BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 26, 2014

எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கபட்டிருக்கும் குழந்தை பரமாத்மாவின் சகவாசத்தில் இருக்கின்றார்.

முதல் விழிப்புணர்வு: நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்?: நான் பரமாத்மாவின் எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கபட்டிருக்கும் குழந்தை ஆவேன். பாபா என்னை மிகுந்த அன்பினாலும் மரியாதையினாலும் சீராட்டுகின்றார் என்பதை நான் அறிவேன்.   

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். பாபா சத்யுகத்தின் சாம்ராஜியத்தை கொடுப்பதற்காக என்னை தேடி நீங்கள் வந்தீர்கள் என்பதை நான் அறிவேன். இந்த இராஜியத்தை பெறுவதற்கு நான் தகுதி பெற வேண்டும் என்பது உங்களுடைய ஒரு தூய ஆசையாகும். நீங்கள் ஒருபோதும் எதையும் எடுத்துக்கொள்வதில்லை ஆனால் எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்கின்றீர்கள்.       

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அம

ர்ந்துக்கொள். நான் பரந்தாமத்திலிருந்து உன்னை கண்டுபிடித்து கற்பிப்பதற்காகவே நான் வருகின்றேன். நான் லண்டன், அமெரிக்கா அல்லது இந்தியாவிலிருந்து வரவில்லை, ஆனால் இந்த உலகிலிற்கு வெகு தொலைவிலிருந்து நான் வருகின்றேன். கற்பனை செய்துபார், இவ்வளவு தொலை தூரத்திலிருந்து நான் வந்து உன்னை கண்டுபிடித்து கற்பிக்கின்றேன், அத்துடன் இதற்கு எந்த கட்டணமும் இல்லை. கடவுளிடம் கற்பதை காட்டிலும் உயர்ந்த மகிழ்ச்சி இருக்கமுடியுமா? இந்த சந்தோஷ உணர்வில் எப்போதும் இரு.  

அகத்தூண்டுதல் பெறுவது: என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

தினந்தோறும் அமிர்த வேளையில், நீ அனைத்து ஆன்மீக சக்திகளையும் உடையவன் என்ற விழிப்புணர்வை வெளிக்கொண்டு வருகின்றாய். இந்த அன்றாட பயிற்சியானது உன்னை தந்தையிடமிருந்து எப்போதும் உதவி பெறுகின்ற  ஆசீர்வாதத்தை உடைய ஒரு நிலையான யோகியாக ஆக்கியிருக்கிறது. இதனால், நீ மாயாவை நயமாகவும் சுலபமாகவும் வெற்றிகொள்ள விதிக்கப்பட்டு இருக்கின்றாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்): இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.