டிசம்பர் 29, 2014

உலகை படைப்பவருடன் இராஜரீகமான குழந்தை சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு: கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்?: நான் ஒர் இராஜரீகமான குழந்தை ஆவேன்.  ஆதியான தூய்மை என்னும்  திலகத்தை விழிப்புணர்வாக கொண்டிருக்கின்றேன், உலகிற்கு நன்மை கொண்டுவரும் பொறுப்பு என்னும் கிரீடத்தை அணிந்திருக்கின்றேன், பாப்தாதாவின் இதயம் என்னும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றேன்.

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். நீங்கள் உலகை படைப்பவர் ஆவீர். உங்களுடன் ஓர் ஆழமான தொடர்பை நான் அனுபவம் செய்கின்றேன். உங்களுடைய குழந்தையாக இருக்கும் எனக்கு கிடைக்காதது என்று எதுவுமே இல்லை.  

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள்.  படைப்பவரான கடவுளின் குடும்பத்திற்கு சொந்தமாகி இருக்கும் இந்த ஒரு வாழ்க்கையில் மட்டுமே அனைத்து பிராப்திகளும் இருக்கின்றன. நீ யாரென்று நினைவு செய், மறதி என்னும் தொந்தரவிலிருந்து உன்னை நீ விடுவித்துக்கொள். நீ யாரென்பதை நீ நினைவு செய்யும்போது, நீ மாஸ்டர் ஆகின்றாய்.

அகத்தூண்டுதல் பெறுவது: என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

நீ அழிவற்ற சந்தோஷத்தை உடைய அதிருஷ்டமான ஆத்மா ஆவாய். உன்னுடைய “ஏன்” என்ற பாடலின் ஓசை முடிவிற்கு வந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் “ஆகா பாபா!’, “ஆகா என்னுடைய அதிருஷ்டம்!”, “ஆகா என்னுடைய இனிமையான குடும்பம்!” என்று நீ பாடுகின்றாய்.     

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்): பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு : சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் – மனதளவில் அல்லது ஸ்தூலமாக – கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.