BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி 17, 2015

ஒரு புனித அன்னபட்சி சக்தியின் இருப்பிடத்தோடு சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:

நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

நான் ஒரு புனித அன்னபட்சி ஆவேன். ஞான இரத்தினங்களும் அன்பு முத்துகளும் என்னுடைய உணவு ஆகும். நான் சக்தியின் இருப்பிடத்தோடு தொடர்பு கொண்டு, பகுத்தறியும் சக்தியினால் என்னை நிரப்பிக்கொள்கின்றேன்.

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். மாயை மிகவும் புத்திசாலி என்பதை நான் அறிவேன். பாபா, குறிப்பாக அமிர்த வேளையில், உங்களிடமிருந்து என்னை பிரித்து தூர கொண்டு செல்வதற்கு மாயை வருகின்றாள். எனக்கு ஆசைகாட்டி, சாக்குபோக்கு சொல்ல வைக்க, மாயை பல விளையாட்டுகளை செய்கின்றாள். கவனக்குறைவு, சோம்பல் என்று பல்வேறு ரூபங்களை காட்டி மாயை என்னை ஏமாற்றுகின்றாள். அவள் எவ்வாறு வருகின்றாள் என்பதை நான் அறிவேன். அவளிடமிருந்து நான் விலகி இருக்கிறேன். உங்களுடன் இருக்கும் இந்த தங்க வாய்ப்பை நான் எடுத்துக்கொள்கின்றேன். எனக்கு தேவையான அனைத்தையும் உங்களிடம் நான் காண்கின்றேன் பாபா.   

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். பகுத்தறியும் சக்தியானது வாழ்க்கையில் பயணத்தில் சுலபமாக பறந்து செல்ல உனக்கு உதவி செய்யும். இந்த சுலபமான யோகி வாழ்க்கையை மாயை தன் பக்கம் உன்னை இழுத்து, பறித்து செல்ல அனுமதிக்காதே! உன்னுடைய வெகுளித்தனத்தையும் கடவுள் உனக்கு அளித்த பகுத்தறியும் பரிசையும் திருடிச்செல்ல மாயைக்கு அனுமதி வழங்காதே.  உன்னுடைய எதிரியான மாயையை தெரிந்துக்கொள். பகுத்தறியும் சக்தியான கடவுளின் பரிசு, பாதுகாப்பு குடையை பரவச்செய்கின்றது, ஆனால், மாயை அவளின் நிழலை உன் மீது பரப்புகின்றாள். பாதுகாப்பு குடை பறந்துவிடுகிறது. அதன் பிறகு நிழல் மட்டுமே உள்ளது. ஆனால், சக்தியின் இருப்பிடத்தின் பரிசான பகுத்தறியும் சக்தியில், துன்பமோ அல்லது ஏமாற்றமோ கிடையாது. பகுத்தறியும் சக்தி கொண்டிருப்பவர்கள் ஏமாற்றப்பட முடியாது. மோசமான சூழ்நிலையிலும் பாதுகாப்பாக இருப்பார்கள். அமிர்த வேளையில், உன்னுடைய பகுத்தறியும் சக்தியானது சரியாக வேலை செய்கின்றதா என்று சோதித்து பார். அமிர்த வேளையில் அதனை சரியாக்குவதன் மூலம், உன்னுடைய முழு நாளையும் நீ பலத்தினால் நிரப்பிக்கொள்வாய்.

அகத்தூண்டுதல் பெறுவது: 

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம்  மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

நீ உன்னை விசேஷமாக பார்க்கின்றாய். நீ மற்றவர்களின் விசேஷத்தன்மை மட்டுமே பார்க்கின்றாய், பேசுகின்றாய். இதனால், நீ கடவுளின் இராஜரீகத்தை வெளிப்பட செய்கின்றாய், நீ அறிந்தவர்களின் இதயங்களில் உயர்ந்த மதிப்பையும் தெய்வீகத்தையும் நிரப்புகின்றாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு :

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.