BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி 6, 2015

திருப்தியான ஆத்மா கண்ணாடியின் உரிமையாளருடன் சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:


நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து
, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்
?:

நான் ஓர் திருப்தியான ஆத்மா. அந்த ஒருவரிடமிருந்து அனைத்து நன்மைகளையும் நான் அடைகின்றேன். ஆசைகளின் ஞானத்தை நான் அறியாதவன் ஆவேன். இது எனக்கு முழு திருப்தியை அளிக்கிறது.


நான் யாருக்கு சொந்தமானவன்
?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம்.
பிறவி பிறவியாக என்னுடைய ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கு மனிதர்களை நான் நம்பினேன். ஒவ்வொரு கதவாக அலைந்து அலைந்து என்னுடைய புத்தி பலவீனமாகி விட்டது. இந்த வாழ்க்கையில், அனைத்து பேறுகளையும் உங்களிடமிருந்து நான் அனுபவம் செய்கின்றேன். நீங்கள் தான் என்னை என்னுடைய இலக்கை நோக்கி இட்டு செல்கின்றீர்கள்.

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய்
, விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். நீ அதிருப்தி அடையும்போது, உனக்காக பாபா வைத்திருக்கும் அலௌகீக கண்ணாடியை பார். இந்த ஆன்மீக கண்ணாடியை உன்னுடன் நீ வைத்திரு. மீண்டும் மீண்டும் அதில் உன்னை பார்ப்பதை பழக்கமாக்கி கொள். உன்னுடைய ஸ்தூல தோற்றத்தில் ஏதாவது சரியாக இல்லாவிட்டால், ஸ்தூலமான கண்ணாடியில் பார்த்து உன்னால் அதை திருத்திக்கொள்ள முடியும். அதே போல்,  உண்மையான உன்னை ஞானக் கண்ணாடியில் பார்த்து திருத்திக்கொள். உன்னுடைய ஆதியான குணங்கள் என்னும் கண்ணாடியில் உன்னை நீ பார்த்து, உடல் உணர்வில் வந்த உடனேயே உன்னை நீ அதிலிருந்து அகற்றிக்கொள். இந்த முயற்சியானது உன்னை என்றென்றைக்கும் திருப்தியான ஆத்மாவாக ஆக்கிவிடும்.

அகத்தூண்டுதல் பெறுவது:


என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.


பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:


என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன்
, சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

உன்னுடைய பிரகாசமான தன்மை நம்பிக்கை அற்றவர்களுக்கு நம்பிக்கையையும் மனம் துவண்டவர்களுக்கு தைரியத்தையும் கொடுக்கிறது. ஆத்மாக்களின் பலவீனத்தை உன்னுடைய ஒளி கரைத்துவிட்டு
, அவர்களுக்குள் சக்தியின் ஒளியை ஏற்றிவிடுகிறது.


எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):


பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில்
, உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு
:

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.