BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி 14, 2015

இந்திர சபையில் ஓர் தேவதை.

முதல் விழிப்புணர்வு:

நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

இந்திர சபையில், தேவதைகளின் பூமியில், நான் ஓர் தேவதை. ஆத்ம உணர்வு என்னும் இறக்கைகளோடு, தேவதை ஆன நான் எப்போதும் பறந்துக்கொண்டு இருக்கின்றேன்.

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். உங்களுடைய ஞானம் மற்றும் யோகம் என்னும் இறக்கைகளிலிருந்து, நான் பலத்தை பெறுகின்றேன். உயர பறப்பதற்கு, பழைய உலகையும் உறவுகளின் பந்தனங்களையும் நான் கடந்து செல்ல வேண்டும் என்பதை நான் அறிவேன்.

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். இது சாதாரண ஒன்று கூடல் அல்ல – இது தேவதைகளின் தனித்துவம் வாய்ந்த ஒன்று கூடல். நான் பொழியும் ஞான மழையினால் முள் காடு பூந்தோட்டமாக மாறுகின்றது. இந்திர சபையில் – வருண மகாராஜா இராஜாங்கத்தில், தேவதைகள் மட்டுமே வசிப்பார்கள். உடல் உணர்வின் துர்நாற்றத்தை தேவதைகள் நுகர்கின்றனர். அதை நறுமணம்மிக்க இனிமையான தோட்டமாக மாற்றிவிடுகின்றனர். உடனடியாக இந்த முள் காட்டை உன்னுடைய ஆதியான பூமியாக உன்னுடைய ஆதியான நிலைக்கு உன்னால் மாற்ற முடியுமா? ஒரு நொடியில் உன்னுடைய இனிமையான வீட்டிற்கு செல்லும் ஆன்மீக பயிற்சியை பயிற்சி செய்.

அகத்தூண்டுதல் பெறுவது:

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

நீ உனக்கே நன்மை செய்துகொண்டு, கடவுளின் ஒளியால் பிரகாசித்து கொண்டு இருக்கின்றாய். இதனால், அனைத்து ஆத்மாக்களிலும் மனச்சோர்வு என்னும் ஆன்மீக சுகமின்மையை நீ போக்குகின்றாய். உன்னுடைய உதாரணம், அவர்களில் நம்பிக்கையை கொண்டுவந்து, அவர்களின் ஆக உயர்ந்த நிலையை அடைய ஊக்குவிக்கின்றது.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு :

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் மனதளவில் அல்லது ஸ்தூலமாக கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.