BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி 7, 2015

எல்லையற்ற ஆத்மா எல்லையற்ற ஒருவருடன் சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:

நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

நான் ஓர் எல்லையற்ற ஆத்மா ஆவேன். மூழு உலகிற்கும் நன்மை கொண்டுவருவதை நான் எல்லையற்ற பொறுப்பாக எடுத்துக்கொள்கின்றேன். இந்த எல்லையற்ற பொறுப்பை நான் நிறைவேற்றுவதால் நான் முன்னேறுகின்றேன். 

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். “நான் ஒரு குடும்பஸ்தர், இவர்கள் என்னுடைய உறவினர்கள்”, இது போன்ற எண்ணங்களை நான் சிந்திக்கும்போது, என்னை கட்டுபடுத்தும் பற்று வருவதை நான் உணர்கின்றேன். “நான் சேவை களத்தில் நிற்கின்றேன், முழு உலகிற்கு நன்மை கொண்டுவருவது என்னுடைய பொறுப்பாகும்”, என்ற விழிப்புணர்வை கொண்டு வந்து, இந்த வரம்புகளை நான் உடைகின்றேன்.  

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். உன்னுடைய அலௌகீக பொறுப்பை நினைவு செய். இதற்கு மாறாக, உன்னுடைய நேரத்தையும் எண்ணங்களையும் எல்லைக்கு உட்பட்ட பொறுப்புகளுக்கு நீ கொடுத்தால், உன்னுடைய உண்மையான கடமையை நீ புறக்கனிக்கின்றாய். எல்லைக்கு உட்பட்ட விழிப்புணர்வில், உன் பொறுப்பில் இருக்கும் ஆத்மாக்களுக்கு நீ நன்மை செய்வதை விட, அவர்களை தொந்தரவு செய்கின்றாய். உன்னுடைய அலௌகீக நடவடிக்கைக்களை பார்க்காமல், அலௌகீக தந்தையிடமிருந்து அவர்கள் பிரிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அதனால், நீ உன்னுடைய பொறுப்பு என்று கருதும் எல்லைக்கு உட்பட்ட விஷயங்கள்,  சுமை ஆகிவிடுகிறது. 

அகத்தூண்டுதல் பெறுவது:

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

உன்னுடைய சந்தோஷமான ஆன்மீகம் நிறைந்த எண்ணங்களின் சேகரிப்பினால் வீணான சொற்களையும் செயல்களையும் நீ முடித்துவிடுகின்றாய். இதன் மூலம் உன்னுடைய ஆன்மீகமானது சுற்றுசூழலை சக்தியால் நிரப்பி கடவுளின் சக்தியினால் ஆத்மாக்களை சக்திசாலி ஆக்குகின்றது.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு :

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.