BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி 11, 2015

உற்சாகமான ஆத்மா, தெய்வீக புத்தியை அருள்பவருடன் சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:

நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

ஒவ்வொரு நாளும் நான் புதிய ஞான கருத்தை சிந்தித்து பார்கின்றேன். ஆத்ம உணர்வில் வந்து, நான் நினைவு செய்யும் முறையை மாற்றுகின்றேன். இது எனக்கு தைரியத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது. பாபாவிடமிருந்து புது விஷயங்களை பெறுவதற்காக நான் அமிர்த வேளையில் உற்சாகத்துடன் விழித்துக்கொள்கின்றேன்.    

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். அமிர்த வேளையில் ஆன்மீக சுற்றுலாவில் நான் செல்கின்றேன் என்பதை நான் உணர்கின்றேன். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதால், சோம்பல் தானாக ஓடிவிடுகின்றது. சில வேளைகளில் நான் பரந்தாமத்திற்கு செல்கின்றேன், சில வேளைகளில் ஸ்வர்கத்திற்கும், சில வேளைகளில் உங்களை மதுவனத்தில் சந்திப்பதையும் நான் மனக்கண்களில் பார்க்கின்றேன்.

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். பாப்தாதா, அவருடைய தெய்வீக புத்தி என்னும் பரிசின் மூலம் உன்னை உயர்த்திவிடுகின்றார். அனைவரும் இந்த பரிசை பெறுகின்றனர், ஆனால் அனைவரும் சம அளவில் பயன்படுத்துவதில்லை. தெய்வீக புத்தியானது மிகவும் சக்தி வாய்ந்தது. சுலபமாக கிடைக்க கூடியது. பரந்தாமம், சூட்சும உலகம் மற்றும் ஸ்தூல உலகம் மூன்றையும் வலம் வர உனக்கு உதவி செய்யும். நினைவின் மூலம் ஒரு நொடியில் நீ அங்கு இருப்பாய். இந்த நினைவின் மூலம், எந்த உலகில் நீ எவ்வளவு நேரம் இருக்க விரும்பினாலும், அந்த உலகை பற்றி விழிப்புணர்வில் இருப்பதன் மூலம் உன்னால் அந்த உலகை அனுபவம் செய்ய முடியும். அமிர்த வேளையில் நீ கவனமாக இருப்பதன் மூலம் இந்த பரிசை மிக நல்ல முறையில் பயன்படுத்த முடியும்.

மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

முழு சக்கரத்திற்கும் உன்னுடைய  மேன்மையான பொக்கிஷங்கள் உன்னிடம் நிலைத்திருக்கும் ஒரு விசேஷமான ஆத்மா நீ ஆவாய். உன்னுடைய பிராமண வாழ்க்கையின் ஆரம்பம் முதற்கொண்டு, நீ மற்றவர்களுக்கு நன்மை செய்துகொண்டு, முழுமையான தூய்மையுடன் இருப்பதால், இந்த பாக்கியத்தை நீ பெறுகின்றாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு :

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.