BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 15,2014

ஓர் தேவதை அவ்யக்த் பிரம்மா பாபாவுடன் சம்பாஷனை செய்கின்றார்

முதல் விழிப்புணர்வு: நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில், நான் உணர்ந்து பார்க்கின்றேன்: “நான் ஒர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்? நான் ஒரு தேவதை ஆவேன். நான் அமிர்த வேளைக்கு அமர்ந்த உடனேயே, அவ்யக்த் பிரம்மா பாபாவை அன்புடன் பார்க்கின்றேன். சிவ்பாபா இவர் மூலம் செய்யும் அனைத்து சேவையையும் நான் ஆழமாக பாராட்டுகின்றேன். சூட்சும உலகிலிருந்து பிரம்மா பாபா செய்யும் எல்லையற்ற சேவையை நான் பார்க்கின்றேன்.

நான் யாருக்கு சொந்தமானவன்? :ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா, காலை வணக்கம் / குட் மார்னிங்.  ஒரு தேவதையாக, உங்களுடன் சூட்சும உலகில் நான் அமர்ந்திருக்கின்றேன். உங்கள் திருஷ்டியின் மூலமாக சக்திகளின் ஒளியை நான் அனுபவம் செய்கின்றேன். உங்களுடன் இங்கு இருப்பதனால் நான் முழுமையாக உணர்கிறேன். உங்களுடைய களைப்பில்லாத சேவை உங்களை போல் ஒரு தேவதையாக நான் ஆக வேண்டும் என்று  உற்சாகப்படுத்துகின்றது. நீங்கள் எனக்காக எவ்வளவு உழைக்கின்றீர்கள். உங்களுடைய சுயநலமற்ற சேவைக்கு நான் கைம்மாறு செய்ய வேண்டும். நீங்கள் ஒரு நிலையான யோகியாகவும் சேவையாளராகவும்  இருப்பதுபோல், நானும் அவ்வாறே ஆக வேண்டும்.

பாபா ஆத்மாவுடன் பேசுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்து கொள்.  பிரம்மா பாபா, உன்னுடைய பலவீனங்களை புரிந்துகொண்டு, பலத்தாலும் தைரியத்தாலும் உன்னை நிரப்புகின்றார். பாப்தாதா உன்னை எல்லையற்ற சேவை என்னும் ஆசனத்தில் அமரச் செய்கின்றார். நான் உன்னை சக்தியினால் நிரப்புகின்றேன், இதன் மூலம் உலக சேவைக்காக நீ நம்பிக்கையும் உற்சாகமும் கொண்டிருக்கலாம். ஒரு சிற்பி, கண்கள், காது என்று ஒரு முகத்தை உருவாக்குவது போல், உன்னில் அனைத்து ஆன்மீக தகுதிகளையும் நான் மும்முரமாக நிரப்பிக் கொண்டிருகின்றேன். 

அகத்தூண்டுதல் பெறுவது: ஓயாத என்னுடைய மனதை ஒரு நிமிடம், மௌன கடலான, பாபாவின் மீது, கவனம் செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் தூய்மையான, சேவைக்கான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தை சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் உண்டாக்குகின்றேன். மிகுந்த அன்புடனும் சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலமும் தூய்மையான பார்வையின் மூலம், அவர் எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

உன்னுடைய எண்ணங்களை அக்கறையுடன் நீ கவனிக்கின்றாய். ஒரு நொடியில் வீணான மற்றும் எதிர்மறையான எண்ணங்களை விட்டுவிடும் சக்தி உன்னிடம் இருக்கிறது. தெய்வீக தன்மையையும் ஆன்மீக இலக்கையும் பிரதிபலிக்கும் எண்ணங்களோடு உன்னை நேர் படுத்திகொள்ளும் திறனும் உன்னிடம் இருக்கிறது. இந்த பயிற்சியின் மூலம், சுயத்தை மாற்றி அமைக்கும் மந்திரம் உன்னுள் பிரவேசித்து இருக்கிறது.  அழகான உலகை நீ மீண்டும் மீட்டு கொண்டு இருக்கின்றாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள் ): மேற் கூறப்பட்ட ஆசீர்வாதத்தை உலகின் மீது அருளுகின்றேன். இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகத்தை வளம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்த பிறகு, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தது. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை விலக்கின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.