BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 22, 2014

ஓர் ஆத்மா சூரிய கதிர்களிலும் நிலவு வெளிச்சத்திலும் திளைத்துக் கொண்டிருக்கின்றார்.

முதல் விழிப்புணர்வு: நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்?: நான் ஒரு ஆத்மா, பாபாவின் குழந்தை ஆவேன். பாபாவுடன் அனைத்து உறவு முறைகளின் இனிமையையும் நான் அனுபவம் செய்கின்றேன். இந்த இரண்டு எண்ணங்களின் ஆன்மீக போதையானது சூட்சும உலகிற்கு என்னை சுபலமாக முன்னோக்கி செல்ல வைக்கின்றது.  

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். ஆத்மாவாகிய நான், பாபாவின் குழந்தை. நான் பாபாவுடன் சகல உறவுமுறைகளின் இனிமையையும் அனுபவம் செய்கின்றேன் -  இந்த இரண்டு எண்ணங்களின் ஆன்மீக போதையானது – என்னை தொடர்ச்சியான, இயல்பான சகஜ யோகி ஆக்குகின்றது.

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். உனக்கு சுற்றுலா செல்லவும் விடுமுறை செல்லவும் பிடிக்கும் என்பதை நான் அறிவேன். அதற்கு பதிலாக, அமிர்த வேளையில் சூட்சும உலகிற்கு என்னை சந்திக்க வருமாறு நான் உனக்கு கொடுக்கும் விசேஷமான அழைப்பிதழை ஏற்றுக்கொள். எந்த செலவும் இல்லாமல் - ஞான கடலின் கரைக்கு வா. நீ அதிகம் நன்மை பெறுவாய்.  ஞான சூரியனின் கதிர்களிலும் ஞான நிலவின் வெள்ளி கதிர்களிலும் திளைத்து விளையாடு. ஒரு ஆன்மீக சுற்றுலாவில் இரு, அனேக விளையாட்டுக்களை என்னுடன் விளையாடு.

அகத்தூண்டுதல் பெறுவது: என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலமும் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:  

உன்னுடைய மேன்மையான யதார்த்தம் (reality) என்னும் ஆசனத்தில் நீ நிலைபெற்று இருப்பதால், அனைத்து விதமான கஷ்டங்களிலிருந்தும், மேலெழும் ஒரு கதாநாயகன் ஆகியிருக்கின்றாய். நீ ஒரு வெற்றி இரத்தினமும் அனைத்து ஆன்மீக சக்திகளுக்கும் மாஸ்டர் என்பதையும் நீ நினைவு செய்தால், இந்த விழிப்புணர்வு சுய-மரியாதைக்கு ஓர் ஆசனமாகின்றது. இந்த ஆசனத்திலிருக்கும்போது, உன்னுடைய எந்த விருப்பமும் கீழ்பணியப்படுகின்றது. இந்த தெய்வீக மந்திரம் உன்னுடைய கைகளில் இருக்கிறது.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்): இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.