டிசம்பர் 27, 2014

ஒரு வாரிசு குழந்தை கடவுளுடன் சம்பாஷணை செய்கிறார்.

முதல் விழிப்புணர்வு: நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்?: நான் கடவுளின் குடும்பத்தில் ஒரு வாரிசு ஆவேன். நான் என்னுடைய அதிருஷ்டத்தை கடவுளிடமிருந்தே பரம்பரை உரிமையாக பெறுகின்றேன்.  

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். பாபா இந்த பிராமண குடும்பத்தில் அன்பான உறவுமுறையில் என்னை கொண்டு வந்ததற்கு உங்களுக்கு நன்றி. நான் ஓர் மேன்மையான ஆத்மா என்ற ஞானத்தை மட்டும் நீங்கள் கொடுக்கவில்லை, ஆனால், நான் உங்கள் குழந்தை என்ற ஞானத்தையும் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுடன் இந்த பெற்றோர்-குழந்தை உறவுமுறையில் வருவதன் மூலம், என்னுடைய தெய்வீக குடும்பத்துடன் தூய்மையான சகோதர-சகோதரி உறவுமுறையிலும் நான் வருகின்றேன்.           

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். என்னுடைய வாரிசு ஆகும் அதிருஷ்டத்தை பெறுவாய் என்று எப்பொழுதாவது கனவு கூட நீ கண்டிருக்கிறாயா? என்னுடைய சொத்து அனைத்திற்கும் உனக்கு உரிமையிருக்கிறது. பெற்றோர்-குழந்தை உறவுமுறையின் அனுபவத்தை கொடுத்து உன்னுடைய பிறப்புரிமையை உனக்கு கொடுப்பதற்காக நான் இங்கு வருகின்றேன். கடவுளின் குடும்பத்தில் நீ சேர்ந்துகொள்ளும்போது இந்த அதிருஷ்டத்தை பெறுகின்றாய். துன்ப உலகை விட்டுவிட்டு சந்தோஷ உலகிற்கு வா. மேன்மையான வழிக்காட்டல்களை பின்பற்றி மனிதர்களில் அதி உயர்ந்தவராக ஆகு.   

அகத்தூண்டுதல் பெறுவது: என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

தினந்தோறும் அமிர்த வேளையில், நீ அனைத்து ஆன்மீக சக்திகளையும் உடையவன் என்ற விழிப்புணர்வை வெளிக்கொண்டு வருகின்றாய். இந்த அன்றாட பயிற்சியானது உன்னை தந்தையிடமிருந்து எப்போதும் உதவி பெறுகின்ற ஆசீர்வாதத்தை உடைய ஒரு நிலையான யோகியாக ஆக்கியிருக்கிறது. இதனால், நீ மாயாவை நயமாகவும் சுலபமாகவும் வெற்றிகொள்ள விதிக்கப்பட்டு இருக்கின்றாய்.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்): இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.