BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 20, 2014

ஒரு விசேஷமான ஆத்மா பாப்தாதாவுடன் சம்பாஷனை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு: நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?: நான் ஒரு விசேஷமான ஆத்மா ஆவேன். நான் பாபாவிற்கு சொந்தமானதால், பாபா என்னை மிகவும் விசேஷமான தனித்துவம் வாய்ந்த ஆத்மாவாக பார்க்கின்றார்.  

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். சூட்சும உலகில் உங்களுடன் நேருக்கு நேர் நான் அமர்ந்துக்கொள்கின்றேன். உங்கள் அன்பும் விசேஷமான கவனிப்பும் என்னை கவர்ந்திழுக்கின்றது. உங்களுடைய விசேஷமான எண்ணங்களின் மூலம் நீங்கள் எனக்கு அளிக்கும் சூட்சும சக்தியை நான் அனுபவம் செய்கின்றேன்.

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். இனிமையான விசேஷமான ஆத்மா, நீ எனக்கு உரியவன் ஆவாய், நான் உனக்கு உரியவன் ஆவேன். இந்த ஆன்மீக பந்தத்தின் விழிப்புணர்வு, ஆத்மாவாகிய உன்னை ஆசீர்வதித்து பெரும் சக்தியால் உன்னை நிரப்புகின்றது. பாப்தாதா வார்த்தைகளால் ஆசீர்வாதங்களை கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பாப்தாதாவின் வெறும் அன்பான எண்ணங்கள் உனக்கு சிறந்த நன்மை அளிக்கும் அனுபவத்தை கொடுக்கிறது. இந்த சூட்சும அன்பு நிறைந்த எண்ணங்களால் நான் உன்னை பராமரிக்கின்றேன். நான் சூட்சும உலகில் அமர்ந்துகொண்டு, விசேஷமான ஆத்மாவாகிய உனக்கு விசேஷமான போஷாக்கை அளிக்கின்றேன்.

அகத்தூண்டுதல் பெறுவது: என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலமும் தூய்மையான பார்வையின் மூலமும் அவர் எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:  

பாப்தாதா மீது உனக்கிருக்கும் அன்பின் காரணமாக உனது சிறகுகள் பலம் பெற்றுவிட்டது. இந்த அன்பு சிறகுகள் உன்னை ஸ்தூல உலகிற்கு அப்பாலும் மாயாவின் நிழலுக்கு அப்பாலும் ஒரு நொடியில் தூக்கிச் செல்கின்றது. இவை முயற்சி என்பது பொழுதுபோக்கு எனவும் வெற்றி என்பது உத்திரவாதம் அளிக்கப்பட்ட ஒன்று என்றும் உன்னை கவலையற்ற ஸ்திதியில், பறக்க செய்துகொண்டிருக்கின்றது.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்): மேற் கூறப்பட்ட ஆசீர்வாதத்தை உலகின் மீது அருள்கின்றேன். இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் மனதளவில் அல்லது ஸ்தூலமாக கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.