BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 18, 2014

ஒரு நண்பர், நண்பராக இருக்கும் கடவுளுடன்  சம்பாஷனை செய்கின்றார்

முதல் விழிப்புணர்வு:  

நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில், நான் உணர்ந்து பார்க்கின்றேன்: “நான் ஒர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்? 

நான் பாபாவின் நண்பர் ஆவேன். பாபாவிடம் வெளிப்படையான, நேர்மையான  உறவுமுறை எனக்கு இருக்கிறது. நான் அவரிடம் எதையும் மறைப்பது கிடையாது.

நான் யாருக்கு சொந்தமானவன்? : 

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: 

இனிமையான பாபா, காலை வணக்கம். உங்களுடைய நட்பு என்னும் சுலபமான பிராப்தியை பெறுவதற்கு, இந்த அதிகாலை பொழுதின் மகிமையை நான் அறிவேன். இந்த நேரத்தின் முழு நன்மையை நான் எடுத்துக்கொள்கின்றேன். நீங்கள் கடவுள்,  நீங்கள் என்னுடைய நண்பர் ஆவீர், நீங்கள் அதிருஷ்டத்தையும் ஆசீர்வாதங்களையும்  அருள்பவர், நீங்கள் என் நண்பர் ஆவீர். எந்த தங்கு தடையுமின்றி நான் கேட்காமலே நீங்கள் எனக்கு அதிருஷ்டத்தையும் ஆசீர்வாதங்களையும் கொடுக்கின்றீர்கள்.

பாபா ஆத்மாவுடன் பேசுகின்றார்: 

இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்து கொள். இந்த நேரத்தில் பாப்தாதா, உன்னுடைய இதயம் திருப்தியாகும் வரை உன்னுடன் தங்கு தடையின்றி பேசுகின்றார். உன்னுடைய கோரிக்கைகளை தாராளமாக நான் கேட்கின்றேன், பலவீனங்களை அழித்துவிடுகின்றேன். மேலும் உன்னுடைய பாவங்களை மன்னிக்கின்றேன். உன்னுடைய அன்பு மற்றும் குறும்புத்தனம், இரண்டையும் நான் பார்க்கின்றேன். நான் தாளாரமாக உனக்கு கிடைக்க கூடியவராக இருக்கின்றேன். அமிர்த வேளையில் நம்முடைய சந்திப்பு அதிகாரபூர்வமானது இல்லை. இங்கு உன்னுடைய நண்பராக இருக்கின்றேன், தூய்மையை, அமைதியை மற்றும் செல்வசெழிப்பை உனக்கு அருளும் அந்த ஒருவர்,  நான்.

அகத்தூண்டுதல் பெறுவது: 

அலைபாயும்  என்னுடைய மனதை ஒரு நிமிடம், மௌன கடலான, பாபாவின் மீது,  செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான், சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: 

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன்  நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன்  சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலமும் தூய்மையான பார்வையின் மூலமும், அவர் எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

நீ உன்னுடைய செயல்களின் பலனாக, புத்தம் புதிய பழத்தை சத்யுகத்தில் நீ உண்பது மட்டுமல்லாமல்,  இங்கு இந்த சங்கம யுகத்திலும் பெறுகின்றாய். நீ பணிவுடன் அந்த ஒருவருக்கே சொந்தமான தூய இதயத்தோடு  சேவை செய்கின்றாய்.  மகிழ்ச்சி, அதீந்திரிய சுகம் மற்றும் லேசான தன்மை ஆகியவற்றை  பலனாக, அதாவது  புத்தம் புதிய பழமாக உன்னுடைய அன்றாட நேர்த்தியான வாழ்க்கையில் நீ அனுபவம் செய்கின்றாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்): 

மேற் கூறப்பட்ட ஆசீர்வாதத்தை உலகின் மீது அருள்கின்றேன். இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகத்தை வலம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : 

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்த பிறகு, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன்  மனதளவில் அல்லது ஸ்தூலமாக  கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தது. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.