BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 24, 2014

குழந்தை பாபாவின் மடியில் அமர்ந்திருக்கின்றார்.

முதல் விழிப்புணர்வு: நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்?: நான் பாபாவின் குழந்தை. பரமாத்மா என்னுடைய தாயும் தந்தையும் ஆவார். பாபாவின் கரங்கள் என்னை அரவணைத்து கொள்கின்றது.  

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். பாபா, சத்யுகத்தில், இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஊஞ்சலில் விளையாடுவேன். ஆனால், இந்த சங்கம யுகத்தில், உங்கள் மடியில் விளையாடுவதை நான் அனுபவம் செய்கின்றேன். இது தான் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காகும். நான் உங்கள் மடியில் அமர்ந்து அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்கின்றேன்.

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். ஆம் குழந்தாய், சத்யுகத்தில், நீ மற்ற தூய ஆத்மாக்களின் சகவாசத்தில் இரத்தினங்கள் பதிக்கபட்ட பொம்மைகளோடு விளையாடுவாய். ஆனால், இங்கு எந்த நேரத்திலும், நீ விரும்பும் எந்த விதத்திலும் என்னுடன் நீ விளையாடலாம். பாபாவை, ஒரு நண்பனாகவும் சகவாசியாகவும் நினைத்து நீ விளையாடலாம்: உன்னுடைய தாய் தந்தையாக என்னுடன் நீ விளையாடலாம். ஒரு குழந்தையாக என்னுடன் விளையாடலாம் அல்லது என்னை உன்னுடைய குழந்தை ஆக்கிக்கொள். இப்படிப்பட்ட உடையாத, நிறம் மாறாத, எந்த செலவும் இல்லாத, அழிவற்ற பொம்மையை உன்னால் இனி பார்க்கவேமுடியாது.

அகத்தூண்டுதல் பெறுவது: என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

தானம் செய்வது என்றால் நிறைவேற்றுவது என்பதாகும். மனிதர்கள் கேட்டு கேட்டு கலைத்துவிட்டனர். அவர்களுக்கு உதாரணத்தை பார்க்கவேண்டும். தெய்வீக குணங்களின் ஸ்வருபமாக இருப்பதன் மூலம் அவர்களின் ஆசையை நீ நிறைவேற்றுகின்றாய். உன்னுடைய கண்கள் குணங்களை வெளிப்படுத்துகின்றன, உன்னுடைய செயல்கள் குணங்களை கற்பிக்கின்றது, உன்னுடைய வார்த்தைகள் குணங்களை எடுத்துரைக்கிறது, உன்னுடைய எண்ணங்கள், ஆத்மாக்கள் அவர்களின் சொந்த குணங்களின் வெளிச்சத்தை உயரத்திக்கொள்வதற்கான சிறகுகளாக இருக்கின்றன.     

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்): இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.