டிசம்பர் 28, 2014

இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் என்னுடைய பாபாவுடன் சம்பாஷனை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு: கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்?: நான் கடவுளின் குடும்பத்து குழந்தை ஆவேன். நான் அவருடைய இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றேன். நான் இந்த தெய்வீக குடும்பத்தை சார்ந்தவன், அதனால் அவரின் இதயத்தில் நான் அமர்ந்திருக்கின்றேன்.

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். என்னுடைய பாபா உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும், நாங்கள் அனைவரும் உங்கள் இதயத்தில் அமர்ந்து கொள்கின்றோம். நான் யாருடனும் போட்டி போடுவது கிடையாது, ஏனென்றால், எங்கள் அனைவருக்கும் உங்கள் இதய சிம்மாசனத்திற்கு உரிமை இருக்கிறது. எங்கள் அனைவரையும் அரவணைப்பதுடன் மேலும் பலருக்கு இடமிருக்கும் உங்கள் இதயம் மிகவும்  பெருந்தன்மை வாய்ந்தது. 

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். உன்னுடைய இதயத்திலிருந்து நீ “என்னுடைய பாபா” என்று கூறிய உடனேயே, உன்னை என்னுடைய இதய சிம்மாசனத்தில் நான் அமரச்செய்கின்றேன். இந்த இதய சிம்மாசனமானது உன்னை சுய-ராஜ்ஜிய அதிகாரி ஆக்குவதுடன் உன்னை ஒரு இராஜா ஆக்குகின்றது. இந்த சிம்மாசனம் உன்னை ஒர் ஆள்பவர் ஆகுவதற்கான ஆசனமாகும். இந்த இராஜரீகமான சிம்மாசனத்தை பெறும் நாளை, உன்னுடைய முடிசூட்டும் நாளை நீ கொண்டாடு. இந்த சிம்மாசனத்தின் விழிப்புணர்வு அனைத்து தடைகளையும் நீ அகற்றுவதற்கு உதவி செய்கின்றது. 

அகத்தூண்டுதல் பெறுவது: என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

இந்த சங்கம யுகத்தில், உன்னுடைய புகழானது - சந்தோஷ கடலின் குழந்தை, சந்தோஷ தெய்வம் என்பதாகும். உன்னுடைய பணிவுத்தன்மையினால், நீ எங்கு சென்றாலும் தெய்வீக மகிழ்ச்சியின் ஒளியை பரப்புகின்றாய். இந்த ஒளி நீ சந்திப்பவர்களின் அழகை பிராகாசிக்கசெய்து முழு படைப்பிற்கும் உன்னை பிரியமானவன் ஆக்குகின்றது.    

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்): இந்த ஆசீர்வாதத்தை பாபாவிடமிருந்து பெற்றுக்கொண்டு என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக முழு உலகிற்கும் பரிசாக  அளிக்கின்றேன். என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.