BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி 2
, 2015

ஒரு விட்டில் பூச்சி ஆன்மீக சுடருடன் சம்பாஷ சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:  

கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

நான் ஒர் அழிவற்ற விட்டில்பூச்சி ஆவேன். நான் ஆன்மீக சுடரை மட்டுமே பார்க்கின்றேன், அவருடன் மட்டுமே தொடர்பு கொள்கின்றேன். என்னுடைய விழிப்புணர்வில், அந்த ஒருவரை தவிர வேறு ஒருவர் இல்லை.

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். பாபா, சுடரான நீங்களும் விட்டில்பூச்சியான நானும் அழிவற்றவர்கள். உங்களிடம் நான் கொண்டிருக்கும் அன்பு அழிவற்றது.  

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். உன் மீது எனக்கிருக்கும் அன்பின் காரணமாக, இன்று ஆன்மீக சுடரான நான் விட்டில்பூச்சியான உன்னை சந்திப்பதற்காக ஒரு ஒன்று கூடலில் வந்திருக்கின்றேன். இதை உணர்ந்து அன்பின் பொறுப்பை நிறைவேற்றுபவர்கள் அனைத்தையும் அடைவார்கள். இந்த அன்பு அனுபவம் ஆனபிறகு, இந்த அன்பு நிறைந்த உறவுமுறையின் பொறுப்பை நிறைவேற்றுவது எவ்வளவு சுலபம் என்பதை நீ அறிவாய்.
 

அகத்தூண்டுதல் பெறுவது:

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.
 

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

முழு சக்கரத்திலும், விலைமதிப்பற்ற இந்த நாட்கள் மீண்டும் வரபோவது இல்லை என்பதை நீ புரிந்துக்கொண்டு இருக்கின்றாய். சங்கம யுகத்தின் தங்க வாய்ப்பை நீ எடுத்துக்கொள்கின்றாய். தந்தையிடமிருந்து பெறும் ஒவ்வொரு பொக்கிஷத்தையும் நேரத்தையும் சக்திசாலி ஆகுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் நீ பயன்படுத்துகின்றாய்.
 

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

 

உறங்குவதற்கு முன்பு :

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.