BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 13, 2014 

ஒரு வெற்றி பெற்ற ஆத்மா பாக்கியத்தை அருள்பவருடன் சம்பாஷனை செய்கின்றார்

முதல் விழிப்புணர்வு: நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில், நான் உணர்ந்து பார்க்கின்றேன்: நான் ஒர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்? நான் ஒர் கீழ்படிந்த குழந்தையாக இருப்பதால், நான் ஒரு வெற்றி பெற்ற ஆத்மாவாக இருக்கின்றேன். அமிர்த வேளைக்கு அமர்ந்த உடனேயே, வெற்றியை குறிக்கும் அடையாளமாக என்னுடைய நெற்றியில் பாக்கியத்தை அருள்பவரான பாபா திலகமிடுவதை உணர்கின்றேன். அவர் தனிப்பட்ட முறையில் இந்த திலகத்தை எனக்கு இடுவதற்காக வந்துள்ளார்.

நான் யாருக்கு சொந்தமானவன்? :ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா, காலை வணக்கம் / குட் மார்னிங். சிறிது கண் அயர்ந்துவிட்டால் கூட என்னுடைய பாக்கியத்தில் சிலவற்றை நான் இழந்து விடுவேன் என்பதை அறிந்து, நான் விழிப்புடன் இருக்கும் ஒளியை ஏற்றி, உங்கள் மீது கவனத்தை வைக்கின்றேன். ஆத்ம உணர்வு என்னும் ஒளியை ஏற்றிவைத்து நான் அமர்ந்திருக்கின்றேன். இக்லஷ்மியின் படைப்பவரான உங்களை என்னுடைய பாக்கியத்தை உருவாக்குமாறு அழைகின்றேன்.

பாபா ஆத்மாவுடன் பேசுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்து கொள். நீ பாபாவை நினைவு செய்தால், பாபா அமிர்த வேளையில் உன்னை கோடி முறை அதிகமாக நினைவு செய்கின்றார். பாபா தினந்தோறும் சுற்றுபயணம் மேற்கொண்டு, உன்னுடைய நினைவிற்கு தாராளமாக வெகுமதி அளிக்கின்றார். நீ உறங்கிக்கொண்டு இருக்கின்றாய் என்றால், பாபா உனக்கு கொடுப்பதை உன்னால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாது. (நீ சிறிது கண்ணயர்ந்தால், நீ கவனகுறைவு என்னும் பொத்தானை தட்டுகின்றாய்) அதனால் நீ பாபாவின் உதவியை பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். சோதனை செய், விழிப்புடன் இருந்து கீழ்படிந்து நடந்துக்கொள். இதன் மூலம் முழு நாளுக்குமான போஷாக்கை பெறுவாய்.

அகத்தூண்டுதல் பெறுவது: ஓயாத என்னுடைய மனதை ஒரு நிமிடம், மௌன கடலான, பாபாவின் மீது, கவனம் செலுத்துகின்றேன். இந்த  மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் தூய்மையான, சேவைக்கான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது : என்னுடைய தேவதை ரூபத்தை சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் உண்டாக்குகின்றேன். மிகுந்த அன்புடனும் சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலமும் தூய்மையான பார்வையின் மூலம், அவர் எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

வாழ்க்கையின் ஆன்மீக சக்திகளை பாபா உனக்கு அருளுகின்றார். இந்த தெய்வீக சக்தியை நீ பரவச்செய்து, நினைவு சக்தி என்னும் ஆக அதிகமாக தேவைப்படும் சக்தியில் கவனம் செலுத்தும் திறனையும், மனதையும் புத்தியையும் உனக்கு வேண்டிய இடத்தில்  ஒரு ஷணத்தில் ஒருமுகப்படுத்துவதிலும்  நீ மாஸ்டர் / கைதேர்ந்தவன் ஆகிவிட்டாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள் ): மேற் கூறப்பட்ட ஆசீர்வாதத்தை உலகின் மீது அருளுகின்றேன். இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகத்தை வளம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு :சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்த பிறகு, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் மனதளவில் அல்லது ஸ்தூலமாக கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தது. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை விலக்குகின்றேன். சுத்தமான தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.