BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 14, 2014

ர் தகுதி வாய்ந்த குழந்தை ஆசீர்வாதத்தை அருள்பவருடன் சம்பாஷனை செய்கின்றார்

முதல் விழிப்புணர்வு: நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில், நான் உணர்ந்து பார்க்கின்றேன்: “நான் ஒர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்? தைரியமும் உற்சாகமும் பேறாக அளிக்கப்பட்ட ஒரு தகுதி வாய்ந்த குழந்தை நான். இந்த நேரத்தில் பாபா எனக்கு கொடுக்கும் சக்தியை பெற்றுக்கொள்ள தகுதி வாய்ந்தவன் நான். பாபா மீது எனக்கிருக்கும் ஆழமான அன்பு என்னை தகுதி வாய்ந்த குழந்தை ஆக்குகின்றது. 

நான் யாருக்கு சொந்தமானவன்? :ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா, காலை வணக்கம் / குட் மார்னிங். நீங்கள் என்னுடைய பாபா ஆவீர்கள். நான் உங்களுக்கு சொந்தம், நீங்கள் எனக்கு சொந்தம். உங்கள் மீது எனகிருக்கும் அன்பும் உங்களை நான்  ஏற்றுகொண்டதும், உங்களுடைய ஆசீர்வாதங்களை பெறுவதற்கு என்னை தகுதி வாய்ந்தவராக ஆக்கியுள்ளது. உங்களிடமிருந்து ஆசீர்வாதங்களை எடுத்துக்கொண்டு என்னுடைய பலவீனங்களை நான் விலக்குகின்றேன்.

பாபா ஆத்மாவுடன் பேசுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்து கொள்.  பாபா, பிராமண ஆத்மாவாகிய  உனக்கென்று ஒதுக்கியிருக்கும் விசேஷமான நேரம் அமிர்த வேளையாகும். இந்த நேரத்தில் நீ என்ன விரும்பினாலும் உன்னால் பெறமுடியும். இந்த நேரத்தில் தான் சேவையில் உன்னுடைய விசேஷ தன்மைகளையும் குணங்களையும் நான் பார்க்கின்றேன். இதன் மூலம் உன்னுடைய குணங்களும் சேவையும் அழியாதவையாக இருக்க உனக்கு விசேஷமான ஆசீர்வாதங்களை நான் கொடுக்கின்றேன். இதனால் தான் இந்த நேரத்தை குறிப்பாக உனக்கென்று ஒதுக்கி இருக்கின்றேன். என்னிடமிருந்து ஆசீர்வாதங்களை பெறுவதற்கு உனக்கு முதல் வாய்ப்பு கிடைக்கிறது.

அகத்தூண்டுதல் பெறுவது: ஓயாத என்னுடைய மனதை ஒரு நிமிடம், மௌன கடலான, பாபாவின் மீது, கவனம் செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் தூய்மையான, சேவைக்கான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது : என்னுடைய தேவதை ரூபத்தை சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் உண்டாக்குகின்றேன். மிகுந்த அன்புடனும் சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலமும் தூய்மையான பார்வையின் மூலம், அவர் எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

ஒரு தந்தையை  உன்னுடைய உலகமாக ஆக்கிக்கொண்டதால், கவர்ச்சி என்னும் தங்க சங்கிலியை நீ தாண்டி, ஆசைகளை அறியாதவர் ஆகிவிட்டாய். பாபாவின் உலகம் உன்னுடைய ஒவ்வொரு அவசியத்தையும், விருப்பத்தையும், கனவுகளையும் பூர்த்தி செய்கிறது.”என்னுடையவை” என்ற அனைத்தையும், “என்னுடைய பாபா” என்று நீ மாற்றிவிட்டதால், நீ திருப்தி இரத்தினமாக திகழ்கின்றாய். நீ சந்தோஷத்தின் மாஸ்டர் சூரியன் ஆவாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள் ): மேற் கூறப்பட்ட ஆசீர்வாதத்தை உலகின் மீது அருளுகின்றேன். இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகத்தை வளம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்த பிறகு, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தது. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை விலக்குகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.