BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி 9, 2015

இரட்டை ஒளி தேவதை ஆன்மீக பயிற்றுவிப்பாளருடன் சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:

நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

நான் ஓர் இரட்டை ஒளி தேவதை ஆவேன். நான் பாபாவின் மீது என்னுடைய அனைத்து பொறுப்பையும் வைக்கின்றேன். சூட்சும உலகில் என்னுடைய ஒளியிலான உடலில் நடனம் ஆடுகின்றேன்.

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். உங்கள் முன் அமரும்போது மூன்று ரூபங்களை நான் நினைவு செய்கின்றேன். நான் உங்கள் குழந்தை, நான் ஒர் மாஸ்டர். நான் ஒர் தேவதை. உங்கள் குழந்தையாக என்னுடைய சுமையை உங்களிடம் கொடுக்கின்றேன். என்னுடைய சூட்சும புலன்களுக்கு அதிகாரியாக, என்னால் கலப்படமற்ற நினைவில் நிலைத்திருக்க முடிகின்றது. ஒரு தேவதையாக, சப்தத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நான் நிலைத்திருக்கின்றேன். பழைய உலகம் என்னை கவர்வதில்லை.  

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். உன்னுடைய பொறுப்பை பாபாவின் மீது வைத்துவிட்டு, தொடர்ந்து சந்தோஷத்தை அனுபவம் செய். இரவு பகல் முழுவதும் ஒர் தேவதை போல் நடனம் ஆடு, அதாவது உன் மனதின் மூலம் நீ நடனம் ஆடு. உடல் உணர்வில் இருப்பது மனித தன்மை, ஆத்ம உணர்வில் இருப்பது தேவதை ஆகும். அமிர்த வேளையில் விழித்துக்கொள், உன்னுடைய சொந்த தேவதை ரூபத்தின் உணர்வில் நிலைத்திருந்து சந்தோஷத்தில் நடனம் ஆடு. இந்த சந்தோஷமானது உன்னை அமைதியிழக்க செய்யும் எந்த விதமான கடினமான சூழ்நிலையையும் முடிவிற்கு கொண்டு வந்துவிடும்.    

அகத்தூண்டுதல் பெறுவது:

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

நீ தெய்வீக தன்மையின் செழிப்பினால் கைகள், இதயம் மற்றும் மனம் பெருக்கெடுத்து ஓடும் அருள்பவரின் குழந்தை ஆவாய். இதனால், உன்னுடைய ஆசைகள் கரைந்துவிட்டது, அருள்பவரின் குழந்தை என்னும் அழியாத முத்திரை உன்னில் பதிக்கபட்டுவிட்டது.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு :

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.