடக்கும். தங்க
யுகத்திலிருந்து தொடங்கி இரும்பு யுகம் வரை சிருஷ்டியின்
வரலாறு புவியியலை நாங்கள் சொல்ல முடியும். நடத்தைகள் பற்றி
நீங்கள் நிறைய புரிய வைக்க முடியும். இந்த லட்சுமி நாராயணரின்
மகிமையைச் சொல்லுங்கள். பாரதம் எவ்வளவு தூய்மையாக இருந்தது,
தெய்வீக குணங்கள் இருந்தன. இப்போது விஷம் நிறைந்த குணங்கள்
இருக்கின்றன. சக்கரம் கண்டிப்பாக திரும்பவும் சுற்றும்.
நாங்கள் உலகின் வரலாறு புவியியல் குறித்து சொல்ல முடியும்.
அங்கே செல்வதற்கும் கூட நல்ல நல்லவர்கள் தேவை. தியாசாபிகல்
சொசைடி இருக்கின்றதல்லவா, அங்கு சென்று சொற்பொழிவாற்றுங் கள்.
கிருஷ்ணர் தேவதையாக இருந்தார், சத்யுகத்தில் இருந்தார். முதன்
முதலாக ஸ்ரீகிருஷ்ணர், பிறகு நாராயணனாக ஆகிறார். நாங்கள்
உங்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் கதை சொல்கிறோம், அதனை வேறு யாரும்
சொல்ல முடியாது. இந்த தலைப்பு எவ்வளவு பெரியது. புத்திசாலிகள்
சொற்பொழிவாற்ற வேண்டும்.
நாம் உலகின் எஜமானர்களாக ஆகப்போகிறோம் என உங்கள் உள்ளத்தில்
உணரு கிறீர்கள், எவ்வளவு குஷி ஏற்பட வேண்டும். உள்ளுக்குள் இதை
சிந்தித்தீர்கள் என்றால் பிறகு உங்களுக்கு உலகில் வேறு எதிலும்
நாட்டம் இருக்காது. இங்கே நீங்கள் வருவதே பரமபிதா பரமாத்மாவின்
மூலம் உலகின் எஜமானர் ஆவதற்காக. உலகம் என்பது இந்த
உலகத்தைத்தான் குறிக்கிறது. பிரம்மலோகத்தையோ சூட்சும வதனத்தையோ
உலகம் என சொல்ல மாட்டோம். நான் உலகின் எஜமானர் ஆவதில்லை என
தந்தை சொல்கிறார். குழந்தைகளாகிய உங்களை இந்த உலகின்
எஜமானர்களாக ஆக்குகிறேன். எவ்வளவு ஆழமான விசயங்கள். உங்களை
உலகின் எஜமானாக ஆக்குகிறேன். பிறகு நீங்கள் மாயைக்கு அடிமை ஆகி
விடுகிறீர்கள். இங்கே முன்னால் நினைவில் அமர வைத்தீர்களானால்
அவர் களுக்கு நினைவூட்ட வேண்டும் - ஆத்ம அபிமானி ஆகி
அமருங்கள், தந்தையை நினைவு செய்யுங்கள். 5 நிமிடங்களுக்குப்
பிறகு சொல்லுங்கள். உங்களுடைய நினைவு யாத்திரை நடக்கிறதல்லவா.
காரணம் பலரின் புத்தி வெளியில் சென்று விடுகிறது, ஆகையால் 5-10
நிமிடங்களுக்கு ஒரு முறை நினைவூட்டுங்கள். தன்னை ஆத்மா என
புரிந்து அமர்ந்திருக் கிறீர்களா? தந்தையை நினைவு
செய்கிறீர்களா? அப்போது தன் மீதும் கவனம் இருக்கும். பாபா இந்த
யுக்திகளை எல்லாம் சொல்கிறார். அடிக்கடி நினைவூட்டுங்கள்.
தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு சிவ பாபாவை நினைவு
செய்கிறீர்களா? அப்போது யாருடைய புத்தியாவது அலைந்து
கொண்டிருந்தால் அது நின்று போகும். அடிக்கடி இந்த நினைவைக்
கொடுக்க வேண்டும். பாபாவின் நினைவின் மூலமே நீங்கள்
அக்கரைக்குச் சென்று விடுவீர்கள். படகோட்டியே என் படகை கரை
சேர்த்திடுங்கள் என பாடவும் செய்கின்றனர். ஆனால் அர்த்தத்தைப்
புரிந்து கொள்வதில்லை. முக்தி தாமத்திற்குச் செல்வதற்காக அரைக்
கல்பம் பக்தி செய்தீர்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால்
முக்தி தாமத்திற்குச் சென்றுவிடுவீர்கள். நீங்கள் (யோகத்தில்)
அமருவதே பாவங்களை அழிப்பதற்காக எனும் போது பாவம் செய்யக்
கூடாது. இல்லாவிட்டால் பிறகு பாவங்கள் தங்கி விடும். தன்னை
ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள் என்பது
முதல் நம்பர் முயற்சியாகும். இப்படியாக எச்சரிக்கை கொடுத்தபடி
இருந்தீர்கள் என்றால் தன் மீதும் கூட கவனம் இருக்கும்.
தன்னையும் எச்சரித்துக் கொள்ள வேண்டும். தானும் நினைவில்
அமர்ந்தால் பிறரையும் அமர வைக்கலாம். நாம் ஆத்மாக்கள், நம்
வீட்டுக்குச் செல்கிறோம். பிறகு வந்து இராஜ்யம் செய்வோம்.
தன்னை சரீரம் என புரிந்து கொள்வதும் கூட ஒரு கடுமையான
வியாதியாகும். ஆகையால்தான் அனைவரும் பாதாளத்தில் விழுந்து
விட்டனர். அவர்களை மீட்க வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்
1. தனது நேரத்தை ஆன்மீக வியாபாரத்தில் பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.
வைரத்திற்குச் சமமான வாழ்க்கையை உருவாக்க வேண்டும். தன்னை
எச்சரித்தபடி இருக்க வேண்டும். சரீரம் என புரிந்து கொள்ளக்
கூடிய கடுமையான வியாதியிலிருந்து விடுபடக்கூடிய முயற்சி செய்ய
வேண்டும்.
2. ஒருபோதும் மாயைக்கு அடிமையாகக் கூடாது. நான் ஆத்மா என
உள்ளுக்குள் சிந்தித்தபடி இருக்க வேண்டும். நாம்
பிச்சைக்காரரிலிருந்து இளவரசனாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்ற
குஷி இருக்க வேண்டும்.
வரதானம் :
களங்கமற்ற (விகாரமற்ற) சக்தியின்
மூலம் சூட்சமவதனம் மற்றும் மூன்று உலகங்களையும் அனுபவம் செய்யக்
கூடிய உயர்ந்த பாக்கியசாலி ஆகுக.
எந்த குழந்தைகளிடம் விகாரமற்ற (மாசுற்ற)
நிலையின் சக்தி இருக்கிறதோ, புத்தியின் நினைவு முற்றிலும்
தெளிவாக இருக்கிறதோ - அப்படிப்பட்ட பாக்கியசாலி குழந்தைகள்
எளிதாகவே மூன்று உலகங்களையும் வலம் (சுற்றி) வரமுடியும்.
சூட்சமவதனம் வரை நமது எண்ணங்களை சென்றடைய செய்வதற்கு அனைத்து
சம்மந்தங்களின் சாராத்தின் நுட்பமான நினைவு வேண்டும், இது தான்
அனைத்தையும் விட சக்திசாலியான கம்பியாகும். இதற்கிடையில் மாயா
நுழைய முடியாது. எனவே சூட்சமவதனத்தின் மிக அழகான அனுபவம்
செய்வதற்காக தன்னை மாசற்றவராக இருப்பதற்கான சக்தியின் மூலம்
நிறைந்தவர் ஆகுகங்கள்.
சுலோகன் :
எந்தவித மனிதன், பொருள் மற்றும்
ஆடம்பரமானவை ஈர்ப்பதினால் தான் பாபாவின் துணையை எண்ணத்தினால்
விவாகரத்து கொடுப்பதாகும்.
ஓம்சாந்தி