BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி 3, 2015

அன்பிற்கினிய குழந்தை அன்பிற்கினிய பாபாவுடன் சம்பாஷணை செய்கின்றார்.


முதல் விழிப்புணர்வு:


கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து
, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்
?:

நான் பாபாவின் அன்பிற்கினிய குழந்தை ஆவேன். என் மீது பாபாவிற்கு மிகவும் ஆழமான தூய அன்பு இருக்கிறது. என் மீது பாபாவிற்கு இருக்கும் அன்பை நினைவு செய்வது
, என்னுடைய இதயத்தை மென்மையாக்கி மனதை சாந்த படுத்துகிறது.

நான் யாருக்கு சொந்தமானவன்
?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம்.
“என்னுடைய பாபா, இனிமையான பாபா, அன்பிற்கினிய பாபா” என்னும் பாடலுக்கு நான் விழித்துக்கொள்கின்றேன். நான் முன்னேறுவதற்கு முழு நாளும் இந்த அழிவற்ற பாடலை மீண்டும் மீண்டும் பாட வேண்டும் என்பதை நான் உணர்கின்றேன்.

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள்.இனிமையான குழந்தாய், அன்பிற்கினிய குழந்தாய், எப்பொழுதோ தொலைந்து இப்போது கண்டெடுக்க பட்டிருக்கும் குழந்தாய்,” உன்னுடைய காதுகளில் தொடர்ந்து உன் மீது பாபா கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தும் இனிமையான பாடலை கேள். பாபாவின் மகிமையை பாடும் பாடல்களையும், உன்னுடைய மேன்மையான வாழ்க்கையின் மகிமையை பாடும் பாடல்களையும் பாடு. இந்த இசையை பாடுவதிலும் கேட்பதிலும் மும்முரமாக இரு. அதன்பிறகு, மற்ற வீணான எதற்கும் உனக்கு நேரம் இருக்காது.

அகத்தூண்டுதல் பெறுவது:

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.


பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

எப்பொழுதெல்லாம், தடைகள் வருகின்றனவோ, அப்போது, தந்தையையும் உனது தேவதை ஸ்திதியையும் ஒர் வினாடியில் அழைக்கும் நீ ஒரு ஆன்மீக மந்திரவாதி ஆவாய். இவ்வாறு செய்வதனால், மாயாவின் பிடியிலிருந்து நீ உயர எழுவதோடு, எல்லையற்ற உயரத்தில் பறந்துக்கொண்டு இருக்கின்றாய்.


எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு
:

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.