BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 21
, 2014

கண்களின் ஒளியானவர் தாய் பிரம்மாவுடன் சம்பாஷனை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு: நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.

நான் யார்?: நான் பாபாவின் கண்களின் ஒளி ஆவேன். நான் அவர் வாழ்க்கைக்கு ஜொலிப்பு ஆவேன். பிரம்மா பாபாவிற்கு என் மீது ஒரு தாயின் பற்றுதல் இருக்கிறது. சூட்சும உலகில் அவரை சந்திப்பதற்கு பாபாவிடமிருந்து எனக்கு விசேஷமான அழைப்பு இருக்கிறது.

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். அமிர்த வேளையில், எனது தாயாரான பிரம்மா என்னை அழைத்து, அனைத்து ஆன்மீக சக்திகளின் போஷாக்கை எனக்கு அளிக்கின்றார். தாயாரான பிரம்மா மிக அன்புடன் ஒவ்வொரு சக்தியையும் ஆத்மாவாகிய எனக்கு ஊட்டுவதாக நான் சிந்தித்து அனுபவம் செய்கின்றேன்.  

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். உன்னுடைய புத்தியின் சக்தியை அதிகரித்துக்கொள். ஒரு ஷணத்தில் ஆத்ம உலகிற்கு செல், அடுத்த ஷணம் சூட்சும உலகிற்கு வந்துவிடு – இவ்வாறு பயணத்தில் செல். அதன் பிறகு ஸ்தூல உலகிற்கு சென்று உன்னுடைய மேன்மையான பிராமண வாழ்க்கையை அனுபவம் செய். மூன்று உலகிற்கும் பந்தயம் செல்லும் பழக்கத்தை உருவாக்கிகொள்.

அகத்தூண்டுதல் பெறுவது: என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலமும் தூய்மையான பார்வையின் மூலமும் அவர் எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:  

ஒரு சுய-இராஜ்ஜிய அதிகாரி ஆத்மாவாகிய உன்னுடைய பொக்கிஷ கிடங்கில் தொடர்ந்து ஆன்மீக ஞானம், நற்குணங்கள் மற்றும் சக்திகள் நிரம்பி வழிகின்றன. உன்னுடைய ஒவ்வொரு மூச்சிலும், எண்ணத்திலும் செயலிலும் இந்த பரிசுகளை நீ இயற்கையாக கொடுக்கின்றாய். இதனால் நீ செல்வசெழிப்போடு, தடையில்லாத மகிழ்ச்சி மற்றும் அமைதியான புதிய உலகின் இராஜ்ஜியத்தில் வாழ்வதற்கு உரிமை பெறுகின்றாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்): மேற் கூறப்பட்ட ஆசீர்வாதத்தை உலகின் மீது அருள்கின்றேன். இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் மனதளவில் அல்லது ஸ்தூலமாக கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.