BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 25, 2014

மகிழ்ச்சியான ஆத்மா மரத்தின் விதையை சந்திக்கின்றார்.

முதல் விழிப்புணர்வு: நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்?: நான் சந்தோஷத்தின் பரம பொக்கிஷத்தை பெறும் ஆத்மா ஆவேன். எனக்கு வேண்டிய அனைத்தையும் நான் அடைகின்றேன். மெய்மறந்து ஆனந்தத்தில் நடனம் ஆடுகின்றேன்.      

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். எனக்கு முன்னால் ஒரு விருந்து இருப்பதை நான் உணர்கின்றேன் – இது அனைத்து உறவுமுறைகளையும் உங்களுடன் கொண்டிருக்கும் விருந்தாகும். இந்த விருந்து என்னுடைய பிறப்புரிமையாகும். எனக்கு வேண்டிய அனைத்தையும் உங்களிடமிருந்து அனுபவம் செய்வதற்கு எனக்கு உரிமையிருக்கிறது.    

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். காலை முதற்கொண்டு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பயன்படுத்து, இதை பற்றி சிந்தித்துப்பார் – சந்தோஷத்தை பற்றி உன்னிடமே நீ பேசு. உன் கண்களை திறக்கும் அந்த நொடியில், உலகை படைப்பவர், பரிசுகளை அருள்பவர் உன் மனக்கண் முன் தோன்ற வேண்டும். மனித குல மரத்தின் விதையாகிய என்னை நீ சந்திக்க வா. விதையாகிய எனக்குள், முழு மரமும் அடங்கியிருக்கிறது.   

அகத்தூண்டுதல் பெறுவது: என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

நீ உன்னுடைய தேவதை விழிப்புணர்வின் ஒளியை ஏற்றிவிடு. இதன் மூலம் வீணான எண்ணங்களின் இருட்டு ஒரு நொடியில் விலகிவிடும். இதை ஏற்றும் கலையை நீ கற்றுக்கொண்டதால், நீ சக்திசாலி ஆகிவிட்டாய். இதனால், முழு படைப்பிற்கும் அருள்பவர் ஆகிவிட்டாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்): இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.