BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி 5, 2015

உண்மையான சீதை
, இராமருடன் சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:


நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து
, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக நான் கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

நான் ஒரு உண்மையான சீதை ஆவேன். நான் ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்யை கடைபிடிக்கின்றேன். நான் மரியாதா கோட்பாடுகளுக்கு உட்பட்டு வாழ்கின்றேன்.
 

நான் யாருக்கு சொந்தமானவன்
?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம்.
என்னுடைய உலகாய கடமைகளை நான் நிறைவேற்றிக்கொண்டு உலகில் என்னுடைய பாகத்தை நடித்துக்கொண்டு இருக்கும்போதிலும், நான் உங்களுடைய உண்மையான சீதை என்பதை எப்போதும் உணர்ந்தவாறு இருக்கிறேன். இராமரான உங்களை ஒவ்வொரு மூச்சிலும் நான் நினைவு செய்கின்றேன்.

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்:

இனிமையான குழந்தாய்
, விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். இராமரே கடவுள் ஆவார். நீ உண்மையான சீதை ஆவாய். உண்மையான சீதையான, ஆத்மாவான நீ, எப்போதும் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தொடர்ந்து தந்தையின் ஸ்ரீமத்யை கடைபிடிக்க வேண்டும். பாபாவின் வழிக்காட்டல்களுக்கு எதிராக ஒரு அடி கூட எடுக்காதே. இரயில் வண்டியானது எவ்வாறு தண்டவாளங்களில் பாதுகாப்பாக நகர்கின்றதோ, அது போல், அமிர்த வேளையில், நினைவு என்னும் தண்டவாளத்தில் முன்னோக்கி செல். அமிர்த வேளையானது முழு நாளையும் பராமரிக்கிறது. இந்த அஸ்திவாரத்தை நீ பலமாக்கினால், முழு நாளிலும் பாபாவின் ஓத்துழைப்பை பெறுவாய்.

அகத்தூண்டுதல் பெறுவது:


என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.


பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:


என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன்
, சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்கள் முன்னேறி பிரகாசிக்கும்போது நீ   மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றாய். மற்றவர்களை முன் வைத்து உனக்காக நீ கொண்டிருக்கும் அனைத்து ஆசைகளையும் நீ விட்டுவிடுவதால், நீ அனைவரின் இதயத்தையும் வென்று உலக உபகாரி ஆகிவிட்டாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):


பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில்
, உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு
:

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.