BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 16, 2014

ஓர் அனுபவம் வாய்ந்த ஆத்மா, கள்ளம் கபடமற்ற அருள்பவருடன் சம்பாஷனை செய்கின்றார்

முதல் விழிப்புணர்வு: நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில், நான் உணர்ந்து பார்க்கின்றேன்: “நான் ஒர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்? நான் ஒரு அனுபவம் வாய்ந்த ஆத்மா. அமிர்த வேளையில் ஒரு நொடி மூழ்கியிருப்பதன் மூலம், முழு நாளுக்கும், அதை தொடரும் இரவிற்குமான அனுபவம் மற்றும் பிராப்தியின் சொரூபம் ஆகின்றேன்.   கள்ளம் கபடமற்ற அருள்பவருடன் நான் ஒரு இணைப்பை மட்டும் மேற்கொண்டால் போதும்.

நான் யாருக்கு சொந்தமானவன்? :ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா, காலை வணக்கம் / குட் மார்னிங்.  ஒரு கள்ளம் கபடமற்ற அருள்பவர் என்னுடைய தந்தை ஆவார். என்னை நான் அனைத்து விதமான அதிருஷ்டமான அனுபவங்களால் நிரப்பிக்கொள்கின்றேன். நான் ஆழமான அமைதியை அனுபவம் செய்கின்றேன். என் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை நான் நினைவு செய்கின்றேன் – இது ஆத்மாவில் பதிந்துவிட்டது. என்னுடைய ஆதியான பவித்திரத்தை (தூய்மையை) நான் நினைவு செய்து பலமாக்கி கொள்கின்றேன்.

பாபா ஆத்மாவுடன் பேசுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்து கொள். என்னை பயன் படுத்திக்கொள். என்னை நீ எவ்வாறு இணங்க வைத்தாலும் சரி, என்னுடன் அமர்ந்துகொள் அல்லது என்னுடன் விளையாடு, என்னுடன் நீ எவ்வாறு உன்னை சம்பந்தப்படுத்திக்கொள்ள நீ விரும்பினாலும்,  என்னை உபயோகபடுத்திக்கொள். எவ்விதமான சுலபமான முறையையும் பிராப்தியையும் நீ  அடைய நினைகின்றாயோ – அவை அனைத்தும் தயாராக இருக்கிறது.அனைத்து பிராப்திகளின் கஜானா மற்றும் அனைத்தையும் கள்ளம் கபடமின்றி அருள்பவரும், அமிர்த வேளையில் சுலபமாக அடையக் கூடியவை. அனைத்து குணங்கள் மற்றும் சக்திகளின்  சுரங்கம் உனக்காக திறந்திருக்கின்றது.

அகத்தூண்டுதல் பெறுவது: ஓயாத என்னுடைய மனதை ஒரு நிமிடம், மௌன கடலான, பாபாவின் மீது, கவனம் செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் தூய்மையான, சேவைக்கான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தை சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் உண்டாக்குகின்றேன். மிகுந்த அன்புடனும் சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலமும் தூய்மையான பார்வையின் மூலம், அவர் எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

நீ ஒரு  கர்மயோகி ஆத்மா ஆவாய். உன்னுடைய ஒவ்வொரு நொடி, எண்ணம் மற்றும் செயலில் ஆன்மீகம் நிறைந்துள்ளது. பாபாவிடம் நீ ஒவ்வொரு மூச்சையும் சமர்பிக்கின்றாய், ஒவ்வொரு அடியையும் சத்தியத்திடம் சமர்பிக்கின்றாய். உன் ஒவ்வொரு செயலும் நன்மையை கொண்டுவருவதாகவும் வாழ்க்கை கொடுப்பதாகவும் இருக்கிறது. இதனால், திருப்தி என்பது உன்னுடைய இதயத்தின் அரசராகவும்,  நீ சந்திக்கும் அனைவருக்கும் நீ அளிக்கும் பரிசாகவும் இருக்கிறது.  

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள் ): மேற் கூறப்பட்ட ஆசீர்வாதத்தை உலகின் மீது அருளுகின்றேன். இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகத்தை வளம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்த பிறகு, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தது. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை விலக்குகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.