BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 19, 2014

ஒரு குழந்தை தாய் தந்தையுடன் சம்பாஷனை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு: நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?:

ஆத்மாவாகிய நான் ஒரு குழந்தை, நான் பாபாவிற்கு உரியவன் ஆவேன். தாய் தந்தையான பாப்தாதாவின் பராமரிப்பை நான் பெறுகின்றேன். பாபா என்னை விசேஷமான முறையில் உபசரித்து கவனித்துக்கொள்கின்றார்.

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். என்னுடைய பாபா, அன்பிற்கினிய பாபா, இனிமையான பாபா. நீங்கள் என்னுடையவர் என்பதை நான் இதயபூர்வமாக அறிவேன்.

 

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். நான் உன்னை மிக அதிகமாக நேசிக்கின்றேன். ஒரு தாய் தந்தை தங்களின் குழந்தையை காலையில் குளிக்க செய்து, உணவு ஊட்டி எவ்வாறு அன்றைய நாளுக்கு  தயார்செய்கின்றார்களோ அது போல், பாப்தாதா அமிர்த வேளையில் உன்னை பராமரிக்கின்றேன். நான் உன்னை சக்திகளால் நிரப்பி, முழு நாளுக்கு உன்னை தயார் படுத்துகின்றேன். நீ பாபாவை கண்டுகொண்டு உன்னுடைய இதயத்திலிருந்து, ”என்னுடைய பாபா”, என்று கூறினாய். பாப்தாதா உனக்கு பல கோடி மடங்கு ஆன்மீக அன்பை வழங்குகின்றார்.    

 

அகத்தூண்டுதல் பெறுவது:

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

 

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:

என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலமும் தூய்மையான பார்வையின் மூலமும்

அவர் எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:  

 

சங்கம யுகத்தில், அன்பு கடல், தட்டு நிறைய வைரங்களையும் முத்துக்களையும் உனக்கு அளிக்கின்றார். இந்த அன்பு சக்தியால், மலை போன்ற மோசமான சூழ்நிலைகளும் தண்ணீரை போன்று லேசாக ஆகிவிடுகின்றது. மாயாவின் ரூபம் எவ்வளவு அச்சமூட்டக் கூடியதாக இருப்பினும், ஒரு ஷணத்தில் எவ்வாறு அன்பு கடலில் உன்னை நீ அமிழ்த்திக்கொண்டு மாயை என்னும் சிங்கத்தை பூனையாக மாற்றுவது என்பதை நீ அறிவாய்.

 

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

மேற் கூறப்பட்ட ஆசீர்வாதத்தை உலகின் மீது அருள்கின்றேன். இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் மனதளவில் அல்லது ஸ்தூலமாக கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி எதையாவது தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.