BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி1, 2015

ஒரு பிராமண ஆத்மா கடலுடன் சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:

கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

நான் ஒர் பிராமண ஆத்மா ஆவேன். நான் பிரம்மா பாபாவின் கமல வாய் மூலம் பிறந்திருக்கின்றேன். இந்த எண்ணங்களை சிந்திக்கும் போது அன்பு அலைகள் வெளிப்படுகின்றன.

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்:

இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். அன்பான பாபா உங்களிடமிருந்து ஒரு தனித்துவம் வாய்ந்த அலௌகிக ஆஸ்தியை நான் பெறுகின்றேன். கடலான உங்களில் முழ்கி, உங்களை போன்று கடலாகும் வரை முழ்கி இருப்பது என்னுடைய பிராமண வாழ்க்கையில் எனக்கிருக்கும் இருக்கும் ஒரே ஆசையாகும்.

 

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்:

இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். எந்த அளவிற்கு ஞான சூரியனின் கதிர்களும் ஒளியும் உன்னுள் அதிகரிக்கின்றதோ, அந்த அளவிற்கு அன்பு அலைகள் அதிகரிக்கும். அதை நீ அனுபவம் செய்வாய். அமிர்த வேலை நேரத்திலிருந்து ஞான சூரியனிடமிருந்து கிடைக்கும் ஞான முரளியானது இவ்வாறு உன்னில் வேலை செய் ஆரம்பிக்கின்றது. எண்ணற்ற அலைகள் எழும்: ஞான அலைகள், அன்பு அலைகள், சந்தோஷ அலைகள், அமைதி அலைகள் மற்றும் சக்தியின் அலைகள். அமிர்த வேளையில் இந்த அலைகள் எழுகின்றன.

அகத்தூண்டுதல் பெறுவது:

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

நீ உன்னுடைய உண்மையான ரூபத்தின் யதார்த்தத்தில் இருந்து தெய்வீக தன்மையின் இராஜரீகத்தின் ஒளியை வெளிப்படுத்துகின்றாய். இதனால்,  கல்லை தங்கமாக மாற்றும் சித்தர் போல், நீ அங்கு இருப்பது, நீ சந்திக்கும் ஒவ்வொரு ஆத்மாவிலும் தங்க ஒளியை ஏற்றுகின்றது.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு :

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் மனதளவில் அல்லது ஸ்தூலமாக கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.