BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us


ஜனவரி 4, 2015

மாயாவை வெற்றி கொண்டவர் அனைத்து உறவுமுறைகளையும் நிறைவேற்றுபவருடன்  சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:

நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

நான் மாயாவை வெற்றி கொண்டவன் ஆவேன். பாபாவை பார்ப்பதற்கு மட்டுமே கண்கள் இருக்கின்றன என்பதை நான் உணரும்போது மாயாவை வெற்றி கொள்கின்றேன். பாபா கூறுவதை கேட்பதற்கு மட்டுமே என்னுடைய காதுகளை பயன்படுத்துகின்றேன். என்னுடைய கால்கள் பாபாவை பின்பற்றுவதற்காக இருக்கின்றன. ஒவ்வொரு அடியிலும், நான் பாபாவின் கால் அடியை பின்பற்றுகின்றேன்.  

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். பாபா நான் உங்களை மட்டுமே பார்கின்றேன், பாபா நான் நீங்கள் கூறுவதை மட்டுமே கேட்கின்றேன், பாபா நான் உங்களுடன் மட்டுமே ஓய்வெடுகின்றேன். உங்களுடன் மட்டுமே நான் சாப்பிடுகின்றேன். நான் சேவை செய்யும்போது, உங்களை நான் அறிமுகப்படுத்துகின்றேன், மற்ற ஆத்மாக்கள் உங்களை சந்திப்பதற்கு உற்சாகப் படுத்துகின்றேன். உங்களிடம் நான் செய்யும் இந்த கலப்படமற்ற அற்பணம் என்னை மாயாவை வெற்றி கொண்டவர் ஆக்குகின்றது.  

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்:

இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். ஒரு கணத்தில் நான் உன்னுடைய தந்தையாக இருக்கின்றேன், மறு கணத்தில் உன் முன், உன்னுடைய ஆசிரியராக இருக்கின்றேன். அதற்கு அடுத்த கணத்தில் உன் முன் உன்னுடைய நண்பனாக நான் இருக்கின்றேன். உனக்காக அனைத்து உறவுமுறைகளையும் பாபாவால் நிறைவேற்ற முடியும். பாபாவால் மட்டுமே இந்த பாகங்கள் அனைத்தையும் நடிக்க முடியும், இந்த சங்கம யுகத்தில் மட்டுமே அவரால் இவ்வாறு இருக்க முடியும். நீ தேர்ந்தெடுக்கும் எந்த ரூபத்திலும் நீ பாபாவை சந்தித்து, உன்னுடைய மேன்மையான அதிருஷ்டத்தை பெற்றுக்கொள்.      

அகத்தூண்டுதல் பெறுவது:

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

பழைய உலகை விட்டுவிட்டதால், உன்னுடைய கைகள் கடவுளின் உலகிற்கு சொந்தமான பொக்கிஷங்களால் நிரம்பியிருக்கிறது. நீ சந்திக்கும் அனைவருடனும் இவற்றை நீ பகிர்ந்து கொள்கின்றாய். இதன் மூலம் அருள்பவர் மற்றும் உலக சக்ரவர்த்தியின் சமஸ்காரங்களை நீ வெளிக்கொண்டு வருகின்றாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு :

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.