BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



 

டிசம்பர் 17, 2014

ஓர் அன்பான குழந்தை விதியை உருவாக்கும் கள்ளம் கபடமற்ற பாதுகாவலருடன், சம்பாஷனை செய்கின்றார்

முதல் விழிப்புணர்வு:  நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில், நான் உணர்ந்து பார்க்கின்றேன்: “நான் ஒர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்? நான் பாபாவின் மீது தூய, ஆழமான அன்பு கொண்டிருக்கும் அன்பான குழந்தை ஆவேன். எனக்கு பாபாவின் சொத்தின் மீது உரிமையிருக்கிறது. இந்த நேரத்தில் நான் பாபாவிடமிருந்து என்னுடைய உரிமையை நான் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு நான் கடினமாக உழைக்க வேண்டியது  இல்லை.

நான் யாருக்கு சொந்தமானவன்? : ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா, காலை வணக்கம் / குட் மார்னிங். நான் எப்படியிருந்தாலும், நான் இருப்பதுபோலவே – நான் உங்களுடையவன். இந்த ஒரு எளிமையான எண்ணத்தை தவிர எனக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை.

பாபா ஆத்மாவுடன் பேசுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்து கொள். விதியின் கள்ளம் கபடமற்ற பாதுகாவலரான நான், உன்னுடைய விதியின் ரேகையை வரைவதற்கு தயாராக இருக்கின்றேன்.  உனக்கு  மிகவும் மேன்மையான பாக்கிய ரேகையை வரைய  விதியின் பாதுகாவலரான என்னை, நீ அனுமதிக்க வேண்டும். இப்போது, கடவுள் தன்னுடைய கள்ளம் கபடமற்ற அன்பு நிறைந்திருக்கும்  ரூபத்தை காண்பிக்கின்றார். உன்னுடைய அன்பினால் என்னிடமிருந்து  மேன்மையான பாக்கியத்தை நீ எடுத்துக்கொள். எத்தனை பிறவிகளை நீ தேர்ந்தெடுத்தாலும்  என்ன தேர்ந்தெடுத்தாலும் 8 மணிகளில் அல்லது 108 மணி மாலையில், எதுவாக இருந்தாலும் – கடவுள் உனக்கு  வாய்ப்பு கொடுக்கின்றார். குறைவான  ஒன்றிற்கு  சமாதானம் ஆகிவிடாதே. இந்த நேரத்தில் மதிப்பில்லாத ஒன்றை கேட்காதே – “எனக்கு ஒரு லௌகிக உறவுமுறை வேண்டும்,” “எனக்கு அதிகமான செல்வம் வேண்டும்” போன்றவற்றை கேட்காதே. உனக்காக நான் உருவாக்கியிருக்கும் மாளிகையோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த வரங்கள் மிகவும் சொற்பமானவை.  

அகத்தூண்டுதல் பெறுவது: அலைபாயும் என்னுடைய மனதை ஒரு நிமிடம், மௌன கடலான, பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான், சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன் சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலமும் தூய்மையான பார்வையின் மூலமும், அவர் எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

நீ உன்னை பற்றியும் தந்தையை பற்றியும்  திருப்தியாக இருக்கின்றாய். குடும்பம் உன்னை பற்றி திருப்தியாக இருக்கிறது. நீ எங்கு சென்றாலும், உன்னுடைய இயற்கையான மற்றும் சுலபமான யோகத்தின் மூலம் மற்றவர்களால்  அவர்களின் சொந்த நன்மையை பார்க்க முடிவதோடு, கடவுளின் இதயத்தின் கடைக்கண் பார்வையை உணர்ந்து பரிவர்த்தனையின் அடிச்சுவட்டில் அடி எடுத்து வைக்கும் விதத்தில் சுற்று சூழல் பிரகாசிக்கின்றது.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள் ): மேற் கூறப்பட்ட ஆசீர்வாதத்தை உலகின் மீது அருள்கின்றேன். இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகத்தை வலம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்த பிறகு, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் மனதளவில் அல்லது ஸ்தூலமாக கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தது. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை விலக்குகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.