BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



ஜனவரி 18, 2015

தன்னை தான் உணர்ந்த ஆத்மா பாக்கியத்தை உருவாக்குபவருடன் சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:

நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

என்னை நான் உணர்ந்த ஆத்மா ஆவேன். சுய-மாற்றத்திற்கான சக்தியை நான் கொண்டிருக்கின்றேன். பாபாவிற்கு சொந்தமான அனைத்திற்கும் எனக்கு உரிமை இருக்கிறது. சிவ்பாபாவும் பிரம்மா பாபாவும் என்னுடைய பாக்கியத்தை உருவாக்குபவர்கள் என்பதை நான் தெளிவாக பார்க்கின்றேன்.

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். நான் செய்யும் தவறுகளை நான் உணர்ந்து பார்க்கின்றேன். என்னை பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு, மற்றவர்களை பற்றி நான் சிந்திக்கின்றேன். என்னை நான் மாற்றிக்கொள்வதை விட்டுவிட்டு, மற்றவர்கள் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். “ நான் பாபாவிற்காக இந்த காரியம் செய்கின்றேன், அதனால் பாபா பிரத்தியக்க்ஷம் ஆகவேண்டும்” என்று சிந்திப்பதற்கு பதிலாக, “ பாபாவிற்காக நான் இதை செய்தேன், அதனால் நான் புகழ் பெற வேண்டும்” என்று சிந்திக்கின்றேன். இந்த தவறுகளை நான் செய்யும்போது, கோடானுகோடி கிடைப்பதற்கு பதிலாக ஒரு கைப்பிடி அளவே கிடைக்கின்றது.

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். அமிர்த வேளையில் நீ பாக்கியத்தை உருவாக்குபவரை சந்திக்க வரும்போது, உனக்கு ஆசீர்வாதங்களும் பாக்கியமும் கிடைக்கின்றன. எவ்வாறாயினும், சிலர் வெறுமனே பாக்கியத்தை பெறுகின்ற, பாக்கியஷாளிகளாக மட்டுமே இருக்கின்றார்கள், சிலர் நூறு மடங்கு பாக்கியத்தை பெறுகின்ற, சௌபாக்கியஷாலிகளாக இருக்கின்றார்கள், மற்றும் சிலர், நூறாயிரம் மடங்கு பாக்கியத்தை பெறுகிறவர்களாக இருகின்றார்கள். இரண்டு சாவிகள் இருக்கின்றன. சரியான திசையில் நீ அந்த சாவியை திருப்பினால், உன் பாக்கியத்தில் இருக்கும் பூட்டு திறந்துக்கொள்ளும். முதல் சாவியானது: என்னுடையவர் ஒரு பாபா ஆவார், மற்ற யாரும் கிடையாது. இரண்டாம் சாவியானது: பிரம்மா பாபா என்னுடைய பாக்கியத்தை உருவாக்குகின்றார். இந்த இரண்டு சாவிகளையும் பூட்டை திறப்பதற்கு பயன்படுத்தி – எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கும் உடல், சுதந்திரமான மனம், எல்லையற்ற செல்வம், உலக இராஜாங்கம் மற்றும் இயற்கையின் முழு ஒத்துழைப்பு என்ற பாக்கியத்தின் நிரம்பிவழியும் பொக்கிஷ பேழையை பெற்றுக்கொள்.

அகத்தூண்டுதல் பெறுவது: 

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம்  மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்

ஏதாவது சமைக்கப்படும்போது, உணவு தயாரான நிலையில், பாத்திரத்தில் அந்த பதார்த்தம் ஒட்டாமல் இருக்கிறது. நீ இப்போது, அனைத்து பற்றையும் விடுவித்து, அந்த அழகான ஒருவரின் இதயத்தோடு உன்னை ஐக்கியப்படுத்திக்கொள்கின்றாய். இதனால், தயாரான பதார்த்தத்தை போல், அனைத்தையும் விட்டுவிட்டு, ஒரு சம்பூர்ணமான தேவதை ஆகிக்கொண்டிருக்கின்றாய்.  

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு :

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் மனதளவில் அல்லது ஸ்தூலமாக கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.