BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 12, 2014

ஓரு சுத்தமான மற்றும் தூய்மையான ஆத்மா சுப்ரீம் காந்தத்தினுடன் சம்பாஷனை செய்கின்றார்

முதல் விழிப்புணர்வு: நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில், நான் உணர்ந்து பார்க்கின்றேன்: “நான் ஒர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்? நான் ஒரு சுத்தமான மற்றும் தூய்மையான ஆத்மா. அமிர்த வேளைக்கு அமர்ந்துகொண்ட உடனேயே, சுப்ரீம் காந்தத்தினுடன் ஒரு காந்த சக்தியை உணர்கின்றேன். சுப்ரீம் காந்தம், என்னுடைய இனிமையான பாபாவிடமிருந்து நான் பெற வேண்டிய அனைத்தையும் நான் பெற்றுவிட்டேன். இந்த பிராப்திகள் அனைவரையும் பாபாவிடம் கவர்ந்திழுக்கும் காந்தமாக ஆகின்றன.

நான் யாருக்கு சொந்தமானவன்? :ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா, காலை வணக்கம் / குட் மார்னிங். சுப்ரீம் காந்தமான உங்களுக்கு நான் சொந்தம். நான் எங்கு பார்த்தாலும், யாரை பார்த்தாலும், உங்களுடன் எனக்கு கிடைத்த அனுபவத்தை மட்டுமே சிந்திக்கின்றேன். சுப்ரீம் காந்தாமான உங்களிடளிருந்து நான் அனைத்தையும் பெறுகின்றேன்.

பாபா ஆத்மாவுடன் பேசுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்து கொள். பிராப்திகள் உன்னை காந்தமாக்குகின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள். உன்னுடைய சொந்த பிராப்திகளின் சக்தியால், கடினமான கல்லிளிருந்து நீ நீர் பெறுகின்றாய், பாலைவனத்தில் நீரை பெருக்கி, பசுமை ஆக்குகின்றாய். உன்னுடைய பிராமண பிறப்பிலிருந்து இது நாள் வரை உன்னுடைய பிராப்திகள் அனைத்தையும் நினைவு செய். உன்னுடைய ஆதியான தூய இயல்பை நினைவு செய். அதன் பிறகு, நீ ஆன்மீக காந்தமாகிவிடுவாய், உன்னுடைய தூய குணநலன்கள் உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களையும் பாபாவிடம் கவர்ந்திழுக்கும்.

அகத்தூண்டுதல் பெறுவது : ஓயாத என்னுடைய மனதை ஒரு நிமிடம், மௌன கடலான, பாபாவின் மீது, கவனம் செலுத்துகின்றேன். இந்த  மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் தூய்மையான, சேவைக்கான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது : என்னுடைய தேவதை ரூபத்தை சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் உண்டாக்குகின்றேன். மிகுந்த அன்புடனும் சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலமும் தூய்மையான பார்வையின் மூலம், அவர் எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தை நீ பெற்றிருப்பதால், உன்னிடம் சந்தோஷத்தின் பரம பாக்கியம் இருக்கிறது. நீ தொடர்ந்து இந்த சந்தோஷத்தின் போஷாக்கை அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றாய். உன்னுடைய இதயத்தில், நீ பாடும் பாடல்,”ஆகா என்னுடைய பாக்கியம்!” ஆகும். மேலும் ஒவ்வொரு நாளும் நீ கவலையற்று வாழ்கின்றாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள் ): மேற் கூறப்பட்ட ஆசீர்வாதத்தை உலகின் மீது அருளுகின்றேன். இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகத்தை வளம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்த பிறகு, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தது. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை விலக்கின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.