BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி 13, 2015

எல்லையற்ற சேவையாளர் உலக உபகாரியுடன் சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:

நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

நான் ஒரு எல்லையற்ற சேவையாளர். உலகிற்கு ஞான ஒளியையும் அனைத்து சக்திகளின் பலத்தையும் நான் கொடுக்கின்றேன்.    

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். தைரியம் என்னும் கால்களை நான் கவனமாக பயன்படுத்தும்போது, மாயை என்னை ஏமாற்றுவதில்லை.  இந்த முயற்சியின் மூலம், அனைத்து ஞான இரத்தினங்களையும் சுலபமாக நான் அனுபவம் செய்கின்றேன். அனைத்து ஆன்மீக சக்திகளையும் என்னுடைய கட்டளையின் கீழ் வைத்திருகின்றேன்.

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். உயர்ந்த ஆன்மீக நிலையில் உன்னை ஸ்திரப்படுத்திக்கொள். எல்லையற்ற சேவையாளர் ஆகி, உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களுக்கும் ஒத்துழைப்பு மற்றும் தூய உணர்வுகளின் அதிர்வலைகளை பரவசெய். உலக உபகாரியின் குழந்தை நீ என்பதை நினைவு செய். அதனால், தெய்வீக குணங்களை நீ உடையவனாக இருக்கவேண்டும். உலகிற்கு இதை பரிசாக அளி.

அகத்தூண்டுதல் பெறுவது:

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

இயற்கை இடர்களின் காட்சிகளை பார்க்கும்போதும், அதை ஒரு பொழுதுபோக்காக அனுபவம் செய்யும் நீ ஒரு சம்பூரண யோகி ஆவாய். துக்கம் முடிந்து சந்தோஷ நாட்கள் வரயிருப்பது தெரிந்து நீ தொடர்ந்து புன்னகை பூத்தவாறு அற்புதங்களின் பாடலை பாடிக்கொண்டு இருக்கின்றாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு :

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் மனதளவில் அல்லது ஸ்தூலமாக கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.