BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி 12, 2015

தெய்வீக கண்களுடைய ஆத்மா, விமான ஓட்டியுடன் சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:

நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

பாபாவிடமிருந்து தெய்வீக கண்களை நான் பரிசாக பெறுகின்றேன். இந்த கண்களின் மூலம், மன்மத், பர்மத் மற்றும் ஸ்ரீமத், 3 க்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக பார்க்கின்றேன். எந்த வழிக்காட்டல் என்னை சத்தோபிரதானமாக்குகின்றது என்பதை பார்க்கின்றேன். என்னில் இருக்கும் இரஜோ அல்லது தமோ குணங்களின் சிறு சுவட்டை கூட கண்டுபிடித்து விடுகின்றேன்.    

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். தெய்வீக, ஆன்மீக கண்களை பரிசாக கொடுத்ததற்கு நன்றி பாபா. இந்த கண்களைக்கொண்டு மாயையை தொலைவில் இருக்கும்போதே பார்த்து விடுகின்றேன். ஏதாவது கடினமாக அனுபவமானால், மாயை என்னுடைய தெய்வீக கண்களை பாதிக்கின்றது என்பதை இப்போது நான் அறிவேன்.

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். தெய்வீக கண்கள் என்னும் பரிசானது, ஒர்  ஆன்மீக விமானம் ஆகும். ஓரூ நொடியில் நீ எங்கு செல்ல நினைத்தாலும், ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் செல்லமுடியும். தூய எண்ணங்கள் தான் இந்த பொத்தான். மேன்மையான எண்ணங்கள் மூலம் இந்த பொத்தானை on செய்து உடனடியாக இந்த நிலையில் ஸ்திரமாகிவிடு. உன்னுடைய தெய்வீக கண்களில் மாயையின் நிழல் இருக்குமாயின், விமானம் சரியாக பறக்க முடியாது. உன்னுடைய சுய-மரியாதையில் நீ ஸ்திரமாக இருக்காவிட்டால், உன்னுடைய இலக்கை நீ சென்றடையமாட்டாய்.

அகத்தூண்டுதல் பெறுவது:

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

“என்னுடைய” என்னும் சொல்லை விட்டுவிட்டதால், பந்தனங்கள் என்னும் கூட்டை நீ உடைத்து விட்டாய். சிறை பறவையிலிருந்து, கடவுளின் ஆகாயவெளியில் சுதந்திரம், ஒளி மற்றும் அன்பு என்னும் இறக்கைகளால் உயர பறக்கும் ஒரு தேவதையாக நீ ஆகியிருக்கின்றாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு :

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் மனதளவில் அல்லது ஸ்தூலமாக கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.