BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி 16, 2015

நம்பிக்கை பொறுப்பாளர் பிரபு மற்றும் மாஸ்டருடன் சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:

நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

நான் ஒரு நம்பிக்கை பொறுப்பாளர் ஆவேன். என்னுடைய உடல், மனம், நேரம் மற்றும் செல்வத்தை பாபா எனக்கு அளித்திருக்கின்றார். பாபா இவற்றை எனக்கு வெறுமனே கடனாக கொடுத்திருக்கின்றார்; நான் ஒரு பொறுப்பாளர், உரிமையாளர் அல்ல.

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். நீங்கள் என்னை எங்கு அமர செய்தாலும், அங்கு அமர்ந்துகொள்கிறேன்; என்னை எது செய்ய சொன்னாலும் அதை செய்கின்றேன். பாபா உங்களுடன் ஒரு இனிமையான உறவு முறையில் நான் இருக்கின்றேன். என்னுடைய கர்ம கணக்கின் பந்தனத்தில் நான் இல்லை. நான் சுதந்திரமாக இருக்கின்றேன். பிரபு மற்றும் அதிபதியான நீங்கள் நான் எவ்வாறு முன்னோக்கி செல்லவேண்டும் என்று எனக்கு அளிக்கும் ஊக்கத்தை என்னால் உணர முடிகின்றது. ஒவ்வொரு காரியத்தையும் உங்களுடைய தெய்வீக ஊக்குவிப்பின் மூலம் செய்கின்றேன்.

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். உன்னிடம் இருக்கும் அனைத்தையும் நீ பாபாவிடம் கொடுத்துவிட்டால், உயிருடன் இறந்து, மறுபிறவி எடுத்ததை அனுபவம் செய்வாய். இது, எதனுடனும் ஒப்பிட முடியாத ஒரு புதிய தெய்வீக பிறவியாகும். இந்த பிறவியில் நீ சுதந்திரமாக இருக்கின்றாய். எதையும் யாரையும் சார்ந்து இல்லை. “என்னுடையது” என்பதை “உங்களுடையது” என்று மாற்றினால் இந்த சுதந்திரம் கிடைக்கும். இந்த உடல், இந்த சேவை, இந்த குணங்கள் மற்றும் சக்திகள் உனக்கு கடனாக கொடுக்கபட்டதாக நீ நினைவு செய்யும்போது, ஒரு நொடியில், உன்னால் பறக்க முடியும். “இது என்னுடைய கர்ம பந்தனம்” என்னும் வலையை விரிக்காதே. “இது என்னுடைய பழைய உடலின் பந்தனம்”, “இது ஒரு குழுவில் இருப்பதனால் இருக்கும் பந்தனம்” போன்ற எண்ணங்கள் வலைகளாகும். நீ ஒரு வலையை விரித்து, அதில் உன்னை நீ சிக்க வைத்துக்கொள்கின்றாய். அதன் பிறகு பாபாவை அழைக்கின்றாய், “என்னை விடுவியுங்கள்!”. பாபா கூறுகின்றார், “ நீ ஏற்கெனவே சுதந்திரமாக இருக்கின்றாய் – வலையை விட்டுவிடு, நீ சுதந்திரமாக இருப்பதை பார்”.

அகத்தூண்டுதல் பெறுவது: 

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம்  மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

நினைவு என்னும் மாயாஜால மந்திரத்தின் மூலம், நீ எதை விரும்பினாலும் பெறமுடியும். தொடர்ந்து உன்னுடைய விழிப்புணர்வில் இந்த மந்திரத்தை வைத்திருந்து, நீ எல்லையற்ற வெற்றியை அடைகின்றாய், நீ கனவிலும் கற்பனை செய்ய முடியாத எதிர்காலத்தை அடைவாய்.   

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு :

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.