BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 11, 2014

ஓர் மகாரதி அன்பு கடலுடன் சம்பாஷனை செய்கின்றார்

முதல் விழிப்புணர்வு  : நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில், நான் உணர்ந்து பார்க்கின்றேன்: “நான் ஒர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்? நான் ஒரு மகாரதி குழந்தை ஆவேன். ஆத்மாவாக்கிய எனக்கு அழகு, ரூபம், நறுமணம் மற்றும் நிறம் இருக்கின்றன. பாபா என்னை விசேஷமான அன்பு மற்றும் சக்தியினால் பராமரிக்கின்றார்.

நான் யாருக்கு சொந்தமானவன்? :

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்:

இனிமையான பாபா, காலை வணக்கம் / குட் மார்னிங். அன்பு கடலான  உங்களுக்கு நான் சொந்தம். நான் எவ்வாறுயிருந்தாலும், என்னவாக இருந்தாலும், நான் உங்களுடையவன், நீங்கள் என்னுடையவர். இனிமையான பாபா, உங்களுடைய அன்பில் என்னை நான் தொலைத்துவிட்டேன்.

பாபா ஆத்மாவுடன் பேசுகின்றார்:

இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்து கொள். குழந்தாய், உன்னுடைய ரூபம் பாபாவை போல் இருப்பதால், அவருடைய திவ்விய குணங்களும் உன்னுடையவை ஆகும். ஒரு மகாரதி குழந்தையாக என்னை சந்தித்து என்னில் ஒன்றிவிடு. கடலில் ஆறுகள் பாய்ந்து அதில் கலந்துவிடுவது போல், பாபாவின் அனைத்து குணங்களும் ஆத்மாவில் பிரவேசித்துவிடும். பிரம்மா பாபா ஸ்தூல ரூபத்தில் அனுபவம் செய்தது மகாரதிகளின் அனுபவமும் ஆகும். உங்களின் சம்பூரண முழுமை ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

அகத்தூண்டுதல் பெறுவது : ஓயாத என்னுடைய மனதை ஒரு நிமிடம், மௌன கடலான, பாபாவின் மீது, கவனம் செலுத்துகின்றேன். இந்த  மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் தூய்மையான, சேவைக்கான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது : என்னுடைய தேவதை ரூபத்தை சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் உண்டாக்குகின்றேன். மிகுந்த அன்புடனும் சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலமும் தூய்மையான பார்வையின் மூலம், அவர் எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

மாயாவினுடைய விளையாட்டுகளுக்கு, சரியான ஆன்மீக சக்திகளை சரியான நேரத்தில் பயன்படுத்தி , நடனம் ஆட கற்றுக்கொண்ட நீ ஒரு விவேகமான மற்றும் புத்திசாலியான ஆத்மா ஆவாய். உன்னுடைய விவேகத்தினால், வெற்றியின் அடையாளம்  உன்மேல் பதிந்துள்ளது. கடவுளின் ஆசீர்வதிக்கும் தங்க கைகள் உன் மீது இருப்பதுடன், தெய்வீக குடும்பத்தின் அன்பும் உன்னுடன் இருக்கிறது. 

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள் ): மேற் கூறப்பட்ட ஆசீர்வாதத்தை உலகின் மீது அருளுகின்றேன். இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகத்தை வளம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்த பிறகு, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தது. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை விலக்கின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.

குறிப்பு: தினமும் கருப்பு வண்ணத்தில் இருக்கும் கருத்துக்கள் மட்டும் வேறுப்பட்டிருக்கும்.