BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY


Home

Amritvela

Contact Us



டிசம்பர் 31, 2014

செல்வ செழிப்புடைய ஆத்மா பொற்கொல்லருடன் சம்பாஷணை செய்கின்றார்.

முதல் விழிப்புணர்வு:  

கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து, உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”

நான் யார்?:

நான் ஒர் செல்வ செழிப்புடைய ஆத்மா ஆவேன். என்னுடைய பொக்கிஷ பேழைக்குள் ஞான இரத்தினங்கள், தெய்வீக குணங்கள் மற்றும் சக்திகள் இருக்கின்றன.

நான் யாருக்கு சொந்தமானவன்?

ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்:

னிமையான பாபா உங்களுக்கு காலை வணக்கம். பொற்கொல்லர், ஞான கடலான உங்களுடன் நான் பேரம் பேசுகின்றேன். தட்டு நிறைய ஞான இரத்தினங்கள், தெய்வீக குணங்கள் மற்றும் சக்திகளை நீங்கள் எனக்கு அளிக்கின்றீர்கள். இந்த இரத்தினங்களோடு நான் விளையாடுகின்றேன். இந்த இரத்தினங்களால் நான் பராமரிக்கப் படுகின்றேன்.

பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்:

இனிமையான குழந்தாய், விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள். எந்த அளவிற்கு இந்த இரத்தினங்களை நீ நடைமுறை படுத்துகின்றாயோ அந்த அளவிற்கு அவை அதிகரிக்கும். இந்த இரத்தினங்களோடு மும்முரமாக இருப்பவர்களே அதிக செல்வ செழிப்பு உள்ள ஆத்மாக்கள் ஆவார்கள். உன்னுடைய விலைமதிப்பற்ற நேரத்தை நீ வீணாக்காதே. வேறு எதை பற்றியும் பார்க்காதே, கேட்காதே, சிந்திக்காதே அல்லது பேசாதே.    

அகத்தூண்டுதல் பெறுவது:

என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில் பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான எண்ணங்களை பெறுகின்றேன்.

பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது: என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த அன்புடன், சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:

உன்னுடைய உணர்வு ஆதியான சுத்தமான நிலையை அடைந்துவிட்டது. சத்தியத்தின் ஒளியாலும் பாபாவின் அன்பாலும் மின்னுகின்றது. உன்னுடைய தூய்மையின் அழகானது கனவிலும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உன்னுடைய எதிர்கால ஓவியத்தை வரைகின்றது.

எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):

பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு என்னுடைய தேவதை ஆடையில், உலகை வலம் வந்து, முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை பரிசாக அளிக்கின்றேன்.

உறங்குவதற்கு முன்பு :

சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான் நிலை பெற செய்து, மனதளவில் சோதிக்கின்றேன்: இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா? அப்படி இருந்தால், நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான் எதற்கு பலியானேன் மனதளவில் அல்லது ஸ்தூலமாக கவர்ச்சி, பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு செய்தேனா?. என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன். மேலும் 30 நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான  தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.